சீர்காழி இரா. அரங்கநாதன் சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் (S. R. Ranganathan, ஆகத்து 12, 1892 - செப்டம்பர் 27, 1972) இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர்; கோலன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நுலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர். இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அரங்கநாதன் 12 ஆகத்து 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் மூத்த மகன். இவரது தந்தையார் இராமாமிருதம், தாயார் சீதாலட்சுமி. இராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர், படித்த பண்பாடுள்ள மனிதர். இவர் நடுத்தர அளவில் நிலமொன்றை வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தார். மக்களுக்கு இராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. இராமாமிருதம் 1898 ஆம் ஆண்டில் அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார். அப்போது அரங்கநாதனுக்கு ஆறு வயது. பின்னர் இவர் பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி அரங்கநாதனுக்குப் பயிற்சி ஏற்பட்டது. இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன. சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909ல் இடம்பெற்ற மெட்ரிக்குலேசன் பரீட்சையில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909ல் சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார். அரங்கநாதன் 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 15 வயதாக இருக்கும்போது ருக்மணி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1928ல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ருக்மணி இறந்துவிட்டார். இந்தத் திருமணம் மூலம் அரங்கநாதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அரங்கநாதன் 1929ல் இரண்டாவது முறையாக சாரதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். சாரதா மூலம் அரங்கநாதனுக்கு ஒரு மகன் உண்டு. கல்வியை முடித்துக்கொண்ட அரங்கநாதன், மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் மதராசு பிரெசிடென்சி கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். ஆசிரியத் தொழிலில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனாலும், வருமானம் போதியதாக இருக்கவில்லை. தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராசுப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924 சனவரியில் மதராசுப் பல்கலைக்கழகத்தில் நூலகராக நியமனம் கிடைத்தது. இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சிக் கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார். 9 மாதங்கள் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்ற அரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். அக்காலத்தில் மதராசுப் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட அரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார். ஹொங்கொங்கில் உள்ள குடாக்களின் பட்டியல் ஹொங்கொங் புவியியல் ரீதியாக 263 தீவுகளையும் கவுலூன் தீபகற்பத்தையும் கொண்டது என்றாலும், இவற்றில் பல குடாக்களையும் கொண்டுள்ளது. ஹொங்கொங்கின் ஆட்சிப் பரப்பு ஹொங்கொங் தீவு, கவுலூன் மற்றும் புதிய கட்டுப்பாட்டகம் ஆகிய மூன்று பிரதானப் பகுதிகளைக் கொண்டது. அதனடிப்படையில் ஹொங்கொங்கில் உள்ள குடாக்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. இவற்றில் பல குடாக்கள் கடல் பரப்பை நிரப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நிர்மானப்பணிகளினால் மறைந்துவிட்டன. மேலும் பல குடாக்கள் எதிர்வரும் காலங்களில் மறைந்துவிடும் என அறியப்படுகின்றது. கவுலூன் மற்றும் புதியக் கவுலூன் பகுதியில் குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளும் உள்ளடக்கம். புதிய கட்டுப்பாட்டகம் மற்றும் புதியக் கவுலூனில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையும் உள்ளடக்கியப் பகுதிகளில் உள்ள குடாக்கள்: கொட்டிச்சேதம் கொட்டிச்சேதம் என்பது நாட்டிய முறைகளுள் ஒன்று. இந்த நாட்டியம் முப்புரமெரித்த வேளையில் விரிசடைக்கடவுள் சிவபெருமான் ஆடியது என்று சிலரும்காஞ்சியில் தவமிருந்த சக்தியின் முன் ஆடியது என்றும் உமையொருபாகனாய் இறைவன் ஆடிய நடனம் என்றும் கூறுவர். சடைமுடி கலைந்து அலம்பி ஆடும். உமையொரு பாகனாக சிவபெருமான் ஆடுகின்ற ஆட்டம். அதிலே, இடது புறம் ஆண்பாதி கண்ணில் கோபம் கனன்று சிவக்க, வலப் புறம் பெண்பாதியில் கண் அன்பு பொங்கும். வலதுகால் ஆடும், இடது கால் அசையாது நிற்கும், வலது சடை அழகாக அப்படியே இருக்க, இடது சடைமுடி கலைந்து அலம்பி ஆடும் என்று சொல்லப்படுகிறது. வாய்ப்பூட்டு (கால்நடை வளர்ப்பு) வாய்ப்பூட்டு என்பது பசுவின் பச்சிளங்கன்றுகள் வாயைத் திறக்காமல் இருக்க அணிவிக்கப்படும் ஒன்றாகும். பொதுவாக இது கயிற்றால் செய்யப்பட்டு இருக்கும். இது கன்றுகள் கண்டதைத் தின்பதைத் தவிர்க்கும் பொருட்டும் தாயிடமிருந்து பாலைக் குடிப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் அணிவிக்கப்படும். இளம் கன்றுகளின் கழுத்தில் கயிறு கொண்டு அவற்றைக் கட்டிப்போட இயலாதாகையால் வாய்ப்பூட்டு போட்டு அவற்றை சுதந்திரமாக விடுவர். கன்று சற்று வளர்ந்து அவற்றைக் கட்டிப்போடும் நிலை வந்ததும் வாய்ப்பூட்டின் தேவை அகன்று விடும். நீலநாக்கு நோய் செம்மறி ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய்களில் ஒன்று நீல நாக்கு நோய் ("Bluetongue disease"). தமிழ்நாட்டில் மழைக் காலத்திலும் அதன் தொடர்ச்சியாகவும் இந்நோய் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இது ஆடுகளைத் தவிர எருமை, மான் போன்ற விலங்குகளையும் தாக்கும். இந்நோய் ரியோவிரிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த பி.டி வைரசினால் ஏற்படுகிறது. இந்நோய் கியூலிகாய்டஸ் எனும் ஈ , நோயுள்ள ஆட்டை கடித்தபின் மற்ற ஆடுகளை கடிக்கும் போது பரவுகிறது. இந்த ஈக்கள் மழைக்காலத்தில் வெகுவாக இனப்பெருக்கம் செய்வதால் நீல நாக்கு நோய், இக்காலத்தில் எளிதில் பரவுகிறது. இந்நோய் மழைக்காலங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் காணப்படுகிறது.   நோய் பாதித்த ஆடுகள் அதிக காய்ச்சலுடன் மேய்ச்சலுக்குச் செல்லாமல் சோர்வாகக் காணப்படும். மூக்கு மற்றும் வாயின் உட்பகுதிகள்   சிவந்து, மூக்குச்சளி மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக் கொண்டிருக்கும்.  மூக்கிலிருந்து  இரத்தத்துடன் கூடிய சளி வரும். உதடுகள்,ஈறுகள், நாக்கு, மூக்கு மற்றும் காதுகளில் வீக்கம்  ஏற்பட்டு புண் உண்டாகும்.  நாக்கு சில சமயம் தடித்து நீல நீறமாக மாறும். கால் குளம்புகளின் மேல் பகுதி சிவந்து வலியுடன் இருக்கும். கம்பளி இன ஆடுகளில் உரோமம்  உடைந்தும், பொலிவிழந்தும் காணப்படுவதால் உரோமங்களின் தரம் மிகவும் குறைந்து விடும். வாயில் கொப்புளங்களும், புண்களும் ஏற்படும். இதனால் ஆடுகளால் மேய முடிவதில்லை.  ஆடு உணவு உண்ண முடியாமல் பட்டினியால் இறந்து விடும்.  இந்நோய்க்கான சிகிச்சைமுறை எதுவும் இல்லை. பின்வரும் தடுப்பு முறைகளை பின்பற்றலாம்:                          குருதியுண்ணும் வௌவால் குருதியுண்ணும் வௌவால் அல்லது வம்பயர் வௌவால் ("Vampire bat") எனப்படுபவை குறும் கைச்சிறகிகள் வகையைச் சேர்ந்த ஒரு வகை வௌவால்கள் ஆகும். சாதாரண வௌவால்களைப் போல இவையும் பாலூட்டிகளே. அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட குருதியுண்ணும் வௌவால்கள் மெக்சிக்கோவிலிருந்து பிரேசில் வரையுள்ள பிரதேசத்திலும் சிலி, ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. குருதியுறுஞ்சும் வௌவால் வகையில் மூன்று உபகுலங்கள் காணப்படுகின்றன. நாசி கூம்புருவானது. வெப்பம், குளிர் உணர்வுகளை இனங்காண உதவும் வாங்கி அங்கங்கள் நாசியின் மேல் அமைந்துள்ளன. இவ்வாங்கி அங்கங்களே இரைகளின் குருதிக்கலன்களை இனங்காண உதவுகின்றன.சிறிய புறச்செவிகளும் மேற்றோலுக்குரிய வாலும் காணப்படும். வாயின் முன்புறம் பெரிய வெட்டும் பற்களும் அடுத்து வேட்டைப்பற்களும் உட்புறம் சிறிய பற்களும் காணப்படும். இவை இரவில் இரை தேடும் வழக்கம் உடையவை. குறைந்த சக்தி கொண்ட ஒலி அலைகளைப் பயன்படுத்தி இரைகளைக் கண்டறிகின்றன. மூளையில் காணப்படும் ஒலிவாங்கும் அமைப்பு இரையின் சுவாச ஒலியைக் கேட்குமளவு சிறப்படைந்தது. அகச்சிவப்பு கதிர்களை உணரக்கூடிய வகையிலான சிறப்பான உணர்கலம் மூளையில் காணப்படும். இது சில பாம்புகளுக்கு உள்ள விசேட கலங்களுக்குச் சமானமானதாகும்.. மனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் குருதியை உண்ணும். வம்பயர் வௌவால் கடிக்கவேண்டிய குருதிக்கலன் உள்ள தானத்தை இனங்கண்டு கடிக்கும். கடிவாயின் ஊடாக அதன் உமிழ் நீரைச் செலுத்தும்.உமிழ் நீரில் குருதி உறைவைத் தடுக்கக் கூடிய டிரக்குயிலின் ("Draculin") எனும் பொருள் உள்ளது. குருதியை உறிஞ்சிக் குடிக்காது. கடிவாயின் ஊடாக நக்கியே உண்ணும். திரவ உணவை சமிபாடடையச் செய்யும் நொதியங்களும் காணப்படும். வௌவால்கள் இனத்திலேயே இவ்வகை வௌவால்கள் தான் தாய்க்கு எதாவது நேர்ந்தால் குட்டியை மற்ற வௌவால்கள் கவனித்து கொள்ளும். மற்றுமொரு சிறப்பான குணாதிசியம் என்னவென்றால் இவ்வகை வௌவால்கள் தன் காலனியிலிருகும் பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு குருதியை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கும். கடற்பாம்பு கடற்பாம்பு "(Sea snake)" என்பது கடற்சூழலில் வாழும் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்பு குடும்பம் ஆகும். இவை நிலத்தில் வாழ்ந்த மூதாதைகளில் இருந்து படிவளர்ச்சி அடைந்தவை. பெரும்பாலான கடற்பாம்புகள் எல்லா நேரமும் கடலிலேயே வாழத் தகவமைத்துக் கொண்டன. இவற்றின் வால் துடுப்பு போல அமைந்திருக்கும். இவற்றால் நிலத்தில் அசையக் கூட முடியாது. கடற்பாம்புகள் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான வெதுவெதுப்பான கரையோரக் கடல் நீரில் காணப்படுகின்றன. கடற்பாம்புகள் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் போன்ற குளிரான நீரில் காணப்படுவதில்லை. ஒரேயொரு சிற்றினத்தைத் தவிர அனைத்துக் கடற்பாம்புகளும் குட்டி ஈனுபவை. நீரில் பிறக்கும் குட்டிகள் தங்கள் வாழ்நாள் முழுதையும் நீரிலேயே கழிக்கின்றன. எல்லாக் கடற்பாம்புகளுமே நச்சுத் தன்மை உடையவை. ஆனால் இவற்றால் மனித உடலுள் செலுத்தப்படும் நஞ்சின் அளவு தரைப்பாம்புகளை விடக் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் கடற்பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாமூலனார் மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல். மாமூலனார் பிராமண குடியைச் சேர்ந்தவர். நந்தர்களையும் மெளரயர்களையும் பற்றி இவர் பாடுவதால் கி. மு. 320 க்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவருடைய படைப்புகள் வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டுபவையாக உள்ளன. மமாமூலனார் குறுந்தொகையில்1 பாடல், நற்றிணையில் 2 பாடல்கள், அகநானுாற்றில் 27 பாடல்கள் மற்றும் திருவள்ளுவ மாலையில் 1 பாடலையும் பாடியுள்ளார் கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின் வருமாறு: "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265) நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். கோசருக்குப் பணியாத பாண்டி நாட்டு மோகூர் இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார். வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார். திருவள்ளுவரைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார் திருவள்ளுவமாலை சங்கப் புலவா்கள் சங்கப் புலவா்கள் சங்க இலக்கியங்கள் மூன்றாவது அணி இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்பது பின்வருவற்றுள் ஒன்றைக் குறிக்கும் மாங்குடிமருதனார் மாங்குடி மருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாட்டும் தொகையும் ஆகிய சங்கநூல்களில் இவரது பாடல்கள் 13 உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. மதுரைக்காஞ்சி அகநானூறு 89, குறுந்தொகை 164, 173, 302 நற்றிணை 120, 123, புறநானூறு 24, 26, 313, 335, 372, 396 (புறநானூற்றில் இவரது பெயர் 'மாங்குடி கிழார்' என்று உள்ளது) மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72) மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கத்து நப்பசலையார் சங்ககாலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். எட்டுப் பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. மாறோக்கம் என்பது ஓர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த மற்றொரு புலவர் மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் என்னும் கணியர் (சோதிடர்) நற்றிணை 304 புறநானூறு 37, 39, 126, 174, 226, 280, 383 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், வானவன், வளவன், செம்பியன், சோழர், அவியன், கபிலன் ஆகியோர் இவரது பாடல்களில் குறிப்பிடபடுகின்றனர். குடவர் கோமான் சங்ககாலத்துச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு. அந்நாட்டு மக்கள் குடவர் (இடையர்) எனப்பட்டனர். இந்தக் குடநாட்டில் தன் ஆட்சியைத் தொடங்கிய சேர மன்னனைக் 'குடவர் கோ' என்றும், 'குடவர் கோமான் என்றும் குறிப்பிட்டனர். இவர்கள் குடநாட்டை வென்று ஆட்சியைத் தொடங்கியவர்கள் எனத் தெரியவருகிறது, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் 'குடவர் கோ' என்று குறிப்பிடப்படுகிறான். (குறுங்கோழியூர் கிழார் - புறநானூறு 17) பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் 'குடவர் கோவே' என்று அழைக்கிறார். (பதிற்றுப்பத்து 55) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 'குடவர் உட்கும் வான்தோய் வெல்கொடி குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்' என்று குறிப்பிடப்படுகிறான். (பதிற்றுப்பத்து பதிகம் 5) குடவர் சங்ககாலச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு. அதில் வாழ்ந்த மக்கள் குடவர் எனப்பட்டனர். 'குடபுலம்' என்பது சேரநாடு. குடதிசை என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். சேர நாட்டைக் 'குடபுலம்' என்பர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடநாட்டை வென்று அதன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். கரிகாலனின் வெற்றிகளைக் கண்டு குடவர்-மக்கள் சோர்ந்து கூம்பிப்போயினராம். குடவர்-மக்கள் வேங்கட அரசன் புல்லி நாட்டிலும் வாழ்ந்தனர். அவர்கள் பொங்கல் சோறும், ஆவின் பாலும் தந்து விருந்தினர்களைப் பேணும் பழக்கமுடையவர். சேரன் செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆகியோர் ’குடவர் கோ’, அல்லது ‘குடவர் கோமான்’ எனப் போற்றப்படிகின்றனர். குன்றத்தில் குரவையாடும் சேரநாட்டு மகளிர் ‘வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோ’வை ஆட்டத்தை முடிக்கும்போது பொதுப்பட வாழ்த்துகின்றனர். இளங்கீரனார் இளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 18 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399, குறுந்தொகை 116, நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 எண் கொண்ட பாடல்களாக அவை அமைந்துள்ளன. அனைத்தும் அகப்பொருள் பாட்கள். இவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித்திணைப் பாடல். ஏனையவை பாலைத்திணைப் பாடல்கள். பொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடல்களில் அரிய பல பழமையான சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. இதனாலும், உதியன் அரசனைக் குறிப்பிடுவதாலும் இவர் காலத்தால் முந்திய புலவர்களில் ஒருவர் எனத் தெரியவருகிறது. எஸ். வி. ராமகிருஷ்ணன் எஸ். வி. ராமகிருஷ்ணன் (1936 - 9 பெப்ரவரி, 2011) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உயிர்மை, காலச்சுவடு,அமுதசுரபி,தினமணிக்கதிர் ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது முதலாவது நூல் அவரது 70 ஆவது வயதளவிலேயே வெளியானது. ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராம கிருஷ்ணன் சுங்கம் கலால் ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார். ராமகிருஷ்ணன் 2011 பெப்ரவரி 9 அதிகாலை 5.45 மணியளவில் காலமானார். அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் என்பவர் ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர், கவிஞர். இவர் 19 ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். பாட உசாத்துணை தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பாட உசாத்துணை தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. 'கட்டுரை மணிகள்' ஆண்டு 9, 10 & 11 - கதைவாணன் மொஹிடீன் ரஜா - ஆதவன் பதிப்பகம், கொழும்பு - 1வது பதிப்பு: 1991 பழையாறு (ஆறு) பழையாறு தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆறுகளில் ஒன்றாகும். மகேந்திரகிரி மலையின் வட மேற்கு திசையில் 17.6 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு 44 கட்டை தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆற்றின் மூலம் 16550 ஏக்கர் ஆயக்கட் நிலம் விவசாய பயனடைகின்றது. இந்த ஆற்றின் குறுக்கே 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்று முக்கியமானவை: தமிழகத்தில் மழைபெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் இவ்வாற்றில் தண்ணீர் ஓடும். முந்தைய காலங்களில் மக்கள் இவ்வாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர். குஃப்ரா சண்டை குஃப்ரா சண்டை ("Battle of Kufra") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த குஃப்ரா பாலைவனச் சோலைப் பகுதியை விடுதலை பிரான்சுப் படைகள் கைப்பற்றின. குஃப்ரா லிபியாவின் தென்கிழக்கில் அமைந்திருந்த ஒரு பாலைவனச்சோலைப் பகுதி. இது பாலைவன வாழ் குடிகளுக்கு ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. 1931ல் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்டது. செப்டம்பர் 1940ல் இத்தாலியப் படைகள் எகிப்து மீது படையெடுத்தன. இதனை எதிர்த்து நேச நாட்டுப் படைகள் டிசம்பர் மாதம் காம்ப்பசு நடவடிக்கையைத் தொடங்கின. இத்தாலியப் படைகளை எகிப்திலிருந்து விரட்டி, லிபியாவுக்குள் முன்னேறின. பிரிட்டானியப் படைகள் கிழக்கிலிருந்து லிபியாவினுள் முன்னேறிக் கொண்டிர்க்கும் போதே தெற்கில் சாடிலிருந்து விடுதலை பிரான்சுப் படைகள் லிபியாவைத் தாக்கின. பிரான்சு ஜூன் 1940ல் நாசி ஜெர்மனியிடம் சரணடைந்திருந்தாலும், அதனை ஏற்க மறுத்த தளபதி சார்லஸ் டி கோல் நாடுகடந்த பிரெஞ்சு அரசை பிரான்சின் காலனிப் பகுதிகளில் நிறுவியிருந்தார். அதன் படைகள் விடுதலை பிரான்சுப் படைகள் என்று அழைக்கப்பட்டன. பிரான்சின் ஆப்பிரிக்கக் காலனிகள் டி கோலின் அரசுக்கு ஆதரவளித்தன. சாடிலிருந்த பிரஞ்சுப் படைகளைக் கொண்டு லிபியாவைத் தாக்கினார் டி கோல். ஜனவர் 31, 1941ல் பிரெஞ்சுப் படைகள் குஃபரா மீதான படையெடுப்பைத் தொடங்கின. வேகமாக குஃப்ராவி பகுதியுள் முன்னேறிய அவை பெப்ரவரி 17ல் அதன் முக்கிய எல் டாக் கோட்டையை முற்றுகையிட்டன. சில வார கால குண்டுவீச்சுடன் கூடிய முற்றுகைக்குப் பின்னர் மார்ச் 1ம் தேதி எல் டாக் கோட்டையின் இத்தாலிய பாதுகாவல் படைப்பிரிவு சரணடைந்தது. குஃப்ரா பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. பாண்டியன் மாறஞ்சடையனின் நடுகல் பாண்டியன் மாறஞ்சடையனின் நடுகல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி.770 ஆகும். இக் கல்வெட்டில் சேர மன்னனுக்கும், பாண்டிய மன்னனுக்கும் இடையே நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் பதிவாகியிருக்கின்றன. இக்கல்வெட்டை பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆரல்வாய்மொழிக்கருகில் கண்டெடுத்தார். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையை இவர் பாடியுள்ளார். அதில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவரது பாடலாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது. கனகாம்பரி கனகாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச), - சட்ஜம் (ச), சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சுத்த மத்திமம் (ம),சுத்த காந்தாரம் (க), சுத்த ரிசபம் (ரி), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: ஔர்வசிரேயப்பிரியா ஔர்வசிரேயப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சுத்த ரிசபம் (ரி), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ஔசதீசப்பிரியா ஔசதீசப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். போகசிந்தாமணி போகசிந்தாமணி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த நிசாதம் (நி), சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். போகசிந்தாமணீ போகசிந்தாமணீ முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), பஞ்சமம் (ப),சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி), சுத்த காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது வக்கிர இராகம் என்று அழைக்கப்படும். தோக்கா தோக்கா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். காந்தாரகபாணி காந்தாரகபாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ஹொங்கொங்கில் உள்ள பாலங்களின் பட்டியல் ஹொங்கொங் பொது போக்குவரத்துப் பாதைககளில் உள்ள பாலங்களின் பட்டியல்: கௌதமி (இராகம்) கௌதமி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். ஏமாங்கி ஏமாங்கி அல்லது ஹேமாங்கி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 54வது மேளகர்த்தா இராகமும், "பிரம்ம" என்று அழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 6வது இராகமுமாகிய விஷ்வம்பரியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), ஷட்சுருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். இந்திரப்பிரியா இந்திரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: கமலினி (இராகம்) கமலினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். கனகத்தோடி கனகத்தோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), சுத்த நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். கந்தார்க்கபாணி கந்தார்க்கபாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். கர்நாடக சுத்தசாவேரி கர்நாடக சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். கணப்பிரபா கணப்பிரபா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். அப் லெய் சாவ் பாலம் அப் லெய் சாவ் பாலம் (Ap Lei Chau Bridge) என்பது ஹொங்கொங்கில் ஒரு அதிவிரைவுப் பாதையில் உள்ள பாலமாகும். இப்பாலம் ஹொங்கொங் தீவில் எபடீன் நகரத்திற்கும் அப் லெய் சாவ் தீவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் பாலமாகும். இந்த பாலம் இரண்டு பாதைக்கோடுகளுடன் கட்டப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பாதைக்கோடுகளை கொண்டு நான்கு பாதைக்கோடுகளாக விரிவாக்கம் பெற்றது. கணப்பிரியா கணப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். லதாந்தப்பிரியா லதாந்தப்பிரியா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். நிக்கோலஸ் கேஜ் நிக்கோலஸ் கேஜ் ("Nicholas Cage", பி. 1964) ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர். அவர் "ரைசிங் அரிசோனா" (1987), "தி ராக்" (1996), "ஃபேஸ் ஆப்" (1997), "கான் இன் 60 செகன்ட்ஸ்" (2000), "நேஷனல் டிரஷர்" (2004), "கோஸ்ட் ரைடர்" (2007) என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 32 வது வயதில் "லீவிங் லாஸ் வேகாஸ்" என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு: லவங்கி லவங்கி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 4 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "--" இராகம் என்பர். மலயமாருதம் மலயமாருதம் 16வது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் 4வது இராகமுமாகிய சக்ரவாகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். செங் சிங் பாலம் செங் சிங் பாலம் (Cheung Tsing Bridge) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்பிற்கும் சிங் யீ தீவுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலமாகும். இப்பாலம் முன்னாள் றெம்பளர் கால்வாய் பாலம் என அழைக்கப்பட்டது. இப்பாலம் சிங் யீ தீவுல் செங் சிங் சுரங்கம் மற்றும் சிங் குவாய் அதிவிரைப்பாதையின் ஒரு பகுதியான குவாய் சுங் வீதிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது. றெம்பளர் கால்வாய் றெம்பிளர் கால்வாய் (Rambler Channel) ஹொங்கொங்கில் உள்ள ஒரு கால்வாயாகும். இந்த கால்வாய் கவுலூன் தீபகற்பம் நிலப்பரப்பிற்கும் சிங் யீ தீவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அதாவது சிங் யி திவிலுருந்து புதிய கட்டுப்பாட்டகம் ஆட்சிப்பரப்பில் சுன் வான், குவாய் சுங் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் கடல் பரப்பின் அகலம் 900 மீட்டர்களாகும். வரலாற்று ரீதியாக இந்த கால்வாயை "சிங் யீ மூன்" என்றும் "சிங் யீ கால்வாய்" என்றும் முன்னாள் அழைக்கப்பட்ட கால்வாயாகும். இந்த கால்வாயின் கரையோரப்பகுதிகள் சுன் வான் புதிய நகரம் மற்றும் குவாய் சுங் கொள்கலன் துறை போன்றவைகளின் உருவாக்கத்தினால் கடந்த பல பத்தாண்டுகளாக பல மாற்றங்களைக் கண்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானப் பணிகளால் கடல் பரப்பு ஒடுங்கியும், கரையோரப் பகுதிகள் அகன்றும் உள்ளன. சிங் யீ குடா என அழைக்கப்பட்ட குடா முற்றிலும் இந்த புனர்நிர்மானப் பணிகளால் மறைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கால்வாய் ஊடாக ஆறு வாகனப் பாலங்களும் ஒரு தொடருந்து பாலமும் உள்ளன. அவைகளாவன: மந்தாகினி (இராகம்) மந்தாகினி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். மன்யா மன்யா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த மத்திமம் (ம),சுத்த காந்தாரம் (க), சுத்த ரிசபம் (ரி), சட்ஜம் (ச), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் எனப்படும். மேகா (இராகம்) மேகா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமம், தைவதம், நிசாதம் என்பன ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். மோகனமல்லார் மோகனமல்லார் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சுத்த மத்திமம் (ம),சுத்த காந்தாரம் (க), சுத்த ரிசபம் (ரி), சட்ஜம் (ச), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். ஓசடீசப்பிரியா ஓசடீசப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். பூர்வமுகாரி பூர்வமுகாரி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ராககுஞ்சரம் ராககுஞ்சரம் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த நிசாதம் (நி), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ரங்கநாயகி (இராகம்) ரங்கநாயகி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ரசகுசீசம் ரசகுசீசம் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். ரத்தினபூர்ணா ரத்தினபூர்ணா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), சுத்த நிசாதம் (நி), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் எல்லாச் சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண சாடவ" இராகம் என்பர். அவரோகணத்தில் மத்திமமும், காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். ரிசபவிலாசா ரிசபவிலாசா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். அவரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். சானப்பிரியா சானப்பிரியா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகமும் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். சிறீபின்னப்பஞ்சமம் சிறீபின்னப்பஞ்சமம் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி), சுத்த ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் எல்லாச் சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண சாடவ" இராகம் என்பர். ஆலம்பேரி சாத்தனார் ஆலம்பேரி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அகநானூறு 47, 81, 143, 175, (இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்) நற்றிணை 152 நெய்தல், 255 குறிஞ்சி, 303 நெய்தல், 338 நெய்தல் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 11 இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டியன் கீரஞ்சாத்தன் மல்லி கிழான் காரியாதி சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன் ஆகியோரைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். அகநானூறு 24, 156, 341, புறநானூறு 38, 40, 166, 177, 178, 196, 261, 301 இடைக்குன்றூர் கிழார் இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார். மேற்கூறிய இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவை. அவை முறையே தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலையே போருக்குச் சென்று பலரை வென்றதை குறிப்பன. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் நூலைப் பாடியவர். செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியுள்ளார். பேரியாழ் மீட்டும் பாணர் கூட்டம் இசைக்கருவிகளை கலப்பையில் போட்டுச் சுமந்துகொண்டு செல்கிறது. இப்படிப் பல ஒலிகளைக் கேட்டுக்கொண்டே (மலைபடு கடாம் கேட்டுக்கொண்டே பாணர் கூட்டம் மலையேறலாம். கண் குளிரக் கண்டுகொண்டும், காது குளிரக் கேட்டுக்கொண்டும் மேலும் செல்லலாம். காடாயிருந்தாலும், பள்ளியாயிருந்தாலும் (உறங்குகிடம் கொண்ட ஊராயிருந்தாலும் யாழிசைத்துப் பண் பாடுங்கள். நெற்களத்தில் யாழில் மருதப்பண் இசைத்துப் பாடுங்கள். சேயாற்றின் கரையில் இருந்த ஊர் செங்கண்மா. அங்கு நிதியம் பயன்படுத்தப்படாமல் உறங்கிக் கிடக்கும். அவ்வூர் மக்கள் பிழைப்புக்காக அயலூர் செல்வதில்லை. ஆறு போல் அகன்ற தெருக்கள். திருவிழாக் காலம் போல் ஆரவாரம். மலை போல் ஓங்கிய மாடங்கள். ஊர் நீரால் சூழப்பட்டிருக்கும். மறவர் காக்கும் வாயில் கொண்டது. அதனுள் தயங்காமல் நீங்கள் நுழைந்து செல்லலாம். அங்கு உங்களைக் கண்டோர் அனைவரும் விருந்து படைப்பர். அரசனுக்குத் திறை தருவது போல விருந்து படைப்பர். அந்தப் பூங்காவில் மரா மரங்கள் ஓங்கியிருக்கும். ஆமான் (காட்டுப்பசு), யானைக்குட்டி, கரடிக்குட்டி, வருடை(காட்டாடு), பருந்து, உடும்பு, மயில், காட்டுக்கோழி, முதலானவற்றைக் கண்டு களிக்கலாம். பலாப்பழமும், மாம்பழமும் உண்டு மகிழலாம். அந்த அருங்காட்சியகத்தில் வகை வகையான நூறை என்னும் வள்ளிக்கிழங்கு, மணி, புலியோடு போரிட்டு மாண்ட யானைத்தந்தம், முதலானவை வைக்கப்பட்டிருந்தன. காந்தள், நாகம், திலகம், சந்தனம், மிளகு முதலான செடிகொடிகள் இருந்தன. மூங்கிலில் விளைந்த தேறல்-கள், எருமைத்தயிர், குரங்கு பாய்ந்ததால் ஒழுகும் தேன், ஆசினிப்பலா முதலானவை காவிரி கடலில் கலக்குமிடத்தில் (புகார் நகரில்) இருப்பது போல் வாங்கி உண்ண வைக்கப்பட்டிருந்தன். இதனை அடுத்துப் போர்யானைகள் கட்டப்பட்டிருக்கும் முற்றம் இருந்தது. யானை-முற்றத்தை அடுத்து அரண்மனை இருந்தது. அரண்மனை முற்றத்துக்குச் சென்றதும் பாடுங்கள். விறலியர் தொன்றுதொட்டு வந்த தம் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்தி மருதப்பண்ணில் இசை எழுப்பிப் பாடவேண்டும். பின்னர் அரசனை வாழ்த்திப் பாடவேண்டும். தன் புகழ் தனக்குப் பயன்படவேண்டும் என்று வாழ்ந்த (வெற்றிப் புகழ்) மன்னர் இங்கு ஓடும் சேயாற்று மணலினும் பலர். தன் புகழ் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று வாழ்பவன் நன்னன் என்னும் உண்மையைச் சொல்லிப் பாடவேண்டும். நன்னன் அழைத்துச் செல்வான். நூல் தெரியாமல் நெருக்கமாக நெய்யப்பட்ட கலிங்கம் தந்து உடுத்திக்கொள்ளச் செய்வான். வேட்டையாடித் தான் கொண்டுவந்த கறிக்குழம்பும், வெண்ணெல் அரிசியில் சமைத்த சோறும் உண்ணும்படி செய்வான். பலநாள் தங்கினாலும் முதல்நாளில் தந்தது போலவே தருவான். நாங்கள் எங்கள் இல்லம் செல்கிறோம் என்று மெல்லச் செய்தி அனுப்பினால் பரிசில் நல்குவான். தலைவன் அணியத் தங்கத்தாலான தாமரை, விறலியர் அணிய விளங்கிழை (ஒளி பொருந்திய அணிகலன்), தண்ணீரில் செல்வது போல ஆடாமல் செல்லும் தேர், வாரிக்கொள்ள முடியாத யானைகள், மணிகள் கட்டிய காளைமாட்டுடன் கூடிய பசுவினம், பொன்தகடு பூட்டிய குதிரை, துய்க்கத் துய்க்க மாளாத நிதிச்செல்வம் முதலானவற்றை நல்குவான். அவன் கைகள் கொடுப்பதற்கென்றே கவிழ்ந்திருக்கும். இல்லாத புலவர்கள் ஏற்ற கை நிறைய நல்குவான். நவிர-மலையில் திடீரென மழை பொழிவது போல வழங்குவான். சென்று பெற்றுக்கொள்ளுங்கள் - என்கிறார் பாடல் பாடிய புலவர் பெருங்கௌசிகனார். பனிப்பூண்டு பனிப்பூண்டு அல்லது துரோசீரா (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன. தாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம்,நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும்.இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும். அந்தாட்டிக்கா தவிர்ந்த எல்லா நாடுகளிலும் அமிலத்தன்மையுள்ள நீர்ப்பாங்கான சூழலில் பனிப்பூண்டுத் தாவரம் காணப்படும். பனிப்பூண்டு ஒரு பல்லாண்டுத் தாவரம். மிக அரிதாக ஆண்டுத் தாவரங்களும் காணப்படும். இனங்களுக்கு ஏற்ப அதன் நிலத்திலிருந்தான 1 சதம மீட்டருக்கும் (0.4 அங்குலம்) 1 மீட்டருக்கும் (39 அங்குலம்) இடைப்பட்டதாக இருக்கும். ஏறிகளின் படரும் கொடி 3 மீட்டர் வரை இருக்கும் (10 அடி) எ.கா:Drosera erythrogyne. பனிப்பூண்டுகள் 50 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது. படைப்போர் படைப்போர் என்பது இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவம் ஆகும். இது ஒரு வகை போர் இலக்கியம் ஆகும். இசுலாமிய வரலாற்றில் இடம்பெற்ற பல்வேறு போர்கள் பற்றிய செய்திகளை இந்த இலக்கியங்கள் கூறுகின்றன. சேக் பீர்முகம்மது சாகிபு சேக் பீர்முகம்மது சாகிபு ஒரு இசுலாமியத் தமிழ் அறிஞர். இவர் இருபதுக்கும் மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்களை இயற்றி உள்ளார். அசன்பே சரித்திரம் அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது. இதை இலங்கை எழுத்தாளர் முகம்மது காசீம் சித்தி லெப்பை என்பவர் எழுதினார். அசன்பேயுடைய கதை எகிப்திய அரச வம்சத்தைச் சேர்ந்த அசன் என்பவனின் சாகசங்களையும் காதலையும் சொல்லுகிறது. மர்மங்கள் நிறைந்த கதை. உண்மையே வெல்லும் என்ற சத்திய நெறியை இக்கதை போதிக்கின்றது. இக்கதை பின்வருமாறு தொடங்குகின்றது: “கல்விச் செல்வங்களிலேயே மிகச் சிறந்த விளங்கா நின்ற மிசுறு தேசத்தின் இராஜதானியாகிய காயிரென்னும் பட்டணத்திலேயே செய்யிது பாஷா என்பவர் இராச்சிய பரிபாலனம் செய்யும் காலத்தில், அந்த பாஷாவினுடைய மாளிகைக்குச் சமீபமான ஓர் அலங்காரமுள்ள மாளிகையில் யூசுபுபாஷா என்பவரொருவர் இருந்தார். அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். மஹா பாக்கியவந்தர். கதீவுடைய மந்திரிமார்களிலொருவர் மதம் பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால நல்வழி நடத்துவதுபோல அரசன் கோபித்தாலும் அவனை விட்டகலாது அப்போது வேண்டும் யுக்தி புத்திகளை யிடத்திடித்துப் புகட்டும் தொழிலை விடாமலிருப்பவர். நேரான காரியங்களில் சோராத துணிவுள்ளவர். பின்னே வருங்கருமங்களை முன்னே அறிந்து தெரிவிக்கும் மூதறிவுடையவர். காலமும் இடமும் ஏற்ற கருவியும் தெரிந்தவர். பிரஜைகளெல்லாம் தமது திறமை முதலிய நற்குணங்களைப் புகழப் பெற்றவர். ஆங்கிலேயர், பிரான்ஸியர் முதலிய ஐரோப்பியர்களெல்லாம் தமது விவேக நுட்பத்தை வியந்து பாராட்டும்படி யதிகாரஞ் செலுத்துபவர். அசன்பே சரித்திரத்தையும், பிரதாப முதலியார் சரித்திரத்தையும் ஒப்பிட்டு முனைவர் தே. நேசன் என்பவர் ஒப்பாய்வு செய்துள்ளார். இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் எனப்படுபவை இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கிபி 1648 ஆம் ஆண்டிற்கும் கிபி 1894 ம் ஆண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் தோன்றின. இசுலாமியத் தமிழ் நாடகங்கள் இசுலாமியத் தமிழ் நாடகங்கள் எனப்படுபவை இசுலாமிய சமயக் கருத்துக்களைப் பகிரும் அல்லது இசுலாமிய நாடக ஆசியர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடகங்கள் ஆகும். சேகனாப் புலவர் சேகனாப் புலவர் என்பவர் 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். செய்கு அப்துல்காதிர் நெயினார் லெப்பை என்ற பெயரின் சுருக்கமே சேகனாப் புலவர் ஆகும். காயல் பட்டினத்தைச் சேர்ந்த இரத்தின வியாபாரியின் மகனான இவர் இளமையில் அறிவுக் குறையுடையவராய் இருந்ததாகவும் ஒருநாள் கருநாகம் ஒன்று இவரது நாவைத் தீண்டியது என்றும் அதுமுதல் இவர் கவிபுனையும் ஆற்றல் பெற்றதாகவும் கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஞானியரான குணங்குடி மஸ்தான் சாகிபு இவரது பள்ளித் தோழராவார். இவர் தனது பரம்பரைத் தொழிலையும் விடாது பாடல் இயற்றி பெருஞ்சிறப்பு பெற்றார். இவர் தமிழுக்கு பெருங்காப்பியங்களை இயற்றித் தந்துள்ளார். கனகாபிடேக மாலை கனகாபிடேக மாலை என்பது தமிழின் முதலாவது இசுலாமியக் காப்பியம் ஆகும். இது 1648 ம் ஆண்டு அளவில் கனக கவிராயர் என அறியப்படும் செய்கு நெயினார் என்பவரால் எழுதப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் பேரார் ரலியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. இது 35 படலங்களைக் கொண்டது. 2, 792 விருத்தப்பாக்களால் அமைந்தது. தீன் விளக்கம் தீன் விளக்கம் என்பது 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். இதை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றினார். இந்த இலக்கியம் இசுலாமை தமிழகத்திற்குப் பரப்ப மதீனாவில் இருந்து வந்த செய்யிது இப்ராகீமைப் பற்றிக் விளக்குகிறது. இவர் பாண்டி நாடு வந்து, அதை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியனை போரில் வென்ற வரலாற்றுக் கதையையும் இது கூறுகிறது. வடவைபோல் கொதிப்பன் சண்டமாருதம் போல்எதிர்ப்பன் இடிகள்போல் எதிர்ப்பன் போரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ கடிதினில் எதிர்த்து யானும் கையிழந்தேன் இங்கே உடல் உயிரொடுமே சேர்ந்தது ஊன்றிய விதி ஒன்றாமே - (ஒன்பதாம் போர்புரி படலம் -44(253) பல்சந்த மாலை பல்சந்த மாலை என்பது தமிழில் எழுந்த முதல் இசுலாமியத் தமிழ் இலக்கியம் ஆகும். இது கிபி 12 ம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. இன்று எட்டுப் பாடல்களே கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களும் ஒரு உரைநூல் ஒன்று மேற்கோள் காட்டப்பட்டு இருந்தன. இதை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த 'களவிற் காரிகை' என்ற பதிப்பித்தார். ஆயிரமசலா ஆயிரமசலா தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று. இது கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. மிகுராசு மாலை மிகுராசு மாலை என்பது தமிழில் தோன்றிய முதல் இசுலாமிய இலக்கியங்களுள் ஒன்று. இது கிபி 1590 ஆண்டளவில் இயற்றப்பட்டது. இது நபிகள் பெருமானார் "பெருமானார் புறாக் என்னும் மின்பரியிலேறி வானுலகடைந்து இறைத்தரிசனம் பெற்று மீண்ட வரலாற்றைக் கூறுகின்றது." ஆலிப் புலவர் ஆலிப் புலவர் 16 ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தமிழ்நாடு) வாழ்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர். இவர் மிகுராசு மாலை என்ற புகழ்பெற்ற இலக்கியத்தை இயற்றினார். இவர் பற்றிய விரிவான கதைகள் உள்ளன. 2002 அகில மலேசிய இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு அகில மலேசிய இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்பது 2002 ம் ஆண்டு மலேயாவில் நடைபெற்ற இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய பிரதமர் மகாதீர் முகம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பல படைப்புகளுடன் விழா மலரும் வெளியிடப்பட்டது. பொது வரலாற்று தமிழ் நூற்பட்டியல் (இலங்கை) இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொது வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் வம்சாவளி ஆய்வுகள், பிரதேச வரலாறு, தொல்லியலாய்வு உட்பட பொது வரலாற்று நூல்கள் இடம் பெறும். நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 108 வைணவத் திருத்தலங்களில் 108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார். = செயலி = 108 திவ்ய தேசம் செயலி  அட்சய திருதியை அட்சய திருதியை (அல்லது "அக்ஷய தீஜ்") என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் "எப்போதும் குறையாதது" எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் ("திதிகள்" ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும், வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து "மூன்றரை முழுத்தத்தை" வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது. அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சமண நாட்காட்டியிலும் அட்சய திருதியை ஒரு புனித நாளாகும். வருடம் முழுவதுமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர்கள் அவர்களின் "தப்சயா" எனப்படும் நோன்புச் சடங்கினை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர். "வருடப்பிறப்பு" திதியாக இருந்தால், "மதிக்கத்தக்க செயல்"களான பாராயணம் , தவம், கொடைகள்,சடங்கு ரீதியான முழுக்கு , தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாதாயச் செயல்களுக்கல்ல. இருப்பினும், இந்த திதியில் உலகாதாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாத்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளைத் துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க "சுத்தி", "முழுத்த யோகங்கள்" மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது. இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் மதமுறையிலான புண்ணியமானது பன்மடங்காகப் பெருகும் எனக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகப் பெரும்பாலான நகைக்கடைகள் "லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர். சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. தர்மசாத்திரங்கள் தர்மசாத்திரங்கள் வடமொழி இந்து இலக்கியங்களில் தர்மம் பற்றி பேசுகின்றன. வேதங்களில் தர்மத்தின் மூலமாய் அமைந்த சுருதிகளை அடிப்படையாகக் கொண்டு சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிப் பேசுவதற்கு எழுந்தவையே தர்மசாத்திரங்கள் இவை மனித வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன. இவற்றின் தோற்றம் பற்றிய காலவரையரையில் தெளிவான குறிப்புக்கள் இல்லாதபோதிலும், குப்தர் காலத்திலேயே அதிகமானவை தோன்றின. தர்மசாத்திரங்களுள் குறிப்பிடத்தக்கவை இவை எழுதியவர்களின் பெயர்களாலேயே வழங்கப்பெறுகின்றன. இவை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு வணிகம் அனைத்துலக வணிகம், நாடுகளிடை வணிகம் அல்லது பன்னாட்டு வணிகம் ("International trade") என்பது நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை அல்லது அவற்றின் எல்லைகளைக் கடந்து நடைபெறுகின்ற, பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களைக் குறிக்கும். பல நாடுகளில் இவ் வணிகம் அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றது. உலக வரலாற்றில் பன்னெடுங் காலமாகவே அனைத்துலக வணிகம் நடைபெற்று வரினும், அதன் பொருளாதார, சமூக, அரசியல் முக்கியத்துவம் அண்மைக் காலங்களில் பெரிதும் உயர்ந்து காணப்படுகின்றது. தொழில்மயமாதல், மேம்பட்ட போக்குவரத்து, உலகமயமாதல், பன்னாட்டு நிறுவனங்கள், outsourcing போன்றவை அனைத்துலக வணிகத்தில் பெருந்தாக்கங்களை உண்டாக்கி இருக்கின்றன. அனைத்துலக வணிகத்தின் அதிகரிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் உலகமயமாதலுக்குப் பெரிதும் தேவைப்படுகின்ற ஒன்றாகும். உலக வல்லரசு என்று கருதப்படுகின்ற எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான மூலமாக அனைத்துலக வணிகம் விளங்கி வருகின்றது. அனைத்துலக வணிகம் இல்லையேல் நாடுகள் தங்கள் தேவைகளை உள்நாட்டில் காணப்படும் வளங்களைக் கொண்டே நிறைவு செய்யவேண்டி இருக்கும். தொழில்மயமாக்கம், மேம்பட்ட போக்குவரத்து, உலகமயமாக்கம், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்த சேவை கொள்முதல் இவை அனைத்துமே சர்வதேச வர்த்தக அமைப்பில் ஒரு பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பதென்பது உலகமயமாக்கத்தின் தொடர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். சர்வதேச வர்த்தகம் இல்லாமல், நாடுகள் தங்களது சொந்த எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கும். ஒரு வர்த்தகம் எல்லைக்குள் செய்யப்பட்டாலும் எல்லை கடந்து செய்யப்பட்டாலும் அந்த வர்த்தகத்தில் ஈடுபடும் இரு தரப்பின் நடவடிக்கைகளும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதால் கொள்கையளவில் சர்வதேச வர்த்தகத்திற்கும் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் வேறுபாடு கிடையாது. பிரதான வித்தியாசம் என்னவென்றால் சர்வதேச வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தை விட செலவு மிகுந்ததாய் இருக்கும். இதற்குக் காரணம் ஒரு எல்லை என்பது ஏராளமான கூடுதல் செலவுகளைக் கொண்டு வரலாம். வரிகள், எல்லையில் ஏற்படும் தாமதங்களால் ஆகும் நேரச் செலவுகள் மற்றும் மொழி, சட்ட அமைப்பு அல்லது கலாச்சாரம் ஆகிய நாட்டுக்கு நாடு வேறுபடும் அம்சங்களுடன் தொடர்புபட்ட செலவுகள் ஆகியவை இந்த கூடுதல் செலவுகளில் சில. மூலதனம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய உற்பத்திக் காரணிகள் உள்நாட்டில் இடம்பெயர்வது என்பது நாடுகளுக்கு இடையே இடம்பெயர்வதைக் காட்டிலும் எளிதாக நடைபெறும் என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகங்களுக்கு இடையிலான இன்னொரு வித்தியாசம் ஆகும். இதனால் சர்வதேச வர்த்தகம் என்பது பெரும்பாலும் பொருட்கள் மற்றும் சேவைகளிலான வர்த்தகம் என்கிற அளவில் வரம்புபட்டு இருக்கிறது. மூலதனம், தொழிலாளர் அல்லது மற்ற உற்பத்திக் காரணிகளின் பரிவர்த்தனை எல்லாம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே இருக்கும். அப்போது பொருட்கள் மற்றும் சேவைகளிலான வர்த்தகம் உற்பத்திக் காரணிகளிலான வர்த்தகத்திற்கு ஒரு பதிலீடாக சேவை செய்யலாம். ஒரு உற்பத்தி காரணியை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, ஒரு நாடு அந்த உற்பத்திக் காரணியை திறம்படப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அமெரிக்கா சீனாவின் உழைப்பு செறிந்த பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். சீன தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, சீன தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. சர்வதேச வர்த்தகம் என்பது பொருளாதாரக் கல்வியின் ஒரு பிரிவு ஆகும். சர்வதேச நிதி உடன் சேர்ந்து இது சர்வதேச பொருளாதாரத்தின் ஒரு பெரும் பிரிவைக் குறிப்பிடுகிறது. வர்த்தகத்தின் போக்குகளை கணிக்கவும் வரிகள் போன்ற வர்த்தக கொள்கைகளின் விளைவுகளை ஆராயவும் பல்வேறு மாதிரிகள் முன்வைக்கப்படுகின்றன. ரிகார்டியன் மாதிரி ஒப்பீட்டு அனுகூலத்தின் மீது கவனம் வைக்கிறது. சர்வதேச வர்த்தகம் குறித்த தத்துவத்தில் இது மிக முக்கியமான கருத்தாக்கம் ஆகும். ரிகார்டியன் மாதிரியில் நாடுகள் தாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பொருட்களை சிறப்பாக உற்பத்தி செய்கின்றன. மற்ற மாதிரிகளில் இருந்து வேறுபடும் விதத்தில் ரிகார்டியன் மாதிரியானது, நாடுகள் நிறைய வகை பொருட்களை உற்பத்தி செய்வதை விட குறிப்பான பொருட்களில் தான் நிபுணத்துவத்தை முழுமையாக்க முயற்சிக்கும் என மதிப்பிடுகிறது. அத்துடன் ஒரு நாட்டிற்குள் இருக்கும் தொழிலாளர் மற்றும் மூலதன அளவு போன்ற காரணி ஆஸ்திகளையும் ரிகார்டியன் மாதிரி நேரடியாய் கருத்தில் கொள்வதில்லை. ரிகார்டியன் மாதிரியின் முக்கியமான சாதகம் என்னவென்றால் இது நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப வேறுபாடுகளை அனுமானிக்கிறது. ரிகார்டியன் மற்றும் ரிகார்டோ-ஸ்ரஃபா மாதிரிகளில் (அடுத்த துணைப் பிரிவைக் காணவும்) தொழில்நுட்ப இடைவெளி எளிதாக உட்சேர்க்கப்படுகிறது. ரிகார்டியன் மாதிரி பின்வரும் கருதுகோள்களைக் கொள்கிறது: ரிகார்டியன் மாதிரி குறைந்த காலத்தில் அளவிடுவதால் தொழில்நுட்பம் சர்வதேசரீதியாய் வித்தியாசப்படுகிறது. நாடுகள் தங்கள் ஒப்பீட்டு அனுகூலத்தை பின்பற்றுகின்றன மற்றும் நிபுணத்துவத்திற்கு அனுமதிக்கின்றன என்கிற உண்மையை இது ஆதரிக்கிறது. ரிகார்டியன் வர்த்தக மாதிரியை கிரஹாம், ஜோன்ஸ், மெக்கென்சி மற்றும் பலர் ஆய்வு செய்தனர். எல்லா தத்துவங்களிலும் இடைநிலை பொருட்கள், அல்லது மூலப்பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் போன்ற வர்த்தக உள்ளீட்டு பொருட்கள் விடுபட்டிருந்தன. இந்த இடைநிலைப் பொருட்களை வர்த்தகத்தில் இருந்து விலக்கினால் குறிப்பிடத்தகுந்த ஆதாயங்கள் தொலைந்து போகும் என்பதை மெக்கென்சி (1954), ஜோன்ஸ் (1961) மற்றும் சாமுவேல்சன் (2001) ஆகியோர் வலியுறுத்தினர். “பருத்தி இங்கிலாந்திலேயே விளைவிக்கப்பட வேண்டியிருந்தால் லங்காஷயர் பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்ய இயன்றிருக்காது என்று ஒரு கணத்தில் யாரும் சொல்லி விடுவர்” என்று மெக்கன்சி தனது புகழ்பெற்ற கருத்துரையில் (1954, ப. 179) ஒருமுறை தெரிவித்தார். சமீபத்தில், வர்த்தகம் செய்யப்படும் இடைநிலைப் பொருட்களையும் உட்சேர்த்து இந்த தத்துவம் விரிவாக்கப்பட்டது. இதன்மூலம் “தொழிலாளர்கள் மட்டும்” என்கிற அனுமானம் தத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறாக, புதிய ரிகார்டியன் மாதிரியானது (இது சில சமயங்களில் ரிகார்டோ-ஸ்ராஃபா மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது) சித்தாந்தரீதியாக நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் எந்திரங்கள், மூலப் பொருட்கள் போன்ற மூலதனப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் சமயத்தில், ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியை விடவும் இது மிக மிக யதார்த்தமான ஒன்றாய் அமைந்துள்ளது. ஏனெனில் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி மூலதனம் ஒரு நாட்டிற்குள் நிலையானதாக இருக்கிறதென்றும் சர்வதேசரீதியாக நகர்வதில்லை என்றும் அனுமானித்துக் கொள்கிறது. 1900களின் ஆரம்பத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த எலி ஹெக்ஸ்கெர் மற்றும் பெர்டில் ஓலின் ஆகிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் காரணி விகிதாச்சார தத்துவம் என்னும் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒரு சித்தாந்தத்தை உருவாக்கினர். குறைவில்லாமல் கிடைக்கக் கூடிய ஆதாரவளங்களைக் (காரணிகள்) கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை நாடுகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் குறைவாய் கிடைக்கக் கூடிய ஆதாரவளங்கள் கொண்டு உருவாக்கக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி வலியுறுத்துகிறது. ஒப்பீட்டு அனுகூலம் மற்றும் முற்றுமுதலான அனுகூலம் குறித்த தத்துவங்களில் இருந்து இந்த தத்துவம் வேறுபடுகிறது. ஏனெனில் இந்த தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்திக்கான உற்பத்தி நிகழ்முறையில் உற்பத்தித் திறன் மீது கவனத்தைக் குவிக்கிறது. ஆனால் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியோ, தாராளமாய் கிடைக்கத்தக்கதாய் இருக்கிற (எனவே மலிவானதாயும் இருக்கும்) காரணிகளைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு நாடு நிபுணத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அடிப்படை ஒப்பீட்டு அனுகூலம் குறித்த ரிகார்டியன் மாதிரிக்கான ஒரு மாற்றாக ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி உருவாக்கப்பட்டது. சிக்கலான நிகழ்முறையைக் கொண்டிருந்தாலும், அதன் கணிப்புகளும் கூடுதல் துல்லியமாய் இருந்ததாக நிரூபணம் ஆகவில்லை. எவ்வாறிருந்தாலும், சித்தாந்த பார்வையில் பார்த்தால், நவசெவ்வியல் விலை எந்திரமுறையை சர்வதேச வர்த்தக தத்துவத்திற்குள் சேர்த்து இது ஒரு நேர்த்தியான தீர்வை அளித்திருப்பதைக் காணலாம். சர்வதேச வர்த்தகத்தின் போக்கு காரணி ஆஸ்திகளின் வித்தியாசங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று இந்த தத்துவம் வாதிடுகிறது. நாடுகள் உள்நாட்டில் தாராளமாய் கிடைக்கக் கூடிய காரணிகளை செறிந்த முறையில் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்றும், உள்நாட்டில் பற்றாக்குறையாய் கிடைக்கக் கூடிய காரணிகளை செறிந்த முறையில் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் என்றும் இது கணிக்கிறது. ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் அனுபவரீதியான பிரச்சினைகள் வாசிலி லியோண்டிப் செய்த சோதனைகளில் வெளிப்படுத்தப்பட்டன. அமெரிக்கா மூலதனம் தாராளமாய் கொண்டிருந்த போதிலும் தொழிலாளர் உழைப்பு செறிந்திருந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தலைப்பட்டதை அவர் கண்டார். இந்த சிக்கல் லியோண்டிப் புதிர் என்று அழைக்கப்பட்டது. ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரி பின்வரும் அடிப்படையான கருதுகோள்களைக் கொள்கிறது: ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் பிரச்சினை என்னவென்றால் இது மூலதனப் பொருட்களின் (கச்சாப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள்) வர்த்தகத்தை விலக்குகிறது. ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியில், தொழிலாளர்கள் மற்றும் மூலதனம் என்பது ஒவ்வொரு நாட்டின் ஆஸ்தியாக அமைந்தவை; நிலையானவை. நவீன பொருளாதாரத்தில் மூலதனப் பொருட்கள் சர்வதேசரீதியாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இடைநிலைப் பொருட்களின் வர்த்தகத்தில் இருந்து கிடைக்கக் கூடிய ஆதாயங்களும் கணிசமானதாய் இருக்கிறது. இதைத் தான் சாமுவேல்சன் (2001) வலியுறுத்துகிறார். பல பொருளாதார வல்லுநர்கள் ரிகார்டோ தத்துவத்தை விட ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியையே தேர்ந்தெடுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த தத்துவம் எளிமைப்படுத்தும் அனுமானங்களை குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்கிறது. 1953 ஆம் ஆண்டில், வாசிலி லியோண்டிப் ஒரு ஆய்வினை வெளியிட்டார். இதில் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் பொருத்தம் குறித்து அவர் பரிசோதனைகள் செய்திருந்தார். அமெரிக்கா மூலதனத்தை ஏராளமாய் கொண்டிருந்தது, எனவே இத்தத்துவத்தின் படி அமெரிக்கா மூலதனம் செறிந்த பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்யவும் உழைப்பு செறிந்த பொருட்களை இறக்குமதி செய்யவும் வேண்டும். ஆனால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதிப் பொருட்களை விடவும் குறைந்த அளவிலேயே மூலதனச் செறிவு கொண்டதாய் இருப்பதை லியோண்டிப் கண்டறிந்தார். லியோண்டிப் புதிர் வெளிவந்த பிறகு, பல ஆராய்ச்சியாளர்களும் அளவீட்டுக்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியோ அல்லது புதிய பொருள்புரிவுகளை அளித்தோ ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியைக் காப்பாற்ற முற்பட்டனர். லியோண்டிப் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரிக்கு சரியாக பொருள்விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவ்வாறு அளித்தால் புதிர் எதுவும் தோன்றாது என்றும் லீமர் வலியுறுத்தினார். லீமர் சொல்வது சரியாக இருந்தால் அமெரிக்க தொழிலாளர்களின் சராசரி நுகர்வு உலக தொழிலாளர் சராசரி நுகர்வைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை பிரெசர் மற்றும் சௌத்ரி சுட்டிக் காட்டினர். இன்னும் பல சோதனைகள் நடந்தன என்றாலும் அநேகமானவை தோல்வியைத் தழுவின. கிரக்மேன் மற்றும் ஓப்ஸ்ட்ஃபெல்டு மற்றும் போவென், ஹாலண்டர் மற்றும் வியானெ உள்ளிட்ட புகழ்மிக்க பாடப் புத்தக எழுத்தாளர்களும் ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் நம்பகத்தன்மை குறித்து எதிர்மறையாய் கருத்து தெரிவித்தனர்.. அனுபவவாத ஆராய்ச்சியின் நெடிய வரலாற்றை ஆராய்ச்சி செய்த பின் போவென், ஹாலண்டர் மற்றும் வியானெ பின்வருமாறு முடிவுக்கு வந்தனர்: “தாராளமாய் கிடைக்கும் காரணி தத்துவம் [ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவம் மற்றும் அதன் வளர்ச்சியுற்ற பல-பண்டம் மற்றும் பல காரணி வடிவம்] மீதான சமீபத்திய சோதனைகளில் H-O-V சமன்பாடுகளை நேரடியாக ஆராயும் போது அவையே தத்துவத்தை நிராகரிக்கவும் செய்கின்றன.” காரணி விலை சமப்படுத்தல் [ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவத்தின் ஒரு விளைவு] நனவாகும் அறிகுறி அதிகமாய் தென்படவில்லை. நாடுகளுக்கு இடையே ஒரேமாதிரியான உற்பத்தி செயல்படுவதாக ஹெக்ஸ்கெர்-ஓலின் தத்துவம் அனுமானித்துக் கொள்கிறது. இது மிகவும் யதார்த்தமற்றது. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளி ஏழை நாடுகளின் முக்கிய கவலையாக இருக்கிறது. இந்த மாதிரியில் குறுகிய காலத்தில் தொழிற்சாலைகளுக்கு இடையில் தொழிலாளர்களின் நகர்வு சாத்தியம். மூலதனத்தின் நகர்வு சாத்தியமில்லை. எனவே, இந்த மாதிரி ஹெக்ஸ்கெர்-ஓலின் மாதிரியின் ‘குறுகிய கால’ வடிவம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. குறுகிய காலத்தில் உருரீதியான மூலதனம் போன்ற உற்பத்தியின் குறிப்பிட்ட காரணிகள் தொழிற்சாலைகளுக்கு இடையே எளிதாக நகர்த்தப்பட முடியாது என்று கருதுவதே இதன் பெயர்க் காரணமாய் அமைந்தது. பொருளின் விலையில் ஏற்றம் ஏற்படுமானால் அந்த பொருளுக்கான உற்பத்திக் காரணியின் உரிமையாளர்கள் உண்மையான ஆதாயத்தைப் பெறுவார்கள் என இந்த தத்துவம் கூறுகிறது. இது தவிர, உற்பத்தியின் குறிப்பிட்ட காரணிகளில் எதிரெதிரான இரண்டின் (அதாவது தொழிலாளர்கள் மற்றும் மூலதனம்) உரிமையாளர்கள் தொழிலாளர்கள் குடியேற்றம் செய்யப்படும் விடயத்தில் எதிரெதிரான கருத்துகள் கொண்டிருப்பர். இதற்கு நேர்மாறாய், மூலதன ஆஸ்தி அதிகரித்தால் உண்மையில் மூலதனம் மற்றும் தொழிலாளர் உழைப்பு ஆகிய இரண்டின் உரிமையாளர்களுமே ஆதாயமடைவார்கள். இந்த மாதிரி சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மிகப் பொருத்தமாய் அமைகிறது. இந்த மாதிரி வருவாய் பகிர்வு குறித்து புரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்து விளங்கினாலும் வர்த்தகத்தின் போக்கு குறித்த விவாதத்தில் சங்கடத்தைக் கொண்டுவருகிறது. மேற்கண்ட இரண்டு மாதிரிகளும் விளக்குவதற்கு சிரமப்படுகிற வர்த்தகம் குறித்த பல்வேறு உண்மைகளை விளக்குவதற்கு புதிய வர்த்தக தத்துவம் முயற்சி செய்கிறது. ஒத்த அளவிலான காரணி ஆஸ்தி அளவு மற்றும் உற்பத்தித் திறன் அளவுகளையும், பெரும் அளவிலான பன்னாட்டு உற்பத்தியையும் (அதாவது அந்நிய நேரடி முதலீடு) கொண்ட நாடுகள் இடையே தான் அநேக வர்த்தகம் நடைபெறுகிறது என்பதும் இந்த உண்மைகளில் ஒன்று. இந்த கட்டமைப்புக்கான ஒரு உதாரணமாக, பொருளாதாரம் ஏகபோக போட்டியையும் முதலீட்டுக்கு ஏற்ப பெருகும் வருவாயையும் வெளிப்படுத்துகிறது. உலக சந்தையாளர் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று அடிப்படை தத்துவங்கள் உள்ளன: 1. ஒப்பீட்டு அனுகூலத் தத்துவம் 2. வர்த்தக அல்லது தயாரிப்பு வர்த்தக சுற்று தத்துவம் 3. வர்த்தக நோக்குநிலை தத்துவம் மேலே கண்ட தத்துவார்த்த மாதிரிகளை விட வர்த்தக போக்குகள் குறித்த மிகவும் அனுபவரீதியான பகுப்பாய்வினை இந்த ஈர்ப்பு மாதிரி வழங்குகிறது. ஈர்ப்பு மாதிரியானது தனது அடிப்படையான வடிவத்தில் நாடுகளுக்கு இடையிலான தூரம் மற்றும் நாட்டின் பொருளாதார அளவுகளின் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தகத்தை முன்கணிக்கிறது. இரண்டு பொருட்களின் அளவுகள் மற்றும் தூரத்தை கருத்தில் கொண்டு கூறப்படும் நியூட்டனின் ஈர்ப்பு விதியை ஒத்ததாய் இந்த மாதிரி உள்ளது. அனுபவரீதியாக இந்த மாதிரி வலிமையானதாக இருப்பதை பொருளாதார அளவீடுகள் மூலமான ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. வருவாய் அளவு, நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள், மற்றும் வர்த்தக கொள்கைகள் ஆகியவையும் இந்த மாதிரியின் விரிவாக்கப்பட்ட வடிவங்களில் சேர்க்கப்படுகின்றன. ஆதாரம் : ஏற்றுமதி. இறக்குமதி. உலக உண்மைகள் புத்தகம். மரபுரீதியாக வர்த்தகம் இரண்டு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. நூற்றாண்டுகாலமாக பல நாடுகள் சர்வதேச வர்த்தகத்திற்கு மிக உயர்ந்த வரிவிதிப்புகளையும் ஏராளமான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக இங்கிலாந்தில், சுதந்திர சந்தை மீதான நம்பிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அதன்பின் மேற்கு நாடுகளில் இந்த சிந்தனை ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இரண்டாம் உலகப் போர் காலம் துவங்கி வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது உடன்பாடு (GATT) மற்றும் உலக வணிக அமைப்பு ஆகிய சர்ச்சைக்குரிய பல்தரப்பு ஒப்பந்தங்கள் எல்லாம் சுதந்திர சந்தையை ஊக்குவித்து ஒரு உலகளாவிய வரன்முறைக்குட்பட்ட வர்த்தக கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்தன. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் எல்லாம் பல சமயங்களில் வளரும் நாடுகளுக்கு அனுகூலம் இல்லாதவை என அதிருப்தி மற்றும் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளன. பொதுவாக பொருளாதாரரீதியாக மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் சுதந்திர சந்தையை வலிமையுடன் ஆதரிக்கின்றன. என்றாலும் தேர்ந்தெடுத்த துறைகளில் அவை சுயகாப்புவாதத்தில் ஈடுபடுகின்றன. உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விவசாயப் பொருட்கள் இறக்குமதியில் சுயகாப்பு வரிவிதிப்புகளை விதிக்கின்றன. நெதர்லாந்தும் இங்கிலாந்தும் தான் தாங்கள் பொருளாதார ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முதலில் சுதந்திர சந்தைக்கு வலிமையான ஆதரவாளர்களாய் திகழ்ந்தனர். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை இதன் ஆதரவு நாடுகளாய் உள்ளன. இப்போது பொருளாதாரரீதியாக வலிமை பெற்று வரும் இன்னும் பல நாடுகளும் (இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்) சுதந்திர சந்தைக்கான ஆதரவு நாடுகளாக உருவாகியுள்ளன. வரியமைப்பு விகிதங்கள் வீழ்ச்சி காண்பதால் அந்நிய நேரடி முதலீடு, கொள்முதல், மற்றும் வர்த்தக வசதி உள்ளிட்ட வரி அல்லாத நடவடிக்கைகளிலும் பேச்சுவார்த்தைக்கான விருப்பம் பெருகிவருகிறது. வர்த்தக மற்றும் சுங்க நடைமுறைகளுக்கு ஆகும் பரிவர்த்தனை செலவை கருத்தில் கொண்டு இந்த சிந்தனை எழுகிறது. மரபுரீதியாக விவசாய நலன்கள் சுதந்திர சந்தைக்கு ஆதரவாய் இருப்பதையும் உற்பத்தி துறைகள் பெரும்பாலும் சுயகாப்புவாதத்தை ஆதரிப்பதையும் காண முடியும். ஆயினும் சமீப வருடங்களில் இந்த போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் விவசாய நலன்கள் தான் முக்கிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை விட விவசாயப் பொருட்களுக்கு கூடுதலான சுயகாப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க பொறுப்பாக செயல்பட்டுள்ளன. மந்தநிலை சமயங்களில் உள்நாட்டு தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி வரிவிதிப்புகளை அதிகப்படுத்த வலிமையான உள்நாட்டு நெருக்குதல் பெருகுகிறது. பெருமந்த நிலை சமயத்தில் உலகெங்கும் இந்த போக்கு நிகழ்ந்தது. இந்த வரிவிதிப்புகள் தான் உலக வர்த்தகத்தில் நேர்ந்த வீழ்ச்சிக்கு காரணம் என பல பொருளாதார வல்லுநர்களும் கூறினர். அத்துடன் இது மந்தநிலையை தீவிரமாய் ஆழப்படுத்தியதாகவும் பலர் நம்பினர். சர்வதேச வர்த்தக வரன்முறைகளானவை உலக அளவில் உலக வர்த்தக அமைப்பு மூலமாகவும், மற்றும் தென் அமெரிக்காவில் MERCOSUR, வட அமெரிக்க சுதந்திர சந்தை ஒப்பந்தம் (NAFTA - இது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவுக்கும் 27 சுதந்திர அரசுகள் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்) போன்ற பல பிராந்திய ஒப்பந்தங்கள் மூலமாகவும் அமல்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சுதந்திர சந்தை பகுதி (FTAA) ஒன்றை நிறுவுவதற்கு 2005 ஆம் ஆண்டு நடந்த புனோஸ் ஏரெஸ் பேச்சுவார்த்தைகள் லத்தீன் அமெரிக்க மக்களின் எதிர்ப்பின் காரணமாக தோல்வியுற்றது. முதலீட்டு மீதான பல்தரப்பு ஒப்பந்தம் (MAI) போன்ற இத்தகைய மற்ற சில ஒப்பந்தங்களும் சமீப வருடங்களில் தோல்வியடைந்திருக்கின்றன. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வெளிப்படையாய் காணக்கூடிய அதே அபாயங்களை சர்வதேச எல்லைகளைக் கடந்து வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் எதிர்கொள்கின்றன. உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்: இத்துடன் சேர்த்து செலாவணி பரிவர்த்தனை விலைகள் எதிர்மறையாய் போகும் அபாயத்தையும் சர்வதேச வர்த்தகம் எதிர்கொள்கிறது (அதேபோல் சில சமயங்களில் இது சாதகத்தையும் கொண்டுவர முடியும்). அரசாங்கங்களுக்கு இடையிலான புள்ளிவிவர சேவைகள், தேசம் சாரா அமைப்புகள் மற்றும் தேசிய புள்ளிவிவர நிறுவனங்கள் ஆகியவை சர்வதேச வர்த்தகம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு மற்றும் மதிப்பு குறித்த தரவு தயாரிப்பு பொருட்களின் வரிசைரீதியாக இந்த புள்ளிவிவரங்களில் காணக் கிடைக்கின்றன: சர்வதேச வர்த்தகம் மீதான பல்வேறு புள்ளிவிவரத் தொகுப்புகளிலும் பயன்படுத்தப்படும் வரையறைகளும் வழிமுறைத் தத்துவங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன. இந்த வரையறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த மீதரவு தரவுடன் சேர்த்து பொதுவாக வெளியிடப்படுகிறது. கணக்கியல் கணக்குப் பதிவியல் ("Accounting" என்பது பங்குதாரர்கள் மற்றும் மேலாளர்கள் போன்ற பயனர்களுக்கு ஒரு வர்த்தக உருவின் நிதியாதாரத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கலை. இந்தக் கருத்துப்பரிமாற்றம் என்பது பொதுவாக நிதியாதார வடிவிலான அறிக்கைகளாக இருக்கும், இதில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பொருளாதார மூலங்கள் வடிவில் பணம் காட்டப்படுகிறது; பயனருக்கு தொடர்புடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்கும் தகவலை தேர்ந்தெடுப்பதில்தான் அந்த கலை அடங்கியிருக்கிறது. கணக்குப் பதிவியல் என்பது கணித அறிவியல்|கணித அறிவியலின் ஒரு கிளை, இது வணிகத்தில் ஏற்படும் வெற்றி தோல்விகளின் காரணங்களைக் கண்டறிவதில் பயனுடையதாக இருக்கிறது. கணக்குப் பதிவியலின் கொள்கைகள், வர்த்தக உருவுக்கு நடைமுறைத் தொழிலின் மூன்று பிரிவுகளில் பொருந்துகிறது, அவை கணக்கு வைப்பு, வரவு செலவு கணக்கு முறை மற்றும் தணிக்கை. கணக்கு வைப்பு , அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செர்டிஃபைட் பப்ளிக் அகௌண்டன்ட்ஸ் (AICPA) ஆல் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது, அது "ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையில் மற்றும் பணம், பரிவர்த்தனைகளில் மற்றும் பகுதியாக அல்லது குறைந்தது நிதியாதாரப் பண்புக்கூறினைக் கொண்டிருக்கும் பொருளில் பதிவுசெய்தல், வகைபிரித்தல் மற்றும் தொகுத்துரைத்தல் மேலும் அதன்மீதான முடிவுகளை இடையீடு செய்தல் போன்றதான ஒரு கலையாகும்." கணக்கு வைப்பு முறை ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையானது; ஆரம்பகால கணக்கு வைப்பு செய்யப்பட்டதற்கான பதிவுகள், 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது, மத்திய கிழக்கில் காணப்பட்டது. அக் காலத்து மக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் பயிர் வளர்ச்சியைப் பதிவுசெய்வதற்குப் பண்டையகால கணக்கு வைப்பு முறைகளை நம்பியிருந்தனர். வர்த்தகம் முன்னேற்றம் கொண்டு கணக்கு வைப்பு வளர்ச்சிபெற்று, காலப்போக்கில் மேன்மை அடையவும் முன்னேற்றம் கொள்ளவும் தொடங்கியது. ஆரம்பகால கணக்குகள், பிரதானமாக வணிகர்|வணிகரின் நினைவாற்றலில் உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டது மேலும் இந்தக் கணக்குகளுக்கான பார்வையாளர்களாக இருந்தது உரிமையாளர் அல்லது பதிவு செய்பவர் மட்டுமே. பன்மடங்கு முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய ஒரு வர்த்தக உருவினால் உருவாக்கப்பட்ட சிக்கல்களுக்குச் செப்பனிடப்படாத முறையிலான கணக்கு வைப்பு முறைகள் போதாததாக இருந்தது, அதனால் இரட்டை-உள்ளீடு வரவு செலவு கணக்கு முறை, 14 ஆம் நூற்றாண்டில் வடக்கு இத்தாலியில் முதன் முதலில் தோன்றியது, இங்கு ஒரு ஒற்றைத் தனிநபரால் முதலீடு செய்ய இயன்றதை விட அதிகமான மூலதனம் வர்த்தக முயற்சிகளுக்குத் தேவைப்பட்டது. கூட்டுப் பங்கு நிறுவனங்கள் வளர்ச்சி கணக்குகளுக்குப் பரந்துவிரிந்த பார்வையாளகளை உருவாக்கியது, ஏனெனில் தங்கள் செயல்பாடுகள் பற்றி எந்த முன்கணிப்பும் இல்லாத முதலீட்டாளர்கள், தேவைப்படும் தகவல்களைப் பெறுவதற்குக் கணக்குகளையே நம்பியிருந்தனர். இந்த வளர்ச்சி, கணக்கு வைப்பு அமைப்புகளில் உள்ளுக்குள்ளான (அதாவது நிர்வாக கணக்குவைப்பு) மற்றும் வெளிப்புற (அதாவது நிதியாதாரா கணக்குவைப்பு) நோக்கங்களுக்காக பிளவை ஏற்படுத்தியது, அதன் தொடர்ச்சியாக கணக்கு வைப்பு மற்றும் வெளிப்படுத்தும் விதிமுறைகளும் ஏற்பட்டது மேலும் வெளிப்புற கணக்குகள் தணிக்கையாளர்களால் கட்டுப்பாடற்ற சான்றளித்தலுக்கான தேவையும் உருவானது. இன்று கணக்கு வைப்பு "வர்த்தகத்தின் மொழி" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது தான் ஒரு வர்த்தக உரு பற்றிய நிதியாதாரத் தகவல்களைப் பல்வேறு குழுக்களான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் சாதனமாக இருக்கிறது. வர்த்தக உருவுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்குத் தெரிவிப்பதில் கவனம்செலுத்தும் கணக்குவைப்பு நிர்வாக கணக்குவைப்பு என்று அழைக்கப்படும் மேலும் இது ஊழியர்கள், மேலாளர்கள் உரிமையாளர்-மேலாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்குத் தகவல்களை வழங்குவதற்காகப் பயன்படுகிறது. நிர்வாக கணக்குவைப்பு முதன்மையாக நிர்வாக அல்லது இயங்கும் முடிவுகளை மேற்கொள்வதற்கான ஒரு அடித்தளமாக இருக்கிறது. வர்த்தக உருவுக்கு வெளியே இருக்கும் நபர்களுக்குத் தகவல்களை வழங்கும் கணக்குவைப்பு நிதியாதார கணக்குவைப்பு என்று அழைக்கப்படும், மேலும் இது தற்போதைய மற்றும் ஏற்படக்கூடிய பங்குதாரர்களுக்கு, வங்கிகள் அல்லது விற்பனையாளர் போன்ற கடன் கொடுத்தவர்கள், நிதியாதார ஆய்வாளர்கள் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது. இந்தப் பயனர்கள் வெவ்வேறு தேவைகளைக் கொண்டிருப்பதால், நிதியாதார கணக்குகளின் வழங்கல் மிகவும் கட்டமைப்புடன் இருக்கிறது மேலும் இது நிர்வாக கணக்குவைப்பை விட இன்னும் அதிக விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறது. நிதியாதார கணக்கு வைப்பை முறைப்படுத்தும் விதிமுறை தொகுப்பு ஜெனரலி அக்சப்டட் அகௌண்டிங் பிரின்சிபல்ஸ் அல்லது GAAP என்று அழைக்கப்படுகிறது. "அக்கௌண்டன்ட்" என்னும் சொல் பிரெஞ்சு சொல்லான லிருந்து உருவானது, இது தன்னுடைய மூலத்தை லத்தின் சொல்லான லிருந்து பெற்றது. முன்னர் இந்த வார்த்தை ஆங்கிலத்தில் முறையாக "அக்கம்ப்டண்ட் என்று எழுதப்பட்டது, ஆனால காலப்போக்கில் அந்த வார்த்தை, அது எப்போதும் "p" என்னும் எழுத்தை விட்டுவிட்டே உச்சரிக்கப்பட்டுவந்ததால், அது மெல்லமெல்ல உச்சரிப்பு மற்றும் எழுத்துக்கூட்டு முறையிலும் மாற்றம்கொண்டு தற்போதைய வடிவிற்கு வந்துள்ளது. ஆரம்பகால கணக்குவைப்பு பதிவுகள் பழங்கால பாபிலோன், அஸ்ஸைரியா மற்றும் சுமேரியா இடிபாடுகளுக்கிடையே காணப்பட்டது, இவை 7000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தினைக் கொண்டிருக்கிறது. அக் காலத்து மக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் பயிர் வளர்ச்சியைப் பதிவுசெய்வதற்குப் பண்டைக்கால கணக்கு வைப்பு முறைகளை நம்பியிருந்தனர். பயிர் செய்வதற்கும் கால்நடை பராமரிப்பிற்கும் இயற்கையான பருவங்கள் இருப்பதால், பயிர்கள் அறுவடை செய்யப்பட்டபிறகு அல்லது இளம் விலங்குகள் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் தேவைக்கும் அதிகமாக இருப்பது அதிகரித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதும் அவற்றை எண்ணுவதும் எளிமையாக இருக்கிறது. கி.மு. 8000–3700 காலகட்டத்தில், வேளாண்மையின் அதிகமான விளைச்சல் காரணமாக செழிப்பான பிறை சிறு குடியேற்றங்களைக் கண்டது. இந்த அளவுக்கு அதிகமானவற்றை அடையாளங் கண்டு அதைப் பெறவது தொடர்பாக கண்காணிக்கும் நோக்கங்களுக்காக கூம்பு அல்லது பந்து போன்ற எளிமையான வடிவியல் அமைப்புகளாக வடிவமைக்கப்பட்ட அடையாளத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டது, மேலும் இது தனிப்பட்ட சொத்துடைமைகளுக்கான பட்டியலைக் குறிக்கும் கணக்குகளுக்கு உதாரணமாக இருப்பவை. அவற்றில் சில செதுக்கப்பட்ட கோடுகள் மற்றும் முத்திரையிடப்பட்ட புள்ளிகள் போன்ற வடிவங்களில் அடையாளக் குறிகளைக் கொண்டிருந்தன. கற்கால சமூகத் தலைவர்கள் விவசாயியின் மந்தைகள் மற்றும் அறுவடைகளில் ஒரு பங்கு என்ற வகையில் அளவுக்கு மீறிய பொருட்களை அவ்வப்போது சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட சமூகப் பொருட்கள் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது, ஆனால் அவற்றில் பெரும்பங்கு மதச் சம்பிரதாயங்களுக்கும் திருவிழாக்களுக்குமே ஒதுக்கப்பட்டது. கி.மு. 7000 ஆம் ஆண்டில், சுமார் 10 அடையாள முத்திரை வடிவங்களே இருந்தன ஏனெனில் அந்த அமைப்பானது வெறும் விவசாயப் பொருட்களை பதிவுசெய்வதற்கு மட்டுமே பயன்பட்டது, தானியம், எண்ணெய் மற்றும் வளர்க்கப்படும் விலங்குகள் போன்று அந்த நேரத்தில் இருந்த உழவுப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒன்று பிரதிநிதிப்படுத்தியது.கி.மு. 3500 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அடையாள வில்லை வடிவங்களின் எண்ணிக்கை சுமார் 350 ஆக அதிகரித்தது, அந்தநேரத்தில் நகர்ப்புற பட்டறைகள் மறுபகிர்ந்தளிப்பு பொருளாதாரத்துக்குப் பங்களிக்க ஆரம்பித்திருந்தன. புதிய அடையாள வில்லைகள் கம்பளி மற்றும் உலோகம் போன்ற கச்சா பொருட்களைக் குறித்தன, இதர வில்லைகள் துணிகள், உடைகள், நகைகள், ரொட்டி, பீர் மற்றும் தேன் போன்ற முடிக்கப்பட்ட பொருட்களின் அடையாளமாக இருந்தன. களிமண் முத்திரை வில்லைகளைப் பயன்படுத்தி ஒரு வகையான வரவு செலவு கணக்கு முறை கண்டுபிடிப்பு, மனித குலத்த்தின் புலன்உணர்வு சார்ந்த முன்னேற்றத்தைப் பிரதிநிதிக்கிறது. முத்திரை வில்லை அமைப்பின் புலனுணர்வு சார்ந்த முக்கியத்துவம், தரவுகளை மாற்றியமைப்பதை ஊக்குவிப்பதாக இருந்தது. ஒரு தனிநபரிடத்திலிருந்து மற்றொரு நபருக்கு வாய்மொழியாக தகவல் சொல்வதுடன் ஒப்பிடுகையில், முத்திரை வில்லைகள் கூடுதல்-உடல் சார்ந்தவையாக இருந்தது, அதாவது மனிதனின் மனதுக்கு வெளியே. இதன் விளைவாக, கற்கால கணக்கர்கள் மற்றொருவரின் அறிவைப் பெறுபவர்களாக இல்லாமல், தரவுகளைக் குறியேற்றம் மற்றும் குறிவிளக்கல் செய்வதில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களானார்கள். முத்திரை வில்லை அமைப்பு உண்மையான பொருட்களுக்குப் பதிலாக சிறு எண்ணக்கூடியவைகளால் இடம்பெற்றன, அவை அவற்றின் பெருந்திரள் மற்றும் எடையை நீக்கியது, மேலும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் தரவுகளை வழங்கி அவற்றையே ஒரு உருமாதிரியாக வைத்துக்கொண்டு கருத்துப்பொருளாக அவற்றுடன் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது. இதன் விளைவாக, தானியங்களின் கனமான கூடைகள் மற்றும் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும் விலங்குகளை எளிதாக எண்ணவும் மறுபடி எண்ணவும் முடியும். இந்த எண்ணக்கூடியவைகளை கைகளால் நகர்த்தியும் நீக்கியும் கணக்கர்கள் கூட்டவும், கழிக்கவும், பெருக்கவும், வகுக்கவும் செய்தனர். கலப்பை, பாய்மரக் கப்பல்கள் மற்றும் செப்பு உலோக வேலைகள் போன்ற தொழில்நுட்ப புதுமைகளின் உருவாக்கத்தின் நடுவே [[மெசபோடோமிய]] நாகரிகம் கி.மு.[[3700]]–[[2900]] காலத்தில் ஏற்பட்டது. கோவில்களால் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கு படவெழுத்து அம்சங்களுடன் கூடிய களிமண் தகடுகள் இந்தக் காலக்கட்டத்தில் தோன்றின. "புல்லேயி" (லத்தின்: 'குமிழ்') என்று அறியப்பட்ட களிமண் கொள்கலன்கள், சுசாவின் எலாமைட் நகரில் பயன்படுத்தப்பட்டன, இவை முத்திரை வில்லைகளைக் கொண்டிருந்தன. இந்தக் கொள்கலன்கள் கோள வடிவைக் கொண்டிருந்தன மற்றும் அவை உறைவிடமாகவும் செயல்பட்டன, பரிவர்த்தனையில் ஈடுபடும் தனிநபர்களின் முத்திரை அதன்மீது செதுக்கப்படும். அடையாள முத்திரையில் அவை கொண்டிருந்த குறியீடுகள் அவற்றின் மேற்புரத்தில் படவெழுத்தாக பிரதிநிதித்தன, மேலும் பொருட்களை பெரும் நபர்கள் தாங்கள் பெற்ற பொருட்களைப் பரிசோதித்தவுடன் புல்லாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை மற்றும் அம்சங்களுடன் ஒத்துப்போவதைச் சரிபார்ப்பார்கள். "புல்லா" வின் பொருளடக்கம் அதன் மேற்புறத்தில் குறியிடப்பட்டுள்ளது என்னும் மெய்மை கொள்கலனை அழிக்காமல் பரிசோதிப்பதற்கான ஒரு எளிய வழிமுறையை ஏற்படுத்தியது, வர்த்தகப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்கெனவே இருக்கும் அமைப்புக்கு ஆதரவாக ஒரே நேரத்தில் உருவானது என்றபோதிலும் அதற்குள்ளாகவே எழுதும் ஒரு பணியை அது கொண்டிருந்தது, இறுதியில் வாய்மொழியற்ற தகவல்தொடர்புக்கு ஒரு உறுதியான பழக்கமாகி விட்டது. இறுதியில், "புல்லேயி" க்கள் களிமண் தகடுகளால மாற்றியிடப்பட்டன, இவை அடையாள முத்திரைகளைப் பிரதிநிதிப்பதற்குக் குறியீடுகளைப் பயன்படுத்தின. சுமேரியன் காலத்தின்போது முத்திரை வில்லை உறை கணக்கு வைப்பு, தட்டையான களிமண் தகடுகளால் மாற்றியிடப்பட்டன இவை குறியீடுகளை மட்டுமே மாற்றல் செய்த முத்திரை வில்லைகளால் அச்சு எடுக்கப்பட்டன. இத்தகைய ஆவணங்கள் படியெடுப்பவர்களால் வைக்கப்பட்டிருந்தன, இவர்கள் தேவைப்படும் இலக்கிய மற்றும் கணித திறன்களைப் பெறுவதற்குக் கவனமாக பயிற்சியளிக்கப்பட்டுளனர் மேலும் நிதியாதாரப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்வதற்கு இவர்களே பொறுப்பாளிகளாவார்கள். அத்தகை பதிவுகள், ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் தகடுகளில் செதுக்கப்பட்ட சுருக்க குறியீட்டு வடிவில் கியூனிஃபார்ம் எழுத்துகளின் உதாரணங்களாக திகழ்பவைகளுக்கு முந்தையது, இது கி.மு. 2900 ஆம் ஆண்டில் ஜெம்டெட் நாஸ்ர் இல் சுமேரியனில் எழுதப்பட்டுள்ளது. அதனால் "முத்திரை வில்லை கணக்கு வைப்பு" எழுத்து வடிவுக்கு முந்தையது மட்டுமல்லாமல் எழுதுதல் மற்றும் கருத்தியலான எண்ணுதல் உருவாக்கத்தில் பெரும் இயங்குவிசையையும் உள்ளடக்கியிருந்தது. "ரெஸ் கெஸ்டேயி டிவி அகஸ்டி" (லத்தின்: "தெய்வீகத்தன்மையுடைய அகஸ்டஸ்ஸின் செயல்கள் ") அகஸ்டஸ்சின் நிருவாகத்தின் கீழ் இருந்த ரோம மக்களின் குறிப்பிடத்தக்க வாழ்க்கைக் குறிப்பாகும். இது அவருடைய பொது மக்களுக்கான செலவினைப் பட்டியலிட்டு தொகையினையும் குறிப்பிடுகிறது, அவற்றுள் மக்களுக்குப் பகிர்ந்தளித்தது, படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அல்லது பண உதவிகள், "ஏரேரியம்" (கருவூலம்) க்கு வழங்கிய மான்யங்கள், கோவில்கள் கட்டுதல், மத வழிபாடுகள் மற்றும் நாடகஞ்சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் வாளேந்தி போர் புரியும் விளையாட்டுகளுக்கான செலவுகள் ஆகியவை அடங்கும். இது நாட்டின் வரவு செலவுபற்றிய கணக்காக இருக்கவில்லை ஆனால் அகஸ்டஸின் தாராளப் பண்பினை வெளிப்படுத்துவதற்கான் நோக்கம் கொண்டிருந்தது. கணக்கு வைப்பு நோக்கில் பார்க்கும்போது, "ரெஸ் கெஸ்டேயி டிவி அகஸ்டி" யின் முக்கியத்துவம், நிருவாக அதிகாரம் விவரமான நிதியாதார தகவல்களுக்கு அணுக்கம் கொண்டிருந்ததைப் படம்பிடித்துக்காட்டுவதில் அடங்கியிருக்கிறது, இது நாற்பது ஆண்டு காலத்தை உள்ளடக்கியிருந்தது மேலும் இது அந்த நிகழ்வுக்குப் பின்னர் இன்னமும் மீட்கப்படவில்லை. பேரரசரின் உடனடி பார்வையில் இருந்த கணக்கு வைப்பு தகவலானது திட்டமிடுதல் மற்றும் முடிவு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நோக்கம் கொண்டிருந்ததைப் பரிந்துரைக்கிறது. ரோம வரலாற்றாசிரியர்கள் சியூடோனியஸ் மற்றும் காசியஸ் டியோ இவ்வாறு பதிவுசெய்கிறார்கள், கி.மு. 23 ஆம் ஆண்டில் அகஸ்டஸ் ஒரு "ரேஷனோரியம்" (கணக்கு) தயாரித்தார், அதில் பொதுமக்கள் வருவாய்கள், "ஏராரியம்" (கருவூலம்), மாநில "ஃபிஸ்கி" (வரி அதிகாரிகள்) மற்றும் "பப்ளிகானி" (பொது ஒப்பந்ததாரர்கள்) கையில் இருக்கும் செலாவணி பணத்தின் தொகைகளைப் பட்டியலிட்டது; அவற்றில் விடுவிக்கப்பட்ட மக்களும் அடிமைகளின் பெயர்களும் கூட சேர்க்கப்பட்டிருந்தது, இவர்களிடமிருந்து விரிவான விளக்கத்தைப் பெறமுடியும். பேரரசரின் நிருவாக அதிகாரத்தின் நெருக்கத்தில் இந்த தகவல்கள் இருந்ததற்கு, அகஸ்டஸ் அவர்களாலேயே இது எழுதப்பட்டது என்று கூறும் டாசிடஸ்ஸின் அறிக்கை சான்றளிக்கிறது. பணம், பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகள் ரோம படைகளின் இராணுவ ஊழியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. கி.பி. 110 ஆம் ஆண்டில் விண்டோலண்டா கோட்டையில் ஒரு சில நாட்களில் பெறப்பட்ட சிறு பணத் தொகைகளின் கணக்குகள், ஒருவேளை முகாம்களில் அதிகமான பொருட்களின் சப்ளை அல்லது தயாரிப்புகளின் விற்பனையில் கிடைத்த வருவாய், "செர்வெசா" (பீர்) மற்றும் "கிளாவி காலிகாரெஸ்" (மிதியடிகளுக்கான ஆணிகள்) போன்று அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட பொருட்கள், அத்துடன் தனிப்பட்ட படைவீரர்களால் வாங்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பண வருவாய்களை தினசரி அடிப்படையில் அந்த அதிகாரத்தால் கணக்கிட முடிந்ததைக் காட்டுகிறது. கோட்டையின் அடிப்படைத் தேவைகள் நேரடி உற்பத்தி, வாங்குதல் மற்றும் கோரிப்பெறுதல் போன்ற ஒரு கலவையில் ஈடு செய்யப்பட்டது; 5,000 "மோடி" (அளவுகள்) "பிரேஸ்கள்" (மதுபானம் வடித்தலில் பயன்படக்கூடிய ஒருவகை தானியம்) வாங்குவதற்கான பண கோரிக்கைக்கான ஒரு கடிதத்தில், குறிப்பிட்ட மக்களை கொடுத்து உணவுப்பொருட்களை வாங்கியதாகக் காட்டுகிறது. ஹெரோனினஸ் ஆவணப்பதிவு என்பது நாணற்புல்லாலான ஆவணங்களின் ஒரு பெரும் தொகுப்புக்காக கொடுக்கப்பட்ட பெயர், இது பெரும்பாலும் கடிதங்களாக இருக்கின்றன, ஆனால் அவற்றில் சுமாரான எண்ணிக்கையிலான கணக்குகளும் அடங்கும், இது மூன்றாம் நூற்றாண்டு ரோமன் எகிப்துலிருந்து வருகிறது. இதிலிருக்கும் பெரும்பாலான ஆவணங்கள் ஒரு பெரிய தனியார் எஸ்டேட்டுக்குத் தொடர்புடையதாக இருக்கிறது, இது ஹெரோனினஸ் அவர்களின் நினைவாக வைத்திருப்பதற்குக் காரணம் அவர் அந்த எஸ்டேட்டின் "ப்ரோன்டிஸ்டெஸ்" (கோய்னே கிரீக்: மேலாளர்) ஆக இருந்தார், அந்த எஸ்டேட் ஒரு கடினமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கணக்கு வைப்பு அமைப்பைக் கொண்டிருந்தது, இது அதன் எல்லா உள்ளூர் பண்ணை மேலாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எஸ்டேட்டின் தினசரி அலுவல்களுக்கு, வேலையாட்களுக்கு கூலி, பயிர்கள் உற்பத்தி, விளைபயிர்களின் விற்பனை, விலங்குகளின் பயன்பாடு மற்றும் ஊழியர்கள் மீதான பொதுச் செலவுகள் என எஸ்டேட்டின் ஒவ்வொரு உட்பிரிவின் ஒவ்வொரு நிர்வாகியும் அவருடையதேயான ஒரு சிறு கணக்குகளை வைத்திருந்தார். இந்தத் தகவல் பின்னர் ஒரு நாணற்புல் காகித சுருள்களாக சுருக்கப்பட்டு எஸ்டேட்டின் ஒவ்வொரு குறிப்பிட்ட உட்பிரிவின் ஒரு பெரிய ஆண்டு கணக்காக செய்யப்பட்டது. உள்ளீடுகள் பிரிவுகளாக அடுக்கப்பட்டிருந்தன, எல்லா வெவ்வேறு பிரிவுகளிலிருந்தும் பணச் செலவுகள் மற்றும் வருவாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வகையான கணக்குகள் உரிமையாளருக்கு சிறப்பான பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுக்கிறது ஏனெனில் தகவல்கள் ஒரு நோக்கத்தில் தேர்வு செய்து அடுக்கிவைக்கப்படுகிறது. எளிய கணக்கு வைப்பு கிறித்துவ விவிலியம் (புதிய ஏற்பாடு) புக் ஆஃப் மாத்யூவில் பாரபிள் ஆஃப் தி டாலண்டஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புனித குரான்|குரானில் "ஹெசாப்" (அரபிக்: கணக்கு) என்னும் சொல் அதனுடைய பொதுவியல்புகளின் பொருளில் பயன்படுத்தப்படுகிறது, இது மனித முயற்சிகளுக்குச் சம்பந்தமுடைய எல்லா விஷயங்களையும் கடவுகளிடம் தெரிவிக்கவேண்டிய ஒருவரின் கடமைக்குத் தொடர்புடையதாக இருக்கிறது. புனித குரானின் கூற்றுப்படி, இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் தங்கள் கடன்பட்ட நிலையை (சுரா 2, அயாஹ் 282) பதிவுசெய்து வைத்திருக்கவேண்டும், இவ்வாறு இஸ்லாம் பரிவர்த்தனைகளின் பதிவுக்கும் தெரிவிப்பதற்குமான ஒரு பொது அங்கீகாரத்தையும் வழிகாட்டலையும் வழங்குகிறது. பரம்பரை சொத்துக்கான இஸ்லாமிய சட்டம் (சுரா 4, அயாஹ் 11) ஒரு தனிநபர் இறந்துவிட்டால் அவருடைய எஸ்டேட் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை துல்லியமாக விவரிக்கிறது. விருப்பாவண அளிப்படையின் ஆற்றல் அடிப்படையிலேயே நிகர எஸ்டேட்டின் மூன்றில் ஒரு பங்கிற்குதான் வரையறுக்கப்பட்டுள்ளது (அதாவது ஈமச்சடங்கு செலவுகள் மற்றும் கடன்களை அடைத்த பிறகு மீதமிருக்கும் சொத்திருப்புகள்), இது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், மனைவி மற்றும் பிள்ளைகள் என்றில்லாமல் தந்தை மற்றும் தாய்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கடினத்தன்மையின் விளைவாக, முஹம்மத் இபின் மூசா அல்-க்வாரிஸ்மி மற்றும் இதர மத்தியகால இஸ்லாமிய கணிதவியலாளர்களால் இயற்கணிதம் (அரபிக்: "அல்-ஜபர்" ) உருவாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அல்-க்வாரிஸ்மியின் "ஹிசாப் அல்-ஜபர் வா அல்-முகாபலா" (அரபிக்: "தி காம்பெண்டியஸ் புக் ஆன் கால்குலேஷன் பை கம்ப்ளீஷன் அண்ட் பாலன்சிங்", பாக்தாத், 825), நேரியல் சமன்பாடுகளைப் பயன்படுத்தி பரம்பரை சொத்துக்கான இஸ்லாமிய சட்டத்திற்கான ஒரு தீர்வாக ஒரு அத்தியாயத்தையே இதற்கு ஒதுக்கியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இந்திய எண்களைப் பயன்படுத்துதல் பற்றி, அல்-கவாரிஸ்மியின் "கிதாப் அல்-ஜம் வா-அல்-தாஃப்ரிக் பி-ஹிசாப் அல்-ஹிந்த்" (அரபிக்: இந்து கணிப்புப்படி கூட்டுதல் மற்றும் கழித்தலுக்கான புத்தகம்) இன் லத்தீன் மொழிபெயர்ப்புகள் தசாமிசம் நிலைபடுத்தும் எண் அமைப்பை மேற்கத்திய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கணிதவியல் மற்றும் கணக்கு வைப்பு ஆகியவற்றின் உருவாக்கம் மறுமலர்ச்சியின்போது ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தது. பிந்தைய 15 ஆம் நூற்றாண்டில் கணிதவியலின் வளர்ச்சி ஒரு முக்கிய காலக்கட்டத்தில் இருந்தது. அரப் கணிதத்திலிருந்து இந்து-அரபிக் எண்கள் மற்றும் இயற்கணிதம் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பெனெடிக்டை துறவி கெர்பெர்ட் ஆஃப் அவுராலிக் அவர்களால் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 1202 ஆம் ஆண்டில் லியானார்டோ பிசானோ (ஃபிபான்னோக்கி என்றும் அறியப்பட்டவர்) தன்னுடைய லிபெர் அபாகியில் வர்த்தக கணிதவியல், இந்து-அரபிக் எண்கள் மற்றும் அட்சர கணிதத்தின் விதிமுறைகளை ஒன்றாகப் பயன்படுத்தியபிறகு தான் இந்து-அரபிக் எண்கள் இத்தாலியில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. இயற்கணிதம் மற்றும் வரவு செலவு கணக்கு முறைகளுக்கு இடையில் எந்த நேரடியான தொடர்பும் இல்லாதபோதும், இந்தப் பாடங்களைப் பயிற்றுவித்தல் மற்றும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் ஒரே வகுப்புக் குழுவைச் சார்ந்திருந்தன, அதாவது கணக்கிடுதல் பள்ளிகள் (ஃப்ளாண்டர்ஸ் மற்றும் ஜெர்மனியில்) அல்லது அபாகஸ் பள்ளி (இத்தாலியில் "அப்பாக்கோ" என்று அறியப்படுவது) ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்ட வணிகர்களின் பிள்ளைகள் வர்த்தகம் மற்றும் வணிகத்துக்குப் பயன்படும் திறன்களைக் கற்றுக்கொண்டனர். வரவு செலவு கணக்கு முறை இயக்கங்களைக் கையாள்வதற்கு இயற்கணிதத்தை பயன்படுத்தும் தேவை இருக்காது, ஆனால் கடினமான பண்டமாற்று செயல்கள் அல்லது கூட்டு வட்டிகளைக் கணிப்பதற்கு கணதத்தின் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது கட்டாயமாகிறது மற்றும் இயற்கணிதத்தை அறிந்துகொள்வது பயனுடையதாக இருக்கிறது. மத்திய காலங்களின் போது பண்டமாற்றம் செய்வது தான் பயணிக்கும் வணிகர்களின் முதன்மைப் பழக்கமாக இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பா பணம் சார் பொருளாதார அமைப்புகளை நோக்கி நகரத் தொடங்கியவுடன், உடல் உழைப்பு தேவைப்படாத வணிகர்கள், வங்கிக் கடன்களால் நிதியளிக்கப்பட்ட பன்மடங்கு ஒரேநேர பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடுவதற்கு அவர்கள் வரவு செலவு கணக்கு முறையையே சார்ந்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு முக்கிய பெரும் முன்னேற்ற நிகழ்வாக இரட்டை-உள்ளீடு வரவு செலவு கணக்கு முறை ஏற்பட்டது, இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு பற்று வரவுப் பதிவைக் கொண்டிருக்கும் எந்தவொரு வரவு செலவு கணக்கு முறையாகவும் அல்லது பெரும்பாலான பரிவர்த்தனைகள் இந்த வடிவில் இருக்கவேண்டிய ஒன்றாக விவரிக்கப்படுகிறது. கணக்கு வைப்பு முறையில் இருக்கும் 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' என்னும் வார்த்தைகளின் பயன்பாட்டின் வரலாற்று மூலங்கள் ஒற்றைப் பதிவு வரவு செலவு கணக்கு முறை காலத்துக்குச் செல்கிறது, இதன் முக்கிய நோக்கமாக இருந்தது வாடிக்கையாளர்கள் (கடனாளிகள்) கொடுக்க வேண்டிய தொகைகள் மற்றும் கடனாளர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகைகளைக் கண்காணிப்பதாகும். 'டெபிட்' என்பது லத்தீன் மொழியில் 'அவன் கொடுக்கவேண்டியது' மற்றும் 'கிரெடிட்' என்பது 'அவன் நம்புகிறான்' என்று பொருள்படும். நடைமுறையில் தொன்மையான முழு இரட்டைப்-பதிவு வரவு செலவு கணக்கு முறைக்குச் சான்றாக இருப்பது 1299-1300 ஆம் ஆண்டின் ஃபாரோல்ஃபி லெட்ஜராகும். கியோவான்னா ஃபாரோல்ஃபி & கம்பெனி என்பது ஃப்ளோரென்டைன் வணிகர்களின் ஒரு நிறுவனமாகும், இதன் தலைமை அலுவலகம் நைம்ஸ்ஸில் இருந்தது, இதன் மிக முக்கிய வாடிக்கையாளரான, ஆர்லெஸ் ஆர்ச்பிஷப் புக்கு பணம்கொடுப்பவர்களாகவும் இது செயல்பட்டது. முழுமையான இரட்டைப்-பதிவு அமைப்புக்கான ஒரு மிகப் பழமையான பதிவாக இருப்பது 1340 ஆம் ஆண்டின் ஜினோவா நகரின் "மெஸ்ஸாரி" (இத்தாலி: பொருளாளரின்) கணக்குகள். இந்த "மெஸ்ஸாரி" கணக்குகள் இருபக்க வடிவில் பதிவுசெய்யப்பட்ட பற்றுகள் மற்றும் வரவுகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அதில் கடந்த ஆண்டின் இருப்பை முன்னெடுத்து கொண்டு செல்வதையும் கொண்டிருக்கும் அதனால் அது ஒரு இரட்டைப்-பதிவு அமைப்பு என பொதுவாக அறியப்படுகிறது. லூகா பாசியோலியின் ""சும்மா டெ அரித்மெடிகா, ஜியோமெட்ரியா, புரபோர்ஷியானோ எட் புரபோர்ஷியோனாலிடா"" (இத்தாலி: "எண் கணக்கியல், வடிவியல், விகிதம் மற்றும் விகிதாச்சாரங்கள் பற்றிய ஒரு மதிப்பாய்வு") முதன் முதலாக 1494 ஆம் ஆண்டு வெனிஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அது வரவு செலவு கணக்கு முறை மீதான ஒரு 27-பக்க ஆய்வுக்கட்டுரையான ""பர்டிகுலரிஸ் டி கம்புடீஸ் எட் ஸ்க்ரிப்டுரிஸ்"" (இத்தாலி: "கணக்கிடுதல் மற்றும் பதிவுசெய்தல் விவரங்கள்"") ஒன்றையும் கொண்டிருந்தது. அந்தப் புத்தகத்தை ஒரு குறிப்புதவி உரையாக, அது கொண்டிருக்கும் கணிதவியல் சார்ந்த புதிர்களிலிருந்து பெரும் இன்பத்திற்காக மற்றும் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுவதற்காக பயன்படுத்தும் வணிகர்களுக்காகவே அது முதன்மையாக எழுதப்பட்டது, மற்றும் முக்கியமாக அவர்களுக்காகவே விற்கப்பட்டது. வரவு செலவு கணக்கு முறை மீது அறியப்பட்ட முதல் அச்சிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையாக இது இருக்கிறது; மேலும் இது நவீன வரவு செலவு கணக்கு முறை பயிற்சிக்கான ஒரு முன்னோடியாக இருந்ததாகவும் பரவலாக நம்பப்படுகிறது. "சும்மா அரித்மெடிகா" வில் பாசியோலி முதல் முதலாக ஒரு அச்சிட்ட புத்தகத்தில் கூட்டல் மற்றும் கழித்தல்களுக்கான அறிகுறிகளை அறிமுகப்படுத்தினார், பின்னர் இந்த அறிகுறிகள் இத்தாலிய மறுமலர்ச்சி கணிதத்தில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட எண் குறிப்பாக ஆனது. "சும்மா அரித்மெடிகா" தான் இத்தாலியில் அல்ஜீப்ராவைக் கொண்டிருக்கும் முதல் அறியப்பட்ட அச்சுப் புத்தகமாகவும் இருக்கிறது. இரட்டைப்-பதிவு வரவு செலவு கணக்கு முறையை லூகா பாசியோலி கண்டுபிடிக்காத போதிலும், வரவு செலவு கணக்கு முறை மீதான அவருடைய 27-பக்க ஆராய்ச்சிக் கட்டுரை அந்த தலைப்பின் மீது அறியப்பட்டு முதல் வெளியீடாக இருக்கிறது, மேலும் இன்று நடைமுறையில் இருக்கும் இரட்டைப்-பதிவு வரவு செலவு கணக்கு முறைக்கான அடித்தளத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பாசியோலியின் ஆராய்ச்சிக் கட்டுரை எந்தவிதமான தனித்தன்மையையும் கொண்டிராத போதிலும், அது ஒரு முக்கிய படைப்பாக கருதப்படுகிறது, முக்கியமாக அதன் பரந்துவிரிந்த விற்பனை, அது வட்டாரமொழியான இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது மேலும் அது அச்சிடப்பட்ட புத்தகமாக இருந்தது. பாசியோலியின் கூற்றுப்படி, கணக்கு வைப்பு என்பது வணிகர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட நோக்கிற்கான அமைப்புமுறையாகும். அதன் தொடர் பயன்பாடு வணிகருக்குத் தன்னுடைய வர்த்தகம் பற்றிய தொடர்ச்சியான தகவல்களை வழங்குகிறது, மேலும் பல விஷயங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிடவும் அதற்கேற்றவாறு செயல்படவும் அனுமதிக்கிறது. மற்றவற்றைக் காட்டிலும் வெனெஷியன் இரட்டைப்-பதிப்பு வரவு செலவு கணக்கு முறையையே பாசியோலி பரிந்துரைக்கிறார். மூன்று பெரும் கணக்கு புத்தகங்கள் இந்த அமைப்பிற்கான நேரடி ஆதாரமாக இருக்கிறது: "மெமோரியேலெ" (இத்தாலி: மெமொராண்ட்ம்), "கையோர்னெலே" (ஜர்னல்) மற்றும் "குவாடெர்னோ" (லெட்ஜர்). லெட்ஜர் தான் அவற்றின் மையப் புத்தகமாகக் கருதப்படுகிறது, மேலும் அது ஒரு அகரவரிசை அட்டவணையையும் கொண்டிருக்கிறது. பாசியோலியின் ஆராய்ச்சிக் கட்டுரை, பண்டமாற்று பரிவர்த்தனைகளில் மற்றும் பல்வேறு செலாவணிப் பணங்களுடனான பரிவர்த்தனையை எவ்வாறு பதிவு செய்யவேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் வழங்கியிருந்தது - இவை இரண்டும் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகவும் பொதுக்கருத்துடையவையாக இருந்தன. வணிகர்கள் தங்கள் சொந்த கணக்கு புத்தகங்களை தணிக்கை செய்யவும், தங்கள் கணக்கெழுத்தர்கள் கணக்கு வைப்பு பதிவுகளில் செய்த உள்ளீடுகள் தான் விவரித்த வழிமுறையில் தொகுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும் கூட இயலச்செய்தது. அத்தகைய ஒரு அமைப்பு இல்லையென்றால், தங்களுடையதேயான பதிவுகளை பராமரிக்காத அனைத்து வணிகர்களும் தங்கள் ஊழியர்கள் மற்றும் முகவர்களால் களவாடுவதற்கான மிக அதிக இடர்ப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள்; தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் விவரித்துள்ள முதல் மற்றும் இறுதி அலகுகள் ஒரு துல்லியமான விளக்கவிவரப் பட்டியல் பற்றியதாக இருப்பது ஒன்றும் எதேச்சையாக ஏற்பட்டதல்ல. இந்த வகையான வரவு செலவு கணக்கு முறை சொத்திருப்புகளைக் கண்காணிக்கச் செய்யவும் அல்லது இலாப நட்டங்களை கணக்கீடு செய்யும் வகையில் வெறுமனே வணிகர்கள் வர்த்தகம் செய்வதை மட்டுமே பதிவுசெய்யவில்லை, அதற்குப் பதிலாக அது எழுதும் ஒரு அமைப்பாக, பிரதியெடுத்தல் மற்றும் கணக்கிடுதலை மீறிய விளைவுகளை அது உருவாக்குகிறது என்பதை அறிவதன் மூலம் இரட்டைப்-பதிவின் இயல்பை உள்வாங்கிக்கொள்ளலாம். அதனுடைய சமூக விளைபயன்களில் ஒன்றாக இருப்பது, ஒரு குழுவாக வணிகர்களின் நேர்மையைப் பறைசாற்றுவதாகும்; அதனுடைய ஒளிர்வுக் கோட்பாட்டுக்குரிய விளைவுகளில் ஒன்றாக இருப்பது கணக்கியலின் விதிமுறைக்கு கட்டுப்பட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய முறையான துள்ளியத்தன்மை அது பதிவுசெய்த விவரங்களின் சரிநுட்பத்துக்கு உத்திரவாதம அளிக்கக்கூடியதாக இருப்பது. கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யப்படும் தகவல் அவசியம் சரியானதாக இல்லாதபோதும், இரட்டைப்-பதிவு அமைப்பின் துல்லியத்தன்மை மற்றும் இயல்பாக்குதல் ஆகியவற்றின் கூட்டு, கணக்கு புத்தகங்கள் துல்லியமானதாக இருப்பது மட்டுமல்லாமல் சரியானதாகவும் இருப்பதான ஒரு எண்ணத்தை துல்லியத்தன்மை உருவாக்க முயற்சிக்கும் விளைபயனைக் கொண்டிருக்கிறது. எண்களால் செல்வாக்கு பெறுவதற்குப் பதிலாக, இரட்டைப்-பதிவு வரவு செலவு கணக்கு முறை எண்களின் மீதான கலாச்சார அதிகாரத்தை வழங்க உதவியது. இத்தாலிய கணக்கு வைப்பின் பரவல் ஐரோப்பாவெங்கும் தன் ஆட்சியைச் செலுத்தியது அதனால் அது முந்தியிருக்கிறது, இவை ஆய்வுக் கட்டுரைகளின் விளைவாக ஏற்பட்டவை, இவற்றில் பல பாசியோலியின் படைப்பினை ஆதாரமாகக் கொண்டு இந்த அமைப்பு மற்றும் அதன் பயிற்சிகளை விவரித்தன. டொமெனிகோ மன்சோனி டா ஓடெர்ஸாவின் ""குவாடெர்னோ டோப்பியோ"" (மொழிபெயர்ப்பு. இரட்டைப்-பதிவு லெட்ஜர், வெனிஸ், 1534) தான் பாசியோலியின் ""பர்டிகுலரிஸ் டி கம்புடிஸ் எட் ஸ்கிரிப்சுரிஸ்"" புத்தகத்தின் மறுவெளியீடுகளில் முதலாவதாக இருந்தது. இந்தப் படைப்பு அதன் விரிவான உதாரணங்களினால் மிகவும் முக்கியமானதாக இருந்ததுடன் வணிகர்களிடம் மிகவும் பிரபலமானதாகவும் பரந்துவிரிந்தும் காணப்பட்டது; 1534 ஆம் ஆண்டு முதல் 1574 ஆம் ஆண்டுகளுக்குள் அது ஏழு பதிப்புகளுக்கு மேல் கண்டது. பாசியோலியின் படைப்பை நேரடியாக அல்லது மறைமுகமாக அடிப்படையாகக் கொண்டு உருவான இதர படைப்புகள் ஹக் ஓல்ட்காஸ்டலின் ""எ பிராஃபிடபிள் ட்ரீடைஸ் கால்ட் தி இன்ஸ்ட்ருமெண்ட் ஆர் போக் டு லேர்ன் டு நோ தி குட் ஆர்டர் ஆஃப் தி கெபிங் ஆஃப் தி ஃபேமஸ் ரிகானின்ஜ் கால்ட் இன் லாடைன், டேர் அண்ட் ஹாபெரெ, அண்ட் இன் இங்கிலிஷ், டெபிடார் அண்ட் கிரெடிடார்"" (இலண்டன், 1543), பாசியோலியின் ஆராய்ச்சிக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு மற்றும் உல்ஃப்காங்க் ஷச்வீக்கரின் ""ஸ்விஃபாச் புச்சால்டென்"" (மொழிபெயர்ப்பு. டபுள்-என்ட்ரீ புக் கீப்பிங், நியூரென்பெர்க், 1549), இது ""குவாடெர்னோ டோப்பியோ"" வின் மொழிபெயர்ப்பு. சைமன் ஸ்டெவின் என்னும் டச்சு கணிதவியலாளர் தான், தன்னுடைய "விஸ்கான்ஸ்டிகெக் ஹெடாச்டெனிஸ்ஸென்" (டச்சு: "கணிதவியல் வரலாற்றுக் குறிப்புகள்", லீய்டென், 1605–08) என்னும் புத்தகத்ததின் ஒரு அத்தியாயமான "கூப்மான்ஸ்பௌக்ஹொடிங் ஆப் டி இடாலியெனெஸ்செ வைசெ" (டச்சு: "இத்தாலிய வழிமுறையில் வர்த்தக வரவு செலவு கணக்குமுறை") யில் வணிகர்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்கள் கணக்குகளைத் தொகுப்புரைப்பதை ஒரு விதிமுறையாகவே மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இருப்பு நிலை குறிப்புக்கு, ஒவ்வொரு நிறுவனமும் லெட்ஜரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படவேண்டும் என்னும் தேவை இருந்தபோதிலும், அது பெரும் கணக்குப் புத்தகத்திலிருந்து தனித்தனியாக தயாரிக்கப்பட்டது. மிகத் தொன்மையான பதிவுசெய்யப்பட்ட அரை-பொது இருப்புநிலை குறிப்பு ஏப்ரல் 30, 1671 தேதியிட்ட கிழக்கு இந்திய நிறுவனத்தினுடையதாக இருக்கிறது, இது நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 30, 1671 அன்று வழங்கப்பட்டது. வங்கி தனியுரிமை சட்டம் 1844 நிறைவேறும் வரையில் இருப்புநிலை குறிப்பின் வெளியீடும் தணிக்கையும் இங்கிலாந்தில் அரிதான ஒன்றாக இருந்தது. 1863 ஆம் ஆண்டில், டோலேய்ஸ் இரும்பு நிறுவனம் ஒரு மோசமான பொருளாதார நிலைமையிலிருந்து மீண்டிருந்தது, அது வணிகத்தில் இலாபம் பெற்றிருந்தபோதிலும் ஒரு புதிய ஊது உலையில் முதலீடு செய்வதற்கு அதனிடம் பணம் இல்லை. முதலீடு செய்வதற்குத் தங்களிடம் ஏன் நிதி இல்லை என்பதை விவரிப்பதற்கு, மேலாளர் "ஒப்பீட்டு இருப்பு நிலை ஏடு" என்றழைக்கப்பட்ட ஒரு புதிய நிதியாதார அறிக்கையைத் தயாரித்தார், அது நிறுவனம் அளவுக்கு அதிகமான சரக்குகளின் பட்டியலைக் கொண்டிருப்பதாகக் காட்டியது. இந்தப் புதிய நிதியாதார அறிக்கைதான் இன்று பயன்படுத்தக்கூடிய பணச்செலவு அறிக்கையின் தோற்றமாக இருக்கிறது. பாசியோலியோவின் ""பர்டிகுலரிஸ் டி கம்புடிஸ் எட் ஸ்கிரிப்சுரிஸ்"" வெளியீடு மற்றும் 19 ஆம் நூற்றாண்டுக்கு இடையில், கணக்கு வைப்பு கோட்பாட்டில் வேறு சில மாற்றங்களும் இருந்தது. கணக்கு வைப்பு சிக்கல்களை ஒரே நேரத்தில் தீர்த்துவிடக்கூடும் என்பதால் இரட்டைப்-பதிவு மிகவும் மேலோங்கியது என்னும் ஒரு பொதுவான கோட்பாட்டியில் கருத்துஒற்றுமை இருக்கிறது, இந்த கருத்துஒற்றுமை இருந்தபோதிலும் கணக்கு வைப்பு செயல்முறைகள் குறிப்பிடதக்க அளவில் வேறுபட்டது மேலும் 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் வணிகர்கள் இரட்டைப்-பதிவு முறையின் உயர் நிர்ணயங்களை எப்போதுமே கடைப்பிடிக்கவில்லை. இரட்டைப்-பதிவு வரவு செலவு கணக்கு முறையின் பயன்பாடு நாடுகள், தொழில்துறைகள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் வேறுபட்டது, இது பகுதிகளில் அவற்றின் வாடிக்கையாளர்களைச் சார்ந்திருந்தது. இந்தப் பார்வையாளர்கள் என்பவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தனி உடைமையாளர் மட்டுமே என்பதிலிருந்து அதிகரித்த மிகப் பெரியதாக பிரிந்து கிடக்கும் கூட்டுத்தொழில், உடன்முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் என மாறிவிட்டனர், இறுதியில் நாடும் கூட ஒரு முதலாளித்துவமாக மாறி அதிக சிக்கலுடையதாக ஆகிவிட்டது. ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தில், அது தன்னுடைய உச்சத்தில் இருக்கும்போது அனாடோலியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, பால்கான்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை ஆட்சி செய்தபோது, "மெர்டிபான்" (பெர்சியன்: ஏணி அல்லது படி) கணக்கு வைப்பு அமைப்புமுறை பயன்படுத்தப்பட்டது, 14 ஆம் நூற்றாண்டில் இல்கானேட்டிலிருந்து தழுவப்பட்ட இந்த கணக்கு முறை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரையில் 500 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இல்கானியர்கள் மற்றும் ஓட்டோமான்கள் இருவருமே "சியாகத்" (அரபிக் "சியாக்" கிலிருந்து, முன்னெடுப்பது அல்லது மேய்ப்பது), எழுத்துவடிவைப் பயன்படுத்தினார்கள், இது அரபிக்கின் சுருக்கெழுத்திலான எழுதும் பாணியாக இருந்தது மேலும் இது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது மற்றும் நாட்டின் முக்கிய கடிதப்போக்குவரத்தைச் சாதாரண மக்கள் படிப்பதைத் தடுத்தது. ஒவ்வொரு உள்ளீடுக்குமான தலைப்பு முதல் வார்த்தையின் கடைசி எழுத்தை ஒரு நேர் கோட்டில் நீட்டிப்பதன் மூலம் கொடுக்கப்படுகிறது, அப்போதுதான் தொடர்ந்துவருகிற உள்ளீடுகள் ஏணியின் படிகள் போன்ற பாணியில் வரிசைப்படுத்தப்படலாம். "மெர்டிபான்" கணக்கு வைப்பு முறையை, இரட்டைப்-பதிவு கணக்கு வைப்பு முறைக்கு மாற்றியிடுவதற்கான அனுமதி, 1880 ஆம் ஆண்டில் சுல்தான் அப்துல்ஹமித் II அவர்களால் நிதி அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டது. மிகப் பிரபலமான கூட்டாண்மைகளோடு என்ரான் கார்போரேஷன், தணிக்கை நிறுவனம் ஆர்தர் ஆண்டர்சன், தொலைத்தொடர்பு நிறுவனம் வர்ல்ட்காம், குவெஸ்ட் மற்றும் சன்பீம் ஆகியவை ஈடுபட்ட தொடர்ச்சியான நிதியாதார தகவல் மோசடிகள் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்றது. கணக்கு வைப்பு நிர்ணயங்கள், தணிக்கை விதிமுறைகள் மற்றும் கூட்டாண்மை ஆட்சி கோட்பாடுகளின் விளைபயன்களை மதிப்பீடு செய்வதற்கான தேவைகளை இந்தச் சிக்கல்கள் பிரதானப்படுத்தியது. சில வழக்குகளில், ஒரு மேம்பட்ட பொருளாதார செயல் நிறைவேற்றமாக சுட்டிக்காட்டுவதற்கு நிதியாதார அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள எண்களை நிர்வாகம் மாற்றியமைத்தது. மற்றவற்றில், வரி மற்றும் ஒழுங்குபடுத்துதல் செயல்தூண்டிகள் நிறுவனங்களின் அதிகரித்த செல்வாக்கு, வழக்கத்துக்குமாறான மற்றும் நியாயமற்ற இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான முடிவுகள் ஆகியவற்றை ஊக்குவித்தன. என்ரான் முறைகேடு நிதியாதார அறிக்கைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரிதும் தூண்டுகோலாக அமைந்தது, மேலும் இது நிறுவனங்களின் நிதியாதார மெய்ம்மைகள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் நோக்கங்கள் மற்றும் தன்னுரிமைகளைக் காட்டும் கணக்கு வைப்பு நிர்ணயங்கள் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம் அதிகரித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய திவாலாவுக்கான மறுசீரமைப்பாக இருந்தபோதிலும் என்ரான் முறைகேடு சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மிகப் பெரிய தணிக்கை தோல்வியாக இருக்கிறது. இந்த முறைகேடு ஆர்தர் ஆண்டர்சன்-ஐ மூடும்படியான விளைவுக்குக் கொண்டுசென்றது, அந்த நேரத்தில் அது உலகில் இருந்த ஐந்து மிகப் பெரிய கணக்கு வைப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. என்ரான் கார்ப்போரேஷன் மற்றும் அவர்களின் தணிக்கையாளர் ஆர்த்தர் ஆண்டர்சன் உள்ளடக்கிய ஒரு நிதியாதார முறைகேடுகளில் அவை ஈடுபட்டிருந்தன, இது 2001 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிப்பட்டது. 1990 ஆம் ஆண்டுகள் முழுக்கவும் ஒழுங்கற்ற கணக்கு வைப்பு நடைமுறைகளைப் பின்பற்றியது வெளிப்பட்ட பிறகு, டிசம்பர் 2001 ஆம் ஆண்டில் என்ரான் அத்தியாயம் 11 திவாலா பாதுகாப்புக்குப் பதிவு செய்தது. இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட ஒரு விளைவாக இருப்பது, 2002 ஆம் ஆண்டில் சர்பேன்ஸ்-ஆக்ஸ்லி சட்டம் நிறைவேற்றமாகும், இது என்ரான் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைதவறிய நடவடிக்கைகளை முதலில் ஒப்புக்கொண்டதன் விளைவாக ஏற்பட்டது. கடன் பத்திர முறைகேடு, அரசு விசாரணைகளில் பதிவுகளை அழித்தல், மாற்றியமைத்தல் அல்லது பொய்ப்பத்திரங்களை உருவாக்குதல் அல்லது பங்குதாரர்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் எந்த திட்டமும் அல்லது முயற்சிகளுக்கும், இந்த சட்டம் குறிப்பிடத்தக்க வகையில் குற்றத் தொடர்பான தண்டனைகளுக்கு வழிவகுக்கிறது. சோனென்புளூம் நடவடிக்கை சோனென்புளூம் நடவடிக்கை ("Operation Sunflower", இடாய்ச்சு: "Unternehmen Sonnenblume") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படை நகர்த்தல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் தோல்வியடையும் நிலையில் இருந்த பாசிச இத்தாலியின் படைகளுக்கு உதவ நாசி ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு தளபதி எர்வின் ரோம்மல் தலைமையில் கடல் வழியாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு வந்து சேர்ந்தது. அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி செப்டம்பர் 1940ல் நேச நாடுகளுடன் நட்புறவுடன் இருந்த எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு பிரிட்டானியப் படைகள் தலைமையிலான நேச நாட்டுப் படைகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இத்தாலி நிலைகுலைந்தது. இத்தாலியின் வடக்கு ஆப்பிரிக்க காலனியாகிய லிபியாவின் பெரும் பகுதிகளை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு இட்லரிடம் முறையிட்டார். இட்லரும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் இத்தாலிக்கு உதவ ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அனுப்பினார். பெப்ரவரி 6, 1941ல் இத்தாலியின் நேப்பிள்ஸ் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜெர்மானியப் படைகள் பெப்ரவரி 11ம் தேதி லிபியாவை அடைந்தன. இந்த படை நகர்த்தல் நிகழ்வுக்கு சோனென்புளூம் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை மேலும் சில மாதங்கள் நீடித்து கூடுதல் படைப்பிரிவுகள் லிபியாவுக்கு அனுப்பபட்டன. இதில் 5வது இலகுரக டிவிசன், 21வது பான்சர் (கவச) டிவிசன், 15வது கவச டிவிசன் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆப்பிரிக்கா கோர் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஜெர்மானியப் படைக்குத் தளபதியாக புகழ்பெற்ற ஜெர்மானியத் தளபதி ரோம்மல் அனுப்பபட்டார். அய்ன் ரேண்ட் அய்ன் ரேண்ட் ("Ayn Rand", இயற்பெயர்: அலிசா சினாவியெவ்னா ரோசன்பாம் ; – மார்ச் 6, 1982), ஒரு உருசிய அமெரிக்க நாவலாசிரியை, தத்துவவாதி, நாடக மற்றும் திரைக்கதை எழுத்தாளர். தி ஃபௌண்டன்ஹெட் (The Fountatinhead) அட்லாஸ் ஷரக்ட் (Atlas Shrugged) ஆகிய புதினங்களுக்காக இவர் அறியப்படுகிறார். அப் புதினங்களில் இவர் புறவயக்கோட்பாடு (Objectivism) என்ற மெய்யியல் பார்வையை உருவாக்கி வெளிப்படுத்தினார். ராண்டின் மாறுபட்ட ஒரு தத்துவ இயலாளராகத் திகழ்ந்தார். இவர் தனி மனித உரிமைகள், அரசியற்சட்ட ரீதியாகக் கட்டுப்பாட்டு கொண்ட அரசினால் அமலாக்கப்படுகிற தலையீடுகள் அற்ற தனியுடமை ஆகியவற்றின் ஆதரவாளராகவும், பொதுவுடமை, சமவுடமை, பொது நல அரசு ஆகியவற்றின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பவராகவும் விளங்கினார். இவர் அறிவை வளர்த்துக் கொள்ள காரணம் அறிதலே ஒரே தீர்வு என உரைத்தார். இவரது தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாக இதுவே அமைந்தது. ஒரு தனிப்பட்ட மனிதரின் முதற்கடமை தன்னைத் தானே காத்துக் கொள்வதே அன்றி சமுதாயக் கடன் அல்ல என்பதே இவரது தத்துவ இயலின் தளமாக இருந்தது. ராண்ட் உருவாக்கிய பருப்பொருள்சார் இயல் என்னும் தத்துவத்தினை சுருக்கமாக இவ்வாறு கூறலாம்: “மனிதன் என்னும் போராளனுக்குத் தனது மகிழ்ச்சி ஒன்றே அவனது வாழ்வின் ஒழுக்க நோக்கமாகும். ஆக்கபூர்வமான சாதனையே அவனது மிகச் சிறந்த நடவடிக்கை மற்றும் அவனது பகுத்தறிவே வரம்பற்ற ஒரே நிலை. பகுத்தறிவிற்கு எதிரானது என நம்பிக்கையின் அடிப்படையிலானவற்றை ராண்ட் மறுதளித்தார். பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த சுய-நோக்கமே வாழ்வின் ஒழுக்கத்திற்கு வழிகாட்டும் ஒரே கோட்பாடாக இருக்க இயலும் என்பதே இவரது வாதமாக இருந்தது. மனிதன் என்பவன் “அவனுக்காகவே வாழ வேண்டும்; மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்வதோ அல்லது தனக்காக மற்றவர்களைத் தியாகம் செய்வதோ பகுத்தறிவுடமை அல்ல” என்பதே இவரது கோட்பாடு. பொதுவாகத் தத்துவம் என்பது அன்றாட வாழ்க்கை வழமைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சிந்தனையாளர்களின் தனிச் சிறப்பாகவுமே கருதப்படுவதை ராண்ட் மறுதளித்தார். தத்துவ அறிவு என்பதையே வாழ்வின் ஆதார சக்தியாகவும் யதார்த்த நிலையை அறியும் கருவியாகவும் அவர் கருதினார். மனித சிந்தனை மற்றும் செயல்களின் மீதான அடிப்படைக் கேள்விகளை தத்துவ இயல் முன்னிறுத்துகிறது: என்ன மாதிரி உலகில் நான் வாழ்கிறேன்? என் விதியின் மீதான கட்டுப்பாட்டை நான் கொண்டுள்ளேனா? அதை நான் எப்படி அறிவேன்? என்னால் அதை நிரூபிக்க இயலுமா? நல்லது என்பது என்ன? நான் சுயநலமாக இருந்து என் தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமா அல்லது இறைவன் மற்றும் இதர மனிதர்களுக்குத் தொண்டு செய்வதில் என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளிலிருந்து தப்பியோட இயலாதென ராண்ட் கருதினார். சரியோ அல்லது தவறோ ஒரு தனக்கே உரியதான கருத்தாக்கம் இன்றி உலகில் ஒருவரால் வாழ இயலாது. இக்கேள்விகளுக்கு ஒருவர் கொள்ளும் பதிலே அவரது வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைகிறது. = புறவயத் தத்துவ இயலின் அடிப்படைக் கோட்பாடுகள் = ராண்டின் புறவயத் தத்துவ இயல் கீழ்க்காணும் நான்கு கோட்பாடுகளைப் பெரிதும் சார்ந்துள்ளது: ரஷ்யாவில் பிறந்து கல்வி கற்றவரான ரேண்ட் 1926ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார் என்பதோடு 1935–1936 இல் பிராட்வேயில் நாடகம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் 1943ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்ற தன்னுடைய முதல் நாவலான "தி ஃபவுண்டைன்ஹெட்" மூலம் புகழ்பெற்றார் என்பதோடு அதைத்தொடர்ந்து அவருடைய மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்த நாவலான "அட்லஸ் ஷ்ரக்டு" 1957ஆம் ஆண்டில் வெளிவந்தது. ரேண்டின் அரசியல் கண்ணோட்டங்கள் அவருடைய புனைவு மற்றும் கோட்பாட்டு எழுத்து ஆகிய இரண்டிலுமே காணப்படுகிறது, இது தனிநபர் உரிமைகள் (சொத்து உரிமை உட்பட) அரசியலமைப்புரீதியாக வரம்பிற்குட்பட்ட அரசாங்கத்தால் வலுவூட்டப்படும் அரசு தலையீடில்லாத முதலாளித்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகிறார். அவர் பாசிசம், கம்யூனிசம், சோசலிஸம், மற்றும் நல்வாழ்வு அரசு, உள்ளிட்ட அனைத்துவகையான அரசுக் கட்டுப்பாடு மற்றும் அரசு சார்பு வடிவத்திற்கும் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார் என்பதோடு, தன்னலமற்ற நிலையின் அறம்சார் நிலையை தள்ளுபடி செய்து அறம்சார் தன்முனைப்பை மேம்படுத்தச் செய்தார். அவர் அறிவைப் பெறுவதற்கான ஒரே அர்த்தமாகவும் தன்னுடைய தத்துவத்தின் பெரும்பாலான அம்சமாகவும் பகுத்தறிவையே கருதுகிறார், அத்துடன், "நான் "பிரதானமாக" முதலாளித்துவ ஆதரவாளர் அல்ல, ஆனால் தன்முனைப்பின் ஆதரவாளர்; அத்துடன் நான் "பிரதானமாக" தன்முனைப்பின் ஆதரவாளர் அல்ல, ஆனால் பகுத்தறிவின் ஆதரவாளர். பகுத்தறிவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதை சீராக ஒருவர் பயன்படுத்துகிறார் என்றால் மற்ற அனைத்தும் தாமாக பின்தொடர்ந்து வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ரேண்ட் அலிஸா சினாயவ்னா ரோஸன்பாமாக செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வாழ்ந்த ஒரு மத்தியதர குடும்பத்தில் 1905ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் பெருமளவிற்கு மதநம்பிக்கைகளை அனுசரிக்காத யூதக் குடும்பத்தைச் சேர்ந்த சினோவி சகாரோவிச் ரோஸன்பாம் மற்றும் ஆன்னா போரிசோவ்னா ரோஸன்பாம் ஆகியோரின் மூன்று மகள்களுள் (அலிஸா, நடாஷா மற்றும் நோரா) மூத்தவர் ஆவார். அவருடைய தந்தை ஒரு வேதியியலாளராக கல்விபெற்று வெற்றிகரமான மருந்தாக்குநர் ஆனார், ஏறத்தாழ தனக்கு சொந்தமாக ஒரு மருந்தகத்தையும் அது அமைந்திருந்த கட்டிடத்தையும் வைத்திருந்தார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில் ரேண்டின் வயது பனிரெண்டு. ஜாருக்கு எதிராக இருந்த அலெக்ஸாண்டர் கெரன்ஸ்கியிடம் ரேண்டின் கரிசனங்கள் இருந்தன. ரேண்டின் குடும்ப வாழ்க்கை போல்ஷெவிக் கட்சியின் எழுச்சியால் தொந்தரவிற்கு ஆளானது. அவருடைய தந்தையின் மருந்தகம் சோவியத்துக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதுடன் அந்தக் குடும்பத்தினர் தொடக்கத்தில் வெள்ளை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியாவிற்கு சென்றனர். தான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தான் ஒரு நாத்திகர் என்றும் பகுத்தறிவையும் புத்திகூர்மையையும் மதிப்பிடுபவள் என்றும் தீர்மானித்ததாக பின்னாளில் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர் கிரிமியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்று உடனடியாக செம்படை வீரர்களுக்கு படிக்கக் கற்றுத்தரும் வேலையைப் பெற்றார். தான் அந்த வேலையை மிகவும் விரும்பியதாக குறிப்பிடும் அவர் கல்வியறிவில்லாத வீரர்கள் படிக்க ஆர்வமாகவும் அவர் மீது மரியாதை கொண்டவர்களாகவும் இருந்தனர். பதினாறு வயதில் ரேண்ட் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த தன்னுடைய குடும்பத்தினரிடம் திரும்பினார். வரலாற்றுப் பிரிவில் முதன்மைப் பாடமாக இருந்த சமூக ஆசிரியப்பணித் துறையில் அவர் படித்த பெட்ரோகிராட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தில் அவருக்கு அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டோவின் எழுத்துக்கள் அறிமுகமாயின, இவர்கள் இருவரும் அவர்மீது முறையே தாக்கத்தையும், எதிர் தாக்கத்தையும் ஏற்படுத்தினர். மூன்றாவதாக அவர் அதிகம் விரும்பிப் படித்த ஆளுமை பிரடெரிக் நீட்ஷே.. அவருடைய முறையான தத்துவப் படிப்பு ஒருசில நிலைகளிலானதாக மட்டுமே இருந்தது, இந்த மூன்று தத்துவவாதிகளுக்கும் வெளியே அவர் படித்த முக்கியமானவர்கள் சுருக்கக் குறிப்புகள் மற்றும் கட்டுரைகளாகவே வரம்பிற்குட்பட்டதாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் படித்து வந்த எழுத்தாளர்களாக விக்டர் ஹ்யூகோ, எட்மண்ட் ரோஸ்டாண்ட், பிரெடெரிக் ஷில்லர், மற்றும் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோர் அவருடைய விருப்பத்திற்குரியவர்களானர்கள் பல கம்யூனிஸ்ட் அல்லாத மாணவர்களுடன் இணைந்து நிறைவுசெய்யும் முன்பே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும், வருகைபுரிந்த வெளிநாட்டு அறிவியலாளர்கள் குழுக்களிடமிருந்து குற்றச்சாட்டுகளைப் பெற்ற பின்னர் கம்யூனிஸ்டுகள் வெளியேறிய பல மாணவர்கள் தங்களுடைய பணி மற்றும் பட்டப்படிப்பை நிறைவுசெய்ய அனுமதித்தினர், ரேண்ட் 1924ஆம் ஆண்டில் நிறைவுசெய்தார். அவர் அதைத் தொடர்ந்து ஸ்டேட் டெக்னிகம் ஃபார் ஸ்கிரீன் ஆர்ட்ஸில் ஒரு வருடம் படித்தார். 1925 ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் அவர் அமெரிக்காவில் இருக்கும் உறவினர்களைப் பார்ப்பதற்கான விசாவைப் பெற்றார். அவர் 1926 ஜனவரி 17 இல் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிப்ரவரி 19 இல் அமெரிக்காவிற்கு வந்தார், ஒரு கப்பலில் நியூயார்க் நகரத்திற்கு வந்தார். சிகாகோவில் தன்னுடைய உறவினர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்த பின்னர் அவர் சோவியத் யூனியனுக்கு திரும்புவதில்லை என்று தீர்மானித்து, ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராக இருக்க முடிவுசெய்தார். ரஷ்யாவில் இருக்கும்போதே எழுதுவதற்கான தன்னுடைய தொழில்முறை புனைப்பெயர் "ரேண்ட்" என்று தீர்மானித்திருந்தார், இது அவருடைய பிறப்பு குடும்பப் பெயரின் சிரில்லிக் சுருக்கமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதுடன் அவர் தன்னுடைய முதல் பெயராக வைத்துக்கொண்ட "அய்ன்" ஃபின்னிஷ் பெயரைச் சேர்ந்ததாக இருக்கலாம். தொடக்கத்தில் ஹாலிவுட்டில் போராடிய அவர் தன்னுடைய அடிப்படை வாழ்வாதார செலவுகளுக்கு விநோதமான வேலைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டார். செசில் பி.டெமில் என்ற இயக்குநரை சந்தித்த வாய்ப்பு அவருடைய திரைப்படமான "தி கிங் ஆஃப் கிங்ஸ்" என்ற படத்தில் அவருக்கு கூடுதலான வேலை கிடைக்க வழியமைத்து, அதற்கடுத்ததாக அவருக்கு இளநிலை திரைக்கதை எழுத்தாளர் என்ற வேலை கிடைத்தது. "தி கிங் ஆஃப் கிங்ஸ்" படத்தில் பணிபுரியும்போதே அவரைக் கவர்ந்த இளம் நடிகரான ஃபிராங்க் ஓ கானரிடம் காதல் வயப்பட்டார். அவர்கள் இருவரும் 1929 ஏப்ரல் 5 இல் திருமணம் செய்துகொண்டனர். ரேண்ட் 1931ஆம் ஆண்டில் அமெரிக்க குடிமகளானார். ஆர்கேஓ ஸ்டுடியோக்களில் உடையலங்காரத் துறையின் தலைமையாக அவர் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தன்னுடைய எழுத்திற்கு உதவியாக 1930களில் பல்வேறு வேலைகளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளை அமெரிக்காவிற்கு அழைத்துவர முயற்சிசெய்தார், ஆனால் குடியேற்றத்துறையில் அவரால் அனுமதியைப் பெற இயலவில்லை. ரேண்டின் முதல் இலக்கிய வெற்றி அவர் யுனிவர்சல் ஸ்டியோவிற்கு 1932ஆம் ஆண்டில் எழுதிய "ரெட் பான்" திரைக்கதையின் விற்பனையோடு இணைந்து வந்தது. ஜோசப் வான் ஸ்டெர்ன்பர்க் இதை மர்லின் டீட்ரிச் என்று கருதியிருந்தார், ஆனால் எதிர்-சோவியத் கருக்கள் அந்த நேரத்தில் பிரபலமானதாக இல்லை, இந்தத் திட்டம் ஒன்றுமில்லாமல் போனது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அறை நாடகமான "நைட் ஆஃப் ஜனவரி 16ன்த்" 1934ஆம் ஆண்டில் முதல்முறையாக ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக 1935ஆம் ஆண்டில் பிராட்வேயில் மறு வெளியீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு இரவும் பார்வையாளர் உறுப்பினர்களிடமிருந்து "ஜுரி" தேர்ந்தெடுக்கப்படுவார், இரண்டு வெவ்வேறு முடிவுகளில் ஒன்று ஜுரியின் "தீர்ப்பிற்குப்" பின்னர் நிகழ்த்தப்படும். 1941ஆம் ஆண்டில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்த நாடகத்தின் திரைப்பட வடிவத்தைத் தயாரித்தது. அவர் இந்தத் தயாரிப்பில் பங்கேற்கவில்லை என்பதோடு இதன் முடிவில் அவர் அதிகம் நிச்சயமற்றவராக இருந்தார். அவருடைய முதல் நாவல், பாதியளவிற்கு சுயசரித பாணியில் அமைந்த "வி தி லிவிங்" மெக்மில்லன் நிறுவனத்தால் 1936ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவைக் கதைக்களமாக கொண்ட இது தனநபருக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் கவனம் செலுத்துவதாக இருந்தது. இந்த நாவலின் முன்னுரையில் ரேண்ட் "வி தி லிவிங்" "நான் எழுதியதிலேயே ஒரு சுயசரிதைக்கு அருகாமையில் வருவது. நேரடியான அர்த்தத்தில் இது சுயசரிதம் அல்ல, ஆனால் அறிவுப்பூர்வ அர்த்தத்தில் மட்டுமே. கதைக்கரு புதிது, ஆனால் பின்னணி அல்ல..." என்று குறிப்பிட்டிருந்தார். ரேண்டிற்குத் தெரியாமலோ அல்லது அனுமதி இல்லாமலோ "வி தி லிவிங்" 1942ஆம் ஆண்டில் இத்தாலியில் ஒரு ஜோடி படங்களான "நொய் விவி" மற்றும் "அடியோ, கிரா" என்பனவாக தயாரிக்கப்பட்டன. 1960களில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட இந்தத் திரைப்படங்கள் ரேண்டால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பதிப்புக்களாக மறு தொகுப்பு செய்யப்பட்டு "வி தி லிவிங்" என்ற பெயரிலேயே 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. "ஆன்த்தம்" என்ற குறுநாவல் 1938ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் ஏழு வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவிலும் பதிப்பிக்கப்பட்டது. அரசு கட்டுப்பாடு வெற்றிபெற்று அளவிற்கு அதிகமாக நீண்டு "நான்" என்ற வார்த்தைகூட மொழியிலும் மனிதர்களின் நினைவகத்திலிருந்தும் அழிக்கப்பட்டுவிடுகின்ற டிஸ்டோபியன் எதிர்கால உலகம் குறித்த தொலைநோக்குப் பார்வையை வழங்குகிறது. 1940களில் ரேண்ட் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அவரும் அவருடைய கணவருமாக சேர்ந்து ரிபப்ளிகன் வெல்டன் வில்கிக்காக 1940 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு தன்னார்வலர்களாக முழுநேர பணியாற்றினர். இந்தப் பணி ரேண்டிற்கு முதல் பொதுவிட பேச்சு அனுபவத்தை வழங்கியது, இது நியூயார்க் நகரத்தில் உள்ள "யூனியன் ஸ்கொயர் திரையரங்கத்தில் புரோ-வில்கியின் நியூஸ் ரீல்களைப் பார்த்த பின்னர்" சிலசமயங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கேள்விகளை எதிர்கொள்வதும் இதில் உள்ளிட்டிருந்தது. இந்த நடவடிக்கை சுதந்திர-சந்தை முதலாளித்துவத்தின் மீது ஆர்வமுள்ள மற்ற அறிவுஜீவிகளோடு அவருக்கு தொடர்புகளைப் பெற்றுத்தந்தது. அவர் பத்திரிக்கையாளரான ஹென்றி ஹாஸ்லிட் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடன் நட்பை வளர்த்துக்கொண்டார் என்பதோடு ஹாஸ்லிட் அவரை ஆஸ்திரியப் பள்ளி பொருளாதாரவாதியான லுத்விக் வான் மைசஸிடம் அறிமுகப்படுத்தினார். அவருடன் தத்துவ வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவருமே ரேண்டின் மீது நன்மதிப்பை வெளிப்படுத்தினர், ரேண்ட் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த இருவரின் எழுத்துக்களையும் ஏற்றுக்கொண்டவராக இருந்தார். ஒரு எழுத்தாளராக ரேண்டின் முதல் பிரதான வெற்றி 1943ஆம் ஆண்டில் "தி ஃபவுண்டைன்ஹெட்" உடனானதாக இருந்தது, ஒரு ரொமாண்டிக் டிராமா மற்றும் தத்துவ நாவலான இதை ஏழு வருடங்களுக்கும் மேலாக எழுதினார். இந்த நாவல் ஹோவார்ட் ரோர்க் என்ற சமரசமற்ற இளம் கட்டிடக்கலை நிபுணரையும், - மற்றவர்கள் வழியாக வாழுகின்ற, மற்றவர்களை தனக்கும் மேலானதாக வைத்துக்கொள்கின்ற "இரண்டாம்-நிலையானவர்களாக" ரேண்ட் விவரிப்பவர்களுக்கு எதிரான அவருடைய போராட்டத்தையும் மையமாகக் கொண்டிருந்தது. இந்த நாவலை பதிப்பிக்கவில்லை என்றால் தான் வேலையைவிட்டு விலகுவதாக தன் முதலாளியை அச்சமூட்டிய எடிட்டர் ஆர்ச்சிபால்ட் ஆக்டெனின் வலியுறுத்தலின்கீழ் பாப்ஸ்-மெரில் கம்பெனியால் இது இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் முன்னர் பனிரெண்டு பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது. "தி ஃபவுண்டைன்ஹெட்" இறுதியில் உலகளாவிய வெற்றிபெற்று ரேண்டிற்கு புகழையும் நிதிவகையிலான பாதுகாப்பையும் பெற்றுத்தந்தது. ஏப்ரல் 2008ஆம் ஆண்டில் அய்ன் ரேண்ட் இன்ஸ்ட்டியூட்டின் கூற்றுப்படி இந்த நாவல் 6.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. 1943ஆம் ஆண்டில் வார்னர் பிரதர்ஸிற்காக "தி ஃபவுண்டைன்ஹெட்டின்" திரைப்படப் பதிப்பிற்கான திரைக்கதை எழுத ரேண்ட் ஹாலிவுட்டிற்கு திரும்பினார், அதற்கடுத்த ஆண்டிலேயே அவரும் அவருடைய கணவரும் நவீனவாதியான ரிச்சர்ட் நியூட்ரா வடிவமைத்திருந்த வீட்டையும் அதற்கு அருகாமையிலிருந்த பண்ணையையும் வாங்கினர். அங்கே ரேண்ட் ஹாஸ்லிட், மோரி ரிஸ்கிண்ட், ஜேனட் கேனர், கில்பர்ட் ஆட்ரியன் மற்றும் லியனார்ட் ரீட் போன்றோர்களால் வரவேற்கப்பட்டார். அந்தத் திரைக்கதையில் தன்னுடைய வேலையை முடிக்கையில் தயாரிப்பாளர் ஹால் வாலிஸ் திரைக்கதை எழுத்தாளராகவும், திரைக்கதை-சரிசெய்பவராகவும் அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார், வாலிஸிற்கான அவருடைய பணி ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட "லவ் லட்டர்ஸ்" மற்றும் "யு கேம் அலாங்" ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது என்பதோடு, அணு குண்டின் உருவாக்கம் அடிப்படையில் அமைந்த திரைக்கதைக்கான ஆய்வும் நடைபெற்று வந்தது. இந்த பாத்திரம் ரேண்டிற்கு மற்ற திட்டங்களில் பணிபுரிவதற்கான நேரத்தை வழங்கியது, இது 1994 பதிப்பு "ரீடர்ஸ் டைஜஸ்ட்" பத்திரிக்கையின் ஜனவரி வெளியீட்டில் "தி ஒன்லி பாத் டு டுமாரோ" என்று தலைப்பிடப்பட்ட முதல் புனைகதை அல்லாத எழுத்தையும் உள்ளிட்டதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ரேண்ட் தனது தத்துவத்தின் புனைவு அல்லாத கட்டமைப்பிற்காக வரையறையையும் விரிவான குறிப்புகளையும் எடுத்தார். இந்த காலகட்டத்தில் ரேண்ட் லிபர்ட்டேரியன் எழுத்தாளர் இஸபல் பேட்டர்ஸன் உடன் உறவை வளர்க்கத் தொடங்கினார். இந்த இருவரும் நண்பர்களாகவும் தத்துவார்த்த-சச்சரவிடும் கூட்டாளிகளாக ஆனார்கள், அவர்களுடைய பல்வேறு இரவுநேர சந்திப்புகளின்போது நீண்ட நேரத்திற்கு அமெரிக்க வராலாறு மற்றும் அரசியல் குறி்த்து நன்கறிந்த பேட்டர்ஸனிடம் ரேண்ட் நிறைய கேள்விகளை எழுப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னாளில், இந்த இரு பெண்களும் ரேண்டின் ஹாலிவுட் விருந்தளிப்புகளுள் ஒன்றில் பேட்டர்ஸனின் கசப்பான மற்றும் அறிவுப்பூர்வமற்ற கருத்துக்களை கண்ட பின்னர் ரேண்ட் அவரிடமிருந்து விலகினார். ரேண்டின் அரசியல் கோட்பாடுகள் மீதான பேட்டர்ஸனின் தாக்கம் தொடர்ந்து விவாதிக்கப்படும் விஷயமானது, ஆனால் பேட்டர்ஸனின் வாழ்க்கைச்சரித எழுத்தாளர் ஸ்டீபன் டி.காக்ஸ் அவர்கள் முன்னமே பிரிந்துபோய்விட்டாலும் பல வருடங்களுக்கு அச்சிடப்பட்ட "தி காட் ஆஃப் தி மெஷின்" என்ற தன்னுடைய முன்னாள் நண்பரின் அரசியல் படைப்பு ரேண்டின் பொது நிபுணத்துவத்திற்கு கடன்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 1947ஆம் ஆண்டில் இரண்டாவது ரெட் ஸ்கேரின்போது அமெரிக்காவின் அமெரிக்கரல்லாத நடவடிக்கைகள் ஆணைய மாளிகையில் "நட்புரீதியான சாட்சியாக" ரேண்ட் சாட்சியமளித்தார். அவருடைய சாட்சியம் சோவியத் யூனியனில் அவர் பெற்ற சொந்த அனுபவங்களுக்கும் "சாங் ஆஃப் ரஷ்யா" என்ற 1944ஆம் ஆண்டில் அது சித்தரிக்கப்பட்டதற்கும் இடையே வேறுபாடு உடையதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்தத் திரைப்படம் சோவியத் யூனியனில் உள்ள சமூகப் பொருளாதார நிலைகளை மோசமான முறையில் தவறாக பிரதிநிதித்துவம் செய்கிறது என்று வாதிட்டதோடு, ஐக்கிய சோவியத் ஒன்றியத்திலான வாழ்க்கை அது உண்மையில் இருப்பதைக் காட்டிலும் சிறந்ததாகவும் மகிழ்ச்சியானதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்றார். விசாரணைக்குப் பின்னர் இந்த விசாரணைகளின் விளைவுகள் மீதான அவருடைய உணர்வுகள் குறித்து கேட்கப்பட்டபோது ரேண்ட் இந்த நிகழ்முறையை "பயனற்றது" என்று விவரித்தார். "தி ஃபவுண்டைன்ஹெட்டின்" திரைப்பட வடிவம் 1949ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது ரேண்டின் திரைக்கதையை சிறிய மாற்றுதல்களோடு வெளியிட்டிருந்தாலும் ரேண்ட் "இந்த திரைப்படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை விரும்பவில்லை" என்பதோடு அதனுடைய படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் மற்ற ஆக்கக்கூறுகளை குறைகூறினார். "தி ஃபவுண்டைன்ஹெட்" பதிப்பிக்கப்பட்ட பின்னர் ரேண்ட் வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்களைப் பெற்றார், அவர்களில் சிலர் இந்த நாவலால் ஆழ்ந்த தாக்கம் பெற்றவர்களாக இருந்தனர். 1951ஆம் ஆண்டில் ரேண்ட் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்கு குடியேறினார், அங்கே அவர் தன் மீது மதிப்புகொண்ட ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டார். இந்தக் குழு (விளையாட்டாக "தி கலெக்டிவ்" எனப்பட்டது) வருங்கால ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன், நதானியேல் புளூமெண்டல் என்று அழைக்கப்பட்ட இளம் உளவியல் மாணவர் (பின்னாளில் நதானியேல் பிரேண்டன்) மற்றும் அவருடைய மனைவி பார்பரா, மற்றும் பார்பராவின் ஒன்றுவிட்ட சகோதரி லியனார்ட் பெய்க்காஃப் ஆகியோரை உள்ளிட்டிருந்தது. முதலில் இந்தக் குழு வார இறுதிகளில் ரேண்டை அவருடைய குடியிருப்பில் சந்தித்து தத்துவ விவாதம் செய்யும் ஒரு முறைப்படியானதாக அல்லாமல் கூடுபவர்களாக இருந்தனர். பின்னர் அவர் கையெழுத்துப்படி பக்கங்களாக எழுதப்பட்டிருந்த "அட்லஸ் ஷ்ரக்டு" என்ற தன்னுடைய புதிய நாவலைப் படிக்க அவர்களை அனுமதித்தார். 1954ஆம் ஆண்டில் மிகவும் இளையவரான நதானியேல் பிரேண்டன் உடனான ரேண்டின் நெருங்கிய உறவு அவர்கள் இருவரின் கணவன் மனைவிக்கு தெரிந்த நிலையிலேயே காதல் உறவாக மாறியது. 1957ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட "அட்லஸ் ஷ்ரக்டு" ரேண்டின் "தலைசிறந்த படைப்பானது" . "மனிதனின் இருப்பில் மனதின் பங்கு-மற்றும் ஒரு அவருடைய தார்மீக தத்துவத்தின் நிரூபணம்: பகுத்தறிவுள்ள சுய-விருப்பத்தின் அறம்சார் நிலை" என்பதே இந்த நாவலின் மையமாக இருந்தது. இது அப்ஜெக்டிவிஸம் என்ற ரேண்டின் தத்துவத்தினுடைய மைய நம்பிக்கையை ஆதரிப்பதாக இருந்தது என்பதுடன் மனித சாதனை குறித்த அவருடைய கருத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. இந்தக் கதைக்கரு மிகவும் படைப்பூக்கமுள்ள தொழிலதிபர்கள், அறிவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் வேலைநிறுத்தத்திற்கு செல்வது மற்றும் அவர்கள் சுதந்திரமான திறந்தநிலை சந்தையை கட்டியமைத்திருக்கும் மலைத்தொடர் பதுங்கிடத்திற்கு திரும்பிச் செல்லும் டிஸ்டோபிய அமெரிக்காவோடு தொடர்புடையதாக இருந்தது. இந்த நாவலின் ககாநாயகனும் வேலைநிறுத்தத்தின் தலைவருமான ஜான் கேல்ட் இந்த வேலைநிறுத்தத்தை தேசத்தின் வளம் மற்றும் சாதனைக்கு அதிக பங்களிப்பு செய்த தனிநபர்களின் மனத்தை திரும்பப் பெறுவதன் மூலம் "உலகின் இயந்திரத்தை நிறுத்துவது" என்று விவரிக்கிறார். இந்தப் புனைவான வேலைநிறுத்தத்தின் மூலம் ரேண்ட் பகுத்தறிவு மற்றும் உற்பத்தித்திறன் முயற்சிகள் இன்றி பொருளாதாரம் குலைந்துவிடும் என்பதோடு சமூகம் சீரழிந்துவிடும் என்பதை நிரூபித்துக்காட்ட விழைகிறார். இந்த நாவல் புதிர்த்தன்மை மற்றும் அறிவியல் புனைகதை அம்சங்களைக் கொண்டிருந்தது என்பதுடன் கேல்ட் அளித்த நீளமான பேச்சான அவருடைய எந்த புனைவுப் படைப்பிலும் காணப்படும் அப்ஜெக்டிவிஸத்தின் மிக விரிவான பிரகடனத்தைக் கொண்டிருந்ததாகவும் இருக்கிறது. "அட்லஸ் ஷ்ரக்டு" ஒரு சர்வதேச நன்கு விற்பனையாகும் நாவலானது. ரேண்டின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த அவருடைய கடைசி புனைவுப் படைப்பு அவருடைய வாழ்க்கையை ஒரு நாவலாசிரியையாக முடித்து வைத்தது என்பதுடன் பிரபலமான தத்துவவாதி என்ற வகையில் அவருடைய வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது. 1958ஆம் ஆண்டில் நதானியேல் பிரேண்டன் பின்னாளில் ரேண்டின் தத்துவங்களை மேம்படுத்துவதற்காக நதானியேல் பிரேண்டன் இன்ஸ்டியூட்டால் (என்பிஐ) இணைத்துக்கொள்ளப்பட்ட நதானியேல் பிரேண்டன் விரிவுகளை தோற்றுவித்தார். கூட்டு உறுப்பினர்கள் என்பிஐக்கான விரிவுரைகளை வழங்குகின்றனர் என்பதோடு அவர் ஆசிரியராக இருந்த அப்ஜெக்டிவிஸ்ட் பீரியாடிக்கல்ஸ் பத்திரிக்கைக்காக கட்டுரைகளையும் எழுதினர். இந்தக் கட்டுரைகள் பலவற்றை பின்னர் ரேண்ட் புத்தகமாக பதிப்பித்தார். 1960கள் மற்றும் 1970கள் முழுவதும் ரேண்ட் தன்னுடைய புனைவல்லாத படைப்புக்கள் வழியாகவும், யேல் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி போன்றவற்றில் சொற்பொழிவு ஆற்றியதன் மூலமும் அப்ஜெக்டிவிஸ்ட் தத்துவத்தை உருவாக்கவும் மேம்படுத்தவும் செய்தார். அவர் 1963ஆம் ஆண்டில் லூவிஸ் அண்ட் கிளார்க் கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். பல வருடங்களுக்கு அவர் ஃபோர்ட் ஹால் ஃபாரமில் வருடாந்திர விரிவுரையாற்றியிருக்கிறார், பார்வையாளர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு தொடர்ந்து தன்னுடைய புகழ்பெற்ற துடிப்பான வடிவத்தில் பதில்களை வழங்கியிருக்கிறார். 1964ஆம் ஆண்டில் நதானியேல் பிரேண்டன் பின்னாளில் அவர் திருமணம் செய்துகொண்ட பாட்ரிசியா ஸ்காட் என்ற இளம் நடிகையோடு காதல் உறவு கொண்டார். நதானியேலும் பார்பரா பிரேண்டனும் இந்த உறவை ரேண்டிடமிருந்து மறைத்தனர். பிரேண்டன் உடனான அவருடைய காதல் உறவு முன்பே முடிவுக்கு வந்திருந்தது, பாட்ரிசியா ஸ்காட் உடனான நதானியேல் பிரேண்டனின் விவகாரத்தை அவர் கண்டுபிடித்தது மற்றும் அதை மூடிமறைப்பதில் பார்பரா பிரேண்டனுக்கு இருந்த பங்கு ஆகியவற்றால் 1968ஆம் ஆண்டில் அவர் இந்த இரண்டு பிராண்டன்களுடனான உறவை நீக்கிக்கொண்டார் என்பதோடு அதன் விளைவாக என்பிஐ மூடப்பட்டது. "தி அப்ஜெக்டிவிஸ்ட்" டில் அவர் பதிப்பித்த கட்டுரையில் நதானியேல் பிரேண்டனை நேர்மையின்மைக்காகவும், மற்ற "தன்னுடைய தனிப்பட்ட வாழக்கையில் பகுத்தறிவற்ற நடத்தைக்காகவும்" கண்டனம் தெரிவித்தார். ரேண்ட் 1974ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு நெருக்கமான "கூட்டு" நண்பர்கள் சிலர் அவருக்கு துணையாக இருந்தனர், 1970களின் பிற்பகுதியில் அப்ஜெக்டிவிஸ்ட் இயக்கத்திற்குள்ளாக இருந்த அவருடைய செயல்பாடுகள் வீழ்ச்சியுற்றன, குறிப்பாக அவருடைய கணவர் 1979 நவம்பர் 9 இல் மரணமடைந்த பின்னர். "அட்லஸ் ஷ்ரக்டுவின்" தொலைக்காட்சி தழுவலுக்காக பணிபுரிந்தது அவருடைய கடைசி தி்ட்டங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் மற்றொரு நாவலை எழுதவும் திட்டமிட்டிருந்தார், ஆனால் அதிகப்படியான குறிப்புகளை அவரால் எழுத முடியவில்லை. 1982ஆம் ஆண்டு மார்ச் 6 இல் நியூயார்க்கில் இருந்த தன்னுடைய வீட்டில் ரேண்ட் இதயச் செயலிழப்பால் மரணமடைந்தார், அவர் நியூயார்க், வால்ஹல்லாவில் உள்ள கென்சிகோ கல்லறையில் புதைக்கப்பட்டார். ரேண்டின் இறுதியஞ்சலியில் ஆலன் கிரீன்ஸ்பான் உள்ளிட்ட சில முக்கியமான பின்பற்றாளற்கள் கலந்துகொண்டனர். டாலர் வடிவத்திலான ஒரு ஆறு அடி மலர் அலங்காரம் அவருடைய சவப்பெட்டியின் அருகாமையில் வைக்கப்பட்டது. அவருடைய உயிலில் ரேண்ட் தன்னுடைய எஸ்டேட்டின் வாரிசாக லியனார்ட் பெய்க்காஃபை குறிப்பிட்டிருந்தார். 1976 ஆம் ஆண்டு விரிவுரைத் தொடரின் ஏற்பில் அவர் தன்னுடைய படைப்புகளுக்காக தத்துவத்தின் சிறப்பு வெளிப்படுத்தலாக இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ரேண்ட் தன்னுடைய கண்ணோட்டங்களை ஒருங்கிணைந்த தத்துவ அமைப்பை உள்ளடக்கியிருப்பதாக காண்கிறார், இதை அவர் "அப்ஜெக்டிவிஸம்" என்று அழைக்கிறார். அப்ஜெக்டிவிஸத்தின் சாரம், ரேண்டின் கூற்றுப்படி "தன் வாழ்க்கையின் தார்மீக நோக்கமாக உள்ள தன்னுடைய சொந்த மகிழ்ச்சியோடும், மேன்மை வாய்ந்த நடிவடிக்கையாக ஆக்கப்பூர்வமான சாதனையோடும், பகுத்தறிவை மட்டுமே தன்னுடைய ஒரே முழுமையாக காண்கின்ற வீரம் உள்ளவனாக மனிதன் குறித்த கருத்தாக்கம." முரண்படுவதிலிருந்து பகுத்தறிவாக நம்பிக்கையை விலக்குவது, ரேண்ட் மதம் உட்பட புதிர்த்தன்மை அல்லது அதிஇயல்பு ஆகியவற்றை எந்த வடிவத்திலும் எதிர்த்தார், தத்துவார்த்த யதார்த்தை ஏற்றுக்கொண்டார். ரேண்ட் பகுத்தறிவு தன்முனைப்புவாதத்திற்காகவும் (பகுத்தறிவு சுய-ஆர்வம்) ஒரே முறையான வழிகாட்டு தார்மீக கொள்கையாக இருக்கிறது என்பதற்காக அதற்காகவும் வாதாடினார். தனி நபரானவர் "தன்பொருட்டின் காரணமாகவே இருக்க வேண்டும்" என்றும் "பிறருக்கு தன்னையும் தனக்காக பிறரையும் பலியிடக்கூடாது" என்று எழுதினார். "அரசு கட்டுப்பாடில்லாத" முதலாளித்துவம் மட்டுமே ஒரே தார்மீக சமூக அமைப்பு என்று ரேண்ட் வலியுறுத்தினார். அவருடைய அரசியல் கண்ணோட்டங்கள் வலுவான தனி நபர்வாதம் என்பதோடு இதனால் எதி்ர்-அரசுவாதம் மற்றும் எதிர்-கம்யூனிஸம் ஆகியனவாக இருக்கிறது. ரேண்ட் அவர் காலத்திலிருந்த முக்கியமான எதிர்-கம்யூனிஸவாதிகள் உட்பட பல லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகளை வெறுத்தொதுக்கினார். கேட்டோ இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த முதுநிலையாளரான ஜிம் பவல் ரேண்டை அமெரிக்க லிபர்டேரியனிஸத்தின் மூன்று முக்கியமான பெண்களுள் (ரோஸ் வில்டர் லேன் மற்றும் இஸபெல் பேட்டர்சன் ஆகியோரோடு) ஒருவராக கருதுகிறார், இருப்பினும் ரேண்ட் லிபர்டேரியனிஸத்தையும் லிபர்டேரியன் இயக்கத்தையும் மறுதலிக்கிறார். ரேண்ட் "நிபந்தனைவகையில் முரண்பாடு" கொண்டதாக இருப்பதாக அனார்கோ-முதலாளித்துவத்தையும் மறுதலிக்கிறார், இந்த இடத்தில் ராய் சைல்ட்ஸ் போன்ற அனார்கிஸ்ட் அப்ஜெக்டிவிஸ்ட் என்று தங்களை அறிவி்த்துக்கொண்டவர்களால் அவர் விமர்சிக்கப்படுகிறார். தத்துவவாதியான சந்திரன் குக்கதாஸ் அவருடைய "அரசு மற்றும் வரிவிதிப்பு நோக்கிய நிறுத்தமில்லாத வெறுப்புணர்வு அனார்கிஸத்தின் மறுதலிப்புடன் சீரற்றதாக இருக்கிறது, அவருடைய இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் மோசமான சிந்தனையாகவும் முறையற்றதாகவும் இருக்கிறது" என்று கூறுகிறார். அவர் அரிஸ்டாடிலை தன்மீது மிகவும் தாக்கமேற்படுத்தியவராக தெரிவிக்கிறார், ஆரம்பகால தாக்கமாக பிரடெரிக் நீட்ஷேவைக் காண்கிறார், இருப்பினும் அவர் பின்னாளில் இதை எதிர்-பகுத்தறிவுவாதம் என்று கூறி அவருடைய அணுகுமுறையை மறுதலிக்கிறார். தத்துவவாதிகளான ரொனால்ட் இ.மெரில் மற்றும் டேவிட் ஸ்டீல் ஆகியோர் மற்றவர்களை பலியாக்குவது குறித்த விஷயத்தில் அவருடைய முந்தைய மற்றும் பின்னாளைய பார்வைகளில் வேறுபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணத்திற்கு "வி தி லிவிங்கின்" முதல் பதிப்பு கருணையே இல்லாத ஒருவகையான மேல்குடி வர்க்கத்திற்கு ஆதரவானதாக விவரிக்கப்பட்டிருந்தது:"உங்களுடைய மக்கள்கூட்டம் எதுவாயினும் அதை காலுக்கு கீழே போட்டு சேற்றில் அழுத்துங்கள், அவர்களை எரிபொருள் ஊற்றி எரித்துவிட வேண்டாமா?" ஹிஸ்டரி ஆஃப் ஃபிலாசபியில் அவர் "மூன்று 'ஏ'க்கள்-அரிஸ்டாடில், அக்வினாஸ் மற்றும் அய்ன் ரேண்ட்" ஆகியோரை மட்டுமே பரிந்துரைக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த தத்துவவாதிகளிடையே ரேண்ட் குறிப்பாக ஏளனத்துடன் வெறுத்தொதுக்குவது இம்மானுவல் காண்ட்டையே, இவரை ஒரு "அரக்கன்" என்றும் "வரலாற்றிலேயே மிகவும் தீமையான மனிதன்" என்றும் ரேண்ட் குறிப்பிடுகிறார். உண்மை என்பது "அதற்கேயுரிய வகையில் இருக்கிறது" என்பதால் அதை அறிய முடியாது என்று குறிப்பிட்ட காண்ட்டின் கண்ணோட்டத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். "ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையிலும்" காண்டின் "துல்லியமான எதிர்வாக" அவருடைய தத்துவம் இருக்கிறது என்று ரேண்ட் கருதினார். அப்ஜெக்டிவிஸ்ட் தத்துவவாதிகளான ஜார்ஜ் வால்ஷ் மற்றும் ஃபிரெட் செடான் ஆகியோர் ரேண்ட் காண்ட்டை தவறாகப் விளக்கச்செய்கிறார் என்று வாதிடுகின்றனர். குறிப்பாக, இரண்டு தத்துவாதிகளுமே ஒரே அடிப்படை நிலைகளை கைக்கொண்டவர்களாக இருக்கின்றனர், ரேண்ட் காண்ட் உடனான தன்னுடைய வேறுபாட்டை மிகைப்படுத்திக் காட்டுகிறார் என்று வால்ஷ் வாதிடுகிறார். பல விமர்சகர்களும் காண்ட் குறித்த ரேண்டின் எழுத்து "புறம்தள்ளவேண்டியதும் விவாதத்திற்கு தகுதியற்றதும்" என்கின்றனர் என்று வால்ஷ் கூறுகிறார். ரேண்ட் ஸ்காலர்களான டக்ளஸ் டென் யுல் மற்றும் டக்ளஸ் ராஸ்மஸேன் அவருடைய பாணியை "இலக்கியப்பூர்வமானது, உயர்வுநவிற்சியானது மற்றும் உணர்ச்சிமேலிட்டது" என்கின்றனர், அதேசமயம் அவருடைய சிந்தனையின் முக்கியத்துவம் மற்றும் அசல்தன்மையை வலியுறுத்துகின்றனர். அதேபோல் தத்துவவாதியான ஜேக் வீலர் "ரேண்டிய வெஞ்சினத்தின் இடையறாத ஆரவாரம் மற்றும் தொடர்ச்சியான வெளித்தள்ளுதல்" இருந்தபோதிலும் அவர் ரேண்டின் அறம்சார் நிலையை "மிகப்பரந்த சாதனை, தற்கால சிந்தனையைக் காட்டிலும் மிகவும் இனிமையான ஆய்வு" என்று கருதுகிறார். 1976ஆம் ஆண்டில், தத்துவத்திற்கான அவருடைய மிக முக்கிய பங்களிப்புகளாக "அவருடைய கருத்துக்களின் கோட்பாடு, [அவருடைய] அறம்சார் நிலைகள், மற்றும் [அவருடைய] ஆற்றல் தொடங்கிவைக்கப்படும் நிலையில் தீமை கலந்திருப்பதை-உரிமைகள் மீறப்படுதல்-அரசியலில் அவர் கண்டு சொன்னது" ஆகியவை இருக்கின்றன. ரேண்டின் நாவல்கள் முதலில் பதிப்பிக்கப்பட்டபோது அவை நீளமானதும் மெலோடிராமாடிக் என்றும் ஏளனம் செய்யப்பட்டன, பின்னாளில் அவை பெருமளவிற்கு வாய்வழியாகவே சிறந்த விற்பனையாகும் எழுத்துக்களாயின. தனது "நைட் ஆஃப் ஜனவரி 16ன்த்" நாடகத்திற்கே ரேண்ட் முதல்முறையாக விமர்சனங்களைப் பெற்றார். பிராட்வே தயாரிப்பின் மதிப்பீடுகள் கலவையாக இருந்தன என்பதோடு சாதகமான விமர்சனங்கள்கூட கவலை தருவனவாக இருக்கும் என்று ரேண்ட் கருதினார், ஏனென்றால் அந்த திரைக்கதையில் தயாரிப்பாளரால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரேண்ட் தானும்கூட தனது முதல் நாவலான "வி தி லிவிங்" பரவலாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார், ஆனால் மைக்கேல் எஸ்.பெர்லினர் 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டதோடு 125 வெவ்வேறு வகையான மதிப்பீடுகளோடு "அவருடைய வேறு எந்த எழுத்தைக் காட்டிலும் இதுவே அதிகம் மதிப்புரை செய்யப்பட்டதாக இருக்கிறது" என்று கூறுகிறார். இந்த மதிப்புரைகளில் பலவும் அவருடைய பின்னாளைய எழுத்துக்களுக்கு அவர் பெற்றதைக் காட்டிலும் மிகவும் நேர்மறையானதாகவே இருந்திருக்கின்றன. அவருடைய 1938 ஆம் ஆண்டு குறுநாவலான "ஆன்த்தம்" இங்கிலாந்தில் இதனுடைய முதல் முதல் பதிப்பு மற்றும் அடுத்தடுத்து வந்த சில மறுவெளியீடுகள் ஆகிய இரண்டும் மதிப்புரையாளர்களிடமிருந்து சிறிதளவு கவனமே பெற்றது. ரேண்டின் முதல் நன்கு விற்பனையான "தி ஃபவுண்டைன்ஹெட்" "வி தி லிவிங்கைக்" காட்டிலும் அதிகமாக சில மதிப்புரைகளைப் பெற்றது என்பதுடன் மதிப்பிடுபவர்களின் விமர்சனங்கள் கலவையாக இருந்தன. "தி நியூயார்க் டைம்ஸில்" ரேண்டை பெருமளவிற்கு பாராட்டி நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன. "டைம்ஸ்" விமர்சகர் ரேண்டை "திறமையாகவும், அழகாகவும், கசப்போடும்" எழுதுகின்ற "பெரும் ஆற்றலுள்ள எழுத்தாளர்" என்று அழைத்தார், அத்துடன் அந்தப் பத்திரிக்கை அவர் "தனிநபரின் பரிசாக அவர்களை துதிபாடி எழுதுகிறார்... நம் காலத்தின் சில அடிப்படையான கருத்தாக்கங்கள் வழியாக சிந்திக்காமல் இந்த பிரமாதமான புத்தகத்தை உங்களால் வாசிக்க முடியாது" என்று குறிப்பிட்டது. வேறுசில நேர்மறையான விமர்சனங்களும் இருந்தன, ஆனால் ரேண்ட் அவற்றை தன்னுடைய செய்தியை புரிந்துகொள்ளவில்லை என்றோ அல்லது முக்கியத்துவமில்லாத பதிப்பகங்களிலிருந்து வந்ததனாலோ புறம்தள்ளினார். இந்த நாவலின் நீளத்தைக் குறிப்பிடும் பல எதிர்மறையான விமர்சனங்கள் ஒருவர் "புத்தகத் திமிங்கிலம்" என்றோ மற்றவர் "இதை வாங்குகின்ற யாரும் காகித பகுத்தறிவு குறித்த கடுமையான விரிவுரையைப் பெற தகுதியானவராக இருப்பார்" என்பதாகவோ இருந்தன. மற்ற எதிர்மறையான விமர்சனங்கள் இந்தக் கதாபாத்திரங்கள் கருணையில்லாதது என்றும் ரேண்டின் பாணி "குற்றத்திற்குரிய கற்பனை செய்ய இயலாதது" என்றனர். ரேண்டின் 1957 ஆம் ஆண்டு நாவலான "அட்லஸ் ஷ்ரக்டு" பரவலாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது, இவற்றில் பலவும் கடுமையாக எதிர்மறையானவையாக இருந்தன. "நேஷனல் ரிவ்யூவில்" கன்சர்வேட்டிவ் எழுத்தாளரான விட்டேகர் சேம்பர்ஸ் இந்தப் புத்தகத்தை "முதிர்ச்சியில்லாதது" என்றும் "குறி்ப்பிடும்படியான அற்பமானது" என்றும் அழைத்தார் என்பதோடு இதை "நாவல் என்ற பதத்தை மதிப்பிழக்கச் செய்வதால் மட்டுமே இதை நாவல் என்று அழைக்கலாம்" என்றும் குறிப்பிட்டார். அவர் இந்தப் புத்தகத்தின் தொனியை "ஒத்திவைக்கப்படாத கீச்சிடல்" என்றும் சோவியத்துக்களைப் போன்றே ரேண்டும் கடவுளற்ற அமைப்பிற்கு ஆதரவானவராக இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார், ""அட்லஸ் ஷ்ரக்டு" இல் கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களிலும் 'வாயு அறைக்குப் போ!' என்று உத்தரவிடுகின்ற வலி மிகுந்த கட்டாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்க முடிகிறது" என்றார். ஒருசில பதிப்பகங்கள் மட்டுமே இந்த நாவலுக்கு நேர்மறையான விமர்சனங்களை அளித்தன, ஆனால் ரேண்ட் ஸ்காலராக உள்ள மிமி ரெய்சல் கிளேட்ஸ்டின் அவற்றைப் பின்னாளில் இந்தப் புத்தகத்தை "மிகமோசமான அறிவின்மை" என்று அழைத்த பல விமர்சகர்களும் "ஒருவருக்கொருவர் புத்திசாலித்தனமான விமர்சனங்களை திட்டமிட்டு புனைந்துகொண்டனர் போல் இருக்கிறது" என்றார், அவர்கள் இது "வெறுப்போடு எழுதப்பட்டது" என்றும் "கருணையின்றி சித்திரவதைப் படுத்துவதும் சலிப்பானதுமாக" இருக்கிறது என்றனர். ரேண்டின் வாழ்நாளிலே அவருடைய எழுத்துக்கள் கல்வித்துறை நிபுணர்களிடமிருந்து குறைவான கவனத்தையே பெற்றது. ரேண்டின் தத்ததுவம் குறித்த முதல் கல்வித்துறை புத்தகமான "வித் சாரிட்டி டுவேர்ட் நன்: அன் அனலிஸிஸ் ஆஃப் அய்ன் ரேண்ட்ஸ் ஃபிலாசபி" 1971 இல் வெளிவந்தபோது அதன் ஆசிரியரான வில்லியம் எஃப்.ஓநீல் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்காக "கூட்டிணைவிலான குற்றத்திற்கு" வழியமைத்துவிடக்கூடிய "நேர்மையற்ற செயல்தி்ட்டம்" என்று ரேண்ட் குறித்து எழுதி பிரகடனப்படுத்துகிறார். ரேண்டின் கருத்துருவாக்கம் குறித்த சில கட்டுரைகள் அவர் 1982ஆம் ஆண்டில் மரணமடைவதற்கு முன்பு கல்வித்துறை பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் பலவும் "தி பர்சனாலிஸ்ட்" டில் காணப்படுகின்றன. ஒரு இலக்கிய ஆளுமையாக அவர் வாழ்நாளின்போது ரேண்ட் குறித்த பரிசீலனை மிகவும் வரம்பிற்குட்பட்டதாக இருந்தது. கிளேடஸ்டீன் ரேண்ட் குறித்து 1973ஆம் ஆண்டில் ஆய்வுசெய்யத் தொடங்கியபோது அவருடைய நாவல்கள் குறித்த கல்வித்துறை கட்டுரைகள் எதையும் காண இயலவில்லை, 1970களில் மட்டுமே மூன்று கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ரேண்டின் புத்தகங்கள் தொடர்ந்து பரவலாக விற்பனையாகி படிக்கப்பட்டன, அய்ன் ரேண்ட் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி 25 மில்லியன் பிரதிகள் 2007 ஆம் ஆண்டில் விற்பனையாகியிருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் 800,000 பிரதிகள் அதிகமாக விற்பனையாகின்றன. அவர் வெவ்வேறு துறைகளில் குறிப்பிடத்தகுந்த மக்களின் மீது தாக்கமேற்படுத்தியவராகவும் இருக்கிறார். உதாரணத்திற்கு தத்துவவாதிகளான ஜான் ஹாஸ்பர்ஸ், ஜார்ஜ் ஹெச்.ஸ்மித், ஆலன் கோதல்ஃப், ராபர்ட் மேஹு மற்றும் தாரா ஸ்மித், பொருளாதாரவாதிகளான ஆலன் கிரீன்ஸ்பேன், ஜார்ஜ் ரீஸ்மேன் மற்றும் முர்ரே ரோத்பார்ட், உளவியலாளர்களான எட்வின் ஏ. லாக், வரலாற்றாசிரியர்களான ராபர்ட் ஹெஸன், சார்ல்ஸ் முர்ரே போன்ற அரசியல் எழுத்தாளர்கள். அமெரிக்க காங்கிரஸ்காரர்களான ரான் பால் மற்றும் பாப் பார், மற்றும் அமெரிக்க உச்சநீதிமன்ற இணை நீதிபதியான கிளாரன்ஸ் தாமஸ் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் அவருடைய தாக்கம் உண்டு என்று தெரிவித்திருக்கின்றனர், அத்துடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் 1960களில் அளித்த தனிப்பட்ட நேர்காணலில் தன்னை ரேண்டின் மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் என்று கூறியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் மற்றும் புக் ஆஃப் தி மன்த் கிளப்பால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பதிலளிப்பாளரின் வாழ்க்கையில் யாருடைய புத்தகம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்கப்பட்டபோது ரேண்டின் "அட்லஸ் ஷ்ரக்டு" பைபிளுக்கு அடுத்தபடியாக இரண்டாம் மிகவும் பிரபலமான தேர்வாக இருக்கிறது. மாடர்ன் லைப்ரரியால் 1998 மற்றும் 1999 இல் வாசகர்களிடம் எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பின்படி 100 சிறந்த நாவல்கள் பட்டியலில் அவருடைய நான்கு புத்தகங்களை சேர்த்திருக்கிறது, இதில் "அட்லஸ் ஷ்ரக்டு" முதல் இடத்தில் இருக்கிறது என்பதுடன் மற்றொரு புத்தகமான "தி வர்ச்சு ஆஃப் செல்ஃபிஷ்னஸ்" 100 சிறந்த புனைவல்லாத பட்டியலில் முதல் நிலையில் இருக்கிறது. ரேண்ட் மற்றும் அவருடைய தத்துவங்களைப் பற்றிய மற்ற ஆசிரியர்களின் புத்தகங்களும் புனைவல்லாத பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோன்ற பட்டியல்களின் மதிப்பு விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறது. 2007ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஃபிரெஸ்டர் மீடியா/ஜாக்பி ஓட்டெடுப்புகள் 8 சதவிகித அமெரிக்க வயதுவந்தோர் "அட்லஸ் ஷ்ரக்டு" நாவலைப் படித்திருக்கின்றனர். ரேண்டின் தாக்கம் அமெரிக்காவில் பெருமளவிற்கு தாக்கமேற்படுத்தியிருக்கிறது என்றாலும் அவருடைய படைப்புக்களில் சர்வதேச அளவிலும் ஆர்வம் காட்டப்படுகிறது. அவருடைய புத்தகங்கள் சர்வதேச அளவில் நன்கு விற்பனையானவை என்பதோடு 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பெரிய அளவிற்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. "அட்லஸ் ஷ்ரக்டு" விற்பனை 2007 ஆம் ஆண்டு கடன் குழப்பத்தால் பொருளாதார சிக்கல்கள் உருவானபோது குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்தது, இதை பலரும் இந்த நாவலில் உள்ள விஷயங்களோடு பொருத்திப் பார்த்தனர். ரேண்ட் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் எழுத்துக்களில் தங்கள் வாழ்வு மற்றும் சிந்தனையில் தாக்கமேற்படுத்தியவராக குறிப்பிடப்படுகிறார். ரேடியோ ஆளுமையான ரஷ் லிம்பாக் தனது நிகழ்ச்சியில் தொடர்ந்து ரேண்டை ஒரு நேர்மறையான குறிப்பாக பயன்படுத்தி வருகிறார். மாயாஜாலவாதியும் நகைச்சுவையாளருமான பென் ஜில்லட் தன் மீதான அவருடைய தாக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அமெரிக்க ஆடை வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் அவரை தன்னுடைய விருப்பமான எழுத்தாளர்களுள் ஒருவராக குறிப்பிட்டிருக்கிறார். ஸ்பைடர் மேன் கதாபாத்திர இணை உருவாக்குநரான ஸ்டீவ் டிட்கோ மிஸ்டர்.ஏ மற்றும் டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான தி கொஸ்டின் உட்பட அவருடைய அப்ஜெக்டிவிஸ்ட் நம்பிக்கை கொண்ட சித்திரக்கதை-புத்தக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். ஆலன் மூர் உருவாக்கிய பின்னாளைய கிராபிக் நாவலான "வாட்சேமென்" அதில் வரும் ரோஷேன் என்ற கதாபாத்திரம் ரேண்டியன் கருத்தாக்கத்தை விமர்சனப்பூர்வமாக இணைத்துக்கொண்டிருக்கிறது என்று மூர் டிட்கோவின் தாக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார். கனடிய ராக் இசைக்குழுவான ரஷ் "2112" என்ற பாடலில் ரேண்டின் "ஆன்த்தமை" மேலெழுந்தவாரியாக அடிப்படையாகக் கொண்டது உட்பட தங்களுடைய பல பாடல்களிலும் ரேண்டின் கதைக்கருக்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. ரேண்ட் அல்லது முக்கியமாக அவருடைய நாவல்களைச் சேர்ந்த அவரது கதாபாத்திரங்களை வில்லியம் எஃப்.பக்லி, மேரி கெய்ட்ஸ்கில், மேட் ரஃப், ஜே. நீல் ஷுஸ்மன், மற்றும் கே நோல்டி ஸ்மித் போன்றோர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ரேண்டால் தாக்கம்பெற்ற டெர்ரி குட்கைண்ட் என்ற எழுத்தாளரின் புத்தகங்களி்ல் உள்ள கதாபாத்திரங்கள் அபெஜ்க்டிவிஸ்ட் கருத்தாக்கங்களை வெளிப்படுத்துபவனாக இருக்கின்றன. ரேண்டின் படம் நிக் கேடெனோ என்ற ஓவியரால் வடிவமைக்கப்பட்டு அமெரிக்க அஞ்சல் முத்திரையில் இடம்பெற்றிருக்கிறது. திரில்லர் எழுத்தாளரான டேவிட் கெஸ்வர் அய்ன் ரேண்டின் தாக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், இருப்பினும் இது தொடர்புடைய கதாபாத்திரங்கள் அவருடைய புத்தகங்களில் கதைத்தொடரில் வரும் அப்ஜெக்டிவிஸ்ட் தத்துவ இருப்பைக் காட்டிலும் கதாநாயகனின் தனிப்பட்ட குணவியல்போடு வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது. ரேண்டின் வாழ்க்கை குறித்து இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1997 ஆம் ஆண்டு ஆவணத்திரைப்படும் "Ayn Rand: A Sense of Life" சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. ரேண்டின் வாழ்க்கை பற்றி திரைப்படமான "தி பேஸன் ஆஃப் அய்ன் ரேண்ட்" 1999ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது, இதில் ஹெலன் மிர்ரன் ரேண்டாகவும் பீட்டர் ஃபாண்டா அவருடைய கணவராகவும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் பார்பரா பிரேண்டன் எழுதிய புத்தகத்தின் அதே பெயரில் வெளிவந்தது என்பதுடன் சில விருதுகளையும் வென்றது. "அட்லஸ் ஷ்ரக்டுவின்" திரைப்படத் தழுவல் பல வருடங்களுக்கு விவாதிக்கப்பட்டது என்பதுடன் அதைத் தயாரிப்பதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் திட்டமிட்ட நிலையைத் தாண்டி யாரும் செல்லவில்லை. ரேண்டின் படைப்பு மற்றும் ஆளுமை அவற்றின் பெருமையைக் குலைப்பனவாக இருந்தன. "ரீஸன் பத்திரிக்கையின்" முதன்மை ஆசிரியரான நிக் கில்லஸ்பி "ரேண்ட் ஒரு சித்திரவதைப்படும் அழிவின்மை, இவற்றில் ஒன்று ஒரு கதைநாயகனாக ஒரு பன்ச் வரியாக இருக்கககூடியவர், உறைந்தும் மனிதநேயமற்றதாகவும் உள்ள ரேண்டின் ஏளனங்கள் பாப்புலர் கலாச்சாரத்தில் நடைபெறுவனாக உள்ளன எனறு ரேண்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார்." எட்வர்ட் ரோத்ஸ்டீன், நியூயார்க் டைம்ஸின் கலாச்சார விமர்சகர் ரேண்டேன் புனைவுகளை "புரட்சிகரமானவற்றிலிருந்து தள்ளியிருப்பது...ஒரு ரொமாண்டிக் உடோப்பியா, ஜனநாயக வாழ்க்கையின் பதட்டங்கள் தீர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன" என்றதோடு "ஜனநாயக கலாச்சாரத்தையும் உயர்வான சாதனையையும சரி செய்வதில் ஏற்பட்டுள்ள தோல்வியாக" எஞ்சிவிடுகிறது என்றும் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ஜோகன் ஹாரி ரேண்ட் எப்படி ஒரு அமெரிக்க குறியீடு ஆனார் என்று வியக்கிறார், அவரை ஒரு சேதமுற்ற பெண்ணாக, பித்துபிடித்த, கருணைக்குரிய ஏமாற்றுவாதி அவருடைய நரம்புக்கோளாறு அவருடைய இயல்பான சித்தபிரமை மற்றும் வெறுப்பை வலுவடையச்செய்கிறது என்பதுடன் "இளைஞர்களின் இறுக்கமாக கண்காணிக்கப்பட்ட சடங்கால்" சூழப்பட்டு போலி விசாரணையோடு நிறைவுபெறுகிறது என்று விவரிக்கிறார்; மேலும் அவர் அவருடைய கருத்துருவாக்கங்களின் பிரபலத்தன்மை "மோசமான மனித உள்ளுணர்வுகளை தோண்டியெடுப்பதின்" மீதே அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். உயிர்ச்சித்திரமாக்கப்பட்ட பல நகைச்சுவைகள் ரேண்டையும் அவருடைய எழுத்தையும் குறிப்பிடுவனாக இருக்கின்றன, இது "ஃப்யூச்சரமா" அத்தியாயத்தில் ரேண்டின் எழுத்துக்கள் எதிர்காலத்தில் கழிவுநீர்க் குழாயில் காணப்படுவனவாக இருக்கின்றன, ஒரு "சவுத் பார்க்" அத்தியாயத்தில் "அட்லஸ் ஷ்ரக்டு" ஒரு குப்பைக்கூளமாக குறிப்பிடப்படுகிறது, இப்படிப்பட்ட பல்வேறு குறிப்புகள் "தி சிம்ஸன்ஸ்" அத்தியாயங்களில் குறிப்பிடப்படுகின்றன. உயிர்ச்சித்திரப் பட உலகத்திற்கும் வெளியில் பின்வருவனவை போன்ற கேம் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பிடப்படுவனவாக இருக்கிறது, ("ஜேப்படி!" ), டிராமாக்கள் ("தி கில்மோர் கேர்ள்ஸ்" , "மேட் மேன்" ), மற்றும் நகைச்சுவைகள் ("தி கோல்பர்ட் ரிப்போர்ட்" ). தத்துவவாதிகளான டேனியன் டேனட் மற்றும் அஸ்பர்ன் ஸ்டெக்லிச்-பீட்டர்ஸன் போன்றோர்களால் பராமரிக்கப்படும் அபத்தவாத எழுத்தான "தி ஃபிலாசபிகல் லெக்ஸிகன்" ரேண்டை பின்வருமாறு வரையறுக்கிறது: "தனிப்பட்ட தாக்குதல் மற்றும்/அல்லது பேசமுடியாத அறம்சார் சிதைவிற்கான தத்துவார்த்த உடன்பாடின்மையை தவறுசெய்வதன் மூலம் கோபமாக வசைமாரி பொழிபவர்." "பயோஷாக்" மற்றும் "பயோஷாக்2" போன்ற வீடியோ கேம்கள் ரேண்டின் தாக்கத்திற்கு ஆளான ஆக்கக்கூறுகளை உள்ளிட்டிருக்கின்றன. 1982ஆம் ஆண்டில் ரேண்ட் மரணமடைந்ததிலிருந்து அவருடைய எழுத்தின் மீதான ஆர்வம் படிப்படியாக அதிகரித்ததாக இருக்கிறது. இருப்பினும் சில பல்கலைக்கழகங்கள் தற்போது ரேண்ட் அல்லது அப்ஜெக்டிவிஸத்தை ஒரு சிறப்பு வாய்ந்த தத்துவமாகவோ அல்லது ஆராய்ச்சிப் பகுதியாகவோ சேர்த்துக்கொண்டிருக்கின்றன. சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ரேண்டின் கண்ணோட்டங்கள் குறித்த இடவசதிகள் அல்லது மையங்களை ஏற்படுத்தி தந்திருக்கின்றன, தனிப்பட்ட ஸ்காலர்களை ஆதரிக்கும் விதமாக ஃபெலோஷிப்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தி ஆன்த்தம் ஃபவுண்டேஷன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் ஆகியவை தத்துவத் துறையில் ரேண்ட் குறித்த ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. சில கல்வித்துறை தத்துவவாதிகள் தாங்கள் வலியுறுத்தும் விஷயங்களின் தீவிரத்தன்மை குறைந்தும் தத்துவ விஷயங்களின் மீதான புரிதல் வரம்பிற்குட்பட்டதாக இருப்பதாகவும் ரேண்டை விமர்சிக்கின்றனர். காண்டினெண்டல் பாரம்பரியத்தில் உள்ள பலரும் சுய-ஆர்வத்தின் மீதான அவருடைய உறுதிப்பாடு போலிவாதத்தின் மீது நம்பி்க்கை கொண்டதாக இருக்கிறது, இதன் காரணமாக தீவிரமான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் மதிப்புள்ளவை என்று எண்ணிவிட இயலாது. பத்தி எழுத்தாளரான சாரா டெப்னே டிஸ்டேலின் கூற்றுப்படி தத்துவாதிகள் "அட்லஸ் ஷ்ரக்டுவை" "முதிர்ச்சியற்றது, சடங்குப்பூர்வமானது மற்றும் அசலற்றது" என்று நிராகரிக்கின்றனர் என்பதோடு அவருடைய தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஒதுக்கிவிடுகின்றனர். கிரிஸ் சியாபாரா வழக்கத்திற்கு மாறான வெறுப்பின் விமர்சனங்கள் என்பது குறித்து ரேண்டின் விமர்சனங்கள் சிலவற்றினுடைய நோக்கங்களை கேள்விக்குட்படுத்துகிறார். "அவருடைய எதிர்-கம்யூனிச, முதலாளித்துவ ஆதரவான அரசியல்களால் இடது வெறிகொண்டுவிட்டது, அதேநேரத்தில் அவருடைய நாத்திகம் மற்றும் சிவில் லிபர்டினிஸத்தால் வெறுப்படைந்திருக்கிறது" என்று சியாபாரா கூறுகிறார். சியாபாரா போன்ற ரேண்ட் குறித்த எழுத்தாளர்களான ஆலன் கோத்தெல்ஃப் மற்றும் தாரா ஸ்மித் போன்றோர் கல்வித்துறைகளில் அவருடைய எழுத்துக்களை கற்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கினர். சியாபாரா "ஜர்னல் ஆஃப் அய்ன் ரேண்ட் ஸ்டடிஸ்"ல் இணை ஆசிரியராக இருக்கிறார், இது அய்ன் ரேண்டின் தத்துவ மற்றும் இலக்கிய எழுத்துக்களை ஆய்வு செய்வதற்கென்று உருவாக்கப்பட்ட "நடுநிலையான" பத்திரிக்கையாகும். 1987ஆம் ஆண்டில் கோதெல்ப் அய்ன் ரேண்ட சொசைட்டி நிறுவுவதற்கு உதவிபுரிந்தார், இது அமெரிக்கன் ஃபிலாசபிகல் அசோஸியேஷனுடன் இணைக்கப்பட்டிருப்பது என்பதுடன் அய்ன் ரேண்ட் குறித்து கருத்தரங்களை வழங்குவதிலும் ஒளிப் பதிவு விரிவுரைகளை விநியோகிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரேண்டின் கருத்தாக்கங்கள் குறித்து ஸ்மித் பல பாடப் புத்தகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியி்ட்டிருக்கிறார், இது "அய்ன் ரேண்ட்ஸ் நார்மேட்டிவ் எதிக்ஸ்: தி வர்ச்சுவஸ்ட் ஈகோயிஸ்ட்" என்ற கேம்ப்ரிட் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பித்த ரேண்டின் அறம்சார் கோட்பாட்டு தொகுப்பையும் உள்ளிட்டிருக்கிறது. ரேண்டின் கருத்துருவாக்கங்கள் கிளிம்சன் மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பொருளாக இருந்துவருகிறது. ஆங்கில மற்றும் அமெரிக்க இலக்கிய ஆய்வாளர்கள் பெருமளவிற்கு அவருடைய எழுத்தை அலட்சியப்படுத்திவிடுகின்றனர், இருப்பினும் அவருடைய இலக்கிய எழுத்துக்கள் மீதான கவனம் 1990களில் இருந்து அதிகரித்திருக்கிறது. 2001ஆம் ஆண்டில் ரேண்டிற்கான "லிட்டரரி என்சைக்ளோபீடியா" பதிவில் ஜான் லூயிஸ் ரேண்டை "ரேண்ட் அவர் தலைமுறையில் அறிவுப்பூர்மாக சவால்மிகுந்த புனைவை பெருமளவிற்கு எழுதியிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். "கிரானிக்கிள் ஆஃப் ஹையர் எஜுகேஷன்" இல் செய்யப்பட்ட 1999 ஆம் ஆண்டு நேர்காணலில் ரேண்ட் ஆய்வாளரான கிரிஸ் மாத்யு சியாபாரா கல்வித்துறை சமூகத்தில் அவருடைய எழுத்துக்களின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதில் கவனம் கொண்டிருக்கும் இவர் "ரேண்டை வெறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 1985ஆம் ஆண்டில் லியனார்ட் பெய்க்காஃப் அய்ன் ரேண்ட் நிறுவனத்தை நிறுவினார், இது "அய்ன் ரேண்டின் நாவல்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வது, அவர் கருத்துருவாக்கங்கள் குறித்து ஸ்காலர்ஷிப் மற்றும் ஆராய்ச்சிக்கு உதவுவது, மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகள், பகுத்தறிவுவாத சுய-ஆர்வம், தனிநபர் உரிமைகள் மற்றும் அரசு கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தை பரந்த அளவிற்கு சாத்தியமுள்ள பார்வையாளர்களிடத்தில் மேம்படுத்துவது" ஆகியவற்றிற்கானதாகும். 1990ஆம் ஆண்டில் டேவிட் கெல்லி அப்ஜெக்டிவிஸ்ட் ஆய்வுகளுக்கான நிறுவனத்தை உருவாக்கினார், இது தற்போது தி அட்லஸ் சொசைட்டி எனப்படுகிறது. இதனுடைய நோக்கம் ரேண்டின் புனைவுகள் மீது வாசகர்களை கவர்வதாகும்; அசோஸியேட்டட் அப்ஜெக்டிவிஸ்ட் அதிக கல்வித்துறை முயற்சிகளோடு செயல்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் வரலாற்றாசிரியரான ஜான் மெக்காஸ்கி அப்ஜெக்டிவிஸ்ட் ஸ்காலர்ஷிப்பிற்கான ஆன்த்தம் ஃபவுண்டேஷனை உருவாக்கினார், இது கல்வித்துறையில் அப்ஜெக்டிவிஸம் கருத்தாக்கத்திலான ஸ்காலர் ஆய்விற்கு நிதியுதவி வழங்குகிறது. துளசிதாசர் துளசிதாசர் (துள்சிதாஸ் , கோஸ்வாமி துள்சிதாஸ் , துளசி தாசா என்றும் அறியப்பட்டவர்) (1532-1623) தேவநாகரி: तुलसीदास) ஒரு பெரும் அவாதி பக்தா (பக்தர்), தத்துவஞானி மற்ற்ம் பாடலாசிரியர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் இராமாயணத்தினை 'இராமன் சரித மானஸ்' எனும் பெயரில் எழுதினார் துளசிதாசர். துளசிதாசர் இராமாயணம் எழுதும் முன் திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்பராமாயணத்தினைக் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை தன்னுடைய காதையில் பல இடங்களில் கையாண்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சிறந்த இராமபக்தராக இருந்த துளசிதாசர் சைவம், வைணவம், சாக்தம் சம்பிரதாயங்களையும் சமமாகப் பாவித்துப் பெருமை பெற்றவர். கணேசர், சிவபெருமான், பார்வதி, சூரியன் என அனைத்து தெய்வங்களையும் போற்றியவர் என்பதால் தனிப்பெருமை பெற்றவர். உத்திரப் பிரதேசத்தில் பந்தா மாவட்டத்தில் பிரயாகைக்கு (காசி) அருகில் உள்ள ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே என்பவருக்கும் உலேசி அம்மையாருக்கும் மகனாக விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு) பிறந்தார் துளசிதாசர். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய நிலையில் வால்மீகி இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உரிய வயதில் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியான இரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார். தம் ஆசிரியரான நர்ஹரி தாசர் அவர்களின் அடக்கமான தொண்டராக துளசிதாசர் தம்மையே ஒப்படைத்துக்கொண்டார், சுகார்-கெட்டில் சிறுவனாக இருந்தபோது அவர் முதன்முதலாக இவரிடமிருந்து இராமனின் வீரச்செயல்களைக் கேட்டார், பின்னர் இதுவே "இராமசரிதமானசா" வின் பொருளாக அமைந்தது. வட இந்தியாவில் பிரபல வைணவ மதத்தை உருவாக்கியவர்களான இராமநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி நர்ஹரி தாசர், அவர் தன்னுடைய பிரபல கவிதைகளுக்கும் நன்கு அறியப்பட்டவர். துளசிதாசர் எனும் பெயர் பல்வேறு வகைகளில் எழுதப்படலாம். எழுத்தின் சமசுகிருத உச்சரிப்பைக் குறிப்பதற்கு தேவநாகரியில் எழுத்துப்பெயர்ப்பாக ஆகும்போது அது துளசி தாஸா என்று எழுதப்படுகிறது (இதுதான் பெரும்பாலான நூலகப் பிரிவு அமைப்புகளில் இருக்கும் வழக்கம்) அல்லது இந்தியில் உச்சரிக்கப்படும்போது அதன் எழுத்துப்பெயர்ப்பு துளசிதாஸ் என்று இருக்கும். அது எவ்வாறாக எழுதப்பட்டாலும், அந்தப் பெயர் இரு சொற்களிலிருந்து வருகிறது: துளசி, இது நறுமணச் செடியின் இந்திய வகையைச் சார்ந்தது மற்றும் தாஸா என்றால் "வேலைக்காரன்" அல்லது நீட்டிக்கப்பட்ட வகையில் "பக்தன்". துளசிதாசர், பெரும் முனிவர் வால்மீகியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பவிஷ்யோட்டர் புராணத்தில், கலி யுகத்தில் ஒரு நாட்டு மொழியில் இறைவன் இராமனின் புகழைப் பாடுவதற்கு அனுமனிடமிருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று இறைவன் சிவன், பார்வதியிடம் கூறுகிறார். சிவனின் இந்த தீர்க்கதரிசனம் ஷ்ராவன் ஷுக்லா சப்தமியின் விக்ராமி சாம்வாட் 1554 ஆம் ஆண்டில் வால்மீகி துளசிதாசராக மறுஅவதாரம் எடுத்தபோது உண்மையானது. துளசிதாசரின் சமகாலத்தவரும் பெரும் பக்தருமான நப்பாதாசு கூட தன்னுடைய படைப்பான பக்த்மாலில் துளசிதாசரை வால்மீகியின் அவதாரமாகவே விவரிக்கிறார். இராமனான்டி சமய பிரிவும்கூட (துளசிதாசர் இந்தச் சமயப் பிரிவைச் சார்ந்தவர்) வால்மீகி தான் இந்த கலியுகத்தில் துளசிதாசராக மறுபிறவி எடுத்துள்ளார் என்று திடமாக நம்பியது. இவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்கள் 39 என்று கூறப்படினும் துளசிதாசரால் இயற்றப்பட்டவை 12 தான் என்று அறிஞர்களால் கூறப்படுகின்றது. அவை: வைராக்கிய சிரசந்தீபனீ, இராமாஞ்ஞா பிரஷ்ன, இராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), இராம சரித மானஸ் (அவதி மொழி) துளசிதாசரின் இலக்கிய மதிப்பை ஆச்சார்யா ராம் சந்திரா ஷுக்லா தம்முடைய இந்தி சாஹித்ய கா இதிஹாஸ் என்னும் விமர்சன படைப்பில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.ஆச்சார்யா ஷுக்லா துளசியின் லோக்மங்கலை சமூக மேம்பாட்டுக்கான தத்துவக் கோட்பாடு என்று விவரித்துள்ளார், இதுதான் அந்தப் பெரும் கவிஞரை என்றும் புகழ்பெறச் செய்துள்ளது என்றும் எந்தவொரு இதர உலக இலக்கிய கர்த்தாக்களுடனும் ஒப்பீடுசெய்யமுடியும் என்றும் விவரிக்கிறார். துளசி தாசரால் எழுதப்பட்ட ஒட்டுமொத்த இசைப்பாடல் தொகுப்பும், 13 புத்தகங்களை உள்ளடக்கியது, ஆங்கிலத்தில் (கவிதைகளாக) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதை மொழிபெயர்த்தவர் பின்தா பிரசாத் காட்ரி (1898-1985). எனினும் இந்தப் படைப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. இராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான "இராமசரிதமானசா" , வால்மீகியின் இராமாயணத்தின் அவாதிப் பதிப்பு. "அவாதி" அல்லாமல் இராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் காணப்படுகிறது. அவை "போஜ்புரி", "பிரிஜ்பாஸா" மற்றும் "சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி". இராமசரிதமானசா, சமசுகிருத இராமாயணத்தின் மற்ற நூல்களைப் போலவே, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது. இது "சௌபாய்" என்றழைக்கப்படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் நூல். இது "துளசி-க்ரிதி இராமாயணா" என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசும் இந்துக்களிடேயே மிகவும் நன்றாக அறியப்பட்டுள்ளது. இதன் பல செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது, மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை.அவருடைய போதனைகள் உண்மையிலேயே நிகழ்கால இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல்மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது; மேலும் துளசிதாசர் எந்த சித்தாந்தையும் ஏற்படுத்தாதபோதும் அவர் ஒரு கவிஞராகவும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். துளசிதாசரின் இராமசரிதமானசா மற்றும் வால்மீகி இராமாயணத்துக்குமிடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு உதாரணமாக இருப்பது, இராமனை வனவாசத்துக்கு அனுப்புவதற்காக கைகேயி தன் கணவரை வற்புறுத்தும் காட்சி. துளசி தாசரில், வலுவான பண்புரு மற்றும் அருமையான உவமைகளுடன் அது மிக நீளமாகவும் கூடுதல் உளவியல் தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது "இராமசரிதமானசா" தவிர துளசிதாசர் ஐந்து நெடும் மற்றும் ஆறு சிறு படைப்புகளின் ஆசிரியரும் கூட, பெரும்பாலானவை இராமனைப் பற்றியதாக, அவருடைய செயல்கள் மற்றும் அவரிடம் கொண்டிருக்கும் பற்றுதல்களையே சார்ந்திருந்தன. முதலாவதாக சொல்லப்பட்டவை பின்வருமாறு துளசிதாசர் காலத்தில் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீர்கேடுகள் மிகுந்திருந்தன. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உயர்த்த வேண்டி ஸ்ரீராமபிரானிடம் முறையிட்டு எழுதியதே "விநய பத்திரிகா". தமது வேண்டுகோள்களை இசைப் பாடல்களாக இயற்றி ஸ்ரீராமபிரானின் அரசவைக்கு அனுப்பி வைக்கிறார் துளசிதாசர். ராமபிரானின் அரசவையில் உள்ள கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை என அனைவரையும் துதித்துப் பாடி அவர்களைத் தம் வேண்டுகோளை நிறைவேற்றச் செய்ய ராமபிரானின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கச் சொல்கிறார் துளசிதாசர். கல் மனத்தையும் கரையச் செய்யும் விநயபத்திரிக்கா" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்க வழங்கிவருகின்றது.இந்நூல் துளசிதாசரால் இறுதியாக எழுதப்பட்ட படைப்பாகக் கருதப்படுகின்றது அவருடைய சிறு படைப்புகளில் உள்ளடங்குபவை, பாராவை இராமாயணா, ஜானகி மங்கல், இராமலாலா நஹாச்சூ, இராமஜ்னா பிரஷ்னா, பார்வதி மங்கல், கிருஷ்ணா கீதாவளி, அனுமன் பஹுகா, சங்கட மோச்சனா மற்றும் வைராக்கிய சண்டிபினி. சிறு இசைப்பாடல்களில் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருப்பது "வைராக்கிய சண்டிபானி" , அல்லது "சுயகட்டுப்பாட்டைத் தூண்டுதல்" , ஒரு துறவியின் இயல்பு மற்றும் மேன்மையை விளக்கும் கவிதை, மற்றும் அவன் பெறக்கூடிய உண்மையான அமைதியைப் பற்றிய கவிதை. இராமாயணம் தவிர துளசிதாசரின் மிகப் பிரபலமானதும் அதிகமாக படிக்கப்பட்டதுமான இலக்கியப் படைப்பாக இருப்பது "அனுமன் சாலிசா", இது அனுமனைப் புகழ்ந்து பாடும் கவிதை. பல இந்துக்கள் இதை ஒரு இறைவழிபாடாக தினமும் ஒப்புவிக்கிறார்கள். இராமசரிதமானசா பால்காண்ட் ஏழாவது பாடல் (नानापुराणनिगमागमसम्मतं यद् ) இராமானுசரைப் போலவே, துளசிதாசரும் ஒப்புயர்வற்ற கடவுளை நம்புகிறார்.அதேசமயம் சங்கராச்சார்யரின் கருத்தையும் ஏற்கிறார்; இந்த இறைவன் தானே ஒருமுறை மனித வடிவை எடுத்துக்கொண்டார், மனிதகுலத்தினை ஆசீர்வதிப்பதற்காக இராமராக அவதாரம் எடுத்தார். அதனால் உடலானது போற்றப்படவேண்டுமே தவிர பயனற்றதாக எண்ணக்கூடாது. இறைவன் நம்பிக்கையுடன் (பக்தியுடன்) அணுகப்படவேண்டும், தன்னலமற்ற வழிபாடு மற்றும் சுத்தமான அன்பில் தன்னையே சரணடையச் செய்யவேண்டும், மேலும் அவனின் சிந்தனையில் சுய-விருப்பங்களின் அனைத்து செயல்களிலும் சுத்தமாக வேண்டும். அனைத்து உயர்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும், அப்போது அவை மகிழ்ச்சியடையும்; ஏனெனில் எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டும் போது நீங்கள் இறைவனிடமும் அன்பு கொள்கிறீர்கள், ஏனெனில் அவனே எல்லாமுமாக இருக்கிறான். ஆன்மா இறைவனிடமிருந்து பெறப்பட்டது, மேலும் வாழ்க்கையில் அது வேலைகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது (கர்மா); மனிதகுலம் தன்னுடைய பிடிவாதத்தினால், செயல்களின் வலைகளில் தங்களைத் தாங்களே பிணைத்துக்கொள்கிறது. இறைவனிடத்தில் நம்பிக்கை வைப்பவர்களின் பேரின்பத்தை அறிந்தபோதிலும் மற்றும் கேட்டறிந்தபோதிலும், விடுதலை ஆவதற்கான ஒரு வழியை அவர்கள் முயற்சிப்பதில்லை. கடவுளின் இல்லத்தில் ஆன்மா பெறக்கூடிய பேரின்பம் இறைவனிடத்தில் ஈடுபாடு அல்ல, அவருடனேயே ஒன்றாதலாகும். இது பிறப்பு மற்றும் மறுபிறப்பின் சுமையிலிருந்து விடுதலையாதல் (முக்தி) மற்றும் உச்சநிலையிலான ஆனந்தமாகும். இராமரிடத்தில் பக்தி மற்றும் சிவனிடத்தில் பற்றுதல் ஆகியவற்றுக்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லாதிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் (இராமாயணா, லங்கா காண்டம், தோஹா 3). ஆனால் அவருடைய எல்லா எழுத்துகளின் நடைமுறை முடிவுகளும் இராமரை நோக்கி செய்யப்படும் பக்தியாக, ஆழமாக மனதில் பதியச் செய்வதாக இருக்கிறது, அதன் மூலம் பிறப்புகள் மற்றும் மறுபிறப்புகளின் சுழற்சியிலிருந்து விடுதலை மற்றும் பாவ விமோசனத்திற்கு ஒரு பெரும் வழியாக இருக்கிறது, பிராமணர்கள் போலவே மிகத் தாழ்ந்த சாதியிலிருக்கும் மக்களுக்கும் திறந்தே இருப்பதான ஒரு விமோசனமாகவும் இருக்கிறது. துளசிதாசருக்கு "சித்தாந்தம்" அத்தனை முக்கியமானது இல்லை. அதற்கு மேலாக முக்கியமானது நாமபக்திதான். இராமனின் பெயரான இராமநாமாவை திரும்பதிரும்பச் சொல்வதான பழக்கம் முக்கியமானது என்கிறார்.இராமரை விடவும் அவருடைய பெயர் மிகப் பெரிது என்று கூறுகிறார் (कहउँ नामु बड़ राम तें निज बिचार अनुसार,). இராமரைக் காட்டிலும் இராமா என்னும் பெயர் ஏன் பெரியதாக இருக்கிறது? ஏனெனில் "இராமா" என்பது ஒரு மந்திரம், ஒரு ஒலி, அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஒருவரை உயர் நிலையான உணர்வுநிலைக்குக் கொண்டுசெல்லும். இவ்வாறு இராமர் அல்லாமல், இராமா என்னும் பெயர் தான் "காப்பாற்றுகிறது". ஏனெனில் பெயருக்குள்ளேயே இறைவன் இராமர் தானே உள்ளடங்கியிருக்கிறார். இராமா என்பதே அண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் ஒன்று என்று பொருள் (ராம்தா சகால் ஜஹான்). "இராமசரிதமானசா"வின் கிரோசெஸ் மொழிபெயர்ப்பில், நப்பாஜியின் "பகத்மாலா" வில் இருக்கும் உரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் அவற்றின் விரிவுரைகளாலேயே காணமுடியும், இதுதான் கவிஞருக்குத் தொடர்புடைய பாரம்பரியங்களுக்கு வலிமையாக இருக்கும் முக்கிய மூல சான்றாகும். நபாஜி அவராகவே துளசிதாசரைச் சந்தித்துள்ளார்; ஆனால் கவிஞரைப் புகழ்ந்து பாடும் பத்தி அவருடைய வாழ்க்கைக்குத் தொடர்புடைய எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை - இவை ப்ரியா தாசு அவர்களின் டிகா அல்லது உரை விளக்கத்தில் குறிப்பிடப்படுகிறது, இவர் இதை 1712 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார், மேலும் பொருளடக்கத்தின் பெரும்பகுதி கட்டுக்கதையாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருக்கிறது. துரதிஷ்டவசமாக, கவிஞரின் தனிப்பட்ட சீடருமாக உண்மையான தோழருமாக இருந்து 1642 ஆம் ஆண்டில் இறந்துபோன பெனிமாதாப் தாசு அவர்களால் இயற்றப்பட்ட கவிஞரின் வாழ்க்கை வரலாறான "கோசாய்-சரித்ரா" காணாமல்போய்விட்டது, அதன் பிரதியும் கூட இருப்பதாகத் தெரியவில்லை. நாக்ரி பிரச்சார்னி சபாவின் இராமாயண பதிப்பின் அறிமுகத்தில் துளசி தாசரின் வாழ்க்கையைப் பற்றி அறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு விமர்சனத்துக்குரிய முறையில் விவாதிக்கப்பட்டது. அவருடைய மத நிலைப்பாடுகளுக்கும் வட இந்தியாவின் பிரபல மதத்தில் அவருக்கான இடத்தைப் பற்றிய விளக்கங்களுக்கும், ஜூலை 1903 ஆம் ஆண்டின் ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏசியாடிக் சொசைடியில் டாக்டர் கிராய்ர்சன்னின் கட்டுரையைப் பார்க்கவும் பக். 447-466. (சி.ஜெ.எல்) "அயோத்திய காண்ட" த்தின் ஒரு கையெழுத்துப்பிரதி, கவிஞரின் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, அவருடைய பிறப்பிடமான பாண்டாவிலுள்ள ராஜாபூரில் இருக்கிறது. "பால-காண்ட"ங்களில் ஒன்று, சாம்வாட் 1661 ஆம் ஆண்டு தேதியிட்டது, கவிஞர் இறப்பதற்குப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர், மிக கவனமாகத் திருத்தப்பட்டதாக துளசிதாசர் அவர்களாலேயே குற்றம்சாட்டப்பட்டுள்ளது, இது அயோத்தியில் இருக்கிறது. மற்றொரு தற்கையொப்பம் லக்னோ மாவட்டத்தின் மலியாபாத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது, ஆனால் தெரிந்தவரையில் இதுநாள்வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதர பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகள் பெனாரசில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தத்தின் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பு இந்திய சிவில் சர்வீசின் ஃஎப்.எஸ்.கிரோசெ (5வது பதிப்பு, காவன்போர், கான்பூர், 1891) அவர்களால் செய்யப்பட்டது. இந்தி தெரியாத பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு ஸ்ரீ இராமசரிதமானஸ் புரிந்துகொள்வது சற்று சிரமம். இது முக்கியமாக பேச்சுவழக்கு பாங்குகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு மொழி மரபுக்குரியதாகவும், சொல்தொக்கி நிற்பதாலும் அவ்வாறு ஏற்படுகிறது. ஸ்ரீ இராமசரிதமானஸ் கற்க விரும்பும் மாணவருக்கும் இந்தக் கடினங்களே அதனுடைய தனித்தன்மையிலான மதிப்பை உருவாக்குகிறது. திரித்துக்கூறப்பட்ட மற்றும் உருக்குலைந்த வார்த்தைகளை அறிந்துகொள்வதற்கு அது மனதை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் ஒரு வாக்கியம் தலைகீழாக ஆக்கப்பட்டும் அகம்புறமாக மாற்றப்பட்டபோதிலும் அது புரியுமாறு இருக்க கற்றுக்கொடுக்கிறது. ஸ்ரீ இராமசரிதமானசுக்கான ஒரு நல்ல இலக்கண அறிமுகம் எட்வின் க்ரீவ்ஸ் அவர்களால் "நோட்ஸ் ஆன் தி கிராமர் ஆஃப் தி இராமாயன் ஆஃப் துளசி தாஸ்" (1895) என்ற தலைப்பில் எழுதப்பட்டது. ! கருணையுள்ள ஸ்ரீ இராமச்சந்திரனை வந்தனை செய் ஸ்ரீ இராமசந்திரா = ஓ ஸ்ரீ இராமா க்ரிபலு = என்றும் கருணையுடையவன் பஜ்மானா = என்னுடைய மனது (அவனை) வணங்கட்டும் ஹரநா = அழிக்கக்கூடியவன் அல்லது துரத்தக்கூடியவன் பாவபாயா = இந்த உலகத்தின் மீதான பயம் (பாவ்சாகர்) - பிறப்பு மற்றும் மறுபிறப்பு பற்றிய சுழற்சி தருனம் = கொடுமையானது (உலகம்) என்றும் கருணையுடையவரும், நம்முடைய இந்தக் கடும் வாழ்க்கையில் நமக்கிருக்கும் அத்தனை பயங்களையும் அழிக்கக்கூடிய ஸ்ரீ இராமனை நினைத்து தியானம் செய்யவேண்டும் என்று தன் மனதை துளசிதாசர் வேண்டுகிறார். நவ காஞ்சலோசனா = புதிதாய் உருவான/இளம் (நவ) தாமரை (கஞ்ச்) போன்ற கண்களை (லோசனா) உடையவன் [அவன் கொண்டிருக்கிறான்] கஞ்சமுகா = தாமரை(கஞ்ச்) போன்ற அழகிய முகம் (முகா) கரகஞ்சா = தாமரையை (கஞ்ச்) போன்ற மிருதுவான கைகளையுடையவன் பாத கஞ்சருனாம் = அவனுடைய பாதம் (பாதா) சிவந்த (அருஆ) தாமரை (கஞ்ச்) போலிருக்கிறது என்னுடைய கடவுளுக்குப் பெரிய, இளம்/புதிதாய் உருவான தாமரை போன்ற அழகிய கண்கள் இருக்கிறது, அவருடைய கைகளும் கால்களும் தாமரையைப் போல் இருக்கிறது மேலும் அவருடைய முகம் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல் இருக்கிறது. கந்தர்பா = மன்மதன் அகநிதா = எண்ணிக்கையற்ற அமிதா = அளவிடமுடியாத சாவி = முகம்/முகபாவம் நவநிலா = புதியதாய் உருவான (நவ) நீலம் = (நீல்) நீரஜா = தாமரை (நீலத் தாமரை - நீலட்பாலம்) போன்று சுந்தரம் = அழகான பாத பிதா = பீதாம்பரத்தை அணிதல் மானோ டாடீடா = என் மனது (டாடீடா என்றால் என்னவென்று உறுதியாகத் தெரியாது) ருசி சுகிநௌமி = தூய்மையானவனிடம் (சுகி) நான் வணங்குகிறேன் (நௌமி) அவன் ஜனகா சுதா வரம் = ஜனகனின் மகளின் (சுதா) கணவனாவான் (வர்) (சீதா) நீலோட்பலாம் போன்று முகம் கொண்டிருக்கும் என்னுடைய இறைவனின் அழகு எண்ணிக்கையற்ற மன்மதன்களை விஞ்சியிருக்கிறது. நான் மனதார அவனை வணங்குகின்றேன், அவன் பொன்னிற வண்ணமுடைய ஆடைகளை (பீதாம்பர்) அணிகிறான், தன்னுடைய தூய்மையில் மாசுபடாதவன், மேலும் ஸ்ரீ சீதாவின் தேர்ந்தெடுக்கப்பட இறைவனாவான். பஜு = பிரார்த்தனை செய் தீனபந்து = நசுக்கப்பட்ட/ஏழை/அதிகாரமற்ற (தீனா) மக்களின் நண்பன் (பந்து) தின்ஈஷா = சூர்ய வம்சத்தின் வழித்தோன்றல் தானவா தைய்த்ய வம்ஷ நிகாகண்டனம் = அரக்கர்களின் (தானவ் மற்றும் தைய்த்யாஸ்) சந்ததியை (வம்ச) (அவன்) அழித்தான் (நிகாந்தனம்) எளியோரின் நண்பரும பாதுகாவலருமான இறைவனை வழிபடுங்கள், சூரிய வம்சத்தின் சந்ததியான அவன் அரக்கர்களை அழிப்பவன். ரகுநந்தா = ரகுவின் மகன் (குலா) ஆனந்தகன்டா = மகிழ்ச்சி (ஆனந்தா) கடல் (கன்டா) கோஷ்லகன்டா = கோசல வம்சத்தின் அன்புக்குரியவர் (கந்தா) தஷரத நந்தனம் = தசரத அரசரின் மகன் (நந்தனம்) ரகுவம்சத்தின் இந்த தசரத அரசரின் மகன், கோசலர்களின் அன்புக்குரியவர் (அவருடைய தாயார் கௌசல்யாவின் குடும்பம்/வம்சம்) மற்றும் முடிவுறாத பேரின்பத்தின் எல்லையற்ற பெருங்கடல். ஷிர முகுடா = அவருடைய தலையில் (சிர்) ஒரு கீரிடத்துடன் (முகுடா) குண்டலா = தொங்கும் காது வளையங்கள் திலகா = மேலும் அவனுடைய நெற்றியில் ஒரு அழகிய திலகம் சாரூ = (தோற்றம்) அழகிய உதார அங்கா = அவருடைய வல்லமைமிக்க (உதார்) அங்கங்கள் (அங்கா) விபூசனம் = அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அவர் தலையில் கீரீடமும், தொங்கும் காது வளையங்கள் மற்றும் நெற்றியில் ஒரு அழகிய திலகமும் அணிந்திருக்கிறார். அவருடைய வலிமைமிக்க கைகள் காப்புகள் மற்றும் கடகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அஜ்அனுபுஜா = அவனுடைய கைகள் (புஜா) நீளமாக இருக்கிறது (அஜ்அனு) - நபரின் முழங்கால் வரையில் கைகள் நீண்டது என்று நேரடியாகப் பொருள்படும் ஷாராகாபா தாரா = அம்பு (காபா) மற்றும் வில்லை (சாரா) கையாளுதல் (தாரா) சங்க்ராமா ஜிதா காரா துஸாநாம் = காரா மற்றும் துஸாநானை போரில் (சங்க்ராம்) வென்றவர் (ஜீதா) தன் நீண்ட கைகளால் வில் அம்பைக் கையாண்டு, அவன் போரில் காரா துஸானைவை (சூர்ப்பனகை சகோதரர்கள்) தோற்கடித்தார். இடி வடாடி = இவ்வாறு (இடி) சொல்கிறார் (வடாடி) துளசிதாஸ் = கவி துளசிதாசர் ஷங்கரா = இறைவன் சிவன் ஷெஸா முனி = (மற்றும்) இதர (ஷெஸா) முனிவர்கள் மன ரஞ்சனம் = தங்கள் மனங்களை மகிழ்விப்பவர்கள் (ரஞ்சனா) மாமா ஹிரதயா கஞ்சா = என்னுடைய (மாமா) இதயக் (ஹிரதய்) கமலத்தில் (கஞ்ச்) நிவாசாகுரு = தயவுசெய்து வாசம்செய்யவும் (நிவாஸ் குரு) காமாடி கலாதாலா கஞ்சானம் = மோகம் (காமா) மற்றும் இதர இழிவான எண்ணங்களை (காலாதாலா) அழிப்பவனே (கஞ்சானம்) கெண்டை (மீன் குடும்பம்) கெண்டைமீன் ("carp", உயிரியல் பெயர்: "Cyprinidae", பண்டைய கிரேக்க மொழி: κυπρῖνος, கெண்டைமீன் குடும்பம்) தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள், 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும், 180-210சிற்றினங்களும் உள்ளன. இதன் தாயகம் ஐரோப்பாவும், ஆசியாவும் ஆகும். எனினும், உலகின் பலநாடுகளில் பணத்திற்காகவும், நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தவும், அழகுணர்வுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய சூழ்நிலையில் இவை நிலைத்து வாழ்கின்றன. மீன் வளர்ப்பினை நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆகிய மூன்று வகை நீர்களிலும் மேற்கொள்ளலாம். இந்திய நாட்டில் உவர்நீர், கடல்நீர் ஆகிய இரண்டு நீர்வளங்களைப் பயன்படுத்தி, இறால்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. மேலும், நண்டுகளும், இங்கி இறால்களும், சில வகை உவர்நீர் மீன்களும், கடல்நீர் மீன்களும், சிலவகை கடற்பாசிகளும், நுண்பாசிகளும்,மிதவை உயிருணவுகளும் வளர்க்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்திய நாட்டில் ஏறத்தாழ 29,000 கி.மீ நீளத்திற்கு ஆறுகளும், 31,50,000 எக்டர் பரப்பளவு நீர்த்தேக்கங்களும், 2 இலட்சம் எக்டர் பரப்பளவு வெள்ளை நீர் தேங்கும் சமவெளிப்பகுதிகளும், நன்னீர்மீன் வளர்ப்புக்கேற்ற, பொது நீர்வளங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பொதுநீர் வளங்களின் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே உள்ளது. இந்திய மீன் உற்பத்தியில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு, நன்னீர் மீன்வளர்ப்பு மூலமே பெறப்படுகிறது. எனவே இந்திய துணைக்கண்டத்தில் மொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்வளர்ப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு ஏற்ற நன்னீர் மீன்களாக கெண்டை, விரால், கெளுத்தி, நன்னீர் இறால் இனங்கள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களால், நன்னீர் மீன்வளர்ப்பு உற்பத்தியில், 85 விழுக்காட்டிற்கும் அதிகமான உற்பத்தி கெண்டை மீன்கள் மூலமே பெறப்படுகிறது. கெண்டை மீன்வளர்ப்பு இந்திய நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வேளாண் தொழிலாகும். இத்தொழிலிலுள்ள பல அனுகூலங்கள்;- இந்திய அறிவியலாளர் வளர்த்த(1970) இத்திட்டத்தின் படி, பெருங்கெண்டை இனங்கள் ஒவ்வொன்றும், மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்டவை. எனவே, மீன் பண்ணைக் குளங்களில் ஒரு பெருங்கெண்டை இனத்தை மட்டும் தனி இனமாக வளர்க்கும் போது அந்த இனம் அதன் தன்மைக்கேற்ற இயற்கை உணவை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தும். இந்நிலையில் நீரில் உற்பத்தியாகும் பிற இயற்கை உணவு வகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கழிவுகளாகவே போகும். இந்நிலையைத் தவிர்க்க நீரில் இயல்பாகவே உருவாகும் மாறுபட்ட தன்மை கொண்ட பல வகை இயற்கை உணவுக்காக ஒரே இடத்திற்குச் சென்று போட்டியிடாமல், நீர்மட்டத்தில் அவற்றிற்கான இயற்கை உணவு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றின் உணவுத் தேவையை பூர்த்திச் செய்கின்றன. தமிழில் தோப்பா மீன், கங்கைக் கெண்டை என்பர். கங்கை ஆற்றை பூர்வீகமாகக் கொண்ட கட்லா இனம், இந்தியப் பெருங்கெண்டை இனங்களுள் மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டது. பெரிய தலையையும், அகன்ற உடல் அமைப்பையும் கொண்ட இவ்வினம், நீரில் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும். விலங்கின் நுண்ணுயிர் மிதவைகள், பாசிகள், மக்கிய பொருட்களை இம்மீனினம் தின்று வளரும் தன்மை கொண்டது. இதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற வகையில், இதன் வாய் சற்று மேல் நோக்கி அமைந்திருக்கும். அதிக அளவில் அங்கக உரங்கள் சேரும் குளங்களில், இம்மீன் இனம் வேகமாக வளருவதால், பொதுக்குட்டைகளிலும் இம்மீன் வளர்க்கப்படுகிறது. குளங்களில் மிதவை உயிரினங்களால் ஏற்படும் கலங்கல் தன்மையை குறைக்க, இறால்களோடு கட்லா இனம் இணைத்து வளர்க்கப்படுகிறது. (நன்னீரிலும், உவர்நீரிலும் கட்லா இனம், கூட்டு மீன் வளர்ப்பில் 10 – 30 விழுக்காடு அளவிற்கு வளர்க்கப்படுகிறது. குளங்களில் முறையான எண்ணிக்கையில் விட்டு, கட்லா மீன்களை வளர்க்கும் போது, ஓராண்டில் ஒரு மீனின் எடை 1 முதல் 1 ½ கிலோ கிராம் வரை கூடுகிறது. இம்மீன் பொதுவாக இரண்டு வயதிற்கு மேல் இனப்பெருக்கம் செய்யும் திறனைப் பெறுகிறது. கெண்டை மீன் இனங்களுள், ரோகு சுவையில் சிறந்த இனமாகக் கருதப்படுகிறது. இந்த இனத்தின் தலை சிறியதாகவும். வாய் நேராகவும், கீழ் தாடையில் உதட்டில் சுருக்கங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வளர்ந்த மீன்கள் ஓரளவு நீளத்துடன் உருண்ட உடலமைப்புடன் இருக்கும். வளர்ந்த மீன்களின் செதில்களில் சிவப்பு கலந்த நிறம் கொண்டதாக இருக்கும். இம்மீன் இனம் அழுகும் தாவரங்களையும், மிதக்கும் பாசிகளையும், நீரில் திடப் பொருட்களில் படிந்து வளரும் பாசி இனங்களையும் விரும்பி உண்ணும். இது தவிர நாம் அளிக்கும் மேலுணவு வகைகளையும் விரும்பி உண்ணும் தன்மை கொண்டது. இம்மீன் இனத்தை மேலுணவு மட்டுமே அளித்து கூட வளர்க்கலாம். இத்தன்மையால், கெண்டை மீன் வளர்ப்பில் ரோகு இனம் தனி இனமாக பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. ரோகு மீன்களுக்கு விற்பனை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கூட்டு மீன் வளர்ப்பில், மீன்களின் எண்ணிக்கையில் 25 – 50 விழுக்காடு அளவிற்கு ரோகு மீன் இருப்புச் செய்யப்படுகிறது. இம்மீன் இனம் ஓராண்டில் ¾ - 1 கிலோ கிராம் எடை வரை வளருகிறது. நீரின் அடிமட்டத்தில் வாழும் இம்மீன் இனம், அடிமட்டத்திலுள்ள கழிவுகளையும், மட்கும் பொருட்களையும், சேற்றிலுள்ள சிறிய விலங்கினங்களையும் உண்டு வளருகிறது. இதன் வாய் சற்று உள்ளடங்கி கீழ்நோக்கி அமைந்து இருக்கும். இம்மீன் நீண்ட உடலமைப்புடனும், வால் துடிப்பின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் மிர்கால் சுமார ½ - ¾ கிலோ கிராம் எடை வரை வளருகிறது. இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இம்மீனின் உடல் பக்கவாட்டில் தட்டையாகவும், வெள்ளி போன்ற சிறிய பளபளப்பான செதில்களையும் கொண்டிருக்கும். நீரின் மேல்மட்டத்திலுள்ள, தாவர நுண்ணுயிர் மிதவைகள் (phytoplankton) இம்மீனின் முக்கிய உணவாகும். இதற்கேற்ப இம்மீனின் வாய் மேல்நோக்கி அமைந்திருப்பதோடு செவுள் அரும்புகளும் மிகவும் சிறியவையாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். மேலும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகள், அழுகிய தாவரங்கள் போன்றவற்றையும் வெள்ளிக் கெண்டை ஓரளவு உண்ணும். இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1 ½ - 2 கிலோ கிராம் எடை வரை வளரும் இயல்புடையது. இம்மீன் சிறிய தலையையும், நீண்ட உடலையும் கொண்டது. இதன் உடலில் மேல்பகுதி சாம்பல் கலந்த பச்சை நிறத்துடனும், வயிற்றின் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். சீன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புல் கெண்டை மீன் நீரிலுள்ள தாவரங்களையும், புல் இனங்களையும், பாசிகளையும் விரும்பி உண்ணும். இவை தவிர நாம் அளிக்கும் காய்கறிக் கழிவுகள், மரவள்ளி இலைகள், வாழை இலைகள், மேலுணவு போன்றவற்றையும் விரும்பி உண்ணும். இதன் உணவுப் பழக்கத்தால், இம்மீன் இனம் நீர் நிலைகளில் அபரிதமாக வளருகிற நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஓராண்டு வளர்ப்பு காலத்தில் சராசரியாக சுமார் 1 - 1 ½ கிலோ எடை வரை வளருகிறது. இம்மீன் இனம் நுகர்வோர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. சாதாக் கெண்டையில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றுள் "கண்ணாடிக் கெண்டை" சமவெளிப்பகுதிகளில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இம்மீன் தாய்லாந்திலுள்ள பாங்காக்கிலிருந்து, இந்திய நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. சாதாக் கெண்டை உருண்டு திரண்டு அடிவரையும் வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்ட பெரிய செதில்களையும், பருமனான வாய் அமைப்பையும் கொண்டிருக்கும். இம்மீன் குளத்திலுள்ள தாவரங்கள் அடிமட்டத்திலுள்ள கழிவுகள், புழுப்பூச்சிகள், சாணம் போன்றவற்றை விரும்பி உண்ணும் அனைத்துண்ணியாகும். சாதாக் கெண்டை ஒரே ஆண்டில் 1 - 1 ½ கிலோ எடை வரை வளரும் திறனுடையது. இருப்பினும் இதன் வயிறு பெருத்து குடல் பகுதி அதிகமாகக் காணப்படுவதால் இதன் விற்பனை விலை பெரும்பாலும் குறைந்து விடுகிறது. தவிர இம்மீன் உணவைத் தேடி, குளக்கரைகளை சதா குடைந்து சேதப்படுத்துவதால், சில இடங்களில் இம்மீன் விரும்பி வளர்க்கப்படுவதில்லை. இனவிருத்தி/முதிர்ச்சி பெற்ற மீன்கள், தூண்டுதல் இல்லாமல் தாமாகவே குளத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. உணவுக்காக அல்லாமல், அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களில் இரண்டு மீன் இனங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவை, 1) தங்கமீன் - "Carassius auratus auratus" 2) கோய் ('錦鯉' - 'nishikigoi') - "Cyprinus carpio carpio" பின்வரும் காரணிகளால், இவை அதிகம் பேணப்படுகின்றன. சிதறால் மலைக் கோவில் சிதறால் சமணக் கோயில் (Chitharal Jain Monuments), இதனை உள்ளூர் மக்கள் "சிதறால் குகைக் கோயில்" என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர். இச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சியில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது. நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும். இக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது. இக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது. இக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது. கிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. முன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது. தற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. 2013 ஆண்டு 2013 (MMXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும். [[File:Nelson_Mandela-2008_(edit).jpg|thumb|100px|[[நெல்சன் மண்டேலா]]]] [[பகுப்பு:2013| ]] பெல்சர் குடா பெல்சர் குடா (Belcher Bay) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவின் வடமேற்கு கரையோரம் கென்னடி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடாவாகும். கவுசவே குடா கவுசவே குடா (Causeway Bay) என்பது ஹொங்கொங்கில் வளர்ச்சி மிக்க ஒரு பகுதியாகும். எண்ணற்ற உயர் கட்டடங்களையும், வானளாவிகள் பலவற்றையும் கொண்ட பகுதியாகும். இப்பகுதி ஹொங்கொங் தீவின் வடக்கு கடலோரம் வஞ்சாய் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டம் பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த பகுதியின் நிலங்களின் குத்தகை விலை உலகில் அதிகமான விலைக்கொண்ட பகுதிகளான லண்டனில் உள்ள சுலோன் வீதி மற்றும் நியூ யோர்க் நகரில் உள்ள ஐந்தாம் ஒழுங்கை போன்ற இடங்களின் குத்தகை விலைக்கு சமமானதாகும். இந்த கவுசவே குடா எனும் பெயர், கவுசவே குடா நகரின் பெயராகவே உள்ளது. இந்த கவுசவே குடா நகர் பகுதி விக்டோரியா பூங்கா, ஹொங்கொங் அரச படகுக் கூடலகம் உட்பட பல சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் இரவு பகல் வேறுப்பாடு இல்லாமல் 24 மணித்தியாளமும் சனநெருக்கம் காணப்படும் ஒரு பகுதியாகும். இப்பகுதிகளில் உள்ள உணவகங்கள், உல்லாச ஊடலங்கள், கூடலங்கல் இரவு பகலாக திறந்தே இருப்பவைகளாகும். இரவு நேரங்களில் பன்னாட்டு பாலியல் பணிப்பெண்களும் உலாவும் ஒரு பகுதியாகும். எண்ணற்ற உல்லாசகங்களும் இப்பகுதியில் உள்ளன. 2014 2014 ஆம் ஆண்டு (MMXIV) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இது கிபி 2014 என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 14ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 14ஆம் ஆண்டும், 2010களின் ஐந்தாம் ஆண்டும் ஆகும். ஐக்கிய நாடுகள் அவை 2014 ஆம் ஆண்டை குடும்ப வேளாண்மை மற்றும் படிகவியல் ஆண்டாக அறிவித்தது. 2017 2017 ஆம் ஆண்டு (MMXVII) ஆனது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2017ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 17ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 17ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் எட்டாம் ஆண்டாகவும் இருக்கும். 2018 2018 ஆம் ஆண்டு ஆனது (MMXVIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி திங்கள் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஒன்பதாம் ஆண்டாகவும் இருக்கும். 2019 2019 ஆம் ஆண்டு (MMXIX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி செவ்வாய்க் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2019ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 19ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 19ஆவது ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2010களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும். 2020 2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும். இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும். அல்டிரிச் குடா அல்டிரிச் குடா (Aldrich Bay) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவில் வடக்கு கடலோரம் அமைந்திருந்த ஒரு முன்னாள் குடாவாகும். இக்குடா தற்போது ஹொங்கொங் வரைப்படத்தில் மறைந்துவிட்ட ஒரு குடாவாகும். ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் பரப்பை நிரப்பி புதிய நகரமயமாக்கல் திட்டத்திற்கு அமைய, இந்த குடாப் பகுதியில் தற்போது பல குடியிருப்புத் தொகுதிகள், பாடசாலைகள், நகரங்கள் என மாறிவிட்டது. இந்த குடா பகுதி தற்போது ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தின் ஒரு நிலப்பரப்பாகும். சய் வான் சயி வான் (Chai Wan) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவின் கடைசி முனைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் சவ் கெய் வான் நகரத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த நகரம் ஒரு முன்னாள் குடாப்பகுதியை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணப் பணிகளினால் விரிவடைந்ததாகும். இந்த நகரம் ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2001ம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் தொகை 186,505 ஆகும். இந்த சய் வான் நகரின் தெற்கில் இயற்கை மலைத்தொடர்கள் கூடிய செக் ஓ தேசியப் பூங்கா உள்ளது. இன்று சயி வான் நகரம் முன்னாள் ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. 1845களில் பிரித்தானியரின் கைப்பற்றலின் பின்னர், பிரித்தானிய இராணுவத்தினரால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றும் சியு சாய் வான் எனும் இடத்தில் முகாம் ஒன்றும் 1980 வரையிலும் இருந்தன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டங்களினால் அப்பகுதி மக்கள் நெரிசலான நகராக மாற்றம் பெற்றது. 1952களின் ஹொங்கொங் அரசாங்கம் வருமானம் குறைந்தோருக்கான வசிப்பிடத் தொகுதிகளை, இந்த சய் வான் கிராமங்களில் கட்டத்தொடங்கியது. தற்போது இந்த நகர் நூற்றுக்கணக்கான வானளாவிகள், வானுயர் குடியிருப்புத் தொகுதிகள் என வளர்ச்சியுடன் காணப்படுகின்றது. அத்துடன் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை உட்படப் பல பேருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்நகரம் கொண்டுள்ளது. பல பொதுப் போக்குவரத்துப் பாதைகளும், அதிவிரைவுப் பாதைகளும் இன்று இந்த நகரூடாகச் செல்கின்றன. சய் வான் பூங்கா எனும் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது. செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் சங்ககால மன்னர்களில் ஒருவன். நன்னன் என்னும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு, பல்வேறு காவல்மர அடையாளங்களைக் கொண்டு பல்வேறு காலங்களில் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்களில் இந்த நன்னன் ஒருவன். செங்கண்மா என்பது ஓர் ஊர். இங்கிருந்த வள்ளல் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன். இவன் மலைபடுகடாம் என்னும் நூலில் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன் என்பவரால் பாராட்டப் பட்டவன். தூதரகங்களின் பட்டியல், ஜோர்டான் இது ஜோர்தான் நாட்டு தூதரகங்களின் பட்டியல்: தூதரகங்களின் பட்டியல், பூட்டான் இது பூட்டான் நாட்டு தூதரகங்களின் பட்டியல்: தோப்புத்துறை தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களில் தோப்புத்துறை ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் தோப்புத்துறை பகுதி அவர்களின் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளி என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாகவே விளைநிலங்களில் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோணி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள். வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களில் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருக்களின் அகலம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிடக் கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமீய பெரிய பள்ளி மற்றும் அடக்கத்தலமும் ஊர் தெருகளின் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது. அறிமுகம்: தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழக்கூடிய ஊர்களில் தோப்புத்துறையும் ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிழக்கு கடற்க்கரையோரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது தோப்புத்துறை. வேளாங்கண்ணியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் வேதாரண்யத்திலிருந்து முன்று கிலோமீட்டருக்கு முன் வங்க கடலிருந்து இரண்டு கிலோமீட்டர் மேற்கே அமைத்திருக்கும் தோப்புத்துறையில் முஸ்லீம்களோடு இந்துக்களும், தலித்துகளும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவது இவ்வூரின் பெருமைகளில் ஒன்றாகும். தென்னை, மா, முந்திரி, சவுக்கு, பனை என தோப்புகள் நிறைந்திருப்பது ஊரின் பெயருக்கேற்ற சிறப்பாகும். தோப்புத்துறையை சுற்றியிருக்கும் தேத்தாகுடி, பெரியகுத்தகை, புஷ்பவனம் போன்ற கிராமங்கள் தோப்புத்துறையின் இயற்கை அழகுக்கு அழகு சேர்ப்பவை. இப்பகுதிகள் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். நேரான வீதிகள், அழகான வீடுகள், சுவையான நிலத்தடி நீர், சுகாதாரமான சூழல் ஆகியன தோப்புத்துறையின் எழிலுக்கு எழில் சேர்ப்பவை. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை போன்ற ஊர்களின் வழியாக தோப்புத்துறைக்கு வருகை தரமுடியும். தோப்புத்துறைக்குள் நுழையும்போதே பசுமைபோர்த்திய மரங்கள் அடர்ந்த இயற்கை சுழலை காணமுடியும். இது கடல்சார்ந்த பகுதி என்பதால் ஒரு நெய்தல் நிலமாக இருக்கிறது. இஸ்லாத்தின் வருகை: சோழ மன்னர்களின் ஆட்சிக்கு முன்பே இஸ்லாம இவ்வூருக்கு அறிமுகமாகியிருக்கிறது. தோப்புத்துறையில் புகழ்பெற்ற துறைமுகம் ஒன்று இயங்கியிருக்கிறது. அதுவே இம்மண்னுக்கு இஸ்லாத்தையும் இறக்குமதி செய்திருக்கிறது! இஸ்லாம் அராபிய வணிகர்களின் வழியாக கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு அறிமுகமானது. இஸ்லாத்தை முதலில் தழுவியவர்கள் தென்னிந்தியர்கள்தான். கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் பல இஸ்லாமிய பிரச்சாரர்களும், அரபு வணிகர்களும் தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வருகை தந்தார்கள். இஸ்லாமிய பிரச்சாரர்களின் கண்ணியமான அணுகுமுறைகளலும், அரபு வணிகர்களின் நேர்மையாலும் இம்மக்கள் கவரப்பட்டார்கள். அதன் வழியாக அருகாமை ஊர்களான காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் இதே காலகட்டத்தில்தான் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளும் இஸ்லாம் தழுவியது. தோப்புத்துறையில் பிள்ளைமார் சமுதாய மக்கள் நிறைந்து வாழ்ந்த நிலையில், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இவ்வூர் மக்களும் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள். கலீபா அபூபக்கர் (ரலி) காலத்திலிருந்தே இங்கு வருகை தந்த அரபு வணிகர்களுடன் திருமண தொடர்புகளும் நிகழ்ந்ததாக சொல்லபடுகிறது.பல இஸ்லாமிய பிரச்சாரர்கள் இங்கு வருகை தந்து இம்மண்ணிலேயே மரணித்தார்கள். மக்கள் அவர்களை இறைநேசர்கள் என போற்றினர். தோப்புத்துரையின் சிறப்புகள்: தோப்புதுரையின் பழைய பெயர் சேதுமாதவபுரமாகும். பொதுவாக இங்கிருந்து கீழக்கரை வரை நீண்டுக் கிடக்கும் கடற்கரை பகுதிக்கு ‘சேது’ என்ற பெயர் இயல்பான அறிமுகமாகும். சேது சமுத்திரத்திட்டம் தோப்புதுறைக்கு அருகிலிருக்கும் கோடியக்கரையிலிருந்துதான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தோப்புதுறைக்கு அருகிலிருக்கும் முக்கிய ஊர் வேதாரண்யமாகும். தோப்புத்துறையிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாத்தலமான கோடியக்கரை காடுகள் உள்ளது. இதன்கடற்பகுதியில் தான் பாக் நீதரிணை உள்ளது. இப்பகுதி இந்திய வரைபடத்தில் point calimare என்று குறிப்பிடப்படுகிறது . இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து இங்குதான் கடலோர காடுகள் உள்ளது. இங்கு மான்கள், காட்டுக்குதிரைகள்,நரிகள், ஓநாய்கள் போன்ற விலங்கினங்கள் வாழ்கின்றன. இங்கு ஒரு பறவைகள் சரணாலயமும் உண்டு. நவம்பர், டிசம்பர், மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வருகை தருகின்றன. தோப்புதுறைக்கு அருகில் கோடியக்கரை, கரியாப்பட்டினம், சரவக்கட்டளை, நாலுவேதபதி, புஷ்பவனம், தலைஞாயிறு, தாதன்திருவாசல், துளசியாபட்டினம் போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சற்று தூரத்தில் நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், திருப்பூண்டி, கட்டிமேடு, நாச்சிக்குளம் போன்ற முஸ்லிம்கள் வாழும் ஊர்கள் உள்ளன. இப்பகுதிகளோடு தோப்புதுறைவாசிகள் திருமணத் தொடர்புகள் கொண்டுள்ளனர். பிற சமுதாய உறவுகள்: தோப்புத்துறையில் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த இந்துக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். தலித்துகள் ஒரு பகுதியில் வாழ்கிறார்கள். சுற்றிலும் உள்ள ஊர்களில் தெற்கே தேவர்கள், வடக்கே வன்னியர்கள், மேற்கே யாதவர்கள், வட கிழக்கே நாயுடுகள், கிழக்கே மீனவர்கள், என பல்வேறு சமுதாய மக்களும் வாழ்கிறார்கள். அவர்கள் வழிபடும் ஏராளமான கோயில்கள் உள்ளன. முஸ்லிம்கள் இம்மக்களோடு மிகுந்த தோழமையோடு வாழ்கிறார்கள். திருமணம், புதுமனை புகுவிழா, விருந்துகள் என அனைத்திலும் ஒருவருக்குகொருவர் பங்கேற்று சமுக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். அயலகத் தொடர்பு: கூப்பிடும் தூரத்தில் இலங்கை தீவு அமைந்துள்ளது. நவீன இயந்திரபடகின் மூலம் ½ மணி நேரத்தில் இலங்கைக்கு சென்றுவிடலாம். அக்காலத்தில் இலங்கைக்கு சென்று இவ்வூர்மக்கள் பெரும் வியாபாரிகளாக திகழ்ந்துள்ளர்கள். யாழ்ப்பாணம், கொழும்பு என இவர்களது பயணம் அமைந்திருக்கிறது. 1930 க்கு பிறகு சிங்கப்பூர் மலேசியாவை நோக்கி பலர் புறப்பட்டார்கள் கடின உழைப்பாளிகலான இவர்கள் விரைவிலேயே செல்வந்தர்கள் ஆனார்கள். பல பெரிய மாடிவீடுகள் உருவாகின.1980க்கு பிறகு பலர் தங்கள் குடும்பத்தினரை அங்கு அழைத்துச்சென்றனர் அதன் விளைவாக இன்று 200க்கும் மேற்பட்ட தோப்புத்துறை குடும்பங்கள் சிங்கப்பூரில் வசிக்கின்றன. அங்கு தோப்புத்துறை முஸ்லிம் சங்கமும் செயல்படுகிறது. சிங்கப்பூர் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 14 சங்கங்களில் இதுவும் ஒன்று. அங்கு உணவகம், மளிகை, கண்ணாடி உள்ளிட்ட துறைகளில் சிறந்த வணிகர்களாக திகழ்கிறார்கள். 1980கள் வரை நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக பினாங்கு மற்றும் சிங்கப்பூருக்கு கப்பல் வழிப்பயணம் தான் இவர்களுக்கு பயண்பட்டிருக்கிறது சிங்கையின் அரசுபணிகளிளும், தனியார் நிறுவனங்களிலும் திறன்மிகு ஊழியர்களாக தோப்புத்துறைவாசிகள் திகழ்கிறார்கள். மலேசியாவிலும் தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் பலதுறைகளிலும் பங்களிப்பு செய்கிறார்கள். 1980 களுக்கு பிற்கு அரபுநாடுகளை நோக்கி புதிய தலைமுறை சென்றது. அது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பெரும்பாலோர் வசிக்கிறார்கள். அங்கும் சிறந்த வணிகர்களாகவும், தொழிலாளர்களாகவும் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளகவும், ஊழியர்களாகவும் உள்ளனர். சிலர் சாதாரண பணியாளர்களாகவும் உள்ளனர். இங்கு தோப்புத்துறை-துபை முஸ்லிம் சங்கம் செயல்படுகிறது. சவுதி, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட பிற நாடுகளிலும் கணிசமானோர் வசிக்கிறார்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய என பயணங்கள் மாறும் சூழலும் உள்ளது. தொடரும்... சவ் கெய் வான் சவ் கெய் வான் (Shau Kei Wan) அல்லது சவ்கெய்வான் என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சய் வான் நகருக்கு அன்மையில் உள்ள ஒரு நகராகும். இன்று ஹொங்கொங்கில் மக்கள் அடர்த்திமிக்க நகரங்களில் இதுவும் ஒன்றாகும். சவ் கெய் வான் நகரப் பகுதி 18ம் நூற்றாண்டுகளின் உள்ளூர் மீனவர்கள், ஹொங்கொங்கில் அடிக்கடி வீசும் தைப்பூன் சூறாவளி காற்றின் போது பாதுகாப்பாக இருக்ககூடிய இடமென கண்டுப்பிடிக்கப்பட்டு படிப்படியாக குடியேறத்தொடங்கியுள்ளனர். 1841 ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றிய காலப்பகுதியின் கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 200 பேர் மட்டுமே இருந்துள்ளனர். கடலோரங்களில் மீனவக் குடில்களும், மீன்ப்பிடி படகுகளும் மட்டுமே அப்போது காணப்பட்டுள்ளன. 1860களில் கடற்கொள்ளையர்களால் இப்பகுதி தாக்குதல்களுக்கும் உள்ளானது. அப்போதைய ஆளுநரான ரிட்சட் கிரேவ் மெக்டொனெல் என்பவரால் அத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறை காப்பகம் ஒன்றையும் நிறுவி கடல் கொள்ளையருக்கு எதிரான சிறந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அப்பகுதி பாதுகாப்பான பகுதியாக மாற்றம் பெறத்தொடங்கியது. 1911ல் சவ் கெய் வான் பகுதியின் மக்கள் தொகை 7,000 ஆக அதிகரித்தது. 1920களில் இப்பகுதி ஒரு தொழில் பேட்டையாக மாற்றம் பெற்றது. முதல் தொழிற்சாலையாக மின்விளக்கு உற்பத்தி நிலையம் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மீன்வணிகத்துறையாக வளர்ச்சிப் பெற்றது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் சீன பெருநிலப்பரப்பில் இருந்து பெருந்திரளான மக்கள் அதிகளாக ஹொங்கொங்கில் வந்து குவிந்த மக்களில், குறிப்பிட்டத் தொகையானோர் இந்த சவ் கெய் வான் பகுதியிலும் வந்து குவிந்தனர். இந்த அகதிகளின் வருகையானது சவ் கெய் வான் மலையடிவாரத்தில் 13 மலைக்கிராமங்களை தோற்றுவித்தது. அந்த கிராமங்களில் அதிகமானவை சேரிகளாகவும், சேரி வீடுகளாகவுமே இருந்தன. அம்மக்களின் உடல்நலக் கேடுகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டன. 1960களில் ஹொங்கொங் அரசாங்கம் மீண்டும் ஒரு மீள்திட்டமிடலை இந்த நிலப்பரப்பில் ஏற்படுத்தி, பொது மக்களுக்கான வசிப்பிடத் தொகுதிகளையும் கட்டத்தொடங்கியது. இத்திட்டங்கள் 1983கள் வரை தொடர்ந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட ஒரு பாரிய தீயணர்த்தம் அப்பகுதியில் உள்ள கடலோரச் சேரி வீடுகளை எல்லாம் தீக்கிரையாக்கியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சேரி வீடுகளையெல்லாம் அரசாங்கம் புல்டோசர் போட்டு தரைமட்டமாக்கியதுடன், புதிய வசதிகளுடன் கூடிய மக்கள் வசிப்பிடத் தொகுதிகளை கட்டியது. இன்று சவ் கெய் வான் பகுதி மக்கள் தொகை அதிகமான பகுதிகளில் ஒன்றாகியது. 19ம் நூற்றாண்டில் இந்த சவ் கெய் வான் கடலோரப் பகுதி மிகவும் சிறப்பான ஒரு மக்கள் வசிப்பிடப் பகுதியாக மாற்றம் பெற்றது. விக்கிநூல்கள் விக்கிநூல்கள் எனும் இணைய தளமானது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் ஒன்றாகும். இது கட்டற்ற பாடநூல்களையும் உரைநூல் தொகுப்புகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கவோ தொகுக்கவோ வழிவகை செய்யும் ஒரு விக்கி வகையைச் சேர்ந்த தளமாகும். இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பலமொழிகளில் செயல்பட்டு வருகிறது. இத்தளமானது தமிழ் விக்கிமீடியா திட்டங்களுள் ஒன்றாகும். தற்போது தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான் நூல்களும் கணினியியல் துறைசார் நூல்களும் தொகுப்பில் உள்ளன. எதிரொலி ஒலிமுதல் ஒன்றிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒலி குறுகிய நேரத்தில் மீண்டும் மீண்டும் கேட்கும் தோற்றப்பாடு எதிரொலி (Echo) எனப்படும். ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. துப்ருக் முற்றுகை துப்ருக் முற்றுகை (டொப்ருக் முற்றுகை, "Siege of Tobruk") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையிலான இத்தாலிய-ஜெர்மானியப் படைகள் டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றன. 1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்புடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகள் தொடங்கின. இதற்கு நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி நாசி ஜெர்மனியின் உதவியை நாடியது. பெப்ரவரி 1941ல் ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையில் இத்தாலியின் உதவிக்காக வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பப்பட்டது. வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. துப்ருக்கை ஜனவரி மாதம் இத்தாலியிடமிருந்து நேச நாட்டுப் படைகள் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுக்காக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை தவிர வேறு சில பிரித்தானிய இந்தியப் படைப்பிரிவுகளும் டோபுருக்கில் இருந்தன. ஆக மொத்தம் 36,000 நேச நாட்டுப் படை வீரர்கள் டோபுருக்கில் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன. முற்றுகை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே துப்ருக்கைக் கைப்பற்ற முதல் பெரும் தாக்குதலை நடத்தினார் ரோம்மல். ஏப்ரல் 11ம் தேதி எல் ஆடெம் சாலை வழியாக நடைபெற்ற இத்தாக்குதலை நேச நாட்டுப்படைகள் முறியடித்துவிட்டன. முதல் தாக்குதல் தோற்றபின்னரும் அடுத்த சில வாரங்களில் வேறு திசைகளில் இருந்து துப்ருக்கைத் தாக்கிய ரோம்மல் அவற்றிலும் தோல்வியை சந்தித்தார். ஆரம்ப கட்ட தாக்குதல்களுக்குக்குப் பின்னர் இரு தரப்பினரும் ஒரு நீண்ட முற்றுகைக்குத் தயாராகினர். பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் டோபுருக்கை விடுவிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. மே மாதம் தொடங்கப்பட்ட பிரீவிட்டி நடவடிக்கையும் ஜூனில் நிகழ்ந்த பேட்டில்ஆக்சு நடவடிக்கையும் தோல்வியடைந்தன. நவம்பரில் நடத்தப்பட்ட குரூசேடர் நடவடிக்கை வெற்றி பெற்று, டோபுருக்கை முற்றுகையிட்டிருந்த ரோம்மலின் படைகள் விரட்டப்பட்டன. நவம்பர் 18ம் தேதி 240 நாட்கள் நீடித்திருந்த டோபுருக் முற்றுகை முடிவு பெற்றது. செங்கண்மா செங்கண்மா என்பது ஓர் ஊர். இங்கிருந்த வள்ளல் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன். இவன் மலைபடுகடாம் என்னும் நூலில் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன் என்பவரால் பாராட்டப் பட்டவன். செங்கண்மா என்னும் ஊரின் இருப்பிடம் பற்றி இருவேறு கருத்துகள் நிலவிவருகின்றன. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நகரம் செங்கம். இதுதான் சங்ககாலத்து நன்னன் (மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்) இருந்த ஊர் என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள சிய்யாறம் என்னும் ஊரே சேயாறு என்னும் பெரியாறு பாயும் செங்கண்மா என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். மலைபடு கடாம் ஆரிப் படுகர் அளிக்கும் விருந்தைக் குறிப்பிடுகிறது. ஆற்றுப் படுகைகளில் வாழ்பவர் படுகர் எனப்பட்டனர். இவர்கள் நீலகிரி மலையில் வாழ்ந்த சங்ககாலப் படுகர் எனக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலும், மலைபடுகடாம் நூலில் கூறப்படும் மலையேறும் வழி பற்றிய குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு சிய்யாறம் என்னும் ஊரே செங்கண்மா என்பர். 1 பத்துப்பாட்டு ஆராய்ச்சி, டாக்டர். மா. இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு. 2 பத்துப்பாட்டு செய்தி உரை, பொதுவன் ஆடிகள், (2009) நுரையீரல்மீன் நுரையீரல்மீன் (lungfish) நன்னீரில் வாழுகின்ற மீன் வகையாகும். எலும்புமீன்கள் (Osteichthyes) வகையின் நீருக்கு வெளியே சுவாசித்தல் போன்ற தோற்றநிலை சிறப்பியல்புகளையும், தசையாலான துடுப்பு (Sarcopterygii) கொண்டுள்ள மீன் வகையின் அமைப்புகளை ஒத்த சோணைத் துடுப்பையும் சிறப்பாக விருத்தியடைந்த அகவன்கூட்டையும் கொண்டது. இன்றைய காலப்பகுதியில் நுரையீரல்மீன்கள் ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அவுத்திரேலியா போன்ற பகுதிகளில் மட்டுமே வசிக்கின்றன. உயிரினத்தொகுதியின் குழுக்கள் அவைகளுக்கிடையே ஏற்பட்ட நிலவியல் வேறுபாட்டால் (மலை, நீர் தோன்றுதல்) வெவ்வேறு இடங்களுக்குப் பிரிக்கப்பட்டதால் மெசொசொயிக் காலத்து மீபெரும்கண்டமான கோண்டுவானாவில் மட்டுமே இவை பரவிக் காணப்பட்டன என அறியப்படுகின்றது. இது வாழும் நீர்நிலையில் நீர் வற்றிவிட்டால் மண்ணைத் தோண்டிக்கொண்டு உள்ளே சென்று வசிக்கும்; இந்த மீனால் மண்ணுக்குள் நான்கு ஆண்டு காலம் உறங்குநிலையில் உயிர்வாழ முடியும். தசையாலான துடுப்பு கொண்டுள்ள மீன் வகையில் இருந்தே நான்குகால் உயிரினங்கள் கூர்ப்படைந்தன என்று நம்பப்படுகின்றது. எல்லா வகை நுரையீரல் மீன்களும் தொடர்ச்சியான கசியிழையத்திலான முதுகுநாண்களுடன் நன்கு விருத்தியடைந்த அண்ணப் பல்வரிசைகளையும் கொண்டிருக்கும். நுரையீரல் மீன் ஒரு ஊனுண்ணியாகும். அடிப்படையான நுரையீரல்மீன் ஓரப்பற்களையும் எலும்பாலான மூளைக்கவசத்தையும் கொண்டிருக்கையில் பரிணாம வளர்ச்சியடைந்த தற்போதைய நுரையீரல் மீனில் ஓரத்து எலும்புகள் குறைவடைந்தும் மூளைக்கவசம் கசியிழையத்தாலும் ஆக்கப்பட்டிருக்கும். இனப்பெருக்கக் காலத்தின்போது தென் அமெரிக்க நுரையீரல் மீனில் ஒரு சோடி இறகுபோன்ற நீட்டங்கள் உருவாகும். இவை முட்டைகளைச் சுற்றி வாயுப்பரிமாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது என நம்பப்படுகின்றது. எல்லா நுரையீரல் மீன்களும் இரண்டு நுரையீரலைக் கொண்டிருக்கும், ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் இதற்கு விதிவிலக்கு, அவற்றில் ஒரு நுரையீரலே காணப்படும். நுரையீரல் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். நாற்காலி விலங்குகளின் நுரையீரலும் நுரையீரல்மீனின் நுரையீரலும் ஒத்தமைப்பு கொண்டதாக இருக்கின்றது. . வாழுகின்ற நுரையீரல் மீன்களுள் ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் மட்டுமே செதிலைப் (gill) பயன்படுத்திச் சுவாசிக்கும். ஏனையவற்றில் செதில் உருவச்செயலிழப்பு அடைந்திருக்கும், இது போதுமான வாயுப்பரிமாற்றத்துக்கு ஏற்றதாக இராது. செதிலைப் பயன்படுத்தி நீருக்குள் வாயுப்பரிமாற்றம் நிகழும்போது சாதாரண மீன்களைப்போலவே ஒட்சிசனை உள்ளெடுக்கின்றது. நீருக்கு வெளியே தனது வாயைப் பயன்படுத்திக் காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றது. ஆபிரிக்க தென் அமெரிக்க நுரையீரல் மீன்கள் பருவகாலத்துக்கு ஏற்ப தம்மைக் காத்துக் கொள்ளும் திறன் உடையவை. பருவகால மாற்றத்தின் போது, நன்னீர்த் தேக்கங்கள் வற்றும் போது இவை சேற்றுள் சென்றுவிடும், பின்னர் உலர்ந்த காலம் முழுவதும் வளை தோண்டி மண்ணுக்குள் வசிக்கும். நான்கு வருடங்கள் இவ்வாறு உறக்கநிலையில் வசிக்கும் வல்லமை கொண்டது. இதன்போது நுரையீரல் மீனுடைய உடற்செயலியலில் மாற்றம் ஏற்படுகின்றது; இதன் வளர்சிதைமாற்ற வீதம் அறுபதில் ஒன்றாகக் குறைகின்றது, புரதக் கழிவுப்பொருட்கள் அமோனியாவில் இருந்து குறைந்த நச்சுத்தன்மை கொண்ட யூரியாவாக மாற்றப்படுகின்றது. (நீரில் இது நேரடியாக அமோனியாவையே கழிவுப்பொருளாக வெளியேற்றும்) இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் நீலகிரி மலையிலுள்ள குன்னூர் சங்ககாலத்தில் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனப்பட்டது. சங்ககாலத்தில் இவ்வூரில் வாழ்ந்த புலவர் பெருங்கௌசிகனார். இவர் பாடிய நூல் மலைபடுகடாம். பெருங்குன்றூர் என்பது ஊரின் பெயர். முட்டு என்னும் சொல் மலைமுகட்டைக் குறிக்கும் சொல்லாக இக்காலத்திலும் வழக்கத்தில் உள்ளது. இரணியம் என்பது இருள்படர்ந்த பனிமூட்டத்தைக் குறிக்கும். இருள்+ந்+இ+அம் = இருணியம் < இரணியம் என மருவுதல் தமிழ் இலக்கண-நெறி. நீல நிறத்தை இருள்நிறமாகக் கொள்வது தொன்றுதொட்டு இருந்துவரும் மரபு. இருள்நிறம் என்பது கருநிறம். இருள்நிறக் கண்ணனை நீலமேனி நெடியோன் என்கிறோம். இவற்றையெல்லாம் ஒப்பிட்டு எண்ணும்போது இருள்நிற முட்டம் சங்ககாலத்தில் இரணியமுட்டம் என மருவியதையும், இருள்நிறம் நீலநிறம் எனக் கொண்ட வகையில் நீலமலை என வழங்கப்பட்டதையும், நீலமலை என்னும் தமிழ்ச்சொற்றொடர் வடமொழித் தாக்கத்தால் நீலகிரி ஆனதையும், எளிதாக, இலக்கண மரபுப்படி கண்டறிய முடிகிறது. குன்றூர் என்னும் இலக்கியச் சொல் குன்னூர் என்று பேச்சு வழக்கில் திரிபது இயல்பு. குன்னூர்க் குன்றம் தமிழ்நாட்டிலுள்ள குன்றங்களில் பெரிதாகையால் 'பெருங்குன்றூர்' எனப்பட்டது. உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 5 உள்ளன.அவை: இவற்றில் இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பிட்டங்கொற்றன் ஆகியோரைப் பாடியுள்ளார். உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 6 இடம்பெற்றுள்ளன. அவை: அவற்றில் இவர் சேட்சென்னி நலங்கிள்ளி, சோழன் நலங்கிள்ளி ஆகிய சோழ மன்னர்களைப் பாடியுள்ளார். நபிமொழிக் குறள் நபிமொழிக் குறள் என்பது திருக்குறள் வடிவில் நபிகள் பெருமானார் நல்லுரைகளைக் கூறும் நூல் ஆகும். இதில் 2000 குறள்கள் உள்ளன. இதை காரை இறையடியான் இயற்றினார். ஐயூர் முடவனார் ஐயூர் முடவனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய 10 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, செல்லிக் கோமான் ஆதன் எழினி, தாமான் தோன்றிக்கோன், கோசர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இவரது பாடலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல்களில் இரண்டு மட்டும் உள்ளன. அவை: அகநானூறு 14, புறநானூறு 248 ஆகியவை. பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன் தலைவியின் துயர நிலையை வெளிப்படுத்துகிறான். காயாம் பூக்கள் நீல நிறத்தில் உதிர்ந்து கிடக்கும் முல்லை நிலத்தில் சிவப்பு நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. மேய்ந்துகொண்டிருக்கும் ஆண்மான் பெண்மானைத் தழுவிக்கொண்டு விளையாடுகிறது. ஆனிரைகள் இல்லம் திரும்பும் மாலை வேளை இது. இந்த வேளையில் பிரிந்திருக்கும் என் காதலர் என்னைப்பற்றி நினைப்பாரா என்று தலைவி தன்னிடம் வினவியதாகப் பாணன் தலைவனிடம் தெரிவிக்கிறான். பாணன் கூறியது கேட்ட தலைவன் தலைவியிடம் வந்து சேர்கிறான். தாபத நிலையை விளக்குகையில் கணவனை இழந்து கைம்மை நோன்பிருக்கும் ஒருத்தி ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாகவும், அதுவும் அல்லி இலையில் உணவை வைத்து உண்பதாகவும் இவர் குறிப்பிடுகிறார். இந்தக் கைமைக் கோலத்துப் பெண் இவளது இளமைக் காலத்தில் இவள் அணியும் தழையாடையில் கோக்கப்பட்டு அழகுடன் திகழ்ந்த இந்த இந்த அல்லி இலை இப்போது உணவு உண்டபின் தூக்கி எறியும் எச்சில் இலையாக மாறிவிட்டதே என்று புலவர் கலங்குகிறார். ஒக்கூர் பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் எனும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார் ஆகியோர் இவ்வூரில் வாழ்ந்த சங்க காலப் புலவர்கள் ஆவர். இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், புறநானுற்றுப் பாடல் (எண்: 279) எழுதிய ஒக்கூர் மாசாத்தியார் வாழ்ந்த ஊர். அரூனா ரோய் அரூனா ரோய் (Aruna Roy, பிறப்பு 26 மே 1946) ஒர் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர். இவர் "தொழிலாளர்கள் உழவர்கள் ஒற்றுமைப் பலம்" (Mazdoor Kisan Shakti Sangathana) என்ற அமைப்பின் அமைப்பாளர். இவர் தகவல் அறியும் உரிமைக்கான இயக்கத்துக்காகவும் அறியப்படுகிறார். தேசியப் பரிந்துரை அவையின் உறுப்பினராகவும் விளங்கினார். 2000ஆம் ஆண்டில் சமூகத் தலைமைத் திறனுக்காக ரமன் மக்சேசே விருது பெற்றார். 2010ஆம் ஆண்டு பொதுத்துறை நிர்வாகம்,கல்வி மற்றும் மேலாண்மையில் சீர்மைக்கான லால் பகதூர் சாத்திரி தேசிய விருதினைப் பெற்றார். 2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அன்னா அசாரே நிகழ்த்திய ஜன் லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின்போது அரசு நிலைக்கும் அன்னா குழுவினரின் நெகிழ்வற்ற நிலைக்கும் இடைப்பட்ட உரையாடி தீர்வு காணக்கூடிய நிலையை பரிந்துரைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்[.இதனால் தகவல் உரிமை சட்டப் போராட்டத்தில் இணைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கருத்து வேற்றுமை கொண்டார் . அருணா மே 26, 1946ஆம் ஆண்டு சென்னையில் ஹேமா மற்றும் எலுபை துரைசாமி ஜெயராம் தம்பதிகளுக்குப் பிறந்தவர். இவரது பெற்றோர் தமிழ் பிராமணக் குடும்பத்தினராக இருந்தபோதும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தனர். தந்தை ஜெயராம் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அரசுப் பணி காரணமாக தில்லியில் வாழ்ந்தபோதும் அருணா சென்னையில் கத்தோலிக்க மடாலய பள்ளி ஒன்றில் படித்தார் பின்னர் கலாசேத்திராவில் இரண்டாண்டுகள் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசை பயின்றார். அதன் பின்னர் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திலும் தில்லியில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் கல்வி பயின்றுள்ளார். உள்ளூர் உணவு உள்ளூர் உணவு அல்லது உள்ளூர் உணவு இயக்கம் (locavores) என்பது உள்ளூர் உணவு உண்பதை ஊக்கப்படுத்தும், ஆதரவு கொடுக்கும் ஒரு சமூக இயக்கமாகும். உள்ளூர் உணவே தற்சார்பு மிக்க பொருளாதாரத்திற்கு, சூழலுக்கு, தரமான நல உணவுக்கு சிறந்தது என்பது இவர்களின் கருத்து ஆகும். இந்த இயக்கம் மேற்குநாடுகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் உணவு இயல்பான ஒரு கூறாக உள்ளது. எனினும், பன்னாட்டு வணிகங்களின் வருகையால் இந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது. உள்ளூர் உணவு, உள்ளூர் உணவு இயக்கம் அல்லது உள்ளூர் உணவாளர்களின் இயக்கம் இவற்றின் முக்கிய நோக்கமே ஒரே புவியியல் பிரதேசத்தில் இருக்கக்கூடிய உணவு உற்பத்தியாளர்களையும், உணவு நுகர்வோர்களையும் இணைத்து, அவர்கள் வளர்ச்சியிலும், உணவு வலையத்திலும் தன்னிறைவு பெறச் செய்வதாகும். உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது (அ) ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்துவதாகும். இச்சொல் ஒரு புவியியல் அமைவிடம் சார்ந்த அளிப்போரையும், நுகர்வோரையும் உள்ளடக்குவதில் மட்டுமன்றி, சமூக மற்றும் அளிப்பு தொடர்பான பண்புகளையும் வரையறை செய்வதாகும். உதாரணமாக உள்ளூர் உணவை முன்னெடுப்பவர்கள் அடிக்கடி தங்கள் நிலையான, உள்ளூர் இயற்கை வேளாண்மை முறைகளை அவர்கள் புவியியற் சார்ந்த உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் சரியான, நேரடித் தொடர்பு இல்லை என்ற போதும் முன்னெடுக்கின்றனர். உலகளாவிய உணவு மாதிரிகள், நீண்ட தொலைவு கடந்து, நுகர்வோரை அடைவதற்கு முன்பாகவே, உள்ளூர் உணவுகள் ஒரு மாற்றாக நுகர்வோரை அடைந்து விடுகின்றன. ஒரு உள்ளுர் உணவு வலையமானது, ஒரு இடத்தின் உணவு பாதுகாப்பு அதிகரிக்க, பொருளாதார, சூழல் சார்ந்த சமூக நிலைத்தன்மை ஏற்படுத்த சமூகத்திலுள்ள உணவு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே ஒரு உறவு முறையை ஏற்படுத்துகிறது. ஆற்றல் சிற்றுற்பத்தி ஆற்றல் சிற்றுற்பத்தி என்பது ஆற்றலை சிறிய அளவில், பரவலான முறையில் உற்பத்தி செய்யும் ஏற்பாட்டையும் தொழில்நுட்பங்களையும் குறிக்கிறது. குறிப்பாக மீள்பயன்படுத்தக் கூடிய, தற்சார்பு உடைய தொழில் நுட்பங்களை இது குறிக்கிறது. சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், Micro hydro போன்றவை சிற்றுற்பத்தி நுட்பங்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். திகார் சிறைகள் திகார் சிறைகள் (இந்தி: तिहाड़ सेन्ट्रल क़ैदख़ाना, உருது: تہاڑ سینٹرل قیدخانہ "Tihāṛ Central Qaidkhānā"), அல்லது திகார் ஆசிரமம் (இந்தி: तिहाड़ आश्रम, உருது: تہاڑ آشرم), என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகும். இது இந்தியாவின் தலைநகர் புது தில்லிக்கு மேற்கே உள்ள சாணக்யா புரியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகில் அரிநகர் உள்ளது. இந்தச் சிறைச்சாலை ஓர் சீர்திருத்தப் பள்ளியாகப் பேணப்படுகிறது. இங்குள்ள கைதிகளை திறமைகள், கல்வி மற்றும் விதிகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கை மிக்க சமூகத்தின் வழமையான நபர்களாக மாற்றுவதே இதன் தலையாய நோக்கமாகும். இங்கு தயாரிக்கப்படும் பொருள்களின் மேல் "திகார்" என்று முத்திரையிடப்படுகிறது. இங்குள்ள வசதிகளைக் கொண்டு ஒரு சிறைக்கைதி இந்தியக் குடியுரிமைப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். திகார் சிறைகளில் வட இந்திய உணவு மட்டுமன்றி தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பயிற்சி மையத்தின்படி இங்குள்ள 11,800 கைதிகளில் 6% முதல் 8% வரை எச். ஐ. வி நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது; இது தேசிய சராசரியை விட மிகக் கூடுதலாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. பர்தியா திடீர்த் தாக்குதல் பார்டியா திடீர்த்தாக்குதல் ("Bardia raid") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். பிரிட்டானியக் கமாண்டோ அதிரடிப் படைகள் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்த பார்டியா நகரில் நாசம் விளைவிக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்திடீர்த்தாக்குதலை நிகழ்த்தின. 1941ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சு நாட்டுப்படைகள் டோபுருக் நகரை முற்றுகையிட்டன. இந்த முற்றுகையில் ஈடுபட்டிருந்த படைகளுக்கு அனுப்பப்படும் தளவாடங்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதற்காக பார்டியா மீது திடீர்த்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிரிட்டானிய கமாண்டோ படைகள் கடல்வழியாக பார்டியா அருகே தரையிறங்கி அந்நகரைத் தாக்கின. ஆனால் அவை எதிர்ப்பார்த்தபடி பார்டியா நகரில் அச்சு நாட்டுப்படைகள் எதுவும் இல்லை. அங்கிருந்த தளவாட கிடங்கு மற்றும் பீரங்கிக் குழுமத்தை மட்டும் அழித்துவிட்டு பின்வாங்கின. இத்தாக்குதலில் மோதல் எதுவும் நிகழவில்லையென்றாலும் நேச நாட்டுப் படைகளால் தங்கள் படைநிலைகளுக்குப் பின்புறம் தாக்கி தளவாடப் போக்குவரத்துக்கு ஊறு விளைவிக்க முடியும் என்று ஜெர்மானியத் தளபதிகளுக்குப் புலனானது. இதனால், தளவாடப் போக்குவரத்தை வருங்கால நாசத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க சொல்லம் நகரிலிருந்த ஒரு டிவிசனை பார்டியாவுக்கு அவர்கள் அனுப்பினர். இதனால் போர்முனையில் நேச நாட்டுப் படைகளுக்கு நெருக்கடி சற்றே குறைந்தது. கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: த. அஜந்தகுமார் த.அஜந்தகுமார் ஈழத்தில் வளரந்து வரும் இளைய படைப்பாளிகளில் ஒருவர்.யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வதிரி எனும் ஊரில் பிறந்த இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம், இதழியல் ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார். தருமராசா அஜந்தகுமார் க.பொ.த சா/உயர் தரத்தை நெல்லியடி மத்திய கல்லூரியிலும், பட்டப் படிப்பினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். ஈழத்துச் சஞ்சிகைகளான கலைமுகம், ஞானம், புதிய தரிசனம், தாயகம், அம்பலம், நடுகை, ஜீவநதி, தெரிதல் மற்றும் பல சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார். வார்ப்பு, காற்றுவெளி, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைகள், உரைநடைக்கோவை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இப்றாகீம் பாசா இப்றாகீம் பாசா (1789 – நவம்பர் 10, 1848) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டுத் தளபதி ஆவார். அவர் எகிப்தின் முகம்மது அலீயின் மகனாகவே நன்கறியப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய இளம்பிள்ளைப் பருவத்திலேயே எகிப்தியப் படைகளின் கட்டளைத் தளபதியானார். பின்னர் அவர் எகிப்து, சூடான், பலஸ்தீன், சிரியா, ஹிஜாஸ், மூரியா, தாசூசு, கிறீற்று ஆகிய பகுதிகளுக்கான உதுமானியப் பேரரசின் ஆளுநராகப் பதவி வகித்தார். 1848 நவம்பர் 10 முதல் அவர் தனது தந்தையின் அரச பிரதிநிதியாகவும் பதவி வகித்தார். இப்றாகீம் பாசாவின் சிறு பராயம் பற்றித் தெளிவாக அறியப்படவில்லை. கிரேக்க நாட்டின் திராமா நகரில் கிறித்தவப் பெண்ணொருவருக்குப் பிறந்த அவர் அல்பானிய இனத்தவரான முகம்மது அலீ பாசாவினால் தத்தெடுக்கப்பட்ட மகன் எனச் சில வேளைகளில் கருதப்படுகிறது. அந்த வகையில், அவரது தாயார் முகம்மது அலீ பாசாவை மணந்ததாகவும், அதன் காரணமாக அப்பெண்ணின் பிள்ளையை அவர் தனது பிள்ளையாகத் தத்தெடுத்ததாகவும் உதுமானிய கலாசாரம் மற்றும் இசுலாமிய நம்பிக்கை என்பவற்றில் அவரை வளரத்ததாகவும் கருதப்படுகிறது. முஸ்லிமல்லாத பெற்றோரின் பிள்ளையாகக் கூறப்படும் செய்தி, இப்றாகீம் பாசாவினால் இழிவு படுத்தப்பட்ட பிரெஞ்சு தூதுவரின் கட்டுக்கதையாக இருக்கலாம். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம் யாதெனில், அவர் 1789 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும், அவர் முகம்மது அலீ பாசாவின் முதல் மனைவி மூலம் (இரண்டாவது பிள்ளையாக) அவருக்குப் பிறந்த அவரது சொந்த மகன் என்பதுமாகும். மேலும் அவர் உதுமானியப் பேரரசின் ருமேலியா மாகாணத்தில், தற்போதைய கிரேக்க நாட்டின் மசெடோனியா பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பிறந்தார் என்றும் அறியப்படுகிறது. 1805 ஆம் ஆண்டு அவரது தந்தை முகம்மது அலீ பாசா எகிப்தின் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடிய போது கட்டிளங் காளையான இப்றாகீம் பாசா தன்னுடைய பதினாறாம் அகவையில் உதுமானியப் பேரரசின் கைதியாக அனுப்பப்பட்டிருந்தார். எனினும் முகம்மது அலீ பாசா தலைவராக அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் பிரித்தானியப் படைத் தளபதி அலெக்சாண்டர் மெக்கன்சீ பிரேசர் எகிப்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்த பின்னர், இப்றாகீம் பாசா எகிப்துக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார். 1813 ஆம் ஆண்டு முகம்மது அலீ பாசா சவூதி மரபினருக்கு எதிராகப் போரிட அரேபியாவுக்குச் சென்றிருந்த வேளை, இப்றாகீம் பாசா மேலை எகிப்து பகுதியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு ஆட்சியை இழந்திருந்த மம்லூக்கியருடன் போரிட்டு அவர்களை ஒடுக்கினார். பின்னர் 1816 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய சகோதரர் தூசுன் பாசாவின் பின்னர் அரேபியாவில் போரிட்ட எகிப்தியப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். முகம்மது அலீ பாசா தன்னுடைய படையினருக்கு ஐரோப்பிய பாணி வழிநடத்தலை அறிமுகப்படுத்தியிருந்தார். இப்றாகீம் பாசாவும் அதே பயிற்சியைப் பெற்றிருக்கலாம். எனினும், அவரது முதலாவது படை நடவடிக்கையானது அவரது பிந்திய நடவடிக்கைகளை விட மிகக் கூடுதலாக ஆசியப் பாணியையே கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் நீடித்த அப்படை நடவடிக்கை சவூதிய மரபினரின் அரசியல் அதிகாரத்தை முறிப்பதில் முடிவடைந்தது. முகம்மது அலீ பாசா மதீனாவின் துறைமுகப் பட்டினமான யன்புஊவில் 1813 ஆம் ஆண்டு தரையிறங்கினார். புனித நகரங்கள் சவூதியினரிடமிருந்து ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தமையால் அவர்களை நஜ்து பாலைவனத்தில் சந்திப்பதுடன் அவர்களது கோட்டையை அழிப்பதே இப்றாகீம் பாசாவின் வேலையாக இருந்தது. எகிப்தியப் படையினர் பெற்றுக்கொண்டிருந்து பயிற்சிகளும் அவர்தம் பீரங்கிகளும் திறந்த வெளிப் போர்க்களங்களில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உயர்வை அளித்தன. மதீனாவின் கிழக்கில் 400 மைல் தூரத்திற்கு அப்பால் திரியா பகுதியில் அமைந்திருந்த சவூதி மரபினரின் கோட்டையை அடைவதற்காகப் பாலைவனத்தைத் தாண்டுவது, வெற்றியை மிகக் கடினமானதாக ஆக்கியது. இப்றாகீம் பாசா தன்னுடைய இராணுவத்தின் துயரங்களையெல்லாம் கருத்திற் கொண்டு அவர்கள் தோல்வி கண்டு துவளாதிருக்க, மிக்க வல்லமையோடும் உறுதியோடும் போராடினார். 1818 செப்டெம்பர் மாத இறுதியில் சவூதியத் தலைவர் அப்துல்லாஹ் பின் சவூத் என்பவரை அடிபணிய வைத்ததுடன் திரியா நகரைக் கைக்கொண்டார். 1819 டிசம்பர் 11 அன்று அவர் பெரும் வெற்றி வீரராக கெய்ரோ மாநகருக்குத் திரும்பினார். அவரது மீள் வருகையின் பின்னர், ஐரோப்பிய பாணியில் தன்னுடைய இராணுவத்தைப் பழக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சுக்காரரான கர்னல் சேவே (சுலைமான் பாசா) என்பவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவர் தானே அதில் சேர்ந்து ஏனைய படையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 1824 இல் முகம்மது அலீ பாசா உதுமானிய இரண்டாம் மஹ்மூத் கிரேக்க நாட்டின் தென்பகுதியில் பெலோபொன் குடாநாட்டை உள்ளடக்கிய மூரியா பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது எழுச்சியடைந்திருந்த கிரேக்கப் புரட்சிக்கு எதிராக, தன்னுடைய படைகள் ஏற்கனவே தோற்றுவிட்டிருந்த நிலையில் சுல்தான் இரண்டாம் மஹ்மூத் நன்கு பயிற்றப்பட்ட எகிப்திய இராணுவத்தின் உதவி தேவைப்பட்டவராக இருந்தார். 1822 ஆம் ஆண்டு, கிரேக்கர்கள் இப்றாகீம் பாசாவின் மைத்துனரான மஹ்மூத் திராமலி பாசாவின் தலைமையிலான 30,000 பேர் கொண்ட படையை மிகத் திறமையாகத் தோற்கடித்திருந்தனர். 17000 பேர் கொண்ட இராணுவத்துடன் பெலோபொன் பகுதிக்கு இப்றாகீம் பாசா அனுப்பப்பட்டிருந்தார். 1824 யூலை 4 அன்று புறப்பட்ட அவரது படையினர் பல மாதங்களாக ரோட்சு மற்றும் கிறீற்று தீவுகளுக்கிடையே வெறுமனே பயணிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதிருந்தனர். கிரேக்க தீக்கப்பல்கள் பற்றிய அச்சம் அவரை மூரியாவை அண்டவிடாமல் செய்திருந்தது. கிரேக்க மாலுமிகள் சம்பளம் தொடர்பாகக் கலகம் செய்த வேளை, இப்றாகீம் பாசா மோடொன் பகுதியில் 1825 பெப்ரவரி 26 அன்று தரையிறங்கினார். மேற்கத்திய சக்திகளால் 1828 ஒக்டோபர் 1 அன்று அவரை வலுக்கட்டாயமாகச் சரணடையச் செய்யும்வரை இப்றாகீம் பாசா மூரியாவிலேயே தங்கியிருந்தார். அவர் கிரேக்கர்களைத் திறந்தவெளிப் போர்க்களங்களில் தோற்கடித்தார். மெசோலொங்கி நகர் மீதான முற்றுகை அவரது சொந்தப் படைகளுக்கும் அவருடன் சேர்ந்து செயற்பட்ட உதுமானியப் பேரரசின் படைகளுக்கும் இழப்பு மிக்கதாய் இருந்த போதிலும் அவர் அம்முற்றுகையை 1824 ஏப்ரல் 24 இல் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்தார். கிரேக்க கெரில்லா படையணிகள் அவரது இராணுவத்தைப் பல இடங்களிலும் வழி மறித்தன. அதற்குப் பழிவாங்கும் முகமாக அவர் அந்நாட்டை அழித்து அதன் ஆயிரக்கணக்கான குடிமக்களை எகிப்துக்கு அடிமைகளாக அனுப்பினார். இவ்வாறான அடக்குமுறை ஐரோப்பியரிடையே பரந்த அனுதாபத்தைத் தோற்றுவித்ததுடன் ஐக்கிய இராச்சியம், புனரமைக்கப்பட்ட பிரெஞ்சு இராச்சியம் மற்றும் உருசியப் பேரரசு என்பவற்றின் கடற்படையணிகள் 1827 ஒக்டோபர் 20 இல் இப்றாகீம் பாசாவை நவரினோ போர் முனையில் சந்திக்க வைத்தது. பிரெஞ்சுப் படைகள் மூரியாவில் தரையிறங்கிய பின்னரே அவர் வெற்றிகொள்ளப்பட்டார். 1828 ஒக்டோபர் 1 ஆம் திகதிய சரணடைதல் ஒப்பந்தப்படி இப்றாகீம் பாசா அந்நாட்டை விட்டு வெளியேறினார். 1831 ஆம் ஆண்டு, அவரது தந்தையார் உதுமானியப் பேரரசின் ஆட்சியாளருடன் முரண்பட்டுக்கொண்டதால், இப்றாகீம் பாசா சிரியாவைக் கைப்பற்றுவதற்காகப் படையுடன் அனுப்பப்பட்டார். அவர் 1832 மே 27 அன்று கடுமையான முற்றுகையின் பின்னர் அக்ரி நகரையும், பின்னர் அதே ஆண்டு யூலை 8 அன்று உதுமானியப் படையை முறியடித்து திமிஷ்கு நகரையும், யூலை 29 அன்று உதுமானியரின் மற்றொரு படையை முறியடித்து பைலான் பகுதியையும், பின்னர் சின்னாசியாவையும் ஆக்கிரமித்ததுடன், இறுதியாக அவ்வாண்டு டிசம்பர் 21 அன்று கோன்யா போரில் முதன்மை ஆளுநர் ராசித் முகம்மது பாசாவை வென்று துரத்தியடித்தார். சிரியாவில் அவர் உமர் தால் என்ற சன்னியாசியைச் சந்தித்ததாகவும் அச்சன்னியாசி இப்றாகீம் பாசாவின் மகன் கண்டிருந்த கடுமையான காய்ச்சலைச் சுகப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது. பின்னர் உமர் தால் என்ற அச்சன்னியாசி இப்றாகீம் பாசாவின் ஆதரவாளராகி, இன்றைய நைஜீரியாவிலுள்ள சொகோட்டோ நகருக்குத் திரும்பி அவரது வழிகாட்டலைப் பின்பற்றத் தொடங்கினார். பிற்காலத்தில் அவர் இன்றைய கினியா, செனெகல் மற்றும் மாலி ஆகிய நாடுகளை உள்ளிட்ட பகுதியின் முதன்மைத் தளபதியானார். அடுத்த ஆண்டு கூதாகியா மாநாட்டின் முடிவுகளின்படி சிரியா நாடு சிலகாலம் முகம்மது அலீ பாசாவின் ஆதிக்கத்திலேயே இருந்தது. அக்காலத்தில் இப்றாகீம் பாசா தன்னுடைய படையில் பணியாற்றிய கர்னல் சேவே மற்றும் ஏனைய ஐரோப்பியருக்கு மிக்க உதவி புரிந்தார். 1832, 1833 ஆம் ஆண்டுகளின் படை நடவடிக்கைகளின் பின்னர் இப்றாகீம் பாசா சிரியாவின் ஆளுநராகப் பதவி வகித்தார். அவர் எவ்வளவு திறம்பட ஆட்சி செய்த போதிலும், அவரது தந்தையாரின் கட்டளைகளை நிறைவேற்றுமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவரது அதிகாரம் வலுவிழந்ததுடன் அவரது ஆட்சியிலிருந்த மக்கள் கலகம் செய்யத் தொடங்கினர். 1838 ஆம் ஆண்டு, உதுமானியப் பேரரசு தன் வலிமையைக் கூட்டிக்கொண்டு மீண்டுமொருமுறை அவர் மீது போர் தொடுத்தது. 1839 யூன் 24 அன்று நிசிப் பகுதியில் இடம்பெற்ற போரில் இப்றாகீம் பாசா உதுமானியப் படைகளை வெற்றி கொண்டார். அதுவே போர்க்களங்களில் அவர் கண்ட இறுதி வெற்றியாகும். உதுமானியப் பேரரசின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமெனக் கூறி ஐக்கிய இராச்சியமும் அவுசுதிரியப் பேரரசும் அதில் தலையிட்டன. அவர்களின் படையணிகள் இப்றாகீம் பாசாவை எகிப்துடன் கடல் வழியாகத் தொடர்புபடுவதிலிருந்து தடுத்துவிட்டன. அதனால், சிரியாவில் ஏற்பட்ட புரட்சி அவரை 1841 ஆம் ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. இப்றாகீம் பாசா தன்னுடைய வாழ்வின் எஞ்சிய பகுதியை அமைதியாகக் கழித்த போதிலும் அவரது உடற்சுகம் குன்றத் தொடங்கியது. 1846 ஆம் ஆண்டு அவர் மேற்கு ஐரோப்பாவிற்குப் பயணித்தபோது அங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அவரது தந்தையார் மனநிலை பாதிக்கப்பட்டபோது இப்றாகீம் பாசா எகிப்தின் பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1846 யூலை மாதம் முதல் 1848 நவம்பர் 10 ஆம் திகதி அவர் இறக்கும் வரை இப்றாகீம் பாசா தன்னுடைய பதவியில் நிலைத்திருந்தார். See Edouard Gouin, "L'Egypte au XIX' siècle" (Paris, 1847); Aimé Vingtrinier, "Soliman-Basha" (Colonel Sève) (Paris, 1886). A great deal of unpublished material of the highest interest with regard to Ibrahim's personality and his system in Syria is preserved in the British Foreign Office archives; for references to these see "Cambridge Mod. Hist." x. 852, bibliography to chap. xvii. பார்டியா பார்டியா ("Bardia") அல்லது எல் புர்டி (அரபி:البردية or البردي‎) லிபியா நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். நடுநிலக்கடல் கரையோரமாக அல் புத்னான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கு பல தாக்குதல்கள் நிகழ்ந்தன. அச்சு நாடுகள் இங்கு கைப்பற்றப்பட்ட நேச நாட்டு படைவீரர்களுக்காக ஒரு போர்க்கைதி முகாமை அமைத்திருந்தன. பிரீவிட்டி நடவடிக்கை பிரீவிட்டி நடவடிக்கை ("Operation Brevity") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் டோப்ருக் நகரை அச்சு நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்த போது சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்க்களத்தில் பலவீனமடைந்திருந்த அவற்றின் படைநிலைகளை ஊடுருவ நேச நாட்டுபடைகள் முயன்றன. 1940ல் இத்தாலி எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு நேச நாட்டுப் படைகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் இத்தாலியப் படைகள் படுதோல்வி அடைந்தன. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து லிபியாவினுள் நேச நாட்டுப் படைகள் முன்னேறியதால், இத்தாலியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மலின் தலைமையில் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவை அனுப்பினார். 1941 பெப்ரவரியில் வடக்கு ஆப்பிரிக்காவை அடைந்த ரோம்மல் அடுத்த மாதமே நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அவரது படைகள் வேகமாக முன்னேறி டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. ஆனால் அந்நகரைக் கைப்பற்ற முடியவில்லை என்பதால் அவற்றின் முன்னேற்றம் தடைபட்டது. முற்றுகை சில மாதங்கள் நீடித்தது. அச்சுப் படைகளின் கவனம் டோப்ருக்கில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்முனையினை பிரிட்டானியப் படைகள் தாக்கின. இதற்கு பிரீவிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. மே 15, 1941ல் தேதி ஜெனரல் வேவல் தலைமையில் பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. அவற்றின் இலக்கு போர்முனைக்கும் டோப்ருக்கும் இடைப்பட்ட பகுதியைக் கைப்பற்றுவது மற்றும் டோப்ருக்கை முற்றுகையிட்டுள்ள அச்சு படைப்பிரிவுகளை பலவீனப்படுத்துவது. முதல் நாள் தாக்குதலில் வெற்றி பெற்ற பிரிட்டானியர்கள் முக்கியமான ஆல்ஃபாயா கணவாய் (halfaya pass), கப்பூசோ கோட்டை ஆகியவற்றை இத்தாலியப் படைகளிடமிருந்து கைப்பற்றினர். ஆனால் மறுநாள் இத்தாலியப் படைகளுக்குத் துணையாக ரோம்மல் அனுப்பிய ஜெர்மானியப் படைகள் அப்பகுதியினை அடைந்து கப்பூசோ கோட்டையை மீண்டும் கைப்பற்றின. மேலும் பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அப்பகுதிக்கு அனுப்பபட்டதால், பிரிட்டானியப் படைப்பிரிவுகள் ஆல்ஃபாயா கணவாய்க்கு பின்வாங்கின. இத்துடன் பிரீவிட்டி நடவடிக்கை முடிவடைந்தது. ஆனால் தளவாடப் போக்குவரத்துக்கு அக்கணவாயின் இன்றியமையாமையை உணர்ந்திருந்த ரோம்மல் சில வாரங்கள் கழித்து அதனைத் தாக்கி மீண்டும் கைப்பற்றினார். கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் கருநாடக முதலமைச்சர், இந்திய மாநிலமான கருநாடகத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். இந்தியாவின் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் பட்டியல்: தி. அ. இராமலிங்கம் திருப்பூர் அங்கப்ப இராமலிங்கம் செட்டியார் ("T. A. Ramalingam Chettiar", பி. மே 18, 1881 - இ.1952) ஒரு தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக இருந்தவர். மேலும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினரும் இவரே. 1881ல் திருப்பூரில் அங்கப்ப செட்டியார்-மீனாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இராமலிங்கம் இளவயதிலேயே கல்வி கற்க கோயம்புத்தூருக்கு அனுப்பபட்டார். இவரது தந்தை அங்கப்ப செட்டியார் செல்வச் செழிப்பு மிக்க பருத்தி வர்த்தகர். பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் இராமலிங்கம் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1904ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் அங்கு வழக்கறிஞர் குழுமத்தின் தலைவராக இருந்தார். 1911ல் கூட்டுறவு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சென்னை மாகாணத்தில் அவ்வியக்கம் பரவ பாடுபட்டார். தமிழ்நாடு கூட்டுறவு கூட்டமைப்பைத் தோற்றுவித்து “கூட்டுறவு” என்ற இதழையும் நடத்தினார். கோவையில் ஒரு கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளியினையும் நிறுவினார். கோவையில் மத்தியக் கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நில வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். அரசியலில் ஈடுபட்ட இராமலிங்கம் கோவை மாவட்ட மன்றம் (ஜில்லா போர்டு) துணைத் தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் கோவை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். சில காலம் நீதிக்கட்சியிலும் பின்பு காங்கிரசிலும் உறுப்பினராக இருந்தார். 1921ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1946ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 பொதுத் தேர்தலில் காங்கிரசு சார்பில் கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இராமலிங்கம் செட்டியார் 1952ல் மரணமடைந்தார். அவரது குடும்பத்தார் அவரது நினைவாக கல்வி அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அது கோவையில் தி. அ. இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, அங்கப்ப செட்டியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, அங்கப்பா கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை நிருவகித்து வருகிறது. ஒருசிறைப் பெரியனார் ஒருசிறைப் பெரியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 272, நற்றிணை 121, புறநானூறு 137 ஆகிய 3 பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. நாஞ்சில் என்பது நாஞ்சில்(கலப்பை) போல் தோற்றம் தரும் ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு நாஞ்சில்நாடு. அதன் தலைநகரம் நாஞ்சில். இது குமரி மாவட்டத்தில் வீரநாராயண மங்கலம் என்னும் பெயர் கொண்டுள்ளது. நாஞ்சில் வள்ளுவன் இவ்வூரிலு இருந்த சங்ககாலக் கொடைவள்ளல். இவனைக் கண்டு புலவர் பாடுகிறார். மூவேந்தர் கொடையைப்பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் உன் கொடை ஒன்றுதான். குளநீர் பாயும் வயலில் போட்ட விதை சாவதில்லை. அதுபோல உன்னிடம் வந்தவர் வறிது மீள்வதில்லை - என்கிறார். கலைமானின்மேல் பாய்ந்த அம்புபோல் அவள் கண் என்மேல் பாய்ந்துவிட்டது. பாய்ந்த அம்பைக் கலைமான் தானே பிடுங்கிக்கொள்ள முடியாதது போல அவள் கண் குத்தியதை என்னால் பிடுங்கி எறிய முடியாது என்று தலைவன் தன் பாங்கனிடம் வினவுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. போருக்குச் சென்ற தலைவன் போர் முடிந்து இல்லம் திரும்புகிறான். அவனது தேரை ஓட்டிவரும் பாகன் தன் தலைவனிடம் சொல்கிறான். 'இதோ! கான்யாற்று மணலைத் தாண்டிவிட்டோம். பிணைமான் விதைத்து வளர்ந்த வரகை மேய்ந்துவிட்டுத் தன் கலைமானோடு சேர்ந்து உறங்கும் உன் ஊர் இதோ நெருங்கிவிட்டது' - என்கிறான். நாஞ்சில் நாஞ்சில் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு சங்ககாலத்து ஊர் ஆகும். குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்கள் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும். நாஞ்சில் என்பது நாஞ்சில்(கலப்பை) போல் தோற்றம் தரும் ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு நாஞ்சில்நாடு. அதன் தலைநகரம் நாஞ்சில். (புறம் 137) நாஞ்சில் வள்ளுவன் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலத்துக் கொடைவள்ளல். இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் பாராட்டுகிறார். இவனை (ஒருசிறைப் பெரியனார்,ஔவையார், கதப்பிள்ளையார், மருதன் இளநாகனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர். தற்காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயரின் முன் “நாஞ்சில்” என்ற அடையாளமொழியை சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. எ.கா. நாஞ்சில் நாடன், நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத். ஜே. எல். பி. ரோச் விக்டோரியா ஜான் லாடிஸ்லாஸ் பிட்சையா ரோச் விக்டோரியா (பி. செப்டம்பர் 26, 1894 - இ. அக்டோபர் 15, 1962) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் பரதவர் சாதியில் பிறந்தார். இவர் மீன்பிடி தொழில் முதலான பலவகைத் தொழில்களில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 1926-46 காலகட்டத்தில் தூத்துக்குடி நகராட்சியின் தலைவராக ஐந்து முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2, 1949 - பெப்ரவரி 8, 1952 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தில்ன் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். (பி. எஸ். குமாரசுவாமிராஜா அமைச்சரவையில்). 1952 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948-49ல் ரோட்டரி சங்கத்தின் 320வது மாவட்டத்தின் (இலங்கை மற்றும் தென்னிந்தியா) ஆளுனராகவும் பணியாற்றினார். 1952ல் புனித கிரகோரி வீரர் அமைப்பின் (K.S.G -Order of St. Gregory the Great, வாடிகன் நகரின் கெளரவ வீரர் அமைப்புகளுள் ஒன்று) உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது. தூத்துகுடியில் உள்ள ரோச் பூங்காவில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. வி. ஐ. முனுசாமி பிள்ளை ராவ் சாகிப் வி. ஐ. முனுசாமி பிள்ளை (பி. 1889 - இ. டிசம்பர் 14, 1953) ஒரு தமிழக அரசியல்வாதி. (முனிசாமி பிள்ளை எனவும் சில இடங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது). இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார். 1889ல் உதகமண்டலத்தில் ஒரு ஏழை பறையர் குடும்பத்தில் பிறந்த முனுசாமி வறுமையின் காரணமாக படிப்பினை நிறுத்தி விட்டு இளவயதிலேயே எழுத்தர் வேலையில் சேர்ந்தார். பின் 1925ல் சொந்தமாக தொழில் தொடங்கினார். 1926ல் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். 1937-39ல் அமைந்த ராஜாஜி அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இத்துடன் முனுசாமியும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின் 1946ல் மீண்டும் அரசியலில் நுழைந்த அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுபின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1953ல் இவர் மரணமடைந்த போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜேம்ஸ் தொம்பர் ஜேம்ஸ் தொம்பர் ("Fr. James Tombeur", 1924-2002) கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு துறவி. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்தவர். குமரி மாவட்டத்தில் பொதுச்சேவை செய்தவர். தொம்பர் 29-108-1924ல் பெல்ஜியத்தில் பிறந்தார். 1952ல் இந்தியாவுக்கு கத்தோலிக்கத் துறவியாக வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சிற்றூர்களில் சேவைசெய்தார். தான் சேவைசெய்யும் ஊர்களில் கைத்தொழில்களை சிறிய தொழிற்சாலைகளாக ஆக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். இவர் நிறுவிய பல தொழிற்சாலைகள் மிகவெற்றிகரமாக இன்றும் பலநூறுபேருக்கு வேலைவாய்ப்பளித்து வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன. குமரிமாவட்டத்தில் நாகர்கோயிலை அடுத்துள்ள சுங்கான்கடையில் இவர் அமைத்து வளர்த்த திருமலா மண்பாண்டத்தொழ்ற்சாலை இன்றும் சிறப்பாக நடந்துவருகிறது. இப்போது அது தமிழ்நாடு காதி போர்டின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. முட்டம் கடற்கரையில் பெல்ஜிய அரசின் உதவியுடன் மரத்தால் படகுகட்டும் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார். அது காலபோக்கில் நசிவுகண்டு இன்று அழிந்துவிட்டது. தன்னுடைய தொழிற்சாலைகளில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்கும்படி பார்த்துக்கொண்டார் ஜேம்ஸ் தொம்பர் இந்தியப்பண்பாடு மீது, குறிப்பாக இந்தியக் கட்டிடக்கலைமீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய கோயில் கலைவடிவங்களை அடியொற்றி தேவாலயங்களை உருவாக்க முயன்றார். குமரிமாவட்டம் களியிக்காவிளை அருகே பரைக்குன்று ஊரில் இவர் கட்டிய தேவாலயத்தில் சிற்பக் கல்தூண்கள் அழகிய வடிவில் அமைந்திருந்தன. நல்லாயன்புரம் என்ற ஊரில் இந்துகோபுரவடிவங்களையும் தேவாலயக் கூம்புக்கோபுர வடிவையும் கலந்து சோதனை முயற்சியாக ஒரு தேவாலயம் கட்டினார் இந்திய ஓவியக்கலையின் அழகியலை ஒட்டி கிறித்தவ ஓவியங்கள் வரையப்படவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார் தொம்பர். தேவலாயக் கண்ணாடி ஓவியங்களில் முகலாய சிற்றோவிய அழகியலை உருவாக்க முயன்றார். இந்தியாவுக்குரிய கிறித்தவம் ஒன்று இந்தியப் பண்பாட்டுத் தனித்தன்மையுடன் உருவாகவேண்டுமென்று விரும்பினார். கடைசிக்காலத்தில் அவர் சுங்கான்கடை திருமலா ஆசிரமத்தில் தியானத்தில் ஒதுங்கி வாழ்ந்தார். 10-10.-2002 அன்று ஜேம்ஸ் தொம்பர் மறைந்தார். அவரது சிலை பரைக்குன்று தேவாலயத்திலும் சுங்கான்கடை மண்பாண்ட தொழிற்சாலைக்கு முன்னாலும் அமைக்கப்பட்டுள்ளது. https://xavi.wordpress.com/2007/08/15/church/ ஹொங்கொங்கில் உள்ள சிறைகளின் பட்டியல் ஹொங்கொங்கில் உள்ள சிறைகள் ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதானப் பகுதியான ஹொங்கொங் ஒழுக்கம் பேணல் பணியகம் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டியல்கள் ஹொங்கொங்கின் பிரதான மூன்று அரசியல் நிலப்பரப்புகளின் படி பட்டியல் இடப்பட்டுள்ளன. இங்கு சிறைகள் என குறிப்பிடப்பட்டிருப்பவைகளின், சீர்த்திருத்த நிலையங்கள், புனர்வாழ்வு மையங்கள், தடுப்புக்காவல் மையங்கள் போன்றனவும் அடங்கும். ரங்கன ஹேரத் ரங்கன ஹேரத் ("Rangana Herath", பிறப்பு: மார்ச் 19, 1978) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு அராரேயில் நடந்த சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதனூடாக பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானர். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, குருணாகலை இளம் துடுப்பாட்ட அணி, முவர்ஸ் அணி, தமிழ் யூனியன் அணி, வயாம்பா துடுப்பாட்ட அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த இடக்கைப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் புகழப்படும் ரங்கன ஹேரத் தேர்வுத் துடுப்பாட்ட இடக்கை சுழற்திருப்ப பந்துவீச்சாளர்களில் சிறந்த உலக சாதனையை இவர் கொண்டுள்ளார். 2016 மே 29 இல், முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் ஆகியோருக்கு அடுத்ததாக 300 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை எட்டினார்.. டிசம்பர் 23,2016 இல் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு ஹெராத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அதிக வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைமை தாங்கிய இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்கு முன் டொம் கிரவெனி தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது. ஹெராத் 1999 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். பின் 2004 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் இவர் எட்டாவது இடம் பிடித்தார். இவர் 1999 ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் முதன்மைப் பந்துவீச்சாளராக ஆகவில்லை. ஏனெனில் முத்தையா முரளிதரன் அணியின் முதன்மைப் பந்துவீச்சாளராக இருந்தார். பின் இவரின் ஓய்விற்குப் பிறகே இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இவர் எடுக்கும் முதல் 5 இலக்காகும் ஒட்டுமொத்தமாக 23 ஆவது முறையாகும். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 251 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தனர். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 79 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 4 இலக்குகளைக் கைப்பற்றி இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்ற உதவினார். 2014 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். மார்ச் 31 இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் 119 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது. 120 வெற்றி இலக்காக வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியில் பிரண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில்,ராஸ் டைலர் ஆகியோர் இந்த அணியில் இருந்தனர். ஆண்டர்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் 10 வீரர்களோடு விளையாடினர். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். கீழப்பூங்குடி கீழப்பூங்குடி (ஆங்கிலம் : Keelapoongudi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்த ஊர் சிவகங்கையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 49 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்குடியிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் பாண்டிய நாட்டின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. பின்னர், சிவகங்கை சமஸ்தானத்தின் கீழாகவும், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் ஆட்சியின் கீழாகவும் இருந்து வந்தது. இங்கு அரசு பொது மருத்துவமனை, அஞ்சலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. தமிழக அரசின் நூலகமும், அய்யன் திருவள்ளுவர் நூலகமும் உள்ளன. இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் உத்திராடம் நட்சத்திரம் விழா சிறப்பு பெற்றது. மிளகாய் சுவாமி கோவில் குருபூசை, மாரியம்மன் கோவில் திருவிழா, புரவி எடுப்பு, எருது கட்டு, முளைப்பாரி என வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கு உழவே முதன்மைத் தொழில் ஆகும். வேளாண் பொருட்களான நெல், கரும்பு, வாழை, தென்னை, பருப்பு மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகளை உழவர்களிடம் மக்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதற்காக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் அல்லது ஹொங்கொங்கின் ஒழுக்கப் பணிகள் (Hong Kong Disciplined Services) என்பது ஹொங்கொங்கின் சட்டத் திட்டங்களின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமான ஆறு சீருடைத்தாங்கிய படைகளை அல்லது பிரிவுகளை கொண்டப் பணிகளாகும். அதேவேளை ஹொங்கொங்கின் ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் நடைமுறையின் படி ஏழாவது பிரிவாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு படைகள் அல்லது பிரிவுகள் ஹொங்கொங்கின் பாதுகாப்பு இலாகாவின் கீழ் இயங்குபவைகளாகும். அவைகளாவன: ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் ஏழாவது ஒழுக்கப்பணியாக நடைமுறையில் கருதப்படுகிறது. இப்பிரிவு நேரடியாக முதன்மை நிறைவேற்று அதிகாரியின் கீழ் இயங்குகிறது. அத்துடன் ஹொங்கொங்கின் பாதுகாப்பு இலாகாவின் கீழ் இரண்டு துணைப்படைகள் அல்லது பிரிவுகள் இயங்குகின்றன. ஆனால் அவை நடைமுறையில் அவசர உதவி மற்றும் நடவடிக்கைகளின் போது இயங்குபவைகளாகும். அவற்றின் பணியாளர்கள் அநேகமாக தன்னார்வ பயிற்சியாளர்களாகும். அவைகளாவன: ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்) ஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் (Independent Commission Against Corruption) சுருக்காமாக ICAC 1974 பெப்ரவரி 15ம் திகதி ஹொங்கொங், பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநர் முறே மெக்லியோஸ் என்பவரால் நிறுவப்பட்டதாகும். சமர கப்புகெதர சமர கந்த கபுகெதர (பிறப்பு:24 பெப்ரவரி 1987 கண்டி) அல்லது சுருக்கமாக சாமர கபுகெதர (கபு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரராவார். 2006 ஆம் ஆண்டு பார்த்தில் நடந்த ஆத்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொழும்பு துடுப்பாட்ட அணி, கந்துரட்ட துடுப்பாட்ட அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி) இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 85 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 156 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 85 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 156 ஹொங்கொங் கலைச்சொற்கள் ஹொங்கொங் கலைச்சொற்கள் என்பன, ஹொங்கொங் தொடர்பானக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் போன்றவைகளாகும். ஹொங்கொங்கில் வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கில் நேரடியாக ஆங்கிலச் சொற்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால், அவற்றிற்கு பதிலாக இடப்பட்டிருக்கும் தமிழ் சொற்கள் இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன. பா. பரமேசுவரன் பா. பரமேசுவரன் (பி. பரமேஸ்வரன், B. Parameswaran; பி. ஜனவரி 20, 1913, -இ.?) ஒரு தமிழக அரசியவாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். ஆதி திராவிடர் சாதியினைச் சேர்ந்த பரமேசுவரன் பறையர் முன்னோடி இரட்டைமலை சீனிவாசனின் பேரர். இவரது தந்தை பெயர் எம். பாலசுப்ரமணியன். சென்னை புனித கேப்ரியல் பள்ளியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றிய இவர் எம். சி. ராஜாவிடம் பத்தாண்டுகள் தனிச் செயலாளராக வேலை பார்த்தார். 1946 தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்ரல் 7, 1949 - ஏப்ரல் 9, 1952 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசுவாமிராஜா அமைச்சரவையில் காதி, குடிசைத் தொழில், மீன்வளம் மற்றும் அரிஜன நலத்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1952-54ல் சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார். ஏப்ரல் 13, 1954 - மார்ச் 31, 1957 காலகட்டத்தில் காமராஜர் அமைச்சரவையில் போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார். 1958-62ல் இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராகப் பணியாற்றினார். 1952 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல்களில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அஞ்செலோ மத்தியூஸ் அஞ்ஜெலா டேவிஸ் மாத்யூஸ் (பிறப்பு: சூன் 2, 1987, கொழும்பு) அல்லது சுருக்கமாக அஞ்ஜெலா மாத்யூஸ், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரர். 2004 ஆம் ஆண்டு ஹராரே யில் நடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, பஸ்னாஹிர துடுப்பாட்ட அணி, கொல்கத்தா நைட்ரைடர் அணி, இலங்கை ஏ அணி, கோல்ட் அணி, ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு, (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011. இல் உள்ளபடி). இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 35 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 72 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 72 திசாரா பெரேரா நாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரா சிரந்த பெரேரா (பிறப்பு: 3 ஏப்ரல் 1989, கொழும்பு) அல்லது சுருக்கமாக திசாரா பெரேரா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வயப துடுப்பாட்ட அணி கோல்ட் அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி) இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 16 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 54 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 16 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 54 பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்) ஹொங்கொங்கில் பாதுகாப்பு இலாகா (Security Bureau) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதான அங்கமாகும். இந்த இலாகாவின் கீழேயே சட்ட நடைமுறைப்படுத்தல், தேடல், காப்பாற்றுதல், பலவேறுப்பட்ட்ட சட்ட நிர்வாக முறைமைகள் மற்றும் ஹொங்கொங்கின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பொறுப்புகள் உள்ளன. இந்த இலாகா பாதுகாப்பு செயலரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. விடாது கறுப்பு விடாது கருப்பு சன் தொலைக்காட்சியில் 1997-98ல் ஒளிபரப்பப்பட்ட ஒரு தமிழ்த் தொலைக்காட்சித் தொடராகும். இந்திரா சௌந்திரராஜன் எழுதிய "விட்டு விடு கருப்பா" என்ற தொடர்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இத்தொடரை, நாகா இயக்கினார். மர்ம தேசம் தொடர் வரிசையில் இரண்டாவதான இது திகில்/உளவியல் கதைக்களத்தைக் கொண்டிருந்தது. சேத்தன், தேவதர்ஷினி, மோகன் வி. ராமன், சி. டி. ராஜகாந்தம் மற்றும் பலர் நடித்த இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தோட்டக்காரன் மங்கலம் என்ற சிற்றூரில் காவல் தெய்வமான கருப்பசாமி குற்றவாளிகளைத் தண்டிக்கிறது என்ற நம்பிக்கையின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையும், அறிவியலும் ஒன்றே எனக் கதை முடிக்கப்பட்டது. திலன் சமரவீர திலன் துசார சமரவீர (பிறப்பு: 22 செப்டம்பர் 1976, கொழும்பு) அல்லது சுருக்கமாக திலன் சமரவீர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார். இவர் 1998 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, கோல்ட் அணி, கந்துரட்ட துடுப்பாட்ட அணி, இலங்கை ஏ அணி, சிங்கள கிறிக்கட் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 2011. உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் 12 பெப்ரவரி 2011.இல் உள்ளபடி) இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 44 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 163 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 44 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 163 நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் வள்ளுவன் சங்ககாலத்து வள்ளலகளில் ஒருவன் ஆவார். இவன் சிறந்த போர்வீரனாகவும் விளங்கினான். இவனை ஒருசிறைப் பெரியனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், மருதன் இளநாகனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் குறிப்பிடுகிறார். மேலை நாட்டுக் கிறித்தவ தமிழ்த் தொண்டர் பட்டியல் கிறித்தவ சமயத்தை இந்திய நாட்டில் பரப்புவதற்காகவும், வணிக உறவு ஏற்படுத்தி, பொருளீட்டவும் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியா வந்த மேலை நாட்டவர் பலர் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பணி ஆற்றியுள்ளார்கள். "வடமொழி பெற்றெடுத்த சேய் தமிழ் மொழி" என்று பன்னெடுங்காலமாக எழுதியும் பேசியும் வந்தவர்களுடைய கருத்தை அவர்கள் மறுத்ததோடு கூட, தமிழ் மொழியின் தனித்தியங்கும் தன்மையை உலகுக்கு அறிவித்தனர். அகராதி, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, நாட்டுப்புறவியல், பழமொழிகள் தொகுப்பு, படைப்பிலக்கியம், ஒப்பிலக்கணம் போன்ற பல துறைகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்த தமிழ் அறிஞர்கள் அவர்களிடையே உண்டு. இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் மொழியை அச்சேற்றிய பெருமையும் மேலை நாட்டுக் கிறித்தவத் தொண்டர்களையே சாரும். தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு புது விடியலைக் கொணர்ந்த அவர்கள் போர்த்துக்கல், இத்தாலியா, பிரான்சு, செருமனி, ஓலாந்து, இங்கிலாந்து, எசுக்காத்துலாந்து, டென்மார்க்கு, வட அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து குடியேற்ற ஆதிக்க காலத்தில் இந்தியா வந்தவர்கள். வணிகத்திற்கென்று வந்தவர்கள் ஆட்சியாளராகவும் மாறினாலும், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு தமிழுக்கு தொண்டாற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது. அவர்களின் பெயர்கள் மேலை நாட்டு வடிவிலும் தமிழ் வடிவிலும் உள்ளன. அவர்கள் பிறந்த ஆண்டும் இடமும், சிறப்புப் பங்களித்த துறையும், இறந்த இடமும் ஆண்டும் தரப்படுகின்றன . இசுகார்பியன் நடவடிக்கை இசுகார்பியன் நடவடிக்கை (ஸ்கார்பியன் நடவடிக்கை, "Operation Skorpion") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் அச்சு நாட்டுப் படைகள் லிபியாவிலுள்ள ஆலஃபாயா கணவாயை நேச நாட்டுபடைகளிடமிருந்து கைப்பற்றின. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் 1941ல் தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சு நாட்டுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. லிபிய, எகிப்து நாட்டுப் பகுதிகளில் இரு தரப்புப்படைகளும் மோதி வந்தன. மே 1941ல் பிரீவிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட தாக்குதலின் மூலம் நேச நாட்டுப் படைகள் ஆலஃபாயா கணவாயைக் இத்தாலியப் படைகளிடமிருந்து கைப்பற்றின. அச்சு நாட்டு தளவாடப் போக்குவரத்துக்கு இக்கணவாய் மிக முக்கியமானதலால், ரோம்மல் அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். மே 26ம் தேதி ரோம்மலின் ஆப்பிரிக்கா கோரின் மூன்று படைப்பிரிவுகள் இக்கணவாயைத் தாக்கின. ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடித்த பிரிட்டானியப் படைகள் மறுநாள் சுற்றிவளைக்கப்படுவதைத் தவிர்க்க ஆலஃபாயாவை விட்டு வெளியேறி பின்வாங்கின. கணவாய் மீண்டும் அச்சுப் படைகள் வசமானது. இந்த மோதலில் 173 பிரிட்டானியப் படைவீரர்கள் மாண்டனர்/காயமடைந்தனர். மேலும் 8 கள பீரங்கிகள், 4 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் 5 காலாட்படை டாங்குகள் நாசமாகின. இசுகார்பியன் நடவடிக்கையின் வெற்றி மூலம், பிரீவிட்டி நடவடிக்கையில் இழந்த பகுதிகள் அனைத்தையும் ஆப்பிரிக்கா கோர் மீட்டுவிட்டது. துப்ருக் துப்ருக் (டொப்ருக், "Tobruk", அரபி:طبرق‎) லிபியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம். நடுநிலக்கடல் கரையோரமாக அல் புட்னான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 3,00,000. பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் அவர்கள் வாழ்ந்த காலனி ஒன்றும், உரோமப் பேரரசின் காலத்தில் ஒரு கோட்டை ஒன்றும் இங்கு இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்நகரம் டோப்ருக் முற்றுகையில் பெருத்த சேதமடைந்தது. போருக்குப் பின் மீண்டும் சீரமைக்கப்பட்டு இப்போது லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் (எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர், திசம்பர் 14, 1896 – சூலை 25, 1996) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இருமுறை தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், ஆறாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகவும், இரு ஆண்டுகள் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். வன்னியர் சாதியில் பிறந்த மாணிக்கவேலு சட்டக் கல்வி கற்றவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர் பின்னர், அதிலிருந்து பிரிந்த சுராஜ்யக் கட்சியில் இணைந்தார். 1926 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1937 வரை அப்பதவியில் நீடித்தார். 1935ல் சுராஜ்யக் கட்சி மீண்டும் காங்கிரசுடன் இணைந்து விட்டது. 1951ல் வன்னிய சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க காமன்வீல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இக்கட்சி வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டது. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் காமன்வீல் கட்சியும் ஒன்று (மற்றொன்று எஸ். எஸ். ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி). மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் காமன்வீல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1957 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1962 வரை அமைச்சராகப் பணியாற்றினார். 1962-64ல் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1964-70 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றினார். 1996ம் ஆண்டு மரணமடைந்தார். காமன்வீல் கட்சி காமன்வீல் கட்சி ("Commonweal party") 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கரால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவருகளுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த மாணிக்கவேலு காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் எஸ். எஸ். ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் காமன்வீல் கட்சியும் ஒன்று. மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் மூன்று இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் காமன்வீல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். இக்கட்சியும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ("Tamilnadu Toilers' Party", தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி) 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாட்டால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் இருந்த வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று. ராமசாமி படையாச்சி உட்பட 19 உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளர்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். தொடக்கத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையைக் காட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளர் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டு அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். இக்கட்சியும் காமன்வீல் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. கோமல் சுவாமிநாதன் கோமல் சுவாமிநாதன் (1935 - 1995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இவரது எழுத்தில் பாலச்சந்தரால் இயக்கபெற்ற தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம் ஆகும். கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 அவர்களுக்காகப் 'புதிய பாதை' என்ற முதல் நாடகத்தை எழுதினார். 1957 முதல் இறுதி வரை சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் வாழ்ந்தார். திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. அவரது சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. 1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆரம்ப காலத்தில் சில நகைச்சுவை நாடகங்களை எழுதிய இவர், பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார். 1980ல் இவர் எழுதிய [தண்ணீர் தண்ணீர்] என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார். வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்புப் புற்றுநோயால் அவதிப்பட்டார். தன் நாடகக் குழுவைக் கலைத்து விட்டு இதழியலில் ஈடுபட்டார். முன்னரே அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. சி. சு. செல்லப்பாவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப் பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது பணியாற்றிய மற்ற படைப்புகள், ஸ்டார்டஸ்ட் (விண்கலம்) ஸ்டார்டஸ்ட் ("Stardust") என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்புத் திட்டத்துடன் அனுப்பப்பட்டது. இதன் முதன்மைத் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நிறைவு செய்து, அது சேகரித்த மாதிரிகளைக் கொண்ட விண்கூடு பூமிக்குத் திரும்பியது. ஆக பறப்பில் உள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 சிறுகோளை ஆராய்வதற்காக அதன் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனை அடுத்து, அது 2011, பெப்ரவரி 11 ஆம் நாள் டெம்பெல் 1 ஐ அண்மித்தது. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, செப்டம்பர் 16, 1918 -ஏப்ரல் 3, 1992) ஒரு தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும். 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று. ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார். சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார். சோதனை (நிகழ்தகவு) நிகழ்தகவுக் கோட்பாட்டில், வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கொண்ட செயல் சோதனை எனப்படுகிறது. ஒரு செயலைச் செய்யும்போது நிகழக்கூடிய விளைவுகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். ஒரேயொரு முடிவுமட்டும் கொண்ட சோதனை தீர்மானிக்கப்பட்ட சோதனையாகும். (Deterministic experiment) ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைக் கொண்ட ஒரு சோதனையில், சோதனை நடப்பதற்கு முன்பாகவே எந்த முடிவு நிகழுமென முன்கூட்டியேத் தீர்மானிக்க முடியாதென்றால் அச்சோதனை குறிப்பில்வழிச் சோதனையாகும். (Random experiment) அறிவியல் மற்றும் அதுபோன்ற பிறதுறைகளில் உள்ள விதிகளை நிறுவ நடத்தப்படும் எல்லா சோதனைகளும் தீர்மானிக்கப்பட்ட "சோதனை"களாகும். ஒரு நாணயத்தைச் சுண்டுதலும், ஒருபகடையை வீசுதலும் சமவாய்ப்புச் சோதனைகள். ஒரு நாணயத்தைச் சுண்டினால் கிடைக்கக் கூடிய முடிவுகள் தலை அல்லது பூ என்று தெரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முயற்சியின்போது இரண்டில் எது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அதேபோல் ஒரு பகடையை வீசும்போது விழக்கூடிய சாத்தியமான எண்கள் 1,2,3,4,5,6 என்று தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு முயற்சியில் நிச்சயமாக இந்த எண் தான் விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. வாழப்பாடி ராமமூர்த்தி வாழப்பாடி கே. ராமமூர்த்தி (1940 - அக்டோபர் 27, 2002) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார். 1959இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜி. கே. மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றிப் பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார் ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். ஓரம்போகியார் ஓரம்போகியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 110 உள்ளன. அனைத்துமே மருதத்திணைப் பாடல்கள். இவை மருதத்திணையில் என்னென்ன சொல்லப்படும் என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல் உள்ளன. தலைவன் தலைவியை விட்டுவிட்டுப் பரத்தியிடம் செல்வது ஓரம் போதல்தானே? ஐங்குறுநூறு - மருதம் காஞ்சிமர நிழலில் மணலை நெல்லெனக் குவித்துக் குற்றிக்கொண்டு சிறுமியர் விளையாடும்போது அவர்களின் குடிப் பெருமையை அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வரால் மீனை அருந்திய சிரல் பறவை அங்குள்ள மருத மரத்தில் உறங்கும். தலைவனைப் பெரியோய் என விளித்துத் தோழி கூறுகிறாள். அறமும் பொருளும் வழாமல் இருக்கிறாய் என்னும் உன் தகவுடைமையை அறிவோம். நீயே பொய்த்தால் மெய் யாண்டு உளது? என வினவுகிறாள். (சூளுரையைப் பொய்யாக்காமல் மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து) எருமைக்கடா பொய்கையில் ஆம்பலை மேய்ந்துவிட்டுப் பொழுது இறங்கும் நேரத்தில் வரால்மீன் எழுந்தோடும்படி தன் கொம்புகளில் பகன்றைப் பூங்கொடிகள் சுற்றிய கோலத்தில் போருக்குச் செல்லும் மள்ளர்களைப் போல வெளியேறும் ஊரன் தலைவன். அவனது கல்லா மகளிர் பரத்தைமை தாங்க முடியவில்லை என்று நீ புலத்தல் தகுமோ என்கிறாள் தோழி தலைவியிடம். எப்போதும் புலந்துகொண்டே உன்னால் இருக்க முடியுமா? எனவும் வினவுகிறாள். உன்னிடமிருந்து செய்யோள்(திருமகளாகிய செல்வம்) நீங்குவிட்டாள். உன்னால் சரியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிதே உண்கிறாய். அவருக்குப் போடமுடியாமல் நீயே சமைத்து நீயே உண்கிறாய். அதனால் பால் இல்லாத திரங்கு முலையைச் சுவைக்கும் குழந்தையையும் அவர் எண்ணிப் பார்க்கவில்லை. என்ன செய்யலாம்? உன்னை நாடி வந்திருக்கும் அவரை ஏற்றுக்கொள் - என்கிறாள் தோழி. உழவர் வளைத்துப் பறித்துச் சூடிக்கொள்ளும் காஞ்சி. அது பயறு போல் மகரந்தக் காம்பினை உடையது. அந்தக் காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரன் தலைவன். தலைவி தாயாகி 'விழவுமுதலாட்டி' ஆகியுள்ளாள். எனவே தலைவனின் கொடுமையைத் தலைவி பொறுத்துக்கொண்டுள்ளாள் என்கிறாள் தோழி. (தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்) 'விழவு முதலாட்டி' என்பதில் உள்ள 'முதல்' என்னும் சொல் தலைவன் தலைவியரின் விதைமுதலாக வந்துள்ள குழந்தையைக் குறிக்கும். குழந்தைமுதல் தோன்றியுள்ளதை அக்காலத்திலேயே விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைவியோடு உடலுறவு கொண்டு மீளும் தலைவன் சொல்கிறான். அவள் தன் நீர்மையால் என்னை அணங்கினாள்(வருத்தினாள்) இத்தகையவள் என்று அவளைப் புனைந்துரைக்க என்னால் முடியாது. அவன் குறுமகள். அவளைத் தழுவினால் சில சொற்களை மட்டும் மென்மையாகப் பேசுகிறாள். கொக்கு நிற்பது போல் ஆம்பல் கூம்பி நிற்கும் மாலை வந்துவிட்டது. நானும் கொக்கைப் போலவும், ஆம்பலைப் போலவும் (ஆனால்) தனியே நிற்கிறேன் - என்கிறாள் தலைவி. தன்னைக் கொத்த வந்த குகுகிடமிருந்து கெண்டைமீன் தப்பித்துகொண்டது. பின்னர் அருகில் பூத்திருந்த தாமரை மொட்டைப் பார்த்துக் கொக்கோ என மருண்டது. அது போல ஒரு பாணன் பொய் சொல்ல எந்தப் பாணனைப் பார்த்தாலும் பொய்யன் என்றே தோன்றுகிறது. பரத்தை தலைவனைப்பற்றிப் பேசுகிறாள். பரத்தையர் உழுந்து போல் திரண்ட கழுத்தையும், கரும்பைப் போல் இனிக்கும் பருத்த தோளையும் உடையவர். அவர்களின் நலனை உண்டுவிட்டுத் துறந்து சென்றாயானால் 'பிரியமாட்டேன்' என்று பரத்தையரிடம் சொன்ன சூளுரை மிகவும் நன்றாயிருக்கிறது! பரத்தையை அறியேன் என்ற தலைவனுக்குத் தலைவி சொல்கிறாள். கூந்தலில் தொங்கும் மராம் பூ கமழ, கலிங்கம் என்னும் மேலாடை அசைந்துவர, வளையல் ஒலி கேட்கும்படி கைகளை வீசிக்கொண்டு அவள் தெருவில் மெல்ல மெல்ல அடியிட்டுச் சென்றாள். அவள் மேனியைச் சுணங்கு அழகு செய்தது. அதில் பூண் அணிந்திருந்தாள். நீ அவளது மார்பில் அழுத்திய பழம்புண்ணாகிய வடு அவளது தோள்களில் இருந்தது. அதனை அவள் அணிந்திருந்த காதுக்குழை தொட்டு மகிழ்ந்துகொண்டிருந்தது. (நானே பார்த்தேன். நீ இல்லை என்கிறாய்) - என்றாள். தலைமகள் ஊடல். நேற்று ஒரு பரத்தையிடம் சென்றாய். அவள் விழாக் கொண்டாட்டத்துக்குப் பின் (ஒப்பனை இல்லாமல்) மன்றில் கிடக்கும் சிலை போலக் கொட்டுமுழக்கம் இல்லாமல் இருக்கிறாள். இன்று நீ வேறொருத்தி மென் தோளை நாடிச் செல்கிறாய். பழக்குபவன் யானைமேல் இருந்துகொண்டு காழால் குத்தியதைப் பொறுக்கமாட்டாமல் அவனைக் கையால் எடுத்துக் கவளம்போல் வைத்திருக்கும் யானை போல நான் உன்னை வைத்திருக்கிறேன் - என்கிறாள். வெற்றிச் செய்தியை வேந்தன் தன் நாட்டு மக்களுக்குத் தூதனிடம் சொல்லி அனுப்புகிறான். அச்செய்தியைக் கொண்டுவரும் தூதனை வாழ்த்திப் பாணன் பாடுகிறான். வருகதில் வல்லே! வருகதில் வல்லே! அரசன் விடுத்த நற்செய்தியைச் சொல்ல வருகதில் வல்லே! தூதன் நூலரிமாலையை மிறையாகத் தலையில் அணிந்துகொண்டு வருகிறான். பகையரசனின் பல்முத்து மாலை அது. தனியே வருகிறான். காலால் நடந்தே வருகிறான். அதனைப் பார்த்த வாட்படை ஒதுங்கி நின்று அவன் கோலத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிக்கிறது. கடல் முத்துச் சிப்பி முத்துச் சிப்பிகள் (Pearl Oyster) இரு ஓடுடைய, நீர்வாழ் மெல்லுடலிகளாகும். கடலின் அடிப்பாகத்தில், பவளப்புற்றுக்கள், பாறைகள், மற்றும் கடினமான தரையுள்ள இடங்களில் ரோமம் போன்ற பிடிப்பான்கள் மூலம் பற்றிப் பிடித்து வாழ்பவை. இவை அடர்த்தியாக வாழும் இடங்களை பார் அல்லது முத்து வங்கிகள் என்று அழைப்பர். கரையிலிருந்து 20 மீட்டர் ஆழம் வரை நல்ல உப்பு நீர் உள்ள இடங்கள் இதன் வாழிடங்களாகும். இந்தியா, சீனா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இவை கூடுதலாக காணப்படுகின்றன. இந்தியாவில் மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுற்றிலும் இவை கூடுதலாக கிடைக்கின்றன. இவைகளில் பிங்க்டேடா பகேற்றா (Pinctada fucata) என்னும் பெயர் கொண்ட சிப்பி கூடுதலாக கிடைக்கக் கூடியதும், வளர்ப்பு உற்பத்திக்கு உகந்ததும் ஆகும். இந்த சிப்பியானது தண்ணீரை உடலினுள் எடுத்து சல்லடை செய்து அதிலிருக்கும் மிதவை உயிரினங்களையும், கரைந்து இருக்கும் புரத சத்து பொருள்களையும் உணவாக உட்கொள்ளும். இரண்டு வயது சிப்பி ஒன்று உணவிற்காக நாளொன்றிற்கு 1500 லிட்டர் தண்ணீரை அரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை 5 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மையுடையது.அப்போது சிப்பியின் விட்டம் 10 செ.மீ. வரை இருக்கும். முத்துச் சிப்பிகள் ஒருபால் உயிரினங்கள். பால் இன மாற்றம் நடைபெறுவதும் உண்டு. ஆணா, பெண்ணா என்பதை புறத் தோற்றத்தால் அறிய இயலாது. இவற்றின் மெல்லிய உடல் பலம் பொருந்திய இரண்டு ஓடுகளால் மூடப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது. ஓடுகள் திறந்து மூடும் தன்மை உடையவை. உள் இருக்கும் உடல் ஒரு மென்மையான மேலுறையால் மூடப்பட்டிருக்கும். முத்துச் சிப்பி உணவிற்காக தண்ணீரை உடலுக்குள் உறிஞ்சி சல்லடை செய்யும் போது தற்செயலாக சென்றடையும் மணல் துகள்கள் மற்றும் பொடிகளை வெளியேற்றும் தகவமைப்பு இவைகளுக்கு இல்லை. இதனால் இப் பொருட்களால் ஏற்படும் உறுத்தல் மற்றும் வேதனையை போக்க மேலுறை ஒருவகை திரவத்தை சுரந்து அந்த உறுத்தும் பொருளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு உறையை உருவாக்கும்.இதில் கால்சியம் கார்பனேட் என்ற வேதிப் பொருள் அதிகமாக இருப்பதாலும், பல அடுக்குகளாக அமைவதாலும் இது ஒளிரும் தன்மையையும் திடத் தன்மையைப் பெற்ற முத்தாக உருமாறுகிறது. நாட்கள் செல்லச் செல்ல இதன் பருமனும், ஒளிரும் தன்மையும் அதிகரிக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் முத்துக்கள் சிறியனவாகவும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் எல்லா சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. இதனால் ஒருசில முத்துக்கள் பெறுவதற்கு பலநூறு சிப்பிக்களை அழிக்க வேண்டிய நிலமை ஏற்படுகின்றது. அதை தடுப்பதற்காக வளர்ப்பு முறையில் சிப்பிகளில் முத்துக்களை உண்டாக்கும் தொழில் நுட்பத்தை சப்பானியர் முதன் முதலில் கண்டுபிடித்து அதைநடைமுறைப்படுத்தினர். இந்தியாவில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் 1973 ம் ஆண்டு இத்தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது சிப்பி குஞ்சுகளை பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யும் முறையும் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கையில் முத்து எவ்வாறு உண்டாகிறதோ அதையே மையமாக வைத்து வளர்ப்பு முறை முத்து உற்பத்தி செய்யப்படுகிறது. முதற்கட்டமாக சிப்பிகளின் குஞ்சுகளை அறைகளில் வைத்து கடலில் மிதவைகளில் தொங்கவிட்டு வளர்க்கின்றனர். வளர்ந்த பின் அவற்றை சேதனைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மேல்உறைத்துண்டால் மூடப்பட்ட ஒரு சிறுப் பொருளை நுட்பமான அறுவை சிகிட்சை மூலம் சிப்பியினுள் செலுத்தி அவைகளை மறுபடியும் கடலில் அதற்காக அமைக்கப்பட்ட வலைக்கூடுகளில் வைத்து வளர்க்கிறார்கள். இது 6 முதல் 12 மாதங்களில் பருமனடைந்து மதிப்பு மிக்க முத்தாக மாறுகின்றது. இந்திய முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இவை ஓரியன்டல் முத்துக்கள் (Oriental Pearls) என்று அழைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு முத்து ரூபாய் 1000 க்கு விலைப் போகின்றன. கடலில் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுப்பதனை சிலாபம் அல்லது முத்துக் குளித்தல் என்பர். இது தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு குமரி முதல் கீழக்கரை வரை மன்னார் வளைகுடாவில் நீண்டகாலமாக அரசு மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. முத்துகுழிக்கும் போது கிடைக்கும் சிப்பிகளில் 2/3 பங்கு அரசாங்கத்திற்கும் 1/3 பங்கு குளிப்பவர்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. 1961 ம் ஆண்டு முதல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்தல் தடை செய்யப்பட்டு இந்த வளம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் சுற்றுச் சூழல் சீரழிவுகளால் இதன் வளம் தற்போது குறைந்து கொண்டே வருகின்றது. பண்டைய காலத்திலேயே முத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாண்டிய நாடு முத்துக்குப் பெயர் பெற்றது. பலபடி ஒரே மாதிரியான கட்டமைப்பு அலகுகள், சங்கிலி போன்ற அமைப்பில், மீண்டும் மீண்டும் ஒழுங்கமைக்கப்படுவதால் உருவாகும் வேதிப்பொருட்கள் பலபடி அல்லது பல்பகுதியம் ("Polymer") எனப்படும். பலபடிகளின் தனிச்சிறப்பான இயல்புகள் காரணமாக, அவை நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இம்முக்கியத்துவம் நன்கு அறியப்பட்ட தொகுப்பு நெகிழி பயன்பாட்டிலிருந்து வாழ்வுக்குத் தேவையான இயற்கை உயிரிப் பலபடியாகிய கருவமிலம் (கருவியக்காடி) மற்றும் புரதம் வரை பரந்தது. பலபடிகளின் கட்டமைப்பு அலகுகளாக ஒருபகுதிய மூலக்கூறுகள் காணப்படுகின்றன. பல ஒற்றைப்படி மூலக்கூறுகள் மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவதால் பலபடிகள் தோன்றுகின்றன. இவை பகிர்பிணைப்பு (கோவேலன்ட் பிணைப்பு - Covalent bond) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கிரேக்கச் சொல்லான "πολύ- poly"- பல- என்ற பொருளுடையது. "μέρος - meros" என்பது உறுப்புகள் அல்லது அலகுகள் என்ற பொருள் கொண்டது. இதிலிருந்து Polymer-பலபடி என்ற சொல்லை 1833 இல் யோன்சு யாக்கோபு பெர்சீலியசு (Jöns Jacob Berzelius), உருவாக்கினார். இது "பாலிமெரிக்" (Polymeric) என்பதிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட கருத்தாகும். பலபடி தொகுக்கப்படும் வரலாறு 1811 இல் தொடங்கியது. அதாவது கென்றி பிறகொனட் (Henri Braconnot) தொகுப்பு செலுலோசை உருவாக்கியதையே இதன் தொடக்கம் எனலாம். 19ஆம் நூற்றாண்டில் இயற்கை நெகிழியின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிப்பதற்காக வல்க்கனைசுப்படுத்தல் (vulcanized) மேற்கொள்ளப்பட்டது. இது அரைத் தொகுப்புப் பல்பகுதியத்தின் முக்கியமானதொரு அடைவாகும்.1907 இல் லியோ பைக்கலான்ட் முதலாவது முழுமையான தொகுப்பு பலபடியான பக்கலைட்டை கண்டறிந்தார். இது பீனோலை போமல்டிகைட்டுடன் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அமுக்கத்தில் தாக்கமுற வைத்து உருவாக்கினார். பக்கலைட்டு 1909ஆம் வருடம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பலபடி செயற்பாடு என்பது ஓருறுப்பு மூலக்கூறுகள் சகப்பிணைப்பு (கோவேலண்ட்) மூலம் தொடர்ந்து இணைவதால் உண்டாகும் ஒரு சங்கிலிக் கட்டமைப்பகும். இத்தகைய பலபடி செயற்பாட்டின் போது ஓருறுப்பிலுள்ள சில வேதியக்கூட்டங்கள் இழக்கப்படும், எடுத்துக்காட்டாக பொலியெசுட்டர் (பொலி எத்திலீன் டெராப்பதலீன்)தொகுப்பை நோக்கினால்: இதன் ஓருறுப்பு டெரெப்தாலிக் காடி (terephthalic acid) (HOOC-CH-COOH) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (HO-CH-CH-OH) ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அலகு -OC-CH-COO-CH-CH-O-, இங்கு இரண்டு ஓருறுப்புகளும் இணையும் போது இரண்டு நீர் மூலக்கூறுகள் இழக்கப்படுகின்றன. ஆய்வுகூடத் தொகுப்பு முறைகள் இரு வகைப்படும். அவை படி வளர்ச்சி பல்லுறுப்பாக்கம், சங்கிலி வளர்ச்சி பல்லுறுப்பாக்கம் என்பனவாகும். சங்கிலி வளர்ச்சி பல்லுறுப்பாக்கத்தில் ஓருறுப்புக்கள் சங்கிலியை ஆக்கும் போது ஒரு தடவையில் ஒரு சங்கிலி மட்டும் இணையும் ஆனால் படி வளர்ச்சி பல்லுறுப்பாக்கத்தில் பல ஓருறுப்பு சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக இணையும்.இருப்பினும்,பாய்ம பலபடி முதலான புதிய முறைகள் இவ்விரு வகைகளோடும் பொருந்தாது. மூன்று வகையான உயிரிப் பலபடிகள் காணப்படுகின்றன. அவை: பல்சக்கரைட்டுக்கள், பல்பெப்டைட்டுக்கள், பல்நியுக்கிளியோடைட்டுக்கள் ஆகும். தமிழக ராஜீவ் காங்கிரசு தமிழக ராஜீவ் காங்கிரசு (தமிழக ராஜீவ் காங்கிரஸ்) 1998-2001 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. வாழப்பாடி ராமமூர்த்தியால் தொடங்கப்பட்டது. ராமமூர்த்தி நெடுங்காலமாக இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார். 1992ல் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி 1998ல் “தமிழக ராஜீவ் காங்கிரஸ்” என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 1998 பொதுத் தேர்தலில் அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணியில் இணைந்து இக்கட்சி போட்டியிட்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 1999 பொதுத் தேர்தலில் திமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணியின் அங்கமாக மீண்டும் இக்கட்சி போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. இதனால் 2001ஆம் ஆண்டு ராமமூர்த்தி கட்சியைக் கலைத்து விட்டு தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்து விட்டார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார் இது 2009 ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப்பின் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தலில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் 234 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 188 பொதுத் தொகுதிகள், 46 தனித் தொகுதிகள். தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு இந்தத் தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையராக குரேசியும், தமிழகத் தேர்தல் ஆணையராக பிரவீன்குமாரும் இருந்தனர். தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் தனது கெடுபிடிகளைக் கடுமையாக்கியது. குறிப்பாக சுவர் விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. கட்அவுட்கள் எங்கும் காணப்படவில்லை. ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கான 16 இலட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு அதற்கான கணக்குகளையும் முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அவ்வாறு கணக்கு காட்டாதவர்கள் வெற்றிபெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று எச்சரித்தது. வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தேர்தல் ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் நிகழ்பட பதிவுக் கருவிகளுடன் சென்று படம்பிடித்தனர். குறிப்பாக வேட்பாளர்கள் பேசுவதையும், செலவுகளையும் கண்காணித்தனர். கட்சிக்காரர்களுக்கு அல்லது பிரச்சாரத்தில் வரும் தொண்டர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதையும் படம் பிடித்தனர். சிற்றுண்டிகளில் 100 சாப்பாடு பொட்டலங்களுக்கு மேல் கொடுத்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் எங்கும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத பணம் 54 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது. வங்கிகளில் ஒருநாளைக்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் விசாரிக்கப்படும் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். குறிப்பாக வன்முறை இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தேறியது. வாக்களிக்க வாக்காளர் அட்டை அவசியமின்றி தேர்தல் ஆணையம் வழங்கிய சீட்டு மட்டுமே போதும் என்று அறிவித்திருந்ததும் வாக்காளர்களுக்கு வசதியாய் இருந்தது. வாக்களித்தவர்கள் 78 சதவீதமாகும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை திமுக தலைவர் எதிர்த்தார். கெடுபிடிகள் நெருக்கடி நிலை காலத்தை நினைவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கு சாதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன. திமுக தலைமையிலான கூட்டணியில காங்கிரசு, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முசுலீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை இடம் பெற்றிருந்தன. இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜக, ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்த மூன்றாவது கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது. வேறு சில சிறிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலினால் முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது; மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்தது. ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 77.8 % வாக்காளர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் இதுவே மிக அதிகமான வாக்குப்பதிவு சதவிகிதம். வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொப்புள் கொடி இரத்தம் குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியில் இருக்கும் சுமார் 80 மி.லி இரத்தம் தொப்புள் கொடி இரத்தம் ("Umblical cord blood") எனப்படுகின்றது. இந்த இரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம். இந்த இரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து சேமித்து வைத்தால் இரத்த சம்பந்தமாக ஏற்படும் 80 க்கும் மேற்பட்ட நோய்களை இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கலாம். தொப்புள் கொடி இரத்தத்தை சேமிக்க பல தொப்புள் கொடி இரத்த வங்கிகள் இருக்கின்றன. குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியிலிருந்து பாதுகாப்பான முறையில் சராசரியாக 80 மி.லி. இரத்தம் இரத்தப்பைகளில் சேகரிக்கப்பட்டு உடனடியாக சேமிப்பு நிலையாங்களுகில் கொண்டு செல்லப்பட்டு திரவ நைட்ரசனைப் பயன்படுத்தி -196 டிகிரியில் பாதுகாக்கப்படுகின்றன. சராசரியாக 21 ஆண்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த காலங்களில் இரத்தம் பெறப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான நோய்கள் கண்டறியப்பட்டால் அந்த குழந்தையின் உடலில் இந்த ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவை உடனடியாக அந்த குறைபாடுள்ள செல்களை உற்பத்தி செய்து நோயை குணமாக்கும். வளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும் சேமித்து வைக்கின்றன. இந்தியாவில் தனியார் நிறுவனங்களே தற்போது சேமித்து வருகின்றன. இதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களிடம் தெரிவித்தால் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் வழியாக அவர்கள் தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து சென்று பாதுகாப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது இரத்த வங்கிகளை தொடங்கி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு ("History of the United Kingdom") என்பது ஐக்கிய இராச்சியம் என்ற அரசியல் அலகின் வரலாற்றைக் குறிக்கும். ஐக்கிய உடன்படிக்கை எனும் உடன்படிக்கை 1707, மே முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதன் மூலம் இங்கிலாந்து உடன் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அரசியல் அடிப்பைடையில் இணைந்தன. இந்த உடன்படிக்கையின் படி பாரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சியம் என அழைக்கப்பட்டது. கெல்ட்டியர் கெல்ட்டியர் ("Kelts") அல்லது செல்ட்டியர் ("Celts") எனப்படுவோர் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர்.. இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர். கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது. ஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் "கெல்டிக்" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். ("கெல்டிக்" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே "கெல்டிக்ஸ்" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் "கெல்டிக்" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை "பிரிட்டன் கெல்டிக்" என்று அழைத்தனர். முதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட் பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது. "கெல்டிக்" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலக்கட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். "கெல்டிக்" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் "பாபேரியன்" எனப்படுகிறது. "பாபேரியன்" என்றால் தமிழில் "காட்டுமிராண்டி" என்பதாகும். அதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர். யாக்கூப் அசன் சேத் மெளலானா யாக்கூப் அசன் சேத் (Yakub Hasan Sait, 1875 – 1940) ஒரு தமிழக தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1875ல் நாக்பூரில் பிறந்த யாக்கூப் அசன் சேத், அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1893ல் பெங்களூரில் வர்த்தகராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1916ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தென்னிந்திய வர்த்தக சபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை நகர் மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அகில இந்திய முஸ்லிம் லீகினை உருவாக்கியவர்களுள் சேத்தும் ஒருவர். கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் பங்கு கொண்டு சிறை சென்றார். ஆனால் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 1937 தேர்தலுக்கு சிறிது காலம் முன்னர் முசுலிம் லீகை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். முசுலிம் லீகின் இரு-தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம். 1937-39 காலகட்டத்தில் சி. ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1940ல் மரணமடைந்தார். எம். ஆர். சேதுரத்தினம் எம். ஆர். சேதுரத்தினம் ஐயர் என்றறியப்படும் மனத்தட்டை ராமகிருஷ்ண சேதுரத்தினம் ஐயர் (ஜனவரி 2 1888 - ?) ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராக மார்ச் 16, 1928 முதல் அக்டோபர் 27, 1930 வரை பணியாற்றியவர். திருச்சியில் பிறந்த சேதுரத்தினம் ஐயர், குளித்தலைப் பள்ளி, தேசிய உயர்நிலைப்பள்ளி திருச்சி, புனித வளனார் பள்ளி திருச்சி ஆகியவற்றில் கல்வி கற்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து பிரிந்து போன சுவராஜ் கட்சியில் இணைந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கினார். திருச்சி மாவட்டக் குழுவிற்கு (ஜில்லா போர்டு) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920, 1923 மற்றும் 1926 தேர்தல்களில் திருச்சி பொதுத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928ல் ப. சுப்பராயன் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது அதற்கு உதவினார். சைமன் கமிஷன் சென்னை வந்த போது அரசு அதற்கு வரவேற்பளித்தது. அதனை சுவராஜ் கட்சியினர் எதிர்த்தனர். அரசின் முடிவை எதிர்த்து, சுப்பராயனின் அமைச்சர்கள் ஆற்காடு ரங்கநாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர். அரசு கவிழாமல் தப்பிக்க சுப்பராயன் நீதிக்கட்சியின் ஆதரவையும் சில் சுவராஜ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் நாடினார். சேதுரத்தினம் ஐயர் சுப்பராயனுக்கு ஆதரவளித்து அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார். இதனால் சுவராஜ் கட்சியினர் அவரைத் துரோகி என்று பழித்தனர். ஐயர் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடலூர் சண்டை (1783) கடலூர் சண்டை ("Battle of Cuddalore") என்பது பிரிட்டிஷ் கப்பற்படைக்கும் அதைவிட சற்றே சிறிய பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். 20 ஜூன் 1783 அன்று இந்த மோதல் நடைபெற்றது. இது கடலூர் முற்றுகையின் ஒரு பகுதியாகும். கடலூர் சண்டை கடலூர் சண்டை என்பது தென்னிந்திய நகரான கடலூர் அருகே நிகழ்ந்த பின்வரும் மோதல்களைக் குறிக்கிறது: கடலூர் முற்றுகை கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. சி. உதயகுமார் சின்னராசா உதயகுமார் ஈழத்து இளம் படைப்பாளிகளில் ஒருவர். கவிதை புனைகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். இவர் கூனந்தோட்டம், சமரபாகுவைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யா/விக்னேஸ்வரா கல்லூரி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிகளிலும் உயர்தரத்தை யா/ சிதம்பராக் கல்லூரியிலும் பயின்றார். இவரது படைப்புக்கள் இதயஒலி(கையெழுத்துச் சஞ்சிகை),ஞானம், மல்லிகை,படிகள்,ஜீவநதி,இருக்கிறம்,செங்கதிர்,தினக்குரல் ,வீரகேசரி,உதயன்- சஞ்சீவி,வலம்புரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பணிபுரிகின்றார். இங்கிலாந்தின் வரலாறு இங்கிலாந்தின் வரலாறு (History of England) என்பது ஐரோப்பிய கண்டத்தில் பல சிறப்புகள் பெற்றதும், இன்று உலகெங்கும் பரவியிருக்கும் அங்கில மொழி தோற்றம் பெற்றதுமான இங்கிலாந்தின் வரலாறாகும். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியம் என அழைக்கப்படும் அரசியல் பரப்புக்குள், பாரிய பிரித்தானியா அல்லது பெரிய பிரித்தானியா என அழைக்கப்படும் தீவின் வரலாற்றையே "இங்கிலாந்தின் வரலாறு" எனப்படுகிறது. இங்கிலாந்து என்பது பாரிய பிரித்தானியாவின் ஒரு ஆட்சி பகுதி அல்லது நாடு மட்டுமே என்றப்போதும், பெரிய பிரித்தானியா தீவு மற்றும் அதன் அயல் குட்டித்தீவுகள் போன்றவற்றையும் உள்ளடக்கிய நிலப்பரப்பின் ஒரு நீண்ட வரலாற்றை "இங்கிலாந்தின் வரலாறு" எனப்படுகிறது. இந்த நிலப்பரப்பின் வரலாறு பல ஆக்கிரமிப்புக்களையும், பல்வேறு மொழிக்கலப்புகளையும், புரட்சியையும், உலகையே தன்வசப் படுத்திய வீரமிகுந்த வரலாற்றையும் கொண்டதாகும். இந்த நிலம் பல நூற்றுக்கணக்கான போர்களை சந்தித்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்ற போர்களால் இரத்தமும் வியர்வையும் கலந்த ஒரு நீண்ட வரலாற்றை இங்கிலாந்து கொண்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்று பாரிய பிரித்தானியா என அறியப்படும் தீவின் நிலத்தகடு, ஐரோப்பிய நிலத்தகட்டுடன் இணைந்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட கி.மு 15,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் பனிப்பாறைகளாக இருந்த இந்நிலப்பரப்பு, மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது. கிட்டத்தட்ட கி.மு 8000 - கி.மு 6500 வரையான காலப்பகுதிகளில் ஐரோப்பிய நிலத்துடன் இணைந்திருந்தப் பனி பிரதேசத்தின் பனியுருகி, கடல் மட்டம் உயர்ந்ததால் தீவாக தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றே, தற்போது "பிரித்தானியா" என்றழைக்கப்படும் தீவாகும். அதனைத் தொடர்ந்து கி.மு 3000 புதிய கற்காலத்தின் தோற்றம் (New Stone Age begins) ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கெல்டிக் மக்கள்; குழுமங்களாக பிரித்தானியாவில் வந்து குடியேறத் தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாகவும் போர் குணமிக்கவர்களாகவும் விளங்கினர். கி.மு 2100 வெண்கலக் காலத்தின் தோற்றம். கி.மு 2050 மக்கள் வெண்கலத்திலான உலோக வேலை, செப்பு, தகரம் போன்றவற்றைப் பயன்படுத்திய மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். பிரித்தானிய பூர்வக்குடிகளான கெல்டிக் மக்களும் வெண்கலத்திலானக் கருவிகள், ஆயுதங்கள் செய்து பழக்கப்பட தொடங்கினர். கி.மு 1200 பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோன்றிய காலக்கட்டமாகும். வணிகத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கின. கி.மு 750 இரும்புக் காலத்தின் தோற்றம் (Iron Age); வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பு பொருற்களை பயன்படுத்தத் தொடங்கிய காலக்கட்டமாகும். அக்காலக் கட்டத்தில் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 150,000 மக்கள் தொகையினர் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. அதன் பின்னர் கி.மு 500 மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தும் மேலும் சில இனக் குழுமங்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறினர். அவர்களையும் கெல்டிக் இனக் குழுமத்தின் ஒரு அங்கத்தினராகவே பார்க்கப்படுகிறது. அவர்களும் விவசாயிகளாகவும், போர் குணமிக்கவர்களாகவும் இருந்தனர். இன்று பாரிய பிரித்தானியா என அழைக்கப்படும் தீவு தோன்றியதன் பின்னர், ஐரோப்பியப் பகுதிகளில் இருந்த மக்கள் இந்த நிலப்பரப்பிற்கு குடிப்பெயரத் தொடங்கினர். இந்த மக்களையே "கெல்டிக் மக்கள்" என்று அழைக்கப்படுகின்றது. கெல்டிக் எனும் சொல் உரோமானியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். "கெல்டிக்" என்றால் ஆங்கிலத்தில் "பாபேரியன்" என்பதாகும். அதன் தமிழ் பொருள் "காட்டுமிராண்டி" என்பதாகும். இதனடிப்படையில் ஐரோப்பிய நிலப்பரப்புகளில் வசித்தப் பூர்வக்குடிகள் எல்லோரையும் "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் வரையரை செய்தனர். இருப்பினும் ஒவ்வொரு கெல்டிக் இனக்குழுமங்களுக்கும் வெவ்வேறு பெயரையும் முன்னொட்டாக இட்டே "கெல்டிக்" என்று அழைத்தனர். இன்றையப் பிரித்தானியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளை பிரிட்டன் அல்லது "பிரிட்டன் கெல்டிக்" என்றே அழைத்தனர். இவர்களே பிரித்தானியாவின் பூர்வக் குடிகளாவர். இவர்கள் பேசிய மொழியையும் "கெல்டிக் மொழி" என்றே அழைக்கப்படுகின்றது. இந்த கெல்டில் பூர்வக்குடிகளின் வாழ்வியல் வேட்டையாடுதல், கால்நடைகள் வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்றவைகளாகும். தங்களது விவசாய நிலங்களில் சிறியச் சிறிய கிராமங்களாக அமைத்து குழுமங்களாக வாழ்ந்தனர். வேட்டையாடுதல் அவர்களது முதன்மைப் பழக்கங்களின் ஒன்றாக இருந்தது. அதேவேளை ன் போர் விரும்பிகளாகவும், இரும்புகளினால் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை செய்யக் கூடியவர்களாவும் விளங்கினர். பிரித்தானியாவில் குடியேறிய இனக்குழுமத்தினர் அனைவரையும் கெல்டிக் என ஒரே பெயர்கொண்டு அழைத்தாலும், அவர்களிடையே பல வேறுபட்ட இனக்குழுமங்கள் இருந்தன. இவர்களிடையே தொடர்ச்சியான சண்டைகளும் நடந்தவண்ணமே இருந்தது. அதேவேளை இறைநம்பிக்கை நம்பிக்கை உள்ளவர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும் இருந்தனர். வானம், மின்னல், சூரியன் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுளாக வழிப்பட்டனர். அதாவது பலகடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் ஆகும். கிட்டத்தட்ட 400 மேற்பட்ட தெய்வங்கள், தேவதைகளை அவர்களது வழிப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகின்றது. இராஜேஸ்கண்ணன் இராஜேஸ்கண்ணன் ஈழத்து எழுத்தாளர் மற்றும் கவிஞர். இராஜேஸ்கண்ணன் வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 'சாத்வீக பிரஸ்தம்' இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியை தற்போதைய முகவரியாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, விமர்சனம், சமூகவியல், ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஈழத்தில் வெளிவரும் மல்லிகை, ஞானம், ஜீவநதி, தினக்குரல், சுடர் ஒளி, இடி மற்றும் தமிழகச் சஞ்சிகையான தாமரை ஆகியவற்றில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியற்றுறை விரிவுரையாளராக உள்ளார் பாடசாலைக் கல்வியை யா/கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியற்றுறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியில் டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார். பேட்டில்ஆக்சு நடவடிக்கை பேட்டில்ஆக்சு நடவடிக்கை (பேட்டிலாக்ஸ் நடவடிக்கை, "Operation Battleaxe") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் நேச நாட்டு படைகள் லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த அச்சு நாட்டுப் படைகளை விரட்ட முயன்று தோற்றன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் 1941ல் தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சு நாட்டுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. லிபிய, எகிப்து நாட்டுப் பகுதிகளில் இரு தரப்புப்படைகளும் மோதி வந்தன. ரோம்மலின் படைகள் டோப்ருக் கோட்டையை நீண்ட நாட்களாக முற்றுகையிட்டிருந்தன. இந்த முற்றுகையை முறியடிக்கவும், லிபியாவின் கிழக்குப் பகுதியான சிரனைக்காவிலிருந்து அச்சு நாட்டுப் படைகளை விரட்டவும் நேச நாட்டுப் படைகள் ஜூன் 15ம் தேதி பேட்டில்ஆக்சு நடவடிக்கையை மேற்கொண்டன. இம்மாதிரி ஒரு தாக்குதல் நிகழும் என்பதை எதிர்பார்த்த ரோம்மல் இதற்கு முன்னர் நடந்த பிரீவிட்டி நடவடிக்கையில் கிடைத்த படிப்பினைகளைக் கொண்டு தனது படைநிலைகளை பலப்படுத்தியிருந்தார். ஜூன் 15ம் தேதி வான்வழி குண்டுவீச்சுடன் இத்தாக்குதல் தொடங்கியது. மூன்று பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் அச்சு நாட்டு படைநிலைகளைத் தாக்கின. கப்பூசோ கோட்டையை விரைவில் கைப்பற்றினாலும் முக்கியமான ஆலஃபாயா கணவாயை அவற்றால் கைப்பற்ற இயலவில்லை. அதே போல அஃபீத் முகட்டிலும் அவை முறியடிக்கப்பட்டுவிட்டன. முதல் நாள் சண்டையில் பிரிட்டானியப் படைபிரிவுகளின் பெரும்பாலான டாங்குகள் சேதமடைந்திருந்தன. ஜூன் 16ம் தேதி இரு தரப்பினரும் மீண்டும் பல இடங்களில் மோதிக் கொண்டனர். ஆனால் யாருக்கும் தெளிவான வெற்றி கிட்டவில்லை. ஆலஃபாயா கணவாய் ஜெர்மானியர் வசமும், கப்பூசோ கோட்டை பிரிட்டானியர் வசமும் இருந்தன. நேரடியாக மோதுவதால் பயனில்லை என்பதை உணர்ந்த ரோம்மல், மறுநாள் நேச நாட்டுப் படைகளைச் சுற்றி வளைத்து பக்கவாட்டிலிருந்தும் பின்புறமிருந்தும் தாக்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். தங்களுக்கு நிகழவிருந்த அபாயத்தை உணர்ந்த பிரிட்டானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியப் படைவளையம் இறுகும் முன்னர் பின்வாங்கி ரோம்மலின் பொறியிலிருந்து தப்பினர். மூன்று நாள் சண்டையில் அவை பெரும் சேதமடைந்திருந்தால், ரோம்மலின் அடுத்தகட்ட தாக்குதலைச் சமாளிக்க பலமில்லாது போயின. ஆயினும், ரோம்மலின் தளவாட மற்றும் எரிபொருள் போக்குவரத்து சிக்கல்களால் அவரால் பின்வாங்கும் பிரிட்டானியப் படைகளை விரட்டித் தாக்க முடியவில்லை. பேட்டிலாக்சு நடவடிக்கை பிரிட்டானியப் படைகளுக்குப் பெரும் தோல்வியாக அமைந்தது. ரோம்மலின் படைகளை விரட்டக் கிளம்பிய அவை, மூன்று நாட்களுள் அவரது படைகளால் விரட்டப்படும் நிலையில் இருந்தன. இத்தோல்வியால் கோபமடைந்த ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டானிய தளபதி வேவல் பிரபுவை தளபதி பதவியிலிருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக இந்தியாவிலிருந்த பிரிட்டானியப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஆச்சின்லெக்கை வடக்கு ஆப்பிரிக்க பிரிட்டானியத் தளபதியாக நியமித்தார். முந்தைய வரலாறு (பிரித்தானியா) பிரித்தானியாவின் முந்தைய வரலாறு (Prehistoric Britain) என்பது பிரித்தானியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் வரலாற்றைக் குறிக்கும். பிரித்தானியாவின் முதல் மனிதன் இரண்டரை (2,500,000) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அக்கால ஆதிமனிதர்கள் கற்கலால் ஆன சாதாரண ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடியவர்களாகவும் நம்பப்படுகிறது. அதற்கான எழுத்தாவணங்கள் எதுவும் இல்லாதப் போதும், அதற்கான சான்றுகளாக கல்லறைகள், நினைவுச்சின்னங்கள், மனிதக் கைத்திறனால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் வட்டக்கற்கள் போன்றன இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்கால மனிதர்களின் கல்லறைகள், பயன்படுத்திய கருவிகள் போன்றன பிரிட்டிசு தீவின் எல்லாவிடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. 500,000 அண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியாவில் இருந்து மக்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறினர். கி.மு 6,500களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இருந்த நிலத்தகடு, ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் பனியுருகி கடல் பரப்பு விரிவடைந்ததால், ஐரோப்பாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நிலத்தகட்டில் இருந்து பிரித்தானியா பிரிந்து ஒரு தனி தீவாகியது. கி.மு 3000 ஆண்டளவில் புதிய கற்காலத்தின் ஆரம்பங்களின் போது ஐரோப்பிய பகுதிகளில் இருந்து விவசாயம் செய்யும் மக்கள் குழுமங்கள் பிரித்தானியாவிற்கு வந்து குடியமர்ந்தனர். கி.மு 3000ம் ஆண்டளவில் முதலாவது வட்டக்கற்கள் எழுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய பாறைகளை கொண்டுவந்து வட்டவடிவிலான கட்டடங்களை உருவாக்கப்பட்டுள்ளன. இவை இன்றும் பிரித்தானியா செல்வோரின் முக்கிய பார்வை இடங்களாக உள்ளன. கி.மு 2100 ஆண்டளவில் வெண்கலக் காலம் ஆரம்பமானது. பிரித்தானியாவில் குடியேறிய மக்கள் வெண்கலத்திலான கருவிகள், ஆயுதங்கள் உருவாக்கத் தொடங்கினர். கி.மு 2000 ஆண்டளவில் வட்டக்கற்கள் (Stonehenge) எழுப்பும் காலம் நிறைவடைந்தது. கி.மு 1650 ஆண்டளவில் பிரித்தானியா உள்ளூருக்குள்ளும், பிரித்தானியாவின் அன்மித்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் ஏற்பட்டன. கி.மு 1200 களில் பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோற்றம் பெறத்தொடங்கின. கி.மு 750 களில் இரும்புகாலத்தின் தோற்றத்துடன் வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பில் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்கத் தலைப்பட்டனர். இரும்பு காலம் பிரித்தானிய மக்கள் மத்தியில் ஒரு பாரிய மாற்றத்தை அதேவேளை முன்னேற்றத்தினை ஏற்படுத்தின. இக்காலத்தில் பிரித்தானியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 150,000 இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐரோப்பிய பகுதிகளில் இருந்து பல கெல்ட்டியர் மக்கள் குழுமங்களாக வந்து பிரித்தானியாவில் குடியேறத்த்தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாகவும், கால்நடைகள் வளர்ப்பவர்களாகவும் இருந்தனர். பிரித்தானியாவுக்குள் வந்த இப்புதிய கெல்ட்டியர் மக்கள் சிறு கிராமங்களை அமைத்து வசிக்கலானர். இருப்பினும் இவர்கள் மிகவும் போர் விரும்பிகளாக இருந்தனர். ஏற்கெனவே பிரித்தானியாவுக்குள் இருந்த கெல்ட்டியர் இனக் குழுமங்களுடன் அடிக்கடி போர் புரிந்தனர். தாக்க காரணி தாக்க காரணி ("Impact factor") என்பது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரை இதழ்களில் வெளியாகும் பதிப்புகளை சார்ந்த மதிப்பீடாகும். இது பல்வேறு துறை சார்ந்த ஆய்விதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதை மதிப்பிடவும் பயன்படுகிறது. யூச்சீன் கார்ஃபீல்டூ( Eugene Garfield) என்பவர் இதை உறுவாக்கினார். இவர் அறிவியல் அறிதல் நிறுவனம் (Institute for Scientific information) என்ற நிறுவனத்தை நிறுவினார். அது இன்று தாம்சன் ராய்ட்டர்சு (Thomson Reuters) என்னும் குழுமத்தின் பங்காக இருந்துவருகிறது. தாக்க காரணியை ஆண்டுதோறும் தாமசு ரியுட்டர்சு ஆய்விதழ் மேற்குறிப்பறிக்கையில் இணையும் ஆய்விதழ்களுக்குக் கணக்கிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஒரு ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சராசரியாக எவ்வளவு முறை (பிற ஆய்வுக் கட்டுரைகளில்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதே அந்த இதழின் அவ்வாண்டுக்கான தாக்க காரணியாகக் கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, ஓர் அறிவியல் இதழில், 2006-இல் n கட்டுரைகளும், 2007-இல் n கட்டுரைகளும் வெளியாகி இருந்து, அந்த n கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k​​​ தடவையும், n கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k தடவையும் மற்ற ஆய்வாளர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டால், 2008-இல், தாக்கக் காரணி = (k + k)/(n + n) என்று கணிக்கப் படும். பிரித்தானிய கெல்ட்டியர் பிரித்தானிய கெல்ட்டியர்(Celts in Britain) என்பவர் கி.மு 750 ஆண்டு முதல் கி.மு 12 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பியா முழுதும் மிகவும் பலமிக்க ஒரு மக்கள் குழுமங்களாக வாழ்ந்தவர்களாவர். இந்த கெல்ட்டியல் இனக்குழுமத்தினர் இடையே பல்வேறு இனப்பிரிவுகள் அல்லது இனக்குழுமங்கள் இருந்தன. இனக் குழுமங்களிடையே பேச்சு வழக்கு வேறுப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட ஒத்த பேச்சு வழக்கு காணப்பட்டன. "கெல்டிக்" எனும் சொல் வழக்கு கிரேக்கர்களிடம் இருந்து தோன்றிய ஒரு சொல்லாகும். "கெல்டிக்" என்றால் ஆங்கிலத்தில் இன்றையப் பொருள் "பாபேரியன்" என்பதாகும். தமிழில் "காட்டுமிராண்டி" எனப்படும். இந்த கெல்டிக் இனக் குழுமத்தினர் அக்காலப்பகுதியில் பண்படாத, வெட்டு குத்து என்று மிகவும் கொடூரமானவர்களாகவே இருந்துள்ளனர். அதனாலேயே அந்த இனக்குழுமங்களை எல்லாம் கிரேக்கர்கள் "கெல்டிக்" என்று அழைத்தனர். அதன் பின்னர் ஐரோப்பியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உரோமர்களும் அதே சொல் கொண்டே இந்த இனக்குழுமங்களை அழைத்தனர். இந்த கெல்ட்டியர் இனக்குழுங்களில் பல்வேறு கெல்ட்டியர் பிரிவுகள் இருந்தன. போன்றவை அவற்றின் முக்கிய சில பிரிவுகளாகும். இதில் பிரிட்டன் கெல்ட்டியர் என்போரே பிரித்தானியாவில் குடியேறி இருந்த கெல்ட்டியர் ஆவர். கி.மு 55 யூலியஸ் சீசரின் தலைமையில் பிரித்தானியாவுக்கு ஒரு படையெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரித்தானியாவின் சில பகுதிகளை கைப்பற்றிய யூலியஸ் சீசர் பின்னர் அவற்றை விட்டுவிட்டு வெளியேறினார். பிரிட்டனியர் பிரிட்டனியர் (Britons) என்போர் பிரித்தானியாவில் குடியேறிய கெல்ட்டிய இனக் குழுமத்தினர் ஆவர். ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுமங்களையும் கி.மு காலங்களில் கிரேக்கர் அழைத்த ஒரு பெயரே கெல்ட்டியர் என்பதாகும். அதே பெயர் உரோமர்களாலும் வழங்கப்பட்டது. இந்த கெல்ட்டிய இனக்குழுமத்தினரிடையே பல் வேறு பிரிவுகளும் இருந்தன. அதனடிப்படையில் பிரித்தானியாவில் குடியேறி இருந்த கெல்ட்டியரை உரோமர்கள் அழைத்தப் பெயரே "பிரிட்டன் கெல்டிக்" என்பதாகும். சுறுக்கமாக பிரிட்டனியர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த பிரிட்டனியரின் வழித்தோன்றல்கள் தற்போது வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் வசிக்கின்றனர் எனப்படுகின்றது. ஐங்குறுநூறு - மருதம் ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். அடுத்த இரண்டாவது அடியில் தலைவி தன் விருப்பத்தைத் (வேட்கையைத்) தெரிவிக்கிறாள். வேழத்தை வயலைக் கொடி சுற்றும். வேழம் கரும்பு போல் பூக்கும். அதன் பூ வெண்குதிரையின் பிடரிமயிர் போல இருக்கும். வேழம் வளர்ந்து அருகிலுள்ள மாந்தளிரை மடக்கும். புனலாடும் மகளிர் புணர மறைவிடமாகி உதவும். அப்போது அவர்களின் நெற்றிக் குங்குமம் அதன் வேரில் ஒட்டிக்கொள்ளும். அதன் பூ வானத்தில் பறக்கும் குருகின் சிறகு போல் இருக்கும். செருந்திப் பூவோடு வேழம் மயங்கிக் கிடக்கும். உதிர்ந்த மாம்பூ புணர்ந்தோர் உடம்பு மணம் கமழ, அதன்மேல் வேழப்பூ உதிர்ந்து மணத்தை மறைக்கும்.மாம்பூவில் மொய்க்கும் வண்டின் சிறகு போல் பூக்கும். வேழம் பூக்கும் ஊரன் அவன். அவனை எண்ணி என் தோள், கண் முதலான உறுப்புக்கள் நலன் இழந்தன - என்கிறாள் தலைவி. களவன் ஆம்பல் கொடியை நறுக்கும். அதன் வேரில் பதுங்கும். ஆவனும் நானும் களவனை விளையாடும்படி ஆட்டுவித்துப் பூக் கொய்து விளையாடினோம். முதலை தன் குட்டிகளையும், களவனையும் தின்னும். வயலைக் கொடி, வள்ளைக்கொடி, செந்நெல் கதிர், செந்நெல் முளை ஆகியவற்றைக் களவன் அறுக்கும். தன் வளைக்குள் நெல்லைச் சேமிக்கும். அந்த வளையில் ஓடி ஒளிந்தகொள்ளும். - என நண்டின் இயல்புகள் இங்குக் கூறப்படுகின்றன. திருட்டுத்தனம் செய்யும் நண்டு போல் பரத்தையோடு திருட்டுத்தனம் செய்யும் ஊரனுக்காக உறுப்பு நலனை இழக்கலாமா? என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இதில் உள்ள 10 பாடல்களும் 'அம்ம வாழி தோழி மகிழ்நன்' என்று தொடங்கித் தலைவன் பிறரோடு மகிழ்ச்சியில் திளைப்பவனாக வாழ்வதைத் தலைவி தன் தோழிக்குச் சொல்லுவதாக அமைந்துள்ளன. இதில் உள்ள 10 பாடல்களில் செய்திகள் உள்ளுறையாகச் சொல்லப்படுகின்றன. உள்ளுறை தெரியாத பொருளைத் தெளிவாக்குவதற்கு உவமை கையாளப்படும். உவமை பல வகையில் அமையும். அவற்றுள் உள்ளுறை என்பது ஒருவகை. உள்ளுறை என்பது அகத்திணைப் பாடல்களில் அமைந்திருக்கும். புறத்திணைப் பாடல்களில் அது அமையுமாயின் அதனைப் 'பிறிது மொழிதல் அணி' (=ஒட்டணி) என்பர். 'கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் அன்ன நிலத்து' என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் அமைந்துள்ளது. ஒருவருடைய செல்வாக்கு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது என்னும் உண்மை 'தேர் கடலில் ஓடாது, கப்பல் தரையில் ஓடாது' என்னும் உவமைகளால் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. தொல்காப்பியர் உள்ளுறை உவமத்தை 'உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான' (தொல்காப்பியம் 1241) என்று குறிப்பிடுகிறார். சொல்லப்பட்ட உவமையைக் கொண்டு சிலவற்றை உய்த்துணர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார். ஓரம்போகியார் பாடிய ஐங்குறுநூறு மருதத்திணைப் புவிப்பத்து பாடல்களில் உள்ளுறை உவமைகளைக் காணலாம். எடுத்துக்காட்டு: அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன் பல சூளினனே. ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் பல ஏறிப் பரண் மேல் தூங்குவதுபோல் தூங்கும் ஊரை உடையவன் என்று தலைவன் இப்பாடலில் விளிக்கப்படுகிறான். தலைவன் பரத்தை மேல் உறங்குகிறான் என்னும் செய்தி இதனால் உய்த்துணர வைக்கப்பட்டுள்ளது. ஐங்குறுநூறு - நெய்தல் ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடிய புலவர் அம்மூவனார். ==2 தோழிக்கு உரைத்த பத்து= ஐங்குறுநூறு - குறிஞ்சி ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் அல்லது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள் ("British governors of Ceylon") என்போர் 1798 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த அலுவலர் ஆவர். இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, மகா தேசாதிபதி பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. 1972 இல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு சனாதிபதி பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரினால் அல்லது அரசியினால் அதன் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசாதிபதியே இலங்கையில் நிறைவேற்றதிகாரமுடையவராக ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதிலும் காணப்பட்டார். அவரே நிறைவேற்றுச் சபையினதும் பிரித்தானிய இலங்கையினதும் தலைவராக இருந்தார். தேசாதிபதியே பிரித்தானிய இலங்கையின் அதிகாரமிக்க அலுவலராக இருந்தாரெனினும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மாத்திரம் சேர் ஜெப்ரி லெய்டன் முதன்மைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தேசாதிபதியிலும் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராக தேசாதிபதியே இருந்தார். இலங்கையில் 1796 ஆம் ஆண்டே ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும் இலங்கைக்கான முதலாவது பிரித்தானியத் தேசாதிபதி 1798 ஆம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை ஆளுநரே பிரித்தானியருக்குக் கீழிருந்த இலங்கைப் பகுதிகளை நிருவகித்தார். ஐங்குறுநூறு - பாலை ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வதைத் தவிர்க வேண்டும் 10 பாடல்கள் இதில் உள்ளன. பாலை நிலத்தின் கொடுமை இதில் கூறப்பட்டுள்ளது. பொருளின் பெருமையைத் தலைவி உணர்வாள். பொருள் தேடச்செல்லும் வழியின் கொடுமையை எண்ணியே செல்லவேண்டாம் என்கிறாள். தோழி சொல்வதாகப் பாடல்கள் உள்ளன. தலைமகனுடன் உடன்போய தலைமகள் மீண்டு வரற்பொருட்டு தாய் ஏக்கத்தோடு பாடிய செய்யுளும், உடன்போய் மீளும் தலைமகனும் தலைமகளும் ஊர்க்கு வரும்போதும் வீடு புக்கப்போதும் தாயும் செவிலியும் தோழியும் தலைமகனும் பாடிய செய்யுட்களும் இப்பத்தில் உள்ளன. எடுதுக்காட்டாய் இப்பத்தின் முதற் செய்யுளைக் காண்போம். உடன்போய தலைமகள் மீண்டு வர வேண்டுமாய் தாய் ஏங்குகிறாள். அதனால் வீட்டின் கண் கண்ட காக்கையிடம் தலைமகள் மீண்டு வரும்பொருட்டு கரையுமாறு வேண்டுகிறாள். பொருள் : குற்றமில்லாத கலையாத அழகிய சிறிய சிறகுகளை உடைய கருமையான காகமே! அன்பைப் பேணும் மரபை உடைய இனத்தைச் சேர்ந்த நீ கிடைத்த உணவு சிறிதாயினும் நின் சுற்றத்தோடு கூடி உண்பாய். அத்தகைய நினக்கு, புதுமையாக அறுக்கப்பட்டு நிண நீர்ச் சொட்டும் பச்சை இறைச்சியான உணவை பொன்னால் செய்யப்பட்ட கலத்தில் வைத்து உனகுத் தருவேன். அதை மகிழ்சியோடு உண்டு, சுடுகின்றாற் போன்ற கடும் சினத்தையும் நல்ல வலிமையையும் கையில் கொலை செய்யும் வேலையும் கொண்ட காளை போன்ற ஆண்மையும் வலிமையும் வீரமும் நிறைந்த ஆண்மகனோடு உடன்போய அழகான சிறிய கூன்தலை உடைய என் மகள் மீண்டு வருமாறு சற்று கரையாயே?? ஐங்குறுநூறு - முல்லை ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். சீனத் திரைப்படத்துறை சீனத் திரைப்படத்துறை உலகில் வேகமாக வளர்ந்து வரும் திரைத்துறைகளி ஒன்று ஆகும். சீன திரைத்துறை ஹொங்கொங், சீனா, தாய்வான் என மூன்று முக்கிய இழைகளைக் கொண்டுள்ளது. வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ சீன மொழியிலும் (மாண்டரின்), கான்ரனீசு மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது. சீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது. இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும். அச்சமில்லை (சீனத் திரைப்படம்) அச்சமில்லை (ஆங்கிலம்: Fearless, சீனம்: Huo Yuanjia) என்பது 2006 ம் ஆண்டு ஹொங்கொங்கில் வெளிவந்த ஒரு சீனத் தற்காப்புக் கலைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ரோனி யு இயக்கினார், யெற் லீ முதன்மைப் பாத்திரமாக நடித்தார். இது 19 ம் நூற்றாண்டின் இறுதிலும் 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த கு யுவான் சியா என்ற போர்க்கலை வீரனின் வாழ்க்கைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இவர் சீனாவின் ஒரு புகழ்பெற்ற போர்க்கலை வீரர். இவர் மேற்குநாட்டு, யப்பானிய வீரர்களை போட்டிக்கு அழைத்து வென்று, சீனாவின் தேசியத்தை நிலை நாட்டினார். கன்பூசியசு (2010 திரைப்படம்) கன்பூசியசு திரைப்படம் 2010 இல் வெளிவந்த கன்பூசியசின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை Hu Mei இயக்கினார், சொவ் யுன் ஃபட் நடித்தார். இந்த திரப்படத்தை ஆக்க சீன அரசின் ஆதரவு இருந்தது. சீனா - விலகும் திரை சீனா - விலகும் திரை என்பது தமிழில் வெளிவந்த ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும். பல்லவி அய்யர் எழுதிய "சுமோக் அண்ட் மிரார்சு: சீனாவில் ஒர் அனுபவம்" (Smoke and Mirrors: An Experience of China) என்ற ஆங்கில நூலை, தமிழில் ராமன் ராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். கிழக்குப் பதிப்பகம் வெளியிடுள்ளது. சீனாவை பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது. சீனாவின் முற்றுகையில் இந்தியா (நூல்) சீனாவின் முற்றுகையில் இந்தியா என்பது 2009 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இது சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது "2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையுள்ள கால கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டு எல்லையை சீன மற்றும் அதன் கூட்டு நாடுகளின் உளவு நிறுவனங்கள் எவ்வாறு கைப்பற்றியுள்ளன என்பதை சுமார் 321 ஆதாரங்களுடன் விளக்கும் 144 பக்க நூல் இது." வென் படம் வென் படம் ("Venn Diagram") என்பது முடிவுறு எண்ணிக்கை கொண்ட கணங்களுக்கு ஏற்படக்கூடிய தொடர்புகளைப் பற்றிய விளக்கப் படமாகும். 1880களில் பிரித்தானிய தர்க்கவாதியும் மெய்யியலாளருமான "ஜான் வென்", கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகளைப் படங்களின் மூலம் விளக்கலாம் என்ற தனது கருத்திற்கு வடிவம் கொடுத்தார். வென்படங்கள், அடிப்படைக் கணக்கோட்பாட்டினைச் சொல்லித்தரவும், நிகழ்தகவு, தருக்கம், புள்ளியியல், மொழியியல், கணினியியல் ஆகிய துறைகளிலுள்ள எளிய கணங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை விளக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. வென் படங்கள் ஒரு தளத்தில் வரையப்பட்ட மூடிய வளைவரைகளைக் கொண்டிருக்கும். அவ்வளைவரைகள் பொதுவாக ஒன்றின் மீது ஒன்று வெட்டிக்கொள்ளூம் வட்டங்களாக இருக்கும். வட்டத்தின் உட்பகுதி அதற்குரிய கணத்திலுள்ள உறுப்புகளையும், வெளிப்பகுதி அக்கணத்தில் இல்லாத உறுப்புகளையும் குறிக்கும். இரண்டு கணங்களைக் குறிக்குமொரு வென்படத்தில், ஒரு வட்டம் எல்லாவிதமான மரச்சாமான்களின் கணம், மற்றொன்று எல்லாவகையான மேசைகளின் கணம் என்றால் இரு வட்டங்களுக்கும் பொதுவான பரப்பு மரமேசைகளைக் குறிக்கும். வட்டங்கள் அல்லாத பிற வடிவங்களையும் பயன்படுத்தலாம். மூன்றுக்கு மேற்பட்ட கணங்களை வென் படத்தில் குறிப்பதற்கு அவ்வடிவங்கள் பயன்படும். வென் படங்கள் கருத்துரு திட்ட வரைபடங்களாகும். எனவே படத்திலிருந்து அதிலுள்ள கணங்களின் எண் அளவைகளைத் தெரிந்து கொள்ளமுடியாது வலதுபுறம் உள்ள படத்தில் A என்னும் கணம் ஆரஞ்சுநிறத்திலும், B என்னும் கணம் நீலநிறத்திலும் வட்டங்களால் குறிக்கப்பெற்றுளன. ஆரஞ்சு நிற வட்டம் இருகால்கள் கொண்ட உயிரினங்களையும் நீல நிற வட்டம் பறக்கக்கூடிய உயிரினங்களையும் குறிக்கின்றன என்று கொள்ளலாம். இந்த உயிரினங்களை அவற்றுக்குரிய வட்டங்களுக்குள்ளே இருக்கும் புள்ளிகளாகக் கொள்ளலாம். கிளிகள் இருகால்கள் கொண்டவை, அதே சமயம் பறக்கவும் செய்யும். எனவே கிளிகளைக் குறிக்கும் புள்ளிகள் இரு வட்டங்களுக்கும் "பொதுவான" பகுதியில் அமையும். பொதுப்பகுதி இந்த இருகுணங்களையும் கொண்ட உயிரினங்களை மட்டுமே குறிக்கும். மனிதர்களுக்கும் பென்குவின்களுக்கும் இருகால்கள் உண்டு ஆனால் பறக்க முடியாது. எனவே அவர்களுக்குரிய புள்ளிகள் ஆரஞ்சு வட்டத்தின் இடதுபுறத்தில், நீல வட்டத்தின் மேற்படியாத பகுதியில் அமையும். கொசுக்களுக்கு ஆறு கால்கள், ஆனால் அவை பறக்கும். எனவே அவற்றுக்குரிய புள்ளிகள் நீல வட்டத்தின் வலதுபுறத்தில், ஆரஞ்சு வட்டத்தின் மேற்படியாத பகுதியில் அமையும். இருகால்களில்லாத மற்றும் பறக்க முடியாத உயிரினங்களை (திமிங்கலம், சிலந்தி போன்றவை) இவ்விரு வட்டங்களுக்கும் வெளியில் உள்ள புள்ளிகள் குறிக்கும். இருவட்டங்களையும் உள்ளடக்கிய பரப்பு, A மற்றும் B கணங்களின் ஒன்றிப்பு என அழைக்கப்படுகிறது. ஒன்றிப்பின் குறியீடு . இந்த இருகணங்களின் ஒன்றிப்பு என்பது, இவ்வெடுத்துக்காட்டில், இருகால்கள் கொண்ட உயிரினங்கள் அல்லது பறக்கும் உயிரினங்கள் அல்லது இந்த இருவிதமுமான உயிரினங்களைக் கொண்ட கணத்தைக் குறிக்கும். இருவட்டங்களுக்கும் பொதுவான பரப்பு A மற்றும் B கணங்களின் வெட்டு என அழைக்கப்படுகிறது. இதன் குறியீடு . A,B -இன் வெட்டுகணம் என்பது இருகால்கள் கொண்டதும் மற்றும் பறக்கக்கூடியதுமான உயிரினங்களின் கணத்தைக் குறிக்கும் வென் படங்களில் மூன்று கணங்கள்வரை விளக்குவதற்கு வட்டங்கள் எளிதானது. ஆனால் அதற்கும் மேற்பட்ட கணங்களைக் குறிப்பதற்கு வட்டங்கள் போதாது. ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் நான்கு கோளங்கள், அனைத்து சமச்சீர்களையும் (symmetries) குறிக்கும் மிகப்பெரிய வென்படத்தை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது. கணங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கான மாற்றுத் தீர்வு காண்பது அவசியமாகிறது. அத்தீர்வு காண்பதில் தீவிரமாக ஈடுபட்டு நீள்வட்டங்களைக் கொண்டு நான்கு கணங்களுக்குப் படவிளக்கமளிக்கும் முறையைக் கண்டறிந்தார் வென். பின்னர் எத்தனை கணங்களானாலும் அவற்றின் வென்படங்களை வரையும் முறையையும் உருவாக்கினார். அந்த முறையில் மூன்று வட்டங்களில் ஆரம்பித்து அடுத்தடுத்து வரும் கணங்களைக் குறிப்பதற்கு வரையப்படும் வளைவரைகள் முந்தைய வளைவரைகளின் இடைப்பின்னல்களாக அமைகின்றன. எ. டபிள்யூ. ஃப். எட்வர்ட்ஸ், கணங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவற்றுக்கான வென்படங்களை வரையும் முறையை உருவாக்கினார். சமச்சீர்தோற்றங்களைக் கொண்டதாக அவ்வென் படங்கள் அமைந்துள்ளன. வென் படத்தை ஒரு கோளத்தின் மீது வீழ்த்தி (project) அதில் கிடைக்கக்கூடிய மூன்று செங்குத்தான (x=0, y=0, z=0) அரைக்கோளங்களை, மூன்று கணங்களைக் குறிப்பதற்கும் நடுக்கோட்டிற்கு மேலும் கீழும் வளைந்தோடும் வளைவரையை (டென்னிஸ் பந்து மீதுள்ள வரி போல) நான்காவது கணத்தைக் குறிப்பதற்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கிடைக்கும் கணங்களை மீண்டும் தளத்தில் வீழ்த்தினால் அதிக பற்கள் கொண்ட பல் சக்கரப் படங்கள் கிடைக்கும். வென்னின் நினவாக ஒரு வண்ணக் கண்ணாடியை வடிவமைக்கும் போது இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. எட்வர்ட்சின் வென் படங்கள் இடவியல் அளவில் கணிதவியலாளர் பிராங்கோ குரூயன்பாம் உருவாக்கிய படங்களுக்கு இணையானதாக அமைந்திருந்தன. பிராங்கோ குரூயன்பாமின் படங்கள் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய, ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் பலகோணங்களை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் அப்படங்கள் மீக்கனசதுரங்களின் (hyper cubes) இருபரிமாண வடிவத்தைக் கொண்டவை. ஸ்மித் என்பவர் சைன் வளைவரையைப் பயன்படுத்திக் கீழ்க்கண்ட சமன்பாடுகளைக் கொண்டு n-கணங்களுக்கான படங்களை உருவாக்கினார். formula_1, இங்கு formula_2 மற்றும் formula_3. பிரித்தானிய கணிதவியலாளர் "சார்லஸ் லுட்விட்ஜ் டாட்சன்" 5 கணங்களுக்கான படத்தை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டில் வென் படங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டன. "டி. டபிள்யூ. ஹெண்டர்சன்" 1963ல் n- மடங்கு சுழற்சி சமச்சீர் உடைய n-வென்படம் இருக்குமானால் n ஒரு பகா எண் எனக் கண்டுபிடித்து விளக்கிக் காட்டினார். மேலும் n = 5, 7 ஆக இருக்கும்போது அத்தகைய சமச்சீர் வென் படங்கள் உண்டு என்பதையும் உறுதிப்படுத்தினார். 2002ல் "பீட்டர் ஹம்பர்க்" n = 11க்கான சமச்சீர் வென்படங்களைக் கண்டுபிடித்தார். 2003ல் "கிர்க்ஸ்", "கில்லியன்", "சாவேஜ்" மூவரும் ஏனைய அனைத்து பகா எண்களுக்கும் சமச்சீர் வென் படங்கள் உள்ளன என்பதை நிரூபித்தனர். n ஒரு பகா எண்ணாக இருந்தால், இருந்தால் மட்டுமே, சமச்சீர் வென் படங்கள் வரைய முடியும் என்பது நிரூபணமானது. தேனூர் தேனூர், (Thenur) கிராமம், மதுரை மாவட்டத்தில், மதுரை மேற்கு பஞ்சாயத்து ஒன்றியத்தில், சமயநல்லூர் அருகில், மதுரை நகரிலிருந்து 18 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. தேனூர் கிராமத்தில் மது மற்றும் புகையிலை பொருட்கள் காலம் காலமாக விற்கப்படுவதில்லை. கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த கட்டுப்பாட்டை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். சித்திரைத் திருவிழா முதன் முதலில் தேனூர் கிராமத்தில்தான் நடந்தது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது. இதற்கு முன்பு அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி கரையோரத்தில் மாண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிப்பதுதான் வழக்கமாக இருந்தது. தென்னவன் தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 'தென்' என்னும் சொல் தென்-திசையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இனிமை என்னும் பொருளையும் உணர்த்தும். :தேங்காய் = இனிய காய். தேங்காய் உள்ளது தென்னை. இதில் 'தென்' என்பது இனிமைப் பொருளைத் தருவதைக் காணலாம். இந்த வகையில் தென்னவர் என்னும் சொல் இனியவர் என்னும் பொருளையும் தரும். தென் திசையிலிருந்து வடக்கு நோக்கித், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை எனக் குடிபெயர்ந்தவர் ஆதலால் இவர்களைத் தென்னவர் என்றனர். குடநாடு எனப்பட்ட மேற்குத்திசை சேரநாட்டை ஆண்ட மன்னன் குடவர் கோமான் என்று பெயர் கொண்டது போன்றது இது. சுபசிறீ சுபசிறீ முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சுத்த மத்திமம் (ம),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். ஃபிளிப்பர் நடவடிக்கை ஃபிளிப்பர் நடவடிக்கை ("Operation Flipper") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியக் கமாண்டோ அதிரடிப்படைப் பிரிவுகள் ஜெர்மானியப் படைத் தளபதி ரோம்மலைப் படுகொலை செய்வதற்காக அவரது தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தின். தாக்குதலின் போது அங்கு இல்லாத ரோம்மல் உயிர்தப்பினார். 1941ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தோற்கும் நிலையிலிருந்த இத்தாலியப் படைகள் ரோம்மலின் தலைமையிலான ஜெர்மானிய ஆப்பிரிக்கா கோரின் வருகையால் தப்பினர். நேச நாட்டுப் படைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கிய ரோம்மல் விரைவில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி விட்டார். பலம் வாய்ந்த டோப்ருக் கோட்டையை முற்றுகையிட்டார். டோபுருக்கை மீட்டு லிபியாவிலிருந்து ரோம்மலை விரட்ட நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கை, பேட்டில்ஆக்சு நடவடிக்கை போன்றவை தோல்வியில் முடிவடைந்தன. ரோம்மலின் போர்த்திறன் பற்றி உருவான பிம்பம் நேச நாட்டுப் படை வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கும் அளவு வளர்ந்தது. இதனால் அடுத்த பெரும் தாக்குதல் நிகழும் முன்னர் அவரைப் படுகொலை செய்ய நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். அவரைக் கொலை செய்தால் ஏற்படும் பெரும் குழப்பத்தில் அச்சுப் படைகள் ஆழ்ந்துவிடும், எளிதில் வென்று விடலாம் என்பது அவர்களது கணிப்பு. குரூசேடர் நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு ரோம்மலைப் படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டானிய கமாண்டோ வீரர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் வழியாக ரகசியமாக அச்சு நாட்டுக் கட்டுப்பாட்டுக் கடற்கரையில் தரையிறங்கினர். பின் போர்களத்திலிருந்து 250 கிமீ அச்சுநாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்பிரிக்கா கோர் போர்த் தலைமையகத்தை நவம்பர் 15, 1941ல் தாக்க முயன்றனர். ஆனால அவர்கள் எதிர்பார்த்தபடி அக்கட்டடத்தில் ரோம்மல் இல்லை. இரு வாரங்கள் முன்னரே போர்முனைக்கு சென்று விட்டார். இதனால் மொத்த திட்டமும் படுதோல்வி அடைந்தது. தாக்குதலில் ஈடுபட்ட கமாண்டோ வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாம் உலகப் போரில் அச்சு நாட்டு படைத் தளபதிகளை நேரடியாகப் படுகொலை செய்ய நேச நாடுகள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. (மற்றொன்று பசிபிக் போர்க்களத்தில் ஜப்பானிய கடற்படைத் தளபதி இசோருக்கு யமாமாட்டோவின் படுகொலை). சதீஸ் தவான் விண்வெளி அரங்கம் சதீஸ் தவான் விண்வெளி அரங்கம் ("Satish Dhawan Space Museum") திரவ இயக்க உந்துகை மையம், மகேந்திரகிரியில் உள்ள ஒரு காட்சியகமாகும். இதில் L-40 என்றழைக்கப்படும் திரவ உந்தியின் முழு அளவு உருவம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விகாசு இஞ்சின், ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, செயற்கை கோள்கள் ஆகியவற்றின் உருவங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுகள் பார்வைக்கு திறந்து விடப் படுகின்றது. சிஸ்கோ சிஸ்டம்ஸ் சிஸ்கோ ("Cisco") உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0 பில்லியன் அமெரிக்க டாலர். வர்த்தகரீதியில் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் இதன் மிக பெரிய போட்டி நிறுவனமாகும். ராஜா ஜென்கின்ஸ் ராஜா ஜென்கின்சு (பிறப்பு: ஒக்டோபர் 30. 1957) இலங்கையின் மலையகத்தில் வாழ்ந்து வரும் ஒரு கலைஞர். கலைத்துறையையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டுள்ள இவர் "சாமு" எனும் புனைப் பெயரில் அறியப்பட்டவர். இலங்கையின் கண்டி மாவட்ட, கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்துவரும் இவர் கண்டியைச் சேர்ந்த எசு. ஜென்கின்சு, சந்திரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர். க. பொ. த உயர்தரம் வரை க/வித்தியார்த்த கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரின் மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு நிதர்சனி, வாணிசிறி, பிரேம் ஆகிய மூன்று பிள்ளைகள் உளர். பாடசாலை வாழ்க்கையில் 10 வயதாக இருக்கும் போது நகைச்சுவை நடிகராக மேடை நாடகத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு ஏ. ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் 12 வயதிலேயே சிறு சிறு வேலைகளைச் செய்து சினிமாவை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். 17 வயதில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் சிறிய பாத்திரமொன்றில் தோன்றி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தொடங்கிய இவரின் கலைப்பயணம் இன்றுவரை தொடர்கிறது. தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராக பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்கு துணை நடிகர்களை ஒழுங்குப்படுத்தும் முகவராகவும் செயலாற்றி வருகின்றார். உலகப் புகழ்பெற்ற ஆங்கில நடிகர் சார்லி சப்ளினின் மகள் ஜெராய்ட் சப்ளின் (Gerald Chaplin) டாக்டர் சவாகோ “Doctor Zhivago” என்ற திரைப்படத்தில் நடித்து, ஆசுகார் விருது பெற்ற நடிகையாவார். இவரின் “மதர் திரேசா” Mother Theresa என்ற ஆங்கிலப் படத்தில் துணை நடிகராக நடித்ததையும், இந்தி பிரபல நடிகர் கபீர்பேடி, இந்தி திரைப்பட வில்லன் நடிகர் குல்சான் ஆகியோர்களுடன் இணைந்து நடித்ததையும் தன்னுடைய கலைத்துறை வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இவர் கொண்டுள்ளார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் வர்ணத்திரைப்படமான "சர்மிலாவின் இதயராகம்" திரைப்படத்தை சிங்களத்தில் “ஒபமட வாசனா” என்று மொழிமாற்றம் செய்தனர். அதற்கு சிங்களத்தில் உதவி வசனகர்த்தாவாக இவர் கடமையாற்றினார். கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தேசிய ரீதியில் புகழ்பெற்று விளங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்களை இன, மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிறப்புபடுத்து முகமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் ரத்னதீப விருது வழங்கும் “ரத்னதீப பதனம” எனும் அரசியல் சார்பற்ற அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் இவராவார் க. இரத்தினசிங்கம் கந்தையா இரத்தினசிங்கம் (ஜுலை 30, 1940 - ஏப்ரல் 30, 2018) இலங்கையின் கிளிநொச்சி மாவட்ட, கரைச்சி கிராமத்தில் வசித்து வந்த மூத்த எழுத்தாளரும், விமர்சகரும், ஊடகவியலாளருமாவார். கந்தையா, தவமணி தம்பதியினரின் புதல்வராகப் கிளிநொச்சி, கரைச்சியில் பிறந்த இவர் சாவகச்சேரி மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலயத்தில் அப்போதைய ஜே.எஸ்.சி. (ஆண்டு 8) வரை கற்றார். இவரின் மனைவி பெயர் தவமணி. இவர்களுக்கு விஜயானந்தன், சிவகுமாரன், சிவமலர், சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரம், சிவராணி, சிவச்சந்திரன் ஆகிய ஏழு பிள்ளைகள் உளர். தனது இளமைக்காலம் முதலே வாசிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் இயல்பான ஆர்வம் பெற்ற இவரின் கன்னியாக்கம் 1959ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. படைப்பிலக்கியம் என்ற வகையில் அன்று தொடக்கம் இன்றுவரை சிறுகதைகள், கவிதைகள் என சுமார் 100 மேற்பட்ட ஆக்கங்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற தேசிய பத்திரிகைகளிலும், கலைச்செல்வி, அமுதம், ஆனந்தசாகரம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் இலங்கை வானொலியிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. க. இரத்தினசிங்கம் ஊடகத்துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராக காணப்படுகின்றார். தினக்குரலின் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் இவர், 1959ஆண்டிலிருந்து சுதந்திரன் பத்திரிகையிலும் செய்திகள் எழுதிவந்தார். தினக்குரலிலும் ஞாயிறு தினக்குரலிலும் இவரது பிரதேச செய்திகள் அவ்வப்போது பிரசுரமாகி வருகின்றன. ஞாயிறு தினக்குரலில் 50க்கும் மேற்பட்ட நேர்காணல்களை இவர் எழுதியுள்ளார். இதில் 32 நேர்காணல்களைத் தொகுத்து ‘மண்ணின் வேர்கள்’ எனும் தலைப்பில் 2006 அக்டோபரில் ஒரு நேர்காணல் நூலினை வெளியிட்டார். கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் முதலாவது வெளியீடாக இந்நூல் வெளிவந்தது. வன்னி மண்ணுக்காக அயராது உழைத்து அம்மண்ணிலே வேரூன்றி அம்மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் சிலரை மண்ணின் வேர்கள் நேர்காணல் மூலம் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் வன்னி மண்ணின் வேர்களாக க. செ. வீரசிங்கம், தாமரைச் செல்வி, ச. முருகானந்தன், மண்டைதீவு கலைசெல்வி, திருநகர் நடராசன், வெ. மோ. கானந்தசிவம், வளவை வளவன், செவ்வந்தி மகாலிங்கம், கனடாவளைக்கவிராயர், புரட்சி பாலன் ஆதிலட்சுமி சிவகுமார், சந்திரகாந்த முருகானந்தன், கு. மணிமேகலை, நா. யோகேந்திரநாதன், தர்சினி ஆனந்த ராசா, மு.கந்தசாமி, இ. நடராசா, கா. நாகலிங்கம், த. புவனேஸ்வரி செல்லையா, கு. இரத்தினேஸ்வரக் குருக்கள், தி. இராசநாயகம், சோ. செல்வராணி, ப. அரியரத்தினம், ம. பத்மநாதன், ஆ. மார்க்கண்டு, நா. வை. மகேந்திரராஜா, சந்திரகாந்தன், அபிராமி கைலாசப்பிள்ளை, வன்னியூர்க்கவிராயர் ஆகிய பலர் நேர்காணப்பட்டுள்ளார்கள். இராசவல்லவன் இராசயோகன் இராசவல்லவன் இராசயோகன் (பிறப்பு: ஒக்டோபர் 17, 1945) இலங்கையின் வடமாகாணத்தில் வசித்துவரும் ஒரு நாடகக் கலைஞரும், சிறுவர் இலக்கிய எழுத்தாளருமாவார். இலங்கையின் யாழ்ப்பாணம், மானிப்பாய் தெற்கு கிராமசேவகர் பிரிவில் பரராஜசிங்கம் இராசவல்லவன், யோகமலர் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இராசயோகன் தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பெற்றார். தொழில் முறையில் மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராக பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி பெயர் சதாலட்சுமி. இவர்களுக்கு இராசமோகன், கலைவாணி, இசைவாணி, மோகனவாணி, யமுனாவாணி ஆகிய ஐந்து பிள்ளைகளுளர். இவர் கற்கும் காலங்களில் ஆங்கிலக் கல்வியைக் கற்றாலும்கூட தமிழ்மொழி மீது இயல்பான பற்று காணப்பட்டது. இதனால் மாணவப் பருவத்திலிருந்தே தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இக்காலகட்டங்களில் எழுத வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அச்சம் இவர் மனதில் ஊடுருவியமையினால் அண்மைக் காலங்களிலிருந்தே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித்தார். இந்த அடிப்படையில் பத்திரிகையொன்றில் பிரசுரமான கன்னியாக்கம் 1999 ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் பிரசுரமானது. இவரின் கன்னிக்கதையின் தலைப்பு ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்பதாகும். இதிலிருந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றார். இவரின் எழுத்தாற்றல் சிறுவர் இலக்கியத்திலே மிகைத்துக் காணப்படுகின்றது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். அரச சேவையாளர்களுக்கான நிர்மாணப் போட்டித் தொடர் 2004, 2005ம் ஆண்டுகளில் இவரது சிறுவர் கதைகளும், கவிதைகளும் பரிசுகளை வென்றுள்ளன. இதுவரை இரண்டு சிறுவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இராசயோகன் வாலிப பராயத்திலிருந்தே நாடகத்துறையிலும் ஈடுபாடுமிக்கவராகக் காணப்பட்டார். இருப்பினும் அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு சரிவரக் கிடைக்கவில்லை. இந்நிலையில் 1994ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட ‘அவன் தாறான்’ எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார். குறிப்பாக 2003ஆம் ஆண்டில் ‘தாவடித் தங்கம்மா’ எனும் நாடகத்தில் தாவடித்தங்கம்மாவின் கணவராக நடித்ததையும், 2005ஆம் ஆண்டு கலைவிழாவில் ‘கல்யாணச் சாப்பாடு’ நாடகத்தில் தகப்பன் வேடன் போட்டு நடித்தமையும் தன் வாழ்வில் மறக்க முடியாத பாத்திரங்களாக குறிப்பிடுகின்றார். வீடியோ ஒளிநாடாக்கள் மூலமாக குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பதற்கும், நெறிப்படுத்துவதற்கும், வெளியிடுவதற்கும் ஆர்வம் கொண்டுள்ளார். ரத்னதீப விருது ரத்னதீப விருது இலங்கையில் கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்களை இன, மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிறப்புபடுத்தும் முகமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் ஒரு விருதாகும். இந்த விருதினை வழங்குவது “ரத்னதீப பதனம” எனும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் ராஜா ஜென்கின்ஸ் என்பவராவார். “ரத்னதீப பதனம” மலைய கலை கலாசார சங்கம், காமினி பொன்சேகா ஞாபகார்த்தமன்றம், ஏ. எம். ராஜா ஞாபகார்த்த மன்றம் ஆகிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகின்றது. பௌளி பௌளி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். கௌளிபந்து கௌளிபந்து பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சுத்த தைவதம் (த), அந்தர காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். கும்மா காம்போஜி கும்மா காம்போஜி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சுத்த தைவதம் (த), சுத்த மத்திமம் (ம), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். நாண் லியான் பூங்கா நாண் லியான் பூங்கா (Nan Lian Garden) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் ய் சின் மாவட்டத்தில், மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அத்துடன் கற்பாறை காட்சியகம் ஒன்றும் உள்ளது. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும். இந்த நாண் லியான் பூங்காவின் தொடர்ச்சியாக, புங் டக் வீதியின் மறுபுறம் சி லின் கன்னிமட பௌத்தக் கோயில் உள்ளது. இந்த பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவின் கட்டடங்கள் டேங் அரசவம்சத்தின் கட்டடக்கலை வடிவில் (Tang Dynasty Style.) கட்டப்பட்டுள்ளன. சினாவில் வளரும் பழமையான அதேவேளை வித்தியாசமான மரங்கள் பூங்கா எங்கும் நடப்பட்டு பராமறிக்கப்படுகின்றன. அம்மரங்களில் பல மருந்து செலுத்தல் ஊடாகவே வளர்கின்றன. பூங்காவிற்கு செல்வோர், பூங்காவின் நினைவு பொருட்கள் வாங்குவதற்கான நினைவுப்பொருள் கடையொன்றும் உள்ளது. ஒரு மலை குன்றை அப்படியே செயற்கையாய் மாற்றியுள்ளனர். இந்த மலைக்குன்று உணவகம் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே உள்ளே ஒரு கடை இருப்பது தெரியும். முழுதும் மரங்களும் பத்தைகளும் நிறம்பி இயற்கையின் தோற்றத்தை தருகின்றது. இருமருங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் மேலே இருந்து கொட்டிய வண்ணம் உள்ளன. உள்ளே உணவகம் சாளரங்கள் கண்ணாடிகளால் பொருத்தப்பட்டிருப்பதால், தண்ணீர் உள்ளே புகாதவாறு உள்ளது. உணவகத்தின் விலை ஐந்து நட்சத்திர சொகுசங்களுக்கு சமமானதாகும். அழைப்பேசி ஊடாக அல்லது இணையத் தளத்தின் ஊடாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். பூங்கா காலை 7:00 மணி முதல் இரவு 9:00 வரை திறந்திருக்கும். பூங்கா திறந்திருக்கும் முழு நேரமும் சீனப் பாரப்பரிய இசை பூங்கா எங்கும் ஒலித்த வண்ணமே இருக்கும். இந்த பூங்கா கவுலூன் தென்கிழக்குப் பகுதியில், இலக்கம் 60 புங் டக் வீதி, மாணிக்க மலை, வொங் டய் சின் எனும் முகவரியில் அமைந்துள்ளது. எம்டிஆர் தொடருந்தில் செல்வதானால் வெளியேற்றம் C2 இல் வெளியேறவேண்டும். மற்றும் பேருந்து சிற்றூந்து சேவைகளும் உள்ளன. இந்த பூங்காவின் மேற்காக பிரமாண்டமான ஹொலிவூட் அங்காடி உள்ளது. கன்னடபங்காளம் கன்னடபங்காளம் பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். சித்திரப்பாவை (புதினம்) சித்திரப்பாவை நாவல் எழுத்தாளர் அகிலன் என்கிற அகிலாண்டம் எழுதியது. இந்நாவல் இந்திய அரசின் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றது. அண்ணாமலை, ஆனந்தி, மாணிக்கம், கதிரேசன், மேஸ்திரி சிதம்பரம், தண்டபாணி, சுந்தரி, சரவணன், சாரதா, மீனாட்சி அம்மாள். லலிதா (இராகம்) லலிதா பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய சூர்யகாந்த இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். மல்லிகா வசந்தம் மல்லிகா வசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சுத்த தைவதம் (த), சுத்த ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். மங்களகைசிகி மங்களகைசிகி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சுத்த ரிசபம் (ரி), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதில் மத்திமம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். பாடி (இராகம்) பாடி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சுத்த தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். மாணிக்க மலை மாணிக்க மலை (Diamond Hill) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் டய் சின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் மலைத்தொடர்களின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் கட்டடங்களில் அதிகமானவை மக்கள் குடியிருப்புத் தொகுதிகளாகும். இந்த மாணிக்க மலைப் பிரதேசம் தற்போது நகரமாயமாகி இருந்தாலும், இது ஒரு ஹொங்கொங்கின் ஒரு முன்னாள் கிராமம் ஆகும். இந்த நகரத்தில் மையத்தில் சீனத் தொன்மையை வெளிப்படுத்தும் டாங் அரசவம்ச கட்டடக் கலையை வெளிப்படுத்தும் கட்டடங்களைக் கொண்ட நாண் லியான் பூங்கா அமைந்துள்ளது. அத்துடன் சீனரின் தொன்மையான ஒரு பௌத்தக் கோயிலும், அதனுடன் அமைக்கப்பட்டிருக்கும் சி லின் கன்னிமடமும் இந்த நகரின் சிறப்பாகும். சி லின் கன்னிமடம் சி லின் கன்னிமடம் (Chi Lin Nunnery) என்பது ஹொங்கொங்கில் உள்ள மிகப் பெரிய பௌத்த கோயில் வளாகம் ஆகும். இந்த பௌத்த கோயில் வளாகம் ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் டயி சின் மாவட்டத்தில், மாணிக்க மலை நகரில் அமைந்துள்ளது. இந்த பௌத்த கோயில் வளாகமும், பௌத்த பெண் துறவியருக்கான கன்னிமடம் 33,000 சதுர மீட்டர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த பௌத்த கோயிலில் பௌத்தத் தூபிகள் எதுவும் இல்லை. இக்கோயில் முழுதுமாக சீனப் பாரப்பரிய கட்டடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டதாகும். ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் உல்லாசப் பயணிகளும் இந்தக் கோயிலில் நிறைந்து காணப்படுவர். கோயிலின் உள்ளே "சக்யமுனி புத்தர் சிலை" ஒன்று உள்ளது. இச்சிலை தங்கம், களிமண், கற்பாறை போன்றவற்றின் கலப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையை சிறப்பு நாட்களில் மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும் கோயில் வளாகம் காலை 7:00 மணி முதல் பின்னேரம் 7:00 மணிவரை திறந்திருக்கும். கற்பாறை காட்சியகம் கற்பாறை காட்சியகம் என்பது ஹொங்கொங், கவுலூன், மாணிக்க மலை நகரில் நாண் லியான் பூங்காவின் ஒரு பாகமாக அமைக்கப்பட்டிருக்கும் கற்பாறைகளின் காட்சியகம் அல்லது கற்பாறைகளின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் ஹொங்சுயி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகளே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை சீனாவில் உள்ள ஒரு சிறப்பான பாறைகள் என்பதாலேயே இதற்கு என ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரேபிய வசந்தம் அரபு எழுச்சி (; ) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது. "பேஸ்புக்" எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 1947 ஆம் ஆண்டில் சென்னை நகரில் வீடுகளின் தேவைக்காக "நகர் மேம்பாட்டு அறக்கட்டளை" (City Improvement Trust)எனும் பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு 1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எனும் பெயருக்கு மாற்றமாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீட்டு மனைகள், வீடுகள் அமைக்கப்பட்டு இந்த நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டு மனைகள், வீடுகள் நான்கு பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன. யூம்லா யூம்லா ("ஜூம்லா", ஆங்கிலம்-"Joomla") என்பது இணையத்தில் உள்ளடக்கத்தை வெளியுடுவதற்கான ஒரு கட்டற்ற உள்ளடக்கம் மேலாண்மை ஒருங்கியம். இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் கட்டமைப்பைக் கொண்டது. பழங்குடியினர் கலைவிழா "பழங்குடியினர் கலாச்சாரம்" மற்றும் வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக பழங்குடியினர் கலைவிழா 2011ம் ஆண்டு பெப்ரவரி 19, மற்றும் 20ம் ஆகிய தேதிகளில் பேச்சிப்பாறை வள்ளக்கடவு பகுதியில் நடந்தது. பேச்சிப்பாறை, கடையாலுமூடு, பொன்மனை பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தினர். கோத்தகிரி, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தோடர்கள், குறும்பர்கள், போர்ட்டர்கள், ஒட்டர்கள், வடுகர் இன பழங்குடி இன மக்களும் இக் கலை நிகழ்வில் கலந்துகொண்டார்கள்். இங்கு கணியான் கூத்து, சேவையாட்டம், குறவன் குறத்தியாட்டம், மரவுரியாட்டம், விளக்குகெட்டு, காட்டுப்புறப் பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியின் முதல் நாள் தெப்ப போட்டி, உறியடி, ஈட்டி எறிதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இரண்டாம் நாளன்று காலை கபடி, வடம் இழுத்தல், வில் அம்பு போட்டிகள் நடத்தப்பட்டது. போர்க் கலை (நூல்) போர்க்கலை (The Art of War) என்பது கிமு 5 ஆம் நூற்றாண்டு அளவில் சீன போரியல் மேதை சுன் த்சு என்பவரால் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூல் போர்க் கலையில் பயன்படும் மூல உபாயங்களையும், உத்திகளையும் சிறப்பாக விவரிக்கிறது. உலகின் முக்கிய போர் நுட்ப நூல்களில் இதுவும் ஒன்று. இது "சுன் த்சு" காலத்தில் முற்றுப் பெறவில்லை. தொடர்ந்து வந்த போரிடும் நாடுகள் காலத்திலேயே முற்றுப்பெற்றது என்பது சில அறிஞர்களின் கருத்து. இது 13 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் போரின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. இது தன் காலத்தின் போர் வியூகம், உத்தி போன்ற போர் சார்ந்த செயல்களை அடிப்படையாகக் கொண்ட நூலாக விளங்கியது. இந்நூலை, இன்றும் அதன் போரியல் உள்நோக்குக்காக பலரும் வாசிக்கின்றனர். போர்க்கலை நூல் உலகின் மிகப் பழையதும், வெற்றிகரமானதுமான போரியல் நூல்களுள் ஒன்று. சீனாவின் ஏழு போர்க்கலை நூல்கள் என வழங்கப்படுவனவற்றுள் மிகவும் புகழ் பெற்றதும், செல்வாக்கு மிக்கதுமான நூலும் இதுவே ஆகும். கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக, ஆசியாவின் மிகச் சிறந்த போர்க்கலை நூலாக இது விளங்கி வருகிறது. சாதாரண மக்கள் கூட இதன் பெயரை அறிந்திருந்தனர். இது 1080ல் ஸாங்(Song) நாட்டின் மாமன்னன் ஷென்ஸாங்(Shenzong) என்பவரால் தொகுக்கப்பட்டது. இத்தொகுப்பு சீனாவின் ஏழு அடிப்படை போர்ப்படைத் தளங்களிலும், தலைமை வழிகாட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு பல ஆண்டு காலங்களுக்கு மேலாக கிழக்கு ஆசியாவில் மிகவும் செல்வாக்குள்ள போர்ப் படிநிலை வழிகாட்டி தொகுப்பாக செயல்பட்டு வந்தது. இத்தொகுப்பு கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் போர்ப்படை சிந்தனைகள், வாணிக உத்திகள், சட்டப் படிநிலைகள் இன்னும் இவற்றை தாண்டிய பல்வேறு கருத்துகளையும் விளக்கும் தொகுப்பாக விளங்குகிறது. இந்த நூலை 1772ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெஸூய்ட் ஜீன் ஜோஸஃப் மேரி அமியோட்(Jesuit Jean Joseph Marie Amiot) என்பவர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார். மேலும் இந்நூலை 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து அதிகாரி எட்வார்டு ஃபெர்குஸான் கால்த்ரோப்(Everard Ferguson Calthrop) என்பவர் ஆங்கில மொழியில் பகுதியளவு மொழிபெயர்த்தார். இருப்பினும் குறிப்புரைகளைக் கொண்ட முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 1910ஆம் ஆண்டு லயனெல் கில்ஸ்(Lionel Giles) என்பவரால் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மாவோ ஸெடாங்(Mao Zedong), படைத் தளபதி வோ குயன் ஜிஆப்(Võ Nguyên Giáp), படைத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர்(Douglas MacArthur) போன்ற பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் நாட்டின் பல தலைவர்களும் இந்த நூலைப் படித்து அகத்தூண்டுதல் பெற்று தம் பணியில் மேன்மை கண்டனர். "சன் வு" ஒரு இராணுவக் கொள்கையாளர். இவர் கி.மு. 776-471 வரையிலான காலத்தில், வசந்த மற்றும் இலையுதிர்கால காலத்தின் பின்பகுதியில் "வூ" அரசாங்கத்தின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த தனது சொந்த மாநிலமான 'கீ" பகுதிக்குச் சென்றார். அவருடைய போர்த்திறனால் 'சூ' மாநில ராஜா ஈர்க்கப்பட்டார். "சன் வு" அரண்மனையின் அழகிய பெண்களுக்குக் கூட போரில் பயிற்சியளித்து போருக்குத் தயார் செய்திருந்தார். சக்தி வாய்ந்த எதிரி நாடுகளையும் போருக்கு அழைக்கும் அளவிற்கு அந்நாட்டு படைகளைத் தயார் செய்திருந்தார் என்பது சீனாவில் எந்நாளும் போற்றப்படும் ஒரு காவியமாகும். போர்க்கலை எனும் இந்நூலின் முற்பகுதிகள் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருப்பினும் கிமு 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "சூரிய குரு" "சுன் த்சு"("Sunzi" or "Sun-tzu")என்ற தலைப்பில் போர்ப்படைத் தளபதிகளின் பாரம்பரியமிக்க இயற்பண்பு நூலாகப் பயன்படுத்தப்பட்டன. இந்நூலின் பயன்பாட்டை உணர்ந்து சிமா கியான்(Sima Qian) எழுதிய கிமு 1ஆம் நூற்றாண்டில் எழுதிய "மாபெரும் வரலாற்றாளரின் பதிவுகள்" எனும் பொருளுடைய ஷிஜி ("Shiji") என்பது சீனாவை ஆண்ட 24 வம்சங்களின் முதல் வரலாற்றுத் தொகுப்பாகும். "கி மாகாணத்திலிருந்து" என்ற நூல் சன் வூ ("Sun Wu") என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல், ஆரம்பகால சீனர்களின் பாரம்பரியம், போர்ப்படைத் தகவல்கள் போன்றவை சார்ந்த பதிவாக உள்ளது. இந்நூல் கிமு 514–495ல் வாழ்ந்த "வூ" நாட்டின் அரசர் ஹெலு (Helü) என்பவரால் படிக்கப்பட்டது. இந்த கருத்துக்கள் பாரம்பரிய நிலையில் கண்டறியப்பட்டு "குரு சூரியனின் போர்க்கலை" என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. போர் உத்தியில் நிலைஎடுத்தலின் முக்கியத்துவத்தை சுன் த்சு தன் நூலில் வலியுறுத்திக் கூறுகிறார். ஒரு போர்ப்படையின் நிலையைக் குறித்து முடிவு எடுக்கும்போது, இயற்பியல் சூழலின் புறநிலை சார்ந்த நிலைமைகளையும், சூழலில் உள்ள பிற போட்டியாளரின்/ போட்டியாளர்களின் அகநிலை சார்ந்த நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உத்தி என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் செயலாற்றுவது அல்ல என்றும், மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப விரைவானதும் உகந்ததுமான எதிர்வினையே முக்கியமானது என்றும் "சுன் த்சு" கருதினார். போருக்கான திட்டம் ஒரு கட்டுப்பாடான சூழலில் செயற்படும். ஆனால் மாறும் சூழலில் போட்டித் திட்டங்கள் மோதுவதால், எதிர்பாராத நிலைமைகள் ஏற்படுகின்றன. இந்நூல் முதன் முதலாக 1772 ஆம் ஆண்டில் பிரெஞ்சு யேசு சபையைச் சேர்ந்த யோன் யோசேப் மாரி அமியட் என்பவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 1905ல், பிரித்தானிய அலுவலர் எவரார்ட் பெர்கூசன் கல்தார்ப் என்பவர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மாவோ சேடொங், தளபதி வே ங்குயேன் கியாப், பாரன் ஆன்டொவின்-என்றி யொமினி (Antoine-Henri Jomini), தளபதி டக்ளசு மக்ஆர்தர், சப்பானியப் பேரரசின் தலைவர்கள் போன்றோர் உட்பட பலர் இந்த நூலிலிருந்து அகத்தூண்டல் பெற்றுள்ளனர். இந்த நூல், வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான உத்திகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போர் கலை எனும் நூல் பைன் ("piān") எனப்படும் 13 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் "முழு" அல்லது "காலமுறையிலான" தொகுப்பு ஒரு ஸூவான் (zhuàn) எனப்படுகிறது. ஏறத்தாழக் கடந்த ஒரு நூற்றாண்டில் மொழிபெயர்த்த பலரும் வெவ்வேறு விதமாகத் தலைப்புக்களைக் கொடுத்துள்ளனர். தலைப்புகள் பின்வருமாறு: ம. சிங்காரவேலர் ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார். சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் . சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார். 1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது.கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார். சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற "ஜாலியன் வாலாபாக் படுகொலை" நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் ""இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!"" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். "ஜாலியன் வாலாபாக் படுகொலை" நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார். ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, ""வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!"" என்று கூறியுள்ளார். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார் இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூரும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன்படி பெப்ரவரி 18, 2011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றைக் குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. ம. சிங்காரவேலர் படைப்புகளின் பின்வருவன அடங்கும்: அரிசன்ட் அரிசன்ட் ("Aricent") என்பது அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைத்தொடர்பு மென்பொருள் கட்டமைப்பு வசதிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கிகள் மற்றும் தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. 33 அலுவலகங்கள், 800 வாடிக்கையாளர்கள் மற்றும் 10,500 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மென்பொருள் பொருட்களின் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. குரூசேடர் நடவடிக்கை குரூசேடர் நடவடிக்கை ("Operation Crusader") இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியாவின் கிழக்குப் பகுதியில் அச்சுநாட்டுப் படைகளை முறியடித்து பின்வாங்கச் செய்தது. 1941ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தோற்கும் நிலையிலிருந்த இத்தாலியப் படைகள் ரோம்மலின் தலைமையிலான ஜெர்மானிய ஆப்பிரிக்கா கோரின் வருகையால் தப்பினர். நேச நாட்டுப் படைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கிய ரோம்மல் விரைவில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி விட்டார். பலம் வாய்ந்த டோப்ருக் கோட்டையை முற்றுகையிட்டார். டோபுருக்கை மீட்டு லிபியாவிலிருந்து ரோம்மலை விரட்ட நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கை, பேட்டில்ஆக்சு நடவடிக்கை போன்றவை தோல்வியில் முடிவடைந்தன. நவம்பர் 18ம் தேதி ரோம்மலை லிபியாவிலிருந்து விரட்ட பிரிட்டானியப் படைகள் மூன்றாவதாக ஒரு முயற்சியைத் தொடங்கின. இதற்கு குரூசேடர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. ரோம்மலின் முன்னணிப் படைகளை பிரிட்டானிய கவசப் படைகள் லிபியப் போர் முனையில் தாக்கி அவர்களது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதே நேரத்தில் காலாட்படைகள் டோப்ருக் நகருக்கு விரைந்து அதன் முற்றுகையை முறியடிக்க வேண்டுமென்பது நேச நாட்டுத் திட்டம். நவம்பர் 18ம் தேதி பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியப் போர் முனையில் தன் தாக்குதலைத் தொடங்கியது. இந்த மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரிட்டானிய 18வது கோர் அச்சு நாட்டு நிலைகளை சுற்றி வளைத்து டோப்ருக் நகரை நோக்கி விரைந்தது. டோப்ருக் நகரை அடைந்து அதனை முற்றுகை இட்டிருந்த அச்சுப் படைகளைப் பின்புறமிருந்து தாக்கியது, டோப்ருக்கின் பாதுகாவல் படைகளும் தங்கள் அரண்நிலைகளுக்குப் பின்னிருந்து வெளிவந்து அசுசு முற்றுகைப்படைகளைத் தாக்கின. 8வது ஆர்மியின் முதல் கட்ட தாக்குதலை முறியடித்திருந்த ரோம்மல், டோப்ருக்கில் இக்கட்டான சுழ்நிலையிலிருந்த தனது படைப்பிரிவுகளின் துணைக்கு லிபியப் போர்முனையிலிருந்த அச்சுப் படைப்பிரிவுகளை அனுப்பினார். ஆனால் டோப்ருக்கிலும் லிபிய எல்லையிலும் நான்கு வாரங்கள் நடந்த கடுமையான மோதல்களால் அச்சுத் தரப்பு டாங்குகளில் பெரும்பாலானவை சேதமடைந்திருந்தன. எஞ்சியிருந்த கவசப் படைப்பிரிவுகளைப் பாதுகாப்பதற்காக ரோம்மல் டோப்ருக் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்தது. டோபுருக்கிலிருந்து பின்வாங்கி முதலில் கசாலா என்ற இடத்தில் பாதுகாவல் அரண்நிலைகளை அமைக்க முயன்றார். ஆனால் நேச நாட்டுப் படைகள் அங்கும் பின் தொடர்ந்து வந்து தாக்கியதால், கசாலாவிலிருந்து எல் அகீலா நிலைக்குப் பின்வாங்கினார். இந்த பின்வாங்கலால் பார்டியா, ஆலஃபாயா கணவாய் போன்ற பல அச்சு நாட்டு கோட்டைகளும், அரண்நிலைகளும் நேச நாட்டுப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பின் சரணடைந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் ரோம்மலின் படைகளுடன் சண்டையிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி இதுவே. பிராட் ஹாடின் பிராட்லி ஜேம்ஸ் ஹாடின் (Bradley James Haddin பிறப்பு: அக்டோபர் 23, 1977) இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் துணை தலைவர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் நியூ சவுத் வேல்ஸ் புளூசு அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மேலும் இவர் முதல்தரத் துடுப்பாட்டம் மற்றும் அ பட்டியல் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலக்ககோப்பையில் கோப்பை வென்ற ஆத்திரேலிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மே 17, 2015 இல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தின் தூதுவராக ஸ்டீவன் சிமித்துடன் இணைந்து அறியப்படுகிறார். செப்டம்பர் 9, 2015 இல் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்தார். பின் பிக்பாஷ் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார். செப்டம்பர் , 2013 ஆம் ஆண்டில் சைமன் கடிச் காயம் காரணமாக விலகியதால் ஹேடின் நியூ சவுத் வேல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆத்திரேலிய அ அணியின் தலைவராகவும் செயல்பட்டார். அடம் கில்கிறிஸ்ற் காயம் காரணமாக விளையாட இயலாதபோது இவர் ஆத்திரேலிய தேசிய அணியின் குச்சக் காப்பாளராக செயல்பட்டார். சனவரி 30, 2001 இல் ஹோபார்ட்டில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதில் ஒரு வீரரை ஸ்டம்பிம்ங் முறையில் வீழ்த்தினார்.மேலும் 13 ஓட்டங்கள் எடுத்தார். பின் 2001 ஆம் ஆண்டில் மேத்தியூ வேடின் வருகைக்குப் பிறகு அணியில் இவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. பின் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டிலிங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் தொடர் முழுவதும் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படவில்லை. செப்டம்பர் 18, 2006 இல் கோலாலம்பூரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டிஎல் எஃப் கோப்பையில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரும் மைக் ஹசியும் சேர்ந்து 6 ஆவது இணைக்கு 165 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன்மூலம் 6 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனை படைத்தது. 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அடம் கில்கிறிஸ்ற் ஓய்வு பெற்ற பின்பு மே 22, கிங்க்ஸ்டன், ஜமைக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 400 ஆவது வீரராக அறிமுகமானார். டிசம்பர் 15, 2014 இல் ஸ்டீவ் சுமித்திற்குப்பதிலாக உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இவர் விளையாடினார். அணி நிர்வாகம் இவரை உதவித் தலைவராகவும். குச்சக் காப்பாளராகவும் தேர்வு செய்தனர். இந்தத் தொடரில் இவர் குச்சக் காப்பாளராக 29 இலக்குகளை ஆட்டமிழக்கச் எய்தார்.இதன்மூலம் ஒரு தொடரில் அதிக இலக்குகளை ஆட்டமிழக்கச் செய்த குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார். ஹொங்கொங்கில் உள்ள நகரங்களின் பட்டியல் ஹொங்கொங்கில் உள்ள பிரதான நகரங்கள் மற்றும் இடங்களின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளன. இவை ஹொங்கொங்கின் அரசியல் அலகுகளுக்கு அமைவாக ஹொங்கொங் தீவு, கவுலூன் மற்றும் புதிய கட்டுப்பாட்டகம் என மூன்று பிரிவுகளாக பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் புதிய நகர் உருவாக்கத் திட்டங்களினால் எதிர்காலத்தில் இந்த பட்டியல் மேலும் நீளும். புதிய கட்டுப்பாட்டகத்தின் உள்ள இடங்கள் எனும் போது, அவற்றில் புதிய கவுலூன் பகுதியில் உள்ள இடங்களும் உள்ளடக்கமாகும். ம. க. அ. அந்தனிசில் ம. க. அ. அந்தனிசில் (இறப்பு: சூலை 9, 2005) ஈழத்து முதுபெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், வரலாற்றாய்வாளரும் ஆவார். தீப்பொறி, "ஒரு தீப்பொறி” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை தமது பத்திரிகைகளில் எழுதினார். 1967 இல் "தீப்பொறி", 1970 இல் "பல்கலை", 1972 இல் "ஒரு தீப்பொறி" ஆகிய மூன்று பத்திரிகைகளை அவ்வப்போதிருந்த தமது அரசியற்கோட்பாடுகளுக்கேற்ற வகையில் நடத்தினார். இவரது அடுக்குமொழித் தலைப்புக்கள் நீண்ட காலம் பொதுமக்களால் பேசப்பட்டுவந்தன. இவரது தீப்பொறி பத்திரிகை இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதை அடுத்து, “ஒரு தீப்பொறி” என்ற பெயரில் தனது பத்திரிகையை வெளியிட்டு வந்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக யாழ்ப்பாண நீதி மன்றம் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. இவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரரும் ஆவார். தமது இறுதிக் காலத்தில் தமிழின் தொன்மையையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில் தொடராக எழுதி வந்தார். விவிலியக் கதைகளை தமிழில் எழுதினார். சொல்லேருழவர் என இவர் அழைக்கப்பட்டார். தமது இறுதிக் காலத்தில் கண்பார்வைக் கோளாறையும், நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கும் உள்ளான நிலையில், அந்தனிசில் மட்டக்களப்பில் 2005, சூலை 9 இல் காலமானார். பரசு பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சுத்த ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். பூர்வி பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருக்கிறது. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்குமாறி வருவதுடன், அவரோகணத்தில் தைவதமும், மத்திமமும் ஒன்றுக்கு மேற்பட ஒழுங்கு மாறி வருகின்றன. இது ஒரு வக்கிர இராகம் ஆகும். ரேவகுப்தி பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். சாரங்கநாதம் சாரங்கநாதம் பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த), காகலி நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். இதில் அவரோகணத்தில் தைவதம் ஒழுங்குமாறி வருவதால், இது ஒரு வக்கிர இராகம் ஆகும். ஆரபி ஆரபி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: பேகடா பேகடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். பிலகரி பிலகரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சுத்த மத்திமம் (ம) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ("Tamilnad Mercantile Bank Limited") இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். இது தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன. எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம் வெளியிடும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தேவகாந்தாரி தேவகாந்தாரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம) பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருப்பதால் இது ஒரு சம்பூர்ண இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். ஆரோகணத்தில் ரிசபம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். கருடத்வனி கருடத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர். கௌடமலாரு கௌடமலாரு இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். ஹம்சவினோதினி ஹம்சவினோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது. சனரஞ்சனி சனரஞ்சனி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். கதனகுதூகலம் கதனகுதூகலம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருப்பதால் இது ஒரு சம்பூர்ண இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் காந்தாரம், பஞ்சமம் ஆகியன ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு இருசுர வக்கிர இராகம் ஆகும். கன்னடா கன்னடா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), ,காகலி நிசாதம் (நி), சதுச்ருதி ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் சட்சம், மத்திமம் என்பனவும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு இருசுர வக்கிர இராகம் ஆகும். கேதாரம் (இராகம்) கேதாரம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சதுச்ருதி ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். கோலாகலம் (இராகம்) கோலாகலம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம), அந்தர காந்தாரம் (க), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சதுச்ருதி ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூர்ணச" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமம், பஞ்சமம் என்பன ஒழுங்கு மாறி வருவதால் இது இருசுர வக்கிர இராகம் ஆகும். குறிஞ்சி (இராகம்) குறிஞ்சி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் காகலி நிசாதம் (நி), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் நிசாதம் ஒழுங்கு மாறி வருவதால் இது வக்கிர இராகம் ஆகும். நவரோஜ் நவரோஜ் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண" இராகம் என்பர். நீலாம்பரி நீலாம்பரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சட்சம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். ஆல்காடெல்-லுசென்ட் ஆல்காடெல்-லுசென்ட்("Alcatel-Lucent") என்பது ஒரு உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனம் கழகம். நகர்பேசிகள், மின்னணு பொருட்கள், ஐபி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. பிரான்சு நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது ஆல்காடெல்-லுசென்ட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெல் செயல்படுகிறது. சி-நிரலாக்க மொழி பெல்லில் உருவானதாகும். எட்மிரால்ட்டி (ஹொங்கொங்) எட்மிரால்டி (Admiralty) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மையம் நகரத்திற்கும், வஞ்சாய் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது. ஹொங்கொங்கை பிரித்தானியர் கைப்பற்றியதன் பின்னர், அவர்கள் தமது கடற்படை தலமையகத்தை இந்த இடத்திலேயே நிறுவியிருந்தனர். அதன் காரணமாகவே "எட்மிரால்டி" எனும் பெயர் நிலைப்பெற்றமைக்கான காரணமாகும். வஞ்சாய் வஞ்சாய் (Wan Chai) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, வஞ்சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது எட்மிரால்டி நகரத்திற்கு அடுத்து உள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது. கே. வெங்கடசாமி நாயுடு கே. வெங்கடசாமி நாயுடு ஒரு தமிழக அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1930களின் இறுதியில் சென்னை நகரின் மேயராகப் பணியாற்றியவர். 1952-54 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தின் அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சராக சி. ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையில் பணியாற்றினார். நிரோஷ்ட்டா நிரோஷ்ட்டா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். டி. என். சிவஞானம் பிள்ளை திருநெல்வேலி நெல்லையப்ப சிவஞானம் பிள்ளை ( டி. என். சிவஞானம் பிள்ளை, ஏப்ரல் 1, 1861- 1936) ஒரு தமிழக அரசியல்வாதி, அரசு நிருவாகி மற்றும் வழக்கறிஞர். நீதிக்கட்சியை சேர்ந்த இவர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். சைவ வேளாள சாதியினைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை, சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்து 1882ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் குடியியல் பணித்துறைக்கு (இந்தியன் சிவில் செர்விஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஆட்சியராக சிறிது காலம் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ல் திருநெல்வேலித் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923-26 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பூரணசந்திரிகா பூரணசந்திரிகா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் ரிசபம், மத்திமம் என்பனவும் ஒழுங்குமாறி வருகின்றன. இதனால் இவ்விராகம் ஒரு வக்கிர இராகம் ஆகும். சிந்துமந்தாரி சிந்துமந்தாரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி), சதுச்ருதி தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். இதில் அவரோகணத்தில் காந்தாரம், மத்திமம், பஞ்சமம் என்பன ஒழுங்குமாறி வருகின்றன. இதனால் இவ்விராகம் ஒரு வக்கிர இராகம் ஆகும். விவர்தினி விவர்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), கைசிகி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. முகையூர் (சட்டமன்றத் தொகுதி) முகையூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. திருநாவலூர் (சட்டமன்றத் தொகுதி) திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. சின்னசேலம் (சட்டமன்றத் தொகுதி) சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. நெல்லிக்குப்பம் (சட்டமன்றத் தொகுதி) நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. பகுதாரி பகுதாரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது சாடவ ஔடவ இராகம் எனப்படுகின்றது. மங்களூர் (சட்டமன்றத் தொகுதி) மங்களூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. திருவோணம் (சட்டமன்றத் தொகுதி) திருவோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி) வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. பங்காள பங்காள இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது சாடவ இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் மத்திமம், ரிசபம் என்பனவும், ஆரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். புதமனோகரி புதமனோகரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். சயதரங்கினி சயதரங்கினி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி), சதுச்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். செஞ்சுகாம்போதி செஞ்சுகாம்போதி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம), சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க), சதுச்ருதி ரிசபம் (ரி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும் அவரோகணத்தில் நிசாதமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். தேசாக்சி தேசாக்சி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி), சதுச்ருதி தைவதம் (த), சுத்த மத்திமம் (ம) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. ஈசமனோகரி ஈசமனோகரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். காப்பிநாராயணி காப்பிநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி), அந்தர காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.