மார்கழி உற்சவம் மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர். மார்கழி உற்சவ காலத்தில் பெண்கள் பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிப்பர். வைணவ தலங்களில் பக்தர்கள் ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி மாதத்தில் ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் நடைபெறும். மார்கழி நீராட்ட பகல்பத்து, இராப்பத்து உற்சவம், மார்கழி 27ம் நாள் மற்றும் கூடாரைவல்லி எனும் கோயில் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் உற்சவம் நடைபெறும். சிவ தலங்களில் திருவெம்பாவை பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி திருவாதிரை அன்று ஆரூத்ரா தரிசனம் எனும் படியளத்தல் விழா நடைபெறும். மார்கழி உற்சவத்தின் போது சென்னை நகரத்தில் உள்ள அரங்கங்களில் கருநாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பண்டிகை பண்டிகை!! பண்டிகை என்றால் விடுமுறை குடும்பத் தலைவிக்கு இரட்டிப்பு வேலை!! பண்டிகை என்றால் கொண்டாட்டாம் தான் முதலில் நினைவு வரும்! அனைவருக்கும் ஆனால் பெண்களுக்கோ முதலில் நினைவில் வருவது என்னவோ வீட்டு வேலை தான் அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்தே நேரம் கரைந்து விடும்! என்ன தான் பார்த்து செய்தாலும் சின்ன குறை ஏற்பட்டால் உடனே பழி முழுவதும் அவள் மேலே விழும்! ஆண்களோ பிடித்த பொழுதுப்போக்கை கையில் கொண்டு விளையாடுவார்கள் பெண்களோ கரண்டியை கையில் கொண்டு விளையாடுவார்கள்! அது மட்டுமா முகத்தில் மகிழ்வு நிலைத்து நிற்க வேண்டுமே தவிர மாற்றம் கண்டால் பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டும்!! விடுமுறை என்றால் ஒருப்பக்கம் நிம்மதியும் மறுப்பக்கம் வேலை பளுவே முன்னிற்கும்! காலைக்கு ஒரு உணவு மதியம் பல வித உணவுகள் மாலை சிற்றுண்டி என பார்த்து பார்த்து செய்யவேண்டிய கடமையோ? தன் விருப்ப பாடலோ தன் விருப்ப படமோ எதுவும் பார்த்திட முடியாத ஏக்கமே மனது முழுவதும்! யாரும் துணைக்கு வருவதும் இல்லை வந்தாலும் ஏதாவது விண்ணம் பண்ணி இரட்டிப்பு வேலை! எத்தனை ஆண்டுகள் மாறினாலும் அங்க இங்க சில மாற்றம் நிகழலாம் ஆனால் பெரும்பாலான வீட்டில் பெண்களே வேலை செய்கிறார்கள்!! தன் உடல் வலியையும் சில ரணமான நிகழ்வையும் மறக்கடிக்க செய்வது என்னவோ பண்டிகை காலங்கள் மட்டும் தான்! ஆனால் அதுவே சுமையாகவும் மாறக்கூடாது இதனால் பண்டிகை என்றால் முதலில் நினைவு வருவது வேலை தான் அதனால் பண்டிகை வருவதை நினைத்து சந்தோஷப்படாமல் வெறுக்க தோன்றும்! வேலைகளை கூடிய வரை குறைத்தாலே போதுமானது பண்டிகையும் சிறக்கும் வீட்டில் உள்ள பெண்களின் மனமும் குளிர்ந்து அதன் வெளிப்பாடாய் உணவின் சுவை கூடுமே தவிர குறையாது!! பண்டிகை இன்பத்தின் எல்லை பண்டிகை அன்பின் எல்லை பண்டிகை பகிர்வின் எல்லை பண்டிகை உறவின் நெருக்கம் பண்டிகை ஈகையின் நெருக்கம் பண்டிகை பாசத்தின் வடிவம் பண்டிகை பகையை முறிக்கும் பண்டிகை பசுமையான நினைவை விதைத்தே செல்லும் ! பண்டிகையை வெறும் உணவுக்காக அல்ல! வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்தல் அவை!! ஸ்டெல்லாமேரி எம் ஜே புதுவை அந்தோரா லா வேலா அந்தோரா லா வேலா (), அந்தோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும். சுருக்கு இலகுவில் இறுக்கக் கூடியதாகவும் தளர்த்தக் கூடியதாகவும் கட்டப்படும் முடிச்சுகள் சுருக்கு எனப்படும். இவ்வியல்புகள் காரணமாகப் பல்வேறு தேவைகளுக்கு சுருக்குமுடிச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. அழுத்த நீர் அணு உலை அழுத்த நீர் அணு உலைகள் ("Pressurized water reactor", PWRs) மேற்கத்திய அணு மின் நிலையங்களில் பெரும்பான்மையானதும் வெப்பக்கடத்தியாக நீரைப் பயன்படுத்தும் மூன்று வகை மென்னீர் அணு உலைகளில் ஒன்றுமாகும்; மற்றவை கொதிநீர் அணு உலைகளும் (BWRs) மற்றும் உய்யமிகை நீர் அணு உலைகளும் (SCWRs) ஆகும். ஓர் அழுத்த நீர் அணு உலையில் முதன்மை வெப்பமாற்றி அல்லது குளிர்வியான (நீர்) மிகுந்த அழுத்தத்தில் அணுஉலையின் உள்ளகத்திற்கு பீய்ச்சப்பட்டு அங்கு அணுக்களின் பிளவினால் வெளிப்படும் ஆற்றலால் சூடாக்கப்படுகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் ஓர் நீராவி ஆக்கிக்கு செலுத்தப்பட்டு அங்கு வெப்ப ஆற்றல் மாற்றமடைந்து நீராவி உருவாகிறது. இந்த நீராவி சுழலி மின்னாக்கிகளில் செலுத்தப்பட்டு மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. கொதிநீர் அணு உலைகளைப் போலன்றி வெப்பமாற்றியாக நீர் பயன்படுத்தும்போது உயர் அழுத்தத்தில் இருப்பதால் அணுஉலையின் உள்ளகத்தில் நீர் கொதிப்பதில்லை. அனைத்து மென்னீர் அணுஉலைகளிலும் சாதாரண மென்னீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அழுத்த நீர் அணுஉலைகள் துவக்கத்தில் அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்க வடிவமைக்கப்பட்டன; முதன்முதலாக ஷிப்பிங்போர்ட் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாட்டில் இயங்கும் அழுத்தநீர் அணுஉலைகள் இரண்டாம் தலைமுறை அணு உலைகள் எனக் கருதப்படுகின்றன. உருசியாவின் விவிஈஆர் அணுஉலைகளும் இவ்வாறானதே. பிரான்சு|பிரான்சின் மின்னுற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது அழுத்த நீர் அணு உலைகளே. அமெரிக்கா 1954 முதல் 1974 வரை அழுத்தநீர் அணு உலைகளை இயக்கி வந்தது. திரீ மைல் தீவு அணு மின் நிலையம் துவக்கத்தில் TMI-1 மற்றும் TMI-2 என பெயரிடப்பட்ட இரு அழுத்த நீர் அணு உலைகளை இயக்கி வந்தது. TMI-2 அணு உலையில் 1979ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தின் பின்னணியில் புதிய அணு உலைகளின் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுத்தப்பட்டது. . விக் ஹேய்ஸ் விக்டர் "விக்" ஹேய்ஸ் ("Vic Hayes") (பிறப்பு சூலை 31, 1941 சுரபாயா, டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் (தற்போதைய நெதர்லாந்து) டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆய்வாளர். ஐஇஇஇ 802.11 எனும் கம்பியிலா குறும்பரப்பு வலையமைப்பிற்கான திட்டமுறைகளை வகுத்து அதனை நிறுவியதற்காக இவர் "ஒய்-ஃபையின் தந்தை" என்று அறியப்படுகிறார். இவர் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்: உரிமரம் உரிமரம் என்பது கண்ணன் உரியில் வெண்ணெய் திருடிய கதை நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் திருவிழா விளையாட்டு. கண்ணன் பிறந்த நாளில் (கிருஷ்ண ஜெயந்தி) நடைபெறும். ஆடவர் இந்த விளையாட்டில் கலந்துகொள்வர். விளக்கெண்ணெய் தடவிய. வழுவழுப்பான மரத்தின் உச்சியில் வெண்ணெய் வைக்கப்பட்டிருக்கும். வழுக்கு மரத்தில் ஏறி வெண்ணெய்யை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏறுபவர் முகத்தில் தண்ணீர் அடிப்பர். இந்தத் தடையையும் மீறி ஏறவேண்டும். உரியடி உரியடி என்பது உரிமரம் போல் கண்ணன் கதை விளையாட்டு. இது காளையர் (இளைஞர்) விளையாட்டு. கண்ணன் பிறந்த நாளில் நடைபெறும் திருவிழா விளையாட்டு. கண்ணைக் கட்டிக்கொண்டு கையிலுள்ள கொம்பால் தொங்கும் உரியை அடிக்கவேண்டும். தொங்கும் உரி கயிற்றால் கட்டி ஏற்றி இறக்கப்படுவதால் அடிப்பது மேலும் சிக்கலைத் தரும். உரியில் மண் கலயங்களில் தயிர் கட்டப்பட்டிருக்கும். உரிமர விளையாட்டில் தயிர்க் கலயத்தை வழுக்குமரத்தில் ஏறி எடுக்கவேண்டும். உரியடியில் தொங்கும் உரியை அடிக்கவேண்டும். மார்கழி நோன்பு மார்கழி நோன்பு இது வருடந்தோறும் மார்கழி மாதம் இந்துக் கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து அவரவர் விருப்பமான கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வர். மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர். நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும்,கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர். திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். திருவெம்பாவை பாடல்களை கோயில்களில் பாடுவது வழக்கம். சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர். திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆருத்திரர் என்றும் கூறுவர். மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் ஆருத்திரர் தரிசனம் நடைபெறும். விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரயணஞ் செய்வர். அந்தக் கழுதை இந்தக் கழுதை அந்தக் கழுதை இந்தக் கழுதை என்பது தாய்மார் அல்லது தலைவர்-ஒருவர் குழந்தையின் கண்ணைப் பொத்தி ஆளைக் காட்டச் சொல்லும் விளையாட்டு. கண் பொத்தப்பட்டிருக்கும் குழந்தை மல்லிகா போன திசையைக் காட்டவேண்டும். காட்டிய திசை சரி ஆயின் மல்லிகா கண் பொத்தப்படும். தவறு ஆயின் மீண்டும் பொத்தப்பட்டவர் கண்ணே பொத்தப்படும். இவ்வாறு ஆட்டம் தொடரும் சுட்டித் தொலைக்காட்சி சுட்டித் தொலைக்காட்சி (ஆங்கிலம்: "Chutti TV") என்பது சன் குழுமத்தின் 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இந்த அலைவரிசையி்ன் இலக்காக மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள சிறுவர்களே உள்ளனர். இந்த அலைவரிசை 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும். முதலிய நிகழ்ச்சிகள் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. கிரிகோரி குட்வின் பிங்கஸ் கிரிகோரி குட்வின் பிங்கஸ் (Dr. Gregory Pincus, ஏப்ரல் 9, 1903 - ஆகஸ்ட் 22, 1967) வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடிப்பதில் தலையாய பங்கு கொண்ட அமெரிக்க உயிரியலறிஞர். மக்கள் தொகைப் பெருக்கம் மேன்மேலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம் என்ற முறையில் கருத்தடை மாத்திரையின் இன்றியமையாமை மிகப் பெரிதாகும். இதனால் அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளில் பாலுணர்வு மனப்போக்குகளில் ஒரு புரட்சி ஏற்பட்டது. வேண்டாத கருத்தங்கலைத் தடுக்க முடியாது என்ற அச்சம், திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பாலுறவு கொள்வதிலிருந்து பெண்களைத் தடுத்து நிறுத்துதல், ஆகியவற்றில் கருத்தடை மாத்திரை பெரும்பங்கு கொண்டது. இதனால் கருத் தரிப்ப்பதான அச்சமின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இம்மாத்திரை ஏற்படுத்தியது. இதனால் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு மனப்போக்கு, நடத்தைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிரிகோரி பிங்கஸ், நியூஜெர்சி மாநிலத்தில் குட்வின் என்னும் ஊரில் 1903 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ரஷ்ய யூதர்கள் ஆவார். இவர் கர்னல் பல்கலைக் கழகத்தில் 1927 ஆம் ஆண்டில் டாக்டட் பட்டம் பெற்றார். அதன் பின் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் உட்பட பல நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் செய்தார். பல ஆண்டுகள் கிளார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டில் ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தை நிறுவுவதற்கு உதவி புரிந்தார். அதன் ஆய்வுக்கூடங்களின் இயக்குநராகவும் நெடுங்காலம் பணியாற்றினார். கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னாலும் பாதுகாப்பான நம்பகமான கருத்தடை முறைகள் அறியப்பட்டிருந்தன. அன்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கருத்தடைக்காக பரிந்துரை செய்த சாதனம் சவ்வுத்திரை(Diaphragm) ஆகும். இது உண்மையில் பாதுகாப்பான நம்பகமான சாதனமாயினும் பெண்கள் நடைமுறையில் இதனைப் பயன்படுத்தத் தயங்கினார்கள். வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையைக் கண்டுபிடிக்க பலர் முயன்றுள்ள போதிலும், இத்தகைய மாத்திரைகளில் எத்தகைய வேதிப் பொருளை இடுவது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. கருத்தடை மாத்திரைக்கான முக்கிய கண்டுபிடிப்பு 1937 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.ஏ. டபிள்யூ மேக்பீஸ், ஜி.எல் வெய்ன்ஸ்டீன், எம்.எச். ஃப்ரீட்மன் ஆகிய மூவரும் பெண்பால் இயக்குநீர் (ஹார்மோன்) களில் ஒன்றான புரோஜஸ்டிரோன் (Progesterone) என்ற பொருளை உட்செலுத்தினால்,ஆய்வுக்கூட விலங்குகளில் கருத்தரிப்பது தடைபடுகிறது என்பதைச் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள். எனினும் தோலடியூடான ஊசி போடுதல் (Hypodermic injection) ஓர் ஏற்புடைய கருத்தடை முறையாகக் கருதப்படாத காரணத்தாலும் அந்தக் கால கட்டத்தில் புரோஜஸ்டிரோன் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தமையாலும் அந்த முறைக்கு கருத்தடை ஆதரவாளர்கள் வரவேற்பளிக்கவில்லை.எனவே கருத்தடை மாத்திரை உருவாக்கும் முயற்சி 1950 வரை மேற்கொள்ளப்படவிலலை. மாசசூசெட்ஸ் நிலத்தில் ஷிரூஸ்பரியிலிருந்த ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநராக பிங்கஸ் பணியாற்றி வந்தார். அவர் வளர்சிதை மாற்றத்திலும் (Steroid metabolism), பாலூட்டிகளின் இனப்பெருக்க உடலியலிலும் ஒரு வல்லுநராக விளங்கினார்.எனவே, குடும்பக் கட்டுப்பாட்டை நெடுங்காலமாக வலியுறுத்தி வந்த மார்கரெட் சாங்கர் (Margaret Sanger) என்பவரின் வலியுறுத்தலின் பேரில் 1950 -இல் கிரிகோரி பிங்கஸ் அந்த முயற்சியைத் தொடங்கினார். ஒர்செஸ்டர் நிறுவன ஆராய்ச்சியாளர் டாக்டர் டின்-சூயே-சாங், மகளிர் மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜான் ராக் ஆகியோர்களின் உதவியுடன் பரிசோதனைகளில் ஈடுபட்டார். பெண்கள் வாய்வழியாக புரோஜஸ்டிரோனை உட்கொண்டால் கருத்தறிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். ஆயினும் இது 85% காலத்திற்கு மட்டும் கருத்தரிப்பதைக் கட்டுப்படுத்தியது. மேலும் அவ்வாறு கட்டுப்படுத்த மிகவும் அதிகமான அளவு மருந்து (doses) தேவைப்பட்டது. முயற்சியைக் கைவிடாத பிங்கஸ், புரோஜஸ்டிரோனை ஒத்ததாக இருக்கும் வகையில் தயாரித்துள்ள வேதிப் பொருள்களின் மாதிரிகளை தமக்கு அனுப்பி வைக்கும்படி பல்வேறு வேதியியற்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை 1953 ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டார். தமக்கு வந்த அனைத்தையும் பிங்கஸ் பரிசோதனை செய்து பார்த்தார். அவற்றுள் 'ஜி.டி.சீயர்லே அண்டு கோ' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'நோரித்தினோடிரல்' (Norethynodrel) என்ற பொருள் சிறப்பான செயல் விளைவு கொண்டிருப்பதை அறிந்தார். நோரித்தினோடிரல் என்ற பொருளை 1951 -ல் சீயர்லே ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிவந்த டாக்டர் ஃபிராங் பி. கோல்ட்டோன் என்ற வேதியல் அறிஞர் செயற்கை முறையில் தயாரித்து, அதற்கு தமது பெயரில் புத்தாக்க உரிமையும் பெற்றிருந்தார். ஆனால் கருத்தடை மருந்தை வாய்வழியாகச் செலுத்த அவரோ அவரது மேற்பார்வையாளர்களோ முயலவில்லை. அச்சமயத்தில் அத்தகைய மருந்தை தாங்கள் கண்டுபிடித்திருப்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. பிங்கஸ் தனது ஆராய்ச்சிக் குழுவினருடன் மேலும் பரிசோதனைகள் செய்து நோரித்தினோடிரலுடன் மெஸ்டிரானோல் (Mestranol) என்ற மற்றொரு பொருளைச் சிறிதளவு சேர்த்தால் அதிகப்பயன் விளைவு ஏற்படும் என்பதைக் கண்டார். இந்த இணைப்புப் பொருள்தான் "ஈனோவிட்" என்ற கருத்தடை மாத்திரையாக உருப்பெற்று, ஜி.டி. சீயர்லே நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. 1955 முதல் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு 'ஈனோவிட்' என்னும் பெயரில் இதனை விற்பனை செய்ய உணவு மற்றும் மருந்து நிருவாகத்துறை (Food and Drug Administration) ஒப்புதலளித்தது. வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் முயற்சிகளையும் செலவழித்த ஒரே விஞ்ஞானி என்ற பெருமை பெற்றார். கிரிகோரி பிங்கஸ் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். "கருவளத்தை வெற்றி கொள்ளுதல்' (Conquest of fertility) என்ற நூலையும் எழுதினார். இது 1965 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிங்கஸ் தமது வாழ்நாளில் ஏராளமான அறிவியல் விருதுகளைப்பெற்றார். ஆனால் அவருக்கோ கருத்தடை மாத்திரையை உருவாக்கியதில் பங்கு கொண்ட எவருக்குமோ நோபல் பரிசு வழங்கப்படவிலை 1967 ஆம் ஆண்டு பாஸ்டனில் காலமான போது அவரது மரணத்தை பொதுமக்களும் பெரும்பாலான விஞ்ஞானிகளும் கண்டுகொள்ளவில்லை. மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008 தேசிய பஞ்சாலை கழகம் தேசிய பஞ்சாலை கழகம் ("National Textile Corporation") இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தில் பல பஞ்சாலைகள் உள்ளன. 1968ல் பல்வேறு காரணிகளால் நலிவடைந்து இயங்காமல் இருந்த 16 பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து தனியாரிடமிருந்து இந்திய ஜவுளிதுறை அமைச்சகம் தத்தெடுத்து இயக்கியது. பின்னர் படிப்படியாக 1973ல் இதன் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது. 1974ல் நலிவுற்ற பஞ்சாலைகள் தேசியமமாக்கல் சட்டம் 1974ன் கீழ் இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இந்நிறுவனம் அரசு உதவியுடன் புத்துயுரூட்டி, நவீனமயமாக்கப்பட்டு சீரான வளர்ச்சியடைந்து மேலும் இதன் எண்ணிக்கை 1995ல் 119 ஆக உயர்ந்தது. இதற்கு 9 மண்டல அலுவலகங்கள் உள்ளன; இதன் மத்திய கட்டுப்பாட்டு அலுவலகம் தில்லியிலும் உள்ளது. இந்தியாவில் ஜவுளித்துறை அபரிதமான வளர்ச்சியால் அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட இயலவில்லை. மேலும் நலிவடைந்ததால் இந்நிறுவனம் 77 பஞ்சாலைகளை கதவடைப்பு செய்தது. 9 மண்டல அலுவலகங்களும் மத்திய கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது மீண்டும் 18 பஞ்சாலைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. தேசிய பஞ்சாலை கழகம் அலுவலக இணையதளம் சாய் லுன் சாய் லுன் (T'sai Lun கி.பி.50 – கி.பி.121) காகிததைக் கண்டறிந்த சீன அறிஞர். இவர் சீனாவின் அரசவையில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் தாம் தயாரித்த காகித மாதிரிகளைப் பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி.105 வாக்கில் அளித்தார். ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இச்சாதனைக்காக அவர் சீனாவில்பெரிதும் மதிக்கப்பட்டார்.சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியை சீனர்கள் நீண்ட காலம் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனால் 151-ல் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சீனக் காகிதத் தயாரிப்பாளர்களைப் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்ட், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று. இக்கலை படிப்படியாக அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. நவீன அச்சுக்கலையை ஜான் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகு மேனாடுகளில் ஆட்டுத்தோலுக்குப் பதில் காகிதம் முக்கிய எழுது பொருள் ஆயிற்று. காகிதம் தயாரிக்க சாய் லுன் கையாண்ட அதே முறைதான் 1800-ல் எந்திர முறை புகுத்தப்பட்ட பிறகும் கூட அதே அடிப்படையில் மாற்றமின்றி காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது. சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை அவர் ஓர் அலியாக இருந்தார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் மன்னர் பெரும் மகிழ்ச்சி கொண்டு சாய் லுன்னுக்கு பதவி உயர்வு அளித்தார். அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால் அரண்மனை சூழ்ச்சி ஒன்றில் சிக்கி அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. துன்பத்திற்குள்ளான சாய் லுன் நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து நஞ்சுண்டு மாண்டார் என சீன வரலாறு கூறுகிறது. மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008 கூபு குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (கி.மு.26) எகிப்தில் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவரது கல்லறையாகத்தான் இந்த பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவர் மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார். ஐயன் கொம்பு ஐயன் கொம்பு என்பது பேசும் குழந்தையிடம் தாய்மார் விளையாடும் விளையாட்டு. இது குழந்தையைப் பேசப் பழக்கும் விளையாட்டு. பேசும் குழந்தையின் விரலை ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு ‘இது யார்க் கொம்பு, ஐயன் கொம்பு … என்று பாடி மகிழ்விக்கும் விளையாட்டு. வெட்டவா, குத்தவா, வெந்நித் தண்ணி ஊத்தவா! இவ்வாறு சொல்லிவிட்டுக் குழந்தையைத் தாய் செல்லமாகக் கிள்ளுவாள். அட்டலங்காய் புட்டலங்காய் அட்டலங்காய் புட்டலங்காய் என்னும் விளையாட்டு பேச முயலும் குழந்தையிடம் தாய்மார் பேசி மகிழ்விக்கும் விளையாட்டு. பல குழந்தைகளைக் கால்களை நீட்டிக்கொண்டு வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கால்களை ஒவ்வொன்றாகத் தொட்டுத் தாய்மார் பாட்டுப்பாடுவர். கடைசியில் தொடும் காலைச் செல்லமாகக் கிள்ளுவர். அத்தளி புத்தளி அத்தளி புத்தளி என்பது குழந்தையைப் பேசவைக்கும் விளையாட்டு. பல குழந்தைகளின் கையைத் தரையில் வைக்கச் சொல்லி ஒவ்வொரு குழந்தையின் கையையும் வரிசையாகத் தொட்டு ‘அத்தளி, புத்தளி, மச்சான், மாமன் … உன் அப்பன் பெயரென்ன’ என்று பெயர் கேட்டு விளையாடும் விளையாட்டு. குழந்தை தன் தந்தையின் பெயரைச் சொல்லவேண்டும். உப்பு மூட்டை உப்பு மூட்டை என்பது மாமா முறையினரோ, பெரியவர்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு. ஏலகிரி மலை ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,048 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும், காலடி வைத்தாலே கர்ம வினைகள் தீரக்கூடிய ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் இங்குதான் அமைய பெற்றுள்ளது.பிரதி மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாஸ்யை தினங்களில் மட்டுமே திறக்கப்படும் பூலோக புண்ய ஆஷ்ரம் ஆகும் இது.18 வருட காலமாக இது மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.இதை ஸ்தாபித்தவர் மஹாவதாரம் பகவான் ஸ்ரீஸத்யம் அவர்கள் ஆவார்கள். அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 பாகை செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது. வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள சோலையார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம். சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர். இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனுார் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது. பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓடுகுஞ்சு ஓடுகுஞ்சு என்பது தமிழக நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு. நிலாவெளிச்சத்தில் சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இது படிப்படியாக மறைந்துவருகிறது. விலங்குகள் தம் குட்டிகளைப் புலி முதலான எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொண்டு சூழ்ந்து செல்லும். அதுபோல ஓடுகுஞ்சு அணியினர் குஞ்சு தப்பி ஓடும்படி பாதுகாத்துக்கொண்டு ஓடுவர். ஓடுசிக்கு ஓடுசிக்கு ஒரு மூச்சுப்பயிற்சி விளையாட்டு. சிறுவர்கள் இதனை விளையாடுவர். தமிழ்நாட்டில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு 1950-க்குப் பின்னர் படிப்படியாக மறையலாயிற்று. இரண்டு அணிகள் கொண்டு கபடி அட்டம் போல் விளையாடப்படும். கபடி ஆட்டத்தில் பாடி வருவோரைப் பிடிக்கலாம். இந்த விளையாட்டில் பிடிக்கக்கூடாது - இது வேறுபாடு. பாடி ஒரு கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூச்சு விடாமல் பாட்டுப் பாடிக்கொண்டே வந்து எதிரணியினரைத் தொடவேண்டும். 8தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) கட்ட விளையாட்டு கட்ட விளையாட்டு பொழுதுபோக்கு விளையாட்டாக முதியோரால் விளையாடப்படும். பிறரும் இணையாகச் சேர்ந்துகொள்வது உண்டு. இருவர் ஆடும் விளையாட்டு இது. படத்தில் உள்ளது போல் அரங்கு ஒன்று வரையப்படும். மூன்று முனைகள் உள்ள அரங்கிற்கு 3 காய்கள் (கற்கள் போன்றவை) பயன்படுத்தப்படும். இருவரும் வெவ்வேறு அடையாளமுள்ள காய்களைப் பயன்படுத்துவர். மாறி மாறி அவர்கள் காயை இறக்குவர். முழுதும் இறக்கிய பின்னர் நகர்த்துவர். அடுத்தவர் காய்கள் நேர்க்கோட்டில் அமையாவண்ணம் தடுப்பர். ஆடுபுலி ஆட்டத்தில் புலிக்காய்கள் வெட்டப்படும். ஆனால் இந்த ஆட்டத்தில் காய்கள் வெட்டப்படுவது இல்லை. ரிச்சார்ட் ஹர்ட் ரிச்சார்ட் ஹர்ட் ("Richard Hurd", பிறப்பு: திசம்பர் 18 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1997-1998 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சார்ட் ஹர்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. மார்டின் ஜேம்ஸ் மார்டின் ஜேம்ஸ் ("Martin James ", பிறப்பு: அக்டோபர் 26 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1993-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்டின் ஜேம்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. கெவன் ஜேம்ஸ் கெவன் ஜேம்ஸ் ("Kevan James ", பிறப்பு: மார்ச்சு 18 1961 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 225 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 254 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1980-1999 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கெவன் ஜேம்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. கண்கட்டி விளையாட்டு கண்கட்டி விளையாட்டு சிறுவர் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று. இது தொடக்கப்பள்ளிகளில் விளையாடப்படும்போது மாணவர்கள் கைகோத்துக்கொண்டு நிற்கும் வட்டம் எல்லையாகப் பயன்படுத்தப்படும். தெருக்களில் விளையாடப்படும்போது கால்களால் தேய்த்து வரைந்த வட்டம் பயன்படுத்தப்படும். தொடுபவர் கண் கட்டப்பட்டிருக்கும். அவர் வட்டத்துக்குள் ஓடுபவர்களைத் தொடவேண்டும். தொடப்பட்டவர் கண் கட்டப்பட்டு ஆட்டம் தொடரும். இது விளையாடுவோர் அனைவருக்கும் இன்பம் பயக்கும். விளையாடும்போது உரையாடல் பாட்டுப் பாடப்படும். கரெத் ஜேம்ஸ் கரெத் ஜேம்ஸ் ("Gareth James ", பிறப்பு: திசம்பர் 1 1984 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004-2007 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கரெத் ஜேம்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. பர்னட் ஜேம்ஸ் பர்னட் ஜேம்ஸ் ("Burnet James ", பிறப்பு: அக்டோபர் 26 1886, இறப்பு: செப்டம்பர் 26 1915), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1914 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பர்னட் ஜேம்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. ஜாம்ஸ் ஹர்ன் ஜாம்ஸ் ஹர்ன் ("James Hurn ", பிறப்பு: நவம்பர் 21 1926 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1964 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜாம்ஸ் ஹர்ன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. பிரயன் ஜேம்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1934) பிரயன் ஜேம்ஸ் ("Brian James ", பிறப்பு: ஏப்ரல் 26 1934, இறப்பு: 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் ஜேம்ஸ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. ஜான் ஹரெல் ஜாம்ஸ் ஹர்ன் ("John Hurrell ", பிறப்பு: செப்டம்பர் 1 1947 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1970 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜாம்ஸ் ஹர்ன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. ஃபிரடெரிக் ஜேக்மன் ஃபிரடெரிக் ஜேக்மன் ("Frederick Jakeman ", பிறப்பு: சனவரி 10 1920, இறப்பு: மே 17 1986) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 134 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1946-1954 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரடெரிக் ஜேக்மன் கிரிக்கட் ஆக்கைவ் - - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011.. ஜோப் ஹர்ஸ்ட் ஜோப் ஹர்ஸ்ட் ("Geoff Hurst ", பிறப்பு: திசம்பர் 8 1941 ), இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1966 காற்பந்தாட்ட உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார். அச்சாதனை இந்நாள் வரையிலும் முறியடிக்கப்படவில்லை. இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1962 ஆம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜோப் ஹர்ஸ்ட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. கிரகாம் ஹர்ஸ்ட் கிரகாம் ஹர்ஸ்ட் ("Graham Hurst ", பிறப்பு: அக்டோபர் 22 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1982-1986 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரகாம் ஹர்ஸ்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. பிரயன் ஜேம்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1941) பிரயன் ஜேம்ஸ் ("Brian James ", பிறப்பு: மார்ச்சு 21 1941, இறப்பு: நவம்பர் 6 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1973 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் ஜேம்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1941) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. பெயர் தெரியாச் சங்கப் புலவர்கள் சங்கப்பாடல்களைப் பாடிய 26 புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. எனவே அவர்கள் பாடிய கவிநயம் கொண்ட பாடலின் ஓர் அடியை எடுத்து, அத்தோடு 'ஆர்' விகுதியை சேர்த்து அழைக்கப்படுகின்றனர். மூன்றாம் தலைமுறை அணு உலை மூன்றாம் தலைமுறை அணு உலை (generation III reactor) இரண்டாம் தலைமுறை அணு உலையை, தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு வளர்ச்சிகளை கருத்தில்கொண்டு, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கியதாகும். இந்த மேம்பாடுகள் பராமரிப்பு மற்றும் முதலீட்டுச் செலவுகளைக் குறைத்து பாதுகாப்பினைக் கூட்டும் வகையிலான எரிபொருள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேம்பட்ட வெப்ப வினைத்திறன், இயக்கியற்ற பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சீர்தரப்பட்ட வடிவமைப்புகள் ஆகும். இத்தகைய முன்னேற்றங்கள் நீண்ட இயக்க கால வாழ்வை (முழுமையான பராமரிப்பிற்கும் அணுக்கரு உலைக்கலன் மாற்றுவதற்கும் முன்னதாக 60 ஆண்டுகள் இயக்கவும், 120+ ஆண்டுகள் வரை விரிவாக்கப்படக் கூடியனவாகவும்) அளிக்கின்றன; எதிராக இரண்டாம் தலைமுறை அணு உலைகள் 40 ஆண்டுகள் இயக்க வாழ்வை (80 ஆண்டுகள் வரை விரிவாக்கக்கூடிய அளவில்) கொண்டுள்ளன. மேலும், முந்தைய தலைமுறை அணு உலைகளில் நிலவுவதைவிட கருவ சிதைவு நிகழ்வடுக்குகள் இந்தவகை அணு உலைகளில் குறைவானதாகும் — ஐரோப்பிய அழுத்த அணு உலைகளுக்கு 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 60 கருவ சிதைவு நிகழ்வுகள்; ESBWRகளில் 1000 மில்லியன் அணு உலை-ஆண்டுகளுக்கு 3 கருவ சிதைவு நிகழ்வுகள் — இரண்டாம் தலைமுறை அணு உலையான கொதிநீர் அணு உலை BWR/4 அளிக்கும் 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 10,000 கருவ சிதைவு நிகழ்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்தவை l மூன்றாம் தலைமுறை வடிவமைப்பாளர்கள் இவ்வகை அணுஉலைகள் முன்பிருந்த அணுஉலைகளை விட பாதுகாப்பானவை என்று கூறுகின்றபோதும் சில அறிவியலாளர்கள், கவலையுறும் அறிவிலாளர்கள் சங்கத்தின் மூத்த அறிவியலாளர் எட்வின் லைமான் போன்றவர்கள் இக்கூற்றினை எதிர்க்கிறார்கள்; முதலீட்டுச் செலவுகளைக் குறைக்குமுகமாக மாற்றப்பட்டுள்ள வடிவமைப்புகளால் கதிர்வீச்சு அடக்குக் கலன்களின் வலிமை மற்றும் கற்காரை கட்டிடடங்களின் வலிமை குறித்து கவலை தெரிவிக்கிறார்கள். முதல் மூன்றாம் தலைமுறை அணுஉலைகள் சப்பானில் கட்டப்பட்டுள்ளன.ஐரோப்பாவில் பல அணுஉலைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளன. வெஸ்டிங்அவுஸ் வடிவமைத்த AP1000 என்ற மூன்றாம் தலைமுறை அணுஉலை சீனாவில் சான்மென் என்றவிடத்தில் 2013இல் இயக்கத்திற்கு வர உள்ளது. நீர்-நீர் ஆற்றல் அணு உலை நீர்-நீர் ஆற்றல் அணுஉலை , ( ; ஆங்கிலப் பெயர்ப்பு : "Vodo-Vodyanoi Energetichesky Reactor"; "Water-Water Energetic Reactor") சுருக்கமாக விவிஈஆர் (VVER) , அல்லது WWER அழுத்த நீர் அணு உலை வடிவமைப்பில் அமைந்த உருசிய அணுக்கரு உலைகளாகும். இவை முன்னாள் சோவியத் ஒன்றியம், இந்நாள் உருசியாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் (OKB Gidropress) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் ஆற்றல்திறன் 440 MWe முதல் 1200 MWe வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா, பல்கேரியா, சீனா, செக் குடியரசு, பின்லாந்து, அங்கேரி, இந்தியா, ஈரான், ஸ்லோவேக்கியா, உக்ரைன், மற்றும் உருசியக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 1970ஆம் ஆண்டில் விவிஈஆர் வகை அணுஉலைகள் முதலில் கட்டப்பட்டன. பெரும்பாலும் VVER-440 வடிவு V230 பொதுவான வடிவமைப்பாக இருந்த இந்த அணுமின் நிலையங்கள் 440 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்டவையாக இருந்தன. V230 வடிவில் ஒவ்வொன்றும் தனித்தனி கிடையான நீராவி ஆக்கியுடன் ஆறு முதன்மை குளிர்வி சுற்றுக்கள் இருந்தன. சற்றே மாற்றியமைக்கப்பட்ட VVER-440, வடிவு V213இல் சோவியத் வடிவமைப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட அணுக்கருப் பாதுகாப்பு சீர்தரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த வடிவமைப்பில் நெருக்கடிநிலை கருவ குளிர்விப்பு மற்றும் துணை ஊட்டுநீர் அமைப்புகளும் மேம்பட்ட விபத்து கண்டறிதல் அமைப்புக்களும் சேர்க்கப்பட்டிருந்தன. பெரிய விவிஈஆர்-1000 1975ஆம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டன. தற்போதைய வடிவமைப்பான விவிஈஆர்-1200 புதிய கட்டுமானங்களில் அளிக்கப்படுகிறது. இது விவிஈஆர்-1000இன் வளர்ச்சியாக கூடுதலான மின்னுற்பத்தித் திறன் 1200 MWe, மற்றும் கூடுதல் இயக்கியற்ற பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டுள்ளது. அப்பூச்சி காட்டுதல் அப்பூச்சி காட்டுதல் என்பது குழந்தை விளையாட்டுகளில் ஒன்று. சின்னக் குழந்தை கண்ணன் தன் நிழலைக் காட்டி அதனைப் பிடித்துத் தா என அடம் பிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். பெரியாழ்வார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது காலத்தில் இதுபோன்றதொரு விளையாட்டு தமிழரிடையே பழக்கத்தில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் குழந்தைகளுக்கு அதன் நிழலைக் காட்டிப் பூதம் எனக் கூறிப் பயமுறுத்தலாயினர். இரட்சிப்பு (கிறித்தவம்) இரட்சிப்பு என்ற சொல் கிறித்தவ இறையியலில் பாதுகாக்கப்படுதல், விடுவிக்கப்படுதல் என்ற பொருள் கொண்டது. எதிரிகளிடமிருந்து, போராட்டங்களிலிருந்து, பாவத்திலிருந்து, நரகத்துக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பதையும் விடுவிப்பதையும் குறிப்பிடுவதாக விவிலியத்தின் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது. வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இரட்சிப்பு என்பது பாவமன்னிப்படைந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதற்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது. திராவிட பிரஞ்சு ஒப்பிலக்கண நூல்கள் திராவிட மொழிகளுக்கும் மற்ற மொழிகளுக்குமான ஒப்பிலக்கண ஆய்வு 100 வருடங்களாகவே நடந்து வருகிறது. அதில் பிரஞ்சுக்காரர்கள் எழுதிய ஒப்பிலக்கண மட்டும் மொழிமாற்று நூல்கள் அதிகம் பிரபலமடையவில்லை. புதுவைத் தமிழர்களான தேசிகம் பிள்ளை மற்றும் செவாலியே மதனகல்யாணி போன்றவர்கள் தமிழ் மொழியிலிருந்து பிரஞ்சு மொழிக்கு நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளனர். ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம் ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம் ("Programmable system on chip") என்பது சைப்பிரெசு குறைக்கடத்தி நிறுவனம் (cypress semiconductors) தயாரிக்கும் ஒரு சில்லு குடும்பத்தின் வணிகப்பெயர் ஆகும். 2001ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சில்லு குடும்பம் உட்பொதிக்கப்பட்ட கட்டக வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் (embedded systems design and implementation) துறையில் ஒரு நவீன அடித்தளமாக விளங்குகிறது மு. பாலசுந்தரம் முருகேசு பாலசுந்தரம் ("Murugesu Balasundaram", (ஏப்ரல் 7, 1903 - திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். மெதடிஸ்த குரு வண. கே. எஸ். முருகேசு என்பவருக்குப் பிறந்தவர் பாலசுந்தரம். யாழ்ப்பாணம் கில்னர் கல்லூரியிலும், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி பயின்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். புலமைப் பரிசில் பெற்று லண்டன் சென்று அங்கு கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுத் திரும்பினார். சிறிது காலம் அவர் ஊடகவியலாளராகப் பணியாற்றிய பின்னர் சட்டம் பயின்று சட்ட வல்லுனரானார். பாலசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து மார்ச் 1960 தேர்தலில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டி. குணரத்தினம் என்பவரை 5,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றார். சூலை 1960 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 1965 இல் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலசுந்தரம், 1965 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 568 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார். கழியல் கழியல் விளையாட்டில் இரண்டு வகை உண்டு. கழி என்னும் சொல் மூங்கில் கழியைக் குறிக்கும். 1) கழியலாட்டம் - :கையில் ஒரு கழியையோ, இரு கைகளிலும் இரு கழிகளையோ வைத்துக்கொண்டு சுழற்றிக் கலைத்திறனைக் காட்டுவது கழியலாட்டம். 2) கழியல்நடை ஆட்டம் - ஒன்று அல்லது இரண்டு மூங்கில் கழிமேல் ஏறி நடந்து ஆட்டம் காட்டுவது கழியல் கழியல்நடை ஆட்டம் கழியல்நடை ஆட்டம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் விளையாடப்படுகிறது. கழியில் யாரும் நிற்க முடியாது. ஆடலாம். (மிதிவண்டியில் யாரும் நிற்க முடியாது. ஓடலாம். அது போன்ற நேர்நிலைதான் இது) கழியல்நடை ஆட்டத்தில் இரண்டு வகை உண்டு. சுமார் கை அளவு பருமனும், பத்து அடி உயரமும் கொண்ட ஒரு மூங்கில் கழியில் சுமார் ஒருமுழ உயரமுள்ள கணுவுக்கு மேல் சுமார் ஒரு அடி நீளமுள்ள அதே பருமன் கொண்ட துண்டுக் கழி ஒன்றைக் கட்டி, அதில் காலை உருத்தாமல் இருக்கத் துணிகளைச் சுற்றி வைத்துக்கொண்டு சுவரைப் பிடித்துக்கொண்டு அந்தத் துண்டுக்கழியின் மேல் இருபுறமும் காலை ஊன்றி நின்று, கம்பைத் தூக்கித் தவ்வித் தவ்வி நடந்து செல்லுதல் ஒருகழி நடை பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இரண்டு கால்களிலும் கட்டை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்து ஆடுவர். இந்தக் கட்டை சுமார் 10 அங்குல உயரந்தான் இருக்கும். இரண்டு கழிகளில் ஏறி நடக்கும் இருகழி நடை ஆட்டத்தில் சுமார் ஐந்தடி உயரத்துக்கு மேல் நின்று அதற்கும் மேலுள்ள அதன் தலைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு நடந்து கூட்டாகப் பலர் ஆடுவர். இதனைக் கொக்கலிக்கட்டை ஆட்டம் எனவும் கூறுகின்றனர். கோப்பாய் தேர்தல் தொகுதி கோப்பாய் தேர்தல் தொகுதி ("Kopay Electorate") என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் நகரை உள்ளடக்கியதாகும். 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் கோப்பாய் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு: 24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: சி. வன்னியசிங்கம் 1959 செப்டம்பர் 17 இல் காலமானார். 19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: சி. கதிரவேலுப்பிள்ளை 1981 மார்ச் 31 இல் இறக்கவே, அவருக்குப் பதிலாக எம். ஆலாலசுந்தரம் 1981 சூலை 23 இல் நியமிக்கப்பட்டார். இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் எம். ஆலாலசுந்தரம் நாடாளுமன்ற இருக்கையை இழந்தார். எம். ஆலாலசுந்தரம் 1985 செப்டம்பர் 2 ஆம் நாள் யாழ்ப்பானத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மென்னீர் அணு உலை மென்னீர் அணு உலை (Light water reactor, LWR) சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் வெப்ப அணுஉலை ஆகும். அணுக்கரு உலைகளில் பெரும்பாலானவை வெப்ப அணுக்கரு உலைகளாகும்; இவற்றில் பெரும்பாலானவை மென்னீர் அணு உலைகளாகும். மென்னீர் அணு உலைகள் மூன்று வகைப்படும்: அழுத்த நீர் அணுஉலை (PWR), கொதிநீர் அணுஉலை (BWR), மற்றும் உய்யமிகை நீர் அணுஉலைகளின் (SCWR) (பெரும்பான்மையான வடிவமைப்புகள்). சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்துவதால் மென்னீர் அணுஉலைகள் பிற அணுஉலைகளை விட எளிமையான வடிவமைப்பாகவும் குறைந்த முதலீடு கொண்டதாகவும் விளங்குகின்றன. இதனால் 2009 வரையில் பெரும்பாலான குடிசார் அணுஉலைகளிலும் கடற்படை செலுத்துகை அணுஉலைகளிலும் இவ்வகை அணுஉலைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பல்வேறு முகமைகள் துவக்கநிலையில் அழுத்த நீர் அணுஉலைகளையும் கொதிநீர் அணுஉலைகளையும் உருவாக்க காரணமாக இருந்தன. இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்க கப்பற்படை, கேப்டன் ஹைமன் ரிக்கோவர் தலைமையில், 1950களில் முதல் அழுத்த நீர் அணுஉலையையும் முதல் அணுக்கரு நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்கினர்; தேசிய அணுஉலை சோதனை நிலையம் (தற்போதைய இடாகோ தேசிய ஆய்வகச்சாலை)யில் நடந்த போராக்ஸ் சோதனைகளின்போது ஆய்வாளர் சாமுவல் அன்டர்மையர் II கொதிநீர் அணுஉலையை உருவாக்கினார். முன்னாள் சோவியத் ஒன்றியமும் தனியாக அவர்களது வகையான அழுத்த நீர் அணுஉலையை 1950களின் பிற்பகுதியில் உருவாக்கினர்; இவற்றின் தனிப்பட்ட துவக்கத்தை குறிக்கவும் சில தேசிய வடிவமைப்பு வேறுபாடுகளை கொண்டும் மேற்கத்திய அழுத்த நீர் அணுஉலைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் இவை விவிஈஆர் என்று குறிப்பிட படலாயிற்று. மூன்றாவது வகையான உய்யமிகை நீர் அணுஉலை 2009 வரையில் எண்ணக்கரு அளவிலேயே உள்ளது; இது நான்காம் தலைமுறை அணுஉலையாக கருதப்படுகிறது. பகுதியளவில் மென்னீரை மட்டுப்படுத்தியாக பயன்படுத்தும் இவை விரைவு நியூத்திரன் அணுஉலையின் சில கூறுகளையும் கொண்டுள்ளது உண்மை உண்மை () ("Truth") என்னும் சொல் வாய்மை, நேர்மை போன்ற பல பொருள்களில் அறியப்பட்டு, ஆளப்பட்டு வருகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் சார்ந்து ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர். உண்மை தொடர்பான பல கோட்பாடுகள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன. வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல். கருத்து: வாய்மை எனப்படுவது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் இல்லாத சொற்களைச் சொல்வது ஆகும். உண்மை என்ற தமிழ் வார்த்தைக்குச் சமமான ஆங்கில வார்த்தை "truth" இது பண்டைய ஆங்கில மொழியில் "tríewþ, tréowþ, trýwþ", என்றும், மத்திம கால ஆங்கில மொழியில் "trewþe",என்றும் அழைக்கப்படுகிறது. பிற மொழி இணைச்சொற்கள்: பண்டைய உயர் ஜெர்மானிய மொழி: "triuwida", பண்டைய நோர்ஸ் மொழி: "tryggð". பண்டைய ஆங்கில மொழி: tréowe வார்த்தைகள், குறியீடுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை ஒழுங்கான உண்மை எவ்வாறு கருதப்படலாம் என்று நிர்ணயிப்பது கடினமானது. ஒரு நபர் அல்லது ஒரு முழு சமூகம் எவ்வாறு கோட்பாடுகளின் அடிப்படையில் "உண்மை" என்ற கருத்தைத் தீர்மானிக்க முடியும் என்பது ஒரு சிக்கலான செயல். "உண்மை" பற்றிய ஒவ்வொரு கண்ணோட்டமும் அறிஞர்களால் வெளியிடப்பட்டு அனைவராலும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மை பற்றிய பெரும்பாலான கோட்பாடுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் சமீபத்தில் தோன்றிய உண்மை சார்ந்த "பணவிறக்கம்" அல்லது "தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்" எனும் கோட்பாடுகள் பழைய நிலையான கோட்பாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளன. உண்மை என்ற கருத்தைப் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் உறுதியாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ கூற இயலாது என்று குறைந்தபட்ச காரண மையங்களை சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். இக்கோட்பாட்டினர், உண்மையின் இயல்பு பற்றி எதுவும் கூற இயலாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவும், கூற்றுக்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்திக் கூறவும், பொது ஊகங்கள் அமைக்கவும் உண்மை அவசியமாகிறது. அச்சமயங்களில் அது சொற்பொழிவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொது முத்திரைத் தகவல் போன்று பயன்படுத்தப்படுவதாக குறைந்தபட்ச காரணக்காரர்கள் கருதுகிறார்கள். தன்னிலையான அல்லது தற்சார்பியலான கோட்பாடுகள் (Substantive theories) பணவிறக்கக் கோட்பாடு (Minimalist (deflationary) theories) மிகைமை மற்றும் தொடர்புடைய கோட்பாடுகள் (Redundancy and related theories) கூட்டு எண்ணக் கோட்பாடு (Pluralist theories) மிக நம்பப்படுகிறது கோட்பாடுகள் (Most believed theories) உண்மையான நம்பிக்கைகள், உண்மையான வாசகங்கள் ஆகியவை நடைமுறை விவகாரக் கையாளுகையுடன் தொடர்புடையவை என்று தொடர்புக் கோட்பாட்டுக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். இது சாக்ரடீஸ் (Socrates), பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்ற கிரேக்க மெய்விளக்கவியல் ஆய்வாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரிய மாதிரி ஆகும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர் தாமஸ் அக்வினாஸின் (Thomas Aquinas) அறிக்கையானது, தொடர்புக் கோட்பாட்டு மாதிரிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். "உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு சமன்பாடு" அல்லது "உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு போதுமான பொருத்தப்பாட்டு நிலைமை ஆகும்" என்று தாமஸ் அக்வினாஸ் தன்னுடய வெரிடாஸ் எஸ்ட் அடிகுவேஷியொ ரீ எட் இன்டெல்லெக்டஸ் (Veritas est adaequatio rei et intellectus) என்ற அறிக்கையில் கூறுகிறார். இது பிளேட்டோவின் அறிவுரையைப் பின்பற்றும், ஒன்பதாம் நூற்றாண்டின் ஐசக் இஸ்ரேலிக்கு (Isaac Israeli) அக்வினாஸால் வழங்கப்பட்டதாகும். அக்வினாஸ் இக்கோட்பாட்டை முன்னிலும் திட்பமாக, "ஒரு தீர்ப்பு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகும்போது அது உண்மை என்று கூறப்படுகிறது" என்று மீண்டும் எடுத்துக்கூறுகிறார். "புறநிலை தற்சார்பற்ற யதார்த்த உண்மை" என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும் ஒரு விஷயமே "உண்மை" என்று தொடர்புக் கோட்பாட்டு மையங்கள் வலியுறுத்துகின்றன. இவர்கள், உண்மையை, எண்ணங்கள், வார்த்தைகள், பிற சின்னங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் குறிக்கின்றனர். கூடுதல் காரணிகளைப் பகுப்பாய்வு செய்யாமல் இலட்சிய வரையறையை அடைய முடியாது என்று நவீன கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஒத்திணக்கமான தத்துவத்தின்படி உண்மை என்பது பொதுவாக ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த உட்கூறுகளுக்கு இடையே உள்ள பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முழுமைப்படுத்தல் மற்றும் தொகுத்தல் ஆகியவற்றின் பின்புலத்தில் உள்ள கருத்துக்களை நுண்ணாய்வுடைய கண்ணோட்டத்தில் சீர்தூக்கிப் பார்த்து தீர்வு காண்பது ஒத்திணக்கமான  அமைப்பின் சிறப்புக் காரணியாகும். ஒத்திணக்கமான தத்துவத்தின் சில மாறிகளில், தர்க்கம் மற்றும் கணிதக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டு அத்தியாவசியமானதும், உள்ளார்ந்ததுமான பண்புகளின் தாக்கம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி கோரப்பட்டுள்ளன. ஸ்பினோஸா (Spinoza), லீப்னிஸ் (Leibniz) ஜி.டபிள்யூ.எஃப். ஹெகல் (G.W.F. Hegel) பிரிட்டன் நாட்டு தத்துவ ஞானி எஃப்.ஹெச். பிராட்லி (F.H. Bradley) ஆகிய பகுத்தறிவுவாதிகளின் தத்துவ சிந்தனைகளிலிருந்து ஒத்திணக்கமான கோட்பாடுகள் முற்றிலும் வேறுபடுத்தி அறியக்கூடியதாக உள்ளன. தத்துவ ஞானி மார்க்ஸ் (Marx) புறநிலைத் தன்மை உடைய உண்மை இருப்பதை ஏற்கிறார். அவரது அகவிருத்திவாத கோட்பாடுகள்: தத்துவவாதி ஜர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas) கருத்தொற்றுமைக் கோட்பாட்டை ஆதரிக்கிறார். இவர் கூற்றுப்படி, தற்போதைய கருத்தொற்றுமைக் கோட்பாட்டின் வலுவான விமர்சகர்களின் மத்தியில் தத்துவவாதி நிக்கோலஸ் ரெஸ்செர் (Nicholas Rescher) முக்கியமானவர். இஸ்லாமிய பாரம்பரியத்தில், இந்த கொள்கை ஹதீஸ்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. ஹதீஸில் முகமது நபியின் வாக்கு: "என் சமூகத்தினர் ஒருபோதும் பிழைகளுக்கு உடன்படமாட்டார்கள்." 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce), வில்லியம் ஜேம்ஸ் (William James), ஜான் டூயி (John Dewey), ஆகியோர், உண்மை பற்றிய செல்வாக்கான மூன்று நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களும், கூறுகளும், கண்ணோட்டங்களும் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. ஆனால் அவர்களின் கருத்துக்களில் பின்வரும் கூறுகள் ஒருமித்து இருந்தன: 1. உண்மை என்பது சரிபார்க்கப்பட்டது. 2. நடைமுறைப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட ஒருவரது கருத்துக்கள் உண்மை எனப்படும். ரிச்சர்ட் ஃபேய்ன்மேன் (Richard Feynman) நடைமுறைக்கேற்ற கோட்பாட்டை பின்வருமாறு சாட்டியுரைக்கிறார்: நாங்கள் நிச்சயமாக ஒருபோதும் சரியானவர்கள் அல்லர். நாங்கள் தவறானவர்கள் என்று எங்களால் உறுதிப்படுத்திகொள்ள முடியும். உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று மிகையச்சம் கொண்டவர்களும், ஏதிலாச் சோர்வுடையவர்களும், உடலில் பிணிக்கான எந்த அறிகுறியும் பெற்றிருக்கமாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தமக்குப் பிணி இருப்பதாகப் புகார் கூறுவார்கள். இந்நிலையில், அப்பிணியாளர், சுய ஏமாற்று வேலை செய்கின்றாரா? அல்லது தவறான நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா? என்பது போன்ற சர்ச்சை ஏற்படும்போது உண்மை பற்றிய ஆய்வுக் கருத்துரை அவசியமாகிறது. புத்த மதம் (Buddhism), கிறித்துவம் (Christianity), இஸ்லாமியம் (Islam), யூதம் (Judaism), ஆகிய மதங்களின், மதச் சூழலில், எல்லா பொருள்களையும் குறித்த சரியான அறிவைப் பெற்றிருக்கும் நிலை (முழுதுணரும் அறிவு) ஒரு தெய்வீகப் பண்பு இருப்பாகக் கருதப்படுகிறது. ஆபிரகாமிய மதப் பார்வையில், இறந்தவர்களின் வாழ்க்கை பற்றிய சரியான அறிவின் அடிப்படையில், கடவுள் மட்டுமே தெய்வீகத் தீர்ப்பு வழங்குவார்.
மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள் ஏரம்பம் என்பதே மிகப்பழைய கணக்கியல் நூலென்றும் தற்போது அது மறைந்து விட்டதாகவும் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அதை தவிர காக்கை பாடினியாரும் காரிநாயனாரும் கணக்கியல் நூல்களை எழுதி இருக்கின்றனர். கரகர வண்டி கரகர வண்டி என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தானே சுழல்வது இந்த ஆட்டம். வண்டி என்னும் சொல் வட்டமாக உள்ள சக்கரத்தைக் குறிக்கும். பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றுவர். சுற்றும்போது வரும் கிறுகிறுப்பு ஒருவகைத் தனி இன்பம். சுற்றும்போது மயக்கம் வந்தால் உட்கார்ந்துகொள்வர். அல்லது படுத்துக்கொள்வர். கரகர வண்டி, காமாட்சி வண்டி (இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே சுற்றுவர்) ஆட்டு பூட்டு. அண்ணன் கொடுத்த சீட்டு (திரும்பத் திரும்ப) பியேர் கியூரி பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பியேர் கியூரி பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி. ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. மிகுந்த தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது. ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக்(Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்ஹ்டில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய இரண்டாவது மகள் ஈவ் கியூரி சிறந்த இசைக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். இவர் தனது தாயார் மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அறிவியல் ஒளி, மே-2009 இதழ். தானே புயல் தானே புயல் "(Cyclone Thane)" என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். இது கடலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது. வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் 2011 திசம்பர் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல மெல்ல வலுவடைந்து 2011 திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டது. 68.819 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்த, "தானே' புயல், 2011 திசம்பர் 30 இல் சென்னை-நாகை இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தமிழக கடலோரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 முதல் 135 கிமீ வேகமாக கணக்கிடப்பட்டது. அதனால் அது கடுமையான புயல் என்று அளவிடப்பட்டது. 30ம் தேதி வலிமை குறைந்து காற்றின் வேகம் 90 முதல் 110 கிமீ வேகம் இருக்குமென அறிவிக்கப்பட்டது. புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. புயல் நாகையைத் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை காவல்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டது. மீட்புக் குழுக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டன. தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும் 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 39 பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் என உயிரிழப்புகள் ஏற்பட்டன. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஒமன், மலேசியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனிவாவில் உள்ள உலக வானிலை மையத்தில் பெயர்களை வழங்குவது வழக்கம். கடைசியாக பாகிஸ்தான் வழங்கிய நீலம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வீசப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 2013 ஏப்ரல் 29-ம் திகதி அறிவித்தார். கதிர்வீச்சு காப்புக் கட்டிடம் கதிர்வீச்சு காப்புக் கட்டிடம் ( "containment building"), அதன் பொதுவான பயன்பாட்டில், அணுக்கரு உலையைச் சூழ கட்டப்பட்டுள்ள ஓர் எஃகு அல்லது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடம் ஆகும். ஓர் நெருக்கடியில் 60 முதல் 200psi ( 410 to 1400 kPa) வரையிலான அதிகபட்ச கதிர்வீச்சை வெளியேறாது அடக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுக்கரு பொறியியலில் கதிர்வீச்சு வெளிப்பாட்டை தடுக்கும் செயல்முறைகளில் இது நான்காவது தடைக்கல்லாக உள்ளது; முதலாவது எரிபொருள் சுட்டாங்கல்லும் இரண்டாவதாக எரிபொருளைப் போர்த்திய உலோக குழாய்களும் மூன்றாவதாக அணுஉலைக் கலன் மற்றும் குளிர்வி ஆகியனவும் ஆகும். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அணு மின் நிலையமும் "இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை" (FSAR)இல் காணப்படும் "வடிவமைப்பு காரண விபத்துக்கள்" பகுதியில் உள்ள சில கட்டுவரம்புகளை தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு அணு மின் நிலையத்திற்கு அண்மையில் உள்ள பொது நூலகமொன்றில் கிடைப்பதாக இருத்தல் வேண்டும். காப்புக் கட்டிடம் வழமையாக அணுஉலையை உள்ளடக்கி காற்றுப்புகா எஃகு கட்டுமானமாக வெளிச் சூழலில் இருந்து தள்ளி அமைக்கப்பட்டிருக்கும். எஃகு தனித்தோ காங்கிறீற்று ஏவுகணை கேடயத்துடன் இணைக்கப்பட்டோ இருக்கும். இந்த காப்புக் கட்டிடம் மற்றும் ஏவுகணை கேடய வடிவமைப்பும் தடிமனும் அணு கட்டுப்பாட்டு ஆணையங்களின் வரையறைகளால் ஆளப்படும். ஒரு முழுவதும் நிரம்பிய பயணிகள் வானூர்தியால் தாக்கப்பட்டாலும் சேதமுறாவண்ணம் தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். பெரும்பாலான அணுஉலை விபத்துக்களில் காப்புக் கட்டிடம் முக்கிய பங்கு வகித்தாலும் இது குறுங்காலத்தில் நீராவியை அடக்கிடவும் குளிர்விக்கவுமே வடிவமைக்கப்பட்டுள்ளது; நெடுங்காலம் தடைபடும் விபத்துக்களில் வெப்பக்கடத்தலை பிற அமைப்புக்கள் வழங்க வேண்டும். மூன்று மைல் தீவு விபத்தில் காப்புக் கட்டிடத்தினுள் நீராவியின் அழுத்தம் கட்டுவரம்பினுக்குள் இருந்தபோதும் சில மணி நேரங்கழித்து அழுத்தம் கட்டுவரம்பை மீறுமோ என்ற கவலையில் இயக்குபவர்கள் தெரிந்தே கதிரியக்க ஆவியை வெளியே கசிய விட்டனர். இது மற்ற தவறுகளுடன் சேர்ந்து வெளிச்சூழலுக்கு கதிரியக்க வளிமத்தை வெளியேற்றுவதாக ஆயிற்று. புக்குஷிமா டா இச்சி அணு உலை விபத்தின் தகவல்கள் இன்னும் அலசப்படுகின்றன. 1971 முதல் பாதுகாப்பாக இயங்கிய இந்த நிலையம் வடிவமைப்பில் எதிர்பார்க்காத அளவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால், மின்சாரம், தடங்கல்காப்பு மின்னாக்கிகள், மின்கலங்கள் ஒருசேர தடைபட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளும் தவறின. இதனால் எரிபொருள் தடிகள் பகுதியாக அல்லது முழுமையாக உருகிடவும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளும் கட்டிடங்களும் சேதமுறவும் மிகுந்தளவு கதிரியக்க கழிபொருள்கள் சூழ்ந்திருந்த காற்று,கடல் வழியே வெளியேறவும் வழி வகுத்தது. ரத்தன் ஜைட்கா ரத்தன் ஜைட்கா ("Rattan Jaidka ", பிறப்பு: 1904, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1927ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரத்தன் ஜைட்கா - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. கொலின் ஹர்ட் கொலின் ஹர்ட் ("Colin Hurt ", பிறப்பு: திசம்பர் 16 1893, இறப்பு: திசம்பர் 31 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1914 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கொலின் ஹர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. கெமால் ஹுசைன் கெமால் ஹுசைன் ("Gemaal Hussain ", பிறப்பு: அக்டோபர் 10 1983 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 25 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கெமால் ஹுசைன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. ஜாஹிட் அஹமட் ஜாஹிட் அஹமட் ("Jahid Ahmed ", பிறப்பு: பிப்ரவரி 20 1986 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005-2009 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜாஹிட் அஹமட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. சார்ல்ஸ் ஜாக்கார்ட் சார்ல்ஸ் ஜாக்கார்ட் ("Charles Jaggard ", பிறப்பு: மே 22 1973 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1997 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சார்ல்ஸ் ஜாக்கார்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. தோமஸ் ஜாக்கியூஸ் தோமஸ் ஜாக்கியூஸ் ("Thomas Jacques ", பிறப்பு: பிப்ரவரி 19 1905, இறப்பு: பிப்ரவரி 23 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1927-1936 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தோமஸ் ஜாக்கியூஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. மெல் ஹுசைன் மெல் ஹுசைன் ("Mel Hussain ", பிறப்பு: அக்டோபர் 17 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1985 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மெல் ஹுசைன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. எட்வார்ட் ஹஸ்சி எட்வார்ட் ஹஸ்சி ("Edward Hussey ", பிறப்பு: 1748, இறப்பு: சூலை 4 1816), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். எட்வார்ட் ஹஸ்சி விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. ரிச்சார்ட் ஹட்சிங்க்ஸ் ரிச்சார்ட் ஹட்சிங்க்ஸ் ("Richard Hutchings ", பிறப்பு: மே 6 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1982-1986 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சார்ட் ஹட்சிங்க்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011. படச்சுருள் வேகம் படச்சுருள் வேகம் ("film speed") படச்சுருளின் ஒளிக்கான உணர்திறனை அளவிடப் பயன்படுகிறது. இது பல்வேறு எண் அளவீடுகளில் அளவிடப்படுகிறது. மிகவும் சமீபத்தியது ISO அமைப்பு ஆகும். நெருங்கிய தொடர்புடைய ISO அமைப்பு டிஜிட்டல் இமேஜிங் அமைப்புகளின் உணர்திறனை அளவிட பயன்படுத்தப்படுகிறது. ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்த படச்சுருளின் குறைந்த வேகச்சுட்டினை கொண்டு, ஒர் உணர்திறன் கூடிய படச்சுருளின் அதே படஅடர்த்தியினை உருவாக்க அதிவெளிப்பாடு தேவைப்படுகிறது, இதனால் பொதுவாக மெதுவான படச்சுருள் எனப்படுகிறது. உணர்திறன் கூடிய படச்சுருள் வேகமான படச்சுருள் எனப்படுகிறது. எண்ணிம மற்றும் படச்சுருள் ஒளிப்படவியலில், குறைவெளிப்பாடு காரணமாக உயர் உணர்திறனை பயன்படுத்தல் ஒளிப்பட இரைச்சல் ஏற்பட காரணமாகிறது, இது ஒளிப்படத்தின் தரத்தை குறைகிறது. சுமேரிய கடவுள்கள் சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது. திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பி திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பிகள் [Matrix metalloproteinases (MMPs)] துத்தநாகத்தினைச் சார்ந்த அகப்புரதக்கூறுச் சிதைப்பிகளாகும். இவை, மிகப்பெரும் புரதச்சிதைப்பி குடும்பமான மெட்ஜின்சின் உயர்குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும். கூட்டாக இப்புரதச்சிதைப்பிகள், அனைத்து வகை செல்புற தாயப்புரதங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டவை. மேலும், பல உயிரியியக்க மூலக்கூறுகளையும் செயல்முறை செய்யவிக்கவல்லன. உயிரணு மேற்பரப்பிலுள்ள ஏற்பிகளைப் பிளவுபடுத்துவதிலும், உயிரணு இறப்பு ஈந்தணைவிகளை விடுவிப்பதிலும் (உதாரணமாக, ஃபாஸ் ஈந்தணைவி; FASL (அ) CD95L) மற்றும் கெமோகைன் (உயிரணு இயக்கி/ஈர்ப்பி)/சைடோகைன் (உயிரணு தொடர்பி/செயலூக்கி) இயக்கல்/செயல்முடக்கல் பணிகளிலும் ஈடுபடுகின்றன. கீழ்வரும் உயிரணு செயலாக்கங்களிலும் இப்புரதச்சிதைப்பிகள் பெரும்பங்கு வகிப்பதாகக் கருதப்படுகின்றது: செல் பெருக்கம், உயிரணு பெயர்ச்சி, உயிரணு ஒட்டிணைவு/பரவல், செல் வேறுபடல், இரத்தக் குழாய் வளர்ச்சி, உயிரணு இறப்பு மற்றும் ஓம்புயிர் பாதுகாப்பு. முதுகெலும்புயிரிகள், முதுகெலும்பற்றவைகள் மற்றும் தாவரங்களில் இப்புரதச்சிதைப்பிகள் காணப்படுகின்றன. மற்ற அகப்புரதக்கூறுச் சிதைப்பிகளிலிருந்து இவை, கனிம அயனிகளை துணைக்காரணிகளாக சார்ந்திருப்பதிலும், செல்புற தாயங்களைச் சிதைப்பதிலும், குறிப்பிட்ட பரிணாம டி.என்.ஏ. வரிசை முறையினைக் கொண்டிருப்பதிலும் வேறுபடுகின்றன. கரணப்பந்து கரணப்பந்து சிறுவர் குழு விளையாட்டு. இதனைக் குரங்குப்பந்து என்றும் கூறுவர். துணியில் முறுக்கிய திரி இதில் பந்தாகப் பயன்படுத்தப்படும். திரிப்பந்தைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பிடித்துக் கரணம் போட்டுக் காலால் வீசுவர். எதிரில் இருப்பவர் அதனைப் பிடிக்கவேண்டும். பிடித்தால் பிடித்தவர் கரணப்பந்து வீசலாம். பிறர் பிடிக்காவிட்டால் பந்து விழுந்த இடத்திலிருந்து முன்பு அடித்தவரே முன்போலவே ஆடலாம். யார் அதிக தொலைவு பந்தைக் கொண்டு செல்கிறாரோ அவர் பெருமை பெறுவார். பிடி நழுவிப் பந்து பின்பக்கம் விழுந்துவிட்டால் அவர் ஆட்டம் போய்விடும். ஒருவர் வென்றுகொண்டே சென்ற கடைசி இடத்திலிருந்து ஏனையோர் நொண்டி அடித்துக்கொண்டு முதலில் ஆட்டம் தொடங்கிய உத்தி இடத்துக்கு வந்து சேரவேண்டும். இது பந்தைப் பிடிக்காமல் விட்ட தோல்விக்குத் தண்டனை. கல் எடுத்தல் கல் எடுத்தல் சிறுவர் சிறுமியர் விளையாடும் போட்டி விளையாட்டுகளில் ஒன்று. இதனை தெருமண்ணில் காலால் தேய்த்து உத்திக்கொடு போடுவர். சுமார் ஐந்தடி இடைவெளியில் 30 அடி தொலைவுக்கு இரண்டு கல்-வைக்கும் கோடுகள் போடுவர். ஒவ்வொரு கோட்டிலும் சம இடைவெளியில் 5 அல்லது 7 கற்கள் வைக்கப்பட்டிருக்கும். இருவர் போட்டியிடுவர். ஓடிச் சென்று முழங்காலும் தொடையும் படியும்படி உட்கார்ந்து ஒவ்வொரு கல்லாக எடுத்துவந்து அதேபோல் உட்கார்ந்து உத்திக்கோட்டில் கல்லை வைக்க வேண்டும். இருவரில் யார் முதலில் எல்லாக் கற்களையும் உத்தியில் சேர்க்கிறாரோ அவர் பழம். அடுத்து, தோற்றவரோடு இன்னொருவர் போட்டியிடுவார். ஓடுதல், உட்கார்ந்து எழுதல் ஆகியவை நல்ல உடற்பயிற்சி. இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு (Passive nuclear safety) என்பது அணுக்கரு உலைகளில் எவ்வித இயக்குனரின் செயல்களையோ மின்னணு சாதன பின்னூட்டையோ சார்ந்திராது நெருக்கடிக் காலங்களில் (பொதுவாக குளிர்விக் குறைவினால் அல்லது குளிர்வி பாய்மம் குறைவினால் சூடு கூடுதலாகும்போது) தானே பாதுகாப்பாக இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்ற ஓர் பாதுகாப்பு அமைப்பாகும். இத்தகைய அணுஉலைகளில், பயன்படுத்தப்படும் பொருட்களின் தேர்வில் அவற்றின்தன்மையால் இயற்பியல் விதிகளின்படி நெருக்கடிக் காலங்களில் அணுக்கரு வினையை ஊக்குவிக்காது மட்டுப்படுத்துபவையாக பொறியியல் வடிவமைப்பின்போது கவனம் செலுத்தப்படுகிறது. மாறாக முந்தைய அணுஉலை வடிவமைப்புகளில், பொதுவான விளைவாக, சூடு கூடுதலாகும்போது அணுக்கரு வினையும் விரைவுபடுத்தப்படுமாதலால் அணுஉலைச் சேதத்தை தவிர்க்க இயக்கும் மனிதரின் இடையீடு அல்லது மின்னியல் பின்னூட்டு மூலமான இடையீடு தேவையாக இருந்தது. ஒரு அணுஉலையை 'இயக்கியற்ற பாதுகாப்புடையது' என்று விவரிப்பது அங்கு பின்பற்றக்கூடிய பாதுகாப்பு யுக்தியைக் குறிப்பதாக அமையுமே தவிர எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதை அல்ல. இயக்கியற்ற பாதுகாப்பை பின்பற்றும் அணுஉலை பாதுகாப்பானதா அல்லவா என்பது பாதுகாப்புக் குறித்தான மதிப்பீடு அளவைகளைப் பொறுத்ததாகும். இருப்பினும் நவீன அணுஉலைகள் இயக்கியற்ற பாதுகாப்பைக் கூட்டுவனவாகவும் இயக்கியற்ற மற்றும் இயக்கத்தில் உள்ள பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி முந்தைய நிறுவல்களைவிட பாதுகாப்பானதாகவும் உள்ளன. இயக்கியற்ற பாதுகாப்பு என்பது பயன்படுத்தப்படும் கூறுகளுக்கானவையே தவிர எக்காரணம் கொண்டும் முழுமையான பாதுகாப்பு நல்குவனவாகக் கருதப்படல்கூடாது. எனவே பன்னாட்டு அணுசக்தி முகமையகம் "இயக்கியற்ற பாதுகாப்பு" பொருட்களை, அவை எவற்றை பயன்படுத்துவதில்லை என்பதைப் பொறுத்து, கீழ்கண்டவாறு தரப்படுத்தியுள்ளது: பன்னாட்டு நாள் கோடு பன்னாட்டு நாள் கோடு ("International Date Line", IDL) என்பது புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள ஓர் கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° நில நிரைக்கோட்டில் அமைந்துள்ள போதும் சில ஆட்சிப்பகுதிகள் மற்றும் தீவுகளின் எல்லைகளைச் சுற்றிச் செல்லுமாறு வளைந்து செல்கிறது. கிழக்கிலிருந்து பயணிக்கும்போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது- பயணி மேற்கில் அந்நாளை மீண்டும் கழிக்கிறார். அதேநேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும் - பயணி ஒருநாளை இழக்கிறார். இந்தக் கோடு கற்பனையாக இருந்தபோதும் நிலையான கால எல்லையை புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது. கல் பிடித்தல் கல் பிடித்தல் தமிழ்நாட்டின் நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. விரல் அளவு பருமன் கொண்ட உருண்டைக் கற்கள் இதற்குப் பயன்படுத்தப்படும். நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவார்கள். ஐவர் ஆடினால் நான்கு மணியாங்கல் பயன்படுத்தப்படும். கல் இல்லாதவரிடம் அருகில் உள்ளவர் தன் கல்லைத் தலை உயரத்துக்கு மேல் தூக்கிப் போடுவார். கல் இல்லாதவர் பிடித்து அவருக்கு அடுத்தவரிடம் தூக்கிப் போடுவார். அவர் பிடித்து அடுத்தவரிடம் போடுவார். யார் கையிலும் இரண்டு கல் இருக்கக்கூடாது. அடுத்தவர் போடும் கல்லைக் கீழே விழாமல் பிடித்துக்கொள்ளவும் வேண்டும். கல்லைப் பிடிக்காமல் கீழே விட்டாலோ, கையில் இரண்டு கல் வைத்திருந்தாலோ அவர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். தவறு செய்யாமல் பிடித்தெறிந்து ஆடிக் கடைசியில் எஞ்சி நிற்பவர் பழம். பழமேறியவர் தோற்றவர்களுக்குத் தண்டனை வழங்குவார். தோற்றவர்கள் விரல்கள் இணைந்து விரிந்திருக்க உள்ளங்கையைத் தரையில் வைக்க வேண்டும். வென்றவர் நின்றுகொண்டு தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி ஆடிய கல்லில் ஒன்றை அவரது புறங்கையில் செங்குத்தாகப் போடுவார். அது தோற்றவர் புறங்கையில் விழுந்தால் வலிக்கும். இது சங்கம் மருவிய கால அம்மானை விளையாட்டைப் போன்றது. நல்லூர் தேர்தல் தொகுதி நல்லூர் தேர்தல் தொகுதி ("Nallur Electorate") என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவை உள்ளடக்கியதாகும். 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: சி. அருளம்பலம் இலங்கை சுதந்திரக் கட்சிக்குத் தாவினார். 21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் எம். சிவசிதம்பரம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார். சப்பானிய கமி கடவுள்கள் கமி என்பது சப்பனியர்கள் பின்பற்றிய மதம் ஆகும். இதைத்தவிர்த்து சிண்டோ மற்றும் புத்த மதத்தினரும் சப்பானில் அதிகம் உண்டு. காமி மதத்தின் ஆண்கடவுள் ஈசாநாகியும் பெண்கடவுள் ஈசாநாமியும் வனவெளிப்பாலம் ஒன்றில் வேல் கொண்டு கடலைக்கடைந்த வண்ணம் இருந்தனர். அந்த வேலின் நுனியில் இருந்து வடிந்த துளியே சப்பானிய தீவுகள் என்பது இம்மதத்தினர் நம்பிக்கை. மொத்தம் 80 லட்சம் சிறு தெய்வ கமிக்கள் (தலைவன்) உண்டு. கல்லா மண்ணா கல்லா மண்ணா தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும் விளையாட்டு. அண்மைக் காலத்தில் மறைந்துவரும் விளையாட்டுகளில் ஒன்று. பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தொடவேண்டும். பட்டவர் கல் என்று சொன்னால் கல்லில் நிற்பவரை மட்டுமே தொடுவார். மண்ணில் நிற்பவரைத் தொடக்கூடாது. பட்டவர் மண் என்று சொன்னால் மண்ணில் நிற்பவரை மட்டுமே தொடுவார். கல்லில் நிற்பவரைத் தொடக்கூடாது. பட்டவராகித் தொடுபவர் கல் என்று சொன்னதையும் மண் என்று சொன்னதையும் மாற்றிச் சொல்லிவிட்டுத் தொட முனைவார். தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் தொடப்பட்டவர் தொடுபவர் ஆகி ஆட்டம் தொடரும். கல்லையோ, மண்ணையோ கோலால் தொட்டுக்கொண்டு நின்றுகொண்டு விளையாடுதலும் உண்டு. கோலால் தொடுவதாயின் அனைவரும் கோலைப் பயன்படுத்த வேண்டும். அல்பிரட் துரையப்பா அல்பிரட் துரையப்பா ("Alfred Duraiappah", இறப்பு: 27 சூலை 1975) என்பவர் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1965, 1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார். அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாகும். நான்கு நிறத் தேற்றம் நான்கு நிறத் தேற்றம் ("Four color theorem") என்பது, கணிதத்தில், வடிவவியலோடு தொடர்புடைய ஒரு தேற்றம் ஆகும். இத் தேற்றம், தளம் ஒன்றை அடுத்தடுத்து அமைந்த பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் அமைந்த வரைபடம் ஒன்றில், அடுத்துள்ள இரண்டு பகுதிகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு நிறந்தீட்டுவதற்குத் தேவையான நிறங்களின் எண்ணிக்கை நான்குக்கு மேற்படா என்று கூறுகிறது. இங்கே, அடுத்தடுத்த பகுதி என்று கூறும்போது, அப் பகுதிகளுக்கு இடையே ஒரு பொதுவான எல்லைக் கோடு இருப்பதைக் குறிக்கிறது. ஒரு புள்ளியில் மட்டும் பொதுவாக இருக்கும்படி மூலைகளில் மட்டும் தொட்டுக்கொண்டிருக்கும் பகுதிகள் இங்கே அடுத்தடுத்த பகுதிகளாகக் கருதப்படுவதில்லை. அரசியல் பிரிவுகளைக் காட்டும் நிலப்படங்களுக்கு நிறந்தீட்டுவது என்பது இத் தேற்றம் உருவாவதற்கான உந்துதலைக் கொடுத்தது எனினும், நிலப்பட வரைவாளர்களுக்கு இது தொடர்பில் குறிப்பிட்ட ஆர்வம் எதுவும் கிடையாது. கென்னத் மே என்னும் கணித வரலாற்றாளர், "நான்கு நிறங்களைப் பயன்படுத்தும் நிலப்படங்கள் மிகவும் அரிது. வழமையாக அவற்றில் மூன்று நிறங்களே தேவைப்படுகின்றன. நிலப்படவியல், நிலப்பட வரலாறு என்பன குறித்த நூல்களும் நான்கு நிற இயல்பு பற்றிக் குறிப்பிடுவது இல்லை." என்று கூறுகிறார். எளிமையான வரை படங்களுக்கு மூன்று நிறங்கள் போதுமானவை. ஒரு பகுதியைச் சுற்றிலும் வட்டமாக ஒற்றை எண்ணிக்கையான பகுதிகள் அமையும் வரை படங்களுக்கு நிறந் தீட்டுவதற்குக் கூடுதலாக நான்காவது நிறம் தேவைப்படும். முன்னர் குறிப்பிட்டபடியான வரைபடம் ஒன்றை நிறந்தீட்டுவதற்கு ஐந்து நிறங்கள் போதுமானவை எனக்கூறும் ஐந்து நிறத் தேற்றம் 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் எளிமையாக நிறுவப்பட்டது. ஆனால், நான்கு நிறத் தேற்றத்தை நிறுவுவது கடினமாக அமைந்தது. 1852 ஆம் ஆண்டில் இத் தேற்றம் தொடர்பான கூற்று வெளிப்படுத்தப்பட்ட பின்னர் பல போலி நிறுவுதல்களும், புறநடை எடுத்துக்காட்டுகளும் எழுந்தன. நான்கு நிறத் தேற்றத்தைக் கென்னத் அப்பெல், வூல்ஃப்காங் ஏக்கன் என்னும் இருவர் 1976 ஆம் ஆண்டில் நிறுவினர். கணனியின் உதவியோடு நிறுவிய முதலாவது முக்கியமான தேற்றம் இதுவாகும். இவர்களின் அணுகுமுறை, நான்கு நிறத் தேற்றத்துக்குப் புறநடையாக அமையாத 1,936 வரைபடங்களைக் கொண்ட குறிப்பிட்ட கணம் ஒன்றை எடுத்துக் காட்டுவதுடன் தொடங்கியது. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு வரைபடமும் மேற்படி இயல்பைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதற்கு கென்னத்தும் ஏக்கனும் இதற்கெனவே உருவாக்கப்பட்ட கணினி நிரல் ஒன்றைப் பயன்படுத்தினர். அத்துடன், புறநடை வரைபடங்கள் உட்பட்ட எல்லா வரைபடங்களும் அவற்றில் ஒரு பகுதியாக முன்னர் கூறிய 1,936 வரைபடங்களுள் ஒன்றைக் கொண்டிருந்தன என்றும் காட்டினர். இதற்கு கையால் எழுதிச் செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட பகுப்பாய்வு தேவையாக இருந்தது. இதன் மூலம், புறநடையான எந்த ஒரு வரைபடமும் நான்கு நிறத் தேற்றத்தோடு உடன்படும் 1,936 வரைபடங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்ற அதே வேளை அவற்றைக் கொண்டிருக்க முடியாது என்னும் முரண்பாடு இருப்பதை எடுத்துக் காட்டினர். இந்த முரண்பாடு புறநடைகள் எதுவுமே இருக்க முடியாது என்பதைக் காட்டியதால் தேற்றம் உண்மை என நிறுவப்பட்டது. எனினும், கணனியின் துணையோடு செய்யப்படும் நிறுவல்களை மனிதர் சரிபார்ப்பது முடியாது என்பதால் இந்த நிறுவலைப் பல கணித வல்லுனர்கள் தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்த ஐயப்பாடுகள் இன்னும் நிலவியபோதும், தற்போது இந்நிறுவலைப் பலரும் ஏற்றுள்ளனர். மீந்திருக்கும் ஐயப்பாடுகளை நீக்கும் நோக்குடன், அதே எண்ணக்கருவைப் பயன்படுத்தி ராபர்ட்சன், சான்டர்சு, சேமூர், தாமசு ஆகியோர் 1997 ஆம் ஆண்டில் ஒரு நிறுவலை வெளியிட்டனர். இவர்களும் கணினியின் பயன்பாட்டிலேயே பெரிதும் தங்கியிருந்தனர். 2005 ஆம் ஆண்டில், பொது நோக்குத் தேற்றம் நிறுவும் மென்பொருளைப் பயன்படுத்தி ஜார்ஜசு கான்தியர் என்பவரும் இத் தேற்றத்தை நிறுவினார். ஃபாக்சு பீ2 ஃபாக்சு பீ2 (FOXP2 - Forkhead box protein P2) என்பது "ஃபாக்சு பீ2 மரபணு" என்றழைக்கப்படும் மரபணுவினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரதமாகும். இந்த மரபணு, வோல்ஃப்காங் எனார்ட் (Wolfgang Enard) என்ற ஆராய்ச்சியாளரால் "மனித முதல் மொழியின் மரபணு" என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமும் செய்த ஆய்வுகளின்படி, மனித இனத்தில் பேச்சுத் திறன், மொழி என்பன விருத்தியடைந்தமைக்கும், இந்த மரபணு, மற்றும் அதிலிருந்து உருவாகும் புரதத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு அறியப்பட்டது. பேச்சுத் திறன், மொழிப் பாவனையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், இந்தக் குறிப்பிட்ட புரதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாக அறியப்பட்டுள்ளது. மாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப்காங் எனார்ட். இவர் மனிதனின் மொழி, பேசும் திறன் ஆகியவற்றிற்கான பல மரபணுக்களில், முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார். கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு உந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர். இரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாராய்ச்சி என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளில் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார். அதுக்கு இந்த ஃபாக்சு பீ2 உதவும் என்பது இவர் கணிப்பு. கல்லுக் கொடுத்தான் கல்லே வா கல்லுக் கொடுத்தான் கல்லே வா என்னும் விளையாட்டு தமிழகத்தில் நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் ஆடிய குழு விளையாட்டுகளில் ஒன்று. அண்மைக் காலமாக இது மறைந்துவருகிறது. ஒருவர் பொத்தியாள். (பொதுவானவர்). இவர் தன் கையிலுள்ள மணியாங்கல்லை மற்றவருக்குக் காட்டுவார். மற்றவர்கள் அவர்முன் பிறைபோல் வளைவாக நிற்பர். ”கல்லுக் கொடுத்தான் கல்லே வா” என்று பாடிக்கொண்டு ஒவ்வொருவர் கையிலும் கல்லைக் கொடுப்பதுபோல் நடிப்பார். அனைவரும் தன் கையில் கல் உள்ளது போல் கையை மூடிக்கொண்டு நடிப்பர். ஒருவரிடம் உண்மையாகவே கல் கொடுக்கப்படும். ”கல்லைக் கொண்டு ஓடிப்போ” என்று பொத்தியாள் இறுதியில் பாடியதும் கல்லைக் கையில் வைத்திருப்பவர் ஓடி முன்பே தீர்மானிக்கப்பட்ட உத்தி இடத்தைத் தொடவேண்டும். உத்தி இடத்தை அவர் அடைவதற்கு முன் பிறர் அவரைத் தொட முனைவர். கல் வைத்திருப்பவர் இடையில் தொடப்பட்டுவிட்டால், ஆட்டம் முனபு போல் மீண்டும் ஆடப்படும். கல் வைத்திருப்பவர் பிறரிடம் பிடிபடாமல் உத்தியைத் தொட்டுவிட்டால், ஏனையோரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்மேல் குதிரை ஏறிக்கொண்டு பொத்தியாள் இருக்குமிடம் வரையில் சவாரி செய்யலாம். பொதுவாகத் தோற்றவருக்குத் தண்டனை என்னும் நிலை மாறி, இந்த விளையாட்டில் வென்றவருக்கு விருது வழங்கப்படுகிறது. கோட்டுரு நிறந்தீட்டல் கோட்டுருவியலில், கோட்டுரு நிறந்தீட்டல் அல்லது கோட்டுரு வண்ணமிடல் (Graph coloring) என்பது ஒரு சிறப்பு வகைக் கோட்டுருக் குறியிடல் ஆகும். இதைச் சில வரையறைகளுக்கு உட்பட்டுக் கோடுருவொன்றின் கூறுகளுக்குப் பெயர் கொடுத்தல் எனலாம். இதன் எளிமையான வடிவமாக, அடுத்துள்ள முனைகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் முனைகளுக்கு நிறந்தீட்டுவதைக் குறிப்பிடலாம். இதை "முனை நிறந்தீட்டல்" அல்லது "முனை வண்ணமிடல்" என்பர். இவ்வாறே அடுத்துள்ள விளிம்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் விளிம்புகளுக்கு நிறந்தீட்டுவதை "விளிம்பு நிறந்தீட்டல்" அல்லது "விளிம்பு வண்ணமிடல்" என்றும், பொதுவான விளிம்பைக் கொண்டிருக்கும் அடுத்துள்ள முகப்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் முகங்களுக்கு நிறந்தீட்டுவதை "முகப்பு நிறந்தீட்டல்" அல்லது "முகப்பு வண்ணமிடல்" என்றும், கூறுவர். முனை நிறந்தீட்டலே இந்தத் துறையின் தொடக்கம். ஏனைய நிறந்தீட்டல் வகைகளை முனை நிறந்தீட்டலாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, விளிம்பு நிறந்தீட்டல், அதன் வரைக் கோட்டுருவின் முனை நிறந்தீட்டலாகவும், தளக் கோட்டுரு ஒன்றின் முகப்பு நிறந்தீட்டல் அதன் இரட்டைத் தளவுருவின் முனை நிறந்தீட்டலாகவும் அமையும். எனினும், முனை நிறந்தீட்டல் அல்லாத பிற வகை நிறந்தீட்டல்களும் அவ்வவ்வடிவங்களிலேயே ஆய்வு செய்யப்படுகின்றன. ஏனெனில், சில பிரச்சினைகளுக்கு, முனை நிறந்தீட்டல் அல்லாத வகைகளை ஆராய்வது கூடிய பொருத்தமாக அமைகின்றது. விளிம்பு நிறந்தீட்டல் கோட்டுருவியலில், விளிம்பு நிறந்தீட்டல் அல்லது விளிம்பு வண்ணமிடல் (Edge coloring) என்பது, கோட்டுரு ஒன்றின் அடுத்துள்ள விளிம்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு அக்கோட்டுருவின் விளிம்புகளுக்கு நிறந் தீட்டுதல் ஆகும். எடுத்துக்காட்டக அருகில் உள்ள படம் சிவப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களைக் கொண்டு விளிம்பு நிறந்தீட்டப்பட்ட கோட்டுரு ஒன்றைக் காட்டுகிறது. விளிம்பு நிறந்தீட்டல், கோட்டுரு நிறந்தீட்டலின் பல்வேறு வகைகளுள் ஒன்று. கணிதத்தின் ஒரு பிரிவு என்ற வகையில், தரப்பட்ட கோட்டுருவொன்றின் விளிம்பு நிறந்தீட்டலுக்குக் கூடிய அளவு k எண்ணிக்கையான நிறங்களைக் கொண்டு நிறந்தீட்ட முடியுமா அல்லது அதன் விளிம்பு நிறந்தீட்டலுக்குக் குறைந்த அளவு எத்தனை நிறங்கள் தேவை என்பது போன்ற கேள்விகளுக்கு விளிம்பு நிறந்தீட்டல் விடையளிக்க முயல்கிறது. ஒரு குறித்த கோட்டுருவுக்கு வெளிம்பு நிறந்தீட்டல் செய்யத் தேவையான மிகக் குறைந்த அளவு நிறங்களின் எண்ணிக்கை "நிறச் சுட்டெண்" (chromatic index) எனப்படுகின்றது. எடுத்துக்காட்டக அருகில் உள்ள கோட்டுரு மூன்று நிறங்களினால் விளிம்பு நிறந்தீட்டல் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் குறைந்த எண்ணிக்கையான நிறங்களைக் கொண்டு நிறந்தீட்ட முடியாது. எனவே இக் கோட்டுருவின் நிறச் சுட்டெண் மூன்று (3) ஆகிறது. தேசார்க் கோட்டுரு கணிதத்தின் கோட்டுருவியலில், தேசார்க் கோட்டுரு (Desargues graph) என்பது, ஒரு தொலைவுக் கடப்பு கனசதுரக் கோட்டுரு ஆகும். இது 20 முனைகளையும், 30 விளிம்புகளையும் கொண்டது. ஜெரார்டு தேசார்க் என்பவரின் பெயரை ஒட்டிப் பெயரிடப்பட்ட இக் கோட்டுரு பல்வேறு சேர்வியல் அமைப்புக்களில் இருந்து உருவாகிறது. உயரளவு சமச்சீர்த்தன்மை கொண்ட இதுவே தளத்திலில்லா கனசதுர பகுதிக் கனசதுரத்துக்கான ஒரே அறியப்பட்ட எடுத்துக்காட்டு ஆகும். இது வேதியியல் தரவுத் தளங்களில் பயன்படுகிறது. தேசர்க் கோட்டுருவை அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன: கல்லுக்குச்சி கல்லுக்குச்சி சிறுவர்கள் விளையாடும் ஒரு குழு விளையாட்டு. எல்லாச் சிறுவரும் தம் கையில் ஒரு முழ நீளத்துக்குக் குறையாத ஒரே அளவுள்ள ஒரு குச்சி வைத்திருப்பர். ஒருவர் குனிந்து தம் கைக்கு எட்டும் தூரத்தில் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போடுவார். அந்த வட்டம் அனைவருக்கும் உத்தி இடமாகப் பயன்படுத்தப்படும். அந்த வட்டத்துக்குள் நின்றுகொண்டு ஒவ்வொருவரும் அடுத்தடுத்துத் தன் குச்சியை எறிவர். எறியும்போது ஒரு காலைத் தூக்கி நின்று அதன் கீழ் உள்ள கால் கவட்டிக்குக் கீழாக எறிவர். யாருடைய குச்சி உத்தியிலிருந்து குறைந்த தொலைவில் விழுந்துகிடக்கிறதோ அந்தக் குச்சிக்காரர் பட்டவர். முதலில் ஒருவர் பட்டவர் குச்சியைத் தன் குச்சியால் தூக்கி எறிவார். பட்டவர் தன் குச்சியை எடுக்க முனைவார். அவர் எடுக்குமுன் மற்றவர்கள் அவரவர் குச்சியால் தூக்கி எறிந்துகொண்டே செல்வர். பட்டவர் தன் குச்சியை எடுத்ததும் அங்கிருந்து அவர் நொண்டி அடித்துக்கொண்டு உத்திவட்டம் வரை வரவேண்டும். இது தோற்றவருக்கு வழங்கும் தண்டனை. கள்ளன் போலீஸ் கள்ளன் போலீஸ் (திருடன் போலீஸ்) என்பது அண்மைய கால நடிப்பு விளையாட்டு. ஐந்தாறு வயது சிறுவர் சிறுமியர் இப்படி விளையாடுவர். வீட்டில் உறங்குவது போலவும், திருடன் திருடிக்கொண்டு செல்வது போலவும், காவல்துறையினரிடம் முறையிடுவது போலவும், அவர்கள் திருடனைப் பிடித்துவருவது போலவும், களவு போன பொருள்களை மீட்டுத்தருவது போலவும் உரையாடலுடன் நடிப்பர். அவர்கள் நடிப்பதைப் பெரியவர்கள் பார்த்து மகிழ்வர். கோட்டுரு (கணிதம்) கணிதத்தில் கோட்டுரு (Graph) என்பது, சில இணைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்களின் பண்புருப் பதிலீட்டைக் (abstract representation) குறிக்கும். இவ்வாறு கணிதப் பண்புருவாக்கத்தினால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பொருட்கள் உச்சிகள் அல்லது முனைகள் எனப்படுகின்றன. இவற்றை இணைக்கும் இணைப்புகளை விளிம்புகள் என்கின்றனர். பொதுவாகக் கோட்டுருக்கள் வரைபட வடிவில் காட்டப்படுகின்றன. இவற்றில் புள்ளிகள் உச்சிகளையும், அவற்றை இணைக்கும் நேர் கோடுகள் அல்லது வளை கோடுகள் விளிம்புகளையும் குறிக்கின்றன. கோட்டுரு பிரிநிலைக் கணிதத்தின் ஆய்வுப் பொருட்களுள் ஒன்றாக அமைகின்றது. விளிம்புகள் திசையுள்ளனவாகவோ (சமச்சீரற்ற) அல்லது தியையற்றனவாகவோ (சமச்சீர்) இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புள்ளிகள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆட்களைக் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். இங்கே இருவர் கைகுலுக்கிக் கொள்ளும்போது ஒரு விளிம்பு (இணைப்பு) உருவாகிறது. ஆள் A, B யுடன் கைகுலுக்கும் போது B யும் A யுடன் கை குலுக்குகிறார். இதனால் இக் கோட்டுரு திசையற்றது. இன்னொரு வகையில் பார்க்கும்போது, A க்கு B யைத் தெரியும் எனில் அங்கும் ஒரு விளிம்பு உருவாகிறது. ஆனாலும் B க்கு A யைத் தெரிய வேண்டியதில்லை ஆதலால் இங்கு உருவாகும் கோட்டுரு திசையுள்ளது ஆகும். இதன் விளிம்புகள் திசையுள்ள விளிம்புகள். உச்சியைக் "கணு", "புள்ளி" ஆகிய சொற்களாலும், விளிம்பைக் "கோடு" என்றும் குறிப்பதுண்டு. கோட்டுருவியலின் அடிப்படையான விடயம் கோட்டுரு ஆகும். காக்கா கம்பு காக்கா கம்பு தெருவில் சிறுவர் விளையாடும் நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இது கல்லுக்குச்சி விளையாட்டைப் போன்றது. ஆனால் குச்சியின் நீளம் அவரவர் உயரம் இருக்கும். எல்லாருடைய கையிலும் குச்சி இருக்கும். ஏதோ ஒரு வகையில் பட்டவர் தீர்மானிக்கப்படுவார். பட்டவர் தன் இரண்டு கைகளாலும் தன் குச்சியை உயர்த்திப் பிடிப்பார். இது காக்கை கூடுகட்டச் சிறு குச்சிகளைத் தூக்கிச் செல்வது போல இருக்கும். இதனால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது. அவர் தூக்கிப் பிடிக்கும் குச்சியைப் பழமேறியவர்களில் ஒருவர் தன் குச்சியால் தட்டிவிடுவதும், மற்றவர்கள் அதனைத் தட்டிச்செல்வதும், பட்டவர் தன் குச்சியை மீட்க முனைவதும் முதலான நிகழ்வுகள் கல்லுக்குச்சி விளையாட்டில் நிகழ்வது போலவே நிகழும். முடிவும் தண்டனையும் அந்த விளையாட்டைப் போலவே இருக்கும். மின் துணி தேய்ப்புப் பெட்டி மின் துணி தேய்ப்புப் பெட்டி(Electic Iron box) துணிகளைச் சலவை செய்து மடிப்புக் கலையாமல் வைத்து நாம் உடைகளைச் சீராக அணிந்து கொள்ள உதவுவது. பல நூற்றாண்டுகளாக மிகப் பெரிய, பட்டையான செங்கல் துண்டுகள் அல்லது உலோகத் துண்டுகள் அல்லது எரியூட்டப்பட்ட கரித்துண்டுகளைப் போட்டு துணிகளைத் தேய்த்து வந்தார்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டில் தான் பல்வேறு மாறுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு, குழாய் மூலம் வாயுவை பெட்டியினுள்ளே அனுப்பி எரிய வைத்துச் சூடாக்கி துணிகளைத் தேய்த்தார்கள். ஆனால் வாயுக்கசிவு ஏற்பட்டதால் அது சரியாக அமையவில்லை. 1880-ல் தான் மின்சாரத் தேய்ப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மின் தேய்ப்புப் பெட்டி ஹென்றி சிலே என்பவரால் வடிவமைக்கப்படது. மின்சாரத்தால் ஒரு வெப்பமூலம் சூடாக்கப்பட்டு அதன் மேல் இப்பெட்டி வைக்கப்பட்டு சூடானதும் துணிகள் தேய்க்கப்பட்டன. 1903-ல் தான் நேரிடை மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு பெட்டியினுள்ளே உள்ள கம்பிச் சுருள் சூடாகி அதனால் கிடைத்த வெப்பம் பெட்டியால் பெறப்பட்டு துணிகள் தேய்க்கப்பட்டன. 1920 -ல் ஜோசப் மையர்ஸ் என்பவரால் தானியங்கி வெப்ப ஒழுங்குமுறை உள்ள மின் தேய்ப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 1926 -ல் நீராவி மின் தேய்ப்புப்பெட்டி அறிமுகப்படுத்தப் பட்டது. இவ்வாறு மின் தேய்ப்புப் பெட்டி படிப்படியாக வடிவம் பெற்றது. துணிகள் மடிப்பு கலையாமல் இருக்க நாம் பயன் படுத்தும் தேய்ப்புப் பெட்டியின் தொழில் நுட்பம் நான்கு விவரங்களை உள்ளடக்கியது அவை: ஆகியவைகளாகும். துணிகளை அழுத்தித் தேய்ப்பதற்கேற்றவாறு ஓரளவு நிறையுள்ள பொருள் தேவை கலைந்த மடிப்புகளைச் சரி செய்ய ஓரளவு வெப்பம் தேவை எனவே தேவையான அளவு சூடு ஏற்படுத்துவதற்கேற்றவாறு வெப்பத்தை உண்டாக்குவதற்கு வழி வேண்டும் பெறப்படும் வெப்பம் பல்வேறு வகைத் துணிகளிலுள்ள சுருக்கங்களை சீராக்கி மடிப்பு கலையாதவாறு அமைக்கக் குறைந்த அளவு வெப்ப நிலையிலிருந்து துணிகள் சேதமடையாத அளவுக்கு வெப்பம் பெறத்த்தக்க அளவு வசதியைப் பெற்றிருக்க வேண்டும் நீர் நயப்பு எனப்படும் ஈரத்தன்மை துணிகளை அழுத்திச் சுருக்கங்களை நீக்குவதற்கு துணிகளுக்கு ஓரளவு ஈரத்தன்மை தேவைப்படுகிறது. அந்த ஈரம் தரப்படவேண்டும். இது வெளியிலிருந்து தரப்படலாம் அல்லது கருவியிலிருந்து நீராவி போல அளிக்கலாம். மின்கடத்தும் பொருளின் வழியே மின்னோட்டம் செல்லும் பொழுது, அப்பொருள் ஓரளவு மின்னோட்டத்தைத் தடுக்கும். அந்த எதிர்ப்புத் தன்மைக்கு மின்தடை என்று பெயர். இது அக்கடத்தி எப்பொருளால் ஆனதோ, அப்பொருளின் தன்மைக்கேற்ப அதாவது அப்பொருளின் மின்தடை எண்ணிற்கேற்ப (Specific resistance) மாறுபடும். எதிலும் ஒட்டாத தன்மையுடைய (Non stick) அதிக அழுத்தத்தில் நன்கு சூடாக்கப்பட்டு பிறகு குளிரூட்டப்பட்டு மாதிரி அச்சில் (mould) வார்க்கப்பட்ட அலுமினிய உலோகக் கலவை மற்றும் அதைச் சுற்றி அமைக்கப்பட்ட துருப்பிடிக்காத இரும்பு (எவர் சில்வர்) அடித்தகடாக அமைக்கப்படுகிறது. இது எளிதில் சூடாகவும் மின்னினைப்பு நின்றதும் எளிதில் குளிரவும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இது வெவ்வேறு வெப்ப நிலை விரிவுத்தன்மை கொண்ட ஈருலோகத் தகடாக (நிக்கல், மங்கனீசு அல்லது செம்பு) அதைச் சுற்றி உலோகக் கம்பிச்சுருள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பட்டு வரும் நீராவி மின்தேய்ப்புப்பெட்டிகளில் தண்ணீர் ஊற்றுவதற்கேற்ற வகையில் சிறிய உள்ளீடற்ற பகுதி உள்ளது. பல மிகச் சிறிய துளைகளைக் கொண்ட அடிப்பகுதியுடன் கூடிய இப்பகுதி நீர் தெளிப்புப் பகுதியாக இருப்பதால் துணிகளில் தேவையான அளவு ஈரத்தன்மையைக் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. நீர் ஊற்றுவதற்கு ஒரு திறப்புப் பகுதியும், தேவையான போது நீரைத் தெளிப்பதற்கு ஒரு தெளி அழுத்தியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பும் உள்ளது. நீரின் அளவைத் தெரிந்துகொள்ள நீர் மட்டக்குழாய் ஒன்றும் உள்ளது. இது முன்பகுதி, நடு கைப்பிடிப் பகுதி, பின்பகுதி என்று மூன்று பகுதிகளை உடையது. இது முழுவதும் நெகிழிப் பொருளால் (பிளாஸ்டிக்கால்) ஆனது. மாதிரி அச்சில் உருவாக்கப்பட்ட நெகிழியால் ஆன அமைப்பு முழுவடிவமைப்பாகும். இது கருவிக்கு முழு வடிவத்தைத் தருகிறது. மின்னிணைப்பு பெறுவதற்கேற்றவாறு காப்புப்பொருளால் சுற்றப்பட்ட மின்கம்பி உள்ளது. மின்னிணைப்பு பெற்றதை உறுதி செய்ய ஓர் அடையாள மின் விளக்கும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கிக் கருவியில் வெப்ப நிலை சீராக்கி இயங்குவதை இவ்விளக்கு எரிவது, அணைவதைப் பொருத்து அறிந்து கொள்ளலாம். அறிவியல் ஒளி,ஏப்ரல் 2007 இதழ். கென்னத் அப்பெல் கென்னத் அப்பெல் (Kenneth Appel) (பிறப்பு அக்டோபர் 8, 1932 புரூக்லின், நியூ யார்க்) ஒரு கணித வல்லுனர். 1976 ஆம் ஆண்டில் உடன் பணியாளரான வூல்ஃப்காங் ஏக்கென் என்பவருடன் சேர்ந்து கணித உலகில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவந்த நான்கு நிறத் தேற்றத்தை நிறுவினார். இதன் மூலம், எந்தவொரு இரு பரிமாண நிலப்படத்தையும், அருகில் உள்ள நாடுகள் ஒரே நிறத்தைக் கொண்டிராமல் நான்கு நிறங்களை மட்டுமே பயன்படுத்தி நிறந்தீட்ட முடியும் என நிறுவினர். கணினியின் உதவியில் பெருமளவுக்குத் தங்கியிருந்ததால், இந்த நிறுவல், தற்காலக் கணிதத்தின் மிகவும் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக அமைந்தது. கணிதச் சமூகத்தில் இதைப் பலரும் கண்டித்து விமரிசித்தனர். "ஒரு நல்ல கணித நிறுவல், கவிதை போன்றது. இது தொலைபேசி விபரத்திரட்டுப் போல இருக்கிறது" என்றும் சொல்லப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியொன்றில், அப்பேலும், ஏக்கனும், தமது நிறுவல் நளினமானதாகவும், சுருக்கமானதாகவும், மனித மூளையினால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது என்றும் ஏற்றுக்கொண்டனர். எனினும், இந்த நிறுவல் கணினி தொடர்பில் கணிதவியலாளர்களுடைய மனப்பாங்கில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் தொடக்கமாக அமைந்தது. அப்பெல் குயீன்ஸ் கல்லூரியிலும், மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். பின்னர் அவர் பிரிசிங்டனில் உள்ள பாதுகாப்புப் பகுப்பாய்வு நிறுவனத்தில் ஆய்வுப் பணி புரிந்தபின், 1961 ஆம் ஆண்டில் உர்பானா-சம்பைனில் உள்ள இல்லினோயிசு பல்கலைக் கழகத்தில் இணைந்து கொண்டார். 1993 ஆம் ஆண்டிலிருந்து, 2002 ஆம் ஆண்டு வரை நியூ அம்சயரின் டர்கமில் உள்ள நியூ அம்சயர் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட போதும், அவ்வப்போது அங்கே கற்பித்து வருகிறார். காக்கா குஞ்சு (விளையாட்டு) காக்கா குஞ்சு மரத்தில் ஏறிச் சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. பட்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எளிதாக ஏறக்கூடிய மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் அடிமரத்தைச் சுற்றி ஒரு வட்டம் போடுவர். எல்லாரும் மரத்தில் ஏறிக்கொள்வர். பட்டவர் குச்சி ஒன்றை அந்த வட்டத்துக்குள் வைத்துவிட்டு மரத்தில் ஏறி ஒருவரைத் தொடவேண்டும். தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவர் ஆகி அவ்வாறே குச்சியை வைத்துவிட்டுத் தொடவேண்டும். ஒருவரைத் தொடும் நோக்கில் பட்டவர் ஒரு கிளையில் ஏறும்போது வேறு கிளையில் உள்ள மற்றொருவர் கீழே இறங்கிவந்து மரத்தடியில் உள்ள குச்சியை எடுத்துத் தொலைதூரத்துக்கு வீசிவிட்டு மரத்தில் ஏறிக்கொள்வார். குச்சி வட்டத்துக்குள் இருக்கும்போது தொட்டால்தான் தொடப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆட்டம் தொடங்கிய பின்னர் மரத்தில் ஏறித் தொட்டாலும், கீழே நிற்கும்போது தொட்டாலும் தொட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும். தொடக்கத்தில் எல்லாரும் மரத்தில் ஏறியிருப்பதால் இந்த விளையாட்டைக் காக்கா குஞ்சு என்கின்றனர். காயா பழமா காயா பழமா விளையாட்டு இரு வகையில் விளையாடப்படுகிறது. அழுது அடம் பிடிக்கும் குழந்தையிடம் தாய் காயா பழமா என்று கேட்டு, பழம் என்று சொல்ல வைத்து அழுகையை நிறுத்துவாள். சிறுவர் சிறுமியர் பகைமை கொள்பவரிடம் இவ்வாறு கேட்டு நண்பராக்கிக் கொள்வர். ஆள்காட்டி விரலை நடுவிரலால் பின்புறமாக வளைத்து இடைவெளி உண்டாகுமாறு செய்து காட்டிக் 'காயா, பழமா' என்பர். பழம் என்றால் இடைவெளி இல்லாமல் இரண்டு விரல்களையும் அமுக்க வேண்டும். காய் என்றால் இடைவெளிக்குள்ளே கையை விட்டு இரு விரல்களையும் பிளந்துவிட வேண்டும். பழம் செயது காட்டினால் சேர்த்தாளி என்பது பொருள். காய் செய்து காட்டினால் சேர்த்தாளி இல்லை என்பது பொருள் காயா பழமா பிற விளையாட்டுகளில் பட்டவரைத் தேர்ந்தெடுக்க உதவும் ஒருவகை விளையாட்டு. பொதுவாக நீச்சல் விளையாட்டுகளில் நீந்தித் தொட இது பயன்படும். ஒவ்வொருவரும் தண்ணீரைச் சுண்டவேண்டும். சுண்டும்போது ஒலி கேட்டால் பழம். கேட்காவிட்டால் காய். காயானவர் பலர் இருந்தால் மீண்டும் சுண்டுவர். ஒருவர் மிஞ்ச ஏனையோர் அனைவரும் பழமாகும்வரையில் நீரைச் சுண்டவேண்டும். கார்த்திகைச் சுளுந்து கார்த்திகைச் சுளுந்து சிறுவர் விழாக்கால விளையாட்டு. கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளன்று நடைபெறும். அண்மைக்காலமாக இந்த விளையாட்டு அருகிவருகிறது. கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய்வர். சிறுவர் தாமே செய்த சுளுந்தைச் சுற்றித் தீப்பொறிகள் சிதறும்படி செய்து மகிழ்வர். தற்போது இந்த விளையாட்டு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் சுளுந்தங்குச்சி என்றும் அறியப்படுகிறது. துவரங்கட்டைக் கரி, நெல் உமி, உப்பு, ஊமத்தஞ்சாறு ஆகியவற்றைச் சேர்த்து இடித்து நிழலில் காயவைத்து, சிறுசிறு துணிப்பைகளில் கட்டி வைத்துக்கொள்வர். சுமார் ஒரு அடி நீளமுள்ள 3 மூங்கில் சிம்புகளை நுனியில் கட்டி இடையில், முன்பே செய்து வைத்திருக்கும் பைகளில் ஒன்றை வைத்து மற்றொரு முனைகளை நீண்ட கயிற்றில் சேர்த்துக் கட்டி, பையில் தீ மூட்டிக் கயிற்றைச் சுற்றும்போது இக்கால மத்தாப்பைப் போலத் தீப்பொறி பறக்கும். பல சிறுவர்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டு சேர்ந்தாற்போல் சுற்றும்போது சுற்றுபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் பெருங் கொண்டாட்டம். வேறு பாடல் அப்பல்லோ 15 அப்பல்லோ 15 ("Appollo 15") அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். "ஜெ திட்ட" பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, "ஜெ திட்ட" பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், "நிலவு உலவு வாகனம்" பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும். 1971]], சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் [[ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது. திட்ட ஆணையாளர் [[டேவிட் ஸ்காட்]] மற்றும் நிலவுக் கலன் விமானி [[ஜேம்ஸ் இர்வின்]] மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர். இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. அப்பல்லோ 15 திட்டம் தான் முதன்முதலில் நிலவின் குறை-எதிரொளிப்பு பகுதியல்லாத பகுதியில் நிலவுக்கலன் இறங்க வைக்கப்பட்ட திட்டமாகும். மாற்றாக 'மழைகளின் கடல்' எனும் பொருளுடைய "மேர் இம்பிரியம்" எனும் பகுதியில் உள்ள "ஹாட்லி ரில்" எனுமிடத்தில் "பாலசு புட்ரடினசு"(சிதைவின் சதுப்பு நிலம்) என்றழைக்கப்பட்ட இடத்தில் இறங்கியது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.) [[பகுப்பு:அப்பல்லோ திட்டம்]] கலித்தாழிசை கலித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சற்று நீண்டு அமையும்; ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும், சில இடங்களில் இது தனித்தும் வரும். கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம் பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின் ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம் மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின் மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின் வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம் கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள் கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள் வில்லியம் ஹட்சிங்க்ஸ் வில்லியம் ஹட்சிங்க்ஸ் ("William Hutchings", பிறப்பு: மே 31 1879, இறப்பு: மார்ச்சு 8 1948), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1899-1906 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில்லியம் ஹட்சிங்க்ஸ் கிரிக்-இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. ஜிம் ஹட்சின்சன் ஜிம் ஹட்சின்சன் ("Jim Hutchinson ", பிறப்பு: நவம்பர் 29 1896, இறப்பு: நவம்பர் 7 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 256 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1920-1931 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜிம் ஹட்சின்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. பவுல் ஹட்சின்சன் பவுல் ஹட்சின்சன் ("Paul Hutchison ", பிறப்பு: சூன் 9 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2001 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பவுல் ஹட்சின்சன் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. பென் ஹட்டன் பென் ஹட்டன் ("Ben Hutton ", பிறப்பு: சனவரி 29 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1998-2007 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பென் ஹட்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. பிரெட் ஹட்டன் பிரெட் ஹட்டன் ("Brett Hutton ", பிறப்பு: பிப்ரவரி 6 1993 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பிரெட் ஹட்டன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. சாமுவல் ஜாக்சன் சாமுவல் ஜாக்சன் ("Samuel Jackson", பிறப்பு: சூலை 15 1859 , இறப்பு: சூலை 19 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1891 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சாமுவல் ஜாக்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. ஒலிவர் ஹட்டன் ஒலிவர் ஹட்டன் ("Oliver Hutton ", பிறப்பு: மே 27 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஒலிவர் ஹட்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. ஒலிவர் ஹைஷே ஒலிவர் ஹைஷே ("Oliver Huyshe ", பிறப்பு: சூலை 26 1885, இறப்பு: ஆகத்து 23 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1907 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஒலிவர் ஹைஷே - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. பெரி ஹயாம் பெரி ஹயாம் ("Barry Hyam ", பிறப்பு: செப்டம்பர் 9 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993-2002 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெரி ஹயாம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. கை ஜாக்சன் கை ஜாக்சன் ("Guy Jackson ", பிறப்பு: சூன் 23 1896, இறப்பு: பிப்ரவரி 21 1966), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 280 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919-1936 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கை ஜாக்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 30, 2011. நியூத்திரன் மட்டுப்படுத்தி நியூத்திரன் மட்டுப்படுத்தி ("neutron moderator") என்பது அணுக்கருவியலில், விரைவு நியூத்திரன்களின் வேகத்தைக் மட்டுப்படுத்தி அவற்றை அணு எரிபொருள் கொண்டு ஏற்பட்ட அணுக்கரு தொடர்வினையை தக்கவைக்கக்கூடிய வெப்ப நியூத்திரன்களாக மாற்றும் ஊடகங்களைக் குறிக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்திகள்: சாதாரண (மென்) நீர் (உலகின் ஏறத்தாழ 75% அணுஉலைகளில்), திட கிராஃபைட் (20% அணுஉலைகள்) மற்றும் கன நீர் (5% அணுஉலைகள்). பெரிலியம் சில சோதனை அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைடிரோகார்பன்களும் வாய்ப்புள்ளவைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வஞ்சித் தாழிசை வஞ்சித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இதில் உள்ள நான்கு அடிகளும் குறளடிகளாக (இரண்டு சீர் அடி) அமைந்திருக்கும்; ஓரெ எதுகை பெற்றிருக்கும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும். பிணியென்று பெயராமே துணிநின்று தவஞ்செய்வீர்! அணிமன்றில் உமைபாகன் மணிமன்று பணிவீரே! பாட்டாளர் நலம்பேணாத் தேட்டாள ராய்வாழ்வார் மாட்டாத மரமென்ன நாட்டாரால் நகையுண்பர் எளியவர்க் கிரங்காமல் ஒளியராய் உறவாழ்வார் துளியிலா விசும்பென்ன வெளியரால் இளிவுண்பர் உழவர்தம் உழைப்புண்டு விழவராய் மிகவாழ்வார் இழவராம் இவரென்னக் கிழவரால் இழிவுண்பர் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ("Cochin University of Science and Technology", CUSAT) 1971 இல் கொச்சி, கேரளம், இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிப் பலகலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பொறியியல், அறிவியற் சார்ந்த இணைப்படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் மொத்தம் மூன்று வளாகங்களை உள்ளடக்கியது: அதில் இரண்டு கொச்சியிலும் மற்றொன்று குட்டநாடு, ஆலப்புழாவிலும் (66 கிமீ. தாண்டி) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இரண்டாயிரம் மாணவர்களுக்கும் மேல் இளநிலை முதுநிலைப் பட்டங்களில் பயின்றும் வருகின்றனர். கொச்சின் பல்கலைக்கழகம் என அறியப்பட்ட இக்கல்வி நிலையம் 1971 இல் கேரள அரசு முதுநிலைப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக சட்டப்பூர்வமாக நிறுவியது. பிப்ரவரி 1986 இல் இது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட்டது (Cochin University of Science and Technology - CUSAT). இதன் மையக் குறிக்கோளாக இளநிலை, முதுநிலை, மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, சமூக வளர்ச்சியில் மேம்பட்ட ஆய்வுகளை நோக்கியமைக்கப்பட்டது. இதில் சேர்க்கை பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வான பொது சேர்க்கை தேர்வு (Common Admission Test - CAT) வாயிலாகவும், அல்லது துறை சார் நுழைவுத்து தேர்வு வாயிலாகவும் (Departmental Admission Tests - DAT) நடைபெறுகிறது. கொச்சிப் பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 1. அறிவியற் கல்விச்சாலை (Faculty of Science) 2. தொழில்நுட்பக் கல்விச்சாலை (Faculty of Technology) 3. பொறியியற் கல்விச்சாலை (Faculty of Engineering) 4. சுற்றுச்சூழலியற் கல்விச்சாலை (Faculty of Environmental Studies) 5. மானுடவியற் கல்விச்சாலை (Faculty of Humanities) 6. சட்டப் கல்விச்சாலை (Faculty of Law) 7. கடலறிவியற் கல்விச்சாலை (Faculty of Marine Sciences) 8. மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்பக் கல்விச்சாலை (Faculty of Medical Sciences and Technology) 9. சமூக அறிவியல்கள் கல்விச்சாலை (Faculty of Social Sciences) சுனிதி சௌஹான் சுனிதி சௌஹான் ("Sunidhi chauhan", ஆகஸ்ட் 14, 1983) வணிக ரீதியான இந்தி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை சாஸ்த்ராவில் துவங்கினார். சுனிதி ஷௌஹான் முதல் பாடலைத் தம் நான்காவது வயதில் பாடினார்.1996-ம் ஆண்டு "மெரி ஆவாஸ் சுனோ" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமது "ஐர க்ஹைர னது க்ஹைர" ஆல்பத்திற்க்காக வெற்றிப்பெற்றார். அது குழந்தைகளுக்கான ஆல்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தன் அடையாளத்தை இழந்தது. இது பற்றி சுனிதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: சுனிதி தம் முதல் பின்னணிப் பாடலை பாலிவுட் திரைப்படமான சாஸ்த்ரா-வில் பாடினார். தம் பத்தொன்பதாவது வயதிற்குள் 350 பாடல்களைப் பாடி முடித்திருந்தார். சுனிதி சௌஹான் தொழில்வாழ்வின் முதல் திருப்பம் மஸ்த் திரைப்படத்தில் "ருக்கி ருக்கி சி ஜிந்தகி" எனும் பாடலை பாடியதற்காக கிடைத்தது.விண்டோஸ் விஸ்டாவிற்காக சுனிதி சௌஹான் விஸ்டா பாடல் ஒன்றை பாடினார்.இப்பாடல் ஹிந்தி,ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாரானது. டிஸ்னி திரைப்படமான "ஹை ஸ்கூல் ம்யுசிகல்" எனும் திரைப்படத்தின் ஹிந்தி மொழி மாற்றத்தில் வனேசா ஆன் ஹுட்கன் பாடிய பாடலை பாடினார்.மேலும் அவர் ஆங்கிலப் பாடலான "ரீச் அவுட்"யும் பாடியிருக்கிறார். "Chhaliya" (Tashan), "Rock Mahi," "Lucky Boy," "Desi Girl" (Dostana), "Dance Pe Chance" (Rab Ne Bana Di Jodi), மற்றும் "Race Saanson Ki" (Race)(இந்த பாடலிற்காக "கேள்வினடோர் ஜிஆர்8! ப்லோ உமன் அவார்ட் 2009" வென்றார்.) ஆகிய பாடல்களால் 2008-ம் ஆண்டு சிறந்த ஆண்டாக கருதப்படுகிறது. இவரது உரத்த குரலால் இவர் "செவ்ரோலேட் GIMA (குளோபல் இந்தியன் மியூசிக் அவார்ட்ஸ்)" விருதினை சிறந்த நேரடி பெண் பாடகிக்காக பெற்றுள்ளார். ஏப்ரல் 2010 -ல் சௌஹான் இந்தியன் இடோல் 5 ல் ஒரு நடுவராக இருந்தார்.அனு மாலிக் மற்றும் சலீம் மெர்ச்சன்ட் ஆகியோர் மற்ற இரு நடுவர்களாவர்.மேலும் இந்தியன் இடோல் 6இலும் அவர் நடுவராக இருக்கிறார். சுனிதி சௌஹான் பிட்புல்,ஜான் லேடெந்து, கே'நான் மற்றும் அலிசியா கேய்ஸ் ஆகியோருடன் இணைந்து வெஸ்டேர்ன் யுனியன்-னின் உலக நலத்திற்கான நிதி திரட்டலுக்காக பாடியுள்ளார்.அவர் "கால் மீ" மற்றும் "வேலன்டைன்" ஆகிய இரு ஆங்கிலப் பாடல்களையும் பாடியுள்ளார்.அதற்கான பணத்தை மும்பையிலுள்ள உதவியற்ற பெண்களுக்கு அளித்துவிட்டார். சுனிதி சௌஹான் அல்கா யாக்னிக் ,உதித் நாராயணன் மற்றும் சுக்விந்தர் சிங்க் (ஓம்காரா மற்றும் ஆஜா நச்சலே ஆகிய படங்களில்) ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.அவர் பெரும்பாலும் சோனு நிகத்துடனே இணைந்து பாடியுள்ளார்.அவர் ஷ்ரேயா கோஷல்-க்கு போட்டியாளராக கருதப்படுகிறார்.பாகிஸ்தானி பாடகர் பாக்ஹிர் மெஹ்மூத்துடன் அவரின் ஆல்பம் மந்த்ராவிற்காக மெல்லிசை பாடல் ஒன்று பாடியுள்ளார்.மேலும் அவர் ஏந்ரிஃஉஎ இக்லேசியஸ்-உடன் இணைந்து "ஹார்ட்பீட் (இந்திய மிக்ஸ்)" எனும் பாடலையும் பாடியுள்ளார். அவர் ஜெய்தீப் சாஹ்னி, இர்ஷாத் கமில், குல்சார் , சமீர், பிரசூன் ஜோஷி, ச்வனாந்து கிர்கிரே, தி லேட் ஆனந்த் பாக்ஷி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகிய பாடலசிரியர்களுடனும்,வண்டேமடாராம் ஸ்ரீநிவாஸ், பப்பி லஹிரி, A. R. ரஹ்மான், இளையராஜா, யுவன், ஹிமேஷ் ரேஷம்மியா, அனு மாலிக், ஜடின் லலித், சங்கர்-இசான்-லாய், ப்ரிடம்,சக்ரபோர்ட்டி, ராஜேஷ் ரோஷன், நதீம்-சிரவண், ஆனந்த்-மிலிந்த், விஷால்-ஷேக்கார், M. M. கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுனிதி சௌஹான் ஹிந்தி திரைத்துறையிலுள்ள முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பாடகிகளுள் முக்கியமானவராவார்.அவர் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய்,பிரீத்தி சிந்தா, ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோருக்கும் மற்றும் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.மேலும் அவர் முன்னாள் நடிகைகளான ரேகா ஆகியோரின் குரல்களுக்காகவும் பாடியுள்ளார்.அவரின் பின்னணி குரல் இருபெரும் முன்னணி நடிகைகளான கஜோல்க்காக பானா படத்திலும்,மாதுரி தீட்சித்க்காக ஆஜா நச்சலே படத்திலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 2011 ம் ஆண்டு சுனிதி சௌஹான் உலக அளவிலான பாப் பாடல்கள் பாடும் முதல் இந்திய பெண்மணி எனும் சிறப்பை பெற்றார். அக்டோபர் 2008 ம் ஆண்டு சுனிதி ஷௌஹான் ஸ்டார் வாய்ஸ் ஆப் இந்தியா நடத்திய பாடல் போட்டியில் இசையமைப்பாளர் அஷு துருவ் உடன் இணைந்து அவர்களின் படமான துரோணாவை ப்ரொமோட் செய்வதற்காக தோன்றினார். சுனிதி ஷௌஹான் இந்தியா ரேடியோ சிட்டி 91.1 பிம்பலையின் நியூ மார்னிங் ஷோ, ம்யுசிகல்-இ-அசாம்-க்காக சிறப்பு ஆர்.ஜேவாக பங்கேற்று குனால் கஞ்சவாலா, தலேர் மேஹெண்டி, சுக்விந்தர் , அட்னன் சமி மற்றும் குல்சார் ஆகியோரின் விருப்பங்களைப் பற்றி உரையாடினார். சுனிதி ஷௌஹான் பெமினா மிஸ் இந்தியா 2011 போட்டி மற்றும் X-பெக்டர் இந்தியாவில் தம் பாடலான "ஹார்ட்பீட்"-ஐ உலக அளவிலான பாப் ஸ்டார் ஏந்ரிஃஉஎ இக்லேசியசின் ஆல்பமான ஐபோரியாவில் ப்ரொமோட் செய்வதற்காக மேடையேற்றம் நடத்தியுள்ளார். சுனிதி ஷௌஹான் டெல்லியில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு நாடக கலைஞராதலால் அவரை இளம் வயதிலேயே இசைத்துறையில் சேர்த்துவிட்டார்.ஷௌஹானுக்கு சுநேஹா என்றொரு தங்கை உண்டு. சுனிதி ஷௌஹான் "இன்றைய தினத்தின் மிக சிறந்த பாடகர்" என தம்மை நம்புவார்.தம் வெற்றிக்கு காரணம் தம் பெற்றோர்கள் மற்றும் துணை பாடகர் சோனு நிகம் என குறிப்பிடுகிறார்.சத்மா திரைப்படம்,ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள்,நடிகர் அக்ஷய் கன்னா,நடிகை மாதுரி தீட்சித் ஆகியவை அவரது விருப்பத் தேர்வுகளாக உள்ளன.அவர் மரியா கரே மற்றும் மைக்கல் ஜாக்சன் ஆகியோரை தம் முன்மாதிரிகளாக குறிப்பிடுகிறார்.அவர்களை போல் உலக புகழ் பெறுவதே ஷௌஹானின் லட்சியமாகும். சுனிதி ஷௌஹான் திரைத்துறையில் இடம்பெறுவதற்காக தம் எடையை 12 கிலோ வரை குறைத்தார்.ஒரு பேட்டியின்போது தாம் பாலிவுட் நடிகையாவது ஓர் இனிய கனவு என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியது: 2002 -ம் ஆண்டில் ஷௌஹான் பாபி கான் என்பவரை மணந்து கொண்டார்.ஆனால் அந்த ஜோடி பிரிவுற்றது.ஏப்ரல் 27, 2012 ல் சுனிதி ஷௌஹான் தம் பால்ய நண்பரும்,இசையமைப்பாளருமான ஹிதேஷ் சோநிக்கை மணந்தார்.இத்திருமணத்திற்கு சக பாடகர்களான ஆஷா போஸ்லே, கவிதா கிருஷ்ணமுர்த்தி,ஸ்மிதா தாகேரே, அல்கா யாக்னிக், கொன்கொனா சென் ஷர்மா ஆகியோர் வந்திருந்தனர். எஹ்சாஸ் - எ பீலிங் (நவம்பர் 30, 2001-ல் ரிலீசானது.) (சிறப்பு தோற்றம்) போட் (ப்ரோமோஷேனல் பாடலான போட் ஹூன் மெயினில் சிறப்பு தோற்றம்) பஸ் ஏக் பல் (ப்ரோமோஷேனல் பாடலான தீமே தீமேவில் பாடகர் கே.கே-உடன் சிறப்பு தோற்றம்) 2004: சிறந்த பின்னணிப் பாடகிக்கான MTV இம்மீஸ் விருது - Dekh Le (Munna Bhai MBBS) 2006: சிறந்த பின்னணிப் பாடகிக்கான RMIM புரஸ்கார் விருது 2006: சிறந்த பாடலுக்கான RMIM புரஸ்கார் விருது - Beedi (Omkara)- சுக்விந்தர் சிங்க் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 2006: சிறந்த பின்னணிப் பாடகர்களுக்கான RMIM புரஸ்கார் விருது- Beedi (Omkara)- சுக்விந்தர் சிங்குடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 2009: கேள்வினடோர் GR8! FLO பெண் விருது. 2010: சிறந்த நேரடி பாடகிக்கான செவ்ரோலேட் GIMA (குளோபல் இந்தியன் மியூசிக் அவார்ட்ஸ்) விருது 2010: சிறந்த படமாக்கபட்ட பாடல் (பெண்) – Udi - ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 2010: டிகேட் பாடகிக்கான பிக் ஸ்டார் என்டேர்டைன்மென்ட் விருது. 2010: சிறந்த பின்னணிப் பாடகிக்கான RMIM புரஸ்கார் விருது 2011: சிறந்த பின்னணிப் பாடகிக்கான மாசல் விருது கால் தூக்கிற கணக்கப்பிள்ளை கால் தூக்கிற கணக்கப்பிள்ளை சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. திளைப்புக்காக விளையாடப்படுவது. தமிழக நாட்டுப்புறங்களில் இது பரவலாக விளையாடப்படும். இக்காலத்தில் அருகிவருகிறது. நான்கு சிறுவர். இருவர் கைகோத்துக்கொள்வர். ஒருவரது வலக்கையும் மற்றொருவரது இடக்கையும் கோக்கப்படும். மூன்றாமவர் அந்த இருவரின் தோள்களை முழங்கைகளால் வளைத்துப் பிடித்துகொண்டு தன் முழங்கால் ஒன்றை மடித்து, இருவர் கோத்திருக்கும் கைகளில் வைத்து ஏறிக்கொண்டு சவாரி செய்வார். சவாரி செய்பவரின் இன்னொரு காலை நான்காமவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்வார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் வேறொருவர் சவாரி. பின்னர் ஆள் மாற்றி மாற்றிச் சவாரி. சவாரி செய்பவர் பாடிக்கொண்டே செல்வார். அவர் பாடும் பாட்டு ”கால் தூக்கிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்துருவா”(இதைத் திரும்பத் திரும்பப் பாடுவார்) அணு உலை வெப்பமாற்றி அணுக்கரு உலை வெப்பமாற்றி அல்லது அணுக்கரு உலை குளிர்வி (nuclear reactor coolant) என்பது அணுக்கரு உலை ஒன்றில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்ற ஓர் குளிர்வி ஆகும். பலமுறை இரு குளிர்வி சுற்றுக்கள், ஒரு (முதன்மை) குளிர்விச் சுற்று அணு உலையின் குறுங்கால கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதால், பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இயங்கும் பெரும்பாலான அணு மின் நிலையங்கள் சாதாரண நீரை உயர் அழுத்தத்தில் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் மென்னீர் அணு உலைகளாகும். மென்னீர் அணு உலைகளில் மூன்றில் ஒன்றான கொதிநீர் அணு உலைகளில் முதன்மை குளிர்வி உலைக்குள் நீராவியாக முகநிலை மாற்றமடைகிறது. ஏனைய 2/3 அணு உலைகள் இன்னும் உயர் அழுத்தத்தில் இயங்கும் அழுத்த நீர் அணுஉலைகளாகும். தற்போதைய அணு உலைகளில் நீர்மநிலைக்கும் வளிம நிலைக்குமான வேறுபாடு மறையும், 374 °C உம் 218 பாரும் அண்மித்த மாறுநிலைப் புள்ளிக்குக் கீழாக இயங்குகின்றன. இது வெப்பப் பயனுறுவினையைக் மட்டுப்படுத்துகிறது; வருங்கால உய்யமிகை நீர் அணு உலைகளில் இந்தப் புள்ளிக்கு மேலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கனநீர் அணு உலைகளில் சாதரண நீரைப் போன்ற பண்புகளுடைய, ஆனால் மிகக் குறைந்த நியூத்திரன் பிடித்தலுடையதால் இன்னும் சிறப்பாக மட்டுப்படுத்தும் துத்தேரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. கிய்யா கிய்யா குருவி கிய்யா கிய்யா குருவி என்பது சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. தொடக்கப் பள்ளிகளிலும் இது விளையாடப்படும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் நீதியைப் புகட்டும் நடிப்பு விளையாட்டு இது. புதரில் சிக்குண்டு பறந்து வரும்போது சிறகு ஒடிந்த குருவி ஒன்று தனக்குக் கூடு கட்டிக்கொள்ள மரங்களைப் பார்த்து இடம் கேட்பது போலவும், வாழைமரம், தென்னைமரம், பனைமரம் போன்றவை இடம் தராதது போலவும், ஆலமரம் இடம் தருவது போலவும் உரையாடி விளையாடும் ஆட்டம் இது. பாடல் குருவி வாழைமரம் ஆலமரம் மென்னீர் மென்னீர் என்பது குறிக்கக்கூடியவையாக: கடுங்கோன் (சங்ககாலம்) கடுங்கோன் என்பவன் சடைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்த அரசனாக கருதப்படும் பாண்டிய மன்னனாவான். இறையனார் அகப்பொருளுரையில் குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் 'கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம் எனப்து போல் கூறப்பட்டுளது. அவ்வகப்பொருளில் கூறியிருப்பது உண்மையாக இருப்பின் இக்கடுங்கோனின் காலம் குறைந்த பட்சம் பொ.மு. 5500 வரை செல்லும். சின்னமனூர் செப்பேடுகளில் சடைச்சங்கத்தை முடித்து வைத்த இக்க்டுங்கோனை முதல் அரசனாக கொண்டு பொ.பி. 10ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னனான ராசசிம்மன் வரை பாண்டிய வம்ச வர்ணனை கூறப்பட்டுளது. இதை வைத்து அகப்பொருள் காலம் முதல் சின்னமனூர் செப்பேடு பொறித்த காலம் வரை சடைச்சங்கத்தை முடித்துவைத்தவன் கடுங்கோன் என்றே பாண்டியர்கள் கருதிவந்ததை அறியலாம். மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண் ("Centered pentagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்டப் புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு ஐங்கோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள ஐங்கோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் ஐங்கோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண் காணும் வாய்ப்பாடு: அணுக்கரு உலை கருவம் அணுக்கரு உலை கருவம் (nuclear reactor core) என்று அணுக்கரு உலை ஒன்றில் அணு எரிபொருள் கூறுகள் வைக்கப்பட்டு அணுக்கருப் பிளவு நிகழ்கின்ற பகுதி அழைக்கப்படுகின்றது. அணுக்கரு உலை கருவம் (பல நேரங்களில் சுருக்கமாக "உலை கருவம்" அல்லது "கருவம்") என்றழைக்கப்படும் பகுதியிலேயே குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற அணு எரிபொருள், அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் அமைந்து அணுக்கருப் பிளவு நிகழ்கின்றது. எனவே இதுவே மிகுந்த வெப்பமானப் பகுதியாகும். ஓர் வழமையான அழுத்த நீர் அணுஉலை அல்லது கொதிநீர் அணுஉலைகளின் கருவத்தில் ஓர் பெரிய எழுதுகோல் சுற்றளவுள்ள பல நூறு அணு எரிபொருள் குச்சிகள், ஒவ்வொன்றும் நீளமுடையவை, நூறு நூறாக கட்டப்பட்டு இருக்கும். இவையே "எரிபொருள் சேர்க்கைகள்" எனப்படுகின்றன. ஒவ்வொரு குச்சிக்குள்ளும் யுரேனிய அல்லது பெரும்பாலும் யுரேனியம் ஆக்சைடு குறுணைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். மேலும் இதற்குள் நியூத்திரன்களைப் பிடிக்கும் போரான் அல்லது ஹாஃப்னீயம் அல்லது காட்மியம் போன்றவற்றின் குருணைகளால் நிரப்பப்பட்ட கட்டுப்பாடு குச்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுப்பாடு குச்சிகள் இறக்கப்படும்போது அவை நியூத்திரன்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு அணுக்கரு தொடர்வினையில் பங்கேற்பதைத் தடுக்கின்றன. மாறாக இவை உயர்த்தப்படும்போது (விலக்கிக் கொள்ளப்படும்போது_ பல நியூத்திரன்கள் பிளவுபடக்கூடிய யுரேனியம்-235 (U-235) அல்லது புளுடோனியம்-239 (Pu-239) அணுக்கருனியைத் தாக்கி அணுக்கருத் தொடர்வினை தீவிரமடைகிறது. இந்த அணுக்கரு பிளவினால் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்றும் நீர் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் செயலாற்றுகிறது. மையப்படுத்தப்பட்ட அறுகோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண் ("Centered hexagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்டப் புள்ளிகளில்,ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு அறுகோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள அறுகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் அறுகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண் காணும் வாய்ப்பாடு: இவ்வாய்ப்பாட்டை கீழுள்ளவாறு மாற்றி எழுத: இதிலிருந்து "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண், "(n−1)"-ஆம் முக்கோண எண்ணின் ஆறு மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம். முதல் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள் சில: 10 அடிமானத்தில் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள், ஒன்றுகளின் இடத்தில் 1-7-9-7-1 என்ற இலக்கங்களின் அமைப்பில் அமையும். மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள், வட்டவடிவப் பொருட்களை பெரியளவு வட்டவடிவ கொள்கலன்களில் அடைக்கும்போது பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு: வட்டவடிவ டப்பாக்களில் அடைக்கப்படும் "வியன்னா தொத்திறைச்சி", தனித்தனியான கம்பிகள் ஒரு கம்பி வடமாக முறுக்கப்படுதல் முதல் "n" மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்களின் கூட்டுத்தொகை "n" ஆகும். அதாவது அறுகோண பிரமிடு எண்களும் கன எண்களும் ஒரேயெண்களாக அமைகின்றன ஆனால் அவை குறிக்கும் வடிவங்கள் வெவ்வேறானவை. (2"n" − 1) மற்றும் "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண் இரண்டிற்குமுள்ள வித்தியாசம் ஒரு செவ்வக எண்ணாக இருக்கும். Weisstein, Eric W. "Hex Number." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HexNumber.html ரேவதி (இராகம்) ரேவதி இராகம் கர்நாடக இசையில் 2வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரத்னாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். கமகக்கிரியா கமகக்கிரியா கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனாச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.. கம்பீரநாட்டை கம்பீரநாட்டை கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 36 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருது" என்றழைக்கப்படும் 6 ஆவது சக்கரத்தின் 6 ஆவது மேளமாகிய சலநாட இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.. கொதிநீர் அணு உலை கொதிநீர் அணு உலை ("boiling water reactor", BWR) மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மென்னீர்அணுக்கரு உலைகளில் ஒருவகையாகும். மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அணு உலைகளில் மற்றொரு மென்னீர் அணு உலையான அழுத்த நீர் அணுஉலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் அணு உலையாகும். இரண்டிற்குமான வேறுபாடாக, கொதிநீர் அணு உலையில் உலைக் கருவம் நீரை நீராவியாக மாற்றி சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. அழுத்த நீர் அணு உலையில் உலைக்கருவம் நீரைக் கொதிக்க விடுவதில்லை. இந்த சுடாக்கப்பட்ட நீர் கருவத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அழுத்தம் குறைக்கப்படுவதால் நீராவியாக மாறி சுழலியை இயக்குகிறது. 1950களின் இடையில் இடாகோ தேசிய ஆய்வகமும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து உருவாக்கின. தற்போது இத்தகைய அணு உலைகளின் வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் "ஜிஇ இடாச்சி அணுக்கரு ஆற்றல்" (GE Hitachi Nuclear Energy) நிறுவனம் சிறப்புக் கவனம் பெற்று வருகிறது. கொதிநீர் அணு உலையில் கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பம் குளிர்வி நீரை சூடாக்கி கொதிக்கச் செய்கிறது. இதனால் உண்டாகும் நீராவி நேரடியாக சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. பின்னர் இந்த நீராவி ஓர் ஆவி சுருக்கியில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. இந்த நீர் மீண்டும் உலைக் கருவத்திற்கு அனுப்பப்பட்டு சுழற்சி முழுமையடைகிறது. குளிர்விக்கும் நீர் சுமார் 75 atm (7.6 MPa, 1000–1100 பவுண்ட்/ச.அங்) அழுத்தத்தில் வைக்கப்பட்டிருப்பதால் கருவத்தில் சுமார் 285 °C (550 °F) வெப்பத்தில் கொதிக்கிறது. இதற்கு எதிராக ,அழுத்த நீர் அணு உலையில் முதன்மைச் சுற்றில் நீர் சுமார் 158 atm (16 MPa, 2300 psi) மிகை அழுத்தத்தில் வைக்கப்படுவதால் கொதிப்பதில்லை. 2011 சப்பானிய அணு உலை விபத்திற்கு முன்பாக கருவச் சேத நிகழ்வடுக்குகள் 10−4 க்கும் 10−7 க்கும் இடையே மதிப்பிடப் பட்டிருந்தது (அதாவது, ஒவ்வொரு 10,000 முதல் 10,000,000 வரையிலான உலையாண்டுகளுக்கு ஒரு கருவச் சேதம்). குறள்வெண் செந்துறை குறள்வெண் செந்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது அளவொத்த (ஒரே சீர் எண்ணிக்கை கொண்ட அடிகள்) இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, (நான்கு சீர்) நெடிலடியாகவோ, (ஐந்து சீர்) கழிநெடிலடியாகவோ (ஐந்துக்கும் மேற்பட்ட சீர்கள்) அமையும். இது செந்துறை வெள்ளை என்றும் அறியப்படுகிறது. தடையில்லாத இனிய ஓசையும், மென்மையான பொருளும் பெற்று வரும் என குறள்வெண் செந்துறை விளக்கப்பட்டுள்ளது. ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே குகமனோகரி குகமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். மையப்படுத்தப்பட்ட எழுகோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட எழுகோண எண் ("Centered heptagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்ட புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு எழுகோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட எழுகோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள எழுகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் எழுகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட எழுகோண எண் காணும் வாய்ப்பாடு: இவ்வாய்ப்பாட்டை கீழுள்ளவாறு மாற்றி எழுத: இதிலிருந்து "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண், "(n−1)"-ஆம் முக்கோண எண்ணின் ஏழு மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம். முதல் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள் சில: ஒரு மையப்படுத்தப்பட்ட எழுகோண எண், பகா எண்ணாக இருந்தால் அது மையப்படுத்தப்பட்ட எழுகோண பகா எண் எனப்படும் முதல் மையப்படுத்தப்பட்ட எழுகோண பகா எண்கள் சில: முதல் மையப்படுத்தப்பட்ட எழுகோண இரட்டைப் பகா எண்கள் சில: மையப்படுத்தப்பட்ட எண்கோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண் ("centered octagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்டப் புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு எண்கோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள எண்கோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் எண்கோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண் காணும் வாய்ப்பாடு: அதாவது மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள் ஒற்றை எண்களின் வர்க்கங்களாக இருக்கும். இவ்வாய்ப்பாட்டை கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்க: இதிலிருந்து "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண், "(n−1)"-ஆம் முக்கோண எண்ணின் எட்டு மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம். முதல் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள் சில: 1, 9, 25, 49, 81, 121, 169, 225, 289, 361, 441, 529, 625, 729, 841, 961, 1089...() அனைத்து மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்களும் ஒற்றை எண்களாகும். 10 அடிமானத்தில் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள், ஒன்றுகளின் இடத்தில் 1-9-5-9-1.என்ற இலக்கங்களின் அமைப்பில் அமையும். ஒரு ஒற்றை எண், முழு வர்க்கமாக இருந்தால், இருந்தால் மட்டுமே அது ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாக இருக்க முடியும். மையப்படுத்தப்பட்ட நவகோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட நவகோண எண் ("centered nonagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்டப் புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு நவகோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட நவகோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள நவகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் நவகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட நவகோண எண் காணும் வாய்ப்பாடு: இவ்வாய்ப்பாட்டைப் பின்வருமாறு மாற்றியமைக்கலாம்: இதிலிருந்து "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட நவகோண எண், "(n−1)"-ஆம் முக்கோண எண்ணின் 9 மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம். இதை விடவும் எளிய தொடர்பு முக்கோண எண்களுக்கும் மையப்படுத்தப்பட்ட நவகோண எண்களுக்குமிடையே உள்ளது. ஒவ்வொரு மூன்றாவது முக்கோண எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட நவகோண எண்ணாக இருக்கும். முதல் மையப்படுத்தப்பட்ட நவகோண எண்கள் சில: பின்வரும் செவ்விய எண்கள் மையப்படுத்தப்பட்ட நவகோண எண்களாக இருப்பதைக் காணலாம்: 1850 -ல் கணிதவியலாளர் "பொல்லாக்", ஒவ்வொரு இயல் எண்ணும் அதிகபட்சம் 11 மையப்படுத்தப்பட்ட நவகோண எண்களின் கூட்டுத்தொகையாக அமையும் என்று கூறியது (நிரூபணம் இல்லாமல்) சரியானது என்றோ அல்லது தவறானது என்றோ நிரூபிக்கப்படவேயில்லை. 11 கிபி ஆண்டு 11 (XI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் தாவுரசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Lepidus and Taurus") எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 764" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 11 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினோராம் ஆண்டாகும். இராணி ஜெத்மலானி இராணி ஜெத்மலானி மகளிர் உரிமைகளுக்காகப் போராடிய செயற்பாட்டாளரும் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவரும் ஆவார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மகளாவார். மும்பையில் வசித்துவந்த இவர் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் மணமகள்கள் எரிக்கப்படுவதற்கும் எதிராக போராடிய ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டார். 1977ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மூன்று முறை மக்களவைக்குப் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. தமது வழக்கறிஞர் பணியைத் தொடங்கும் முன்னர் மும்பையின் "கிசன்சந்த் செல்லாராம் கல்லூரியில்" சட்ட பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் இந்திய சட்ட அமைச்சரும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞருமாகிய ராம் ஜெத்மலானிக்கும் துர்கா ஜெத்மலானிக்கும் பிறந்தவர். ராணி ஜெத்மலானியின் சகோதரி ஷோபா & சகோதரர்கள் மகேஷ், ஜானக் ஆவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே தத்து எடுத்து வளர்த்த மகனும் ஓர் வழக்கறிஞர் ஆவார். மகளிர் உரிமைகள் குறித்து மிகவும் துடுப்பான செயற்பாட்டாளராக விளங்கினார். மகளிருக்கு எதிரான தீயச்செயல்களுக்கு எதிராக "மகிளா தக்சத சமிதி" என்ற அமைப்பை நிறுவினார். "கமிட்2சேஞ்ச்" என்ற அமைப்பின் வாரியக்குழு உறுப்பினராக வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். குற்ற விசாரணைகளில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து ஓர் புதிய போக்கை உருவாக்கினார். பெண்களுக்கு எதிரான பழமையான பழக்க வழக்கங்கள் குறித்து ஆயவும் எதிர்க்கவும் "WARLAW (மகளிர் செயல் ஆய்வு மற்றும் மகளிருக்கான சட்ட செயல்)" என்ற அமைப்பை இணைநிறுவனராக உருவாக்கினார். இந்த அமைப்பு சட்டங்கள் ஆக்கமும் செயற்பாடும் பாலின நடுநிலையாக அமையவும் பாடுபடுகிறது. 1995ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று சிகிட்சை மேற்கொண்ட இராணி 2002ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சையும் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்த சிறுநீரக செயலிழப்பால் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இராணி ஜெத்மலானி காலமானார். என் வீட்டு கொல்லையில் வேண்டாம் என் வீட்டு கொல்லையில் வேண்டாம் என்ற சொற்றொடர் தமது குடியிருப்புக்கு அருகில் ஏற்படுத்தப்படவிருக்கும் ஒரு பொதுநல திட்டத்தினால் பதிப்பு ஏற்படும் என்று என்னும் மக்களின் மன வெளிப்பாடாகும். ஆங்கிலத்தில் "நாட் இன் மை பேக்யார்ட்" (ஆங்கிலம்:NIMBY அல்லது not in my back yard) என்று அறியப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் புதிதாக அமையும் விமான நிலைய வானூர்தி ஓடுதளத்திற்கு அந்த பகுதி மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பை இவ்வகையில் சேர்க்கலாம். சமணர் மலை, மதுரை சமணர் மலை மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ள கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் மகாவீரர், இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. ""வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி"" என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டெழுத்து செய்தி. இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்யக் காரணமாயிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.மேலும் இன்னாரது மாணாக்கர் என்று அவர்தம் ஆசிரியர் கொண்டு தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இயற்கையாக அமைந்த குகைத்தளமான செட்டிப்புடவின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதலிலும் கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களும் நடுவிலுள்ள மூன்று சிற்பங்களில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள இயக்கி சிம்மத்தின் மீதமர்ந்து யானை மேல் வரும் அசுரனை எதிர்கொள்வது போலுள்ளது. இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி இருசேடிப் பெண்கள் சூழ இடக்காலை மடக்கி வலதுகாலை நீட்டி ” சுகாசன “ நிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இந்த ஐந்து சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. "‘ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி ‘" என்றுள்ள கல்வெட்டுக்கள்வழி மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களைச் செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை அறியலாம். இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே உள்ள இடத்தில் கி.பி.10 நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவிப் பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுமூலம் பராந்தக வீரநாராயணன் (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் இப்பள்ளியைக் கட்டியுள்ளது புலனாகிறது. "” ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு இருபத்தேழிதனெதிராண்டி னெ திரான் டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து மாதேவிப் பெரும்பள்ளிச் சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நில மிருவே லியாலும் கீழ்மாந்தரனமான் வயும் அதன்துடவரும் மேற்றி நில மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீழ் சிறபால வயக்கலு மிதன் தென்வய “"என்பது மாதேவிப் பெரும்பள்ளி அடித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டின் வாசகம். இக்கல்வெட்டு வீரநாராயணனின் 29 ஆம் ஆட்சியாண்டான கி.பி.889ல் வெட்டபட்டுள்ளது. இதன் மூலம் இம்மலைக்கு "திருவுருவகம்" என்ற பெயர் இருந்ததும், இப்பள்ளியின் பராமரிப்புக்காக "மாடக்குளக்கீழ்" என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்த புளிங்குன்றூரில் இரு வேலி நிலம் கொடையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது. புளிங்குன்றூர் என்னும் ஊரே இன்று சமணப்படுகைகள் அமைந்துள்ள கொங்கர் புளியங்குளம் என்ற ஊராகலாம். இந்த சமணப்பள்ளி இடிந்தபின் இங்கிருந்த இயக்கியர் உருவங்களை கீழே உள்ள அய்யனார் கோயிலில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையேறிச் சென்றால், கிழக்கிலிருந்து தெற்காக செல்லும் சரிந்து நீண்ட ஏற்றத்தின் உச்சியில் ஒரு தீபத்தூணை வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதன் கீழே கன்னடக் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.இந்த கல்வெட்டுகள் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள சிரவணபெளகொள பகுதியிலிருந்து வந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம். இரண்டாம் கல்வெட்டு மட்டும் தமிழிலும் மற்றவை கன்னடத்திலும் உள்ளன. மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையுச்சியிலுள்ள தீபத்தூணை நோக்கிச் செல்லாமல், மலையின் தென்புறம் நோக்கிச் சென்றால் அங்குள்ள பாறையின் கீழ் தமிழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டை 2012ல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு.முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லுநர்கள் முனைவர் சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன், சொ.சந்திரவாணன் ஆகியோர் படித்துப் படியெடுத்துள்ளனர். ""பெருதேரூர் குழித்தை அயஅம்"" என 13 எழுத்துக்களை இத்தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும். வெங்கமேடு வெங்கமேடு தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். இப்பகுதியானது கரூர் நகர்ப்பகுதியில் சற்று உயரமாக இருபதாலும் மேலும் இப்பகுதியில் வெண்கற்கள் இருந்ததாகவும் இப்பகுதி வெண்கல்மேடு என்று வழங்கபட்டு காலப்போக்கில் இன்று இப்பகுதி வெங்கமேடு என்று வழங்கப்படுகிறது. இப்பகுதி தற்பொழுது கரூர் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. எட்வார்ட் ஹைட் எட்வார்ட் ஹைட் ("Edward Hyde ", பிறப்பு: மார்ச்சு 18 1881, இறப்பு: அக்டோபர் 9 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1907 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். எட்வார்ட் ஹைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ரொஜர் இட்டிசன் ரொஜர் இட்டிசன் ("Roger Iddison ", பிறப்பு: செப்டம்பர் 15 1834 , இறப்பு: மார்ச்சு 19 1890), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 134 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1853-1876 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரொஜர் இட்டிசன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. மைக்கல் ஐகின் மைக்கல் ஐகின் ("Michael Ikin ", பிறப்பு: திசம்பர் 31 1946 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972-1979 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மைக்கல் ஐகின் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ரிச்சார்ட் ஜாக்சன் ரிச்சார்ட் ஜாக்சன் ("Richard Jackson", பிறப்பு: திசம்பர் 8 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2001/02 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சார்ட் ஜாக்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. பீட்டர் ஜாக்சன் (துடுப்பாட்டக்காரர்) பீட்டர் ஜாக்சன் ("Peter Jackson", பிறப்பு: மே 11 1911, இறப்பு: ஏப்ரல் 27 1999), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 385 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1929-1950 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் ஜாக்சன் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ஜேம்ஸ் இலெஸ் ஜேம்ஸ் இலெஸ் "(James Iles, பிறப்பு: பிப்ரவரி 1 1990)", இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2006 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜேம்ஸ் இலெஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. நைஜல் இலிங்வோர்த் நைஜல் இலிங்வோர்த் ("Nigel Illingworth ", பிறப்பு: நவம்பர் 23 1960 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981-1983 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நைஜல் இலிங்வோர்த் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ஜார்ஜ் ஜாக்சன் ஜார்ஜ் ஜாக்சன் ("George Jackson", 18ம் நூற்றாண்டு பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. நைஜல் இலொட் நைஜல் இலொட் ("Nigel Ilott", பிறப்பு: ஆகத்து 22 1965 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1993 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நைஜல் இலொட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ஜெப்ரி ஜாக்சன் ஜெப்ரி ஜாக்சன் ("Geoffrey Jackson ", பிறப்பு: சனவரி 10 1894, இறப்பு: ஏப்ரல் 9 1917), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1912-1914 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெப்ரி ஜாக்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. இம்ரான் ஜாம்செட் இம்ரான் ஜாம்செட் ("Imran Jamshed ", பிறப்பு: திசம்பர் 31 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2002-2003 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இம்ரான் ஜாம்செட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. டேவிட் ஜாக்சன் டேவிட் ஜாக்சன் ("David Jackson ", பிறப்பு: சூன் 9 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1983-1985 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் ஜாக்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. பிரயன் ஜாக்சன் பிரயன் ஜாக்சன் ("Brian Jackson", பிறப்பு: ஆகத்து 21 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 149 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1963-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் ஜாக்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. ஜான் இன்ச்மோர் ஜான் இன்ச்மோர் ("John Inchmore ", பிறப்பு: பிப்ரவரி 22 1949 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 218 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 227 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973-1986 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் இன்ச்மோர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. வில்பிரெட் இசார்ட் வில்பிரெட் இசார்ட் ("Wilfred Izzard ", பிறப்பு: பிப்ரவரி 25 1892, இறப்பு: செப்டம்பர் 15 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919-1920 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில்பிரெட் இசார்ட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 31, 2011. வெட்சியரவம் தமிழ் இலக்கணத்தில் வெட்சியரவம் என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். வெட்சியின் ஐந்து நிலைகளுள் இத்துறை "கவர்தல்" என்னும் முதல் நிலையைச் சார்ந்தது. தொல்காப்பியம் இதனை "ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்" என்று கூறும். வெட்சி என்பது பசுக் கூட்டங்களைக் கவர்தலையும், அரவம் என்பது ஓசையையும் குறிக்கும். பகை நாட்டிலிருந்து பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வரப் படையினர் செல்லும்போது உண்டாகும் ஓசையைப் பொருளாகக் கொள்வது வெட்சியரவம் ஆகும். இதனை விளக்க, "பகை நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்வதற்காகப் போர்முனைக்குச் செல்வதை வெட்சி வீரர் விரும்புவார்கள். அவ்வாறு விரும்புவதை வெளிப்படுத்துவது" என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது. வெப்ப நியூத்திரன் அணு உலை வெப்ப நியூத்திரன் அணு உலை ("thermal neutron reactor") என்பது மெதுவான அல்லது வெப்ப நியூத்திரன்களை பயன்படுத்தும் ஓர் அணுக்கரு உலை ஆகும். பெரும்பாலான மின் அணுஉலைகள் இவ்வகையானவையே. இவற்றில் நியூத்திரன் மட்டுப்படுத்தி மூலம் நியூத்திரன்களின் வேகத்தை, தங்களைச் சூழ்ந்துள்ள துகள்களின் சராசரி ஆற்றலுக்கு இணையாகும்வரை குறைக்கப்படுகிறது; அதாவது, நியூத்திரன்களின் வேகம் குறைந்த வேகத்திலுள்ள வெப்ப நியூத்திரன்களின் வேகத்திற்கு குறைக்கப்படுகிறது. . யுரேனியம்-235 இன் அணுக்கருனி குறுக்குப்பாகம் மெதுவான வெப்ப நியூத்திரன்களுக்கு ஏறத்தாழ 1000 பார்ன்கள். இதுவே விரைவு நியூத்திரன்களுக்கு 1 பார்னுக்கு அண்மித்துள்ளது. யுரேனியம்-235களை வெப்ப நியூத்திரன்கள் தாக்கும்போது பிளவுபட யுரேனியம்-238 ஐ விடக் கூடுதல் வாய்ப்புள்ளது. எனவே U-235 பிளவிலிருந்து ஒரு நியூத்திரனாவது மற்றொரு அணுக்கருனியை தாக்கி அதுவும் பிளவுபட ஏதுவானால் தொடர்வினை நீடிக்கும். இவ்வாறு தொடர்வினை தன்னாலேயே நீடிக்குமானால் அது "உய்நிலை எதிர்வினை" எனப்படும். இந்த நிலையை எட்டக்கூடிய U-235யின் திண்மை உய்நிலை பொருண்மை எனப்படுகிறது. வெப்ப அணு உலைகளில் கீழ்கண்டவை அமைந்துள்ளன: சேவப்ப நாயக்கர் சேவப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் முதல் மன்னன். சேவப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர். சேவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி சக்கரவர்த்தி சோமசன்மா சக்ரவர்த்தி சோமசன்மா (பிறப்பு: ஏப்ரல் 28, 1936), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். இந்தியா, தமிழ்நாடு தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் டி.இ.எல்.சி, ஆரம்பப் பாடசாலை, ஈ.வெ.ரா, வாசுகி, இராமகிருட்ணா தொடக்கப் பள்ளி, மங்ஸ்கில் நீல்ட்டன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளை நன்கறிந்த இவர், சொந்த தொழில் ஈடுபட்டு வருகிறார். சிங்கப்பூரில் இவர் ஒரு ஊடகவியலாளராக அறியப்பட்டுள்ளார். திரையொளி, அறிவுச் சுடர் இதழ்களின் துணையாசிரிராகவும், சூரியன், வீடியோ மூவி நியூஸ் ஆகியவற்றின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வீடியோ மூவி நியுசின் விற்பனை அதிகாரியாகவும் இருந்துள்ளார். ம.செ.க. உறுப்பினராகவும், ஏ.யு.பி. செயற்குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ஆயுள் உறுப்பினராகவும், போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் தொண்டூழிய அதிகாரியாகவும், அண்ணா நாடக மன்றத்தின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1954ம் ஆண்டில் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, கட்டுரை முதலிய துறைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவரின் கன்னிக் கவிதை ‘பிரிந்து நான் இருந்திடேன்' எனும் தலைப்பில் தமிழ் முரசில் பிரசுரமானது. வான்முகில், இயற்கைதாசன், சமூகன், சோமா போன்ற புனைப்பெயர்களில் சுமார் 50க்கும் அதிகமான சிறுகதைகளையும், 60 கவிதைகளையும், 10 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புகள் தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அமலதாசன் கவிஞரேறு அமலதாசன் (பிறப்பு: செப்டம்பர் 1, 1939) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியா கோலசிலாங்கூரில் பிறந்த இவர் தோட்டப் பள்ளியிலும் ரவாங், கிளைவ் இன்ஸ்டிடியுசன் ஆங்கிலப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் இயங்கிவந்த ‘நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன் - ரீஜண்ட் இன்ஸ்டிடியூசன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், அவ்லட் வட்டார தமிழர் திருநாள் விழாக் குழு உறுப்பினராகவும், செயலாளராகவும், அவ்லக் தமிழ்பள்ளி வள்ளுவர் நூலகத்தின் செயலாளராகவும், மாதவி இலக்கிய மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பொருளாளராகவும், பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும், தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும், எழுத்தாளர் கழகத்தின் தலைவராகவும், சிங்கப்பூர்க் குடியரசின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியர் பண்பாட்டு மாதத்தின் ‘தமிழ் மொழி வார' இணைத் தலைவராகவும், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பேராளராகவும், 1வது தமிழ்மொழி வாரத்தில் கழகத்தின் பேராளராகவும், 2வது தமிழ்மொழி வாரத்தின் ஆலோசகராகவும், தமிழர் பேரவையின் உதவித் தலைவர் மற்றும் கலாசாரக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1958ல் எழுதத் தொடங்கிய இவருக்கு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலர் களமமமைத்துக் கொடுத்தது. கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தேசியம், மொழி, சமுதாயம், இயற்கை, காதல், தத்துவம், இசைப்பாடல்கள், சிறுவர் பாடல்கள் என பல்துறைகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளிபரப்பாகியுமுள்ளன. பி. சிவசாமி பி. சிவசாமி (பிறப்பு: சூன் 20, 1943) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், இராங்கியன் விடுதி எனும் ஊரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கப்பூரிலுள்ள இராமகிருஸ்ணா பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்றிருந்த இவர் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் தமிழாசிரியர் கழகத்தின் பொருளாளராகவும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும், சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க 25வது ஆண்டு வெள்ளிவிழா மலரின் பொறுப்புக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1958ல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, கட்டுரை முதலான துறைகளில் கூடிய ஆர்வம் செலுத்திவந்தார். இவரது முதல் கட்டுரை தமிழ் முரசு மாணவர் மணிமன்றத்தில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலக்கியப் போட்டிகளின் இவர் பல பரிசில்களைப் பெற்றுள்ளார். பரணன் பரணன் (பிறப்பு: ஏப்ரல் 9 1944), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார். தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கறிந்த இவர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றினார். இவர் மரபுக் கவிதை எழுதுவதில் அதிக அக்கறைக் கொண்டிருந்தவர். புதுக்கவிதை, புதினம், கட்டுரை என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது முதல் ஆக்கம் என்னை நான் கண்டேன் எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளியானது. இராம. கண்ணபிரான் இராம. கண்ணபிரான் (பிறப்பு: 1943) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராபிள்ஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். ரோசைத் தொடக்கப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராகவும், பின்பு அதே பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியராகப் தொழிலாற்றியுள்ளார். இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்ப காலச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையம், தேசிய கலை மன்றம் போன்ற இலக்கிய, கலை, அரசு அமைப்புகளின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என பல்துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் இவரது முதல் படைப்பு ஒரு சிறுகதையாகும். இதுவரை சுமார் 60 சிறுகதைகளையும், 4 குறுநாவல்களையும், 8 நாடகங்களையும், 7 கவிதைகளையும், 35 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது இத்தகைய மலேசியா சிங்கப்பூர் தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கை, மலேசியா வானொலிச் சேவைகள் இவரது சிறுகதைகளை ஒலிபரப்பியுள்ளன. பார்வதி பூபாலன் பார்வதி பூபாலன் (பிறப்பு: பெப்ரவரி 4, 1944) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், கல்விமானுமாவார். கல்வி, மொழி, இலக்கியம் தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகளில் பங்கேற்று கட்டுரைகள் படைத்துவருபவரும் இவர் கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றும் வருகின்றார். ஆரம்ப காலகட்டங்களில் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடநூல் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார். 1961ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், மாணவர்களுக்கான இலக்கிய மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரது படைப்புகள் பல நாடுகளிலிருந்தும் வெளிவரும் ஏடுகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன. எம். ஏ. பசீர் அகமது எம். ஏ. பசீர் அகமது (பிறப்பு: ஏப்ரல் 1 1944) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இயல்பாக கவிதைகளை எழுதக்கூடிய ஆற்றல்மிக்கவர். புதுவை மாநிலத்தின் அம்பகத்தூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அவ்வூர் அரசாங்கப் பள்ளியில் கற்று பின்பு மாயூரம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வந்த இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிள்ளார். மேலும் இவர் பாடல், நடித்தல், ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் ஆர்வமிக்கவர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராவார். இவர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினராகவும், வெண்ணிலா கலை அரங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பெக் கியோ இந்தியர் நற்பணிக் குழுவின் பொருளாளராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக செயற்குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் இந்தியர் கலைஞர் சங்கச் செயலவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார். கலைத்துறையில் கூடிய ஈடுபாடுள்ள இவர் சிறு வயது முதல் பல பாடல் போட்டிகளில் பங்பேற்று பரிசில்களை வென்றுள்ளார். பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். சிங்கப்பூர் வானொலியில் பகுதிநேரக் கலைஞராகப் பணியாற்றிவரும் இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் தொடர்ந்தும் நடித்து வந்தார். இளம் பிறையே ஏன் சிரித்தாய்! பாத்தேறல் இளமாறன் பாத்தேறல் இளமாறன் (பிறப்பு: சனவரி 2 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச்சாலையில் பிறந்த இவர் தனது 12வது வயதில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்துவந்தார். இவருக்கு கண்ணகி. தமிழ்க்கோதை. கலைச் செல்வி, மணிமாற செல்வன் எனும் அன்புச் செல்வங்களுளர். இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பின்பு செயலாளராகவும், துணைத் தலைவராகவும், கொள்கை முழக்கம் எனும் திங்கள் இதழில் ஆசிரியராகவும், மற்றும் பல தனித் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார். சிறுவயதில் காடு காக்கப் போகும் போது பாட்டுப் புத்தகங்களை எடுத்துச் சென்று உரத்த குரலில் பாடும் பழக்கத்தை உடையவராக இவர் காணப்பட்டார். பின்பு சிங்கப்பூர் வந்து தமிழார்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் சமையல் உதவியாளராகச் சேர்ந்த இவருக்கு அதிகமான புத்தகங்களை வாசிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அங்கு உருவானது. அதைப் பயன்படுத்திக் கொண்டு யாப்பிலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் தமிழ் முரசு மாணவர்மணிமன்றத்தில் துணுக்குகள் எழுதிவந்த இவரின் முதல் கவிதை 1964ல் தமிழ் மலரில் வெளியானது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், பாடல்களையும், 10க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் பாடல்களை எழுதியுள்ளார். -- 22:34, 27 சனவரி 2014 (UTC)====கவிதைத் தொகுப்புகள்==== இரா. துரைமாணிக்கம் இரா. துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர் வானொலியில் சமூக நேரம் எனும் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார். சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் பொருளாளராகவும், தமிழர் பிரதிநிதித்துவ சபை மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொருளாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் கொள்கை முழக்கம், மாணவர் பூங்கா போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் தமிழாசிரியர் சங்கம் வெளியிட்ட தமிழாசிரியர் குரல் எனும் இதழின் ஆசிரியரும் இவரே. வேம்பரசன் எனும் புனைப்பெயரில் சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரின் முதல் ஆக்கம் 1958ல் மாணவர் மணிமன்ற மலரில் வெளியானது. அச்சுதப்ப நாயக்கர் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன். அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645). தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நான் சிகப்பு மனிதன் நான் சிகப்பு மனிதன் 1985இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்தரசேகர் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மு. பிச்சைக்கனி மு. பிச்சைக்கனி (பிறப்பு: சனவரி 2 1947) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலுக்கருகிலுள்ள புதூர் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அன்னவாசல் அரசினர் தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கி பின்பு பர்மா (மியன்மார்) தலைநகர் ரங்கூனுக்குச் சென்று புனித கேப்ரியல் எஸ்.பி.ஜே. பள்ளியில் இணைந்து கற்று பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலும், விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியிலும் கல்வி கற்று இரசாயனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வணிகம், கணினிக் கணக்கு நிர்வாகம் போன்ற துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ள இவர் தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம், அரபி, பர்மிய மொழிகளை கற்றறிந்தவராவார். 1963ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரின் முதல் சிறுகதையான 'ஆ!!! நீயா?' எனும் தலைப்பில் பர்மிய நாளிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் கூடிய ஆர்வம் காட்டிவந்துள்ளார். மேலும் கல்கி இதழில் வெளியான ஸ்ரீகாஞ்சி சங்கராச்சாரியாரின் ஒரு பக்கக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். தமிழகத்தில் தமிழ் இக்கிய மன்றத்தின் செயலாளராகவும், 1997ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியின் வெள்ளிவிழா மலரைத் தயாரிப்பதற்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். கோட்டை பிள்ளைமார் கோட்டை பிள்ளைமார் என்பவர்கள் பாண்டியர்களுக்கு பட்டம் சூட்டும் பரம்பரை உரிமை கொண்டவர்கள். காமக்கிழத்தியின் மகனான கூத்தனுக்கு பட்டம் கட்ட மறுத்ததாலும் கூத்தன் விரும்பிய தங்கள் சாதிப்பெண்ணை தர மறுத்ததாலும் இனத்தாரோடு அக்னி குண்டத்தில்விழுந்த போது ஐந்துதலை நாகத்தால் காப்பாற்றப்பட்ட சிலரின் வழிவந்தாரே கோட்டைப் பிள்ளைமார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சாதியினர் அழிந்துவிட்டதாக கூறுகின்றனர். அவர்களை குலப்பெண்கள் தீயை தாண்டக்கூடாது என்ற பழக்கம் இருந்ததால் பாண்டியர் கோட்டை எரிந்த போதே அதிலிருந்த அனைவரும் தீயை தாண்டாமல் இறந்து விட்டதாக கூறுகின்றனர். நரேந்திர நாயக் நரேந்திர நாயக் கர்நாடகத்தைச் சார்ந்த அறியப்பட்ட பகுத்தறிவாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் Dakshina கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். அற்புதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார். ராம் புனியானி ராம் புனியானி (பிறப்பு 25 ஆகத்து 1945) இந்திய உயிரிமருத்துவ பொறியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் சமய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சமய சார்பற்ற, பன்முக, மக்களாட்சி விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக அனைத்திந்திய சமய சார்பற்ற அமைப்பு, மத நல்லிணக்க, சனநாயக அமைப்பு போன்ற அமைப்புகளோடு சேர்ந்து இயங்கு வருகிறார். பிரபிர் ஃகோசு பிரபிர் ஃகோசு ("Prabir Ghosh", பிறப்பு மார்ச் 1, 1945) இந்திய அறிவியலாளர்கள் பகுத்தறிவாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும், கொல்காத்தாவின் மனிதபிமான ஒன்றியத்தின் தலைவரும் ஆவார். மூடநம்பிக்கைகள், சாமிமார்கள், அற்புதங்கள் போன்ற மீவியற்கை கோரிக்கைகளுக்கு எதிராக மிக தூண்டல் முறையிலான பொதுமக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். இவர் மீவியற்கை சக்திகளை நிரூபிப்பவர்களுக்கு 2 மில்லியன் இந்திய ரூபாய் பரிசு ஒன்றையும் அறிவித்துள்ளார். மையப்படுத்தப்பட்ட தசகோண எண் கணிதத்தில் மையப்படுத்தப்பட்ட தசகோண எண் ("centered decagonal number") என்பது மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களில் ஒரு வகையாகும். தரப்பட்டப் புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு தசகோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட தசகோண எண்ணாகும். ஒரு அடுக்கிலுள்ள தசகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகள் அதற்கு முந்தைய அடுக்கின் தசகோணத்தின் ஒரு பக்கத்திலுள்ள புள்ளிகளைவிட எண்ணிக்கையில் ஒன்று அதிகமாக இருக்கும். "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட தசகோண எண் காணும் வாய்ப்பாடு: இவ்வாய்ப்பாட்டைப் பின்வருமாறு மாற்றியமைக்கலாம்: அதாவது: இதிலிருந்து "n" -ஆம் மையப்படுத்தப்பட்ட தசகோண எண், "(n−1)"-ஆம் முக்கோண எண்ணின் 10 மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம். முதல் மையப்படுத்தப்பட்ட தசகோண எண்கள் சில: அனைத்து மையப்படுத்தப்பட்ட தசகோண எண்களும் ஒற்றை எண்களாக அமைகின்றன. மேலும் பத்தடிமானத்தில் அவை 1 -ல் முடிகின்றன. மையப்படுத்தப்பட்ட தசகோண எண்களின் மற்றொரு வாய்ப்பாடு: இங்கு "CD" = 1. ஒரு மையப்படுத்தப்பட்ட தசகோண எண்ணானது பகா எண்ணாக இருந்தால், அந்த எண் மையப்படுத்தப்பட்ட தசகோண பகா எண் என அழைக்கப்படும். முதல் மையப்படுத்தப்பட்ட தசகோண பகா எண்கள் சில: ஹம்சலதா ஹம்சலதா கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. அமெரிக்க குடும்ப அமைப்பு ஐக்கிய அமெரிக்க மக்கள் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை வழங்கும் இரண்டு நபர்கள் தொடர்புடைய ஒரு பாரம்பரிய குடும்ப ஆதரவு அமைப்பே அமெரிக்க குடும்ப அமைப்பு ("American family structure") ஆகும். பெற்றோர் குழந்தைகள் மட்டும் கொண்ட குடும்பம் கருக்குடும்பம் எனப்படும். இவ்வமைப்பு உடைய குடும்ப அமைப்பு அமெரிக்காவில் குறைவாகவே உள்ளது. மாமா, அத்தை, தாத்தா, பாட்டி ஆகிய உறவுகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்பம் ஆகும். மணமுறிவு, பதின்மவயது மகப்பேறு, ஒரு பெற்றோர் குடும்பங்கள், திருமணமாகாத தாய்மார்கள், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின திருமணம் ஆகியன காலப் போக்கில் அதிகரித்தது. இவை காரணமாக அமெரிக்க குடும்ப அமைப்பு மாறுதலுக்கு ஆளாகியுள்ளது. குடும்பங்களை நான்கு வகையாக பிரிக்கலாம் .அவையாவன கருக்குடும்பம் ,கூட்டு குடும்பம், படி நிலை குடும்பம் மற்றும் ஒற்றை பெற்றோர் குடும்பம் ஆகும். கருக்குடும்பம் என்பது அம்மா, அப்பா, மற்றும் குழந்தைகள் கொண்டது. ஒற்றை பெற்றோர் குடும்பம் என்பது தனது துனைகளது உதவியின்றி தமது பிள்ளைகளை பராமரிப்பது ஆகும் .கூட்டு குடும்பம் என்பது தாத்தா, அத்தைகள், மாமாக்கள், மற்றும்சகோதர, சகோதரிகள் ஆகியோரை கொண்டது ஆகும் இரகுநாத நாயக்கர் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 – 1645) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் மூன்றாவது மன்னன். இரகுநாத நாயக்கரின் தந்தை அச்சுதப்ப நாயக்கர் (1560–1600). தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர் இரகுநாத நாயக்கர். இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.இரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் (கி.பி.1633 – 1673). இவர் தமது ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டார். ஈழத்தில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சையை நோக்கித் திரும்பும் வழியில் தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் என்பவனோடு போரிட்டார். ஜக்கராயன் விசயநகரப் பேரரசுக்கு உட்பட்ட கோலார் பகுதியை ஆண்டு வந்தவன் ஆவான். இவன் விசயநகரப் பேரரசைக் கவரச் சதி செய்தான். இதனை யாசம நாயக்கர் என்ற குறுநில அரசர் அறிந்தார். இவர் விசயநகரப் பேரரசின் விசுவாசி ஆவார். யாசம நாயக்கர் ஒரு பெரும்படை திரட்டிச் சென்று ஜக்கராயனோடு போரிட்டார். போர் கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் ( தற்போது அது தோகூர் என்றழைக்கப்படுகிறது) என்னும் இடத்தில் கி.பி.1616இல் நடைபெற்றது. இப்போரில் ஜக்கராயனுக்கு மதுரை, செஞ்சி நாயக்கர்கள் துணைநின்றனர். ஜக்கராயன் செஞ்சி, மதுரை நாயக்கர்களோடு சேர்ந்து கொண்டு தஞ்சைக்கு மேற்கே உள்ள கல்லணையை இடிக்க முற்பட்டான். இதனை அறிந்த இரகுநாத நாயக்கர் பெரும்படையுடன் சென்று தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் படைகளோடு பெரும்போர் செய்தார். ஜக்கராயனுக்குத் துணைநின்ற மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் தோல்வியுற்றுப் போர்க்களம் விட்டோடினர். ஆனால் ஜக்கராயன் போரில் கொல்லப்பட்டான். இரகுநாத நாயக்கர் மாபெரும் வெற்றி பெற்றார். தோப்பூர்ப் போர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராகக் கருதப்படுகிறது. இரகுநாத நாயக்கர் தம் முன்னோர் போல, விசயநகரப் பேரரசிற்கு ஆதரவாளராகவே இருந்தார். இரகுநாத நாயக்கர் காலத்தில் டச்சு, டென்மார்க், இங்கிலாந்து, போர்த்துகீசு வாணிகர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்து வாணிபத்திற்காகப் போட்டியிட்டனர். டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடி என்னும் சிறு துறைமுகப்பட்டினத்தில் தங்கி வாணிபம் செய்ய இரகுநாத நாயக்கர் அனுமதி வழங்கினார். இரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டவரோடு கொண்ட நட்புறவால் வாணிபம் நடைபெற்றது. தஞ்சாவூரில் வீணை முதன்முதுலாக இம்மன்னர் காலத்தில் முதன் முதலில் செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாத வீணை என்றும் பெயர் பெற்றது. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி விஜயராகவ நாயக்கர் விஜயராகவ நாயக்கர் (கி.பி.1633 - 1673) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் நான்காவது மன்னன். விஜயராகவ நாயக்கரின் தந்தை இரகுநாத நாயக்கர் (1600 - 1632). இவர் தம் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே கி.பி.1631இல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்று, அரசு பொறுப்புகளைத் தந்தையாருடன் இணைந்து கவனித்து வந்தார். இரகுநாத நாயக்கர் கி.பி. 1645இல் மறைந்ததும் அதே ஆண்டில் விசயராகவ நாயக்கர் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். மதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது.மதுரையை ஆண்ட மன்னன் சொக்கநாத நாயக்கருக்கு விஜயராகவ நாயக்கர் தன் மகளைக்கொடுக்க மறுத்துத்ததால்,சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என்னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விசயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார். விசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். இது நாயக்கர் காலத்திய கோயிலாக இருத்தல் கூடும். விஜயராகவ நாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன. இவர் 32க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி, அவற்றில் பெரும்பாலான நாடகங்களை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கவும் செய்துள்ளார். குறிப்பாக பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரதான நாடகமாகப் போற்றப்பெறுகின்ற பிரகலாத நாடகம் ஒன்றை விஜயராகவனே எழுதி மன்னார்குடி கோயிலில் அரங்கேற்றியுள்ளார் என்பதை சுவடிகள் வாயிலாக அறியும்போது, குச்சுப்புடி நாட்டிய மரபின் பல அம்சங்கள் மன்னார்குடியிலிருந்துதான் சென்றுள்ளது என்பதை நம்ப முடிகிறது. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி சிவனின் தமிழ்ப் பெயர்கள் சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு. சிவபெருமானுடைய ஆயிரம் தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கீழே. சிவையின் தமிழ் பெயர்கள் சிவையின் (சக்தி / அம்மன்) தமிழ்ப்பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு: தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட். தீப்பெட்டி தீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.அந்த மேற்பரப்பில் போஸ்பரசு தடவப்பட்டிருக்கும். இதைக்கண்டு பிடித்தவர்கள் சுவீடனின் யோன், கொரல் சண்டேஸ்டம் ஆவார்.அதன் பின் பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் தீப்பெட்டி என அழைக்கப்பட்டது. முற்காலத்தில் இதன் உடல் மரத்தால் ஆக்கப்பட்டிருந்தது.தற்போது இது மெழுகு நிறைந்த ஒரு காகிதத்தால் ஆக்கப்படுகிறது. தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தொடர்பான பிற பொருட்களை பொழுதுபோக்காக சேகரிப்பது "பில்லுமெனி" எனப்படும். கொண்டு கொடுத்தல் கொண்டு கொடுத்தல் என்பது பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்ற பழக்கம் ஆகும். இதன்படி 'அ' குழுவைச் சேர்ந்த பெண்ணை ஆ குழுவிற்கு கொடுத்தால் அங்கிருந்து 'அ' குழுவிற்கு ஒரு பெண் திரும்பப் பெறப்படுவாள். உடன் பிறந்தோர் பரிமாற்றம் (sibling set exchange) என்ற இம்முறை கொண்டு கொடுத்தலில் ஒரு முறையாகும். இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொள்ளலாம். கிள்ளாப் பறண்டி கிள்ளாப் பறண்டி என்பது தாய்மார் குழந்தைகள் பலரோடு விளையாடி மகிழ்விக்கும் விளையாட்டு. குழந்தைகள் தம் கைகளை விரித்துத் தரையில் வைத்துக்கொண்டு அமர்வர். தாய் ஒவ்வொருவர் கையிலும் கிள்ளாமல் கிள்ளி மென்மையாகப் பறாண்டுவார். இதனால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது. என்று பாடிக்கொண்டே கிள்ளுவாள். குழந்தை என்று ஏதோ ஒரு பூவின் பெயரைச் சொல்லும். (பின் அடுத்தடுத்த குழந்தைகள் பூவின் பெயரையே சொல்லவேண்டும்) முதல் குழந்தை காயின் பெயரையோ, பழத்தின் பெயரையோ சொன்னால் பிற குழந்தைகளும் அந்த இனப் பொருளில் வேறொரு பெயரைச் சொல்ல வேண்டும். என்று சொல்லி, அக்குழந்தையின் கையில் ஒரு சிறு மணியாங்கல்லைத் தருவார். அந்தக் குழந்தை பிறருக்குத் தெரியாமல் வாங்கித் தன் இரு கைகளால் பொத்தி அடி வயிற்றில் வைத்துக்கொள்ளும். தாச்சி எதனையும் கொடுக்காவிட்டாலும் பெற்றது போல் நடித்துக்கொண்டு வைத்துக்கொள்ளும். தாய்ச்சி பாட்டுப் பாடும்போது ஒவ்வொரு அடிக்கும் அட்டுத்தடுத்து உள்ளவரின் கையில் பறாண்டுவதால் கல் கொடுக்கப்பட்டவரோ கொடுக்கப்படாதவரோ போகக் கடைசியில் எஞ்சுபவர் யார் கையில் கல் உள்ளது எனச்சொல்லவேண்டும். சொல்லிவிட்டால் அவர் பழம். அவர் விலகிக் கொள்ளலாம். எஞ்சியவரிடம் விளையாட்டு நிகழும். கிள்ளி நுள்ளிப் பிராண்டி கீயா மாயப் பிராண்டி கொப்பன் தலையில் என்ன பூ முருக்கம் பூவை திண்டவனே முள்ளந்தண்ணியைக் குடிச்சவனே பாவட்டம் கையை மடக்கு லுடொவிக் ஹப்ளர் லுடொவிக் ஹப்ளர்(Ludovic Hubler) பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த பயணி.தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவழிக்காமல் உலகம் முழுவதையும் கடந்த ஒரு மனிதன். காசிருந்தால் மட்டுமே பயணம் செல்ல முடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் உலகைச் சுற்ரிவர முடியும் என்பதற்குச் சான்றாக சாலையில் எதிர்ப்படும் வாகனங்களிடம் உதவி கேட்டு மட்டுமே 17,00,000 கிலோ மீட்டர் தூரம் கடந்த சாதனயாளர். 59 நாடுகள் 1825 நாட்கள் மகிழுந்து, டிரக், ஒட்டகம், கழுதைச் சவாரி, படகு என தன்னைக் கடந்து செல்லும் எந்த வாகனமாக இருப்பினும் நிறுத்தி உதவி கேட்டு உலகைச் சுற்றிய மனிதர்.இவரது உலகப் பயணத்தைச் சாத்தியமாக்கியவர்கள் 1300 வாகன ஓட்டிகள். சில வாகனங்களில் 200 முதல் 500 கி.மீ. வரை கூட பயணம் செய்தவர்.தன்து பயன பட்டறிவுகளை நூலாக எழுதியவர். அதற்காக 2010 ஆம் ஆண்டிற்கான 'பியர் லோட்டி' என்ற விருதினைப் பெற்றவர். லுடொவிக் ஹப்ளர் 1977 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ல் மானிக்ஹப்ளர்-ஜாக்குவிஸ் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கிழக்கு பிரெஞ்சில் வளந்த இவர் இளமையிலேயே கால்பந்து விளையாட்டிலும் புவியியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 2002 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்க் கல்லூரியில் நிர்வாகவியலில் படம் பெற்றார். பட்டம் பெற்றதும் தொழில் சந்தையில் நுழைவதற்கு முன் உலகின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று எண்ணிய லுடொவிக் ஹப்ள தனது போக்குவரத்திற்கு சாலையில் செல்லும் வானங்களின் உதவியைப் பயன்படுத்தி மட்டுமே உலகின் ஒரு சுற்றுப்பயணத்தை தொடங்குவது எனத் தீர்மானித்ததார். 2003 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கிய போது தனது நண்பர்களுடன் ஆல்ப்ஸ் மலியிலிருந்து தனது முதலடியை லுடோவிக் துவங்கினார். அப்போது இவருக்கு வயது 25. ஆல்ப்ப்ஸ் மலையில் பயணம் துவங்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது சொந்த செலவில் எந்த வாகனத்திலும் பயணம் செய்யக்கூடாது எனவும் தான் மேற்கொள்ளும் இலவசப் பயணங்கள் உத்தேசித்துள்ல நகரின் பெட்ரோல் பங்க் வரை மட்டுமே, அதன் பிறகு இன்னொரு வாகனத்தை நாடிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தனது பயணத்தை லுடோவிக் துவங்கினார். இவர் படகுப் பயணம் மூலம் பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றைக் கடந்தார். பணிஉடைப்பு வண்டிகள் இவற்றின் மூலம் அன்டார்டிக்கா பிரதேசத்தைக் கடந்தார். மேலும் சஹாரா பாலைவனம், மற்றும் ஆப்கனிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளையும் தனது கட்டை விரல் ஒன்றினை மட்டும் பயன்படுத்தி கடந்தது சாதனை செய்தார். இக்காலத்தில் இவர் கற்பனையும் செய்து பார்த்திராத பல இக்கட்டான நேரங்களைக் கடந்து வந்துள்ளார். இவர் நினைத்தது போல் பயணம் அவ்வளவு எளிமையானதாக இல்லை. சில இடங்களில் கால் கடுக்க நாள் முழுவதும் நின்று கொண்டேயிருந்தால் ஏதேனும் ஒரு வாகனம் நிறுத்தப்படும். ஆனால் அவர்கள் எளிதில் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு மொழிப் பிரச்சனை வேறு. எனவே சில சமயங்களில் தன்னைப் பற்றிய குறிப்புகளை ஒரு அட்டையில் பல மொழிகளில் எழுதி அதனை நீட்டிக் காட்டுவதும் இவரது வழக்கமானது. ஆயினும் உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையான மனிதர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இவருக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் பல நேரங்களில் தங்குமிடம் மற்றும் உணவு தந்து லுடோவிக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவரது பயணத்தில் உதவ முன்வந்த பெரும்பான்மையினர் எளிமையான அடித்தட்டைச் சேர்ந்த மகிழுந்து ஓட்டிகளே. அவர்கள் தங்களால் முடிந்த தூரத்திற்கு லுடோவிக்கை வாகனத்தில் கொண்டு இறக்கி விட்டிருக்கிறார்கள். தனது ஐந்தாண்டுப் பயனத்தில் வாகனத்தில் பயணம் செய்த நேரத்தை விட அதற்காக காட்திருந்த நேரமே அதிகம். லுடோவிக் ஆங்காங்கே 450 இடங்களில் தங்கியுருக்கிறார். சில நேரங்களில் காவலர்களிடமும் இராணுவத்திடமும் பிடிபட்டிருக்கிறார். இரவுக் காவல் என்று சிறைச் சாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். சில நேரங்களில் வெறு வழியின்றி பெண்களைப் போல பர்தா உடையணிந்தும் உதவி கேட்டு பயணம் செய்து இருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணன். கோடுகள் இல்லாத வரைபடம். உயிர்மை பதிப்பகம். 2008 ஜான் ஜக்லின் ஜான் ஜக்லின் ("John Jacklin ", பிறப்பு: திசம்பர் 12 1947 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1975 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜான் ஜக்லின் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. டெரெக் ஐஸ்லஸ் டெரெக் ஐஸ்லஸ் ("Derek Isles ", பிறப்பு: அக்டோபர் 14 1943 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1967 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டெரெக் ஐஸ்லஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. லயனல் இசர்வுட் லயனல் இசர்வுட் ("Lionel Isherwood ", பிறப்பு: ஏப்ரல் 13 1891, இறப்பு: செப்டம்பர் 30 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919-1927 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லயனல் இசர்வுட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. மைக்கல் இன்காம் மைக்கல் இன்காம் ("Michael Ingham ", பிறப்பு: பிப்ரவரி 20 1957 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1996 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மைக்கல் இன்காம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. பீட்டர் இன்காம் பீட்டர் இன்காம் ("Peter Ingham ", பிறப்பு: செப்டம்பர் 28 1956 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979-1981 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் இன்காம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. ரெக்கி இங்கிள் ரெக்கி இங்கிள் ("Reggie Ingle ", பிறப்பு: நவம்பர் 5 1903, இறப்பு: திசம்பர் 19 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 345 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1923-1939 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரெக்கி இங்கிள் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. கொலின் இங்கிள்பை-மெக்கன்சி கொலின் இங்கிள்பை-மெக்கன்சி ("Colin Ingleby-Mackenzie ", பிறப்பு: செப்டம்பர் 15 1933, இறப்பு: மார்ச்சு 9 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 343 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951-1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கொலின் இங்கிள்பை-மெக்கன்சி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. அல்பிரெட் இங்கிளிஸ் அல்பிரெட் இங்கிளிஸ் ("Alfred Inglis ", பிறப்பு: செப்டம்பர் 24 1856, இறப்பு: சூன் 17 1919) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1885-1887 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அல்பிரெட் இங்கிளிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. ஜான் இங்கிளிஸ் ஜான் இங்கிளிஸ் ("John Inglis ", பிறப்பு: அக்டோபர் 19 1979 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2000 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜான் இங்கிளிஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. ரசல் இங்கிளிஸ் ரசல் இங்கிளிஸ் ("Russell Inglis ", பிறப்பு: சூன் 13 1936, இறப்பு: ஏப்ரல் 28 1982 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1965-1969 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரசல் இங்கிளிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. லீ இன்கிராம் லீ இன்கிராம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. தோமஸ் இன்கிராம் தோமஸ் இன்கிராம் ("Thomas Ingram ", 18ம் நூற்றாண்டு பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தோமஸ் இன்கிராம் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. ஜான் ஐசாக் ஜான் ஐசாக் (" John Isaac ", பிறப்பு: பிப்ரவரி 14 1880 , இறப்பு: மே 9 1915 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1905/06-1908 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் ஐசாக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012. பீட்டா துகள் பீட்டா துகள்கள் ("Beta particle") என்பது கதிரியக்க உட்கருக்களிலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட உயர் வேக எதிர்மின்னிகள் அல்லது பொசித்திரன்கள் ஆகும். உமிழப்படும் பீட்டா துகள்கள் அயனாக்கற்கதிர்ப்பின் வடிவத்தில் உள்ளன, இவை பீட்டா கதிர்கள் என அறியப்படுகிறது. பீட்டா துகள்கள் உற்பத்தி பீட்டா சிதைவு எனப்படுகிறது. இது கிரேக்க எழுத்து பீட்டா (β) மூலம் குறிப்பிடப்படுகிறது. இரு பீட்டா சிதைவு வடிவங்களான β மற்றும் β முறையே எதிர்மின்னி மற்றும் பொசித்திரனில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து வெளிப்படும் β துகள்கள் பீட்டாகதிர்கள் என்றும் அறியப்படுகின்றன. இவ்வினை பொதுவாக அணுஎண் 79 விட குறைந்த தனிமங்களிலேயே காணப்படுகின்றன. இங்கு சேய் தனிமத்தின் அணுநிறை மாறுவதில்லை, ஆனால் அதன் அணுஎண் β ஆனால் ஒன்று கூடவும் ,β என்றால் ஒன்று குறையவும் செய்கின்றன.ஒருகதிர் தனிமத்திலிருந்து வெளிப்படும் β துகள்கள் ஒரே ஆற்றல் கொண்டு இருப்பதில்லை. இவைகளின் சராசரி ஆற்றல்,உச்ச ஆற்றலின் 1/3 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. β துகள்களின் திசைவேகம் ஒளியின் வேகத்தில் 90% முதல் 95% வரையிலும் உள்ளன. வளியில் அவைகளின் செல்தொலைவு சில மீட்டர் வரையிலும் இருக்கும். α துகள்களைப் போல் இத்துகள்களும் அயனியாக்கும் பண்புடையன, ஆனால் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவைகளின் நிறை குறைவாக இருப்பதால் அவைகள் எளிதில் விலக்கமுறுகின்றன. அவைகளின் செல்தொலைவு ,ஊடகத்தின் அடர்த்தியினையும் துகள்களின் ஆற்றலையும் பொறுத்திருக்கிறது. மருத்துவத்தில் பயன் படும் சில β உமிழ்வான்கள். நிலையற்ற அணுக்கருவின், மிகுதியான நொதுமின்னிகள் βசிதைவுக்கு உள்ளாகிறது. அங்கே ஒரு நொதுமின்னியானது நேர்மின்னி, எதிர்மின்னி மற்றும் ஒரு எதிர்மின்னி-வகை எதிர்நியூட்ரினோவாக (நியூட்ரினோவின் எதிர்த் துகள்) மாற்றப்படுகிறது. நிலையற்ற அணுக்கருவின், மிகுதியான நேர்மின்னிகள் β சிதைவுக்கு உள்ளாகிறது. அங்கே ஒரு நேர்மின்னியானது, நொதுமின்னி, பொசித்திரன் மற்றும் ஒரு எதிர்மின்னி-வகை நியூட்ரினோவாக மாற்றப்படுகிறது. எஸ். எம். அப்துல் மஜீத் எஸ். எம். அப்துல் மஜீத் சாஹிப் ("S. M. Abdul Majid", பிறப்பு: ஜனவரி 12, 1924) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத்திற்க்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சங்கரநாயனார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தற்பொழுது சங்கரன் கோவில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் இவரது சொந்த ஊர். ஆசிரியராகப் பணியாற்றியவர். கனேடியன் ராயல் வங்கி கனேடியன் ராயல் வங்கி (Royal Bank of Canada) வைப்பு நிதி, சொத்துமதிப்பு மற்றும் சந்தை முதலீட்டு அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது 80,100 பணியாளர்களுடன் சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய நிதி நிறுவனமாகும். இது கனடாவில் ரொறன்ரோ நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகின்றது. இது கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் 1864ல் நிறுவப்பட்டது. இவ்வங்கி கனடாவில் 1209 கிளைகளும், அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள சுமார் ஆறு மாகாணங்களில் 439 கிளைகளுடனும் செயல்படுகின்றது. அறிவியல் கோட்பாடு நவீன அறிவியலில், அறிவியல் கோட்பாடு ("scientific theory") என்பது அறிவியல் முறைகளால் தொடர்ச்சியான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, கவனிப்புக்களாலும், பரிசோதனைகளாலும் சரியெனக் காணப்பட்ட, இயற்கை உலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும். பெரும்பாலான அறிவியல் சார்ந்த அறிவுகளைப் போல அறிவியல் கோட்பாடானது பல்வேறு தோற்றப்பாடுகளின் அடிப்படையில் பொதுமை காண முயல்வது. அதேவேளை, எதிர்வு கூறுவதற்கான ஆற்றலையும், விளக்கம் தருவதற்கான வல்லமையையும் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டது. யாராவது இந்த அறிவியல் கோட்பாட்டில் முழுவதுமோ அல்லது பகுதியோ தவறாக கண்டால், அந்த தேற்றம் மாற்றப்படுகிறது, அல்லது முழுவதும் தூக்கி எறியப்படுகிறது. பல மாற்றங்களை கண்டது என்று ஒரு அறிவியல் கோட்பாட்டைக் காட்டவேண்டுமெனில், ஒரு எடுத்துக்காட்டாக நோய்க் கிருமி கோட்பாட்டினை குறிக்கலாம். பண்டைய காலங்களில், நோய்கள் கடவுள்களின் காரணமாக, அல்லது சாபங்கள் , அல்லது முறையற்ற நடவடிக்கை மூலம் வருகின்றன என்று மக்கள் நம்பினர். கிருமிகள் பார்க்க மிகவும் சிறியதாக இருப்பதால், கிருமிகள், அறியப்படாததாக இருந்தன. நுண்ணோக்கி கண்டுபிடித்த பின்னால், கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதனால், நோய் மூலமாக கிருமி வருகிறது என்ற கோட்பாடு முன்மொழியப்பட்டது. நோய் கிருமி கோட்பாட்டின் காரணமாக, பல நோய்கள் இப்போது குணப்படுத்த முடியும். இருப்பினும், சில நோய்கள் கிருமிகள் இல்லாமலேயே உருவாவதால், நோய் கிருமி கோட்பாடு திருத்தத்துக்கு உள்ளானது.. காய்ச்சல் மற்றும் ஸ்கர்வி நோய் கிருமிகளால் உருவாவதில்லை, உருவாவதில்லை. மோசமான ஊட்டச்சத்து மற்றும் வைரசுக்களாலோ ஏற்படும் என்று தெரிகிறது. விஞ்ஞானிகள் நோய் கிருமி கோட்பாட்டினை மாற்றி, "சில நோய் கிருமிகளால் ஏற்படுகின்றன." என்று கூறுவார்கள். ஒரு கோட்பாடு அறிவியல் கோட்பாடாக அறியப்பட வேண்டுமெனில், அது ஒரு பெரிய எண்ணிக்கையிலான சோதனைகளில், பல்வேறு இடங்களில், வெவ்வேறு விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மற்றும் சோதனை செய்யும் ஒவ்வொரு முறையும் அது நிரூபிக்கப்பட வேண்டும். இது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் பெரும்பாலும் கணிதம் மூலமாக. இது மற்ற அறிவியல் கோட்பாடுகள் அனைத்துடனும் பொருந்த வேண்டும். அறிவியல் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , நிலவியல் , மற்றும் வானியல் அறிவியல் முக்கிய கிளைகள் சில இருக்கின்றன. அறிவியலின் ஒரு கிளையில் இருக்கும் ஒரு அறிவியல் கோட்பாடு, அறிவியலின் மற்ற கிளைகள் அனைத்திலுமே உண்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக, அனைத்து பொருட்களும் அணுக்களாலேயே உருவாகின்றன என்ற விஷயத்தை இயற்பியல் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் வேதியியலில் இருக்கும் ரசாயன பொருட்கள், உயிரியல் காணப்படும் உயிர்வாழும் திசு, பாறைகள் நிலவியல் ஆய்வு, மற்றும் வானியல் ஆய்வு கிரகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அணுக்களாலேயே செய்யப்பட்டது. அணு கோட்பாடு அறிவியலின் ஒவ்வொரு பகுதியிலும் செல்லும். ஒரு அறிவியல் கோட்பாட்டில் ஒரு விதிவிலக்கு கண்டுபிடிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது, மற்றும் ஒரு விஞ்ஞானி அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கை கண்டுபிடிப்பதன் மூலம் பிரபலமான முடியும். ஐசக் நியூட்டனின் இயக்கவியல் விதிகளுக்கு ஒரு விதிவிலக்கை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார், அதன் மூலம் அவர் பிரபலமானார். பல நூறு ஆண்டுகளாக ஏற்கப்பட்டு இருந்த நியூட்டனின் கோட்பாடு, மாற்றப்பட வேண்டியதாக இருந்தது, அது மாற்றப்பட்டும் விட்டது. இங்கே நவீன அறிவியல் முக்கிய கோட்பாடுகள் சில ஒரு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த கோட்பாடுகள் முறை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டும் விதிவிலக்கு ஏதும் இல்லாமல் இருக்கின்றன. அணு கொள்கை: அனைத்து பொருட்களும் அணுக்களாலேயே உருவாகின்றன. கிழவி விளையாட்டு கிழவி விளையாட்டு என்பது சிறுவர் சிறுமியரோடு கிழவி ஒருத்தி உரையாடுவது போன்ற ஒரு நடிப்பு-விளையாட்டு. சிறுமியரில் ஒருவர் கிழவி போல் தடி ஊன்றிக்கொண்டு நடிப்பார். இவர்களுக்கு இடையே உரையாட்டு நிகழும். (சற்று தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து) கிழவி தடியை உயர்த்திக்கொண்டு அவர்களை அடிக்கச் செல்வது போலவும், சிறுவர் சிறுமியர் அடி படாமல் ஓடுவது போலவும் நடிப்பர். பின் வேறொருவர் கிழவியாக மாறி ஆட்டம் தொடரும். மூத்தோர் சொல்லைப் பினபற்ற வேண்டும் என்று நீதி புகட்டும் விளையாட்டு. பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஆவணக் காப்பகம் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஆவணக் காப்பகம் என்பது சென்னையில் அமைந்துள்ள ஒர் ஒலிக்கோப்பு ஆவணக் காப்பகம் ஆகும். இதை அலிகான் என்பவர் அமைத்து நடத்தி வருகிறார். இந்தப் பாடல்களில் வேண்டியவற்றை கட்டணத்துக்கு வாடிக்கையாளர்கள் இசைத்தட்டில் பெற்றுக் கொள்ளலாம். கிறுகிறு மாம்பழம் (விளையாட்டு) கிறுகிறு மாம்பழம் என்பது சிறுவர் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு மகிழும் ஒரு உல்லாச விளையாட்டு. ஒவ்வொருவரும் தன் கைகளைத் தோளுக்கு நேரே பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு சுழல்வர். கிறுகிறு எனத் தலையைச் சுற்றுவது போன்று வரும் உணர்ச்சி இன்பத்தில் திளைப்பது ஒருவகைச் சுவை. சுற்றும்போது கிறு கிறு என வந்தால் உட்கார்ந்து இன்பம் காண்பர். சுற்றும்போது பாடும் பாடல் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே சுழல்வர் தட்சிண கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியம் தட்சிண கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியம் (Dakshina Kannada Rationalist Association (DKRA)) என்பது மங்களூர், கர்நாடகத்தில் அறியப்பெற்ற பகுத்தறிவாளர், ஐயுறவியல், இறைமறுப்பு அமைப்பு ஆகும். இதன் தலைவர் நரேந்திர நாயக் ஆவார். இந்நிறுவத்தினர் சாமியார்களாக இருப்பவர்கள் செய்யும் வித்தைகளில் உள்ள பொய்மையை அம்பலப்படுத்துவதுகின்றது. இந்நிறுவனத்தாரால் கருதப்படும் மூடநம்பிக்கைகளுக்கும், ஆபத்தான சமய நம்பிக்கைகளுக்கும் எதிராக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. கனடாவில் சமயமின்மை உலக நாடுகளில் வெளிப்படையாக சமயமின்மை கூடிய மக்கள் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. சமயம் இன்மை என்னும் போது இறைமறுப்பாளர்கள், அறியவியலாமைக் கொள்கை கொண்டவர்கள், மனிதநோயர்கள், சமயத் தொடர்பு இல்லாதவர்கள் அடங்கும். 2011 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 23.9% ஆனோர் சமய நம்பிக்கை இல்லாதாவர்கள். இந்த விழுக்காடு பத்து ஆண்டுகளில் சுமார் 7.7 % உயர்ந்துள்ளது. 2001 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 16.2% மக்கள் சமய நம்பிக்கைகள் அற்றவர்கள். மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது. இது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். மலேசிய தேசியத் தேர்தல்கள் சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல் 2004, 2004-இல் நடைபெற்றது. மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக, சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப் பட்டது. மலேசியப் பொதுத்தேர்தல் முடிவுகள் 2008 !style="background-color:#E9E9E9" align=left valign=top| !style="background-color:#E9E9E9" align=right|Votes !style="background-color:#E9E9E9" align=right|% of vote !style="background-color:#E9E9E9" align=right|Seats !style="background-color:#E9E9E9" align=right|% of seats !style="background-color:#E9E9E9" align=right|+/– சான்று: Sin Chew Jit Poh, Malaysia மலேசியப் பொதுத் தேர்தல், 2013 குச்சி விளையாட்டு குச்சி விளையாட்டு என்பது எல்லா வயதினரும் விளையாடும் கைத்திறன் விளையாட்டு. விரல் நடுக்கம் இன்மையையும், பொறுமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டு. விளக்குமாற்றில் உள்ள சீவங்குச்சிகள் சுமார் நான்கு அங்குல அளவுக்கு உட்பட்டனவாக ஒரே அளவில் 10 குச்சிகளும், அவற்றுடன் அவற்றைவிடச் சற்றே நீளமுள்ள குச்சி ஒன்றும், ஆக 11 குச்சிகள் இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும். 11 குச்சியையும் ஒருசேரப் பிடித்து நிலத்தில் ஒரே வீச்சில் பரவலாக எறியவேண்டும். உள்ளங்கையால் உருட்டியும் போடலாம். சீழே விழுந்துகிடக்கும் குச்சிகளை பிற எந்தக் குச்சியும் அலுங்காவண்ணம் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். அப்படி எடுத்த குச்சிகளின் எண்ணிக்கை வெற்றிப்பள்ளிகளின் பழமாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் எடுக்கும்மோது ஏதாவது ஒரு குச்சி அலுங்கினால் ஆட்டம் கைமாறும். சீவங்குச்சிகளுக்குப் பதிலாகத் தீக்குச்சிகளும் பயன்படுத்தப்படும். அலுங்காமல் எடுத்த ஒவ்வொரு குச்சிக்கும் ஒரு வெற்றிப்புள்ளி. பெரிய குச்சி எடுத்தால் 10 புள்ளி. இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டுப் புள்ளிகள் கூட்டிக்கொள்ளப்படும். அதிக புள்ளிகள் பெற்றவர் வெற்றி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012 2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012, நவம்பர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது அமெரிக்காவின் 57வது தேர்தலாகும். இத்தேர்தல் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவர்களே துணை குடியரசுத் தலைவரையும் 2012, திசம்பர் 17 அன்று தேர்ந்தெடுப்பர். தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, இரண்டாம் முறையாக மக்களாட்சி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ராம்னி அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரு தரப்பிற்கும் மிக இறுக்கமான நிலையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறும் என மிக முக்கியமான ஊடகங்கள் தமது கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தன. நவம்பர் 7, அதிகாலை 1:00 மணியளவில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிகக் குறைந்த 270 வாக்காளர் குழுக்களை பராக் ஒபாமா பெற்றதை அடுத்து, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி தமது தோல்வியை ஒப்புக் கொண்டார். 2012 குடியரசுத் தலைவர் தேர்தலுடன் ஐக்கிய அமெரிக்க செனட் தேர்தலும், பல்வேறு மாகாணத் தேர்தல்களும் நடைபெற்றன. நா. ஆண்டியப்பன் நா. ஆண்டியப்பன் (பிறப்பு: செப்டம்பர் 19,1947) இவர் ஒரு சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் இராங்கியம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியைத் தனது ஊரிலேயே கற்றுப் பின்பு, 9வது வயதில் 1956ல் இவரது தந்தையாரால் மலாயாவிலுள்ள தெலுக் ஆன்சன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆங்கிலோ - சீன ஆங்கிலப் பள்ளியில் மீண்டும் தனது கல்வியை முதல் வகுப்புலிருந்தே ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து செயிண்ட் அந்தோணி பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்த இவர் பிறகு தமிழகம் வந்து கல்வியைத் தொடர்ந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தாவரவியலில் இளநிலைப் பட்டமும் பெற்றார். மலேசியாவுக்கு திரும்பிய இவர் சில ஆண்டுகள் வர்த்தகராகவும், பின்பு 1976ல் கோலாலம்பூரில் தமிழ் மலர் நாளிதழில் இணைந்து அதன் துணை நிர்வாக ஆசிரியராகவும், 1983ல் மீண்டும் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள ஒலிபரப்புக் கழகத்தின் தமிழ்ச் செய்திப் பிரிவில் துணை நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 1993ல் உறுப்பினராகவும், 1995ல் அதன் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தான் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துப் பணியில் ஈடுபாடுகாட்டிவந்த இவர் தமக்குத் தமிழ் ஆர்வத்தையூட்டிய பெருமை மதுரை தியாகராசர் கல்லூரியைச் சாரும் எனக் கூறுகிறார். இவரின் முதல் சிறுகதை தமிழ் மலரில் 1967ல் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களிப்பு நல்கியுள்ளார். பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாஞ்சாலி சபதத்தை நாடகமாக்கி தமிழ் மலரில் தொடராக எழுதிவந்தார். இலக்கிய வேந்தன் பட்டம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெப்ரவரி 8, 2012 முதல் மார்ச்சு 3, 2012 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கிறது. 112மில்லியன் வாக்காளர்களுடன் உலகிலேயே அதிக வாக்களர்களைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. இந்த எண்ணிக்கை மொத்த அமெரிக்காவின் பாதி வாக்காளர்களுக்கு சமமானது. இம்மாநில சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிக மாநிலங்களவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. 2007ல் இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால் இத்தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி பதவியில் உள்ளார். இக்கட்சி கடந்த தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த்து குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி பிப்ரவரி 4, 8,11,15, 19, 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவு மார்ச் 6 அன்று வெளியிடப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக அக்கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்பியதை காட்டியுள்ளது. மக்களின் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் () புதிய வரலாறு படைத்தது.: 2007ல் வாக்காளர் ஓட்டளிப்பு 46 சதவீதத்திலிருந்து இத்தேர்தலில் 60 சதவீதமானது - இது உபியில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிகமாகும்.. தொங்கும் சட்டமன்றங்கள் உபியில் வழமையானது, எனினும் கடந்த இரண்டு தேர்தல்களும் தனிகட்சியை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வித்துட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தல்களில் பெற்ற 97 இருந்து தற்போது 224 தொகுதிகளை வெற்றிகொண்டுள்ளன. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206லிருந்து 80 தொகுகளையே வென்றுள்ளது.. ராகுல் காந்தி தலைமையில் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் பாரதிய ஜனதாவிற்குப் பின் நான்காவது இடத்தையே அடையமுடிந்தது. டி. என். அனந்தநாயகி டி. என். அனந்தநாயகி ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் , மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971 - தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931 இல் பிறந்த அனந்தநாயகி, பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவரது கணவர் பெயர் டி.ராஜ்மோகன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்; இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தவர். அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகள் அன்வார் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வழக்காகும். மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 ல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின் 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார். ஜூன் 29, 2008ல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு அரசியற் காரணங்களால், பிரதமர் மற்றும்அவரது மனைவியின் தூண்டுதலில் பேரில் புனையப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறிவருகிறார். எனினும் இதனைக் காவல்துறை மறுத்துள்ளது. தக்க ஆதாரங்களுடனேயே இக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு சனவரி 9, 2012 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டிஎன்ஏ சான்று நம்பக்கூடியதாக இல்லை என்று கூறி விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்றிருந்தாலும் தற்பொழுது இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் அன்வார் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறினார். இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றதில் வழக்கு நடைபெற்றது. அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பபட்ட மேல் முறையீட்டிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுங்கை புளு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா (Corrections Corporation of America (NYSE: CXW) (CCA)) என்பது ஐக்கிய அமெரிக்காவில் சிறைகளை நடத்தும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும். பல சிறைகளை இது சொந்தமாக வைத்திருக்கிறது, பிறவற்றை ஒப்பந்த அடிப்படையில் இது நடத்துகிறது. சுமார் 60 வரையான சிறைகளை இது நடத்துகிறது. நபர்களை சிறை வைப்பதே இவர்களின் வணிக மாதிரியாக இருப்பதால், அதிக நபர்களை சிறை வைக்கும் சட்டங்களை இவர்கள் ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். போதைக்கு எதிரான போர் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்கள் மூலம் பெரும்பான்மையானோர் கைதிகள் ஆகிறார்கள். இந்த வணிக மாதிரி உலகின் 25% சிறைக் கைதிகள் ஐக்கிய அமெரிக்காவில் இருக்க ஒரு காரணம் ஆகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. சட்டமீறிய குடிவந்தவர்களை சிறையில் வைத்திருப்பதும் இவர்களுக்கு இலாபம் ஈட்டுவதாகும். ஆகையால் அத்தகைய சட்டங்களுக்கும் இவர்கள் சார்பாகப் பரப்புரை செய்கிறார்கள். சனவரி 2012 சனவரி 2012 ("January 2012"), ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் 2012 சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 2012 பெப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. முகமது பாரூக் (எழுத்தாளர்) முகமது பாரூக் (பிறப்பு: சூலை 13 1948) இவர் சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு தோப்புத்துறையில் பிறந்த இவர் ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வேதாரய்ம் இடைநிலைப் பள்ளியிலும் தனது கல்வியைத் கற்றுமுடித்தார். உணவகத்தில் பணிபுரியும் இவருக்கு தமிழ், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு புலமையுண்டு. 1965ல் எழுதத் தொடங்கிய இவரது கன்னியாக்கம் திரையொளியில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தார். சென் ஜான்ஸ் ஆம்புலன்சில் ஐந்தாண்டு சேவையாற்றியுள்ள இவர் தோப்புத்துறை முஸ்லிம் சங்க செயற்குழு உறுப்பினராகவும், ஜாமியாவின் தொண்டூழியராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (இசுட்டான் வாவ்ரின்கா) ("Stanislas Wawrinka", லோசானில் பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்திற்கு ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக ஜான் மக்கன்ரோ கருதுகிறார். ஆசுத்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், யூ. எசு. ஓப்பன் என மூன்று டென்னிசு பெருவெற்றி தொடரை (கிராண்டு சிலாம்) கைப்பற்றியுள்ளார். 2014 பிரெஞ்சு ஓப்பனுக்கு முன் தன் பெயரை இசுடேன் வாவ்ரின்கா என்று மாற்றிக்கொள்ள தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர்களின் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. பெயர் மாற்றம் தொடர்பாகவும் சுருக்க பெயர் தொடர்பாகவும் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டுமிட்டுள்ளார் சூன் 7,2015 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6-4 4-6 3-6 4-6 என்ற கணக்கில் வென்றார். 2016ஆம் ஆண்டு யூ. எசு. ஓப்பன் தொடரில் நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6–7(1–7), 6–4, 7–5, 6–3 என்ற புள்ளி கணக்கில் வாகை சூடினார். தமிழக தொல்லியல் களங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது. அவைகளின் விவரம்: மகொடோ கோபயாஷி மகொடோ கோபயாஷி (Makoto Kobayashi, பிறப்பு ; 7 ஏப்ரல் 1944) ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 2008ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். கோபயாஷி பிறந்தது மற்றும் கல்வி பயின்றது ஜப்பானில் உள்ள நகோயா நகரத்தில். இவர் 1975 ல் சசிகோ ஏனோமொடோ என்பவரை மணந்தார்; இவர்களுக்கு ஜூனிசிரோ என்ற ஒரு மகன் இருக்கிறார். கோபயாஷி முதல் மனைவி இறந்த பிறகு, 1990 இல் எமிகோ நகயமா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் ஒரு மகள் -யூகா- இருக்கிறார். தமிழக முத்திரைக் காசுகள் தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. 2ஆம் நூற்றாண்டினவையாக இருக்கின்றன. இவை கிடைக்கப்பட்ட இடம், இவற்றின் காலம் கொண்டு நடன காசிநாதன் என்பவர் ஒரு அட்டவனையும் வெளியிட்டுள்ளார். மேலும் சில இடங்களில் கிடைத்த நாணயங்கள் பற்றி சில பேர் குறிப்புகள் தந்துளனர். முதலில் இதைப்போன்ற முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்திய வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். பேசின்பிரிட்ஜ் (சட்டமன்றத் தொகுதி) பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சென்னை மாநகராட்சி வார்டு எண் : பிரம்மதேசம் பிரம்மதேசம் பெயரிலுள்ள கட்டுரைகள் மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் ("Central Marine Fisheries Research Institute" - CMFRI) இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1967 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் தற்போது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தில் இயங்கிவருகிறது. இது 1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டதாகும். இது கடல் மீன் வள ஆய்வில் தனக்கென பல வளர்ச்சிகளை உலகளவில் எட்டியுள்ளது. இந்நிறுவனம் தனக்கென தலையாயக் கொள்கைகளை இந்திய வேளாணமை ஆய்வுக் கழகத்தின் ஒப்புதலின் படி செயற்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் தனக்கென வெவ்வேறு பகுப்புகளை ஏற்படுத்தி வெவ்வேறு இடங்களில் செயற்படுத்தி வருகிறது. அவை நான்கு பகுப்புகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை மேற்மொள்ளும் பணிகள் குறித்து அதன் செயற்பாடு விரிவாக்கம், அதன் ஆளுமை ஆகியவற்றைக் கொண்டு வட்டார மையம், ஆய்வு மையம், களப்பணிமையம், படிப்பினை மையம் என வகுத்து நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தனக்கென மூன்று வட்டார மையங்களை நடத்தி வருகிறது. அவை மண்டபம் - தமிழ் நாடு, விசாகப்பட்டினம் - ஆந்திர மாநிலம், வெராவல் - குசராத் மாநிலம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள் ஆய்வு, வளர்ச்சி மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை முறையே செயற்படுத்தி வருகிறது. மேற்குக்கடல் மற்றும் கிழக்குக்கடல் ஆகியவற்றில் மீன் வளம் குறித்து கண்காணிக்க ஏழாய்வு மையங்களை நாடு முழுவதும் மங்களூர், கோழிக்கோடு, மும்பை, விழிஞ்சம், கார்வார், தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகியவற்றில் செயல்படுத்திவருகிறது. நாடு முழுவது 14 களப்பணி மையங்கள் உள்ளன. அவை கன்னியாக்குமரி, ஓங்கோல், அலிபாக், பட்டுக்கோட்டை, கொடாய், சிரிக்காகுளம், கோவா, நர்சாபூர், நாகப்பட்டினம், சாம்நகர், பாட்கல், பூரி, கொல்லம், ரத்னகிரி, கடலூர் ஆகியன. கிரிசி விக்யான் கேந்தரா என்றப் பெயரில் ஞாரக்கல், கொச்சின் என்னும் இடத்தில் நடத்தி வருகிறது. உயர்திணை உயர்திணை () என்பது தமிழ் இலக்கணத்தில் தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும். உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை "விரவுப்பெயர்கள்" என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களை காணலாம். டேவிட் (திரைப்படம்) டேவிட் 2013ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை பெஜாய் நம்பியார் இயக்க விக்ரம் மற்றும் ஜீவா முன்னணி கதா பாத்திரத்திங்களில் நடித்துள்ளனர். டேல் இனிஃப் டேல் இனிஃப் ("Dale Iniff ", பிறப்பு: செப்டம்பர் 18 1977 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1999 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டேல் இனிஃப் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. கெவின் இன்னெஸ் கெவின் இன்னெஸ் ("Kevin Innes ", பிறப்பு: செப்டம்பர் 24 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 86 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994-2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கெவின் இன்னெஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஜான் இன்ஸ் ஜான் இன்ஸ் (" John Inns ", பிறப்பு: மார்ச்சு 30 1876, இறப்பு: சூன் 14 1905 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898-1904 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் இன்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. சாமி இக்பால் சாமி இக்பால் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. சஹித் இக்பால் சஹித் இக்பால் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. அல்பேர்ட் ஐயர்மோங்கர் அல்பேர்ட் ஐயர்மோங்கர் ("Albert Iremonger ", பிறப்பு: சூன் 15 1884, இறப்பு: மார்ச்சு 9 1958) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1906-1910 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அல்பேர்ட் ஐயர்மோங்கர் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஆத்தர் ஐசாக் ஆத்தர் ஐசாக் ("Arthur Isaac ", பிறப்பு: அக்டோபர் 4 1873, இறப்பு: சூன் 7 1916) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1950/51 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆத்தர் ஐசாக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஹெர்பேர்ட் ஐசாக் ஹெர்பேர்ட் ஐசாக் ("Herbert Isaac ", பிறப்பு: திசம்பர் 11 1899, இறப்பு: ஏப்ரல் 11 1962), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெர்பேர்ட் ஐசாக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. எட்வார்ட் நைட் எட்வார்ட் நைட் ("Edward Knight ", பிறப்பு: மே 10 1794, இறப்பு: நவம்பர் 5 1879), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1822-1828 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எட்வார்ட் நைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஜார்ஜ் டி. நைட் ஜார்ஜ் டி. நைட் ("George T. Knight ", பிறப்பு: நவம்பர் 22 1795, இறப்பு: ஆகத்து 25 1867), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1820-1837 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் டி. நைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. நௌல்ஸ் (மிடில்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்) நௌல்ஸ் "Knowles (Middlesex", பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1797 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நௌல்ஸ் (மிடில்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஹென்ரி நைட் ஹென்ரி நைட் "Henry Knight ", பிறப்பு: 1796, இறப்பு: மே 31 1843), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1827 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஹென்ரி நைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. மார்டின் நைட் மார்டின் நைட் ("Martin Knight ", பிறப்பு: அக்டோபர் 5 1984 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2002 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மார்டின் நைட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. டொம் ஜென்னிங்ஸ் டொம் ஜென்னிங்ஸ் ("Tom Jennings ", பிறப்பு: நவம்பர் 3 1896 , இறப்பு: செப்டம்பர் 7 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921-1924 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொம் ஜென்னிங்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஹிடேகி யுகாவா ஹிடேகி யுகாவா(Hideki Yukawa, 23 ஜனவரி 1907 – 8 செப்டம்பர் 1981) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர். அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் , எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற அறிஞர். ஹிடேகி 1907 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை 'டகுஜி ஒகாவா' என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர் கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932-ல் இவர் 'சுமிகோ' என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935-ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937-ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938-ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.1947-லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948-ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கியோட்டோ என்ற ஊரில் காலமானார். அறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ். யான்கோ டிப்சாரெவிச் யான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார். ஆசிரியத் துறை ஆசிரியத் துறை என்பது தமிழ் பாவினங்களில் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்றாகும். இது நான்கடியில் அமையும்; முதலடி தவிரப் பிற அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும். இடையே வரும் அடிகள் இடைமடக்காக ( வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல்) அமையும். நான்கடியாய் இடையிடை குறைந்து வருவதும் உண்டு. நான்கடியாய் இடை இடை குறைந்து, இடைமடக்காக வருவதும் உண்டு.அனைத்துவகை சீர்களும் அடிகளும் இடம்பெறும். ஆசிரியத் துறையில் எவ்வகைச் சீரும் வரலாம் ; எவ்வகை அடியும் வரலாம். மிக நீண்ட கழி நெடிலடிகள் கூட வரலாம். ஈற்றயலடி அளவு குறைந்து வருவது ஆசிரிய நேர்த்துறை என்றும் இடையிடை குறைந்து வருவது ஆசிரிய இணைக்குறள் துறை என்றும் அழைக்கப்படும். " போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தீதுறு தீவினை இலரே " "வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோ னன்றேர்" இப்பாடல், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, இரண்டாமடியே இடைமடக்காகி மூன்றாம் அடியாக வந்துள்ளது, ஆகவே இது ஆசிரியத்துறை. இதனை ஆசிரிய நேர்த்துறை எனவும் கூறலாம் "இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் அரங்கு மணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்" இப்பாடல் நான்கடியாய் இடையிடை குறைந்து (முதலடியும், மூன்றாமடியும் ) வந்திருக்கிறது. இரண்டாமடியே மடங்கி மூன்றாமடியாய் வந்துள்ளது. ஆகவே இது ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும். கலித்துறை கலித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது பல்வேறு ஓசைகள் உடையது. நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும். அவை நான்கும் எதுகை கொண்டிருக்கும். ஆழ்வார் பாடல்கள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற படைப்புகளில் இப்பாவினம் மிகுந்து காணப்படுகிறது. கட்டளைக் கலித்துறை இதன் வகைகளில் ஒன்று. கலி நிலைத் துறை என இரண்டு வகைகள் உண்டு. நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே... துப்பாக்கி (திரைப்படம்) "துப்பாக்கி" என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் டிசம்பர் 5,2011 அன்று தொடங்கி 35 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி 60 சண்டைப்பயிற்சி வீரர்களுடன் 7 காமிராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டது. இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார். தங்களின் கள்ள துப்பாக்கி என்ற படத்தின் தலைப்பு போல் இருப்பதால் துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த தடைவிதிக்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார். இத்திரைப்படம் இசுலாமியர்களை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி சில இசுலாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. அதனைத் தொடர்ந்து விஜய் அரசிடம் திரைப்படத்தைப் பாதுகாக்கக் கூறி மனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் சர்ச்சைக்குறிய காட்சிகளுக்காக மன்னிப்புக் கோரிய பிறகு அக்காட்சிகள், படத்தில் இருந்து நீக்கப்பட்டன. இத்தவறுக்கு பரிகாரமாக விஜய் ஒரு படத்தில் இசுலாமியராக நடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அறிவித்துள்ளார். வஞ்சித்துறை வஞ்சித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. நான்கு குறளடி (இரு சீர் அடிகள்) கொண்டு தனித்து அமையும். இது பல்வேறு ஒசை அமைப்புகளில் அமையும். மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய். உள்ளம் உரைசெயல் உள்ளஇம் மூன்றையும் உள்ளிக் கெடுத்திறை உள்ளில் ஒடுங்கே குச்சிக்கல் குச்சிக்கல் என்பது சிறுவர்களால் தெருவில் விளையாடப்படும். ஒரு சதுரமும் அதற்குள் ஒரு வட்டமும் போடுவர். வட்டத்துக்குள் 4 கற்கள் வைத்திருப்பர். 5 பேர் விளையாடுவர். விளையாடுவோர் எல்லாரும் சுமார் ஐந்தடி நீளமுள்ள குச்சி ஒன்று வைத்திருப்பர். ஏதோ ஒரு முறையைப் பின்பற்றிப் பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பட்டவர் தன் இரண்டு கால்களையும் பரப்பிச் சதுரத்தின் எதிர் எதிர் முனைகளில் வைத்துக்கொண்டு நிற்பார். அவர் தன் குச்சியைப் பிறர் தட்டுவதற்கு வசதியாகத் தன் தலைக்கு மேல் உயர்த்தி விரல் கவட்டையில் பிடித்துக்கொண்டிருப்பார். பழமேறியவரில் ஒருவர் தன் குச்சியால் தூக்கி எறிவார். பட்டவர் தன் காலடி வட்டத்துக்குள் இருக்கும் கற்களை எடுத்துச் சதுரத்தின் 4 முனைகளிலும் வைத்துவிட்டு ஓடி மற்றவர்களில் ஒருவரைத் தொடவேண்டும். பிறர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடிச் சதுரத்தின் முனைகளில் வைக்கப்பட்டுள்ள கல் ஒன்றில் காலை ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டும். இடையில் தொடப்பட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவராக மாறி விளையாட்டு தொடரும். யாரையும் தொடாவிட்டால் பட்டவர் தன் குச்சி கிடக்கும் இடத்திலிருந்து உத்திக்கட்டம் வரையில் தன் குச்சியை வாயில் கவ்விக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டு வந்து சேர வேண்டும். வாயில் குச்சியுடன் நொண்டி அடித்துகொண்டு பட்டவர் வரும்போது மற்றவர்கள் பாடும் சேர்ந்திசைப் பாடல். சிங்கப்பூர் வான்வழி சிங்கப்பூர் வான்வழி என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான ஏர்பசு எ 380 தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது . வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரின் சங்கி எனும் இடத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். தெற்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களில் இது சிறப்புற செயல்படுகிறது. சிங்கப்பூர் வான்வழி மலாய் வான்வழி என்கிறப் பெயரில் முதலில் துவக்கப்பட்டது. சிங்கப்பூர் கோலாலம்பூர் இடையில் முதல் பறப்புகள் துவக்கப்பட்டன. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததும் சிங்கப்பூர் வான்வழி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1970களில் இந்திய நகரங்களுக்கு பறக்கத் தொடங்கியது. போயிங்-747 ரக வானூர்திகள் அதன் அணிவரிசையில் சேர்க்கப்பட்டன. 1980களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு பறப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போதைய விமானங்களில் அதிக பயணிகள் விமானத்தினை இயக்குவது இதுவே. ஏர்பஸ் ஏ380 இன் முதல் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆவர். இது தனது கிளைநிறுவனங்களுக்கும் தேவையான விமானச் சேவைகளைப் புரிகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிளைநிறுவனமாக சில்க்ஏர் குறைந்த நிறுத்தற் தூரம் கொண்ட இடங்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மற்றொரு கிளை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கார்கோ, சரக்குகளை இடமாற்றும் செய்யும் விமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. டைகர்ஏர் எனும் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிளைநிறுவனமாக ஸ்கூட் குறைந்த கட்டண விமானச் சேவையினைச் செய்கிறது. பயணிகளின் வருமானத்தின் அடிப்படையிலான தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள்ளும், சர்வதேச பயணிகளுக்கான சேவையின் அடிப்படையிலான பட்டியலில் 10 வது இடத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளது. டிசம்பர் 15, 2010 இல் உலகின் இரண்டாவது பெரிய சந்தை முதலீட்டினைக் கொண்ட விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அப்போதைய சந்தை மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர்களின் பெருநிறுவன அடையாளங்களில் சிங்கப்பூர் பெண்ணைக் காட்டுவதனை அடையாளமாகக் கொண்டுள்ளனர். கிரிசுபிளையர்(KrisFlyer) மற்றும் பிபிஎசு கிளப்(PPSClub) என்கிற இரண்டு தொடர் பயணியர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மைல் புள்ளிகள் StarAlliance உறுப்பினர் வான்வழிகள் மற்றும் அறைவிடுதிகளிலிருந்து சேர்க்கப்படுகிறது. "Priority Passenger Service" (PPS) முதல் வகுப்பு (First Class) அல்லது வணிக வகுப்பு (Business Class) பறப்புகளிலிருந்து சேர்க்கப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் ஆறு கண்டங்களில் உள்ள 35 நாடுகளில் தனது இலக்குகளைக் கொண்டுள்ளது. இந்த இலக்குகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதன்மை மையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வலுவான போக்குவரத்துப் பதிவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தங்களது கிளை நிறுவனமான சில்க்ஏர் உதவியுடன் செயல்பட்டு பல சர்வதேச இலக்குகளை சிங்கப்பூருடன் இணைக்கிறது. ‘கங்காரு பாதை’ என்றழைக்கப்படும் பாதையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெரும்பான்மையாக பணியாற்றியுள்ளது. மார்ச் 2008 ன் படி, ஆஸ்திரேலியாவிற்கு உள்ளே மற்றும் வெளியில் இயக்கப்பட்ட, சர்வதேச விமானப் பயணங்களில் 11 சதவீத பயணங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸினை சார்ந்தவை. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் தாராளவாத ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் மூலம் பாங்காங்கில் இருந்து துபாய்க்கு விமானங்களைச் செயல்படுத்தத் தொடங்கியது. கோலா லம்பூர் – சிங்கப்பூர், சிட்னி – மெல்போர்ன், சிங்கப்பூர் – கோலா லம்பூர் மற்றும் சிட்னி – பிரிஸ்பேன் போன்ற வழிப்பாதைகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உயர்தர விழித்தடங்கள் ஆகும். இவை தவிர பிற தேவைகளுக்கென மெல்போர்னில் இருந்து காஃப்ஸ் துறைமுகம் வரையிலும், கிறிஸ்ட்சர்சில் இருந்து வுட்போர்ன் வரையிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தற்போதைய விமானக்குழு(பிப்ரவரி 28, 2015 ன் படி) ஏர்பஸ் ஏ330, ஏர்பஸ் ஏ380 மற்றும் போயிங்க் 777 ஆகிய மூன்று ரக விமானங்களில் உள்ள அகன்ற பாகங்களுடன் கூடிய அனைத்து விமானங்களையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்குகிறது. பிப்ரவரி 28, 2015 ன் படி மொத்தம் 108 விமானங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் உள்ளது. அதிக பழமையில்லாத விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொண்டிருப்பதால், அடிக்கடி இதன் விமானங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உள் விமானச் சேவைகளாக முதல் வகுப்பு அறைகள், பொருளாதார வகுப்புகள், வணிக வகுப்புகள், உயர் மதிப்பு பொருளாதார வகுப்புகள் மற்றும் அறைச்சேவைகளுடன் சேர்த்து உணவுகளையும் அளிக்கின்றனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. இதில் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினர்கள் கிடையாது. அபயன் அபயன் அல்லது அபய (ஆட்சிக்காலம்: கி.மு 474-454) என்பவன் இலங்கையின் முதலாவது அரச மரபில் வந்த மூன்றாவது அரசனாவான். இவன், இவனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட பண்டுவாசுதேவனின் மூத்த மகனாவான். இவனுக்கு ஒன்பது சகோதரரும் உம்மத சித்தா என்னும் சகோதரியும் இருந்தனர். மகாவம்சம் 9ம் அத்தியாயம் அபயனின் வரலாற்றை விவரிக்கிறது. விஜயனின் ஆட்சியின் பின்னர் அவனுக்கு வாரிசு இல்லாமையினால், லாலா நாட்டிற்கு தூதனுப்பி, அங்கிருந்து விஜயனின் சகோதரன் ஒருவனின் மகனான பண்டுவாசுதேவன் என்பவன் இலங்கைக்கு வந்து அரசுரிமையை பொறுப்பேற்கின்றான் என்கிறது மகாவம்சம்,ஆனால் பாண்டுவாசு தேவன் பாண்டியன் என்கிறது தீபவமசம். அவனுக்கு 10 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பெண் குழந்தையின் பெயர் உம்மத சித்திரா. சித்திரா இலங்கையில் பழங்குடி மக்கள் மரபினான ஒருவனுடன் உறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றைப் பெறுகிறாள். அந்தக் குழந்தையே "பண்டுவாசுதேவன்" எனப்படுபவன் ஆவான். இவர்களது தந்தை அரசனாக இருந்த காலத்தில் சோதிடன் ஒருவன், உம்மத சித்தாவுக்குப் பிறக்கும் மகன், அவன் மாமன்மார்களைக் கொல்லுவான் என்று கூறியிருந்தான். இதனால் உம்மத சித்தாவைக் கொல்லுவதென்று அபயவைத் தவிர்ந்த ஏனைய சகோதரர்கள் அவர்களுள் மூத்தவனான திஸ்ஸ என்பவன் தலைமையில் கூடி முடிவு செய்தனர். அபய அதற்கு இணங்காததால் அவளைத் தனிமைப்படுத்திக் காவலில் வைத்திருப்பதென முடிவு செய்யப்பட்டது. அவர்களது உறவினனான இளவரசன் தீககாமினி என்பவனைத் தற்செயலாகக் கண்ட சித்தா தனிமையில் அவனைச் சந்தித்தாள் இதன்மூலம் அவள் கர்ப்பமுற்றாள். இதனைக் கேள்வியுற்ற அபய, தந்தையான பண்டுவாசுதேவனை இணங்கச் செய்து சித்தாவை தீககாமினிக்கு மணம் முடித்து வைத்தான். இதனால் திஸ்ஸவும் ஏனைய சகோதரர்களும் கோபமுற்றிருந்தனர். சித்தாவுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் அவனைக் கொன்று விடுவதாக திஸ்ஸ சூளுரைத்தான். சித்தா ஒரு ஆண் குழந்தையையே பெற்றாள். ஆனாலும் அதனை மறைத்துவிட்டு அதற்குப் பதிலாக இன்னொரு பெண் குழந்தையை அதற்குப் பதிலாக வைத்தாள். மகனை நாட்டின் தென் பகுதிக்கு அனுப்பி அங்கே வளர்க்க ஏற்பாடு செய்திருந்தாள். அவனுக்குத் தனது தந்தையினதும், மூத்த தமையனதும் பெயர்களைச் சேர்த்து பண்டுகாபயன் எனப் பெயரும் வைத்தாள். அபய அரசனாகிச் சில காலத்தின் பின்னர் தமது சகோதரிக்கு ஆண் பிள்ளை பிறந்தது பற்றியும் அவன் நாட்டின் தென்பகுதியில் வளர்வது பற்றியும் திஸ்ஸவும் ஏனைய சகோதரரும் அறிந்து கொண்டனர். அவனைக் கொல்லுவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால், சித்தாவுக்கு உறுதுணையாக இருந்த அபயவைப் பதவியில் இருந்து அகற்றித் திஸ்ஸ அரசனானான். இந்த அபயனின் வரலாறு தொடர்பான ஒரு வரலாற்று ஆவணத் திரைபடம், அபயன் எனும் பெயரில் சிங்கள மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆல்க்கைன் ஆல்க்கைன் "(Alkyne)" என்பது கரிம வேதியியலில் குறைந்தபட்சம் ஒரு கார்பன்-கார்பன் முப்பிணைப்பையாவது கொண்டுள்ள நிறைவுறாத ஐதரோகார்பன்களைக் குறிக்கும் . வேதி வினைக்குழு எதுவும் பிணைக்கப்படாமல் ஒரே ஒரு முப்பிணைப்பை மட்டும் பெற்று. ஒத்தவரிசை சேர்மங்களாக உருவாகும் எளிய வளையமில்லா ஆல்க்கைன்கள் பொதுவாக CnH2n−2 என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். ஐயுபிஏசி முறையில் எத்தீன் என்று அழைக்கப்படும் C2H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அசிட்டலீன் என்று ஒரு சேர்மம் காணப்பட்டாலும் பாரம்பரியமாக ஆல்க்கைன்கள் அசிட்டலீன்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன.மற்ற ஐதரோகார்பன்களைப் போலவே, ஆல்கைன்கள் பொதுவாக நீர் விலக்கிகள் ஆகும். ஆனால் அவை மிகவும் தீவிரமாக வினைபுரிகின்றன. முப்பிணைப்புக் கொண்ட கார்பனுடன் இணைக்கப்பட்ட ஐதரசனைக் கொண்டிருப்பதால் அசிட்டிலீன் மற்ரும் பிற ஆல்க்கைன்களில் உள்ள ஐதரசன் அமிலப் பண்பைப் பெற்றுள்ளது. எனவே ஆல்கேன்கள் மற்ரும் ஆல்க்கீன்கள் போல அல்லாமல் இவை அமிலங்கள் போலச் செயல்படுகின்றன. ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஆல்க்கைன்கள் மிகவும் நிறைவுறா தன்மையைக் கொண்டுள்ளன. எனவே இவற்றுடன் இரண்டு சம அளவு புரோமின் அணுக்கள் சேரமுடியும். ஆல்க்கீன்களுடன் ஒரே ஒரு சம அளவு புரோமின் மட்டுமே சேரும். ஆல்க்கைன்களின் பிற வேதிவினைகள் பின்வருமாறு கொடுக்கப்படுகின்றன. சிலவகை வினைகளில் ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஆல்க்கைன்கள் குறைந்த அளவு வினைத்திறனையே வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு மூலக்கூறில் யீன் மற்றும் ஐன் குழுக்கள் இருந்தால் கூட்டு வினை யீனில் நிகழ்கிறது.. ஆல்கீன்களை விட ஆல்க்கைன்கள் பலபடியாதல் வினைக்கு அதிகமாக ஆளாகின்றன. இதனால் விளையும் பலபடிகள் ஆல்க்கைன்களைக் கொண்டிருப்பதில்லை. இவை குறைக்கடத்தி பண்புகளைப் பெற்றுள்ளன. ஒரு கார்பன் அணுவின் எலக்ட்ரான் கவர் தன்மை அது அதனை அடுத்த கார்பன் அணுவுடன் எத்தனை பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்ததாகும். σ எலக்ட்ரான்களைக் காட்டிலும் π எலக்ட்ரான்கள் தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே π பிணைப்புகளுடன் கூடிய கார்பனைச் சூழ்ந்துள்ள எலக்ட்ரான் செறிவு σ பிணைப்புகளுடன் கூடிய கூடிய கார்பனை விடக் குறைவாகும். σ பிணைப்புகள் மட்டுமே கொண்ட கார்பனைவிட ஒரு π பிணைப்பு கொண்ட கார்பன் சிறிதளவு நேர்மின் சுமை கொண்டதாக உள்ளது. அசிட்டிலீனுள்ள புரோட்டான் எத்திலீன் அல்லது மீத்தேனிலுள்ளதைக் காட்டிலும் சுலபமாக விடுவிக்கப்படுகின்றது. இதனால் அசிட்டிலீன் அமிலத் தன்மை கொண்டதாக உள்ளது. இருப்பினும் அந்த அமிலத்தன்மை குறைவானதாகவே நீரைவிட வலிமை குறைவாக இருக்கும். pKa மதிப்பு 25 ஆகும். அசிட்டைலீனில் உள்ள அமில ஐதரசன் கார உலோகங்களால் பதிலீடு செய்யப்பட்டு பல வழிப்பொருட்கள் உருவாகின்றன. வெள்ளி மற்றும் தாமிரக் கரைசல்களுடன் வினைபட்டு கன உலோக அசிட்டலைடுகள் உருவாகின்றன. அசிட்டிலைனில் H–C≡C பிணைப்பின் பிணைப்புக் கோணம் 180° ஆகும். இப்பிணைப்பு ஒழுங்கின் காரணமாக ஆல்க்கைன்கள் குச்சி வடிவத்தைக் கொண்டுள்ளன. பென்சைன் நிலைப்புத்தன்மை அற்றதாகும். ஆல்க்கைனிலுள்ள C≡C பிணைப்பு இடைவெளி 121 பைக்கோ மீட்டர் ஆல்க்கீனிலுள்ள பிணைப்பிலுள்ள 134 பைக்கோமீட்டர் C=C பிணைப்பை விட குறைவாகும். ஆல்கேன்களில் உள்ள C–C பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 153 பைக்கோ மீட்டர் ஆகும். முப்பிணைப்பு மிகவும் வலிமை உடையதாகும். அதனுடைய பிணைப்பு வலிமை 839 கிலோ யூல்/மோல் ஆகும். முதல் பை பிணைப்பு 268 கிலோ யூல்/மோல் வலிமையையும் இரண்டாவது பை பிணைப்பு 202 கிலோ யூல்/மோல் வலிமையையும் வழங்குகின்றன. எசு மற்றும் பி ஆர்பிட்டல்களின் மேற்பொருந்தலால் முப்பிணைப்பு தோன்றுகிறது என மூலக்கூறு ஆர்பிட்டல் கொள்கை பிணைப்பைக் குறித்து விளக்கமளிக்கிறது. ஆல்க்கைனில் உள்ள கார்பன் அணுக்கள் எசுபி இனக்கலப்பு அடைகின்றன என இணைதிறன் பிணைப்புக் கொள்கை இதை விவரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் இரண்டு இனக்கலப்பில்லாத பி ஆர்பிட்டல்களையும் இரண்டு எசுபி இனக்கலப்பு ஆர்பிட்டல்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு அணுவிலிருந்தும் மேற்பொருந்திய ஒரு எசுபி ஆர்பிட்டல்கள், எசுபி-எசுபி சிக்மா பிணைப்பாக உருவாகின்றன. பி ஆர்பிட்டல்கள் இவ்வாறு ஒன்றின் மேலொன்றாக மேற்பொருந்தி இரண்டு பை பிணைப்புகள் உருவாகின்றன. ஆக மொத்தமாக முப்பிணைப்புகள் இவ்வாறு தோன்றுகின்றன. எஞ்சியிருக்கும் ஒவ்வொரு கார்பன் அணுவிலும் உள்ள எசுபி ஆர்பிட்டல்கள் சிக்மா பினைப்பாக உருவாகி பிற அணுக்களுடன் இணைகின்றன. உதாரணமாக மூல அசிட்டைலீனில் உள்ள ஐதரசன் அணுக்கள். கார்பன் அணுவின் எதிர் எதிர் திசையில் இரண்டு எசுபி ஆர்பிட்டல்களும் முன்னோக்கியுள்ளன. உட்புற ஆல்க்கைன்கள் ஒவ்வொரு அசிட்டைலீனிக் கார்பனுடன் இணைந்து கார்பன் மாற்றீடுகளுடன் தோன்றுகின்றன. டைபீனைல் அசிட்டைலீன் மற்றும் 3-எக்சைன் இதற்கு உதாரணங்களாகும். விளிம்பு நிலை ஆல்க்கைன்கள் RC2H என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. மெத்தில் அசிட்டைலீன் இதற்கு உதாரணமாகும். ஆம்ப்பியர் விதி ஆம்ப்பியரின் மின்சுற்று விதி ("Ampère's circuital law") அல்லது பொதுவாக ஆம்ப்பியர் விதி எனப்படுவது மின்னோட்டத்துக்கும் அது தூண்டும் காந்தபுல சுற்றோட்டத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விதி ஆகும். இது மைக்கேல் பரடேயின் மின்காந்தத் தூண்டலின் காந்தவியல் இணையாகும். இந்த விதியை ஆந்த்ரே-மாரி ஆம்பியர் 1823ம் ஆண்டு கண்டுபிடித்தார். ஆம்ப்பியர் விதி பின்வருமாறு ஆம்பியர் விதி, தன் மூல வடிவில், பின்வரும் சமன்பாடு மூலம் காந்தப் புலத்திற்கும் (H), மின்னோட்ட அடர்த்திக்கும் (J) உள்ள தொடர்பைச் சுட்டுகிறது: இதன் வகையீட்டு வடிவம் காந்தப் புலத்திற்கும் (H) காந்தப்பாய அடர்த்தி Bக்குமான தொடர்பு இவ்விதி மின்னூட்டத்தைப் பெறுகிற அல்லது இழக்கிற ஒரு மின்தேக்கியைப் பொறுத்தவரையில் முற்றாகப் பொருந்துவதில்லை என்பதை ஜேம்ஸ் க்ளெர்க் மேக்ஸ்வெல் அறிவித்தார்.formula_14 ஆக இருந்தபோதும்கூட, மேற்பரப்பானது கம்பிகளிடையே அல்லாது ஒரு மின்தேக்கியின் இரு தட்டுகளுக்கிடையே செல்லும்பொழுது formula_15 என்றாகிறது. எனவே திருத்தப்பட்ட ஆம்பியர் விதி (தொகையீட்டு வடிவில்): இதில் வகையீட்டு வடிவில் "ஆம்பியர் - மேக்ஸ்வெல் விதி" பின்வருமாறு அமையும்: இதில் இரண்டாவது பகுதி பெயர்ச்சி மின்னோட்டத்தால் விளைவது. பெயர்ச்சி மின்னோட்டத்தைச் சேர்த்ததன் மூலம் மேக்ஸ்வெல் அவர்களால் ஒளி ஒரு மின்காந்த அலை என்பதை (சரியாக) நிறுவ முடிந்தது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு மின்காந்த அலைச் சமன்பாடு பற்றிய கட்டுரையைக் காணவும். ஆய கலைகள் அறுபத்து நான்கு ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர் 'அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனைத்தும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்படி இங்குத் தரப்பட்டுள்ளது. முதற்பட்டி ஆரிய நூல் மரபை முற்றும் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்கும் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வேறுபட்டும் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது. அறுபத்துநான்கு கலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தரப்பட்டிருக்கிறது. அந்த அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும். 1. பாட்டு (கீதம்); 2. இன்னியம் (வாத்தியம்); 3. நடம் (நிருத்தம்); 4. ஓவியம்; 5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; 6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; 7. பூவமளியமைக்கை; 8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை; 9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை; 10. படுக்கையமைக்கை; 11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்); 12. நீர்வாரி யடிக்கை; 13. உள்வரி (வேடங்கொள்கை); 14. மாலைதொடுக்கை; 15. மாலை முதலியன் அணிகை; 16. ஆடையணிகளாற் சுவடிக்கை; 17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை; 18. விரை கூட்டுகை; 19. அணிகலன் புனைகை; 20. மாயச்செய்கை (இந்திரசாலம்); 21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்); 22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்); 23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி); 24. தையல்வேலை; 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; 26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி); 27. விடுகதை (பிரேளிகை); 28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; 29. நெருட்டுச் சொற்றொடரமக்கை; 30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை; 31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி; 32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); 33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்; 34. கதிரில் நூல் சுற்றுகை; 35. மரவேலை; 36. மனைநூல் (வாஸ்து வித்தை); 37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை); 38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்); 39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்; 40. தோட்டவேலை; 41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்; 42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை; 43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்; 44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை); 45. மருமமொழி (ரகசிய பாஷை); 46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி); 47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை; 48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை; 49. பொறியமைக்கை; 50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); 51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்); 52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை; 53. வனப்பு (காவியம்) இயற்றுகை; 54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி); 55. யாப்பறிவு; 56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி); 57. மாயக்கலை (சாலவித்தை); 58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); 59. சூதாட்டம்; 60. சொக்கட்டான்; 61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை; 62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி; 63. படக்கலப் பயிற்சி; 64. உடற் (தேகப்) பயிற்சி (சது.). வித்தகவிழையம் வித்தகவிழையம் ("endosperm") என்பது கருத்தரித்தலின் போது பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உற்பத்தியாகும் திசுவாகும். முளையத்தைச் சூழ்ந்திருக்கும் இத்திசுவில் எண்ணெய்சத்தும் புரதமும் இருந்தாலும், மாப்பொருள்(ஸ்டார்ச்) வடிவில் ஊட்டச்சத்தைக் கொண்டுள்ளது. இது மனித உணவுகளில் முக்கிய ஊட்டச்சத்து மூலமாகயிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பார்லி வித்தகவிழையம் பீர் உற்பத்தி முக்கிய ஆதாரமாகவும், கோதுமை வித்தகவிழையம், ரொட்டிக்கு மாவாகவும் பயன்படுகிறது. தேங்காய் மற்றும் சோளம் போன்றவற்றின் உண்ணப்படும் பகுதி வித்தகவிழையம் ஆகும். ஆர்க்கிட் போன்ற தாவரங்களில் வித்தகவிழையம் விதையில் இல்லாமல் இருக்கும். மைதா மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா, ஐரோப்பிய ஒன்றியம், (பிரிட்டன் உட்பட,) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம். பொன். சுந்தரராசு பொன். சுந்தரராசு (பிறப்பு: 1947) இவர் ஒரு சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பின்பு சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து தனது கல்வியை வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பித்தார். பின்னர் செயிண்ட் ஜார்ஜ்ஸ் தொடக்கப் பள்ளியில் தமது கல்வியைத் தொடர்ந்து உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியை முடித்துக்கொண்டார். பின்பு மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர். அத்துடன், சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பகுதி நேர செய்தி வாசிப்பாளர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் பங்களிப்பு அளித்துவரும் இவரின் கன்னியாக்கம் வேலைக்காரன் வேலாயுதன் எனும் தலைப்பில் 1963ல் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 40 சிறுகதைகளையும், 50 வானொலி, தொலைக்காட்சி நாடகங்களையும், 7 ஆய்வுக் கட்டுரைகளையும், 20 வானொலிச் சிறுவர் கதைகளையும் திருமுகன் எனும் புனைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் பல ஆக்கங்கள் வானொலி, தொலைக்காட்சிக்களில் ஒலி ஒளிபரப்பானதுடன், சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைளில் பிரசுரமாகியுமுள்ளன. மேலும் இவர் சிங்கப்பூர்த் தமிழ் மொழி - தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு ஆகிய அரங்குகளில் தமிழ் இலக்கியம், தமிழ்மொழி கற்றல் - கற்பித்தல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அரசாங்கத்தின் மக்கள் கழக மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் வெளியிடும் தமிழாசிரியர் குரல் எனும் இதழின் (1992 - 1996) பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மூக்கறு போர் மூக்கறு போர் இது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது. கந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக திருமலை நாயக்கரின் ஏவலின் பேரில் திருமலை நாயக்கரின் படைவீரர்கள், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர். இந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது. தூண்டில் தூண்டில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவை(இதை சில இடங்களில் மப்புலி என அழைப்பர்)என்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட இரைகளை பொருத்தி அதனைக் கவரவரும் மீன் பிடிக்கப்படுகிறது. தூண்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஊசி தூண்டில் ஊசி ஆகும். இது சிறப்பான வளைவையும் கொக்கி போன்ற கூர்முனையையும் கொண்டு காணப்படும். முனைப்பகுதியில் இரை பொருத்தப்படும். முனையிலுள்ள கொக்கி தூண்டிலை சுண்டி இழுக்கும் போது மீனின் தொண்டையில் செருகிக் கொள்ளும். மீன்பிடித்தலில் இரு வகையான இரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை இரைகள், செயற்கை இரைகள் என்பவையாகும். தூண்டில் மூலம் மீன் பிடித்தலில் இயற்கை இரையாக பூச்சிக் குடம்பிகள், கீடங்கள், புழுக்கள், மண்புழு, சிறியமீன்கள், தவளைகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்மையான மணம், நிறம், தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பதால் செயற்கை இரையை விட செயற்றிறன் மிக்கவையாகும். கல்பாக்கம் சமுதாய வானொலி கல்பாக்கம் சமுதாய வானொலி தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையம் ஆகும். அணுசக்தித் துறையின் உரிமையில் உள்ள இந்த நிலையம் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்கிறது. பண்பலை அலைவரிசை 90.8 MHzல் ஒலிபரப்பாகும் இதன் நிகழ்ச்சிகளை கல்பாக்கத்திலிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவு வரை கேட்கலாம். சோதனைக் குழாய் சோதனைக் குழாய் என்பது, ஆய்வுகூடங்களில் பயன்படும் சிறிய குழாய் வடிவக் கொள்கலம் ஆகும். இதன் மேற்பகுதி திறந்தும், அடிப்பகுதி பெரும்பாலும் வளைவானதாகவும் இருக்கும். திறந்த மேற்பகுதி பொதுவாக வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்டதாக இருக்கும். இவ்வமைப்பு உள்ளேயிருக்கும் நீர்மங்களைப் பாதுகாப்பாக வேறு கலங்களில் ஊற்றுவதற்கு வசதியானது. பல விதமான தேவைகளை நிறைவேற்றுவதற்காக, சோதனைக் குழாய்கள், பல்வேறு நீள, அகலங்களில் உருவாக்கப்படுகின்றன. ஆய்வுகூடச் சோதனைகளின்போது, வெவ்வேறான வேதிப் பொருள் மாதிரிகளை, பெரும்பாலும் நீர்ம மாதிரிகளை, வைத்திருப்பதற்கு இது பயன்படுகிறது. வேதியியற் சோதனைகளின்போது உள்ளேயுள்ள பொருட்களை இலகுவாகச் சூடாக்குவதற்கு வசதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சூடாக்கும்போது வெப்பத்தினால் வரிவடைந்து உடையாமல் இருப்பதற்காகப் "பைரெக்ஸ்" வகைக் கண்ணாடியால் செய்யப்படுகின்ற சோதனைக் குழாய்களை, பன்சன் சுடரடுப்பின் சுவாலையில் பிடித்துச் சூடாக்க முடியும். நீண்ட நேரம் மாதிரிகளைச் சூடாக்க வேண்டியிருக்கும்போது, சோதனைக் குழாய்களைவிடக் கொதி குழாய்கள் விரும்பப்படுகின்றன. கொதி குழாய்கள் சோதனைக் குழாய்களைவிடப் பெரியவையாகும். மூலக்கூற்று உயிரியலில் பல்வேறு வகையான ஆய்வுக் குழாய்கள் (tubes) செய்முறைக்காக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மூலக்கூற்று உயிரியலில் மிக குறைவான (மைக்ரோ லிட்டர் முதல் மில்லி லிட்டர் ) கொள்ளவுகளில் ஆய்வுகள் நிகழ்த்தபடுவதால், இம்முறையில் பயன்படும் குழாய்கள் சிறியனவாக இருக்கின்றன. இவை 100 மைக்ரோ லிட்டர் (0.1 ml) முதல் 2 மில்லில் லிட்டர் (2ml) வரை கொள்ளவு கொண்ட குழாயாகும். மைக்ரோ மற்றும் மில்லி லிட்டர் அளவுகளை எடுப்பதற்கு சிறு உறிஞ்சும் குழல்கள் (tips) உள்ளன. செய்முறைகளின் போது ஒருசிறிதே அயல் பொருள்கள் அல்லது மாசுக்கள் இருந்தாலும், அவற்றின் சிறு மூலக்கூறுகள் நாம் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கவல்லன. எடுத்துகாட்டாக ஆர்.என்.ஏ ஆய்வுகளின் போது, நாம் கைகளில் அல்லது பணி புரியும் இடங்களில் எளிதாக காணப்படும் ஆர்.என்னேசு (RNase) என்னும் நொதியால் செய்முறைகள் தடுக்கப்படக்கூடும். இவ்வகையான நொதிகள் ஆர்.என்.ஏ க்களை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆதலால் ஆய்வு முறைக்கு உட்ப்படுத்தப்படும் சிறு குழாய்கள் மற்றும் உறிஞ்சும் குழல்களை மாசகற்றல் (sterilization) என்னும் முறையில் மிக உயர் அழுத்த நிலைகளில் தூய்மை படுத்தப்படும். மேலும் நீர்மங்களை எடுப்பதற்கு பைப்பெட் என்னும் நுண்குழாய் (pippet) உறிஞ்சிகளின் மூலம் உறிஞ்சும்போது, அவற்றின் மேற்பகுதியில் பட்டு மாசு அடைவதற்கும், உறிஞ்சும்போது உள்-செலுத்தப்படும் காற்றின் மூலமும் அயல் பொருள்கள் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இவற்றைக் களைவதற்கு பின்னாளில் வடிகட்டி உறிஞ்சும் குழல்கள் (filter tips) அறிமுகப்படுத்தப்பட்டன. கடலூர் கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன, கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது. சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக 1783-இல் போர் மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும்.மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது. கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவை வருமாறு கடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன. கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது முனைவர் முனைவர் பட்டம் ("Doctorate") என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் "docere" என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுமுனைவர் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார். கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் மதிப்புறு முனைவர் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன. தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம் செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகபயன்படுத்த வேண்டும். மலையில் வாழும் பளியர் சாதியைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்த இந்தக் கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்த ராமசாமி காட்டைய நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. 1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் அல்லது வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு ரயிலில் திருவில்லிபுத்தூர் வரை பயணித்து பிறகு அங்கிருந்து பேருந்து மார்கமாக சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை சென்றடைந்து அங்கிருந்து இருந்து மலை ஏறலாம். மதுரை பகுதிகளில் இருந்து திருவில்லிபுத்தூர்க்குப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து வத்திராயிருப்புக்கு பேருந்து வசதிகள் உள்ளது. வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மி. தொலைவில் சதுரகிரி மகாலிங்கம் மலையின் அடிவாரமான தாணிப்பாறை உள்ளது. தாணிப்பாறையிலிருந்து மலையேறி, 7 கிமீ பயணித்து சுந்தரமகாலிங்கம் கோயிலை அடையலாம். பைத்தான் பைத்தான் ("Python Programming Language") என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, 'Monty Python's Flying Circus' என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான் என்று வைத்தார். அந்நாடகம் ஓர் 'அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை' (Surreal humor) அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும். கூகிள், நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைதானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களைப் படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளைத் தற்பொழுது பைத்தோன் மென்பொருள் நிறுவம் பராமரித்து வருகிறது. இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சிபைத்தோன் என்பதாகும். பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகின்றது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோசு, லினக்சு, யுனிக்சு, மேக் இயங்குதளம் போன்ற பல்வேறு இயக்க சூழல்களிலும் பைத்தான் இயங்கும். சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ள் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. - இணைய மென்பொருள் (Web Application), - மின்னஞ்சல் அலகிடல் (Email Parsing) - வலையமைப்பு நிரலான் (Network Program) - மேசைத்தளம் மென்பொருள் (Desktop Application), - இணைய நெறிமுறை (Internet Protocol) - கணினி நிருவாகம் (System administration) - விளையாட்டுகள் வருக வையகமே நிரல் print u"வணக்கம்" வெளியீடு(Output) வணக்கம் வேறுபடுபவை(Variable) a = 1 b = 2 print a + b வெளியீடு(Output) 3 இணை ஒப்படைப்பு(parallel assignment) a, b = 1, 2 language = "python" print a, b, language வெளியீடு(Output) 1 2 python கூற்று(Expression) print 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2 வெளியீடு(Output) 3 -1 6 2 2.5 கூற்று print 2 > 3, 1 < 3 print 2 > 3 and 1 < 3 print 1 < 2 < 3 print 1 + 2 * 3 + 5 print 1 or 2 print 1 and 2 வெளியீடு(Output) False True False True 12 1 2 சரம்(String) language = "தமிழ்" lang = 'தமிழ்' l = """தமிழ்""" kural = """ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. print language, lang, l print kural வெளியீடு(Output) தமிழ் தமிழ் தமிழ் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கட்டியம்(Condition) a = 23 if a > 0: else: a = 0 if a >= 0: elif a < 0: elif a == 0: வெளியீடு(Output) a 23 is positive number a(0) is positive number தொடர் (List) l = [] #தொடர் உருவாக்குதல் l.append("தமிழ்") l.append(1) #புதிய சேர்க்கை print l, l.count() l.remove(1) #1யை நீக்குதல் print l வெளியீடு(Output) [தமிழ், 1], 2 [தமிழ்] டியுப்பல் (Tuple) t = (1, 2, 3, 1) print t.count(1) print t.index(2) வெளியீடு(Output) 2 1 அகராதி(Dictionary) print d print d['name'] print d['age'] print d.keys() print d.values() print d.items() வெளியீடு(Output) Tamil Magan 23 ['age', 'place', 'name'] [23, 'coimbatore', 'Tamil Magan'] [('age', 23), ('place', 'coimbatore'), ('name', 'Tamil Magan')] தொகுப்பு (set) s = set([1, 2, 3, 1, 2, 3]) print s s.add(23) print s s.pop() print s s.remove(23) print s print len(s) வெளியீடு(Output) set([1, 2, 3]) set([1, 2, 3, 23]) set([2, 3, 23]) set([2, 3]) 2 தொடர் for no in [1, 2, 3, 4, 5]: #தொடர் வெளியீடு(Output) 1 2 3 4 5 டியுப்பல் for no in (1, 2, 3, 4, 5): #டியுப்பல் வெளியீடு(Output) 1 2 3 4 5 அகராதி for key in d: #அகராதி வெளியீடு(Output) age 23 place coimbatore name Tamil Magan ஒயில் (while) no = 1 while no < 10: வெளியீடு(Output) 1 ஒற்றை 2 இரட்டை 3 ஒற்றை 4 இரட்டை 5 ஒற்றை 6 இரட்டை 7 ஒற்றை 8 இரட்டை 9 ஒற்றை கொடுக்கப்பட்ட எண்ணை பெருக்கல் அட்டவணை அச்சிடும் நிரல் (பார் லூப் எடுத்துக்காட்டு) val=5 for i in range(5): வெளியீடு(Output) 1 X 5 = 5 2 X 5 = 10 3 X 5 = 15 4 X 5 = 20 5 X 5 = 25 def square(no): def cube(no): print square(2) print square(2) + square(3) print cube(3) print cube(square(2)) print square(no=10) வெளியீடு(Output) 4 13 27 64 100 இயல்பிருப்பு(Default) def square(no=2): def cube(no=2): print square() print square(4) வெளியீடு(Output) 4 16 மாற்றுப்பெயர் (Alias) def square(no=2): def cube(no=2): def caller(func_name, arg): s = square c = cube print s(2) print c(3) print caller(s, 10) print caller(c, 5) print caller(square, 7) 4 27 100 125 49 Open-Tamil library example, import re, operator import tamil #open-tamil library def print_tamil_words(tatext): சு. ப. அருணாசலம் சு.ப. அருணாசலம் (பிறப்பு: சூலை 11, 1959) தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது பள்ளிப் படிப்பை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சி தேசிய கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்பு இளங்கலை வணிகவியல் பட்டத்தை மதுரை மாவட்டம் திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் கல்லூரியிலும் முதுகலை நிர்வாகவியல் பட்டத்தினை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இளவயது முதல் இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் கல்லூரிக் காலம் தொட்டே Blossom என்ற மாணவர் பத்திரிகையை நடத்தியுள்ளார். அத்தோடு சமூகச் சிந்தனையுள்ள கட்டுரைகளையும், பல நாடகங்களையும் எழுதியுள்ளார். கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவரின் முதல் கவிதை சிங்கை தமிழ் முரசில் வெளிவந்தது. சிங்கப்பூரில் பல பட்டிமன்றங்களில் பங்கேற்று சிறந்த பேச்சாளராகவும், இலக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், அதன் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார் ஐங்கோணம் வடிவவியலில் ஐங்கோணம் ("pentagon") என்பது ஐந்து பக்கங்களைக் கொண்ட ஒரு பலகோணமாகும். ஒரு ஐங்கோணத்தின் ஐந்து பக்கங்களும் சம அளவுடன் இருந்தால் அந்த ஐங்கோணம் "ஒழுங்கு ஐங்கோணம்" அல்லது "சீர் ஐங்கோணம்" (regular pentagon) எனப்படும். ஒரு ஐங்கோணத்தின் அனைத்து (ஐந்து) உட்கோணங்களின் கூட்டுத்தொகை 540°. கிரேக்க மொழியில் எண் ஐந்தைக் குறிக்கும் சொல்லான "pente" -யிலிருந்து ஐங்கோணத்தின் ஆங்கிலப் பெயர் "pentagon" தோன்றியுள்ளது. ஒரு ஐங்கோணம் தனக்குள்ளாக வெட்டிக் கொள்வதாகவும் அமையலாம். "நட்சத்திர ஐங்கோணம்" இவ்வகையைச் சேர்ந்தது. ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் ஐந்து பக்கங்களின் அளவுகளும் சமமாகவும் ஒவ்வொரு உட்கோணத்தின் அளவும் 108° -ஆகவும் இருக்கும். ஒழுங்கு ஐங்கோணத்திற்கு 5 சமச்சீர் பிரதிபலிப்புக் கோடுகளும் 5 வரிசையுடைய சமச்சீர் சுழற்சிகளும் (72°, 144°, 216° மற்றும் 288°) உண்டு. ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் மூலைவிட்டங்கள் அதன் பக்கங்களுடன் தங்க விகிதத்தில் அமைகின்றன. ஒரு ஒழுங்கு குவிவு ஐங்கோணத்தின் பக்க அளவு "t" எனில் அதன் பரப்பு காணும் வாய்ப்பாடு: "R", அலகு ஆரமுள்ள ஒரு வட்டத்துக்குள் வரையப்படும் ஒழுங்கு ஐங்கோணத்தின் பக்க நீளம் "t" : எந்தவொரு ஒழுங்கு பலகோணத்தின் பரப்பு வாய்ப்பாடு: இங்கு "P" பலகோணத்தின் சுற்றளவு, "a" -பலகோணத்தின் மையத்திலிருந்து அதன் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளிக்கு வரையப்படும் நடுக்கோட்டின் நீளம். ஐங்கோணத்திற்கான இவற்றின் மதிப்புகளை பரப்பு வாய்ப்பாட்டில் பிரதியிட: "t" -ஒழுங்கு ஐங்கோணத்தின் பக்க நீளம். ஒழுங்கு ஐங்கோணத்தின் மூலைவிட்டமும் (D) பக்கமும் (T) தங்க விகிதத்தில் அமையும் என்ற உண்மையைப் பயன்படுத்த: எனவே மூலைவிட்டத்தின் நீளம்: வரிசையாக A, B, C, D, E உச்சிகளுடைய ஒரு ஒழுங்கு ஐங்கோணம் ஒரு வட்டத்துக்குள் வரையப்பட்டால்: B மற்றும் C புள்ளிகளுக்கிடையே வட்டத்தின்மீது அமையும் புள்ளி P. நட்சத்திர வடிவில் அமையும் ஒழுங்கு ஐங்கோணமானது "நட்சத்திர ஐங்கோணம்" (pentagram) எனப்படும். இதன் Schläfli குறியீடு {5/2} ஆகும். இச்சிறப்பு வடிவத்தின் பக்கங்கள் ஒழுங்கு குவிவு ஐங்கோணத்தின் மூலைவிட்டங்களாக அமையும். எனவே இவ்விரண்டு வடிவங்களின் பக்கங்கள் தங்க விகிதத்தில் இருக்கும். ஒரு ஒழுங்கு ஐங்கோணம் வரைவதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன. கவராயம் மற்றும் அளவுகோலைப் பயன்படுத்தி ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தை தரப்பட்ட வட்டத்துக்குள்ளாக அல்லது தரப்பட்ட ஒரு விளிம்பினைக் கொண்டு வரையலாம். இந்த வரைமுறையை தனது "எலிமெண்ட்ஸில்" யூக்ளிட் விளக்கியுள்ளார் (கிமு.300). ஒரு தரப்பட்டுள்ள வட்டத்துக்குள் ஒழுங்கு ஐங்கோணம் வரையும் மற்றொரு முறை: கார்லைல் வட்டமானது ஒரு இருபடிச் சமன்பாட்டின் மூலங்களை வடிவவியல் முறையில் காண்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஒரு ஒழுங்கு ஐங்கோணம் வரையும் முறையைக் காணும் வழியைத் தருகிறது. ஜஸ்ட் காஸ் 2 ஜஸ்ட காஸ் 2 ("Just Cause 2") என்பது வெளிப்படையான உலக நடவடிக்கை-சாகசகங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட விளையாட்டு ஆகும். அவலாஞ்ச் ஸ்டுடியோஸ் ஆல் உருவாக்கப்பட்டு ஐடோஸ் இண்டெராக்டிவ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு ஸ்கொயர் எனிக்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2006 ல் வெளிவந்த ஜஸ்ட காஸ் விளையாட்டின் புதிய பதிப்பாகும். ஜஸ்ட காஸ் 2 ஆனது கற்பனைத் தீவான பனாவ் தீவில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டது. பனாவ் தீவு தென்-கிழக்கு ஆசியாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜஸ்ட காஸ் 2 ஆனது விளையாடுபவரை இத்தீவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றிவர அனுமதிக்கிறது. மேலும் இவ்விளையாட்டின் போக்கானது அந்த விளையாடுபவரின் ஒழுக்கமின்மையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அரசாங்க சொத்துகளை அழிப்பது, இராணுவத் தளங்களை அழிப்பது மற்றும் அளிக்கப்படும் வேலைகளை முடிப்பது என இந்த விளையாட்டை விளையாடலாம். இவ்வாறான நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த விளையாட்டின் போக்கு கணக்கிடப்படுகிறது. குவாட்றன்டிட் எரிகற் பொழிவு குவாட்றன்டிட் எரிகற் பொழிவு அல்லது குவாட்றன்டிட் விண்கற் பொழிவு ("Quadrantid meteor shower") ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் எரிகற் பொழிவாகும். இந்த எறிகற் பொழிவின் கதிர்விடு புள்ளி இடப விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இது பெருங்கரடி விண்மீன் தொகுதிக்கும் ட்ராகோ விண்மீன் தொகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ் எரிகற் பொழிவின் மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும். குவாட்றன்டைற்ஸ் எரிகற் பொழிவு பின்னிரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை காணலாம். அடல்பீ குவாட்டலெட் மற்றும் புருசெல் ஆகியோர் இதனை 1830இல் இதனை முதன் முதலில் அவதானித்தனர். இவ் எரிகற்பொழிவு ஒடுங்கியதாகவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு உட்பட்ட விண் பாகங்களில் இருந்து வந்தாகவும் கருதப்படுகின்றது. இவ் எரிகற் பொழிவு 2012 ஆம் ஆண்டு சனவரி 3ந் திகதி பின்னிரவிலிருந்து 4ந் திகதி அதிகாலை வரைக் தொடர்ந்து காணப்பட்டது. இலங்கை, இந்திய நாடுகளில் 3ந் திகதி இரவு முதல் 4ந் திகதி அதிகாலை 4.00 மணி வரையும் காணப்பட்டது. இரா. பெருமாள் ராசு இரா. பெருமாள் ராசு (பிறப்பு: நவம்பர் 19, 1931) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். தமிழ் நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலை என்றழைக்கப்படும் கிருஷ்ணகிரியில் 1931-ல் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார் இரா. பெருமாள் ராசு. இவருடைய மனைவியின் பெயர் மகாலட்சுமி. தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜ, கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறள் வீ. முனிசாமி போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். வீர ராஜேந்திர சோழனையும் ஆகம வல்லாரையும் முன்னிலை படுத்தி வரலாற்றில் சுட்டப்பெறும் கூடல் சங்கமத்து போரை அடிப்படைக் களமாக கொண்டு இயற்றப்பட்ட வரலாற்று கவிதை நாடகம். ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பில், திருமலையில் தொடங்கி, குமரி வரை இந்தியாவிலுள்ள 151 திருத்தலங்களைச் சுற்றிவந்து, அந்த ஆலயங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது ஓவிய கண்காட்சி, சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம் சுரத் குமாரிடம் நெருங்கிப் பழகிய அவருடைய பக்தர். பல ஆண்டுகளாக உபநிடத வகுப்புளை ஆன்மீக சேவையாக, எளிய முறையில் நடத்தி வருபவர். இவர் ஒரு நிறைநிலை எய்திய எளிய ஆனால் சிறந்த ஆன்மிகவாதி. மிக உயரிய ஆன்மீக அனுபவங்கள் பெற்ற ஆன்மீகச் செல்வர். இவரை ஆன்மீகத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் இவரை ”கருமலை சித்தர்” என்று போற்றுகிறார்கள். "..என் வாழ்வில் தோல்விகளே இல்லை... ஏனென்றால் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல..." "..என் வாழ்வில் ஏமாற்றங்களே இல்லை... ஏனென்றால் எதிர்ப்பார்ப்புகள் இல்லை..." "... நிமிர்ந்த மலையின் கம்பீரம், வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று, குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர் இப்படி எல்லாமே குருநாதர்களே! புரிந்து கொள்... வேதங்கள் புரியும் ...! உன்னையும் புரிந்து கொள்வாய் ...!" "... சுமையாக எண்ணிய கடும் உழைப்பே என் உடலை உருக்காக மாற்றிய விந்தையை வியந்தேன் வல்லவனே ..." தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் நெடுஞ்செழியன் (மாங்குளம்) நெடுஞ்செழியன் என்ற பெயர் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பாண்டிய மன்னனின் பெயராகும். இக்கல்வெட்டுகளின் காலம் பொ.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இவனின் முழுப்பெயர் தெரியவில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையலங்கான நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு இவன் முன்னோனாக கருதப்படுகிறான். தமிழ்நாடு, மாங்குளத்தில் இச்செழியன் பற்றிய இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்றில் இச்செழியனின் பணயனான கடலன் வழுதி என்பவன் கணியன் நந்தா என்ற சமண குருவுக்கு கொடுத்த குகைத்தானம் பற்றியுள்ளது. மற்றொன்றில் இச்செழியனின் சகலனாகிய இளஞ்சடிகன் தந்தை சடிகன் என்பவன் இதே துறவிக்கு பள்ளி அமைத்து கொடுத்தது பற்றியுள்ளது. குமார் குமார் லைட்டடி குமார் குமார் லைட்டடி கிராமப் புறங்களில் சிறுவர்கள் பாடும் ஒருவகை விளையாட்டுப் பாடல் ஆகும். குமார் குமார் லைட்டடி கோழிக் கூட்டுக்கு லைட்டடி எத்தனை மாசம் சம்பளம் மூணு மாசம் சம்பளம் அத்தான் எங்கே படுக்கிறார் மெத்தயிலே படுக்கிறார் சைக்கிளுக்குக் காத்துப் போச்சு சித்தறம் பூச்சிக்கு மூச்சுப் போச்சு பெருவழுதிக் காசுகள் பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும். சிலர் மூவேந்தர்களும் குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களயே பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இந்நாணயம் கிடைப்பத்ற்கு முன் சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்திலில்லை என்று நிலவி வந்த கருத்து மாறியது. 1987ஆம் ஆண்டு கிருட்டிணமூர்த்தி என்பவர் பெருவழுதி என தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டு பெயரிட்ட 13 நாணயங்களை வெளியிட்டார். இந்நாணயங்களில் மீன்கள், 1, 2 அல்லது 4 ஆமைகளும், யானை, குதிரை, வேலியிட்ட மரம், காளத்தலை, மூன்று அல்லது ஆறு முகடுகளுடைய மலை, ஆறு புள்ளிகள், சிவலிங்கம், காளை, கோயில் ஆகிய சின்னங்கள் முன் பக்கத்திலும் பெருவழுதி என்று எழுதப்பட்ட எழுத்துக்களுடன் பின் பக்கத்திலும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சின்னங்கள் முத்திரை நாணயங்களிலும் காணப்படுகிறது. மூலம் - தினமலர் இந்த நாணயத்தின் காலம் குறித்து தமிழ் பிராமி எழுத்தறிஞரான ஐராவதம் மகாதேவன் அந்நாணயத்தில் காணப்படும் சொற்றொடரில் பெருவழுதி – பெருவழுதிஸ என்ற இரு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று கையுடைய சின்னத்தை பிராமி எழுத்தான “ஸ’ என்று தான் கொள்ள வேண்டுமென்றும் அதனால் அதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டென்று கூறினார். மத்திய அரசின் முதன்மைத் தொல்லெழுத்து அலுவலரான கே.ஜி.கிருஷ்ணன் இந்த நாணயம் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதன்படி அந்நாணயம் இரு மொழி நாணயமன்று. பிராகிருத வழக்குப்படி முதல் சொற்றொடர் "பெருவழுதிஸ" என்றால் அடுத்த சொற்றொடர் தமிழ் வழக்குப்படி பெருவழுதிக்கு என்றிருக்க வேண்டும். ஆனால் பெருவழுதி என்ற சொல்லுக்குப் பின் எதுவுமில்லை என்பதை கூறினார். அதற்பின் 2004ஆம் ஆண்டு கிருட்டிணமூர்த்தி செய்த ஆய்வின்படி இலங்கையின் கொழும்பு நாணயவியல் காப்பாளரான செனரத் விக்ரமசிங்கே மற்றும் ஹெட்டி ஆராச்சி என்ற நாணயவியல் அறிஞர் கொடுத்த பெருவழுதி நாணயங்களின் படி குதிரைச் சின்னம் முன்னங்கால்களின் கீழ் 'ஸ எழுத்துப் பொறிக்கப்படவில்லை, மூன்று கைசின்னங்களைத்தான் (Triskle)பொறித்தனர் என்பதை உறுதிப்படுத்தினார். அச்சின்னம் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டிலே தொடங்குவதால் அதன் காலம் ”பொ.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு” என்று நிறுவினார். பி. சி. சேகர் டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் ("B.C.Sekhar", நவம்பர் 17, 1929 - செப்டம்பர் 6, 2006) மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வியூகத்திற்கு மாற்றியவர். நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறவர். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில்துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தார். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தினார். சிலாங்கூர், சுங்கை பூலோவில் இருக்கும் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை ("Rubber Research Institute of Malaysia") உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தார். மலேசியாவின் ரப்பர் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இரு முக்கிய நிகழ்ச்சிகள் அடையாளம் சொல்லப் படுகின்றன. ஒன்று மலாயாவில் ரப்பர் அறிமுகம் செய்யப்பட்டது இரண்டாவது பி. சி. சேகரின் பிறப்பு. முதல் நிகழ்வு 1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து 12 ரப்பர் விதைகள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டன. அங்கிருந்து அவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிர் செய்யப்பட்டன. எல்லா கன்றுகளுமே உயிர் பெறவில்லை, மடிந்து விட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து சர் ஹென்றி விக்ஹாம் என்பவர் 70,000 ரப்பர் விதைகளை பிரேசிலிலிருந்து கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டு கன்றுகள் ஆகின. இவற்றில் 2000 கன்றுகள் இலங்கைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில் 22 கன்றுகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ‘ரப்பர் ரிட்லி’ எனும் எச்.என்.ரிட்லி ஒன்பது ரப்பர்க் கன்றுகளை மட்டும் 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. அவற்றில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா மாறியது. (இவ்வாறு மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் ஒரு கன்று வளர்ந்து இன்னும் கோலாகங்சாரில் காட்சிப் பொருளாக நின்று கொண்டு இருக்கிறது. கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் அந்த மரம் இருக்கிறது. அதன் வயது 135.) தென் அமெரிக்காவில் ரப்பரைப் பயிர் செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. கன்றுகளுக்குக் கருகல் நோய் வந்து அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரு மரங்கள் மட்டுமே உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் வயது 135. மலேசிய ரப்பர் வரலாற்றை மாற்றிய இரண்டாவது நிகழ்வு பாலசந்திர சகிங்கல் சேகர் என்ற முழுப்பெயர் கொண்ட பி. சி. சேகரின் பிறப்பு. 1929 நவம்பர் மாதம் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குடும்பத்தில் மூன்றாவது குழன்தை. சேகர் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். தகப்பனாரின் பெயர் அச்சுத சேகர் நாயர். தாயாரின் பெயர் சீதாலட்சுமி அம்மாள். டான்ஸ்ரீ பி.சி.சேகர், சுங்கை பூலோ உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். அருகாமையில் 1925-இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகமும் இருந்தது. அந்தத் தோட்டம் இப்போது இல்லை. அங்கே ’மலாயன் கிலாஸ்’ எனும் தொழில்சாலை இருந்தது. பி. சி. சேகர், தன்னுடைய தொடக்க, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளைச் சுங்கை பூலோ, கோலாலம்பூர் நகரங்களில் மேற்கொண்டார். பட்டப் படிப்பிற்காகப் புதுடில்லி சென்றார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்தார். பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய போது சிறந்த சேவைகளை வழங்கினார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் இயற்கை ரப்பர் தொழில்துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட பி. சி. சேகர், படிப்படியாக முன்னேறி 1966 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். அவர்தான் அக்கழகத்தின் முதல் மலேசியர், முதல் இந்தியர், முதல் ஆசியர். அதுவரை அந்தத் தலைமைப் பதவியைப் பிரித்தானியர்களே வைத்து வந்தனர். வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று மற்ற இனத்தவரைத் தவிர்த்தனர். பி. சி. சேகரின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது எஸ்.எம்.ஆர் எனும் மலேசியத் தர ரப்பர் திட்டத்தை ("Standard Malaysian Rubber (SMR) Scheme") உருவாக்கியது தான். அந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய ரப்பர், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் முதல் தரமாகக் கருதப் பட்டது. அந்தத் திட்டம் ரப்பர் தொழில்துறையின் மூலப்பொருள் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் (tyre) தயாரிப்பு, கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர் ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்’ எனும் தத்துவத்திற்கு புதிய வடிவு தந்தார். ரப்பரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் ’சுங்கை பூலோ போ, சேகரைப் பார்’ என்று சொல்லும் அளவுக்கு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் நிலை உயர்ந்தது. டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்த போது. உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்தனர். அதற்கு வழிவகை செய்யும் விதமாக அதன் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் ஆகியவற்றை உயர்த்தியிருந்தார். சில சமயங்களில் ரப்பர் மரங்களுக்குச் சாயம் அடிப்பார்கள். பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறச் சாயங்களாக இருக்கும். அப்படி சாயம் அடிப்பதன் மூலம் ரப்பர் மரங்களின் பால் உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்கிக் காட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தர் பி. சி. சேகர். அனைத்துலக ரப்பர் விலையை ஒருமுகப் படுத்துவதற்கு தீவிரமான செயல்பாடுகளில் இறங்கி வெற்றி கண்டார். அதனால், மலேசியா, பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற பல ரப்பர் உற்பத்தி நாடுகள் பலன் அடைந்தன. அதன்வழி பல இலட்சம் சிறு தோட்டக்காரர்களும், மலேசியக் கிராமப்புற ஏழைகளும் நன்மை அடைந்தனர். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை 1983 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தார். தோட்டத் தொழிலாளர்கள் மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த தோட்ட முதலாளிமார்களுக்கு அது பலத்த அடியாக அமைந்தது. இப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஓய்வூதியம் கிடைக்கிறது. ஓய்வூதியப் பயன்களும் ("gratuity benefits") கிடைக்கின்றன. டான்ஸ்ரீ பி.சி.சேகருக்கு சுகுமாரி எனும் மனைவியும் ஜெயக்குமார், கோபிநாத், சுஜாதா, வினோத் எனும் நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார் அப்போது அவருக்கு வயது 77. அவரது உடல் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டு, செராஸ் மின்சுடலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொழிலாளிகள், அறிவியலாளர்கள், வர்த்தகர்கள், அரசுத் தலைவர்களென மலேசிய சமூகத்தின் அனைது தரப்பினரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். அவரைப் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது. பி. சி .சேகரின் இரண்டாவது மகன் கோபிநாத் சேகர், ஓரு தொழில்நுட்ப புத்தாக ஆய்வு நிறுவனத்தை ("Sekhar Research Innovations; SRI") நடத்தி வருகிறார். அவருடைய இன்னொரு மகன் வினோத் சேகர் மீது பண மோசடிகளின் காரணமாக, கோலாலம்பூர் மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பி. சி. சேகர் பதவியில் இருந்த காலத்தில் ரப்பர் மரங்கள் மற்று ரப்பர் தொழிலாளிகள் இருவரது நலனையும் பார்த்துக் கொண்டார். மலேசிய அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம்: “மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். மரம் இல்லை என்றால் மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனும் இல்லை’. 2005 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை மேம்படுத்துவதற்கு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்ட போது எந்தப் பதவியிலும் இல்லை. மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும், கழக ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் அப்போது பதவியில் இல்லை எனினும், அவரது வேண்டுகோளை மதித்து அவருடைய கோரிக்கையைத் தட்டாமல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல கோடி பணத்தை ஒதுக்கி வைத்தது. ஒய்வு பெற்ற ஒருவரின் கோரிக்கையை அரசு ஏற்றச் செயல் பி. சி. சேகரின் மதிப்பினையும் செல்வாக்கை உணர்த்துகிறது. அதே சமயத்தில் அனைத்துலக ரப்பரின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்யக் கூடிய செல்வாக்கும் அவரிடம் இருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் உள்ள பிரிகண்டான்பரி எனும் இடத்தில் இருந்த பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழகததை ("British Rubber Producers' Research Association") ஒரு விளையாட்டரங்கமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அக்கழகத்தின் புதிய பெயர் ’துன் ரசாக் ஆய்வுக் கழகம்’ ஆகும். அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்பு படுத்தப் பட்டார். அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றத்திற்கு முதன்முதலில் முழு எதிர்ப்பு தெரிவித்தவர் பி. சி. சேகர். பி. சி. சேகர், மலேசிய நாட்டிற்கு செய்துள்ள அரிய சேவைகளுக்காகப் பேரரசர் டான்ஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார். இந்த விருது இந்தியாவின் பத்ம விபூஷண் விருதிற்குச் சமமானது. இவர் 1973-இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்சசே விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 20 கண்டிபிடிப்புகளின் வழி புனைவுரிமைகளையும் பெற்று இருக்கிறார். வெளி விருத்தம் வெளி விருத்தம் என்பது தமிழின் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகையில் ஒன்று. யாப்பருங்கலக் காரிகை இதனை என்று விளக்குகிறது. வெளி விருத்தம் பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளிலும் அமையலாம். ஒவ்வொரு அடியிலும் அதே தனிச்சொல்லைப் பெற்று வரும். ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல்லைச் சேர்க்காமல் நான்கு சீர்கள் அமையும். இது அடி மறி மண்டில வெளி விருத்தம், நிலை வெளி விருத்தம் என இருவகைப்படும். சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்; புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்; கொல்லல் கொல்லல் செய்ந்நன்றி கொல்லல் - எஞ்ஞான்றும், நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்திங் - கெஞ்ஞான்றும் ரோஜர் நைட் ரோஜர் நைட் ("Roger Knight ", பிறப்பு: செப்டம்பர் 6 1946 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 387 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 310 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994-2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரோஜர் நைட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. டொம் நைட் டொம் நைட் ("Tom Knight ", பிறப்பு: சூன் 28 1993 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொம் நைட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ரொபர்ட் ஜென்னிங்ஸ் ரொபர்ட் ஜென்னிங்ஸ் (" Robert Jennings ", பிறப்பு: பிப்ரவரி 28 1977 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2001 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரொபர்ட் ஜென்னிங்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. கீத் ஜென்னிங்ஸ் கீத் ஜென்னிங்ஸ் ("Keith Jennings", பிறப்பு: அக்டோபர் 5 1953 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 68 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975-1981 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கீத் ஜென்னிங்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. ஜார்ஜ் ஜென்னிங்ஸ் ஜார்ஜ் ஜென்னிங்ஸ் ("George Jennings ", பிறப்பு: சனவரி 14 1895 , இறப்பு: சூலை 12 1959), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1923-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் ஜென்னிங்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. வில்லியம் நைட் வில்லியம் நைட் "Wiliam Knight ", பிறப்பு: திசம்பர் 5 1828, இறப்பு: செப்டம்பர் 17 1918), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆயினும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1862 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வில்லியம் நைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் தேசிய கடலியல் நிறுவனம், இந்தியா தேசியக் கடலியல் நிறுவனம் ("National Institute of Oceanography, India") டோனாப் பவுலா, கோவாவில் தலைமையகத்தையும், கொச்சி, விசாகப்பட்டினம், மும்பையில் வட்டார மையங்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. இது புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) 38 ஆய்வு நிறுவனங்களில் ஒன்று. 1960 ஆம் ஆண்டு நிகழ்ந்த அனைத்துலக இந்தியப் பெருங்கடல் குறிக்கோள் பயணத்திட்டத்தின் (International Indian Oceana Expedition - IIOE) தொடர்ச்சியாக இந்நிறுவனம் சனவரி 1, 1966 ஆம் ஆண்டு கோவாவில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் உலகளவில் கடலியல் ஆய்வில் சிறந்த நிலையை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வின் நோக்கம் வட இந்திய கடல்பகுதி அளிக்கும் சிறப்புகளை கண்காணிப்பதும் புரிந்துக்கொள்வதுமே ஆகும். இவ்வாய்வின் விளைவாக இதுவரை இந்நிறுவனத்திலிருந்து 5000 க்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்நிறுவனத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முறை துணைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆய்வுகள் நான்கு மெரும்பகுப்புகளாக இருக்கின்றன - உயிரியல், வேதியியல், புவியியல்/புவிஇயற்பியல் மற்றும் இயற்பியல் - மற்றும் சில கடல் கருவியாக்கம் மற்றும் தொல்லியல் சார்ந்து நடைப்பெறுகின்றன. இந்நிறுவனம், ஆய்வுக்காக 23 மீ நீளமுள்ள கடல் ஆய்வுக்கலம் (Coastal Research Vessel - CRV) சாகர் சுக்தி எனும் கப்பலை பலதுறைச் சார்ந்த கண்காணிப்பிற்காகப் பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்குநர்கள் புவியியல் அமைச்சகத்தின் பெருங்கடல் ஆய்வுக்கலமான சாகர் கன்யாவிலும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிறுவனத்தின் நூலகத்தில் 15000 க்கும் மேற்பட்ட பனுவல்களும், 20000 க்கும் மேற்பட்ட ஆய்விதழ்களின் படைப்புகளும் நிரப்பப்பட்டுள்ளன. அடிப்படை ஆய்வுகளைத் தவிர்த்து, இந்நிறுவனம் பயனுறு ஆய்வுப்பணிகளையும் தொழில் நிறுவனங்களின் துணையுடன் செயற்படுத்தி வருகின்றது. இதில் கடலியல் தரவுகள் திரட்டல், சுற்றுச்சூழல் தாக்க அலசல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை வியூகிக்கும் வகையில் மாதிரிகளை உருவாக்குதல். இது கடல் மண்டல ஒருங்கிணைப்பு மற்றும் கடற்சூழல் பாதுகாப்பில் பரிந்துரை மற்றும் விளக்கங்களும் அளிக்கின்றன. ஆசிரிய விருத்தம் ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும். இதந்தரு மனையின் நீங்கி பதந்திரு இரண்டும் மாறிப் விதந்தரு கோடி இன்னல் சுதந்தர தேவி நின்னைத் பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன. கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி, பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சீறாப்புராணம் போன்ற பெருங்காப்பியங்களில் மிகப்பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே. சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன. அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை. தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே. இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளேயாகும். சீர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம், பதினான்கு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் எனப் பலவகைப்படும் அறுசீர் அடிகள் நான்கு ஒரே எதுகைஅமைப்பில் வருவது. முதலடியின் சந்த ஒழுங்கு ஏனைய அடிகளிலும் வரும். சந்த ஒழுங்குகள் பலவகையாக அமையும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை, என்பன. சில இடங்களில் மாங்காய்ச்சீர் வரும். வெய்யிற் கேற்ற நிழலுண்டு கையில் கம்பன் கவியுண்டு தெய்வ கீதம் பலவுண்டு வையம் தருமிவ் வளமன்றி மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தம் ‘மா மா காய் மா மா காய்’ எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்துள்ளது. எழுசீரடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. எழுசீர் விருத்தச் சந்தங்களுள் சிறப்பானது ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ என்னும் சந்தமாகும். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம். தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் மேற்காட்டிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது. ‘அணைப்பள்தாய்’ என ஒரு சீர் மட்டும் புளிமாங்காய்ச்சீர். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீர் வந்துள்ளது. எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. பாரதிதாசன் போன்றோர் எண்சீர் விருத்தத்தால் முழுக் காவியங்கள் (பாண்டியன்பரிசு) பாடியுள்ளனர். மிகுந்த பெருவழக்குடைய எண்சீர் விருத்தத்தில் இருவகைச் சந்தங்கள் சிறப்பானவை. காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் மங்களம் பாடுதல் பாரம்பரிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெறும். இதற்கு 'மங்களம் பாடுதல்' எனப்பெயர். வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முடிவில் பாடப்படும் மங்களம் 'வாழிபாடுதல்' என்றழைக்கப்படும். வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவாக கீழ்க்காணும் பாடல் பாடப்படுகிறது. ப - நீநாமரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ச1 - பவமாநஸுதுடு பட்டு பாதாரவிந்தமுலகு பிரஹ்லாத பக்தி விஜய கீர்த்தனைகளிலிருந்து, சௌராஷ்டிரம் இராகத்தில் அமைக்கப்பட்ட இந்த உருப்படியின் சரணத்தை முதலில் சௌராஷ்டிரம் இராகத்திலேயே பாடிவிட்டு பிறகு பல்லவியை மத்தியமாவதி இராகத்தில் பாடி முடிப்பர். இந்த உருப்படியில் 6 சரணங்கள் இருக்கிறது. அர்த்தம்: வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! எனத்தொடங்கும் பாரதியாரின் பாடல் ஒரு புகழ்வாய்ந்த வாழ்த்துப்பாடலாகும். தமிழ் மொழியையும் இந்திய நாட்டையும் வாழ்த்தி வணங்கும் விதமாக இப்பாடலை பாடகர்கள் பாடுகின்றனர். தமிழிசையை முதன்மையாகக் கருதி நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில், பெரும்பாலான பாடகர்களால் இப்பாடல் நிறைவாகப் பாடப்படுகிறது. டி. எஸ். பார்த்தஸாரதி எழுதிய "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
குச்சு குச்சு ரங்கம்மா குச்சு குச்சு ரங்கம்மா என்னும் இந்த விளையாட்டு இரண்டு குழுச் சிறுமியர் பாடி மகிழும் விளையாடு. ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு வட்டங்களில் இரண்டு குழுவினர் அமர்ந்து பாடுவர். (குழுவின் சமநிலை எண்ணிக்கை என்பது வேண்டுவதில்லை) பாடல் சேர்ந்திசைப் பாடலாக இருக்கும். ஒரு குழு வினாப்பாடல் பாடும். மற்றொரு குழு அதற்கு விடைப்பாடல் பாடும். பாடல் மகளிர் திருமணம் பற்றியதாக இருக்கும். சாதி-சனத்தில் பெண் இல்லை, பணத்துக்குப் பெண்ணை விற்பார் இல்லை என்னும் கருத்துக்கள் இந்த விளையாட்டால் சிறுமிகளுக்கு சொல்லப்படும். விடைப்பாடல் இப்படிப் பாடல் பலவாக வளரும் குஞ்சு விளையாட்டு குஞ்சு விளையாட்டு, நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. இது ஓடித்தொடும் விளையாட்டு. ஒரு அணி கோழிக்குஞ்சு. மற்றொரு அணி பருந்து. பருந்து கோழிக்குஞ்சைப் பிடிக்கவேண்டும். ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். அது குஞ்சு பதுங்குமிடம். அதிலிருந்து 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு இருக்கும். அதில் குஞ்சு அணி நிற்கும். அதிலிருந்து 10 அடி தொலைவில் மற்றொரு உத்திக்கோடு. அதில் பருந்து அணி நிற்கும். பொத்தியாளாக இருக்கும் நடுவர் 'உய்' என ஓர் ஒலி எழுப்புவார். பருந்து குஞ்சுகளைப் பிடிக்கும். குஞ்சு ஓடி வட்டத்துக்குள் நின்றுகொள்ளும். இங்கு வந்துவிட்டால் தொட்டால் சேர்த்தி இல்லை. கடைசி ஒருவர் பிடிபடும் வரையில் ஆட்டம். பின் குழு மாறி விளையாடுவர். எத்தனை 'உய்'யில் அணியிலுள்ள அனைவரும் பிடிபடுகிறார்கள் என்பது கணக்கு. அதிக எண்ணிக்கைக் கணக்கில் பிடிபட்டவர் வெற்றி. குத்து விளையாட்டு குத்து விளையாட்டு தமிழக நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாடும் உந்துவேகத்திறன் காட்டும் விளையாட்டு. இதில் பெரியவர்களும் சிறியவர்களோடு கலந்துகொள்வது உண்டு. இரண்டு பேர். ஒருவர் தன் இருகை மணிக்கட்டுகளையும் இணைத்து அடுத்தவர் அதில் குத்துமாறு காட்டிக்கொண்டிருப்பார். மற்றொருவர் அதில் குத்துவார். பிடிவிசையில் மட்டுமே குத்தவேண்டும். குத்தும் கையைப் பிடித்துவிட்டால் குத்தியவரைக் கையைக் காட்டும்படி செய்து தான் குத்தலாம். இந்த வகையில் இது ஒரு மனமகிழ்வு விளையாட்டு. குதிரைக் கல்லு குதிரைக் கல்லு ஒரு சிறுவர் விளையாட்டு. ஒருவகையில் இது குதிரைச் சில்லி விளையாட்டு போன்றது. குதிரைச் சில்லி இருவர் ஆடும் விளையாட்டு. குதிரைக் கல்லு இரண்டு அணியினர் விளையாடும் விளையாட்டு. குதிக்காலால் திருகி ஒரு சிறிய குழி செய்து அதனை உத்திக் குழி என்பர். சுமார் 15 ஆடி தொலைவில் ஒரு உத்திக்கோடு போடுவர். அந்த உத்திக்கோட்டிலிருந்து ஒவ்வொரு அணியிலிருந்தும் மூவர் முன்வந்து சில்லுக்கல்லைக் குழியில் விழுமாறு எறிவர். எந்த அணியினரின் சில்லுக்கல் குழியில் விழுகிறதோ, அல்லது குழிக்கு அருகாமையில் விழுந்து கிடக்கிறதோ அந்த அணியினர் அனைவரும் அடுத்த அணியினர்மீது குதிரை ஏறி சிறிது நேரம் நட்டகச்செய்து திளைக்கலாம். இந்த வகையில் இது ஒரு குறி-விளையாட்டு. குதிரைச் சில்லி குதிரைச் சில்லி என்பது இரண்டு சிறுவர் விளையாடும் ஒர் குறிவிளையாட்டு. இரண்டு பேரில் ஒருவர் குதிரை. மற்றொருவர் சவாரி செய்பவர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு சில்லி இருக்கும். குதிரையாக இருப்பவர் தன்னிடமுள்ள சில்லியை எறிவார். சவாரி செய்பவரைப் பார்த்து "நீ அடிக்கிறாயா, நான் அடிக்கட்டுமா" என்பார். சவாரி செய்பவர் தன் சில்லியால் அவர் எறிந்த சில்லை அடிக்கலாம். அல்லது தன் சில்லைக் குதிரையாரிடம் கொடுத்து அடிக்கச் சொல்லலாம். அடித்தவர் குதிரை ஏறலாம். இருவரும் அடிக்காவிட்டால் எறிந்தவரே மீண்டும் குதிரை ஆகி விளையாடவேண்டும். தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் சுரைக்காய் சுரைக்காய் ("Calabash / Bottle gourd") உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் "Lagenaria siceraria". உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இது இரண்டு அடி நீளம் மற்றும் மூன்று அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும். மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய் தான் .இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும் ,இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா என்று நம்பப்படுகிறது.உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு வாரம் காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் துவங்கும். தொடர்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம் சக்தி 63ஜூல்கள்,கார்போஹைட்ரேட் 3.69கிராம் ,நார்ச்சத்து 1.2கிராம்,கொழுப்பு 0.02கிராம்,ப்ரோடீன் 0.6கிராம்,வைட்டமின் பி1 0.029மில்லிகிராம்,இன்னும் பல சத்துகள் உள்ளது. கொடி (தாவரம்) கொடி (தாவரம்) என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடியது தாவரங்கள் ஆகும். பொதுவாக பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இச்செடிகள் வளரும். பெரும்பாலனாபற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். சில கொடியின செடிகள் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பரிசுத்தொகையினை நூலாசிரியர்களுக்கு ரூபாய் 30, 000 என்றும், பதிப்பகத்தினருக்கு ரூபாய் 10, 000 என்றும் உயர்த்தி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் குதிரைக்குக் காணம் காட்டல் குதிரைக்குக் காணம் காட்டல் என்பது கரணம் போட்டுக் காலால் பந்து எறிந்து விளையாடும் அணி விளையாட்டு. காணம் என்பது கொள். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சுமார் 15 அடி இடைவெளி விட்டுக் கோடு போட்டுள்ள விளையாட்டுத் திடல். துணியில் திரித்த பந்து ஒன்றைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் ஒரு அணியிலிருந்து ஒருவர் வீசுவார். அவ்வாறு வீசும்போது காலோ, கையோ தன் எல்லைக் கோட்டைத் தாண்டவோ, தொடவோ கூடாது. வீசிய பந்து எதிரணியினர் எல்லைக்கோட்டைத் தாண்டி விழவேண்டும். விழாவிட்டால் ஆட்டத்தை இழப்பார். துணிப்பந்து தரையில் விழுவதற்கு முன்பு எதிரணியினர் பிடித்துவிட்டாலும் ஆட்டம் பறிபோகும். அத்துடன் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம். குதிரை ஏறியவரும், குதிரையானவரும் மாறி மாறி உரையாடும் பாடல் பாடுவர். குதிரையானவர் எழுந்துவிடுவார். சவாரி முடிந்துவிடும். அடுத்த ஆட்டம் தொடரும். அவாருவா அவாருவா () (குக் தீவுகளின் மாவோரி மொழியில் 'இரு துறைமுகங்கள்' என பொருள்படும்) நகரம், குக் தீவுகளின் தலைநகரம் ஆகும். இது ரரோட்டொங்கா தீவில் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி அவாருவா மாவட்டத்தின் மக்கட்தொகை 5,445 ஆகும். இது தாபெரே எனப்படும் 18 நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது. கே. ஜே. சரசா கே. ஜே. சரசா ("K.J. Sarasa", இறப்பு: சனவரி 2 2012) தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும், முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார் இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் "சரசாலயா" நடன பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர். கே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார். தென்காசி பெரிய லாலா கடை பெரிய லாலா கடை என்பது தென்காசி நகரிலுள்ள ஒரு இனிப்பு மற்றும் கார வகை பலகார கடையாகும். இக்கடையின் பெயர் கிருஷ்ண விலாஸ் என்பதாகும். இக்கடை தென்காசியில் பெரிய பலகார கடை என்பதால் பெரிய லாலா கடை என்றே அழைக்கின்றனர். 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் கிருஷ்ண சிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்களின் உறவினர்கள் ஆவர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலப்போக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கிய இவர்களின் கோதுமை அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாக சுவையாக இருந்ததால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. தற்போது இக்கடையை கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான சுப்பு சிங், மோகன் சிங் நடத்தி வருகின்றனர். இக்குடும்பத்தினர் அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றாறின் தண்ணீரே என்று கருதுகின்றனர். தாமரைக் கோபுரம் தாமரைக் கோபுரம் எனப்படுவது தற்போது இலங்கையில் அமைக்கப்பட்டுவரும் ஒரு கோபுரமாகும். இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக இது அமையும் என்று கணிக்கப்படுகின்றது. இந்தக் கோபுரக் கட்டுமாணப் பணிகளிற்கான பண உதவித் தொகையான 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக சீன வங்கியான எக்சிம் வங்கி வழங்கியுள்ளது. இந்தக் கோபுரத்தின் கட்டுமாணப் பணிகள் சுமார் 30 மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இக் கோபுரம் கொழும்பின் புற நகர் பகுதியான பாலியகொடையில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் பின்னர் டிசம்பர், 2011 இல் அமைச்சரவை முடிவுக்கு இணங்க கொழும்பு நகரின் மையத்தில் இக்கோபுரத்தை அமைப்பதாக முடிவாகியது.. தலைமன்னார் தலைமன்னார் ("Talaimannar", ) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்த் தீவின் வடமேற்குக் கரைப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியாகும். 1964 டிசம்பரில் இடம்பெற்ற தனுஷ்கோடி புயல் அழிவுகளுக்கு முன்னர் பாக்குநீரிணை ஊடாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் வரை பயணிகள் படகுச் சேவை இடம்பெற்று வந்தது. தலைமன்னார் தனுஷ்கோடியில் இருந்து கிழக்கே 18 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்படகுச் சேவை இந்திய-இலங்கை புகையிரதத் துறையினரால் இராமேசுவரத்தில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்தது. புயலின் அழிவுகள் காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது. இலங்கையின் தென்பகுதிகளை இணைக்கும் தொடருந்து சேவைகள் தலைமன்னாரில் இருந்து மதவாச்சி ஊடாக நடைபெற்று வந்தது. ஈழப்போரை அடுத்து இச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டது. 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து மடு வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 மார்ச் 14 இல் இச்சேவை தலைமன்னார் வரை நீடிக்கப்பட்டது. தலைமன்னாரில் இருந்து மடு வரையிலான முதலாவது சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆரம்பித்து வைத்தார். திருப்பள்ளியெழுச்சி திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும். திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு பொதுவாகக் கன்னிப் பெண்களே கடைப்பிடிப்பர். நோன்புகாலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரைத் துயில் எழுப்பி அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று திருப்பாவையில் கண்ணன் மற்றும் திருவெம்பாவையில் அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். அப்பொழுதில் பாடும் பாடல்களாகவும் இவை கொள்ளப்படுகின்றன. திருப்பதியில் அதிகாலையில் ஆலயத்தில் இசைக்கப்படும் 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. சமஸ்கிருத மொழியிலமைந்த இந்த சுப்ரபாதம், கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் மணவாள மாமுனிகள் ஆணைக்கிணங்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியரால் இயற்றப்பட்டு இன்றளவும் பாடப்பெற்றுவருகிறது. எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலக்ஷ்மியாலே பாடப்பட்டுள்ளது. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது. இவை தவிர சபரிமலையில் அதிகாலையில் 'ஐயப்ப சுப்ரபாதம்' இசைக்கப்படுகிறது, விக்னேஷ்வர சுப்ரபாதம், பாடகர் கே. ஜே. யேசுதாசால் பாடப் பெற்றுள்ளது. =தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி= =மணிவாசகரின் திருப்பள்ளியெழுச்சி= =இவற்றையும் பார்க்கவும்= =மேற்கோள்= பீட்டர் சீமன் பீட்டர் சீமன் ("Pieter Zeeman", 25 மே 1865 - 9 அக்டோபர் 1943) ஒரு டச்சு இயற்பியலாளர். ஜீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும் கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. கேமிலோ கொல்கி கேமிலோ கொல்கி ("Camillo Golgi", 7 ஜூலை 1843 - 21 ஜனவரி 1926) ஒரு இத்தாலிய மருத்துவர் மற்றும் நோய்க்குறியாய்வு வல்லுநர். 1906 ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். ”கோல்கி கருவி” (Golgi Apparatus) என்னும் உயிர்ச்சிற்றணுவைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். எழுகோணம் வடிவவியலில் எழுகோணம் ("heptagon") என்பது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணமாகும். ஏழு பக்கங்களும் ஏழு கோணங்களும் சமமாக உள்ள எழுகோணம் "ஒழுங்கு எழுகோணம்" அல்லது "சீர் எழுகோணம்" எனப்படும். எழுகோணத்தின் பக்கங்கள் சந்திக்கும் கோணம் 5π/7 ரேடியன் அல்லது 128.5714286 பாகைகள் ஆகும். இதன் "ஷ்லாஃப்லி குறியீடு" {7}. "a" -பக்க அளவுள்ள எழுகோணத்தின் பரப்பு: கவராயம், அளவுகோல் கொண்டு தோராயமாக எழுகோணம் வரையும் முறையின் அசைப்படம். நடைமுறைப் பயன்பாட்டுக்காக வரைதலில் 0.2% அளவு தோராயப்படுத்தப்பட்டுள்ளது. "A" சுற்றுவட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளி. வில் "BOC" வரைந்தால், formula_2 என்பது எழுகோணத்தின் தோராயமான பக்க நீளத்தினைத் தரும். formula_3 பக்க அளவுடைய ஒரு ஒழுங்கு எழுகோணத்தை formula_4 ஆரம் கொண்ட வட்டத்துக்குள் 0.00013% -க்கும் குறைவான பிழையுடன் வரைய முடியும். formula_5 இத்தோராயப்படுத்தல் மூலம் இது சாத்தியமாகிறது. இரு நட்சத்திர எழுகோணங்கள் வரையலாம். இணைக்கும் இடைவெளியைக் கொண்டு இவ்விரு எழுகோணங்களின் ஷ்லாஃப்லி குறியீடுகள் {7/2} மற்றும் {7/3} ஆகும்.
ஒரு ஒழுங்கு எழுகோணத்துக்குள் (சிவப்பு) வரையப்பட்ட {7/2} (நீலம்) மற்றும் {7/3} (பச்சை) நட்சத்திர எழுகோணங்கள்.
மூவரை வென்றான் மூவரை வென்றான் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின், மூவரைவென்றான் ஊராட்சியில் உள்ள வருவாய் கிராமம் ஆகும். திருவில்லிப்புத்தூர் அருகே மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்(NH208) உள்ளது. குரங்கு விளையாட்டு குரங்கு விளையாட்டு சிறுவர் சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. உள்வட்டம் ஒன்று, வெளிவட்டம் ஒன்று போடுவர். பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரைக் குரங்கு என்பர். அவரை நடுவில் உள்ள உள்வட்டத்துக்குள் உட்கார வைப்பர். மற்றவர்கள் வெளிவட்டக் கோட்டில் உட்காருவர். உரையாட்டுப்பாடல் நிகழும். பத்து என்றதும் எல்லாரும் எழுந்து ஓடுவர். குரங்கு பிடிக்கவேண்டும். பிடிபட்டவர் குரங்காக்கப்படுவார். ஓடுபவர் குரங்கு இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் தொடக்கூடாது. நவகோணம் வடிவவியலில் நவகோணம் ("nonagon") என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் "ஒழுங்கு நவகோணம்" அல்லது "சீர் நவகோணம்" எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°. "a" -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு: கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ("Indian Council of Agricultural Research" – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இதற்கு முன்னர் இக்குழுமம் வேந்திய வேளாண் ஆய்வுக் குழுமமாக அறியப்பட்டது (Imperial Council of Agricultural Research). இந்நிறுவனம் 1860ல் வேளாணரசு ஆணைக்குழுவின் ஆணைக்கிணங்க 16 சூலை, 1929 ஆம் ஆண்டு சமூககப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுச்சமூகமாக நிறுவப்பட்டது. இக்குழுமமானது வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளில் தலைச்சிறந்த அமைப்பாக இயங்கிவருகிறது. இதில் தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பின் கீழ் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்களும் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இது உலகில் காணப்படும் மிகப்பெரிய தாயக வேளாண் அமைப்புகளுள் ஒன்றாகும். 1950–51 களில் இருந்து வேளாண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பின் மூலம் பசுமைப்புரட்சியில் முதன்மைப் பங்கும் மற்றும் நாட்டின் விவசாய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியதுடன், நாட்டின் உணவுதானிய உற்பத்தியில் 4 மடங்கு கூடுதல் பெருக்கமும், தோட்டப்பயிர்களில் ஆறுமடங்கும், மீன் உற்பத்தியில் ஒன்பது மடங்கும், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் முறையே ஆறு மற்றும் 27 மடங்கும் முன்னேற்றம் பெற காரணமாய் இருந்துள்ளன. இது நாட்டின் வேளாண் கல்வியில் தன்னிகர் அடையும் அளவுக்கு பங்களித்துவருகிறது. இதன் தற்போதைய தலைவர் மத்திய வேளாண் அமைச்சர் [[ராதா மோகன் சிங்]; முனைவர். ஐயப்பன் இதன் தலைமை இயக்குனராகவும் செயற்பட்டு வருகின்றார். அக்டோபர்,2017ன் படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) பின்வரும் நிறுவனங்களை கொண்டுள்ளது.: மத்திய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட [[நிதி ஆயோக்]] பரிந்துரைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள [[மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா)|மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை]] கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. [[பகுப்பு:இந்திய ஆய்வுக் கழகங்கள்]] [[பகுப்பு:இந்திய வேளாண்மை]] [[பகுப்பு:வேளாண்மை நிறுவனங்கள்]] ஈரானின் பொருளாதாரம் ஈரானின் பொருளாதாரம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2015ல் 12ஆவது இடத்தை அடைந்துவிடுவோம் என்று ஈரானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஈரானின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவும் நிலைமாறும் பொருளாதாரமுமாக அதிக அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் 50 சதவீத பொருளாதாரம் பரவலானத் துறைகளிலும் திட்டமிடபட்டதாக உள்ளது. பரந்துப்பட்ட பொருளாதாரத்தை கொண்டதாகவும், 40 தொழில்துறைகள் ஈரான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. 2010ல் ஈரான் அரசிற்கு அதிக வருவாயை ஈரானின் பெட்ரோலியத் துறை பெட்ரோல் ஏற்றுமதி மூலம் பெற்றுத் தந்தது. மனாமா மனாமா (, ), பஹ்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை அண்ணளவாக 155,000 ஆகும். நீண்ட காலமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் இந்நகரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போர்த்துக்கேயர்களினதும் பாரசீகர்களினதும் ஆதிக்கம் மற்றும் அல் சவூத், ஓமானின் படையெடுப்புகளின் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடானது. பஹ்ரைனின் எண்ணேய் வளத்தின் பயனாக, இருபதாம் நூற்றாண்டில் துரித வளர்ச்சியடைந்த இந்நகரம் மத்திய கிழக்கில் ஒரு பிரதான பொருளாதார மையமாக உள்ளது. சார்ல்ஸ் நைட்லி சார்ல்ஸ் நைட்லி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. சார்ல்ஸ் நாட் சார்ல்ஸ் நாட் ("Charles Knott ", பிறப்பு: நவம்பர் 26 1914 , இறப்பு: பிப்ரவரி 27 2003), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 173 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1938-1957 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சார்ல்ஸ் நாட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. ஜேம்ஸ் நாட் ஜேம்ஸ் நாட் ("James Knott ", பிறப்பு: சூன் 14 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995-1998 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் நாட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. கிரைக் ஜென்னிங்ஸ் கிரைக் ஜென்னிங்ஸ் ("Craig Jennings ", பிறப்பு: நவம்பர் 13 1983 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரைக் ஜென்னிங்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. ஜான் ஜெனெர் ஜான் ஜெனெர் ("John Jenner ", பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1807-1826 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் ஜெனெர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. கிரகாம் நௌல்ஸ் கிரகாம் நௌல்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. ஹெர்பெர்ட் ஜெனெர் ஹெர்பெர்ட் ஜெனெர் ("Herbert Jenner ", பிறப்பு: பிப்ரவரி 23 1806 , இறப்பு: சூலை 30 1904), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1825-1838 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெர்பெர்ட் ஜெனெர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. சார்ல்ஸ் கோர்ட்ரைட் சார்ல்ஸ் கோர்ட்ரைட் ("Charles Kortright ", பிறப்பு: சனவரி 9 1871 , இறப்பு: திசம்பர் 12 1952), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 170 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1893-1907 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சார்ல்ஸ் கோர்ட்ரைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. பிரயன் கிரிக்கன் பிரயன் கிரிக்கன் ("Brian Krikken ", பிறப்பு: ஆகத்து 26 1946 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1966-1969 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் கிரிக்கன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. கார்ல் கிரிக்கன் கார்ல் கிரிக்கன் ("Karl Krikken ", பிறப்பு: ஏப்ரல் 9 1969 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 214 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 202 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988-2003 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கார்ல் கிரிக்கன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. ஹெர்பெர்ட் ஜென்னெர்-ஃபஸ்ட் ஹெர்பெர்ட் ஜென்னெர்-ஃபஸ்ட் (" Herbert Jenner-Fust", பிறப்பு: ஆகத்து 14 1841, இறப்பு: நவம்பர் 11 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1875 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஹெர்பெர்ட் ஜென்னெர்-ஃபஸ்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. ஸ்டீவன் ஜென்கின்ஸ் ஸ்டீவன் ஜென்கின்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. செசில் ஜென்கின்சன் செசில் ஜென்கின்சன் ("Cecil Jenkinson ", பிறப்பு: மே 15 1891, இறப்பு: நவம்பர் 6 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1922-1923 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செசில் ஜென்கின்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்(Karl Ferdinand Braun' 6 ஜுன் 1850 – 20 ஏப்ரல் 1918). ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர். இயற்பியலாளர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறையில் ஆய்வு செய்து, வானொலியைக் கண்டறிந்த அறிஞர் மார்க்கோனியுடன் 1909-ல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர். கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மனியில் உள்ள 'ஹெஸ்ஸன் கேசல்' என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் 1850 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன. அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு 'மார்பர்க் பல்கலைக் கழகத்தில்' (University of Marburg) சேர்ந்தார். பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு மாறி அங்கு இயற்பியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். 1872-ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1885-ல் அமெலி புக்லர் என்ற பெண்ணை மணந்தார். உர்சுபர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் "குயிங்க்" என்பவரின் உதவியாளராகப் பணி புரிந்தார். 1874-ல் லெய்ப்சிக் என்ற ஊரில் உள்ள "புனித தாமஸ் பள்ளியில்" ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு "மார்பர்க் பல்கலைக்கழகத்தில்" கோட்பாட்டு இயற்பியலில் மிகச் செறந்த பேராசிரியர் என்ற வகையில் பணியில் அமர்த்தப்பட்டார். 1880-ல் "ஸ்டாஸ்பர்க் பல்கலைக் கழகத்தில்" அதே பணிக்கு அழைக்கப்பட்டார். 1883-ல் கார்ல்ஸ்குகே என்ற ஊரில் அமைந்திருந்த தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியில் 1885-ல் 'டூபின்சன் பல்கலைக்கழகத்தில்' சேர்ந்து பணியாற்றினார். அங்கு புதிய இயற்பியல் கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1895-ல் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு இயற்பியல் கல்வி நிறுவனத்தின் முதல்வராகப் பணியில் அமர்ந்தார். மீள்சக்தியுடைய கம்பிகள், சுருள்கள் ஆகியவற்றின் அலைவுகள் (Oscillations of strings and elastic)குறித்து இவருடைய முதல் ஆய்வு அமைந்தது. கம்பிகள் இயங்கும் சூழ்நிலை, கம்பி அசையும் வீச்சின் தனமை ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் அலைவுகள் எவ்வாறு அமைகின்றன என ஆரய்ந்தார். வெப்ப இயக்கவியல் கொள்கையையும், திடப்பொருள்களின் கரை தன்மை, அழுத்தத்தைப் பொருத்து எவ்வாறு மாற்றமடைகின்றன என்ற ஆய்வினையும் மேற்கொண்டார். இவருடைய முதன்மையான ஆய்வுப்பணிகள் மின்னியலைப் பொருத்தே அமைந்தன. ஓம் விதியிலிருந்து மாறுபட்டவைகள் பற்றியும், வெப்ப மூலங்களிலிருந்து மீளும் தன்மை கொண்ட தனிமங்களில் மின்னியக்கு விசையைக் கணக்கிடுவது பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். மின் பகுளிகளில் கரைந்துள்ள உலோக உப்புகளின் மின் கடத்தும் தன்மை பற்றி ஆய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அவற்றில் கரையாத உலோக சல்பைடு படிகங்கள், பிற படிக வடிவமுள்ள திடப் பொருள்களின் மின்கடத்தும் தன்மை பற்றி ஆராய்ந்தார். பல உலோக சல்பைடுகளில் மின்தடையின் அளவு செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் திசைகள் மற்றும் அளவுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதைக் கண்டறிந்தார். காரீய சல்பைடு கலந்த குறை மின்கடத்தியான கலினா(galena) என்ற படிகத்தின் மின் திருத்தும் தன்மையை இரு மின்வாயாக உருவாக்கிப் பயன்படுத்தினார். இதுதான் அன்றைய முதல் குறை மின்கடத்தியாகும். அப்போது அதை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை எனினும் 1948 -இலிருந்து இது அதிகமாகப் பயன்பட ஆரம்பித்தது. பிரவுன் இருபது ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரியப் பணியிலும், இயற்பியல் தொடர்பான ஆய்வுகளிலுமே கவனம் செலுத்தினார். பலவிதமான மின்னாய்வுக் கருவிகளை உருவாக்கினார். 1897-ல் எதிர்மின் கதிர் அலையியற்றி ( Cathode ray oscillograph) ஒன்றையும் மின்னோட்டமானி (Eloctrometer) ஒன்றையும் உருவாக்கினார்.. இவர் அதற்கான காப்புரிமையைப் பெறவில்லை ஆனால் அது எப்படி இயக்கப்பட வேண்டும் என்பதை எவரும் புரிந்துகொள்ளும்படி விளக்கக்கட்டுரையாக எழுதி வெளியிட்டார். இவர் இவற்றை உருவாக்கிய சமயத்தில்தான் எதிர்மின் கதிர்கள் வெளியேற்றப்படுவது பற்றிய கருத்துகள் வெளியாயின. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1898-இல் கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வுகளில் கவனஞ்செலுத்தினார். அதிக அதிர்வெண் கொண்ட மின்னோட்டத்தின் உதவியுடன் நீரின் வழியே மோர்ஸ் சைகைகளைப் பரப்பினார். அலைவின் மூடிய சுற்றை இதில் அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட திசைகளில் மின் சைகைகளைச் செலுத்தினார். 1902-ல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார். "நீரிலும், காற்றிலும் கம்பியில்லாத் தந்திமுறை" என்ற தலைப்பில் இவற்றை விவரமாக எழுதி வெளியிட்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு சட்டப்பூர்வமான காப்புரிமை பற்றிய ஒரு வழக்கில் சாட்சி கூறுவதற்காக அமெரிக்கா சென்றார். அதன்பின் இவர் ஆய்வுகளில் ஈடுபடவில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தை அமெரிக்காவில் கழித்த இவர் 1918, ஏப்ரல் 20 ஆம் நாள் அங்கு காலமானார். ரோரி ஜென்கின்ஸ் ரோரி ஜென்கின்ஸ் ("Rory Jenkins ", பிறப்பு: சூன் 29 1970 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990-1993 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரோரி ஜென்கின்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. பவுல் ஜென்கின்ஸ் பவுல் ஜென்கின்ஸ் (" Paul Jenkins", பிறப்பு: பிப்ரவரி 8 1972 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1999 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பவுல் ஜென்கின்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012. வில்லியம் ஹென்றி பிராக் சர் வில்லியம் ஹென்றி பிராக் ("William Henry Bragg", 2 சூலை 1862 – 12 மார்ச் 1942). பிரித்தானிய இயற்பியலாளர். வேதியலாளர், கணதவியலாளர். படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காககவும், 1915 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினைத் தனது மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் உடன் சேந்து பகிர்ந்து கொண்டவர். எச். என். ரிட்லி சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி ("Henry Nicholas Ridley", 10 டிசம்பர் 1885 - 24 அக்டோபர் 1956) என்பவர் மலாயாவில் (இப்போதைய மலேசியா) ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவருடைய படங்கள் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் இன்றும் இருக்கிறது. அந்த மரத்தின் வயது 135. ‘ரப்பர் ரிட்லி’ என்று அன்பாக அழைக்கப்படும் சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி, இங்கிலாந்தில் உள்ள நார்போல்க் எனும் இடத்தில் 10 டிசம்பர் 1885 ஆம் தேதி பிறந்தார். தகப்பனாரின் பெயர் ஆலிவர் மேத்தியூ ரிட்லி. தாயாரின் பெயர் லூயிசா போல். ரிட்லி கைக் குழந்தையாக இருக்கும் போதே தாயார் இறந்து விட்டார். இவர் சிறுவனாக இருந்த போது தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை மிகவும் விரும்பி ரசித்தார். எதிர்காலத்தில் தான் ஓர் இயற்கைவியலாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். 1877ஆம் ஆண்டு அறிவியல் துறையில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பிரித்தானிய அரும்பொருள் காப்பகத்தில் ஓர் உதவியாளராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ரிட்லி போகின்ற இடங்களுக்கு எல்லாம் ரப்பர் கொட்டைகளை எடுத்துச் செல்வார். அங்கு உள்ளவர்களிடம் அந்தக் கொட்டைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்வார். அவர் மேற்கொண்ட தீவிரமான பிரசாரங்களினால் பலர் ரப்பர் கன்றுகளை நட்டனர். முதன்முதலாக 22 ரப்பர் கன்றுகள் சிங்கப்பூருக்கு இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து ஒன்பது கன்றுகளை ரிட்லி 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. கொண்டு வரப்பட்ட கன்றுகளில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. எஞ்சிய 13 கன்றுகள் சிங்கப்பூரில் நடப்பட்டன. அவற்றில் இரண்டு கன்றுகள் மட்டுமே பிழைத்தன. அந்த இரண்டும் பெரிய மரங்களாகி சிங்கப்பூரியர்களுக்கு காட்சி பொருளாக அமைகின்றன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றின் வயது 135. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகள் எடுக்கப்பட்டு மலாயாவின் மற்ற பகுதிகளில் நடப்பட்டன. அந்த ஒரே ஒரு மரத்தின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. அந்தக் கன்றுகள் ஒட்டுக் கட்டப்பட்டு புதிய வகை கன்றுகள் உருவாக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா உருவானது. மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் எஞ்சிய ஒரே ஒரு கன்று வளர்ந்து பெரிய மரமாகி இன்னும் கோலாகங்சாரில் மலேசிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்சிப் பொருளாக உள்ளது. கோலா கங்சார் கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன்பாக அந்த மரம் இருக்கிறது. இப்போது அந்த மரத்திற்கு வயது 135 ஆகின்றது. ரப்பர் மரத்தின் பாலை மரத்திற்கு காயம் படாமல் சேகரிக்கும் புதிய அணுகு முறைகளை ரிட்லி உருவாக்கினார். ரப்பர் மரத்தின் பட்டைகளைச் சேதப்படுத்தாமல் சீவி எடுக்கும் முறையை உருவாக்கிக் கொடுத்த பெருமை ரிட்லி அவர்களையே சாரும். அந்தப் புதிய முறை மலாயா மக்களிடையே வெற்றி கண்டது. மலாயாவில் காபி தோட்டங்கள் போட்டவர்கள் எல்லாம் ரப்பர் கன்றுகளை நடத் தொடங்கினர். அதன் பின்னர், மலாயாவின் மூலை முடுக்குகள் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் தோன்றின. ரிட்லி போகும் இடங்களுக்கு எல்லாம் ரப்பர் விதைகளை தன் கால்பைக்குள் நிறைத்துக் கொண்டு போவார். யார் யாரைப் பார்க்கிறாரோ அவர்களிடம் எல்லாம் அந்த விதைகளைக் கொடுத்து நடச் சொல்லுவார். அவரே நட்டும் கொடுப்பார். அவர் மலாயாவில் இருந்த 30 ஆண்டு காலத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தார். மலாயாவில் ரப்பர் தொழில்துறை துளிர் விட்டு வளர்ந்தது. ரிட்லியின் செல்லப்பெயர் ’திருவாளர் ரப்பர்’. சில இடங்களில் அவரை ’பைத்தியக்கார ரிட்லி’ என்றும் அழைத்தனர். அவருக்கு பலவித தடங்கல்கள், பலவித ஏச்சு பேச்சுகள், பலவகையான நெருக்குதல்கள் வந்தன. இருப்பினும், அவற்றையும் எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுடைய ரப்பர் பயிரிடும் முறையை அமல்படுத்துவதிலேயே விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். ஒரு கட்டத்தில் அவர் மனமுடைந்து இங்கிலாந்திற்கு திரும்பி விடலாமா என்று கருதினாலும் மலேசிய ரப்பர் மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் அவ்வாறு செல்லவில்லை. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ரப்பர் தொழிலை மேம்படுத்துவதிலேயே செலவழித்தார். மலாயா உலகப் பொருளாதார அரங்கில் இடம்பெற ரிட்லியே காரணமாவார். 1912 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். அங்கு போயும் தாவர ஆராய்ச்சிகளைச் செய்தார். இருப்பினும், மலாயாவில் அவர் விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அவரை விடவில்லை. 1917-இல் ஐந்து ஆண்டுகள் கழித்து மறுபடியும் சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் வந்தார். அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1922-இல் மறுபடியும் வந்தார். அவருக்கு 83 வயதாகும் போது லில்லி எலிசா டோரான் எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1953-இல் அவரால் சரிவர நடக்க முடியாமல் போய்விட்டது. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலாயாவில் உள்ள நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதி ரப்பர் மரங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார். அவருடைய 93ஆவது வயதில் கண் பார்வையை இழந்தார். அடுத்து செவிப் புலன்களின் தனமைகளையும் இழந்தார். இருந்தாலும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் மலாயாவைப் பற்றியும் அங்கு இருக்கும் ரப்பர் மரங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார். 24 அக்டோபர் 1956-இல் தன்னுடைய 101ஆவது வயதில் இங்கிலாந்தில் உள்ள சுர்ரேயில் சர்.ரிட்லி காலமானார். அவரின் நினைவாக உலகப் புகழ்பெற்ற கியூ தாவரவியல் பூங்காவில் ஒரு பகுதியை ரிட்லி பூங்கா என்றும் பெயர் சூட்டி அவருக்கு சிறப்பு செய்துள்ளனர். அவருடைய படங்கள், ஆய்வு நூல்கள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு மலேசிய அரும் பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மலேசியாவில் கோலாகங்சார், சுங்கை சிப்புட், தைப்பிங், ஈப்போ, ஜொகூர் பாரு, மலாக்கா போன்ற நகரங்களில் உள்ள பல சாலைகளுக்கு ரிட்லி சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலாயா, சிங்கப்பூர் நிலப்பகுதிகளில் அவர் ஆற்றிய தாவரவியல் சேவைகளுக்காக அவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. அவற்றுள் மிக முக்கியமானது இங்கிலாந்தின் ‘சர்’ பட்டம். இந்தப் பட்டம் 1911ஆம் ஆண்டு கிடைத்தது. அடுத்தபடியாக, 1907ஆம் ஆண்டு பிரித்தானிய வேந்திய அறிவியல் கழகத்தின் சக ஆய்வாளர் ("Fellow of the Royal Society") எனும் கல்வி விருது அவருக்கு வழங்கப்பட்டது. மலாயா மற்றும் சிங்கப்பூரிலிருந்து அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆய்வாளர் ரிட்லி. அதற்கு முன்னர் சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டான்பர்ட் ராபில்ஸுக்கு கிடைத்தது. உலகின் பல கலைக்களஞ்சியங்களிலும் ரிட்லியின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரை ரப்பர் தொழில்துறையின் தந்தை ("Father of the Rubber industry") எனும் அடைமொழியுடன் சிறப்பு செய்கின்றன. இயற்கை ரப்பரை தென்கிழக்கு ஆசியாவில் பிரபலம் செய்த மனிதர் என்றும் புகழாரம் செய்கின்றன. குலையா குலையா முந்திரிக்காய் குலையா குலையா முந்திரிக்காய் அல்லது குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் கூடி விளையாடும் திளைப்பு விளையாட்டு. இதனை 'ஆனைத்திரி', 'திரி திரி பந்தம்' என்றும் பாடப்படும் பாடலுக்கேற்பப் பெயரிட்டு வழங்குவர். விளையாடுவோர் அனைவரும் வட்டமாக உட்காருவர். ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார். அப்போது அவர் பாடிக்கொண்டே வருவார். அமர்ந்திருப்போரில் ஒருவருக்குப் பின்னால் அவருக்குத் தெரியாமல் துணித்திரியை வைத்துவிட்டு மீண்டும் தன் கையில் துணி இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டு பாடிக்கொண்டே வருவார். தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு திரி வைத்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணித்திரியால் அடித்துக்கொண்டே வருவார். அடிபடுபவர் துரத்தி அடிப்பவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் திரி உள்ளவர் பாடிவர ஆட்டம் தொடரும். தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார். இதுதான் விளையாட்டு. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடி படுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற திளைப்புகள் இந்த விளையாட்டில் உண்டு. இவ்வாறு சுற்றிவருபவர் மட்டும் பாடுவார். தனக்குப் பின்னால் திரி வைக்கிறாரா என்று திரும்பிப் பார்ப்பவர் தலையில் ஒரு குட்டும் போடுவார். திரும்பத் திரும்பப் பாடப்படும் பிரான்சிஸ் லேசி ஃபிரான்சிஸ் லேசி ("Francis Lacey ", பிறப்பு: அக்டோபர் 19 1859, இறப்பு: மே 26 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 50 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1880-1897 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரான்சிஸ் லேசி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. சைமன் லேசி சைமன் லேசி ("Simon Lacey ", பிறப்பு: மார்ச்சு 9 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997-2000 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சைமன் லேசி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. லூயிஸ் ஜென்கின்ஸ் ஸ்டீவன் ஜென்கின்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. மார்ட்டின் ஜென்கின் மார்டின் ஜென்கின் (" Martin Jenkin ", பிறப்பு: மார்ச்சு 1 1975 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2002 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மார்டின் ஜென்கின் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஃபிரடெரிக் ஜெலிகோ ஃபிரடெரிக் ஜெலிகோ ("Frederick Jellicoe ", பிறப்பு: பிப்ரவரி 24 1858, இறப்பு: சூலை 29 1927) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877-1880 ஆண்டுகளில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரடெரிக் ஜெலிகோ கிரிக்கட் ஆக்கைவ் - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. பால் டிராக் பால் அட்ரியென் மாரிசு, டிராக், ஓஎம் "(Paul Adrien Maurice Dirac, OM )" (ஆகஸ்டு 8,1902 பிரிஸ்டல் – அக்டோபர் 20 டலகாசி என்பவர் ஆங்கிலநாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலர் ஆவார். இவருடைய தந்தை சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியில் இருந்து வந்தவர் ஆவார். எர்வின் சுரோடிங்கரின் அலை விசையியல் வெர்னர் ஐசன்பர்க்கின் அணி விசையியல் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை 1926 ஆம் ஆண்டில் உருவாக்கினார். 1928 ஆம் ஆண்டில் இவர் டிராக் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார். மற்றும் இவர், குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். பருப்பொருளுக்கு எதிரான எதிர்ப் பருப்பொருளின் இருப்பை முன்கணித்துக் கூற டிராக் சமன்பாடு இவருக்கு வழிகொடுத்தது. 1933 ஆம் ஆண்டு இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் வென்றார். 1932 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் 1972 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராகவும் பணியாற்றினார். கிரெயில் ஆய்வகம் புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் ("Gravity Recovery and Interior Laboratory", GRAIL) ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் கீழ் நிலவினைக் குறித்த அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். இது நிலவின் உயர்தர புவியீர்ப்பு புல வரைவைக் கொண்டு அதன் உள்ளக கட்டமைப்பை தீர்மானிக்கப் பயன்படுத்தும். ஒரே டெல்டா இரக விண்கல ஏவுபொறி மூலம் செப்டம்பர் 10, 2011 அன்று இரண்டு சிறிய விண்கலங்கள் கிரெயில் A மற்றும் கிரெயில் B விண்வெளியில் செலுத்தப்பட்டன. கிரெயில் ஏ ஏவப்பட்டதில் இருந்து ஒன்பதாவது நிமிடத்திலும் கிரெயில் B எட்டு நிமிடங்கள் கழித்தும் ஏறிபொறியிலிருந்து பிரிந்தன. தங்களுக்கான நிலவின் சுற்றுகையில் 24 மணி நேரங்கள் இடைவெளியில் சேர்ந்தன. முதல் துருவிக் கலம் திசம்பர் 31, 2011 அன்றும் இரண்டாவது சனவரி 1,2012 அன்றும் தங்களுக்கான சுற்றுப் பாதையில் வந்தடைந்தன. சொ. கருப்பசாமி சொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தசகோணம் வடிவவியலில் தசகோணம் ("decagon") என்பது பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம் ஆகும். சமபக்கங்களும் சமகோணங்களும் கொண்டஒரு தசகோணம் "ஒழுங்கு தசகோணம்" அல்லது "சீர் தசகோணம்" எனப்படும். ஒழுங்கு தசகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 144°. இதன் "ஷ்லாஃப்லி குறியீடு" {10}. "t" பக்க அளவு கொண்ட ஒழுங்கு தசகோணத்தின் பரப்பு காணும் வாய்ப்பாடு: மற்றொரு வாய்ப்பாடு: "d" என்பது தசகோணத்தின் இரு இணைபக்கங்களுக்கு இடையேயுள்ள தூரம் அல்லது தசகோணம் அதன் ஒரு பக்கத்தை அடியாகக் கொண்ட நிலையில் தசகோணத்தின் உயரம். "d" -ன் மதிப்பு: ஓரலகு வட்டத்துக்குள் வரையப்பட்ட ஒரு ஒழுங்கு தசகோணத்தின் பக்க நீளம்: இங்கு "ϕ" = formula_5 -தங்க விகிதம். கவராயம் மற்றும் நேர்விளிம்பு கொண்டு ஒரு ஒழுங்கு தசகோணத்தை வரைய முடியும்: இதேபோன்ற மற்றொரு வரைமுறை: ஒழுங்கு தசகோணத்தின் பத்து முனைகளையும், ஒவ்வொரு மூன்றாவது முனையுடன் இணைத்தால் ஒரு நட்சத்திர தசகோணம் {10/3} கிடைக்கும். , {10/2} நட்சத்திர தசகோணமானது இரண்டு ஐங்கோணங்களாகவும் (2{5}) மற்றும் {10/4} நட்சத்திர தசகோணமானது இரண்டு நட்சத்திர ஐங்கோணங்களாகவும் (2{5/2})உள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திர தசகோணங்களின் படங்கள் முறையே: கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது கட்டுரை, கவிதை, புனைக்கதை, நாடகம், ஆங்கிலப் படைப்புகள் மற்றும் பிற மாநில மொழி ஆகிய 6 பிரிவுகளில் அளிக்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்படுத்தியுள்ள (பபாசி) அறக்கட்டளையின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு சிறந்த முறையில் பங்களிக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கொருமுறை அளிக்கப்படும் விருதாகும். 2007 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 30 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கிய ரூபாய் ஒரு கோடியில் அறக்கட்டளை ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த அறக்கட்டளையின் பெயரில் ஒரு கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வங்கி வட்டி வருமானம் மூலம் வருடம் தோறும் தமிழ் எழுத்தாளர்கள் நான்கு பேர், பிற இந்திய மொழிகளுக்கான எழுத்தாளர் ஒருவர், ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஒருவர் என மொத்தம் ஆறு எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. 2008 ம் ஆண்டு முதல் இவ்விருது அளிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள். 2010 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள். 2011 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள். 2017 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற எழுத்தாளர்கள். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் ("Council of Scientific and Industrial Research" - CSIR) தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகும். இது 1942 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றம் (Central Legislative Assembly) எடுத்த தீர்மானத்தின் படி, 1860 சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் 39 ஆய்வகங்களையும் மற்றும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதில் 17000 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டப்பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், மாழையியல், வேதி, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சூழல் ஆகியனவற்றில் ஆளுகைச் செலுத்தி வருகின்றன. [[பகுப்பு:இந்திய ஆய்வுக் கழகங்கள்]] செவ்வக எண் கணிதத்தில் செவ்வக எண் ("rectangular number") என்பது இரு அடுத்தடுத்த முழு எண்களின் பெருக்குத்தொகையாக அமையும் எண்ணாகும். "n" -ஆம் செவ்வக எண்: "n" ("n" + 1). இது "n"-ஆம் முக்கோண எண்ணைப்போல் இருமடங்காகவும் "n" -ஆம் சதுர எண்ணைவிட "n"-அளவு அதிகமாகவும் இருக்கும். முதல் செவ்வக எண்களில் சில : பலகோண எண்களைப் போல இவ்வெண்கள் கீழே உள்ளவாறு செவ்வக வடிவில் அமைகின்றன: செவ்வக எண்ணை "n"² + "n" என எழுதலாம். "n"-ஆம் செவ்வக எண்ணானது முதல் "n" இரட்டை முழு எண்களின் கூடுதலாகவும், (2"n" − 1)² மற்றும் "n"-ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசமுமாகவும் இருக்கும்.. அனைத்து செவ்வக எண்களும் இரட்டை எண்களாக இருப்பதால் 2 மட்டுமே பகா எண்ணாக உள்ள ஒரு செவ்வக எண். மேலும் 2 மட்டுமே ஃபிபனாச்சி தொடர் வரிசையிலுள்ள செவ்வக எண்ணாகவும், செவ்வக "லூகாஸ் எண்"ணாகவும் உள்ளது. எந்தவொரு சதுர அணியிலும் மூலைவிட்ட உறுப்புகள் தவிர மற்ற உறுப்புகளின் எண்ணிக்கை ஒரு செவ்வக எண்ணாக இருக்கும். இலா பட் இலா பட் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். சேவா (SEWA - Self-Employed Women's Association of India) என்ற பெண்களுக்கான சேவை அமைப்பை உருவாக்கியவர். இவர் தமது சமூக சேவைகளுக்காக 1977 ஆம் ஆண்டு சமூகத் தலைமை பிரிவில் ரமோன் மக்சேசே விருது பெற்றார். அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் (Rockefeller Foundation) அறங்காவலர்களில் ஒருவராகவும் உள்ளார். 1979 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கான உலக வங்கி நிறுவனர்களில் ஒருவர். இவர் தமது சமூக சேவைக்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விருதுகளை பெற்றுள்ளார். தொலைவுக் கல் தொலைவுக்கல் என்பது போக்குவரத்துப் பாதையில் அடுத்துள்ள முக்கிய ஊருக்கான தொலைவைக் காண்பிப்பதற்காக நடும் ஒரு கல்லாகும். இந்தக் கல்லில் அடுத்துள்ள முக்கிய ஊரின் பெயரும் அதன் கீழ் அந்தக் கல்லிலிருந்து குறிப்பிடப்பட்ட முக்கிய ஊருக்கான தொலைவும் கிலோமீட்டர் அளவில் தரப்பட்டிருக்கும். இந்தியாவில் பல மொழிகள் பயன்பாட்டிலுள்ளதால், அந்தக் கல்லில் கல் நடப்பட்டுள்ள மாநிலப் பகுதியின் பயன்பாட்டிலுள்ள மொழியிலும் அதன் கீழ் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர் இடம் பெற்றிருக்கும். சில கற்களில் பயன்பாட்டிலுள்ள மேலும் சில மொழிகளும் குறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் தொலைவு கிலோ மீட்டர் அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இவை முதன்மைத் தொலைவுக்கற்களாகும். முன்பு இக்கற்களில் பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தொலைவுகளை அளக்கப் பயன்படும் மைல் நீள அலகு கணக்கில் குறிப்பிட்டதால் மைல் கற்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இரு முதன்மைக் கற்களுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவிலான கற்கள் நடப்பட்டிருக்கின்றன. சாற்றுக்கவி சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும். வள்ளலார் என அழைக்கப் பெற்ற இராமலிங்க அடிகளாரிடம் பலர் சாற்றுக்கவிகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள் முத்துக்கிருஷ்ண பிரமம் எழுதிய நீட்டானுபூதி உரை, மதுரை ஆதீனம் சிதம்பர சுவாமிகள் பதிப்பித்த சிதம்பர புராணப் பதிப்பு, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூல் போன்றவற்றிற்கு சாற்றுக்கவிகள் குறிப்பிடத்தக்கவையாகும். ஒஸ்டின் ஜெல்ப்ஸ் ஒஸ்டின் ஜெல்ப்ஸ் (" Austin Jelfs ", பிறப்பு: ஆகத்து 29 1949 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1991 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஒஸ்டின் ஜெல்ப்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஹென்ரி ஜெல்ப் ஹென்ரி ஜெல்ப் ("Henry Jelf ", பிறப்பு: ஆகத்து 27 1877, இறப்பு: ஏப்ரல் 18 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910-1911 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹென்ரி ஜெல்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஆய்க்குடி ஆய்க்குடி () (AYIKUDI) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி ஆகும். பொதிகை மலையடிவாரத்தில், தென்காசி - சுரண்டை செல்லும் பாதையில் அமைந்த ஆய்க்குடி ஊரைச் சுற்றி தென்னந்தோப்புகளும், வெற்றிலை கொடிக்கால்களும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற கம்பிளி மகாலிங்கம் கோவில் மற்றும் பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில்கள் உள்ளன. கம்பிளி மகாலிங்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அருகமைந்த தொடருந்து நிலையம், தென்காசி ஆகும். திருநெல்வேலியிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்த ஆய்க்குடிக்கு வடக்கில் அனுமான் ஆறும், கிழக்கில் சுரண்டையும், தெற்கில் தென்காசியும், மேற்கில் செங்கோட்டையும் உள்ளது. 8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 4,088 வீடுகளும், 15,129 மக்கள்தொகையும் கொண்டது. பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் குறிப்பிடுவர். இவர் பெயரை ஆய்க்குடி என அழைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்களின் படையெடுப்பினால், இந்தியாவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்க்குடி கேரளா ஒரு பகுதியாக உள்ளது மற்றும் இன்று வரைக்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணியம் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. குறிப்பு: புறநானூறு 132 ,134 கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களால் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நாகம் நல்கி மகாலிங்க, ஆலமர் செல்வதற்க்கு கொடுத்தவன் ஆய் என்று சிறு பாணாற்றுப் படை (96-99) கூறுகின்றது. இவை அனைத்தும் ஆய்க்குடி என்று பெயர் வந்ததற்கும் ஒரு சாட்சி சான்றாக திகழ்கின்றது என்பது உண்மை. புறநானூறு 132, 144 போன்ற பகுதிகளில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில் நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான் தோய் இமயம் தென் திசை ஆஅய்குடி இன்றாயின் பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”. இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும், தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும். முன்னொரு காலத்தில் ஆய்க்குடியில் இயற்கை வளம், நாகரிகம், பண்பாடு மற்றும் ஆன்மீக போன்றவை இமையமலைக்கு இணையாக உள்ளது என்பதை புறநானூறு நூல்கள் விளக்குகிறது. [[[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] டேவிட் லேசி-ஸ்காட் டேவிட் லேசி-ஸ்காட் ("David Lacy-Scott ", பிறப்பு: ஆகத்து 18 1920), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1946-1948 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் லேசி-ஸ்காட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஜேம்ஸ் லாட்புரோக் ஜேம்ஸ் லாட்புரோக் ("James Ladbroke ", பிறப்பு:1772, இறப்பு: மார்ச்சு 23 1847), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1800-1826 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் லாட்புரோக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ரொனால்ட் லாக்டன் ரொனால்ட் லாக்டன் ("Ronald Lagden ", பிறப்பு: நவம்பர் 21 1889, இறப்பு: மார்ச்சு 1 1915), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1909-1912 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரொனால்ட் லாக்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. டேவிட் லெய்ட் டேவிட் லெய்ட் ("David Laitt ", பிறப்பு: மே 3 1931, இறப்பு: சூன் 27 1998), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1959-1960 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் லெய்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. பிரயன் ஜெப்ரீஸ் பிரயன் ஜெப்ரீஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. பிரயன் லெய்டி பிரயன் லெய்டி ("Brian Laity ", பிறப்பு: அக்டோபர் 20 1935, இறப்பு: மார்ச்சு 22 2007 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1970-1977 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் லெய்டி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ் ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ் ("Arthur Frederick Jeffreys ", பிறப்பு: ஏப்ரல் 7 1848 , இறப்பு: ஆகத்து 14 1906 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1872-1879 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. கிரகாம் லேக் கிரகாம் லேக் (" Graham Lake ", பிறப்பு: ஏப்ரல் 13 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1956-1958 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரகாம் லேக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. பீட்டர் லேகர் பீட்டர் லேகர் (" Peter Laker ", பிறப்பு: திசம்பர் 5 1926 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948-1949 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் லேகர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. ஆத்தர் லாம்ப் ஆத்தர் லாம்ப் ("Arthur Lamb ", பிறப்பு: திசம்பர் 17 1868, இறப்பு: ஆகத்து 26 1908 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1895-1896 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆத்தர் லாம்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012. விரிச்சி (வெட்சி) தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் விரிச்சி என்பது அகத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பொதுவாக "விரிச்சி" என்பது வாயிலிருந்து வரும் சொல் என்னும் பொருள் கொண்டது. சிறப்பாக, முன் பின் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் சொற்களைக் கேடு அதற்குப் பொருள் கொள்வது "விரிச்சி" என்பர். வெட்சித் திணையில், பகைவர்களின் ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் தெரியாதவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு அதிலிருந்து, தமது செயல் நன்மையாக முடியுமா இல்லையா என்று அறிவதைப் பொருளாகக் கொள்வது "விரிச்சி" ஆகும். இதனை விளக்க, "பகைவரது பசுக் கூட்டங்களைக் கவர விரும்பும் வீரர்கள், தமது செயல் நன்மையாக முடியுமா அன்பதை அறிந்து கொள்வதற்காக, இருண்ட மாலை நேரத்தில் நல்ல சொற்களைக் கேட்பது "விரிச்சி"" என்னும் பொருள்படும் பின்வரும் கொளுப் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது. செலவு (வெட்சி) தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் செலவு என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "செலவு" என்னும் சொல் "செல்லுதல்". "போதல்" ஆகிய பொருளைக் கொடுக்கும். வெட்சித் திணையில், பகைவருடைய பசுக் கூட்டங்களைக் கவர்வதற்காகச் செல்லும் செயலைப் பொருளாகக் கொள்ளும் துறை "செலவு" எனப்படுகிறது. இதனை விளக்க, "வில் தாங்கிய வீரர்கள், பகைவருடைய இடத்தை நோக்கி மலைகள் கொண்ட காட்டினூடாகச் சென்றது" என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது. முதலிரவு இந்தியப் பண்பாட்டில் இல்லறவாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் முதலிரவு என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரைத் தனியறைக்கு அனுப்பும்முன் சில சம்பிரதாயச் சடங்குகள் இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கைத்தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. இந்திய சமூகத்தில் மிகப்பெரும்பாலும் குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களே நடைபெறுகின்றன. மணமக்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாகப் பழகுவதும், உடலுறவு கொள்வதும் நடப்பதில்லை. எனவே திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தமது இல்லற வாழ்கையை சிறப்புடன் அமைத்துக்கொள்ள குடும்பத்தினரால் தரப்படும் ஒரு பயிற்சியாக 'முதலிரவு' கருதப்படுகிறது. தம்பதியர் தமது கூச்சத்தை விலக்கி, தமக்குள் நெருங்கிப் பழக இச்சடங்கும் சம்பிரதாயமும் அடிகோலும் என நம்பப்படுகிறது. மணமக்கள் தங்கவிருக்கும் தனி அறையில் புதிய படுக்கை போடப்பட்டு பொதுவாக மலர்களால் அலங்கரிக்கப்படும். அறை முழுவதும் நறுமணம் வீசும் வகையில் செய்யப்படும். தனித்திருக்கையில் உண்டு மகிழும் வகையில் பலகாரங்களும் பழங்களும் தட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும். குறிஞ்சி வஞ்சி குறிஞ்சி வஞ்சி என்பது ஒரு சிறுமியர் விளையாட்டு. ஒரு வட்டம் போடுவர். பட்டவர் அதில் தன் கண்களைத் தானே தன் கைகளால் மூடிக்கொண்டு நிற்பார். நிகழும் உரையாடல் திரும்பத் திரும்பப் பலமுறை எல்லாரும் ஒளிந்துகொண்டபின் கண்ணைப் பொத்திக்கொண்டிருப்பவர் கண்ணைத் திறந்துகொண்டு மறைந்திருப்போரை ஓடித் தொடுவார். மறைந்தவர் பிடிபடாமல் ஓடிவந்து வட்டத்துக்குள் நின்றுகொள்வர். பிடிபட்டவர் பட்டவராகிக் கண்களைப் பொத்திக்கொள்ள வேண்டும். பின் மறு ஆட்டம். குறிஞ்சி என்னும் சொல் அகத்திணை ஒழுக்கத்தில் மறைந்து நடந்துகொள்வதைக் குறிக்கும்; வஞ்சி என்பது இக்காலப் பொருளில் வஞ்சித்தலைக் குறிக்கும். எனவே மறைந்து வஞ்சிக்கும் விளையாட்டைக் குறிஞ்சி வஞ்சி என்கின்றனர். கேலி (விளையாட்டு) உரையாடலில் பிறரைக் கேலி செய்து விளையாடுவது கேலி-விளையாட்டு. ஒரு கையில் நடு விரலை மட்டும் உள்ளே மடக்கிக்கொண்டு ஏனைய இரு கை விரல்களையும் கோத்து இறுக்கமாக மூடிக்கொள்வர். மற்றொருவரை ஒவ்வொன்றாகத் திறக்கச் சொல்வர். திறப்பர் கடைசியாக மடங்கிக் கிடக்கும் நடுவிரலைத் திறக்கும்போது அதனை ஆட்டிக் காட்டி 'உன் பெண்டாட்டி எட்டி எட்டிப் பார்க்கிறாள்' (உன் புருசன் எட்டி எட்டிப் பார்க்கிறான்) என்று சொல்லிக் கேலி செய்வர். யாருடைய பெயரையும் சொல்லாமல் பொதுச்சொல்லால் பிறரைக் கூப்பிடுவர். யாராவது திரும்பிப் பார்க்கும்போது 'உன்னையா கூப்பிட்டேன், காரைவீட்டுக் கருத்த நாயைக் கூப்பிட்டேன்' என்று சொல்லிக் கேலி செய்வார். சொல்-விளையாட்டுக் கேலி 'இது யாருக்கு வேட்டை' என்பர். விடை சொல்பவர் 'எனக்கு வேட்டை' எனச் சொல்ல எண்ணி அவசரத்தில் 'எனக்கோட்டை' என்பார். அதற்கு மறுமொழியாக 'உன் மாமியார் பல் ஓட்டை' என்று சொல்லிக் கேலி செய்வர். கைச்சில்லி முதிரோர் தனிமையில் இருக்கும்போது தன் இளமைக்கால நினைவுகளை வெளிப்படுத்தி அமர்ந்துகொண்டு கை விரல்களைப் பயன்படுத்தி ஆடும் விளையாட்டு கைச்சில்லி நொண்டி அடித்தும், சில்லை மிதித்தும், சில்லை நொண்டிக்காலால் உந்தி உதைத்து அரங்குக்கு வெளியே தள்ளி மிதித்தும் சிறுவர் சில்லி விளையாடுவர். காலால் விளையாடப்படும் இந்த விளையாட்டைக் கைவிரல்களைப் பயன்படுத்தி விளையாடுவது இந்தக் கைச்சில்லி விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு அரங்கம் கையை நகர்த்தி விளையாடப்படும் அளவுக்குச் சிறிதாக வரையப்படும். ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் கால்போல் பயன்படுத்தி இதனை வாளையாடி மகிழ்வர். இதனை இரு முதியவர் ஆடுதலும் உண்டு. கொக்கு விளையாட்டு கொக்கு விளையாட்டு பட்டவர் கொக்கைப் போல் ஒருகாலில் நிற்க எல்லாரும் வினா-விடையாகப் பாடி மகிழும் விளையாட்டு. எவ்வளவு நேரம் ஒற்றைக் காலால் நிற்கமுடியும் என்னும் திறனை அளவிடுவது. மற்றவர் வினவுவர். கொக்கு விடை பகரும் சித்ரதுர்கா சித்ரதுர்கா (ஆங்கிலம்: Chitradurga, கன்னடம்: ಚಿತ್ರದುರ್ಗ) என்பது இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சாத்தாரா சாத்தாரா அல்லது சதாரா , மராத்தி: सातारा) நகரம் இந்திய மாநிலத்தில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சதாரா மாவட்டமும் ஒன்றாகும். மராத்தியப் பேரரசில் இந்நகரம் சத்திரபதி இராஜாராமின் தலைநகராமாக விளங்கியது. குழு நடத்தை குழு நடத்தை("Group Behavior") என்பது சமூகவியலில், பெரிய அல்லது சிறிய மக்கள் குழுக்களாக சேர்ந்து செயல்படும் சுழலைக் குறிப்பதாகும். ஒருங்கிணைந்த வகையில் ஒருமித்த முடிவுகள் அடையும் சிறு குழுக்கள் பற்றிய துறை குழு இயக்கவியலாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏராளமான மக்கள் குழுக்கள் ஒருமித்து இலக்கைஅடைய விழைவதற்கும், தனிநபர்கள் தனியாக விழைவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒருபெரிய குழு (ஒரு கூட்டம் அல்லது கும்பல்) இதே போன்ற ஒன்று சேரும்போது குழு நடத்தை உதயமாகிறது. உதாரணத்திற்கு:- பேரணி அல்லது போராட்டங்களில் பங்கெடுப்பது, கிளர்ச்சி அல்லது யுத்தத்தில் பங்கெடுப்பது. பெரிய குழு நடத்தை சிறப்பு வடிவங்கள் உள்ளன: எந்தவொரு ஒருங்கிணைப்பின்றி ஒரே விசயத்தை பலர் செய்வது வெகுஜன நடவடிக்கையாகும். இதை குழு நடத்தை என்று கொள்ளமுடியாது. அதுவே ஒருங்கிணைப்புடன் பலர் செய்தால் அது குழு நடவடிக்கையாகும். குழு நடத்தையில் உள்ள ஒரு சிறப்பு மந்தை புத்தி. அதாவது தன்னிடமில்லாத விசயங்களை குழுவிலுள்ள மற்றவர் மூலம் பெற்று விரும்பியதை செய்து முடிப்பதாகும். பல்வேறு காரணங்களுக்காக மக்கள் குழுவாக இணைகிறார்கள். முக்கியமாக தனிப்பட்ட தேவைகளுக்காக மக்கள் இணைகிறார்கள். சிலசமயம் குழு உறுப்பினர்கள் தங்களை அறியாமல் பல தேவைகளைநிறைவேற்றிக்கொள்ள முடியும். நிறுவனங்கள் பொதுவாக வேலைதொடர்பான பணிகளைநிறைவேற்றும் பொருட்டு குழுக்கள்உருவாக்குகின்றன; அதன்மூலம ஒருவேலை குழுவின் ஒரு உறுப்பினருக்கு தானறியாமல் தற்செயலாக பல நன்மைகள் விளையும். குழுக்கள் உருவாகும் விதம் மாறுபட்டாலும் அதில் உள்ள சில ஒற்றுமைகளைக் கொண்டு குழு வளர்ச்சிநிலையை படிக்கலாம். வளர்ச்சி கோட்பாடுகள் பல்வேறு இருந்தாலும் Tuckman (1965) நிலை மாதிரி தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இதன்படி பின்வரும் ஐந்து நிலைகளில் ஒருகுழு உருவாகுகிறது. செயல்படும் வேலைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகையில் பிரிக்கலாம். குழு என்பது கும்பலாகயில்லாமல் கட்டமைக்கப்பட்ட தொகுதிகளை உடையது. பதவிகள், சட்டங்கள், மதிப்பு, எண்ணிக்கை, கலப்பு, கொள்கை என்று பல கட்டமைப்புகள் கொண்டது. ஒவ்வொன்று குழுவின் நடத்தையை தீர்மானிக்கும். சமூக சோம்பல் சமூக சோம்பல் (Social Loafing) என்பது சமூக உளவியலில், பெரிய குழுக்களில் இருக்கும் போது அதன் உறுப்பினர்கள் குறைவாக பங்களிக்கும் ஒரு நிகழ்வு ஆகும். பல உளவியல் காரணங்களால் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக அளிப்பதில்லை. பெரிய குழு என்பதால் வேலையின் அளவை கணக்கிட முடியாது என்ற மனப்போக்கும் ஒரு காரணமாகும். இதனால் குழு நடத்தை பாதிக்கப்படும். குழு நடவடிக்கை குழு நடவடிக்கை (Group Action) என்பது சமூகவியலில், ஒரு குழுவாக சேர்ந்து ஒரே நேரத்தில் பொதுவான குறிக்கோளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் நிலை எனப்படும். பொதுவாக குழு நடத்தையின் பலனாக குழு நடவடிக்கை அமையும். வெகுமக்கள் நடவடிக்கை எனப்படுவது ஒருங்கிணைப்பில்லாமல் நடக்கும் குழு செயல் ஆகும். வெகுமக்கள் நடவடிக்கை வெகுமக்கள் நடவடிக்கை(Mass Action) என்பது சமூகவியலில், ஆங்காங்கே பலர் ஒரே .நேரத்தில் பொதுவான குறிக்கோளுடன் ஒருங்கிணைப்பில்லாமல் செயலாற்றும் நிலை எனப்படும். எடுத்துக்காட்டாக, வங்கி கடன்முறிவு ஆனதாக செய்தி வந்தவுடன், மக்கள் கூட்டமாக வந்து பணத்தை திரும்ப எடுக்கும் செயலைக் குறிப்பிடலாம். குழு நடவடிக்கை எனப்படுவது ஒருங்கிணைப்புடன் நடக்கும் குழு செயல் ஆகும். புருஸ் லாம்ப் புருஸ் லாம்ப் ("Bruce Lamb", பிறப்பு: ஆகத்து 25 1878, இறப்பு: மார்ச்சு 21 1932 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898-1901ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். புருஸ் லாம்ப் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. சார்ல்ஸ் லாம்ப் சார்ல்ஸ் லாம்ப் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. வில் ஜெபர்சன் வில் ஜெபர்சன் ("Will Jefferson ", பிறப்பு: அக்டோபர் 25 1979 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 117 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில் ஜெபர்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. ரிச்சர்ட் ஜெபர்சன் ரிச்சர்ட் ஜெபர்சன் ("Richard Jefferson ", பிறப்பு: ஆகத்து 15 1941 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 94 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961-1969 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சர்ட் ஜெபர்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. வில்லியம் ஜெப்ரீஸ் வில்லியம் ஜெப்ரீஸ் "William Jefferies ", பிறப்பு: சூலை 1 1777, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1803 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வில்லியம் ஜெப்ரீஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. ஜான் லாம்ப் ஜான் லாம்ப் ("John Lamb ", பிறப்பு: மே 3 1912, இறப்பு: பிப்ரவரி 5 1993 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934-1938 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் லாம்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. நிக் லாம்ப் நிக் லாம்ப் ("Nick Lamb ", பிறப்பு: நவம்பர் 9 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2005-2007 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நிக் லாம்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. டிமொதி லாம்ப் டிமொதி லாம்ப் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. சிறுத்தை (வழிநெறிப் பக்கம்) ”சிறுத்தை” என்னும் பெயருடன் தொடர்புடைய பின்வரும் கட்டுரைகள் உள்ளன:- எம். குலசேகரன் குலசேகரன் முருகேசன், ("Kulasegaran Murugeson", பிறப்பு: 1957), மலேசிய மனிதவள அமைச்சராவார். இரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இவரை அரசியலின் சிகரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. இவர் மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகளின் போராட்டவாதியும் ஆவார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் ("Yik Phooi Hong") என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 32,576 வாக்குகள் பெற்றார். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் 49,618 வாக்காளர்கள் உள்ளனர். சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈப்போ மாநகரில் ஒரு தமிழர் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாகும். எம். குலசேகரன் மலேசியாவில் பிரபலமான ஒரு வழக்குரைஞர். இவர் 1980ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ’லிங்கன்ஸ் இன்’ (lincoln's Inn) எனும் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1983 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். மலேசிய இந்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படுவதைக் கண்டு மனம் கலங்கிய எம். குலசேகரன் அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று அரசியலில் ஈடுபட்டார். மலேசியாவின் எதிர்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம். குலசேகரன், 1995 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு ஈப்போ, தாமான் கேனிங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் 1997 மே மாதம் நடைபெற்ற தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 2,916 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தொகுதியின் மக்களுக்கு பல அரிய சேவைகளைச் செய்தார். தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினார். தெலுக் இந்தான் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருந்தார்கள். அதனால் பலர் அடையாள அட்டைகள், குடியுரிமைகள் இல்லாமல் இருந்தனர். தன்னுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு அடையாள அட்டைகள், குடியுரிமைகள் பெற்றுத் தந்தார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் 78 விழுக்காடினர் சீனர்கள் ஆகும். சீனர்களின் முழுமையான ஆதரவைப் பெற்று சாதனை படைத்தார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் நடந்து முடிந்த பிறகு, ஒருமுறை அவருடைய அலுவலகம் உடைக்கப்பட்டு சில முக்கியமான சட்டப் பத்திரங்களும் பணமும் களவாடப்பட்டன. அரசியலுக்கும் தன்னுடைய அலுவலகம் உடைக்கப் பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று எம்.குலசேகரன் உறுதிப் படுத்தினார். இந்திராகாந்தி என்பவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவருடைய கணவர் இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாறினார். தன் பெயரை முகமட் ரிசுவான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். பின்னர், இந்திரா காந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து தன் இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெயர்களையும் மாற்றினார். கடைசியாக, தன் மூன்றாவது மகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். அதனால், ஷரியா சட்டப்படி, பிள்ளைகள் அனைவரும் தகப்பனாரின் பராமரிப்பின் கீழ் வருவார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அநதத் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி, ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய குழந்தைகளை தன் அனுமதி இல்லாமல் மதமாற்றம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்திராகாந்தியின் சார்பில் வழக்குரைஞர் எம். குலசேகரன் வாதாடினார். இந்த வழக்கு மலேசிய மக்களின் கவனத்தையும், அரசியல், நீதித்துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. இறுதியில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயாரைச் சேரும் என்று ஈப்போ நீதிமன்றம் முடிவு செய்தது. மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் குலசேகரன் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவுகளை வழங்கி வந்துள்ளார். மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு சமய, மொழி, கலாசார உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய இந்தியர்களுக்கு பொருளாதார வகைகளில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்தப் பேரணியில் எம்.குலசேகரன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கேட்ட போது அவருடைய மனு முற்றாக மறுக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் குரல் எழுப்பி வருகிறார். மலேசிய மக்களவையில் இந்தியர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசும் போது பல முறை ஆளும் கட்சியினரால் இவர் கேலி செய்யப்பட்டுள்ளார். கீழ்த்தரமான சொற்களினால் வேதனைப்படுத்தப் பட்டுள்ளார். ஒருமுறை அவர் நாடாளுமன்றத்தில் ‘வேசைக்குப் பிறந்தவனே’ என்றும் திட்டப்பட்டிருக்கிறார். ’ஏசுபவர்கள் ஏசிவிட்டுப் போகட்டும். நான் என் கடமையைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்று சொன்னார் குலசேகரன். 2007 ஆம் ஆண்டு துணை சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகர், துணைசபாநாயகர்களின் சம்பள உயர்வைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால் குலசேகரன் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றம் செய்யப்பட்டார். நான்கு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தின் முகப்பு அறையிலேயே உட்கார்ந்து தன் பணிகளைச் செய்தார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 'பாக்காத்தான் ராக்யாட்' எனும் மலேசிய மக்கள் கூட்டணி, பேராக் மாநிலத்தைக் கைப்பற்றியது. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆளும் பாரிசான் நேசனல் கட்சியின் வசம் இருந்து வந்த பேராக் மாநிலம் முதல் முறையாக எதிர்க்கட்சிகளிடம் கை மாறியது. ஏறக்குறைய 10 மாதங்கள் மக்கள் கூட்டணி, பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூனறு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினர். அதனால், மக்கள் கூட்டணி வீழ்ச்சியுற்றது. பாரிசான் நேசனல் கட்சியின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்தக் கட்டத்தில், மக்கள் கூட்டணியின் இதர சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத மறியல் செய்தனர். அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட குலசேகரன் அவர்களும், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் சிவகுமார் அவர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். 2013 பொதுத் தேர்தலில் எம். குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பதவிக்கு ஆர்வப் பட்டதாக ஆருடங்கள் சொல்லப் பட்டன. அவற்றை அவர் வன்மையாக மறுத்தார். 'தற்சமயம் பினாங்கு துணை முதல்வர் பதவியில் இருக்கும் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அப்பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று கூறினார். ஜனநாயக செயல் கட்சி ஜனநாயக செயல் கட்சி ("Democratic Action Party" D.A.P) அல்லது சுருக்கமாக டி.ஏ.பி என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின. அண்மைய தேர்தல்களில் ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, இந்த பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடும் சவால்களைக் கொடுத்து வருகின்றது. "மலேசியர்களுக்கு மலேசியா" எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி போராடி வருகின்றது. இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன. பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுயிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில், அவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னைத் தோற்கடித்தார். பேராசிரியர் இராமசாமி, தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார். வி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட், இவரை பேராக் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராக்கியது. மலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத்தின் சபாநாயகர் பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும். தற்சமயம் கட்சியின் அனைத்துலகச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார். எம். குலசேகரன் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ,ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார். 2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த முதல் தமிழ்பெண் ஆவார். திருவிளக்கு வழிபாடு திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும் திருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைப்பர். உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள் வைப்பர். ஆகிய திசைகளில் மட்டுமே விளக்கேற்றுவர். திருவிளக்கை கிழக்கு முகமாக வைத்து, வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி அமருவர். திருவிளக்கிற்குப் பயன்படும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். திருவிளக்கு வழிபாட்டுக்கு திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு), தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, படையல் பொருட்கள், துணை விளக்கு, நீர்க்கடன் செலுத்தும் பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. முதலில் வழிபாடு நடத்தும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக்கப்படும். வழிபாடு நடத்தும் முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களால் அழகு செய்வர். பின்பு வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமருவர். பின்பு கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுவர். அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றுவர். தீபம் ஏற்றும்போது "ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி" என்று சொல்லுவர். பின் ஊதுபத்தி ஏற்றி வைப்பர் முதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அலங்கரிப்பர். பின்பு அம்பாள் துதிப்பாடல்கள் பாடியபடி வழிபாட்டைத் துவங்குவர். அம்பாள் வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் மலர் அல்லது குங்கும அர்ச்சனை நடைபெறும். அவ்வாறு அர்ச்சனை செய்கின்ற போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும், மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும். மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அருச்சிக்க வேண்டும் என்பது விதி. அர்ச்சனை செய்து முடித்தவுடன் எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதுவர். நூற்றியெட்டு போற்றி ஓதி முடிந்தவுடன் படையல் பொருள்களை அம்மனுக்குக் காணிக்கையாக்குவர். எல்லோரும் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுவர். இப்போது திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூரசோதி காண்பிக்கப்படும். கற்பூர சோதி காட்டும்போது சொல்லப்படவேண்டியது:. பின்பு திருவிளக்கின் முன் கற்பூர தட்டை வைத்தபடி கையில் மலரெடுத்து கற்பூர சோதியை வலம் சுற்றி திருவிளக்கிற்கு சாற்றி கற்பூர தீபத்தைத் தொட்டு வணங்குவர். அனைவரும் பின்வருமாறு அம்பாள் பெயர் போற்றி கைதட்டிப் பாடிக்கொண்டு திருவிளக்கினை மூன்று முறை வலம் வருவர். மங்களம் பாடி நிறைவு செய்யப்படும். திருவிளக்கை அம்பாளாகக் கருதி, 16 முறை விழுந்து வணங்குவர். ஜார்ஜ் லாம்பேர்ட் ஜார்ஜ் லாம்பேர்ட் ("George Lambert ", பிறப்பு: மே 11 1919, இறப்பு: அக்டோபர் 30 1991), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 340 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1938-1960 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் லாம்பேர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. கிரெக் லாம்பேர்ட் கிரெக் லாம்பேர்ட் ("Greg Lambert ", பிறப்பு: சனவரி 4 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரெக் லாம்பேர்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. ஜான் லாம்பேர்ட் ஜான் லாம்பேர்ட் ("John Lambert ", பிறப்பு: ஏப்ரல் 28 1772, இறப்பு: செப்டம்பர் 14 1847), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1794-1810 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் லாம்பேர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. லாம்பர்ன் (ஹம்பெல்டன் துடுப்பாட்டக்காரர்) லாம்பர்ன் (" Lamborn (Hambledon cricketer) ", 18ம் நூற்றாண்டு பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1777 - 1781 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லாம்பர்ன் (ஹம்பெல்டன் துடுப்பாட்டக்காரர்) விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. பெர்சி ஜீவ்ஸ் பெர்சி ஜீவ்ஸ் ("Percy Jeeves ", பிறப்பு: மார்ச்சு 5 1888, இறப்பு: சூலை 22 1916), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 50 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1912-1914 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெர்சி ஜீவ்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. டொம் லாம்பேர்ட் டொம் லாம்பேர்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி ஆலயம் அருள்மிகு மகாலட்சுமி ஆலயம் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரத்தில் உள்ளது. இக்கோயில் தினம் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். - ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு (ஆங்கில மாதம் ஜூலை - ஆகஸ்ட் - தமிழ் மாதம் ஆடி 18 ஆம் தேதி) அன்று திருவிழா நடைபெறும். இத்திருகோவிலில் தொன்றுதொட்டு 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சார்ந்த 16 வீடு மும்முடியார் கோத்திரத்தை (குலம்) சேர்ந்த குடும்பங்களும், குரும்பக்கவுண்டர் இனத்தை சார்ந்த குடும்பங்களும் மகாலட்சுமியை தங்களது குல தெய்வமாக ஏற்று வழிபட்டு வந்துள்ளனர். தற்போது இத்திருக்கோவில் பொதுமக்கள் எல்லோரும் வந்து வழிபடும் கோவிலாக மாறிவிட்டது. தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் அவசியம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமியை தரிசித்துச் செல்லவேண்டும். இந்த அம்மன் கோயில் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இத்திருக்கோவிலில் அருள்மிகு மகாலட்சுமி மூலவராக இரண்டு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வைணவ சம்பிரதாயப்படி மகாலட்சுமி சிலை தாமரை மலர்மீது அமர்ந்து. நான்கு கரங்களில் கதை, தாமரை, சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருவது மரபு. ஆனால் திருக்கோவில் கருவறையில், தனி பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாலட்சுமியின் தொன்மை வாய்ந்த கருங்கல் திருவுருவ சிலை உள்ளது. இத்திருக்கோவில் கருவறையை சுற்றிலும் மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் பல பரிவார தெய்வங்களை வழிபடுவதற்கான சன்னதிகள் அமைந்துள்ளன. குரும்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார். குரும்பநாயனார் பெருமிழலை நகரை ஆண்ட மன்னரிடம் பணிபுரிந்து வந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரை குருவாக ஏற்றுக்கொண்டு வணங்கி வந்தார். குரும்ப இனத்தவர்கள் ஆடு மேய்ப்பதை தம் தொழிலாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆட்டின் முடியில் தயாரித்த கம்பளி இவர்களிடம் இருக்கும். குரும்பநாயனார் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார். தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவு, உடை போன்றவற்றை மூட்டையாக ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார். “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை நாவினிக்க ஓதி உணர்ந்து இன்புற்றார். சிவன்தாள் போற்றும் சிவனடியாராய் சிவத்தொண்டு ஆற்றி வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. இந்த நேரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் கைலாயத்திற்கு அழைக்க எண்ணினார். இதனை அறிந்த குரும்ப நாயனார், தம் குருவை பிரிந்து எவ்வாறு வாழ்வது என்று வருந்தினார். தன் குருவுக்கு முன்னதாக யோகநெறியின் மூலம் சிவபெருமானின் திருவடியை சேர்வேன் என உறுதி பூண்டார். அதன்படியே சிவலோகத்திற்கும் சென்று சிவனின் திருவடியின்கீழ் அமர்ந்தார். பெரியபுராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. அன்னை ஆதிமகாலட்சுமி அம்பாள் குரும்ப நாயனாரின் குலதெய்வம் ஆவார். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது உதித்தவள் அன்னை ஆதிமகாலட்சுமி. அப்போது திருமால் அமிர்தத்தை தேவர்களுக்கும், விஷத்தை அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தகாசூரன் என்ற அசுரன் இதை தனது ஞானத்தால் உணர்ந்து விஷத்திலிருந்து தப்பிக்க எண்ணி ஓடிச்சென்றான். அப்போது அன்னை மகாலட்சுமியைப் பார்த்து அவள் மீது மோகம் கொண்டு அருகில் சென்றான். அசுரனிடமிருந்து தப்பிக்க மகாலட்சுமி காவிரிக்கரை வழியாக ஓடினாள். அசுரனும் விரட்டி வந்தான். அப்போது ஆடு மேய்க்கும் குரும்ப இனத்தவர்கள் மேட்டுமகாதானபுரம் என்ற இடத்தில் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்தார்கள். மகாலட்சுமி அசுரனிடமிருந்து தப்ப குரும்பர் இனத்தவர் இருந்த இடத்தில் பூமிக்குள் ஒளிந்துகொண்டாள். அந்த இடத்தில் சிவபக்தனான ராவணன் ஈசனை நினைத்து தவமிருந்து கொண்டிருந்தான். மகாலட்சுமி அங்கு ஒளிந்திருப்பதை அறிந்த ராவணன் தன்னை அழிப்பதற்கே அவள் வந்திருக்கிறாள் என கருதி இலங்கைக்கு சென்றுவிட்டான். மகாலட்சுமி குரும்பர்கள் கறக்கும் ஆட்டுப்பாலை அவர்கள் அறியாமலேயே குடித்துவந்தாள். இதை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஒரு இடத்தில் ஈரமாக இருந்ததை பார்த்த மக்கள் அந்த இடத்தை தோண்டினர். அப்போது மகாலட்சுமி சுயம்புவாக காட்சிதந்து அசுரனிடமிருந்து தன்னை காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாள்.தெய்வமான மகாலட்சுமி மக்களிடம் தன்னைக் காக்கவேண்டும் என்று கூறியது அவர்களை சோதிக்கத்தான். உடனே மக்கள் மகாலட்சுமியை ஒரு கம்பளியில் சுற்றி மறைத்து வைத்துவிட்டார்கள். அசுரன் இதைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் சண்டை செய்தான். அம்மனையும் பிடித்து விட்டான். மக்கள் இறைவனிடம் அந்த பெண்ணைக் காக்க வரவேண்டும் என வேண்டினர். முக்கண் உடைய சிவபெருமானை நினைத்து உருகி பாடல்கள் பாடினர். ஆனாலும் சிவபெருமான் வரவில்லை.எனவே முக்கண் உடைய தேங்காயை எடுத்து சிவபெருமான் அங்கு வரும்வரை தங்கள் தலையில் உடைத்து வணங்குவோம் என வேண்டிக்கொண்டு அவரவர் தலையில் தேங்காயை உடைக்கத் தொடங்கினார்கள். மக்களின் பக்தியை மெச்சிய சிவன் அங்கு தோன்றி அம்மனை காப்பாற்றினார். மெய்யன்பர்கள் பொருட்செல்வம் பெற்று மேன்மையுறவும், குழந்தைகள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், இளைஞர்கள் திருமணத்தடை நீங்கிடவும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும். அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். எனொக் ஜீவன்ஸ் எனொக் ஜீவன்ஸ் " Enoch Jeavons ", பிறப்பு: சனவரி 12 1893, இறப்பு: சூலை 29 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1924 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். எனொக் ஜீவன்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. வில்லியம் லாம்பேர்ட் வில்லியம் லாம்பேர்ட் ("William Lambert", பிறப்பு: 1779, இறப்பு: ஏப்ரல் 19 1851), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1801-1817 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில்லியம் லாம்பேர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. ஸ்டுவார்ட் லாம்பிட் ஸ்டுவார்ட் லாம்பிட் ("Stuart Lampitt ", பிறப்பு: சூலை 29 1966 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 236 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 302 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985-2001 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஸ்டுவார்ட் லாம்பிட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012. புரதப்பீழை புரதப்பீழை (Prion) பிரியன் என்பது நோய் உண்டாக்கும் காரணி. இது மற்ற நோய் காரணிகளிடம் இருந்து முரண்பட்டது, அதாவது இந்த பிரியான் எனப்படும் புரதபீழைக்கு எந்த ஒரு மரபு பொருளும் கிடையாது தீநுண்மத்தைப் போன்று இவையும் உயிரற்ற நோய் உண்டாக்கும் பொருளாகும். இவை சில முறைவடிவம் பெறா அல்லது ஒழுங்கற்ற புரதநிலை அடையாப் புரதப்பொருளானது திசுக்களில் மாறுதல்களை உண்டுசெய்து அவை நோயாக உருவெடுக்கின்றன. இவ்வாறு நோயை உண்டாக்கும் புரதப்பொருட்கள் புரதப்பீழை எனப்படுகின்றன.தொற்றிகொள்ளும் பஞ்சு போலான திசு முளைவியாதி ஏற்படுத்தும். கா. மாணிக்கம் கா. மாணிக்கம் (பிறப்பு: மார்ச்சு 7 1948) இவர் முத்துமாணிக்கம் எனும் பெயரால் அறியப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு பிளார் எனும் ஊரில் பிறந்த இவர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் ஓர் பட்டதாரி ஆசிரியர். 1981ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவர். இவரின் முதல் படைப்பு சிங்கப்பூரில் தமிழரும் தமிழ் இலக்கியமும் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம் நடத்திய ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது. 'உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஏற்படும் இடர்ப்பாடுகள்' என்பது அக்கட்டுரையின் தலைப்பாகும். 100க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவரின் முதல் மரபுக் கவிதை அகிலன் எனும் தலைப்பில் 1988ல் தமிழ் முரசில் வெளிவந்தது. தமிழ் நேசனிலும் இவரது படைப்புகள் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன. செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படையின் மேலதிகாரியாகவும் (1966 - 1992), தமிழர் சீர்த்திருத்தச் சங்கப் பொருளாளராகவும் (1979), தமிழர் பேரவை சங்கப் பேராளராகவும் (1977) இருந்துள்ளார். அத்துடன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், 1976 - 1982 வரை காலாங் இந்தியர் கலாசார மன்றத்தின் துணைத் தலைவராகவும், 1978 - 1985 வரை சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்புச் சங்கத்தின் பணியாளராகவும் பதவி வகித்துள்ளார். செ. ப. பன்னீர்ச்செல்வம் செ. ப. பன்னீர்ச்செல்வம் (பிறப்பு: ஏப்ரல் 19 1948) தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த புக்கிட் பாஞ்சாங் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தனது கல்வியைக் கற்று பின்னர் லிங்கன்சையர் ஹம்பர்சைட் பல்கலைக்கழகம், ஆக்லஹாமா நகர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிர்வாகத் துறையில் இளங்கலை சிறப்புப் பட்டத்தினையும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டத்தினையும் பெற்றார். மேலும் இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய் போன்ற மொழிகளில் நன்கு புலமைமிக்கவராவார். சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், ஆய்வாளராகவும், செய்தியாசிரியராகவும் தொழில்புரிந்துள்ளார். இவர் வானொலியில் பணியாற்றிய காலத்தில் முதன் முதலாக நாளும் ஒரு குறள் எனும் நிகழ்ச்சியைத் தயாரித்தளித்ததுடன் பல ஆண்டுகள் தேசியநாள் அணிவகுப்பை நேரடி வர்ணனை செய்தும் வந்தார். மேலும் 25 ஆண்டுகள் (1968 - 1993) தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். அங் மோ கியோ வசிப்போர் குழு வெளியிட்ட இதழின் (1980 - 1990) செய்தி ஆசிரியர். பூன் லே இலக்கியக் குழுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். சாருகேசி, ஸ்ரீநிதியதுநந்தனன், இடைக்காடன், செ.பக்கிரிசாமி, கோகுலபாரதி போன்ற புனைப்பெயர்களில் 1960ம் ஆண்டு தொடக்கம் எழுதிவரும் இவர் சிறுகதைகள், மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்துள்ளார். சுமார் 40 சிறுகதைகளையும், 30 நாடகங்களையும், 60 மரபுக் கவிதைகளையும், 50 புதுக் கவிதைகளையும், 2 நாவல்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான 'மாயா', சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பக வெளியீடாக 2014 ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. சிங்கப்பூர் இந்திய முன்னோடிகளைப் பற்றி சிங்கப்பூர் தங்கமீன் இணைய இதழில் இவர் எழுதிய தொடர், தற்போது 'சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள்' என்ற தலைப்பில் நூல்லாகிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது, அம்பியவாகர் எழுதிய ஆங்கில நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இலக்கிய நாடகங்கள், வாழ்க்கைப் பாதை நாடகங்கள் போன்றவற்றை வானொலிக்காக எழுதி, தயாரித்து ஒலிபரப்பியுமுள்ளார் தமிழ்ச்செல்வம் எனும் பட்டம் மு. அ. மசூது மு. அ. மசூது (பிறப்பு: மார்ச்சு 15 1949) தமிழ்நாட்டின் கடைநல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். பின்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து சான்றிதழ் பெற்று தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1980களில் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது கன்னிக் கவிதை தமிழ் முரசு மாணவர் மன்ற மலரில் பிரசுரமானது. இவரது அநேகமான படைப்புகள் பல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. உணர்வுகளின் ஊர்வலம் (கவிதைத் தொகுப்பு) கடையநல்லூர் முஸ்லிம் லீக் வெளியிடும் நம் குரல் எனும் இதழுக்கு இரண்டு தசாப்த்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகச் செயலாற்றி வருகின்றார். சிங்கப்பூர் கடைநல்லூர் முஸ்லிம் லீக்கின் செயலாளராகவும் (1978), சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் துணைத் தலைவராகவும் (1992), இந்திய முஸ்லிம் பேரவையின் துணைச் செயலாளராகவும் (1992), லெங் கீ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவின் செயலாளராகவும் (1999) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கவிதைக்காகவும், பொதுச் சேவைக்காகவும் மலேசிய பாரதிதாசன் கழகத்தின் பாராட்டு (1997) ஜேம்ஸ் பிராங்க் ஜேம்ஸ் பிராங்க் ("James Franck", 26 ஆகத்து 1882 – 21 மே 1964) செருமானிய இயற்பியலாளர். பல்வேறு வளிமங்களில் இலத்திரன்களின் பண்புகள் குறிப்பாக "போர் எடுகோள்களின் அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்து அக்கொள்கையை மெய்ப்பித்தமைக்காக 'குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து 1925 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர். ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் நிகழ்கின்றன. அப்போது அவை அதிர்வுறுகின்றன; சுழல்கின்றன. அதனால் ஏற்படும் மாற்றத்திற்கான வரைபட வளைவுகளை இரு அணுத் தொகுதிகளுக்கு உருவாக்கிய உடனே, ஈரணு மூலக்கூறுகள் அவற்றின் கற்றை நிறமாலைத் தொகுதி அமைப்பிலிருந்து மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடுவதைத் தீர்மானிக்கத் தேவையான முறைகளை வகுத்தவர் 'ஜேம்ஸ் பிராங்க்'.