நாராயணசாமி நாயுடு நாராயணசாமி நாயுடு (திசம்பர் 6, 1925 - திசம்பர் 20, 1984) தமிழக உழவர் இயக்கத்தின் (தமிழக விவசாயிகள் சங்கம்) நிறுவனர் மற்றும் தலைவர். தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் செங்காளிபாளையம் கிராமம் வையம்பாளையம் என்ற சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தார் நாராயணசாமி. பெற்றோர் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணசாமி அதன் பிறகு தன்னை முழுமையாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957 முதலே உழவர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டார் நாராயணசாமி. உழவர்கள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற முடிவதில்லை என்பதை உணர்ந்து உழவர்கள் இயக்கத்தை கட்டமைப்பதிலே கவனம் செலுத்தினார். 1968-ல் கோவை வட்ட உழவர் இயக்கம் 1969-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டமைத்தார். 1970-லிருந்து 1980 வரை தமிழகத்தில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார் நாராயணசாமி. உழவர் போராட்டங்களிலே கலந்து கொண்டதற்காக பல முறை சிறை சென்றார். 1980-க்கு பிறகு இந்திய அளவில் உழவர்களை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் நாராயணசாமி. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பேராசிரியர் நஞ்சுண்ட சாமியையும், ஆந்திராவில் சங்கர் ரெட்டியையும் மராட்டியத்தில் சரத் ஜோசியையும் உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத்தையும் சந்தித்து உழவர் இயக்கத்தை கட்டமைக்க தூண்டினார். அதன் பிறகே இம்மாநிலங்களில் உழவர் இயக்கங்கள் ஏறபடுத்தப்பட்டன. 1970-களில் நாராயணசாமி முன் வைத்த முதன்மையான கோரிக்கைகளில் சில:- 1802 1802 (MDCCCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. டேவிட் ஷெப்பர்ட் டேவிட் செப்பர்ட் ("David Sheppard ", பிறப்பு: மார்ச்சு 6 1929, இறப்பு: மார்ச்சு 5 2005), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1963 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய ஒரே கிருத்தவ மறைப்பரப்புனராவார். தகவுர் உசைன் ராணா தகவுர் உசைன் ராணா (Tahawwur Hussain Rana, , பிறப்பு: சனவரி 12, 1961) ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் "மார்கவிசன் யல்லாந்து போஸடன்" மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் வாழும் ஒரு பாக்கித்தானியக் கனடியர். 2008 மும்பை தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாக இவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க சான்றாயர்கள் இவரை விடுவித்தனர். இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த இந்திய அரசு தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ராணா மீது குற்றம் சாட்டி தேசிய புலானாய்வு முகமை வழக்குத் தொடரும் என அறிவித்தது. 2013 சனவரி 17 இல், இவருக்கு 14 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மொடெகேய் சர்வின் மொடெகேய் சர்வின் ("David Sheppard ", பிறப்பு: பிப்ரவரி 26 1851, இறப்பு: சூலை 3 1910), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 -1888 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தேசிய புலனாய்வு முகமை (இந்தியா) தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் "தேசிய புலனாய்வு முகமை மசோதா" திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது எஸ். சி. சின்கா தலைமை இயக்குனராகப் பணியாற்றி வந்தார். தற்போதய தலைமை இயக்குனர் ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார். ஆத்தர் சுரூஸ்புரி ஆத்தர் சுரூஸ்பதி ("Arthur Shrewsbury", பிறப்பு: ஏப்ரல் 11 1856, இறப்பு: ஏப்ரல் 19 1903 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 498 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் சூட்டர் ஜோன் சூட்டர் ("John Shuter", பிறப்பு: பிப்ரவரி 9 1855, இறப்பு: சூலை 5 1920), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 306 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் எட்லி டேவிட் கோல்மேன் ஹெட்லி (David Coleman Headley), முன்பாக தாவூத் சயீத் கிலானி, (பிறப்பு சூன் 30, 1960) பாக்கித்தானிய வன்முறைக் குழு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து சதி செய்த அமெரிக்காவின் சிகாகோ நகரில் வாழும் ஓர் பாக்கித்தானிய அமெரிக்கராவார் தனது கைதிற்குப் பிறகு மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டவராக மாறிய ஹெட்லி 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தாக்குதல்களுக்கும் பிற பயங்கரவாதச் செயல்களுக்கும் பாக்கித்தானிய இராணுவ அதிகாரிகள் துணை புரிந்ததாகவும் கூறியுள்ளார். தனது இந்திய நுழைவு எளிதாக அமையவும் தான் பாக்கித்தானிய முஸ்லிம் என்பதை மறைக்கவும் தனது இசுலாமியப் பெயரை கிறித்தவப் பெயராக மாற்றிக் கொண்டார். 2002க்கும் 2005க்கும் இடைப்பட்டக் காலத்தில் பாக்கித்தானிற்குப் பலமுறை சென்று தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டார். இதே காலத்தில் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் தகவல் அளிப்பவராகவும் பணியாற்றி உள்ளார். 2006க்கும் 2008க்கும் இடையே லஷ்கர்-ஏ-தொய்பாவினருக்காகவும் பாக்கித்தானிய முன்னாள் இராணுவ அதிகாரிகளின் சார்பாகவும் 2008 மும்பை தாக்குதல்களின்போது தாக்கப்படக்கூடிய இலக்குகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள ஐந்துமுறை இந்தியாவின் மும்பைக்குச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதல்களில் 168 பேர் கொல்லப்பட்டனர். முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரங்கள் பதிப்பித்த டேனிசு நாளிதழுக்கு எதிரான தாக்குதலை நடத்த திட்டமிட 2009ஆம் ஆண்டு ஹெட்லி இங்கிலாந்திற்குப் பயணமானார். அக்டோபர் 2009 அன்று பாகித்தான் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். தனது கைது மற்றும் குற்றமேற்பு மனுவிற்குப் பிறகு ஹெட்லி அமெரிக்க மற்றும் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தனது கூட்டாளிகளைக் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெட்லியுடன் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அனுமதித்த போதிலும் இந்தியாவில் ஹெட்லியின் பெயரை வெளியிடாததற்காக ஐயப்பாடு எழுந்தது. டகவூர் உசைன் ராணாவின் வழக்கின்போது ஹெட்லி மும்பை தாக்குதல்களுக்கு பாக்கித்தானின் அரசு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பெரிதும் துணை புரிந்ததாக விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார். இருப்பினும் மே 31, 2011 அன்று கூறிய தனது வாக்குமூலத்தில் ஐஎஸ்ஐ தலைமைக்கு இதில் தொடர்பில்லை எனவும் கூறினார். கென் செடில்வர்த் கென் செடில்வர்த் ("Ken Shuttleworth", பிறப்பு: நவம்பர் 13 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் போட்டியிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். கலவை கலவை (வேதியியல்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு பதார்த்தங்கள் இரசாயன தாக்கத்தில் ஈடுபடாது. கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும். எ.கா: உப்புக் கரைசல் கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும். எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல். பிராங்க் சிமைல்ஸ் பிராங்க் சிமைல்ஸ் ("Frank Smailes", பிறப்பு: மார்ச்சு 27 1910, இறப்பு: திசம்பர் 1 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 269 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1946 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிளாட்ஸ்டன் சிமோல் கிளாட்ஸ்டன் சிமோல் ("Gladstone Small", பிறப்பு: அக்டோபர் 18 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அலன் சிமித் அலன் சிமித் ("Alan Smith", பிறப்பு: அக்டோபர் 25 1936 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 428 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 - 1963 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சீ. ஆப்ரே சிமித் சீ. ஆப்ரே சிமித் ("C. Aubrey Smith", பிறப்பு: சூலை 21 1863, இறப்பு: திசம்பர் 20 1948), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 143 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிறிஸ் சிமித் கிறிஸ் சிமித் ("Chris Smith ", பிறப்பு: அக்டோபர் 15 1958 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 269 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 214 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1986 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா ("Debiprasad Chattopadhyaya", நவம்பர் 19, 1918 - மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.ஜார்ஜ் தாம்சனின் ஆய்வுமுறையைப் பின்பற்றி உலகாயதம் பற்றி ஆய்வு செய்தார்.கொல்கத்தா நகரக் கல்லூரியில்(city colleage)நெடுங்காலம் மெய்யியலைப் போதித்தார். அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கலாம்: தாமோதர் தர்மானந்தா கோசாம்பி டி. டி. கோசாம்பி எனப் பரவலாக அறியப்பட்ட தாமோதர் தர்மானந்தா கோசாம்பி ("Damodar Dharmananda Kosambi", ஜூலை 31, 1907–ஜூன் 29, 1966)) ஒரு இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர், புள்ளியியலாளர் மற்றும் பல்துறை அறிஞர். இந்திய மார்க்சிய வரலாறெழுதலில் அடிப்படைகளை இட்டவர். இவர் புகழ் பெற்ற பாளி மொழி அறிஞர் ஆச்சாரிய தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் மகன் ஆவார். தாமோதர் தர்மானந்தா கோசாம்பி 1907ல் பிறந்தார். அவரது தந்தை உலகப்புகழ்பெற்ற பௌத்த தத்துவமேதை தர்மானந்த தாமோதர் கோசாம்பி. 1918ல் கோசாம்பி தன் தந்தையுடனும் குடும்பத்துடனும் மசாசுசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு பயணமானார். அவரது தந்தை ஹார்வார்ட் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றச் சென்றார். மசாசுசெட்ஸின் கிராமர் பள்ளியில் பயின்றபின் 1920ல் கேம்பிரிட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே அவர் கேம்பிரிட்ஜ் சாரணர் அமைப்பில் பங்குபெற்றார் கேம்பிரிட்ஜில் மிகச்சிறப்பான வெற்றி பெற்று 1924ல் ஹார்வார்ட் பல்க்லையில் சேர்ந்தார். ஆனால் அவரது தந்தை இந்திய சுதந்திரப்போரில் பங்கெடுக்க விரும்பி திரும்பி வந்தமையால் கோசாம்பி படிப்பை விட்டுவிட்டு குஜராத்துக்கு வந்துசேந்தார். 1926ல் கோசாம்பி மீண்டும் அமெரிக்கா திரும்பி ஹார்வார்ட் பல்கலையில் சேர்ந்தார். ஜார்ஜ் டேவிட் பிர்க்காஃப் அவர்களின் கீழே கணிதவியலில் ஆய்வுசெய்ய ஆரம்பித்தார். 1929ல் ஹார்வார்டில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியா திரும்பினார் இந்தியாவில் கோசாம்பி பனாரஸ் இந்து பல்கலையில் கணிதமும் ஜெர்மன் மொழியும் கற்பிக்கும் ஆசிரியராக ஆனார். கணித ஆய்வுகளையும் செய்துவந்தார். அவரது முதல் ஆய்வேடு "Precessions of an Elliptic Orbit" 1930ல் வெளிவந்தது 1931ல் கோசாம்பி நளினி என்ற செல்வந்த குடும்பத்துப் பெண்ணை மணந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்குக் கணிதப்பேராசிரியராக அழைக்கப்பட்ட கோசாம்பி அங்கே பணியாற்ற ஆரம்பித்தார். அங்கே பணியாற்றும்போது கணிதம் [Differential Geometry ]மற்றும் பொறியியலில் [Path Spaces.] அவர் எட்டு ஆய்வேடுகளைத் தயாரித்தார். 1933ல் கோசாம்பி பூனாவில் உள்ள ஃபெர்கூசன் கல்லூரியில் டெக்கான் கல்வி கழகத்தில் கணிதவியலாசிரியராகச் சேர்ந்தார். பன்னிரண்டு வருடங்கள் அங்கே பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவரது மகள்கள் மாயா மற்றும் மீரா ஆகியோர் பிறந்தார்கள். மீரா பின்னாளில் முக்கியமான பெண்ணியச் சிந்தனையாளராக அறியப்பட்டார். இங்கே பணியாற்றும்போது கோஸாம்பி 1944ல் வரைபடங்களை ஆராய்ந்து புகழ்பெற்ற ஆய்வேடு ['The Estimation of Map Distance from Recombination Values’] ஒன்றை வெளியிட்டார். இது கோசாம்பியின் வரைபடசெயல்பாட்டுக் கொள்கை எனப்படுகிறது. அதேபோல புள்ளியியலிலும் முக்கியமான சில முன்னோடி முயற்சிகளைச் செய்தார். proper orthogonal decomposition (POD) என அழைக்கப்படும் அந்த ஆய்வு இன்றும் புகழ்பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் கோசாம்பி வரலாற்றாய்வுக்குள் புகுந்தார். சம்ஸ்கிருதத்தை கற்றுத்தேர்ந்தார். மூலநூல்களைத் தேடி ஆராய்ந்தார். சம்ஸ்கிருதச் செவ்வியல் கவிஞரான ஃபத்ருஹரி பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1948ல் பிரசுரித்தார். ஏறத்தாழ இக்காலகட்டத்தில் கோசாம்பி அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்றார். காங்கிரஸின் தீவிரச்செயல்பாட்டாளராக அவரது தந்தை இருந்தபோதிலும்கூட கோசாம்பி மார்க்ஸிய ஆய்வுமுறைகளிலும் மார்க்ஸிய அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார் 1945ல் ஹோமி பாபா கோசாம்பியை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிச்சர்ச் (TIFR) அமைப்புக்கு அழைத்தார். அங்கே கோசாம்பி கணிதத்தில் ஆய்வுசெய்தார். அன்று உருவாகி வந்துகொண்டிருந்த கணிப்பொறியலை ஆய்வுசெய்வதற்காக 1948 முதல் இரு வருடங்கள் கோசாம்பி யுனெஸ்கோ உதவியுடன் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார். அப்போது சிக்காகோ பல்கலையில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பிரின்ஸ்டன் பல்கலையின் உயராய்வுக் குழுமத்திலும் பணியாற்றினார். லண்டனில் அவருக்கு இந்தியவியலாளர் ஏ.எல்.பாஷாம் அவர்களுடன் நெருங்கி பழக நேர்ந்தது. அது அவரை மீண்டும் வரலாற்றாய்வுகளில் ஆர்வம் கொள்ளச் செய்தது . இந்தியா திரும்பிய கோசாம்பி இந்திய அரசியலிலும் ஈடுபட்டார். கோசாம்பி ருஷ்ய ஆதரவு மனநிலை கொண்டவ்ர். ஆனால் உலக அமைதி இயக்கத்தில் சேர்ந்து உலக அமைதிக்காகப் போராடினார். இந்தியாவில் அணுசக்தி மயமாதலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. கோசாம்பி அணு ஆற்றலுக்கு மாற்றாக மாற்று எரிபொருட்களை உருவாக்கவேண்டுமென கருத்துக்கொண்டிருந்தார் இக்காலகட்டத்தில் இந்தியாவின் தொன்மையான வரலாற்றை ஆராய்ந்த கோசாம்பி அவரது புகழ்பெற்ற முதல் வரலாற்று நூலை 1956ல் வெளியிட்டார். ‘இந்திய வரலாற்றாய்வுக்கு ஒரு முன்னுரை [Introduction to the Study of Indian History ] பல முக்கியமான வினாக்களை எழுப்பிய இந்த நூல் பெரிதும் பேசப்பட்டது 1952 முதல் 1962 வரை சீனாவில் இருந்த கோசாம்பி சீனப்புரட்சியை நேரில் கண்டார். அது அவருக்குள் நவீன உற்பத்திமுறை மற்றும் நுகர்வோர் பண்பாடு மேல் ஆழமான ஐயத்தை உருவாக்கியது. நேரு பாணி பெருந்தொழிலாக்கம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மேல் நம்பிக்கை இழந்த கோசாம்பி டாட்டா அறிவியல் ஆய்வுக்கழகத்தில் இருந்து விலகினார் அதன்பின் கோசாம்பியின் ஆய்வு முழுக்க முழுக்க இந்திய வரலாற்றில் குவிந்தது. அவரது பெரும்படைப்பு என்று கருதப்படும் ’பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரீகமும்’ என்ற நூல் 1965ல் வெளிவந்தது. இந்நூல் தமிழில் எஸ்.ஆர்.என்.சத்யாவால் மொழியாக்கம்செய்யப்படது. கோசாம்பி இந்திய அறிவியல் தொழில் துறைக் கழகத்தின் [Council of Scientific and Industrial Research -CSIR] முதுநிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில்தான் அவரது முக்கியமானவரலாற்று ஆய்வேடுகள் வெளிவந்தன. இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கான கதைகளையும் நிறைய எழுதினார். அவர் எழுதியவற்றில் கணிசமானவை அவர் காலகட்டத்தில் பிரசுரமாகவில்லை. கோசாம்பி ஜூன் 29, 1966ல் காலமானார். அவரது மரணத்துக்கு பின் அவருக்கு இந்திய பல்கலைமானியக்குழுவின் உயரிய விருதான ஹரி ஓன் ஆஷ்ரம் விருது அளிக்கப்பட்டது கோசாம்பியின் வரலாற்றாய்வுமுறை இந்திய வரலாற்றாய்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மன்னனின் பெயரைவிட எந்த வகையான கலப்பை பயன்படுத்தப்பட்டது என்பதே வரலாற்றை ஆராய்வதற்கு முக்கியமானது என அவர் கூறினார். உற்பத்திமுறை,வினியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப்பரிணாமத்தை உருவகித்து அதைக்கொண்டு வரலாற்றை உருவாக்க முற்பட்டார். மதக்குறியீடுகள் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றை சமூக வளர்ச்சியின் சித்திரத்தை காட்டும் அடையாளங்கள் என்று அவர் விளக்கினார். ‘தொன்மமும் உண்மையும்’ என்ற அவரது நூலில் இந்திய தெய்வங்களை இந்தியாவின் சமூக வளர்ச்சி பற்றி ஆராய்வதற்கான குறியீடுகளாக அவர் பயன்படுத்துவதைக் காணலாம். கோசாம்பியை ஒரு சம்பிரதாய மார்க்ஸியர் என்று சொல்லலாம். கோசாம்பியின் ஆய்வுமுறையை மேலெடுத்த ஆய்வாளர்கள் என ஆர்.எஸ்.சர்மா, இர்பன் அபீப் (Irfan Habib), ரொமிளா தாப்பர் போன்றவர்களைச் சொல்லலாம். இன்றும் அவரது ஆய்வுமுறை வெற்றிகரமாகக் கையாளப்படுகிறது. டி. டி. கோசாம்பியின் படைப்புகளில் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.அவைகள்: டேவிட் சிமித் டேவிட் சிமித் ("David Smith", அக்டோபர் 5 1934 - திசம்பர் 17 2003), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 386 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 - 1962 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் சிமித் (1956) டேவிட் சிமித் ("David Smith ", பிறப்பு: சனவரி 9 1956, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 - 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில்ப் சிலெக் வில்ப் சிலெக் ("Wilf Slack", பிறப்பு: திசம்பர் 12 1954, இறப்பு: சனவரி 15 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 237 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 183 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரெக் சின்பீல்ட் ரெக் சின்பீல்ட் ("Reg Sinfield", பிறப்பு: திசம்பர் 24 1900, இறப்பு: மார்ச்சு 17 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 430 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜிம் சிம்சு ஜிம் சிம்சு ("Jim Sims", பிறப்பு: மே 13 1903, இறப்பு: ஏப்ரல் 2 1973), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 462 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1935 -1937 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட் ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட் ("George Simpson-Hayward", சூன் 7 1875 - அக்டோபர் 2 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1910 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிறிஸ் சில்வர்வூட் கிறிஸ் சில்வர்வூட் ("Chris Silverwood", பிறப்பு: மார்ச்சு 5 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரயான் சைட்பொட்டம் ரயான் சைட்பொட்டம் ("Ryan Sidebottom", பிறப்பு: சனவரி 15 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 152 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 177 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2010 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆர்னி சைட்பொட்டம் ஆர்னி சைட்பொட்டம் ("Arnie Sidebottom", பிறப்பு: ஏப்ரல் 1 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 228 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 240 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1985 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொனால்ட் சிமித் டொனால்ட் சிமித் ("Donald Smith", பிறப்பு: சூன் 14 1923, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 377 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1957 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எட் சிமித் எட் சிமித் ("Ed Smith", பிறப்பு: சூலை 19 1977, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 197 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹாரி சிமித் (1881) எட் சிமித் ("Harry Smith ", பிறப்பு: மே 21 1891, இறப்பு: நவம்பர் 12 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 402 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜிம் சிமித் ஜிம் சிமித் ("Jim Smith ", பிறப்பு: ஆகத்து 25 1906, இறப்பு: பிப்ரவரி 8 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 208 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 37 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எம். ஜே. கே. சிமித் எம். ஜே. கே. சிமித் ("M. J. K. Smith", பிறப்பு: சூன் 30 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 637 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1958 - 1972 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தமிழ்நாட்டின் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தமிழக அரசால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தனியார் பள்ளிகளில் நிலவும் தன்னிச்சையான கட்டண வீதங்களை முறைப்படுத்தும் நோக்கத்துடன் திசம்பர் 2009இல் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக நீதியரசர் கோவிந்தராசன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டிலுள்ள 10,233 மானியம் பெறாத பள்ளிகளின் கட்டுமானம், ஆசிரியர்களின் ஊதியம், மற்றபிற செலவினங்கள் ஆகியவை குறித்த தகவல்களைப் பெற்று, அவ்வகை தகவல்களைத் தர மறுத்த 701 பள்ளிகள் உள்ளிட்ட 10,934 தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை பரிந்துரைத்தது. 955 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை தமிழக அரசு அக்டோபர் 21, 2010 அன்று தனது இணைய தளத்தில் வெளியிட்டது. ஆனால் இந்தக் கட்டண வீதங்களை ஏற்க மறுத்த 6,500 பள்ளிகள் இந்த கட்டணங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றதில் முறையிட்டன. இதனை ஏற்ற நீதிமன்றம் இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை நான்கு மாதங்களில் மீளாய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. கட்டண வீதங்களை வெளியிட்டபிறகு தனது பொறுப்பிலிருந்து கோவிந்தராசன் விலகியதால் அக்டோபர் 31, 2010 அன்று குழுத் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தொழில்சார் கல்விநிறுவனங்களுக்கான சேர்க்கைக்கான நிரந்தரக் குழுவின் தலைவராக உள்ள ரவிராஜ பாண்டியன் தலைமையில் இந்தக் குழு மாவட்டம் வாரியாக பள்ளிகளை அழைத்து பள்ளிகளின் விவரங்களை கேட்டறிந்தது. நேர்முக கேட்பு 15.11.2010 முதல் 4.5.2011 வரை நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள் மேல்முறையீடு செய்த போது அளித்த விவரங்கள் நேர்முக கேட்பின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் சரிபார்த்து இறுதி கட்டணங்கள் கொண்ட தனது அறிக்கையை சூன் 13, 2011 அன்று வெளியிட்டது. இந்த கட்டண வீதங்கள் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டண விகிதத்தை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக் கட்டண முழு விவரமும் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும். மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்தக் கட்டணங்கள் செயலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது அறிக்கையை வெளியிட்டபிறகு ரவிராஜ பாண்டியன் முந்தைய தலைவர் போலவே தம் பதவியிலிருந்து விலகினார். அவன் இவன் அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். கதைச் சுருக்கம் ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை. கண்மாய் கண்மாய் () என்பது குளம், ஏரி போன்ற ஒரு நீர்நிலை. இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. கண்மாய் நீர் மக்களுக்கு குடிக்கவும், வேளாண்மைக்கும் பயன்படுகிறது. மேலும் சில கண்மாய்கள் பறவைகள் மிகுந்து வாழ ஏற்றதாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேத்தமங்கலம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கண்மாய்கள் சில கிலோமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டிருக்கும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர். எஸ். கண்மாயின் நீளம் 19.8 கி.மீ, அகலம் 6 கி.மீ. மியாசாக்கி மாகாணம் மியாசாக்கி (Miyazaki Prefecture (宮崎県) சப்பானின் கியூசு தீவிலுள்ள ஒரு மாகாணம். இதன் தலைநகரின் பெயரான மியாசாக்கி என்ற பெயராலேயே இம்மாகாணமும் அழைக்கப்படுகிறது. இது தீவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. துளசி சுந்தரம் துளசி சுந்தரம் (பி: 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியையும் கூட. 1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியவற்றையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இ. தெய்வானை இ. தெய்வானை (பிறப்பு: ஆகத்து 15 1950) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓர் ஆசிரியையும் கூட. மலேசிய இந்து சங்கம் மூவார் வட்டாரத்தின் மாதர் பகுதித் தலைவியுமாவார். 1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஏ. தேவராஜன் ஏ. தேவராஜன் (பிறப்பு: சூன் 20 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலாய் மொழி ஆசிரியரும், சிறந்த ஒவியருமாவார். மற்றும் "அருவி", "இலக்கியக் குரிசில்" ஆகிய இதழ்களில் துணைசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பல சிறுகதைகள், கட்டுரைகள், 2000த்துக்கு மேற்பட்ட புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஜெர்மனியிலிருந்து வரும் "பூவரசு", டென்மார்க்கிலிருந்து வரும் "இளைஞன்" இதழ்களிலும் இவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. நம் உரத்த சிந்தனை (சிற்றிதழ்) தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் நம் உரத்த சிந்தனை மாத இதழும் ஒன்று. சென்னையிலிருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக எஸ். ஜி. வெங்கட்ராமன் என்கிற உதயம்ராம் என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது. இந்த இதழுக்கு உரத்த சிந்தனை வாசகர் வட்டம் எனும் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அமைப்புகள் உள்ளன. புதுதில்லி, ஹைதராபாத் நகரங்களிலும் கிளை அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வெ. தேவராஜுலு வெ. தேவராஜுலு (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். வெ. தேவராசன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் கிறித்துவ சமயப் போதகருமாவார். மேலும் இவர் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராக 2006 முதல் பணியாற்றி வருகின்றார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சமயபோதனை தவிரச் சமுதாயச் சிந்தனையும், உடல் நலமும் இவர் எழுத்துக்களின் கருப்பொருள்களhகக் காணப்பட்டன. கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கு. தேவேந்திரன் கு. தேவேந்திரன் (பி: 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார். 1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் செய்திகள், கட்டுரைகள் எழுதிவரும் அதேநேரம், புதுக்கவிதையையும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நடராஜா முனியப்பன் நடராஜா முனியப்பன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'தமிழ் கிறுக்கன்' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் தனது பெற்றோர்களை, தெய்வங்களாக போற்றி வருகின்றார். அத்துடன் இவர் 18 முறை இரத்த தானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். 2002 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பல கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற இவர் தனது தனது படைப்புக்களில் சமூகப்பிரச்னைகளைப் பற்றியும் அவற்றைக் களையும் வழிமுறைகளைப் பற்றியும் எழுதுவதில் ஆர்வம் காட்டியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஆறு. நாகப்பன் ஆறு. நாகப்பன் (பிறப்பு: மார்ச்சு 20 1944) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளராகவும், பல ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார். சிறந்த ஆன்மீகப் பேச்சாளரும்கூட. 1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், திறனாய்வுகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம், தமிழ்க் கவிதைகளை மலாயில் மொழிபெயர்த்து "தேவான் பஹாசா" என்னும் மலாய் இதழில் பதிப்பித்துமுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் பல ஆண்டுகளாக "சக்தி" என்னும் இந்து சமய இதழைத் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பதிப்பித்து வருகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் (2006). கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ("Kanyakumari Government Medical College") தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று ஆகும். இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லுரி தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற இடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்திருந்த அரசு காசநோய் மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதற்கு உரிய தளமாக தேர்வு செய்யப்பட்டது. மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும் ஒரே வளாகத்தில் இருக்கவேண்டும் என்ற இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவுறுத்தலுக்கு உட்பட்டு இக்கல்லூரியானது நிறுவப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. முதல் வருட மருத்துவப் படிப்பு இங்கு 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 500 மருத்துவ மாணவர்களும் பல மருத்துவ உதவியாளர் பயிற்சி மாணவர்களும் எந்த நேரத்திலும் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். வருடத்திற்கு மருத்துவப் பட்டப்படிப்பில் நூறு இளங்கலை மாணவர் சேர்க்கைகளுக்கான இடங்களைக் கொண்ட இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பல்வேறு பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரியுடன் கீழ்கண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உவமான சங்கிரகம் உவமைகளைச் சொல்லடைவாகவும், பொருளடைவாகவும் தொகுத்துக் காட்டும் நூல் உவமான சங்கிரகம். உவமான சங்கிரக நூல்கள் நான்கு. உவமான சங்கிரகம் என்னும் பெயரால் மூன்று சிறிய நூல்கள் உள்ளன. அவை முறையே நூற்பாவாலும், விருத்தப்பாவாலும், வெண்பாவாலும் ஆனவை. இவற்றின் காலம் முறையே 15, 17, 18ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உவம-இயல் மொழியின் அணியைக் கூறுகிறது. இதனை விரிவுபடுத்தித் தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகிய நூல்கள் பல்வேறு அணிகளைக் கூறுகின்றன. இந்த நூல்கள் பெண்ணின் உறுப்புகளுக்கு முன்னோர் சொன்ன உவமைகளைத் தொகுத்துக் கூறுகின்றன. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்த நூல்கள் தோன்றின. பிரபந்தங்களில் பல பெண்ணை வருணிப்பதில் ஆர்வம் காட்டின. அவர்கள் வருணிக்கக் கையாண்ட உவமைகளைத் தொகுத்துக் கூறுபவை இந்த நூல்கள். குவலயானந்தம் (மாணிக்கவாசகர்) உலகப் பன்னோக்கு என்னும் பெயரில் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது குவலயானந்தம் (குவலயம்+அனந்தம்) குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது. மீமாம்சை என்னும் நூல் வடமொழியில் உள்ளது. இது அணியிலக்கணம் கூறும் நூல். இந்த நூலைத் தமிழில் தரும்படி வரகுண பாண்டியன் என்பவன் வேண்டினானாம். அவன் வேண்டுகோளுக்கு இணங்க வாதவூரான் என்பவர் இந்த நூலைச் செய்தளித்தாராம். இப்படி இந்த நூலின் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கிறது. இந்த வாதவூரார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அல்லர். பிரபந்தங்கள் தோன்றிய 13ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். முற்றுப்பெறாத இந்த நூலில் 282 நூற்பாக்கள் உள்ளன. இவற்றில் சொல்லிலக்கணமும், அணியிலக்கணமும் கூறப்படுகின்றன. மைதிலி சரண் குப்த் மைதிலி சரண் குப்த் ("Maithilisharan Gupt", "मैथिलीशरण गुप्त"; ஆகஸ்ட் 3, 1886 – டிசம்பர் 12, 1964) ஒரு இந்திக் கவிஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நவீன இந்தி கவிதையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகிலுள்ள சிர்கான் எனும் ஊரில் 03-08-1886 ஆம் நாளில் பிறந்த இவர் பள்ளிப்படிப்புக்கும் குறைவாகத்தான் படித்தார். இவருடைய சகோதரர் சியாம் சரண்குப்தா புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்ததால் இவரும் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1903 ஆம் ஆண்டில் வைஸ்யோபகாரக் என்ற சஞ்சிகையில் இவரது சாண்ட்ஸ் எனும் படைப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு 1905 ஆம் ஆண்டில் சரஸ்வதி எனும் இதழில் இவருடைய முதல் கவிதை வெளியானது. இவரது கவிதைத் தொகுப்புகளில் 1909 ஆம் ஆண்டில் வெளியான “ரங்மைன் பாங்”, 1910 ஆம் ஆண்டில் வெளியான “ஜெயாத்ரத்வாத்”, 1912 ஆம் ஆண்டில் வெளியான “சந்த்ரஹாஸ்”, “கிசான்” மற்றும் 1916 ஆம் ஆண்டில் வெளியான “வைடாலிக்” போன்ற நூல்கள் மிகவும் சிறப்பு பெற்ற நூல்களாகக் கருதப்படுகின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர் 1940 ஆம் ஆண்டில் ஜான்சி சிறைச்சாலையிலும், 1941 ஆம் ஆண்டில் ஆக்ரா சிறைச்சாலையிலும் சிறைத்தண்டனை பெற்றார். 1952 முதல் 1964 வரை பன்னிரண்டு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1936 ஆம் ஆண்டில் இந்தி சாகித்திய சம்மேளனம் இவருடைய சாகேத் கவிதை நூலுக்கு மங்கள பிரசாத் பரிசை வழங்கியது. பிரயாக், ஆக்ரா, காசி இந்து பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் (டி.லிட்) பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இந்தி ஆர்வலர்களால் “ராஷ்டிர கவி” என்று அழைத்துப் பெருமைப்படுத்தப்பட்ட இவருக்கு 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவருடைய எழுபத்து எட்டாம் வயதில் சிர்கானில் 12-12-1964 ஆம் நாள் மரணமடைந்தார். ஏ. எஸ். பிரான்சிஸ் ஏ. எஸ். பிரான்சிஸ் (பிறப்பு: செப்டம்பர் 29, 1950), மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியாவில் பேராக் மாநிலத்தில், ஆயர்தாவார் என்ற சிறு நகரிலிரிந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆர்க்கிராப்ட் எஸ்டேட் என்ற ஒரு இரப்பர் தோட்டத்தில், மரியம்மாள்-ஆரோக்கியசாமி தம்பதியினரின் புதல்வனாக பிறந்த இவர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பின்பு சித்தியவான் காந்தி கலாசாலையில் ஆங்கிலம் கற்று, அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு, குடும்பச் சூழ்நிலையால் ஆங்கிலப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறந்த தோட்டத்திலேயே, "சொக்கரா' வேலையில் சேர்ந்த்தார். 1970-ஆம் ஆண்டு, கத்தோலிக்க கிறிஸ்துவ குருமார்களின் ஆதரவில், தமிழ்நாடு, தெற்கு ஆற்காடு மாவட்ட நகரான திண்டிவனத்தில், சமயப் படிப்புக்குச் சென்று, அங்கு ஈராண்டுகள் படிப்பு முடித்து, பின் பூந்தமல்லி வேதியர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டும் படித்து, சமயக் கல்வியில் பட்டயப் படிப்பில் தேர்வு பெற்றார். 1973-ஆம் ஆண்டு, ம்லேசியா திரும்பி, சமயத் திருப்பணி ஆற்றத்தொடங்கினார். சிறிய வயது முதல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இவரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. 1975-ஆம் ஆண்டு, ஈப்போவிலிருந்து வெளிவந்த "ஒளி விளக்கு" என்ற கிறிஸ்த்துவப் பத்திரிகையில் கவிதை-கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இவரது "நவீன சாக்ரடிஸ்" என்ற முதல் புதுக்கவிதையும், "கையெழுத்து" என்ற முதல் சிறுகதையும், "வானம்பாடி" வார இதழில் 1980-ஆம் ஆண்டு அச்சேறி, மலேசிய வாசகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற இவர் வானொலிக்கு இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. இதுவரை, ஆயிரத்துக்கும் அதிகமான புதுக்கவிதைகள், நூற்றுக்கும் குறையாத கட்டுரைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர் கதைகள் என இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. மலேசியாவில் அதிக புதுக்கவிதை படைப்பாளர், புதுக்கவிதை நூல்களை அதிகம் வெளியிட்டவர் என்ற பெருமைக்குரிய ஏ. எஸ். பிரான்சிஸ் அவர்களின் எழுத்துப்பணி இன்றும் தொடர்கிறது. இவரது நூல்கள் பட்டப்படிப்பு ஆய்வுகளுக்காக பல மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முரு. சொ. நாச்சியப்பன் முரு. சொ. நாச்சியப்பன் (பிறப்பு: அக்டோபர் 3 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழ் வண்ணன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் இதழாசிரியராகவும், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய பத்திரிகைகளில் துணையாசிரியராகவும் இருந்துள்ளார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். மேலும், "கண்ணதாசன் பரம்பரை" எனும் தலைப்பில் தமிழகக் கவிஞர்களை மலேசிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் தொடர் கட்டுரையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழ் ஒலிப்புமுறை தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். ஒலியன் என்பது தமிழில் காணப்படும் சொற்களின் பொருள்களை வேறுபடுத்தி அறிவதற்கு உரிய அடிப்படையான ஒலி அலகு. எடுத்துக்காட்டாகத் தமிழில் காணப்படும் அடு, ஆடு, இடு, ஈடு முதலியன பொருள் கொள்ளுதலில் தம்முள் வேறுபட்டவை ஆகும். இவ்வேறுபாட்டை இச் சொற்களில் காணப்படும் அ(a), ஆ(a:), இ(i), ஈ(i:), ஆகிய ஒலியன்கள் காட்டுகின்றன. எனவே அ, ஆ இ, ஈ முதலியன ஆகியவை தமிழ் மொழியில் காணப்படும் தனித்தனி உயிர் ஒலியன்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மொழியில் காணப்படும் சொற்கள் அனைத்தையும் ஆ(ரா)யும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர் எழுத்துக்களும், க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம், ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய 18 மெய் எழுத்துக்களும்,ஃ என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆய்தமும் ஆகிய 31 ஒலியன்கள் உள்ளன. ஒலிகள் அவை பலுக்கப்படும் போது பயன்படும் ஒலி உறுப்புக்களின் இடத்தையும்(place) அவை பலுக்கப்படும் முறையையும்(manner) அடிப்படையாக வைத்துப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படும். ஒலி உறுப்புக்கள்: காற்று வாய்வழி வரும்பொழுது மூக்கறை அடைபட்டு வாய்வழி ஒலி வரும்போது உருவாகும் ஒலி அலைகள் வாய் ஒலிகள் (oral sound) - அ,இ,க்,ச்,ட் போன்றவை. வாய் அடைக்கப்பட்டு மூக்கு வழி வரும் ஒலி அலைகள் மூக்கொலிகள்(nasal) - ங்,ஞ்,ண்,ம்,ந்,ன் போன்றவை. தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என பிரிக்கப்பட்டுள்ளன. உச்சரிக்கையில், வல்லின எழுத்துகள் அழுத்தம் மிகுந்தும், மெல்லின எழுத்துகள் அழுத்தம் குறைந்தும், இடையின எழுத்துகள் மிதமான அழுத்தத்துடனும் ஒலிப்பன. வல்லின எழுத்துகள் சொல்லின் முதலாக தோன்றும் பொழுதும் சொல்லின் இடையில் இன ஒற்றுக்குப் பிறகு தோன்றும் பொழுதும் வல்லினதிற்குறிய இயல்பான அழுத்தத்துடனேயே உச்சரிக்கப் படுகின்றன. ஆனால் பெரும்பாலும் சொல்லின் இடையில் தனித்து தோன்றும் பொழுது அழுத்தம் சற்று குறைந்து ஒலிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: பெ. நாராயணசாமி பெ. நாராயணசாமி (பிறப்பு: பிப்ரவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் ஒரு சிறந்த மேடை நாடகப் பயிற்றுநரும், நல்ல காற்பந்தாட்டக்காரருமாவார். 1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கே. ஐ. நாராயணன் கே. ஐ. நாராயணன் (பிறப்பு: அக்டோபர் 6 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் "மலரும் உள்ளம்" எனும் மாத இதழுக்கு ஆசிரியாராகவும் இருந்துள்ளார். 1961 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் தொடர்கதைகள் புதுக்கவிதைகள் மற்றும் கட்டுரைகளும் துணுக்குகளும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. குறமகள் இளவெயினி குறமகள் இள எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 157 எண் கொண்ட பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது பெயர் குறமகள் குறியெயினி என்னும் புலவரின் பெயர் அமைப்பைப் போன்றது. ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்' என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது. ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான். பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன். தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன். மலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது. நிர்மலா ராகவன் நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார். வடோதரா வடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: , மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது, மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும். இந்த நகரத்தை "சயாஜி நகரி" என்ற பெயரிலும் ("சயாஜியின் நகரம்" மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது "சன்சுகாரி நகரி" ("கலாச்சார நகரம்", மற்றும் "குசராத்தின் கலாச்சார தலைநகரம்"). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி நதிக் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது. பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது. இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. குரு கோவிந்த் சிங் குரு கோவிந்த் சிங் ("Guru Gobind Singh", பஞ்சாபி: ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ, டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பைச் சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார். இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். இவரது தாய் மாதா குஜ்ரி ஆவார். இவரது தந்தை அஸ்ஸாம் மாநிலத்திற்கு மதத்தைப் பரப்ப சென்ற போது இவர் பிறந்தார். தனது தாயார் மற்றும் தாய் வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே கோவிந்த் சிங் தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார்.ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக்கொண்டு இருந்த போது,நவாப் யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்கச் சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள் என்று கூறினார். வழக்கமான தனது குறும்புச் செயல் போல, ஒருநாள் குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தை உடைக்க முயன்ற போது,கல் தவறுதலாக அவரது நெற்றியில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு முகமதிய பெண்மணி. மகனின் செயலைக் கண்ட கோவிந்த் சிங்கின் தாயார் உடனடியாக வந்து கடுமையாக கண்டித்தார். தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தனது தவறுக்கு வருந்துவதாகவும் கோவிந்த் தெரிவித்தார். அதற்கு தாயார், ’நீ என்ன செய்திருக்கிறாய்? வெளியாட்களின் ஆட்சியில் நாம் இருப்பது தெரியாதா? இதில் அந்த மதத்தினர் காயம் பட்டது மன்னருக்குத் தெரிந்தால் நமக்கு அழிவு காலம் வரும்’ என்று வருந்தினார்.இந்த பாகுபாட்டைக் கேட்ட கோவிந்த் சிங் கோபம் கொண்டார்.தாய் மற்றும் பாட்டியாரின் சமாதான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல், உறுதியோடு ’இந்த நாட்டில் இனியும் இருக்க மாட்டேன். எனது தந்தையின் நாட்டுக்குச் செல்வேன்’ என்று கூறி பஞ்சாப் சென்றார். டெல்லி சிறையிலிருந்த தமது தந்தை குருதேக் பகதூர்க்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங். தமது மகனின் மீது நம்பிக்கை கொண்ட தந்தை ஒரு இளநீரையும் சில நாணயங்களையும் தமது குருசக்தியை மகனுக்கு தருவதின் சங்கல்பமாக நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்.."நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல" என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார்.இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார். 1685 , ஏப்ரல் மாதம் இவர் சிர்மௌர் மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார். 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான இடங்களையும் நிறுவினார். எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயமாக மாற்றினார். அவ்வமைப்பிற்கு கல்ச (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.இவ்வமைப்பில் சேருபவரை அகாலி என்று அழைத்தார். அகாலி என்பதற்கு இறவாதவன் என்று பொருள். கடவுளின் சார்புள்ளவானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார். சீக்கியர் அனைவரும் சிங்கத்தினைப் போன்ற பலமும், அரசனைப் போன்ற சக்தியும்,சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார்.முன்பு வழக்கமாயிருந்த சரண்பாஹுல் எனும் ஞானஸ்நானம் வழங்கும் சடங்கினை மாற்றி அம்ருத்பாஹீல் எனும் புதிய சட்டத்தினைக் கொண்டுவந்தார்.இந்த சடங்கினைச் செய்த பின்னரே அவர்கள் சீக்கியர்களாக மாறுவர் என்று சட்டங்கள் இயற்றினார்.இச்சடங்கு முடித்த ஆண் தன் பெயரின்பின் சிங் (சிங்கம்) என்றும் பெண் கெளர் (பெண்சிங்கம்) என்றும் பெயரின் பின் இணைத்துக்கொள்ள வேண்டுமெனக் கட்டாயமாக்கினார். சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங் அகற்றினார். அவருக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான 'தஸ' எனும் பாகத்தை இவரே எழுதினார்.ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர்,பகவதி தீவார், ராம் அவதார்,துர்க ஸப்தஸதி ஆகிய இந்து நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார். ”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார். சீக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்திய குரு கோவிந்த் சிங் சில கோட்பாடுகளை வகுத்தார்.அதன் படி ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காகத் தலைப்பாகையும் பஞ்ச 'க' வையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்தி மொழியில் பஞ்ச் என்றால் ஐந்து.க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது. ஐந்தும் முறையே தியாகம்,தூய்மை,ஆன்ம சுத்தி,புலனடக்கம்,நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார். சீக்கியர் மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது.நாள் தோறும் ஐந்துமுறை வழிபடுதல் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு தானம் வட்டி வாங்காமை ஆகியவற்றை அவர்கள் கடைபிடித்துவருதலைக் கட்டாயமாக்கினார். மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் அக்டோபர் 7, 1708இல் மரணமடைந்தார். தமிழ்ப் பிராமி தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிப்புரலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டது) மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் பற்றிப் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழி எழுத்துமுறை கி.மு.5ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும் மற்ற பிராமி எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும், அதாவது அசோகருக்கு பிற்பட்ட அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு (சுமார் கி.மு. 322-185) காலத்துக்குரியவை என பொதுவாகக் கருதப்படுகின்றன. சில ஆரம்ப கால எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரியனவாகவுள்ளன. இதிலுள்ள பல பிராமி எழுத்துமுறைகளுள் தமிழ்ப் பிராமி பட்டிப்புரலு எழுத்துமுறைக்கு நெருங்கியதாயுள்ளது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும். இது தமிழி (தாமிழி) எனவும் அழைக்கப்படுகிறது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றன. அவை: பிராமி மற்றும் தமிழ்ப் பிராமி என்பவற்றின் மூலம் பற்றி திட்டவட்டமாகத் தெளிவாக அறிய முடியவில்லை. பல எழுத்துப்பொறிப்புகளின் காலங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் உள்ளன. ஆயினும் இலக்கிய, கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்பொருள் சான்றுகள் பல கருத்துக்களை முன் வைக்கின்றன. சிலரது கருத்துக்கள் தமிழி அசோகருக்கு முற்பட்டது எனவும், சிலரது கருத்துக்கள் அசோகருக்குப் பிற்பட்டது எனவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாகப் பின்னர் உருமாறின. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று. அடுத்தது சமண நூல்களான சமவயங்க சுத்தா (கி.மு. 300), பன்னவயன சுத்தா (கி.மு. 168) என்பனவற்றில் தமிழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெளத்த நூலான "லலிடவிஸ்டரா" (புத்தரின் பிறப்பைக் கூறும் இது கி.பி. 308 இல் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது) "திராவிடலிபி" சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கமில் சுவெலபில் "திராவிடலிபி", "தமிழி" என்பன தமிழ் எழுத்துமுறைக்கான ஒரே பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்துமுறைத் தொடர்பு ஆரம்ப தமிழ் இலக்கியத்தில் உள்ளது. தொல்காப்பிய செய்யுள் 16 மற்றும் 17 மெய்யொலிக்கு புள்ளி சேர்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய ஆசிரியர் அவருக்குத் தெரிந்த எழுத்துமுறை, படமுறை பற்றித் தெரிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குறள் "எழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் "கண்ணெழுத்து" பற்றிக் குறிப்பிடுகின்றது. இது துறைமுக வணிக மையமான காவிரிப்பூம்பட்டினத்தில் விற்பனைப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அடையாளமிடப்பட பயன்படுத்தப்பட்டது. "கண்ணெழுத்தாளர்" (எழுத்தர்) என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலடியார், புறநானூறு ஆகிய எழுத்தோலைகளில் நடுகல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு அடிப்படையில், தமிழர் குறைந்தது கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து எழுத்துமுறை பற்றி அறிந்திருந்தனர் என கமில் சுவெலபில் நம்புகின்றார். அசோகருக்கு முன்னான சான்றுகள் இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் கிடைத்துள்ளன. கொற்கையில் நடந்த அகழாய்வின் படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடு ஒன்றும் கிடைத்தது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 4ம் நூற்றாண்டு கால தென்னாசிய ஆரம்ப சான்றுள்ள சாசனங்கள் அனுராதபுர அரணில் கண்டுபிடிக்கப்பட்டன. அல்சின் கருத்துப்படி, அசோக முன் பிராமி பயணத்திற்கு மேம்பட்டு, வர்த்தகத்தொடர்பினால் தென்னாசியாவிற்குப் பரவியது. பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 5ம் நூற்றாண்டு கால சாசனம் மற்றும் சில சாசனங்கள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அசோகருக்கு பிற்பட்ட பரவல் பற்றி மகாதேவனினால் உருவாக்கப்பட்ட கருத்து அனுராதபுர கண்டுபிடிப்பினால் புறக்கணிக்கப்பட்டது. ஆர். நாகசுவாமியின் கருத்துப்படியும், கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படியும் தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியிலிருந்து சுதந்திரமாகத் தமிழகத்தில் மேம்பட்டு, மௌரியப் பேரரசின் தென் பிராமியினையினை சேர்த்துக் கொண்டது. கொனிங்கம் (1996), காசிநாதன் (1995), கே.வி. ரமேஸ், எம்.டி. சம்பத், கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. ராமன் (1976) மற்றும் சிரான் உபேந்திரா (1992) போன்றோர் அசோகருக்கு முன் பிராமி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததென நம்புகின்றனர். கே. ராஜன் தமிழ்ப் பிராமியின் மூலத்தை அறிய தமிழகத்தினதும் இலங்கையினதும் பொதுவான கலாச்சாரப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நம்புகின்றார். கி.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கூடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னுமெரு கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன. கல்வெட்டியல் மதிப்பீட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவனின் கருத்திற்கேற்ப சில ஆதாரக் கருத்துக்கள் முன்மொழியப்பட்டன. மகாதேவனின் கருத்துப்படி, தென்னிந்தியாவிலிருந்து சமணமும் பெளத்தமும் பரவியதால் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தை வந்தடைந்தன. பின்னர் தமிழ் ஒலிப்பியல் முறைக்கு ஏற்ப உள்வாங்கப்பட்டன. இக்கருத்தின் ஊகத்தின்படி, பிராமி எழுத்துமுறை கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் மௌரியப் பேரரசு தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரவியபோது கண்டுபிடிக்கப்பட்டது அல்லது தோற்றுவிக்கப்பட்டது. இக்காலம் அசோகனுக்கு பிற்பட்டதாக அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு காலமாக இருக்கலாம். அகமட் கசன் டனி கி.மு. 3ம் நூற்றாண்டு என்பதை கேள்விக்குட்படுத்தி கி.பி. 1ம் நூற்றாண்டு என்ற கருத்தை முன்வைத்தார். ஆயினும், தே. வே. மகாலிங்கம் மற்றம் ரிச்சட் சல்மன் போன்றோரினால் இக்கருத்து நிராகரிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமணர் மலையில் 2012இல் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2ம் நூற்றாண்டு தமிழ்ப் பிராமி சாசனம் கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப் பிராமி பரவலாகப் பாவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியான குழப்பமற்ற கலாச்சார அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு, நாணயங்கள் போன்ற பல செயற்கைப் பொருட்கள் பாறைப்படிவியல் காலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அடியில் காணபப்ட்ட அடுக்குகளைவிட மேலே காணப்பட்ட அடுக்குகள் காலத்தில் குறைந்தவை. ஆயினும் அடுக்குகளின் தொடர்ச்சி அண்மித்ததிலிருந்து தற்காலக்கு தொடர்புபட்ட காலவரிசையான தொடர்வரிசையினைத் தருகின்றது. கொடுமணலில் கீழ்மட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கி.மு. 4ம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரியது என பகுப்பாய்வில் கண்டுகொள்ளப்பட்டன. கீழ்மட்ட மட்பாண்ட ஓடு தமிழுக்குரிய எழுத்துக்களையும் "m" போன்ற வேறுபட்ட தொல்லெழுத்தியல் வடிவத்தினையும் கொண்டிருந்தது. மேலும், பேச்சொலி, மெய்யொலி, உயிர் உச்சரிப்பு, சீறொழி விலக்கல் தமிழ்ப் பிராமியில் காணப்பட்டன. கொங்கு நாட்டு கொடுமணலில் மட்டும் இந்கிகழ்வு வரையறுக்கப்படாது தமிழ்நாடு, கேரளா, இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாடு வரையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்பட்ட எழுத்துமுறையின் பரிணாமம், சீரான உள்வாங்கல் என்பன பரவலாகியது என கருதப்படுகின்றது. கே. ராஜன் கருத்துப்படி, தமிழ்நாட்டில் எழுத்துமுறையின் அறிமுகம் அல்லது பரிணாமம் அல்லது மூலம் என்பன அதன் ஒருமைப்பாடு, இலக்கண பிழை இண்மை மற்றும் பரவலான பயன்பாடு என்பவற்றால் கி.மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம். அசோகப் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காகப் புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறுபடுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும். இந்த முறைமை தனித்தமிழ் எழுத்து முறைமை எனக் கூறப்படுகிறது. பழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதன் காலத்தை அமெரிக்க நிறுவனம் கி.மு.490 என்று கணித்துள்ளது. இதனால் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அசோகப் பிராமிக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்களவு தனிப்பண்புகளைக் கொண்டுள்ளது. இது நான்கு வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்டு இந்தோ-ஆரிய பிராக்கிருதம் கொண்டு எழுதப்படும் வட பிராமி போன்றில்லாது திராவிட மொழிச் சூழலை வெளிப்படுத்துகின்றது. இந்திய அபுகிடா எழுத்து முறை செலுத்திய தாக்கத்தினால் அகர வரிசைப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டது. இலங்கையில் வட பகுதி கந்தரோடை முதல் தென் பகுதி திசமகாராமை வரை தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பட்டிப்புரலு சாசனம் தற்போதைய ஆந்திராப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முறையாகக் காணப்பட்ட இது, தமிழ்ப் பிராமிக்கு நெருங்கியதாக இல்லை. ரிச்சட் சல்மனின் கருத்துப்படி, பட்டிப்புரலு எழுத்துமுறை திராவிட மொழியினை எழுதக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இந்திய-ஆரிய மொழி பிராக்கிருதத்தினை பொறிக்க மீள் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் பட்டிப்புரலுவும் தமிழ்ப் பிராமியும் பொதுவான மாற்றத்தைக் கொண்டு திராவிட மொழிகளைப் பிரதிபலிக்கின்றன. பட்டிப்புரலு எழுத்து தமிழ்ப் பிராமி மொழி பெயர்ப்பின் ரொசெட்டாக் கல் எனவும் கருதப்படுகின்றது. இராவதம் மகாதேவனின் கருத்துப்படி, எழுத்துவடிவம் வளர்ச்சியில் மூன்று படிநிலைகள் காணப்பட்டன. ஆரம்ப நிலை கி.மு. 3ம்/2ம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ம் நூற்றாண்டு வரையானது. இரண்டாம் நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையானது. கடைசி நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம்/4ம் நூற்றாண்டு வரையானது. கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படி, தமிழ்ப் பிராமி எழுத்து தெளிவான காலக்கணிப்பைப் பின்பற்றாது காலம் பற்றிய குழப்பத்திற்து வழியேற்படுத்துகின்றது. கே. ராஜனின் கருத்துப்படி, அசோகப் பிராமி மகாதேவனின் வகைப்படுத்தலின்படியான இரண்டாம் நிலையுடன் தொடர்புபட்டது. ஆயினும் இவர் முதலாம் நிலை முன்மொழியப்பட்ட நேர எல்லையிலிருந்து மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார். கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்தாகவும் சோழ, பல்லவ நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது. குகை படுக்கைகள், நாணயங்களில் இருந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் சில அரசர்களையும் சங்ககால பிரதானியையும், அசோகரின் தூண்களில் இருந்த எழுத்துக்களையும் அடையாளங் காண உதவியன. தமிழ்ப் பிராமிப் பயன்பாடு சமண மதத்தினருடன் தொடங்கியது அல்லது மக்கள் நீண்ட காலமானப் பயன்படுத்தி வந்தனர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மொழிபெயர்ப்பு விளக்கமளிப்பவர் எழுத்துப் பயன்பாடு சமய விடயங்களுக்கு ஆரம்பத்தில் தடையாகவிருந்தது என நம்புகின்றனர். ஆயினும் தொல்பொருளியலாளர்கள் ஆரம்ப எழுத்துமுறை குத்துக்கல், நடுகல் மற்றும் மரண சாம்பல் கலசங்களில் உள்ளவாறு இயற்கையாகக் காணப்பட்டது என ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் இதனுடைய ஆரம்பம் அரசர்கள், தளபதிகள், குயவர் மற்றும் கள்ளு உற்பத்தியாளுடன் வேகமாப் பரவி, வணிகர் பாவணை இதனை தமிழகத்திலும் வெளியிலும் பரவச் செய்தது. தொல்பொருளியல் தேடல்களின்படி, எழுத்துவடிவம் இறுதிச் சடங்கு மற்றும் ஏனைய தேவைகளான பல்வேறுபட்ட சமயப் பிரிவினரில் திகதி குறித்தல் பயன்பாட்டிற்காகப் பெருங்கற்கால குறியீடுகளுடன் பயன்படுத்தப்பட்டது. சமய சாசனங்களில் தமிழ் இலக்கணக்காரர்களால் உருவாக்கப்பட்ட பிராகிருதம் மூலங்கள் அற்று மொழி பயன்பட்டது. சில ஆரம்பகால சாசனங்கள் இன்றைய கருநாடகத்தின் கன்னட மொழி தாக்கத்தினைக் காட்டுகின்றது. இது கிராம, நகர்ப்புறங்களில் வேறுபட்ட சமூக வகுப்பினரிடையே பயன்பாட்டிலிருந்த இடைக்கால தென்னாசிய ஏனைய எழுத்துக்களிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி தனியான எழுத்து முறையாக 20ம் நூற்றாண்டின் மத்தி வரை மொழி பெயர்ப்பு விளக்கம் பெறவில்லை. அதுவரைக்கும் இது பிராக்கிருத பிராமி எழுத்துமுறையாகக் கருதப்பட்டது. கி.பி. 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தென்னிந்திய சாசனங்களின் கிரந்த, வட்டெழுத்து, தேவநாகரி, தமிழ் எழுத்துக்களை மொழி பெயர்த்து விளக்கமளிப்பதும், எழுத்துக்களின் தற்கால வடிவங்களின் தோற்ற ஒற்றுமையில் அவற்றின் வளர்ச்சி நிலைகளை விளக்குவதும் ஆரம்ப பிராமி எழுத்துக்களைவிட இலகுவானதும் சிறப்பானதும் ஆகும். ஆரம்ப பிராமி சாசனங்கள் பிராக்கிருதத்திற்கு பயன்பட்ட பிராமியின் வேறுபாடுகளான வழக்கொழிந்த எழுத்துக்கள், எழுத்துக்கூட்டுமுறை விதிகள் என்பன பாரிய சவாலை ஏற்படுத்தின. ஏ.சி. புரூனல் (1874) தென்னிந்திய தொல்லெழுத்தியல் ஆரம்ப படைப்புக்கள் பற்றி ஆராய முயற்சித்தார், ஆயினும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் (1924), எச். கே. கிருஸ்ன சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகியோர் ஆரம்ப வடிவம் பிராக்கிருதத்தில் அல்ல தமிழல் எழுதப்பட்டது என்பதை கண்டுகொண்டனர். ஆரம்ப முயற்சிகள் உண்மையாக என்ன பயன்பட்டன என்பதைவிட்டு அதிக பிராக்கிருத சொற்கள் உள்வாங்கப்பட்டன என ஊகிக்கப்பட்டது. ஆயினும் மொழி பெயர்ப்பு விளக்கம் முற்றிலும் வெற்றியடையவில்லை. இ. மகாதேவன் அதிக தமிழ்ச் சொற்கள் உள்ளடங்கப்பட்டதை அடையாளங் கண்டு 1960களில் கருத்தரங்குகளில் தெரிவித்தார். இது மேலும் ரி.வி. மகாலிங்கம் (1967), ஆர். நாகசுவாமி (1972), ஆர். பன்னீர்ச்செல்வம் (1972), எம். எஸ். வெங்கடசாமி (1981) ஆகியோரால் விரிபுபடுத்தப்பட்டன. அமுல் அமுல் (Anand Milk Producers Union Iimited (AMUL)என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி.சி.எம்.எம்.எப். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது" என்பது பொருளாகும் வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது. அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது ஆகும். இந்நிறுவனம் உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்ணனி நிறுவனமாகும். இச்சங்கத்தின் மூலமாக ஒரே நாளில் 75 லட்சம் லிட்டர் பாலனது வெவ்வெறு 13141 கிராமங்களைச் சேர்ந்த 28 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. கடந்த 2008-09 நிதி ஆண்டில் அமுல் நிறுவனத்தின் நிகர வருமானம் 6711 கோடி ஆகும். அமுல் நிறுவனம் ISO 9001- 2000 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்த 3 சங்கங்களிலும் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து, பெறப்படும் பாலின் மூலமாக, உருவாகப்படும் பொருட்கள் அமுல் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் மூலமாக நாளொன்றுக்கு 15 கோடியானது கையாளப்படுகிறது. நாட்டின் பால் உற்பத்தியில் அமுல் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பால் பொருட்கள் 37 நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி வருவாயும் அதிகரிக்கிறது. பால் மூலம் உற்பத்தியாகக் கூடிய அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் அமுல் நிறுவனம் விற்பனை செய்கிறது. அவற்றுள் சில, இவை அவற்றுள் சில, மேலும் அமுல் நிறுவனமானது ஊட்டச்சத்து பானமான “STAMINA” என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அமுல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டு உள்ள சர்க்கரை சேர்க்கப்படாத புதிய வகை பனிக்கூழானது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புதிய தயாரிப்பாகும். பால் வகைகள், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, ஐஸ் கிரீம், பால் பொடி, இனிப்பூட்டப்பட்ட சுண்டிய பால், இனிப்பு வகைகள், சாக்கலேட், குளிர் பானங்கள், அமுல் சக்தி, நியூட்ராமுல் ஆகியனவும் அமுலால் சந்தைப்படுத்தப்படுகின்றன. தினமலர் தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி. இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் இரண்டு நாளிதழ்களில் இதுவும் ஒன்று. தினமலர் நாளிதழில் தினம் இடம் பெறுகின்ற பகுதிகள். தினமலர் நாளிதழுடன் இலவச இணைப்புகளாக புத்தகங்களும், வரிவிளம்பரம் போன்ற பகுதிகளும் கொடுக்கப்படுகின்றன. தினமலர் கோவில்கள் பகுதியில் பகவத் கீதை, மாவட்ட கோயில்கள், 12 திருமுறைகள், முக்கிய ஊர்களில் உள்ள கோயில்கள், 108 திவ்ய தேசம், 274-சிவாலயம், விஷ்ணு கோயில், சிவன் கோயில்,12 ஜோதிர் லிங்கம், விநாயகர் கோயில், அம்மன் கோயில், சக்தி பீடங்கள், முருகன் கோயில், அறுபடைவீடு, நவக்கிரக கோயில், 27 நட்சத்திர கோயில், பிற கோயில், தனியார் கோயில், கோயில் முகவரிகள், வெளி மாநில கோயில்,வெளிநாட்டு கோயில், சிறப்பு வீடியோ, ஐயப்ப தரிசனம், வழிபாடு, காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள் போன்றவை உள்ளன. தினமலர் மொபைல் நாளிதழ் என்பது தினமலர் நாளிதழ் வழங்கும் நகர்பேசி சேவையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. . இந்த சேவையை பெறுவதற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வசதி உடைய நகர்பேசி தேவை. இந்த சேவையை நியூஸ்ஹன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தினமலர் வழங்குகிறது . பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருச்சிராப்பள்ளி (Bharathidasan Institute of Management, Tiruchirappalli) அல்லது (BIM-Trichy) 1984ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட தனித்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம் முழுநேர வணிக நிர்வாகத்தில் பட்டமேற்படிப்பையும் (எம்பிஏ) முகவர் படிப்புகளையும் பல மேலாளர் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது. தனது துவக்கத்திலிருந்தே பாரத மிகு மின் நிறுவன வளாகத்திலிருந்து இயங்குகிறது. அந்த வளாகத்தில் உள்ள எம்எச்டி வளாகத்தில் வகுப்புகளும் மாணவர் விடுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. நகரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக கஜமலையில் உள்ள 12 ஏக்கரா நிலத்தில் இதன் சொந்த மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இவை 2011யில் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது. களரிப்பயிற்று களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும். வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார். தலிகோட்டா சண்டை தலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர் ("Battle of Talikota", , , சனவரி 26, 1565), விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர். ஜார்ஜ் தாம்சன் ஜார்ஜ் தாம்சன் ("George Derwent Thomson", 1903-பெப்ரவரி 3, 1987) ஒரு பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர், பண்டைய கிரேக்கவியல் மற்றும் கிரேக்க மொழி வல்லுநர். தமிழ்ப் புலமையாளர்களான க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரின் கலாநிதிப் பட்ட நெறியாளர். மார்க்சியத்தைப் பயில்வதற்கான அடிப்படை நூல்களை எழுதியுள்ளர். பத்தாவது தமிழ் இணைய மாநாடு உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில் பத்தாவது தமிழ் இணைய மாநாடு அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு சூன் 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ் இணையம் 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன. இம்மாநாட்டில் கீழ்காணும் 10 தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடத்தப்பட உள்ளன. இராஜாக்கமங்கலம் இராஜாக்கமங்கலம் (Rajakkamangalam) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிருவாக நிலைகளுள் ஒன்றாகும். இந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சிகளாவன, ராதாபுரம் வட்டம் இந்த வட்டத்தின் கீழ் இராதாபுரம், லெவிஞ்சிபுரம், சமூகரெங்கபுரம், பழவூர், பணகுடி, வள்ளியூர், என 6 குறுவட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் உள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராதாபுரம் வட்டத்தில் 302,268 பேர் வசிக்கின்றனர். இதில் 149,056 ஆண்களும், 153,212 பெண்களும் உள்ளனர். இதன் எழுத்தறிவு விகிதம் 79.67 ஆகும். ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 16,219 ஆண்கள் மற்றும் 15,620 பெண்கள் உள்ளனர். குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்) உலகப் பன்னோக்கு என்னும் பொருளில் செய்திகளைக் கூறுவது குவலயானந்தம் (குவலயம்+அனந்தம்). குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது. இக்கட்டுரையில் அப்பைய தீட்சிதரின் குவலயானந்தம் பற்றிய செய்திகள் தொகுக்கப்படுகின்றன. வாதவூராரின் நூல் நூற்பா எனப்படும் சூத்திர யாப்பால் அமைந்தது. இந்த நூல் கட்டளைக்கலித்துறை என்னும் யாப்பால் அமைந்தது. இடையிடையே ஈரடிப் பாடல்களும் வருகின்றன. இதில் 154 பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அணியிலக்கணம் பற்றியவை. ஐதராபாத்திலிலுள்ள 'அப்பைய தீட்சிதேந்திர கிரந்தாவளி பிரகாசன சமிதி' என்ற ஒரு நூலகத்தாரல் 1972இல் வெளியிடப்பட்டு, முனைவர் என். ரமேசன் என்பவரால் (ஆங்கிலத்தில்) எழுதப்பட்ட 'ஶ்ரீ அப்பைய தீட்சிதர்' என்றநூலில், தீட்சிதரின் 104 நூல்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அவைகளில் 'குவலயானந்தம்' பற்றி உள்ள குறிப்பு: 'அர்த்தாலங்காரத்தை' கற்பிக்கும் நூல் இது. அலங்கார சாத்திரத்தில் இது ஒரு பிரசித்தமான ஏற்புடைய நூல். இவருக்கு முன்னால் இத்துறையில் இருந்த நூல்களையெல்லாம் அலசி, தேர்ந்து திருத்தியமைக்கப்பட்ட நூல்.முழுநூலும் மனதுக்குப் பிடித்தமாகவும் விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் எழுதப்பட்டது. சில புது அணிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அணிகளைப் பற்றிப் படிப்போர் முதன்முதலில் படிக்கவேண்டிய நூல்.இதற்கு 'சந்திரிகா' (நிர்ணயசாகரா அச்சகம், மும்பை), 'ரசிக ரஞ்சனி' என்ற இரண்டு விளக்கவுரைகள் உள்ளன. 'ரசிக ரஞ்சனி' ஹாலாஸ்யநாத சாஸ்திரியாரால் கும்பகோணத்திலிருந்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. மழை மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் ("கார்முகில்களில்") இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது. "அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்." கோப்பென் வகைப்பாட்டு (Köppen classification) விலாடிமீர் கோப்பெனால் உருவாக்கப்பட்ட காலநிலை வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை அடிப்படையில் கோப்பென் இம்முறையை படைத்தார். உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார். "டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :" டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன: என்றாலும், இப் பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உப பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார். மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லீட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லீட்டர் என்ற அளவைவிட லீட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு மில்லி லீட்டர் ஆகும். எனவே, 10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில் 1mm மழை என்பது 17,40,00,000 லீட்டர் மழை பெய்ததாகக்கொள்ளலாம். மழை பெய்வதை முன்னரே அறிய பிராணிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கலாம். மழை பெய்யப்போவதை முன் கூட்டியே அறியும் திறன் பிராணிகளுக்கு உள்ளது. மழை பெய்வதை அறிய உதவும் பிராணிகளின் நடவடிகைகள் மழைக்காடுகள் என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன. உலகிலுள்ள விலங்குகள், தாவரங்களில் 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன. பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன. உலக ஆக்சிஜன் உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்ப்பத்தி செய்யப்படுவதாகும். இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் தலைநகரான சில்லாங் அருகே கிழக்கு இமாலய மலைச்சரிவில் அமைந்திருக்கும் சிரபுஞ்சி பூமியின் அதிக மழைப்பொழிவுள்ள இடமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீ (450 அங்குலம்) ஆகும். 1961 ஒற்றை ஆண்டில் மட்டும் சிரபுஞ்சியில் 22,987 மி.மீ. (905.0 அங்குலம்) என்ற உச்சபட்ட மழைபொழிவு பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேகலாயா மாநிலத்தின் மௌசின்ரம் என்ற இடத்தின் 38 ஆண்டுகளின் சராசரி மழைப்பொழிவு 11,873 மி.மீ (467 அங்குலம்) ஆகும் . ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள "மவுன்ட் பெல்லிடன் கெர்" என்ற இடத்தில் வருட சராசரி மழைப்பொழிவு 8,000 மி.மீ ஆகும். இந்த இடத்தில் 2000 ம் ஆண்டில் மட்டும் 12,200 மி.மீ மழை பொழிந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது .ஹவாய் தீவுகளின் கவுஆய் தீவிலுள்ள "மவுன்ட் வொய் அலே-அலே" யின் 32 வருடங்களின் சராசரி மழைப்பொழிவு 12,000 மி,மீ (460 அங்குலம்) 1982 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17,340 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பீட்டர் சிமித் பீட்டர் சிமித் ("Peter Smith", பிறப்பு: அக்டோபர் 30 1908, இறப்பு: ஆகத்து 4 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 465 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1946 - 1947 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பட்டாசு பட்டாசு (firecracker, cracker, banger) என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதைவிட பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளனவோ அத்தனை கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் சீனாவில் தோன்றியவை ஆகும். இவற்றைக் கொண்டு விரிவாக திட்டமிடப்படும் வாண வேடிக்கைகளும் அவர்களது கண்டுபிடிப்பே. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டிலுள்ள சிவகாசி நகரில் அதிக அளவிலுள்ளது. சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்துவந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது. சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் பயர் ஒர்க் என்பதன் மூலம் சப்பானிய சொல்லான ஹனாபி என்பது. இதன் பொருள் நெருப்பு மலர் ஆகும். உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது. ஸ்பெயினில் பெரும்பாலோனோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர் சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீரிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர். 1279இல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழிர் நுட்பத்தை கற்றுக் கொண்டனர்.சீனாவுக்கு வந்துசென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளை சீன அம்புகள் என்றை குறிப்பிட்டுள்ளனர். 1240ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர்.ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில் நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயனி மார்கோகோலோ இந்த தொழில் நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டுசென்றார் என்றும், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.பிரெஞ்சு பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது. அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்த புத்தகத்தை பின்பற்றியே தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830இல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடப்படுகிறது. 1922இல் கல்கத்தாவில் சப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது., ரொபின் சிமித் ரொபின் சிமித் ("Robin Smith ", பிறப்பு: செப்டம்பர் 13 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 71 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 443 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1999 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டைகர் சிமித் டைகர் சிமித் ("Tiger Smith", பிறப்பு: பிப்ரவரி 6 1886, இறப்பு: ஆகத்து 31 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 496 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெரால்ட் சிமித்ஸன் ஜெரால்ட் சிமித்ஸன் ("Gerald Smithson", பிறப்பு: நவம்பர் 1 1926, இறப்பு: செப்டம்பர் 6 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். குறும்பர் குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறும்ப இடையர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru or kurumba idaiyar) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இவர்கள் யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழு ஆவர். குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களான இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி தமிழ் மற்றும் குறும்பா மொழி ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் குறும்பஇடையர் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாயக்கர் என்பன ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் "தங்கர்" என அறியப்படுகின்றனர். அன்றூ மைக்கல் சிமித் அன்றூ மைக்கல் சிமித் ("Andrew Michael Smith", பிறப்பு: அக்டோபர் 1 1967) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் சினோ ஜோன் சினோ ("John Snow ", பிறப்பு: அக்டோபர் 13 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 346 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 182 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 - 1976 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜேம்ஸ் சதர்ட்டன் ஜேம்ஸ் சதர்ட்டன் ("James Southerton", பிறப்பு: நவம்பர் 16 1827, இறப்பு: சூன் 6 1880), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 286 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பழியர் பலியன், அல்லது பழையர் அல்லது பழையரேர் (Paliyan, Palaiyar,Pazhaiyarare) எனப்படுபவர் தென்னிந்தியாவில், முக்கியமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்னக காடுகளில் வாழும் திராவிட பழங்குடியினராவர். இவர்கள் பொதுவாக வேட்டைக்காரர்களாகவும் தேன் சேகரிப்பவர்களாகவும் உள்ளனர். சேனைக் கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவர்களது முதன்மை உணவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தும் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்திருந்தனர். தற்காலத்தில் இவர்கள் மற்றவர்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். மலைப்புறத் தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் சிலர் பணி புரிகின்றனர். வண்ணத்தியல்பு தமிழிசையின் இலக்கணம் கூறும் நூல் வண்ணத்தியல். இதனை வண்ணத்தியல்பு என்றும் வழங்குகின்றனர். வண்ணத்தை இக்கால இசைவாணர்கள் சந்தம் என்கின்றனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய இலக்கண நூல்கள் இரண்டு - ஒன்று அறுவகை இலக்கணம் என்னும் நூல். மற்றொன்று வண்ணத்தியல்பு எனப்படும் இந்த நூல். இந்த நூலைப் பாடியதாலேயே நூலாசிரியர் தண்டபாணி சுவாமிகளை ‘வண்ணச்சரபம்’ என்னும் அடைமொழி தந்து சிறப்பிக்கலாயினர். கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்பதை முச்சங்க வரலாறு தெரிவிக்கிறது. அந்த நூல்கள் இப்போது இல்லை. பண்ணத்தி பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது. மேலும் பாஅ-வண்ணம், தாஅ- முதலான 20 வகையான வண்ணங்களைப் பற்றிய விளக்கமும் உள்ளது. சிலப்பதிகாரத்திலும், அதற்கு எழுதிய அடியார்க்கு நல்லார் உரையிலும் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள தமிழிசை-நூல்களில் இந்த வண்ணத்தியல் முதல்-நூல் எனலாம். இந்த நூலில் 110 நூற்பாக்கள் உள்ளன. முதல் 10 பாடல்கள் நூல் பற்றிய செய்திகளைக் கூறும் பாயிரமாக அமைந்துள்ளது. ஆகிய வண்ணங்களுக்கு இந்நூலில் விளக்கங்கள் உள்ளன. இந்நூல் குறிப்பிடும் செய்திகளில் சில (பாடல் எண்ணுடன்): டிக் ஸ்பூனர் டிக் ஸ்பூனர் ("Dick Spooner", பிறப்பு: திசம்பர் 30 1919, இறப்பு: திசம்பர் 20 1997), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 359 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1955 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரெஜி ஸ்பூனர் ரெஜி ஸ்பூனர் ("Reggie Spooner", பிறப்பு: அக்டோபர் 21 1880, இறப்பு: அக்டோபர் 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 237 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1905 - 1912 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரொனி ஸ்டெனிபோத் ரொனி ஸ்டெனிபோத் ("Rony Stanyforth", பிறப்பு: மே 30 1892, இறப்பு: பிப்ரவரி 20 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 - 1928 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சேம் ஸ்டெப்பல் சேம் ஸ்டெப்பல் ("Sam Staples", பிறப்பு: செப்டம்பர் 18 1892, இறப்பு: சூன் 4 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 385 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரியன் ஸ்டேபல்ஸ் பிரியன் ஸ்டேபல்ஸ் ("Brian Statham", பிறப்பு: சூன் 17 1930, இறப்பு: சூன் 10 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 70 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 759 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -1965 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஏ. ஜீ. ஸ்டீல் ஏ. ஜீ. ஸ்டீல் ("A. G. Steel", பிறப்பு: செப்டம்பர் 24 1858, இறப்பு: சூன் 15 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 -1888 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் ஸ்டீல் டேவிட் ஸ்டீல் ("David Steele", பிறப்பு: செப்டம்பர் 29 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஊமைத்துரை ஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். . இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன. இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர். ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். ஜோன் ஸ்டீவன்ஸ் (1965) ஜோன் ஸ்டீவன்ஸ் ("John Stephenson", பிறப்பு: மார்ச்சு 14 1965), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 304 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 319 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1989 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெங்களூர்க் கோட்டை பெங்களூர்க் கோட்டை கெம்பேகௌடா என்பவரால் கட்டப்பட்ட களிமண்ணால் ஆன கோட்டையாகும். பின்னர் 1761-இல் இது ஐதர் அலியால் கற்கோட்டையாக மேம்படுத்தப்பட்டது. இக்கோட்டை 1791-இல் நடந்த மூன்றாம் மைசூர்ப் போரில் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. தற்போது கோட்டையின் தில்லி வாசல் மட்டுமே எஞ்சியுள்ளது. கிரென்வில் ஸ்டீவன்ஸ் கிரென்வில் ஸ்டீவன்ஸ் ("Greville Stevens",பிறப்பு: சனவரி 7 1901, இறப்பு: செப்டம்பர் 19 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 243 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1930 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரஹாம் ஸ்டீவன்சன் கிரஹாம் ஸ்டீவன்சன் ("Graham Stevenson",பிறப்பு: திசம்பர் 16 1955), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 188 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 255 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1980 - 1981 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அலெக் ஸ்டுவார்ட் அலெக் ஸ்வேர்ட் ("Alec Stewart",பிறப்பு: ஏப்ரல் 8 1963) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 133 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 170 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 447 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 504 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2003 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மிக்கி ஸ்டுவார்ட் மிக்கி ஸ்வேர்ட் ("Micky Stewart",பிறப்பு: செப்டம்பர் 16 1932 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 530 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 - 1964 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆன்ட்ரூ ஸ்டோடார்ட் அன்றூ ஸ்டோடார்ட் ("Andrew Stoddart ",பிறப்பு: மார்ச்சு 11 1863, இறப்பு: ஏப்ரல் 4 1915) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 309 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888 - 1898 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செயற்கை வைரம் செயற்கை வைரம் "(Synthetic diamond)" என்பது தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்படும் வைரம் ஆகும். மிகை வெப்ப மிகை அழுத்த நிலை (High-Pressure High-Temperature synthesis) முறையிலோ அல்லது வேதிய ஆவிப் படிதல் (Chemical Vapor Deposition) முறையிலோ இவை தயாரிக்கப்படுகின்றன. முதல் செயற்கை வைரம் 1953 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இவை பல்வேறு வடிவிலும் பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்க்கப்படுகின்றன. இவை இயற்கை வைரத்தோடு ஒப்பிடுகையில் சில பண்புநலன்களில் விட மேலாகவும் சில பண்பு நலன்களில் கீழாகவும் உள்ளன. வைரச் சந்தையில் செயற்கை வைரத்தை இயற்கை வைரத்தில் இருந்து வேறுபடுத்தி அறிய நிறமாலைமானி முறையைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை வைரம் ஆபரணமாக மட்டுமின்றி வெட்டும் இயந்திரங்கள், ஒளி உமிழ் டையோடுகள், வெப்பக்கடத்திகள் எனப் பல வகைகளில் பயன்படுகிறது பில் ஸ்டோரர் பில் ஸ்டோரர் ("Bill Storer",பிறப்பு: சனவரி 25 1867, இறப்பு: பெப்ரவரி 28 1912), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 289 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1897 - 1899 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ் அன்றூ ஸ்ரோஸ் ("Andrew Strauss", பிறப்பு: மார்ச்சு 2 1977) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 124 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 211 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 254 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 - 2011 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஹென்றி கிரே ஹென்றி கிரே "(Henry Gray)" ஓர் ஆங்கில உடல்கூறு இயல் அறிஞர் மற்றும் அறுவை மருத்துவர் ஆவார். கிரேஸ் அனாட்டமி நூலைப் பதிப்பித்ததன் பொருட்டு இவர் உலகெங்கும் அறியப்படுகிறார். இந்த நூலே உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களால் வாழ்நாள் முழுதும் படிக்க வேண்டிய நூலாக உள்ளது. கிரே 1827 ஆம் ஆண்டு இலண்டனில் பெல்கிரேவியாவில் பிறந்தார். 1845 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் மருத்துவமனையில் மாணவராய்ச் சேர்ந்தார். அங்கே இவர் மிகவும் கடின முயற்சியுடன் நிதானமாய் உடற்கூறு இயலைக் கற்றார். மாணவராய் இருக்கும் போதே "ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்" நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார். 1852 ஆம் ஆண்டு தனது 25ஆவது அகவைத் துவக்கத்திலேயே ராயல் சொசைட்டியின் உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1858 ஆம் ஆண்டு கிரே தனது உடற்கூறு இயல் புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார். இதில் 750 பக்கங்கள் கொண்ட இந்நூலுள் 363 படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படங்கள் ஹென்றி கார்ட்டர் எனும் கிரேயின் நண்பரால் வரையப்பட்டு இருந்தன. இந்த நூல் புகழடைய கார்டடரின் ஓவியங்களும் உறுதுணையாய் இருந்தன. 1960 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கிரே தானே தயாரித்து வெளியிட்டார். 1861 ஆம் ஆண்டு சின்னம்மை பாதித்த தன் உறவினரைக் கவனித்து வந்த கிரே தானும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டார். 13.06.1861 அன்று தனது முப்பத்து நான்காம் வயதில் ஹென்றி கிரே இயற்கை எய்தினார். (உறவினர் பிழைத்து விட்டார்) at the age of thirty-four. அனாட்டமி நூலின் முதல் இரண்டு பதிப்புகள் மட்டுமே கிரேயால் வெளியிடப்பட்ட போதும் இன்றளவும் இந்த நூல் கிரேஸ் அனாட்டமி என்ற பெயரில் அவரது பெயரிலேயே வெளியிடப்படுகிறது. கிரேஸ் அனாடமி கிரீட் சண்டை கிரீட் சண்டை ("Battle of Crete", இடாய்ச்சு: "Luftlandeschlacht um Kreta") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி கிரேக்க நாட்டின் கிரீட் தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது மெர்க்குரி நடவடிக்கை ("Operation Mercury") என்றும் அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 1941ல் ஜெர்மானியப் படைகள் பாசிச இத்தாலிக்கு ஆதரவாக கிரீசு மீது படையெடுத்தன. மூன்று வார காலத்துக்குள் கிரேக்க நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி விட்டன. ஏப்ரல் இறுதி வாரத்தில் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். சில தீவுகளைத் தவிர கிரேக்க மூவலந்தீவில் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். அத்தீவில் கிரேக்கப்படைகளைத் தவிர பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர். மே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. ஆனால் அவற்றுக்கு கிரேக்க, நேச நாட்டுப் படைகள் மற்றும் கிரீட்டின் பொதுமக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வான்குடை படைப்பிரிவுகள் பெருமளவில் ஒரு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. மேலும், ஜெர்மானியப் படைகளை அவை தாக்கும் நாட்டின் பொதுமக்கள் பெருமளவில் எதிர்த்துத் தாக்கியதும் இதுவே முதல் முறை. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. முதல் நாள் தாக்குதலில் ஜெர்மானியர்களால் தங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய இலக்குகள் எதனையும் கைப்பற்ற இயலவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் பல விமான ஓடுதளங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலம் புதிய துணைப் படைப்பிரிவுகள் கிரீட்டுக்கு அனுப்பப்பட்டன. கிரீட்டில் ஜெர்மானியப் படைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றைச் சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின்வாங்க முடிவு செய்தனர். மே 27ம் தேதி ஜெர்மானியப் படைகளுக்குத் துணையாக 3000 பேர் கொண்ட ஒரு இத்தாலியப் படைப்பிரிவும் கிரீட்டில் கடல்வழியாகத் தரையிறங்கி முன்னேறத் தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களில் கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது. வான்குடைப் படைப்பிரிவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரும் படையெடுப்பான இது ஜெர்மானியர்களுக்குப் பெருவெற்றியில் முடிவடைந்தது. ஆனால் அப்படைப்பிரிவுகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளால் இட்லர் இனி இத்தகு பெரும் தாக்குதல்களில் அவற்றை ஈடுபடுத்தக் கூடாது என தன் தளபதிகளுக்கு ஆணையிட்டு விட்டார். அதேவேளை ஜெர்மானிய வான்குடைப் படைகளின் திறனை உணர்ந்து கொண்ட நேச நாட்டு தளபதிகள் தங்கள் படைகளிலும் இத்தகு படைப்பிரிவுகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினர். இச்சண்டை ஜெர்மானியர்களுக்குப் பிர்ரிய வெற்றியாகவே அமைந்தது. ஆக்சி ஐதரசன் ஆக்சி ஐதரசன் ("Oxyhydrogen") என்பது ஐதரசன் (H2) மற்றும் ஆக்சிசன் (O2) வாயுக்கள் சேர்ந்து உருவாகும் கலவையாகும். வாயு நிலையில் உள்ள இந்த கலவை முதன் முதலாக உலோக பற்ற வைப்பு தீவட்டி விளக்குகளில் எரிபொருளாகவும் தீக்களிமண் உருவாக்குவதில் பற்ற வைக்கவும் பயன்படுத்தப்பட்டது. அதிக செயல் திறனைப் பெற 2:1 ஐதரசன்:ஆக்சிசன் கலவை விகிதம் போதுமானதாகும். ஆக்சிசனேற்றமடையும் சுவாலையைத் தடுக்க 4:1 அல்லது 5:1 விகித கலவை பயன்படுத்தப்படுகிறது . ஆக்சி ஐதரசன் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வாயு. இது வளிமண்டல அழுத்தத்தில் 570C வெப்பநிலையில் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்கலவை தீப்பற்றி எரியும்போது நீராவியையும், வெப்ப ஆற்றலையும் வெளியேற்றுகிறது. அதிகபட்சமாக 2800C வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனுடைய வெப்பமானது ஹைட்ரஜனை காற்றில் எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை விட 700C கூடுதலானது. ஜார்ஜ் காமாவ் ஜார்ஜ் காமவ் ("George Gamow", (, காமவ்; ஆகத்து 19, 1968), இயற்பெயர்: "கியார்கிய் ஆந்திரனோவிச் காமவ்", உருசியம்: Георгий Антонович Гамов), ஓர் அணுவிக்கருவியல், அண்டவியல், உயிர்வேதியியல், இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்து விளக்கியவர். அணுக்கருவின் கதிரியக்கச் சிதைவு, விண்மீன் படிமலர்ச்சி, விண்மீன் அணுக்கருத் தொகுப்பு வினை, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு வினை, மூலக்கூற்று மரபியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் இவற்றின் தொகுப்பு நிகழ்வை அணுக்கருசார் அண்டத் தோற்ற நிகழ்வாக வரையறுத்தார். தன் வாழ்வின் நடுப்பகுதியிலும் கடைசிப்பகுதியிலும் கல்வி பயிற்றுவதில் நாட்டம் செலுத்தியுள்ளார். பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் "ஒன்று இரண்டு மூன்று ... ஈறிலி ", "திருவாளர் தோம்ப்கின் ..." நூல் தொடர் ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. இன்னமும் முதல் வெளியீட்டுக்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னரும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு விற்பனையாகின்றன. இவை அறிவியலின் அடிப்படைகளையும் கணிதவியலையும் அறிமுகப்படுத்துவதிலும் விளக்குவதிலும் திறமை மிக்கனவாய் அமைகின்றன. காமவ் உருசியப் பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் உருசிய மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும் தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர்..இவர் உருசிய மொழியுடன் தய்யரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் உருசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். இராமசாமி சிவன் இராமசாமி சிவன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழிசை அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற மகா வைத்தியநாத அய்யரின் தமையன் ஆவார். இவரது தந்தை துரைசாமி அய்யரிடம் தனது துவக்க கால இசைப் பயிற்சியைப் பெற்ற இராமசாமி சிவன் பின்பு மாநோன்புச்சாவடி வேங்கட சுப்பயரிடம் இசை பயின்றார். இராமசாமி சிவன் தனது பெரிய புராணக் கீர்த்தனைகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். கலைக்களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு - இரண்டாம் பாகம்- பக்கம் 65 உபய வேதாந்தம் உபய வேதாந்தம் அல்லது ஸ்ரீவைஷ்ணவம் என்பது ஆழ்வார்கள் பாசுரங்களின் முடிவும் வேதங்களின் முடிவும் ஒன்றே எனும் வைணவக் கொள்கை ஆகும். சமசுகிருதம் மட்டுமே கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருந்த நிலையில் வேதாந்த தேசிகர் காலத்தில் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் வேதங்களைப் பாடும் அதே மெட்டில் பாடும் படி செய்யப்பட்டன. இதனால் வேதாந்த தேசிகர் உபயவேதாந்தாச்சாரியார் என்றும் அறியப்படுகிறார். சி. சொக்கலிங்கம் சி. சொக்கலிங்கம் (பிறப்பு: சனவரி 4, 1939), மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தனது தொடக்கக் கல்வியை கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியிலும் பயின்றார். அதன் பின் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயின்று முழு நேர மருத்துவத் தொழில் புரியும் இவர் இலக்கியத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். சிதம்பரன், நடராஜ் போன்ற புனைப்பெயர்களிலும் இவர் எழுதிவருகிறார். 1955-1957 ஆம் ஆண்டுகளில் 'இளைஞன் குரல்' எனும் கையெழுத்து ஏட்டை நடத்தி பத்திரிகை துறையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இவரது முதல் சிறுகதை 'ஆண்டவன் கூலி' என்ற தலைப்பில் 1968-ஆம் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளார். வீ. செல்வராஜ் வீ. செல்வராஜ் (பிறப்பு: மே 16 1935, இறப்பு: மே 31 2000, மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மலேசியா எழுத்தாளர்களுக்காக பல நல்ல காரியங்களைச் செய்தவராக இனங்காட்டப்படுகின்றார். யாராவது புத்தகங்கள் வெளியிட்டால், உடனை தொடர்பு கொண்டு பாரி புத்தக விற்பனை மையத்துக்கு இருபது புத்தகங்களை பெற்றுக்கொள்வார். தேசிய நூலகத்துக்கு ஐந்து புத்தகங்கள், மலாயா பல்கலைக்கழகத்திற்குப் பத்துப் புத்தகங்கள் கொடுக்க ஏற்பாடு செய்வார். வீ. செல்வராஜ் பதினேழு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவற்றில், ஆறு புத்தகங்கள், 1988- 1998 ஆம் ஆண்டுவரை, அந்தந்த ஆண்டுகளில் பிற எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, டாக்டர். இரா. தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவையின் கீழ் 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்ற நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். இதில் சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாவல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் வெளியாகும் படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் தனது சொந்த செலவில் தொகுத்து கடந்த பத்து ஆண்டுகளாக சீரிய முறையில் தமிழ்த்தொண்டாக செய்து வந்திருக்கின்றார். நிர்மலா பெருமாள் நிர்மலா பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஒரு பள்ளி ஆசிரியை. மூன்று பெண் மக்களுக்கு தாயான இவர், தமிழ் இளைஞர் மணிமன்ற உறுப்பினராக பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். 1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவரது படைப்புக்கள் தேசிய நிலையில் பல பரிசுகளை வென்றுள்ளன. கிறிஸ் டவாரே கிறிஸ் டவாரே ("Chris Tavaré", பிறப்பு: அக்டோபர் 27 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 431 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 399ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1980 - 1989 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நேசமணி ஜோன் நேசமணி ஜோன் (பிறப்பு: டிசம்பர் 9, 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் மலாக்கா தமிழர் சங்கத்தில் மாதர் பகுதித் தலைவியும், மலாக்கா பயனீட்டாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினரும், கிறிஸ்த்துவ தமிழ் சபையின் வட்டாரத் தலைவியும், மலாக்கா சிலம்பக் கழகத்தின் ஆலோசகருமாவார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மீக மற்றும் தன்முனைப்புக் கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஜார்ஜ் ஸ்ட்ரீட் ஜார்ஜ் ஸ்ட்ரீட் ("George Street", பிறப்பு: திசம்பர் 6 1889), இறப்பு: ஏப்ரல் 24 1924), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 197 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1923 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹார்பட் ஸ்ரூட்விக் ஹெர்பெர்ட் ஸ்ரூட்விக் ("Herbert Strudwick", பிறப்பு: சனவரி 28 1880), இறப்பு: பிப்ரவரி 14 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 674 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1910 - 1926 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சாள்ஸ் ஸ்டட் சாள்ஸ் ஸ்டட் ("Charles Studd", பிறப்பு: திசம்பர் 2 1860), இறப்பு: சூலை 16 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் ஸ்டட் ஜார்ஜ் ஸ்டட் ("George Studd", பிறப்பு: அக்டோபர் 20 1859, இறப்பு: பிப்ரவரி 13 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 87 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பொப் டெய்லர் பொப் டெய்லர் ("Bob Taylor", பிறப்பு: சூலை 17 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 639 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 333 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 - 1984 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கென் டெய்லர் கென் டெய்லர் ("Ken Taylor ", பிறப்பு: ஆகத்து 21 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 313 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1959 - 1964 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லெஸ் டெய்லர் லெஸ் டெய்லர் ("Les Taylor", பிறப்பு: அக்டோபர் 25 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1985 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். போல் டெய்லர் போல் டெய்லர் ("Paul Taylor", பிறப்பு: ஆகத்து 8 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993/94 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லயனல் டென்னிசன் லயனல் டென்னிசன் ("Lionel Tennyson, 3rd Baron Tennyson", பிறப்பு: நவம்பர் 7 1889, இறப்பு: சூன் 6 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 477 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 - 1923 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ராமன் சுப்பா ராவ் ராமன் சுப்பா ராவ் ("Raman Subba Row", பிறப்பு: சனவரி 29 1932), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 260 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 - 1961 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் சச் பீட்டர் சச் ("Peter Such ", பிறப்பு: சூன் 12 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 306 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 - 1999 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரேங்க் சக் ஃபிரேங்க் சக் ("Frank Sugg", பிறப்பு: சனவரி 11 1862, இறப்பு: மே 29 1933) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 305 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெர்பட் சட்கிளிஃப் ஹர்பட் சட்கிலிஃப் ("Herbert Sutcliffe", பிறப்பு: நவம்பர் 24 1894, இறப்பு: சனவரி 22 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 754 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1935 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரோய் டெட்டர்சல் ரோய் டெட்டர்சல் ("Roy Tattersall ", பிறப்பு: ஆகத்து 17 1922), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1954 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மாரீசு டேட் மாரீசு டேட் ("Maurice Tate ", பிறப்பு: மே 30 1895, இறப்பு: மே 24 1956), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 679 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1935 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரெட் டேட் ஃபிரெட் டேட் ("Fred Tate", பிறப்பு: சூலை 24 1867, இறப்பு: பிப்ரவரி 24 1943) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 320 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். விக்ரம் சொலன்கி விக்ரம் சொலன்கி ("Vikram Solanki", பிறப்பு: ஏப்ரல் 1 1976), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 245 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 343 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெரமி சினேப் ஜெரமி சினேப் ("Jeremy Snape", பிறப்பு: ஏப்ரல் 27 1973), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 273 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நீல் சிமித் (1967) நீல் சிமித் ("Neil Smith", பிறப்பு: சூலை 27 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1986 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மைக்கல். ஜே. சிமித் மைக்கல். ஜே. சிமித் ("Michael J. Smith )", பிறப்பு: சனவரி 4 1942, இறப்பு: நவம்பர் 12 2004), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 5ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1973 - 1974 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தாயமங்கலம் தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தபுகழ்மிக்க அம்மன் கோவில் காரணமாக இந்த ஊர் தாயமங்கலம் (அம்மா-தாய்) என பெயர் பெற்றுள்ளது. பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். இலங்கை அகதிகள் முகாம் ஒன்று இங்கு உள்ளது. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அருகில் உள்ள ஊர்களான இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆரம்ப சுகாதார மையம், தபால் அலுவலகம், உயர்நிலைப் பள்ளி, குழந்தைகள் நலமையம் ஆகியன இவ்வூரில் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் த்ங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். மதுரையில் தனது வேலை முடித்துத் திரும்புமுன் தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராய் இருந்தும் அவருக்கு மக்கட்பேறு கிட்டவில்லை. முத்துச்செட்டியார் ஒரு நாள் மதுரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சின்னமன்னூரில் ஒரு பெண் குழந்தை யாரும் அருகில் இல்லாமல் தனியே அழுது கொண்டிருக்கக் கண்டார். அழுது கொண்டிருந்த குழந்தையை வாரியணைத்துக் கொண்டவர் அருகில் யாரும் அக்குழந்தைக்குரியவராகக் காணப்படாததால் அன்னை மீனாட்சித் தன் மேல் இரக்கம் கொண்டு அக்குழந்தையைத் தனக்காகவே அனுப்பியுள்ளதாக எண்ணித் தானே கூட்டிக் கொண்டுபோய் வளர்க்க எண்ணினார். குழந்தையைக் கூட்டிக் கொண்டு வரும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவர் ஆற்றின் கரையில் குழந்தையை இருக்கச் செய்து விட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கினார். குளித்து முடித்து திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. சுற்றுமுற்றும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் தாளாத துயருடன் வீடு சென்றவர் தன் மனைவியிடம் நடந்த விவரத்தைக் கூறி வருந்தினார். துயரத்தினால் உண்ணாமல் உறங்கிக்கொண்டிருந்த அவரது கனவில் அக்குழந்தை வந்து தான் கள்ளிக்காட்டில் உறைவதாகவும் அவ்விடத்தில் தனக்கு சிலை செய்து வைத்து வணங்கும்படியும் தெரிவித்தது. குழந்தையைத் தோளில் சுமந்து சென்றபோது அக்குழந்தை அவரிடம் அவர் பெயருடன் அம்மன் பெயரையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதால் அம்மனுக்கு "முத்துமாரி" என பெயரிடப்பட்டது. அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆற்று மணலைக் கொண்டு அம்மன் சிலை செய்யப்பட்டு கூரை வேயப்பட்ட ஒரு சிறு கோவிலுக்குள் வைத்து வணங்கப்பட்டது. இந்த அம்மனை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. செல்வந்தர்களிடமிருந்தும் அயல்நாட்டினரிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடையால் கோவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருங்கல்லான அம்மன் சிலையும் கோவிலும் 1914ல் உருவானது. ஏழு தலைமுறையாக முத்துச்செட்டியார் வழிவந்தவர்கள் இக்கோவிலைப் பராமரித்து வருகிறார்கள். அவ்வழி வந்த திரு என். எ. முத்துப்பால் செட்டியார் என்பவர் 1-12-1967 இல் இந்து சமய அறக்கட்டளை வாரியம் மற்றும் மதுரை ஆட்சியாளரால் (1180/68 சட்டப்படி) கோவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு 3-4-2001 தனது மறைவு வரை பொறுப்பிலிருந்தார். அதன் பிறகு 4-4-2001 இல் அவரது மகன் வெங்கடேசன் செட்டியார் பரம்பரைவழி அறங்காவலராக இந்து சமய அறக்கட்டளை வாரியத்தால் நியமிக்கப்பட்டார். இக்கோவில் விலக்களிக்கப்பட்டக் கோயிலாக 1934 ஆம் ஆண்டில் 2286(a.O. 327/34) தேதி செப்டம்பர் 19 -ஆணையின் படி, சென்னை வாரிய ஆணையரால் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோவிலில் வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி 15ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மிக விமரிசையாக திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்கள் கொண்ட திருவிழாவில் தேரோட்டம் மிகவும் சிறப்பான வைபவம் ஆகும். தேரோட்டத்தின் பொழுது  முத்துமாரிஅம்மன் அமர்ந்திருக்கும தேரை அப்பகுதி வாழ் யாதவர்கள் ஓட்டிச்செல்வர். அப்பொழுது யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படும். திருவிழா சமயத்தில்  மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போல் டெர்ரி போல் டெர்ரி ("Paul Terry )", பிறப்பு: சனவரி 14 1959), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 292 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். முரசு. நெடுமாறன் முரசு. நெடுமாறன் (பிறப்பு: சனவரி 14 1937) மலேசியாவிலுள்ள தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பல்கலைக் கழக பகுதிநேர விரிவுரையாளருமாவார். தமிழ் நெறி மன்றத்தின் நிறுவுநராகவும் உள்ளார். 1950 தொடக்கம் முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கவிதைகள், குழந்தைக் கவிதைகள் போன்றவற்றையே அதிகம் எழுதி வருகின்றார். இவை இரண்டும் பற்றிய ஆராய்ச்சி எனும் கருப்பொருள்களிலேயே இவரது பெரும்பாலான எழுத்துப் படைப்புகள் காணப்படுகினறன. இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் பெருமுயற்சியுடன் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்துள்ளார். வகுப்பறைகள், மேடைகள் மட்டுமல்லாது வானொலியில் கல்வி ஒலிபரப்பில் இவரது பாடல்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தும் பரப்பி வருகிறார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இலவசமாகத் தமிழ்ப் பாடம் போதித்து வந்துள்ளார். ஆண்டுதோறும் மாணவர்களைக் கொண்டு மாணவர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியுள்ளார். வெ. நீலவேணி வெ. நீலவேணி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தொல்காப்பியம் விளிமரபுச் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது. இந்த விளிமரபு சொல்லதிகாரத்தில் நான்காவது இயலாகும். தொல்காப்பியருக்கு முன் வாழ்ந்தவர்கள் வேற்றுமையை ஏழு பிரிவாக்கிக் கண்டனர். தொல்காப்பியர் விளி வேற்றுமையையும் சேர்த்து வேற்றுமை எட்டு என்று காட்டியுள்ளார். எனவே இவர் புகுத்திய எட்டாவது விளி-வேற்றுமைக்குத் தனி இயல் ஒன்றை வைத்துக்கொண்டு விளக்குகிறார். பெயரை அழைப்பது அல்லது கூப்பிடுவது விளி-வேற்றுமை. இது எட்டாம் வேற்றுமை. இந்த விளி வேற்றுமைக்கு உருபு இல்லை. இந்த வேற்றுமையில் பெயர் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும். அல்லது திரியும்போது, ஈறு திரிதல், ஈற்றயல் திரிதல், பிறிது வந்து அடைதல் ஆகிய மூன்று மாற்றங்கள் நிகழும். வழக்கம்போல் தொல்காப்பியர் சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக் கொண்டும், உயிரீறு, மெய்யீறு என்று பாகுபடுத்திக் கொண்டும் விளிகொள்ளும் பாங்கை விளக்குகிறார். இங்கு அவர் குறிப்பிட்டுள்ள பொருள் நோக்கில் பாகுபாடு செய்துகொண்டு தொகுத்துப் பார்க்கிறோம். (எந்த நூற்பாவில் செய்தி உள்ளது என்பது இங்கு எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது. விளி கொள்ளும் பெயர் மட்டுமே விளி ஏற்கும் -1- விளி கொள்ளும் பாங்கை இனிக் காணலாம் -2- உயிர்-இறுதி மெய்-இறுதி அளபெடைப்பெயர் அளபெடையாக விளி கொள்ளும் -18- உயிர்-இறுதி மெய்-இறுதி ஈற்றயல் நீட்டச் சொல் ஈற்றயல் நீடும் சொல் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் () இந்தியத் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பெயரைக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற சட்டம் 1985 இன் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றிய பின்னர் 2000 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டது. இலங்கையின் கொலைக்களம் இலங்கையின் கொலைக்களம் ("Sri Lanka’s Killing Fields") என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய ஒர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இதனை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 சூன் 14, 2011 அன்று பொதுவில் ஒளிபரப்பியது. இலங்கையில் இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள், மீறல்கள் நடந்தற்கு ஒரு முக்கிய சாட்சியாக இது கருதப்படுகிறது.. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் நாள் சேனல் 4 வெளியிட்டது. இலங்கையின் படுகொலைக்களம் பொதுவில் ஒளிபரப்பப்படும் முன்பு, இது ஐ.நா மனித உரிமைகள் அவையில் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுதலால் சூன் 3 அன்று காண்பிக்கப்பட்டது. இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு, இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" 2012, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. நெகிரி செம்பிலான் நெகிரி செம்பிலான் ("Negeri Sembilan") மலேசியாவின் 11 மாநிலங்களில் ஐந்தாவது பெரிய மாநிலம். மலேசியத் தீபகற்பத்தின் கிழக்கு கடல் கரையில் அமைந்து உள்ளது. நெகிரி செம்பிலான் என்றால் மலாய் மொழியில் ஒன்பது மாநிலங்கள் என்று பொருள். Negeri என்றால் மாநிலம். Sembilan என்றால் ஒன்பது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான். அரச நகரம் ஸ்ரீ மெனாந்தி. நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வடக்கே சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் உள்ளன. தெற்கே மலாக்கா, ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே மலாக்கா நீரிணை உள்ளது. அதற்கு அடுத்து இந்தோனேசியத் தீவான சுமத்திரா இருக்கிறது. அதற்கு அடுத்து இந்து மாக்கடல் பரந்து விரிந்து பரவி உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மீனாங்காபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள். இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங், ஜெலுபு, ஜொகூல், ரெம்பாவ் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார். அந்தத் தலைவரை ‘உண்டாங்’ என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர். அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் - டி - பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார். 15 ஆம் நூற்றாண்டில் மீனாங்காபாவ் இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர். அந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது. ஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மீனாங்காபாவ்கள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மீனாங்காபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார். நெகிரி செம்பிலான் மீனாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய ராஜா மெலாவார் என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார். ஆனால், ராஜா மெலாவார் வந்த போது ராஜா காத்திப் என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார். சினம் அடைந்த ராஜா மெலாவார், ராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் ராஜா மெலாவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான ராஜா மெலாவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசாராக அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773ல் நடந்த நிகழ்ச்சி. ராஜா மெலாவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனது போல ஆளாளுக்குத் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் தான் மிஞ்சியது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர். பிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் சாக்குப் போக்குகளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873ல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது. சுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு British Resident எனும் பிரிட்டிஷ் கண்காணிப்பாளர் நியமிக்கப் பட்டார். 1886ல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல், ரெம்பாவ் எனும் மாவட்டங்கள் 1897ல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின. நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941ல் இருந்து 1945 வரை ஆட்சி செய்தனர். 1948ல் மலாயாக் கூட்டரசில் இணைந்தது. பின்னர் 1963ல் மலேசியாவின் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத் திட்டங்கள் 1959 மார்ச் 26ல் அமலுக்கு வந்தன. அதன்படி யாங் டி பெர்துவான் பெசார் மாநிலத்தின் ஆட்சி செய்பவராக இயங்குவார். அவர்தான் மாநிலத்தின் மன்னர். தற்சமயம் மாட்சிமை தங்கிய துங்கு முஹ்ரிஷ் இப்னி அல்மார்ஹும் துவாங்கு முனாவிர் மாநில மன்னராக விளங்குகின்றார். அவருக்கு முன்பு துங்கு ஜாபார் இப்னி அல்மார்ஹும் துவாங்கு அப்துல் ரஹ்மான் மன்னராக இருந்தார். அவர் 27 டிசம்பர் 2008ல் இயற்கை எய்தினார். நெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு உண்டாங்குகள்: ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். மலேசியாவின் 12வது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் 21 இடங்களைப் பெற்று ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் முதன்மை பெற்றது. ஐந்து தமிழர்கள் வெற்றி பெற்றனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்கள் நால்வர். 2008 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் விவரம். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று முக்கிய இனத்தவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். அடுத்து அதிகமானோர் சீனர்கள். இந்தியர்கள் 16 விழுக்காட்டினர். இந்தியக் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வருவதால், அண்மைய காலங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள்: சு. ரவிச்சந்திரன் சு. ரவிச்சந்திரன் (பி: 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'சுரவி' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஆசிரியருமாவார். 1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. ராஜன் மு. ராஜன் (பிறப்பு: சூன் 11 1966) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'முரசுராஜன்' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் கிறிஸ்த்தவ மத போதகருமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ் கிறிஸ்த்தவ எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும், மலேசியத் தமிழ் பாவலர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும்கூட. 1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கிறிஸ்த்தவ சமயக் கட்டுரைகள், சிறுகதைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III போயிங் (முன்னதாக மக்டொனல் டக்ளசு) சி-17 குளோப்மாஸ்டர் III (Boeing C-17 Globemaster III) ஆனது மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து வானூர்தியாகும். மக்டொனால் டக்ளசு நிறுவனத்தால் 1980-1990 காலகட்டத்தில் அமெரிக்க வான்படைக்காக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. சி-17 மூலம் சரக்கு மற்றும் ராணுவ வீரர்களை உலகின் எந்த போர்த்தளத்திற்கும் துரிதமாக கொண்டு செல்ல முடியும். மேலும் வழமையான போக்குவரத்து முறைகள் மூலம் செல்ல இயலாத இடங்களிலிருந்து பிணியாளர்களை மருத்துவ முகமைக்கு கொண்டு செல்லவும் அத்தியாவசியப் பொருட்களை பேரிடர்ப் பகுதிவாழ் மக்களுக்களிக்கவும் இவ்விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தின் பெயரானது, முற்றிலும் தொடர்பற்ற இருவேறு ஐக்கிய அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்களின் பெயர்களை மூலமாகக் கொண்டுள்ளது. அவ்விமானங்கள் முறையே டக்ளசு சி-74 குளோப்மாஸ்டர் மற்றும் டக்ளசு சி-124 குளோப்மாஸ்டர் II ஆகியனவாகும். சி-17 விமானம் ஐக்கிய அமெரிக்க, ஐக்கிய இராச்சிய, ஆத்திரேலிய, கனடா, நேடோ, கத்தார் வான்படைகளால் இயக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இந்தியாவும் இவ்வகை விமானங்கள் வாங்க முடிவெடுத்துள்ளன. 6174 (எண்) 6174 என்பது ஒரு குறிப்பிடத்தக்க எண் ஆகும். இவ்வெண் இந்தியக் கணிதவியலர் டி. ஆர். கப்ரேக்கரின் நினைவாக கப்ரேக்கர் மாறிலி ("Kaprekar Constant") என அழைக்கப்படுகிறது. பின்வரும் காரணங்களுக்காக இது குறிப்பிடத்தக்கது: இந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில், 9200-0029 = 9171 9711-1179 = 8532 8532-2358 = 6174 நான்கு இலக்கங்களைக் கொண்டு, மிகப் பெரிய எண்ணை எழுதும் போது அந்த எண்களை இறங்கு வரிசையிலும், மிகச் சிறிய எண்ணாக எழுதும் போது ஏறு வரிசையிலும் எழுதுகிறோம். a,b,c,d என்ற நான்கு எண்களும் 9 ≥ a ≥ b ≥ c ≥ d ≥ 0 என்றும், நான்கும் ஒரே எண்ணாக இருக்காது. எனவே அதிகபட்ச எண் abcd ஆகவும்,குறைந்தபட்ச எண் dcba ஆகவும் இருக்கும். இப்போது கப்ரேகர் முறையை பயன்படுத்தினால், a b c d -- d c b a A B C D .கிடைக்கும். மேலும் D = 10 + d - a (as a > d) C = 10 + c - 1 - b = 9 + c - b (as b > c - 1) B = b - 1 - c (as b > c) A = a - d A,B,C,D என்ற நான்கு எண்களையும் a,b,c,d மூலம் எழுத முடிந்தால் அதே எண்ணே திரும்பவும் வருவதைக் காணலாம். நான்கு இலக்கங்களை வைத்து மொத்தம் 4!=24 எண்கள் எழுத முடியும். அதில் மேலே உள்ள சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் எண்களை சரி பார்த்தால் முழு எண் தீர்வாக ABCD=bdac என வருவதைக் காணலாம். இந்த நான்கு சமன்பாடுகளிலிருந்து A=6,B=1,C=7, D=4 என்பதைக் கண்டறியலாம் .இந்த ஒரே ஒரு நான்கு இலக்க எண்ணுக்குத் தான் இந்த பெருமை உள்ளது.எந்த ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7 தடவைகள் கப்ரேகர் முறையைப் பயன்படுத்தினால் 6174 என்ற எண்ணை அடைந்து விடலாம். மூன்று இலக்க எண்களுக்கு இதே போல் ஓர் எண் உள்ளது; அந்த எண் 495 ஆகும். எஸ். ராஜமூர்த்தி எஸ். ராஜமூர்த்தி (பி: 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் உணவுக்கடை உரிமையாளராவார். 1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஞான. ராயப்பன் ஞான. ராயப்பன் (பி. 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்டவர். மேலும் இவர் புலவர் அ. முத்தையனிடம் முறையாக யாப்பு இலக்கியம் பயின்றுள்ளவர். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வீ. ருக்மணி லோகநாயகி வீ. ருக்மணி லோகநாயகி (பிறப்பு: சனவரி 31 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் 'ருக்மணி லோகா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்டவர். 1992 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் தமது அமெரிக்க, அவுஸ்திரேலிய, இந்திய, தாய்லந்துப் பயணங்கள் பற்றித் தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழர் திருநாள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (2001). கணியான் கூத்து கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். மகுடம், டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையைத் தர உச்சம். இளகிய ஓசையைத் தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும். கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறும். இந்த இசைக்கருவிகளை அடிக்கடி நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும். உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொள்வதும் கணியான் கூத்தின் ஒரு பகுதியான ‘அம்மன் கூத்தின்’ போது இலை தழைகளைக் கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்க ஒப்பனையாக உள்ளது. சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் ‘வேதாள ஆட்டம்’ என்னும் நிகழ்வினை நடத்தும்போது விகாரமான தோற்றத்துடனான முகமூடியும் அணிந்து கொள்வதுண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். இவர்கள் நீளமான கூந்தல் கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கட்டியிருப்பர். கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. சிவபெருமான் இரண்டு முரடர்களைப் படைத்து பூவுலகிற்கு அனுப்பினார் என்றும் அதில் ஒருவன் சுடலைமாடனாகவும் மற்றொருவன் கணியான் ஆகவும் அழைக்கப்பெற்று, கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்து அவன் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இது கணியான் கூத்தின் ஒரு பகுதியாக அமைந்து வருகிறது. தன் குருதி சிந்தி, சுடலைமாடனுக்கு உதவுவதைக் காட்ட, சுடலையை நோக்கி ஓடும் சுடலைமாடனுக்கு, தனது விரல் அல்லது நாக்கை அறுத்துக் குருதியை ஒர் இலையில் ஒத்திக் கொடுப்பான். வெட்டிய இடத்தில் திருநீறு பூசப்படும். அப்போது பின்வரும் பாடல் பாடப்படும். குருதி கொடுத்து மாடனுக்கு உறுதியாக உதவும் கணியான் பருதி இருக்கும் காலம் வரை இறுதி யின்றி வாழ் வானே கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலை மாடன் கதை, பன்றி மாடன் கதை, வண்ணாரமாடன் கதை, கருப்பசாமி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சந்தன மாரி கதை, முத்துப்பட்டன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும். இது தவிர இராமாயணம், மகாபாரதக் கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு. வில்லுப்பாட்டுக்கும், கணியான் கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளிலும் எடுத்தாளப்படும் கதைகள் ஒன்றாகவே இருக்கின்றன. வில்லுப்பாட்டில் எழுதி வைத்து பாடப்படும் கதைகள், கணியான் கூத்தில் வாய் போன போக்கில் சொல் போன போக்கில் மனதில் இருந்தே பாடப்படுகிறது. வழிவழியாக இக்கலை தொடர்கிறதே ஒழிய, முறைப்படி பயிற்றுவிக்கவோ, ஆட்டுவிக்கவோ ஏற்பாடுகள் இல்லை. சிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம். இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர். மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுக்களும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு. கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். ‘அண்ணாவி’ முதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும். பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவருமாக நின்று இவர்கள் தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. இது தெய்வவழிபாட்டோடு இசைந்த கலையாக விளங்குவதால் சில சடங்குகளும் இக்கூத்தின் வாயிலாகப் படைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது இரத்தப்பலியிடுதல் என்னும் ‘கைவெட்டு’ நிகழ்ச்சியாகும். இவ்வகையில் ஒரு கதையானது கூத்து, சடங்கு என்னும் இருவகைப் படிநிலைகளில் கோவில் விழாவின்போது செயல்படுவதைக் காணலாம். அ. ரெங்கசாமி அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. மேலும், இவர் மலேசியாவில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். மற்றும் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றைத் தம் நாவல்களில் யதார்த்தம் குலையாமல் சொல்லியிருக்கிறார். 1950 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இராணுவப் போக்குவரத்து வானூர்தி ராணுவப் போக்குவரத்து வானூர்திகள் ("Military transport aircraft") வழமையான வணிகரீதியிலான போக்குவரத்து வானூர்திகள் செல்ல இயலாத இடங்களுக்கும் போர்த்தளங்களுக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படும் சரக்கு வானூர்திகளாகும். குண்டுவீசும் வானூர்திகளை மூலமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவை, இரண்டாம் உலகப் போரின்போது வான்வழியே வீரர்களைக் கொண்டுசென்று இறக்கவும் ராணுவ மிதவை வானூர்திகளை இழுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. மேலும், சில ராணுவ போக்குவரத்து வானூர்திகள் வழமைக்கு மாறான சில பணிகள் செய்யவும், அதாவது வானிலேயே மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் சரக்குகளை தயார்செய்யப்படாத ஓடுதளங்கள் (அ) தற்காலிக ஓடுதளங்களில் இறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மறவன்குடியிருப்பு மறவன்குடியிருப்பு கிராமம் தமிழ்நாட்டில் நாகர்கோயில் நகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்ககளைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர். மறவன்குடியிருப்பு கிராம மக்கள் நாடார் சாதியினைச் சேர்ந்தவர்கள். மறவன்குடியிருப்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். தற்ப்போதைய, கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு (Our Lady of Snow-Sancta Maria Thasnavis) அர்ப்பணம் செய்யபட்டது. இந்த கோவில் 1954 ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது. மறவன்குடியிருப்பு பங்குத்தளம் 1984இல் நிறுவப்பட்டது. ஜிம் லேக்கர் ஜிம் லேக்கர் ("Jim Laker", பிறப்பு: பெப்ரவரி 9 1922, இறப்பு: ஏப்ரல் 23 1986) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 450 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகக் கூடிய இலக்குகளை (விக்கெட்) வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். ஓல்ட் ட்ரபோட் மைதானத்தில் 1956 ஆம் ஆண்டின் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லேக்கர் இந்த சாதனையை நிலைநாட்டினார். அந்தப் போட்டியில் அவர் 90 ஓட்டங்களைக் கொடுத்து 19 இலக்குகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் (193 இலக்குகள்) பங்கேற்றுள்ள ஜிம் முதல் தர போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 1,944 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 1956 ஓல்ட் டிரேஃபோர்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தான் இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார். முதல் இன்னிங்ஸில் ஒன்பது இலக்குகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 இலக்குகளும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜிம் லேக்கர் மொத்தம் வீழ்த்திய இலக்குகள் மட்டும் 63. அதாவது சராசரியாக 10 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கு என்ற விகிதத்தில் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம் லேக்கர் 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும் காயங்கள் அதிகம் ஏற்பட்டதால் மிகுதியான போட்டியில் இவர் பங்கேற்கவில்லை. துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பின் வர்ணனையாளராக மாறினார். ஜிம் லேக்கர் 1986ல் லண்டன் நகரில் பட்னி என்ற இடத்தில் இயற்கை எய்தினார். ஜிம் லேக்கரின் சாதனையை தான் இந்திய சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமஸ் ஹார்டி தாமஸ் ஹார்டி. ("Thomas Hardy", ஜூன் 2, 1840 – ஜனவரி 11, 1928) ஒரு ஐக்கிய இராச்சியப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். இங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார். “த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார். அலகு (அளவையியல்) கணியங்களின் பெறுமானங்களைக் குறிப்பிடுவது அலகு () ஆகும். ஒரு வேதிப் பொறியாளராக நீங்கள் கடந்து வந்திருக்கும் அனைத்து மதிப்புகளிலும் எண்களும், அலகுகளும் தான் இருக்கும். ஆனால் சில மதிப்புகளுக்கு அலகு இல்லை, ஏனென்றால் அவை ஒரு தூய எண் (π, போன்று) அல்லது ஒரு விகிதம். சிக்கல்களை திறமையாக சமாளிக்க வேண்டுமென்றால், அனைத்து வகையான அலகுகளும் மற்ற அலகுகளுடன் இசைவு கொடுக்க வேண்டும் அல்லது அனைத்தும் ஒரே "முறையாக" இருக்க வேண்டும். ஒரு முறையான அலகு என்பது அதன் சில அடிப்படை அலகுகளை எளிதில் வேற்று அலகு முறைகளுடன் மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அடிகள் என்பது அமெரிக்காவிலும், ஆசுதிரேலியாவிலும் ஒரே அளவாகும். ஒருவர் சந்திக்கும் ஐந்து பொதுப் பயன்பாட்டு அடிப்படை அலகு வகைகள் அல்லது "கணங்கள்" இங்கு உள்ளன(கண ஆய்விற்காக அதன் சுருக்க வடிவை காட்டப்பட்டுள்ளது): குறிப்பு: மின்னோட்டத்தை ஒரு அடிப்படை அலகாய் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் மின்சாரம் என்பது மணிக்கு இத்தனை மின்னிகள் என்பது ஆகும். நீங்கள் மின்னோட்டத்தை அடிப்படை அல்லது முதல் அழகாக வைத்துக்கொள்வதையே எளிதாக உணர்வீர்கள். பல்வேறுபட்ட இசைவு அலகு முறைகள் உள்ளன. பெரும்பான(ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் அல்லாத) உலகில் அனைவரும் எஸ்.ஐ அலகு முறைகளையே பயன்படுத்துகின்றன. இந்த இரு நாடுகளிலும் அதே முறையையே அறிவியல் மற்றும் பொறியியல் இதழ்கள் பயன்படுத்துகின்றன. நடைமுறையில், வேதிப் பொறியாளர்கள் எஸ்.ஐ முறைகளை பயன்படுத்தவும், பிற அலகுத் தரவுகளை பயன்படுத்தவும், சில அலகு முறைகளில் குறிப்பிட்ட கட்டமைப்புகளை உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு அலகு முறைகளும் அதன் பெயர்களைப் போன்றே அதன் அடிப்படை அலகுகளில் இருந்து திரிந்து ஏராளமாக உருவாக்கியுள்ளது. அந்த அலகுகள் அனைத்தும் வேறு சில அளவுகளில் இருந்து வந்து, மேலும் வேறு சில மாறிலிகளின் குழுக்களாகவும் உள்ளது. இங்கு ஏழு பொதுவான கொணர் அலகு முறை அளவுகளையும், அதன் பரிமாணங்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது, நீங்கள் அறிந்து கொள்ளலாம். 10ஐ அடிப்படை காரணியாக வைத்திருக்கும் இதுவே உலகில் பெரும்பாலும் பயன்படுத்தும் அலகு முறையாகும். தற்போது அதி துல்லியமாக இருக்கும் இந்த எஸ்ஐ முறை, அடிப்படையில் நீரின் தன்மையையே மூலமாக கொண்டுள்ளது. இதிலுள்ள பெரிய அலகுகள் பின்வருமாறு: குறிப்பு: இதில் உள்ள கிலோகிராம் என்பது 1000 கிராம். கிராம் என்பது அடிப்படை அலகாக இல்லாமல் கிலோகிராம் அடிப்படையாக இருக்கிறது. ஒரு கூம்பு மீட்டர் (மீ) நீரின் எடை சுமார் 1000 கிலோகிராம் உள்ளதால் நீருடன் நெருக்கத் தொடர்பு கொண்டது என்று இதனை கூறப்படுகிறது. அடிப்படை மோல் அலகை புரிந்து கொள்வது சற்று கடினமானதாகும். ஏதேனும் ஒரு "பண்டத்தில் (பொருளில்)" 6.022*10 துகள்களாய் உள்ளது ஒரு மோல் ஆகும். அந்த எண்ணை அவாகாத்ரா எண் அல்லது அவாகாத்ரா மாறிலி என்று அழைப்படுகிறது. இது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு சமம். வேதிப் பொறியாளர்கள் கிலோமோலைப் பயன்படுத்துவர். 2 ஐதரசன் அணுக்கள் (அணுப் பொருண்மை = 1) மற்றும் 1 ஆக்சிசன் அணு (அணுப் பொருண்மை = 16) சேர்ந்த HO நீரின் சார்பு மூலக்கூறு பொருண்மை (மூலக்கூறு எடை) 18 ஆகும். ஆக ஒரு கிலோகிராம் நீரில் இரண்டு H அணுக்களும், ஒரு O அணுவும் கொண்ட ஒரு கிலோமோல் HO உள்ளது. எஸ்ஐ முறையில் உள்ள ஒவ்வொரு அடிப்படை அலகுகளையும், எப்படி வேண்டுமானால் பத்தால் பெருக்கி, அல்லது வகுத்து அதற்குரிய இலக்கப் பெயரிட்டு எழுதலாம். அதன் தனிப் பொருட்கள் பின்வருமாறு: இந்த அட்டவணையின் படி, 1 கிமீ என்பதில் உள்ள 'கி' என்ற எழுத்து 10 என்ற மதிப்பையும், 'மீ' என்ற எழுத்து மீட்டரையும் குறிக்கிறது. ஆக 1 கி.மீ என்பது 10 மீட்டர். எண்ணுக்கும், அலகுக்கும் எப்பொழுதும் இடைவெளி விட்டு எழுத வேண்டும். அதேபோல் இரண்டு அலகுகள் பெருக்கும் படியாக வரும்பொழுதும் இடைவெளி விட்டு எழுத வேண்டும். ஆகையால் மிஆம்ப் என்றால் மில்லி ஆம்பயர் என்றும், மீ ஆம்ப் என்றால் மீட்டர்(மீற்றர்) ஆம்பயர் என்றும் குறிப்பிடலாகும். (குறிப்பு : மீஆம்பி என்று இரண்டு அலகை சேர்த்து எழுதல் கூடாது. இது ஆங்கிலத்தில் இருந்து வந்த வழக்கம். ஆங்கிலத்தில் meter(மீட்டர்) என்பதற்கும், milli (மில்லி) என்பதற்கும் ஒரே எழுத்து (m) தான் குறியீடாக உள்ளது. ஆகையால் வேறுபாடு வேண்டும் என்று கருதி அவர்கள் இந்த விதியை உருவாக்கினர் எனலாம். தமிழில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்ற போதிலும் தற்போதைக்கு அதே விதியை பயன்படுத்துகிறோம்.) எ.கா: தருவிக்கப்பட்ட அலகுகள் எனப்படுபவை அடிப்படையான மேற்கண்ட SI அலகுகளிலிருந்து தருவிக்கப்பட்டன ஆகும். எ.கா: 1 மைல் பொருத்த விளக்கம் பொருத்த விளக்கம் என்னும் இந்த நூலை நாகூர் தர்கா மகாவித்துவான் ஸ்ரீலஸ்ரீ குலாம் காதிறு நாவலர் என்பவர் இயற்றினார். ஆ.கா.பிச்சை இபுறாகிம் என்பவர் இந்த நூலுக்குப் பாயிரம் பாடியுள்ளார். 1880ல் அரங்கேற்றப்பட்ட இந்த நூல் 1900 ஆண்டில் செய்யது இபுறாகிம் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிற்காலப் பாட்டியலின் ஒரு பகுதி எழுத்துப் பொருத்தம். ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை எழுத்துப்பொருத்தம். பாட்டுடைத் தலைவன் பெயருக்குப் பொருத்தமான எழுத்தில் தொடங்கிப் பாடவேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறும். பாட்டுடைத் தலைவன் பிறந்த நாள் நட்சத்திரம் எழுத்துப் பொருத்தத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். நூல் சில மங்கலச் சொற்களில் தொடங்கப்பட வேண்டும் என்றும் பாட்டியல் நூல்கள் கூறும். பொருத்த-விளக்கம் என்னும் இந்த நூல் 18 மெய்யெழுத்துக்களை 4 வருணத்தாருக்கு உரியனவாகப் பிரித்துக் காட்டுகிறது. தமிழ் எழுத்துக்களை 27 நட்சத்திரமாகவும் பிரித்துக் காட்டுகிறது. இப்படியெல்லாம் ஒரு கற்பனை செய்கிறது இந்த நூல். அரபு எழுத்துமுறை அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது "அப்ஜதிய்யா அரபிய்யா" என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும். முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன. இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பஷ்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டம் என்பதால் அரபு எழுத்துமுறை ஒரு அப்ஜத் வகை எழுத்துமுறையாக பிரிந்து கொண்டு இருக்கிறது. வெர்னர் ஐசன்பர்க் வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் என்னும் முழுப்பெயர் கொண்ட வேர்னர் ஐசன்பேர்க் (வெர்னர் ஹைசன்பர்க், "Werner Heisenberg", டிசம்பர் 5, 1901 - பெப்ரவரி 1, 1976) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். குவாண்டம் பொறிமுறையைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஐசன்பேர்க், நாஸி ஆட்சியின் கீழ் ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின் தலைவராக இருந்தார். இத் திட்டத்தின் இயல்பும், இதில் ஐசன்பேர்க்கின் பங்களிப்பும் பெருமளவு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இவர், நவீன இயற்பியலின் மையக் கொள்கைகளுள் ஒன்றான ஐசன்பேர்க் uncertainty கொள்கையை கண்டுபிடித்ததன் மூலமும், குவாண்டம் பொறிமுறையின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்புக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். மேலும் இவர் 1925ல் மாகசு பார்னுடன் இணைந்து சத்திச்சொட்டு நிலையியக்கவியலுக்கான அணி சூத்திரமாக்கலை இயற்றினார். இதற்காக 1932 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோ. புண்ணியவான் கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K. Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. புஷ்பலீலாவதி புஷ்பலீலாவதி (பி: 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் பாவை, நாகலட்சுமி போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவர். 1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. க. பூபாலன் க. பூபாலன் (பி: 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் 'கே.பி.ஷாமினி' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமுரசு" "தினமணி" நாளிதழ்களுக்கு நிருபராகவும் பணியாற்றியுள்ளார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ம. பெரியசாமி ம. பெரியசாமி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ம. பெரியோன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரும்கூட. 1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இறைத் துதிப் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. க. பெருமாள் க. பெருமாள் (பிறப்பு: மே 5 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார். 1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கு.சா. பெருமாள் கு. சா. பெருமாள் (பிறப்பு: பிப்ரவரி 10 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கு. சா., தொண்டன், வளவன், விழிப்பு, குகன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். மேலும் "மக்கள் தொண்டன்" (கையெழுத்தேடு - 1957), "மலைநாடு" (வார இதழ் - 1959), "மலைநாடு" (நாளிதழ் - 1961), "கூட்டுறவு" (மாத இதழ் - 1963), "இயக்கம்" (ம. இ. கா. இதழ் - 1972), "தமிழ் நேசன்" (நாளிதழ்) ஆகியவற்றில் ஆசிரியர் / துணையாசிரியராகவும், மலேசிய்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். 1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். என்றாலும் தமது தீவிரமான அரசியல், சமுதாயப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கோவி. பெருமாள் கோவி. பெருமாள் (பிறப்பு: டிசம்பர் 25 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழானந்தன் எனும் புனையரில் எழுதிவரும் இவர் "சங்கமணி" வார இதழின் துணையாசிரியராவார். மேலும் இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. 1959 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மா. பெருமாள் மா. பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். லாபீஸ் மாயவன். முருகு மணாளன், லாபிஸான் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியராவார். 1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வ. பெருமாள் வ. பெருமாள் (பிறப்பு நவம்பர் 9 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ருக்மணி பெருமாள், மல்லிகா பெருமாள், கோவிதாசன், உதயச்சந்திரன் போன்ற புனையர்களால் நன்கறியப்பட்ட இவர் கோயில் அலுவலராவார். மேலும் இவர் சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், மலேசிய-மொரிசியஸ் நட்புறவுக் கழகத்தின் பொருளாளராகவும் கடமைபுரிந்துள்ளார். 1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தற்போது அதிகம் சமயக் கட்டுரைகளே எழுதி வருகிறார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. டி. எஸ். பொன்னுசாமி டி. எஸ். பொன்னுசாமி (பிறப்பு: டிசம்பர் 22 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தீப்பொறி எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். தீவிரச் சமுதாயச் சிந்தனையுள்ள கவிஞர். "உயர்வோம்" இதழில் பொறுப்பாசிரியராகவும், பொன் பாவலர் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அதிகமாக இசைப்பாடல்கள் எழுதியுள்ளார், அவை உள்ளூர்ப் பாடகர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளதோடு இசைநாடா, குறுந்தட்டு வடிவங்களும் பெற்றுள்ளன. சுரங்கத் தீ சுரங்கத் தீ என்பது, பொதுவாக நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில், நிலக்கரிப் படிவுகள் நிலத்துக்கு அடியில் கனன்றுகொண்டு இருப்பதைக் குறிக்கும். இத்தகைய தீக்கள், பொருளாதார, சமூக, சூழலியல் தாக்கங்களைக் கொண்டுள்ளன. இவை பொதுவாக மின்னல், காய்ந்த புற்கள் எரிதல், காட்டுத்தீ போன்றவற்றால் ஏற்படுகின்றன. புவியின் மேற்பரப்பில் எரிந்த தீ அணைந்த பின்னரும், சுரங்கத்தினுள் தீ தொடர்ந்தும் கனறு கொண்டு இருப்பதனால் இது மிகவும் தீங்கானது. ஆண்டுக் கணக்கில் கூட சுரங்கத் தீ எரிந்து கொண்டிருக்கக்கூடும். இவை மீண்டும் அண்மையில் உள்ள காடுகளை எரியூட்டிக் காட்டுத்தீயை ஏற்படுத்தலாம். இத் தீ, சுரங்க வழியூடாகவும், நிலவியல் அமைப்புக்களில் காணப்படும் வெடிப்புக்களூடாகவும் பரவுகின்றது. சுரங்கத் தீயினால் நச்சுப் புகைகள் வெளியேறுவதனால் மனித உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும், சூழலுக்கும் தீங்காக அமைகின்றது. அத்துடன், காந்த புல், பற்றை, காடு என்பவற்றை எரியூட்டிக் காட்டுத்தீயை ஏற்படுத்துவதனாலும், மேற்பரப்பில் உள்ள சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் முதலிய கட்டமைப்பு வசதிகள் கீழிறங்குவதனாலும் பெரும் தீங்கு விளைகின்றது. இது இயற்கையாக அல்லது மனித நடவடிக்கைகளினால் உருவாலாம். எப்படி உருவானாலும், பல சமயங்களில் சுரங்கத்தீ பல பத்தாண்டுகளாகவோ அல்லது சில சமயங்களில் நூற்றாண்டுகளாகவோ தொடர்ந்து எரியக்கூடியது. எரிபொருள் முற்றாக எரிந்து முடியும் வரை, அல்லது தீ நிரந்தரமான நிலத்தடி நீர் மட்டத்தை அடையும்வரை, அல்லது மனிதர் தலையிட்டு அணைக்கும் வரை சுரங்கத்தீ தொடர்ந்து எரியும். இவை நிலத்தின் கீழ் எரிவதால் அணைப்பதற்குக் கடினமானது என்பதுடன், பெருமளவு செலவும் பிடிக்கும். மழையாலும் அணைக்க முடிவதில்லை. உலகம் முழுவதிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுரங்கத் தீக்கள் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. அதிக நிலக்கரி வளம் கொண்ட சீனா போன்ற நாடுகளில் இப் பிரச்சினை மிகவும் கூடுதலாக உள்ளது. மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள் மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார். தாம் காட்டும் நூலைப்பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அகர வரிசையில் அவை வருமாறு: சந்தனா மேஜர் சந்தனா (இறப்பு: ஜூன் 26, 2000, மயிலிட்டி, யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட குணசிங்கம் கவிதா தமிழீழ விடுதலைப் புலிகளில் கடற்கரும்புலியாக இருந்தவர். விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியில் இருந்த மேஜர் சந்தனா 1995 இல் கடற்கரும்புலி அணியில் இணைந்து கொண்டார். 26 ஜூன், 2000இல் உகண' கப்பல் யாழ்குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தது. இக்கப்பல் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு, கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்க, கடும் சமர் ஏற்பட்டது. சமர் நடுவே இலாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது. மேஜர் சந்தனா இதில் கொல்லப்பட்டார். விங்ஸ் (திரைப்படம்) விங்ஸ் 1927ஆம் ஆண்டு வெளியான முதலாம் உலகப் போர் பற்றிய ஆங்கில ஊமைப்படமாகும். இப்படம் லூசியன் ஹப்பார்ட் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் அ. வெல்மன் ஆல் இயக்கப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. ஆஸ்கார் விருது என்றழைக்கப்படும் ‘’’அகாடெமி விருது’’’ இப்படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், ஒரு ஊமைப்படதிற்கு முதலும் கடைசியுமாக அகாடெமி விருது வழங்கப்பட்டது. க்லாரா பௌ, சார்லஸ் ரோஜெர்ஸ், ரிச்சர்ட் அர்லேன், கேரி கூபர் ஆகியோர் ‘’’விங்ஸ்’’’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆவணவியல் தலைப்புகள் பட்டியல் பாபெல் (திரைப்படம்) பாபெல்(Babel) 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது. எஸ். பி. நாவின்ன எஸ். பி. நாவின்ன (" S. B. Nawinne", பிறப்பு: பெப்ரவரி 24 1946), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் குருநாகலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது நலசேவை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார். வாரியபொல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் மனுசா நாணயக்கார பன்னகமுவ, வன்சாவல. காலியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், சையது அகமது கான் சர் சையது அகமது கான் (Urdu: سید احمد خان; அக்டோபர் 17, 1817 – மார்ச் 27, 1898) ஒரு இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர். இந்தியத் தலைநகர் புது தில்லியில் பிறந்த இவர் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார். யுனானி மருத்துவமுறையான “திப்” கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் 1841 ல் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார். 1839 ஆம் ஆண்டில் ஆக்ராவில் முன்சீப் நியமனம் பெற்று நீதித்துறைப் பணியைத் தொடங்கினார். 1855 ஆம் ஆண்டில் பிஜ்னார் எனுமிடத்தில் சதர் அமீன் எனும் பதவியில் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 1858 ஆம் ஆண்டில் மொராதாபாத் எனுமிடத்தில் “சதர்-அஸ்-சாதர்” எனும் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். 1859 ஆம் ஆண்டில் மொராதாபாத்தில் “பெர்சியன் மதர்சா” எனும் கல்விச்சாலையை நிறுவிய இவர் வடமேற்கு மாநிலங்களில் 1860 ஆம் ஆண்டில் பஞ்ச நிவாரப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டார். 1864 ஆம் ஆண்டில் “டிரான்ஸ்லேசன் சொசைட்டி” எனும் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு பின்னர் “சயிண்டிபிக் சொசைட்டி ஆஃப் அலிகார்” எனும் பெயரில் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இவர் 1870 ஆம் ஆண்டில் இசுலாமியர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த “தேஜிபுல் இலாஹி” எனும் இதழைப் பதிப்பித்து வெளியிட்டார். அலிகார் எனுமிடத்தில் 1875 ஆம் ஆண்டில் எம் ஏ ஓ எனும் கல்லூரியை நிறுவினார். வைஸ்ராய் சட்டப்பணிக் குழுவின் உறுப்பினராக 1878 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 1888 ஆம் ஆண்டில் “இந்திய சுதந்திரக் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். வரலாறு, அரசியல், மதம் மற்றும் சட்டம் பற்றிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் நிறைய எழுதியிருக்கிறார். சுசந்த புஞ்சிநிலமே சி. 42, சுமிட் பிலட்ஸ், கெப்பட்டிபொல மாவத்தை, கொழும்பு 05 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், அப்துல் கனி அப்துல் கனி (நாகூர், தமிழ்நாடு) என்பவர் ஒரு தமிழ் சூபி பாடகர், இசைக் கலைஞர். இவர் எளிமையான நாட்டுப்புற இசையில் அமைந்த இசுலாமிய பக்திப் பாடல்களுக்காக அறியப்படுகிறார். இவர் குவாஜா முகியித்தீன் மற்றும் சபர்மு கியித்தீன், பாபா சபீர் ஆகியோருடம் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இது ஓர் இசை: தீண்டப்படாத பறையை மீட்டாக்கம் செய்தல் இது ஓர் இசை: தீண்டப்படாத பறையை மீட்டாக்கம் செய்தல் (This Is A Music: Reclaiming an Untouchable Drum) என்பது 2011 இல் வெளிவந்த பறை இசை பற்றிய ஓர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இது பறை இசை, பறை இசையின் பண்பாட்டு முக்கியத்துவம், அது சந்திக்கும் சாதி அடக்குமுறை, அதில் இருந்து மீளல், மீட்டாக்கம் செய்தல் பற்றி இனத்துவ-இசையியல் பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப் படம் ஆகும். இதை அத்துறையில் ஆய்வு செய்யும் ஒரு அமெரிக்கர் எடுத்துள்ளார். முப்பரிமாண வெளி முப்பரிமாணம் (3D, Three Dimensional) என்பது ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு தரும் ஒரு தோற்றம் ஆகும். பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். வச்சனந்திமாலை வச்சனந்திமாலை என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூல். இதன் ஆசிரியர் வச்சன். பாட்டியல் என்பது பாடப்படும் தலைவன் பெயரிலுள்ள எழுத்துக்குப் பொருத்தம் பார்ப்பது. எழுத்துக்களுக்குப் பாட்டியல் நூலில் சாதி-வருணம், ஓரை (ராசி), நட்சத்திரம் முதலானவை கூறப்பட்டிருக்கும். திருமணத்துக்குச் சிலர் சாதகப் பொருத்தம் பார்ப்பது போலப் பாடப்படும் தலைவனுக்கும் பொருத்தம் பார்த்துப் பொருத்தமான எழுத்துக்கள் அமைந்த சொற்களால் தொடங்கிப் பாடுவார்கள். தமிழில் வடமாழி கலப்புக்குப் பின்னர் இத்தகைய போலி நம்பிக்கை உள்ள நூல்கள் நோன்றின. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (செப்டம்பர் 26, 1820 - சூலை 29, 1891) என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் மேட்னிபூர் ஆருகிலுள்ள பிரிசங் எனும் ஊரில் 26-09-1820 ஆம் நாள் பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சம்ற்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமற்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது. இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமற்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌமுதி”, “ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்”, “ஜீவன் சரித்”, “போதோதயா” என்கிற நூல்கள் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர் மேற்கு வங்காள மாநிலம், கல்கத்தா நகரில் 29-07-1891 ஆம் நாளில் மரணமடைந்தார். யுகோசிலாவியப் படையெடுப்பு யுகோசிலாவியப் படையெடுப்பு ("Invasion of Yugoslavia") என்பது இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் யூகோசிலாவிய நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது ஏப்ரல் போர் ("April war") என்றும் நடவடிக்கை 25 ("Unternehmen 25") அழைக்கப்படுகிறது. 1940ல் அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி கிரீசு மீது படையெடுத்தது. ஆனால் கிரேக்கப்படைகளின் கடுமையான எதிர்ப்பை அதனால் சமாளிக்க முடியவில்லை. இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு நாசி ஜெர்மனியின் சர்வாதிகாரி இட்லரிடம் முறையிட்டார். இத்தாலிக்குத் துணையாக பால்கன் குடா பகுதியில் தலையிட இட்லர் முடிவு செய்தார். மேலும் கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கும் சாத்தியக் கூறு இருந்தது. அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் அச்சுக் கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் ஒரு புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார். ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பு காலத்தில் யுகோசிலாவிய எதிர்ப்புப் படைகள் தொடர்ந்து அச்சுப் படைகளை எதிர்த்து கொரில்லாப் போர் புரிந்தன. சிறு வரைவி சிறு வரைவி "(Mini Drafter)" என்பது வரைபடங்களை சுலபமாகவும் சரியாகவும் வரையப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் செங்கோண வடிவ அளவுகோலின் மூலம் நாம் வரைதாள் ஒரு கிடைமட்ட கோட்டினையும் அதற்கு இணையான "(Parallel)" மற்றும் செங்குத்தான "(Perpendicular)" கோடுகளை வரைய முடியும். மேலும் கிடைமட்டமாக "(0 பாகை)" மட்டுமின்றி அளவுகோலினை 360 பாகை வரை மாற்றி அமைத்து தேவையான கோணத்தில் கோடுகளை வரையலாம். அளவுகோலினை வரைதாளின் எந்த இடத்தில் நகர்த்தி கொண்டு சென்றாலும் நாம் நிறுவிய கோணமானது மாறாது என்பது இதன் சிறப்பம்சம். இன்றளவும் பொறியியல் கல்லூரிகளில் சிறு வரைவி கொண்டு தான் வரைய பயிற்றுவிக்கப்படுகிறது. வரை பலகையின் மீது வரைதாளை வரைதாள் கவ்வி கொண்டு நான்கு மூலையிலும் பொருத்த வேண்டும். பிறகு அளவுகோலின் நேர் எதிர் முனையை, வரை பலகையின் மேல் இடது பக்க ஓரத்தில் பொறுத்த வேண்டும். சிறு வரைவியின் திருகாணியை ஆடாதவண்ணம் வரைபலகையுடன் நன்கு இறுக்கிவிட வேண்டும், இல்லையெனில் கோணம் மாற வாய்ப்புண்டு. பின்னர் அளவுகோலில் நமக்குத் தேவையான கோணத்தினை நிறுவி வரையத் துவங்கலாம். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் (ஆத்தியடி சித்தி விநாயகர்) 100 வருடம் பழமை வாய்ந்த, புனிதம் மிகுந்த, அமைதியான ஒரு கோயில். இக்கோயில் பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு, ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் தரும பரிபாலன சபை, "நூற்றாண்டு மலர்" ஒன்றை 2004 இல் வெளியிட்டது. இம் மலரில் கோவில் வரலாறு, தரும பரிபாலன சபைக் கீதம், ஊஞ்சல், நாயகன் பதிகம், தரும பரிபாலன சபை நடந்து வந்த பாதை, அன்பும் அறனும், சமுகத்தில் சமயம் போன்ற கட்டுரைகளும், சனசமுக நிலையம், சைவ மன்ற பாலர் பாடசாலை பற்றிய விபரங்களும் அடங்கியுள்ளன. ஆத்தியடி சுப்பிரமணியர் மேற் பதிகம் 1913 இல் கோ. கணபதிப்பிள்ளை அவர்களால் கோவில் முதல் மகா கும்பாவிஷேகத்தின் போது பாடப்பெற்றது. நிலக்கரி அகழ்தல் நிலக்கரி அகழ்தல் என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும். எரியும் போது கூடிய ஆற்றலை வெளிவிடக்கூடிய நிலக்கரி 1880 களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அத்துடன், எஃகு, சீமெந்து போன்றவற்றின் உற்பத்தியிலும் நிலக்கரி ஒரு முக்கிய எரிபொருளாகப் பயன்படுகின்றது. இதனால் நிலக்கரி அகழ்தல் பல நாடுகளில் ஒரு முக்கியமான தொழில் துறையாக உள்ளது. கைத்தொழிற் புரட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது. இது பின்னர் ஐரோப்பாக் கண்டப் பகுதிக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது. இந்தப் புரட்சி அதன் அடிப்படையாக விளங்கிய நீராவி எந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதிலேயே தங்கியிருந்தது. நீராவி எந்திரங்களால் இயங்கிய தொடர்வண்டிச் சேவை, நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் பன்னாட்டு வணிகம் பல மடங்காகியது. இதனால் நிலக்கரியின் தேவையும் கூடியது. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய நிலக்கரிச் சுரங்கங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆபத்தான வேலை நிலைமைகளில் நீண்ட நேரம் வேலை செய்தனர். சவுத் வேல்சு நிலக்கரிப்புலத்தின் மையப் பகுதியில் காணப்படும் சவுத் வேல்சு பள்ளத்தாக்கில் உள்ள டவர் நிலக்கரிச் சுரங்கமே தொடர்ச்சியாக நீண்டகாலம் இயங்கிய ஆழ் நிலக்கரிச் சுரங்கம் ஆகும். 1805 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சுரங்கம், 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூடப்பட இருந்தது. அதைத் தவிர்ப்பதற்காக, அதன் தொழிலாளர்கள் அதனை விலை கொடுத்து வாங்கினர். எனினும், 200 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வந்த டவர் நிலக்கரிச் சுரங்கம் 2008 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி இறுதியாக மூடப்பட்டது. அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலக்கரி அகழப்பட்டது. வணிக அடிப்படையிலான நிலக்கரி அகழ்வு 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெர்சீனியாவின் மிட்லோத்தியனில் தொடங்கியது. 1880களில் நிலக்கரியை வெட்டியெடுக்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்னர், அலவாங்கு, மண்வெட்டி போன்ற கருவிகளே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குப் பயன்பட்டன. 1912 ஆம் ஆண்டில் மேற்பரப்பு அகழ்வு வேலைகளை, அதற்கெனவே உருவாக்கப்பட்ட நீராவியினால் இயங்கிய இயந்திரங்கள் செய்தன. மேற்பரப்பில் இருந்து நிலக்கரிப் படுகையின் ஆழம், அதன் தரம், வேறு நிலவியல், சூழலியல் காரணிகள் என்பவற்றைப் பொறுத்தே நிலக்கரி அகழ்வதற்கான சிக்கனமான முறை எது என்பதைத் தீர்மானிக்க முடியும். அகழ்வு மேற்பரப்பிலா அல்லது நிலத்துக்குக் கீழா என்பதைப் பொறுத்து அகழ்வு வழிமுறைகள் வேறுபடுகின்றன. மேற்பரப்பு அல்லது நிலத்தின் கீழிருந்து அகழப்படும் நிலக்கரிகளில் பெரும்பாலானவற்றைக் கழுவவேண்டியிருக்கிறது. நிலக்கரி அகழ்தலின் தொழில்நுட்பச் சாத்தியப்பாடு, பொருளாதாரச் சாத்தியப்பாடு என்பன பல்வேறு காரணிகளைக் கவனத்தில் எடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிடைக்கக்கூடிய தன்மை; தேவையான அளவு, தரம், கொண்டுசெல்லவேண்டிய இடம் என்பவை தொடர்பான வாங்குபவர்களின் தேவைகள்; தேவைப்படும் முதலீடு என்பனவாகும். நிலக்கரி அகழ்தலில், மேற்பரப்பு அகழ்வு, ஆழமான நிலக்கீழ் அகழ்வு என்பனவே அடிப்படையான இரண்டு முறைகள் ஆகும். நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர். நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் மேற்பரப்பு அகழ்வு முறை பயன்படுகிறது. படுகைகளின் ஆழம் 50 - 100 மீட்டர்களாக (180 - 300 அடிகள்) இருக்கும்போது நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது எனினும், சில வேளைகளில் மேற்பரப்பு அகழ்வுத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சில 60 மீட்டர் (200 அடிகள்) ஆழத்துக்கும் கீழுள்ள படுகைகளில் திறந்த குழி முறையைப் பயன்படுத்துகின்றனர். நிலக்கரிப் படிவின் தடிப்பு 20-30 மீட்டர் (60-90 அடிகள்) அளவே இருப்பது இதற்குக் காரணம் ஆகும். 100 மீட்டருக்கும் கூடிய ஆழத்தில் இருக்கும் படுகைகளில் நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது. எனினும் சில விதி விலக்குகள் இல்லாமல் இல்லை. கேடயச் சுரப்பி கேடயச் சுரப்பி அல்லது தைராய்டுச் சுரப்பி (Thyroid gland) என்பது உடலில் உள்ள மிகப்பெரிய அகச்சுரப்பிகளுள் ஒன்று. இது மனிதன் உள்ளிட்ட அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படும் முக்கியச் சுரப்பி ஆகும். கேடயச்சுரப்பியின் உயிரணுக்கள் ஆரம்பகால அயோடைடு செறிவாக்கும் செரிமானமண்டலச் உயிரணுக்களிலிருந்து பரிணமித்திருக்கின்றன. ஆதிகால உயிரினம் கடலில் வாழ்ந்ததால் அவைகளுக்கு அயோடைடைச் செறிவுபடுத்தி வைக்கும் உயிரணுக்கள் தேவைப்பட்டிருக்கின்றது. இந்த அயோடைடு ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகச் செயல்பட்டிருக்கிறது. பின்னாளில் உயிர்கள் கடல்நீரை விட்டு நன்னீருக்கு வந்தபோது அவற்றுக்கு அயோடைடு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யத் தங்கள் ஆதிகால அயோடைடு செறிவாக்கும் செல்களைப் பயன்படுத்தின. அடுத்ததாக தைராக்சின் இயக்குநீரை வெப்பஉருவாக்குதலுக்கும் பயன்படுத்த துவங்கின. இச்சுரப்பி இரண்டு கதுப்புகளைக் கொண்டது. இக்கதுப்புகள் மூச்சுக்குழலின் மேல் பகுதியில் இரு பக்கங்களிலும் உள்ளன. இக்கதுப்புகள் குறுகிய இஸ்துமஸ்(isthmus) எனும் தைராய்டு திசுவினால் இணைக்கப்படுகின்றது. இ‌து கேடயக் குருத்தெலும்புக்கு கீழே மோதிரவுருக் குருத்தெலும்பின் மட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எடை 20 கிராம் இவ்வுறுப்பு அதிகளவு இரத்தத் தந்துகிகளைக் (குருதி நுண்குழாய்களைக்) கொண்டுள்ளதால் வெட்டுத் தோற்றத்தில் அருகில் உள்ள பிற இழையங்களை விட மிகச் சிவப்பாய் காணப்படும். இதனுள் பல கோள வடிவ நுண்குமிழ் (Follicle) அமைப்புக்கள் உண்டு. இவற்றின் சுவரில் கூம்பு வடிவ உயிரணுக்களுண்டு. நுண்குமிழ்களின் நடுவில் ஓர் இடைவெளி உண்டு. அவ்விடம் தைரோகுளோபுலின் எனும் (Thyroglobulin) புரோட்டீனால் நிரம்பியிருக்கும். இப்பகுதி அதிக அளவில் தைராயிடு இயக்குநீரைத் தேக்கிவைக்கக் கூடியது. தைராக்சின் (T), நான்கு அயோடோ தைரோனைன் (T) மற்றும் கால்சிடோனின் ஆகிய இயக்குநீர்கள் கேடயச் சுரப்பியால் சுரக்கப்படுகின்றன. தைராக்சின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதுடன், உடலின் பிற தொகுதிகளின் வளர்ச்சியையும், செயற்பாட்டு வீதத்தையும் பாதிக்கின்றது. (T), (T) ஆகிய இரு வளரூக்கிகளிலும் அயடீன் முக்கிய கூறாக உள்ளது. கால்சிடோனின் உடலில் கால்சியச் சமநிலையைப் பேண உதவுகின்றது. மத்துவர் மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் ("Madhvacharya", 1238 – 1317) இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார். மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகா மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8வது வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரக்ஞர். மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார். மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் "மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்" என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது. ருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார். துவைதம் என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவ கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை: இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் "ஸ்வகத பேதம்" என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை "விஜாதீய பேதம்" என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை. மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது. மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய "மத்வவிஜயம்" என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது. ஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது. அவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை. ‘விஸ்வகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’! பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால் அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது. துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது. ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில் ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வவுனியா நகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில் 12 மைல் தூரம் சென்று பன்றிக்கெய்தகுளத்தில் இறங்கி சேமமடு செல்லும் சிறுசாலையில் சுமார் நான்கு மைல்கள் சென்றால் இக்கோயிலை அடையலாம். 1958-ம் ஆண்டிலே ஏற்பட்ட இனக்கலவரத்திலே வடமத்திய மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வளமான வணிக நிலையங்கள் நெருப்புக்கு இரையாக்கப்பட, அங்கிருந்து இடம் பெயர்ந்த பருத்தித்துறை, தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பலரையும், காடாக இருந்த ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அண்மைக்கிராமங்களில் வாழ்ந்த பலரையும் சேர்த்து பண்டிதமணி திரு சி.சின்னையா ஆசிரியர் அவர்களின் செயல் திட்டத்திலே, இங்கு குடிசைகள் அமைத்து, ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் ஆதிகாலப் பெயரையே சூட்டி, இடிபாடுகளாக இருந்த கந்தசுவாமி ஆலயத்தின் இடிபாடுகளை நீக்கி புதிதாகக்கட்டி, 1962-ம் ஆண்டு கும்பாபிசேகம் செய்து பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் அலங்கார உற்சவங்கள் பத்து நாட்களும் விமரிசையாக நடைபெற்றும், அதனைத் தொடர்ந்து வரும் கந்தர்சஷ்டி விரதத்தில் கந்தபுராணம் படித்துப் பயன் விரித்துரைப்பதும், சூரன் போரை மிகவும் விமரிசையாக நடத்தியும் தொடர்ந்து கார்த்திகைப்பரணி, பெருங்கதை, மார்கழித் திருவெம்பாவைக் காலங்களில் திருவாதவூரர் அடிகள் புராணம் படித்து பயன் விரித்துரைப்பதும், தொடர்ந்து வரும் எல்லா விசேஷ நாட்களிலும் விசேஷ பூசைகளும், நித்திய பூசையாக இருகாலப்பூசைகளும் நடைபெற்று வந்தது. இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது பரிவார தெய்வங்களாக வினாயகர், பைரவர் போன்ற தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர் .இத்தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் உண்டு. உற்சவ மூர்த்தியாக வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணியப்பெருமான் உள்ளார். காமா கதிர் வெடிப்பு காமா கதிர் வெடிப்பு "(Gamma-ray burst)" என்பது உச்சகட்ட ஆற்றல் உள்ள விண்வெளி வெடிப்பின் போது சிதறும் காமா கதிர்கள் ஆகும். தொலை தூர விண்மீன் திரள்களில் நிகழும் இது நமது பேரண்டத்தில் நடக்க கூடிய அதிக ஒளிர்வுள்ள நிகழ்வு ஆகும். பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியிலிருந்து பில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே நிகழ்கின்றன. காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம். They are very rare (a few per galaxy per million years). பால்வெளி மண்டலத்தில் இத்தகைய வெடிப்பு நடக்குமாயின் அது புவியை அழித்து விடக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. No such case is known. ஐக்கிய அமெரிக்க நாடுகள் விண்வெளியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு வெடிப்புச் சோதனைகளைக் கண்டறிவதற்கென நிறுவியிருந்த காமா கதிர் உணர்வான்கள் 02.07.1967 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட நேரம் 14:19 அளவில் இனங்கண்டறிய இயலா அணு ஆயுதங்களில் இருந்து வந்த காமா கதிர்களைக் கண்டறிந்தன. இது குறித்து விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. கடைசியில் இக் கதிர்கள் பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இக்கண்டறிதல் வெளியிடப்பட்டது. நீராவிக் கப்பல் நீராவிக் கப்பல் என்பது, செலுத்துவதற்கான முதன்மை முறையாக நீராவி ஆற்றலைப் பயன்படுத்தும் கப்பல் ஆகும். இங்கே நீராவி ஆற்றல், சுழலுந்திகளை அல்லது துடுப்புச்சில்லுகளை இயக்குவதன் மூலம் கப்பல் செலுத்தப்படுகிறது. நீராவிக் கப்பல் என்பது பொதுவாகப் பெருங் கடல்களில் செல்லும் பெரிய கப்பல்களையே குறிக்கும். ஏரிகளிலும், ஆறுகளிலும் செல்லும் சிறிய படகுகள் நீராவிப் படகுகள் என்று அழைக்கப்படுகின்றன. கப்பல்களில் பயன்படுத்துவதற்கான நீராவி எந்திரங்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாயின. எனினும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இவை பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. ஐக்கிய அமெரிக்காவின் ஆறுகளில் இவற்றின் பயன்பாடு வேகமாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடலில் செல்லும் வணிகக் கப்பல்கள், பாய்க் கப்பல்களில் இருந்து, நீராவிக் கப்பல்களாகப் படிப்படியாக மாற்றம் பெற்றன. அக் காலத்தில் மிகவும் பெரிய நீராவிக் கப்பல்களில் கூடத் துணைப் பாய்கள் இருந்தன. அத்திலாந்திக் கடலில் போகுவரத்துச் செய்த பிரெஞ்சுக் கப்பலான "லா டூரீன்" என்பதே பாய்கள் பொருத்தப்பட்டு இருந்த இறுதி நீராவிக் கப்பலாக இருக்கலாம். எனினும் இக் கப்பல் ஒருபோதும் பாய்களைப் பயன்படுத்தியது இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரை நூற்றாண்டுக் காலத்தில் நீராவிக் கப்பல்களுக்குப் பதிலாக டீசலினால் இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1860 ஆம் ஆண்டுகளில் இருந்து, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வளிமச் சுழலிகள் அறிமுகமாகும் வரை பெரும்பாலான போர்க் கப்பல்களில் நீராவி எந்திரங்களே பயன்பட்டன. இன்று, அணுவாற்றலால் இயங்கும் போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நீராவியால் இயங்கும் சுழலிகளைப் பயன்படுத்துகின்ற போதும், அவற்றை நீராவிக் கப்பல்கள் என அழைப்பதில்லை. 1870களிலும், 1880களிலும் திருகாணிமுறையில் இயங்கிய நீராவிக் கப்பல்கள், அவற்றின் பெயருடன் "SS" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இது "Screw Steamer" அல்லது "Steam Ship" என்பதன் சுருக்கம் ஆகும். பின்னர் அறிமுகமான துடுப்புச்சில்லுகளைக் கொண்ட நீராவிக் கப்பல்கள் "Paddle Steamers" என்பதன் சுருக்கமான "PS" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன. இவ்வாறே நீராவிச் சுழலிகளால் இயங்கிய கப்பல்கள் (Turbine Ship) "TS" என்னும் முன்னொட்டைப் பயன்படுத்தின. தற்காலத்தில் டீசல் மோட்டார்களினால் இயங்கும் கப்பல்களின் (Motor-driven Vessels) பெயர்களுடன் "MV" என்னும் முன்னொடுப் பயன்படுகிறது. துடுப்பு நீராவிக் கப்பல் துடுப்பு நீராவிக் கப்பல் ("paddle steamer") என்பது, உந்துவதற்காக துடுப்புச் சில்லுகளைப் பயன்படுத்தும் நீராவிக் கப்பல் ஆகும். உந்துகோல், துடுப்பு, பாய் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பின்னர் துடுப்புச்சில்லு உருவானது. தொடக்ககாலத் துடுப்புச்சில்லுகள் விலங்கு அல்லது மனித ஆற்றலைப் பயன்படுத்தி இயக்கப்பட்டன. தற்காலத் துடுப்புச்சில்லுகள் டீசல் எந்திரங்களினால் இயக்கப்படுகின்றன. சுற்றுலாத் தேவைகளுக்கான படகுகளையும், பிற கேளிக்கைகளுக்கான சிறிய படகுகளையும் தவிர தற்காலத்தில் துடுப்புச் சில்லுகள் பயன்படுவதில்லை. தற்காலத்தில் கப்பல்களில், சிறப்பாக திறந்த கடலில் செல்லும் கப்பல்களில், துடுப்புந்திகளுக்குப் பதிலாக, கூடுதல் செயற்றிறன் கொண்ட திருகுமுறை உந்திகளும், கடல்சார்ந்த பிற உந்தி வகைகளும் பயன்படுகின்றன. துடுப்புச்சில்லுகள், எஃகுச் சட்டக அமைப்பிலான பெரிய சில்லு ஆகும். இதன் வெளிப்பக்க விளிம்பில் எஃகிலாலான பல துடுப்பு அலகுகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் கடலில் செல்லும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் துடுப்புச்சில்லின் கீழ் காற்பகுதி கடலுக்குள் அமிழ்ந்திருக்கும். சில்லைச் சுற்றுவதன் மூலம் உருவாகும் உந்துவிசை கப்பலை முன்புறம் அல்லது பின்புறமாகத் தள்ளுகிறது. தற்காலச் சில்லுகளில் துடுப்பு அலகுகள் நீருக்குள் இருக்கும் போது ஏறத்தாழ நிலைக்குத்தாக இருக்குமாறு வடிவமைக்கப்படுகின்றன. இது செயற்றிறனைக் கூட்டுகிறது. நீர் தெறிப்பதைத் தவிர்ப்பதற்காகத் துடுப்புச்சில்லின் மேற்பகுதி மூடப்பட்டிருப்பது வழக்கம். நீராவிக் கப்பலில் துடுப்புச்சில்லுகளைப் பொருத்தும் அடிப்படையான முறைகள் இரண்டு. ஒற்றைத் துடுப்புச்சில்லை கப்பலின் பின்பகுதியில் பொருத்துவது ஒரு வகை. இரண்டு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சில்லுகளைப் பொருத்துவது இரண்டாவது முறை. பக்கவாட்டில் இரண்டு சில்லுகள் கூடுதலாக இருப்பதனால், இரண்டாவது வகைக் கப்பல்கள் அகலம் கூடியவை. பக்கச்சில்லுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்லவை. அத்துடன், இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையிலும் இயங்க முடியும். இது கப்பல் விரைவாகத் திரும்புவதற்கு உதவுகிறது. தமிழர் மதம் (நூல்) தமிழர் மதம் எனும் இந்நூலானது 1972 ஆம் ஆண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே பழந்தமிழர் மதம், பின்பற்றிய கொள்கைகள், வணங்கிய தெய்வங்கள் என பலவற்றை இலக்கிய சான்றுகளுடன் தருகிறார் பாவாணர். இந்நூலின் முன்னுரையிலே மதம், சமயம் ஆகியன தென்சொல்லே (தமிழ் வேர் கொண்ட சொல்) என நிறுவும் தேவநேயர், மதம் தோன்றிய வகை, மூவகை மதம், குமரிநாட்டு மதநிலை ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறார். பின்னர், நூலிலே மிக விரிவாக குமரி நிலையியல், இடைநிலையியல், நிகழ்நிலையியல், வருநிலையியல், முடிபுரையியல் எனும் ஐந்து தலைப்புக்களில் பண்டைக்கால வழக்கங்கள் குன்றி, வேறு பல செல்வாக்குகள் விரவினமையையும், நிகழ்காலத்தில் தமிழர் பண்பாடு பேண வேண்டிய கட்டாயத்தையும் விளக்குகின்றார். பொன்முகம் பொன்முகம் (பி: 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். பொற்கொடி எனும் புனைப்பெயராலும் அறியப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞராவார். "தமிழ் நேசன்" துணை ஆசிரியராகவும், "உதயம்" இதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் தீவிரச் சமுதாயச் சிந்தனையாளர். அரசியல், சட்டம், தமிழ்க்கல்வி குறித்து நிறைய எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார். 1963 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஆதி குமணன் ஆதி குமணன் (பிறப்பு: பிப்ரவரி 9 1950, இறப்பு: மார்ச்சு 28 2005) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 1970 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். அதிகமாக புதுக்கவிதைகளையே இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழ் மலரில் அவர் பணியாற்றத் தொடங்கிய 1970-ஆம் ஆண்டுகளில்தான் புதுக்கவிதைத் துறை மலேசியாவில் வேர் விடத் தொடங்கியது. அந்த வேருக்கு நீர் வார்த்த பெருமைக்குரியவர் ஆதி குமணன் அவர்களே. புதன்கிழமை தோறும் "புதன் மலர்" என்ற சிறப்புப் பக்கத்தை ஒதுக்கிஇ அதில் புதுக்கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். "வானம்பாடி" (1977) "தமிழ் ஓசை" ரோஜர் டொல்சார்ட் ரோஜர் டொல்சார்ட் ("Roger Tolchard", பிறப்பு: சூன் 15 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 77 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சார்லி டவுன்சென்ட் சார்லி டவுன்சென்ட் ("Charlie Townsend", பிறப்பு: நவம்பர் 7 1876, இறப்பு: அக்டோபர் 4 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 199 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரகாம் தோர்ப் கிரஹாம் தோப் ("Graham Thorpe", பிறப்பு: ஆகஸ்ட் 1 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 100 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 354 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 2005 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இயன் தாம்சன் இயன் தாம்சன் ("Ian Thomson ", பிறப்பு: சனவரி 23 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 425 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 -65 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் தாம்சன் (துடுப்பாட்டக்காரர்) ஜார்ஜ் தாம்சன் ("George Thompson", பிறப்பு: அக்டோபர் 27 1877, இறப்பு: மார்ச்சு 3 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 352 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 -10 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிரேக் தோமஸ் கிரேக் தோமஸ் ("Greg Thomas", பிறப்பு: ஆகத்து 12 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 -87 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் டவுன்சென்ட் டேவிட் டவுன்சென்ட் ("David Townsend )", பிறப்பு: ஏப்ரல் 20 1912, இறப்பு: சனவரி 27 1997), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 இல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மின்மினி (சிற்றிதழ்) தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மின்மினி இதழும் ஒன்று. சென்னையில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக “கன்னிக்கோவில் இராஜா” என்பவர் இருந்து வருகிறார். ஹைக்கூ எனப்படும் குறுங்கவிதைகளை முதன்மை உள்ளடக்கமாகக் கொண்டு இந்த இதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வருகிறது. லெஸ்லி டவுன்சென்ட் லெஸ்லி டவுன்சென்ட் ("Leslie Townsend", பிறப்பு: சூன் 8 1903, இறப்பு: பெப்ரவரி 17 1993), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 493 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 -34 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மொரிஸ் டெம்லெட் மொரிஸ் டெம்லெட் ("Maurice Tremlett", பிறப்பு: சூலை 5 1923, இறப்பு: சூலை 30 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 389 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்கஸ் ட்ரஸ்கொதிக் மார்கஸ் ட்ரஸ்கொதிக் ("Marcus Trescothick", பிறப்பு: திசம்பர் 25 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 123 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 279 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 339 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2006 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மொரோக்கோவின் ஆறாம் முகம்மது ஆறாம் முகம்மது ("Mohammed VI", (, பிறப்பு: ஆகத்து 21, 1963) என்பவர் மொரோக்கோ நாட்டின் தற்போதைய மன்னர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு சூலையில் மொரோக்கோ மன்னராகப் பதவியேற்றார். முகம்மது சட்டத்துறையில் இளங்கலைப் பட்டத்தை மொரோக்கோவின் அக்தால் பல்கலைக்கழகத்தில் 1985 இல் பெற்றார். அதே ஆண்டு நவம்பர் 26 இல் மொரோக்கோ இராணுவத்தில் சேர்க்கப்பட்டு கேர்ணல் மேஜராகப் பதவியேற்றார். 1994 ஆம் ஆண்டு வரை இவர் இராணுவத்தில் பணியாற்றினார். 1993 இல் பிரான்சின் நைசு சோபியா ஆண்டிபாலிசு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். பிரேம்சந்த் தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற முன்சி பிரேம்சந்த் ("Premchand", சூலை 31, 1880 - அக்டோபர் 8, 1936) ஒரு குறிப்பிடத்தக்க இந்தி மற்றும் உருது மொழி எழுத்தாளார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி என்கிற காசிக்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். 1919 ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருமுறை திருமணம் செய்து கொண்ட இவர் 1895 ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், 1905 ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். 1899 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார். 1903 ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் இவருடைய முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக வெளிவந்தது. இவரது முதல் சிறுகதை “துனியாகா அன்மோல் ரத்தன்” 1907 ஆம் ஆண்டில் வெளியானது. “படேகர் கி பேட்டி” என்னும் கதை “பிரேம்சந்த்” எனும் புனைப்பெயருடன் வெளியானது. இவரது முதல் கதைத் தொகுதி “ஸோசி - வாடன்” 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1922 ஆம் ஆண்டில் “மரியாதா” என்னும் இதழின் செயல் ஆசிரியராகவும், 1926 ஆம் ஆண்டில் “மாதுரி” எனும் இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் “ஹன்ஸ்” எனும் இதழைத் தொடங்கி வெளியிட்டார். 1934 ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதற்கான உரையாடல்களை இவரே எழுதித் தந்தார். அதன் பிறகு “மஸ்தூர்” எனும் திரைப்படத்திற்கும் உரையாடல் எழுதிக் கொடுத்தார். “சேவாசதன்”, “பிரேம் பக்சி”, “ரங்பூமி”, “காயகல்ப்”, “சப்த்சுமன்”, “வர்தான்”, “நிர்மலா”, “பிரதிக்சா”, “காபான்”, “கோடன்”, “கர்மபூமி” எனும் நாவல்களை எழுதியிருக்கிறார். இது தவிர முன்னூறுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். இவரது “ரங்பூமி” நாவல் வெளியானதும் மற்றொரு வங்கமொழி நாவலாசிரியரான சரத் சந்திரர் இவரை “உபன்யாஸ் சாம்ராட்” என்று வாழ்த்தினார். இவரது ஐம்பத்தாறு வயதில் காசி நகரில் 08-10-1936 ஆம் நாளில் மரணமடைந்தார். மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 24 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் மலேசிய அரசாங்க உயர்ப் பதவிகளை வகிப்பவர்கள்: பெரும்பாலான இந்திய வேட்பாளர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் போட்டியிட்டனர். மலேசியாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு மலாயர், சீனர், இந்தியர்(தமிழர்) ஆகிய மூன்று இனத்தவர்களின் வாக்குகள் அவசியம் தேவை. மலேசியச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் பலவற்றின் வெற்றித் தோல்விகளை மலேசிய இந்திய வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர். மலேசிய நாடாளுமன்றத்தில் 13 இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் பகுதியில் தெரிந்து கொள்ளலாம். மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய விவரங்கள். பொன் நாவலன் பொன் நாவலன் (பிறப்பு: 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் சிறு வயது முதலே நாடோடி பாடல்களிலும் கிராமியப்பாடல்களிலும் நாட்டம் கொண்டமையினால் தாமும் அதுபோல் பாடல்கள் எழுதவேண்டும் என்ற உந்துதலில் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியிடம் கவிதை பயின்றார், பின்பு 'நாகப்பன்' என்ற தனது பெயரை 'பொன் நாவலன்' என்று மாற்றிக் கொண்டார் 1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். மறைந்த உவமைக்கவிஞர் சுரதாவின் தீவிரப் பற்றாளர். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சி. வடிவேலு சி. வடிவேலு (பிறப்பு: பிப்ரவரி 23 1929, இறப்பு: ஏப்ரல் 23 1992) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கெடா அலோர்ஸ்டார் பட்டணத்தில் பிறந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வளர்ந்தார். இளமையில் ஒரு சிறந்த விளையாட்டாளராக திகழ்ந்ததுடன் தமிழாசிரியர் பணியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்பு நெகிரி செம்பிலான் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி நான்கு ஆண்டுகள் (1983-1986) வரை தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1949 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதை கட்டுரை சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசிய மண்ணின் மணத்தையும் வளத்தையும் தொட்டு இலக்கியம் வளரத் தொடங்கிய காலத்திலே எழுதத் தொடங்கியவர்களில் ஒருவரான இவர் மலேசியாவில் தமிழ்ச் சிறுகதையைப் பற்றிப் பேசப்படும்போது, முதலில் நினைவுக்கு வரவேண்டியவராக உள்ளார் ஜெய்சங்கர் பிரசாத் ஜெய்சங்கர் பிரசாத் ("Jaishankar Prasad"; ஜனவரி 30, 1889 - நவம்பர் 15, 1937) என்பவர் இந்தி மொழி இலக்கியத்திலும், நாடகங்களிலும் புகழ் பெற்றவர். உத்தரப் பிரதேசம் மாநிலம் காசி நகரில் 30-01-1889 ஆம் நாளில் பிறந்த இவர் ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். அதன் பிறகு வீட்டிலிருந்தபடியே சமற்கிருதம், உருது, பெர்சியன், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இது தவிர தத்துவம், மதம், வரலாறு, புதைபொருள் ஆய்வு குறித்த நூல்களையும் விரும்பிப் படித்து அதிலும் தன்னை வளப்படுத்திக் கொண்டார். இவர் மூன்று திருமணம் செய்து கொண்டார். “பாரத் தேந்து” எனும் இதழில் “கலாதர்” எனும் புனைப்பெயரில் இவரது முதல் கவிதை வெளியானது. “ஹான்ஸ்”, “ஜகரான்” எனும் இதழ்களில் இவர் நிறைய கவிதைகளை எழுதி வந்தார். அதன் பிறகு 1909 ஆம் ஆண்டில் “இந்து” எனும் மாத இதழைத் தொடங்கினார். இவரது இயற்பெயரான “ஜெய்சங்கர்” என்பதை விட இவர் இலக்கியத்திற்காக வைத்துக் கொண்ட “பிரசாத்” என்கிற புனைப்பெயர் மிகவும் புகழ் பெற்றதால் இரண்டு பெயரையும் இணைத்து வைத்துக் கொண்டார். “பிரேம் பாதிக்”, “கானன்குஸீம்”, “சித்ராதர்”, “ஜர்னா”, “அன்சு”, “லெகர்”, “காமாயினி” எனும் கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டார். இவர் பதின்மூன்று இலக்கியத்தரம் மிகுந்த நாடகங்கள், எட்டு வரலாறுகள், மூன்று புராணங்கள், உணர்வுப்பூர்வமான இரண்டு நாடகங்கள் போன்றவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். “கன்கல்”, “டிட்லி” என்னும் இரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டார். “ஐராவதி” எனும் நாவல் முடிவடையாமல் இடையில் நின்று போய் விட்டது. கவிதை மற்றும் உரைநடை கலந்த “ஊர்வசி மற்றும் பப்ருவாகன்” என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார். இது தவிர கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். இவர் உயர்வான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை, கட்டுரை, கதை, நாவல்கள், நாடகங்கள் என இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவரது “காமாயினி” எனும் காவியத்திற்கு மங்களப் பிரசாத் விருது வழங்கப்பட்டது. வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையும், மூத்த சகோதரரும் திடீரென மரணமடைந்ததால் வணிகத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. இதனால் இலக்கியவாதியான இவர் பின்னர் வணிகராக மாறிவிட்டார். உத்தரப்பிரதேசத்தின் காசி நகரில் இவருடைய நாற்பத்தெட்டாம் வயதில் 15-11-1937 ஆம் நாளில் மரணமடைந்தார். அல்பட் ட்ரொட் அல்பட் ட்ரொட் ("Albert Trott", பிறப்பு: பெப்ரவரி 6 1873, இறப்பு: சூலை 30 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 375 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1895 - 1899 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரெட் ட்ரூமன் ஃபிரெட் ட்ரூமன் ("Fred Trueman", பிறப்பு: பெப்ரவரி 6 1931, இறப்பு: சூலை 1 2006 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 603 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1965 ல், இங்கிலாந்து நாட்டு அணியின் உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுல் ஒருவராகக் கருதப்படும் ஃபிரெட் ட்ரூமன் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 307 இலக்குகளை வீழ்த்தி அவருடைய காலத்தின் அருஞ்செயல் புரிந்தவரானார். சிறப்பான பங்களிப்பாக ஒரு ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் கொடுத்து 8 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். அலெக்ஸ் டியூடர் அலெக்ஸ் டியூடர் ("Alex Tudor", பிறப்பு: அக்டோபர் 23 1977) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 129 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2002 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நெவில் டஃப்நெல் நெவில் டஃப்நெல் ("Neville Tufnell", பிறப்பு: சூன் 13 1887, இறப்பு: ஆகத்து 3 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1910 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபில் டஃப்நெல் ஃபில் டஃப்நெல் ("Phil Tufnell", பிறப்பு: ஏப்ரல் 29 1966 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 99 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2001 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மொரிஸ் டர்ன்புல் மொரிஸ் டர்ன்புல் ("Maurice Turnbull", பிறப்பு: மார்ச்சு 16 1906, இறப்பு: ஆகத்து 5 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 388 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1936 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆண்டிமடம் ஆண்டிமடம்(Andimadam) இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். இது 16.09.2016 ஆம் ஆண்டிலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமென்ட் நகரம் என அழைக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.இது அரியலூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தெற்கே 242 கி.மீ தொலைவில் சென்னை அமைந்துள்ளது.வடகிழக்கில் 111 கி.மீ தொலைவில் திருச்சியும், வடமேற்கில் 23கி.மீ தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம்).இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது.சோழமன்னர்களுள் ஒருவரால் கட்டப்பட்டது.இக்கோவிலைச்சுற்றிT ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.இப்பொழுது இங்கு திருச்சபை கூட்டங்கள் திருத்தந்தை சூசைமாணிக்கம் என்பவரால் நடத்தப்படுகிறது. உவெசுலி கல்லூரி, கொழும்பு உவெசுலி கல்லூரி ("Wesley College", வெஸ்லி கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் பள்ளி ஆகும். இது 1874, மார்ச் 2 இல் நிறுவப்பட்டது. 1874 மார்ச் 2 ஆம் நாள் மெதடிஸ்தத் திருச்சபையின் நிறுவனர் ஜோன் உவெசுலியின் நினைவாக அவரது நினைவு நாள் அன்று கொழும்பின் நடுப்பகுதியில் புறக்கோட்டையில் டாம் வீதியில் கொழும்பு மெதடிஸ்த திருச்சபையினரால் உவெசுலி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கொழும்பில் பொரல்லைக்கு இடமாற்றப்பட்டது. இக்கல்லூரியின் முதல் அதிபராக வண. சாமுவேல் வில்க்கின் பணியாற்றினார். இப்பாடசாலை முக்கியமாக சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. கிழக்கு ராண்ட் கிழக்கு ராண்ட் (East Rand) மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் செயற்திட்டங்களுக்காக இணைந்துள்ள விட்வாடர்சுராண்டின் கிழக்கு நகரப் பகுதியாகும். 1886ஆம் ஆண்டு தங்கம் பொதிந்த கடற்பாறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதியாகும். இங்கு துவங்கிய தங்க வேட்டையே ஜோகானஸ்பேர்க் குடியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது. நிறவெறிக் கொள்கை முடிவிற்கு வரும் தருவாயில் இங்குள்ள கறுப்பின நகரப்பகுதிகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இங்காதா விடுதலை கட்சித் தொண்டர்களுக்கும் பலத்த கைகலப்புகள் ஏற்பட்டன. . இந்த வலயம் மேற்கில் கெர்மிஸ்டனிலிருந்து கிழக்கே ஸ்பிரிங்ஸ் வரையும் தெற்கே நிகெல் வரையும் பரவியுள்ளது. இப்பகுதியில் போக்ஸ்பர்க், பெனோனி, பிராக்பன், கெம்ப்டன் பார்க், ஈடென்வேல், பெட்பார்வியூ ஆகிய நகரங்கள் உள்ளடங்கி உள்ளன. தென்னாபிரிக்காவின் நகராட்சிகளின் சீர்திருத்தத்தின்போது கிழக்கு ராண்டின் உள்ளூராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு ஒரே நகராட்சியாக "அமைதியின் இடம்" எனப் பொருள்பட "எகுர்யுலேனி பெருநகர மாநகராட்சி" (Ekurhuleni Metropolitan Municipality) எனப் பெயரிடப்பட்டது. மேற்கு ராண்ட் போலவே இதுவும் தனி மாநகராட்சியாக இருந்தபோதும் மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கு ராண்டின் தொலைபேசி அழைப்புக் குறியீடு ஜோகானஸ்பேர்கின் 011 ஆக உள்ளது. கிழக்கு ராண்ட் பகுதியில் வசிப்போர் ஜோனஸ்பேர்கில் பணியாற்றுவதும் அதேபோல ஜோகானஸ்பேர்க் மக்கள் இங்கு பணியாற்றுவதும் வழமையானதே. டிக் டைல்டெஸ்லே டிக் டைல்டெஸ்லே ("Dick Tyldesley", பிறப்பு: மார்ச்சு 11 1897, இறப்பு: செப்டம்பர் 17 1943), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 397 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1930 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எர்னஸ்ட் டில்டெஸ்லி எர்னஸ்ட் டில்டெஸ்லி ("Ernest Tyldesley", பிறப்பு: பிப்ரவரி 5 1889, இறப்பு: மே 5 1962), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 648 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1929 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜொன்னீ டெல்டெஸ்லே ஜொன்னீ டெல்டெஸ்லே ("Johnny Tyldesley", பிறப்பு: நவம்பர் 22 1873, இறப்பு: நவம்பர் 27 1930), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 608 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 - 1909 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எட்வர்ட் டைல்கோட் எட்வர்ட் டைல்கோட் ("Edward Tylecote", பிறப்பு: சூன் 23 1849, இறப்பு: மார்ச்சு 15 1938), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1886 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டெட் டைலர் டெட் டைலர் ("Ted Tyler", பிறப்பு: அக்டோபர் 13 1864, இறப்பு: சனவரி 25 1917 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 185 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மலை மலை என்பது ஒரு குறித்த நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நிலவடிவம் ஆகும். இதற்கு ஒரு உச்சி இருக்கும். மலை, குன்று ஆகிய சொற்கள் சில வேளைகளில் ஒன்றுக்கு ஒன்று மாற்றீடாகப் பயன்பட்டாலும், மலை, குன்றைவிடக் குறைவான உயரம் உள்ளதாகவும், கூடிய சரிவு கொண்டதாகவும் இருக்கும். மலை தொடர்பான கல்வித்துறை மலையியல் எனப்படுகிறது. மலை என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. உயரம், கனவளவு, புறவடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என்பன மலை என்பதை வரையறுப்பதற்கான அடிப்படைகளாகப் கொள்ளப்படுகின்றன. "பிரமிப்பூட்டத்தக்கதாக, அல்லது குறித்துச் சொல்லத்தக்க உயரத்துக்கு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழச் சடுதியாக இயற்கையாகவே உயர்ந்திருக்கும் நில மேற்பரப்பு" என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, மலைக்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. ஒரு நிலவடிவம் மலையாகக் கொள்ளப்படுகிறதா என்பது உள்ளூர் மக்கள் அதனை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. கலிபோர்னியாவின் சான்பிரான்சிசுக்கோவில் உள்ள "டேவிட்சன் மலை" 300 மீட்டர் (980 அடி) மட்டுமே உயரம் கொண்டது ஆயினும் அது மலை எனப்படுகிறது. இதுபோலவே ஒக்லகோமாவின் லோட்டனுக்குப் புறத்தேயுள்ள "இசுக்காட் மலை" 251 மீட்டர் (823 அடி) மட்டுமே உயரமானது. யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடல் மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்திருக்கும் பகுதி கீரிமலை என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடலாம். மலை என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணங்கள் புழக்கத்தில் உள்ளன: ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன. உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் அரைப் பகுதியினர் நீருக்காக மலைகளிலேயே தங்கியுள்ளனர். மலைகளை - எரிமலை, மடிப்பு, பகுதி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வகைகளும், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகள் நகர்வதால் உருவாகின்றன. பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகளின் அழுத்தத்தால் வெப்பநிலை உயர்ந்து எரிமலைகள் (Volcanoes) உருவாகின்றன. பூமிக்கு அடியில் 100கிமீ தொலைவில் ஏற்படும் உயரழுத்த வெப்பநிலையானது, அருகிலிருக்கும் பாறைகளை உருக்கி திரவம் போன்றதாக்கிவிடும். திரவநிலையிலுள்ள பாறைக்குழம்பானது, தனது உஷ்னத்தால் மேலெழுந்து பூமியின் மேற்பரப்பை அடைந்துவிடும். மேற்பரப்பை அடைந்த பாறைக்குழம்பானது, அப்படியே படிந்து பெரும் எரிமலைகளாய் உருவாகிவிடும். சப்பானிலுள்ள ஃவூஜி மலை மற்றும் பிலிப்பீன்சிலுள்ள பினாதுபோ சிகரம் ஆகியவை எரிமலைகளின் சான்றுகளாகும். மடிப்பு மலைகளானது (Fold mountains), பூமிக்கு மேலிருக்கும் பாறை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து பாறைகள் மடிவதினால் உருவாகின்றன. பெரும் வெடிப்பிலிருந்து உருவாகிய பூமியின் மேற்பரப்பில், எடை குறைந்து காணப்பட்ட பெரும் பாறைகளானது ஒருகட்டத்தில் அசையா நிலங்களான கண்டங்களை நோக்கி நகர ஆரம்பித்தது. பின்னர் உந்து விசையினால் தள்ளப்பட்ட பாறைகள், பெரும் விசை கொண்டு கண்டங்களுடன் மோதியதால் ஏற்பட்ட செங்குத்தான மடிப்புகளே மடிப்பு மலைகள் எனப்படுகி்ன்றன.. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான ஜீரா மலைத்தொடர், மடிப்பு மலைகளுக்கு சிறந்த உதாரணமாகும். பூமியின் மேலடுக்கிலுள்ள பாறை அடுக்குகள், ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்படும் தவறுகளினால் பகுதி மலைகள் (Block mountains) உருவாகின்றன. ஒரு பாறையின் தவறுதலான நகர்தலால், மற்ற பாறைகள் பாதிக்குமானாலும் மலைகள் உருவாகும். பாறைகள் உராய்வதால் மேல்லெழும்பப்பட்ட பகுதிகள், பகுதி மலைகளாகும். மலைத்தொடரின் இடைப்பட்ட பள்ளமான பகுதிகள், பிளவிடை பள்ளங்கள் என அழைக்கப்படுகின்றன. மேலும் இது சிறிய வடிவிலான பள்ளத்தாக்குகளாகும். கிழக்கு ஆபிரிக்கா, வொஸ்கெஸ், வட அமெரிக்காவின் மேற்கிலுள்ள மலைத்தொடர் ஆகியவை, பகுதி மலைகளின் சான்றுகளாகும். பாறைகளின் அழுத்தத்தால் மெல்லியதான பூமியின் மேலேடுகள் விரிவடையும் போது, பகுதி மலைகள் அடிக்கடி உருவாகும். மலைப்பகுதிகள் பல காரணங்களால் (நீர், காற்று, பனி, நிறை ஈர்ப்பு) மண்ணரிப்புக்கு ஆளாகின்றன, இதனால் மண் படிப்படியாக உயரப்பகுதியில் இருந்து கீழே தள்ளப்படுகின்றன. இதனால் மலைகளின் மேற்பரப்பு குறைக்கிறது. இதனால் பனிச்சரிவு நிகழ்வுகள்,   பிரமிடு போன்ற சிகரங்கள், கத்தி-விளிம்புகள், கின்ன வடிவ வளைந்த ஏரிகள், பீடபூமி மலைகள் போன்றவை  உயர்ந்த பீடபூமியின் அரிப்பிலிருந்து உருவாகின்றன. மலைகள் மீது நிலவும் குளிர்ச்சியான காலநிலை மலைகளில் வாழும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது. இதனால் மலைப்பகுதியில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை இக்கால நிலையில் வாழ ஏதுவாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. மலையின் உயரப்பகுதிகளில் சூழியல் அமைப்பானது கிட்டத்தட்ட நிலையான காலநிலை நிலவுகிறது. இது உயரடுக்கு மண்டலம் எனப்படுகிறது. வறண்ட காலநிலைகளுடன், அதிக மழைப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இப்பகுதியில் மாறுபட்ட காலநிலையை கொண்டதாக உள்ளது. உயரடுக்கு மண்டலங்களில் காணப்படும் சில தாவரங்களும் விலங்குகளும் தனிமைப் படுத்தப்படுகின்றன, ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்கு மேலேயும் கீழேயுள்ள நிலைமைகள் மாறுபட்டு இருப்பதால், அவற்றின் இயக்கங்கள் அல்லது பரவல்கள் கட்டுப்படுத்தப்படும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் வானளாவிய தீவுகளாக அறியப்படுகின்றன. உச்சநிலை மண்டலங்களில் ஒரு பொதுவான முறை நிலவுகிறது. உயரத்தில் உள்ள காலநிலையில், மரங்கள் வளர முடியாது, அங்கு உள்ள வாழ்க்கையானது எப்பொழுதும் பனிசூழ்ந்து துருவப்பகுதி போல இருக்கும். கீழ்பகுதியில் வரவர, குளிர்ச்சியான, வறண்ட கால நிலையைத் தாங்கக்கூடிய ஊசிஇலை மரக்காடுகள் காணப்படுகின்றன. அதற்கும் கீழே, மலைக் காடுகள் காணப்படுகின்றன. இங்கு பூமியின் மிதமான காலநிலை நிலவுவதால், இந்த காடுகளில் உள்ள மரங்கள், பெரும்பாலும் வெப்ப மண்டல, மழைக்காட்டு மரங்களாக இருக்கின்றன. மலைகளின் குளிர்ச்சியான காலநிலையானது, அங்கு வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க ஒரு சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வாழ முனைகின்றன. இதனால், உயிரினங்களின் பரிமாண வளர்ச்சி பாதிக்கப்படுகின்றன. உலர் காலநிலைகளுடன் உள்ள பகுதிகளில், அதிக மழையினாலும் குறைந்த தட்பவெப்ப நிலையினாலும், பல்வேறு இயற்கை சூழல்களை வழங்குகிறது. குறிப்பிட்ட உயர்ந்த மண்டலங்களில் காணப்படும் சில தாவரங்கள் மற்றும் விலங்குகள், ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் சரியான உணவு கிடைக்காமையால், தனிமைப்படுத்தப்பட்டு அழியும் தறுவாயில் உள்ளது. இவ்வாறான சுழற்சி முறைகள் வான் தீவுகள் என்றழைக்கப்படுகின்றன. கடுமையான வானிலை மற்றும் சிறிய அளவிலான நிலப்பரப்பு ஆகியவற்றின் காரணமாக சமவெளிகளைவிட மலைகளில் மனித குடியிருப்புகளு் பொதுவாக குறைவானவை ஆகும். பூவியில் 7% நிலப்பரப்பே 2,500 மீட்டர் (8,200 அடி) க்கும் கூடுதலான உயரத்தில் உள்ளது, இந்த உயரத்திற்கு மேலே 140 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் மேலும் 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்தில் 20-30 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். உயரம் கூடக்கூட வளிமண்டல அழுத்தம் குறைவதால் சுவாசத்திற்கான குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, மேலும் சூரிய கதிர்வீச்சிலிருந்து (UV) குறைவான பாதுகாப்பே இங்கு உள்ளது. ஆக்சிஜன் குறைவதால்,   உலகிலேயே மிக அதிகமான நிரந்தர குடியிருப்புகள் 5,100 மீட்டர் (16,700 அடி) வரையே உள்ளன. நிரந்தரமாக தாங்கமுடியாத மிக அதிகமான உயரம் 5,950 மீட்டர் (19,520 அடி) ஆகும். 8,000 மீட்டர் (26,000 அடி) உயரத்தில், மனித உயிர்களுக்கு போதுமான போதுமான ஆக்ஸிஜன் இல்லை. இதனால்  இது "மரண மண்டலம்" என்று அறியப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் முனை மற்றும் கே2 சிகரம் ஆகியன மரண மண்டலத்தில் உள்ளன. ஆண்டிஸ், மத்திய ஆசிய, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் சுமார் பாதி மலைவாசி மக்கள் வாழ்கின்றனர். பாரம்பரிய மலைசார் சமூகங்கள் விவசாயம் செய்து வாழ்து வந்தனர்,  தாழ் நிலங்களிலைவிட இங்கு விவசாயம் பொய்த்துப்போகும் ஆபத்து கூடுதலாக உள்ளது. மலைகளிலேயே பெரும்பாலும் தாதுக்கள் கிடைப்பதால், தாது அகழும் சுரங்கங்கள் சில சமயம் மலைவாழ் சமுதாய மக்களின் பொருளாதரத்தில் முதன்மை அங்கமாக இருக்கின்றன. மிக அண்மைக்காலமாக, மலைவாழ் சமுதாயத்தினருக்கு சுற்றுலா சார்ந்த  தேசிய பூங்கா அல்லது ஸ்கை ரிசார்ட்ஸ் போன்றவை கவர்ச்சிகரமான வளர்ச்சியைக் அளிக்கின்றன.   மலைவாழ் மக்களில் சுமார் 80% வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான ஆறுகளுக்கான மூலமாக மலை உள்ளது, மலைகளில் பொழியும் பனிப்பொழிவால் படியும் பனியானது சமதள மக்களுக்கு ஆற்று நீரை கோடையில் வழங்கும் ஒரு சேமிப்புக் கருவியாக செயல்படுகிறது.   மனிதகுலத்தில் பாதிக்கும் மேலான மக்கள் தண்ணீருக்கு மலைகளை சார்ந்தது உள்ளனர். தமிழ்த் திணையியலின் படி, மலையும் மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. ஃபிராங்க் டைசன் ஃபிராங்க் டைசன் ("Frank Tyson", பிறப்பு: சூன் 6 1930) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 244 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1959 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். முக்கோண இறக்கை வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை ("Delta wing") என வழங்கப்பெறும். இதன் ஆங்கிலப் பெயரான டெல்டா, முக்கோணவடிவிலிருக்கும் கிரேக்க எழுத்தான டெல்டா (Δ)-விலிருந்து பெறப்பட்டதாகும். 1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், "கொன்றாடு காசு" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார். அக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது. முக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் "வாலற்ற முக்கோணம்", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் "பறக்கும் இறக்கைகள்" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும். ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார். அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது. போருக்குப்பின் லிப்பிச் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் கலிபோர்னியாவிலுள்ள கன்வொயர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கன்வொயர் நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்த சில பொறியாளர்கள் லிப்பிச்சின் இடைமறி வானூர்தி வடிவமைப்பில் கவரப்பட்டனர். அவர்கள் சற்றே பெரிதான சோதனை வடிவமைப்பில், கன்வொயர் எக்சு.எஃப்-92, ஆழ்ந்தனர். இவ்வானூர்தியின் முன்மாதிரி வடிவம், இது வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படவில்லை, மிக அதிக அளவில் பலவித சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு பல நாடுகளிலிருந்த பல வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்களில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே பல வானூர்திகள், முக்கியமாக இடைமறி வானூர்திகள், முக்கோண இறக்கை வடிவமைப்புடன் செய்யப்பட்டன. அதி வேகப் பயன்பாட்டிற்கு வாலற்ற முக்கோண இறக்கை வானூர்திகளே உகந்தவை என குறுகிய காலத்திலேயே நிலைநாட்டப்பட்டது. கன்வொயர் நிறுவனத்தின் எஃப்-102 எனும் போர்வானூர்தியே உலகின் எந்தவொரு வான்படையிலும் பயன்படுத்தப்பட்ட முதல் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியாகும். அதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக அவ்ரோ வல்கன் எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது. அதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் மிக்-21, சுகோய் சு-9/சு-11/சு-15 போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது. அண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு(Canard) பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன்(Eurofighter Typhoon). தூய முக்கோண இறக்கைகளின் சில விரும்பப்படாத பின்விளைவுக் காரணிகளால் அவற்றின் பயன்பாடு குறைந்தது. முக்கியமாக, அதிக தாக்கு கோணங்களில் காற்றோட்டப் பிரிவு (வளைந்த இறக்கைகளிலும் இத்தகைய பிரச்னை உண்டு), குறைவான உயரங்களில் அதிகமான இழுவை ஏற்படுதல். ஆகையால், தூய முக்கோண இறக்கைகள் அதிக உயரங்களில் அதிக வேகத்தில் பறக்கும் இடைமறித்துத் தாக்கும் வானூர்திகளில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. அண்மைக் கால போர் விமானங்களில் முக்கோண இறக்கைகளுடன் கானர்டுகளும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன், டசால்ட் ரஃபேல். எசன் எசன் (Essen, ) செருமனியின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் ரூர் பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். ரூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை (சூன் 30, 2008 படி) ஏறத்தாழ 579,000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் "ஐரோப்பிய பண்பாட்டு தலைநகராக" விளங்கியது. முந்தைய செருமனியின் நிலக்கரி மற்றும் இரும்பு ஆலைகளுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கிய எசன் வரலாற்றில் நாற்றாண்டுகள் பழமையான க்ரூப் குடும்ப இரும்பு தொழிற்சாலைகள் புகழ் வாய்ந்தவை. தற்போதைய எசன் சேவைகள் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்று அண்மையிலுள்ள டுசல்டோர்ஃப்புடன் இணைந்து ரூர் பகுதியின் "மேசைத் தொழிலகமாக" விளங்குகிறது. செருமனியின் 100 பெரும் நிறுவனங்களில் 13க்கு தலைமையகமாகவும் பல மண்டல நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. 1958ஆம் ஆண்டு எசன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ("Ruhrbistum") தலைமையகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003இன் துவக்கத்தில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த எசன் பல்கலைக்கழகம் மற்றும் டுயிஸ்பெர்க் பல்கலைக்கழகங்களை இணைத்து டுயிஸ்பெர்க்-எசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரு நகரங்களிலும் தனது வளாகங்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைகழகத்தின் மருத்துவமனை எசனில் உள்ளது. சான் உடால் சான் உடால் ("Shaun Udal", பிறப்பு: மார்ச்சு 18 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 410 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2006 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் உலைட் ஜார்ஜ் உலைட் ("George Ulyett", பிறப்பு: அக்டோபர் 21 1851, இறப்பு: சூன் 18 1898), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 537 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1889 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் சித்தா மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் சித்தா மருத்துவ அறிஞர் (இளம்நிலை சித்தா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Siddha Medicine and Surgery -B.S.M.S) மற்றும் சித்தா மருத்துவம், சித்தா குணபாடம், சித்தா சிறப்பு மருத்துவம், சித்தா குழந்தை மருத்துவம், சித்தா நோய்நாடல், சித்தா நஞ்சு நூலும் மருத்துவ நூலும் எனும் ஆறு பிரிவுகளின் கீழ் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆண்டுக்கு 100 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும், சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய மூன்று இடங்களில் தலா 30 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட 3 சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 90 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 240 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. டெரெக் அன்டர்வுட் டெரெக் அன்டர்வுட் ("Derek Underwood", பிறப்பு: சூன் 8 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 86 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 676 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 411 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1966 - 1982 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தமிழ்நாடு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் ஆயுர்வேதாச்சார்யா (இளம்நிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Ayurvedic Medicine and Surgery -B.A.M.S.) எனும் இளநிலைப் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி எதுவுமில்லை. தனியார் நிர்வாகத்தின் கீழான சுயநிதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் ஐந்து உள்ளன. இவற்றுள் சென்னையிலுள்ள கொரட்டூர், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர், திருச்சி மாவட்டத்திலுள்ள சன்னாசிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுயநிதிக் கல்லூரிகளில் கல்லூரி ஒவ்வொன்றிலும் 30 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனும் ஊரிலுள்ள சுயநிதிக் கல்லூரியில் 20 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என்று மொத்தம் 140 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தமிழ்நாடு யுனானி மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான யூனானி மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் சித்த மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் காமில்-ஈ-டிப்-ஓ-ஜாரகட் (இளம்நிலை யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Unani Medicine and Surgery) எனும் இளநிலைப் பட்டப் படிப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 26 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டுமே உள்ளது. பிரையன் வாலன்டின் பிரையன் வெலன்டைன் ("Bryan Valentine", பிறப்பு: சனவரி 17 1908, இறப்பு: பெப்ரவரி 2 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 339 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1939 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மைக்கல் வோகன் மைக்கல் வோகன் ("Michael Vaughan", பிறப்பு: அக்டோபர் 29 1974 , இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 82 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 268 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 282 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளம்நிலை ஓமியோபதி மருத்துவம் (ஆங்கிலம்: Bachelour of Unani Medicine and Surgery) இளநிலைப் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, [மதுரை மாவட்டம்]], திருமங்கலத்தில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆத்தூர், நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி, சென்னையிலுள்ள போரூர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் இரண்டு கல்லூரிகள் என மொத்தம் எட்டு சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 400 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தமிழ்நாடு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளம்நிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (ஆங்கிலம்: Bachelour of Naturopathy and Yogic Sciences) எனும் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 10 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இது தவிர உதகமண்டலத்தில் ஆண்டுக்கு 60 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட ஒரு சுயநிதிக் கல்லூரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் எனுமிடத்திலும் இரு சுயநிதிக் கல்லூரிகள் என மூன்று சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 10 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 140 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தமிழ்நாடு வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி தமிழ்நாடு அரசுக் கல்லூரியாகும். இக்கல்லூரியில் வனவியல் குறித்த இளம் அறிவியல், முது அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பட்டப்படிப்புகள் உள்ளன. ஹெட்லி வெரிட்டி ஹெட்லி வெரிட்டி ("Hedley Verity", பிறப்பு: மே 18 1905, இறப்பு: சூலை 31 1943), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 378 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1939 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெட்டி ஆர்க்டேல் பெட்டி ஆர்க்டேல் ("Betty Archdale", மே 23, 1907 - சூலை 8, 1973), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 - 1937 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெனட் ஆஸ்பினால் ஜெனட் ஆஸ்பினால் ("Janet Aspinall ", பிறப்பு: செப்டம்பர் 12 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் வெர்னான் ஜார்ஜ் வெர்னான் ("George Vernon", பிறப்பு: சூன் 20 1856, இறப்பு: ஆகத்து 10 1902), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 240 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜோ வைன் ஜோ வைன் ("Joe Vine", பிறப்பு: மே 15 1875, இறப்பு: ஏப்ரல் 25 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 547 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜிம் டிரஃப்டன் ஜிம் டிரஃப்டன் ("Jim Troughton", பிறப்பு: மார்ச்சு 2 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 131 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 68 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தொல்காப்பியம் நூன்மரபுச் செய்திகள் தொல்காப்பியத்தின் 3 அதிகாரங்களில் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம். எழுத்ததிகாரத்தில் முதலாவது இயல் நூன்மரபு. நூல் எழுத்து வடிவில் உள்ளது. எனவே நூல் என்பது எழுத்தைக் குறிக்கும். (ஆகுபெயர்) எழுத்தின் மரபு பற்றிக் கூறுவதால் இந்த இயல் நூன்மரபு எனப்பட்டது. எழுத்து என்றாலே அது முதலெழுத்தைக் குறிக்கும். இவை 30 (உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து 18) இவை எந்தச் சார்பும் இல்லாமல் தனித்து ஒலிக்கக்கூடியவை. சார்பெழுத்துக்கள் மொழியைச் சார்ந்து வரும்போதுதான் தன் ஒலிப்பைப் புலப்படுத்தும். மரபுவழி அடுக்காகிய தமிழ் நெடுங்கணக்கு, இனப்பாகுபாடுகள், ஒன்றோடொன்று மயங்கும் நிலை முதலானவை இந்த இயலில் கூறப்பட்டுள்ளன. உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என மாத்திரை நோக்கில் இனப்படுத்தப்பட்டுள்ளன. மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பொருளைப் புலப்படுத்தும் சுட்டெழுத்துக்கள், வினாவெழுத்துக்கள் இடைச்சொல்-எழுத்துக்கள் சுட்டப்பட்டுள்ளன. மக்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்குவது போல எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்கும் எழுத்து மயக்கம் மரபியல் கண்ணோட்டத்தில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொல்காப்பிய காலத்துக்கு முந்திய மரபுநெறி என்பதை இந்த இயலுக்குச் சூட்டப்பட்டுள்ள 'நூல்-மரபு' என்னும் பெயராலும், 'என்ப' என முன்னோரைச் சுட்டிச் சொல்லும் குறிப்பு இந்த இயலில் மட்டுமே ஆறு இடங்களில் வருவதாலும் அறியலாம். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - என்னும் பன்னிரண்டும் உயிரெழுத்து. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - என்னும் பதினெட்டும் மெய்யெழுத்து. மெய்யெழுத்துக்களைப் புள்ளி இட்டு எழுதுவர். ஒலிக்கும்போது புள்ளி இல்லா எழுத்தாக்கிக்கொண்டு ஒலிப்பர். குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துக்கள். க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம். ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம். ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம். அ, இ, உ மூன்றும் சுட்டெழுத்து. (அவன், இவன், உவன்) (அவன் - கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருப்பவன், இவன் - கண் முன் இருப்பவன், உவன் - கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புலப்படாமல் இருப்பவன்) ஆ, ஏ, ஓ - மூன்றும் வினா எழுத்து. (அவனா, அவனே, அவனோ செய்தான்) (எவன் என்னும் சொல் தொல்காப்பியர் காலத்தில் ஏன் என்னும் பொருளில் கையாளப்பட்டது.) மெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்படும். எ, ஒ ஆகிய இரண்டும் புள்ளி பெறும். சார்பெழுத்துக்களாகிய குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய எழுத்துக்களும் புள்ளியிட்டு எழுதப்படும். மகரக்குறுக்கம் உள்ளே புள்ளி பெறும். (ம் எழுத்தில் முன்பே புள்ளி உள்ளது. ம் எழுத்தின் அரைமாத்திரை கால்மாத்திரையாகக் குறையும்போது புள்ளியை ம்-க்குள்ளே வைத்தனர்) புள்ளி இல்லாமல் எழுதப்படும் மெய்யெழுத்து உயிர்மெய் அகர-உயிர் ஏறிய எழுத்தாக மாறிவிடும். ஏனைய உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்தோடு இயையும்போது திரிந்த உருவம் பெறும். இப்படிக் கண்ணின் இமை நொடிக்கும் காலத்தை ஓர் 'அளபு' என்று கொண்டு அதனை 'மாத்திரை' என்று குறிப்பிடலாயினர். குறில் எழுத்துக்கு ஒரு மாத்திரை. நெடில் எழுத்துக்கு இரண்டு மாத்திரை. எந்த எழுத்தும் மூன்று மாத்திரை ஒலிக்காது. எழுத்துக்கு மாத்திரை கூடவேண்டும் என்று கருதினால் கூடவேண்டிய அளபுள்ள எழுத்தைக் கூட்டி எழுதிக்கொள்ளவேண்டும். (உயிரளபெடை, ஒற்றளபெடை) மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்துக்களுக்கு அரைமாத்திரை. மகரக் குறுக்கத்துக்குக் கால்மாத்திரை. உயிர்மெய் எழுத்து ஒலிக்கப்படும்போது மெய்யொலி முதலில் தோன்றி அதன் வழியை உயிரொலி தொடரும். நரம்பு என்பது யாழ். யாழிசை பற்றிய நூல் நரம்பின்மறை. யாழிசைக்கு ஏற்ப இசை பாடும்போது எழுத்தின் மாத்திரை சொல்லப்பட்ட அளபெல்லையை மீறும். உயிரெழுத்துக்கு மட்டுமல்லாமல் ஒற்றெழுத்துக்களுக்கும் மாத்திரை நீளும். இப்படி இசை நீடும் என்று புலவர்கள் கூறுவர் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். எல்லா மெய்யெழுத்துக்களும் எல்லா மெய்யழுத்துக்களோடும் இணைந்து நிற்பதில்லை. இன்ன மெய்யெழுத்து இன்ன மெய்யெழுத்தோடுதான் இணைந்து நிற்க்கும், இன்ன மெய்யெழுத்தோடு இணைந்து நிற்காது - என்பது இப்பகுதியில் சுட்டப்படுகிறது. ட், ற், ல், ள் ஆகிய மெய் முன் க, ச, ப மூன்றும் மயங்கும். ல், ள் ஆகிய ஆகிய மெயம்முன் ய, வ தோன்றும். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய மெய்ம்முன் அதன் இனவெழுத்து மயங்கும். ண், ன் ஆகிய மெய்ம்முன் க, ச, ஞ, ப, ம, வ, ய ஆகிய ஏழும் மயங்கும். ஞ், ந், ம், வ் முன்னர் ய நிற்கும். ம், வ மயங்கும் ய், ர், ழ் முன்னர் மொழிமுதல் ஒன்பது மெய்யும், ங எழுத்தும் உடனிற்கும். ர, ழ தன் மெய்யோடு தான் மயங்கும் எந்த எழுத்தும் தன்னைச் சுட்டுவதாயின் இணையும். சார்பெழுத்து மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும். இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது. "சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல் எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று" என்று தொல்காப்பியர் இதனை விளக்குகிறார். (பிறப்பியல்) தாய்தந்தையரைச் சார்ந்து குழந்தை வாழ்வது போல இந்தச் சார்பெழுத்துக்கள் உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து வாழும். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆகமொத்தம் 30 எழுத்துக்கள் முதல்-எழுத்துக்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் சார்பெழுத்துக்கள் மூன்று என்கிறது.. அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன. ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நன்னூல் சார்பழுத்துக்கள் 10 வகை எனக் காட்டுகிறது. இந்த 10 என்னும் பாகுபாட்டுக்குத் தொல்காப்பியத்தில் தோற்றுவாய் உள்ளது. அவற்றை இப்பட்டியலில் காணலாம். 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் சொல்காப்பியர் வழியில் சார்பெழுத்துக்கள் 3 எனக் காட்டிச் செல்கிறது. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் சார்பெழுத்துக்கள் 10 என்கிறது. நன்னூலுக்குப் பின்னர் தோன்றிய பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்கள் நன்னூலை வழிமொழிகின்றன. உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் புத்ராஜாயா புத்ரஜெயா மலேசியாவில் உள்ள ஒரு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். 1999 முதல் மலேசியாவின் கூட்டாட்சி நிருவாகத் தலைநகராகச் செயல்படுகிறது. கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள இதில் புது அரசு தலைமையகம் வீடுகள், கடைகள் அற்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து அரசு வேலைகளும் முடித்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை இராமையாதாஸ் தஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார். இராமையாதாஸ் தமிழ்நாடு தஞ்சாவூர், மானம்பூச்சாவடியில் நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு இரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர். ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி" என்பதாகும். இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார். இதனை அடுத்து நாகி ரெட்டியின் "பாதாள பைரவி" படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார். இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி" என்ற திரைப்படமாகியது. இப்படத்தில் இவர் எழுதிய "சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு", "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..." என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார். இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார். தஞ்சை இராமையாதாசின் கலைப்படைப்புகள் 2010 ஆம் ஆண்டு சூலை 16 இல் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு அவரது வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு இலட்சம் பணமும் வழங்கப்பட்டது. தியூசல்டோர்ஃபு தியூசல்டோர்ஃபு (Düsseldorf ) செருமனியின் வடக்கு ரைன்-வெஸ்பாலியா மாநிலத்தின் தலைநகரமும் ரைன்-ரூர் பெருநகரப்பகுதியின் மையமும் ஆகும். பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையமாக விளங்கும் தியூசல்டோர்ஃபு ஆடை வடிவமைப்பு/புதுப் பாங்கு மற்றும் வணிகச் சந்தைகளுக்குப் பெயர் பெற்றது. ஐரோப்பிய பெருநகரத் தொகுப்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஐந்து ஃபார்ட்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களுக்கும் பல செருமானிய பங்குச்சந்தைக் குறியீட்டெண்ணில் (டாக்ஸ்) உள்ள நிறுவனங்களுக்கும் தலைமையகமாக விளங்குகிறது. இங்குள்ள மெஸ் தியூசல்டோர்ஃபு என்ற சந்தைப்படுத்தல் நிறுவனம் உலகின் வணிகச் சந்தைகளில் ஐந்தில் ஒன்றுக்கு அண்மித்த அளவில் ஒழுங்குபடுத்துகிறது. பண்பாட்டில், தியூசல்டோர்ஃபின் நுண்கலை சங்கமான "குன்ஸ்டாக் அகாதெமி டுசல்டோர்ஃப்" பெயர்பெற்றது. துவக்ககால இலத்திரனியல் இசை மீதான தாக்கத்திற்கும் (கிராஃப்ட்வொர்க்) மிகப்பெரும் சப்பானிய குடியேற்றத்திற்கும் அறியப்பட்டது. ரைன் ஆற்றங்கரையில் ஒவ்வொரு ஆண்டும் சூலையில் நடத்தப்படும் "ரைன் மீதான பெரும் சந்தை" விழாவிற்கு 4.5 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். நகர எல்லைக்குள் உள்ள மக்கள்தொகை கொண்டு செருமனியின் ஏழாவது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. பெருநகரப் பகுதியில் 1.5 மில்லியன் மக்கள்தொகை கொண்டு நாட்டின் ஐந்து உலக நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2009ஆம் ஆண்டுக்கான "மெர்சரின் உலக வாழ்க்கைத்தர கணக்கெடுப்பில்" தியூசல்டோர்ஃபு உலகளவில் ஆறாவதாகவும் செருமனியில் முதலாவதாகவும் வந்துள்ளது. ரிச்சார்ட் ஆக்செல் பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் ("Richard Axel") ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர். இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. நீல வாழை நீல வாழை (Blue Banana), சூடான வாழை (Hot Banana), ஐரோப்பிய பெருநகரத் தொகுதி (European Megalopolis) அல்லது ஐரோப்பாவின் முதுகெலும்பு (European Backbone) என்பது மேற்கு ஐரோப்பாவின் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, இடைவெளிவிட்ட நகரமயமானப் பகுதிகளை இணைத்து அழைக்கப்படும் நிலப்பகுதி ஆகும். வடக்கில் கிட்டத்தட்ட வடமேற்கு இங்கிலாந்து முதல் தெற்கில் மிலன் வரை நீடித்துள்ளது. இதன் வளைவில் (வாழைப்பழம் போன்ற வடிவத்தால் இவ்வாறு அழைக்கப்படலாயிற்று) பிராட்ஃபோர்ட், லீட்ஸ், லிவர்பூல், மான்செஸ்டர், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இலண்டன், ஆம்ஸ்டர்டம், டென் ஹாக், ராட்டர்டேம், பிரசெல்சு, ஆண்ட்வெர்ப், ஐந்தோவன், ரூர், டுசல்டோர்ஃப், கோல்ன், பிராங்க்ஃபுர்ட், லக்சம்பர்க், இசுடுட்கார்ட், இசுட்ராசுபோர்க், சூரிக், துரின், மிலன், மற்றும் செனோவா நகரங்கள் உள்ளன. இது உலகின் மிக கூடுதலான மக்கள்தொகை, நிதி மற்றும் தொழிலகங்கள் செறிவாக உள்ள நிலப்பகுதியாக விளங்குகிறது. இத்தகைய கருத்தாக்கம் "ரோஜர் புருனே"யால் நிர்வகிக்கப்படும் பிரெஞ்சு நிலவியலாளர்கள் குழு ரெக்லஸ் (RECLUS) 1989ஆம் ஆண்டு உருவாக்கியது. . முலை ஊடுகதிர்ப்படச் சோதனை முலை ஊடுகதிர்ப்படச் சோதனை (Mammography) முறைமையில் குறைந்தளவு எக்ஸ் கதிர்கள் (பொதுவாக 0.7 mSv) பயன்படுத்தி மனித முலையை ஆராய்வதாகும். இது புற்றுநோய் தன்மையை அறிவதற்கும் நோயுள்ளவர்களைப் பிரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதன்மை நோக்கமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதை நோய்த்தன்மையுள்ள கட்டிகள் மற்றும்/அல்லது நுண் கால்சிய சேர்க்கைகளாலோ துவக்கநிலையிலேயே அறிவதாகும். மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்தச் சோதனை மிகவும் உதவியுள்ளதாகக் கருதப்படுகிறது. மார்பகப் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறியும் வண்ணம் பல நாடுகளில் முதிய மகளிருக்கு முலை ஊடுகதிர்ப் படச் சோதனை ஊக்குவிக்கப்படுகிறது.2009ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தடுப்பு சேவைகள் செயற்திட்ட அணியினர் 40 முதல் 49 வரை உள்ள மகளிருக்கான சோதனை வழிகாட்டல்களில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. சுருக்கமாக, இதன்படி 50 அகவைக்கு மேற்பட்டோருக்கே இச்சோதனைகளை வழக்கமாகச் செய்ய அறிவுறித்தியது. இந்த அரசு அறிவுரையை பல புற்றுநோய் மற்றும் மகளிர் தன்னார்வல அமைப்புக்கள் எதிர்த்தன. இருப்பினும், அமெரிக்க அரசு இன்னமும் முலை ஊடுகதிர்ச் சோதனையை 50 முதல் 74 வரையுள்ள பெண்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவ முலைச் சோதனைகளுடனோ அல்லாமலோ, அறிவுறுத்தியுள்ளது. மருத்துவச் சோதனைகள் மார்பகப் புற்றுநோய் மரணம் இதன்மூலம் 20% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறார்கள். இரு மிக உயர்ந்த தர ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான கட்டுரையால் 2000 முதல் முலை கதிர்படங்கள் (Mammograms) சர்ச்சைகளுக்கள்ளாகி உள்ளன பிற எக்ஸ் கதிர்கள் போலவே முலை ஊடுகதிர் படங்களும் கதிரியக்க விளைவுகளைக் கொண்டு படம் பிடிக்கின்றன. இந்தப் படங்களை ஆராய்ந்து கயிரியக்க மருத்துவர்கள் வழமைக்கு மாறானவற்றை அறிகிறார்கள். எலும்புகளுக்குப் பயன்படுத்தப்படும் குறைந்த அலைநீள எக்ஸ் கதிர்கள் போலல்லாது இங்கு கூடுதல் அலைநீளமுள்ள எக்ஸ் கதிர்கள் (பொதுவாக Mo-K) பயன்படுத்தப்படுகின்றன. துவக்க கால மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உடற்கூறு முலைச் சோதனையுடன் கூடிய முலைக் கதிர்படச் சோதனை முதன்மை விருப்பத்தேர்வாக உள்ளது. மீயொலி, டக்டோகிராபி, பொசிட்ரோன் வெளியாடு ஊடுகதிர்ப் படச்சோதனை (PEM), மற்றும் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியன கூடுதல் சோதனைகளாக உள்ளன. மீயொலி பொதுவாக முலைக் கதிர்படச் சோதனை மூலம் கண்டறியப்பட்ட கட்டிகளைக் குறித்த மேலாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மருத்துவமனைகளில் முலை ஊடுகதிர்ப்படம் மூலம் கண்டறியப்படாத நிலையில் உள்ள முலைக்காம்பு குருதிக்கசிவுகளில் நோயறிய டக்டோகிராம் பயன்படுத்தப்படுகிறது. ஐயத்திற்குரிய கண்டுபிடிப்புகளை மேலாய்வு செய்யவும் அறுவை சிகிட்சைக்கு முன்னர் அறுவை செய்முறையை (முலையைத் தக்கவைக்கும் கட்டி நீக்கமா அல்லது முலையையே எடுத்து விடுவதா என) மாற்றக்கூடிய வகையில் ஏதேனும் கூடுதல் வளர்சதைகள் உள்ளனவா என அறியவும் MRI பயனாக உள்ளன. முலை தன்-சோதனை (BSE) குணமாக்கக்கூடிய நிலையில் உள்ள புற்றுநோய்களைக் கண்டறிய முன்பு ஊக்குவிக்கப்பட்டாலும் தற்காலத்தில் அதன் செயற்திறன் குறைவின் காரணமாக சுகாதார அதிகாரிகள் பொதுப்பயனிற்கு அறிவுறுத்துவதில்லை. தன-சோதனையை விட பெண்கள் உடல் குறித்த மற்றும் மார்பக நலன் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. முலை ஊடுகதிர்ப்படச் சோதனை கண்டறியாத, ஆனால் நோயுள்ள, நிகழ்வுகள் 10 விழுக்காடாக உள்ளது. இது பொதுவாக ஒளிபுகா அளவு செறிவான திசுக்கள் புற்றுக்கட்டியை மறைத்து விடுவதால் ஏற்படுகிறது. கிளைசின் கிளைசின் ("Glycine") [குறுக்கம்: Gly (அ) G] என்னும் அமினோ அமிலம் ஒரு கரிமச்சேர்மம் ஆகும். இதனுடைய வாய்பாடு: NHCHCOOH. "பக்கத் தொடரில்" இரண்டு ஹைட்ரசன் அணுக்களை மட்டும் கொண்டுள்ளதால் புரதங்களில் சாதரணமாகக் காணப்படும் 20 அமினோ அமிலங்களில் கிளைசின் மிகவும் சிறியதாகவும், நீர்நாட்டமுள்ள மற்றும் நீர்தவிர்க்கும் இரண்டு சூழல்களிலும் பொருந்தக்கூடியதாகவும் உள்ளது. இதன் குறிமுறையன்கள்: GGU, GGC, GGA மற்றும் GGG. கிளைசின் வண்ணமற்ற, இனிய சுவையுள்ள படிகத்தன்மை கொண்ட திடப் பொருளாகும். இதற்கு சமச்சீரின்மை (chiral) பண்பு கிடையாது. ஹென்றி பிரகோன்னாட் என்னும் பிரெஞ்சு வேதியியலர் மற்றும் மருந்தாளுநர் 1820-ல் ஜெலாட்டினை கந்தக அமிலத்துடன் சேர்த்துக் கொதிக்கவைத்து கிளைசினைக் கண்டறிந்தார். தொழிலகங்களில் குளோரோ அசெடிக் அமிலத்துடன் அமோனியாவை வினைப்படுத்தி கிளைசின் தயாரிக்கப்படுகின்றது. இம்முறையில் சுமார் 15 மில்லியன் கிலோகிராம் கிளைசின் ஒரு வருடத்திற்கு உற்பத்திச் செய்யப்படுகிறது. இதனுடையக் காடித்தன்மை எண்கள்: 2.35 மற்றும் 9.78. எனவே, அமிலக்காரக் குறியீடு (pH) 9.78 -ட்டிற்கு மேல் பெரும்பாலான கிளைசின் அமைன் எதிரயனிகளாக உள்ளது, HNCHCO. அமிலக்காரக் குறியீடு (pH) 2.35 -க்கு கீழே கிளைசின் கரைசல்கள் பெரும்பாலும் கார்பாக்சிலிக் அமில நேரயனிகளாகவே உள்ளது, HNCHCOH. இதனுடையச் சமமின்புள்ளி (pI): 6.06. கிளைசின், கரைசல்களில் இருமுனை அயனி வடிவத்தில் உள்ளது. இவ்வடிவத்தில், பல அணுக்களிலும் உள்ள பகுதி மின்னூட்டங்களை காஸ்டெய்கர் மின்னூட்ட முறையில் கணக்கிடும்போது வரும் மதிப்புகள்: N (+0.2358), H (N- உடன் இணைந்தது) (+0.1964), ஆல்ஃபா-C (+0.001853), H (ஆல்ஃபா-C-யுடன் இணைந்தது) (+0.08799), கார்போனைல் C (+0.085) மற்றும் கார்போனைல் O (-0.5445). கிளைசின், நம் உணவில் தேவையில்லாதது. 3-பாஸ்போ கிளிசரேட்டிலிருந்து பெறப்பட்ட செரின் அமினோ அமிலத்திலிருந்து நம் உடல் உயிர்வேதியியல் முறையில் கிளைசினைத் தொகுத்துக் கொள்கிறது. பெரும்பாலான உயிரினங்களில் செரின் ஹைட்ராக்சி இடமாற்றி நொதி பிரிடாக்சால் பாஸ்பேட் என்னும் துணைக்காரணியின் உதவியுடன் வினையூக்கியாகச் செயல்பட்டு இவ்வுருமாற்றத்தை நிகழ்த்துகிறது: முதுகெலும்புயிரிகளின் கல்லீரலில் "கிளைசின் தொகுப்பி" (மறு பெயர்: "கிளைசின் பிளவு நொதி") என்னும் நொதியால் கிளைசின் தொகுக்கப்படுகின்றது. இத்தொகுப்பு மாற்றம் எளிதில் மீளுறும் தன்மையுள்ளது பெரும்பாலானப் புரதங்கள் கிளைசினைச் சிறிய அளவிலேயே கொண்டுள்ளன. ஆனால், 35% கிளைசினைக் கொண்ட கொலாஜென் புரதம் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காகும். கிளைசின் மூன்று வழிகளில் சிதைக்கப்படுகிறது. விலங்குகளில், "கிளைசின் சிதைவுத் தொகுதி நொதிகள் வினையூக்கத்தின் மூலம் கிளைசின் சிதைக்கப்படுவது முதன்மையான வழியாகும். இதே வினைவேகமாற்றிதான் கிளைசின் உயிரித்தொகுப்பிலும் ஈடுபடுகிறது. சிதைவு வழிமுறை, தொகுப்பு வழிமுறையின் தலைகீழ் வினையாகும்: இரண்டாவது வழிமுறையில் கிளைசின் இரு படிகளில் சிதைக்கப்படுகிறது. முதலாம் படியானது, செரின் அமினோ அமிலத்திலிருந்து "செரின் ஹைட்ராக்சிமீத்தைல் இடமாற்றி" நொதியின் உதவியுடன் நிகழும் உயிரிதொகுப்பின் தலைகீழ் வினையாகும். பின்னர் செரின், பைருவேட்டாக "செரின் அமைன் நீக்கியால்" மாற்றப்படுகிறது. மூன்றாவது வழிமுறையில் கிளைசின், "அமினோ அமில உயிர்வளியேற்றி" நொதியால் கிளையாக்சிலேட்டாக மாற்றப்படுகிறது. பின்னர், கிளையாக்சிலேட் ஈரலின் "லேக்டேட் ஹைட்டிரசன் நீக்கியால்" ஆக்சலேட்டாக NAD-அய் சார்ந்த உயிர்வளியேற்றம் அடைகிறது. கிளைசினின் அரைச்சிதைவுக் காலமும், உடலிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான நேரமும் அதன் அளவைப் பொருத்தே முக்கியமாக அமைகிறது. ஒரு ஆய்வில், கிளைசினின் அரைச்சிதைவுக் காலம் 0.5 - 4.0 மணியாகக் கண்டறியப்பட்டது. நீர் மாசுபாடு நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப் பெருக்கம், புயல், நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, "ஓரிடமூல மாசடைதல்" (Point-source pollution) எனப்படும். மற்றது, "பரந்தமூல மாசடைதல்"' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார அமைப்பு மாசு கலந்த நீரால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பினைக் காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில் மனித உடலில் ஒவ்வொரு பகுதியிலும் என்ன என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தரப்பட்டுள்ளது. இங்கு இந்த வரைபடத்தைப் பார்வையிடலாம். மனிதனின் இன்றியமையாத கழிவுகள் அதிக அளவில் வெளியேற்றப் படுவதானால் நீர் மாசுபடுத்தப்படுகின்றது. விளைவு வெப்ப விளைவின் காரணமாக நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவதினால் நீர் மாசுபடுகின்றது. பொதுவாக, நீரில் ஆக்சிசனின் அளவு 8 முதல் 15 மில்லி கிராம் /லிட்டர் -ஆக இருக்க வேண்டும். விளைவு தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலப்பதனால் நீர் மாசடைகிறது. விளைவு தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், வீட்டுக் கழிவுநீர், சிறுநீர் தேக்கம் போன்றவை கலப்பதனால் நீர் மாசடைகிறது. விளைவு எ.கா: எண்ணெய், பெட்ரோல், நெகிழி, சலவைத்தூள், பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலச்சரிவு மற்றும் மணல் அரிப்பு ஏற்படுவதால் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. விளைவு லியூசின் லியூசின் ("Leucine") [குறுக்கம்: Leu (அ) L] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)CHCH(CH). இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது. தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே. உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது. ஐசோலியூசின் ஐசோலியூசின் ("Isoleucine") [குறுக்கம்: Ile (அ) I] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)CH(CH)CHCH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC மற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்]. அல்மராய் அல்மராய் என்பது மத்தியகிழக்குப் பகுதியின் பெரிய பால் பொருட்கள் உருவாக்கும் நிறுவனங்களுள் ஒன்று. இது 1976-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ரியாத் நகரில் உள்ளது. இந்நிறுவனம் பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களையும் வெதுப்பகப் பொருட்களையும், அண்மையில் கோழியிறைச்சி போன்றவற்றையும் விற்பனை செய்கிறது. அல்கான் அல்கான் "(Alcon)" என்பது கண்நலப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலும் அமெரிக்கத்தலைமையகம் டெக்சாசு மாநிலத்திலும் உள்ளது. இந்நிறுவனம் 1945-இல் டெக்சாசில் ஒரு சிறு மருந்துக்கடையாகத் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியோர் ராபர்ட் அலெக்சாண்டரும் வில்லியம் கான்னரும். இவர்களது பெயர்கள் ஒரு பகுதியை (அல், கான்) எடுத்து அல்கான் என்று பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் உள்விழி ஆடி முதலியவற்றைத் தயாரிக்கிறது. பாம்பாறு (கேரளா) பாம்பாறு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடியில் உருவாகும் ஆறு. இது இரவிக்குளம் தேசியப்பூங்காவினூடாகப் பாய்ந்து சின்னாறு கானுயிர் காப்பகப் பகுதிக்குள் ஓடுகிறது. கூட்டாறு என்ற இடத்தில் சின்னாற்றுடன் கலக்கிறது. பாம்பாறு, கபினி, பவானி ஆகியனவே கேரளத்தில் பாயும் 44 ஆறுகளுள் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளாகும். சின்னாறு தமிழக எல்லைக்குள் அமராவதி என்றழைக்கப்படுகிறது. இது கரூர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கின்றது. தூவானம் அருவி இவ்வாற்றின் குறிப்பிடத்தக்க அருவியாகும். பம்பார் ஆறு List of rivers of Tamil Nadu சின்னாறு (ஆனைமலை) சின்னாறு ஆனைமலையில் உற்பத்தியாகி வரும் ஒரு ஆறு. இது கேரள மாநிலத்தின் இடிக்கி மாவட்டத்தில் உள்ளது. 18 கி.மீ நீளமான சின்னாறு தமிழக-கேரளத்தின் ஒரு பகுதியில் எல்லையாக உள்ளது. சோலைக்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் இந்த ஆறு கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைகிறது. தமிழக எல்லையை அடைந்ததும் இது அமராவதி ஆறு என்றழைக்கப்படுகிறது. புறவணியிழையம் புறவணியிழையம் (Epithelium) அல்லது மேலணியிழையம் என்பது விலங்கினங்களில் காணப்படும் நான்கு வகை அடிப்படை இழைய வகைகளில் இணைப்பிழையம், தசை இழையம், நரம்பிழையம் ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் தொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடியும் இருக்கும். மேலும் பல சுரப்பிகள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உறிஞ்சல், பாதுகாப்பு, உயிரணுக்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். கிரேக்கத்தில் "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "இழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் "எப்பித்தீலியம்" எனக் குறிப்பிடுகின்றனர். தோலிழையம் (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள தோலாக அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும். புறவணியிழையங்கள், இணைப்பிழையங்களின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக அமையும்போது இரண்டுக்குமிடையே அடிமென்சவ்வு என அழைக்கப்படும் ஒரு படை இருந்து இரு வகை இழையங்களையும் பிரிக்கின்றது. இந்த சவ்வுகளில் மிக நெருக்கமாக கூட்டமான உயிரணுக்கள் இறுக்கச் சந்திப்புகளுடன் டெஸ்மோசோம்களால் பிணையப்பட்டுள்ளன. புறவணியிழையங்கள் குருதிக் கலன்கள் அற்றவை. எனவே அவற்றிற்கான சத்துக்களை கீழேயுள்ள இணைப்பிழையங்கள் மூலமாக பரவல் முறையில் பெறுகின்றன. இந்த இழையங்கள் சில இடங்களில் கூட்டமாக அமைக்கப்பட்டு புறச்சுரப்பிகளாகவும் (Exocrine glands), நாளமில்லாச் சுரப்பிகளாகவும் (Endocrine glands) செயல்படும். இவ்வகைச் சுரப்பிகள் குருதிக் கலன்களைக் கொண்டிருக்கும். மேலணியிழையம் அடித்தள மென்சவ்வுக்கு மேல் அடுக்கப்பட்டதாக இருக்கும். மேலணியிழையத்தின் அனைத்து கலங்களும் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அது எளிய மேலணியிழையமாகும். மேலணியிழையத்தின் அடியிலுள்ள மேலணிக் கலங்கள் மாத்திரம் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அவ்விழையம் சிக்கலான மேலணியிழையமாகும். அடித்தள மென்சவ்வு தொடுப்பிழையத்தாலான ஒரு மென்சவ்வு ஆகும். மேலணியிழையத்துக்குள் குருதிக் கலன்கள் ஊடுருவாததால் இந்த அடித்தள மென்சவ்வூடாகவே மேலணியிழையத்துக்குப் பதார்த்தப் பரிமாற்றல் நடைபெறுகின்றது. மேலணியிழையக் கலங்கள் இழையுருப்பிரிவடையும் ஆற்றலைத் தக்க வைத்துள்ள கலங்களாகும். தூண்டப்படும் போது பிரிவடையலாம். உதாரணமாக தோலில் உள்ள மேலணியிழையத்தின் அடியிலுள்ள கலங்கள் தொடர்ந்து இரட்டிப்படையும் கலங்களாகும். சுயாதீன மேற்பரப்பில் உராய்வினால் கலங்கள் (மேற்பரப்பில் கலங்கள் இறந்துவிட்டதால், வலி தெரியாது) இழக்கப்பட கீழிருந்து மேலாக கலங்கள் ஈடு செய்யப்படுகின்றன. சில கலங்கள் முதிர்ந்த நிலையில் இறந்து விடுவதுடன், அவற்றின் குழியவுரு கெராட்டின் புரதத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது. கெராட்டினேற்றப்பட்ட இறந்த கலங்கள் தோலின் மேற்பரப்பை ஆக்குகின்றன. வாய்க்குழியின் அகவணியில் கெராட்டின் ஏற்றப்படாத கலங்கள் உள்ளன. பொதுவாக மேலணியிழையக் கலங்களிடையில் பல கலச்சந்திகள் உள்ளன. இக்கலச்சந்திகள் மேலணியிழையத்தை ஒரு தனிப்படையாகத் தொழிற்பட உதவுகின்றன. மேலணியிழையம் அக, புற, மற்றும் இடை ஆகிய அனைத்து முதலுருப்படைகளிலிருந்தும் உருவாக்கப்படலாம். செ. சீனி நைனா முகம்மது செ. சீனி நைனா முகம்மது (பிறப்பு: செப்டம்பர் 11 1947) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனைப் பெயர்களாலும் அறியப்பட்டவர். கவிதை இலக்கணத்தை முறையாகக் கற்று அதனைப் பிறருக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இஸ்லாமியச் சமய உரைகளும் நிகழ்த்தி வருகிறார். 1961 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் கவிதைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய, தமிழக பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலி, மேடைக் கவியரங்கங்களில் பாடியும் வருகிறார். இவர் ஓர் இதழாசிரியருமாவார். கேத்தரின் பிரண்ட் கேத்தரின் பிரண்ட் ("Katherine Brunt", பிறப்பு: சூலை 2, 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோ சேம்பர்லென் ஜோ சேம்பர்லென் ("Jo Chamberlain ", பிறப்பு: ஏப்ரல் 25 1969), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜீன் கிளார்க் ஜீன் கிளார்க் ("Jean Clark", பிறப்பு: செப்டம்பர் 26 1936, இறப்பு: நவம்பர் 25 1970), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1968/69 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மால்லி சைல்ட் மால்லி சைல்ட் ("Mollie Child"), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சான்ட்ரா பிரவுண் சான்ட்றா பிரவுண் ("Sandra Brown ", பிறப்பு: 1940), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கேத்தரின் பிரவுண் கதரின் பிரவுண் ("Katherine Brown", பிறப்பு: சனவரி 24 1953), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேன் பிரிட்டின் ஜேன் பிரிட்டின் ("Jan Brittin", பிறப்பு: சூலை 4 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அர்ரன் பிரிண்டில் அர்ரன் பிரிண்டில் ("Arran Brindle", பிறப்பு: நவம்பர் 23 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜூன் பிராகர் ஜூன் பிராகர் ("June Bragger", பிறப்பு: சூன் 2 1929, இறப்பு: சூன் 27 1997), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 -1966 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெட்டி பிர்ச் பெட்டி பிர்ச் ("Betty Birch", பிறப்பு: செப்டம்பர் 12 1923), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 -1957/58, பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பில் வோஸ் பில் வோஸ் ("Bill Voce", ("Joe Vine", பிறப்பு: ஆகத்து 8 1909, இறப்பு: சூன் 6 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1947 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஏப் வேடிங்டன் ஏப் வேடிங்டன் ("Abe Waddington", பிறப்பு: பெப்ரவரி 4 1893, இறப்பு: அக்டோபர் 28 1959), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 266 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1920 - 1921 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெட்டி பெல்டன் பெட்டி பெல்டன் ("Betty Belton", பிறப்பு: பிப்ரவரி 1 1916, இறப்பு: சனவரி 24 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937/38 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோசப்பீன் பெட்சன் ஜோசப்பீன் பெட்சன் ("Josephine Batson", பிறப்பு: பிப்ரவரி 23 1929, இறப்பு: சனவரி 11 2000), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1957/58 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். எட்னா பார்க்கர் எட்னா பார்க்கர் ("Edna Barker", பிறப்பு: நவம்பர் 24 1936), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1968/69 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டெட் வெய்ன்ரைட் டெட் வெய்ன்ரைட் ("Ted Wainwright", பிறப்பு: ஏப்ரல் 8 1865, இறப்பு: அக்டோபர் 28 1919), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 391 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1898 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் வாக்கர் பீட்டர் வாக்கர் ("Peter Walker", பிறப்பு: பெப்ரவரி 17 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 469 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1960 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எனிட் பேக்வெல் எனிட் பேக்வெல் ("Enid Bakewell", பிறப்பு: திசம்பர் 16 1940), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். சிரில் வால்டர்சு சிரில் வால்டர்சு ("Cyril Walters", பிறப்பு: ஆகத்து 28 1905, இறப்பு: திசம்பர் 23 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 245 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலன் வார்ட் அலன் வார்ட் ("Alan Ward", பிறப்பு: ஆகத்து 10, 1947) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 163 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அல்பர்ட் வார்ட் அல்பர்ட் வார்ட் ("Albert Ward", பிறப்பு: நவம்பர் 21 1865, இறப்பு: சனவரி 6 1939) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,385 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1895 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இயன் வார்ட் இயன் வார்ட் ("Ian Ward", பிறப்பு: செப்டம்பர் 30 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜானி வார்டில் ஜானி வார்டில் ("Johnny Wardle", பிறப்பு: சனவரி 8 1923, இறப்பு: சூலை 23 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 412 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 -1952 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கரோலின் அட்கின்ஸ் கரோலின் அட்கின்ஸ் ("Caroline Atkins", பிறப்பு: சனவரி 13 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2008 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லைசின் லைசின் (Lysine) [குறுக்கம்: Lys (அ) K] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)(CH)NH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AAA மற்றும் AAG. லைசின் காரத்தன்மைக் கொண்டதாகும். லைசினில் உள்ள ε-அமினோ தொகுதியானது பரவலாக ஹைட்ரசன் பிணைப்பிலும், வினையூக்கத்தில் பொது காரமாகவும் பங்கேற்கிறது. ஆர்ஜினின் ஆர்ஜினின் ("Arginine") [குறுக்கம்: Arg (அ) R] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HN-C(=NH)-NH-[CH]-CH(NH)-COOH. இது ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்ட (அ) அரைகுறையான அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது மனிதரின் வளரும் நிலை (அ) உடல்நலத்தினைப்பொருத்ததாகும். இதன் குறிமுறையன்கள்: CGU, CGC, CGA, CGG, AGA மற்றும் AGG. வாலின் வாலின் (Valine) [குறுக்கம்: Val (அ) V] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOCCH(NH)CH(CH). இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) இரத்தப் புரதத்தில் (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட குளுடாமிக் அமிலத்தினை நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் இரத்தப் புரதம் சரியாக மடங்குவதில்லை. காமினி ஜயவிக்கிரம பெரேரா 80, குருப்பு ரோட், பொரல்லை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், நில உரிமையாளர். எம். ஜோசப் மைக்கல் பெரேரா கமமெத ரோட், துடெல்ல, ஜா-எலயில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர், டிலான் பெரேரா 30, பண்டாரநாயக்கா மாவத்தை, பதுளையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், நியோமல் பெரேரா 3/3, ரொக்வூட் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர், பிளிக்ஸ் பெரேரா 25, நீர்கொழும்பு வீதி, துடெல்ல, ஜா-எல யில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர், சுசில் பிரேமஜயந்த் 123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட. லெஸ்லி கிளிஃப்பர்ட் லெஸ்லி கிளிஃப்பர்ட் ("Lesley Clifford", பிறப்பு: சனவரி 19 1937, இறப்பு: மே 16 1979), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1966 - 1973 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஆட்ரி காலின்ஸ் ஒட்ரி கொலின்ஸ் ("Audrey Collins", பிறப்பு: ஏப்ரல் 14 1915, இறப்பு: பிப்ரவரி 14 2010), இங்கிலாந்துபெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். செய்தியாளர் நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் ("journalist") எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன. செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். செய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம். செய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம். செய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம். செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது. தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களால் ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள் , 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு செய்தியாளர் அட்டைகளை அளிக்கிறது. சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும். சாய்னா நேவால் சாய்னா நேவால் ("Saina Nehwal", பிறப்பு: 17 மார்ச் 1990) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலக தரவரிசையில் முதலாவதாக உள்ளார், உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலக தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர். அரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது. டிசம்பர் 142018 இல் இவர் பாருபள்ளி காசியப் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார். 1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். 2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார். டெக்சுடர் சாக்சன் டெக்சுடர் சாக்சன் "(Dexter Jackson)" அல்லது "தி ப்ளேடு" "(The Blade)" என்பவர் புளோரிடாவைச் சேர்ந்த சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனத்தின் "(IFBB)" தொழிற்சார் உடற்கட்டாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டமான திரு. ஒலிம்பியா (2008) பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25ஆம் தேதி பிறந்தார். லென் அட்டன் லென் ஹட்டன் (Len Hutton,12.06.1903, யோர்க்சயர், இங்கிலாந்து - (06.09.1990) துடுப்பாட்ட வீரர் ஆவார். இங்கிலாந்து அணி சார்பாக 1937 இல் நியூசிலாந்துக்கு எதிராக தன் முதல் ரெஸ்ட் போட்டியை லோர்ட்ஸ் ஆடுகளத்தில் விளையாடிய ஹட்டன் பெற்ற ஓட்டங்கள் வெறும் 0 மற்றும் 1. அடுத்த போட்டியில் தன் முதல் சத்தைப் பெற்றார். அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1938 இல் ஓவல் மைதானத்தில் டொன் பிரட்மன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 13 மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 364 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தில் ஆடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 579 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரெஸ்ட் வரலாற்றில் இன்று வரை மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஹட்டன் காயமடைந்தார். சத்திரசிகிச்சை காரணமாக அவரது இடது கை வலது கையை விடச் சற்றுக் கட்டையானதாகியது. ஆயினும் போர் முடிந்தபின் ஹட்டன் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 1950 இல் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளிற்கெதிராக ஆட்டமிழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்றார். 1952 இல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்ற போது ஹட்டன் இங்கிலாந்து அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அணித்தலைமைப் பொறுப்பேற்ற முதல் தொழில்முறை வீரர் ஹட்டன் தான். 1958 இல் ஹட்டனுக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது. சாரா கொல்லியர் சாரா கொலயர் ("Sarah Collyer", பிறப்பு: அக்டோபர் 3 1980), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஹொலி கொல்வின் ஹொலி கொல்வின் ("Holly Colvin", பிறப்பு: செப்டம்பர் 7 1989 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிளேர் கானர் கிளேர் கானர் ("Clare Connor", பிறப்பு: பெப்ரவரி 1, 1976), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜாக்லின் கோர்ட் ஜாக்லின் கோர்ட் ("Jacqueline Court", பிறப்பு: சனவரி 22 1950), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோன் டேவிஸ் ஜோன் டேவிஸ் ("Joan Davis", பிறப்பு: சூன் 2 1911, இறப்பு: 2004), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தொல்காப்பியம் பெயரியல் செய்திகள் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் பெயர், வினை என்னும் சொல் பாகுபாடு உண்டு. இயற்கைப் பொருள்களுக்கும் செயற்கைப் பொருள்களுக்கும் மொழி பெயரிட்டு வழங்குகிறது. இது பெயர். பெயரின் இயக்கம் வினை. தமிழிலுள்ள பெயர்ச்சொற்களை விளக்குவது பெயரியல். இது தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் ஐந்தாவது இயல். இதில் சொல்லப்படும் செய்திகள் நூற்பா வரிசையெண் குறிப்புடன் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழியிலுள்ள எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு -1- பொருளைத் தெரிவித்தல், சொல்லைத் தெரிவித்தல் ஆகியவை சொல்லின் செயல் -2- சொல்லின் செயலானது தெரிபுவேறு நிலையல், குறிப்பில் தோன்றல் எனப் பொருள்-தோன்று-நிலை இரு வகைப்படும் -3- சொல்லின் வகைகள்: பெயர், வினை என்று சொல் இரண்டு வகைப்படும் -4- அவற்றின் வழியே இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை தோன்றும் -5- உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல், இருதிணைக்கும் உரிய சொல் –எனப் பெயர்ச்சொல் 3 வகைப்படும் -6- இரு திணைக்கு உரிய சொற்கள் 5 பாலில் வரும் -7- பால் அறிய வந்த உயர்திணைச் சொற்கள் 15 -8- மேலும் 15 சொற்கள் உயர்திணைக்கு உரியவை -9- மேலும் இவை உயர்திணைக்கு உரியவை -10- மேலும் இவை உயர்திணைக்கு உரியவை -11- அன்ன பிற -12- பால் அறிய வந்த அஃறிணைப் பெயர்கள் 15 -13- மேலும் 9 அஃறிணைப் பெயர் -14- ‘கள்’ளொடு சிவணும் பெயர் பல-அறி சொல்லாக வரும் -15- பல-அறி சொல் அன்ன பிற -16- அஃறிணை விரவுப்பெயர் வினையொடு வரும்போது பால் உணர்த்தும் -17- விரவுப்பெயர் (இரு திணையிலும் வரும் பெயர்) வினையொடு வரும்போதுதான் பால் உணர்த்தும் -18- செயல்படுவதாலும் பால் உணரப்படும் -19- பெயர்ச்சொல் 10 வகை இயற்பெயர் 4, சினைப்பெயர் 4, முறைப்பெயர் 2 (நூற்பா 20 முதல் 25) பெண்பெயர் ஒருத்திக்கும், ஒன்றன் சினைப்பெயருக்கும், ஒன்றன் முறைப்பெயருக்கும் பொது -26- என வரும் ஆண் பெயர் -27- என வரும். பன்மைப்பெயர் ஒன்றன்-பாலுக்கும், பலவின்-பாலுக்கும், ஒருவருக்கும் உரிமை பெற்று வரும் -28- ஒருமைச் சுட்டிய பெயர் ஒன்றற்கும், ஒருவர்க்கும் பொருந்தும் -29- தாம் என்பது பன்மைக்கு உரியது -30- தான் என்பது ஒருமைக்கு உரியது -31- எல்லாம் என்பது மூவிடத்துக்கும் உரியது -32- உயர்திணையில் தன்னை உள்ளிட்ட பன்மைக்கே இது உரியது. படர்க்கைப் பனமைக்கு எல்லாம் என்னும் சொல் வரக்கூடாது. -33- நீயிர், நீ என்னும் சொற்களுக்குப் பால் இல்லை -34- நீ ஒருமைக்கு உரியது -35- நீயிர் பன்மைக்கு உரியது -36- ஒருவர் என்னும் சொல் ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும் உரியது -37- ஒருவர் என்னும் சொல் தன்மையை உணர்த்துமானால் அப்போது அது பன்மை -38- இவற்றையெல்லாம் உன்னிப்பாக முன்னத்தால் உணர்ந்துகொள்ள வேண்டும் -39- பெண்மகன் என்னும் சொல் பெண்மகன் வந்தாள் என்று சொல்லப்படும் -40- செய்யுளில் ஆன்-ஈறு ஓன்-ஈறு ஆகும் -41- செய்யுளில் இறைச்சிப்பொருளை (கருப்பொருளை)ச் சுட்டும் பெயர் உயர்திணையை உணர்த்தாது -42- சார்லட் எட்வர்ட்சு சார்லட் எட்வர்ட்சு ("Charlotte Edwards ", பிறப்பு: திசம்பர் 17 1979), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மென்டி கொட்லிமன் மென்டி கொட்லிமன் ("Mandie Godliman", பிறப்பு: ஏப்ரல் 5 1973), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஈசா குகா ஈசா குகா ("Isa Guha", பிறப்பு: மே 21 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். களையான தோற்றமும், நல்ல நிறமும் கொண்ட வீராங்கனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்குக் குடியேறியவர்கள். 5' 1" உயரம் கொண்ட இந்த மிதவேக வீச்சாளர் தற்போது ஐபிஎல் உரையாளராக சிறப்பான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். ஜென்னி கன் ஜென்னி கன் ("Jenny Gunn", பிறப்பு: மே 9 1986), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 170 பெண்கள் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜாய்ஸ் ஹேடில்சி ஜாய்ஸ் ஹேடில்சி ("Joyce Haddelsey", பிறப்பு: 1898), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். லாரா ஹார்ப்பர் லாரா ஹார்ப்பர் ("Laura Harper", பிறப்பு: சனவரி 22 1984), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லிங்கனமக்கி அணை லிங்கனமக்கி அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் சராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது சாகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2.4 கி.மீ. ஜோக் அருவியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இவ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1819 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 55 மெகாவாட் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. பசவ சாகர் அணை பசவசாகர் அணை என்பது கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இது நீர்ப்பாசன வசதிக்காக கட்டப்பட்ட அணையாகும். நேத்ராவதி ஆறு நேத்ராவதி ஆறு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள குதிரேமுக் பகுதியில் உற்பத்தியாகி வரும் ஆறு. இது தர்மஸ்தாலா நகரின் குறுக்கே பாய்கிறது. இது பின்னர் குமாரதாரா ஆற்றுடன் சேர்ந்து பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது. இது ஏறத்தாழ 1353 ச.கி.மீ வடிநிலப் பரப்பைக் கொண்டது. நேத்ராவதியின் கரைகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் தொழில் வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் ஆகும். பருவமழை ஓய்ந்த காலங்களில் இந்த ஆறே வேளாண்மைக்கு ஆதாரம் ஆகும். இவ்வாறு மிகுந்த நீர் வளப்பம் கொண்டது. இவ்வாற்றில் மீன்பிடியை நம்பியே நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன.மேலும் இவ்வாற்றின் படுகைகளில் இருந்து மணல் வாரப்படுகிறது. இவ்வாற்றில் அமைந்துள்ள பாலம் மங்களூர் நகரின் நுழைவாயிலாகும். நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்த ஆறானது "பாந்த்வால் ஆறு" (Bantwal River) என அழைக்கப்பட்டது. இந்த ஆறானது கர்நாடகம் மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றனது. பெல்ஹம் வார்னர் பெல்ஹம் வானர் ("Pelham Warner", பிறப்பு: அக்டோபர் 2 1873, இறப்பு: சனவரி 30 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 521 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 -1912 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் வார் ஜோன் வார் ("John Warr", பிறப்பு: சூலை 16 1927), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 344 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அர்னால்ட் வார்ரென் அர்னால்ட் வார்ரென் ("Arnold Warren", பிறப்பு: ஏப்ரல் 2 1875, இறப்பு: செப்டம்பர் 3 1951) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 255 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1905 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சிரில் வாஷ்புரூக் சிரில் வாஷ்புரூக் ("Cyril Washbrook", பிறப்பு: திசம்பர் 6 1914, இறப்பு: ஏப்ரல் 27 1999), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 592 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 -1956 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஸ்டீவ் வாட்கின் ஸ்டீவ் வாட்கின் ("Steve Watkin", பிறப்பு: செப்டம்பர் 15 1964 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அலன் வாட்கின்ஸ் அலன் வாட்கின்ஸ் ("Allan Watkins", பிறப்பு: ஏப்ரல் 21 1922 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 484 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 -1952 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மைக் வாட்கின்சன் மைக் வாட்கின்சன் ("Mike Watkinson", பிறப்பு: ஆகத்து 1 1961 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். வில்லி வாட்சன் வில்லி வாட்சன் ("Willie Watson", பிறப்பு: மார்ச்சு 7 1920, இறப்பு: ஏப்ரல் 24 2004 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 468 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஏ. ஜே, வெப்பி ஏ. ஜே, வெப்பி ("A. J. Webbe", பிறப்பு: சனவரி 16 1855, இறப்பு: பிப்ரவரி 19 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 468 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார். ஆர்தர் வெலாட் ஆர்தர் வெலாட் ("Arthur Wellard", பிறப்பு: ஏப்ரல் 8 1902, இறப்பு: திசம்பர் 31 1980) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 - 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அலன் வெல்ஸ் அலன் வெல்ஸ் ("Alan Wells", பிறப்பு: அக்டோபர் 2 1961) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். தமிழர் திருமணம் (நூல்) தமிழர் திருமணம் எனும் நூல், 1956 ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. நூலாசிரியர் தேவநேயப் பாவாணர் நூல் முகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இந்நூலின் முன்னுரையிலே வாழ்க்கை நோக்கம், வாழ்க்கைமுறை, இல்லறச்சிறப்பு, திருமணமும் கரணமும், மணமக்கள் பெயர், அன்பும் காதலும் காமமும் எனும் தலைப்புக்களில் திருமணம் என்பதை வரையறுக்கின்றார் பாவாணர். நூலிலே, பண்டைத்தமிழ்மணம் எனும் குறுந்தலைப்பின் கீழ் பண்டைக்காலத்தில் நிலவிவந்த மணவகை, மணத்தொகை, மணநடைமுறை முதலியன பற்றி பேசுகிறார்; இடைக்கால மாறுதல்கள் எனும் குறுந்தலைப்பின் கீழ் பிராமணப் புரோகிதமும் வடமொழிக்கரணமும், ஆரியக்கரணத்தால் விளைந்த தீமைகள், குலக்கட்டுப்பாடு மிகை, பொருந்தா மணமும் வீண்சடங்கும் என்ற தலைப்புக்களில் திருமண முறையிலுள்ள குறைகளைச் சாடுகின்றார்; திருமணச் சீர்திருத்தம் எனும் தலைப்பின் கீழ் சீர்திருத்த இயக்கம், பெற்றோர் கவனிக்க வேண்டியவை, மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டியவை, அரசியலார் கவனிக்க வேண்டியவை, போலிச்சீர்திருத்த மணங்கள், பெண்டிர் சமன்மை ஆகிய எவ்வெவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் உரைக்கின்றார். சமச்சீர்மை சமச்சீர் ("symmetry") என்பது, அன்றாட மொழியில் ஒன்றின் இசைவிணக்கம், அழகான விகிதம் மற்றும் சமநிலையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இது துல்லியமானதும் தெளிவாக வரையறுக்கப்பட்டதுமான ஒன்று. இதனால், இதனைக் கணித அல்லது இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி விளக்கவும், நிறுவவும் முடியும். சமச்சீர் என்னும் இந்தக் கருத்துரு பல்வேறு விதமாகப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் "சமச்சீர்க்" கருத்துரு பின்வரும் இடங்களில் பயன்படுகின்றது: தன்னெதிர்ப்பினால் உருவாகும் முடக்குவாத நோயை வகைப்படுத்தும் விதிகளில் ஒன்றாக, சமச்சீராக (உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள அதேபோன்ற மூட்டுப்பகுதிகள்) இந்நோயினால் பாதிப்படைவது சேர்க்கப்பட்டுள்ளது. என்றாலும், உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள சிறு மூட்டுகளில் ஏற்படும் முடக்குவாத நோய் பாதிப்பின் சமச்சீர்மை அறுதியாக இல்லாவிட்டாலும் முடக்குவாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது. வடிவவியல், நுண்கணிதம், தொகையிடல், தொடர்கள், நேரியல் இயற்கணிதம், நுண் இயற்கணிதம், வகையீட்டுச் சமன்பாடுகள், நிகழ்தகவு போன்ற கணிதத்தின் பல பிரிவுகளிலும் சமச்சீர்மை காணப்படுகிறது. ஒரு பொருளானது குறிப்பிட்ட சில உருமாற்றங்களின்கீழ் அதன் சில அளவீடுகள் மாற்றமுறாமல் அமையும் பண்பே சமச்சீர்மையாகும். ஒரு கட்டமைப்புள்ள பொருள் "X" ஐ அதன் கட்டமைப்பு மாறாமல் "X" ஆகவே மாற்றும் கோப்பாக சமச்சீர் அமைகிறது. எடுத்துக்காட்டாக, பலவிதமான சூழல்களிலும், சமூக இடைவினைகளிலும், சமச்சீரற்ற சமநிலைகளிலும், மக்கள் பெரும்பாலும் சமச்சீர்மையைக் காண்கின்றனர். சமச்சீர்மை என்பது, நேர்எதிர்மை, பிரதிச்சலுகை, இணைக்கிணை வாங்கல், பச்சாதாபம் புரிந்துணர்வு, பரிவு, செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோருதல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், உரையாடல், மரியாதை, நீதி, மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மதிப்பீடுகள் செய்வதை உள்ளடக்கியதாகும். பொதுக் கொள்கைகள், திட்டவட்டமான தீர்ப்புகள் இவற்றுக்கிடையே, ஆழ்ந்தாராய்ந்து எச்சரிக்கையாய்ச் செய்யும் பரஸ்பர சரிசெய்தல் மூலம் பெறப்படும் சமநிலை, பிரதிபலிப்புச் சமநிலை ஆகும். சமச்சீர் கலந்துரையாடல்களில், வெளிப்படும் ஒழுக்கம் சார்ந்த வாக்கியம், "நாம் அனைவரும் சமம்", "நாம் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள்" போன்றவையாகும். சமச்சீரற்ற கலந்துரையாடல்களில், வெளிப்படும் வாக்கியம், "நான் சிறப்பானவன். நானே உன்னைவிட மேலானவன்" போன்றவையாகும். சம தரத்தில் உள்ளவர்களின் உறவுகள், சமச்சீர் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஆனால், அதிகார உறவுகள் சமச்சீரற்ற தன்மை கொண்டவை என்பதே மனித உறவுகளின் தங்க விதி ஆகும். சமச்சீர் உறவுகளை 'இதற்கும் அதற்கும் சரியாகிப் போய்விட்டது' என்ற எளிய விளையாட்டு உத்திகளின் மூலம் குறிக்கலாம். கட்டிடக்கலையின் ஒவ்வொரு அலகிலும், சமச்சீர்மை முக்கிய இடம் பெற்றுள்ளது. கட்டிடக்கலையில் சமச்சீர்மைக்கு உதாரணம்: கோதிக் தேவாலயங்கள், வெள்ளை மாளிகை, குதுப்மினார், தஞ்சாவூர் கோபுரம், போன்றவை. இத்துடன், கட்டிடங்களில் பயன்படுத்தப்படும், தரைத் திட்டங்கள், பல்லடுக்குத்தரை, அடுக்கழகுத்திரை, பல்வணிப்பதிகல் போன்ற கட்டுமானவியல் கூறுகளும் சமச்சீர்மைத் தன்மை பெற்றுள்ளன. தாஜ் மகால் போன்ற இஸ்லாமிய கட்டிடங்களின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றில், சமச்சீர் தன்மையின் விரிவான பயன்பாடு மிகுந்து காணப்படுகின்றது. அல்கம்றா போன்ற மூரிஷ் கட்டிடங்கள், இயல் பெயர்ச்சி மற்றும் பிரதிபலிப்பு சமச்சீர் மற்றும் சுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறப்பில்லாத கட்டிடக் கலைஞர், சமச்சீர்மை, பொருண்மை, வரைபட வடிவமைப்பு தளவமைப்பு போன்றவற்றை நம்பி இருப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச பாணியில் தொடங்கி நவீன கட்டிடக்கலையானது, இறக்கைகளையும், பொருண்மைச் சமநிலையையும் சார்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. மட்பாண்டங்களை வடிவமைப்பதற்கு மட்பாண்ட சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால், அவை வலுவான சமச்சீர்மை பெற்றுள்ளன. மட்பாண்ட சக்கரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மட்பாண்டங்கள் செங்குத்து அச்சில் சுழல்வதால், அதன் சுழற்சியில் முழு சுழற்சி சமச்சீர் அமைப்பைப் பெறுகிறது. மேலும், செங்குத்து திசையில் போதுமான அளவு மாற்றங்களைச் செய்யும் அளவுக்கு சுதந்திரத்தை அனுமதிக்கிறது. உலோகப் பாண்டங்கள் செய்யும் போது, மட்பாண்டங்கங்களைப் போல் சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இவற்றில் இயல்பான சுழற்சி சமச்சீர் தன்மை அமைவது இல்லை. கி.மு. 17 ஆம் நூற்றாண்டில் பண்டைய சீனர்கள், வெண்கல வார்ப்புகளைப் பயன்படுத்தி சமச்சீர் அமைப்புகள் கொண்ட உலோகப் பாண்டங்களை உருவாக்கினர். வெண்கலப் பாத்திரங்கள், இருபக்க கலை அலங்கார வேலை நோக்குருக்களையும், ஒரே மாதிரியான விளிம்பு வடிவமைப்பையும் காட்சிப்படுத்தின. ஒரு தொகுப்புக்கு வழக்கமாக 9, 16, அல்லது 25 துண்டுத் துணிகள் சேர்த்து ஒட்டுத்தையல் வடிவமைப்புத் துணிகள் மற்றும் கைவினை வேலைப்பாட்டு வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் துணிகள் பெரும்பாலும் முக்கோண வடிவங்களையும், சதுர வடிவங்களையும், பெற்றுள்ளதால் இவற்றில் சமச்சீர்மைத் தன்மை வெளிப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களில், கம்பளம் மற்றும் தரைவிரிப்புகளில் சமச்சீர்மைப் பயன்பாடு நீண்ட பாரம்பரியப் பண்பு கொண்டுள்ளது. அமெரிக்க நவாஜோ இந்தியர்கள் திடமான மூலைவிட்டங்கள் மற்றும் செவ்வக வடிவங்களை உடைய சிந்தனை அடிப்படையிலான கருத்து அலங்கார வேலை நோக்குருக்களைப் பயன்படுத்தினர். பல கிழக்கத்திய விரிப்புகள் கடுஞ் சிக்கலான, புதிரான, பிரதிபலிப்பு மையங்களையும், எல்லைகளையும், விளிம்பு வடிவமைப்புகளையும் கொண்டுள்ளன. செவ்வக விரிப்புகள் பொதுவாக நாற்கோண சமச்சீர் வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. அதாவது, கிடைமட்ட அச்சுகளும், செங்குத்து அச்சுகளும், முழுவதும் பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டன. ஸ்டீவ் ரீச் (Steve Reich), பெலா பார்டோக் (Béla Bartók), ஜேம்ஸ் டென்னி (James Tenney) போன்ற பல இசையமைப்பாளர்கள், இசை வடிவங்களில் சமச்சீர்மை கொண்ட பரம பெருக்க வடிவம் (ஏ.பி.சி.பி.ஏ - ABCBA) போன்றவற்றைப் பயன்படுத்தி முறையான இசை வடிவமைப்பில் இருந்த தடைகளைக் களைந்தனர். சமச்சீர்மை இசை அமைப்பில் ஒரு முறையான வடிவத்திற்கு வழிகோலியது. இசையமைப்பாளர் பாச் (Bach) பாரம்பரிய இசையில், பல்வகை நிலை மாற்றம், வரிசைமாற்றம், மாற்றமின்மை எனும் சமச்சீர்மைக் கருத்துக்களைப் பயன்படுத்தினார். அனைத்து வகையான பொருட்களிலும் சமச்சீர் தன்மைத் தோற்றம் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணங்கள்: மணி வேலைப்பாடுகள், மரச்சாமான்கள், மணல் ஓவியங்கள், முடிச்சு வேலைகள், முகமூடிகள், வாத்தியக் கருவிகள் போறவை. எம்.சி. எஷ்ஷர் (M.C. Escher) தம்முடைய சுவரோவியங்கள், பீங்கான், தாழ்வார ஓடுகள், கூரை ஓடுகள், உள்ளீடற்ற ஓடுகள், பல்வணிப்பதிகல், நெசவுத்தொழில், மெழுகு அச்சுகள், கம்பளத் தயாரிப்பு, சித்திரத்தையல் போன்ற கலை மற்றும் கைவினை படிவங்களில் சமச்சீர் தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.  அகப்பா அகப்பா என்பது மலைமீது இருந்த ஓர் ஊர். அதனைச் சுற்றி அகழி இருந்தது. கோட்டை வாயிலுக்குத் தொங்கும் கதவு இருந்தது. அந்தக் கதவைத் தாழ்ப்பாள் போட அமைத்திருந்த ஐயவி என்னும் குறுக்கு மரத்தைத் தூக்க வில்விசை வைக்கப்பட்டிருந்தது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொங்குநாட்டை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்த பின்னர் இந்தக் கோட்டையைத் தாக்கி வென்றான். குட்டுவன் ஆண்ட இந்த அகப்பா நகரைத் தாக்கிச் செம்பியன் பகலிலேயே அதனைத் தீயிட்டுக் கொளுத்தினான். இந்தச் செய்திகளைத் தொகுத்து எண்ணிப் பார்க்கும்மோது தூங்கெயில் கதவம் காவல் கொண்ட வண்டனும், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனும் நினைவுக்கு வருகின்றனர். அகப்பாக் கோட்டை அரசன் வண்டன். இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் வென்று தனதாக்கிக்கொண்டான். பின்னர் இந்தக் குட்டுவனைத் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் வென்று அகப்பாக் கோட்டையை வென்று ஊரைத் தீக்கு இரையாக்கினான் – என்னும் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. தூங்கெயில் தூங்கெயில் கதவம் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் என்பவன் ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான். ந. மகேசுவரி ந. மகேசுவரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மாங்கனி, மோகினி, பாரதி ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார், இவர் ஒரு ஆசிரியர். 1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். எம். மகேந்திரன் எம். மகேந்திரன் (பிறப்பு: டிசம்பர் 29 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் எம். பிரபு எனும் பெயரிலும் எழுதிவருகின்றார். 1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய சிறுகதைகள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலாய் மொழியிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மலாய்ச் சிறுகதைகள் பல மலாய் மொழி சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. ம. மகேஸ்வரி ம. மகேஸ்வரி (பிறப்பு: ஏப்ரல் 1 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். 1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிக்கும் அதிகமாக எழுதியுள்ளார். பெ. மங்கள கௌரி பெ. மங்கள கௌரி (பிறப்பு: சூன் 1 1961) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றி வருகின்றார். சிதனா என்பது இவரின் புனைபெயர் 1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சி. மணிக்குமரன் சி. மணிக்குமரன் (பிறப்பு: மே 15 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் திருக்குறள் பரப்புநராகவும், சமயப் பிரச்சாரகராகவும் பணியாற்றி வருகின்றார். குழந்தைகளுக்குத் திருக்குறளுடன் மும்மொழிப் பயிற்சியும் அளித்து வருகிறார். 1963 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் திருக்குறள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஜாக்கி ஹாக்கர் ஜாக்கி ஹோக்கர் ("Jackie Hawker", பிறப்பு: பிப்ரவரி 21 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ராக்கேல் ஃபிளின்ட் ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட் ("Rachael Heyhoe Flint", பிறப்பு: சூன் 11 1939 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மோலி ஹைட் மோலி ஹைட் ("Molly Hide", பிறப்பு: அக்டோபர் 24 1913, இறப்பு: செப்டம்பர் 10 1995 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோய் லீபர்ட் ஜோய் லீபர்ட் ("Joy Liebert", பிறப்பு: மே 16 1914, இறப்பு: சூன் 8 1999), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பால்கன் போர்த்தொடர் இரண்டாம் உலகப் போரில் பால்கன் போர்த்தொடர் ("Balkans Campaign") என்பது அச்சு நாடுகள் பால்கன் குடா பகுதியைக் கைப்பற்ற நடத்திய படையெடுப்புகளையும் அவற்றால் விளைந்த சண்டைகளையும் குறிக்கின்றது. அக்டோபர் 28, 1940 - ஜூன் 1, 1941 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இப்போர்த்தொடரில் அச்சுப் படைகள் அல்பேனியா, யுகோஸ்லாவியா, கிரீசு ஆகிய நாடுகளைக் கைப்பற்றி ஆக்கிரமித்தன. பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். மேற்குப் போர்முனையில் சண்டை ஓயுமுன்னர், ஜெர்மனியின் கவனம் கிழக்கு நோக்கித் திரும்பியது. சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்க இட்லர் முடிவு செய்தார். இப்படையெடுப்புக்குத் துணையாக இருக்க பல்கேரியா, ரொமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியும் வலியுறுத்தியும் அச்சுக் கூட்டணியில் சேரச் செய்தார். பால்கன் குடா பகுதியில் இருந்த யுகோஸ்லாவியா மட்டும் ஜெர்மானிய வற்புறுத்தல்களுக்கு இணங்க மறுத்து வந்தது. இப்படி இருவேறு காரணங்களால் அச்சு நாடுகளின் கவனம் பால்கன் பகுதி மீது திரும்பியது. இத்தாலி கிரீசை சரணடைந்து தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியது. கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள். அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி, இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன. முசோலினிக்கு உதவுவதைத் தவிர கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்குவதைத் தவிர்க்கவும் ஜெர்மானியர்கள் விரும்பினர். அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார். ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. யுகோசிலாவியா மீது படையெடுத்த அன்றே கிரீசையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. இத்தாக்குதல் மாரிட்டா நடவடிக்கைஎன்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின. அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிரீசு முழுமையாகக் கைப்பற்றப்படும் முன்னர் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். சில தீவுகளைத் தவிர கிரேக்க மூவலந்தீவில் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். அத்தீவில் கிரேக்கப்படைகளைத் தவிர பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர். மே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. ஆனால் அவற்றுக்கு கிரேக்க, நேச நாட்டுப் படைகள் மற்றும் கிரீட்டின் பொதுமக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வான்குடை படைப்பிரிவுகள் பெருமளவில் ஒரு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. மேலும், ஜெர்மானியப் படைகளை, அவை தாக்கும் நாட்டின் பொதுமக்கள் பெருமளவில் எதிர்த்துத் தாக்கியதும் இதுவே முதல் முறை. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. முதல் நாள் தாக்குதலில் ஜெர்மானியர்களால் தங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய இலக்குகள் எதனையும் கைப்பற்ற இயலவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் பல விமான ஓடுதளங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலம் புதிய துணைப் படைப்பிரிவுகள் கிரீட்டுக்கு அனுப்பப்பட்டன. கிரீட்டில் ஜெர்மானியப் படைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றைச் சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின் வாங்க முடிவு செய்தனர். மே 27ம் தேதி ஜெர்மானியப் படைகளுக்குத் துணையாக 3000 பேர் கொண்ட ஒரு இத்தாலியப் படைப்பிரிவும் கிரீட்டில் கடல்வழியாகத் தரையிறங்கி முன்னேறத் தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களில் கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது. பால்கன் போர்த்தொடரின் முடிவில் பால்கன் குடா முழுவதும் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் கிரீசிலும், யுகோசிலாவியாவிலும் உள்ளூர் எதிர்ப்புப் படைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அச்சு ஆக்கிரமிப்புப் படைகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் எதிர்த்து கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். பால்கன் போர்த்தொடரினால் இரண்டாம் உலக்ப் போரின் போக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கிரீசு மற்றும் கிரீட் சண்டைகள் போரின் போக்கினைப் பெருமளவில் பாதித்தன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் வரலாற்றாளர்களுள் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர். கிரீட் சண்டையே உலகில் வான்குடைப் படைப்பிரிவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரும் படையெடுப்பு. இது ஜெர்மானியர்களுக்குப் பெருவெற்றியில் முடிவடைந்ததாலும் அப்படைப்பிரிவுகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளால் இட்லர் இனி இத்தகு பெரும் தாக்குதல்களில் அவற்றை ஈடுபடுத்தக் கூடாது என தன் தளபதிகளுக்கு ஆணையிட்டு விட்டார். அதே வேளை ஜெர்மானிய வான்குடைப் படைகளின் திறனை உணர்ந்து கொண்ட நேச நாட்டு தளபதிகள் தங்கள் படைகளிலும் இத்தகு படைப்பிரிவுகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினர். தற்காலப் படைத்துறைகளில் வான்குடைப் படைப்பிரிவுகள் இன்றியமையா அங்கங்களாக உள்ளன. மர்ட்டில் மெக்லகன் மர்ட்டில் மெக்லகன் ("Myrtle Maclagan", பிறப்பு: ஏப்ரல் 2 1911, இறப்பு: மார்ச்சு 11 1993 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1951 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லாரா மார்ஷ் லாரா மார்ஷ் ("Laura Marsh", பிறப்பு: திசம்பர் 5 1986), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோய் பாட்டிரிஜ் ஜோய் பாட்டிரிஜ் ("Joy Partridge", பிறப்பு: 1889, இறப்பு: ஏப்ரல் 2 1947), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லூசி பியர்சன் லூசி பியர்சன் ("Lucy Pearson ", பிறப்பு: பெப்ரவரி 19 1972 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜேன் பவல் ஜேன் பவல் ("Jane Powell ", பிறப்பு: சனவரி 19 1957), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1990 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிலாபத் இயக்கம் கிலாபத் இயக்கம் அல்லது கிலாஃபட் இயக்கம் 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. ஒட்டோமானிய கலீபகத்தைப் பாதுகாக்கும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தியது. காங்கிரசு அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முசுலிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரசும் கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவ்வியக்கம், தேசியவாதத்துக்கு எதிரான பரந்த இசுலாமியத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டிய முசுலிம் லீக் மற்றும் இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் இதனை எதிர்த்தன. கிலாபத் இயக்கத்தின் விளைவாக கேரளாவின் மலபார் பகுதியில் உருவாகிய மாப்ளா கலகத்தில் கடும் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன. இதனால் கிலாபத் இயக்கம் சர்ச்சைகளுக்காளாகியது. காங்கிரசுக்குள்ளும் அதற்கு எதிர்ப்பு உருவானது. சவுரி சாவ்ரா நிகழ்வுக்குப் பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதை அலி சகோதரர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கத்தைத் தனியே தொடர்ந்தனர். 1924ல் துருக்கியில் கெமால் அடாடுர்க் தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் உதுமானியக் கலீபகம் ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு உருவானதால் கிலாபத் இயக்கம் பலனற்றுப் போனது. மத அடிப்படையில் ஓர் அரசு (கலீபகம்) அமைவதற்காக இந்த இயக்கம் செயல்பட்டதால், இந்தியப் பிரிவினைக்கும் பாக்கித்தானின் உருவாக்கத்துக்கும் இது முன்னோடியாகக் கருதப்படுகிறது. மேரி ரிச்சர்ட் மேரி ரிச்சர்ட் ("Mary Richards)", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1935ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெட்டி ஸ்னோபோல் பெட்டி ஸ்னோபோல் ("Betty Snowball", பிறப்பு: சூலை 9 1908, இறப்பு: திசம்பர் 13 1988), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மேரி ஸ்பியர் மேரி ஸ்பியர் ("Mary Spear", பிறப்பு: செப்டம்பர் 11 1913, இறப்பு: ஏப்ரல் 10 2006), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லோரா ஸ்பிராக் லோரா ஸ்பிராக் ("Laura Spragg", பிறப்பு: சூன் 16 1983), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மேரி ஸ்பிரை மேரி ஸ்பிரை ("Mary Spry", பிறப்பு: ஆகத்து 9 1922), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 195ஒன்றில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எவ்ரில் ஸ்டாலின் எவ்ரில் ஸ்டாலின் ("Avril Starling", பிறப்பு: ஏப்ரல் 9 1953), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1986 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜுன் ஸ்டீபன்சன் ஜுன் ஸ்டீபன்சன் ("June Stephenson", பிறப்பு: சனவரி 30 1943), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1966 - 1976 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அமேண்டா ஸ்டின்சன் அமேண்டா ஸ்டின்சன் ("Amanda Stinson", பிறப்பு: 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டெப்ரா ஸ்டாக் டெப்ரா ஸ்டாக் ("Debra Stock", பிறப்பு: சூலை 17 1962), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜில் ஸ்டொக்டேல் ஜில் ஸ்டொக்டேல் ("Jill Stockdale", பிறப்பு: 1963), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1985 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஹெலன் ஸ்டொதர் ஹெலன் ஸ்டொதர் ("Helen Stother", பிறப்பு: சூன் 21 1955), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982–1986 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜேன் சவுத்கேட் ஜேன் சவுத்கேட் ("Jan Southgate", பிறப்பு: செப்டம்பர் 24 1955), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1985 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜில் கிரவீஸ் ஜில் கிரவீஸ் ("Jill Cruwys ", பிறப்பு: திசம்பர் 5 1943, இறப்பு: திசம்பர் 30 1990), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜீன் கம்மின்ஸ் ஜீன் கம்மின்ஸ் ("Jean Cummins ", பிறப்பு: சூலை 3 1920, இறப்பு: மார்ச்சு 29 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 -ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அரங்க. சீனிவாசன் அரங்க.சீனிவாசன் (செப்டம்பர் 29, 1920 - சூலை 31, 1996) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். மகாத்மா காந்தியைத் கதைத்தலைவராய்க் கொண்டு மனித தெய்வம் காந்தி காதை என்ற காப்பிய நூலை எழுதியவர். சீனிவாசன் பர்மாவில் "பெகு" மாவட்டத்தின் "சுவண்டி" என்ற சிற்றூரில் அரங்கசாமி நாயுடு, மங்கம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். மங்கம்மாள், நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவில் துப்பாக்கி ஏந்திப் போரிட்டவர். 1942-இல் இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து கால்நடையாக இந்தியா வந்தார். இடையில் குண்டர்களின் தாக்குதலால், கெளஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். இராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சமக்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆராய்ச்சி முனைவராகப் பணிபுரிந்தார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார். திண்டுக்கல் அருகே கோவிலூரில் வாழ்ந்து வந்தார். இரண்டு தன் வரலாற்று நூல்கள் எழுதினார். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் படத்தை அரும்பாடுபட்டு ஊற்றுமலை ஜமீனில் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார். அரங்க. சீனிவாசன் பத்தாம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அவை "சுதேச பரிபாலினி", "பர்மா நாடு", பால பர்மர், "சுதந்திரன்", "ஊழியன்" என்ற இதழ்களில் வெளிவந்தன. 14ஆம் வயதில் தேசிய கீதம், சரஸ்வதி துதி முதலிய சிறு நூல்களை இயற்றினார். 15ஆம் வயதில், வடமலை சீனிவாச மாலை, மணவாள சதகம் முதலான பல பிரபந்தங்களை இயற்றினார். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பழனி மாம்பழக் கவிராயரின் தலை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். திண்டுக்கல் "தோப்புச்சாமிகள்" என்ற பி.எஸ்.இராமானுச தாசரிடம் வைணவ நூல்களின் விளக்கங்களை அறிந்து கொண்டார். கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார். அங்கிருந்து வெளிவந்த "ஜோதி" மாத இதழிலும், திருச்சி "தொழிலரசு" இதழிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழகத்துக்கு வந்து முதன் முதலாக "சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை" என்ற நூலை இயற்றி, அரங்கேற்றிப் பரிசும் பணமும் பெற்றார். தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். "தியாக தீபம்" என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதினார். இதற்கு நாரண. துரைக்கண்ணன் அணிந்துரை எழுதினார். "மனித தெய்வம் காந்தி காதை" என்ற காப்பிய நூலை திருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ.சுப்புராயலு செட்டியாரின் ஆதரவில் எழுதினார். இது ஐந்து காண்டங்களில், எழுபத்தேழு படலங்களையும், 5,183 பாடல்களையும் கொண்டது. தினமணி இதழில் பலநூறு கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். தினமணியில் இவர் எழுதிய சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. வைணவத் தத்துவ அடிப்படைகள், அருள் விளக்கு அரிவையர், அறிய வேண்டிய ஐம்பொருள், திருவரங்கத் திருநூல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். "தேசிய கீதம்" முதலாக "நீலிப்பேயின் நீதிக்கதைகள்" வரை 29 நூல்களை எழுதியுள்ளார். தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, "தமிழ்க் கலைக் களஞ்சியம்" உருவாக ஒத்துழைத்தார். பல ஆண்டு மலர்களுக்கும், நினைவு மலர்களுக்கும், பற்பல சிறந்த தமிழ் நூல்களுக்கும் பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழக அரசு தொல்பொருள் துறையின் "வானர வீர மதுரைப் புராணம்" என்ற நூலைத் திருத்திப் பதிப்பித்தார். "மண்ணியல் சிறுதேர்" முதலாக "அண்ணாமலையார் நினைவு மலர்" ஈறாக 12 நூல்களைப் பதிப்பித்துள்ளார். பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, அண்ணாமலை ரெட்டியார் கவிதைகள், கூடற் கலம்பகம் ஆகிய பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். காவடிச்சிந்தை 20 ஆண்டுகள் ஆய்ந்து நல்ல காவடிச்சிந்து புகழ் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு (1989), காவடிச் சிந்தும் கவிஞர் வரலாறும் (1984) ஆகிய நூல்களை வெளியிட்டார். பார்பரா தானியேல்சு பார்பரா டேனியல்ஸ் ("Barbara Daniels", பிறப்பு: திசம்பர் 17 1964), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 - 2000 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிளயார் டெய்லர் கிளயார் டெய்லர் ("Claire Taylor", பிறப்பு: செப்டம்பர் 25 1975), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிளேர் டெய்லர் கிளேர் டெய்லர் ("Clare Taylor", பிறப்பு: மே 22 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பீட்டா டெய்லர் பீட்டா டெய்லர் ("பீடா டெய்லர்") ("Peta Taylor", பிறப்பு: ஆகத்து 18 1914, இறப்பு: 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 7 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எப்பாள் ஏரி எப்பாள் ஏரி பெங்களூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது பெல்லாரி சாலையும் பெங்களூரு வெளிவட்டப் பாதையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1537-இல் கெம்பேகௌடா அவர்களால் உருவாக்கப்பட்ட மூன்று ஏரிகளுள் ஒன்று. இந்த ஏரியில் சேர்க்கப்பட்ட கழிவுகளால் மிகவும் மாசுற்றிருந்த இது இந்திய-நார்வே சூழியல் திட்டம் ஒன்றினால் 1998-ஆம் ஆண்டு 2.7 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இங்கு தூர்வாரப்பட்ட மண்ணைக் கொண்டு இரு சிறு தீவுகள் உருவாக்கப்பட்டன. இங்கு வளர்க்கப்பட்ட தாவரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக உள்ளன. இந்த ஏரிக்கு வாத்துகள், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் முதலிய பல வகையான நீர்ப் பறவைகள் வருகின்றன. ஃகெதர் டியூட்னி ஃகெதர் டியூட்னி ("Heather Dewdney", பிறப்பு: பிப்ரவரி 17 1947), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 - 1978 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அல்சூர் ஏரி அல்சூர் ஏரி (Ulsoor lake) பெங்களூரின் பெரிய ஏரிகளுள் ஒன்று. இது பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதியான அல்சூர் பகுதியின் பெயரிலேயே ஏரி பெயரிடப்பட்டுள்ளது. 123 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரியில் பல சிறு தீவுகள் அமைந்துள்ளன. இந்த ஏரியை ஒட்டி நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆட்ரி டிஸ்பரி ஒட்ரி டிஸ்பரி ("Audrey Disbury", பிறப்பு: மார்ச்சு 5 1934), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1957/58-1968/69, 73 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பலகணி வரி பலகணி வரியானது இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து முதற்கொண்டு பின்னர் பெரிய பிரித்தானியா முழுவதினதும் சமூக, பண்பாட்டு, கட்டடத்துறை ஆகிய தளங்களில் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்கு செலுத்திய ஒரு வரியாகும். அக்கால வீடுகளின் பலகணிகள் சில செங்கல் கொண்டு அடைக்கப்பட இதுவே காரணமாயிற்று. ஷிர்லி டிரிஸ்கோல் ஷிர்லி டிரிஸ்கோல் ("Shirley Driscoll ", பிறப்பு: அக்டோபர் 25 1935), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 7 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1963 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சாங்க்கி ஏரி சாங்க்கி ஏரி பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டியுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி. 37 ஏக்கர் பரப்பள்ள இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள். இது 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினைச் சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதைக் கட்டுவதற்கு 575000 ரூபாய் செலவானது. மேரி டுகான் மேரி டுகான் ("Mary Duggan", நவம்பர் 5 1925, இறப்பு: மார்ச்சு 10 1973), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1949 - 1963 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜுன் எட்னி ஜுன் எட்னி ("June Edney", ஏப்ரல் 27 1956), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 8 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984, 1984/85 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மும்பா தேவி கோவில் மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இது தேவியின் அவதாரமான மும்பா என்ற கடவுளாக்க கட்டப்பட்டது. இது வடமொழிச் சொல்லான மகா அம்பா என்பதிலிருந்து உருவானது. ஆய் என்ற மராத்திச் சொல்லும் இதுவும் இணைந்து மும்பாய் என்ற பெயர் உருவானது. இந்தக் கோவில் 1675-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜெக்குலின் எலெட்ஜ் ஜெக்குலின் எலெட்ஜ் ("Jacqueline Elledge", சனவரி 8 1937), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கரோல் எவன்ஸ் கரோல் எவன்ஸ் ("Carol Evans", நவம்பர் 29 1938, இறப்பு: அக்டோபர் 14 2007), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1968/69 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். என்னி கீவ்ஸ் என்னி கீவ்ஸ் ("Annie Geeves", நவம்பர் 4 1914, இறப்பு: 2006), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1968/69 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். சுசான் கோட்மன் சுசான் கோட்மன் (பிப்ரவரி 5 1945), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973 - 1982 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜெனட் கொட்மென் ஜெனட் கொட்மென் ("Janet Godman", 16 மார்ச், 1966), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ரோஸ்மேரி குட்சைல்ட் ரோஸ்மேரி குட்சைல்ட் ("Rosemary Goodchild", பிறப்பு: 1936), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1966 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கே கிறீன் கே கிறீன் ("Kay Green",பிறப்பு: 1917, இறப்பு: 1997), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1954 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். லிடியா கிரீன்வே லீடியா கிரீன்வே ("Lydia Greenway", பிறப்பு: ஆகத்து 6 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 33 பெண்கள் இருபதுக்கு - 20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அலைத்தீநுண்மம் தீநுண்மங்கள் இல்லாத இடமேயில்லை என்று விவரிக்கும் அளவுக்கு இவை ஞாலத்தில் விரவிக்கிடக்கின்றன. பெருங்கடல்களின் நீர்பரப்பில் காணப்படும் நுண்ணுயிர்களில் இத்தீநுண்மங்கள் குறிப்பிடத்தக்க இடத்தையும் ஏன் அவற்றை மிஞ்சும் அளவுக்கு மிகுந்துக் கிடக்கின்றன எனக் கூறலாம். இவ்வாறு கணக்கெடுக்கப்பட்டத் தீநுண்மப் பொருட்கள் ஊட்டமில்லா/ஊட்டமற்ற நீர்நிலைகளில் (Oligotrophic water ecosystem) 10 என்கிற அளவிலும் ஊட்டநிறையுள்ள நீர்நிலைகளில் (Eutrophic water ecosystem) இவை 10 என்ற நிலையிலும் உள்ளன. இவ்வாறுப் பரவிக்கிடக்கும் தீநுண்மமானது கடல்நீரில் கரிமப் பொருட்கள் மற்றும் ஊட்டங்கள் சுழற்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன . இவ்வாறு நீர்நிலைகளில் பரவியும் சுற்றுச்சூழல் சுழற்சிக்கும் பெரிதும் துணைநிற்கும் தீநுண்மங்கள் மற்ற மிதவைவாழிகளைப்போல் இவைகளும் நீரோட்டத்திற்கு உட்பட்ட இடப்பெயர்ச்சியை சந்திக்கின்றன. இவ்வாறு நீர்மேற்பரப்பில் பரந்து எளிதாக/கட்டற்று நீந்தக்கூடிய தீநுண்மச் சமூகத்தை நாம் அலைத்தீநுண்மங்கள் (அ) மிதவைத்தீநுண்மங்கள் என அழைக்கிறோம். நீரில் இருக்கும் தீநுண்மங்களின் முதல் கண்காணிப்புத் தோன்றியது வலிமைமிக்க எதிர்மின்னி நுண்ணோக்கியின் கண்டுப்பிடிப்பிற்குப் பின்புதான் சாத்தியமாயிற்று. அறிவியல் வளர்ச்சியின் ஊக்கத்தால் கண்டறியப்பட்டதில் இவ்வுயிருருளையில் (Biosphere) 10 மடங்கு அளவுக்குத் இத்தீநுண்மங்கள் காணப்படுகின்றன. இவ்வாறுப் பரவிக்கிடக்கும் தீநுண்மங்களில் பெரிதும் காணப்படுவது பாவுண்ணி என அறியப்படும் நுண்ணுயிர்த்தின்னிகளே யாகும். இவை பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா இனங்களைக் காட்டிலும் 10 மடங்கு அளவுக்கும்/ஒரு க்யூபிக் செ.மீ.க்கு 1 கோடியளவுக்கு சுற்றுச்சூழலில் மிகுந்துக் காணக்கிடக்கின்றன. இவை பரிணாம மாற்றத்திற்கும் சுற்றுச்சூழலை நெறிப்படுத்துவதற்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்தீநுண்மங்கள் இனங்களுக்கிடையில் மரபணுவைப் பரிமாற்றுவதால் இவை இனப்பரவலிலும் (Species diversity) மேலும் ஒருத் தனியினமே உருவாகும் அளவிற்குக் காரணமாகின்றன. இவை நிலைக்கருவிலிகளுக்கிடையில் மரபணுப் பரவியிருத்தலில் மிகமுக்கியப் பங்காற்றுகிறது. Competitive dominance என்று அறியப்படும் முந்துபவர்களைக் கொன்று - அஃதாவது சூழலில் முந்திக்கொண்டு வளரும் நிலைக்கருவிலி உயிர்களை அழித்தும் அதன் வளர்ச்சி மற்றும் முந்துதலில் கண்காணிப்புச் செலுத்தி இவை ஒருக் கட்டுப்பாட்டில் நிறுத்தி வருகின்றன ஜூலியா கிரீன்வூட் ஜூலியா கிரீன்வூட் ("Julia Greenwood", பிறப்பு: 1951), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மோனா கிறீன்வூட் மோனா கிறீன்வூட் ("Mona Greenwood", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மியுரியல் ஹெடில்சே மியுரியல் ஹெடில்சே ("Muriel Haddelsey", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் ஹாஸ் ஜோன் ஹாஸ் ("Joan Hawes", பிறப்பு: நவம்பர் 18 1933, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957 - 1958 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெலீன் ஹெகார்டி ஹெலீன் ஹெகார்டி ("Helene Hegarty", பிறப்பு: 1930, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 - 1963 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கெரோல் ஹொட்ஜஸ் கெரோல் ஹொட்ஜஸ் ("Carole Hodges", செப்டம்பர் 1 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1993 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷிர்லி ஹாட்ஜஸ் ஷிர்லி ஹாட்ஜஸ் ("Shirley Hodges ", சூன் 29 1943), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 - 1982 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டான் ஹோல்டன் டான் ஹோல்டன் ("Dawn Holden", செப்டம்பர் 1 1980), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2004 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். கிளைனிஸ் ஹுல்லாஹ் கிளைனிஸ் ஹுல்லாஹ் ("Glynis Hullah", ஆகஸ்ட் 8 1948), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1982 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். எஸ்மி இர்வின் எஸ்மி இர்வின் ("Esme Irwin", பிறப்பு: சூன் 13 1931, இறப்பு: ஆகத்து 18 2001), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 4 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1961 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அட்ட வாயில் அட்டவாயில் என்னும் ஊர் நெல்வயல் சூழ்ந்திருக்கும் ஓர் ஊர். அதில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். பல ஊர்களிலிருந்தும் மக்கள் அந்த விழாவுக்குச் செல்வர். விழாவில் ‘கலி’ என்னும் மகிழ்ச்சி ஆரவாரம் மிகுந்திருக்கும். பரத்தையுடன் வாழ்ந்த கிழவன் மனைவியை நாடி இல்லம் வருகிறான். தோழி அவனை வீட்டுக்குள் விடவில்லை. கிழவன் பிரிவால் அவனது மனைவி உடலில் தித்தி என்னும் ஊரல் தோன்றி நொந்து கண்ணீர் விடுகிறாள். அவளது கண்ணீரைப் போக்க முதலில் அவளை அட்டவாயில் நகரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லும்படி தோழி வழிகாட்டுகிறாள். வழியில் கழனி வழியே செல்லும்போது நெல் கதிர்வாங்கியிருக்கும் அழகை அவள் அழகோடு ஒப்பிட்டுக் காட்டிப் பாராட்டிக்கொண்டே செல்லவேண்டும் என்றும் கூறுகிறாள். அவன் அழைத்துச் செல்வதை ஊர்மக்கள் கண்கொட்டாது பார்க்கவேண்டும் என்பதும் அவள் விருப்பம். பழையன் என்பவன் சோழனின் படைத்தலைவன் (‘சோழன் மறவன்’) அவன் உயர்த்திப் பிடித்த வேல் போல் ஊரார் கண்கள் பார்க்கவேண்டுமாம். அதிகை, கடவூர், கண்டியூர், குறுக்கை, கோவலூர், பறியலூர், வழுவூர், விற்குடி ஆகிய 8 ஊர்களைச் சைவர் வீரட்டானம் என்பர். இந்த வீரட்டானம் வேறு. அட்டவாயில் வேறு. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன் விளங்கியது எனலாம். அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்படும். ஆடு என்னும் சொல்லுக்கு வெற்றி என்னும் பொருள் உண்டு. அட்டு ஆடு பெற்ற ஊர் ஆடனை. ஆடனை என்பது சிறப்பிக்கப்பட்டுத் திருவாடனை ஆயிற்று. முற்போக்கு இலக்கியம் முற்போக்கு இலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் போக்குகளின் ஒன்று. மார்க்சிய மற்றும் பொதுவுடமைக் கருத்துக்களை வலியுறித்தியும், யதார்த்த இலக்கியத்தை முன்னிறுத்தியும் இந்தப் போக்கு அமைந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்தப் போக்கு 1950 களில் வலுப்பெற்றது. பொழுதுபோக்கு இலக்கியம் பொழுதுபோக்கு இலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் போக்குகளில் ஒன்று. பரவலான இரசணைக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த இலக்கியப் போக்கை முற்போக்கு, நற்போக்கு போன்ற இலக்கியப் போக்குகளுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். தமிழ் இலக்கியப் போக்குகள் தமிழ் இலக்கியப் போக்குகள் அல்லது தமிழ் இலக்கிய இயக்கங்கள் எனப்படுபவை ஒரு குறிப்பிட்ட நடை, தன்மை, கட்டமைப்பு, கொள்கைகள் கொண்ட இலக்கியங்களை, கலைகளைச் சுட்டுகிறது. அவற்றின் படைப்பாளிகள், அரசியல் சமூகப் வரலாற்றுப் பின்னணிகள் ஆகியவற்றையும் இலக்கியப் போக்கு அல்லது இலக்கிய இயக்கம் என்பது சுட்டி நிற்கிறது. ஆர்த்தரோசுப்பைரா ஆர்த்தரோசுப்பைரா (Arthrospira) என்பது மிதக்கும், இழைபோன்ற, சயனோபாக்டீரியா என்னும் வகையைச் சேர்ந்த உயிரினம். இவை உருளை வடிவ, பல் உயரணுவுடைய, இடஞ்சுழியாய் காணப்படும் டிரைக்கோம் (trichome) (நுண்முடியுடைய) வகை உயிரினம். இவை இயற்கையாய் வெப்பமண்டல, குறைவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உயர்ந்த பி.எச் (pH) (உயர் காரத்தன்மை) கொண்ட , கூடுதலான கார்பனேட்டு, பைகார்பனேட்டு அடர்த்திகொண்ட ஏரிகளில் காணப்படுகின்றன. ஆர்த்தரோசுப்பைரா பிளேட்டென்சிசு ("Arthrospira platensis") என்னும் வகை ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் காணப்படுகின்றது, ஆனால் ஆர்த்தரோசுப்பைரா மாக்ஃசிமா (Arthrospira maxima) என்னும் வகை நடு அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது. ஆர்த்தரோசுப்பைராவில் இருந்து மாந்தர்களுக்கும் பிற சில விலங்குகளுக்கும் பயன்படும் இசுப்பைருலீனா (Spirulina)என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து பெறுகின்றார்கள் . ஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ 55/6 வோடர் டேங் வீதி, ரம்புக்கென்னையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். சஜித் பிரேமதாச 11/01, ரோயல் பார்க் எபார்மன்ட், லேக் டிரைவ், இராஜகிரியாவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஆன் ஜாகோ ஆன் ஜாகோ ("Ann Jago", பிறப்பு: பிப்ரவரி 20 1939), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 2 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1961 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கெரன் ஜொப்லிங் கெரன் ஜொப்லிங் ("Karen Jobling", பிறப்பு: ஏப்ரல் 13 1962), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். தமிழ்ப் பண்டிதர் தமிழ்ப் பண்டிதர் என்ப்படுபவர் தமிழ் மொழியில் மரபு வழியில் தேர்ச்சி பெற்ற தமிழ் அறிஞர் ஆவார். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு ஒருவர் பரீட்சை எடுக்க வேண்டும். மதுரைத் தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள் இந்த வகைப் பரீட்சைகளை நடத்துகின்றன. இந்தப் பரீட்சையை எடுத்த பலர் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களாக விளங்கிய பலர் உள்ளார்கள். அவர்களுள் விபுலானந்தர், கனகசபை சிவகுருநாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். கவிராயர் கவிராயர் எனப்படுப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். பல கவிராயர்கள் குடும்ப வழியாக இதில் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகம் வேற்றுநாட்டவர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த காலத்தில் இவர்கள் அருகினார்கள். தமிழ் மொழியைப் பேண கவிராயர்கள் முக்கிய பங்காற்றினார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தல், அச்சிலேற்றல் ஆகிய முக்கிய பணிகளை இவர்கள் செய்தார்கள். தகனம் (உடல்) இறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது தகனம் எனப்படுகிறது. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மனித உடல்கள் புதைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சமய வழக்கங்களின்படியோ அல்லது இடநெருக்கடி காரணமாகவோ இறந்து விட்ட மனித உடல்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய தகனத்தின் போது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை.பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன. இந்த எரியா நிலை எலும்புகளை அரவை மூலம் பொடியாக்கப்பட்டு புனித சாம்பலாக இறந்தவரின் உறவினரிடம் அவரின் புனித சடங்கிற்காகக் கொடுக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் மின் தகன அமைப்பின் மூலம் இம்மாதிரி செயல்கள் நடைபெறுகின்றன.இந்த எரியூட்டலுக்கு விறகு, எரிவாயு, மின்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரியூட்டலில் விறகு கொண்டு செய்யப்படும் நிலை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் இவைதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறாக விறகுகள் வைத்து எரிக்கப்படுவைகளில் விறகுகளின் சாம்பலை மனித உடல்களின் சாம்பல் என்று நினைத்து அந்த சாம்பலை சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மின் எரிமேடைகளில் அதன் மின் உலைகளில் "சுமார் 870 முதல் 980 டிகிரி சென்டிகிரேட்" (பாரன்ஹிட்-1600 டிகிரி முதல் 1800 டிகிரி வரை) அளவு வெப்பநிலையில் உடல்கள் எரிக்கப்படுகின்றன.உடல்கள் எரிமேடையில் உள்ள மின்னூட்டத் தகடுகளில் மேல் வைக்கப்பட்டு மின்னேற்றம் செய்யப்படுகிறது. உடல்களை தகட்டில் செலுத்துவதற்கு முன் அவ்வுடல்களின் மீதுள்ள நகைகள் கழற்றப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் அவ்வாறு கழற்றுவதில்லை.அவர்கள் சவப்பெட்டியில் வைத்து உடல்களை எரிக்கின்றனர் அப்பெட்டியில் வைப்பதற்குமின் ஆபரணங்களை கழற்றிவிடுவர். இவ் வெப்பநிலையில் உடலின் மிருதுவான சருமங்கள் எரிந்து (ஆக்சிஜனேற்றம் அடைந்து) ஆவியாகிவிடுகின்றன. இவ்வேலை நடைபெறுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் "2 மணி" நேரம் மட்டுமே. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே எரிக்க இம்மேடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.பல உடல்களை ஒரே சமயத்தில் எரிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன. இப்போது எரிமேடைகள் "கணினி" மயமாக்கப்பட்டுள்ளன. எரியூட்டப்படுவதை பல நாடுகளில் பார்வையாளர்கள் பார்ப்பதில்லை இந்து சமயக் கோட்பாடு உடையவர்களுக்காக பார்க்க அனுமதிக்கிறார்கள். பெரியவர்கள் உடல்களின் எரியா எலும்புகளின் எடை சுமார் 2.4 கிலோ கிராம் இருக்கும். இவைகள் தனியாக புனித ஜாடி அல்லது சிறிய பெட்டிகளில் அடைத்து உறவினர்களிடம் கொடுக்கப்படும்.தற்கால எரிமேடைகளில் எரிபொருளாக இயற்கை வாயு, புரோப்பேன் வாயு போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன. எரிதல் எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான ஒக்சிசன் முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் தகனம் எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். ஐதரோகாபன்கள் தகனமைந்து பொதுவாக காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றைத் தரும். நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக ஒக்சிசன் அல்லது புளோரின் காணப்படலாம். எ.கா: உதாரணமாக ஏவுகணைகளில் ஐதரசன் மற்றும் ஒக்சிசன் தாக்கத்தில் ஈடுபட்டு சக்தி வழங்கப்படுகிறது. இங்கு நீராவி பக்கவிளைபொருளாகும். திரவ எரிபொருட்கள் - மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் திண்ம எரிபொருட்கள் - மரம், [கரி], நிலக்கரி இந்த மூன்று நிபந்தனைகள் இருக்கையில் தகனத்திற்கான தொடர் தாக்கங்கள் நிகழும். அப்போது நெருப்பு தோன்றும். எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் நிறை தகனம் ஆகும். ஐதரோகாபன்கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது காபனீரொட்சைட்டும் நீரும் விளைவுகளாகக் கிடைக்கும். எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, காபன் துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும். இலெமூரியா 19 ஆம் நூற்றாண்டு நடுவில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்தியப் பெருங்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டு முன்னேயே அது கைவிடப்பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு இலெமூரியா என்று பெயரிட்டார்.சிந்துபாத்தின் கடல் பயன்கள் என்ற திரைபடத்தில் இலெமுரியா பற்றிய குறிப்பு உண்டு. தங்க சூரியன் என்ற நிகழ்பட ஆட்டத்தில் இலெமுரியா வில் ஒரு பகுதியில் ஆட்டத்தின் கதை அமைந்து இருக்கும். இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பிலிப் ஸ்க்லேட்டெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார். ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர். இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்நேரம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் ஆற்றல்கள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர். அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. புவிஓடு அசைவுகள்,கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப்பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது. பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் "Book of Dzyan" என்னும் நூலிதினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார். ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் வலிமை மிக்கதாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வினமானது இன்றைய ஐந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக ஆற்றல்களைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில இலெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுயிர்கள் அல்லாத இலெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அந்நூலின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த அறிவுயிர்கள் கலிபோர்னியாவிலுள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center). குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர். மேரி ஜான்சன் "'மேரி ஜான்சன் " ("Mary Johnson", பிறப்பு: நவம்பர் 7 1924), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948/9, 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சூசி கிட்சன் சூசி கிட்சன் ("Suzie Kitson", பிறப்பு: சூன் 19 1969), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 - 1993 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மேகன் லியர் மெகன் லியர் ("Megan Lear", பிறப்பு: ஆகத்து 31 1951), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973 - 1985 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோன் லீ "'ஜோன் லீ" ("Joan Lee", பிறப்பு: பிப்ரவரி 4 1952), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1986 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வினிபிரெட் லீச் வினிபிரெட் லீச் ("Winifred Leech", பிறப்பு: ஆகத்து 5 1920, இறப்பு: மே 10 2000), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 195ஒன்றில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கேத்ரின் லெங் கெதரின் லெங் ("Kathryn Leng ", பிறப்பு: செப்டம்பர் 28 1973, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்கரெட் லொக்வுட் மார்கரெட் லொக்வுட் ("Margaret Lockwood ", பிறப்பு: மார்ச்சு 28 1911, இறப்பு: சனவரி 14 1999), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கேட் லோவ் கேட் லோவ்" ("Kate Lowe , பிறப்பு: ஆகத்து 2 1975, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மேகன் லோவ் மேகன் லோவ் ("Megan Lowe", பிறப்பு: நவம்பர் 17 1915), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1949 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மியுரியல் லோவ் மியுரியல் லோவ் ("Muriel Lowe", பிறப்பு: 1914, இறப்பு: சூன் 25 1946), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரூத் லுப்டன் "'ரூத் லுப்டன்" ("Ruth Lupton", பிறப்பு: திசம்பர் 9 1964), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நக்கசேலம் நக்கசேலம் (ஆங்கிலம்:"Nakkasalem"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமாகும். பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் பிரதான சாலையில் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.( பெரம்பலூரில் இருந்து சுமார் 22 கி. மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 13 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ) நக்கசேலம் கிராமத்தில் சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இவ்வூரை சுற்றி புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, சிறுவயலூர், மங்கூன், விராலிப்பட்டி ஆகிய சிறிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், மிளகாய், எள், உளுந்து, பருத்தி முதலிய புஞ்சை வெள்ளாமையும் செய்கின்றனர். ஆடி பட்டங்களில், மானாவரி பயிர்களான பச்சைபயிறு, தட்டைபயிறு, மொச்சை போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக சின்ன வெங்காயம் இந்த ஊரில் பணப்பயிராக பயரிடப்படுகிறது. இக்கிராமத்தில் முழு நேர அஞ்சல் நிலையம் அமையக்கப் பெற்றுள்ளது. அஞ்சல் குறியீடு எண் : 621118 . இங்கே கனரா வங்கி ஒன்று உள்ளது. ஊரின் வடக்கே மலை அடிவாரத்தில் சின்ன ஏரியும், ஊரின் தெற்கே பெரிய ஏரியும் உள்ளன. ஊரின் வடக்கே உள்ள மலையில் இருந்து ஆற்று வழியாக ஊரை கடந்து, தெற்கே உள்ள பெரிய ஏரியில் கலக்கின்றது.ஊரின் தெற்கே உள்ளே ஏரி தான் பாசன பயன்ப்பாட்டுக்கு உள்ளது. இது நக்கசேலம் கிராமத்துக்கு மட்டும் அல்லாமல் அருகில் உள்ள புது அம்மாபாளையம் ஊருக்கும் பெரிதும் பயன்பெறுகிறது. மேலும் தெற்கே உள்ள ஏரியில் தான் ஸ்ரீ செல்லி அம்மனும், அய்யனாரும் உள்ளன. ஊரை ஒட்டி இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. 1. இரட்டைக்குளம்(இன்டு குளங்கள் ஒன்றாக அமைய பெற்றதால்) 2. ஒற்ற குளம்(ஓர் குளம் ) ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை ஒற்றை குளத்து மேட்டில் வாரச்சந்தை நடைபெறுகிறது. நக்கசேலம் கிராமத்தில் ஊரின் வட புறமுள்ள மலையில் பாறையின் மீது சுனை நீர் உள்ளது. எப்போதும் நீர் வற்றாமல் பாறையின் மீது அமையபெற்றுள்ளது. 1.அரசு மேனிலைப்பள்ளி (2013–2014) 2.அறிவாலயம் மெற்றிகுலேசன் மேனிலைப்பள்ளி 3.ஹயகிரிவா மெற்றிகுலேசன் மேனிலைப்பள்ளி 4.ஸ்ரீ ராம் ஐ.டி.ஐ 5.ஸ்ரீ ராம் செவிலியர் கல்லூரி 1.பாரத் பெட்ரோல் நிலையம் 2.எஸ்ஸார் பெட்ரோல் நிலையம் ஜில்லியன் மெக்கொன்வே கிலியன் மெக்கொன்வே ("Gillian McConway", பிறப்பு: மே 8 1950), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். டொரத்தி மெக்கெவோய் டொரத்தி மெக்கெவோய் ("Dorothy McEvoy", பிறப்பு: சூலை 30 1910, இறப்பு: ஏப்ரல் 20 1994), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1951 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொரொத்தி மெக்ஃபார்லேன் டொரொத்தி மெக்ஃபார்லேன் ("Dorothy Macfarlane", பிறப்பு: திசம்பர் 2 1931, இறப்பு: 2001), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1963 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செங்டூ செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும். இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து வசதிகள் உள்ளன. பாலி மார்சல் பொலி மார்சல் ("Polly Marshall", பிறப்பு: மே 17 1932, இறப்பு: மார்ச்சு 1995), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 - 1966 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜூலி மே ஜூலி மே ("Julie May", பிறப்பு: மார்ச்சு 19 1964), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1986/87 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டெப்ரா மேபரி டெப்ரா மேபரி ("Debra Maybury", பிறப்பு: ஆகத்து 8 1971), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பொன் மலை சண்டை பொன் மலைச் சண்டை அல்லது பொன் மலைப் போர் ("Battle of Golden Rock") என்பது 1753, சூன் 26 இல், இரண்டாம் கர்நாடகப் போரின் போது, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கு இடையே நடந்த போர் ஆகும். ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசின் குதிரைப்படை உதவியுடன் பிரெஞ்சுப் படைகள் திருச்சிராப்பள்ளி அருகே பிரித்தானியப் புறக்காவல் நிலையைத் தாக்கினர். இச்சண்டையில் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் தலைமையின் கீழிருந்த பிரித்தானியப் படை வெற்றி பெற்றது. சூசன் மெட்காஃப் சூசன் மெட்காஃப் ("Susan Metcalfe", பிறப்பு: மே 25 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெத் மோர்கன் பெத் மோர்கன் ("Beth Morgan ", பிறப்பு: செப்டம்பர் 27 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிறேஸ் மோர்கன் கிறேஸ் மோர்கன் ("Grace Morgan", இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1947/48, 1951 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கேத்தரின் மோவாட் கதரின் மோவாட் ("Catherine Mowat", பிறப்பு: செப்டம்பர் 20, 1952), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1978 - 1984 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஆரணி சண்டை ஆரணி போர் (அல்லது ஆரணி சண்டை) இரண்டாம் கர்நாடக போரின் போது, டிசம்பர் 3 1751 அன்று ஆரணி என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து. பார்பரா மறீ பார்பரா மறீ ("Barbara Murrey", பிறப்பு: சூன் 16 1924), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 - 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லாரா நியூட்டன் லோரா நியூட்டன் ("Laura Newton", பிறப்பு: நவம்பர் 27 1977), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 73 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 - 2007 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். லீசா நை லீசா நை ("Lisa Nye", பிறப்பு: அக்டோபர் 24 1966), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ராபர்ட் கிளைவ் மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், ("Robert Clive, 1st Baron Clive", செப்டம்பர் 29, 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்... ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அத்தை வீட்டில் பால பருவத்தை கழித்த கிளைவ் இளைஞனானதும் வீட்டுக்கு அடங்காமல் திரிந்தார். குறிப்பாக பொறுக்கியாக திரிந்தவர் தன் நண்பகர்ளை சேர்த்துகொண்டு, டிரைட்டன் சந்தையில் உள்ள கடைகளில் மிரட்டி மாமுல் வசூலித்தார் என்கின்றன வரலாற்று குறிப்புகள். இரண்டு முறை ஜெயிலுக்கு சென்று வந்த கிளைவை அவர் தந்தை ரிச்சர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எழுத்தர் வேலைக்கு அனுப்பினார். ராபர்ட்  கிளைவ் 1725-ம் வருடம் செப்டம்பர் 29-ம் நாள் இங்கிலாந்தில் உள்ள டிரேட்டன் சந்தை அருகில் பிறந்தார். தனது இள வயதில்  டிரேட்டன் சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டுவது, தனது வயதுள்ள இளைஞர்களை உடன் வைத்துக்கொண்டு  பெரும் ரகளையில் ஈடுபடுவது என தந்தை ரிச்சர்ட் கிளைவிற்கு பெரும் தலையாகவலியாக  இருந்தார் கிளைவ். இதனால் தனது தங்கை வீட்டில் ராபர்ட் கிளைவை இடம் மாற்றினார் தந்தை ரிச்சர்ட் கிளைவ். லண்டன் நகர வீதிகளிலும் அதே ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்த கிளைவ் தனது அத்தைக்கும் பெரும் தலைவலியாகி பொறுக்கியாக திரிந்துள்ளார். தினம் ஒரு சண்டையின் காரணமாக பலபேர் கிளைவின் அத்தையை திட்டுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது. 1743-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து தந்தை ரிச்சர்ட் கிளைவால்  இந்தியாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கணக்கெழுதும் கிளார்க் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு  உள்ளார்,  அப்போது கிளைவுக்கு 18 வயது. 18 மாதப் பயணத்துக்குப் பிறகு, சென்னை வந்து சேர்ந்தார் கிளைவ். கிழக்கிந்தியக் கம்பெனியில் அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு 5 பவுண்ட். அதாவது, இந்தியப் மதிப்பில் 50 ரூபாய். கிளார்க் வேலையில் நாட்டமில்லாமல், ஒருமுறை துப்பாக்கியால் சுட முயற்சித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார். தற்கொலைக்கு கிளைவ் முயன்றதற்கு காரணம் நம் தேசத்தின் வெப்ப மயமான சூழல்தான். நம் தேச வெயில் அவரை நிம்மதியாக உறங்கவிடவில்லை. கி.பி.1746ம் வருடம் பிரஞ்சு தளபதி லெபூர்தனே சென்னை ஜார்ஜ் கோட்டையை பிடித்தார். அப்போது ராபர்ட் கிளைவையும் கைது செய்தார். ஆனால் கிளைவ், தமிழர்களை போன்று உடை அணிந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்து தப்பி கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள புனித டேவிட் கோட்டைக்கு சென்றார். இரவு கடலூர் தேவனாம்பட்டினம்  அருகே போர் ஆரம்பமானது பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலையில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு படையின் எண்ணிக்கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தார்கள். எந்த போர் பயிற்சியும் இல்லாத ராபர்ட் கிளைவ் இருளான சூழலைப்  பயன்படுத்தி  சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சுகாரர்களின் பின்புறம் தைரியமாக வந்து, சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்ததில் பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினார்கள். அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள். பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர். பிரெஞ்சுகாரர்கள் பின்வாங்கி உயிர் பிழைத்து ஓடியதே பெரிய காரியமானது. இந்த வெற்றி பற்றிய செய்தி இங்கிலாந்து அரசர்வரை தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் கிளைவிற்கு பெரிதான பதவியை கிழக்கிந்திய நிறுவனம் தந்துவிடவில்லை. டூப்லெக்ஸ் "யார் இந்த ராபர்ட் கிளைவ்? நம்மை மண்ணை கவ்வ வைத்துவிட்டானே"  என்று விசாரணை செய்யும் அளவிற்கு கிழக்கிந்திய படையில் பிரபலமானார் கிளைவ். கிபி 1757-ம் ஆண்டில் கல்கத்தா அருகில் உள்ள பிளாசி என்னும் ஊரில் சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடிக்க கிளைவை அனுப்பி வைத்தது  கிழக்கிந்திய நிறுவனம். சிராஜ்-உத்-தெளலாவின் முக்கிய அதிகாரிகளையும் வீரர்களையும்  லஞ்சம் கொடுத்து வளைத்தார் கிளைவ். லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், சிப்பாய்கள் ஒதுங்கிய பின்பு சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடித்தார் கிளைவ். இதனால் கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் நிலைபெற செய்த நாயகன் என்னும் பெயரை பெற்றார் கிளைவ். இன்றும் அவருக்கு அந்த பெயரே நிலைத்து நிற்கிறது. பிற்பாடு சென்னையின் மேஜர் ஜெனரல் பதவியை கிழக்கிந்திய நிறுவனம் கிளைவிற்கு கொடுத்து கெளரவித்தது. கிளார்க் வேளையில் இருந்தபோதே சரக்குகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் கணக்குகளில் பல  தில்லுமுல்லு வேலைகளை செய்து பெரும் பணத்தை சம்பாதித்தார். ஊழல் செய்து சம்பாதித்த  பணத்தை வைத்தே சென்னையின் மேஜராகும் அளவிற்கு உயர்ந்துள்ளார் கிளைவ். மேஜர் ஜெனரல் ஆனதும் வேறுவழியில் பெருமளவில் லஞ்சம் பெற்றும், ஆற்காடு நவாப்புகளுக்கு அடியாட்களாக ஆங்கிலேய சிப்பாய்களை அனுப்பி வைத்தும் பெருமளவில் சொத்து சேர்த்தார் கிளைவ். பணி முடிந்து  இங்கிலாந்து திரும்பிய போது அவரிடம் இருந்த பணம் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் பவுண்ட் அதாவது இருபது லட்சம் ரூபாய். 240 ஆண்டுகளுக்கு முன்பு இருபது லட்சம் ரூபாயை கையாள்வதும், செலவு செய்வதும், பாதுகாப்பதும் என்பது மிகப்பெரும் சவாலான விஷயமாகும். தனது சேமிப்பை இந்தியாவில் இருந்து எளிதாக எடுத்துச் செல்ல வைரமாக மாற்றிக் கொண்டார் என்றொரு குறிப்பும் வரலாற்றில் காணப்படுகிறது என்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். அவர் 1400 தங்கப் பாளங்களைக் கொண்டுசென்ற "டோனிங்டன்" என்ற கப்பல், புயலில் சிக்கி மூழ்கியது. ராபர்ட்  கிளைவ் மீது பெரும் ஊழல் குற்றசாட்டை கூறி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. விசாரணையில் தான் பெரும் யோக்கியன் நல்லவன் என பெரும் கூப்பாடு போட்டார் கிளைவ். ஆனாலும் ராஜதுரோக குற்றம் செய்தார் என பல உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டார் கிளைவ். இங்கிலாந்து அரசும் கிளைவை ஒதுக்கி தள்ளியே வைத்திருந்தது. பின்பு லண்டன் நகரின் குறிப்பிட்ட செல்வந்தர்களில் ஒருவராக சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார் கிளைவ். 2004-ம் ஆண்டு லண்டனில் உள்ள "சூத்பே"  என்ற ஏலக்கடை வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதில்,  ராபர்ட் கிளைவ் வசம் இருந்த முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட, வைரம் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட நீர் ஊற்றும் தங்கக் குடுவையும் ஒன்று. சுமார் 5.2 மில்லியன் டாலருக்கு ( இன்றைய மதிப்பில் சுமார் 27 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டது. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்தக் குடுவை இந்தியாவில் இருந்த நவாபிடம் ராபர்ட் கிளைவ் பறித்து கொண்டதாக தெரிகிறது. ராபர்ட் கிளைவ், தான் வைத்திருந்த பணத்திற்கும் உயிரை விட்ட வயதிற்கும் ஊசிமுனை அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை. ஒரு கட்டத்தில் பல நோய்களுக்கு ஆளான கிளைவ்,  தூக்கமின்மையால் அவதிப்பட்டார். போதை ஊசியை தூங்குவதற்காக தொடர்ந்து பயன்படுத்திய ராபர்ட் கிளைவ் நரம்பு தளர்ச்சியாலும் அவதிப்பட்டார். தனிமையின் காரணமாக தினம் தினம் தற்கொலை எண்ணம் தோன்றி நிதானத்தை இழந்தவர், தனது 49-வது வயதில் தன்  கழுத்தை தானே அறுத்துகொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது நண்பர் எட்மண்ட் மஸ்கில்னேவின் தங்கை  மார்க்ரெட்டை  திருமணம் செய்துகொண்டார் கிளைவ். இவருடைய திருமணம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள செயின்ட் மேரிஸ் சர்ச்சில் நடந்தது என்றும், வேப்பேரி சர்ச்சில்  நடந்தது என்றும், இரு வேறான தகவல் உள்ளது திருமணம் நடந்த வருடம் 1753. ராபர்ட் கிளைவின் மகன் "எட்வர்ட் கிளைவ்" தனது தந்தை  இறந்துபோன அதே 1774-ம் வருடம்  சென்னையில் பிரிட்டிஷ் கம்பெனி கொடுத்த வேலையில்  இணைந்தார் ( தந்தை வகித்த அதே மேஜர் ஜெனரல் பதவியில் ) பிற்பாடு 1804-ம் வருடம்  அவராகவே  பதவி விலகி இங்கிலாந்து திரும்பி சென்றார். மனைவி : மார்க்கரட் மஸ்கலீன் மகன்கள் : எட்வர்ட் கிளைவ், ராபர்ட் கிளைவ் ஜுனியர், சார்லட் கிளைவ், ரிச்சர்ட் கிளைவ், ராபர்ட் கிளைவ், மகள்கள் : ரெப்பாக்வ் கிளைவ், மார்கரட் கிளைவ், எலிசபெத் கிளைவ், ஜேன் கிளைவ் தீவிரமான மனச்சிதைவு மற்றும் பித்தப்பை கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவர் தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுகொண்டிருந்தார், அது நரம்பு தளர்ச்சியை அதிகமாக்கியது. அவரால் யாரிடமும் பேச முடியவில்லை, வலியும் வேதனையும் மிதமிஞ்சிய கோபத்தையே உருவாக்கியது. அழுது கதறியதோடு தன்னை கொன்றுவிடுமாறு நாளெல்லாம் கத்திக்கொண்டே இருந்தார்.1774-ஆம் ஆண்டு தனது 49-வது வயதில் இங்கிலாந்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது கழுத்தை தானே அருத்துகொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தற்கொலை செய்துகொண்டார் ராபெர்ட் கிளைவ்.இந்தியாவை தனதாக்கிகொள்ள முயன்ற கிளைவ், தற்கொலை செய்துகொண்ட காரணத்தால் தேவாலயத்தில் இறுதி சடங்குகள் நடத்தகூட அனுமதிக்கப்படவில்லை. தேவாலயங்கள் தற்கொலைகளை ஏற்றுகொள்வதில்லை. கிளைவின் கல்லறையில் பொறிக்கப்படும் கல்கூட அனுமதிக்கப்படவில்லை, அடையாளமற்ற ஒரு மண் மேடாகவே அவர் புதைந்து போனார். மேரி பிலிங் மேரி பிலிங் ("Mary Pilling", பிறப்பு: திசம்பர் 14 1938), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1963 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஷீலா பிளாண்ட் ஷீலா பிளாண்ட் ("Sheila Plant", பிறப்பு: பிப்ரவரி 19 1936), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61, 1968/69 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெலன் பிலிம்மர் ஹெலன் பிலிம்மர் ("Helen Plimmer", பிறப்பு: சூன் 7 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989–1997 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பாபரா பொண்ட் பாபரா பொண்ட் ("Barbara Pont ", பிறப்பு: திசம்பர் 20 [[1933), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். [[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]] [[பகுப்பு:1933 பிறப்புகள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] சாரா பொட்டர் சாரா பொட்டர் ("Sarah Potter", பிறப்பு: சூன் 11 1961), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜில் பவல் ஜில் பவல் ("Jill Powell", பிறப்பு: சனவரி 19 1957), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெ. முருகையா பெ. முருகையா (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார். 1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன ப. முருகேசு ப. முருகேசு (பிறப்பு: அக்டோபர் 11 1927) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சிலிகியூரான் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர். 1953 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகளையே எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. முருகேசன் மு.முருகேசன் (கி.பி 1946) மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கே.எம்.முருகேசன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். 1962 ஆம் ஆண்டு தொடங்கி இவர் மலேசியத் தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியத் தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. கு. முருகன் கு. முருகன் (பிறப்பு: டிசம்பர் 29 1959) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இளந்தமிழன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓர் ஆசிரியராவார். 1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ந. முனியாண்டி ந. முனியாண்டி (பி 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு இணைப் பேராசிரியரும், மிருக மருத்துவத்துறை ஆராய்ச்சியாளருமாவார். மற்றும் Veterinary Congress Prceeings இன் தலைமைத் தொகுப்பாசிரியர். (1996, 1997), சிறந்த தன்முனைப்புப் பேச்சாளர். தமிழ் இலக்கிய விழா, பாரதி விழா, திருக்குறள் விழா, வெளிநாட்டுப் பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளார். 1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் மிருக மருத்துவத்துறை ஆராய்ச்சிக் கட்டுரைகளையே எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (Emil Adolf von Behring) (மார்ச் 15, 1854 - மார்ச் 31, 1917) 1901 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கலுக்கான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடலியங்கியலாளர். இப்பரிசு முதன் முதலில் இவருக்கு வழங்கப்பட்டது. கிளவுட் நைன் மூவீஸ் கிளவுட் நைன் மூவீஸ் ("Cloud Nine Movies") சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தயாநிதி அழகிரி தயாநிதி அழகிரி, ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் வழங்குநரும் ஆவார். கிளவுட் நயன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேரனும் இந்திய நடுவண் அரசின் வேதியியல் மற்றும் உரங்கள் துறைக்கான முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும் ஆவார். மங்காத்தா, தமிழ் படம் ஆகியவை இவர் தயாரித்த படங்களில் சில. அலிசன் ராட்கிளிஃப் எலிசன் ராட்கிளிஃப் ("Alison Ratcliffe", பிறப்பு: அக்டோபர் 10 1934), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹேசல் சாண்டர்ஸ் ஹேசல் சாண்டர்ஸ் ("Hazel Sanders", பிறப்பு: சூலை 16 1926), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948/49, 1957/58 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹெலன் சார்ப் ஹெலன் சார்ப் ("Helen Sharpe", பிறப்பு: பிப்ரவரி 23 1937, இறப்பு: திசம்பர் 7 1996), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1960/61பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பூர்வக் கிரியை பூர்வக் கிரியை சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் ஒரு பிரிவாகிய ஆன்மார்த்தக் கிரியையின் வகைகளில் ஒன்றாகும். இது ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும். பூர்வக் கிரியைகளில் பிரதானமாக இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவற்றைக் குறிப்பிடலாம்.