நிக்கி ஷா நிக்கி ஷா ("Nicki Shaw", பிறப்பு: திசம்பர் 30 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2010 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜேன் சிமித் ஜேன் சிமித் ("Jane Smit", பிறப்பு: திசம்பர் 24 1972), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 - 2008 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜில்லியன் சிமித் ஜில்லியன் சிமித் ("Gillian Smith", பிறப்பு: நவம்பர் 22 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 - 1993 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கெத்தலீன் சிமித் கெதலின் சிமித் ("Kathleen Smith", பிறப்பு: 1921), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கேரன் சிமித்தீஸ் கேரன் சிமித்தீஸ் ("Karen Smithies ", பிறப்பு: மார்ச்சு 20 1969), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 - 2000 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சூ ரெட்ஃபெர்ன் சூ ரெட்ஃபெர்ன் ("Sue Redfern", பிறப்பு: அக்டோபர் 26 1977), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மெலீசா ரெனார்ட் மெலீசா ரெனார்ட் ("Melissa Reynard", பிறப்பு: மார்ச்சு 14 1972), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். எண்ணிம சந்தாதாரர் இணைப்பு எண்ணிம சந்தாதாரர் இணைப்பு ("Digital Subscriber Link") (டிஎஸ்எல்) ஒரு உள்ளூர் தொலைபேசி வலையமைப்பு. கம்பிகள் மூலம் தகவல் பரிமாற்றம் வழங்கும் தொழில்நுட்ப குடும்பம். நுகர்வோர் டிஎஸ்எல் சேவைகளின் சேவை நிலை அமலாக்கத்தை பொறுத்து, வாடிக்கையாளர் (கீழ்நிலை) க்கு தரவு வீதம் நொடிக்கு 256 கிலோபைட்டுகள் முதல் 40 மெகாபைட்டுகள் வரை மாறுபடுகிறது. டிஎஸ்எல் செயல்படுத்தல்கள் பிணைக்கப்பட்ட அல்லது வழிச்செயலி பிணையங்கள் ஆகும். ஒரு பிணைக்கப்பட்டக் கட்டமைப்பில், சந்தாதாரர் கணினிகள் குழு திறம்பட ஒரு உள்பிணையமுடன் இணைக்கபடுகின்றன. முந்தைய செயல்படுத்தல்கள் மாக் (MAC) முகவரி அல்லது ஐபி முகவரியை பிணைய, விவரங்களை வழங்க டிஎச்சிபி நெறிமுறை (DHCP) பயன்படுத்தின. முற்காலத்தில் செயல்படுத்தல்கள் பெரும்பாலும் புள்ளி-க்கு-பாயிண்ட் நெறிமுறை (PPP) அல்லது ஈத்தர்நெட் வழியாக பாயிண்ட்-க்கு-பாயிண்ட் நெறிமுறை (PPPoE) அல்லது அசின்க்ரோனியஸ்டிரான்ஸ்பர் மோட் (ATM) (ஏடிஎம்) வழியாக புள்ளி-க்கு-பாயிண்ட் நெறிமுறை (PPPoA) போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தின. வில்லியம் ஹியூவெல் வில்லியம் ஹியூவெல் ("William Hewell", மே 24, 1794 - மார்ச் 6, 1866) ஒரு ஆங்கிலேயப் பல்துறை வல்லுநர், அறிவியலாளர், தத்துவவாதி, இறையியல்வாதி, மற்றும் அறிவியல் வரலாற்றாசிரியர். இவர் கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக இருந்தார் . வில்லியம் ஹியூவெல் இங்கிலாந்தில் லான்காஸ்டரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு தச்சர். அவர் மகன் தனது தொழிலைப் பின்பற்ற வேண்டும் விரும்பினார், ஆனால் வில்லியம் லான்காஸ்டர் இலக்கணப் பள்ளிகளில் கணிதம் படித்து, கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் புலமைப்பரிசில் பெற்றார். 1814 இல் அவரின் கவிதைகளுக்காக துணைவேந்தர் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. கடசர் கடசர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். பட்டம்கட்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. திருப்பால் கடல் அமுது கடையும் நிகழ்ச்சியின் போது அசுரர்கள் வால்புரமாக நிற்க வால் நுனியை நந்து மாமுனி பற்ற, தலை பகுதியை தேவர்கள் பற்றி இழுத்தனர். தேவர்கள் மாட்டாமல் தளர்ந்தனர். இதனால் அவர்கள் வால் பாகத்திலும் அசுரர்கள் தலை பாகத்திற்குமாக இடம் பெயர்ந்தனர். ஆனால் நந்து மாமுனி மட்டும் இடம் பெயராமல் பாம்பின் கடைசிப் பகுதியான வாலைப் பற்றி இழுத்ததால் அவர் வழி வந்த குலத்தோர் கடைசர் என்றழைக்கப் பட்டனர். நீற்றரசன் வம்ச வழியினருக்குப் 18 திருத்தலங்களில் பட்டுக்கட்டி, மாலை அணிவித்து, பிரசாதம் அளித்து மரியாதை வழங்கினர். வரலாற்று காலபோக்கில் பட்டு கட்டி , பட்டம்கட்டி என ஆகி, சாதி பெயராயிற்று. ( ஆதாரம் பாபநாசம் கோவில் பங்குனி விழாவில் கடேசர் குலத்தாருக்கு பிற மரியாதைகளுடன் பட்டு கட்டப் படுகிறது.) நெட்டா ரெயின்பர்க் நெட்டா ரெயின்பர்க் ("Netta Rheinberg", பிறப்பு: அக்டோபர் 24 1911, இறப்பு: சூன் 18 2006), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1949 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். உடும்பு உடும்பு () ("Monitor lizard") என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா ("Varanus bitatawa") , வரானசு மபிடாங் ("Varanus mabitang") மற்றும் வரானசு ஒலிவாசியசு ("Varanus olivaceus" ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும். வரானசின் பல்வேறு இனங்கள் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ளன; ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, நியூ கினியா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகள், தென் சீனக் கடல் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணலாம். சிசிலியா ரொபின்சன் சிசிலியா ரொபின்சன் ("Cecilia Robinson", பிறப்பு: மே 22 1924), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1948/49, 1963 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மார்கிரட் ருதர்போர்ட் மார்கிரட் ருதர்போர்ட் ("Margaret Rutherford", பிறப்பு: சூன் 15 1935), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆன் சாண்டர்ஸ் ஆன் சாண்டர்ஸ் ("Anne Sanders", பிறப்பு: சூலை 20 1931), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1954, 1968/69 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். உயிரொளிர்வு உயிரொளிர்வு ("Bioluminescence") என்பது ஒரு வாழும் உயிரினம் மூலம் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு ஏற்படுவது ஆகும். உயிரொளிர்வு உயிரினங்களில் இயற்கையாக ஏற்படும் ஒரு வேதிம ஒளிர்வு, இங்கு ஆற்றலானது ஒளி உமிழ்வு வடிவத்தில் வெளிவிடப்படுகின்றது. மின்மினிப் பூச்சிகள், தூண்டில்மீன் மற்றும் இலுசிபெரின் (ஒரு நிறமி), இலுசிபெரேசு (ஒரு நொதி) போன்ற வேதிப் பொருட்களை உருவாக்கும் பிற உயிரினங்கள் உயிரொளிர்வை ஏற்படுத்தவல்லன. இலுசிபெரின் ஒட்சிசனுடன் வினைபுரிந்து ஒளியைத் தோற்றுவிக்கின்றது; வினைவேகத்தைக் கூட்டுவதற்கு இலுசிபெரேசு ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது, சில நேரங்களில் கல்சியம், ஏடிபி போன்றவை இந்த எதிர்வினைக்குத் துணைக்காரணிகளாக உதவுகின்றன. இந்த வேதிய எதிர்வினை உயிரணுக்களுக்கு உள்ளே அல்லது வெளியே நிகழலாம். நின்றொளிர் காளான் உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும். கியோமிசு-டேரா கியோமிசு-டேரா ("Kiyomizu-dera", சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரண்மனையை ஒட்டியுள்ள இந்தக் கோயில், சப்பானியக் கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது. இதன் முக்கிய பகுதிகள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. கியோமிசு-டேரா கோயில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்தது. கிபி 798 இல் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய கட்டடங்கள் 1633 ஆம் ஆண்டில் டொக்குகாவா யேமிட்சு என்ற இராணுவத் தலைவரின் கட்டளையின் பேரில் மீளக்கட்டப்பட்டது. இக்கட்டட அமைப்பில் எந்தவொரு ஆணியும் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் பெயரை அடியாகக் கொண்டு இக்கோயிலுக்கு இப்பெயர் அமைந்தது. "கியோமிசு" என்றால் "தெளிந்த நீர்", அல்லது "தூய நீர்" எனப் பொருள். 2007-இல், புதிய ஏழு உலக அதிசயங்களின் இறுதிப் பட்டியலின் 21 இடங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது. ஆனாலும், புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன. இங்கு இளநிலை சட்டப் படிப்பில் ஐந்து ஆண்டுகள் படிப்பும், மூன்று ஆண்டு படிப்பும் என இரு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன. ஐந்தாண்டு பட்டப்படிப்பிற்கு நுழைவுக் கல்வித் தகுதியாக மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் அரசினர் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்றும் பிற கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்படுகின்றன. சேலம் நகரில் சுயநிதி சட்டக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. போர்வை (தமிழ்நாடு) இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது. போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம் கட்டூர் எனப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து பிரிந்த வாய்க்கால் புதவு என்னும் மதகடைப்புப் பலகையின் வழியாக ஓடி இந்த ஊரின் படப்பை நிலத்தை வளப்படுத்தியதாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. காவிரி ஆற்றிலிருந்து உய்யக்கொண்டான் ஆறு பிரியும் இடத்திலுள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊரே இந்தப் போர்வை என்னும் ஊர். காவிரியாற்று நீர் உய்யக்கொண்டான் ஆற்றுப் புதவத்தில் பொரூஉம் இடம் போஒர். பயிர்களை விளைவித்து மக்களை உய்யக்கொண்ட ஆறு உய்யக்கொண்டான் என்னும் பெயரைப் பெற்றது. போஒர் கிழவோன் பழையன் போஒர் கிழவோன் பழையன் சங்க காலத்திய சோழநாட்டுச் சிற்றரசன். இவன் ஆண்ட ஊர் சங்ககாலத்தில் போர்வை, போஒர், திருப்போர்ப்புறம் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது. இப்போது அவ்வூர் குழித்தலைக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊர் ஆகும். இவன் வில்லாண்மையில் சிறப்புற்று விளங்கினான். இவனது தலைநகருக்கு அருகிலிருந்த கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் ஏழுபேர் சேர்ந்து தாக்கி இவனைக் கொன்றனர். நாகநாதன் வேலுப்பிள்ளை நாகநாதன் வேலுப்பிள்ளை ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் விளைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்குபவர். இவர் இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறை, மேலைப்புலோலியூரில் அமைந்துள்ள ஆத்தியடி என்ற சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பருத்தித்துறை நகரசபையின் துணை முதல்வராக இருந்த காலஞ்சென்ற நாகநாதன், ஈஸ்வரி ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் கலைப்பீடாதிபதியான பேராசிரியர் ஞானக்குமரனின் சகோதரர். பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான இவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களைப் பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட, இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான இவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள், இந்த நூல் கணினிவழி விற்பனை நிறுவனமான 'அமேசன்' நிறுவனத்தின் சிறந்த விற்பனைப் பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது. 2007-இல் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010-இல் மாற்றீடு செய்யப்பட்ட பின்னரும், புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இடம் பெற்றுள்ளது. இவரது சேவைகளைப் பாராட்டும் முகமாக பிரெஞ்சு அரசாங்கம் 'செவாலியர்' என்னும் விருதை இவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது கொழும்பில் வைத்து சூன் மாதம் 27ஆந் தேதி வழங்கப்படவுள்ளது. அ. மணிசேகரன் அ. மணிசேகரன் (பிறப்பு: பிப்ரவரி 28 1955) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் அரசாங்க உயர் அதிகாரியாவார். மேலும் மலேசியாவின் மேடை நாடகங்களின் தன்மை, வரலாறு பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள "மலேசியாவில் மேடை நாடகங்கள் நூல்" அத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். 1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படத்துறை பற்றியும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வெர்புமோபில் வெர்புமோபில் (Verbmobil) என்பது இடாய்ச்சுலாந்தின் நெடுங்காலத்திய மொழிசார் தொழில்நுட்ப (Language Technology) (குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு) ஆய்வுத்திட்டம். இதன் குறிக்கோள் இடாய்ச்சு-ஆங்கிலம், இடாய்ச்சு-சப்பான் ஆகிய மொழிகளுக்கு இடையே இருபுறமாகவும் இயல்மொழி உரைகளை மொழிபெயர்ப்பதாகும் . வெர்புமொபில் 1993 முதல் 2000 வரை இடாய்ச்சுலாந்தின் நடுவண் அரசின் ஆய்வு- தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுநிதி உதவியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இடாய்ச்சுலாந்தின் நடுவணரசின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Bundesministerium für Forschung und Technologie) ஏறத்தாழ மொத்தம் 116 மில்லியன் இடாய்ச்சுமார்க்கு (ஏறத்தாழ 60 மில்லியன் யூரோ) முதலீடு செய்தது, இது மட்டுமல்லாமல் தொழிலக உடனுறுப்புகளான டைம்லர் கிரைசலர் (DaimlerChrysler) சீமென்சு Siemens_AG), பிலிப்ஃசு (Philips) போன்றவை கூடுதலாக 52 மில்லியன் இடாய்ச்சுமார்க்குகளும் (ஏறத்தாழ 26 மில்லியன் யூரோக்கள்) தந்து உதவின . வெர்புமோபில்-2 செயற்திட்டத்தில், டியூபிங்கென் பல்கலைக்கழகம் (Tübingen University) அரைவழித் தானியிங்கியாய் செயற்படும் இடாய்ச்சு, ஆங்கிலம், சப்பான் மொழிகளுக்கிடையே இயல்பாய்ப் பேசும் மொழியை பேச்சிலிருந்தே மொழிபெயர்க்கும் திறன் கொண்டிருந்தது. TüBa-D/S என்பதில் 38,000 சொற்றொடர்கள் அலல்து 360,000 சொற்கள். TüBa-E/S என்பதில் ஏறத்தாழ 30,000 சொற்றொடர்கள் அலல்து 310,000 சொற்கள். TüBa-J/S என்பதில் ஏறத்தாழ 18,000 சொற்றொடர்கள் அல்லது 160,000 சொற்கள். சி. மணிமாறன் சி. மணிமாறன் (பி: 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கண்மணி, எஸ். எஸ். மணிமாறன் போன்ற புனையர்களால் அறியப்பட்ட இவர் ஒரு சுகாதாரத் துறை உதவியாளரும்கூட. மற்றும் இவர் "வீடியோ மூவி நியூஸ்" பத்திரிகைக்கு நிருபராகவும், புகைப்படக்காரராகவும் பணியாற்றியுள்ளார். 1962 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. என். எஸ். மணியம் என். எஸ். மணியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மலாக்கா நாக மணியம் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஒற்றுமைத் துறை (துணை) அதிகாரியுமாவார். மேலும் இவர் வானொலியில் இரு மொழிகளிலும் அறிவிப்பாளராகவும், "மலேசிய நண்பன்" மலாக்கா மாநில நிருபராகவும், மேடை அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகரும் கூட. 1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் மலாய், தமிழ் இரு மொழிகளிலும் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கே. ஜி. மணியம் கே. ஜி. மணியம் (பிறப்பு சனவரி 2 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். நீதிவாளன் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தோட்ட அதிகாரியாவார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. சு. மணியம் மு. சு. மணியம் (பிறப்பு: ஆகத்து 9 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இமய வரம்பன் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் மருத்துவமனை ஊழியரும், பந்தாய் டாலாம் தமிழ் நெறிக் கழகத் தலைவருமாவார். 1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாரா டெய்லர் சாரா டெய்லர் ("Sarah Taylor ", பிறப்பு: மே 20 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2009 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லின் தோமஸ் லின் தோமஸ் ("Lynne Thomas", பிறப்பு: செப்டம்பர் 29 1939), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1966 - 1982 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டோரிசு டர்னர் டோரிசு டர்னர் ("Doris Turner", 1908-1986) இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கரோல் வேலன்டைன் கரோல் வேலன்டைன் ("Carol Valentine"), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1934 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்பங்குகொண்டார். ஐலின் விகோர் ஐலின் விகோர் ("Eileen Vigor", பி: 1935), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 - 1966 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜாக்குலின் வைன்ரைட் ஜாக்குலின் வெயின்ரைட் ("Jacqueline Wainwright", பிறப்பு: மே 28 1947), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1979 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிறிஸ்டோபர் ரென் சர் கிறிஸ்டோபர் ரென் ("Sir Christopher Wren", அக்டோபர் 20, 1632 – பெப்ரவரி 25, 1723) வரலாற்றில் மிக மிகவும் பாராட்டப்பட்ட ஓர் ஆங்கிலேயக் கட்டிடக்கலை நிபுணர். லண்டன் மாநகரில் 1666 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் தீயை அடுத்து 51 கிறித்தவத் தேவாலயங்களை மீளக் கட்டினார். லுட்கேட் ஹில் என்ற இடத்தில் புனித பவுல் தேவாலயத்தை 1710 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். ரென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மற்றும் இயற்பியல் பயின்றார். மேலும் ரென் ஒரு குறிப்பிடத்தக்க வானியல், கணித-இயற்பியலாளரும் ஆவார். ரென் ராயல் சொசைட்டியை நிறுவினார். ஆர். கே. லட்சுமண் இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் ("Rasipuram Krishnaswamy Laxman" (24 அக்டோபர் 1921 – 26 சனவரி 2015) பிரபல கேலிச் சித்திரங்கள் வரைந்துவந்த ஓர் ஓவியர் ஆவார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் இந்தியாவில் மைசூரில் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார்.  ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை குமாரி கமலாவை (பேபி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசித்தார். இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார். சென்னையின் செமினி இசுடியோவில் ("Gemini Studio") ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு ("Karanjia") சில கேலி சித்திரங்கள் வரைந்தார். அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் ("Free Press Journal") சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்("State's People Supplement".) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது. லட்சுமண் பிரி பிரசு சர்னலில் பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயணின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் ("mascot") இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது . இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர். கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது. 2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் புனே நகரில் காலமானார்.. ஹெலன் வேட்லோ ஹெலன் வேட்லோ ("Helen Wardlaw", பிறப்பு: அக்டோபர் 11 1982), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002–2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிரிஸ் வாட்மோ கிரிஸ் வாட்மோ ("Chris Watmough", பிறப்பு: மார்ச்சு 22 1947), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968/69, 1984/85 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். துள்ளிசை துள்ளிசை என்பது குறிப்பாக உணர்வுமேலிட்ட இசை அல்லது இசைப்பதிவாகும். இதனை குத்துப்பாட்டிசை என்றும் கூறுவர். இவ்வகை இசையினைக் கேட்பவர்கள் தங்களை அறியாமலேயே தமது உடலையும் மனதையும் இசைக்கேற்ப ஒன்றித்துவிடுவர். மேற்கத்திய இசை முறைப்படி 2/4 அல்லது 6/8 தாள வகையில் அடங்கிய பாடலுக்கு இளம் வயதினர் தங்கள் கால்களால் ஆட்டம் போட்டபடியும் கைகளால் தாளம் தட்டியபடியும் ஒன்றிவிடுவது இயற்கை. வென்டி வாட்சன் வென்டி வாட்சன் ("Wendy Watson", பிறப்பு: சூலை 8 1960), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 -1992 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜான் வெஸ்ட்புரூக் ஜான் வெஸ்ட்புரூக் ("Joan Westbrook", பிறப்பு: பிப்ரவரி 17 1923), இறப்பு: சனவரி 2 2000), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹென்றி கிசிஞ்சர் ஹென்றி கிசிஞ்சர் ("Henry Kissinger") (மே 27, 1923) செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர். இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துகள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. ரூத் வெஸ்ட்புரூக் ரூத் வெஸ்ட்புரூக் ("Ruth Westbrook", பிறப்பு: சூலை 12 1930), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957 - 1963 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஐலீன் வீலன் ஐலீன் வீலன் ("Eileen Whelan", பிறப்பு: அக்டோபர் 30 1911), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜாக்குலின் விட்னி ஜாக்குலின் விட்னி ("Jacqueline Whitney", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் வில்கின்சன் ஜான் வில்கின்சன் ("Joan Wilkinson", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1947/48, 1957/58 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பார்பரா வூட் பார்பரா வூட் ("Barbara Wood ", இறப்பு: 1999), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1949 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சர்ட் குன் ரிச்சர்ட் குன் (Richard Kuhn, டிசம்பர் 3, 1900 - ஆகஸ்ட் 1, 1967) ஒரு ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல் அறிவியலாளர். இவர் 1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ரிச்சர்ட் குன் ஆஸ்திரியாவில் பிறந்தார்; இலக்கணப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தன்தொடக்கக்கல்வி பயின்றார். குன் 1918 ல் தொடங்கி வியன்னா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். பின்னர் ரிச்சர்ட் வில்ஸ்டாட்டரின் இணைந்து நொதிகள் துறையில் 1922 இல் முனைவர் பட்டம் பெற்றார். எலைன் வுல்க்கோ எலைன் வுல்க்கோ ("Elaine Wulcko ", பிறப்பு: 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சந்தியா அகர்வால் சந்தியா அகர்வால் ("Sandhya Agarwal", பிறப்பு: மே 9 1963), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1995ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நூசின் அல் காதிர் நூசின் அல் காதிர் ("Nooshin Al Khadeer", பிறப்பு: பெப்ரவரி 13 1981), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2006 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டில்களில் பங்குகொண்டார். அடால்ஃப் புடேனண்ட் அடால்ஃப் பிரெடெரிக் யோகான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர் மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பாலின இயக்குநீர்கள் (sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர். கார்கி பேனர்ஜீ கார்கி பெனர்ஜீ ("Gargi Banerji", பிறப்பு: சூலை 20 1968), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 - 1991 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஹெரால்டு சூர் ஹாசென் ஹெரால்டு சூர் ஹாசென் ("Harald zur Hausen", பிறப்பு; மார்ச் 11, 1936) நச்சுயிரியல் வல்லுநர் ("virologist"). இவர் 2008 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். சூர் ஹாசென், ஜெர்மனியில் பிறந்தார், பான் ஹம்பர்க் மற்றும் டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ ஆய்வு மேற்கொண்டார், டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகத்தில் 1960 இல் டாக்டர் பட்டம் பெற்றார். ரூனா பாசு ரூனா பாசு ("Runa Basu ") இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். விரிந்தா பகத் விரிந்தா பகத் ("Vrinda Bhagat", பிறப்பு: சனவரி 26 1959 ), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பிரான்சுவாசு பாரி-சினோசி பிரான்சுவாசு பாரி-சினோசி ( "Françoise Barré-Sinoussi", பிறப்பு; ஜூலை 30, 1947) பிரான்சு நாட்டைச் சேர்ந்த தீநுண்மவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பாஸ்டரின் பாரிசு நிறுவனத்தின் நோய்த்தொற்றுகள் துறையின் இயக்குனர். இவர் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான 2008 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவர் ஆவார். பிரமிளா பட் பிரமிளா பட் ("Pramila Bhatt", பிறப்பு: செப்டம்பர் 16 1969 ), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 1995 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லோபமுத்ரா பாட்டாசார்ஜி லோபமுத்ரா பாட்டாசார்ஜி ("Lopamudra Bhattacharji", பிறப்பு: சனவரி 31 1960), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார். சேண்ட்ரா பிரகான்சா சேண்ட்ரா பிரகான்சா ("Sandra Braganza", பிறப்பு: நவம்பர் 30 1961), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 - 1991 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அஞ்சூம் சோப்ரா அஞ்சூம் சோப்ரா (Anjum Chopra) இந்திய மகளிர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற வீராங்கனை ஆவார். இவர் புது தில்லியில் பிறந்தவர். இவருடைய தாத்தா வேத் பிரகாஷ் தடகள வீரராகவும், மட்டைப்பந்தாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார். இவருடைய தந்தை கிஷன்பால் கோல்ப் விளையாட்டு வீரராகவும், சகோதரர் நிர்வண் துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தனர். மட்டைப்பந்து விளையாட்டில் விளையாடத் தொடங்கியது முதலே இடது கை அதிரடி துடுப்பாட்டக்காரராகவும், வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். பள்ளி, கல்லூரி, மாவட்டம் என எல்லா அணிகளிலும் இடம் பெற்ற இவருக்கு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தில்லி அணியில் இடம் கிடைத்தது. 1995 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து சென்ற போது, ஒரு நாள் தொடருக்கான அணியில் அஞ்சும் சோப்ராவின் பெயரும் இடம் பெற்றது. அப்போது இவருக்கு வயது 17 தான். 1995 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகளிர் அணி இந்தியா வந்த போது தேர்வு துடுப்பாட்ட அணியிலும் அஞ்சூம் சோப்ராவுக்கு இடம் கிடைத்தது. மொத்தம் 12 தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய அஞ்சும் சோப்ரா, 4 அரை சதம் உட்பட 548 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 116 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2009 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணியின் உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். 1995 ஆம் ஆண்டில் தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை இவர் இந்திய மகளிர் துடுப்பாட்டத்தில் தனது பங்கினை அளித்துள்ளார். 2000, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதையும், 2014 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதையும் பெற்றார். உத்பாலா சக்ரவர்த்தி உத்பலா சக்ரவர்த்தி ("Uthpala Chakraborty"), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றிலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நிதி புலே நிதி புலே ("Nidhi Buley ", பிறப்பு: ஆகத்து 14 1986), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சர்மிளா சக்ரவர்த்தி சர்மிளா சக்ரவர்த்தி‎ ("Sharmila Chakraborty", பிறப்பு: மார்ச்சு 4 1961), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1984 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சங்கீதா டாபிர் சங்கீதா டாபிர்‎ ("Sangita Dabir", பிறப்பு: சனவரி 22 1971), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1997 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார் மினோட்டி தேசாய் மினோட்டி தேசாய்‎ ("Minoti Desai", பிறப்பு: மார்ச்சு 15 1968), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 ல் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார். சீமா தேசாய் சீமா தேசாய் ("Seema Desai"), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 ல் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரீட்டா டே ரீட்டா டே ("Rita Dey", இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 - 1995 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சங்ககாலச் சேரர் தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம். சேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் 'சேரமான்' என்னும் அடைமொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர். எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக 'சேரமான்' என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப்பெயர்களின் பெயர்வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அரசர் பெயரை அடுத்து அவர்கள் பாடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்-வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள சேர அரசர்கள் புறநானூற்றுப் பாடல்களில் வருபவர்கள். பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் சேர அரச பரம்பரையில் காலநிரல் தெரிகிறது. எனவே அவர்கள் காலநிரல் வரிசையிலேயே காட்டப்படுகின்றனர். மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை ஆகிய சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் கிடைத்துளன. இதன் மூலம் சங்ககாலப் பாடல்களில் இவர்களைப் பற்றியுள்ள செய்திகள் உறுதியாகின்றன. மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். இவர்கள் 18 பேர் [[பகுப்பு:சங்ககாலச் சேரர்|*]] [[பகுப்பு:சங்ககால அரசர்கள்]] மு. மணிவெள்ளையன் மு. மணிவெள்ளையன் (பிறப்பு: ஏப்ரல் 15 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் காப்புறுதி முகவராவார். மேலும் இவர் "தமிழியம்" இதழின் ஆசிரியராகவும், உலகப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளராகவும், "திருக்குறள்" நெறி பரப்புநராகவும் கடமையாற்றியுள்ளார். 1966 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் வணிகவியல், குறளியம் மற்றும் சமுதாயச் சிந்தைனைக் கட்டுரைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மனஹரன் மனஹரன் (பிறப்பு: சூலை 13 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஓர் ஆசிரியராவார். 1981 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் புதுக் கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. மாடசாமி மு. மாடசாமி (பிறப்பு: டிசம்பர் 6 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும், இவரது ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்துலக ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிச் அல்லது சுருக்கமாக ஈடிஎச் சூரிச் ("Swiss Federal Institute of Technology Zurich", ETH) என்பது சுவிட்சர்லாந்து சூரிச் நகரத்தில் உள்ள ஒரு பொறியியல், அறிவியல், தொழிநுட்ப மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் ஆகும். இது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இது தற்போது பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் 7ஆவது சிறந்த பல்கலைக்கழகமாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட 31 நோபல் பரிசு பெற்றவர்களை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசினால் 1854 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. முற்காலச் சோழர்கள் முற்காலச் சோழர்களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். இவற்றின் விரிவுகளை கீழ்காணும் இருவேறு கட்டுரைகளில் காணலாம். மஞ்சக்குப்பம் மஞ்சக்குப்பம் இந்திய நகரான கடலூரின் மூன்று பெரிய பிரிவுகளுள் ஒன்று. பொன்னையார் நதி நகரம் வழியாக பாய்கிறது, நதிக்கரைக்கு அருகில் உள்ள பகுதி மஞ்சகுப்பம் என்று பெயரிடப்பட்டது. இது 17 ஆம் நூற்றாண்டின் போது மஞ்சள் குப்பம் என்று அறியப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அது இன்னும் மஞ்சகுப்பம் என்று அறியப்படுகிறது, இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் மஞ்சைநகர் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறது.மஞ்சகுப்பத்தில் கடலூரின் முக்கிய அரசுஅலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன மஞ்சகுப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம். 1680இல் வெளியிடப்பட்ட சென்னை கசட்டேர்ஸ் "... தென்ஆற்காடு மாவட்டத்தில் , அவர்கள் (டச்சு) தேவனாம்பட்டினம் கோட்டை உடைமையாக கொண்டிருந்தனர் மற்றும் மஞ்சகுப்பம் ஒரு குத்தகை நிலமாக அவர்கள் வசம் இருந்தது, 1690 ல் கோட்டை புனிதடேவிட் வாங்கப்பட்டது ... " என்று குறிபிடுகிறது மு. மீரா சலீமுல்லாஹி மு. மீரா சலீமுல்லாஹி (பிறப்பு: பிப்ரவரி 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பலதரப்பட்ட சமுதாய, பொதுநல இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். 1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இடைக்காலச் சோழர்கள் இடைக்காலச் சோழர்கள் 9-ம் நூற்றாண்டில் மிகப்பெரியதும் பிரபலமானதுமான பேரரசை நிறுவினார்கள். தென் இந்தியாவின் மிகப்பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்களுடைய கடற்படை மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. அதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சிறீவிஜயம் வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்கள், தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள். முத்திரைக் காசு முத்திரைக் காசு (Punch marked coin) என்பது, வேதகாலத்துக்குப் பின்னர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 3 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலப்பகுதியில். இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதியில் முத்திரை பொறித்து வெளியிடப்பட்ட காசைக் குறிப்பதாக கருத்து நிலவி வந்தது. பிற்பாடு பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளின் பழமை பொ.மு. 500 வரை சென்றதால் இவை தமிழகத்தில் சம காலத்தில் புழக்கத்தில் இருந்தமை அறியப்பட்டது. இவையே இந்தியாவில் வெளியிடப்பட்ட முதற் காசுகள் எனக் கருதப்படுகின்றன. இக்காசுகளை தமிழக மூவேந்தர்களின் அரசுகள், "சனபதங்கள்", "மகாசனபதங்கள்" அரசுகள் வெளியிட்டன. இக் காசுகள் அக்காலத்தில் "புராணா", "கர்சாப்பாணா", "பாணா" போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டன. இக் காசுகள் பலவற்றில் சின்னங்கள் முத்திரை இடப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, சௌராசுட்டிரக் காசுகளில் திமிலுடன் கூடிய காளைச் சின்னமும், தெற்குப் பாஞ்சாலக் காசுகளில் சுவசுத்திக்காவும் பொறிக்கப்பட்டிருந்தன. மகதக் காசுகளில் பல்வேறு சின்னங்கள் காணப்படுகின்றன. இக் காசுகள் வெள்ளியில் செய்யப்பட்டவையாகவும், ஒரே நிறை கொண்டவையாகவும் இருந்தன. எனினும், இவை ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருந்தன. வட இந்தியாவில் இக் காசுகள் கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்துக்கு முன்பே வழக்கற்றுப் போய்விட்டன எனினும், தென்னிந்தியப் பகுதிகளில் மேலும் மூன்று நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தன. இக் காசுகளைச் செய்த விதம் குறித்த குறிப்புக்கள் மனு, பாணினி, கௌடில்யர் என்போர் எழுதிய நூல்களிலும், புத்த சாதகக் கதைகளிலும் வருகின்றன. உலோகத்தை மட்கலத்தில் இட்டு உருக்கியபின் அதனுடன் காரப்பொருள் சேர்த்துச் சுத்தம் செய்தனர். பின்னர் அவ்வுலோகத்தைக் குளிரவிட்டுச் சம்மட்டியால் அடித்துத் தகடுகளாக ஆக்கினர். இத்தகடுகள் குறித்த நிறைகளைக் கொண்டிருக்குமாறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்னர், அவற்றின் மீது முத்திரைப் பொறிகளைப் பயன்படுத்தி முத்திரை இட்டனர். சில அரசுகள் உருக்கிய உலோகத்தை அச்சில் வார்த்து வட்டவடிவமாகச் செய்து முத்திரை இட்டதையும் அறிய முடிகிறது. இக்காசுகளில் எழுத்துக்களோ அல்லது அவை வெளியிடப்பட்ட ஆண்டுகளோ பொறிக்கப்படவில்லை. சின்னங்கள் மட்டுமே காணப்பட்டன. இச் சின்னங்களில் விலங்குகள், பறவைகள், மரங்கள், மனிதர், பிற உயிரினங்கள், சூரியன் போன்றவைகளும்; சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களும் அடங்கியிருந்தன. இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் சின்னங்களைக் கொண்டே காசுகள் எக்காலத்துக்கு உரியவை என்றும் யாரால் வெளியிடப்பட்டவை என்றும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது. இக் காசுகளின் முன்பக்கத்தில் ஐந்து அல்லது ஆறு சின்னங்கள் காணப்படுகின்றன. சில காசுகளில் பின்பக்கத்தில் சின்னங்கள் எதுவும் இல்லை. எனினும், வேறு சில காசுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சின்னங்களும் காணப்படுவது உண்டு. இச் சின்னங்கள், அவை முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அன்றிப் பின்னர் அவற்றை வைத்திருந்தவர்களால் பொறிக்கப்பட்டவை என்ற கருத்தும் நிலவுகிறது. கல்யாணி தொகரிகர் கல்யாணி தொகரிகர் ("Kalyani Dhokarikar ", பிறப்பு: மே 9 1971), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 ல் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கல்யாணி ஒரு மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார். சுவசுத்திக்கா சுவசுத்திக்கா அல்லது சுவஸ்திக்கா என்பது ஒன்றையொன்று அவற்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள், அவற்றின் எல்லா நுனிப்பகுதிகளும் ஒரே திசையில் வளைந்து இருக்குமாறு அமைந்த ஒரு வடிவத்தைக் குறிக்கும். இது நுனிகள் வலப்பக்கம் வளைந்தவையாகவோ (), இடப்பக்கம் வளைந்தவையாகவோ () இருக்கலாம். இந்த வடிவம் பண்டை இந்தியாவின், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இது இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாகப் பயன்பட்டது. மேற்கத்திய பண்பாட்டில் குறிகிய காலம் இவ்வடிவம் பெரு வழக்கில் இருந்ததைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டில் தேசிய சமூகவுடமைச் செருமன் தொழிலாளர் கட்சியினர் (நாசிக் கட்சி) இவ்வடிவத்தைத் தமது சின்னமாக ஆக்கினர். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் செருமனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், சுவசுத்திக்கா நாசி செருமனியில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது. 1935 ஆம் ஆண்டில் சுவசுத்திக்காவைக் கொண்டிருந்த நாசிக் கட்சியின் கொடி, செருமனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனால் 1930களில், சுவசுத்திக்காவை நாசிசம், பாசிசம், வெள்ளையின உயர்வுக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகவே மேற்குலகம் பார்த்தது. தற்காலத்தில் மேற்கு நாடுகளில் இது இகழ்ச்சிக்கு உரிய ஒரு சின்னமாகவே உள்ளது. நாசிசத்தின் சின்னமாக இது பயன்படுத்தப்படுவதை செருமனி தடை செய்துள்ளது. நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பல தற்கால தீவிரவாத அரசியல் கட்சிகள் சற்று மாற்றியமைக்கப்பட்ட சுவசுத்திக்காவைத் தமது சின்னமாகக் கொண்டுள்ளன. சுவஸ்திக்கா என்னும் பெயர் சமசுக்கிருத மூலம் கொண்டது. இது அதிட்டத்தைத் தரக்கூடிய அல்லது மங்களமான பொருட்களைக் குறிக்கிறது. இச்சொல்லில் முதலில் வரும் "சு" நல்ல என்பதைக் குறிக்கும். ஆகவே "சுவஸ்தி" நலமாக இருத்தலைக் குறிக்கிறது." பௌத்த சமயத்தவர்கள் பயன்படுத்திய இக் குறியீடு சமயத்தினூடாகச் சீன மொழியில் எழுத்தாக நிலை பெற்றுள்ளது. அம் மொழியில் இருந்து சப்பான் மொழி உட்பட்ட பல கிழக்காசிய மொழிகளுக்கும் இது பரவி உள்ளது. சீன மொழிக்கான ஒருங்குறி வரி வடிவங்களில் இடது புறம் நோக்கும் சுவசுத்திக்கா வடிவம் U+534D என்பதினாலும், வலது புறம் நோக்கும் வடிவம் U+5350 என்பதினாலும் குறிக்கப்படுகிறது. திபெத்திய மொழிக்கான ஒருங்குறியிலும் நான்கு வகையான சுவசுத்திக்கா வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. வடிவவியல் அடிப்படையில் சுவசுத்திக்காவை ஒரு இருபதுகோணி அல்லது 20 பக்கப் பல்கோணி எனக் கொள்ளலாம். இது 90 பாகை சுழற்சிச் சமச்சீர் கொண்ட ஒரு வடிவம். ஆனால், இது தெறிப்புச் சமச்சீர்த் தன்மை உடையது அல்ல. இதன் வலப்புறம் நோக்கியதும், இடப்புறம் நோக்கியதுமான இரு வடிவங்களும் ஒன்றுக்கொன்று தெறிப்பு வடிவங்களாக அமைந்துள்ளன. இவ்விரு சுவசுத்திக்கா வடிவங்களையும் பின்வரும் வழிகளில் வேறுபடுத்திக் குறிப்பிடுவது உண்டு. கோடுகள் கிடையாகவும், நிலைக்குத்தாகவும் அமைய இருக்கும் சுவசுத்திக்கா வடிவம் ஒன்றில், மேலே இருக்கும் கிடைக்கோடு நோக்கும் திசையின் அடிப்படையிலேயே வலம் நோக்கு, இடம் நோக்கு என்பன தீர்மானிக்கப்படுகின்றன. இக்கோடு பார்ப்பவர்களின் வலப்பக்கம் நோக்கியிருந்தால் அது வலம் நோக்கிய சுவசுத்திக்கா. இடப்புறம் நோக்கியிருந்தால் அது இடம் நோக்கிய சுவசுத்திக்கா. சுவசுத்திக்காவின் சுழற்சித்திசை என குறுக்குக்கோடுநோக்கும் திசையைக் கொள்வதா அல்லது அக்கோடு பின்தொடர்ந்து செல்லும் திசையைக் கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. பெரும்பாலும், நுனிகளில் அமையும் குறுக்குக் கோடுகள் நோக்கும் திசையில் சுழற்சி ஏற்படுவதாகக் கொண்டே மணிக்கூட்டுத்திசை அடிப்படையில் வேறுபாடு விளக்கப்படுகிறது. இதன்படி வலம் நோக்கிய சுவசுத்திக்கா மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும். இடம் நோக்கிய வடிவம் எதிர்மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும். கேன்டசி அட்கின்ஸ் கேன்டசி அட்கின்ஸ் ("Candacy Atkins", பிறப்பு: பிப்ரவரி 13 1984), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2004 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷெரில் பேலி ஷெரில் பேலி ("Sheryl Bayley"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷிர்லி-ஆன் பொனபார்ட் ஷிர்லி-ஆன் பொனபார்ட் ("Shirley-Ann Bonaparte ", பிறப்பு: பிப்ரவரி 5 1956), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1979 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெவர்லி பிரௌன் பெவர்லி பிரௌன் ("Beverly Browne", பிறப்பு: மார்ச்சு 27 1957), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லுயீஸ் பிரௌன் "'லுயீஸ் பிரௌன்" ("Louise Browne", பிறப்பு: மார்ச்சு 16 1952), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மடைப்பள்ளி வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது. இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம் “மடைப்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது. வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு. மடை என்னும் சொல் சமையல் செய்த சோற்றைக் குறிக்கும். பள்ளி என்னும் சொல் இடத்தைக் குறிக்கும். எனவே சமையல் செய்யுமிடம் மடைப்பள்ளி எனப்பட்டது ஃபெலீசியா கமிங்ஸ் ஃபெலீசியா கமிங்ஸ் ("Felicia Cummings", பிறப்பு: பிப்ரவரி 20 1968), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2005 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சி. கணபதிப்பிள்ளை பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (சூன் 27, 1899 - மார்ச் 13, 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்களப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார். 1926 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்விற் சித்தி பெற்றுப் பண்டிதர் பட்டம் பெற்றார். லோச் செல்லப்பாவின் தூண்டுதலால் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் காவிய வகுப்புகளைப் பண்டிதமணி நடத்த ஆரம்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற பண்டிதமணியை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்கள் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையே அவருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது. கவிசமயம் என ஒரு சமயம் புலவர்களுக்கு உண்டு என பண்டிதமணி விளக்கம் கூறுவார். அவரது வார்த்தையில் கூறினால், கவிசமயமாகிய அந்தச் சமயம் சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்களை நாடி அதனை இன்னும் இன்னும் பொறாது, பொறுக்க முடியாது கருவுயிர்த்தற்கு, சொல்லுருவத்திற் கண்டுகளித்தற்கு - முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குக் கவிசமயம் என்று பெயர் வைத்துக் கொள்வோம் என்கிறார் பண்டிதமணி. நல்லூர் ஆறுமுக நாவலர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் பண்டிதமணி. அவரது எழுத்துக்களைக் கற்று நாவலரோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவற்றை எழுதினார். அத்துடன் சிதம்பரம் கும்பாபிசேக மலரில் சுவாமி ஞானப்பிரகாசர் குறித்தும் கலைமகள் மலரில் பஞ்ச கன்னிகைகள் குறித்தும் பண்டிதமணி எழுதிய ஆக்கங்கள் அவருக்கு மிகுந்த புகழைக் கொடுத்தன. மெர்லின் எட்வர்ட்சு மெர்லின் எட்வர்ட்சு ("Merlyn Edwards") மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெக்கி ஃபேர்வெதர் பெக்கி ஃபேர்வெதர் ("Peggy Fairweather", மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். வெரீனா ஃபெலீசியன் வெரீனா ஃபெலீசியன் ("Verena Felician", பிறப்பு: நவம்பர் 12 1964), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 2005 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். யொலன்டே கெட்டஸ்ஹோல் யொலன்டே கெட்டஸ்ஹோல் ("Yolande Geddes-Hall"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டெசிமீட்டர் ஒரு டெசிமீட்டர் ஒரு மீட்டரின் பத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது 1 டெசிமீட்டர் = 10 சென்டிமீட்டராகும். இம்பீரியல் அளவு முறையில் உள்ள ஒரு டெசிமீட்டர் என்பது 3.93 அங்குலம் ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுள் ஒன்று. நடீன் ஜார்ஜ் நடீன் ஜார்ஜ் ("Nadine George", பிறப்பு: அக்டோபர் 15 1968), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2009 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இந்துமதி கோர்டியால் இந்துமதி கோர்டியால் ("Indomatie Goordial", பிறப்பு: ஆகத்து 15 1985), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2005 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சுவசுத்திக்கா வளைவு சுவசுத்திக்கா வளைவு என்பது, ஒரு நாற்படிச் சமதள வளைவரைபு ஆகும். இவ்வளைவரைபுக்கு கன்டி, ரோலெட் ஆகிய இருவர் இப்பெயரை இட்டனர். இதன் கார்ட்டீசியச் சமன்பாடு பின்வருமாறு அமையும்: அல்லது இவ்வளைவைப் பின்வருமாறு கோணத்தூரச் சமன்பாட்டினாலும் குறிப்பிடலாம். இவ்வளைவு வலம் நோக்கிய சுவசுத்திக்காவின் வடிவத்தை ஒத்திருக்கும். எனினும் சமன்பாட்டை மாற்றுவதன் மூலம் இடம் நோக்கிய சுவசுத்திக்காவை ஒத்த வளைவைப் பெறலாம். இச் சமன்பாடு பின்வருமாறு அமையும்: ஜுலியானா நீரோ ஜுலியானா நீரோ ("Juliana Nero", பிறப்பு: சூன் 14 1979), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2010 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ப. மு. அன்வர் ப. மு. அன்வர் (பிறப்பு: சூன் 15, 1942) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு மூத்த தமிழ்ப் புலவர். சிந்துக் கண்ணியில் நிறைய பாடல்களை எழுதி உள்ளார். அன்வர் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பனந்தாள் எனும் இடத்தில் பக்கீர் முகமது ராவுத்தர், சபியாபிவி ஆகியோருக்கு 1942-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தவித்திரு குமரகுருபரர் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 1956-இல் மலாயாவிற்கு வந்து தம்முடைய கல்வியைத் தொடர்ந்தார். பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பல அறிஞர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் கற்று நிறைந்த நூலறிவைப் பெற்றார். 1957-ஆம் ஆண்டு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதத் தொடங்கினார். கவிதைவேள் கா.பெருமாள் வழியாகத் தம்முடைய கவிதைப் படைப்பாற்றலை நெறிப்படுத்திக் கொண்டார். இவருடைய தன்னுணர்ச்சிப் பாக்களும், கவிதை நாடகங்களும், இசைப் பாடல்களும் மலேசிய வானொலி யில் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி உள்ளார். ஆனால், அந்தப் பாடல்களை நூலாக்கம் செய்யவில்லை. எனினும், ‘செய்குசனான்’ எனும் குறும்பாவியலை நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2003-ஆம் ஆண்டின் டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் விருதைப் பெற்றது. 5000 மலேசிய ரிங்கிட் பரிசாகவும் வழஙகப்பட்டது. இவர் மலேசியாவில் எண்ணற்ற பரிசுகள், விருதுகள், தங்கப் பதக்கங்களப் பெற்றுள்ளார். . அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட ‘மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்’ தொகுப்புக் குழுவின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றி உள்ளார். ஸ்டெஃபனி பவர் ஸ்டெஃபனி பவர் ("Stephanie Power", பிறப்பு: ஏப்ரல் 19 1957), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993-2004/05 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜாக்குலின் ராபின்சன் ஜாக்குலின் ராபின்சன் ("Jacqueline Robinson", பிறப்பு: சனவரி 30 1966, இறப்பு: அக்டோபர் 3 2005), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஜாஸ்மின் சாம்மி ஜாஸ்மின் செம்மி ("Jasmine Sammy"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 -1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெட்ரீசியா விட்டேகர் பெட்ரீசியா விட்டேகர் ("Patricia Whittaker"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975 -1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார். நம்பியாறு நம்பியாறு தமிழகத்தின் தென்பகுதியில் பாயும் ஓர் ஆறு. இது திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி வட்டத்தினூடாகப் பாய்கிறது. இது 45 கிலோமீட்டர் நீளமுடைய ஒரு சிறு ஆறு. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது. பரட்டையாறு, தாமரையாறு ஆகியன இதன் துணையாறுகள் ஆகும். மகேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் இவ்விரு ஆறுகளும் சேர்கின்றன. என்விஸ் வில்லியம் என்விஸ் வில்லியம் ("Envis Williams", பிறப்பு: அக்டோபர் 8 1962), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 997/98-2004/05 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சூரியச் சின்னங்கள் சூரியச் சின்னம் என்பது சூரியனைக் குறிப்பதற்காகப் பயன்படும் ஒரு குறியீடு ஆகும். உளப்பகுப்பாய்வு, குறியியல், சோதிடம், சமயம், தொன்மவியல், குறிசொல்லல், மரபுச் சின்னவியல் போன்ற துறைகளில் சூரியச் சின்னங்கள் பயன்படுகின்றன. சூரியச் சின்னங்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாக உள்ளன. எளிமையான ஒரு வட்டம் சூரியனைக் குறிக்கும் சின்னமாகப் பயன்படுவது உண்டு. வட்டமொன்றின் மையத்தில் புள்ளியைக் கொண்ட குறியீடு சூரியனைக் குறிக்கப் பயன்படுவது உண்டு. இது வானியல், சோதிடம் ஆகிய துறைகளில் சூரியனைக் குறிக்கப் பயன்படுகின்றது. பண்டை எகிப்து மொழியில் சூரியனைக் குறிக்கும் "ரா" என்பதன் குறியீடும் இதுவே. பழங்காலச் சீன மொழியில் சூரியன், பகல் என்பவற்றைக் குறிக்கும் குறியீடும் இது போன்றதே. எனினும் தற்காலத்தில் இது சதுரவடிவம் கொண்டதாக மாறிவிட்டது. "சூரியச் சிலுவை" அல்லது "சூரியச் சில்லு" எனப்படும் சூரியச் சின்னம் ஒரு வட்டத்தை நான்காகப் பிரிக்குமாறு அதற்குள் ஒன்ன்றுக்கொன்று செங்குத்தாக வரையப்பட்ட இரண்டு கோடுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்த நான்கு பிரிவுகள் நான்கு பருவகாலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சுவசுத்திக்காவை "சூரியச் சிலுவை" சின்னத்திலிருந்து இருந்து உருவாக்க முடியும். சில வேளைகளில் இது சூரியச் சின்னமாகப் பயன்படுகின்றது. எனினும் பல பண்பாடுகளில், இது பிற பொருள்களைக் குறிக்கும் குறியீடுகளாகவும் பயன்படுவது உண்டு. இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் இது வேறு பொருள் குறிக்கின்றது. பெரும்பாலும் நாற்படிச் சமச்சீருடன் கூடிய என்முனை விண்மீன் வடிவங்கள் சூரியனைக் குறிக்கின்றன. இவ்வடிவங்கள், உடுமுர்ட்டியா, மோர்டோவியா, மாரி எல், சுவாசியா போன்ற உருசிய நாட்டின் உட்பிரிவுகளின் கொடிகளில் சூரியனைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுகின்றன. இதே பொருள் குறிக்கும் வகையில் இச் சின்னம் 1959 - 1963 காலப் பகுதி ஈராக்கின் கொடியிலும் அமைந்திருந்தது. பண்டைக்காலத்தில் ஊராலியப் பழங்குடியினர் தமது குறியீடாக இதனைக் கொண்டிருந்தனர். வட்டமொன்றை எட்டுப் பாகங்களாகப் பிரிக்கும் வகையில் நான்கு குறுக்குக் கோடுகளைக் கொண்ட குறியீடு இது. எட்டு ஆரைக்கால்கள் கொண்ட சில்லின் வடிவம் கொண்டது. இதுவும் சூரியனைக் குறிக்கும் ஒரு சின்னம் ஆகும். மூன்று சுருளிகள் ஒன்னுடன் ஒன்று பிணைந்த அமைப்பைக் கொண்டவையே முச்சுருளி வடிவங்கள். சில முச்சுருளி வடிவங்கள் சூரியனைக் குறிப்பதற்கான குறியீடுகளாகப் பயன்படுகின்றன. உருசியாவின் உட்பிரிவுகளில் ஒன்றான இங்குசேத்தியக் குடியரசின் கொடியில் காணப்படும் முச்சுருளி வடிவம் சூரியனைக் குறிக்கிறது. உரோசாப்பூவின் இதழ்களைக் காட்டுவதாகக் கூறப்படும் ஆறு இதழ்களுடன் அமைந்த இந்த உரோசாவிதழுரு என்னும் வடிவம், அங்கேரியில் ஒரு சூரியச் சின்னமாகவும், ஒரு அழகூட்டல் கூறு ஆகவும் பயன்படுகிறது. இதே சின்னம், சிலேவியப் பகுதிகளில் வியாழனைக் குறிக்கிறது. இது பல்வேறு பாரம்பரியக் கலைகளிலும், பண்டைய கட்டிடக்கலையிலும் அலங்காரக் கூறாகப் பயன்பட்டது. பொதுவாக இச்சின்னம் அரசியல் தொடர்புகள் அற்ற பாரம்பரியச் சின்னமாகவே கருதப்பட்டாலும், எசுப்பானியாவின் தன்னாட்சியுடன் கூடிய அசுட்டூரியாசுப் பகுதியில் சில தேசியவாத இயக்கங்கள் இதனைத் தமது சின்னமாகப் பயன்படுத்துகின்றன. வட்டமொன்று மூன்று குறுக்குக் கோடுகளால் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படும் வகையில் அமைந்த வடிவமே சூரிய வட்டம் எனப்படுகிறது. சிலாவியப் பகுதியில் சூரியச் சின்னமாகப் பயன்படும் இக் குறியீடு இசுபுருச் சிலைகளிலும் காணப்படுகிறது. அச் சிலைகளில் இது போர்க் கடவுளான சுவாந்தவிட்டைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றது. வட்டமான நடுப் பகுதியையும், அதிலிருந்து விரிந்து செல்வதுபோல் வரையப்பட்ட முக்கோண வடிவக் கதிர்களையும் கொண்ட குறியீடுகள் சூரியனின் சின்னமாகப் பயன்படுகின்றன. இவ்வாறான சூரியச் சின்னங்களில் கதிர்களின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. கதிர்கள் நேரான, வளைந்த, அல்லது அலைவடிவிலான முக்கோணங்களாக அமைவது உண்டு. பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சாமாசு என்னும் சூரியக் கடவுளைக் குறிக்கும் சின்னத்தில் நான்கு நேர் முக்கோணங்களும், அவற்றின் இடையே அமைந்த நான்கு அலைவடிவ முக்கோணங்களும் கதிர்களைக் குறிக்க வரையப்பட்டுள்ளன. உருகுவே, கிரிபாட்டி ஆகிய நாடுகளின் கொடிகளிலும், ஆர்சென்டீனாக் கொடியின் சில வகைகளிலும், ஐரியப் பாதுகாப்புப் படையினரின் தொப்பியில் உள்ள சின்னத்திலும் இவ்வகையான கலப்பு வடிவங்களைக் காணலாம். சீனக் குடியரசு, கசாக்கிசுத்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் கொடிகளில் நேர் முக்கோணங்களால் அமைந்த சூரியச் சின்னங்கள் உள்ளன. கிர்கிசுத்தான் கொடியில் அலைவடிவக் கதிர்களுடன் கூடிய சூரியன் உள்ளது. பிலிப்பைன்சு நாட்டுக் கொடியில் கதிர்கள் நடுவில் இருந்து விரிந்து செல்வதுபோல் அமைந்துள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் அரசியலில் அண்மைக் காலத்தில் சூரியச் சின்னம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இச் சின்னங்கள் உதய சூரியனைக் குறிப்பதாக அமைந்துள்ளன. 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் சின்னமாக உதய சூரியனை ஏற்றுக்கொண்டது. மலைகளுக்கு இடையில் இருந்து சூரியன் உதிப்பது போல் அமைந்த சின்னம் அது. அரைவட்ட வடிவத்திலிருந்து கதிர்கள் விரிந்து செல்வது போன்ற அமைப்புக் கொண்டது திமுகவின் உதய சூரியன் சின்னம். இலங்கையில் மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழர் கூட்டணியை உருவாக்கியபோது அதன் சின்னமாக உதய சூரியன் தெரிவு செய்யப்பட்டது. உதய சூரியன் அக் கட்சியின் தேர்தல் சின்னமாக மட்டுமன்றி அதன் கொடியிலும் உதய சூரியன் பெரிய அளவில் பொறிக்கப்பட்டிருந்தது. இச்சின்னம் அரை வட்டத்திலிருந்து கதிர்கள் செல்வதுபோல் அமைந்தது. இதன் கதிர்கள் முக்கோண வடிவில் அமைந்தவை. மெரீசா ஆகிலேரா மெரீசா ஆகிலேரா ("Merissa Aguilleira ", பிறப்பு: திசம்பர் 14 1985), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 பெண்கள் இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 -2011 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிர்பியினா அலெக்சான்டர் கிரிபினா அலெக்சான்டர் ("Kirbyina Alexander", பிறப்பு: சூலை 6 1987), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 6 பெண்கள் இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 -2010 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆன் பிரவுன் ஆன் பிரவுன் ("Ann Browne", பிறப்பு: சூன் 28 1955), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -1997 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஈவ் சீசர் ஈவ் சீசர் ("Eve Caesar"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 6 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டையேன் காகென் டையேன் காகென் ("Dianne Cagen") மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 3 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எலைன் கன்னிங்காம் எலைன் கன்னிங்காம் ("Elaine Cunningham"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 5 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஷனேல் டேலி ஷனேல் டேலி ("Shanel Daley", பிறப்பு: திசம்பர் 25 1988), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 பெண்கள் இருபதுக்கு -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 -2011 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஷேன் டி சில்வா ஷேன் டி சில்வா ("Shane de Silva", பிறப்பு: செப்டம்பர் 22 1972), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டியாண்ட்ரா டோட்டின் டியாண்ட்ரா டோட்டின் ("Deandra Dottin", பிறப்பு: சூன் 21 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 பெண்கள் இருபதுக்கு -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 -2009 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மலேசிய வானொலி மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் ("Radio Televisyen Malaysia"), மலேசிய அரசுக்கு சொந்தமான ஓர் ஒலி, ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். சுருக்கமாக அதனை ஆர்.டி.எம் என்று அழைக்கிறார்கள். அந்த நிறுவனம் பல நிலையங்களை கோலாலம்பூரில் இருந்து நடத்தி வருகின்றது. தற்சமயம் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் நடத்தி வரும் நிலையங்கள் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் நடத்தி வரும் ஒளிபரப்பு நிலையங்கள் TV1 தொலைக்காட்சி காலை 06.00 மணியில் இருந்து மறுநாள் 1.00 வரை ஒளிபரப்பு செய்கிறது. TV2 தொலைக்காட்சி மட்டும் 24 மணி நேரச் சேவையை வழங்குகிறது. மலேசிய ஊடகச் சந்தையில் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் 17 விழுக்காடு ரசிகர்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் TV3, ntv7, 8TV, TV9 எனும் மீடியா பிரைமா தனியார் நிறுவனம் உள்ளது. அடுத்து அஸ்ட்ரோ நிறுவனம் வருகிறது. மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் அமைக்கப் பட்டது. 1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்ததும் மலாயா வானொலி, சிங்கை வானொலி என்று இரண்டாகப் பிரிந்தது. மலாயா வானொலி பின்னர் மலேசிய வானொலி என்று பெயர் மாற்றம் கண்டது. 1963 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தொலைக்காட்சி மலேசியாவில் அறிமுகம் ஆனதும் அதற்கு மலேசிய வானொலி தொலைக்காட்சி எனும் புதிய பெயர் கிடைத்தது 1963 டிசம்பர் 28 ஆம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தொடங்கின. 1968 ஆம் ஆண்டு இரண்டாவது ஒளிபரப்பு அலை அங்காசாபுரியில் இருந்து தனது சேவைகளைத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு கல்வி ஒளிபரப்பு தொடங்கப் பெற்றது. புரோலின் புரோலின் "(Proline)" என்பது CHNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமினோ அமிலம் ஆகும். இதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை HO2CCH(NH[CH2])3.என்று எழுதுகிறார்கள். CCU, CCC, CCA மற்றும் CCG போன்ற மரபுக்குறிமுறையன்களால் இது குறிக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலம் புரதங்களைத் தயாரிக்கும் உயிரினத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் α-அமினோ அமிலக் குழுவும், ஓர் α-கார்பாக்சிலிக் அமிலமும் புரோலினில் இடம்பெற்றுள்ளன. முனைவற்ற அலிபாட்டிக் அமினோ அமிலம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள். மனித உடலுக்கு அத்தியாவசியமற்ற அமினோ அமிலம் புரோலினாகும். அத்தியாவசியமற்ற அமினோ அமிலமான எல் குளுட்டாமேட்டிலிருந்து மனித உடல் இதைத் தயாரித்துக் கொள்கிறது. புரோலின் மட்டுமே இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்து புரதமாகும் அமினோ அமிலமாகும். இதிலுள்ள ஆல்பா-அமிலக் குழுவானது நேரடியாகப் பக்கச் சங்கிலியுடன் இணைந்து ஆல்பா-கார்பனை பக்கச் சங்கிலிக்கு ஒரு நேரடியான பதிலீடாக்குக்கிறது. திரியோனின் திரியோனின் (Threonine) [குறுக்கம்: The (அ) T] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)CH(OH)CH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: ACU, ACA, ACC மற்றும் ACG. செரின் அமினோ அமிலம் போலவே திரியோனினும் ஆல்கஹால் (-OH) தொகுதியைக்கொண்டுள்ளது. திரியோனின் ஒரு மின் முனைவுள்ள அமினோ அமிலமாகும். சிதம்பரநாதன் சபேசன் சிதம்பரநாதன் சபேசன் பிரித்தானியாவின் இளம் கண்டுபிடிப்பாளர். பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தார். யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சபேசன் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றுச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார். இந்நிலையில் பிரித்தானியாவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியியற் கல்வியை 2007-ஆம் ஆண்டு நிறைவு செய்து இங்கிலாந்து அளவில் தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை இங்கிலாந்து கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்றுத் தொடர்ந்தார். இவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி எந்தவொரு பொருளுடனும் ஒரு சிறு பொறியை இணைத்து விட்டால் அந்தப் பொருளுக்கான அடையாளமாகவும் அது இன்னாருடையது எனத் தெரிவிப்பதாகவும் அமைகிறது. அத்துடன் தனது இருப்பிடத்தைத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டும் உள்ளது. இது போன்ற அடையாள இணைப்புகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும் இவரது கண்டுபிடிப்பான பொறியை மிகக் குறைந்த விலையில் உருவாக்க முடியும் என்றும் மின்கலம் இல்லாமலேயே இயங்கவல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பான intelligent wireless passive sensor technology system விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது. இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவரது கண்டுபிடிப்புக்காக அவருக்கு "ஐக்கிய இராச்சிய முன்னோடி" ("UK Pioneer") விருதையும் "முடியாட்சியின் கல்விசார் தொழில் முனைவு" ("Royal academic enterpreneurship") விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இவர் Master Of Physicology in Electronic Engg மற்றும் Doctor Of Physicology in Electronics Engg என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார். "Sir William Siemen Medal" பதக்கம் பெற்றுக் கொண்டார். இரண்டு Patents Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system ஆனது பல வணிக நிறுவனங்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. தொல்காப்பியம் வினையியல் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம் சொற்கள் இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்துகிறது. இந்தப் பாங்கை நாம் வாக்கியம் என வழங்கிவருகிறோம். வினையியல் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வருகிறது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை-மயங்கியல், விளிமரபு என்னும் முதல் நான்கு இயல்களும் வாக்கிய அமைப்பை உணர்த்துகின்றன. அடுத்து வரும் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களும் வாக்கியத்தில் வரும் சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஒன்பதாவதாக உள்ள எச்சவியல் 8 இயல்களில் சொல்லப்படாத எச்சமிச்சச் செய்திகளைக் கூறுகிறது. வினைச்சொல் வேற்றுமை கொள்ளாது காலம் காட்டும் -1- காலம் மூன்று வகைப்படும் -2- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தெரியும்-நிலையிலும், குறிப்பு-நிலையிலும் தோன்றும் -3- வினைச்சொல்லானது உயர்திணைக்கும், அஃறிணைக்கும், இரண்டிலும் விரவும் பெயர்க்கும் உரிமை உடையது -4- உயர்திணையில் தன்மைப்பன்மை வினைச்சொல் 8 ஈறுகளில் முடியும் -5- தன்மை-ஒருமை வினைச்சொல்லின் 7 ஈறு -6- செய்கு வந்தேன் (செய்துகொண்டு வந்தேன்) என மற்றொரு வினை கொண்டும் முடியும் -7- படர்க்கை-ஒருவர் 4 ஈறு கொள்ளும் -8- படர்க்கை-பலர் 3 ஈறு கொள்ளும் -9, 10- இந்த 23 ஈறுகள் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் உணர்த்திக்கொண்டு உயர்திணையில் வரும். -11- வந்தனம், வந்தாம் தொடக்கத்தன தன்மையொடு முன்னிலையையும் சேர்த்து உணர்த்தும் -12- யார் என்னும் சொல் 3 பாலுக்கும் உரியது. -13- பால் உணரும்படி வந்த உயர்திணை ஈறு மூன்றும் செய்யுளில் ஆ<ஓ ஆகும் -14- முன்னிலையில் வரும் ஆய் என்னும் சொல்லும் அவ்வாறு வரும் -15- குறிப்பு வினைமுற்றில் காலம் குறிப்பால் உணர்த்தப்படும் -16- உயர்திணை வினைமுற்று ஈறுகள் 23 என்று கூற்றப்பட்டன. அவற்றிற்கும் இந்தக் குறிப்பு வினைமுற்று ஈறுகளுக்கும் வேறுபாடு இல்லை. -17- இவற்றில் வடாது, தெனாது என்பவை குறிப்பு-வினைமுற்று பலவற்றுப் படர்க்கை ஈறுகள் 3. அவை: அ, ஆ, வ – என்பன -18- ஒன்றன் படர்க்கை 3 குற்றியலுகர ஈறுகள். அவை து, டு, று -19- இந்த 6 ஈறுகள் அஃறிணையில் பால் உணர்த்துவன -20- எவன் அது, எவன் அவை என எவன் என்னும் சொல் ஒன்றன்பாலுக்கும், பலவின்பாலுக்கும் பொதுவாக வரும். -21- அஃறிணைக் குறிப்பு வினைமுற்று -22- விரவுத்திணைப் பெயர்கள் -23- ஒருவற்கும் ஒன்றற்கும் பொது -24- பல்லோர்க்கும் பலவற்றுக்கும் பொது -25- முன்னிலை அல்லாத ஏனை ஏழும் 5 பாலுக்கும் உரியன -26- வியங்கோள் மன்னா இடம் (சிறுபான்மையாக வருமிடம்) தன்மை, முன்னிலை -27- செய்யும் என்னும் நிகழ்காலச்சொல் வருமிடம் -28- வினையெச்சம் -29- மேலும் வினையெச்ச ஈறுகள் -30- செய்து, செய்யூ, செய்பு ஆகிய 3 வினையெச்சங்கள் வினைமுதல் வினை கொண்டு முடியும் -31- இவை மூன்றும் சினையொடு முடியா -32- செய்தென என்னும் வினையெச்சம் -33- வினையெச்சங்கள் பலவாகவும் வரும் -34- செய்யும், செய்த – பெயரெச்சங்கள் -35- மூவிடப் பெயர்க்கும் கொள்க -36- பெயரெச்சமும், வினையெச்சமும் எதிர்மறையில் வந்தாலும் காட்டிய வழியில் இயையும் -37- இவற்றிற்கு இடையில் வேறு சொல்லும் வரும் -38- செய்யும் என்பது செய்ம் எனவும் வரும் -39- செய்து என்பது நிகழ்கால வினையெச்சம். இது எதிர்காலத்துக்கும் வரும் -40- இயற்கை நிலையை நிகழ்காலத்தால் சொல்லவேண்டும் -41- விரைவு கருதி நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இறந்தகாலத்தால் சொல்லலாம். -42- உறுதிப்பொருளை நிகழ்காலத்தால் சொல்லவேண்டும் -43- இது செயல்வேண்டும் – என்று சொன்னால் அது செய்வானையும், அதற்குத் துணைநிற்கும்படி பிறரையும் வேண்டிக்கொள்வதாக அமையும். -44- வற்புறுத்த வரும் வினாவிடை எதிர்மறுக்கும் பொருளையும் உணர்த்தும் -45- இறந்தகாலத்தால் கூறப்படுவன -46- செயப்படு பொருள் செய்தது போலவும் சொல்லப்படும் -47- மயங்குமொழிக் கிளவி இறந்த-காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்த்தும் -48- மயங்குமொழிக் கிளவியில் நிகழ்காலமும் மயங்கும் -49- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு, தமிழகக் காவல் துறையில் உள்ள காவலர், சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஆகிய இருபாலருக்குமான பணியிடங்களுக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலுள்ள ஆண்களுக்கு மட்டுமான தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு சிறைத்துறையில் உள்ள இரு பாலருக்குமான சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. ஏ. பி. மருதழகன் ஏ. பி. மருதழகன் (பிறப்பு: மே 18 1944) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜேஸ், ராஜேஸ்குமார் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் ஒரு முழு நேர எழுத்தாளரும்கூட. மேலும் இவர் "தினமுரசு" நாளிதழ் நிருபராக பணியாற்றியுள்ளார். 1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தோ. மாணிக்கம் தோ. மாணிக்கம் (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ஜடாமுனி, கதிரவன் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், பத்திரிகைப் பொறுப்பாசிரியராவார். மற்றும் "கூட்டுறவு", "தமிழ் மலர்", "தினமணி" ஆகிய பத்திரிகைகளில் நீண்ட காலம் துணை ஆசிரியராக இருந்துள்ளார். 1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இரா. மாணிக்கம் இரா. மாணிக்கம் (பி: 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் மலேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும், மலாயாத் தமிழ்ப் பள்ளிகள் ஆசிரியர் தேசிய சங்க "ஆசிரியர் ஒளி" இதழின் ஆசிரியராகவும் பதவிகளை வகித்துள்ளார். ஈப்போவில் உலகத் திருக்குறள் மாநாட்டினை (2000) ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார் 1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொழிற் சங்கம் மற்றும் கூட்டுறவு பற்றிய கட்டுரைகள் மற்றும் அனைத்துலக மாநாடுகளில் கூட்டுறவு தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மா. செ. மாயதேவன் மா. செ. மாயதேவன் (பி: 1933) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். முனியாண்டி, முனிதாசன், மாயன், மா. மரகதம் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், அச்சக உரிமையாளராவார். மலேசியாவில் ஆரம்ப காலத்திலேயே புத்திலக்கியம் வளர்த்தவர்களுள் மா. செ. மா. முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். மேலும் "திருமுகம்" எனும் தலைப்பில் கையெழுத்து சஞ்சிகையொன்றையும் நடத்தியுள்ளார். தைப்பிங் தமிழர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1951 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஓரங்க நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. (இரண்டும் மா.இராமையாவுடன் கூட்டாக எழுதியவை) தொகுப்பாசிரியர்: இர. ந. வீரப்பன் 1969). கிளியா ஹாய்ட் கிளியா ஹாய்ட் ("Clea Hoyte ", பிறப்பு: ஆகத்து 9 1981), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ராஜேஸ்வரி தொலாக்கியா ராஜேஸ்வரி தொலாக்கியா ("Rajeshwari Dholakia", பிறப்பு: திசம்பர் 26 1959 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கவுந்தி அடிகள் கவுந்தி அடிகள் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ "இவர்கள் எம் மக்கள்" என்கிறார். கேட்டவர்களோ "உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவிக்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் விளையாட்டுக் கல்விக்கான படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.இக்கல்லூரிகளில் ஆசிரியர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்,மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன. பிரீத்தி டிம்ரி பிரீத்தி டிம்ரி ("Preeti Dimri", பிறப்பு: அக்டோபர் 18 1986, ஆக்ரா), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். தமிழ்நாடு உடலியக்க மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உடல் இயக்கம் குறித்த மருத்துவப் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் தமிழ்நாடு உடலியக்க மருத்துவக் கல்லூரிகள் எனப்படுகின்றன. இக்கல்லூரிகள் இம்மருத்துவக் கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. இக்கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் திருச்சியில் தலா 25 மாணவர் சேர்க்கைக்கான இடங்களுடைய இரண்டு அரசு உடலியக்க மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40 சுயநிதிக் கல்லூரிகள் இக்கல்வியை அளிக்கின்றன. கோர்டெல் ஜாக் கோர்டெல் ஜாக் ("Cordel Jack ", பிறப்பு: பிப்ரவரி 22 1982), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் உறுப்பினர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2010 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மருந்தாளுமை குறித்த மருத்துவப் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள் எனப்படுகின்றன. இக்கல்லூரிகள் மருந்தாளுமைக் கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. இக்கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் மதுரையில் என இரண்டு அரசு மருந்தாளுமைக் கல்லூரிகள் உள்ளன. இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 38 சுயநிதிக் கல்லூரிகள் இக்கல்வியை அளிக்கின்றன. பமேலா லவைன் பமேலா லவைன் ("Pamela Lavine", பிறப்பு: மார்ச்சு 12 1969), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் / போட்டிகளி லும் 15 இருபது20 துடுப்பாட்டப் போட்டியிலும் / போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004/05 - 2010 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் / போட்டிகளில் பங்குகொண்டார். மலையாளிகள் மலையாளிகள் எனப்படுவோர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மகாராஷ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள். தெலுங்கர் தென் இந்தியாவின் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தி மற்றும் வங்காளம் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு. ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கருநாடகம், மகாராட்டிரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மொரீசியசு, மலேசியா, கனடா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். பினைல்அலனின் பினைல்அலனின் (Phenyl alanine) [குறுக்கம்: Phe (அ) F] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: CHCHCH(NH)COOH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUU மற்றும் UUC. பென்சைல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், நீர்தவிர்க்கும் பினைல்அலனின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். கன்னடர் கன்னடர் எனப்படுவோர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை கன்னடிகா ("Kannadiga") என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. தமிழ்மொழியைப் போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள். இனக் குழு இனக் குழு (Ethnic group) என்பது ஒரு மக்கள் குழு அல்லது கூட்டம் என்பதாகும். அதாவது அந்த குழுவில் உள்ள மக்கள் தங்களுக்கென பொதுவான மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதநம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் ஒரு பொது மரபுவழியைக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் அகமணம் செய்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். டிரிப்டோபான் டிரிப்டோபான் (Tryptophan) [குறுக்கம்: Trp (அ) W] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்தே இது பெறப்படுகிறது. ஆதலினால் இது இன்றியமையா அமினோ அமிலங்கள் (Essential Amino Acid) என்ற பிரிவினுள் அடங்கும். இதனுடைய வாய்பாடு: CHNO. மரபுக்குறியீட்டில் (Genetic code), இந்த டிரிப்டோபானுக்குரிய முக்குறியம் (Codon) UGG என்பதாகும். கட்டமைப்பு மற்றும் நொதிப் புரதங்களில் டிரிப்டோபானின் L-முப்பரிமாண மாற்றியம் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது. என்றாலும், எப்போதாகிலும் D-முப்பரிமாண மாற்றியம் இயற்கையில் உருவாகும் புரதக்கூறுகளில் (Peptide) உருவாக்கப்படுகிறது (உ-ம்) கடல்சார்ந்த நச்சுப் புரதக்கூறு கான்டிரிபான். டிரிப்டோபான், இன்டோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது. பேரரசு பேரரசு என்பது ஒரு அரசாட்சி முறை; மிகவும் சக்திவாய்ந்த ஆட்சி, அதிகாரம் கொண்ட அரசுகள் பேரரசுகள் எனப்படும். இலத்தின் வார்த்தையான இம்பீரியம் என்பதும் பேரரசைக் குறிக்கிறது. மன்னர் ஆட்சி தான் இங்கு நடைபெறும். பேரரசின் மன்னரைப் பேரரசர் அல்லது பேரரசி என்று அழைப்பார்கள். அரசியல்ரீதியாக பேரரசு என்பது பல மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் ஒன்று அல்லது பல்வேறுபட்ட இனக்குழு மக்களை உள்ளடக்கியதாக இருக்கும். உலகில் பல பேரரசுகள் தோன்றின, குறிப்பாக ரோமப் பேரரசு, ஆங்கிலேயப் பேரரசு மிகவும் பெயர் பெற்று விளங்கின. மெத்தியோனின் மெத்தியோனின் (Methionine) [குறுக்கம்: Met (அ) M] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)CHCHSCH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்: AUG. மெத்தியோனின், ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும். ஹிஸ்டிடின் ஹிஸ்டிடின் (Histidine) [குறுக்கம்: His (அ) H] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: CHNO. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது. டெபி-ஆன் லூயிஸ் டெபி-ஆன் லூயிஸ் ("Debbie-Ann Lewis", பிறப்பு: ஆகத்து 7 1969), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் / போட்டிகளி லும் ஐந்து இருபது20 துடுப்பாட்டப் போட்டியிலும் / போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2009 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் / போட்டிகளில் பங்குகொண்டார். லோனா மெக்கோய் லோனா மெக்கோய் ("Lorna McKoy"), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98)பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மின்னல் எப்.எம் மின்னல் எப். எம். (Minnal FM) என்பது மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். அதன் பழைய பெயர் வானொலி 6 "(Radio 6)". உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கிய பெருமையும் இதற்கு உண்டு. மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரிதலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. ஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார். 1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, சஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது. 1938-ஆம் ஆண்டு மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு முதன் முதலாகத் தொடங்கப் பட்டது. அந்த ஒலிபரப்புடன் மலாய், ஆங்கிலம், சீன மொழிகளும் இருந்தன. தமிழ்ப் பகுதிக்குத் தஞ்சை தாமஸ் என்பவர் பொறுப்பு வகித்தார். இவர் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இன்றும் அழைக்கப் படுகிறார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் 'JMPK வானொலி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.எஸ்.சண்முகம் என்பவர் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு நடைபெற்றது. 1948-இல் கம்னியூஸ்டுகளின் அச்சுறுத்தல் நாட்டை உலுக்கியது. அப்போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன. மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவர்களின் பட்டியல் அதன் பின்னர் 1956-ஆம் ஆண்டு Federal House என்று அழைக்கப்படும் கூட்டரசு மாளிகையில் இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி இந்தக் கூட்டரசு மாளிகையில் இருந்து செயல் படும் போது தான் பற்பல நவீனத்துவங்களைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் தோன்றுவதற்கு இந்தக் கூட்டரசு மாளிகை காரணமாக இருந்தது. மலேசிய வானொலிப் புகழ் கலப்படம் நிகழ்ச்சி 1957-ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. இந்த நிகழ்ச்சி இன்று வரை மலேசியத் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப் படும் போது மலேசியாவில் பல இலட்சம் இந்தியர்களும் கேட்டு ரசித்தனர். அது ஒரு வரலாறு. பாடல்கள், நவீன இசைகள், கேள்வி பதில் அங்கம், நகைச்சுவைகள், பேட்டிகள் என பல வகையான தொகுப்புகள் நிறைந்த ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக விளங்கியது. அந்த நிகழ்ச்சி இப்போது இல்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒலிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்போது மலேசியாவில் 7.3 இலட்சம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இதே மக்கள் தொகை 2012-ஆம் ஆண்டில் 6.9 இலட்சமாகக் குறையும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஐந்தாம் தலைமுறை இந்தியர்களின் குடும்பங்களில் இரு குழந்தைகள் இருந்தால் போதும் எனும் புதிய அணுகுமுறை தோன்றி உள்ளது. கல்வி கற்ற நவீன சமுதாயமாக மலேசிய இந்தியச் சமுதாயம் மாறி வருகிறது. ஆனால், மலேசிய இந்திய மக்கள் தொகை மட்டும் குறைந்து கொண்டே போகிறது. மலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் மலேசியத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய அளவிலான ஒரு மாபெரும் கலப்பட நிகழ்ச்சி தாசேக் பிரதானா எனும் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள மையத்தில் நடந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அது ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி. மலேசியாவின் 15,000 பல்லின மக்கள் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. 1950களில் மலாயா வானொலியின் செய்திகள் சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின. தஞ்சை தாமஸ், ஏ.பீட்டர், எஸ்.சுவாமிநாதன், ஏ.ஆர்.ஐயர், ராம ஐயர், ஹனீப், சுந்தரராஜு கோவிந்தசாமி போன்றோர் மலேசியாவில் தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவைகளுக்கு அரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர். அவர்களுடைய தன்னலமற்றச் சேவைகளை மலேசிய இந்தியர்கள் என்றென்றும் நினைத்துப் பார்க்கின்றனர். 1960 ஆம் ஆண்டுகளை மலாயா வானொலித் தமிழ்ப்பகுதிக்கு பொன்னான காலம் "(Golden Era)" என்று சொல்வார்கள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயா வானொலி இசைச் சோலையாக மாறியது. பல மாற்றங்கள் செய்யப் பட்டன. இரா.பாலகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு வந்தார். அவரை ’ரேடியோ பாலா’ என்று அன்பாக அழைப்பார்கள். பல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல புதிய நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். பல தமிழ் எழுத்தாளர்களை மலாயா வானொலியில் அறிமுகம் செய்தார். திரு.இரா.பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். 1960களில் தமிழ்த் திரைப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும்போது மூன்று தமிழ்ப் பாடல்களுக்கு ஓர் இந்திப் பாடலை ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனும் ஒரு மேலிடத்து ஆணைக்கு சாணக்கியமான தீர்வு கண்டவர் பாலக்கிருஷ்ணன். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார். பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார். அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப் பட்டு இருந்தது. எட்டு மணி நேர ஒலிபரப்பை 14 மணி நேர ஒலிபரப்பாக உயர்த்திக் காட்டினார். அவருடைய முயற்சியின் பலனாக இப்போது 24 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார். அந்த இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும். அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது. 1961ல் மலாயா வானொலி என்பது ‘மலாயா வானொலியின் இந்தியப் பகுதி’ என்று மாறியது. பின்னர், 1970ல் ‘சிகப்பு அலைவரிசை’ என்று மாறியது. அதன் பின்னர் ‘வானொலி 6’ என்று மாற்றம் கண்டது. 1976-ஆம் ஆண்டு இரா.பாலகிருஷ்ணன் ’யுனெஸ்கோ’வின் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதும் ஹனிப் அவர்கள் தலைவர் ஆனார். அடுத்து திருமதி.கமலா தேசிகன் என்பவர் தலைவர் பதவியை ஏற்றார். கமலாவிற்குப் பின்னர் சுவாமிநாதன், அப்பாதுரை, கணபதி போன்றவர்கள் இந்தியப் பகுதியின் தலைவர்களாகப் பணியாற்றினர். அனைவரும் அருமையான, சிறப்பான சேவைகளை வழங்கினர். சில பல நிகழ்ச்சி மாற்றங்களையும் செய்தனர். கர்நாடக இசையை மலேசிய மக்களுக்கு பரவலாக ஒலிபரப்பு செய்தவர் சுவாமிநாதன். இவர்களில் கணபதி என்பவர் மலேசியச் செய்தி நிறுவனமான பெர்னாமாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதன் பின்னர், 1994-ஆம் ஆண்டில் வீ.பூபாலன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். வீ.பூபாலன் பொறுப்பு ஏற்ற பிறகு மலேசிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் கவிதை தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய சேர்த்துக் கொள்ளப் பட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தேதி, மலேசிய வானொலியின் இந்தியப் பிரிவு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது. உலகிலேயே அப்படிப்பட்ட ஒரு சேவையை வழங்கிய முதல் வானொலி நிலையம் மலேசிய வானொலியாகும். அதன் பின்னர் மலேசிய வானொலி மலேசிய இந்தியர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. அதிகமான ரசிகர்கள் சேர்ந்தனர். வணிக ரீதியிலும் செல்வாக்குப் பெற்ற நிலையமாக விளங்கத் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைப் பற்ரறி ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் டாக்டர் பூபாலன். இவர் பதவி ஓய்வு பெற்றதும் ராஜசேகரன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். ராஜசேகரன் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். நிறைய புதுமைகளைக் கொண்டு வந்தார். விவசாயம் தொடர்பான அங்கங்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கினார். மின்னல் எப்.எம். ஒலிபரப்பிற்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். அடுத்து வந்தவர் பி.பார்த்தசாரதி. மலேசிய வானொலியின் இந்தியப் பகுதிக்கு ஒரு பரிமாணத்தை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. வானொலி 6க்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். புதுப் புதுக தமிழ்க் கலைச்சொற்களை அறிமுகம் செய்தார். சாதாரண மக்களும் பேட்டிகள் வழியாக தங்கள் குறைகளைச் சொல்ல வாய்ப்புகளை வழங்கினார். ஒரு தலைவர் பதவியில் இருந்தாலும் பார்த்தசாரதி, ஒரு கடைநிலை ஊழியரைப் போல அங்காசாபுரியில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்தியர்களின் நிகழ்ச்சிகள் மலேசியாவில் எங்கே நடந்தாலும் இவர்தான் முதல் ஆளாகச் சென்று கலந்து கொள்கிறார். செய்திகளையும் சேகரித்து வருகிறார். பல இளம் அறிவிப்பாளர்களை வானொலிக்கு அடையாளம் காட்டிய பெருமையும் இவருக்கு உள்ளது. தமிழ் மணம் மணக்கும் ஓர் ஊடகமாக மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியை மாற்றி வருகிறார். ஸ்டெஃபனி டெய்லர் ஸ்டெஃபனி டெய்லர் ("Stafanie Taylor", பிறப்பு: சூன் 11 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். ஜமைக்காவில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 33 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 - 2011 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிலிப்பா தோமஸ் பிலிப்பா தோமஸ் ("Philipa Thomas", பிறப்பு: செப்டம்பர் 20 1968), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03 - 2004/05 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நெலி வில்லியம்ஸ் நெலி வில்லியம்ஸ் ("Nelly Williams", பிறப்பு: ஆகத்து 16 1980), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03 - 2004/05 பருவ ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பாலினக் குறியீடு பாலினக் குறியீடு என்பது, ஒரு உயிரினத்தின் பாலினத்தை அல்லது அதோடு தொடர்புடைய ஒன்றைக் குறிப்பிடுவதற்குப் பயன்படும் குறியீடு ஆகும். ஆண் ♂, பெண் ♀ என்னும் இரண்டு பாலினங்களைக் குறிக்கும் குறியீடுகள் சோதிடக் குறியீடுகளில் இருந்து பெறப்பட்டவை. ஆணுக்கான குறியீடு செவ்வாய்க் கோளையும், பெண்ணுக்கான குறியீடு வெள்ளிக் கோளையும் குறிக்கும் குறியீடுகள் ஆகும். இந்தக் குறியீடுகள் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்தே மேற்கு நாடுகளில் பயன்பட்டு வருகின்றன. இரசவாதத்திலும், தனிமங்களை, குறிப்பாக இரும்பு, செப்பு ஆகியவற்றைக் குறிப்பதற்கும் இக்குறியீடுகள் பயன்பட்டன. இக் குறியீடுகளை 1751 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தாவரங்களின் செயல்படு பாலினத்தைக் குறிப்பதற்கு கரோலசு லின்னேயசு பயன்படுத்தினார். ரீ-சீக்குவல் ரீ-சீக்குவல் சைபேசுவினதும் மைக்ரோசாப்ட்டினதும் வினவல் அமைப்பு மொழியின் (சீக்குவல்) ஓர் நீட்சியாகும். இது அமெரிக்க நியம அமைப்பில் 1992 ஆண்டில் நியமத்தை அடிப்படையாகக்கொண்டு மேலதிகவசதிகளுடன் மெருகூட்டப்பட்ட ஓர் பதிப்பாகும். இதன்காரணமாக ரீ-சீக்குவலில் எழுதப்படும் நிரலானது ஏனைய தரவுத் தளங்களில் இயங்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே நிரலாக்கம் செய்யும்போது இயன்றவரை சீக்குவல்-92 இன் நியமத்தை ஒத்ததாக எழுதுமாறு பரிந்துரைக்கபப்டுகிறது. இதில் வழமையான வினல் அமைப்பு மொழிகள் போலவே வினவ முடியும். தவிர தரவை வரையறுக்கவும் முடியும் (Data Definition Language), தவிர தரவைக் கையாளவும் முடியும். பெஹ்ரோஸ் எடுல்ஜி பெஹ்ரோஸ் எடுல்ஜி ("Behroze Edulji ", பிறப்பு: ஏப்ரல் 13 1950), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 ல் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜேம்ஸ் விடேகர் ஜேம்ஸ் விடேகர் ("James Whitaker", பிறப்பு: மே 5 1962 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். புட்ச் வைட் புட்ச் வைட் ("Butch White", பிறப்பு: திசம்பர் 14 1935, இறப்பு: ஆகத்து 1 2008), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 337 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -62 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டயானா எடுல்ஜி டயானா எடுல்ஜி‎ ("Diana Edulji", பிறப்பு: சனவரி 26 1956), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1991 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லயா பிரான்சிஸ் லயா பிரான்சிஸ்‎ ("Laya Francis", பிறப்பு: மார்ச்சு 22 1963), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். நாயக்கர் நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே ஆகும். இவர்களின் தாய் மொழி தெலுங்கு. இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள். இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுகப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர். ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு (ராஜ கம்பளம், பலிஜா, கவரா) போன்றோர்களும்,தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவார்,முத்தரையர்,அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள். நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள். ஆந்திராவில் காப்பு நாயுடு இனத்தவர்கள் 29% பேர் உள்ளனர் அதாவது ஏறக்குறைய மூன்று கோடி அளவில் உள்ளனர். ஆந்திராவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே. அதே போல தமிழகத்தில் அதிக மக்கள் தொகை இவ்வினத்தில் உள்ளனர். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் இம்மக்கள் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர். ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர். பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து) ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர். தமிழ் நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர். தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள். தாங்கள் "'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே. இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர். இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்kகை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள். தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்: தெலுங்கு பேசுவோர் : கன்னடம் பேசுவோர் : இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் . தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர். ஆந்திராவில் காப்பு என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர்( குடியான சாதி ) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும் , ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர். கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது. ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் . அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் . ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் . பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள். கம்மவார், நாயுடு, சவுதாரி, நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர்,தேனி ,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக கருதப்படுகிறார்கள் .பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய ,விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் இளையரசனேந்தல் ,நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமின்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஆந்திரா மக்கள் தொகையில் 5% கொண்ட இவர்கள் அரசியலிலும், பொருளாதாரம், கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர்,பல கல்வி நிறுவனகள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன. 13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த "வாசாப்" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு தேவர்கள் ராஜ கம்பளத்தார் இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம், அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர் காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில் கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் . நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் : சூர்யகாந்த் திரிபாதி சூரியகாந்த் திரிபாதி "நிராலா" ("Suryakant Tripathi "Nirala"", सूर्यकांत त्रिपाठी, பெப்ரவரி 21, 1899 அக்டோபர் 15, 1961) இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை என பல வகைப் படைப்புகளைப் படைத்துள்ளார். நிராலா என்ற புனைபெயரில் எழுதியவர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் வங்காளி, பெர்சியன், சமற்கிருதம் மற்றும் இந்தி மொழிகளைத் தனியாகக் கற்றுக் கொண்டார். 1916 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பின்னர் கொல்கத்தாவிலிருந்து வெளியான “சமான்வே” என்ற இதழின் ஆசிரியராக 1920 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். 1923 ஆம் ஆண்டில் “அனாமிகா” எனும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.1929 ஆம் ஆண்டில் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு “பரிமள்” வெளியானது. அதன் பிறகு அவருடைய மகள் சரோஜ் நினைவாக 1935 ஆம் ஆண்டில் “சரோஜ் ஸ்மிருதி” எனும் நூலை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் 1936 ஆம் ஆண்டில் “கீதிகா”, 1938 ஆம் ஆண்டில் “துளசிதாஸ்”, 1942 ஆம் ஆண்டில் “குர்கர்மட்டா”, 1943 ஆம் ஆண்டில் “அனிமா”, 1946 ஆம் ஆண்டில் “நயே பேட்டி”, 1950 ஆம் ஆண்டில் “அர்ச்சனா”, 1953 ஆம் ஆண்டில் “ஆராதனா”, 1954 ஆம் ஆண்டில் “கீத்குஞ்சன்” போன்ற நூல்கள் மிகவும் புகழ் பெற்றன. “பில்லெசர் பஹரிகா” எனும் வாழ்க்கை வரலாற்று நூல், “சதுரி சாமர்”, “சுகுல் கி பீவி” எனும் இரு சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களில் 1927 ஆம் ஆண்டில் எழுதிய “ரபீந்த்ர கவிதா கானன்”, 1948 ஆம் ஆண்டில் எழுதிய “பண்ட் அவுர் பல்லவ்” மற்றும் 1951 ஆம் ஆண்டில் எழுதிய “சபக்” ஆகிய நூல்கள் விமர்சன நூல்களாகும். இவை பிரச்சனைகளை சந்தித்த நூல்களுமாகும். இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாகையில் அக்டோபர் 15, 1961 ஆம் நாளன்று மரணமடைந்தார். உலா (இலக்கியம்) தமிழ் இலக்கியத்தில் உலா () என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும் , சங்க இலக்கியங்களிலும் கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும். பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாத்து. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர். உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நான் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது. ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது. உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும். இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும். ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன. உலா நூல்கள் அகர வரிசையில்: அருந்தி சந்தோஷ் கோஸ் அருந்தி சந்தோஷ் கோஸ் ("Arunadhati Santosh Ghosh", பிறப்பு: 1960), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1986 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷாமனி செனவிரத்ன ஷாமனி செனவிரத்ன ("Chamani Seneviratne", பிறப்பு: நவம்பர் 14 1978), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 ல், இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். தமிழ்நாட்டிலுள்ள வானொலி நிலையங்கள் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வானொலி நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. இவை அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களில் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனமான அனைத்திந்திய வானொலியின் கட்டுப்பாடில் இயங்கும் வானொலி நிலையங்கள்: When the days began and ended with radio shows ரசாஞ்சலி சில்வா ரசாஞ்சலி சில்வா ("Rasanjali Silva", பிறப்பு: நவம்பர் 26 1971), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98 ல், இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சந்தமாலி தோலவத்த சந்தமாலி தோலவத்த ("Sandamali Dolawatta", பிறப்பு: பிப்ரவரி 10 1983), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2011 ஆண்டுகளில் இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சசிகலா சிரிவர்தன சசிகலா சிரிவர்தன ("Shashikala Siriwardene", பிறப்பு: பிப்ரவரி 14 1985), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2011 ஆண்டுகளில் இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அதலை அதலை ("Momordica cymbalaria") என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இதன் வேறு அறிவியற் பெயர்கள்: "Luffa tuberosa", "Momordica tuberosa" ஆகியன. அதலை தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதலைச்செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சிலவேளைகளில் வயல்வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப்படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக்காலத்தில் காய்ந்து விழுந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும். இக்கொடியின் இலைகளின் அடிப்பகுதி இதயவடிவாகவும் ("chordate"), எஞ்சிய பகுதி ஒருபுறம் சாய்ந்தோ ("oblicular"), சிறுநீரக வடிவிலோ ("reniform") இருக்கும். ஒரே கொடியில் ஆண்-பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஐந்து முதல் முப்பது மி.மீ. நீளம் வரை உள்ள ஒவ்வொரு ஆண் மலர்த்தார்த் தண்டிலும் ("peduncle") இரண்டு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கின்றன. பூந்தார்கள் இழைவடிவாகவும் ("filiform"), மென்மயிர்ப்படர்ந்து பூவடிச்செதில்களில்லாமலும் இருக்கின்றன. மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் ("racemose") இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன. இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவை வளர்வதை ஊக்குவிப்பர். இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன. தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது. இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப் புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர். கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது. இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாட்டுப்புறத்தில் அதலை காய்க்கும் காலத்தில் அவற்றைப் பறித்து சமையல் செய்து உட்கொள்கின்றனர். முறையாக பயிரிடப்படாமல் தாமாக வளரும் கொடியாதலால் சிலர் மட்டுமே இவற்றின் பயனை அறிந்து பயன்படுத்துகின்றனர். இவற்றை முறையாகச் சமைக்கும் முறைகளும் வெளியில் தெரியாமல் இருந்தன. 1997-ஆம் ஆண்டில் தோட்டக்கலை ஆய்வாளர்கள் பார்வதி, குமார் ஆகியோர் தங்கள் ஆய்வுக்காக இதன் சமையல் முறைகளை உருவாக்கி பொரியல், எண்ணெய் வறுவல், புளிக்குழம்பு, ஊறுகாய், வடகம் ஆகியவற்றைச் செய்து மக்களின் விருப்பத்தைச் சுவை அலகில் அளந்துள்ளனர். அவர்களுடைய ஆய்வின்படி புளிக்குழம்பையும் வடகத்தையும் மக்கள் பொதுவாக விரும்பினார்களாம். முன்னதில் புளியும், பின்னதில் மோரும் கசப்புச்சுவையைக் குறைப்பதால் அவற்றை மக்கள் விரும்பியதாக அறிகின்றனர். மேரி எலிட் மேரி எலிட் ("Mary Allitt", பிறப்பு: நவம்பர் 1 1925), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 - 1963 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சாரா அன்ட்ரூஸ் சாரா அன்ட்ரூஸ் ("Sarah Andrews", பிறப்பு: திசம்பர் 26 1981), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டெனீஸ் ஏன்னட்ஸ் டெனீஸ் ஏன்னட்ஸ் ("Denise Annetts", பிறப்பு: சனவரி 30 1964), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெகி அந்தோனியோ பெகி அந்தோனியோ ("Peggy Antonio", பிறப்பு: சூன் 2 1917, இறப்பு: சனவரி 11 2002 ), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அலெக்ஸ் பிளாக்வெல் அலெக்ஸ் பிளாக்வெல் ("Alex Blackwell", பிறப்பு: ஆகத்து 31 1983), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கேட் பிளாக்வெல் கேட் பிளாக்வெல் ("Kate Blackwell", பிறப்பு: ஆகத்து 31 1983), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். வென்டி பிளன்ஸ்டன் வென்டி பிளன்ஸ்டன் ("Wendy Blunsden", பிறப்பு: பிப்ரவரி 9 1942), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1979 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். முச்சுருளி முச்சுருளி என்பது, ஐரிய பெருங்கற்கால, புதியகற்காலக் களங்களில் காணப்படும் செல்ட்டிய, முன்செல்ட்டியக் குறியீடுகள் ஆகும். குறிப்பாக இக் குறியீடுகள், நியூகிராங்கே நடைவழிக் கல்லறையின் வாயில் தூண்களிலும், மண்மேட்டைச் சுற்றியுள்ள வரம்புக்கற்களிலும் பொறிக்கப்பட்டு உள்ளன. செல்ட்டிய, முன்செல்ட்டிய நம்பிக்கைகள் சார்ந்த குறியீடுகள் எனப் பலர் கருதும் இம்முச்சுருளிகள், அப் பண்பாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் பலவற்றில் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுக்கான மிகவும் பழைய எடுத்துக்காட்டுகள் முன்செல்ட்டியக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் உள்ளன. பிந்திய எடுத்துக்காட்டுகள் செல்ட்டியக் கிறித்தவம் சார்ந்த அலங்கார எழுத்துக்களைக் கொண்ட சுவடிகளில் காணப்படுகின்றன. நியூகிராங்கேயையும், பிற நினைவுச் சின்னங்களையும் உருவாக்கியவர்களின் பண்பாட்டில், இம்முச்சுருளிகள் என்ன பொருள் குறித்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அண்மைக்கால வரலாற்றில், செல்ட்டியக் கிறித்தவர்கள், கிறித்தவ மும்மையைக் குறிக்க இக் குறியீட்டைப் பயன்படுத்தினர். புதுப்பலகடவுட்கொள்கைச் சமயங்கள் இக் குறியீட்டைத் தமது நம்பிக்கைகளில் காணப்படும் பல்வேறு மும்மைத் தன்மைகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். செல்ட்டிய மீளமைப்புப் பல்கடவுட்கொள்கையில் முச்சுருளி ஒரு முக்கியமான குறியீடு ஆகும். அவர்கள் இதை நிலம், கடல், விண் என்னும் முப்புலங்களை அல்லது மும்மைத் தன்மை கொண்ட ஒரு கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தினர். அவர்களின் மனான்னான் என்னும் கடவுளைக் குறிக்கவே இக் குறியீடு பெரும்பாலும் பயன்பட்டது ஆயினும், சில வேளைகளில் இது பிரிகிட் என்னும் பெண் கடவுளையும் குறித்தது. இக்குறியீடு மனிதரின் கருப்பக் காலமான ஒன்பது மாதங்களைக் குறித்தது என்ற கருத்தும் உண்டு. பிட்டாட்டவா உடும்பு பிட்டாட்டவா உடும்பு அல்லது சேரா மட்ரே வன உடும்பு (ஆங்கிலம்: Sierra Madre Forest monitor lizard; இலத்தின்: "Varanus bitatawa") மரத்தில் வாழும் பழம் உண்ணும் உடும்பு வகையாகும், பிலிப்பைன்சு நாட்டில் லுசோன் தீவில் அமைந்துள்ள சேரா மட்ரே வனப் பகுதிகளில் மட்டுமே வசிப்பவை என அறியப்பட்டுள்ளது. இவை இரண்டு மீட்டர்களுக்கும் (6.6 அடி) கூடுதலாக வளரக்கூடியவை, ஆனால் இவற்றின் எடை ஏறத்தாழ பத்து கிலோகிராம்கள் மட்டுமே (22 இறாத்தல்) என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் செதில் உடல் மற்றும் கால்களில் நீல-கருப்புப் பொட்டுக்களுடன் கூடிய வெளிர் மஞ்சள் மற்றும் பச்சைப் புள்ளிகளையும், வாலில் கருப்பு மற்றும் பச்சை நிறத் துண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருப்பதையும் காணலாம். ஏனைய சில பல்லி இனங்களைப் போன்று இவற்றின் ஆண் இனத்துக்கும் இரட்டை ஆண்குறிகள் உண்டு. வரானசு பிட்டாட்டவா இந்தோனேசியாவில் வாழும் கொமோடோ டிராகனைப் போன்று இருக்கின்றது. ஏப்ரல் 2010-இல் புதிய உயிரினமாக அறியப்பட்டது; 2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நடைவழிக் கல்லறை நடைவழிக் கல்லறை என்பது, பெருங்கற் பண்பாட்டுக்கு உரிய ஒருவகைக் கல்லறை ஆகும். இது பெரிய கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு நடைவழியையும், மண்ணால் அல்லது கற்களால் மூடப்பட்ட ஒன்று அல்லது பல அடக்க அறைகளையும் கொண்டது. பெருங்கற்களால் கட்டப்பட்ட நடைவழிக் கல்லறைகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட கல்லறைகளில், முதன்மை அறையில் இருந்து வாயில்களைக் கொண்ட துணை அறைகள் அமைந்திருக்கும். பொதுவாகக் காணப்படும் சிலுவைவடிவ நடைவழிக் கல்லறை சிலுவையின் வடிவில் அமைந்த தளவடிவம் கொண்டது. சில சமயங்களில் நடைவழிக் கல்லறைகள் கற்குவைகளினால் மூடப்பட்டிருக்கும். எல்லா நடைவழிக் கல்லறைகளிலும் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கவில்லை. மாதரி மாதரி சிலப்பதிகாரக் கதைமாந்தருள் ஒருவராவார். பொருளிழந்த கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குக் கூட்டி வரும் கவுந்தி அடிகள் அவர்களை இவள் வீட்டிலேயே தங்கவைக்கின்றார். மாதரியும் நன்கே விருந்தோம்பும் பண்பினள் ஆதலால் தன் மகள் ஐயையையே கண்ணகிக்குப் பணிப்பெண் ஆக்கின்றாள். பின்னர் கோவலன் கள்வன் என பொய்சாட்டப்பட்டுக் கொலையுண்ட போது கண்ணகி துன்பப்படும் போது குரவைக்கூத்தாடி அவளை மகிழ்விக்க விழைகின்றாள். இறுதியில், விருந்தினராகிய கண்ணகி படும் துயர் ஆற்றமுடியாமை கண்டு தான் உயிர் துறக்கிறாள். சங்ககாலப் பாண்டியர் சேர சோழ பாண்டியர் தமிழ்நாட்டைச் சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசர்கள். இவர்களை மூவேந்தர் என வழங்குகிறோம். இவர்கள் ஆண்ட நிலப்பகுதியை முறையே சேரநாடு, சோழநாடு, பாண்டிய-நாடு எனக் குறிப்பிடுகிறோம். இவற்றை இருப்பிடம் நோக்கிக் குடபுலம், குணபுலம், தென்புலம் எனச் சங்ககாலத்திலேயே வழங்கிவந்தனர். காண்க தலைச்சங்கம் - காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக 89 அரசர்கள் இடைச்சங்கம் – வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக 59 அரசர்கள் கடைச்சங்கம் – முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 அரசர்கள் இவர்களது பெயர்களின் அகரவரிசை புறநானூறு என்னும் நூல்தொகுப்பில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாண்டிய அரசர்களின் பெயர்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ள. இவர்களது பெயருக்கு முன்னால் 'பாண்டியன்' என்னும் அடைமொழி உள்ளது. ஒப்புநோக்க எளிமைக்காக இந்த அடைமொழியை விடுத்து இங்குப் பெயர்களைத் தொகுத்துள்ளோம். பகுத்தறிய உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதிப்பெயர் முதனமைக்குறிப்பு செய்யப்பட்டு அகரவரிசையில் பெயர்கள் அடுக்கப்பட்டுள்ளன. இந்த அரசர்கள் இன்னின்ன புறநானூற்றுப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளனர் என்னும் குறிப்பு அந்தந்த அரசர்களின் பெயருக்குப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். அறிவுடை நம்பி (பாண்டியன்) உக்கிரப் பெருவழுதி (கானப்பேரெயில் கடந்தவன், தந்தவன்) கீரஞ்சாத்தன் (பாண்டியன்) நன்மாறன் (பாண்டியன், இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்) நெடுஞ்செழியன் (நம்பி) நெடுஞ்செழியன் (பாண்டியன், தலையாலங்கானத்துச் செரு வென்றவன்) பூதபாண்டியன் பெருவழுதி (பாண்டியன், பல்யாகசாலை, முதுகுடுமி) பெருவழுதி (பாண்டியன், வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்) மாறன் வழுதி (பாண்டியன், கூடகாரத்துத் துஞ்சியவன்) வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சங்ககால வரலாறு சங்ககால வரலாறு தொல்பழங்காலம், சங்ககாலம், களப்பிரர் காலம், இடைக்காலப் பாண்டியர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழ, பாண்டியர்காலம், மதுரை நாயகர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைப் போராட்ட காலம், சுதந்திர இந்தியாவில் தமிழகம் என்னும் கால நிரலில் எழுதப்பட்டுவருகிறது. தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம். பழைய கற்காலம், இரும்புக்காலம், புதிய கற்காலம் முதலானவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது. எழுத்தப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது சங்ககாலம். சங்ககால வள்ளல்கள் பிறருக்கு வாரி வழங்கும் தன்மை உள்ளவர்களை வள்ளல்கள் எனப்படுகின்றனர். பத்துப்பாடு, எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வள்ளல்களை இங்குக் காணலாம். வள்ளல்களின் பெயர்கள் கூடியவரை முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையான ஒப்புநோக்கத்திற்காகப் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. வள்ளலைப் பற்றித் தெரிவிக்கும் பாடல்களும் ஆங்காஙகாங்கே சேர்க்கப்பட்டுள்ளன. நூல்-குறிப்பு இல்லாத எண்களைப் புறநாற்றுப் பாடல்-எண் எனக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பிட்ட 7 வள்ளல்களைச் சங்கப்பாடல்கள் இரண்டு தொகுத்துக் காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள வள்ளல்களை நாம் கடையெழு வள்ளல்கள் என வழங்கிவருகிறோம். ஓயமானாட்டு நல்லியக்கோடனும், வள்ளல் குமணனும் இவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்கள் லாரன்சு பிக்காச்சி லாரன்சு ட்ரவர் பிக்காச்சி ("Lawrence Trevor Picachy") கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும், இந்தியக் கர்தினால்களுள் ஒருவரும் ஆவார். இவர் இந்தியாவின் டார்ஜீலிங் பகுதியில் லெபாங் என்னும் நகரில் 1916ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 7ஆம் நாள் பிறந்தார். கொல்கத்தாவில் 1992, நவம்பர் 30ஆம் நாள் இறந்தார். பிக்காச்சி இயேசு சபைத் துறவியாகவும், கொல்கத்தா அன்னை தெரசாவின் ஆன்மிக வழிகாட்டியாகவும், பின்னர் 1969இலிருந்து 1992 வரை கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் விளங்கினார். அவர் 1976இல் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். கர்தினால் லாரன்சு பிக்காச்சியின் பெற்றோர் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர்கள். அவர்கள் 1911இல் இந்தியாவில் குடியேறியிருந்தார்கள். அவர்களின் மகனாக லாரன்சு பிக்காச்சி டார்ஜீலிங்கில் பிறந்தார். டார்ஜீலிங்கில் புனித யோசேப்பு கல்லூரியில் கேம்ப்ரிட்ஜ் மேநிலைக் கல்வி பயின்றபின் பிக்காச்சி 1943இல் துறவற வாழ்க்கை புக எண்ணம் கொண்டு, இயேசு சபை உறுப்பினரானார். இயேசு சபையில் புகுமுகத் துறவறப் பயிற்சியைப் புனித ஸ்தனிஸ்லாஸ் கல்லூரியிலும் (ஜார்க்கண்ட்), செண்பகனூர் (கொடைக்கானல்) தூய இதயக் கல்லூரியில் மெய்யியல் படிப்பையும் மேற்கொண்டார். சிறிதுகாலம் கொல்கத்தாவில் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் ஆசிரியப் பணி ஆற்றினார். அதைத் தொடர்ந்து கர்சியாங்கில் புனித மேரி கல்லூரியில் இறையியல் படிப்பில் தேர்ச்சிபெற்று குருத்துவப் பணிக்குத் தயார் ஆனார். 1947ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 21ஆம் நாளில் பிக்காச்சி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1950இலிருந்து 1960 வரை கொல்கத்தா புனித சேவியர் கல்லூரியில் பேராசியராகவும் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து பசந்தியில் அருட்பணி ஆற்றினார். திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1962, சூலை 12இல் பிக்காச்சியை ஜாம்ஷெட்பூரின் முதல் ஆயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள் பிக்காச்சி பேராயர் ஜேம்ஸ் நாக்ஸ் (இந்தியாவில் திருத்தந்தைத் தூதுவர்) என்பவரால் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். அந்நிகழ்ச்சியில் பேராயர் பயஸ் கெர்க்கெட்டாவும் ஆயர் அகுஸ்தீன் வில்டெர்மத்தும் துணைத் திருப்பொழிவாளர்களாகக் கலந்துகொண்டனர். 1962இலிருந்து 1965 வரை நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் நான்கு அமர்வுகளிலும் ஆயர் பிக்காச்சி கலந்துகொண்டு வாக்களித்தார். 1969, மே திங்கள் 29ஆம் நாள் ஆயர் பிக்காச்சி கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1976இல் பிக்காச்சி இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். திருத்தந்தை ஆறாம் பவுல் பேராயர் பிக்காச்சியை 1976ஆம் ஆண்டு மே திங்கள் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அப்போது அவருக்கு புனித மரியாவின் திருஇதயக் கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்விலும் (ஆகத்து 1978), திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்விலும் (அக்டோபர் 1978) கர்தினால் பிக்காச்சி கலந்துகொண்டு வாக்களித்தார். 1986ஆம் ஆண்டு, ஏப்பிரல் 5ஆம் நாள் பிக்காச்சி ஆயர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தம் 76ஆம் அகவையில் கொல்கத்தாவில் இறையடி எய்தினார். கர்தினால் பிக்காச்சி, கொல்கத்தாவில் தாக்கூர்புகூரில் அமைந்துள்ள இயேசு சபை தியானாஷ்ரம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் மண்மலை பொத்துவில் மண்மலை என்பது இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பாகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. ஆமரபுட்டி மற்றும் சான்ட் ஹில் (Sandhill) என்ற பெயர்கள் கொண்டும் இந்த இயற்கையாக உருவான பிரமாண்டம் அழைக்கப்படுவதுண்டு. மண்மலையின் தெற்காக ஜலால்தீன் சதுக்க பிரதேசமும், கிழக்காக கடற்கரையும், மேற்காக மதுரஞ்சேனை பிரதேசமும், வடக்காக சின்னப்புதுக்குடியிருப்பு பிரதேசமும். எல்லைகளாக அமைந்து காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் காரணமாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மண்மலையானது ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது குறிப்பிடத்தகது. மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்து, சுமார் 32 அடி உயரத்தையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள் அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என பல இயற்கையின் அழகுககள் உள்ளன. மண் சேர்ந்து மலையானது மட்டுமல்லாது, அதனிடையிடையே பச்சைப் பசேலென வளர்ந்து விரிந்த பாரிய மரங்கள் பார்வைக்கு பக்குவமாய் உள்ளன. முழு நிலவில் பலரும் இங்கு தங்கள் பொழுதை இனிதாகக் களித்துவிட கூடிடுவார்கள். மண்மலை எப்போது, எவ்வாறு உருவாகியது? என்பதற்கான தெளிவான பதில்களோ, விளக்கங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் பண்டைய காலத்தில் ஆழிப்பேரலை போன்ற ஓர் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதே மண்மலை உருவாகி இருக்கக்கூடும் என வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் சொல்கிறார்கள். ஆயினும் பொத்துவில் அறுகம் குடா, மிகவும் முக்கியமான துறைமுகமாகக் பண்டைக் காலத்தில் திகழ்ந்ததாகவும் அறுகம் குடா என்பது "லித்தஸ் மெக்னஸ்" (Lithus Magnus) எனும் பெயரில் வழங்கப்பட்டதாகவும் கி.பி 140 காலப்பகுதியில் தொலமியினால் வரையப்பட்ட வரைபடமும் குறிப்புகளும் குறிப்பிடுகின்றன . அறுகம் குடா சிறந்த துறைமுகமாக திகழ்வதற்கு அவ்விடத்தில் அமைந்திருந்த மண்மலை பெரிதும் உதவியாகவிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஒரு தளமாகவும் மண்மலை காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கலைக்கதிர் (இதழ்) தமிழகத்திலிருந்து வெளிவரும் பல இதழ்களில் கலைக்கதிர் அறிவியல் மாத இதழும் ஒன்று. கோயம்புத்தூர் மாநகரில் இருந்து ஜி. ஆர். டி. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் இந்த இதழின் நிறுவனர் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் ஆவார். இதன் முதன்மை ஆசிரியராக முனைவர் தா. பத்மனாபன் என்பவரும், ஆசிரியராக டாக்டர். வி. ஆர். அறிவழகன என்பவரும் இருந்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள், செய்திகள் போன்றவை எளிய தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. இம்மாத இதழ்தான் “முதல் தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதி”யை வெளியிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டைரோசின் டைரோசின் (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: CHNO. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் புரதங்களில் உள்ள பினைல்அலனின் என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது. குளூட்டாமிக் காடி குளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமிக் அமிலம் ("Glutamic acid", சுருக்கமாக Glu அல்லது E) என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், எதிர்மின்மம் கொண்ட கார்பாக்சைலேட்டும் (carboxylate anion) குளூட்டாமேட் என்று அழைக்கப்படுகின்றது. பக்கக் கிளை இணைப்பு கொண்ட கார்பாக்சைலிக் காடியின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pK = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது எதிர்மின்மம் கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), கிரப் சுழற்சியில் வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் நிப்பானைச் சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் உமாமி என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல நாவில் உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள் . இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக இருக்கின்றது. என்சலடசு (துணைக்கோள்) என்சலடசு ("Enceladus") என்பது சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் (நிலா) ஆகும். இது 1789 ஆம் ஆண்டில் வில்லியம் ஹேர்ச்செல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. "வொயேஜர்" விண்கலங்கள் இரண்டு 1980களின் ஆரம்பத்தில் இதற்கு அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணைக்கோள் பற்றிய அறிவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனாலும், இதன் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர் இருப்பது அறியப்பட்டிருந்தது. வொயேஜர் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களின் படி, இத்துணைக்கோளின் விட்டம் 500 கிமீ ஆகும். இது டைட்டான் என்ற சனியின் மிகப்பெரிய துணைக்கோளை விட 10 மடங்கு குறைவானதாகும். இதன் மேற்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் அனைத்தையும் இது மீளத் தெறிக்கிறது. 2005 ஆம் ஆண்டில், நாசாவின் கசினி விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது. நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை கசினி விண்ணுளவி கண்டுபிடித்துள்ளதாக 2011 சூன் மாதத்தில் நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர். வீ. மாரியப்பன் வீ. மாரியப்பன் (பிறப்பு: சூலை 2 1942) மலேசிய எழுத்தாளர் ஆவார். வீரமான் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர், ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், மாஜூ ஜயா கூட்டுறவுக் கழக அமைப்பாளர்களில் ஒருவராகவும், பல இலக்கியப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் இருந்துள்ளார். 1959 தொடங்கி மலேசிய தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய தேசிய செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தென் திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள் என்பது திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவு ஆகும். இதில் 85-ற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. உலக மொழி குடும்பத்தில் 47 மொழிகள் இந்த உட்பிரிவுகளில் இருக்கிறது. தென் திராவிட மொழிகள் பெரும்பாலும் இந்தியாவில் தான் அதிகமாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் 2007 கணக்கின்படி இலங்கையில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3,770,000. மற்ற நாடுகளில் குடியேரிய மக்களில் சிலரும் தென் திராவிட மொழிகளைப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மொழி பேசுபவர்கள் மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். மலையாள மொழி பேசுபவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கிரிஸ் பிரிட் கிரிஸ் பிரிட் ("Kris Britt", பிறப்பு: ஏப்ரல் 13 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். உனா பாய்ஸ்லி உனா பாஸ்லி ("Una Paisley", பிறப்பு: நவம்பர் 18 1922), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1961 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மொல்லி டைவ் மொல்லி டைவ் ("Mollie Dive", பிறப்பு: சூன் 26 1913), இறப்பு: செப்டம்பர் 10 1997), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1951 பருவ ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆன் பாமர் "'ஆன் பாமர்" ("Anne Palmer", பிறப்பு: 1915), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934/35 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லியோமி கோல்மன் லியோமி கோல்மன் ("Leonie Coleman", பிறப்பு: பிப்ரவரி 5 1979), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லோரன் எப்சரி லோரன் எப்சரி ("Lauren Ebsary", பிறப்பு: மார்ச்சு 15 1983), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2008/09-2009/10 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மார்கிரட் பெடன் "'மார்கிரட் பெடன்" ("Margaret Peden", பிறப்பு: அக்டோபர் 18 1905, இறப்பு: மார்ச்சு 18 1981), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இது மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும். மாற்று விகித அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 இந்திய நகரங்களின் பட்டியல். இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூபாய்) வளர்ச்சிகான ஒரு பட்டியல் எலிஸ் பெர்ரி "'எலிஸ் பெர்ரி" ("Ellyse Perry", பிறப்பு: நவம்பர் 3 1990), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 - 2009 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ("British Academy Film Awards") அல்லது பாஃப்டா (BAFTA) ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரித்தானியர்கள் வழங்கும் உயரிய திரைப்பட விருதுகள். 2008 வரை ராயல் ஒபேரா ஹவுஸ் என்பதில் இவை நடைபெற்றன. 1947ல் டேவிட் லீன், அலெக்ஸாண்டர் கோர்டா, கரோல் ரீட், சார்லஸ் லாப்டன், ரோஜர் மன்வல் மற்றும் சிலரால் பாஃப்டா உறுவாக்கப்பட்டது. 1958ல் இந்த அகாடமி தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சமுதாயம் என்றானது. ஷெல்லி நிட்ஷ்கி ஷெல்லி நிட்ஷ்கி ("Shelley Nitschke", பிறப்பு: திசம்பர் 3 1976), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 -2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜான் லம்ஸ்டன் ஜான் லம்ஸ்டன் ("Jan Lumsden", பிறப்பு: அக்டோபர் 2 1945), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மியுரியல் பிக்டன் மியுரியல் பிக்டன் ("Muriel Picton", பிறப்பு: அக்டோபர் 31 1930), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1961 - 1967 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். விருது விருது என்பது ஒரு நபருக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ வழங்கப்படும் அன்பளிப்பு அல்லது பரிசு அல்லது பதக்கம் அல்லது சான்றிதழ்.ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கு அடையாளமாக இது வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவைகளுடன் பணமும் சேர்த்து வழங்கப்படும். எ.கா நோபல் பரிசு சமூகத்திற்கு தொண்டு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹில்டா ஹில்ஸ் ஹில்டா ஹில்ஸ் ("Hilda Hills", பிறப்பு: சூலை 18 1913, இறப்பு: 2003), ஆத்திரேலியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1934/35 பருவ ஆண்டில், ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியி ல் பங்குகொண்டார். கிரிஸ்டன் பைக் கிரிஸ்டன் பைக் ("Kirsten Pike", பிறப்பு: நவம்பர் 12 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2005 - 2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோனி புரோட்பென்ட் ஜோனி புரோட்பென்ட் ("Joanne Broadbent", பிறப்பு: நவம்பர் 29 1965), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989/90-1998 பருவ ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1989/90-2000/01 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லியா போல்ட்டன் லியா போல்ட்டன் ("Leah Poulton", பிறப்பு: பிப்ரவரி 27 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2006 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மெலிசா புலோ மெலிசா புலோ ("Melissa Bulow", பிறப்பு: சூன் 13 1980), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 -2008 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003 -2007 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். புரொன்வின் கால்வெர் புரொன்வின் கால்வெர் ("Bronwyn Calver"), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கேரன் பிரவுண் கேரன் பிரவுண் ("Karen Brown", பிறப்பு: செப்டம்பர் 9 1963), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1985 -1993 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சேலி கிரிஃப்பித்ஸ் சாலி கிரிஃப்பித்ஸ் ("Sally Griffiths", பிறப்பு: ஏப்ரல் 9 1963), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1995 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1985 - 1995 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சங்கமம் (1999 திரைப்படம்) சங்கமம் 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்க்கான விருதையும் வைரமுத்து 2000ம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருது. ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குனருக்கான விருதைப் பெற்றார். ஜூலியா பிரைஸ் "'ஜூலியா பிரைஸ்" ("Julia Price", பிறப்பு: சனவரி 11 1972), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1996 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம் தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம் என்பது பண்டைக் காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்கள் பயன்படுத்தி வரும் நீர்பாசனத் தொழில்நுட்பங்களைக் குறிக்கிறது. தமிழ்ச் சமூகம் பெரும்பாலும் ஒரு வேளாண் சமூகமாகவே இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக வறட்சிக் காலத்தில் பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரைப் பெறுவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை அது விருத்தி செய்தது. இத் தொழில்நுட்பம் பல்வேறு பொருளாதார அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியது. பழ. கோமதிநாயகம் அவர்கள் தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். இவர் எழுதிய தமிழர் பாசன வரலாறு என்ற நூல் இத் துறையில் முக்கியம் பெறுகிறது. கேரன் பிரைஸ் "'கெரன் பிரைஸ்" ("Karen Price ", பிறப்பு: மே 7 1955), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 - 1985 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1976 - 1986 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மிஷேல் கோஸ்கோ மிஷேல் கோஸ்கோ ("Michelle Goszko", பிறப்பு: அக்டோபர் 7 1977), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2007 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 - 2007 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மிரியம் நீ "'மிரியம் நீ" ("Miriam Knee", பிறப்பு: சனவரி 19 1938), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 - 1972 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973/74 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லின்சே ரீலர் லின்ட்சே ரீலர் ("Lindsay Reeler", பிறப்பு: மார்ச்சு 18 1961), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1987 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1984 - 1988 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லின் லாசர்ன் லின் லாசர்ன் ("Lyn Larsen", பிறப்பு: பிப்ரவரி 3 1963), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983 - 1992 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1984 - 1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜில் கெனாரே ஜில் கெனாரே ("Jill Kennare", பிறப்பு: ஆகத்து 16 1956), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 -1987 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லிசா கெய்ட்லி லிசா கெய்ட்லி ("Lisa Keightley", பிறப்பு: ஆகத்து 26 1971), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2005 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 -2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மெல் ஜோன்ஸ் மெல் ஜோன்ஸ் ("Mel Jones", பிறப்பு: ஆகத்து 11 1972), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2003 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மார்கரெட் ஜென்னிங்ஸ் மார்கரெட் ஜென்னிங்ஸ் ("Margaret Jennings", பிறப்பு: சூன் 1 1949), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 -1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ராக்கேல் ஹெயின்ஸ் ராக்கேல் ஹெயின்ஸ் ("Rachael Haynes", பிறப்பு: திசம்பர் 26 1986), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லொரைன் ஹில் லொரைன் ஹில் ("Lorraine Hill", பிறப்பு: அக்டோபர் 24 1946), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெலின்டா ஹெக்கெட் பெலின்டா ஹெக்கெட் ("Belinda Haggett", பிறப்பு: அக்டோபர் 12 1962), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1986 - 1993 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஆன் கோர்டன் ஆன் கோர்டன் ("Anne Gordon", பிறப்பு: திசம்பர் 24 1941), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1976 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் ஜோடி ஃபீல்ட்ஸ் ஜோடி ஃபீல்ட்ஸ் ("Jodie Fields", பிறப்பு: சூன் 19 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2009 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2006 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ரெனே ஃபெர்ரல் ரெனே ஃபெர்ரல் ("Rene Farrell", பிறப்பு: சனவரி 13 1987), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டெனீஸ் எமெர்சன் டெனீஸ் எமெர்சன் ("Denise Emerson", பிறப்பு: மே 13 1960), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 -1987 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 -1987 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெலிண்டா கிளார்க் பெலிண்டா கிளார்க் ("Belinda Clark", பிறப்பு: செப்டம்பர் 10 1970), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2005 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2005 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கேரன் ரோல்டன் கெரன் ரோல்டன் ("Karen Rolton", பிறப்பு: நவம்பர் 21 1974), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 141 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1995 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லோரீன் பவல் லோரீன் பவல் ஜொப்ஸ் ("Laurene Powell Jobs"), கொலேஜ் ட்ரெக் நிறுவனத்தின் துணை நிறுவுனரும், பணிப்பாளர் சபையின் தலைவரும் ஆவார். இவர் ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸின் மனைவியாவார். பவல் ஜொப்ஸ் தனது கலைப் பட்டப் படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அத்தோடு, 1985 ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பொருளாதாரவியலுக்கான பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப்பட்டத்தை ஸ்டான்பேர்ட் வணிகவியல் பட்டதாரி பள்ளியில் இவர் பெற்றார். 1991 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18 ஆம் நாள் ஸ்டீவ் ஜொப்ஸை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1991 ஆம் ஆண்டு செப்டம்பரில் ரீட் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து 1995 மற்றும் 1998 இல் முறையே எரின் மற்றும் ஈவ் என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. பவல் ஜொப்ஸ் தனது கணவர், பிள்ளைகளோடு, பாலோ அல்டோவில் வசித்து வருகின்றார். ஆர்க்கிமிடியச் சுருள் ஆர்க்கிமிடியச் சுருள் அல்லது எண்கணிதச் சுருள் என்பது, ஒருவகைச் சுருள் ஆகும். இப்பெயர் கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்க்கிமிடிசு என்னும் கணிதவியலாளரின் பெயரைத் தழுவியது. மாறாக் கோணத் திசைவேகம் ஒன்றுடன் சுற்றும் ஒரு நேர்கோட்டில் மாறா வேகத்துடன் செல்லும் புள்ளியொன்றின் ஒழுக்கே ஆர்க்கிமிடியச் சுருள் ஆகும். முனைவாள்கூறுகளின் ("r", "θ") அடிப்படையில் இது பின்வரும் சமன்பாட்டால் குறிக்கப்படும். இங்கே "a", "b" என்பன உண்மை எண்கள். "a" மாறும்போது சுருள் சுற்றும். அடுத்தடுத்த சுற்றுக்களுக்கு இடையிலான தூரம் "b" இல் தங்கியுள்ளது. ஆர்க்கிமிடியச் சுருள், மடக்கைச் சுருளில் இருந்து வேறுபட்டது. ஆர்க்கிமிடியச் சுருளில், அடுத்தடுத்த சுற்றுகளுக்கு இடையிலான தூரம் ஒரேயளவாக இருக்கும். θ வை ரேடியனில் அளந்தால், மேற்படி தூரம் 2πb ஆக இருக்கும். மடக்கைச் சுருளில் இந்தத் தூரம் பெருக்குத் தொடரில் அமைந்திருக்கும். சில வேளைகளில் ஆர்க்கிமிடியச் சுருள் என்னும் சொல் பொதுவான சுருள்களின் தொகுதியைக் குறிக்கப் பயன்படுகிறது. "x" = 1 ஆக இருக்கும்போது சாதாரண ஆர்க்கிமிடியச் சுருள் உருவாகிறது. மீவளையச் சுருள், பெர்மாவின் சுருள், ஊதுகொம்புத் தளவளைவு என்பன இத் தொகுதியுள் அடங்கும் பிற சுருள்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் நிலையான சுருள்கள் அமைத்தும் மடக்கைச் சுருள்களே. சூரியக் காற்றின் பார்க்கர் சுருள், கதரீன் சில்லினால் உருவாகும் கோலம் போன்ற இயங்கு சுருள்கள் ஆர்க்கிமிடியச் சுருள்கள் ஆகும். ஆர்க்கிமிடியச் சுருள் பல தேவைகளுக்குப் பயன்படுகின்றது. சுருள்வடிவ அமுக்கிகளில் ஒன்றினுள் ஒன்று அமைந்த இரண்டு ஒரேயளவான ஆர்க்கிமிடியச் சுருள்கள் பயன்படுகின்றன. இது, வளிமங்களையும், நீர்மங்களையும் அமுக்குவதற்குப் பயன்படுகின்றது. கைக்கடிகாரங்களில் பயன்படும் சமநிலைச் சுருள்கள் ஆர்க்கிமிடியச் சுருள்கள் ஆகும். பழங்காலத்து இசைத்தட்டுக்களில் காணப்படும் வரிப்பள்ளமும் ஆர்க்கிமிடியச் சுருள் வடிவினதே. இவ்வாறு, வரிப்பள்ளங்களை ஒரேயளவான இடைத்தூரத்தில் அமைப்பதன் மூலம் குறித்த பரப்பளவில் கூடிய இசைத் தகவல்களை அடக்க முடிந்தது. எனினும், ஒலித் தரத்தின் மேம்படுக்காக இது பிற்காலத்தில் மாற்றப்பட்டது. நோயாளிகளை ஆர்க்கிமிடியச் சுருள் ஒன்றை வரையச் சொல்வது உடல் நடுக்கத்தை அளவிடுவதற்கான ஒரு முறையாகக் கையாளப்படுகிறது. இது நரம்பியல் நோய்களைக் கண்டறிவதில் உதவுகிறது. சாங்காய் அரங்கம் சாங்காய் அரங்கம் ("Shanghai Stadium") என்பது சீனாவின் சாங்காய் நகரில் அமையப் பெற்றுள்ள பல்தேவை அரங்கமாகும். தற்போது, இந்த அரங்கம் அதிகளவில் கால்பந்து விளையாட்டு போட்டிகளுக்காகவே உபயோகப்படுத்தப்படுகின்றது. இவ்வரங்கு, 1997 ஆம் ஆண்டு, நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் எட்டாவது தேசிய விளையாட்டுப் போட்டியையொட்டி நிர்மாணிக்கப்பட்டது. இது சுமார் 80,000 மக்களை பார்வையாளர்களாக கொள்ளக்கூடிய தகவுகளைக் கொண்டது. இதன் காரணமாக இது "80,000 மக்களின் அரங்கு" (八万人体育场) என்றும் அழைக்கப்படுவதுண்டு. உலகிலுள்ள மிகப்பெரிய முப்பது கால்பந்து விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். அத்தோடு, சீனாவின், குவாங்டொங் ஒலிம்பிக் அரங்கு மற்றும் பீஜிங் தேசிய அரங்கம் ஆகியவற்றிற்கு அடுத்து அளவில் மிகப்பெரிய அரங்கம் இதுவாகும். 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது, கால்பந்து தேர்வாட்டங்களுக்காக இவ்வரங்கம் பயன்படுத்தப்பட்டது. 2007 இல் இடம்பெற்ற விஷேட கோடைகால அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின், அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற தளமாக இவ்வரங்கு விளங்கியது குறிப்பிடத்தக்கது. சாங்காய் அரங்கம் என்ற பெயரானது, சாங்காய் உள்ளக அரங்கம் என்ற பெயரோடு மிகவும் நெருக்கமானது. இந்த இரண்டு நிர்மாணங்களின் பெயர்களில் ஒரேயொரு சொல்லே ஆங்கில மொழியிலும் சீன மொழியிலும் வித்தியாசப்படுவதால், பலரும் இவ்விரண்டு நிர்மாணங்களின் பெயர்கள் தொடர்பில் குழம்பியிருக்கின்றனர். சாங்காய் மெட்ரோ லைன் 4 என்ற போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை இன்னும் மோசமானது. ஏனெனில், இந்த இரண்டு நிர்மாணங்களுக்கான தரிப்பு நிலையங்களும் அடுத்தடுத்து காணப்படுவதாகும். இந்த அரங்கத்தினுள்ளேயே, ரீகல் சாங்காய் கிழக்காசியா விடுதி அமையப்பெற்றுள்ளது. சாங்காய் அரங்கத்தை அடைந்து கொள்ள, சாங்காய் மெட்ரோ லைன் 4 இல், சாங்காய் அரங்க தரிப்பை நோக்கி பயணிக்க வேண்டும். பொத்துவில் மத்திய கல்லூரி பொத்துவில் மத்திய கல்லூரி ("Pottuvil Central College") இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். இப்பாடசாலை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் முஸ்லிம் பாடசாலையாகும். நவீன கல்வி வழிகாட்டல் மூலம் ஆற்றல் மிக்க சமூகத்தை அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்புதல். அவியன் அவியன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் இவனது கொடையைப் பாராட்டிப் பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 383-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் இவன் 'கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்' என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புலவர் கோழி கூவும் விடியலில் அவியனின் வாயிலில் நின்றுகொண்டு அவனது பகடுகளை வாழ்த்திப் பாடினாராம். (அவியன் அரசனாகவோ, உழவனாகவோ இருக்கலாம். அரசனாயின் பகடு என்பதற்கு யானைப்படை என்றும், உழவனாயின் உழும் எருது என்றும் நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்.) அவன் வெளியே வந்தானாம். அப்போது அவன் மனைவியும் அவன் பின்புறம் அவனைத் தழுவிக்கொண்டே வந்தாளாம். அவியன் புலவருக்குப் புத்தாடை அணிவித்துப் போற்றினானாம். அவன் அணிவித்த ஆடை பாம்பு உரித்த தோல் போலவும், மூங்கிலில் உரியும் தோல் போலவும் இருந்ததாம். அந்தப் புலவர்க்கு அவன் ஒருவனின் கொடை போதுமாம். கொடைக்காகப் பிறரை நாடிச் செல்லமாட்டேன் என்று புலவர் பாடுகிறார். ஏறைக்கோன் ஏறை என்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளில் ஒன்று. ஏறைக்கோன் சிறந்த போர்வீரன். குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் இவனது வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் இவனது வள்ளண்மை கூறப்படவில்லை. என்றாலும் பாராட்டிய புலவரை இவன் பேணியிருக்கலாம். 'பெருங்கல் நாடன்' என இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவனது நான்கு பண்புகள் பாடலில் சுட்டபடுகின்றன. யுகோசிலாவியப் போர்முனை யுகோசிலாவியப் போர்முனை ("Yugoslav Front") என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட யுகோசிலாவியாவில், அச்சு படைகள் மற்றும் அவர்களது உள்நாட்டு ஆதரவாளர்களுக்கும் யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களைக் குறிக்கிறது. 1941 - 1945 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இது யுகோசிலாவிய தேசிய விடுதலைப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் கூட்டணியில் சேரும்படி நாசி ஜெர்மனி யுகோசிலாவியாவை வற்புறுத்தியது. இதற்கு இசைய மறுத்ததால் ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6, 1941 அன்று யுகோசிலியாவைத் தாக்கின. ஏப்ரல் 17ம் தேதி யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. யுகோசிலாவியர்களுள் குரோசியர் ஜெர்மனியின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஜெர்மனியின் துணையுடன் குரோவாசியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பிற யுகோசிலாவியர்கள் நேச நாடுகளின் துணையுடன் அச்சு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) இப்போர் தொடர்ந்து நீடித்தது. ஜெர்மானியர்களை எதிர்த்த உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தில் முதலில் இரு பிரிவுகள் இருந்தன - யுகோசிலாவிய அரச குடும்பத்தை ஆதரித்த செட்னிக்குகள் மற்றும் ஜோசப் புரோஸ் டிட்டோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள். 1941-42 காலகட்டத்தில் ஜெர்மானியர்களை எதிர்த்த செட்னிக்குகள் பின்பு அவர்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கி தங்கள் எதிர்ப்பினைக் கைவிட்டனர். ஆனால் டிட்டோவின் கம்யூனிசப் படைகள் தொடர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து வந்தன. அவற்றுக்கு சோவியத் ஒன்றியமும் மேற்கத்திய நேச நாடுகளும் உதவி செய்தன. இதனால் இரு எதிர்ப்பு குழுக்களுமிடையே ஒரு உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. டிட்டோவின் கம்யூனிஸ்டுகளை ஒழிக்க அச்சுப் படைகள் தொடர்ச்சியாகப் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றின் பலனாக 1943ஆம் ஆண்டு டிட்டோவின் படை அழியும் நிலை உருவானது. எனினும் அதனை சமாளித்து தப்பித்த கம்யூனிஸ்டுகள், மேற்கத்திய நேச நாடுகளிடமிருந்து வான்வழியே கிட்டிய தளவாட மற்றும் ஆயுத உதவியினாலும், சொவியத் ஒன்றியத்தின் படை உதவியாலும், அச்சுப் படைகளை முறியடித்து, 1945இல் யுகோசிலாவியன் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இப்போரே வருங்கால யுகோசிலாவிய கூட்டாட்சி அரசு உருவாக அடித்தளம் அமைத்தது. இப்போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் இனவொழிப்பு, எதிர்தரப்புப் போர்க்கைதிகளை விசாரணையின்றி கொல்லுதல், குடிமக்களைக் கொல்லுதல் போன்ற போர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித இழப்புகள் பெருமளவில் இருந்தன. ஓய்மான் நல்லியாதன் ஓய்மான் நல்லியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் இவனை நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற்றுள்ளார். பொழுது இறங்கிய மாலை வேளையில் புலவர் இவனது வாயிலுக்குச் சென்று தன் தொடாரிப்பறையை முழக்கினாராம். நல்லியாதன் இரவு வேளையில் அவருக்குப் புத்தாடையும், தேறலொடு நல்விருந்தும் நல்கிப் போற்றினானாம். அத்தோடு நரகம் போன்ற புலவரின் வறுமை போய்விட்டதாம். நீர் நிறைந்திருக்கும் குளத்திலிருந்து மதகுப்பலகையில் பீறிக்கொண்டு பாயும் நீர் போல அவன் வெளிப்பட்டுப் பாய்ந்து புலவரின் வறுமையைப் போக்கினானாம். புறத்திணை நன்னாகனார் புறத்திணை நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் ஓய்மான் நல்லியாதனைப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அது புறநானூறு 376 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. புலவர் வறுமையில் நரகவேதனைப் பட்டதாகவும், பொழுது இறங்கிய மாலை வேளையில் நல்லியாதனிடம் சென்று பாடியதாகவும், நல்லியாதன் அன்றிரவே புலவரின் வறுமையையெல்லாம் போக்கியதாகவும் இந்தப் பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார். நன்னாகனார் என்னும் புலவர் ஒருவர் உள்ளார். அவரிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்ட இவரைப் 'புறத்திணை' என்னும் அடைமொழி தந்து குறிப்பிடலாயினர். பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை இவரும் நன்னனாகனாரும் ஒருவரே எனக் கொண்டு பாடல்களைத் தொகுத்துள்ளார். ரகுமான் (நடிகர்) ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார். புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார். கூடெவ்விடே 1983ல் வெளிவந்த ஒரு மலையாளப் படம்,கூடுஎவ்விடே. இதை எழுதி இயக்கியவர் பத்மராஜன். இந்தப் படம் சுஹாசினி, மம்முட்டி மற்றும் ரகுமான் ஆகியவர்களுக்கு முதல் படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் கதை வசந்தி என்ற ஒரு தமிழ்மொழி நாவலை மையமாகக் கொண்டதாகும். மற்றும் பலர். சுகுமாரி (நடிகை) சுகுமாரி (அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார். நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். 1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாவிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். திருமணத்துக்குப் பிறகு பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார். மலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது. இத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார் தமிழிலும் எம்.ஜி.ஆர். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் , ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாக. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோது. சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல். வருஷம் 16 படத்தில் கார்த்திக், குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும் சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணமான நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் . பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜில்லென்று மேக் அப்போட்டு ஜெயலலிதாவுடன் நடிப்பில் வெளுத்து வாங்கி வி கே ராமசாமியை ஓரம் கட்டியிருப்பார் .வசனங்கள் பேசும்போது கண்களில் துறுதுறுப்பும் ,உதட்டு சுழிப்பும் அவருடைய தனி முத்திரை . வசந்த மாளிகையில் தலையை கொஞ்சம் கூட அசைக்காமல் சூடு சூடு வசனம் பேசிவிட்டு கிண்டல் பார்வை வீசுவது இவரது தனி முத்திரை . தீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என்பது 1980 இல் வெளிவந்த மீண்டும் கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். இந்தப் பாடலை கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா இருவரும் இணைந்து பாடியிருந்தனர். அனேகமான தென்இந்தியத் திரைப் படங்களில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும். பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும். வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு பெண் கூனா, குருடா, செவிடா என்று ஆராய அவளை ஆடு, பாடு என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வதாக இருக்கும். இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது. ஆனால் கமலஹாசன் தன் சம்மதத்தை இப்பாடலினூடு தெரிவிக்கும் விதம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது இந்தச் சின்னஞ் சிறு வயதினிலே எனக்கோர் சித்திரம் தோணுதடி என்ற பாடலைத்தான் பாடத் தொடங்குகிறார். பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு, இடையில் பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமலஹாசன் பாடலைத் தொடர்ந்து பாடி சம்மதத்தைத் தெரிவிப்பதாய் காட்சி அமைகிறது. பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை, இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை, தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை, வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை போன்ற நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனவும் இப்பாடலில் காட்டப்பெற்றுள்ளது. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான் உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன் ஊமையைப் போலிருந்தேன் கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி சபாஷ், பலே வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன் காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் மோதும் விரகத்திலே செல்லம்மா... சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி பெரிய உப்போடை பெரிய உப்போடை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு 4000 இற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இது மட்டக்களப்பு வாவியின் கரையிலே உள்ளது. இங்கே புனித தெரேசா கல்லூரி என்ற பாடசாலை உள்ளது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையினால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் மிகவும் முன்னேறிய கிராமமாகும். 1990களில் இடம் பெற்ற போர்ச் சூழலினால் இங்கே வசித்து வந்த சிங்களவர்கள் இடம் பெயர்ந்து விட்டனர். இங்கே சிங்கள மகா வித்தியாலயம் என்ற பாடசாலை உள்ளது. தற்பொழுது இந்த பாடசாலையில் கல்வி நடவடிக்கை எதுவும் நடைபெறுவதில்லை. கொக்கட்டிச்சோலை கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். கொக்கட்டி மரங்கள் இங்கே சோலை போன்று காட்சி தருவதால் இதற்கு கொக்கட்டிச்சோலை என்று பெயர் வந்தது. இங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் விளங்குகிறது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலானது இங்கு அமையப் பெற்றுள்ளது. ஈழத்திலுள்ள சுயம்பு லிங்கம் கொண்ட கோயில்களில் இது மிகவும் முக்கியமானதாகும். இது மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்குப் புறமாக உள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் கொக்கட்டிச்சோலை மிகவும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பரவை முனியம்மா பரவை முனியம்மா (பிறப்பு: 1943) தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார். காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன. பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார். ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் வில்லியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் இவனது வள்ளண்மையைப் போற்றிப் பாடியுள்ள பாடல் ஒன்று புறநானூறு 379-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடலில் இவன் ‘இலங்கை கிழவோன்’ என்று குறிப்பிடப்படுகிறான். இந்த வில்லியாதனைப் பாடிய இந்தப் புலவர் ஓய்மான் நல்லியாதனின் கொடையையும் பாராட்டிப் பாடியுள்ளார். பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் அப்பாடலில் ‘நன்மா இலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்னும் பெயர் கொண்ட மூவர் ஓய்மானாட்டில் சற்றேறக் குறைய ஒரே காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள் மூவரும் அண்ணன் தம்பியராய் அடுத்தடுத்தோ, ஆங்காங்கேயோ செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகிறது. இவனது இலங்கை நெல்வயல் சூழ்ந்த ஊராம். அங்கு நெல் அரியும் உழவர்கள் அங்குக் கிடக்கும் ஆமை ஓட்டில் தன் அரிவாளைத் தீட்டிக்கொள்வார்களாம். தான் எப்போதும் வில்லியாதன் தாள்நிழலிலேயே வாழவேண்டும் என்றும், அவன் தனது பாட்டைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் புலவர் விருப்புவதாக இப்பாடல் தெரிவிக்கிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை இவனது வள்ளண்மைச் சிறப்புகளைக் கூறுகிறது. கடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையைப் போற்றி அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் அவர்கள் ஈகைநுகம் பற்றி இழுத்துச் சென்ற கொடை என்னும் தேரை இவன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் எனப் புலவர் குறிப்பிடுகிறார். பாடலில் இவன் ‘நன்மா இலங்கை கிழவோன்’ எனப் போற்றப்படுகிறான். இவன் தன் குடும்பத்தாருடன் உடனமர்த்திப் பாணர்களுக்கு விருந்து படைப்பானாம். இவன் பாணர்களுக்கு நல்கும் பரிசிலைப் பாண்டில் என்னும் தேர்வண்டியில் ஏற்றி வண்டி ஓட்டும் பாகனோடு அனுப்பிவைப்பானாம். இப்பாடலில் நல்லியக்கோடன் ‘பெருமாவிலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்படுகிற்றான். இவனது ஊரிலுள்ள மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றைக் கிண்டுவார்களாம். அப்போது அவர்களுக்கு ஆமை முட்டையும், ஆம்பல் கிழங்கும் கிடைக்குமாம். அவை அவர்களுக்குத் தேன்போல் இனிக்கும் தீனி ஆகுமாம். பாரியின் பறம்புமலையில் பனிச்சுனை ஒன்று இருந்தது. அதன் தெளிந்த நீர் அவ்வூர் மக்களுக்கு இனிப்பது போல நல்லியக்கோடன் தொடர்பு நன்னாகனாருக்கு இனிக்குமாம். சாரா எலியட் சாரா எலியட் ("Sarah Elliott", பிறப்பு: சனவரி 4 1982), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 போட்டிகளிலும், 82 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2005 -2010 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெட்டி வில்சன் பெட்டி வில்சன் ("Betty Wilson", பிறப்பு: நவம்பர் 21 1921), இறப்பு: சனவரி 22 2010), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1958 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். முக்கூர்த்தி தேசியப் பூங்கா முக்கூர்த்தி தேசியப் பூங்கா தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். இதன் பரப்பளவு 78.46 கி.மீ². இது இப்பகுதியின் சிறப்பான வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நீலகிரி பல்லுயிர் வலயத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி புல்வெளிகளும் சோலைக் காடுகளும் உள்ளடங்கியது. மேலும் பல அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களின் தாயகமாக உள்ளது. இங்கு வங்காளப் புலி, ஆசிய யானை முதலியன உள்ளன. வரையாடு இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றறியப்பட்டது. இப்பகுதி கானுயிர்க் காப்பகமாக 1982 ஆகத்து 3-ஆம் நாளும் பின்னர் 1990 அக்டோபர் 15-இல் தேசியப்பூங்காவாகவும் தரமுயர்த்தப்பட்டது. அலீசா ஹீலி அலீசா ஹீலி ("Alyssa Healy", பிறப்பு: மார்ச்சு 24 1990), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும், 28 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2010 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வெல்லிங்டன், தமிழ்நாடு வெல்லிங்டன் (Wellington) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு பாதுகாப்புப் படையினரின் பயிற்சிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு ஒரு இரயில் நிலையமும் உள்ளது. நீலகிரி பயணிகள் வண்டி இங்கு நின்று செல்கிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 20,000 ஆகும்.. ஜூலி ஹன்டர் ஜூலி ஹன்டர் ("Julie Hunter", பிறப்பு: மார்ச்சு 15 1984), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும், 63 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2010 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எரின் ஆஸ்போர்ன் எரின் ஆஸ்போர்ன் ("Erin Osborne", பிறப்பு: சூன் 27 1989), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும், 20 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். போரூர் ஏரி போரூர் ஏரி சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போரூரில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது உள்ளூர் வழக்கில் ரெட்டேரி என்றழைக்கப்படுகிறது. இது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளுள் குறிப்பிடத்தக்கது. 1995-ஆம் ஆண்டிலிருந்து குளித்தல், துவைத்தல், நீந்துதல் முதலியன இந்த ஏரியில் தடைசெய்யப்பட்டுள்ளன. இது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுள் ஒன்று. எம்மா சாம்சன் எம்மா சாம்சன் ("Emma Sampson ", பிறப்பு: சூலை 29 1985), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். லீசா ஸ்தலேகார் "'லீசா ஸ்தலேகார்" ("Lisa Sthalekar", பிறப்பு: ஆகத்து 13 1979), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2011 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 - 2011 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜுலி ஸ்டொக்டன் ஜுலி ஸ்டொக்டன் ("Julie Stockton", பிறப்பு: ஏப்ரல் 19 1959), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ரேலீ தாம்சன் ரேலீ தாம்சன் ("Raelee Thompson", பிறப்பு: ஆகத்து 3 1945), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1985 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷரோன் டிரட்ரீ ஷேரன் டிரெட்ரியா ("Sharon Tredrea", பிறப்பு: சூன் 30 1954), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 - 1984 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1988 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பெட்டா வர்கோ பெட்டா வர்கோ (பிறப்பு: மார்ச்சு 2 1956), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1977 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 - 1985 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜெஸ் கேமரன் ஜெஸ் கேமரன் ("Jess Cameron", பிறப்பு: சூன் 27 1989), இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு இருபது20 போட்டிகளிலும், 34 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2009 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆமில்டன், ஒண்டாரியோ ஆமில்டன் (ஹாமில்டன், Hamilton, 2006 மக்கள்தொகை:504,559; நகர்ப்புற பகுதியில் மக்கள்தொகை:647,634; மாநகரப்பகுதியில் மக்கள்தொகை: 692,911) கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஓர் துறைமுக நகரமாகும். 1812ஆம் ஆண்டின் சண்டையை அடுத்து துரண்ட் பண்ணையிடமிருந்து வாங்கிய பகுதியில் ஜியார்ஜ் ஆமில்டன் வடிவமைத்த இந்நகரம், ஒண்டாரியோ ஏரியின் மேற்கு எல்லையில் தங்க குதிரை இலாடம் எனப்படும் பகுதியில் மிகுந்த மக்களடர்த்தி மற்றும் தொழிலகங்களை கொண்டது மையமாக வளர்ந்துள்ளது. சனவரி 1, 2001 அன்று முந்தைய நகரப்பகுதியுடன் அண்மையிலிருந்த சிறு நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஆமி்ல்டன் நகரம் உருவானது. பழைய நகரவாசிகள் "ஆமில்டோனியர்கள்" என அழைக்கப்படுகின்றனர். 1981 முதல் இந்த நகரம் கனடாவின் ஒன்பதாவது பெரும் நகரமாகவும் ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜுலான் கோஸ்வாமி ஜுலான் கோஸ்வாமி ("Jhulan Goswami", பிறப்பு: நவம்பர் 25 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 100 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 - 2006 பருவ ஆண்டுகளில், இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02 - 2010/11 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பிந்தேஷ்வரி கொயல் பிந்தேஷ்வரி கொயல் ("Bindeshwari Goyal", பிறப்பு: சூலை 1 1979), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2002 - 2003 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சசி குப்தா சசி குப்தா ("Shashi Gupta", பிறப்பு: ஏப்ரல் 3 1964 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1991 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1984 - 1993 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சுசான் இட்டிசேரியா சுசான் இட்டிசேரியா ("Susan Itticheria", பிறப்பு: 1959 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அஞ்சு ஜெயின் அஞ்சு ஜெயின் ("Anju Jain", பிறப்பு: ஆகத்து 11 1974 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2003 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1993 - 2005 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கரு ஜெயின் கரு ஜெயின் ("Karu Jain", பிறப்பு: செப்டம்பர் 9 1985 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004 - 2008 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். நிலீமா ஜோக்லேகார் நிலீமா ஜோக்லேகார் ("Nilima Jogalekar", பிறப்பு: சூலை 1 1961 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1977 - 1978 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1978 - 1985 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். நீட்டா கதம் நீட்டா கதம் ("Neeta Kadam"), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1984 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள் கம்பளம் என்ற நாடு ( தற்போது பெல்லாரி - ஆந்திர கர்நாடக எல்லையில் உள்ளது ) . கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்று ஆனார்கள் என்று கூறப்படுகிறது . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர் என்றும் அழைத்து கொள்கிறார்கள் .1850 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் அல்லாத தெலுங்கு மொழியை பேச கூடியவர்களில் மக்கள் தொகையில் இவ்வினத்தவர்கள் அதிகம் இருந்து வந்து உள்ளனர் . இவர்கள் முகமதியர் படை எடுப்பின் காரணமாக தமிழகம் வந்ததாக கூறபடுகிறது . இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும் , மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர் . 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை மக்கள் வடக்கு , மேற்கு திண்டுக்கல் பகுதிகளில் அதிகம் குடியேறினர் . மதுரையை 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர்கள் ஆண்டு வந்ததால் , பெரும்பான்மையான பாளையங்களில் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர் . இவர்கள் மதுரை கசட்டுகளில் tottiyans , kappiliyan போன்ற ஜாதிகளாக குறிப்பிட்டு உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே பிற ஜாதியினரை தங்கள் பகுதிகளில் அனுமதிக்காமல் வாழ்ந்து வந்து உள்ளனர் . இவர்கள் வேட்டையாடுவது , சேவல் சண்டை விடுவது போன்றவற்றில் பொழுது போக்கி வந்து உள்ளதாக குறிப்புகளில் பதிய பட்டுள்ளது . இவர்கள் வைணவ வழிபாட்டை விரும்புபவர்கள் . உடன் கட்டை ஏறும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்து வந்து உள்ளது , தற்போது அது இவர்களால் கடை பிடிப்பது கிடையாது . இவர்கள் தங்கள் சுக , துக்கங்கள் அனைத்தையும் கடவுளிடம் பாடல் மூலம் முறையிடும் வழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் . வீரர்களாக தங்களை அடையாள படுத்தி கொள்வர் என்றும் கூறபடுகிறது . பிராமணர்களை எந்த நிகழ்சிகளிலும் இவர்கள் அழைப்பது கிடையாது மாறாக தங்கள் இனத்திலேயே பெரியவரை - தலைவரை தேர்ந்து எடுப்பார் , இவரே இம்மக்களின் திருமணம் முதலிய சடங்கை செய்து விப்பார் . இவரை கோடாங்கி நாயக்கர் என்றும் ஊர் நாயக்கர் என்றும் அழைகிறார்கள். இம்மக்கள் பெரும்பான்மையான பாளையங்களை ஆண்டு வந்து உள்ளனர் . . இவர்கள் பெரும்பாலும் கோயம்புத்தூர் ,திருப்பூர், நாமக்கல்,சத்தியமங்கலம், கோபி, மதுரை , திருச்சி , செங்கல்பட்டு , திருநெல்வேலி , சேலம் போன்ற பகுதிகளில் தங்களை குடி அமர்த்தி கொண்டு ஆள தொடங்கினர் . கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் பெருமளவில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பல லட்சகணக்கான இன்னுயிர்களை இம்மக்கள் விடுதலை போராட்டத்தில் இழந்து உள்ளனர் . அரியலூர் சபாபதி என்ற புரட்சிகாரர் படையில் இருபதாயிரம் மக்களுக்கு மேல் கம்பளத்து சமுதாய மக்களே இருந்து வந்து உள்ளனர் . தீரன் சின்னமலை படையிலும் பல்லாயிரகணக்கான கம்பளத்து நாயக்கர் மக்கள் இருந்து வந்து உள்ளனர் . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்திலும் இம்மக்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர் . இது மட்டும் அல்லாது தாங்கள் ஆண்ட பகுதிகளிலும் ஆங்கிலேயர்களை பெருன்பான்மையாக எதிர்த்தே வந்து உள்ளனர் . கோப்பைய நாயக்கனூர்-கோப்பைய நாயக்கர் கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் போயர் இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது . ஆந்திராவில் பெரும்பான்மை காப்பு இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் . தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது . நாயிநிகாரு ஆண்ட பகுதி மேற்கொண்ட பாளயங்களிலும் ,அதனை சுற்றி உள்ள ஊர்களிலும் தற்போதும் கம்பளத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . THE MADURA COUNTRY , MANUAL BY JAMES HENRY NELSON - மடக்கைச் சுருள் மடக்கைச் சுருள் அல்லது மடக்கைச் சுருளி என்பது ஒரு சிறப்புவகைச் சுருள் வளைவு ஆகும். இது இயற்கையில் பரவலாகக் காணப்படுகிறது. முதன் முதலாக டெசுக்கார்ட்டசு என்பவர் மடக்கைச் சுருள் பற்றி விளக்கினார். இதன் பின்னர், ஜேக்கப் பெர்னோலி இது குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார். இவர் இதை "அற்புதமான சுருள்" (marvellous spiral) என அழைத்தார். முனைவாள்கூறுகளில் (r,θ) இந்த வளைவைப் பின்வருமாறு எழுதலாம்: அல்லது இங்கே formula_3 இயற்கை மடக்கைக்கான அடி. formula_4, formula_5 என்பன குறிப்பிலா மாறிலிகள். அளபுரு வடிவத்தில் இவ்வளைவைப் பின்வருமாறு எழுதலாம்: ஆதனுங்கன் ஆதனுங்கன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 2 புறநானூற்றில் உள்ளன. அவை 175, 389. ஒருபாடல் “எந்தை! வாழியாதனுங்கன்” என்று தொடங்குகிறது. இதில் புலவர் இவனை “அறத்துறை” என்கிறார். ‘உலக இடைக்கழி’ போன்ற அறத்துறை என்கிறார். “என் நெஞ்சம் திறக்குநர் நிற் காண்குவரே, நின் யான் மறப்பின், மறக்குங்காலை, என் உயிர் யாக்கையின் பிரியும்’ என்னும் புலவர் வரிகள் நம் நெஞ்சை நெகிழவைக்கின்றன. மற்றொரு பாடலில் வேங்கட வள்ளல் புல்லி போலக் கொடை வழங்கும்படி ஆதனுங்கனைப் புலவர் வேண்டுகிறார். என் நெஞ்சில் நினைக்காண்பார் - புறநானூற்றுப்பாடல் உலக இடைக்கழி உலக இடைக்கழி என்பது மோரியர் சங்ககாலத்தில் தமிழகத்திற்குள் நுழைந்த வழி. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் ஓய்மானாட்டு நல்லியக்கோடனைச் சிறப்பித்துப் பாடிய பாடல் சிறுபாணாற்றுப்படை. ஓய்மானாடு இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊரை மையமாகக் கொண்டது. சங்ககாலத்தில் இது மாவிலங்கை என்னும் ஊரை மையமாகக் கொண்டிருந்தது. இது இடைக்கழி நாடு. இதனின்று வேறுபட்டது உலக இடைக்கழி. உலக இடைக்கழி என்பது மோரியர் தமிழ்நாட்டுக்குள் நுழையத், தேரில் வர, தேர்ச்சக்கரம் உருண்டு உருண்டு பள்ளப்படுத்திய, மலையிடைக் கணவாய். இது இக்காலத்து மங்களூர் மலையிடைப் பிளவு. சங்ககாலத்தில் இது கொண்கானம் எனப் பெயர் பெற்றிருந்தது. இங்குதான் கோசரின் பொற்கிடங்கு இருந்தது. அகப்பா என்னும் ஊரின் கோட்டை இருந்தது. இந்தக் கிடங்குக்குத்தான் தூங்கெயில் கதவம் அமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் அறத்துறை எனப்பட்ட மடம் ஒன்றும் இருந்தது. வள்ளல் ஆதனுங்கன் புலவர் கள்ளில் ஆத்திரையனார் என்பவரால் பாராட்டப்பட்டுள்ளான். பாராட்டும்போது உலக இடைக்கழி அறத்துறை போல ஆதனுங்கன் அறத்துறையாக விளங்கினான் என்று பாராட்டுகிறார். மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியாவின் பொதுத்தேர்தல் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 12வது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. மலேசியாவின் 13 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெறும். இந்த 13 மாநிலங்களில், சரவாக் மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் தனியாக நடைபெறும். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன. தேசிய முன்னணி "(Barisan Nasional)" என்பது ஒரு கட்சி. மக்கள் கூட்டணி "(Pakatan Rakyat)" என்பது மற்ற கட்சி. இரு கட்சிகளுமே மக்களிடம் அரசியல் செல்வாக்கு பெற்றவை. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கட்சியாகும். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தேசிய முன்னணி (மலேசியா) (பாரிசான் நேசனல்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் 2009 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி (பாக்காத்தான் ராக்யாட்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் குலசேகரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மலேசியாவின் மூன்று சமூகங்களும் அவரை நம்புகின்றன. ஈப்போவில் 100க்கு 88 விழுக்காடு மக்கள் சீனர்கள். ஒரு தமிழரை நம்பி அவரை வெற்றிப் பெறச் செய்தனர். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து பெருமை படுத்துகிறது மலேசியச் சீன சமூகம். குலசேகரன் மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். பல முறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர். அவர் கைது செய்யப் பட்ட பிறகு மலாய், சீன, இந்திய சமூகத்தவர் கோலாலம்பூர் தலைநகரில் பேரணி வகுத்தனர். அதனால், மலேசிய சட்ட அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. குலசேகரன் மலேசிய நாடாளுமன்றத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர். என்று ஓர் இந்திய ஆங்கில நாளிதழ் எழுதி உள்ளது. மலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும் அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர். பேயோன் பேயோன் ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் யார், இயற்பெயர் என்ன போன்ற விவரங்கள் தெரியவில்லை. முன்னரே புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரே “பேயோன்” என்ற புனைப்பெயரில் எழுதுகிறார் எனப் பலரும் ஊகித்துள்ளனர். சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் புகழ் பெற்றவர். இவரது முதல் நூலான 'பேயோன் 1000' டுவிட்டரில் இவரது நுண்பதிவுகளின் தொகுப்பாகும். 2009ல் இவர் எழுதத் தொடங்கிய 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற நெடுங்கதையில் (இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை) வரும் பேயோன் என்ற முக்கியப் பாத்திரத்திற்கு வடிவம் கொடுப்பதற்காக டுவிட்டரில் செப்டம்பர் 11, 2009 கணக்குத் தொடங்கி பதிவிடத் தொடங்கியதாக எழுத்தாளர் பேயோன் குறிப்பிட்டுள்ளார். உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள் உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள் ("Seven Pilgrim Churches of Rome") என்பது கிறித்தவர்கள் உரோமையில் திருப்பயணமாகச் சென்று சந்தித்து வழிபடுகின்ற முதன்மை வாய்ந்த ஏழு கோவில்களைக் குறிக்கும். கிறித்தவ சமயத்தோடு நெருங்கிய தொடர்புடைய உரோமை நகரில் ஏழு கோவில்களுக்குச் சென்று இறைவேண்டல் செய்யும் பழக்கம் 16ஆம் நூற்றாண்டில் எழுந்தது. புனித பிலிப்பு நேரி என்பவர் உரோமை நகருக்கு வந்த திருப்பயணியருக்கு ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்ந்து, அவர்கள்தம் திருப்பயணம் முறையாக நிகழத் துணைபுரிந்தார். அவர் 1552ஆம் ஆண்டு, பெப்ருவரி 25ஆம் நாள் அவர் இப்பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். இவ்வாறு, உரோமைக்கு வந்த திருப்பயணிகள் ஆன்மிக நலம் பெற்றிட ஏழு பெருங்கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் புரியலாயினர். அந்த ஏழு பெருங்கோவில்களின் பட்டியல் இதோ: 2000ஆம் ஆண்டில் நிகழ்ந்த யூபிலியின் போது (புனித ஆண்டு) திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருப்பயணியரின் வசதியைக் கருத்தில் கொண்டு, மேலே தரப்பட்ட ஏழு கோவில்களுள் தொலைவில் அமைந்த புனித செபஸ்தியான் பெருங்கோலுக்குப் பதிலாக இறையன்புத் தாய் மரியாவின் திருத்தலத்தை இணைத்தார். இருப்பினும், திருப்பயணியர் பலர் தம் திருப்பயணத்தின் பகுதியாக புனித செபஸ்தியான் பெருங்கோவிலையும் இன்றுவரை சந்தித்து இறைவேண்டல் செய்வது வழக்கமாய் உள்ளது. உரோமை நகருக்குச் சென்று அங்குள்ள புனித இடங்களாகிய கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் செய்யும் பழக்கம் தவக்கால பக்தி முயற்சியின் பகுதியாக இருந்தது. தவக்காலப் புதன் தொடங்குவதற்கு முந்திய வியாழனன்று, தாம் தொடங்கவிருக்கின்ற நோன்புக்கு ஆயத்தமாகத் திருப்பயணியர் உரோமை நகரின் ஏழு முதன்மைக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். இப்பழக்கத்தைப் புனித பிலிப்பு நேரி ஊக்குவித்தார். 1575இல் நிகழ்ந்த யூபிலி ஆண்டின்போது நிறைபேறுபலன்களை அடைந்திட கிறித்தவர்கள் உரோமையின் ஏழு கோவில்களுக்குத் திருப்பயணமாகச் சென்றனர். அந்த ஆண்டு முழுவதும் மக்கள் தனியாகவோ குழுவாகவோ ஒவ்வொரு கோவிலாகச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினர். 2000ஆம் ஆண்டு யூபிலியின் போதும் திருப்பயணியர் மேற்கூறிய ஏழு கோவில்களுக்கும் தனியாகவோ குழுவாகவோ சென்று இறைவேண்டல் நிகழ்த்தி பேறுபலன்கள் பெறலாம் என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழிசெய்தார். அக்கோவில்கள் தவிர, எருசலேமில் அமைந்துள்ள திருத்தலங்களுக்குச் சென்றும் பேறுபலன்கள் பெறலாம் என்றும் அவர் அறிவித்தார். மேலும், உரோமைக்கோ எருசலேமுக்கோ சென்று கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் செய்ய இயலாதோர் தம் சொந்த மறைமாவட்டங்களிலேயே ஆயர்களால் குறிக்கப்படும் கோவில்களுக்குத் திருப்பயணமாகச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தி, பேறுபலன்கள் பெறும் வசதியும் இன்று உண்டு. இன்று உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் பலர் கீழ்வரும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர். ஒரே நாளில் கால்நடையாகச் சென்று ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்வோரும் உண்டு. காலை 7 மணியிலிருந்தே புனித பேதுரு பெருங்கோவில் திறந்திருக்கும். அங்கே திருப்பயணத்தின் முதல் கட்டம் தொடங்கும். ஏழு கோவில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். திருப்பயணத்தின் இறுதிக்கட்டமாக புனித மரியா பெருங்கோவில் அமையும். அது மாலை 7 மணிக்கு மூடப்படும். கால்நடையாகச் சென்று ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்திட எல்லாத் திருப்பயணிகளாலும் இயலாதிருக்கலாம். எனவே அவர்கள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழி அக்கோவில்களுக்குச் செல்வதும் உண்டு. திருப்பயணத்தைக் கால்நடையாகச் சென்று நிகழ்த்திட 25 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஏழு கோவில்களும் உரோமை நகரின் மையப்பகுதியில் இல்லாமல் வெளிப்பகுதிகளில் இருப்பதால் இவ்வாறு உள்ளது. பண்டைய உரோமையின் மையம் மக்கள் கூடும் பொதுவிடமாக இருந்தது. இடைக்கால உரோமையின் மையம் சிறிது அகன்று போனது. ஆனால் கிறித்தவ சமயத்தின் முதன்மைக் கோவில்கள் பல நகர எல்லைக்கு வெளியே கட்டப்பட்டன. இதற்குக் காரணம் கிறித்தவத்தின் தொடக்க கால மறைச்சாட்சிகள் தம் நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டு நகர எல்லைக்கு வெளியே புதைக்கப்பட்டது தான். கிறித்தவர்கள் அவ்விடங்களில் கல்லறை கட்டி அப்புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். அவ்விடங்களில் சிறப்புமிக்க கோவில்களை எழுப்பினார்கள். எனவே, இன்று புனிதர்களின் கல்லறைகளை உள்ளடக்கிய புனித பேதுரு பெருங்கோவில், புனித பவுல் பெருங்கோவில், புனித இலாரன்சு பெருங்கோவில், புனித செபஸ்தியான் பெருங்கோவில் ஆகிய நான்கும் தொலைவில் உள்ளன. புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில், புனித திருச்சிலுவைப் பெருங்கோவில் ஆகிய இரண்டும் தொடக்க காலப் பேரரசர்களின் நிலப்பகுதியில் அவுரேலியா பெருஞ்சாலையைத் தொட்டு உள்ளன. புனித மரியா பெருங்கோவில் எஸ்குலின் என்னும் குன்றின்மேல் உள்ளது. இவ்வாறு, இந்த ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்வதற்குத் திருப்பயணியர் ஓரளவு தொலைவு நடந்துசெல்வது தேவையாகிறது. திருப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லும் பயணப் பாதை இது: முதல் கட்டமாக அமைவது புனித பேதுரு பெருங்கோவில். அங்கிருந்து டைபர் ஆற்றின் கரை ஓரமாகச் சென்று புனித பவுல் பெருங்கோவிலை அடைவர். பின்னர் சுரங்கக் கல்லறைகள் அமைந்த பகுதியாகிய புனித செபஸ்தியான் பெருங்கோவிலுக்குச் செல்வர். அங்கு இறைவேண்டல் நிகழ்த்தியபின், புனித கலிஸ்து சுரங்கக் கல்லறை பகுதியைத் தாண்டி, ஆப்பியா பெருஞ்சாலையையும் புனித ஸ்தேவான் வட்டக்கோவிலையும் கடந்து புனித இலாத்தரன் யோவான் பெருங்கோவிலுக்குச் சென்று வழிபடுவர். யோவான் பெருங்கோவிலுக்கு அருகே உள்ள புனித திருச்சிலுவைப் பெருங்கோவில் அடுத்த கட்டம். அங்கிருந்து "பெருவாயில் வளாகம்" என்னும் பகுதியைக் கடந்து புனித இலாரன்சு பெருங்கோவிலுக்குச் சென்று திருப்பயணியர் இறைவேண்டல் நிகழ்த்துவர். இறுதியாக, திருப்பயணியர் சந்தித்து வழிபடும் இடம் புனித மரியா பெருங்கோவில் ஆகும். திருப்பயணிகள் சந்தித்து இறைவேண்டல் நடத்தும் கோவில்கள் ஏழு என்னும் வழக்கம் உள்ளது. ஆனால், உரோமையில் ஏழு கோவில்கள் மட்டுமே புனித இடங்கள் என்னும் விதத்தில் இப்பழக்கம் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மாறாக, ஏழு என்பது ஓர் அடையாள எண். உரோமை நகர் ஏழு குன்றுகள்மீது அமைந்தது. உலகின் அதிசயங்கள் ஏழு என்றொரு விளக்கம் உண்டு. விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் வருகின்ற ஏழு சபைகள் பற்றிய குறிப்பும் இதற்கு ஒரு பின்னணியாக இருக்கலாம். சிறப்பாக விவிலிய வழக்கப்படி, ஏழு என்பது முழுமையின் அடையாளம். புனித இலாரன்சு பெருங்கோவில் புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Lawrence Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Laurentii extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Lorenzo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பங்குக் கோவிலாகவும் உள்ளது. இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள ஏழு திருப்பயணக் கோவில்களுள் ஒன்றாகும். மேலும் இதற்கு "குலமுதுவர் பெருங்கோவில்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோவில் வெரானோ கல்லறைத் தோட்டத்தின் அருகே உள்ளது. புனித இலாரன்சு பெருங்கோவிலில் கி.பி. 258இல் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இலாரன்சு என்னும் உரோமைச் சபை முதன்மைத் திருத்தொண்டர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை உள்ளது. இக்கோவிலில் திருத்தந்தை ஹிலரி, ஒன்பதாம் பயஸ் (பத்திநாதர்) போன்ற புனித திருத்தந்தையர்களின் கல்லறைகளும் இத்தாலிய அரசியல் தலைவர் ஆல்சிதே தே காஸ்பெரி என்பவரின் கல்லறையும் உள்ளன. புனித இலாரன்சு பெருங்கோவில் முதல்முதலாக நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் காண்ஸ்டண்டைன் மன்னர் ஆவார். கிறித்தவ நம்பிக்கைக்காக உயிர் துறந்த இலாரன்சு என்பவரின் கல்லறைக்கு அருகே அவரது நினைவாக இக்கோவிலைக் காண்ஸ்டண்டைன் கட்டினார். வேறு புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை உள்ளடக்கி எழுந்த சில கோவில்கள்: ஆப்பியா பெருஞ்சாலையில் அமைந்த புனித செபஸ்தியான் பெருங்கோவில்; சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித ஆக்னஸ் கோவில்; புனிதர்கள் மர்செல்லீனோ, பியேத்ரோ கோவில். புனித இலாரன்சின் கல்லறைக்கு நேர் மேலே ஒரு சிறு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அது திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுஸ் (579-590) என்பவரின் ஆட்சியில் விரித்துக் கட்டப்பட்டது. எனவே, பல ஆண்டுகளாக காண்ஸ்டண்டைன் கட்டிய "முது பெருங்கோவிலும்" பெலாஜியுஸ் கட்டிய "இளம் பெருங்கோவிலும்" அருகருகே இணையாகச் செயல்பட்டன. எனினும், 9-12 நூற்றாண்டுக் காலத்தில் காண்ஸ்டண்டைன் கோவில் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. பெலாஜியுஸ் கட்டிய கோவிலின் விரிவாக்கம் 1217இல் நடந்தது. பழைய கோவிலின் பீடப் பகுதி அகற்றப்பட்டு, மேற்கு நோக்கி கோவில் நீளமாக்கப்பட்டது. இப்பணி திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ் என்பவரால் செய்யப்பட்டது. புதிய பெருங்கோவில் பழைய கோவிலோடு இணைக்கப்பட்டு சிறிது உயர்ந்த தரைமட்டத்தில் அமைக்கப்பட்டது. புனித இலாரன்சு, புனித ஸ்தேவான் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் கோவில் சுவர்களில் சித்திரமாக எழுதப்பட்டன. கோவிலின் மையப் பீடத்தின் அடியில் இவ்விரு புனிதர்களின் கல்லறைகளும் அமையும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டது. புனித இலாரன்சு கோவிலின் ஒரு தனிச் சிறப்பு அது 1347இலிருந்து 1847 வரை எருசலேம் நகர் இலத்தீன் குலமுதுவர் பேராயரின் ஆட்சிப்பீடமாக இருந்ததுதான். 1847இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் எருசலேம் குலமுதுவர் ஆட்சிப்பீடமாக எருசலேம் நகரையே ஒப்படைத்தார். இத்திருத்தந்தை புனித இலாரன்சு கோவிலில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதும் சிறப்பாகும். பரோக்கு கலையின் தாக்கமும் இக்கோவிலில் இருந்தது. ஆனால் அக்கலையின் அம்சங்களை விர்ஜீனியோ வெஸ்பிக்னானி என்னும் கட்டடக் கலைஞர் 1855-1864 காலக் கட்டத்தில் நிகழ்த்திய சீரமைப்பின்போது அகற்றிவிட்டார். இரண்டாம்.உலகப்போரின்போது இக்கோவில் சேதமுற்றது. உரோமை நகரை நேசப்படைகள் தாக்கியபோது இக்கோவில் குண்டுகளுக்கு இரையாகியது. 1943, சூலை 19ஆம் நாள் நிகழ்ந்த இத்தாக்குதலின்போது கோவிலுக்குப் பேரழிவு ஏற்பட்டது. கோவில் முகப்பில் வரையப்பட்டிருந்த அழகிய சித்திரங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின. இருந்தபோதிலும், இடிமானப் பொருள்களைப் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. 1957இல் புனித இலாரன்சு கோவிலின் அடியில் அகழ்வாய்வுகள் நிகழ்ந்தன. அப்போது காண்ஸ்டண்டைன் மன்னரால் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த பழைய கோவிலின் இடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கோவிலின் பீடப் பகுதி பெரிய வட்ட வடிவத்தில் அமைந்திருந்ததும், கோவிலின் நெடுநீளப் பகுதிகள் மூன்றும் பெரிய தூண்களால் தாங்கப்பட்டிருந்ததும், ஆழ்நிலக் கல்லறைகளும் அகழ்வாய்வில் தெரியவந்தன. இக்கோவில் கப்புச்சின் சபைத் துறவியரின் கண்காணிப்பில் உள்ளது. 1709, சூலை 4ஆம் நாளிலிருந்து இக்கோவில் ஒரு பங்குக் கோவிலாகவும் செயல்பட்டு வருகிறது. பங்குப்பொறுப்பு முதலில் இலத்தரான் ஒழுங்குமுறைத் துறவியரிடம் இருந்தது. 1855இல் கப்புச்சின் சபையினர் பொறுப்பேற்றனர். இக்கோவிலுக்கு அழகூட்டும் கூறுகள் பல உண்டு. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன: கோவிலுக்கு வெளியே ஒரு பரந்த முற்றமும் அதில் உயர்ந்தெழும் தூணும் உள்ளன. தூணின் மேல் புனித இலாரன்சின் செப்புச் சிலை உள்ளது. அதை ஸ்தேஃபனோ கல்லேற்றி என்பவர் 1865இல் வடித்தார். கோவிலின் அருகே துறவியர் இல்லமும் 12ஆம் நூற்றாண்டு உரோமைக் கலைமுறையில் அமைந்த மணிக்கூண்டும் உள்ளன. 1943இல் அழிந்துபோன முகப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டது. மூன்று சாளரங்களைக் கொண்ட முகப்பு முழுவதிலும் வரையப்பட்டிருந்த கற்பதிகைச் சித்திரங்கள் அழிந்துபட்டன. சில பகுதிகளே எஞ்சின. அவற்றில் இயேசு கிறித்து ஆட்டுகுட்டியாக உருவகிக்கப்பட்டிருப்பதையும், புனித இலாரன்சின் உருவையும் காணமுடிகிறது. முகப்பு வாயிலில் ஆறு பெரும் தூண்கள் உள்ளன. வாயிலைச் சூழ்ந்த சுவர்களில் புனித இலாரன்சு மற்றும் புனித ஸ்தேவானின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. நேசப்படைகள் புனித இலாரன்சு கோவில் பகுதியில் குண்டுவீசி சேதம் ஏற்பட்டதும் கோவிலுக்கு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் வருகை தந்து அழிவைப் பார்வையிட்டதை நினவுகூர்கின்ற கல் ஆங்குள்ளது. இரா. பாலகிருஷ்ணன் இரா.பாலகிருஷ்ண்னன் (பிறப்பு: டிசம்பர் 26, 1936) மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஆழமானக் காலச் சுவடுகளைப் பதித்துச் சென்றவர். இவர் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியின் தலைவராக இருந்த போது பல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். இவர் பல தமிழ் எழுத்தாளர்களை வானொலிக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இரா.பாலகிருஷ்ணனின் தந்தையாரின் பெயர் ராமானுஜம். தாயாரின் பெயர் கிருஷ்ணம்மாள். இவர் மலேசியா, பேராக், தெலுக் இந்தான், ரூபானா தோட்டத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் அத்தோட்டத்தில் கணக்கராகப் பணியாற்றினார். அவருக்கு பாலகிருஷ்ணன், பத்பநாபன், ஹரிராமுலு, சாம்பசிவம், ராதா, இந்திராவதி, புஷ்பலீலா என ஏழு பிள்ளைகள். ஜப்பானியரின் ஆட்சிகாலத்தில் ரூபானா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் சிரம்பான் சென்று அங்கு தன் மாமாவின் இல்லத்தில் தங்கி தன் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தார். காலையில் ஆங்கிலோ சீனப் பள்ளியில் ஆங்கிலத்தையும் பிற்பகலில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழியையும் கற்றார். பின்னர் அவருடைய மாமா வேலை மாற்றலாகி தெலுக் இந்தான் வந்தார். அதனால், பாலகிருஷ்ணனும் அவருடன் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தெலுக் இந்தான் ஆங்கிலோ சீனப் பள்ளியிலும், பாரத மாதா தமிழ்ப்பள்ளியிலும் கல்வியைத் தொடர்ந்தார். அவருடைய பள்ளி வாழ்க்கை சிரமமானது. அதிகாலையிலேயே எழுந்து கிந்தா ஆற்றைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். பின்னர் எட்டு கிலோமீட்டர் சைக்கிளில் மிதித்து பள்ளி செல்ல வேண்டும். அவருக்கு காற்பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். ஆறாம் படிவம் படிக்கின்ற காலத்தில் ஸ்டான்லி பத்மன் எனும் ஆசிரியரின் இல்லத்தில் தங்கிப் படித்தார். ஸ்டான்லி ஆசிரியர் தான் அவருக்கு நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராகவும் காப்பாளராகவும் விளங்கினார். பாலகிருஷ்ணனின் வாழ்க்கையைத் திசை மாற்றி அமைத்தவரும் அவரே. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கியதால் அவர் பள்ளியின் தலைமை மாணவ ஆளுகையாளராக நியமிக்கப் பட்டார். அந்தக் காலக் கட்டத்திலேயே பாலகிருஷ்ணனின் படங்கள் மலேசிய நாளிதழ்களில் பிரசுரமாயின. பாலகிருஷ்ணன் தம்முடைய ஆறாம் படிவ இறுதிக் கல்வியை ஈப்போ ஆங்கிலோ சீனப் பள்ளியியில் படித்து முடித்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகம் சென்று பட்டப் படிப்பை மேற்கொண்டார். அப்போது மலாயா பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இருந்து இயங்கி வந்தது. 1961 ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் அரசாங்கங்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு அப்பல்கலைக்கழகத்தை இரு பல்கலைக்கழகங்களாகப் பிரித்தன. கோலாலம்பூரில் உள்ள பல்கலைக்கழகம் மலாயா பல்கலைக்கழகம் என்றும் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்றும் தனித் தனியாகச் செயல்படத் தொடங்கின. பல்கலைக்கழகத்திலும் அவர் காற்பந்து போட்டியில் சிறந்து விளங்கினார். பல்கலைக்கழக மாணவர்கள் அவரை ‘ராக்பில்லர்’ என்று செல்லமாக அழைத்தனர். அவருக்கு ‘கோலி பாலா’ எனும் மற்றோர் அடைமொழியும் இருந்தது. 1960 ஆம் ஆண்டு இந்தியக் கல்வியில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவரைப் பாராட்டி பல்கலைக்கழகத்தின் நூல் பரிசும் வழங்கப் பட்டது. அதே ஆண்டு தம்முடைய 24வது வயதில் மலேசிய வானொலியில் (அப்போது மலாயா வானொலி) நிகழ்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். மலேசிய வானொலியில் பணிபுரிந்து கொண்டே மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவில் 1961–1970 வரை பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார். 1962லிருந்து 1972வரை மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவராகவும் மலேசிய ஒலிபரப்பு பயிற்சி மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1976 ஆம் ஆண்டு ’யுனெஸ்கோ’ அவரை ஆசிய பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகத்தின் தலைவராக நியமித்தது. அதே ஆண்டு ’மக்கள் ஓசை’ நாளிதழின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1991 ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் இருந்தார். மலேசிய இந்தியர்களின் தலைவர்களாக விளங்கிய துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ பத்மநாபன், டத்தோ எஸ்.சுப்பிரமணியம் போன்றோரிடம் நெருக்கமாகப் பழகி மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் செய்துள்ளார். அவருடைய இறுதி காலம் வரை ராம சுப்பையா படிப்புதவி கடனுதவிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். அவருடைய அயராத முயற்சியின் பலனாக மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதியில் இப்போது 24 மணி நேர ஒலிபரப்பு ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார். 1965 மார்ச் 27ல் பாலகிருஷ்ணன் தன்னுடைய 28வது வயதில் கிரிஜா நாயுடு என்பவரைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் மலேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இவர்களுக்கு அனுராதா(1966), லெட்சுமி(1967), வெங்கடகிரி(1969), ஸ்ரீதர்(1973) எனும் நான்கு குழந்தைகள். பாலகிருஷ்ணன் கிரிஜா தம்பதியினருக்கு சைலேஷ், மனிஷா, நிக்கில், திரிஷா, திரன் எனும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் அவருடைய கோலாலம்பூர் அரா டமன்சாரா இல்லத்தில் இயற்கை எய்தினார். அந்த இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும். அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது. யோ. திருவள்ளுவர் யோ. திருவள்ளுவர் உலக விவகாரங்கள் குறித்தும், உரிமைக்காகப் போராடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம் தொழில் நிமித்தமாக பெல்யியத்தில் வாழ்கிறார். 20 ஆண்டுகளாக ஈழம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகே உள்ள மணலிக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவரது புலம் பெயர் தொழிலாளர் பற்றிய சோகக்கதைகளைக் கொண்ட "திரை கடலோடியும் துயரம் தேடு" நூல் குறிப்பிடும்படியாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. 1987 இல் இருந்து கூடங்குளம் அணு உலைக்கான எதிர்ப்பு, அனைவருக்கும் வேலை உத்தரவாதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். ஆசை (1995 திரைப்படம்) ஆசை () என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன. சுரேஷ் கோபி சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். சந்திரகிரிக் கோட்டை சந்திரகிரிக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை. இது ஒரு பெரிய சதுரமான கோட்டையாகும். இதன் பரப்பளவு ஏழு ஏக்கர்கள். பயசுவினி ஆற்றிற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தற்போது இக்கோட்டை சிதிலமடைந்துள்ளது. அம்பத்தூர் ஏரி அம்பத்தூர் ஏரி தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஓர் ஏரி. இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் இதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்று. வொர்த் கோட்டை, டெக்சாஸ் வொர்த் கோட்டை (Fort Worth) ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206. 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது. டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது. நேப்பியர் அருங்காட்சியகம் இந்திய நாட்டின் கேரள மாநிலம் திருவனந்தபுர நகரத்தில் உள்ளது நேப்பியர் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் 1855ல் உருவாக்கப்பட்டது. 1874ல் இந்த அருங்காட்சியகத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. இதற்கு சென்னை மாகணத்தின் ஆளுநராக இருந்த நேப்பியர் பிரபுவின் (1866 - 1872) பெயர் சூட்டப்பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியின் அரிய தொகுப்புகள், வெங்கலச் சிலைகள், பழங்கால நகைகள், யானைத்தந்த சிற்பங்கள் மற்றும் பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரோகிணி ரோகிணி அல்லது ரோகினி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: இலூசியானா அடை வௌவால்மீன் இலூசியானா அடை வௌவால்மீன் ("Louisiana Pancake Batfish", இலத்தீன்: "Halieutichthys intermedius") என்பது மெக்சிகோ வளைகுடாவில் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்து அறிவியலாளர்களால் 2010-இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அடை வௌவால்மீன் இனமாகும். "Halieutichthys aculeatus" மற்றும் "Halieutichthys bispinosus" போன்ற வேறு அடை வௌவால்மீன் இனங்கள் அட்லாண்டிக் கரையில் லூசியானா தொடங்கி வட கரோலைனா வரை பரந்து உள்ளது, ஆனால் இலூசியானா அடை வௌவால்மீன் மெக்சிகோ வளைகுடாவில் மட்டுமே சுமார் 400 மீட்டர்கள் ஆழத்தில் வசிக்கின்றது என அறியப்பட்டுள்ளது. இது ஒரு ஒளிந்து வாழும் விலங்காகும். மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவுச் சம்பவத்தின் போது வெளி உலகுக்குத் தென்பட்டது. அடை உணவு போன்று தட்டையாகக் காணப்படும் இவற்றின் இடுப்புத் துடுப்புகள் கால்கள் போன்று செயற்படுகின்றன, இவற்றின் கண்கள் வெளிப்பிதுங்கிக் காணப்படும். மாந்தரின் உள்ளங்கையில் அடங்கக்கூடியவாறு இதன் அளவு உள்ளது. 2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழப்பள்ளி கோவில் வாழப்பள்ளி கோவில் இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் சஙகனாசேரி நகரத்தில் இருகின்றது. முதலாம் சேர பரம்பரையை சேர்ந்தவர்கள் இக்கோயிலை கட்டியதாக கருதப்படுகிறது. சிவன், விநாயகர், பார்வதி ஆகிய கடவுள்கள் இங்கு வழிபடப்படுகின்றனர் என்ற போதிலும் சிவனே முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறார். பழங்கதைப்படி கேரளம் திருமாலின் 6-வது அவதாரமான பரசுராமரால் கொடையாக அருளப்பட்டதாகும். பரசுராமனே இக்கோயிலுள்ள இறைவன் மகாதேவன் சிலையை நிறுவியதாக கருதப்படுகிறது. பரசுராமன் நிறுவிய 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு தெரியவில்லை. பிரேம புஸ்தகம் 1992ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் பிரேம புஸ்தகம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக கஞ்சனும் நடித்துள்ளனர். இதுதான் அஜித்குமாருக்கு முதல் திரைப்படம். தெலுங்கில் அவருக்கு இதுவே முதல் மற்றும் கடைசித் திரைப்படமாக அமைந்தது. கிரேக் வைட் கிரேக் வைட் ("Craig White", பிறப்பு: திசம்பர் 16 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 275 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 351 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இவர் 1994 - 2003 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இந்தியா டுடே இந்தியா டுடே (India Today) மும்பையை அடித்தளமாகக் கொண்டு 1975ஆம் ஆண்டு முதல் "லிவிங் மீடியா இந்தியா நிறுவனத்தால்" முதன்மையாக ஆங்கில மொழியில் வாரமொருமுறை வெளியிடப்படும் ஓர் இந்தியச் செய்தி இதழ் ஆகும். இதே பெயரில் இந்தி, தமிழ் எனப் பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியிட்டது. தற்போது தமிழ் மொழியில் வெளியீடு இல்லை. 1975 முதல் இதன் தலைமை ஆசிரியராக மூன்று பத்தாண்டுகளாக இருந்து வருகிறார். இதன் மேலாண் நிறுவனமாக உள்ள இந்தியா டுடே குழுமம் 13 மொழிகளில் இதழ்களையும் 3 வானொலி நிலையங்களையும் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஒரு செய்தித் தாளையும் நடத்தி வருகிறது. மேலும் ("மியூசிக் டுடே") என்ற செவ்விசை ஒலித்தட்டுகளையும் நூல் வெளியீட்டுகளையும் இந்தியாவின் ஒரே நூல் சங்கத்தையும் மேலாண்மை செய்கிறது. 1975 ஆம் ஆண்டில் 5,000 படிகளுடன் துவங்கி, திசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டுநிறைவு இதழின்போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான படிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது. ஜாக் வைட் ஜாக் வைட் ("Jack White ", பிறப்பு: பெப்ரவரி 19 1891, இறப்பு: மே 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 472 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டாட்ஜர் வைசால் டாட்ஜர் வைசால் ("Dodger Whysall", பிறப்பு: அக்டோபர் 31 1887, இறப்பு: நவம்பர் 11 1930), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 371 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1925 - 1930 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இணை (வடிவவியல்) இணை ("parallel") என்ற கருத்து, கணிதத்தின் ஒரு பிரிவான வடிவவியலில் பயன்படுத்தப்படுகிறது. இது யூக்ளிடிய வெளியில் அமையும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கோடுகள் மற்றும் தளங்களின் பண்பினைக் குறிக்கும். இணைகோடுகளும் அவற்றின் பண்புகளும் யூக்ளிடின் இணை அடிக்கோளுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஒரு தளத்தில் அமையும் இரு கோடுகள் ஒன்றையொன்று சந்திக்காமலோ அல்லது வெட்டிக் கொள்ளாமலோ இருந்தால் அவை இணகோடுகள் எனப்படுகின்றன. இணை என்பதன் குறியீடு: formula_1 (எ-கா): formula_2 என்பது கோடு "AB" ஆனது கோடு "CD" க்கு இணை என்பதைக் குறிக்கும். யூக்ளிடிய வெளியில், "l" மற்றும் "m" என்ற இருகோடுகளில், "m" ஆனது "l" க்கு இணையாக அமைவதை பின்வரும் விளக்கங்களால் வரையறுக்கலாம். formula_3 எனில், மேலும், மேலே தரப்பட்ட மூன்று வரையறைகளால் இணைகோடுகள் வரைவதற்கு மூன்று விதமான வழிமுறைகள் கிடைக்கின்றன. ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாத இருகோடுகள் இணையானவை என்ற வரையறை இருபரிமாணத் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். வில்ஃப் பார்பெர் வில்ஃப் பார்பெர் ("Wilf Barber", பிறப்பு: ஏப்ரல் 18 1901, இறப்பு: செப்டம்பர் 10 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 373 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லென் வில்கின்சன் லென் வில்கின்சன் ("Len Wilkinson", பிறப்பு: நவம்பர் 5 1916, இறப்பு: செப்டம்பர் 3 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 77 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அமராவதி (திரைப்படம்) அமராவதி 1993-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு அறிமுகமானார் அஜித்குமார். ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளர் பாலபாரதி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார். அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் "தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே", மற்றும் "புத்தம் புது மலரே" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. மீவளையச் சுருள் மீவளையச் சுருள் அல்லது அதிபரவளைவுச் சுருள் என்பது ஒரு விஞ்சிய தள வளைகோடு ஆகும். இதைத் தலைகீழ்ச் சுருள் எனவும் அழைப்பர். இதன் சமன்பாடு (கோல்-கோண ஆட்கூறு திட்டத்தில் (polar coordinates)): இது மையத்தில் இருந்து முடிவிலித் தொலைவில் தொடங்குகிறது (கோணம் சுழியமாக இருக்கையில் (formula_2), ஆரம் அல்லது கோடு (formula_3) முடிவிலியாக இருக்கும்). கோணம் மாறமாற (கூடக்கூட), கோட்டின் (ஆரத்தின்) நீளம் குறைந்துகொண்டே வந்து மையத்தை நெருங்கும். இதனால், இந்தச் சுருள் சிறுத்துக்கொண்டே வரும். சுருளின் எந்தப் புள்ளியில் இருந்தும், வளை கோடு வழியாகத் துருவத்துக்கு உள்ள தொலைவு முடிவற்றது ஆகும். இந்த கோல்-கோண ஆட்கூறில் (polar coordinate system) இருந்து x-y கார்ட்டீசிய ஆட்கூற்றுக்கும் மாற்றினால்: என்றாகும். இதனைக் கார்டீசிய முறையின், கீழ்க்காணும் பண்புக்கூறு (parametric) முறையில் மாற்றி அமைத்தால்: என்றாகும். இதில் "t" என்னும் பண்புக்கூறு மாறி, கோல்-கோண முறையில், கோணமாகிய θ உக்கு ஈடானது. இந்த விரிவளை (spiral), "y" = "a" என்னும் நிலையில் ஓர் அடைகோடு (asymptote) ஒன்றை கொண்டிருக்கும்: ஏனெனில் "t" என்பது சுழியத்தை (0) எட்டும்பொழுது, உயரம் (y-மதிப்பு) "a" ஐ எட்டும், அதே நேரத்தில் கிடை அளவு (x-மதிப்பு) முடிவிலியை எட்டும்: கஞ்சன் (நடிகை) கஞ்சன் ("Kanchan") ஏப்ரல் 17, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மும்பையில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்கள் நடித்துள்ளார். அவற்றுள் சல்மான் கானுடன் நடித்த ஷனம் பேவாபா, அஜித்குமாருடன் நடித்த பிரேம புஸ்தகம், மோகன்லாலுடன் நடித்த கந்தர்வம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. சங்கவி (நடிகை) சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார். இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய சரத்குமார் ,தொப்பி கார்த்திக்,பிரபு,விஜய் ,அஜித் ,ராம்கி,பிரசாந்த் ,விஜயகாந்த் ,சிரஞ்சீவி ,விஷ்ணுவர்தன் (நடிகர்) கமலஹாசன் , ரஜினி,தனுஷ் , சத்தியராஜ், ஜூனியர் என் டி ஆர் போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் . பணவீக்கம் பொருளாதாரத்தில் பண வீக்கம் ("Inflation") என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம். விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது. எனவே பருவ கால விலையேற்றங்கள் இதில் வருவதில்லை அல்லது எதிர் காலத்தில் விலையேரும் என்று எண்ணி பொருட்களை ஊக வியாபாரத்திற்காக பதுக்கி வைப்பதால் ஏற்படும் விலையேற்றத்தை இது குறிப்பதில்லை. விலைவாசியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதை பணவீக்கம் என்று கூறலாம் தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும். அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை உயருகிறது. பணவீக்கத்தினால் ஏற்படும் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஆகிய இரண்டும் உண்டு. பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளில் பின்வருவன அடங்கும்: குறிப்பிட்ட காலத்திற்கு பணம் மற்றும் பணம் சார்ந்த பிற உருப்படிகளின் அசல் மதிப்பின் நிலைத் தன்மை இழப்பு; எதிர்கால பணவீக்கத்தைப் பற்றி உறுதியாகக் கணிக்க முடியாததால் முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கான ஊக்கம் குறைதல், மேலும் உயர் பணவீக்கத்தின் போது எதிர்காலத்தில் விலை ஏறும் என்று கருதி நுகர்வோர் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடும்பட்சத்தில் சரக்குகள் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரப் பின்னிறக்கங்கள் மட்டுப்படுத்தல், மற்றும் கடனின் அசல் அளவைக் குறைப்பதன் மூலம் வழங்கப்படும் கடன் தள்ளுபடி ஆகியவை அதன் நேர்மறை விளைவுகளில் அடங்கும். மொத்தப் பண அளவின் அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் கட்டற்ற பணவீக்கத்திற்கும் காரணமாகின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எத்தகைய காரணிகள் பணவீக்க வீதங்களை, குறைவு முதல் மிதமான அளவுவில் கட்டுப்படுத்தி வைக்கும் என்பது பற்றிய கருத்துகளில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. குறைவான அல்லது மிதமான பணவீக்கம் என்பது, பொருள்கள் மற்றும் சேவைகளின் அசல் தேவையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலைகளில் கிடைக்கக்கூடிய அளிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் மொத்தப் பண அளவின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட அதிக வேகத்தில் பண இருப்பு அதிகரிப்பதே தொடர்ச்சியான நீண்ட கால பணவீக்கத்திற்குக் காரணம் என்பதே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இன்று, பெரும்பாலான மரபு வழி பொருளியலாளர்கள் குறைவான நிலையான பணவீக்க வீதத்தையே ஆதரிக்கின்றனர். (பூச்சிய அல்லது எதிர்மறை பணவீக்கத்திற்கு மாறாக) குறைவான பணவீக்கமானது, ஒரு மோசமான வணிகச் சூழ்நிலையில் பணியாளர் சந்தையை தக்கவாறு சரி செய்வதன் மூலம் பொருளாதாரப் பின்னிறக்கங்களின் தீவிரத்தைக் குறைக்கிறது, மேலும் பணக்கொள்கையானது பொருளாதாரத்தைச் சீரமைப்பதை ஒரு நீர்மை செயலறு நிலை தடுக்கின்ற ஆபத்தையும் குறைக்கிறது. பணவீக்க வீதத்தை, குறைவானதும் மற்றும் நிலையானதுமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பொறுப்பு வழக்கமாக பண ஆணையங்களிடம் வழங்கப்படுகிறது. பொதுவாக, இந்தப் பண ஆணையங்கள் என்பவை மத்திய வங்கிகளே ஆகும். அவை வட்டி வீதங்கள், திறந்த நிலைச் சந்தை செயல்பாடுகள் மற்றும் வங்கியியல் ரீதியான தேவையான ஒதுக்கீடுகளை அமைத்தல் ஆகிய வழிகளின் மூலம் மொத்தப் பண அளவைக் கட்டுப்படுத்துகின்றன. பணவீக்க காலத்தில் எல்லா விலையுவர்களும் பனவீக்க விலை ஏற்றம் அல்ல. உதாரணமாக ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு அடையாத நிலையில் ஒவ்வொறு செலவும் வேலை வாய்ப்பை முழு நிலைக்கு கொண்டு செல்லபயன்படுகிறது. எனவே செலவுகள் எல்லாம் வேலை வாய்ப்பை அதிகரித்தல் உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் இந்த விலைவாசி ஏற்றம் பொருளாதாரத்தை பாதிப்பதில்லை. இதை பகுதி பணவீக்கம் என்று கூறலாம். ஆனால் ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு நிலை அடைந்த பிறகு ஒவ்வொரு செலவும் விலைவாசியை உயர்த்த ஆரம்பிக்கும் ஏனென்றால் இந்த செலவு ஆனது வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்க முடியாது. இந்த பணவீக்கத்தை முழு பணவீக்கம் என்று கூறலாம். பொதுவாக பணவீக்க காலத்தில் பணத்தின் வாங்கும் சக்தி குறைகிறது எனவே இதை சரி கட்ட பணத்தின் அளவினை அதிகரித்தல் சரியான ஒன்றாகும். இந்த பண சுழற்சி அதிகரிப்பதால் தேவை அதிகரித்து பொருட்களின் உற்பத்தியை தூண்டுகிறது. தொழிற்சாலைகள் தங்கள் பொருட்களுக்கு தேவை அதிகரிப்பதால் அவை உற்பத்தி அதிகரிக்க அதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே இவ்விலைவாசி உயர்வு பொருளாதாரத்திற்க்கு தேவையான ஒன்று ஆனால் நாடு முழு வேலை வாய்ப்பை அடைந்த பின்பு பண சுழற்சி அதிகரிப்பு முழுதும் விலைவாசி மேல் விழுகிறது. இத்தகைய சுழற்சி ஆரம்பித்துவிட்டால் அது தொடர்ந்து இயங்கி விலைவாசியை வெகு வேகமாக உயர செய்கிறது. இக்காலத்தில் சேமிப்பு செய்பவர்கள் கூட செலவு செய்கின்றனர் அவ்வாறெ வியாபாரிகள் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்து செலவு செய்கின்றணர். இந்த இரண்டு பக்க அழுத்தம் பணவீக்க சுழற்சியை அதிகரிக்க செய்து நாடு முழு வேலை அடைந்த நிலையில் பணவீக்க சுழற்சியை அதிகரிக்க செய்கிறது பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாயமுள்ளது என்கின்றனர். ஆனால் இத்தகைய பணவீக்கத்திலே இருக்கவேன்டும் என்று ஜெர்மனி போன்ற நாடுகள் 1956 இலிருந்து முயற்சி செய்கிறார்கள் விலைவாசி உயர்வும் வேகத்தை பொருத்து அடுத்த கட்டம், நடக்கும் பணவீக்கம் இதில் விலைவாசி தவழும் பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கும் இது ஒரு சிகப்பு விளக்கு அறிகுறி இதை கட்டுப்படுத்த தவறினால் அது ஓடும் பணவீக்கத்தைய்ம் பின்பு பறக்கும் அல்லது தாவும் பணவீக்கத்தை அடைய வாய்ப்புகளுண்டு என்பதை இது காட்டுகிறது. ஓடும் பணவீக்கம் தாவும் பணவீக்கம் போன்றவற்றில் விலை வாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் இது பொருளாதாரத்தை சீர்குலைக்க செய்யும். பணவீக்கங்களின் வகைகளை பிரிப்பதே விலை வாசி எவ்வளவு வேகமாக உயர்கிறது என்பதை அடிப்படியாக வைத்துதான். தவழும் பணவீக்கத்தில் விலைவாசி இரட்டிப்பாக ஒரு தலைமுறைக்கு பின்பு உயரும் நடக்கும் பணவீக்கத்தில் 5 வருடத்தில் உயரும். ஓடும் பணவீக்கத்தில் 1வருடத்தில் தாவும் பணவீக்கத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாக என்று விலைவாசி உயரும். அரசானது தன்னுடைய வரவுகளுக்கு மேல் செலவு செய்யும்பொழுது தொழிலாலர்கள் தங்களுடைய திறமை அதிகரிப்பால் அவர்களுக்கு தரும் ஊதியத்தால் ஏற்படும் பணவீக்கம்.. தொழில் முனைவோர்கள் இலாபததை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தும் பணவீக்கம் அரசானது போருக்காக செலவிடும் பணமானது எந்த விதமான உற்பத்தியும் இல்லாத்தால் ஏற்படும் பணவீக்கம் அரசானது போருக்கு பின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தாத நிலையில் ஏற்படும் பணவீக்கம் உதாரணம் இரண்டாம் உலக் யுத்ததின் பின் ஜெர்மனியில் ஏற்பட்ட பறக்கும் பணவீக்கம் பணவீக்கம் என்பது உண்மையில் நாணயத்தின் மதிப்பிறக்கத்தையே குறிக்கும். தங்கமானது நாணயமாகப் பயன்படுத்தப்படும் போது, அரசாங்கம் தங்க நாணயங்களைச் சேகரித்து, உருக்கி பின்னர் வெள்ளி, தாமிரம் அல்லது ஈயம் போன்ற பிற உலோகங்களுடன் கலந்து அதே பண மதிப்பில் வெளியிடுகிறது. தங்கத்துடன் பிற உலோகங்களைக் கலந்து செறிவைக் குறைப்பதன் மூலம், நாணயங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் தங்கத்தின் அளவை அதிகரிக்காமல், வெளியிடப்படும் மொத்த நாணயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்தால் முடிகிறது. இவ்விதமாக ஒரு நாணயத்திற்கான செலவு குறைக்கப்படுவதால், உரிமை வரி அதிகரிப்பால் அரசாங்கம் இலாபமடைகிறது. இந்த உத்தியினால் பண இருப்பு அதிகரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒவ்வொரு நாணயத்தின் ஒப்பீட்டு மதிப்பும் குறைக்கப்படுகிறது. இந்த ஒப்பீட்டு மதிப்பு குறைவதால் நுகர்வோருக்கு, அதே மதிப்புள்ள பொருள் மற்றும் சேவைக்கு அதிக அளவு நாணயங்கள் தேவைப்படும். ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் குறையும் போது, இந்தப் பொருள்களும் சேவைகளும் விலையேற்றத்திற்குட்படும். 19 ஆம் நூற்றாண்டில், பொருள்களின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் காரணாமாக விளங்கும் மூன்று தனித்தனிக் காரணிகளை பொருளியலாளர்கள் வகைப்படுத்தினர்: பொருள்களின் "மதிப்பு" அல்லது வளங்கள் விலைகளில் ஏற்படும் மாற்றம், பின்னாளில் நாணயத்தில் உள்ள உலோக உள்ளடக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமான "பணத்தின் விலையில்" ஏற்படும் மாற்றம் மற்றும் நாணயத்திற்குச் சமமான பரிமாற்றப்படக்கூடிய உலோகத்தின் அளவை விட ஒப்பீட்டில் அதிகமாகிவிடும் மொத்தப் பணத்தின் அளவின் அதிகரிப்பினால் ஏற்படும் "நாணயத் தேய்மானம்" ஆகியவையாகும். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது அச்சிடப்பட்ட தனியார் வங்கி நாணயத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து, "பணவீக்கம்" என்ற சொல், பரிமாற்றக்கூடிய நாணயத்தின் அளவானது அந்தப் பரிமாற்றத்துக்குத் தேவையான உலோகத்தின் அளவை விட அதிகமாவதால் ஏற்படும் விளைவான "நாணயத் தேய்மானத்தை" நேரடியாகக் குறிப்பதானது. பின்னர் பணவீக்கம் என்ற இந்தச் சொல், பொருள்களின் விலையேற்றத்தைக் குறிக்காமல் நாணயத்தின் மதிப்பின் வீழ்ச்சியையே குறித்தது. வங்கி நோட்டுகளின் அதிக இருப்புக்கும் அவற்றின் மதிப்புக் குறைவதற்கும் உள்ள தொடர்பை டேவிட் ஹியூம் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்ற மரபார்ந்த பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், அவர்கள் பொருள்களின் விலையில் இந்த நாணய மதிப்புக் குறைவு (பின்னாளில் "பணம் சார்ந்த பணவீக்கம்" என்றழைக்கப்பட்டது) என்ன விளைவை (பின்னாளில் "விலை சார்ந்த பணவீக்கம்" என்றும் பின்னர் "பணவீக்கம்" என்றும் அழைக்கப்பட்டது) ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய்ந்தும் விவாதித்தும் வந்தனர். "பணவீக்கம்" என்ற சொல், வழக்கமாக பொருளாதாரத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த விலைகளைக் குறிக்கும் விலைக் குறியீட்டில் ஏற்பட்ட அதிகரிப்பின் அளவையே குறிக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), தனிப்பட்ட நுகர்வு செலவினங்கள் விலைக் குறியீடு (PCEPI) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். பணவீக்கம் என்ற சொல், பொருளாதாரத்தின் பொருள்கள் அல்லது சேவைகளின் குறிப்பிட்ட குறுகிய தொகுப்புக்கு மட்டும் ஏற்படும் விலையேற்றத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சரக்குகள் (இதில் உணவுப் பொருள்கள், எரிபொருள், உலோகங்கள் ஆகியவை அடங்கும்), நிதி சொத்துகள் (பங்குகள், பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் ஆகியவை இதில் அடங்கும்) மற்றும் சேவைகள் (பொழுதுபோக்கு மற்றும் உடல்நலம் போன்றவை இதில் அடங்கும்) ஆகியவை இந்தத் தொகுப்புகளில் அடங்கும். ரியாச்சர்ஸ்-CRB பட்டியல் (CCI), உற்பத்தியாளர் விலைக் குறியீடு மற்றும் பணிச் செலவுக் குறியீடு (ECI) ஆகியவை பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் விலைப் பணவீக்கத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் குறுகிய விலைக் குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். சொத்து விலைப் பணவீக்கம் என்பது, சரக்குகள் சேவைகளுக்கு மாறாக, சொத்துகளின் விலையில் ஏற்படும் விலையேற்றமாகும். மையப் பணவீக்கம் என்பது உணவு மற்றும் ஆற்றல் விலைகள் நீங்கலாக, பரவலான விலைக் குறியீடுகளின் துணைத் தொகுப்பில் ஏற்படும் விலையின் ஏற்றத்தாழ்வுகளின் அளவீடாகும். பெடரல் ரிசர்வ் மன்றமானது, பொதுவான பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய நீண்டகால பணவீக்கப் போக்கின் மதிப்பீட்டின் துல்லியத்தைப் பாதிக்கும் குறுகிய கால விலை ஏற்றத் தாழ்வைச் சமாளிக்க, உணவு மற்றும் ஆற்றல் விலைகளை விடுத்து, ஒட்டுமொத்தப் பணவீக்கத்தை அளவிட மையப் பணவீக்க வீதத்தைப் பயன்படுத்துகிறது. இதனுடன் தொடர்புடைய பிற பொருளாதார கருத்துகள்: பணவாட்டம் – பொது விலையேற்றத்தின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி; பணவீக்க வீழ்ச்சி – பணவீக்க வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சி; கட்டற்ற பணவீக்கம் – கட்டுப்பாடற்ற பணவீக்க சுழற்சி; தேக்கநிலை – பணவீக்கம், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை ஒருங்கே சேர்ந்தது; மற்றும் மறுவீக்கம் – பணவாட்ட அழுத்தங்களைச் சமாளிக்கும் விதமாக பொதுவான விலைகளின் அளவினை உயர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி. வழக்கமாக விலைக் குறியீட்டின் பணவீக்க வீதத்தைக் கணக்கிடுவதன் மூலமே பணவீக்கமானது மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக நுகர்வோர் விலைக் குறியீடே இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு "சராசரி நுகர்வோர்" வாங்கக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் விலைகளை நுகர்வோர் விலைக் குறியீடு அளவிடுகிறது. பணவீக்க வீதம் என்பது குறிப்பிட்ட கால அளவில் ஒரு விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும். எடுத்துக்காட்டுக்கு, 2007 ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க ஒன்றியத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு 202.416 என்ற அளவிலும் அதுவே 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் 211.080 என்ற அளவிலும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின், CPI மதிப்பில் ஏற்பட்ட பணவீக்க சதவீத வீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் பின்வருமாறு: இந்த ஓராண்டு காலத்திலான CPI க்கான விளைவு பணவீக்க வீதம் 4.28% ஆகும், அதாவது 2007 இல் சராசரி அமெரிக்க நுகர்வோர் வாங்கும் பொருள்களின் பொதுவான விலைகள் சராசரியாக நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது. விலைப் பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் விலைக் குறியீடுகளில் பின்வருவனவும் அடங்கும்: பணவீக்கத்தின் பிற அளவீடுகள் பின்வருமாறு: ஒரு பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடுவதற்கு பொதுவான பொருள்கள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட தொகுப்பின் சராசரி விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வகைப்படுத்தும் நோக்கம் சார்ந்த சிறப்பான அணுகுமுறைகள் அவசியமாகும், மேலும் அளவு, தரம் அல்லது செயல்திறன் போன்ற மதிப்புகளால் விளையும் உயர்வுகளை அவற்றிலிருந்து பிரித்தறியும் திறனும் அவசியமாகும். எடுத்துக்காட்டாக, 10 அவுன்ஸ். மக்காச்சோள கேனின் விலை தரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ஓராண்டில் $0.90 இலிருந்து $1.00 விலைக்கு மாறுகிறது என்க, இந்த விலை வேறுபாடு பணவீக்கத்தைக் குறிக்கிறது எனலாம். எனினும் இந்த ஒரு விலையில் ஏற்படும் மாற்றம் மட்டுமே ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பணவீக்கத்தை முழுவதும் குறிக்கிறது என்று கூற முடியாது. ஒட்டுமொத்த பணவீக்கத்தை அளவிட, முக்கியமான பொருள்கள் மற்றும் சேவைகளின் ஒரு "தொகுப்பின்" விலையில் ஏற்படும் மாற்றம் அளவிடப்படுகிறது. இதுவே விலைக் குறியீட்டின் அவசியத்தை வழங்குகிறது, இது பல பொருள்கள் மற்றும் சேவைகளின் "தொகுப்பின்" தொகுப்பு விலையைக் குறிப்பதாகும். தொகுப்பு விலை என்பது அந்தத் "தொகுப்பிலுள்ள" உருப்படிகளின் சராசரி விலைகளின் கூடுதலாகும். ஓர் உருப்படியின் விலையை ஒரு சராசரி நுகர்வோர் வாங்கக்கூடிய அந்த உருப்படியின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் இந்தச் சராசரி கணக்கிடப்படுகிறது. ஓர் உருப்படியின் விலையின் மாற்றத்தால் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை அளவிடுவதற்கு இந்தச் சராசரி விலையிடுதல் முறை அவசியமானதாகிறது. நுகர்வோர் விலைக் குறியீடானது ஒரு சராசரி நுகர்வோரின் மொத்த செலவில் குறிப்பிட்ட பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எவ்வளவு விகிதம் செலவழிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க, வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறது, மேலும் அந்த உருப்படிகளின் சராசரி விலைகளைக் கணக்கிடுகிறது. இந்த கணக்கிடப்பட்ட சராசரி விலைகளைத் தொகுத்து ஒட்டுமொத்த விலையானது கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சிறப்பாக ஒப்பிட, இந்த விலைக் குறியீடுகள் ஓர் "அடிப்படை ஆண்டைக்" குறித்து, அதற்கான மதிப்பை 100 என நிர்ணயித்துக்கொள்கின்றன. அடுத்து தொடர்ச்சியான ஆண்டுகளின் குறியீட்டு விலைகள் அடிப்படை ஆண்டின் விலையைப் பொறுத்து குறிக்கப்படுகின்றன. தொகுப்பில் கருதப்படும் பொருள்களின் ஒப்புமை எடைக்காகவோ அல்லது கடந்த காலத்தின் பொருள்கள் மற்றும் சேவைகளுடன் தற்கால பொருள்களும் சேவைகளும் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்ற விதத்தினாலோ காலப்போக்கில் பணவீக்க அளவீடுகள் மாற்றம் செய்யப்படுகின்றன. 'சராசரி நுகர்வோர்' வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தேர்ந்தெடுக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளில் காலப்போக்கில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம், பழையன இல்லாமல் போகலாம், இருக்கின்ற தயாரிப்புகளின் தரம் மாறலாம் மற்றும் நுகர்வோரின் முன்னுரிமைகள் மாறலாம். சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பணவீக்க அளவீடுகளும் சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக "தொகுப்பில்" சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வகைகளும் பணவீக்க அளவீடுகளில் பயன்படுத்தப்படும் தொகுப்பு விலைகளும் காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும். எதிர்நோக்கப்படும் சுழற்சி விலை மாற்றங்களை வகைப்படுத்த, பணவீக்க எண்கள் அவ்வப்போது காலத்திற்கேற்றபடி சரிசெய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வெப்பமூட்டும் சாதனங்களின் விலை குளிர்கால மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம், மேலும் ஆற்றல் அல்லது எரிபொருள் தேவையில் ஏற்படும் மாற்றச் சுழற்சியினை ஈடுசெய்யும் வகையில் பணவீக்கத்தை அளவிடும்போதும் இந்த காலத்திற்கேற்ற சரிசெய்தல் பயன்படுத்தப்படுகிறது. புள்ளியியல் மாற்றத்தையும் தனிப்பட்ட விலைகளின் எளிதில் மாறும் தன்மையையும் ஈடுகட்ட, பணவீக்க எண்களின் சராசரி கணக்கிடப்படலாம் அல்லது புள்ளியியல் முறைகளுக்கு உட்படுத்தப்படலாம். பணவீக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நிறுவனங்கள் குறிப்பிட்ட சில வகை விலைகள் அல்லது மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கையைக் கட்டமைக்கப் பயன்படுத்தும் மையப் பணவீக்க வீதம் போன்ற "சிறப்புக் குறியீடுகளில்" மட்டுமே கவனம் செலுத்தலாம். பொருள்களின் விலைகளின் பொதுவான நிலை உயர்வது என்பது நாணயத்தின் வாங்குதல் திறன் குறைவதைக் குறிக்கிறது. அதாவது, பொருள்களின் விலைகளின் பொதுவான நிலை உயரும் போது ஒவ்வொரு நாணயமும் வாங்கக்கூடிய சரக்குகள் மற்றும் சேவைகளின் அளவு குறைகிறது. பணவீக்கத்தின் விளைவுகள் பரவலாக இல்லை, மேலும் வாங்குதல் திறன் குறைவதன் விளைவாக மறைமுக செலவுகள் ஒரு சிலருக்கும்; அதனால் கிடைக்கும் நன்மைகள் பிறருக்கும் சென்றடைகின்றன. எடுத்துக்காட்டுக்கு, நிலையான வட்டி வீதத்தில் கடன் வழங்கியவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பணவீக்கத்தின் காரணமாக, வட்டி வருவாயின் வாங்குதல் திறன் குறைகிறது, மாறாக கடன் பெற்றவர்கள் பலனடைகின்றனர். ரொக்கச் சொத்து வைத்திருக்கும் தனி நபரோ அல்லது நிறுவனங்களோ தங்களிடம் உள்ள பணத்தினைச் செலவழிப்பதில் வாங்குதல் திறன் குறைவை எதிர்கொள்வர். பணவீக்கத்தின் காரணமாக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான ஊதிய உயர்வுகள் பின் தங்கிவிடும், குறிப்பாக நிலையான ஊதியம் வாங்குவோர் மிகவும் பாதிப்படைவர். விலை நிலையின் உயர்வினால் (பணவீக்கம்) பணம் (பயன்பாட்டில் உள்ள பணம்) மற்றும் பணத்தின் அடிப்படையில் விலையிடப்படும் அடிப்படைப் பணத் தன்மையுள்ள பிறவற்றின் மெய் மதிப்பு குறைகிறது (எ.கா. கடன்கள், பத்திரங்கள், நிலையான ஒய்வூதியங்கள்). எனினும், பணம் சாராத பொருள்களின் மெய் மதிப்பில் பணவீக்கத்தின் பாதிப்பு இல்லை (எ.கா. பொருள்கள் மற்றும் கார், தங்கம் போன்ற சரக்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்) ஏனெனில் அவற்றின் விலைகள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நிலையாக நிர்ணயிக்கப்படுவதில்லை. அதிக அல்லது கணிக்க முடியாத பணவீக்கமானது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் தீங்காகக் கருதப்படுகிறது. அவ்வகைப் பணவீக்கங்கள் சந்தையில் செயல்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை நிலவுகையில் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கான வரவு செலவு மதிப்பீட்டைச் செய்வது மிகவும் கடினமாகிறது. பணவீக்கத்தினால் நிறுவனங்கள் உற்பத்தித் திறனில் கவனம் செலுத்த முடியாது மேலும் பணவீக்கத்தின் காரணமாக இலாப நட்டத்தில் கவனம் செலுத்தும் நடவடிக்கையினால் அவர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளிலிருந்து பணியாளர்களை அகற்றும் நிலைக்குட்படுகிறார்கள். எதிர்கால வாங்குதல் திறனின் நிச்சயமற்ற தமையின் காரணமாக முதலீடு மற்றும் சேமிப்பில் ஊக்கமிழக்கப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக வரி செலுத்துபவர்கள் வருமான வரி வீதத்திற்கு உட்படுத்தப்படுவதால், பணவீக்கமானது மறைமுக வரி உயர்வுகளுக்கு வழிவகுக்கிறது. அதிக பணவீக்கத்தினால், வாங்குதல் திறனானது ஓய்வூதியம் போன்ற நிலையான வருவாய் பெறுபவர்களிடமிருந்து, பணவீக்கத்தின் அதிகரிப்புக்கேற்ப சமாளிக்கும் விதமான வருவாய் பெறுபவர்களுக்குக் கைமாறுகிறது. சர்வதேச வர்த்தகப் பங்குதாரர்களிடையேயும் இந்த கைமாறுதல் நிகழ்வு ஏற்படும். பணவீக்கத்தின் அதிகரிப்பால் நிலையான பரிவர்த்தனை வீதங்கள் சுமத்தப்படுவதால், ஏற்றுமதிக்கான செலவுகள் அதிகரித்து, அது வர்த்தகத்தின் சமநிலையைப் பாதிக்கிறது. கணிக்க முடியாத பணவீக்கத்தினால் விளையும் நாணயப் பரிமாற்ற விலைகளில் ஏற்படும் அதிக நிலையற்ற தன்மையினால் வர்த்தகத்திற்கும் எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படலாம். வரலாறில் பெரும்பாலான பொருளாதார இலக்கியங்கள், பணவீக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றியே விவாதித்தன. பணவீக்கத்திற்கான காரணங்கள் எனக் கருதப்பட்ட பல கருத்துகள் இருந்துவந்தன. அவற்றை, பின்வரும் இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்: பணவீக்கத்தின் தரக்கோட்பாடுகள் மற்றும் பணவீக்கத்தின் அளவுக்கோட்பாடுகள். ஒரு விற்பனையாளர் தான் ஏற்றுக்கொள்ளும் பணத்தைக் கொண்டு, ஒரு வாங்குபவர் என்ற நிலையில் விரும்பும் பொருளைப் பெற அதைப் பரிமாற முடிய வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பே பணவீக்கத்தின் தரக்கோட்பாட்டின் அடிப்படையாகும். பணவீக்கத்தின் அளவுக்கோட்பாடு என்பது, பண இருப்பு, அதன் பாய்வு வேகம் மற்றும் பெயரளவிலான பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும், பணத்தின் அளவுச் சமன்பாட்டையே அடிப்படையாகக் கொண்டது. ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ஹியூம் இருவரும் பணத்திற்கான பணவீக்கத்தின் அளவுக் கோட்பாட்டையும் தயாரிப்புக்கான பணவீக்கத்தின் தரக்கோட்பாட்டையும் முன்மொழிந்தனர். தற்காலத்தில் பணத் தொகைக் கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக பொருளியலாளர்களிடையே, நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது மொத்த பண அளவின் வளர்ச்சியைப் பொறுத்தது என்ற ஒரு பரவலான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த கால அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம், மேலும் ஊதியங்கள், விலைகள் மற்றும் வட்டிவீதங்களின் ஒப்புமை நெகிழ்ச்சியினாலும் பாதிக்கப்படலாம். குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே, பணம் சார் பொருளியலாளர்களுக்கும் கெயின்சியன் பொருளியலாளர்களுக்கும் இடையேயான விவாதத்தின் மையமாக உள்ளது. பணத்துவத்தில், பொதுவான போக்கைப் பாதிப்பதில் பிற காரணிகள் வெறும் விளிம்புநிலைப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் வண்ணம் விலைகளும் ஊதியங்களும் தங்களைச் சரி செய்துகொள்கின்றன. கெயின்சியன் பொருளியலாளர்களின் பார்வையில், விலைகளும் ஊதியங்களும் வேறுபட்ட வீதங்களில் சரி செய்யப்படுகின்றன, மேலும் இந்த வேறுபாடுகள் ஒரு பொருளாதாரத்திலுள்ள மக்களின் பார்வையில் உண்மையான வெளியீட்டில் ஏற்படுத்தும் விளைவுகள் "நீண்ட கால" அளவிலானவையாகத் தோன்றப் போதுமானவையாகும். மொத்த பண அளவில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக விலைகளைப் பாதிக்காது, மேலும் விலைகளாகப் பாவிக்கப்படும் பொருளாதார அழுத்தத்தினால் ஏற்படும் விளைவே நாம் காணும் பணவீக்கத்திற்குக் காரணமாகும் என கெயின்சியன் பொருளாதாரக் கொள்கை முன்மொழிகிறது. பண இருப்பு என்பது பணவீக்கத்தின் தலையாய காரணியாகும், ஆனால் அது ஒன்று மட்டுமே காரணியல்ல. பணவீக்கத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன அவற்றை "முக்கோண மாதிரி}" என ராபர்ட் ஜே கார்டன் அழைக்கிறார் அவை பின்வருமாறு: தேவை-மிகுதிக் கோட்பாட்டின் படி, பொருளாதாரத்தினால் உருவாக்க முடிந்த அளவை (அதன் உள்ளார்ந்த உற்பத்தி) மீறி மொத்தத் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் பணவீக்க வீதம் முடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தத் தேவையை அதிகரிக்கும் எந்தக் காரணியும் பணவீக்கத்திற்கு காரணமாகலாம். இருப்பினும், புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவை பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி வீதத்தை விட வேகமாக அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, மொத்தத் தேவையானது உற்பத்தித் திறனை விட அதிகரிக்கப்பட முடியும். பணத்தின் "தேவையின்" துரிதச் சரிவும் (பொதுவாக அரிது எனினும்) இதற்கு ஒரு காரணியாகலாம், கருப்புச் சாவின் போது ஐரோப்பாவில் ஏற்பட்ட நிகழ்வு அல்லது 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் தோல்விக்கு முன்பு ஜப்பான் கைப்பற்றியிருந்த மாகாணங்களில் ஏற்பட்ட நிகழ்வு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். உள்நாட்டுப்போர் போன்ற சூழ்நிலைகளுக்காக அரசாங்கங்கள் அதிக நிதியைச் செலவழித்தல், அதிகப்படியாக பணத்தை அச்சடித்தல் போன்ற நடவடிக்கைகளால், பணவீக்கத்தில் பணத்தால் ஏற்படும் பாதிப்பு வெளிப்படையானதாகும். இது சில நேரங்களில், ஒரு மாதமோ அல்லது அதற்கும் குறைவான கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான கட்டற்ற பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மொத்த பண அளவானது மிதமான பணவீக்க அளவை நிர்ணயிப்பதில் எவ்வளவு முக்கியமானது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அது முக்கியப்பங்கு வகிக்கிறது என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்த தொடர்பு மிகவும் உறுதியானது என பணம் சார் பொருளியலாளர்கள் நம்புகின்றனர்; மாறாக கெயின்சியன் பொருளியலாளர்கள் பணவீக்கத்தை நிர்ணயிப்பதில் மொத்த பண அளவை விட பொருளாதாரத்தில் நிலவும் மொத்த தேவையின் பங்கே முக்கியமானது என வலியுறுத்துகின்றனர். அதாவது, மொத்தத் தேவையை நிர்ணயிக்கும் ஒரே காரணி மொத்த பண அளவே ஆகும் என்பது கெயின்சியன் பொருளியலாளர்களின் கருத்தாகும். சில கெயின்சியன் பொருளியலாளர்கள் மொத்த பண அளவின் கட்டுப்பாடு மத்திய வங்கியிடம் இருப்பது போன்ற கருத்தை மறுக்கின்றனர், வணிக ரீதியான வங்கிகள் வழங்கிய வங்கிக் கடனுக்கான தேவைக்கேற்ப மொத்த பண அளவானது சரி செய்யப்படுவதால் மத்திய வங்கியிடம் அதற்கான சிறிது கட்டுப்பாடு மட்டுமே உள்ளது என வாதிடுகிறார்கள். இது உள்ளார்ந்த பணக்கொள்கை எனப்படுகிறது, மேலும் இது 1960களைச் சேர்ந்த முன்பு கெயின்சினுக்குப் பிந்தைய காலத்தின் பொருளியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இது டெய்லர் விதியைப் பரிந்துரைப்பவர்களின் மையக் கவன ஈர்ப்பாக உள்ளது. இது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – வங்கிகள் கடன் கொடுப்பதன் மூலம் பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் மெய்யான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு குறைகிறது. இதனால், மத்திய வங்கிகள், பணத்தின் மதிப்பைக் குறைத்து அல்லது அதிகரித்து மொத்த பண அளவைக் கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு தனது உற்பத்தியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையே உள்ள தொடர்பே பணவீக்கப் பகுப்பாய்வின் அடிப்படைக் கருத்தாகும், இது ஃபிலிப்ஸ் வளைவு எனப்படுகிறது. இந்த மாதிரியானது விலையின் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பினிடையே வர்த்தகப் பரிமாற்றம் இருப்பதாக அறிவுறுத்துகிறது. இதனால், ஓரளவு பணவீக்கத்தின் மூலம் வேலையின்மையைக் குறைக்க முடியும். ஃபிலிப்ஸ் வளைவு மாதிரியானது 1960களில் அமெரிக்க ஒன்றியத்தின் அனுபவத்தை சிறப்பாக விளக்கியது, ஆனால் 1970களில் நிகழ்ந்த பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார "தேக்கநிலை" ஆகியவற்றின் சேர்க்கையை விளக்கத் தவறியது. இவ்வாறு, தற்கால மேக்ரோ பொருளியலாளர்கள் பணவீக்கத்தை "மாறும்" ஃபிலிப்ஸ் வளைவைப் பயன்படுத்தி விளக்குகின்றனர் (இதில் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம் மாறுகிறது), ஏனெனில் அளிப்பின் அதிர்வு மற்றும் பணவீக்கம் போன்ற சில காரணிகள் பொருளாதாரத்தின் இயல்பான செயல்பாடுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. முந்தையது 1970களின் எண்ணெய் அதிர்வு போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது, பிந்தையது விலை/கூலி சுருள் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் குறிக்கிறது, இவை "இயல்பாக" பணவீக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைக் குறிக்கின்றன. இதனால், ஃபிலிப்ஸ் வளைவானது முக்கோண மாதிரியின் தேவை மிகுதி கூறை மட்டுமே வெளிப்படுத்துகிறது. மற்றொரு குறிப்பிடத்தகுந்த கருத்து உள்ளார்ந்த உற்பத்தி ஆகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறது), இது நிறுவனம் சார்ந்த மற்றும் இயற்கைத் தடைகள் சுமத்தப்பட்ட நிலையில் சிறப்பான உற்பத்தியைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரத்தில், GDP மதிப்பின் ஒரு நிலையாகும். (இந்த வெளியீடானது, வேலையின்மையின் முடுக்கப்படாத பணவீக்க வீதம் NAIRU அல்லது வேலையின்மையின் "இயல்பான" வீதம் அல்லது முழுமையான வேலை வாய்ப்பு வேலையின்மை வீதம் ஆகியவற்றுக்குரியது.) GDP அதன் சாத்தியக்கூறை விட அதிகரித்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்குக் குறைவாக இருந்தால்), வழங்குபவர்கள் தங்கள் விலையை உயர்த்தினால் மற்றும் உள்ளமைவுப் பணவீக்கம் மோசமான நிலையைடைந்தால் பணவீக்கமானது முடுக்கப்படும் என இந்தக் கோட்பாடு கூறுகிறது. GDP அதன் சாத்தியக்கூறை விடக் குறைந்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்கும் அதிகமாக இருந்தால்), வழங்குபவர்கள் விலைகளைக் குறைத்தும் உள்ளமைவுப் பணவீக்கத்தை அகற்றியும் தங்கள் அதீதத் திறனை நிரப்ப முயற்சிப்பதால், பணவீக்கம் "மட்டுப்படும்" . இருப்பினும், கொள்கை உருவாக்கும் நோக்கில் இந்தக் கோட்பாட்டில் உள்ள ஒரு சிக்கல் என்னவெனில், உள்ளார்ந்த உற்பத்தியின் சரியான நிலை (மற்றும் NAIRU இன் நிலை ஆகியவை) தெரியாது, மேலும் அது காலத்தால் மாறுவதாக உள்ளது. பணவீக்கம் சமச்சீரற்ற முறையில் செயல்படுவது, ஏனெனில் அது குறைவதை விட உயர்வதில் அதிக வேகமாக செயல்படுகிறது. கொள்கையினால் இதை மாற்ற முடியும் என்பதே மோசமானது: எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் பிரதமர் மார்கரேட் தாட்ச்சர் ஆட்சியில் அதிகளவில் வேலையின்மை ஏற்பட்ட போது, அது NAIRU வின் உயர்வுக்கு (மேலும் சாத்தியக்கூறில் குறைந்தது) வழிகோலியது, ஏனெனில் பெரும்பாலான வேலையில்லாதோர் அமைப்பார்ந்த வேலையின்மையில் தாங்கள் இருப்பதை உணர்ந்தார்கள் (மேலும் பார்க்க வேலையின்மை), தங்கள் திறமைக்கு தகுந்த வேலையைத் தேட முடியாமல் இருந்தார்கள். அமைப்பார்ந்த வேலையின்மையின் அதிகரிப்பு, NAIRU நிலையில் குறைந்த சதவீத பணியாளர்கள் மட்டுமே வேலை பெற முடிந்தது, ஏனெனில் இந்நிலையில் பொருளாதாரமானது பணவீக்கத்தின் ஆதிக்கத்தைத் தொடக்கூடிய எல்லையைத் தாண்டுவதைத் தவிர்த்தது. கடனை எளிதாக்குவது அல்லது கடினமாக்குவது ஆகிய செயல்களின் மூலம் மொத்த பண அளவை நிர்வகிப்பதே பணவீக்கம் அல்லது பணவாட்டத்தைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்கக் காரணி என பணம் சார் பொருளியளாளர்கள் நம்புகிறார்கள். இவர்கள் நிதித்துறைக் கொள்கை, அல்லது அரசு செலவுகள் மற்றும் வரி விதிப்பு ஆகியவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் செயல்திறனற்றவை எனக் கருதுகிறார்கள். பணம் சார் பொருளியளாளர்கள் பணம் சார்ந்த வரலாற்றின் சோதனை முறை ஆய்வுகள், பணவீக்கமானது எப்போதும் பணம் சார்ந்த நிகழ்வாகவே இருந்துவந்துள்ளதையே காட்டுகின்றன என உறுதியாகக் கூறுகிறார்கள். பணத் தொகைக் கோட்பாடானது, பொருளாதாரத்தில் செலவிடப்படும் மொத்த பணம் இருப்பில் உள்ள மொத்த பணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என எளிதாகக் கூறுகிறது. இந்தக் கோட்பாடு சர்வ சமன்பாட்டுடன் தொடங்குகிறது: இங்கு இந்த சூத்திரத்தில், பொருளாதார நடவடிக்கையின் நிலை ("Q" ), பணத்தின் அளவு ("M" ) மற்றும் பணப்பாய்வு வேகம் ("V" ) ஆகியவற்றால் பொதுவான விலை அளவு பாதிப்படைகிறது. இந்த சூத்திரம் சர்வ சமன்பாடு, ஏனெனில் பணப்பாய்வு வேகமானது ("V" ), இறுதி செலவினங்கள் (formula_7) மற்றும் பணத்தின் அளவு ("M" ) ஆகியவற்றின் விகிதமாக வரையறுக்கப்படுகிறது. பணப்பாய்வு வேகம் பெரும்பாலும் மாறிலியாகக் கருதப்படுகிறது, மேலும் நீண்ட கால அளவில் வெளியீட்டின் மெய்மதிப்பு பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கருதுகோள்களின் அடிப்படையில், பொதுவான விலை அளவின் மாற்றத்தின் முதன்மை பாதிப்புக் காரணி பணத்தின் அளவில் ஏற்படும் மாற்றங்களாகும். நிலையான பணப்பாய்வுடைய பண இருப்பானது, குறைந்த கால அளவில் (இறுதிச் செலவினத்தைச் சமன்படுத்தும்) பெயரளவு வெளியீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. நடைமுறையில் பணப்பாய்வு வேகம் மாறிலியல்ல, மேலும் இதனை மறைமுகமாக மட்டுமே அளவிட முடியும், ஆகவே இந்த சூத்திரம் பண இருப்புக்கும் பெயரளவு வெளியீட்டிற்குமிடையே உள்ள நிலையான தொடர்பைக் குறிக்கிறது என்று கூற முடியாது. இருப்பினும் நீண்ட கால அளவில், பண இருப்பில் ஏற்படும் மாற்றங்களும் பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களும் பணப்பாய்வில் ஏற்படும் மாற்றங்களைப் புறக்கணிக்கத்தக்கதாகச் செய்கின்றன. பணப்பாய்வு என்பது ஒப்பீட்டில் மாறிலி எனக் கருதினால், நீண்ட கால அளவிலான விலை உயர்வு வீதமானது (பணவீக்கம்), நீண்ட கால அளவிற்கான பண இருப்பின் வளர்ச்சி வீதம் மற்றும் நீண்ட கால அளவிற்கான உண்மையான வெளியீட்டின் வளர்ச்சி வீதம் ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும். அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாடானது, பொருளாதார செயலாளர்கள், தங்கள் நலத்தை மேம்படுத்திக்கொள்ள முயலும் போது, எதிர்காலத்தை அறிவார்ந்த நோக்கில் பார்க்கிறார்கள், மேலும் உடனடி மாற்றுகளின் செலவுகள் மற்றும் அழுத்தங்களைத் தனிப்பட்ட விதத்தில் எதிர்கொள்வதில்லை எனக் கூறுகிறது. இந்தக் கோணத்தில், பணத்துவ அடிப்படையிலுள்ள போது பணவீக்கத்திற்கு எதிர்கால எதிர்பார்ப்புகளும் உத்திகளும் முக்கியமே. பொருளியல் செயலாளர்கள் அதிக பணவீக்கத்தின் கணிப்புகளை நிறைவேற்றும் விதங்களில் செயல்பட்டு, மத்திய வங்கியின் முடிவுகளைத் தவிர்க்க முற்படுவர் என்பதே அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் அடிப்படைச் சாரமாக விளங்குகிறது. அதாவது, மத்திய வங்கிகள் பணவீக்கத்திற்கு எதிராகப் போராடுவதில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கியிருக்க வேண்டும், அல்லது மத்திய வங்கி பின்னிறக்கத்தை அனுமதிப்பதற்கு பதிலாக பண இருப்பை அதிகரிக்கும் என பொருளாதார செயலாளர்கள் நம்பி, பொருளாதாரம் விரிவாக்கப்படும் என சவால் விட வேண்டும். பண இருப்பினாலேயே பணவீக்கம் உயர்கிறது, ஏறும் விலைகள் வெறும் பின் விளைவுகளே ஆகும் எனவும், மேலும் இந்த பொருள் நிறைந்த வேறுபாடு பணவீக்கத்தை வரையறுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது எனவும் ஆஸ்திரியப் பள்ளி உறுதியாகக் கூறுகிறது. பணம் சார்ந்த பணவீக்கம் மற்றும் பொதுவான விலைப் பணவீக்கத்திற்கிடையில் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் நம்புகிறார்கள். காலம் செல்லச் செல்ல உருவாக்கப்பட்ட, பரிமாற்றத்திற்கு உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய புதிய நாணயங்களின் வளர்ச்சியைக் கணக்கிடுவதன் மூலம், பணம் சார்ந்த பணவீக்கத்தை ஆஸ்திரிய பொருளியலாளர்கள் அளவிடுகின்றனர். மத்திய அரசு அல்லது அதன் மத்திய வங்கி ஆகியவை எடுக்கும், பண இருப்பை அதிகரிக்க இசையும் அல்லது அனுமதிக்கும் தனிப்பட்ட நடவடிக்கையே பணவீக்கமாகும் என பணவீக்கத்தின் இந்தப் புரிதல் உணர்த்துகிறது. மாநிலங்களால் உருவாக்கப்படும் பணம் சார் விரிவாக்கத்துடன் கூடுதலாக, பண இருப்பை அதிகரித்தலின் விளைவுகள் கடன் விரிவாக்கத்தால் பெரிதாகத் தோன்றுகிறது என்றும் ஆஸ்திரியப் பள்ளி கூறுகிறது, மேலும் உலகிலுள்ள பெரும்பாலான பொருளாதார மற்றும் நிதியக முறைகளில் பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் முறை பயன்படுத்தப்படுவதே இந்தக் கடன் விரிவாக்கத்திற்குக் காரணமாகும். மாநிலங்கள் தமது நடவடிகைகளுக்கு நிதி திரட்டும் மூன்று வழிகளில் ஒரு வழியாக (பணவீக்க வரி) பணவீக்கத்தைப் பயன்படுத்துகின்றன, என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் வாதிடுகின்றனர், இதில் வரி விதிப்பும் கடன் பெறுதலும் பிற இரு வழிகளாகும். இராணுவச் செலவுகளும் பெரும்பாலும் கடன் பெறுதல் மற்றும் பணவீக்கத்திற்கு வழிகோலும் நடவடிக்கைகளாகக் குறிக்கப்படுகின்றன, இந்தச் செலவினனக்கள் சந்தை ஆதாரங்களைப் பெறுவதற்கான குறுக்கு வழியாக இருக்கக்கூடும் என்பதால் வறுமையான மற்றும் கடனுள்ள அரசாங்கங்கள் இதற்கு முன்னுரிமையளிக்கின்றன. மற்றபடி, உண்மையில் அரசாங்கம் உற்பத்தித் திறனின் கட்டமைப்பை உருக்குலைக்கக் கூடிய செயற்கை பொழிப்பு நிலைகளை உருவாக்கி, அதுவே பொருளாதார பின்னிறக்கங்கள் மற்றும் தாழ்நிலைகளை உருவாக்குகிறது என என ஆஸ்திரியர்கள் வாதிடுகிறார்கள். மொத்த பண அளவின் வளர்ச்சியை "ஊக்குவிப்பதன்" மூலம் செயற்கையான முறையில் பொருளாதாரத்தைத் "தூண்ட" முயற்சிப்பதன் மூலம், மேலும் செயற்கையான குறைந்த வட்டி வீதத்தில் கடன் பெறுதல் மூலம், பொருளாதார பின்னிறக்கங்கள் அல்லது வீழ்ச்சிகளை உண்டாக்கக்கூடிய, பரவலான கடன்சுமைகள் மற்றும் நிதிப்பற்றாக்குறை மற்றும் பின்னிறக்கங்களைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட மத்திய வங்கி முயற்சிக்கலாம். அதேபோல், பெரும்பாலான ஆஸ்திரிய பொருளியலாளர்கள் மத்திய வங்கிகள் மற்றும் பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் முறை ஆகியவற்றை ஒழித்தலை ஆதரிக்கின்றனர், மேலும் 100 சதம் அல்லது பெரும்பாலும் தங்கத் தரநிலை முறைக்குத் திரும்புவதை அல்லது திறந்த நிலை வங்கியியல் போன்றவற்றை வலியுறுத்துகின்றனர். நீடித்து நிலைக்காத மற்றும் எளிதில் மாறக்கூடிய பகுதி-ஒதுக்கீட்டு வங்கியியல் நடை முறைகளைத் தடுத்து கட்டுப்பாட்டில் வைக்கும் என அவர்கள் வாதிடுகிறார்கள், மேலும் மொத்த பண அளவின் வளர்ச்சி (மற்றும் பணவீக்கம்) கட்டுப்பாட்டை மீறிய சுழற்ச்சியாயிருக்காது என உறுதியளிக்கின்றனர். பணத்துக்கு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், பண அளவுக் கோட்பாடு மற்றும் உண்மையான பட்டியல்கள் கொள்கை (RBD) இவற்றினிடையே ஒரு முக்கிய கருத்து வேறுபாடு காணப்பட்டது. இந்தக் கருத்துப்படி, வங்கிகள் கையிருப்பில் வைக்கும் நாணயங்களுக்கு நிகராக (பொதுவாக தங்கம்) அனுமதிக்கப்பட்ட பகுதிபட்ட கணக்கிடல் ஒதுக்கீட்டு நிலையில் அளவுக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நாணயம் மற்றும் வங்கியியல் பள்ளிகள், வணிகர்களிடமிருந்து வாங்கிய "உண்மையான பட்டியல்களான" வர்த்தகத்தின் பட்டியல்களுக்கு நாணயங்களை வழங்கும் திறனை வங்கிகள் பெற்றிருக்க வேண்டும் RBD குறித்து வாதிடுகின்றன. இந்தக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டில் பணம் சார் "வங்கியியல்" மற்றும் "நாணயப்" பள்ளிகளிடையேயான விவாதங்களிலும் பெடரல் ரிசர்வ் கூட்டமைப்பின் உருவாகத்திலும் முக்கியப் பங்கு வகித்தது. இது 1913 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சர்வதேச தங்கத் தரநிலையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மற்றும் அரசாங்கத்தின் நிதியகப் பற்றாக்குறை நோக்கிய நகர்வின் போது, நாணய ஆணையங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே ஆர்வம் காட்டப்பட்ட சிறிய விவகாரமாக RBD விளங்கியது. அது மிகவும் மதிப்புக் குறைந்ததாகக உள்ளது, பெடரல் ரிசர்வின் ஆளுநர் ஃப்ரெடெரிக் மிஷ்கின், இன்னும் ஒரு படி மேலே சென்று அது "முழுமையான மதிப்பிழந்தது" எனக் கூறுகிறார். இருப்பினும், இதை கொள்கையளவில் சில பொருளியலாளர்கள், குறிப்பாக கடனின் சில வகைகளில் உள்ள கட்டுப்பாடுகளை லெய்சஷ்-ஃபேரின் சுதந்திரவாத கொள்கைகளுடனான இணக்கமின்மையாகக் கருதுபவர்கள், ஆதரிக்கின்றனர், இருப்பினும் ஏறத்தாழ அனைத்து சுதந்திரவாத பொருளியலாளர்களும் RBD க்கு எதிராக இருக்கிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் பிரட்டனில் இருந்த, நாணயம் அல்லது அளவுக் கோட்பாடு மற்றும் வங்கியியல் பள்ளிகளிடையே நிலவிய விவாதங்கள், பணத்தின் தற்கால நம்பகத்தன்மை பற்றிய நடப்பு கேள்விகளை முன்கூட்டியே எழுப்பியிருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் வங்கியியல் பள்ளி அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரட்டனில் கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் நாணயப் பள்ளி "கண்டங்களில்" பெரும் ஆதிக்கம் செலுத்தியது, அதாவது பிரட்டனைச் சாராத நாடுகள், குறிப்பாக லத்தீன் பணம் சார் கூட்டமைப்பு மற்றும் முந்தைய ஸ்காண்டினவிய பணம் சார் கூட்டமைப்பு ஆகியவை. பண்டைய அரசியல் தொடர்பான பொருளாதாரத்தில் இருந்த மற்றொரு சிக்கல், பழமைக்கெதிரான பணக் கொள்கை அல்லது "ஆதரவுக் கோட்பாடு" ஆகும். பணத்தின் மதிப்பானது, அதை வெளியிடும் நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது என ஆதரவுக் கோட்பாடு வாதிடுகிறது. பண்டைய அரசியல் தொடர்பான பொருளாதாரத்தின் பணக் கொள்கை போலில்லாமல், பணம் வெளியிடும் நிறுவனங்கள், வெளியிட்ட பணத்தின் பரிமாற்றத்துக்குப் போதுமான அளவு சொத்துகளை வைத்திருக்கும் வரை பணவீக்கமின்றி பணத்தை வெளியிட முடியும், என ஆதரவு கொள்கை வாதிடுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பல வகையான முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான கருவி பணக்கொள்கையாகும். பெரும்பாலான மத்திய வங்கிகள் பெடரல் நிதிகளின் கடன் வீதத்தை இயல்பாக ஆண்டுக்கு 2% முதல் 3% வரையிலான இலக்கு வீதம் என்ற குறைவான அளவில் வைத்திருக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் ஆண்டுக்கு 2% முதல் 6% வரையிலான இலக்கு பணவீக்க வரம்பிற்குள்ளும் இருக்குமாறு கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. பணவாட்ட நிலைகள் வளமான பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவிப்பதாகத் தோன்றுவதால் ஒரு குறைந்த நேர்மறை பணவீக்கமே இலக்காகக் கருதப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. U.S. பெடரல் ரிசர்வ் போன்ற மத்திய வங்கிகள் வட்டி வீதங்களை அமைப்பதன் மூலமாகவும் மற்ற பிற செயல்பாடுகள் மூலமாகவும் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க முடியும். அதிக வட்டி வீதங்கள் மற்றும் மொத்த பண அளவின் மெதுவான வளர்ச்சி ஆகியவையே பணவீக்கத்துக்கு எதிராக அல்லது அதைத் தடுக்க மத்திய வங்கிகளால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளாகும், இருப்பினும் அவை இரண்டும் வேறுபட்ட அணுகுமுறைகள் ஆகும். எடுத்துக்காட்டுக்கு, சில வங்கிகள் சமச்சீர் பணவீக்க இலக்கைக் கொண்டிருக்கின்றன, ஆனால் பிற வங்கிகள் பணவீக்கமானது குறிப்பிடப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட ஓர் இலக்கை மீறும்போது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பணம் சார் பொருளியலாளர்கள், பணத்தின் வளர்ச்சி வீதத்தை நிலையாக வைத்திருந்து, பணவீக்கத்தக் கட்டுப்படுத்த, (வட்டி வீதங்களை அதிகரித்தல், மொத்த பண அளவின் உயர்வை மட்டுப்படுத்தல் போன்ற) பணக்கொள்கையைப் பயன்படுத்துதவதை வலியுறுத்துகின்றனர். கெயின்சியன் கொள்கையாளர்கள் பணவீக்கத்தை நிலையாக வைத்திருக்க, பொருளாதார விரிவாக்கத்தின் போது மொத்தத் தேவையைக் குறைத்தலையும் பின்னிறக்கங்களின் போது தேவையை அதிகரித்தலையும் வலியுறுத்துகின்றனர். மொத்தத் தேவையின் கட்டுப்பாட்டை, பணக்கொள்கை மற்றும் நிதித்துறைக் கொள்கை (தேவையைக் குறைக்க வரி விதிப்பை அதிகரிக்கலாம் அல்லது அரசுச் செலவினங்களைக் குறைக்கலாம்) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி அடைய முடியும். நிலையான பரிவர்த்தனை வீத நாணய ஆட்சிமுறையின் கீழ், ஒரு நாட்டின் நாணயமானது மற்றவொரு தனிப்பட்ட நாணயம் அல்லது பிற நாணயங்களின் தொகுப்பின் மதிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது (அல்லது சில நேரங்களில் தங்கம் போன்ற பிற மதிப்பின் அளவீட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது). வழக்கமாக, ஒரு நாணயத்தின் மதிப்பை அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட நாணயத்திற்கு நிகராக நிலைநிறுத்த ஒரு நிலையான பரிவர்த்தனை வீதம் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகவும் பயன்படுத்த முடியும். இருப்பினும், தொடர்புபடுத்தப்படும் நாணயத்தின் மதிப்பானது ஏற்ற இறக்கத்திற்குட்படுவதால், அது அதனுடன் ஒப்பிடப்படும் நாணயத்தின் மதிப்பும் ஏற்ற இறக்கத்திற்குட்படுகிறது. நிலையான பரிவர்த்தனை வீத நாட்டின் பணவீக்க வீதமானது, அதன் நாணயம் தொடர்புபடுத்தப்படும் நாட்டின் பணவீக்க வீதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். மேலும், நிலையான பரிவர்த்தனை வீதமானது ஒரு அரசாங்கம் மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மையைப் பெறுவதற்காக உள்நாட்டுப் பணக்கொள்கையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தின்படி, உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் நாணயங்கள் அதன் நாணய மதிப்பை US டாலருக்கு நிகராக வைத்துள்ளன. இது அந்த நாடுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது, ஆனால் அவற்றை இது பாதுகாப்பற்ற பாதிப்புகளின் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன. 1970களின் தொடகத்தில் ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் கைவிடப்பட்ட பின்னர், நாடுகள் படிப்படியாக மாறும் பரிமாற்ற வீதங்களுக்குத் திரும்பின. இருப்பினும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சில நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நிலையான பரிவர்த்தனை வீதத்திற்குத் திரும்பவும் சென்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நிலையான பரிவர்த்தனை வீதத்தைப் பயன்படுத்தும் இந்தக் கொள்கையானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் அமெரிக்காவிலுள்ள பல நாடுகளால் பயன்படுத்தப்பட்டது (எ.கா. அர்ஜென்டினா (1991-2002), பொலிவியா, பிரேசில், மற்றும் சிலி). தங்கத் தரநிலை என்பது, ஒரு ஆட்சிமுறையில் பொது பரிமாற்ற ஊடகமாக, முன் நிர்ணயிக்கப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான தங்கத்திற்கு பரிமாறிக்கொள்ளக்கூடிய காகிதத் தாள்களைப் பயன்படுத்தும் பண முறையாகும். தரநிலையானது, தங்கத்திற்கான ஆதரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகின்றது, ஒவ்வொரு நாணயத்தின் அலகுக்குமான நாணயங்களின் அளவும் இதில் அடங்கும். நாணயம் என்பது எந்த "உள்ளார்ந்த மதிப்பையும்" கொண்டிருப்பதில்லை, ஆனால் அதை அதே மதிப்பிலான நாணயத்திற்கு மீட்டுகொள்ள முடியும் என்பதால் வர்த்தகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எடுத்துகாட்டாக, U.S. வெள்ளிப் பணத்தை, அதன் அசல் மதிப்பிலான வெள்ளியாக மீட்டுகொள்ள முடியும். தங்கமானது அதன் கிடைக்கும் தன்மை, உறுதித்தன்மை, பகுபடும் தன்மை, பரிமாற்றத் தன்மை மற்றும் அடையாளம் காணுவதில் சிரமமின்மை ஆகியவற்றின் காரணமாக பிரதிப்பணத்தின் ஒரு பொது வடிவமாக இருந்தது. பிரதிப்பணம் மற்றும் தங்கத் தரநிலை ஆகியவை, கட்டற்ற பணவீக்கம் மற்றும் பெருமந்தம் நிலவியபோது சில நாடுகளில் காணப்பட்டது போன்ற பணக்கொள்கையின் பிற முறைகேடுகளில் இருந்து குடிமக்களைக் காப்பாற்றப் பயன்பட்டன. இருப்பினும், அவை அவற்றிலும் சிக்கல்களும் அவை குறித்த விமர்சனங்களும் இருந்தன, ஆகவே ப்ரெட்டன் உட்ஸ் முறையின் சர்வதேசத் தழுவலின் மூலம் ஒரு பகுதி கைவிடப்பட்டன. இந்த அமைப்பின்படி, மற்ற முக்கிய நாணயங்கள் அனைத்தும் டாலருக்கு நிகரான நிலையான வீதத்தில் சமநிலைப்படுத்தப்பட்டன, அது ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு $35 என்ற வீதத்தில் சமநிலைப்படுத்தியிருந்தது. 1970 ஆம் ஆண்டு பிரெட்டென் உட்ஸ் முறையானது கைவிடப்பட்டது, இதனால் பெரும்பாலான நாடுகள் அரசு நிர்ணய நாணய முறைக்கு மாறின – இதில் நாட்டின் சட்டங்களால் மட்டுமே பணத்தைத் திரும்ப்பெற முடியும். ஆஸ்திரிய பொருளியலாளர்கள் 100 சதவீத தங்கத் தரநிலைக்கு மீண்டும் திரும்புவதற்கு மிகுந்த ஆதரவளிக்கின்றனர். தங்கத் தரநிலையில், நீண்ட கால பணவீக்க (அல்லது பணவாட்ட) வீதமானது, மொத்த உற்பத்தியுடனான ஒப்பீட்டில் தங்கக் கையிருப்பின் வளர்ச்சி வீதத்தால் நிர்ணயிக்கப்படும். விமர்சகர்கள், இது பணவீக்க வீதத்தில் கட்டற்ற ஏற்ற இறக்கங்களை உருவாக்கும், மேலும் பணக்கொள்கையானது தங்கச் சுரங்கத் தொழிலால் நிர்ணயிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் வாதிடுகின்றனர், அவர்களில் சிலர் அதுவே பெருமந்ததிற்கு காரணனதாகவும் நம்புகின்றனர். கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் ("வருமானக் கொள்கைகள்") என்பது கடந்த காலத்தில் முயற்சிக்கப்பட்ட மற்றொரு வழிமுறையாக இருந்தது. போர்க்கால சூழ்நிலைகளில், பங்கீட்டு முறைகளுடன் ஒருங்கிணைந்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் வெற்றிகரமாக இருந்துவந்துள்ளன. இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் பயன்பாடானது கலைவையாக உள்ளது. அவற்றின் பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் விதித்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகளும் உள்ளடங்கும். ஆஸ்திரேலியாவில் விலைகள் மற்றும் வருமானங்கள் ஒப்பந்தம் மற்றும் நெதர்லாந்தில் வாஸ்ஸெனார் ஒப்பந்தம் ஆகியவை வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் அடங்கும். பொதுவாக கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிக மற்றும் விதிவிலக்கான வழிகளாகவே கருதப்படுகின்றன, கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடு ஆட்சியின் போதான, நடைபெறும் போரில் வெற்றிபெறுதல் போன்ற, பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணங்களைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் போது மட்டுமே செயல்திறனுள்ளவையாக இருக்கும். அவை சந்தைக்கு வழங்கும் திரிபுற்ற சமிக்ஞைகளால் அடிக்கடி முரண்பாடான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கையான விலைக் குறைப்புகள், பங்கீடுகளையும் பற்றாக்குறையையும் உண்டாக்கி, எதிர்கால முதலீட்டுக்கான ஊக்கமிழப்பை ஏற்படுத்தும், இதன் விளைவுவாக மேலும் பற்றாக்குறை ஏற்படும். ஏதேனும் ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் விலை குறைக்கப்பட்டால் அது அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்பதே வழக்கமான பொருளாதாரச் சிந்தனை. எடுத்துக்காட்டாக, ரொட்டியின் அதிகாரப்பூர்வ விலை மிகவும் குறைவாக இருந்தால், அதிகாரப்பூர்வ விலைகளில் மிகச்சிறிய அளவிலான ரொட்டிகளே இருக்கும், மேலும் எதிர்காலத் தேவையைச் சமாளிக்க, சந்தைகளால் மிகச்சிறிய அளவிலான முதலீடே ரொட்டி தயாரிப்பில் செய்யப்படும், இதனால் சிக்கல் நீண்ட கால அளவில் இன்னும் மோசமாகிறது. தற்காலிகக் கட்டுப்பாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னிறக்கத்துடன் "ஒருங்கிணையலாம்" : கட்டுப்பாடுகள், பணவீக்கத்தைச் சமாளிக்கும் மிகச் செயல்திறனுள்ள வழியாக பின்னிறக்கத்தை மாற்றலாம் (வேலையின்மையை அதிகரிக்க, தேவையைக் குறைத்தல்), அதே நேரத்தில் தேவை அதிகமாக இருக்கும்போது கட்டுப்பாடுகளால் ஏற்படும் உருத்திரிபுகளை, பின்னிறக்கம் தடுக்கின்றது. இருப்பினும், விலைக் கட்டுப்பாடுகளை விதிக்காமல், மாறாக இலாபமற்ற பொருளாதார நடவடிக்கைகளை பொருளாதாரம் சரிசெய்யவும் தவிர்க்கவும் செய்யும் என்ற நோக்கில் விலைகளைத் தாராளமயமாக்க வேண்டும் என்பதே பொதுவாக பொருளியலாளர்களின் அறிவுரையாகும். குறைந்தபட்ச செயல்பாடு பணவீக்கத்தை உருவாக்கும் எல்லாவற்றின் தேவைகளையும் குறைக்கும், அது தொழிலாளராகவோ அல்லது வளங்களாகவோ இருக்கலாம், மேலும் பணவீக்கமானது மொத்தப் பொருளாதார உற்பத்தியால் குறையும். இது அதிகபட்ச உற்பத்தித் திறன் மறு ஒதுக்கீடு செய்யப்படுவதாலும் அது வாழ்வியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்ட மக்களிடையே மிகுந்த செல்வாக்கற்றதாகவும் மாறுகிறது பெரும்பாலும் கடுமையான பின்னிறக்கத்தை உருவாக்குகின்றது, (காண்க, ஆக்கப்பூர்வ முடிவு). நிலையான கட்டணங்களின் மெய் மதிப்புகளை மாறிலியாக வைத்திருக்க, அவை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சரி செய்துகொள்ளாதபட்சத்தில், அவற்றின் உண்மையான வாங்குதல் திறனானது பணவீக்கத்தால் அரித்து அழிக்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், பணியாளர் ஒப்பந்தங்கள், ஓய்வூதியச் சலுகைகள் மற்றும் அரசாங்க உரிமை வழங்கல்கள் (சமூகப் பாதுகாப்பு போன்றவை) வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் இணைந்துள்ளன, இயல்பில் இவை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்துள்ளன. "வாழ்வினச் செலவுப் படி" யானது (COLA), வாழ்வினச் செலவுக் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பளங்களைச் சரிசெய்கிறது. சம்பளங்கள் பொதுவாக ஆண்டுதோறும் சரிசெய்யப்படுகின்றன. பணியாளர் பயணித்துக்கொண்டிருபவர் எனில், அவர் மாறும் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து மாறும் வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் சம்பளங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம். பணியாளர் ஒப்பந்தங்களில் உள்ள வருடாந்தர அதிகரிப்பு கூற்றுகள், எந்தக் குறியீட்டுடனும் இணைக்கப்படாத பணியாளர் சம்பளத்திற்கான அதிகரிப்பின் எதிர்கால அல்லது முன்னுரைக்கப்பட்ட சதவீதம் பற்றிக் குறிப்பிடலாம். சம்பளத்திலான பேரம் செய்யப்பட்ட இந்த அதிகரிப்புகளை பேச்சு வழக்கில் வாழ்வினச் செலவு சமாளிப்புகள் அல்லது வாழ்வினச் செலவு அதிகரிப்புகள் எனக் குறிப்பிடப்படுன்றன, ஏனெனில் அவற்றின் அதிகரிப்புகளானது வெளிப்புறம் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளுக்கு ஒத்தே உள்ளன. பெரும்பாலான பொருளியலாளர்கள் மற்றும் இழப்பீட்டுப் பகுப்பாய்வாளர்கள், முன் நிர்ணயிக்கப்பட்ட எதிர்கால "வாழ்வினச் செலவு அதிகரிப்புகள்" சிந்தனையானது இரண்டு காரணங்களுக்காக தவறான வழிநடத்தலைக் கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்: (1) தொழில்மயமாக்கப்பட்ட உலகின் மிகச்சமீப காலங்களில், சராசரியான கூலியானது பெருவாரியாகக் கணக்கிடப்பட்ட வாழ்வினச் செலவுக் குறியீடுகளை விட வேகமாக அதிகரித்துள்ளது, இது உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் பணியாளர் பேரத் திறன் ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவேயன்றி இயல்பான வாழ்வினச் செலவுகளால் அல்ல என உணர்த்துகின்றது, மற்றும் (2) பெரும்பாலான வாழ்வினச் செலவுக் குறியீடுகள் முன்னோக்கு சிந்தனையுடையனவாக இல்லை, மாறாக அவை தற்போதயை அல்லது வரலாற்றுத் தரவை ஒப்பிடுகின்றன. கஞ்சன் கஞ்சன் என்பது பொதுவாக கருமி, உலோபி போன்றோரைக் குறிக்கும் சொல். கஞ்சன் என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் (நூல்) மொழிபெயர்க்கப்பட்ட மௌனம், பத்திரிகையாளர் லதாவினால் எழுதப்பட்டு, இலங்கையின் படைப்பாக்க வரலாற்றில் முதல் தடவையாக இருபது இந்திய மற்றும் இலங்கை ஆளுமைகளுடனான காத்திரமான நேர்காணல்களை உள்ளடக்கிய வகையிலாக வெளியிடப்பட்ட நூலாகும். இந்நூல் காற்று பதிப்பகத்தினால் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர் லதாவின் இயற்பெயர் டி. ஆர். பி. லதா என்பதாகும். இலங்கையிலுள்ள பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பத்திரிகையாளராக கடமையாற்றிய இவர், ஒரு தமிழ் இலக்கியப் பட்டதாரியுமாவார். இந்த நூல், பத்திரிகையாளர் லதாவின் முதலாவது நூலாகும். இந்த நூலிற்கு அணிந்துரைகளை, கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பாடலாசிரியர் பழநிபாரதி ஆகியோர் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் கவிதை போன்ற அழகிய நேர்காணல்களாய் இடம்பெற்றிருந்த இருபது ஆளுமைகளின் விபரங்கள் வருமாறு: கிளாட் சிமோன் கிளாட் சிமோன் ("Claude Simon", அக்டோபர் 10, 1913 – சூலை 6, 2005) ஒரு பிரெஞ்சு நாவலாசிரியராவார். 1985-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றவர். மடகாசுகாரிலுள்ள அன்டனநரிவோவில் பிறந்தார். பிரான்சின் பாரிசு நகரில் காலமானார். இவரது பெற்றோர் பிரெஞ்சுக்காரர்களாவர். இவரது தந்தை முதல் உலகப் போரில் காலமானார். பெர்பிக்னன் (ரோசிலான் மாகாணத்தின் மத்தியிலுள்ளது) எனுமிடத்தில் இவர் தனது தாயார் மற்றும் குடும்பத்தினரோடு வளர்ந்தார். இவரது முன்னோர் ஒருவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது படைத்தளபதியாய் இருந்திருக்கிறார். காலேஜ் ஸ்டானிஸ்லாஸில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் சிறிது காலம் ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் பயின்றிருக்கிறார். பின்னர் ஆன்றே லோடே அகாதமியில் ஓவியத்தை எடுத்து படித்திருக்கிறார். அதன் பின்னர் ஸ்பெயின், ஜெர்மனி, சோவியத் யூனியன், கிரீஸ் ஆகிய இடங்களில் அதிக அளவிலான பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். இப்பயண அனுபவமும் இரண்டாம் உலகப் போர் அனுபவங்களும் அவரது இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் மியூஸ் சண்டையில் (1940) பங்கெடுத்து போர்க்கைதியானார். ஒருவாறாக அங்கிருந்து தப்பி போரெதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது இவர் தனது முதல் புதினமான 'லெ டிரெச்சர்'('துரோகி', 1946-ல் பதிப்பிக்கப்பட்டது)-யை எழுதி முடித்தார். இப்புதினத்தை அவர் போருக்கு முன்னரே எழுதத் தொடங்கியிருந்தார். 1961-ஆம் ஆண்டு 'ல ரௌட் டெ ஃபிளான்றே'-வுக்காக 'ல எக்சுபிரசு' பரிசைப் பெற்றார். 1967-ல் 'ஹிஸ்டொயர்'-க்காக மெடிசிஸ் பரிசைப் பெற்றார். 1973-ல் கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகம் மதிப்புறு பேராசிரியராக்கி சிறப்பித்தது. சுவலட்சுமி சுவலட்சுமி (சுவலக்‌ஷ்மி, பிறப்பு: ஆகத்து 19, 1977) வங்காள மொழித் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில வங்காள மொழி மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 2011 எம்டி 2011 எம்டி ("2011 MD") என்பது பூமிக்குக் கிட்டவாக, கிட்டத்தட்ட 12,000 கிலோமீட்டர் (7,500 மைல்) தூரத்தில், கடந்து சென்ற ஒரு சிறுகோள் ஆகும். இவை அப்பல்லோ சிறுகோள் வகையைச் சேர்ந்ததாகும். இது 2011 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் 17:00 UTC நேரத்துக்கு பூமிக்குக் கிட்டவாக வந்துள்ளது. இவ்விண்கல் பூமியை அணுகும் போது அது சூரியனுக்குக் கிட்டவாக இருப்பதாகவே காணப்பட்டது. இதனால் இதனை சிறிது நேரம் மட்டுமே அவதானிக்க முடிந்தது. ஆனாலும், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவில் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் இதனை அவதானிக்க முடிந்துள்ளது நியூ மெக்சிக்கோ, சொக்கோரோ என்ற இடத்தில் உள்ள விண்தொலைநோக்கி மூலம் 2011 சூன் 21 ஆம் நாளில் "லிங்கன் பூமியை அணுகும் சிறுகோள்கள் ஆய்வு" (லீனியர்) என்ற நாசா ஆய்வுக்கழகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது இதனை ஒரு விண்கழிவு என்றே வானியலாளர்கள் கருதிருந்தனர். ஆனாலும் பின்னர் இது ஒரு சிறுகோள் என உறுதி செய்யப்பட்டது. இது ஏறத்தாழ 10 முதல் 45 மீட்டர்கள் (30 முதல் 150 அடி) நீளமானதெனக் கணிக்கப்பட்டுள்ளது 2011 எம்டி பூமியை நோக்கி வந்திருந்தாலும், அது வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்திருக்கும் எனவும், பூமியில் எதுவித சேதத்தையும் ஏற்படுத்தியிருக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது. ரோகிணி (நடிகை) ரோகிணி (பிறப்பு: திசம்பர் 15, 1969) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா, தபூ, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். பின்பு 2017ஆம் ஆண்டு வனிதா விருது பெற்றார். ரோகிணி திசம்பர் 15, 1969 ஆம் ஆண்டு ராவு நாயுடு, சரஸ்வதி ஆகியோருக்கு பிறந்தார். இவர் நடிகர் ரகுவரனை 1996ஆம் ஆண்டு மணந்தார். ரகுவரன் பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார். ரகுவரன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ரோகிணியும் இவரை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. 2004ஆம் ஆண்டில் சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றுக்கொண்டனர். ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. பின்பு மார்ச்சு 19, 2008ஆம் ஆண்டு ரகுவரன் உடல்நலக் குறைவால் காலமானார். ஓஸ்வால்ட் அவேரி ஓஸ்வால்ட் அவேரி ("Oswald Avery", அக்டோபர் 21, 1877 - பெப்ரவரி 2, 1955) கனடாவில் பிறந்த அமெரிக்க மருத்துவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கழித்தார். குரோமோசோம்கள் மற்றும் மரபணுக்கள் டி.என்.ஏ வால் ஆனவை என்று கண்டுபிடித்தற்காக இவர் நன்கறியப்படுகிறார். உரோசலிண்டு பிராங்குளின் உரோசலிண்டு பிராங்குளின் எனப்படும் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் ("Rosalind Elsi Franklin", 25 ஜூலை 1920 - 16 ஏப்ரல் 1958) ஒரு பிரித்தானிய அறிவியலாளர். உயிர் இயற்பியல் அறிஞர், வேதியலாளர், இவர் மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் (X-ray Crystallography) என பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர். பிராங்குளின் இலண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். ஒரு பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க ஆங்கிலேய யூத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை 'எல்லிஸ் ஆர்தர் பிராங்க்ளின்' (1894-1964),இலண்டனில் வணிக வங்கி ஒன்றினைத் தொடங்கி நடத்திவந்தார். இவருடைய தாயார் 'முரியேல் பிரான்சஸ் வேலி' (1894-1976). இவரது குடும்பத்தினர் பலரும் அரசில் உயர்பதவிகளை வகித்து வந்தனர். புனித பவுல் மகளிர் பள்ளியிலும், வடக்கு இலண்டன் கல்லூரிப் பள்ளியிலும் சேர்ந்து இவர் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். இலத்தீன் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய பிராங்குளின் பள்ளிப் பருவத்திலேயே அறிவியலில் தணியாத ஆர்வத்தைக் காட்டினார். இவருடைய பதினைந்தாவது வயதில் வேதியல் ஆராய்ச்சி செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தீர்மானித்தார். அவர் சமூக சேவையில்தான் ஈடுபடவேண்டும். கல்லூரிப் படிப்பு பெண்களுக்குத் தேவையற்றது என்று கூறிய அவருடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1941-ல் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார். அன்றைய கால கட்டத்தில் பெண்கள் பட்டதாரி ஆனாலும் பெயருக்குப் பின்னால் பட்டத்தினைப் போட்டுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற 1941-42 ஆண்டுகளில் தேம்ஸ் நதிக் கரையில் கிங்க்ஸ்டன் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆங்கில நிலக்கரிப் பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இங்கு எக்சு கதிர்கள் விளிம்பு விளைவுப் படிகவியல் (X-ray diffraction Crystallography) மூலம் நிலக்கரியின் மூலக்கூற்றின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் இவருடைய ஆய்வை அமைத்துக் கொண்டார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1951-ல் இலண்டனில் மன்னர் கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் 'ஜான் ரேண்டல்' என்ற அறிவியலறிஞரின் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார் அதே சமயம் தனிப்பட்ட முறையில் கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் (Proteins and lipids)தன்மை பற்றி எக்சு கதிர் விளிம்பு விளைவின் உதவி கொண்டு அறிவதற்கான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார் இந்த ஆராய்ச்சியில் இவருக்குக் கிட்டிய இந்த முன்னறிவை அறிந்த ரேண்டல், டி.என்.ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராயும்படி பிராங்குளினைக் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு 'மௌரிசு வில்கின்சு' என்பவரும், இவருடைய ஆய்வு மாணவர் 'ரேமண்ட் கோசிங்' என்பவரும் உதவி புரிந்தனர். எக்சுரே கதிர்குழாயும் மற்றும் நுண்மையான புகைப்படக் கருவியும் வில்கின்சு மூலம் கிடைத்தது. எக்சு கதிர் ஆராய்ச்சியில் இருந்த முன்னறிவே பிராங்குளினை மரபணு அமைப்பை ஆராயும் அறிவியலறிஞர்களுடன் பணியாற்ற வழிகோலியது. மரபணு 1898-ல் ஜோகன்மீச்சர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபணுவின் சரியான வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரோசலிண்ட் பிராங்க்ளினின் ஆராய்ச்சியே இதற்கு அடித்தளமாக அமைந்தது. பிராங்குளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். இந்தப் படங்களை பிராங்க்ளினின் அனுமதி பெறாமலேயே வில்கின்சு, வாட்சனுக்குக் காண்பித்தார் வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன் படுத்தி அவர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகிய மூவருக்கும் பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனது சூழ்நிலை காரணமாக பிராங்க்ளின் இலண்டனில் உள்ள் பர்பெக் கல்லூரியில் சேர்ந்து தனக்கென்று ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கித் தன்னுடைய பழைய ஆய்வுகளைத் தொடர்ந்தார். வைரசுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். ஐந்து ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். ஆய்வின் பொருட்டு அமெரிக்கா சென்ற போது பிராங்க்ளினுக்குக் கருப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய ஆய்வுகளின் இடையே மூன்று முறை அறுவை சிகிச்சை மற்றும் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நலம் தொடர்ந்து பாதிப்படைந்தது. சிகிச்சை பலனின்றி இவருடைய 37-ஆவது வயதில் 1958 -ல் பிராங்க்ளின் மரணமடைந்தார். வாட்சன் அவருடைய ஆராய்ச்சியப் பற்றி நூல் வெளியிட்ட போது மரபணு கண்டுபிடிப்பில் உரோசலிண்டு பிராங்குளின் பற்றி எழுதாமல் தவிர்த்தார். ஆனால் பின்னர் ஒரு சமயம் கிரிக், இதே கண்டுபிடிப்பை எட்ட பிராங்க்ளின் இன்னும் இரண்டு அடிகள் மட்டும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்று எழுதியிருந்தார். புகைப்படத்தை வாட்சனுக்குத் தந்த வில்கின்சு மட்டுமே நோபல் பரிசு பெற்ற போது பிராங்க்ளின் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். வாட்சன், கிரிக் மற்றும் வில்கின்சு மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது பிராங்க்ளின் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. நோபல் பரிசு பரிந்துரை விதிகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் ஓர் ஆராய்ச்சிக்கு பரிசு வழங்க அனுமதி இல்லை .மேலும் இறந்த பிறகு ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கமும் கிடையாது. இதனால் உரோசலிண்டு பிராங்குளினுக்கு நோபல் பரிசு கிடைக்காமலேயே போயிற்று. பிற்காலத்தில் ரோசலிண்ட் பிராங்க்ளினுடன் பணிபுரிந்தவர்களும் அவருடைய நண்பர்களும், பற்பல ஆராய்ச்சிகளின் போது அவர் எழுதிய குறிப்பேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பிராங்க்ளினை உலகறியச் செய்தனர். மரபணு வின் வடிவத்தைக் கூட்டாக அன்றி தனியொரு பெண்ணாக உழைத்துக் கண்டறிந்ததை உலகம் புரிந்துகொண்டது. பிராங்க்ளினைப் போற்றும் வகையிலும் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2004-ஆம் ஆண்டு சிகாகோ மருத்துவப் பள்ளி என்னும் பெயரை மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பல்கலைக்கழகம் (Rosalind Franklin University of Medicine and Science) என்று மாற்றி அமைத்தனர்^ Dedication| of Rosalind Franklin University|. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது. 'அறிவியல் ஒளி' மே 2010 இதழ் ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு ("Ronald George Wreyford Norrish", 9 நவம்பர் 1897 - 7 சூன் 1978) ஆங்கிலேய வேதியியலாளர். இவர் கேம்பிரிட்சில் பிறந்து பெர்சே பள்ளியில் கல்வி பயின்றார். இவருக்கு 1967 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ராபர்ட் கால்லோ ராபர்ட் சார்லஸ் கால்லோ (பி. மார்ச் 23, 1937) ஒரு அமெரிக்க உயிரியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். கல்லோ பால்டிமோரில் உள்ள மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனித வைரஸ் ஆய்வு நிறுவன இயக்குனர். இவர் பிராவிடன்ஸ் கல்லூரியில் 1959 ல் உயிரியல் BS பட்டம் பெற்றார். பின்னர் 1963 ல் பிலடெல்பியா, பென்சில்வேனியா ஜெபர்சன் மருத்துவ கல்லூரியில் எம்டி பெற்றார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவரது மருத்துவ மேற்படிப்பு முடித்த பிறகு, இவர் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் ஆனார். ஹெச்.ஐ.வி தீநுண்மத்தை கண்டறிந்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார். ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்) ஸ்டான்லி கோஹன் ("Stanley Cohen", பி. நவம்பர் 17, 1922) ஒரு அமெரிக்க உயிரியலாளர். இவர் ப்ரூக்ளின் கல்லூரியில் 1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரி விலங்கியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1948 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்தற்காகப் பரவலாக அறியப்படுகிறார். 1986ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ரீட்டா-லெவி மோன்டால்சினியுடன் சேர்ந்துப் பெற்றவர். ரொனால்ட் கோஸ் ரொனால்ட் கோஸ் ("Ronald Coase", பி. டிசம்பர் 29, 1910 ) பிரிட்டனில் பிறந்த் அமெரிக்கப் பொருளியாலாளர். சிகாகோ சட்ட பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஓய்வுபெற்ற மதிப்புறு பேராசிரியராய் பணிபுரிந்து வருகிறார். இவர் 1991 ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார். லிண்டா பக் லிண்டா பக் ("Linda Buck", பி: ஜனவரி 29, 1947 ) ஒரு அமெரிக்க உயிரியலாளர். இவர் தனது சக ஆய்வாளர் ரிச்சார்ட் ஆக்செலுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றார். பக் வாஷிங்டன் அருகில் உள்ள சியாட்டில் நகரில் பிறந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1975 ல் உளவியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் டாலசில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1980 ல் நோயெதிர்ப்பியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார். நெல்லி சாக்ஸ் நெல்லி சாக்ஸ் ("Nelly Sachs", டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். கிறிஸ்டைன் லகார்டே கிறிஸ்டைன் மேடலீன் ஓடெட் லகார்டே (Christine Madeleine Odette Lagarde, பிறப்பு 1 சனவரி 1956) பிரான்சின் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவராக சூலை 5, 2011 அன்று பொறுப்பேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளவருமாவார். சூன் 2007 அன்று பிரான்சின் நிதி அமைச்சராக குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியால் நியமிக்கப்பட்டார். முன்னதாக, டொமினிக் வில்லெபின்னின் அரசில் வேளாண் அமைச்சராகவும் வணிக அமைச்சராகவும் பங்காற்றி யுள்ளார். ஜி8 நாடுகள் ஒன்றில் பொருளாதார விவகார அமைச்சராகப் பணியாற்றிய முதல் பெண் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் தலைவர் என்ற பெருமையும் கொண்டவர். ஏகபோகத்திற்கு எதிரான மற்றும் தொழிலாளர் நலன் வழக்கறிஞராக அறியப்பட்ட லகார்டே பன்னாட்டு சட்ட நிறுவனம், பேக்கர் & மெக்கன்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 16, 2009 நாளிட்ட "த பினான்சியல் டைம்ஸ்" இதழ் ஐரோப்பிய வலயத்தில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக தரவரிசைப்படுத்தி உள்ளது. 2009ஆம் ஆண்டு "போர்ப்ஸ்" இதழ் வெளியிட்ட உலகின் மிகச் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் லகார்டே 17வதாக குறிப்பிடப்பட்டுள்ளார் . சூன் 28, 2011, பாலியல் குற்றவழக்குத் தொடரப்பட்டுள்ள டொமினிக் ஸ்ட்ராஸ்-கானிற்கு மாற்றாக பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த மேலாண் இயக்குனராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். சூலை 5, 2011 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார். 2011 ஆண்டு வெளியான எச்பிஓ நிறுவனத்தின் "டூ பிக் டு ஃபெயில்" என்ற திரைப்படத்தில் லைலா ராபின்சு என்ற நடிகை லகார்டேயாக சித்தரிக்கப்படுள்ளார்.
புருஷ சுக்தம் "புருஷ சுக்தம்" ரிக் வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. "சுக்தம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு "இறைவனைப் பற்றிய துதிப் பாடல்" என்று பொருள். "புருஷன்" , ஆயிரம் கண்களும் ஆயிரம் பாதங்களும் கொண்டு விளங்குவதாகவும் பூமியைச் சுற்றி பத்து அங்குல உயரத்திற்கு அவன் வியாபித்து இருப்பதாகவும் இதன் தொடக்க வரிகள் கூறுகின்றன. அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அல்லது இஸ்கான் எனவும் பரவலாக அரே கிருஷ்ணா இயக்கம் என்றறியப்படுவதுமான அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும் இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது. 1896 செப்டம்பர்1 ஆம் நாளில் கல்கத்தாவில் பிறந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் இவ்வமைப்பின் நிறுவனராவார். இவரது ஆன்மிகக் குருவாகிய சிறீல பக்தி சித்தாந்த சுவாமி என்பவரின் வேண்டுகோளின் பெயரால் சைதன்யர் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இவ்வமைப்பை இவர் உருவாக்கினார். வெற்றுக் கணம் கணக்கோட்பாட்டில், வெற்றுக் கணம் ("empty set") என்பது உறுப்புகளே இல்லாத தனித்ததொரு (unique) கணமாகும். அடிக்கோள் சார்ந்த கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணமானது, வெற்றுக் கண அடிக்கோள் மூலம் தரப்பட்டுள்ளது. ஏனைய கோட்பாடுகளில் வெற்றுக் கணம் இருப்பதை உய்த்தறிந்து தெரிந்து கொள்ளலாம். கணங்களுக்குரிய பண்புகள் எல்லாம் வெற்றுக் கணத்திற்கும் பொருந்தும் என்பதை எளிதாகக் காணலாம். வெற்றுக் கணத்தின் சில குறியீடுகள்: கடைசி இரு குறியீடுகளும் டேனிய மற்றும் நார்வீஜிய எழுத்தான Ø ன் அடையாளமாக 1939ல் பூர்பாக்கி குழுவால் (Bourbaki group) அறிமுகப்படுத்தப்பட்டன. (இந்த எழுத்துக்கும் கிரேக்க எழுத்தான Φ (phi) க்கும் எந்தவொரு தொடர்பு இல்லை). வெற்றுக் கணத்தின் பிற குறியீடுகள்: இரு கணங்கள் சமமானதாக இருக்க வேண்டுமெனில் அவற்றிலுள்ள உறுப்புகள் எல்லாம் சமமாக இருக்க வேண்டும். எந்தவொரு உறுப்பும் இல்லாமல் ஒரேயொரு கணம் மட்டுமே இருக்க முடியும் என்பதால் வெற்றுக் கணம் தனித்தன்மை கொண்டதாகும். "A" என்ற ஏதாவது ஒரு கணத்திற்கு: "A" மற்றும் வெற்றுக் கணத்தின் வெட்டு வெற்றுக் கணமாகும். வெற்றுக் கணத்தின் பண்புகள்: வெற்றுக் கணத்துக்கும் பூச்சியத்துக்கும் இடையேயுள்ள இணைப்பு, இயல் எண்களின் கணக் கோட்பாட்டு வரையறையிலும் தொடர்கிறது. இதில் இயல் எண்களைக் குறிப்பதற்கு கணங்கள் ஒப்புருக்களாகப் (model) பயன்படுத்தப்படுகின்றன. அதில், பூச்சியத்துக்கு வெற்றுக் கணம் ஒப்புருவாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு பண்பிற்கும்: மறுதலையாக, ஏதேனும் ஒரு பண்பு மற்றும் ஏதேனும் ஒரு கணம் "V" க்கு: உட்கணத்தின் வரையறைப்படி, வெற்றுக் கணமானது எந்தவொரு கணம், "A" -க்கும் உட்கணமாகும். ஏனென்றால் formula_1 கணத்தின் ஒவ்வொரு உறுப்பு "x" -ம், கணம் "A" -ல் இருக்கும். இது உண்மை இல்லையென்றால் "A" -ல் இல்லாத ஒரு உறுப்பு (குறந்தபட்சம் ஒன்றாவது) formula_1 -ல் இருக்க வேண்டும். அப்படி ஒரு உறுப்பு formula_1 _ல் இருக்குமானால் அது வெற்றுக் கணத்தின் வரையறையான உறுப்புகளே இல்லாத கணம் என்பதற்கு முரண்பாடாக அமையும். எனவே formula_1 கணத்தின் ஒவ்வொரு உறுப்பும் "A" -ல் இருக்கும் என்பதும் அதன் விளைவாக வெற்றுக் கணமானது, "A" கணத்தின் உட்கணமாகும் என்பதும் மெய்யாகிறது. எனினும் "formula_1 கணத்தின் ஒவ்வொரு உறுப்பும்" என்ற கூற்றானது, ஆணித்தரமான கருத்து கிடையாது, இது ஒரு பொருத்தமற்ற உண்மையாகும். பெரும்பாலும் இக்கூற்று, "வெற்றுக் கணத்தின் உறுப்புகளுக்கு அனைத்தும் மெய்யாகும்" என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. வெற்றுக் கணத்தின் மீதான செயல்கள் வழக்கமான செயல்கள் போன்றவை அல்ல. எடுத்துக்காட்டாக, இம்முடிவுகள் வெற்றுக் கணத்தின் உறுப்புகளை விட கூட்டல் மற்றும் பெருக்கல் செயல்களின் தன்மையைத்தான் கூறுகின்றன. உதாரணமாக, கூட்டலின் முற்றொருமை உறுப்பு 0, பெருக்கலின் முற்றொருமை 1 என்ற கருத்துதான் இச்செயல்களைப் பற்றிக் கூறும்போது முன்னிற்கிறது. மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் இது (நடுவண் அரசின் வரிப் பங்கீடல் அல்லாது) மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும் . அபராசித வர்ம பல்லவன் அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் I இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது. ஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை இது மாநில ஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும் கெழு கணிதத்தில் கெழு அல்லது குணகம் ("coefficient") என்பது ஒரு பல்லுறுப்புக்கோவை, தொடர் அல்லது கோவையின் உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை மாறிலிகளாகும். எனவே எண் கெழு அல்லது எண் குணகம் ("Numerical Coefficient") எனவும் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: மாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெரும்பாலும் கெழுக்கள் எண்களாகவே அமைந்தாலும் சிலநிலைகளில் அவை அளவுருக்களாகவும் (parameters) ( "a", "b", "c" ...) அமையலாம். எடுத்துக்காட்டு: இருபடிக் கோவையின் பொதுவடிவம்: இதிலுள்ள "a", "b", "c" மாறிகளைக் குறிப்பதில்லை ஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவை: இவ்வாறு ஒரு பல்லுறுப்புக்கோவையை எழுதும்போது, "x" இன் ஏதேனுமொரு படிக்குரிய உறுப்பு அப்பல்லுறுப்புக்கோவையில் இல்லையெனில், அதனை 0 ஐக் கெழுவாகக் கொண்ட உறுப்பாக எழுதிக்கொள்ளும் முறையைக் கையாள வேண்டும். formula_6 என்றவாறமையும் formula_7 இன் மிகப்பெரிய மதிப்பிற்கான கெழு formula_8 தலைக்கெழு அல்லது முன்னிலைக் கெழு எனப்படும். எடுத்துக்காட்டு: ஈருறுப்புத் தேற்றத்தின் விரிவிலமையும் கெழுக்கள் ஈருறுப்புக் கெழுக்களாகும். ஈருறுப்புக் கெழுக்கள் பாஸ்கலின் முக்கோணத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. நேரியல் இயற்கணிதத்தில் ஒரு அணியின் ஒரு நிரையின் தலைக்கெழு என்பது அந்நிரையில் காணப்படும் முதல் பூச்சியமற்ற உறுப்பாகும். எடுத்துக்காட்டு: அடிப்படை இயற்கணிதத்தில் மாறிலிகளாக உள்ள கெழுக்கள் பொதுவில் மாறிகளாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு: formula_12 களை அடுக்களமாகக் கொண்ட திசையன் வெளியிலுள்ள ஒரு திசையன் formula_13 இன் ஆட்கூறுகள் formula_14 அடுக்களத் திசையனின் கெழுக்களாக உள்ளன. மோரியர் மௌரியப் பேரரசு சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது. கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது. எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்படலில் உள்ளது. கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது. வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆரியப் பொருநன் ஆரியப் பொருநன் பாணன் என்பவனை மற்போரிட்டுத் தாக்கினான் என அகநானூறு குறிப்பிடுகிறது. பாணன் மார்பில் குத்தும்போது ஆரியப் பொருநனின் கையின் தோள்பட்டை மூட்டு நழுவி விட்டது. எனவே ஆரியப்பொருநன் வீழ்ந்து விட்டான். இது தெரியாமல் பாணன் மேலும் ஆரியப் பொருநனைத் தாக்கினான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கணையன் பாணனின் செயல் கண்டு நாணினான். பக்கத்து வீட்டுக்காரி தலைவியிடம் வந்தாள். தலைவியின் முகத்தையும் கூந்தலையும் தன் மெல்லிய விரல்களால் தடவிக்கொடுத்துக் கொண்டு "நானும் உனக்குத் தங்கை ஆவேன், தெரிந்துகொள்" என்றாள். இவள் தலைவனின் காதல் பரத்தை என்பது தலைவிக்குப் புரிந்து விட்டது. தலைவி தன் கணவன் செயலை எண்ணி நாணம் கொண்டாள். கணையன் நாணியது போல் தலைவி நாணினாள் என்கிறார் புலவர். அமிர்தகழி அமிர்தகழி இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். அமிர்தகழியானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கிராமமாகும். வங்கக்கடலோடு மட்டக்களப்பு வாவி சங்கமமாகும் இடத்தின் அயலில் உள்ளது அமிர்தகழி. மட்டுநகரில் இருந்து இருமைல் தொலைவில் உள்ளது. கிழக்கிலங்கையில் அதி பிரபலமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் இக்கிராமத்திலேயே அமைந்துள்ளது. ஆரிய அரசன் பிரகத்தன் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் புலவர் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலைப் பாடினார். இந்தப் பிரகத்தன் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தான். தமிழரின் களவு ஒழுக்கம் எப்போதும் திருட்டுத்தனமாகவே வாழும் வாழ்க்கை அன்று. அது திருமணம் செய்துகொள்ளும் கற்பு ஒழுக்கத்தில் முடியும் என்னும் அறநெறியை விளக்குவது குறிஞ்சிப்பாட்டு. இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. குர்த் வியூத்ரிச் குர்த் வியூத்ரிச் ("Kurt Wüthrich", பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க் என்னுமிடத்தில் பிறந்தார். பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார். ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் ("Richard R. Ernst", பிறப்பு: ஆகஸ்ட் 14, 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயல்வேதியியல் அறிவியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவர். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விண்டேர்தரில் பிறந்தார். எர்ன்ஸ்ட் 1957 ம் ஆண்டு ஜூரிச்சில் உள்ள நடுவண் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து இளநிலை வேதியியல் பட்டம் பெற்றார் பின்னர் 1962-ம் ஆண்டு இயற்வேதியியல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் மூனிக் மற்றும் சூரிக் பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எர்ன்ஸ்ட்க்கு 1991 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்நோர்ட்ஸ் (பிறப்பு: மே 16, 1950) ஐபிஎம் சூரிக் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் ஒரு இயற்பியலாளர். ஜெர்மனியில் உள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பிறந்தவர். உயர் வெப்ப மிகுகடத்து திறன் கண்டுபிடிப்புக்காக அறியபடுகிறார். இதற்காக அவர் 1987 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஹைன்றிக் ரோரர் ஹைன்றிக் ரோரர் ("Heinrich Rohrer", பிறப்பு ; 6 ஜூன் 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 1986ம் ஆண்டு வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ரோரெர் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலனில் பிறந்தார். இவர் 1951 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் (ஈடீஎச்), இல் சேர்ந்தார். இவர் 1961 இல் ரோஸ்-மேரி எக்கர் என்பவரை மணந்தார். ஆரிய அண்ணல் கனக, விசயர் என்னும் இரு இமயச்சாரல் மன்னர்களை ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடுகிறது. சேர அரசன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்யும் கல்லை ஆரிய அரசனை வென்று கொண்டுவந்தான். இமயமலையிலிருந்து சேரன் செங்குட்டுவன் கொண்டுவந்தான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தபோது தம் போன்ற மன்னர் அங்கு இல்லை என்று ஆரிய அண்ணல் கனகனும், விசயனும் தம்பட்டம் அடித்துக்கொண்டனராம். செங்குட்டுவன் அவர்களைப் போரில் வென்று கண்ணகி சிலைக்கான கல்லை அவர்கள் தலையில் சுமத்திக் கொண்டு வந்து, கங்கையாற்றில் நீராட்டி, தன் சேரநாட்டு இடும்பில்பறம் என்னுமிடத்துக்குக் கொண்டுவந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. கடம்பின் பெருவாயில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட குடியினர் கடம்பர். கடம்பின் பெருவாயில் அவர்களது ஊர். நன்னன் என்பான் ஒருவனும் அவனது முன்னோரும் கடம்பின்-பெருவாயில் நாட்டை ஆண்டுவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை நூலைப் பாடிய பெருவாயில் முள்ளியார் இந்த பெருவாயில் நகரில் வாழ்ந்த புலவர். பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இந்தக் கடம்பரை வென்றான். பலர் கூடிக் காப்பாற்றிய அவர்களது கடம்ப மரத்தை வெட்டி அந்த மரத்தில் தனது அரச-முரசைச் செய்துகொண்டான். லட்சத்தீவு பகுதில் வாழ்ந்துகொண்டு அரபிக்கடல் வழியே செல்லும் கப்பல்களைக் கொள்ளையடித்து வந்தவர் கடம்பர் என்பது அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்து. சான்றுகள் வேறு வகையில் கருதுமாறு அமைந்துள்ளன. பெருவாயின் முள்ளியார் பெருவாயில் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பெருவாயின்முள்ளியார். கடம்பின் பெருவாயில் என்னும் ஊரே இந்தப் பெருவாயில். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. வெண்பாயாப்பில் அமைந்த இந்த நூலில் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டும் என்று சில ஆசாரங்கள் கூறப்படுகின்றன. சேரநாட்டில் பார்பாரின் செல்வாக்கு மிகுந்திருந்திருந்ததைச் சேரர்கள்மீது பாடப்பட்ட பதிற்றுப்பத்து நூலில் காணமுடிகிறது. ஆசாரமும் இந்த வகையின. எனினும் இந்த நூலில் கூறப்படும் ஆசாரங்கள் வாழ்வியல் தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை. பிரிட்சு ஏபர் ஃபிரிட்சு ஏபர் ("Fritz Haber", டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர். இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரது மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். கிளாரா இம்மெர்வார் கிளாரா இம்மெர்வார் ("Clara Immerwahr", ஜூன் 21, 1870 - மே 2, 1915) ஒரு யூத-ஜெர்மானிய வேதியியலாளர். வேதியியலாளர் ஃபிரிட்ஸ் ஹெபரின் மனைவி. இவர் பிரெசுலாவு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற முதல் பெண். 1901 இல் ஃபிரிட்ஸ் ஹெபரைத் திருமணம் செய்து கொண்டார். பண்டுங் பண்டுங் (Bandung) இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தின் தலைநகரமாகும். இது 2007ஆம் ஆண்டில் 7.4 மில்லியன் மக்கள் தொகையின்படி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும் இரண்டாவது பெரும் நகரப்பகுதியாகவும் விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 768 மீ (2,520 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஜகார்த்தாவிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 140 கிமீ தொலைவில் உள்ளது. பிற இந்தோனேசிய நகரங்களை விட பண்டுங்கில் ஆண்டு முழுமையும் குளிர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆற்று முகவாயில் எரிமலைக் குன்றுகள் சூழ அமைந்துள்ளதால் இயற்கையான அரண் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டச்சு கிழக்கிந்தியக் கம்பனி தனது குடியேற்றத்தின் தலைநகரை பத்தாவியாவிலிருந்து பண்டுங்கிற்கு மாற்றியது. டச்சு காலனியவாதிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் சுற்றியுள்ள மலைகளில் தேயிலைத் தோட்டங்களையும் அவற்றை தலைநகருடன் இணைக்க நெடுஞ்சாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய குடியேறிகள் தங்களுக்கு ஓர் நகராட்சியை வேண்டி 1906ஆம் ஆண்டில் இதற்கான அனுமதி பெற்றனர். இதன்பின்னர் தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கான ஆடம்பர கேளிக்கை நகரமாக பண்டுங் மாறியது. ஆடம்பர தங்குவிடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் ஐரோப்பிய ஆடை அங்காடிகளுமாக "ஜாவாவின் பாரிசு" என்று கூறுமளவில் புகழ் பெற்றது. 1945ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்னர் விரைவான வளர்ச்சியைக் கண்டு இன்று பெருநகரப்பகுதியில் சதுரகிமீக்கு 16500 பேர் அளவிலான மக்களடர்த்தியையும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. உற்பத்தி வரி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டபின், அதன் விற்பனை மதிப்பில், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு உற்பத்தி வரியாக செலுத்தப்பட வேண்டும். பொருளை உற்பத்தி செய்பவர்கள், அதன் மதிப்பின் மீதான உற்பத்திவரியை அரசாங்கத்துக்கு செலுத்திவிட்டாலும் இந்த வரியை பொருளின் விலையுடன் சேர்த்து தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விடுவார்கள். எனவே இது "மறைமுக வரி" எனப்படுகிறது. தற்போது இந்தியாவில் பொதுவான உற்பத்தி வரி 10.3 % ஆக உள்ளது. ஒரு பொருளின் மீது உற்பத்தி வரி விதிக்கப் படவேண்டுமெனில், மூன்று நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஏற்றுமதி - இறக்குமதி வரி ஒரு நாட்டில் இருந்து பொருட்களை வேற்று நாட்டுக்கு ஏற்றுமதி செய்வோரும் பிற நாட்டில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வோரும் செலுத்த வேண்டிய வரிக்கு முறையே ஏற்றுமதி-இறக்குமதி வரி என்று பெயர். இறக்குமதி வரியை விதிப்பதற்கு பல நோக்கங்கள் (அரசாங்கத்துக்கு) இருக்கலாம். கதரீன் சில்லு (வாணவெடி) கதரீன் சில்லு ("Catherine wheel") என்பது ஒரு வகை வாணவெடி ஆகும். இது, வெடிமருந்து நிரப்பப்பட்ட ஒரு சுருள் வடிவக் குழாயாக இருக்கும் அல்லது அதன் நடுப்பகுதியூடாகச் செல்லும் ஊசியொன்றால் சரிவான நிலையில் பொருத்தப்பட்டுச் சுழலும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு வாணத்தைக் கொண்டிருக்கும். இதைப் பற்றவைக்கும் போது இது வேகமாகச் சுழல்வதனால் வாணத்தில் இருந்து வெளியேறும் வண்ணத் தீச்சுவாலையும், தீப்பொறிகளும் சுருள் வடிவான அழகுக் கோலத்தை உருவாக்குகின்றன. மத்தியகால ஐரோப்பாவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும், வதைப்பதற்கும் "உடைக்கும் சில்லு" என்னும் கருவி பயன்பட்டது. இக் கருவியிலேயே புனித கதரீன் உயிர்த் தியாகம் செய்தார். இதனால் இக் கருவிக்கும், அதைப் போன்ற இந்த வாணவெடிச் சில்லுக்கும் "கதரீன் சில்லு" என்னும் பெயர் ஏற்பட்டது. மால்ட்டா நாட்டில் கதரீன் சில்லு பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. அந்நாட்டிலுள்ள அசு-செபுக் என்னும் நகரம் இதற்குப் பெயர் பெற்றது. அங்கே ஒரு முழுத் தெருவையுமே இந்தக் கதரீன் சில்லுகளால் நிரப்பியிருப்பர். எளிமையான சிறிய சில்லுகளில் இருந்து, பற்சில்லுகளுடன் கூடிய சிக்கலான அமைப்புடையன வரை பல விதமான சில்லுகள் இங்கே இருக்கும். 2011, சூன் 18 ஆம் நாள் இது வரை இல்லாத அளவுக்கு 105 அடி விட்டம் கொண்ட மிகப்பெரிய கதரீன் சில்லு, மால்ட்டாவில் உள்ள இம்காப்பா நகரத்தில் உருவாக்கி இயக்கினர். அது ஒரு உலக சாதனையாக விளங்குகிறது. கதரீன் சில்லுகள் பல்வேறு கோலங்களில் அமைவது உண்டு. "ஐந்து சில்லு அமைப்பு" என்னும் வகையில், நடுவில் ஒரு சில்லும், அதைச் சுற்றி சிலுவை வடிவில் அமையும்படி நான்கு சில்லுகளும் இருக்கும். நான்கு மீட்டர்கள் வரை விட்டம் கொண்டனவும், 8 முதல் 10 வரையான சில்லுகளைக் கொண்டனவுமான வகை "விண்மீன் அமைப்பு" எனப் பெயர் பெறுகிறது. சோங்கிங் சோங்கிங் (Chongqing,முந்தைய எழுத்தாக்கம்:Chungking, ) சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். இது சீனாவின் ஐந்து தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. நிர்வாக நோக்கில் சீன மக்கள் குடியரசினால் நேரடியாக ஆட்சி செய்யப்படும் நான்கு நகராட்சிகளில் (மற்ற மூன்று நகராட்சிகள்:பெய்ஜிங், சாங்காய்,தியான்ஜின்) உள்நாட்டில் அமைந்துள்ள ஒரே நகராட்சியாகும். சிசுவான் மாநிலத்தின் பங்காக இருந்த இந்த நகரம் தனியான நகராட்சியாக மார்ச் 14, 1997 அன்று உருவாக்கப்படது. 2007ஆம் ஆண்டில் சோங்கிங் நகராட்சியின் மக்கள்தொகை 31.4 மில்லியனாக இருந்தது. இதன் ஆட்சிப்பகுதியில் 19 மாவட்டங்கள், 17 கௌன்டிகள் மற்றும் நான்கு தன்னாட்சி பெற்ற கௌன்டிகள் உள்ளன. 82,300 கிமீ² (31,800 மைல்²) பரப்பளவுள்ள இந்த நகராட்சி ஹைனன் மாநிலத்தை விடப் பெரியது. மக்கள்தொகையின்படி உலகின் மிகப்பெரும் நகராட்சியாகவும் இருக்கலாம்; பரப்பளவின்படியும் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கலாம். வாணவெடி வாணவெடி என்பது, ஒரு வகையான வெடிபொருள் வாணத்தொழில்நுட்பப் பொருள் ஆகும். இது அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பயன்படுகிறது. பொதுவாக இது வாணவெடிக் காட்சி, அல்லது வாணவேடிக்கை என்று அழைக்கப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைகின்றது. வாணவெடிக் காட்சி அல்லது வாண வேடிக்கை என்பது, வாணவெடிகளினால் உருவாகும் பலவகையான தோற்றங்களைக் காட்சிப்படித்தும் நிகழ்வு ஆகும். வாணவெடிப் போட்டிகளும் பல்வேறு இடங்களில் நிகழ்வது உண்டு. பல்வேறு வடிவங்களில் அமையும் வாணவெடிகள் பொதுவாக நான்கு விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, ஒலி, ஒளி, புகை, மிதக்கும் பொருட்கள் என்பன. வணவெடிகள், சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, வெள்ளி எனப் பல்வேறு நிறத் தோற்றங்களையும் கோலங்களையும் உருவாக்கும் வகையில், வாணவெடிகளை வடிவமைக்கலாம். உலகின் எல்லாப் பகுதிகளிலும் அரசியல், சமய, பண்பாட்டு நிகழ்வுகள் உட்படப் பல நிகழ்வுகளின்போது வாண வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. வாணவெடி ஏழாம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவின் நான்கு பெரிய கண்டுபிடிப்புக்களின் ஒன்றான வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே வாணவெடி உருவானது. தீய ஆவிகளை விரட்டுவது என்னும் நம்பிக்கையில் இவை முதலில் பயன்பட்டன. சீனப் புத்தாண்டு, நடு இலையுதிர்கால நிலவு விழா போன்ற கொண்டாட்டங்களின் போது வாண வேடிக்கைகள் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. இன்றும் உலகில் வாணவெடிகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி நாடாக விளங்குவது சீனாவே. வாணவெடிக் காட்சி நிகழும் இடத்தைப் பொருத்து வாணவெடிகள், நில வாணவெடிகள் அல்லது வான் வாணவெடிகள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப் படுகின்றன. இரண்டாவது வகையில் அவற்றை வானுக்கு உந்துவதற்கான வாணங்கள் வாணவெடிகளிலேயே இருக்கும், அல்லது எறிகணைவீசிகள் மூலம் அவற்றை வானில் செலுத்துவர். வாணவெடிகளில் உள்ள மிகப் பொதுவான அம்சம், வெடிமருந்து நிரப்பிய, தாள் அல்லது அட்டையினால் ஆன குழாய்கள் ஆகும். இத்தகைய பலவிதமான குழாய்கள் சேர்த்து அமைக்கப்படுவதனால், அவை எரியும்போது பல்வேறு நிறங்களும் வடிவங்களும் உண்டாகின்றன. வாணவெடிகளின் மிகப் பொதுவான வடிவம் வாணம் ஆகும். வாணங்கள் போரிலும் பயன்பட்டன. அஞ்சல்களை அனுப்புவதற்கும் வாணத்தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளதுடன் மாதிரி ஏவுகணைகளை உந்துவதற்கும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். வான் வாணவெடிகளைவிட, நில வாணவெடிகள் பெரிதாக விரும்பப்படுவதில்லை எனினும் நில வாணவெடிகள் மூலமும் அழகான தோற்றங்களை ஏற்படுத்தமுடியும். இதன்மூலம், எளிமையான சுழலும் சில்லுகள் முதல் முப்பரிமாணக் கோளங்கள் வரை உருவாக்குகின்றனர். அமேசான் கிண்டில் அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது. கிண்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் அகரவரிசை, வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கிண்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மின் மை (E Ink) என்ற வகையிலான திரையை இந்தக் கிண்டில் கருவி கொண்டிருப்பதால், தாளில் படிக்கும் கண்களை உறுத்தாத, இனிய அனுபவம் கிடைக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான ஜெப் பெசோஸ்தன்னுடைய ஊழியர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தார். அது உலகிலேயே ஒரு சிறந்த மின்னூல் படிப்பானை நமது போட்டி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன் நாம் உருவாக்க வேண்டும் என்பதாகும். அமேசான் இதற்கு இட்ட குறிப்பெயர் ஃபியோனா ஆகும். தெ கிண்டில் என்ற பெயரானது நிறுவனத்தின் ஆலோசகர்களான மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆய்வுக்கூடம் 126 (லேப் 126) தங்களின் கருவிக்கு ஒரு பொருத்தமான பெயரை வைக்குமாறு மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா போன்றவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் இதற்கு கிண்டில் எனப் பெயரிட்டனர். அதற்கு வெளிச்சத்தை உருவாக்குவது என்பது பொருளாகும். அறிவார்ந்த மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது என்ற பொருள் தரக்கூடிய உவமையாக இந்தப் பெயர் பொருத்தமானதாக இருந்ததாக அவர்கள் நினைத்தனர். 2007 ஆம் ஆண்டில் கிண்டில் வன்பொருளுடன் கிண்டில் கருவி வெளியானது. பின் 2009 இல் சற்றுப் பெரிய திரையுடன் கிண்டில் டிஎக்சு வெளியானது. பலவிதமான கிண்டில் கருவிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று விசைப்பலகையுடனும் மற்றொன்று தொடுதிரையோடு வெளியிடப்பட்டது. மேலும் கிண்டில் மென்பொருளுடன் கூடிய கைக் கணினி கிண்டில் தீ என்ற பெயரிலும், விலை குறைவான தொடுதிரை கொண்ட கிண்டில் 7என்ற கருவியும் வெளிவந்தது. கிண்டில் மின்னனு படிப்பான் என்பது வாசித்தலுக்கு மட்டும் என்ற ஒரே நோக்கோடு தான் வெளிடயிப்பட்டது. ஏனெனில் வேறு சில வசதிகள் அதில் இருந்தால் வாசிப்பதில் இருந்து கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனம், பல்வேறு தளங்களிலும் மற்றும் கருவிகளிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக் இயக்குதளம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளம், விண்டோசு செல்லிடத் தொலைபேசி போன்றவற்றில் செயல்படும் வகையில் கிண்டிலை உருவாக்கியுள்ளது. மேலும் அமேசான் மேகக் கணிமை பயனர் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் நவீன உலாவிகளின் மூலம் மின்னனு நூல்களைப் படிக்க முடியும். அமேசான் தனது முதல் மின்னனுப் படிப்பானை நவம்பர் 19,2007 இல் 399 அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியிட்டது. விற்பனை துவங்கிய ஐந்தரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. பின் ஐந்து மாதங்கள் வரையில் இருப்பில் இல்லை என்ற செய்தியே 2008 ஏப்ரல் இறுதி வரை நீடித்தது. பெப்ரவரி 10, 2009 இல் அமேசான் தனது இரண்டாம் தலைமுறை கிண்டிலான கிண்டில் 2 என்பதை அறிவித்தது. ஆனால் அது பெப்ரவரி 23, 2009 இல் விற்பனைக்கு வந்தது. உரையை ஒலியாக மாற்றக்கூடிய வசதியுடன் வந்தது. மேலும் இதில் 2 கிகாபைட்டு அளவிற்கு உள்ளக நினைவிடம் இருந்தது. அதில் 1.4 ஜிகாபைட்டு அளவிற்கு பயனர்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. முதல்தலைமுறை கிண்டிலின் எதிர்மறை தாக்கத்தால் கிண்டில் 2 இல் நினைவக அட்டைக்கான இடமின்றி கிண்டில்2 வந்தது. இது முதல் தலைமுறை கிண்டிலை விட மிகவும் மெல்லியதாக இருந்தது. கா. மாரிமுத்து கா. மாரிமுத்து (பிறப்பு: செப்டம்பர் 30 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர், பத்திரிகை துணை ஆசிரியராகவும், தமிழ் மலர் இதழின் துணையாசிரியராகவும் இருந்துள்ளார். 1972 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பார்க்கர் சுருள் பார்க்கர் சுருள் என்பது, சூரியனின் காந்தப்புலம் சூரிய மண்டலத்தில் விரிந்து செல்லும்போது உண்டாகும் வடிவத்தைக் குறிக்கும். சட்டக் காந்தத்தின் காந்தப்புலத்தின் வடிவத்தைப் போலன்றி, சூரியனின் விரிவுப் புலம் ஒரு எண்கணிதச் சுருளாக முறுக்கம் அடைந்துள்ளது. இது சூரியக் காற்றின் காந்தநீர்மவியக்கத் தாக்கத்தினால் ஏற்படுகிறது. சூரியக் காற்றையும் அதோடு தொடர்புடைய பல தோற்றப்பாடுகளையும், 1950களில், எதிர்வு கூறிய இயூசீன் பார்க்கரின் பெயரைத் தழுவியே இவ் வடிவத்துக்குப் பெயர் இடப்பட்டுள்ளது. கோளிடை ஊடகத்தில் சூரியனின் சுருள் வடிவக் காந்தப்புலத்தின் தாக்கம், சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய அமைப்பை உருவாக்குகிறது. சூரியக் காற்றின் பார்க்கர் சுருள் வடிவம் சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியனின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சூரியனில் இருந்து 10-20 வானியல் அலகுகளுக்கு அப்பால், காந்தப் புலம் சுருள்வளைய வடிவம் உடையதாக இருக்கும். சட்டக் காந்தத்தில் இருப்பதுபோல் வடமுனையில் இருந்து தென்முனைக்குச் செல்லும் முனையச் சார்பு கொண்டதாகவோ, சூரியன் சுற்றாவிட்டல் சூரியக் காற்றோட்டத்திலிருந்து எதிர்பார்க்கக்கூடிய உள் நோக்கிய அல்லது வெளி நோக்கிய ஆரைப் போக்கமைவு கொண்டதாகவோ இருப்பதில்லை. இந்தச் சுருள் வடிவம், சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியக் காந்தப்புலத்தின் வலிமையைக் கூட்டுகிறது. இந்தச் சுருள் வடிவம், புல் தரைச் சுழலும் நீர் தெளிப்பானிலிருந்து வெளிவரும் நீரின் கோலத்தை ஒத்தது. சூரியக் காற்று சூரியனிலிருந்து சீரான வீதத்தில் வெளியேறுகிறது. ஆனால் இந்தச் சூரியக் காற்றை வெளியேற்றும் சூரியனின் மேற்பரப்பில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் சூரியனின் சுழற்சியுடன் சேர்ந்து சுழல்கின்றன. இது அவற்றிலிருந்து வெளியேறும் சூரியக் காற்றை வெளியில் சுருள் வடிவில் அமைக்கிறது. தெளிப்பானிலிருந்து வரும் நீர்த்தாரையைப் போலன்றி, சூரியக் காற்று காந்தப் புலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, காந்தப் புலக் கோடுகள் சூரியக் காற்றுப் பொருளுடன் பிணைந்து இருப்பதால், காந்தப்புலக் கோடுகளும் சுருள் வடிவத்தைப் பெறுகின்றன. சூரியனின் நடுக் கோட்டைவிட அதன் துருவப் பகுதிகள் குறைந்த வேகத்துடன் சுற்றும் வேறுபாடான சூரியனின் சுழற்சிக்கு பார்க்கரின் சுருளும் காரணமாக இருக்கக்கூடும். சூரியனின் காந்தப் புலம் சூரியக் காற்றை நெறிப்படுத்துகிறது. அத்துடன், சூரியக் காற்று பெரும்பாலும் துருவப் பகுதியில் இருந்து வெளியேறுவதால் உருவாகும் சுருள் வடிவம், காந்த இழுவிசையினால், ஒரு முறுக்குப் பின்னிழுவையை உண்டாக்குகிறது. வூல்ஃபிராம் செயல்முறை விளக்கத் திட்டம் முகமது சுல்தான் (எழுத்தாளர்) முகமது சுல்தான் (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மைதீ சுல்தான் எனும் புனைப் பெயரில் எழுதிவரும் இவர், மலேசிய வானொலியின் முன்னாள் கலைஞராவார். மேலும் இவர் ஒரு சிறந்த வானொலி அறிவிப்பாளரும், தயாரிப்பாளரும், விளையாட்டு வருணனைகளில் வல்லவரும், பட்டி மன்றப் பேச்சாளரும், தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் ஈடுபாடுள்ள செயலாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ந. முகம்மது காசீம் ந. முகம்மது காசீம் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழவேள் தாசன், பாட்டாளித் தமிழன் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், ஒரு வணிகராவார். 1947 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் தமிழின எழுச்சிக் கட்டுரைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. முகம்மது யூசுப் (மலாயா) ஹாஜி. முகம்மது யூசுப் (பி: 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கவியோகி நாச்சிகுளத்தார் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர், சிற்றங்காடி வியாபாரியாவார். 1950 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வெண்பா, சதகம், மாலை, கோவை, பதிகம், பிள்ளைத்தமிழ் எனும் வடிவங்களிலும் அமைப்புகளிலும் அமைந்த இவை அருள் நூல்களும், நீதி நூல்களுமாகும். பல அரிய பழந்தமிழ்த் தத்துவ நூல்களை மறுபதிப்புச் செய்துள்ளார். ஆசான்சோல் ஆசன்சோல் (Asansol , ) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மலிந்த சுறுசுறுப்பான வணிக பெருநகர் பகுதியாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் மாநகராட்சி மன்றத்துடன் கூடியது. மாநிலத்தின் மேற்கு எல்லையில் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிடம் ஆகும். மிகுந்த தொழிலாளர்கள், உயர்ந்த தனிநபர் வருமானம், நல்ல கல்வி நிறுவனங்கள், போக்குவரது வசதிகள் என வளர்ச்சிக்கு வழிகோலும் காரணிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்புலத்தில் பாங்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களும் வடக்கு வங்காளமும் உள்ளன. ஒரிசா மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களுடனும் அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஓர் பிரித்தானிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் இடம் பெற்றுள்ள 11 இந்திய நகரங்களில் ஒன்றாக ஆசன்சோல் திகழ்கிறது. . ஆசன்சோல் என்ற பெயர் இரு பெயர்களின் கூட்டாகும்; "ஆசன்" என்பது தாமோதர் ஆற்றங்கரைகளில் காணப்படும் ஒருவகை மரத்தையும் "சோல்" என்பது மண் எனவும் குறிக்கும். இணையாக கனிமங்கள் நிறைந்த பூமி எனப் பொருள் கொள்ளலாம். சீ. முத்துசாமி சீ. முத்துசாமி (பிறப்பு: பிப்ரவரி 22 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஆசிரியராவார். 1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ராணா ராணா (; ) வெளிவர இருக்கும் புராண, அதிரடி திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார். சிங்கப்புலி (விலங்கு) சிங்கப்புலி அல்லது லைகர் ("Liger") என்பது ஆண் சிங்கம் ("Panthera leo") மற்றும் பெண் புலி ("Panthera tigris") இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் "பந்தேரா" எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது. எர்வின் நேயெர் எர்வின் நேயெர் ("Erwin Neher", பிறப்பு: மார்ச் 20, 1944) ஒரு செருமானிய உயிரி இயற்பியலாளர். நேயெர் 1963 முதல் 1966 வரை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1966 இல், இவர் அமெரிக்காவில் படிக்க ஒரு ஃஃபுல்ப்ரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை பேர்ற் சக்மனுடன் சேர்ந்துப் பெற்றார். பெர்மாவின் சுருள் பரவளைவுச் சுருள் என்று அழைக்கப்படும் பெர்மாவின் சுருள் (Fermat's spiral) என்பது ஒரு வகை ஆர்க்கிமிடியச் சுருள் ஆகும். முனைவாள்கூற்று முறையில் இதன் சமன்பாடு: மிகப் பொதுவான பேர்மட்டின் சுருள் என்னும் சமன்பாட்டில் அமையும். சூரியகாந்தி, டெய்சி போன்ற தாவரங்களில் வட்டு இலையடுக்கத்தில், சுருள் வலை ஃபிபொனாச்சி எண்களில் அமைகிறது. இங்கே சுருள்களின் வடிவங்கள் அடுத்தடுத்து உருவாகும் கூறுகளின் வளர்ச்சியில் தங்கி உள்ளது. முதிர்ந்த வட்டு இலையடுக்கத்தில், எல்லாக் கூறுகளும் சமமான அளவில் இருக்கும்போது, அது சுருள் பேர்மட்டின் சுருளாக அமையும். பெருக்குத் தொடர் கணிதத்தில், பெருக்குத் தொடர் என்பது, ஒவ்வொரு எண்ணுக்கும் அடுத்து வரும் எண், முதல் எண்ணைச் சுழி (சைபர்) அல்லாத மாறா எண் ஒன்றினால் பெருக்கி வரும் எண்ணாக அமையும் எண்களின் தொடர் ஆகும். இந்த மாறா எண் பொது விகிதம் எனப்படும். பெருக்குத் தொடரைப் பெருக்கல் விருத்தி எனவும் அழைப்பதுண்டு. 2, 6, 18, 54, ... என்னும் தொடர் 3 ஐப் பொது விகிதமாகக் கொண்ட ஒரு பெருக்குத் தொடருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் பெருக்கி அடுத்துவரும் எண் பெறப்படுகின்றது. இது போலவே 1/2 ஐப் பொது விகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடருக்கு, 10, 5, 2.5, 1.25, ... என்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பெருக்குத் தொடர் ஒன்றின் பொது வடிவம் பின்வருமாறு அமையும். இதில் r பொது விகிதம், a முதல் எண். இலங்கை அஞ்சல் துறை இலங்கை அஞ்சல் துறை என்பது இலங்கை அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இலங்கை முழுவதும் 609 அஞ்சல் அலுவலகங்களும், 3440 உப அஞ்சல் நிலையங்களும், 536 முகவர் அஞ்சல் நிலையங்களும், 46 அஞ்சல் கடைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் திணைக்களத்தின் வழமையான சேவைகளான அஞ்சல் முத்திரை, முத்திரையிடப்பட்ட பொருட்கள், எழுதுகருவிகள், தொலைபேசி அழைப்புக்கள், பிரித்தானிய அஞ்சற் கட்டளை, தொகை அஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல், விரைவு அஞ்சல் சேவை, அஞ்சல் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள், அஞ்சல் பெட்டி, அஞ்சல் பை சேவைகள், தந்திச் சேவைகள், தொலைநகல், போட்டோ பிரதிகள், பதிவஞ்சல், சாதாரண அஞ்சல் சேவைகள், உள்நாட்டு வெளிநாட்டு பொதிச் சேவைகள், காப்புறுதி அஞ்சல் சேவைகள், அஞ்சல் அறிமுக அட்டை, புதினப் பத்திரிகைகள் பதிவு செய்தல் என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன. இலங்கையில் 1500களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும், 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும் அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல் துறையில் துரித வளர்ச்சியும், அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன. கூட்டுத் தொடர் கணிதத்தில், கூட்டுத் தொடர் அல்லது எண்கணிதத் தொடர் என்பது அடுத்தடுத்து வரும் "எந்த" இரு எண்களுக்கு இடையே "ஓரே ஓர் எண்" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண்கள். எடுத்துக்காட்டாக 3, 5, 7, 9, 11, 13, … என்பது ஒரு கூட்டுத்தொடர், ஏனெனில் அடுத்தடுத்து வரும் "எந்த" இரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இங்கே 2. அதாவது, இத்தொடரை 3, 3+2, (3+2)+2... என்று எழுதலாம்; அடுத்தடுத்து, ஒரு வரிசையில் வரும் எண்களை அறிய, ஓர் உறுப்பின் முன்னுள்ள எண்ணுடன் 2 ஐச் சேர்த்தால் கிட்டும். ஒரு கூட்டுத் தொடரில் அடுத்தடுத்து வரும் "எந்த" இரண்டு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு "பொது வேறுபாடு" எனப்படும். கூட்டுத்தொடரில் வரும் முதல் எண் formula_1 என்றும், பொது வேறுபாடு "d" என்றும் கொண்டால், வரிசையில் "n"-ஆவது உறுப்பு என்ன என்பதைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: இதையே, இன்னும் பொதுமைப் படுத்தி, எனலாம். இந்தக் கூட்டுத் தொடர் முடிவிலியாய்ப் போகலாம் எனினும், "வரம்புடைய" எண்ணிக்கையில் உறுப்புகள் கொண்ட ஒரு கூட்டுத்தொடரை, "வரம்புள கூட்டுத் தொடர்" என்று அழைப்பர் அல்லது பொதுவான சொல்லான கூட்டுத்தொடர் என்றும் அழைப்பர். ஒரு கூட்டுத்தொடர் எப்படி வளர்கின்றது என்பது, அதன் பொதுவேறுபாட்டு எண்ணைப் பொருத்துள்ளது. பொதுவேறுபாட்டு எண்ணானது, ஒரு வரம்புள்ள கூட்டுத்தொடரின் உறுப்புகளைக் கூட்டினால், அதன் "கூட்டல் மதிப்பு" அல்லது "கூட்டுத்தொகை" என்ன என்பதைக் கணிக்கலாம். ஒரு கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை formula_4 எனக் குறிப்பதாகக் கொண்டால், இந்தக் கூட்டுத்தொகையை இருவேறு விதமாக எழுதலாம் (இப்படி இருவேறு விதமாகக் கணக்கிடும் முறை, நிறுவலுக்குப் பயன்படும் ஒரு தனி முறையாகவும் கொள்ளப்படுகின்றது): மேலே உள்ளதில், முதல் தொடரானது formula_1 ஓடு d, 2d, 3d என்று படிப்படியாகக் "கூட்டிக்கொண்டே" போவது, ஆனால் இரண்டாவது தொடரானது, கடைசி உறுப்பாகிய formula_8 இல் இருந்து (n-1)d, (n-2)d என்று படிப்படியாக "கழித்துக்கொண்டே" செல்வது. இப்படியாக மேலே உள்ளவாறு இருவேறு விதமாக எழுதப்பட்ட இரண்டு கூட்டுத்தொடர்களின் கூட்டுத்தொகைகளைக் கூட்டினால், பொதுவேறுபாடான "d" ஒன்றோடு ஒன்று "கழிபட்டுப்" போகின்றது: சமன்பாட்டின் இருபுறத்தையும் இரண்டால் வகுத்தால், கூட்டுத்தொகையை அடையலாம்: இன்னொரு மாற்று வடிவத்தைப் பெற, மீண்டும் formula_11 என்பதை உள்ளே நுழைக்கலாம்: 499 கி.பி யில் இந்திய வானியல், கணித வல்லுநர் ஆரியபட்டா என்பவர் தன்னுடைய ஆரியபட்டியம் என்னும் நூலில் இம்முறையைத் தந்துள்ளார். (section 2.18) எடுத்துக்காட்டாக, கூட்டுத்தொடர் ஒன்றை "a" = 3 + ("n"-1)(5) எனக் குறித்தால், இதன் 50 உறுப்புகளின் கூட்டுத்தொகை: ஒரு வரம்புள கூட்டுத்தொடரின் உறுப்புகளைப் பெருக்கினால் வரும் பெருக்குத்தொகையைக் கணிக்கலாம். முதல் உறுப்பு அல்லது உருப்படி "a" என்றும், பொதுவேறுபாடு "d" என்றும், மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை "n" என்றும் கொண்டால், அந்த n உறுப்புகளின் பெருக்குத்தொகை முடிவுறும் வாய்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: மேலுள்ளவற்றில், formula_15 என்பது போக்காமர் குறியீட்டில் காட்டப்படும் இயல் தொடர்பெருக்கம் (rising factorial in Pochhammer symbol), அடுத்து formula_16 என்பது காமா சார்பியம். (இந்த வாய்பாடு formula_17 என்பது எதிர்ம எண்ணாகவோ சுழியாகவோ இருந்தால் செல்லாது என்பதையும் குறிப்பிட வேண்டும்). இது ஓர் உண்மையைப் பொதுமைப் படுத்தும் முறையால் வருவது: தொடரின் பெருக்குத்தொகை formula_18 என்பது தொடர்பெருக்கம் (factorial) formula_19, அதன் பின் m மற்றும் n என்னும் நேர்ம இயல் எண் கூட்டுத்தொடரின் பெருக்கம்: மேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் கொண்டால், n ஆவது உறுப்பை "a" = 3 + ("n"-1)(5) எனக்கொண்டால் 50 ஆவது உறுப்புவரை பெருக்கினால் இப்பொழுது கூட்டுத்தொடர் ஒன்றைக் கருதுக: formula_23 இதில் முதல் மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை formula_26 இது கீழ்க்காணும் வடிவில் உள்ளது: ஆகவே, formula_28 உறுப்புகளின் இன் பெருக்குத்தொகை: இதற்கு முடிவுதரும் தீர்வுகள் இல்லை. ஒரு கூட்டுத் தொடரின் திட்டவிலக்கத்தைக் கீழுள்ள வாய்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்: வாய்பாடுகள்: பிரியா ராய் பிரியா ராய் ("Priya Rai", பிறப்பு: டிசம்பர் 25, 1977) என்கின்ற பிரியா அஞ்சலி ராய் இந்தியாவில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை. பிரியா ராய் இரண்டு வயதில் புது தில்லியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். மினசோட்டா மாநிலத்தில் மினியாப்பொலிஸ் நகரில் வாழ்ந்து வந்தார். இவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கல்வியைத் தொடராமல் வயது வந்தோர்க்கான மாடலானார். பிரியா ஆடை அலங்காரம் மற்றும் நீச்சலுடை விளம்பர மாடலாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் போர்னோகிராபி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கார்மென் லுவானா கார்மென் லுவானா ("Carmen Luvana", பி. 23 ஆகஸ்ட் 1981) நியூயார்க் நகரில் பிறந்த முன்னாள் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை. இவர் 23 ஆகஸ்ட் 1981 நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தார். லுவானா ஐந்து இருக்கும்போது குடும்பம் ரிக்கோக்கு குடிபெயர்ந்தது. இவர் 18 வயதில், ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி நகருக்குக்கு குடிபெயர்ந்தர் பின்னர் மியாமி ஆடைஅவிழ்ப்பு ஆட்ட நிறுவனமொன்றில் ஒரு நடன கலைஞராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். லுவானா 2001 ம் ஆண்டு ஆபாச துறையில் நுழைந்தார். பூபேன் அசாரிகா பூபேன் அசாரிகா (Bhupen Hazarika, அசாமிய மொழி: ভূপেন হাজৰিকা, "பூபேன் ஹசோரிகா") ( செப்டம்பர் 8, 1926 நவம்பர் 5, 2011) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். முனைவர் பூபேன் அசாரிகா இந்தி மற்றும் அசாமிய திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசையில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். அவரது மாநிலமான அசாமிலும் அண்டை மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் பெருமதிப்புமிக்கவராக புகழ் பெற்றுள்ளார். அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக அமைந்துள்ளார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக பொறுப்பாற்றி உள்ளார். அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான "ஜோய்மோதி" என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான "இந்திரமாலதி" என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார். 1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் "இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை" ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார். பாடகராக அவரது ஆழமான கரகரப்புக் குரலுக்காகவும் மொழி உச்சரிப்புக்காகவும் அறியப்பட்டார்; பாடலாசிரியராக கவித்துவம் நிறைந்த வரிகளுக்காகவும் உவமைகள் நிறைந்த உள்ளடக்கத்திற்காகவும் அறியப்பட்டார்; இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார். தனது தாய்மொழியான அசாமிய மொழி தவிர இந்தி, வங்காள மொழி எனப் பிற மொழிகளிலும் பாடியுள்ளார். பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது. தன்பாத் தன்பாத் (Dhanbad, , ) சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் நகரமாகும். நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால் இது "இந்தியாவின் நிலக்கரித் தலைநகர்" எனவும் அறியப்படுகிறது. உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் 79வது நிலையில் உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி, தன்பாத் இந்தியாவின் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான 35 நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் கோட்டங்களில் வருமான ஈட்டலில் மும்பை கோட்டத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது. தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் டாடா ஸ்டீல், பாரத் கோக்கிங் கோல் லிட்., ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட்., இந்திய இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (IISCO) ஆகியவற்றிற்கு சொந்தமானவை. நிலக்கரி அகழ்ந்தெடுத்தல், கழுவுதல், சூளைக்கரி தயாரித்தல் ஆகியன முகனையான தொழில்களாகும். இந்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் பாரத் கோக்கிங் கோல் லிட்.மற்றும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட். கூடுதலான சுரங்கங்களை இயக்கி வருகின்றன. இவை பெரும்பாலும் திறந்தநிலைச் சுரங்கங்களாகும். தனியார்த்துறை டாடா ஸ்டீல் நிலத்தடி சுரங்கங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்காக குடியிருப்பு நகர்களை அமைத்துள்ளன. பிலாய் பிலாய் அல்லது பிலாய் நகர் (Bhilai, இந்தி:भिलाई) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலதில் துர்க் மாவட்டத்தின் நிர்வாக தலைமையிட நகரமாகும். 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 753,837 ஆகும். 11 கிமீ தொலைவிலுள்ள துர்க்குடன் இணைந்த துர்க்-பிலாய் பெருநகரின் மக்கள்தொகை 2005ஆம் ஆண்டில் 1.062 மில்லியனாக இருந்தது. மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு மேற்கே தொலைவில் ஹௌரா–மும்பை இருப்புப் பாதையில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆறிலும் அமைந்துள்ளது. இங்குள்ள பிலாய் எஃகு தொழிற்சாலை பொகாரோ எஃகுத் தொழிற்சாலைக்கு அடுத்த மிகப் பெரிய தொழிற்சாலையாகும். 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்த ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா தொழிற்சாலை 1959ஆம் ஆண்டு சோவியத்-இந்திய கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. பிலாய்க்குத் தெற்கே சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளும் பள்ளிகளும் இந்த ஆலை நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு முதல் பிலாய் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மூன்று தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன: அண்மையிலுள்ள துர்க் தொடர்வண்டி நிலையமும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல விரைவு தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. உள்ளூரில் டெம்போ எனப்படும் மூன்று சக்கர வண்டிகள் நம்பகமான போக்குவரத்து வசதிகளுக்குப் பன்படுத்தப்படுகின்றன. டோரி பிளாக் டோரி பிளாக் (Tori Black, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1988) ஓர் ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை. இவர் 2007 ம் ஆண்டு போர்னோகிராபி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குவாலியர் குவாலியர் (Gwalior) (இந்தி/மராத்தி: ग्वालियर ) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு தெற்கே தொலைவிலும் மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து வடக்கேயும் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரமும் இங்குள்ள கோட்டையும் பல வட இந்திய பேரரசுகளின் மையமாக விளங்கியுள்ளன. குவாலியர் நகரம் இதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்திற்கு நிர்வாகத் தலைமையகமாக விளங்குகிறது. குவாலியர் கோட்டை பலமுறை கைமாறியுள்ளது; எட்டாவது நூற்றாண்டில் டோமராக்களிடமிருந்து முகலாயர்களுக்கும் பின்னர் சிந்தியாக்களின் கீழ் மராத்தாக்களுக்கும் (1754) கைமாறி குறைந்த காலம் ஜான்சியின் லட்சுமி பாயிடமும் தாத்தியா டோப்பிடமும் பிரித்தானியர்களிடமும் இருந்தது. இங்கு பல சிறப்புமிகு கல்விக்கூடங்கள் உள்ளன; இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (IIITM), இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக் கழகம், சிந்தியா பள்ளி, மாதவ் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கழகம், இலட்சுமிபாய் தேசிய உடலியல் கல்வி நிறுவனம் ஆகியன இவற்றில் சிலவாகும். ராஜாவின் பார்வையிலே ராஜாவின் பார்வையிலே 1994ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், விஜய் நடித்துள்ளனர். ஜானகி செளந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். ஜெனவீவ் ஜூலி ஜெனவீவ் ஜூலி ("Jenaveve Jolie", பிறப்பு: ஜூன் 4, 1984) ஒரு அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை, நிர்வாண மாடல் மற்றும் கவர்ச்சி நடன கலைஞர். இவர் 2004 ம் ஆண்டு பாலுணர்வுக் கிளர்ச்சிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு முன் ஒரு அசைவ உணவகத்தில் பணியாற்றி வந்தார். இவர் 300 க்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். 2009 ல் இவர் ஆண்டொராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தார். வான்மதி (திரைப்படம்) வான்மதி 1996 பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்துள்ளனர். 1996 வது ஆண்டில் பொங்கலன்று வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய அகத்தியனும், இப்படத்தின் நாயகன் அஜித் குமாரும் மீண்டும் காதல் கோட்டை திரைப்படத்தில் இணைந்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பரேலி பரேலி (Bareilly, , ) வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் முகனையான நகரமாகும். ராம்கங்கா ஆற்றங்கரையில் ரோகில்காண்ட் என்ற புவியியல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் பரேலி கோட்டத்தின் தலைநகருமாகும். மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து வடக்கே தொலைவிலும் நாட்டுத் தலைநகர் புது தில்லியிலிருந்து கிழக்கே தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரம் பிரம்பு அறைகலன்களுக்குப் புகழ்பெற்றது. தவிர பருத்தி, தானியங்கள் மற்றும் சர்க்கரை வணிகத்தில் முதன்மை மையமாக உள்ளது. இப்பகுதியில் வணிகம், நிதி, பண்பாடு, கலை, ஆய்வு, கல்வி என பல்வேறுத் தளங்களிலும் இந்த நகரத்தின் தாக்கம் உள்ளது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 699,839 ஆகும். கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் இரண்டாம் உலகப் போரில் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்முனை ("East African Front") என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான், சொமாலியா, கென்யா, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். ஜூன் 10, 1940 - நவம்பர் 27, 1941 காலகட்டத்தில் இங்கு அச்சுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் ("East African Campaign") என்றழைக்கப்படுகின்றன. பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையின் கீழிருந்த இத்தாலி 1930களில் மற்ற ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளைப் போல தனக்கும் ஒரு காலனியப் பேரரசை உருவாக்கத் தீர்மானித்தது. 1936இல் எத்தியோப்பியாவைக் கைப்பற்றி இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரிட்ரிய காலனிகளை அதனுடன் ஒன்றிணைத்து “கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியப் பேரரசு” என்ற பெயரில் ஒரு காலனிய அரசை உருவாக்கியது. 1939ல் ஐரோப்பாவில் போர் மூண்டபின்னர் பிரித்தானியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளைக் கைப்பற்ற இத்தாலி முயன்றது. ஜூன் 10, 1940 இல் இத்தாலி எகிப்து மற்றும் பிரித்தானியக் கிழக்கு ஆப்பிரிக்கக் காலனிகளின் மீது படையெடுத்தது. ஜூலை 4 ஆம் தேதி கென்யா மற்றும் சூடானைத் தாக்கிய இத்தாலியப் படைகள் அவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவை பிரித்தானிய சோமாலிலாந்தின் மீது படையெடுத்தன. சில வாரகால சண்டைக்குப் பின் பிரித்தானியப் படைகள் பின் வாங்கின; சொமாலிலாந்து இத்தாலி வசமானது. பிரித்தானிய சோமாலிலாந்தை மீட்க ஜனவரி 1941 இல் பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகள் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதல் மூன்று திசைகளிலிருந்து நடைபெற்றது. வடக்கில் லெப்டினண்ட் ஜெனரல் வில்லியம் பிளாட் தலைமையிலான ஒரு படை எரிட்ரியா மற்றும் சூடான் வழியாகத் தாக்கியது; தெற்கில் ஆலன் கன்னிங்காம் தலைமையிலான ஒரு படை கென்யா வழியாக சொமாலிலாந்து மீது படையெடுத்தது. இவை தவிர கிழக்கிலிருந்து கடல்வழியாக ஒரு படைப்பிரிவு சொமாலியாலாந்து மீது நீர்நிலத் தாக்குதல் நடத்தியது. எத்தியோப்பியாவின் உள்நாட்டு எதிர்ப்புப் படைகள் அந்நாட்டு மன்னர் முதலாம் ஹைலி செலாசி தலைமையில் இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தாக்கின. இவ்வாறு பலமுனைகளிலிருந்து நடைபெற்ற தாக்குதல்களை சமாளிக்க இயலாத இத்தாலியப் படைகள் தோல்வியடைந்தன. ஐந்து மாத கால சண்டைக்குப் பின், கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும் இத்தாலியக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டன. அடுத்த சில மாதங்களில் எஞ்சியிருந்த பகுதிகளும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. இத்தாலியின் முன்னாள் காலனிகள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. ஜியாசூ விரிகுடா பாலம் ஜியாசூ விரிகுடா பாலம் (Jiaozhou Bay Bridge) சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது. இந்தப் பாலத்திற்கு மூன்று உள்ளே/ வெளியே வாயில்கள் உள்ளன. இது நீளமுள்ளது. கிங்டோவிற்கும் ஹுங்டோவிற்குமிடையேயான தொலைவை ஆகக் குறைத்தும், பயண நேரத்தை பாதியாக (40 நிமிடங்களிலிருந்து 20ஆக) குறைத்தும் உள்ளது. சூன் 30, 2011 அன்று திறக்கப்பட்ட இந்தப் பாலம் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் நீரின் மீதான சாலைப்போக்குவரத்து பாலங்களில் மிக நீளமான பாலமாக இடம் பெற்றுள்ளது. பேரி வுட் பேரி வுட் ("Barry Wood", பிறப்பு: திசம்பர் 26 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 357 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 297 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1972 - 1978 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரொக்லீ வில்சன் ரொக்லீ வில்சன் ("Rockley Wilson ", பிறப்பு: மார்ச்சு 25 1879, இறப்பு: சூலை 21 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 136 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் விலீ பீட்டர் விலீ ("Peter Willey", பிறப்பு: திசம்பர் 6 1949), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 559 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 458 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1986 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இவர் 1977 - 1986 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். நீல் வில்லியம்ஸ் நீல் வில்லியம்ஸ் ("Neil Williams ", பிறப்பு: சூலை 2 1962, இறப்பு: மார்ச்சு 27 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 255 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பொப் வில்லிஸ் பொப் விலிஸ் ("Bob Willis ", பிறப்பு: மே 30 1949), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 64 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 308 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 293 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 - 1984 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இவர் 1973 - 1984 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிளேம் வில்சன் கிளேம் வில்சன் ("Clem Wilson", பிறப்பு: மே 15 1875, இறப்பு: பிப்ரவரி 8 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 52 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொன் வில்சன் டொன் வில்சன் ("Don Wilson ", பிறப்பு: ஆகஸ்ட் 7 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 422 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 - 1971 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆர்த்தர் வுட் (1898) ஆர்த்தர் வுட் ("Arthur Wood", பிறப்பு: ஆகத்து 25 1898 - இறப்பு: ஏப்ரல் 1 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 420 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். உடைக்கும் சில்லு உடைக்கும் சில்லு (Breaking Wheel) என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான சில்லு வடிவம் கொண்ட ஒரு கருவி ஆகும். தண்டனை பெற்றவர்களை இச்சில்லில் கட்டி பரத்தாலான கோல்களால் அடித்துக் கொல்வர். புனித கதரீன் இதிலேயே உயிர்த்தியாகம் செய்தமையால் இதைக் கதரீன் சில்லு எனவும் அழைப்பதுண்டு. ஐரோப்பாவில் மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும் இது பயன்பாட்டில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த வழக்கம் நீடித்தது. இது பல ஆரைக் கால்களைக் கொண்ட பெரிய வண்டிச் சில்லை ஒத்தது. சில சமயங்களில் தண்டனை விதிக்கப்பட்டவரைச் சில்லில் கட்டி மரக்கோல்களால் அல்லது நீளமான இரும்புக் கம்பிகளால் அடிப்பர். இதற்கு மாற்றாகச் சில வேளைகளில் தண்டனை பெற்றவரை இரண்டு மரவளைகளை "X" வடிவில் பொருத்திய "புனித ஆன்ட்ரூவின் சிலுவை"யில் கட்டி அடித்தபின் சிதைந்த உடலைச் சில்லில் கட்டிக் காட்சிக்கு வைப்பர். சில மரண தண்டனைகளின் போது தண்டனைக்கு உள்ளாகுபவர்களின் கால் கைகளை மரக்குற்றிகளில் உயர்த்தி வைத்தபின்னர் அவை முறியும்படி அவற்றின் மீது சில்லால் அடிப்பதும் உண்டு. பிரான்சில், தண்டனை பெற்றவரை வண்டிச் சில்லில், கால் கைகள் சில்லின் ஆரைக்கால்களின் மீது பொருந்துமாறு வைத்து வண்டிச் சில்லை மெதுவாகச் சுழல விடுவர். பின்னர், பெரிய சம்மட்டிகள் அல்லது இரும்புக் கோல்களைப் பயன்படுத்தி எலும்புகள் முறியுமாறு செய்வர். இது ஒவ்வொரு காலுக்கும் கைக்கும் பல தடவைகள் திருப்பித் திருப்பிச் செய்யப்படும். சில வேளைகளில் தண்டனை பெற்றவரின் மார்பிலும், வயிற்றிலும் இறக்கும்வரை அடிக்குமாறு பணிப்பதும் உண்டு. இது "கருணை அடி" எனப்படும். இந்த அடி இல்லாவிட்டால் தண்டனைக்கு உள்ளானவர் இரத்தப் போக்காலும், தாகத்தாலும் இறக்கும்வரை பல மணி நேரங்கள் அல்லது பல நாட்கள் கூட உயிருடன் இருந்து வருந்தவேண்டி இருக்கும். சில தருணங்களில் சிறப்புக் கருணையின் பேரால் இரண்டு மூன்று அடிகளுக்குப் பின்னர் கழுத்தை இறுக்கிக் கொல்லுமாறு பணிப்பதும் உண்டு. கை கால்கள் உடைந்து குற்றுயிராகக் கிடக்கும் உடல்களின் கால் கைகளைச் சில்லின் ஆரைக் கால்களிடையே பின்னி, உடலைப் பறவைகள் தின்பதற்கு ஏதுவாக, அச் சில்லை உயரமான கம்பத்தில் ஏற்றிவிடுவர். புனித ரோமப் பேரரசில், கொடுமையான கொலைக் குற்றம் செய்தவர்களுக்கே "உடைக்கும் சில்லில்" தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் மிகக் கடுமையாக இல்லாவிட்டால் "மேலிருந்து கீழ்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்பட்டது. இதன்படி கழுத்தில் அடிக்கத்தொடங்குவர். இதனால் முதல் அடியிலேயே இறப்பு நிகழும். கடுமையான குற்றங்களுக்குக் "கீழிருந்து மேல்" முறையில் அடிக்குமாறு பணிக்கப்படும். இதன்படி அடி காலில் இருந்து தொடங்கும். எவ்வாறு, எத்தனை அடிகள் அடிக்கவேண்டும் என்பதைத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பர். தொல்காப்பியம் எச்சவியல் செய்திகள் தமிழின் இலக்கணம் கூறும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுப்பாக உள்ளது. ஒவ்வொரு பகுப்பிலும் 9 உட்பிரிவுகள் உள்ளன. எச்சவியல் சொல்லதிகாரத்தில் ஒன்பதாவது உட்பிரிவு. முதலாவது கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கிய அமைப்பை விளக்குகிறது. அடுத்து வரும் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய மூன்றும் பெயர் எழுவாயாக நின்று பயனிலை கொள்ளும்போது வேறுபடும் வேற்றுமைப் பாங்கினை உணர்த்துகின்றன. அடுத்து சொல் நான்காக வகைப்படுத்தப்பட்டு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் பகுப்புகளில் விளக்கப்படுகின்றன. ஒன்பதாவதாக உள்ள இந்த இயலில் மொழியானது செய்யுள், வழக்கு என்று பாகுபடுத்தப்பட்டு விளக்கப்படுகிறது. மேலும் முந்தைய 8 இயல்களில் அடங்கி வராத செய்திகளும் கூறப்படுகின்றன. விளக்கங்கள் இவ்வியலின் நூற்பா வரிசையெண்ணுடன் அமைக்கப்படுள்ளன. மேற்கோள்கள் பெரும்பான்மை தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைத் தழுவித் தரப்பட்டுள்ளன. சேனாவரையர் காட்டும் இடம்பெற்றுள்ளது. குறிப்பு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றைச் செய்யுள் ஈட்டிக்கொள்ளும் -1- இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கினை ஒட்டிப் பொருள் பொருள் பயக்கும் -2- திரிசொல் என்பது 2 வகை -3- திசைச்சொல் செந்தமிழ் சேர்ந்த 12 நிலத்தினும் பொருள்குறிப்பினை உடையவை -4- வடசொல் என்பது வட-எழுத்தை நீக்கித் தமிழில் எழுதப்படுவது -5- வடசொல் சிதைந்தும் வரும் -6- வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல், நீட்டல், குறுக்கல் – ஆகியவை நான்குவகைச் சொல்லிலும் செய்யுளில் நாட்டப்படும் -7- மொழிபுணர் இயல்பு 4 வகை. பெயரிலும், வினையிலும் சொற்களைத் தனித்தனியை நிறுத்திப் பொருள்கொள்ள வைப்பது நிரல்நிறை -9- ஈரடி எட்டுச் சீர்களில் சொற்களைத் துணித்து வேண்டிய இடத்தில் ஒட்டிக்கொள்ளுமாறு செய்யுள் இயற்றுதல் -10- சீர்நிலை திரியாமல் அடிகள் இடம்-மாறும்படி அமைத்தல் அடிமறி -11- அடிமறியில் ஈற்றடியை எங்கு நிறுத்தினும் பொருள் மாறுபடாது -12- சொற்களை இடம் மாற்றி இணைத்துப் பொருள் கொள்வது மொழிமாற்று -13- பிரிக்கப்படக் கூடாத பெயர்கள் -14- ஒருசொல் அடுக்கு (அடுக்குத்தொடர்) 3 வகை -15- தொகைமொழி 6 வகை -16- வேற்றுமைத்தொகை -17- வினைத்தொகை -18- வினைத்தொகை -19- பண்புத்தொகை -20- உம்மைத்தொகை -21- அன்மொழித்தொகை -22- தொகைச்சொல்லில் பொருள் நிற்குமிடம் -23- தொகைச்சொல் ஒருசொல் நடை கொள்ளும் -24- உயர்திணையில் வரும் உம்மைத்தொகை பலசொல் நடைத்து. -25- குறிப்புரை -26- இசைப்பொருளை நான்குமுறை அடுக்கலாம் -27- விரைசொல்லை மூன்றுமுறை அடுக்கலாம் -28- இரண்டுமுறை அடுக்குவன -29, 30- இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலம் மூன்று தன்மை முன்னிலை படர்க்கை என இடம் மூன்று வினைமுற்று, வினைக்குறிப்பு என முற்று இரண்டு -31- வினைமுற்று இந்த இரண்டு வகையில் அமையும் -32- அடுக்கும் இந்த இருவகையில் அமையும் -33- எச்சம் 10 வகை -34- பிரிநிலை எச்சம் 2 வகை -35- வினையெச்சம் 2 வகை -36- பெயரெச்சம் பெயர் கொண்டு முடியும் -37- ஒழியிசை எச்சம் -38- எதிர்மறை எச்சம் -39- உம்மை எச்சம் -40- செஞ்சொல் உம்மை எச்சம் -41- என என்னும் எச்சம் வினை கொண்டு முடியும் -42- ஏனைய எச்சங்களுக்கு முடிபு வரையறை இல்லை -43- குறிப்பு எச்சம் -44- சொல்லெச்சம் -45- அவையல் கிளவி (பலர்முன் சொல்லக்கூடாத சொல்) -46- மறைக்கும்போது மரூஉச்சொல்லைப் பயன்படுத்துக -47- ஈ, தா, கொடு – இந்த மூன்னறு இரத்தலைக் குறிக்கும் சொற்கள் -48- தாழ்ந்தவன் உயர்ந்தவனிடம் ‘ஈ’ என்பான் -49- ஒத்தவனிடம் ‘தா’ என்பான் -50- உயர்ந்தவன் நாழ்ந்தவனிடம் ‘கொடு’ என்பான் -51- கொடு என்னும் சொல்லை அவனுக்குக் கொடு என்று படர்க்கைப் பொருளில்தான் பயன்படுத்த வேண்டும். என்றாலும் தனைப் பிறன் பொல் பாவித்துக் கூறும்போது எனக்குக் கொடு என்றும் வரும் -52- இலக்கணத்தில் கட்டுப்படாத வரவுகள் ஏற்கப்படும் -53- செய்யாய் என்னும் முன்னிலைக் கிளவி ஏவலாகவும் வரும் -54- முன்னிலை ஈறு -55- 2. மே ஈறு – அட்டிலோளைத் தொட்டனை நின்மே கடிசொல் இல்லை காலத்துப் படினே -56- குறைசொற்களை அறிந்து நிறைசொற்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் -57- வேற்றுமை உருபு அல்லாத இடைச்செற்களைப் பெயரை வேறுபடுத்தும் வேற்றுமைச்சொல் என்றே கொள்ளுதல் வேண்டும் -58- உரிச்சொற்களிலும் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமைச்சொல் உண்டு -59- வினையெச்சத்தில் திரிபு நிகழும் -60- உரையிடத்து உடனிலைப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் -61- சில சொற்களை முன்னத்தால் உணர்ந்தகொள்ள வேண்டும் (முன்னம் = உய்த்துணர்வு) -62- ஒரு பொருள்மேல் இரண்டு தொடர் வந்தால் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது -63- ஒருமை சுட்டிய பெயர் பன்மையை உணர்த்தும் -64- ஆற்றுப்படை நூலில் ஒருமை பன்மை மயக்கம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் -65- சொற்களைச் செய்யுளில் வருபவை என்றும், வழக்கில் வருபவை என்றும் பாகுபடுத்தி பிழையின்றி உணர்ந்துகொள்ள வேண்டும் -66- ஏமி டைமண்ட் ஏமி டைமண்ட் (Amy Diamond, பிறப்பு: ஏப்ரல் 15, 1992) ஒரு சுவீடிய பாப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். டைமண்ட் ஆறு வயதில் வடிவச் சறுக்கல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து பல தங்க பதக்கங்களை வென்று உள்ளார். பன்னிரெண்டு வயதில் தனது முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவரை ஆறு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டு கூட்டுறவுதினம் பன்னாட்டு கூட்டுறவுதினம் ("Inernational Co-operative Day") ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை 1923 முதல் பன்னாட்டு கூட்டுறவு ஒன்றியத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்” சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம், 1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர். ‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’ சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை, சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது. டாட்டா ஸ்டீல் ஐரோப்பா டாட்டா ஸ்டீல் ஐரோப்பா (Tata Steel Europe, முன்னர் கோரஸ் குழு, "Chorus Group") இலண்டனைத் தலைமையிடமாக கொண்ட ஒரு இரும்பு தயாரிக்கும் நிறுவனம். இது ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய இரும்பு-தயாரிப்பு நிறுவனம் ஆகும். மேலும் இதன் துணை நிறுவனம் இந்தியாவின் டாட்டா ஸ்டீல் உலகின் பத்து மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கோரஸ் குழு 1999, அக்டோபர் 6 ஆம் நாள், பிரிட்டிஷ் ஸ்டீல் மற்றும் கொனிங்கிள்ஜ்கி ஊகோவன்சு (Koninklijke Hoogovens) ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 2007-இல் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. 2010, செப்டம்பர் 27 இல் கோரஸ் நிறுவனம் டாட்டா ஸ்டீல் ஐரோப்பா எனப் பெயரை மாற்றியது. மேலும் டாட்டா நிறுவன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. வல்லரசு வல்லரசு என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு நாடு ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான அலிசு லைமன் மில்லர் என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப்பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்." 1944 ஆம் ஆண்டளவில், பிரித்தானியப் பேரரசு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது பனிப்போர் எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது எனினும், பிரேசில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, உருசியா ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது. பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே சிலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் பல்முனைப்பண்பு கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர். "வல்லரசு" என்னும் தமிழ்ச் சொல், "சூப்பர் பவர்" (Superpower) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுகிறது. மேற்குறித்த ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவை முழுமையாகத் தமிழில் குறிக்கும் ஒரு சொல்லாகவே இது பயன்பட்டு வருகிறது. எனவே "வல்லரசு" என்னும் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியை அதற்கு இணையான ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியூடாகக் காண்பது பொருத்தமானது. 1944 ஆம் ஆண்டிலேயே ஆற்றல் வாய்ந்த நாடுகளிலும் கூடிய ஆற்றல் வாய்ந்த நாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் ஆங்கிலச்சொல் பயன்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே பிரித்தானியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றைக் குறிப்பாக விளக்கும் ஒரு சொல்லாக வழங்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்ல நிலையில் இருந்ததனாலேயே இந்நாடுகளும் வல்லரசு என்னும் வரையறைக்குள் வந்தன. அக் காலத்துக்கு முந்திய பேரரசுகளையும் உள்ளடக்கும் வகையில் பண்டைய எகிப்து, பண்டைய கிரீசு, பண்டைய சீனா, பண்டைய இந்தியா, பாரசீகப் பேரரசு, ஓட்டோமான் பேரரசு, மங்கோலியப் பேரரசு, போத்துக்கீசப் பேரரசு, எசுப்பானியப் பேரரசு, பிரான்சு, ஒல்லாந்துக் குடியரசு என்பவற்றையும் வல்லரசு என்னும் சொல்லால் குறிக்கச் சிலர் முற்பட்டனர். வரலாற்றில் இவையும் சில தனித்துவமான பெருமைகளைக் கொண்டிருந்ததே வரலாற்றாளர்கள் இவற்றுக்கும் வல்லரசு நிலை கொடுக்க முற்பட்டதற்கான காரணங்கள் எனலாம். இன்றைய பொருளில் இச் சொல்லை (ஆங்கிலம்) முதலில் பயன்படுத்தியவர் ஒல்லாந்த-அமெரிக்க புவிசார் அரசியல் தந்திரியான நிக்கோலாசு இசுப்பைக்மான் (Nicholas Spykman) என்பவர் ஆவார். போருக்குப் பிந்திய புதிய உலக ஒழுங்கு எவ்வாறு அமையக் கூடும் என்பது குறித்து 1943 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலேயே இச் சொல்லை அவர் பயன்படுத்தினார். இவ்விரிவுரைகள் பின்னர் அவர் எழுதிய "அமைதியின் புவியியல்" "(The Geography of the Peace)" என்னும் நூலுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக அமைதிக்கும், செழிப்புக்கும் அவசியம் என அவர் கருதிய ஐக்கிய அமெரிக்காவினதும், ஐக்கிய இராச்சியத்தினதும் ஒப்பார் இல்லாத உலகளாவிய கடல்சார் வல்லாண்மை பற்றியே இந்நூல் முதன்மையாகக் குறிப்பிடுகிறது. ஓராண்டுக்குப் பின்னர், வில்லியம் டி. ஆர். ஃபாக்சு என்னும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைப் பேராசிரியர், தான் எழுதிய "வல்லரசுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் என்பனவும் அமைதிக்கான அவற்றின் பொறுப்பும்" "(The Superpowers: The United States, Britain and the Soviet Union and Their Responsibility for Peace)" (1944) என்னும் நூலில் நிக்கோலாசு இசுப்பைக்மானின் கருத்துருவை மேலும் விரிவாக்கினார். இந்நூலில், அவர் மிகப்பெரிய அதிகாரம் பெற்ற நாடுகளின் உலகளாவிய அதிகார வீச்சுப் பற்றிப் பேசுகிறார். நிகழ்ந்த போர் எடுத்துக் காட்டியபடி, உலக அளவில் ஒன்றுடன் ஒன்று போரிடக்கூடிய புதிய வகையைச் சேர்ந்த நாடுகளைக் குறிக்கவே "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் சொல்லை ஃபாக்சு பயன்படுத்தினார். ஃபாக்சைப் பொறுத்தவரை, அக்காலத்தில், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய மூன்று வல்லரசுகள் இருந்தன. பிரித்தானியப் பேரரசே உலக வரலாற்றில் மிகவும் விரிந்த பேரரசு. 1921 ஆம் ஆண்டளவில் இதுவே முன்னணியில் இருந்த பெரும் ஆற்றல் வாய்ந்த நாடாக இருந்தது. இது உலகின் மக்கள்தொகையின் 25% ஐத் தன்னுள் அடக்கியிருந்தது. அத்துடன் புவி நிலப்பரப்பின் 25% ஐயும் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வலிமை பெற்ற நாடுகள். வல்லரசு என்பதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இதற்குப் வேறுபாடான விளக்கங்கள் தரப்படுகின்றன. லைமன் மில்லரின் கருத்துப்படி, வல்லரசுத் தகுதிக்கான அடிப்படைக் கூறுகளை; படைத்துறை, பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்னும் என்னும் நான்கு அதிகார அச்சுக்கள் மூலம் அளவிட முடியும். குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் ரிச்சார்ட் நோசல் (Kim Richard Nossal) என்பவரது கருத்துப்படி, இந்தச் சொல்லானது, கண்டம் அளவுக்குப் பெரிதான நிலப் பகுதியொன்றில் இருப்பதும், பிற பெரிய அதிகாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய மக்கள்தொகை கொண்டதாகவும், உயரளவுப் பொருளாதாரத் திறன் கொண்டதாகவும், உள்ளூரிலேயே பெருமளவிலான உணவுப் பொருட்களும் இயற்கை வளங்களும் கொண்டதாகவும், உயரளவுக்குப் பன்னாட்டுத் தொடர்புகளில் தங்கியிராத தன்மை உள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் வளர்ச்சியடைந்த அணுவாற்றல் திறன் கொண்டதாகவும் உள்ள ஒரு சமுதாயத்தைக் குறிக்கும். பேராசிரியல் பால் டியூக் என்பவர், "வல்லரசு என்பது, உலகை அழிக்கக்கூடிய சாத்தியம் உட்பட உலகம் தழுவிய உத்திகளை நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டிருப்பதுடன், பெருமளவு பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் கொண்டிருப்பதாகவும், உலகம் தழுவிய கருத்தியலை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்" என்றார். எனினும் இந்த அடிப்படை வரைவிலக்கணத்துக்குப் பல மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார். 1956 ஆம் ஆண்டின் சூயெசு நெருக்கடி, பிரித்தானியா இரண்டு உலகப் போர்களின் காரணமாக நிதி அடிப்படையில் வலிமை குன்றி விட்டதையும், அதன் வெளிநாட்டுக் கொள்கை இலக்குகளைப் பிற வல்லரசுகளுக்குச் சமமான நிலையிலிருந்து எய்தமுடியாமல் இருந்ததையும் எடுத்துக் காட்டியது. இரண்டாம் உலகப் போரின் பெரும்பகுதி ஐக்கிய அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால் நெடுந் தொலைவில் இடம்பெற்றதால், ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடந்ததுபோல் தொழில்துறை அழிவுகளோ, பாரிய குடிமக்கள் இழப்புக்களோ ஏற்படவில்லை. நீண்ட காலமாக உலகுக்குக் கடன் வழங்கும் ஒரு நாடாகவும், பொருட்களை வழங்கும் முதன்மை நாடாகவும், ஐக்கிய அமெரிக்காவின் நிலையைப் போர் வலுப்படுத்தியது. அத்தோடு அமெரிக்கா, அதன் படைத்துறை வலிமையை உலக அளவில் பெருமளவுக்கு முன்னேற்றி உலக அரங்கில் அதை முதல் நிலைக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக விளங்கிய தொழில்துறை, தொழில்நுட்பம் என்பன சார்ந்த கட்டமைப்புக்களையும் உருவாக்கியது. பன்னாட்டுக் கூட்டமைப்புக்களையும், சட்டவாக்க அமைப்புக்களையும் முயற்சிகள் இடம்பெற்று வந்தாலும், உலகப்போருக்குப் பிந்திய உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வல்லரசுகள் வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன், 1947ல் கிரீசுக்கான நிதியுதவியை பிரித்தானியா விலக்கிக்கொண்ட பின்னர், பனிப்போரில் சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்கா தலைமை நாடானது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும், கருத்தியல், அரசியல், படைத்துறை, பொருளாதாரம் ஆகிய எல்லாத்துறைகளிலும் ஒன்றையொன்று எதிர்த்தன. சோவியத் ஒன்றியம் பொதுவுடைமைக் கருத்தியலை முன்னெடுத்தது. அதே வேளை ஐக்கிய அமெரிக்கா தாராண்மையியக் குடியாட்சியையும், கட்டற்ற சந்தை முறையையும் முன்னெடுத்துச் சென்றது. இது, வார்சோ உடன்படிக்கையிலும், நேட்டோ கூட்டமைப்பிலும் வெளிப்பட்டது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் அல்லது சோவியத் ஒன்றியத்துடன் அணிசேர்ந்தன. இந்த இணைப்புக்கள், இவ்விரு நாடுகளும் இரு முனையங்களாகப் பிரிந்து வந்த உலகின் பகுதிகள் என்பது உட்கிடையாக விளங்கியது. சாலை சாலை ("road") என்பது நிலத்தின்மீது உள்ள இரு இடங்களை இணைக்கும் வழி அல்லது வழித்தடத்தினைக் குறிக்கின்றது. வாகனங்கள் செல்வது, மக்கள் நடப்பது என்ற வகைகளில் இதன் மீது போக்குவரத்து நடைபெறும். சாலைகளை அவை அமைக்கப்படும் விதங்களைப் பொறுத்து தார் சாலை, மண் சாலை எனவும்; அவற்றின் பயன்பாடு கருதி நெடுஞ் சாலை, பிரதான சாலை, இணைப்புச் சாலை, புறவழிச் சாலை எனவும் சில வகைகளாகப் பிரிக்கலாம். பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி திவான் பகதூர் பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி ("Sir Perungavur Rajagopalachari", மார்ச் 18, 1862 – டிசம்பர் 1, 1927) ஒரு இந்திய நிருவாகி மற்றும் அதிகாரி. கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் அரசுகளின் திவானாகப் பணியாற்றியவர். சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் முதல் இந்தியத் தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை நகரில் பிறந்த ராஜகோபாலாச்சாரி சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். மே 3, 1886 இல் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். டிசம்பர் 1887 இல் உதவி ஆட்சியாளராகப் பணி உயர்வு பெற்றார். மே 2, 1890-டிசம்பர் 1896 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் துணை ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார். டிசம்பர் 1896ல் கொச்சின் அரசின் மன்னர் ராம வர்மாவால் திவானாக நியமிக்கப்படார். 1901 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் தான் கொச்சின் உள்ளூர் வர்த்தகர்கள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கமாக மாறியது. மேலும் இவரது ஆட்சிக் காலத்தில் கொச்சின் அரசின் ஆவண மைய அலுவலகமும் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் கேரள் அரசின் ஆவணத் துறையாக மாறியது. This later evolved into the Kerala State Archives Department. ராஜகோபாலாச்சாரி 1901 முதல் சென்னை மாகாணத்தின் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பதிவாளராகவும், 1902-06 காலகட்டத்தில் மீண்டும் துணை ஆட்சியாளராகவும் பணியாற்றினார். 1906ம் ஆணு திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த அய்யன்காளி நடத்திய பட்டியல் வகுப்பினர் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். 1907ம் ஆண்டு பட்டியல் வகுப்பினர் குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்கும் படி திருவிதாங்கூர் அரசு ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்த நம்பூதிரி நாயர் சாதி மக்கள் அரசாணையை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக பட்டியர் சாதியினர் அவர்களது விளைநிலங்களில் வேலை செய்ய மறுத்தனர். 1910ம் ஆண்டு ராஜாகோபாலாச்சாரி மற்றும் கல்வித் துறையை நிருவகித்துக் கொண்டிருந்த மிட்செல் என்னும் ஆங்கிலேயரும் தலையிட்டு இவ்வாணையை நடைமுறைப்படுத்தினர். இது தவிர பட்டியல் சாதியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப் பட்டிருந்த திருவிதாங்கூர் சட்ட்மன்றத்திற்கு அவர்களை அனுமதிக்க ராஜாகோபாலாச்சாரி ஆணையிட்டார். இதன்படி அய்யன்காளி திருவிதாங்கூர் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பட்டியல் வகுப்பினர் ஆவார். அவர் தனது ஆட்சி காலத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 1914ம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண நீதித்துறையின் முதல் இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1917ம் ஆண்டு சென்னை ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இராஜகோபாலாச்சாரி லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். 1927ல் மரணமடைந்தார். சி. பி. சிற்றரசு சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர். இவருக்கு சரசுவதி என்னும் மகள் இருந்தார். இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949இல் திமுகவை அண்ணா உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். அவை: இவைதவிர புறப்படு மகனே, பேரனுக்கு என்னும் தொடர்களை இனமுழக்கம் இதழிலும் கபாரபுரம் என்னும் தொடரை முன்னணி இதழிலும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நோய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. மேல இலந்தைகுளம் மேல இலந்தைகுளம் (ஆங்கிலம் : "Mela Ilandaikulam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மேல இலந்தைகுளம் அல்லது மேல இலந்தைக்குளம். இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள 3கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்ட குளமும் ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர் விவசாயத்துக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் இலந்தை மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2001 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு அறிக்கையின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள். தேவாலயங்கள் 1)தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம். 2)ஆர்.சி கத்தோலிக்கத் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம். 1)இசக்கியம்மன் கோயில், சுடலை மாடன் கோயில், மற்றும் விநாயகர் கோயில் ஆகிய கோயில் உள்ளது. இவற்றின் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் கடைசி 3 நாள்கள் கொண்டாடப்படுகின்றது. 2)மாரியம்மன் கோயில், கறுப்பசாமி கோயில், மற்றும் ஜயனார் கோயில் இவை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அன்று கொடை விழாக்கள் கொண்டாடபடுகின்றது. இந்த ஊரின் வடதிசை மத்தியில் ஒரு பழமை வாய்ந்த பள்ளிவாசல்(மசூதி) உள்ளது. இவ் ஊரில் முஸ்லிம்கள் இல்லை இருப்பினும் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இங்கு வருடம் தோறும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று சந்தனக் கூடு என்னும் திருவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள். 1)டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய) 2)டீ.டி.டீ.ஏ தொடக்கப் பள்ளி (1 முதல் 5 முடிய) 3)திரு இருதய மேல் நிலைப் பள்ளி (6 முதல் 12 முடிய) இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் 500 மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு காற்றாடியின் மூலம் 1250 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிரது. சிலோன் விஜயேந்திரன் சிலோன் விஜயேந்திரன் (1946 - ஆகத்து 2004) ஈழத்து எழுத்தாளரும், கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார். நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் ஆவார். தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர், மனைவி இசுலாமியர். இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார். கல்லடியாரைப் போலவே விஜயேந்திரனும் நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர் சிவாஜி கணேசன் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது முதல் திரைப்படம் பைலட் பிரேம்நாத். 77 திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார். சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். தமிழகத்தின் மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர். கவிஞர் கம்பதாசனை ஆய்வு செய்து நூல்கள் எழுதினார். சிலோன் விஜயேந்திரன் இராஜீவ் காந்தி கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர். 2004, ஆகத்து 26 ஆம் நாள் திருவல்லிக்கேணியில் இடம்பெற்ற ஒரு தீவிபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனது 58வது அகவையில் காலமானார். வ. முனியன் வ. முனியன் (பிறப்பு: சூலை 13 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜி, வதனி, வீயெம் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், வழக்கறிஞரும், முன்னாள் கல்வியதிகாரியும், ஆசிரியருமாவார். மேலும், இவர் கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், முத்தமிழ்ப் படிப்பகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள். கட்டுரைகள் மற்றும் தொடர் பயணக் கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சூலை 2011 சூலை 2011 ("July 2011"), ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் சூலை 17 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 2011 ஆகத்து 17 புதன்கிழமை முடிவடைந்தது. கோ. முனியாண்டி கோ. முனியாண்டி (பிறப்பு: மே 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவரான இவர் ஒரு நிருபரும், இலக்கியச் சிந்தனை அமைப்பாளர்களுள் ஒருவருமாவார். 1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சு. முனியாண்டி சு. முனியாண்டி (பிறப்பு சூன் 3 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சு. தினகரன் எனும் புனைப்பெயரில் அறியப்பட்ட இவர், ஒரு பத்திரிகையாளருமாவார். 1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஹூப்ளி ஹூப்ளி (Hubli) அல்லது ஹூப்பள்ளி, (, தமிழ்: பூப்பள்ளி) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் முதன்மை நகரமாகும். ஹூப்பள்ளி என்ற பெயர் கன்னட மொழியில் "பூக்கும் கொடி" என்ற பொருளைத் தருவதாகும். இதன் இரட்டை நகரான தார்வாடுடன் இணைந்த "ஹூப்ளி-தார்வாட்", கர்நாடகத்தில் பெங்களூருவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நகரப்பகுதியாகும். தார்வாட் நிர்வாகத் தலைநகராக விளங்குகையில் தார்வாட்டுக்கு தென்கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ள ஹூப்ளி வணிக மையமாகவும் வட கர்நாடகத்தின் தொழில் முனையமாகவும் விளங்குகிறது. இதன் பின்புல நிலப்பகுதியில் பருத்தியும் நிலக்கடலையும் கூடுதலாக வேளாண்மை செய்யப்படுகின்றன. இந்திய இரயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் ஹூப்ளியில் தென்மேற்கு இரயில்வே மண்டலம் மற்றும் ஹூப்ளி கோட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. மாநிலத்தலைநகர் பெங்களூருவிலிருந்து வடமேற்கே 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி நகர நிர்வாகத்தை பேணுகிறது. 2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இரட்டை நகரத்தின் மக்கள்தொகை 786,000 ஆக இருந்தது. இது 2011 ஆண்டு 1200,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கன்னடம் முதன்மை மொழியாக விளங்குகிறது. மராத்தியும் கொங்கணியும் உருதும் அடுத்தநிலையில் பேசப்படுகின்றன. ஹூப்ளி-தார்வாட் அயனமண்டல ஈரப்பதமிக்க மற்றும் உலர்ந்த காலநிலை கொண்டுள்ளது. பெப்ரவரியின் பிற்காலத்திலிருந்து சூன் முற்பகுதிவரையான வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்து உலர்ந்த காலநிலையும் தொடரும் பருவக்காற்று காலத்தில் மிகுந்த ஈரப்பதத்துடன் கூடிய மிதமான வெப்ப காலநிலையும் நிலவுகிறது. அக்டோபர் கடைசி முதல் பெப்ரவரி முற்பகுதிவரை இளங்கூதிர் காலத்தில் மழை ஏதுமின்றி மிதமான வெப்ப காலநிலை நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவே மிகச்சிறந்த காலமாகும். ஹூப்ளி சராசரி கடல்மட்டத்திலிருந்து 626.97 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 838 மிமீ. தார்வாடு தார்வாடு (Dharwad), () என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது தார்வாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான ஹூப்ளியுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது. மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 425 கிமீ தொலைவில் நான்காம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது. இந்த இரட்டை நகரங்களின் வரலாறு ஹொய்சளர் காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் "தார்வாட் பேடா" புகழ்பெற்றது. இது மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு, வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான பெங்களூருக்கும் புனேவிற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன. க. முனுசாமி க. முனுசாமி (பிறப்பு: ஏப்ரல் 15 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். நிலாவண்ணன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் முன்னாள் தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆவார். மேலும் இவர் தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், பேரா மாநில எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நிகழ்நேர பெருந்திரள் தீர்வு பொருளியலில் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு ("Real Time Gross Settlement" - RTGS) என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, "நிகழ்நேரத்தில்" பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. இங்கே நிகழ்நேரம் என்பது, பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி ஆகிய இவற்றிடையே நிகழும் நடவடிக்கை, "காத்திருக்கும்" நேரம், ஏதும் இல்லாமல் "நிகழ் நேரத்திலேயே" நடப்பதாக கொள்ளப்படுகின்றது. "மொத்த பணமதிப்புத் தீர்வு" (gross settlement) என்பது ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தீர்க்கப்படுவது; ஒருவருக்கு வரவு அல்லது பற்று இரண்டையும் கணித்து நிகரத்தொகை தீர்க்கப்படுவதன்று. இந்த நடவடிக்கை, உறுதிசெய்யப்பெற்ற, மீள்விக்க இயலாத, முடிவான தீர்வு. இது ஒரே நேரத்தின் அடிப்படையில் நடவடிக்கைளை உடனுக்குடன் கணினி வழித் தீர்வு செய்யும் முறை ஆகும். இது வங்கி வணிக நடவடிக்கைகளைத் தீர்க்க பயன்படுகிறது. இதில் நிகழும் கணினி வழியதான பணம் செலுத்தல்-பெறுதல் முறையை ஒரு நாட்டின் நடுவண் (அரசு) வங்கி பராமரிக்கும். நேரடியாக பணத்தாள்கள் போன்ற பருப்பொருள் பண மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. ஒரு வங்கி (வங்கி-1) இன்னொரு வங்கிக்கு (வங்கி-2) 1000 பண அலகு (டாலர், உருபாய் போன்றவை) பணம் செலுத்துகின்றது என்றால், நடுவண் வங்கியானது வங்கி-1 இன் கணக்கில் 1000 பண அலகை கழிப்பதும், வங்கி-2 இல் 1000 பண அலகைக் கூட்டுவதும் செய்யும். இந்த நிகழ்நேரத் தீர்வுமுறை (RTGS system) அதிக மதிப்புள்ள பண மாற்றங்களை, குறைந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளாகச் செய்வர். இதனால் ஒரு பண-நிதி நிறுவனத்தின் பண நடவடிக்கை பற்றிய தெளிவான கணக்குவழக்கை அறிய உதவுகின்றது. இம்முறையானது, ஒவ்வொரு நாளின் இறுதியிலும், பண நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களைத் (செலுத்தல்-பெறுதல்களைத்) தொகுத்துத்தரும் இதித் தீர்வு முறைக்கு (BACS)மற்றொரு மாற்று முறையாக கருதப்படுகின்றது. பெத்ரா கிவிதோவா பெத்ரா கிவிதோவா ("Petra Kvitová"; பிறப்பு: 8 மார்ச் 1990, பிலோவெக், செக்கோசுலேவேகியா) செக் குடியரசைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். தற்போது தனது தரவரிசையிலேயே உயர்ந்த எட்டாமிடத்தில் உள்ளார். இதுவரை மகளிர் டென்னிசு சங்க போட்டிகளில் ஐந்து முறை வென்றுள்ளார். தனது முதல் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் பட்டத்தை விம்பிள்டனில் 2011ஆம் ஆண்டு வென்றுள்ளார். இணையச் சேவை வழங்கி இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இணையதில் இணைக்கிறனர். இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு "(intranet)" என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன. 1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்டது. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாக கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐஎஸ்பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989இல் சேவை வழங்கப்பட்டது. அன்னகிரேட் ஹெல்ட் அன்னகிரேட் ஹெல்ட் (Annegret Held, பிறப்பு: ஏப்ரல் 25, 1962) செருமனிய பெண் எழுத்தாளர் ஆவார். அன்னகிரேட் ஹெல்ட் ஜெர்மனியில், வெஸ்டர்வால்ட்டில் (Westerwald) பிறந்தவர். இவர் பல நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க பரிசில்களும் பெற்றுள்ளார். அலிகர் அலிகர் (Aligarh, ), இந்தியாவின் வட மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓரு மாநகரமாகும். இது புது தில்லியிலிருந்து தென்கிழக்கே தொலைவில் உள்ளது. அலிகர் மாவட்டம், அலிகர் கோட்டம் ஆகியவற்றின் தலைநகரான இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சமாக உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தினால் பெரும்பாலும் பல்கலைக்கழக நகரமாக அறியப்படுகிறது. இதனால் 'கல்வியின் மெக்கா ' எனவும் புகழ்பெற்றுள்ளது. பாக்கித்தானின் உருவாக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படும் சேர் முகமது இக்பால் உட்பட பல அறிஞர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் தொடர்பு பெற்றுள்ளனர். அலிகார் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது; ஆகவே உள்ளூர் மக்கள் இதனை `பூட்டுக்கள் நகரம்' எனவும் அழைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 பெருநகர் பகுதிகளில் (அலிகார், ஆக்ரா, அலகாபாத், பரேலி, காசியாபாத், கோரக்பூர், ஜான்சி, கான்பூர்,லக்னோ, மொராதாபாத், மீரட், சாரங்பூர், வாரணாசி) இது ஒன்றாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அலிகாரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1167732 ஆகும். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் ஆவர். தேசிய சராசரியான 65.4%ஐவிட படிப்பறிவு 71%ஆக உள்ளது; ஆண்கள் 79%உம் பெண்கள் 61%உம் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். மக்கள்தொகையில் 16% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள். http://www.whediatechnologies.com கோட்டா, இராசத்தான் கோட்டா (Kota, ), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும். அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது. =மேற்கோள்கள்= இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர் மூன்றாம் ஆல்பர்ட், மொனாக்கோவின் இளவரசர் ("Albert II, Sovereign Prince of Monaco", "ஆல்பர்ட் அலெக்சாண்டர் லூயிஸ் பியேர் கிரிமால்டி"; பிறப்பு: மார்ச் 14, 1958) என்பவர் மொனாக்கோ நாட்டின் தலைவர்ரும் கிரிமால்டி வம்சத்தின் தலைவரும் ஆவார். இவர் மொனாக்கோ இளவரசர் மூன்றாம் ரைனியர், மற்றும் அமெரிக்க நடிகை கிரேஸ் கெலி ஆகியோரின் மகன். தந்தை மூன்றாம் ரைனியே 2005 ஆம் ஆண்டில் இறக்கவே, 2005 ஏப்ரல் 6 ஆம் நாள் ஆல்பர்ட் மொனாக்கோ இளவரசராக முடி சூடினார். 2011, சூலை 1 இல் இவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான 33 வயது சார்லீன் விட்ஸ்டொக் என்பவரைத் தனது 53வது அகவையில் திருமணம் செய்தார். இளவரசியான இவரின் மனைவி 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்திய உருக்கு ஆணையம் செய்ல் ("SAIL")(, எனப்பரவலாக அறியப்படும் இந்திய உருக்கு ஆணையம் ("Steel Authority of India Limited") என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி இந்திய ரூபாய்கள் ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும். செயில் (SAIL) அரசுக்கு சொந்தமான நிறுவனம் மேலும் இந்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமகவும் உள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இந்தியா நிலக்கரி நிறுவனம் இந்தியா நிலக்கரி நிறுவனம் ("Coal India Limited") (, ) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது.