அஷ்டலட்சுமி கோயில் அஷ்டலட்சுமி கோயில் (Ashtalakshmi Kovil) சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. இங்கு இலட்சுமியின் எட்டு வடிவங்கள் வழிபடப்படுகின்றன. அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கசலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம். அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு. மச்சலி (புலி) மச்சலி (T-16) "(machali)" இந்தியாவின் ரண்ர்தம்போர் தேசிய பூங்காவில் வாழ்ந்த "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்ற ஒரு பெண் புலி. தில்லியைச் சேர்ந்த புலிகளுக்கான பயண ஏற்பாட்டாளர் குழுமத்தினரால் "(Travel Operators For Tigers)" மச்சலிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக "ஏரியின் பெண்மணி" என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது. மச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது. தொல்காப்பியம் இடையியல் செய்திகள் தொல்காப்பியம் தமிழின் மொழியியலைக் கூறும் நூல். இது எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியம் இடையியல் நூற்பா இடைச்சொல் விளக்கம் இடையியல் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் ஏழாவது இயலாக அமைந்துள்ளது. இடைச்சொல் பற்றிய விளக்கங்கள் இவ்வியலின் முதல் இரு நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. உயிரணுவியல் உயிரணுவியல் அல்லது குழியவியல் (cytology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவைத் தரும் கல்வியாகும். உயிரியல் கல்வியின் ஒரு துணைத் துறையாக உயிரணுவியல் திகழ்கின்றது. உயிரணுக்களின் கட்டமைப்பு, தொழிற்பாடு, வேதியல் மாற்றங்கள், நோய்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இத்துறையில் ஆராயப்படுகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து இவை பின்வருமாறு மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன: உயிரணு உயிரியல் உயிரணு உயிரியல் அல்லது கலவுயிரியல் (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு, புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல உயிர்களின் பல்வகைமை தெளிவாக அறியப்படுகின்றது. உயிரணுக்களையோ அல்லது அவற்றின் உள்ளடக்கங்களையோ அவற்றின் தொழிற்பாடு தொடர்பாக ஆராய்வது உயிரியல் அறிவியலில் முதன்மையானது. உயிரணுக்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிய அறிவு வெவ்வேறு துறைகளுக்கு துணை நிற்கின்றது; மூலக்கூற்று உயிரியல், புற்றுநோய் ஆராய்ச்சி, உயிர் வளர்ச்சியியல் போன்ற துறைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உயிரணு உயிரியல் ஆராய்வு வேறு துறைகளான மரபியல், உயிர் வேதியியல், மூலக்கூற்று உயிரியல், நோய் எதிர்ப்பியல், உயிர் வளர்ச்சியியல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. ஒரு உயிரணுவில் பற்பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, உயிரணுக்களின் வகையைப் பொறுத்தும் உயிரினத்தின் தேவையைப் பொறுத்தும் உயிரணுக்கு உயிரணு இவை வேறுபடுகின்றது, ஆனால் அனைத்து உயிரணுக்களுக்கும் பொதுவான நிகழ்வுகளும் உண்டு. தேசிய வீரதீர விருது இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது (National Bravery Award for Indian Children) ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் (ICCW) இணைந்து பல இடர்களின் இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது. பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1978ஆம் ஆண்டு தங்களைக் கடத்தியவர்களுடன் போராடி உயிர்விட்ட சோப்ரா குழந்தைகள் நினைவாக ஓர் சிறுவனுக்குத் தரப்படும் சஞ்சய் சோப்ரா விருதும் ஓர் சிறுமிக்குத் தரப்படும் கீதா சோப்ரா விருதும் குறிப்பிடத்தக்கன.. இந்த விருதுகளில் உயரியனவாக 1987ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாரத் விருதும் 1988ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாபு கயதானி விருதும் கருதப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ஓர் பதக்கம், சான்றிதழ் மற்றும் நிதிப்பரிசு கொண்டவையாக உள்ளன. பாரத் விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கமும் ஏனையோருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்க சிறார் நலத்திற்கான இந்திய மன்றத்தின் நிதிப்புரவலும் மருத்துவ,பொறியியல் போன்ற தொழில்முறைக் கல்விக்கு இந்திரா காந்தி படிப்புதவியும் வழங்கப்படுகின்றன.. 2009ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்த விருது வென்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த விருதுகள் நவம்பர் 14, சிறுவர் நாள், அன்று அறிவிக்கப்படுகின்றன; சில நேரங்களில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படுகின்றன. இந்தியக் குடியரசு நாள்|இந்தியக் குடியரசு நாளுக்கு முந்தைய நாள் இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரால் வழங்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்தியக் குடியரசுத் தலைவர் கொடுக்கின்ற விருந்து ஒன்றில் இவர்கள் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். குடியரசுத் திருநாள் பேரணியில் யானைமீது இவர்கள் பேரணியின் அங்கமாக உலா வருகின்றனர். அஜின்க்யா ரகானே அஜின்க்யா மதுகர் ரகானே (Ajinkya Madhukar Rahane, பிறப்பு: சூன் 6, 1988, என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலது கை மட்டையாளரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் உதவி அணித் தலைவராக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகவும் உள்ளார். 2007 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். 100 போட்டிகளில் விளையாடிய பின் இவரின் துடுப்பாட்ட சராசரி 62.04 ஆக இருந்தது. முதல் ஐந்து பருவகாலங்களில் 1000 ஓட்டங்களுக்கு மேல் மூன்று முறை எடுத்துள்ளார்.ஆகத்து 2011 இல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஷிகர் தவானுக்கு விரல்களில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதால் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற அலன் போடர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு அடித்தார். விராட் கோலி தோள் எலும்பு காயம் காரணமாக விலகியதால் 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்குத் தலைவரானார். அஜின்கியா ரகானே சூன் 5, 1988 இல் அகமது நகர் மாவட்டம், மகாராட்டிரம்,இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை மதுகர் பாபுராவ் ரகானே,தாய் சுஜாதா ரகானே ஆவர். இவருக்கு சசான்க் எனும் இளைய சகோதரனும் , அபூர்வா எனும் இளைய சகோதரியும் உள்ளனர். இவருக்கு 17 வயதாக இருக்கும் போது பிரவின் ஆம்ரே எனும் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரரிடம் பயிற்சி பெற்றார். 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பான இரு நூறுகள் அடித்தார். அந்தத் தொடரில் விளையாடிய விராட் கோலி, கேன் வில்லியம்சன், இஷாந்த் ஷர்மா, டிம் சௌத்தி, டிரென்ட் போல்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பின்னாளில் நட்சத்திர துடுப்பாட்டக்காரர்களாக ஆனார்கள். இந்தத் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தினால் பாக்கித்தானில் நடைபெற்ற முகமது நிசார் கோப்பைக்கான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. மார்ச் 22, 2013 ஆம் ஆண்டில் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பார்டர் - சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் வீரேந்தர் சேவாக்கிற்குப் பதிலாக துவக்க வீரராக இவர் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 40 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் துடுப்பாட்ட சராசரி 90.90 ஆகும். அந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் 54 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி, மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடத் தவறினார். ராஜகோபால் சதீஷ் ராஜகோபால் சதீஷ் ("Rajagopal Sathish", சனவரி 14, 1981, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். அனைத்துலக் குற்றவியல் சட்டம் அனைத்துலக் குற்றவியல் சட்டம் என்பது பாரதூரமான அட்டூழியங்களை செய்வோருக்கு குற்றப் பொறுப்பைக் கொடுத்து தண்டனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்துலகச் சட்டத் தொகுப்பு ஆகும். முக்கியமாக இது இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், வலிந்த போர் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஏ, ஜீ. ராம் சிங் ஜனார்த்தன் ராம்தாஸ் ஜனார்த்தன் ராம்தாஸ் ("Janardhanan Ramdas", சூன் 2, 1970, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். ஜோகிந்தர் ராவ் ஜோகிந்தர் ராவ் ("Joginder Rao ", பிறப்பு: ஆகத்து 16 1938, இறப்பு: அக்டோபர் 3 1994 இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் யலீகா ஞானேஸ்வர ராவ் யலீகா ஞானேஸ்வர ராவ் ("Yaleeka Gnaneswara Rao ", பிறப்பு: ஆகத்து 25, 1984, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். மஹேஸ் ரவாட் மஹேஸ் ரவாட் ("Mahesh Rawat", பிறப்பு: அக்டோபர் 25, 1985 , இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அம்பாதி ராயுடு அம்பாதி ராயுடு ("Ambati Rayudu", பிறப்பு: செப்டம்பர் 23, 1985 , இந்தியத் துடுப்பாட்டக்காரர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயது முதல் ஐதராபாத்து துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2003 ஆம் ஆண்டில் இந்தியா அ பிரிவு அணியில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.பின் ஐசிஎல் போட்டிகளில் விளையாடியதால் இவரால் இந்திய தேசிய அணியில் விளையாட இயலவில்லை. பின் 2009 ஆண்டில் ஐசிஎல்லின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். பரோடா அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியதால் 2012 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இருந்தபோதிலும் 2013 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். டிசம்பர், 2012 ஆம் ஆண்டில் இந்திய அணியின் தேர்வுக்குழு செயலாளராக சந்தீப் படேல் நியமனம் ஆனார். இவர் ஏற்கனவே ஐசிஎல் நிருவாகத்தில் இருந்தவர். இவர் 2012-2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இவரைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக மனோஜ் திவாரி விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படபில்லை. 2012 -2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இந்தத் டொடரில் 666 ஓட்டங்களை எடுத்தார். இதில் ஒரு நூறு, மற்றும் ஏழு அரைநூறுகள் அடங்கும். இவரின் ஒட்டுமொத்த சராசரி 60.54 ஆகும். 2013 இல் நடைபெற்ற ராணி கோப்பையில் மும்பை அணிக்கு எதிராக இவர் 51 மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 156* ஓட்டங்களையும் எடுத்துள்ளார். மேலும் 2012-2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தியோதர் கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மூன்றுநாடுகளுக்கு இடையேயான தொடரில் மகேந்திரசிங் தோனிக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகள் விளையாடின. இந்தத் தொடரை இந்தியா வென்றது. 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மே 13, 2018 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கி தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இதில் 4 நான்குகளும், 3 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற உதவினார். மேலும் ஷேன் வாட்சனுடன் இணைந்து முதல் இலக்கிற்கு 134 ஓட்டங்கள் சேர்த்தார். சிரில் ரீட் சிரில் ரீட் ("Cyril Reed", பிறப்பு: சூலை 10, 1906, இறப்பு: சூலை 6 1991) இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். குழுமச் சுதந்திரம் குழுமச் சுதந்திரம் என்பது தனிநபர்கள் சேர்ந்து ஒரு குழுவாக அல்லது கழகமாக தமது நலன்களை பாதுகாக்க, முன்னெடுக்க, வெளிப்படுத்துவற்கான உரிமை ஆகும். இது பல அனைத்துலக மனித உரிமைக் கருவிகளிலும், நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் முக்கிய கூறாக இடம்பெற்றுள்ளது. கத்தோலிக்க செபமாலை கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் "ஒளியின் மறைபொருள்கள்" என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார். செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான "ரோசரி" (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள். இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது. 13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார். குறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் "ஓ என் இயேசுவே!..." செபம் பாத்திமா அன்னை கற்றுக்கொடுத்தது ஆகும். செபமாலையின் வெவ்வேறு மறைபொருள்களை தியானிக்கும் கிழமைகள் பின்வருமாறு: செபமாலை செபிக்க பயன்படுத்தப்படும் செபமாலை அருட்கருவிகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றில் சில கீழேத் தரப்படுகின்றன. பிரதீப் சங்க்வன் சொ. சேதுபதி சேதுபதி ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள வள்ளல்பாரி ஆண்ட பறம்புமலைச்சாரலில் உள்ள கிருங்காக்கோட்டைக் கிராமத்தைச் சார்ந்தவர். தம் ஊர்ப்பெயர் சுருக்கி, ‘கிருங்கை’ எனக்கொண்டு, ‘கிருங்கை சேதுபதி’ ஆனவர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வள்ளல்பாரி உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பையும், பாரம்பரிய மிக்க, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்க்கல்வியும் பெற்றவர். முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்ற இவர் கல்வியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்றவர். புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த் துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். பல்துறை சார்ந்த நூல்கள் படைத்துவரும் கவிஞர்; சிறுகதையாளர்; நாடக ஆசிரியர்; ஆய்வாளர்; சொற்பொழிவாளர்; பட்டிமண்டபம் ஏறுபவர். 1990களில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘தொடரும்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். உலகத்திருக்குறள் பேரவையின் மாநில இளைஞர் அணித்தலைவர். உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றவர். எட்வர்டு செவெல் ஜெய்தேவ் சா ஜெயதேவ் சா ("Jaydev Shah", பிறப்பு: மே 4, 1983, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அமித் சர்மா அமித் சர்மா ("Amit Sharma", பிறப்பு: நவம்பர் 20, 1974 , இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 40 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பத்மகார் சிவல்கர் பத்மகார் சிவல்கர் ("Padmakar Shivalkar", பிறப்பு: ஏப்ரல் 14, 1940 , இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 124 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் சிரிகாந்த் வாக் சிரிகாந்த் வாக் ("Shrikant Wagh", பிறப்பு: மார்ச்சு 10, 1991), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது இருபது20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாலிந்திர சிங் ராஜா மகராஜ் சிங் ராஜா மகராஜ் சிங் ("Raja Maharaj Singh", மே 17 1878, இறப்பு: சூன் 6 1959 இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். சூர்யவீர் சிங் சுவரன்ஜித் சிங் பொன்னுசாமி சீதாராமன் மன்னார்க் கோட்டை மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் அமைந்துள்ள மன்னார்த் தீவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். அதன் நீளப்பாட்டு அச்சு, வடமேற்கு - தென்கிழக்காக, கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண்டு அமைந்துள்ளது. தீவுக்கும், தலைநிலத்துக்கும் இடையே மிகவும் குறுகலான கடற்பகுதியே உள்ளது. மன்னார்க் கோட்டை, தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த்தீவை 1560 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். போத்துக்கீசர் கைப்பற்றிய யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் நிலப்பகுதி இது. இங்கே அவர்கள் தமது கோட்டை ஒன்றைக் கட்டினர். 1658 ஆன் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுப்பதற்கு முன்னர் மன்னார்த்தீவைக் கைப்பற்றினர். மன்னார்க் கோட்டை சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரிப்புக் கோட்டை அரிப்புக் கோட்டை ("Arippu Fort") அல்லது அல்லிராணிக்கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள அரிப்பு என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். வரண்ட தரிசு நிலப்பகுதியில் அமைந்துள்ள இக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது. 1658ல் இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும், கிழக்குச் சுவரையும் அண்டி வீரர்கள் தங்குவதற்கான அறையும், வேறு சிறிய அறைகளும் காணப்படுகின்றன. தெற்குப்புறச் சுவரில் கோட்டை வாசல் உள்ளது. டெரெக் வால்காட் டெரெக் வால்காட் ("Derek Walcott", சனவரி 23, 1930, மார்ச் 17, 2017) செயின்ட் லூசியாவைச் சேர்ந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர் ஆவார். இவர் 1992-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். மேலும் 2011-ஆம் ஆண்டு டி.எசு.எலியாட் பரிசை தனது "வெள்ளை நாரைகள்" நூலுக்காக வென்றார். இவரது "ஒமேரோஸ்" மிகவும் அறியப்பட்ட, புகழப்பட்ட படைப்பாகும். ஒமேரோஸ் ஒமேரோஸ் ("Omeros") டெரெக் வால்காட் எனும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட கவிதை நூலாகும். இது 1990-ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு புராண கவிதை ஆகும். இதுவே டெரெக் வால்காட்டின் ஆகச்சிறந்த படைப்பாக பலரால் கருதப்படுகிறது. இக்காவியம் செயின்ட் லூசியாவின் ஒரு தீவில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அதன் பெயர் "ஒமேரோஸ்"(கிரேக்கத்தில் "ஓமர்") எனினும், ஓமரின் இலியட் மற்றும் ஒடிசியுடன் சிறிய அளவிலேயே தொடர்புடையது. ஜெப்ரி டூபின் ஜெப்ரி ரொஸ் டூபின் ("Jeffrey Ross Toobin", பிறப்பு: மே 21, 1960) ஒரு அமெரிக்க வக்கீல், எழுத்தர், மற்றும் சி.என்.என், "தி நியூ யார்கரின்" சட்ட ஆலோசகர். டூபின் நியூயார்க் நகரத்தில் பிறந்தார், ஏ.பி.சி நியூஸ், சி.பி.எஸ் ஆகியவற்றின் செய்தித் தொகுப்பாளர்கள் மர்லீன் சேண்டேர்ஸ் மற்றும் ஜெரோம் டூபின் ஆகியோரின் மகனாவார். நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பள்ளியில் தனது இளம்வயது பள்ளியை முடித்தார். ஹார்வார்ட் கல்லூரியில் படித்தார். 1986 ஆம் ஆண்டு, டூபின் ஏமி மக்கின்டோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 7 உலக வர்த்தக மையம் 7 உலக வர்த்தக மையம் ("7 World Trade Center") செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம். அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது. மில்லெனியம் பூங்கா மில்லெனியம் பூங்கா ("Millenium Park") அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். பொதுமக்கள் கூடுமிடமான இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக தொடருந்து நிறுத்துமிடமாக இருந்தது. மிச்சிகன் அவன்யு, ரான்டொல்ப் தெரு, கொலம்பஸ் டிரைவ் மற்றும் ஈஸ்ட் மன்ரோ டிரைவ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு தரவுகளின் படி சிகாகோவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் மில்லெனியம் பூங்கா கடற்படை தூண்சுவர்களுக்கு அடுத்த இடம் பெற்றிருந்தது. இப்பூங்காவின கட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 1997ஆம் ஆண்டில் தொடங்கின. கட்டடப்பணிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகள் தொய்விற்குப் பின் 2004ஆம் ஆண்டு முடிந்தன. இப்பூங்கா ஜூலை 16, 2004 ஆம் நாள் திறக்கப்பட்டது. மூன்று நாள் திறப்பு விழா சுமார் மூன்று இலட்சம் மக்களை ஈர்த்தது. இப்பூங்கா தனது போதுச்சேவைக்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் படியான வடிவமைப்பிற்காகவும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. இப்பூங்காவில் நுழைய கட்டணம் வசூலிக்க்ப்படுவதில்லை. ஜே பிரித்கேர் பெவிலியன், "க்லூது கேட்",மற்றும் "கிறவுன் பௌண்டைன்", லூரி கார்டன் மற்றும் பல பகுதிகள் மக்களை கவர்கின்றன. இப்பூஙகாவிலிருந்து பி.பீ நடைபாலம் மற்றும் நிகோலஸ் பாலவழியின் மூலம் கிரான்ட் பூங்காவின் மற்ற பகுதிகளை அணுகலாம். 1893இன் உலக கொலம்பிய கண்காட்சிக்குப் பிறகு இப்பூங்காவே சிகாகோ நகரத்தின் முக்கிய திட்டம் என்று கருதப்படுகிறது. இதனைக் கட்ட 15 கோடி டாலர்கள் செலவாகும் என்று முதலில் செய்யப்பட்ட மதிப்பீடை விட மிக அதிகமாக செலவானது. கடைசியாக 47.5 கோடி டாலர்கள் செலவானது. சிகாகோ நகரம் 27கோடி டாலர்களை மட்டுமே கொடுத்தது மீதி பணம் தனியார் அன்பளிப்புகளால் கிடைத்தது. கட்டடப்பணிகளின் தொய்வு மற்றும் பண விரையம் ஆகியவை சரியான திட்டமிடாதல், பல்வேறு திட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் தான் என்று பலர் கூறுகிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி பூங்காவை திறந்ததற்காக பலர் பாராட்டினர். திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் ஒன்றாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட 50 இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன. நெல்லையில் உள்ள சந்திப்பிள்ளையார், குறுக்குத்துறை முருகன் கோவில், திருவாவடுதுறை, திருநள்ளாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான கோயில்கள் உள்ளன. குறிப்பாக திருமங்கலக்குடி, சூரியனார் கோயில், ஆகியன ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த ஆதீனம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம்,இலக்கணம், நாடகம், புராணம் என பலதுறை சார்ந்த பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23 ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தாரால் மேற்கொள்ளப்பட்டது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குரு மகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த அருள்திரு நமசிவாயமூர்த்திகள் ஆவார். திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமகாசன்னிதானமாக 25 ஆண்டுகளாய் விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள். 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21 தேதியன்று அன்று இச்சுவாமிகள் காலமானார். திருவிடைமருதூர் கோவிலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தர தம்பிரான்,சுவாமிகள் அம்பலவாண தேசிக பண்டார சன்னிதிகள் என்ற பெயருடன் 24 ஆவது குருமகாசன்னிதானமாகப் பட்டமேற்றார். மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது (Mahapandit Rahul Sankrityayan Award, தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन पुरस्कार) இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (நடுவண் இந்தி அமைப்பு) வழங்கும் விருதாகும். "இந்தி செவி சம்மான்" என்றும் "ராகுல் சாங்கிர்த்யாயன் தேசிய விருது" என்றும் அழைக்கப்படும் இந்த விருது இந்தியில் பயண இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாக இருவருக்கு வழங்கப்படுகிறது. நுண்ணுறுப்பு நுண் உறுப்புகள் அல்லது உயிரணுவின் உள்ளுறுப்புகள் ("organelle") (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு உயிரணுவின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. நிலைக்கருவிலிகளிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது. நுண்ணுறுப்புகள் அனைத்தும் நுண்நோக்கி கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு அதன் கரு ஆகும். இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது. நிலைக்கருவிலிகள் மெய்க்கருவுயிரிகள் போன்று சிக்கல் நிறைந்தவை அல்ல. முன்னர் நிலைக்கருவிலிகளுக்குள் கொழுப்பு மென்சவ்வால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று அவற்றுள் உள்ள நுண் உறுப்புகள் அறியப்பட்டுள்ளது. 1970களில் பாக்டீரியா மேசோசோம் என்னும் நுண் உறுப்பைக் கொண்டுள்ளது என்று அவதானிக்கப்பட்டது, ஆனால் அவை இலத்திரன் நுண் நோக்கியில் பாக்டீரியாவைப் பார்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வேதிப்போருட்களின் விளைவால் ஏற்பட்ட போலி உருவம் எனத் தெரியவந்தது. ஆயிலியம் (பஞ்சாங்கம்) ஆயிலியம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 9 ஆவது பிரிவு ஆகும். கடகராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ஆயிலிய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ஆயிலிய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" ஆயிலியம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், ஒன்பதாவது நட்சத்திரமாகிய ஆயிலியம் 106° 40'க்கும் 120° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஆயிலியத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ஆயிலிய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ஆயிலிய நட்சத்திரக் கூட்டத்தின் (δ, ε, η, ρ, and σ Hydrae) பெயரைத் தழுவியது. ஆயிலியத்தின் சமசுக்கிருதப் பெயரான "ஆஷ்லெஷா" "(Ashlesha)" என்பது "ஒன்றுடன் ஒன்று பிணைதல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு ஒன்றுடனொன்று பிணைந்த பாம்புகளின் வடிவம் ஆகும். இது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் காணும் குண்டலினி சக்தியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ஆயிலிய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: மகம் (பஞ்சாங்கம்) மகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது மக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் மக நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" மகம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பத்தாவது நட்சத்திரமாகிய மகம் 120° 00'க்கும் 133° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் மகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தில் உள்ள மக நட்சத்திரத்தின் (Regulus) பெயரைத் தழுவியது. மகத்தின் சமசுக்கிருதப் பெயரான "மகா" "(Magha)" என்பது "மகத்துவமான ஒன்று" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு சிம்மாசனம் அல்லது பல்லக்கு ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. மக நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: பூரம் (பஞ்சாங்கம்) பூரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 11 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினோராவது நட்சத்திரமாகிய பூரம் 133° 20'க்கும் 146° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமசுக்கிருதப் பெயரான "பூர்வ பால்குனி" "(Purva Phalguni)" என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூர நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: உத்தரம் (பஞ்சாங்கம்) உத்தரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 12 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்தரம் 146° 40'க்கும் 150° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதற் பாதம் சிங்கராசியிலும் அடுத்த மூன்று பாதங்களும் கன்னிராசியிலும் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தர நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரத்தின் (டெனெபோலா (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் சமசுக்கிருதப் பெயரான "உத்தர பால்குனி" "(Purva Phalguni)" என்பது "பிந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் நான்கு கால்கள்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தர நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: அத்தம் (பஞ்சாங்கம்) அத்தம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 13 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அத்த நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அத்த நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" அத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதின்மூன்றாவது நட்சத்திரமாகிய அத்தம் 160° 00'க்கும் 173° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் அத்தத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் கன்னிராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி அத்த நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் கோர்வசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட அத்தத்தின் (α, β, γ, δ, ε கோர்வசு) பெயரைத் தழுவியது. அத்தத்தின் சமசுக்கிருதப் பெயரான "ஹஸ்த" "(Hasta)" என்பது "கை" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கை" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. அத்த நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: சுவாதி (பஞ்சாங்கம்) சுவாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 15 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சுவாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சுவாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" சுவாதி ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினைந்தாவது நட்சத்திரமாகிய சுவாதி 186° 40'க்கும் 200° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சுவாதியின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக துலை இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சுவாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பூட்டெசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தின் (ஆர்க்ட்டூரசு (Arcturus) பெயரைத் தழுவியது. சித்திரையின் சமசுக்கிருதப் பெயரான "ஸ்வாதி" "(Swati)" என்பது "வாள்" அல்லது "தங்கியிராமை" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காற்றில் அசையும் ஒற்றைப் புல்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சுவாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: விசாகம் (பஞ்சாங்கம்) விசாகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 16 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது விசாக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் விசாக நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" விசாகம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினாறாவது நட்சத்திரமாகிய விசாகம் 200° 00'க்கும் 213° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் விசாகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலை இராசியிலும் நான்காம் பாதம் விருச்சிக இராசியிலும் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி விசாக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் துலை விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட விசாக நட்சத்திரத்தின் (α, β, γ, ι லிப்ராய்) பெயரைத் தழுவியது. விசாகத்தின் சமசுக்கிருதப் பெயரான "விஷாக்க" "(Vishakha)" என்பது "கிளைத்த வடிவம்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "குயவர் சில்லு" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. விசாக நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: prashanth அனுஷம் (பஞ்சாங்கம்) அனுஷம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 17 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அனுஷ நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அனுஷ நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" அனுசம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினேழாவது நட்சத்திரமாகிய அனுஷம் 213° 20'க்கும் 226° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் அனுஷத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக விருச்சிக இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுச நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமசுக்கிருதப் பெயரான "அனுராத" "(Anuraadha)" என்பது "தெய்வீக ஒளியின் சீடர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "தாமரை" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. அனுச நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: கேட்டை (பஞ்சாங்கம்) கேட்டை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 18 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது கேட்டை நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் கேட்டை நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" கேட்டை ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினெட்டாவது நட்சத்திரமாகிய கேட்டை 226° 40'க்கும் 240° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் கேட்டை நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக விருச்சிக இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி கேட்டை நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் (α, σ, τ இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. கேட்டையின் சமசுக்கிருதப் பெயரான "ஜியேஷ்ட்டா" "(Jyeshta)" என்பது "மூத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காதணி"யும் "குடை"யும் ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. கேட்டை நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: மூலம் (பஞ்சாங்கம்) மூலம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 19 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது மூல நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் மூல நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" மூலம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பத்தொன்பதாவது நட்சத்திரமாகிய மூலம் 240° 00'க்கும் 253° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் மூல நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக தனு இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மூல நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட மூலத்தின் ε, ζ, η, θ, ι, κ, λ, μ மற்றும் ν இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. மூலத்தின் சமசுக்கிருதப் பெயரான "மூல" "(Mula)" என்பது "மூலம்" அல்லது "வேர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வேர்களின் கட்டு" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. மூல நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில் விசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன. 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர். கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன. 1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன. 1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம் ஆடிச் செவ்வாய் புரட்டாதிச் சனி ஐப்பசி கந்தசஷ்டி கார்த்திகை விளக்கீடு மார்கழி திருவெம்பாவை தைப் பூசம் மாசி சிவராத்திரி அன்னதான சபை இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது. பண்ணாக மான்மியம் - பண்டிதர் அ. ஆறுமுகம். பூராடம் (பஞ்சாங்கம்) பூராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 20 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூராடம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபதாவது நட்சத்திரமாகிய பூராடம் 253° 20'க்கும் 266° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூராட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக தனு இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூராட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமசுக்கிருதப் பெயரான "பூர்வ ஆஷாட" "(Purva Ashadha)" என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூராட நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: உத்தராடம் (பஞ்சாங்கம்) உத்தராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 21 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தராடம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்தோராவது நட்சத்திரமாகிய உத்தராடம் 266° 40'க்கும் 280° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தராட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதலாம் பாதம் தனு இராசியிலும் மற்ற மூன்று பாதங்களும் அமைந்துள்ளன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தராட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தராடத்தின் (ζ மற்றும் σ சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. உத்தராடத்தின் சமசுக்கிருதப் பெயரான "உத்தர ஆஷாட" "(Uttara Ashadha)" என்பது "பிந்திய வெற்றி" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "யானைத் தந்த"மும் "கட்டில் பலகை"களும் ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தராட நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: திருவோணம் (பஞ்சாங்கம்) திருவோணம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 22 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது திருவோண நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் திருவோண நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" திருவோணம் ஆகிறது. ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்திரண்டாவது நட்சத்திரமாகிய திருவோணம் 280° 00'க்கும் 293° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் திருவோண நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் அல்லது கால்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மகர இராசிக்குள் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி திருவோண நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமசுக்கிருதப் பெயரான "ஷ்ரவன" "(Shravana)" என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. திருவோண நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: அவிட்டம் (பஞ்சாங்கம்) அவிட்டம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 23 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அவிட்ட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அவிட்ட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" அவிட்டம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து மூன்றாவது நட்சத்திரமாகிய அவிட்டம் 293° 20'க்கும் 306° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் அவிட்ட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களும் மகர இராசியிலும் ஏனைய இரண்டும் கும்ப இராசியிலும் அமைந்துள்ளன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி அவிட்ட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் டெல்பினசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட அவிட்டத்தின் (α முதல் δ டெல்பினி வரை) பெயரைத் தழுவியது. அவிட்டத்தின் சமசுக்கிருதப் பெயரான "தனிஸ்தா" "(Dhanishtha)" என்பது "ஆகக்கூடிய செல்வம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "முரசு" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. அவிட்ட நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: சதயம் (பஞ்சாங்கம்) சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சதய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சதய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" சதயம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து நான்காவது நட்சத்திரமாகிய சதயம் 306° 40'க்கும் 320° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சதய நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் கும்ப இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சதய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் அக்குவாரியசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட அவிட்டத்தின் (γ அக்குவாரீ) பெயரைத் தழுவியது. அவிட்டத்தின் சமசுக்கிருதப் பெயரான "ஷத்தபிஷா" "(Shatabhisha)" என்பது "நூறு குணப்படுத்துபவர்கள்" அல்லது "நூறு பூக்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வெறும் வட்டம்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சதய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: பூரட்டாதி (பஞ்சாங்கம்) பூரட்டாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 25 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூரட்டாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூரட்டாதி ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஐந்தாவது நட்சத்திரமாகிய பூரட்டாதி 320° 00'க்கும் 333° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களும் கும்ப இராசியிலும் நான்காவது பாதம் மீன இராசியிலும் அமைந்துள்ளன. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரட்டாதியின் (α மற்றும் β பெகாசி) பெயரைத் தழுவியது. பூரட்டாதியின் சமசுக்கிருதப்பெயரான "பூர்வ பத்ரபாத" "(Purva Bhadrapada)" என்பது "முதல் ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வாள்", "கட்டிலின் இரண்டு கால்கள்", "இரண்டு முகங்கள் கொண்ட மனிதன்" என்பன. இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: உத்தரட்டாதி (பஞ்சாங்கம்) உத்தரட்டாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 26 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தரட்டாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தரட்டாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தரட்டாதி ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஆறாவது நட்சத்திரமாகிய உத்தரட்டாதி 333° 20'க்கும் 346° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மீன இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்திலும் ஆன்ட்ரோமெடா விண்மீன் கூட்டத்திலும் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரட்டாதியின் (γ பெகாசி மற்றும் α ஆன்ட்ரோமெடாய்) பெயரைத் தழுவியது. உத்தரட்டாதியின் சமசுக்கிருதப்பெயரான "உத்தர பத்ரபாத" "(Uttara Bhadrapada)" என்பது "இரண்டாவது ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்", அல்லது "இரட்டையர்" ஆகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தரட்டாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: ரேவதி (பஞ்சாங்கம்) ரேவதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 27 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ரேவதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" ரேவதி ஆகும். ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஏழாவது நட்சத்திரமாகிய உத்தரட்டாதி 346° 40'க்கும் 360° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ரேவதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மீன இராசியில் அமைந்துள்ளது. இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ரேவதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் மீன விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நட்சத்திரமான ரேவதியின் (ζ Piscium) பெயரைத் தழுவியது. ரேவதியின் சமசுக்கிருதப்பெயரான "ரேவதி" "(Revati)" என்பது "வளம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் "மீன்", "முரசு" என்பனவாகும். இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ரேவதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு: ஏர்ல் குணசேகர 49/1, வோர்ட் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகம். சரண குணவர்தன 15, விஜயராம மாவத்தை, கம்பஹாவில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகர். வெட்டுமானக் கோயில் தனிப் பாறை ஒன்றிலிருந்து தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுப்பதன் மூலம் அமைக்கப்படும் கோயில் வெட்டுமானக் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. கற்களை அடுக்கிக் கோயில்களைக் கட்டும் முறை அறிமுகமாவதற்கு முன்னர் வெட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கற்களை அடுக்கிக் கட்டும் கோயில் கட்டுமானக் கோயில் ஆகும். வெட்டுமானக் கோயில்களை அமைப்பது கடினமானதும், அமைப்பதற்கு அதிக காலம் எடுப்பதுமாகும். இக்கோயில்களை எல்லா இடங்களிலும் அமைக்க முடியாது. ஏற்ற பாறைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே அமைக்க முடியும். அமைத்துக்கொண்டிருக்கும்போது ஏதாவது பிழைகள் ஏற்பட்டால் முழுக் கோயிலுமே பயன்படாதது ஆகிவிடும். கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் வெட்டுமானக் கோயிலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக் கோயில் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. சந்திரஸ்ரீ கஜதீரா CD 90, கிரீகோரியஸ் வீதி, கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், சட்டத்தரணி. ஸ்ரீபால கமலாத் 79/5/3, ஹைபார்க் ரெசிடன்ஸ், ஹைட்பார்க் கோனர், கொழும்பு 02 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகர். டோனி மாரிசன் டொனி மொறிசன் (ரொனி மொறிசன், "Toni Morrison", பி. பெப்ரவரி 18, 1931) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கலைஞர் காப்பீடு திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். ஜூலை 2009ல் மு. கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஜூன் 2011ல் ஜெ. ஜெயலலிதாவின் அதிமுக அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது இத்திட்டம் கூடுதல் பலன்களுடன் திருந்திய வடிவில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2011(Chief Minister's Comprehensive Health Insurance Scheme, 2011) என்ற பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு சூலை 2011 ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜூலை 23, 2009 அன்று இந்திய மத்திய சுகாதரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கலைஞர் மருத்துவக் காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதே போன்ற திட்டம் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அரோக்கியஸ்ரீ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான தவணைத் (பிரிமியம்) தொகையை பயனாளிகளே கட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அத்தொகையை மாநில அரசே கட்டியது. இதே போன்று தமிழக மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான தவணைத் தொகையாக மாதம் ரூ.20 அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படதுது. தமிழ்நாடு அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனும் பெயரில் ஸ்டார் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஜூலை 2011ல் அதிமுக அரசு பொறுப்பேற்றபின்னர் இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது. தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. ஒரு இலட்சம் முதல் ரூ. 1.5 இலட்சம் வரை நான்காண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் நான்கு லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள், குறிப்பிட்டுள்ள நோய் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள். நெஞ்சக நோய்கள் இரத்த நோய்கள் தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும். அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏனைய அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். (1) கிராம நிர்வாக அதிகாரி / வரி வசூலிப்பவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் கிராம / நகர பஞ்சாயத்துக்களாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலராலும், நகராட்சி / மாநகாராட்சிகளில் வரி வசூல் அலுவலராலும் பயனாளியின் புகைப்படத்துடன் கூடிய சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். (2) அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏதாவதொரு அடையாள அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். (3) முதல்முறையாக சிகிச்சை மேற்கொள்ளும் போது மட்டுமே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் சான்றிதழ் அல்லது மேற்குறிப்பிட்ட வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய இயலும். அடுத்து வரும் மருத்துவ சிகிச்சைகளின் போது, பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உரிய அடையாள சிறப்பு அட்டையைப் பெற்று மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய முடியும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அல்லது பொதுநல மருத்துவர்களால் உரிய படிவத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைச் சீட்டு எனினும் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அளித்த பரிந்துரைச் சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் அனுமதிக்கப்படலாம். ஆனால் இரண்டு நாட்களுக்குள் தக்க அத்தாட்சியைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் இத்திட்டச் செயல்பாட்டிற்கான ஒரு செயல் அலுவலகம் அந்தந்த மருத்துவமனைகளால் செயல்படுத்தப்படும். இந்த செயல் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் ஸ்டார் காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரி பயனீட்டாளர்களுக்குச் செய்து கொடுப்பார். இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்ற இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகின்றது.. பயனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்குச் சென்று, காப்பீட்டு நிறுவனத்தினிடமிருந்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த அடையாள அட்டையைக் காண்பித்து ஏழைக் குடும்பங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அல்லது குறிப்பிட்டத் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தவணைத்(பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கியது. நேர்மாறு (கணிதம்) கணிதத்தில், நேர்மாறு ("Inverse") என்பது பெரும்பான்மையான இடங்களில் ஏதாவது ஒரு கருத்துக்கு எதிர்மாறான ஒன்றாகக் கருதப்படுகிறது. நேர்மாறு மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் கணிதப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. "e" எனும் முற்றொருமை உறுப்பைக் கொண்ட ஈருறுப்புச் செயலி * ஐப்பொறுத்து ஒரு உறுப்பு "x" ன் நேர்மாறு உறுப்பு "y" எனில், தாவணி தாவணி என்பது இளம் பெண்கள் அணியும் மேல் ஆடை. சுமார் இரண்டு மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட துண்டுத் துணியாகும். பருவம் எய்திய பெண்கள் தங்கள் மார்பு , வயிறு , முதுகுப் பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தும் துணி ஆகும். இது இடது தோள் பகுதியை மறைக்கும் ஆடை ஆகும். பாவாடை , மேல்சட்டை ஆகிய ஆடைகளுக்கு மேலாக இவ்வாடை அணியப்படுகிறது. ஓரங்கள் தைத்தோ தைக்காமலோ இவ்வாடை அணியப்படுகிறது. பெண்கள் அணியும் புடவையின் முந்தானைப் பகுதியைப் போன்றது. இது பெண் குழந்தைகள் பருவம் எய்திய பிறகு திருமணத்திற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் அணியும் ஆடை. தாவணி அணியும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இப்பழக்கம் எந்த நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது என்பதை அறுதியிட்டுக்கூற இயலவில்லை. ஆனாலும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதை}} செவி வழிச் செய்திகளால் அறிய முடிகிறது. தாவணிகள் பல்வேறு வண்ணங்களிலும் பூ உள்ளிட்ட பல ஓவியங்களையும் தாங்கி அழகாக வடிவமைக்கப்படுகின்றன. ஆலன்டாயின் ஆலன்டாயின் "(allantoin)" என்பது CHNO எனும் மூலக்கூறு வாய்பாடு உடைய ஒரு வேதிச்சேர்மம். மனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான இது அவற்றின் சிறுநீரில் கழிவுப்பொருளாக வெளியேற்றப்படுகிறது. மனிதன் மற்றும் குரங்கினங்களில் யூரிக் அமிலத்தை ஆலன்டாயினாக மாற்றும் நொதி இல்லை. எனவே யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது. மீன்களிலோ ஆலன்டாயின் அம்மோனியாவாக உடைக்கப்படுகிறது. தாவரங்கள் மற்றும் பாக்டீரியங்களிலும் இது முக்கிய வளர்சிதை மாற்ற இடைபொருளாக உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்லன்டாயின் பாதுகாப்பானது; நச்சுத்தன்மை அற்றது; ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. எனவே இது பற்பசை, உதட்டுச் சாயம், பருவுக்கான களிம்பு உள்ளிட்ட பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் மருந்துகளில் முக்கியப் பொருளாக உள்ளது. டேவிட் அலன் (துடுப்பாட்டக்காரர்) டேவிட் அலன் ("David Allen", பிறப்பு: அக்டோபர் 29 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 456 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1960-1966 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கபீர் அலி கபீர் அலி ("Kabir Ali", பிறப்பு: நவம்பர் 24 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 117 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2003 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கூபி ஆலென் கூபி ஆலென் ("Gubby Allen ", பிறப்பு: சூலை 31 1902, இறப்பு: நவம்பர் 29 1989) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 265 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1930 - 1948 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜொனத்தன் ஆக்னியூ ஜொனத்தன் ஆக்னியூ ("Jonathan Agnew", பிறப்பு: ஏப்ரல் 4 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 218 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1984/1985 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மோரிஸ் அலொம் மோரிஸ் அலொம் ("Maurice Allom", பிறப்பு: மார்ச்சு 23 1906, இறப்பு: ஏப்ரல் 8 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 179 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1931 - 1932 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். உஸ்மான் அப்சால் உஸ்மான் அப்சால் ("Usman Afzaal", பிறப்பு: சூன் 9 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 215 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2001 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கிரிஸ் ஆடம்ஸ் கிரிஸ் ஆடம்ஸ் ("Chris Adams", பிறப்பு: மே 6 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 336 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1999/ 2000 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். தியான் சந்த் விருது தியான் சந்த் விருது (Dhyan Chand Award) இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது. பவுல் அல்லோட் பவுல் அல்லோட் ("Paul Allott", பிறப்பு: செப்டம்பர் 14 1956), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 245 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 291 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1981 - 1985 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார் சார்லி அப்சலோம் சார்லி அப்சலோம் ("Charlie Absolom", பிறப்பு: சூன் 7 1846, இறப்பு: சூலை 30 1889 இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1879ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டிம் ஆம்ப்ரோஸ் டிம் ஆம்ப்ரோஸ் ("Tim Ambrose", பிறப்பு: டிசம்பர் 1 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 108 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1988 - 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார் பொபி எபில் பொபி எபில் ("Bobby Abel", பிறப்பு: நவம்பர் 30 1857, இறப்பு: டிசம்பர் 10 1936) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 627 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1888 – 1902 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பால கணபதி பால கணபதி(, , , விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 1வது திருவுருவம் ஆகும். இவ்வடிவம் யானை முகம் கொண்ட இந்துக் கடவுளான விநாயகரைக் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதற்கு உரியது. பால கணபதியை பல்வேறு வடிவங்களில் ஓவியர்கள் காட்டுவது உண்டு. விநாயகரின் தாய், தந்தையராகக் கொள்ளப்படும் பார்வதியும், சிவனும் பால கணபதியைக் குளிப்பாட்டுவது போலவும், பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போலவும் வரையப்பட்ட படங்கள் உள்ளன. தவிர, பால கணபதி இருப்பது போலவும், தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. சமசுக்கிருதத்தில் "பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது. பால கணபதி நான்கு திருக்கரங்களும் யானைமுகமும் உடைவர். இவரது மேனி உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் கொண்டது எனச் சில மூலங்களில் காட்டப்பட்டுள்ளது. வேறு சில மூலங்கள் இவரைப் பொன்னிற மேனி கொண்டவர் என்கின்றன. குழந்தைத் திருமேனி கொண்டவராகப் பெரும்பாலும் காட்டப்பட்டாலும், சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்டுவது உண்டு. கழுத்தில் பூமாலை அணிந்திருப்பார். பால கணபதி நான்கு கைகளை உடையவர். நான்கு கைகளிலும் ஏந்தியிருக்கும் பொருள்கள் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவது இல்லை. சிலவற்றில் மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம் ஆகியவற்றை ஏந்தியிருப்பவராகக் காணப்படும் பால கணபதி, வேறு சிலவற்றில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுகிறார். இப்பொருட்கள் செழிப்பையும், வளத்தையும் குறித்துக்காட்டுகின்றன. பலாப்பழத்துக்குப் பதிலாக பூங்கொத்தை அவரது தும்பிக்கையில் மோதகத்தை அல்லது விளாம்பழத்தை ஏந்தியபடி காட்டப்படும் பால கணபதி வடிவங்களும் உண்டு. பெரும்பாலும் துதிக்கையில் மோதகத்தை ஏந்தி அதை வாயை நோக்கித் திருப்பி வைத்திருப்பதையும் காண முடியும். இச் சிறுபராயக் கடவுள் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இவரை வணங்குவதனால் சிறுவர்கள் நல்ல ஒழுக்கத்தை அடைய முடியும் எனவும் கூறுகின்றனர். அத்துடன் இவர் குழந்தையைப் போன்ற மகிழ்வையும், நல்ல உடல்நலத்தையும் தனது பக்தர்களுக்குத் தருவார் என்றும் கூறுகின்றனர். இரண்டு கைகளுடனான சிறுவன் வடிவில் இவரை வணங்குவதற்கான கோயில்கள் சில தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. அங்கே இவரைப் பிள்ளையார் (சிறுவன்) என்பர். லெஸ் ஏம்ஸ் லெஸ் ஏம்ஸ் ("Les Ames", பிறப்பு: திசம்பர் 3 1905, இறப்பு: பெப்ரவரி 27 1990 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், , 593 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1929 - 1939 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார் அச்சுவினி (நட்சத்திரம்) அச்சுவினி ("Ashvini") என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் இராசி சக்கரத்தில் ("Zodiac") பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் ஆகும். இது மேட இராசியில் (Aries) உள்ள மிகப்பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியற்பெயர் formula_1-Arietis. மேற்கத்திய நாடுகளில் இதை "ஹாமல்" ("Hamal") என்பர். இது ஆங்கிலேய வானியலில் மேட இராசி விண்மீன் குழுவில் உள்ள β மற்றும் γ விண்மீனுக்கு ஒப்பாகும். சோதிடத்தில் அச்சுவினியை கேது ஆள்கிறது. அச்சுவினி விண்மீனை தமிழில் இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி என்ற சொற்களால் திவாகர, சூடாமணி நிகண்டுகள் சுட்டியுள்ளன. இது சூரியனின் குறுக்களவை விட 18 பங்கு பெரியது. சூரியனைப்போல் 4.5 பங்கு கனமுள்ளது. 55 பங்கு ஒளியுடையது. பூமியிலிருந்து 65.9 ஒளியாண்டுகள் தூரத்தில் தான் இருப்பதால் இதன் தோற்ற ஒளிப்பொலிவு (apparent magnitude) 2.01 ஆகும். வானத்தில் ஒளிரும் எல்லாவற்றிலும் ஒளிர்வில் 47வதாக உள்ளது. சாதாரணமாக இதை டிசம்பர் 1ம் தேதி 22 மணியளவிலும், செப்டம்பர் 1ம் தேதி 4 மணி அளவிலும், மற்ற நாட்களில் கீழே உள்ள அட்டவணைப்படியும் காணலாம். இது பெகாஸஸ் சதுரத்திற்குக் கிழக்கே உள்ளது. இதற்கு மேற்கேயுள்ள கார்த்திகை நட்சத்திரங்களும்("Pleides cluster") இதுவும் ஏறக்குறைய ஒரே நடுவரைவிலக்கம் ("declination") உடையவை. இரவில் நட்சத்திரங்களைக்கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் அச்சுவினி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்: பொருள்: "அச்சுவனி ஆறு நட்சத்திரங்களைக்கொண்டது. அவைகள் சேர்ந்த உருவம் குதிரைத் தலை போல் இருக்கும். அச்சுவனி உச்சத்தில் வரும்போது கீழ்வானில் கடகராசி உதித்து இரண்டு நாழிகையாயிருக்கும்". எ.கா.: மார்கழி மாதம் 15 தேதியில், அச்சுவினியை இரவு உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். தனுசு இராசியின் மத்தியில் சூரியன் இருப்பதால் சூரியனுக்கும் கீழ்த்தொடுவானத்திற்கும் உள்ள இடச்சுழி தூரத்தை இப்படி கணக்கிடலாம். தனுசில் 2 1/2 நாழி, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிடபம், மிதுனம், ஆகிய ஒவ்வொரு ராசிக்கும் தோராயமாக 5 நாழிகை, கடகத்தில் 2 நாழிகை -- இவ்வளவையும் கூட்டினால் 34 1/2 நாழிகை ஆகிறது. அதாவது, சூரியன் மறைந்து 4 1/2 நாழிகையாகிறது. நேரம் 7-48P.M.(தோராயமாக). வடமொழியில் இதற்கு ஒத்த வாய்பாடு: அச்வீ கர்க்கீ ரூபா. இங்கு "ரூபா" என்ற சொல்லுக்கு க-ட-ப-ய எண்ணிக்கையில் சூட்சுமமாக 2 1/8 நாழிகை என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அச்சுவனியை உச்சத்தில் பார்த்தால் கீழ்வானில் கடகராசி உதித்து 2 1/8 நாழிகையாகியிருக்கும் என்று கொள்ளவேண்டும். இதன்படி, மேலே ஆளப்பட்ட எடுத்துக்காட்டில், நேரம் 7-51 P.M. என்ற விடை வரும். தருண கணபதி தருண கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 2வது திருவுருவம் ஆகும். நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர். ரொனால்ட் யெல்தாம் ரொனால்ட் யெல்தாம் ("Ronald Yeldham", பிறப்பு: ஆகத்து 18 1902, இறப்பு: ஆகத்து 14 1983) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். டென்னிஸ் அமிஸ் வில்கின் மோதா வில்கின் மோதா ("Wilkin Mota", பிறப்பு: செப்டம்பர் 20, 1981), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஹேமுலால் யாதவ் ஹேமுலால் யாதவ் ("Hemulal Yadav", இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பக்தி கணபதி பக்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 3வது திருவுருவம் ஆகும். நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர். ரங்கநாத் குமார் ரங்கநாத் குமார் ("Ranganath Vinay Kumar", பிறப்பு: பிப்ரவரி 12, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அஜய் வர்மா (கேரளா துடுப்பாட்டக்காரர்) அஜய் வர்மா ("Ajay Varma", பிறப்பு: பிப்ரவரி 18, 1963), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 21 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். பவுல் வால்தட்டி பவுல் வால்தட்டி ("Paul Valthaty",பிறப்பு: டிசம்பர் 7, 1983), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். வீர கணபதி வீர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 4வது திருவுருவம் ஆகும். சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர். கீத் ஆண்ட்ரூ கீத் ஆண்ட்ரூ ("Keith Andrew", பிறப்பு: திசம்பர் 15, 1929, இறப்பு: திசம்பர் 27 2010) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 330 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1955 - 1963 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சுனில் வால்சன் சுனில் வால்சன் ("Sunil Valson", பிறப்பு: அக்டோபர் 2, 1958, இந்தியத் துடுப்பாட்டக்காரர்), சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் (Sangeet Natak Akademi Fellowship), மேலும், சங்கீத நாடக அகாதமி ரத்ன சதஸ்யஎன்ற மாண்புமிகு உறுப்பினர் பதவி சிறப்பான இந்திய நிகழ்த்து கலைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு நேரத்திலும் முப்பது நபர்கள் இருக்குமாறு இந்த உறுப்பினர் பதவிகள் சங்கீத நாடக அகாதமியால் அளிக்கப்படுகின்றன. இந்திய அரசு|இந்திய அரசால் ஓர் நிகழ்த்து கலைக் கலைஞருக்கு வழங்கப்படும் உயரிய பெருமை இதுவேயாகும். 1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அங்கத்துவம் முதலில் கருநாடக இசைக் கலைஞர்களான காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி இராமானுச அய்யங்கார் மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்கள் அல்லாவுதீன் கான், அஃபீசு அலி கான் மற்றும் திரைப்பட, மேடைநாடக நடிகர் பிரித்திவிராசு கபூர்.ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அமித் ஒனியல் அமித் ஒனியல் ("Amit Uniyal", பிறப்பு: நவம்பர் 21, 1981), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 40 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வால்டர் டுரூப் வால்டர் டுரூப் ("Walter Troup" பிறப்பு: அக்டோபர் 16 1869, இறப்பு: டிசம்பர் 14 1940) இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். ஜேக்சன் தாம்சன் ஜேக்சன் தாம்சன் ("Jackson Thompson", பிறப்பு: பிப்ரவரி 7, 1986), இந்தியத் துடுப்பாட்டக்காரர்). ஒமான் அணியிலும் விளையாடி வருகிறார் இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டி. கே. சுகுமாரன் தி. கே. சுகுமாரன் ("T. K. Sukumaran", இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சந்தனு சுக்வீகர் சந்தனு சுக்வீகர் ("Shantanu Sugwekar", டிசம்பர் 18 1966), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டி. பி. சுதீந்திரா டி. பி. சுதீந்திரா ("TP Sudhindra", ஏப்ரல் 24 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தாமஸ் ஸ்டர்கெஸ் தாமஸ் ஸ்டர்கெஸ் ("Thomas Sturgess", செப்டம்பர் 24 1898, இறப்பு: பிப்ரவரி 27 1974) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். ஒஸ்வால்ட் ஸ்மித் ஒஸ்வால்ட் ஸ்மித் ("Oswald Smith ", சனவரி 29 1904, இறப்பு: சனவரி 27 1979) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாப் ஆப்பிள்யார்ட் பாப் ஆப்பிள்யார்ட் ("Bob Appleyard", சூன் 27, 1924 - 17 மார்ச் 2015), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 154 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1954 - 1955 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஆல்பிரட் ஆர்ச்சர் ஆல்பிரட் ஆர்ச்சர் ("Alfred Archer", பிறப்பு: டிசம்பர் 6, 1871, இறப்பு: சூலை 15 1935) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டாம் ஆர்மிடாஜ் டாம் ஆர்மிடாஜ் ("Tom Armitage", பிறப்பு: ஏப்ரல் 25, 1848, இறப்பு: செப்டம்பர் 21 1922) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 57 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1877 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜெஃப் அர்னால்ட் ஜெஃப் அர்னால்ட் ("Geoff Arnold", பிறப்பு: செப்டம்பர் 3, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 248 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1967 - 1975 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜான் அர்னால்ட் ஜான் அர்னால்ட் ("John Arnold", பிறப்பு: நவம்பர் 30, 1907, இறப்பு: ஏப்ரல் 4, 1984) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 402 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1931ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டெட் அர்னால்ட் டெட் அர்னால்ட் ("Ted Arnold", பிறப்பு: நவம்பர் 7, 1876, இறப்பு: அக்டோபர் 4, 1942) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 343 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1903- 1907 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இவார்ட் அஸ்டில் இவார்ட் அஸ்டில் ("Ewart Astill ", பிறப்பு: மார்ச்சு 1, 1888, இறப்பு: பிப்ரவரி 4, 1948) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 733 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1927- 1930 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மைக் அத்தர்ட்டன் மைக் அத்தர்ட்டன் ("Mike Atherton", பிறப்பு: மார்ச்சு 23 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 115 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 336 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 287 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1989 - 2001 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இருவளையப் பொதுவணுச் சேர்மம் இருவளைய பொதுவணுச் சேர்மம் (spiro compound) என்பது இரண்டு கரிம வளையங்கள் ஓர் அணுவால் இணைக்கப்பட்ட கரிமச் சேர்மம் ஆகும். இந்த இருவளையங்கள் ஒரே மாதிரியாகவோ அல்லது வெவ்வேறாகவோ இருக்கலாம். இவ்வாறு இணைக்கும் அணு இரு வளையப் பொது அணு (spiro atom) என்று அழைக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் ஸ்பைரோ என்ற முன்னொட்டால் அழைக்கப்படும். இந்தப் பெயரிடும் முறையை 1900 ஆம் அடால்ஃப் வான் பேயர் வகுத்தார். பில் எதெ பில் எதெ ("Bill Athey", பிறப்பு: செப்டம்பர் 27 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1980 - 1988 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். வில்லியம் அட்டிவெல் வில்லியம் அட்டிவெல் ("William Attewell", பிறப்பு: சூன் 12 1861 ,இறப்பு: சூன் 11 1927) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 429 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1884 - 1892 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ராப் பெய்லி டிரெவர் பெய்லி டிரெவர் பெய்லி ("Trevor Bailey", பிறப்பு: திசம்பர் 3 1923, இறப்பு: பெப்ரவரி 10 2011.) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 682 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1946 - 1959 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டேவிட் பிரய்ஸ்ரோன் டேவிட் பிரய்ஸ்ரோன் ("David Bairstow", பிறப்பு: செப்டம்பர் 1 1951, இறப்பு: சனவரி 5 1998) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஃபிரெட் பேக்வெல் ஃபிரெட் பேக்வெல் ("Fred Bakewell", பிறப்பு: நவம்பர் 2 1908, இறப்பு: சனவரி 23 1983) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 250 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரிஸ் பால்டெர்ஸ்டோன் கிரிஸ் பால்டெர்ஸ்டோன் ("Chris Balderstone", பிறப்பு: நவம்பர் 16 1940, இறப்பு: மார்ச்சு 6 2000) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 390 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1976ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் () என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை ப‌ல்கலைக்கழகம். இது ஜேப்பியார் தலைமையில் செயல் படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ப‌ல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது. பொப் பாபர் பொப் பாபர் ("Bob Barber", பிறப்பு: செப்டம்பர் 26 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 386 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1960- 1968 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டிக் பார்லோ திக் பார்லோ ("Dick Barlow", பிறப்பு: மே 28 1851, இறப்பு: சூலை 31 1919 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 351 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1881- 1887 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கிரகாம் பார்லோ கிரகம் பார்லோ ("Graham Barlow", பிறப்பு: மார்ச்சு 26 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பில்லி பார்ன்ஸ் பில்லி பார்ன்ஸ் ("Billy Barnes", பிறப்பு: மே 27 1852, இறப்பு: மார்ச்சு 24 1899 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 459 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1880 - 1890 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சிட்னி பான்ஸ் சிட்னி பான்ஸ் ("Sydney Barnes", பிறப்பு: ஏப்ரல் 19 1873, இறப்பு: திசம்பர் 26 1967) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 133 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1901 - 1914 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சார்லி பெர்னாட் சார்லி பெர்னாட் ("Charlie Barnett )", பிறப்பு: சூலை 3 1910, இறப்பு: மே 28 1993) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 498 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1933 - 1948 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஏழாண்டுப் போர் ஏழாண்டுப் போர் ("Seven Years' War") என்பது 1756க்கும் 1763க்கும் இடையில் நடந்த உலகளாவிய இராணுவப் போராகும். வடக்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரித்தானிய இந்தியா, பிலிப்பின்ஸ் இந்த போரில் பங்கு பெற்றன. வரலாற்றில் இந்தப் போர் பிரெஞ்சு இந்திய போர் (1754–1763), போமேரனியன் போர் (1757–1762), மூன்றாவது ஆங்கில மைசூர் போர் (1757–1763), மூன்றாவது சிலேசியன் போர் (1756–1763) என்றெல்லாம் அறியப்படுகிறது. பிரித்தானியப் பேரரசுக்கும் பிரெஞ்சு, எசுப்பானிய அரச மரபான போர்பன் குலத்துக்கும் இடையே நிலவிய பகையுணர்வும், பிரசியாவின் ஹோஹன்சோலர்ன் மற்றும் ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பர்க் குடிகளிடையே நிலவிய பகையுணர்வும் இப்போருக்குக் காரணமாக அமைந்தன. இரு பெரும் கூட்டணிகள் மோதிக்கொண்ட இப்போரில் எப்பக்கத்துக்கும் முழுமையான வெற்றி கிட்டவில்லை. கசையிழை கசையிழை அல்லது சவுக்குமுளை என்பது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே பாக்டீரியாவில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக கோலுயிரி பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன. மூன்று வகையான கசையிழைகள் இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவை பாக்டீரியா, ஆர்கிபாக்டீரியா மற்றும் மெய்கருவிலி யாகும். கலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால் இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது. மேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன. ஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கீழே வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: மெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம். யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளைச் சுற்றி முதலுரு மென்சவ்வு காணப்படும். இவ்வகைச் சவுக்குமுளைகள் 9+2 கட்டமைப்பைப் பெற்றுள்ளன. அதாவது யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகத்தை இலத்திரன் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால், நடுப்பகுதியில் இரு தனி நுண்புன் குழாய்களும், சுற்றிவர ஒன்பது சோடி நுண்புன்குழாய்கள் முதலுரு மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும். சவுக்குமுளையும் பிசிரும் ஒரே நுண்கட்டமைப்பையே கொண்டுள்ளன. அவற்றின் நீளமும் அவை அசையும் விதமுமே அவற்றை வேறுபடுத்துகின்றன. இரண்டும் கல மென்சவ்விலுள்ள அடிச்சிறுமணி என்னும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிச்சிறுமணி 9+0 கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் அடிச்சிறுமணியின் நுண்புன்குளாய்கள் சோடிகளாக அல்லாமல் மும்மைகளாகவே காணப்படும். அடிச்சிறுமணியின் மத்தியில் நுண்புன்குழாய்கள் இருப்பதில்லை. யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளின் கட்டமைப்பு பாக்டீரிய சவுக்குமுளை கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் இவை இரண்டும் கலத்தின் அசைவை ஏற்படுத்தல் என்ற ஒரே தொழிலையே புரிகின்றன. பேரிசாத்தனார் பேரிசாத்தனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 38, 214, 242, 268, 305, குறுந்தொகை 81, 159, 278, 314, 366 நற்றிணை 25, 37, 67, 104, 199, 299, 323, 378, புறநானூறு 125, 198, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், மலையன் திருக்களிற்றுப்படி கோயில்களில் அமைக்கப்படும் மண்டபங்களுக்கு ஏறிச் செல்லும் படிகளின் இருபுறமும் யாளி அல்லது கஜயாளிகளைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்ற கைப்பிடிகள் திருக்களிற்றுப்படி என்று அழைக்கப்படுகின்றன. திருக்களிற்றுப்படியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்றாகும் உய்யவந்த தேவநாயனார் தான் இயற்றிய நூலை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வந்தார், அவர் தாழ்ந்த குலத்தினை சேர்ந்தவர் என்பதால் ஏற்கப்படவில்லை. எனவே இறைவனிடம் முறையிட வரும்போது, திருக்களிற்றுப்படியில் உள்ள கல்யானை இவரது நூலை இறைவனிடம் கொடுத்ததால் திருக்களிற்றுப்படியார் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பெந்தெகொஸ்தின் பேரொலி (சிற்றிதழ்) கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான பெந்தெகொஸ்தே சபைச் செய்திகளைக் கொண்டு சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் பெந்தெகொஸ்தின் பேரொலி. இந்த இதழின் ஆசிரியராக சகோ. டபிள்யூ. டேனியல் ராஜ் என்பவர் இருந்து வருகிறார். மே 2011 மே 2011 ("May 2011"), ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 2011 சூன் 15 புதன்கிழமை முடிவடையும். சங்கீத நாடக அகாதமி விருது சங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும். ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது. இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. சுப்பிரமணிய பாரதி விருது சுப்பிரமணிய பாரதி விருது (Subramanyam Bharati Award) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு தமிழ் மொழியின் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. அவ்வாண்டில் டா. பிரபாகர் மச்வே, டா. ராசேசுவர் வர்மா, டா. அர்தேவ் பகாரி, டா. என்.ஏ. நாகப்பா, பேரா. ராம்சிங் டோமர், டா.பக்த் தர்சன், டா. பி. கோபால் சர்மா மற்றும் திரு. மங்கல்நாத் சிங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தினேஷ் கன்கந்த 22/1ஏ, புலர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், டியு குணசேகர 128, பெத்தகன வீதி, புறக்கோட்டை இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், கீதாஞ்சன குணவர்தன 115, தியவன்ன கார்ட்ன், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், சரத் குமார குணரத்ன 20c, துனகல்பிட்டிய, நீர்கொழும்பில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர், மார்க் பென்சன் மார்க் பென்சன் ("Mark Benson", பிறப்பு: சூலை 6, 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 292 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1986 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பொப் பேரி (துடுப்பாட்டக்காரர்) பொப் பேரி (துடுப்பாட்டம்) ("Bob Berry )", சனவரி 29 1926, இறப்பு: டிசம்பர் 2 2006) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 273 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1950 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மார்ட்டின் பிக்நெல் மார்ட்டின் பிக்நெல் ("Martin Bicknell," சனவரி 16 1969) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1993 - 2003 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கங்கா சரண் சிங் விருது கங்கா சரண் சிங் விருது (Ganga Sharan Singh Award, தேவநாகரி: गंगाशरण सिंह पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பாகிய கேந்திரிய இந்தி சன்சுதான் இந்திமொழியை பரப்பவும் இந்திமொழிப் பயிற்சிக்கும் பேருதவியாக இருந்த இலக்கியவாதிகளுக்கு தேசிய அளவில் வழங்கும் விருதாகும். 1989ஆம் ஆண்டு இந்தி பயிற்றுவிக்கும் திட்டத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின்போது நிறுவப்பட்ட ஏழு விருதுகளில் இதுவும் ஒன்றாகும். இந்திய விடுதலை வீரரும் இந்தி மொழிப் பற்றாளருமான கங்கா சரண் சிங் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. ஜிம்மி பின்க்ஸ் ஜிம்மி பின்ஸ் (Jimmy Binks, அக்டோபர் 5 1935) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 502 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1963/64 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மொரீஸ் பேர்ட் மொரீஸ் பேர்ட் (Morice Bird, மார்ச்சு 25, 1888 இறப்பு: டிசம்பர் 9, 1933) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 192 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1910 - 1914 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜோய் பென்ஜமின் ஜோய் பென்ஜமின் ("Joey Benjamin", பிறப்பு: பிப்ரவரி 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1994 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜாக் பிர்கென்ஷா ஜாக் பிர்கென்ஷா "(Jack Birkenshaw," நவம்பர் 13, 1940) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 490 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1973 - 1974 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இயன் பிளாக்வெல் இயன் பிளெக்வெல் (Ian Blackwell, சூன் 10, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 158 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2006 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அலெக் பெட்சர் அலெக் பெட்சர் ("Alec Bedser", பிறப்பு: சூலை 4 1918, இறப்பு: ஏப்ரல் 4 2010) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 485 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1946 - 1955 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ரிச்சர்ட் பிளேக்கி ரிச்சர்ட் பிளேக்கி (Richard Blakey, சனவரி 15, 1967) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1992/93 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். காலின் பிளைத் காலின் பிளைத் "(Colin Blythe," மே 30, 1879, இறப்பு: நவம்பர் 8 1917) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 439 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1901 -1910 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். திருச்சிராப்பள்ளி முற்றுகை (1751–1752) திருச்சிராப்பள்ளி முற்றுகை ("Siege of Trichinopoly") என்பது சந்தா சாகிப்பின் படைகள் திருச்சி கோட்டை மீது 1751-52ல் நடத்திய முற்றுகை போராகும். இந்த முற்றுகை இரண்டாவது கர்நாடகப் போரின் ஒரு அங்கமாகும். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி சந்தா சாகிப்பை ஆற்காடு நவாப் ஆக அங்கீகரித்தது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடன் நவாப் ஆக முயன்று வந்த முகமது அலி கான் வாலாஜாவிடமிருந்து திருச்சி கோட்டையைக் கைப்பற்ற சந்தா சாகிப் முயற்சித்தார். இந்த முற்றுகையின் முடிவில் பிரெஞ்சு படைகள் சரணடைந்தன; சந்தா சாகிப் தஞ்சாவூர் மராத்தியப் படைகளால் கொல்லப்பட்டார். சக்தி கணபதி சக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 5வது திருவுருவம் ஆகும். செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர். ஸ்ட்ரிங்கர் லாரன்சு மேஜர் ஜெனரல் ஸ்ட்ரிங்கர் லாரன்சு ("Stringer Lawrence", மார்ச் 6, 1697 – ஜனவரி 10, 1775) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் ஆவர். இவர் இந்திய ராணுவத்தின் தந்தை எனவும் குறிப்பிடப்படுகிறார். லாரன்சு ஹெரிஃபொர்ட் என்ற ஊரில் பிறந்தார். 1727 ஆம் ஆண்டு பிரித்தானிய ராணுவத்தில் சேர்ந்தார் கடலூரில் உள்ள லாரன்சு சாலை இன்றும் இவர் பெயரால் அறியப்படுகிறது. துவிஜ கணபதி துவிஜ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 6வது திருவுருவம் ஆகும். சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர். ஜோர்ஜ் பீன் ஜோர்ஜ் பீன் ("George Bean", பிறப்பு: மார்ச்சு 7 1864, இறப்பு: மார்ச்சு 16 1923) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 3தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 247 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1882 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கிரேத் பத்தி கிரேத் பத்தி ("Gareth Batty ", பிறப்பு: அக்டோபர் 13 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 135 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 185 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2003 - 2005 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சித்தி கணபதி சித்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும். பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார். பில்லி பேட்ஸ் பில்லி பேட்ஸ் ("Billy Bates" , பிறப்பு: நவம்பர் 19 1855, இறப்பு: சனவரி 8 1900) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 299 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1881 - 1887 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். விக்டர் பெர்டன் கென் பெரிங்டன் ("Ken Barrington" , பிறப்பு: அக்டோபர் 6 1867), இறப்பு: மார்ச்சு 23 1906) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1889 / 1890 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அசுணமா (இலக்கியம்) அசுணமா என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம். இதை உணர்ந்த வேட்டுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாத காது வலியால் மிரண்டுவிடும். அந்த சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர்.
யானை மதத்தில் மொய்க்கும் வண்டுகளின் ஒலியை யாழின் ஒலியோ என அசுணம் கேட்கும்
கென் பாரிங்டன் கென் பாரிங்டன் ("Ken Barrington" , பிறப்பு: நவம்பர் 24 1930, இறப்பு: மார்ச்சு 14 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 82 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 533 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1955 - 1968 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பிரித் பெர்னாட் பிரித் பெர்னாட் ("Kim Barnett" , பிறப்பு: ஏப்ரல் 12 1894), இறப்பு: சனவரி 29 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 371 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1929 - 1930 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். கிம் பர்னாட் கிம் பர்னாட் ("Kim Barnett", பிறப்பு: சூலை 17 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 479 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 527 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1988 - 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். த நியூயார்க் டைம்ஸ் த நியூயார்க் டைம்ஸ் ("The New York Times") என்பது அமெரிக்க ஆங்கில நாளிதழ். இது 1851 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்பம் 1896 ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது. உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான புலிட்சர் பரிசுகளை வென்றுள்ள நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன், தி ஸ்டார் நியூஸ், டைம்ஸ் நியூஸ் போன்ற செய்தி தாள்களும் இவைதவிர அபௌட்.காம், என்ஒய்டைம்ஸ்.காம் போன்ற இணைய தளங்களும் உள்ளன. அல் ஹிலால் (சிற்றிதழ்) அல் ஹிலால் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். 'அல் ஹிலால்' எனும் அரபிப்பதம் "இளம் பிறை" என்ற பொருளைத் தரும். ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. அறபு - தமிழ் அகராதி (1905) அறபு - தமிழ் அகராதி இது இந்தியா, தமிழ் நாடு சென்னையிலிருந்து 1905ம் ஆண்டில் வெளிவந்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த அகாராதி 504 பக்கங்களைக் கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய இலங்கை முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் நடையே மிகைத்துக் காணப்பட்டுள்ளது. இந்த அகாராதி அரபுப் பதங்களுக்கான தமிழ்க் கருத்துக்களை வழங்கியிருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது அரபு தமிழ் அகராதியாக இது கருதப்படுகின்றது. அலெக்ஸ் (நடிகர்) அலெக்ஸ் (இறப்பு: மே 1, 2011) தமிழ்த் திரைப்பட நடிகரும் மந்திர வித்தைகளில் நிபுணரும் ஆவார். திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடிக்க வருவதற்கு முன்பே மந்திரவித்தைக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர். 2010 ஆம் ஆண்டில் திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மாஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். 2011 மே 1 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். 52 வயதான இவருக்கு திரவியமேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர். அற விளக்கு (1972) அற விளக்கு இந்தியா தமிழ் நாடு சென்னையிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். இவ்விதழ் தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது. கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது. அறிவுச் சுடர் (சிற்றிதழ்) அறிவுச் சுடர் என்பது சிங்கப்பூரிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆக்கங்களை உள்ளடக்கியிருந்தது. அறிவுப் பேரிகை (1945) அறிவுப் பேரிகை சிங்கப்பூரிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் தொடர்ச்சியாக 1947 வரை வெளிவந்ததாக அறிய முடிகின்றது. இது முஸ்லிம் சங்க வெளியீடு என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் சார்ந்த செய்திகளையும், கட்டுரைகளையும் கொண்டிருந்தது. அன்னம் விடு தூது (சிற்றிதழ்) அன்னம் விடு தூது இந்தியா, சிவகங்கையிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். இவர் "மக்கள் நேசன்" (சென்னை- 1991), "தமிழன்" (சென்னை- 1992) ஆகிய நாளிதழ்களிலும் சிறப்பு ஆசிரியராக் இருந்துள்ளார். வாலிபராக இருந்த காலத்தில் "இஸ்லாமியச் சோலை" (1961) எனும் இதழில் தனது தந்தையுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். இது ஒரு இலக்கிய சிற்றிதழாகும். கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. அஷ்ஷபாப் அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். "அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும். ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா இந்தியா, தமிழ் நாடு சென்னையிலிருந்து 1985ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். இஸ்லாமிய அடிப்படைச் சட்ட விதிகளை விளக்கக்கூடிய ஆக்கங்களைக் இது கொண்டிருந்தது. பிரயன் போலஸ் மேஜர் பூத் மேஜர் பூத் "(Major Booth" டிசம்பர் 10 1886, இறப்பு: சூலை 1 1916 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1913 -14 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பெர்னார்ட் பொசன்குவெட் பெர்னார்ட் பொசன்குவெட் "(Bernard Bosanquet )," அக்டோபர் 13 1877, இறப்பு: அக்டோபர் 12 1936 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1903 -05 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மொன்றி பொவ்டன் மொன்றி பொவ்டன் ("Monty Bowden," நவம்பர் 1, 1865, இறப்பு: பெப்ரவரி 19, 1892) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1889 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பில் போவ்ஸ் பில் போவ்ஸ் (Bill Bowes, சூலை 25, 1908, இறப்பு: செப்டம்பர் 4, 1987) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 372 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1932-1946 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டெட் போலி டெட் போலி (Ted Bowley, சூன் 6, 1890, இறப்பு: சூலை 9, 1974 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1929-1930 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜெப்ரி போய்கொட் ஜெப்ரி போய்கொட் (Geoffrey Boycott, அக்டோபர் 21, 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 609 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 313 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1964-1982 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பில் பிரேட்லி பில் பிரேட்லி ("Bill Bradley )," சனவரி 2, 1875, இறப்பு: சூன் 19, 1944) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். லென் பிராண்ட் லென் பிராண்ட் (Len Braund, அக்டோபர் 18, 1875, இறப்பு: திசம்பர் 23, 1955) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 432 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1901-1908 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். மைக் பிரியர்லி வால்டர் பிரியர்லி வால்டர் பிரியர்லி ("Walter Brearley", மார்ச்சு 11, 1876, இறப்பு: சனவரி 30 1937) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 134 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1905-1912 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். டான் பிரென்னன் டான் பிரென்னன் ("Don Brennan", பெப்ரவரி 10, 1920, இறப்பு: சனவரி 9, 1985) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1951 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜானி பிரிக்ஸ் ஜானி பிரிக்ஸ் ("Johnny Briggs", அக்டோபர் 3, 1862, இறப்பு: சனவரி 11, 1902) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் இங்கிலாந்து அணியின் உறுப்பினராக 1884 - 1899 ல் பங்கு பெற்றார். கிரிஸ் புரோட் கிரிஸ் புரோட் ("Chris Broad", பிறப்பு: செப்டம்பர் 29, 1957, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 340 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 319 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1984 - 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். பில் புரொக்வெல் பில் புரொக்வெல் ("Bill Brockwell", பிறப்பு: செப்டம்பர் 29, 1957, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 357 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1993 - 1999 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஃகியூ புரொம்லி-டெவன்போர்ட் ஃகியூ புரொம்லி-டெவன்போர்ட் ("Hugh Bromley-Davenport", பிறப்பு: ஆகத்து 18 1870, இறப்பு: மே 23 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டென்னிஸ் புரூக்ஸ் ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்கள் ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. 1. பவானி கூடுதுறை காவிரி, பவானி, கண்ணுக்குத் தெரியாத அமுத நதி மூன்றும் கூடும் இடம். தென்னகத்தின் "திரிவேணி சங்கமம்". சம்மந்தர் பாடல் பெற்ற கோவில். 2. பவானி கலெக்டர் மாளிகை 1799 - 1804 ஆண்டுகளில் ஆட்சியர் மேக்ளியாட், வில்லியம் கேரோ தங்கிய பழைய மாளிகை. இது இன்றும் நல்ல நிலையில் உள்ளது. ஆட்சியர் வில்லியம் கேரோ பவானிக் கோயிலுக்கு 11.1.1804 -இல் கொடுத்த தந்தம் போர்த்த கட்டில் பவானி சிவாலயம் அம்மன் பள்ளியறையில் உள்ளது 3. காளிங்கராயன் அணை 1282 - இல் காளிங்கராயன் பவானி காவிரியோடு கலக்கும் இடத்தில் கட்டிய அணை. அணைத்தோப்பு, பவானி அருகில் உள்ளது. 4. பவானிசாகர் அணை உலகின் மிகப்பெரிய மண் அணை. 1954 -இல் கட்டிமுடிக்கப்பட்டது. சத்தியமங்கலத்திற்கு மேற்கே 25 -ஆவது கிலோமீட்டரில் உள்ளது. 5. கொடிவேரி அணை உம்மத்தூர்த் தலைவன் நஞ்சராயன் கட்டிய அணை. அணையில் இருந்து இரு புறமும் கால்வாய்கள் ( அரக்கன்கோட்டை, தடப்பள்ளி ) உள்ளன 6. வெள்ளோடு பெரியகுளத்தில் பறவைகள் சரணாலயம், ஆதிநாதர் சமணக்கோயில் உள்ளது. காளிங்கராயன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது 7. ஆப்பக்கூடல் சக்தி நகரில் சக்தி சக்கரை ஆலை; பெரிய ஏரி உள்ளது. 8. ஆழத்துக்கோம்பை இங்கு பண்ணாரியம்மன் சக்கரை ஆலை உள்ளது. 9. தவளகிரி சத்தியமங்கலம் அருகில் உள்ள முருகன் கோவில். விஜயநகரக் காலத் திருப்பணி செய்யப்பட்ட கோவில். சிலப்பதிகாரம் கூறும் வெண்குன்று. 10. பழமங்கலம் பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல் இங்கே உள்ளது. 11. பழையகோட்டை அரண்மனை ; புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் உள்ள கால்நடைப் பண்ணை உள்ளது. 12. பெரியார் அண்ணா நினைவகம் ஈரோடு நகரில் பெரியார் சாலையில் தந்தை பெரியார் பிறந்த வீட்டில் அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன 13. தீரன் சின்னமலை நினைவு மண்டபம் ஓடா நிலையில் உள்ளது. அரசு அமைத்த நினைவுச்சின்னம். சின்னமலை கோட்டை இருந்த இடம். 14. மேலப்பாளையம் தீரன் சின்னமலை பிறந்த ஊர். பெரியவினாயகர் கோவில் உள்ளது .சின்னமலை சமுதாயக்கூடம் உள்ளது. 15. ஈரோடு வ.உ.சி. பூங்கா; கலைமகள் பள்ளி அருங்காட்சியாகம், அரசு அருங்காட்சியகம்; காரைவாய்க்கால் அருகே பெரும்பள்ளம் காளிங்கராயன் பாலம் ( 13 -ஆம் நூற்றாண்டு) மகிமாலீஸ்வரர் கோவில் 10 -ஆம் நூற்றாண்டு சுதைத் திருப்பணி. 16. பிரப் நினைவாலயம் ஈரோட்டில் சி.எஸ்.ஐ. தேவாலயம் கட்டிடக் கலை நயம் மிக்கது. 17. ஷேக் அலாவுதீன் தர்க்கா ஈரோடு காவிரிக்கரையில் உள்ளது. 18 -ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் கல்வெட்டு உள்ளது. 18. திம்பம் இனிய மலைக்காட்சி காணத்தக்கது. 19. இராமலிங்கம் சேனடோரியம் பெருந்துறையில மேற்க்கே 300 - மீட்டர் உயரம் உள்ள தூய காற்றோட்டம் உள்ள இடத்தில்; ' இராமலிங்கம் காசநோய் மருத்துவமனை' உள்ளது. 1933 - ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் வெலிங்கடன் பிரபு காசநோய் ஒழிப்பு அவசியம் பற்றி மிகவும் வலியுறுத்தினார். தனி மருத்துவ மனைகள் தொடங்குமாறு கூறினார். கோவை மாவட்ட ஆட்சியர் ஏ.சி.வுட் ஹவுஸ் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க துவங்கினார் 1935 - ம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்ட காசநோய் மருத்துவக் குழு என்ற குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்தார். அப்போது கொண்டாடப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடிய வெள்ளி விழா நிதி 60 ஆயிரம் இருந்தது. குழுவில் இருந்த பலர் நிதி உதவியுடன், சில பகுதிகளையும் கட்டித்தருவதாக வாக்களித்தனர். சென்னை மாநில அரசு, இந்தியத்தேயிலைக் குழு, அஞ்சல் துறை, டாட்டா எண்ணெய்த்தொழிற்ச்சாலை தேயிலை - காப்பித்தோட்ட அதிபர்கள், நகராட்சிகள் ஆகியவும் நிதியுதவி செய்தனர். மருத்துவமனைக்குரிய ஆணைகளை அரசு 13/8/1936; 22/11/1937 - ல் பிறப்பித்தது. மருத்துவமனை உருவானது. 20. கொடுமணல் ஒரத்துப்பாளையம் அணை; தொல்பொருள் அகழாய்வு செய்யப்பட்ட இடம் 21. அரச்சலூர் சமணமுனிவர்கள் வாழ்ந்த குகை. இசைக்கல்வெட்டு உள்ளது. 1800 - ஆண்டுகட்கு முற்ப்பட்டது 22. கோபி புகழ்பெற்ற சீதா கல்யாணமண்டபம் ஒரே சமயத்தில் 5 - திருமணங்கள் நடைபெறலாம் ( இலவசம் ) 23. தாளவாடி திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசல் உள்ளது அலன் பிரவுண் அலன் பிரவுண் ("Alan Brown )", பிறப்பு: அக்டோபர் 17 1935) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 251 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டேவிட் பிரவுண் (1942) டேவிட் பிரவுண் (1942) ("David Brown , born 1942)", பிறப்பு: சனவரி 30 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 390 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1965-1969 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஃபிரெட்டி பிரவுண் ஃபிரெட்டி பிரவுண் ("Freddie Brown )", பிறப்பு: டிசம்பர் 16 1910, இறப்பு: சூலை 24 1991) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 335 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1953 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜோர்ஜ் பிரவுண் ஜோர்ஜ் பிரவுண் ("George Brown )", பிறப்பு: அக்டோபர் 6 1887, இறப்பு: டிசம்பர் 3 1964) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 612 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1921-1923 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். ஜெக் பிரவுண் ஜெக் பிரவுண் ("Jack Brown )", பிறப்பு: ஆகத்து 20 1869, இறப்பு: நவம்பர் 4 1904) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 383 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1894-1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சைமன் பிரவுண் சைமன் பிரவுண் ("Simon Brown", பிறப்பு: சூன் 29 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1996 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். சலேர்னோ சலேர்னோ ("Salerno", ) இத்தாலியின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சலேர்னோ மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. உரோமக் குடியரசின் காலத்திலிருந்து இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கள் தொகை 1,39,579. உலக தகவல் சமூக நாள் உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த "தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை" அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது. உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது. நவம்பர் 2005இல் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாடு தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) இன்றியமையாமை மற்றும் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல்வேறு எழுவினாக்களைக் குறித்துமான குவியத்தை ஏற்படுத்த மே 17ஆம் நாளை உலக தகவல் சமூக நாள் என்று அறிவிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது. மார்ச்சு 2006 அன்று பொதுச்சபை அவ்வாறே தீர்மானம் (A/RES/60/252) நிறைவேற்றியது. முதல் உலக தகவல் சமூக நாள் மே 17, 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண்டாட தீர்மானித்தது. இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானம் 68 உறுப்பினர் நாடுகளையும் துறை உறுப்பினர்களையும் ஆண்டுதோறும் தேசியளவில் தகுந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தது. அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் (System Administrator Appreciation Day) என்றும் சிஸ்அட்மின் நாள் என்றும் SAAD என்றும் குறிப்பிடப்படும் நாளை டெட் கெகாடோசு என்ற அமைப்பு நிர்வாகி உருவாக்கினார். புதிய அச்சுப்பொறிகளை நிறுவியதற்கு நன்றி கூறும்விதமாக சக ஊழியர்கள் அமைப்பு நிர்வாகிக்கு பூக்களும் கனிகளும் நிறைந்த கூடைகளை பரிசளிப்பது போல வந்த ஹுவலெட் பெக்கார்ட் நிறுவனத்தின் இதழ் விளம்பரத்தினால் கெகாடோசிற்கு இத்தகைய எண்ணம் எழுந்தது. அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பணியை பாராட்டும் விதமாக இந்த விடுமுறை நாள் விடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சூலை திங்கின் கடைசி வெள்ளிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. முதல் அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் சூலை 28, 2010 அன்று கொண்டாடப்பட்டது. அடுத்த விடுமுறை சூலை 29, 2011 அன்று வருகிறது. பல கணினி மற்றும் இணையம் சார்ந்த பண்பாடுடைய நிறுவனங்கள், திங்க்கீக்,கஃபேபிரஸ் போன்றவை, இந்த விடுமுறை நாளின்போது சிறப்பு பயன்பாட்டு சேவைகளையும் போட்டிகளையும் நடத்துகின்றன. இந்நாளைக் கொண்டாட பல கானாப் பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் புகழ்பெற்ற வாழ்த்தட்டை நிறுவனங்களான ஆல்மார்க் போன்றவற்றின் ஆதரவு இன்னமும் கிடைக்கவில்லை. இந்த நாளை தொழில்முறை அமைப்பு நிர்வாகிகள் சங்கம் (League of Professional System Administrators) மற்றும் சேஜ் (SAGE/USENIX) என்ற இரு தொழில்சார் அமைப்புகள் அங்கீகரித்தும் ஆதரவளித்தும் வருகின்றன. ராதிகா சிற்சபையீசன் இராதிகா சிற்சபையீசன் ("Rathika Sitsabaiesan", பிறப்பு: 23 திசம்பர் 1981) கனடாவின் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கனடா நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது தமிழர் இவராவார். இவர் 2011, மே 2 இல் நடந்த தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015 தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். ஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார். பதவி ஏற்பு விழா உரை. ரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது. பில் கோப்சன் பில் கொப்சன் ("Bill Copson", பிறப்பு: ஏப்ரல் 27, 1908, இறப்பு: செப்டம்பர் 14, 1971) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 279 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1939 - 1947 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நேர்மாறு உறுப்பு நுண்புல இயற்கணிதத்தில், நேர்மாறு உறுப்பு ("inverse element") என்ற கருத்தானது, கூட்டல் செயலுக்குரிய எதிர்மறை உறுப்பு மற்றும் பெருக்கல் செயலுக்குரிய பெருக்கல் தலைகீழி உறுப்பு எனும் கருத்துருக்களின் பொதுமைப்படுத்தலாக அமைகிறது. நேர்மாறு உறுப்பின் துல்லியமான வரையறை, ஒவ்வொரு இயற்கணித அமைப்பிற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்தாலும் அவை அனைத்தும் குலத்தில் ஒன்றுபட்டு விடுகின்றன. formula_1 எனும் ஈருறுப்புச் செயலியைக் கொண்ட கணம் formula_2 என்க. (அ-து) formula_2 ஒரு மேக்மா. formula_4 ன் முற்றொருமை உறுப்பு formula_5 என்க. (S ஒரு யூனிட்டல் மேக்மா (unital magma)) formula_6 எனில் formula_7 ஆனது formula_8 இடது நேர்மாறு என்றும் formula_8 ஆனது formula_7 ன் வலது நேர்மாறு என்றும் அழைக்கப்படும். formula_11 , formula_12க்கு இடது மற்றும் வலது நேர்மாறு இரண்டுமாக இருந்தால் அது formula_12 ன் இருபக்க நேர்மாறு அல்லது சுருக்கமாக நேர்மாறு எனப்படும். கணம் formula_2 ல் இருபக்க நேர்மாறுடைய ஒவ்வொரு உறுப்பும் formula_2 ல் நேர்மாற்றக்கூடியது (invertible) எனப்படும். இடது நேர்மாறு மட்டும் கொண்ட உறுப்பு இடது நேர்மாற்றக்கூடியது எனவும் வலது நேர்மாறு மட்டும் கொண்ட உறுப்பு வலது நேர்மாற்றக்கூடியது எனவும் அழைக்கப்படும். S லுள்ள அனைத்து உறுப்புகளும் நேர்மாற்றக்கூடியதெனில் S ஒரு கண்ணி (loop) எனப்படும். யூனிட்டல் மேக்மா, formula_4 க்குப் பல இடது மற்றும் வலது நேர்மாறு உள்ளது போல எந்தவொரு உறுப்புக்கும் பல இடது மற்றும் வலது நேர்மாறு உறுப்புகள் இருக்கும். இந்த இடது மற்றும் வலது நேர்மாறுகளின் வரையறைகளில் பயன்படுத்தப்படும் முற்றொருமை உறுப்பு இருபக்க நேர்மாறு கொண்டதாகும். formula_1, ஒரு சேர்ப்பு ஈருறுப்புச் செயலியாக இருக்கும்போது ஒரு உறுப்பின் இடது மற்றும் வலது நேர்மாறுகள் சமமாக இருக்கும். எனவே ஒற்றைக்குலத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிகபட்சமாக ஒரு நேர்மாறு உறுப்பு இருக்கும். ஒற்றைக்குலத்தில் உள்ள இருபக்க நேர்மாற்றக் கூடிய உறுப்புகளின் கணம் ஒரு குலமாகும். இக்குலம், formula_2 ன் அலகுகளின் குலம் (group of units) எனப்படும். இக்குலத்தின் குறியீடு, formula_19 அல்லது "H" ஆகும். இடது நேர்மாற்றக்கூடிய உறுப்பு இடது நீக்கலுக்கும் வலது நேர்மாற்றக்கூடிய உறுப்பு வலது நீக்கலுக்கும் இருபக்க நேர்மாற்றக்கூடிய உறுப்பு இருபக்க நீக்கலுக்கும் உட்பட்டும். முந்தைய பிரிவில் நேர்மாறு உறுப்புக்கு, முற்றொருமை உறுப்புடன் தொடர்புபடுத்தப்பட்ட வரையறை தரப்பட்டுள்ளது. முற்றொருமை உறுப்பு இல்லாமல் சேர்ப்புப் பண்பினைப் பயன்படுத்தியும் நேர்மாறை வரையறுக்கலாம். அதாவது அரைக்குலத்திலும் வரையறுக்கலாம். ஒரு அரைக்குலம் formula_2 ல் "x" என்ற உறுப்புக்கு, xzx" = "x; என்றவாறு "z" என்ற உறுப்பு formula_2 ல் இருந்தால் "x" ஒழுங்கான உறுப்பு (regular element) எனப்படும். "z" சில சமயங்களில் போலி நேர்மாறு என அழைக்கப்படுகிறது. xyx" = "x , y" = "yxy எனில் "y" , "x" ன் நேர்மாறு என அழைக்கப்படும். ஒவ்வொரு ஒழுங்கான உறுப்புக்கும் குறைந்தபட்சம் ஒரு நேர்மாறு உண்டு. x" = "xzx எனில், y" = "zxz என்றமையும் உறுப்பு இப்பிரிவில் தரப்பட்டுள்ள வரையறைப்படி "x" ன் நேர்மாறு ஆகும். எளிதாக நிறுவக்கூடிய மற்றுமொரு கூற்று: "y" , "x" ன் நேர்மாறு எனில் e" = "xy மற்றும் f" = "yx என்றவாறு அமையும் "e" , "f" உறுப்புகள் இரண்டும் தன்னடுக்குகளாகும். (அ-து) ee" = "e , ff" = "f ஆகும். ஒன்றுக்கொன்று நேர்மாறாக அமையும் ஒவ்வொரு சோடி உறுப்புகளாலும் இரண்டு தன்னடுக்குகள் கிடைக்கின்றன. மேலும் ex" = "xf" = "x, ye" = "fy" = "y ஆகும். "e" , "x" ன் இடது முற்றொருமையாகவும் "f" வலது முற்றொருமையாகவும் இருக்கின்றன. "y" க்கு "f" இடது முற்றொருமையாகவும் "e" வலது முற்றொருமையாகவும் அமைகின்றன. இக்கருத்தை கிரீன் தொடர்புகளைப் (Green's relations )பயன்படுத்திப் பொதுமைப்படுத்தலாம். இப்பிரிவில் வரையறுக்கப்பட்ட தனித்தன்மை கொண்ட ஒரு நேர்மாறானது அரைக்குலக் கோட்பாட்டிற்கு வெளியே சில இடங்களில் பகுதி நேர்மாறு (quasi inverse) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பயன்பாடுகளில் சேர்ப்புப் பண்பு உள்ளதால் இந்தக் கருத்து பொதுவாக மெய்யாகிறது. எனவே முற்றொருமை மூலம் வரையறுக்கப்பட்ட இடது மற்றும் வலது நேர்மாறுகளின் பொதுமைப்படுத்தலாக இது அமைகிறது. (அ-து) கூட்டலைப் பொறுத்து formula_11 ன் நேர்மாறு formula_24. (அ-து) பெருக்கலைப் பொறுத்து formula_11 ன் நேர்மாறு formula_27 (அல்லது formula_28). சார்பு formula_29 ன் ஆட்களத்தில் formula_30 என்பது முற்றொருமை உறுப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே சார்பு formula_31 ஆனது சார்புகளின் தொகுப்புச் செயலைப் பொறுத்து formula_29 ன் இடது நேர்மாறுச் சார்பாகும். அதேபோல் formula_31ன் ஆட்களத்தில் (formula_29 ன் இணையாட்களம்) formula_35 என்பது முற்றொருமை உறுப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே சார்பு formula_29 ஆனது சார்புகளின் தொகுப்புச் செயலைப் பொறுத்து formula_31 ன் வலது நேர்மாறுச் சார்பாகும். formula_29 ன் நேர்மாறு பெரும்பாலும் formula_39 எனக் குறிக்கப்படுகிறது. இருவழிச் சார்புகளுக்கு மட்டும்தான் இருபக்க நேர்மாறு உண்டு என்றாலும் எந்தவொரு சார்புக்கும் பகுதி நேர்மாறு உண்டு. களம் formula_40 ல் உள்ள உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணி formula_41 ன் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாதிருந்தால், இருந்தால் மட்டுமே அணி formula_41 ஆனது ஒரேவரிசையுடைய சதுர அணிகளின் கணத்தில், அணிகளின் பெருக்கல் செயலைப் பொறுத்து நேர்மாற்றத் தக்கதாகும். பொதுவாக, பரிமாற்று வளையம் formula_43 மீதான ஒரு சதுர அணியின் அணிக்கோவை formula_43 ல் நேர்மாற்றத்தக்கதாக இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சதுர அணியும் நேர்மாற்றத்தக்கதாக இருக்க முடியும். முழுத்தரம் (full rank) கொண்ட சதுரமில்லா அணிகள் ஒருபக்க நேர்மாறு கொண்டவை. முழுத்தரம் இல்லாத எல்லா அணிகளுக்கும் நேர்மாறு (ஒருபக்க நேர்மாறு கூட) கிடையாது. எனினும் மூர் பென்ரோசு போலி நேர்மாறு (Moore-Penrose pseudoinverse) அனைத்து அணிகளுக்கும் உண்டு. மேலும் ஒரு அணிக்கு இடது (வலது) பக்க நேர்மாறு அல்லது இருபக்க நேர்மாறு இருக்குமானால் அதனுடன் போலி நேர்மாறு ஒன்றுபடும். formula_49
எனவே, m formula_51
formula_52 formula_53 இடது நேர்மாறு காண முடியாது. ஏனெனில், formula_54, என்பது வழுவுள்ள அணி ஆகும், எனவே நேர்மாற்றக்கூடியதல்ல.
டொமினிக் குக் டொமினிக் குக் ("Dominic Cork", பிறப்பு: ஆகத்து 7 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 312 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 307 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெப் கோப் ஜெப் கோப் ("Geoff Cope", பிறப்பு: பிப்ரவரி 23 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வெண்பா நாயகம் தமிழ் உலகில் இன்று தலைசிறந்த சித்திரக்கவிகளையும் குறிஞ்சிச் சுவையையும் நமக்கு அளித்திருப்பவர்கள் இலங்கை வெலிகமாவைச் சார்ந்த பெரும் மதிப்பிற்குரிய ஞானமகான் கலீல்அவுன் நாயகம் அவர்கள்.இவர்களை பன்னாடுகளில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் இவர்கள் கூறும் ஞான உபன்னியாசங்களை கேட்டு பின்பற்றி வருகிறார்கள். பதினைந்துக்கும் அதிகமான தமிழ் நூட்கள் எழுதி உள்ள இவர்கள் தாகிபிபரம் எனும் ஞானகிரந்தத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். பொப் கொட்டம் பொப் கொட்டம் ("Bob Cottam", பிறப்பு: அக்டோபர் 16 1944, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 289 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 113 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969 - 1972 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சாம் குக் சாம் குக் ("Sam Cook", பிறப்பு: ஆகத்து 23 1921- இறப்பு: செப்டம்பர் 4 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 506 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நிக் குக் நிக் குக் ("Nick Cook", பிறப்பு: சூன் 17 1956), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1989 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜெப் குக் ஜெப் குக் ("Geoff Cook", பிறப்பு: அக்டோபர் 9 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 460 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 377 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1981 - 1983 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சார்லஸ் கோவெண்ட்ரி சார்லஸ் கோவெண்ட்ரி ("Charles Coventry", பிறப்பு: பிப்ரவரி 26 1867, இறப்பு: சூன் 2 1929) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நார்மன் கோவான்ஸ் நார்மன் கோவான்ஸ் ("Norman Cowans", பிறப்பு: ஏப்ரல் 17, 1961 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 - 1985 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டெனிஸ் கொம்டன் டெனிஸ் கொம்டன் ("Denis Compton", பிறப்பு: மே 23 1918, இறப்பு: ஏப்ரல் 23 1997) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 78 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 -1957 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லென் கோல்டுவெல் லென் கோல்டுவெல் ("Len Coldwell", பிறப்பு: சனவரி 10 1933, இறப்பு: ஆகத்து 6 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 310 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 -1964 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன் குளோஸ் பிரயன் குளோஸ் ("Brian Close", 24 பிப்ரவரி 1931 - 13 செப்டம்பர் 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 786 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 164 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 -1976 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கோலின் கௌட்ரி கோலின் கௌட்ரி ("Colin Cowdrey", பிறப்பு: திசம்பர் 24, 1932, இறப்பு: திசம்பர் 4, 2000) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 114 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 692 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 87 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோனி கிளே ஜோனி கிளே ("Johnnie Clay", பிறப்பு: மார்ச்சு 18 1898, இறப்பு: ஆகத்து 11 1973) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 379 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரிக்கி கிளார்க் ரிக்கி கிளார்க் ("Rikki Clarke", பிறப்பு: செப்டம்பர் 29 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 96 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 132 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 2003 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன் ஸ்டான்லி கிரிஸ்டோபர்சன் ("Stanley Christopherson", பிறப்பு: நவம்பர் 11 1861, இறப்பு: ஏப்ரல் 6 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 66 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1884 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஜான் சைல்ட்ஸ் ஜான் சைல்ட்ஸ் ("John Childs", பிறப்பு: டிசம்பர் 15 1951, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 381 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1988 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். வில்லியம் சேட்டர்ட்டன் வில்லியம் சேட்டர்ட்டன் ("William Chatterton ", பிறப்பு: டிசம்பர் 27 1861, இறப்பு: மார்ச்சு 19 1913), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 289 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1882 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஹென்றி சாள்வூட் ஹென்றி சாள்வூட் ("Henry Charlwood", பிறப்பு: டிசம்பர் 19 1846, இறப்பு: சூன் 6 1888), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 197 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1877 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். பெர்சி சாப்மேன் பெர்சி சாப்மென் ("Percy Chapman", பிறப்பு: செப்டம்பர் 3 1900, இறப்பு: செப்டம்பர் 16 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 394 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1931 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலெக் கொக்சோன் அலெக் கொக்சோன் ("Alec Coxon", பிறப்பு: சனவரி 18 1916, இறப்பு: சனவரி 22, 2006) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 146 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டொம் கார்ட்ரைட் டொம் கார்ட்ரைட் ("Tom Cartwright", பிறப்பு: சூலை 22 1935, இறப்பு: ஏப்ரல் 30 2007), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 479 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964/65 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பரம வீர சக்கரம் பரம் வீர் சக்கரம் (Param Vir Chakra அல்லது PVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழியில் உள்ள இந்த விருதின் பெயரின் தமிழாக்கம் உயரிய வீரர் பதக்கம் என்பதாகும். சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகத்து 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது. இந்த விருதை இரண்டாம் முறை (அல்லது அதன் பின்னரும்) பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்க விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று வரை, அத்தகைய வாய்ப்பு எதுவும் நடக்கவில்லை.இந்த விருதைப் பெற்றவர்கள் தங்கள் பெயரின் விகுதியில் பி.வி.சி என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரம் வீர் சக்கரத்திற்கு இணையான அமைதிக்கால மிக உயரிய படைத்துறை விருது அசோகச் சக்கர விருது ஆகும். இந்த விருது போர்களத்தில் அல்லாது காண்பிக்கப்படும் "மிக உயரிய வீரதீரச் செயலுக்கும் தன்னலமற்ற தியாகத்திற்கும்" வழங்கப்படுகிறது. இது படைத்துறை அல்லாது குடிமக்களுக்கும் வழங்கபடக்கூடியது. பரம் வீர் சக்கரத்தைப் போலவே இதுவும் மரணத்திற்கு பின்பு வழங்கக்கூடியது. இந்த விருது பெற்ற லெப்டினன்ட் நிலைக்கு கீழான (இணையான பிற சேவையினருக்கு) நிதிப் படி வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிதிக்கொடையும் வழங்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம், அவர் இறக்கும்வரை அல்லது மறுமணம் புரியும்வரை, வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த இந்த நிதி உதவி பெரும் சர்ச்சையில் இருந்தவாறுள்ளது. மார்ச்சு 1999 நிலவரப்படி இது ரூ.1500/- என்ற அளவிலேயே இருந்தது. டொனால்ட் கார் டொனால்ட் கார் ("Donald Carr", பிறப்பு: டிசம்பர் 28 1926), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 446 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். டக்ளஸ் கார் டக்ளஸ் கார் ("Douglas Carr", பிறப்பு: மார்ச்சு 17 1872, இறப்பு: மார்ச்சு 23 1950) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1909 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஆர்த்தர் கார் கென் கிரான்ஸ்டொன் கென் கிரான்ஸ்டொன் ("Ken Cranston", பிறப்பு: அக்டோபர் 20, 1917, இறப்பு: சனவரி 8, 2007) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1948 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் கபெல் ஃபிரெட்டி கால்த்தோர்ப் ஃபிரெட்டி கால்த்தோர்ப் ("Freddie Calthorpe", பிறப்பு: மே 27 1892, இறப்பு: நவம்பர் 19 1935) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 369 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1930 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஹரி பட் உரோலண்டு புச்சர் உரோலண்டு புச்சர் ("Roland Butcher", பிறப்பு: அக்டோபர் 14 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 2004 இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்க் புட்ச்சர் ஆலன் புட்ச்சர் ஆலன் புட்ச்சர் ("Alan Butcher", பிறப்பு: சனவரி 7 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும்கலந்து கொண்டுள்ளார். ஜாக் கிராப் ஜாக் கிராப் ("Jack Crapp", பிறப்பு: அக்டோபர் 14, 1912, இறப்பு: பெப்ரவரி 13, 1981 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 7தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 452 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்) ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் எனப்படுவது 2010/2011 ஆண்டுகளில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். ஜே.கே. ராவ்லிங் எழுதிய புதினத்தைத் தழுவியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை ராவ்லிங்குடன் டேவிட் ஹேமேன் மற்றும் டேவிட் பரோன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த திரைப்படங்கள் ஹரி போட்டர் தொடரின் இறுதித் திரைப்படம் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது. திரைப்படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 19 பெப்ரவரி 2009 இல் ஆரம்பித்து 12 சூன் 2010 வரை நடைபெற்றது. பகுதி ஒன்று ஐமாக்ஸ் வடிவில் 19 நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளியிடப்பட்ட வாரத்தில் வட அமெரிக்காவில் மட்டும் 125 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது. இத்திரைப்படம் இரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜாக் கிராஃபோர்ட் ஜாக் கிராஃபோர்ட் ("Jack Crawford", பிறப்பு: டிசம்பர் 1, 1886, இறப்பு: மே 2, 1963 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 210 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 - 1908 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜான் கிராலி ஜான் கிராலி ("John Crawley", பிறப்பு: செப்டம்பர் 21, 1971) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 351 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 308 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ராபர்ட் கிராஃப்ட் வில்லிஸ் கட்டெல் எட்டி டாசன் ரிச்சர்ட் டாசன் திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை கடந்த 800 ஆண்டுகளாக ஒவ்வொரு திருத்தந்தையும் தங்களுக்கென தனிப்பட்ட ஒரு ஆட்சி முத்திரையைத் திருப்பீட அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர், திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் (1243-1254) முதல் முதலில் ஆட்சி முத்திரையைப் பயன்படுத்தினார் என்பர். அதற்கு முன் இருந்த திருத்தந்தையர் பண்புசார் முத்திரைகளை (Attributed arms) பயன்படுத்தினர். பதினாறாம் பெனடிக்டைத் தவிர மற்ற திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்க மும்முடி இருக்கும். பதினாறாம் பெனடிக்ட் இதனை நீக்கிவிட்டு ஆயரின் தலைப்பாகை (mitre) மற்றும் பாலியம் (pallium) ஆகியவற்றை வைத்தார். பாரம்பரியமாக திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் இருக்கும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும். இக்கோட்பாடு மத்தேயு 16:18-19 -ஐ ஆதாரமாகக் கொண்டது : அதனால் திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள், கிறித்துவின் பிரதிநிதியாக இவ்வுலகில் திருத்தந்தையருக்கு இருக்கும் ஆன்மீக அதிகாரத்தைக் குறிக்கும். திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800 கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்: (தொடர்ச்சி): தூதரகங்களின் பட்டியல், அசர்பைஜான் இது அஸர்பைஜான் நாட்டு தூதரகங்களின் பட்டியல் ஆடைப்பட்டயம் படைத்துறை அலங்காரங்களில் ஆடைப்பட்டயம் மிகவும் முகனையானதொன்றாகும். இதன் வரலாறு அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்திலிருந்து துவங்கியது. அந்தக் காலக்கட்டத்தில் படைவீரர்களுக்கு படையணித் தலைவர்கள் பதக்கங்கள் வழங்குவது அலுவல்முறையாக இல்லாதிருந்தது. இதனை ஓர் முறையான இராணுவ அங்கீகாரமாக ஆக்கியது இசுப்பானிய-அமெரிக்க போரின் (1898) போதாகும். படைத்துறை அலங்காரம் அல்லது படைத்துறை விருது என்பது எதிரிகளிடத்து துணிச்சலையும் வீரத்தையும் வெளிக்காட்டும் படைவீரர்களுக்கும் சிறப்பாகச் சேவையாற்றிய வீரர்களுக்கும் வழங்கப்படுவதாகும். இவற்றை படைவீரர்கள் தங்கள் சீருடையில் அணிவது பெருமைக்குரிய ஒன்றாகும். ஓர் இராணுவ விருது பதக்கம் ஒன்றையும் இணைந்த நாடா ஒன்றையும் கொண்டிருக்கும். நிஜாமாபாத் நிஜாமாபாத் என்பது முகலாய மன்னர்கள் காலத்தில் பெயரிடப்பட்ட ஊர்ப் பெயராகும். கலபிரியா கலபிரியா ("Calabria") தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு மண்டலம். பண்டைய காலத்தில் புரூட்டியம் என அறியப்பட்ட இப்பகுதி இத்தாலிய மூவலந்தீவின் குதிங்கால் (தெற்கு) பகுதியில் அமைந்துள்ளது. வடக்கில் பசிளிகாதா, தென்மேற்கில் சிசிலி, மேற்கில் திரேனியக் கடல், கிழக்கில் அயோனியன் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 15,080 சதுர கிமீ பரப்பளவு உள்ள இப்பகுதியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம். கி. கஸ்தூரிரங்கன் கி. கஸ்தூரிரங்கன் (சனவரி 10 1933 - மே 4 2011) தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர். கி.கஸ்தூரிரங்கன். 10-1.1933ல் செங்கல்பட்டு, களத்தூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1961 இல் தில்லிக்குச் சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராகப் பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார். 1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார் கஸ்தூரிரங்கன் புதுக்கவிதையில் ஆர்வம்கொண்டவர். அவரது கவிதைகள் முன்னோடி சிற்றிதழான எழுத்து இதழில் வெளிவந்துள்ளன. தில்லியில் இருக்கும் காலத்தில் அங்கே வாழ்ந்த க. நா. சுப்பிரமணியம், ஆதவன், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்ற எழுத்தாளர்களின் உதவியுடன் கணையாழி இதழைத் தொடங்கினார். கஸ்தூரிரங்கன் ஐந்து புதினத் தொடர்களை தினமணி கதிர் வார இதழில் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்ற பேரில் கவிதைகள் எழுதினார். கஸ்தூரிரங்கன் 2011 மே 4 காலை 6 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருடைய மனைவி பெயர் இந்து. இவருக்கு பாலாஜி, மோகன் என இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வளர்ந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகள் ("developed countries") எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி உயர் வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். ஆனால் எந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் என்பதிலும், எந்த அளவீடுகள் அதனை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதிலும் தொடர்ந்து விவாதங்கள் உள்ளன. பொருளாதார அளவீடுகள் எவை என்பதே அதிகளவு விவாதத்துக்கு உட்படும் விடயமாகும். நபர்வாரி வருமானம்; நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கு எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அலகாகும். தொழில்மயமாக்கம் என்பதும் இன்னொரு திட்ட அளவையாகும். அண்மையில் மனித வளர்ச்சிச் சுட்டெண் பிரபலமான ஒரு திட்ட அளவையாக அறியப்படுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது பொருளாதார அளவீடு, தேசிய வருமானம் போன்றவற்றுடன் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி போன்றவற்றையும் கருத்தில் கொண்டுள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண் அதிகம் உள்ள நாடுகள் வளர்ந்த நாடுகள் எனவும், அல்லாதவை வளர்ந்துவரும் நாடுகள் அல்லது வளர்ச்சியடையாத நாடுகள் எனவும் அழைக்கப்படும். பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல் பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல் எனப்படுவது நவம்பர் 20, 1979 அன்று ஆயுததாரிகள் இசுலாமியரின் புனிதப் பிரதேசமான மக்காவில் உள்ள புனித காபாவை கைப்பற்றியமையாகும். கைப்பற்றிய ஆயுததாரிகள் இஸ்லாமின் புதிய தூதர் ஆயுததாரிகளில் ஒருவனான Abdullah Hamid Mohammed Al-Qahtani என்றதுடன். முஸ்லிம்கள் இவரை மதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இந்தச் செயல் இசுலாமிய நாடுகளை பெரும் பீதியில் ஆழ்த்தியது. இதற்கு முக்கியமான காரணம் உலகம் எங்கும் இருந்து வந்த ஹஜ்ஜூ யாத்திரிகள் இந்த சண்டையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டமையே. இந்த குறுக்குச் சண்டையில் சிக்கி பாதுகாப்பு படையினர், ஆயுததாரிகள், யாத்திரிகர்கல் எனப் பலர் மாண்டனர். சக்தி மிக்க குடும்பமான நஜித் குடும்பத்தைச் சேர்ந்த Juhaiman ibn Muhammad ibn Saif al Utaibi என்பவன் இந்த தாக்குதலை முன்நின்று நடத்தினான். இவன் தன் மச்சினனான Muhammad bin abd Allah al-Qahtani வை இறைதூதர் என்று பிரகடனப்படுத்தினான். நீல் ஃபேர்பிரதர் நீல் ஃபேர்பிரதர் ("Neil Fairbrother ", பிறப்பு: செப்டம்பர் 9, 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 366 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 505 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். [[பகுப்பு:1963 பிறப்புகள்] [[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]] [[பகுப்பு:லன்காசையர் துடுப்பாட்டக்காரர்கள்]] [[பகுப்பு:1963 பிறப்புகள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] ஆர்த்தர் ஃபாக் ஆதர் பாக் ("Arthur Fagg", பிறப்பு: சூன் 18 1915, இறப்பு: செப்டம்பர் 13 1977) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 5தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 435 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1936 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வளர்ந்துவரும் நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான் வளர்ந்த நாடுகள் என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்". ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை.. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.. ஜோன் இவன்ட் (துடுப்பாட்டக்காரர்) ஜோன் இவன்ட் ("John Evans", பிறப்பு: மே 1 1889, இறப்பு: செப்டம்பர் 18 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 90 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இஸ்லாமிகர் செய்லானிகா இஸ்லாமிகர் செய்லானிகா இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டுதோறும் வெளியிடும் மலராகும். 1953 ஆண்டில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. தற்போதும் (2011) இம் மலர் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சில ஆண்டுகளில் இவ்விதழ் வேறு பெயர்களிலும் வெளிவந்தன. பெயர்கள் மாறுபட்டாலும் கூட விடய அடிப்படை ஒன்றாகும். இதன் ஆசிரியர்கள் வருடம் தோறும் மாறுபடுவர். இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசே ஆசிரியரைத் தெரிவு செய்யும். ஆரம்ப காலமலர்களில் பழைய இஸ்லாமிய இலக்கியங்கள் மீண்டும் வெளியிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டு ஆரம்ப மலரில் நாகூர் தர்கா புலவர் குலாம் காதிறு நாவலரின் "குவாலீர்க் கலம்பகம்"வெளியிடப்பட்டது. மேலும் ஆய்வுகள், காப்பியங்கள் போன்றனவும் வெளியிடப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு வருகின்றன. காட்ஃபிரே எவான்ஸ் காட்ஃபிரே எவான்ஸ் ("Godfrey Evans", பிறப்பு: ஆகத்து 18 1920, இறப்பு: மே 3 1999) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 91 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 465 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1946 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டாம் எம்மெட் டாம் எம்மெட் ("Tom Emmett", பிறப்பு: செப்டம்பர் 3 1841, இறப்பு: சூன் 30 1904) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 - 1882 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபெடரிக் ஃபேன் கென் ஃபார்னெஸ் கென் ஃபார்னெஸ் ("Ken Farnes", பிறப்பு: சூலை 8, 1911, இறப்பு: அக்டோபர் 20 1941) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 168 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோர்ஜ் எம்மெட் ஜோர்ஜ் எம்மெட் ("George Emmett", பிறப்பு: டிசம்பர் 2 1912, இறப்பு: டிசம்பர் 18 1976) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 509 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். உலக அமைதிச் சுட்டெண் உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, ஜுன் 2008 இலும், அண்மையில் ஜுன் 2010 இலும் வெளியிடப்பட்டது. இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது அவுஸ்திரேலிய தொழில்முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான், தலாய் லாமா இன்னும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடுகளுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. குறைந்த சுட்டெண் கொண்ட நாடுகளே கூடிய அளவு அமைதி பேணும் நாடுகளாகும். பச்சை நிறத்தில் உள்ளவை கூடிய அமைதி நாடுகளின் 20% இலும், சிவப்பு நிறத்தில் உள்ளவை குறைந்த அமைதி நாடுகளின் 20% இலும் உள்ளன. பில் பெரிமொன்ட் பில் பெரிமொன்ட் ("Bill Farrimond", பிறப்பு: மே 23, 1903, இறப்பு: நவம்பர் 15 1979) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 153 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெர்சி ஃபென்டர் பெர்சி ஃபென்டர் ("Percy Fender ", பிறப்பு: ஆகத்து 22, 1892, இறப்பு: சூன் 15, 1985) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 557 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1929 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சேறு கூழ்ம நிலையில் உள்ள திட அல்லது திரவ பொருள் சேறு ("Slurry") என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய இளைஞன் (சிற்றிதழ்) இஸ்லாமிய இளைஞன் மலேசியா, கோலாலம்பூரிலிருந்து 1942ம் ஆண்டு வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இஸ்லாமிய இளைஞன் எனும் பெயரில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. இசுலாமிய விளக்கக் கட்டுரைகள், இசுலாமிய இளைஞர்களுக்கான அறிவுரைகள் இசுலாமிய உலக செய்திகள், செய்திகள், ஆய்வுகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன. நடு நிலைமை நோக்குடன் இவ்விதழ் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. ஜோன் எம்பியுரி ஜோன் எம்புயுரி ("John Emburey ", பிறப்பு: ஆகத்து 20 1952) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 64 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 513 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 536 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1978 - 1995 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ஜோன் ஃபெர்ரிஸ் ஜோன் பெரிஸ் ("John Ferris )", பிறப்பு: மே 2, 1867, (ஆத்திரேலியா), இறப்பு: நவம்பர் 17, 1900) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1892 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சேறு எற்றி சேறு ஏற்றி ("slurry pump") ஒரு வகையான மைய விலக்கு ஏற்றி. இது கூழ்ம நிலையில் உள்ள திரவத்தின் அழுத்தத்தை அதிகரித்து ஓரிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு கடத்த உதவி புரிகிறது. ஏற்றியில் உள்ள இம்பெல்லர் சுழலி சுற்றுவதால் மைய விலக்கு விசை உருவாகுகிறது. ரிச்சர்ட் எலிசன் ரிச்சர்ட் எலிசன் ("Richard Ellison )", பிறப்பு: செப்டம்பர் 21 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 207 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 175 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1984 - 1986 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். [[பகுப்பு:1959 பிறப்புகள்] [[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]] [[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]] [[பகுப்பு:மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்]] [[பகுப்பு:1959 பிறப்புகள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] [[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]] ஹரி எலியோட் ஹரி எலியோட் ("Harry Elliott", பிறப்பு: நவம்பர் 2 1891, இறப்பு: பிப்ரவரி 2 1976) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 534 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஜோன் எட்ரிச் ஜோன் எட்ரிச் ("John Edrich", பிறப்பு: சூன் 21 1937) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 77 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 7 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆர்தர் பில்டர் ஆர்தர் பில்டர் ("Arthur Fielder", பிறப்பு: சூலை 19, 1877, இறப்பு: ஆகத்து 30, 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 6தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 287 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1904 - 1908 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஸ்டீவன் ஃபின் ஸ்டீவன் ஃபின் ("Steven Finn", பிறப்பு: ஏப்ரல் 4, 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 146 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இவர் மார்ச் 12, 2010 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவரின் 20 ஆவது வயதில் 647 ஆவது வீரராக இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் 181 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 10 இலக்குகள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வென்றது. சகாதத் ஹொசைனை தனது முதல் இலக்காக வீழ்த்தினார். தனது இரண்டாவது போட்டியில் 10 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்களை எடுக்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள்வீசி 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மூன்றாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். நான்காவதுபோட்டியில் 10 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்கினைக் கைப்பற்றினார். மூன்றாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களில் முதலிடம் பிடித்தார். இவர் 8இலக்குகளை 31.62 எனும் சராசரியோடு எடுத்தார். இந்தத் தொடரை 5-0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இவரைப் பற்றி கூறுகையில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஃபின் எங்களின் முதன்மைத் தேர்வாக இல்லை. இருந்தபோதிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார் என இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்தார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இலங்கையில் நடைபெற்ற 2012 ஐசிசி உலக இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ஓட்டஙகளை வீட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 2 இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவரும் ஜேட் டெர்ன்பாகும் சேர்ந்து 10 ஆவது இணைக்கு பன்னாட்டு இருபது உலககோப்பையில் அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். பில் எட்ரிச் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 571 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1955 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபில் எட்மண்ட்ஸ் ஃபில் எட்மண்ட்ஸ் ("Phil Edmonds", பிறப்பு: மார்ச்சு 5 1951 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 391 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 301 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். லாரி ஃபிஷ்லாக் லாரி ஃபிஷ்லாக் ("Laurie Fishlock", பிறப்பு: சனவரி 2, 1907, இறப்பு: சூன் 25, 1986) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1936 - 1947 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்க் எல்ஹாம் மார்க் எல்ஹாம் ("Mark Ealham", பிறப்பு: ஆகத்து 27 1969, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 281 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜாக் தர்ஸ்டன் ஜாக் தர்ஸ்டன் ("Jack Durston", பிறப்பு: சூலை 11 1893, இறப்பு: ஏப்ரல் 8 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 386 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜக் பிளவெல் ஜக் பிளவெல் ("Jack Flavell", பிறப்பு: மே 15, 1929, இறப்பு: பெப்ரவரி 25, 2004) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 401 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 - 1964 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். குமார் சிரி துலீப்சிங்ஜீ குமார் சிரி துலீப்சிங்ஜீ ("Kumar Shri Duleepsinhji", பிறப்பு: சூன் 13 1905, இறப்பு: டிசம்பர் 5 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 205 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆண்டி டுகாட் ஆண்டி டுகாட் ("Andy Ducat", பிறப்பு: பிப்ரவரி 16 1886), இறப்பு: சூலை 23 1942) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜொனி டக்ளஸ் ஜொனி டக்ளஸ் ("Johnny Douglas", பிறப்பு: செப்டம்பர் 3 1882, இறப்பு: டிசம்பர் 19 1930) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 449 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1925 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இஸ்லாமிய உலகம் (1978, சிற்றிதழ்) இஸ்லாமிய உலகம் இந்தியா, மதுரையிலிருந்து 1978ம் ஆண்டு வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். இஸ்லாமிய உலகம் எனும் பெயரில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. இசுலாமிய உலக செய்திகள் செய்திகள், ஆய்வுகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன. நடு நிலைமை நோக்குடன் இவ்விதழ் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. ஆர்த்தர் டோல்ஃபின் ஆதர் டொல்பின் ("Arthur Dolphin", பிறப்பு: டிசம்பர் 24 1885, இறப்பு: அக்டோபர் 23 1942) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 449 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வில்பிரட் பிளவர்ஸ் வில்பிரட் பிளவர்ஸ் ("Wilfred Flowers", பிறப்பு: டிசம்பர் 7, 1856, இறப்பு: நவம்பர் 1, 1926) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நவம்பர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 442 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1884 - 1893 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆன்ட்ரூ பிளின்டொஃப் ஆன்ட்ரூ பிளின்டொஃப் ("Andrew Flintoff", பிறப்பு: திசம்பர் 6, 1977) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 141 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 183 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 282 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜஸ்டின் பீபர் ஜஸ்டின் பீபர் ("Justin Bieber", பி. மார்ச் 1. 1995) ஒரு கனேடிய ஆங்கில பாடகர், கவிஞர் மற்றும் நடிகராவார். ஜஸ்டின் பீபரை sifkan sing .என்பவர் ஒரு யூடியூப் காணொளி மூலம் இனம் கண்டு பிரபலப்படுத்தினார். தற்போது இவரே ஜஸ்டின் பீபரின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் "வன் டைம்" எனும் பாடல் 2009 இல் வெளியிடப்பட்ட கனடாவில் முதல் பத்து பாடலகள் வரிசையில் இடம்பெற்றதுடன் பல்வேறு சர்வேதேச பாடல் சந்தைகளிலும் முதல் 30 இடங்களிற்குள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வெளியாகிய "மை வேல்ட்" எனும் பாடல் அமெரிக்காவில் வசூல் சாதனை புரிந்ததுடன் பிளாட்டினம் சான்றிதளும் பெற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற "மை வேல்ட் 2.0" வெளியீடும் முன்னைய பாடல்கள் போல பெரும் வரவேற்பு பெற்றதுடன் அமெரிக்காவில் மீளவும் பிளாட்டினம் சான்றிதளைப் பெற்றுக்கொண்டது. பல்வேறு சர்வதேச இசைச் சந்தைகளில் இந்த இசை முதல் பத்து வரிசையினுள் இடம்பெற்றுச் சாதனை படைத்தது. இவரின் இசைப்பயனம் தவிர எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கீத் பிளெச்சர் கீத் பிளெச்சர் ("Keith Fletcher", பிறப்பு: மே 20, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரான்சிஸ் போர்ட் பிரான்சிஸ் போட் ("Francis Ford )", பிறப்பு: டிசம்பர் 14, 1866, இறப்பு: பிப்ரவரி 7, 1940) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 168 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1894 - 1895 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிராங்க் ஃபோஸ்டர் பிராங்க் போஸ்டர் ("Frank Foster", பிறப்பு: சனவரி 31, 1889, இறப்பு: மே 3, 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் போஸ்டர் ஜேம்ஸ் போஸ்டர் ("James Foster )", பிறப்பு: ஏப்ரல் 15, 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நீல் போஸ்டர் நீல் போஸ்டர் ("Neil Foster", பிறப்பு: மே 6, 1962), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 48 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 215 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1993 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆர். ஈ. போஸ்டர் ஆர். ஈ. போஸ்டர் ("R. E. Foster", பிறப்பு: ஏப்ரல் 16, 1878, இறப்பு: மே 13, 1914) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 139 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1903 - 1907 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும். இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும். 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன. டொம் டால்லெரி டொம் டால்லெரி ("Tom Dollery", பிறப்பு: அக்டோபர் 14 1914, இறப்பு: சனவரி 20 1987) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 436 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1950 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹுபர்ட் டோக்கார்ட் ஹுபர்ட் டோக்கார்ட் ("Hubert Doggart", பிறப்பு: சூலை 18 1925), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 210 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். அல்பிரட் டிப்பர் அல்பிரட் டிப்பர் (" Alfred Dipper", பிறப்பு: நவம்பர் 9 1885, இறப்பு: நவம்பர் 7 1945) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 481 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரகாம் டில்லி டெட் டெக்ஸ்டர் ஜோன் டூவிஸ் டேவிட் டென்டன் மைக் டென்னெஸ் மைக் டென்னெஸ் ( " Mike Denness", பிறப்பு: டிசம்பர் 1 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 501 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969- 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிலிப் டீஃபிரைடாஸ் பிலிப் டீஃபிரைடாஸ் ( " Phillip DeFreitas", பிறப்பு: பிப்ரவரி 18 1966), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 103 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 372 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 479 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹாரி டீன் ஹரி டீன் ( " Harry Dean ) ", பிறப்பு: ஆகத்து 13 1884, இறப்பு: மார்ச்சு 12 1957) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 267 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இஸ்லாமிய சகோதரத்துவக்குரல் (இதழ்) இஸ்லாமிய சகோதரத்துவக்குரல் இந்தியா, திருநெல்வேலியிலிருந்து 1994ம் ஆண்டு வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இருமுறை இதழாகும். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் கொள்கை விளக்க ஏடு. இவ்விதழ் இசுலாமிய இன உறவினை எடுத்துக்காட்டக் கூடிய பல்வேறு ஆக்கங்களை கொண்டிருந்தன. கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மைக் கேட்டிங் மைக் கெட்டிங் ("Mike Gatting", பிறப்பு: சூன் 6, 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 92 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 551 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 551 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1978 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ளது பழைய வத்தலக்குண்டு. இங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சென்றாயப் பெருமாள் கோயில். இந்த சென்றாயப் பெருமாள் கோயிலில் ராஜகம்பளத்து நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்யும் பணியைச் செய்து வருகின்றனர். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது. சுமார் 405 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆதி சென்னம நாயக்கர், ஒருநாள் தனது பசு மாடுகளில் ஒன்றைக் காணாமல் தேடியிருக்கிறார். அந்தப் பசு மாட்டைத் தேடி மலையின் உச்சிப்பகுதிக்குச் சென்று பார்த்த போது, அங்கு அந்தப் பசு, பாலகன் ஒருவனுக்குப் பால் தந்து கொண்டிருந்திருக்கிறது. மலைப்பகுதிக்குப் பாலகன் எப்படி வந்தான் என்று அவர் சிந்தித்த நிலையில் அவர் கண் முன் பெருமாள் தோன்றி, இந்த மலைப்பகுதியில் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தால் இந்தப் பகுதி மக்களுக்கும், இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்றும், இவர்கள் குடும்பத்தினர் இக்கோயிலில் பக்தர்களுக்குச் சொல்லும் அருள் வாக்குகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் சொல்லி மறைந்திருக்கிறார். அன்றிலிருந்து ஆதிசென்னம நாயக்கர் வாரிசுதாரர்கள் இந்தக் கோயிலை அமைத்து பூசை மற்றும் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் மரபு வழியில் அறங்காவலர்களாக சென்னம நாயக்கரின் மரபுரிமையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கண்ணன் பூசாரி எனும் சென்னம நாயக்கர், செல்வராஜ், ராஜ் ஆகியோர் உள்ளனர். மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் மண்டகப்பட்டு குடைவரைக் கோயில், தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு இரும்பு, மரம், செங்கல், சுதை என்பவற்றைப் பயன்படுத்தாமல் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. அலைத்திருத்தி அலைத்திருத்தி (இலங்கை வழக்கு: சீராக்கி, "Rectifier") என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் ஆற்றல் மின்னணுவியல் அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு மிகவும் இன்றியமையாததாக திண்மநிலை மின்னணு உறுப்பான இருமுனையம் விளங்குகிறது. . அமைப்புநிலையில் திருத்திகள் பலவடிவங்களில் அமைகின்றன. அவை வெற்றிடக்குழல் இருமுனையங்களாகவோ, இதள்வில் கவாடங்களாகவோ செம்பு-செலினியம் ஆக்சைடு திருத்திகளாகவோ, அரைக்கடத்தி இருமுனையங்களாகவோ சிலிக்கான் கடுபாட்டுத் திருத்திகளாகவோ பிற சிலிக்கான் சார்ந்த அரைக்கடத்தி நிலைமாற்றிகளாகவோ அமையலாம். வரலாற்றியலாக, ஒத்தியங்குவகை நிலைமாற்றிகளும் மின்னோடிகளும் கூட இதற்குப் பயன்பட்டன. படிக வானொலிகள் எனப்பட்ட தொடக்க கால வானொலி அலைவாங்கிகளில் கலீனா எனும் ஈயச் சல்பைடுகளில் கம்பி பொதித்த பூனை மீசை ஒற்றிகள் புள்ளித் தொடுகைத் திருத்திகளாகப் பயன்பட்டன. இவை படிகத் திருத்திகள் எனப்பட்டன. அலைத்திருத்திகள் நேர்மின்சார ஆற்றல் மூலங்களாகவும் உயர் மின்னழுத்த நேர்மின்சாரத்(HVDC) திறன் செலுத்துகை அமைப்புகளிலும் மிகவும் பயன்படுகின்றன. நேர்த்திசை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக திருத்திகளைப் பயன்படுத்துவது எளிதாகும். சைன் அலையானது அலைத்திருத்தம் செய்யப்பட்டு ஒரு நேர்த்திசை மின்னழுத்தமாக மாற்றப்பட்டு மின்னோட்டமானது ஒருமுக மின்னோட்டமாக மாற்றப்படினும் சில துடிப்புகள் அம்மின்னோட்ட அலைவில் காணப்படும். ஆனால் அலைத்திருத்தி பயன்படக்கூடிய கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் சிறப்பாக செயல்பட, வழங்கப்படும் நேர்மின்னோட்டமானது உறுதியாகவும் மாறாலியாகவும் இருத்தல் வேண்டும். இத்தகு சாதனங்களில் அலைத்திருத்தியின் வெளியீடு ஒரு வடிப்பியினுள்(filter) இடப்பட்டு அதன்மூலம் துடிப்புகள் அகற்றப்பட்டு ஒரு சீரான மாறா மின்னோட்டம் பெறப்படுகிறது. ஒரு அலைத்திருத்தியின் செயல்பாட்டைத் தலைகீழாகச் செய்யக்கூடிய ஆற்றல் மின்னணுவியல் கருவி, புரட்டி அல்லது மாறுதிசையாக்கி அல்லது நேர்மாற்றி(inverter) ஆகும். இது நேர்த்திசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே மாறுதிசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றுகிறது. அலைத்திருத்திச் சுற்றுகளில் மிகவும் எளிய அமைப்புடையது இது. மாறுதிசை மின்னோட்டத்தின் மேற்பாதியை (+ve அரையலை) மட்டும் செலுத்தி கீழ்ப்பாதியைத்(-ve அரையலை) தடுத்துவிடும் அமைப்பே அரையலைத் திருத்தி ஆகும். இவ்வமைப்பில் தாழ்வடுக்கு மின்மாற்றியின் வெளியீட்டுச் சுற்றில் ஒரு இருமுனையம் இணைக்கப்படுகிறது. தாழ்வடுக்கு மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னோட்ட அலையின் முதல் அரைப்பகுதியின்(+ve அரையலை) போது தாழ்வடுக்கு முன்னோக்குச் சார்பில் இருக்கும்; எனவே, மின்னோட்டம் அதன் வழியே கடத்தப்படும். அலையின் இரண்டாவது அரைப்பகுதியின்(-ve அரையலை) போது இருமுனையம் பின்னோக்குச் சார்பில் இருப்பதால் மின்னோட்டத்தை அது தடுத்து விடுகிறது. இந்நிகழ்வின் விளைவாக உள்ளிடப்பட்ட மாறுதிசை மின்னழுத்தம் நேர்த்திசை மின்னழுத்தமாக மாற்றப்படுகிறது. ஒரு இலட்சிய அரையலைத்திருத்தியின் (சுமையில்லா) வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தத்தின் அளவு : formula_1 formula_2ஆகும். இங்கு, முழு அலைத்திருத்தி என்பது ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தின் இரு பகுதியையும் திருத்தும் சுற்று ஆகும். சமனச்சுற்று அலைத்திருத்தியும் (bridge rectifier) மைய மடை மின்மாற்றியைக் கொண்ட அலைத்திருத்தியும் (center tapped transformer type rectifier) முழு அலைத்திருத்திகளேயாகும். ஒரு தாழ்வடுக்கு மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது. இங்கும் ஒரு தாழ்வடுக்கு மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. இங்குள்ள மின்மாற்றி மையத்தில் ஒரு மடை கொண்டுள்ள மின்மாற்றி ஆகும். முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D1) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D1) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D2) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D2) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது. இவ்வழியாக முழுவலைத்திருத்திகளின் மூலம் மாறுதிசை மின்சாரம், நேர்த்திசை மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு இலட்சிய ஒற்றைத் தறுவாய் முழுவலைத்திருத்தியின் (சுமையில்லா) வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தத்தின் அளவு : formula_3 formula_4 ஆகும். இங்கு, தாரந்தோ தாரந்தோ (டாரண்டோ, "Taranto", ) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு துறைமுக நகரம். தெற்கு இத்தாலியக் கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தாரந்தோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இத்தாலியின் முக்கிய வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகவும் இத்தாலியக் கடற்படைத் தளமாகவும் விளங்குகிறது. 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,01,349. மகா வீர சக்கரம் மகா வீர சக்கரம் (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இந்தி மொழியில் மகாவீர் என்பது தமிழில் பெரும் வீரர் என்ற பொருளில் வழங்கும். விருது பதக்கம் தரமான வெள்ளியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு இலச்சினை இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு தாமரை மலர்களுடன் தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது மார்பில் 3.2 செ.மீ அகலமுள்ள அரை வெள்ளை அரை செம்மஞ்சள் வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது தோளிற்கு அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது. விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம். இதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரில் வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் இந்திய வான்படைக்கு வழங்கபட்டது. மகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழங்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), அருண் ஸ்ரீதர் வைத்யா (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை. போல் கிப் போல் கிப் ("Paul Gibb", பிறப்பு: சூலை 11, 1913, இறப்பு: திசம்பர் 7, 1977) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 287 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1946 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பேடவுன் நடவடிக்கை பேடவுன் நடவடிக்கை ("Operation Baytown") என்பது [இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நடைபெற்ற ஒரு படையெடுப்பு நடவடிக்கை. நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் கலபிரியா பகுதியில் தரையிறங்கியது. செப்டம்பர் 3, 1943ல் நடைபெற்ற இத்தரையிறக்கத்தில் நேச நாட்டுப் படைகள் சிசிலியிலிருந்து நேரடியாக தரையிறங்கு படகுகள் மூலம் இத்தாலியை அடைந்தன. பயணதூரம் மிகக்குறைவு என்பதால் கப்பல்களில் ஏறி பின் மீண்டும் தரையிறங்கு படகுகளுக்கு மாறி தரையிறங்கவில்லை. இவற்றின் தரையிறக்கத்துக்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. இத்தாலியப் படையெடுப்பின் முதன்மை தரையிறக்கம் சலேர்னோவில் தான் நிகழப்போகிறது என்பதை ஊகித்து விட்ட ஜெர்மானியத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் தனது படைகளை கலபிரியாவிலிருந்து பின்வாங்க உத்தரவிட்டார். நேரடியாக மோதாமல் பாலங்களைத் தகர்த்தும், சாலைகளை மறித்தும் பிரித்தானியப் படை முன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் தாமதப்படுத்தினர். ஒரு வார காலத்துக்குள் கலபிரியா பகுதி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. எட் கிட்டின்ஸ் எட் கிட்டின்ஸ் ("Ed Giddins ", பிறப்பு: சூலை 20, 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 192 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2000 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜார்ஜ் கிரே ஜார்ஜ் கிரே ("George Geary )", பிறப்பு: சூலை 9, 1893, இறப்பு: மார்ச்சு 6, 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 549 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நோமன் கிப்போர்ட் நோமன் கிப்போர்ட் ("Norman Gifford", பிறப்பு: மார்ச்சு 30, 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 - 1973 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேசன் கால்லியன் ஜேசன் கால்லியன் ("Jason Gallian", பிறப்பு: சூன் 25, 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 259 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 231 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். லெஸ்லி கே லெஸ்லி கே ("Leslie Gay", பிறப்பு: மார்ச்சு 24, 1871, இறப்பு: நவம்பர் 1, 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1894 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வீர சக்கரம் வீர சக்கரம் (Vir Chakra, Vr.C) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இவ்விருது பெற்றோர் தங்களின் பெயரின் பின்னால் Vr.C என்று போட்டுக்கொள்ளலாம். இந்த விருது 1-3/8 அங்குல வட்டவடிவ வெள்ளிப் பதக்கமாகும். நடுவில் சக்கரமும் தங்க முலாமில் இந்திய அரசு இலச்சினையும் புடைச்செதுக்கப்பட்ட ஐம்முனை நட்சத்திரம் முகப்பில் உள்ளது. ஓரங்களில் விருதின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஓர் சுழலும் பட்டையத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் விளிம்பில் நடுவில் இடைவெளி விடப்பட்டு தாமரை மலர்கள் இடையில் இருக்க இந்தியிலும் (தேவநாகரி) ஆங்கிலத்திலும் விருதின் பெயரும் ஆண்டும் குறிக்கப்படுகின்றன. 32 மி.மீ அகலமுள்ள அரை கரும்நீலம், அரை செம்மஞ்சள் நாடாவில் தொங்கவிடப்படுகிறது. ஆஷ்லே கைல்ஸ் ஆஷ்லே கைல்ஸ் ("Ashley Giles", பிறப்பு: மார்ச்சு 19 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 178 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 224 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் ஆரம்பகாலங்களில் வேகப்பந்து வீச்சாளராக விளையாட ஆரம்பித்தார். பின்னர் காயம் காரணமாக இடதுகை சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார். சீ. பி. ஃபிரை சீ. பி. ஃபிரை ("C. B. Fry", பிறப்பு: ஏப்ரல் 25, 1872, இறப்பு: செப்டம்பர் 7, 1956) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 394 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1912 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். புரூசு பிரெஞ்சு ஆர்தர் கிலிகன் ஆர்தர் கிலிகன் ("Arthur Gilligan",பிறப்பு: டிசம்பர் 23, 1894, இறப்பு: செப்டம்பர் 5, 1976) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 337 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1925 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டைச் பிரிமென் டைச் பிரிமென் ("Tich Freeman", பிறப்பு: மே 17, 1888, இறப்பு: சனவரி 28, 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 592 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1929 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அரோல்ட் கிலிகன் அரோல்ட் கிலிகன் ("Harold Gilligan", பிறப்பு: சூன் 29, 1896, இறப்பு: மே 5, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 321 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஹரோல்ட் கிம்பிளெட் ஹரோல்ட் கிம்பிலிட் ("Harold Gimblett", பிறப்பு: அக்டோபர் 19, 1914, இறப்பு: மார்ச்சு 30, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 368 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1936 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டாம் கொடார்ட் டாம் கொடார்ட் ("Tom Goddard", பிறப்பு: அக்டோபர் 1, 1900, இறப்பு: மே 22, 1966) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 8தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 593 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அசோகச் சக்கர விருது அசோகச் சக்கரம் (Ashoka Chakra) இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்ய சக்கரம் பெற தடை இல்லை. கிரகாம் கூச் கிரகாம் கூச் ("Graham Gooch", பிறப்பு: சூலை 23, 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 118 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 581 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 614 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கோசிகன் கோசிகன் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். மாதவிக்காக கோவலனிடம் தூது சென்ற வைதிகர். மாதவியின் தோழி மற்றும் மணிமேகலையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்திய சுதமதியின் அப்பா. இரட்டைக் காப்பியத்தில் இடம் பெற்ற மாதவிக்காக தூது சென்றதால் இரண்டிலும் இடம் பெற்றவர். மாதவி குற்றமற்றவள் என கோவலனுக்கு உண்மை புரிய வைத்தவர். டேர்ரன் கோ டேர்ரன் கோ ("Darren Gough", பிறப்பு: செப்டம்பர் 18, 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 159 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 248 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 421 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆல்ஃப் கோவர் ஆல்ஃப் கோவர் ("Alf Gover", பிறப்பு: பெப்ரவரி 29, 1908, இறப்பு: அக்டோபர் 7, 2001) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 4தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 362 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் கோவர் டேவிட் கோவர் ("David Gower ", பிறப்பு: ஏப்ரல் 1, 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 117 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 114 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 448 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 430 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1978 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஈ. எம். கிரேஸ் ஈ. எம். கிரேஸ் ("E. M. Grace", பிறப்பு: நவம்பர் 28, 1841, இறப்பு: மே 20, 1911) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரயெம் பவுலர் கிரயெம் பவுலர் ("Graeme Fowler", பிறப்பு: ஏப்ரல் 20, 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அர்னால்ட் ஃபோதர்கில் அர்னால்ட் ஃபோதர்கில் ("Arnold Fothergill", பிறப்பு: ஆகத்து 26, 1854, இறப்பு: ஆகத்து 1, 1932) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பிரெட் கிரேஸ் பிரெட் கிரேஸ் (" Fred Grace", பிறப்பு: திசம்பர் 13, 1850, இறப்பு: செப்டம்பர் 22, 1880) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 195 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டபிள்யூ. ஜி. கிரேஸ் வில்லியம் கில்பர்ட் டபிள்யூ. ஜி. கிரேஸ் ("William Gilbert "W. G." Grace", சூலை 18, 1848 - அக்டோபர் 23, 1915) என்பவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். மேலும் துடுப்பாட்டத்தின் வரலாற்றில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் டபிள்யூ.ஜி என பரவலாக அறியப்படுகிறார். இவர் 1865 முதல் 1908 வரையிலான காலகட்டங்களில் 44 சர்வதேச முதல்தர போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி, க்லொசெஸ்டெர்ஷைர் மாகாண உள்ளூர் அணி, எம் சி சி, யு எஸ் இ இ ஆகிய அணிகளின் தலைவராக இருந்துள்ளார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத்துறையராக விளங்கினார். மட்டையாளர், பந்துவீச்சாளர், களவீரரகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் இவர் ஒரு சிறப்பான மட்டையாளராகவே அறியப்படுகிறார். சில புதுமையான மட்டை நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் துவக்கவீரராக களம் இறங்கினார். இவர் ஒரு துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் ஈ. எம். கிரேஸ் மற்றும் இளைய சகோதரர் ஃபிரெட் கிரேஸ் ஆகியோர் 1880 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடினர். டபிள்யூ. ஜி. கிரேஸ், ஈ. எம். கிரேஸ் மற்றும் ஃபிரெட் கிரேஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினர். மூன்று சகோதரர்கள் இணைந்து விளையாடுவது அதுவே முதல் முறையாகும். கிரேஸ் துடுப்பாட்டம் தவிர பிற விளையாட்டுகளிலும் பங்கேற்றார். 440 கெஜம் தடை தாண்டும் ஓட்டத்தில் வாகையாளர் ஆவார். மேலும் வாண்டரர்ஸ் காற்பந்துச் சங்கத்திற்காக விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு சுருள்வு (விளையாட்டு),குழிப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார். டபிள்யூ.ஜி. கிரேஸ் சூலை 18, 1848 இல் டவுனெண்ட், பிரிஸ்டலில் பிறந்தார். ஆகஸ்டு 8 இல் உள்ளூர் கிறித்தவத் தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்றார். கில்பெர்ட் என்ற பெயரால் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவரின் தாயார் மட்டும் இவரை வில்லீ என அழைத்தார். எனவே தான் இவர் டபிள்யூ (வில்லீ) ஜி (கில்பர்ட்) என அழைக்கப்படுகிறார். இவருடைய தந்தை ஹென்றி மில்ஸ் கிரேஸ் மற்றும் தாய் மார்த்தா ஆவர். இவர்கள் இருவரும் நவம்பர் 3, 1831 இல் பிரிஸ்டலில் திருமணம் புரிந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். டபிள்யூ.ஜி. கிரேஸ் எட்டாவது குழந்தை ஆவார். இவருக்கு ஈ. எம் கிரேஸ் உட்பட மூன்று மூத்த சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர். இவரின் இளைய சகோதரர் (ஒன்பதாவது குழந்தை) ஃபிரெட் கிரேஸ் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். கிரேஸ் முதலில் டவுனெண்டில் உள்ள மிஸ் ட்ராட்மன் பள்ளியில் பயின்றார். பின் விண்டர்போர்னிலுள்ள திரு கர்டிஸ் பள்ளியில் பயின்றார். இவரின் பதினான்கு வயது வரையில் திரு மாப்ளஸ் என்பவர் நடத்திய ரிட்ஜ்வே எனும் நாள்முறைப் பள்ளியில் பயின்றார். இவரின் பள்ளிக்கூட ஆசிரியரான டேவிட் பர்னார்ட் , கிரேஸின் தங்கை அலைசை திருமனம் புரிந்தார். 1863 இல் தீவிர நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டார். நோய்த்தாக்குதலினால் இவர் முழு உயரத்தினை 6 அடி 2அங்குலத்தை அடைந்தார். எனவே இவர் வீட்டில் இருந்தபடியே ரெவெரென்ட் ஜான் டன் எனும் போதகரிடம் கல்வி பயின்றார். பதுவை நகர அந்தோனியார் பதுவை நகர அந்தோனியார் ("Anthony of Padua") அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் ("Anthony of Lisbon", 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231) பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது. ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார். ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார். தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம். மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு. புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது. 1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார். மிச்சிகன் அவென்யூ (சிகாகோ) மிச்சிகன் அவென்யூ ("Michigan Avenue") சிகாகோ நகரில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள தெருவாகும். சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே இத்தெரு புகழ் பெற்றுள்ளது. 1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன. தற்போது சிகாகோ ஆற்றின் வடக்கு பகுதி “தி மெக்னிபிசென்ட் மைல்” என்று அழைக்கபடுகின்றது. சில நேரங்களில் ”தி மேக் மைல்” என்றும் அழைக்கபடுகின்றது. கிரான்ட் பூங்கா (சிகாகோ) கிரான்ட் பூங்கா ("Grant park", முன்னதாக லேக் பார்க்) சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 319 ஏக்கர்கள் அல்லது 1.29 சதுர கிமீ. சிகாகோவின் நடுவில் இருக்கும் இப்பூங்காவில் மில்லெனியம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. அமெரிக்க குடியரசுத் தலைவரும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தளபதியுமான யுலீசசு எசு. கிரான்ட்டின் நினைவாகல் இப்பூங்கா பெயரிடப்பட்டது. இதன் வடக்கில் ரான்டொல்ப் தேருவும் தெற்கில் ரூஸ்வேல்ட் சாலையும் மேற்கில் மிச்சிகன் அவென்யூ மற்றும் கிழக்கில் மிச்சிகன் ஏரியும் உள்ளன. இப்பூங்கா சிகாகோவின் முற்றம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது சிகாகோ நகர் உருவாக்கத் திட்டப்பணிகள் மிச்சிகன் அவென்யு பகுதிகளை பிரிக்காமல் காலியாக விட்டன. அரசு மிச்சிகன் அவென்யு பகுதி மக்களுக்காக அந்நிலங்கள் காலியாக வைக்கப்படும் என்று உறுதியளித்தது. 1890இல் டியர்போர்ன் கோட்டை சிகாகோவுடன் இணைக்கப்பட்டபோது இந்த நிலங்கள் "பொதுச்சொத்து. என்றென்றும் கட்டடங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்." என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29, 1844 ஆம் நாள் சிகாகோ நகராட்சி இப்பகுதியை பூங்காவிற்கு என்று ஒதுக்கி இதற்கு லேக் பார்க் என்று பேரிட்டது. கிரான்ட் பார்க்கின் நடுவில் இருப்பது உலகின் பெரிய நீர்விழ்ச்சிகளில் ஒன்றான பக்கிங்ஹாம் நீர்விழ்ச்சியாகும். ரோகோகோ கல்யாண கேக் பாணியில் கட்டப்பட்ட இந்த நீர்விழ்ச்சி 1927 ஆம் ஆண்டு கேடி பக்கிங்ஹாமின் கேடி ஸ்டர்ஜெஸ் என்பவர் சிகாகோ நகரத்திற்கு பரிசாக தந்தார். இந்நீர்விழ்ச்சி ஏப்ரில் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 20 நிமிட இடைவெளியில் தண்ணீரை வெளியேற்றுகிறது. அம்மாதங்களில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மற்றுமே இயங்கும். டொம் கிரவெனி டொம் கிரவெனி ("Tom Graveney", பிறப்பு: சூன் 16, 1927), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 732 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1969 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூலை 12, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் முதன்மை செயல் அலுவலராக ஆகத்து 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது. சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், புனித அந்தோனியார் புனித அந்தோனியார் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்) மரு. ராபின் குக் ("Dr. Robin Cook", பிறப்பு மே 4, 1940; நியூ யார்க் நகரம், நியூ யார்க்), பொது மக்கள் நலவாழ்வு, மருத்துவத் துறைகளைக் குறித்து எழுதும் ஓர் அமெரிக்க மருத்துவர், புதின எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறைப் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளை எழுதுவதற்காக அறியப்படுகிறார். ராபின் குக்கின் பல நூல்கள் நியூயார்க் டைம்சின் அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் படிகள் விற்றுள்ளன. பொதுக்கயத்துக் கீரந்தை பொதுக்கயத்துக் கீரந்தை சங்ககாலப் புலவர். இவரது பாடலாகக் குறுந்தொகை 337 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர். இவள் பெருமுது செல்வர் பலருக்கு ஒரே ஒரு மகள். இவள் உலகம் அறியாத மடமைப் பண்பினள். இவளது முலை முகிழ்முகிழ்த்தது. கிளி போன்ற குரல் மாறிக் கிழக்கு வீழ்த்தது. (அடித்தொண்டைக்கண்ணதாயிற்று) பல் விழுந்து முளைத்து வரிசைப்பட்டுள்ளன. உடலைச் சில சுணங்குகள் அழகுபடுத்துகின்றன. இவற்றையெல்லாம் நான் அறிவேன். அவளுக்குத் தெரியாது. என்ன ஆவாளோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். (நீ வேறு அவளைத் தரும்படி கெஞ்சுகிறாய். நான் என்ன செய்வேன்?) - குறை இரக்கும் தலைவனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள். குருதிவளிக்காவி ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர். இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும். போதனார் போதனார் சங்ககாலப் புலவர். நற்றிணை 110 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. இவரத் பாடல் "பிரசம் கலந்த வெண்நுவைத் தீம்பால்" என்று தொடங்குகிறது. போதம் என்னும் சொல் பாலைக் குறிக்கும். இப் புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் பாலுண்ணச் செய்யும் செய்தியமைந்த பாடலைப் பாடியதால் நற்றிணை நூலைத் தொகுத்தவர் 'போதனார்' என்று பெயர் சூட்டியுள்ளார். போதனார் - இயற்பெயர். (இதன் பொருள் விளக்கப்பட்டுள்ளது) செவிலி சிறுமிக்குப் பாலூட்டுகிறாள். ஒரு கையில் வெள்ளிக்கிண்ணத்தில் தேன் கலந்த பால். மற்றொரு கையில் சிறிய கோல். தோலின் நுனி பூப்போல் உள்ளது. கோலை அடிப்பது போல் சுழற்றிக்கொண்டு உண் என்று ஊட்ட வருகிறாள். சிறுமி உண்ண மறுத்துப் பந்தலைச் சுற்றி ஓடுகிறாள். செவிலி கால் ஓய்ந்துவிடுகிறது. சிறுமி ஓடுகிறாள். இது சிறுவிளையாட்டு. சிறுவிளையாட்டி உலக அறிவையும், குடும்ப ஒழுக்கத்தையும் எங்குக் கற்றுக்கொண்டாள் என்று செவிலி வியக்கிறாள். (அவள் இப்போது கொழுநன் வீட்டில் வாழ்கிறாள்.) கொழுநன் வீட்டில் வறுமை. தந்தை அனுப்பிவைத்த சோற்றை அவள் உண்ணவில்லை. கொழுநன் வீட்டு-உணவு இல்லாதபோது பட்டினி கிடக்கிறாள். கிடைத்தபோது மட்டும் உண்கிறாள். (தேன்பால் பருக மறுத்து ஓடியவள்) பட்டினி கிடக்கும் ஒழுக்கத்தை எங்கே கற்றுக்கொண்டாள்? - செவிலியின் வியப்பு. போந்தைப் பசலையார் போந்தைப் பசலையார் சங்ககாலப் புலவர். அகநானூறு 110 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிறகும் இந்தப் பாடல் ஒரு நிகழ்வின் தொடர் போல அமைந்துள்ளது. நான் சொல்லப்போகும் செய்தி இவளைப் பெற்ற தாய்க்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. ஊருக்கே தெரியினும் பரவாயில்லை. வேறு வழி இல்லை. புகார்த்தெய்வத்தை நோக்கிச் சூளுரைத்து உண்மையைக் கூறுகிறேன். தோழிமார் கூடித் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். பின் சிற்றில் இழைத்தோம். சிறுசோறு ஆக்கினோம். இப்படி விளையாடிய வருத்தம் தீரச் சிறிதே அமர்ந்திருந்தோம். அங்கு ஒருவன் வந்தான். பேச்சுக்கொடுத்தான். "தடமென் பணைத்தோள் மட நல்லீரே! பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன? என்று வினவினான். அவனைப் பார்த்ததும் இவள் தலைவணங்கி நின்றாள். நான் சொன்னேன், 'இவை நிமக்கு உரிய செயல்கள் அல்ல'. அவள் சேசலானாள். கொடி அசையும் வணிக நாவாயைக் காட்டினாள். மீன் வல்சிதான் எங்கள் உணவு என்றாள். இவளது ஆயத்தார் பலரும் அவ்விடத்தில் நிற்காமல் சென்றுவிட்டனர். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். 'நன்னுதால்! நானும் போகட்டுமா' என்றாள். அதன் பொருள் நான் போகவேண்டும் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் விலகினேன். அப்போது அவன் தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்றது என் கண்ணை விட்டு அகலவில்லை. மொஹான் லால் கிரேரோ 3/1, ரெய்மோன்ட் வீதி, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை ("Operation Slapstick") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு படையெடுப்பு நடவடிக்கை. நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் தாரந்தோ நகரைத் தாக்கிக் கைப்பற்றியது. இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டுப் படைகள் முடிவு செய்த போது சலேர்னோ மற்றும் கலபிரியா பகுதிகளில் மட்டும் படைகளைத் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் செப்டம்பர் 3, 1943ல் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தாகி இத்தாலி சரணடைந்தது. இதனால் பிற இடங்களிலும் படைகளைத் தரையிறக்க வாய்ப்புகள் உருவாகின. இதனைப் பயன்படுத்தி தாரந்தோ துறைமுகத்தைக் கைப்பற்ற நேச நாட்டு உத்தியாளர்கள் திட்டமிட்டனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசனை ஏற்றிக் கொண்டு நான்கு பிரித்தானியக் கப்பல்கள் தாரந்தோவிற்குச் சென்றன. அவற்றுக்குத் துணையாக பல போர்க்கப்பல்களும் சென்றன. இத்தாலியப் படைகளின் சரணடைவுக்குப் பின் தராந்தோ பகுதியில் சில ஜெர்மானியப் படைப்பிரிவுகளே நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் தளபதி, தன்னிடம் உள்ள சொற்பப் படைகளைக் கொண்டு நேச நாட்டுத் தரையிறக்கத்தைத் தடுக்க இயலாது என்று உணர்ந்தார். எனவே தராந்தோ நகரிலிருந்து பின்வாங்கி விட்டார். தராந்தோவில் எந்த எதிர்ப்புமின்றி நேரடியாகத் துறைமுகத்திலேயே பிரித்தானியப் படைகள் தரையிறங்கின. எதிர்ப்பில்லையெனிலும் படைகளைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல் துறைமுகத்திலிருந்த கண்ணிவெடி மீது மோதி மூழ்கியதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 9ம் தேதி இரவுக்குள் தாரந்தோ நகரும் துறைமுகமும் பிரித்தானியர் வசமாகின. அனோமா கமகே 19/6A சுனான்திராம வீதி, களுபோவில, தெஹிவளையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், நாபொலி நாபொலி ("Napoli", ) அல்லது நேப்பிள்ஸ் ("Naples") இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்பம் காம்லின் ஜார்பம் காம்லின் (Jarbom Gamlin, பிறப்பு 16 ஏப்ரல் 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அருணாச்சலப் பிரதேசத் தலைவரும் ஆவார். காம்லின் சோக்ஜார் காம்லினிற்கு மகனாக மேற்கு சியாங் மாவட்டத்திலுள்ள அலோங்கில் பிறந்தார். அசாமிலுள்ள கோல்ப்பரா சைனிக் பள்ளியில் படித்தபோது 1976-77 ஆண்டுகளில் பள்ளி மாணவர் தலைவராக இருந்துள்ளார். தில்லியின் புனித இசுடீபன் கல்லூரியிலிருந்து வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்தார். தில்லிப் பல்கலைக்கழகதின் வளாக சட்ட மையத்தில் (Campus Law Centre) சட்டப்படிப்பை முடித்தார். காம்லின் தமது அரசியல் வாழ்வை "அனைத்து அருணாச்சலப் பிரதேச மாணவர் சங்கத்" துவக்கினார். 1999-2004ஆம் ஆண்டுகளில் பதின்மூன்றாவது மக்களவையில் மேற்கு அருணாச்சல மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004ஆம் ஆண்டில் மேற்கு சியாங் மாவட்டத்திலுள்ள லிரோமோபா சட்டப்பேரவைத்தொகுதியிலிருந்து நான்காவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2009ஆம் ஆண்டு அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாவது அருணாச்சல சட்டப்பேரவையின் உறுப்பினரானார். தோர்ச்யீ காண்டுவின் அமைச்சரவையில் நவம்பர் 6,2009 முதல் மின்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஏப்ரல் 30, 2011இல் தோர்ச்யீ காண்டு உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த பின்னர் இடா நகரில் கூடிய காங்கிரசு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இவரை தம் தலைவராகத் தேர்ந்தெடுக்க மே 5, 2011 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு (United Nations observances – International Year) என்பது, ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் நோக்கங்களை அடைவதற்காகவும், உலகம் தழுவிய அரசியல், சமூக, பண்பாட்டு, மனிதநேய அல்லது மனித உரிமை விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு குறித்த விடயத்துக்காக அறிவிக்கப்படும் ஆண்டில், பன்னாட்டு அளவிலும், நாடுகள் அளவிலும் அவ்விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் திட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் ஆர்வத்தை உண்டாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக அறிவிக்கப்படும் அனைத்துலக ஆண்டுகள் தொடர்பிலான ஆயத்த வேலைகள், மதிப்பீடு, கண்காணிப்பு ஆகிய செயற்பாடுகளுக்கான அடிப்படைகளை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் உருவாக்குகிறார். பெரும்பாலான அனைத்துலக ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்படுகின்றன. வேறு சிலவற்றை ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்களான யுனெஸ்கோ போன்றவை அறிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் முதலாவது அனைத்துலக ஆண்டு 1959 ஆம் ஆண்டில், பொதுச் சபையின் 1285 (XIII) ஆவது தீர்மானத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. இது உலக ஏதிலி ஆண்டு ஆகும். இதைத் தொடர்ந்து 1961, 1965, 1967, 1968, 1970, 1971, 1974, 1975, 1978/79, 1979, 1981, 1982, 1983, 1985, 1986, 1987, 1990, 1992, 1993, 1994, 1995, 1996, 1998, 1999, 2000, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013 ஆகியனவும் பல்வேறு விடயங்களுக்காக அனைத்துலக ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதுவரை பெரும்பாலான ஆண்டுகள் ஒரு விடயத்துக்காகவே அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளன எனினும், அண்மைக் காலத்தில் ஒரு ஆண்டு ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களுக்காகவும் அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டதைக் காண முடிகிறது. மிக அதிக அளவாக 2009 ஆம் ஆண்டு ஐந்து விடயங்களுக்காக அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அறிவிக்கப்பட்ட அனைத்துலக ஆண்டுகளின் பட்டியலைக் கீழே காண்க. United Nations Observances ஹேமால் குணசேகர ஹேமால் குணசேகர ("HEMAL GUNASEKERA", பிறப்பு: திசம்பர் 25, 1959), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். தயானி, வெல்லாக்க, வெலிகமையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், எம். எச். ஏ. ஹலீம் எம். எச். ஏ. ஹலீம் ("M. H. A. Haleem", பிறப்பு: ஆகத்து 29, 1956), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,011 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 16/2 பவுசியா கார்டன், மாவில்மடைவீதி, கண்டியில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், குலசேகரபட்டினம் குலசேகர பட்டிணம் (Kulasekharapatnam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு ஊர். இங்கு புதிதாக புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும், பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2x800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி; முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலயத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன. இந்திய விண்வெளி அமைப்பு, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் இந்திய நடுவண் அரசை வற்புறுத்தி வருகின்றனர். நவராத்திரி திருவிழாவுக்குப் பெயர் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் இவிடத்தில் அமைந்துள்ளது. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் திருவிளையாடற் புராணத்தில் 48 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2297 -2321) நாரைக்கு முத்தி கொடுத்த படலம் உள்ளது. இப்படலத்தில் பொற்றாமரை வாவியில் மூழ்கித் தன் தீவினை ஒழித்து இறைவனின் திருவடிகளை அடைவதை உறுதிபட யாசித்த நாரைக்கு முத்தி கொடுத்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தெற்கில் தாமரைக் குளமொன்றில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. வரட்சி காரணமாக குளம் வற்றியதால் நாரை அக்குளத்தை விட்டு நீங்கி காட்டுப் பகுதி ஒன்றில் இருந்த குளக்கரையில் வாழ்ந்து வந்தது. அக்குளத்தில் முனிவர்கள் வந்து முழுகிச் செல்வர். முனிவர்கள் முழுகும் போது மீன்கள் அவர்களது சடையிலும் தோளிலும் புரள்வதை இந் நாரை அவதானித்தது. முனிவர்களைத் தொட்டதால் புனிதமடைந்த மீன்களைப் புசிப்பதில்லை என உண்பதையே நிறுத்தியிருந்தது. அக்குளத்தில் மூழ்கிய முனிவர்கள் கரையேறிய பின் வாசித்த மதுரைப் புராணமும், சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல் புராணமும் அந் நாரையின் காதுகளில் கேட்டன. நாரை அறியாமை நீங்கி மெய்யறிவு பெற்றது. இறைவனின் மாட்சிமையை உணர்ந்தது. அது மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி 15 நாட்கள் இடையறாது இறைவனைத் தியானித்தது. இறைவன் அந்நாரையின் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். " ஐயனே நான் இப்பிறவி நீங்கி சிவலோகப் பயன் அடைய வேண்டும். பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழாத நிலை வேண்டும்" எனக் கேட்டது. பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் சங்ககாலப் புலவர். நற்றிணை 57 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரது மகனார் வெண்கண்ணியார் என்பவரும் ஒரு புலவர். ஆமான் கூட்டம் வேங்கை மரத்தடியில் வாழும்போது மந்தி ஆமானின் பாலைக் கறந்து தன் குட்டியின் கை நிறையப் பெய்யும் மலையில் வாழ்பவன் அவன். (அவள் தினைப்புனம் காத்தபோது அவன் அவளோடு இருந்தான்.) தினை கொய்பதம் கொண்டதும் அவள் நலம் தொலைந்தது. - தலைவி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதைத் தோழி இவ்வாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள். அலமாதி அலமாதி (Alamathi / Alamathy) தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம். அலமாதி கிராமம், சென்னை நகரத்திற்கு மேற்கே சுமார் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்குன்றம் நகரமும், மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் தாமரைப் பாக்கம் என்ற சிற்றூரும், தெற்கே, 14 கி.மீ. தொலைவில் ஆவடி நகரமும் அமைந்துள்ளது. அலமாதி கிராமம், பழைய அலமாதி, புதிய அலமாதி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டு பழமையானது. இவ்வூர் "அலர்மதீஈஸ்வரம்" என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், இதுவே மருவி, அலமாதி என்று வழங்கப்படுகிறது. இவ்வூர் "சோழவரம்" ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். மிகக் கடினமான கிராவல் வகை மண் இப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. இவ்வகை மண் விவசாயத்திற்கு ஏற்புடையதல்ல எனவே, இங்கு பெரும்பகுதி வரண்ட நிலமாகவே உள்ளது. எனினும், வறட்சி தாங்கி வளரும் "முந்திரி மரங்கள்" சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது. அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளும் இங்கு இருந்தது. தற்போது இந்த முந்திரி தோப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. விவசாயம் செய்ய தகுதியான ஒரு சில இடங்களும், குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டது. எனினும் மிகச்சிறிய "அலமாதி" ஏரி இவ்வூரின் இயற்கை வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சென்னை நகரதிற்கு அருகில் இவ்வூர் இருந்தாலும், புதிய குடியேற்றங்கள் ஏற்பட்டாலும், இன்றும் பெரும்பான்மையான மக்கள் பழமை சிந்தனையிலேயே இருப்பது மாற்றமடையும் என்றே காத்திருக்க வேண்டும். பழைய அலமாதி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களும், புதிய அலமாதி பகுதி வேறுஒரு சாதி மக்களும், இந்த இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பெருமளவில் தலித் இன மக்களும் தத்தம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.மக்களில் பெரும்பான்மையானவர்கள் கூலி வேலை செய்பவர்கள். இயற்கையாக அமைந்த நிலத்தடி நீர்வளம், இவ்வூரில் மிக அதிக அளவில் "குடிநீர்" வியாபாரம் பெருக வகை செய்துள்ளது. இவ்வூரில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய குடிநீர் சுத்தீகரிப்பு ஆலைகளும் கணக்கில்லாத சிறிய ஆலைகளும் உள்ளது. இன்று சென்னை நகர மக்கள் பலரின் தாகத்தை அலமாதி தண்ணீர் தனித்துவருகின்றது. மேலும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய், வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளும், அவற்றை தரம் பிரிக்கும் தொழிலும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. பழைய அலமாதியில் உள்ள "அலர்மதீஈஸ்வரம்" சிவன் கோயிலும், அதன் அருகில் உள்ள முருகன் கோயிலும் இப்பகுதியில் மிகப்பிரபலம். பழைய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், புதிய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின், உணவு பதப்படுத்துதல் பயிற்சி கல்லூரியும் அலமாதியில் உள்ளது. அலமாதி, செங்குன்றம்-திருவள்ளுர்-திருபெரும்பூதூர்-சிங்க பெருமாள் கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்குன்றம் அருகில் உள்ள பெரிய நகரமாகும். அரசு போக்குவரத்து பேருந்துக்கள் மட்டுமல்லாது, அதிகமான ஷேர் ஆட்டோக்களும் அலமாதியை செங்குன்றத்தோடு இணைக்கின்றது. பேருந்து வழித்தடம் 57D பூச்சி அத்திப்பேடு - அலமாதி (வழி) - செங்குன்றம் - பாரிமுனை 57M அலமாதி - செங்குன்றம் - பாரிமுனை 65H ஆவடி - திருநின்றவூர் - தாமரைப் பாக்கம் - அலமாதி (வழி) - செங்குன்றம் 505 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர் 505P செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - பெரியபாளையம் 105 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர் 73A கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - மெய்யூர் 111D கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளுர் சுல்தான் அசுலான் சா கோப்பை சுல்தான் அசுலான் சா கோப்பை (Sultan Azlan Shah Cup) மலேசியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் பன்னாட்டு ஆண்கள் வளைதடிப் பந்தாட்டப் போட்டியாகும். 1983ஆம் ஆண்டு ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் போட்டியாகத் தொடங்கியது வளர்ச்சியும் புகழும் பெற்று 1998ஆம் ஆண்டுமுதல் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுகிறது. வளைதடிப் பந்தாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மலேசியாவின் ஒன்பதாவது யாங் டிபெத்துவன் அகோங் மன்னர் சுல்தான் அசுலான் சா நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா 2009ஆம் ஆண்டு 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்று கோப்பையை வென்றது. 2010ஆம் ஆண்டில் தென் கொரியாவுடனான இறுதியாட்டம் மோசமான காலநிலையால் கைவிடப்பட்டு இருவரும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா கோப்பையை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டது. 2013 ம் ஆண்டு ஐந்தாம் இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வென்றது. http://www.azlanshahcup.com/ அலுவல்முறை இணையதளம் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை நற்றிணை 375, 387. இவரது தந்தையார் பொதும்பில் கிழார் என்பவரும் ஒரு புலவர். உமரிக்காடு இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் உமரிக்காடு (Umarikadu) ஆகும். கொற்கையை தலைநகராக கொண்டு அரசாண்ட பாண்டிய மன்னர்கள் பண்டைய நாளில் உமரிச்செடி என்னும் பெயருடைய ஒரு வகை செடியை பகைவர்கள் வராதவண்ணம் அரணாக வைத்து வளர்த்தனர். இதனால் உமரிக்காடு என்ற பெயர் உருவானது . பொத்தியார் பொத்தியார் சங்ககாலப் புலவர். இவரது ஐந்து பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: புறநானூறு 217, 220, 221, 222, 223 ஆகியவை. அனைத்துலகக் காடுகள் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டைக் காடுகள் அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. தற்போது வாழும் மக்களினதும், எதிர்காலத் தலைமுறையினரினதும் நன்மைக்காக, பேண்தகு காட்டு மேலாண்மை, எல்லாவிதமான காடுகளினதும் பாதுகாத்துப் பேண்தகு வளர்ச்சியுறச் செய்தல் போன்றவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகம் தழுவிய பேண்தகு வளர்ச்சியில் காடுகள் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி 1.6 பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்க்கைக்குக் காடுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் 300 மில்லியன் மக்கள் காடுகளுக்குள்ளேயே வாழ்கின்றனர். காட்டு உற்பத்தித் தொழில் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்களுக்குமான முக்கிய மூலங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் காட்டு உற்பத்திகளின் வணிகத்தின் மொத்தப் பெறுமதி 327 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. காடழிப்பினால் 130,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் ஒவ்வொரு ஆண்டும் அழிந்து போவதாக உணவு வேளாண்மை நிறுவனம் மதிப்பிடுகிறது. உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, புவி சூடாதலுக்குக் காரணமாக உள்ள பசுங்குடில் வளிம வெளியேற்றத்தின் 20 வீதம் காடழிப்பினாலேயே ஏற்படுகிறது. உலகில் கானப்படும் உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டவைகளுக்குக் காடுகளே வாழிடங்களை வழங்குகின்றன. அத்துடன் வெப்பவலய மழைக்காடுகளின் அழிப்பினால் நாளொன்றுக்கு 100 இனங்கள் வரையிலான உயிர்ப்பல்வகைமை இழப்பு ஏற்படுவதாகவும் உலக வங்கியின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இயற்கையின் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம், காட்டு நிலத்தோற்ற மீள்விப்புத் தொடர்பான கூட்டாண்மை ஆகிய அமைப்புக்கள், உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட எக்டேர் பரப்பளவு கொண்ட அழிந்துபோன அல்லது தரம் குறைந்துபோன காடுகளை மீள்விக்க முடியும் என்கின்றன. ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றத்தின் செயலகமே காடுகள் அனைத்துலக ஆண்டின் நோக்கங்களைச் நிறைவேற்றுவதற்கான மைய அமைப்பாக உள்ளது. இதற்காக நாடுகளின் அரசுகளின் துணையோடும், காடுகள் தொடர்பான ஒன்றிணைந்த கூட்டாண்மை மற்றும் அதுபோன்ற அமைப்புக்களின் உதவியோடும் ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றம் செயற்படுகின்றது. அரசுகளும், பிற பிரதேச, பன்னாட்டு அமைப்புக்களும், குடிமக்கள் சமூக அமைப்புக்களுடன் இணைந்து அந்தந்த நாடுகளில் இது தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான தேசியக் குழுக்களை அமைக்கின்றன. சிகாகோ பெருந்தீ சிகாகோ பெரும் தீ ("Great Chicago Fire") அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு பெரும் தீ விபத்து. அக்டோபர் 8, 1871ல் எரிய ஆரம்பித்து, அக்டோபர் 10 வரை தொடர்ந்து எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோ உள்ளது. சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இப் பெரும் தீயினைக் குறிக்கிறது. இந்நாள் நாள் வரை இத்தீ உருவான காரணம் அறியப்படவில்லை. இத்தீ அக்டோபர் 8ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில், 137 டேகோவென் தெருவிலுள்ள ஒரு சின்ன கிடங்கில் ஆரம்பித்தது. செய்தித்தாள் நிருபரான மைகேல் அஹர்ன் என்பவர் இத்தீ ஒரு மாடு எரிவிளக்கை எட்டி உதைத்ததனால் உருவானது என்று கூறினார். ஆனால் 1893ஆம் ஆண்டில் தான் சொன்னவை உண்மையில்லை என்று அறிவித்தார். இந்த தீ சிகாகோ நகரத்தின் அதிகமான மரக்கட்டை பயன்பாடு மற்றும் தென்மேற்கு காற்றினாலும் அதிகமாக ஏரிந்தது. சீக்கிரமாக தடுக்காதலாலும் முன்னதாக நடந்த தீவிபத்தில் சோர்வடைந்த தீயணைப்பவர்களாலும் தீயின் பரப்பளவு அதிகமானது. நகரத்தின் தீயணைப்புத்துறையினர் காலை சுமார் பத்து மணியளவில் அழைக்கப்பட்டனர். அவர்களின் தவறால் தீ மேலும் பரவியது. இரண்டு நாட்கள் முழுவதும் தீயணைப்பவர்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பெய்த மழையினால் தீ முற்றிலுமாக அனைக்கப்பட்டுவிட்டது. 300 மக்கள் இறந்ததாகவும், 3 இலட்சம் மக்கள் வீடிழந்ததாகவும் கூறப்பட்டது. இத்தீயிலிருந்து தப்பி இன்றுவரை நிற்கும் கட்டிடங்கள்: அனைத்துலக உயிர்ப்பல்வகைமை ஆண்டு 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2010 ஆம் ஆண்டை உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டு என அறிவித்தது. 2010 உயிர்ப்பல்வகைமை இலக்குடன் பொருந்தக்கூடிய வகையில் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் 61 ஆவது அமர்வு வெளியிட்டது. உயிர்ப்பல்வகைமை பற்றியும், புவியில் வாழ்க்கைக்கு இதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டில், உயிரியல் பல்வகைமை தொடர்பான சாசனத்தின் பங்காளிகளும், யோகானசுபர்க்கில் இடம்பெற்ற பேண்தகு வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்களும் 2010 க்கான உயிர்ப்பல்வகைமை இலக்கு ஒன்றை ஏற்றுக்கொண்டனர். இந்த இலக்குடன் பொருந்தும் வகையில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 61 ஆவது அமர்வில் தீர்மானம் 61/203 நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே உயிர்ப்பல்வகைமைக்கான அனைத்துலக ஆண்டு அறிவிக்கப்பட்டது. கனடாவின் மொன்ட்றீலில் தனது செயலகத்தைக் கொண்டுள்ள உயிரியல் பல்வகைமைக்கான சாசனம், உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டுக்கான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தது. உயிரியல் பல்வகைமைக்கான சாசனம், உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாத்துப் பேண்தகு முறையில் பயன்படுத்துவதற்கும், இதன் பல்வகைப் பயன்களை நியாயமான அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்குமாக 1992 ஆம் ஆண்டில் ரியோ டி செனரோவில் நிகழ்ந்த புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதில் 193 நாடுகள் பங்காளிகளாக உள்ளனர். உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டின் நோக்கங்கள் பின்வருமாறு: கீர்த்தி சக்கரம் கீர்த்தி சக்கரம் (Kirti Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது "அமைதிக் காலத்தில்" வழங்கப்படும் மகா வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் "அசோகச் சக்கரம், வகுப்பு II" என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு கீர்த்தி சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது. இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது. கீர்த்தி சக்கரா கீர்த்தி சக்கரா (Keerthi chakra) () 2006ஆம் ஆண்டு போர்க்களப் பின்னணியில் மேஜர் ரவியின் முதல் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். இதில் மோகன்லாலும் ஜீவாவும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்திய மாநிலம் சம்மு காசுமீரில் உண்மையான போராளிகளின் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது. இந்தியப் படைத்துறை அமைதிகாலத்தில் வழங்கும் உயரிய கீர்த்தி சக்கரம் விருதினைக் கொண்டு திரைப்படம் பெயரிடப்பட்டது. இது மேஜர் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தின் முதல் திரைப்படமாகும். இதனை அடுத்து இதே கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்த குருச்சேத்திரம் வெளியானது. இந்தப் படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழில் ஒலிபெயர்ப்புச் (டப்) செய்யப்பட்டு அரண் என்று பெயரில் வெளியானது. சௌர்யா சக்கரம் சௌர்யா சக்கரம் (Shaurya Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் மூன்றாவது நிலையில் கீர்த்தி சக்கரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள உயரிய விருதாகும். சேனா பதக்கங்களுக்கு மேல்நிலை விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது "அமைதிக் காலத்தில்" வழங்கப்படும் வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் "அசோகச் சக்கரம், வகுப்பு III" என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு சௌர்ய சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது. இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது. சூலை, 1999 முதல் காவல்துறை, தீயணைப்புதுறையினரைத் தவிர பிற அனைத்து வாழ்க்கைத்துறை குடிமக்களுக்கும், ஆண்பெண் பாகுபாடின்றி வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துலகக் கூட்டுறவு ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2012 ஆம் ஆண்டைக் கூட்டுறவுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. சமூக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கைச் எடுத்துக் காட்டியும், குறிப்பாக வறுமையைக் குறைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றில் கூட்டுறவின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டும் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு என்பது ஆட்கள், கூட்டாக உரிமை கொள்வதும் சனநாயக முறைப்படி கட்டுப்படுத்தப்படுவதுமான ஒரு தொழில்முயற்சியின் மூலம் தமது பொதுவான பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இதன்படி கூட்டுறவு அமைப்புக்களின் உறுப்பினராக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அதன் கூட்டு உரிமையாளர்களுள் ஒருவராக இருப்பதுடன் அதைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து பயன்பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். பல்வேறு கூட்டுறவு அமைப்புக்கள் தம்மிடையே ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்வதன்மூலம் அவை தம்மைப் பொருளாதார அடிப்படையில் வலுப்படுத்திக் கொள்கின்றன. இவை நடைமுறைக்கு ஒத்த கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றன. உலகில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு பில்லியன் வரையான மக்கள் பன்னாட்டுக் கூட்டுறவுக் கூட்டமைப்பு ஊடாகக் கூட்டுறவு இயக்கத்தில் இணைந்துள்ளனர். பல நாடுகளில் அவற்றின் மக்கள்தொகையின் குறிப்பிடத்தக்க வீதத்தினர் கூட்டுறவு அமைப்புக்களில் உறுப்பினராக உள்ளனர். சில நாடுகளில் இது 50 வீதம் வரை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பல நாடுகளில் கூட்டுறவுத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது. நோர்வே, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் பால் உற்பத்தியின் 80 - 90 வீதம் கூட்டுறவுத்துறை ஊடாகவே நடைபெறுகிறது. அத்துடன், கூட்டுறவுத்துறை உலகம் முழுவதிலும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை ஆற்றும் முக்கியமான பங்கை ஐக்கிய நாடுகள் அவை பெரிதும் மதிக்கிறது. 1995 ஆம் ஆண்டில் கோப்பன்கேகனில் நடைபெற்ற சமூக வளர்ச்சிக்கான உலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வளர்ச்சிக்கான மக்களை மையப்படுத்திய அணுகுமுறையில் கூட்டுறவின் முக்கியத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக ஒருமைப்பாடு ஆகியவை உட்பட்ட சமூக வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காகக் கூட்டுறவுத் துறையைப் பயன்படுத்துவதற்கும் அதன் ஆற்றலை முழுமையாக வளர்ப்பதற்கும் மாநாட்டில் ஒத்துக்கொண்டது. அனைத்துலக நீர்க் கூட்டுறவு ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2013 ஆம் ஆண்டை நீர்க் கூட்டுறவுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. நீர் சூழியல் ஒருமைப்பாடு, வறுமை, பசி ஆகியவற்றின் ஒழிப்பு என்பவற்றை உள்ளடக்கிய பேண்தகு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும், மனித நலத்துக்கும், நல்வாழ்வுக்கும் அடிப்படையானது என்றும், ஆயிரவாண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு அவசியமானது என்றும் இதற்கான தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர்க் கூட்டுறவு தொடர்பான முன்முயற்சி தாசிக்கிசுத்தான் குடியரசின் சனாதிபதி திரு. எமோமலி ரகுமோனால் எடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் இசுத்தான்புல்லில் இடம்பெற்ற ஐந்தாவது உலக நீர் மன்றத்தில் இதனை அறிவித்தார். இதன் முதல் வரைவு, பொதுச் சபையின் நீர் தொடர்பான முன்னைய தீர்மானங்களின் அடிப்படையிலும், "வாழ்க்கைக்கு நீர்" என்னும் பத்தாண்டுச் செயல்திட்டம் (2005 - 2015) நிறைவேற்றப்படுவது தொடர்பிலான இடைக்கால ஆய்வுக்காக இடம்பெற்ற உயர்மட்ட அனைத்துலக மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் விரிவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தாசிக்கிசுத்தானுடன், ஆப்கானிசுத்தான், ஆர்மீனியா, ஆசுத்திரேலியா, பகரேன், பொலீவியா, சிலி, கொசுத்தாரிக்கா, கபொன், ஒன்டூராசு, ஈராக், கசாக்கிசுத்தான், மடகாசுக்கர், மங்கோலியா, நேபாளம், பாகிசுத்தான், ரசியா, தாய்லாந்து, உக்ரேன் ஆகிய நாடுகள் கூட்டாக முன்மொழிந்திருந்தன. பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் ("பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்") என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது. கட்டி (உயிரியல்) கட்டி ("tumor") என்பது இழையங்களில் ஏற்படக்கூடிய அசாதாரணமான, அளவுக்கதிகமான வளர்ச்சியால் ஏற்படும் புத்திழையம் (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். இந்த வளர்ச்சியானது அருகில் சூழவுள்ள இழையங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுடன், அதற்குரிய தூண்டல் நீக்கப்பட்டாலும்கூட, தொடர்ந்த அசாதாரண வளர்ச்சியையே காட்டும். இந்த அசாதாரண வளர்ச்சியானது, (எப்பொழும் இல்லையெனினும்) பொதுவாக திணிவு கூடி வீக்கமடைந்து காணப்படும் நிலையில் இது கட்டி எனப்படும். கட்டிகளை நான்கு வகைப்படுத்தலாம். கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும். கட்டிகள் எல்லாமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள, அதாவது புற்று நோயாக மாறக்கூடிய கட்டிகளும் () உண்டு. இவை தவிர, சரியாக அறிய முடியாத, குறிப்பிடும்படியாக இல்லாத கட்டிகளும் உண்டு. இவற்றில் புற்ரு நோய்க் கட்டிகள் பற்றிய படிப்பே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றிய கற்கை நெறி புற்றுநோயியல் எனப்படும். பொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான இழைய மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் மரபணு திடீர்மாற்றம் ஆகும். குருதிப் புற்றுநோய் போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். உயிரகச்செதுக்கு மூலமோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை நோயியலாளர்கள் பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள். உலக நீரிழிவு நாள் உலக நீரிழிவு நாள் ("World Diabetes Day") உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. பசி ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி ("hungry") என்ற உணர்வு ஏற்படுகிறது. பல நேரம் பசி எடுக்காத நிலை பசியின்மை ஆகும். ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் ("Hormone") நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறி வைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி விரும்பத்தகாத பசி உணர்வு ஏற்படுகிறது. ஆரோக்கியமான ஒருவர் சில வாரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியும். சாப்பிடாமல் விட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகே மிகவும் விரும்பத்தகாத ஒரு விதப் பசி உணர்வு ஏற்படுகிறது. பசி உணர்வு உணவு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே மட்டுப்படுத்தப்படுகிறது. "பசி" எனும் சொல்லானது பொதுவாகச் சமூகத்தில் தேவையான உணவில்லாதவரின் நிலையையும் அடிக்கடி அந்நிலைமையை உணர்பவரைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் பசி குறித்த உணர்வு ஏற்படுவது மறைமுகமாகப் பசி வேட்கை ("Hunger pang") என்பதைக் குறிக்கும். கடைசியாக எடுத்துக் கொண்ட உணவு செரித்த 12 முதல் 24 மணி நேரத்திற்குள் பசி வேட்கை ஏற்படுவதில்லை. ஒரு தனித்தப் பசிக் குறுக்கம் ஆனது 30 நொடிகள் வரையும், பசி வேட்கையானது 30 - 45 நிமிடங்கள் வரையும் நீடிக்கலாம். 30 - 150 நிமிடங்களுக்குள் பசி வேட்கை அடங்கும். ஒவ்வொருவருக்கும் இந்த நேரமானது மாறத்தக்கது.உணர்ச்சிகள் பலவும் பசியைக் குறைக்க வல்லவை. பசியின் அளவு ஆனது இரத்தத்தில் குறைவாக உள்ள சர்க்கரையால் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை நோயினால் அதிகரிக்கும். அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களில் அதிகபட்ச பசி அளவையும் சில நாட்களில் மிகக் குறைவான பசி உணர்வையும் எட்டுவர். இருந்தபோதும் பசி என்பது எந்த ஒரு தனி மனிதருக்கும் அறவே இல்லாமல் இருக்காது. பசியில்லா நிலை ஆனது இளைய வயதினர்க்கே அதிகம் ஏற்படுகிறது. மேலும் அதிக அளவிலான குடல் நோய்கள் உள்ளவர்களுக்கும் இது ஏற்படும். பசியிலா நிலைகளுக்கு இடைப்பட்ட கால அளவானது வயது முதிர்விர்கேற்ப அதிகரிக்கும். லெப்டின், க்ரேலின் போன்ற இயக்குநீர்களின் சுரப்பு உயிரினத்தை உணவு உட்கொள்ளுமாறு செய்கிறது. ஓர் உயிரி உணவு உட்கொள்ளும்போது அடிபோசைட்டுகள் லெப்டினை உடலில் சுரக்கச் செய்கின்றன. லெப்டின் அதிக அளவு சுரந்தால் பசியைக் குறைத்து விடும். உணவு உண்ணாமல் இருந்த சில நேரங்களுக்குப் பிறகு லெப்டினின் அளவு குறைகிறது. லெப்டினின் குறைவான அளவு இரண்டாம் நிலை ஆர்மோனான க்ரெலினைச் சுரக்கச் செய்கிறது. இது பசியைத் தூண்டுகிறது. க்ரெலினின் அதிகபட்ச உற்பத்தியானது உணவைப் பார்த்தவுடனேயே சாப்பிடும் விருப்பத்தைத் தூண்டுகிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் உளைச்சலும் இந்த இயக்குநீரின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன்மூலம் மனஉளைச்சலின் போதும் ஏன் பசி ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது. பசி பல விலங்குகளில் சுறுசுறுப்புத் தன்மையையும் இயக்கத்தையும் அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக சிலந்திகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின் படி பசியில் இருந்த சிலந்திகள் இரைபிடித்துண்டபின் அதிக எடையைப் பெற்றன என்று அறியப்பட்டது. இம்முறை பல விலங்குகளில் காணப்படுகிறது. மனிதரிலும் இம்முறை தூங்கும்பொழுது காணப்படுகிறது. . இது பெரு மூளைப் புறணிக்கோ வயிற்றுக்கோ தொடர்பிலாத ஒன்றாகும். பசியின் பொழுது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே உண்ணுவது பசி நாட்டம் ("Food craving") ஆகும். இதேபோல தாகம் என்பது நீர்ம நாட்டம் ஆகும். நாட்ட நிறுத்தம் மருந்துப் பொருள்களுக்கு அடிமையாதலை ஏற்படுத்தும். ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவர் ஆற்றலின் பின் (225) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. (944) காவாலக்குடி காவாலக்குடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுக்காவில் உள்ள ஊர் சுமார் 2000 மக்கள் தொகை கொன்டது. தனி ஊராட்சியாக உள்ளது சுமார் 40 சதவிகித மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். முதன்மை தொழிலாக விவசாயம் செய்ய படுகிறது. வெள்ளாறு எனும் ஆறு இவ்வூரின் வழியாக செல்கிறது இதனால் நீர் வளம் செழிப்பாக உள்ளது. கோ (திரைப்படம்) கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். இந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார். படத்தின் காட்சிகள் சென்னை, சீனா, நோர்வேயில் படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. பேர்கன் நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில் துரொல்துங்கா, ஸ்தோல்ஹெய்ம், பிரெய்க்கஸ்தூலன் என்ற இடங்களிலும் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன. வந்தான் வென்றான் (திரைப்படம்) வந்தான் வென்றான் ஆர்.கண்ணன் இயக்கத்தில் 2011 செப்டம்பர் மாதம் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, தாப்சீ பன்னு, நந்தா துரைராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொய்கையார் பொய்கையார் சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகியவை. இவர் வறுமையில் வாடும் புலவர்களைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுபடுத்துகிறார். பொருந்தில் இளங்கீரனார் பொருந்தில் இளங்கீரனார் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 19, 351, புறநானூறு 53 ஆகியவை. பொருந்தில் என்பது ஊரின் பெயர். சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாடலில் புலவர் கபிலர் இறந்துபோன செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். கபிலன் இன்று இருந்தால் நன்று (வெற்றியைப் பாடுவான்) என்று அந்தச் சேரன் ஏங்கினானாம். கபிலன் பாடல் செறுத்த செய்யுளாம். வெறுப்பன பேசினாலும் கபிலன் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் இயல்பினராம். இவர் புகழின் விளக்காம். விளங்கில் வெற்றியை இப்போது நான் பாடுகிறேன் என்கிறார் இந்தப் புலவர் இளங்கீரனார். குருதிப் புரதங்கள் குருதிப் புரதங்கள் அல்லது பாய்மப் புரதங்கள் எனப்படுபவை, குருதி நீர்மத்தில் காணப்படும் புரதங்கள் ஆகும். பாய்ம மொத்தப் புரதத்தின் அளவு கிட்டத்தட்ட 7g/dl ஆக இருக்கும். இப்புரதங்கள் பல்வேறு தொழில்களைச் செய்பவையாக இருக்கும். மின்புலத் தூள்நகர்ச்சி மூலம் பிரித்தெடுக்கப்படும் இந்த குருதிப் புரத அளவீடுகள் நோய்களைக் கண்டறியவும், மேலதிக தொடர்ந்த செய்ற்பாடுகளில் மாற்றங்களைக் கண்டறியவும் உதவும். பொதுவாக காணப்படும் அடிக்கடி பேசப்படும் புரதங்களாவன: ராஜாமணி மயில்வாகனம் ராஜாமணி மயில்வாகனம் (பி. 1943) மலேசியாவில் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை. ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். ஆசியான், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். பல ஆசிய, தேசியச் சாதனைகளைப் படைத்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை விருதைப் பெற்ற முதல் பெண்மணி. மின்னல் தாக்கி இவருடைய நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டதால் 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. ராஜாமணி வறுமையான குடுமபத்தில் பிறந்து வாழ்ந்தவர். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி ஓர் உயர் நிலைக்கு வந்தவர். இவர் புகழ் பெற்ற மலேசியப் பெண்களின் பட்டியலில் முதல் பத்து பெண்களில் ஒருவராக உள்ளார். ராஜாமணி தன்னுடைய தொடக்கக் கல்வியை தாப்பா ஆங்கிலப் பள்ளியில் பெற்றார். அவர் நான்காம் வகுப்பில் படிக்கும் போது பள்ளிகளுக்கு இடையிலான 4X400 ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது ஒன்பது. ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கும் சில பள்ளிகளும் அப்போட்டியில் கலந்து கொண்டன. அந்தப் பந்தயத்தில் ராஜாமணி கடைசி ஓட்டக்காரர். அவர் அபார வேகத்துடன் ஓடி, தன் பள்ளியை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். அது பள்ளி ஆசிரியர்களை மட்டும் அல்ல, எல்லாரையும் ஆச்சரியப் பட வைத்தது. ஏன் என்றால் மற்ற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பலர் மாவட்ட, தேசிய ரீதியில் புகழ்பெற்றச் சிறந்த ஓட்டக்காரர்கள். பல சாதனைகளைச் செய்தவர்கள். ஒன்பது வயது மாணவி மற்றவர்களைத் தோற்கடித்தது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அந்தச் சாதனைக்கு மூல காரணம் ராஜாமணிக்குப் பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியர் கந்தவனம் என்பவரே. விளையாட்டுத் துறையில் கட்டொழுங்கும் கண்ணியமும் மிக மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தி வந்தார். அந்த நிகழ்ச்சி ராஜாமணியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று என ராஜாமணி சொல்கிறார். அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டிலிருந்து 1966 ஆம் ஆண்டு வரை பேராக் மாநிலத்தின் சிறந்த ஓட்டக்காரராக ராஜாமணி புகழ் பெற்று விளங்கினார். அதன் பின்னர் ராஜாமணி மாவட்ட, மாநில, தேசிய ஓட்டப் பந்தயங்களில் கலந்து பல வெற்றி வாகைகளைச் சூடினார். ஐந்தாம் படிவம் படிக்கும் போது ஓட்டப் பந்தயத் துறைக்குத் தற்காலிகமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைத்தார். அந்த ஆண்டு ராஜாமணிக்கு உயர்நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு. தேர்வு முடிந்த பிறகு ஓட்டப் பந்தயத்திற்கு வராமல் தூங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். இதனால் அவருடைய தந்தையார் அவரை ஆர். சுப்பையா எனும் ஓர் ஓட்டப் பந்தயப் பயிற்சியாளரிடம் கொண்டு சென்றார். மாலை 4.40 லிருந்து இரவு 7.30 வரை ஓட்டப் பயிற்சிகள். ராஜாமணியின் வீட்டிற்கும் பயிற்சி நடைபெறும் திடலுக்கும் சற்றுத் தூரம். அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் சைக்கிள்களை இரவல் கேட்பார். ஏன் என்றால் ராஜாமணியின் வீட்டில் அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர முடியாத நிலைமை. ராஜாமணியின் குடும்பம் அப்போது வறுமையில் வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் யாருடைய சைக்கிளையாவது இரவல் வாங்கித் தான் பயிற்சி செய்யும் திடலுக்குச் செல்வார். ராஜாமணிக்கு வீட்டை அலங்கரிப்பதில் மிகவும் விருப்பம். தான் ஓடி வெற்றிப் பெற்ற சின்னங்ளுடன் விநாயகர் சிலைகளையும் நிறைய சேகரித்தார். அவற்றைத் தன்னுடைய பூசை அறையில் வரிசை வரிசையாக அடுக்கி வைத்தார். விதம் விதமான குத்து விளக்குகளைச் சேகரிப்பதிலும் அவருக்கு ஆசை. ஒரு நாள் ராஜாமணியின் தந்தையார் ஒரு செருப்பு தைப்பவரிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குப் புதிதாக ஒரு புதிய செருப்பு தைத்துக் கொடுக்கப்பட்டது. அதுதான் அவருடைய முதல் ஓட்டப் பந்தயச் செருப்பு. ராஜாமணியைக் கடைக்குக் கொண்டு போய் ஒரு தரமான, விலை உயர்ந்த சாப்பாத்தை வாங்கிக் கொடுக்க அவருடைய தந்தையாருக்குப் பண வசதி இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் மலிவான விலையில் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அந்தச் சப்பாத்துகளின் அடிப் பாகத்தில் சாதாரண ஆணிகள் வைத்து அடிக்கப்பட்டன. ஆணிகள் தேய்ந்ததும் அல்லது ஆடத் தொடங்கியதும் அந்தச் சப்பாத்துகளுக்கு மறுபடியும் புதிய ஆணிகள் அடிக்கப் பட்டன. இப்படித் தான் ராஜாமணியின் திடல் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் ராஜாமணியின் குடும்பம் வசதியான வாழ்க்கையில் வாழவில்லை. சாப்பாட்டு மேசையில் என்ன இருந்ததோ அதை மட்டுமே குடும்பத்தினர் சாப்பிட்டு வந்ததாக ராஜாமணியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். தங்களின் ஏழ்மையான வாழ்க்கையை ராஜாமணி ஒரு போதும் மறக்கவில்லை; மறைக்கவும் இல்லை. பத்திரிகைப் பேட்டிகளில் அவருடைய குடும்ப ஏழ்மை நிலைமையை இன்றும் நினைவு படுத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளத்தில் இருக்கும் காட்மாண்டு சென்றார். அங்கிருந்து கைலாசத்திற்குப் போகும் போது பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டி கண்டார்கள். அந்தப் பேட்டியில் தன் குடும்ப ஏழ்மையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஒரு முறை ஓட்டப் பந்தயத்திற்குப் பொருத்தமான சட்டை சிலுவார் வாங்க வேண்டும் என்று விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா சொன்னார். அதன் விலை 20 ரிங்கிட். அதைக் கூட ராஜாமணியின் தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு குடும்பத்தில் பணச் சிரமம். அரசாங்கமும் உதவி செய்யவில்லை. அறநிறுவனங்களும் ஆதரவு தரவில்லை. அதை எல்லாம் தாண்டி ராஜாமணி ஓடி சாதனைகள் செய்தார். அதனால், உடலைத் துவட்டப் பயன்படும் துண்டுகளை விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா வாங்கி வந்தார். அந்தத் துண்டுகளை ஒன்றாகப் பிணைத்து ஓட்டப் பந்தய உடைகள் தைக்கலாம் என்று அந்தத் துண்டுகள் ஒரு தையல்காரரிடம் கொடுக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்ட ஒரு கடைக்காரர் மனம் இளகி இலவசமாக ஒரு ஜோடி ஓட்டப் பந்தய சட்டை சிலவார்களை ராஜாமணிக்கு வழங்கினார். அதன் பின்னர், ராஜாமணிக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்கள் கடும் பயிற்சிக்குப் பின்னர் ராஜாமணி ஒலிம்பிக் குழுவில் சேர்வதற்கு தகுதி பெற்றார். அதுவரை அரசாங்கம் ராஜாமணிக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. 1964 ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ராஜாமணி தகுதி பெற்றச் செய்தி நாடு முழுமையும் பரவியது. மலாயா வாழ் இந்தியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதன் முறையாக ஒரு தமிழ்ப் பெண் ஒலிம்பிக்கிற்கு போகிறார் என்பது அப்போதைய காலத்தில் பெரிய விஷயம். அதன் பிறகு தான் ராஜாமணியின் பெயர் அனைவருக்கும் தெரியவந்தது. அதுவரை ராஜாமணி வெளிநாடுகளுக்குச் சென்றது இல்லை. அதே காலக் கட்டத்தில் மணி ஜெகதீசன் என்பவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார். மலேசிய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் இது வரை தேர்வு செய்யப்பட்ட ஒரே மலேசியர் மணி ஜெகதீசன் மட்டுமே. மலேசியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுமைக்கும் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப் பட்ட ஒரே தமிழர். தோக்கியோ சென்ற போது உலகம் முழுவதும் இருந்து வந்த பல போட்டியாளார்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ராஜாமணிக்கு கிடைத்தது. தோக்கியோவில் அவருக்கு 64 ரிங்கிட் சேவை அன்பளிப்பு மட்டுமே வழங்கப் பட்டது. தோக்கியோவில் இருந்த போது இந்திய அணியினருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராஜாமணிக்கு கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் இருந்து சொந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இருந்தனர். ராஜாமணிக்கும் இந்திய அணியினர் இந்திய உணவுகளை கொடுத்து உதவினர். அங்கே வந்து இருந்த அனைவரும் தங்கள் நாடுகளை பிரதிநிதிப்பதில் பெருமை அடைந்தனர். ராஜாமணியும் மலேசியாவைப் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ராஜாமணி வெற்றி பெறவில்லை. இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு ஒலிம்பிக் அனுபவங்கள் நிறைய கிடைத்தன. 1965 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டியில் ராஜாமணி நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். சியாப் விளையாட்டுப் போட்டி என்றால் South East Asia Peninsula என்று ஆங்கிலத்தில் பொருள்படும். இந்தப் போட்டி மலேசியத் தலைநகர் கோ[லாலம்பூரில் நடை பெற்றது. இதில் 33 தங்கங்களைப் பெற்று மலேசியா இரண்டாவது நிலையில் வந்தது. ‘ஒவ்வொரு முறையும் நான் மேடையில் ஏறி பதக்கங்களைப் பெறும் போது மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சந்தோஷக் குரல் எழுப்பினர். நாட்டிற்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது. நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது’ என்று ராஜாமணி கண்கலங்கிச் சொல்கிறார். ‘நான் திடலில் ஓடும் போது என் தந்தை பார்வையாளர்கள் மேடையில் இருந்து பார்ப்பார். நம் நாட்டின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களும் வந்து கவனிப்பார். அது எனக்கு பெருமையாக இருக்கும்’ என்று மகிழ்ச்சியுடன் ராஜாமணி சொல்கிறார். ஓட்டப் பந்தயப் பயிற்சிகள் நடைபெறும் போது ராஜாமணிக்கு சிறப்பு உணவுகள் வழங்கப் படவில்லை. ஆசிரியர்களுக்கு என்ன உணவு வழங்கப் பட்டதோ அதே உணவு தான் ராஜாமணி போன்ற விளையாட்டாளர்களுக்கும் வழங்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தன் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று ராஜாமணி சோகமாகச் சொல்கிறார். கோலாலம்பூரில் உள்ள கர்னி சாலையில் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது கனத்த மழை பெய்து கொண்டு இருந்தது. ராஜாமணியுடன் செரில் டோரல், இஸ்தியாக் முபராக், பி.என்.கோவிந்தன் போன்ற விளையாட்டாளர்களும் இருந்தனர். திடீரென்று மின்னல் தாக்கியதால் செரில் டோரல் கீழே விழுந்தார்; ராஜாமணி மயக்கம் அடைந்து சுயநினைவு இல்லாமல் போனார். கோவிந்தன் அதே இடத்தில் காலமானார். இஸ்தியாக் முபராக்கும் மற்றவர்களும் ராஜாமணியைத் தூக்கிக் கொண்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு விரைந்தாரகள். ராஜாமணிக்குத் தற்காலிகமாக நினைவு இல்லாமல் போனது. என்னதான் நடந்தது என்றும் அவருக்குத் தெரியவில்லை. 18 மணி நேரம் அவர் சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி இருக்கிறார். செய்திதாள்களைப் படித்த பின்னர் தான் மின்னல் தாக்கியது ராஜாமணிக்குத் தெரிய வந்தது. கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இரண்டு படுக்கைகளுக்கு நடுவில் ஒரு தற்காலிகப் படுக்கை போடப் பட்டு அதில் ராஜாமணி கிடத்தி வைக்கப் பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு அந்த நிலையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவருக்கு சாதாரணமான சிகிச்சையே அளிக்கப் பட்டது. ஒரு நாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கும் ஒரு வீராங்கனைக்கு எத்தனை மோசமான மருத்துவ வசதிகள் என்று நாளிதழ்கள் கருத்துகள் தெரிவித்தன. ராஜாமணியை மிகவும் பாதித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் ராஜாமணியை நேரில் பார்க்க வருகிறார் எனும் செய்தி மருத்துவமனை வட்டாரத்தில் பரவியது. உடனே ராஜாமணி முதலாம் வகுப்பிற்கு மாற்றப் பட்டார். இருப்பினும் பிரதமர் துங்கு வரவில்லை. ஆர்கிட் பூக்கூடையை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார். அந்த அன்பளிப்பு ராஜாமணிக்கு ஓர் ஊட்டச்சத்து வைத்தியமாக அமைந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு ராஜாமணி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவச் செலவுகளை விளையாட்டு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள். மூன்று மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் கட்டணத்தைக் கட்டவில்லை. மருத்துவமனை நினைவுக் கடிதங்களை அனுப்பியும் தக்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ராஜாமணியைத் திருமணம் செய்யவிருந்த ராஜலிங்கத்தைக் கட்டுமாறு மருத்துவமனை கேட்டுக் கொண்டது. பின்னர் ராஜலிங்கம் தான் அந்த மருத்துவத் தொகையைக் கட்டினார். அந்த மின்னல் தாக்குதல் நிகழ்ச்சி ராஜாமணியின் விளையாட்டு வாழ்க்கையினை அவரது 25வது வயதில் முடிவிற்கு கொண்டு வந்தது. ‘அந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் அலைக் கழித்தது. நான் செத்துப் போய் இருப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டேன். அதன் பின்னர் எனக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் இல்லாமல் போனது. ஒரு முற்றுப் புள்ளி வைப்பது என்று முடிவு செய்தேன்’ என்று இதுபற்றி ராஜாமணி சொல்லியுள்ளார் 1972 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26 ஆம் திகதி ராஜாமணி, தான் ஏழரை ஆண்டுகள் காதலித்த ராஜலிங்கம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராஜலிங்கம் ஒரு போலீஸ் அதிகாரி. மலாக்கா ஜாசினில் அதிகாரியாக இருந்தவர். 1964 ஆம் ஆண்டு இருவரும் ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் நட்பு வளர்ந்தது. அதுவே காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. ராஜாமணி தற்சமயம் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தேசிய விளையாட்டு மன்றம் போன்றவற்றில் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 1992, 1994 ஆம் ஆண்டுகளில் தாமஸ் கிண்ணப் போட்டியாளர்களுக்குப் பயிற்சியாளராகவும் இருந்தவர். ‘ஒரு நாட்டைப் பிரதிநிதிப்பது என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் ஆயுள்கால வாய்ப்பு. அதை நான் முறையாகப் பயன் படுத்திக் கொண்டேன். என்னுடைய மலேசிய நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் தேடிக் கொடுத்தேன். இரண்டு பிரதமர்களிடம் தங்கக் கேடயங்களை வாங்கினேன். மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்களிடம் இருந்து டத்தோ விருதை வாங்கினேன்.’ ’நாளிதழிகளில் நான் டத்தோ பட்டம் வாங்கும் படங்களைப் பார்த்து என் பேரப் பிள்ளைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அது எனக்குப் போதும். நான் எங்கே சென்றாலும் மலேசிய மக்கள் என்னை அன்புடன் கவனிக்கின்றனர். சில உணவகங்களில் நான் சாப்பிட்டதற்குக் கட்டணம் கூட வாங்குவது இல்லை.’ என்று கண்ணீர் மலகப் பேசினார். ’தாப்பா நகரக் காய்கறிச் சந்தையில் நான் வாங்கும் காய்கறிகளுக்குப் பல சமயங்களில் வியாபாரிகள் காசு வாங்க மறுக்கின்றனர். ஒரு கத்தரிக்காயை எடுத்தால் மூன்று காய்களைப் போட்டு 'எடுத்துப் போ’ என்கின்றார்கள். எனக்கே மனசு சங்கடமாக இருக்கும். ராஜாமணியாகிய நான சாதித்தது மலேசிய மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றது’ என்று ராஜாமணி பெருமையாகச் சொல்லியுள்ளார். டோனி கிரெய்க் டோனி கிரேக் ("Tony Greig", அக்டோபர் 6 1946 - டிசம்பர் 29, 2012), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 350 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 190 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1972 - 1977 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற கிரெய்க் வானொலி, தொலைக்காட்சி விவரணையாளராகப் பணியாற்றினார். நீண்ட காலமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரெய்க், 2012 அக்டோபரில் அவரது நுரையீரலில் புற்றுநோய் உள்ளது கண்டறியப்பட்டது. 2012 டிசம்பர் 29 இல் கிரெய்க் இருதய நிறுத்தம் காரணமாகக் காலமானார். இயன் கிரெய்க் இயன் கிரெய்க் ("Ian Greig", பிறப்பு: டிசம்பர் 8, 1955) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 253 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். அன்றூ கிரீன்வூட் அன்றூ கிரீன்வூட் ("Andrew Greenwood", பிறப்பு: ஆகத்து 20, 1847, இறப்பு: பிப்ரவரி 12, 1889) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 141 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டாமி கிரீன்ஹோ டாமி கிரீன்ஹோ ("Tommy Greenhough ", பிறப்பு: நவம்பர் 9, 1931, இறப்பு: செப்டம்பர் 15, 2009) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 255 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1959 - 1960 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பேசில் கிரீவ் பேசில் கிரீவ் ("Basil Grieve ", பிறப்பு: மே 28, 1864, இறப்பு: நவம்பர் 19, 1917) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888/89 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பில்லி கிரிப்பிஃத் பில்லி கிரிப்பிஃத் ("Billy Griffith", பிறப்பு: சூன் 16, 1914, இறப்பு: ஏப்ரல் 7, 1993) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 215 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948/49 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வில்லியம் கன் வில்லியம் கன் ("William Gunn )", பிறப்பு: டிசம்பர் 4, 1858, இறப்பு: சனவரி 29, 1921) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 521 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆக்சே நடவடிக்கை ஆக்சே நடவடிக்கை ("Operation Achse") அல்லது அலாரிக் நடவடிக்கை ("Operation Alaric") என்பது என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் நடைபெற்ற ஒரு படைத்துறை நடவடிக்கை. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் படைகள் தங்களது முன்னாள் கூட்டாளிகளான இத்தாலியப் படைகளிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து அவர்களை நிராயுதபாணிகளாக்கின. பாசிச சர்வாதிகாரி முசோலினி தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகள் இடம் பெற்றிருந்தது. நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்த போது அந்நாட்டு ஆட்சியாளர்கள் முசோலினியைப் பதவி நீக்கம் செய்தனர். பின்பு நேச நாட்டுப் படைகளிடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகினர். செம்படம்பர் 8, 1943ல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இத்தாலி அணி மாறிவிடும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்த ஜெர்மானியர்கள் உடனடியாக இத்தாலியினை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இறங்கினர். இத்தாலியின் ஆக்கிரமிப்பில் இருந்த தெற்கு பிரான்சு, பால்கன் பகுதிகளில் ஜெர்மானியப் படைகள் நுழைந்து அங்கிருந்த இத்தாலிய வீரர்களைக் கைது செய்தன. இத்தாலிக்குள்ளும் பல கூடுதல் ஜெர்மானிய டிவிசன்கள் நுழைந்தன. இத்தாலியப் படைகள் நேச நாடுகளுக்குத் துணையாக போரிடாமல் செய்யும் வண்ணம் அவற்றின் ஆயுதங்களை ஜெர்மானியர்கள் பறிமுதல் செய்தனர். சுமார் பத்து லட்சம் இத்தாலிய வீரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இத்தாலிய வீரர்களுள் சுமார் இரண்டு லட்சம் பேர், ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் ஈடுபட முன்வந்தனர். இவர்களும் பாசிசத்தை பின்பற்றுபவர்களும் முசோலினியின் நாடுகடந்த இத்தாலிய சமூக அரசின் ஆதரவாளர்களும் அடக்கம். எஞ்சியோர் ஜெர்மனியின் வேலை முகாம்களில் அடைக்கப்பட்டனர். 1945ல் ஜெர்மனி சரணடையும் வரை இத்தாலியில் அச்சுப் படைகளுக்கும் நேசப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்றது. கொல்கொதா கொல்கொதா ("Golgotha") என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி ("Calvary") அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், "கல்வாரி" என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன. புதிய ஏற்பாடு கொல்கொதா (கல்வாரி = மண்டை ஓட்டு இடம்) என்பதை ஒரு மலை என்றோ, குன்று என்றோ குறிப்பிடவில்லை. மாறாக "இடம்" என்று பொதுவாகவே குறிப்பிடுகிறது. ஆயினும் கி.மு. 333இலிருந்து அவ்விடம் ஒரு "குன்று" என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு "மலை" என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து "கல்வாரி" என்னும் பெயர் தோன்றியது. பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அப்பெயரும் ஏற்கப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு கொல்கொதாவில் சிலுவையில் அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர். கொல்கொதா என்னும் சொல்லின் மூலம் பற்றியும் அதன் பொருள் பற்றியும் பல கருத்துகள் உள்ளன. அவை: கொல்கொதா எங்கே உள்ளது என்பது பற்றியும் பல கருத்துகள் உண்டு. மிகப் பாரம்பரியக் கருத்து கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது. அந்த ஆண்டில் புனித ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார். ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது. ஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார். அது "திருக்கல்லறைக் கோவில்" (Church of the Holy Sepulchre) என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 333இல் அந்த இடத்தைச் சந்திக்கச் சென்ற "போர்தோ நகர் திருப்பயணி" என்பவர் கீழ்வருமாறு குறிப்பிட்டார்: இயேசு சிலுவையில் அறையுண்ட இடமாகிய கொல்கொதா கிறித்தவர்களுக்குப் புனித இடமாக மாறிற்று. கி.பி. 117-138 ஆண்டுகளில் உரோமைப் பேரரசனாக இருந்த ஹேட்ரியன் எருசலேமில் கிறித்தவ புனித இடங்களை அழித்துவிட்டு, உரோமை தெய்வங்களின் கோவில்களை அங்கு எழுப்பினார். காண்ஸ்டண்டைன் மன்னன் (ஆட்சிக்காலம்: கி.பி. 301-337) கிறித்தவர்கள் தம் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப வழிபாடுகள் நடத்த முழு உரிமை அளித்தார். கி.பி. 325இல் நிசேயா பொதுச்சங்கத்தின்போது எருசலேம் ஆயர் மக்காரியுசு என்பவர் காண்ஸ்டண்டைன் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எருசலேமில் இயேசுவின் கல்லறைமேல் ஹேட்ரியன் மன்னன் கட்டியிருந்த பிற சமயக் கோவிலை அழித்துவிட்டு, அந்த இடத்தை மீண்டும் கிறித்தவ வணக்கத்திற்கு விடவேண்டும் என்பதே அக்கோரிக்கை. காண்ஸ்டண்டைன் பிற சமயக் கோவிலை அழித்தபின்னர் அவ்விடத்தில் மிகப் பெரிய அளவில், எழில் மிக்க ஒரு பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். அப்பேராலயத்தில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஒரு குவிமாடம் எழுப்பப்பட்டது; இயேசு இறந்த இடமாகிய கொல்கதாவும் பேராலயத்தின் உள் வருமாறு கட்டடம் வடிவமைக்கப்பட்டது. கி.பி. 614இல் பாரசீகப் படையெடுப்பின் விளைவாக, காண்ஸ்டண்டைன் கட்டிய திருக்கல்லறைப் பேராலயம் அழிவுற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சீரமைப்பு வேலைகள் நடந்தன. கி.பி. 638இல் அராபிய படையெடுப்பு நிகழ்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் திருக்கல்லறைப் பேராலயத்திற்குத் தீ வைத்ததால் அழிவு ஏற்பட்டது. மரக் கட்டு அமைப்புகள் எரிந்து அழிந்தன. 1009இல் அல்-ஹாக்கிம் என்னும் ஆளுநர் கோவிலை அழிக்குமாறு ஆணையிட்டார். அதன் பின் நிகழ்ந்த சீரமைப்பணியின்போது (1042-1048) காண்ஸ்டண்டைன் எழுப்பியிருந்த பேராலயத்தின் ஒருசில பகுதிகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டன. சிலுவைப் போர் வீரர்கள் எருசலேமை 1099இல் கைப்பற்றிய பிறகு கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இப்புதிய கோவில் 1149இல் நேர்ந்தளிக்கப்பட்டது. 1188இல் சலாதீன் படையெடுப்போடு கொல்கொதா உள்ளடங்கிய கோவில் மீண்டும் பாழானது. இயேசுவின் கல்லறையைச் சந்திக்க கிறித்தவர்கள் தனி வரி செலுத்தும் கட்டாயம் எழுந்தது. 1335இல் எருசலேம் திரு இடங்கள் புனித பிரான்சிஸ் சபைத் துறவியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1517இலிருந்து 1917 வரை திரு இடங்கள் துருக்கியரின் ஆட்சிக்கு உட்பட்டன. 1555இல் துருக்கிய ஆளுநரின் இசைவோடு கட்டட வேலை நிகழ்ந்தது. 1808இல் கோவிலின் ஒரு பகுதி தீக்கிரையாகியது. 1955இலும் 1997இலும் புதுப்பித்தல் பணிகள் தொடர்ந்தன. இயேசுவின் கல்லறைப் பகுதியில் வழிபாட்டு உரிமை கத்தோலிக்கர்கள், கிரேக்க மரபுவழிச் சபையினர் மற்றும் அர்மீனிய சபையினருக்கு உண்டு. இந்த மூன்று சபையினரும் இணைந்து புதுப்பித்தல் பணிகளைச் செய்தனர். இன்று இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேர்மேலாக எழுகின்ற குவிமாடத்தின் திறப்பிலிருந்து கதிரவனின் ஒளி பரந்து சிதறி அக்கல்லறையை ஒளிமயமாக்குகிறது. ஜார்ஜ் கன் ஜார்ஜ் கன் ("George Gunn",பிறப்பு: சூன் 13, 1879, இறப்பு: சூன் 29, 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 643 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1907 - 1930 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கடவுள் அஞ்சி கடவுள் அஞ்சி என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் கோட்டை கட்டியிருந்தான். இதனைத் தூங்கெயில் கதவம் என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் வண்டன் என்பவனுடையது. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். வண்டன் வண்டன் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன். இவனது செல்வத்தைப் பாதுகாக்கக் கடவுள் அஞ்சி என்னும் அரசன் இவனுக்குத் தூங்கெயில் கதவம் அமைந்த கோட்டை ஒன்றைக் கட்டித் தந்திருந்தான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - இந்தக் கோட்டை அகப்பா நகரில் இருந்தது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் அரசனின் சித்தப்பா பல்யானைச் செல்கெழு குட்டுவன். இந்தக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை வென்று முன்பே தனதாக்கிக் கொண்டிருந்தான். பின்னர் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் தூங்கெயிலை அழித்தான். ஜான் கன் ஜான் கன் ("John Gunn ", பிறப்பு: சூலை 19, 1876, இறப்பு: ஆகத்து 21, 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1901 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். தூங்கெயில் கதவம் தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு. எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். தூங்குதல் என்னும் சொல் சங்ககாலத்தில் தொங்குதலைக் குறிக்கும். எயிலின் கதவம் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. எயிற்கதவத்தைத் திறக்கும்படி, ஐயவி என்னும் கணையமரத் தாழ் இட்டு அமைப்பதுதான் வழக்கம். இந்தக் கோட்டையை அமைத்த அரசன் மடவுள் அஞ்சி இதன் கதவைத் தொங்கும்படி அமைத்திருந்தான். இக்காலத்தில் மேலே சுருண்டுகொள்ளும் கதவை அமைக்கிறோம். இந்தத் தூங்கெயிற்கதவம் வாயிலின் இருபுற எயில் பிடிப்பில் ஏறி இறங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கதவு மேலே ஏறி நிற்கும்போது எப்படித் தோன்றும் என்று எண்ணிப் பாருங்கள். வானத்தில் தொங்குவது போலத்தானே தோன்றும். எனவே வானத்து இழைத்த கதவு என்று அதனைக் குறிப்பிட்டனர். இதனைக் கட்டியவன் கடவுள் அஞ்சி என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் வண்டன் என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான். கி.மு. 1867-ல் ஈராக் நாட்டில் கட்டப்பட்டிருந்த தொங்கு தோட்டம் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. இந்தத் தோட்டத்தை அங்கு பாயும் யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் ஆறுகள் மூழ்கடித்தன. ஆஃப்தாப் ஹபீப் ஆஃப்தாப் ஹபீப் ("Aftab Habib", பிறப்பு: பிப்ரவரி 7 1972) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நைஜல் ஹைக் நைஜல் ஹைக் ("Nigel Haig", பிறப்பு: டிசம்பர் 12, 1887, இறப்பு: அக்டோபர் 27, 1966) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 5தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 513 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1930 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். அடிகளாசிரியர் அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி (ஏப்ரல் 17, 1910 ( - சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியை அடுத்து கூகையூர் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். ஏழாம் அகவையிலேயே தந்தையை இழந்தவர் தம் தாய்மாமனார்களான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணியதேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார். மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார். பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தார். தமது தமிழ்க்கல்வியை உ. வே. சாமிநாதையரிடம் கற்ற இவர், 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார். 1938ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க.வோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். தமிழைத் தவிர சமசுகிருதம், இலக்கணம், சோதிடம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். இவர் மொத்தம் 64 நூல்களை வெளியிட்டவர். கல்வெட்டு ஆய்வுகளிலும் ஆர்வமிக்கவராக விளங்கினார். அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வந்தார். இவர் எழுதிய 100 பாடல்களைக் கொண்ட சிறுவர் இலக்கியத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரது பங்காற்றலுக்காக தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ் பேரவை செம்மல் என்று பாராட்டியுள்ளது. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தொல்காப்பியர் விருதை 2011 மே 6 ஆம் நாள் மத்திய அரசு இவருக்கு செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் மூலம் அறிவித்தது. இசுக்கோஃபீல்ட் ஹை துராலுமின் துராலுமின் (Duralumin) அலுமினியம், செம்பு, மங்கனீசு, மக்னீசியம், சிலிக்கான், நாகம், என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இதன் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமானக் கலப்புலோகமான AA20204 நிறைப்படி 93.5%அலுமினியம், 4.4% செம்பு, 1.5% மங்கனீசு, 0.6% மக்னீசியம் என்பவற்றைக் கொண்டு காணப்படும். இது உறுதிமிக்கதாகவும், துருப்பிடிக்காததாகவும், பாரம் குறைந்ததாகவும் காணப்படும். வேதியியலுக்கான வேந்திய சங்கம் வேதியியலுக்கான வேந்திய சங்கம் ("Royal Society of Chemistry") என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு உயர்தொழில்சார் சங்கம் ஆகும். வேதியியல்சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம். வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச நிறுவனம், பரடே சங்கம், பகுப்பாய்வு வேதியியலுக்கான சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, 1980 ஆம் ஆண்டில் அரச பட்டயத்துடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இதற்கு 34,000 உறுப்பினர்களும், வெளிநாடுகளில் 8,000 உறுப்பினர்களும் இருந்தனர். இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள பிக்காடிலியில் பேர்லிங்டன் மாளிகையில் அமைந்துள்ளது. இதன் வெளியீட்டுப் பிரிவு கேம்பிரிட்சில் தாமசு கிரகாம் அவுசில் (Thomas Graham House) உள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே, ஐக்கிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக நகர் அறிவியல் மையத்தில் ஒரு அலுவலகமும், சீனாவில் பீஜிங்கிலும், சாங்காயிலுமாக இரண்டு அலுவலகங்களும், இந்தியாவில் மும்பாயில் ஒரு அலுவலகமும் உள்ளன. கியூரியஸ் ஜோர்ஜ் (திரைப்படம்) ஹிட்ச்.ஏ. மற்றும் மார்கரெட் ரே இணைந்து எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை தழுவி மரபு அசைப்படமாக எடுக்கப்பட்டதே 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கியூரியஸ் ஜோர்ஜ் திரைப்படம். டெட் எனும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் வில் ஃபெர்ரெல்.இப்படத்தை இயக்கியவர் மாத்யு ஒ'கால்லகான். மைக்கேல் மக்கல்லரஸ்,டேன் கெர்சன்,ராப் பேர்ட்,ஜோ ஸ்டில்மென் மற்றும் கேரே கிர்க்பாட்ரிக் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதினர். இமெஜின் என்டேர்டயின்மன்ட்இன் முதல் அசைப்படம் இதுவே. முதலாம் ஏரோது முதலாம் ஏரோது (Hebrew: הוֹרְדוֹס‎, Hordos, Greek: Ἡρῴδης, Hērōidēs) என்பவர் (பிறப்பு 73 அல்லது 74 கி.மு, இறப்பு எரிக்கோவில் 4 கி.மு, இன்னுமொரு வரலாற்றாசிரியர் கருத்துப்படி, 1 கி.மு ) உரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட யுதேயாவை ஆண்ட ஒரு சிற்றரசர் ஆவார். இவர் தனது குடும்பத்தாரையும், பல யூத ரபிக்களையும், குழந்தைகள் பலரை படுகொலை செய்ததாலும் "பைத்தியக்காரன்" என்றும் அழைக்கப்படுவதுண்டு.. மாபெரும் தூண்களைக்கொண்ட கட்டடங்களை அமைத்தமைக்கு இவர் பெயர்பெற்று விளங்குகின்றார். ஜெருசெலமிலும் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான மாபெரும் கட்டடங்களைக் கட்டியுள்ளார். இதில் இரண்டாம் ஆலயம் எனப் பெயர்பெறும் ஆலயத்தையும் செசேரியா மார்திமா (Caesarea Maritima) எனும் நகரில் ஒரு துறைமுகத்தையும் அமைத்தார். இவருடைய வாழ்க்கைத் துணுக்குகள் உரோம-யூத வரலாற்றாசிரியர் ஜோசீபஸ் பிளேவியஸ் என்பவர் மூலம் உலகிற்கு அறியக்கிடைத்தது. மின்காந்த அலைப்பரவல் மின்காந்த அலைகள் பரவும் விதம், அலைகளின் தன்மைகள் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை சார்ந்துள்ளது. புவியின் வளிமண்டலத்தில் எந்த ஒரு மாற்றாமும் நிகழாமல் இருக்கும்வரை ரேடியோ அலைகள், சாதாரணமாக நேர்க்கோட்டில் மட்டுமே பயணம் செய்யும். தகவல் தொடர்புக்கு ப்யன்படும் மின் காந்த நிறமாலையின் நெடுக்கங்களும் உள்ளன. அலைகளின் அதிர்வெண்களைப் பொருந்து பரப்பும் விண்ணலைக் கம்பிக்கு ரேடியோ அலைகளின் வகைகள்: தரை அலைகள் புவியின் மேற்பரப்பு பயணம் செய்யும் ரேடியோ அலைகள் ஆகும். பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ணலைக் கம்பிகள் தரைக்கு மிக அருகில் உள்ளபோது தரை அலை பரவல் நடைபெறும். நடுத்தர மற்றும் நிண்ட அலை சைகைகள் பரவுதலின் போது மட்டுமே தரை அலை பரவல் முறை முதன்மையான முக்கியத்துவம் பெறுகிறது. பகற்பொழுதில் ஏற்கப்படும் அனைத்து நடுத்தர அதிர;வெண் சைகைகளும் தரை அலைபரவலை பயன்படுத்துகின்றன. புவியின் அடிவளிமண்டலத்தின் வழியே பரப்பபடும் ரேடியோ அலைகள், வெளி அலைகள் எனப்படுகின்றன. அடிவளிமண்டலம் என்பது 15 கிமீ உயரம் வரை பரவி உள்ள வளிமண்டல பகுதியாகும். வெளி அலைகள் வழக்கமாக இரண்டு பரப்பியை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக 30 மெகா ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்கள் கொண்ட அலைகளைப் பரப்புவதற்கு ”வெளி அலை” பரவல் முறை பொருத்தமானதாக உள்ளது. வளி மண்டலத்தின் மேற்பகுதியில் அயனி மண்டலம் உள்ளது. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சு, ஆற்றலை அதிக அளவு உட்கவர்ந்துக் கொள்வதால் இப்பகுதி வெப்பபடுத்தப்பட்டு அயனியாக்கம் அடைகிறது.அயனியாக்கப்பட்ட இப்பகுதி கட்டற்ற எலக்ட்ரான்கள் நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள்து. விண்ணலைக் கம்பியிலிருந்து தரையுடன் அதிக கோணத்தில் சிற்றலை வரிசையில் உள்ள ரேடியோ அலைகள், வளிமண்டலத்தின் ஊடே சென்று மேற்புற வளிமண்டல பகுதியான அயனியாக்கப்பட்ட பகுதியுடன் எதிர;ப்படுகிறது. உகந்த நிலையில் ரேடியோ அலைகள் அயனியாக்கப்பட்ட பகுதியுடன் வெவ்வேறு இடங்களில் விலகல் அடைவதால் அவை கீழ்நோக்கி வளைக்கப்பட்டு புவியின் தொலைவில் உள்ள இடத்தை அடைகின்றன.இது போன்ற ரேடியோ அலைகள்”வான் அலை ”என்றழைக்கப்படுகிறது.இந்த அலை பரவல் ”வான் அலை அல்லது அயனி மண்டல அலைபரவல்” என்றழைக்கப்படுகிறது. அயனி மண்டலத்தால் மின் காந்த அலைகள் எதிரொளிக்கப்படுதல்: அயனி மண்டலத்தினுள் நுழையும் மின் காந்த அலைகள் அயனி மண்டலத்தால் எதிரொளிக்கப்படுகின்றன. உண்மையில் ,இதில் நடைபெறும் செயல் விலகலே ஆகும். அயனிமண்டலதின் வெவ்வேறு ஏடுகளில் ஒளிவிலகல் எண்கள் மாறிலியாக இருப்பதில்லை. இது எலக்ற்றான் அடர;த்தி மற்றும் படுகின்ற அலையின் அதிர;வெண் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. அயனியாக்க அடர;த்தி அதிகரிப்பதால், குறிப்பிட்ட அடுக்கினை குறிப்பிட்டதொரு கோணத்தில் அலை நெருங்கும் போது, அவ்வடுக்கின் ஒளிவிலகல் எண் குறைகிறது. எனவே அலையானது படிப்படியாக குத்துக்கோட்டில் இருந்து மென்மேலும் வளைந்து விலகி செல்கிறது. எலக்ற்றான் அடர;த்தி அதிகமாக உள்ள போது விலகி கோணம் தொண்ணூறு டிகிரியாக மாறும். அதன் பிறகு அலையானது புவியை நோக்கி செல்லும். வான் அலை பரவுவதில், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு பரப்பும் புள்ளியிலிருந்து ஏற்கும் புள்ளி வரை பரப்பின் வழியே உள்ள குறைந்தபட்சத் தொலைவு, தாவு தொலைவு” எனப்படும். தரை அலை ஏற்பு இல்லாத புள்ளிக்கும் வான் அலை முதலாவதாக எந்த புள்ளியில் ஏற்படுகிறதோ அந்த புள்ளிக்கும் இடைப்பட்ட பகுதி ”தாவு மண்டலம்” எனப்படும் தகவல் தொடர்பு நோக்கத்திற்காக மின் காந்த நிறமாலையில் உள்ள ரேடியோ அலைகள் மற்றும் மைக்ரோ அலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிக சமீப காலத்தில் செயற்கை கோள்கள் மற்றும் ஒளி இழை ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பானது கணினி மற்றும் இதர தரவு தகவல் தொடர்புக்கு அதி முக்கியத்துவம் அளித்து விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அல்னிக்கோ அல்னிக்கோ (Alnico) அலுமினியம், நிக்கல், இரும்பு, கோபால்ற்று, என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இம்மூலகங்களின் குறியீட்டு எழுத்துகளைக் கொண்டு al-ni-co என வழங்கப்படலாயிற்று. இதற்கு மேலதிகமாக சில வேளைகளில் செம்பு, டைட்டானியம் என்பவற்றியும் அடக்கியிருக்கும். இது இலகுவில் காந்தமாக்கப்படக்கூடிய மற்றும் கந்தவியல்பைப் பிடித்து வைத்திருக்ககக் கூடிய தன்மை கொண்டதாகக் காணப்படுவதால் நிலையான காந்தங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும். பொதுவாக அல்னிக்கொ 8–12% Al, 15–26% Ni, 5–24% Co, 6% வரை Cu, 1% வரை Ti, மிகுதி Fe ஐயும் கொண்டிருக்கும். இன்சைடு மேன் (திரைப்படம்) ஸ்பைக் லீ இயக்கிய 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்சைடு மேன். டென்சல் வாஷின்டன்,கிளைவ் ஓவென்,வில்லம் டஃபோ மற்றும் ஜோடி ஃபோஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெத்தானியா பெத்தானியா (Bethany) என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும். இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன. பாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள "அல்-எய்சரியா" (Al-Eizariya அல்லது al-Izzariya [அரபி: العيزريه]) என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. "அல்-எய்சரியா" என்பதற்கு "இலாசரின் இடம்" என்பது பொருள். இந்த இடத்தில் இலாசரின் கல்லறை உள்ளதாக நம்பப்படுகிறது. பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலையில், ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, இலாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர். அல்-எய்சரியாவில் உள்ள கல்லறை இலாசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாக கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கருதப்பட்டு வந்துள்ளது. யூத வரலாற்றாசிரியர் செசரியா நகர் எவுசேபியுஸ் (கி.பி. சுமார் 330) என்பவரும் "போர்தோ நகர் திருப்பயணி" (கி.பி. சுமார் 333) என்பவரும் இத்தகவலைத் தருகின்றனர். ஸானேக்கியா (1899) என்பவர், பண்டைய பெத்தானியா ஒலிவ மலையின் உயரப் பகுதியில் தென்கிழக்காகவும், பெத்பகே என்னும் இடத்திற்கு அருகில், அல்-எய்சரியாவிலிருந்து சிறிது தொலையில் அமைந்திருந்தது என்றும் கருத்துத் தெரிவித்தார். பெத்தானியா என்பதன் பொருள் யாது என்பது குறித்து அறிஞரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஜோசப் பார்பர் லைட்ஃபுட் என்பவர் பெத்தானியா "அத்திப்பழ வீடு" என்று பொருள்படும் என்றார். இதற்கு "அனியாவின் வீடு" அல்லது "அனனியாவின் வீடு" என்று பொருள் என்பது இன்னொரு விளக்கம் (இது பெத்தேலுக்கு அருகில் இருந்ததாக நெகேமியா 11:32 குறிப்பிடுகிறது). பொதுவாக ஏற்கப்பட்ட விளக்கம் இது: பெத்தானியா என்பது "துயர இல்லம்" அல்லது "துன்பத்தின் வீடு" எனப் பொருள்படும். கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் என்பவர் இந்த விளக்கம் தந்தார். இதை "ஏழையர் வீடு" அல்லது "ஏழைகளுக்கு உதவும் வீடு" எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். "ஏழை" என்னும் சொல் வறியவர்களை மட்டுமன்றி, நோயுற்றோர், எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம். ப்ரையன் கேப்பர் (Brian J. Capper) என்னும் அறிஞரும் பிறரும் பெத்தானியாவில் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். இக்கருத்தின் அடிப்படை புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலேயே உள்ளது. மாற்கு நற்செய்தி, பெத்தானியாவில் சீமோன் என்னும் தொழுநோயாளர் இருந்ததைக் குறிப்பிடுகிறது (மாற்கு 14:3-10). இயேசு பெத்தானியாவில் இருந்தபோது, அவருடைய நண்பராகிய இலாசர் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக அறியவந்தார் (காண்க: யோவான் 11:1-12:11). கும்ரான் அருகே அமைந்த குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட "திருக்கோவில் சுருளேடு" என்னும் ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட தகவல்: நோயுற்றவர்களையும் தொழுநோயால் வாடியவர்களையும் கவனிப்பதற்காக எருசலேமின் கிழக்குப் பகுதியில் மூன்று இல்லங்கள் அமைய வேண்டும். தூய்மையற்ற எதுவும் எருசலேம் திருநகருக்கு மூவாயிரம் முழம் தூரம் வரை காணப்படல் ஆகாது என்று அந்த ஏட்டில் கூறப்படுகிறது. பெத்தானியா என்ற ஊர் எருசலேமிலிருந்து பதினைந்து ஸ்தாதியம் தொலைவில் இருந்ததாக யோவான் கூறுகிறார் (யோவான் 11:18). இது ஏறக்குறைய மூன்று கிலோமீட்டரைக் குறித்தது. எனவே, தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் போன்றோர் எருசலேமிலிருந்து சரியான தொலையில், பெத்தானியாவில் இருந்தார்கள் என்று தெரிகிறது. இது தவிர, நற்செய்தியில் வருகின்ற பெத்பகு (காண்க: மத்தேயு 21:1) எனனும் ஊர் ஒலிவ மலையின் உயர்பகுதியில் அமைந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவில் கண்ணுக்கு அழகாய்த் தோற்றமளித்தது. ஆனால் பெத்தானியா அம்மலையின் அடிவாரத்தில் இருந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவிலைப் பார்க்கவியலாது. இதுவும் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர் போன்றோர் பெத்தானியாவில் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் கோவிலின் பார்வைக்கு அப்பால் இருந்தனர் என்றும் கூறுவதற்கு அடிப்படையாக உள்ளது. எனவே, கும்ரான் பகுதியில் குடியேறிய "எஸ்ஸேனியர்" என்னும் துறவியர் அல்லது அவர்களைப் போன்ற மரபுடைய யூத சமயத்தவர் பெத்தானியாவில் தொழுநோயாளர் உட்பட பிற நோயாளரையும் கவனிக்க மருத்துவ/நலவாழ்வு இல்லங்களை அமைத்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். அக்காலத்தில் ஏரோது மன்னன் (கி.மு. 36 - கி.மு. 4) எஸ்ஸேனியருக்கு ஆதரவு அளித்ததையும் இவண் குறிப்பிடலாம். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவான இல்லம் பெத்தானியாவில் இருந்த பின்னணியில் இயேசு, "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்" (மத்தேயு 26:11; மாற்கு 14:7) என்று கூறியிருப்பார் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பெத்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட "எலும்புப் பாதுகாப்புப் பெட்டகங்களில்" காணப்படுகின்ற பெயர்களில் கலிலேயப் பெயர்கள் பல உள்ளன. இவர்கள் வடக்கிலிருந்த கலிலேயாவிலிருந்து வந்து எருசலேம் அருகே பெத்தானியாவில் தங்கியிருப்பார்கள். இதனால் கலிலேயர்களாகிய இயேசுவின் சீடர்களும் அங்குப் போய் தங்கியிருக்கலாம். நீண்ட பயணத்துக்குப் பின் எருசலேமில் நுழைவதற்கு முன் தங்கியிருக்க ஏழைமக்களுக்கு பெத்தானியாவில் வசதி செய்து கொடுக்கப்பட்டது எனலாம். இவ்வாறு பெத்தானியாவில் ஏழைமக்களுக்கும் நோயாளருக்கும் உதவிட இல்லங்கள் இருந்ததற்கான அடிப்படை உறுதியாகவே உள்ளது. புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் பெத்தானியாவோடு தொடர்புடைய ஐந்து நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் பெத்தானியா என்னும் பெயர் பதினொரு முறை வருகிறது. மேற்கூறிய நிகழ்ச்சிகள் தவிர, இன்னொரு தடவை இயேசு மரியா, மார்த்தா ஆகியோரின் இல்லத்திற்குச் சென்றார் என்று லூக்கா 10:38-42 குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு "பெத்தானியா" என்னும் சொல் இல்லை. இயேசு பெத்தானியாவுக்குச் சென்றபோது தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் உணவு அருந்திய வேளையில் ஒரு பெண் அவரது காலடியை நறுமணத் தைலத்தால் பூசினார். இந்நிகழ்ச்சி மாற்கு 14:3-9 பகுதியிலும், யோவான் 12:1-8 பகுதியிலும் மேலதிகமாகக் காணப்படுகின்றது. பெத்தானியா என்னும் பெயர் கொண்ட இன்னொரு ஊரும் யோவான் நற்செய்தியில் உள்ளது. அது யோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது என்று யோவான் 1:28இல் உள்ளது. இந்த ஊர் எங்குள்ளது என்று தெளிவாகத் தெரியவில்லை. சார்லி ஃகாலோஸ் கெவின் ஹாமில்டன் ஜோன் ஹாம்சயர் வேல்லி ஹாம்மண்ட் வேல்லி ஹாம்மண்ட் ("Wally Hammond", பிறப்பு: சூன் 19 1903, இறப்பு: சூலை 1 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 85 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 634 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 - 1947 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். வால்லி ஹார்டிஞ் வால்லி ஹார்டிஞ் ("Wally Hardinge", பிறப்பு: பெப்ரவரி 25 1886, இறப்பு: மே 8 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 623 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஸ்டீவ் ஹார்மிசன் பொன்மணியார் பொன்மணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 391. உவரியிலுள்ள கலங்கல் நீர் ஓடும்படி பெருமழை பெய்கிறது. மயில் கூவுகிறது. (அவர் சொன்ன கார்காலம் இது) வந்துவிடுவார். - தோழி தலைவியை இவ்வாறு தேற்றுகிறாள். பொன்னாகன் பொன்னாகன் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 114. தோழி தலைவனிடம் சொல்கிறாள். முத்துப்பட்டன் கதை முத்துப்பட்டன் கதை என்பது தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் கதை ஆகும். இக் கதை 18 ஆம் நூற்றாண்டில் முத்துப்பட்டன் என்பவன் சாதி மீறித் திருமணம் செய்ததையும், அவன் மனைவியின் உறவினர்களுக்கு வரும் இடையூறுகளுக்கு எதிர்த்துப் போராடியதையும், அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்ததையும் பற்றியுக் கூறுகிறது. பியூட்டர் பியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும். பொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும். . நீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும். பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பது பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்களின் அமைப்புக்கள் ஆகும். இவை பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழாத இடங்களில் இருக்கும் பல்கலைக்கழங்களில் இயங்குகின்றன. இந்த ஒன்றியங்கள் தமிழ் மொழி, கலைகள், பண்பாடு, சமூகம் தொடர்பாக ஈடுபாடுள்ள மாணவர்களை ஈர்க்கின்றன. இனவாதம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் மாணவர் சிக்கல்கள் மற்றும் பல பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் இவர்களில் பலர் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். சில நாடுகளில் பல்வேறு தமிழ் மாணவர் ஒன்றியங்களை இணைந்த மாணவர் பேரவைகளும் உள்ளன. ஜார்ஜ் ஹரீஸ் ஜான் ஹாட்லி இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் செப்டம்பர் 3, 1943ல் கையெழுத்தானது; செப்டம்பர் 8ம் தேதி வெளிப்படையாக அறிவிக்கபப்ட்டது. நேச நாட்டுப் படைகள் தெற்கு இத்தாலி மீது படையெடுத்த போது ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் மூலம் இத்தாலி அச்சுக் கூட்டணியிலிருந்து வெளியேறி நேச நாடுகளிடம் சரணடைந்தது. இது செப்டம்பர் 8 போர் நிறுத்தம் எனவும், கசீபிலி ஒப்பந்தம் (ஒப்படந்தம் முடிவான இடத்தைப் பின்பற்றி) எனவும் அறியப்படுகிறது. சர்வாதிகாரி முசோலினியின் தலைமையில் பாசிச இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம் வகித்து வந்தது. நாசி ஜெர்மனிக்குத் துணையாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தோல்வியால் இத்தாலிய மக்களிடையே முசோலினியின் செல்வாக்கு சரிந்தது. நேச நாட்டுப்படைகள் இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி மீது படையெடுத்த போது, இத்தாலிய ஆளும் பாசிச கட்சித் தலைவர்கள் ஜூலை 1943ல் முசோலினியை பதவி நீக்கம் செய்தனர். இத்தாலியின் மன்னர் மூன்றாம் விக்டர் எமானுவேலின் ஆதரவாளர்கள் பின் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அவர்கள் உடனடியாகக் கூட்டணி மாறவில்லை. நேச நாட்டுத் தரப்புடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். இப்பேச்சு வார்த்தைகள் நடுநிலை நாடான போர்த்துகலில் இரகசியமாக நடைபெற்றன. இத்தாலி கட்சி மாறிவிடும் என்பதை ஊகித்த இட்லர் பல கூடுதல் தரைப்படை டிவிசன்களை இத்தாலிக்கு அனுப்பினார். ஆகஸ்ட் 1943 முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகளின் பலனாக இத்தாலி சரணடைய ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 3ம் தேதி எச். எம். எசு "நெல்சன்" போர்க்கப்பலில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலி சார்பில் ஜெனரல் ஜுசேப்பே காஸ்தெலானோவும் நேச நாடுகள் தரப்பில் ஜெனரல் வால்ட்டர் பெடெல் ஸ்மித்தும் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் உடனடியாக இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. அதேநாள் இத்தாலி மீது நேச நாட்டுப் படையெடுப்பு நிகழ ஏற்படாகியிருந்தது. என்று நேச நாட்டுப் படைகள் இத்தாலியின் நடுப்பகுதியில் தரையிறங்குகின்றனவோ அன்றிலிருந்து போர் நிறுத்தம் நடமுறைக்கு வரும் என்று ஏற்பாடாகியிருந்தது. அதன்படி செப்டம்பர் 8ம் தேதி சலேர்னோவில் நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய போது போர் நிறுத்தம் உலகிற்கும் இத்தாலியப் படைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 8, 1943ல் இத்தாலியின் அரசுத் தலைவரும் பிரதமருமான மார்சல் பியெத்ரோ படோகிலியோ இதனை இத்தாலிய தேசிய வானொலியில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேச நாட்டு தெற்குத் தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இதனை அல்ஜீர்ஸ் வானொலியில் அறிவித்தார். இதனை முன்னரே எதிர்பார்த்த ஜெர்மானியப் படைகள் ஆக்சே நடவடிக்கை மூலம் இத்தாலிய படைப்பிரிவுகளை முடக்கி அவற்றை நிராயுதபாணிகளாக்கினர். இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பிய பகுதிகள் அனைத்தையும் ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. போர் நிறுத்தம் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இத்தாலியப் படைகள் மற்றும் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான இத்தாலியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியர்களால் முடக்கப்பட்டுவிட்டன. மேலும் பல படைப்பிரிவுகளும், இத்தாலிய வான்படை மற்றும் கப்பற்படையும் நேச நாடுகள் பக்கம் சேர்ந்து விட்டன. பாசிச கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தங்கள் நாட்டின் சரணடைவை ஏற்க மறுத்தனர். அவர்களைக் கொண்டு ஜெர்மனி முசோலினியின் தலைமையில் இத்தாலிய சமூக அரசு என்ற பெயரில் ஒரு கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியில் உள்நாட்டுப் போர் மூண்டு ஜெர்மனி மற்றும் நேச நாட்டு ஆதரவாளர்கள் என இரு அணிகள் மோதிக்கொண்டன. மார்ட்டின் ஹாக் மார்ட்டின் ஹாக் (" Martin Hawke, 7th Baron Hawke", பிறப்பு: ஆகத்து 16 1860, இறப்பு: அக்டோபர் 10 1938 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 633 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். அகத்திணைப் பார்வை தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 9 இயல்களில் முதலாவது இயல் அகத்திணையியல். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் இங்குப் பகுத்தும் தொகுத்தும் காட்டப்பட்டுள்ளன. சேனா பதக்கம் சேனா பதக்கம் (Sena Medal) இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், "தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றோருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது. எல்ஜி ஜிடி 540 எல்ஜி ஜிடி 540 அல்லது எல்ஜி ஒப்டிமஸ் எனப்படுவது எல்ஜி எலக்ரோனிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு இடைநிலை உயர்தர நகர்பேசியாகும். இந்த தொலைபேசியில் புகழ் பெற்ற கூகிள் அன்ரொயிட் இயங்குதளம் பதிப்பு 1.6 நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் உத்தியோகபூர்வமாக பதிப்பு 2.1 இற்கு தரம்உயர்த்தும் வசதியும் உள்ளது. மேலும் உத்தியோகபூர்வமற்ற 2.2 பதிப்பையும் இந்த நகர் பேசியில் பதிவேற்றிக்கொள்ளலாம்.. எல்ஜி ஒப்டிமஸ் தொலைபேசி முதற்றடவையாக உயர் ரக தொலைபேசியைப் பாவிக்கும் பயனர்களுக்காகத் தயாரிக்கபட்டுள்ளது. தொலைபேசி பொதுவாக சிறப்பான பின்னூட்டங்களே வெளிவந்தது. ஆயினும் சிலர் தொலைபேசியின் வேகம் குறைவு என்று குறைகூறுகின்றனர். கொடுக்கும் விலைக்கு சிறப்பான செயற்பாடு கொண்ட நகர்பேசி என்றும் வாதம் உள்ளது. ஜோ ஹாட்ஸ்டாப் (இளையவர்) ஜோ ஹாட்ஸ்டாப் (இளையவர்) ("Joe Hardstaff junior", பிறப்பு: சூலை 3, 1911, இறப்பு: சனவரி 1, 1990 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 517 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 1945 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜோ ஹாட்ஸ்டாப் (மூத்தவர்) ஜோ ஹாட்ஸ்டாப் (மூத்தவர்) ("Joe Hardstaff senior", பிறப்பு: நவம்பர் 9, 1882, இறப்பு: ஏப்ரல் 2, 1947 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 377 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1907 - 1908 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இவோ பிளை இவோ பிளை ("Ivo Bligh, 8th Earl of Darnley", பிறப்பு: மார்ச்சு 13, 1859, இறப்பு: ஏப்ரல் 10, 1900) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1883 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஏர்ணி ஹேயஸ் ஏர்ணி ஹேயஸ் ("Ernie Hayes", பிறப்பு: நவம்பர் 6, 1876, இறப்பு: டிசம்பர் 2, 1953) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 560 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 - 1912 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நவ சேனா பதக்கம் நவ சேனா பதக்கம் (Nao Sena Medal) இந்தியக் கடற்படை தனது கடற்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக வழங்கும் ஓர் விருதாகும். இது 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. "முகப்பு": இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள் இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை உடைய ஐம்முனை வெள்ளி பதக்கமாக குறிப்பிட்டாலும் இத்தகைய பதக்கம் வெளியானதாகத் (மாதிரிகள் மற்றும் குறுவடிவங்கள் தவிர்த்து ?) தெரியவில்லை. மே 1961ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதன்படி கடற்படை சின்னம் முகப்பில் அமைந்த 35 மி.மீ வட்டவடிவ வெள்ளி பதக்கமாக உள்ளது. பதக்கத்தைத் தொங்கவிட ஓர் அழகிய சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது; இதன் ஓரத்தில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும். "பின்புறம்": முதலில் ஓர் கயிறு சுற்றிய மேல்நோக்கிய திரிசூலம் பதிப்பதாக இருந்தது. 1961ஆம் ஆண்டில் இதற்கு மாற்றாக குறுக்காக ஒன்றன்மீது ஒன்று சாத்திய நங்கூரங்களைச் சுற்றி சங்கிலி வடம் அமைந்துள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டது. மேலே இந்தியில் "நௌ சேனா பதக்கம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. "நாடா": 2 மிமீ வெள்ளை மையக்கோடுகளுடன் 32 மிமீ, கருநீலம். கருநீலம் 15 மிமீ, வெள்ளை 2 மிமீ, கருநீலம் 15 மிமீ. ஃபரேங் ஹேயஸ் டொம் ஹேவார்ட் டொம் ஹேவார்ட் ("Tom Hayward", பிறப்பு: மார்ச்சு 29, 1871, இறப்பு: சூலை 19, 1939) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 712 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1909 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டீன் ஹெட்லீ வாயுசேனா பதக்கம் இதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு "வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)" என்றும் பிறருக்கு "வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)" என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளது. முகப்பு: தாமரை மலர்வது போன்ற நான்கு கைகள் உடைய வெள்ளி நட்சத்திரம். நடுவில் தேசியச் சின்னம். ஓர் நேர் சட்டக்கத்திலிருந்து தொங்குமாறான அமைப்பு. சட்டகத்தின் ஓரங்களில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும். பின்புறம்: சிறகுகள் விரித்த இமாலாயக் கழுகு. அதன் மேலும் கீழும் இந்தியில் "வாயு சேனா பதக்கம்" என்ற பொறிப்பு. நாடா: 2 மிமீ அகலமுள்ள கருவெள்ளை மற்றும் செம்மஞ்சள் பட்டைகள் கீழிருந்து மேலாக குறுக்காகவும் மாறி மாறியும் இருக்குமாறு 30 மிமீ நாடா. அலெக் ஹர்ன் ஃபிராங் ஹர்ன் ஃபிராங் ஹர்ன் ("Frank Hearne", பிறப்பு: நவம்பர் 23, 1858, இறப்பு: சூலை 14, 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1886 - 1906 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஏர் அரேபியா ஏர் அரேபியா ("Air Arabia", , அல் அரேபியா லில் த‌ய‌ரான்) என்ப‌து ஷார்ஜா ந‌க‌ர‌த்தை த‌லைமைய‌க‌மாக‌க் கொண்டுள்ள‌ ம‌த்திய‌க் கிழ‌க்கைச் சேர்ந்த‌ ஒரு தாழ்விலை விமான‌ சேவை நிறுவ‌ன‌மாகும். அத‌ன் முத‌ன்மை த‌ள‌ம் ஷார்ஜா ப‌ன்னாட்டு விமான‌நிலைய‌ம் ஆகும். இந்நிறுவ‌ன‌ம் ம‌த்திய‌க்கிழ‌க்கு, ம‌த்திய‌ ஆசியா, இந்திய‌த் துணைக்க‌ண்ட‌ம், ஐரோப்பா ஆகிய‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளில் 46 இட‌ங்க‌ளுக்கு முறைப்ப‌டி வான்சேவைக‌ளைக் கொண்டுள்ள‌து. இதன் முக்கிய தளம் ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் ஆகும். மற்ற குறைந்த கட்டண விமான சேவைகளுடன் ஒப்பிடும்போது இதிலுள்ள வித்தியாசம் என்னவென்றால், இதன் முக்கிய மையமான ஷார்ஜாவிலேயே பல விமானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது தான். மேலும் அலெக்ஸாண்டரியா மற்றும் காஸாப்ளான்கா நாடுகளிலும் முக்கிய நகரங்களை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. அரபு ஏர் கேரியர் ஒருங்கிணைப்பின் ஒரு அங்கத்தினராகவும் ஏர் அரேபியா உள்ளது. இந்நிறுவ‌ன‌ம் ஃபிப்ர‌வ‌ரி 2003இல் நிறுவ‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் முத‌ல் ப‌ற‌ப்பு ஷார்ஜாவிலிருந்து ப‌ஹ்ரெயின் இடையில் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌து. முத‌ல் ஆண்டிலிருந்தே இது இலாப‌த்தை திர‌ட்டிய‌து. ஏர் அரேபியா பிப்ரவரி 3, 2003 ஆம் ஆண்டில், அமிரி டெக்ரீ அவர்களால் நிறுவப்பட்டது. இவர் ‘சுப்ரீம் கவுன்சில் ஆஃப் த யுனைடட் அரபு எமிரேட்ஸ்’-இன் உறுப்பினர் ஆவார். இப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட முதல் குறைந்த கட்டண விமானச் சேவை இதுவாகும். 28 அக்டோபர் 2003 ஆம் ஆண்டில் ஷார்ஜாவிலிருந்து பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு, தனது முதல் விமானத்தினை அனுப்பியதன் முதல் விமானச் சேவையினைத் தொடங்கியது. முதலாம் ஆண்டு முடிந்த உடனே லாபம் தரும் நிறுவனமாக மாறியது. ஷார்ஜா விமான நிலைய சரக்கு மையத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. மத்திய துபாயில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் (9.30 மைல்) தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. ஏர் அரேபியா மூன்று சர்வதேச தளங்களில் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் இருந்த அல்லது இருக்கக்கூடிய நாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஏர் அரேபியா எகிப்து (2009 முதல் தற்போது வரை) – 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி எகிப்தின் அலெக்ஸாண்டரியாவினை மையமாகக் கொண்டு எகிப்தின் பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான டிராவ்கோ குழுவுடன் இணைந்து செயல்படும் என அறிவித்தது. இதற்கான செயல்பாட்டு உரிமத்தினை மே 22, 2010 இல் பெற்றது மற்றும் இதற்கான விமானச் சேவை ஜூன் 1, 2010 முதல் ஆரம்பிக்கப்பட்டன. ஏர் அரேபியா எகிப்தின் விமானக் குழுமத்தில் மூன்று விமானங்கள் செயல்படுகின்றன. ஏர் அரேபியா ஜோர்டான் – ஜூன் 7, 2010 இல் ஏர் அரேபியா டான்டேஷ் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி ஏர் அரேபியா ஜோர்டான் குயின் அலியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களுக்கு தனது விமானச் சேவையினை தொடங்கியது. ஏர் அரேபியா மொராக்கோ (2009 முதல் தற்போது வரை) – 2007 ஆம் ஆண்டில் மொராக்கன் முதலீட்டாளர்களுடன் சேர்ந்து ஏர் அரேபியா மொராக்கோவினை தொடங்கியது. அதன்படி மொராக்காவின் பெரிய நகரமான காஸாப்ளான்காவில் தனது இரண்டாவது தளத்தினை அமைத்தது. மே 6, 2009 முதல் இது தனது விமானச் சேவையினைத் தொடங்கியது. அதன் பின்பு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு தனது சேவையினை விரிவடையச் செய்தது. மொராக்கோவின் விமானக் குழுவானது ஐரோப்பாவினை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய நான்கு விமானங்களைக் கொண்டுள்ளது. ஃப்ளை யெட்டி (2007 முதல் 2008 வரை) – 2007 ஆம் ஆண்டில் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் ஏர் அரேபியா நிறுவனம் தனது தளத்தினை நிறுவியது. யெட்டி விமானச்சேவையுடன் சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தியது. இதன் மூலம் ஏர் அரேபியாவினால் காத்மாண்டுவிலிருந்து ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது சேவையினை விரிவுபடுத்த முடிந்தது. அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்த முயற்சி கைவிடப்பட்டது. பிப்ரவரி 2014 ன் படி, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 90 விமான நிலையங்களில் ஏர் அரேபியா தனது சேவையினை தொடர்கிறது. அத்துடன் எகிப்து மற்றும் கைரோ நாடுகளின் பகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. [6] ஏர் அரேபியா விமானச்சேவை சராசரியாக 3.2 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட 22 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களைக் கொண்டுள்ளன. அனைத்து விமானங்களும் 162 இருக்கைகளுடன் இருப்பது விமானச் சேவையின் பொருளாதார ரீதியாக மற்றுமொரு பலமாக உள்ளது. டம்மாம் – ஷார்ஜா, டோஹா – ஷார்ஜா, ஷார்ஜா – குவைத், ஷார்ஜா – டம்மாம் போன்ற இடங்களுக்கு இடையேயான விமானச் சேவைகள் முக்கியப் பகுதிகள் ஆகும். இந்த இடங்களுக்கு முறையே வாரத்திற்கு 21, 21, 21 மற்றும் 21 விமானங்களை இயக்குகிறது. சிறப்புத் தேவைகளுக்காக கஸானிலிருந்து ஷார்ஜாவிற்கும், ஷார்ஜாவிலிருந்து கஸானுக்கும் இடையே விமானப் போக்குவரத்துகள் செயல்படுத்தப்படுகிறது. ஜோர்ஜ் கிப்பன் ஹர்ன் ஜோர்ஜ் கிப்பன் ஹர்ன் ("George Gibbons Hearne", பிறப்பு: சூலை 7, 1856, இறப்பு: பிப்ரவரி 13, 1932) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பாதராயணர் பாதராயணர், உபநிடதங்களின் மையக் கருத்துக்களை விளக்குவதற்கு பிரம்ம சூத்திரம் என்ற வேதாந்த சூத்திரங்களை இயற்றிய ஆசிரியராவார். பிரம்மத்தை அறியும் முறைகள் பிரம்ம சூத்திர நூலில் விளக்கியுள்ளார். மேலும் வேறு தத்துவ ஆசிரியர்களின் முரண்பட்ட கருத்துகளை தவறானது எனவும் உறுதி செய்துள்ளார். மீமாஞ்ச சூத்திரங்களை இயற்றிய ஜைமினி வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் வேதாந்தம் எனும் உத்தர மீமாம்சத்திற்கும் மட்டுமல்லாது பூர்வ மீமாம்சை பற்றியும் தனது கருத்துக்களையும் தெரிவித்ததாக ஜைமினி தம் நூலில் கூறுகிறார். விஷ்ணு சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது. மகாபாரதம், மற்றும் 18 புராணங்கள், 18 உபபுராணங்கள் இவற்றையெல்லாம் இயற்றிய வியாசருக்கு இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது. இது சத்துவ குணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார். யுதிஷ்டிரரின் ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பீஷ்மர் அரசதர்மம், நெருக்கடிநிலைதர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடுபெறும் தர்மம், ஆக இன்னும் பல தர்மங்களை உபதேசித்தார். நம் முன்னோர்கள் நல்வழி என்று தாம் ஆராய்ந்து உணர்ந்த வழியில் தாமும் சென்று நலம் பெற்றபின் நம்மையும் அதைப் பின்பற்றுமாறு அன்புடன் கட்டளையிட்டுள்ளதை 'அனுசாஸனம்' என்பர். இப்படி அனுசாஸனங்கள் நிறைந்த அனுசாஸனபர்வத்தின் முடிவில், ஒரு சிறந்த அனுசாஸனமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் இடம் பெறுகிறது. முடிவாக யுதிஷ்டிரர் கேட்கும் கேள்விகள் ஆறு: இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது. ஆண்டவனுடைய 'அனந்த-கல்யாண-குணங்களை', அதாவது, அவனுடைய எல்லையற்ற நற்குறிசெறிந்த இயற்பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம். ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். சில பெயர்கள் அக்குணம் இருப்பதாலேயே தோன்றக்கூடிய அல்லது தோன்றிய பெயர்கள். இப்பெயர்களின் முழு உட்கருத்தையும் புரிந்துகொள்வதற்கு, ஏதாவதொரு பரம்பரை வழி வந்த வேதாந்த நுணுக்கங்கள் சில நமக்குத் தெரிதல் வேண்டியிருக்கலாம். உண்மையில் ஆண்டவன் ஒரு பேரிலி. அதனால் எந்தப் பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம். இவ்வாயிரம் பெயர்களை ஒருவன் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் வண்ணமே அதனுடைய ஆழ்கருத்துகளில் திளைத்து இச்சுவை தவிர வேறு எச்சுவையும் வேண்டேன் என்று சொல்லக்கூடிய பக்குவம் கிடைத்துவிடும் என்பது இந்துமதச் சான்றோர்களின் நம்பிக்கை.நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை. வியாசரும் பீஷ்மருமே உரையாசிரியர்கள் தாம். ஏனென்றால் மந்திரசக்திமிக்க நாமங்களை ரிஷிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் பலவற்றை வியாசர் மகாபாரதத்தில் பல நிகழ்ச்சிகளில் எடுத்து விளக்கியுள்ளார். அவற்றை வரிசைப் படுத்தித் தொகுத்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து பீஷ்மர் தொகுத்ததில் பல அழகிய கருத்துகள் உருவாகின்றன.முதன்முதல் பாஷ்யம் என்று பெயரிட்டு உரை எழுதியவர் ஆதி சங்கரர். இவர் எழுதிய உரையின் சிறப்பிற்கு சான்றாக மகாபாரதத்திற்கு உரை எழுதிய நீலகண்டர் விஷ்ணுசஹஸ்ரநாமப்பகுதிக்கு வந்ததும், நாமங்களின் பொருள் ஶ்ரீசங்கரரின் பாஷ்யத்திலிருந்தே அறியத்தகுந்தது என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளதைச் சொல்லவேண்டும்.விசிஷ்டாத்வைத வேதாந்த முறையின் வழிவந்த பராசரபட்டரின் உரை அடுத்தபடி தோன்றியது. மத்வ பரம்பரை வழி வந்த ஶ்ரீ சத்யஸந்த யதி ஓர் உரை எழுதியுள்ளார். இம்மூண்று உரைகளைத்தழுவி, பின் நூற்றாண்டுகளில் இன்றுவரை பலர் உரைகள் எழுதியுள்ளனர்.இவர்களில் சிலர்: விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சுலோகத்திலுள்ள முதல் பெயர். 'விஶ்வம்' என்ற வடமொழிச் சொல்லிற்கு உலகம் என்று பொருள். நாம் பார்க்கும் இவ்வுலகம் தான் விசுவம். ஆனால் இதையே ஆண்டவனின் பெயராக இங்கு சொல்லப்படுகிறது. உலகைப்படைத்தவன் ஆண்டவன். ஆக அவன் உலகிற்குக் காரணமாகிறான். வேதாந்தத்தில் காரணம் என்று சொல்லப்படும் எதுவும் அதன் காரியத்தை (அதாவது காரணத்தால் ஏற்படும் பயனாகிய காரியப்பொருளை) வியாபிக்கிறது. காரணமில்லாமல் காரியமில்லை. எங்கெல்லாம் காரியம் இருக்கிறதோ அங்கெல்லாம் காரணம் ஒன்று இருந்தாகவேண்டும். அதனால், இங்கு காரியமான உலகு அதன் காரணத்தைக் காட்டிக் கொடுக்கின்ற காரணத்தால் காரியமான 'விசுவமே' காரணத்தின் பெயராகத் திகழ்கின்றது. பரம்பொருள் பால்பிரிவினைக்குட்படாதாகையால் அஃறிணையாகவே குறிப்பிடப்பெறும். இதனாலேயே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் நாமமே அஃறிணைச்சொல்லான விஶ்வமாக இருக்கிறது. விசுவம் என்ற சொல்லே 'விஶ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து முளைத்த சொல். 'விஶ்' என்ற வினைச்சொல்லிற்கு 'நுழை' என்று பொருள். உலகைப்படைத்து அதில் 'அனுப்ரவேசம்' செய்தார் என்று பரம்பொருளைப் பற்றி உபநிடதங்கள் சொல்கின்றன இதற்கு உரை எழுதும் ஆதி சங்கரர் பரம்பொருள் உலகத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உள்ளுறைபவனாக ('அந்தர்யாமி'யாக) இருக்கின்றான் என்பதே இதன் பொருள் என்று தீர்மானம் செய்கிறார். இப்படி ஆண்டவன் அவன் படைத்த உலகிற்குள் உள்ளுறைபவனாகிறான் என்ற பொருளில் அவன் உலகிற்குள் நுழைந்தான் என்று பொருள் தருவதுபோல் பேசுகிறது வேதம். விஶ்வம் என்ற சொல்லின் தத்துவப் பொருளும் இதுவே. இந்துமதத்தின் கடவுள் தத்துவத்தில் இரண்டு தத்துவங்கள் பிணைந்துள்ளன. அவன் எல்லாவற்றிலும் உள்ளுறைபவனாக இருக்கின்றான் என்பது ஒன்று.அவன் எல்லாவற்றையும் கடந்து இருக்கிறான் என்பது மற்றொன்று. விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதற்பெயரான விசுவம் அவன் உள்ளுறைவதை சுட்டிக்காட்டுகிறது. எல்லாமானவர் என்பதை முதற்பெயரால் சொல்லி, எல்லாவற்றையும் கடந்து இருக்கிறார் என்ற இரண்டாவது தத்துவத்தை சுட்டிக்காட்டும் சொல்லான 'விஷ்ணு'வை இரண்டாவது பெயராகச் சொல்கிறார் பீஷ்மர். இச்சொல் 'படர்ந்து பரவுதல்' என்று பொருள் தரும் சொல். எல்லாவற்றையும் பரவுதலோடு மட்டுமல்லாமல், 'புருஷ சூக்தம்' என்ற வேதப்பகுதியில் சொல்லியதுபோல் எல்லாவற்றையும் பரவி அவைகளைத் தாண்டியும் இருக்கிறான். அதாவது உலகு என்று பொருள்படும் விஶ்வத்தைத் தாண்டி அப்பாலும் உள்ளவன் அவன் என்பதால் அவனுக்கு 'விஷ்ணு' என்று பெயர். இடம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் நிற்பதைச் சொல்கிறது 'விஷ்' என்ற வினை.விஶ்வத்தின் உள்ளும் புறமும் நீக்கமற வியாபித்திருப்பதால் அவன் 'விஷ்ணு' வாகிறான். 'கடவுள்' என்ற சொல்லிலுள்ள 'கட' என்ற பகுதி அவர் எல்லாவற்றையும் கடந்துமிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இது 'விஷ்ணு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கடவுள் என்ற சொல்லிலுள்ள இராண்டாவது பகுதி 'உள்'; அவன் கடந்து மட்டுமில்லை, உள்ளேயும் இருக்கிறான் என்ற 'உள்ளுறைதல்' தத்துவத்தைச் சொல்வதால், இது 'விஶ்வம்' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பெயரில்லாத ஆண்டவனுக்குப் பெயர்களிட்டுப் பட்டியலிடும் ஸஹஸ்ரநாமம் ஒன்றுக்கொன்று நேர் எதிர்ப் பொருள் உடைய பெயர்களையும் சேர்த்திருப்பதில் விந்தையெதுவுமில்லை. எனினும் அவ்வெதிர்மாறுப் பெயர்களிலும் கடவுள் தத்துவம் புதைந்து கிடப்பதை உரையாளர்களின் ஆழமான கருத்துகளிலிருந்து அறிகிறோம்.எடுத்துக்காட்டுகள் பலவற்றில் சில: இவைகளை பீஷ்மர் தொகுத்திருப்பதின் சிறப்பாக, எதிர்மாறாக உள்ள ஒவ்வொரு இரட்டையினிலுள்ள இரு சொற்களும் "அடுத்தடுத்து" வருவதைப் பார்க்கலாம்: (அடைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் எண் அவ்விரு சொற்களும் ஸஹஸ்ரநாம சுலோகங்களில் வரும் தொடர் எண்: நிமிஷோநிமிஷ: (23); நைகரூபோ பிருஹத்ரூப: (29); அத்ருஶ்யோவ்யக்தரூப: (33); ஸதஸத் க்ஷரமக்ஷரம் (51); அநேகமூர்த்திரவ்யக்த: (77); ஏகோனைக: (78); அசலஶ்சல: (79); அணுர்பிருஹத் க்ருஶஸ்தூல: (90); குணப்ருந்நிர்குண: (90). இவைகளுள் மறைந்திருக்கும் தத்துவப் பொருள்களுக்கு விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும். தமிழ் வேதம் என்று சொல்லப்படும் பிரபந்தத்திலும் இதே முறையில் எதிர்மாறான பெயர்கள் சொல்லி ஆண்டவனைக்குறிக்கும் இடங்கள் பல பல: மந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து இருக்கும்படித் தொகுக்கப்பட்டிருக்கும் வரிசையமைப்பினால் தனி நாமம் கூறும் பொருளைத் தவிர அந்நாமம் வரிசையில் அமைந்த இடம் புதிய மற்றொரு கருத்தைப் பறை சாற்றுகிறது. நான்கு எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்: எப்போதும் நமக்கு உதவும் இறைவனின் அம்மாண்பை 'அனுகூல:' விளக்குகிறது. கடவுள் எல்லோருக்கும் அனுகூலர். உள்ளுறைபவனாக, ஆன்மாவாக, ஜீவனாக, பிராணனாக, அறிவாக எல்லாமாக இருப்பதால் அவரால் அனுகூலராக மட்டுமே இருக்கமுடியும். உதவி புரிய அன்புடன் இணைந்து இருக்கும் இறைவன், ஒரு முறை அப்படி இருப்பதில் களிப்படையாமல், நூறு தடவை -- எண்ணற்ற தடவை -- திரும்பத்திரும்ப வருகிறார் என்பதை அடுத்த நாமமான 'சதாவர்த்த:' சொல்கிறது. கையில் ஏந்திய தாமரையாலும், தாமரையை ஒத்த கண்களாலும், பரிவு சொட்டச்சொட்ட, நமக்கு உதவி புரிவதற்காக திரும்பத்திரும்ப வருகிறார்! தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளாதவர். உண்மையில் இருக்கின்ற பெருமையைக் கூடத் தாழ்த்தித் தூதனாகவும், தேரோட்டியாகவும் கூச்சமின்றிச் செயல்பட்டவர்.தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பெருமையைக் கூட்டித் தருகிறார்.தன் பக்தர்களுக்குத் தானே கீழ்ப்படிந்தவராகி அதையே பெருமையாகக் கொண்டவர். இதில் சிறப்பு என்னவென்றால், அறிஞர்கள் இப்பெயர் தொகுப்பில் கிருஷ்ணாவதார ரகசியமே இருப்பதாகச் சொல்கிறார்கள். கண்ணனைப் பற்றி இதில் ஒன்றுமே இல்லையே! சொல்லியிருப்பதெல்லாம் பொதுவாக எல்லாக் கடவுளுக்கும் பொருந்துமே என்று தோன்றும். இதில் தான் கண்ணனின் அவதார ரகசியமே இருக்கிறது. கண்ணனுடைய கதையில் அடிக்கடி நாம் சந்திப்பதென்ன? கோபியர் அவன் வெண்ணை திருடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவன் தாயுடன் இருப்பது தெரிகிறது. மண்தின்றதாகச் சொல்லப்பட்ட அவன் வாயில் பார்த்தால் இப்பிரபஞ்சமே தெரிகிறது! கோபியர் அவனுடன் சல்லாபம் செய்துகொண்டிருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அடுத்த கணமே அவர்கள் தங்கள் கணவன்மார்களுடன் தான் இருக்கிறோமென்று உணர்கிறார்கள். இதுதான் கண்ணனின் ரகசியம். நாம் நினைக்கிற இடத்திலோ, நினைக்கிறபடியோ அவன் இருக்கமாட்டான். மேலுள்ள எட்டு நாமங்களில் அவன் இருப்பதாக அவனைத் தேடுகிறோம். ஆனால் எட்டு நாமங்களுக்குப் பின் வரும் நாமமான "அனிர்தேஶ்யவபு:" என்ற பெயரில் இருக்கிறான். 'இப்படி, அப்படி என்று எப்படியும் சுட்டிக்காட்டமுடியாத உருவத்தையுடையவன்' என்ற பொருளில், "அனிர்தேஶ்யவபு:" கண்ணனை உள்ளபடி பறை சாற்றுகிறது.! "அணு:" - அணுவானவர்; "பிருஹத்" - பெரிதானவர்; "கிருஶ:" - மெலிதானவர்; "ஸ்தூல:" -பருத்தவர்; "குணபிருத்" - குணங்களைத் தாங்கி நிற்பவர்; "நிர்குண: - குணமற்றவர்" ; "மஹான்" -மிகப்பெரியவர்; "அத்ருத:" - தாங்கப்பெறாதவர். இவ்வெட்டு நாமங்களில் முதல் ஆறு நாமங்களிலுள்ள எதிர்மாற்றுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கவும். இவ்வெட்டு நாமங்களையும் ஒன்று சேரப் பார்க்கும்போது, பராசர பட்டரின் உரையிலிருந்து நமக்கு ஓர் அருமையான பொருள் கிடைக்கிறது. பீஷ்மர் இவைகளை இந்த வரிசையில் தொகுத்ததின் உட்பொருளும் விளங்குகிறது. யோகசூத்திரத்தின் மூல ஆசிரியர் பதஞ்சலி எட்டு யோகசித்திகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன: , இவ்வெட்டு நாமங்களில் இவ்வெட்டு யோகசித்திகளையுடையவர் பகவான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.நாமங்களின் வரிசையும், சித்திகளின் வரிசையும் ஒத்துப்போகும் அழகைப் பார்க்கலாம். விஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன: கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன் ,பத்மநாபன், தாமோதரன். இப்பன்னிரு பெயர்களும் இந்து சமூகத்திலும் அதன் சமயத்திலும் மீறத்தகாத உயர்நிலையுடையவை. அதே காரணத்தினால் தான், விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட வைணவத்தில், மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் 'நாமத்தைக்' (=பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது. இப்பன்னிரு நாமங்களையும் ஒருங்கே போற்றும் வகையில் நம்மாழ்வார் தன் திருவாய்மொழி யில் பன்னிருநாமப் பாட்டு என்ற தொகுதியில் பன்னிரு பாடல்களாக ஓர் அந்தாதி முறையில் சிறப்பாகப் பாடியிருக்கிறார். இதனில் சுவையான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர் ஆகிய இரு பெயர்கள் இப்பன்னிருவரில் இல்லை. எனினும், திரிவிக்ரமன், வாமனன் என்ற இரு பெயர்களைத் தவிர இதர 10 பெயர்களும் கிருஷ்ணருடையது தான். இப்பன்னிரு பெயர்களில் நேரடியாக விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்வது 'திரிவிக்ரமன்', 'வாமனன்' என்ற இரு பெயர்கள்தாம். வாமன அவதாரத்தில் ஒரு சிறிய உருவத்துடன் மகாபலிப்பேரரசரின் முன் வந்து, மூன்றடி மண் கேட்டு அதற்கு அரசன் உடன்பட்டவுடன் வானளாவிய கால்களினால் மூவுலகத்தையும் அளந்தார் விஷ்ணு. இதனால் அவருக்கு திரிவிக்ரமன் என்ற பெயர் வந்தது. 'திரி' என்றால் 'மூன்று'. 'விக்ரம' என்றால் 'காலின் ஓரடி'. 'வாமன' என்றால் 'சிறிய உருவம்'. குள்ளமான உடலமைப்பு கொண்டபடியால் 'வாமனர்' என்ற பெயர். உலகளந்த பெருமானாதலால் 'திரிவிக்ரமர்'. மற்ற பெயர்களின் சொற்பொருளைப் பற்றி அப்பெயர்களிலுள்ள தனிக்கட்டுரைகளைப் பார்க்கலாம். பாரதநாட்டில் (குறிப்பாக தென்பிராந்தியங்களில்) கோயில்களிலும் (வீடுகளிலும் கூட) ஏதாவதொரு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துக்கொண்டு, அதனிலுள்ள 1008 பெயர்களையும் ஒவ்வொன்றாக 'ஓம்' சேர்த்து நான்காம் வேற்றுமையில் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் இறுதியில் நம: என்ற சொல்லையும் சேர்த்து, ஆண்டவன் காலடியில் மலர்களால் அர்ச்சிப்பது ஒரு வழக்கமான வழிபாடாக உள்ளது. இவ்விதம் அர்ச்சிப்பது ஒரு ஸஹஸ்ரநாம அர்ச்சனை எனப்படும். இவ்விதம் கூட்டாக பல நபர்கள் சேர்ந்து நூறு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து முடித்தால் அது இலட்சார்ச்சனை வழிபாடாகும். விழாக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கோடி அர்ச்சனையும் (அ-து, நூறு இலட்சார்ச்சனை) செய்வதுண்டு. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் போன்ற பழங்கால ஆன்மிக நூல்களிலெல்லாம் 'பலசுருதி' என்றோர் பகுதி தவறாமல் இருக்கும். அப்பகுதியில் இந்த நூலை எப்படியெப்படியெல்லாம் தியானித்தோ படித்தோ ஆண்டவனை அர்ச்சித்தோ செய்தால் இன்னின்ன நற்பயன்கள் கிடைக்கும் என்பதை இனிக்க இனிக்கச் சொல்லப்பட்டிருக்கும். இவ்விதம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பதால் வரக்கூடிய பயன்கள் இருபது சுலோகங்களில் மகாபாரதத்திலேயே ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் இவை தவிர,பத்மபுராணத்திலிருந்தும் பகவத் கீதையிலிருந்தும் சில சுலோகங்கள் இவைகளுடன் சேர்த்துப் படிக்கப்படுகின்றன. 'பலசுருதி' யிலிருந்து சில பகுதிகள்: http://www.raaga.com/channels/sanskrit/moviedetail.asp?mid=s0000312 சந்திரமலர் ஆனந்தவேல் சந்திரமலர் ஆனந்தவேல் (பி. 1941) மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி. அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் மலேசியா வைப் பிரதிநிதித்தவர். ஐக்கிய நாடுகள் அவை யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மலேசியக் காவல் துறைப் பயிற்சிக் கல்லூரியின் முதல் பெண் ஆணையர். சந்திரமலர் இண்டர்போல் எனும் அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. நூற்றுக்கணக்கான சிவப்பு விளக்கு மாதர்களை நல்வழி படுத்தியவர். ஆயிரக் கணக்கான போதைப் பித்தர்களுக்குச் சீர்திருத்த வழிகளைக் காட்டி அவர்கள் சுயதொழில்களில் ஈடுபட ஊக்குவிப்பு செய்தவர். சந்திரமலர் ஆனந்தவேல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பிறந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் மலாயா வுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர். மலேசியக் குடியுரிமையைப் பெற்றனர். சந்திரமலர் தன் ஆரம்பக் கல்வியை மலாயா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங் நகரில் பெற்றார். ஐந்து பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலராகப் பணி புரிந்தார். சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போதுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் தொழிலுக்குள் போவதையே பெருமையாகக் கருதினர். பெண்களுக்கு ஆசிரியர் தொழில்தான் சிறந்தது என்று பெற்றோரும் விரும்பினர். 1960 ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு சந்திரமலருக்கு இடம் கிடைத்தது. பேராக் ஈப்போ வில் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி பெற்றார். பின்னர் பினாங்கு மாநிலக் காவல் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். அவருக்குக் காவல் துறையின் சீருடைகள் அணியாத உளவுத் துறையில் இடம் கிடைத்தது. அவருடைய பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை. தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் தேர்ச்சி பெற்று இருந்ததால் அவருக்கு உளவுத்துறை வழங்கப்பட்டது. 1960 களில் இவர் பேராக் ஈப்போவில் உள்ள பயிற்சி முகாம்களில் காவல் துறைப் பயிற்சிகளைப் பெற்றார். குறி சுடுதல், தற்காப்புக் கலைகள், கொமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை. இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஜூடோ இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ‘ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும்’ என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள். ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு விரட்டிச் சென்றார். சந்து பொந்துகளில் எல்லாம் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடத்தல்காரன் கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் மாட்டிக் கொண்டான். அவனோடு போராட்டம் நடத்தும் போது அவர் தலைக் கவசத் தொப்பியால் தாக்கப் பட்டு காயம் அடைந்தார். அப்படிப் பட்ட சூழ்நிலையிலும் அவனைத் துப்பாக்கியால் சுடாமல் பிடித்தார். அவர் நினைத்து இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்று இருக்க முடியும். ‘அனாவசியமாக ஓர் உயிர் பலியாகக் கூடாது’ என்பதில் உறுதிப்பாடு கொண்டவர் சந்திரமலர். ஓர் ஆண்டிற்குப் பின்னர், அவர் பினாங்கு ரகசியக் காவல் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். அனுதினமும் ரகசியக் கும்பல்களுடன் மோதிக் கொள்வது, அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவது வாடிக்கையான விஷயங்கள். அவருடைய குழுவில் 13 பேர் இருந்தனர். எட்டு ஆண்கள் ஐந்து பெண்கள். ஒரு நாளைக்கு 15 விபசார விடுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் நடந்தன. சில சமயங்களில் அவர் ஒரு விலைமாதைப் போல உடை அணிந்து, ஒரு விலைமாதைப் போலவே இயல்பாக நடித்துத் துப்பு துலக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. கள்ளத் தனமாகச் சூதாடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு இவரும் சூதாடுவார். தங்களுடன் சூதாட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர் ஒரு போலீஸ் அதிகாரி எனத் தெரிந்ததும் விளையாட்டாளர்கள் தப்பித்து ஓடுவார்கள். அந்தச் சமயத்தில் வெளியே சீருடை இல்லாமல் இருக்கும் மற்ற அதிகாரிகள் அவர்களை வளைத்துப் பிடிப்பார்கள். சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து “Kelinga cha bor lai leow!” என்று சீன மொழியில் கத்திக் கொண்டு ஓடுவார்கள். “இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள். ‘ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை. ஆனால், ஓர் அதிகாரி ஊழல் இல்லாதவர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அந்த அதிகாரிக்கு மதிப்புயையும் மரியாதையையும் கொடுப்பார்கள்’ என்று சொல்கிறார் சந்திரமலர். போதைப் பொருளும் விபசாரமும் இணைந்தே செல்பவை. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்வார். இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் காவல் துறையினர் நுழைய முடியாது. ஆனால், போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும். பறிமுதல் செய்யப் படும் பணம் நேர்மையாகக் கையாளப் பட வேண்டும் என்றும் உறுதியாய் இருப்பார் சந்திரமலர். தன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளும் செய்வார். பினாங்குத் தீவின் பர்மா சாலையில் ‘யுனைடெட் ஓட்டல்’ எனும் தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதிக்குள் சந்திரமலரும் அவருடைய அதிகாரிகளும் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். அந்தத் தங்கும் விடுதி கள்ளச் சூதாட்டத்திற்குப் பேர் போன இடம். சூதாட்ட அறைக்குள் நுழைந்ததும் சூதாடிகள் பணத்தையும் சில்லுகளையும் பண அடையாளத் தட்டைகளையும் கழிவறைத் துவாரங்களில் வீசினர். ஜன்னல் வழியாகவும் பணக் கத்தைகளை வீசி எறிந்தனர். ஏறக்குறைய 40,000 மலேசிய ரிங்கிட். பணத் தாள்கள் தெருவில் மிதந்து வரவதைப் பொறுக்குவதற்கு சந்திரமலரின் அதிகாரிகள் கீழ் தளத்திற்கு விரைந்தனர். பின்னர், சந்திரமலர் தன்னுடைய உளவு அதிகாரிகளை அனைவரையும் பரிசோதனை செய்தார். அவர்களுடைய காலுறைகள், உள்ளாடைகளில் இருந்து பணக் கற்றைகள் பல ஆயிரங்கள் மீட்கப் பட்டன. தன்னிடம் பணி புரிபவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் சந்திரமலர் உறுதியாக இருந்தார். அவருடைய இந்த மாதிரியான கெடுபிடிகள் தான் பின்னாளில் அவருக்குப் பதவி உயர்வுகள் கிடைப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தின. ஒரு முறை ஓர் அமெரிக்க இளம் பெண் டாக்டர் பட்ட ஆய்வுகள் செய்ய பினாங்கிற்கு வந்து இருந்தார். நடுத்தரமான ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். ஒரு திடீர்ச் சோதனையின் போது அந்தப் பெண் கைது செய்யப் பட்டார். அவருடைய கைகளில் ஊசி குத்திய அடையாளத் தளும்புங்கள் இருந்தன. போதைப் பொருள்களை வாங்குவதற்காகத் தன் உடலையே சில நாட்களாக விற்று வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. சந்திரமலருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். எனினும், மலேசியாவில் தங்குவதற்கு வழங்கப் பட்ட கால வரையறையையும் தாண்டி அந்தப் பெண் தங்கி இருந்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் மீது இரக்கப் பட்டார் சந்திரமலர். குடிநுழைவு அதிகாரிகளிடம் பேசி தண்டனை இல்லாமல் அவரைத் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தார். எனினும் அப்பெண் இரண்டு மாதங்கள் கழித்து அதிகமானப் போதை மருந்தை உடலுக்குள் செலுத்தியதால் இறந்து போனார். இன்னொரு முறை 12 வயது இளம் பெண்ணை விபசாரப் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். ஒரு முறை ஒரு வாடிக்கையாளுருக்குச் சேவை செய்தால் அந்தப் பெண்ணுக்கு ஐந்து ரிங்கிட் சம்பளமாகக் கொடுக்கப் பட்டது. ஆனால், தரகர்கள் வாடிக்கையாளரிடம் இருந்து தலா 100 ரிங்கிட் வசூலித்து வந்தனர். பின்னர், அந்த இளம்பெண் ஒரு பெண் புனர் வாழ்வு மையத்திற்கு அனுப்பப் பட்டார். அங்கே அவருடைய வாழ்க்கை நல்ல வழிக்குத் திருப்பப்பட்டது. சந்திரமலரைப் பார்க்கும் போது எல்லாம் அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி சொல்வாராம். பொது மக்களின் பார்வையில் சந்திரமலர் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று இருந்தார். இருந்தாலும் அவருடைய மேல் அதிகாரிகளிடம் சுமுகமான உறவு முறைகள் நல்லபடியாக அமையவில்லை. சிக்கல்கள் நிறைந்து இருந்தன. அளவுக்கு மீறி சுதந்திரமாகவும் அளவுக்கு மீறி தன்னிச்சையாகவும் சந்திரமலர் செயல் படுகிறார் எனும் குறைபாடுகள் அதிகாரிகளிடையே நிரம்பி இருந்தன. அவருக்கு வழங்கப் பட்ட அதிகார உரிமைகளை அவர் தாண்டிச் செல்வதாகச் சிலர் அதிருப்தி அடைந்தனர். தொழிலில் உறவு இறுக்கங்கள் ஏற்பட்டன். அதனால் அவருக்கு 17 ஆண்டுகள் பதவி உயர்வு கிடைக்கவில்லை. 1974 ஆம் ஆண்டு சந்திரமலர் அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டார். வாஷிங்டனில் இருக்கும் அனைத்துலகப் போலீஸ் தலைமையகத்தில் போதைப் பொருள் பிரிவில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். இரு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர். அமெரிக்காவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சந்திரமலர் மலேசியாவில் பல ஊர்களில் பல நூறு காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிகளைக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். 1976 ஆம் ஆண்டு சந்திரமலர் மீது ஓர் ஊழல் குற்றம் பதிவு செய்யப் பட்டது. அதைப் பற்றி மலேசிய புக்கிட் அமான் காவல் தலைமையகம் விசாரணை நடத்தியது. அதில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. அந்த விசாரணையின் மூலம் அவர் ஒரு நல்ல சிறப்பான அதிகாரி என்பது அறியப் பட்டது. ஏதோ உள்ளார்ந்த காரணங்களினால் அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப் படவில்லை என்பதும் தெரிய வந்தது. அளவுக்கு மீறிய நியாயமான கொள்கை, லஞ்ச மறுப்பு, லஞ்ச வாங்கிய அதிகாரிகளைக் கண்டித்து தண்டித்தது போன்ற விவாரங்களினால் சந்திரமலர் பழி வாங்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெளிவானது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐ.ஜி.பி துன் ஹனிப் ஓமார் இருந்தார். அதன் பின்னர்தான் சந்திரமலரின் தன்னமலற்றச் சேவைகள் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தன. அவர் தடாலடியாக எடுக்கும் முடிவுகள் நல்ல முடிவுகளாக இருந்தன என்பதும் மேலிடத்திற்கு தெரிய வந்தது. அதனால் அவர் உடனடியாக துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்வு பெற்றார். அடுத்து அவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கோலகுபு பாரு காவல்துறை கல்லூரிக்கு ஓர் உயர்ப் பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். 1981 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் ஷா ஆலாம் காவல் துறைக்கு அனுப்பப் பட்டார். அங்கு பணியாற்றும் போது அவர் Deputy Superintendent of Police எனும் பதவி உயர்வைப் பெற்றார். அவருடைய அயராத உழைப்பிற்கும் தளராத சேவைகளுக்கும் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் கிடைத்தன. 1994 ஆம் ஆண்டு பதவி ஓய்வு முன் அவருக்கு துணை ஆணையர் பதவி வழங்கப் பட்டது. அடுத்து அவர் புக்கிட் அமான் தலையகத்தில் உயர் காவல் துறை பொறுப்பில் அமர்த்தப் பட்டார். அப்போது மலாய்க்காரர் அல்லாத எந்தப் பெண்ணும் அந்தப் பதவியை அதுவரை வகிக்கவில்லை. பதவி ஓய்வு பெற்ற பின் அவர் அடிக்கடி பினாங்கு நகருக்குச் செல்வது உண்டு. சந்திரமலர் தன் பதவி காலத்தில் நூற்றுக்கணக்கானோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவர்களில் பலர் நாடறிந்த பிரபலங்கள். அவர்களைப் பார்த்து பேசுவதும் உண்டு. அவர்களில் நண்பர்களும் உள்ளனர்; எதிரிகளும் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் எச்சரிக்கையுடன் நடமாடுகின்றார். சில சமயங்களில் உணவகங்களுக்குக் குடுமபத்துடன் போவார். அவர்கள் சாப்பிட்ட கட்டணத்தை யாராவது கட்டி விட்டுப் போயிருப்பார்கள். யார் என்று கடை முதலாளியிடம் கேட்டால் அவரும் சொல்வது இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையில் நிறைய நடந்து வருகின்றன. சந்திரமலரின் கணவரின் பெயர் ஆனந்தவேல். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரு ஆண்கள். ஒரு பெண். பிள்ளைகள் யாருமே தாயாரைப் பின்பற்றி காவல் துறை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அன்னை திரேசா சந்திரமலரின் ஆன்மீகத் தலைவர். இப்போது பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்விச் சேவைகள் வழங்கி வருகிறார். ஆன்மீகத் துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகின்றார். இன்று வரை மலேசியக் காவல் துறைத் தலைமையகத்தினர் இவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைக் கேட்டு வருகின்றனர். அமைச்சர்களும் கருத்துகளைக் கேட்கின்றனர். மலேசிய வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக விளங்கி வருகிறார். மலேசியக் காவல் துறையில் சந்திரமலர் சரித்திரம் படைத்தவர். இப்போது கிள்ளான் மாநகரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அன்பாக ‘சந்திரா’ என்று அழைக்கின்றனர். அவர் வீட்டில் ஒரு பூந்தோடத்தை வைத்து பராமரித்து வருகிறார். முன்பு அவர் பணியாற்றிய போது ஒழுங்கீன விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளம்பெண்களைக் காப்பாற்றி இருக்கிறார். அவர்களுக்குப் புனர்வாழ்வும் வழங்கி உள்ளார். நூற்றுக்கணக்கான போதைப் பித்தர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல வழிகளைக் காட்டியவர். சந்திரமலர் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு வீரப் பெண்மணி. 2011 ஆம் ஆண்டு வரை எந்த மலேசியத் தமிழ் பெண்ணும் சந்திரமலர் வகித்து வந்த காவல் துறையின் ஏ.சி.பி ஆணையர் பதவியை வகிக்கவில்லை. நிணநீர்க்கணு நிணநீர்க்கணு (Lymph Node) என்பது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் உடல் உறுப்பு. நிணநீர்க்கணுக்கள் உடல் முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும். நோயைக் கண்டறிவதிலும், இந்த நிணநீர்க்கணுக்கள் உதவியாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில நோய்நிலைகளில் அழற்சிக்குட்படுவதுடன், இக்கணுக்கள் பெருத்தும் காணப்படும். இந்நிலை தொண்டை அழற்சி போன்ற நோய்களில் எளிமையாகவும், புற்றுநோய் போன்ற நோய்களில் உயிருக்கே இடர் விளைவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறான நிலைகளில் உயிரகச்செதுக்கு மூலம் இவை ஆராயப்படும். சில நோய்களில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட விதத்தில் நிணநீர்க்கணுக்கள் இவ்வகையான மாற்றத்தைப் பெறுவதால் நோய் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நோய்க்காரணிகள் அல்லது கிருமிகள் உடலின் எந்த ஒரு பகுதியையாவது தாக்கினால் உடலில் தொற்றுநோய் ஏற்படலாம். இந்நோய்க்காரணிகளை பிறபொருளெதிரியாக்கிகள் எனக் கூறலாம். இவ்வாறு ஏற்படும் நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க, நிணநீர்க் கலங்கள் தொழிற்பட ஆரம்பிக்கும். நிணநீர்க்கணுக்களையும் உள்ளடக்கிய நிணநீர் உறுப்புகளில், இந்த பிறபொருளெதிரியாக்கிகளுடன் நிணநீர்க் கலங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பைக் காட்டும். நிணநீர்க்கணுக்களில் B உயிரணுக்கள் மிக விரைவாகப் பெருக்கம் அடைவதனால், நிணநீர்க் கலங்கள் வீங்கிக் காணப்படும். மனித நிணநீர்க்கணுவானது, சாதாரண நிலையில், சில மில்லிமீற்றரில் இருந்து 1-2 சென்ரிமீட்டர் வரை அளவுடையதாகவும், அவரை விதை வடிவம் கொண்டதாகவும் இருக்கும். அழற்சி, தொற்றுநோய், கட்டி போன்ற காரணங்களால் இவற்றின் அளவு பெரியதாகலாம். இப்படியான நிலைகளில், நிணநீர்க்கணுவின் உள்ளே வரும் வெண்குருதியணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த வீக்கம் காணப்படும். சிலசயம் உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரிலும், ஏற்கனவே ஏற்பட்ட ஒரு நோய்த் தொற்று தொடர்பிலும் இவ்வகையான வீக்கம் காணப்படும். நிணநீர்க்கணு நார்த்தன்மைவாய்ந்த ஓர் உறையால் ("capsule") சூழப்பட்டிருக்கும். இந்த உறை நிணநீர்க்கணுவின் உட்புறமாக சில இடங்களில் நீண்டு, தடுப்புகளை ("trabeculae") உருவாக்கியிருக்கும். நிணநீர்க்கணுவின் அமைப்பு புறவணி அல்லது மேற்பட்டை ("cortex") என்னும் வெளிப்பகுதியையும், மையவிழையம் ("medulla") என்னும் உட்பகுதியையும் கொண்டிருக்கும். மையவிழையம் பொதுவாக மேற்பட்டையால் சூழப்பட்டிருக்கும். நிணநீர்க்கலன் ("Lymph vessel") உள் நுழையும் பகுதியான, நுழைவுப்பகுதியில் ("Hilum") மட்டும் மையவிழையம் வெளி மேற்பரப்புடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும். நிணநீர்க்கணுக்களின் உள்ளே மீண்மநார்ப் பொருள் (elastin) எனப்படும் மெல்லிய நுண்வலை நார்களும், வேறு நுண்வலை நார்களும் (reticular fibres) இணைந்து ஒரு நுண்வலையமைப்பை உருவாக்கி நிணநீர்க்கணுவைத் தாங்கி உதவும். இந்த நுண்வலையமைப்பானது, நிணநீர்க்கணுக்களைத் தாங்கி நிற்பதோடு அல்லாது, நிணநீர்க் கலங்கள், கிளையி உயிரணுக்கள், பெருவிழுங்கிகள் ஆகியவற்றை ஒட்டிப் பற்றிக் கொள்வதற்கான அமைப்பாகவும் இருக்கும். இது நோயெதிர்ப்பு கலங்கள் முதிர்ச்சியடைவதற்கும், தூண்டப்பட்டு தொழிற்படுவதற்கும் தேவையான வளர்ச்சி, ஒழுங்குபடுத்தும் காரணிகளை வழங்குவதுடன், அகவணி நுண்சிரைகளூடாக ("endothelial venules) குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் பதார்த்தங்கள் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும்.. இவ்வலையமைப்பின் உள்ளே, அதிகளவில் நிணநீர்க்கலங்களை உள்ளடக்கிய வெண்குருதியணுக்கள், நுண்குமிழ் (follicle) வடிவத்தில் மேற்பட்டைப் பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும். ஒரு பிறபொருளெதிரியாக்கியினால் உடலானது தாக்கத்துக்கு உட்படுகையில், முளைமையம் (germinal centre) உருவாகும்போது, இந்த நுண்குமிழ்களின் எண்ணிக்கையும், அதன் கட்டமைப்பும் மாற்றமடையும். நிணநீர்க்கணுக்களில், நிணநீர்ப்பைக் குழிவுகளினூடாக (lymph sinuses) நிணநீரானது செல்லும். உட்காவும் நிணநீர்க் கலன்களூடாக நிணநீர்க்கணுக்களினுள் கொண்டு வரப்படும் நிணநீரானது, அங்கே வடிகட்டப்பட்டு, நிணநீர்க் குழிவுகளினூடாக கடத்தபட்டு, மீண்டும் வெளிக்காவும் நிணநீர்க் கலன்களூடாக வெளியே கொண்டு செல்லப்படும். மேற்பட்டைப் பகுதியில், உறைக்குக் கீழாக உள்ள நிணநீர்ப்பைக் குழிவுகளூடாக ("subcapsular sinuses") வடிக்கப்படும் நிணநீர், பின்னர் தடுப்புகளிலுள்ள நிணநீர்ப்பைக் குழிவுகளூடாக ("trbecular sinuses"), மையவிளைய நிணநீர்ப்பைக் குழிவினுள் ("medulla sinus") செல்லும். மேற்பட்டையின் வெளிப்பகுதியில் அதிகளவில் B உயிரணுக்கள் நுண்குமிழ் வடிவங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இவை ஒரு பிறபொருளெதிரியாக்கியின் தாக்கத்திற்கு உட்படுகையில், முளையமையத்தை உருவாக்கும். மேற்பட்டையின் ஆழமான பகுதியில் பொதுவாக T உயிரணுக்கள் காணப்படும். மனித உடலின் பல பகுதிகளிலும் இந்த நிணநீர்க்கணுக்கள் பரந்து காணப்படும். நுரையீரல் பகுதியில், மூச்சுக்குழாய், களம், மார்பு வயிற்றிடை மென்றகடு போன்ற இடங்களில் பல நிணநீர்க்கணுக்கள் உள்ளன. கை, கால், வயிறு போன்ற பகுதிகளிலும் நிணநீர்க்கணுக்கள் காணப்படும். பல்வேறுபட்ட தொற்றுநோய்கள், ஏனைய நோய் நிலைகளில், நிணநீர்க்கணுக்கள் வீங்கிப் பெருத்து நோயுள்ள பகுதியாகத் தோற்றமளிக்கும். [[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]] ஊதாப்புள்ளியம் ஊதாப்புள்ளியம் ( இலத்தீன்:purpura, "ஊதா") என்பது சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோலில் புள்ளிப்புள்ளியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இயல்பு நிலையில் தோலில் அழுத்தும்போது தோன்றும் வெளிறிய நிறம் இப்புள்ளிகள் காணப்படும் இடங்களில் அழுத்தினால் தோன்றாது. தோலின் கீழே ஏற்படும் குருதிக்கசிவினால் இவை ஏற்படுகின்றன. ஊதாப்புள்ளியம் 0.3–1 cm (3–10 mm) அளவிலும், குருதிக்குறும்புள்ளியம்(petechiae) 3 mm அளவுக்குக் குறைவாகவும், மற்றும் குருதித்திட்டு (ecchymoses) 1 cm அளவிலும் அதிகமாகவும் சுற்றளவைக் கொண்டது. தைபசுக் காய்ச்சலில் பொதுவாகக் காணப்படும், மேலும் நைசீரியா மெனின்ச்சைடிடிசுவால் ஏற்படும் மூளைமென்சவ்வழற்சியில் மற்றும் குருதி நுண்ணுயிர் நச்சேற்றம் போன்றவற்றில் காணப்படும். பெருந்திணை பெருந்திணை என்பது பொருந்தாக் காம உறவு. இதனைத் தொல்காப்பிய இலக்கணம் அகத்திணையில் ஒன்றாகக் கொண்டு பாகுபாடு செய்துள்ளது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணம் இதனைப் 'பெருந்திணைப் படலம்' என்னும் பெயரில் தனிப் பகுப்பாக வைத்துக்கொண்டு இலக்கணம் கூறுகிறது. இதனை இந்த இலக்கணம் 'அகப்புறம்' என்னும் பாகுபாட்டின் கீழ் வைத்து எண்ணுகிறது. வடநூலார் திருமண முறைகள் எட்டு எனத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. இவற்றில் முதலில் உள்ள நான்கும் கைக்கிளை என்றும், இறுதியில் உள்ள மூன்றும் பெருந்திணை என்றும் வகுத்துக்கொண்ட தொல்காப்பியம் இடையில் உள்ள கந்திருவர் மணத்தை யாழோர் கூட்டம் எனப் பெயர் சூட்டி 'அன்பின் ஐந்திணை' எனக் கொண்டு விளக்குகிறது. பெருந்திணை என்பது அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்று வடநூல் குறிப்பிடும் மூன்று வகையான மணமுறைகள். இவற்றில் அரும்பொருள் வினை என்பது ஆண்மகன் தன் திறமையை வெளிப்படுத்தித் திருமணம் செய்துகொள்வது. இராக்கதம் என்பது விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைவது. பேய்நிலை என்பது மது மயக்கத்தில் கிடக்கும் பெண்ணிடமும், உறங்கும் பொண்ணிடமும் உறவு கொள்வது. புறநானூற்றில் பெருந்திணைப் பாடல்கள் ஐந்து உள்ளன. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்வதைத் தகாத செயல் என அக்காலப் புலவர்கள் எடுத்துக் கூறித் திருத்தும் பாடல்களாக அவை உள்ளன. மேலே நாம் கண்ட தொல்காப்பிய நெறி இந்தப் பாடல்களில் இல்லை. தொல்காப்பியர் காட்டும் பெருந்திணையில் காதலன் தன் காதலியையும், அவளது பெற்றோர்களையும் தன் திருமணத்துக்கு உதவும்படி வற்புறுத்துகிறான். இது அகத்திணை. புறநாற்றுப் பாடல்களுக்குத் திணை, துறை வகுத்தவர் பன்னிரு படலம் என்னும் நூலைப் பின்பற்றியிருக்கிறார். நம்பியகப்பொருள் பெருந்திணையை இரண்டு வகையாகப் பிரித்துக்கொண்டு விளக்குகிறது. காம இன்பம் துய்க்கும் பாடல்கள் அகத்திணைப் பாடல்கள். மாறாகத் தலைவன் தலைவியர் துன்பப்படும் பாடல்களை இந்த நூல் பெருந்திணை எனக் கொள்கிறது. இதில் 19 துறைகள் உள்ளன இதில் 17 துறைகள் உள்ளன பியூபோ கொட்டகமய் பியூஃபோ கொட்டகமை ("Bufo Kotagamai") இலங்கைக்கு உரித்தான பியூபோனிடே குடும்பத்தைச் சேர்ந்த தேரை இனமாகும். இலங்கையின் புகழ்மிக்க விலங்கியலாளரான சரத் கொட்டகமாவின் பெயரால் இவ்விலங்கு அழைக்கப்படுகிறது. முதுகுப்புறம் கபிலம் அல்லது செம்மஞ்சள் நிறமுடையது. வயிற்றுப்புறம் இளநிறமானது. உலர்ந்த சருமம் கொண்டது. சருமத்தில் திறள் போன்ற கரணைகள் காணப்படும். கண்களிடையே இள நிறமான மூன்று கோடுகள் காணப்படும். எழுதிணை தொல்காப்பியர் அகத்திணையை 7 பகுப்புகளாகவும், புறத்திணையை 7 பகுப்புகளாகவும் காட்டுகிறார். அகத்திணை என்பது உள்ளங்கையில் சிறுதுரும்பை மறைத்துவைப்பது போன்று, ஆண்பெண் உறவு மறைத்து வைக்கப்படும் செய்திகளைக் கூறுவது. புறத்திணை என்பது புறங்கையில் பொருளை மறைக்க முடியாது போன்று போல வாழ்க்கையில் வெளிப்படையாக நிகழ்வனவற்றைக் கூறுவது. இவற்றை எழுதிணை என்று அவர் குறிப்பிடுகிறார். ஐந்திணைப் பொருள் பண்டையத் தமிழ் மக்கள் பாடற்பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் வகைப்படுத்தினர். தொல்காப்பியர் இந்த மரபைப் பின்பற்றி அகப்பொருளை என மூன்றாகப் பகுத்து விளக்கியுள்ளார். வாரென் ஹெக் வாரென் ஹெக் ("Warren Hegg", பிறப்பு: பெப்ரவரி 23, 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 348 முதல்தர துடுப்பாட்டப் 409 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20, இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 1999 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜே. டி. ஹர்ண் ஜே. டி. ஹர்ண் ("J. T. Hearne", பிறப்பு: மே 3 1867, இறப்பு: ஏப்ரல் 17 1944) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 639 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 - 1899 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜே. டப்ளியு. ஹர்ண் ஜே. டப்ளியு. ஹர்ண் ("J. W. Hearne", பிறப்பு: பெப்ரவரி 11 1891, இறப்பு: செப்டம்பர் 14 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 647 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1926 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். முதற்பொருள் (தொல்காப்பியம்) உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே காலம் ஒருவகை முதற்பொருள். காலத்தை ஆண்டு நோக்கில் பார்ப்பது பெரும்பொழுது. தமிழர் பார்வையில் இது ஆறு பருவம். காலத்தை நாள் நோக்கில் பார்ப்பது சிறுபொழுது. தமிழர் பார்வையில் பகலில் 3 சிறுபொழுது. இரவில் 3 சிறுபொழுது. ஆக 6 சிறுபொழுது. தொல்காப்பியர் காலத்தைப் பொழுது என்கிறார். கால மாற்றத்தைப் பொழுதின் (சூரியனின்) இயக்கத்தை அடிப்படையாக வைத்துத்தானே அளவிடுகிறோம். திணைமயக்கம் நிகழும்போது நிலமயக்கம் இல்லை. கருப்பொருள் மயங்கும். உரிப்பொருள் மயங்காது. தாய் தமிழியல் தாய் தமிழியல் ("Thai Tamil Studies") என்பது தாய் மொழி, தாய்லாந்து, தாய் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தொங்கம் (தங்கம்), கப்பல் (கம்பன்), கை (கை), கா (கால்), தொராசாப் (தொலைபேசி), தொராதாட் (தொலைக்காட்சி), நாளிகா (நாளிகை), மல்லி (மல்லி), வினாடி (வினாடி), கனா (கணம்), மாங்க் (மாங்காய்), சிந்தனா (சிந்தனை), பார்வே (பார்வை) எனப் பல தமிழ் சொற்கள் தாய் மொழியில் இடம்பெற்றுள்ளன. உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியா - 2011, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 2011 மே 20 முதல் மே 22 வரை நடைபெற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஏற்கனவே இந்தியாவிலும், இலங்கையிலும் பல முறை நடத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் நடைபெற்றமை இது முதல் முறையாகும். தமிழ் இலக்கியத்துக்கு வலிமையும், துடிப்பும் மிக்க ஒரு பங்காளியாளராக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இயக்கம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பங்களிப்புப் பல வகைகளில் தொடரும் அதேவேளை, இவ்வியக்கம் குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முனைப்புடனே திகழ்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத். சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் அடங்கலாக, அமெரிக்க, ஐரோப்பா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து வரையிலும் விரிந்துள்ள புலம்பெயர் தமிழுலகமும் இதில் பெருமுனைப்புக் காட்டிவருகிறது. மலேசியா வாழ் தமிழ் முஸ்லிம் தலைவர்கள், நிறுவனங்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியவாணர்கள் ஒன்றிணைந்த தேசிய குழு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. சமுதாயத் தலைவர்கள், மூத்த தேசிய முன்னோடிகள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் செயற்படும் பொது அமைப்புகள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய முயற்சியாகும். முன்னிலைப் பெருமக்களையும் இலக்கியத் துறையறிஞர்களையும் கொண்ட 20 பேர் அடங்கிய வழிநடத்துங்குழு, இந்த மாநாட்டிற்குரிய அரங்கங்களைத் தெரிவுசெய்து முறைப்படுத்தும் பணிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்த மாநாடு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் அவர்களின் சிறப்பு ஆதரவுடன் நடைபெற்றது. கோலாலம்பூர் புத்ரா உலக வணிக மையதிலுள்ள மெர்டேக்க மண்டபத்தில் மே 20 2011 இரவு 8.00 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நூர் முகம்மது யாக்கோப் கலந்துகொண்டார். ஆய்வரங்கத் தொடக்க விழா மலாயாப் பல்கலைக்கழகப் 'பெர்டானா சிஸ்வா' மண்டபத்தில் 2011 மே 20 திகதி ஆரம்பமானது. அறிஞர் அல்லாமா கரீம் கனி அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் ஹாஜா கனி தலைமை தாங்கினார். முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள் ஆய்வுரை நடத்தியவர்: அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஹாஜி மு.சாயபு மரைக்காயர் இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக முனைவர் எம். எஸ். எம். அனஸ் தமிழக இலக்கியத்துறையில் இரண்டாம் இருண்டகாலத்தில் இஸ்லாமியக் காப்பியங்களின் எழுச்சி ஆய்வுரை நடத்தியவர் : திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி ஓய்வுபெற்ற தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை மகதூம் சாயபு அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இலங்கையைச் சேர்ந்த டாக்டர் தாசீம் அஹமது தலைமை தாங்கினார். இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் தமிழிலக்கிய மரபுகள் ஆய்வுரை நடத்தியவர்: இணைப் பேராசிரியர் முஃஅப்துல் சமது இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் திருமண நடைமுறை ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் ஜே. ராஜா முகம்மது சீறா புராணத்தில் உலா - பழைமையும், புதுமையும் ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஹாஜி அப்துல்லாஹ் - மாஸா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசியா அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக டாக்டர் அஹமது காமில் மைதீன் மீரா தலைமை தாங்கினார். முன்சி அப்துல்லாவின் வாழ்வும் பணியும் ஆய்வுரை நடத்தியவர்: மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் மலேசியாவில் தமிழ் முஸ்லிம்களின் இஸ்லாமியப் பணி ஆய்வுரை நடத்தியவர்: கோலாலம்பூர் அனைத்துல இஸ்லாமியப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தமீம் உஸாமா மலேசிய ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: கோலாலம்பூர் அனைத்துல இஸ்லாமியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் ஹாஜா முஹையத்தீன் பண்டிட் மு. அப்துல் மஜீது அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் என். ஏ. அமீர் அலி தலைமை தாங்கினார். தமிழகக் கலாசாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழிசைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: மதுரை இசை ஆய்வாளர் இறையறிஞர் நா. மம்மது இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் சமய நல்லிணக்கம் ஆய்வுரை நடத்தியவர்: புதுவைப் பல்கலைக்கழக தொலைக்கல்வித்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் ம. அறிவுநம்பி செய்குத்தம்பிப் பாவலர் அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு ஓய்வுபெற்ற மலேசியாக் கல்வித்துறை அதிகாரி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மலேசியாவின் தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: மலேசிய முதுநிலை எழுத்தாளர் சை. பீர் முகம்மது மலேசியத் தமிழிலக்கியத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் கிருஸ்ணன் மணியம் சிங்கைமொழி, இலக்கிய வளர்ச்சியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: சிங்கை முதுநிலை எழுத்தாளர் ஜே. எம். சாலி கன்னல்கவி நக்கம்பாடி கரீம் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இலங்கையைச் சேர்ந்த எஸ். எச். எம். ஜெமீல் தலைமை தாங்கினார். இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்பில் மகளிர் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: காரைக்கால் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி ஓய்வுபெற்ற கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சா. நசீமா பானூ 50 ஆண்டுகால இஸ்லாமிய தமிழலக்கியம், ஆய்வுப் போக்குகளும், ஆற்ற வேண்டிய பணிகளும் ஆய்வுரை நடத்தியவர்: மதுரை காமராசப் பல்கலைக்கழ இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுத்துறை தலைவர் முதுநிலைப் பேராசிரியர் பீ.மு. அஜ்மல்கான் கலாநிதி டாக்டர் ம. மு. உவைஸ் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசியா பேராசிரியர் முனைவர் ரெ. கார்திகேசு தலைமை தாங்கினார். 20, 21ம் நூற்றாண்டு இஸ்லாமியத் தமிழிலக்கியம் ஒரு பார்வை ஆய்வுரை நடத்தியவர்: சென்னைப் புதுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் எச். நத்தர்சா மரைக்காயர் இலங்கை இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் கே.ரகுபரன் சித்தி லெவ்வை அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசிய முனைவர் முரசு. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழக ஊடகத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: சென்னை புதுக்கல்லூரி தமிழ் முதுநிலை மற்றும் ஆய்வியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் எம். ஐ. அஹமது மரைக்கார். மலேசிய தமிழ் ஊடகத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வே. சபாபதி புலவர்மணி சர்புதீன் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு டாக்டர் அ. சையது இபுராகிம் தலைமை தாங்கினார். மலேசிய மேம்பாட்டில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்: மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் சிங்கை சமூக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுரை நடத்தியவர்கள்: சிங்கப்பூர் முனைவர் எச். எம். சலீம், சிங்கப்பூர் எழுத்தாளர் முகம்மது இலியாஸ் டத்தோ சிக்கந்தர் பாட்சா அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு எஸ். எம். ஹிதாயதுல்லா தலைமை தாங்கினார். இவ்வரங்கில் 7 நூல்கள் வெளியிடப்பட்டன. ஜே. எம். ஹசைன் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு ஹாஜி முகம்மது இஸ்மாயில் சரீப் தலைமை தாங்கினார். கருத்தரங்கத் தலைப்பு இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வும் எதிர்நோக்கும் சவால்களும். இவ்வரங்கில் பாத்திமா முஸாஃபர் (தமிழ்நாடு), பாரதி கிருஸ்ண குமார் (தமிழ்நாடு), பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு), ஜாமிஆ நளீமிய்யா பேராசிரியர் அகார் முகம்மது (இலங்கை) ஆகியோர் உரை நிகழ்த்தினர். காதர் முஹையத்தீன் கப்பித்தான் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசிய தமிழ் மின்னூடகப் பிரிவுத் தலைவர் உஸ்தாத் ஜமால் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். இவ்வரங்கில் கோலாலம்பூர் மிஸ்பாகுல் ஹதா மத்ரஸா உஸ்தாத் கம்பம் பீர்முகம்மது பாகவி, கோலாலம்பூர் இந்திய மஸ்ஜித் பிரதான இமாம் மௌலவி நாசில் அலி. கோலாலம்பூர் மத்ரஸா ஸ்தாப்பா ஜெயா மௌலவி சம்பை ஹிதாயத்துல்லாஹ் அரூசி ஆகியோர் உரை நிகழ்த்தினர். பெரும்புலவர் காதர் முஹையத்தீன் மரைக்காயர் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு கவிக்கோ முனைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.இவ்வரங்கில் புலவர் ப. மு. அன்வர் (மலேசியா), கவிஞர் மாலிறையன் (தமிழ்நாடு), கவிஞர் எம். எம். நஜ்முல் ஹசன் (இலங்கை), கவிஞர் க. து. மு. இக்பால் (சிங்கை), கவிஞர் மைதீ. சுல்தான் (மலேசியா), கவிஞர் கே. ஏ. ஹாஜா மைதீன் (மலேசியா), கவிஞர் ஏம்பல் தஜம்முல் மகம்மது (தமிழ்நாடு), கவிஞர் பொத்துவில் முகம்மது அஸ்மின் (இலங்கை), கவிஞர் செ. சீனி நைனா முகம்மது மலேசியா ஆகியோர் கவி பாடினர். முன்சி அப்துல்லா அரங்கம் இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசிய தோட்டத்தொழில் மூலப்பொருள் துணையமைச்சர் டத்தோ ஜி. பழனிவேலு கலந்துகொண்டார். முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழின் பல வகையான இலக்கிய வடிவங்களிலும் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் இசை சார்ந்த இலக்கிய வடிவங்களையும் இவர்கள் கையாண்டுள்ளனர். இந்த அடிப்படையில் முஸ்லிம் தமிழ் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்களின் பட்டியல் பின்வருமாறு: ஆப்டாபாத் அபாட்டாபாத் ("Abbottabad") அல்லது ஆப்டாபாத் ("Abtabad", , ; ; ) பாக்கித்தானின் "கைபர் பக்தூன்க்வா" மாநிலத்தில் அசீரா பகுதியில் அமைந்துள்ள இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகும். ஓராஷ் பள்ளத்தாக்கில் உயரத்தில் நாட்டின் தலைநகர் இசுலாமாபாத்திலிருந்து வடகிழக்கில் தொலைவிலும் பெசாவரிலிருந்து கிழக்கில் தொலைவிலும் அமைந்துள்ளது. பாக்கித்தான் முழுமையிலும் இந்நகர் குளுமையான காலநிலைக்கும் உயர்தர கல்விநிலையங்களுக்கும் படைத்துறை அமைப்புகளுக்கும் பெயர்பெற்றது. அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் இங்குதான் 2005ஆம் ஆண்டு முதல் தனது இறுதிக் காலம்வரை வாழ்ந்திருந்தார். ராம் ஸ்ரீராம் ராம் ஸ்ரீராம் கூகுள் இணையதள முதல் முதலீட்டாளர்களில் ஒருவராவர். அவர் முன்னதாக அமேசான் டாட் காம் இணையதள நிறுவனத்தில் அதன் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் பணியாற்றினார். போர்பஸ் உலகின் பெரும் பணக்காரர் (பில்லியனர்) பட்டியலில் இவர் 2007 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இடம் பிடிக்கிறார். 2005 ஆண்டின் படி இவர் 3.4 மில்லியன் கூகுள் பங்குகளை பெற்றிருந்தார். தூதரகங்களின் பட்டியல், பஹ்ரேய்ன் இது பஹ்ரேய்ன் நாட்டுத் தூதரகங்களின் பட்டியல். வெலம்பொடை வெலம்பொடை ("Welamboda") இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமமாகும். கிட்டத்தட்ட 5000 பேரைக் கொண்டது வெலம்பொடை கிராமம். இங்கு ஒரு ஜும்மா பள்ளியும் 9 தக்கியாக்களையும் அமைந்துள்ளன. கண்டிய மன்னர் காலத்திலேயே வெலம்படை குடியிருப்புக்கள் ஆரம்பமானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கண்டிய மன்னர்களது ஆஸ்தான வைத்தியர்களாக இருந்த பல முஸ்லிம்களின் குடும்பங்கள் வெலம்பொடையில் குடியமர்த்தப்பட்டது இக்கருத்துக்கு சான்றாக அமைகிறது. இவர்களில் ஒருவரான செய்கு முகம்மத் உடையார் என்பவருக்கு கண்டி மன்னன் கீர்த்திசிரி ராஜசிங்கன் செப்புசாசனம் மூலம் 1747 இல் வெலம்படைப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சன்னச என்று இச்சாசனம் பற்றி தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி கம்புறுபிடிய தேரர் குறிப்பிடுகிறார். ஐமன் அழ்-ழவாகிரி ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி ("Ayman Muhammad Rabaie al-Zawahiri", , ""; பிறப்பு சூன் 19, 1951) ஓர் எகிப்திய இசுலாமிய மெய்யியலாளர். "எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின் " தலைவர் அப்த் அல் ஸுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய "அமீராக" இருப்பவர். மே 2, 201 முதல், உசாமா பின் லாதினின் மறைவிற்குப் பின்னால், இவரே அல் காயிதாவின் முக்கியத் தலைவராக விளங்குகிறார். இவர் தனது பார்வைகளிலும் செயலாக்கத்திலும் உசாமா பின் லாதினை விட மிகவும் தீவிரமானவராகக் கருதப்படுகிறார். அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை 1986ஆம் ஆண்டு ஜித்தாவில் சந்தித்தார். அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு அரபி , ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி உண்டு. அல்காயிதாவின் உறுப்பினர் என்பதால் இவர் மீது ஐ.நா பாதுகாப்பு அவை 1267 குழு உலகளவில் தடைகள் விதித்துள்ளது. 1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார். நாபொலியின் நான்கு நாட்கள் நாபொலியின் நான்கு நாட்கள் ("Four days of Naples", இத்தாலியம்: "Quattro giornate di Napoli") என்னும் தொடர் இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் நாபொலி நகரின் மக்கள் நாசி ஜெர்மனியின் படைகளுக்கு எதிராக நடத்திய எழுச்சியைக் குறிக்கிறது. செப்டம்பர் 27-30, 1943 ஆகிய நான்கு நாட்களில் ஜெர்மானியர்களுடன் மோதிய நகர மக்களும் இத்தாலிய எதிர்ப்புப்படையினரும், ஜெர்மானியப் படைகளை நகரத்திலிருந்து வெளியேற்றினர். இத்தீரச் செயலுக்காக படைத்துறை வீரத்துக்கான தங்கப்பதக்கத்தை இத்தாலியின் அரசர் மூன்றாம் விக்டர் எமானுவேல் நாபொலி நகரத்துக்கு வழங்கி சிறப்பித்தார். எழுச்சி வெற்றி பெற்ற மறுநாள் (அக்டோபர் 1) நேச நாட்டுப் படைகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன. செப்டம்பர் 3, 1943ல் [நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு]] ஆரம்பமானது. அதே நாள் இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்தது. இந்த சரணடைவு செப்டம்பர் 8ம் தேதி இத்தாலிய மக்களுக்கும் படைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஜெர்மானியர்கள் இத்தாலியை ஆக்கிரமித்தனர். இத்தாலியர்களிடையே சரணடைவை ஏற்று அணி மாறுவதா அல்லது ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக அச்சுக் கூட்டணியில் நீடிப்பதா என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்நாட்டுப் போர் மூண்டு. நாபொலி நகர மக்கள் நேச நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தனர். சரணடைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பத்தால், நாபொலியிலிருந்த இத்தாலியப் படைப்பிரிவுகள் நிலை குலைந்து சிதறின. ஜெர்மானியப் படைகள் அந்ந்கரை ஆக்கிரமித்தன. ஜெர்மானியப் படைகளுக்கும் நாபொலி மக்களுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு நிலை மோசமானது. செப்டம்பர் 13ம் நாபொலியிலிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி வால்டர் ஸ்கோல் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். நாபொலி மக்கள் ஜெர்மானிய படைவீரர்களைத் தாக்கினால், கொல்லப்படும் ஒவ்வொரு ஜெர்மானியருக்குப் பழியாக நூறு நாபொலியர்கள் கொல்லப்படுவார்கள் என அச்சுறுத்தினார். முற்றுகை நிலை அமலில் இருப்பதாகவும், அதனால் மக்கள் தங்களிடமுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் தன் படைகளிடம் ஒப்படைக்கும்படியும் ஆணையிட்டார். அவரது ஆணைகளை எதிர்த்தவர்கள் பொதுவிடங்களில் கொல்லப்பட்டனர். இதனால் நாபொலியர்களின் கோபம் அதிகமானது. வெளிப்படையாக ஜெர்மானியர்களுடன் மோத அவர்கள் தயாராகினர். ஆயுதங்களும், அவற்றுக்கான குண்டுகளும் திருடப்பட்டு சேகரிக்கபபட்டன. செப்டம்பர் 22ம் தேதி 18 முதல் 33 வயது வரை உள்ள அனைத்து இத்தாலியர்களும் கட்டாய உழைப்பில் ஈடுபட வேண்டுமென்று ஸ்கோல் ஆணையிட்டார். மேலும் கடற்கரையிலிருந்து 300மீ தொலைவுக்குள் வாழும் அனைத்து நாபொலியர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்து இடம் பெயர உத்தரவிட்டார். நாபொலி துறைமுகப் பாதுகாப்பாக இடப்பட்ட இந்த ஆணையால் 2,40,000 பேர் பாதிக்கப்பட்டனர். கட்டாய உழைப்புக்காக ஜெர்மனிக்குச் செல்ல மறுத்த இத்தாலியர்களுக்கு மரண தண்டனை விதித்தார். இச்செயல்பாடுகள் நாபொலியில் ஆயுதப் புரட்சி வெடிக்க இறுதித் தூண்டுகோலாக அமைந்தன. செப்டம்பர் 26ம் நாள் பெரும் மக்கள் கூட்டமொன்று ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தது. மறுநாள் முதல் வெளிப்படையாக புரட்சி வெடித்து, “நாபொலியின் நான்கு நாட்கள்” துவங்கின. செப்டம்பர் 27 அன்று சுமார் 8000 நாபொலியர்களை ஜெர்மானியர்கள் கைது செய்தனர். ஆயுதமேந்திய எதிர்ப்புப் படைகள் கைதிகளை விடுவிக்கவும், ஆயுதங்களைக் கைப்பற்றவும் ஜெர்மானிய படைநிலைகளைத் தாக்கத் தொடங்கின. மறுநாள் எழுச்சி நாபொலியில் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, மேலும் பல நாபொலியர்கள் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்து கொண்டனர். ஜெர்மானிய ரோந்துக் குழுக்கள் தாக்கப்பட்டன. துறைமுகத்தையும் வானூர்தி நிலையத்தையும் கைப்பற்ற இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். செப்டம்பர் 29 அன்று கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்தது; ஜெர்மானியர்கள் பீரங்கிகளைக் கொண்டும் கண்மூடித்தனமாகவும் தாக்கியதால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 30ம் தேதி நேச நாட்டுப் படைகள் நாபொலி நகரை அணுகும் செய்தி கிட்டியவுடன் ஜெர்மானியர்கள் பின்வாங்கத் தொடங்கினர். காலி செய்து செல்லும்போதும் நாபொலியின் பல பகுதிகள் மீதி பீரங்கித் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தனர். அக்டோபர் 1 அன்று காலை 9.30 மணியளவில் நேச நாட்டுப் படைகள் நாபொலியில் நுழைந்த பின்னர் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. நான்கு நாட்கள் நடந்த போராட்டங்களிலும் மோதல்களிலும் நூற்றுக்கணக்கான நாபொலியர்கள் கொல்லப்பட்டனர். மாண்டவர்கள் எத்தனை பேர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. இக்கிளர்ச்சியால் நாபொலியை நேச நாட்டுப் படைகளுக்கு எதிரான அரண்நிலையாக பயன்படுத்த ஜெர்மானியர்கள் வகுத்திருந்த திட்டம் பாழானது. நாபொலி மக்களின் தீரத்தைப் பாராட்டி படைத்துறை வீரத்துக்கான தங்கப்பதக்கத்தை இத்தாலியின் அரசர் மூன்றாம் விக்டர் எமானுவேல் நாபொலி நகரத்துக்கு வழங்கி சிறப்பித்தார். குவார்ட்சு குவார்ட்சு ("Quartz", "குவார்ட்ஸ்"; ஒலிப்பு: "குவார்ட்ஃசு") என்பது புவியின் மேலோட்டில் (புறணியில்), சிலிக்கேட்டு வகைப் பாறைக் கனிமமாகிய ஃபெல்டுஸ்பாருக்கு அடுத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் கனிமமாகும். இது தொடர்ச்சியான SiO சிலிக்கான்-ஆக்சிசன் மூலக்கூற்றால் ஆன நான்முகியாகும். இதில் இரண்டு நான்முகிகளுக்கு இடையில் ஆக்சிசன் பகிரப்பட்டிருக்கும். இதன் வாய்பாட்டை SiO எனக்குறிக்கலாம். குவார்ட்சில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில மதிப்பு மிகு இரத்தினக் கற்களாகும். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் குவார்ட்சின் சில வகைகள் நகைகள் செய்யவும் கல்லோவியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. "குவார்ட்சு" எனும் சொல்லின் பிறப்பியல் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த செர்மானிய மொழியிலிருந்து தொடங்குவதாகக் கருதுகின்றனர். குவார்ட்சு (quartz) எனும் சொல் நடுவுயர் செருமானியச் சொல்லாகிய twerc என்பதன் மாற்று வடிவான querch என்பதன் சுருக்கமாக quartz என்று வந்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். இது வேறு வழியாகவும் வந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். "உறுதி", "கெட்டி" என்னும் பொருள்கள் தரும் "twardy" என்னும் மேற்கு சிலாவியச்சொல்லும், "tvrdý" என்னும் செக் மொழிச் சொல்லும், போலிசு மொழிச்சொல் ட்வார்டி (twardy) என்பதும் தொடர்புடையதாக கூறுவர். குவார்ட்சு முக்கோண படிக அமைப்பைச் சார்ந்தது. இதன் நல்லியல்பு படிக வடிவம் ஒவ்வொரு பக்கத்திலும் ஆறு பக்க பிரமிடுகளைக் கொண்டு முடிவுறும் ஆறு பக்கப் பட்டகமாகும். இயற்கையில் குவார்ட்சு படிகங்கள் பளிங்கிருமைத் தன்மை (Crystal twinning property), குலைவுத்தன்மை உடையனவாகவும் அருகிலுள்ள படிகங்களுடனோ பிற கனிமங்களுடனோ உள்வளர்ச்சி உடையனவாகவும் உள்ளன. மேலும் சில நேரங்களில் பக்கங்கள்/முகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்துப் படிகம் மிகப் பெரியதாகக் காட்சியளிக்கும். α-குவார்ட்சு முக்கோணப் படிக அமைப்பையும் வெளிக்குழு (space group) "P"321ஐயும் "P"321 முறையே கொண்டது. β-குவார்ட்சு அறுங்கோணப் படிக அமைப்பையும் வெளிக்குழு "P"621ஐயும் "P"621 முறையே கொண்டது. α-குவார்ட்சு, β-குவார்ட்சு இவ்விரண்டுமே "கைரல்" (Chiral) படிகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். α-குவார்ட்சுக்கும் β-குவார்ட்சுக்கும் இடைப்பட்ட உருமாற்றம், அவற்றின் இணைக்கப்பட்ட விதத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நான்முக முக்கோணகத்தில் (Tetrahedron) ஒன்றைப் பொறுத்து மற்றொன்று சிறிய அளவிலான சுழற்சியையே கொண்டுள்ளது. தூய குவார்ட்சு, காலங்காலமாக கல் படிகம் (சிலநேரங்களில் தெளிவான குவார்ட்சு) என்று அழைக்கப்படுகிறது. இது நிறமற்றது, ஒளியூடுருவும் தன்மை உடையது மேலும் "லொதைர் படிகத்தைப்" போன்று கருங்கல் ஓவியத்திற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. பொதுவான நிறமுடைய குவார்ட்சு படிகங்கள் எலுமிச்சை வண்ணக் குவார்ட்சு, இளஞ்சிவப்புக் குவார்ட்சு, செவ்வந்திக்கல், சாம்பல் வண்ணக் குவார்ட்சு, பால் வண்ணக் குவார்ட்சு ஆகியவற்றை உள்ளடக்கியது. குவார்ட்சின் வகைகளுக்கிடைப்பட்ட முதன்மையான வேறுபாடு அது பெரும்படிகமா (macrocrystalline) நுண்படிகமா (microcrystalline) அல்லது படிக வடிவற்றதா (cryptocrystalline) என்பதேயாகும். படிகவடிவற்ற வகைகள் ஒளியூடுருவுவனவாகவோ மிகவும் ஒளியூடுருவாத் தன்மையுடையனவாகவோ இருக்கும். ஆனால் பெரும்படிக வகைகள் அனைத்துமே ஒளியூடுருவும் வகையாகும். சிட்ரின் (எலுமிச்சை வண்ண குவார்ட்சு) (citrin) எனும் குவார்ட்சு வகை வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை நிறமாறுபாட்டைக் கொண்டுள்ளது. இயற்கை சிட்ரின்கள் மிகவும் அரிதானவை. வணிகநோக்கிலான சிட்ரின்கள் செவ்வந்திக்கல்லையோ சாம்பல் வண்ண குவார்ட்சையோ சூடுபடுத்திப் பெறப்படுகின்றன. மஞ்சள் புட்பராகத்திலிருந்து சிட்ரைனை வெட்டி எடுப்பது உறுதியான ஒன்றன்று. அவை கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. சிட்ரின் இரும்பு மாசுகளைக் கொண்டுள்ளது. மேலும் இயற்கையாகவே அரிதாகவே இது புலப்படுகிறது. பிரேசில் தான் சிட்ரின் உற்பத்தியில் முன்னணியிலிருக்கும் நாடாகும். அந்நாட்டின் "ரியோ கிரான்டெ டு சுல்" (Rio Grande do sul) எனும் மாநிலமே அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடமாகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் மஞ்சள் என்று பொருள்படும் "சிட்ரினா" (citrina) எனும் சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். மேலும் "சிட்ரான்" (citron) எனும் சொல்லுக்கும் அச்சொல்லே மூலமாகும். சிலநேரங்களில் சிட்ரினும் செவ்வந்திக்கல்லும் சேர்ந்தே ஒரு படிகத்திலேயே கிடைக்கும். இத்தகு படிகம் அமெட்ரின் (ametrine) எனப்படும். சிட்ரின் நவம்பர் மாதத்திற்கான பிறப்புக்கல் ஆகும். இளஞ்சிவப்பு குவார்ட்சு வெளிறிய இளஞ்சிவப்பு நிறம் முதல் சிவப்பின் சாயல் (hue) வரை வண்ணம் பெற்றுள்ள ஒருவகை குவார்ட்சு ஆகும். இந்த நிறம், டைட்டானியம், இரும்பு அல்லது மாங்கனீசு ஆகியவற்றின் சிறிதளவான கலப்பினால் ஏற்படும். சில இளஞ்சிவப்பு குவார்ட்சு வகைகள் நுண்ணளவிலான ரூட்டைலைக் (TiO) கொண்டிருக்கின்றன. அண்மைய X-கதிர் விளிம்பு விளைவு ஆய்வுகள் இந்த இளஞ்சிவப்பு நிறம் அலுமினியம் போரோ சிலிக்கேட்டுக் கனிமமாகிய, டியூமோர்டியரைட்டின் (Dumortierite) நுண்ணிய நார்களால் ஏற்படுகின்றன என்று காட்டுகின்றன. மங்கிய செவ்வூதா நிறம் முதல் அடர்வான செவ்வூதா நிறம் வரையிலான குவார்ட்சு பொதுவாக செவ்வந்திக்கல் (Amethyst) என்றறியப்படுகிறது. சாம்பல் வண்ண குவார்ட்சு (Smoky quartz) அரைகுறையாக ஒளியூடுருவும் (translucent) வகையாகும். இது பழுப்பு-சாம்பல் வண்ண முழுமையான ஒளிபுகும் தன்மை முதல் முழுவதும் ஒளியூடுருவா நிலை வரை வேறுபடுகிறது. சில வகைகள் கருப்பு நிறத்திலும் உள்ளன. பால் குவார்ட்சு (milk quartz) அல்லது பால் வண்ண குவார்ட்சு (milky quartz) (வெங்கச்சாங்கல்) எனும் குவார்ட்சு வகையே பொதுவாக எங்கும் காணப்படும். இந்த வெண்ணிறம் சிறிய அளவிலான நீர்ம உள்ளீடாலோ (fluid inclusion) வளிம (வாயு) உள்ளீடாலோ அல்லது இரண்டின் உள்ளீடாலோ ஏற்பட்டிருக்கும். வரலாறுகளில் பலகாலங்களாக கனிமத்தின் நிற அடிப்படையில் பல பெயர்கள் வழங்கப்பட்டாலும், தற்போது இடப்படும் அறிவியற்பெயர்கள் பொதுவாக அவற்றின் நுண்வடிவத்தை வைத்தே உள்ளன. படிகவடிவமற்ற படிகங்களுக்கு நிறம் இரண்டாவது அடையாளப்படுத்தியாக உள்ளது. மேலும் நிறமே பெரிய அளவிலான படிகங்களுக்கு முதன்மையான அடையாளச்சுட்டியாக உள்ளது. அனைத்து குவார்ட்சு வகைகளும் இயற்கையில் கிடைப்பதில்லை. ஒளிகசியும் புதினா பச்சை (அல்லது ஆலிவ்) நிற பொருளான பிரசியோலைட்டு வெப்ப முறை மூலம் உற்பத்திசெய்யப்படுகிறது, மேலும் இயற்கைப் பிரசியோலைட்டு 1950 முதல் பிரேசில் நாட்டில் இருந்து கிடைத்து வந்தது, இப்பொழுது போலந்து நாட்டின் சிலெசியா (Silesia) என்ற இடத்தில் இருந்தும், கனடாவில் தண்டர்பே என்னும் இடத்தில் இருந்தும் கிடைக்கின்றது . மேலும் சிட்ரின் இயற்கையில் கிடைத்தாலும், பெரும்பான்மையாக வெப்பப்படுத்தப்பட்ட செவ்வந்திக்கல்லே சிட்ரின் எனப்படுகிறது. கார்னெலியன் (Carnelian) அதன் நிறம் அடர்வாகும் வகையில் சூடுபடுத்தப்படுகிறது. இயற்கைக் குவார்ட்சு எப்போதும் பளிங்கிருமையாதல் (crystal twinning) என்னும் படிகப் பிழை கொண்டிருக்கும். எனவே தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் பல குவார்ட்சு வகைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பெரிய, குறையில்லாத, பளிங்கிருமையாகாப் படிகங்கள் ஆகும். குவார்ட்சு சிலிக்கான் ஆக்சைடு என்பதால் பற்பல சிலிக்கான் சேர்மங்கள் உருவாக்கத்தில் பயன்படுகின்றது. ஒருங்கிணைத்த சிலிக்கான் தொகுப்புச் சுற்றுகள் (IC) செய்யத் தேவையான அடிப்படை சிலிக்கான் சில்லுகளைச் (silicon wafers) செய்வதில் இதன் பயன் இல்லாவிடினும் அவற்றைச் செய்யப் பயன்படும் பல உயர்வெப்பநிலை உலைகளில் இது குழாய்களாகப் பயன்படுகின்றது. சிலிக்கோன் என்னும் பலபடி செய்யவும் பயன்படுகின்றது. உயர் வெப்பநிலையை நிலைமைப் பண்புடன் தாங்கும் என்பதால் பல தொழிலகங்களில் உராய்வுப்பொருளாகவும் (abrasive), உரு வடிப்பு அச்சுகளாகவும், சுட்டாங்கல் (Ceramics), பைஞ்சுதை (cement) செய்வதில் பயன்படுகின்றது. குவார்ட்சுப் படிகங்களின் சிறப்பான பண்புகளில் ஒன்று அழுத்தமின் விளைவு (பீசோமின்சாரம்) கொண்டிருப்பது. புறவிசை ஒன்று தரப்படும்பொழுது படிக அமைப்பு சிறிதளவு மாற்றம் பெறுவதால், குவார்ட்சு கட்டியில் மின்னழுத்தம் உருவாக்கும். இன்றைய படிக அழுத்தமின் விளைவின் முதன்மையான பயன்பாடு படிக அலையியற்றி ஆகும். குவார்ட்சு கடிகாரம் எனும் கருவியும் இப்படிகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே ஆகும். குவார்ட்சு படிக அலையியற்றியின் ஒத்திசைவு அதிர்வெண் இயந்திரவியல் முறைகள் மூலம் மாற்றப்படுகின்றன. இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே மிகக் குறைந்த எடை மாற்றங்களையும் குவார்ட்சு படிக நுண்ணளவியில் (quartz crystal microbalance) அளவிட உதவுகிறது. மேலும் ஆவியாக்கிப் படியச்செய்தோ தெறிப்பு முறையிலோ மென்படலங்கள் உருவாக்கும்பொழுது, படிகத்தின் எடைமாற்றத்தால் அதிர்வெண் மாறுவதைக் கொண்டு படிந்த பொருளின் தடிமனை அளக்கவும் கண்காணித்துக் கட்டுப்படுத்தவும் (thin-film thickness monitor) முடியும். கணினிகளில் மையச்செயலகத்தின் உள்ளே இயங்கும் துல்லிய கடிகாரங்களுக்கும் இது பயன்படுகின்றது. கருங்கல்லிலும், பிற தீப்பாறைகளிலும் குவார்ட்சு ஒரு அடிப்படைக் கூறாக உள்ளது. படிவுப் பாறைகளான மணற்கல், மென்களிமண் கல் (shale) போன்றவற்றிலும் இது உள்ளது. மேலும் சில கால்சியம் கலந்த அல்லது கால்சியமும் மக்னீசியமும் கலந்த கார்பனேட் பாறைகளிலும் காணக்கிடைக்கின்றன. வானிலை, தட்பவெப்ப நிலைகளால் மாறும் தன்மையை அளக்கும் கோல்டுரிச்சு கரைப்பான் வரிசைப்படி, குவார்ட்சு மிகவும் குறைவான தாக்கத்தையும், மிகவும் நிலையான வேதியியல் வடிவத்தையும் கொண்ட ஒரு பொருள் என்று அறியபப்டுகின்றது. பிற கனிமங்களின் தாதுக்களிலும் இது உடன் கிடைக்கிறது. மிகவும் சரியாக உருவான படிகங்கள் பல மீட்டர் நீளம் வரையும், 640 கிலோ கிராம் எடை வரையும் அடைகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் குவார்ட்சு படிகங்கள் மிகத் தூய்மையானவை. இவை சிலிக்கான் செதில்கள் உற்பத்தியில் முதன்மையானப் பங்காற்றுகின்றன. இவை அரியவை மேலும் விலை அதிகமானவை. மிகுதூய்மையான குவார்ட்சு, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்திலுள்ள ஸ்ப்ரூஸ் பைன் சுரங்கத்தில் இருந்து கிடைக்கின்றது. பெரும்பாலும் மெக்சிக்கோவில் கிடைக்கும் டிரைடிமைட்டும், 1470 °C வெப்பநிலைக்கு மேல் நிலைமை கொள்ளும் கிரிஸ்டோபலைட்டும் SiO-இன் உயர்வெப்பநிலை மாற்றியங்கள் (ஒரே பொருள் மாற்றுரு கொண்டிருத்தல்). இவை சிலிக்கா எரிமலைப் பாறைகளில் உருவாகின்றன. கோயெசைட்டு புவியின் கருவத்தை விடவும் அதிக அழுத்தம் கொண்ட அதனைப் போன்ற பாறைகளில் உருவாகும் இன்னொரு வகையான மாற்றியம் (polymorph) ஆகும். சதுரப்பட்டக வடிவில் அமையும் ஸ்டிசோவைட்டும் (Stishovite) , அண்மையில் செவ்வாய்க் கோளிலும் கண்டுபிடிக்கப்பட்ட சைவர்டைட்டும் (Seifertite) அதிக அழுத்தத்தில் உருவாகும் பிற அடர்வுமிகு மாற்றியம் ஆகும். லெகாடெலியெரைட் என்பது படிகவடிவமற்ற சிலிக்கா கண்ணாடி SiO ஆகும். இது மின்னல் குவார்ட்சு மணல் மீது மோதுவதால் உருவாகிறது. குவார்ட்சு (quartz) எனும் சொல் செர்மானிய மொழியிலிருந்து வருவதாகும்.. இச்சொல் சிலாவியத்தை மூலமாகக் கொண்டது. (செக் சுரங்கத்தொழிலாளர்கள் இதனை "கியெமென்" ("křemen") என்றழைத்தனர்). இச்சொல்லின் மூலத்தைச் சில இடங்களில் "குவெர்க்லுஃப்டெர்சு" ("Querkluftertz") என்ற இடையீடு-விரிசல் தாது (cross-vein ore) என்று பொருள்படும் சாக்சன் சொல் என்றும் கூறுவதுண்டு. அயர்லாந்திய மொழியில் குவார்ட்சு எனும் சொல்லுக்கு கதிரவக் கல் (stone of sun) என்று பொருள். ஆஸ்திரேலிய பழங்குடியின நம்பிக்கையின்படி குவார்ட்சு மாயமந்திரத் தன்மைகளைக் கொண்ட மபன் (maban) என்ற பொருளாக அறியப்பட்டிருக்கிறது.. அயர்லாந்து நாட்டில் இறந்தோரைப் புதைக்கும் இடங்களில் பரவலாகக் காணப்பட்டது. மேலும் குவார்ட்சு கற்கள் ஆயுதங்களாகவும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பயன்பட்டிருந்திருக்கின்றன. முன்னாட்களில் கிழக்கு ஆசியாவிலும் கொலம்பசுக்கு முந்தைய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் பச்சைக்கல்லே (jade) விலைமதிக்கத்தகு ஒன்றாகவும் நகைகள் செய்யவும், கல்லோவியங்கள் தீட்டவும் பயன்படுத்தப்பட்டும் வந்தது. இந்த முறையே 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தொடர்ந்துவந்தது. உரோமானிய இயற்கை அறிஞர் மூத்த பிளினி (Pliny the Elder) குவார்ட்சைப் பல காலங்களாக உறைந்திருக்கும் பனிக்கட்டி என்று நம்பினார். படிகம் என்ற சொல்லைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் "crystal" என்பது கிரேக்க மொழிச் சொல்லான "κρύσταλλος", "ice" என்பதிலிருந்து வந்ததேயாகும். அவர் இந்த கருதுகோளைக் குவார்ட்சு ஆல்ப்ஸ் மலையின் பனியாறுகளுக்கு அருகில் காணப்படுவதாகவும் ஆனால் எரிமலைகளுக்கு அருகில் காணப்படவில்லையென்றும் கூறி ஆதரித்தார். அவருக்கு ஒளியை நிறமாலையாக குவார்ட்சு மாற்றுவதும் தெரிந்திருந்தது. இக்கருதுகோளே 17ஆம் நூற்றாண்டு வரையிலும் நீடித்தது. 17ஆம் நூற்றாண்டில் நிக்கோலசு ஸ்டெனோவின் குவார்ட்சு பற்றிய ஆய்வு நவீன படிகவியலுக்கு வழிவகுத்தது. குவார்ட்சு படிகத்தை எந்தவித பாதிப்புக்கு உட்படுத்தினாலும், அதன் பாகை எப்போதும் 60° ஆகவே இருக்கும் என்பதை இவரே கண்டறிந்தார். சார்லசு பி. சாவ்யெர் என்பவரே குவார்ட்சை வர்த்தக நோக்கில் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டறிந்தார். இது சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட குவார்ட்சை மின்னணு கருவிகளில் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றும் முறைகளைக் கொண்டது. குவார்ட்சின் அழுத்தமின் விளைவுப் பண்புகளை ஜாக்குவெஸ், பியரி கியூரி ஆகிய இருவரும் 1880இல் கண்டறிந்தனர். குவார்ட்சு அலையியற்றி அல்லது ஒத்திசைவி என்பது வால்ட்டர் கைட்டன் கேடிய் என்பவரால் 1921இல் மேம்படுத்தப்பட்டது. கேடிய், பியரியின் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாரென் மாரிசன் முதல் குவார்ட்சு அலைவுறு கடிகாரத்தை 1927இல் உருவாக்கினார். ஜார்ஜ் வாசிங்டன் பியர்சு என்பவர் குவார்ட்சு அலையியற்றிகளை 1923இல் உருவாக்கி அவற்றுக்குக் காப்புரிமை பெற்றார். கெர்மிட் த ஃபுராக் கெர்மிட் த புரொக் ("Kermit the Frog") எனப்படும் பொம்மை பொம்மலாட்டத்தில் பெயர்பெற்ற ஜிம் ஹென்சன் என்பவரின் மிகப்பிரபலமான படைப்பாகும். கெர்மிட் 1955இல் முதற் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. த மப்பட் ஷோ, சிசேம் சிரீட் மற்றும் பல விளம்பரங்களில் கெர்மிட் த புரொக் தோன்றுகின்றது. 1990 இல் இறக்கும் வரை ஜிம் ஹென்சனினாலேயே கெர்மிட் த புரொக்கின் பொம்மலாட்டம் நிகழ்த்தப்பட்டது. ஹென்சனின் இறப்பின் பின்னர் ஸ்றீவி விட்மையர் என்பவரால் இந்தப் பொம்மலாட்டம் நிகழ்த்தப்படுகின்றது. 1979 இல் த ரெயின்போ கெனக்சன் எனும் பாடலை த மப்பட் மூவி எனும் முழுநீள பொம்மலாட்ட திரைப்படத்தில் கெர்மிட் தோன்றினார். இந்த திரைப்படத்தில் முற்றுமுழுதாக ஹென்சனின் படைப்பில் உருவான பொம்மைகளே பங்கு பற்றின என்பது சிறப்புச்செய்தி. இந்தப் பாடல் பில்போர்ட் பட்டியலில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. பெட்சி ஹென்ரன் பெட்சி ஹென்ரன் ("Patsy Hendren", பிறப்பு: பெப்ரவரி 5 1889, இறப்பு: அக்டோபர் 4 1962) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 833 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1920 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மைக் ஹென்றிக் மைக் ஹென்றிக் ("Mike Hendrick", பிறப்பு: அக்டோபர் 22 1948 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 267 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1981 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரிஸ்டோபர் ஹசேல்டன் கிரிஸ்டோபர் ஹசேல்டன் ("Christopher Heseltine", பிறப்பு: நவம்பர் 26 1869), இறப்பு: சூன் 13 1944) இங்கிலாந்து அணியின் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 79 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கிரயேம் ஹிக் கிரயேம் ஹிக் ("Graeme Hick", பிறப்பு: மே 23 1966), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 120 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 526 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 651 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். கென் ஹிக்ஸ் கென் ஹிக்ஸ் ("Ken Higgs", பிறப்பு: சனவரி 14, 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 511 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 - 1968 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டை ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே இந்த அறிவிப்பு வெளியானது. ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் நலனுக்காக தேசிய மட்டத்திலான செயற்பாடுகளையும், பன்னாட்டு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இந்த ஆண்டின் அடிப்படைக் குறிக்கோள். ஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் பல்வேறுபட்ட மரபுகள், பண்பாடுகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிப்பதிலும், இவை குறித்த அறிவை மேம்படுத்துவதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ஆண்டு உதவும் என்பதுடன், ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கு எதிரான இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பை உருவாக்குவதற்குத் தேவையான உந்து சக்தியாகவும் இந்த ஆண்டின் செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க வம்சாவழியினர் பரவலாக இனவாதத்துக்கும், இனப் பாகுபாட்டுக்கும் உள்ளாகி வந்தனர். அடிமை வணிகம், குடியேற்றவாதம் என்பவற்றின் அடிப்படையாக அமைந்த இந்த இனப்பாகுபாட்டின் வெளிப்பாடுகள் இன்றும் இம்மக்களைப் பாதிக்கின்றன. பல வகைகளாகக் காணப்படும் இந்த இனவாதத்தின் வெளிப்பாடுகள் மனித உரிமைகளை மீறுவனவாகவே அமைகின்றன. 2001 ஆம் ஆண்டிலேயே இத்தகைய பிரச்சினைகளை ஆராயவும், ஆப்பிரிக்க வம்சாவழியினர் மீதான இனப்பாகுமாட்டை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ஒரு குழுமை ஐக்கிய நாடுகள் அவை அமைத்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்க வம்சாவழியினர் நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, நலச் சேவைகள், வீட்டு வசதி போன்றவற்றில் பாகுபாடாக நடத்தப்படுவதாக இக் குழு கண்டறிந்தது. 2001 இல் இனவாதத்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்" என்னும் ஆவணம், ஆப்பிரிக்க வழிவந்தோரை, இனப்பாகுபாட்டினால் இன்றும் பாதிக்கப்படும் ஒரு குழுவினராக ஏற்றுக்கொண்டுள்ளது. மேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம், அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது.