வெண்பாவூர் வெண்பாவூர் என்பது தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். வெண்பாவூர் பெரம்பலூர்லிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. பாண்டகப்பாடி, வெங்கலம், நெய்க்குப்பை, அனுக்கூர், வேப்பூர், ஆலத்தூர், கிருஷ்னாபுரம், வ.களத்தூர், அகரம்- பெரம்பலூர், கரியனூர்,நூத்தப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் வீரகனூர் பூளை (செடி) பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் பொழுது சேர்க்கின்றனர். கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் "கற்பேதி" என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் "கண்பீளை" என்றும் பெயர் உருவாயின. இது சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை ஆகும். இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம், முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும். சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS) இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக்குடித்தால் அரை மணி நேரத்துல வயிற்று வலி. கிட்னியில் கல் சரியாகிடும்" பூளாப்பூவைப் போல் காணப்படும் பேப்பூளாப் பூ புதிய குடியேற்றவாதம் புதிய குடியேற்றவாதம் ("Neocolonialism") என்பது நேரடியான இராணுவ, அரசியல் ஆதிக்கத்துக்குப் பதிலாக, முதலாளித்துவம், உலகமயமாக்கம், கலாச்சார சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை (குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவால் குடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகளை) தன் ஆதிக்கத்துக்குள் கொணர்கின்ற செயல்பாட்டைக் குறிக்கும். இத்தகைய குடியேற்ற ஆதிக்கம் பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் நிகழ்கின்ற திணிப்புகளாக இருக்கலாம். ஒரு நாடு தனது கலாச்சாரத்தை, மொழியை, தொடர்பு ஊடகங்களை மற்றொரு நாட்டில் பரப்பும்போது அங்கே புகுத்தப்பட்ட நிறுவனங்கள் சந்தையை அந்நாட்டில் விரிவாக்க முடியும். இவ்வாறு, முதலில் பெரிய அளவில் தீங்கில்லாதவை போல் தொடங்கிய வணிக நடவடிக்கைகள் இறுதியில் கலாச்சாரத் தீங்குகளை விளைவிக்கும் காரணிகளாக மாறிவிடுவதால் புதிய குடியேற்றவாதம் தலைதூக்குகிறது. புதிய குடியேற்றவாதம் ("Neocolonialism") என்னும் சொல் முதன்முதலாக குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah) என்னும் ஆப்பிரிக்கப் பெருந்தலைவரால் உருவாக்கப்பட்டது. நிக்ரூமா இங்கிலாந்தின் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற கானா நாட்டின் முதல் அதிபராக இருந்தவர். பின்னர் "புதிய குடியேற்றவாதம்" என்ற சொல் நோம் சோம்சுக்கி, ழான் பால் சாத்ரே போன்ற இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள், மெய்யியலார் ஆகியோரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளின் விவகாரங்களில் வளர்ச்சியடைந்த நாடுகள் தலையீடு செய்வதை விமர்சிப்பதற்காக "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குடியேற்ற ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்னணியில் இன்றைய உலக நிலையை விமர்சிப்பவர்களாக உள்ளார்கள். இந்த ஆய்வாளர்களின் நூல்களில் காணப்படும் விமர்சனங்கள் கீழ்வருவன: இரண்டாம் உலகப் போருக்குப்பின் பல முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகள் விடுதலை பெற்றன. ஆனால் அந்நாடுகளைத் தம் குடியேற்றப் பகுதிகளாக மாற்றியிருந்த ஆதிக்க நாடுகள் பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகளைத் தமக்கு சாதகமாக உருவாக்கி, குடிமைப்பட்ட நாடுகள் தொடர்ந்து குடியேற்ற ஆதிக்க நாடுகளைச் சார்ந்துநிற்கும் நிலையை நீடிக்கச் செய்கின்றன. மேலும், "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் இரு உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது. முதலில், இன்றும் கூட சில நாடுகள் தம் நாட்டுக்கு வெளியே பிற பகுதிகளையும் அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களையும் தம் ஆதிக்கத்துக்குள் குடியேற்றப் பாணியில் வைத்திருப்பதை அச்சொல் குறிக்கும். இவ்வாறு பிற நிலப்பகுதிகளையும் மக்களையும் குடியேற்றப் பாணியில் கட்டுப்படுத்துவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களுக்கு எதிராகவும் நடைபெறுகிறது. இரண்டாவது, இன்றைய முதலாளித்துவ வியாபார முறைகள் முன்னாளைய குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கும். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் முன்னாளைய குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைத் தம் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவது ஒருவகை புதிய குடியேற்றவாதம் ஆகும். இது, வரலாற்றில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை பல ஐரோப்பிய நாடுகள் கடல்கடந்து சென்று தமக்கென குடியேற்றப் பகுதிகளை உருவாக்கி, அல்லது பிற நிலப்குதிகளில் தமக்கு சாதகமாக வணிகத்தில் ஈடுபட்ட செயல்பாட்டை ஒத்தது. நடைமுறையில் "புதிய குடியேற்ற வாதம்" என்பது இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடுகள் வலுக்குறைந்த நாடுகளில் தமக்கு சாதகமாகத் தலையீடு செய்வதைக் குறிக்கும். இது இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து நிகழ்கிறது. எனவே, "புதிய குடியேற்றவாதம்" என்பது ஒருவகையில் "பொருளாதாரப் பேரரசுவாதமாக" ("economic imperialism") உருவெடுத்துள்ளது. முன்னாட்களில் அரசியல் மற்று இராணுவ ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட குடியேற்றவாதம் இன்று பொருளாதார அடிப்படையில் "புதிய" குடியேற்றவாதமாகத் தழைக்கின்றது. மேற்கூறிய கருத்துகளை முன்வைத்து, பல ஆய்வாளர்கள் "புதிய குடியேற்றவாதத்தை" விமர்சிக்கிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் தோன்றி, குடியேற்ற ஆதிக்க நாடுகள் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டங்கள் நிகழ்த்தின. இவ்வாறு குடியேற்ற ஆதிக்க நாடுகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற முன்னாள் குடிமைப்பட்ட நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் புழக்கத்துக்கு வந்தது. தங்களுக்கு விடுதலை கிடைத்த பிறகும் தங்கள் நாடுகளில் முன்னாளைய குடியேற்ற ஆதிக்க நாடுகளும் பிற வளர்ச்சியடைந்த நாடுகளும் புதியதொரு குடியேற்ற ஆதிக்க முறையைத் திணிக்கத் தொடங்கியுள்ளன என்று குறைகூறப்பட்டது. இவ்வாறு குறைகூறியவர்களுள் புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சிலவற்றின் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் போன்றோர் அடங்குவர். பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த கானா நாட்டின் முதல் அதிபராக 1957இல் பதவியேற்ற குவாமே நிக்ரூமா என்னும் தலைவர் "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லைப் பயன்படுத்தி, குடியேற்ற ஆதிக்க நாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் எழுதிய "புதிய குடியேற்றவாதம், பேரரசுவாதத்தின் கடைசிக் கட்டம்" ("Neo-Colonialism, the Last Stage of Imperialism") (1965) என்னும் நூலில் நிக்ரூமா "புதிய குடியேற்றவாதம்" என்றால் என்னவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். நிக்ரூமா எழுதிய நூலின் தலைப்பு உருசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் என்பவரின் "பேரரசுவாதம், முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம்" ("Imperialism, the Last Stage of Capitalism")(1916) என்னும் நூலின் தலைப்பை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலில் லெனின், முதலாளித்துவம் வளர்ந்து 19ஆம் நூற்றாண்டின்.பேரரசுவாதத்துக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிட்டார். நுக்ரூமா கூற்றுப்படி, "முதலாளித்துவ நாடுகளில் நிலவுகின்ற சமூகப் போராட்டங்களை முன்னாட்களில் குடியேற்ற ஆதிக்க நாடுகள் குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்தன. அதுபோல இன்று புதிய குடியேற்றவாதம் செயல்படுகிறது. முன்னாட்களில் குடியேற்ற ஆதிக்கம் என்பது பேரரசுவாதத்தின் கருவியாக இருந்தது. இன்று புதிய குடியேற்றவாதம் குடியேற்ற ஆதிக்கத்தின் கருவியாக மாறியுள்ளது." மேலும், நிக்ரூமா கூறினார்: உலகத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள நாடுகளை முன்னேற்றுவதற்கு அல்ல, அவற்றைச் சுரண்டும் நோக்கத்தோடே வெளிநாட்டு முதலீட்டைப் புதிய குடியேற்றவாதம் பயன்படுத்துகிறது. பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளியைக் குறைப்பதற்கு மாறாக, அதை அதிகரிக்கும் நோக்கத்தோடே புதிய குடியேற்றவாதம் ஏழை நாடுகளில் முதலீடு செய்கிறது. புதிய குடியேற்றவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலீடு வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குத் தேவையல்ல என்பதன் அடிப்படையில் அல்ல. மாறாக, முதலீட்டைத் தவறாகப் பயன்படுத்தி, வளரும் நாடுகளை மேலதிக வறுமை நிலைக்குத் தள்ளாமல் தடுக்கும் பொருட்டே அத்தகைய எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகள் விடுதலை அடைந்ததும் அந்நாடுகளின் பல தலைவர்களும் அறிஞர்களும் "அனைத்து ஆப்பிரிக்க இயக்கம்" ("Pan Africanism") என்னும் அமைப்புக்கு உயிர்கொடுத்தார்கள். அந்த அமைப்பு "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லைப் புழக்கத்துக்குக் கொணர வழிவகுத்தது. 1955இல் இந்தோனேசியாவில் பாண்டுங் நகரில் முன்னாள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க குடிமைப்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினர் ("Bandung Conference"). அம்மாநாட்டில் அணிசேரா நாடுகள் இயக்கம் ("Non-Aligned Movement") என்றொரு அமைப்பை உருவாக்க முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகள் உறுதிபூண்டன. மேற்கத்திய நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் தனித்தனி அணிகளாகப் பிரிந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வேளையில், குடிமைப்பட்ட நிலையிலிருந்து புதிதாக விடுதலையடைந்த நாடுகள் மேற்கூறிய இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிப்பது என்று பாண்டுங் மாநாட்டில் முடிவானது. அம்மாநாட்டில் "புதிய குடியேற்றவாதம்" விமர்சனத்துக்கு உள்ளானது. 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் கூடிய "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாடு" (All-African Peoples' Conference = AAPC) புதிய குடியேற்றவாதம் பற்றி விவாதித்தது. டூனிசு நகரில் 1960இலும், கெய்ரோ நகரில் 1961இலும் கூடிய இம்மாநாடு புதிய குடியேற்றவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. குறிப்பாக, முன்னாளைய குடியேற்ற ஆதிக்க நாடாகிய பிரான்சு, தன் ஆதிக்கு உட்பட்டிருந்த முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து, ஓர் ஒன்றியத்தை உருவாக்கி, "புதிய" குடியேற்றவாதத்தைத் தொடர்ந்ததை "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாடு" எதிர்த்தது. குவாமே நிக்ரூமா உருவாக்கிய "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில்" பரவலாக ஏற்கப்பட்ட சொல்லாகவும் கருத்தாகவும் மாறியது. புதிய குடியேற்றவாதம், புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டிய எதிரியாக மாறிற்று. குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில், அணிசேரா நாடுகள் இயக்கம் தோன்றி வலுவடைந்த காலத்தில், "ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் கூட்டுறவு அமைப்பு" (Organization of Solidarity with the People of Asia, Africa and Latin America) வளர்ந்த பின்னணியில், குடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் புதிய குடியேற்றவாதத்தைத் தாங்கள் எதிர்த்துப் போராடவேண்டிய முக்கிய எதிரியாகப் பார்த்தன. குடியேற்றவாதத்தை ஆயுதம் தாங்கி எதிர்த்த சில விடுதலை இயக்கங்கள் "புதிய குடியேற்றவாதத்தையும்" எதிர்த்தன. 1970களில் போர்த்துகீசிய குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொசாம்பிக், அங்கோலா போன்ற நாடுகளில் மார்க்சிய இயக்கங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஃப்ரெலிமோ ("FRELIMO") மற்றும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் (எம்.பி.எல்.ஏ ["MPLA"]) போன்ற இயக்கங்களை இவண் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்த இயக்கங்கள், தம் நாடுகள் குடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலை அடைந்ததும் அங்கு ஆட்சி அமைத்தன. புதிய குடியேற்றவாதத்தைத் தொடர்ந்து எதிர்த்தன. புதிய குடியேற்றவாதத்தைக் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடு, தான் பிற நாட்டில் பொருளாதார, இராணுவ, கலாச்சார ஆதிக்கத்தைப் புகுத்துவது அப்பிற நாட்டின் நன்மைக்காகவே என்று வாதாடி நியாயப்படுத்துவது "கரிசனையுள்ள புதிய குடியேற்றவாதம்" (paternalistic neocolonialism) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வாதமும் நியாயப்படுத்தலும் பிற நாட்டைச் சுரண்டுவதற்கும், இன வேறுபாட்டு ஒதுக்கலைக் கடைப்பிடிப்பதற்கும் சாக்குப்போக்காவே உள்ளது என்று புதிய குடியேற்றவாதத்தை எதிர்ப்போர் கூறுகின்றனர். முன்னாட்களில் குடிமைப்பட்ட நாடுகளைத் தம் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்குத் தொடர்ந்து உட்படுத்துவதே "கரிசனையுள்ள குடியேற்றவாதம்" என்ற பெயரில் நடைபெறுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் குடியேற்ற ஆதிக்க நாடுகள் குடிமைப்பட்ட நாடுகளுக்குத் தாங்கள் நாகரிகத்தைக் கொணர்வதாகக் கூறி, அந்த நாடுகளைச் சுரண்டியது போன்றதே "கரிசனையுள்ள புதிய குடியேற்றவாதம்" என்பது அந்த விமர்சகர்களின் கருத்து. புதிய குடியேற்றவாதம் என்றால் என்னவென்று விளக்குவதற்கு வழக்கமாகச் சுட்டிக்காட்டப்படுகின்ற எடுத்துக்காட்டு "பிரான்சுஆப்பிரிக்கா" ("Françafrique") என்பதாகும். இக்கூட்டுச்சொல்லின் பகுதிகள் "பிரான்சு", "ஆப்பிரிக்கா" என்னும் இரு சொற்கள் ஆகும். பிரான்சு நாடு தான் முன்னாட்களில் குடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய சில நாடுகளின் தலைவர்களோடு மிக நெருங்கிய உறவுகொண்டிருந்ததை "பிரான்சுஆப்பிரிக்கா" என்னும் சொல் குறிக்கிறது. இச்சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் ஐவரி கோஸ்ட் நாட்டு அதிபர் ஃபேலிக்சு ஊஃபூவே-புவாஞி ("Félix Houphouët-Boigny") என்பவர் என்று தெரிகிறது. பிரான்சு நாடு ஆப்பிரிக்க நாடுகளோடு நல்லுறவு கொண்டிருக்கும் நிலையை விளக்க நல்ல பொருளில்தான் அவர் அச்சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால், பிரான்சு தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வாறு நெருங்கிய உறவை ஏற்படுத்தியது என்றும், அந்த உறவு ஒருதலைச் சார்பாக அமைந்தது என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தன. ரால்ப் வால்டோ எமேர்சன் ரால்ப் வால்டோ எமேர்சன் ("Ralph Waldo Emerson ") (மே 25, 1803 – ஏப்பிரல் 27, 1882) என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" ("Transcendentalism") என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார். அவர் தனிமனிதவாத ஆதரவாளராகவும், சமூகத்தில் நெருக்கடி கொணர்கின்ற காரணிகளை விமர்சிக்கும் முன்னறிவு கொண்டவராகவும் போற்றப்படுகிறார். அவர் தம் சிந்தனைகளை எண்ணிறந்த கட்டுரைகள் வழியாகவும், ஐக்கிய அமெரிக்கா நாடெங்கும் வழங்கிய சொற்பொழிவுகள் வழியாகவும் வெளியிட்டுள்ளார். எமேர்சன் சம கால சமய நம்பிக்கைகள், சமூகக் கருத்துகள் ஆகியவற்றிலிருந்து படிப்படியாக விலகிச் சென்றார். 1836இல் "இயற்கை" ("Nature") என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் அவர் "கடப்புவாதம்" ("Transcendentalism") என்ற தமது மெய்யியல் கொள்கையை முன்வைத்தார். புகழ்மிக்க அந்தக் கட்டுரை வெளியீட்டுக்குப் பின் எமேர்சன் 1837இல் "அமெரிக்க அறிஞர்" ("The American Scholar") என்ற தலைப்பில் ஒரு பேருரை ஆற்றினார். அவ்வுரை பற்றி விமர்சித்த ஆலிவர் வெண்டெல் ஹோம்சு என்பவர், அதை "அறிவுசார்ந்த விடுதலை முழக்கம்" என்று விவரித்துள்ளார். எமேர்சன் வெளியிட்ட முக்கிய கட்டுரைகள் முதலில் பேருரைகளாக வழங்கப்பட்டவை. பின்னர் எமேர்சன் அவற்றை மறுபார்வை செய்து அச்சுக்கு அனுப்பினார். அவர் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் அவருடைய சிந்தனைகளின் மையக் கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவை முறையே 1841, 1844 ஆண்டுகளில் வெளியாயின. அக்கட்டுரைத் தொகுப்புகளில் அவர் எழுதிய "தற்சார்பு" ("Self-Reliance"), "மேல்-ஆன்மா" ("The Over-Soul"), "வட்டங்கள்" ("Circles"), "கவிஞன்" ("The Poet"), "அனுபவம்" ("Experience") போன்ற கட்டுரைகள் அடங்கியுள்ளன. "இயற்கை" ("Nature") என்னும் கட்டுரையும் மேலே குறிப்பிட்ட கட்டுரைகளும் 1830களின் நடுப்பகுதியில் இருந்து 1840களின் நடுப்பகுதிவரையான காலக்கட்டத்தில் வெளியானதோடு, எமேர்சனின் எழுத்துவளம் மிக்க காலத்தைச் சார்ந்தவையாகவும் உள்ளன. எமேர்சன் இறுகிய மெய்யியல் கொள்கைகளை ஏற்காதவர். பல பொருள்கள் பற்றிய சிந்தனைகளை அவர் வழங்கியுள்ளார். அவர் விளக்கும் சில மெய்யியல் கருத்துகளுள் "தனித்துவம்", "சுதந்திரம்", "மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்", "ஆன்மாவும் சூழல் உலகும் உறவு கொண்டவை", "பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு" போன்றவை அடங்கும். எமேர்சனின் மெய்யியல் சிந்தனைகளை விளங்கிக்கொள்வது கடினம் என்று சம காலத்தவர் கருதினார்கள். அவரது எழுத்துப் பாணியைப் புரிவது இன்றும் கடினம்தான். என்றாலும், அமெரிக்க சிந்தனையாளர்களுள் தலைசிறந்த ஒருவராக எமேர்சன் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுள்ளார்கள். எமேர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், "தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக் கொள்கை" என்றுரைத்தார். Individual essays Poems பிளட் டைமன்ட் (திரைப்படம்) பிளட் டைமன்ட் (Blood Diamond) 2006 இல் வெளியான அமெரிக்க அரசியல் திரைப்படமாகும். மார்ஷல் ஹெர்ஸ்கோவிக்ஸ், கிரஹாம் கிங், பவுலா வெயின்ஸ்டைன், எட்வர்ட் சிவிக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு எட்வர்ட் சிவிக் ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, ஜென்னிபர் கானேலி, ஜிமான் ஹான்சு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்றாம் பார்வை (ஆவணத் தொலைக்காட்சித் தொடர்) மூன்றாம் பார்வை என்பது கனடாவில் தமிழ் வண்ணில் ஒளிபரப்பும் ஒர் ஆவண நிகழ்பட நிகழ்ச்சி ஆகும். இது ஈழத்தின் தற்கால வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் ஆய்கிறது. புனர்வாழ்வு என முன்னெடுக்கப்படும் ஏமாத்துக்கள், யாழ்ப்பாணத்தில் பரவிவரும் மதுபான விற்பனை நிலையங்களும் குடிப்பழக்கமும், வெளிநாட்டு மாப்பிளை மோகம் போன்ற தலைப்புகளில் இந்த ஆவணப் படங்கள் அமைகின்றன. குற்றமும் அதன் பின்னணியும் குற்றமும் அதன் பின்னணியும் என்பது விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் ஓர் ஆவணத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இதன் நிகழ்ச்சிகள் பல்வேறு சம்பவங்களையும் நம்பிக்கைகளையும் சுருக்கமாக ஆராய்கின்றன. குற்றச் செயல்கள், அபூர்வச் செயல்கள், வரலாற்றுச் செய்திகள் போன்றவை இவற்றுள் அடங்கும். ரங்கோ (திரைப்படம்) ரங்கோ (ஆங்கிலம்:Rango) 2011 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். கோர் வேர்ப்பீன்ஸ்கி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜானி டெப், ஐஸ்லா பிஷர், அபிகெயில் பிரெஸ்லின், ஆல்ஃப்ரெட் மோலினா, பில் நிஹி, ஹாரி டீன் ஸ்டாண்டன், ரே வின்ஸ்டன், திமோதி ஒலிபான்ட், நெட் பெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. தொல்லியல் சுடர்கள் (நூல்) தொல்லியல் சுடர்கள் என்பது முனைவர் சு. இராசவேலு என்பவரால் எழுதப்பட்ட தொல்லியல் பதிவு நூலாகும். இதில் குறிப்பிடப்படும் "மாமல்லை அருகில் சங்ககால முருகன் கோவில்"' என்ற தலைப்பில் கண்டறியப்பட்ட கோவிலைக் கொண்டு அதை சங்கப்பாடல்களிலும் இடைக்கால மெய்க்கீர்த்திகளில் கூறப்படும் செய்திகளைக் கொண்டும் இது நீர்ப்பெயற்று என்ற சங்ககாலத் துறைமுகம் என்று நிறுவப்படுகிறது. மேலும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே யுனெசுக்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக மற்றும் இந்திய மரபுச்சின்னங்கள் பற்றி கூறப்பட்டுளது. மணிச்சிகை மணிச்சிகை என்பது குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகத் தொகுத்துக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. இந்த மலர் பற்றிய செய்தி வேறு சங்கப்பாடல்களில் இல்லை. என்றாலும் இந்த மலரின் பெயரைக்கொண்டு இந்த மலர் இன்னதென உணரமுடிகிறது. மணி என்னும் முன்னொட்டு மணியாங்கல் என்னும்போது சிறிய கல்லை உணர்த்தும். மண் < மணல் என்பனவும் இச்சொல்லின் வேரிலிருந்து தோன்றியவை. முதலான சொற்களில் மணி என்பது கருநீல நிறத்தையும், கருநிறத்தையும் உணர்த்துதலைக் காணலாம். இதனை மனத்திற்கொண்டு நீல(கரு)நிறத்தை உச்சியில் கொண்ட குன்றிமணியைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றர். ஆயின் இது குன்றிமணியைக் குறிக்கும். ஆசியக் கிண்ணம் 2010 ஆசியக் கிண்ணம் 2010 ("Asia Cup 2010") துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு சூன் 15 முதல் சூன் 24 வரை இலங்கையில் இடம்பெற்றன. ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 81 ஓட்டங்களால் வென்று 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கியது. போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக பாக்கித்தானிய அணித்தலைவர் சாகித் அஃபிரிடி தெரிவு செய்யப்பட்டார். அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்றன. அனைத்தும் பகல்/இரவு ஆட்டங்களாக நடைபெற்றன. போட்டியில் கலந்துகொள்ளும் நான்கு அணிகளும் போட்டியில் பங்குபெறும் வீர்ர்களை சூன் மாத தொடக்கத்தில் அறிவித்தன. "அனைத்தும் உள்ளூர் நேரப்படி (UTC+05:30)" அப்பல்லோ 13 (திரைப்படம்) அப்பல்லோ 13 ("Apollo 13") 1995 இல் வெளிவந்த திரைப்படமாகும். தோல்வியடைந்த அப்பல்லோ 13 விண்கலம் பற்றிய திரைப்படமாகும். ரான் ஹவர்டு இயக்கினார். டொம் ஹாங்க்ஸ் நடித்துள்ளார். மராஅம் (மரம்) மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்த செய்தி நமக்குத் தெரியும். மராஅம் மலர் பயன்பாடு ஆதி (கணிதம்) கணிதத்தில் யூக்ளிடிய வெளியின் ஆதி அல்லது ஆதிப்புள்ளி ("origin") என்பது ஒரு சிறப்புப் புள்ளி. இடவெளியில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் அமைவும் இப்புள்ளியை ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இப்புள்ளியின் வழக்கமான குறியீடு "O". கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் அதன் அச்சுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாக இது அமையும். யூக்ளிடிய வெளியில் எந்தவொரு புள்ளியும் ஆதிப்புள்ளியாகக் கட்டற்றுத் தேர்ந்தெடுக்கப் படலாம். பெரும்பாலும் வழக்கமான ஆயமுறைமைகள் இருபரிமாணம் அல்லது முப்பரிமாணத்தில் உள்ளன. இருபரிமாண ஆயமுறைமை ஒரு தளத்தில் அமைந்த இரு செங்குத்து அச்சுகளையும் முப்பரிமாண ஆயமுறைமை ஒரு இடவெளியில் அமைந்த மூன்று செங்குத்து அச்சுகளையும் கொண்டிருக்கும். ஆதிப்புள்ளி இந்த அச்சுகள் ஒவ்வொன்றையும் நேர் அரைஅச்சு மற்றும் எதிர் அரைஅச்சு என இரண்டு சமபகுதிகளாகப் பிரிக்கும். ஆதிப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு மற்ற புள்ளிகளின் இருப்பிடத்தை அவற்றின் அச்சுதூரங்கள் மூலம் குறிக்கலாம். ஒரு புள்ளியின் ஒவ்வொரு அச்சின் மீதான வீழல்கள் (நேர் அரைஅச்சு அல்லது எதிர் அரைஅச்சின் மீதானவை) அப்புள்ளிக்குரிய அந்தந்த அச்சுதூரங்கள் எனப்படும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் எப்பொழுதும் பூச்சியமாகவே இருக்கும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் இரு பரிமாணத்தில் (0,0) மற்றும் முப்பரிமாணத்தில் (0,0,0). கலெப்பெண் தளத்தில் மெய் அச்சும் கற்பனை அச்சும் வெட்டிக்கொள்ளும் புள்ளி ஆதிப்புள்ளி. இப்புள்ளி 0 + 0"i" என்ற கலப்பெண்ணால் குறிக்கப்படுகிறது.. ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரான ஒரு வரைபடத்தை 180 பாகைகள் சுழற்றினால் அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. ஒரு வரைபடம் x-அச்சு மற்றும் y -அச்சு இரண்டிலும் பிரதிபலிக்கப்படும்போது அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையெனில் அந்த வரைபடம் ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரானது. நேர்மாறு சார்புடைய சார்புகளும் அவற்றின் நேர்மாறுகளும் கோடு y = x கோட்டைப் பொறுத்து சமச்சீரானவையாக இருக்கும். இக்கோடு ஆதிப்புள்ளி வழியே செல்லும் கோடாகும். நெ. து. சுந்தரவடிவேலு பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, "Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu", அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.இவரது பெற்றோர் துரைசாமி, சாரதாம்பாள் தம்பதியினர். 1951 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும். இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர். எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். சுந்தரவடிவேலு, 1951 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார். அப்போது நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கிடைத்ததும் இவர் காலத்தில்தான். தமிழ் நாட்டில் சொத்து வரியுடன் சேர்த்து பெறப்படுகிற நூலக வரி திட்டம் இவர் பொது நூலக இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார். சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை "வள்ளுவர் வரிசை" என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். கான்சி கான்சி (ஆங்கிலம்: Cangjie, எளிய சீனம்: 仓颉; மரபுச் சீனம்: 倉頡; பின்யின்: cāngjié; வேட்-சில்சு: Ts'ang-chieh) என்பது பண்டைச் சீனாவின் (கிமு 2650) ஒரு முக்கிய நபர் ஆவார். இவர் சீனாவின் முதல் பேரரசர் ஆகிய மஞ்சள் பேரரசரின் அதிகாரபூர்வ வரலாற்றாளராகவும் சீன எழுத்துக்களின் கண்டுபிடிப்பாளாராகவும் முன்னிறுத்தப்படுகிறார். இவர் ஒரு வரலாற்று நபர் என்பதை விட ஒரு தொன்ம செவி வழிக்கதை கதாபாத்திரமாகவே கருதப்படுகிறார். யாங் யான்யுவான் யாங் யான்யுவான் (ஆங்கிலம்: Zhang Yanyuan, எளிய சீனம்: 张彦远; மரபுச் சீனம்: 張彥遠; பின்யின்: Zhāng Yànyuǎn; வேட்-சில்சு: Chang Yenyüan, காலம்: கிபி 815- 877) என்பவர் ஒரு பின்னைய தாங் வம்ச வரலாற்றாசிரியர், அறிஞர், calligrapher, ஓவியர். வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இவர் ஓவியத்தையும் calligraphy பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவற்றுள் Fashu Yaolu (法書要錄, "Compendium of Calligraphy" - ) என்ற நூலும் Lidai Minghua Ji (歷代名畫記, "வரலாற்றில் புகழ்பெற்ற ஓவியங்கள்") என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. ஓராக்கிள் எலும்பு ஓராக்கிள் எலும்பு (ஆங்கிலம்: Oracle bones, சீனம்: 甲骨; பின்யின்: jiǎgǔ) எனப்படுவது எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் எலும்பை ஆகும். காளையின் தோல் பட்டையும், ஆமையின் மார்புப்பரிசமும் இவ்வாறு பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான இந்த ஓராக்கிள் எலும்புகள் சாங் வம்ச (கிமு 1600 - 1046) காலத்தைச் சார்ந்தவை. இந்த எழுத்துக்கள் உள்ள எலும்புகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தைப் பற்றிய தகவல்களை எதிர்வுகூற முடியும் என்று நம்பட்டது. கடம்பு மரம் கடம்ப மரம் ("Anthocephalus indicus, Anthocephalus Cadamba") முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன. முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று என்பது வரலாற்று உண்மை. குப்பி சோவியத் படைகளின் தாலின் காலிசெய்தல் சோவியத் படைகளின் தாலின்காலிசெய்தல் ("Soviet evacuation of Tallinn") என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்தின் படைகள் நாசி ஜெர்மனியின் படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த தாலின் நகரைக் காலிசெய்து கடல்வழியாகப் பின்வாங்கியதைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 1941 இல் நடைபெற்ற இக்காலிசெய்தல் நடவடிக்கை தாலின் பேரழிவு ("Tallinn disaster") என்றும் சோவியத் டன்கிர்க் ("Soviet Dunkerque") என்றும் அழைக்கப்படுகிறது. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த பால்டிக் நாடுகளான லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றை ஜெர்மானியப் படைகள் எளிதில் கைப்பற்றின. ஆகஸ்ட் மாத இறுதியில் எஸ்டோனியாவின் தலைநகர் தாலினை அவை முற்றுகையிட்டன. பால்ட்டிக் பகுதியில் இருந்த சோவியத் படைகளும் குடிமக்களும் தாலின்துறைமுகம் மூலம் கடல்வழியாகத் தப்ப முயன்றனர். இதனைத் தடுக்க ஜெர்மானிய மற்றும் ஃபின்லாந்தியக் கடற்படைகள் தாலின்துறைமுகத்துக்கு வெளியே கடலில் கண்ணிவெடிகளை இறைத்திருந்தன. ஜெர்மானியப் படைவளையம் இறுகியதால், ஆகஸ்ட் 27 ஆம் தேதி சோவியத் படைகள் தாலின் நகரைக் காலிசெய்து, துறைமுகத்தில் கப்பல்களில் ஏறத்தொடங்கின. இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுக்கிடையே ஐந்து நாட்கள் இக்காலிசெய்தல் நடைபெற்றது. சோவியத் செம்பதாகை பால்ட்டிக் கடற்படைப் பிரிவின் பாதுகாப்போடு, குடிமக்கள் மற்றும் படைகளைத் தாங்கிய நான்கு சோவியத் கப்பல் கூட்டங்கள் தாலினிலிருந்து கிளம்பின. ஜெர்மானிய வான்படை குண்டுவீசிகளின் தொடர் தாக்குதல்களிடையே சோவியத் கப்பல் கூட்டங்கள் தாலினிலிருந்து தப்பின. ஜெர்மானிய குண்டுவீச்சால் 13 சோவியத் போர்க்கப்பல்களும் 34 சரக்குக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. ஏறத்தாழ 165 கப்பல்கள் தப்பி பத்திரமாக சோவியத் துறைமுகங்களுக்குச் சென்றன. ஆலடி அருணா வை. அருணாசலம் என்ற ஆலடி அருணா (சூலை 09, 1933 - திசம்பர் 31, 2004) இவர் மூன்று முறை 1967 , 1971 மற்றும் 1996 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். 2004, திசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 1977 இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆலடிப்பட்டி அருணாசலம் என்ற ஆலடி அருணா திருநெல்வேலி மாவட்டம், ஆலடிப்பட்டி என்னும் ஊரில் வைத்தியலிங்க நாடார் - பத்திரகாளி அம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். இவருடைய தகப்பனார் ஒரு விவசாயி. இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஆலடிப்பட்டி தொடக்கப்பள்ளியிலும், மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றார். ஆலடி அருணா இளம் வயதிலிருந்தே தமிழ் சிந்தனைவாதியாகவும் பேச்சாளராகவும் இருந்தார். தன் கல்லூரி நாட்களில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் வெற்றிக் கண்டார். கமலா என்பவரை மணந்து ஐந்து மகன்களையும், ஒரு மகளையும் பெற்றெடுத்தார். இவருடைய மகன்கள் மதிவாணன், அமுதவாணன், அன்புவாணன், தமிழ்வாணன், எழில்வாணன் ஆகியோர்கள். இவருடைய மகள் பூங்கோதை ஆவார். தந்தை பெரியாரின் பகுத்தறிவாத கொள்கைகளால் கவரப்பட்டு, பகுத்தறிவாதம் குறித்த அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்த தாக்கமே அவரை இளம் மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடச் செய்து, வரலாற்று நிகழ்ச்சியான "இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்" தீவிர பங்காற்ற வைத்தது. 1962ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) கட்சி சார்பில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் அவர் தோல்வியடைந்த போதிலும், பின்னர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு இரண்டு முறையும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டம் முழுதும் உள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்றமடைய முயற்சிகள் செய்தார். ஆலடி அருணா 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதன் மூலம் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தில் பங்காற்றிய அரசியல்வாதியென புகழ்பெற்றார். 1984இல் கட்சியின் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவரை தமிழ்நாடு சார்பில் மாநிலங்கவையில் இடம்பெறச் செய்தார். இந்த காலத்தில், ஆலடி அருணா "போபர்ஸ் ஊழல்" ஆய்வு குறித்த கூட்டு பாராளுமன்ற குழு உறுப்பினராக பணியாற்றினார். எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த பிறகு, அவர் மீண்டும் திமுகவில் இணைந்து, அதன் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கென்று தனி அலுவலகம் கிடைக்கப்பெற்ற முதல் நபராவார். அவர் 1996 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர் ஆனார். அவர் சென்னையில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்படவும், திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி கொண்டு வரவும், மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். வகுத்தற்குறி வகுத்தற்குறி அல்லது அரண (ஆங்கிலம்: "Obelus") என்பது குறுகிய கிடைக் கோடு ஒன்றையும் அதன் மேலும் கீழும் ஒவ்வொரு புள்ளியையும் கொண்ட குறியீடு ஆகும். இக்குறியீடு முக்கியமாகக் கணிதத்தில் வகுத்தற் செயற்பாட்டைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, இது வகுத்தல் குறி எனப்படுகிறது. வகுத்தல் குறியானது முதன்முதலாக 1659இல் ஜோகன் ரான் என்பவரால் எழுதப்பட்ட நூலில் வகுத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. வகுத்தல் குறியானது பிரதானமாக வகுத்தலுக்கான குறியீடாகவே பயன்படுத்தப்படுகின்றது. இக்குறியீடே கணிப்பான்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் வகுத்தற் செயற்பாடு பின்னமாகவும் காட்டப்படுவதுண்டு. அவ்வாறு காட்டும்போது சாய்கோடே பயன்படுத்தப்படுகின்றது. மைக்ரோசாப்ட் விண்டோசில் மாற்று விசை+0247 என்பதன் மூலம் வகுத்தல் குறி பெறப்படும். ஒருங்குறியில் "U+00F7" என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம். லாடெக்சில் "\div" என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம். கோரக்பூர் மாவட்டம் கோரக்பூர் மாவட்டம் (, ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கோரக்பூர் ஆகும். இம்மாவட்டம் கோரக்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கோரக்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கோரக்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,436,275. இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 40வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் கோரக்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.69%.கோரக்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் உள்ளனர். மேலும் கோரக்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.25%. கிறிஸ்டோபர் நோலன் கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார். இலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார். தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார். ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார். அவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும். 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் "லார்சனி". நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது. அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான "பால்லோவிங்" வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது "த டார்க் நைட்" திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது. வில்லியம் லாரன்ஸ் பிராக் வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg, 1 மார்ச்சு 1890 – 1 ஜூலை 1971) ஆஸ்திரேலியாவில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளர். இயற்பியலில் எக்சு கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்ததுடன் எக்ஸ் கதிர் நிறமாலைமானி ஒன்றைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக்குடன் சேர்ந்து 1915 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பிராக் விதியை உருவாக்கியவர். இவர் 1941 இல் இங்கிலாந்தின் வீரராகச் (knight) சிறப்பிக்கப்பெற்றார். தற்சமயம் இவர் நோபல் பரிசு பெற்றோரில் மிகவும் இளையவர் ஆவார். அப்பரிசைப் பெற்றபோது அவருக்கு வயது 25 தான் ஆகியிருந்தது. 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேம்சு டி. வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்த மாபெரும் நிகழ்ச்சியின்போது பிராக் கேம்பிரிட்ஜில் உள்ள கேவெண்டிஷ் சோதனைக்கூடத்தின் இயக்குநராக இருந்தார். அச்சோதனைக் கூடத்தில்தான் வாட்சனும் கிரிக்கும் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்தனர். வில்லியம் லாரன்சு பிராக் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் 1890 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் நாள் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவழி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்த போது அங்கு பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் குவெண்டோலின் பிராக். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. 1921-இல் 'ஆலிசு கிரேசு ஹாப்கின்சன்' என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு மக்கள் பிறந்தனர். 'பில்லி' என அழைக்கப்பட்ட இவர் சிறு வயது முதலே மிகவும் சுறு சுறுப்பாக இருந்த இவர் கணிதம் அறிவியல் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினார். இவருக்கு ஐந்து வயதிருக்கும்போது இவருடைய மூன்று சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. அப்போது வில்லெம் ரோண்ட்கன்‎ எக்சு கதிரைக் கண்டுபிடித்திருந்த நேரமாதலால், இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக் அக்கதிர் முறையைப் பயன்படுத்தி இவருடைய எலும்பு முறிவை அறிந்துகொண்டு சிகிச்சை செய்தார். இது ஆஸ்திரேலியாவில் எக்சு கதிரைப் பயன்படுத்திய முதல் நிகழ்ச்சியாகும். கடற்கரைக்குச் செல்லும் போதெல்லாம் கிளிஞ்சல்கள், கூடுகள் ஆகியவற்றைச் சேமிப்பது இவருடைய வழக்கம். அவ்வாறு சேமிக்கும்போது எதிர்பாராத வகையில் ஒரு புதிய மீனைக் கண்டறிந்தார். அந்த மீன் தற்போது இவருடைய் பெயரால் 'செப்லா பிராக்கில்'(Sepla Braggil) என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் மட்டுமல்லாது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதல், தோட்ட வேலை, இலக்கியம் ஆகியவற்றிலும் இவர் ஆர்வம் செலுத்தினார். படிப்பில் இவருடைய வயதின் தன்மையை மீறிய அறிவுத்திறன் இவருக்கு அமைந்திருந்தது. இவருக்கு பதினைந்து வயதான போது 'அடிலெய்டு பல்கலைக்கழகத்தில்' சேர்ந்தார். 1908-ல் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆனார். 1909-இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கைக்கழகத்தில் சேர்ந்தார். அதே நேரம் இவருடைய குடும்பமும், இங்கிலாந்தின் லீட்சு என்ற இடத்தில் குடியேறியது. திரித்துவக் கல்லூரியில் (Trinity College) ஒரு சிறந்த கணித வல்லுநராகச் சேர்ந்தார். மிக உயர்வான கல்வி ஊக்கத்தொகை இவருக்குக் கிடைத்தது. இவர் தேர்வு எழுதும் சமயம் நிமோனியாவில் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்க நேர்ந்தது. ஆனால், இவருடைய தந்தை இவரை இயற்பியலில் கவனம் செலுத்தும்படி ஆர்வமூட்டினார். அவரும் அவ்வாறே செயல்பட 1911-இல் இயற்பியல் பட்டம் பெற்றார். 1912-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு அங்குள்ள கேவெண்ட்ஷ் ஆய்வுக் கூடத்தில் தன் பணியைத் தொடங்கினார். அப்பொழுது எக்சு கதிர்கள் அலைவடிவம் கொண்டதா? அல்லது துகள்களா? என்ற விவாதம் தொடங்கியிருந்தது. இது பற்றி தந்தையும், மகனும் பல வகைகளில் விவாதித்தனர். எக்சு கதிர்கள் பற்றியும், மேக்சு வான் லாவின் எக்சு கதிர் வகைகள் பற்றியும், ஆய்வு செய்தபோது இவர்களுக்குப் பல வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன. இக்கதிர்கள் சில வகைகளில் அலை வடிவத்திலும் சில வகைகளில் துகள்களாகவும் செயல்படுகின்றன என்பதை உணர்ந்தனர். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு பிராக் விதியை (Bragg's Law) உருவாக்கினர். 1912-ல் நவம்பரில் இந்த ஆய்வுகளை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டனர். எக்சு கதிர்களைக் கொண்டு படிகங்களில் ஆய்வு நடத்திய பிறகு இருவரும் சேர்ந்து 1915-ல் 'எக்சு கதிர்கள் மற்றும் படிக அமைப்பு (X rays and Crystal Structure) என்ற புத்தகத்தை வெளியிட்டனர். முதல் உலகப் போரின் போது இவர் பிரான்சில் இராணுவத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணி புரிந்தார். அந்தப் போரில் இவருடைய இளைய சகோதரர் 'பாப்' (Bob) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பணியில் இருந்தபோதுதான் இவருக்கு நோபெல் பரிசு பெற்ற செய்தி கிடைத்தது. 1919-இல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1937 வரை அப்பதவியில் இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக படிக வரைவுச் சங்கம் (International Union of Crystallography) ஒன்றை நிறுவி அதன் ஆரம்பகாலத் தலைவராகச் செயல் பட்டார். இவர் தந்தையைப் போலவே ராயல் நிறுவனத்தில் பல சிறுவர்களுக்கு அறிவியல் தொடர்பான பல சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார்.1937-38 -ல் தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராகப் பணி புரிந்தார். 1938 மற்றும் 1954-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிஷ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1953-ல் டி. என். ஏ அமைப்பைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரான்சிஸ் கிரிக், ஜேம்சு வாட்சன் என்பவர்கள் இவரின் கீழ் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். கிரிக், வாட்சன், வில்கின்சு ஆகிய மூவரும் 1962-ல் நோபெல் பரிசு பெற பிராக் பரிந்துரை செய்தார். 1954,66 ஆண்டுகளில் ராயல் கழகத்தின் தலைவராகப் பணிபுரிந்தார். பிற்காலத்தில் லாரன்சு 'வடிவத் தொடர்புகளினால் தூண்டப்படும் முன்னேற்றங்கள் (Geometric relations could stimulate progress) என்ற வகையிலும் சிலிக்கேட்டுகள், சிலிக்கேட்டு வேதியல், உலோகவியல், புரத வேதியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். ராயல் நிறுவனத்தில் புரத மூலக்கூறுகளில் எக்சு கதிர்களைச் செலுத்தி அவற்றின் சிக்கல்களை ஆராய்வதற்கு என தனிப்பட்ட ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். இவருடைய சிறப்பான சொற்பொழிவுகளாலும் இவரின் செயல்பாட்டுத் திறனாலும் இவருடைய ஆய்வுத் துறைகளில் பெரிதும் போற்றப்பட்டார். சோடியம் குளோரைடு என்ற வேதிச் சேர்மம், சோடியம் குளோரைடு என்ற மூலக்கூறுகளைப் பெறவில்லை. ஆனால், சோடியம் அயனிகளும், குளோரின் அயனிகளும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கான வடிவத்தில் அமைந்துள்ளன எனக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு வேதியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. படிகங்களில் உள்ள அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தை இவர் ஆய்வு செய்தார். இவருடைய தந்தை எக்சு கதிர் நிறமாலை மானி ஒன்றை உருவாக்கினார். மேலும் எக்சு கதிரின் கதிரியக்கம் பற்றியும் விளக்கினார். இந்தக் கண்டு பிடிப்புகளுக்குத் தந்தை மகன் இருவருக்கும் நோபெல் பரிசு 1915-ல் வழங்கப்பட்டது. நோபெல் பரிசு பெற்ற போது இவருடைய வயது 25. மிக இளம் வயதில் நோபெல் பரிசு பெற்றவர் பிராக் ஆவார். ஆகிய பட்டங்களும் பதக்கங்களும் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன. பிராக்கின் 81 ஆம் வயதில் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் 1971 ஜூலை 1 ஆம் நாள் இவருடைய உயிர் பிரிந்தது. இவருடைய சிறப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலியாப் பல்கலைக் கழகத்தில் இவருடைய பெயரில் தங்கப்பதக்கம் ஒன்று இயற்பியல் பிரிவில் சிறப்பாகப் பணி புரிபவருக்கு 1992-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 'அறிவியல் ஒளி', மார்ச்சு 2012 இதழ் சிவ தாண்டவங்கள் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன. சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார். நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன. சிவபெருமானது தாண்டவங்களில் பன்னிரு தாண்டவங்கள் என்று சிறப்புபெறுபவை கீழே. நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார். சிவதாண்டவத்தினைப் பற்றி தமிழிலக்கியமான கலித்தொகையின் இறைவணக்கத்தில் முதல் குறிப்பு உள்ளது. காரைக்கால் அம்மையின் பாடல்கள், எ எல் பாஷ்யம் சிவதாண்டவம் ஆகியவற்றிலும், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ். செல்லபாண்டியன் எஸ். செல்லபாண்டியன் (ஆங்கிலம்:S. Chellapandian) ஒரு தமிழக அரசியல்வாதி (பிறப்பு:12.11.1911) இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்க்கு 1962 ல் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மெமன்டோ (திரைப்படம்) மெமன்டோ (Memento) 2000 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். ஜென்னிபர் டாட், சூசன் டாட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. காய் பியர்ஸ், கேர்ரி-அன் மாஸ், ஜோ பாண்டோலியானோ ஆகியோர் நடித்துள்ளனர். சூரிய மணிகாட்டி சூரிய மணி காட்டி அல்லது சூரிய கடிகாரம் என்பது சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவி ஆகும். பொதுவாக கிடைமட்ட சூரிய மணி காட்டி வடிமைப்பில் சூரியனின் நிழல் ஆனது, அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். நேரம் குறிப்பிடும் அமைப்பான க்னோம் (gnomon) ஆனது பொதுவாக மெல்லிய கம்பியாகவோ அல்லது கூர்மையான அல்லது நேரான விளிம்பைக் கொண்ட அமைப்பாகவோ இருக்கும். சூரியன் நகரும்போது இந்த அமைப்பின் முனையின் நிழலானது வேறுபட்ட நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். சரியான நேரத்தைக் காட்ட அனைத்து சூரிய மணி காட்டிகளும் பூமியின் சுழல் அச்சுடன் ஒத்துப்போகுமாறு அமைக்கப்பட வேண்டும். சூரிய மணி காட்டியில் பல்வேறு வகைகள் உள்ளன. சில சூரிய மணி காட்டிகள் ஒரு ஒளிக் கோட்டை நேரத்தை காட்ட பயன்படுத்துகின்றன. மற்றைவைகள் நிழலின் முனைகளை பயன்படுத்துகின்றன. ஒளிப் புள்ளிகளானது சூரியனின் ஒளிக்கதிர்களை ஒரு சிறிய துளையின் வழியாக அனுப்புவதன் மூலமாகவோ அல்லது ஒரு சிறிய வட்ட வடிவ கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்வதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. ஒளிக் கோடானது ஒரு சிறிய பிளவின் வழியாக சூரிய ஒளிக் கதிர்களை அனுப்புவதன் மூலமாகவோ, அல்லது வட்ட வடிவ ஆடியில் குவிப்பதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. பொதுவாக, செலவு குறைவான, அதிக அளவில் தயாரிக்கப்பட்ட சூரியக் கடிகாரங்கள் தவறுதலாக அளவீடு செய்யப்பட்ட நிழல் உருவாக்குங் குச்சிகள் மற்றும் நேரக்கோடுகளைக் கொண்டவையாகவும், சரியான நேரத்தைக் கணக்கிடும் வகையில் சரிசெய்ய இயலாதவையாகவும் இருந்தன. வ. சுப. மாணிக்கம் டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 – ஏப்ரல் 25.1989) ("வ.சுப. மா") தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த "மூதறிஞர்". தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் "தமிழ் இமயம்" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன. வ.சுப.மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், "வ.சுப்பிரமணியன் செட்டியார்" – "தெய்வானை ஆச்சி" அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் "அண்ணாமலை". மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் இவருக்கு நிலைத்துவிட்டது. தன்னுடைய ஆறாம் வயதில் தாயை இழந்தார். தொடர்ந்து பத்து மாதம் கழித்து தந்தையும் இறந்தார். இவருடைய தாய்வழிப் பாட்டனார் "அண்ணாமலை செட்டியார்" பாட்டி "மீனாட்சி ஆச்சி" ஆகிய இருவரும் இவரை வளர்த்து வரலாயினர். தன் தொடக்கக் கல்வியினைத் தம் ஏழாம் வயது வரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்றார். வ.சுப. மா நகரத்தார் குல மரபுப்படி தனது பதினொன்றாம் வயதில் வட்டித் தொழில் கற்றுக்கொள்வதற்காகப் பர்மா சென்றார். பர்மாவில் ரங்கூன் நகரத்தில் உள்ள வட்டிக்கடையில் "பெட்டி அடிப் பையனாக" (உதவி செய்யும் சிறுவனாக) வேலைக்குச் சேர்ந்தார். .இவர் வேலை செய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் இவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். அனால் பொய் சொல்ல விரும்பாத அந்தச் சிறுவன், 'முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடையை வீட்டு நீக்கப்பட்டார். இதனாலேயே இவருக்குப் "பொய் சொல்லா மாணிக்கம்" என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத நிலையில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப.மா வுக்கு தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கூடவே தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டமும் ஏற்பட்டது. பண்டிதமணி அவர்கள் வழி நடத்துதலை ஏற்று அடியொற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விடா முயற்சியுடன் பயின்று 1945 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஒ.எல் பட்டத்தையும் 1951 ஆம் ஆண்டு எம்.ஏ முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இவருடைய தமிழ் ஆய்வுக்கான "எம்.ஒ.எல்" பட்டம் "தமிழில் வினைச்சொற்கள்" என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், "முனைவர்" (பிஎச்.டி) பட்டம் "தமிழில் அகத்திணைக் கொள்கை" என்னும் பொருளில் இவர் நடத்திய "சங்க இலக்கிய" ஆய்வுக்காகவும் அளிக்கப்பட்டன. இவருடைய திருமணம் 1945 ஆம் ஆண்டு நெற்குப்பை என்னும் ஊரைச் சேர்ந்த "ஏகம்மை ஆச்சி" உடன் நடந்தது. இவர்களுக்குத் "தொல்காப்பியன்", பூங்குன்றன், "பாரி" என்று மூன்று ஆண் குழந்தைகளும், "தென்றல்", "பொற்கொடி" என்று இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவருடைய திருமணத்திற்குப் பிறகுதான் இவருடைய ஆய்வுகளும், எழுத்துப்பணிகளும் மிக அதிகமாக இவரால் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கண்டிப்பான தந்தை இவர். ஒரு முறை இவரின் மகன் அழகப்பா கல்லூரியில் தேர்வு எழுதுகையில் தவறு செய்து மாட்டிக் கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் வ.சுப.மா அவர்கள். தவறு செய்த ஐந்து மாணவர்களையும் மேற்பார்வையாளர் முதல்வர் முன் நிறுத்துகிறார். முதல்வர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மற்றவரைப் போல இவர் மகனுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2006 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கியது. வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஒரு சிந்தனையாளர். பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். "தமிழ் வழிக் கல்வி இயக்கம்" என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார். இவர் தம் விருப்ப முறியில் எழுதிய விருப்பங்கள்: "எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் அவர்கள், மாரடைப்பின் காரணமாக 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புதுச்சேரியில் காலமானார். உயிர் பிரிந்த போது கூட அவர் கையில் இருந்தது திருவாசகம் தான். கரு மருது கரு மருது என்பது ஒரு மர வகையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது. சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும். மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் மருத மரம் - படம். மரபுசார் ஆயுதம் மரபுசார் ஆயுதம் எனப்படுவது பேரழிவு உண்டு செய்யும் பேரழிவு ஆயுதங்கள்{அணு குண்டு, இரசாயன ஆயுதம், மற்றும் உயிரியல் ஆயுதம்) போன்றவையல்லாத பயன்பாட்டிலுள்ள ஆயுதமாகும். இவை பொதுவாக சிறிய மற்றும் எளிய ஆயுதங்கள், அணுஅல்லாத குண்டுகள், ஏவுகணைகள், கொத்துக் குண்டுகள் போன்றவையாகயிருக்கும். அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் அணு குண்டு போலல்லாமல் இதன் வெடிபொருள் இரசாயன ஆற்றல் மூலம் செயல்படும். ஜெனீவா உடன்படிக்கை அடிப்படையில் மரபுசார் ஆயுதஙகள் போரில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஐக்கிய சபையின் படி சில மரபுசார் ஆயுதங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டும் உள்ளது. உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 2006ம் ஆண்டின் நிலவரப்படி பிரித்தானிய நில அளவாய்வத் துறை தகவலின் படி தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும். பொருளாதார சுதந்திரத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இது பொருளாதார சுதந்திரத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல். செமியோன் ரூதின் செமியோன் கெஸ்சலேவிச் ரூதின் ("Semyon Gesselevich Rudin", ஜூலை 21, 1929-ஆகஸ்ட் 22, 1973) ஒரு சோவியத் மொழியியலாளரும், இந்தியவியலாளரும், தமிழறிஞருமாவார். தமிழ் முறைக்கேற்ப தனது பெயரை “செம்பியன்” என்று மாற்றிக் கொண்டவர். உருசிய-தமிழ், தமிழ்-உருசிய அகராதிகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். லெனின்கிராட் நகரில் பிறந்தவரான ரூதின் யூத இனத்தவர். லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். இந்தியவியலில் மேற்படிப்புச் சான்றிதழும் பெற்றார். 1955 இல் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். 1968 இல் முனைவர் பட்டம் பெற்று துணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், மராட்டி போன்ற இந்திய மொழிகளைக் கற்றறிந்தார். பேரா. ஏ. பியார்தியோஸ்கியும் ரூதினும் இணைந்து உருவாக்கிய தமிழ்-உருசிய அகராதி 1960 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஏறத்தாழ 46,000 சொற்கள் இடம்பெற்றிருந்தன. ரூதின் தமிழுக்காற்றிய தொண்டினைப் பாராட்டி, 1965 இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவருக்கு ஒரு பரிசையும் சிறப்புப் பதக்கத்தையும் வழங்கியது. 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ரூதின் கலந்து கொண்டார். பால்லோவிங் (திரைப்படம்) பால்லோவிங் (Following) 1998 இல் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், ஜெரெமி தியோபால்து, பீட்டர் பிரோடெரிக் ஆகியோரால் தயாரித்து கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஜெரெமி தியோபால்து, அலெக்ஸ் ஹா, லூசி ரஸ்செல், ஜான் நோலன் ஆகியோர் நடித்துள்ளனர். ராடர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது மற்றும் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த முதல் அம்சம்" பரிசு உட்பட பல விழாக்களில் பல விருதுகளை வென்றது. கிறிஸ்டோபர் நோலன் மற்றும் பிளாக் அண்ட் வைட் விருதினிலும், ஸ்லாம்டன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவேசில் கிராண்ட் ஜூரிப் பரிசாகவும் ஆரம்பிக்கப்பட்ட புகழைப் பெற்றார். இன்சாம்னியா (திரைப்படம்) இன்சாம்னியா (Insomnia) 2002 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர்த் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், பிரோடெரிக் ஜான்சன், பால் ஜங்கர் விட், அண்ட்ரூ சொசொவே, எட்வர்ட் மெக்டான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஆல் பசினோ, ராபின் வில்லியம்ஸ், ஹிலாரி சுவாங்க், மாறா டியர்னி, மார்டின் டோனோவன், நிக்கி காட், கிரிஸ்தர் லோ, பவுல் டோலி ஆகியோர் நடித்துள்ளனர். த டார்க் நைட் ரைசஸ் (திரைப்படம்) த டார்க் நைட் ரைசஸ் (The Dark Knight Rises) 2012 இல் வெளியிடப்பட்ட அமெரிக்கத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்படுகிறது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், கேரி ஓல்ட்மன், டாம் ஹார்டி, அன் ஹாத்வே, மரியன் கோடில்லர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்ட பேட்மேன் பிகின்ஸ் மற்றும் த டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவருகிறது. இத்திரைப்படம் நோலன் இயக்கும் பேட்மேன் திரைப்படங்களின் இறுதித் திரைப்படம் என்று கூறப்பட்டுள்ளது. "த டார்க் நைட் ரைசஸ்" திரைப்படம் நியூயார்க்கில் சூலை 16, 2012 அன்று முன்னோட்டம் காட்டப்பட்டது. சூலை 19, 2012 இல் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும், சூலை 20, 2012இல் வட அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் இந்தியாவிலும் வெளியானது. மற்ற நாடுகளிலும் பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் வெளியானது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் டென்வரில் அரோரா என்றவிடத்தில் இரவுக்காட்சியின்போது துப்பாக்கி ஏந்திய ஒருவன் 12 பேரை சுட்டுக் கொன்றான்; சிறுவர் உட்பட 58 பேர் காயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டை அடுத்து வார்னர் பிரதர்ஸ் தனது மற்றசில முன்னோட்டக் காட்சிகளை இரத்து செய்ததுடன் தனது சந்தைப்படுத்தலையும் மாற்றிக் கொண்டுள்ளது. த டார்க் நைட்டில் கூறப்பட்டவை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் காத்தம் நகரில் அமைதி நிலவுகிறது. காவல் துறை ஆணையர், டென்ட் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கை நிறுவுகிறார். டென்ட் செய்த குற்றங்களை மறைத்து, அவனை மக்கள் மனதில் ஒரு முன்மாதிரி ஆக்கிவிட்ட போதும், ஆணையர் கோர்டன் தவறு செய்து விட்டதாக வருந்துகிறார். டென்டின் நினைவு விழாவில் இதை சொல்ல வந்தும், பின்னர் இது சமயமல்ல என்று சொல்லாது விட்டுவிடுகிறார். அவ்விழாவில் கடத்தப்பட்ட ஆட்சியாளர் ஒருவரை தேடி செல்லும் போது கோர்டன் பேனால் சுடப்படுகிறார்; அவர் உண்மையை கூறவென்று எழுதி வைத்திருந்த உரை தீயவனான பேன் கைகளில் சிக்குகிறது. மருத்துவமனையிலுள்ள கோர்டன் ப்ளேக்கை பதவியுயர்த்தி, அவரிடம் நேரடியாக அறிவிக்கும் உரிமையையும் வழங்குகிறார். பாட்மானை பலகாலம் காத்தம் நகர் காணவில்லை, புருசு வெயின் தன் அறையிலேயே அடைந்து கிடக்கிறார். வெயின் அணுக்கருப் பிணைவை பயன்படுத்தும் ஒரு தூய சக்தி திட்டத்தில் முதலிட்ட போதும் அது தீயோரின் கைகளில் சிக்கினால் அணுக்குண்டாக மாற்றப்பட்டலாம் என அறிந்து அதை நிறுத்திவிட்டார். இதனால்,வெயின் என்டர்பிரைசோ வியாபாரத்தில் வீழ்ச்சி காண்கிறது. மேலும், புருசு இது எல்லாம் அவரது தொழில் எதிரி யோன் தாகட் தன்னை வீழ்த்தவே பேன் என்பானை பணியமர்த்தியுள்ளார் என்று எண்ணுகிறார். பேன் பங்குச் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தும் போது, புருசு வெயின் அதை தடுக்க முனைகிறார். அல்பிரட் பாட்மானாக மீண்டும் மாறுவது தீங்கே என்று சொல்லி அறிவுரை கூறி அவனை விட்டு செல்கிறார். செல்லு முன், ரேச்சல் புருசை காதலிக்கவில்லை என்றும், டென்டையே திருமணம் செய்யவிருந்தாள் என்றும் கூறிச் செல்கிறார். செலினா கைலைத் தொடர்ந்து பேனை எதிர்கொள்கிறார் பாட்மான். பேன் தானே லீக் ஒஃப் சாடோசின்(League of Shadows) தற்போதைய தலைவர் என்றும்,யோன் தாகட்டை தான் பகடைக் காயாகக் கொண்டு பாட்மானின் படைக் கொட்டிலைச் சூறையாடிவிட்டேன் என்றும் கூறி, பாட்மானையும் அடித்து சிறையிலடைக்கிறான். சிறையிலுள்ளோர் தேவையும், மனத்திட்பமும் கொண்ட ஒரேயொரு சிறுபிள்ளை மட்டுமே அந்தச் சிறையிலிருந்து தப்பியுள்ளதாகக் கூறுகின்றனர். நகரின் காவல் துறையினரை பேன் நிலத்துக்கு கீழ் ஏமாற்றி வரச்செய்து வெளியேறவியலாதவாறு சிக்கவைக்கிறான். வெயின் என்டர்பிரைசின் அணுக்கரு வினையி கைப்பற்றப்பட்டு வெடிகுண்டாக மாற்றப்பட்டு , யாரும் வெளியேற எத்தனித்தால் அது வெடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு நகரிலுள்ளவர்கள் வெளியேறாதிருக்குமாறு செய்யப்படுகிறது. டென்டின் கபடத்தை அரங்கேற்றும் பேன், டென்ட் சட்டத்தின் மூலம் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிகளை வெளிக் கொண்டுவருகிறான். நகரின் அதிகார வர்க்கத்தினர் வீதியில் இழுத்துவந்து, நீதிமன்றத்தில் கிரேன் தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டு, நாடுகடத்தல், மரணம் ஆகிய இரண்டுக்கிடையில் தெரிவு செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். காத்தம் நகரில் வன்முறை வெடிக்கிறது, சட்ட ஒழுங்கு சீர்குலைகிறது. தடுக்க வந்த சிறப்புப் படையினரும் தாக்கப்பட காத்தம் நகரை அரசு சூழடைப்புச் செய்கிறது. சிறையிலிருந்து தப்பிக்கும் புருசு, மற்றையோரையும் அழைத்துக் கொண்டு வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். பாட்மான் பேனினை எதிர்கொள்கிறான். இந்த சமயத்தில், அவனுடன் இது வரையிலும் கூடவே இருந்த மிராண்டா அவனைத் தாக்குகிறாள். இறந்த ராசு அல் கூளின் மகள் அவளே என்றும், சிறையிலிருந்து தப்பித்தது ஒரு சிறுமி என்றும், அது அவளே என்றும் அடுக்கடுக்காக உண்மைகள் வெளிவருகின்றன. அவள் வெளியேற உறுதுணையாக இருந்தவனே பேன் என்றும், அதனாலே காயம் பட்டான் என்றும் எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கப்படுகின்றன. கோர்டன் குண்டை தொலைவிலிருந்து இயக்கவியலாதவாறு செய்கிறான்; செலினா கைல் பேனைக் கொல்கிறாள்; இதற்கிடையில் குண்டை அவர்களிடம் சிக்க விடாமல் வண்டியில் கொண்டு செல்லும் மிராண்டா/ தாலியாவை பாட்மான் துரத்திச் செல்கிறான். மிராண்டா வண்டி அடிபட்டு கொல்லப்படுகிறாள். குண்டை அதற்கான அறைக்கு கொண்டு சென்றால் நிலைப்படுத்தலாம் என்று பாட்மான் எண்ணியிருந்த போதும், கூடவே இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்ட மிராண்டா, அந்த அறையை அதற்கு தக்கதல்லாதாக ஆக்கிவிட்டாள் என்ற உண்மையை அவள் சாகும் முன் சொல்லக் கேட்டு அறிந்து கொள்கிறான். இதனால் பாட்மான் குண்டை ஒரு உலங்கு வானூர்தியால் இழுத்துச் செல்லவும், நடுக்கடலில் குண்டு வெடிக்கிறது. உலகே பாட்மான் இறந்து விட்டதாக நம்புகிறது. ஆனால் அல்பிரட் இத்தாலிய விடுதி ஒன்றில் புருசையும், செலினையும் ஒன்றாகக் காண்கிறார், பெருமகிழ்வடைகிறார். பாட்மானின் குகையை பிளேக் பெறுகிறார். த பிரஸ்டீஜ் (திரைப்படம்) த பிரஸ்டீஜ் (The Prestige) 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.கிறிஸ்டோபர் நோலன், ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டேவிட் போவி, பிபர் பெராபோ, ஆண்டி செர்கிஸ், ரெபெக்கா ஹால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை கிறிஸ்டோபர் பிரீஸ்ட்யின் அதே பெயரிலான புதினத்தை தழுவி எழுதப்பட்டது. திரைக்கதை கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜோனதன் நோலன் ஆகியோரால் எழுதப்பட்டது. இத்திரைப்படம் அக்டோபர் 20, 2006 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்டோபர் பிரீஸ்டினை அனுகி அவரது த பிரஸ்டீஜ் புதினத்தை படமாக்க கேட்டனர். பிரீஸ்ட் நோலனின் பால்லோவிங் மற்றும் மெமன்டோ படங்களைப் பார்த்து மயங்கிப்போனார். மேலும் வேலரீ டீன் இப்புதினத்தை நோலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அக்டோபர் 2000, நோலன் இங்கிலாந்திற்கு சென்று தன் மெமன்டோ படத்தினை வெளியிட சென்றார். அங்கு நோலன் பிரீஸ்டின் புதினத்தைப் படித்து தன் சகோதரருடன் பகிர்ந்தார். த பிரஸ்டீஜ்யின் தயாரிப்பு துவங்கியது. 2001 இல், நோலன் தனது இன்சாம்னியா திரைப்பட தயாரிப்பில் மூழ்கினார் ஆதலால் திரைக்கதை எழுதுவதை தன் சகோதரரிடன் ஒப்படைத்தார் . நோலன் சகோதரர்கள் திரைக்கதை எழுத ஐந்து வருடங்களாயிற்று. பிரீஸ்ட் திரைக்கதையினை பார்வையிட்டு பாராட்டினார். நோலன் 2003இல் பேட்மேன் பிகின்ஸ் படமெடுத்தலில் மூழ்கினார். பேட்மேன் பிகின்ஸ் பெளியிடப்பட்டப் பின்னர் இத்திரைப்படத்தில் களமிறங்கினார். அக்டோபர் 2005இல் படத்தில் நடிக்க ஹூக் ஜாக்மன் மற்றும் கிரிஸ்டியன் பேல் ஆகியோரிடம் பேசினார். படமாக்கல் ஏப்ரல் 9 2006 அன்று முடிவடைந்தது. கிரௌலி பத்தொன்பதாம் நூற்றாண்டு இலண்டன் மாதிரியான இடத்தை கண்டுபிடிக்க மொத்தம் எழுபது இடங்களை ஆராய்ந்தார். ஜோனதன் நோலன் கொலராடோவிற்கு சென்று நிகோலா டெஸ்லா பற்றி ஆராய்ச்சி செய்தார். டெஸ்லா செய்த பரிசோதனைகளை திரைப்படத்திற்கு பயன்படுத்தினார். டெஸ்லாவின் கண்டுபிடிப்பு காட்சிகளை நேதன் கிரௌலி வடிவமைத்தார்; மவுன்ட் வில்சன் ஆராச்சிக்கூடத்தின் வாகன நிறுத்தகத்தில் இக்காட்சிகள் படமெடுக்கப்பட்டன. கிரௌலி மாய அரங்குகளுக்கு லாஸ் ஏஞ்சலஸ்சின் நாடக மாவட்டதில் நான்கு இடங்களை பயன்படுத்தினார். கொலராடோவிலுள்ள ஆஸ்கூட் அரண்மனையில் படமெடுக்கப்பட்டது. நோலன் இத்திரைப்படத்திற்காக ஒரே ஒரு செட்டினை மட்டுமே பயன்படுத்தினார். மேலும் நோலன் இயற்கை பெளிச்சத்தில் மட்டுமே படமெடுத்தார். திருத்தல், இசையமைப்பு ஆகியவை செப்டம்பர் 22, 2006 அன்று முடிவடைந்தது. பார்த்திபனூர் பார்த்திபனூர் தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும்.இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியையும் சார்ந்தது.மேலும் இது கமுதி, மானாமதுரை மற்றும் பரமக்குடி மையத்தில் உள்ளது. ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்("Albert Abraham Michelson", டிசம்பர் 19,1852 – மே 9, 1931): அமெரிக்க இயற்பியலாளர். போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர். 'மைக்கேல்சன்-மார்லி ஆய்வு' என்ற ஒளி செல்லும் ஊடகம் குறித்த ஆய்விற்காகச் சிறப்பாக அறியப்பட்டவர். 1907 ஆம் ஆண்டு ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். ஆல்பர்ட் மைக்கல்சன் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள 'ஸ்டெரெல்னோ' என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு வணிகர் ஆவார்.. தாயார் ரோசலியா. இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1855-ல் இவரது குடும்பம் போலந்தை விட்டு அமெரிக்காவில் குடியேறியது. முதலில் நியூயார்க், வர்ஜினியா, நெவடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ என்று பல நகரங்களில் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இறை இருப்பு பற்றி அறியவொணாமைவாதியாகவே (agnostic)இருந்தார். சான் பிரான்சிஸ்கோவில் இவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்த போது தன்னுடைய பள்ளிப்படிப்பை அங்கு மேற்கொண்டார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார். 1899-ல் 'எட்னா ஸ்டேன்டன்' என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர். 1869-ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக அப்போதைய அமெரிக்கத் தலைவர் 'யூலிசஸ் எஸ் கிராண்ட்' என்பவரால் நியமிக்கப்பட்டார். அங்கு 4 ஆண்டுகள் பணி புரிந்த போது, இவர் சரியாகப் பயிற்சிப் பெற்றாரோ இல்லையோ, இயற்பியல் பிரிவுகளான, ஒளியியல், வெப்பவியல், பருவகால இயல் முதலிய துறைகளையும் மற்றும் சித்திரம் வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873-ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை இயற்பியல் மற்றும் வேதியல் போதிப்பவராகப் பணியாற்றினார். 1875-ல் 'கிளெவ்லாண்ட்' என்னும் இடத்தில் அமைந்திருந்த பயனுறு அறிவியலுக்கான கேஸ் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880-82-இல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் பெர்லினிலும், பாரிசிலும் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் புதிதாக உருவாக்கப்பட்ட சிகாகோ பலகலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் அதில் பணியாற்றினார். 1877-ல் 'அன்னபோலிஸ்' என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். 1867-ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வானியலறிஞர் 'அர்மெண்ட் பிசியூ' விண்மீன்களின் அளவை அளவிடக் "குறுக்கீட்டு மானி" ஒன்றைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887-ல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல ஆடிகளையும் ஒளி ஓரளவு ஊடுருவும் கண்ணாடிகளையும் பயன்படுத்தி ஒரே மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி ஒளிக்கதிர்களை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் தூரம், திசை, இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு "குறுக்கீட்டு மானி" ஒன்றை அமைத்தார். இந்த அண்டம் முழுவதும் திரவ வாயு நிலைக்கு இடைப்பட்ட "ஈதர்" என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர். மைக்கல்சன், "மார்லி" என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும் ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின் அடர்த்திகளுக்கேற்ப செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள் மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது. அவ்வாறு ஏற்படாததால் "ஈதர்" என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர். இந்த ஆய்வு "மைக்கல்சன்-மார்லி ஆய்வு" என்று புகழ் பெற்றது.. மக்கல்சனுக்கு முன்னால் பல அறிவியலறிஞர்கள் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டிருந்ததனர். ஆனால் அவர்கள் கண்டறிந்த அளவுகள் துல்லியமாக அமையவில்லை. மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்ட மைக்கல்சன் ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878-ல் வெற்றிபெற்றார். தன்னுடைய ஆய்வுகளை மீண்டும் மீண்டும் பலமுறை செய்து பார்த்தார். 1920-ல் "வில்சன்", "சான் ஆன்டோனியா" என்ற 22 மைல்களுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகத்தை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்தார்.( 299,940 km/s, or 186,380 mi/s) இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் "ஆல்பா ஆரியனிஸ்" என்ற வின்மீண் விட்டத்தை அளந்துகாட்டினார். 1929-ல் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகி பாசதேனா என்ற இடத்தில் அமைந்திருந்த "மவுண்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில்" சேர்ந்து தன்னுடைய ஓய்வுகாலப் பணியை மேற்கொண்டார். 1931-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். அறிவியல் ஒளி, டிசம்பர் 2010. பக் 31-33. இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan,22 மார்ச்சு 1868 – 19 டிசம்பர் 1953) என்பவர் அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர். இவர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிட்ட முறைகளுக்காகவும் ஒளிமின் விளைவில்(Photo electric effect) இவருடைய ஆய்வுகளுக்காகவும் 1923-ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றவர். 1921-இல் பிரஸ்பெல்சு என்ற இடத்தில் நடந்த சால்வே மாநாடு என்று சிறப்புப் பெற்ற இயற்பியல் அறிஞர்களின் மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கியவர். இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868 அன்று பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891-ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. இயற்பியல் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1893-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895-ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான். மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார். 1909-ல் ஒற்றை எலக்ட்ரான் மூலம் கடத்தப்படும் மின்னூட் டத்தை தீர்மானிக்கும் தொடர் கட்டச் சோதனைகளை நிகழ்த்தினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரியர்சன் சோதனைக் கூடத்தில் துணை ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். அங்கு 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமை யாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார். ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார். பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ராபர்ட் மில்லிகன் 85 வயதில் (1953) மறைந்தார். சான் வில்லியம் ஸ்ட்ரட் சான் வில்லியம் ஸ்ட்ரட், மூன்றாம் பாரன் ராலே ("John William Strutt, 3rd Baron Rayleigh", 12 நவம்பர் 1842 – 30 ஜுன் 1919) என்பவர் இங்கிலாந்து இயற்பியலறிஞர். ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டறிந்தவர். வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருக்கு 1904 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதற்கு இவருடைய ஒளிச்சிதறல் (Scattering of Light) பற்றிய 'ராலே கொள்கை' சரியான விளக்கமாக இருந்தது. ஓம் (Ohm) என்ற அலகினைத் தரப்படுத்தியவர். சான் ஸ்ட்ரட் 1842ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த இவருடைய தந்தை இரண்டாவது பாரன் ராலே ஆவார். இவர் உழவரும் நிலக்கிழாரும் ஆவார். சான் ஸ்ட்ரட் இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இவர் சிறுவனாயிருந்த போது இவரின் உடல் நலம் அடிக்கடி சீர்கேடு அடைந்தது. பத்து வயதான போது பள்ளியிலேயே அமைந்திருந்த உடல்நல வாழிடத்தில் இருந்துகொண்டே இவருடைய இளமைக் கல்வியைப் பெறவேண்டியிருந்தது. அதன்பின் மூன்று ஆண்டுகள் தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார். வார்னர் என்ற பாதிரியாரின் அரவணைப்பில் சில ஆண்டுகள் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1861-ல் டிரினிட்டிக் கல்லூரியில் நேர்ந்தார். எட்வர்டு.ஜெ, ரூத் என்ற மிகச் சிறந்த ஆசிரியருடைய பயிற்சி இவருக்குக் கிடைத்தது. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்கும் அவருடைய பயிற்சி அடித்தளமாக அமைந்தது. ஸ்டோக்ஸ் என்ற லூகேசியன் கணிதப் பேராசிரியர் அக்கல்லூரியில் அவ்வப்போது சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார். சொற்பொழிவுகளின் இடையே அவர் சில ஆய்வுகளையும் செய்து காட்டி விளக்கியது ராலேவை மிகவும் கவர்ந்தது. அந்த காலத்தில் மணவர்கள் தனியே ஆய்வுகளைச் செய்து பார்க்க இயலாத சூழ்நிலையில் ஸ்டோக்சின் ஆய்வுக் காட்சிகள் இவரைக் கவர்ந்தன. பிற்காலத்தில் இவர் சிறந்த அறிவியலறிஞராக விளங்கிய போது, ஸ்டோக்ஸ் தன்னைக் கவர்ந்த விதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 1864-இல் இவருக்கு வானியல் துறையின் உதவித்தொகை கிடைத்தது. 1865-இல் நடைபெற்ற டிரைபாள் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் சுமித் பரிசையும் வென்றார். 1865-ல் மாக்ஸ்வெல் என்ற அறிவியலறிஞர் வெளியிட்ட மின்காந்தக் கொள்கை பற்றிய ஆய்வறிக்கையை ஆர்வமுடம் படித்தார். அது தொடர்பான முக்கியக் கருத்துக்களை இவர் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அது போலவே 1860-ல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட "ஒலி அனுநாத இயற்றி" (Acoustic resonator) பற்றிய ஆய்வுகளையும் தன்னுடைய ஆய்வில் பயன்படுத்திக்கொன்டார். 1866-ல் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாட். அதே காலத்தில் அமெரிக்கா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தன்னுடைய வாழ்க்கைக்காக எந்தப் பணியிலும் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டிய தேவை இவருக்கு இல்லாமல் இருந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பியது. தன்னுடைய அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பல்வேறு கருவிகளை வாங்கி இவருடைய குடும்பப் பண்ணைத் தோட்டம் அமைந்துள்ள டெர்லிங்(டெர்லிங்) என்ற இடத்தில் தனக்கான ஆய்வுக் கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். கால்வனா மீட்டர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். 1868-ல் ஆங்கிலச் சங்கக் கூட்டம் ஒன்றில் அது பற்றிய தன்னுடைய முடிவுகளை அறிவித்தார். 1871-ல் ஒளிச்சிதறல் பற்றிய ராலே கொள்கையை வெளியிட்டார். வானம் நீல நிறத்தில் காட்சியளிப்பதற்கான சரியான விளக்கமாக இவருடைய கொள்கை அமைந்தது. 1872-ல் கடுமையான காய்ச்சலால் தாக்கப்படார். அப்போது இவர் எகிப்திலும் கிரீசிலும் தன்னுடைய வாழ்க்கையைக் கழிக்க நேர்ந்தது. 1873-ல் சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது இவருடைய தந்தை காலமானார். எனவே 7600 ஏக்கருள்ள நிலங்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இவர் தலைமேல் விழுந்தது. பொது அறிவியலில் இவர் பெற்ற கல்வி, பட்டறிவில் இவர் பெற்ற வேளாண்மை அறிவுக்குப் பல வகைகளில் தூண்டுதலாக அமைந்தது. இவர் "மூன்றாம் பாரன் ராலே" ஆனார். 1876-ல் இப்பொறுப்பைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு விலகினார். 1877-ல் அறிவியல் முறையில் ஆராய்ந்து இவரால் எழுதப்பட்ட 'ஒலிக் கொள்கை' (Theory of Sound) பற்றிய முதல் நூல் தொகுதி வெளியிடப்பட்டது. இதில் ஒலியை உருவாக்கும் அதிரும் ஊடகத்தின் எந்திரவியல் (Mechanics of vibrating medium) பற்றி விளக்கமாக எழுதியிருந்தார். அடுத்த ஆண்டில் இரண்டாம் தொகுதியாக ஒலி அலைகளின் இயக்கம் பற்றி எழுதி வெளியிட்டார். இராமப்பூர் மாவட்டம் இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(, ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கிமீ². 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,335,398. இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 194வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் இராமப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.4%.இராமப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர். மேலும் இராமப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 55.08%. இந்த மாவட்டத்தை சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு. இந்த மாவட்டம் ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. குமரி அனந்தன் குமரி அனந்தன் ("Kumari Ananthan", பிறப்பு: மார்ச் 19, 1933) தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர். குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில் இந்து நாடார் இனத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டினப்பெருமாள் - தங்கம்மை தம்பதிக்கு தலை மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் "அனந்தகிருட்டிணன்". "குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன்" பின்னாளில் "குமரி அனந்தன்" ஆனார். தொழில் அதிபர் எச். வசந்தகுமார் , இவருடைய தம்பி ஆவார் தமிழில் எம்.ஏ மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார். இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1977 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1977 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தேர்வு பெற்றார்இதற்கு முன்பு பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி இதுவாகும். இதற்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்:
.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1996 தேர்தலில் இதே நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
1998 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1998 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
. இவர் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது போல 1984 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 மற்றும் 1991. சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு முறை எம்.எல்.ஏ.,தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1980 களில் "காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியினை தொடங்கினார். பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்தார். பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி "தொண்டர் காங்கிர"ஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், தற்போது காங்கிரஸ் தொண்டராகவே இருந்து தனது கடமையை ஆற்றி வருகிறார். இவருடைய 80 ஆவது பிறந்த நாள் விழா 2012 ஆம் ஆண்டு மார்ச்சு 20 ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ் நாடு காங்கிரஸ் குழு சார்பில் கொண்டாடப்பட்டது. தற்போது குமரிஅனந்தன் "காந்தி பேரவை" என்ற அமைப்பின் தலைவராகவும், "தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தி"ன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக தன தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தின் தலைவர் பதவியை 2011 ஆம் வருடம் மே மாதம் 14 ஆம் தேதி ராஜினாமா செய்தார். தமிழக தலைவர்களில் நிறைய பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார். இவர் 1967 ஆண்டு முதல் பல பாத யாத்திரைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் ஒன்பதாவது முறையாக நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ. தூரம் பாத யாத்திரையை மேற்கொண்டார் . அந்த நான்கு அம்ச கோரிக்கைகளிவை: "நதிகள் இணைப்பு" குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் இவர் வலியுறுத்திக் கூறும் கருத்துக்கள் இவை: நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கிய குமரி அனந்தன். தமிழில் தந்தி விண்ணப்பங்கள், காசாணை (மணியார்டர்) வேண்டும் எனப் போராடிப் பெற்றுத் தந்தவர். தமிழில் விமானங்களில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என இவர் வலியுறுத்தி வருகிறார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29 நூல்களின் ஆசிரியர்.
மௌவல் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை. வஞ்சி (ஊர்) வஞ்சி என்னும் மாநகரம் மணிமேகலை – வஞ்சிமாநகர் புக்க காதை சேரநாட்டின் தலைநகர். குடநாட்டின் தலைநகர் வஞ்சி. தற்காலக் கரூரையும் சங்ககாலத்தில் வஞ்சி என்றும், வஞ்சிமுற்றம் என்றும் வழங்கினர். வஞ்சி மரம் வஞ்சி என்பது ஒரு வகை மரம். இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது. வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது. வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது. தொடர் (கணிதம்) கணிதத்தில் தொடர் ("series") என்பது, ஒரு தொடர்வரிசையில் உள்ள உறுப்புக்களின் கூட்டல் அல்லது கழித்தலாகும். எண்ணற்ற உறுப்புகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூட்டுவதைக் காட்டும் அமைப்பாகக் தொடரைக் கருதலாம். முடிவுறு தொடர்வரிசை மற்றும் தொடரின் முதல் மற்றும் கடைசி உறுப்புக்கள் வரையறுக்கப்படும்; ஆனால் முடிவுறாத் தொடர்வரிசை மற்றும் தொடர்களில் உறுப்புக்கள் முடிவிலி எண்ணிக்கையில் இருக்கும். கணித வரைமுறைப்படி, தொடர் என்பது கொடுக்கப்பட்ட { "a" } எண்களை உறுப்புக்களாகக் கொண்ட முடிவுறா தொடர்வரிசையின் அனைத்து உறுப்புக்களின் கூட்டுதொகையாகும்: "a" + "a" + "a" + · · ·. இதனை இன்னும் சுருக்கமாகக் கூட்டுத்தொகை குறியீடு ∑ மூலம் குறிப்பிடலாம். காட்டாக, செனோவின் முரண்பாடு தீர்வுப்படியும் அதன் கணித சார்பீடும் இவ்வாறுக் குறிக்கப்படும்: இத்தொடரின் உறுப்புக்கள் பெரும்பாலும் ஓர் விதியைப் பின்பற்றி, வாய்பாடு அல்லது படிமுறைத் தீர்வு கொண்டு அமைந்திருக்கும். முடிவிலி எண்ணிக்கையில் உறுப்புக்கள் அமைந்துள்ளதால் இவை முடிவுறாத் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன. முடிவுறு கூட்டல்களைப் போலன்றி முடிவுறா தொடர்கள் கணித நுட்பக்கருவிகள், முக்கியமாக எல்லைகள் குறித்தக் கோட்பாடுகள் முழுமையாக அறிந்துகொள்ளப்பட வேண்டும். தொடர்கள் குறித்த விவரணங்கள், நுண்கணிதம் மற்றும் அதன் பொதுமைப்படுத்தலான பகுவியலின் முக்கியப்பகுதியாக உள்ளது. சேர்வியல் உட்பட்ட கணிதத்தின் பல பிரிவுகளில், பொதுசார்புகளைக் கொண்டு முடிவுறு அமைப்புகள் குறித்த படிப்புகளுக்குத் தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்கள் கணிதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர, அளவறி துறைகளான இயற்பியல், கணினியியல், புள்ளியியல், நிதியியல் ஆகியவற்றிலும் தொடர்கள் பயன்படுகின்றன. ஒரு முடிவுறாத் தொடர் அல்லது சுருக்கமாக தொடர் என்பது, பின்வரும் முடிவுறாக் கோவை வடிவிலுள்ள முடிவுறாக் கூடுதலாகும். இதில் formula_3 என்பது எண்கள், சார்புகள் மற்றும் கூட்டக்கூடிய வேறுகணிதப்பொருள்களை (எகா: பரிமாற்றுக் குலம்) உறுப்புகளாகக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட தொடர்வரிசை ஆகும். கூட்டுகைக் குறீயீட்டைக் கொண்டு மேலுள்ள தொடரை கீழுள்ளவாறும் எழுதலாம்: formula_7 என்ற தொடரின் பகுதிக் கூட்டுத்தொகைகளாலான தொடர்வரிசையின் எல்லை காணக்கூடியாக இருந்து, அவ்வெல்லையின்மதிப்பு எனில், தொடர் formula_7 ஆனது என்ற எல்லைக்கு "ஒருங்குகிறது" எனப்படும். மேலும் அத்தொடரின் கூட்டுத்தொகை ஆகும் எனப்படுகிறது. ஒரு தொடர் ஒரு எல்லைமதிப்புக்கு ஒருங்கினால் அது "ஒருங்குதொடர்" என்றும், அவ்வாறில்லையெனில் அது "விரிதொடர்" எனவும் அழைக்கப்படும். ஒருங்குதொடரின் கூட்டுத்தொகை அது ஒருங்கும் எல்லையின் மதிப்பிற்குச் சமமாகும். பெருக்குத் தொடர் ஒன்றின் பொது வடிவம் பின்வருமாறு அமையும். பகுதிக் கூட்டுகையானது, { "a" } என்ற தொடரை உள்ளீடாக எடுத்துக்கொண்டு, வெளியீடாக { "S" } என்ற மற்றொரு தொடரைத் தருகிறது. எனவே பகுதிக் கூட்டுகையானது, தொடர்களின் மீதான ஓருறுப்புச் செயலி ஆகும். மேலும் இது ஒரு நேரியல் சார்பாகவும் உள்ளது. எனவே இது தொடர்களின் திசையின் வெளியின் மீதான ஒரு நேரியல் கோப்பு; இதன் குறியீடு Σ ஆகும். இச்செயலிக்கான நேர்மாறு, "முடிவுறு வேறுபாடு"ச் செயலி - Δ (finite difference) ஆகும். இயல் எண்கள் சார்புகளைக் கொண்ட தொடர்களுக்கு மட்டும் இச்செயலிகள், நுண்கணித தொகையிடல் மற்றும் வகையிடல் செயலிகளை ஒத்தவையாய் உள்ளன. ஆனால் மெய்யெண் சார்புகளின் தொடர்களுக்கு இவ்வாறு அமையாது. இது கீழ்வரும் தொகையீட்டிற்கு ஒத்ததாக உள்ளதைக் காணலாம். வடவனம் வடவனம் என்பது ஒரு மலரைக் குறிக்கப் பழங்காலத்தில் வழங்கிய தமிழ்ப் பெயர். வடவனம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை. குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. முத்திரை வரிவடிவம் முத்திரை வரிவடிவம் (ஆங்கிலம்: Seal script; எளிய சீனம்: 篆书; மரபுச் சீனம்: 篆書; பின்யின்: zhuànshū) என்பது ஒரு பண்டைய சீன எழுத்து வனப்புடைமைப் பாணி ஆகும். இது சவு வம்சத்தின் உலோக வரிவடிங்களில் இருந்து சின் (Qin) நாட்டில் தோன்றியது. சின் வம்சத்தின் அதிகாரபூர்வ எழுத்துமுறையாக இது அமைந்தது. சின் வம்சத்தைத் தொடர்ந்த ஹான் அரசமரபிலும் அலங்கார செதுக்கல்களுக்கும் முத்திரிகளுக்கும் இந்த வரிவடிவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் பெரும்பான்மையினரால் இந்த வரிவடத்தை வாசிக்க மாட்டர்கள். சீன உலோக வெட்டெழுத்துக்கள் சீன உலோக வெட்டெழுத்துக்கள் எனப்படுபவை சீன உலோகப் பொருட்களில் பல்வேறு சீன எழுத்துமுறைகளில் பொறிக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் ஆகும். சாங் அரசமரபுக் காலத்தில் இருந்து சவு அரசமரபுக் காலம் வரையில் உருவாக்கப்பட்ட சீன உலோக வெட்டெழுத்துக்கள் பெரிதும் அறியப்பட்டவை. தொடக்க கால வெட்டெழுத்துக்கள் அச்சின் வார்தெடுக்கப்பட்டன. பிற்கால வெட்டெழுத்துக்கள் அச்சில் வார்க்கப்பட்ட உலோகப் பொருட்களில் பொறிக்கப்பட்டன. ரிச்சர்டு பெயின்மான் ரிச்சர்டு ஃபெயின்மான் ("Richard Feynman", 1918–1988) இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். குவாண்டம் விசையியலின் தொகையீட்டு சூத்திரம், குவாண்டம் மின்னியக்கவியலின் கோட்பாடு (quantum electrodynamics), அதிகுளிரவைக்கப்பட்ட ஹீலியத்தின் மீப்பாய்மத்தன்மைக்கான இயற்பியல் வரையறை, துகள் இயற்பியல் (துகள் மாதிரியை முன்மொழிந்தார்) போன்ற துறைகளில் தன் ஆராய்ச்சிகளின் மூலம் அறியப்படுபவர். குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு ஃபெயின்மான், சூலியன் சிவிங்கர் (Julian Schwinger) மற்றும் சின்-இடிரோ டோமோநாகா (Sin-Itiro Tomonaga) ஆகியோருடன் சேர்ந்து பங்காற்றினார். எனவே ஃபெயின்மானுக்கு 1965ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு குண்டு தயாரித்த குழுவில் உறுப்பினராக இருந்தவர். துவக்க காலங்களில் குவாண்டம் விசையியல் கல்வி பெற்ற முதல் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர். பிற்காலத்தில் குவாண்டம் மின்னியக்கவியல் என்றத் துறையை நிறுவினார். ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் நியூயார்க் நகரத்தில், 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் லூசில்லே (Lucille), அவருடைய தொழில் வீடு நிர்மாணித்தல் ஆகும். ரிச்சர்டின் தாயின் பெயர் மெல்வில் ஆர்தர் ஃபேய்ன்மேன் (Melville Arthur Feynman) என்பதாகும், அவர் ஒரு விற்பனை மேலாளர் ஆவார். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவருடைய பிறப்பிடங்களும் முறையே உருசியா மற்றும் போலந்து ஆகும். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவரும் அஸ்கினாஜி யூதர்கள் ஆவர். அவர்கள் இருவரும் மதவாதிகள் அல்லர், ரிச்சட்டும் கூட தன்னை வெளிப்படையாக "ஒரு நாத்திகர்" என விவரித்துள்ளார். ஃபெயின்மான் தாமதமாகவே பேசப்பழகினார். தனது மூன்றாவது பிறந்த நாளில் ஒரு வார்த்தயைக்கூட முழுமையாகக் கூறமுடியவில்லை. வயது வந்தபின் நியூயோர்க்கில் பேசப்படும் ஒருவித ஆங்கிலச் சொல்வழக்கை பேசத் தொடங்கினார். விண்வெளிப் போட்டி விண்வெளிப் போட்டி என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் சோவியத் ஒன்றியத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே பனிப்போரின் எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் செயற்கைக்கோள் அனுப்புதல், பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை மனித விண்வெளிப்பறப்பு மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்துடன் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவல் உருவக்க்கபட்ட இந்த ராணுவ ஆபரேஷன் காகித கிளிப் என்பது நாஜி ஜெர்மனி மீது படையெடுத்து அங்கு இருக்கும் வின்வெளிக்கலன் தயார் செய்யும் குழுவின் தலைமை வடிவமைப்பாளர் மற்றும் அதனைச் சார்ந்த விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் போன்ற பொறுப்பை வகித்த பலரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தது. அவ்வாறு பலரையும் தேடிபிடித்து வேளைக்கு அமர்த்தியது .ஜூன் 1941முதல் ஜெர்மானிய படைகள் முதலில் ருசியவில் தோல்வியை சந்திக்க தொடங்கியது. ரஷ்யாவின் செஞ்சேனை ஜெர்மானிய படைகளை முறியடித்து பல இடங்களில் முன்னேறி கொண்டு வந்தது .அவ்வாறு முன்னேறி வரும் செஞ்சேனை இடம் அகபடாமல் இருக்கவும். நாஜி ஜெர்மனி படைகளால் சுட்டு கொள்ள படாமல் இருக்கவும் தங்கள் உயிரை காப்பற்றி கொள்ள பலரும் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தனர் . வேர்நஹெர் வான் பிரான் என்பவர் ராக்கெட் அறிவியலின் தந்தை என்று கூறுவார்கள் அவரும் அவருடைய சகோதரரும் அவர்களுடன் 126 நபர்கள் அந்த பட்டியலில் அடங்குவார்கள் .சோவியத்து யூனியன் மற்றும் அமெரிக்காவின் இடையில் யார் வல்லரசு என்ற போட்டி மற்றும் அதிகளவில் வி -2 ராக்கெட் பாகங்களை மற்றும் அதன் ஊழியர்கள்சிறை எடுப்பதில் தீவிரம் காட்டினர் இரண்டாம் உலக போர் முடியும் தறுவாயில் இந்த நிலை பெரும் அளவில் வளர்ந்து இருந்தது .அமெரிக்காவின் இந்த ராணுவ ஆபரேஷன் போது 300 தொடர்வண்டி பேட்டியின் அளவு வி -இரண்டு ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் ராக்கெட்டுகள் சிறைபிடிகபட்டு அமெரிக்காவிற்கு அணுபிவைகபட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்க மற்றும் அமெரிக்க மற்றும் சோவியத்து யூனியன் ராக்கெட் வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் இங்கிலாந்தும் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் நாஜி ஜெர்மனியர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது 1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான் மனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் ஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் . விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார் மே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை செயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது மேற்குச் சுவர் மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் (எபிரேயம்: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; அரபு: حائط البراق‎, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) யெரூசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது. இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் உட்பட்ட அரைவாசி சுவர் வீதி மட்டத்திலிருந்து கீழே உள்ளன. இது இரண்டாம் கோவிலின் இறுதி காலத்திற்குரியனவென்றும், கி.மு. 19 இல் முதலாம் ஹெரொட்டால் கட்டப்பட்டதென்றும் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அன்மைய ஆய்வு ஹெரொட்டின் காலத்தில் வேலைகள் பூர்த்தியாகவில்லையென்பதை குறிப்பிடுகிறது. எஞ்சிய அடுக்கின் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் பின்பு இடம்பெற்றன. மேற்குச் சுவர் என்பது யூத பகுதியில் தெரியும் பெரிய சதுக்கம் மாத்திரமல்ல, முழு கோயில் மலையையும் உள்ளடக்கிய மறைந்து கிடக்கும் அதன் கட்டமைப்பு என்பனவுமாகும். முசுலிம் பகுதியில் காணப்படும் 25 அடி (8 மீட்டர்) பகுதியான சிறிய மேற்குச் சுவரும் இதனுள் அடங்கும். இது யூதர்களின் செபம் செய்யும் இடமும் யாத்திரை செல்லும் இடமுமாக பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டது. 4ம் நூற்றாண்டிலிருந்து இந்த இடம் யூதர்களுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது என பழைய ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது. 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, பல யூதர்கள் சுவர் மற்றும் அதன் பகுதிகளின் உரிமையை பெற்றுக் கொள்ள முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீயோனிசம் சீயோனிச இயக்கத்தின் எழுச்சியுடன் சுவரானது யூத சமூகத்திற்கும் இசுலாம் மத தலைவர்களுக்கும் இடையிலான எதிர்ப்பின் மூலமானது. இசுலாம் மத தலைவர்கள் யூத தேசியவாதிகள் மலைக் குகையையும் யெரூசலேமையும் பெற்றுக் கொள்ள சுவர் காரணமாகிவிடும் எனக் கவலை கொண்டனர். சுவரை மையப்படுத்தி வெடித்த வன்முறை சர்வசாதாரணமாகி, சுவர் பற்றிய இசுலாமியர்களினதும் யூதர்களினதும் உரிமை கோரலை தீர்மானிக்க சர்வதேச குழு 1930 இல் கூடியது. 1948 ஆம் ஆண்டு அரபு-இசுரேலிய போரின் பின் சுவர் யோர்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனால் 19 வருடங்கள் யெரூசலேம் பழைய நகரை யூதர்கள் 1967 இல் கைப்பற்றும் வரை தடை செய்யப்பட்டிருந்தனர். பேட்மேன் பிகின்ஸ் (திரைப்படம்) பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) 2005 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். எம்மா தாமஸ், லாரி பிராங்கோ, சார்லஸ் ரோவன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேன், லியம் நீசன், கேட்டி ஹோல்ம்ஸ், கேரி ஓல்ட்மன், சில்லியன் மர்பி, மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ஸ் சிம்மர், ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சூலை 15 2005 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட்டது. தனது முதல் வாரத்தில் $48 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்தது. உலகம் முழுவதும் மொத்தம் $372 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்து. விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் "ப்ருஸ் வெய்ன்" தவறுதலாக அப்பகுதியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான்.அதனுள் வசிக்கும் வௌவால்கள் இவனை கண்டவுடன் தாறுமாறாக பறக்கத் தொடங்குகின்றன.அவற்றின் கொடூர முகங்களை மிக அருகில் காணும் சிறுவன் பயத்தினால் மிரண்டு போகிறான்.அது அச்சிறுவனின் மனதில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது.பின்னர் ஓர் நாளில் தன் பெற்றோருடன் "மாஸ்க் ஃஒப் த சோரோ" நாடகத்தை பார்க்க செல்கிறான்.நாடகத்தின் இடையில் காட்டப்படும் வௌவால்களைக்கண்டு மன சஞ்சலம் அடைகிறான்.மீண்டும் அவனுக்கு அந்த கிணற்றுக்குள் நடந்த சம்பவங்கள் கண்முன்னே வந்து செல்ல நாடகத்தின் பாதியிலேயே பெற்றோருடன் வெளியேறிவிடுகிறான். வரும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் இவர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்களின் நகை,பணம் முதலியவற்றை கேட்க,திரு.வெய்ன் அவர்கள் அதை மறுக்க,திருடன் கையில் இருந்த துப்பாக்கி சாராமாரியாக சுடப்பட சம்பவ இடத்திலேயே பெற்றோர்களை இழக்கிறான் சிறுவன் வெய்ன்."டிம் பெர்டனின்" மட்டமான கற்பனையைப் போல அத்திருடன் ஜோக்கர் எல்லாம் அல்ல.வயிற்றுப் பசிக்காக கொள்ளையடிப்பவன்.ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையானவன் போலும். அதனால்தான் இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றுகிறான்.பல வருடஙகள் உருண்டோடுகின்றன.பதின்ம வயதின் நடுப்பகுதியை எட்டுகிறான் ப்ரூஸ்.கொலைக்குற்றதிற்கான நிரந்தர தண்டனை அளிக்கப்படாமல் இன்னும் அலைகழிக்கப்படுகிறான் அத்திருடன்.ப்ருஸ் "சட்டம் தண்டிக்கும் முன்னதாகவே நான் அவனை தண்டிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் நீதிமன்ற வளாகத்தினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து அவனை கொலை செய்ய யத்தனிக்கிறான்.ஆனால் வேறு ஒரு கும்பல் 'குற்றவாளி'யை தண்டித்து விடுகிறது.ப்ரூஸ் கொலை முயற்சியில் ஈடுப்பட்டதை அறியும் அவனது தோழி(Rachel) "உன் தந்தை உன் செய்கையை நினைத்தால் மிகவும் வெட்கப்படுவார்" என கூறுகிறாள்.இதுவும் அவனது நடத்தையில் பாரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.தான் இந்நகரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அக்கணம் நினைக்கிறான்.தனது திறனை விருத்தி செய்யும் முகமாகவும் உலகை வலம் வரும் முகமாகவும் 'பூட்டானு'க்கு செல்கிறான்.அங்கு "ஹென்றி டூகார்ட்" என்பவனை காண நேரிடுகிறது.அவனுடன் பழகும் ப்ரூஸ் விரைவிலேயே டூகார்ட்டுக்கு நெருங்கிய நண்பனுமாகுகின்றான்.ப்ருஸுக்கு தற்காப்புகலைகளை கற்றுதருவதுடன் "லீக் ஒப் ஷேடோவ்ஸ்" என்ற தற்காப்பு கலை அமைப்பிலும் அவனை இணைத்து பயிற்சியளிக்கிறான். விரைவிலேயே தற்காப்புகளைகளை நன்றாகக் கற்றுக்கொள்ளும் ப்ரூஸ் அவ்வமைப்பின் நோக்கம் கோதம் நகரை அழிப்பதுதான் என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆத்திரமும் கொள்கிறான்.திடசங்கற்பத்துடன் செயற்படும் அவன் அவ்வைப்பு வளாகத்தை தீயிட்டு கொளுத்துகிறான். இத்திடீர் தாக்குதலால் அவ்வமைப்பின் தலைவன் ராஷ்-கல்(நீங்க ராஸ்கல்னே வச்சிக்குஙுக)மாண்டுபோகிறான். அதுட்டுமல்லாது இவ்விபத்தில் படுகாயமடையும் தனது நண்பனை உயிரை காப்பாற்றுகிறான் ப்ரூஸ்.தாய்நாடு திரும்பும் அவன் தன் நகரை காப்பாற்றுவதாக உறுதிபூணுகிறான்.இதற்காக அந்நகரின் நேர்மையான போலீஸ்காரரான கமிஷ்னர்.கோர்டான் அவர்களின் உதவியை கோருகிறான்.முதலில் மறுக்கும் அவர் பின் இவனது திடகாத்திர செயல்களைக்கண்டு சம்மதம் தெரிவிக்கிறார். இதே நேரம் புதிய நபர் ஒருவன் கோதம்மை பயங்கொள்ளச்செய்கிறான்.அவன்தான் "ஸ்கேயார் க்ரோ"(Scare crow).சதாரண சாக்கு துணியை முகமூடியாக அணிந்து கொள்ளும் இவன் மனிதர்களின் மேல் ஒரு திரவத்தை ஸ்பேரே செய்துவிடுவான்.அந்த திரவம் தெளிக்கப்பட்ட மனிதர்கள் பயத்தின் எல்லைக்கே சென்று விடுவர்.அவனது காமடியான முகம் அத்தருணத்தின் போது அவர்களுக்கு மிக கொடூரமாகக் காட்சியளிக்கும்.வசியம் செய்தது போல் தமக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் உளறத்தொடங்கி விடுவர்.இவனைப் பிடிக்கும் முதல் முயற்சியில் பேட்மேன் தோற்றுப்போனாலும் இரண்டாவது முயற்ச்சியில் அவனது வழியிலேயே சென்று அவனை மடக்குகிறார்.அவனை விசாரித்து அவனது அடுத்து கட்ட திட்டங்கள் என்ன?அவன் யாருக்காக வேலை செய்கிறான் என்பதை அறியும் பேட்மேனுக்கு தலை சுற்ற தொடங்குகிறது.காரணம் அவன் வேலை செய்வது "லீக் ஒப் ஷாடோஸின்" தலைவனான ராஷ்-கல் இடமாகும்.ராஷ்-கல் இறக்கவில்லை உண்மையான ராஷ்-கல் பேட்மேன் காப்பாற்றிய ஹென்றி டூகார்ட் ஆவான்.அவன் முதற்கட்டமாக ப்ரூஸின் இருப்பிடத்தை அழிக்கிறான்.பின்னர் அவனது நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.பல இறுதி கட்ட சண்டைகளின் பின் பேட்மேன் ப்ரூஸின் நிறுவனத்தையும் கோதம் நகரத்தையும் காப்பாற்றுகிறான்.ராஷ்-கல் ரயில் விபத்தில் இறக்கிறான்.இறுதியில் பேட்மேன் கமிஷ்னர் கோர்டானை சந்திக்கிறான்.அப்போது கோர்டான் மீண்டும் நகரில் குற்றங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளதாகவும்.அதில் குற்றவாளி ஒருவன் சம்பவ இடங்களில் கோமாளி படம் பொரித்த சூதாட்ட அட்டைகளை விட்டு செல்வதாகவும் கூறுவதோடு படம் முடிகிறது. இத்திரைப்படம் நோலனின் பேட்மேன் முப்பட தொடரின் முதல் திரைப்படமாகும். இப்படத்தினைத் தொடர்ந்து த டார்க் நைட் திரைப்படம் சூலை 2008 இல் வெளியானது. இத்தொடரின் கடைசித் திரைப்படம் த டார்க் நைட் ரைசஸ் சூலை 2012 இல் வெளியாகிறது. சனவரி 2003 இல் வார்னர் சகோதரர்கள் மெமன்டோ திரைப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனை ஓர் பேட்மான் திரைப்படம் ஒன்றை எடுக்க அழைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு டேவிட் கோயர் என்பவரை திரைக்கதை எழுத வைத்தது. மீண்டும் புதியதாக பேட்மான் திரைப்படங்களை உருவாக்க நோலன் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் பேட்மானின் அசல் கதையினை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறினார். 1978 இல் வெளியான ரிச்சர்ட் டான்னரின் சூப்பர்மேன் திரைப்படமே தனது உந்துகோல் என்று நோலன் கூறினார். "சூப்பர்மேன்" திரைப்படத்தைப் போன்றே பேட்மான் திரைப்படத்திலும் சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க விருப்பபட்டார். அதனால் கதைக்கும் திரைப்படத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார். தனது பிற திரைப்படங்களைப் போலவே திரைப்படமெடுக்க மற்றொரு குழுவினை பயன்படுத்துவதை தவிர்த்தார். தனது மேற்பார்வையிலேயே அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நம்பினார். படப்பிடிப்பு மார்ச் 2004 இல் தொடங்கியது. நோலன் திரைப்படத்தின் காட்சிகள் நிறையவற்றை இங்கிலாந்திலேயே எடுத்தார். இத்திரைப்படத்தினை அனைத்து வயதினோரும் பார்க்குமாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதற்காக கோரமான காட்சிகளைத் தவிர்த்தார், நோலன் 1982 இல் வெளியான "பிளேட் ரன்னர்" திரைப்படத்தினை உந்துகோலாக பயன்படுத்தினார். அத்திரைப்படத்தினை தன் திரைப்படக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டி அந்த வகையில் திரைப்படத்தினை எடுக்க வேண்டும் என்றார். நேதன் கிரோவ்லி திரைப்படத்திற்காக "கொதம் மாநகரத்தினை" வடிவமைத்தார். இதற்காக நியூ யார்க், சிகாகோ, டோக்கியோ, ஹாங்காங் போன்ற நகரங்களின் பகுதிகளை பயன்படுத்தினார். கொதம் நகரத்தை வடிவமைத்த நேதன் கிரோவ்லியே பேட்மொபிலினை வடிவமைத்தார். நான்கு மாதங்களில் மொத்தம் ஆறு வடிவமைப்புகளை செய்தார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட பேட்மொபில் வடிவமைப்பினை பிலாஸ்டிக்கில் உருவாக்க இரண்டு மாதங்கள் ஆகின. பின்னர் எஃகு பயன்படுத்தி வாகனத்தின் உடம்பு மட்டும் தயாரிக்கப்பட்டது. வாகனத்தின் தயாரிப்பு ஒன்பது மாதங்களானது. பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது. பேட்மொபில் திரைக்காட்சிகள் சிகாகோ தெருக்களில் படமாக்கப்பட்டது. ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது. முதலில் ஹான்ஸ் சிம்மரை மட்டுமே இசையமைக்க அழைத்தார். பின்னர் சிம்மரின் வேண்டுகோளின்படி ஜேம்ஸ் நியூடன் ஹவார்தினையும் அழைத்தார். இருவரும் தனித்தனியாக புரூஸ் வேய்னின் இரு (பேட்மேன் மற்றும் தொழிலதிபர்) முகங்களுக்கு இசையமைத்தனர். முதலில் லாஸ் ஏஞ்செலஸ்சில் இசையமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் இலண்டணிற்கு சென்று பன்னிரண்டு வாரங்களாக சேர்ந்து இசையமைத்தனர். தங்கள் இசையினை மேலும் மேம்படுத்த "பேட்மேன் பிகின்ஸ்" படப்பிடிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர். ஹான்ஸ் சிம்மர் முந்தைய "பேட்மேன்" திரைப்படங்களில் பயன்படுத்திய இசையினை முற்றிலும் தவிர்க்க முயன்றார். ஆனால் முழுமையாக தவிர்க்க இயலவில்லை. இரு இசையமைப்பாளர்களும் இணைந்து திரைப்படத்திற்காக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இசையமைத்தனர். இந்தியாவின் இரட்டை நகரங்களின் பட்டியல் வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகரம் உறவு கொண்டுள்ள இந்திய நகரங்களின் பட்டியல் ஒடிசாவில் உள்ள இரட்டை நகரங்கள்: லக்னௌ உத்தரப் பிரதேசம்: எம்மா தாமஸ் எம்மா தாமஸ் (Emma Thomas) ஓர் இங்கிலாந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனை திருமணம் செய்துக் கொண்டார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது தன் கணவருடனும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார். ஜோனதன் நோலன் ஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார். மைக்கேல் ஹாக் "மைக்கேல் ஹாக்" அல்லது "மைக்" (ஆங்கிலம்:Mykel A.G. "Hawke" Pierce) ( பிறப்பு : நவம்பர் 29, 1965) இவர் ஒரு ஓய்வு பெற்ற ஐக்கிய அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரியாவார். இவருடைய மனைவி ரூத் இங்கிலாந்து, இவர் ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். மைக்கேல் ஹாக் மற்றும் இவரது மனைவி ரூத் இங்கிலாந்து இவர்கள் இருவரும் இணைந்து "டிஸ்கவ்ரி தொலைக்காட்சியில்" ஆண், பெண், காடு (Man, Woman, Wild) என்ற தொடர் நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். இவர் அறிவியல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் , சாண்டா பார்பராவில் உளவியல் , அறிவியல் முதுகலைப்பட்டம் ஒரு இளநிலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் 25 ஆண்டு காலம் போரிட்டில் மிக்கத் தேர்ந்தவர் எனவே மைக்கேல் ஹாக்கிற்க்கு பச்சைத் தொப்பி (Green Beret) மற்றும் பின்னர் ஒரு குறிப்பிட்ட பட்டியலிடப்பட்டு இருந்த சிறப்புப் படைகளின் ஒரு தலைவராக செயல்ப்பட்டார். மேலும் இவர் ஜப்பானில் புகழ்ப் பெற்ற கலைகளான அய்கிடோ மற்றும் யுடோ விர்க்கான கறுப்பு இடைவார் (Black Belts) ஈட்டியிருக்கிறார். மைக்கேல் ஹாக் மேலும் இவர் டிஸ்கவரி அலைவரிசையில் (Discovery Channel) ஒன் மேன் ஆர்மி (ஒரு ஆள் இராணுவம்), என்கின்ற தொடர் நிகழ்ச்சியை நடத்துகின்றார். சிறப்பு நடவடிக்கைகள், இராணுவ, சட்ட அமலாக்கம், மற்றும் தீவிர விளையாட்டு என பின்னணியிலிருந்து வீரர்களின், வேகம், வலிமை, மற்றும் உளவுத்துறை ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிடப்படும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசாக பணம் மற்றும் ஒன் மேன் ஆர்மி என்ற பட்டமும் வழங்கப்படும். மேலும் ஹாக் விநோத வகை உணவுகளை பட்டியலிடுவதில் மிக சிறந்தவர். மற்றும் ஹாக் முதல் முறையாக நகைச்சுவை திரைப்படமான " டர்ட்டி சான்செஸ்: தி மூவி" (Dirty Sanchez: The Movie) என்கின்ற திரைப்படத்தை சொந்தமாக இயக்கியுள்ளார். 1) Hawke's Special Forces Survival Handbook: The Portable Guide to Getting Out Alive Running Press ( ஏப்ரல் 26 , 2011 ). ஐஎஸ்பிஎன் 978-0762440641. 2) Hawke's Green Beret Survival Manual Running Press ( சூன் 9, 2009 ). ஐஎஸ்பிஎன் 9780762433582 3) The Quick and Dirty Guide to Learning Languages Fast Paladin Press ( செப்டம்பர் 1 , 2000 ) ஐஎஸ்பிஎன் 978-1-58160-096-4 (புணைப் பெயர் ஏ.ஜி ஹாக்). 4) In the Dark of the Sun Pixel Dragon Designs ( ஆகஸ்ட் 24, 2010 ) ஐஎஸ்பிஎன் 978-0982931608 (திகில் கிம் மார்டின் இணை ஆசிரியராக). ஆஸ்கர் மின்கோவஸ்கி ஆஸ்கர் மின்கோவஸ்கி (Oskar Minkowski - ஜனவரி 13, 1858 - ஜூலை 18, 1931) ஜெர்மன் நோயியலாளரும் (Pathologist), வானவியலாளரும் ஆவார். உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர். மின்கோவஸ்கியின் இளைய சகோதரர், உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர் ஹெர்மன் மின்கோவஸ்கி ஆவார். ஹெர்மன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆசிரியரும் ஆவார். ஆஸ்கர் மின்கோவஸ்கி 1831ம் ஆண்டு, ஜனவரி 13ம் நாள், கௌனாவுக்கு அருகிலுள்ள அலெக்சன் (Alexoten, near Kaunas, now in Lithuania) என்று அழைக்கப்படும், இன்றைய லிதுவேனியாவில் பிறந்தார். லிதுவேனிய யூதக் குடும்பத்தில் பிறந்து பின் கிறித்தவ மதத்தைத் தழுவினார்.ஆஸ்கர் மருத்துவப் படிப்பை 1888ல் முடித்தார். மேரி ஜோஹன்னா சேகல் என்பவரை 1894ல் மணமுடித்தார். 1904 வரை ஸ்ட்ராபௌர்க்கில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் கிரிச்வேல்த்-ல் மருத்துவப் படிப்பின் அவைத்தலைவராக இருந்தார். பின் பிரெஸ்லுவில் பேராசிரியராகப் பணியாற்றினார். உலகின் வெற்றிகரமான முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையைச் (hepatectomy) செய்தவரும் இவரே. சர்க்கரை நோயின் காரணி போதுமான மண்ணீரல் சுரப்பு இன்மையே என்று ஆஸ்கர் நிரூபித்தார். (சர்க்கரைநோயின் கட்டுப்பாட்டாளர்/மேலாளர் இன்சுலின் என்ற ஹார்மோன் என்ற உண்மையை பிரடரிக் பாண்டிங் (Dr.Frederick Banting) பின்னரே கண்டறிந்தார்). பிறகு ஆஸ்கரும், ஜோசப் வான் மேரிங்கும் இணைந்து மண்ணீரல் தான் சர்க்கரை கட்டுப்பாட்டை நடத்தும் தொழிற்சாலை என்று அறிந்தனர். ஆஸ்கர் மின்கோவஸ்கியின் சேவையைப் பாராட்டும் வகையில், இத்துறையில் அரிய ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் "மின்கோவஸ்கி விருது" என்ற விருதினை சர்க்கரை நோய்க்கான ஐரோப்பியக் கழகம் வழங்கி வருகிறது. அலெசாந்திரா கிலியானி அலெசாந்திரா கிலியானி (Alessandra Giliani, 1307- 26 மார்ச்சு 1326) என்பவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடற்கூற்றியலாளர். இடைக்காலத்தில் வாழ்ந்தவர். அலெசாந்திரா கிலியானி கி.பி 1307ல் பிறந்தார். 19 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்கவர். அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து, இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்குச் செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் எனக் கண்டறிந்தார். உலகில் முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, வேறு வண்ண திரவம் ஏற்றியவரும், அதனைப்பற்றி பதிவு செய்தவரும் அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியவும் படிக்கவும் முடிந்தது. இதன் மூலம் கிலியானி மருத்துவர்களுக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தார். இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரகப் பார்க்கப்பட்டது. மேலும் அவாறு செயல்படுவோருக்குத் தூக்கு அல்லது கொலை தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும், கடவுள் மறுப்பு என்றும் போதிக்கப்பட்டது. இக்காலத்தில்தான் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி, பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார். இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஓட்டோ, கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16 எம். மரியம்பிச்சை மரணமடைந்ததை அடுத்து திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2011 அக்டோபர் 13 ல் நடந்தது. ஆளும்கட்சியான அதிமுக வெற்றி பெற்றது. அமைச்சர் சொ. கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் 2012 மார்ச்சு 18-ந்தேதி நடந்தது. அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க. சார்பில் முருகன் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். 242 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,59,760 வாக்குகள் பதிவாகின. இது 77.52 சதவீதம் ஆகும். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி இதில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஈட்டுத்தொகையை (Deposit) இழந்தனர். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன், விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வி. ஆர். கார்த்திக் தொண்டைமான், தேமுதிக வேட்பாளராக ஜாகீர் உசேன், ஐஜேகே வேட்பாளராக சீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டனர்.அ.தி.மு.க., வேட்பாளர் வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பெருமாள் வெற்றி பெற்றார். ஜூலை 18ம் தேதி, 2013இல் திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அக்டோபர் 6 அன்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 14 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்தார். திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி) இடைத் தேர்தல், 2015 எஸ். வளர்மதி அதிமுக 1,51,561 - என். ஆனந்த் திமுக 55,045 ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015 ஆர். கே. நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் பதவி விலகல் செய்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9 ஆயிரத்து 710 வாக்குகள் பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் தேர்தல் வைப்புநிதியை இழந்தனர். வழை மரம் வழை ("Ochrocarpos longifolius") என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். ஒரிக்கோட்டை ஓய்கோட்டை என்பது பழமையான பெயர். இது காலபோக்கில் ஒரிக்கோட்டை என்றாயிற்று. ஒரிக்கோட்டை கிராமம் திருவாடானை வட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் இப்பகுதியில் உள்ள எட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகள் பயிலுகின்றனர். இக்கிராமத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சம அளவில் உள்ளனர். அதோடு ஒற்றுமையும் அன்பும் நிறைந்து காணப்படும். இங்கு ஸ்ரீ நல்லாதுரை முனீஸ்வரர் ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி ஆலயம் சிறப்பு மிகுந்தது ஆகும். இக்கவிளில் ஆண்டுதோறும் மே மதம் இறுதியில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் பூக்குழி இறங்குதல் போன்ற வழிபாடுகள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். இங்கு இந்து, கிருத்துவர் பகுபாடு இல்லாமல் இறைவனை வழிபடுவர். இங்கு ஜெபமாலை அன்னை ஆலயம் இந்த பகுதியின் சிறந்த ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இங்கும் இந்து கிருத்துவர் வேறுபாடு கிடையாது. இங்கு சிறப்பு என்னவென்றால் இத்திருவிழா சமயத்தில் எப்படியும் மழை பொழியும் என்பது மறுக்க முடியாத ஒன்று ஆகும். ஆண்டுதோறும் இத்திருவிழா நடைபெறும் போது மழை பொழியும். இது விவசாய காலம் ஆகும். சௌமித்திர சாட்டர்ஜி சௌமித்திர சாட்டர்ஜி ("Soumitra Chatterjee") அல்லது சௌமித்திர சட்டோபாத்யாய் ( பிறப்பு சனவரி 19, 1935) இந்தியாவின் புகழ்பெற்ற வங்காளி நடிகர் ஆவார். வங்காளத் திரைப்படத்துறையின் மிகப்பெரும் இயக்குனராக விளங்கிய சத்தியஜித் ரேயின் திரைப்படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார். வங்காளத் திரைப்படத்துறையின் மக்கள் கலைஞராக விளங்கிய உத்தம் குமாருடன் அடிக்கடி ஒப்பிடப்படுவதாலும் நன்கு அறிமுகமானவர். இந்தியத் திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே விருதுக்கு 2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சௌமித்திர சாட்டர்ஜி மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணநகரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இளமைக் காலத்திலேயே சௌமித்திர சாட்டர்ஜியின் குடும்பம் கொல்கத்தா மற்றும் ஹௌராவிற்கு குடிபெயர்ந்தது. வங்காள இலக்கியத்தில் சௌமித்திர சாட்டர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறப்புகளுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழக்கத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பும் மேற்கொண்டார். கொல்கத்தாவில் சத்தியஜித் ரேயின் பழைய அடுக்ககம் ஒன்றில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்னால் இவர் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி உள்ளார். சௌமித்திர சாட்டர்ஜி சத்தியஜித் ரேயின் "அப்பூர் சன்சார்" (அப்புவின் உலகம்) என்றத் திரைப்படத்தில் 1959ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதன்பிறகு ரேயுடன் பதினான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடன் சர்மிளா தாகூரும் பல ரே திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரைப் பல வேடங்களில் நடிக்க வைத்துள்ள ரே சில வேடங்களும் திரைக்கதையும் இவரை மனதில் இருத்தியே உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. சத்தியஜித் ரேயின் "ஃபெலுடா" தொடர் நூல்களிலும் 1970களின் "சோனார் கெல்லா", "ஜோய் பாபா ஃபெலுநாத்" என்ற இருத் திரைப்படங்களிலும் தனிநபர் துப்பறிவாளராக வரும் ஃபெலுடா என்ற பிரதோஷ் சந்திர மிடர் வேடத்தில் நடித்துள்ளார். "கரே பாய்ரே" என்ற ரவீந்திர நாத் தாகூரின் புதினத்தை திரைப்படவடிவில் எடுத்தபோது அதில் முதன்மை வேடத்தில் நடித்தார். "சாக்கா பிரசாக்கா" என்றத் திரைப்படத்தில் மனதை உருக்கும் விதத்தில் நடித்துள்ளார். சத்தியஜித் ரே தவிர மிருணாள் சென் ,தபன் சின்கா ஆகிய முன்னணி வங்காளத் திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சௌமித்திர சாட்டர்ஜி பெற்ற சில முதன்மையான விருதுகள்: ஜான் ஷெப்பர்ட் பேரோன் ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Adrian Shepherd-Barron, 23 ஜூன் 1925 – 15 மே 2010) ஏ.டி. எம் எனப் பரவலாக அறியப்படும் தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஜான் ஷெப்பர்ட் பேரோன் இந்தியாவின் அசாம் மாகாணத்தின் சில்லாங் (தற்போதைய மேகாலயாவில் உள்ளது) என்ற இடத்தில் 1925, ஜூன் 23-ஆம் நாள் இந்திய-பிரித்தானியப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை 'வில்பிரெட் பெரோன்' ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கிழக்கு வங்காளத்தின் (தற்போதைய வங்காள தேசம்) சிட்டகொங் துறைமுகப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்தார். பின்பு பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைப் பொறியாளராக உயர் பதவியில் இருந்தார். தாய் டோரத்தி ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற ஓர் டென்னிசு விளையாட்டு வீராங்கனையாவார். இவர் விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றாவராவார். ஷெப்பர்டுக்கு 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் ஜான் ஷெப்பர்ட் பேரோன் இங்கிலாந்தின் ஸ்டோவ் பள்ளியிலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் பின்பு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் படித்தார். இரண்டாம் உலகப் போரின்போது 159 வது பாராசூட் படைப் பிரிவில் பணியாற்றினார். ஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது சிந்தித்தார். அந்தசிந்தனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.. இவர் 'டெலாரூ கருவிகள்' என்ற தானியக்கப் பணமளிக்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். தற்போது 1.7 மில்லியன் இயந்திரங்கள் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளன. இந்த தன்னியக்க காசளிப்பு இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனிச்சிறப்பான காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 6 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார். இன்று வரை அதுவே தொடர்கிறது. காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 17 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள் இன்று நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன. ஜான் ஷெப்பர்ட் பேரோன் நீண்ட நாள் உடல்நலமின்றி ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்மோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி தனது 84ஆம் வயதில் 2010 மே 19 அன்று காலமானார். வாராணசி மாவட்டம் வாராணசி மாவட்டம் அல்லது வாரணாசி மாவட்டம் (, ) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வாராணசி நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535  சதுர கிலோ மீட்டர். 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194. இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர். மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%. முகுல் ராய் முகுல் ராய் (Mukul Roy, ; பிறப்பு 17 ஏப்ரல் 1954) இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமாவார். அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசின் பொதுச் செயலாளரும் ஆவார். தற்போதைய நடுவண் அமைச்சில் இரயில்வேத்துறை அமைச்சராக மார்ச்சு 20 அன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பாக இரயில்வேத்துறையின் இணை அமைச்சராகவும் கப்பல்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். வள்ளி (தெய்வம்) முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி. குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான். இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம். வள்ளியும் தெய்வானையும் முந்தைய பிறப்பில் ஶ்ரீமன்நாராயணன் மற்றும் நாராயணியின் மக்களாக இருந்தார்கள். முருகனை மணக்க இருவரும் விரும்பினர்.அதனாலேயே இருவரும் மறுபிறப்பு எடுத்தனர். வள்ளி குளித்த தடாகத்தின் சிதைவு , வடிவேலன் மயில் தன் கால்தடம் ஆகியனவற்றை காணலாம். தமிழ் கலாச்சாரத்திலே மாமன் மகளை மணம்புரியும் வழக்கம் வள்ளி வள்ளல் என்பதன் பெண்பால், வள்ளல்-முருகப்பெருமானின் மனைவி, வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது கதை. வள்ளிக்கிழங்கு வள்ளிக்கிழங்கு இவற்றில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் கிழங்கு கொடியின் வேரில் விழும் மாவலிக் கிழங்காகும். த குயீன் (திரைப்படம்) த குயீன் (The Queen) 2006 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும்.ஆன்டி ஹார்ரிஸ், கிறிஸ்டின் லாங்கன், டிரேசி சிவார்ட், பிராங்காய்ஸ் இவர்னி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஸ்டீபன் பிரீயர்ஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹெலன் மிர்ரேன், மைக்கேல் சீன், ஜேம்ஸ் கிறோவெல், ஹெலன் மெக்கிரோரி, அலெக்ஸ் ஜென்னிங்க்ஸ், ராஜர் அல்லாம், சில்வியா சிம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது. கோவில் மலை கோவில் மலை (Har haBáyith (எபிரேயம்: הַר הַבַּיִת‎), Haram Ash-Sharif (அரபு: الحرم القدسي الشريف‎) பழைய யெரூசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமய ஸ்தலங்களில் ஒன்று. ஆயிரம் வருடங்களாக இது ஒரு சமய ஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறிஸ்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பாவித்துள்ளன. வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை மொரியா மலையும் சீயோன் மலையும் ஆகும். கடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய தல்மூத், இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் ஆதாமை உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும். இரண்டாம் கோவில் காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, முதல் கோவில் சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, பாபிலோனியரால் கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, உரோம பேரரசால் கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர். இசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் சுன்னி இசுலாமியரால் நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், முகம்மது சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் பாறைக் குவிமாடம் என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் மக்காவை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது. யூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. சிலுவைப் போர் காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர். 1967 இலிருந்து இசுரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டில் இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும். இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது. அடோன்மண்ட் (திரைப்படம்) அடோன்மண்ட் (Atonement) 2007 இல் வெளியான பிரித்தானிய காதல்-போர்த் திரைப்படமாகும். டிம் பெவன், எரிக் பெல்னர், பால் வெப்ஸ்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோ ரைட் ஆல் இயக்கப்பட்டது. ஜேம்ஸ் மெக்அவாய், கீரா நைட்லி, சாய்ரோஸ் ரோனன், ரோமோலா காராய், வனஸ்சா ரெட்கிரேவ், ஜூனோ டெம்பிள், பெனிடிக்ட் கம்பர்பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது. சரஸ்வதி சம்மான் விருது சரஸ்வதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும். 1991 ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் இந்திய ரூபாய் ஆகும். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 1729 (எண்) ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது அல்லது இராமானுச எண் அல்லது 1729 ("One Thousand Seven Hundred and Twenty-Nine" அல்லது "Ramanujan Number") என்பது தமிழ் எண்களில் ௧௭௨௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும். 1729 என்பது 1728இற்கும் 1730இற்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும். ஜி. எச். ஹார்டி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார். அவ்விரு வழிகளும் பின்வருமாறு:- formula_1 1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும். வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்) வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (Wallace & Gromit: The Curse of the Were-Rabbit) 2005 இல் வெளியான பிரித்தானிய அசைவூட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். நிக் பார்க், கிளார் ஜென்னிங்க்ஸ், பீட்டர் லார்ட், கார்லா ஷெல்லி, டேவிட் ஸ்பார்க்ஸ்டன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு நிக் பார்க் மற்றும் ஸ்டீவ் பாக்ஸ் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் சாலிஸ், ரால்ப் பியேன்னஸ், ஹெலேனா கார்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. பாலியல் இனப்பெருக்கம் பால்சார் இனப்பெருக்கம் (Sexual reproduction) அல்லது கலவிமுறை இனப்பெருக்கம் எனப்படுவது இரு உயிரினங்களின் மரபுப் பொருட்கள் ஒன்றிணைந்து ஓர் புதிய உயிரினம் உருவாவதைக் குறிக்கும். பால்சார் இனப்பெருக்கத்தில் இரு செயல்பாடுகள் முதன்மையானவை;அவை: ஒடுக்கற்பிரிவு, நிறப்புரிகள் பாதியாக உடைகின்ற செயல்பாடு; மற்றொன்று கருக்கட்டல், இரு பாலணுக்கள் இணைந்து நிறப்புரிகள் முதலில் இருந்த எண்ணிக்கைக்குத் திரும்புதல். ஒடுக்கற்பிரிவின்போது, ஒவ்வொரு சோடியின் நிறப்புரியும் வழமையாக பரிமாறப்பட்டு ஒத்த மறுசேர்க்கை நிகழச் செய்கிறது . பால்சார் இனப்பெருக்க கூர்ப்பு நிகழ்வு புதிரானது. பால்சார்ந்த இனப்பெருக்க உயிரினங்களுக்கான முதல் தொல்லுயிர் எச்ச ஆதாரங்கள் ஏறத்தாழ 1 முதல் 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஸ்டேனிய காலத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுகின்றன. கட்புலனாகத்தக்க உயிரினங்கள் பெரும்பாலானவற்றில், ஏறத்தாழ அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்களில், பால்சார் இனப்பெருக்கமே முதன்மையான இனப்பெருக்க வழியாக உள்ளது. இந்தச் செயல்முறைகள் ஒரேபோல இருப்பதால் பாக்டீரிய இணைவுறுதல், இரண்டு பாக்டீரியாக்களிடையே டி. என். ஏ. மாற்றிக்கொள்வது, பால்சார் இனப்பெருக்கத்துடன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. உயிரியல் கூர்ப்புக் கொள்கைகள் முந்தைய பால்சாரா இனப்பெருக்கத்திலிருந்து பால்சார் இனப்பெருக்கம் உருவானதற்கு பல விளக்கங்கள் அளித்துள்ளன. கிளைப்பாட்டின் தேர்வு அழுத்தம் காரணமாக — தனது கிளைப்பாட்டுத் தொகையில் மாறிவரும் சூழலுக்கேற்ப மிக விரைவாக மாற்றங்களை உண்டாக்கிட கருவுறா இனப்பெருக்கத்தினை விட விரைவான பால்சார் இனப்பெருக்கத்தின் வினைத்திறன்.மேலும் கிளைப்பாடு வேறொரு கிளைப்பாட்டுடன் மட்டுப்படுத்திய வளங்களுக்காகப் போராடும் வகையில் கூர்ப்பு மேம்பட பால்சார் இனப்பெருக்கம் உதவுகிறது. வள்ளி (கொடி) வள்ளி (Dioscorea pentaphylla) என்பது இதன் பெயர் இது ஒரு கொடி வகையாகும். இக்கொடியிலிருந்து "வள்ளிக்கிழங்கு" கிடைக்கிறது. இதன் வேறு பெயர் "வள்ளைக்கொடி" என்பதாகும். வள்ளி (அணிகலன்) வள்ளி என்பது போரின்போது போரிடும் வயவர் சூடும் அடையாளப் பூ. இதனை 'வாடா வள்ளி' எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது அரசன் வழங்கிய பூ ஆனதால் வள்ளி எனப்பட்டது. இது எந்தக் குடியைச் சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் அடையாளம். பனை, வேம்பு, ஆத்தி போன்ற எந்தப் பூவாகவும் இருக்கலாம். இந்தப் பூவைச் சூடியவன் போரில் புறமுதுகிட்டு ஓடாத வீரக் கழலும் அணிந்திருப்பான். ஆனிரைகளைக் களவாடிக் கவர்ந்துவரும் போர்ப்பாங்கு வெட்சித்திணை எனப்படும். அதில் 14 துறைகள் உண்டு. மற்றும் களவாடிய ஆனிரைகளை மீட்கும் கொற்றவைநிலையும் வெட்சித்திணையே. இந்தக் கொற்றவை நிலையில் 21 துறைகள் உண்டு. இந்த 21 துறைகளில் ஒன்று வயவர் வாடாவள்ளி சூடுதல். போந்தை, வேம்பு, ஆர்(ஆத்தி) என்னும் பூக்களைச் சூடி வேந்தர்கள் போரிடுவர். அப்போது அவர்களது படைவீரர்கள் அதே பூவைச் சூடிப் போரிடுவர். அந்தப் பூ வாடாத பொற்பூவாக இருக்கும். இந்த வயவர் சூடிய பூவுக்கு வாடாவள்ளி என்று பெயர். வள்ளி (தொய்யில்) மேனியில் எழுதிய வள்ளிக்கொடியை தொய்யில் என்பர். இக்காலத்தில் மகளிர் கைகளிலும் கால்களிலும் மருதாணிக் குழம்பால் எழுதப்பட்டும் கலைக்கொடி போன்றது அக்காலத்தில் மகளிர் மார்பில் எழுதப்பட்ட தொய்யில். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் வெண்ணிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்டிருந்தது. முதன்முதலாக அழகன் அழகியைத் தொலைவில் பார்க்கும்போது அவன் அணங்குத் தெய்வமோ என ஐயுறுவானாம். பின்னர் உற்றுநோக்கிச் சில அடையாளங்களால் இவள் பெண்ணே எனத் தெளிவு பெறுவானாம். அந்தத் தெளிவைத் தரும் அடையாளங்கள் பலவற்றுள் வள்ளி என்பதும் ஒன்று. இந்த வள்ளி என்பது முலையிலும் தோளிலும் எழுதிய கொடி. (பிற வண்டு மொய்த்தல், இழைக்கப்பட்ட செயற்கை அணிகலன்கள் அணிந்திருத்தல், பூ அணிந்திருத்தல். கண்ணில் நிழலாடல், அலமரும் தடுமாற்றம், கண் படபடத்தல் முதலானவை) காண்க: வள்ளி வள்ளி (சுவர்சிற்பக் கொடி) காஞ்சி நகரத்துத் திருவெஃகா மாடத்துச் சுவரில் வள்ளிக்கொடி புடைப்பு-ஓவியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை புடைப்போவியங்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி வள்ளி என்பது ஒருவரின் வள்ளண்மையைக் குறித்துப் போற்றிப் பாடுவது. பாடாண் திணையில் கடவுளை வழிபடுதலும், பிறரைக் கடவுளாக்கி வழிபடுதலும் உண்டு. வள்ளண்மை வள்ளண்மையைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. புதிர்ப் பாடல்கள் புதிர் பாடல்கள் என்பது பாடல்களில் புதிர் முறையிலான கேள்விகளைப் பாடல்களாகக் கூறி அதற்கு விட கோருவதாக இருக்கும். பாடல்: 1 "டா டா டா டா டா டா அது டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை" - இதில் முதல்வரியில் ஆறுடா உள்ளது. இரண்டாவது வரியில் பத்து டா உள்ளது. அதாவது ஆறுடா அது, பத்துடா மாட்டை என்பது ஆறடா அங்கே பத்துடா மாட்டை என்பது போன்று சிறுவர் விளையாட்டுப் புதிர்ப் பாடல்கள் உள்ளன. பாடல்:2 "தலையில் எட்டு இடையில் ஐந்து கடையில் மை" எல்லாம் சேர்ந்தால் மேன்மை அஃது என்ன? இதற்கு விடை “அருமை”. பாடல்:3 "ஈராறும் ஈரறையும் இல்லையென்றேன் ஆதலினால் ஈராறு செல்லாது இருந்தீரே - ஈராறு கட்டி அணைத்தேநீ காதலுடன் சேர்ந்தாலே வட்டியுடன் தானே வரும்." இதற்கு என்ன பொருள் தெரியுமா? 2 x 6 = 12 + 2 x 1/2 = 12 + 1 = 13 13 ஆவது நட்சத்திரமாகிய அத்தம் (பொருள்) 2 x 6 = 12 ஆவது நட்சத்திரமாகிய உத்திரம் (மறுமொழி) 2 x 6 = 12 ஆண்டில் பன்னிரண்டாவதான வெகுதான்ய (நெல்) நட்சத்திரக் கணக்கு போடுவது போல இப்பாட்டின் ஆசிரியர் சுந்தரக் கவிராயர், செல்வர் இயல்பை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிக் காட்டுகிறார். பதின்மூன்று நட்சத்திரமாகிய அத்தம் (அதாவது பொருள்) என்னிடத்தில் இல்லையென்று நான் சொன்னபடியால் பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்திரம் (மறுமொழி) உரையாது இருந்தீரே. ஆண்டில் பன்னிரண்டாவதாகிய வெகுதான்யத்தை (மிகுந்த நெல்லை) மூட்டை மூட்டையாகக் கட்டி அவற்றை ஆசையுடனே சேர்த்து வைத்தால் பொருள் வட்டியுடன் தானே வரும் என்பது இப்பாட்டின் பொருள். பாடல்:4 ”முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும் முன் எழுத்து இல்லாவிட்டால் பெண்ணேயாகும். பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம் பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம் சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் முதலாம் பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே.” என்பது அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பவர் எழுதிய பாடல். இப்பாடலில் விடை கண்டறியும் வகையில் விடைகள் இலைமறை காயாக அமைத்துப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலின் விடை: புதையல் என்பதையும் முடிவில் தெரிவித்துள்ளார். உணவுவழி நோய்த்தொற்று உணவுவழி நோய்த்தொற்று ("Foodborne illness" அல்லது "foodborne disease") என்றும் பொதுவழக்கில் உணவு நஞ்சாதல் ("food poisoning") என்றும் கெட்டுப்போன உணவை அல்லது நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதால் நோயுறுவது குறிக்கப்படுகிறது. தவிர வேதியியல்|வேதிப்பொருள் அல்லது நச்சுக்காளான் போன்ற இயற்கை நச்சுக்கொருள்|நச்சுப்பொருட்களை உண்பதாலும் நோய் உண்டாகலாம். உணவு நஞ்சாதல் இருவழிகளில் ஏற்படுகிறது: நச்சுப்பொருளால் அல்லது நோய்த்தொற்றால். உணவு நஞ்சாதல் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் "நஞ்சு" என அறியப்படும் உணவிலுள்ள வேதிப்பொருள் அல்லது நச்சுப்பொருளால் பெரும்பாலும் நோயுறுவதில்லை; நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதாலேயே பெரும்பான்மையினர் நோயுறுகின்றனர்.ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 76 மில்லியன் மக்கள் உணவுவழியால் நோயுறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5000 பேர்கள் வரை இதனால் மரணமடைவதாகவும் மதிப்பிடப்படுகிறது. உணவு உண்டபின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். நச்சுத்தன்மை பெற எது காரணம் என்பதைப் பொறுத்து இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல், பேதி மற்றும் சுரம், தலைவலி, உடல்தளர்வு எனக் காணப்படலாம். பெரும்பாலான சமயங்களில் கடிய நோய் மற்றும் மன உலைவு ஏற்பட்டாலும் உடல் விரைவாக பழையநிலைக்கு திரும்புகிறது. கூடுதல் தீ வாய்ப்புள்ள குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிர் (அவர்களின் கரு), வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் உணவுவழி நோய்த்தொற்றால் நிரந்தர நலக்கேடு பெறுவதுடன் மரணமடையவும் கூடும். உணவுவழி நோய்களில் பெரும்பான்மையாக (77.3%) விலங்குகளின் திடக்கழிவுகளில் காணப்படும் "கேம்ப்பிலோபாக்டர்" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அடுத்து "சால்மனெல்லா", "சிகெல்லா" போன்ற பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன. ஜுவான் கிரிஸ் ஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ் (மார்ச் 23, 1887 – மே 11, 1927), அல்லது ஜுவான் கிரிஸ், ஒரு எசுப்பானிய ஓவியரும் சிற்பியும் ஆவார். இவர் எசுப்பானியராயினும், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பிரான்சில் கழித்தார். இவரின் படைப்புகள் கியூபிசம்கலை இயக்கத்தில் மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.. கொடிநிலை கொடிநிலை என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இக்காலத்தில் கோயில் விழாக்களைக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். இதனைத் தொல்காப்பியம் கொடிநிலை எனக் குறிப்பிடுகிறது. பாடாண்திணை எட்டு வகைப்படும். அவற்றில் முதல் ஆறு துறைகள் அமரர்கண் முடியும். அமரர் என்போர் தெய்வநிலை எய்திய பெருமக்களும், தெய்வங்களும் ஆவர். கடவுள் மேலும், வேண்டியவர் மேலும் காமம் கொள்ளல் பின்னைய இரண்டு. அவை காமப்பகுதி எனப்படும். காமப்பகுதி அவர்களைக் குழந்தையாக்கியும் ஊரொடு தோற்றம் செய்தும் இரு வகையில் பாடப்படும். தொல்காப்பியம் 3-81,82 கொடிநிலை கந்தழி வள்ளி ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும். கந்தழி கந்தழி என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வழிபடும் தெய்வம், நடுகல்-தெய்வம் போன்றவை பகைவரின் வலிமையை அழித்துப் பற்றுக்கோடாகித் துணைநின்ற பாங்கைப் பாராட்டிப் பாடுவது கந்தழி. கந்து என்னும் சொல் துணைநிற்றலைக் குறிக்கும். பாடாண்திணை எட்டு வகைப்படும். அவற்றில் முதல் ஆறு துறைகள் அமரர்கண் முடியும். அமரர் என்போர் தெய்வநிலை எய்திய பெருமக்களும், தெய்வங்களும் ஆவர். கடவுள் மேலும், வேண்டியவர் மேலும் காமம் கொள்ளல் பின்னைய இரண்டு காமப்பகுதிகள். தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்றவை காமப்பகுதி. இது குழந்தையாக்கியும் ஊரொடு தோற்றம் செய்தும் இரு வகையில் பாடப்படும். கொடிநிலை கந்தழி வள்ளி ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும். இது போக தமிழ்த் தத்துவக் கொள்கையும் இங்கு எண்ணத்தக்கது கொடிநிலை ஒன்றைப் பற்றுக் கோடாக கொண்டு படர்தலையும் அதாவது உயிரின் இயல்பையும் வள்ளி அருள் நிலையாகவும் கந்து கட்டு என்றும் பொருளில் கந்தழி கட்டழிந்த (limitless) பரம்பொருளையும் குறிக்கும் தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12-ல் ஒன்று பாணாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை கந்தழி வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும். ச. முத்துசெல்வி எஸ். முத்துசெல்வி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2012 இடைத்தேர்தலில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சங்கரன்கோவில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சங்கரலிங்கத்தின் (1984-88) மகள் ஆவார். இவர் பொறியியல் பட்டதாரி மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியின் தலைவியுமாவார். இந்திய தேசிய தினங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசு சில நாள்களை சிறப்பு நாள்களாக அறிவித்துள்ளது. !வரிசை எண் !! தேதி !! சிறப்பு நாட்கள் வள்ளி (சொல் விளக்கம்) தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12-ல் ஒன்று பாடாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை கந்தழி வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும். காண்க: கொடிநிலை, கந்தழி தேவநம்பிய தீசன் தேவநம்பிய தீசன் அல்லது தீசன் (ஆங்கிலம்: "Devanampiya Tissa" அல்லது "Tissa", சிங்களம்: "දේවානම්පිය තිස්ස" அல்லது "තිස්ස") என்பவர் கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த மன்னன் ஆவார். பௌத்த சமயத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால் இவருடைய ஆட்சிக் காலம் முக்கியம் பெறுகின்றது. இவருடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு மகாவம்சம் உதவுகின்றது. மூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 267இல் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் பேரரசர் அசோகருடன் நட்புக் கொண்டிருந்தார்பௌத்தஅறிமுகம் ஆனது. முதலாம் விமலதர்மசூரியன் முதலாம் விமலதர்மசூரியன் அல்லது கோணப்பு பண்டாரன் அல்லது தொன் ஜூவான் ("Vimaladharmasuriya I" அல்லது "Konappu Bandara" அல்லது "Don Juan", சிங்களம்: "පළමුවන විමලධර්මසූරිය" அல்லது "කොනප්පු බණ්ඩාර" அல்லது "දොන් ජුවන්") என்பவர் இலங்கையில் 1591 இலிருந்து 1604 வரை ஆட்சி செய்த கண்டி இராச்சிய மன்னராவார். போர்த்துக்கேயருக்கு எதிராக இவர் புரிந்த தந்துரேப் போர், பலனப் போர் என்பன குறிப்பிடத்தக்கவை. கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார். முதலாம் இராஜசிங்கன் கண்டிராச்சியத்தை பரிபாலுப்பதற்காக பிரதிநிதியாக வீரசுந்தர பண்டாரவை நியமித்தார். பின்னர் இவர் மீது சந்தேகப்பட்டு அவரை பொறிக்கிடங்கில் வீழ்த்திக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தார். கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் கத்தோலிக்கப் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர், போர்த்துக்கேயர் தொன் ஜூவானின் தலைமையிலான படையைக் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற அனுப்பி வைத்தனர். கண்டி இராச்சியம் கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார். ஆனாலும் யமசிங்க பண்டாரனைக் கொன்று, தொன் ஜூவான் போர்த்துக்கேயருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து 1591ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார். முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்கு அரசனானதும் 1592இல் முதலாம் இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தார். ஆனாலும் இவ்வாக்கிரமிப்பு முதலாம் விமலதர்மசூரியனால் முறியடிக்கப்பட்டது. முதலாம் இராஜசிங்கன் போரில் தோல்வியுற்றுத் திரும்பிச் செல்லும் தருணத்தில் 1593ஆம் ஆண்டு பெத்தங்கொடை என்னும் இடத்தில் மூங்கிற் சிராய் குத்தி இறந்தார். 1594ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படையுடன் தொன் பிலிப் என்கின்ற யமசிங்க பண்டாரவின் மனைவி குசமாசனதேவியையும் கூடவே அனுப்பினர். முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார். தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது. இதன்பின் குசமாசனதேவியை விமலதர்மசூரியன் மணம்செய்து தனது ஆட்சி உரிமையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார். 1602ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொன் ஜெரனிமோ டி அசவேது எனும் படைத் தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பி வைத்தனர். இவ்வாக்கிரமிப்பின்போது போர்த்துக்கேயர் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றனர். ஆனாலும் போர்த்துக்கேயரின் படையில் சேவை செய்து வந்த இலங்கைப் படை வீரர்கள் (லஸ்கரின் படையினர்) முதலாம் விமலதர்மசூரியனின் படையுடன் இணைந்து கொண்டதால் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டனர். பலன எனும் இடத்தில் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டதால் இப்போர் பலனப் போர் என அழைக்கப்படுகின்றது. முதலாம் விமலதர்மசூரியன் சப்பிரகமுவ மாகாணத்தி்ல் போர்த்துக்கேயரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தரின் தந்ததாதுவைக் கொண்டு வந்து கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வைப்பித்தார். அத்தோடு, ஒவ்வோர் ஆண்டும் தலதா ஊர்வலத்தை நடத்துவித்தார். மேலும் பர்மாவின் தென் பகுதியிலிருந்து புத்த பிக்குகளை வரவழைத்து உபசம்பதா என்னும் சடங்கைச் செய்வித்தார். இலங்காதிலக, கடலாதெனிய, ரிதி, தெகல்தொருவ முதலிய விகாரைகளைப் புனருத்தாரணம் செய்தார். கொத்மலை, ஹரிஸ்பத்துவ, ஹேவாஹெட்ட, யடிநுவர, உடதும்பர, உடுநுவர, வலப்பன முதலிய இடங்களில் விவசாய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அத்தோடு ஊவாவில் இரும்புத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.பருத்திச் செய்கையை விருத்தி செய்தமை ஆட்சியாளர் பட்டியல், இலங்கை மஞ்சள் மூக்கு நாரை மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork, Mycteria leucocephala), வண்ண நாரை அல்லது செவ்வரி நாரை சங்குவளை நாரை என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். மஞ்சள் மூக்கு நாரைகள் குறைவாகவே வலசை போகின்றன. இவை மரங்களில் கூடுகட்டுகின்றன. இவை இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளிலும், தென் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படும். இந்தப் பறவைகளுக்கு நீர்வாழ் உயிரினங்கள்தாம் முக்கிய உணவு. முட்டையிட எங்கே கூடு கட்டுவது என்பதை ஆண்பறவையே முடிவு செய்யும். அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, அந்த ஆண் பறவையுடன் கூடுவது குறித்து பெண் பறவை முடிவு செய்யும். பெண்பறவையுடன் கூட ஆண் பறவைகளுக்கிடையே கடும் போட்டி இருக்கும் சூழல் இருந்தால், அந்தப் பறவைகளில் எந்த ஆண் பறவை மிக உயரமாக இருக்கிறதோ, அதனோடு இணைசேர பெண் பறவை முடிவுசெய்யும். பெண்பறவையானது இரண்டு முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். குஞ்சுகளுக்குத் தாய், தந்தை என இரண்டு பறவைகளும் இரை தேடிக்கொண்டு வரும். இவற்றின் அலகுகள் நீண்டதாக இருப்பதால், குஞ்சுகளுக்கு ஊட்ட ஒரே நேரத்தில் ஐந்தாறு சின்னச் சின்ன மீன்களைக்கூட கவ்விக்கொண்டு வரும். தம்பிக்குருவி தம்பிக்குருவி என அழைக்கப்படும் இப்பறவை மூளைக்காய்ச்சல் பறவை எனவும், பாப்பிஹா எனவும் அழைக்கப்படுகிறது. இவை மனித குடியிருப்பிற்கு அருகிலுள்ள முந்திரி, மா, பலா, புளி முதலிய மரங்களில் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களின் அடர்த்தி குறைந்த காடுகளிலும், மரங்களில் மறைந்தும் வாழும், வெட்கப்படும் பறவையே. ஆனால், குயிலை விட அதிகம் மறைந்து வாழும் பறவை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது குயிலை பார்ப்பதும் படமெடுப்பதும் எளிது. தம்பிக்குருவியைப் பார்ப்பதே கடினம். காலை, பகல் முழுவதும், மாலை மற்றும் இரவில் குயில்கள் அமர்ந்திருக்கும் அதே மரத்தில் தங்கி, குயிலோடு இணைந்து பாடும். ஆனால், இப்பறவையின் பாடல் கேட்க சகிக்காது. பகலில் ஆகாயத்தில் அலைந்து பாடித்திரியும். பறவையியலார் குறிப்பிடும் இதன் இயல்புகள் முதுகுபுறம் அடர்ந்த சாம்பல் நிறமும், வயிறு பிரவுண் பட்டைகளுடைய வெள்ளை நிறமும் கொண்டது. இதன் வாலும் பட்டைகளுடையது. உரோமங்களுடைய கம்பளி புளுக்கள், பெரிய வகைப் பழங்கள், கிளை நுனிகள் போன்றவை இதன் உணவுகளாகும். குயிலைப்போன்று இதுவும் பிற பறவைகள் கூட்டில் முட்டையிட்டு அப்பறவைகளைக் கொண்டே அடைக்காத்து குஞ்சு பொரிக்கும் அயிரை மீன் அயிரை மீன் என்பது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் நன்னீர் மீன் இனம் ஆகும். இவை குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழ்கின்றன. இவை உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன. இவை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பயன்படுத்தும் போது பிற மீன்களைப் போல் இம்மீனின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை. இம்மீன்கள் சேற்றுப்பகுதியில் வசிப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாகும்படி உப்பு கொண்டு ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரு சில முறை சுத்தம் செய்யப்படுகிறது. இம்மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இதன் விலையும் பிற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள அசைவ உணவகங்களில் இம்மீன் குழம்பு கிடைக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டு நாள் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 19 -ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியச் சிறப்பை இந்நாளில் இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை மனதில் உறுதி கொண்டு, அன்பு, சத்தியம் ஆகியவற்றை மூச்சாக கொண்டும் இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களும் இணைந்து இந்திய ஒருமைப்பாட்டை காக்க உறுதி செய்வதும் இந்நாளின் நோக்கமாகும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பாரம்பரியமுடைய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பாகும். "தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்" எனும் பெயரில் 1955 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது‌. சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 27-11-1956 ஆம் நாள் பதிவு செய்யப் பெற்றது. பின்னர் 1973 ஆம் ஆண்டில் "தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்" எனும் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. இது தவிர நலிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித்தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்திற்கான மாத உதவித் தொகை போன்று வேறு சில திட்டங்களின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2014 ஆகஸ்ட் 3 இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக தேவாவையும், செயலாளராக சித்ரா விக்னேஸ்வரனை மும் நியமித்தார். தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தின் தலைவராக இசையமைப்பாளர் தேவா உள்ளார். காட்சிக் கலை காட்சிக் கலை என்பது, காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக் குறிக்கும். வரைதல், ஓவியம், சிற்பம், வடிவமைப்பு, கைப்பணி, நவீன காட்சிக் கலைகள் (ஒளிப்படம், நிகழ்படம், திரைப்படம்), கட்டிடக்கலை என்பன காட்சிக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிகழ்த்து கலை, கருத்துருசார் கலை, நெசவுக் கலை போன்ற பல்வேறு பிற கலைத்துறைகளும், பிற அம்சங்களுடன் சேர்த்துக் காட்சி அம்சங்களையும் கொண்டிருப்பதனால், இந்த வரைவிலக்கணத்தை இறுக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. காட்சிக் கலைகளுள், தொழிற்றுறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்கரிப்புக் கலை போன்ற பயன்படு கலைகளும் அடங்குகின்றன. மேலே குறிப்பிட்டபடி, காட்சிக் கலை என்பது தற்காலத்தில் நுண்கலைகளையும், அதனுடன் சேர்த்து, பயன்படு கலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கினாலும், எல்லாக் காலத்திலுமே இதே நிலை இருந்ததில்லை. 20 நூற்றாண்டுத் தொடக்கத்தின் கலை கைவினை இயக்கக் காலத்துக்கு முன், பிரித்தானியாவிலும் மேற்குலகின் பிற இடங்களிலும், கலைஞன் என்னும் சொல் ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளில் ஈடுபடுபவர்களை மட்டுமே குறித்தது. இது கைவினையையோ அல்லது பயன்படு கலைகளையோ குறிக்கவில்லை. நாட்டார் கலை வடிவங்களையும், உயர் கலை வடிவங்களையும் ஒரு சேர மதித்த "கலை கைவினை இயக்கக்" கலைஞர்கள் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் வலியுறுத்தத் தவறவில்லை. அக்காலக் கலைப் பள்ளிகளும், இரண்டையும் வேறுவேறாக நோக்கியதுடன், கைவினைஞர்கள் கலைத்தொழில் செய்பவர்களாகக் கொள்ளமுடியாது என்னும் கொள்கையைக் கொண்டிருந்தன. எனவே கைவினை, பயன்படு கலைகள் போன்றவை கலை என்ற வரம்புக்குள்ளேயே வராதபோது காட்சிக் கலைகள் என்ற வகைப்பாட்டுக்குள் இருந்திருக்க முடியாது. முற்காலத்தில் காட்சிக் கலைகள் தொடர்பான கல்வி ஒருவருக்குக் கீழ் தொழில் பயிலுனராக வேலை செய்வதன் மூலமே பெறப்பட்டது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், கலைஞர்களுக்கான மதிப்பைக் கூட்டு முகமாக, "அக்கடமி" முறை மூலம் காட்சிக் கலைகள் உட்பட்ட கலைகளைப் பயில்வோருக்குக் கல்வி புகட்டினர். இந்தியா, இலங்கை போன்ற கீழை நாடுகளில், காட்சிக் கலைகள் தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட சாதி அல்லது குழுவினராலேயே பயிலப்பட்டு வந்தது. நுட்பங்கள் இரகசியமாகவே பாதுகாக்கப்படுவதும் உண்டு. மாணவர்கள், தந்தையிடம் அல்லது நெருங்கிய உறவினரிடம் இருந்து இக் கலைகளின் நுட்பங்களைப் பயின்றனர். தற்காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியாகக் காட்சிக் கலைக் கல்வியைக் கலைப் பள்ளிகளில் பயில்கின்றனர். இக்காலத்தில், காட்சிக் கலைகள் பெரும்பாலான கல்வி முறைகளில், ஒரு தெரிவுப் பாடமாக உள்ளது. எனினும், குறிப்பாகக் கீழை நாடுகளில், மரபுவழிக் காட்சிக் கலைகளைத் தொழில் பயிலுனராகச் சேர்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வழக்கம் இன்னும் நிலவுகிறது. வரைதல் என்பது பல வகைகளாகக் காணப்படும் கருவிகள், நுட்பங்கள் என்பவற்றுள் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ பயன்படுத்திப் படிமங்களை உருவாக்கும் முறையாகும். பொதுவாக ஒரு மேற்பரப்பில் அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய கருவி ஒன்றை அம் மேற்பரப்பில் வைத்து அழுத்திக் கீறுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. வரைதல் பொதுவாகத் தாளொன்றில் கோடு கீறுவதுடனும், பரப்புக்களுக்குச் சாயை கொடுத்தலுடனும் தொடர்புள்ளது. காரீயக் கோல், பென்சில், பேனாவும் மையும், நிறப் பென்சில்கள், கரி, வண்ணப்பசை போன்றவை இத்தகைய கருவிகள். தற்காலத்தில், வரைவதற்கு, எண்மியக் கருவிகளும் பயன்படுகின்றன. பல்வேறு வகை வரைதலுக்கான மென்பொருள்களும் உள்ளன. வரைதலுக்கான நுட்பங்களில் கோட்டு வரைதல், கோட்டு நிரப்பல், குறுக்குக் கோட்டு நிரப்பல், கிறுக்கல், புள்ளி நிரப்பல் முதலியன அடங்கும். வரைதல் தொழில் புரிபவரை வரைவாளர் அல்லது வரைஞர் என அழைப்பர். வரைதல், குறைந்தது 16,000 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. பல்வேறு வகையான விலங்குகளைக் காட்டும் வரைதல்களைப் பிரான்சின் லாசுகோக்சு என்னும் இடத்திலும், இசுப்பெயினின் ஆல்ட்டமிராவிலும் உள்ள பழங்கற்காலக் குகைகளில் கண்டுபிடித்துள்ளனர். பண்டை எகிப்தில், பப்பிரசுத் தாள்களில் மையினால் வரைந்த மனிதர்களைக் காட்டும் வரைதல்கள், ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் முதற்கட்ட மாதிரியாகப் பயன்பட்டுள்ளன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பூஞ்சாடிகளில் வரைதல்களை வரைந்துள்ளனர். இவை முதலில் வடிவவியல் கோலங்களாகவும், பின்னர் மனித உருவங்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தகைய பூஞ்சாடிகள் கறுப்பு உருவ மட்பாண்டங்கள் எனப்பட்டன. கிபி 15 ஆம் நூற்றாண்டளவில், கடதாசித் தாள்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிய பின்னர், ஐரோப்பாவில் சான்ட்ரோ பொட்டிசெல்லி, ராஃபேல், மைக்கேலாஞ்செலோ, லியோனார்டோ டா வின்சி போன்றோர் வரைதலை ஓவியத்துக்கோ சிற்பத்துக்கோ ஒர் தொடக்கக் கட்டமாக மட்டும் கருதாமல் அவற்றைத் தனியான ஒரு கலை வடிவமாகவே பயன்படுத்தினர். இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு இடையே சில சமயங்களில் வரைதல்கள் வரையப்பட்டன. ஓவியம் என்பது, வண்ணத்தூள், ஊடகம், பிணைக்கும் பொருள் ஆகியவற்றால் ஆன நிறக்கூழைப் பயன்படுத்தி, தாள், கன்வசு, சுவர் போன்ற மேற்பரப்புக்களில் பூசுவதன் மூலம் பெறப்படுவது ஆகும். எனினும் வெறுமனே பூசுவது ஓவியம் ஆகாது. பல்வேறு கலை நுட்பங்களைப் பயன்படுத்திக் கருத்துரு சார்ந்த நோக்கங்களை அழகியல் நோக்குடன் கலைஞன் வெளிப்படுத்தும்போதே ஓவியம் உருவாகிறது. ஓவியமும் நீண்ட வரலாறு கொண்டது. பழமையான பழங்கற்காலக் குகைகளில் ஓவியங்கள் உள்ளன. தெற்கு பிரான்சில் உள்ள சோவெட், லாசுகாக்சு போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டு. சிவப்பு, மண்ணிறம், மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு குகைச் சுவர்களிலும், விதானங்களிலும் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே இவற்றின் கருப்பொருளாக உள்ளன. மனித உருவங்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் பண்டை எகிப்துக் கல்லறைகளில் காணப்படுகின்றன. இரண்டாம் ராம்செசுவின் பெரிய கோயிலில் உள்ள ஒரு ஓவியத்தில் ஐசிசுக் கடவுள், ராம்செசுவின் மனைவி அரசி நெஃபெர்த்தாரியை அழைத்துச் செல்லும் காட்சி ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. கிரேக்கர்களின் காலத்திலும், ரோமப் பேரரசுக் காலத்திலும் ஓவியங்கள் வளர்ச்சியுற்றன. இவ்விரு நாகரிகங்களும், பைசன்டைன் நாகரிகக் காலத்து ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன. பின்னர் மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில், 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கியோட்டோ, லியோனர்டோ டா வின்சி, ராஃபேல் போன்றோர் ஓவியக் கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். இத்தாலிய ஓவியக்கலையின் பொற்காலம் எனக் கருதப்படும் இக் காலகட்டத்தில், "கியாரோசுக்குரோ" என அழைக்கப்படும் "ஒளி-இருள்" நுட்பம் மூலம் முப்பரிமாண உணர்வைக் கொடுக்கக்கூடிய ஓவியங்கள் வரையப்பட்டன. வடக்கு ஐரோப்பிய ஓவியர்களும் இத்தாலிய ஓவியக் கலைச் செல்வாக்குக்கு உட்பட்டனர். பெல்சியத்தைச் சேர்ந்த சான் வான் எய்க், நெதர்லாந்தின் மூத்த பீட்டர் புரூகெல், செருமனியரான இளைய ஆன்சு ஒல்பெயின் என்போர் அக்காலத்தில் வெற்றிகரமான ஓவியர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் மினுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியத்துக்கு ஆழத்தையும் ஒளிர்வையும் கொடுத்தனர். 17 ஆம் நூற்றாண்டில், நெதர்லாந்தில் புகழ் வாய்ந்த ஓவியர்கள் உருவாகினர். ரெம்பிரான்ட் பைபிள் காட்சிகளுக்காகப் பெயர் பெற்று விளங்கினார், வெர்மீர் உள்ளகக் காட்சிகளை வரைவதில் சிறந்து விளங்கினார். 19 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பாவில் பல ஓவியப் பாணிகள் தோன்றி ஓவியக் கலைக்குப் புதிய பரிமாணங்களைக் கொடுத்தன. 19 ஆம் நூற்றாண்டில், பிரான்சில் உணர்வுப்பதிவியம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டன. குளோட் மொனெட், பியரே-அகசுத்தே ரெனோயிர், பால் செசான்னே போன்றோர் இக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உணர்வுப்பதிவியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் விதமாக பின்-உணர்வுப்பதிவியம் என்னும் கலைக் கோட்பாடு உருவானது. தொடர்ந்து குறியீட்டியம், வெளிப்பாட்டியம், கியூபிசம் போன்ற கலைக் கோட்பாடுகள் உருவாகி அவற்றின் அடிப்படையில் நவீன ஓவியங்கள் வரையப்பட்டன. ஓர்க்கா திமிங்கலம் ஓர்க்கா திமிங்கலம் ("Orcinus orca") என்பது கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாலூட்டி இனம் ஆகும். இது ஓர்க்கா எனவும் கொலைகாரக் திமிங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதுவே ஓங்கில் இனங்களில் மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியதும், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும் ஆகும். இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றன. ஆண் ஓர்கா திமிங்கலங்கள் 30 அடி நீளமும், பெண் ஓர்கா திமிங்கலங்கள் 26 அடி நீளமும் இருக்கும். ஆண் திமிங்கலத்தின் எடை 16,000 பவுண்டும், பெண் திமிங்கலத்தின் எடை 12,000 பவுண்டும் இருக்கும். இவை, அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டவை. சாதாரணமாக மணிக்கு 10 முதல் பதினாறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். நீந்தும்போது உடலை சமன் செய்து கொள்ள முதுகிலுள்ள துடுப்பு பயன்படுகிறது. இவற்றின் நீளம் சுமார் 6 அடி வரை காணப்படுகிறது. பெண் திமிங்கலங்களின் துடுப்பு பின்நோக்கி வளைந்து ஆணின் துடுப்பின் நீளத்தில் பாதியளவே காணப்படுகிறது. ஒவ்வொரு தாடையிலும் 20 முதல் 26 கூர்மையான பின்னோக்கி வளைந்த பற்கள் காணப்படுகின்றன. இவை பெரிய இரைகளைக் கடித்து உண்பதற்கு வசதியாக உள்ளன. இந்த ஓர்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் வரை இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டித் திமிங்கலங்களும் இருக்கும். பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிரிந்து செல்வதும் உண்டு. எல்லா பெண் திமிங்கலங்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால், ஆண் திமிங்கலங்கள் குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும். இவை 12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. தென் துருவ கடல்களில் வாழ்பவை டிசம்பர் முதல் ஜூன் வரையிலான பருவகாலங்களிலும், வடதுருவ கடல் பகுதிகளில் வாழ்பவை மே முதல் ஜூலை வரையிலான பருவ காலங்களிலும் இணை சேருகின்றன. பின் 12 மாதங்களுக்குப் பின் ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் இரண்டு வயது வரை குட்டிக்குப் பால் கொடுக்கின்றன. மேலும், பல ஆண்டுகள் தன் தாயின் பாதுகாப்பிலேயே குட்டிகள் வாழ்கின்றன. எனவே, இவை 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே குட்டிப் போடுகின்றன. இந்த ஓர்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. தனது இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள இவை எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு. ரூத் இங்கிலாந்து "ரூத் இங்கிலாந்து" (ஆங்கிலம் : Ruth England) இவர் மார்ச் 29 - 1970 ஆண்டு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர், இன்ஃபீரோவ்வில், (Inkberrow) பிறந்தார். இவர் ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். தற்போது, இவர் கணவர் மைக்கேல் ஹாக், இவர் ஒரு ஓய்வுப் பெற்ற முன்னாள் ஐக்கிய அமெரிக்க இராணுவச் சிறப்புப் படை அதிகாரியாவார். இவருடன் இணைந்து டிஸ்கவரி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான ஆண், பெண், காடு (Man, Woman, Wild) என்ற தொடர் நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் வெஸ்ட்மின்ஸ்டர், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி ஆவார். மற்றும் பிபிசி, சிஎன்பிசி, ஐ தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். 2004. சுவாதித் திருநாள் ராம வர்மா ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மா ("Swathi Thirunal Rama Varma", மலையாளம்: ശ്രrii സ്വാതി തിരുനാള്‍ രാമ വര്‍മ, (ஏப்ரல் 16 1813 - திசம்பர் 25 1846) இந்தியாவில் திருவிதாங்கூர் சமத்தானத்தை (தற்காலக் கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு பகுதியை) 1829 முதல் 1846 வரை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் இராணி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். லட்சுமிபாய்க்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். இராணி கவுரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் இராணி கவுரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரச அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார். இவர் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இந்திய இசைக்கலையின் வடிவங்களுள் இந்துஸ்தானி இசை மற்றும் கருநாடக இசை ஆகியவற்றை ஆதரித்தாலும் இவர் ஒரு கருநாடக இசை மரபின் ரசிகர் ஆவார். இவர் நானூற்றுக்கும் மேலான கீர்த்தனைகளைக் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார். இவற்றுள் இவருக்கு விருப்பமான கீர்த்தனைகள் இவை: "பத்மநாப பாஹி"; "தேவ தேவ"; "சரசிஜநாப" மற்றும் "ஸ்ரீ ரமணா விபோ" ஆகியவையாகும். சுவாதித் திருநாள் மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் வங்காள மொழி, தமிழ், ஒரியா மற்றும் ஆங்கில மொழிகளைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றிருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள "வானியல் ஆய்வகம்", அருங்காட்சியகம் மற்றும் விலங்கியல் தோட்டம், அரசு அச்சகம், திருவனந்தபுரம் பொது நூலகம் (தற்போதைய மாநில மைய நூலகம் இது), கீழ்த்திசைச் சுவடி நூலகம் (தற்போதைய கேரளப் பல்கலைக்கழகம் இதை நிர்வாகிக்கிறது), போன்ற அமைப்புகள் சுவாதி திருநாள் மன்னரால் தொடங்கப்பட்டன. மன்னர் 1843 ஆம் ஆண்டு முதல், ஆசிய அரச சங்கத்தின் ("Royal Asiatic Society") உறுப்பினராக இருந்தார்.. சுவாதித் திருநாள் என்று பலராலும் அறியப்படும் இவர் குலசேகர வம்சத்தைச் சேர்ந்த திருவிதாங்கூர் சமத்தான அரச குடும்பத்தில் 1813 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். திருவிதாங்கூரை 1811 முதல் 1815 வரை ஆண்ட இராணி கவுரி லட்சுமி பாய் - சங்கனாச்சேரி அரண்மனையின் "இராசராச வர்மா கோயில் தம்புரான்" ஆகிய இவர்களின் "இரண்டாவது மகன்" சுவாதித் திருநாள் ஆவார். புகழ் பெற்ற கவிஞரும், நெருங்கிய உறவினருமான "இறையம்மன் தம்பி" எழுதிய "ஓமனத்தின் கல்கிடவோ நல்ல கோமளத்தமறு பூவோ" (ഓമനത്തിങ്കള്‍ക്കിടാവോ നല്ല കോമളത്താമരപ്പൂവോ) என்ற மலையாள தாலாட்டுப் பாடல் சுவாதித் திருநாள் பற்றி இவர் பிறந்த நேரத்தில் எழுதப்பட்டதாகும். இவருக்கு "ருக்மிணி பாய்" என்ற பெயரில் ஒரு சகோதரியும், "உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா" என்ற சகோதரரும் உண்டு. சுவாதித் திருநாள் நான்கு மாதக் குழந்தையாயிருக்கும் போது இராணி கவுரி லட்சுமி பாய் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளரான "கர்னல் மன்றோ" மற்றும் அவருடைய அலுவலர்களை அழைத்துத் தன அரசவையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அவர் அறிவித்த செய்தி இது: தன மகன் சுவாதித் திருநாளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பில் வளர்த்து வரவும், திருவிதாங்கூர் அரசுக்குக் கம்பெனியின் ஒத்துழைப்பை நல்கவும் மன்றோவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் இது. இராணி கவுரி லட்சுமி பாய் தன மூன்றாவது குழந்தை பிறந்து பின்பு இரண்டு மாதம் கழித்து இறந்து போனார். இராணியின் இறப்புக்குப் பின்னர் அவருடைய இளைய சகோதரி "கவுரி பார்வதி பாய்" ஆட்சிப் பொறுப்பையும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். சுவாதித் திருநாள் ராம வர்மா பதினேழு மாதக் குழந்தையாயிருக்கும் போது இவரின் தாய் இறந்துவிட, இவரின் சிறிய அன்னை கவுரி பார்வதி பாய் பதினான்கு வருடம் அரசாட்சி புரிந்தார். இதன் பின்பு சுவாதித் திருநாள் முழு அதிகாரத்துடன் மன்னரானார். சிறிய அன்னையும் வளர்ப்புத் தாயுமான இராணி கவுரி பார்வதி பாய் இசையில் தேர்ச்சி பெற்றவர். சமஸ்கிருத அறிஞரான தந்தை சுவாதித் திருநாளின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொண்டார். இது போலக் கர்னல் மன்றோவும் அக்கறை காட்டினார். இளவரசர் ராம வர்மா ஆறு வயதில் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தையும், ஏழு வயதில் ஆங்கிலத்தையும் கற்றார். தொடர்ந்து கன்னடம், தமிழ், இந்துஸ்தானி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றார். இவருடைய ஆசிரியர்களையும், வெளிநாட்டு விருந்தாளிகளையும் மலைக்க வைத்த இவர் மொழிகள் மட்டுமல்லாது வடிவவியல் போன்ற துறைகளிலும் தன் திறமையைக் காட்டினார். "கர்னல் வெல்ஷ்" என்ற ஆங்கிலேய அதிகாரி அரண்மனைக்கு வந்தபோது அவரிடம் வடிவவியல், அறுகோணம், எழுகோணம் போன்ற வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதாக வாதிட்டாராம். சுவாதித் திருநாளுக்கு சிறு வயது முதலே இசையில் நாட்டமிருந்தது. மொழிகளில் நல்ல இசை இருப்பதாக எண்ணியே அவர் மொழிப்புலமை பெறத் தொடங்கினார். இவரின் இசைபற்றிய கல்வி முதல் பாடத்திலிருந்து "கரமண சுப்பிரமணிய பாகவதர்" மற்றும் "கரமண பத்மநாப பாகவதர்" ஆகியோர் மூலம் தொடங்கியது. பின்னர் இசையை ஆங்கிலத்தில் "சுப்பாராவ்" மூலம் கற்றார். தொடர்ந்து புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்டும் பாடியும் கற்றார். இசையும் கலையும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வளர்ந்து வந்த காலம் அது. "கருநாடக சங்கீத மும்மூர்த்தி"களான தியாகராஜர் (1767–1847), சியாமா சாஸ்திரிகள் (1762–1827) மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் (1775–1835) என்போர் இவர் வாழ்ந்த காலத்தில் இசைக்கு வளமூட்டினார்கள். சுவாதித் திருநாளின் மாளிகை அந்நாளில் சிறந்திருந்த இசைக் கலைஞர்களின் தாயகமாக மாறிற்று. சகோதரர்களான தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர், தியாகராசரின் மாணவர் "கண்ணையா பாகவதர்", "அனந்தபத்மநாப கோஸ்வாமி" (கோகிலாகந்தமேரு சுவாமி என்ற பெயர் பெற்ற மராத்தி பாடகர), ஷாட்கலா கோவிந்த மாரார் ஆகியோர் இங்கு வருகை புரிந்த கலைஞர்களாவர். மன்னர் சுவாதித் திருநாள் வழிவந்தவர் தென்னிந்திய கர்நாடாக இசைக்கலைஞர் இளவரசர் இராம வர்மா. "சுவாதி சங்கீதோத்சவம்" என்ற ஒரு வாரம் முழுவதும் சுவாதித் திருநாள் மன்னரின் கீர்த்தனைகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட இசை விழாவினை இளவரசர் இராம வர்மா நடத்தினார். ஆண்டுதோறும் சனவரி மாதம் 6 முதல் 12 ஆம் தேதி வரை திருவனந்தபுரம் "குதிர மாளிகையில்" இந்த இசைவிழா நடப்பது வழக்கம். சுவாதித் திருநாள் திருவிதாங்கூரின் மன்னராய் தன சிறிய அன்னையிடமிருந்து தன் பதினாறாம் வயதில் பொறுப்பேற்றுக் கொண்டார். தன் ஆசிரியரான சுப்பாராவைத் தன் "முதலமைச்சராக" (திவான்) நியமித்தார். இவருடைய முதல் நடவடிக்கை அரசின் செயலகத்தை 75 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த கொல்லம் நகரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றியதாகும். அரசாங்க அலுவல்களில் தனி கவனம் செலுத்த இந்த நடவடிக்கை உதவியது. தன அரசில் கையூட்டைத் தடுக்க பல வழிகளில் முயன்றார். திவான் ஒரு நிலத் தாவாவில் ஒரு சார்புடன் இருந்தமைக்காக அவரிடம் கண்டிப்புக் காட்டினார். திருவனந்தபுரத்தில் 1834 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இது பின்னாளில் "மகராசா மேனிலைப்பள்ளி" என்றும் "மகராசா கல்லூரி" என்றும் வளர்ந்தது. இதுவே தற்போதைய திருவாங்கூர் பல்கலைக்கழகக் கல்லூரியாகும். பின்னாளில் இது போலப் பல பள்ளிகள் பிற இடங்களில் தொடங்கப்பட்டன. சட்டத் துறையில் நிறைய சீர்திருத்தங்கள் வந்தன. இவர் தொடங்கிய முன்சிப் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் மேல் முறையீட்டு நீதி மன்றங்கள் சட்டத் துறையில் புதுமையை ஏற்படுத்தின. "மலபாரைச்" சேர்ந்த "கந்தன் மேனன்" என்பவர் இவரால் கண்டறியப்பட்டு "ஹுசூர் திவான் பேஷ்கார்" என்ற பதவியில் அமர்த்தப் பட்டவராவார். இவரின் மற்றொரு சாதனை நில சச்சரவுகளைத் தீர்க்க மீண்டும் "நில அளவை" செய்ததாகும். இவருக்கு மேனன் வேண்டிய உதவிகள் செய்தார். இவர் 1836 ஆம் ஆண்டு முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பினை நடத்தினார். இந்தக் கணக்கெடுப்பின்படி அக்கால "மக்கள் தொகை" "128, 068" ஆகும். நவீன மருத்துவத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை சுவாதித் திருநாளையே சாரும். ஒரு ஐரோப்பியரை அரண்மனை வைத்தியராய் நியமித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொறுப்பை ஏற்று பல மருத்துவமனைகளைத் தொடங்கினார். கேரளா மாநிலம் உருவாகும் காலம் வரையிலும் இந்தப் பதவி "சர்ஜன் ஜெனரல்" என்று அழைக்கப்பட்டது. "லெப்டினன்ட் ஹோர்ஸ்லி" தலைமையில் ஒரு பொறியியல் துறையையும் நிறுவினார். "கரமண பாலம்" அப்போது தான் கட்டப்பட்டது. சுவாதித் திருநாள் அக்கறை காட்டிய மற்றொரு துறை வானியலாகும். இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி மேல்நாட்டு வானியலுடன் ஒப்பிட்டு நோக்க விரும்பினார். வானியல் பொறிகளைக் கட்டமைக்க ஆலப்புழையில் வாழ்ந்த "கால்டிகாட்" என்ற "தொழிலக சார்பாளரை" விரும்பி அழைத்துப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டார். 1837 ஆண்டு ஒரு வானியல் ஆய்வகம் (astronomical observatory) ஒன்றை நிறுவிக் கால்டிகாட்டை அதன் பொறுப்பாளாராக்கினார். இன்றும் கூடச் சில கருவிகளைத் திருவனந்தபுரம் வானியல் ஆய்வகத்தில் (இயற்பியல் துறை, கேரளா பல்கலைக்கழகம்) காணலாம். இவர் கண்டறிந்தவை அண்டம் பற்றிய உண்மைகள் இந்திய மற்றும் மேற்கத்திய தகவல்களுடன் ஒத்துப் போகிறது என்பது தான். அரசு அச்சகத்தையும் (அப்போது கேரளாவிலிருந்த தனியார் அச்சகம் சி.எம்.எஸ் பிரஸ்), அருங்காட்சியகத்தையும், வனவிலங்குப் பூங்காவையும் மன்னர் நிறுவினார். தன் தாய் இராணி கவுரி பாய் இறக்கும் போது சுவாதித் திருநாள் இளம் குழந்தை. பின் தன் சிறிய அன்னை இராணி பார்வதி பாயிடம் வளர்ந்தார். சிறிய அன்னைக்குக் குழந்தைகளில்லை. இவரின் சகோதரன் "உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா" ஆவார். சுவாதித் திருநாள் மறைவுக்குப் பிறகு (1846 ஆம் ஆண்டு) உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மன்னரானார். இவர் 1860 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். சுவாதித் திருநாளின் சகோதரி "கவுரி ருக்மிணி பாய்" ஆவார். இவருடைய மகள் தான் மன்னரின் முதல் மனைவி. இவர்களுக்குப் பிறந்தவர் மன்னர்மூலம் திருநாள் ஸ்ரீ ராம வர்மா ஆவார். சுவாதி திருநாள், ஸ்ரீமதி நாராயணபிள்ளை கொச்சம்ம்மா அம்மாவீடு குடும்பத்தைச் சேர்ந்த திருவட்டார் அம்மாச்சி "பணபிள்ளை அம்மா" என்பவரை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். இராணி ஒரு கருநாடக இசைப் பாடகி மற்றும் வீணைக் கலைஞர் ஆவார். இவர் கொல்லத்தில் "ஆய்குட்டி வீடு" என்ற பெயருடைய சாதாரண நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண். திருமணத்துக்கு முன்பு இவர் திருவட்டார் அம்மாவீட்டாரால் (இவரின் பூர்வீக தாய் மற்றும் சகோதரிகள் உட்பட) தத்தெடுக்கப்பட்டார். இவரின் சகோதரி மன்னரின் சகோதரர் "உத்திரம் திருநாளை" மணந்தார். சுவாதித் திருநாளுக்கு "திருவட்டார் சித்திரை திருநாள் அனந்த பத்மநாபன் தம்பி" என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். மன்னர் 1843 ஆம் ஆண்டு முதலியார் இனத்தைச் சேர்ந்த "சுந்தர லட்சுமி அம்மாள்" என்ற நடன நங்கையை மணந்து கொண்டார். சுந்தர லட்சுமி சுகந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டாள். முதலில் மன்னர் சுகந்தவல்லியை அம்மாச்சி என்ற பட்டத்துடன் வடசேரி அம்மாவீடு என்ற வீட்டுக்குத் தத்தெடுத்தார். தஞ்சாவூர் அம்மாவீடு என்ற மாளிகையை 1845 ஆம் ஆண்டு கட்டி சுகந்தவல்லி குடும்பத்தாரை இங்கு குடியமர்த்தினார். எனினும் இவர் குடும்பத்தார் இந்தத் திருமண உறவை அங்கீகரிக்கவில்லை. மன்னர் 1846 ஆம் ஆண்டு இறந்தார். சுகந்தவல்லி தன இறுதிக் காலமான 1856 ஆம் ஆண்டு வரை (பத்தாண்டுகள்) தஞ்சாவூர் அம்மாவீட்டில் வாசித்தாராம். ஒரு இராணிக்கு உரிய சகல மரியாதைகளையும் தனிவகை முறைகளையும் இவர் பெற்றாராம். இவர் மறைவுக்குப் பின் மன்னர் உத்திரம் திருநாள் வீட்டையும் சொத்தையும் பிணைத்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். சுகந்தவல்லிக்காக ஏற்படுத்தப்பட்ட சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்ள இருப்பதாக உத்தரவு வந்தது. இதை எதிர்த்துச் சுகந்தவல்லியின் தங்கை கணவர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மனுவினைப் பதிவு செய்தார். தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் சொத்துக்களை பிணைத்துக்கொள்ளும் உரிமையை ஒரு நிபந்தனையின் பேரில் அளித்தது. சுகந்தவல்லி குடும்பத்தாருக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் மட்டும், மானியமாக அளிக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை.(ஆதாரம் திருவனந்தபுரத்தினேண்ட இதிகாசம்) "சுவாதித் திருநாள்" என்ற தலைப்பில் ஒரு மலையாளப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பெயர் லெனின் இராசேந்திரன். சுவாதித் திருநாளாக நடித்தவர் பெயர் ஆனந்த் நாக். : கட்டுரைகளும் தொகுப்புகளும் -டாக்டர். அச்சுத்சங்கர் எஸ் நாயர் வெள்ளைச் சுறா வெள்ளைச் சுறா (The great white shark) என்பது குருத்தெலும்பு மீன்கள் குடும்த்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இவை கடல் உயிரினங்களிலேயே மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக் கூடியவை ஆகும். இதன் அறிவியல் பெயர் Carcharodon carcharias என்பது. இவற்றைக் கண்டு மனிதர்கள் அஞ்சக் காரணம் இவற்றின் இராட்சதத் தோற்றமாகும். இவை 12 முதல் 21 அடி நீளம் வரை இருக்கும். இவை ஆண்டுக்கு 25 முதல் 30 செ. மீ. வரை வளர்கின்றன. இவற்றின் முதுகுப் பகுதி வெளிறிய சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். முதுகில் ஒன்று, இரண்டு பக்கங்களிலும் தலா ஒன்று என மொத்தம் மூன்று துடுப்புப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு சுமார் மூவாயிரம் பற்கள் உள்ளன. அவை இரண்டு வரிசைகளாக அமைந்துள்ளன. பெரிய வெள்ளைச் சுறாக்கள் தங்கள் இரையைப் பிடித்து, கடித்து, மென்று உண்பதற்கு இவை உதவுகின்றன. முன் வரிசைப்பல் உடைய நேர்ந்தாலோ அல்லது விழுந்து விட்டாலோ பின் வரிசைப் பல் அந்த இடத்திற்கு நகர்ந்து விடுகிறது.இந்தவகை சுறாக்களை மையமாகவைத்தே Steven Spielberg “Jaws" எனும் திரைப்படத்தை 1975 ல் வௌியிட்டார் தனது ஒன்பதாவது வயதில் இனபெருக்கம் செய்யும் பருவத்தை அடைகின்றன. ஒரு பெரிய பெண் வெள்ளை சுறாவானது தனது ஆயுளில் மொத்தம் இரண்டு முறை மட்டுமே குட்டி ஈனுகின்றன. கடலில் 3 அடி முதல் 1280 மீட்டர் ஆழம் வரை இவை குட்டிக்கரணம் அடித்தப்படியே சுற்றித்திரிகின்றன. அனைத்து கடல் தட்பவெப்ப நிலைகளிலும் வாழும் தன்மையுடைய இவை அமெரிக்காவின் கலிபோர்னியா முதல் அலாஸ்கா வரையிலும், கிழக்கு அமெரிக்க கடற்கரைகளிலும், அனைத்து வளைகுடா பகுதிகளிலும், அவாய், தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா முதல் ரஷ்யா வரையிலான கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பாசிலிகஸ் பல்லிகள் பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)அல்லது ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். அமெரிக்காவில் வாழும் தண்ணீரில் நடக்கும் பல்லி இனத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி என்று அழைக்கிறார்கள். கிரேக்க மொழியில் பாசிலிக்கஸ் என்றால் அரசர் எனப் பொருள்படும். இவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பரவல் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டுப் பிரதேங்கள் வரை காணப்படுகிறது இந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும், பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன. இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத் தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். பாசிலிகஸ் பல்லி ஓர் அனைத்துண்ணி ஆகும். பூச்சிகள் சிறு பாலூட்டிகள்(கொறினிகள்) சிறிய பல்லிகள், பழங்கள், பூமொட்டுகள், சிறு பறவையினங்கள் மற்றும் பாம்புகளையும் இரையாக உண்கிறது. பெண் பல்லி ஒரு முறைக்கு ஐந்தும் முதல் பதினைந்து முட்டைகள் வரை இடுகின்றன. மணல் அல்லது மண்ணில் இடப்படும் இதன் முட்டைகளிலிருந்து எட்டு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு குட்டிகள் வெளிவருகின்றன. அவை பிறந்தவுடன் தனித்துச் செயல் படுகின்றன. அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1963 ல் தொழிலதிபர் ப. அய்யநாடார் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று இருப்பதுடன் தன்னாட்சி நிலையையும் பெற்று இயங்குகிறது. இந்தக் கல்லூரியின் பல்கலைக்கழகம் சிவகாசியில் 175 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஔரையா மாவட்டம் ஔரையா மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ஔரையா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 17 செப்டம்பர் 1997 அன்று ஔரையா மற்றும் பிதுனா வட்டங்கள் ஏட்டாவா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய ஔரையா மாவட்டம் உருவாக்கப்பட்டது. திபயாபூர் ஆனது இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் நகரம் ஆகும். இங்கு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசியின் 663 MW மின்நிலையம், பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மற்றும் கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு அமுக்கி நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஔரையா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,372,287. இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 357வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் ஔரையா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.3%.ஔரையா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் உள்ளனர். மேலும் ஔரையா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.25%. எஸ். கே. தேவமணி டத்தோ எஸ். கே. தேவமணி (பிறப்பு: செப்டம்பர் 10, 1957) மலேசிய அமைச்சரவையின் பிரதமர் துறையில், துணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் ம.இ.காவின் உதவித் தலைவர்களில் ஒருவர். மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய மொழியில் மிகச் சரளமாகப் பேசி, மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர்களையே வியப்பில் ஆழ்த்தியவர். நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு இலவசமாக எஸ்.பி.எம். தேர்வுக்கான மலேசிய மொழிப் பாடத்தைக் கற்றுக் கொடுத்து சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவியவர். இவர் போதித்த மாணவர்கள் பலர் பட்டதாரிகளாகி அரச உயர்ப் பதவிகளில் இருக்கின்றனர். எஸ்.கே.தேவமணி மலேசியாவின் பேராக், தைப்பிங், செமாங்கோல் எனும் இடத்தில் 1957 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் எஸ்.கிருஷ்ணசாமி, ஒரு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர். இருப்பினும், அவருடைய குடும்பத்தில் பொருளாதார வகையில் ஏழ்மை நிலவியது. அதுவே, அவருக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் துடிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இவர் படிவம் ஐந்து படிக்கும் வரையில், அவருடைய இல்லத்தில் தொலைக்காட்சி வசதிகள் இல்லை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாத நிலையில் அவருடைய குடும்பம் இருந்தது. தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் அவர் அண்டை வீடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தார். தன்னுடைய தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை தைப்பிங், கிங் எட்வர்ட் பள்ளியிலும் பயின்றார். 1975ஆம் ஆண்டு மலேசிய உயர்நிலைக் கல்வியை முடித்தார். எஸ்.கே.தேவமணி தன்னுடைய இளம் வயதிலேயே பொதுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மேல்கல்வியைத் தொடர முடியாத குடும்பச் சூழ்நிலை. அதனால், தற்காலிக பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார். 1975 – 1977 ஆண்டுகள் வரை பேராக், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1978ஆம் ஆண்டு, கோலாலம்பூர், செராஸ் புறநகர்ப் பகுதியில் இருந்த சிறப்பு ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில், உடல்நலப் பயிற்சித் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றார். 1979 – 1982ஆம் ஆண்டுகளில் சுங்கை சிப்புட் லாசா நில மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர், 1982ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை மேற்கொண்டார். மலாய் இலக்கியத் துறையில் இளநிலை பட்டத்தில் சிறப்புநிலை பெற்றார். 1985 லிருந்து 1990 வரையில் பத்து குராவ் பள்ளியில் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அடுத்து 1990 லிருந்து 1995 வரையில் சிம்மோர் பள்ளியில் பணியாற்றினார். ஈப்போ, தைப்பிங், கூலிம், பினாங்கு ஆகிய இடங்களில் இயங்கும் ரிபா கல்லூரியின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பும் வகித்தார். இந்தக் காலக் கட்டத்தில் அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார். எஸ்.கே.தேவமணி, மலாயா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா என்பவர் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக இருந்தார். அவர், மலேசியாவில் மேல் உயர்நிலைக்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று எஸ்.கே.தேவமணியையும் மற்ற இந்திய மாணவர்களையும் கேட்டுக் கொண்டார். இந்திய சமுதாயத்தைக் கல்வித் துறையில் மேம்படுத்த வேண்டும் என்பது டாக்டர் எம். தம்பிராஜாவின் இலட்சியமாக இருந்தது. 1982 செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஸ்ரீ முருகன் கல்வி மையம் தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.கே.தேவமணி மலேசிய மொழியைப் போதித்தார். நான்கு கிளைகளுடன் அப்போது தொடங்கிய ஸ்ரீ முருகன் கல்வி மையம், தற்சமயம் மலேசியாவின் 28 நகரங்களில் 103 வகுப்புகளை நடத்தி வருகிறது. ஸ்ரீ முருகன் கல்வி மையம் இதுவரையில் 250,000 இந்திய மாணவர்களுக்கு கல்விச் சேவை வழங்கியுள்ளது. அவர்களில் 16,000 மாணவர்களைப் பட்டதாரிகளாகவும் உருவாக்கி உள்ளது. எஸ்.கே.தேவமணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு துணை அமைச்சராகவும் பதவிகள் வகித்தாலும், இன்றும் ஸ்ரீ முருகன் கல்வி மையங்களுக்குச் சென்று இந்திய மாணவர்களுக்கு இலவசக் கலவிச் சேவையை வழங்கி வருகிறார். 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டாவது தவணையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வாகை சூடினார். அதன் பின்னர் அவர் பிரதமர் துறையின் துணை அமைச்சராக நியமனம் செய்யப் பட்டார். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டத்தோ விருதைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப் பட்டார். தன்னுடைய கேமரன் மலை தொகுதியில் தன்னால் இயன்ற உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். ஏழை மக்கள் வீடுகள் கட்டும் போது இவரும் களம் இறங்கி ஒரு தச்சனாக வேலைகளையும் செய்கின்றார் என்று அவரைப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நில ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று போராட்டம் செய்து வருகிறார். இதனால் அவர் சார்ந்துள்ள ஆளும் பாரிசான் நேசனல் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்தும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. இவருடைய மலேசிய மொழி ஆற்றல் தான் இவரை அமைச்சர் தகுதிக்கு உயர்த்தி விட்டது. எஸ்.கே.தேவமணியின் மலேசிய மொழி ஆற்றலைக் கண்டு வியந்து போன முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி அவரை தன்னுடைய பிரதமர் துறையிலேயே துணையமைச்சராக அமர்த்திக் கொண்டார். இந்தியச் சமூகங்கள் சார்ந்த கல்வி அமைப்புகள், கல்வி இலக்கிய சமய விழாக்கள், ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் போன்றவற்றில் பொதுநலச் சேவைகளில் ஈடுபட்டு மலேசிய இளைஞர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மலேசியாவில் விரைவில் நடக்கவிருக்கும் 13-வது பொதுத் தேர்தலில் எஸ்.கே.தேவமணிக்கு ஆதரவாக பல அரசு சாரா இயக்கங்கள் ஆதரவுகள் தெரிவித்து வருகின்றன. பழைய நகர் (எருசலேம்) பழைய நகர் தற்போதைய யெரூசலம் நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி (0.35 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. 1860 இல் "சமாதான குடியிருப்பு" எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. கோவில் மலையும் மேற்குச் சுவரும் யூதர்களுக்கும்; புனித கல்லறைத் தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கும்; பாறைக் குவிமாடமும் அல் அக்சா பள்ளிவாசலும் இசுலாமியர்களுக்கும் முக்கிய இடங்களாகும். பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது. இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் யோர்தானால் கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 ஆறு நாள் போரில் இசுரேல் பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றியது. இன்று, இசுரேல் முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது 1980 இல் பழைய நகர் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களத்தின் பட்டியலில் குறிக்கப்பட வேண்டும் என யோர்தானால் முன்மொழியப்பட்டது. 1981 இல் இது பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1982 இல் ஆபத்தான உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என யோர்தான் விண்ணப்பித்தது. யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் கிழக்கு எருசலேம் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டுமெனவும், எருசலேமின் அந்தஸ்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அந்தஸ்தாக தீர்க்கப்பட வேண்டுமென அறிக்கை வெளியிட்டது. 2010 இல் பழைய நகரின் மதில்களுக்கு வெளியே புராதன எழுத்துக்களின் உடைந்த துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வானி வானி ("Euonymus dichotomus") என்பது செலாஸ்ராசே குடும்ப பூக்கும் தாவர இனத் தாவரமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. சிறுமூங்கில் வேரல் ["Dendrocalamus strictus"] என்பது சிறுமூங்கில். பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி) (International Bank for Reconstruction and Development) என்பது உலக வங்கிக் குழுமத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்த வங்கி பிற்காலத்தில் வறுமை ஒழிப்பிற்கு உதவி வருகிறது. இறைமையுள்ள நாடுகளின் மூலம் நிதி ஆதரங்களைத் திரட்டிக்கொண்டு அந்நாடுகளின் உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிறது. இவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கு அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது. 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. உலக வங்கியின் பிணைப்பத்திரங்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டு திரட்டப்படும் நிதியே இதன் முக்கிய நிதி ஆதாரமாகும். இவ்வங்கியின் பங்குகள் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதாலும், உத்திரவாதத்துடன் கடன் வழங்குவதாலும் இதன் பிணைப்பத்திரங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்கப்படுகிறது. 2010ல் சேர்ந்த துவாலு உட்பட 187 ஐக்கிய நாடுகள் அவை உறுப்பு நாடுகள் மற்றும் கொசோவோ இதன் உறுப்பினர்களாகும். உறுப்பினரல்லாத நாடுகள்: அண்டோரா, குக் தீவுகள், கூபா, லீக்டன்ஸ்டைன், மொனாக்கோ, நவூரு, நியுவே, வடகொரியா மற்றும் வத்திக்கான் நகர். இதர உறுப்பினரல்லாத நாடுகள் குறைந்த ஒப்புதலுடன் உள்ளன. இதன் உறுப்பினர்களெல்லாம் அனைத்துலக நாணய நிதியத்திலும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1944 ஜூலை 1 முதல் 22 வரை அமெரிக்க பிரிடன்வுட்ஸ் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் நாணைய மற்றும் நிதி மாநாட்டில் இவ்வங்கி தொடங்க முடிவெடுக்கப்பட்டு, 1945 டிசம்பர் 27ல் தொடங்கப்பட்டது. 1946 ஜூன் 25லிருந்து இதன் வணிக செயல்பாடுகள் தொடங்கியது, போருக்குப் பிந்திய புனரமைப்பிற்காக 1947 மே 9ல் $250மி பிரான்சு நாட்டிற்கு வழங்கப்பட்டதே இதன் முதல் பரிவர்தணையாகும். ஐ.பி.ஆர்.டி முக்கியமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் புனரமைப்பிற்காக ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு உதவ தொடங்கப்பட்டது. மேலும் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முன்வந்தது. அரம்பக் காலத்தில், நெடுங்சாலைகள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள் போன்ற கட்டுமான வளர்ச்சிக்கு உதவி வந்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலா வருமானம் இதன் உச்ச வரம்பிற்கு மேல் அதிகரித்ததையடுத்து வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளித்துவருகிறது தனி நபர் வருமானம் தனி நபர் வருமானம் என்பது தலா வருமானம் அல்லது நபர்வரி வருமானம் ("GDP per head, Per capita income") என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு பொருளாதாரக் கருவியாகும். உண்மையான தனி நபர் வருமானம் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும். அதாவது; தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை இது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் அல்லது யூரோ எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது. பொது விநியோக முறை பொது விநியோக முறை (Public Distribution System) என்பது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு முறையாகும். மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் நியாய விலைக் கடைகளின் மூலமாக நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகம், ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் மூலமாக உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலம் நுகர்வோரான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் திட்டப்படி, மாதம் ஒன்றிற்கு, ஒவ்வொரு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 35கிலோ அரிசி அல்லது கோதுமையும், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள குடும்பங்களுக்கு 15கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) என்பது இந்திய அரசின் ஒரு அமைச்சகமாகும். தற்போதைய இணை அமைச்சராக கே.வி. தாமஸ் உள்ளார். இந்த அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மற்றும் நுகர்வோர் நலன் துறை ஆகிய இருப்பிரிவுகள் உள்ளன. இதன் கீழுள்ள நிறுவனங்கள்: நுகர்வோர் கூட்டுறவு, விலை கண்காணிப்பு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இராமாபாய் நகர் மாவட்டம் இராமாபாய் நகர் மாவட்டம் (), (), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. கான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092. இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர். மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% . இந்திய தர நிர்ணய அமைவனம் இந்திய தர நிர்ணய அமைவனம் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு இந்திய தர நிர்ணய அமைப்பாகும். இந்திய நுகர்வுப் பொருட்களின் தர நிர்ணயம், தரச்சான்றிதழ் மற்றும் தரமதிப்பையும் ஒழுங்குபடுத்துவது இதன் வேலையாகும். அமைச்சகத்தின் அமைச்சரே இந்த அமைவனத்தின் அதிகாரத்தைக் கொண்டிருப்பார், தற்போதைய அமைச்சர் கே.வி.தாமஸ் இதன் தலைவராவார். இந்தியா, சுதந்திரம் அடைந்தப்பின் 1947ல் தொழிற்துறையில் முன்னேற்றமடைய தர நிர்ணய முறையை இந்திய தர நிர்ணய அமைப்பின்(Indian Standards Institution) மூலம் இந்திய அரசு அமல்படுத்தியது. பிறகு பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த அமைப்பிற்கு கூடுதல் வலிமை வழங்க 1986 இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம் இயற்றி இந்திய தர நிர்ணய அமைவனமாக 1987 ஏப்ரல் 1ல் மாற்றப்பட்டது. தரத்தை நிர்ணயம் செய்வதிலும், மதிப்பிடலிலும், தரச்சான்று வழங்குவதிலும் இணக்கமான முண்னேற்றம் பெறுதல் தர நிர்ணயத்திற்கும், தரக் கட்டுபாட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தல் தரமதிப்பிற்கேற்ப தேசிய வியூகத்தை உருவாக்கி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் பெறுதல் மத்திய அல்லது மாநில அரசு, தொழிற்துறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்டது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு 20 கிளைகளைக் கொண்டுள்ளது. தரச் சான்றிதழ் வழங்கும் விதமாக 8 ஆய்வுக்கூடங்களையும் கொண்டுள்ளது. தங்க நகைகளின் தரத்தை மதிப்பிட இவ்வமைவனத்தின் மூலம் 2000 முதல் 'பிஐஎஸ் ஹால்மார்க்' என்ற பெயரில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் பிஐஎஸ் விலைமதிப்புள்ள உலோகப் பிரிவுக் குழுவின் படி தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தர நிர்ணயங்கள்: 2005 முதல் வெள்ளிக்கும் ஹால் மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல் 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட த வேர்ல்டு ஃபக்ட்புக் தகவலின் படி தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும். அலகாபாத் பிரிவு அலகாபாத் பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் ஒன்று. முதன் முதலில் அலகாபாத் பிரிவின் கீழ் இருந்த மாவட்டங்களாவன:- அலகாபாத் மாவட்டத்தின் மறுசீரமைப்பு 2000 ஆம் ஆண்டு உத்ராஞ்சல் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட போது அலகாபாத் பிரிவு மற்றும் மாவட்டமானது அதிகமாக மறு சீரமைக்கப்பட்டது. அலகாபாத் பிரிவின், எட்டாவா மாவட்டம், பாருகாபாத் மாவட்டம், கான்பூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை இணைத்து கான்பூர் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. அலகாபாத் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு கௌசாம்பி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேநேரத்தில் பிரத்தாப்புகர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டது. தற்போதைய அலகாபாத் பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்களாவன: ஜிம் யோங் கிம் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார். இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் "பார்ட்னர்ஸ் இன் எல்த்" என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் சனவரி 7 2019 இல் தான் உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், 2019 பெப்ரவரி 1 அன்று இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார். குடம்புளி குடம்புளி ("Garcinia gummi-gutta", "இலங்கை வழக்கு": சீமை கொறுக்காய்) என்ற இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்: gambooge,ಕಾಚುಪುಳಿ) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia)' என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும். குடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும். மரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடினமாகவும் இருக்கும். மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஆண் மரமா? அல்லது பெண்மரமா? என அறிவது சிரமமானதாகும். தற்போது விதைவழி மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. எத்தகைய தட்பவெட்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது குடம்புளி. இதை, குறிப்பிடும்படியான எந்த நோய்களும், பூச்சிகளும் தாக்குவதில்லை. குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும். ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம். இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது. கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது. வேரி மலர் வேரி மலர் என்பது பழந் தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் ஒருவகை மலர். வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். முற்காலத்தில் மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர். பீட்டர் ஜாக்சன் பீட்டர் ஜாக்சன் என்ற பெயர் பின்வரும் தலைப்புகளைக் குறிக்கலாம். ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அல்லது அமைதி குழாய்த்தொடர் என்பது ஈரானிலிருந்து பாக்கித்தான் வழியாக இந்தியா வரை இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் குழாய்த்தொடராகும். ஈரான் மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை 1994ல் தொடங்கின இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 1995ல் இருநாடுகளும் ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி பாக்கித்தானின் கராச்சி நகருக்கு குழாய்த்தொடர் அமைப்பது குறிந்து ஆராயப்பட்டன. பின்பு ஈரான் பாக்கித்தானிலிருந்து இந்தியாவரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. 1999 பெப்ரவரியில் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. 2007 பெப்ரவரியில், இந்தியாவும் பாக்கித்தானும் ஈரானுக்கு US$4.93 per million British thermal units (US$4.67/GJ) தர ஒப்பந்தம் செய்தன. ஆனால் விலை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்தன. ஏப்ரல் 2008ல் சீன மக்கள் குடியரசும் இத்திட்டத்தில் பங்குபெற ஈரான் விரும்பியது. ஆகஸ்டு 2010ல் பங்களாதேசும் கலந்துகொள்ள ஈரான் அழைப்புவிடுத்தது. 2008ல் ஐக்கிய அமெரிக்காவுடன் குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து 2009ல் விலை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கூறி (குழாய்த்தொடர்) இத்திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கியது. எனினும், மார்ச்சு 2010ல் பாக்கித்தானும் ஈரானும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைத்தது. அது மே 2010ல் தெஹ்ரானில் நடந்தது. சனவரி 2010ல் பாக்கித்தான் இத்திட்டத்தை கைவிட அமெரிக்கா வலியுறுத்தியது. இத்திட்டத்தை அந்நாடு கைவிடும்பட்சத்தில் பாக்கித்தானில் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கவும், ஆப்கானித்தான் வழியாக தஜிகிஸ்தானிலிருந்து மின்சாரம் பெற்றுத்தரவும் உதவி புரிவதாக தெரிவித்தது. எனினும், இதனை பாக்கித்தான் பொருட்படுத்தாமல் ஈரானும் பாக்கித்தானும் எரிவாயு குழாய்த்தொடர் அமைக்க மார்ச்சு 16, 2010ல் அங்காராவில் கையெழுத்திட்டன. சூலை 2011ல் கட்டுமானப் பகுதி நிறைவடைந்துள்ளதாக ஈரான் அறிவித்தது. பாக்கம் கோட்டூர் பாக்கம் கோட்டூர் ("Pakkam Kottur") என்பது தமிழ்நாடு, நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிராமம். இது திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே மூன்று கிலோ மீட்டார் தொலைவில் உள்ளது. சுமார் 500 குடும்பங்கள் அனைத்து தரப்பினருமாய் வாழும் இவ்வூரில் சமூக கட்டமைப்பில் பெரும்பான்மையாய் இசுலாமியர்களும், இந்துக்களும் கணிசமான அளவில் கிறித்துவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் வாழ்வதாரமாய் விளங்குவதில் வேளாண்மை முக்கிய இடத்தை வகிக்கிறது. கட்டமைப்பைப் பொறுத்த வரையில் பாக்கம் கோட்டூர் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒரு வங்கி, மற்றும் சில்லறை வணிக கூடங்கள் உள்ளன. ஆன்மீக தளங்களில் இரு மசூதிகள், மற்றும் சில புராதன கோவில்களைக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தில் போக்குவரத்திற்கென ஒருசில பேருந்துகள் திருவாரூர் நகருக்கும் திட்டச்சேரி மற்றும் நாகப்பட்டினம் இடையே அரசால் இயக்கப்படுகிறது. மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக அருகாமையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏனங்குடி மற்றும் ஆண்டிப்பந்தல் ஆகிய ஊர்களுக்கு ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டமாக இருப்பினும் பெரும்பாலும் தம் கொள்முதல் தேவைகளுக்காக மக்கள் அருகாமையில் இருக்கும் திருவாரூர் நகரையே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், போக்குவரத்து வசதி இல்லாததும் ஒரு பெரும் குறையாகவே இங்கு காணப்படுகிறது. மாணவர்கள் தங்களின் உயர் நிலை கல்விக்கு அருகே அமைந்திருக்கும் ஏனங்குடியில் உள்ள உயர் நிலை பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். அவசர கால மருத்துவத்திற்கு அங்கு உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்கின்றனர். புத்தாறு என்னும் ஆற்றுப் படுகையும், விவசாய காலங்களில் பசுமையாய் காட்சி தரும் வயல் வெளிகளும், இவ்வூரின் சிறப்புகளாகும். https://pakkamkotturonline.blogspot.ae/ https://www.youtube.com/watch?v=jVdoEOi2LeM கொன்ராடு அடேனார் கொன்ராடு அடேனார் (Konrad Hermann Joseph Adenauer,5 ஜனவரி 1876–19 ஏப்ரல் 1967) ஓரு ஜெர்மானிய அரசியல்வல்லுநர். 1949 முதல் 1963 வரை மேற்கு செருமனியின் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி சீரழிந்து போனது. ஜெர்மனி மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என பிளவுப்பட்டு போனது. இதில் மேற்கு ஜெர்மனி வெகு சீக்கிரமாக தலைநிமிர்ந்தது. பொருளாதாரத்தில் தன்னை வலுபடுத்திக் கொண்டது. மேற்கு ஜெர்மனி விரைவாக பொருளாதார வளமிக்க நாடாக மாறுவதற்கு பெரும் காரணமாக விளங்கியவர் அடேனார் கொன்ராடு ஆவார். கொன்ராடுஅடேனார் 1876 - ல் கோலோ நகரில் பிறந்தார். தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். இவர் ரோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர். அடேனார் சட்டத்தையும், பொருளாதாரத்தையும் கற்றுத் தேர்ந்து கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை நீதிபதியானார். 1906 - ல் கோலோன் நகரின் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரசபையோடு நில்லாமல் தேசிய அரசியலிலும் ஈடுபட்டார். கத்தோலிக்க மையக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1926 - ல் அடேனார் இலான்சிலிக்கல் கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாகப் பேசினார். இதனால் ஹிட்லரின் கோபத்துக்கு ஆளானார். 1933 - ல் ஹிட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள் அடேனாரை ஜெர்மனிய மக்களுக்கு எதிராக குற்றம் செய்தவர் எனக்கூறி அனைத்து பதவிகளிலிருந்தும் விலக்கிவிட்டனர். பன்னிரெண்டு ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகியிருந்தார். 1944 - ஆம் ஆண்டின் இறுதியில் நாசிகள் இவரை அரசுக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் முகாம்களில் தள்ளி ஒதுக்கி வைத்தனர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்விற்றது. அமெரிக்கர்கள் 1945 - ல் அடேனாரைச் கோலோன் நகரின் மேயராக்கினர். கோலோன் நகர் ஆங்கிலேயர் வசப்பட்டபோது ஆங்கிலேயர் இவரது பதவியைப் பறித்தனர். அப்போது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் என்னும் அரசியல் கட்சி உருவானது. அதை உருவாக்கியவர்களில் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற ஜெர்மனியைச் சீராக்கப் பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ சமய உயர்வை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடைய அக்கட்சியின் முயற்சியால் கிறிஸ்தவர்களிடையே நல்லிணக்கம் தோன்றியது. அடேனாரின் எழுபதாவது வயதில் அவரது பெரும் அரசியல் வாழ்வு மீண்டும்துவங்கியது. விரைவில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரானார். அவரது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால் இவரது செல்வாக்கு உயர்ந்தது. மேற்கு ஜெர்மனி மூன்று பகுதிகளாக இருந்தது. அவை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தன. இம்மூன்று பகுதிகளையும் இணைத்து மேற்கு ஜெர்மனி உருவானபோது அடேனார் அதன் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். 1948 - ல் பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆனவுடன் ஜெர்மானியக் கூட்டாட்சி குடியரசுக்கான புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். 1949 - ல் முதல் ஜெர்மானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தால் இவர் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலேயே மேற்கு ஜெர்மனி 1955 - ல் முழு விடுதலை பெற்றது. அந்நாடு வியத்தகு முறையில் பொருளாதார முன்னேற்றம் பெற்றது. 1953, 1957, 1961 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1963 அக்டோபர் திங்களில் அடேனார் தனது 87-ஆவது வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1967 -ல் ஏப்ரல் 19 அன்று அடேனார் மறைந்தார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தின் அதிபரான லின்டன் பி. ஜான்சன் உட்பட உலகின் பல தலைவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இர்வின் ரோமெல் இர்வின் ரோமெல் (Erwin Johannes Eugen Rommel, 1891,நவம்பர் 15 – 1944,அக்டோபர் 14) 'பாலைநிலக் குள்ளநரி' என அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் பீல்டு மார்ஷல் என்ற பதவியில் இருந்தவர். ஜெர்மனியிலுள்ள சுவாபியா என்னுமிடத்தில் கி.பி. 1891 - ஆம் ஆண்டு நவம்பர் 15 - ஆம் நாள் பிறந்தவர் இர்வின் ரோமெல். ஸ்டுட்கார்ட் என்னும் நகரத்திலிருந்த இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். 1910 - ஆம் ஆண்டு ஜெர்மனி படையில் சேர்ந்தார். முதல் உலகப்போரில் பங்கேற்று பதவி உயர்வு பெற்று படையின் துணைத்தலைவராக உயர்ந்தார். போருக்கு பின் நாஜிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், போட்ஸ்டாம் போர்க் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது அரசின் ஆணையை ஏற்று ஆசிரியர் பணியைத் துறந்து பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து நாடுகளில் முக்கிய ராணுவப் பொறுப்புகளை ஏற்றார். வட ஆப்பிரிக்க போர் முனைகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த இத்தாலி படையினருக்குத் துணையாக ஜெர்மானியப் படைகளின் தலைவராக 1941 -ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். டாங்கிப் படைகளைக் கொண்டு போர் செய்வதில் ரோமெல் தனித்திறமையை வெளிப்படுத்தினார். 1942 - ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆங்கிலப் படைகளை எகிப்தின் அல் அலாமீன் பகுதியிருந்து விரட்டியடித்தார். பின்னர் ரோமல் தலைமையிலான படைகள் எகிப்திலிருந்து விரட்டப்பட்ட போது, இவர் படைகளுடன் துனீஷியாவுக்குத் தப்பிச் சென்றார். இவரை நேசப் படையினர் பாலைநிலக் குள்ளநரி என்று வர்ணித்தனர். வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனி தோற்பது உறுதியான போது 1943 - ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆணைபடி இவர் பெர்லின் திரும்பினார். சிறிது காலம் இத்தாலியில் அச்சு நாடுகளின் படைகளுக்கு தலைமை தாங்கினார். பிரான்சின் நார்மாண்டி கடற்கரையில் நடைபெற்ற போரில் படுகாயமடைந்தார். ஜெர்மனி தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் பயனில்லை என்று ஹிட்லரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். 1944 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிட்லரை கொலைசெய்ய சதி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு உடன்பட வேண்டும் அல்லது நஞ்சுண்டு சாக வேண்டும் என்ற ஆணையைத் தொடர்ந்து, நஞ்சு உண்டு மரணமடைந்தார். வெண்கூதாளம் வெண்கூதாளம் பூ நீர்க்கரையில் பூக்கும். அதனைக் கொடியோடு பறித்து ஆண்கள் தம் கால்களில் கழல் போல அணிந்துகொள்வர். மகளிர் கூந்தலில் சூடிக்கொள்வர். கனிமீடு கனிமீடு ("Ganymede") என்பது வியாழனின் மிகப்பெரிய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். அறியப்பட்டுள்ள துணைக்கோள்களில் காந்தப் புலம் கொண்ட கோளாக வியாழனின் நிலவாகிய கனிமீடு கருதப்படுகிறது. வியாழனின் ஏழாவது இயற்கைத் துணைக்கோளாகவும் அதனிடமிருந்து மூன்றாம் இடத்திலும் கனிமீடு இடம்பெற்றுள்ளது. இதன் விட்டம் ஆகவுள்ளது. புதனை விட அளவில் 8% பெரியதான கனிமீடு நிறையில் 45% மட்டுமே கூடுதலாக உள்ளது. சனிக் கோளின் இரண்டாவது மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனை விட இதன் விட்டம் 2% பெரியது ஆகும். அறியப்பட்ட அனைத்து துணைக்கோள்களில் இதுவே மிக அதிக நிறை கொண்ட கோளாகும். பூமியைச் சுற்றிவரும் நிலவைப் போல கனிமீடு 2.02 மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கிறது. கனிமீடு வியாழன் கோளை அதன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி நிறைவு செய்யத் தோராயமாக ஏழு நாட்கள் பிடிக்கின்றன. ஐரோப்பா, ஐஓ ஆகிய நிலவுகளுடன் கனிமீடு 1:2:4 என்ற விகிதத்தில் அலை மண்டல ஒத்திசைவு கொண்டுள்ளது. சிலிக்கேட்டுப் பாறைகள் மற்றும் பனிக்கட்டி நீரும் தோராயமாக சம அளவில் சேர்ந்து கனிமீடு உருவாகியுள்ளது. அதிகளவு இரும்பு, திரவ உள்ளகம் மற்றும் உட்புறப் பெருங்கடல் ஆகிய அடையாளங்களுடன் முற்றிலும் வேறுபடுத்தப்பட்ட துணைக்கோளாகக் கனிமீடு காணப்படுகிறது. இதன் நிலப்பகுதி இரண்டு பிரதான வகைகளால் ஆக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகள் வயதுடைய விண்கல் வீழ் பள்ளங்களால் நிறைந்திருக்கும் இருள் பகுதி முதலாவது வகையாகும். கோளின் முக்கால் நிலப்பகுதி இவ்வகை மேற்பரப்பினால் ஆக்கப்பட்டுள்ளது, எஞ்சியுள்ள பகுதி இரண்டாவது வகையான வெளிச்சப் பரப்பு நிலப்பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. சிறிதளவு வயது குறைந்த இப்பகுதி வரிப்பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான நீட்சிகளால் ஆன குறுக்குவெட்டுகளால் ஆக்கப்பட்டதாகும். இத்தகைய இயல்பற்ற புவியியல் நிலப் பகுதிக்கான காரணம் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால், வெப்ப ஏற்ற இறக்கத்தின் விளைவுகளால் மேல் தட்டில் நிகழ்ந்துள்ள செயல்பாடுகளே இதற்குரிய காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. கனிமீடின் காந்தப்புலம், ஒருவேளை அதனுடைய திரவ இரும்பு உள்ளகத்தின் வெப்பச் சலனச் செயல்பாட்டின் மூலம் உருவாகியிருக்கலாம். விண்பொருளுக்கு அருகில் இருக்கும் காந்தப்புலம் வியாழனின் அபரிமிதமான காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு மறைந்திருக்கலாம். அங்கு உண்டாகும் குழப்பமான காந்தப்புலக் கோடுகளுக்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம். இதன் மெல்லிய ஆக்சிசன் வளிமண்டலத்தில் தனி ஆக்சிசன், ஆக்சிசன், ஓசோன் ஆகிய வாயுக்கள் அடங்கியுள்ளன. அணு ஐதரசன் வாயுவும் சிறிதளவு இவ்வளிமண்டலத்தின் பகுதிப்பொருளாக இருக்கிறது. கனிமீடின் வளிமண்டலத்தில் அயனிமண்டலம் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் அறியப்படவில்லை. முதன் முதலாக கலீலியோ கலிலி 1610 சனவரி 7 இல் கனிமீடு துணைக்கோளைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர் வானியலாளர் சைமன் மாரியசு இத்துணைக்கோளுக்கு புராணப் பெயரான கனிமீடு என்ற பெயரைச் சூட்டினார். கனிமீடு என்பது கிரேக்கக் கடவுள்கள் மற்றும் சியுசு ஆகியோருக்கு விருந்தில் குடிகலம் பரிமாறுபவரின் பெயராகும். பயோனிர் 10 விண்கலம் தொடங்கி பிற விண்கலங்களால் கனிமீடு துணைக்கோளை நெருங்கி ஆராயமுடிந்தது. ஆளில்லா விண்ணாய்வியான வாயேஜர் இதனுடைய உருவ அளவுகளையும் அதேவேளையில் நாசாவின் கலீலியோ விண்கலம் கனிமீடின் காந்தப்புலத்தையும் அதிலுள்ள பெருங்கடலையும் கண்டறிந்தது.சோவியன் அமைப்பின் அடுத்தக்கட்ட ஏவுகணைத் திட்டம், 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் மூலம் ”வியாழனின் பனிக்கட்டி நிலவு தேட்டக்கலம்“ (JUICE) அனுப்பிவைத்து ஆராயும் திட்டமாகும். கலீலியோ விண்கலத்தின் மூன்று பனிக்கட்டி நிலவு பயணங்களுக்குப் பின்னர் ஆளில்லா விண்கலத்தை கனிமீடின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சனவரி 7, 1610 ஆம் ஆண்டில் கலீலியோ கலிலி வியாழன் கோளுக்கு அருகில் உற்றுநோக்கி அங்கு மூன்று விண்மீன்கள் இருப்பதாக நம்பினார். அவைகளே பின்னர் கனிமீடு, காலிசுடோ மற்றும் ஐரோப்பா (நிலவு) மற்றும் ஐஓ விடமிருந்து ஒளியைக் பெற்றுக்கொண்ட ஒரு நிலவு என்பனவென்று கருதப்படுகிறது. அடுத்தநாள் இரவு அவை அங்கிருந்து நகர்ந்துவிட்டன என்பதையும் கண்டார். ஒவ்வொன்றையும் இவர் தனித்தனியாக பார்த்திருந்தாலும் சனவர் 13 தேதியன்றுதான் முதன்முதலாக நான்கையும் ஒரேநேரத்தில் கண்டார். சனவரி 15 நாளில்தான் அவை வியாழனை சுற்றும் பொருட்கள் என்ற முடிவுக்கு கலீலியோ வந்தார். தொடர்ந்து அந்நிலவுகளுக்கு பெயரிடும் உரிமையைக் கோரினார். அவற்றிற்கு காசுமியன் விண்மீன் என்று பெயரிட நினைத்து இறுதியாக மெடிசியன் விண்மீன் என்று பெயர் சூட்டினார். மெடிசி குடும்பத்து நிலவுகள் என்ற பெயரை மாற்றி ஒவ்வொரு நிலவுக்கும் தனித்தனியாகப் பெயரிடுமாறு பிரெஞ்சு வானியலாளர் நிக்கோலசு – கிளாடு பேப்ரைடு பைரெசு பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை ஏற்கப்படவில்லை. பின்னர், கலீலியன் செயற்கைக் கோள்களைப் பார்த்த சைமன் மாரியசு இவற்றுக்கான பெயரிடும் உரிமையைக் கோரி முயற்சித்தார். வியாழனின் சனி , வியாழனின் வியாழன் (இதுதான் கனிமீடு) , வியாழனின் வெள்ளி , வியாழனின் புதன் என்றெல்லாம் அவர் பெயர் சூட்டினார். அவருக்கு இதைத் தவிர வேறு பெயர்கள் ஏதும் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் சோகன்னசு கெப்ளர் பரிந்துரையின்படி மாரியசு மீண்டும் முயன்று இவற்றுக்குப் பெயரிட்டார். கிரேக்க நாட்டின் புராணக்கதை ஒன்றில் திராய் நகரத்தின் மன்னன் திராசுவின் மூன்றாவது மகன் அழகான கனிமீடை , கழுகு உருவமெடுத்த ஜுபிடர் தன் முதுகில் சொர்கத்திற்குச் சுமந்து சென்றார் என்று கவிஞர்கள் கனிமீடின் பிரகாசமான ஒளியை வியந்து பாடியுள்ளனர்"}}. இந்தப் பெயர் மற்றும் மற்ற கலீலியன் செயற்கைக் கோள்கள் யாவும் குறிப்பிட்ட சிலகாலம் வரை ஆதரவு எதனையும் பெறாமல் இருந்தன. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் அவை பொதுவான பயன்பாட்டில் இல்லை என்றே கூறவேண்டும். முன்பிருந்த வானியல் நூல்களில் வியாழன் III அல்லது வியாழனின் மூன்றாவது நிலவு என்றே கனிமீடு அதிகமாக அடையாளம் காட்டப்பட்டிருந்தது. கலீலியோவின் பெயரிடல் முறையில் ரோமன் எண் குறியீட்டு முறையில் பெயரிடல் வழக்கமாக இருந்தது. சனி கிரகத்தின் நிலவுகள் கண்டறியப்பட்ட பிறகே கெப்ளர் மற்றும் மாரியசு அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் வியாழனின் நிலவுகளுக்கு இவ்வாறாகப் பெயரிடப்பட்டது. சொர்கத்தின் கடவுளான சியுசுவின் அன்பிற்கு உகந்தவராக கனிமீடு கருதப்பட்டது. ஐரோப்பா, ஐஓ , காலிசுடோ போல ஆணின் பெயர் சூடப்பட்ட ஒரே கலீலியன் நிலவு கனிமீடு என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு 365 இல் வியாழனின் நிலவை வெற்றுக் கண்களால் கண்டதாக சீனநாட்டின் வானியல் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது கலீலியன் நிலவுகளில் மூன்றாவது நிலவான கனிமீடு வியாழன் கோளை 1,07,400 கி.மீ தொலைவில் சுற்றிவருகிறது. வியாழனை ஒருமுறை சுற்றிவர இதற்கு ஏழு நாட்கள் மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. மற்றக் கோள்களைப் போலவே கனிமீடும் எப்போதும் அதன் ஒரு பக்கம் வியாழனை நோக்கியே இருப்பது போல ஓதப் பூட்டலால் பூட்டப்பட்டுள்ளது.. இதன் சுழல்வட்டம், ஜோவியன் கோட்டிலிருந்து, சிறிது விசித்திரமாகவும் சாய்ந்தும் உள்ளது. இவ்விசித்திரமும் சாய்வும் சூரியன் மற்றும் கோள்களின் ஈர்ப்புவிசை சலனத்தால் நூற்றாண்டு கால நேர இடைவெளிகளில் அவ்வப்போது பகுதிபகுதியாக மாறிவருகிறது. இவ்வாறான மாற்றங்களின் எல்லைகள் முறையே, 0.0009-0.0022 மற்றும் 0.05-0.32° என்ற அளவுகளில் குறிக்கப்படுகின்றன.. இந்த சுற்றுப்பாதை மாறுபாடுகளால் அச்சுச் சாய்வு அதாவது சுழல் மற்றும் சுற்றுப்பாதை அச்சுக்கு இடையே உள்ள கோணம் 0° மற்றும் 0.33° என்ற போக்கில் வேறுபடுகிறது.. ஐரோப்பா மற்றும் ஐஓ நிலவுகளுடன் கனிமீடு நிலவு சுற்றுப்பாதை ஒத்திசைவில் பங்கேற்கிறது. கனிமீடு வியாழனை ஒருமுறை சுற்றிவருவதற்குள் ஐரோப்பா நிலவு இரண்டு முறையும் ஐஓ நிலவு நான்கு முறையும் சுற்றி வருகின்றன.. ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையமும் ஐஓ நிலவின் சேய்மைக் கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது, இதேபோல் ஐரோப்பா நிலவின் அண்மைக் கவர்ச்சி மையம் கனிமீடு நிலவின் சேய்மை கவர்ச்சி மையமும் ஒரே அச்சில் வரும்பொழுது இவற்றின் சேய்மை இணையல் நிகழ்கிறது. ஐஓ – ஐரோப்பா மற்றும் ஐரோப்பா – கனிமீடு நிலவுகளின் தீர்க்கரேகைகளின் மாற்றம் ஒரே விகிதத்தில் நிகழ்கிறது. இதனால் மூன்று நிலவுகளின் இணையல் சாத்தியமில்லாமல் போகிறது. சிக்கல் நிறைந்த இந்த ஒத்திசைவே இலாப்லாசு ஒத்திசைவு என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய இலாப்லாசின் ஒத்திசைவு கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகலை உயர்த்தப் போதுமானதாக இல்லை. வட்டவிலகல் மதிப்பு 0.0013 என்பது பெரும்பாலும் இவ்வாறான விலகலை உயர்த்தக்கூடிய முந்தைய ஊழி ஒன்றின் எச்சமாக இருக்கலாம். கனிமீடு சுற்றுப்பாதையின் வட்டவிலகல் சற்று புதிராகவே இருக்கிறது; இவ்விலகல் தற்பொழுது உந்தப்பட்ட விலகலில்லை என்றால், அது கனிமீடின் உள்ளகத்தில் பொங்கித்தாழும் வெப்ப சிதறல் காரணமாக நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாக குறைந்து வந்ததாக இருக்க வேண்டும். அதாவது கடைசியாக பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்பாதையின் வட்டவிலகல் ஆச்சர்யம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதே இதன்பொருள் ஆகும். ஏனெனில் கனிமீடு நிலவின் சுற்றுப்பாதை வட்டவிலகல் ஒழுங்கின்மை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தது ஆகும். சராசரியாக 0.0015 என்பது இந்த சந்திரனின் பேரலை வெப்பமூட்டலுக்கு மிகவும் குறைவு ஆகும்— இந்நிலவின் ஓத வெப்பம் தற்பொழுது மிகவும் குறைவாகும். ஆனாலும் கடந்த காலத்தில் கனிமீடு நிலவு ஒன்று அல்லது பல இலாப்லாசு வகை ஒத்திசைவுகளை கடந்து வந்திருக்கவேண்டும்அப்படியான நிகழ்வுகளால்தான் சுற்றுப்பாதையின் வட்டவிலகலின் மதிப்பை 0.01 – 0.02 என்ற உயர்மதிப்புக்கு உந்தமுடியும். இது அநேகமாக கனிமீடு நிலவின் உள்ளகத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பேரலை வெப்பமூட்டத்தால் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய ஒரிரு வெப்பமூட்ட நிகழ்வுகளின் விளைவாக கனிமீடு நிலப்பகுதியில் வரிப்பள்ளங்கள் உருவாகியிருக்கலாம். ஐரோப்பா, ஐஓ மற்றும் கனிமீடு நிலவுகளுக்கு இடையே நிலவும் இலாப்லாசு ஒத்திசைவின் தோற்றம் குறித்து இரண்டு விதமான கருதுகோள்கள் உள்ளன. ஆதியில் இருந்தே இவ்வொத்திசைவு இருந்து சூரியக்குடும்பத்தின் ஆரம்பகாலத்தில் இருந்து தொடர்கிறது என்பது ஒருவகை கருதுகோள்;. இலாப்லாசு ஒத்திசைவு சூரியக்குடும்பம் தோன்றிய பிறகு தோற்றம் பெற்று வளர்ந்தது என்று கருதுவது மற்றொருவிதமான கருதுகோள். பிந்தைய கருதுகோள் சாத்தியமானது என்பதற்கு ஆதாரமாக தொடர்ச்சியான சில நிகழ்வுகள் கூறப்படுகிறது. தன்னுடைய சுற்றுப்பாதையை விரிவடையச்செய்து ஐரோப்பாவுடன் 2:1 விகிதத்திலான ஒத்திசைவை ஏற்படுத்த வியாழனின் மீது ஐஓ நிலவு ஓதங்களை உயர்த்தியது. இதன் பின்னரும் விரிவடைதல் தொடர்ந்தது. ஆனால் சிறிதளவு கோணத் திருப்பம் ஐரோப்பா நிலவுக்கும் மாற்றப்பட்டது. சுற்றுப்பாதையில் ஒத்திசைவு ஏற்பட்டதோடு மட்டுமின்றி அது மேலும் விரிவடையவும் செய்தது. ஐரோப்பா நிலவும் கனிமீடுடன் 2:1 என்ற விகிதத்தில் சுற்றுப்பாதை ஒத்திசைவு ஏற்படும்வரை இச்செயல்பாடு தொடர்ந்தது . இறுதியாக மூன்று நிலவுகள் இடையிலான ஒருங்கிணைப்பும் நகர்வு விகிதங்களும் ஒத்திசைக்கப்பட்டு இலாப்லாசு ஒத்திசைவுக்கு உட்பட்டன கனிமீடு நிலவின் சராசரி அடர்த்தி 1.936 கி/செ.மீ 3 என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ சம அளவில் பாறையும் பனிக்கட்டி வடிவில் நீரும் இந்நிலவைக் கட்டமைத்துள்ளன என்பதையே மேற்கண்ட அளவீடு உணர்த்துகிறது. மொத்த நிறைக்கும் பனிக்கட்டிக்கும் இடையிலான நிறை பின்னம் 46–50% ஆகும். இது காலிசுடோவின் நிறை பின்னத்தை விட சிறிது குறைவாகும்.இங்கு கூடுதலாக அம்மோனியா போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளும் இருக்கக்கூடும். இந்நிலவின் பெரும்பகுதியாக உள்ள பாறைகளின் துல்லியமான இயைபு அறியப்படவில்லை. ஆனால் அநேகமாக அவை எல்/எல்.எல் வகை சாதாரண வேதி எரிகல் லுக்கு நெருக்கமான வகையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வகைப் பாறையில் இரும்பின் மொத்த அளவு குறைவாகும். அதாவது குறைவான உலோக இரும்பும் எச் வகை எரிகல்லைவிட மிகுதியான இரும்பு ஆக்சைடு தாதுவும் கொண்ட பாறை வகையாக இது அடையாளம் காட்டப்படுகிறது. கனிமீடின் இரும்பு – சிலிக்கான் எடை விகிதம் 1.05–1.27 ஆகவும் சூரிய நிறை விகிதம் கிட்டத்தட்ட 1.8 ஆகவும் காணப்படுகிறது. கனிமீடு நிலவின் தரைப்பகுதி எங்கும் பனிக்கட்டி நீர் நிறைந்துள்ளது. பெரும்பான்மை அல்லது முழுவதுமாக 43% எதிரொளிதிறன் தன்மையும் 50 – 90% நிறை பின்ன மதிப்பும் கொண்டதாக இத்தரைப்பகுதி காணப்படுகிறது. கோளில் பனிக்கட்டி நீரின் இருப்பை அகச்சிவப்புக் கதிர் களின் அண்மை அகச்சிவப்புப் பகுதியின் 1.04, 1.25, 1.5, 2.0 மற்றும் 3.0 மை.மீ அலைநீளங்கள் உறுதி செய்கின்றன. வரிப்பள்ளங்கள் நிரம்பிய தரைப்பகுதி பிரகாசமாகவும் அடர்த்தியான இருள் பகுதிகளை விட அதிகமான பனிக்கட்டியாலும் உருவாகியுள்ளது. கலீலியோ விண்கலம் மூலம் பெறப்பட்ட அண்மை அகச்சிவப்புப் பகுதி மற்றும் புறஊதா கதிர் நிறமாலையியல் உயர்தர ஆய்வு முடிவுகள், இதன் தரைப்பகுதியில் கார்பன் டை ஆக்சைடு, கந்தக டைஆக்சைடு, சயனோசன், ஐதரசன் சல்பேட்டு மற்றும் பலவகையான கரிமச் சேர்மங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன . மக்னீசியம் சல்பேட்டு (MgSO4), சோடியம் சல்பேட்டு (Na2SO4) ஆகிய வேதிச்சேர்மங்கள் கனிமீடு நிலவின் தரைப்பகுதியில் காணப்படுகின்றன என்று கலீலியோ விண்கல முடிவுகளும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவ்வுப்புகள் அங்குள்ள பெருங்கடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கனிமீடின் மேற்பரப்பு சமச்சீரற்று காணப்படுகிறது. முன்புறமாகத் தெரியும் அரைக்கோளம் பின்புற அரைக்கோளத்தைவிட பிரகாசமாக இருக்கிறது. ஐரோப்பா நிலவிலும் இதேநிலை காணப்படுகிறது ஆனால் காலிசுடோவில் இதற்கு எதிரான நிலை காணப்படுகிறது. கனிமீடின் பின்புற அரைக்கோளத்தில் கந்தக டைஆக்சைடு மிகுந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதன் துருவப்பகுதிகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் காண முடியவில்லை என்றாலும், இவ்வாயுப் பரவல் அரைக்கோளத்தின் ஒத்தமைவின்மை எதையும் விளக்கவில்லை. ஒரேஒரு விண்கல் வீழ் பள்ளத்தைத் தவிர கனிமீடின் பிற பள்ளங்கள் எதுவும் கார்பன்டை ஆக்சைடு வாயு மிகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த அம்சமும் கனிமீடை காலிசுடோவில் இருந்து வேறுபடுத்துகிறது. கனிமீட் நிலவு இரும்பு (II) சல்பைடு – இரும்பு உள்ளகம் மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தால் ஆக்கப்பட்டு முழுவதுமாக வேறுபட்டுத் தோன்றுகிறது . இதன் உள்ளமைப்பில் உள்ள உன்னதமான பல்வேறு அடுக்குகளின் தடிமன் ஒலிவைன் மற்றும் பைராக்சின் சிலிக்கேட்டுகளும் உள்ளக கந்தகத்தாலும் ஆனவையென்று ஊகிக்கப்படுகிறது கனிமீடு நிலவின் நிலப்பகுதியில் மேல் கீழாக உள்ள இரண்டு பனிக்கட்டி அடுக்குகளுக்கு இடையில் ஒரு தடிமனான பரப்பாக கடல் இருக்கலாம் என்று 1970 களில், நாசா விஞ்ஞானிகள் ஊகித்தார்கள். 1990 களில் நாசாவின் கலிலியோ விண்கலம் கனிமீடுக்கு அருகில் பறந்து இந்நிலவில் கடல் இருப்பதை உறுதிப்படுத்தியது. இக்கடல் வெவ்வேறு நிலை பனிக்கட்டி கடல் அடுக்குகளால் ஆனவொரு தொகுப்பு என்றும் பாறை மூடகத்திற்கு அடுத்ததாக மட்டும் கீழே குறைவான திரவ அடுக்காக கடல் உள்ளது என்றும் கருதப்படுகிறது. நீரின் வெப்ப இயக்கவியல் மற்றும் ஆதன் வேதியுப்பு விளைவுகள் ஆகிய எதார்த்தமான வேதிப்பண்புகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உயிரினத்தின் தோற்றதிற்கு நீர் – பாறை இடையிலான தொடர்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். 800 கிலோ மீட்டர் ஆழங்கொண்ட கடல் அடிபரப்பு பனிநீர் இடைமுகத்தைவிட 40 கெல்வின் வெப்பநிலை அதிகமாகவுள்ள வெப்பச்சலனமற்ற கடல் பகுதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கனிமீடின் நிலத்தடியில் பெருங்கடல் இருப்பதையும் அதன் துருவ ஓளியின் நகர்வுக்கும் அப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் அளவீடுகள் எவ்வாறு உதவின என்று விஞ்ஞானிகள் மார்ச்சு 2015 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கனிமீடின் துருவ ஒளியையும், அதன் காந்தப்புலத்தையும் ஒரு பெரிய உப்புநீர் பெருங்கடல் பாதிப்பதாகக் கருதப்படுகிறது. ஒட்டுமொத்த சூரியக் குடும்பப் பருப்பொருட்களில் கனிமீடு நிலவு குறைவான நிலைமத் திருப்புத்திறன் கொண்டுள்ளது. கலிலியோ விண்கலம் கண்டறிந்த திரவநிலையில் மிகுந்திருக்கும் இரும்பு – நிக்கல் உள்ளகம் கனிமீடின் அகநிலை காந்தப்புலத்திற்கான காரணத்தினை விளக்குகிறது. அதிக மின் கடத்துதிறன் பெற்றுள்ள திரவ இரும்பின் வெப்பச்சலனம் , காந்தப்புலம் உருவாகும் முறையை விளக்குவதற்கான பொருத்தமான மாதிரியாகும் கனிமீடு உள்ளகத்தின் அடர்த்தி 5.5 – 6 கி/செ.மீ மற்றும் சிலிக்கேட்டு மூடகத்தின் அடர்த்தி 3.4 – 3.6 கி/செ.மீ ஆகும். உள்ளகத்தின் ஆரம் 500 கி.மீ ஆகவும் அதன் உள்வெப்பம் 1500 – 1700 கெல்வின் ஆகவும், அழுத்தம் 10 பாசுக்கல் ஆகவும் இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. கனிமீடு நிலவின் மேற்பரப்பு இரண்டு வகையான நிலப்பரப்புகளின் கலவையாக உள்ளது: மிகப் பழமையானதும் அதிகளவு கிண்ணக்குழிகளால் ஆக்கப்பட்ட இருண்ட பகுதிகளைக் கொண்டிருப்பது ஒருவகையாகும். இரண்டாவது வகை இவற்றைவிட வயது குறைந்தவை ஆனால் பழமையான வெளிச்சப்பகுதிகள், இவற்றில் கரடுமுரடான நீட்சிகளும் வரிப்பள்ளங்களும் காணப்படுகின்றன. மேற்பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இருண்ட நிலப்பரப்பு களிமண் மற்றும் கரிமவேதியியல் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இவையே பல்வேறு தாக்கங்களால் உருண்டு திரண்டு வியாழனின் துணைக்கோள்களாக உருப்பெற்றன என்று இக்கலவையின் பகுதிப்பொருட்கள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன. கனிமீடின் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாவதற்கு தேவையான வெப்ப இயக்கவியல் வழிமுறை கோள் அறிவியல் துறையில் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வரிப்பள்ள நிலப்பரப்பு என்பது இயற்கையின் முக்கியமான மேலோட்டு நிலவியல் என்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன . பனி எரிமலை ஏதேனும் அங்கு இருந்திருந்தாலும் வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாக்கத்தில் அதன் பங்கு மிகக் குறைவேயாகும். கனிமீடின் பனிப்பாறை அடுக்குகளில் புறச்சக்திகள் ஏற்படுத்திய வலிமையான அழுத்தம் , மேலோட்டு நிலவியல் மாற்றச் செயல்பாடுகளை முன்னெடுக்க அவசியமானதாகவும் முற்காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய வெப்ப ஏற்ற இறக்க அலை நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டும் இருந்திருக்கும். ஒருவேளை இத்துணைக்கோளில் இதனால் நிலையற்ற சுற்றுப்பாதை ஒத்திசைவு ஏற்பட்டிருக்கலாம். பனிக்கட்டியின் நெகிழ்ச்சியான ஏற்ற இறக்கச் செயல்பாடுகளால் கோளின் உட்புறம் சூடாகி பாறை அடுக்கில் கீறல்கள் தோன்றியிருக்கலாம். இதனால் நில விரிசல்கள், பாறைப் பிளவுகள் மற்றும் பிளவிடைப் பள்ளங்களின் நகர்வுகள் நிகழ்ந்திருக்கும். இவை 70 சதவீத பண்டைய இருள் நிலப்பகுதிகளை அழித்திருக்கக்கூடும். வரிப்பள்ள நிலப்பரப்பு உருவாக்கம் , கோளின் உள்ளக உருவாக்கத்துடனும் தொடர்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும். கனிமீடின் உள்ளகத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த வெப்ப ஏற்ற இறக்க அலை இயக்கங்கள் விளைவாக பனிக்கட்டி நிலை மாற்றங்களைச் சந்தித்தும் வெப்ப விரிவு காரணமாகவும் இக்கோளின் அளவு 1 முதல் 6 சதவீதம் வரை விரிவடைந்திருக்கலாம். அடுத்துவந்த ஆழமான பரிணாம மாற்றங்களின் போது, மெல்லிய சுடு நீர் ஊற்றுகள் புகையாக உள்ளகத்தில் இருந்து மேற்பரப்பு நோக்கி உயர்ந்திருக்கும். இதனால் மேற்புற பாறை அடுக்கில் உருச்சிதைவு நிகழ்ந்திருக்கலாம். கோளுக்குள் நடைபெறும் கதிரியக்க வெப்பமே அதிலுள்ள கடலின் ஆழம் வரைக்குமான வெப்ப மாறுபாடுகளின் பங்களிப்பிற்குப் பொருத்தமான வெப்ப ஆதாரமாக உள்ளது. கடந்த காலத்தில் இருந்திருக்க கூடிய சுற்றுப்பாதை ஒழுங்கின்மையால் உண்டான அலை இயக்க மூலங்களில் இருந்து பெறப்பட்ட வெப்பத்தின் அளவு தற்போது கதிரியக்க வெப்பமூட்டலால் கிடைக்கும் வெப்பத்தின் அளவைக்காட்டிலும் கணிசமான வெப்ப ஆதாரமாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சி மாதிரிகள் கண்டறிந்துள்ளன. மேகலை நகரங்கள் மேகலை நகரங்கள் என்பன அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் நான்கு நகரங்களாகும். அவை, இவை ஒவ்வொன்றும் நிலநடுக்கோட்டில் ஒன்றோடு ஒன்று 90 பாகை இடைவெளி விட்டு அமைந்திருந்ததாக குறிப்பிடுகின்றன. இந்த நான்கு நகரங்களில் ஒன்றான லங்காபுரி நிலநடுக்கோடும் உஜ்ஜைன் நகரத்தின் நேராக வரும் நிலநேர்க்கோடும் இணையும் இடத்தில் உள்ளதாக சில இந்து தொன்மவியல் ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர். அதன்படி இராவணன் ஆண்ட இலங்கை நிலநடுக்கோட்டில் இருந்ததாகவும் அதற்கு அனுமன் பயனம் செய்த குறிப்புகள் இராமாயணத்தில் இருந்ததைக் கொண்டும், மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவனின் திக்விசயத்தின் போது இலங்கை, சிங்களம் என்ற இரண்டு நாடுகளையும் பிரித்துக் கூறுவதைக் கொண்டும் இராவணின் லங்காபுரி தற்போதைய இலங்கை இல்லை என்று தொன்மவியல் ரீதியாக சில நூல்களில் நிறுவப்பட்டுமுளது. பாடலம் பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும். வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். பா. தாவூத் ஷா அல்ஹாஜ் தாவூத்ஷா (ஆங்கிலம் : B. Dawood Shah)(1885,மார்ச்சு 29 - 1969, பிப்ரவரி 24) சிறந்த இதழாசிரியர். எழுத்தாளர்; சீர்திருத்தவாதி; சிறந்த சொற்பொழிவாளர்; கம்பராமாயணச் சொற்பொழிவு ஆற்றியதால் "இராமாயண சாயபு" என அழைக்கப்பட்டவர்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர். கும்பகோணம் நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில் கிழ்மாந்தூர் "நறையூர்' என்று அழைக்கப்பட்டது. எனவே இவர் "நறையூர் தாவூத்ஷா' என அழைக்கப்பட்டார். நாச்சியார் கோயிலில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் "நேடிவ்' உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் உ. வே. சாமிநாதையர். கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் 'இஸ்லாம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது. 1909-ஆம் ஆண்டு "சபுரா' என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1912-ஆம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாகத் தங்கப்பரிசும் பெற்றார். 1915-இல் இவருடைய மனைவியை இழந்தார். ஆட்சியர் பணிக்குத் தேவையான துறைத் தேர்வெழுதி 1917-ல் துணை நீதிபதியாக பணியாற்றினார். பின்பு மைமூன் பீவி என்பவரை மறுமணம் செய்து கொண்டார் ஒன்பது ஆண்டுகள் வரை அரசுப் பணியில் இருந்தார். கிலாபத் இயக்கத்தில் ஈடுபடவேண்டிய காரணத்தால் பணியை விட்டு வெளியேறினார் 1921 இல் விழுப்புரத்தில் துணை நீபதியாக (சப் மாஜிஸ்ட்ரேட்டாக) இருந்தபோது கிலாபத் இயக்கக் காரணத் தாலும் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளி விட்டு வெளியேறினார். அப்பொழுது இவரின் பெயர் உதவி ஆட்சியர்(டெபுட்டி கலெக்டர்)பணிக்கு உயர்த்தப்பட வேண்டிய பரிந்துரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தாவூத்ஷா, இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு, ஊர் ஊராகச் சென்று உரையாற்றினார் . 1934-ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிரசாரத்திற்காக "தேச சேவகன்' என்ற வார இதழை சென்னையில் நடத்தினார். உரையாற்றுவதில் வல்லுநராக இருந்த தாவூத்ஷா, சென்னை நகரத் தெருக்களிலும், வெளியூரிலும் கூட்டங்கள் நடத்தி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் தேச விடுதலையின் அவசியத்தையும் தெளிவுபடப் எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் கடுமையான உழைப்பினால், சென்னை மாவட்டக் காங்கிரஸின் தலைவரானார். பிறகு சென்னை நகரசபையின் நகரத் தந்தையாகவும் நியமிக்கப்பட்டார். மூதறிஞர் ராஜாஜி, சேலம் மருத்துவர் பெ. வரதராஜுலு நாயுடு, மறைமலையடிகள், திரு. வி. க. போன்றோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கம்பராமாயணம் சொற்பொழிவும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, "இராமாயண சாயபு' என்றே அழைத்தனர். 1920-இல் "தத்துவ இஸ்லாம்" என்ற பெயருடன் மாதப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். இந்த இதழ் 1923 ஜனவரியில் "தாருல் இஸ்லாம்" என்று மாற்றப்பட்டது. "தாருல் இஸ்லாம்' என்றால் "முஸ்லிம் உலகம்" என்று பொருள். 1922 பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சமய உரையாற்றச் சென்றார். அங்கே "இஸ்லாமிய ரெவ்யூ' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் தமது சொந்த ஊரான நாச்சியார் கோவிலில் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். எனினும், 1923 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கிய தாருல் இஸ்லாமே சாதனை இதழாகப் பெயர் பதித்தது. தாருல் இஸ்லாம் இதழுடன் 1932-ஆம் ஆண்டில் 'ரஞ்சித மஞ்சரி' என்ற பொழுதுபோக்கு (மாத) இதழையும் நடத்தினார். 'தாருல் இஸ்லாம்' நாளிதழை தாவூத்ஷாவின் நண்பரான "சுதேசமித்திரன்" ஆசிரியர் சி.ஆர்.சீனிவாசன் தவறாமல் படித்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன், தாருல் இஸ்லாம் இதழுக்கு விளம்பரம் கொடுத்து, வாராவாரம் ஆனந்த விகடனைத் தாவூத்ஷாவுக்குத் தொடர்ந்து இலவசமாக அனுப்பி வந்தார். அத்துடன், தாருல் இஸ்லாம் இதழைத்தொடர்ந்து படித்தும் வந்தார். சென்னையில் "கார்டியன்' என்ற அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் தாருல் இஸ்லாம் வார இதழாக மாற்றப்பட்டது. 1934-இல் இருமுறை இதழாக வெளிவந்தது. பிறகு நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ஆம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தபோது காலை, மாலை என இரு வேளையும் வெளியான ஒரே இதழ் "தாருல் இஸ்லாம்' ஒன்றுதான். இவ்விதழ் மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. 1920 ஆம் ஆண்டில் 64 பக்கங்களுடன் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழ், பல புதிய இதழ்களின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. தலையங்கங்கள். அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, கேள்வி - பதில், வாசகர் கடிதம், துணுக்குகள் முதலான பல்சுவை அம்சங்களுடன் பவனி வந்தது தாருல் இஸ்லாம். இதழில் 'எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு' என்று அறிவித்ததார். மேலும் தம் பத்திரிகையில் அச்சுப்பிழை திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்தும் வைத்திருந்தார். இடைக்காலத்தில் இதழ் தொழில் நட்டமடைந்ததால், 1947-இல் மாத இதழாக வெளியிட்டார். திரைப்பட விமர்சனம், திரைச் செய்திகள், கலைஞர்களின் பேட்டி ஆகியவையும் அதில் வெளிவந்தன. இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் பத்திரிகையில் திரைச்செய்திகள் வெளிவருவது அந்தக் காலத்தில் அதிசயமாகப் பேசப்பட்டது. தமது 70-வது வயதில் தாருல் இஸ்லாம் இதழை நிறுத்திவிட்டார். 1934-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி "வரலாற்று தொகுப்பு' என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் "எல்லைப்புற காந்தி கான் அப்துல் கஃப்ஃபார் கான்' என்ற நூலை சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார். 1905-ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் "சுதேச நன்னெறிச் சங்கம்' என்ற சங்கத்தைத் தொடங்கி ஒரு நூலகம் நடத்தினார். அவருடைய சொற்பொழிவுகளை 1919-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் "கமலம்' என்ற பெயரில் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.இவர் எழுதிய முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர் சித்திக்' என்ற இவருடைய நூல்கள் பள்ளிகளில் இடம்பெற அரசாங்கம் அனுமதி அளித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கம் தாவூத்ஷாவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி 1963 இல் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த தாவூத்ஷா, 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-அன்று சென்னையில் தன்து 84-ஆம் வயதில் காலமானார். சென்னை மாநகராட்சி அவருடைய மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. நகரமன்ற உறுப்பினராக இருந்த ரங்கூன் சுலைமான் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பாலர் அரங்கம் என முன்னர் அழைக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஒன்றும் நடத்தப் பட்டது. அன்றைய அமைச்சர் சாதிக் பாட்சா, சட்டமன்ற உறுப்பினர் ரவண சமுத்திரம் பீர் முஹம்மது, பேராசிரியர் கா. அப்துல் கபூர் முதலானோர் உரையாற்றினர். மயிலை மயிலை என்பது ஒரு நிறம். வெளிர்-கருமை நிறம் கொண்ட மாட்டை மயிலைமாடு எனக் கூறும் வழக்கம் இக்காலத்திலும் உண்டு. சங்ககாலப் புலவர் அரிசில் கிழார் மயிலைப் பூ காட்டுக்காக்கை போல வெளிர்கருமை நிறம் கொண்டது என்றும், மகளிர் அதனைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டது பற்றியும் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்கள் மயிலைமலர் பற்றிக் குறிப்பிடுகின்றன. தி வொண்டர் தட் வாஸ் இந்தியா தி வொண்டர் தட் வாஸ் இந்தியா ("The Wonder That was India") என்பது ஏ. எல். பசாம் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் பண்டைய இந்தியாவின் சிறப்புக்களை, குறிப்பாக வரலாறு, கலை, மரபு, சமூகம் முதலான விடயங்கள் பற்றிப் பேசுவதாக அமைகின்றது. இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனுடைய முதற்பாகத்தின் இரண்டாம் பதிப்பு 1963இல் வெளியிடப்பட்டதுடன் இந்நூல் பல தடவைகள் பதிப்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகம் 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பசாமால் எழுதப்பட்ட முதலாம் பாகத்தில் பண்டைய கால இந்தியா முதலாக முசுலிம்களின் வருகை வரையான தகவல்கள் உள்ளன. இரண்டாம் பாகம் 1200-1700 வரையான ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. வியத்தகு இந்தியா என்னும் தலைப்பில் இந்நூல் தமிழில் செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டினன் என்பவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. காசீப்பூர் மாவட்டம் காசீப்பூர் மாவட்டம் (இந்தி: ग़ाज़ीपुर ज़िला, உருது: غازیپور ضلع "Ghāzīpur Zilā") இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. காசீப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் வாரனாசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. காசீப்பூர் ஆனது இங்கு உருவாக்கப்படும் ரோஜாவின் நறுமணம் கொண்ட வாசனைத் திரவியமான "குலாப் ஜல்லுக்கு" பிரபலமானது. மேலும் இங்கு பிரித்தானிய இந்தியாவின் வைசிராயான லார்டு கார்ன்வல்லிஸின் கல்லறை அமைந்துள்ளது. லார்டு கார்ன்வல்லிஸ் காசீப்பூரில் மரணமடைந்தார். இம்மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் அமைத்துள்ள இவரின் கல்லறையானது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காசீப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,622,727. இது தோராயமாக லித்துவேனியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 79வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் காசீப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 19.26%.காசீப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் உள்ளனர். மேலும் காசீப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.27%. யின் அரசமரபு (265-420) யின் அரசமரபு (ஆங்கிலம்: Jìn Dynasty, எளிய சீனம்: 晋朝; மரபுச் சீனம்: 晉朝; பின்யின்: Jìn Cháo; வேட்-சில்சு: Chin⁴-ch'ao², ஐபிஎ: [tɕîn tʂʰɑ̌ʊ];) என்பது சீனாவை கிபி 265 இருந்து 420 ஆண்ட ஒர் அரசமரபு ஆகும். இந்த மரபின் வரலாற்றில் இரண்டு முக்கிய காலப் பகுதிகள் உண்டு. முதலாவது மேற்கு யின் (西晉, 265–316) காலப் பகுதி, அடுத்தது கிழக்கு யின் (東晉 317–420). ஆன் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்பு சீனா வேய், சூ, வூ ஆகிய மூன்று தனித்தனி அரசுகளைக் கொண்டு இருந்தது. வேய் நாட்டை காஓ (Cao) குலத்தினர் ஆட்சி செய்தனர். Sima குலத்தினர் பெரும் நிலங்களை வைத்திருந்தனர். இந்தக் குலத்தை சார்ந்த சிமா யீ (Sima Yi) என்பவர் வேய் அரசின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தார். 249 இல் Gaoping Tombs அருகே சிமா யீ வேய் நாட்டின் படைத்தளபதியைக் கொன்றார். இதற்குப் பின்னர் சிமா குலத்தின் பலம் அதிகரித்தது. 263 இல் வேய் சூ அரசை வெற்றிக் கொண்டது. 265 இல் சிமா யீ வேய் அரசனை பதிவியில் இருந்து விலக்கச் செய்து அரசுரிமையை கைப்பெற்றி யின் அரசமரபை ஏற்படுத்தினார். 280 இல் வூ அரசையும் கைப்பெற்றி சீனாவை ஒன்றிணைத்தார். முசுண்டை மலர் முசுண்டைக்கீரை மக்கள் தேடிப்பிடித்து இக்காலத்தில் உண்ணும் கீரை வகைகளில் ஒன்று. இதுபற்றிச் சங்கநூல்களில் உள்ள குறிப்புகள் இவை. வேம்பி (ஊர்) வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று. வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ 'வேம்பு' இதன் அக்கால அரசன் பெயர் 'முசுண்டை'. இவன் சிறந்த வள்ளல். ஆகிய சங்ககாலப் புலவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஒடெசா முற்றுகை (1941) ஒடெசா முற்றுகை ("Siege of Odessa") 1941 இல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. உக்ரைனிய துறைமுக நகர் ஒடெசாவை நாசி ஜெர்மனி தலைமையிலான அச்சு படைகள் முற்றுகையிட்டு சோவியத் ஒன்றியத்தின் படைகளிடமிருந்து கைப்பற்றின. இம்முற்றுகை பர்பரோசா நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனி தலைமையிலான அச்சுக் கூட்டணியில் ருமேனிய இராச்சியமும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த போது உக்ரெய்னின் ஒடெசா பகுதியைக் கைப்பற்றுவதில் ருமேனியாவின் உதவியை இட்லர் நாடினார். அதற்கு பதிலாக டினீஸ்டர் மற்றும் பக் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆளும் உரிமையை ருமேனியர்களுக்கு வழங்கினார். ஒடெசா கருங்கடல் ஓரத்தில் அமைந்திருந்த ஒரு துறைமுகம். சோவியத் ஒன்றியத்தின் வலிமை வாய்ந்த கருங்கடல் கப்பற்படைப்பிரிவு அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஒடெசா நகரமும் அதன் சுற்றுப்புறப்பகுதியும் வெகுவாக பலப்படுத்தப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 1941 இல் ருமேனிய 4வது ஆர்மி இப்பகுதியைத் தாக்கியது. கடற்பகுதியிலும் இரு தரப்பு கடற்படைகளும் மோதின. மூன்று வார கால சண்டைக்குப்பின்னும் ருமேனியர்களால் சோவியத் அரண்நிலைகளை ஊடுருவ இயலவில்லை. இரு தரப்பிலும் கூடுதல் படைகள் களத்துக்கு அனுப்பப்பட்டன. சில நாள் மந்த நிலைக்குப் பின்னர் செப்டம்பர் மூன்றாம் வாரம் மீண்டும் ருமேனியத் தாக்குதல் தொடங்கியது. அக்டோபர் இரண்டாம் வாரம் ஒடெசா நகரைக் காலி செய்து பின்வாங்க சோவியத் போர் தலைமை முடிவு செய்தது. சோவியத் கருங்கடல் படைப்பிரிவு 3,50,000 சோவியத் படைவீரர்களையும் குடிமக்களையும் ஒடெசாவிலிருந்து காலி செய்தது. 73 நாட்கள் முற்றுகையில் நான்கு பெருந்தாக்குதல்களுக்குப் பின்னர் அக்டோபர் 16 அன்று ஒடேசா துறைமுகத்தை அச்சுப்படைகள் கைப்பற்றின. கு. ப. சேது அம்மாள் கு. ப. சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் தங்கை. சேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் "காந்தி" இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. செங்குந்தர் துகில்விடு தூது தமிழகத்தில் பல சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடி உள்ளனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் இருந்தாலும் கூட, சில சாதியருடைய பண்டைக் கால வழக்க ஒழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைக்கின்றன. செங்குந்தர் துகில்விடு தூது என்னும் இந்நூல் செங்குந்தர் மரபினரைப் பற்றிக் கூறுகின்றது. இந்நூலில், காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு, நேரிசை வெண்பா ஒன்றையும் பெற்றுள்ளது. இது, ஆண் பெண்மீது விடுத்த தூது. சேலம் மாவட்டம், வெண்ணந்தூர் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் பிறந்த பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் தன்னுடைய இளமைப் பருவம் முதல் முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்றாக பயின்று, விருதுகவி பாடும் திறமை பெற்று விளங்கினார் என்ற கருத்து பின்வரும் அடிகளால் அறியப்படுகின்றது. பெரிய திறம் படைத்த அரசர்களாலும், சிறிய அரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தம்முடைய செங்குந்தர் குல அதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப்பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் உள்ள சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலின் வாயிலாக அறியப்படுகிறது. இந்நூலில் செங்குந்தர் குல மரபினருடைய 1-8 கண்ணிகளில், திருமால், பிரமர், முனிவர், இந்திரர் முதலியோர்களின் துயரத்திற்குச் சிவபெருமான் இரங்குதலும், உமையைச் சிவன் மணத்தலும், கந்தப் பெருமான் திருவவதார நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன. 9-13 கண்ணிகளில், உமையின் பாதச் சிலம்பின் நவரத்தினங்களிலிருந்து நவசத்திகளுண்டாய், அவர்களனைவரும் நவ வீரர்களைப் பெற்ற வரலாற்றுக் குறிப்பும் அவர்களிடத்திலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து நூறாயிரவர் தோன்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளன. 14-15 கண்ணிகளில், முருகன் பிரமனின் செருக்கை யடக்கிய வரலாறும், தான் சிருஷ்டித் தொழில் செய்ததும் கூறப்பட்டுள்ளன. 16-17 கண்ணிகளில், சிவனால் பிரமன் சிறை மீண்டது, முருகன் சிவனுக்கு பிரணவப் பொருளை குருமூர்த்தமாக நின்று உபதேசித்தது ஆகிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. 18-வது கண்ணியில், முருகன் சக்திவேல் பெற்றதையும், 19-22 கண்ணிகளில், முருகன் தன் தந்தையின் ஆணைப்படி சூரபதுமன் முதலானோரை வென்ற செய்தியும், 23-வது கண்ணியில், முருகன், இந்திரன்மகள் தெய்வயானையை மணந்தக் குறிப்பும், 24-25 கண்ணிகளில், செங்குந்தர் வீரவாகுதேவரின் பரம்பரையினர் என்பதும், 26-28 கண்ணிகளில், செங்குந்தரின் கடவுள்பற்றும், அவர் செய்யும் திருவிழாவின் குறிப்பும் அவரது பண்பாடு ஆகியவைகளைப் பற்றியும், 29-வது கண்ணியில், செங்குந்தர் ஆண்ட மண்டலங்களின் பெயர்களையும், 30-44 கண்ணிகளில், செங்குந்தரின் குணாதிசயங்கள், அவரது தொழில் நுட்பங்கள், தமது குலப் புலவரான ஒட்டக் கூத்தரைப் புரந்து தாம் பெற்ற பேறுகள், அவர்கள் பெற்ற வரிசைகள், பல கொடைவள்ளல்களால் புகழப்பெற்றவை ஆகிய செய்திகளையும் கூறப்பட்டிருக்கின்றன. 45-46 கண்ணிகளில், புலவர் தாம் சென்று போற்றி வந்த முருகன் ஊர்களைப் பற்றிக் கூறுகின்றார். 47-53 கண்ணிகளில், திருவேரகத்தில் புலவர் தாம் தரிசித்த முருகன் கோலத்தைப் பற்றியும், அச்சந்நிதியில் முனிவர்கள் வணங்கும் காட்சி, நடனமாது ஆடும் காட்சி முதலியவைகளைப் பற்றியும், 54-வது கண்ணியில், புலவர் முருகனைப்பற்றிப் பாடிப் பணிந்து பாமாலை செய்ததையும், 55-57 கண்ணிகளில், முருகன் சந்நிதியில் வணங்குவோரின் மெய்ப்பாட்டின் தன்மையையும், 58-80 கண்ணிகளில், புலவர், முருகன் புகழினைச் சொல்மலர்களால் அருணகிரியார் திருப்புகழ் முதலியன கொண்டு போற்றிப்பாடுகின்றார். 81-82 கண்ணிகளில், புலவர், திருவேரக முருகனைப் போற்றி செய்து, "தன்னைக் காத்தல் நின்கடன்" எனக்கூறி, தலவாசம் செய்ததாகக் கூறுகின்றார். 83-89 கண்ணிகளில், முருகன் புலவர் கனவில் தேசிகராய்த் தோன்றி, "யாது வேண்டும் உமக்கு" என வினவினதையும், அதற்குப் புலவர், "கனவினும் உன் புகழைப் பாட, வுனையே வணங்க, பொன் பொலியும் வாழ்வு புகழீகை இன்பம் தவிரா திகபரமும் தந்தருள் ஐயா", எனக் கூறி வேண்டினதையும், முருகன், "பாளைய சீமைக்குள் வளர் செங்குந்த சபையோரின் மூலமாக நீ நினைத்த செல்வமெல்லாம் தந்தருள்வோம்" என்று கூறி மறைந்த செய்தியும் கூறப்பட்டுள்ளன. 90-100 கண்ணிகளில், புலவர் கும்பகோணம், திருநாகேஸ்வரம் முதலிய சிவத் தலங்களைத் தரிசித்துப், பின்னர், பெரிய தம்பி மன்னன் அன்பினால் ஆதரிக்கப்பட்டிருந்த செய்தி கூறுகின்றார். 101-134 கண்ணிகளில், பாளையஞ் சீமைக்குள் இருக்கும் பல நாட்டு செங்குந்தர்களும் கூடி, பலப்பல தீர்ப்பு வழங்குதலின் நேர்மையும், அந்நாட்டாண்மை சபையின் இலக்கணமும் நேர்மையும் பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டிருக்கின்றன. 135-144 கண்ணிகளில், புலவர் செங்குந்த சபையினிடத்துச் சென்றதும், அச்சபையோர் தன்னை வரவேற்று வினாவியதையும், அதற்குத் தான் பதிலளித்ததையும் கூறுகின்றார். 145-வது கண்ணியில், அச்சபையோர் தனக்கு ஈந்த வரிசையின் சிறப்பினைக் கூறுகின்றார். 146-249 கண்ணிகளில், துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அது பயன்படும் இடத்தின் தன்மையைக் கொண்டும், அது இல்லாததால் ஏற்படும் தன்மையும் இருந்தால் ஏற்படும் பெருமையைக் கொண்டும் துகிலின் பெருமையை உயர்வு நவிற்சி படப் புகழ்ந்து கூறுகின்றார். 250-253 கண்ணிகளில், தன்னை வருத்திய பரத நாட்டியம் கற்றாடிய பெண்ணின் தன்மையையும், தன்னை யவள் வருத்திய விதத்தையும் கூறுகின்றார், 254-258 கண்ணிகளில், புலவர் பரதவிதத்தாலாடிய பெண்ணைப் புகழ்ந்து கூறுகின்றார், 259-261 கண்ணிகளில், புலவர் தன் ஊழ்வினையின் வலியை எடுத்துரைக்கின்றார். 262-வது கண்ணியில், இவையிவை பொல்லாதது ‍என்று கூறுகின்றார். 263-271 கண்ணிகளில், புலவர், தான் அவளை நினைத்து வருந்தி வாடிய தன்மையையும், அவளையடைய அவளிடத்துத் தூது சென்று அவளை யழைத்துவா, என்று துகிலைத் தூது விடுத்தலோடும் முடிகிறது இந்நூல். முதல் இருபத்தைந்து கண்ணிகளில், கந்த புராண வரலாற்றைத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் வாயிலாக, செங்குந்த மரபினர் பண்டு தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர் என்பதும், அந்த காலத்து அரசர்களாலும் வள்ளல்களாலும் அறிஞர் பெருமக்களாலும் சிறப்புப் பட்டங்கள் பெற்றும், அரச காரியங்கள் செய்வோர் என்பதும், தங்களுக்குள் நாட்டாண்மை பொதுச் சபை ஏற்படுத்திக்கொண்டு, வழக்குகளை எவ்வாறு தீர்த்து வைத்தது போன்று சாதுரியம் பெற்று இருந்தனர் என்றும், முருகர் கோயிலில் ஆண்டாண்டுதோறும், "சூரசம்ஹாரத் திருவிழா" செய்பவர் என்றும், முதலாய செய்திகள் அறியக் கிடக்கின்றன. மேலும், ஆசிரியர், தன்னுடைய புலமையை திறம்பட உபயோகப்படுத்தியிருப்பது இவ்வடிகளால் அறியலாம். "கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல் நீ! கற்பில்லா துர்ப்புணர்ச்சி கன்னியர்க்குந் தோழமை நீ !" "-செங்குந்தர் வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப் பூசலிட்டு மேன்மேலும் போட்டுவைத்து-" இக்காலத்து, நெசவுத் தொழில் செய்வோர் இல்லங்களில், நெசவுத் தொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வர் என்பது கண்கூடாகப் பார்ப்பவருக்கு விளங்கும். இம்முறை அக்காலத்தும் உண்டு என்பதனை, “வையகத்தில் சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக் காரிகையார் தாரால் கலைசெய்யும்” என்று எடுத்துக் கூறுகிறார். இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச் சுவடி R. 1756-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காரத்தெரு, 35-ஆம், எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ்.வி. துரைராசன் என்பாரிடமிருந்து அரசியலாரால் 1948-ம் ஆண்டு, இந்நூல்நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப் பட்டதாகும். கான்பூர் மாவட்டம் கான்பூர் மாவட்டம் ("கான்பூர் நகர் மாவட்டம்") இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கான்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைத்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நிர்வாகத்தை செம்மைப்படுத்த இம்மாவட்டம் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்பது பொதுவாக இவ்விரு மாவட்டங்களையும் குறிக்கும். கான்பூர் மாவட்டம் 1977ல் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர் 1979ல் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981ல் இரண்டாக பிரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,572,951. இது தோராயமாக கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 32வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் கான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 9.72%.கான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் உள்ளனர். மேலும் கான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 81.31%. எம். பி. நாச்சிமுத்து பத்மசிறீ எம். பி. நாச்சிமுத்து முதலியார், 1983-ம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் "சென்டெக்ஸ்" என்ற சென்னிமலையில் உள்ள கைத் தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார். இவருடைய பெயரில், திரு. ஜெ. சுத்தானந்தன் அவர்களால் பொறியியல் தொடங்கினார். நந்தா பொறியியல் கல்லூரி நந்தா பொறியியல் கல்லூரி ஈரோட்டிலிருந்து, பெருந்துறை செல்லும் வழியில் வாய்க்கால் மேடு என்னும் இடத்தில் உள்ளது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜுன் மாத இறுதியில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வாயிலாக மாணவ - மாணவியர் சேர்க்கை நடைபெறும். இப்பொறியியல் கல்லூரியில், ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கோவை விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உலகளாவிய இதழ்களும், IEEE எனப்படும் உலகளாவிய பொறியியல் வல்லுநர்களுக்கான கூட்டமைப்பின் இணையதளச் சேவையும் உள்ளது. இருபாலாருக்கும், தனித்தனியே விடுதி வசதி உள்ளது. படிப்பு மட்டுமின்றி இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இன்ன பிற இலக்கிய குழுமங்களும் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் மற்றும் ஜெனிஸிஸ், ரேடிக்ஸ், டெக்கீஸ் உள்ளிட்ட துறை சார்ந்த விழாக்களும் நடைபெறும். தினேஷ் தினேஷ் என்பது இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர். தினேஷ் என்பது இவர்களில் யாரையாவது குறிக்கலாம், யாழூர் துரை ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) (அக்டோபர் 15, 1946 - மார்ச்சு 21, 2012) யாழூர் துரை என்ற புனைபெயரில் எழுதி வந்த ஈழத்து எழுத்தாளரும், நாடக இயக்குனருமாவார். யாழ்ப்பாண மண்ணை மையப்படுத்திப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். "கண்ணீர்த் தேசம்" என்ற சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆறுமுகம்-சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பத்திரிகை விற்பனைப்பகுதியை நீண்ட காலமாக இயக்கி வந்தவர். புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்னையில் வசித்து வந்தவர். உடுமலை நாராயணகவி ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அறிஞர் அண்ணா எழுதிய "வேலைக்காரி", "ஓர் இரவு", "நல்லதம்பி" போன்ற படங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய "பராசக்தி", "மனோகரா" திரைப்படங்களுக்கும், "பிரபாவதி", "காவேரி", "சொர்க்கவாசல்", "தூக்குத்தூக்கி", "தெய்வப்பிறவி", "மாங்கல்யபாக்கியம்", "சித்தி", "எங்கள் வீட்டு மகாலட்சுமி", "ரத்தக் கண்ணீர்", "ஆதிபராசக்தி", "தேவதாஸ்" போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர். 1899ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும். இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார். பூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'இராமநாடகம்' என்ற நாடகத்தில் இலக்குவன் வேடம் பூண்டவர் இவரே. இளமைப் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பின்னர்த் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத்துறையில் புகழ்பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர்.இவர் 'ஆரிய கான சபா' என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார்.பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார். இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர். வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது.'இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன் எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே துணையாகக் கொண்டு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது. மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார். ஒருமுறை மதுரை நாடக சங்கத்தார் இவரின் கலைத்திறத்தைப் பாராட்டி வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களாகவே வாங்கினார். அப்போது ஊரில் உள்ள கடன் நினைவுக்கு வரவே மீண்டும் பொருளீட்டினார். ஈட்டிய பணத்துடன் சென்று தன் ஊருக்குப் புறத்தே நின்று கடனையெல்லாம் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார். மதுரையில் வாழ்ந்த போது அங்கு முகாமிட்டிருந்த டி.கே.எஸ் நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ் கிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் முதலிய திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதனால் திராவிடர் இயக்கப்பற்றும், பகுத்தறிவுப் பார்வையும் கவிக்குக் கிடைத்தன. நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அப்படியே திரைப்படப் பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார். முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் "சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு" ஆகும். "கவிராயர்" எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார். கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது . இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பெயர் பெயர் ("Name") என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்துவதாகும். ஒருவரையோ ஒரு குழுமத்தையோ ஒரு பெயர் அடையாளப்படுத்தும். ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பெயர்களுக்கு பின்னால் குல பெயர். எ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் குலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது. (எ-டு) வட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன. பெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது. பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை ("Initial") மாற்றம் செய்து கொள்வர். திருமணத்திற்கு முன்: இந்திரா பிரியதர்சினி பெரோஸ் காந்தியை மணந்த பின்: இந்திரா பிரியதர்சினி காந்தி மலையமான் காசுகள் திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இரும்புக் காசுகள் கிடைத்துள்ளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும். சரத்பாபு ஏழுமலை சரத்பாபு ஏழுமலை சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) மிக முக்கியமானவர் ஆவார். மேலும் இவர் ஒரு சமூக ஆர்வலர், அரசியல்வாதி. தன்னுடைய படிப்பை பிட்ஸ் பிலானியிலும், ஐஐஎம் அஹமதாபாத்திலும் முடித்துள்ளார். தற்போது "ஃபுட்கிங்" (Foodking) என்கிற பெயரில் உணவு தயாரித்து விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை துவங்கி அதன் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். சரத்பாபு பற்றிய அதிகார்ப்பூர்வ இணையதளம் கன்னியாகுடி கன்னியாகுடி தமிழ்நாட்டில் திருச்சியில் சமயபுரத்துக்கு அருகில் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 94, கரியமாணிக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இவ்வூரில் பஞ்சாயத்து பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளியில் 70க்கு அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பண்டைய ரோம் பண்டைய உரோமை ("Ancient Rome") என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது. உரோமைக் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அக்காலக் கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. உரோமையின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் உரோமை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் உரோமையே விளங்கியது. பண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு உரோமைதான். உரோமையர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுள் ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் அடங்குவர். உரோமைக் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர். உரோமை இராணுவக் கலையிலும் அரசியல் கலையிலும் சிறந்து விளங்கியது. அதன் இராணுவம் தனிப்பயிற்சி பெற்ற போர்வீரர்களை உருவாக்கி, அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. உரோமையின் அரசியல் அறிவு மக்களின் பொது நலனை வளர்க்கவே அரசு அமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு போன்ற நாடுகளில் நிலவுகின்ற நவீன காலத்து மக்களாட்சி முறைகளுக்கு உரோமை வழிவகுத்தது. உரோமையில் மக்களாட்சி நிலவிய காலம் முடிவுக்கு வந்த கட்டத்தில் உரோமை மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பகுதிகளையும் அதற்கு மேலும் பல நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு, அட்லாண்டிக் கடலிலிருந்து பாலஸ்தீனாவில் யூதேயா வரை, ரைன் நதியின் முகத்துவாரத்திலிருந்து வட ஆப்பிரிக்காவரை விரிந்து பரந்தது. உரோமை பேரரசாக உருவெடுத்தபோது அதன் பொற்காலம் அகஸ்டஸ் சீசர் ஆட்சியின் கீழ் தொடங்கியது. பேரரசன் ட்ரேஜன் ("Trajan") ஆட்சியில் உரோமைப் பேரரசு நிலப்பரப்பில் மிக உச்சக் கட்டத்தை எட்டியது. பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி விழுமியங்கள் மங்கத் தொடங்கின. புதிய பேரரசன் ஆட்சியை நிலைநாட்டுமுன் உள்நாட்டுப் போர்கள் நிகழ்வது வழக்கமாயிற்று. கிபி 5ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியாக இருந்த மேற்குப் பேரரசு சிறுசிறு தனி நாடுகளாகப் பிளவுபடத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் உள்நாட்டுக் கலகங்கள், வெளியிலிருந்த வந்த இடம்பெயர் மக்களின் தாக்குதல்கள் போன்றவை ஆகும். வரலாற்றாசிரியர்கள் பொதுவரலாற்றின் பண்டைய காலம் முடிவடைந்து ஐரோப்பிய நடுக்காலம் தொடங்கியதை இக்காலத்தோடு இணைத்துப் பேசுகின்றனர். உரோமை மேற்குப் பேரரசு சிறுசிறு நாடுகளாகப் பிளவுபட்ட காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசு பிளவின்றி முழுமையாக இருந்து தப்பிக்கொண்டது. மேற்கு-கிழக்கு என்று உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து காண்ஸ்டாண்டிநோபுள் மாநகரம் கிழக்குப் பேரரசின் தலைநகராயிற்று. கிழக்கு உரோமைப் பேரரசில் கிரேக்க நாடு, பால்கன் நாடுகள், சிறு ஆசியாவின் பகுதிகள், சிரியா, எகிப்து ஆகியவை உள்ளடங்கியிருந்தன. பின்னர், இசுலாமியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியதோடு கிழக்கு உரோமைப் பேரரசின் சிரியா மற்றும் எகிப்துப் பகுதிகள் கலீபா ஆட்சியின் கீழ் வந்தன. இருப்பினும், மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு கிழக்கு உரோமைப் பேரரசு நீடித்தது. துருக்கி ஓட்டோமான் பேரரசு கிழக்கு உரோமைப் பேரரசின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி, காண்ஸ்டாண்டிநோபுளைச் சூறையாடியதோடு அந்நகரும் வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமைப் பேரரசு கிறித்தவக் கலாச்சாரம் நிலவிய நடுக்கால, கிழக்கு உரோமைப் பேரரசை வரலாற்றாசிரியர்கள் "பிசான்சியப் பேரரசு" என்று அழைக்கின்றனர். உரோமை நாகரிகத்தைப் பண்டைய கிரேக்கத்தோடு இணைத்து "செவ்விய பண்டைக்காலம்" ("classical antiquity") என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு. பண்டைய உரோமை உலகுக்கு வழங்கியவற்றுள் மேற்கத்திய நாடுகள் பெற்றுக்கொண்ட ஆட்சிமுறை, சட்டமுறை, போர்முறை, கலைகள், இலக்கியங்கள், கட்டடக் கலை, தொழில்நுட்பம், சமயம், மொழி ஆகியவை உள்ளடங்கும். மீன் பிடித்தல் மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுதுபோக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப்பு ஆகும். இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர். பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.. இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டன.. சிறிய வகை மீன்களைப் பிடிக்க தூண்டிலும், பெரிய வகை மீன்களைப் பிடிக்க வலையும் உபயோகப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி மீன் பிடிக்க, ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இராமேசுவரம் பகுதியில் ஓலை வலை மீன்பிடி என்ற வகையில் பெண்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். மீன் பிடி வலை' என்பது மீன் பிடிக்கப்பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீன்களைச் சிக்க வைக்கும் கூடரம் போன்றா அமைப்புகள் கரப்புகளாகும். இவை கட்டு கரப்பு, வாளிக் கரப்பு என பல வகைப்படும். மீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகளென இரு வகைப்படும். இது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களைப் பிடிக்கலாம், இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டுப் பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இனக் கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக் கொள்ளும். கழிதூண்டில் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரே இன மீன்களைப் பிடிக்கலாம். சூரை மீன்களைப் பிடிக்க இந்தத் தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்தத் தூண்டிலில் இரையைப் பயன்படுத்திப் படகுக்குக் பக்கததில் உள்ள மீன்களைக் கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை பயன்படுத்தப்படுகிறது. தூண்டில் மீன்பிடிப்பில் உயிருடன் பொறி வைத்தல் முறையில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடிப்பு முறையில் இது ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. இம்முறையில் 21 இனங்களைச் சேர்ந்த மீன்கள் மற்ற மீன்களைப் பிடிக்க மீன்பொறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் 12 இன மீன்களை மட்டும் இரைமீனாக உயிருடன் மீன் பொறியில் பொருத்துவர். நீரடித்திட்டு மற்றும் உப்பு நீர்த்தேக்கங்களில் மீன்களைப் பிடிக்கக் கப்பலில் குறிப்பிட்ட இடத்தில் மீன் பொறிகளை வைத்திருப்பார்கள் மீன்களைப் பிடிக்கும்போது மட்டும் எடுத்துப் பயன்படுத்துவர். ஸ்பார்டெல்லாயிட்ஸ் டெலிகேட்டுலஸ், ஸ்.ஜபோனிகஸ், அப்போகான் சங்கின்சஸ், அ.சவர்ன்சிஸ் மற்றும் க்ரோமிஸ் டெமாடென்சிஸ் ஆகியவை சில மீன்பொறி இனங்களாகும். கணவாய் மீன்களைப் பிடிக்கப் போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதைத் தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களைப் பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும்போது மாட்டிக்கொள்ளும். இரவில் ஒளி ஈர்ப்பு மூலம் மீன்பிடித்தலுக்குப் போலி இரை மீன்பிடிப்பைப் பயன்படுத்துவார்கள். பெரிய அளவில் மீன்பிடிக்க மீன்பிடிப்புக் கலன்கள் பயன்படுகின்றன. கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு, பெரிய வகையான மீன் பிடிப்பிற்கு ஏற்றால்போலப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டு வகையான மீன்பிடிப்பு கலன்கள் உள்ளன. அவை: கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும். மீன் பிடிக்கச் சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு, பொறிப்படகு, செவுள்வலைப்படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசி விடுவார்கள். மாட்டிய மீன்கள் வலையிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேளையில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்தப் பொறிமூலம் பிடிக்கலாம். வலைக்கு ஏற்றவாறு பொறி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத அல்லது குறைந்த எடை கொண்ட மீன்களைத் திரும்பக் கடலிலேயே விட்டுவிடுவார்கள். இந்தப் பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகளும் கூடச் சில வேளைகளில் மாட்டிக்கொள்ளும். மீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களைச் சார்ந்து வாழ்கின்றன. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளன. அப்பொழுது சில சாதனங்களைச் பயன்படுத்தி மேலே உள்ள மீன்களைப் பிடிக்கலாம். மீனவர்கள் இந்தச் சாதனங்ளைப் படகுடன் இணைத்து மீன்களைக் கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடிப் பொறி, தூண்டில் போன்றவை. கடல் மற்றும் பேராழிகளில் மீன்பிடித்தலை ஆழ்கடல் மீன்பிடித்தல் என்கிறோம். இவ்வகை மீன்பிடித்தலுக்குப் பெரிய இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுறா, கெளுத்தி, கெண்டை, வெள்ளி போன்ற மீன்கள் இவ்வகை மீன்பிடிப்பில் பிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் கடல் மீன்பிடித்தல் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெரிய கடற்கரை வழி (8118 கி.மீ.) மற்றும் பொருளாதாரத் தனி உரிமைப் பகுதி (2.025 ச.கி.மீ.) ஆகியன முக்கிய மீன்வளம் அமைந்துள்ள இடங்களாகும். இந்தியாவில் கடல் மீன்பிடிப்பு வளம்மூலம் இரண்டுகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல்மீன் பிடிப்பினால் பயன்படுத்தும் கப்பல் மற்றும் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, அதாவது 2,80,491 கப்பல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைமையான கப்பல்கள் 1,81,284 ஆகும். இயந்திர படகுகள் 44,578 மற்றும் விசைப்படகுகள் 53,684 ஆகும். மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பழைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு முறையே 9 விழுக்காடு முதல் 26 விழுக்காடு மற்றும் 65 விழுக்காடு ஆகும். கடல் பகுதிகளில் 100 மீ ஆழம்வரைத் தீவிர மீன்பிடிப்பு பகுதி ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்தலின்போது குறிப்பிட்ட மீன்பிடிப்பு அளவைத் தாண்டுவதனால் மீன் அளவும் குறைகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து விட்டதால். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. புதிதாக ஆழ்கடலில் மீன் பிடிக்க நீளடுக்குத் தூண்டில், சுருக்கு வலை மற்றும் கணவாய்ப் போலி இரை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன. உள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது. இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30% மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது. உலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40-70% உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும். இந்திய ஆற்று மீன்வளங்கள் இரு வகைப்படும் அவை இவை ஆறுகளில் மீன் உற்பத்தியப் பாதிக்கும் காரணிகளாகும். மீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது. மேலும் மீன்கள் கடல்சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீன் பிடித்தலின்போது மீன் மட்டுமின்றி, பிற கடல் உயிரினங்களையும் பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் உணவுக்காக மட்டுமின்றி அலங்காரம் மற்றும் அணிகலன்களுக்கான முத்து, சிப்பி போன்றவைகளும் மீனவர்களால் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு, நண்டு போன்ற உணவு வகைகளும் கிடைக்கும். மீன் பிடித்தல், மீன்களைச் சந்தைப்படுத்துதல், பிடிபடும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், அளவுக்கதிகமாகச் சிறிய மீனினங்கள் பிடிபடும் காலகட்டத்தில் அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து வைத்தல் ஆகியன மீன்பிடிப்புத் தொடர்பான பிற தொழில்களாகும். சில நாடுகளில் அந்தந்த நாடுகளின் கடற்றொழில் நீர்வள துறை இப்பணிகளை மேற்கொள்கிறது. மீன்கள் பெரும்பாலும் குழுவாகவும் தனித்தும் இருந்தாலும், அவை அனைத்தும் முதுகெலும்புள்ள உயிரின வகையைச் சார்ந்தவை . இவை அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள் மற்றும் வாழ்விடங்கள் ஆகியவற்றில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. நெல்சன் என்ற ஆய்வாளர் 1981-ல், உலகில் 21,723 மீன் இனங்கள், இதில் 4,044 பேரினங்கள், 445 குடும்பங்கள் மற்றும் 50 வகை மீன்களென வகைப்படுத்தினார். டே என்ற அறிஞர் 1989-ல் பிரித்தானிய இந்தியாவில் மட்டும் 1418 இனங்களும்,இதன் கீழ் 342 பேரினங்களும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1991-ல்தல்வார் என்பவரின் மதிப்பீட்டின்படி 969 பேரினங்களும், 254 குடும்பங்களும் மற்றும் 40 வகைகளும் உள்ளன. உலகில் காணப்படும் மீன் வகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் இனங்கள் 11.72%, பேரினங்கள் 23.96% மற்றும் 51% குடும்பங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் மீன்களின் பேரினங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சில குடும்பங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் ஆசியாவில் கெண்டை மீன்கள் (சைப்ரின்டயே) மற்றம் கெளுத்தி மீன்கள் (சில்ராய்டயே), இவை இரண்டும் மேம்பட்ட மீன் வகைகளாகும் ). மீன் பிடித்தல் என்னும் இத்தொழிலைச் செய்பவர், மீனவர் ஆவார்.இவர்கள் பரதவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். பண்டைத் தமிழ் நூல்கள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் உடையநெய்தல் நில மக்களின் ஒரு தொழிலாக மீன் பிடித்தல் குறிப்பிடப்படுகிறது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் மீன் பிடித்தல் ஏரி, ஆறு, கடல் அல்லது குளம் போன்ற பகுதிகளில் நடைபெறும், சில சமயங்களில் கிணற்றிலும் நடைபெறும். இந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும். இந்தியாவின் நீர்வளம் மீன்பிடித்தல் தொழிலுக்கு ஏற்றதாகும். உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் மூன்றாவது இடமும் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடமும் வகிக்கிறது. இந்த மீன்வளத்துறையின் மூலம் சுமார் 11 கோடி மக்கள் பகுதிநேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் துணைத்தொழிலாக மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் விளங்குகிறது. கடல் வளம் மூலமும் உள்நாட்டு நீர் வளம் மூலமும் கிடைத்த மீன் உற்பத்தி 3.9 கோடி டன் மற்றும் 4.5 கோடி டன் ஆகும். இந்திய நாட்டின் கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் வாழும் ஏறக்குறைய 1.5 கோடி மக்களின் வலுவான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக மீன்வளத் துறை விளங்குகிறது. இது மக்களுக்கு மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், மீன்விதை வங்கி அமைத்தல், கூடுகளில் மீன் முட்டைகளை வளர்த்தல், அலங்கார மீன் வகைகளை வளர்த்தல் ஆகிய பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. இத்துறை மலிவான மற்றும் தரமான மீன் புரதம் வழங்கும் துறையாகவும், வருடத்திற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாகவும் விளங்குகிறது. மீன்வளத்துறை இந்திய நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலுகிறது. சராசரியாக இந்தியாவில் உள்ள 291 சிறிய நீர்த்தேக்கங்களில் 49.90 யீல்டும் 110 நடுநிலை நீர்த்தேக்கங்களில் 12.30 யீல்டும் 21 பெரிய நீர்த்தேக்கங்களில்11.43 யீல்டும் 422 குளங்களில் 20.13 யீல்டும் மீன்பிடிப்பு மூலம் மீன்கள் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் நன்னீர் வளத்தினால் நிறைந்துள்ளது. ஆறு, கழிமுகம், மற்றும் ஏரிகளில் நன்னீர் உள்ளது. இந்தியாவில் மீன்வளம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிந்து (கிளை ஆறுகள்), கங்கை, பிரம்மபுத்திரா கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆற்று மீன்வளங்களாகும். இந்த ஆறுகளிலிருந்தும் இதன் துணையாறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் 930 மீன் இனங்கள் 326 பேரினங்கள் உள்ளன. கங்கைஆற்றுப் பகுதியில் 89.5% மீன்குஞ்சுகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள மீன்கள் கெண்டை மீன் வகைகள், கெளுத்தி, விரால் மீன், மடவை, விலாங்கு மீன் மற்றும் இறால் போன்ற பலவகைகள் ஆகும். ஆற்றில் மண் அரிப்பு, தண்ணீர் அளவு குறைதல், தண்ணீர் பின் வாங்குதல், விட்டு விட்டு மீன் பிடித்தல் இவை அனைத்தும் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுவதால் மீன் உற்பத்தி குறைகிறது. இந்தப் பகுதிகளில் கொண்டை வலை, வீச்சு வலை, மற்றும் துரிவலை. இவ்வகையான வலைகளை மக்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்றனர். கோதாவரி ஆற்றில் கொண்டை, கெளுத்தி, இறால் ஆகிய மீன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகமான இறால்கள் இங்குதான் கிடைக்கின்றன. இப்பகுதியில் செவுள் வலை, சூழ்வலை, மற்றும் காப்பு வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்தல் நடைபெறுகிறது. காவேரி ஆற்றில் 80 வகை மீன் இனங்கள், 23 குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகள் உள்ளன. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்ற ஆறுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுபவையாகும். கெண்டை, கெளுத்தி, ரோகு, நெத்திலி, நெய்மீன் இன்னும் பல மீன்கள் காவேரி ஆற்றில் கிடைக்கும் மீன் இனங்களாகும். உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு 6.9 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியாகிறது. மீன் வளத்துறையின் கணக்குப்படி 2005 - 2006-ல் ரூ.34,755 கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 விழுக்காடு மற்றும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 விழுக்காடு எனினும் தமிழ்நாட்டில் மட்டும் 2005-2006ல் மீன்வளத்துறையின் பங்கு நாட்டு உற்பத்தியில் 4.44 விழுக்காடென மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாகக் கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியிலிருந்து உள்நாட்டு மீன்வள உற்பத்தி படிப்படியாக முன்னேறி வருகிறது. தேசிய அளவில் தமிழ்நாடு மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. மிக நீண்ட கடற்கரையும் (1076 கி. மீ), அகலமான கண்டத்திட்டும், கடல் சார்ந்த மீன்வளர்ப்பை ஊக்குவிக்கின்றன. தமிழகக் கடற்கரையை ஒட்டி 13 மாவட்டங்களில் பரவியுள்ள சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாகும். அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம்(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியவை மீன்பிடித் துறைமுகங்களாக விளங்குகின்றன. இவை தவிர சிறிய அளவில், பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களாகச் செயல்படுகின்றன. கடல் சார் மீன் உற்பத்தியில் 40 விழுக்காடு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்படுகிறது. 2007-08 ஆம் ஆண்டு மீன் கொள்முதல் 3,93,266 டன் ஆகும். தமிழ் நாட்டில் 370 ஹெக்டேர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகளும், 63,000 ஹெக்டேர் பரப்பில் நதி முகத்துவாரம், காயல்கள், சதுப்புநிலங்களும் உள்ளன. எண்ணூர் மற்றும் புலிக்காட் ஏரிகளில் இறால் மீன் செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. 2007-08 ஆண்டிற்கான மொத்த மீன் உற்பத்தி சுமார் 64,504 டன் ஆகும். தமிழகத்தில் மவட்டங்களுக்குள் 10 விழுக்காடு மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன் பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன. இராமேசுவரம் மீன் பிடித்தலுக்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகின்றன. எனவே இத்தீவு கடல் சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலில் கூடு வைத்து மீன் பிடிக்கும் மிகப் பழைமையான முறையை இன்றளவும் இராமேசுவரம் மீனவர்கள் சிலரால் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகின்றது. கூடை போன்ற கூடுகள் செய்து மீன் பிடிக்கும் முறை இதுவாகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரியமாக ஒலைகுடா, சங்குமால், மாங்காடு, சம்பை, வடகாடு, அரியாங்குண்டு ஆகிய கிராமங்களில் இம்மீன்பிடி முறை தற்போதும் பின்பற்றப்படுகின்றது. இது தவிர மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, கீழக்கரை பகுதியில் சில கிராமங்களிலும் இம்மீன்பிடி முறை பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் இம்முறையைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஒருகாலத்தில் முதன்மையான மீன்பிடி முறையாக இருந்த இத்தொழில் தற்போது நலிவடைந்து கொண்டே வருகின்றது. இந்தியாவில் சுமார் 40 வகையான மீனினங்கள் வணிக முதன்மைத்துவம் பெற்றவையாகும். அவை: ஆகியவை. ம. நடராசன் (அறிவியலாளர்) முனைவர் ம. நடராசன் (மந்திரம் நடராசன், ஆங்கிலம் M. Natarajan, பிறப்பு ஆகஸ்டு 1945) மேன்மை தாங்கிய விஞ்ஞானி (Distinguished Scientist), பொறியியலாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) தலைவராவார். இந்தப் பதவியின் அலுவல் முறையில் இவர் இந்திய மைய அரசின் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். . இவரின் பணியினைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி உள்ளது. நடராசன் 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி இல் "இயந்திரவியல் துறையில்" "பி.டெக்" இளங்கலை பட்டமும், மும்பை ஐ.ஐ.டி இல் "பொறியியல் வடிவமைப்பு" (Engineering Design) என்ற சிறப்புத் துறையில் "எம்.டெக்" முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர் ஐக்கிய இராச்சியம் (யு.கே) (United Kingdom (U.K.) நாட்டில் உள்ள சிரிவென்ஹாம் (Shrivenham) நகரில் அமைந்துள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் (ஆர்.எம்.சி.எஸ், R.M.C.S) "படைத்துறை ஊர்தி தொழில் நுட்ப இயலில்" "எம்.எஸ்.சி" பட்டமும் பெற்றார். நடராசன் 1970 ஆம் ஆண்டில் டி.ஆர்.டி.ஒ (DRDO) இல் இணைந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராக பதவி ஏற்பதற்கு முன்பே டி.ஆர்.டி.ஒ இல் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பல முக்கிய பாதையிடு ஊர்திகளின் (tracked vehicles) வடிவமைப்பு மற்றும் வளர்மானத் திட்டங்களில் (design and development projects) பங்களித்துள்ளார். அர்ஜுன் முதன்மை போர் ஊர்தி செயல் முறைத் திட்டத்தில் (programme) அதன் தொடக்க காலம் முதலே தொடர்பில் இருந்தார். அர்ஜுன் முதன்மை போர் ஊர்தி செயல் முறைத் திட்டத்தின் செயல் முறை இயக்குனருக்கான சகல பொறுப்புக்களையும் 1987 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)) "இயக்குனாராக" 1989 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். முனைவர் நடராசன் மற்றும் இவருடைய குழுவினர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆற்றிய கூட்டு முயற்சியும், கடின உழைப்பும், வடிவமைப்பு அணுகு முறைகளும், மேலதிகமான அர்ப்பணிப்பும், நமது படைத்துரையினருக்கான நவீன (state of the art) உள்நாட்டு (indigenous) அர்ஜுன் முதன்மை போர் ஊர்தியாகவும், "தன சுழல் திறன் பீம் பிரங்கி" ஊர்தியாகவும் உருவாயின. அர்ஜுன் போரூர்த்தி தற்சமயம் உறபத்தியில் உள்ளது. இது மட்டுமல்லாமல் பல பயனுள்ள பல சிறந்த தொழில் நுட்பங்களையும் பிற போரூர்திகளுக்காகவும் "இலகுரக போர் வானூர்தி"க்காகவும் (Light Combat Aircraft (L.C.A) வடிவமைத்தவர் இவர். இது காரணமாகவே இவர் இந்தியாவின் போரூர்தி தொழில் நுட்பத்தின் தந்தை (father of combat vehicle technology in India) என்று அறியப்படுகிறார். நடராசன் 2000 ஆம் ஆண்டு முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (ஆராய்ச்சி மற்றும் வளர்மானம்) (Chief Controller (Research and Development (C C R & D) ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கட்டுப்பாட்டில் படைகலன்கள் (Armament) போரூர்தி (Combat Vehicles) மற்றும் பொறியியல் கருவிகள் (Engineering Equipments) (சுருக்கெழுத்து (ஏ. சி. இ - A. C. E) போன்ற திட்டங்களும் ஆய்வகங்களும் செயல்பட்டன. இவர் இப்பணியில் திறம்பட செயலாற்றியதால் பினாகா பல்குழல் எறிகணை ஏவுபொறி (Pinaka Multi-Barrelled Rocket Launching System (M.B.R.L. S) பல கள சோதனைகளுக்குப் (field tests) பின்னர் படைத்துறையினரால் (Army) பயனாக்கம் (induction) பெற்றது. இவர் 2004 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் செயலாளராகவும் (Secretary of Dept. of Defence Research & Development), பொது இயக்குனர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Director General Research and Development (D.G.R&D), பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 31,2004 அன்று இப்பதவியை முனைவர் ஆத்ரேயின் (Dr. Aatre) பணி ஓய்வினை அடுத்து ஏற்றார் . இவருடைய தலைமையில் 52 ஆய்வகங்களைத் தன்னகத்தே கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய ஆய்வு அமைப்பான டி ஆர். டி. ஒ பல படி நிலைகளைக் (milestones) கடந்தும் பல அரிய ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியும் பெரிதும் முன்னேற்றம் கண்டது. "அக்னி (மூன்று)" (Agni III ) ஏவுகணை, "இடைமறி ஏவுகணை" (Interceptor missile), கப்பற்படைக்கான சூழ்சசித்திறனமைந்த ஏவுகணை (strategic missile for Navy), அர்ஜுன் முதன்மைப் போரூர்தி (MBT Arjun), படைத்துறையினருக்கான "சம்யுக்தா இலத்திரனியல் எச்சரிக்கை அமைப்பு" (Samyukta Electronic Warning (EW) system), "இலகுரக போர் வானூர்தி" (Light Combat Aircraft (L. C. A) போன்ற ஆயுதங்களின் வளர்மானத்தை ஒருமுகப்படுத்தி, கள சோதனைகளை முடுக்கிவிட்டு இணக்கம் (acceptance) பெற்றமையால் முப்படைகளில் பயனாக்கம் (induction) பெற்றன. நடராசன் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 தேதி ஆக்கப் பணிகள் உச்ச நிலை அடைந்தமையால் (culmination) நிறைவளிக்கும் பணி ஆற்றிய மனநிறைவுடன் பணிமூப்பு (superannuation) அடைந்தமையால் ஒய்வு பெற்று டி.ஆர்.டி.ஒ விலிருந்து விடைபெற்றார்.. மஞ்சள் தலைப்பாகைக் கிளர்ச்சி மஞ்சள் தலைப்பாகைக் கிளர்ச்சி என்பது கி. பி. 184இல் சீனாவில் ஆன் பேரரசின் ஆட்சியின் போது இடம்பெற்ற ஒரு உழவர் கிளர்ச்சி ஆகும். கிளர்ச்சியாளர்கள் தமது தலையில் கட்டிய மஞ்சள் துணியின் காரணமாக இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தாவோயியப் பிரிவுகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தது தாவோயிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. வேளாண் நெருக்கடி, பஞ்சம், மிகை வரிகள், ஒடுக்குமுறை ஆகியவை இந்தக் கிளர்ச்சியின் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் கிளர்ச்சி உடனேயே அடக்கப் பட்டது எனினும் ஆன் அரசை பலவீனம் அடையச் செய்து பின்னர் அதன் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகவும் அமைந்தது. வு கு எழுச்சி வு கு எழுச்சி என்பது யின் அரசமரபின் காலத்தின் போது ஆன் சீனர் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட எழுச்சியாகும். சீன அரசிற்கு கட்டுப்பட்டு இருந்த வு கு (ஐந்து காட்டுமிராண்டி குலங்கள்) என சீனர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் 304 இல் வடக்குச் சீனாவில் கிளர்ந்து எழுந்தார்கள். 316 இல் அவர்கள் முழு வெற்றி ஈட்டினார்கள். இதன் காரணமாக யின் அரசமரபு தென் சீனாவிற்கு இடம்பெயர்ந்தது. வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது. நாடளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை சட்டவடிவம் ஆக்குவதற்கு முன் மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக கனடாவில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. தற்காலத்தில், புதிய பொருள் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்யும் முன் அதன் அம்சங்கள் பற்றி விளம்பரம் செய்ய அந்நிறுவனங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிடுகின்றன. வணிக வெள்ளை அறிக்கைகள் தகவல் தொடர்பாக பயன்படுகிறது. பச்சை அறிக்கை என்பது விவாதிப்பதற்காக அடிக்கடி வெளியிடப்படும் திறந்தநிலை அறிக்கையாகும். பல பச்சை அறிக்கைகள் மூலம் விவாதிக்கப்பட்டு முடிவான கொள்கை, சட்டம் ஆவதற்கு முன் வெள்ளை அறிக்கையாக வெளிவரும். பச்சை அறிக்கை பச்சை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் தராமல் தங்கள் நிலையை மட்டும் விளக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இதன் மூலம் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். ஐரோப்பிய ஆணையம் வெளியிடும் பச்சை அறிக்கை விவாதத்தைத் துவக்கும் அறிவிப்பாக பயன்படுகிறது. கனடாவின் பச்சை அறிக்கை, அரசின் இறுதி முடிவாக இல்லாமல், ஒரு முன்மொழிவாக மக்கள் முன் வைக்கப்படுகிறது. விவாதங்களுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டு வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுகிறது. வெள்ளை அறிக்கை மஞ்சள் பத்திரிகை மஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய் கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும். இதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக மிகைப்படுத்திய செய்திகள், புரட்டான செய்திகள், கிளர்ச்சியூட்டும் செய்திகள் கொண்டவையாகயிருக்கும். ப்ராங்க் லூத்தர் மோட் (1941) வரையறையின் படி மஞ்சள் இதழின் ஐந்து பண்புகள் பின்வருமாறு: பெட்ரோமாக்ஸ் பெட்ரோமாக்ஸ் ("Petromax", அமெ.: "kerosene lamp") என்பது வளிம வலைத்திரி (மாண்டில்) மற்றும் மண்ணெண்ணெய் துணையுடன் எரியக் கூடிய ஒரு அழுத்த புகை போக்கி விளக்கு ஆகும். இது பெட்ரோமாக்ஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு ஆகும். செருமனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த ஏகுரிச் & கிரெத்சு என்ற நிறுவனத்தின் தலைவர் மாக்சு கிரெட்சு (1851–1937) என்பவர் இவ்விளக்கை முதன் முதலில் வடிவமைத்தார். பெட்ரோலியம் என்ற எரிபொருளின் பெயரும் மாக்சு என்ற கிரெத்சின் முதற் பெயரும் சேர்க்கப்பட்டு பெட்ரோமாக்சு என இவ்விளக்குக்குப் பெயரிடப்பட்டது. அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த பரபீனை எரிபொருளாகக் கொண்டு ஒரு விளக்கை உருவாகக் அவர் முயன்றார். பரபீனில் இருந்து வளிமம் ஒன்றை அவர் உருவாக்கினார். இவ்வளிமம் மிக உயர்ந்த கலோரி அளவைக் கொண்டிருந்தது. அத்துடன் மிகச் சூடான நீலத் தீச்சுடரையும் தந்தது. கிரெட்சு ஆவியாக்கிய பரபீனைக் கொண்டு அழுத்த விளக்கு ஒன்றைத் தயாரித்தார். இவ்விளக்கு முதலில் மீத்தைலேற்றப்பட்ட மதுசாரத்தைக் கொண்டு சூடாக்கப்பட்டது. மூடிய கலன் ஒன்றில் பரபீன் கைப்பம்பி ஒன்றின் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. வளிம வலைத்திரியில் இருந்து பெறப்பட்ட வெப்பம் மூலம் பரபீன் ஆவியாக்கப்பட்டது. இது பின்னர் காற்றுடன் சேர்ந்து வலைத்திரியை எரிக்கப் பயன்பட்டது. 1916 ஆம் ஆண்டளவில் இவ்விளக்கும் இத பெயரும் உலகெங்கும் பரவியது. இன்றும் இவ்விளக்கு பயன்பாட்டில் உள்ளது. இதன் வடிவமைப்பு பின்னர் சமையல் அடுப்புகள் போன்றவை தயாரிக்கப் பயன்பட்டது. பெட்ரோமாக்சின் வடிவமைப்பு இன்று பல நாடுகளில் உள்ளூர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் "டவர்", இந்தியாவில் பிரபாத் போன்றவை இவற்றுள் சிலவாகும். சேனா சம்மத விக்கிரமபாகு சேனா சம்மத விக்கிரமபாகு ("Sena Sammatha Wickramabahu", ) என்பவர் 1473ஆம் ஆண்டிலிருந்து 1511ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார். இவரே 1469ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியத்துக்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டு கண்டி இராச்சியத்தை உருவாக்கியவர். இவரே கண்டி இராச்சியத்தின் முதல் மன்னர். இவருக்குப் பின் இவருடைய வாரிசான ஜயவீர ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழ் கம்பளை, சிதுறுவான, தெநுவர, பலவிட்ட, மாத்தளை, பன்சிய பத்துவ, ஊவா முதலிய பிரதேசங்கள் இருந்து வந்தன. ஆட்சியாளர் பட்டியல், இலங்கை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் . இது 1969 இல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். இந்திய மொழிகள் மையத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். "ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்?" என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட "கோன் பனேங்கா கரோர்பதி" என்ற நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை நடிகர் சூர்யா, இரண்டாவது பகுதியை நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் மூன்றாவது பகுதியை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போச்புரி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி வேறு சில இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. பெருமூங்கில் வெதிரம் ["Dendrocalamus giganteus"] என்பது பெருமூங்கில். வேரல் என்பது சிறுமூங்கில். பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும். சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர். வெதிர், வெதிரம், அமை கழை என்னும் சொற்கள் ஒரே புல்லினப் பெருமூங்கில் மரத்தைக் குறிப்பவை. இத்தாவரங்கள் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக பரவி உள்ளன. இது மூங்கில் குடும்ப உலகத்தில் அதிக எண்ணிக்கை உள்ள சிற்றினமாகும். இது கொத்தாக புதர் போன்று காணப்படும். இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். இதன் தண்டு உயரமானது. நீண்ட கணுவிடைப் பகுதியை கொண்டது. கணுவிடைப் பகுதி மென்மையானது கணுப்பகுதி கடினமானது. கொத்தான புதர் செடியாக வளரும். பச்சை – சாம்பல் வண்ணம் கொண்டது. ஒவ்வொரு தண்டும் கொத்தாக நெருக்கமாக புதர் போன்று தனித்தனியாக வளரும். இது 30 மீட்டர் உயரம் வரை வளரும் ( 98 அடி ) இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் வளரும் மூங்கில் 42 மீட்டர் ( 13.7 – 9 அடி ) சாதகமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 40 செ.மீ வரை வளரும். இது குறைந்த மற்றும் உயரமான மலைப்பகுதிகளிலும், பொதுவாக ஆற்றங்கரை ஒரம் மற்றும் வீட்டுத் தோட்டத்தில் வளர்கின்றன. இத்தாவரம் வங்களதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து பகுதிகளில் காணப்படுகிறது. கணுக்கள் உள்ள தண்டு நேராக வளரும். இத்தண்டு சாம்பல் நிற பச்சை வண்ணம் கொண்டது. மேற்புறத்தில் சாம்பல் துகள்கள் ஒட்டியது போன்ற தோற்றம் கொண்டது, பின்னர் காயும் போது பழுப்பு பச்சை நிறமாக வழவழப்பாக மாறுகிறது. இளம் தண்டு கருப்பு ஊதா நிறம் கொண்டது. கணுவிடைப்பகுதி நீளம் 25 – 40 செ.மீ, சுற்றளவு 10 – 35 செ.மீ உள்ளது. தண்டுப்பகுதி மெல்லியதாகவும் நுனியில் மட்டும் கிளைத்திருக்கும். தொங்கும் வேர்கள் 8 வது கணுப்பகுதி வரை உள்ளது. தண்டின் அடிப்பகுதியில் உள்ள வேர்கள் பருத்து ரைசோம் போன்று தரையில் ஒட்டி உள்ளது.  கணுக்களை கொண்ட தண்டுப்பகுதியை சுற்றி குழாய் வடிவ இலை அடி உறை சுற்றியுள்ளது. இளம் பருவத்தில் பச்சை நிறத்திலும் காய்ந்த பிறகு பழுப்பு நிறமாக மாறுகிறது. குழாய் வடிவ இலை அகன்ற பெரிய இலையடியை கொண்டது. இதன் நீளம் 24 – 30 செ.மீ அகலம் 40 – 60 செ.மீ கொண்டது. இலைத்தாள் முக்கோண வடிவம் (அ) ஈட்டி வ் வடிவத்தினால் ஆனது. 7 – 10 செ.மீ நீளம் கொண்டது. மேற்பகுதியில் உள்ள இலைப்பகுதி சுருண்டு வட்டமாக உள்ளது. அதன் கீழ் பகுதி கணுக்களில் காதுமடல் போன்ற சிறிய இலையானது (லிக்யூல்) சம அளவு கொண்ட வட்ட வடிவத்தில் சுருளாக உள்ளது. இலையின் மேற்பகுதியில் தங்க மற்றும் பழுப்புநிற தூவிக:ள் காணப்படுகிறது. கீழ் புறப் பகுதி தூவிகள் இல்லாமல் வழவழப்பாக உள்ளது. இத் தாவரம் வளர வளர இலைப்பகுதிகள் உதிர்ந்து விடுகிறது. இந்தியாவில் மூங்கில் பாலங்கள் கட்டுவதற்கும் வீட்டுச் சுவர்களுக்கு மாற்றாக தூண்களாகவும் பயன்படுகிறது. மேலும் சிமெண்ட் கான்கீரிட் போடுவதற்கான தாங்கி, ஏணி, மேடைகள் அமைத்தல், மற்றும் ஓடாகவும் தரை விரிப்பாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் கூரை வேயப் பயன்படுகிறது. மீவியற்பியல் மீவியற்பியல் அல்லது பெளதீக அதீதவியல் ("Metaphysics") என்பது மெய்யியலின் ஒரு கிளை ஆகும். அது "இருப்பு" ("being") என்றால் என்ன, "உலகு" என்பதன் பொருள் யாது போன்ற வேரோட்டமான கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு விடைதேடுகின்ற அறிவியல் துறையைச் சார்ந்தது. வழக்கமாக, "மீவியற்பியல்" இரு அடிப்படையான கேள்விகளுக்கு மிக விரிவான பின்னணியில் விடை தேடுகிறது. அக்கேள்விகள்: மீவியற்பியலைப் பயிலுபவர் "மீவியற்பியலார்" என்று அழைக்கப்படுகிறார் உலகு பற்றிய அடிப்படை உண்மைகளை மக்கள் எவ்வாறு விளங்கிக்கொள்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது மீவியற்பியலின் நோக்கம். எனவே, "இருப்பு" பற்றியும், பொருள்கள், அவற்றின் பண்புகள், இடம், காலம், காரண காரியம், நிகழலாம் தன்மை போன்றவை பற்றியும் மீவியற்பியல் ஆய்கிறது. இந்த ஆய்வுத் துறையின் ஒரு மையக் கிளை "இருப்பியல்" ("ontology") ஆகும். இது "இருப்பு" என்றால் என்ன என்பதையும், இருப்புப் பற்றிய கருத்துக் கோப்புகள் தமக்குள் எவ்வாறு உறவுகொண்டுள்ளன என்பதையும் ஆய்கிறது. மீவியற்பியலின் மற்றொரு கிளை "பாருலகியல்" ("cosmology") என்று அழைக்கப்படுகிறது. இது பாருலகில் நிலவும் தோற்றக் கூறுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஆய்கின்ற துறை ஆகும். நவீன காலத்தில் அறிவியல் வரலாறு தோன்றுவதற்கு முன்னால், அறிவியல் சார்ந்த கேள்விகளை ஆய்வுக்கு உட்படுத்திய படிப்புத் துறை "இயற்கை மெய்யியல்" ("natural philosophy") என்று அழைக்கப்பட்டது. அதுவும் மீவியற்பியலின் ஒரு பிரிவே. இன்று அறிவியல் என அழைக்கப்படுவது "அறிவு" பெறுதல் என்பதிலிருந்து வருவதே. "அறிதல்" என்றால் என்ன என்பதை அதன் அடிப்படைகளை ஆய்தல் வழியாக எடுத்துரைக்கும் படிப்புத் துறை "அறிதலியல்" அல்லது அறிவாய்வியல் ("epistemology") ஆகும். ஆனால் அறிதல் என்பதை "அறிவியல் முறை"ப்படி ("scientific method") அறிய முற்பட்டபோது, இயற்கை மெய்யியல் என்ற துறை ஏனைய மெய்யியல் துறைகளிலிருந்து வேறுபடத் தொடங்கியது. ஐம்புலன்களின் மெய்ப்பித்தலுக்கும் சோதனைவழி மெய்ப்பித்தலுக்கும் உட்படக் கூடியதையே "அறிவியல்" ஏற்றது. ஆக, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்த அறிவுத் துறை அறிவியல் ("science") என்னும் பெயர் பெறலாயிற்று. மெய்யியலிலிருந்து அது வேறுபட்டது என்பதும் தெரிந்தது. அதிலிருந்து, மீவியற்பியல் என்றால் இருப்பு எத்தகையது என்று அறிந்திட புலன்வழி மெய்ப்பித்தல் சாரா முறையில் ஆய்வு நிகழும் துறையைக் குறிக்கலாயிற்று. மீவியற்பியல் என்று தமிழில் கூறப்படுகின்ற மெய்யியல் துறை ஆங்கிலத்தில் "metaphysics" என அழைக்கப்படுகிறது. அச்சொல் கிரேக்க மொழியிலிருந்து பிறக்கிறது. கிரேக்கத்தில் metá (μετά) என்றால் "அப்பால்", "மேல்", "பின்" எனப் பொருள்படும். கிரேக்கத்தில் physiká (φυσικά) (= physics) என்பது இயற்கை என்னும் பொருளின் அடிப்படையில் தமிழில் வழங்குகின்ற இயற்பியல் என்னும் சொற்பொருளைத் தரும். "மீவியற்பியல்" என்பது மீ+இயற்பியல் என்று பிரிந்து, "இயற்பியலுக்கு அப்பால்" ("மேல்", "பின்") வருகின்ற படிப்புத் துறை என்னும் பொருளைத் தரும். மீவியற்பியல் என்னும் இணைச்சொல்லைக் கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் என்னும் மெய்யியலாரின் நூல்களைப் பதிப்பித்தோர் பயன்படுத்தினர். அவர்கள் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் பற்றிய நூல்களைத் தொகுத்தபின்,"இயற்பியலுக்குப் பின்னர்" வரும் நூல்கள் என்னும் பொருளில் சில நூல்களைத் தொகுத்தனர். அரிஸ்டாட்டில் அந்நூல்களை "மீவியற்பியல்" நூல்கள் என்னும் பெயரால் அழைக்கவில்லை. மாறாக, அவர் கொடுத்த பெயர் "முதல் மெய்யியல்" ("first philosophy") என்பதாகும். அரிஸ்டாட்டிலின் நூல்களைப் பதிப்பித்த ரோட் நகர் அண்ட்ரோனிக்கசு ("Andronicus of Rhodes") என்பவர் அரிஸ்டாட்டலின் "முதல் மெய்யியல்" நூல்களை "இயற்பியல்" நூலுக்குப் "பின்" அமைத்து, "இயற்பியல் நூல்களுக்குப் பின் வரும் நூல்கள்" ("ta meta ta physika biblia") () (= "the books that come after the [books on] physics") என்று பெயர் கொடுத்தார். இதை இலத்தீன் அறிஞர்கள் தவறுதலாக, "இயற்கையைக் கடந்தது பற்றிய படிப்புத் துறை" ("the science of what is beyond the physical") என்று பொருள்கொண்டுவிட்டார்கள். இப்பின்னணியிலேயே இன்று "மீவியற்பியல்" என்னும் தமிழ்ச் சொல்லும் வழங்குகிறது. பெயர் கொடுக்கப்பட்ட பிறகு, அறிஞர்கள் அப்பெயர் எதைக் குறிக்கிறது, குறிக்கலாம் என்னும் ஆய்வில் ஈடுபட்டார்கள். கிரேக்கத்தில் "phusis" என்னும் சொல் "இயற்கை" என்னும் பொருள் கொண்டுள்ளதால், "இயற்கையைக் கடந்த உலகு பற்றிய படிப்புத் துறை" ("the science of the world beyond nature") என்று சிலர் "மீவியற்பியலை" விளக்கினார்கள். அவர்கள் பார்வையில் இப்படிப்புத் துறை "பொருண்மை சாரா உண்மைகள்" பற்றியது. வேறு சிலர் "மீவியற்பியல்" என்றால், முதலில் இயற்பியலை அதாவது பொருண்மைசார் உலகு பற்றிப் பயின்றுவிட்டு, அதன் "பின்" பயிலப்படுகின்ற படிப்புத் துறை என்று பொருள் கொண்டார்கள். இதுவே நடுக்கால மெய்யியலாராகிய அக்வீனா தோமா என்பவரின் பார்வை ஆகும்.. சிலர் "மீவியற்பியல்" என்பதை "ஆன்மிகம் சார்ந்த" என்று விளக்குவார்கள். எடுத்துக்காட்டாக, "மீவியற்கை நலமளிப்பு" ("metaphysical healing") என்னும் சொல்லால் அவர்கள் பொருண்மைசார் உலகுக் காரணிகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் நிகழ்கின்ற குணமளிப்புகளைக் குறிக்கிறார்கள்." "மீவியற்பியல்" என்னும் சொற்பயன்பாடு அரிஸ்டாட்டல் என்னும் மெய்யியலாரால் தொடங்கப்பட்டது என்றாலும், தமக்கு முன் வாழ்ந்த மெய்யியலார் மீவியற்பியல் சார்ந்த பொருள்கள் குறித்து சிந்தித்திருந்தனர் என்று அரிஸ்டாட்டலே கூறியுள்ளார். அரிஸ்டாட்டல் கூற்றுப்படி, வரலாற்றிலேயே முதன்முதலாக, அனைத்துப் பொருள்களும் ஒரே மூலப்பொருளையே தம் தொடக்க காரணமாகக் (கிரேக்கம்: "Arche") கொண்டுள்ளன என்னும் மெய்யியல் கருத்தை மைலீட்டசு நகர் தாலெசு ("Thales of Miletus") எடுத்துரைத்தார். அறிவியல் சார்ந்த கேள்விகளைப் பண்டைய கிரேக்க நாட்டில் மெய்யியலாரே ஆய்ந்தனர். ஆனால் கிபி 18ஆம் நூற்றாண்டு விடிந்ததும், அறிவுபெறல் பற்றி ஐயம் கொண்டோர் "உமக்கு/நமக்கு எப்படித் தெரியும்?" என்ற கேள்வியைக் கேட்டு, "அறிதலியல்" அல்லது அறிவாய்வியல் என்னும் மெய்யியல் துறை தோன்றிட வழிவகுத்தார்கள். அத்துறை "உமக்கு/நமக்கு "எப்படித்" தெரியும்?" என்னும் கேள்வியைத் தன் ஆய்வுப்பொருளாகக் கொண்டது. "யாது" தெரியும் என்னும் மீவியற்பியல் கேள்வி இப்போது "எப்படித்" தெரியும் என்னும் கேள்வியாக மாறியதால் அது நவீன அறிவியலுக்கும் அறிவியல் முறைக்கும் இட்டுச்சென்றது. எனவே, ஐயுறுவாதம் ("Skepticism") மீவியற்பியலிலிருந்து அறிதலியல் தோன்றிட வழியாயிற்று எனலாம். அதிலிருந்து, மீவியற்பியல் என்றால் "இருப்பின்" தன்மையை மெய்யியல் அடியிலான புலன்சாரா முறையில் ஆய்தலைக் குறிக்கலாயிற்று. மீவியற்பியலை அரிஸ்டாட்டில் "அறிவியல் துறைகளின் அரசி" என்று அழைத்தார். மேற்படிப்பு நிறுவனங்களில் ஆய்வுத்துறை சார்ந்த கல்விமுறையில் மீவியற்பியல் ஒரு துறையாக அரிஸ்டாட்டில் காலத்துக்கு முன்னேயே விளங்கியது. இயற்பியல், மருத்துவம், கணிதம், பாவியல், இசையியல் போன்ற துறைகளைப் போன்றே மீவியற்பியலும் முதன்மையானதாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில் நவீன கால மெய்யியல் எழுந்தது. அதிலிருந்து, முற்காலத்தில் மீவியற்பியலின் உள்ளடக்கமாக இல்லாதிருந்த வேறு பல பொருள்களும் அத்துறையின் உள்ளடக்கமாக மாறின. நேர்மாறாக, முற்காலத்தில் மீவியற்பியலின் உள்ளடக்கமாகக் கருதப்பட்ட வேறு பல பொருள்கள் நவீன காலத்திலிருந்து மெய்யியலின் வேறு பல துறைசார்ந்தனவாக மாறிவிட்டன. எடுத்துக்காட்டாக, சமய மெய்யியல் ("Philosophy of religion"), உள மெய்யியல் ("philosophy of mind"), உணர் மெய்யியல் ("philosophy of perception"), மொழி மெய்யியல் ("philosophy of language"), அறிவியல் மெய்யியல் ("philosophy of science") போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் அறிவியல் மேதை உருவாக்கிய சார்புக் கோட்பாடு ("theory of relativity") போன்றவை இயற்கையின் பொருண்மை சார்ந்தவற்றை ஆய்வதால் அறிவியல் சார்ந்தனவாகவும், அதே நேரத்தில் மீவியற்பியல் சார்ந்தனவாகவும் முகிழ்த்துள்ளன. அரிஸ்டாட்டில் ஆக்கிய மெய்யியல் கிளையாகிய மீவியற்பியல் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய மேற்கத்திய மெய்யியலில் வழக்கத்தில் உள்ளது. அக்கிளைகள் இவை: அரிஸ்டாட்டில் "முதல் மெய்யியல்" ("first philosophy") என்று அழைத்த இந்தப் பொது அறிவியல் "இருப்பு, இருப்பு எனும் பார்வையில் யாது" ("being qua being") எனும் பொருளை ஆய்கிறது. அதாவது, எல்லா அறிவுத் துறைகளுக்கும் அடிப்படையான கேள்விகள் அங்கு எழுப்பப்படுகின்றன. காரிய காரணம் ("causality"), இருத்தமை ("substance"), வகைகள், கூறுகள், முடிவுறுகை ("finitude") போன்றவையும் இத்துறையின் ஆய்வுப் பொருள்கள் ஆகும். மீவியற்பியலின் மையப் பொருள்கள் இவை இவை என்று எல்லா மெய்யியலாரும் ஒருமனதாக ஏற்காவிடினும், பெரும்பான்மையோர் ஏற்கும் பொருள்கள் அவண் பட்டியலிடப்படுகின்றன. "இருப்பு" ("being") என்றால் என்னவென்பது மீவியற்பியல் கேட்கின்ற அடிப்படையான கேள்வி ஆகும். மீவியற்பியல் தோன்றிய பண்டைக் காலத்திலிருந்தே இக்கேள்வியை மெய்யியலார் கேட்டுவந்துள்ளனர். எடுத்துக்காட்டாக பார்மேனிடசு ("Parmenides") என்னும் பண்டைய கிரேக்க மெய்யியலாரைக் கூறலாம். அவர், "இருப்பு" ஒன்றே எனவும், அது மாற்றமுறாதது எனவும் கற்பித்தார். ஆனால், இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்மிக்க மெய்யியலாராகிய ஹைடகர் ("Heidegger") என்பவர், முன்னாளைய மெய்யியலார்கள் "இருப்பு, இருப்பு எனும் பார்வையில் யாது" என்னும் கேள்வியை மறந்துவிட்டு, இருப்புகள் ("beings" ["existing things"]) பற்றியே கவனம் செலுத்திவிட்டனர் என்று கூறி, மீண்டும் பண்டைய மெய்யியலாராகிய பார்மேனிடசின் அணுகுமுறைக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்றுரைத்தார். எதார்த்தத்தின் அடிப்படையான அமைவுக் கூறுகளை வரிசைப்படுத்தும் பட்டியல் "இருப்பியல் பட்டியல்" ("ontological catalogue") ஆகும். "இருத்தல்" ("existence") என்பதை பயனிலையாக ("predicate") கூறலாமா என்னும் கேள்வி தொடக்க நவீன காலத்திலிருந்து ("Early Modern period") ஆய்வுக்கு உட்படலாயிற்று. குறிப்பாக, கடவுள் இருக்கிறார் என்று நிலைநாட்டும் முயற்சியில் இப்பார்வை தொடர்புடையது ("ontological argument"). ஒரு பொருள் "உளது" ("existence") என்னும் கூற்று, அப்பொருள் "யாது" ("essence") என்னும் கூற்றிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது. இந்த இரு கூற்றுகளும் தமக்குள் கொண்டுள்ள ஒற்றுமை, உறவு, வேற்றுமைகள் பற்றிய ஆய்வினை அரிஸ்டாட்டில் தமது மீவியற்பியலில் மேற்கொண்டார். அது பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட மற்றொருவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பாரசீக மெய்யியலாரான இபின் சீனா ("Avicenna" ["Ibn Sina"]) ஆவார். "யாது" என்பது இன்றி "உளது" என்பது வெறுமையாகத் தோன்றுவதால், ஹேகெல் போன்ற மெய்யியலார்கள் அதை ஒன்றுமில்லாமையாகக் கருதுகிறார்கள். உலகில் தனித்தனிப் பொருள்கள் பல உளவாக நமக்குத் தெரிகிறது. அப்பொருள்கள் பருண்மை சார்ந்தவையாக, அல்லது கருத்து சார்ந்தவையாக (எ.டு.: அன்பு, மூன்று எனும் எண்) உள்ளன. பொருண்மை சார்ந்த பொருள்கள் "தனிமங்கள்" ("particulars") ஆகும். அவற்றிற்கு குணங்கள் உண்டு. அவை எந்த அளவு, வடிவம், நிறம், இருப்பிடம் கொண்டுள்ளன என்று நாம் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களுக்குப் பொதுவான குணங்களும் இருக்கலாம். இத்தகைய பண்புகள் "பொதுமங்கள்" ("Universals") அல்லது "குணங்கள்" ("properties") என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இயல்பு என்ன? இவை உண்மையாகவே உளவா? அவ்வாறாயின் அவற்றின் "உளமை" எத்தகையது? - இது நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி இரு எதிர்மாறான கொள்கைகள் உள்ளன. ஒன்று "பொதுமங்கள்" எதார்த்தமாகவே உள்ளன ("realism") என்று கூறுகிறது. அதை மறுத்து, "பொதுமங்கள்" "பெயர்" அளவில் மட்டுமே உள்ளன ("nominalism") என்று மற்ற கொள்கை கூறுகிறது. பொதுமங்கள் மற்றும் தனிமங்கள் பற்றி ஆய்கின்ற மீவியற்பியலார், பொருள்களின் இயல்பையும் அவற்றின் குணங்க்ளையும் ஆய்வதிலும் கருத்தைச் செலுத்தி, அவை இரண்டிற்கும் இடையே நிலவும் உறவையும் ஆய்கிறார்கள். பிளேட்டோ போன்ற மெய்யியலார் "குணங்கள்" கருத்துறு பொருள்கள் என்றும், கால இட எல்லை தாண்டி அவை இருக்கின்றன என்றும், அவற்றோடு "தனிமங்கள்" சிறப்பு உறவு கொண்டுள்ளன என்றும் கூறுவர். டேவிட் ஆம்ஸ்ட்ராங் என்பவர், "பொதுமங்கள்" கால இட எல்லைக்குள் உள்ளன என்று ஏற்றாலும், அதே சமயத்தில் அவை ஒரு பொருள் அல்லது பல பொருள்களில் இடம்கொண்டிருப்பதால் மட்டுமே "உள்ளன" என்பார். அவற்றைக் கண்டுபிடிப்பது அறிவியலின் பணி என்றும் அவர் கூறுவார். வேறு சிலர், "தனிமங்கள்" என்பவை அவை கொண்டிருக்கின்ற குணங்களின் தொகுப்பே என்பர். "பொதுமங்கள்" மற்றும் எண்கள் போன்ற கருத்துறு பொருள்கள் உள்ளன என்று சில மெய்யியலார் கூறுவர். சிவப்பு என்னும் நிறம், சதுரம் என்னும் வடிவம் போன்றவை தனிப்பொருள்களில் இடம்கொள்ள இயலும். எனவே அவை "பொதுமங்கள்" ஆகும். கருத்துறு பொருள்கள் என்பவை பொதுவாக கால இட எல்லையைத் தாண்டி உள்ளன; அவை காரணமாக செயல்படுவதில்லை. கணிதப் பொருள்கள், கற்பனைப் பொருள்கள் மற்றும் கற்பனை உலகுகள் போன்றவை கருத்துறு பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள். கருத்துறு பொருள்கள் வெறும் பெயர்களே என்பது "பெயர்க் கொள்கை" ("nominalism") ஆகும். கருத்துறு பொருள்களும் "உள்ளன" என்பது பிளேட்டோ கொள்கை. இவ்விரு கொள்கைகளுக்கும் இடைப்பட்ட கொள்கை "மித எதார்த்தக் கொள்கை" ("moderate realism") ஆகும். அதை அரிஸ்டாட்டில் எடுத்துரைத்தார். இன்னுமொரு கொள்கை "கருத்துக் கொள்கை" ("conceptualism") ஆகும். கணித மெய்யியல் துறை ("philosophy of mathematics"), மீவியற்பியலின் நிலைப்பாடுகள் சிலவற்றைத் தனதாக்குவதும் உண்டு. ஏனென்றால், கடவுநிலையிலோ ("transcendentally") பொருண்மையாகவோ மனத்தளவிலோ பொருள்கள் உண்மையாகவே உள்ளன என்னும் நிலைப்பாடு கணிதத்துக்கும் மீவியற்பியலுக்கும் பொதுவாகக் கூடும். பிளேட்டோவின் எதார்த்தவாதத்தின்படி ("Platonic realism"), கணித எதார்த்தங்கள் பொருண்மையற்ற கடவுநிலை உலகு சார்ந்தவை. கணித புலனுறுவாதம் ("mathematical empiricism"), கணித எதார்த்தங்கள் (எ.டு.: சதுரம்) சாதாரண புலனுறு பொருள்கள் போன்றே உள்ளன என்கிறது. ஆனால் பிளேட்டோ இக்கருத்தை ஏற்கவில்லை. அவர் கூற்றுப்படி, எந்தவொரு புலனுறு பொருளும் ஒரு கணித எதார்த்தத்தை முழுமையாக, நிறைவாக வெளிக்காட்ட இயலாது. எடுத்துக்காட்டாக, சதுரம் என்னும் கணித எதார்த்தம் புலனுறு வகையில் சதுரமாக அமைந்துள்ள எந்தவொரு சதுர வடிவப் பொருளிலும் தன் முழுநிறைவோடு வெளிப்பட இயலாது. பிளேட்டோவின கருத்தை நவீன கணிதவியல் உறுதிப்படுத்துகிறது. அதாவது நவீன கணிதவியலார் பல சிக்கல் மிகு கணித அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். அவற்றை அப்படியே புலனுறு விதத்தில் வெளிக்காட்டும் பொருள்கள் கிடையாது. மூன்றாவது எதார்த்தவாதத்தின்படி, கணித எதார்த்தங்கள் மனத்தளவில் உள்ளன. ஆனால், மனம் என்பது பொருண்மைப் பண்புடையது என்னும் பார்வையில் கணிதத்தின் எண்ணிறந்த எதார்த்தங்களை அப்படியே தன்னகத்தே அடக்கிக் கொள்ள மனம் வலுவற்றது. இம்மானுவேல் காண்ட் என்னும் நவீன கால மெய்யியலார் "அனுபவத்துக்கு உட்படாத எந்த கணித எதார்த்தமும் இருக்க இயலாது" என்னும் கருத்துடைய "உள்ளுணர்வுக் கொள்கையை" ("Intuitionism") ஆதரிக்கிறார். மனத்தால் உள்வாங்க முடியாத, உருவாக்க இயலாத எதுவும் உள்ளுணர்வுக்கு எட்டாதது. எனவே, இரு முரண்களில் ஒன்றே மெய் என்னும் கொள்கை ("law of the excluded middle") என்பதையும், முடிவறாநிலை ("infinity") மற்றும் முடிவுகடவு எண்களையும் ("transfinite numbers") இக்கொள்கை ஏற்பதில்லை. எதார்த்த-எதிர் வாதம் ("anti-realism") கணிதப் பொருள்களுக்கு எந்தவொரு எதார்த்த நிலையையும் வழங்குவதில்லை. மீவியற்பியலின் ஒரு பகுதியான பாருலகவியல் ("Cosmology") கால இட அமைவில் அண்டத்தின் முழுமை பற்றி ஆய்கின்றது. வரலாற்றில், இப்படிப்புத் துறை மிக விரிந்த ஆய்வுத் தளம் கொண்டிருந்தது. பலகாறும் மதக் கொள்கைகளோடு உறவுகொண்டும் இருந்தது. பண்டைய கிரேக்கர்களும் இந்த அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். ஆனால், நவீன காலத்தில் பாருலகவியல் இயற்பியலின் வீச்சுக்குள் வராத கேள்விகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. நவீன பாருலகவியல் மதம்சார் பாருலகவியலிலிருந்து ("religious cosmology") தன்னை வேறுபடுத்திக் காண்கிறது. ஏனென்றால், அது பாருலகு சார்ந்த கேள்விகளை மெய்யியல் அடிப்படையில் எழுப்பி ஆய்கிறது. பாருலகுத் தோற்றவியல் ("Cosmogony") என்னும் ஆய்வுத் துறை பாருலகு எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. நவீன மீவியற்பியல் பாருலகவியலும் பாருலகுத் தோற்றவியலும் கீழ்வரும் கேள்விகளுக்குப் பதில் வழங்க முயல்கின்றன: தமிழகத்தின் இரும்புக்காலம் தமிழகத்தின் இரும்புக்காலம் பொதுவாகவே அறிஞர்களால் பொ.மு. 500 என்றே நிறுவப்பட்டு வந்தது. ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் விரைவு பெற்ற காலம் அதை இன்னும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியது. இதற்கு முன்னரே செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருள்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை பொ.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை பொ.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அகமது ஷா துரானி அகமது ஷா துரானி (), (பஷ்தூ/) கி.பி.1722–1773 ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் ஆவார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார். அப்போது ஆப்கானிஸ்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பாரசீகத்தின் நாதிர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது. 14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார். இஸ்லாம் ஷா இஸ்லாம் ஷா சூரி( 1545-1554)டில்லியை ஆண்ட சுல்தான் ஷெர்ஷாவின் இரண்டாம் மகன். இவரது இயற்பெயர் ஜலால் கான். ஷெர்ஷா மரணமடைந்தபின் பெருவாரி பிரபுக்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் ஆதரவோடு மூத்த சகோதரர் ஏதில்கான் இருக்க கி.பி. 1545 - ஆம் ஆண்டு 'இஸ்லாம் ஷா' என்ற பட்டத்தோடு முடிசூட்டிக் கொண்டார். ராந்தம்பாரில் தங்கியிருந்த ஏதில்கான் இஸ்லாம் ஷாவின் ஆட்சியினை ஏற்க மறுத்தார். அவரை தலைநகர் ஆக்ராவிற்கு அழைத்துவந்து சமாதானம் செய்து வைக்க முயன்றனர் பிரபுக்கள் சிலர். அதே நேரம் இஸ்லாம் ஷா தம் தமையனை கொல்ல சதித்திட்டம் தீட்டினார். தப்பிய ஏதில்கானை சிறைபிடிக்க தொடர்ந்து முயன்றார் இஸ்லாம் ஷா. இச்செயல்களால் பல பிரபுக்கள் ஏதில்கானை ஆதரிக்க தொடங்கினர். முடிவில் ஏதில்கானுக்கும், இஸ்லாம் ஷாவிற்கும் ஆக்ரா அருகில் போர் நடைபெற்றது. இப்போரில் தோல்வியடைந்த ஏதில்கானும் அவர் ஆதரவு பிரபுக்களும் தப்பியோடினர். முக்கிய பிரபுக்கள் பலர் ஏதில்கானை ஆதரித்ததால் இஸ்லாம் ஷா பிரபுக்கள் மீது சந்தேகமும், கோபமும் அடைந்தார். பல்வேறு காரணங்களைச் சொல்லி பிரபுக்களை ஒவ்வொருவராக சிறைபடுத்தியும், போர் தொடுத்தும் கொன்றார். இறுதியில் இஸ்லாம் ஷா கி.பி. 1554 நவம்பர் 22 - ஆம் நாள் இயற்கை மரணம் எய்தினார். அமனுல்லாகான் அமனுல்லாகான் (பஷ்தூ: أمان الله خان, உருது: أمانالله خان ; சூன் 1, 1892 – ஏப்ரல் 25, 1960) ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசுத் தலைவராக 1919 முதல் 1929 வரை இருந்தவராவார்; முதலில் அமீராகவும் 1926க்குப் பின்னர் அரசனாகவும் இருந்தார்.ஆப்கானித்தானின் அமீராக இருந்த அபிபுல்லாவின் மகனான இவர், தந்தை கொலையுண்ட பின் படைகளின் ஆதரவுடன் அமீரானார். அமனுல்லாகான் கி.பி. 1919 - ல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இது மூன்றாம் ஆங்கில-ஆப்கானியப் போர் எனப்பட்டது. புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார். ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்ட பின்னர் தமது நாட்டுக்கெனத் தனியான வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தார். அமனுல்லாகான் ஆப்கானிஸ்தானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பி பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதனை விரும்பாத இஸ்லாமிய முல்லாக்கள் 1924 மார்ச் முதல் 1925 ஜனவரி வரை கலகத்தில் ஈடுபட்டனர். கோஸ்ட் கலகம் எனப்பட்ட இதுவே 1928 - ல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அப்புரட்சி தோல்வியடைந்தது. ஆனால், அமனுல்லாகான் 1929 ஜனவரி 14 - ஆம் நாள் முடி துறந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின் 1941 - ஆம் ஆண்டு ஜெர்மனி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். தமது முயற்சிகளில் தோல்வியடைந்த அமனுல்லாகான் 1960ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சூரிக்கு நகரில் மரணமடைந்தார். ரசியா பேகம் ரஸியா பேகம் கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான். (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.) இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் ஷம்ஸ்-வுட்-டின் அல்டமிஸ். இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார். குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். அல்டமிஸ் திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்காலக் கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார். தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 - ஆம் ஆண்டு அல்டமிஸ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது மகன்களுள் ஒருவரான ருகுன்-வுட்-டின் பெரோஸ் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் மிக மோசமான ஆட்சியின் மூலம் ஆறே மாதங்களில் மக்களிடம் செல்வாக்கை இழந்தார். பின் ரஸியா பேகம் ஆட்சிப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் தன் தந்தைக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றார். எனவே, இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். ருத்திரமாதேவி ருத்திரமாதேவி கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார். இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார். எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். In brief about the life of Rani Rudrama Devi ஆசிரியர்களுக்கான தேசிய விருது இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. ஒருவர் இவ்விருது பெற ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகளும், தலைமை ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். தற்போதைய நிலையில் இவ்விருதின் மொத்த எண்ணிக்கை 378 ஆகும். இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் மேதகு குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்படும். இவ்விருதின் ஒரு பகுதியாக வகுப்பறையில் கற்றல் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி தேசிய நல்லாசிரியர் விருதுகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. இறுதியாக விருதுக்குரியவர்களை நடுவண் கல்வி அமைச்சகம் தேர்வு செய்கிறது. இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசுத்தலைவர், விருதுகளை வழங்குவார். தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் 'நல்லாசிரியர் விருது' பெறுவோருக்கு, குடியரசுத்தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து பெருமைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் தொடர்வண்டியில் இலவசமாகப் பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது. இண்டிகா (நூல்) இண்டிகா மெகஸ்தெனஸ் இந்தியாவை பற்றி எழுதிய நூலாகும். அலெக்சாண்டருக்குப் பிறகு பாரசீக, பாபிலோனிய நாடுகளை ஆண்ட செலூகஸ் நிகேடரின் தூதராக மௌரியப் பேரரசரான சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பப்பட்டவர் மெகஸ்தெனஸ். எட்டு பகுதிகளைக் கொண்ட இந்நூல் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. 1846 - ல் பேரறிஞர் இசுவான் பெகுக் என்ற செருமானியர் சிதறிகிடந்த மெகஸ்தனிசின் குறிப்புகளைத் தொகுத்து ஒழுங்குப்படுத்தினார். ஜே.டபிள்யூ. மாக்ரின்டல் இதை கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அலெக்சாண்டர் கங்கை பகுதிக்கு படையெடுத்துச் செல்லாததற்குக் காரணம் அங்கே புகழ்பெற்ற நான்காயிரம் யானைகளையுடைய படை இருந்ததாக கேள்விப்பட்டதே ஆகும் என்கிறார் இவர். நம்ப முடியாத பல தகவல்களும் இந்நூலில் உள்ளன. இந்தியாவில் ஒரே கால் உடைய மக்கள், கொம்புள்ள குதிரைகள், சிறகு முளைத்த பாம்புகள், பாதங்களை தொடக்கூடிய அளவு நீண்ட காதுகளையுடைய மக்கள், வாயில்லாதவர், மூக்கிலாதவர், ஏழு வயதில் குழந்தை பெற்ற தாய்மார்கள் ஆகியோர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இவர் வழக்கமாக பொய் பேசுபவர் என்றும், அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே எளிதில் நம்பிவிடக் கூடியவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அயினி அக்பரி அயினி அக்பரி என்பது மொகலாயர்களின் ஆட்சிமுறை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள பயன்படும் நூல். இது பாரசீக மொழியில் அபுல் பைசல் என்பவரால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிர்வாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின. அயினி அக்பரி பெயருக்கேற்றபடி, அக்பரின் ஆட்சிக்காலத்திலிருந்த எல்லாத் துறைகளையும் பற்றிய முழுமையான விளக்கங்களைத் தருகிறது. இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அக்பரின் பண்புகளையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கிறது. அக்பரின் அரண்மனைப் பகுதிகள், குதிரைக் கொட்டில், ஆடை அணிகள், படைக்கலங்கள், வேட்டையாடும் குழு, அக்பர் பயணத்தின் போது பாசறை அமைக்கும் முறை முதலியவை பற்றிய விளக்கங்கள் இந்நூலில் காணப்படுகின்றன. அபிக்ஞான சாகுந்தலம் சாகுந்தலம் என்பது காளிதாசரால் இயற்றப்பட்ட சமசுகிருத மொழி நாடக நூல் ஆகும். வட இந்தியாவிலிருந்து சகர்களை விரட்டிய பெருமைக்குரிய குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் எனும் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர் காளிதாசர். சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் காதல் திருமணத்தை விளக்கும் சாகுந்தலம் நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன. இதன் உட்பொருள் வியாச மகாபாரதத்தினின்று எடுக்கப்பட்டது. ஆயினும் இலக்கியச் சுவைக்கேற்பச் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. சமசுகிருத மொழி சாகுந்தலம் நாடக நூலை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆர்தர் டபுள்யு. ரைடர் என்பவர் சாகுந்தலம் நாடகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம், தமிழ், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாக வெளி வந்துள்ளது. அபிதம்மாவதாரம் அபிதம்மாவதாரம் என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தசமயப் பெரியோர்களுள் ஒருவரான புத்ததத்த தேரர் என்பவரால் பாலி மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலாசிரியர் புத்த சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒரு தமிழர். சோழ நாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். புத்த சமயப் புனித நூலான திரிபிடகத்திலுள்ள அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போல அமைந்ததாகும். சோழ நாட்டையும், காவிரிப்பூம்பட்டினத்தையும் இந்நூல் சிறப்பித்து கூறுகிறது. இராசாவலிய இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. இராஜாவலிய அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது. சமயச் செய்திகளை விளக்கவில்லை. இலக்கிய நடையைத் தவிர்த்து பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக கி.பி. 1359 - ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். உண்டவல்லி உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு கி.பி.4முதல் 5- ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் யாவும் திருமாலை பற்றியன. இங்கு நான்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மேல் கூரையைத் தாங்கி நிற்கின்றன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரண்டாம் தளம் 9 மீ. அகலமும், ஏறக்குறைய 17 மீ. நீளமும் உள்ள மண்டபத்தையும், தென்முனையில் 4 மீ. சதுரமான சிறிய அறையையும், வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அனந்தசயனரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. நடுமண்டபத்தில் நான்கு வரிசையில் தூண்கள் உள்ளன. இத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன. இங்கு சைவ சிற்பங்கள் சிலவும் காணப்படுகின்றன. எனவே, இக்கோயில் 17 - ஆம் நூற்றாண்டில் சைவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கியிருக்க வேண்டும். மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. கணவிரி கணவிரி என்பது ஒரு மலரின் பெயர். வையை ஆற்றில் வந்த மலர்களில் ஒன்று. யாப்பிலக்கணத்தில் பாடலின் அடிகளை இருவகைகளில் அலகிடுவர். தொல்காப்பியம் எழுத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளைக் குறிப்பிடும் முறைகளையும், சீரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளின் பேரில் பாடலைக் குறிப்பிடும் முறையையும் காட்டுகிறது. யாப்பருங்கலம் என்னும் நூல் கணவிரி என்னும் மலர்பெயரை நாலெழுந்துச் சீருக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது. பரிபாடல் பல்வகைப் பூக்களோடு இதனையும் ஒன்றிக் குறிப்பிடுகிறது. மணிமேகலை என்னும் நூல் கணவிரி என்னும் பூவால் கட்டிய மாலையைக் குறிப்பிடுகிறது. கணவீரம் கணவீரம் என்பது ஒரு மலர். இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர். வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. நீலம் (மலர்) நீலம் என்பது மலர். இது நீலநிறம் கொண்டது. இது இலங்கை நாட்டின் தேசிய-மலர். நீலமலர் எது என வரையறுப்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றில் இளநீல-நிற மலர் வேறு, இருள்நீல-நிற மலர் வேறு என்னும் உண்மை தெளிவாகிறது. வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், கோயில் நகரமான மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர். இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது. தைப்பூசத்தன்று வண்ணமயமான தெப்பத்திருவிழா இதன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. பயனர் வழிகாட்டி பயனர் வழிகாட்டி அல்லது பயனர் கையேடு (User Guide) என்பது ஒரு பொருளைப் பயன்படுத்த உதவும் குறிப்புகள் கொண்ட ஒரு தொழில்நுட்பத் தொடர்பு ஆவணம் ஆகும். பொதுவாக இவை தொழிற்நுட்ப எழுத்தாளர்களால் எழுதப்படும், ஆனால் சிறு நிறுவனங்களில், நிரலாளர், தயாரிப்பு அல்லது திட்ட மேலாளர்களால் எழுதப்படும். இவை பெரும்பாலும் மின்னணு சாதனங்கள், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் போன்றவற்றிற்காக எழுதப்படுகிறது. இந்தக் கையேடுகள் எழுத்துவடிவமுடன் விளக்கப்படங்களும் கொண்டிருக்கும். தொழிற்நுட்ப குறியீடுகள் தவிர்க்கப்பட்டு பயனர்களின்வசதிக்கேற்ப மொழியும், நடையும் அமைந்திருக்கும். பயனர் வழிகாட்டியில் பெரும்பாலும் இருப்பவைகள்: முக்கிய பயன்பாட்டு மென்பொருள்களுக்கெல்லாம் மேற்கண்ட பட்டியலைப் போன்ற தகவல்கள் கொண்ட புத்தக வடிவ ஆவணமாக இருக்கும். "கூகிள் எர்த்தின்" பயனர் வழிகாட்டி ஒரு சிறந்த ஆங்கில உதாரணம் சில வணிக மென்பொருட்களில், ஒரு குறிப்பிட்ட குழிவினர் மட்டும் பயன்படுத்து வகையில் பிரத்யேக கையேடுகளும் தயாரிக்கப்படும். உதாரணம்: "ஆட்டோடெஸ்க் டாபோபேஸ் 2010 உதவி வெளியீட்டுக் குறிப்புகள் வெளியீட்டுக் குறிப்புகள் (Release notes) என்பது மென்பொருள் வெளியீட்டுடன் இணைந்துவரும் ஒரு தொழில்நுட்பத் தகவல் குறிப்புகளாகும். பெரும்பாலும் இவை கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருளின் சோதனை வெளியீட்டுடன்(beta version) இணைப்பாக வரும். அல்லது பயனர் பயன்படுத்தும் பொருள்களின் அடுத்தப் பதிப்பு வெளிவரும் போதும் அதனுடன் இணைந்து வெளிவரும், அதில் புதிய மாற்றங்கள் அல்லது பழுது நீக்கல் பற்றிய குறிப்புகள் கொண்டிருக்கும். தயாரிப்பு நிறுவனத்தால் இந்தக் குறிப்புகள் பயனர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும். வெளியீட்டுக் குறிப்பின் மூலம் அப்பொருளின் அல்லது அந்த சேவையில் மாற்றங்கள் அல்லது அபிவிருத்திகள் பற்றி மட்டும் பயன்ர்கள் அறிந்துக் கொள்ளமுடியும். திண்டுக்கல் ஐ. லியோனி திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருவிழா திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மதுரை திருவிழா நகரம் என்றழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், ஆண்டிற்கு 12 மாதங்களும், 10 நாட்களுக்குக் குறையாமல் திருவிழா நடக்கும். மேலும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தம். தமிழ்நாட்டிலுள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதன் ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வழிபடுவர். பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார். திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராக கருதப்படுகின்றது. தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது. "முதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா" சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா ஆ‌ண்டு தோறு‌ம் 10 நா‌ட்க‌ள் வெகு ‌‌சிற‌ப்பாக நடைபெறுவது வழ‌க்க‌ம். கா‌ர்‌த்‌திகை‌த் ‌தீப‌த் ‌திரு‌விழா அ‌ன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகர் கோவில்களில் அக‌ண்ட கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இத்திருவிழா,திருவ‌ண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவசமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படும். ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார். “கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை) நாலாயிர திவ்யபிரபந்தததில் பெரியாழ்வார் பரம்பரையாக திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருஓண நன்னாளில் நாரசிம்மா அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போக பல்லாண்டு வாழ்த்துவமே “எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6 தேவாரத்த்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார் “மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2 இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடேட், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும். கிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேர பெண்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு ("Dul Haji") 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) ("Wesak") வைகாசி மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் அவர்கள் பிறந்ததும் இந்நாளே, ஞானோதயம் பெற்றதும் இந்நாளே மற்றும் அவர் இயற்கை எய்தியதும் இந்நாளே. இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது. இராமையன் இராமையன் என்ற இராமப்பய்யன் மதுரை நாயக்க வம்சத்து மன்னர் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாகப் பணியாற்றியவர். "இராமப்பய்யன் அம்மானை" என்ற நாட்டுக் கதைப்பாடலின் கதைப்பொருள். இராமையன் மன்னர் திருமலை நாயக்கரின் படையில் பணியாற்றிய அந்தணர் ஆவார் கத்திச் சண்டையிடும் திறமையால் புகழடைந்த இவர் படிப்படியாக உயர்ந்து நாயக்க மன்னர்களின் படையின் தளபதியாக ஆனார்.. இராமையனின் முதல் பெரும்போர் மைசூர் அரசின் படைத்தளபதி "ஹரசுர நந்தி ராசா" என்பவருடன் 1633 ஆம் ஆண்டு நடைபெற்றது. மதுரை நாயக்க அரசின் மீது படையெடுத்து திண்டுக்கல் வரை வந்த ஹரசுர நந்தி ராசாவை இராமையனும் கன்னிவாடி பாளையக்காரர் அரங்கண்ண நாயக்கரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். திருவிதாங்கூர் மீது 1634 - 1635 ஆம் ஆண்டு நாயக்கர் படை தொடுத்த போரிலும் இராமையன் பங்கு பெற்றார். இராமநாதபுரம் "சேதுபதி சடைக்கண்". இவனுடைய முறைகேடாகப் பிறந்த சகோதரன் "தம்பி" ஆவான். 1639 ஆம் ஆண்டு தம்பி சடைக்கனுக்கு எதிராக புரட்சி செய்து அரசு கட்டிலை அடைய முயற்சித்தான். திருமலை மன்னர் இந்தப் புரட்சி வீரன் தம்பியை ஆதரித்து ஒரு பெரும்படையை இராமையன் தலைமையில் அனுப்பி வைத்தார். இந்த மறவர் மண்ணில் சேதுபதியின் மருமகன் "வன்னி" நடத்திய படையுடன் இராமையன் போரிட்டார். போர் ஐந்து மாதங்கள் நடந்தது. வன்னி போரில் தோற்றான். சேதுபதியோ பாம்பன் தீவில் ஓடி ஒளிந்தான் பின்னர் பிடிபட்டு கைது செய்யப்பட்டான். இராமையன் 1639 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரில் காட்டிய வீரம் நாடறிந்த தமிழ் நாட்டுக் கதைப்பாடலான இராமப்பய்யன் அம்மானை கதைப்பொருளாக ஆக்கம் பெற்றுள்ளது.. இந்தக் கதைப்பாடலில் சடைக்கண் தொடக்கத்தில் இராமையனை இழிவாக கேலி செய்கிறான். போர் முடிவுற்ற பின்பு இராமையன் மன்னர் திருமலை நாயக்கருக்கு அடியில் கண்டவாறு செய்தி அனுப்புகிறார்:: இராமையன் இராமநாதபுரம் போரில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இறந்துவிடுகிறார். இவருடைய மரணம் 1639 ஆம் ஆண்டுக்கும் 1648 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வாய்புள்ளது... நிகமகாமணி நிகமகாமணி இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். ரத்னபூசிணி ரத்னபூசிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். குஷ்வந்த் சிங் குஷ்வந்த் சிங் ("Khushwant Singh"; பெப்ரவரி 2,1915 - மார்ச்சு 20, 2014) பஞ்சாபை சேர்ந்த முதுபெரும் புதின ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் பல்வேறு பத்திரிகைகள், வார இதழ்களில் பணியாற்றியுள்ளார். இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷண் விருதை 2007 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவின் கீழ் பெற்றார். மேற்கத்திய கலாச்சாரத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இவரது பெரும்பாலான படைப்புகள் இருக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு. பாக்கிச்தானின் பஞ்சாபில் உள்ள ஹதாலியில் 1915ஆம் ஆண்டு பிப்பிரவரி 2இல் பிறந்தார்.தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்த குஷ்வந்த் தில்லி,லாகூர் ஆகிய நகரங்களில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியிலும் பயின்றார். குஷ்வந்த்சிங் 1947இல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சேருவதற்குமுன் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நடுவணரசு திட்டக்குழுவுக்காக யோஜனா என்னும் பத்திரிக்கையை நிறுவினார்.மேலும் தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா ’தி இந்துஸ்தான் டைம்ஸ்’ ’தி நேசனல் ஹெரால்ட்’ ஆகிய செய்தி இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 அன்று தனது 99ஆவது வயதில் காலமானார். சேகரச்சந்திரிக்கா சேகரச்சந்திரிக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 45 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வசு" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சுபபந்துவராளி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். வ. களத்தூர் வ.களத்தூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 45லிருந்து 7 கி.மீ. மேற்க்கில் அமைந்துள்து வெள்ளாற்றின் கிளை ஆறான கல்லாற்றின் இருபுறமும் வ.களத்தூர் அமைந்துள்ளது. வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள இக்கிராமம் களத்தூர், வண்ணாரம்பூண்டி , பாரதி நகர் , வள்ளியூர் , ராயப்பா நகர் மற்றும் மில்லத் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்., , வ.களத்தூர், கிராமம், வேப்பந்தட்டை ஒன்றியம் - பெரம்பலூர் மாவட்ட விவகார எல்லைக்குட்பட்டது. வ.களத்தூர், வண்ணாரம்பூண்டி, ராயப்பா நகர், மேட்டுச்சேரி, மில்லத் நகர். மேற்கே பிம்பலூர் ஊராட்சி,கிழக்கே அகரம், பேரயூர் ஊராட்சிகள், வடக்கே திருவாளாந்துரை, தெற்கே மேட்டுப்பாளயம். வ.களத்தூர் ஊராட்ச்சி மன்றத்தின் 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 32000 ஆகும். மாரியம்மன் திருக்கோவில் களத்தூரில் அமைந்துள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருநாள் அனைத்து சமுதாய மக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இக் கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பணப்பயிர்களான கரும்பு, நெல், பருத்தி, சோளம் முக்கிய விவசாயங்களாகும். தமிழகத்தின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ளது. இங்கு அனைத்து தனி நபர் மற்றும் விவசாயிகள், மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறுகின்றனர். விரைவான வங்கிச்சேவைக்காக வங்கி வணிகத்தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரத ரிசர்வ் வங்கியின் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் எல்லைக்குட்பட்ட திருவாளந்துரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் தொலைபேசி எண் : 9840176193, 04328-251225 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் கடைத்தெரு அருகிலும் செயல்படுகிறது. BSNL தொலை பேசி அலுவலகம் இங்கு இயங்கி வருகிறது.தவிர தனியார் செல்போன் சேவைகள் AIRCEL,AIRTEL,BSNL CELONE,RELIANCE,TATA TOCOMO,VODAFONE முழுவதும் உள்ளது. 621117 . அருகில் உள்ள தலைமை அஞ்சலகம்: பெரம்பலூர் - 621212. பெரம்பலூரிருந்து எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளது. களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். . இங்கு கால்நடை மருந்தகம் ஒன்றும் இயங்கி வருகிறது. களத்தூரில் காவல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது களத்தூர், திருவாளந்துரை, பசும்பலூர், நெய்குப்பை ஆகிய பகுதி மக்களின் பாதுகாவலனாக இக் காவல்நிலையம் இயங்கி வருகின்றது. அனுபாவி முருகன் கோவில் கோவையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் இங்கு யானைகள் கூட்டமாக நீர் அருந்த வருவதாலும் மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. சின்னத் தடாகம் இதன் அருகே உள்ள பெரிய ஊர் ஆகும். கோவை மாநகரில் செங்கல் சூளைகளுக்கு இந்தப் பகுதி புகழ் பெற்றது. கிருத்திகை விழா மாதந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெரும். விண்வெளிப் பறப்பு விண்வெளிப் பறப்பு ("spacefilght") என்பது, விண்வெளியினுட் செல்லும் அல்லது அதன் ஊடாகச் செல்லும் ஒரு எறியப் பறப்பு ஆகும். விண்வெளிப் பறப்பு, மனிதரைக் கொண்டு செல்வதாக அல்லது மனிதர் இல்லாத பறப்பாக அமையக்கூடும். உருசியாவின் சோயுசு திட்டம் அமெரிக்காவின், விண்வெளியோடத் திட்டம், பன்னாட்டு விண்வெளி மையம் என்பன மனிதரைக் கொண்டு செல்லும் விண்வெளிப் பறப்புக்களுக்கு எடுத்துக்காட்டுகள். விண்வெளி ஆய்வுகளுக்காக புவியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் செல்லும் விண்ணாய்வி ("space probe") விண்கலங்களும், புவியைச் சுற்றிய சுற்றுப் பாதையில் இருக்கும் தகவல் தொடர்புச் செய்மதிகளும் ஆளில்லா விண்வெளிப் பறப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவை தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் மூலமாக இயக்கப்படுகின்றன அல்லது தானாக இயங்கும்படி அமைக்கப்படுகின்றன. விண்வெளிப் பறப்புகள் விண்வெளி ஆய்வுகளில் பயன்படுவதுடன், செய்மதித் தொலைத்தொடர்பு போன்ற வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுகின்றன. விண்ணாய்வகம், கண்காணிப்புச் செய்மதிகள், புவிக் கவனிப்புச் செய்மதிகள் என்பன விண்வெளிப் பறப்பின் வணிகமல்லாத பிற பயன்பாடுகள். விண்வெளிப் பறப்பு ஏவுகணைகள் மூலம் ஏவப்படுவதில் தொடங்குகிறது. ஏவுகணைகள் விண்கலம் அல்லது செய்மதி புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு வெளியேற உதவுகிறது. விண்வெளிக்குள் சென்ற பின்னர் உந்துதல் மூலமோ அல்லது உந்துதல் இல்லாமலோ ஏற்படும் இயக்கம் வானியக்கவியல் என்னும் துறையுள் அடங்குகிறது. சில விண்கலங்கள் முடிவில்லாமல் விண்வெளியிலேயே பறந்துகொண்டிருக்கின்றன. வேறு சில மீண்டும் புவியின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விடுகின்றன. சில நிலவிலோ வேறு கோள்களிலோ விழுகின்றன. விண்வெளிப் பறப்புக் குறித்த நடைமுறைக்கு ஒத்த முதல் முன்மொழிவை ரசியாவைச் சேர்ந்த கொன்சுட்டன்டின் சியோல்கோவ்சுக்கி என்பவர் முன்வைத்தார். இது தொடர்பில் அவர் எழுதிய "எதிர்வினைக் கருவிகளைப் பயன்படுத்தும் அண்டவெளி ஆய்வுப் பயணம்" "(ரசிய மொழி: Исследование мировых пространств реактивными приборами, ஆங்கிலம்: The Exploration of Cosmic Space by Means of Reaction Devices)" என்னும் நூல் 1903 ஆம் ஆண்டில் வெளிவந்தது. எனினும், இந்தக் கோட்பாட்டு நூல் ரசியாவுக்கு வெளியே அதிகம் செல்வாக்குப் பெறவில்லை. ராபர்ட் எச். கொடார்ட் எழுதிய "அதிகூடிய உயரங்களை அடைவதற்கான ஒரு வழிமுறை" "(A Method of Reaching Extreme Altitudes)" என்னும் கட்டுரை 1919 ஆம் ஆண்டு வெளிவந்த பின்னரே விண்வெளிப் பறப்பு பொறியியல் அடிப்படையில் சாத்தியமான ஒன்றாகியது. இக்கட்டுரையில் அவர் விளக்கிய நீர்ம எரிபொருள் ஏவுகணைகளுக்கு டி லாவல் குழாய்வாய்களைப் பயன்படுத்தும் முறை, கோளிடைப் பயணத்துக்குப் போதுமான ஆற்றலைக் கொடுத்து அதனைச் சாத்தியம் ஆக்கியது. விண்வெளியின் வெற்றிடத்தில் இவ்வாறான ஏவுகணைகள் செயற்படக் கூடியவை என்பதை ஆய்வுகூடத்திலும் அவர் நிறுவிக் காட்டினார். இது இயலக்கூடியது என்பதை அக்காலத்து அறிவியலாளர்கள் சிலர் நம்பவில்லை. பிற்காலத்தில் விண்வெளிப் பறப்பில் முக்கியமான பங்கு வகித்த ஏர்மன் ஒபேர்த் (Hermann Oberth), வேர்னெர் வொன் புரோன் (Wernher Von Braun) ஆகியோர் இக் கட்டுரையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். 100 கிமீ உயரம்வரை சென்று விண்வெளிக்குள் நுழைந்த முதல் ஏவுகணை செருமனியின் வி-2 ஏவுகணை ஆகும். இது 1944 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஒரு சோதனைப் பறப்பின்போது நிகழ்ந்தது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, சோவியத் ஒன்றியம் ஏவிய இசுப்புட்னிக் 1, புவியைச் சுற்றிய முதல் செய்மதி ஆனது. மனிதனை ஏற்றிக்கொண்டு வெண்வெளிக்குள் நுழைந்த முதல் விண்கலம் வாசுட்டாக் 1. புவியை ஒரு முறை சுற்றிவந்த வாசுட்டாக் 1 விண்கலத்தில் விண்பயணி யூரி ககாரின் பயணம் செய்தார். செர்கே கொரோலியோவ், கெரிம் கெரிமோவ் என்னும் ஏவுகணை அறிவியலாளர்களே சோவியத் ஒன்றியத்தின் வாசுட்டாக் 1 திட்டத்தை வழிநடத்தியோர் ஆவர். விண்வெளிப் பறப்புக்கான ஏவுதல் விண்வெளித்தளம் ஒன்றில் இடம்பெறும். விண்வெளித்தளத்தில் நிலைக்குத்தாக ஏவுகணைகளை ஏவுவதற்கான ஏவுமேடைகள், சரக்கு வானூர்திகளும் இறக்கையோடு கூடிய விண்கலங்களும் பயன்படுத்துவதற்கான ஓடுபாதைகள் என்பன இருக்கும். இரைச்சல், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, விண்வெளித்தளங்களை மனிதர் வாழும் இடங்களில் இருந்து தொலைவில் அமைப்பது வழக்கம். ஏவு காலம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே விண்வெளி ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. ஏவு காலம், கோள்களின் இருப்பிடங்களிலும், ஏவுதளத்துக்குச் சார்பாக சுற்றுப்பாதையின் அமைவிடத்திலும் தங்கியுள்ளது. மிக முக்கியமான காரணியாக அமைவது புவி சுற்றுவது ஆகும். ஏவப்பட்ட பின்னர், புவியின் அச்சுடன் நிலையான கோணம் ஒன்றை அமைக்கும் வகையிலான, ஏறத்தாழ மாறாச் சமதளம் ஒன்றில் சுற்றுப்பாதை அமைந்திருக்கும். புவி சுற்றுவதும் இச் சுற்றுப்பாதையின் உள்ளேயே அமையும். ஏவுமேடை என்பது, விண்ணூர்திகளை விண்ணில் செலுத்துவதற்கான ஒரு நிலையான அமைப்பு. இது ஏவுகோபுரம், தீப்பிழம்புக் குழி போன்ற அமைப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வமைப்பைச் சுற்றிலும் பல்வேறு துணைக்கருவிகள் இருக்கும். இவை, ஏவுகணைகளை உரிய இடத்தில் நிறுத்துதல், எரிபொருள் நிரப்பல், பராமரித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன. கார்மென் கோட்டுக்கு வெளியில் அமைந்துள்ள பகுதி அனைத்தும் "விண்வெளி" என்பதே பொதுவாகப் பயன்படும் வரைவிலக்கணம். கார்மென் கோடு, புவியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) உயரத்தில் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், புவிப் பரப்பில் இருந்து 50 மைல்கள் (80 கிமீ) தொலைவுக்குப் புறத்தேயுள்ள வெளியே "விண்வெளி" என்று கொள்ளும் வழக்கமும் உண்டு. தற்போதைய நிலையில், ஏவுகணைகளைப் பயன்படுத்துவதே விண்வெளிக்குச் செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி. குறிப்பிட்ட உயரத்துக்குமேல் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதால், வழமையான வானூர்தி எந்திரங்களைப் பயன்படுத்தி வெண்வெளிக்குச் செல்ல முடியாது. ஏவுகணை எந்திரங்கள் உந்துபொருட்களை வெளியேற்றி ஏவுகணையை முன்னோக்கி உந்துவதன் மூலம், அதைச் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் போதுமான டெல்ட்டா-வியை (வேக மாற்றம்) உருவாக்குகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கான உந்தல் முறைமைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: மனிதரோடு கூடிய விண்கலங்களை ஏவும் முறைமைகளில் ஏவுநிலைத் தப்பிப்பு முறைமையே பொதுவாகப் பயன்படுகிறது. இது, ஏவும்போது ஆபத்தான பிழைகள் ஏற்படும் நிலைமைகளில் விண்பயணியர் தப்புவதற்கு உகந்ததாக உள்ளது. தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமாக இல்லாவிட்டாலும், விண்வெளியை அடைவதற்கான வேறு பல வழிகளையும் பலர் முன்மொழிந்துள்ளனர். விண்வெளி உயர்த்தி (space elevatior), சுற்றுயர்த்தி (rotovator) போன்ற எண்ணக்கருக்கள் நடைமுறைச் சாத்தியமான வழிகள் ஆவதற்குத் தற்போது கிடைப்பதிலும் மிகவும் வலுவான புதிய பொருட்கள் தேவை. மின்காந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலான ஏவு கண்ணி முறையைத் தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இவை தவிர, எதிர்வினைப் பொறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஏவுகணை உதவியுடன் இயங்கக்கூடிய தாரை வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளும், சுடுகலன் வழி ஏவுவதற்கான வழிமுறைகள் குறித்த முன்மொழிவுகளும் உள்ளன. நிலவுப் பயணத்துக்கோ அல்லது கோளிடைப் பயணத்துக்கோ ஒரு மூடிய சுற்றுப்பாதையை அடையவேண்டும் என்ற தேவை கிடையாது. ரசியாவின் தொடக்ககால விண்வெளி ஊர்திகள் சுற்றுப்பாதைக்குச் செல்லாமலேயே மிகவும் கூடிய உயரங்களுக்கு வெற்றிகரமாகச் சென்றுள்ளன. அப்பல்லோ திட்டங்களின் வடிவமைப்பின்போது, விண்கலங்களை நேரடியாகவே நிலவுக்கான வீசுபாதைக்குள் செலுத்தும் வழிமுறையையும் கவனத்துக்கு எடுத்தனர். எனினும், பின்னர், தற்காலிகமாக நிறுத்தற் சுற்றுப்பாதையில் செலுத்திப் பல சுற்றுக்களின் பின்பே நிலவுக்கான வீசுபாதையில் செலுத்தும் முறையைப் பின்பற்றினர். விண்கலம் புவிக்குள் மீண்டும் நுழைவதைத் தவிர்ப்பதற்கு நிறுத்தற் சுற்றுப்பாதை அண்மைப் புள்ளி போதிய உயரத்தில் இருக்கவேண்டும். இதனால் இந்த முறையில் கூடிய உந்துபொருட் செலவு ஏற்படும். இருந்தாலும், நிறுத்தற் சுற்றுப்பாதை அணுகுமுறை பல்வேறு வழிகளில் அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலை எளிமையாக்கியது. இது, ஏவு காலத்தைக் கணிசமான அளவு கூட்டியதன் மூலம், ஏவுதலின்போது சிறு பிழைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக ஏவுதலுக்கான சாத்தியப்பாட்டை அதிகரித்தது. நிறுத்தற் சுற்றுப்பாதை திட்டத்துக்கான உறுதியான இடைத்தளமாக அமைந்ததால், விண்கலப் பணிக்குழுவினரும், கட்டுப்பாட்டாளரும் விண்கலத்தை முற்றாகச் சரிபார்த்து அடுத்த கட்டமான நீண்டதூர நிலவுப் பயணத்துக்குத் தயாராவதற்குப் பல மணிநேர இடைவெளியை வழங்கியது. அத்தோடு, தேவை ஏற்பட்டால் பணிக்குழுவினர் புவிக்குத் திரும்புவதோ அல்லது இன்னொரு மாற்றுப் புவிச்சுற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ இலகு. திட்டத்தின் நிலவு நோக்கிய வீசுபாதை, வான் அலன் கதிர்வீச்சுப் பட்டையின் செறிவான பகுதியைத் தவிர்ப்பதற்கும் நிறுத்தற் சுற்றுப்பாதை உதவியது. நிறுத்தற் சுற்றுப்பாதையினால் ஏற்படக்கூடிய செயல்திறன் இழப்பைக் கூடிய அளவு குறைப்பதற்காக, அப்பல்லோ திட்டங்களில் நிறுத்தற் சுற்றுப்பாதையின் உயரத்தை முடியுமான அளவுக்குக் குறைத்தனர். எடுத்துக்காட்டாக அப்பல்லோ 15ன் நிறுத்தற் சுற்றுப்பாதையின் அளவு வழமைக்கு மாறாக 92.5 x 91.5 கடல் மைல்களாக இருந்தது. அந்த உயரத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டல இழுவை இருந்தது. எனினும், சட்டர்ன் 5 இன் மூன்றாம் கட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஐதரசன் வெளியேற்றத்தின் மூலம் இது பகுதியாகச் சரிசெய்யப்பட்டது. அத்துடன், குறைந்த கால நிறுத்தங்களுக்கு இது சகித்துக்கொள்ளக் கூடியதே. விண்வெளி இயங்கியல் என்பது விண்கலங்களின் வீசுபாதை தொடர்பான கல்வித்துறை. குறிப்பாக, இது தொடர்பில் ஈர்ப்பு, உந்தல் ஆகியவற்றின் தாக்கங்கள் பற்றி இத்துறை கவனத்தில் கொள்கிறது. விண்கலம் அடைய வேண்டிய இடத்தை, அளவுக்கதிகமான உந்துபொருட் செலவின்றிச் சரியான நேரத்தில் வந்தடைவதற்கு விண்வெளி இயங்கியல் உதவுகிறது. கலத்தைச் சுற்றுப்பாதையில் பேணுவதற்கும், அதன் திசையை மாற்றுவதற்கும், சுற்றுப்பாதைத் திசைமாற்று முறைமை ஒன்று தேவைப்படலாம். ஏவுகணை அல்லாத சுற்றுப்பாதை உந்தல் முறைகளும் உள்ளன. அவற்றுள், சூரியப் பாய்கள், காந்தப் பாய்கள், பிளாசுமாக்குமிழி காந்த முறைமை போன்றனவும், பிற கோள்களின் ஈர்ப்பைப் பயன்படுத்தும் முறைகளும் உள்ளன. சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் பெருமளவு இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன. விண்கலம் வளிமண்டலத்தில் காற்றியக்கச் சூடாக்கத்தினால் ஆவியாகி விடாமல் பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டுமானால் இந்த ஆற்றலை இல்லாமல் செய்யவேண்டும். காற்றியக்கச் சூடாக்கத்தில் இருந்து விண்கலத்தைப் பாதுகாப்பதற்குச் சிறப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும். மீள்நுழைவுக்குப் பின்னணியில் உள்ள கோட்பாடு அரி யூலியன் அலன் (Harry Julian Allen) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் மீள்நுழையும் கலங்கள் வளிமண்டலத்தை எதிர்கொள்ளும் பகுதி மழுங்கிய வடிவில் அமைந்திருக்கும். இந்த மழுங்கிய வடிவங்களினால் கலங்களின் இயக்க ஆற்றலின் 1% மட்டுமே வெப்பமாகக் கலத்தை அடையும். எஞ்சிய ஆற்றல் வெப்பமாக வளிமண்டலத்தை அடைகிறது. மேர்க்குரி, ஜெமினி, அப்பல்லோ போன்ற திட்டங்களில் கலங்கள் நீரில் பாய்ந்து தரையிறங்கின. இக் கலங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வேகத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. உருசியாவின் சோயுசுத் திட்டக் கலங்கள் நிலப்பகுதியில் தரை இறங்கும்படி வடிவமைக்கப்பட்டதால் அவை வேகக்குறைப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தரையிறங்கின. சோவியத்தின் புரான் கலங்கள் உயர் வேகத்தில் வழுக்கு முறையில் தரையைத் தொட்டன. ஒரு விண்கலம் வெற்றியுடன் தரயிறங்கிய பின்னர், அதில் இருப்போரையும், பொருட்களையும் மீட்க முடியும். சில வேளைகளில், கலம் தரையிறங்கும் முன்பே, கலம் வான்குடை உதவியுடன் இறங்கிக்கொண்டு இருக்கும்போது, நடுவானில் சிறப்பு வானூர்திகளைக் கொண்டு மீட்பதும் உண்டு. கொரோனா உளவுச் செய்மதியில் இருந்து படப் பேழைகளை மீட்பதற்கு இந்த முறை பயன்பட்டது. தென்னிந்தியத் திருச்சபை "தென் இந்திய திருச்சபை" (ஆங்கிலம் ; Church of South India = C.S.I = சி.எஸ்.ஐ.) என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது. இயேசு, தம்மை ஏற்று நம்பிக்கை கொள்கின்ற மக்களிடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்தி உரைத்த கீழ்வரும் சொற்கள் தென்னிந்தியத் திருச்சபை உருவாவதற்கு உந்துதலாக அமைந்தன: "அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" ("That they all may be one") என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபையின் விருதுவாக்காகவும் உள்ளது. தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிஷனெரி சங்கம் (LMS), மதுரை அமெரிக்கன் மிஷன், மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஷன் சபை, போன்றவைகள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய ஜக்கியச் சபை - (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தன. இந்த அமைப்பு மற்ற இந்திய புரோட்டஸ்தாந்து திருச்சபைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், அச்சபைகளுடன் தொடர்பு கொண்டு அவற்றையும் தென்னிந்திய ஜக்கியச் சபையில் இணைப்பதற்காக தரங்கம்பாடியில் 1919 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிலும். அதற்குப் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் பெரும்பங்கேற்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர் பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா. தமிழ்நாட்டில் பிறந்த இவர் ஆங்கிலிக்கன் சபையின் முதல் இந்தியப் பேராயராக 1912, திசம்பர் 29இல் திருநிலைப்பாடு பெற்று, புதிதாக நிறுவப்பட்ட தோர்ணக்கல் மாவட்டப் பேராயராக நியமனம் பெற்றிருந்தார். தென் இந்திய திருச்சபை பிரார்த்தனைகள் மற்றும் விவாதங்கள் இருபத்தெட்டு ஆண்டுகளின் விளைவாக, அதன் பயனாக 1920 தில் ஆங்கிலேக்கன் சபைகள் இதணுடன் இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். பின்பு இவர்களைத் தொடர்ந்து 1925தில் மெதடிஸ்ட் சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947லில் தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்ற மாபெரும் அமைப்பு உதயமானது. இந்த அமைப்பு 1947 - செப்டம்பர் 27 ஆம் நாள் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இது தென் இந்தியத் திருச்சபை தொடக்க செயல்பாட்டின் தலைமையில் திருவாங்கூர் மற்றும் கொச்சி மறை மாவட்டத்தில் பேராயராக மரியாதைக்குரிய (Rt Revd) சி.கே ஜேக்கப் என்பவர் ஆயராக பொறுப்பேற்றார். தென் இந்திய திருச்சபை திறப்பு விழா, தேவாலயங்களில் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து. இது ஒரு கூட்டமைப்பு குருபரிபாலன அல்லாத தேவாலயங்களில் இடையே உணரப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக. இந்த கூட்டமைப்பு நான்கு மரபுகள் அதாவது, ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), புரட்டாஸ்டன்ட், பிரிஸ்பைடீரியன், மற்றும் மெத்தடிஸ்ட், ஒன்றாக இனைந்தது. அப்போது தென்னிந்தியத் திருச்சபை பதினான்கு தேவாலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இன்று இருபத்தி இரண்டு தேவாலயத்தில், எட்டு தமிழ் நாட்டிலும், ஆந்திர பிரதேசத்தில் ஆறு, கேரளம் நான்கு, கர்நாடகம் மூன்று, மற்றும் இலங்கை ஒன்றும் உள்ளது. மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைத் தன்னகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த தென்னிந்தியத் திருச்சபையின் ஐக்கியத்தில், ஆர்காட் லூத்தரன் திருச்சபை (ALC), தமிழ் நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் திருச்சபை (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு திருச்சபை, இரட்சணிய சேனை திருச்சபை (Salvation Army), பெந்தேகோஸ்தே திருச்சபை, போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியத் திருச்சபையின் முத்திரை (லோகோ) இந்திய பாரம்பரியத்தை நினைவுறுத்தும் வகையில் தாமரையோடு இணைந்த சிலுவையுடன் காணப்படுகிறது. ( That they all may be one ) என்ற வசனத்தை நினைவு கூறும் வாக்கியமும் இதில் காணப்படுகிறது. இது கடவுள் மற்றும் மக்களின் ஒற்றுமை வெளிப்பாடு ஆகும். ஒரு வெண்மையின் பின்னணியில் உண்மையான நிறங்கள், சிவப்பு (வாழ்க்கையையும்) மற்றும் ஊதா (பக்தி மற்றும் சமயத்திற்க்கு) ஒரு இணைபிரியா தோழமை கடவுள் மற்றும் மனிதர் இடையே உள்ள விசித்திரமான ஒற்றுமையை விளக்குகின்றது. மேலும் தாமரை மற்றும் சிலுவை யை சுற்றி ஒரு வட்டவடிவத்தில் பொன்மொழி மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் (Church of South India) என்ற பெயர் வார்த்தைகள் சித்தரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 3.8 மில்லியன் உறுப்பினர்கள், 14,000 உள்ளூர் பிராத்தனைக் கூடங்கள் உள்ளது. உறுப்பினர்கள் பெரும்பாலான இந்தியவிலும் அதேவேளை, இலங்கை, அமெரிக்க ஜக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா, பக்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளனர். மேலும் தென்னிந்தியத் திருச்சபை உறுப்பினர்கள் புது தில்லி, கொல்கத்தா,போப்பால், பிலாய், மும்பை, புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றனர். தென்னிந்தியத் திருச்சபையானது தென் இந்தியா மற்றும் இலங்கை மொத்தம் 22 மறைமாவட்டங்கள் உள்ளது. அவைகள் கீழ் உள்ள பட்டியலில் அடங்கியுள்ளது: இந்த சபையின் தலைமையில் 2000 பள்ளிகள், 130 கல்லூரிகள், மற்றும் தென் இந்தியாவில் 104 மருத்துவமனைகள் இயங்குகின்றது. 1960 ஆம் ஆண்டு தேவாலய அதன் சமூக பொறுப்பு உணர்வு மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை தொடங்கியது. இந்தியா முழுவதும் 50 க்கும் மேல்பட்ட திட்டங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொத்தம் 35,000 பேர், மற்றும் 500 குடியிருப்பு விடுதிகள், இன்னும் 50 பயிற்சி மையங்கள், உள்ளன. மேலும் தென்னிந்தியத் திருச்சபையின் தெற்கு கேரளம் மாவட்டமான திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. மேலும் தலித் மற்றும் ஆதிவாசி சமூதாயத்தினர் நல வாழ்வு திட்டங்கள், பள்ளிக் கூடங்கள், பிராத்தனைக் கூடங்கள். சமூகங்களின் தேவைகளுக்கு பரிமாறுதல் என ஒரு குறிப்பிட்ட உதவிகளை இந்த அமைப்பு ஏற்றுக் கொள்கிறது. இந்த தேவாலயத்தின் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் "செனட் ஆஃப் செராம்பூர் கல்லூரி", என்ற இறையியல் கல்வி வாரியம் இணைக்கப்பெற்ற நிறுவனங்கள் வழங்கப்படும் இறையியல் பட்டங்கள் அங்கீகரிக்கிறது. இவைகள் பின்வருமாறு: முழுநிறை காலமுறை மீளாய்வு முழுநிறை காலமுறை மீளாய்வு (The Universal Periodic Review (UPR)) என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஒரு பொறிமுறை ஆகும். இது நாடுகளின் மனித உரிமைப் பேணலை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கும் ஒரு செயலாக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 16 நாட்டு அரசுகள் இவ்வாறான மீளாய்வு செயப்படும். இந்தச் செயற்பாடு 2005 ம் ஆண்டு ஐ.நா சீர்திருத்த செயற்பாடுகளில் ஒன்றாகத் தொடங்கப்பட்டது. இபிரப்புவேரா பூங்கா இபிரப்புவேரா பூங்கா ("Ibirapuera Park") பிரேசில் சாவோ பாவுலோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 545 ஏக்கர்கள் அல்லது 1.58 சதுர கிமீ. இப்பூங்கா ஆகஸ்டு 21, 1954 ஆம் நாள் திறக்கப்பட்டது. தொழில் பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும். ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தை செலவு செய்கின்றனர். முழு நேர தொழில், பகுதி நேர தொழில், தற்காலிக தொழில், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். மத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது. கோளம் மற்றும் உருளை பற்றி கோளம் மற்றும் உருளை பற்றி ("On the Sphere and Cylinder") என்பது ஆர்க்கிமிடீசின் ஒரு படைப்பு.அவர் கிமு 225 -ல் இதனை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார். ஒரு கோளத்தின் மேற்பரப்பளவு காண்பதைப் பற்றியும் ஒரு உருளையின் கனஅளவுக்கும் அவ்வுருளைக்குள் அமைந்துள்ள கோளத்தின் கனஅளவுக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் இப்புத்தகம் விவரங்களைத் தருகிறது. இவ்வாறு கோளத்தின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் அதைச் சுற்றி அமைந்த உருளையின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பை முதல்முதலாக கண்டுபிடித்தது ஆர்க்கிமிடீசுதான். "கோளம் மற்றும் உருளை பற்றி" புத்தகத்தில் தரப்பட்டுள்ள முக்கிய வாய்ப்பாடுகள்: கோளத்தின் மேற்பரப்பு, உருளைக்குள் அமைக்கப்பட்ட கோளத்தின் கன அளவு, உருளையின் மேற்பரப்பு மற்றும் கனஅளவு ஆகியவற்றைக் கணக்கிடும் வாய்ப்பாடுகளாகும். இதன்படி, உருளையின் மேற்பரப்பு: உருளையின் கனஅளவு: ஒரு கோளத்தின் மேற்பரப்பு அதன்மீது வரைப்படும் பெரு வட்டத்தின் பரப்பளவைப் போல நான்கு மடங்காக இருக்கும் என்பதை ஆர்க்கிமிடீசு கண்டறிந்தார். இதனைப் பயன்படுத்தி இப்பொழுது கோளத்தின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடு: formula_3 கோளத்தின் கனஅளவு அதைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு உருளையின் கன அளவில் 2/3 பங்காக இருக்குமென அவர் கூறியதின்படி கோளத்தின் கன அளவு காணும் வாய்ப்பாடு: கோளத்தின் கனஅளவும் மேற்பரப்பும் முறையே அதைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு உருளையின் கன அளவு மற்றும் மேற்பரப்பில் 2/3 பங்காக அமையுமென்ற தனது கண்டுபிடிப்பால் பெருமையடைந்த ஆர்க்கிமிடீசு தனது கல்லறைமீது உருளைக்குள் அமைக்கப்பட்ட கோள உருவினை அமைக்கும் கேட்டுக் கொண்டார். செடிகொடிகளால் மூடப்பட்டுக் கிடந்த அக்கல்லறை பிற்காலத்தில் ரோம மெய்யியலாளர் "மார்க்கசு சிசெரோவால்" கண்டுபிடிக்கப்பட்டது. நோக்கியா 808 ப்யூர்வியூ நோக்கியா 808 ப்யூர்வியூ என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசி 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள், மொபைல் வேர்ல்டு காங்கிரசு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கைப்பேசி 41 மெகாபிக்சல் ஒளிப்படக்கருவியைக் கொண்ட முதல் கைப்பேசி ஆகும். மேலும் இந்த வகை தொலைப்பேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன. தற்போது இந்த வகை கைப்பேசியின் மதிப்பு 835 அமெரிக்க டாலர் ஆகும். இப்போது விலை குறைந்திருக்கலாம் என்பதைக் கவனத்திற்கொள்ளவும். செங்குந்தர் பிரபந்தத் திரட்டு செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, வண்ணக்களஞ்சியம் பாடிய காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் 1926-ம் ஆண்டு வெளியிட்ட நூல் ஆகும். இந்நூல் ஈட்டியெழுபது, எழுப்பெழுபது, களிப்பொருபது, புகழேந்தியார் பாடிய திருக்கை வழக்கம், செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கலித்துறையந்தாதி, தசாங்கம், ஊசல், அனுபந்தம் முதலிய செங்குந்த மரபினரைப் பற்றிய நூல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் (Castes and Tribes of Southern India) என்ற பெருநூலிற்கு நிகராக எழுதப்பட்டதாகும். 1926-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில், பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்களின் தொகுப்பு. செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் கீழ்காணும் நூல்களும், அதனுடைய விளக்கவுரையும் அமையப் பெற்று இருக்கிறது. குல்லை குல்லை மலர் வெண்மையானது. கோடைக்காலத்தில் பூக்கும். ஆண்களும் பெண்களும் இதனைத் தனியாகக் கட்டியும் வேறு சில மலர்களோடு சேர்த்துக் கட்டிடியும் அணிந்துகொள்வர். இந்த மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் இவை. சத்திரபதி சாகு மகராஜ் சத்திரபதி சாகு மகராஜ் (Shahu IV -Rajarshi Shahu 26 ஜுன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர். 'இராஜர்சி சாகுஜி சத்திரபதி' எனவும் 'சத்திரபதி சாகுஜி மகராஜ்' எனவும் அறியப்பட்டார். சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர். 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர். ஏசிசி லிமிடெட் ஏசிசி லிமிடெட்(ACC Limited) (, ) மும்பை அடிப்படையாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. இதன் பதிவு அலுவலகத்தை சிமெண்ட் மாளிகை என்று அழைக்கப்படுகிறது, இது மும்பையின் மகரிஷி கார்வே சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இ சென்செக்ஸ் கணக்கிடுவதில் பங்கு வகிக்கிறது. த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (திரைப்படம்) த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (The Beat That My Heart Skipped) 2005 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். பாஸ்கல் கசிடக்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஜாக்குவஸ் ஆடியர்ட் ஆல் இயக்கப்பட்டது. ரொமேயின் டுரிஸ், நீல்ஸ் அரெஸ்ட்ரப், ஜோனதன் சகாய், ஜில்லஸ் கோஹன், லின் டான் பாம், அவுரி அடிகா, எம்மானுவேல் தேவோஸ், மெலனி லாரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து சீசர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான சீசர் விருதையும் சேர்த்து எட்டு சீசர் விருதுகளை வென்றது. தமிழ்நாடு கல்வி மாவட்டங்கள் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டின் 32 வருவாய் மாவட்டங்களில் 68 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையின் கீழ் அலுவலகம் ஒன்று இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்குதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. ரமாமனோகரி ரமாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. ஷரபத்வஜா ஷரபத்வஜா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும். அலகுச் சதுரம் கணிதத்தில் அலகுச் சதுரம் ("unit square") என்பது ஓரலகு பக்க நீளமுள்ள ஒரு சதுரம். பெரும்பாலும் இருபரிமாண கார்ட்டீசியன் தளத்தில் அலகுச் சதுரம் என்பது (0, 0), (1, 0), (0, 1), மற்றும் (1, 1) ஆகிய நான்கு புள்ளிகளை உச்சிகளாகக் கொண்ட சதுரத்தைக் குறிக்கும்.. ("x" , "y") அச்சுதூரங்கள் கொண்ட கார்ட்டீசியன் ஆய முறைமையில் வரையறுக்கப்பட்ட அலகுச் சதுரத்துக்குள் அமையும் புள்ளிகளின் "x" மற்றும் "y" அச்சுதூரங்களின் மதிப்பு [0, 1] -மூடிய இடைவெளியிலேயே அமையும். அதாவது அலகுச் சதுரமானது இடைவெளி I -ன் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அமையும். இங்கு I என்பது மூடிய அலகு இடைவெளி [0, 1] -ஐக் குறிக்கும். கலப்பெண் தளத்தில் அலகுச் சதுரத்தின் முனைகள் 0, 1, formula_1, மற்றும் 1 + formula_1 -ல் அமைகின்றன.. சிவக்காம்போதி சிவக்காம்போதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு. இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-சாடவ இராகம் எனப்படுகின்றது. சுத்த தோடி சுத்த தோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது எட்டாவது மேளகர்த்தா இராகமும், "நேத்ர" என்று அழைக்கப்படும் இரண்டாவது சக்கரத்தின் இரண்டாவது இராகமுமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது. சுராநந்தினி சுராநந்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளது. தீபகற்ப இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை தமிழகம் பரவியுள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு சற்றேறக்குறைய முக்கோண வடிவமான அமைப்பினைப் பெற்றாதாகும். மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கையமைப்பு பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது. இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன. பொதுவாக தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகிறது. இதன் சராசரி யுஅரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டின் மலைத்தொடரின் அதிகபட்ச உயரமான முகடுகள் (சிகரங்கள்) தொட்டபெட்டா (2620 மீ.) மற்றும் முக்கூர்த்தி( 2540 மீ) ஆகும். மேற்கு மலைத்தொடரின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி சுமார் 2500 ச.மீ பரப்பில் பரவிக் காணப்படுகின்றது. இவ்வுயர் நிலப்பகுதியின் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும். அவற்றில் தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று கூடுகின்றன. தமிழ்நாட்டின் நீலகிரியில் இருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையில் இருந்தும் சுமார் 1500 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர் வரை உயரமுள்ள ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கிச் செல்கின்றது. இதற்குப் பழனிக்குன்றுகள் என்று பெயர். பழனிக்குன்றுகளுக்குத் தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25.கி.மீ நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகின்றாது. இது பாலக்காட்டுக் கணவாய் எனப்படும். பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் உள்ளன. ஏலமலைத் தொகுதியில் செழிப்பு மிக்கக் கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. வருச நாடு மலைக்கும் அகத்திய மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டைக் கணவாய் என அழைக்கப்படுகிறது, சமவெளிகளையும் பீட பூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய் கடலூர் மாவட்டத்தைச் சமவெளிப்பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமிப் பகுதியோடும் இணைக்கிறது. இடைவெளியற்று நீளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் பாலக்காடும் செங்கோட்டையும் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. இம்மலைகளின் சராசரி உயரம் 1100மீ முதல் 1600 மீ வரை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை. இதன் உயரம் 1500 மீ முதல் 1600 மீ வரை ஆகும். இடைவெளிவிட்டுக் காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் மலைகள் என அழைக்கப்படுகின்றன. இம்மலைப்பகுதிகள் வெவேறு பகுதிகளில் வெவேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை: மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மேட்டு நிலத்தில் சந்திக்கின்றன. இங்கிருந்து 24 கி.மீ. தொலைவில் கீழ்நோக்கிச் சுமார் 1800 மீ. உயரத்தில் கோயம்புத்தூர் மேட்டு நிலத்தை நோக்கி இவ்வுயர் நிலம் சரிகின்றது. அங்கிருந்து மேலும் சரிந்து சேர்வராயன் உயர்நிலங்களுக்கு மேற்காக பாராமகால் பீடபூமி என்றழைக்கப்படும் தருமபுரி பீடபூமி அமைந்துள்ளது. இம்மேட்டு நிலத்தின் சராசரி உயரம் 300 மீ. முதல் 700.மீ ஆகும். இது மேற்கில் மைசூர் மேட்டு நிலங்களை இணைக்கிறது. பொதுவாகத் தமிழ்நாட்டின் மேட்டுநிலங்களின் சராசரி உயரம் கிழக்கில் இருந்து சுமார்120 மீட்டர்களில் இருந்து மேற்காக 300 முதல் 400 மீ, வரை உயர்ந்து காணப்படுகிறது. பொதுவாகத் தமிழ்நாட்டின் பீடபூமிகளைக் கோயமுத்தூர் பீடபூமி மதுரை பீடபூமி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவ்விரு பீடபூமிகளுக்கிடையே பல தனித்த குன்றுகள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை இவ்வகைக் குன்றுகளுள் ஒன்றாகும். தமிழ் நாட்டின் சமவெளிகள் ஆற்றுச் சமவெளி மற்றும் கடலோரச்சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆற்றுச் சமவெளிகளில் தமிழ்நாட்டின் முதன்மை ஆறுகளின் செய்கையால் அமையப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளிப்பகுதியின் வண்டல்மண் வளம் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டதே ஆகும். வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளால் சமவெளிகள் ஏற்படுத்தப்படுகின்றன. நடு ஆற்றுச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளினால் ஏற்படுத்த்தப்படுகின்றன. தெற்கே பாயும் வைகை, வைப்பார் மற்றும் தாமிரவருணி ஆகிய ஆறுகள் தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கியுள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர சமவெளி தொன்று தொட்டு "சோழமண்டலச் சமவெளி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு கடற்கரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை மெரீனாக் கடற்கரை உலகின் அழகிய இரண்டாவது பெரிய கடற்கரையாகும். இக்கடற்கரை சுமார் 13 கி.மீ நீளம் வரை பரவியுள்ளது இது சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத்தலம் மற்றும் பொழுதுபோக்குத் தலமும் ஆகும். அழகிய கடல்நிலத் தோற்றங்களுக்கும் அலைகளே இல்லாத கடற்பரப்பிற்கும் இராமேஸ்வரம் கடற்கரை புகழ்பெற்றதாகும். இங்கு அலைகள் 3 செ.மீ க்கும் மிகாத அளவிற்கு மட்டுமே எழும்புவதால் இது பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. கபாடபுரம் (புதினம்) கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான செய்திகளை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது. மேலும் இந்நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்று. கபாடபுரம் என்ற பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரத்தில் அமர்ந்து பாண்டி நாட்டை அனாகுலப் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆழ்கிறான். இவரது தந்தையாரான வெண்டேர்ச் செழியன் (முதிய பாண்டியர்) என்பவரே இடைச்சங்கத்தையும் கபாடபுரத்தையும் நிறுவிய முதலாம் பாண்டிய மன்னர். இவரது அநாகுல பாண்டியன் வழி மகனான சாரகுண பாண்டியன் (இளைய பாண்டியன்) என்பவனே இப்புதினக் கதையின் நாயகனாவான். குருகுலக் கல்வியை அவிநயனார் மற்றும் சிகண்டியார் என்ற அகத்தியரின் சீடர்களிடம் கற்று முடித்த சாரகுணன் கபாடபுரத்தைக் காண நீண்ட நாள் கழித்து ஒரு திருவிழா நாளில் வருகிறான். வரும் வழியில் கண்ணுக்கினியாள் என்ற பாணர் குலப் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இக்காதலை அறிந்து கொள்ளும் வெண்டேர்ச் செழியன் மன்னர்களுக்கு கலைகளின் மீதும் பெண்களின் மீதும் அதிக நாட்டம் இருக்கக்கூடாதென்று கூறி சில அரச வேலைகளைக் கொடுத்து அவனின் நோக்கத்தை அரசத்தந்திரங்களில் திருப்ப முயல்கிறார். இசை மீதும் கண்ணுக்கினியாள் மீதும் தீராத காதல் கொண்ட சாரகுணனின் போக்கு அரச தந்திரங்களில் அவ்வளவாக திரும்பாமல் இருக்கிறது. கடம்பர், அவுனர் போன்ற திருடரினத்தைச் சேர்ந்தவர்கள் கபாடபுர முத்து மற்றும் ரத்தினங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளைத் சாரகுணனும் தேர்ப்பாகன் மற்றும் வீரனான முடிநாகனும் சேர்ந்து முறியடித்தும் அதில் திருப்தி கொள்ளாத முதிய பாண்டியர் அவர்களிருவரையும் தென்பழந்தீவுகள் என்னும் பயங்கர நாகரிகத்தைக் கொண்ட மக்களினங்கள் வாழும் தீவுகளின் தொகுதிக்கு அரசத்தந்திரங்களை அனுபவம் மூலம் கற்பதற்கு அனுப்பி வைக்கிறார். அதைக் கண்ணுக்கினியாளிடம் கூற நினைத்தும் முடியாமல் சாரகுணன் தென்பழந்தீவுகளுக்கு சென்று சில நாட்களுக்குப் பின் திரும்புகிறான். மீண்டும் கண்ணுக்கினியாளைக் கண்டு அவளின் யாழ் இசையின் மீது ஈர்க்கப்பட்டு புதிய இசையிலக்கணம் படைக்க வேண்டுமென நினைக்கிறான். அதை தன் இசை ஆசான் சிகண்டியாரிடம் கூற அவர் கண்ணுக்கினியாளின் யாழிசையை நேரில் கேட்டு இசை நுனுக்கம் என்னும் நூலை இடைச்சங்கம் மீண்டும் நடக்கும் நாளன்று அரங்கேற்றி விட வேண்டும் என்று அதற்கு வெண்டேர்ச் செழியன் சம்மதத்தையும் பெறுகிறார் சிகண்டியார். கண்ணுக்கினியாளின் மீது சாரகுணன் காதல் அதிகமாவதைக் கண்ட வெண்டேர்ச் செழியன் பாணர்களை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மறைமுகமாக வேண்டுகிறார். இதற்கிடையில் இடைச்சங்கத்தில் இசைநுணுக்கம் நூல் அதற்குரிய கண்ணுக்கினியாளை மரியாதை செய்யாமலேயே அரங்கேறுகிறது. கண்ணுக்கினியாள் தன் யாழை உடைத்து சாரகுணன் பார்க்கும் இடத்தில் விட்டுச் செல்கிறாள். இடைச்சங்கம் கலைந்தபின் அவளைக் காணச்சென்று பாணர்கள் நகரை விட்டு வெளியேறிவிட்ட செய்தியறிந்த சாரகுணன் காதல் தோல்வியால் மிகுந்த மனவருத்தத்துடன் கபாடபுரத்திற்கு திரும்புகிறான். கபாடபுரத்தின் கோட்டைக் கதவுகளை போல் அவன் மனமும் அடைத்துக் கொள்கிறது. லா பாஸ் நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, , ), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது. அரியநாத முதலியார் தளவாய் அரியநாத முதலியார், விசயநகர முன்னாள் அரசப் பிரதிநிதியும் (வைஸ்ராய்) மற்றும் பின்னாள் ஆட்சியாளருமான விசுவநாத நாயக்கர் (1529–1564 ) ஏற்படுத்திய, மதுரை நாயக்க மன்னர்கள் அரசில் பணியாற்றிய தொண்டை மண்டல சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த தளவாயும் முதலமைச்சருமாவார். இவர் பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பை (quasi-feudal organization of regions) நாட்டின் பாளையங்களில் பாளையக்காரர் முறை (poligar or the palayakkarar system) என்ற பெயரில் நிறுவினார். இந்த அமைப்பில் நாட்டின் பகுதிகள் பாளையங்களாகப் (palayams) (சிறு இளவரசாட்சிகள்) (small principalities) பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் (குறுநில முதன்மையர்கள்) (petty chiefs) ஆளுகையில் நிர்வாகிக்கப்பட்டன.. இவர் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களை 72 பாளையக்காரர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். அரியநாத முதலியார் இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு முந்திய இராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் தென் தமிழ்நாட்டில் குடிமக்களின் மிகுந்த மதிப்பையும் (cult status) மரியாதையையும் பெற்றிருந்தார். இவர், கால்நடைகளைப் பராமரித்தும் வேட்டையாடியும் வாழ்ந்த குழுக்களிடையே "அடைக்கலமளித்துக் காக்கும் புரவலர்" (tutelary patron figure) என்றறியப்பட்டார். இன்றளவும் கூட தென்தமிழ் நாட்டின் பாளையக்காரர்கள் (நிலமானிய முறை) இவரை நினைவு கூர்கிறார்கள். புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள் அமைந்துள்ள "ஆயிரம் கால் மண்டபம்" 1569 ஆம் ஆண்டு இவரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம்.. அரியநாத முதலியார் தொண்டைமண்டலத்தில் (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம்) அமைந்துள்ள மெய்ப்பேடு என்ற கிராமத்தில் தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய, முதலியார் இனத்தில் "காளத்தியப்பருக்கும்" "சிவகாமிக்கும்" மகனாகப் பிறந்தார்http://www.hindu.com/fr/2008/04/04/stories/2008040451220300.htm. இவர்களுக்கு இவர் ஒரே மகன். இவர் மூன்று மாதக் குழந்தையாயிருந்த போது இவரின் தாயார் இவரை தரையில் படுக்க வைத்துவிட்டு வேறு எதோ ஒரு வேலையைக் கவனிக்க தோட்டத்திற்குச் சென்றாராம். அப்போது குழந்தையின் தலைக்குமேல் ஒரு "இராசநாகம்" படம் எடுத்து ஆடியபடி இருந்தது. வீட்டிற்குத் திரும்பிய இவர் அன்னை இதைக் கண்டு பயந்து அலறி காளத்தியப்பரை அழைத்தார். அவர் வரும் சமயத்தில் நாகம் விருட்டென்று வெளியேறிப் போனது. அங்கு கூடிய ஊரார் அரியநாதன் அரச போகம் பெற்று வாழ்வான் என்று சோதிடம் சொல்வது போல் சொன்னார்கள். அரியநாதர் தன பதினாறு வயதில் மற்போர், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளிலும் சிறப்புடன் விளங்கினார். ஒரு சமயம் இவர் சிலம்பம் ஆடிய திறன் கண்டு மகிழ்ந்த ஒரு முதியவர் அரியநாதனை அழைத்து அவர் கைரேகையைப் பார்த்து வியந்தார். கைரேகை அரியநாதரின் மேன்மையான எதிர்காலம் பற்றிச் சுட்டிக்காட்ட முதியவர் சிறுவனை விசயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயரிடம் செல்லுமாறு கூறினார். மாமன்னர் திறமைகளை மதிப்பவர். எனவே சிறுவனை சிறந்த வீரனாக உருவாக்குவார் எனக் கூறி வாழ்த்தினார். இதை வயதானவர் ஏதோ வாழ்த்துகிறார் என்று அதை எளிதாக நினைத்தார். முதியவரோ இது உறுதியாக நடக்கும். அவ்வாறு நடந்து நீ செல்வந்தனாய் வாழும் காலத்தில் இந்த முதியவனை நினைத்துக் கொள்வது கேள்விக்குறி தான் என்றார். அரியநாதன் சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு பனையோலையில் ஒரு உறுதிமொழி எழுதினான். முதியவர் சொற்படி நடக்குமென்றால் தன சொத்தில் கால்பகுதியை முதியவருக்குக் கொடுப்பதற்கான உறுதிமொழி அது.. அரியநாதர் தன தந்தை சொற்படி தெலுங்கு மொழி கற்றார். தந்தையும் விசயநகரத் தளபதி "நாகம நாயக்கருக்கு" யார் மூலமோ ஒரு சிபாரிசுக் கடிதம் ஒன்றை ஏற்பாடு செய்து அரியநாதரை தளபதியிடம் அனுப்பினார். தளபதி அரியநாதரை தன் கணக்கராகச் சேர்த்துக் கொண்டார். மாமன்னர் கிருஷ்ணதேவராயர் அரியநாதரின் மதியின் கூர்மை கண்டு வியந்தார். படிப்படியாக தலைமைக் கணக்கராய் பதவி உயர்வு பெற்றார். விசயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைந்த போது இவர் தளவாய் ஆக உயர்வு பெற்று விசயநகர அரசப் பிரதிநிதியான (Viceroy) விசுவநாத நாயக்கருக்கு அடுத்த "இரண்டாம் நிலையை" (second in command) அடைந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூடப் பேருதவியாக விளங்கினார். அரியநாதரின் இந்த செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் தளவாய் அரியநாத முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது . பின்னாளில் தன்னைக் காணவந்த மெய்ப்பேடு முதியவருக்கு தன சொத்தில் கால் பங்கை வழங்க முன் வந்தாலும், முதியவர் வேண்டுதல்படி வீடு, வாசல் செல்வம் என்று எல்லாம் அளித்து மகிழ்ந்தார். விரைவில் பாண்டிய நாட்டிற்கு தன அரச பிரதிநிதியாக (viceroy) விசுவநாத நாயக்கரையும் அமைச்சராக அரியநாதரையும் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் நியமித்தார். விசயநகர பேரரசின் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணி 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதன் முதற்கட்டம் தமிழ்நாட்டுப் பகுதிகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் செஞ்சி என்ற மூன்று நாயக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. இந்த நாயக்க அரசுகள் தன்னாட்சி உரிமை (autonomous) பெற்றிருந்தாலும் விஜயநகரப் பேரரசு மற்றும் இதன் மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் இறையாண்மையை (sovereignity) ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு ஒருங்கிணைப்பு நடந்த போது, மாமன்னர் கிருஷ்ணதேவராயர் அவருடைய பல வெற்றிகளுக்குக் காரணமாகவிருந்த "தளபதி நாகம நாயக்கரை" ஒரு குறிப்பிட்ட போர் நிமித்தம் அனுப்பினார். சில பாண்டிய நாட்டுப் பகுதிகளை அபகரித்துக் கொண்ட "வீரசேகர சோழன்" என்ற சிற்றரசனை அடக்கும்படி நாகம நாயக்கர் பணிக்கப்பட்டார். பாண்டிய நாடு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட அரசாகும். வீரசேகரனை வென்ற நாகம நாயக்கர் மதுரையைத் தான் ஆள விரும்பினார். நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் பெரிய விசுவாசியாக விளங்கினார். எனவே தன தந்தை கைப்பற்றிய மதுரையை அவரிடமிருந்து மீட்டு மாமன்னர் கிருஷ்ண தேவராயர் வசம் ஒப்படைத்தார். விசுவநாத நாயக்கரின் நேர்மையையும் விசுவாசத்தையும் கண்டு மகிழ்ந்த மாமன்னர் கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் அதைச் சுற்றிய தமிழ்நாட்டுப் பகுதிகளின் ஆளுநராக நியமித்தார். இவர் தொடர்ச்சியாக, விசுவநாத நாயக்கர் (1529–1564), முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1564–72), வீரப்ப நாயக்கர் (1572–95), இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1595–1601) ஆகிய நான்கு மன்னர்களுக்குத் தளபதியாக இருந்து வந்தார். தமது 80-வது வயதில் கி.பி. 1600-இல் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகுதான் திருமலை நாயக்கர் (1623–1659) மன்னராக வந்தார். திருமலை நாயக்கருக்குத் தளபதியாகவோ, அமைச்சராகவோ அரியநாதர் இருந்ததில்லை . விசுவநாத நாயக்கரின் படையை நடத்திய அரியநாத முதலியார் இரண்டாம் நிலை தளபதியாக உயர்ந்தார். இதன் தொடர்ச்சியாக விசுவநாதருடன் இணைந்து தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதற்கிடையில் விசுவநாதரின் மகனும் வாரிசுமான கிருட்டிணப்ப நாயக்கர் தொடர்ந்து மதுரைப் பகுதியின் ஆளுநரானார். அரியநாதர் மதுரை நாயக்கர்கள் ஆண்ட அரசை படிப்படியாக விரிவு படுத்தினார். தொடர்ந்து பண்டைய பாண்டிய அரசு மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது. விஜய நகர் பேரரசின் பாளையக்காரர்கள் சில உரிமைகளை பெற்றனர். வரி வசூல் செய்வது, இராணுவத்தினை பாதுக்காப்பது மற்றும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவது போன்ற வேலைகளை பாளையக்காரர்கள் செய்தனர். அரியநாத முதலியார் பாளையங்களையும் பாளையக்காரர் முறையையும் நிருவியவராவார். பாளையக்காரர் முறை என்பது 16 ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசை ஆள்வதற்கு பயன்பட்டது. "பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பின்படி" (quasi-feudal organization of regions) மதுரை நாயக்க அரசு பல பாளையங்களாக அல்லது சிறு பகுதிகளாகப் (small provinces) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரர் என்ற குறுநில முதன்மையரால் ஆளப்பட்டது. இந்த அமைப்பின்படி மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்களை அரியநாதர் விசுவநாத நாயக்கர் மற்றும் இவருடைய மைந்தன் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 50 ஆண்டுக்காலம் நிர்வாகித்தார்.. தளவாய் அரியநாத முதலியார் மாசித் தேர் மண்டபம் கட்டி உள்ளார். இதனை மதுரை கீழமாசி வீதியில் பார்க்கலாம். அவருடைய மகன் காளத்தியப்ப முதலியார் பங்குனி மாதத்தில் ஒரு தேரோட்டத் திருவிழாவை நடத்தியிருக்கிறார். மதுரை கீரனூர் கல்வெட்டுச் செய்தியில் "களாத்தியப்ப முதலியார்" விசுவநாத நாயக்கரின் தலைமை அமைச்சர் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இவர் கொன்றங்கி கீரனூர் (கொண்டல் தங்கி கீரனூர்) எனும் கிராமத்தை அந்தணர்களுக்குக் கொடையாக வழங்கிய செய்தியை அறிய முடிகிறது. விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றலான சொக்கநாத நாயக்கர் (1659–1682) ஆட்சி காலத்தில் "சின்னத்தம்பி முதலியார்" என்பவர் "வாசல் பிரதானி" (அதாவது "முதல் குடிமகன்" என்ற "தலைமை அமைச்ச"ர்) ஆகப் பொறுப்பு வகித்த செய்தியும் உள்ளது. இவர் தளவாய் அல்லது பிரதானி ஆக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த வரலாறு விவரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக "ராம் இம்மானுவேல்" என்ற முன்னாள் "வெள்ளை மாளிகை" "முதன்மை அலுவலர்" கூட "ஓவல் அலுவலகத்தின்" "வாசல் அலுவலராக" குறிப்பிடப்படுகிறார்"..for example Rahm Emmanuel(Chief of Staff), the Gate Keeper to Obama..". "ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலின்" மற்றொரு கல்வெட்டு "முத்துன முதலியார்" "இராமகிருட்டிண நாயக்கரின்" "வாசல் பிரதானி" என்று அழைக்கப்பட்டதாக சான்றளிக்கிறது. கழுநீர் (மலர்) கழுநீர் மலர் பொய்கை முதலான நீர்நிலைகளில் பூக்கும். தமிழ்நாடு அரசின் சிறந்த கலை அமைப்பு விருது தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலை அமைப்புகள்/நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளுக்கு சிறப்புப் பரிசாகக் கேடயம் மற்றும் பரிசுத் தொகைகளைக் கொண்ட விருதினை வழங்கிச் சிறப்பித்து வந்தது. 1973 முதல் 2000 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விருதுக்கான பரிசுத் தொகைகளில் முதல் 13 ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பொற்கிழியும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பரிசுத் தொகை ரூபாய் ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்டு பொற்கிழியும் அளிக்கப்பட்டன. பின்னர் பரிசுத் தொகை ரூபாய் பத்தாயிரமாக உயர்த்தப்பட்டு பொற்கிழியும் அளிக்கப்பட்டன. திட்டக் குழு (இந்தியா) இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 2014 இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. 1934ல் விசுவேசுவரய்யா பொருளாதார வளர்ச்சிக்கான தனது ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில் 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார்.இந்திய அரசுச் சட்டம், 1935 சட்டத்தின் அடிப்படையில் 1937ல் ராஜதானிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டது .இதில் எட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.1937ல் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், ‘தற்போதைய முக்கியமான, மக்களின் (வறுமை, வேலையின்மை, நோய், பஞ்சம், கல்வி, சுரண்டல் போன்ற) உடனடிப் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும் என்று, ராஜதானிகளில் உள்ள நிபுணர்களைக் கேட்டுக்கொள்வதாக’ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.ரஷ்யப் புரட்சியும், அங்கு செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களும் , அதன் மூலம் அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும், சமூக மாற்றங்களும் இந்திய விடுதலைப் போராளிகளையும் ஈர்த்தது. அறிவியல்பூர்வமான வளர்ச்சி கொண்டதாக அமைய வேண்டும் என்று எண்ணிய மேகநாத சாஃகா , அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து, இந்தியாவின் வறுமையை ஒழிக்கவும், எல்லா வகையிலும் வளர்ச்சியை எட்டவும், தேசிய திட்டக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தியும், உற்பத்தியைப் பெருக்கியும், வேலைவாய்ப்பை அதிகரித்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் வளர வழிசெய்வதற்காக ஒரு திட்டக் குழு உருவாக்கப்பட்டது. 1950 மார்ச் 15ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதைப் பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். ஜவகர்லால் நேரு இதன் முதல் தலைவராவார். 1951ல் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாக்கிஸ்தான் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது. 1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது. திட்டக் குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தவர்களாவார்கள். பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுனர்களே நிரந்திர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். திட்டக்குழுவிற்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு துணை தலைவராக அரவிந்த் பனகாரியா ஜனவரி 5ஆம் தேதி 2015 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்,தற்போது துணைதலைவரக ராஜீவ்குமார் உள்ளார். 1950ல் இந்திய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் படி திட்டக்குழுவின் பணிகள் பின்வருவன. பெரும் கோலாலம்பூர் பெரும் கோலாலம்பூர் (Greater Kuala Lumpur) என்று கோலாலம்பூர் பெருநகரப் பகுதியின் புவியியல் எல்லைகளை வரையறுக்குமாறு குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் கிளாங் பள்ளத்தாக்குடன் ஒத்திருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. இதன் பரப்பளவு 2,793.27 சதுர கிமீ ஆகும். கோலாலம்பூரைச் சுற்றியுள்ள உள்ளாட்சி நடைபெறும் பத்து நகராட்சிகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டதாக பெரும் கோலாலம்பூர் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த பத்து நகராட்சிகளாவன: கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL), பெர்பதனன் புத்ரஜயா, ஷா ஆலம் நகர மன்றம் (MBSA), பெடலிங் ஜெயா நகர மன்றம் (MBPJ), கிளாங் நகராட்சி மன்றம் (MPK), கஜங் நகராட்சி மன்றம் (MPKj), சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPSJ), செலயங் நகராட்சி மன்றம் , அம்பங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) மற்றும் செபாங் நகராட்சி மன்றம் (MPSp). பெரும் கோலாலம்பூர் என்றப் பயன்பாடு அண்மையில்தான் புழக்கத்தில் வந்துள்ளது; கிளாங் பள்ளத்தாக்கு என்றே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கால் வெளியிடப்பட்ட "பொருளியல் நிலைமாற்றத் திட்டத்தில்" ஊரக மாநகரம் உருவாக்கல் மூலம் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டும் வண்ணம் இந்தச் சொல்லை பரப்புரை செய்தார். 2010ஆம் ஆண்டில் பெரும் கோலாலம்பூரின் மக்கள் தொகை ஆறு மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வருமானத்திற்கு இப்பகுதி RM263 பில்லியன் பங்களித்துள்ளது. தமாலம் தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. இதனை இக்காலத்தில் தாம்பூலம் என்கிறோம். தக்கோலம் என்பது பாக்கு. தமாலம் என்பது ஒரு நறுமணமுள்ள கொடி. அது பசுமையான இலைகளைக் கொண்டது. இது ஆர் என்னும் ஆத்தி மரத்தில் ஏறிப் படர்ந்திருந்ததாம். அந்த மரத்தில் இருந்த கொம்புத்தேனை எடுக்க மலைநிலக் குறவன் ஏறினானாம். அப்போது அது சரிந்து விழுந்ததாம். கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை மலர்கள் பலவற்றின் நடுவில் வைத்து ஒப்பனை செய்த பின் தமாலக் கொடியால் சுற்றி அனுப்பியிருக்கிறாள். திருப்பதியில் தமாலம் சோழர் கால வாணிகப் பொருள்களில் ஒன்று தமாலம். ஆளுநர் கே. கே. ஷா. நினைவுப் பரிசுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் தமிழ்நாட்டில் சிறப்பாக நாடகங்களை நடத்தி வந்த சிறந்த நாடகக் குழுக்கள்/நிறுவனங்களுக்கு தமிழக முன்னாள் ஆளுநர் கே. கே. ஷாவின் பெயரில் சுழற்கேடயம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கி வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அடுத்துள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களையும் அடக்கிய நிலப்பகுதி ஆகும். இதன் தற்காலப் பெயராக "கோலாலம்பூர் பெருநகர்ப் பகுதி" அல்லது பெரும் கோலாலம்பூர் உள்ளது. இது புவியியல் ரீதியாக தித்திவாங்சா மலைத்தொடர் வடக்கிலும் கிழக்கிலும், மலாக்கா நீரிணை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4 மில்லியன் மக்கள். இது மலேசியத் தொழில் மற்றும் வணிகத்திற்கான முதன்மை இடமாக விளங்குகிறது. 2010இன் கணக்கெடுப்பின்படி 8.1 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் இந்தோனேசியா, இந்தியா, நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் குடியேற்றத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். மாவட்டக் கல்வி அலுவலர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டில் இருக்கும் 32 வருவாய் மாவட்டங்களில் 66 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் இருக்கிறார். இவர் குறிப்பிட்ட மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாகப் பணிகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்கும் பணிகள் போன்றவைகளைத் தனது அலுவலகத்தின் கீழுள்ள பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்கள் பணி உயர்வு பெறுவதன் மூலமும் குறிப்பிட்ட அளவு இப்பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். பிரிக்ஸ் பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும். இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் 2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது. நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. 2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க "எஸ்" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது. 2014 பிரிக்ஸ் மாநாட்டில் $100 பில்லியன் மூதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சாங்காய் சீனா தலைமையிடமாக கொண்டு இயங்கும். 2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது. நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பு நாடுகளின் பட்டியல்: †'இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் துணை மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், மாநிலங்களின் அலுவல் மொழிகளை மாநிலங்களே தீமானிக்கும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை. வெண்டேர்ச் செழியன் வெண்டேர்ச் செழியன் என்பவன் இறையனார் அகப்பொருள் கூறும் இடைச்சங்கம் நிறுவிய முதலாம் பாண்டியர் மன்னன் ஆவான். இவன் கபாடபுரம் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டவன். நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் நூலில் இவரின் கதாப்பாத்திரம் வருகிறது. அதன்படி இவர் வெண்முத்துக்களை பதித்த மூவாயிரம் தேர்களை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அதனால் இவர் பெயர் வெண்தேர்ச் செழியன் என்றானது. சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையாகவும் மனிதனின் கவனக்குறைவினாலும், தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் போன்றவைகள் மூலம் ஏற்படும் பேரழிவுகளை இயற்கை பேரழிவுகள் என்று சொல்லலாம். நிலத்தின் சீற்றம் நில நடுக்கம் மற்றும் பூகம்பமாகவும் நீரின் சீற்றம் வெள்ளம்மாகவும், நெருப்பின் சீற்றம் எரிமலை சீற்றம் ஆகவும், ஆகாயத்தின் சீற்றம் ஓசோனில் ஓட்டையாக காற்றின் சீற்றம் புயல்ஆகவும் மாறி பேரழிவை ஏற்படுத்துகின்றன. அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த கற்றுக்கொன்டதன் விளைவாக மனிதத் தவறுகள் மற்றும் கவனக்குறைவுகளால் தீ விபத்து, சாலை விபத்து கட்டிட விபத்து, கப்பல், படகு விபத்துகள், மின்சார விபத்துகள் ஆகாய விமான விபத்துகள், தீவிரவாதத்தால் ஏற்படும் போர், வெடிகுண்டு அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றால் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது... இவை யாவும் மனிதனால் ஏற்படும் பேரிடராகும். இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் இன்னல்களின் தன்மைகளை அறிந்து அவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை என்று அழைக்கிறோம். இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை சி. சண்முகம் (வானொலி) சி. சண்முகம் இலங்கை வானொலிக் கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். இவர் வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர் ஆவார். யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் 1955 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய போது நாடகத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்கள் சானா (சண்முகநாதன்), மற்றும் பொன்மணி குலசிங்கம் ஆகியோர் ஆவர். 1956 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்து சிறு கைத்தொழில் திணைக்களத்தில் 22 ஆண்டுகளும், சுற்றுலா, கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். அரசாங்கத்தில் பணியாற்றிய போது இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். 15 நிமிட, 30 நிமிட தொடர் நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். தொடர் நாடகங்களில் "துணி விடு தூது", "லண்டன் கந்தையா", "நெஞ்சில் நிறைந்தவள்" ஆகியன 52 வாரங்களும், "அப்பாவும் மகனும்" 100 வாரங்களும் ஒலிபரப்பாகின. இவரது முதலாவது மேடை நாடகம் "மனிதருள் மாணிக்கம்" 1957 சனவரியில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் மேடையேறியது. ஈட்டி ஈட்டி என்பது, மரம் அல்லது, இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும். வேல் என்னும் ஆயுதமும், ஈட்டியும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிற்கும் சிறிய வேற்றுமை உண்டு. வேல் நுனிக்குக் கீழே வட்ட வடிவத்தில் முடியும். ஈட்டி நேர்க்கோட்டில் முடியும். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. ஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும் தயாரிப்பாளர் (திரைப்படம்) திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளர் , என்பவர் ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் இயக்குநருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ இருப்பார். சில வெளியாட்களும், அரசியல்வாதிகளும் திரைப்படம் தயாரிப்பதும் உண்டு. நுண்வட்டு நுண்வட்டு ("MiniDisc") என்பது காந்தவொளியியல் சேமிப்புச் சாதனமாகும். சாதாரண நுண்வட்டில் 80 நிமிடங்கள் நீளமான ஒலிதக் கோப்பைப் பதிவு செய்ய முடியும். நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு நவம்பரில் சப்பானிலும் திசம்பரில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு விடப்பட்டது. நுண்வட்டானது formula_1 மில்லிமீற்றர் அளவிலான பொதியுறையில் வைக்கப்படுகின்றது. இது 3.5 அங்குல நெகிழ் வட்டின் உறைப் பெட்டியை ஒத்தது. அத்தோடு, நுண்வட்டானது தரவுகளைச் சேமித்து வைக்கதற்கு மீள எழுதக்கூடிய காந்தவொளியியல் தேக்ககத்தைப் பயன்படுத்துகின்றது. வட்டக்கோணப்பகுதி வடிவவியலில் ஒரு வட்டக்கோணப்பகுதி அல்லது ஆரைத்துண்டு ("circular sector") என்பது ஒரு வட்ட வடிவ தகட்டின் இரு ஆரங்கள் மற்றும் அவ்வட்டத்தகட்டின் ஒரு வில் ஆகியவற்றால் அடைபெறும் வடிவமாகும். ஒரு வட்டத் தகடு இரு துண்டுகளாகப் பிரிக்கப்படும் பொழுது பெரிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி பெரிய வட்டக்கோணப்பகுதி என்றும் சிறிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி சிறிய வட்டக்கோணப்பகுதி என்றும் அழைக்கப்படுகின்றன. படத்தில், θ மையக்கோணம் (ரேடியன்களில்), formula_1 வட்டத்தின் ஆரம், formula_2 சிறிய வட்டவில்லின் நீளம். 180° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப்பகுதி அரைவட்டம், 90° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி காற்பகுதி (quadrants), 60° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி அறுபகுதி (sextant) மற்றும் 45° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி எண்பகுதி (octant) என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. ஒரு வட்டவில்லின் இரு முனைப்புள்ளிகளை வட்டத்தின் பரிதியின் மீது அமையும் ஏதேனும் ஒரு புள்ளியுடன் இணைக்கக் கிடைக்கும் கோணத்தின் அளவு அவ்வட்டவில் வட்டமையத்தில் தாங்கும் கோணத்தில் பாதியளவாக இருக்கும். ஒரு முழு வட்டத்தின் பரப்பளவு: formula_3. முழு வட்டத்தின் மையக்கோணம் :formula_4 ஒரு வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவு அதன் மையக்கோணத்தின் விகிதத்தில் அமையும். எனவே வட்டக்கோணப்பகுதியின் மையக்கோணம் formula_5 மற்றும் formula_4 ஆகிய இரண்டின் விகிதத்தால் வட்டத்தின் பரப்பளவைப் பெருக்க வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவு கிடைக்கும்: kegel வரையறுத்த தொகையீட்டின் மூலமாக: மையக்கோணத்தைப் பாகைகளாகக் கொண்டால்: ஒரு வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் மற்றும் இரு ஆரங்களின் கூடுதல் அந்த வட்டக்கோணப்பகுதியின் சுற்றளவாகும்: இங்கு "θ" ரேடியன்களில் தரப்படுகிறது. வட்டத்தின் மையத்திற்கும் வட்டக்கோணப்பகுதியின் நிறை மையத்திற்கும் (center of mass) இடையேயுள்ள தூரம், வட்டமையத்திற்கும் வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நிறை மையத்திற்கும் இடையேயுள்ள தூரத்தில் 2/3 பங்காக இருக்கும். வட்டக்கோணப்பகுதியின் மையக்கோணத்தின் அளவு பூச்சியத்தை நெருங்க நெருங்க அதன் வில்லின் நிறை மையம், வட்ட மையத்திலிருந்து "r" அலகு தூரத்தில் இருக்கும். எனவே அப்பொழுது வட்ட மையத்திலிருந்து வட்டக்கோணப்பகுதியின் நிறை மையம் 2"r"/3 அலகு தூரத்தில் அமையும். மையக்கோணத்தின் அளவு 2π -ஐ நெருங்க நெருங்க, வில்லின் நிறை மையம் வட்ட மையத்துடன் ஒருங்கும். எனவே இந்நிலையில் வட்டக்கோணப்பகுதியின் நிறை மையமும் வட்ட மையத்துடன் ஒருங்கும். இசைநுணுக்கம் இசைநுணுக்கம் (Isai Nunukkam) என்பது கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும். தெய்வப் பாண்டியன் மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம். மேலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள், நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் புதினத்தில் இசைநுணுக்கம் பற்றி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வெண்டேர்ச் செழியன் என்னும் பாண்டியர் மன்னனின் ஆட்சியில் அவரது பேரனான சாரகுண பாண்டியன் மற்றும் சாரகுணனின் காதலியான கண்ணுக்கினியாள் ஆகியவர்களின் இசை ஞானம் பொருட்டு சிகண்டியாசிரியர் என்னும் புலவரால் அவர்களின் இசை ஆராயப்பட்டு 59 புலவர்கள் முன்னும் இடைச்சங்கம் இருந்த கபாடபுர அரண்மனையில் அரங்கேறுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆசம்கர் பிரிவு ஆசம்கர் பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்று. இப்பிரிவு பூர்வாஞ்சல் என அழைக்கப்படும் உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. ஆசம்கர் பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்களாவன: தேவிகா ராணி தேவிகா ராணி சௌத்திரி ரோரிக் ("Devika Rani Chaudhuri Roerich", ) () (30 மார்ச்சு 1908 – 9 மார்ச்சு 1994) இந்தியத் திரைப்பட உலகின் துவக்க காலங்களில் நடிகையாக புகழ்பெற்றவர். தேவிகா ராணி வால்டேர் என்றழைக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சிறப்புமிகுந்த குடும்பமொன்றில் மார்ச்சு 30, 1908இல் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையவர். தேவிகாவின் தந்தை எம். என். சௌத்திரி மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக (Surgeon-General of Madras) பணியாற்றியவர். தாயார் பெயர் லீலாவாகும். 1920களில் தனது துவக்க பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் "நாடகக் கலைக்கான வேந்திய அகாதமி"யிலும் (RADA) வேந்திய இசை அகாதமியிலும் உதவித் தொகைகளுடன் பயின்றார். தவிரவும் கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்வி கற்று எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பணியாற்றி வந்தார். இங்குதான் பிற்காலத்தில் அவரது பல வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பாலை சந்தித்தார். 1929ஆம் ஆண்டில் இந்தியத் தயாரிப்பாளரும் நடிகருமான இமான்ஷூ ராயை திருமணம் புரிந்தார். இருவரும் 1933ஆம் ஆண்டில் வெளிவந்த "கர்மா" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து பம்பாய் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்புத்தளத்தை நிறுவினர். நிரஞ்சன் பால் மற்றும் பிரான்சு ஓஸ்டென் ஆகியோருடன் இணைந்து சாதி அமைப்புகளை சாடி திரைப்படங்கள் எடுத்தனர். இந்த காலகட்டத்தில் இவர்களுடன் நடித்தவர்களில் அசோக் குமார், மதுபாலா குறிப்பிடத் தக்கவர்கள். 1936இல் தன்னுடன் நடித்து வந்த காதலர் நஜம் உல் அசனுடன் தேவிகா ராணி ஓடிவிட்டார்.இருப்பினும் கணவர் ராய் அவரை மீளவும் அழைத்துக்கொண்டார். ஆனால் நஜம் அசன் திரும்பாதநிலையில் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோக் குமாரை முதன்மை வேடத்தில் நடிக்க வைத்து திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்தார். "அச்சுத் கன்யா" என்ற அந்தத் திரைப்படத்தில் அசோக் குமார் பிராமண இளைஞராகவும் தேவிகா தீண்டத்தகாத இனப்பெண்ணாகவும் நடித்தனர். தனது கணவருடன் நடித்த கர்மா திரைப்படத்தில் திரைப்பட உலகிலேயே சாதனையாக நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். நான்கு நிமிடநேரம் நீடித்த அந்த முத்தம் கட்டுப்பெட்டியான இந்திய சமூகத்தில் அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 1940இல் கணவனை இழந்தபிறகு அவரது "பம்பாய் டாக்கீஸ்" படப்பிடிப்புத் தளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் அதன் நிர்வாகத்தை சசாதர் முகர்ஜியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. 1943ஆம் ஆண்டில் சசாதர், அசோக்குமார் மற்றும் பிற பம்பாய் டாக்கீஸ்காரர்கள் பிரிந்து சென்று "பிலிம்ஸ்தான்" என்ற திரைப்பிடிப்பு தள நிறுவனத்தை உருவாக்கினர். இதன்பின்னர் பம்பாய் டாக்கீஸ் மெதுவாக மங்கத் துவங்கியது. 1945ஆம் ஆண்டில் தேவிகா இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் புரிந்து பெங்களூருவில் வாழத் தொடங்கினார். கனகபுரா சாலையில் அமைந்திருந்த பரந்த டாடாகுனி எஸ்டேட்டில்1994ஆம் ஆண்டில் தமது மறைவு வரை வாழந்திருந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் இந்த எஸ்டேட்டின் உரிமை குறித்து இந்திய உருசிய அரசுகளிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் பிணக்கு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர். 1958ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. 1969ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத்துறையின் மதிப்புமிக்க விருதான தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டபோது அதனைப் பெற்ற முதல் கலைஞராக பெருமை பெற்றார். அவரது மறைவின்போது அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இரண்டாம் சிம்மவர்மன் இரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன். நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருட்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இவனாகவே இருக்கக்கூடும் என்பது வரலாற்றாளர்கள் கணிப்பு. அதனால் இவனது காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியான கி.பி. 475ல் இருந்தது எனக் கொள்ளலாம். முதலாம் சிம்மவர்மன் (முற்காலம்) முதலாம் சிம்மவர்மன் என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலத்தை அறிய போதிய சான்றுகள் இல்லை எனினும் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்றின் மூலம் அவனின் ஆட்சிக்காலம் பொ.பி. 275ல் தொடங்கியதை அறியலாம்.