மாலொருபாகன் மாலொருபாகன், அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத் திருவுருவங்களில் ஒன்றாகும். சைவ - வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு இத்திருவுருவம் சான்றாகின்றது.இந்தத் திருவுருவத்தை "சங்கர நாராயணன்" , "கேசவார்த்த மூர்த்தம்" "அரியர்த்த மூர்த்தம்" என்றெல்லாம் அழைப்பதுண்டு. வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். வலப்புறம் வெண்ணிறம், வெண்ணிலா, வெண்ணீறு, உருத்திராக்கம், அஞ்சேல், மான் ஏந்திய கரங்கள் என்பன அலங்கரிக்க, இடப்புறம் கார்வண்ணம், மஞ்சளாடை, நகைகள், சங்கமும் கதையும் தாங்கிய திருக்கரங்கள் எனக் காணப்படும். எனினும், மாறுபட்ட வடிவங்கள் இந்தியாவெங்கணும் கிட்டுகின்றன. மாலொருபாகன் வடிவத்துக்கான தோற்றம், குசாணர் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதற்கு, சக்கரம் தாங்கிய சிவன் பொறிக்கப்பட்ட குசாணரின் பொற்காசைக் குறிப்பிடலாம். பிற்கால வட இந்திய, தென்னிந்திய ஆலயங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பத்தைக் காணமுடிகின்றது. ஈசனின் மாலொருபாகன் பற்றி வாமனபுராணம், இலிங்கபுராண முதலான பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. சைவ வழக்கில் தேவியின்ன் ஆண் வடிவே திருமால் எனவும் சிவனின் நான்கு சக்தியரில் திருமாலும் ஒருவரென்றும் சொல்லப்படுகின்றது. சிவனின் தேவி என்பதாலேயே, பசுமாசுர வதத்திலும், பாற்கடல் கடைந்தபோதும், தாருகாவன முனிவரின் செருக்கடக்கிய போதும், திருமால், மோகினி அவதாரம் எடுத்து, ஈசனின் தேவியாகத் தோன்றமுடிந்தது. தமிழநாட்டின் சங்கரன் கோவிலில் அமைந்த சங்கரநாராயணன் கோவிலும், கர்நாடகத்தின் கரிகர் ஊரிலுள்ள அரிகரேசுவரர் கோயிலும் ஈசனின் இத்திருமூர்த்தத்துக்காக அமைக்கப்பட்டவை ஆகும். சென்னகேசவர் கோயில், பேளூர், மீனாட்சியம்மன் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த இந்தியத் திருத்தலங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பங்கள் உண்டு. இடக்கை கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை (). இக்கருவி ஒரு தோல் வாத்தியம் என்றாலும் கேரள இசையில் இது தாள வாத்தியம் ஆக மட்டும் அல்லாமல் சுருதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிற வாத்தியங்களுக்கு "இடையே" வாசிக்க பயன்படுத்தப்படுவதால் தான் இதற்கு "இடக்கை" என்று பெயர் சூட்டப்பட்டதாக கருதப்படுகிறது. ரத்த சந்தனம், வரிக்கை பலா மரம் போன்ற மரங்களை பயன்படுத்தி இடக்கை தயாரிக்கப்படுகிறது. கேரளாவில் பொதுவாக மாரார், பொதுவாள் போன்ற இனத்தார் இடக்கை வித்வான்களாக உள்ளனர். கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. உடுக்கைவிட சற்று பெரிய அளவிலானது இடக்கை. இக்கருவியின் நடுப்புறத்தைவிட, பக்கவாட்டில் உள்ள வளைய முகங்களின் விட்டம் அதிகமாக இருக்கும். இடக்கையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கயிற்றை கையால் அழுத்தி, சிறிய வளைந்த கம்புகளை பயன்படுத்தி ஒலியை கட்டுப்படுத்தலாம். இடக்கை மீது கம்பளத்தாலான அறுபத்தி நான்கு நூல் உருண்டைகள் உள்ளன. இவை அறுபத்தி நான்கு கலைகளைக் குறிக்கும். இடக்கையின் இரு முகங்களில் ஒன்று ஜீவாத்மாவையும், ஒன்று பரமாத்மாவையும் குறிக்கும். வளையத்தில் உள்ள ஆறு ஓட்டைகள் ஆறு வேதங்களை குறிக்கிறது. ஜேக்கப் சகாயகுமார் அருணி ஜேக்கப் என்ற 'ஜேக்கப் சகாயகுமார் அருணி (சூன் 4, 1974 - நவம்பர் 4, 2012), சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் உள்ளிட்ட பலருக்கும் உணவு சமைத்து கொடுத்துள்ளார். பல்வேறு பெரிய உணவங்களுக்கும் தலைமை சமையற்காரராக பணி புரிந்துள்ள இவர், சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங்க் துறையின் இயக்குனராக இருந்தார். இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் நான்கு வயதில் தாய், மருத்துவர் விமலா அருணியிடமிருந்து சமையல் கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில் இருந்து சமையல் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர். கடந்த 2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். சன் தொலைக்காட்சியில், ஆஹா என்ன ருசி என்ற சமையல் தொடரில் தன்னுடைய சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்களித்து வந்தார். மாரடைப்புக் காரணமாக தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 05,நவம்பர்,2012 அன்று காலமானார். வரவு எட்டணா செலவு பத்தணா வரவு எட்டணா செலவு பத்தணா 1994 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். குடும்பத் திரைப்படம் , சமூகத் திரைப்படம் எளிய நிலையில் உள்ள ஒரு குடும்பம் வரவுக்கு மீறிய ஆடம்பரமாக வாழ எண்ணித் தவறான வழியில் பணம் சம்பாதித்து பணக்கார வாழ்க்கை அடைகிறது. குடும்ப ஒற்றுமை குலைந்து துயரங்களுக்கு ஆளாகின்றனர். கணவன் தீய பழக்கங்களுக்கு ஆட்படுகின்றான். மக்களின் சாபங்கள் அக்குடும்பத்தைப் பாதிக்கிறது. இறுதியில் அக்குடும்பத்தினர் தம் தவறுகளை உணர்ந்து திருந்தி சிக்கன வாழ்வின் அருமையை உணர்கின்றனர். உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்கும், மற்றதெல்லாம் ஆபத்தைத் தான் விளைவிக்கும் என்னும் கருத்தை விளக்கும் குடும்பச்சித்திரம் இது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2000) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (Koodi Vazhnthal Kodi Nanmai) 2000 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை வி.சேகர் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில்நாசர், குஷ்பூ, கரண், ரோஜா, விவேக், வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். 15 ஜூலை 2000 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் தேவா ஆவார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தங்கராஜ் (நாசர் (நடிகர்)) அவரது மனைவி மீனாட்சி (குஷ்பூ) மற்றும் மகள் பத்மா (கவிதா) ஆவர். தங்கராஜின் தம்பி பாக்ஸர் கிருஷ்ணன் (வடிவேலு (நடிகர்)) அரசியலில் பகல் கனவு காணும் ஒரு பொறுப்பற்ற ஆசாமி. கிருஷ்ணனின் மனைவி கனகவல்லி (கோவை சரளா) . நன்கு படித்த மற்றொரு தம்பியான சிவராமனும் (கரண்) தங்கராஜும், வள்ளுவதாசனின் (விஜயகுமார்) சொந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சிவராமனை தன் சொந்த பிள்ளையை போலவே வளர்த்தனர். சிவராமன் நன்கு வருமானம் பெறுவதால், அக்குடுன்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தது. சிவராமனின் குணத்தையும், கூட்டுகுடும்பத்தையும் பார்த்து வள்ளுவர்தாசன் தனது மகளான தமிழ்ச்செல்வியை (ரோஜா) சிவராமனுக்கு மணமுடித்து வைக்கிறார். பணக்கார வீட்டை சேர்ந்தவளாக இருந்தாலும் கனிவுடனும் பணிவுடனும் நடந்துகொள்கிறாள் தமிழ்செல்வி. அதேசமயம், தான் அதிகம் வருமானம் ஈட்டுவதால் வீட்டில் இருக்கும் அனைவரும் தன் பேச்சை கேட்கவேண்டும் என்று நினைக்கிறான் சிவராமன். கிருஷ்ணன் வேலையில்லாமல் அரசியல் பகல் கனவு காணுவதால், இவர்களுக்கிடையே அவ்வப்பொழுது வாக்குவாதம் நடக்கிறது. தங்கராஜின் வீட்டருகில் இருக்கும் தண்டபாணி (விவேக்) பத்மாவை விருப்புவது தெரியவந்து, மணமுடிக்க நினைக்கிறார் தங்கராஜ். ஆனால், தண்டபாணியின் தந்தையோ மிகவும் அதிக வரதட்சணை கேட்கிறார். எப்படியும் சிவராமன் பணத்தை கொடுப்பான் என்று எண்ணி தங்கராஜ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், பணம் தர சிவராமன் மறுக்க, குடும்பத்தில் பிரச்சனைகள் வெடிக்கின்றன. சிவராமனின் நோக்கம் முழுவதும் பணத்தை நோக்கியே இருப்பதாக எண்ணிய மீனாட்சியும், சிவராமனும் வீட்டைவிட்டு வெளியிருக்கிறார்கள். கூட்டுககுடும்பம் சிதறியதால், அதை இணைக்க முயல்கிறாள் தமிழ்செல்வி. தண்டபாணிக்கும் பத்மாவிற்கும் திருமணம் ஆனதா? சிவராமன் பணம் கொடுத்தானா? உடைந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதி கதையாகும். இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். முத்துலிங்கம், காளிதாசன், காமகோடியன் மற்றும் பழனி பாரதி இப்படத்தின் பாடல்களை எழுதினர். "இந்து.காம் எஸ்.ஆர்.அசோக்குமார்" "படத்தின் துவக்கம் பிரகாசமாகவே இருந்தாலும், இரண்டாம் பகுதி சுமாராகவே இருந்தது" என விமர்சனம் செய்தார். விரலுக்கேத்த வீக்கம் விரலுக்கேத்த வீக்கம் 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். குடும்பத் திரைப்படம் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், ஆடம்பர விரும்பிகளாக , ஊதாரித்தனமாக செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். கடன் வாங்கியும் , பொய் சொல்லியும் செலவு செய்கிறார்கள். கடன் தொல்லை பொறுக்க முடியாத அந்த நண்பர்களின் மனைவிமார் மூவரும் தங்கள் கணவர் பேச்சை மீறி வேலைக்குச் செல்கிறார்கள். நண்பர்களின் பணித்திறன் இன்மையால் நிறுவனத்திலும் வேலை போகிறது. தங்கள் மனைவிகளைத் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வர என்ன முயற்சி செய்யலாம் என்று போராடுகிறார்கள் அந்த நண்பர்கள். ஆடம்பர ஆசைகளை உதறிவிட்டு இருக்கும் தகுதிக்கேற்ப சிக்கனமாய் இருந்தாலே வாழ்வு சிறக்கும் என்பதை நகைச்சுவையுடன் விளக்கும் குடும்பச்சித்திரம் இது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம். இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம். பால்கோவா இங்குள்ள கூட்டுறவு பால் பண்ணையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செகராசசேகரப் பிள்ளையார் கோயில் செகராசசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வட பகுதியில், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒர் கோயில். 13 ஆம் நூற்றாண்டு முதல் 1620 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்து அரசர்களின் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றான "செகராசசேகரன்" என்னும் பெயரைத் தழுவிய பெயர் கொண்ட இக் கோயில், தொடக்கத்தில் அக்கால மன்னர்களில் ஒருவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக் கோயிலுக்குப் பருத்தியடைப்புப் பிள்ளையார் கோயில் என்ற பெயரும் வழங்கி வருகிறது. செகராசசேகர மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், யாழ்ப்பாண இராச்சியத் தொடக்க காலத்தில் இணுவில் பகுதித் தலைவனான பேராயிரவரும், அவர் வழிவந்தவர்களும் வழிபாடாற்றி வந்ததாகத் தெரிகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயர் அங்கிருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்துவிட்டனர். அப்போது யாழ்ப்பாண மன்னர்கள் கட்டுவித்த செகராசசேகரப் பிள்ளையார் கோவிலும் அழிந்துவிட்டது. ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் இக் கோயில் மீளக் கட்டப்பட்டது. சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறிய அளவிலான சாந்துக் கட்டிடமாக இருந்த இக் கோயில் இப்போது பொழிகற்களால் கட்டப்பட்ட அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. செகராசசேகரப் பிள்ளையார் மேல் வித்துவான் இ. திருநாவுக்கரசு ஒரு திருவூஞ்சற் பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார். நான் பெத்த மகனே நான் பெத்த மகனே 1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். குடும்பப்படம் ரவி (நிழல்கள் ரவி) ஆண்டாள் என்னும் பெண்மணியின் (மனோரமா) ஒரே மகன். ஆண்டாள் ரவியின் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை கொண்டு இருப்பவர். அவர் தனது மகனுக்குத் திருமணம் செய்விக்க நல்ல குணம், அம்சம் மற்றும் சாதுவான பெண்ணைத் தேடுகிறார். ஏனென்றால் ரவிக்கு வரப்போகும் மனைவி சாதுவாக இல்லாவிட்டால், அவள் அவனைக் கட்டுப்பாடு விதித்தோ, அச்சுறுத்தல் செய்தோ தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. அவர் சாந்தமான வேலைக்காரி உமா மகேஸ்வரி (ஊர்வசி) என்ற பெண்ணைத் தேடிப்பிடித்து தனது மகன் ரவிக்குத் திருமணம் செய்கிறார். எப்பொழுதும் அவர்கள் வீட்டில் ஆண்டாள் அம்மாவின் அதிகாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. உமா தன் மனதை வெளிக்காட்டத் தொடங்கும் போது, ஆண்டாள் தனது கண்டிப்பைக் கட்டுகிறார். திடீர் என்று உமா தற்கொலை செய்கிறாள். அவளது தற்கொலைக்கு ஆண்டாள் தான் காரணம் என்று கைது செய்யபடுகிறார். ஆனால் உண்மையில் தான் எதுவும் உமாவைச் செய்யவில்லை என்று ஆண்டாள் கூறுவதை ரவி கூட நம்பவில்லை. உண்மையான காரணம் வெளிப்படுவதும், அவர் குற்றவாளியில்லையென இறுதியில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதும் எவ்வாறு என்று தாய் தனது மகன் மேல் கொண்ட அதீத பாசத்தைக் காட்டும் திரைச் சித்திரம் இது. காலம் மாறிப்போச்சு (1996 திரைப்படம்) காலம் மாறிப் போச்சு 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம் நான்கு பெண்கள் பெற்ற தகப்பனார் அம்மூன்று பெண்களையும் சுமையாகவும் செலவாகவும் கருதுகிறார். தான் பெற்ற ஒரே மகன்தான் தனது ஆஸ்திக்குரிய ஒரே வாரிசு என்று வாழ்கிறார். தனது பெண்களுக்கு விருப்பமில்லாத மணமகன்களை அவர்களுக்கு மணமுடித்து வைக்கிறார். துளி கூட தனது விருப்பத்திற்கு மதிப்பில்லாமல் தந்தை மணமுடித்த விரக்தியில் புகுந்த வீடு செல்கின்றனர் அப்பெண்கள். சொந்த தொழில் செய்வதற்காக மாமனாரிடம் கடன் பெற்று வர அப்பெண்களை கட்டாயப் படுத்துகிறார்கள் அவர்களின் கணவன்மார். தந்தையோ திருமணத்தோடு தனது பொறுப்பு முடிந்தது என்று மகன் பெயரில் தனது சொத்துகளை எழுதி வைக்கிறார். வசதியான வீட்டுப் பெண்ணைத் தேடி மணமுடித்தும் வைக்கிறார். அவனோ தனது தங்கையின் திருமணத்துக்குக் கூட பணம் தர மறுத்து தந்தையை வீட்டை விட்டே துரத்துகிறான். நடுத்தெருவில் நிற்கும் மாமனாரின் கௌரவத்தைக் காக்க திருமணம் நடத்தித்தர உதவுகிறார்கள் பெண்களும் அவரின் மாப்பிள்ளைகளும். பெண் குழந்தை ஆண் குழந்தை என்று பேதம் பாராட்டிய தந்தை மனம் மாறுகிறார். ஆணும் பெண்ணும் சமம், இரு குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று பெற்றோருக்குச் செய்தி சொல்லும் திரைச்சித்திரம் இது. வடிவுக்கரசி வடிவுக்கரசி (பிறப்பு: சூலை 7, 1962) ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் "கன்னிப் பருவத்திலே". இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார். அருணாச்சலம் திரைப்படத்தில் கதாநாயகனின் பாட்டியாக இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. கழிவுத்தொகுதி கழிவுத்தொகுதி (Excretory system) எனப்படுவது உயிரினங்களின் உடலில் இருந்து தேவையற்றதாகவும், மேலதிகமானதாகவும் கருதப்படும் பொருட்களை வெளியேற்றும் ஒரு உயிரியல் தொழிற்பாட்டிற்கான உடல் உறுப்புக்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதி உடலில் ஒரு சீரான சமநிலையைப் பேண உதவும். பொதுவாக உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் அனைத்து உடல் உறுப்புக்களும் கழிவுத்தொகுதியினுள் அடங்குமாயினும், சிறுநீர்த்தொகுதியே மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகக் கருதப்படுகின்றது. இதனால், சிலசமயம் சிறுநீர்த் தொகுதியையே கழிவுத்தொகுதி எனவும் அழைப்பதுண்டு. வளர்சிதைமாற்றத்தில் உருவாகும் கழிவுப் பொருட்கள், வேறும் உடலிற்குத் தேவையற்ற, அல்லது மேலதிகமான திண்ம நீர்ம, வளிமப் பொருட்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இந்த கழிவுத்தொகுதி உதவுகின்றது. உடலின் அனைத்து உறுப்புக்களும் வளர்சிதைமாற்றத் தொழிற்பாட்டில் பங்குகொண்டாலும், கழிவுகளை வெளியேற்றுவதில் பங்களிக்கும் உறுப்புக்களே கழிவுத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. உடலின் உள்ளே உருவாகும் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால், அவை உடலுக்கு நச்சுப்பொருளாக மாறி உடல்நிலையைப் பாதிக்கவோ, அல்லது மிக அதிகளவில் கழிவுகள் தேங்கினால் இறப்பை ஏற்படுத்தவோ கூடும். முக்கியமான கழிவுத்தொகுதி உறுப்புக்களாக சிறுநீர்த்தொகுதியின் உறுப்புக்களே கருதப்படுகின்றன. பெரிய மூலக்கூறுகளான புரதங்கள் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படும்போது யூரியா என்னும் கழிவுப்பொருளை முக்கிய பக்கவிளைவுப் பொருளாகத் தருகின்றது. யூரியா, மற்றும் உடலில் உள்ள மேலதிக நீர், வேறும் சில கழிவுப் பொருட்கள் சேர்ந்து சிறுநீராக வெளியேற சிறுநீரகமும் அதனுடனிணைந்து தொழிற்படும் ஏனைய உறுப்புக்களும் உதவுகின்றன. வெளிமூச்செறிதலின்போது, உடலில் இருந்து காபனீரொக்சைட்டு, நீராவி போன்ற பொருட்கள் வெளியேற்றப்படுவதனால், சுவாசத் தொகுதியில் உள்ள நுரையீரலும், அதனோடிணைந்த ஏனைய உறுப்புக்களும் கழிவுத்தொகுதியில் பங்கெடுக்கின்றன. உடலில் உணவுப் பொருட்கள் சமிபாட்டுக்கு உட்படும்போது, சமிபாடடையாத கழிவுப் பொருட்கள் திண்மக் கழிவான மலமாக சமிபாட்டுத் தொகுதியின் முடிவில் உள்ள உறுப்பான குதத்தினூடாக மலம் கழித்தல் செயல்முறை மூலம் வெளியேற்றப்படும். உடலின் வெளிப்புறமாக இருக்கும் தோலும் கழிவுத்தொகுதியின் ஒரு அங்கமாகும். தோலினூடாக வெளியேற்றப்படும் வியர்வையும் கழிவுப் பொருட்களான மேலதிக நீர், சிறிய அளவிலான யூரியா, மற்றும் சில உப்புக்களைக் கழிவாகக் கொண்டிருக்கும். ஜேக்கப் ஜேக்கப் ("Jacob") அல்லது யாக்கோபு என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: இறைச்சி (இலக்கணம்) அகப்பொருள் பாகுபாடு புணர்ச்சி, ஆற்றியிருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஆண் பெண் உறவுகளை (உரிப்பொருளை) மையமாகக் கொண்டது. இதற்கு முதற்பொருளும், கருப்பொருளும் துணையாக அமையும். இவற்றை ஐந்திணை என்பர். இவற்றில் இறைச்சி என்பது கருப்பொருள். கரு வளரும் பொருள். இறைச்சி அழுகும் பொருள். கரு உயிரோட்டம் உள்ளது. இறைச்சி உயிரோட்டம் இல்லாதது. பாட்டில் சொல்லப்படும் கருப்பொருள்களிலிருந்து பாட்டால் சொல்லப்படும் பொருளை உய்த்துணர்ந்துகொள்வதை இலக்கண நூலார் இறைச்சி எனக் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியத்தில் சில நூற்பாக்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் கருங்காற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இறைக்கும் நாடனொடு நட்பே ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்து பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் கொய்மார் நின்றுகொய மலரும் நாடனொடு ஒன்றேன் தோழி ஒன்றினானே. அடிதாங்கும் அளவின்றி அழல் அன்ன வெம்மையால் கடியவே கனங்குழாய் காடு என்றார் அக் காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரை மிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே த. நமசிவாயம் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஈழத்துத் திரைப்பட நடிகர். ஜெயகாந்த் என்ற பெயரில் நடித்தவர். புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழும் இவர் அந்நாட்டின் இலவுசான் மாநகரசபை உறுப்பினராக உள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நமசிவாயம் சிறுவயது முதலே திரைப்பட ஆர்வம் கொண்டிருந்தவர். 'பாராவழலு' என்ற சிங்களத் திரைப்படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்த்’ என்று வைத்துக் கொண்டார். ஈழத்தில் தயாரான குத்துவிளக்கு தமிழ்த்திரைப்படத்தில் ‘சோமு’ என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் தொல்காப்பியம் பொருளியல் செய்திகள் பொருளியல் என்பது தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஐந்தாவதாக வரும் ஓர் இயல். இதற்கு முன் சொல்லப்பட்ட நான்கு இயல்களுக்கும், பின் சொல்லப்போகும் நான்கு இயல்களுக்கும் பொதுவான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. பாட்டின் உட்பொருளை இவ்வாறு உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இதில் உள்ளன. இதனை ஒழிபியல் என்று எடுத்துக்கொண்டாலும் பொருந்தும் என்று இளம்பூரணர் தெரிவிக்கிறார். வெறுமனே தரப்பட்டுள்ள எண்கள் இவ்வியலில் உள்ள நூற்பா எண்ணைக் குறிக்கும். எம். தம்பிராஜா டான் ஸ்ரீ, டத்தோ, டாக்டர் எம். தம்பிராஜா (M.Thambirajah பிறப்பு: "டிசம்பர் 2, 1942") மலேசிய இந்தியர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடி வருபவர். ஸ்ரீ முருகன் நிலையம் எனும் சமூகக் கல்வி மையத்தை உருவாக்கியவர். கடந்த 30 ஆண்டுகளில், மலேசியாவில் 16,000 இந்தியப் பட்டதாரிகள் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தவர். ஒவ்வோர் ஆண்டும், பத்துமலையில் பல இலட்சம் இந்திய மாணவர்களை ஒன்று திரட்டி கல்வி யாத்திரை எனும் ஓரணித் தியான வழிமுறைகளை விதைத்து வருகின்றவர். மலேசியாவில் இந்தியச் சமுதாயம் ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறிவிடக்கூடாது. அரசியல், பொருளாதாரத் துறைகளில் முன்னுக்கு வர வேண்டும் என்றால், மலேசிய இந்தியர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தை உருவாக்கியவர். கல்விதான் மலேசிய இந்தியர்களின் ஆயுதம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும் எனும் கொள்கையை முன் வைத்துப் போராடி வருகிறார். மலாயாவிற்குச் சஞ்சிக் கூலிகளாக வந்த இந்தியர்களின் பிள்ளைகள், கூலிகளாகவே இருந்து விடக்கூடாது என்று மலேசிய இந்தியர்களிடம் கல்வி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றவர். தொலைதூரங்களில் வாழும் ஏழை இந்திய மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஆசிரமங்களையும், கல்வி மையங்களையும் கட்டி வருகின்றார். அந்த ஆசிரமங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் உள்ளூர், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்குத் தயார் படுத்தப்படுகின்றனர். அவருக்கு உதவியாக பல நூறு பட்டதாரி மாணவர்கள் ஆயுள்காலச் சேவைகளை வழங்கி வருகின்றனர். டாக்டர் தம்பிராஜா 1942ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, புக்கிட் தெங்ஙா, செபராங் பிறையில், ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் முனியாண்டி. தாயாரின் பெயர் ஆரம்மா. இவருக்கு மு. துரைவேல், மு. புஷ்பராஜா, மு. பன்னீர் செல்வம் என மூன்று சகோதரர்கள். மு. சரோஜினி, மு. தேவி, மு. ஜோதிமணி, மு. செல்வமணி என நான்கு சகோதரிகள். இவர்களில் பன்னீர் செல்வம் என்பவர் ஒரு மருத்துவர். தம்பிராஜா தன்னுடைய தொடக்கக் கல்வியைத் தமிழ், ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை, 1958ஆம் ஆண்டு, புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப் பள்ளியில் முடித்துக் கொண்டார். 1960இல் இங்கிலாந்தில் லிவர்பூலில் உள்ள கிர்க்பி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முடித்தார். 1950களில் மலாயாவில் பெரும்பாலான ஆங்கிலமொழி ஆசிரியர்கள், கிர்க்பி அல்லது பிரின்ஸ்பர்ட் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆகும். மலாயாவில் ஆங்கில மொழிக்கு என்று தனிப் பயிற்சிக் கல்லூரிகள் அப்போது இல்லை. 1963ஆம் ஆண்டுதான் உள்நாட்டு ஆங்கிலமொழிப் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மலேசியாவிற்கு, கிர்க்பி கல்லூரி இதுவரை 1500 ஆசிரியர்களையும், 405 ஆசிரியர் பயிற்றுநர்களையும் உருவாக்கி உள்ளது. இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்தான் பின் நாளில் மலாயா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களாகச் சேவை செய்தார்கள். பல ஆயிரம் மொழி ஆசிரியர்களை உருவாக்கினார்கள். நூற்றுக் கணக்கான இந்தியர்கள் ஆங்கிலமொழி ஆசிரியர்களாகப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். 1962ஆம் ஆண்டு, மலாயாவுக்குத் திரும்பிய தம்பிராஜா, சுங்கை பட்டாணியில் உள்ள இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு ஓர் ஆண்டு காலம் பணி புரிந்தார். பின்னர், 1963ஆம் ஆண்டு, கூலிம் நகரில் உள்ள சுல்தான் பாட்லிஷா பள்ளிக்கு மாற்றலாகிப் போனார். 1966ஆம் ஆண்டு வரை கெடாவில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1969ஆம் ஆண்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். மேலும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், 1971 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கே முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டார். 1972ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிட்டியது. உருசியப் புரட்சி, சோவியத் வரலாறு, சோவியத் வெளியுறவுக் கொள்கை, தென்கிழக்கு ஆசியாவில் இடதுசாரியினரின் கொள்கை போன்ற பாடங்களில் விரிவுரைகள் ஆற்றினார். 1974இல் தான் படித்த அதே வாசிங்டன் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் சென்று, முனைவர் பட்டத்தையும் படித்து முடித்தார். 1980களில் மலேசிய உயர்நிலைப் பள்ளிகளில் இவர் எழுதி வெளியிட்ட "Malaysia Dalam Sejarah" எனும் வரலாற்றுப் பாட நூல் பயன்படுத்தப்பட்டது. அவர் சட்டம் பயில இங்கிலாந்து செல்வதற்கு முன் அந்தப் பாட நூல் எழுதப்பட்டது. மலேசியாவில் உள்நாட்டு ஆவண அமைப்பில் எழுதப்பட்ட முதல் நூல் எனும் பெருமையும் அதற்கு உண்டு. அதைத் தவிர "History for Primary Schools" எனும் பாட நூலையும் அவர் எழுதியுள்ளார். இந்தக் காலக் கட்டத்தில்தான் ஸ்ரீ முருகன் நிலையம் உருவாவதற்கான அடித்தளம் போடப்பட்டது. ஒரு சமுதாயம் உயர்ந்து வளர்வதற்கும், தாழ்ந்து போவதற்கும் கல்விதான் அஸ்திவாரம் என்பதை தம்பிராஜா முழுமையாக நம்பினார். எதிர்காலத்தில் இந்தியர்கள் பின் தள்ளப்படும் அவலநிலை மலேசியாவில் ஏற்படலாம் என்று சந்திக்கின்ற எல்லா இந்தியர்களிடம் சொல்லி வந்தார். கல்வி இல்லை என்றால் ஒரு சமுதாயம் முன்னேற முடியாது. அந்தச் சமுதாயம் ஓரங்கட்டப்பட்டு விடும் என்பதைத் தமிழ்க் கல்வியாளர்களிடம் வலியுறுத்தி வந்தார். அரசியல் தலைவர்களிடமும் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார். சிலர் உதவிகள் செய்ய முன்வந்தனர். பலர் அவரை விட்டு விலகிச் சென்றனர். அப்போது தம்பிராஜாவுக்கு மனதில் இனம் புரியாத இறுக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், அதாவது 1970 – 1980களில் மலேசிய இந்தியச் சமுதாயம் பொருளாதாரத் துறையில் மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருந்தது. 1969 மே மாத கலவரத்திற்குப் பிறகு, மலேசியாவில் இருந்த பல இந்தியச் செல்வந்தர்களுக்கு இரண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டது. இருக்கிற நிலபுலன்களை, முடிந்த வரையில் விற்றுவிட்டு தாயகம் திரும்பினர். சிலர் தங்கள் நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். மலாயாவில் வாழ்ந்த இந்தியர்கள் 1969-1970களில் ஏறக்குறைய 450 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலங்களை மலேசியச் சீனர்களுக்கு விற்றுச் சென்றுள்ளனர். அப்போது 450 மில்லியன் ரிங்கிட் என்பது பெரிய பணத்தொகை ஆகும். மலேசியாவில் இந்தியர்களின் பொருளாதார மூலதனம் குறைந்து போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கட்டத்தில் பல ஆயிரம் சீனர்களும் சீனாவிற்குத் திரும்பிச் சென்றனர். 1969 மே மாத கலவரத்திற்குப் பிறகு, மலேசியாவின் அரசியல் நிர்வாகம் முழுமையாக மலாய்க்காரர்களின் கைவசம் மாறியது. சீனர்களிடம் பொருளாதார பலம் இருந்தது. 1890-1900களில் இந்தியாவில் இருந்து பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்கள், காலம் காலமாக ரப்பர் தோட்டங்களையும், பொது மராமத்துக் கடைநிலைப் பணிகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். மலேசிய இந்தியச் சமூகத்தவரின் பிள்ளைகளுக்கு உயர்க் கல்விகளுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தோட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை. மலேசிய இந்தியச் சமுதாயத்தின் பின்னடைவுகளுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். மலேசிய இந்தியச் சமூகத்தவர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை மையமாகக் கொண்டு, 2007 நவம்பர் மாதம், கோலாலம்பூரில் ஒரு பெரிய பேரணியும் நடைபெற்றது. 1960களில், மலேசிய இந்தியச் சமூகத்தின் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்தனர். அவர்களில் ஒரு சிலர் உயர்க் கல்வி பெற்றவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலும் தோட்டப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்தான் படித்தவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் தங்களுடைய சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் அவலநிலைகளைக் கண்டறிந்தனர். ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. தங்களுடைய சமுதாயத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் எனும் இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டனர். அந்த வகையான விழிப்புணர்வும், இந்திய சமூகத்திற்கு கல்வித் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணமும் தம்பிராஜாவிடம் மேலோங்கி நின்றது. பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது, இந்திய மாணவர்களிடம் அதைப் பற்றியே நிறைய பேசினார். அவர்களிடம் விவாதமும் செய்தார். தம்பிராஜாவிடம் பயின்ற மாணவர்களிடையே சமுதாய விழிப்புணர்வுகள் மிளிரத் தொடங்கின. சில மாணவர்களுக்கு உணர்வுகள் துடித்தன. ஒரு நாள், மலாயா பல்கலைக்கழகத்தின் 42 மாணவர்கள் ஒன்று கூடினர். மாணவர்கள் அனைவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது மலாயா பல்கலைக்கழகத் தமிழ் மொழிக் கழகத்தின் தலைவராக டத்தோ ஆ. தெய்வீகன் இருந்தார். இவர் தற்சமயம், மலேசியா,சிலாங்கூர் மாநிலக் காவல் துறையின் துணைத் தலைவர் ஆகும். மலேசியக் காவல் துறையின் மிக உயரிய பதவிகளில் பணியாற்றும் தமிழர்களில் இவரும் ஒருவர் ஆவார். அந்த மாணவர்கள் அனைவரும் தெய்வீகன் தலைமையில் டாக்டர் தம்பிராஜாவைப் போய்ப் பார்த்தனர். தம்பிராஜாவிற்கு உதவியாக மற்றும் ஒரு விரிவுரையாளர் டாக்டர் எம். இராஜேந்திரன் என்பவர் இருந்தார். இருவருமே மலாயா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை விரிவுரையாளர்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துரையாடினர்.இந்திய சமுதாயத்தைக் கல்வியின் வழி, எப்படி உயர்த்திக் காட்டுவது என்று கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியின் உறைகலனாக அமைந்ததுதான் ஸ்ரீ முருகன் நிலையம். தெய்வத்தின் பெயரிலேயே ஒரு கல்விக் கோயிலை உருவாக்கினார்கள். 1982 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழக ‘டி’பயிலரங்கில் ஸ்ரீ முருகன் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது. மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ஆயிரக் கணக்கான இந்திய ஏழை மாணவர்கள் பட்டதாரிகளானார்கள். அடுத்து வந்த ஆறு மாதங்களில் விரிவுரைக் கூறுகள், தேர்வு வழிகாட்டிகள், பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. அவர்களின் முதல் இலக்கு "STPM" தேர்வு எழுதும் மாணவர்கள்தான். STPM என்றால் Sijil Tinggi Pelajaran Malaysia. மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ் என்று பொருள். பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முன்னால் மாணவர்கள் இரு ஆண்டுகள் உயர்க்கல்வி பயில வேண்டும். அதைத்தான் எஸ்.டி.பி.எம். என்பார்கள். அவர்கள் எஸ்.டி.பி.எம். பயிற்சி மையத்தைத் தொடங்குவதற்கு காரணங்கள் உள்ளன. 1970, 1980களில் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் அடைவு நிலைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிறைவு செய்யவே மாணவர்கள் இல்லாமல் போய்விட்டனர். ஒவ்வொரு எஸ்.டி.பி.எம். பாடத்திற்கும் 25 பாடம் கற்பித்தல் திட்டங்கள். பாடத் திட்டங்களைப் பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் சேர்ந்து தயாரித்தார்கள். தம்பிராஜா தலைமை ஆலோசகராக இருந்தார். பாடத் திட்டங்களில் பயிற்சிகள், பயிலரங்குகள், முன்மாதிரி விடைகள், பழைய தேர்வுத் தாட்கள், பதில் நுட்பக் கூறுகள், உத்திகள், குறிப்புகள், சுயமாகப் பயிலும் திட்டங்கள், ஊக்குவிப்பு உரைகள் போன்றவையும் அடங்கும். We need workers not talkers என்பதே அவர்களின் தலையாய நோக்கமாகவும் இருந்தது. ‘எங்களுக்கு வேலை செய்பவர்கள்தான் வேண்டும். பேசுபவர்கள் அல்ல’என்பதே அதன் பொருளாகும். முதல் எஸ்.டி.பி.எம். வகுப்பு செப்டம்பர் 1982 லிருந்து 1983 ஏப்ரல் வரை நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் 12/19இல், ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டது. அதே 1983ஆம் ஆண்டில், பெட்டாலிங் ஜெயா, செந்தூல், கிள்ளான், சிரம்பான் ஆகிய நகரங்களில் வகுப்புகள் திறக்கப்பட்டன. அப்படியே படிப்படியாக வளர்ந்து வந்ததுதான், இப்போது உலகமே வியந்து பார்க்கும் ஸ்ரீ முருகன் நிலையம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் பலர், அரசு தேர்வுகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு இப்போது 200க்கு மேற்பட்ட கல்வி மையங்கள் உள்ளன. அவற்றில் 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்து, இதுவரையில் 16,000 பேர் பட்டதாரிகளாக வெளி வந்துள்ளனர். ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய 800 பட்டதாரிகளை, ஸ்ரீ முருகன் நிலையம் உருவாக்கி வருகிறது. இது ஒரு பெரிய சாதனை. அது மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலையில் அறியச் செய்யும் சாதனை. இது தவிர, ஆண்டுதோறும் ஒரு சிறந்த தாயாரைத் தேர்ந்து எடுத்து அவரைக் கௌரவிப்பும் செய்கிறது. மலேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு, பல வகைகளில் நிதியுதவிகள் செய்து வருகின்றன. ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஜீவநாடிகளாக அதன் துணை இயக்குநர்கள் இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் டாக்டர் பிரகாஷ் ராவ். தற்சமயம் மலேசியத் துணையமைச்சர் டத்தோ டத்தோ எஸ்.கே. தேவமணியின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இருவர் துணை இயக்குநர்களாக அரிய சேவைகளைச் செய்து வருகின்றனர். மலேசியக் கல்வியாளர்கள் எல். கிருஷ்ணன், கே. சுரேந்திரன் ஆகிய இருவரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் துணை இயக்குநர்கள். டத்தோ எஸ்.கே. தேவமணியும் மூத்த துணை இயக்குநர் ஆகும். நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், நாடளாவிய நிலையில், ஸ்ரீ முருகன் நிலையத்தில் தன்னார்வத் தொண்டுகள் செய்து வருகின்றனர். அவர்களில் எம். தமிழ்ச்செல்வம், எம். புகனேஸ்வரி போன்றவர்களின் சேவைகள் பாராட்டத் தக்கவை. இவர்கள் மலேசியப் பல்கலைக்கழகங்களில், மிகவும் அரிதாகக் கிடைக்கும் "1st Class Honors" பெற்றவர்கள். ஸ்ரீ முருகன் நிலையத்தைத் தோற்றுவித்த பின்னர் தம்பிராஜா, சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். 1987இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார். "Certificate of Legal Practice" என்று அழைக்கப்படும் வழக்கறிஞர்த் தொழில் செய்வதற்கான சான்றிதழை, 1988ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெற்றார். மலேசியாவில் உள்ள காவல் துறைக் கல்லூரிகளில், விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் தம்பிராஜாவுக்கு உண்டு. 1976 ஆம் ஆண்டில் இருந்து 1989 ஆம் ஆண்டு வரை, மலேசியக் காலாட் படை அதிகாரிகள் கல்லூரியிலும், கோலாகுபு பாரு காவல் துறைக் கல்லூரியிலும் இவர் விரிவுரைகள், பயிலரங்குகள், மாநாடுகளை நடத்தியுள்ளார். இவருடைய சேவைகளைப் பாராட்டி சிலாங்கூர் சுல்தான் 1999 ஆம் ஆண்டு SMS விருதையும், பினாங்கு கவர்னர் 2001 ஆம் ஆண்டு DPMS எனும் டத்தோ விருதையும், மாட்சிமை தங்கிய பேரரசர் PSM எனும் டான்ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளனர். இவருடைய மனைவியின் பெயர் இந்திராணி அருணாசலம். இவர் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரியர். இரண்டு பிள்ளைகள். மூத்தவர் டாக்டர் சுமித்ரா. இளையவர் ஆனந்த். மருமகனின் பெயர் டாக்டர் கௌரவ் குப்தா. ஒரே ஒரு பேத்தி. பெயர் லைலா. ஸ்ரீ முருகன் நிலையத்தின் சேவைகள் பாராட்டுக்குரியவை. மலேசிய இந்திய சமூகத்திற்காகப் போராடி வருகிறது. அவர்களின் ஒழுங்கு முறைகள் உலக மக்களை வியக்க வைக்கிறது. தன்னார்வத்தையும் தாண்டி நிற்கும் சமூகத் தொண்டுகள். மலேசிய அரசாங்கம் பல வகைகளில் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு உதவிகள் செய்து வருகிறது. கல்வி யாத்திரை http://www.youtube.com/ பிரதமர் நஜீப் http://www.youtube.com/watch?v=2CFoxAXjjfA&feature=relmfu/ ஆண்டு விழா http://www.youtube.com/watch?v=2hNvrPfxA_c&feature=related ரேஸ் 2 ரேஸ் 2 இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரேஸ் என்ற பாலிவுட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அப்பாஸ் ஹுசேன் இயக்கத்தில் வரவிருக்கும் படம்.2013 ஜனவரி 25-ஆம் தேதி வெளியிடவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்தில் வரும் ரண்வீர் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா ஆகிய கதாபாத்திரங்களாக ரேஸ் 2-வில் சயீப் அலி கான் மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். காந்தியம் காந்தியவாதம் அல்லது காந்தியம் ("Gandhism") என்று மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்நாள் பணி, கருத்தாக்கம் மற்றும் உள்ளூக்கத்தால் பெறப்பட்ட கொள்கைகளையும் கருத்துகளையும் உள்ளடக்கிக் கூறப்படுகின்றது. முக்கியமாக அகிம்சைப் போராட்டம் குறித்த அவரது கருத்துக்களும் செயல்முறைகளும் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. 'காந்தியம்' என்ற கருத்தாக்கத்தில் உலகெங்கும் உள்ள மக்களுக்கான காந்தியின் உரைகளும் செயல்பாடுகளும் மற்றும் அவர்களது மேம்பாட்டிற்காக அவரது வழிகாட்டுதல்களும் உள்ளடக்கப்படுகிறது. மேலும் இது தனிமனிதச் சூழலுக்கும் அரசியல் சாரா சூழலுக்கும் பொருந்துவதாகவும் உள்ளது. காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் "காந்தியவாதிகள்" எனப்படுகின்றனர். காந்தியை இருபதாம் நூற்றாண்டின் புத்தராக ராம்ஜி சிங் என்ற அறிஞர் கருதுகிறார். இருப்பினும் காந்தி 'காந்தியத்தை' அங்கீகரிக்கவில்லை: தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புப் பெயர்ப் பட்டியல் ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும், தனித்தன்மைகளுடன் பிற ஊர்களிலிருந்து வேறுபட்டு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்களும், அவற்றின் சிறப்புப் பெயர்களும் கொண்ட பட்டியல் இது. அச்சன் உறங்காத வீடு (திரைப்படம்) அச்சன் உறங்காத வீடு (ஆங்கிலம்:Achanurangatha_Veedu), (மலையாளம்: അച്ഛനുറങ്ങാത്ത വീട്) லால் ஜோஸ் இயக்கத்தில் மற்றும் பாபு ஜனார்தனன் எழுதி சனவரி 6 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1996 செப்டம்பரில் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி பள்ளி பேருந்து நடத்துநர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்தப் (பாலியல்) பின் அச்சிறுமியை கேரளத்தின் மிக முக்கிய அரசியல் வாதிகள் மற்றும் பெரிய பணக்கரரிடம் விற்றிருக்கிறான். இவர்கள் கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஊர் ஊராகப் கூட்டிச் சென்று அனுபவித்த பின் 40 நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 42 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சனவரி 6 - 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்தது. நிகழ்வியல்வு பேயஸியன் பகுவியலில் நிகழ்வியல்வைக் கொண்டு துணையலகுகளைக் கண்டறியலாம். நிகழ்வியல்வுச் சார்பின் தொகையீடு ஒன்றல்ல. துணையலகுகளைக் கண்டறிய கட்டுப்பாட்டிற்குட்பட்ட எதிர்வுப் பெறுமதியைப் பெற்று, அதன் மீப்பெருமதிப்பை தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல முறை செய்து ஒருங்கல் நிபந்தனையைச் சரி பார்க்கவும். திருப்புகழ்மாலை திருப்புகழ்மாலை அல்லது கட்டளை செபம் (இலத்தீன்: "Liturgia Horarum", ஆங்கிலம்:Liturgy of the Hours அல்லது Divine Office அல்லது canonical hours) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இறைவேண்டல் தொகுப்பு ஆகும். இது துறவிகளாலும், துறவற சபையினராலும், பொது நிலையினராலும் பயன்படுத்தப்படலாம். இதில் பெரும் பகுதி திருப்பாடல்களும், அதனோடு விவிலிய வசனங்களும், பிற பக்திப்பாடல்களும் இடம்பெறுகின்றன. திருப்பலியோடு சேர்ந்து இதுவே கத்தோலிக்க திருச்சபையின் வெளிப்படையான செப வாழ்வாகக் கருதப்படுகின்றது. திருப்புகழ்மாலையை வேண்டுவதில், குறிப்பிட்ட மணிக்கு உரிய உண்மையான நேரத்தை, இயன்றவரைக் கடைப்பிடிக்கவேண்டும். ஒருவர் திருப்பட்டம் பெற்றப்பின், கத்தோலிக்க திருச்சபையின் சட்டப்படி கட்டாயம் இச்செபத்தை தினமும் செபிக்க வேண்டும். கத்தோலிக்க குருக்களும் குருத்துவத்தை விரும்பும் திருத்தொண்டர்களும் உரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள திருவழிபாட்டு நூல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் திருப்புகழ்மாலையை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர்; எனினும் நிரந்தர திருத்தொண்டர்கள் ஆயர் பேரவையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு அதை நிறைவேற்ற வேண்டும். இச்செபமே, துறவற இல்லங்களின் அடிப்படை செபமாகக் கருதப்படுகின்றது. அர்ப்பண வாழ்வுச் சபை மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், அவர்களின் அமைப்புச்சட்டங்களின் விதிமுறைக்கேற்பக் இச்செபத்தை செபிக்க கடமைப்பட்டுள்ளனர். மற்றக் கத்தோலிக்க விசுவாசிகளும், சூழ்நிலைக்கேற்ப, திருப்புகழ்மாலையில், அது திருச்சபையின் செயல் என்றளவில், பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் பல திருச்சபைகளிலும் இதனை ஒத்த பழக்கம் உண்டு. கீழ்வரும் நேரங்களில் திருப்புகழ்மாலை செபிப்பது வழக்கம்: எல்லாமே என் பொண்டாட்டிதான் எல்லாமே என் பொண்டாட்டிதான் 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். குடும்பப்படம் எல்லாமே தனது மனைவிதான் என்று மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஒரு அப்பாவி மனிதனின் கதை. அம்மனிதனின் வாழ்வில் வரும் பிரச்சனைகளையும் மனைவியின் துணைகொண்டு அதை சமாளிப்பதையும் நகைச்சுவையுடன் விவரிக்கும் குடும்பச் சித்திரம். பெல்லின் சமன்பாடு பெல்லின் சமன்பாடு ("Pell's equation") கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள ஏதாவதொரு முழுவெண் கெழு சமன்பாடு ஆகும். இங்கு formula_2 ஒரு வர்க்கமல்லாத முழு எண்ணும், formula_3 முழு எண்களும் ஆகும். கார்ட்டீசியன் ஆள்கூறுகளில், இச்சமன்பாடு ஒரு அதிபரவளைவு வடிவத்தைக் குறிக்கிறது. இவ்வளைவு x, y என்பன முழு எண்களாக இருக்கும் புள்ளிகளூடாகச் செல்லும்போது x, y என்பவற்றுக்கான தீர்வு கிடைக்கிறது. "x" = 1, "y" = 0 என்பது இவ்வாறான ஒரு எளிமையான தீர்வு. ஜோசப் லூயி லாக்ராஞ்சி என்பவர் "n" என்பது நிறைவர்க்கமாக இல்லாதிருக்கும்வரை பெல் சமன்பாட்டுக்கு முடிவில்லாத அளவு பல வெவ்வேறான முழு எண் தீர்வுகள் இருக்கும் என நிறுவினார். இத்தீர்வுகளை, "n" இன் வர்க்கமூலத்தை x/y என்னும் வடிவத்திலான விகிதமுறு எண்ணால் துல்லியமாக அண்ணளவாக்குவதற்குப் பயன்படுத்தலாம். இந்தச் சமன்பாடு தொடர்பான ஆய்வு யோன் பெல் என்பவரால் செய்யப்பட்டது என லெனார்ட் ஆய்லர் பிழையாக எண்ணியதாலேயே "பெல் சமன்பாடு" என்னும் பெயர் ஏற்பட்டது. இச்சமன்பாட்டுக்கான பொதுத் தீர்வைக் கண்டறிந்த முதல் ஐரோப்பியர் புரூங்கர் பிரபுவே என ஆய்லர் அறிந்திருந்த போதும், இது விடயத்தில் அவர் புரூங்கரையும், பெல்லையும் குழப்பிக்கொண்டார் எனத் தெரிகிறது. தோராயமாக கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் இந்திய மற்றும் கிரேக்க நாடுகளில் பெல் சமன்பாட்டின் n = 2 ஆக இருக்கும், என்னும் நிலை மீதும், இதோடு நெருக்கமாகத் தொடர்புடைய, என்பதன் மீதும், ஆய்வுகள் இடம்பெற்றன. இவ்விரு சமன்பாடுகளும் 2 இன் வர்க்கமூலத்துடன் தொடர்புள்ளதாக இருந்ததாலேயே இவை ஆராயப்பட்டன. "x" உம் "y" உம் இச் சமன்பாட்டுக்குப் பொருத்தமாக அமையும் நேர் முழுஎண்களாக இருந்தால், x/y என்பது √2இன் அண்ணளவாக்கம் ஆகும். இந்த அண்ணளவாக்கத்தில் வரும் எண்கள் "x" உம், "y" உம் பைதகோரியக் கணிதவியலாளர்களுக்குத் தெரிந்திருக்கிறது. திணை கொள் நெறி தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது எனக் கொள்வது எப்படி எனத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆகையால் திணையைக் குறிப்பதற்கு நிலத்தை அடிப்படையாய்க் கொள்ளாமல் உரிப்பொருள் நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொள்வது நெறி. பல்லவி கருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் பல்லவி என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண்ணம் முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது. கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமன்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை எடுப்பு, முதல்நிலை, முகம் ஆகிய சொற்களால் குறிப்பிடுவர். இந்துத்தானி இசையில் இதை ஸ்தாயி என்பர். ஒரு இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும். பல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு தாள வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. பக்கவாத்தியம் வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு. அலைபாயுதே ... என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும். பல்லவி அனுபல்லவி சரணம் இராகம் தானம் பல்லவி யாழ்ப்பாண விசுவகம்மாளர் யாழ்ப்பாணம் விஸ்வகுலம் எனப்படும் சாதி கொல்லர், தட்டார், கண்ணார், கட்சிப்பர், தச்சர் ஆகிய உட்பிரிவுகளை கொண்டதாகும். இவர்கள் சைவர்கள் ஆவர். தீட்சை எடுத்து பூநூல் அணிவது கட்டாயமாகும். ஆசாரங்களையும், சைவ வழிபாடுகளையும் முறையாகப் பின்பற்றுபவர்கள். திருமணம் தங்களுக்குள்ளும், தங்கள் உட்பிரிவுகளுக்குள்ளும் செய்து கொள்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் தட்டார் தெரு, கன்னாதிட்டி, நல்லூர், பெருமாள்கோவிலடி, நாச்சிமார்கோவிலடி, கேசாவில் பிள்ளையார் கோவிலடி, காளி கோவிலடி, சிவன் கோவிலடி, வண்ணார்பண்ணை, செட்டித்தெரு, சங்கத்தானை போன்ற இடங்கள் இவர்களின் பூர்விகமாகும். வெப் மாஸ்டர் வெப் மாஸ்டர் (webmaster) வலை இயக்குனரும் மேலாளரும் வடிவமைப்பாளரும் ஆவார். இவரது பணி வலை கண்காணித்தல், வலை இயக்கம், வெப் இயக்குதல் போன்றவை அறிதல் அவசியம். இவர் ஜாவாஸ்கிரிப்ட், பி.எச்.பி மற்றும் பேர்ள் ஆகிய மொழிகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும். இவர் தள உருவாக்கத்திலும், நிர்வகிப்பது மட்டுமின்றி, உள்ளடக்கத்தை தொகுத்தல், விளம்பரங்களைச் சேர்த்தல் போன்ற பணிகளையும் செய்வார். இவரின் முக்கியப் பணிகள் தளத்தில் ஒவ்வொருவருக்கும் அணுக்கங்களை (அதிகாரம்) நிர்வகிப்பது, தளத்தின் வடிவமைப்பை மாற்றுவது ஆகியன. இவரின் பணிகளில் வலைதளத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதும் ஒன்று. பெரிய தளங்களின் வெப் மாஸ்டர்கள் தளங்கள் தொடர்பான அதிகளவிலான மின்னஞ்சல்களையும் நிர்வாகிப்பார்கள். தெற்காசிய முஸ்லிம் தேசியம் தெற்காசியாவில் முஸ்லிம் தேசியம் என்று தெற்கு ஆசியாவின் முஸ்லிம்களால் இசுலாமியக் கொள்கைகளையும் அடையாளத்தையும் முன்னிலைப் படுத்தி வெளிப்பட்ட அரசியல் மற்றும் பண்பாட்டு தேசிய இயக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. தெற்காசியாவில் நிலவிய பல்வேறு இசுலாமியப் பேரரசுகளின் தாக்கத்தில் துவங்கிய இத்தேசிய உணர்வு இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த நிகழ்வுகளால் வலுப்பட்டு இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளது. வட இந்தியாவில் தில்லி சுல்தானகமும் முகலாயப் பேரரசும் ஆண்ட காலத்திலேயே முசுலிம் தேசிய சிந்தனைகள் வேரூன்றத் துவங்கின. வலிமை மிக்கதாக அமைந்திருந்த அவர்களின் படைகளாலும் மத்திய கிழக்கு, பெர்சியா மற்றும் நடுவண் ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த முசுலிம் மக்களாலும் இந்தியர்களிடையே இசுலாமிய சமயம் தழைத்தோங்கியது. முதல் இசுலாமிய எதிர்ப்பாக 1766இல் முசுலிம் மன்னன் திப்பு சுல்தானின் மைசூர் ஆயுதப் போராட்டம் அமைந்தது. இதுவே பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இந்திய விடுதலை இயக்கத்திற்கு செயலூக்கியாகவும் அமைந்தது. தொடர்ந்து முசுலிம் அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளுமான சையது அகமது கான், சையது அமீர அலி மற்றும் ஆகா கான் போன்றோர் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இயக்கங்களில் முக்கிய பங்காற்றினர். முசுலிம்களுக்கானத் தனிநாடு மற்றும் பிரிவினைக்கானக் கருத்துகள் கவிஞரும் தத்துவவியலாளருமான சர் அல்லாமா முகமது இக்பால் மற்றும் அரசியல்வாதி சௌத்தரி ரகமது அலி போன்றோரால் உருவானது. திமோதி டால்டன் திமோதி டால்டன் ( பிறப்பு 21 மார்ச் 1946) இவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களில் நடித்தவர் ஆவர். இவர் தந்தை இங்கிலாந்து மற்றும் தாய் அமெரிக்காவை சேர்த்தவர். நூற்றெட்டு சிவதாண்டவங்கள் நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்தார் சிவபெருமான். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆடல் வல்லான் கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரத்தில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களையும் ஆடும் பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களில் என்பத்து ஒரு தாண்டவங்கள் காணப்படுகின்றன. திருவதிகை வீரட்டனேசுவரர் கோயில் கதவில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன் இணுவில் அண்ணமார் கோயில் இணுவில் அண்ணமார் கோயில் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கோயில். இணுவிலில் இருந்து உரும்பிராய் நோக்கிச் செல்லும் கருணாகரப் பிள்ளையார் கோயில் வீதியில் காங்கேசன்துறை வீதியில் இருந்து ஏறத்தாழ அரைக் கிலோமீட்டர் தொலைவில் இக் கோயில் உள்ளது. யாழ்ப்பாணத்தின் பிற இடங்கள் சிலவற்றிலும் காணப்படும் அண்ணமார் கோயில்களைப் போலவே இதுவும் தாழ்த்தப்பட்டவர்களான "பள்ளர்" வகுப்பினருக்கு உரிய கோவிலாக உள்ளது. பனை மரம் ஒன்றைச் சுற்றி வளர்ந்த ஆலமரம் ஒன்றுக்குக் கீழே, கட்டிட அமைப்புக்கள் எதுவும் இன்றி, மரபு வழிச் சின்னங்களுடன் நாட்டார் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இயங்கிவந்த இக் கோயில் அண்மைக் காலத்தில் கட்டிடங்களுடன் கூடிய கோயிலாக மாறியுள்ளது. அத்துடன், சமசுக்கிருதமயமாக்கத்தின் விளைவாக இது வேணுகோபால சுவாமி கோயில் எனப் பெயர் மாற்றம் அடைந்துள்ளதுடன், விக்கிரகங்களையும் வைத்து வணங்குகின்றனர். இக் கோயிலின் தோற்றம் குறித்த கதை ஒன்று உள்ளூரில் நிலவுகின்றது. எனினும், இக் கதை பல வேறுபாடுகளுடன் சொல்லப்படுகின்றது. உயர்குடி எனக் கருதப்படும் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இருவர் புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றதும், அவர்களின் கீழ் பணிபுரிந்த பள்ளர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அவர்களைத் தொடர்ந்து அருகில் இருந்த பனை மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றதும், கதைக்கான அடிப்படை. அவ்வாறு விண்ணுலகம் சென்றவர்களை அவரவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுளராக வழிபட்டனராம். வெள்ளாளர் ஏறிய புளிய மரத்தடியில் இளந்தாரி வழிபாடும், பனை மரத்தடியில் அண்ணமார் வழிபாடும் தோன்றின என்கின்றனர். எனினும், சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம், அவர்களின் எண்ணிக்கை, மரங்களில் ஏறி விண்ணுலகம் சென்றமைக்கான காரணம் என்பவை தொடர்பில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த "பஞ்சவன்னத் தூது" என்னும் நூல் வெள்ளாளர் குடிப்பிறந்த இளந்தாரி எனப்படும் கைலாயநாதன் இணுவில் பேரூரின் ஆட்சியாளன் என்றும், அண்ணமார் எனப்படுவோர் அவனுக்குக் கீழே பணிபுரியும் வீரர்கள் என்றும் கூறுகிறது. இதைத் தழுவிப் பிற்காலத்தில் நூல் எழுதியோர் சிலர் அண்ணமார் கைலாயநாதனின் மெய்க்காப்பாளன் எனக் குறிப்பிடுகின்றனர். கள ஆய்வில் பெற்ற வாய்வழிச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சண்முகலிங்கன் இன்னொரு வேறுபாடான கதையைக் கூறுகிறார். இக் கதையின் படி புளியில் ஏறிய கைலாயநாதன், காலிங்கராயன் என்னும் இருவர் வெள்ளாள இனத்தைச் சேர்ந்த உடன்பிறந்தோராகவும், பனையில் ஏறிய பள்ளர் வகுப்பைச் சேர்ந்த இளைஞன் அவர்களுடன் குடிமை உறவு கொண்டவனாகவும் கொள்ளப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்த சண்முகலிங்கன், பழைய மரபுப்படி அண்ணமார் கோயில்களில், கல், பொல்லு, சூலம் போன்றவற்றுள் ஒன்றை அல்லது இரண்டை புனிதப் பொருளாகக் கருதி வழிபட்டு வந்ததாகக் கூறுகிறார். இணுவில் அண்ணமார் கோயிலிலும் அண்மைக்காலம் வரை கல்லும் பொல்லும் வைத்து வழிபட்டதாகத் தெரிகிறது. அண்ணமார் கோயில்களின் மரபுக்கு ஏற்ப பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இக் கோயிலிலும் பூசாரியாக இருப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒரு முறை அயலில் உள்ள இளந்தாரி கோயிலில் பொங்கல் வைத்துப் படைக்கும்போது அண்ணமாருக்கும் படையல் வைப்பது வழக்கமாக இருந்தது. பள்ளர் சமூகத்தினர் அண்ணமார் கோயிலடியில் பொங்கல் வைத்து, அசைவ உணவு வகைகளையும் படைத்து வழிபடுவர். அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், சாதி அடிப்படையிலான சமூக உறவுகள் தளர்ந்து வருவதாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பொருளாதார அடிப்படையில் உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைத்ததாலும், அண்ணமார் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. 1998 ஆம் ஆண்டில், கட்டிடம் எதுவும் இல்லாதிருந்த இவ்வழிபாட்டிடத்துக்கு அருகே கட்டிடம் அமைக்கப்பட்டது. வேணுகோபாலசுவாமி கோயில் எனப் பெயர் கொடுத்து விக்கிரகம் ஒன்றும் வைத்ததுடன் குடமுழுக்கும் செய்தனர். அண்ணமார் கோயில் ஆலமரம் புதிய கோயிலின் தலவிருட்சம் ஆனது. ஆல மரத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் அமைத்து அதோடு சேர்ந்ததாக ஒழுங்கையை நோக்கியதாக அண்ணமாருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக் கோயிலுக்குத் தினமும் இரண்டு காலப் பூசைகளும் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் 15 நாட்கள் அலங்கார உற்சவங்களும் இடம்பெற்று வருகின்றன. 14 ஆம் நாள் தேர்த் திருவிழாவும், 15 ஆவது நாளில் தீர்த்தத் திருவிழாவும், 16 ஆவது நாளில் திருக்கல்யாணமும் இடம்பெறுகின்றன. தேர்த் திருவிழாவுக்காகப் புதிய தேரும், அதற்குப் பாதுகாப்பாக ஒரு தேர்முட்டியும் இக் கோயிலில் அமைந்துள்ளன. வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு மலரிடுகை மலரிடுகை என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இத்தாண்டவம் தாளபுஷ்பபுடம் என்றும் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே முதல் கரணமாகும். இடது பக்கத்து மார்பிற்கு நேராக, புஷ்பபுட முத்திரை பிடித்து கால் நுனிகளால் சஞ்சரிப்பவராக சிறிது வணங்கிய பக்கத்தையுடையவராக நடிப்பது புஷ்பபுடத்தோடு இடதுப் பக்கமாக இருப்பதால் இது தலபுஷ்பபுடம் என்னும் பெயர்பெற்றது. ஒண்ணா இருக்க கத்துக்கணும் ஒண்ணா இருக்க கத்துக்கணும், 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சமூகத் திரைப்படம் தன் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஆடு மாடுகள் போன்று நடத்துகிறார் அந்த ஊர் பண்ணையார். கல்வியறிவு இல்லாத அந்த மக்கள் தங்களை அறியாமலே அந்த அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர். ஊருக்குப் புதிதாக வரும் பள்ளிகூட வாத்தியார் அம்மக்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். அம்மக்களுக்கும் அவர்களது அறியாமையையும் அதன் காரணமாய் அவர்கள் முன்னேறாமல் இருப்பதையும் பண்ணையாரால் சுரண்டப்படுவதையும் உணர்த்துகிறார். தன்னிலை உணரும் மக்களின் நிலை என்ன, அந்த பண்ணையாரின் நிலை என்ன என்பதை விளக்கும் அருமையான திரைச்சித்திரம். நாட்டில் உள்ள பல ஊர்களில் புரையோடிப்போய் இருக்கும் சாதிகொடுமைகளைக் கட்டும் சமூகத் திரைப்படம் இது. பார்வதி என்னை பாரடி பார்வதி என்னை பாரடி (Parvathi Ennai Paradi) வி. சேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். சரவணன், புதுமுகம் ஸ்ரீபார்வதி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், சார்லி, வாசுவிக்ரம், காஜா ஷெரிப், லலிதாகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கே. ஆர். கங்காதரன் தயாரிப்பில், இளையராஜா இசை அமைத்து 23 ஜூலை 1993 ஆம் தேதி இப்படம் வெளியானது. காதல்படம் சரவணன், புதுமுகம் ஸ்ரீபார்வதி, விஜயகுமார், ஸ்ரீவித்யா, ஜனகராஜ், சார்லி, வாசுவிக்ரம், காஜா ஷெரிப், லலிதாகுமாரி, கோவை பாபு, எல்.ஐ.சி. நரசிம்மன், இடிச்சபுளி செல்வராஜ், பசி நாராயணன், தங்கராஜ், சிங்கமுத்து. செல்வந்தரான ராஜதுரை (விஜயகுமார்), ஊரில் மிகவும் மதிக்கத்தக்க நபராவார். அவரின் குறும்புக்கார மகள் பார்வதி (ஸ்ரீபார்வதி) . ராஜதுரையின் ஊரில் உள்ள கல்லூரிக்கு தமிழ் ஆசிரியராக வருகிறார் வெங்கடராமன் (ஜனகராஜ்). வேங்கடராமனிடம் தனிப்பாடம் பயில்கிறாள் பார்வதி. வேங்கடராமனின் மனைவி காயத்ரி (ஸ்ரீவித்யா) மற்றும் மகன் சிவா (சரவணன்). அநீதியை தாங்க முடியாத, முன் கோபம் கொண்டவன் சரவணன். கல்லூரியில் படிக்கும் பொழுது, மந்திரியின் மகனை சரவணன் அடித்ததால், அவன் கல்லூரியில் இருந்து விலக்கப்பட்டான். பின்னர், செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்கிறான் சரவணன். அந்த நிறுவனத்தின் முதலாளியுடன் மோதல் ஏற்பட்டு, சரவணனுக்கு சிறை செல்ல நேரிடுகிறது மீண்டும் ஊர் திரும்பும் சிவா, தன் பெற்றோரிடம் செல்கிறான். முதலில் பார்வதியுடன் மோதல் ஏற்பட்டு. பின்னர் அதுவே காதலாக மாறுகிறது. ராஜதுரையின் உருவினார் ரமேஷ் (வாசு விக்ரம்) பார்வதியை திருமணம் செய்ய விரும்புகிறான். இறுதியில் பார்வதியை யார் மணந்தார் எனபதே மீதிக் கதையாகும். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. வாலி, கங்கை அமரன், பிறைசூடன் எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார். இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. நீங்களும் ஹீரோதான் நீங்களும் ஹீரோதான் 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சமூகத் திரைப்படம், நகைச்சுவைப்படம் கிராமத்திற்கு வரும் திரைப்படப் படப்பிடிப்புக் குழுவினரும், அந்த கிராமத்துவாசிகளும் சந்திக்கையில் நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. சினிமா மோகத்தில் சினிமாவில் சேர்ந்து புகழும் பணமும் பெற நினைக்கும் கிராமத்துக் கலைஞர்களுக்கு உண்மையான சினிமா என்றால் என்ன என்பதைப் புரிய வைக்கும் நகைச்சுவைச் சித்திரம். 'பாவாடைசாமி' என்னும் பெயரில் கவுண்டமணியின் வித்வான் கதாப்பாத்திரம் எல்லாராலும் ரசிக்கப்பட்ட பாத்திரம். தலைத்தோப்பு தலைத்தோப்பு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரான் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு கடற்கரையோர கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் மீன்பிடித்தொழில் செய்கின்றனர். பெண்கள் கூலிவேலைக்குச் செல்கின்றனர். இந்த ஊரில் ஒரு சிறிய தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர்கல்விக்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனியார் பள்ளியை நாடிச் செல்கின்றனர். கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்களைக் கொண்ட இந்த கிராமத்தில் உயர்கல்வி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. உள்ளுறை உவமம் தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு உரிய திணையைத் தீர்மானிப்பதற்குத் திணை கொள் நெறி எனத் தனி இலக்கண நெறி ஒன்று உண்டு. அது உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. உரிப்பொருளானது பாடலில் வெளிப்படையாகப் புலப்படுவதோடு மட்டுமன்றி இறைச்சி உள்ளுறை உவமம் ஆகியவற்றாலும் வெளிப்படும். அகத்திணையில் உட்பொருள் வரின் அது உள்ளுறை உவமம் என்று கூறப்படும். புறத்திணையில் உட்பொருள் வரின் அது ஒட்டணி (பொருள் ஒட்டிக்கொண்டிருக்கும் அணி) என்னும் பிறிதுமொழிதல் அணி என்று கூறப்படும். உள்ளுறை உவமத்தில் ஐந்து வகை உண்டு. விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த கால்முளை அகைய நெய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப ‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுக் குறுகும் – நிறைமதுச்சேர்ந்து உண்டாடும் தன்முகத்தே செவ்வி உடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு. தொடி நோக்கி மென் தோளும் நோக்கி, அடி நோக்கி அஃது ஆண்டு அவள் செய்த்து அசையியற்கு உண்டு ஆண்டு ஒர் ஏஎர் யான் நோக்கப் பசையினள் பைய நகும் உள்ளுறையில் சிறப்பு உள்ளுறை பெரிதும் போற்றப்படும் சிறப்பு மிக்கது. அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் எண்ணுவது எவன்கொல் அறியேன் என்னும் கிளாமங்கலம் கிளாமங்கலம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள கிராமம். 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி கிளாமங்கலத்தின் மொத்த மக்கள் தொகை 2372 பேர், 1140 ஆண்களும் 1232 பெண்களும் உள்ளனர். கிளாமங்கலம் கிராமம் கீழ்க்காணூம் தெருக்களை உள்ளடக்கியது, கிளாமங்கலம் கிராமம் தெற்குத் தெருவில் உள்ள குருந்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அக்கோவிலில் ஐய்யனார், வீரனார், கருப்பு சாமி, முனி, காளி போன்ற தெய்வங்கள் உள்ளன. கிளாமங்கலம் கிராமம் வடக்குத் தெருவில் உள்ள ஆக்கமுடைய ஐயனார் கோவில் பிரசித்தி பெற்றது, அக்கோவிலில் ஐய்யனார், வீரனார், கருப்பு சாமி,செம்முனி, காளி போன்ற தெய்வங்கள் உள்ளன. குஞ்சான் தெருவில் அரங்கநாதர் ஸ்வாமி திருக்கோவில் உள்ளது கிளாமங்கலம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமம். இங்கு நெல், தென்னை, கரும்பு, நிலக்கடலை முதலியவை பயிரிடப்படுகின்றன. ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியும் மூன்று அரசு தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. ராமசுப்ரமணியம் ராம சுப்ரமணியம் (எ) ராம் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி போன்ற இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007ம் ஆண்டு வெளியான இவரின் முதல் படைப்பான கற்றது தமிழ் நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெறவில்லை. அத்திரைப்படம் ஜீவாவிற்கும் அஞ்சலிக்கும் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுக் கொடுத்தது. 2013 இல் , இவர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , இயக்கிய "தங்க மீன்கள்" என்ற படம் வெளியானது. இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்க மீன்கள்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது. இந்தியாவில் சோசலிசம் இந்தியாவில் சமவுடைமை அல்லது சோசலிசம் பேரரசுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போதே நிலைபெற்று நீண்ட வரலாற்றை உடையது; நாட்டின் அரசியல் மரபுடைமை வரலாற்றில் பெரும் பங்கு கொண்டது. உருசியப் புரட்சியின் போதே இந்தியாவிலும் சமவுடைமை இயக்கம் உருவாகத் துவங்கியது. இருப்பினும், 1871இலேயே கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு குழு அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியத்தின் இந்தியக் கிளையைத் துவங்க கார்ல் மார்க்சை அணுகினர். ஆனால் அது ஈடேறவில்லை. மார்க்சையும் ஏஞ்செல்சையும் குறிப்பிட்டு இந்தியாவில் வெளியான முதல் ஆங்கிலக் கட்டுரை மார்ச் 1912இல் மாடர்ன் ரிவ்யூ என்ற கொல்கத்தா சஞ்சிகையில் வெளியானது. இதில் செருமனியில் வாழ்ந்த இந்தியப் புரட்சியளர் லாலா ஹர் தயாள் எழுதிய "கார்ல் மார்க்சு – நவீன இருடி" என்ற குறும் வாழ்க்கை வரலாறு வெளியானது. கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு முதன்முதலாக ஓர் இந்திய மொழியில் வெளியானது 1914இல் ஆர். இராமகிருஷ்ணப் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். இந்திய ஊடகங்களில் உருசியப் புரட்சியின் பெரும் தாக்கம் காணப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் தங்களை வரையரைத்துக் கொள்ளும் உரிமையை போல்ஷ்விக் கொள்கை முன்னிறுத்தியது இந்தியர்களைக் கவர்ந்தது. புதிய உருசிய ஆட்சியையும் லெனினையும் பாராட்டிய பிரபல இந்தியர்களில் பிபின் சந்திரப்பாலும் , பால கங்காதர திலக்கும் முதன்மையானவர்கள். உருசியப் புரட்சியைக் குறித்து அறிந்தவுடனேயே அப்துல் சத்தர் கைரியும் அப்துல் சபார் கைரியும் மாசுகோ சென்று லெனினை சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தியாவில் பொதுவுடமைக் கருத்துக்கள் பரவ கிலாபத் இயக்கமும் பெரும் பங்காற்றியது. கலீபகத்தை காப்பாற்ற பல இந்திய முசுலிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். அவர்களில் பலர் சோவியத் ஒன்றியத்தில் பயணம் புரிந்தவேளையில் பொதுவுடமைக் கொள்கையால் கவரப்பட்டனர். இவர்களுடன் பல இந்துக்களும் சோவியத்தின் பல பகுதிகளுக்கு வருகை பரிந்தனர். லெனினின் பொதுவுடைமை (போல்ஷ்விக்) கொள்கைகளுக்கு வளர்ந்துவந்த ஆதரவினால் கவலையடைந்த குடியேற்றவாத அரசு இக்கொள்கை இசுலாமிற்கு எதிரானதாக ஃபத்வா வெளியிடச் செய்தனர். இந்தியாவிற்குள் மார்க்சியப் புத்தகங்கள் இறக்குமதியாவதை சுங்கத்துறையினர் தடுத்தனர். உள்துறை அமைச்சில் பொதுவுடமைக் கொள்கைகளின் தாக்கத்தை கண்காணிக்கத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இக்கொள்கைகளுக்கு எதிரானப் பல நூல்கள் வெளியாயின. முதல் உலகப் போரின் முடிவில் இந்தியாவில் தொழில்துறை விரைவாக முன்னேறியது. அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்றமடைந்தன. இக்காரணங்களால் இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் உருவாகத் துவங்கின. பெருநகரப் பகுதிகளில் உருவான இச்சங்கங்கள் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டன. 1920இல் அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரசு உருவானது. அரசியல் யாப்பு நீதிமன்றம் அரசியல் யாப்பு நீதிமன்றம் ("constitutional court") என்பது நாடொன்றின் அரசியலமைப்புக் குறித்த சட்டங்களை ஆராயும் ஓர் உச்ச நீதிமன்றம் ஆகும். நாடாளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் அரசியலமைப்புக்கு ஏற்றதா அல்லது முரணானதா என்பதை அரசியல் யாப்பு நீதிமன்றம் தீர்மானிக்கும். உலகின் பெரும்பாலான நாடுகள் தனியான அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றைக் கொண்டிருப்பதில்லை, பதிலாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றமே அரசியலமைப்பு முரண்பாடுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும். ஆஸ்திரியாவே முதன் முதலாக தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றத்தை நிறுவியது. 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1945 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் தீர்மானத்தை செக்கோசிலோவாக்கியாவே முதன் முதலாக தனது நாடாளுமன்றத்தில் 1920 பெப்ரவரி 2 ஆம் நாள் நாள் நிறைவேற்றியது, ஆனாலும் அதன் நீதிமன்ற 1921 நவம்பரிலேயே நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது உச்சநீதிமன்றங்களின் ஊடாக அரசியல் யாப்புகளின் நீதிமுறை மேலாய்வுகளை மேற்கொண்டன. இலங்கையில் 1972 - 1978 காலப்பகுதியில் தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் நடைமுறையில் இருந்தது. தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் உள்ள நாடுகள்: பாலியல் நாட்டம் பாலியல் நாட்டம் ("sexual orientation") என்பது ஒருவர் யாருடன் நீடித்த உணர்வுபூர்வமான, காதல் வயப்பட்ட மற்றும்/அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. இது ஒருவரின் அடையாளம், நடத்தைகள், சமூக உறுப்பாண்மையுடனும் தொடர்புடையது. பாலியல் நாட்டம் என்பது பல்வேறு பாலின அடையாளங்களோடு ஒரு தொடர்மத்தில் அமைகிறது. பொதுவாக எதிர்பால் நாட்டம், தற்பால் நாட்டம், இருபால் நாட்டம், நாட்டம் தொடர்பாக தெளிவற்ற நிலை, நாட்டம் இன்மை என்று வகைப்படுத்தப்பட்டு கருத்தாடப்படுகின்றன. செய்சுவல் ஓறியன்ரேசன் (Sexual orientation) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் பாலியல் ஒருங்கிணைவு அல்லது பாலியல்பு என்றும் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சவன்னத் தூது பஞ்சவன்னத் தூது என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், இணுவில் பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு. இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் ஆவார். ஒரு பொருளையே தூதாக அனுப்புவதாகக் கொண்டு அமைவதே பெரும்பாலான தூது இலக்கியங்களின் நடைமுறை. பஞ்சவன்னத் தூது நூலில், தலைவி தலைவனிடம் தூது செல்வதற்கு ஐந்து பொருட்களை அணுகுகிறாள். இதனாலேயே இந்நூலுக்குப் "பஞ்சவன்னத் தூது" என்னும் பெயர் ஏற்பட்டது. பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன், தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவனும், இணுவில் பேரூரின் ஆட்சியாளனாக இருந்தவனுமான "காலிங்கராயன்" என்பவனின் மகன் என்கிறது இந்நூல். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை அண்டி இலங்கையின் வடபகுதி பாண்டியரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இணுவிலுக்கான அவர்களின் பிரதிநிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். நல்லரசு புரிந்து வந்த அவன் ஒரு நாளில் தனது மாளிகைக்கு அயலில் இருந்த புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றானாம். அதைக் கண்ட அவனது குடிமக்கள் வருந்தித் துதித்தபோது. கைலாயநாதன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்து மீண்டான் என்பது கதை. மக்களும் அவனுக்குக் கோயில் அமைத்து இளந்தாரி என்னும் பெயரால் வழிபட்டு வந்தனர். இந்த வழிபாடு இப்போதும் இப் பகுதியில் நிலவிவருகின்றது. கைலாயநாதன் வீதி உலா வரும்போது அவனைக் கண்ட சந்திரமோகினி என்பவள் அவன் மீது காதலுற்று வெண்ணிலா, தென்றல், கிளி, அன்னம் ஆகியவற்றைத் தூதனுப்ப முயல்கிறாள். பின்னர் தனது தோழியைத் தூதாக அனுப்புகிறாள். தோழி சந்திரமோகினியின் நிலைமையைக் கைலாயநாதனுக்கு உரைத்து அவனது சம்மதம் பெறுவதே நூற்பொருளாக உள்ளது. பஞ்சவன்னத் தூது நூலில், வெவ்வேறு நீளங்களில் அமைந்த 44 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முதல் எட்டுப் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. இறுதியில் 11 பாடல்கள் இளந்தாரி துதியாகவும், தொடர்ந்து வரும் இரண்டு பாடல்கள் வாழ்த்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. 9 ஆம் பாடல் முதல் 31 ஆம் பாடல் வரையிலான 23 பாடல்களே தூது நூல் வகையுள் அடங்குவன. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இணுவிலில் கோயில் கொண்டிருக்கும் கடவுளரைத் துதித்துப் பாடியவை. இக்கடவுளர், பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியர், வைரவர், பத்திரகாளி என்போர். இவர்களுடன் இளந்தாரிக்கும் துதிப் பாடல் ஒன்று உள்ளது. பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மன் ஆகிய கடவுளரின் துணை வேண்டி இரண்டு காப்புப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. நூலில் பின்வரும் தலைப்புக்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன: பொதுவான தூது நூல்களில் இருப்பதைப் போலன்றி இந்நூலில் பல பாடல்கள் இசையுடன் பாடத் தக்கனவாக உள்ளன. இப் பாடல்களுக்கு இராகங்களும், தாளங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், நூல் கட்டியக்காரன் தோற்றத்தோடு தொடங்குவதால் இது நாடகப் பாங்கு கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இதனால், இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் இந்நூலில் உள்ளன. இணுவிலில் இளந்தாரி வழிபாட்டில் பஞ்சவன்னத் தூது முக்கியமான இடம் பெறுகிறது. இளந்தாரி வழிபாட்டில் சித்திரைப் புத்தாண்டை அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை பொங்கல் பொங்கி மடை வைத்துச் சிறப்பாக வழிபடுவர். இரவில் பஞ்சவன்னத் தூது நூல் படித்தல் இடம்பெறும். இது இத் திருவிழாவின் முக்கியமான ஒரு நிகழ்வாக விளங்குகிறது. இதை மக்கள் கூடியிருந்து கேட்பர். சிறப்புப் பூசை நிகழ்த்தி, சடங்கு முறையாகப் படிப்பைப் பூசகர் தொடங்கி வைப்பார். முற்காலத்தில் படிப்பதற்காகப் பஞ்சவன்னத் தூது நூல் பனையோலை ஏட்டில் எழுதிக் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அக்காலத்தில், கோயிலில் படிப்பதற்கான நூல்களை வீட்டில் வைத்துப் படிக்கலாகாது என நம்பினர். இதனால், எவரும் இதைப் படியெடுத்து வீட்டில் வைத்திருக்கும் வழக்கம் இருக்கவில்லை. இப் படிப்பின்போது பாடல்கள் இராகம், தாளத்தோடு இசைக் கருவிகளும் முழங்கப் பாடப்படுவதால் அடியார்களின் ஆட்டமும் இடம்பெறுவது உண்டு. ஸ்ரீ முருகன் நிலையம் ஸ்ரீ முருகன் நிலையம் என்பது மலேசியாவில் இயங்கி வரும் ஒரு கல்வி மையம் ஆகும். 1982 செப்டம்பர் 24ஆம் தேதி கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கல்வி மையம் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் டான் ஸ்ரீ எம். தம்பிராஜா. இவருடன், மலாயா பல்கலைக்கழகத்தின் மேலும் 42 தமிழ்மொழிக் கழகப் பட்டதாரி மாணவர்கள் இணைந்து, அந்த மையத்தை உருவாக்கினார்கள். இந்த மையம், மலேசியாவில் இதுவரை 16,000 இந்தியப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய 800 பட்டதாரிகளை, ஸ்ரீ முருகன் நிலையம் உருவாக்கி வருகிறது. மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலையில் அறியச் செய்யும் சாதனை. இது தவிர, ஆண்டுதோறும் ஒரு சிறந்த தாயாரைத் தேர்ந்து எடுத்து அவரைக் கௌரவிப்பும் செய்கிறது. மலேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு, பல வகைகளில் நிதியுதவிகள் செய்து வருகின்றன. மலேசிய இந்தியச் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேறவில்லை என்றால், எதிர்காலத்தில் அந்தச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு விடும் என்பதை மலேசிய இந்தியக் கல்வியாளர்கள் புரிந்து கொண்டனர். அதனால் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது. அரசியல் தலைவர்களும் அதையே வலியுறுத்தி வந்தனர். 1970 - 1980களில் இந்திய சமுதாயம் பொருளாதாரத் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. இந்தக் கட்டத்தில், மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு, மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் எம். தம்பிராஜாவிற்கு ஏற்பட்டது. அப்போது அவர், மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாறுப் பாட விரிவுரையாளராக இருந்தார். தன்னிடம் பயின்ற இந்திய மாணவர்களிடம் அதைப் பற்றி நிறைய பேசினார். அவர்களிடம் விவாதமும் செய்தார். இந்திய மாணவர்களிடம் சமுதாய விழிப்புணர்வுகள் ஏற்பட்டன. மலாயா பல்கலைக்கழகத்தின் 42 மாணவர்கள் ஒன்று கூடினர். மாணவர்கள் அனைவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது தமிழ் மொழிக் கழகத்தின் தலைவராக டத்தோ ஆ. தெய்வீகன் இருந்தார். இவர் இப்போது, சிலாங்கூர் மாநில காவல் துறையின் துணைத் தலைவராக இருக்கிறார். மாணவர்கள் அனைவரும் டாக்டர் தம்பிராஜாவிடம் சென்று பேசினர். தம்பிராஜாவிற்கு உதவியாக மற்றும் ஒரு விரிவுரையாளர் டாக்டர் எம். இராஜேந்திரன் என்பவர் இருந்தார். அவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை விரிவுரையாளர் ஆகும். அந்த 42 மாணவர்களின் பட்டியலில் டத்தோ எஸ்.கே. தேவமணி, டாக்டர் அருள்செல்வன், திருமதி. கோமதி தெய்வீகன், டாக்டர் பிரேமளா, பேராசிரியர் எம்.கிருஷ்ணன், பேராசிரியர் புவனேஸ்வரி, எஸ். ரகுநாதன், பரம் எட்டிக்கன், குப்பு ரெட்டி, மோகன், செல்லதுரை, ரத்னேஸ்வரி, மோகன கிருஷ்ணன், எஸ்.சேகரன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். மேலும் பலர் உள்ளனர். இந்திய சமுதாயத்தைக் கல்வியின் வழி, எப்படி உயர்த்திக் காட்டுவது என்று கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியின் உறைகலனாக அமைந்ததுதான் ஸ்ரீ முருகன் நிலையம். இந்து தெய்வத்தின் பெயரிலேயே ஒரு கல்வி மையம் உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களின் முதல் இலக்கு STPM தேர்வு எழுதும் மாணவர்கள்தான். எஸ்.டி.பி.எம். பயிற்சி மையத்தைத் தொடங்குவதற்கு காரணங்கள் உள்ளன. 1970, 1980களில் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் அடைவு நிலைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிறைவு செய்யவே மாணவர்கள் போதாமல் போய்விட்டனர். தொடர்ந்து ஆறு மாதங்களில் விரிவுரைக் கூறுகள், தேர்வு வழிகாட்டிகள், பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. அவர்களின் முதல் இலக்காக "STPM" தேர்வு எழுதும் மாணவர்கள்தான் இருந்தனர். STPM என்றால் Sijil Tinggi Pelajaran Malaysia. மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ் என்று பொருள்படும். ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு முன்னால் இரு ஆண்டுகள் உயர்க்கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தயார்நிலைக் கல்வி. அதைத்தான் எஸ்.டி.பி.எம். என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். ஒவ்வொரு எஸ்.டி.பி.எம். பாடத்திற்கும் 25 பாடம் கற்பித்தல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாடத் திட்டங்களைப் பல்கலைக்கழக மாணவர்களும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் ஒன்றாக இணைந்து தயாரித்தார்கள். அந்தப் பாடத் தயாரிப்புகளுக்கு, தம்பிராஜா தலைமை ஆலோசகராக இருந்தார். பாடத் திட்டங்களில் பயிற்சிகள், பயிலரங்குகள், முன்மாதிரி விடைகள், பழைய தேர்வுத் தாட்கள், பதில் நுட்பக் கூறுகள், உத்திகள், குறிப்புகள், சுயமாகப் பயிலும் திட்டங்கள், ஊக்குவிப்பு உரைகள் போன்றவை அடங்கும். முதல் எஸ்.டி.பி.எம். வகுப்பு செப்டம்பர் 1982 லிருந்து 1983 ஏப்ரல் வரை நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் 12/19இல், ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டது. அதே 1983ஆம் ஆண்டில், பெட்டாலிங் ஜெயா, செந்தூல், கிள்ளான், சிரம்பான் ஆகிய நகரங்களில், மேலும் எஸ்.டி.பி.எம். வகுப்புகள் திறக்கப்பட்டன. அப்படியே படிப்படியாக ஸ்ரீ முருகன் நிலையம் வளர்ந்து வந்தது. ஸ்ரீ முருகன் நிலையத்தின் மூன்று கோட்பாடுகள். பல வெளிநாட்டுக் கல்வி மையங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்விக் கோட்பாட்டைப் பின்பற்றி, அவர்கள் நாட்டிலும் அதைச் செயல்படுத்தி வருகின்றன. அதன்பின்னர், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் திறக்கப்பட்டன. ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு இப்போது 200க்கு மேற்பட்ட கல்வி மையங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்து, இதுவரையில் 16,000 பேர் பட்டதாரிகளாக வெளி வந்துள்ளனர். அந்தப் பட்டதாரிகளில் பலர் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, விரிவுரையாளர்களாக, தொழில்துறை வல்லுநர்களாக, விமானிகளாக, அரசதந்திரிகளாக, நிபுணத்துவ ஆலோசகர்களாக, ஆசிரியர்களாக, கணினி நிபுணர்களாகப் புகழ்பெற்று விளங்குகின்றனர். நூற்றுக் கணக்கானோர் அரசாங்க உயர்மட்டப் பணிகளில் இருக்கின்றனர். சிலர், சொந்தமாகத் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களையும் நடத்த வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சம் மாணவர்கள் கல்வி யாத்திரை எனும் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர். மலேசியாவின் எல்லாப் பகுதியில் இருந்தும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டு கல்விப் பிரார்த்தனை செய்கின்றனர். கோலாலம்பூர் பத்துமலை, ஈப்போ கல்லுமலைக் கோயில், பினாங்கு பாலதண்டாயுதபாணி ஆலயம், காஜாங் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன ஆலயம், மூவார் நாகமலை ஆலயம், தம்பின் வைதீஸ்வரர் ஆலயம் போன்ற சன்னிதானங்களில், கல்வி யாத்திரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த யாத்திரைகள் பெரும்பாலும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெறுகின்றன. அதிகாலை ஏழு மணிக்கு மாணவர்கள் கூடத் தொடங்கிவிடுகின்றனர். இரா. ரெங்கசாமி இரா. ரெங்கசாமி (பிறப்பு: செப்டம்பர் 3, 1953) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை மாவட்டக் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் கதை, கவிதை, நாடகம் போன்றவைகளை எழுதியிருக்கிறார். இவர் தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதை நாடகம் சிறுவர் நாவல்கள் சிறுவர் புதிர்கள் குழந்தைப் பாடல்கள் கேள்வி - பதில் பிற தமிழிசை வரலாறு முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது. பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப்புலமையும், இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன. பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும் ஒலிக் கூறுகளை நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர் இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய அந்த இசை முறையைப் "பண்" என்று அழைத்தனர். வாழும் நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப் (காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத் தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர். செயல்முறைத் தகைமைக்கு ஏற்பக் கலைஞர்கள் வெவ்வேறு வகுப்பினராகத் தொழில்பட்டனர். பாட்டுப் பாடியவர்கள் பாணர். கூத்து ஆடியோர்கள் கூத்தர். கருவி இசைத்தோர் யாழ்ப்பாணர், பறையர், துடியர், கிணைஞர் என்றவாறு அவரவர் கருவிப் பெயர் கொண்ட வகுப்பினர் ஆயினர். மேலும் இசைப் பொழிவுக் கலைஞர், குரலிசைக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், குழலிசைக் கலைஞர் ஆகியயோரும், இசை வளர்த்த நங்கையர்களும் இருந்துள்ளனர். நரம்புக் கருவி, காற்றுக் கருவி, தோற்கருவி ஆகியவற்றை முறையே யாழ், குழல், முழவு எனப் பொதுப்படக் கூறினர். இவை ஒவ்வொன்றிற்கும் உரிய பல்வேறு வகைக் கருவிகளை உருவாக்கினர். இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவை உதவின. முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா, இசைநுணுக்கம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுள்துறைக் கோவை முதலான பண்டைய இசைத் தமிழ் நூல்களாகும். இவற்றுள் சில காலத்தால் அழிந்துபட்டன. குரலானது, துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நிலைகளாகத் தமிழிற் சுட்டப்படுகிறது. சிலப்பதிகாரம் தமிழிசை இலக்கண நூல் என்றே போற்றப்படுகிறது. அதற்குரிய அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன. இடைக்காலத்தில் இசையோடு தமிழ் பாடிய ‘தேவார திருவாசகம்’ தமிழிசை வளர்ச்சியைக் காட்டக் கூடியனவாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் தேவாரத்திற்குரிய பண்களை வகுத்து அவற்றை அதன்படி பாடி, நாடெங்கும் பரப்பி வந்துள்ளனர். பரிபாடலும், தேவாரமும் இங்ஙனம் பண்முறைப் படி தொகுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இசைத்தமிழை வளர்த்தார். ஆயிரத்தெட்டு மேளகர்த்தாப் பண்களுக்கும் அவர் திருப்புகழ் பாடினார். இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்: அண்ணாமலை அரசர் 1943-இல் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கித் தமிழிசை வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்தார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரும், இரசிகமணி டி.கே.சியும், கல்கியும் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள். தீவிரவாதியாய் இருந்த சீமோன் தீவிரவாதியாய் இருந்த சீமோன் ("Simon the Zealot") அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது. சிறிய திருமடல் சிறிய திருமடல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல். தலைவன் “நாராயண”னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை அமைந்துள்ளது. நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி ஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான். மல்லாரி மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாதசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். இது போல ஆலயச் செயற்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் அச்செயலுக்கேற்ற மல்லாரி இசைக்கப்படுவதுண்டு. மல்லாரி பெரும்பாலும் கம்பீரநாட்டை இராகத்தில் இசைக்கப்படும். மேலும் கான பஞ்ச இராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வாராளி, ஸ்ரீஇராகம் ஆகியவற்றிலும் அமையும். தோடியிலும் சில வேளைகளில் இசைக்கப்படுவதுண்டு மயில்+ ஆரி மயிலாரி என்பது மரூவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில் நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது. மல்லாரி இசை அமைதிகளைக் கொண்டு ஆலயத்தில் நடைபெறும் செயற்பாடுகளை அறியலாம். ஆலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று பெரும்பாலும் மல்லாரி இசைப்பதில்லை. மற்ற நாட்களில் இறைவன் வீதியுலா முடிந்ததும் அலங்காரம் களைந்து பள்ளியறைக்குச் செல்லும்பொழுது ஊஞ்சல் பாட்டு இசைப்பர். இது முடிந்ததும் கதவு தாளிடுவர். தாளிட்டதும் மல்லாரியைக் கொஞ்ச நேரம் இசைக்க வேண்டும். இம்மரபு முறைகள் முறையான கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் இசை மாணவர்களுக்கு ஆசிரியரால் அளிக்கப்படுகிறது. ரிதுபர்னோ கோஷ் ரிதுபர்னோ கோஷ் ( "Ritupôrno Ghosh", 31 ஆகத்து 1963 – 30 மே 2013) ஒரு வங்காள மொழி திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 11 நாடளவிலான திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.பொருளியலில் பட்டம் பெற்ற கோஷ் ஒரு விளம்பர நிறுவனத்தில் படைப்புத்திறமிக்க கலைஞராக தமது பணிவாழ்வைத் துவங்கினார். அவரது முதல் திரைப்படமாக "ஹைரர் அங்க்டி" 1992இல் வெளியானது. 1994இல் வெளியான அவரது அடுத்த திரைப்படம் "உன்னிசே ஏப்ரல்" சிறந்த திரைப்படமாக தேசியத் திரைப்பட விருது பெற்றது. கோஷ் தம்மை சத்யஜித் ராய் இரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இருபது ஆண்டுகள் விரிந்த அவரது திரைவாழ்வில் 12 தேசிய விருதுகளையும் சில உலகளாவிய விருதுகளையும் பெற்றுள்ளார். பெரும் மாரடைப்பு காரணமாக மே 30, 2013 அன்று கொல்கத்தாவில் கோஷ் உயிரிழந்தார். ரிதுபர்னோ கோஷ் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவருடைய பெற்றோர்கள் இருவரும் திரைப்படம் சம்மந்தமுடையவர்கள், இவர் தந்தை ஓர் ஆவணப்படம் உருவாக்குபவர் ஆவார். இவர் தன் பள்ளி கல்வியை சவுத் பாயிண்ட் உயர்நிலை பள்ளியில் பயின்றார். மேலும் இவர் தன் உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்றார். பிறிதுமொழிதல் அணி பிறிது மொழிதல் அணியைத் தண்டியலங்காரம் என்னும் நூல் ஒட்டணி என்று குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் 35 அணிகளில் இது ஒன்று. புலவர் தான் சொல்ல விரும்பும் கருத்து தன் பாடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்படி பிறிதொன்றைக் கூறுவது ஒட்டணி. இதனை நுவலா நுவற்சி, தொகைமொழி என்றும் குறிப்பிடுவர். அகப் பாடல்களில் இப்படிப் பொருள் ஒட்டவைக்கப்படுமாயின் அது உள்ளுறை உவமம் எனப்படும். இது தொல்காப்பியம் கூறும் தமிழ்நெறி. பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து தமிழ்நூல் தண்டியலங்காரம் வடநூல் தண்டியலங்காரத்தைப் பின்பற்றியது. இது இந்த அணியை விளக்குவது புதுவரவு. இந்த அணியில் நான்கு வகை உண்டு. இவற்றிற்குப் பழைவுரை தரும் மேற்கோள் பாடல்கள், உரையாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாகவும், அகத்துறைப் பாடல்களாகவும் உள்ளன. ரோஷன் சேத் ரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார். மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் மற்றும் ஒரு நீண்ட பயணம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டு அறியப்பட்டவர் சேத் இந்தியாவின் பீகார் தலைநகரான பட்னாவில் பிறந்தவர், இவரது தந்தை உயிர்வேதியியல் பேராசிரியர் ஆவார் அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை) நாம் அடியெடுத்து நடந்து ஓர் இடத்தை அடைகிறோம். அதுபோலப் பாட்டு அடியெடுத்து நடந்து ஒரு பொருளைத் தரும். நாம் நடக்கும் தப்படிகள் நீண்டும் குறைந்தும் இருக்கும். அதுபோலப் பாட்டின் அடிகளும் இருக்கும். தொல்காப்பியம் ஒவ்வோர் அடியிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளது. அவற்றை 17 வகையான நிலம் எனக் குறிப்பிடுகிறது. குறளடி 4 முதல் 6 எழுத்துக்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுகள்: தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து நேர்ந்து வாமனை நினைமின் சேர்ந்த வல்வினை தேய்ந்தக லும்மே குன்று கொண்டு நின்ற மாடு பொன்ற வந்த மாரி சென்று காத்த திறலடி தொழுமே ஆறு சூடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனை கூறு நெஞ்சே குறைவிலை நினக்கே 7 முதல் 9 எழுத்துக்கள் கொண்டது சிந்தடி. போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர் சேர்வோர் சோதி வானம் துன்னு வாரே. தடந்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூம் களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன் றளியவென் நெஞ்சே 9 எழுத்து அடி - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 10 முதல் 14 எழுத்து அமைந்த அடி நேரடி 15 முதல் 17 எழுத்து அமைந்த அடி நெடிலடி 18 முதல் 20 எழுத்து அமைந்த அடிகளைக் கொண்டது கழிநெடிலடி. அமுதசாகரர் எனவும், அமிர்தசாகரர் எனவும் குறிப்பிடப்படும் ஆசிரியர் (காலம் 1070-1120) தமது யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களில் ஒவ்வோர் அடியிலும் அமந்துள்ள சீர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். இவரே தாம் முதலில் எழுதிய அமுதசாகரம் என்னும் யாப்பிலக்கண நூலில் தொல்காப்பியத்தை நெறியில் பாடல் அடி ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களின் அளவுகோலாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். பிளாண்டர் புலத்தில் பிளாண்டர் புலத்தில் ("In Flanders Fields") என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும். இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் பிரபலம் பெற்றதும் அடிக்கடி கூறப்படுவதுமான கவிதையாக இது விளங்கியது. இதன் திடீர்ப் பிரசித்தி காரணமாக, கவிதையின் சிலவரிகள் போருக்கு பணம், படைபலம் திரட்ட உதவியது. இக்கவிதையில் போரில் உயிரிழந்த வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவே நினைவுறுத்தும் நாளின் சின்னமாக இன்று விளங்குகின்றது. இக்கவிதையும் பொப்பிச் சின்னமும் பொதுநலவாய நாட்டு மக்களிடையே, குறிப்பாக கனடாவில், பிரபல்யமானவையாக உள்ளன. In Flanders fields the poppies blow Scarce heard amid the guns below. We are the Dead. Short days ago We lived, felt dawn, saw sunset glow, Take up our quarrel with the foe: To you from failing hands we throw We shall not sleep, though poppies grow பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் மலரும் சிலுவைகள் இடையே, தொடர் தொடராக, எங்கள் இடமே அதுவென சுட்டும், அந்த வானத்தில் வானம்பாடிகள் பறக்கும், அவை வீரகானங்கள் மௌனமாய் இசைக்கும், துப்பாக்கி ஓசைகள் கீழேயோங்க – கானமோ அரிதாய்ச் செவிதன்னில் மோதும். நாம்தான் சாவைக் கண்டவர்கள். நாட்கள் சில முன்னர் உயிருடன் இருந்தோம், உணர்ந்தோம் வைகறை அழகை கண்ணுற்றோம் ஒளிரும் அந்திநேரம், காதலுற்றோம் காதல் பெற்றோம், இன்றோ பிளாண்டர் புலத்தில் துயில்கின்றோம். எதிரியுடன் எங்கள் சமரை உமதாக்குங்கள்: வீழ்ந்து கொண்டிருக்கும் கைகளில் இருந்து தீவர்த்திதனை உமக்காக எறிகின்றோம்; உயரத்தில் நீங்கள் தாங்கிக்கொள்ள. வீரமரணித்த எம்முடன் உம் நம்பிக்கை உடைந்தால் நாங்கள் துயிலமாட்டோம், பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் வளர்ந்தாலும் கூட.. நிகழ்ந்து கொண்டிருக்கும் போரைத் தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் என்று இறந்த ஒரு வீரன் கூறுவதுபோன்று இக்கவிதை அமைந்துள்ளது. இறுதி வரியில் "நாங்கள் துயிலமாட்டோம், பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் வளர்ந்தாலும் கூட.." என்பது சோன் மக்கிரே ஒரு மருத்துவர் என்பதை நினைவுபடுத்துகின்றது. ஒருவகை பொப்பிச் செடிகள் மற்றும் அவற்றின் விதைகள் மருத்துவத்தில் தூக்கத்தை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அபினி அல்லது அபின் எனும் போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஒரு பொப்பி வகை அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. பிளாண்டர் புலத்தில் வளர்ந்த பொப்பிகள் பப்பாவேர் ரோயியாசு (Papaver rhoeas) எனும் இனத்தைச் சார்ந்தவை. ஆரோகணம் (திரைப்படம்) ஆரோகணம் 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியிருப்பவர் லட்சுமி இராமகிருஷ்ணன். இப்படத்தில் விஜி சந்தரசேகர், உமா பத்மநாபன், மாரிமுத்து, ஜெயப்பிரகாசு போன்றோர் நடித்துள்ளனர். இருமுனையப் பிறழ்வினால் பாதிக்கப்பட்ட தாயை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கா நினைவு நீங்கா நினைவு (; ( என்பது சால்வதோர் தாலீ (Salvador Dalí) என்னும் புகழ்மிக்க எசுப்பானியக் கலைஞர் 1931இல் வரைந்த எழில்மிகு ஓவியம் ஆகும். அந்த ஓவியம் முதன்முறையாக "ஷூலியேன் லேவி" கலைக்கூடத்தில் 1932இல் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் 1934இலிருந்து நியூயார்க்கில் உள்ள "தற்காலக் கலைப்பொருள்கள் காட்சியகத்தில்" வைக்கப்பட்டுள்ளது. எளிதில் அடையாளம் காணக்கூடிய இந்த ஓவியம் மக்கட்கலை ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறுகிறது. மெதுவாக உருகி வழிகின்ற சட்டப்பைக் கடிகாரம் ("pocket watch") இந்த ஓவியத்தில் மைய இடம் பெறுகிறது. இந்த ஓவியம் அடிமன வெளிப்பாட்டியம் ("Surrealism") என்ற பெயரில் 1930களில் ஐரோப்பாவில் எழுந்த புரட்சி இயக்கத்தின் ஒரு சான்றாக உள்ளது. மென்மை, கடுமை என்னும் இரு பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும்போது என்ன நிகழும் என தாலீ இந்த ஓவியத்தில் காட்ட விழைகிறார். பிரபஞ்சத்தில் நிலையான ஒழுங்கு உண்டு என்று நினைக்கின்ற மனது "கடுமை"யைக் குறிக்கிறது என்று கொண்டால், அந்த ஒழுங்கு உருகி இளகுவது "மென்மை"யைக் குறிக்கிறது. காலம், இடம் இரண்டுமே நெகிழ்ச்சி கொண்டவை என்பது அடிமன அனுபவம். அந்த அனுபவம் ஓவியமாக தாலீயின் கைகளில் உருவெடுக்கிறது என்பது ஒரு விளக்கம். இருப்பினும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்புக் கோட்பாடு என்ற பெயரில் வெளியிட்ட இயற்பியல் கொள்கையை சால்வதோர் தாலீ ஓவியமாக்கினாரா என்ற கேள்விக்கு ஓவியர்தாமே அளித்த பதில்: "சூரிய வெப்பத்தில் மென் பாலடைக்கட்டி உருகுவதுதான் கடிகாரம் உருகுவதாகக் காட்டும் இந்த ஓவியத்துக்கு அடிமன விளக்கம் என்னும் அடிப்படையாக அமைந்தது." சிக்மண்ட் பிராய்ட் என்னும் உளநிலைப் பகுப்பாய்வு அறிஞர் எடுத்துரைத்த அடிமனக் கொள்கை சால்வதோர் தாலீயின் ஓவியத்தின் அடிப்படையாக உள்ளது. 1945இல் சப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தாலீ இந்த ஓவியப் பாணிக்கு மெருகூட்டினார். கனவு நிலையில், காலமும் இடமும் தாண்டிய விதத்தில், ஓவியத்தின் நடுப்பகுதியில் ஒரு மனித உரு உள்ளது. அது விசித்திரமான முறையில் முகங்குப்புற புழுதியில் விழுந்துகிடக்கிறது. இந்த உருக்குலைந்த மனித உருவை தாலீ தாம் வரைந்த பல ஓவியங்களில் சேர்த்துள்ளார். அது மனிதரைப் பொதுவாகவும், தம்மைக் குறிப்பாகவும் சுட்டுவதாக அவரே விளக்கியுள்ளார். ஓவியத்தின் பின்புலத்தில் ஒரு மலைத்தொடர் உள்ளது. அது மட்டுமே "நிலை"யாக உள்ளது. பிற பொருள்கள் நெகிழ்ச்சியுற்றும், வழிந்து சென்றும், உருக்குலைந்தும் தோற்றமளிக்கின்றன. மனித அடிமனத்தில் காலமும் இடமும் வேறுபாடு இன்றி ஒன்றோடொன்று தொடுகின்றன. காலமே உருக்குலைந்து போகிறது. மரக்கிளையில் பச்சை இல்லை, மாறாக அது பட்டுப்போய் காலத்தைச் சுமந்து, சாவு தவிர்க்க இயலாது என உணர்த்துகிறது. ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சட்டைப்பைக் கடிகாரம் உள்ளது. அது அழுகியதுபோலவும், அதன் மேல் எறும்புகள் ஊர்வதுபோலவும் ஓவியம் காட்டுகிறது. காலம் என்பது நிலையற்றது என்னும் கருத்து ஆங்கே துலங்குகிறது. எறும்புகளைச் சாவுக்கும் பிறப்பைக் காட்டும் பெண்குறிக்கும் அடையாளமாகச் சித்தரிப்பது தாலீயின் பாணி ஆகும். கனவு நிலையிலும் அடிமன நிலையிலும் எதார்த்தம் என்பது உறுதியாக நிலைகொள்ளாமல் இளகுநிலையில் உள்ளதை ஓவியத்தின் நடுவிலுள்ள மனித உரு காட்டுகிறது. அந்த முகப்பகுதியில் ஒரு கண் மூடியிருக்கிறது. கண்ணின் இமையில் முடிவரிசை அடர்த்தியாக உள்ளது. அந்த மனித உருவும் கனவு நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த ஓவியமே சால்வதோர் தாலீ அனுபவித்த ஒரு கனவின் சித்திரமாக இருக்கலாம். கனவு காணும்போது காலம் கடந்துசெல்வது எப்படித் தெரிகிறது என்பதன் சித்திரமாகவும் இருக்கலாம். நினைவு என்பது காலத்தின் நீட்சி என்று கொண்டால், அந்த நினைவு நிலையாக இருப்பதில்லை, மாறாக நெகிழ்ச்சியோடு நீள்கிறது. எனவே "நீங்கா நினைவு" கனவிலும் கனவிலி நிலையிலும் நீடிக்கிறது. எசுப்பானியா நாட்டின் கத்தலோனியா பிரதேசத்தில் உள்ள க்ரூசு முனை (Cap de Creus) என்னும் இடத்தில் அமைந்த பாறைத் தொகுப்புதான் தாலீயில் ஓவியத்தில் பின்னணியாக, வலது மேற்புறத்தில் காட்டப்படுகிறது. தாலீ தாம் பிறந்து வளர்ந்த கத்தலோனியா நிலப்பகுதியைத் தம் ஓவியங்களில் காட்டுவது வழக்கம். ஓவியத்தின் முன்னணியில் இருள்போலப் படர்ந்து கருமையாகத் தோற்றமளிப்பது பானி என்னும் மலையின் தோற்றம் ஆகும். தாலீ இந்த ஓவியத்தின் கருத்தைத் தழுவி வேறு படைப்புகளையும் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கிய ஓர் ஓவியம் "நீங்கா நினைவு கலைதல்" (" The Disintegration of the Persistence of Memory") என்னும் 1954 ஆண்டு சித்திரம் ஆகும். அந்த ஓவியத்தில் "நீங்கா நினைவு" ஓவியத்தில் காணும் பொருள்கள் சிதைவதாகவும், அவற்றிற்குக் கீழே அடிமன நிலையில் சதுரப் படிகங்கள் வைக்கப்பட்டு அப்படிகங்களின் இடை வழியே நோக்கும்போது அடிமட்டத்தில் வேறு பொருள்கள் தோன்றுவதாகவும் சித்திரம் உள்ளது. இதிலும் அடிமன வெளிப்பாட்டுக் கொள்கை தெரிகிறது. அந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக் காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது. கல்படிம முறையிலும் கல்லோவிய முறையிலும் தாலீ "நீங்கா நினைவு" ஓவியத்தில் உள்ள சட்டைப்பைக் கடிகார நெகிழ்ச்சி உருவகத்திற்கு உருக்கொடுத்து, படைப்புகளை ஆக்கியுள்ளார். அவை "நீங்கா நினைவு கல்லோவியம்" ("Persistence of Memory"), "காலத்தின் மேன்மை" ("Nobility of Time"), "காலத்தின் முகத்தோற்றம்" ("Profile of Time"), "நடனமாடும் மூன்று கடிகாரங்கள்" ("Three Dancing Watches") என்பவை ஆகும். சிருஷ்டி சிருஷ்டி மதுரை () மதுரையில் இயங்கும் பால்புதுமையினர் மற்றும் மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும்.இதன் தனித்துவம் என்னவெனில், இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு சாரா, நிறுவனம் சாரா வட்டமாகும். சிருஷ்டி மதுரை என்பது இயற்கை, சமூகம் மற்றும் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் நுண்ணிய தொடர்புகளில் பன்மை சார்ந்த ஒன்றுக்கொன்று தொடர்புடைய உன்னதத்தை வெளிக்காட்டும் எல்லையற்ற ஒரு பிரபஞ்ச வெளி. "பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உருவாக்குவதே ஸ்ருஷ்டி-யின் நோக்கமாகும்" என்று இவர்கள் தமது வலைத்தளத்தில் கூறியுள்ளார்கள். ஸ்ருஷ்டி செப்டம்பர் 2 2011 மதுரையில் துவக்கப்பட்டது.மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - இளைங்கர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறது, 2012 ஜூலை 29 மதுரையின் முதல் வானவில் திருவிழா அலன் டூரிங் நினைவாக துரிங் வானவில் திருவிழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா என்று கொண்டாடப்பட்டது, ஆண், பெண் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்களுக்கு தமிழில் பெயர் சூட்டியது இந்த அமைப்பு. இவர்கள் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஆங்கிலத்தை அடுத்து தமிழில் மட்டும் தான் ஆண், பெண் , திருனர் தவிர்த்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பாலினங்கலான பால் புதுமையருக்கு வழக்கு மொழி சொற்கள் உள்ளன இவை மற்றும் தமிழில் கோணல் கோட்பாடு , பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் மதுரை மற்றும் ஜான் ஆவர். ஸ்ருஷ்டி மதுரை கல்வி பொறுப்பாட்சி குழும ஆலோசனை வாரியத்தின் கவுரவ தலைவர் அஞ்சலி கோபாலன் ஆவர். "பொதுவாக நான் இதைப் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், சிருஷ்டி நடத்திய விழாவில் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.சிருஷ்டி அமைப்பு சாராத, நிறுவனம் சாராத மாணவர்கள் வட்டம் என்பது ஒரு காரணம். உலகில் முதல் முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, திருநங்கை ரேவதி போன்றவர்களுடன் ஒரு அம்மாவாக நானும் அங்கு சென்றேன். மனநிறைவாக இருந்தது. மதுரை போன்ற ஓரிடத்தில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மதுரைக்கு முதன்முதலாக அப்போதுதான் வந்தேன். என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டது அழகிய மதுரை மாநகரம்." கடந்த 2013 டிசம்பர் உச்சநீதிமன்றத்தின் இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு குறித்து வெளியான தீர்ப்பை சிருஷ்டி நடுநிலையாக பார்க்கிறது என்று மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டது மேலும் இந்த பிரச்சனையை அறிவியல்,மருத்துவம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள்மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்துதான் ஒருபால் ஈர்ப்புடையவர்கள் விஷயத்தில் தீர்வு காணப்படவேண்டும். கலாசாரம் அல்ல, அறிவியலே சட்டத் தீர்வுக்கான பின்னணியாக இருக்கவேண்டும். ஒரு தனி மனிதனுக்கு அரசு அளிக்கும் அத்தனை பாதுகாப்புகளும் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்கள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்களை அணுகவேண்டும். உச்ச நீதிமன்றம் இந்தச் சட்ட பிரிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்ற கருத்தை பிற பாலின பாலியல் அமைப்புகளிடம் இருந்து வேறுபட்ட அறிக்கையை வெளியிட்டது. 24 டிசம்பர் 2013 சிருஷ்டி மதுரை ஒரு கல்வி பொறுப்பாட்சி குழுமமாக பதிவுசெய்யப்பட்டு தெனிந்தியாவில் முதல் முறையாக உளநிலைப் பகுப்பாய்வு, பாலினம், பாலின ஒரிங்கினைவு, மெய்யியல், யோகா உட்பட பதிமூன்று ஆராய்ச்சி பள்ளியை நிறுவி இலவச கல்வி சேவையை பல்வேறு சர்வதேச கல்வி அறிஞர்களை நியமித்து வழங்குகிறது.இதற்கான வலைதளத்தை திருமிகு,செவாலியர் அஞ்சலி கோபாலன் மற்றும் முனைவர் பிராக எத்திங்கர்() மதுரையில் தொடங்கி வைத்தனர். சிருஷ்டி மதுரை முயற்சியால் தற்போது ஆண், பெண் தவிர இந்த 25 வகைப் பாலினங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி ஃபேஸ்புக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்ததும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அழகியல் மற்றும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்த கோபி ஷங்கர், அதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்துள்ளது. பால்புதுமையாரான இவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துப் படிப்பில் சேர விரும்பவில்லை.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது.தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் அக்பர் சௌத்ரி, செயலாளர் பிரவின் ஆகியோரைத் தொடர்புகொண்டார் கோபி. தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வந்துவிட்ட நிலையைச் சுட்டிக்காட்டினார். நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் 3-ம் பாலினத்தவருக்கான உரிமை மறுக்கப்படுவது வேதனை தருகிறது என முறையிட்டார். பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த மாணவர் பேரவை நிர்வாகிகள், பல்கலைக்கழக கல்விக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர். அதன் பின்னரும், கோரிக்கை நிறைவேறாததால் மாணவர் பேரவை சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.அதைத் தொடர்ந்து இந்த (2015–16) கல்வியாண்டு முதல் விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண்ணைத் தவிர, பிறர் என்ற வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதன் காரணமாக,பல மாணவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 24 2015 இல் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிருஷ்டி மதுரையின் நிர்வாகத்தினரை "மாற்று பாலினத்தவர் உரிமைகள் மசோதா 2014" தாக்கல் செய்ய சாட்சியாகவும், ஆதரவளிக்கவும் அழைப்பு விடுத்தார், சிருஷ்டி மதுரை சார்பில் ஐநாவின் ஆனந்தி யுவராஜ், கமாலினி முகர்ஜி மற்றும் கோபி ஷங்கர் மாநிலங்களவையில் சாட்சியாக ஆதரவு அளித்தனர். கடந்த 2011 பாலினம் சார்ந்த பிராந்திய மொழி சொற்களை மொழியியலாளர் மற்றும் உயிரியலாளர் ஜான் மார்ஷல் , கோபி ஷங்கர் மற்றும் முனைவர் அருணாச்சலம் ஆகியோர் மதுரை அமெரிக்கன் கல்லூரி கலந்தாய்வில் உருவாக்கினர். அவர்கள் தமிழில் உருவாக்கிய சொற்கள்: உனக்காக எல்லாம் உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக, 1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்திக் மற்றும் ரம்பா முக்கிய கதாபாத்திரத்தில் கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி, விவேக் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் நாள் வெளியான இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அனிருத்தன் வாசுதேவன் அனிருத்தன் வாசுதேவன் சென்னை, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆங்கில எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர். இவர் தனது பாலினம், பாலியல்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காவும் எழுத்துக்காவும் அறியப்படுகிறார். இவர் இவ் விடயங்கள் தொடர்பாக செயற்படும் சக்தி வள நடுவம் (The Shakti Resource Center) என்ற இலாப நோக்கமற்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ஏ. எல். அப்துல் மஜீத் ஏ. எல். அப்துல் மஜீத் (நவம்பர் 15, 1933 - நவம்பர் 13, 1987) கிழக்கிலங்கையின் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அப்துல் மஜீத் திருகோணமலை மாவட்டம், மூதூரில் முகமது சுல்தான் அப்துல் லத்தீப் விதானையாருக்கு மகனாகப் பிறந்தவர் மஜீத். தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர்ப்படிப்புக்காக இந்தியா சென்று திருச்சி ஜமால் கல்லூரி, பூனா வாதியா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக நாடு திரும்பினார். கிண்ணியா மத்திய கல்லூரியில் குறுகிய காலம் பதில் அதிபராகப் பணியாற்றினார். மார்ச் 1960 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தையல் இயந்திரச் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். அதே ஆண்டு சூலை மாதம் நடந்த பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அன்றில் இருந்து 1977 வரை மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைப் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். அப்துல் மஜீத் 1987, நவம்பர் 13 ஆம் நாளன்று இனந்தெரியாதோரால் மூதூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் நஜீப் அப்துல் மஜீத் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்தவர். அப்துல் மஜீத் அப்துல் மஜீத் என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: பொம்மலாட்டம் (2008 திரைப்படம்) பொம்மலாட்டம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மூட்டுறை திரவம் மூட்டுறை திரவம் (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் நியூட்டன் வகையிலாப் பிசுப்பு திரவமாகும். அசையும்போது நீர்ம மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் ஏற்படும் உராய்வினைக் குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான பணியாகும். மூட்டுறை திரவத்தை சாதாரணமானவை, அழற்சியல்லாலாதவை, அழற்சியானவை, சீழ் பிடிப்பவை, இரத்தக்கசிவானவை என்று வகைப்படுத்தலாம் : பல்வேறு மூட்டுறை திரவ வகைகளும் குறிப்பிடத்தக்க நோயறிதல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன: தநாமிவா நிறுவனம் தநாமிவா நிறுவனம் (தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனம்) (Tamil Nadu Electricity Board - TNEB Limited) சூலை 01, 2010 இல் மின்சார சட்டம், 2003 இன் கீழ் அந்நாளைய அரசின் தமிழ் நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக அமைப்பை கரு அமைப்பாக கொண்டு தநாமிவா வரையறை (தமிழ்நாடு மின்சார வாரியம் வரையறை) என்ற ஓர் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு அரிசின் முன்னாள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் தொடரமைப்பு பிரிவை கருவாக அமைப்பாக கொண்ட ஓர் தனி துணை நிறுவனமாகவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவை கருவாக அமைப்பாக கொண்ட ஓர் தனி துணை நிறுவனமாகவும் பின் வரும் வடிவில் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி கொண்டிருகிறது: In October 2008, the Government of Tamil Nadu has decided to split TNEB into three companies. On 1 November 2010, TNEB Limited became a holding company with two subsidiaries, தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) and தமிழ்நாடு மின்சார வாரியம் (TANTRANSCO). பூர்ணிதா பூர்ணிதா என்கின்ற கல்யாணி (பிறப்பு: 23 நவம்பர், 1990) ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், "அள்ளித்தந்த வானம்" திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் தன்னுடைய பெயரை "பூர்ணிதா" என்று மாற்றிக்கொண்டு "மறந்தேன் மெய்மறந்தேன்" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு "பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00" திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான "கல்யாணி" என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். போடா போடி போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது. விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார். தகவல் சுதந்திரம் தகவல் சுதந்திரம் அல்லது தகவலுக்கான உரிமை என்பது கருத்துவெளிப்பாடுச் சுதந்திரத்தின் நீட்சியாக அடிப்படை மனித உரிமையாக அனைத்துலக சட்டங்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுகளிடம் இருக்கும் தகவல்களைப் பெறுதல், தனிநபர் அந்தரங்கம், இணையம் ஊடாகக் தகவல் பகிர்வு ஆகியவை தொடர்பான உரையாடல்களிலும் சட்டங்களிலும் தகவல் சுதந்திரம் அல்லது உரிமை முக்கியம் பெறுகிறது. அரசுகளிடம் இருக்கும் தகவல்களை மக்கள் பெறுவதற்கு தகவல் சுதந்திரமே சட்ட அடிப்படையாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல நாடுகள் தகவல் உரிமைச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளன. அந்தரங்கம் தொடர்பான உரிமைகளை உறுதி செய்யவும் தகவல் சுதந்திரம் பயன்படுகிறது. அதாவது அரசுகள் தமது தரவுத்தளங்களில் நபர்கள் பற்றி வைத்திருக்கக் கூடியத் தகவல்களைப் பெறுவதற்கும், அரசுகள் எவ்வாறான தனிநபர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும் தகவல் சுதந்திரம் உதவுகிறது. எ.கா யார் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு, இணையப் பயன்பாடு தொடர்பான அரசுகள் என்ன தரவுகளைத் திரட்டுகின்றன என்பதை அறிவதற்குத் தகவல் சுதந்திரம் உதவுகிறது. இணையம் ஊடாகக் தடையின்றி தகவல்களைப் பகிர்வதற்கு அடிப்படையாக தகவல் சுதந்திரம் பார்க்கப்படுகிறது. உணவுக்கான உரிமை உணவுக்கான உரிமை என்பது மக்கள் உணவை உற்பத்திசெய்து, அல்லது கொள்வனவுசெய்து மானத்துடன் உண்பதற்கான உரிமை ஆகும். இது அனைத்துலகச் சட்டங்களில் உறுதிசெய்யப்பட்ட ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த உரிமையின் நீட்சியாக மக்கள் தம்மால் உச்சகட்டமாக முடிந்தளவு போதிய சத்தான உணவை உற்பத்தி செய்ய அல்லது கொளவனவுசெய்யத்தக்க சூழலை ஏதுவாக்குவது அரசுகளின் கடமை ஆகும். சிறப்பாக, இந்த உரிமை மக்கள் போரால் அல்லது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசுகள் உணவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்) சிலுவையின் புனித யோவானின் கிறித்து ("Christ of Saint John of the Cross") என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ (1904–1989) என்பவர் 1951இல் உருவாக்கிய புகழ்மிக்க ஓவியம் ஆகும். இந்த ஓவியம் சிலுவையில் தொங்கும் இயேசு கிறித்துவை ஒரு தனிப் பார்வையில் சித்தரிக்கிறது. இயேசு தொங்குகின்ற சிலுவை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம், அதில் மீனவர்களோடு கூடிய ஒரு படகு, மேலே இருண்ட வானம். இயேசு சிலுவையில் தொங்குவதைத் தாம் ஒரு கனவில் கண்டதாக தாலீ கூறியுள்ளார். அக்கனவில் அவர் கண்ட இயேசு முழுமையாகத் தமது மனிதத் தன்மையோடு தோன்றியதால், தாலீ இயேசுவின் உடலைச் சிலுவையில் அறைந்துவைக்க ஆணிகள் உள்ளதாகத் தம் சித்திரத்தில் காட்டவில்லை. இயேசு இரத்தம் சிந்துவதாகவோ, அவருடைய தலையில் முள்முடி உள்ளதாகவோ சித்தரிக்கவில்லை. மேலும், இயேசுவும் அவர் தொங்குகின்ற சிலுவையும் நேரே செங்குத்தாக இல்லாமல் கீழே சாய்ந்து விழுவதுபோன்று மிகைப்படுத்திய ஒரு கோணத்தில் காட்டப்படுவதும் தாலீ கனவில் கண்டதாகக் கூறுகிறார். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்மேல் சபைத் துறவியான சிலுவையின் புனித யோவான் என்னும் புனிதர், இயேசு சிலுவையில் தொங்குவதை ஒரு வரைபடமாக ஆக்கினார். அதில் இயேசுவின் உடல் சிலுவையோடு ஒட்டியிராமல் தனியே பிரிந்து நிற்பதுபோலக் காட்டப்பட்டது. இதுவே தாலீயின் ஓவியத்துக்கு ஒரு தூண்டுதலாயிற்று. தாலீ வரைந்த ஓவியத்தில் ஒரு முக்கோணமும் ஒரு வட்டமும் தெளிவாகத் தெரிகின்றன. இயேசுவின் விரிந்த இரு கைகளும் வீழ்கின்ற தலையும் மூன்று கோணங்களைக் காட்டுகின்றன. இயேசுவின் தலை ஒரு வட்டமாக உள்ளது. மூன்று கோணங்கள் கடவுள் மூவொரு இறைவனாக உள்ளார் என்பதை அடையாள முறையில் குறிப்பதாகவும், வட்ட வடிவில் உள்ள இயேசுவின் தலை, பிளேட்டோ குறிப்பிடுகின்ற முழுமையின் அடையாளமான வட்டம் என்னும் வடிவமாக இருக்கக்கூடும் எனவும் ஒரு விளக்கம் உள்ளது. இந்த ஓவியத்தை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தவற்றைக் குறிப்பிட்டபோது தாலீ பின்வருமாறு கூறினார்: "1950இல் நான் ஒரு கனவு கண்டேன். அது ஒரு பிரபஞ்சக் கனவு. அதில் நான் இயேசு சிலுவையில் தொங்குகின்ற காட்சியை நிறங்களில் கண்டேன். அது எனது கனவில் அணுவின் கருவாகத் தோன்றியது. அக்கரு பின்னர் மீஇயற்பு விரிவில் பரந்தது. அதை நான் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் ஒன்றிப்பாகக் கண்டேன். அதுவே அகண்ட கிறித்துவாக உருப்பெற்றது" தாலீ உருவாக்கிய கிறித்து சிலுவையிலிருந்து கீழே விழுவதுபோன்று தொங்குகிறார். தாம் கண்ட கனவுக்காட்சி அதுவே என்று தாலீ கருதியதால் அந்த வீழ்கோணத்தைச் சரியாகக் கற்பனை செய்வதற்காக ஹாலிவுட் வீரசாகச நடிகர் ரசல் சோண்டர்சு ("Russell Saunders") என்பவரின் உதவியை நாடினார். தலைக்குமேல் உயர்த்தி எழுப்பப்பட்ட உத்தரத்தில் மேலிருந்து கீழ்நோக்கி அந்த நடிகர் தொங்கவிடப்பட்டார். அவ்வாறு தொங்கிய மனித உருவத்தைப் பொருத்தமான கோணத்திலிருந்து நோக்கிய தாலீ அந்தக் கோணத்திலேயே இயேசு சிலுவையில் தொங்குவதாக ஓவியத்தில் காட்டுகிறார். தாலீ வரைந்த கிறித்து ஓவியத்தையும் அதற்கான உடைமை உரிமையையும் கிளாசுகோ நகரக் கலைகூடத்தின் இயக்குநர் டாம் ஹனிமேன் ("Tom Honeyman") என்பவர் 1950களில் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை 8,200 பவுண்டுகள் ஆகும். பட்டியலில் குறிக்கப்பட்ட விலையாகிய 12,000 பவுண்டை விடவும் அவர் கொடுத்த விலை குறைவாக இருந்த போதிலும், அது அதிகமாகவே கருதப்பட்டது. ஆனால், உடைமை உரிமையும் கூடவே வாங்கப்பட்டதால், பின்வந்த ஆண்டுகளில் கிளாசுகோ கலைக்கூடம் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை இலாபமாக ஈட்டியது. தாலீயின் ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியது. கிளாசுகோ நகர் கலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், அந்த ஓவியத்தை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைத் தமது பகுதியைச் சார்ந்த கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதே முறை என்று கூறி புகார் கொடுத்தார்கள். இதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக ஹனிமேனும் தாலீயும் கடிதத் தொடர்புகொண்டு நண்பர்கள் ஆனார்கள். அக்கடிதத்தொடர்பு ஓவியச் சர்ச்சைக்குப் பிறகு பல ஆண்டுகளாக நீடித்தது. கிளாசுகோ நகரில் கெல்வின்க்ரோவ் கலைக்கூடத்தில் தாலீயின் கிறித்து ஓவியம் 1952, சூன் 23ஆம் நாள் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. 1961இல் ஓவியத்தைப் பார்வையிடச் சென்ற ஒருவர் அதைக் கல்லால் தாக்கி, ஓவியம் வரையப்பட்டிருந்த துணிப்பரப்பைக் கையால் கிழித்துவிட்டார். கலைக்கூடக் கைவினைஞர்கள் அந்த ஓவியத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மிகக் கவனமாகச் சரிசெய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு தாலீயின் கிறித்து ஓவியம் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டது. I 1993இல் தாலீயின் கிறித்து ஓவியம் "புனித மங்கோ சமய வாழ்வு மற்றும் கலை சார்ந்த காட்சியகம்" ("St Mungo Museum of Religious Life and Art") என்னும் கலைகூடத்துக்குச் சென்றது. 2006, சூலை மாதம் கெல்வின்க்ரோவ் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டபோது தாலீயின் கிறித்து ஓவியம் திரும்பி வந்தது. இசுக்காத்துலாந்தின் மிகப்புகழ்பெற்ற ஓவியம் தாலீயின் கிறித்து ஓவியமே என்று 2006இல் 29% பேர் தீர்ப்பளித்தனர். சால்வதோர் தாலீ வரைந்த "சிலுவையின் புனித யோவானின் கிறித்து" என்னும் ஓவியம், கிறித்துவைச் சிலுவையில் சித்தரிக்கின்ற மரபு ஓவியங்களிலிருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றிப் பல விமரிசனங்கள் எழுந்தன. தாலீ ஏற்கெனவே அடிமன வெளிப்பாட்டியம் ("Surrealism") என்னும் கலைப்பாணியில் நீங்கா நினைவு போன்ற பல ஓவியங்களை உருவாக்கியிருந்ததால், அவர் சமயம் தொடர்பான ஒரு படைப்பை உருவாக்கியது அதிர்ச்சியாக இருந்ததாக சில கலை விமர்சகர்கள் கூறினர். 2009இல், "கார்டியன்" ("The Guardian") என்னும் இலண்டன் நகர நாளிதன் கலை விமர்சகரான ஜானத்தன் ஜோன்சு ("Jonathan Jones") என்பவர் தாலீயின் கிறித்து ஓவியம் "கீழ்த்தரமான, கலையழகற்ற" படைப்பு என்றார். ஆயினும், "நல்லதாயினும் தீயதாயினும், அந்த ஓவியம் கிறித்து சிலுவையில் தொங்கும் காட்சியாக 20ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களுள் நீடித்த புகழ்கொண்டதாக உள்ளது" என்று கூறினார்." எசுப்பானியக் கலைஞராகிய சால்வதோர் தாலீயின் தலைசிறந்த படைப்பாகிய கிறித்து ஓவியம் மீண்டும் எசுப்பானிய நாட்டுக்குத் திரும்புவதே முறை என்று எண்ணிய எசுப்பானிய அரசு அந்த ஓவியத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. 127 மில்லியன் டாலர் கொடுத்து ஓவியத்தை விலைக்குக் கேட்டது எசுப்பானிய அரசு. ஆனால் எசுக்காத்துலாந்து நாட்டுக் கலைக்கூடம் அதை விற்க முடியாது என்று கூறிவிட்டது. அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்) அம்மாவின் கைப்பேசி (English :Mothers Mobile) தங்கர் பச்சான் இயக்கத்தில் கே. பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் இனியா நடித்து நவம்பர் 13, 2012 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தங்கர் பச்சான், தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற நாவலை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான அம்மா வேடத்தில் நடித்துள்ளவர் காக்கும் கரங்கள் மற்றும் தனிப் பிறவி ஆகிய படத்தில் நடித்த ரேவதி என்ற பழம்பெரும் நடிகை. இத் திரைப்படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு காட்சியில் சாந்தனுவை இனியா நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. அம்மாவின் கைப்பேசி திரைப்படத்தின் இசை புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மூலம் அமைக்கப்பட்டது. மேலும் சென்னை சத்தியம் சினிமாவில் அக்டோபர் 1 2012 ஆம் தேதி அன்று ஒலிதம் (Audio) வெளியிடப்பட்டது. மற்றும் பல புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர்களும் கலந்து கொண்டனர். அந் நிகழ்வில் ””என்ன செஞ்சிப் போற...” என்ற பாடலின் முன்னோட்டம் காட்டப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல் வரலாறு பட்டியல் புகலிட உரிமை ஒரு நாட்டில் அரசியல் நோக்கில் துன்புறுத்தப்படும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் செய்யப்படும் ஒருவர் இன்னொரு நாட்டுக்குச் சென்று வாழ்வதற்கான உரிமையே புகலிட உரிமை (Right of Asylum or Political Asylum) ஆகும். இது உலக மனித உரிமைகள் சாற்றுரையில் உறுப்புரை 14 இலும், அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை ஊடாகவும், ஜெனீவா உடன்படிக்கை ஊடாகவும், பல்வேறு நாடுகளின் சட்டங்களின் ஊடாகவும் நிலைநாட்டப்படும் ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த உரிமை கடந்த சில பத்தாண்டுகளாக ஐரோப்பா, வட அமெரிக்கா, அசுத்திரேலியா, இந்தியா ஆகிய இடங்களில் மதிக்கப்பட்டு வந்தாலும், அண்மைக் காலமாக புகலிடம் கோரும் அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணம் இங்கு புகலிட உரிமையை மட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றன. சிறு வீடு இயக்கம் சிறு வீடு இயக்கம் (Small house movement) என்பது சிறிய வீடுகளைப் பரிந்துரைக்கும் ஒரு கட்டிடக்கலை, வடிவமைப்பு, சமூக இயக்கம் ஆகும். சிறிய பரப்பளவில், குறைந்த பொருட் செலவில் உச்சபட்ச பயன்பாட்டைப் பெறக் கூடியவாறான கட்டிடக்கலை மற்றும் உள்ளக வடிவமைப்பு கொண்ட வீடுகள் விரும்பப்படுகின்றன. பொருளாதார கட்டாயம் காரணமாகவும், விருப்பத் தெரிவாகவும் சிறிய வீடுகள் நாடப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் இந்த இயக்கம் வலுப்பெற்றுவருகிறது. யப்பானில் இடச் சிக்கல் காரணமாக சிறிய வீடுகள் பயன்படுகின்றன. தமிழ்நாடு அமைச்சரவை தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார். அதன்படி குழுவின் தலைவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும் ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள். இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்) இறுதி இராவுணவு அருட்சாதனம் ("The Sacrament of the Last Supper") என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ (1904-1989) வரைந்த ஒரு புகழ்மிக்க ஓவியம் ஆகும். ஒன்பது மாதங்கள் உழைப்புக்குப் பின் உருவான இந்த ஓவியம் 1955இல் நிறைவுற்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய கலைக்கூடத்தில் இந்த ஓவியம் 1956இல் வைக்கப்பட்டது. அதுவரையிலும் அந்த கலைக்கூடத்தில் பெரும்பான்மை மக்களால் போற்றப்பட்ட ஓவியமாக இருந்தது பியேர் ஓகுஸ்த் ரெனுவா ("Pierre-Auguste Renoir") என்னும் கலைஞரின் படைப்பாகிய "பூவாளி பிடித்த சிறுமி" ("A Girl with a Watering Can") என்னும் ஓவியமே. அதன் இடத்தை தாலீயின் ஓவியம் பிடித்துக்கொண்டது. இன்று தேசிய கலைக்கூடத்தில் மக்கள் போற்றும் முதன்மை ஓவியமாக "இறுதி இராவுணவு அருட்சாதனம்" ஓவியம் விளங்குகிறது. சால்வதோர் தாலீ அடிமன வெளிப்பாட்டியம் என்னும் புரட்சிக் கலைப்பாணியில் ஓவியங்களை வரைந்தார். அதன்பின் பண்டைச் செவ்விய கிறித்தவ கருத்துருக்களை நவீனத்தோடு அவர் இணைக்கத் தொடங்கினார். அதன் பயனாக, உருவான படைப்புகளுள் சில: தாலீ உருவாக்கிய "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தில் பொன் விகிதம் என்னும் கணித வாய்பாடு செயலாக்கம் பெறுகிறது. தாலீ வரைந்த இந்த ஓவியத்தின் நீளமும் அகலமும் பொன் விகிதத்தின்படி அமைந்துள்ளன. மேலும், இயேசுவும் அவருடைய நண்பர்களும் அமர்ந்திருக்கின்ற உணவு மேசையைச் சூழ்ந்து குவிந்துள்ள அமைப்பு பன்னிருகோணம் ("dodecahedron") ஆகும். பன்னிருகோண வடிவத்தின் பண்புகளை விவரித்த பிளேட்டோ என்னும் பண்டைய மெய்யியலார் "வான வெளியில் (பன்னிரு) கிரகத் தொகுப்புகளைச் சூழ்ந்து அணிசெய்ய கடவுளே பயன்படுத்திய வடிவம் அது" என்று கூறியுள்ளார். பன்னிருகோண வடிவும் பொன் விகிதத்தோடு நெருங்கிய தொடர்புடையது. குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற மூன்று பொன் விகித செங்கோண முக்கோணங்கள் பன்னிருகோண வடிவத்தை உருவாக்குகின்றன. தாலீ வரைந்த இந்த ஓவியத்தில் குறைகண்டோருள் பிரான்சிசு ஷேஃபர் ("Francis Schaeffer)", பவுல் டில்லிக் ("Paul Tillich") என்னும் இறையியலாரும் அடங்குவர். ஷேஃபர் கூறியது: "தெளிவில்லாத இருப்பியல்வாத அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் காணும் கிறித்து புலன்களுக்கு எட்டாதவராக உள்ளார். அவருடைய சீடர்கள் தெளிவாக, திடப்பொருள்முறையில் உள்ளார்கள். சால்வதோர் தாலீ, திடப்பொருள் காட்சியைவிடத் தெளிவற்ற, கலக்கமான காட்சியைச் சக்தியாகக் கருதி உள்ளார்ந்த அர்த்தம் வாழ்வுக்குக் கிடைப்பதாகக் கூறுகிறார். அந்த அர்த்தத்தைக் கொடுப்பதற்காக மேலே ஒரு கூரையை அமைத்துள்ளார். இங்கே கிறித்தவப் பார்வை மறைந்துவிட்டது." பவுல் டில்லிக் என்னும் இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைக் குறைகூறினார். சமய எழுச்சி என்ற பெயரில் தாலீ தரும் ஓவியம் பொருளற்றதாக, வெறும் குப்பையாகவும் (""simply junk!"") உள்ளது என்பது அவரது கருத்து.அப்படத்தில் இருக்கின்ற இயேசு "அமெரிக்காவின் அடிப்பந்தாட்ட வீரர் போல, திடகாத்திரமான உடலோடு காட்டப்பட்டுள்ளார். அது தவறு" என்றார் டில்லிக். இயற்கையை மகிமைப்படுத்தும் இந்த முயற்சி வெறுக்கத்தக்கது என்பது அவரது பார்வை. மேலே கூறிய இரு இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று வேறு விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர்கள் கருத்துப்படி, தாலீயின் ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தை முற்றிலும் ஒத்ததாகக் கருதுவது தவறு. இயேசுவைச் சூழ்ந்து பன்னிரண்டு பேர் அமர்ந்து இருப்பது அத்தோற்றத்தைத் தரக்கூடும். ஆனால் தாலீ தரும் பொருள் அதைவிட ஆழமானது. இந்த ஓவியத்தை தாலீ வரைந்தபோது (1955) அவர் கத்தோலிக்க சமயத்திற்குத் திரும்பிவிட்டிருந்தார். அவருடைய மனமாற்றம் நிகழ்ந்தது 1949இல் ஆகும். அதற்கு முன்னோடியாக அமைந்தது தாலீ எசுப்பானியப் புனிதரான சிலுவையின் புனித யோவான் என்பவருடைய இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு, கிறித்தவ சமயத்தைச் சார்ந்த பொருள்கள் குறித்து கலையாக்கம் செய்யத்தொடங்கியது ஆகும். வெளிப்படையாகக் கிறித்தவப் பொருள்பற்றி தாலீ 1946இல் வரைந்த முதல் ஓவியம் "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" ("The Temptation of St. Anthony"). கத்தோலிக்க சமய நம்பிக்கையை வெளிப்படையாகத் தழுவிய காலத்திலிருந்து, தாம் அடிமன வெளிப்பாட்டியத்தின் கூறுகளோடு, செவ்வியம் மற்றும் மறுமலர்ச்சிக் காலக் கலைக்கூறுகளையும் இணைத்துக் கலையாக்கம் செய்ய உறுதிபூண்டார். சால்வதோர் தாலீ நவீன கால அறிவியல் முன்னேற்றங்களைத் தம் கலையாக்கத்தில் இணைப்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டினார். அணுக்கரு இயற்பியல் ("nuclear physics") மனித அறிவுக்குக் கொணர்ந்த இயற்கை இரகசியங்களை ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தினார். எனவே, அவருடைய பார்வையில் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று. மெய்யியல் துறை, அறநெறித் துறை, கலைத்துறை, உயிரியல் துறை ஆகியவற்றின் எந்தவொரு கண்டுபிடிப்புமே கடவுள் மறுப்புக்கு இட்டுச்செல்வதில்லை என்பது அவருடைய கருத்து. சிக்மண்ட் பிராய்டின் உளநிலைப் பகுப்பாய்வு, கனவு வெளிப்பாடுகள் போன்றவற்றைக் கைவிடாமலே அவர் கிறித்தவக் கருத்துகளையும் நவீன கலைப்பாணியையும், குறிப்பாக அடிமன வெளிப்பாடுகளையும் இணைக்கின்ற வழியைத் தம் கலைப்படைப்புகளில் கையாண்டார். தாலீயின் "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்ற ஓவியத்தைத் துல்லியமாக ஆய்ந்தால் பல ஆழ்ந்த சமய உண்மைகளைக் கண்டுகொள்ளலாம்: "அப்போது பிலிப்பு, இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: 'பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே..." (யோவான் 14:8-10) "ஆண்டவர் மோசேயிடம், 'என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது' என்றார்" (விடுதலைப் பயணம் 33:20) சால்வதோர் தாலீ வரைந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி என்னும் பேர்போன கலைஞர் வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தைப் போன்று, இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து உணவருந்தியதைக் குறிப்பது அல்ல. மாறாக, தாலீயின் ஓவியம் நற்கருணையில் இயேசு உண்மையாகவே உடனிருக்கிறார் என்னும் உண்மையைக் கலைவடிவில் காட்டுகிறது. இயேசு அப்ப இரச வடிவத்தில் உண்மையாகவே நற்கருணையில் உள்ளார் என்பது கத்தோலிக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த உடனிருப்பின் உட்பொருள் என்னவென்பதை தாலீ கலைவடிவில் வெளிக்கொணர்கிறார். நற்கருணை என்பது ஒரு அருட்சாதனம். அருட்சாதனம் என்றால், "புலனாகா எதார்த்தத்தைப் புலனாக்கும் அடையாளம்" என்று பொருள். தாலீயின் ஓவியத்தில் பீடத்தைக் குறிக்கும் மேசையின்மீது அப்பமும் இரசமும் உள்ளன. அவற்றின்முன்னே புலனாகா விதத்தில் (ஒளிபுகு நிலையில்) இயேசு கிறித்து உள்ளார். அவரே "கடவுளின் அருட்சாதனம்" என்னும் வகையில் தந்தையாம் கடவுளை உலகுக்கு வெளிப்படுத்துகிறார். நற்கருணைக் கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகின்ற திருப்பலியின்போது என்ன நிகழ்கிறது என்பதை சால்வதோர் தாலீ ஓவியமாகச் சித்தரிக்கிறார். மண்ணகத்தில் நிகழும் நற்கருணை வழிபாடு, விண்ணக எதார்த்தத்தை மண்ணகத்துக்குக் கொணர்கிறது என அவர் ஓவியத்தில் காட்டுகிறார். இயேசு நற்கருணையில் உண்மையாகவே உள்ளார் என்னும்போது இயேசு வெளிப்படுத்துகின்ற தந்தையாம் கடவுளும் அங்குள்ளார். குழுவாக இணைந்து வழிபடுகின்ற திருச்சபை தூய ஆவியின் உடனிருப்புக்குச் சான்றாக உள்ளது. மூவொரு கடவுள் எங்கு உள்ளாரோ அங்கே விண்ணகம் உள்ளது. அது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இறைவேண்டலில் ஈடுபட்டு வழிபடுகின்றோருக்கு அது உள்ளார்ந்த விதத்தில் புலனாகின்றது. இதுவே சால்வதோர் தாலீ வரைந்த "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தின் உட்பொருள். மு. ச. செல்லச்சாமி முத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி ("Muthu Sangaralingam Sellasamy", பிறப்பு: நவம்பர் 13, 1926) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சரும் ஆவார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக சேவல் சின்னத்தில் மத்திய கொழும்பில் முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார். 1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். யோவான் கிறிசோஸ்தோம் புனித யோவான் கிறிசோஸ்தோம் அல்லது புனித பொன்வாய் அருளப்பர் (சுமார். 347–407, ), காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்தவர். இவர் மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர் பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், விவிலிய விரிவுரையாளர். இறையியலாளர். இவரால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இவரது மறை உரையின் மேன்மையினை உனர்த்தும் விதமாக மக்கள் இவரை "பொன்வாய்" என்னும் பொருள்படும்படி கிரேக்கத்தில் "கிறிசோஸ்தோமோஸ்" என அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் இவரின் பெயர் ஆயிற்று. கி.பி.347ம் ஆண்டில் ரோமானியப் படைத் தளபதிக்கும், கிரேக்கப் பெண்மணிக்கும் மகனாகப் அந்தியோக்கியாவில் பிறந்த கிறிஸ்சோஸ்தம் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். இவருக்கு 23 வயதாகும்போது, அதுவரை பயின்று வந்த கிரேக்கப் பாடங்களிலிருந்து மாற்றி, விவிலியத்தைப் படிக்க இவரைத் தூண்டினார் இவரது நண்பரான புனித பாசில். தவவாழ்வு நடத்த விரும்பி 375ம் ஆண்டில் அந்தியோக்கியாவுக்கு அருகிலிருந்த மலைக்குச் சென்றார். ஆயினும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 386ம் ஆண்டில் அந்தியோக்கியா திரும்பி வந்து குருப்பட்டம் பெற்றார். 397ம் ஆண்டில் பேரரசர் ஆர்கேடியஸ், யாருக்கும் தெரியாமல் இவரைக் கான்ச்டண்டிநோப்புளுக்கு வரவழைத்து இவரை ஆயராக நியமித்தார். திருமறை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் இப்பொறுப்பை ஏற்றார். ஆயரானதும் சீர்திருத்தப்பணிகளில் இறங்கினார். ஆயர் இல்லத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தார். ஆயர் இல்லத்தின் ஆடம்பர வாழ்வை முற்றிலும் மாற்றினார். அடிக்கடி விருந்துகள் வைப்பதைத் தவிர்த்தார். இவரே படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஆயர் இல்லத்தில் பெண்கள் வேலை செய்வதை முதலில் நிறுத்தினாலும், பின்னர் அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் கன்னிமை வாக்குறுதியைக் கொடுக்கச் செய்தார். இவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது கான்ஸ்டான்டிநோபிள் நகரில் எண்ணற்ற துறவிகள் இருந்தனர். இவர்களில் துறவிக்குரிய வாழ்க்கை வாழாமல் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களைத் துறவு மடங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து பிறருக்குத் கெட்ட எடுத்துக்காட்டாக இருந்த குருக்களைக் கண்டித்தார். கொலை மற்றும் விபச்சாரக் குற்றம் புரிந்த குருக்களை குருத்துவநிலையிலிருந்து விலக்கினார். இவரது மறை போதனைகளும், இவர் எழுதியப் புத்தகங்களும் பலரையும் நல வழிப் படுத்தியதாகக் கூறப்படுகின்றது. பணக்காரர்களின் அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தார். பணக்காரப் பெண்களின் வீண்பெருமையைச் சாடினார். அவர்கள் உடை அணிவதில் அடக்கத்தை வலியுறுத்தினார். ஏழைகள்மீது அக்கறை காட்டினார். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் அலெக்சாந்திரியா முதுபெரும் தலைவர் தெயோபிலஸ் உட்பட சில திருச்சபையின் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியிலிருந்தவர்கள் இவருக்கு எதிரிகளானார்கள். இவர்களில் யுடோக்சியா என்ற பேரரசி இவருக்குக் கடும் எதிரியானார். இவரின் மறையுரைகள் இந்தப் பேரரசிக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் பலக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் பேரரசி. அதனால் அரன் இவரை நாடு கடத்த ஆனையிட்டான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் வேகுண்டேழுந்ததைக் கண்டு இந்த முயற்சி கைவிடப் பட்டது. இவரின் கத்தீடிரலுக்கு வெளியே அரிசி யுடோக்சியாவின் வெள்ளி சிலை நிருவப்பட்டு அதன் திரப்பு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டர். ஆனால் இவர் அரசியின் ஆடம்பரசெயலை கடுமையாக சாடினார். அதனால் இவரை அர்மேனியாவுக்கு நாடு கடத்தினர். அப்போதைய திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் இவருக்கு ஆதரவாக இருந்தது அரசனின் செயலை வன்மையாக கண்டித்தார். அவரை அந்தப் பேரரசின் கடைகோடியிலிருந்த பைதியுசுக்கு மீண்டும் நாடு கடத்தினர். அவ்விடத்துக்கு இரண்டு படைவீரர்களால் நடக்க வைத்தே அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் மழையிலும் நீண்டதூரம் நடக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே நலிந்திருந்த இவரது உடல் தாங்கவில்லை. கி.பி.407ம் ஆண்டு செப்டம்பர் 14ம்தேதி இவரால் நடக்கவே முடியவில்லை. இனிமேல் நடக்க முடியாது என அந்தப் படைவீரர்களிடம் கூறியும், அவர்கள் அதற்கு இணங்காமல் மீண்டும் ஆயரைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தனர். அவரது உடல்நிலை மோசமாகவே கோமனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அதே நாளில் தனது 52வது வயதில் இறந்தார். "எல்லாவற்றிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக" என்ற வார்த்தைகளைச் சொல்லி இவர் காலமானார். இந்தப் புனிதர் இறந்து 31 ஆண்டுகள் கழித்து, பேரரசி யுடோக்சியாவின் பிள்ளைகளான அரசி புனித புல்கேரியாவும், அரசர் 2வது தியேடோசியசும் தம் பெற்றோரின் செயல்களூக்கு மனம் வருந்தி தவம் செய்தனர். புனிதரின் உடலை கி.பி.438ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று மிக ஆடம்பரமாக கான்ச்டண்டிநோப்புளின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர். ஊர்வலத்தில் சவப்பெட்டியை இவர்கள் தாங்கிச் சென்றனர். இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் கருதப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 13 செப்டம்பர். கிழக்கு மரபுவழி திருச்சபையில், இவர் காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்ட நாளான 13 நவம்பரில் இவரின் விழா நாளை நினைவு கூர்கின்றனர். ஜான் கிறிஸ்சோஸ்தம், தொடக்க காலத் திருச்சபையின் மாபெரும் போதகர் என்று அறியப்படுகிறார். கிரேக்கத் திருச்சபையின் தந்தையர்களுள் இவரைப் போன்று யாரும் போதிக்கும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. விவிலியத்தில் தொடக்கநூல் பற்றி 67 மறையுரைகள், திருப்பாடல்கள் பற்றி 59 மறையுரைகள், மத்தேயு நற்செய்தி பற்றி 90 மறையுரைகள், யோவான் நற்செய்தி பற்றி 88 மறையுரைகள், திருத்தூதர்பணிகள் பற்றி 55 மறையுரைகள் என இவர் ஆற்றிய மறையுரைகள் ஏராளம், ஏராளம். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு நூல்கள் பற்றி நூற்றுக்கணக்கான விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார். இவரது மறையுரைகள் கேட்பவரது வாழ்க்கையை நேரிடையாகத் தொட்டன. இதனால் இவரது மறையுரைகளைக் கேட்கும் மக்கள் அவற்றை எழுதி அரசர் முதல் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். ஷோபார் ஷோபார் ("shofar", உச்சரிப்பு: , , ) என்பது யூத சமய நோக்கங்களுக்காக பாரம்பரியமாக செம்மறியாட்டின் கொம்பிலிருந்து பாவிக்கப்படும் ஒன்றாகும். ரோஷ் ஹஷானா, யோம் கிப்பூர் ஆகிய திருநாட்களில் யூத தொழுகைக் கூடங்களில் ஷோபார் ஊதப்படும். இது வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன. ஷோபார் பற்றி அடிக்கடி யூத வேதாகமத்திலும், தல்மூட்டிலும், யூத போதக இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாய் மலையில் தடித்த மேகத்திலிருந்து வெளிப்பட்ட ஷோபார் சத்தம் இசுரேலியர்களை திகிலால் அச்சமடையச் செய்தது (யாத்திரையாகமம் 19:16). ஷிட்சிஸ் ஷிட்சிஸ் ("tzitzit") () எனப்படும் எபிரேய பெயர்ச்சொல் சமய அனுசரிப்பு யூதர்களால் அணியப்படும் முடிச்சு போடப்பட்ட சமய ஆராரிப்பு குஞ்சம் ஆகும். இது தலிட்டின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டிருக்கும். திஃபிலின் திபிலின் அல்லது டிஃபிலின் ("Tefillin"; ; ) என்பது தோரா வசனங்கள் தோலில் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய கருப்பு தோலிலானான ஓர் பெட்டியாகும். இது சமய ஒழுங்கை பின்பற்றும் யூதர்களினால் கிழமை நாட்களின் காலை வேண்டுதலில் அணியப்படும். திஃபிலின் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும். ஆனாலும், ஒருமைச் சொல்லாகவும் பாவிக்கப்படும். அரையுயிர்க் குற்றியலுகரம் குற்றியலுகரம் என்பது வல்லின உகர எழுத்துக்களில் முடியும் ஆறு வகையான சொற்கள். இவை அனைத்தும் மொழியிறுதிக் குற்றியலுகரங்கள். தொல்காப்பியர் மொழிமுதல் குற்றியலுகரம் என 'நுந்தை' என்னும் முறைப்பெயரைக் குறிக்கிடுகிறார். இவற்றுடன் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரையில் தமிழில் புழக்கத்தில் உள்ள குற்றியலுகரம் இந்த அரையுயிர்க் குற்றியலுகரம். மெய்யெழுத்துக்களில் வ, ய ஆகிய இரண்டையும் இக்கால மொழியியலாளர்கள் அரையுயிர் எனக் குறிப்பிடுகின்றனர். இலக்கண நூல்கள் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுகின்றன. உயிர் முன் உயிர் வந்து புணரும்பொது உடம்படுமெய் தோன்றும். வெண்பா யாப்பானது நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு கொண்டு முடியும். திருக்குறளில் 10 படல்கள் அறிவு என்னும் சொல்லைக்கொண்டு முடிகின்றன. இப்படிப் பார்க்கும்போது அறிவு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்பாடுதானே? பிறப்பு என்பது குற்றியலுகரம் அல்லவா? கதவைத் திற என்கிறோம். இதில் கதவு + ஐ = கதவை எனக் குற்றியலுகரம் போலப் புணர்ந்துள்ளதைக் காண்கிறோம். "அறிவற்றம் காக்கும் கருவி" திருக்குறள் 421 என்னும்போது அறிவு என்னும் சொல் குற்றியலுகரம் புணர்வது போலப் புணர்ந்துள்ளது அல்லவா? இந்தகைய நிலை 'வு' எழுத்துக்கு எதனால் நேர்ந்தது? அரையுயிர் என்பதனால் நேர்ந்தது. உடம்படுமெய் தமிழ் மொழியில் சொல்லோடு சொல் சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். உயிர் எழுத்தில் முடியும் சொல்லோடு உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் வந்து சேரும்போது இடையே ய, வ ஆகிய இரண்டு எழுத்துக்களை ஆசாகக் கொள்ளும். இவை இரண்டையும் அரையுயிர் என இலக்கண நூலார் குறிப்பது வழக்கம். அண்மைக் காலம் வரையில் திண்ணைப் பள்ளிகளில் எழுத்துக்களை ஓசையுடன் கற்பித்துவந்தனர். அவற்றில் இந்த உடம்படுமெய் பிறப்பதைக் காணலாம். அ - ஆனா ஆ - ஆவன்னா இ - ஈனா ஈ - ஈயன்னா உ- ஊனா ஊ - ஊவன்னா எ - ஏனா ஏ - ஏயன்னா ஐ - ஐயன்னா ஒ - ஓனா ஓ - ஓவன்னா ஔ - ஔவன்னா இவற்றில் நெடில் எழுத்துக்களோடு இணைந்துள்ள எழுத்துக்களைக் கழுத்தில் கொண்டு நன்னூல் உடம்படுமெய் எழுத்துக்களைப் பாகுபாடு செய்து காட்டுகிறது. அரையுயிர் தமிழில் உயிரெழுத்துக்கள் 12. இவை ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரை. மெய்யெழுத்து 18. இந்தப் பதினெட்டில் வ, ய ஆகிய இரண்டு எழுத்துக்களையும் மொழியியலாளர்கள் அரையுயிர் எனக் குறிப்பிடுவர். இலக்கண நூலார் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுவர். இரண்டு உயிரெழுத்துக்களுக்கு இடையே தோன்றும் மெய்யெழுத்தை உடம்படுமெய் என்கிறோம். கிளி என்னும் சொல் [இ]-ல் முடிகிறது. அழகு என்னும் சொல் [அ]-ல் தொடங்குகிறது. இரண்டும் ஒன்று சேரும்போது [கிளி அழகு], [கிளி ய் அழகு] கிளியழகு என வருகிறது. பா என்னும் சொல் [ஆ]-ல் முடிகிறது. இனிது என்னும் சொல் [இ]-ல் தொடங்குகிறது. இரண்டும் ஒன்று சேரும்போது [பா இனிது]. [பா வ் இனிது] பாவினிது என வருகிறது. தமிழில் இந்த இரண்டு மெய்யெழுத்தொலிகள் மட்டுமே இவ்வாறு வருகின்றன. ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும் இடையின எழுத்துக்கள். இவற்றில் [ய], [வ] என்னும் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே இயல்பெழுத்துக்கள். ஏனையவை நாவின் சுழற்ச்சியால் பிறப்பவை. எனவே இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அரையுயிர்களாக வருகின்றன. அறிவு என முடியும் திருக்குறள் பாடல்கள் உள்ளன. இச்சொல் அறிவுடைமை எனக் குற்றியலுகரம் போலப் புணர்வதை அறிவோம். காரணம் [வ] எழுத்தின் அரையுயிர்த் தன்மையே. இ, ஈ, ஏ - என்பன பல்லெழுத்துக்கள். எனவே இவை பல்லெழுத்து அல்லாத [ய] என்னும் அரையுயிரைச் சேர்த்துக்கொள்கின்றன. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, - என்பனவற்றில் பல்லொலி இல்லை. எனவே இவை [வ] பல்லெழுத்தை அரையுயிராக இணைத்துக்கொள்கின்றன. பிற மொழிகளிலும் இந்த நிலை உண்டு. உல்ம் மினிஸ்டர் உல்ம் மினிஸ்டர் (""Ulm Minster"", ) என்பது செருமனியில் உல்ம் எனும் இடத்தில் அமைந்துள்ளள லூதரனிய தேவாலயம். இதனுடைய பாரிய அளவு காரணமாக சில வேளைகளில் இது உல்ம் பேராலயமாகவும் கருதப்படுகின்றது. ஆயரின் இருப்பிடம் இல்லாததால் இது பேராலயம் அல்ல. உல்ம் மினிஸ்டர் கோல்ன் கதீட்ரல் போன்று கோதிக் கட்டிடக்கலை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் இறுதி பூர்த்தியடையாமல் இருந்தது. இது உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயமும், 20ம் நூற்றாண்டுக்கு முன் வரை நான்கவது உயரமான கட்டடமாகவும், கோபுரத்துடன் 768 படிகளுடன் காணப்படுகின்றது. கேட்வே ஆர்ச் கேட்வே ஆர்ச் ("Gateway Arch") அல்லது கேட்வே டு த வெஸ்ட் ("Gateway to the West"), என்பது செயின்ட் லூயிஸ், மிசூரியில் உள்ள ஜெபர்சன் தேசிய பரந்த வெளி நூதனசாலையின் முக்கிய மேல்வளைவு ஆகும். உயரமுடைய இது அமெரிக்காவில் உயரமான மனிதனால் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும். அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் ("Arecibo Observatory") என்பது புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும். இந்த ஆய்வுக்கூடம் தேசிய அறிவியல் நிறுவனத்துடனான கூட்டு உடன்படிக்கையின் கீழ் எஸ்.ஆர்.ஐ பன்னாடு நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றது. அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமான Messier 13 (M13) – விற்கு வேற்று கிரக வாசிகளை நோக்கி முதன் முதலாக அரிசிபோ தகவல் அனுப்பப்பட்டது. பூட்டுச் செம்பு பூட்டுச் செம்பு அல்லது தூக்குச் செம்பு என்பது இறுக்கமாகப் பூட்டிப் பயன்படுத்தக் கூடியதாகவும், தூக்கிக் கொண்டு போகக் கூடியவாறும் வடிவைமைக்கப்பட்ட ஒரு செம்பு ஆகும். பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன. பித்தளையினால் ஆன செம்பு வகையைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும் 7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம். தற்போது வழக்கொழிந்து போய் விட்ட இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போது போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும். டப்ளின் தூபி டப்ளின் தூபி ("Spire of Dublin"), உத்தியோகபூர்வமாக "வெளிச்ச நினைவுச் சின்னம்" என தலைப்பிடப்பட்ட ("Monument of Light") (), பெரியதும், துருப்பிடிக்காத உருக்கால் உருவாக்கப்பட்டதும், குண்டூசி போன்றதுமான நினைவுச் சின்னம். 121.2 மீட்டர் (398 அடி) உயரம் உடைய இது அயர்லாந்து குடியரசின் டப்ளினில் அமைந்துள்ளது. பொருட்புணர்ச்சி தொல்காப்பியம் புணர்ச்சியைச் சொற்புணர்ச்சி என்றும் பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காட்டுகிறது. சொல்லில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடுகள் சொல்லின் ஒலி நோக்கியவை அல்ல. சொல்லின் பொருள் நோக்கியவை. மற்றும் சில பொருள்நோக்குப் புணர்ச்சிகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இந்தப் புணர்ச்சிகளை நன்னூல் இலக்கணமும் வழிமொழிகிறது. அவை இங்குத் தொகுத்துப் பார்க்கப்படுகின்றன. உயர்திணைச்சொல் எல்லா வழியும் இயல்பாக வருதல் வேண்டும். இப்படிப் பல. சீயோனிசம் சீயோனிசம் ("Zionism", , "Tsiyonut") என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும். சீயோனிசம் யூதர்கள் அவர்கள் அடையாளத்தை காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத எதிர்ப்பு, வெளியேற்றப்படல், துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து யூதர்களை இசுரேலுக்கு திரும்பச் செய்வதற்கு பரிந்து பேசல் ஆகியவற்றுக்கு இது உதவுகின்றது. பெரிய இசுரேல் பெரிய இசுரேல் ("Greater Israel") என்பது பல காலமாக உள்ள சில வேறுபட்ட விவிலிய மற்றும் அரசியல் அர்த்தம் உடைய ஒரு வாதத்திற்கு இடமான தெரிவிப்பாகும். தற்போது, இசுரேல் மற்றும் பாலஸ்தீன பகுதி உட்பட்ட நிலப்பகுதிகளை வரையறுக்கும் பதமாக பொதுவாகக் காணப்படுகின்றது. 1923இற்குப் பின்னான மறுநோக்கு சீயோனிசத்தின் விருப்பின் முன்னைய வரையறுப்புக்கள், பிரித்தானிய ஆட்சி பாலஸ்தீனம் மற்றும் திரான்ஸ்யோர்டான் உட்பட்ட அல்லது உட்படாத நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாகவிருந்தது. ஏனைய சமய பார்வையில், இது இசுரேல் தேசம் எனப்படும் விவிலிய குறிப்பின் ஒன்றாகப் பாவிக்கப்படுகின்றது. இது விவிலியத்தின் ஆதியாகமமம் 15:18-21, உபாகமமம் 11:24, உபாகமம் 1:7, எண்ணிக்கை 34:1-15 அல்லது எசேக்கியேல் 47:13-20 ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. வாக்களிக்கப்பட்ட நாடு வாக்களிக்கப்பட்ட நாடு () என்பது கடவுளால், எபிரேய விவிலியமான டனாக்கின்படி யாக்கோபின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வாக்குறுதி முதலில் ஆபிரகாமுக்கும் (ஆதியாகமம் 15:18-21), பின்பு அவருடைய மகன் ஈசாக்குடனும் அவருடைய மகன் யாக்கோபுடனும் புதுப்பிக்கப்பட்டது (ஆதியாகமம் 28:13)). வாக்களிக்கப்பட்ட நாடு எகிப்து நதியிலிருந்து புராத்து ஆறு வரை என விபரிக்கப்பட்டுள்ளது (யாத்திரையாகமம் 23:31). யூதப் பாரம்பரியத்தின்படியும், பல கிறித்தவ விளக்கவுரையாளர்களின் விளக்கத்தின்படியும், ஆபிரகாமின் சந்ததியினர் எனப்படுபவர்கள் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு, அவருடைய பேரன் யாக்கோபு என்பவர்கள் ஊடானது மாத்திரமேயாகும். இது இஸ்மவேல், ஏசா என்பவர்களை உட்படுத்தவில்லை. எருசலேம் சின்னம் எருசலேம் சின்னம் 1950-51 இல் யூத தேசிய எலியானு நிதியின் இயக்குனர் கொரனினால் வடிவமைக்கப்பட்டு, பின்பு மேம்படுத்தப்பட்டது. சிங்கம் யூதாவின் சிங்கத்தையும், பின்னணி மேற்குச் சுவரையும், ஒலிவக் கிளை சமாதானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவற்றின் மேல் எருசலேம் ("யெருசலைம்") என்னும் எபிரேயச் சொல் பதிக்கப்பட்டுள்ளது. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் என்பது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு நூலகமாகும். முழுக்க முழுக்க மாநில அரசு நிறுவனமான இதற்கும் சென்னைப்பல்கழகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் இச் சுவடி நூலகத்திற்கு இடம் தரவேண்டும் என ஆணையிட்டு அதற்காக ஒரு தொகையையும் அப்போதைய ஆங்கில அரசு உத்தரவிட்டது. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன. இந் நூலகம் ஆராய்ச்சிக் கருவூலமாகத் திகழ்வதைக் கருத்திற்கொண்டு முனைவர் சு.சௌந்தரபாண்டியனின் முயற்சியால் ’அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது இப்பெயரிலேயே இது இயங்கிவருகிறது. இம் மையத்தில் தற்போது தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் ஆகிய மொழிகளிற் சுவடிகள் உள்ளன. சுவடிகளில் ஓலைச்சுவடிகளும் தாட் சுவடிகளும் அடங்கும். காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்புக்களே இந் நூலகம் உருவாவதற்கு ஆதாரமாகும். இம்மையத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல் முதாலன பிரிவுகளைச் சேர்ந்த சுவடிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திர மாநில வரலாறுகளைக் கூறும் கைபீதுகளும் (Kaifyats) இருக்கின்றன. துள்ளி எழுந்தது காதல் (திரைப்படம்) துள்ளி எழுந்தது காதல், என்பது "தகிட தகிட" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும். "தகிட தகிட" ஸ்ரீஹரி நானு இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படம், துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. எருசலேம் கொடி எருசலேம் கொடி இசுரேலிய தேசியக் கொடியை அடிப்படையாகக் கொண்டது. இது தலிட்டினை அல்லது யூத வேண்டுதல் போர்வையினை நினைவூட்டும் இரு கிடையான நீலக் கோடுகளைக் கொண்டது. நடுவில் எருசலேம் சின்னத்தினைக் கொண்டுள்ளது. செங்குத்தான கொடி சிலவேளைகளில் சடங்கு விழாக்களில் பாவிக்கப்படும். இக் கொடி 1949 இல் இசுரேல் உருவாக்கிய (நகரின் மேற்குப் பகுதியில்) எருசலேம் மாநகர அரசு நடத்திய போட்டியினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இது 1967 ஆறு நாள் போர் போரைத் தொடர்ந்து ஐக்கிய எருசலேமின் கொடியாகியது. கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில் கல்யாணபசுபதீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் தேவாரம் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது. இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன. மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் கருவூரார் சன்னதியும், ராகு கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன. கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி. தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார். படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார். காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்தது இவ்வூரில்தான். இது திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம், ஆருத்தரா தரிசனம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோவில் தினமணி, நவம்பர் 02, 2012 தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006 தமிழிசை ஆய்வுகள் தமிழிசை ஆய்வுகள் என்பது தமிழிசை குறித்து ஆய்வு செய்தோர் மற்றும் ஆய்வு நூல்களையும் குறிக்கும். ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழிக்கு இசைமரபு இல்லை என்றும், தமிழ்மொழியில் இசைநூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து தமிழன் பெற்றவையே மிகுதி என்றும் கூறப்பட்டு வந்தது. இக்கருத்துகளுக்கு முடிவு தரும் நிலையிலும் இசைத்தமிழின் வளர்ச்சியையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் உ.வே.சாமிநாதையர் 1892-இல் சிலப்பதிகாரத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூலும் இந்நூலுக்கு எழுந்த அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் நமக்கு எடுத்துணர்த்தின. சிலப்பதிகாரத்தையும் அதன் அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரையையும் மையமாகக் கொண்டு இசைத்தமிழ் ஆய்வுகள் தோன்றலாயின. சில ஆய்வு நூல்கள்: 1892-இல் உ.வே.சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார். இந்நூல் வாயிலாகவும் இந்நூலுக்கு எழுந்த உரைகள் வாயிலாகவும் தமிழ்க் கலைச் செல்வங்கள் பற்றி பலர் ஆராய முற்பட்டனர் இவ்வகையில் இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர். இவர் எழுதி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் தமிழிசை பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாக விளங்குகிறது. இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்ததோடு தமிழில் இசைப் பயிற்சி நூல்கள் இல்லை என்ற குறையை நீக்கும் பொருட்டு, தமிழில் பயிற்சிப் பாடல்கள் அடங்கிய கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டார். தஞ்சையில் இசைத்தமிழ் ஆய்வு மாநாடுகளை நடத்தி, இசைத்தமிழ் வளங்களையெல்லாம் உலகறியச் செய்தார். மதுரையைச் சேர்ந்த எம். கே. எம். பொன்னுச்சாமி தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு நூலிற்கு பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிட்டார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நிலவிய இசை பற்றிய உண்மைகளை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம் என்றும், இதனால் இதற்குப் 'பூர்வீக சங்கீத உண்மை' என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் நூன் மரபு, கர்த்தா ராகத்தின் நிர்ணயம், மூர்ச்சை பிரசுதாரம், கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும், இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. எம். கே. எம். பொன்னுச்சாமி அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய "தாய் இராகம் 32" என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விபுலானந்த அடிகள் பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட தமிழிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது. தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களை விபுலானந்தர் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் இதில் விளக்கியுள்ளார். இசைத் தமிழ் ஆய்வில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் () (இறப்பு சுமார் 287), இரட்டைப் பிள்ளைகளான இவர்கள், அரேபியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டுச் சிசிலியா கடற்கரையருகே இலவசமாக பணம் வாங்காமல் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இவர்கள் "காசுபணம் இல்லாதவர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தியாகங்கள், புனித வாழ்க்கை, குணமளிக்கும் சக்தி ஆகியவற்றினால் பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பர். பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்டு தலைவெட்டப்பட்டு இறந்தனர். புனிதர்கள் கோஸ்மாஸ் தமியான் பெயரால் கிழக்கிலும் மேற்கிலும் பல ஆலயங்கள் உள்ளன. திரிபு திரிபு (இலக்கணம்) தமிழில் சொல்லோடு சொல் இணையும் புணர்ச்சியில் சொற்களில் மாற்றம் உண்டாவதைத் திரிபு என வழங்குவர். இந்த மாற்றங்களைத் தொல்காப்பியம் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகையாகப் பாகுபாடு செய்துகொள்கிறது. நன்னூல் திரிதலை விகாரம் எனக் குறிப்பிடுகிறது. இதன் பாகுபாடுகளைத் தோன்றல், திரிதல், கெடுதல் எனக் குறிப்பிடுகிறது. செய்யுள் விகாரம் விகாரம் என்பது இயல்பு மாற்றம். செய்யுளில் எதுகை,மோனைகளுக்காகச் சில சொற்கன் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படும். ஓசை ஒத்திசைவுக்காக இவை இவ்வாறு வருகின்றன. பதம் பதம் (சொல் விளக்கம்) பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை. சீ சின்பிங் சீ சின்பிங் ("Xi Jinping", பின்யின்: "Xí Jìnpíng"; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும் சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார். பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார். அகபு புனித அகபு அல்லது புனித அகபுஸ் () என்பவர் ஆதி கிறித்தவ திருச்சபையின் முதல் சீடர்களுள் ஒருவர். இவரை இறைவாக்கினர் என அப்போஸ்தலர் பணி குறிக்கின்றது. லூக்கா நற்செய்தி இல் குறிப்பிடப்படும் கிறித்துவின் எழுபது சீடர்களுள் இவரும் ஒருவர் என நம்பப்படுகின்றது. திருத்தூதர் பணிகள் இன் படி இவர் எருசலேமிலிருந்து அந்தியோக்கியாவுக்கு வந்த இறைவாக்கினர்களுள் ஒருவர். இவர் தூய ஆவியாரால் ஏவப்பட்டு உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது. மேலும் திருத்தூதர் பணிகள் இன் படி, இவர் மற்ற சீடர்களிடம் சென்று திருத்தூதர் பவுலின் இடைக் கச்சையை எடுத்து தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு, இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள் இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்புவிப்பார்கள் என எச்சரித்தார். இருப்பினும் பவுல் எருசலேமுக்கு சென்றார். இவர் பல கிறித்தவப்பிரிவுகளில் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் பிப்ரவரி 13 ஆகும். பாரம்பரியப்படி இவர் அந்தியோக்கியாவில் மறைசாட்சியாக இறந்தார் என்பர். ஆம்பல் (அணிகலன்) ஆம்பல் என்பது சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அணியும் ஒருவகை வளையல் ஆகும். இந்த அணிகலன் இயற்கையாக மலர்ந்த ஆம்பல் மலரால் ஆனதாக இருந்திருக்கலாம். ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் என்ற சங்கப்புலவர் எனப் புறநானூறில் பாடியுள்ளார். எம். பகீரதி எம். பகீரதி ஆளுமை: பகீரதி, மோசேஸ் (1975.07.03) மட்டக்களப்பு, சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பகீரதி 1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை கனகரெத்தினம், இவரது தாய் பாக்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சித்தாண்டி இராமகிரு~;ண மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் கற்றார். கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் மானிடவியலும் துறையில் விசேட பட்டப்படிப்பை மேற்கொண்டு இரண்டாம் தர மேற்பிரிவில் சித்தியடைந்து, திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி பட்டயக்கல்வியை பூர்த்தி செய்து, அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணியை பூர்த்தி செய்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘உயர்கல்வி போதனை திறன் விருத்தி கற்கையை’ மேற்கொண்டு சித்தியடைந்துள்ளார். கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட உறுப்பினர், பீடத்தின் ஊழியர் மதிப்பீட்டு குழு உறுப்பினர், பல்கலைக்கழக ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் இணைப்பாளர், பல்கலைக்கழக பாலின சமத்துவத்திற்கான கல்விப்பிரதிநிதி, பீடத்தின் கல்வித் தர உத்தரவாத செயற்குழு உறுப்பினர் என பல்கலைக்கழகத்தின் பல மட்டங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருவதோடு, சமூகவியல்துறை இணைப்பாளர், பீடத்தின் மாணவ ஆலோசகர் என்ற பதவி நிலைகளிலும் பணியாற்றியுள்ளார். கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சமூகவியல் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர்  சமூக ஆய்வாளர், எழுத்தாளர், வளவாளர், ஆலோசகர் போன்ற அடையாளங்களையும் பெற்றுள்ளார். இந்தியா, மலேசியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழக மட்டத்திலான ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்படும் ஆய்வேடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இவர் சமூகவியலின் பன்முகப் பார்வையிலான பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். பல்வேறுபட்ட கருத்தரங்குகள், பேருரைகள் என்பவற்றுக்கான செயற்குழு உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாநாடுகளின் நடுவராகவும் செயற்பட்டுள்ளார். விருதுகள்: பல்கலைக்கழக மட்டத்திலான சர்வதேச ஆய்வரங்குகள் பலவற்றில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆறாவது சர்வதேச ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட சமூக ஆய்வுக்கு ;சிறந்த ஆய்வு வழங்குனர் விருது’ வழங்கப்பட்டது. சமூகவியல், மானிடவியல், கல்வியியல், ஊடகவியல், வெகுஜன தொடர்பியல் என பல்துறை அறிவும் சிந்தனை ஆற்றலும் கொண்ட எம்.பகீரதியின் ‘இலங்கையில் தொலைக்காட்சி –நிகழ்ச்சிகள் ஊடான சமூகவியல் பார்வை’ என்ற ஒரே நூல் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். கலாசார அமைச்சும் கலாசார திணைக்களமும் இணைந்து வழங்கிய தொலைக்காட்சி ஆய்வு நூலுக்கான தேசிய விருது, இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய ஆய்வு நூலுக்கான விருது, கிழக்கு மாகாண கலாசார அமைச்சு வழங்கிய ஆய்வு நூலுக்கான சாகித்திய விருது, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் வெளியீட்டுக்கான தரம் வாய்ந்த நூல் பரிசு என்பவை கிடைக்கப்பெற்றன. இவரால் கதை, கதை வசனம் எழுதப்பட்டு இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘புதுமைப்பெண்’ என்ற தொலைக்காட்சி நாடகத்திற்கு 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடகம் என்ற விருது கிடைக்கப் பெற்றுள்ளது.  இவரது பிரதியாக்கத்தில் இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘வீதியும் வீடும்’ என்ற விவரண நிகழ்ச்சிக்காண தேசிய விருது 2007 ஆம் ஆண்டு கிடைத்தது. தேசிய மட்டத்திலான பங்களிப்பு இலங்கை தொலைக்காட்சித் துறையில் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கிவரும் இவரது பல எழுத்தாக்கங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த ஏழு வருடங்களாக இலங்கை தேசிய தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘இப்படிக்கு சட்டம்’ என்ற சமூகம் சார் சட்ட நிகழ்ச்சிக்கான ஆராய்ச்சிப் பிரதிகளை எழுதி வருவதோடு குறித்த நிகழ்ச்சிக்கான ஆலோசகராகவும் விளங்கி வருகிறார். இலங்கை ஊடக அமைச்சின் தகவல் திணைக்களத்தின் வெளியீடான ‘திங்கள்’ சஞ்சிகை, தேசிய தொலைக்காட்சியின் ‘செலலிஹினி வத’, கலாசார அமைச்சின் ‘ரூபவாஹினி சமீக்சா’ மற்றும் ‘இலக்கியம்’, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ‘நிவேதினி’ போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். இலங்கையின் தேசிய தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதிவரும் இவர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் லிமிட்டட்டின் ‘கேசரி இயர் வுக் - 2011’ என்ற தகவல் களஞ்சியத்திற்காக  இலங்கையில் தொலைக்காட்சி வரலாறு என்ற பகுதியை எழுதினார்.     தேசிய மட்டத்திலான பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கும் தனது பங்களிப்பை செய்து வருகிறார். குறிப்பாக, இலங்கை தகவல் திணைக்களத்தின் ‘திங்கள்’ சஞ்சிகையின் ஆலோசகர், தகவல் திணைக்களத்தின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்ட’ வளவாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வளவாளர், கூட்டுறவுக் கல்லூரியின் வளவாளர், கிருசி வெளியீட்டகத்தின் ஆலோசகர் என பல பங்களிப்புகளை செய்து வருகிறார். தேசிய மட்டத்திலான ஊடகம் சார் பங்களிப்பினை செய்து வருகிறார். குறிப்பாக இலங்கை தேசிய தொலைக்காட்சியின் ‘இப்படிக்கு சட்டம்’ என்ற வாராந்த சமூக நிகழ்ச்சிக்கான ஆலோசகராக கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றி வரும் இவர் அதற்கான ஆராய்ச்சிப் பிரதிகளையும் எழுதி வருகிறார். ‘எமது பூமி’ என்ற சமூகம் சார் விவரண நிகழ்ச்சிக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ‘தடம்’ என்ற சமூக சஞ்சிகை நிகழ்ச்சிக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ‘விடியல்’ என்ற விவரண நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதியுள்ளார்.        பகுபத உறுப்புகள் தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள். அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு இதனால் தெரியவரும் பிழிவு. கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறவன் நல் தாள் தொழாஅர் எனின். இந்தச் சொல்லமைதி விளக்கத்தால் பெறப்படும் பிழிவு. வீ. ரேணுகாதேவி வீ. ரேணுகாதேவி (பிறப்பு: ஆகஸ்ட் 14, 1954) என்பவர் ஒரு தமிழகக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், மொழியியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டமும், மொழியியலில் முனைவர் பட்டமும், தெலுங்கு மொழியில் பட்டயமும் பெற்றிருக்கிறார். தேசிய அளவிலான 15 பணிமனைகள் மற்றும் கருத்தரங்குகளை இவர் நடத்தியுள்ளார். அகில இந்திய வானொலியில் 15 முறை இவர் உரையாற்றியுள்ளார். கல்வி தொடர்பான பன்னாட்டு இதழ்களில் இவரது 78 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மொழியியல் தொடர்பான சில நூல்களையும் எழுதியுள்ளார். இவர் இந்தியாவிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார். இவர் கீழ்க்காணும் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறார். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சில கல்லூரிகளின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். ஆம்பல் (மருந்து) ஆம்பல் என்பது சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து ஆகும். ஆம்பல் மலரின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன அக்காலத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் பூசி, நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதியதாகப் புறநானூற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், தொழுநோய் (குட்டம்) போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்களுக்கும் இவற்றின் புகை ஊதப்படுகிறது. இவற்றின் புகை கெட்ட ஆவிகளைப் போக்கும் என்ற நம்பிக்கையும் அக்காலத்தே இருந்துள்ளது. ஆம்பல் குழல் (இசைக்கருவி) ஆம்பல் குழல் என்பது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஒருவகை காற்றிசைக் கருவியாகும். மூங்கிலையும் ஆம்பல் என்று பண்டைய நூல்கள் குறிக்கின்றன. ஆம்பல் பண்ணை இசைத்த குழலை ஆம்பல் குழல் எனவும் அழைத்திருக்கலாம். எனவே ஆமபல் என்பது ஆம்பலின் தண்டில் செய்த குழல் அல்லது மூங்கிலால் செய்த குழலைக் குறிக்கலாம். சிலப்பதிகாரம், நற்றிணை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களில் ஆம்பல் குழல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அழகிய ஆம்பல் குழல் தெளிவான இசையை வெளிப்படுத்தும் என்பதை “ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” எனக் கூறுகின்றது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில், ஆம்பல் தண்டு நடுவே துளையுடையது. அதனை "நீர்வளர் ஆம்பல் தூம்பு திரள் கால்" என நற்றிணை சொல்வதால் அறியலாம். ஐங்குறுநூறு ஆம்பல் பண் இனிமையாய் ஒலிப்பதை “தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்” எனச் சொல்வதால் அறியலாம். ஆம்பல் பண் ஆம்பல் பண் என்பது ஒருவகைப் பண்ணாகும்[இராகம்]. சங்க இலக்கியங்களில் இப்பண்ணைப் பற்றிய செய்திகள் காணப் பெறுகின்றன. முல்லை நில மக்களாகிய கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் ஆம்பல் பண்ணை இசைத்து மகிழ்கின்றனர் என நற்றிணை கூறுகிறது. பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்ந்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகூட்டினார்கள் என்பதை என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. மேலும் ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகியவற்றிலும் சிலப்பதிகாரத்திலும் ஆம்பல் பண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆம்பல் (எண்) ஆம்பல் (எண்) என்பது அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களுள் ஒன்றாகும். இதனை அல்பெயர் எண் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர். (ஆம்பல் = 100,000,000,000,000 = 1014 = நூறு திரில்லியன்) சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் மதிப்பிலான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்னக்(அழிந்து போகுமாறு) கைவிட்டான் என்பதை மாமூலனார் என்ற புலவர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்து என்ற இலக்கியம் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனைக் கபிலர் வாழ்த்துவதாக " இலைகளால் சூழப்படாத பூக்கள் அல்லாத பல ஆம்பல் என்னும் பேரெண்ணும, அதனை ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளம் என்னும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!"எனக் குறிப்பிடுகிறது. ஆம்பல் பால் உணர்த்தும் ஈறுகள் பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 எழுத்துக்கள் என வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது. உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறினையில் ஒன்றன்பால், பலவின்பால் என்பன தமிழ் மொழியில் உள்ள ஐந்து பால்கள். பெயரும் வினையுமாக வாக்கியம் அமையும்போது பெயரில் தோன்றும் பாலறி கிளவியும், வினையில் தோன்றும் பாலறி கிளவியும் மயக்கமின்றி (முரண்படாமல்)வருதல் நெறி. நன்னூல் இவற்றை விகுதி என்று பதத்தின் பகுதியாகக் காட்டுகிறது. பெரிய ஆல்பர்ட் புனித பெரிய ஆல்பெர்ட், O.P. ( 1200க்கு முன்பு – நவம்பர் 15, 1280), பெரியவர் ஆல்பெர்ட் என்றும் கொலோனின் ஆல்பெர்ட் என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு கத்தோலிக்க முனிவர் (புனிதர்) ஆவார்.இவர் செருமானியத் தொமினிக்கத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் "அகற்பொது முனைவர்" என்றும் "புலவாண்மை முனைவர்" என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி "பெரியவர்" என்ற பெருமையையும் பெற்றவர்.ஜேம்சு ஏ.விஷீப்பிள், ஜோச்சிம் ஆர்.சோடர் போன்ற புலமையாளர்கள் இவரை இடைக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளராகவும் இறையியலாளராகவும் மதித்தனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை திருச்சபை (மறையியல்) முனைவராக தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத் தக்கதாகும். உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. ஆர்சனிக் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே. அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களை ஆராய்ந்தவர். ஆல்பெர்ட் போலிசுதாத் என்பவரின் மகனாகப் பிறந்தார். 1280இல் இவர் இறந்தபோது இவருக்கு 80 அகவை எனக்கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி இறக்கும்போது 87 அகவை முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193இல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட் (இப்போது பவாரியா எனப்படும்) இலௌவிங்கெனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை இலௌவிங்கெனின் ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம். 1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார். விகுதி நன்னூல் வகுத்துக் காட்டும் பகுபத உறுப்புகளில் ஒன்று விகுதி. தொல்காப்பியம் இதனைப் பாலறி கிளவி எனக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் 11 எழுத்துக்கள் பாலறி கிளவிகளாகக் காட்டப்பட்டுள்ளன. நன்னூல் இலக்கணம் வினைச்சொல் விகுதிகளைக் குறிப்பிடுகிறது. என்பவும் பிறவும் எனக் குறிப்பிடுகிறது. அ இசுரேல் தேசம் இசுரேல் தேசம் (, "Land of Israel") என்பது "தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால்" சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும். இது கானான், பாலஸ்தீனம், வாக்களிக்கப்பட்ட நாடு, அல்லது புனித பூமி எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, தோராவின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர். ஆதியாகமத்தின்படி, கடவுளினால் ஆபிரகாமுக்கும், அவருடைய மகன் ஈசாக்குக்கும், அவருடைய மகன் யாக்கோபுக்கும், அவர்களின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் அத் தேசம் வாக்களிக்கப்பட்டது. தாவீதின் நகர் தாவீதின் நகர் ("City of David", , ) என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும். இது கோவில் மலையிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், பாரம்பரியத்தின்படி தாவீது அரசர் இங்கு தன் அரண்மனையினை கட்டி தன் தலைநகரை நிறுவிய இடமாகவும் உள்ளது. தாவீதின் நகர் இயற்கையாகவே மேற்கில் தைரோபன் பள்ளத்தாக்கு, தெற்கில் கின்னம் பள்ளத்தாக்கு, கிழக்கில் கிதரோன் பள்ளத்தாக்கு மற்றும் வழுக்கும் பள்ளத்தாக்கினால் பாதுகாப்பப்பட்டது. எருசலேம் புனித பூமியின் மாதிரி எருசலேம் புனித பூமியின் மாதிரி என்பது இரண்டாம் கோவில் கால எருசலேம் நகரின் 1:50 அளவு மாதிரியாகும். இம் மாதிரி அதன் மூல இடத்திலிருந்து இஸ்ரேல் அருங்காட்சியகத்திற்கு சூன் 2006 நகர்த்தப்பட்டது. பெருமகிழ்ச்சிமாலை பெருமகிழ்ச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு முதலியவற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. கவரா கவரா (Kavara) அல்லது கவரா நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். போயர்கள் (Bhoyar/Boyar/Bhoir), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும். கோழி (koli) எனும் இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே எனவும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அஹீர் (Ahir)எனும் ராஜபுத்திர இனம் கவரா இனமே அவ்வினத்தினை கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் (Gaolan), ரவட் (Rawat),கஹ்ர (Gahra), மகாகுல் (Mahakul) என்கின்றனர். கோளகர் Golkars தெலுங்கிலிருந்து மருவிய கொல்லர் (Golars) என்கின்ற வார்த்தையாகும். (The Golkars of Chanda may be derived from the Telugu Golars or graziers) அஹீர் எனும் இனத்தவரான கோழி இனத்தவரே நேபாளின் அரசராக இருந்துவருகின்றனர். அஹிரின் துணை சாதிகளாக அஹீர் சுனார்,சூத்திர,லஹர்ஸ்,சிம்பி,செயில், குரோ மற்றும் கோழி. ( In many castes there is a separate division of AhIrs, such as the Ahir Sunars, Sutars, Lohars, Shimpis, Sails, Guraos and Kolis) கடவுளின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது அஹீர் இனமே, மேலும் யாதவ அரசனான இவர் பாண்டவர்களின் உறவினரும் ஆவார், மேலும் அஹீர் இனத்தின் ஒரு துணை பிரிவினரே கௌரவர்கள் (Gowara) மேலும் கென்ட் கவரா Gond- Gowaris அழைக்கபடுவர். (In Chanda the Gowaris are admittedly descended from the unions of Gonds and Ahirs, and one of their subcastes, the Gond- Gowaris) இவர்கள் நாயக்கர்,நாயுடு,ராயர்,ராயுடு மற்றும் ராவ் பட்டங்களை பயன்படுத்துகின்றனர். இச்சமூக மக்கள் வடதமிழகத்தில் திருவள்ளூர்,சென்னை,வேலூர்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி,தருமபுரி,கடலூர்,சேலம், திருச்சி ஆகியவற்றிலும் கொங்குநாட்டுபகுதிகளான கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களில் பெருபான்மையாக மதுரை,தேனி,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,நாகப்பட்டினம்,காரைக்கால் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் அதிகமாக வசித்து வருகின்றனர் வரலாறு:- "கவரா" சமூகமக்கள் அனைவரும் பலிஜாவின் ஒரு பிரிவினரே. இவர்களை வடதமிழகத்தில் பலிஜா என்றும், தென்தமிழகத்தில் கவரா என்றும் அழைக்கின்றனர். கவரா சமூகமக்களின் வர்ணம் சத்திரியர்கள் மற்றும் மக்களை காப்பதே குலத்தொழிலாக கொண்ட மக்கள். கவரகுலத்தோர் (அ) கௌரவகுலத்தோர் தண்டகமாலை தண்டகமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. காஞ்சிமாலை (பாட்டியல்) காஞ்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவருடைய ஊர்ப் புறத்தில் காஞ்சிப் பூமாலை சூடி ஊன்றலைக் கூறுவது காஞ்சிமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. நொச்சிமாலை (பாட்டியல்) நொச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஊருக்குப் புறத்தே நிலை பெற்ற பகைவர் ஊருக்குள் நுழையாமல் நொச்சிப் பூமாலை சூடித் தன் மதில் காக்குந் திறங்கூறுவது நொச்சிமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. உழிஞைமாலை (பாட்டியல்) உழிஞைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவர் ஊருக்குப் புறத்தே சூழ்ந்திருக்க உழிஞைப்பூமாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. கங்கவார் கங்கவார் எனப்படுபவர் கங்கவார் நாயுடு என்று அழைக்கபடுவர் மேலும் இவர்கள் போய நாயக்கர்களின் ஒரு பிரிவே ஆவர். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) எனும் வம்சாவளியான வால்மீகி முனிவரின் குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் என்றழைக்கபடும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும், மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் ஒரு பிரிவே முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கராவார். முடிராஜ் இனத்தினை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று அந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைக்கபடுவர். தமிழகத்தில் முத்திரையர் மற்றும் முத்தரையர்,முத்துராஜா என்றழைப்பர் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோலி (Koli) என்றும் அழைப்பர். இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் அறியப்படுகின்றது . வாகைமாலை (பாட்டியல்) வாகைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூடுவதை ஆசிரியப்பாவாற் கூறுவது வாகை மாலை யாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. வி. மி. ஞானப்பிரகாசம் வண. வி. மி.ஞானப்பிரகாசம் அடிகளார் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், கத்தோலிக்கத் துறவியும் ஆவார். ஞானப்பிரகாசம் திருச்சிராப்பள்ளி வளனார் மேனிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் நிறைவேற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. வரதராசனாரின் வழிகாட்டுதலில் வீரமாமுனிவர் பற்றி ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். கத்தோலிக்கத் துறவிக்குரிய குருத்துவக் கல்வியைச் செண்பகனூரிலும், புனேயிலும் நிறைவு செய்தார். 1957 முதல் 1973 வரை, சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாகப் பணியாற்றினார். பின், 1973 முதல் 1974 வரையும், பின், 1977 முதல் 1985 வரையும், பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றினார். 1974 முதல் 1977 வரையில் அருளானந்தர் கல்லூரியில் பணியாற்றியுள்ளார். செண்பகனூர் ஆவணக் காப்பக ஒருங்கிணைப்பாளராக, 1985 முதல் 1988 வரை பொறுப்பேற்றுப் பணி புரிந்துள்ளார். 1988-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கிறித்துவ இயல்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கோலாலம்பூரிலும், பாரிசிலும் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, கட்டுரை வழங்கிய இவர், வெளிநாட்டு நூலகங்களில் உள்ள பழம் நூல்களைப் பார்வையிட, பிரான்சு, இங்கிலாந்து, உரோம் முதலிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். தவத்திரு தனிநாயகம் அடிகளார், தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வந்த முத்திங்கள் இதழ், ஒரு சமயத்தில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் தோன்றியது. அப்போது இலயோலாவில் பணியாற்றிய ஞானப்பிரகாச அடிகளார், பேராசிரியர் க. ப. அறவாணன் போன்றோர் துணையுடன், அந்த இதழ் தொடர்ந்து வெளிவரப் பெரிதும் துணை நின்றார். கருத்தரங்குகள் நிகழ்ந்தன. இதழ்கள் சிலவும் வெளிவந்து, சில காலத்திற்குப்பின் நின்றும் போயின. இந்தக் காலக்கட்டங்களில், Tamil Culture Academy உறுப்பினராகவும், பின் செயலராகவும் ஞானப்பிரகாச அடிகளார் தொண்டாற்றினார். கண்படைநிலை கண்படைநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். அரசரும் அரசரைப் போன்றவர்களும் சபையில் நீண்ட நேரம் இருக்கும்போது, மருத்துவர் மந்திரிமார் முதலியோர்க்கு கண் துயில் கொள்வதைக் கருதிக் கூறுவது கண்படை நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. விளக்குநிலை விளக்குநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேலும் வேற்றலையும் விலங்கா தோங்கியவாறு போலக் கோலொடு விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவதாகக் கூறுவது விளக்கு நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம் புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே புங்குடுதீவு கிழக்கு, வல்லன் மாவுதிடல் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை. இந்த பகுதி பெரியவரும் சைவத் தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை 1925 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். தொடர்ந்து யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தினால் நடத்தப்பட்டது. 1970 இல் பெற்றோர் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு இடப் பற்றாகுறையப் போக்குமுகமாக புதிய கட்டிடம் ஒன்றை கோரி இருந்தனர். அதற்கிணங்க புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. இங்கு அறிவியல் கூடம் தொடங்கப்பட்டது. 1972 இல் ஆரம்பப் பாடசாலையாக இருந்து வந்த இது தரம் உயர்த்தப்பட்டு உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பின்னர் சண்முகநாதன் கனிட்ட மகா வித்தியாலயமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1991 அக்டோபரில் புங்குடுதீவு மக்களின் இடப்பெயர்ச்சி காரணமாக இப்பாடசாலை தொடர்ந்து இயங்காமல் இருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் கல்வி தேவை கருதி தென்மராட்சியில் இந்த பாடசாலை தற்காலிகமாக இயங்கியது. அங்கே அதிபராகப் பணியாற்றிய செ.சண்முகவடிவு கிழாலிக் கடலில் அகால மரணமாக இப்பாடசாலை மேற்கொண்டு அங்கேயும் இயங்காமல் போனது. புங்குடுதீவின் ஐந்து பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கினாலும் இந்த பாடசாலை இன்னும் திறக்கப் படவில்லை. 1973இல் நடைபெற்ற யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சங்கீத நடன நாடகப் போட்டிகளில் சாம்ராட் அசோகன் என்னும் நாடகம் இரண்டாம் இடத்தை பெற்றது. அதே ஆண்டில் காவலூர் பாடசாலைகளின் மெய் வல்லுநர் போட்டிகளில் 13 வயது பிரிவில் பெண்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றது. இப்பாடசாலையின் அதிபர்களாக லோரன்ஸ் சேதுபதி செல்லையா, வை. கந்தையா, த. கனகரத்தினம் பொன்னுத்துரை, க. சீவரத்தினம், மூ. நடராசா, நாகரத்தினம், இ. நடராசா, சண்முகவடிவு ஆகியோர் பணியாற்றினர். இடைநிலை தனிச்சொல்லில் பகுதி முதலிலும், விகுதி இறுதியிலும் நிற்கும். இந்தப் பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது இடைநிலை. வினைச்சொல்லில் இது காலம் காட்டும். பெயர்ச்சொல்லில் ந், ஞ் முதலான எழுத்துக்களாய் வரும். தொல்காப்பியம் இதனைக் காலம் காட்டும் இடைச்சொல் என்று குறிப்பிடுகிறது. நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது. புறநிலை புறநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நீ வணங்குந் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும், உன்னுடைய வம்சம் பெருகட்டும் எனக் கூறுவது புற நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. புறநிலைவாழ்த்து புறநிலைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வழிபடுகின்ற தெய்வம் உன்னைப் புறத்திருந்து காப்பாற்ற, குற்றமில்லாத செல்வத்தோடு சிறப்பாக வளமுடன் வாழ்வாய் என்று மருட்பாவால் வாழ்த்துவது புறநிலைவாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. வாயுறைவாழ்த்து வாயுறைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இயன்மொழி வாழ்த்து இயன்மொழிவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இக்குடியிற் பிறந்தவர்களுக்கு எல்லாம் இந்தக் குணம் இயல்பானது என்றும், அவற்றை நீயும் இயல்பாகக் கொண்டிருக்கிறாய் என்றும், இன்னோர் போல நீயும் இயல்பாகக் கொடை அளி என்றும், உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக் கூறுவதும் இயன்மொழி வாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. வல்வை ந. அனந்தராஜ் நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட வல்வை ந. அனந்தராஜ் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தற்போது வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவராக சேவையாற்றுகின்றார் நடராஜா குணலக்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்துறை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லுரியிலும் கற்றவர். கல்லூரியில் கற்ற காலத்திலேயே இலக்கியத்துறை மற்றும் நாடகம், சாரணியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். இருபத்தி மூன்று வயதில் ஆசிரியராகத் தனது கல்விச் சேவையை ஆரம்பித்த அனந்தராஜ் பின்னர் அதிபராக, கொத்தணி அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றினார். பின்னர் உலக வங்கியின் பாடசாலை மேம்பாட்டுத் நிகழ்ச்சித் திட்டத்திற்கான வடமாகாண நிபுணத்துவ ஆலோசகராக பாடசாலைகளின் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் ஊடகப் பட்டபடிப்பு மாணவர்களுக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கலைமாணி, முதுமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, ஊடகத்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, மற்றும் ஊடகத்துறையில் முதுமாணிப் பட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பட்டங்களையும், கல்வி முகாமைத்தவத் துறையில் முதலாம் தர அதிபர் சேவை, மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையையும் பெற்றவர். சிறுகதைத் தொகுப்பு நூல்கள், அறிவியல் நூல்கள், நாட்டார் இலக்கியங்கள், முகாமைத்துவம், கல்வி, ஆய்வு நூல்கள், சமய இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வாதோரணமஞ்சரி வாதோரணமஞ்சரி என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். யானையை வயப்படுத்தி அடக்கினவருக்கும், எதிர்த்த யானையை வெட்டி அடக்கினவருக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரியாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. விந்தையர் விந்தையர் என்பவர் தென்காசி பெரிய கோயிலில் ஜீவ சமாதி அடைந்த சித்தராவார். இவரைப் பற்றிய கதை தென்காசி பகுதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது. இவரின் ஊர் விந்தன்கோட்டை ஆகும். இந்த விந்தன்கோட்டை முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சியில் கட்டப்பட்டது. கோட்டை கட்டப்பட்டவுடன் அதற்கான பாண்டிய அமைச்சர்களுக்கு (சில சமயம் பாண்டிய வேந்தனின் சகோதரர்கள் அல்லது நேரடி உறவினர்களே இவ்வூரின் அமைச்சராக இருப்பர்) குருவாக இருப்பதற்குச் சிலர் நியமிக்கப்பட்டனர். அந்த வம்சத்தில் வந்தவரே விந்தையர் ஆவார். இவர் முதுமை அடைந்ததும் அகத்தியர் மூலம் சித்து நிலை அடைந்து செண்பகப்பொழில் பகுதியில் தவம் செய்து வந்தார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 - 1463) தென்தமிழகப் பகுதிகளை ஆண்ட போது அவருக்கு தென்காசி பெரிய கோயிலை அகத்தியர் கூறும் நெறிமுறைப்படி கட்டுமாறு சிவன் கனவில் ஆணையிட்டார். அதன்படி பாண்டியன் அகத்தியரை வேண்ட அவர் தன் சீடர்களில் ஒருவனான விந்தையரிடம் பாண்டியனை அனுப்பினார். அவரின் ஆணைப்படியே இந்த கோயில் கட்டப்பட்டது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விந்தையரையே தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டான். சில காலம் கழித்து விந்தையர் சமாதி நிலை எய்த அவருக்குத் தென்காசி கோயிலிலேயே சமாதியும் கட்டுவித்தான். தன் குருவை எப்போதும் தரிசித்தபடி தென்காசி பெரிய கோயிலில் இருக்கும் விந்தையர் சமாதியின் முன் தனது சிற்பத்தையும் அமைத்துக் கொண்டான். அடுத்தது அடுத்தது, தக்காளி சி சீனிவாசன் தயாரித்து, இயக்கி 2012-ம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம். நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துயிலெடை நிலை துயிலெடை நிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. தொல்காப்பியக் காலத்தில் மன்னனைக் குறித்துப் பாடப்படும் இது ஒரு துறையாக இருந்தது. பின்னர் பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாகவும் உருவானது. இக்காலத்தில் இச் சிற்றிலக்கியம் பள்ளியெழுச்சி என்றும் அழைக்கப்படுவது உண்டு. மூன்றாம் கோவில் மூன்றாம் கோவில் அல்லது எசேக்கியேலின் தேவாலயம் () என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்காலஎருசலேம் கோவிலும், எல்லா மக்களும் பலி செலுத்தி விண்ணப்பம் செய்யும் வீடும் ஆகும். எருசலேமின் கோவில் மலையின் நிரந்தரமாக யாவே வாசம் பண்ணும் எல்லையற்ற வாசல் தளமாக எசேக்கியேல் இதை குறிப்பிட்டுள்ளார். வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது. இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது. 9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார். உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன. தலவிருட்சம் பவளமல்லி. பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம். உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது "கருடசேவைத் திருவிழா" ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும். வரலட்சுமி சரத்குமார் வரலட்சுமி சரத்குமார் (பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். திமிலை திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் திமிலை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. விகாரம் (பகுபத உறுப்பு) விகாரம் என்பது இயல்பு மாற்றம். தனிச்சொல்லில் உள்ள உறுப்புக்களைப் பகுபத உறுப்புக்கள் என்று நன்னூல் பகுத்துக் காட்டுகிறது. அது காட்டும் ஆறு உறுப்புக்களில் ஒன்று விகாரம். இயல்பு மாற்றத்தை விகாரம் என்பர். பகுபத உறுப்புக்கள் ஆறில் பகுதி, சந்தி, இடைநிலை ஆகிய மூன்று உறுப்புக்களில் நிகழும். பண்புப்பெயர் மாற்றங்கள் தமிழ் இலக்கணம் பெயர்ச்சொல்லை ஆறு வகையாகப் பகுத்துப் பார்க்கிறது. அவை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பன. தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. நன்னூல் பண்புப் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்துச் சுட்டி, அவை எத்தகைய மாற்றங்களைக் கொள்ளும் எனத் தொகுத்துக் காட்டுகிறது. செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே (நன்னூல் 135) ஈறு போதல் இடையுகர மிய்யாதல் ஆதி நீட லடியகர மையாதல் தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக லினையவும் பண்பிற் கியல்பே (நன்னூல் 136) இடப்பெயர் இடத்தை உணர்த்தும் சொற்களை இடப்பெயர் என்கிறோம். ஊர்களின் பெயர்களும் ஊரில் உள்ள நிலப்பிரிவுகளின் பெயர்களும் இடப்பெயர்கள் ஆகும். நிலம், மலை, காடு, ஆறு, கடல் முதலானவை இடப்பெயர்கள். வானம் என்னும் வெளியைத் தமிழர் இடம் என்றே கொண்டனர். இக்கால அறிவியல் வெளியைப் பொருள்களைத் தாங்கும் ஓர் ஆற்றலாகப் பார்க்கிறது. பெயர்கள் ஆறு வகையாகப் பகுக்கப்படும்போது, அவற்றில் ஒன்றாக அமைவது இடப்பெயர். நிலவு மறைப்பு, நவம்பர் 28, 2012 புறநிழல் நிலவு மறைப்பு ஒன்று நவம்பர் 28, 2012 அன்று நிகழ்ந்தது. இது இவ்வருடத்தில் நிகழ்ந்த இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.
உச்ச மறைப்பின் போது நிலவின் மையத்திலிருந்து புவியின் நிலை
காலப்பெயர் தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது. இந்த ஆறு பாகுபாடுகளில் ஒன்று காலப்பெயர். வாழ்நாள் முதலானவற்றை அளக்கக் காலப்பெயர் உதவும். ஞாயிறு தோன்றி மறையும் காலம் நாள். பூமி ஞாயிற்றை ஒருமுறை சுற்றிவரும் காலம் ஆண்டு. நிலா ஒருமுறை வளர்ந்து தேயும் காலம் மாதம். சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களைக் கண்டறிந்த முன்னோர் வாரம் என்னும் ஏழுநாள் சுழலை வகுத்துக்கொண்டனர். இவற்றின் ஒவ்வொரு அலகுக்கும் தனித்தனிப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். 2012 நவம்பர் 13 சூரிய கிரகணம் 2012 நவம்பர் 13-14 இல் ஒரு முழு சூரியகிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் அதன் ஆரம்பத்தில் பன்னாட்டு நாள் கோட்டைத் தாண்டியதால் நேரக்கோட்டின் மேற்கில் நவம்பர்14ந் திகதி வட அவுத்திரேலியாவிலும் நவம்பர் 13ந் திகதி தேதிக்கோட்டின் கிழக்கான தென்னமெரிக்காவிலும் தோன்றியது. தொழிற்பெயர் தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது. இவற்றில் செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம். தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் இந்த ஆறாகவும் பகுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர். செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன் தொழிற்பெயர். சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் பொருட்புணர்ச்சி எனலாம். சொற்புணர்ச்சியில் தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர். முதனிலையை நோக்கி நடிகைகளின் கதை நடிகைகளின் கதை, ஆர். டி. எ(க்)ஸ் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். புதுமுக நடிகைகள், திரைப்படங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எவ்வளவு பிணக்குகளைச் சந்திக்க வேண்டியுள்ளது, எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது, எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி சில அடிப்படைத் தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். திரைப்படத்துறையின் மறுபக்கத்தைக் காட்டும் நூல். தேங்காய் சீனிவாசன் தேங்காய் சீனிவாசன் (21 அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1988) 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் "கல் மணம்" என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். தேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் "கல் மணம்" நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை "தேங்காய் ஸ்ரீநிவாசன்" என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார். தேங்காய் ஸ்ரீநிவாசன், "ஒரு விரல்" திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த "கிருஷ்ணன் வந்தான்" என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். ஸ்ரீநிவாசன் லக்‌ஷ்மி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு கீதா, ராஜேஸ்வரி என்று இரு மகள்களும், சிவசங்கர் என்ற மகனும் உள்ளனர். கீதாவுடைய மகன் யோகி / சுவரூப்பும், சிவசங்கரின் மகள் ஸ்ருதிகாவும் திரைத்துறையில் நுழைந்தனர். தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 50-ம் அகவையில் 1987-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார். மரியா கொரெற்றி புனித மரியா கொரெற்றி ("Maria Goretti", அக்டோபர் 16, 1890 – சூலை 6, 1902) இத்தாலிய அர்பனிக்கப்பட்ட கன்னியரும் கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை வன்கலவியால் அடைய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டு இவர் இறந்தார். கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் மரியா. 12 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது. புது நன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்சாண்ட்ரோ செரனெல்லா என்ற 18 வயது இளைஞன் வன்கலவியால் மரியாவை அடைய முனைந்தான். மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். "இது பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட மரியா மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டு மரித்தார். கொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார். மரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் புனிதர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர். இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். இவரின் விழா நாள் சூலை 6 ஆகும். ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) திருத்தந்தை ஐந்தாம் யோவான் (; 635 – 2 ஆகஸ்ட் 686) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஜூலை 685 முதல் 686இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பைசாந்தியப் பேரரசரின் அனுமதியில்லாமல் பதவியேற்ற பத்து திருத்தந்தையருள் இவர் முதலாமவர் ஆவார். இவரின் ஆட்சியில் உரோமை நகருக்கும் பைசாந்தியப் பேரரசுக்கும் இடையே ஒற்றுமை நிலவியது. இவர் ஆந்தியோக்கியாவில் பிறந்த ஒரு சிரியன் கிறிஸ்தவர் ஆவார். இவருடைய கிரேக்க மொழியின் புலமையால் மூன்றாம் ஆயர்களின் பேரவைக்கு அப்போதைய திருத்தந்தையின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிலுக்கு அனுப்பப்பட்டார். பெங் லியென் பெங் லியென் (Peng Liyuan, ; பிறப்பு : நவம்பர் 20, 1962) புகழ்பெற்ற சீன நாட்டார் இசைப் பாடகரும் தற்போதைய துணை அரசுத் தலைவர் சீ சின்பிங்கின் இரண்டாவது துணைவியாரும் ஆவார். சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியாக சீனத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். நாடெங்கும் நடந்த இசைப்போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றவர். சின்பிங் சியாமென் நகர துணை மேயராக இருந்த போது, லி யென்னைத் திருமணம் செய்து கொண்டார். சீனாவின் மக்கள் விடுதலைப் படையில் குடிசார் உறுப்பினராக உள்ள இவருக்கு மேஜர் ஜெனரலுக்கு இணையானப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் தேர்தல் தொகுதி மன்னார் தேர்தல் தொகுதி ("Mannar Electorate") என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் மன்னார், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு: 24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: வி. அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார். வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வருமாறு: 21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் பி. எஸ். சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார். வி. அ. அழகக்கோன் விராசிப்பிள்ளை அல்பர்ட் அழகக்கோன் ("Virasipillai Albert Alegacone", 19 மார்ச் 1903 - 25 நவம்பர் 1973) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அழகக்கோன் 1903 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் பஸ்தியாம்பிள்ளை விராசிப்பிள்ளை சின்னையா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற இவர், சட்டக் கல்வி பயின்று மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் மன்னார், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டப் பேரவைத் தலைவராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பஸ்தியாம்பிள்ளை அரசரத்தினம் எனபவரின் மகள் மேரி செபஸ்தியம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு அருந்ததி, தேவதாசன், பாலேந்திரா, சத்தியவன், அரிச்சந்திரன் என ஐந்து பிள்ளைகள். 1940களில் அழகக்கோன் மன்னார் நகரசபை உறுப்பினராகத் தெரிவானார். 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்.. 1952 நாடாளுமன்றத் தேர்தலில் அழகக்கோன் சுயேட்சை வேட்பாளராக மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து அக்கட்சி சார்பாக 1956 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் அவர் 1960 மார்ச், 1960 சூலை, 1965, 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார். சொற்புணர்ச்சி தமிழில் சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சியானது சொற்புணர்ச்சி என்றும், பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காணுமாறு அமைந்துள்ளது. புணரும் சொற்களிலுள்ள ஓசைகளின் ஒத்திசைவோடு புணர்வதைச் சொற்புணர்ச்சி என்கிறோம். தொல்காப்பியத்திலுள்ள புணரியல், தொகைமரபு, உருபியல் ஆகிய இயல்கள் இவற்றை விரிவாக விளக்குகிறது. ஓசை இசைவுக்கு மாறுபட்டு நிலைமொழி, வருமொழி ஆகியவற்றில் உள்ள பெயரின் பொருள் தன்மைக்கு ஏற்பப் புணர்வது பொருட்புணர்ச்சி. எடுத்துக்காட்டு பொருட்புணர்ச்சியோடு இதனை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். சான் ஓசே பல்கலைக்கழகம் சான் ஓசே பல்கலைக்கழகம் ("San Jose State University"), அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே நகரத்தில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 154 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில், முப்பதாயிரத்திற்கு மேலான மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பயின்று வருகின்றனர். அருகிலுள்ள சிலிகான் பள்ளத்தாக்கு (மென்பொருள்) நிறுவனங்கள் இங்கே பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு வளாகங்கள் சொந்தமாகும். தெற்கு வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு அரங்கம் அமைந்து மாணவர்களுக்குப் பயன்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அறிவியல், வேதியியல், இயற்பியல், சமூகவியல், விலங்கியல், தாவரவியல், பொறியியல் (மென்பொருள் மற்றும் பல), கலைக் கல்லூரி, இலக்கியம் மற்றும் இதழியல் சம்பந்தப்பட்ட படிப்பைக் கற்கலாம். இங்கே 70களில் புகழ்பெற்ற நடிகர் குர்த்வூத் ஸ்மித் படித்தார். பாண்டியன் அறிவுடைநம்பி பாண்டியன் அறிவுடைநம்பி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கியிருக்கிறான். புலவர் பிசிராந்தையார் இவனை நேரில் கண்டு பக்குவமாக எடுத்துக் கூறித் திருத்தியிருக்கிறார். வயலில் விளைந்த நெல்லை அறுத்து அடித்துக் குற்றி அரிசியாக்கிப் பொங்கிக் கவளமாக்கி யானைக்கு ஊட்டினால் விளைந்த நெல் பல நாட்களுக்கு உதவும். இதே விளைச்சல் வயலில் யானை மேய்ந்தால் அது உண்ணுவதை விட, அதன் காலால் மிதிபட்டு அழிவது மிகுதியாகும். எனவே அரசன் குடிமக்களிடம் விளைச்சலில் புகுந்த யானை போல் வரி தண்டக்கூடாது என எடுத்துரைத்தார். அரசன் திருந்தினான். காய்சின வழுதி காய்சின வழுதி என்பவன் சங்கநூல் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியன். இறையனார் களவியல் உரையில் மட்டும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முதற்சங்கம் பேணிய 89 அரசர்களில் இவன் முதல்வன். இக்குறிப்பின்படி காய்சின வழுதி தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவன் ஆகிறான். இவன் தலைச்சங்கத்தை நிறுவிய இடம் கடல் கொள்ளப்பட்ட மதுரை. வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி என்பவன் சினப்போர் வழுதி எனப் போற்றப்பட்டுள்ளான். இவன் கடைச்சங்க காலத்து மன்னன். காய்சின வழுதி தலைச்சங்க காலத்து அரசன். எருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள் எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ("Timeline of Jerusalem") என்பது உலகத்தில் பல மதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகராக விளங்குகின்ற எருசலேம் வரலாற்றில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஆகும். எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது. நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் "உலகப் பாரம்பரியச் சொத்து" (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும். எருசலேமின் வரலாற்றில் பல நிகழ்வுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன . நல்லிசை வஞ்சி நல்லிசை வஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல் ஒன்றுக்குச் சுட்டப்பட்டுள்ள துறை. இது வஞ்சித்திணையின் பகுதியாக வருகிறது. படையெடுத்துச் சென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் படையிலுள்ள யானைகள் பகைநாட்டுக் குடிநீர்த் துறைகளைக் கலக்கிப் பாழாக்கினவாம். முருகனின் படைவீரர்கள் போன்று இவனது படையிலிருக்கும் வில்லாளிக் கூளியர் வேண்டியதை எடுத்துக்கொண்டு வீசிய மிச்சில் காடெங்கும் இறந்துகிடந்தனவாம். காவல்மரம் வெட்டப்படும் ஓசை கேட்டு ஊர் நடுங்கிக்கொண்டிருந்த்தாம். இப்படியெல்லாம் வெற்றிச் சிறப்புகள் போற்றப்படுவதால் இது நல்லிசை வஞ்சி. அரசனின் விறலை (வெற்றியை)க் கூறுவது நல்லிசை வஞ்சி எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. பகைவனை அழிக்கப் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை என்று குறிப்பிடும் தொல்காப்பியம் இந்தத் துறையைத் தனியே குறிப்பிடவில்லை. விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு விக்கிப்பீடியா சமூகம் ("Wikipedia Community") என்பது இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் தன்னார்வலர் வலையமைப்பைக் குறிக்கும். இவர்கள் விக்கிப்பீடியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தொடக்கக் காலங்களில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்த தன்னார்வலர்களின் அளவு மிகவேகமாக கூடினாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருகின்றது. நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அனைத்து மொழி விக்கிப்பீடியா பதிப்புகளையும் சேர்த்து, ஏறத்தாழ 31.7 மில்லியன் பேர் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு கொண்டுள்ளனர். இவர்களில் 2,70,000 பேர் ஒவ்வொரு மாதமும் செயற்பாட்டில் உள்ளனர். 2008ஆம் ஆண்டு, எழுத்தாளரும் விரிவுரையாளருமான கிளே செர்க்கியும் கணினி அறிவியலாளருமான வாட்டன்பர்கும் இணைந்து நடத்திய ஆய்வில், விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு தோராயமாக 100 மில்லியன் மணி நேர மனித உழைப்பு செலவாகியிருக்கும் என்று கணக்கிட்டனர். உருப்பெருக்கம் ஒரு பொருளின் உருவத்தை தோற்றத்தில் மாத்திரம் பெருப்பிப்பதே உருப்பெருக்கம் எனப்படும். எனவே உருப்பெருக்கத்தின் மூலம் பொருளின் பௌதிக அளவு பெருப்பிக்கப்படாது. எம் கண்களுக்கு மாத்திரம் பெரிதாகத் தென்படும். உதாரணமாக உருப்பெருக்கமானது உயிரியலில் சிறிய நுண்ணங்கிகளை நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப் பயன்படும். ஆவியாதல் திரவங்களின் மேற்பரப்பிலிருந்து அத்திரவம் வாயு நிலையை அடைதல் ஆவியாதல் எனப்படும். திரவம் வாயுவாகும் செயற்பாடான கொதித்தலிலிருந்து இது மாறுபட்டது. கொதித்தல் என்பது முழுத்திரவமும் ஒன்றாக தமது கொதிநிலை வெப்பநிலையை அடைந்தவுடன் வாயு நிலைக்கு மாறுதல் ஆகும். கொதித்தலுக்கு கொதிநிலை அவசியமானாலும் ஆவியாதலுக்கு அது தேவையில்லை. ஆவியாதலானது நீர்வட்டத்தின் ஓர் அவசியக் காரணியாகும். தேவையானளவு இயக்கசக்தியை மேற்பரப்பிலுள்ள துணிக்கைகள் அடையும் போது அவை திரவ நிலையிலிருந்து வாயு நிலையை அடையும். கதிரவேலு சிற்றம்பலம் கதிரவேலு சிற்றம்பலம் ("C. Sittampalam", சி. சிற்றம்பலம், செப்டம்பர் 13, 1898 - பெப்ரவரி 3, 1964), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். விடுதலை பெற்ற இலங்கையின் முதலாவது அமைச்சரவையின் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராகவும் இருந்தவர். சிற்றம்பலம் 1898 செப்டம்பர் 13 ஆம் நாள் பிறந்தவர். யாழ்ப்பாணத்தின் பிரபலமான குடும்பம் ஒன்றில்பிறந்தவர். இவரது தந்தை ஆறுமுகம் கதிரவேலு குற்றவியல், மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தந்தையின் சகோதரர் ஆறுமுகம் கனகரத்தினம் யாழ்ப்பாணத்தின் முதல் நகரசபைத் தலைவராக இருந்தவர். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தைத் தோற்றுவித்தவர். சிற்றம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனார் விஸ்வநாதர் காசிப்பிள்ளை முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். சிற்றம்பலத்தின் சகோதரர் சி. பொன்னம்பலம் யாழ்ப்பாண நகரின் முதலாவது முதல்வராக இருந்தவர். ஆரம்பக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார். ரோயல் கல்லூரியில் பயின்ற போது கல்லூரி இதழின் ஆசிரியராகவும், இலக்கியக் கழகத்தின் செயலாளராகவும் சேவையாற்றினார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டமும் பெற்றார். இங்கிலாந்து மிடில் டெம்பிலில் பாரிஸ்டரானார். சிற்றம்பலம் கமலாம்பிகை சுப்பிரமணியம் என்பவரைத் திருமணம் புரிந்தார். தேவலட்சுமி பாலசுந்தரம், புஷ்பலக்சுமி, அர்ச்சுனா, யோகலக்சுமி, மல்லிகாலக்சுமி ஆகியோர் இவர்களுக்குப் பிறந்தவர்கள். இலங்கையில் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்கு அரச அதிபராகவும் பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மன்னார் தேர்தல் தொகுதியில் 1947, 1வது நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 இல் அன்றைய டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் முதலாவது அரசில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். சிறிது காலம் தொழிற்துறை, மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1952 தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் மன்னார் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. ஏ. அழகக்கோனிடம் தோற்றார். சிற்றம்பலம் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்த போது பல முக்கிய வானொலி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். இவற்றில் பௌத்த மக்களுக்காக பிரித் ஓதும் நிகழ்வை வானொலியில் அறிமுகப்படுத்தியமையைக் குறிப்பிடலாம். பல கிராமங்களில் உப அஞ்சல் நிலையங்களை ஆரம்பித்தார்.. சிற்றம்பலத்தின் நினைவாக 2004 ஆம் ஆண்டில் இலங்கை அரசு அஞ்சல்தலையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது. வாதநோய் எதிர்ப்பு மருந்து வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் அல்லது நோய் தணிக்கும் வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் [Disease-modifying antirheumatic drugs (DMARDs)] என்பவை முடக்குவாத நோய் தீவிரமடைவதைத் தடுக்க உபயோகிக்கப்படும், வேறுவகையில் தொடர்பற்ற, மருந்துகளின் பகுப்பாகும். வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் என்னும் சொல், இஸ்ட்டீராய்டு கலக்கப்படாத அழற்சி மருந்துகள் (அழற்சி உருவாவதற்கானக் காரணங்களைத் தணிக்காமல், அதனால் ஏற்படும் விளைவுகளைத் தணிக்கும் வேதிப்பொருள்கள்), இஸ்ட்டீராய்டுகள் (நோய் தீவிரமடைவதைத் தடுக்க இயலாத, ஆனால் நோயெதிர்ப்பு வினைகளைத் தணிக்கக்கூடியவை) ஆகியவற்றை குறிக்க, முரண்பாடாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற ஒரேமாதிரியான சூழல்களில் மருந்தின் விளைவுகளைக் குறிப்பிடாமல், வாதநோய் எதிர்ப்பு என்னும் சொல் பயன்படுத்தப்படலாம். பாங்காக் மாரியம்மன் கோயில் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்றதாகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். இங்கு குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் தமிழ்க் கடவுளான மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பிற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. உள்ளூர்வாழ் தமிழர்களும், தாய்லாந்து மக்களும் விழாக்காலங்களின்போது வழிபட வருகிறார்கள். நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரியா ஆனந்து பிரியா ஆனந்து தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார். பதார்த்த குண சிந்தாமணி பதார்த்த குண சிந்தாமணி தேரையர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட ஒரு மருத்துவ நூலாகும். தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணியில் ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ‘பதார்த்தம்’ என்பது தாவரங்களின் உறுப்புகளான வேர், பட்டை, பிசின், சாறு, இலை, பூ, காய், விதை ஆகிய எட்டுப் பொருள்களையும் குறிப்பதாகும். இப்பொருள்கள் கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதே பதார்த்த குண சிந்தாமணியாகும். பதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர் பதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? சரஸ்வதி மகால் காப்பாற்றிய தமிழின் சொத்து இது. நாம் உட்கொள்ளும், பயன்படுத்தும் அத்தனைக்கும் அதற்கான பயன்பாடு, நன்மை, தீமைகள் பற்றிப் புட்டுப்புட்டு வைத்த ஒரு ஆதி நூல். நீரின் வகை, பாலின் வகை, நிழலின் வகை, உறக்கத்தின் வகை, காயின் வகை, கனியின் வகை, இன்பத்தின் வகை, சாதத்தின் வகை, பழங்களின் வகை, உலோகங்களின் வகை என்று நீளும் இந்த சிந்தாமணியின் விறுவிறுப்பும், அதன் ஆராய்ச்சியும் ஒரு போதும் அலுத்ததில்லை. தனக்கு ஒரு சீடனைத் தேடிக்கொண்டிருந்த அகஸ்தியரிடம், ஔவை ஒரு வாய் பேசாத ராமதேவன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவனைச் சீடனாக அளித்தார். ஒரு சமயம் கூன்பாண்டியன் என்றறியப் பட்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்குக் கூனை நிமிர்த்தும் பொருட்டு அபூர்வ மூலிகைகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தேடிக் கொண்டுவரச் சொன்னார் அகஸ்தியர். ராமதேவர் கொண்டுவந்த மூலிகைகளை அரைத்து தைலமாகக் காய்ச்ச அடுப்பில் ஏற்றினார். வேறொரு வேலையின் நிமித்தம் வெளியே சென்ற அகஸ்தியர், ராமதேவனிடம் கவனித்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கொதிக்கும் சாறு நிரம்பிய பாண்டத்தின் மேலே, கூரையில் வேயப்பட்டிருந்த வளைந்த மூங்கில் ஒன்று கொதிக்கும் சாற்றின் ஆவியால் நிமிர்ந்ததைக் கண்ட ராமதேவன், அடுப்பிலிருந்த சாறு தைலமாகப் பதமாகிவிட்டதென யூகித்து இறக்கி வைத்தார். திரும்பிய அகஸ்தியரிடம் நடந்ததைச் சைகையால் விளக்க, அவரைப் பாராட்டி மன்னனின் கூன் முதுகில் தைலத்தைத் தடவி சிகிச்சை செய்யக் கூன் நிமிர்ந்தது. மற்றொரு முறை மன்னன் காசிவர்மனுக்கு பொறுக்க முடியாத தலைவலி. அகஸ்தியரிடம் சிகிச்சை பெற வந்த மன்னனைப் பரிசோதித்து, மன்னன் உறங்குகையில் மூக்கின் வழியாக தலைக்குள் சென்ற சின்னஞ்சிறு தேரைதான் காரணம் என்று கண்டுபிடித்தார். மன்னனுக்கு அதிர்ச்சி. அகஸ்தியர் அதற்கு சிகிச்சையளித்துக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். மன்னனுக்கு ஆழ்ந்த மயக்கம் அளிக்கப்பட்டு, மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் உட்கார்ந்திருந்த தேரையை வெளியேற்ற முயன்ற அகஸ்தியரின் முயற்சி எளிதில் பலிக்கவில்லை. சட்டென்று ராமதேவர், நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றை மன்னனின் தலைக்கருகில் தேரையின் பார்வை படும் வகையில் வைத்தார். நீரைக் கண்ட தேரை பாத்திரத்திற்குத் தாவியது. மன்னனின் கபாலத்தை சந்தானகரணி என்னும் மூலிகையால் இணைத்து மூடினார் அகஸ்தியர். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னனின் தலைவலி மறைந்து போயிருந்தது. பாராட்ட வார்த்தைகளின்றி அகஸ்தியருக்கும், தேரையருக்கும் ஏராளமான வெகுமதிகள் வழங்கினான் மன்னன். ராமதேவரின் சமயோஜிதத்தால் மகிழ்ந்த அகஸ்தியர், அவரின் பேசும் திறனை சிகிச்சையால் மீட்டார். தனக்குத் தெரிந்த அத்தனை வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். ராமதேவரின் பெயரையும் தேரையர் என்று மாற்றி, அவரின் புகழ் எங்கும் பரவச் செய்தார். இடுகையின் நீளம் அனுமன் வாலாகி விடுமோ என்ற அச்சத்தில் இத்தோடு தேரையரின் சாகசங்களை நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் அமைகையில், இன்னொரு இடுகையில். பதார்த்த குண சிந்தாமணியில் தேரையரின் கீழேயுள்ள பாடல்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு பொருளின் நல்லது, கெட்டது பற்றிச் சொல்லிவந்த தேரையர் இறுதியில் மொத்தமாக சிகரம் வைத்தது போல, Do's and Dont's என்று வரையறுக்கும் இந்தப் பாடலை அறிமுகப் படுத்தலாம் என நினைக்கிறேன். பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம் பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம் இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம் மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம் முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம் ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506) உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம் உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம் பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம் பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம் மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம் வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. (1507) ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம் அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந் தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந் திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம் வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம் விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம் நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508) பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட் படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ் சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந் துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம் வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம் நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509) ஒரு முறை பதம் பிரித்து வாசித்தால் - சில அரிய வார்த்தைகள் தவிர்த்து - எளிமையாய்ப் புரிந்துகொள்ளலாம். முடியாதவர்களுக்காக இதன் பொருள்: பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம். பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம். தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம். காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம். மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம். சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம். இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம். மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம். புளித்த தயிரை உண்போம். முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம். பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம். ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம். கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம். வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம். நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம். இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம். பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது? 100 பொருட்களில் உலக வரலாறு 100 பொருள்களில் உலக வரலாறு (A History of the World in 100 Objects) என்பது, பிபிசி ரேடியோ 4, பிரித்தானிய அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து செயற்படுத்திய ஒரு திட்டம். இத்திட்டத்தில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் எழுதி வழங்கிய 100 பகுதிகளைக் கொண்ட ஒரு வானொலித் தொடர் நிகழ்ச்சியும் அடங்கும். ரேடியோ 4ல் ஒலிபரப்பான இந்த 15 நிமிட தொடர் நிகழ்ச்சியில், உலக வரலாற்றை விளக்குவதற்காக பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொழிற்துறை, தொழில்நுட்பம், படைக்கலங்கள் போன்றவை அடங்கிய 100 பொருட்களைப் பயன்படுத்தினர். நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இத்திட்டம், முதலாவது நிகழ்ச்சியை 18 சனவரி 2010ல் தொடங்கி 20 வாரங்கள் ஒலிபரப்பியது. "100 பொருள்களில் உலக வரலாறு" ("A History of the World in 100 Objects" என்னும் பெயர்கொண்ட துணை நூலொன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது. இதையும் நீல் மக்கிரெகரே எழுதியிருந்தார். ஒரு முக்கியமான திட்டம் என விபரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடர், உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பெறப்பட்டனவும், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளனவுமான 100 பொருட்களின் ஊடாகச் சொல்லப்பட்ட மனித குலத்தின் வரலாறு எனப்பட்டது. இந்த நிகழ்ச்சித் தொடரின் தொடக்கத்தில் மக்கிரெகர் அதனைப் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார். "இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக, மனிதர்களாகிய நாம், எவ்வாறு எமது இந்த உலகத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும், உலகத்தால் நாம் எவ்வாறு உருவாகியிருக்கிறோம் என்றும் அறிந்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சிகளில், நான் காலத்தின் ஊடாகப் பின்நோக்கிப் பயணம் செல்கிறேன். மனிதரால் உருவாக்கப்பட்ட பொருட்களின் ஊடாகவே இக்கதையை நான் சொல்லப்போகிறேன். இப்பொருட்கள் பல விதமானவை, கவனமாக வடிவமைக்கப்பட்டு ரசிக்கப்பட்டவை, பாதுகாத்து வைக்கப்பட்டவை அல்லது பயன்படுத்தப்பட்டவை, உடைத்து எறியப்பட்டவை. சமைக்க உதவும் பானையில் இருந்து கப்பல்கள் வரையும், கற்காலக் கருவிகளில் இருந்து கடன் அட்டை வரையும் என, நாம் பயணம் செய்துவந்த பாதையின் பல்வேறு கட்டங்களில் இருந்து நான் 100 பொருட்களை மட்டும் தெரிவு செய்துள்ளேன்." "எகிப்திய மம்மிகளாக இருக்கலாம் அல்லது ஒரு கடன் அட்டையாக இருக்கலாம், அத்தகைய பொருட்கள் மூலம் வரலாற்றைக் கூறுவதற்காகவே அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அத்துடன், பிரித்தானிய அருங்காட்சியகம் உலகம் முழுவதிலும் இருந்து பொருட்களைச் சேகரித்து வைத்திருப்பதால் உலக வரலாற்றைக் கூறுவதற்கு இது ஒரு தகுதியற்ற இடம் அல்ல. உண்மையில் இது உலகின் "ஒரு" வரலாறுதான், இதுதான் உலகின் வரலாறு அல்ல. அருங்காட்சியகத்துக்கு வரும் மக்கள் தாங்களே சில பொருட்களைத் தெரிந்து கொண்டு அவற்றினூடாக இந்த உலகத்தை வலம் வருகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய இந்த வரலாறு மற்றவர்களுடைய வரலாறுகளுடன் பொதுவான பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண்பார்கள் என எண்ணுகிறேன்." "நம்மை மனிதராக வரையறுத்த மிகப் பழைய பொருட்களை நீல் மக்கிரெகர் வெளிப்படுத்தினார்." முதல் ஒலிபரப்பு வாரம் 18 சனவரி 2010ல் தொடங்கியது. "வேளாண்மை தொடங்கியதற்கான காரணம் என்ன? அக்காலத்தவர் விட்டுச் சென்ற பொருட்களில் பதிலுக்கான தடயங்கள் உள்ளன." 25 சனவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "மக்கள் ஊர்களிலிருந்து நகரங்களுக்குச் சென்றபோது நடந்தது என்ன? ஐந்து தொல்பொருட்கள் கூறும் கதை." 1 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "4,000 ஆண்டுகளுக்கு முன், சமூகங்கள், தொன்மங்கள், கணிதம், நினைவுச் சின்னங்கள் என்பவற்றினூடாகத் தம்மை வெளிப்படுத்தத் தொடங்கின." 8 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "உலகின் பல பாகங்களில் புதிய ஆட்சிகள் தமது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காகப் புதிய பொருட்களை உருவாக்கினர்." 15 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "சான்றோர்களின் எழுத்துக்களைப் போல மறைந்திருக்கும் உண்மைகளை அலங்காரப் பட்டைகளும், குவளைகளும் எமக்குக் கூற முடியுமா?" 22 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "பொருட்களூடாக உலக வரலாறு கூறுவதை நீல் மக்கிரெகர் தொடர்கிறார். இவ்வாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய ஆட்சியாளர்களைப் பற்றிக் கூறுகிறார்" 17 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "2000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எவ்வாறு இம்பம் துய்த்தனர் என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்." 24 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "பல பெரும் சமயங்கள் தொடர்பான படிமங்கள் எப்பொழுது, எவ்வாறு புழக்கத்துக்கு வந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்." 31 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஐந்து பொருட்கள், பண்டங்களும் எண்ணக்கருக்களும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லப்படுவது தொடர்பான கதைகளைக் கூறுகின்றன." 7 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "1200 ஆண்டுகளுக்கு முன் ஆளும் உயர்குடியினரின் வாழ்க்கை குறித்த விபரங்களைத் தருகிறார்." 14 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "1000 ஆண்டுகளுக்கு முன் வணிகம், போர், சமயம் என்பன பொருட்களை இடத்துக்கிடம் கொண்டு சென்ற விதம்." 21 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "தகுதிசார் இயல்புகளைக் கொண்டனவும், உற்பத்தி செய்வதற்குக் கூடிய திறமை தேவை உள்ளவையுமான பொருட்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆய்வு செய்கிறார்." 28 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நம்பிக்கையாளர் எவ்வாறு கடவுளருக்கு அருகில் கொண்டுவரப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றன." 05 யூலை 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "நவீன காலகட்டத்துக்கு மாறும் நிலையில் உலகின் பெரிய பேரரசுகள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்." 13 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "1450 இலிருந்து 1600 வரையான காலப்பகுதியில் பயணம், வணிகம், நாடுகளைக் கைப்பற்றல் என்பவற்றின் தாக்கங்கள் குறித்து மக்கிரெகர் ஆராய்கிறார்." 20 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "16ம் 17ம் நூற்றாண்டுகளில் பெரிய சமயங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் கூறுகிறார்." 27 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "வெவ்வேறு உலகங்கள் மோதும்போது ஏற்படக்கூடிய தப்பபிப்பிராயங்கள் குறித்து மக்கிரெகர் பேசுகிறார்." 4 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "எவ்வாறு தொழில்மயமாக்கம், மக்கள் அரசியல், பேரரசு நோக்கம் என்பன உலகை மாற்றின என்பது குறித்து." 11 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. "அண்மைக்காலத்துப் பாலியல், அரசியல், பொருளாதார வரலாற்றின் அம்சங்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்." 18 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது. யோசேபைன் பசுரிகா யோசேஃபைன் அகோசுடா பசுரிசா (Josephine Acosta Pasricha), பிலிப்பைன்சு நாட்டின் இந்தியவியலாளர் ஆவார். சமற்கிருதத்தில் எழுதப்பட்ட இராமசரிதமானசா என்ற நூலை பிலிப்பினிய மொழியில் மொழிபெயர்த்தார். இவர் யுவான் பிரான்சிசுக்கோ என்னும் இந்தியவியல் பேராசிரியரின் மாணவியாவார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நன்கறிந்த இவர், [[தில்லிப் பல்கலைக்கழகம்|தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகவுள்ளார். [[மணிலா]]வில் மனிதவியல் கற்பித்து வருகிறார். பிலிப்பினிய மொழியில் வெளியான காமசூத்திரத்தை தொகுத்தவர்களில் இவரும் ஒருவர். [[பகுப்பு:1945 பிறப்புகள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] [[பகுப்பு:இந்தியவியலாளர்கள்]] யுவான் பிரான்சிசுக்கோ யுவான் பிரான்சிசுக்கோ (Juan R. Francisco), பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த இந்தியவியலாளர் ஆவார். இவர் பிலிப்பைன்சுத் தீவிற்கு உரிய மரனவோ இராமாயணத்தைக் கண்டறிந்து, ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். மணிலாவில் உள்ள பிலிப்பைன்சுப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பிலிப்பைன்சின் மூத்த இந்தியவியலாளரும் இவரே. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதம் படித்து முனைவர் பட்டம் பெற்றார். உக்ரைனில் உருசிய மொழி உருசிய மொழி (உருசியம்) உக்ரைன் நாட்டின் உள்ளூர் மொழிகளில் ஒன்று. தொன்பசு, கிரிமியா ஆகிய பகுதிகளில் அதிகம் பேசப்படும் மொழியாகவும், உக்ரைனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ஆதிக்க மொழியாகவும் உள்ளது. உக்ரைன் நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக உக்ரேனிய மொழி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உருசிய மொழிக்கு உள்ளூர் ஆட்சிமொழி என்ற நிலை புதிய சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டது. உக்ரைனிய மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உருசிய மொழி முக்கியப் பாடங்களில் ஒன்றாக கற்பிக்கப்படுகிறது. பெரும்பான்மையான ஊடகங்கள் உருசிய மொழியிலேயே உள்ளன. எண்ணிக்கை அளவில் குறைவானவர்கள் பேசினாலும், உருசிய மொழி ஆதிக்க மொழியாகவும் முக்கிய மொழியாகவும் திகழ்கிறது. உருசிய மொழியும், உக்ரைனிய மொழியும் சிரில்லிக் எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. இவ்விரு மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால், பல சொற்களும், இலக்கணமும் இருமொழிகளுக்கும் பொதுவாக இருக்கின்றன. இதனால் இவ்விரு மொழி பேசுபவர்களும் ஒருவர் மொழியை மற்றொருவர் ஓரளவேனும் புரிந்துகொள்வர். கிழக்கு சிலேவிய மொழிகள் ரசு என்னும் பெரும்பகுதியில் பேசப்பட்டன. இப்பகுதி பிரிக்கப்பட்ட போது வெவ்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழி வழக்குகள் தனி மொழிகளாயின. மசுக்கோ (மாஸ்கோ) பகுதியினர் பேசிய மொழி தற்கால உருசிய மொழியாக உருவெடுத்தது, லிதுவேனிய பகுதியினர் பேசிய மொழி பெலாருசிய மொழியாகவும், தெற்கு போலந்துப் பகுதியில் பேசப்பட்ட மொழி உக்ரைனிய மொழியாகவும் ஆயின. உக்ரைன் என்ற பெயரே தற்காலத்தில் வழங்கப்படுவதுதான். முற்காலத்தில் உக்ரைன், பெலாருசியப் பகுதிகள் “சிறிய”, “வெள்ளை” ருசியப் பகுதிகள் எனவும், ருசியா நாடு “பெரிய ருசியா” எனவும் அழைக்கப்பட்டன. உருசிய, உக்ரைனிய மொழி பேசிய மக்கள் கலந்து வாழ்ந்திருந்தனர். நிலத்தில் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்படவில்லை. பின்னர், தாங்கள் வாழும் பகுதியில் இருந்த அரசுகளின் ஆணைக்கேற்ப தங்கள் மொழியின் நிலைபெற்ற வடிவத்தைப் பின்பற்றத் தொடங்கினர். உருசிய மொழி உக்ரைனில் பேசப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, உருசிய மொழி பேசியவர்கள் உக்ரைன் நாட்டிற்கு குடிபெயர்ந்தது. இன்னொன்று, உக்ரைன் நாட்டு மக்கள் உருசிய மொழியைப் பேசத் தொடங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல உருசியர்கள் உக்ரைனில் குடியேறினர். உக்ரைனில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் உருசிய மொழி பேசியவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். எடுத்துக்காட்டாக, இப்பகுதிகளில் குடியேறிய உக்ரைன் மக்கள் உருசிய மொழி ஆட்சி மொழியாக செயல்பட்டதால், அம்மொழியை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உருசிய அரசு, உருசிய மொழியின் பரவலுக்கும், வளர்ச்சிக்கும் உதவியது. உக்ரைனிய மொழி இலக்கியங்கள் மசுக்கோவிலும், புனித பீட்டர்ஸ்பர்க்கிலும் அச்சடிக்கப்பட்டன. உக்ரைனிய மொழி எழுச்சியைக் கண்ட உருசிய அமைச்சர், உக்ரைனிய மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களுக்குத் தடை விதித்ததார். பின்னர் வந்த அமைச்சர்களும் உக்ரைனிய மொழி நாடகங்கள், உரைகளுக்குத் தடை விதித்தனர். உருசியாவில் ஆட்சி மொழி இல்லையென்றாலும், உருசிய மொழியே நாடெங்கிலும் பேசப்பட்டது. உக்ரைனிய மொழிக்கு அரசு வளர்ச்சி நிதி வழங்கினாலும், மக்களிடையே தாழ்வான நிலையைப் பெற்றிருந்தது. எனவே, மக்கள் உக்ரைனிய மொழியில் பேசுவது குறைத்துக் கொண்டனர். 1960களில் அனைத்து நூல்களும் மசுக்கோவில், உருசிய மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியானது. இதனால் அனைத்து அறிவியல் ஆக்கங்களும் உருசிய மொழியிலேயே எழுதப்பெற்றன. பள்ளிகளிலும் உருசிய மொழி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதனால் உருசிய மொழி பெரிதும் வளர்ச்சியுற்றது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 14,273,000 மக்கள் (30 விழுக்காட்டினர்) உருசிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். இவர்களில் 56 விழுக்காட்டினர் உருசிய இனத்தவராகவும், பிறர் உருசிய மொழி பேசும் வேற்று இனத்தவர்களாகவும் உள்ளனர். உருசிய மொழியைப் பேசுகின்ற வேற்று இனத்தவர்களின் மக்கட்தொகை: உக்ரைனில் ஆட்சி மொழியாக இல்லாத அதிகம் பேசப்படும் மொழியாக உருசிய மொழி உள்ளது. உருசியர்கள் உருசியாவிற்கு அடுத்தபடியாக உக்ரைனில்தான் அதிகம் பேர் வாழ்கிறார்கள். உக்ரைனில் உருசிய மொழி தொடர்பான வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு ஆய்வில், உருசிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுகிறவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் பேர் வீட்டில் உருசிய மொழி பேசுகின்றனர் எனக் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் ஏறத்தாழ பாதிபேர் உருசிய மொழி பேசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தெற்கு. கிழக்கு மாநிலங்களில் உருசிய மொழி ஆதிக்க மொழியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் தலைநகரான கீவ் பகுதியிலும் பொது வழக்கில் பேசப்படும் மொழி உருசிய மொழியே. தாய்மொழியாக இன்றி, வீட்டில் பேசப்படும் மொழிகளைக் கணக்கிட்டபோது கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன. உக்ரைனில் மூன்றில் ஒருவர் உருசிய மொழி பேசுபவராக உள்ளார். எனவே, உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 39 விழுக்காட்டினர் உருசிய மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும் என்றும் 38 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மற்றொரு ஆய்வின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட கேள்வி, “நீங்கள் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்பீர்களா?” உக்ரைனிய அரசு இணையதளங்கள் அனைத்தும் உக்ரைனிய மொழியில் இருக்கின்றன என்றாலும் உக்ரைன் நாட்டில் பெரும்பாலான இணையதளங்கள் உருசிய மொழியிலேயே இருக்கின்றன. உதாரணமாக, உருசிய விக்கிப்பீடியா, உக்ரைனிய விக்கிப்பீடியாவைக் காட்டிலும் ஐந்து மடங்கு பிரபலமானதாக இருக்கின்றது. கூகுள் தேடலில் "авто" (அவ்டோ/auto, "வண்டி") எனத் தட்டச்சிட்டால், முதலில் வரும் பத்து முடிவுகளில் ஒன்பது முடிவுகள் உருசிய மொழியிலேயே உள்ளன. உக்ரைனில் உருசிய மொழி ஆட்சி மொழியல்ல, தேசிய சிறுபான்மையினர் மொழியாகும். உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தில், “உருசிய மொழியும், பிற சிறுபான்மையினர் மொழிகளும் பயன்படுத்தப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்” என்று இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம், உக்ரைனிய மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தாலும், பிற மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. சோவியத் ஒன்றியத்தின் பிற நாடுகள் உருசிய மொழியை தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தாலும், உக்ரைன் உக்ரைனிய மொழியையே தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தது. சிறுபான்மை மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுத்தினாலும், உக்ரைன் ஐந்து ஆண்டுகள் கழித்தே இச்சட்டத்தை நிறைவேற்றியது. உருசிய மொழியை ஆட்சி மொழியாக்க சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறியே தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள் அரசியல்வாதிகள். 2006 ஆம் ஆண்டில் கார்கிவ் நகரம் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல தெற்கு, கிழக்கு மாநிலங்கள் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டன. உக்ரைன் நாட்டுக் கல்விச் சட்டம், உக்ரைனில் வாழும் குடும்பத்தினர் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கலாம் எனத் தெரிவிக்கிறது. தற்போதுவரை அனைத்துப் பள்ளிகளிலும் (உக்ரைனிய மொழிப் பள்ளிகள் உட்பட) உருசிய மொழி கட்டாய மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. அதே போல், உருசிய மொழிப் பள்ளிகளில் உக்ரைனிய மொழி கட்டாயமாக கற்பிக்கப்படும் மொழியாகும். ஆகஸ்டு 2012 இல் இயற்றப்பட்ட சட்டத்தில், ஒரு பகுதியில் குறைந்தது 10 விழுக்காட்டினர் பேசும் மொழி அப்பகுதியின் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி தெற்கு, கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் உருசிய மொழி உள்ளூர் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டது. சனவரி 1, 2010 ஆம் நாளிலிருந்து, நீதிமன்றங்களில் உருசிய மொழியில் வழக்காடலாம் என்று அரசாணை தெரிவித்துள்ளது. உக்ரைனிய மொழியிலோ, உருசிய மொழியிலோ பேசத் தெரியாதவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேசலாம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாடலாம் என்று தெரிவித்துள்ளது. 1785 1785 (MDCCLXXXV) ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1784 1784 (MDCCLXXXIV) ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும். கருவேலம்பூக்கள் (திரைப்படம்) கருவேலம் பூக்கள் () என்பது 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பூமணியின் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாகத் தயாரித்தன. கருவேலம்பூக்கள் கரிசல்குளம் என்னும் ஊரில் குழந்தைகளை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலுக்கு அனுப்புவதும், சிற்றூரில் பருவ மழை தாமதமானால் விவசாயிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்லமுத்துவாக நாசர், அவரது மனைவி வடிவாக ராதிகா தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள். படிக்க வைப்பதில் உறுதியாகவுள்ளனர். மாரியப்பனாக சார்லி அதே ஊரைச் சேர்ந்த ஆண்களை மூளைச் சலவை செய்து வேளைக்கு ஆள் பிடிக்கும் தரகராக நடித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகாலை ஜந்து மணிக்கு தூக்கக் கலக்கத்தில் பேருந்தில் ஏறிச் செல்லும் காட்சியுடன் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் இலக்கிய எழுத்தாளரான பூ. மாணிக்கவாசகம் என்னும் இயற்பெயர் கொண்ட பூமணி என்பவர் இயக்கியுள்ளார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவில் இளையராஜா இசையமைத்து 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை இந்தியா தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், மற்றும் தூர்தர்ஷன் ஆகிய அரசு சார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படம் பின்வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது: அவுட்லுக் (இதழ்) அவுட்லுக் என்பது இந்தியாவில் விற்பனையாகும் ஆங்கில வார இதழ்களில் ஒன்றாகும். இவ்விதல் 1995-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளியாகிறது. 1779 1779 (MDCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். சிந்து சமவெளி (திரைப்படம்) சிந்து சமவெளி 2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அமலா பால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுகமானார்கள். செப்டம்பர் 3-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு "வயதுவந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் வழங்கப்பட்டது. சாமி (இயக்குநர்) சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார். ஒலியும் ஒளியும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி) ஒலியும் ஒளியும், 1980-களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை ஆறு மணிக்கு, பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதிய திரைப்படப் பாடல்களின் தொகுப்பாகும். அன்றைய காலகட்டத்தில், இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1990-களிலும் இந்நிகழ்ச்சி பரவலாக காணப்பட்டது. அதன்பிறகு தனியார் தொலைக்காட்சிகளின் போட்டியால் வழமையான நிகழ்ச்சியாக தற்போது இரவு 7:30 மணி முதல் 8:00 வரை ஒளிபரப்பாகி வருகிறது. அல்போன்ஸ் மரிய லிகோரி புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (செப்டம்பர் 27, 1696 – ஆகஸ்ட் 1, 1787) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839இல் புனிதர் பட்டம் அளித்தார். 1871இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இத்தாலியின் இன்றைய நாபொலி நகருக்கு அருகிலுள்ள மரியனெல்லா என்ற ஊரில் 1696ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் அல்போன்ஸ் மரிய லிகோரி. 16 வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. 27 வது வயதில் நேப்பிள்ஸ் மாநில வழக்கறிஞர் அமைப்பு ஒன்றுக்குத் தலைவராகவும் இருந்தார். ஆனால் 1723ம் ஆண்டில் நேப்பிள்ஸ் பிரபு ஒருவருக்கும், டஸ்கன் பிரபு ஒருவருக்கும் இடையே இருந்த சொத்து வழக்கில் அல்போன்ஸ், தனது எட்டு வருட வழக்குரைஞர் வாழ்க்கையில், முதல் முறை தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வி அவரை வெட்கித் தலைகுனிய வைத்தது. “உலகே, உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்க மாட்டாய்” என்று சொல்லி நீதிமன்றத்தைவிட்டுக் கிளம்பினார். மூன்று நாள்கள் சாப்பிட மறுத்துவிட்டார். இந்தத் தலைகுனிவானது, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். 27வது வயதில் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப்பணியாற்றிய "நேப்பிள்ஸ் பிரச்சாரம்" என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்ஸ் குருவானார். “அடுத்தவருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு” என்று இவர் சொல்வதுண்டு. 1732ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உலக இரட்சகர் சபையைத் தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்ம வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது என்பர். அல்போன்ஸ் நேப்பிள்ஸ் மாநிலத்தில் புனித ஆகத்தா தெய்கோத்தி என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்கு இவர் இணங்க மறுத்ததால், திருத்தந்தை இவரை கீழ்ப்படிதல் வாக்குறிதியைக்கொண்டு கட்டாயப்படுத்தி ஆயராக்கினார். 13 வருடங்கள் பனியாற்றி தனது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார். ஜான்சனிசத் தப்பறைக் கொள்கையைப் பெருமளவில் கட்டுப்படுத்தினார். இவர் ஆயர் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் மற்றும் அவருக்கு பின் திருத்தந்தையான திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் ஆகியோர் இவரை நோயுற்றிருப்பினும் ஆயர் பதவியில் இருக்க கட்டயப்படுத்தினர். 1775இல் தனது 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆதனால் மே, 1775இல் திருத்தந்தை ஆறாம் பயஸ் இவர் ஓய்வு பெற அனுமதியளித்தார். இவரின் இறுதிநாட்களில் இவர் துவங்கிய சபையினில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. இவரின் இறப்புக்குப் பின்னும் அவை நீடித்தன. இவர் 1787ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நொச்சேரா தெ பகானி என்ற ஊரில் இறந்தார். செப்டம்பர் 15, 1816இல் இவருக்கு திருத்தந்தை ஏழாம் பயஸ் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839ம் ஆண்டு மே 26ம் தேதி இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். 1871ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி அல்போன்ஸ் மரிய லிகோரியின் திருவிழா ஆகும். அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, “அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்” என்ற பட்டத்தை இவருக்கு தேடித் தந்தது. இன்றும் உரோமையில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக இரட்சகர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது. இவர் நற்கருணை மற்றும் அன்னை மரியா மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாவின் பெருமை, திருநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. மோர் மோர் பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று. தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருள் மோர் ஆகும். ஆயுர்வேதம் ஆயுர்வேதம் () ("Ayurveda", ) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. "ஆயுள்வேதம்" என்னும் சொல் "ஆயுர்வேத" என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் "ஆயுர்" என்னும் சொல் "நீண்ட வாழ்வு" என்பதையும், "வேத" என்பது "கல்வி தொடர்பானது" அல்லது "அறிவுத்துறை" என்று பொருள்படக்கூடியது. எனவே "ஆயுர்வேதம்" என்பது "நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை" என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர். மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது. திருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது. சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது. ஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம். இந்துக் கலைக்களஞ்சியம் இந்துக் கலைக்களஞ்சியம் என்பது இலங்கையில் இந்துக் கலாசார திணைக்களத்தால் இந்து சமயம் பற்றி தமிழில் வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார். இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் மடத்துவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இது உள்ளூர் மக்களால் சின்ன நல்லூர் என அழைக்கப்படுகிறது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் உள்ள நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இளந்தாரி நாச்சிமார் கோவில் என்ற தொன்மைப் பெயரைக் கொண்ட இக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில் மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார். மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் "நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது," என்று ஏளனம் செய்தார். இதனைக் கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலியைக் கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டுத் தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார். அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப்படுகின்றது. மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது. அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆன மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது. இவ்வாலயம் 1960களில் புனரமைக்கப்பட்டு அதன் உரிமையாளராக வேலுப்பிள்ளை சபாபதி என்பவர் இருந்து வந்தார். இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது. கருவறையின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிட்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மாற்றப்பட்டது. அருணாசலத்தைத் தொடர்ந்து வர்த்தகர் வி. இராமநாதன் பொறுப்பேற்றார். இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் 1970களின் ஆரம்பத்தில் புங்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைப்பாட்டில் முடி வரை அமையப்பெற்ற சித்திரத் தேர் கட்டப்பட்டு வீதியுலா வந்தது. அத்தோடு அழகான தேர்முட்டியும் அமைக்கப்பட்டது. மடத்துவெளி வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார். திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும். இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப்பாட்டுடன் முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம். திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும். அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத திரைப்படப் பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் கேளிக்கை, வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும். கொடியேற்றம், எட்டம் திருவிழா, பூங்காவனம், தீர்த்தம் உட்படச் சிறப்பான சித்திரத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பச்சை சாத்தும் நிகழ்ச்சியும் இடம்பெறும். மேலும் சூரன் போர் வாழை வெட்டு, கந்தசட்டி, திருவெம்பாவை போன்ற விழாக்களும் சிறப்பாக இடம்பெறும். 1991 காலப் பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது. பின்னர் புதிய பரிபாலன சபையும் உருவாகியது. 2002 முதல் மீண்டும் தினசரி நைவேத்தியக் கிரியைகள் நடைபெற்று வருகின்றன. பரீனா லை பரீனா லை ("Farina Lai") இலங்கைத் திரைப்பட, மற்றும் நடன நடிகையும் ஆவார். தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்தவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களில் நடனமாடியுள்ளார். மலாய் முசுலிம் இனத்தைச் சேர்ந்த பரீனா லை, 1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன்முதலில் நடனமாடியதன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடனக் காட்சிகளில் தோன்றினார். மேலும் இரவுக் கேளிக்கை விடுதிகளில் பாடகர் எம். எஸ். பெர்னாந்துவுடன் இணைந்து நடனமாடினார். 1975 ஆம் ஆண்டில் வெளியான புதிய காற்று திரைப்படத்தில் வி. பி. கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். சிங்கள் நடிகர் காமினி பொன்சேகா தயாரித்த "சருங்கலே" (1979), "உதுமானெனி" (1979) போன்ற சிங்களப் படங்களில் காமினி பொன்சேகாவின் தங்கையாக நடித்தார். இலங்கை, இந்திய கூட்டுத்தயாரிப்பான நங்கூரம் படத்தில் நடிகை லட்சுமியின் தங்கையாக நடித்தார். பிற்காலத்தில் குணசித்திர நடிகையாக நடித்தார். நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி திரைப்படங்களில் நடனமாடி நடித்திருந்தார். சில்லையூர் செல்வராசனின் மகன் திலீபன் செல்வராஜன் கதாநாயகனாக நடித்த "ஆதரகதாவ" என்ற சிங்களத் திரைப்படத்தில் திலீபனின் சகோதரியாகத் தமிழில் பேசி நடித்தார். இவர் கடைசியாக "அலிபாபா ஹொரு ஹதலிய" எனும் சிங்களப் படத்தில் ரொபின் பெர்னாந்துவுக்குச் சோடியாக நடித்தார். நியாமான நீதிவிசாரணைக்கான உரிமை நியாமான நீதிவிசாரணைக்கான உரிமை என்பது சட்டத்தை மதித்து ஆட்சி நடக்கும் நாடுகளில் மிக முக்கியாமன ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இத உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலக உடன்படிக்கைகளாலும் சட்டங்களாலும் உறுதிசெய்யப்பட்ட உரிமை ஆகும். நீதி முறையாக வழங்கப்படுகிறது என்பதை உறுதிசெய்வதே நியாமான நீதிவிசாரணைக்கான உரிமையின் நோக்கமாகும். பின்வரும் உரிமைகள் நியாய நீதிவிசாரணை உரிமைகளில் அடங்கும்: எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் ("Positions on Jerusalem") என்பது யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்து, சிறப்புடைய பழம்பெரும் நகராகிய எருசலேம் எந்த நாட்டின் அல்லது ஆளுகையின் கீழ் வரவேண்டும் என்பது குறித்து, பன்னாட்டளவில் நிலவுகின்ற சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும். பன்னாட்டுச் சட்டத்தின்கீழ் எருசலேம் எந்நிலை பெறவேண்டும் என்பது குறித்து நாடுகளிடையேயும் வல்லுநர்களிடையேயும் கருத்து ஒற்றுமை இல்லை. பெரும்பான்மையான உலக நாடுகள் எருசலேம் நகரை இசுரயேல் நாட்டின் தலைநகராக ஏற்பதில்லை. பல நாடுகள் எருசலேம் நகர் இசுரயேலுக்கு உரிமைப்பட்டதல்ல என்று கூறுகின்றன. ஐ.நா.வின் பெரும்பான்மையான நாடுகள், எருசலேம் பன்னாட்டு நிலை கொண்ட நகராக இருக்கவேண்டும் என்று ஐ.நா. அளித்த பரிந்துரையை ஏற்கின்றன. 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் என்று அழைக்கப்படுகின்ற சண்டையின்போது இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டது. அது சட்டத்துக்கு முரணானது என்று ஐ.நா. அவையின் பெரும்பான்மை உறுப்பினர் நாடுகள் கருதுகின்றன. "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம்" இசுரயேலின் தலைநகராக இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிக்கை விடுத்தது. அதையும் பெரும்பான்மை நாடுகள் ஏற்பதில்லை. என்றாலும், மேற்கு எருசலேம் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுபற்றிப் பெரும்பான்மை நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு, வெளிநாட்டுத் தூதரகங்கள் இசுரயேல் நாட்டில் டெல் அவீவ் ("Tel Aviv") நகரிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் அமைந்துள்ளன. பாலத்தீன ஆட்சியமைப்பும் ("Palestinian National Authority") இசுரயேலும் எருசலேமின் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்னும் பரிந்துரை இன்னும் நிறைவேறவில்லை. பாலத்தீன ஆட்சியமைப்பின்படி, எருசலேம் (அல்-குட்சு - "Al Quds") வருங்கால பாலத்தீன தன்னுரிமை நாட்டின் தலைநகர் ஆகும். ஆனால், இசுரயேலின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு இறுகிய நிலைப்பாடு வெளியிட்டார். அவர் கருத்துப்படி, "எருசலேம் யூத மக்களுக்கு உரிமைப்பட்டது. அது நித்திய காலமும் இசுரயேலின் இறையாண்மைக்கு உட்பட்டே இருக்கும்." " பிற நிறுவனங்களும் நாட்டு சமூகங்களும் எருசலேம் நகரம் பன்னாட்டு நிலை கொண்ட நகரமாக விளங்கவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றன. 1517ஆம் ஆண்டிலிருந்து எருசலேம் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்தது. 1830இலிருந்து எருசலேமில் யூதர் பெரும்பான்மையினராக இருந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய அரசுகள் எருசலேமில் தம் செல்வாக்கைப் பரப்பத் தொடங்கின. அவற்றுள் சில நாடுகள் எருசலேமின் கிறித்தவ புனிதத் தலங்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பராமரிக்கத் தொடங்கின. பல நாடுகள் எருசலேமில் அரசுத் தூதரக அலுவலகங்களை ஏற்படுத்தின. முதலாம் உலகப் போருக்குப்பின், 1917இல் பிரித்தானிய அரசு எருசலேமைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. நேச நாடுகளின் முக்கிய உறுப்பு நாடுகள் எருசலேம் நகரம் ஆபிரகாமிய மதங்களுக்கு (யூதம், கிறித்தவம், இசுலாம்) முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, அது "மனித நாகரிகத்துக்குப் புனிதமான அறக்கட்டளை" போல உள்ளது என்று ஏற்றுக்கொண்டு, எருசலேம் நகர் குறித்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக் கோரிக்கைகளும், உடைமைக் கோரிக்கைகளும் மதித்து ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் பன்னாட்டு உத்தரவாதம் அமைய வேண்டும் என்று ஒத்துக்கொண்டன. எருசலேமைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமுன், 1948 மே மாதத்தில், பிரித்தானிய அரசு பாலத்தீனப் பகுதி குறித்து அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே நிலவிய உடைமைக் கோரிக்கையைத் தீர்த்துவைக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொண்டது. 1947, நவம்பர் மாதம் ஐ.நா. "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவை வெளியிட்டது. அதன்படி, பாலத்தீனப் பகுதி அரபு நாடு என்றும் யூத நாடு என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். எருசலேம் நகரம் "தனி நிலப்பகுதி" ("corpus separatum") என்னும் சட்ட நிலை, அரசியல் நிலை பெறவேண்டும். அது ஐ.நா. அவையால் நிர்வகிக்கப்படும். அது 1947இல் வெளியிடப்பட்ட "பாலத்தீனத்தைப் பிரிப்பது பற்றிய ஐ.நா. திட்டம்" என்னும் ஆவணத்தின்படி அரபு நாடு மற்றும் யூத நாடு ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு உட்படாவகையில் அமையும். இதுவே ஐ.நா. வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவின் சுருக்கம். யூதர்களின் தரப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், அரபு மக்கள் மேற்கூறிய தீர்மானத்தை ஏற்பதாக இருந்தால் தாங்களும் அதை ஏற்பதாக ஒத்துகொண்டனர். ஆனால் அரபு பிரதிநிதிகளும் அரபு நாடுகளும் ஐ.நா. தீர்மானம் சட்ட முரணானது என்று கூறி அதை நிராகரித்தன. இசுரயேல் தன்னை முழு இறையாண்மை கொண்ட நாடாக 1948 மே மாதம் அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து அண்டைய அரபு நாடுகள் இசுரயேல் மீது படையெடுத்தன. இவ்வாறு, எருசலேம் குறித்து ஐ.நா. வெளியிட்ட தீர்மானம் செயல்படாமல் மடிந்தது. 1949இல் போர்முடிவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, எருசலேம் நகரின் கீழ்ப்பகுதி யோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும், எருசலேம் நகரின் மேற்குப் பகுதி இசுரயேல் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தன. இரு தரப்பினரும் ஒருவர் மற்றொருவர் நடைமுறையில் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பகுதிகளை ஏற்றனர். எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. வெளியிட்டிருந்த தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், இசுரயேலுக்கும் யோர்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர்முடிவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்ட முறைமை கொண்டதாக ஏற்கப்படவில்லை. உடனடியாக இசுரயேல், "எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டுக்கே உரித்தான பகுதி என்னும் வகையில் அது நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும்" என்று அறிக்கையிட்டது. 1950 இல் யோர்தான் கிழக்கு எருசலேமை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய இராச்சியம் மற்றும் பாக்கிஸ்தான் நாடு ஆகியவை இதனை ஏற்றுக் கொண்டன. வேறு எந்த உலக நாடும் யோர்தானோ அல்லது இசுரயேலோ எருசலேமில் ஆட்சி செய்வதை சட்டரீதியாக ஏற்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுப்பேரவை கீழ்வருமாறு கூறியுள்ளது: "எருசலேம் நகரம் தனிப்பட்ட ஆன்மிக, சமயம் சார்ந்த மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நகரம் என்பதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சமூகம் வழியாகச் செயல்படுகின்ற உரிமை ஐ.நா.வுக்கு உண்டு." இந்த ஐ.நா. நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக அமைவது 1947, நவம்பர் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" ஆகும். அது கூறியது: "எருசலேம் நகரம் ஒரு தனி நிலப்பகுதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அது பன்னாட்டு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்." இந்த நிலைப்பாட்டை ஐ.நா. பொதுப்பேரவை, 1948ஆம் ஆண்டு அரபு-இசுரேலி போருக்குப் பின்னரும் அறிவித்தது (ஐ.நா. பொதுப்பேரவையின் 303ஆம் தீர்மானம்). மேலும், 1979இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இசுரயேல் எருசலேம் நகரைத் தனது தலைநகராக அறிவித்தது சட்டபூர்வமாகச் செல்லாது என்பது ஐ.நா. பொதுப்பேரவையின் நிலைப்பாடு ஆகும். அது ஐ.நா. பொதுப்பேரவையின் 2009ஆம் ஆண்டு தீர்மானம் 63/30 என்னும் அறிவிப்பிலிருந்து தெரிகிறது. அந்த தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: "ஆக்கிரமிப்பு நாடாகிய இசுரயேல் எருசலேம் திருநகரின்மீது தனது சட்டங்கள், சட்ட உரிமை, நிர்வாகம் சார்ந்தவற்றைத் திணிப்பது சட்டப்படி செல்லாது. இத்தகைய சட்டமுரணான, தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இசுரயேல் கேட்டுக்கொள்ளப்படுகிறது." இதுவரை, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆறு தீர்மானங்கள் இசுரயேல் எருசலேமைக் கையகப்படுத்தியது சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்துள்ளன. பாகுபடாத எருசலேம் இசுரயேலின் தலைநகராக நித்திய காலமும் இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பன்னாட்டுச் சட்டத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் எருசலேமிலிருந்து பன்னாட்டுத் தூதரகங்கள் இடம்பெயர்வதே நல்லது என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தனது 1980ஆம் ஆண்டு தீர்மானம் 478இல் அறிவித்தது. எருசலேம் நகரின் மேற்குப்பகுதியைத் 1948ஆம் ஆண்டில் தனக்கு உரியதாகப் பெற்றதால், அதன் மீது இறையாண்மை தனக்கு உண்டு என்று இசுரயேல் நாடு உரிமைபாராட்டுகிறது. பாலத்தீனக் குடியேற்றத்தை விட்டுவிட்டு பிரித்தானிய நாடு சென்றதால், போர்க்காலத்தின்போது எருசலேம் பகுதி எந்தவொரு இறையாண்மையின் கீழும் இருக்கவில்லை. அப்போது இசுரயேல் அங்கு நுழைந்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது. 1967இல் ஆறு நாள் போர் என்னும் சண்டையின்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைக் கைப்பற்றி அங்கு தனது ஆட்சியையும் நிர்வாகத்தையும் நிறுவி, புதிய நகராட்சி எல்லைகளையும் வரையறுத்தது. எருசலேம் நகரில் அமைந்துள்ள புனித தலங்களுக்குப் பயணியர் சென்றுவருவதற்கான பாதுகாப்பையும் இசுரயேல் அளித்தது. அச்சமயத்தில் இசுரயேல் ஐ.நா.வுக்குக் கொடுத்த தகவலில், தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துப் பிடித்துக்கொள்ளவில்லை என்றும், நிர்வாகத்தின் பொருட்டும் நகராட்சி எல்லைகளை வரையறுக்கும் பொருட்டும் நடவடிக்கை எடுத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும் கூறியது. ஆனால், இசுரயேலின் உச்ச நீதி மன்றம் பின்னர் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைத் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகக் கருதிச் செயல்பட்டது தெளிவாகவே தெரிந்தது. இசுரயேல் தனது நிலைப்பாட்டைக் கீழ்வருமாறு வெளியிட்டது: "யோர்தான் நாடு எருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்து 1948இல் கையகப்படுத்திக்கொண்டது. எனவே அதற்கு இறையாண்மை கோர முடியாது. ஆனால் இசுரயேலோ 1967இல் தற்காப்புப் போரில் ஈடுபட்டு அப்பகுதியைப் பெற்றுக்கொண்டதால், அப்பகுதியின்மீது அதிக வன்மையோடு உரிமைபாராட்ட முடியும்." 1980 சூலை மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றமான கினேசட், நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் ஓர் அம்சமாக "எருசலேம் சட்டம்" என்றொரு சட்டம் இயற்றி, "ஒன்றுபட்ட எருசலேம் இசுரயேலின் தலைநகர் ஆகும்" என்று அறிக்கையிட்டது. இசுரயேலின் நாட்டுத்தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எருசலேமில் அமைந்துள்ளன. 2010, நவம்பர் மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றம் மற்றுமொரு சட்டத்தை இயற்றியது. கிழக்கு எருசலேம் சார்பான மற்றும் கோலான் நிலப்பகுதி தொடர்பான உடைமையுரிமையை இசுரயேல் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்குமுன் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் 60 உறுப்பினரின் இசைவு பெறப்பட்டிருக்கவேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது. ஐ.நா. அவை "எருசலேம் பன்னாட்டு நிர்வாகத்தின்கீழ் இருக்கவேண்டும்" என்று தீர்மானம் இயற்றியதற்குப் பன்னாட்டுச் சட்டமுறையில் எந்த ஆதாரமும் இல்லை என்று இசுரயேல் கருதுகிறது. மேலும், ஐ.நா.வின் நிலைப்பாடு எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாத ஒரு பரிந்துரை மட்டுமே. அப்பரிந்துரையின் செயல்படு காலமும் கடந்துவிட்டது. அதாவது, அரபு நாடுகள் ஐ.நா.வின் 181ஆம் தீர்மானத்தை மீறி, இசுரயேல் நாட்டின்மீது சட்டமுரணாகப் படையெடுத்த நேரத்திலிருந்து ஐ.நா.வின் பரிந்துரை மடிந்துபட்டது. இது இசுரயேலின் நிலைப்பாடு. எருசலேமைத் "தனிப்பகுதி" ("corpus separatum") என்று கருதுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ, புரிதலோ எக்காலத்திலும் இருந்ததில்லை என்று இசுரயேல் கூறுகிறது. இசுரயேலில் ஆட்சிசெய்த அரசுகள் மாறியபோது, எருசலேம் பற்றி அந்த அரசுகள் கொண்டிருந்த நிலைப்பாடும் அவ்வப்போது மாறிவந்துள்ளது. இசுரயேலி பிரதமராய் இருந்த இட்சாக் ரபீன் ("Yitzhak Rabin") ஓஸ்லோ உடன்படிக்கையில் ("Oslo Accords") கையெழுத்திட்டார். அதில் எருசலேமின் வருங்கால சட்டநிலை கருத்துப்பரிமாற்றத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ராபின், "எருசலேம் நகரை ஒருபோதும் பிரிக்கப்போவதில்லை" என்றும் கூறினார். பின்னர், 1995இல் பள்ளிச் சிறுவர் குழுவினரிடம் பேசும்போது ராபின், "இசுரயேலின் இறையாண்மையின் கீழ் இருக்கின்ற ஒன்றுபட்ட எருசலேமைக் கைவிட்டால் அமைதி ஏற்படும் என்று யாராவது கூறினால், அதற்கு நாம் அளிக்கின்ற பதில், 'அப்படிப்பட்ட அமைதி எங்களுக்கு வேண்டாம்' என்பதே" என்று கூறினார். பிரதமர் ராபினுக்குப் பின் பதவி ஏற்ற பிரதமர் பென்யமின் நெத்தன்யாகு என்பவரும் மேற்கூறிய நிலைப்பாடு கொண்டவராகவே இருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் பாராக் என்பவர், தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, "எருசலேம் பிரிக்கப்படுவது தேவை என்றால் அதற்கும் அணியமாய் இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு பேசிய முதல் இசுரயேலி பிரதமர் பாராக் மட்டுமே. பின்னர் பதவியேற்ற பிரதமர் ஆரியேல் ஷாரோன் ("Ariel Sharon") "எருசலேம் எக்காலத்திற்கும் யூத மக்களின் பிளவுபடாத தலைநகராக இருக்கும்" என்று சூளுரைத்தார். பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் ஓல்மெர்ட் என்பவர், தற்போது இசுரயேலி இறையாண்மையின் கீழ் உள்ள அரபு குடியேற்றங்களைப் பிரித்துக் கொடுக்கவும், கோவில் மலை பகுதியைப் பன்னாட்டு அறக்கட்டளை ஒன்றின்கீழ் கொணரவும் ஆதரவு தெரிவித்தார். ஆனால், அதன் பின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு கடினப்போக்கு கொண்டவர். அவர் கூற்றுப்படி, "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம் நகரம் நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும். எந்த சமயத்தைச் சார்ந்தவர்களும் எருசலேமுக்கு வந்து போகலாம்." கிழக்கு எருசலேம் இசுரயேல் நாட்டினால் ஆக்கிரமித்துக் கைப்பற்றப்பட்ட பகுதி என்று ஐ.நா. பாதுகாப்பு அவை தனது 242ஆம் தீர்மானத்தில் கூறியிருப்பதைப் பாலத்தீனிய ஆட்சியமைப்பு தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. பாலத்தீன நாட்டின் தலைநகரம் கோவில் மலை உட்பட்ட கிழக்கு எருசலேம் முழுவதும் ஆகும் என்றும், மேற்கு எருசலேம் எந்நிலையது என்பதற்கு குறித்துப் பேச்சுவார்த்தையின்படி முடிவுசெய்யலாம் என்பதும் பாலத்தீனிய நிலைப்பாடு. இருந்தாலும், "எருசலேமைத் 'திறந்த நகர்' ("open city") என்று கொள்வது, அல்லது வேறு தீர்வுகளைக் காண்பது எப்படியென்று பேச்சுவார்த்தை நடத்துவது தனக்கு ஏற்புடையதே என்றும் பாலத்தீனம் கூறுகிறது. 1988ஆம் ஆண்டு பாலத்தீனிய விடுதலை இயக்கம் ("PLO") வெளியிட்ட "பாலத்தீனிய விடுதலைப் பிரகடனத்தில்" ("Palestinian Declaration of Independence") எருசலேம் பாலத்தீன நாட்டின் தலைநகரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் பாலத்தீனிய ஆட்சியமைப்பு, எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அச்சட்டம் யாசிர் அரபாத்தால் 2002இல் அமலாக்கப்பட்டது. காண்க: பாலத்தீனிய நாட்டு ஆட்சியமைப்பின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு இது: "எருசலேம் 'திறந்த நகராக' இருக்கும். அது தனித்தபகுதிகளாகப் பிரிக்கப்படாமல் இருக்கும். சமயம் தொடர்பான இடங்களைப் பாதுகாத்தல், அவற்றைச் சந்தித்து வழிபாடு நடத்தவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அதற்கான சுதந்திரம் வழங்கல் அனைத்திற்கும் பாலத்தீன அரசு பொறுப்பு ஏற்கும்." ஒரு நிலப்பகுதியை வன்முறையால் கையகப்படுத்துவது சட்ட முரணானது என்னும் கொள்கையின் அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் தீர்மானத்தின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம், பேச்சுவார்த்தைகளின் விளைவாக எருசலேமின் நிரந்தர நிலை பற்றிய தீர்வு ஏற்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான நடவடிக்கைகளை எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துக்கொண்டாலன்றி, எருசலேம் தொடர்பான எல்லை வரையறைகள் 1967க்கு முந்திய நிலைப்படி அமைய வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுள் பின்வருவனவும் அடங்கும்: கிழக்கு எருசலேமில் பாலத்தீன ஆட்சியமைப்பு தனது நிறுவனங்களை மீண்டும் ஏற்படுத்த வழி திறக்கப்பட வேண்டும். குறிப்பாக, "கிழக்கு இல்லம்" ("Orient House"), வர்த்தக இல்லம் ("Chamber of Commerce") ஆகியவை இந்த நிறுவனங்களுள் அடங்கும். வேலைக்கு அனுமதி வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெற வாய்ப்புகள், கட்டடங்கள் எழுப்ப அனுமதி, வீடுகள் தகர்த்தல், வரிவிதிப்பு, செலவினங்கள் போன்ற துறைகளைப் பொறுத்தமட்டில் கிழக்கு எருசலேமில் பாலத்தீனியருக்கு எதிராகச் செயல்படாதிருக்க வேண்டும் என்று இசுரயேலி அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது." 2010, மார்ச்சு 21ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதியான காதரின் ஆஷ்லி ("Catherine Ashley") என்பவர் பின்வருமாறு கூறினார்: "ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை சென்ற திசம்பர் மாதம் அறிக்கையிட்டது. அதன்படி, அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்ற பாலத்தீனம் மற்றும் இசுரயேல் என இரு நாடுகள் அருகருகே உருவாகும் தீர்மானத்தை அது ஆதரிக்கிறது. 1967இல் இருந்த எல்லைக் கோட்டின்படி, கிழக்கு எருசலேம் மற்றும் காசா நிலப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி மேற்குக் கரையில் செயல்படக்கூடுமான பாலத்தீன நாடு உருவாக வேண்டும். எருசலேம் நகரம் பாலத்தீனம் மற்றும் இசுரயேல் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய தலைநகராக மாறக்கூடிய விதத்தில் வழி காணப்பட வேண்டும்." "எருசலேம் நகரம்" எந்த எல்லைகளைக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்து, அந்நகரை ஒரு "தனிநிலமாக" ("corpus separatum") அறிவித்ததோ, அதையே ஐக்கிய அமெரிக்கா நாடுகளும் குறிப்பிடுகிறது. அதன்படி, "சட்டப்பூர்வமாக" ("de jure") எருசலேம் நகரம் "பாலத்தீன நில ஆட்சியை" ("Palestine Mandate") சார்ந்தது; அதன்பின் அந்நகரம் வேறு எந்த இறையாண்மைகொண்ட நாட்டின் ஆளுகையின்கீழும் வந்ததில்லை. 1989-1993 ஆண்டுகளில் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் ("George H. W. Bush") பின்வருமாறு கூறினார்: "கிழக்கு எருசலேமில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவது சரி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கருதவில்லை" மேலும், எருசலேம் பிளவுபடுவதையும் தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார். 2008ஆம் ஆண்டு, சூன் மாதம் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பராக் ஒபாமா பின்வருமாறு கூறினார்: "எருசலேம் இசுரயேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும். அது பிளவுபடாமலும் இருக்கவேண்டும்." கிழக்கு எருசலேமில் வாழ்ந்த பாலத்தீனியரைப் பாதிக்கும் விதத்தில் ஜீலோ மற்றும் ராமத் ஷ்லோமோ பகுதிகளில் இசுரயேலி குடியேற்றம் விரிக்கப்படுவதையும், மக்கள் வீடுகளிலிருந்து அகற்றப்படுவதையும், வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதையும் ஒபாமா அரசு கண்டனம் செய்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவை 478ஆம் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, எருசலேமில் தங்கள் தூதரகங்களை அமைத்திருந்த 13 நாடுகள் அங்கிருந்து தம் தூதரகங்களை இடம்பெயர்த்து, முக்கியமாக டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றன. அவ்வாறு எருசலேமிலிருந்து தூதரகங்களை அகற்றிய நாடுகள் இவை: மேற்கூறிய நாடுகளுள் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகள் 1984இல் தங்கள் தூதரகங்களை மீண்டும் எருசலேமுக்கு மாற்றின. பின்னர் 2006இல் கோஸ்ட்டா ரிக்கா தன் தூதரகத்தை மீண்டும் ஒருமுறை டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றது. ஒரு சில வாரங்களுக்குப் பின் எல் சால்வடோர் நாடும் அவ்வாறே தனது தூதரகத்தை டெல் அவீவுக்கு மாற்றியது. தற்போது பன்னாட்டுத் தூதரகம் எதுவும் எருசலேமில் இல்லை. பராகுவாய் மட்டும் எருசலேமுக்கு மேற்கே 10 கி.மீ தூரத்திலுள்ள மெவாசரெத் சீயோன் என்னும் இடத்தில் தன் தூதரகத்தைக் கொண்டுள்ளது. பொலீவியாவும் அவ்வாறே செய்தது, ஆனால் 2009இல் இசுரயேலோடு தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது. உலக நாடுகளுள் பல 1940களிலும் 1950களிலும் இசுரயேலை இறையாண்மை கொண்ட தனி நாடாக ஏற்றன. ஆனால் மேற்கு எருசலேம் மீது இசுரயேல் நாட்டுக்கு இறையாண்மை உண்டு என்று அவை ஏற்கவில்லை. "Consular Corps of the Corpus Separatum" என்னும் பெயர்கொண்ட பன்னாட்டு "தனிநிலப்பகுதி துணைத் தூதரகம்" ஒன்று எருசலேமில் அமைந்துள்ளது. சில நாடுகள் எருசலேமில் "துணைத் தூதரகங்கள்" ("consulates") அமைத்துள்ளன. அந்த நிறுவனங்கள் பிரித்தானியக் கால பாலத்தீனத்தின் சட்டநிலை கொண்டவை ("Mandate Palestine") என்றும், அந்த நிலப்பகுதி எந்தவொரு நாட்டின் இறையாண்மைக்கும் உட்படவில்லை என்றும் மேற்கூறிய நாடுகள் கூறுகின்றன. நெதர்லாந்து அரசு எருசலேமில் ஓர் அலுவலகத்தை நடத்துகிறது. அது முக்கியமாக இசுரயேலி குடிமக்களுடைய தேவைகளுக்காக உள்ளது. எருசலேமில் துணைத் தூதரகம் அமைத்துள்ள பிற நாடுகள் இவை: இசுரயேலின் குடியரசுத் தலைவர் எருசலேமில் தங்கியிருப்பதாலும், அங்குதான் அவர் அயல்நாட்டுத் தூதர்களின் பதவி ஆவணத்தைப் பெறுவதாலும், அயல்நாட்டுத் தூதர்கள் டெல் அவீவ் நகரிலிருந்து பயணம் செய்து எருசலேம் வந்து அங்கு தம் ஆவணத்தைச் சமர்ப்பிக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம் டெல் அவீவ் நகரிலும், துணைத் தூதரகம் "தனிப்பகுதி" நிலைப்படி ("Consular Corps of the Corpus Separatum") எருசலேமிலும் உள்ளது. அமெரிக்காவின் நாட்டுச் சட்டப்படி, ஒரு நிலப்பகுதியில் அன்னிய இறையாண்மையை ஏற்று ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு அமெரிக்க முதல்வருக்கு மட்டுமே உரிய பொறுப்பு ஆகும். அமெரிக்க நாடாளுமன்றம் ("Congress") ஒன்றுபட்ட எருசலேம் நகரத்தை இசுரயேலின் தலைநகராக ஏற்பது பொருத்தம் என்றும், அமெரிக்க தூதரகத்தை எருசலேமில் நிறுவுவது பொருத்தம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை தம் விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைகின்றனவே ஒழிய, கட்டுப்படுத்தும் திறன் ("binding effect") கொண்டவை அல்ல. 1995இல் பாராளுமன்றம் நிறைவேற்றிய "எருசலேம் தூதரகச் சட்டம்" ("Jerusalem Embassy Act") என்னும் தீர்மானம் இவ்வாறு உள்ளது: "எருசலேம் இசுரயேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இசுரயேல் தூதரகம் எருசலேமில் 1999, மே 31ஆம் நாளுக்கு முன் நிறுவப்பட வேண்டும்." இத்தீர்மானம் அமெரிக்க முதல்வரின் அதிகாரத்தில் தலையீடுபோல் அமையக்கூடும் என்பதால் சட்டத்திற்கு முரணானது என்று அமெரிக்க நீதித்துறை கூறியது. டெல் அவீவ் போன்ற ஒரு நகரத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது என்னும் ஒரே காரணத்தின் அடிப்படையில் அந்த நகரைத் தலைநகராக அமெரிக்கா கருதுகிறது என்று பொருளாகாது. வெளியுறவுச் சட்ட வல்லுநர்கள் கூற்றுப்படி, அமெரிக்க நாடாளுமன்றம் எருசலேமில் தூதரகம் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்துவதாக இருந்தால், அமெரிக்க அரசு எருசலேமில் இன்னொரு தூதரகத்தை அமைத்துவிட்டு, அதே நேரத்தில் எருசலேமை இசுரயேலின் தலைநகராகக் கருதவில்லை என்று வாதாட முடியும். அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை எருசலேமின் பகுதியாகிய டால்பியோட் ("Talpiot") என்னுமிடத்திற்கு மாற்றி, அங்கு எருசலேமிலும் பாலத்தீன நிலப்பகுதிகளிலும் வாழும் குடிகளுக்கு நுழைவுரிமை வழங்கல், வர்த்தகம் மேம்படுத்தல் போன்ற அரசு சேவைகளில் ஈடுபட்டுள்ளது. Jewish Virtual Library: ""The area known as 'Greater' Jerusalem usually refers to an approximately space surrounding the Old City of Jerusalem. This area includes both West and East Jerusalem, including the adjacent neighborhoods outside of the municipal boundaries of the city. ... Regarding the route of Israel's security fence in the Jerusalem area, there have been a few competing strategies: to reinforce the municipal boundaries of the city, to alter the demographics in Israel's favor, and to permanently draw the lines for 'Greater' Jerusalem."" ""The Israeli proposal included the following main points: 1. Jewish areas outside Jerusalem's municipal boundaries would be annexed to the city, including such population centers as Givat Ze'ev, Ma'aleh Adumim and Gush Etzion. (Gush Etzion is a major settlement block just south of Jerusalem, and is not shown on the map)."" IRIS.org (Information Regarding Israel's Security). Map Centre of OCHA oPt (United Nations Office for the Coordination of Humanitarian Affairs – occupied Palestinian territory): Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA). Jerusalem maps section: ஈற் டிரிங்க் மான் வுமன் ஈற் டிரிங்க் மான் வுமன் (, தமிழில்: "உண் குடி ஆண் பெண்") என்பது 1994 இல் வெளிவந்த, ஆங் லீ ஆல் இயக்கப்பட்ட ஒரு தாய்வான் நாட்டுத் திரைப்படம் ஆகும். ஒரு தகப்பனுக்கும், அவரின் மூன்று மகள்களுக்கும் இருக்கும் உறவையும், அவர்களின் வாழ்வோட்ட நிகழ்வுகளையும் தகப்பனின் சமையல் கலையோடு பிணைத்துக் கதையாக இத் திரைப்படம் கூறுகிறது. இத் திரைப்படம் 1994 க்கான சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருதைப் பெற்றது. லீ கெச்சியாங் லீ கெச்சியாங் ("Li Keqiang", பின்யின்: "Lĭ Kèqiáng", பிறப்பு 1 சூலை 1955) சீன மக்கள் குடியரசின் துணைப் பிரதமர்களில் முதலாமவரும் மாநிலங்களவையின் துணை கட்சித் தலைவரும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசாய நிலைக்குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் ஆவார். இவரை சீனப் பிரதமராக வென் ஜியாபாவோவை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அலாரிப்பு (நடனம்) பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலாரிப்பு ("alarippu") எனப்படுகிறது. கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணங்கும் பொருட்டு இதைச் செய்கின்றனர்.. நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும். அண்ணா மேம்பாலம் அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்), சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகும், 1973 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும் ஆகும். இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது. ஜெமினி ஸ்டூடியோஸ் இங்கு அமைந்திருந்ததால், இப்பகுதி ஜெமினி சர்க்கிள் எனவும் மேம்பாலம் ஜெமினி மேம்பாலம் எனவும் அழைக்கப்பட்டன. குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20,000 வாகனங்கள் இப்பாலத்தின்வழி செல்கின்றன. ஏர்செல் செல்லுலர் நிறுவனம் இப்பாலத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டது. பாலத்தில் ஒளி விளக்குகளை நிறுவி பராமரிக்கிறது. வியட்நாமில் இந்தியர் வியட்னாமில், வியட்னாமிய போருக்கு முன்பிருந்தே இந்தியர்கள் குழுக்களாக வாழ்கின்றனர். குறிப்பாக தமிழ்ச் செட்டியார்கள் அதிக அளவில் வசித்தார்கள். சுற்றுலாத் தலமான ஹோ சி மின் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலை இவர்கள் நிர்வகித்து வருகிறார்கள். சம்ப அரச குடும்பத்தின் வம்சாவழியினரான சாம் மக்கள் இந்தியாவுடன் நீண்ட வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து வந்த புத்த சமயத்தையே வியட்னாமில் பெரும்பான்மையினர் கடைபிடிக்கின்றனர். மோரே, இந்தியா மோரே, மியான்மர் நாட்டின் எல்லைக்கருகில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்திலுள்ள இந்திய நகரமாகும். இங்கு குக்கி எனப்படும் இன மக்கள் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்களும், நேபாளிகளும், மெய்தெய் இன மக்களும் வாழ்கின்றனர். இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகங்களில் பெரும்பான்மை இவ்வூரிலேயே நடைபெறுகின்றன. இவ்வூர் தென்கிழக்காசியாவின் வாசல் என்றழைக்கப்படுகிறது. மியான்மரிலிருந்து நாடு திரும்பிய தமிழர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர். அதனால் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் இங்கு காணமுடியும். புதிதாக தொடங்கப்படவிருக்கும் ஆசிய இரயில் போக்குவரத்து மூலம் சரக்குகளை தரைவழியாக சிங்கப்பூரிலிருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம். இந்த இரயில் பாதை மோரே வழியாக செல்லும். பர்மிய இந்தியர் பர்மாவில் வசிக்கும் இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் பர்மிய இந்தியர் (மியான்மர் இந்தியர்) ஆவர். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பர்மாவில் வசித்து வந்தாலும், பெரும்பான்மையினர் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சென்று குடியேறியவர்கள். ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் பர்மாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் ரங்கூன், மாண்டலே ஆகிய இருநகரங்களிலேயே வாழ்கிறார்கள். அரசு, இராணுவப் பணிகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றினார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ரங்கூனில் இந்தியர்களே அதிகளவில் வசித்தனர். பல தொழில்களில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவர்களில் தமிழர், இந்திக்காரர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள், குசராத்தியர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பர்மா அரசு இந்திய மொழிகளுக்குத் தடை விதித்ததால், பெரும்பாலான இந்தியர்கள் பர்மிய நீரோட்டத்தில் கலந்து விட்டார்கள். இருப்பினும் பலர் தங்கள் குடும்பப் பெயர்களைச் சூட்டிக் கொண்டும், தம் பண்பாட்டைப் பேணியும், இந்திய மொழிகளைப் பேசியும் வாழ்கின்றனர். கடவுச்சொல் பலம் ஒரு கடவுச்சொல் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை கடவுச்சொல் பலம் ("Password strength") என்கிறார்கள். பொதுவாக குறிப்பிட வேண்டுமென்றால், கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முயல்பவர் எத்தனை தடவைகளில் கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பார் என்பதை அளவிடுதலாகும். பலமிகுந்த கடவுச்சொலைப் பயன்படுத்துதல் பாதுகாப்பானதாகும். எனவே மின்னஞ்சல் நிறுவனங்களும், வங்கிகளும் பாதுகாப்பான கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு பயனர்களை வேண்டுகின்றன. வெறும் சொற்களை மட்டும் கொண்டிருக்கும் கடவுச்சொற்கள் பாதுகாப்பானவை அல்ல. கடவுச்சொல்லைக் கண்டுபிடிக்க முயல்பவர், அகராதியில் உள்ள அனைத்துச் சொற்களையும் பிரபலமான சொற்களையும் உள்ளிட்டு சோதிப்பார். எனவே இத்தகைய சொற்களைத் தவிர்க்க வேண்டும். கடவுச்சொல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்றால், எழுத்துக்களுடன் எண்களையும் குறியீடுகளையும் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, a1brS, ve4Op' கடவுச்சொற்களை கண்டுபிடிக்க தற்போது ஏராளமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிமிடத்திற்கு ஆயிரம் கடவுச்சொற்கள் என, அகராதியில் உள்ள அனைத்துச் சொற்களையும் உள்ளிட்டு எளிதில் கண்டுபிடிக்கும் செயலிகளும் உள்ளன. இத்தகைய கருவிகள், பத்து எழுத்துருக்களைக் கொண்ட கடவுச்சொல்லை ஒரே நாளில் கண்டுபிடிக்கக்கூடியவை. மார்க் வா மார்க் வா (ஆங்கிலம்: Mark Waugh, பிறப்பு ஜூன் 2, 1965), முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர், முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் ஸ்டீவ் வாவுடன் (Steve Waugh) இரட்டையராகப் பிறந்தவர், வலது கை ஆட்டக்காரரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4-ம் எண் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்கியவர், பிரமாதமான ஸ்லிப் பீல்டரான இவர் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த படியாக அதிகமாக 181 பிடிகளை எடுத்தவர். மார்க் வா, நியூ சவுத் வேல்ஸிலுள்ள கேம்ப்சியின் காண்டெர்ப்யூரி மருத்துவமனையில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அன்று பிறந்தார். இவர் ரோட்கெர் மற்றும் பெவர்லி வா இரட்டையருக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவராவார். இவரது தந்தை வங்கி அதிகாரி, தாயார் நியூ சவுத் வேல்ஸ் கல்வித் துறையில் ஆசிரியராக இருந்தார். அவரது குடும்பம் மேற்கு சிட்னியின் புறநகரான பனானியாவில் குடியமர்ந்தது. இரட்டையர்களுக்கு மேலும் இரு சகோதரர்கள் டீன் மற்றும் டானி பிறந்தனர். துவக்கக்காலத்திலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தினர். ஆறு வயதை அடைந்தபோது இரட்டையர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட காற்பந்தாட்டம் (சாக்கர்), டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை விளையாடினர். அவர்களின் முதல் கிரிக்கெட் போட்டியில், சகோதரர்கள் இருவரும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தனர். இவர்கள் குடும்பத்தில் பலர் ஏற்கனவே விளையாட்டு வீரர்களாய் இருந்தனர். இவர்களது தந்தை வழிப் பாட்டனாரான எட்வர்ட் ஓட்டப்பந்தய நாய் பயிற்சியாளராக இருந்தவர். வடக்கு கடற்கரை நகரான பங்காலோவில் வளர்ந்த எட்வர்ட், ரக்பி லீக் போட்டிக்கு நியூ சவுத் வேல்ஸ் கண்ட்ரி அணிக்காகக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக்கின் ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியில் இணையும் சமயத்தில் குடும்ப காரணங்களுக்காக அவரது தொழில் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. எட்வர்ட்சின் ஒரே மகன் ரோட்கெர், உறுதியளிக்கும் டென்னிஸ் ஆட்டக்காரர். அவர் ஆஸ்திரேலியாவின், இளநிலை- தரவரிசையில் எட்டாவதாகவும் 14 வயதிற்கு கீழான நிலையில் மாகாண சாம்பியனாகவும் இருந்தார். தாய்வழியைச் சேர்ந்த பெவ், டென்னிஸ் விளையாட்டில் 14 வயதிற்கு கீழான தென் ஆஸ்திரேலியன் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர். பெவ்வின் மூத்த சகோதரர் டியோன் பர்னே ஒரு துவக்க ஆட்டக்காரராக சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் பாங்ஸ்டவுன்னிற்காக விளையாடியவர். இப்பொழுதும் அக்குழுமத்தின் வரலாற்றில் முன்னணி ஓட்ட எண்ணிக்கையாளராக அவர் நிலைபெற்றிருக்கிறார். எட்டு வயதில் பாங்க்ஸ்டவுன் மாவட்டத்தின் பத்து வயதிற்கு கீழான அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுதான் இரட்டையர்களின் முதல் நுழைவு ஆகும். 1976 ஆம் ஆண்டில், இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்சின் துவக்கப்பள்ளி காற்பந்தாட்ட (சாக்கர்) அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த அணியின் வரலாற்றிலேயே, அணியில் பங்குபெற்ற மிகவும் இளம் வயதினராக இருந்தனர். தாங்கள் படித்துக் கொண்டிருந்த பனானியா துவக்கப் பள்ளிக்காக விளையாடி, தங்கள் பள்ளிக்கு உம்ப்ரோ பன்னாட்டுக் கேடயத்தை பெற்றுத் தந்தனர். அந்த மாநிலம் தழுவிய நாக்-அவுட் கால்பந்து (சாக்கர்) போட்டியின் இறுதியாட்டத்தில் அணியின் அனைத்து மூன்று கோல்களையும் இட்டனர். அவர்கள் பள்ளி தொடர்ச்சியாக மூன்றுமுறை மாநில கிரிக்கெட் சாம்பியன் பட்டம் பெற்றதற்கும் பள்ளி இறுதி ஆண்டில் பள்ளியின் டென்னிஸ் அணி மாநில அளவில் இரண்டாவதாக வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக இருந்தனர். பள்ளி இறுதி ஆண்டில் மார்க் வா, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் அணித் தலைவனாக இருந்து இரண்டிலும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களைப் பள்ளிக்குப் பெற்றுத் தந்தார். சேந்தியம்பலம் சேந்தியம்பலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேர்வைகாரன்மடம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூர். தூத்துக்குடியிலிருந்து ௨௦ கி.மீ ​​தொலைவில் உள்ளது. ஊரின் வடப்புறம் பரந்து விரிந்து கிடக்கும் ​தேரிப்பகுதி. அத்​தேரி எங்கும் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இவ்வூரில் ​அதிமான நெசவாளர்கள் வசிக்கிறார்கள். இக்கிராமத்தின் ​தெருக்கள் அனைத்தும் சமமாக, கிரமமாக, சீராக அ​​மைக்கப்பட்டிருக்கக் காணலாம். இத்​தெருக்கள் பாவாத்து சந்தி எனவும் அ​​ழைக்கப்படுகின்றன. சித்தியவான் சித்தியவான் ("Sitiawan") மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் இருக்கிறது. 1900களில், சீனாவில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக சில நூறு சீனர்கள், இங்கு குடியேறினார்கள். ஒரு காலக் கட்டத்தில், சீனாவின் குத்தியான், பூசோவ் மாநிலத்தில் இருந்து வந்து குடியேறிய சீனர்களினால் இந்த நகரம் ஆதிக்கம் பெற்று இருந்தது. ரப்பர் தோட்டங்களினால் சூழப்பட்டு இருந்த சித்தியவான் இப்போது வெகு துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அரச மலேசிய கப்பல் படைத் தளம், இந்த நகருக்கு அருகாமையில் இருக்கும் லூமுட் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாடோடிகளாக வந்த இரு சீனச் சமயத் தலைவர்கள், இங்கு இரு சீனக் கோயில்களைக் கட்டினர். பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் இன்று வரை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. சித்தியவான் நகரில் அதிகமாக இந்தியர்களைக் காண முடியும். 1900களில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வந்த அவர்களில் பலர், சமூக அரசியல் நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கிய சின் பெங் என்பவர் இங்குதான் பிறந்தார். நாட்டுப்புறக் கதைகளில் சித்தியவான் நகரம் ‘கம்போங் சுங்கை காஜா மத்தி’என்று அழைக்கப்படுகிறது. 'இறந்து போன யானையின் ஆற்றுக் கிராமம்' என்று பொருள்படும். ஈய மூட்டைகளைச் சுமந்து செல்லும் போது, இரண்டு யானைகள் டிண்டிங்ஸ் ஆற்றின் சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டன. ஒரு யானை மூழ்கி அங்கேயே இறந்து போனது. ஒரு யானை தப்பித்துக் கொண்டது. உயிரோடு இருந்த யானையைக் கரைக்கு கொண்டு வர பல முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்தாலும் அந்த யானை கரைக்கு வர மறுத்தது. கடைசி வரை இறந்து போன யானையுடன் இருந்து, அதுவும் இறந்து போனது. நட்பின் திடமான விசுவாசத்திற்காக அந்த இடத்திற்கு,’செத்தியா காவான்’ என்று வேறு ஒரு பெயரும் வைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் ஈயமும், ரப்பரும் பிரதான உற்பத்திப் பொருட்களாக இருந்தன. ஈய மூட்டைகள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு, லூமுட் கடல்கரையில் அணைந்து இருந்த நீராவிக் கப்பல்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அந்தக் கப்பல்கள் ஈய மூட்டைகளை பினாங்குத் தீவிற்கு கொண்டு சென்றன. 1870களில் சித்தியவான் பகுதியைப் பெரியம்மை நோய் தாக்கியது. இறந்து போன யானைகளினால்தான் பெரியம்மை அந்த நகரைத் தாக்கியதாகச் சீனர்கள் நம்பினர். அதனால், அந்த யானைகளைச் சாந்தப் படுத்த ’கம்போங் சுங்கை காஜா மத்தி’ எனும் நகரின் பெயரை, செத்தியா காவான் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். இந்தச் செத்தியா காவான் எனும் பெயர்தான் காலப் போக்கில் ‘சித்தியவான்’ என்று மாறிப் போனது. இப்போது சித்தியவான் என்றும் அழைக்கப்படுகிறது. 1903ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் பூஜியான் மாநிலத்தில் இருந்து 360 கிறிஸ்துவச் சீனர்கள் சித்தியவானில் குடியேறினார்கள். அப்பொழுது சீனாவில் வறுமையும் பஞ்சமும் ஏற்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து தப்பிக்க அந்தக் கிறிஸ்துவச் சீனர்கள், இங்கு வந்து குடியேறினர். கம்போங் கோ எனும் ஒரு புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்த கம்போங் கோ, தற்சமயம் மிளகாய்ச் சுவைச் சாறு தயாரிப்பதில் மலேசியாவிலேயே புகழ்பெற்று விளங்குகிறது. சித்தியவானில் குடியேறிய சீனர்கள் ரப்பர் தோட்டங்களிலும், ஈயச் சுரங்கங்களிலும் வேலை செய்தனர். அவர்கள் சித்தியவானில் நான்கு கிணறுகளைத் தோண்டினர். 1930களில் இரு கிணறுகளும், 1950களில் இரு கிணறுகளும் தோண்டப்பட்டன. பழமை வாய்ந்த அந்தக் கிணறுகள் இன்றும் உள்ளன. இருப்பினும் இன்றைய காலத்தில் அவை பயன்படுத்தப் படவில்லை. பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரர் ஆவார். ராமசாமி மே 10 , 1949 அன்று சித்தியவானில் பிறந்தார். தனது தந்தை பழனிசாமி மற்றும் தாயார் பழனியம்மாள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 1920 ல் மலாயா குடிபெயர்ந்தனர். ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி பேரூராட்சியில் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. செங்கோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்து சமயக் கடவுளான முருகனை முதன்மைக் கடவுளாக கொண்டமைந்த கோவில் இது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது. மூலவருக்கு வலப்புறம் மகாதேவன், மகாவிஷ்ணு, அம்பிகை, கணேசரும் இடப்புறம் சூரியனும் உள்ளனர். பஞ்ச தேவர்கள் சூழ பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் அமைந்துள்ளார். அனுமன் நதி இக்கோவிலின் தல தீர்த்தமாகும். இக்கோவிலில் அரச இலை திருநீற்றுப் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆய்க்குடிக்கு அருகிலுள்ள மல்லிபுரம் என்னும் ஊரில் ஒரு குளத்தைத் தூர்வாரும் போது ஒரு முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பக்தர் ஒருவர் அச்சிலையைத் தன் வீட்டு ஆட்டுத்தொழுவத்தின் அருகே கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டு வரலானார். அரசும் வேம்பும் இணைந்து உள்ள இடத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து வழிபடும்படியும் அவ்விடத்தை ஆடு ஒன்று அடையாளம் காட்டும் பக்தரின் கனவில் தோன்றி. முருகன் கூறினார். அதன்படியே செம்மறி ஆடொன்று அரசும் வேம்பும் உள்ள ஒரு இடத்துக்குச் செல்ல, பக்தரும் அந்த இடத்தில் ஓலைக் கீற்றால் குடிசை அமைத்து முருகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். பிற்காலத்தில் அவ்வூரை ஆண்ட அரசர்களால் இக்கோவில் மேம்படுத்தப்பட்டது. மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது. கந்த சஷ்டி, தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம் ஆகியவை இக்கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும். கந்த சஷ்டி விழா, ஐப்பசி மாதம் (நவம்பர் 15 -டிசம்பர் 15, தோராயமாக) அதாவது துலா மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். ஆறாம் நாள் சூரசம்ஹாரமும் 7 ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறும். ஆய்க்குடி கல்லாங்காட்டுபுதூர் கல்லாங்காட்டுபுதூர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவ்வூரின் அருகில் சிங்கராம்பாளையம், பகவதிபாளையம், கோதவாடி போன்ற கிராமங்களும் அமைந்துள்ளன.இவ்வூரிலிருந்து 17கி.மீ தொலைவில் இயற்கை சூழல் நிறைந்த பொள்ளாச்சி அமைந்துள்ளது. தொழில்: இப்பகுதியின் பிறதான தொழிலாக வேளாண்மை தொழிலும்,அருகில் ஏராளமான சிறிய பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.. கல்வி: இவ்வூரில் பெரும்பகுதி மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்,ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அருகில் அக்சயா பொறியியல் கல்லூரியும் உள்ளது.. கெ. ஆர். மீரா கெ.ஆர். மீரா (பிறப்பு 19 பிப்ரவரி 1970) புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ’ஆவே மரிய’ என்ற மலையாளச் சிறுகதை 2009-ஆம் ஆண்டு ’கேரள சாகித்ய அகாதமி விருது’ பெற்றுள்ளது. நான்கு சின்னத்திரை தொடர்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ள கெ.ஆர். மீரா தேசிய விருது பெற்ற ’ஒரே கடல்’ என்ற திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார். கெ.ஆர். மீரா 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம்கோட்டை என்னும் ஊரில் பிறந்தார். மலையாள மனோரமாவில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த கெ.ஆர். மீரா, பிறகு எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக அந்த பதவியைப் பணித்துறப்பு செய்தார். இவரது சிறுகதைகளுள் பல தமிழில் கே.வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி புக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.. தென்னிந்திய மொழிகளில் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பில் இவர் எழுதிய "" சிறுகதை இடம்பெற்றுள்ளது. கே. ஏ. சுப்பிரமணியம் கே. ஏ. சுப்பிரமணியம் என்ற கொல்லங்கலட்டி அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம் (மார்ச் 5, 1931 - நவம்பர் 27, 1989) இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களால் அழைக்கப்பட்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். கலை இலக்கியப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர், தாயகம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தவர். சுப்பிரமணியம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், கீரிமலையில் கொல்லங்கலட்டி என்ற சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் கதிரிப்பிள்ளை அம்பலப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை இலங்கைநாயகமுதலி ஆகியோருக்குப் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியிலும் முடித்துக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தனது 17வது அகவையில் பொறியியல் பயிலுனராகப் பணியில் சேர்ந்தார். 1962 ஆம் ஆண்டில் ஆசிரியையான வள்ளியம்மை என்பவரைக் காதலித்துக் கலப்புத் திருமணம் புரிந்து கொண்டார். சீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கம்யூனிசத் தொழிலாளிகள் பாசையூர் சந்தியாப்பிள்ளை, மான் முத்தையா போன்றோருடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மாக்சிய சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கப் பணிகளில் அவர் ஈடுபடலானார். இதன் விளைவாக மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 1951 ஆம் ஆண்டில் கம்யூனிச வாலிபர் இயக்கத்திலும், அதன் பின்னர் 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார். 1953 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தினார். அன்றைய காலகட்டத்தில் வடக்கு மாகாணத்தில் கம்யூனிச இயக்கத்தை வழிநடத்தி வந்த மு. கார்த்திகேசன், மரு. சு. வே. சீனிவாசகம், பொன். கந்தையா, அ. வைத்தியலிங்கம், எம். சி. சுப்பிரமணியம் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பினால் கட்சியில் முழுநேர ஊழியரானார். 1950களின் இறுதியில் வி. பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை கிராமம் தோறும் நிறுவுவதற்கு சுப்பிரமணியம் பக்கபலமாக நின்று செயற்பட்டார். 1956 பொதுத்தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியுடன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆட்சியைப் பிடித்தார். இதனையடுத்து பாடசாலைகள் தேசியமயமாக்கல் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக மணியம் வாலிபர்களைத் திரட்டி முன்னணியில் நின்று செயல்பட்டார். 1964 ஆம் ஆண்டில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கூறாகப் பிளவடைந்தது. இப்பிளவினை அடுத்து, நா. சண்முகதாசன் தலைமையில் மாக்சியம்-லெனினியம், மற்றும் மாவோ சே துங் சிந்தனையில் உருவான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) உடன் சுப்பிரமணியம் தன்னை இணைத்துக் கொண்டார். 1967 இல் அல்பேனியாவில் நடைபெற்ற வாலிபர் அமைப்பு மாநாட்டில் இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கப் பிரதிநிதியாக ரோகண விஜயவீரவுடன் கலந்து கொண்டார். 1963, 1967, 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்குச் சென்றார். 1966 அக்டோபர் 21 இல் தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிராக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சுன்னாக எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டார். எழுச்சி ஊர்வலம் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி இவர் தலைமையில் முன்னேறியபோது, காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகியதோடு கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலையானார். 1969 ஆண்டு மே நாள் நிகழ்வு பௌத்தர்களின் புனித நாளான வெசாக் நாளன்று வந்ததால் அன்று மே தினப் பேரணிகளுக்கு அன்றைய டட்லி சேனநாயக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோருக்கு எதிராக காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சுப்பிரமணியம் உட்படப் பலர் படுகாயமடைந்தனர். ஆனாலும் ஊர்வலம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுக்கூட்டம் ஒன்று நல்லூர் வீராளி அம்மன் கோயிலடியில் நடைபெற்றது. 1978 ஆம் ஆண்டில் நா. சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தமிழரின் சுயநிர்ணயத்தை ஏற்காமை, மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பது என்ற முடிவைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற மத்திய குழு முடிவை மீறி பகிரங்க அறிக்கை வெளியிட்டது என்கிற காரணங்களால் சுப்பிரமணியம் உட்படப் பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்தனர். 1978 சூலை 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கட்சி உறுப்பினர்கள் கூடி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர். இதன் செயலாளராக கே. ஏ. சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார். 1984 செப்டம்பர் 2, 3 நாட்களில் இக்கட்சியின் முதலாவது தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சுப்பிரமணியம் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நோய்வாய்ப்பட்டு 1989 ஆம் ஆண்டில் இறக்கும் வரை அப்பதவியை வகித்து வந்தார். 1978 -1981 காலப் பகுதியில் Red Banner என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பல கட்டுரைகளையும் ஏனைய அனைத்து ஆசிரிய தலையங்கங்களையும் அவரே எழுதினார். கே. ஏ. சுப்பிரமணியம் அரசியல்வாதியாக மட்டுமன்றி கலை, இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டில் தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க சில்லையூர் செல்வராசன், கே. டானியல், என். கே. ரகுநாதன் போன்றோருடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டார். பேரவைக்கு க. கைலாசபதி, இ. முருகையன் ஆகியோரது முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார். பேரவையின் தாயகம் இதழ் வெளியிடப்பட இவரது வழிகாட்டல் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன் அதன் ஆசிரியர் குழுவிலும் பங்கேற்றார். இறக்கும் வரையில் அவ்விதழின் ஆசிரியர் தலையங்கங்களை எழுதி வந்தார். விக்ரம் பிரபு விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார். நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார். இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். சமர் (திரைப்படம்) சமர், 2013 ஆன் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால், திரிசா, சுனைனா நடிக்கின்றனர். கற்றது கடலளவு (நூல்) கற்றது கடலளவு, து. கணேசன் எழுதிய நூல். கப்பல் பணியிலிருந்த நூலாசிரியர், தன் பயண அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார். இவர் உலகின் பல நாட்டுத் துறைமுகங்களுக்குப் பயணித்திருக்கிறார். புதிய கடல்சார் துறை மாணவர்களுக்கு கப்பலைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்கியுள்ளார். இந்நூல் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வெளியானது. கடல் மற்றும் கப்பல் தொடர்பான நூல்கள் தமிழில் குறைவு. படிப்போருக்குப் புரியும்படியாக எளிய தமிழில் தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். கப்பலில் கற்றவைகளையும் ஒவ்வொரு துறைமுகத்திற்குச் செல்லும்போதும் அங்கு நிகழ்ந்தவற்றையும் விவரித்துள்ளார். இந்நூலுக்கு கடலோடி நரசய்யா முன்னுரை எழுதியுள்ளார். வெண்ணிலா கபடிகுழு வெண்ணிலா கபடிகுழு, 2009-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இயக்குனர் சுசீந்தரன் இயக்கிய முதல் திரைப்படமான இதில், விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அறிமுகமானார். இவருடன் அப்புக் குட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் அறிமுகமானார்கள். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்திருந்தார். இத்திரைப்படம், பீம்லி கபடி ஜட்டு என்ற பெயரில் 2010-ம் ஆண்டு தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படம் வெற்றித்திரைப்படமாக இருந்தது. பெரும்பாலான திரைத்துறையினரும் இத்திரைப்படத்தைப் பாராட்டினர். சிறுநீரகத்தி சிறுநீரகத்தி (Nephron) எனப்படுவது சிறுநீரகத்தின் அமைப்பிற்குரியதும், தொழிலுக்குரியதுமான அடிப்படை அலகாகும். இந்த சிறுநீரகத்தியே, குருதியை வடிகட்டுவதன் மூலமும், பின்னர் தேவையான பொருட்களை மீள உறிஞ்சி, தேவையற்றவற்றை கழிவாக அகற்றுவதன் மூலமும், உடலிலுள்ள நீரினதும், சோடியம் போன்ற கரையும் பதார்த்தங்களினதும் சமநிலையைப் பேணும் முக்கியமான தொழிலைச் செய்கின்றது. இந்த சிறுநீரகத்தியின் தொழில் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பதுடன், அகச்சுரப்பித் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படுவதுமாக இருக்கின்றது. சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone), அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல்) வளரூக்கி ஆல்டோஸ்டிரோன் (aldosterone), இணைகேடய வளரூக்கி போன்றவைகளினால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடு உடைய சிறுநீரகத்திகள் கழிவுகளை வடித்து வெளியேற்றுவதன் மூலம் உடலிலுள்ள நீரின் அளவு, சோடியம் போன்ற அயனிகளின் அளவு, வளர்சிதைமாற்ற இடைநிலைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் சமநிலையைப் பேணுகின்றது. இதன் மூலம் குருதியின் அளவு, குருதி அழுத்தம், குருதியின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பவற்றை ஒழுங்கமைக்கின்றது. மனிதரில் ஒரு சாதாரண சிறுநீரகத்தில், 800,000 தொடக்கம் 1.5 மில்லியன்கள் வரையிலான சிறுநீரகத்திகள் உள்ளன. மருந்தில் கூற்றம் மருந்தில் கூற்றம் என்பது சங்ககாலப் பாண்டியர் காலத்தில் ‘கூற்றம்’ என்னும் நாட்டுப் பகுப்பாக விளங்கிய ஒரு பகுதி. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி என்னும் பாண்டியன் யானை மீதிருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கோட்டைக் கதவுகளை உடைத்து அந்நாட்டை வென்றான். மருந்தில் கணிச்சி என்பது மும்முனைச் சூலத்தைக் குறிக்கும். மருந்தில் கூற்றம் என்பது இது போலக் சூலத்தைக் குறிக்காது. நீண்மொழி நீண்மொழி என்பது புறநானூறு 287-ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள துறைப்பெயர். கரந்தைத்திணையின் துறையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைத் திணையின் துறைகள் என்று 14 துறைகளைக் குறிப்பிடுகிறது. அதில் நெடுமொழி என வரும் துறை போர்வீரன் தன் பெருமையைத் தானே எடுத்துக் கூறுவதாக அமையும் எனக் குறிப்பிடுகிறது. கரந்தைத்திணையை வஞ்சித்திணைக்குள் அடக்கிக் காட்டும் தொல்காப்பியத்தில் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் திணை பற்றிய பேச்சு இல்லை. நூழிலாட்டு நூழிலாட்டு, வாகைத்திணையின் துறைகளில் ஒன்று. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் என்னும் புலவர் பாடிய இரண்டு பாடல்கள் நூழிலாட்டுத் துறையினவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைவன் ஒருவன் புற்றுக்குள் இருக்கும் பாம்பு போன்றவன், காட்டுக்குள் திரியும் சிங்கம் போன்றவன் என்று ஒருபாடல் குறிப்பிடுகிறது. தலைவன் ஒருவனின் தந்தை முதல் நாள் போரில் மாண்டான். மறுநாள் போரில் இந்தத் தலைவன் பகைவனின் களிற்றை வீழ்த்தி மீண்டு அது குத்திய புண் வலியைப் பொறுத்துக்கொண்டிருக்கிறான். புறப்பொருள் வெண்பாமாலை வாகைப்படலத்தில் 33 துறைகளைக் குறிப்பிடுகிறது. இவற்றில் இந்தத் துறை பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியம் தும்பைத்திணையின் துறைகளில் ஒன்றாக ‘நூழில்’ என்னும் துறையைக் குறிப்பிடுகிறது. பல படைவீரர்கள் பின்வாங்குமாறு ஒருவன் வாட்போர் புரியும் நிலை ‘நூழில்’ எனச் சுட்டப்பட்டுள்ளது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எழுவர் நல்வலம் அடங்க ஒரு தான் ஆகிப் பொருது களத்து அடல் , அவன் போர்க்கள வயலில் யானைகள் சிதறி ஓடும்படிச் செய்தது ஆகிய பாடல் பகுதிகள் நூழில் என்னும் போர்க்கள ஆட்டத்துக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் (), இந்திய மாநிலமான கேரளத்தில் அமைந்துள்ள மலையாளப் பல்கலைக்கழகம் ஆகும்.. இது 2012 ஆம் ஆண்டு கேரள அரசினால் நிறுவப்பட்டது.. இப்பல்கலைக்கழகத்தை நவம்பர் 1, 2012 அப்போதைய கேரள அரசின் முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைத்தார். மலப்புறத்தில் அமைந்துள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப் பட்டது.. வன்முறை வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும். வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம். புனைபெயர் புனைபெயர் ("Pseudonym", "Pen name") என்பது ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். ஒரு படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் தனது படைப்புகளை வெளியிடலாம். தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் குழுக்களும் புனைபெயரில் தங்கள் படைப்புகளை வெளியிடலாம். தங்கள் உண்மை அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாமை, கவர்ச்சியான பெயர்கள் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்தல் போன்றவை புனைப்பெயர் பயன்படுத்தப்படும் காரணங்களுள் சில. புனைபெயர் பட்டப்பெய‌ரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. (எ.கா- பாரதி) புனைபெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது. புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற சில எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புனைபெயர்‌களில் எழுதி வந்தனர். மஞ்சள் நீராட்டு மஞ்சள் நீராட்டு என்பது இவற்றில் ஏதாவது ஒன்றை குறிக்கலாம். ஜான் ஆஸ்டின் ஜான் ஆஸ்டின், ("John Austin", மார்ச் 3, 1790 - டிசம்பர் 1, 1859) இங்கிலாந்தைச் சேர்ந்த நீதி- சட்ட வல்லுநர் மற்றும் அரசியல் சிந்தனையாளர். எழுத்தாளர்; சட்டவியல் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட நூல்கள் மிக முக்கியமானவை. "சட்டவியல் தொடர்பான விரிவுரைகள்" என்ற இவரது நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். இறைமை பற்றிய ஒருமுகக் கோட்பாட்டினை விளக்கியவர். பரிசில் பரிசில் என்னும் துறையினதாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாடாண் திணையில் வரும் துறை. குமணனிடம் பெற்றுவந்த பரிசிலைப் புலவர் பெருஞ்சித்திரனார் தன் மனைவியிடம் கொடுத்து அதனை என்ன செய்யவேண்டும் என்று கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. உன்னை விரும்பியவர்களுக்கும், நீ விரும்பியவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நம் சுற்றத்தாரின் பசியைப் போக்க முன்பு கடன் கொடுத்தவர்களுக்கும், - இப்படி இன்னார்க்கு என்று எண்ணாது, எல்லாருக்கும் கொடு. என்னிடம் கேட்காமலேயே கொடு. இது குமணன் நல்கிய வளம். – என்கிறார். பரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் இதனைத் தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை பரிசில் துறை எனச் சுட்டுவது வேறு துறை. இன்னார் கொடுத்தது என்று கூறுவது ‘பரிசில் துறை’ என்கிறது. ஜெரமி பெந்தாம் ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம்(Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர், சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும். இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார். எஸ். மோகனதாஸ் எஸ். மோகனதாஸ் இலங்கையின் கல்விமான்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணைவேந்தரும் ஆவார். வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்த்தின் விவசாய வேதியியல் துறையில் பெரும் பங்களிப்புகளை வழங்கியவர். மூத்த விரிவுரையாளர் ஆழ்வார்பிள்ளையுடன் கூட்டு முயற்சியில் வட மாகாணத்தில் முன்னோடியான ஆய்வுத்திட்டங்களை செயற்படுத்தியவர். தற்போது பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் செயற்பாட்டு உறுப்பினராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். இலங்கை அரசின் வித்தியா ஜோதி விருது பெற்றவர் பரிசில் துறை பரிசில் துறை என்னும் துறை வகுக்கப்பட்ட 17 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவை பாடாண் திணைப் பாடல்கள். பரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் இதனைத் தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் தனியொரு துறையாகச் சுட்டுகிறது. இந்தப் பரிசில் இன்னார் கொடுத்தது என்று கூறுவது ‘பரிசில் துறை’ என்கிறது. மண்ணகம் காவல் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 193) வரிசை கருதாது வான்போற் றடக்கைக் குரிசினீ நல்கயாங் கொள்ளும் - பரிசில் அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்ந படுகளி நால்வாய்ப் பகடு. பரதேசி (2013 திரைப்படம்) பரதேசி (ஆங்கிலம்:Paradesi) பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கான வசனத்தை நாஞ்சில் நாடன் எழுதி, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பி. எச் டேனியலின் ரெட் டீ என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் இந்நாவலை "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் இரா முருகவேள் மொழிபெயர்த்திருக்கிறார். 1930 ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இராசா (ஆதர்வா), பிரித்தானாயர் ஆண்டுவந்த நாட்களில் சென்னை மாகாணத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு கவலையற்ற இளம் மனிதர். அந்த கிராமத்தில் வசிக்கும் அங்கம்மா, ராசாவை நேசிக்கிறாள். அங்கம்மாவின் காதலலை அவள் தாய் எதிர்க்கிறாள், காரணம் ராசா ஒரு வேலையில்லாதவன். இராசா வேலை தேடி அருகிலுள்ள கிராமத்திற்கு செல்கிறான். அங்கே கங்காணியின் நட்பு கிடைக்கிறது. அவரை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறான். கங்காணி மலைப்பகுதிகளில் உள்ள பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களில் வேலை வாங்கித்தருவதாக கிராமவாசிகளிடம் கூறுகிறார். மேலும் அவர் சரியான விடுதி மற்றும் உயர் ஊதியங்கள் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். இராசா மற்றும் கிராம மக்கள் பலர், கங்காணியின் பேச்சைக் கேட்டு அங்கே வேலைக்கு செல்கிறார்கள், வேலைக்குச் சென்ற இடத்தில் அவர்கள் எதிர்நேக்கும் பிரச்சனைகளையும் மீண்டும் அங்கம்மாவை இராசா சந்தித்தானா என்பதையும் மையமாகக்கொண்டு மீதிக்கதை நகர்கிறது. இளவெளிமான் இளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல் வெளிமானின் தம்பி. வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்து இரண்டு பாடல்கள் பாடியுள்ளர். நீர் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும். அருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தருகிறான். பரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை. உலகம் பெரிது. பேணுநரும் பலர் உள்ளனர். - என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டார். யானையை வேட்டையாட எண்ணிய புலி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது. நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது. பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன். ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான். ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம். – என எண்ணிக்கொண்டு சென்றுவிடுகிறார். பரிசில் கடாநிலை பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார். பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்று குறிப்பிடுகிறது. சங்ககால விருதுகள் சங்ககால அரசர்கள் சிறப்பாகக் கடமையாற்றுபவர்களுக்கும், சிறந்த கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர். அவர்கள் தந்த விருதுகள்: எட்டி இட்லிப் பொடி இட்லிப் பொடி என்பது மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு மற்றும் எள் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு அரைக்கப்படும் கலவை இட்லிப் பொடியாகும். இட்லிப் பொடி இட்லி மட்டுமின்றி, தோசை மற்றும் பிற தென்னிந்திய உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் இட்லிப் பொடியானது, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. பருப்பையும், வரமிளகாயையும் நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கியபின் சூடு தனியும் முன்பு பெருங்காயம் சேர்க்க வேண்டும். எள்ளை தனியாக வறுக்கவும். பிறகு அனைத்து கலைவையினையும் ஒன்றாக சேர்க்கவும். ஆறிய பிறகு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்தபின், மின்சாரத்தால் இயங்கும் ஆட்டாங்கல் அல்லது அம்மிக்கல் மூலமாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் பூண்டையும் இக்கலவையில் சேர்த்துக் கொள்ளலாம். சிறிதளவு அரிசியையும் மிளகுப் பொடியும் சேர்த்தால் இன்னும் சற்று வேறு சுவை கிடைக்கும். எள்ளிற்கு பதிலாக வெல்லம் சேர்த்தால் சன்று இனிப்பான சுவையும் கிடைக்கும். எட்டி மரம் நாக்ஸ் வாமிகா, விஷம் கொட்டை, சிமேன் ஸ்ட்ரைகோனஸ் மற்றும் குவாக்கர் பொத்தான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்ட்ரைகோனஸ் மரம் (Strychnos nux-vomica L.), இந்தியா,மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் தாயகமாக கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். இது திறந்தவெளி வாழ்விடங்களில் வளரும் லொகானியேசியே குடும்பத்தை சார்ந்த  ஒரு நடுத்தர மரம் ஆகும். அதன் இலைகள் முட்டை மற்றும் 2-3.5 அங்குலங்கள் (51-89 மிமீ) அளவுள்ளன. இது மரத்தின்  வட்டத்திற்குள் விதைகளிலிருந்து பெறப்பட்ட மிகையான நச்சு, தீவிர கசப்பான அல்கலாய்டுஸ் ஸ்டிரைச்னைன் மற்றும் புரோசின் ஆகியவற்றை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது, பச்சை நிற ஆரஞ்சு பழம். விதைகளில் சுமார் 1.5% ஸ்ட்ரைக்னின்கள் உள்ளன, மற்றும் உலர்ந்த பூக்கள் 1.0% கொண்டிருக்கும். இருப்பினும், மரத்தின் பட்டை கூட புளுசினையும் பிற விஷத்தன்மை உடைய கூட்டுப்பொருள்களை கொண்டுள்ளது. மாற்று மருத்துவத்தில் பல நிலைமைகளுக்கு சிகிச்சையாக ஸ்ட்ரைநினோஸ் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மருத்துவ சான்றுகளால் இந்த கூற்றுகள் நிறுபிக்கப்படவில்லை. பல நாடுகளில் ஸ்ட்ரைநினின் பயன்பாடு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, மேலும் காட்டு விலங்குகள், நரிகள், மற்றும் கொறித்துண்ணிகள் உட்பட பல வகையான பாலூட்டிகளைக் கொல்ல உணவாக  பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.தற்செயலாக தோலின்மீது பட்டாலோ அல்லது சுவாசித்தாலோ நச்சாக மாறிவிடும். Strychnos nux-vomica ஒரு சிறிய தடித்த தண்டு ஒரு நடுத்தர அளவு மரம் ஆகும்.  அடர்த்தியானது, கடினமான வெள்ளை மற்றும் சொரசொரப்பானது ஆகும். கிளைகள் மேல் ஒழுங்கற்ற மற்றும் ஒரு மென்மையான சாம்பல் பட்டை மூடப்பட்டிருக்கும். இளம் தளிர்கள் ஒரு பளபளப்பான மேலுறை கொண்ட  பச்சை நிறம் ஆகும். இந்த இலை எதிரிலை அடுக்கம் அமைவுகொண்டது, குறுகிய இலைக்காம்பு, நீள்முட்டை வடிவமானது, ஒரு பளபளப்பான படலம் மற்றும் இருபுறமும் மென்மையானவை. இலைகள் 4 அங்குல (10 செமீ) நீளமும், 3 அங்குல (7.6 செமீ) அகலமும் கொண்டவை. மலர்கள் ஒரு புனல் வடிவத்துடன் ஒரு வெளிர் பச்சை நிறம் கொண்டவை. அவைகள் குளிர் பருவத்தில் பூக்கின்றன மற்றும் வெறுக்கதக்க வாசனை கொண்டது. பழம் ஒரு மென்மையான மற்றும் கடினமான ஓடு கொண்ட ஒரு பெரிய ஆப்பிள் அளவு வடிவம் கொண்டது. பழத்தின் சதை பழுக்கும் போது செந்நிறம், மென்மையான மற்றும் வெண்மையானது,  மெல்லிய பொருளைக் கொண்டிருக்கும் ஐந்து விதைகள் கொண்ட ஜெல்லி போன்ற கூழ்ம பொருளால் ஆன்து. விதைகள் பக்கவாட்டின் மையத்தில் இருந்து வெளிவரும் முடிகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் ஒரு தட்டையான வட்டு வடிவத்தில் உள்ளன. இந்த விதைகள் மிகக் கடினமாக இருக்கின்றன, ஒரு கருமையான சாம்பல் கொம்பு கருவுணவு கொண்டிருக்கும் சிறிய கருவானது எந்த வாசனையுமின்றியும், மிகவும் கசப்பான சுவை உடையதாகவும் இருக்கும். புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பரந்தளவிலான பல நோய்களுக்கு சிகிச்சையாக இருப்பது ஸ்ட்ரைகோனஸ் மூலிகை மருத்துவத்தில் ஊக்குவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையுமின்றி இது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. விதைகள் ஸ்டைக்நினைன் விஷத்தை கொண்டிருக்கின்றன என்பதால், வழக்கமான மருந்துகள் அதை ஒரு மருத்துவமாக பரிந்துரைக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாத மூலிகைகளின் கமிட்டி  மின் பட்டியலில் உள்ளது, ஏனென்றால் அது பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படவில்லை, பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும்     இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. ஆயுர்வேதத்தில் (இந்திய மருத்துவ முறை), ஹுடார் ஸ்ட்ரைக்னோஸ் நுக்ஸ்-வோமிகா கொண்டிருக்கும் கலவையாகும். விதைகள் முதன் முதலில் ஐந்து நாட்களுக்கு நீரில் மூழ்கி, இரண்டு நாட்களுக்கு  பாலில் கொதிக்க வைக்கப்படுகின்றன. இந்தியாவில், பாரம்பரிய மருத்துவ பக்குவப்படாத மற்றும் பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ரைக்னோஸ் விதைகளின் தரம் / நச்சுத்தன்மையை நிருபிக்க முடியும். நச்சு ஆல்கலாய்டுகளை நிறுவப்பட்ட HPLC முறைகள் மற்றும் / அல்லது HPLC-UV முறைகள். இந்தியாவில் இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புற மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது எனக் கருதப் படுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும் இட ஒதுக்கீடு ஏற்படலாம் இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமானிய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும். இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களைக் கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக அமையும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தைக் குறைக்கிறது என்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%ம், பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%ம், பட்டியல் சாதியினருக்கு (SC) 15%ம், பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA) 3% இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எட்டி சாயலன் எட்டி சாயலன் கதை சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. காவுந்தி ஐயை இந்தக் கதையைச் சொல்கிறார். கண்ணகியை மாதரியிடம் அடைக்கலப் படுத்துமுன் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளின் பெருமையைக் கூறுவதற்காக இந்தக் கதையைச் சொல்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் சமணத் துறவி சாரணர்க்குக் கல்கோயில் (சிலாதலம்) ஒன்று இருந்தது. அதன் தலைவர் சாரணரிடம் சாவக நோன்பிகள் அறம் கேட்பது வழக்கம். ஒருநாள் அறம் கேட்டுக்கொண்டிருந்தபோது தேவகுமரன் ஒருவன் தோன்றினான். அவன் மேனியைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவனது கைகள் மட்டும் குரங்குக் கைகளாக இருந்தன. இவன் யார் என்று சாவகர்கள் சாரணரிடம் கேட்டனர். அவர் சொன்னார். எட்டி சாயலன் என்பவர் ஒரு சமணத் துறவி. அவர் மனைவி பட்டினி நோன்பிகளுக்கு உணவளித்துவந்தாள். ஒருநாள் நோன்பிகள் உண்ணும்போது உதிர்ந்த உணவை அங்கு வந்த குரங்கு ஒன்று உண்டு மகிழ்ந்தது. கண்ட எட்டி சாயலன் அந்தக் குரங்கையும் மகவாகப் பேணுமாறு அறம் வளர்த்த தன் மனையோளிடம் கூறினார். அதுமுதல் அவளும் தன் அற உணவில் ஒரு பகுதியை அந்தக் குரங்குக்கு அளித்துப் பேணிவந்தாள். அந்தக் குரங்கு அவள் உணவை உண்டு உயிர் வாழ்ந்து இறந்தது. மத்திம நாட்டு வாரணம் என்னும் ஊரில் வாழ்ந்த உத்தர கௌத்தன் என்பவனுக்கு அந்தக் குரங்கு மகனாகப் பிறந்தது. அந்தக் குரங்குமகன் 32 அண்டுகள் தானம் பல செய்து விண்ணுலகு எய்தினான். அவன்தான் இங்கு முற்பிறவிக் கைகளுடன் தோன்றுகிறான் என்று கற்கோயில் சாரணர் சாவக நோன்பிகளுக்கு விளக்கினார். சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோயில் சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் (, ) என்பது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். பரசுராமரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோவில்களில் ஒன்று . இந்தக் கோவில் அமைந்துள்ள சாஸ்தாம்கோட்டை பகுதியின் மூன்று புறங்களும் கேரளாவில் உள்ள மிகப் பெரிய ஏரியான சாஸ்தாம்கோட்டை ஏரியால் சூழப்பட்டுள்ளது. இக்கோவிலைச் சுற்றி ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இக்கோவில் இராமாயணம் எழுதப்பட்ட காலகட்டம் வரையில் பழமை வாய்ந்தது என்றும் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் வானரப்படையுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இங்கு வந்து ஐயப்பனை (தரும சாஸ்தாவை) வணங்கியதாக தொன்ம நம்பிக்கை உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் ராமர் பித்ரு தர்ப்பணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராமரின் வானரப்படைத் தலைவர் நீலன் என்ற குரங்கை ஐயப்ப சேவைக்காக சாஸ்தாம்கோட்டையில் விட்டுச் சென்றதாகவும், நீலனின் பரம்பரையில் உள்ள குரங்குகள் தான் இன்று அங்கு காணப்படுகின்றன என்பதும் இங்குள்ளவர்களின் தொன்ம நம்பிக்கை. பிப்ரவரி - மார்ச்சு மாத கால அளவில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் நடைபெறும் "கெட்டு காழ்ச்சா" என்ற வழிபாட்டின்போது மாடு, குதிரை, அலங்காரம் செய்யப்பட்ட தேர் போன்ற உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ஊர்வலம் செல்வது வழக்கம். இது தவிர திருவோணம், நவராத்திரி, மண்டல மகோற்சவம் (41 நாட்கள்), மகர சம்கிரம பூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், ப்ததாம் உதயம் போன்ற விசேஷ நாட்களிலும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவினர் பிரெஞ்சு மொழி பேசுபவராக உள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி, 1.6 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழியை வீட்டில் பேசுகின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் சில ஆங்கிலம், எசுப்பானியம், சீனம், பிரெஞ்சு ஆகியன. அமெரிக்காவில், லூசியானா, நியூவ்இங்கிலாந்து, மிசௌரி ஆகியன பிரெஞ்சு பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதிகள். இங்கு பேசப்படும் பிரெஞ்சு மொழியின் வட்டார வழக்குகள் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. தற்போது லூசியானா, மெய்ன், நியூஹாம்ப்ஷையர், வெர்மோண்ட் பகுதிகளில் பிரெஞ்சு அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாக உள்ளது. 13 மில்லியனுக்கும் அதிகமானோர் தாங்கள் பிரெஞ்சு வம்சாவழியினர் எனக் கூறியுள்ளனர். இவர்களில் பிரெஞ்சு பேசும் நாட்டிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 9,412,000. இவர்களில் 1,979,951 மக்கள் வீட்டில் பிரெஞ்சு பேசுகின்றனர். இவர்கள் பிரான்சு, கெபெக், பெல்ஜியம், ஐத்தி, செனெகல் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் எனக் கூறியுள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பிரெஞ்சு மொழி செய்தித்தாள்கள் வெளியாகின்றன, மியாமி, நியூ யேர்சி, லூசியானா பகுதிகளில், முழுநேர பிரெஞ்சு வானொலி நிலையங்கள் உள்ளன. அமெரிக்காவில் பல மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் கற்கும் மொழி பிரெஞ்சு மொழி. ஆனால், அதிக அளவிலான எசுப்பானியர்களின் குடியேற்றத்தாலும், தென்னமெரிக்காவில் எசுப்பானிய மொழியின் செல்வாக்காலும், எசுப்பானியமே அதிகம் கற்கின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் எசுப்பானியத்திற்கு அடுத்ததாகக் கற்கப்படுவது பிரெஞ்சு மொழியே ஆகும். பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான கனடாவில் கனேடிய பிரெஞ்சு கற்றுத் தரப்பட்டாலும், அமெரிக்காவில் பிரான்சில் பேசப்படும் பொது பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கின்றனர். அண்மைக் கணக்கெடுப்பின்படி 216, 419 மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றனர். கார்த்திகா அடைக்கலம் கார்த்திகா அடைக்கலம் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். ராமன் தேடிய சீதை, தூத்துக்குடி ஆகிய திரைப்படங்களில் நடித்ததால் பிரபலமானார். தூத்துக்குடி (திரைப்படம்) தூத்துக்குடி, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின் [[தூத்துக்குடி]]யில் எடுக்கப்பெற்ற [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும். பிரவீண் மணி பின்னணி இசையமைத்திருக்கிறார்.. [[பகுப்பு:2006 திரைப்படங்கள்]] ஐசுவரியா (நடிகை) ஐசுவரியா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட நடிகையாவார். பிரபல தென்னிந்திய நடிகையான லட்சுமியின் மகள். சாந்தா மீனா என்ற பெயரில் பிறந்து, பின்னர் தன் பெயரை ஐசுவரியா என மாற்றிக் கொண்டார். தற்போது திருமணம் செய்து கொண்டார். எட்டி விருது எட்டி என்பது சங்ககால விருதுகளில் ஒன்று. சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் இது வழங்கப்பட்டது. எட்டிய நிலங்களில் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கிட்டும்படி செய்பவன் எட்டி. இந்த எட்டி என்னும் சொல் இக்காலத்தில் செட்டி என மருவி வழங்குகிறது. தொல்காப்பியம் இதனைச் சுட்டுகிறது. உயர்திணைச் சொல் எல்லா வழியும் இயல்பாகப் புணரும். அவற்றுள் ‘இ’ எழுத்தில் முடியும் சொல் வருமொழி ஒற்று மிக்கும் வரும். இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் எட்டிப்பூ, எட்டிப்புரவு என எடுத்துக்காட்டுத் தருகிறார். யாழிசையில் சிறந்து விளங்கும் பாணனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப்பூ வழங்கப்பட்டது போல சுறந்த வணிகனுக்குப் பொன்னால் செய்த எட்டிப்பூ வழங்கி அரசன் சிறப்பித்தான் எனத் தெரிகிறது. காவிதிப்பூ, காவிதிப்புறவு என்பன காவிதி விருது பெற்ற உழவனுக்கு வழங்கப்பட்டவை. இவற்றை இங்கு ஒப்புநோக்கிக் கொள்வது நன்று. தருமதத்தன் என்னும் வணிகன் எட்டி விருது பெற்றதை மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது. அரவிந்து ஆகாசு அரவிந்து ஆகாசு, தமிழ்த் திரைப்பட நடிகரும் தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதலில் கிருஷ்ணதாசி, கல்கி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளினால், உன்னாலே உன்னாலே, காதல் சாம்ராச்சியம், சென்னை 600028, உனக்கும் எனக்கும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடனப்பயிற்சியும் அளித்துள்ளார். அக்சயா (நடிகை) அக்சயா, தமிழ்த் திரைப்பட நடிகையாவர். இவர் கலாபக் காதலன், எங்கள் ஆசான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகை சாயா தேவியின் பேத்தி ஆவார். சாஸ்தாம்கோட்டை ஏரி சாஸ்தாம்கோட்டை ஏரி, இதை ஈரநிலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.இதுவே கேரள மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நன்னீர் ஏரி ஆகும். சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் இந்த ஏரிக்கரையில் அமைந்துள்ளது.கொல்லம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் இந்த ஏரியில் இருந்து கிடைக்கிறது. மேலும் இந்த ஏரியில் மீன்வளமும் மிகுதியாக உள்ளது. அஷ்டமுடி ஏரியின் வடக்கே உள்ள கொல்லம் நகரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ., மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாஸ்தாம்கோட்டை ஏரி.இந்த ஏரியின் மிக அருகில் உள்ள பட்டினம் கருநாகப்பள்ளி சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மேற்கு கல்லடா பகுதியில் இருந்து சாஸ்தாம்கோட்டை வரையில் இந்த ஏரி வழியாக படகு சேவை உள்ளது. சாஸ்தாம்கோட்டை ஏரியில் மிகுதியாக காணப்படும் காவாபோரஸ் (cavaborus) வகை லார்வாக்கள் நீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்பதால் ஏரி நீர் சுத்தமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது சாஸ்தாம்கோட்டை ஏரியின் தெற்கே கல்லடா நதியின் படுகையில் நெல் வயல்கள் உள்ளன, பிற அனைத்து பக்கங்களிலும் செங்குத்தான குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் தான். ஏரியின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சிறிய அளவிலான நீர்தேக்கங்கள் உள்ளன. ஏரியின் அதிகபட்ச பகுதிகள் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு விட்டதால் ஏரியின் தற்போதைய பரப்பளவு 375 ஹெக்டேர் மட்டும் தான். இந்த ஏரிக்கு உபநதிகள் ஏதும் இல்லாவிட்டாலும் ஏரியின் அடிப்பாகத்தில் உள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் நீர் மட்டத்தை நிலையாக நிறுத்த உதவுகிறது. பருவமழைக்காலத்தின் இறுதியில் இந்த ஏரியின் நீர் மட்டம் அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது. நிலத்தடி நீர் சுமார் 3.89 மீ. ஆழத்தில் இருந்து கிடைக்கிறது. சாஸ்தாம்கோட்டை ஏரியின் பாதுகாப்பு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு கேரள அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செயல் திட்டம் (MAP) அமல்படுத்தியுள்ளது. இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் (ஆங்கிலம்:National Film Development Corporation of India (NFDC).) இது ஒரு அகில இந்திய அரசு சார்ந்த இந்தியத் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கடந்த பல்லாண்டுகளில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பல்வகை சேவைகளை வழங்கி வருகிறது; குறிப்பாக 1970களில் இந்தியாவில் நிலவிய மாறுபட்ட புத்தலை திரைப்படங்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் நிதி உதவி மற்றும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிறுவனமும் இதற்கு முன்னர் இருந்த திரைப்பட நிதிக் கழகமும் 300 திரைப்படங்களுக்கும் மேலாக நிதி உதவி வழங்கியும் தயாரித்தும் உள்ளன. இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. அண்மையில் காசுமீரியில் எடுக்கப்பட்ட மூன்றாவதுத் திரைப்படமான "Bub" ('தந்தை') இந்நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும். இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தற்போதையத் தலைவராக ரமேஷ் சிப்பி உள்ளார்; இதற்கு முன்னதாக ஓம் பூரி இருந்தார். 1983இல் எட்டு அகாதமி விருதுகள் பெற்ற "காந்தி"யின் தயாரிப்பில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் முக்கியப் பங்காற்றி உள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழி, கலாசார அடிப்படையில் இது வரையில் இந்த நிறுவனம் முன்னூறுக்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மிகப் பெரிய விவாதங்களையும் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில அட்டவணையில்:- வாழைப்பூ வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படுகின்றன. மஞ்சள் திருமுழுக்கு மஞ்சள் திருமுழுக்கு அல்லது மஞ்சள் அபிஷேகம் என்று அழைக்கப்படும் இச்செயல், இந்து சமயத்தில் கடவுளின் உருவச்சிலை அல்லது கடவுள் சார்ந்த் பொருட்களின் மீது மஞ்சள் நீர் ஊற்றி திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வதைக் குறிக்கிறது. இச்செயல் பக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. கடவுள் உருவச்சிலை அல்லது பொருட்களின் மீது குடம் குடமாய் (அதிக அளவில்) மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடைபெறும். மஞ்சள் மட்டுமின்றி, திருநீறு, சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டும் இத்திருமுழுக்கு செய்யப்படுகிறது. பொதுவாக அலங்காரம் செய்யும் முன்பு இவ்வகையான திருமுழுக்கு நடைபெற்றாலும், குடமுழுக்கின் போது இது சிறப்பாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நீராடல் மஞ்சள் நீராடல், இந்து சமயத்தில் கடவுளுக்கு வேண்டிக்கொண்ட பக்தர்கள் அவ்வேண்டுதலை நிறைவேற்ற விரதம் இருப்பர். விரதம் முடிந்து வேண்டுதலை நிறைவேற்றத் தொடங்கும்போது அவர்களது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் அவர்கள் மீது வேப்பிலை கலந்த மஞ்சள் நீரால் நீராட்டுவர். எடுத்துக்காட்டாக, காவடி எடுத்தல், பாற்குடம் எடுத்தல், அலகு குத்துதல், பூ மிதித்தல், பூச்சட்டி எடுத்தல் போன்றவை பக்தர்கள் முக்கியமாக வேண்டிக்கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். இந்நிகழ்வுகள் தொடங்கும் போது அவற்றைச் செய்யும் பக்தர்களுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறும். சிறுக்குளம் சிறுக்குளம் (ஆங்கிலம் :Sirukkulam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் புகழ்மிக்க இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இவ்வூர் மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். வடசங்கந்தி தமிழ்நாட்டின் தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டம்‌, தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ வட்டம், முத்‌துப்‌பே‌ட்‌டை‌ ஒன்‌றி‌த்‌தி‌ற்‌குள்‌ இருக்‌கி‌றது வடசங்‌கந்‌தி‌. முன்‌பு‌ தஞ்‌சா‌வூ‌ர்‌ மா‌வட்‌டத்திற்குட்பட்டிருந்தது. பின்னர், திருவாரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. இங்‌கு அகமுடை‌ய தே‌வர்‌, பி‌ள்‌ளை‌, தெ‌லுங்‌கு மொ‌ழி‌ பே‌சும்‌ ரா‌ஜூ‌, வெ‌ள்‌ளா‌ளர்‌, நா‌டா‌ர்‌, நா‌ட்‌டரசர்‌, பள்‌ளர்‌ போ‌ன்‌ற சா‌தி‌ பி‌ரி‌வு‌களை‌ சே‌ர்‌ந்‌த மக்‌கள்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌. ஆரமப கா‌லம்‌ தொ‌ட்‌டு, இன்‌றுவரை‌ சா‌தி‌ய பூ‌சல்‌கள்‌ இங்‌கு வந்‌ததி‌ல்‌லை‌. தற்‌போ‌தை‌ய தகவல்‌ படி‌ ஆண்‌கள்‌ 342, பெ‌ண்‌கள்‌ 348 என மொ‌த்‌தம்‌ 690 பே‌ர்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌ முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் ("Catechism of the Catholic Church") (சுருக்கம்: க.தி.ம.) என்பது கத்தோலிக்க திருச்சபை வழங்குகின்ற போதனையின் விளக்கமான தொகுப்பாக அமைந்து, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட மறைக்கல்விப் பனுவல் ஆகும். இந்நூலில் ஒவ்வொரு சிறு பகுதியும் வரிசையாக எண் குறிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் சுருக்கத் தொகுப்பும், ஒப்புமைப் பகுதிகளுக்குக் குறுக்கு அமைப்புக் குறிப்புகளும், விவிலியக் குறிப்புகளும், திருச்சபைத் தந்தையர் நூற்குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு இந்நூல் கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கைத் தொகுப்பைக் கிறித்தவரும் பிறரும் தெளிவாக அறிந்து புரிந்துகொள்ள பெரும் துணையாக அமைந்துள்ளது. க.தி.ம. உலகின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், அதன் மூல பாடம் இலத்தீன் மொழியிலேயே உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த அல்க்குவின் என்பவர் 8ஆம் நூற்றாண்டில் ஒரு மறைக்கல்விநூலை உருவாக்கினார். அதன் பின் விரிக்கப்பட்ட மறைக்கல்விநூல்கள் வெளியாயின. திருச்சபையின் சீர்திருத்தக் காலத்தில் மார்ட்டின் லூத்தர் 1529இல் "சிறிய குறிப்பிடம்" ("Der Kleine Katechismus") என்னும் மறைக்கல்விநூலை செருமானிய மொழியில் வெளியிட்டார். இறையியலார் மற்றும் பங்குத்தந்தையர் பயன்படுத்துவதற்காக "பெரிய குறிப்பிடம்" ("Der Große Katechismus") என்னும் நூலையும் எழுதினார். அப்பின்னணியில் கத்தோலிக்க இறையியலாரான பீட்டர் கனீசியுஸ் என்பவர் (1521-1597) 1555இல் மாணவர்கள் பயன்பாட்டுக்காகச் "சிறிய குறிப்பிடம்" என்னும் மறைக்கல்விநூலைத் தொகுத்தார். "கிறித்தவ போதனைச் சுருக்கம்" என்னும் நூலையும் இலத்தீன் மொழியிலும் செருமானிய மொழியிலும் வெளியிட்டார். இம்முறையில் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் மரபைத் தொடங்கியவர் பீட்டர் கனீசியுஸ் என்று கூறலாம். திருச்சபையில் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் கொணர்வதற்காகக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம்(1545-1563) கத்தோலிக்க கொள்கையை விளக்கி உரைக்கும் முறையில் பங்குத்தந்தையர்க்கும் கத்தோலிக்க மக்களுக்கும் பயன்படுவதற்காக "மறைக்கல்விநூல்" உருவாக்கப் பணித்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மறைக்கல்விநூல் பீட்டர் கனீசியுஸ் வெளியிட்ட மறைக்கல்விநூலின் பகுதிகளை உள்ளடக்கிய விதத்தில் அமைக்கப்பட்டு, கத்தோலிக்க நம்பிக்கை அறிக்கை, திருவருட்சாதனங்கள், பத்துக் கட்டளைகள், இறைவேண்டல் என்னும் நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது. திரெந்து பொதுச்சங்கத்தின் முடிவுப்படி வெளியான "உரோமை மறைக்கல்விநூல்" ("Roman Catechism") உலகளாவிய திருச்சபைக்கும் பயன்படும் விதத்தில் ஆக்கப்பட்டு இலத்தீனில் வெளியிடப்பட்டது. பின்னர் வேறு பல நாட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டது. அதன் பிறகு இருபதாம் நூற்றாண்டில் தான் வேறு பல தனி மறைக்கல்விநூல்கள் வெளியாயின. இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965) நிறைவேறிய 20ஆம் ஆண்டின்போது, சனவரி 25, 1985இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு சிறப்பு ஆயர் மன்றத்தைக் கூட்டினார். அம்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆயர்கள் அனைத்துலக திருச்சபைக்கும் பயன் நல்கும் விதத்தில் ஒரு புதிய மறைக்கல்விநூல் தொகுத்து வெளியிடலாம் என்று முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 12 ஆயர்களையும் கர்தினால்மார்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கி அதை மறைக்கல்விநூல் தயாரிப்புத் திட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தார். அக்குழுவுக்குத் துணைநல்கும் விதத்தில் ஆயர்களையும் இறையியல் மற்றும் மறைக்கல்வித்துறை வல்லுநர்களை உள்ளடக்கிய ஏழுபேர் கொண்ட ஒரு குழுவும் உருவாக்கப்பட்டது. மறைக்கல்விநூல் தயாரிப்புக் குழு உருவாக்கிய முதல் வரைவு உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களுக்கும் பொறுப்பான பிற குழுக்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களுடைய பரிந்துரைகளைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் முதல் வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மறைக்கல்விநூலின் இறுதி பாடத்தை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1992, சூன் 25ஆம் நாள் அங்கீகரித்து, அதே ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் (இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிய முப்பதாம் ஆண்டு) ஓர் ஆவணத்தின் வழியாக ("Fidei depositum") அறிவிப்பு வழங்கினார். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் (க.தி.ம.) முதலில் 1992ஆம் ஆண்டில் "Catéchisme de l'Église Catholique" என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டு, பின்னர் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆங்கில மொழிபெயர்ப்பு அந்நாட்டு ஆயர் பேரவையின் மேற்பார்வையில் 1994இல் வெளியானது. அந்த வெளியீட்டில் ஒரு குறிப்பும் தரப்பட்டது. அதாவது, இலத்தீன் மூல பாடம் வெளியிடப்படும்போது அதற்கு ஏற்ப ஆங்கில மொழிபெயர்ப்பும் தழுவியமைக்கப்படும் என்ற குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. 1997ஆம் ஆண்டு, ஆகத்து 15ஆம் நாள், மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூலின் இலத்தீன் மூல பாடத்தை "Laetamur Magnopere" என்னும் ஆவணத்தின் வழியாக வெளியிட்டார். இதுவே அதிகாரப்பூர்வமான பாடம் ஆகும். இதுவே பிற மொழிபெயர்ப்புகளுக்கு மூல பாடமாகவும் அமையும். இலத்தீன் மூல பாடம் வெளியானதும், அப்பாடத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் பிரெஞ்சு பதிப்பில் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களுள் ஒன்று கத்தோலிக்க திருச்சபை மரண தண்டனை குறித்து அளிக்கின்ற போதனை ஆகும். இப்பொருள் பற்றி திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தாம் 1995இல் வெளியிட்ட "உயிர்போற்றும் நற்செய்தி" ("Evangelium Vitae") என்னும் சுற்றுமடலில் வழங்கிய போதனையே மறைக்கல்விநூலிலும் தரப்பட்டது. இதன் விளைவாக, பிரெஞ்சு பதிப்பிலும் அதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆங்கிலம் போன்ற பிற மொழிப் பதிப்புகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாயிற்று. அந்த மாற்றங்களைத் தாங்கிய வெவ்வேறு மொழி பெயர்ப்புகள் "இரண்டாம் பதிப்பு" என்னும் பெயரோடு வெளியிடப்பட்டன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அந்நாட்டு ஆயர்கள் இலத்தீன் மூல பாடத்தை ஆதாரமாகக் கொண்டு புதியதொரு மொழிபெயர்ப்பை 1997இல் வெளியிட்டனர். அப்பதிப்பில் சில புதிய கூறுகள் சேர்க்கப்பட்டன. அருஞ்சொற்பட்டியல் மற்றும் பகுப்பாய்வுப் பொருளடைவு ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபை வழங்குகின்ற போதனையின் விரிவான தொகுப்பு என்ற முறையில் இந்த மறைக்கல்விநூல் திருச்சபை மக்களிடையே நல்லுறவை வளர்க்கப் பயன்படும் என்றும், இந்த ஏட்டின் அடிப்படையில் கிறித்தவ நம்பிக்கைத் தொகுப்பைச் சரியாக போதிக்க முடியும் என்றும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தாம் 1992இல் வெளியிட்ட "Fidei depositum" என்ற ஏட்டில் கூறியுள்ளார். மறைக்கல்விநூல் கத்தோலிக்க மரபில் "கிறித்தவ சமயக் கொள்கைகளைப் பொதுவாகக் கேள்வி-விடை பாணியில் கற்கத்தக்க விதத்தில் வழங்குகின்ற ஏடு" என்னும் பொருள் கொண்டது. திருச்சபையின் தொடக்க நாட்களிலிருந்தே போதனைத் தொகுப்புகள் இருந்துவந்துள்ளன. மறைக்கல்விநூல் அத்தொகுப்புகளில் அடங்கியுள்ள போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கற்கத்தக்க விதத்தில் வழங்குகின்றன. தேவைக்கு ஏற்ப, தனி மறைக்கல்விநூல்களை உருவாக்குவதற்கு ஆதாரமாக க.தி.ம. அமைந்துள்ளது. இளைஞர், முதியோர் போன்ற தனிக் குழுக்களுக்கு ஏற்ற மறைக்கல்விநூல்கள் உருவாக்கப்படுவது வழக்கம். எடுத்துக்காட்டாக, இளைஞர்க்குப் பொருத்தமான "YouCat" என்னும் மறைக்கல்விநூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஐக்கிய அமெரிக்க நாடுகளில் "வளர்ந்தோருக்கான மறைக்கல்விநூல்" ("U.S. Catechism for Adults") வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்கள் கொண்ட போதனை நூல் "பெரிய மறைக்கல்விநூல்" ("major catechism") என்னும் பெயர்பெறுகிறது. க.தி.ம. வெளியிடப்பட்டபோது, அது தனித் தேவைகளை முன்னிட்டு வெவ்வேறு நாடுகளிலோ மண்டலங்களிலோ உருவாக்கப்படுகின்ற போதனை நூல்களுக்கு எடுத்துக்காட்டாகவும், நம்பகமான ஆதாரமாகவும் அமையும் என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கூறினார். க.தி.ம. ஏடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேற்கூறிய நால்வகைப் பிரிவில் அடங்கியுள்ளவை கிறித்தவ சமயத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் அடங்கியுள்ள பகுதிகளுக்கு அடிக்குறிப்புகள் பல தரப்படுகின்றன. போதனையின் அடிப்படையாக இருக்கின்ற விவிலிய பாடங்கள் முதலிடம் பெறுகின்றன. தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களான "திருச்சபைத் தந்தையர்களின்" படைப்புகள் மிகப் பல அடிக்குறிப்புகளில் தரப்படுகின்றன. அதுபோலவே திருச்சபையின் வாழ்வில் நடந்துள்ள பொதுச்சங்கங்களின் போதனைகள் அடிக்குறிப்புகளில் கொடுக்கப்படுகின்றன. சிறப்பாக இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போதனை விரிவாகத் தரப்படுகிறது. அண்மைக்காலத் திருத்தந்தையர்கள் அவ்வப்போது வெளியிட்டுள்ள கொள்கை விளக்க ஏடுகளும் க.தி.ம. ஏட்டின் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு, தமிழக இலத்தீன் ஆயர் பேரவையின் வழிகாட்டலின் கீழ், தமிழக முப்பணி நிலையத்தால் "கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம்" என்னும் நூல் வெளியிடப்பட்டது. இது, வத்திக்கான் 2006இல் "Compendium of the Catechism of the Catholic Church" என்னும் பெயரில் வெளியிட்ட நூலின் தமிழாக்கம் ஆகும். இந்நூல், க.தி.ம. ஏட்டின் உள்ளடக்கத்தைக் வினா-விடை வடிவில் சுருக்கமாகத் தருகின்றது. மாராயம் மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். தாமரை விருது சங்ககால அரசர்கள் சிறந்த யாழிசைப் பாணனைப் போற்றிப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையை விருதாக வழங்கினர். சங்ககாலத்துக் காஞ்சி அரசன் தொண்டைமான் இளந்திரையன் தன்முன் பின்னணி இசைக்கருவிகளுடன் யாழிசை மீட்டித் தன் திறமையை வெளிப்படுத்திய பாணன் பித்தையில் தீயில் மலர்ந்த தாமரையைத் தன் கையால் சூட்டிப் பெருமைப்படுத்தினான். பித்தை என்பது ஆண்களின் தலைமுடி. எதிர்த்துகள் அறியப்பட்ட அனைத்து அணுத் துகள்களுக்கும், அவற்றின் ஒத்த திணிவும் எதிர் ஏற்றமும் கொண்ட தொடர்புடைய எதிர்த் துகள்கள் ("antiparticles") உள்ளன. உதாரணமாக இலத்திரனின் எதிர்த் துகளான எதிர் இலத்திரன் ஒரு நேர் ஏற்றம் கொண்ட துகள் (பாசித்திரன்) ஆகும். இது குறிப்பிட்ட இயற்கையான கதிரியக்கச் சிதைவு மூலம் உருவாக்கப்படுகிறது. இயற்கை விதிகள் துகள்களுக்கும் எதிர்த்துகள்களுக்கும் சமச்சீரானவை. உதாரணமாக ஒரு எதிர்புரோட்டான் மற்றும் பாசிட்ரான் இணைந்து ஒரு எதிர்ஐதரசன் அணுவை உருவாக்க முடியும். இதன் பண்புகள் ஏறக்குறைய சாதாரண ஐதரசன் அணுவைப் போன்றே இருக்கும். இதனால், ஏன் பெருவெடிப்பின் பின் பேரண்டம் அரைவாசி எதிர்ப்பொருளும், அரைவாசி பொருளுமாக நிரம்பாமல் ஏறக்குறைய மொத்தமாக பொருளால் (matter) நிரம்பியுள்ளது எனும் கேள்வி உருவாகிறது. ஆரம்பத்தில் கச்சிதமானதாகக் கருதப்பட்ட இந்த சமச்சீர்த் தன்மை, உண்மையில் அண்ணளவானதே என்பது மின்னூட்ட நிகர்மை மீறுகையின் ("Charge Parity violation") கண்டுபிடிப்பு உணர்த்தியது. தொண்டைமான் இளந்திரையன் தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். கிழார் கிழார், கிழான் என்னும் சொற்கள் உரிமை பூண்டவரைக் குறிக்கும். பெண் ஒருத்திக்கு உரிமை பூண்டவனை அகத்திணை இலக்கணம் ‘கிழவன்’, ‘கிழவோன்’ என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன. நிலத்துக்கு உரியவனைத் திருக்குறள் கிழவன் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் கிழார் என்னும் உரிமைப்பெயர் ஊரின் பெயரோடு புணரும்போது எல்லா இடங்களிலும் இனவொற்று மிகாமல் புணர்ந்துள்ளது. எனவே ஊரின் பெயர் ஊரிருள்ள மக்களைக் குறிக்கும் உயர்திணைப் பெயர் எனத் தெரியவருகிறது. இந்த வகையில் அரிசில் கிழார் என்றால் அரிசில் என்னும் ஊரில் வாழும் மக்களுக்கு உரியவர் எனப் பொருள்படும். இது இவருக்கு மக்கள் வழங்கிய விருது. அரசன் ஓர் ஊரின் நிலம் முழுவதையும் வழங்கி, இறையிலியாக அதனை கிழார் பெருமகனாருக்கு உரிமையாக்கியதால் ‘கிழார்’ எனச் சிறப்பிக்கப்பட்டார் எனக் கொள்வாரும் உளர். ஆயின், இது அரசனால் வழங்கப்பட்ட விருது. செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு ஊர் வழங்கியதை எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சிக்குக் கொள்ளலாம். புலவரின் தந்தை இலங்கை கிழான் சங்ககால அரசர்களில் சிலரும், வள்ளல்களில் சிலரும் கிழான், கிழவன், கிழவோன் அவர்களுடைய நாட்டின் தலைநகரின் அல்லது வாழ்ந்த ஊரின் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் கிழார் போல அந்த ஊருக்கு உரியவர்கள். இந்த உரிமை அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒன்று, இந்த உரிமை அந்த ஊர் அல்லது நாட்டு மக்களால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது பேரரசன் ஒருவன் இந்த உரிமையை வழங்கியிருத்தல் வேண்டும். வேறுபாடு பிந்து மாதவி பிந்து மாதவி () ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த "பொக்கிஷம்" தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார். பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது. இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. மது சாலினி மது சாலினி ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொகுப்பாளினியும் ஆவார். குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்பட நடிகையாவார். மது சாலினி பிறந்ததும் வளர்ந்ததும் ஹைதராபாத் நகரமாகும். இவரது தந்தை ஒரு தொழிலதிபர்; தாயார் ஒரு வழக்குரைஞர். தந்தை இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர், தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். தாயைப் போல குச்சிப்புடி நடனம் கற்ற இவர் முதலில் விளம்பரப் படங்களில் நடித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக சிலகாலம் இருந்தார். பின் நடிகையாகத் தெலுங்கு திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி பரவலாகப் பேசப்பட்ட இவர் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். தெலுங்கில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட "பழனியப்பா கல்லூரி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை. இவரது அடுத்த தமிழ்த் திரைப்படம் "பதினாறு". மிகவும் காலம் சென்று வெளியான இத்திரைப்படம் சுமாரான படமாக அமைந்தாலும் அதில் இவரது கதாபாத்திரமான இந்து, இவருக்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் "டிபார்ட்மெண்ட்" என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஓம் பூரி சர் ஓம் பூரி ("Sir Om Puri", , அக்டோபர் 18, 1950 - சனவரி 6, 2017) வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலும் மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ள ஓர் இந்திய நடிகர். இவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஓம் பூரி அரியானாவின் அம்பாலா நகரில் 1950இல் பிறந்தார். புனேயில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியிலும் பயின்றார். அங்கு இவருடன் உடன் மாணவராக நசிருதீன் ஷா பயின்றுள்ளார். ஐம்பெரும் அம்பலங்கள் ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் "பொன்னம்பலம்", "வெள்ளியம்பலம்", "இரத்தினம்பலம்", "தாமிர அம்பலம்", "சித்திர அம்பலம்" ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து ஊர்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன. இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன. பொன்னம்பலம் அல்லது கனக சபை எனப் பெயர் கொண்டது, சிதம்பரத்திலுள்ள நடராசர் கோவில் ஆகும். இக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாகும். பெரும்பாலான சிவத்தலங்களில் சிவன் லிங்க வடிவில் அமைந்திருக்க, இக்கோவிலில் நடனத்தின் தலைவனாக நடராசர் வடிவில் உள்ளார். இங்குள்ள நடராசரின் நடனக்கோலம் ஆனந்த தாண்டவமாகும். இங்கு நடராசர் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதர் முனிவருக்கும் தனது பிரபஞ்ச நடனத்தை தைப்பூசத் திருநாளில் ஆடிக்காட்டியதாக தொன்நம்பிக்கை உள்ளது. இச்சபையில் ஆடியமையால் சிவபெருமானுக்கு பொன்னம்பலத்தான், பொன்னம்பலநாதன் என்ற பெயர்கள் உருவாயின. வெள்ளியம்பலம் அல்லது இரஜத சபை எனப் பெயர் கொண்டது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதியாகும். பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் மட்டும் வலக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் காட்சி தருகிறார். வெள்ளியால் ஆன அம்பலம் (அரங்கம்) என்பதால் இவ்விடம் வெள்ளியம்பலம் எனப் பெயர் பெற்றது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் எனக் கூறப்படுகிறது.. பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. மீனாட்சியை மணந்து மதுரைக்கு அரசனானதால் வெள்ளியம்பலத்தில் நடராசர் பத்துக் கரங்களிலும் ஆயுதங்களுடன் காணப்படுகிறார் என்ற கூற்றும் உள்ளது. இரத்தின அம்பலம் அல்லது இரத்தின சபை என்ற பெயர் கொண்டது திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில் ஆகும். இங்கு நடராசர் தனது இடதுகாலை உயரத் தூக்கிய நடனக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவமாகும். காளி தேவிக்கும் நடராசருக்கும் நடந்த நடனப் போட்டியில், இருவரில் யார் சிறந்தவர் என்று காணமுடியாதவாறு இருவரும் சமமாக ஆடினர். இறுதியில் நடராசர், கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறைடையா வண்ணம் இடது காலால் எடுத்து அக்காலை உயரத்தூக்கி எடுத்த காதணியைக் காலாலேயே அணிய முற்பட, காளியால் அக்கோலத்தில் ஆடமுடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறது மரபுவழி வரலாறு. இங்கு ஆருத்தரா தரிசன வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இரத்தின அம்பலத்திலுள்ள நடராசர் அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான். இவர் இரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த அரங்கத்தில் ஸ்படிக லிங்கமும் திருமுறைப்பேழையும் உள்ளன. அம்பலத்தைச் சுற்றி வரும்போது சுந்தரர் பதிகம் பதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். இவ்வம்பலத்தின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு 5 கலசங்களுடன் அமைந்துள்ளது. தாமிர அம்பலம் அல்லது தாமிர சபை எனப் பெயர் கொண்டது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள நடராசர் சன்னிதியாகும். நெல்லையப்பர் கோவிலின் உட்புறம் அமைந்துள்ள இந்த அம்பலம் சிறந்ததொரு கலைப்படைப்பாகும். ஆருத்திரா தரிசன விழாவின் போது இங்கு நடராசர் மற்றும் சிவகாமியின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சந்தன சபாபதி என அழைக்கப்படும் நடராசர் தாமிர அம்பலத்துக்குப் பின்னால் உள்ளார். சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட இவரைத் தாமிர அம்பலத்தின் வழியாகப் பார்க்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். பெரிய சபாபதி என்ற மற்றொரு சன்னிதியும் இக்கோவிலில் நடராசருக்கு உள்ளது. சிறப்பு விசேட நாட்களில் இவருக்கு பூசைகள் நடைபெறுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி கோவிலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதில்லை. சித்திர அம்பலம் அல்லது சித்திர சபை எனப் பெயர் கொண்டது, குற்றாலநாதர் கோவில் ஆகும். இக்கோவிலின் தல விருட்சம் குறும்பலா என்பதால் குறும்பலாவீஸ்வரர் கோவில் எனவும், கோவில் சங்குவடிவ அமைப்பு கொண்டுள்ளதால் சங்குக் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சித்திர அம்பலம் முதன்மைக் கோவிலைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒரு கண்கவர் சித்திரக் கூடமாக அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய சுவற்றோவியங்கள், இந்து சமயப் புராணக் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன. முக்கிய திருவிழாக்களின் போது குறும்பலாவீஸ்வரர் கோவிலில் இருந்து நடராசர் உருவச்சிலை இங்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆருத்தரா தரிசனத்தின் போது தாண்டவ தீப ஆராதனை நடைபெறும். கண்ணன் நாகனார் கண்ணன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். பரிபாடல் ஐந்தாம் பாடலை இசையமைத்துப் பாடியவர். செவ்வேள் மீது இளவெயினனார் என்னும் புலவர் 81 அடிகளில் பாடிய இந்தப் பாடலை இவர் பாலையாழ் என்னும் சங்ககால இசையில் பாடினார். முருகனிடம் பொன்னும் பொருளும் விரும்பாமல், அருள், அன்பு, அறம் ஆகிய நற்பண்புகளைத் தரும்படி வேண்டும் இந்த மனப்பாங்கு இந்த இசைவாணரைப் பெரிதும் கவர்ந்த்து எனலாம். நன்னாகனார் நன்னாகனார் (இசைவாணர்) புலவர் நன்னாகனார் சங்ககாலத்தின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இசைவாணர் நன்னாகனார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். கீரந்தையார் என்னும் புலவர் திருமால்மீது பாடிய பரிபாடலுக்கு இசைவாணர் நன்னாகனார் பண்ணமைத்துப் பாடியுள்ளார். இவர் பாடிய பண் பாலைப்பண். இது பாலையாழ் எனவும் வழங்கப்பெறும். திருமாலே! சுற்றத்தாரோடு உன்னை வணங்கும்போது எங்கள் அறிவு எங்களது துன்பத்தைப் பற்றி எதையும் நினைக்காமல் இருக்கும் வரம் தந்தருள்க என வேண்டும் உயர்ந்த உள்ள வரிகள் இந்த இசைவாணரை ஈர்த்திருக்க வேண்டும். நந்நாகனார் நந்நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்வழுதியார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசை அமைத்துப் பாடியுள்ளார். இவர் அப்பாடலுக்கு வகுத்த சங்ககால இசை பாலைப்பண். இந்தப் பண் பாலையாழ் என்னும் பெயராலும் வழங்கப்படும். இவர் வேறு. நன்னாகனார் வேறு. பஞ்சார்மாசின் பஞ்சார்மாசின் (Bandjarmasin) என்பது இந்தோனேசியாவின் தென் கலிமாந்தான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும் இது போர்னியோ தீவின் தென் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நகரம் பாரித்தோ, மர்த்தாபுரா ஆறுகளின் கழிமுகத்தில் அமைந்து உள்ளது. பஞ்சார்மைசின் நகரத்தை "ஆற்று நகரம்" என்றும் அழைப்பார்கள். இந்த நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சம்சுத்தீன் விமான நிலையம் உள்ளது. திரிசக்தி துறைமுகம் பிரதான வணிகத் தளமாக விளங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 625,395. நாகனார் நாகனார் என்பவர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அப்பாடலை இவர் பாலையாழ் என்னும் பண் கூட்டிப் பாடிவந்தார். வையை ஆற்றில் மக்கள் நீராடிய முறைமையை இந்தப் பாடல் விரித்துரைக்கிறது. இவற்றில் மரவகைகளின் இயல்பும், இருப்பிடங்களும் வேறுபடுத்தித் தெளிவாக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும். பித்தாமத்தர் பித்தாமத்தர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். மையோடக் கோவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். இப் பாடலை இவர் பாலையாழ் பண்ணில் பாடிவந்தார். வையை ஆற்றில் அக் கால மக்கள் நீராடிய பாங்கு இப் பாடலில் கூறப்பட்டுள்ளது. பெட்டன் நாகனார் பெட்டன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பாடிய இரண்டு பரிபாடல்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார்.திருமாலைப் போற்றும் இந்த இரு பாடல்களுக்கும் பாலைபண் கூட்டிப் பாலையாழ் இசையோடு பாடியிருக்கிறார். 1 2 திருமாலின் உருவமும், உணவும், வெளிப்பாடும் இவற்றில் கூறப்பட்டுள்ளன. மருத்துவன் நல்லச்சுதனார் மருத்துவன் நல்லச்சுதனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் கிட்டியுள்ள பரிபாடல்களில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைப் பாடிவந்தவர். இந்த இசையமைப்பாளர் வேறு. பரிபாடல் பாடிய நல்லச்சுதனார் வேறு எனக் கொள்வதே சான்றுகளின் அடிப்படையில் கொள்வது பொருத்தமானது. பெயர் ஒப்புமை பற்றி ஒருவர் எனல் ஒருவகை ஊகம். சான்டி தீவு (நியூ கலிடோனியா) சான்டி தீவு ("Sandy Island") எனப்படுவது ஆஸ்திரேலியாவிற்கும் நியூ கலிடோனியாவிற்கும் இடையில் பசிபிக் பெருங்கடலின் பவளக் கடல் பகுதியில் உள்ளதாகக் கருதப்படும் ஒரு கற்பனைத் தீவாகும். இந்தத் தீவு பிரபல உலக வலைப்படங்களான கூகிள் மேப்ஸ் போன்றவற்றில் இடம்பிடித்துள்ளது. இந்தத் தீவு இவ்விடத்தில் இல்லை என்று 2000ம் ஆண்டளவில் ஒரு தனிப்பட்ட நபர் அறிவித்திருந்தாலும் அந்தக் காலத்தில் இந்தச் செய்தி பிரபலமாகவில்லை. ஆயினும் 2012ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்குச் சென்ற அவுஸ்திரேலியக் குழுவினர் பல்வேறு வரைபடங்களில் இருக்கும் வேறுபாட்டை அறிந்து இந்தத் தீவை நேரில் சென்று பார்க்க முடிவெடுத்தனர். அதன்படி அங்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் அந்த தீவு இருக்கவில்லை. தீவு இருந்ததாகக் குறிப்பிட்ட இடத்தில் சுமார் 1400 அடிக்கு கடல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. டைட்டன் (மீத்திறன் கணினி) டைட்டன் ("Titan") என்பது கிரே நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, அறிவியல் ஆய்வுகளுக்காக ஓக் ரிச் நசனல் லபோரட்டரியில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் மீத்திறன் கணினி ஆகும். டைட்டன் ஓக் ரிச் நசனல் லபோட்டரியில் முன்னைய "யக்குவார்" மீத்திறன் கணினியின் மேம்பட்டதும், மையச் செயற்பகுதிக்கு மேலதிகமாக ஓவியக்கலை மையச் செயற்பகுதி பயன்படுத்துவதும் ஆகும். இது ஒக்டோபர் 2011 இல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 2012 இல் செயற்பாட்டிற்கு வந்தது டெராபைட்டு டெராபைட்டு அல்லது ரெறாபைற்று ("terabyte") என்பது அனைத்துலக முறை அலகுகளின் "டெரா" என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. டெரா என்பது 10 என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே, இரும முன்னொட்டில், இந்த அளவிற்கான குறியீடு டெ.பை ("TB"/"TByte") எனப்படும். கிகாபைட்டு கிகாபைட்டு ("Gigabyte") என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. கிகா என்பது 10 என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே, இந்த அளவிற்கான குறியீடு கி.பை ("GB"/"GByte") ஆகும். 1777 1777 (MDCCLXXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். ஒல்லையூர் கிழான் ஒல்லையூர் கிழான் என்பவன் ஒல்லையூரில் வாழ்ந்த பெருமகன். இவனது மகன் பெருஞ்சாத்தன். இந்தப் பெருஞ்சாத்தனை வென்று ஒல்லையூரைக் கைப்பற்றியவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். ஒல்லையூர் மக்களின் தலைவன் ஒல்லையூர் கிழான். இந்த ஒல்லையூர் மன்னர் ஒருவராலும் இவனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இவனது மகன் பெருஞ்சாத்தன் தன்னாட்சி நிறுவ முயன்ற காலத்தில் பூதப்பாண்டியன் ஒல்லையூரைக் கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். ஓர்னெட்யித்தெஃபு ஓர்னெட்யித்தெஃபு என்பவர், பண்டை எகிப்தின் மூன்றாம் தொலமியின் ஆட்சிக் காலத்தில் (கிமு 246-222) கர்னாக்கில் இருந்த அமுன் கோயில் மதகுரு. இவர், எகிப்தின் தேப்சில் உள்ள அசாசிஃப் பகுதியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, தொடக்க தொலமியர் காலத்து வேலைப்பாடுகளுடன் கூடிய பிணப்பெட்டி, மம்மி முகமூடி, மம்மி என்பவற்றின் மூலமாக அறியப்பட்டவர். இப் பொருட்கள் இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன. 2010 ஆம் ஆண்டில், பிரித்தானிய அருங்காட்சியகமும், பிபிசியும் இணைந்து செயற்படுத்திய "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் திட்டத்தில், உலக வரலாற்றைக் கூறுவதற்காக முதலாவதாகத் தெரியப்பட்டவை இப்பொருட்களே. மேற்சொன்ன பொருட்களுடன், இவரது கல்லறையில் வேறு பல பொருட்களும் காணப்பட்டன. இவற்றுள் பப்பிரசுத் தாளில் எழுதிய இறந்தோர் நூல், இப்தா-சோக்கர்-ஒசிரிசுவின் நிறந்தீட்டிய மரச் சிலை என்பனவும் அடங்கும். நீந்தும் கலைமான் நீந்தும் கலைமான் ("Swimming Reindeer") என்பது, தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, 13,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பத்தைக் குறிக்கும். மாமூத் தந்தத்தின் நுனிப் பகுதியில், இரண்டு கலைமான்கள் நீந்துவது போல் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது. இச் சிற்பத்தை 1866 ஆம் ஆண்டில் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடித்தனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அபே என்றி பிரேயில் என்பவர் இவ்விரு துண்டுகளும் பொருந்தக்கூடியன என்றும் அவை, இரண்டு கலைமான்கள் ஒன்றின் பின்னால் இன்னொன்று நீந்துவதுபோல் அமைந்த ஒரே சிற்பத்தின் பகுதிகள் என்றும் உணர்ந்தார். சுப்பிறீம் சட்-1 சுப்ரீம்சட்-1 அல்லது சைனாசட் 12 ("SupremeSAT-I", "ChinaSat 12" அல்லது "Zhongxing 12/ZX 12") சீனா நிறுவனமான "சைனா கிறேட் வோல் இன்டச்ரீ கோப்பறேசன்" மற்றும் இலங்கை நிறுவனம் "சுப்ரீம்சட்" ஆகியவற்றுக்குச் சொந்தமான தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இது சீனா, கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அவுஸ்த்திரேலியா, சீன கடற்பகுதி, இந்து சமுத்திரப் பிராந்தியம் ஆகியவற்றுக்கான தொடர்பாடல் சேவையினை வழங்க வல்லது. இது புவியிணக்கப்பாதை 87.5° கிழக்கில் அமையும். தலெஸ் அலெனியா ஸ்பேஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இது 15 வருட வாழ்நாட்களைக் கொண்டது. இது இலங்கையின் முதலாவது பகுதியாக உரிமைகொள்ளும் செயற்கைக்கோள் ஆகும். இதன் மூலம் இலங்கை செயற்கைக்கோள் உடைய 45வது நாடும், அதன் பிராந்தியத்தில் இந்தியா, பாக்கித்தானுக்கு அடுத்த மூன்றாவது நாடும் ஆகும். சுப்பிறீம் சட் இலங்கையின் முதலாவது செய்மதி செயற்படுத்தும் நிறுவனம் ஆகும். சுப்பிறீம் சட்-1 நவம்பர் 22, 2012 அன்று விண்ணுக்கு ஏவப்பட உத்தேசிக்கப்பட்டது. ஆனால் சீரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் நவம்பர் 27, 2012க்குப் பிற்போடப்பட்டது இலங்கை மற்றும் சீன நாட்டுக் கொடிகளைத் தாங்கியதாக இது வலம்வர உள்ளது. இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் ("Electoral districts in Sri Lanka") என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி இலங்கை நாடாளுமன்றத்திற்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை 160 வாக்கெடுப்புப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இரண்டு தேர்தல் மாவட்டங்களைத் தவிர மீதமான 20 தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் நிருவாக மாவட்டத்தின் பெயர்களையே தாங்கியுள்ளன. மாறாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிருவாக மாவட்டங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. அதே போல், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னித் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த 22 புதிய தேர்தல் மாவட்டங்களிலும் முதற்தடவையாக 1989 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் (ஆசனம்) கொண்டிருக்க வேண்டும்: தேர்தல் மாவட்டச் சீரமைப்புக்காகவும், 36 மாகாண இருக்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் அரசியலமைப்பின் படி தொகுதிச் சீரமைப்பு ஆணையம் ("Delimitation Commission") ஒன்று அமைக்கப்பட்டது. தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 வரை இருக்கலாம் என அரசியலமைப்பு வரையறுத்தது. 1978 நவம்பர் 29 இல் தொகுதிச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டது. இதன் முடிவுகள் 1981 சனவரு 15 இல் வெளியிடப்பட்டன. இதன் படி இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களின் பெயர்கள் அந்தந்த நிருவாக மாவட்டங்களின் பெயர்களை எடுத்துக் கொண்டன. நிருவாக மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, வவுனியா புதிதாக அமைக்கப்பட்ட வன்னி தேர்தல் மாவட்டமாக இணைக்கப்பட்டன. 36 மாகாண இருக்கைகளும் பின்வருமாறு மாகாணவாரியாகப் பிரிக்கப்பட்டன: 1984 பெப்ரவரியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் என்ற புதிய நிருவாக மாவட்டம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த இரு நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பானத் தேர்தல் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. தேர்தல் மாவட்ட அடிப்படையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை: தேர்தல் மாவட்டங்களுக்கு ஆண்டுகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள். ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் "(reduction-oxidation, சுருக்கமாக Redox)" என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான்எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அவ்வினை ஒடுக்க ஏற்ற வினை ) வகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்கம் என்ற இரண்டு வினைகளும் இடம்பெறுகின்ற வேதி வினைகளில் எலக்ட்ரான் மாற்ற செயல்முறை முக்கியமான இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறது. ஆக்சிசனேற்ற நிலையில் மாற்றம் ஏற்படுகின்ற அனைத்து வினைகளும் ஒடுக்க ஏற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஒடுக்க ஏற்ற வினைகளில் வேதியியல் இனங்களுக்குள் எலக்ட்ரான் மாற்றம் நிகழ்கிறது. எந்த வேதிப்பொருளில் இருந்து எலக்ட்ரான் பறிக்கப்படுகிறதோ அப்பொருள் ஆக்சிசனேற்றம் அடைந்ததாகவும், எந்த வேதிப்பொருளுடன் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறதோ அப்பொருள் ஒடுக்கம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது. Reduction is the gain of electrons or a decrease in oxidation state by a molecule, atom, or ion. ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன்(C) ஆக்சிசனுடன்(O) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும். (எ-க): C + O -> CO பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன. 'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்ஆக்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.. (எ.கா): ZnO + C -> Zn + CO தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால், மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன. (எ.கா): Na + F -> NaF பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி "(reductant)" என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(Na) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. ஐதரசன் மற்றும் புளோரின் ஆகிய வாயுக்களுக்கு இடையில் நிகழும் வேதிவினையை ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இவ்வினையில் ஐதரசன் ஆக்சிசனேற்றம் அடைகிறது. புளோரின் ஒடுக்கம் அடைகிறது. இந்த ஒட்டுமொத்த வேதிவினையை நாம் இரண்டு சமன்பாடுகளாகப் பிரித்து எழுதலாம். ஆக்சிசனேற்றத்தை, ஒடுக்க வினையை, இவ்விரண்டு அரை வினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அலசினால் ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையை நம்மால் கூடுதலாக புரிந்துகொள்ள இயலும். ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையின் முடிவில் நிகர மின்சுமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆக்சிசனேற்ற வினையில் உபரியாகக் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒடுக்க வினையில் எடுத்துக் கொள்ளப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது. மூலக்கூற்று வடிவிலும் இத்தனிமங்க்களின் ஆக்சிசனேற்ற நிலை எப்போதும் 0 என்ற நிலையிலேயே உள்ளது. முதல் பாதி வினையில் ஐதரசன் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து +1 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றமடைகிறது. இரண்டாவது பாதி வினையில் புளோரின் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து -1 என்ற நிலைக்கு ஒடுக்கமடைகிறது. இரண்டு அரைபாதி வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் போது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இரத்து ஆகிறது. அயனிகள் தொடர்ந்து இணைந்து ஐதரசன் புளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன, ஒட்டுமொத்த வினையை பின்வருமாறு எழுதலாம். இந்த வகையிலான வினையில், ஒரு சேர்மத்திலுள்ள அல்லது ஒரு கரைசலிலுள்ள உலோக அணுவானது மற்றொரு உலோகத்தின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்ற வகை வினையாகும். எடுத்துக்காட்டாக துத்தநாகம் உலோகம் ஒரு தாமிர(II) சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்படும் போது துத்தனாகம் தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது. தாமிரம் வீழ்படிவாக மாறுகிறது. Zn(நீ)+ CuSO(நீரிய) → ZnSO(நீரிய) + Cu(திண்மம்) மேற்கண்ட வினையில் துத்தநாகம் தனிமமானது தாமிர சல்பேட்டிலிருந்த தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு தாமிரம் உலோகத்தை தனித்து விடுகிறது, இவ்வினைக்கான அயனிச் சமன்பாடு: மேற்கண்ட இரண்டு அரை வினைகள் போல இங்கு துத்தநாகம் ஆக்சிசனேற்றமடைகிறது. இங்கு தாமிரம் ஒடுக்கப்படுகிறது. யவனிகா ஸ்ரீராம் யவனிகா ஸ்ரீராம் (பிறப்பு: 1962) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அத்தோடு விமர்சகராகவும், கட்டுரை மற்றும் சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். தமிழில் அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் 1962ம் ஆண்டு ராமசாமி-மகமாயி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை முடித்தார். தன் 19ம் வயதில் இலக்கியத்தினுள் நுழைந்தார். கம்பர், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வழியே கவிதையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்கப் பயணித்தார். அதே வணிகக் காரணங்களுக்காக கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பன்முறை பயணம் செய்ததில் சேகரித்த காட்சிப் பின்னணிகளைக் கொண்டு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்திற்கும் நாடு சுதந்திரமடைவதற்கும், பிறகு 1990களில் அறிமுகமான பொருளாதாரத் திறப்பிற்கும் அதன் விளைவான பின் காலனித்துவத்திற்கும் தனது மொழியின் இலக்கியத் தொன்மங்களுக்கும் இடையே நிலம் உடல் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தன் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறார். பிற்காலத்தில் சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ரமேஷ்-பிரேம், பிரம்மராஜன், சுகுமாரன், சேரன், ஆத்மாநாம் போன்றோரின் தாக்கத்தில் நவீன கவிதைக்குள் வந்தார். தமிழில் தன்னைப் ‘பின் காலனித்துவக் காலக் கவிஞன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஊதாமனை ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும். விறகடுப்புக்கள் வேகமாக மறைந்து வரும் இக்காலச்சூழலில் இதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது. சங்ககாலச் சிற்பங்கள், திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் சங்க காலச்சிற்பங்கள் காணப்படுவதைப் பரிபாடல் பாடலொன்று குறிப்பிடுகிறது. இவை கல்லில் வடிக்கப்பட்ட புடைப்போவியங்கள். இரண்டு கதைகளை விளக்கும் இந்தச் சிற்பங்கள் இருந்தது பற்றிய குறிப்புகள் அப்பாடலில் வருகின்றன. காமன், இரதி ஆகியோர் சிற்பங்கள் தனித்தனியாகவும், தழுவிநிற்கும் காட்சியாகவும் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. (உடலியல் இன்பத்திற்கான ஆண் வடிவம் காமன் என்றும் பெண் வடிவம் இரதி என்றும் அழைக்கப்படுவது வடநூல் கதை வழக்கு. தமிழில் இவை குறிஞ்சித்திணையின் உரிப்பொருள்.) விழாக் காலத்தில் அங்குச் சென்றவர்களில் சிலர் அச்சிற்பங்களைப் பார்த்து இவை என்ன என்று வினவ, தெரிந்தவர்கள் அவற்றை விளக்கிச் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது. பதிலளித்தோர், கவுதம முனிவனின் மனைவி அகலிகை. கவுதமன் உருவம் கொண்டு வந்த இந்திரன் அகலிகையை ஏமாற்றி அவளோடு புணர்ந்தான். வெளியில் சென்ற கவுதமன் திரும்பியபோது உண்மை வெளியாயிற்று. இந்திரன் பூசை(பூனை) உருவம் கொண்டு நழுவினான். கவுதம முனிவன் சினம் கொண்டு இருவரையும் சபிக்க அகலிகை கல்லானாள். எனும் கதையை விளக்கும் சிற்பங்கள் இவை என உரைத்ததைப் பாடல் சுட்டுகிறது. பாடல் குறிக்கும் கதைப் புராணக் கதை. இதில் ஏமாற்றுப் புணர்ச்சி உள்ளதால் தமிழில் வரும் மருதத்திணையின் உரிப்பொருளோடு ஒப்பிட முடியாது. கேப்ஸ்யூல் எண்டோஸ்கோபி கேப்சியூல் எண்டோஸ்கோப்பி, ("Capsule endoscopy") மருத்துவத்தில் செரிமானத் தொகுதியைக் காணொளியாகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு புதிய வழியாகும். மாத்திரை வடிவில் ஒரு சிறிய புகைப்படக்கருவி பயன்படுத்தப்படுகிறது. இம்மாத்திரை வடிவப் புகைப்படக்கருவி 27மிமீ நீளமும் 11மிமீ விட்டமும் கொண்டது. ஒரு நோயாளி விழுங்கிவிடும் மாத்திரை போன்ற புகைப்படக்கருவி பின்னர், அவரது இரைப்பை குடல் உள்ளே படங்களை எடுக்கும். காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி முறை மற்றைய எண்டோஸ்கோபி முறைகளால் பார்க்க முடியாத சிறுகுடல் பகுதியைக்கூட ஆய்வுசெய்ய உதவுகிறது. பெரும்பாலும் இந்த வகையான பரிசோதனைகள் இரத்தக்கசிவு மற்றும் வயிற்றுவலிக்கான காரணங்களைக் கண்டறிய உதவுகிறது. இந்த வகையான நடைமுறை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) 2001 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்ககாலச் சமையல் நூல் தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டான் என்கிறது. இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலின் தமிழாக்கம் போலும். குறும்பியன் குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார். இவன் 'வளங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்' எனப் போற்றப்பட்டுள்ளான். இவனது படைத்தலைவன் திதியன். அன்னி மிஞிலி என்பவள் கோசர்குடிப் பெண். இவளது தந்தை வயலை உழுதபின் உழுத எருதுகளை மேய விட்டிருந்தான். உழுத களைப்பால் அவன் சற்றே அயர்ந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் மாடுகள் அருகிலிருந்த பசுமையான வரகுப் பயிர்களை மேய்ந்துவிட்டன. வயல்காரன் ஊர் முது கோசர்களிடம் முறையிட்டான். ஊர் முது கோசர் அன்னி மிஞிலியின் தந்தையை நன்றாக அடித்தனர். அத்துடன் விடாமல், மாடுகள் மேயப் பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தீர்மானித்து, அவனது இரண்டு கண்களையும் தோண்டிவிட்டனர். தந்தைக்கு இழைத்த கொடுமையைப் பொறாத மகள் இந்தக் குறும்பியனிடம் முறையிட்டாள். குறும்பியன் தன் படைத்தலைவன் திதியனை அனுப்பிக் கோசர் கொட்டத்தை அடக்கினான். சனனி ஐயர் ஜனனி ஐயர் (), ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார். அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார். எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார். குழு குழு ("group") என்பது இரண்டுக்கு மேற்பட்டவை சேர்ந்து இருப்பதை குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் உயிரியல் அண்டவியல் மனோபாலா மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் தேர்தல் மாவட்டம் அனுராதபுரம் தேர்தல் மாவட்டம் ("Anuradhapura electoral district") எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி வாக்களிப்புக்காக அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் இத்தேர்தல் மாவட்டம் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். இலங்கை நாடாளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் இம்மாவட்டத்தில் இருந்து 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் இத்தேர்தல் மாவட்டத்தில் 579,261 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். செபலோட்டசு செபலோட்டசு (Cephalotus) என்பது ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இத்தாவரம் 'செபலோட்டேசியீ' என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 'செபலோட்டசு போலிகுலோரிசு' என்ற ஒரு இனம் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இவை மேற்கு ஆஸ்திரேலியாவில், அல்பேனி என்ற நகரத்தின் சதுப்பு நிலப்பகுதியில் வளர்கிறது. எனவே இதனை 'அல்பேனிச் சாடிச்செடி' எனவும் அழைப்பார்கள். இச்செடிகள் இப்பகுதியில் காணப்படுவதை முதன்முதலில் 'ஜார்ஜ் சவுண்ட்' என்பவர் கண்டறிந்தார். செபலோட்டசு என்றால் கிரேக்க மொழியில் 'தலையை உடையது' என்பது பொருளாகும். பூவின் அடிப்பகுதியில் தலைப்பகுதிகொண்ட மயிர்கள் போன்ற அமைப்பு உள்ளதனால் இத்தாவரம் இப்பெயர் பெற்றது. இது ஒரு பல பருவச் செடியாகும். இச்செடி 5 முதல் 8 செ. மீ. உயரம் மட்டுமே வளரக்கூடிய மிகச் சிறிய செடியாகும். இதன் தண்டுப்பகுதி தரையில் ஊர்ந்து செல்லும் மட்டத்தண்டு கிழங்கு வகையைச் சேர்ந்தது. இலைகள் தலையை ஒட்டிப் படர்ந்திருக்கும். இவற்றில் இரண்டு வகையான இலைகள் உள்ளன. உள்வட்டத்தில் பூவின் இதழடுக்கு போல் 4 முதல் 6 இலைகள் உள்ளன. இது நீள்முட்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த இலைகள் சாதாரண இலைகளைப்போல் சூரிய ஒளியின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன. இலைகளை ஒட்டி வெளிப்புறத்தில் இலையிலிருந்து மாறுபட்டு சாடியாகவோ, கூஜாவாகவோ இலைகள் உள்ளன. இந்தச் சாடிகள் 2.5 முதல் 5 செ. மீ நீளம் கொண்டவை. இது பச்சை, சிவப்பு கலந்த நீலம், வெள்ளை ஆகிய நிறத்துடன் அமைந்துள்ளன. சாடியின் வாய்ப்பகுதி குழல் போன்று இருக்கும். இதன் மேல் பகுதியில் மூடி அமைந்துள்ளது. இதில் நரப்புகள் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். இம்மூடி கீழ்நோக்கி இயங்கும் வகையில் அமைந்துள்ளது. குடுவையின் உள் பகுதியில் தண்ணீர் போன்ற திரவம் காணப்படும். குடுவையின் வாய் விளிப்புக்குக் கீழே இளம் பச்சையுடன் கூடிய சிவப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இனிப்பான வாசனையுடைய தேன் சுரப்பிகள் உள்ளன. இதற்கடுத்த பகுதி வழுவழுப்பாக இருக்கும். இதை வழுக்குப் பகுதி, சறுக்கும்பகுதி என அழைப்பர். ஜாடியின் உள் பகுதியில் சுரப்பிகள் பளபளக்கும் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும். இவை கீழ்நோக்கி வளைந்தும், மிகவும் நீண்டு, அடர்த்தியாகவும், மிகமிக மிருதுவாகவும் இருக்கும். இவை பூச்சிகளை செரிக்கக்கூடிய செரிப்பு நீரைச் சுரக்கின்றன. இது போன்ற சுரப்பி மூடிகள் குடுவையின் அடிப்பகுதியில் காணப்படுவதில்லை. சில சமயங்களில் பறக்கும் பூச்சிகள்,குறிப்பாக எறும்புகள் குடுவையின் அழகினால் கவரப்பட்டு, குடுவையின் வாய்ப்புறத்திற்குச் செல்லும். உள்பகுதியில் உள்ள தேன் சுரப்பிகள் மின்னுவதால் தேன் என எண்ணி உள்ளே ஊர்ந்து செல்லும். அங்கே உள்ள வழுக்கும் பகுதியில் இதன் கால் பட்டவுடன் பூச்சி வழுக்கி கீழே விழுந்துவிடும்.பூச்சி மேலே வர முயற்சிக்கும்போது மேலே உள்ள மயிர்கள் தடுக்கின்றன. பிறகு பூச்சிகள் செரிக்கப்படுகின்றன. இச்செடியின் மையப்பகுதியில் நீண்ட 60 செ.மீ நீளமுடைய காம்பு உள்ளது. இதில் மிகச்சிறிய வெள்ளைப்பூக்கள் உள்ளன. இது பார்ப்பதற்கு கவர்ச்சியாக உள்ளதால் இவற்றை செடிகள் வளர்க்கக்கூடிய கண்ணாடி வீடுகளில் வளர்க்கிறார்கள். ஏற்காடு இளங்கோ. ';அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002. ரெடிப்.காம் ரெட்டிஃப்.காம் என்பது இணைய வழி செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வணிக கொள்முதல் தலைவாயிலாகும். இது 1996 இல் "இணையத்தில் ரெட்டிஃப்" என துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளதுடன் அலுவலகங்கள் புதுதில்லி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளன. அலெக்சா தரவரிசைப்படி ரெடிப் 11வது இந்திய வலைவாயிலாக உள்ளது. 316 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது.ரெடிப்.காம் இன் மில்லியன் கணக்கான வருகுனர்களில் 89.1% ஆனோர் இந்தியாவிலிருந்தும், எஞ்சியோர் முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா (3.4%) மற்றும் சீனாவிலிருந்து வருகின்றனர். முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முல்லைத்தீவு தேர்தல் தொகுதி ("Mullaitivu Electorate") என்பது சூலை 1977 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரை உள்ளடக்கியதாகும். 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எக்ஸ். எம். செல்லத்தம்பு உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள். யக்‌ஷியும் ஞானும் யக்‌ஷியும் ஞானும் 2010-ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். வினையன் இயக்கத்தில் ஆர். ஜி. தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. இயக்குனர் வினையனின் திகில்த் திரைப்பட வரிசையில் ஆகாஷ கங்கா, வெள்ளி நக்‌ஷத்திரம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியான திகில்த் திரைப்படம் இது. இத்திரைப்படம் ஜக்கம்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேக்கனா ராஜ் பேயாகவும், கதையின் நாயகியாகவும் வருகிறார். சமூக கருத்துகளை மையமாக வைத்து ஒரு திகில்த் திரைப்படத்தை உருவாகியுள்ளார் வினயன். திலகன் சோதிடம் கூறுவராக நடித்திருக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார். சந்திரசேகர் தமிழ்நாடு மாநிலம் ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார். இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார். " சந்திரசேகர்" தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள "சத்தின் கீ லெவு" ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்துள்ளார். எஸ்.சங்கர்,எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். டூரிங் டாக்கிஸ்(2015) திரைப்படம் "சந்திரசேகர்" இயக்கிய 69 வது படமாகும் குளோவிசு ஈட்டி முனை குளோவிசு ஈட்டி முனை என்பது, வட அமெரிக்கக் குளோவிசுப் பண்பாட்டினர் பயன்படுத்திய எறிவதற்கான ஈட்டி முனைகளைக் குறிக்கும். இத்தகைய ஈட்டி முனைகள் முதன் முதலாக 1929 ஆம் ஆண்டில், நியூ மெக்சிக்கோவில் உள்ள குளோவிசு என்னும் நகரில் கண்டெடுக்கப்பட்டதால் இவற்றுக்கு அந்நகரின் பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. இவை 13,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமிந்தியக் காலத்தைச் சேர்ந்தவை. பக்கத்தில் காணப்படுவது நடுத்தர அளவு கொண்ட ஒரு வேல்வடிவக் குளோவிசு முனையாகும். இவற்றின் பக்கங்கள் வளைவானதாக இருப்பதுடன், விளிம்பு வழியே கவனமாக அழுத்தம் கொடுத்து செதுக்கப்பட்டிருக்கும். முனையின் அடிப்புறம் அல்லது நடுப்பகுதி அகலம் கூடிய பகுதியாக அமைந்திருக்கும். இதன் அடிப்பக்கம் உள்வளைந்த வடிவில் இருக்கும். இதன் விளிம்பின் ஒரு பக்கத்தில் அல்லது இது பக்கங்களிலுமே தவாளிச் செதுக்கு இருக்கும். பருத்திச்சேரி பருத்திச்சேரி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றூர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பருத்திச்சேரியின் மொத்த மக்கட்தொகை 1021. இதில் 503 பேர் ஆண்கள், 513 பேர் பெண்கள். பாலின விகிதம் 1030. எழுத்தறிவு விகிதன் 75.5% ஆகும். தேரோட்டம் தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலைகளையோ சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும். இந்தியாவிலும், இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது. கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே அரசர்கள் குதிரை, யானை, தேர் முதலியவற்றில் ஏறி நகர வீதிகளில் உலாவருதல் வழமையாக இருந்துள்ளது. இதைப் பின்பற்றியே கடவுள்களையும் வாகனங்களில் ஏற்றி வீதியுலா வரச் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது எனலாம். சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலும் தேர்கள் குறித்த செய்திகள் உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் தேர்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரம் புத்த சமயத்தவரின் தேர்த் திருவிழா பற்றிக் குறிப்பிடுகின்றது. அக்காலத்துத் தேர்கள் எதுவும் இன்றுவரை நிலைத்து இருக்கவில்லை. இன்றுள்ள மிகப் பழைய தேர்கள் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை. கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. தேரின் பல்வேறு உறுப்புக்களும் அண்டத்திலும், இவ்வுலகத்திலும் உள்ள பல்வேறு அம்சங்களைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தேரோட்டம் நடக்காத காலங்களில் தேரை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தைத் தேர் நிலை அல்லது தேர் முட்டி (இலங்கை வழக்கு) என்று குறிப்பிடுவர். சில கோயில்களில் தேர் நிலைகள் நிரந்தரமான கட்டிடங்களாக இருக்க, வேறு சில கோயில் தேர் நிலைகள் தற்காலிகமானவையாக இருக்கும். பெரிய தகரக் கூரைகள் கொண்டு தேர் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க வழி செய்வர். அருகில் உள்ள படம் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரமான தேர் முட்டியைக் காட்டுகின்றது. இதில் அலங்காரங்களுடன் கூடிய தாங்குதள அமைப்புக்களும், வேலைப்பாடுகளுடன் கூடிய கூரை அமைப்பும், திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்களும் காணப்படுகின்றன. இத் தேர் நிலைகள், தேர் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன. சில தேர்கள் உச்சி முதல் சில்லுகள் வரை மரத்தினால் செய்யப்பட்டு நிரந்தரமான அலங்காரங்களுடன் இருப்பது உண்டு. இவை "சித்திரத்தேர்" என அழைக்கப்படுகின்றன. வேறு சில தேர்கள் நிலையில் இருக்கும் போது அலங்காரங்கள் இல்லாமல் எளிய நிலையில் இருக்கும். தேரோட்டம் துவங்கும் மாதத்தில் தேரைத் தூய்மைப்படுத்தி, செப்பனிட்டு வைப்பர். கோவிலில் தேரோட்டத்திற்கு கொடி ஏறிய பின்னர், தினமும் அலங்காரங்கள் செய்யப்படும். வண்ண வண்ண மலர்த் தோரணங்கள், உதிரிப் பூக்கள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள், குஞ்சங்கள் கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும். சுவாமியும் தேரில் எழுந்தருளுவார். வாழை மரங்கள், அழகிய வண்ணக்கொடிகள், பல்வேறு சிற்பங்கள் என்பன கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும். பீடத்துக்குக் கீழேயுள்ள பகுதி மட்டும் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தேர்களும் உள்ளன. மேற்பகுதி தேர்த் திருவிழாவுக்கு முன்னர் கட்டி அலங்காரம் செய்யப்படும். இவற்றைக் "கட்டுத்தேர்" என்பர். பெரிய கயிறுகள் தேரில் இணைக்கப்படும், அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும்.தேர் செல்லும் வழி எங்கும் மக்கள் தத்தம் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள். தேரோட்டத்தன்று இறைவன் எழுந்தருளிய எழில்மிகு தேரை வடம் பிடித்து ஊர்மக்கள் யாவரும், அந்த ரதவீதிகளில் தேரை இழுத்து வருவர்.இறைவனின் திருநாமத்தைச் சொல்லி தேர் இழுப்பவர்களுக்கு நீர்மோர், பானகம், தண்ணீர் என வழங்க பந்தல்கள் அமைக்கப் பெற்று விளங்கும்.மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என கோவிலின் நாற்புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து திரும்பவும் தேர் தன் நிலை வந்து அடையும் வரை தேரோட்டம் நடைபெறும். இந்துக் கோயில்களில் தேர் வீதியுலா வரும்போது, அதற்கு முன்னே நாதசுவரம், தவில் ஆகிய இசைக் கருவிகளை வாசித்துக்கொண்டு கலைஞர்கள் வருவர். கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் போன்ற ஆட்டங்களும் நிகழ்வது உண்டு. தேருக்குப் பின்னே அடியார்கள் திருமுறைகளை இசையுடன் பாடி வருவது வழக்கம். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் ஆவணி (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்) மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இத்தேரோட்டம் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களிலும் தேர்த் திருவிழாக்கள் ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறுகின்றன. கதிர்காமத்தில் இடம்பெறும் திருவிழாக் காலத்தில் கொழும்பில் இடம்பெறும் ஆடிவேல் விழாவின் போது கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் இருந்து தேர் பம்பலப்பிட்டியில் உள்ள சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு கொழும்பு நகரின் முக்கிய வீதிகளினூடாக இழுத்துவரப்படுகின்றது. இது கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் தேரோட்ட விழா ஆகும். நல்லூர்த் தேர்த்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியின் ஒரு பகுதி உட்பட சில வீதிகள் வாகனப் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழிகளில் பயணிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் நடைபெறும் பிரசித்திபெற்ற கோயில்களின் தேரோட்டத்தின் போது வீதிகள் பகுதியாகத் தடைசெய்யப்படுகின்றன. தமிழகத்தில் கிருத்தவ சமயத் தேவாலயங்கள் சிலவற்றில் உள்ளூர் இந்து சமயம் தொடர்பு உடையனவாகவோ அல்லது அம்மரபினைப் பின்பற்றியவையாகவோ அமையும் சடங்குகளில் ஒன்றாக தேரோட்டம் அமைகிறது. வேளாங்கண்ணி மாதா கோவில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் சிரிய அல்லது இலத்தீன் மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம். இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வேளாங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலுள்ள பனிமயமாதா கோயிலிலும் தேர்த்திருவிழா நடத்தப் பெறுகிறது. இக்கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தவ மதத்தின் சார்பாக நடைபெற்ற உலகின் முதல் தேர்த் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த நெட்டையான பல்லக்கில், உருவம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். உருவத்தை இறக்கி வைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பர். அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவப் பரிகாரச் செபம் படித்தபின் உருவம் இறக்கப்பட்டு பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து உருவத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடன் 6 பேர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும். தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடுன் உருவம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றி வைக்கப்படும். பரதகுலச் சிற்றரசன், நல்முத்துகள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார். அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த் தலைவர்களிடம் அளிப்பார். மக்கள் வடத்தை மரியே, மாதாவே எனும் வானைப் பிளக்கும் வாசகத்துடன் தேர் இழுத்துச் செல்வர். யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் இப்படித்தான் தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இத்தேர்ப்பவனி சற்று மாற்றப்பட்டு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் புரத்தாக்குடி என்ற ஊரில் உள்ள மாதா கோயிலில் ஆண்டு தோறும் புகழ்பெற்ற திருச்சபைத் தேரோட்டம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் ("Jaffna railway station", யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வடக்குப் பாதை தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. இந்நிலையம் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெரிதும் சேதமுற்றது. மே 2009 இல் போர் முடிவடைந்தததை அடுத்து இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் இப்பாதையின் புனரமைப்பை மேற்கொண்டது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் அதிகாரபூர்வமாக இயங்குகிறது. 1902 மார்ச் 11 இல் ஆளுநர் சேர் ஜே. டபிள்யூ. ரிட்ஜ்வே என்பவரால் காங்கேசன்துறை முதல் சாவகச்சேரி வரையிலான பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 1902 செப்டம்பர் 5 இல் 14 மைல் நீள சாவகச்சேரி-பளை வரையான பகுதி திறக்கப்பட்டது. 1904 நவம்பர் 1 இல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையான பகுதி ஆரம்பிக்கப்பட்டது. .1905 மார்ச் 11 இல் மதவாச்சி வரை நீடிக்கப்பட்டது. 1905 ஆகத்து 1 இல் முதலாவது தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது. இதற்கான பயண நேரம் 13 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக இருந்தது. யாழ் தேவி என அழைக்கப்படும் விரைவு வண்டி 1956 ஏப்ரல் 23 இல் வடக்குப் பாதையில் முதன் முதலாக சேவையில் விடப்பட்டது. இதன் மூலம் கொழும்பு-யாழ்ப்பாணப் பயண நேரம் 7 மணித்தியாலங்களால் குறைக்கப்பட்டது. இச்சேவை மூலம் கொழும்பு கோட்டைக்கு அடுத்த படியாக யாழ்ப்பாணத் தொடருந்து நிலையம் இலங்கையின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக உருவெடுத்தது. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையே தினமும் எட்டு பயணிகள் வண்டிகளும், ஆறு சரக்கு வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. 1980களின் ஆரம்பத்தில் நாள்தோறும் ஆறாயிரம் பயணிகள் வரை வடக்குப் பாதையூடாக சென்று வந்தனர். சாம்சங் கேலக்ஸி எஸ் III சாம்சங் கேலக்ஸி எஸ் III தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இது 29 மே 2012 அன்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட. சாம்சங் கேலக்ஸி எஸ் III அண்ட்ராய்டு 4.0.4 "ஐஸ் கிரீம் சாண்ட்விச்" இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது, மேலும் இதனை அண்ட்ராய்டு 4.1 "ஜெல்லி பீன்" பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள்ள முடியும். சாம்சங் கேலக்ஸி எஸ் III 20 மில்லியன் மொபைல்கள் முதல் நூறு நாட்களில் விற்கப்பட்டது. இன்று வரை 50 மில்லியன் மொபைல்களுக்கு மேல் விற்க்கப்பட்டுள்ளது. மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது ஜான் கே ஜான் கே (John Kay:1704 – 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த இயந்திரக் கண்டுபிடிப்பாளர். தொழிற்புரட்சியில் தனது பங்களிப்பாக நெசவுக் கலையில் உதவும் பறக்கும் நாடாவைக் கண்டுபிடித்தவர். இதே துறையில் 'சுழலும் சட்டம்'(Spinning frame) கண்டறிந்தவர் பெயரும் 'ஜான் கே' என்பதாகும். ஜான் கே 1704, ஜூன் 17 ஆம் நாள் இங்கிலந்தில் லங்காசையரின் வால்மெர்சிலி எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராபர்ட் ஒர் பண்ணையாளர். இவருக்கு அங்கு சொந்த நிலம் இருந்தது. ஜான் கே பிறக்கும் முன்பே இவருடைய தந்தை இறந்ததனால் இவர்களுடைய குடும்பம் அந்நிலத்தை இழக்க வேண்டியிருந்தது. ஜான் கே தனது தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 14 வயது வரை கல்வி கற்றார். ஜான் கே கைத்தறி நெசவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பறக்கும் நாடாவைக் கண்டறிந்து 1733 இல் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். பறக்கும் நாடா துணி இழைகளுக்கிடையே அகலவாக்கில் மிக வேகமாக சென்று வந்தது. இக்கருவி கண்டறியப்பட்ட பிறகு இரண்டு ஆட்கள் செய்ய வேண்டிய தறி நாடா பிடிக்கும் வேலையை ஒருவர் மேற்கொண்டால் போதுமானதாக இருந்தது. ஜான் கே இக்கருவியினை சுழழும் நாடா என்று அழைத்தார். ஆனால் இதன் தொடர்ந்த வேகத்தின் காரணமாக இது பறக்கும் நாடா எனறழைக்கப்பட்டது. சாமுவேல் கிராம்டன் சாமுவேல் கிராம்ப்டன் ("Samuel Crompton", 3 டிசம்பர் 1753 – 26 சூன் 1827) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது. ஜேம்சு ஆர்கிரீவ்ஸ் ஜேம்சு ஆர்கிரீவ்சு (James Hargreaves:1720 – 1778). இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1764 இல் நூற்கும் ஜென்னி என்ற இயந்திரத்தைக் கண்டறிந்தவர். எழுதவும் படிக்கவும் தெரியாத ஆர்கிரீவ்சு கண்டறிந்த இவ்வியந்திரம் தொழிற்புரட்சியின் பொழுது நெசவுத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதே நேரத்தில் தாமசு ஹை என்பவரும் நூற்கும் ஜென்னியைக் கண்டறிந்தார். ஆனால் ஆர்கிரீவ்சு சுழலும் அச்சில் இயங்கும் விதமாக இக்கருவியை மேம்படுத்தினார். ஆர்கிரீவ்சு இதற்கான காப்புரிமையைப் பெறாமலேயே இக்கருவியினை விற்பனை செய்தார். பிற நெசவாளர்களின் பொறாமை காரணமாக இவரின் வீடு மற்றும் நூற்கும் ஜென்னி இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் ஆர்கிரீவ்சு நாட்டிங்காம் சென்று குடியேறினார். ஜேம்சு ஆர்கிரீவ்சின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறர் இவ்வியந்திரங்களை உற்பத்தி செய்தனர். ஆனால் அதற்கான தொகை இவருக்கு வழங்கப்படவில்லை. ஏழ்மையான நிலையில் வாழ்ந்த ஆர்கிரீவ்சு 1778 இல் மறைந்த போது 20,000 நூற்கும் ஜென்னிகள் பிரித்தானியாவெங்கும் புழக்கத்தில் இருந்தன. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடசாலையாக இது திகழ்ந்தது. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப் பக்கமாகவும், காங்கேசன்துறை வீதிக்கு அருகாமையிலும் இக்கல்லூரி அமைந்திருந்தது. ஈழப்போர் காரணமாக இப் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. "நேர்மை நெறி நில்" என்பது கல்லூரி வாசகம் ஆகும். தொடக்கத்தில் தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கியது. இது பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகள் வரை கொண்டுள்ளது. நடேஸ்வராக் கல்லூரி வீதிக்கு வடக்குப் பக்கத்தில் கனிட்ட பாடசாலையும், தெற்குப் பக்கத்தில் உயர்தரப் பாடசாலையும் அமைந்துள்ளன. காங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்கின்றனர். இலங்கை அரசு இப்பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் இக்கல்லூரியின் முகாமையாளர்களாகப் பணியாற்றினர். சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் சூடாமணி ஐயர், கந்தசாமி, மார்க்கண்டு, கிருஷ்ணபிள்ளை, சிவப்பிரகாசம், சோமசுந்தரம் போன்றோர் உயர்நிலைப் பாடசாலையில் அதிபர்களாகப் பணியாற்றினர். கனிட்ட பாடசாலையில் அக்காலத்தில் சபாபதிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, கந்தையா, திருநாவுக்கரசு, மு.அ. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள். அரிமானம் அரிமானம் அல்லது துருப்பிடித்தல் ("corrosion") என்பது ஒரு தூய்மையாக்கப்பட்ட உலோகம் அதனுடைய இயற்கை நிலைப்புத்தன்மை நிலையான ஆக்சைடு வடிவத்திற்கு மாற்றமடையும் ஓர் இயற்கைச் செயல்முறையாகும். பொருட்கள் (பெரும்பாலும் உலோகங்கள்) இச்செயல்முறையில் சூழலிலுள்ள வேதிப்பொருட்களுடன் வேதிவினையில் ஈடுபட்டு படிப்படியாக சிதைவடைகின்றன. உலோகங்கள் ஆக்சிசனேற்றியான ஆக்சிசனுடன் ஈடுபடும் வேதிவினையே அரிமானம் என்றும் மின்வேதியியல் ஆக்சிசனேற்றமென்றும் தற்பொழுது அரிமானம் என்ற சொல்லுக்கு பொருள் கொள்ளப்படுகிறது. இரும்பு ஆக்சிசனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடு உருவாகும் துருப்பிடித்தல் என்னும் செயல்முறை மின்வேதியியல் அரிமானத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அசல் உப்புகள் குறிப்பாக ஆக்சைடுகளாக அல்லது உப்புகளாக மாற்றமடைவதால் இவ்வகை சேதம் உண்டாகி அதன் விளைவாக தனித்துவமான ஆரஞ்சு வண்ண நிறமாற்றம் நிகழ்கிறது. அரிமானம், உலோகங்கள் மட்டுமின்றி மண்பாண்டங்கள் அல்லது பல்படிமங்கள் போன்ற பொருட்களிலும் ஏற்படுகிறது. இத்தைகய பொருட்களில் நிகழும் அரிமானம் ஆக்சைடுகள் உருவாதல் என்ற வரையறையில் இருந்து மாறுபட்டு தரம் குறைத்தல் என்ற வரையறையாக பொருள் மாறுகிறது. இத்தகைய அரிமானத்தால் பொருட்களின் வலிமை, தோற்றம், வாயுக்களாகவும் திரவமாகும் பொசியும் தன்மை போன்ற பயனுள்ள பண்புகள் தரமிழக்கின்றன. கட்டமைக்கப்பட்ட பல உலோகக் கலவைகள் வெறுமனே காற்றில் உள்ள ஈரப்பதத்தால் அரிப்புக்கு உட்படுகின்றன. ஆனால் காற்றில் உள்ள ஈரபதம் சிலபொருட்களில் இச்செயல்முறையினால் கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது. பொதுவாக ஒரு புள்ளி அல்லது ஒரு பிளவாக ஆரம்பமாகும் அரிமானம் படிப்படிப்படியாக மேற்பரப்பு முழுமைக்கும் பரவி சிதைவை ஏற்படுத்த முடியும். அரிமானம் என்பது ஒரு விரவுதல் கட்டுப்பாட்டு செயல்முறை என்பதால் சூழலுடன் தொடர்புள்ள மேற்பரப்பு முழுவதும் இதனால் பாதிக்கப்படுகிறது. வினை முடமாக்கல், குரோமேட்டாக மாற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் உலோகங்களின் அரிமானத்திற்கு எதிரான எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க முடியும். இருந்தாலும் சில வகை அரிமானங்கள் சரியாக வெளிப்படுவதும் இல்லை முன்னுணர்ந்து உரைக்கவும் இயல்வதில்லை. இரண்டு வெவ்வேறு உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருந்தாலோ அல்லது மின்வழித் தொடர்பில் தொட்டுக்கொண்டு இருந்தாலோ மற்றும் அவை பொதுவான ஒரு மின்பகுளியில் மூழ்கியிருந்தாலோ அல்லது ஒரே உலோகம் வெவ்வேறு செரிவுள்ள மின்பகுளிகளில் தொடர்பு கொண்டிருக்கும் சூழல் போன்ற நிலைகளில் மட்டுமே முன்வேதியியல் அரிமானம் நிகழ்கிறது. ஒரு கால்வனிக் இரட்டைகளில், மிகவும் செயல்திறன் மிக்க உலோகம் {நேர்மின் முனை) துரிதமாக அரிமானத்துக்கு ஆளாகிறது. மேலும் மந்தமாக செயல்படும் உலோகம் (எதிர்மின் முனை) குறைவான விகிதத்தில் அரிக்கப்படுகிறது. மின்பகுளியில் அவை தனித்தனியாக மூழ்கவைக்கப்பட்டிருக்கும்பொழுது ஒவ்வொறு உலோகமும் அதனதன் வீதத்தில் அரிமானம் அடைகின்றன. எப்படிப்பட்ட உலோகம் அல்லது உலோகங்களை பயன்படுத்துவதென்று கண்டறியப்பட்டு கால்வனிக் தொடர்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, உதாரணமாக எஃகு அமைப்புகளில் பெரும்பாலும் துத்தநாகம் தன்னிழப்பு நேர்முனையாகப் பயன்படுத்தப்படுகிறது. கால்வனிக் அரிமானம் கடல்சார் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தண்ணீர் தொடர்புடைய ( உப்புகள் அடங்கிய) அனைத்து குழாய்கள் அல்லது உலோக கட்டமைப்புகளிலும் அரிமானம் பெரும்பங்கு வகிக்கிறது. நேர்முனை அளவு, உலோக வகைகள், மற்றும் இயக்க நிலைமைகள் (வெப்பநிலை, ஈரப்பதம், உப்புத் தன்மை, முதலியன) போன்ற காரணிகள், கால்வனிக் அரிப்பை பாதிக்கின்றன. நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாய் ஆகியனவற்றின் மேற்பரப்பு விகிதம் நேரடியாக பொருட்களின் அரிமான விகிதங்களை பாதிக்கின்றன. . பெரும்பாலும் தன்னிழப்பு நேர்முனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்வனிக் அரிமானம் தடுக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட எந்தச் சூழலானாலும் (ஒரு நிலையான காற்றோட்ட ஊடகம், அறை வெப்பநிலை, கடல் நீர்), ஒரு உலோகம் மற்றதைவிட அதிக செயல்திறன் மிக்கதாகவோ அல்லது அதிக மந்தநிலை கொண்டதாகவோ இருக்கும். இது அவற்றின் அயனிகள் மேற்பரப்புடன் கொண்டுள்ள பிணைப்பின் வலிமையைப் பொறுத்து அமைகிறது. மின்தொடுகையில் உள்ள இரண்டு உலோகங்கள் அதே எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இரண்டு பொருட்களுக்கிடையே, ஒவ்வொன்றின் மேற்பரப்பிலும் தனி எலக்ட்ரான்களுக்காக நிகழும் இழுபறிப்போர் சம அளவில் காணப்படுகிறது. ஒரே திசையில் அயனிகளின் ஓட்டத்தை ஓம்பும் மின்பகுளியைப் பயன்படுத்தி மந்தவினை உலோகம் செயல்திறன் மிக்க உலோகத்தில் இருந்து எலக்ட்ரான்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் விளையும் மின்னோட்டம் அல்லது திரளோட்டத்தை ஊடகத்தினுடன் தொடர்பிலுள்ள உலோகங்களின் அதிகாரப் படிநிலையை நிறுவதல் மூலம் அளவிட முடியும். இவ்வதிகாரப் படிநிலை கால்வனிக் மின்குறைமான உலோகத் தொடர்கள் எனப்படுகின்றன. அரிமானத்தை முன்னறியவும் புரிந்துகொள்ளவும் இத்தொடர்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும், பொருட்களின் அரிமான விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும். உதாரணமாக இரும்புக் கருவிகள் அல்லது இரும்பு மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை நீக்க பாசுபாரிக் அமிலத்தை உப்புநீர் பழப்பாகு வடிவில் மேற்பூச்சாகப்பூசி நீக்குகிறார்கள். இது சில அடுக்குகள் துருவை நீக்கி உலோகத்தின் மேற்பரப்பை வழவழப்பாக்குகிறது. பாசுபாரிக் அமிலத்தை செப்புவின் மின்மெருகூட்டலுக்காகவும் பயன்படுத்த முடியும். அதாவது இதன்பொருள் செப்பின் அரிமானப் பொருட்களை நீக்குதல் என்பதல்ல செப்புவை நீக்குதல் என்பது கவனிக்கத் தக்கது ஆகும். சில உலோகங்கள் ( உதாரணங்கள், கால்வனிக் உலோகத் தொடர் பார்க்கவும்) அரிமானத்திற்கு எதிராக உள்ளார்ந்த எதிர்ப்பை மற்றதனிமங்களைவிட அதிக அளவில் தருகின்றன. உலோகங்களை அரிமானத்தில் இருந்து காப்பாற்ற அல்லது உலோகங்களில் ஆக்சிசனேற்றம் நிகழாமல் தடுக்க பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. சாயம் பூசுதல், வெப்ப மூழ்குவிப்பு முலாம் பூசுதல் அல்லது இவையிரண்டையும் ஒருங்கே மேற்கொள்ளுதல் போன்றவை முக்கியமான வழிகளாகும். தொடுப்பு தொடுப்பு என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்: வெருகல் பாலம் வெருகல் பாலம் கிழக்கு மாகாணத்தில் வெருகல் ஆற்றினைக் கடக்கவும், இருமருங்கு வீதியினை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 19 ஒக்டோபர் 2011 அன்று திறக்கப்பட்டது. இப்பாலம் 105 மீ (344 அடி) நீளமுடையது. இதற்காக 250 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ($2.3 மில்லியன்) பிரான்சிய அபிவிருத்தி முகவரின் உதவியுடன் செலவிடப்பட்டது. இப்பாலம் ஏ-15 மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையின் பகுதியாகும். இது அமைக்கப்பட்டதன் மூலம் முன்னர் மக்கள் போக்குவரத்திற்குப் பாவித்த படகு சேவைக்கு மாற்றீடாக அமைந்துள்ளது. காயங்கேணிப் பாலம் காயங்கேணிப் பாலம் கிழக்கு மாகாணத்தில் வெருகல் ஆற்றினைக் கடக்கவும், இருமருங்கு வீதியினை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 19 ஒக்டோபர் 2011 அன்று திறக்கப்பட்டது. இப்பாலம் நீளமுடையது. இதற்காக 202 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ($1.8 மில்லியன்) பிரான்சிய அபிவிருத்தி முகவரின் உதவியுடன் செலவிடப்பட்டது. இப்பாலம் ஏ-15 மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையின் பகுதியாகும். இது அமைக்கப்பட்டதன் மூலம் முன்னர் மக்கள் போக்குவரத்திற்குப் பாவித்த படகு சேவைக்கு மாற்றீடாக அமைந்துள்ளது. செங்காளிபுரம் முத்தண்ணா செங்காளிபுரம் வைத்தியநாத தீட்சிதர் (அல்லது செங்காளிபுரம் முத்தண்ணா, 1830–1893) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் குடமுருட்டி ஆற்றின் அருகில் உள்ள செங்காளிபுரத்தைச் சேர்ந்தவர். இவ்வூர் ஆயிரக்கணக்கான தீட்சிதர் குடும்பங்கள் வாழும் சிற்றூராகும். முத்தண்ணர் இப்பகுதியில் வாழ்ந்த மாணக்கர்களின் மனமறிந்து பாடம் நடத்திப் புரிய வைத்தார். இவரது கற்பித்தல் திறனால் நன்கறியப் படுகிறார். சம அழுத்தச் செயல்முறை சம அழுத்தச் செயல்முறை ("Isobaric process") அல்லது மாறா அழுத்தச் செயல்முறை என்பது ஒரு தொகுதியின் அழுத்தம் மாற்றமடையாமல் நிலையாக வைத்து நிகழ்த்தப்படும் வெப்பவியக்கவியல் செயல்முறையாகும். இதன் போது தொகுதியினுள் கடத்தப்படும் வெப்பமானது வேலையைச் செய்வதுடன் தொகுதியின் உள்ளாற்றலினையும் அதிகரிக்கிறது: வெப்பவியக்கவியலின் முதலாவது விதிப்படி "W" தொகுதியினால் செய்யப்பட்ட வேலையையும், "U" உள் ஆற்றலினையும், "Q" தொகுதிக்கு வழங்கிய வெப்பத்தையும் குறிக்கிறது. மூடிய தொகுதியின் கனவளவு - அழுத்த வேலை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: இங்கு Δ முழுச்செயல்முறையில் நிகழ்ந்த மாற்றத்தை குறிக்கிறது, d நுண்ணளவைக் குறிக்கிறது. அழுத்தம் மாற்றமடையாது இருப்பதால் இது கருத்தியல் வளிம விதியின்படி பின்வருமாறு மாறுகிறது: வளிமத்தின் அளவு மாறாதிருக்கும் எனக்கருதுக, உ+ம், நிலைமாற்றம் நிகழாத வேதியியல் தாக்கம். சமபகிர்வுக் கோட்பாட்டின் படி, உள் ஆற்றலில் நிகழும் மாற்றம் தொகுதியின் வெப்பநிலையுடன் தொடர்புடையது இங்கு formula_6 என்பது மாறாக் கனவளவிலான தன்வெப்பக்கொள்ளளவு. கடைசி இரண்டு சமன்பாடுகளையும் முதல் சமன்பாட்டில் பிரதியிட வருவது: இங்கு formula_10 சம அழுத்தத் தன்வெப்பக்கொள்ளளவு. தொடர்புடைய வளிமத்தின் மூலர் தன்வெப்பக்கொள்ளளவை கண்டறிய பின்வரும் சமன்பாடுகள் யாதேனும் பொதுவான கலோரியில் இலட்சியமான வளிமங்களிற்கு பாவிக்கப்படுகின்றன. formula_11 தன்வெப்பக்கொள்ளளவு விகிதம் எனப்படுகிறது. சில மூலங்கள் formula_11 இற்கு பதிலாக "k" இனை பயன்படுத்துகின்றன. மூலர் மாறாக் கனவளவு தன்வெப்பக்கொள்ளளவு: மூலர் சம அழுத்த தன்வெப்பக்கொள்ளளவு: formula_11 இன் மதிப்பு காற்றிற்கும் அதன் பிரதான கூறுகள் போன்ற ஈரணு வளிமங்களிற்கு formula_16 ஆகவும், இலட்சிய வளிமம் போன்ற ஓரணு வளிமங்களிற்கு formula_17 ஆகவும் உள்ளது. தன் வெப்பக்கொள்ளளவிற்கான கோவைகள் கிழ்க்காணும் சிறப்பு வேளைகளில் பின்வருமாறு ஒடுங்குகிறது: ஓரணுவிற்கு: ஈரணுவிற்கு: ஓர் சம அழுத்த செயல்முறை P-V வரைபடத்தில் இறுதி ஆரம்ப நிலைகளை கிடையான நேர்கோட்டால் இணைத்துக் காட்டப்பட்டிருக்கும். இங்கு செயல்முறை வலது பக்கத்தை நோக்கி நகருமாயின் அது விரிவடைதல் என்றும் இடது பக்கத்தை நோக்கி நகருமாயின் அது நெருங்குதல் என்றும் அழைக்கப்படும். வெப்பவியக்கவியலின் குறித்த குறி வழக்கிற்கான உந்துகை வெப்ப பொறிகளின் ஆரம்பகால முன்னேற்றத்துடன் வந்தது. வெப்ப பொறிகளினை வடிவமைக்கையில் இலக்காக இருப்பது வேலையை வெளியீடாக விடுவதற்கான அமைப்பினை உருவாக்குதலாகும். வெப்ப பொறியின் ஆற்றல் மூலமாக அமைவது வெப்பம் வளங்குதலாகும். கனவளவு நெருக்கப்படும் போது (டெல்டா V = இறுதிக்கனவளவு-ஆரம்பக் கனவளவு < 0), ஆகவே W < 0. அதாவது சம அழுத்த செயல்முறையில் வளிமம் எதிர்ம வேலையை செய்கிறது அல்லது சூழல் வளிமம் மீது நேர் வேலையைச் செய்கிறது. கனவளவு விரிவாக்கப்படுகையில் போது (டெல்டா V = இறுதிக்கனவளவு-ஆரம்பக் கனவளவு > 0), ஆகவே W > 0. அதாவது சம அழுத்த செயல்முறையில் வளிமம் நேர்ம வேலையை செய்கிறது அல்லது சூழல் வளிமம் மீது எதிர்ம வேலையைச் செய்கிறது. தொகுதிக்கு வெப்பம் சேர்க்கப்படுமாயின் Q > 0 ஆகும். அதாவது மாறா அமுக்கத்தில் விரிவடைதல் அல்லது வெப்பப்படுத்தும் போது நேர் வெப்பம் வளிமத்திற்கு சேர்க்கப்படுகிறது அல்லது நிகராக எதிர்ம வெப்பத்தை சூழல் பெறுகிறது. மீளக்கூறுவதாயின் வளிமம் சூழலில் இருந்து நேர் வெப்பத்தை பெறுகிறது. தொகுதிக்கு வெப்பத்தை இழக்குமாயின் Q < 0 ஆகும். அதாவது மாறா அமுக்கத்தில் நெருக்குதல் அல்லது குளிர்விக்கும் போது எதிர்ம வெப்பம் வளிமத்திற்கு சேர்க்கப்படுகிறது அல்லது நிகராக நேர்ம வெப்பத்தை சூழல் பெறுகிறது. மீளக்கூறுவதாயின் சூழல் வளிமத்திலிருந்து நேர் வெப்பத்தை பெறுகிறது. ஓர் மாறாக்கனவளவு செயல்முறை formula_22 எனும் சமன்பாட்டால் விபரிக்கப்படுகிறது. ஆனால் சமஅழுத்தச் செயல்முறையில் "U + p V" என்பது செயன்முறையின் நிலையுடன் தொடர்புடைய கணியம், எனவே இதை ஓர் பெயர் கொண்டு அழைக்க முடியும். இது வெப்ப அடக்கம் (enthalpy) என்று அழைக்கப்படுகிறது, "H" என்பதைல் குறிக்கப்படுகிறது. ஆகவே சம அழுத்த செயல்முறையை எனும் சமன்பாட்டால் விபரிக்கமுடியும். வெப்ப அடக்கமும் மாறாக்கனவளவு தன் வெப்பக்கொள்ளளவும் திறந்த தொகுதி செயல்முறையை ஆராய்கையிலும், மாறாக்கனவளவில் பூச்சிய வேலை நடைபெறும் சந்தர்ப்பங்களிலும் பயனுள்ள கணித கட்டமைப்புக்களாக இருக்கின்றன. ஒர் திறந்த தொகுதியில் வெப்ப அடக்கமானது பாய்மம் கொண்டுள்ள ஆற்றலின் அளவை கண்காணிப்பதற்கான பயனுள்ள கணியமாக உள்ளது. மாறுபடும் கனவளவுடைய குறித்த அளவு (திணிவு "m") வளிமம் மாறும் அடர்த்தி ρ இனை தருகிறது. இப்பின்னணியில் இலட்சிய வளிம விதியானது பின்வருமாறு எழுதப்படுகிறது இங்கு "T" என்பது வெப்பவியக்கவியல் வெப்பநிலை. R மற்றும் M மாறிலியாக இருக்கையில், அமுக்கம் "P" can stay constant as the density-temperature quadrant (ρ,"T" ) undergoes a squeeze mapping. வி. என். சிதம்பரம் வி. என். சிதம்பரம் என்பவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தவர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் மதுரையில் வசித்து வந்தார். சென்னையிலுள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சில தமிழ் நூல்களையும் எழுதியிருக்கிறார். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு கமலா என்கிற மனைவியும், வள்ளியப்பன், நாகப்பன், கணேசு என்கிற மூன்று மகன்களும் உள்ளனர். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். “தூங்கா நகரம்” திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். (முழுமையடையவில்லை- தகவல் தெரிந்தவர்கள் சேர்க்கலாம்.) கவிஞர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர் சிதம்பரம் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது நேரில் சந்தித்து பேசிய ஒரே நண்பர் இவர்தான். மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2012, நவம்பர் 24 அன்று மரணமடைந்தார்., , இவருடைய உடல் அவரது சொந்த ஊரான ராங்கியத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வஸந்த்! வஸந்த்! (புதினம்) வஸந்த்!வஸந்த்!, சுஜாதாவால் எழுதப்பட்டு கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது. 2005 ஆம் ஆண்டு உயிர்மைப் பதிப்பகத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. உக்கல் என்ற இடத்தில் உள்ள "ராஜராஜன் கிணறு" பற்றி செய்யும் பேராசிரியரின் குறிப்புகள் பறிபோகின்றன. அதை மீட்கச் செல்லும் வசந்த் என்ன ஆகிறார், கணேஷ் அந்த கிணற்றின் மர்மத்தைக் கண்டுபிடிப்பதாகவும் செல்லும் கதை. 24 ரூபாய் தீவு (புதினம்) 24 ரூபாய் தீவு, தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை. கொலையுதிர்காலம் (புதினம்) கொலையுதிர்காலம், தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. உரிய வயதை அடைந்ததும் தனது சொத்துக்களைத் தன் பாதுகாப்பாளர் ஆகிய சித்தப்பாவிடம் இருந்து பெற நினைக்கும் ஒரு பெண். அந்த பெண்ணின் சொத்தில் மறைந்துள்ள மர்மங்கள், அதன் பின்னணியில் நடக்கும் கொலைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் துப்புத் துலக்கும் கதை. காயத்ரி (புதினம்) காயத்ரி, 1970 களில் தினமணி கதிரில் சுஜாதாவால் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ஒருவருக்கு பழைய புத்தகக்கடையில் விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட ஒரு நோட்டு கிடைக்கிறது. புதிதாக மணமுடித்து வரும் ஒரு பெண் தனது புகுந்தவீட்டில் இருப்பவர்களின் மர்மமான நடவடிக்கைகளை எழுதி வைத்து தன்னைக் காப்பாற்றுமாறு கோருகிறாள். எழுத்தாளர் வக்கீல் கணேஷிடம் உதவி கேட்கிறார். அந்த மர்ம வீட்டில் நடந்தது என்ன, அப்பெண்ணை மீட்டார்களா என்பதே கதை. இப்புதினம் 1977 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.