ல் ல் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தாறாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "லகர மெய்" அல்லது "லகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இல்லன்னா" என வழங்குவர். தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ல் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ல் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.. வ் வ் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தேழாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "வகர மெய்" அல்லது "வகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இவ்வன்னா" என வழங்குவர். தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் வ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.. ழ் ழ் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தெட்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ழகர மெய்" அல்லது "ழகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இழ்ழன்னா" என வழங்குவர். தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ழ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ழ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.. ள் ள் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தொன்பதாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ளகர மெய்" அல்லது "ளகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இள்ளன்னா" என வழங்குவர். தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ள் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ள் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.. ற் ற் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பதாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "றகர மெய்" அல்லது "றகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இற்றன்னா" என வழங்குவர். தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ற் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் "ற்" வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.. கீரங்கீரனார் கீரங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரம் என்னும் ஊரில் வாழ்ந்த கீரனார் இவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 78 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். இடம்; வாள்போல் இருக்கும் கழிமுகம். அதில் சுறா மேய்மிறது. அதில் பூத்திருக்கும் நீல நிற நெய்தல் பூவின்மேல் புன்னைப் பூக்களின் மகரந்தத் தாதுகள் உதிர்கின்றன. அருகில் தாழம்பூ பூத்திருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். இங்கே அவர் இல்லையே என்று நாம் துன்றுகிறோம். அதோ கேள்! அவர் திருமணம் சொய்துகொள்ள வரும் தோரின் மணியோசை கேட்கிறது. அவரது தேரோட்டி குதிரையைத் தார்க்கோல் செய்யாமல் மெதுவாக ஓட்டிவருகிறான். (நாம் பதறிக்கொண்டிருக்கிறோம்) ன் ன் () தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பத்தோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "னகர மெய்" அல்லது "னகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இன்னன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது ந், ன் என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துக்களுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துக்களின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துக்களையும் முறையே "நகரம்", என்றும் "னகரம்" என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துக்களைக் குறித்து ன் ஐ "றன்னகரம்" என்றும் ந் ஐத் "தன்னகரம்" என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம். ண், ன் ஆகிய எழுத்துக்களிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு. தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ன் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ன் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.. கீரந்தையார் கீரந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரன் தந்தை என்னும் சொற்கள் சேர்ந்தால் கீரந்தை என அமையும் என்பது தொல்காப்பிய நெறி. திருமாலைப் போற்றும் பரிபாடல் ஒன்று மட்டும் இவர் பாடலாக உள்ளது. அது பரிபால் நூலில் 2ஆம் பாடல். இந்தப் பாடலின் தொடக்கத்தில் அடிகள் சிதைந்துள்ளன. திருமால் கேழல்(பன்றி) உருவில் தோன்றிய ஊழி முதல்வன் என்று குறிப்பிடும்போது ஊழிகளை இப்பாடல் பட்டியலிடுகிறது. 1 விசும்பின் ஊழி - இந்த ஊழியில் பசும்பொன் உலகமும்(வானுலகம்) மண்ணுலகமும் பாழாயிற்று. 2 ஒன்றன் ஊழி - வானத்தில் நிசை தெரியாத ஊழி. 3 வளி ஊழி - காற்று தோன்றிற்று. 4 தீ ஊழி. 5 பனி ஊழி - பனியும் மழையும் பெய்தழித்த ஊழி. 6 வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஊழி. 7 நிலம் தோன்றிய ஊழி. 8 நீரில் நெய்தல், குவளை, ஆம்பல் பூத்து சங்குகள் மேய்ந்த ஊழி. இந்த ஊழியில்தான் திருமால் கேழல் உருவில் தோன்றினான். திருமால் ஆழி முதல்வன். சங்குநிற வாலியோன்(பலராமன்) திருமாலுக்கு அண்ணன். பனைக்கொடியோன் திருமாலுக்குத் தம்பி. மேலும் அமிழ்தம் கடைந்தது போன்ற வரலாறுகளும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. பெரு விரல் பெரு விரல் என்பது கை, கால் இவைகளின் பெரிய விரல் அல்லது கட்டைவிரல் () என்பது ஆகும். இக்கட்டைவிரல் ஆனது கையின் முதல் விரல் ஆகும். திருக்கோவில் திருக்கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள், முக்கிய வருமானம் நெல் வயல், மற்றும் மீன்பிடித் தொழிலும் ஆகும், பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் தம்பிலுவில், விநாயகபுரம், தாண்டியடி, தம்பட்டை. அக்கரைப்பற்று கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது. திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும். ஆள்காட்டி விரல் ஆள்காட்டி விரல் என்பது கைகளின் பெருவிரலுக்கு அடுத்த விரல் ஆகும் . இவ்விரல் ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனையோ சுட்டிகாட்ட உதவும் ஆகையால் இதனை ஆட்காட்டி விரல் அல்லது சுட்டுவிரல் என்று பொதுவாக தமிழில் அழைப்பர். இக்கட்டைவிரல் ஆனது கையின் இரண்டாவது விரல் ஆகும். சத் பூசை சத் (Chhath)(இந்தி:छठ}}, அல்லது தாலா சத் அல்லது சூரிய சட்டி எனப்படும் ஓர் இந்து விழாவாகும். உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. தாங்கள் நேர்ந்துகொண்ட விருப்பங்களை நிறைவேற்றியமைக்காகவும் நன்றி தெரிவிக்க இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது. கடுமையான வழிபாடு விதிகளைக் கொண்ட இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் (கங்கை எனக் கருதி) குளித்து நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருத்தல்,நீரில் நெடுநேரம் நிற்றல் மற்றும் கதிர் எழும்,விழும் காலங்களில் அருக்கியம் (படையல்)விடுதல் என்ற கூறுகளை உள்ளடக்கியது. இப்பண்டிகை பீகார், சார்க்கண்ட் மற்றும் நேபாளத்தின் டேரைப் பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்டாலும் தற்காலத்தில் இம்மக்கள் இடம் பெயர்ந்துள்ள நாட்டின் பிற பகுதிகளிலும் நகரங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மும்பை மற்றும் மொரீசியஸ்போன்ற இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஆற்றோரங்களில் கூடி கொண்டாடுகின்றனர். மிகப் பெருமளவில் மும்பையில் புதிதாகக் குடிபெயர்ந்த வட மாநிலத்தவர் சத் பூசையைக் கொண்டாடுவது "அரசியல் நோக்குடன்" வளர்க்கப்படுவதாகவும் "எண்ணிக்கை பலத்தை எடுத்துக் காட்டும் நாடகம்" என்றும் புதியதாக மகாராட்டிர நிர்மாண சேனா என்ற கட்சியை நிறுவிய ராஜ் தாக்ரே குற்றம் சாட்டினார்.ஆற்றோரங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகை கடலோரத்தில் கொண்டாடப்படுவதின் நோக்கத்தை கேள்வி எழுப்பினார். இவரது பேச்சுக்களுக்கு எதிராக பட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இவர் உள்ளூர் பண்பாட்டைச் சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார். நடு விரல் நடுவிரல் என்பது கை, கால் இவைகளின் நடுவில் உள்ள (மூன்றாவது) விரல் ஆகும் . இவ்விரல் ஐவிரல்களுள் நடுவிலுள்ள விரல், ஆகையால் இதனை நடுவிரல் என்று ஆழைப்பர். நடுவிரல் ஆனது கையின் மூன்றவது விரல் ஆகும். மோதிர விரல் மோதிரவிரல் என்பது கையில் மோதிரம் அணியும் (சுண்டுவிரலுக்கு அடுத்த) விரல் ஆகும். இதனை ஆழிவிரல் என்றும் ஆழைப்பர். மோதிரவிரல் ஆனது கையின் நான்கவது விரல் ஆகும். சுண்டு விரல் சிறுவிரல் என்பது பெருவிரலிலிருந்து கடைசியாகவுள்ள விரல் ஆகும். இதனை சுண்டுவிரல் என்றும் ஆழைப்பர். சுண்டுவிரல் ஆனது கையின் ஐந்தாவது விரல் ஆகும். கணவாய் (உயிரினம்) கணவாய் ("squid") என்பது தலைக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த கணவாய் வடிவி என்ற பெருவரிசையில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினம் ஆகும். இது மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கணவாய் இனங்கள் 60 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை என்றாலும் சிலவகை கணவாய்கள் 13 மீட்டர் வரை வளரக்கூடியவை. இது மிகவும் பிரபலமான உணவாகும்.மேற்கத்திய நாடுகளில் இது கலமாரி என்ற இத்தாலியன் பெயரால் அழைக்கப்படுகின்றது. கணவாய் என்பது ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்றழைக்கப் படுவது. கணவாய்களை கடல்வாழ் பச்சோந்தி என்று சொல்வதும் உண்டு. காரணம் இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள கோலங்களையும் வண்ணங்களையும் சுற்றுப் புறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவை. கணவாய்களை எதிரிகள் (டால்ஃபின், சுறா மீன் போன்றவை) துரத்தும் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை நிறம் கொண்ட திரவத்தினை கடலில் பாய்ச்சும். பெரிய கணவாய் கருப்பு நிற திரவத்தினையும், ஊசிக் கணவாய் நீல நிற திரவத்தினையும். கணவாய் பழுப்பு நிற திரவத்தினையும்,வெளி விடும். கணவாயின் கண்ணில் உள்ள கருவிழி சற்று வினோதமானது. பல உயிரினங்களின் கண்ணில் கரு விழிகள் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் கணவாயின் கரு விழி டபிள்யூ (W) என்னும் ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும். ஸ்டீக் லார்சன் ஸ்டீக் லார்சன் ("Stieg Larsson", ஆகஸ்ட் 15, 1954 – நவம்பர் 9 2004) ஒரு சுவீடிய இதழாளர் மற்றும் எழுத்தாளர். உலகப்புகழ் பெற்ற "மில்லெனியம் டிரைலஜி" (ஆயிரமாண்டு முப்புத்தகங்கள், Millennium Trilogy) என்ற புதின வரிசையை எழுதியவர். இப்புதின வரிசை இது வரை உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2.7 கோடி படிகள் விற்றுள்ளது. 2008ம் ஆண்டில் உலகில் மிக அதிகமான புத்தகங்கள் விற்ற எழுத்தாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர். லார்சன் இடதுசாரி கொள்கையுடைவர். தனது இளமைக்காலத்தில் எரித்திரியா நாட்டில் அரசு எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் தன்னார்வலராகச் சென்றவர். சுவீடிய பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். சுவீடனின் திரொட்ஸ்கிய பத்திரிக்கையான "ஃபியார்டே இண்டெர்நேஷனலேன்" இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் "இண்டெர்நேஷனலேன்" இதழிலும் அடிக்கடி எழுதிவந்தார். சுவீடனில் வலதுசாரி சிந்தனைகளும் வெள்ளைப் பேரினவாத கருத்துகளும் பரவாமல் தடுக்க சுவீடிய எக்ஸ்போ அமைப்பைத் தொடங்கினார். அது வெளியிட்ட "எக்ஸ்போ" இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சுவீடிய வலதுசாரி அமைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதினார். சுவீடிய அறிபுனை ரசிகர் அமைப்புகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். 2004ம் ஆண்டு லார்சன் மாரடைப்பால் காலமானார். அவர் வாழ்நாளில் பல புதினங்களை எழுதியிருந்தாலும் அவற்றை அவர் பதிப்பிக்க முயலவில்லை. மாலை நேரங்களில் தனது மனமகிழ்வுக்காக மட்டும் எழுதிவந்திருந்தார். அவரது மறைவுக்குக் பின் 2005ல் அவரது "மென் சோம் ஹாடர் குவின்னோர்"(பெண்களை வெறுக்கும் ஆண்கள், Män som hatar kvinnor) என்ற தலைபில் சுவீடனில் வெளியாகி பெருவெற்றி கண்டது. "தி கேர்ல் வித் தி டிராகன் டாட்டூ" (டிராகன் பச்சை குத்தியிருக்கும் இளம்பெண், The Girl with the Dragon Tattoo) என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் புகழ் பெற்றது; பல இலக்கிய விருதுகளையும் வென்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த முப்புதின வரிசையின் அடுத்த இரு புதினங்களும் வெளியாகி அவையும் பெருவெற்றி பெற்றன. "தி கேர்ல் வித் தி டிராகன் டாட்டூ" சுவீடிய மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. தற்போது ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. குமரி விடுதலைப் போராட்டம் குமரி விடுதலைப் போராட்டம் அல்லது தெற்கு எல்லைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள், நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர். இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் தெற்குப் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகஸ்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன் படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப் பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரேற்றுப்பாசனம் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இம் முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், இப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது பட்டம் தாணு பிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது. திருவிதாக்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்ப்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது. தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணு பிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று தமிழக முதலமைச்சர் காமராசர், நாகர்கோவில் எசு. எல். பி கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்பு விழாவில் கீழ்கண்டவாறு ஏற்புரையாற்றினார் மக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இரிகேசன் திட்டம் ஆகியவற்றிற்கு செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும், சித்த மருத்துவக் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் தீட்டப் பட்டது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப் பட்டு திட்ட காலக் கெடுவில் முடிக்கப் பட்டது. பாஸ்டோன் பாஸ்டோன் (Bastogne) பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு நகரமும் உள்ளாட்சிப் பகுதியுமாகும். இது பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் மாகாணத்தில் உள்ளது; ஆர்டென் பகுதியிலுள்ள ஒரு முகட்டில் 510 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 14, 144 (2006 கணிப்பின் படி). பெட்டவாய்த்தலை பெட்டவாய்த்தலை அல்லது வெட்டுவாய்த்தலை ("Pettavaithalai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். சங்க காலத்தில் இது போர்வை அல்லது போஓர் என அழைக்கப்பட்டது. திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கிமீ தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ள சிற்றூர் பேட்டவாய்த்தலை. இவ்வூரை பேட்டவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் அழைக்கின்றனர். வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மாறுபெயர் ஆகும். ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு. இவ்விதம் காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலை இடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர்களால் அழைக்கப்படுகின்றது.. நாஞ்சில் நாடு நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பகுதி. இப்பகுதி பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நாஞ்சில் நாடு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இங்கு சோழர்கள் ஒரு படை நிலை அமைந்திருந்தனர். இப்பகுதியிலுள்ள கோட்டார் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியமான புற நானூறின் 139 வது பாடலில் நாஞ்சில் நாட்டைப் பற்றிய குறிப்பு உள்ளது. எஃகு எஃகு அல்லது உருக்கு ("steel") என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும். கரிமத்தின் அளவைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். பொதுவாக இதில் கரிமம் கலக்கப்படுகிறது, எனினும் மாங்கனீசு, நிக்கல், வனேடியம் போன்ற கனிமங்களும் கலக்கப்படுகின்றன. எஃகின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை, இழுவு தன்மை ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து மாறுபடும். இதனுடன் சேர்க்கப்படும் கரிமத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இதன் வலு அதிகமாகும், ஆனால் நெகிழ்வுத்தன்மை குறையும். சேர்க்கப்படும் கலப்பு உலோகங்களின் தன்மையைப் பொறுத்து எஃகின் அடர்த்தி மாறுபடுகிறது. வழக்கமாக எஃகின் அடர்த்தி 7750 மற்றும் 8050 கிலோகிராம்/மீட்டர் ஆகும். குறைந்தது பதினோரு விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்து தயாரிக்கப்படுவது துறுயேறாக எஃகாகும். எஃகுடன் குரோமியம் சேர்ப்பதால் துரு பிடித்தலும் அரிமானம் உண்டாவதும் தடுக்கப்படுகிறது. கரிம உருக்கே பரவலாகப் பயன்படுகின்ற கலப்புலோகமாயினும், அவற்றின் சிறப்பியல்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கலப்புலோகங்கள் பல உள்ளன. ஒரு பழைய வரைவிலக்கணத்தின்படி, எஃகு என்பது 2.1% வரை கரிமத்தைக் கொண்ட கலப்புலோகமாகும். தற்காலத்தில், கரிமம் ஒரு விரும்பப்படாத கலப்புலோகக் கூறாகக் கருதப்படும் சிலவகையான உருக்குகளும் உண்டு. ஓர் அண்மைய வரைவிலக்கணம், உருக்கு என்பது plastic ally வார்க்கக்கூடிய ஒரு இரும்பை அடிப்படையாகக் கொண்ட கலப்புலோகம் என்கிறது. உருக்கில் கரிமத்தின் முக்கியத்துவம், உருக்கின் இயல்புகளிலும், அதன் நிலை மாற்றத்திலும், கார்பன் கொண்டிருக்கும் தாக்கத்தின் விளைவுகளினாலேயே உருவாகிறது. கார்பனின் அளவு அதிகரிக்க, உருக்கின் கடினத்தன்மையும், இழுவைப் பலமும் அதிகரிக்கின்றது. ஆனாலும் அதன் நொறுங்கக்கூடிய தன்மையும் அதிகரிக்கவே செய்கின்றது. எஃகின் அடர்த்தி இதன் உலோகக் கலப்பைப் பொறுத்து மாறுபடும், ஆனால் பொதுவாக 7.75 முதல் 8.05 g/cm3 அடர்த்திக்குள் இருக்கும். எஃகின் தன்மையின் காரணமாக இது பெரும்பான்மையான உபயோகங்களுக்கு பயன்படுகிறது. அறை வெப்பநிலையில் body-centered cubic (BCC) நிலைகள் இருக்கும். எஃகு காந்தத்தன்மை கொண்டது. எஃகுக்கு பல வகையான வெப்பமாக்கும் முறைகளும் உள்ளன. காய்ச்சுதல், தணித்தல் மற்றும் பதமாக்குதல் என்பவை மிகப் பொதுவான வெப்பமாக்கும் முறைகளாகும். கார்பன் மீக்குறை அளவாக 0.8% பகுதிப்பொருளாக இருக்கும்போது வெப்பமாகும் முறை திறனுள்ளதாக இருக்கும். மீவுயர் பகுதிப் பொருளாக கார்பன் உள்ளபோது எஃகு வெப்பமாகும் முறை போதுமான பயனளிக்காது. காய்ச்சிக் குளிரவைத்தல் என்பது உட்புற அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்காக எஃகை போதுமான அளவுக்கு வெப்பப்படுத்தி பின்னர் குளிரவைக்கும் செயல்முறையாகும். இத்தயாரிப்பு முறை பொதுவாக எஃகை மென்மையாக்காது. ஆனால் உட்புற இறுக்கம் மற்றும் அழுத்தத்தை விடுவிக்கிறது. காய்ச்சிக் குளிரவைத்தல் செயல்முறை மூன்று கட்டங்கள் வழியாக நிகழ்கிறது. மீட்பு, மறுபயன்பாடு மற்றும் படிகவளர்ச்சி என்பவை அம்மூன்று கட்டங்களாகும். காய்ச்சிக் குளீரவைத்தல் செயல்முறைக்கு குறிப்பிட்ட வகை எஃகுக்குத் தேவையான வெப்பநிலை அதனுடன் கலப்புலோகமாக சேர்க்கக்கூடிய உலோகத்தையும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எஃகை நன்றாக துறு ஏறா நிலைக்கு சூடுபடுத்தி தண்ணீர் அல்லது எண்ணெயில் தோய்த்து குளிரவைத்தலே தனித்தல் செயல்முறையாகும். இத்தகைய விரைவுக் குளிர்விப்பால் கடினமான ஆனால் நொறுங்கும் தன்மையுடைய துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பு உருவாகிறது தணித்தலுக்குப் பின்னர் எஃகு பதப்படுத்தப்படுகிரது. இந்த சிறப்பு காய்ச்சிக் குளிரவைத்தலால் நொறுங்கும் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் கடின இரும்பு உருவாகிறது. கம்பியாக நீளும் தன்மை கொண்ட அதே சமயம் முறியும் தன்மையற்ற எஃகு கிடைக்கிறது. இரும்பு தாதுவிலிருந்து எஃகு தயாரித்தல் என்பது இரண்டாம் நிலையாகும். இந்த நிலையில் இரும்பிலிருந்து சல்பர், பாஸ்பரஸ் மற்றும் அதிகப்படியான கார்பன் ஆகிய மாசுப்பொருள்கள் நீக்கப்படுகின்றன. பின் இதில் கலப்பு உலோகங்களான நிக்கல், குரோமியம், மாங்கனீசு, வனேடியம் போன்றவை சேர்க்கப்பட்டு தேவையான எஃகு தயாரிக்கப்படுகிறது. தாதுக்களில் இருந்து இரும்பு உருக்கிப் பிரிக்கப்பட்ட பின்னர் அதில் அதிகமான கார்பன் கலந்திருக்கும். எஃகைப் பெறுவதற்கு தேவையான சரியான அளவுக்கு கார்பனைப் பிரித்தெடுக்க மீள் செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும். முற்காலத்தில் இரும்பு தயாரித்தலின் போது வார்ப்புகளாக இரும்பு தயாரிக்கப்பட்டு, பின்னர் மேலும் மேலும் அதை சுத்திகரிப்புக்கு உட்படுத்தி இறுதி பொருள் தயாரிக்கப்பட்டது. தற்காலத்தில் நவீன செயல்முறைகள் மூலம் நேரடியாகவே வெட்டியும் வடிவமைத்தும் பாளங்கள் வார்க்கப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் அதிக அளவில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருள் எஃகு ஆகும் இதனுடைய மறுசுழற்சி வீதம் 60% ஆகும். 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 82000 மெட்ரிக் டன் எஃகு மறுசுழற்சி செய்யப்பட்டது, [59] அமெரிக்காவில் மட்டும் 82,000,000 மெட்ரிக் டன் (81,000,000 டன் டன்) 2008 ஆம் ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்டது , இயந்திரவியலில் இது அதிகம் பயன்படுகிறது. இது ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துறையிலே உருக்கு மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. தூண்கள், உத்தரங்கள், கூரைச் சட்டகங்கள், தள அமைப்புகள், கூரைத் தகடுகள் மற்றும் பலவகையான அமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் அலங்காரத்துக்கான கட்டிடக் கூறுகள் உருக்கினாலேயே ஆக்கப்படுகின்றன. இவற்றைவிட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்புக்களில் பெருமளவு உருக்கு, கம்பிகள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது. சாலைகள், இரயில்வே பாதைகள் அமைத்தல், உள்கட்டமைப்புகள், உபகரணங்கள், மற்றும் கட்டடங்களுக்கான கட்டுமானம் போன்ற செயல்களில் பரவலாக இரும்பும் எஃகும் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு அரங்கங்கள், வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள், மற்றும் விமான நிலையங்கள் போன்ற மிக பெரிய நவீன கட்டமைப்புகள் உருவாக்கத்திற்கு எஃகு பயன்படுத்தப்படுகிறது. இந்தியா உருக்கு உற்பத்தியில் சீனா, ஜப்பான், அமெரிக்காவிற்கு அடுத்து நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முந்தைய இரண்டு மாதங்களில் 1.456 கோடி டன்கள் உற்பத்தி செய்து அமெரிக்காவை மிஞ்சி சாதனை செய்தது. உலக அளவில் 12.76 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வோல்கோகிராட் வோல்கோகிராட் ("Volgograd", உருசியம்:) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் ("" என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (")" என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கிமீ நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது. சென் வித் சண்டை சென் வித் சண்டை ("Battle of St. Vith") என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியம் நாட்டின் சென் வித் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றன. டிசம்பர் 16, 1944ல் ஐரோப்பாவின் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலின் குறிக்கோள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றுவதாகும். பல்ஜ் போர்முனையின் மையைக்களத்தில் சென் வித் நகர் ஜெர்மானியப் படைகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்தது. பெல்ஜிய சாலைப் பிணையத்தில் முக்கிய இடத்தில் இந்நகரம் அமைந்திருந்தால் இதனைக் கைப்பற்றுவது ஜெர்மானியர்களுக்கு அவசியமானது. சென் வித்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் ஐந்து நாட்கள் ஜெர்மானியத் தாக்குதலை சமாளித்தன. ஆனால் டிசம்பர் 21ம் தேதி நகரைச் சுற்றியிருந்த அரண் நிலைகளுக்குப் பின் வாங்கின. அடுத்த இரு நாட்களில் ஜெர்மானியப் படைகள் அமெரிக்கப் படைநிலைகளைப் பக்கவாட்டிலிருந்து ஊடுருவி விட்டதால், அமெரிக்கர்கள் நகரையும் அதன் சுற்றுபுறங்களையும் விட்டுப் பின்வாங்கினர். சென் வித் ஜெர்மானியர் வசமானது. ஆனால் ஆறு நாட்கள் நடந்த இச்சண்டை, ஜெர்மானிய தாக்குதல் கால அட்டவணையில் தாமதமேற்படுத்திவிட்டது. பல்ஜ் தாக்குதலை முறியடித்தபின்பு ஜனவரி 30 - பெப்ரவரி 1, 1945ல் நேச நாட்டுப் படைகள் சென் வித் நகரை ஜெர்மானியர் வசமிருந்து மீட்டன. மண்டைக்காடு கலவரம் மண்டைக்காடு கலவரம் என்பது 1982 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மண்டைக்காடு என்னும் இடத்தை மையமாகக் கொண்டு நடந்த கலவரங்களைக் குறிக்கும். இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்க நீதியரசர் வேணுகோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மண்டைக்காடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் புனித கண்ணாம்பாள் ஆலயம் மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாடதட்டுவிளை என்னும் இடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே சிறு சண்டை மூண்டது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவை காணாமல் போனதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், உலக செப வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டது. அதன் இறுதி நாளன்று கிறித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள் நகர் வழியாக ஒர் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிறித்தவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றைத் திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைக்கப்பட்டது. அந்த ஊர்வலம் முடிந்த பிறகு அச்சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்து விவசாயி ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை அமைத்தார் வழிபாடு நடத்த ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து மகா சிவராத்திரி அன்று காவல்துறையினர் கிறித்தவர்களின் எதிர்ப்பின் காரணமாக சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களின் முக்கிய திருவிழாவன்று இச்சிலை அகற்றப்பட்டதால் இந்துக்கள் இடையே கொந்தளிப்பு எற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனால் இந்து மக்களிடையே ஒற்றுமையும் எழுச்சியும் ஏற்பட்டது. இந்து கிறித்தவ கலவரம் பக்கத்து ஊர்களிலும் பரவியது. கிறித்தவர்கள் குமரிக் கடலில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர். ஆவணங்களின் படி அப்பாறை கன்னியாகுமரி கோவிலுக்குச் சொந்தமானது. இரு முறை விவேகானந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளை அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர். இப்படி கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டே இருந்தது. இதன் உச்ச கட்டமாக, 1982 பெப்ரவரி 13,14 அன்று நாகர்கோவிலில் இந்துக்கள் ஒன்றினைந்து நடத்திய இந்துக்கள் எழுச்சி மாநாடு கிறித்தவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 1982 ம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிறித்தவர்கள் இந்து பெண்களைhf கேலி செய்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. ஏற்கனவே வழிபாட்டுக்கு ஒலிகுழல் கட்டுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. இதன் காரணமாக மார்ச் 1, 1982 அன்று மக்கள் மண்டைக்காடு ஆலயத்தின் முன் கூடினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் முதலிய இடங்களுக்கும் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கோவளத்தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள், மற்றும் பொது சொத்துக்கள் அதிகமாக சேதம் அடைந்தன. இக்கலவரத்தால் கடற்கரையிலுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. மால்மெடி படுகொலை மால்மெடி படுகொலை ("Malmedy Massacre") இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படுகொலைப் போர்க் குற்றம். இது பல்ஜ் சண்டையின் போது நடைபெற்றது. இச்சம்பவத்தில் நாசி ஜெர்மனியின் எஸ். எஸ் அமைப்பின் காம்ப்கிரெஃப்ஃபே பெய்பெர் என்ற படைப்பிரிவு டிசம்பர் 17, 1944 அன்று சரண்டைந்த 84 அமெரிக்கப் போர்க்கைதிகளை சுட்டுக் கொன்றது. டிசம்பர் 1944ல் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. பல்ஜ் போர்முனையின் வடகளத்திற்கான பொறுப்பு ஜெனரல் செப்ப டயட்ரிக் தலைமையிலான 6வது பான்சர் ஆர்மியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் முக்கியப் படைப்பிரிவு யோக்கீம் பெய்ப்பரின் கீழான காம்ஃப்குருப்பே பெய்ப்பர் என்பதாகும். நேச நாட்டுப் படைநிலைகளை முறியடித்து முன்னேறும் போது எரிபொருள் கிடங்குகளைக் கைப்பற்ற வேண்டுமென்ற இலக்கும் பெய்ப்பரின் படைப்பிரிவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 17ம் தேதி முன்னேறத் தொடங்கிய பெய்ப்பரின் படைப்பிரிவு, கைப்பற்றிய பியூலிங்கன் எரிபொருள் கிடங்குகளில் சிக்கிய அமெரிக்க வீரர்களை போர் விதிகளை மீறி சுட்டுக் கொன்றது. பெல்ஜியக் குடிமக்கள் பலரும் அவர்களால் காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பெல்ஜியத்தின் மால்மெடி நகரருகே பாவ்கென்சு என்ற இடத்தில் அமெரிக்க ஊர்திக்குழாம் (convoy) ஒன்றை பெய்ப்பரின் படையினர் தோற்கடித்து 120 அமெரிக்கப் படைவீரர்களைக் கைது செய்தனர். அவர்களைப் பனிப்பொழிவால் நிறைந்திருந்த ஒரு திறந்த மைதானத்தில் நிற்கவைத்து எந்திரத் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டு வீழ்த்தினர். அமெரிக்கர்களுள் தப்பி ஓடியவர்களையும் விரட்டி சுட்டனர். பின்னர் குண்டடி பட்டும் உயிருடன் இருந்தவர்களைத் தேடி அவர்களைக் கொன்றனர். கைது செய்யப்பட்ட சுமார் 120 அமெரிக்க வீரர்களில் 43 பேர் மட்டும் தப்பி ஓடிவிட்டனர். பெய்ப்பரின் படைப்பிரிவு மீண்டும் முன்னேறத் தொடங்கியது. இது போல மேலும் பல இடங்களில் போர்க்கைதிகளைச் சுட்டுக் கொன்றது. பல்ஜ் சண்டை ஓய்வதற்குள் மேலும் நூற்றுக்கணக்கில் போர்க்கைதிகளை இப்படைப்பிரிவினர் கொன்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலையின் செய்தி அமெரிக்கப்படையினரிடையே பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு பல அமெரிக்கப் படைப்பிரிவுகளும் ஜெர்மானிய எஸ். எஸ் மற்றும் வான்குடை வீரர்களை உயிருடன் பிடிக்காமல் கண்ட இடத்தில் (சரணடைந்தாலும் கூட) சுடத் தொடங்கினர். நேச நாட்டுத் தளபதிகள் நேரடியாகத் தலையிட்டு இதனைத் தடுக்க வேண்டியதாயிற்று. ஜனவரி 1945 மத்தியில் ஜெர்மானியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு நேசநாட்டுப் படைகள் பாவ்கென்சு மைதானத்தை மீண்டும் கைப்பற்றின. அதிலிருந்து உறைந்த நிலையில் 84 அமெரிக்க வீரரகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் டயட்ரிக், பெய்ப்பர் உட்பட 70 ஜெர்மானிய வீரர்கள் மால்மெடிப் படுகொலைக்காகக் கைது செய்யப்பட்டனர். பெய்ப்பர் உட்பட 43 பேருக்கு மரணதண்டனையும் 22 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டன. ஆனால் விடுதலை அடைந்த மேற்கு ஜெர்மனியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் தண்டனைக் காலமும் குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டனர். 1956ல் பெய்ப்பரும் விடுதலையானார். அறுவைச் சிகிச்சை அறுவைச் சிகிச்சை () என்பது, ஒரு நோயாளியின் நோயியல் நிலைமையை அல்லது காயம்பட்ட நிலமையை ஆராய்ந்து பார்க்கவோ, அல்லது ஆராய்ந்து பார்க்கும் அதேவேளையில் நோயைக் குணப்படுத்தவோ, அல்லது உடலின் தொழிற்பாட்டையோ, தோற்றத்தையோ மேம்படுத்தும் நோக்கிலோ, அல்லது சில சமயங்களில் ஏதாவது மதம் தொடர்பான நோக்கங்களுக்காகவோ மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சார்ந்த செயல்முறையைக் கொண்ட மருத்துவத்தின் சிறப்பம்சமாகும். இம்முறை மனிதர்களிலும், ஏனைய விலங்குகளிலும் செயற்படுத்தப்படுகிறது. இவ்வாறான சிகிச்சையை செய்பவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுவார். அறுவைச் சிகிச்சையானது சில நிமிடங்களிலிருந்து சில மணித்தியாலங்களில் செய்யப்படுமெயன்றி, தொடர்ந்துகொண்டிருக்கும் சிகிச்சை முறையல்ல. பண்டைய காலத்தில் ஒருவர் முழு உணர்வுடன் இருக்கும் நிலையிலேயே இவ்வகையான அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மயக்க மருந்துகள் வழங்கப்படுவதன் மூலம், நோயாளியை விழிப்புநிலை தடுமாறுதல் நிகழ்வினால் அவருக்கு வலி ஏற்படாதிருக்கச் செய்து அதன் பின்னரே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. நோயாளிக்கு பகுதியாக உணர்வற்ற நிலையை ஏற்படுத்தியோ, அல்லது முழுமையான மயக்கநிலையை ஏற்படுத்தியோ அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுவதானால் அதிக வலியிலிருந்து தப்ப முடிகின்றது. . ஒன்றிய வாழ்வு ஒன்றிய வாழ்வு ("Symbiosis") எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். 1877 இல் பெனெற் என்பவர் பாசி-காளான்களிடையே ("lichens-fungal") காணப்பட்ட தொடர்பை விளக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். 1879 இல் செருமானிய ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் அன்ரன் டீ பரி என்பவர் ஒன்றிய வாழ்வை "வேறுபட்ட உயிரினங்கள் இணைந்து வாழ்தல்" என வரைவிலக்கணப்படுத்தினார். ஒன்றிய வாழ்வு என்ற பதமானது மிகவும் பரந்த உயிரியல் இடைவினைகளை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையில் இந்த ஒன்றிய வாழ்வானது ”அண்டி வாழ்தல்” ("commensalism"), ”இணைவாழ்வு” அல்லது ”சமபங்கித்துவம்” ("mutualism"), ”ஒட்டுண்ணி வாழ்வு” எனப் பகுக்கப்படுகின்றது. சில ஒன்றிய வாழ் உயிரினங்களில் அப்படியான வாழ்வு இன்றியமையாததாக இருக்கின்றது. அவ்விரு உயிரினங்களும் தமது வாழ்வுக்கு ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையாக, ஒன்றுக்கொன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்கின்றன. சில பாசி, காளான்கள் தனித்தனியாக இருப்பின் வாழும் திறனற்றவையாக இருக்கின்றன. வேறு சில உயிரினங்கள் அமையத்திற்கேற்றபடி ஒன்றிய வாழ்வை மேற்கொண்டு, மாற்றுச் சூழலில் தனித்தியங்கும் பண்பையும் கொண்டிருக்கின்றன. ஒன்றிய வாழ்வானது சிலசமயம் உயிரினத்துக்கு பயனுள்ளதாக இருப்பினும், வாழ்வுக்கு அத்தியாவசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு உயிரினத்தின் உடலின் இழையங்களின் உள்ளாக அடுத்த உயிரினம் வாழுமாயின் அது அக ஒன்றிய வாழ்வு ("Endosymbiosis") என அழைக்கப்படும். இழையத்தினுள்ளே இருப்பவை என்னும்போது, அவை உயிரணுக்களின் உள்ளாகவோ, அல்லது உயிரணுக்களுக்கு வெளியாகவோ வாழலாம். இதற்கு எடுத்துக்காட்டாக அவரையினத் தாவரங்களின் வேர்களில் வாழும் நைதரசன் பதிக்கும் ரைசோபியா வகைப் பாக்டீரியாக்கள், அல்டர் மரவேர்க் கணுக்களில் வாழும் நைதரசன் பதிக்கும் அக்ரினோமைசிட் இன பாக்டீரியாக்கள், பவளப் பாறைகளில் ("Coral reef") வாழும் தனிக்கல பாசிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒரு உயிரினத்தின் உடல் இழையங்களுக்கு வெளிப்புறமாக இரண்டாவது உயிரினம் வாழுமாயின் அது வெளி ஒன்றிய வாழ்வு ("Ectosymbiosis") எனப்படும். இவை உடலின் வெளிப்புறமாகவோ, அல்லது உடலின் உட்பரப்பில் சமிபாட்டுத் தொகுதியின் குழாய்களிலோ, அல்லது சுரப்பிகளின் வெளிப்புறத்திலோ வாழும். இவற்றுக்கு எடுத்துக்காட்டாக ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் பேன், சில வகைத் திமிங்கலங்களின் தாடையில் இணைவாழ்வை வாழும் பிளவுச்சிப்பிகள் ("Barnacles"), அழுக்கை உண்ணும் மீன்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒட்டுண்ணியியல்பு ("parasitism") என்பது போசணையை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்களுக்கிடையிலான இடைத்தொடர்பாகும். இங்கு உயிரினங்கள் தம் விருந்து வழங்கிகளிடமிருந்து உணவையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வதுடன் ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கிக்கு பொதுவாக தீமையை ஏற்படுத்துவதாய் அமையும். எ.கா: புற ஒட்டுண்ணி- உண்ணி, பேன் அக ஒட்டுண்ணி- வட்டப்புழு, பிளாஸ்மோடியம் இவற்றுக்கிடையேயான இடைத் தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வு என அழைக்கப்படுகின்றது. போசணையைப் பெறுவதற்கன்றி இடத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வதற்காக மற்றொரு உயிரினத்துடன் இணைந்து வாழுதல் மேலொட்டித் தொடர்பாகும். இது அண்டி வாழ்தல் எனப்படுகின்றது. இங்கு பொதுவாக அண்டிவாழும் உயிரினம், தான் தங்கியிருக்கும் உயிரினத்துக்கு தீமை பயப்பதில்லை. எ.கா: கற்றாழை ஒரு உயிரினம் நன்மையைப் பெறும் அதேவேளை மற்றைய உயிரினம் நன்மையையோ தீமையையோ அடையாத வகையிலான இரு உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பு ஓரட்டிலுண்ணல் ("commensalism") ஆகும். இதுவும் அண்டி வாழும் முறையே ஆகும். வாழிடம் (எ.கா: சிலந்தி மரத்தில் வாழ்தல்), இடம்பெயர்தல் (எ.கா: துறவி நண்டில், கடற் சாமந்தி ஒட்டி நகர்தல்), பாதுகாப்புத் தேவைக்காக இத்தொடர்பு காணப்படலாம். இரண்டு உயிரினங்கள் தமக்கிடையிலான தொடர்பு காரணமாக இரண்டுமே நன்மை அடையுமாயின் இத்தொடர்பு ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை ("(mutualism") எனப்படும். இது இணைவாழ்வு என அழைக்கப்படுகின்றது. இவ்வகை வாழ்வு இரு உயிரினங்களுக்கும் அவசியமானதாகவோ, அல்லது ஒரு உயிரினத்துக்கு அவசியமானதாகவும், மற்றைய உயிரினத்துக்கு அவசியமற்றதாகவோ, அல்லது இரு உயிரினக்களுக்குமே அவசியமற்றதாகவோ இருக்கலாம். எ.கா: உயிரியல் இனங்களுக்கிடையிலான இடைத் தொடர்பில், இரை பிடித்துண்ணல், உணவு, நீர், உறைவிடம் போன்றவற்றிற்கான போட்டியிடல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த ஒன்றிய வாழ்வுக்கு வரலாற்றில் குறைந்த கவனிப்பே அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் பல உயிரியல் இனங்கள் வரலாற்றில் நீண்ட காலத்துக்கு ஒன்றிலொன்று தங்கியிருந்து இணையாகவே கூர்ப்பை அடைந்ததனால், கூர்ப்பிற்கான தேர்வு முறையில், ஒன்றிய வாழ்விற்கான முக்கியத்துவமும் நாளடைவில் அதிகரித்து வந்துள்ளது. டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையின்படி உயிர் வாழ்வுக்காக உயிரினங்களுக்கிடையில் ஏற்படும் போட்டியில், சில உயிரினங்களில் ஏற்படும் இயற்கைத் தேர்வு காரணமாக குறிப்பிட்ட உயிரினங்கள் இயற்கையில் பிழைத்துக் வாழும். லின் மர்குலிஸ் ("Lynn Margulis") என்ற உயிரியலாளர் டார்வினின் கூற்று முழுமையற்றது எனவும் உயிரியல் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, இடைத் தொடர்பு, ஒன்றிலொன்று தங்கியிருத்தல் ஆகியவையும் கூர்ப்பில் மிக முக்கியமானது எனக் கூறுகின்றார். மர்குலிஸ், டோரியன் சேகன் ("Dorion Sagan") ஆகிய இருவரது கூற்றுப்படி உயிரியல் இனங்களுக்கிடையிலான போட்டியைவிட, அவற்றிற்கிடையிலான வலையமாக்கம் (networking) முக்கியமானது. பூக்கும் தாவரங்களுக்கும், அவற்றின் மகரந்தச்சேர்க்கைக்கு உறுதுணையாயிருக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஒன்றிய வாழ்வு முறையானது, அவற்றின் இணைக் கூர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சிகள், வௌவால், பறவைகளால் மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகிய தாவரங்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தினால் மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகக்கூடிய வகையில் தமது பூக்களின் அமைப்பில் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டதும், அந்த விலங்கு இனமும் அதற்கேற்ற வகையில் மாற்றம் அடைந்ததும் நிகழ்ந்துள்ளது. முதன்முதலில் தோன்றிய பூக்கும் தாவரம் மிகவும் எளிமையான பூவைக் கொண்டிருந்தது. பின்னர் அவற்றில் தேன், ஒட்டும் தன்மையுள்ள மகரந்தம் போன்றவை விருத்தியடைந்து, பல்வேறுபட்ட இனங்கள் உருவாகின. அதற்கேற்ப, இப்படியான உணவை சேகரிக்கக் கூடிய வகையில், பூச்சிகளிலும் விசேட உருவவியல் அமைப்புகள் உருவாகி, பல்வேறு புதிய இனங்கள் உருவாகின. ஒரு குறிப்பிட்ட இன பூச்சியால் மட்டுமே மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாகும் தாவரமாக இருக்குமிடத்து, அத்தாவரத்திற்கும், பூச்சிக்கும் இடையிலான இடைத் தொடர்பு ஒன்றிலொன்று தங்கியதாக அமைந்துவிடும். பீ.பி பீ.பி (BP p.l.c) ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும். இலண்டனில் தலைநகரைக் கொண்ட இந்நிறுவனம் மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகும். உலகில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. முன்னர் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்று இருந்த பெயரை அதன் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்டு பீ.பி என்று மாற்றிக் கொண்டது. 1998ல் அமாக்கோ என்னும் நிறுவனத்தினோடும், பிறகு 2000ல் ஆர்க்கோ என்னும் நிறுவனத்தோடும் இணைந்ததன் மூலம் உலகளவில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனமாக மாறிவிட்டது. அண்மையில் அமெரிக்கக் கடலில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் பெருத்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. ராயல் டச்சு ஷெல் ராயல் டச்சு ஷெல் ("Royal Dutch Shell") என்பது ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும். இது நெதர்லாந்தின் ஹேகு நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு மாபெரும் எண்ணெய் நிறுவனம். பொதுவாக "ஷெல்" என்னும் சுருக்கப் பெயரிலேயே அறியப்படும். 1907ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ராயல் டச்சு பெட்ரோலியம் கம்பெனியும், பிரித்தானிய ஷெல் நிறுவனமும் இணைந்து ராயல் டச்சு ஷெல் குழுமத்தை உருவாக்கியது. அப்போது உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் நிறுவனத்தோடு போட்டியிட இவ்விணைப்பினை மேற்கொண்டன. இணைந்த நிறுவனத்தின் 60% உரிமையை டச்சுப் பகுதியும், மீதி 40% உரிமையை பிரித்தானிய பகுதியும் எடுத்துக் கொண்டன. பிரெட்ரிக் போர்சித் ஃபிரெட்ரிக் ஃபோர்சித் அல்லது ஃபிரெட்ரிக் ஃபார்சித் (Frederick Forsyth, ஆகஸ்ட் 25, 1938) ஒரு ஆங்கில எழுத்தாளர். இவரது உளவுப்புனைவு மற்றும் பரபரப்புப் புனைவுப் புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்கிலாந்தில் கெண்ட் மாநிலத்தில் பிறந்த ஃபோர்சித் தன் இள வயதில் பிரிட்டனின் வேந்திய வான்படையில் சேர்ந்து விமானியாகப் பணியாற்றினார். பின்னர் பத்திரிக்கையாளராக மாறி ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். 1967ல் நைஜீரிய உள்நாட்டுப் போரைப் பற்றி செய்தி சேகரிக்க நைஜீரியாவில் பிபிசி நிருபராகப் பணியாற்றினார். உள்நாட்டுப் போரில் ஒரு தரப்பான பயாஃபராவுக்கு சார்பாகச் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றாச்சாட்டு எழுந்ததால் பிபிசியை விட்டு வெளியேறினார். தனது நைஜீரிய அனுபவங்களை தி பயாஃபரா ஸ்டோரி (The Biafra Story) என்ற பெயரில் 1969ல் அபுனைவு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அமைப்பு சார்பற்ற எழுத்தாளராகப் பணியாற்றிய போது இதழாளர்கள் பயன்படுத்தும் புலனாய்வு முறைகளை பயன்படுத்தி ஒரு புதினம் எழுதும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதன்படி எழுதப்பட்ட "தி டே ஆஃப் தி ஜாக்கால்" ("The Day of the Jackal") 1971ல் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கோலைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப் படும் ஒரு (கற்பனை) சதிமுயற்சியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினம், ஆங்கில பரபரப்புப் பாணியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உலகெங்கும் லட்சக்கணக்கான படிகள் விற்பனையாகி சிறந்த எழுத்தாளுருக்கான எட்கர் ஆலன் போ விருதையும் ஃபோர்சித்துக்குப் பெற்றுத் தந்தது. உண்மையாக நிகழ்ந்திருக்கக் கூடிய சம்பவங்களின் அடிப்படையில் பன்னாட்டு அரசியல், உளவுத் துறைகள், போர்கள் போன்ற விஷயங்களைக் களமாகக் கொண்டு ஃபார்சித் மேலும் பல புதினங்களை எழுதினார். அவையும் வாசகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட அவற்றுள் சில திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. ஃபோர்சித் ஒரு பழமைவாதக் கட்சி ஆதரவாளர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணையக் கூடாது என்ற நிலையைக் கொண்டவர். எட்வார்ட் கிப்பன் எட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் ("Edward Gibbon", பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் ("The History of the Decline and Fall of the Roman Empire") உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பீப்பாய் "பீப்பாய்" என்பது தொன்மையாக மரத்தினால் செய்யப்பட்ட உருளை வடிவிலான உட்புறம் காலியாக உள்ள ஒரு ஏனம் ஆகும். இது நீர், எண்ணெய், பியர், மது, போன்ற நீர்மங்களைத் தேக்கி வைக்க உதவும் ஒரு பொருள். பயன்பாட்டைப் பொறுத்து அளவை தரப்படுத்தப் பட்டிருக்கும். காட்டாக, பியர் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாய்கள் 36 கேலன் அளவு இருக்கும். கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும். இரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும். லீ சாங் வேய் லீ சாங் வேய் ("Lee Chong Wei") (பி. பீனாங், சீனா - அக்டோபர் 21, 1982), மலேசியாவைச் சேர்ந்த தொழில்முறை பூப்பந்து விளையாட்டு வீரர். இவ்விளையாட்டில் தற்போது முதலிடம் வகிக்கும் வீரர் இவர். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்; அதன் காரணமாக மலேசிய பிரதமர் நசிப் துன் ரசாக் வேய்யிற்கு "தாதுக்" என்ற பட்டத்தை அளித்து பெருமைப் படுத்தினார். கூகிள் ஆப் இஞ்சின் கூகிள் ஆப் இஞ்சின் ("Google App Engine") இணைய வலைச் செயலி உருவாக்க உதவும் சேவையாக கணிமைத் தளம் அமைப்பாகும். இதன் உதவியுடன் உருவாக்கப்படும் வலைச் செயலித் தளங்கள், கூகிள் தள அமைப்பு வழங்கிகளில் செயல்படும். கூகிள் அப் இஞ்சின் மேகக் கணிமை எனப்படும் கோட்பாட்டை செயல்படுத்தும் முறையாகும். இந்திய வர்த்தகச் சட்டங்கள் வர்த்தக நிறுவனங்களை நெறிப்படுத்தவும் அவை மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் நன்மை செய்வதை உறுதிப் படுத்தவும் வணிகச் செயல் முறைகளை ஒழுங்கு படுத்தவும் இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சில ஆழ்வார் திருநகர் ஆழ்வார்திருநகர் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்று.  ஜோசப் கொன்ராட் ஜோசப் கொன்ராட் அல்லது ஜோசஃப் கான்ராட் ("Joseph Conrad", டிசம்பர் 3, 1857 – ஆகஸ்ட் 3, 1924) ஒரு ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில் ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார். தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அவருடையப் படைப்புகள் கடல், கப்பல் வாழ்க்கை ஆகியவற்றையே பெரும்பாலும் களமாகக் கொண்டுள்ளன. கடமையுணர்வும், விசுவாசமும் மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் இவருடைய புதினங்களிலும், சிறுகதைகளிலும் கருபொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டானியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கொன்ராடின் படைப்புகள், அதன் தொலைதூரப் பிரதேசங்களை ஆளும் அதிகாரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. கொன்ராடின் உரைநடைத் திறன் புகழ்பெற்றது. ஆங்கில இலக்கிய உலகு அதுவரை கண்டிராத சோக யதார்த்தவாதச் சூழலை ஆங்கிலப் புதினப் படைப்புச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர் கொன்ராட். அவருடைய கதை சொல்லும் பாணியும், எதிர் நாயக கதை மாந்தரும் பல பிற்கால எழுத்தாளர்களுக்கு தாக்கங்களாக அமைந்துள்ளன. கொன்ராடின் படைப்புகள் உலகெங்கும் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன; அவை பல திரைப்படங்களின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. சேத்துப்பட்டு (சென்னை) சேத்துப்பட்டு (:Chetput) சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடமாகும். இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதையில் உள்ளது. சேத்துப்பட்டு குளம் அருகிலுள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. சென்னையின் நடுவே அமைந்திருக்கும் சேத்துப்பட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8.8 கிலோ மீட்டர் தூரத்தில் எழும்பூரின் அருகில் உள்ளது. கார்பனோராக்சைடு கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓராக்சைடு (இலங்கை வழக்கு: காபனோரொட்சைட்டு, ஆங்கிலம்: Carbon monoxide, CO) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு கரிம அணுவும் ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். ஒரு கார்பன் அணுவுடன் ஓர் ஆக்சிசன் அணு முப்பிணைப்பால் இணைந்து கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும். இங்கு கார்பன் ஒக்சிசனோடு மும்மைப் பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பங்கீட்டுப் பிணைப்புகளும், ஒரு ஈதற் பங்கீட்டுப் பிணைப்பும் உள்ளன. CO ஆனது பெருமளவில் இயற்கையான செயற்பாடுகளாலேயே உருவாகிறது. மாறன் மண்டலத்தில் நடைபெறும் ஒளியிரசாயனத் தாக்கங்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 5 x 10kg CO உருவாகிறது. எரிமலை வெடிப்புக்கள், காட்டுத்தீக்கள் போன்றவற்றாலும் உருவாகின்றது. குறை தகனத்துடன் தொடர்புபட்ட மனித செயற்பாடுகள் CO ஐ உருவாக்கும். சாதாரண அடுப்புகள், நிலக்கரி அனல் மின் நிலையங்கள், வாகனங்களில் ஏற்படும் குறை தகனம், குப்பைகளை எரித்தல் போன்றவற்றால் உருவாகும். இரும்பு உற்பத்தியின் போது பிரதான தாழ்த்தும் கருவியாக CO தொழிற்படுவதால் அங்கிருந்தும் ஓரளவு CO வெளியிடப்படுகின்றது. அலுமினிய உற்பத்தியிலும் அனோட்டாக உள்ள காரியம் அனோட்டில் உருவாகும் ஒக்சிசனுடன் தாக்கமுற்று CO உருவாகும். டைட்டானிய உலோக உற்பத்தியிலும் CO உருவாகின்றது. சாதாரண மனித உடலில் நரம்புச் செலுத்தியாக CO உருவாக்கப்பட்டுத் தொழிற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சில மருத்துவத் தேவைகளுக்கு மருந்தாக CO பயன்படுத்தப்படுகிறது. எனினும் அதிகளவு CO விஷமாகும். சில மெத்தேனாக்கும் பக்டீரியாக்களால் காபனோரொக்சைட்டு போசணைப் பொருளாகப் பயன்படுவதால் வளிமண்டலத்தில் இவ்வாயு நீண்ட காலம் தேங்குவதில்லை. CO 28 g/mol மூலர் திணிவுடையது. இது வளியின் 28.8 g/mol ஐ விடக் குறைவு என்பதால் இது வளியை விட அடர்த்தி குறைவான வாயு ஆகும் (சம வெப்ப, அமுக்க நிபந்தனைகளில்). CO இல் உள்ள மும்மைப் பிணைப்பே அறியப்பட்டதில் மிக வலிமையான பிணைப்பாகும். இது 1072 kJ/mol எனும் மிக உயர் பிணைப்புச் சக்தியைக் கொண்டுள்ளது. இது நைதரசன் வாயுவை ஒத்த உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது. (68, 82 கெல்வின்) ஈதற் பங்கீட்டுப் பிணைப்பு உருவாகும் போது கார்பன் அணுவில் மறை ஏற்றமும், ஒக்சிசன் அணுவில் நேர் ஏற்றமும் உருவாகும். எனினும் ஒக்சிசன் கார்பனை விட மின்னெதிரான மூலகம் என்பதால் ஒக்சிசன் இலத்திரன்களைக் கவர்ந்து அதன் நேரேற்றத்தைக் குறைத்துக்கொள்ளும். நிகரமாக கார்பனில் சிறிய மறையேற்றமும், அதற்குச் சமனான சிறிய நேரேற்றம் ஒக்சிசன் அணுவிலும் எஞ்சியிருக்கும். இதனால் நிகர இருமுனைவுத் திருப்புத் திறனாக 0.122 D உள்ளது. இவ்வாயு நிறமற்று, மணமற்று, சுவையற்று இருப்பதால் இவ்வாயு வளியில் சேர்ந்தாலும் அதை எம்மால் உணர முடியாது. எனினும் புகையுடன் எரியும் நெருப்பில் இவ்வாயுவும் உருவாகும் என்பதால் புகையைக் கொண்டு அவதானிக்கலாம். தனியே இவ்வாயு மட்டும் வெளிவரின் அவதானிக்க முடியாது. உட்சுவாசிக்க நேர்ந்தால் இவ்வாயு மிக அதிக நச்சுத் தன்மையை உருவாக்கும். இது குருதியில் ஒக்சிசனைக் காவும் புரதமான ஈமோகுளோபினில் ஒக்சிசன் இணையும் தானத்தில் நிரந்தரமாக இணைவதால் குருதியில் ஒக்சிசன் காவும் கொள்ளளவு குறைவடையும். CO ஈமோகுளோபினுடன் இணைந்து உருவாக்கும் சேர்வை காபொக்சி ஈமோகுளோபின் எனப்படும். வளியில் 667 ppm செறிவில் காபனோரொக்சைட்டு உள்ள போதே உடலில் ஈமோகுளோபினின் 50% காபொக்சி ஈமோகுளோபினாக மாற்றப்பட்டு விடும். ஒக்சிசனை விட CO க்கு ஈமோகுளோபின் மிக அதிக நாட்டம் கொண்டுள்ளதாலேயே 210000 ppm செறிவில் உள்ள ஒக்சிசன் COக்கு முன்னால் தோற்றுப் போகிறது. உடற் கலங்கள் ஒக்சிசன் பற்றாக்குறையால் இறப்பதே CO மரணத்தை ஏற்படுத்தும் பிரதான வழியாகும். ஆரம்பத்தில் களைப்பு, தலை வலி, தலைச் சுற்றல், வாந்தித் தன்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். கர்ப்பமாக உள்ள தாய்மாரின் முதிர் மூலவுருவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சு வாயுவாகும். வெர்ஜீனியா வூல்ஃப் வெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் ("Virginia Woolf", ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார். வேல் வேல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: டெளன் நோய்க்கூட்டறிகுறி டௌன் நோய்க்கூட்டறிகுறி (Down Syndrome/Down's Syndrome) அல்லது டௌன் நோய்த்தொகை என்பது மனிதரில் காணப்படும் 21 ஆம் நிறப்புரியில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். மரபணு கோளாறுகளில் இந்நோயானது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது. இதில் சில வேறுபட்ட வகைகள் இருப்பினும் டிரைசமி-21 அல்லது டிரைசமி-ஜி (Trisomy 21 / Trisomy G) என்னும் வகை 95% ஆகும். இக்குறையை முதலில் வரையறுத்த ஜான் லாங்டன்-டவுன் என்ற ஆங்கிலேய மருத்துவர் பெயரால் இந்தக் கோளாறு பெயரிட்டு அழைக்கப்படுகிறது. டிரைசமி-21 என்பது முதலில் உருவாகும் செல்லில் 21 ஆம் நிறப்புரியின் எண்ணிக்கை இரண்டிற்கு பதில் மூன்றாய் இருப்பதாகும். இந்த முதல் செல்லிலிருந்து, பிரிந்து பெருகும் அனைத்து செல்களிலும் இப்படி ஒரு அதிகமான நிறப்புரி 21 இருக்கின்றது. இந்த அதிகப்படியான நிறப்புரிகளில் உள்ள மரபணுக்களின் இயக்கத்தினால் சுரக்கும் தேவைக்கதிகமான இயக்குநீர்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது தந்தையின் விந்திலோ அல்லது தாயின் கரு முட்டையிலோ 21ம் நிறப்புரி தனியாக இல்லாமல் இரு சோடிகளாய் சேர்ந்திருப்பதால் ஏற்படுகிறது. கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரில் பல்வேறு நிலைகளைக் கண்டறியச் செய்யப்படும் மீயொலி சோதனையின்போது, குழந்தையின் முதிர்கரு நிலையிலேயே டெளன் நோய்க்குறித் தொகுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். தாயின் வயது அதிகமாக அதிகமாக இக்குறையுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிமாகிறது. இந்த நோயானது 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவிலிருந்து, 1000 பேருக்கு ஒருவர் என்னும் அளவுவரை வேறுபடுகின்றது. அமெரிக்காவில் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையமானது (Centers for Disease Control and Prevention) செய்த ஆய்வில், 2006 ஆம் ஆண்டில் 733 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறான நோய் நிலையுடன் பிறந்ததாகவும் அந்த வருடத்தில் மொத்தமாக 5429 குழந்தைகள் பிறந்ததாகவும் அறியப்படுகின்றது. மேலும் எல்லாவகையான மனித இனங்கள், வேறுபட்ட பொருளாதார சூழல் கொண்டவர்கள் என அனைவரிலும் ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டது. இந்த டெளன் நோய்க்குறித் தொகுப்பைக் கொண்டவர்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இந்த சிக்கல்களில் இதய ஒழுங்கீனங்கள் (Heart malformation) போன்றன பிறக்கும்போதே இருக்கலாம். காக்காய் வலிப்பு (Epilepsy) என அழைக்கப்படும் ஒரு வகை வலிப்பு (Convulsion) நோயானது குழந்தை வளர்ச்சியின் பிந்திய நிலைகளில் ஏற்படக்கூடும். அறியப்பட்டுள்ள சில பிரச்சனைகள்: அட்லஸ் (எலும்பு) மனித உடலில் மண்டையோட்டைத் தாங்கி நிற்பது முள்ளந்தண்டு நிரல் ஆகும். மனித உடலில் மொத்தம் உள்ள 33 முள்ளந்தண்டெலும்புகளில் (கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்-7, நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்-12, நாரி முள்ளந்தண்டெலும்புகள்-5, திருவெலும்பு-5, வாலெலும்பு-4) முதலாவது கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது கழுத்து முள்ளந்தண்டெலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது. அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அட்லசு (தொன்மவியல்) அட்லசு என்பவர் கிரேக்கத் தொன்மவியல் கூறப்படும் ஓர் "புராதனக் கடவுள்" (டைட்டன்). இவரது சகோதரர் புரோமித்தியூசு ஆவார். டைட்டானோமாச்சி போரில் டைட்டன்களுக்கு ஆதரவாகப் போராடியதால் அட்லசைத் தண்டிக்கும் பொருட்டு விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி கிரேக்கர்களின் தலைமைக் கடவுள் சியுசு பணித்தார். நிலப்படத் தொகுப்பு நிலவரைத் தொகுப்பு ("atlas") என்பது நிலப்படங்களின் தொகுப்பு ஆகும். இது பொதுவாக பூமியில் அல்லது பூமியின் ஒரு பகுதியில் உள்ள நிலம் நீர் உள்ளிட்டவைகளை வரைபட அமைப்பில் காட்டும் புத்தகமாகும். பொதுவாக பூமி எனக் குறிப்பிட்டாலும் சூரியக் குடும்பம் மற்றும் அவற்றின் கோள்கள் ஆகியவற்றையும் வரைபட அமைப்பில் தருவதையும் குறிக்கிறது. பொதுவாக நிலப்படத் தொகுப்புகள் பாரம்பரியமாக புத்தக வடிவிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. இன்று பல நிலப்படத் தொகுப்புகள் இணையப் பக்கங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நிலப்படத் தொகுப்புப் புத்தகத்தில் பூமியிலுள்ள புவியியல் அமைப்புகள் மற்றும் அரசியல் எல்லைகள் இடம்பெறுவதோடு பெரும்பாலும் அரசியல், சமூகம், வேளாண்மை, மதம் மற்றும் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெறும். வெறும் வரைபடங்கள் மட்டுமல்லாது இடங்கள் மற்றும் அது குறித்த தகவல் தரவுகள் பலவற்றை ஒரு வரைபடப் புத்தகம் தருகிறது. நிலவரைக்கு அட்லசு என்ற பெயர் வந்ததற்கான மூலம் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதற்கு காரணம் தொன்மங்களிலுள்ள இரண்டு வேறுபட்டவர்கள் அட்லசு என்ற பெயருடனும் வரைபட உருவாக்கத்துடனும் தொடர்புபட்டிருப்பதுதான். பழங்கால மொரிட்டானியாவின் அரசன் அட்லசு கணித வல்லுனராகவும், வானியல் நிபுணராகவும் தத்துவஞானியாகவும் அறியப்படுகிறார். இவரே சொர்க்கம் அல்லது வான்கோளங்கள் வரைபடத்தை முதலில் உருவாக்கியராக கருதப்படுகிறார். வரைபடவியலாளர் சிராடுசு மெர்கேடர் இவரையே அட்லசு என்று குறிப்பிட்டுள்ளார்", இந்த அரசனையே தன் வரைபடத்தின் தலைப்பில் ஓவியமாக வைத்துள்ளார். பிளேட்டோ குறிப்பிடப்படும் அட்லாண்டிசு என்னும் தீவின் அரசன் அட்லசு ஆவான். கிரேக்க தொன்மவியலில் குறிப்பிடப்படும் அட்லசு என்பவனே பலர் அறிந்தவனாவான். இவன் டைட்டன் லெப்டுசுவின் மகனாவான். இவன் சியுசு என்ற தெய்வத்தால் சொர்கத்தை தன் தோளில் எப்போதும் சுமந்துகொண்டிருக்கவேண்டும் என்று தண்டிக்கப்பட்டவன். சியுசுவின் மகனான அராகில்சு பாம்பு போன்ற டிராகனான லாடான் காக்கும் ஆப்பிள் பழங்களை பறிக்கும் படி பணி வந்தபோது அட்லசை அணுகுகிறான். அட்லசு அப்பழங்களை பறித்து தர ஒப்புக்கொண்டு தான் சுமக்கும் சொர்க்கத்தை அது வரை ஆராகில்சை சுமக்க சொல்கிறான். ஆராகில்சே எப்போதும் சொர்க்கத்தை சுமக்கும் படி எண்ணி அட்லசு விலகிச்செல்ல முயலும் போது ஆராகில்சு அட்லசை ஏமாற்றி அவனிடமே சொர்கத்தை ஒப்படைக்கிறான். அதிலிருந்து அட்லசே சொர்க்கத்தை சுமக்கிறான். கிரேக்க இதிகாசமான ஒடிசியில் ஓமர் அட்லசு கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்தவன் என்கிறார். கலை உலகில் இந்த அட்லசு சொர்கங்களை அல்லது வான்கோளங்களை தோளில் சுமந்திருப்பவானாக உருவகப்படுத்தப்படுகிறான் (கிரேக்க தொன்மம்). பார்னிசே அட்லசு என்னும் சிலையே பழங்காலத்தில் இவ்வகையில் உருவகப்படுத்தப்பட்ட முதல் சிலையாகும். இச்சிலை தற்போது இத்தாலி நாட்டின் நாபொலி நகரின் அருங்காட்சியகத்தில் உள்ளது, இதன் ஓவியமே பெரும்பாலான நிலவரைபடங்களின் அட்டை அல்லது முகப்பில் இடம் பெறுகிறது. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலக வரைபடம் வெளியிட்ட டச்சு நாட்டினர் இவ்வோவியத்தை அட்டையில் வரைந்திருந்தனர். அதனால் இப்படம் டச்சு வணிகர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக மையக் கட்டடத்தில் அட்லசு உலகைத் தாங்கி நிற்பது போன்ற சிலை உள்ளது. கிமு 2300 காலகட்டத்தில் மத்திய கிழக்கில் இருந்த பாபிலோனிய சுட்ட களிமணில் இருந்த நிலவரைபடமே மிகபழைய வரைபடம் ஆகும். கிமு 6 ம் நூற்றாண்டிலிருந்து பல கிரேக்க அறிஞர்கள் புவி கோளவடிவுடையது என்று நம்பினார்கள். கிமு 350ல் அரிசுட்டாட்டில் புவியானது கோளவடிவுடையது என்பதை நிருபிக்க ஆறு வாதங்களை வைத்தார் கிமு 200ல் எரடோசுதினிசு (Eratosthenes) புவியின் சுற்றளவை கோணங்கள் மூலம் துல்லியமாக கணித்தார். கிமு 150ல் குளோடியஸ் தொலெமாயெஸ் ஜியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூலில் அறிவியல் முறைப்படி நிலவரைபடக்கலையை பற்றி விளக்கியுள்ளார். இவர் புவியை சுற்றி சூரியன் சுழல்கிறது என கருதினாலும் அவர் காலத்தில் அறிவியல் ஆய்வு செய்வதில் முன்னோடியாக விளங்கினார் பழங்கால சீனர்கள் அவர்கள் காலத்தில் மற்றவர்களை விட நிலவரைபடவியலில் சிறந்து விளங்கினர். சீன இலக்கியங்கள் வரைபடத்தை பற்றி 7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றன. மற்ற பழைய நிலவரைபடங்களை விட அவர்களது நிலவரைபடம் விரிவாகவும் துல்லியமாகவும் இருந்தது. இடைக்காலத்தில் ஐரோப்பியர்களது வரைபடம் வரைபடக்கலையை சார்ந்திருந்ததை விட மதத்தை சார்ந்தே இருந்தது. கிறுத்துவ சமய துறவிகள் நிலவரைபடங்களில் சமயம் தொடர்பான குறிப்புகள் இடம் பெறுவதில் முனைப்பாக இருந்து வரைபடக்கலையை கட்டுப்படுத்தினர். ஐரோப்பியர்களின் வரைபடம் யெருசலம் நகரை மையமாக வைத்தும் வரைபடத்தின் மேல் பகுதி கிழக்கு திசையை குறிப்பதாகவும் இருந்தது . இதற்கு மாறாக அராபியர்களின் வரைபடக்கலை கிரேக்கர்கள் வழிமுறையை பின்பற்றி முன்னேற்றமடைந்து காணப்பட்டது, அல்-இட்ரிசியின் வரைபடத்தொகுப்பு இதில் சிறப்பானது . 1507ல் மார்டின் வால்ட்சிமுல்லர் ( Martin Waldseemüller) என்பவர் உருவாக்கிய வரைபடமே அமெரிக்கா என்ற சொல்லை புதிய உலகத்துக்கு முதலில் குறித்ததாகும் . 1569ல் மெர்க்காடர் உருவாக்கிய வரைபடம் அதுவரை இருந்த வரைபடங்களை விட இது மேம்பட்டதாக இருந்ததால் அதை கடலோடிகள் தங்கள் பயணங்களுக்கு பயன்படுத்தினர். நியூட்டன் மைய விலக்கு விசையினால் சுழழும் புவியின் நிலக்கோட்டுப்பகுதியில் பருத்தும் வட தென் முனைகளில் குறுகியும் இருக்கும் என்றார். இது வரைபடத்துறையில் பெரும் மாற்றங்களை கொணர்ந்தது. 17ம் நூற்றாண்டிலிருந்து நிலவரைப்படக்கலை அறிவியல் முறையில் பெரும் வளர்ச்சி கண்டது. 20ம் நூற்றாண்டில் வான் வழி நிழற்படக்கலை, கணினி, தொலையுணர்வு கருவி போன்ற பல நிலவரைபடக்கலைக்கு உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நிலவரைபடத்தொகுப்பில் துல்லியம் ஏற்பட்டது. பயண நிலபடத் தொகுப்பு என்பது பயணங்களின் போது பயன்படுத்துவதற்காக எளிய முறையில் உள்ளதாகும். இது சுருளாக கட்டப்பட்ட புத்தகமாக இருக்கலாம், அதனால் இதன் பக்கங்களை தட்டையாக மடிக்கலாம். இதை சாலை வரைபடம் என்றும் சிலர் கூறுவர். மேசை நிலப்படத் தொகுப்பு என்பது மேற்கோள் நூல் போன்று உள்ள நிலப்படத் தொகுப்பாகும். இது மெல்லியஅட்டை அல்லது கடினஅட்டை உடைய புத்தகமாக இருக்கலாம். இதில் பயண நிலப்படத் தொகுப்பை விட அதிக விவரங்கள் இருக்கும். மரபணு நோய் பரம்பரை நோய் எனப்படுவது மரபியல் வழியாகத் தோன்றும், அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் நோய் அல்லது கோளாறு ஆகும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண மரபணு, குறைவான மரபணு, மேலதிக மரபணு, தொழிற்பாட்டை இழந்த மரபணு, மேலதிகமாகத் தொழிற்படும் மரபணு, அசாதாரண எண்ணிக்கையிலான நிறப்புரிகள் போன்ற காரணிகளால் ஏற்படும். இவ்வாறான நோய்கள் பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும். ஆனாலும் இவற்றில் சில முட்டை, விந்து, முளையம் போன்றவற்றில் எழுந்தமானமாக நிகழும் மரபணு திடீர்மாற்றத்தினாலும் ஏற்படும். அப்படி குறிப்பிட்ட ஒருவரில் ஏற்படும் மாற்றமானது, தொடர்ந்து வரும் சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள், இரத்தம் உறையாமை, டெளன் நோய்க்கூட்டறிகுறி, நடுக்குவாதம், போன்றன பரவலாக அறியப்பட்ட சில பரம்பரை நோய்களாகும். கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை (Guindy Thiru Vi Ka Industrial Estate) சென்னையில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இது 1960க்கும் 1970க்கும் இடையில் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டையாகும். இங்கு சிறு தொழில் நிறுவனங்கள் இருந்தன. இங்கு பல்வேறு பட்டறைகள் இருந்தன. தற்போது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை விமான நிலையம் மிக அருகில் உள்ளது. கிண்டி ஒலிம்பியா பார்க் அருகில் உள்ளது.  மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் கணிமையியலில் மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் (FLOPS, FLoating point OPerations per Second) என்பவை மிதப்புப் புள்ளி எண்களைக் கொண்டு செய்யப்படும் கணிதச் செயல்பாடுகளைக் குறிக்கும். பின்னங்களுடைய மெய்யெண்களைக் கணினியானது மிதப்புப் புள்ளி எண்களாகக் கருதிக் கொள்ளும். இவ்வெண்களைக் கொண்டு செய்யப்படும் கணிப்பீடுகள் மிதப்புப் புள்ளிக் கணிப்பீடுகள் (Floating Point Calculation) எனப்படும். பழைய கணினிகளில் இவ்வெண்களைக் கொண்டு கணிப்பீடுகளைச் செய்ய எனத் தனியாக ஓர் உட்கூறு (உட்பகுதி) பயன்படுத்தப்பட்டது. அது மிதப்புப் புள்ளிச் செயலகம் (Floating Point Unit - FPU) எனப்பட்டது. ஆனால் தற்போது மையச் செயலகத்திலேயே ஒருங்கமைந்து (inbuilt) வருகிறது. மிதப்புப் புள்ளிக் கணிப்பீடு என்பது அறிவியல் துறையில் மிகவும் கடினமான கணிப்பீடுகளைச் செய்ய, முன்பு பயன்படுத்தப்பட்ட ஓர் எளிய முறையான 'ஒரு நொடிக்கான கட்டளைகள்' ("Instructions per second") என்பதைப் போன்ற ஓர் அளவுமுறை ஆகும். இது பொதுவாக ஆங்கிலத்தில் ஃப்ளாப்புகள் (FLOPS) என்று அழைக்கப் படுகிறது. இதனைத் தமிழில் நொடிக்குள் செய்யப்படும் மிதப்புப்புள்ளிச் செயல்பாடுகள் (நொமிசெகள்) என்று வழங்கப்படும். இது கணினியின் செயல்திறனை அளக்கப் பயன்படுகிறது. ஆங்கிலத்தில் FLOPS என்பதிலுள்ள S என்பது நொடிகள் என்பதைக் குறித்தாலும் பொதுவாக இது பன்மையாக்வும் பொருள் கொள்ளப்படுகிறது. ஒருமையில் இது மிதப்புப் புள்ளிச் செயல்பாடு (FLOP - FLoating Point Operation) எனப்படுகிறது. மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டு எண்ணிக்கை (Flop Count) என்பது ஒரு குறிப்பிட்ட நிரலைச் செயலாக்கவோ ஒரு படிமுறைத் தீர்வை நிறைவேற்ற்வோ எடுத்துக் கொள்ளும் நேரம் என்றும் வரையறுக்கப் படலாம். என்.இ.சி (NEC) நிப்பானிய நிறுவனத்தின் நிப்பா இன் SX-9 (எசு.எக்ஃசு-9) என்பதுதான் 100 கிகா ஃப்ளாப்பைத் தாண்டிய (நொமிசெகளைத் தாண்டிய) நெறிய நுண்செயலி கொண்ட முதல் மீத்திறன் கணினி ஆகும். ஐ.பி.எம்-இன் மீத்திறன் கணினியான ரோடு ரன்னர் தான் 1 பெட்டா ஃப்ளாப்பைத் தாண்டிய (ஒரு பெட்டா நொமிசெகளைத் தாண்டிய) முதல் மீத்திறன் கணினி என்பது மென்பொருள் நூலக நிரலோட்டத்தால் (Linepack Benchmark) அளவிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. சூன் 2010-இன் நிலவரத்தின் படி உலகின் "முதல் 500" மீத்திறன் கணினிகள் 32.4 அளவிலான கணிப்பீட்டுத் திறனைக் கொண்டுள்ளன. ஒரு சிறிய அளவிலான கணிப்பானானது 10 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் என்ற அளவில் இருந்தால் மட்டுமே அது செயல்படுகிறது என்று கூற முடியும். மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளை அளவிடக் கணினிகளில் நிரலோட்டம் (Benchmark) என்ற ஒன்று அவசியத் தேவை ஆகும். இதற்கோர் எடுத்துக்காட்டுதான் மென்பொருள் நூலகம் (Linepack) ஆகும். வெறும் மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டை அளவிடுவது மட்டும் இதில் அடங்காது. இந்த வேகத்தை அளக்கும் செயலில் உள்ளீட்டு வெளியீட்டு செயல்பாடுகள், செயலிக்குள்ளான தகவற்பரிமாற்றம், ஓரியல்பு மீவேக நினைவகப் பரிமாற்றம், நினைவகப் படிமுறை போன்ற பல காரணிகள் தங்களுக்கே உரிய இடங்களைப் பகிர்கின்றன. வன்பொருள் செலவினங்கள் கீழ்க் காணும் அட்டவணையில் எப்படி வேகம் அதிகரிக்க அதிகரிக்க கணித்தலின் செலவு குறைகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது. கிகா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளுக்கான தோராய செலவினம் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் நூறு கோடி மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளைக் குறிக்கின்றது. அஞ்சுதா அஞ்சுதா ("Anjuta") கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையில் அமைந்த பலதரப்பட்ட சிறப்பம்சங்களையுடைய ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல் (Integrated Development environment -IDE) ஆகும். இது சி, சி++ போன்ற உயர்கணிணி மொழியில் நிரல் எழுதவும், குனோம் பணிச்சூழலுக்கான செயலிகளை கிளெடு(ஆங்கிலம்:glade) மூலம் உருவாக்கவும் உதவும் ஒருங்கிணைந்த உற்பத்திச்சூழல் ஆகும். இதன் மற்றசில உயர் சிறப்பம்சங்களாவன திட்ட மேலாண்மை (Project management), ஒருங்கிணைந்த கிளேடு பயனர் இடைமுகப்பு வடிவமைப்பி, பிழைதிருத்தி(Debuger), திறன்மிக்க நிரல் திருத்தி, நிரல் தேடல் மேலும் பல. அஞ்சுதா மணிப்பூரை சேர்ந்த நபகுமார் என்ற இந்தியரால் உருவாக்கப்பட்டு இன்று பலதரப்பட்ட குனோம் மென்பொருள் உருவாக்குனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கட்டற்ற / திறந்த மென்பொருள் துறையில் எந்தவித பங்களிப்பையும் தரவில்லை பயனை மட்டுமே அனுபவிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கும் வகையில் இது போன்ற பல சிறந்த மென்பொருட்கள் தற்போது இந்தியரால் உருவாக்கப்பட்டுவருகிறது. மற்ற சில கட்டற்ற / திறந்த ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல்கள் அஞ்சுதாவின் அம்சங்கள், அஞ்சுதா ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழலின் இணையமுகவரி போஸ்கிரெஸ்குயெல் போஸ்கிரெஸ்குயெல் அல்லது போசுகிரசு (PostgreSQL) எனப்படுவது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையைச் சேர்ந்த ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். மையெசுக்யூயெல் ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான மைசீக்யுல் பயன்படுத்தும் இணையதளங்கள் மையெசுக்யூயெல்லிலிருந்து தங்கள் தரவுதளத்தினை போஸ்கிரெஸ்குயெலுக்கு மாற்றிவிட்டன. மேலும் தற்போது புதிதாக உருவாக்கப்படும் பல இணைய தளங்களும் போஸ்கிரெஸ்குயெலையே பயன்படுத்துகின்றன. போஸ்கிரெஸ்குயெல் இப்படி உச்சரிக்கப்படுகிறது. ; (ஒலி வடிவம், 5.6k MP3) போஸ்கிரெஸ்குயெல் வரைகலை பயனர் இடைமுகப்பு பைஅட்மின் என்பது பலவகைக் கணினிகளில் நிறுவப்பட கூடிய போசுகிரசு நிர்வாக மென்பொருள் ஆகும். நிறுவிய பின்பு இது வெவ்வேறு போசுகிரசு வழங்கிகளில் இருக்கும் தரவுத்தளங்களை மேலாண்மை செய்ய உதவுகிறது. மென்பொருள் உருவாக்குநர் மென்பொருள் உருவாக்குநர் என்கிற பதம் பொதுவாக ஒரு மென்பொருளை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபரைக் குறிக்கப் பயன்படுகிறது. மென்பொருளின் உருவாக்கத்தில் இதுதான் ஒரு மென்பொருள் உருவாக்குநரின் பணி என்று வரையறை செய்ய முடியாதபடி துவக்க திட்டத்திலிருந்து இறுதி ஒருக்கிணைப்புவரை வெவ்வேறு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் இந்த பொதுவான பதத்தாலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கிடையேயான எல்லை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாதபடியே உள்ளது. மென்பொருள் உருவாக்கத்தில் உருவாக்குநரின் பணி பின்வரும் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது பலவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம். பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்குநர் தன்னார்வமிக்க தனிநபராக, ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்து உருவாக்கத்தில் பங்களிப்பார். ஜிடிகே+ ஜிடிகே+ - ஜிம்ப் டூல்கிட் (GTK+ - GIMP Toolkit) வரைகலை பயனர் இடைமுகப்பை உருவாக்க உதவும் ஒரு விட்ஜட் (widget) டூல்கிட் ஆகும். X விண்டோ(window) அமைப்பில் பயன்படுத்தப்படும் டூல்கிட் வகைகளில் இது மிக முக்கியமானதாகும். இது 1997-ம் ஆண்டு ஸ்பென்சர் கிம்பல்(Spencer Kimball) மற்றும் பீட்டர் மாட்டிஸ்(Peter Mattis)ஆகியோரால் குனூ பட கையாலல் நிரலுக்காக(ஜிம்ப்)(GIMP-GNU Image manipulation Program) உருவாக்கப்பட்டது. ஜிடிகே+ சி மொழியில் எழுதப்பட்ட ஒரு பொருள்நோக்கு விட்ஜட் டூல்கிட் ஆகும். ஜிடிகே+, சி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் பிற நிரலாக்கல் மொழிகளுடன் இணைக்கும் வண்ணம் இணைப்பிகளைக்(language bindings) கொண்டுள்ளது. அவற்றுல் சில சி மொழியில் அமைந்த விண்டோ(window) உருவாக்கதிற்கான ஒரு எளிய ஜிடிகே+ நிரல்: ஜே. டி. சாலிஞ்சர் ஜே. டி. சாலிஞ்சர் ("J. D. Salinger", ஜனவரி 1, 1919 – ஜனவரி 27, 2010) ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1951ல் வெளியான "தி கேச்சர் இன் தி ரை" ("The Catcher in the Rye") என்ற புதினத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். மேலும் புகழை விரும்பாது வெகுஜனத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்ததாலும் (1985ம் ஆண்டுக்குப்பின் எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் கொடுக்கவில்லை) பரவலாக அறியப்பட்டவர். மிகக் குறைவான படைப்புகளையே பதிப்பித்தவர். 1965க்குப் பின் அவருடைய எந்தப் படைப்பும் வெளியாகவில்லை. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வளர்ந்த சாலிஞ்சர் தன் பள்ளிப் பருவத்திலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1948ம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை நியூயார்க்கர் இதழில் வெளியானது. 1951ல் "தி கேச்சர் இன் தி ரை" பெருவெற்றி பெற்றது. பதின்ம வயதினர் தனிமையினையும் வலியினையும் கருவாகக் கொண்ட இப்புதினம் 20ம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இப்புதினமும் அதன் நாயகனான ஹோல்டன் காஃபீல்டும் வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டனர். உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் "கேச்சரு"க்குப்பின் சாலிஞ்சர் சில படைப்புகளையே வெளியிட்டார். 1960களில் பொதுப் பார்வையிலிருந்து விலகி தனிமையில் வாழத்தொடங்கினார். ஆனாலும் அவருடைய இந்த வாழ்க்கை முறையே பிறரது கவனத்தை ஈர்த்தது. வாழ்வின் இறுதிவரை பல சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபட்டது. டொரன்டோ டொமினியன் வங்கி டொரன்டோ டொமினியன் ("The Toronto-Dominion") வங்கி சந்தை முதலீடு மற்றும் பணக்கையிருப்பு அடிப்படையில் கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகவும், வட அமெரிக்காவில் ஆறாவது பெரிய வங்கியாகவும் உள்ளது. இது 1955ம் வருடம் டொரன்டோ வங்கி மற்றும் டொமினியன் வங்கி இணைப்பு முலம் உருவாக்கப்பட்டது. டொரன்டோ டொமினியன் வங்கி நிதியியல் குழுமம் சுமார் 74000 ஆயிரம் பணியாளர்களுடன், உலகம் முழுவதும் சுமார் 1700000௦ வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றது. இது கனடாவில் TD கனடா டிரஸ் (TD Canada Trust ) என்ற பெயரில் 1100கும் மேற்பட்ட கிளைகளுடன் நாடுமுழுவதும் சேவை செய்துவருகின்றது. அமெரிக்கவில் சில வங்கிகளை கையகப்படுத்தியதன் முலம் அங்கும் தனது சேவையை விரிவுபடித்தியுள்ளது. அங்கு 1000 கிளைகளுடன் 6500000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இவ்வங்கி தனது சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இவ்வங்கி கனடாவில் முதல் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றதுடன் போர்ப்ஸ் பத்திரிக்கை 2010ல் நடாத்திய உலகலாவிய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 86வது இடத்தையும் பிடித்துள்ளது. டொரன்டோ டொமினியன் கிழ்கண்ட கிளை நிறுவனங்களுடன் கனடா மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டுவருகின்றது. கனடா டிரஸ்ட் கனடா டிரஸ்ட்(CanadaTrust) ஒரு நிதி சேமிப்பு குழுமம் ஆகும். இது கனடா லண்டன் ஒன்ராரியோவில் ஹோரன் மற்றும் எரிக் (Huron & Erie) என்பர்களால் 1864ல் கடன் மற்றும் சேமிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இவர்கள் டோரோன்டொவில் டொரோன்டோ ஜெனரல் டிரஸ்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடாத்திவந்தனர். 1872ல் இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து கனடா டிரஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2000ம் ஆவது ஆண்டுவரை இந்நிறுவனம் கனடாவின் ஆறாவது பெரிய நிதி நிறுவனமாக செயல்பட்டுவந்தது. 2000ம் ஆண்டு டொரோன்டோ டொமினியன் வங்கிக் குழுமமும், கனடா டிரஸ்ட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன. தற்பொழுது டொரோன்டோ டொமினியன் (TD வங்கி) வங்கிக் குழுமம் TD கனடா டிரஸ்ட் என்ற பெயரிலேயே கனடா முழுவதும் தனது சேவையை நடத்திவருகின்றது. போர்ப்ஸ் போர்ப்ஸ் (Forbes) ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனமாகும். இந்நிறுவனம் 1917ம் ஆண்டு நியூயார்க்கில் பி.சி போர்ப்ஸ் (Bertie Charles Forbes) என்பவரால் தொடங்கப்பட்டது. வாரமிருமுறை வெளிவரும் இப்பத்திரிக்கை சுமார் 900,000 பிரதிகள் விற்பனையாகின்றது. போர்ப்ஸ்.காம் (forbes.com) இதன் இணையதள பதிப்பகும். சுமாராக 18 மில்லியன் மக்கள் ஒவ்வொருமாதமும் இதன் இணைய தளத்திற்கு வருகை தருகின்றார்கள். இப்பத்திரிக்கை 11 உலக மொழிகளில் சீனா, இந்தியா, இந்தோனேசியா,இஸ்ரேல், கொரியா, போலாந்து, ரஷ்யா, ரோமானியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் வெளிவருகின்றது. இவைதவிர ரியல்கிளியர்பாலிடிக்ஸ், ரியல்கிளியர்மார்க்கெட், ரியல்கிளியர்ஸ்போர்ட்ஸ், இன்வெஸ்ரோபிடியா, போன்றவை போர்ப்ஸ் குழுமத்தால் நடாத்தப்படும் பிற இணையதள பத்திரிக்கைகளாகும். இந்நிறுவனம் வருடம் தோறும் உலக அளவில் சிறந்த நிறுவனங்ளையும், மனிதர்களையும் பட்டியலிடுகின்றது. இப்பட்டியலில் இடம்டபெறுவது உலகஅளவில் சிறந்த கெளரவமாக கருதப்படுகின்றது. எட்டு ஒழுக்கங்கள் எட்டு ஒழுக்கங்கள் ("8 Discipline/8D") என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது. இது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க ஃபோர்டு மோட்டர் கம்பனியால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் இரண்டாம் உலகப்போரின் போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்ககு அமெரிக்க ராணுவ ” வழக்கம் 1520 நியமத்திர்க்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மாற்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது, சிக்கலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்ப்படும் பாதிப்பையும் பொருத்து நெருக்கடி நிலையென்று அறிவித்து நெருக்கடி நிலைக்கான பதில் செயலை கண்டறிந்து அதனை செயல்படுத்தவேண்டும். இதற்கு “நெருக்கடி நிலைக்கான பதில் செயல்” என்று பெயர். நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, இதனை முறைப்படி ஆவணமாக்குதல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வேரு ஓர் இட்த்தில் இது போன்ற சிக்கல்கள் நிகழுமேயானால் எளிதாக தீர்க்க முடியும். விசா டெபிட் விசா டெபிட் ("Visa debit") அட்டை என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இவ்வட்டையைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக இதர கடன் அட்டைகளைப் போல பொருட்களை வாங்க முடியும். இவ்வட்டையை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும் என விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வட்டையைப் பயன் படுத்துவதற்கு வாடிக்கையாளர் தனது கணக்கில் பற்று வைத்திருத்தல் அவசியம். இவ்வட்டை வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்திவிடுவதால் இதர கடன் அட்டைகளைப் போல பணத்தை திரும்பச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. கடன் அட்டை பெற தகுதி இல்லாதவர்கள் இவ்வட்டையை எளிதாக வங்கிகள் மூலம் பெறமுடியும் என நம்பப்படுகின்றது. இவ்வட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் மற்றைய நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை, எனினும் கனடாவில் முதன் முதலாக கனேடியன் இம்பிரியல் வங்கி "(CIBC)" முலமாக 2010 நவம்பரில் வெளியிடப்பட்டது. பேவேவ் பேவேவ் (payWave) என்பது விசா நிறுவனத்தினால் தனியாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கடன் அட்டையாகும். இவ்வட்டை மற்ற கடன் அட்டையைப் போன்றே பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வட்டையைக் கண்ணுக்குப் புலப்படாத அகச்சிவப்பு நுண்ணலைகள் தொடர்பாலும் பயன்படுத்த முடியும். இவ்வட்டையைத் தடவியோ (தடவி இழுத்தோ swiping ) அல்லது செருகியோ(insert) பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் (அகச்சிவப்புக் கதிர் வழி) அட்டையில் உள்ள குறிப்பை உணரும் அல்லது "படிக்கும்" கருவிமுன் அசைப்பதன் முலம் பணப் பரிமாற்றத்தைப் பாதுகாப்பாகச் செய்யமுடியும். இவ்வட்டையில் ஒர் அலைவழிப்படுத்தி(antenna) மற்றும் ஒரு தொகுசுற்று (processor) உள்ளிடாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வட்டையை வாசிப்புக்கருவி முன் அசைப்பதன் மூலம், ஒர் தொடுதல்லில்லா தொடர்பு (contactless communication) அட்டைக்கும் வாசிப்புக்கருவிக்கும் ஏற்படுத்தப்பட்டு பணப்பரிமாற்றம் நடைபெறுகின்றது. இதன் மூலம் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளரின் கையொப்பம் கோரப்படுவதிலை. பணப்பரிமாற்றங்களைச் செய்ய எடுக்கும் நேரத்தை குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். விசா நிறுவனம் அதிக அளவாக 50 டொலர் வரையிலான பண பரிமாற்றத்தை மட்டுமே பாதுகாப்புக்காரணங்களுக்காக அனுமதிக்கின்றது. கனடாவில் இவ்வகை அட்டையை ராயல் வங்கி, டொரன்டோ டொமினியன் வங்கி, ஸ்கோட்ரியா வங்கி போன்றவை மக்களுக்கு வழங்கிவருகின்றன. ஏ. ஈ. முத்துநாயகம் முனைவர் A.E. முத்துநாயகம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஒரு முதன்மை விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளித் துறையின் கீழ் வரும் திரவ உந்துகை அமைப்பு மையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் http://www.thehindu.com/news/national/astronautical-societys-aryabhatta-award-for-muthunayagam-saraswat/article4259752.ece பிரித்துத் தீர்த்தல் பிரித்துத் தீர்த்தல் என்பது ஒரு சிக்கல் தீர்வு உத்தி ஆகும். ஒரு சிக்கலை சிறு கூறுகளாகப் பிரித்து, அந்தக் கூறுகளை தீர்ப்பதன் மூலம் சிக்கலின் முழுமைக்கும் தீர்வு காணும் முறை இதுவாகும். பல சூழ்நிலைகளில் இது ஒரு அடிப்படை செயற்பாடு. எ.கா ஒரு நூல் எழுதுவது என்றால், அந்த நூலின் பாகங்களை பிரித்து அவற்றை ஒவ்வொன்றாக எழுதி, பின்னர் நூலாகத் தொகுக்கலாம். பேபாஸ் பேபாஸ் மாஸ்டர் கடன் அட்டை நிறுவனத்தினால் பிரத்தோயகமாய் வெளியிடப்பட்டிருக்கும் ஒர் கடன் அட்டையாகும். இது மாஸ்டர் கடன் அட்டையின் போட்டி நிறுவனமான விசா அறிமுகப்படுத்திய பேவேவ் அட்டையைப் போன்றது. இவ்வட்டைமற்ற கடன் அடையைப் போன்றே பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வட்டையை இன்ப்ராரெட் எனப்படும் நுன்அலை மூலமாகவும் பயண்படுத்த முடியும். இவ்வட்டையைத் தேய்த்தோ(swiping ) அல்லது செருகியோ(insert) அல்லமல் அட்டைவாசிப்பு கருவிமுன் அசைப்பதன் முலம் பணப்பரிவர்தணையை பாதுகாப்பாக செய்யமுடியும். இவ்வட்டையில் ஒர் அலைவழிப்படுதி(antenna) மற்றும் ஒரு தொகுசுற்று உள்ளிடாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வட்டையை வாசிப்புக்கருவி முன் அசைப்பதன் மூலம், ஒர் தொடுதல்லில்லா தொடர்பு (contactless communication) அட்டைக்கும் வாசிப்புக்கருவிக்கும் ஏற்படுத்தப்பட்டு பணப்பரிவர்தனை நடைபெறுகின்றது. பணப்பரிவர்தனை செய்ய எடுக்கும் நேரத்தை குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். விசா நிறுவனம் அதிகபட்சமாக 50 டொலர் வரையிலான பண பரிவர்த்தையை மட்டுமே பாதுகாப்புக்காரணங்களுக்காக அனுமதிக்கின்றது. கனடாவில் இவ்வகை அட்டையை பாங்க் ஆப் மொன்றியல் (Bank of Montreal), மக்களுக்கு வழங்கிவருகின்றது. பிகா சிஸ்டம்ஸ் பிகா சிஸ்டம் (Pega System) ஒரு தகவல்தொழில்நுற்ப நிறுவனமாகும். இது 1983ல் ஆலன் டெரிப்ளர் (Alan Trefler) என்பவரால் அமெரிக்காவில் கேம்பிரிச் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது. பணிச் செயலாக்க மேலாண்மை (BPM) மென்பொருள்கள் எழுதுவதும் வடிவமைப்பதும் இதன் முக்கிய பணிகளாகும். பிகா பணிச் செயலாக்க மேலாண்மை (PEGARULES PROCESS COMMANDER SmartBMP) மென்பொருள் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்த ஒரு மென்பொருளாகும். பெரும்பாலான நிதி நிறுவனங்கள், வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும்இதர சேவை நிறுவனங்கள் இந்த மென்பொருளை மிகவும் அதிகஅளவில் பயன்படுத்துகின்றன. இதனைப் பயன்படுத்தி எழுதப்படும் செயலிகளை இணைம் மூலம் எங்கிருந்தும் இயக்கலாம் பணிச் செயலாக்க மேலாண்மை பணி செயலாக்க மேலாண்மை (Business Process Management)என்பது ஒரு பணியை தொடச்சியாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் செய்யப் பயன்படுத்தப்படும் ஒர் அணுகுமுறையாகும். இது ஒரு பணியை அதன் தன்மையையும், அவசரத்தையும் பொறுத்து பொருத்தமானவர்களுக்கு பிரித்தளிப்பதன் மூலம் அப்பணியை விரைவாக முடிக்க உதவுகின்றதோடு மட்டுமல்லாமல் அப்பணியை செய்பவரையும் மேற்பார்வையிட அல்லது கண்காணிக்க உதவுகின்றது. பணி செயலாக்க மேலாண்மை வாழ்க்கை சுழற்சியை பின்வருமாறு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை எல்லாத்துறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் குறிப்பாக வங்கி, காப்பிடு, தொலைத்தொடர்பு போன்ற சேவைத்துறைகளில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. சக்தி பண்பலை சக்தி பண்பலை ஒளிபரப்பு கேப்பிடல் மகாராஜா நிறுவனத்தால் 20.11.1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, சமயம், அரசியல், கல்வி, செய்திகள் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை இது 24 மணிநேரமும் ஒளிபரப்புகிறது. மேலும் வாரக் கடைசியில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. கொழும்பு மற்றும் கிழக்குப் பகுதிகளில்; 105.1 மெகாஹெர்ட்சிலும் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி பகுதிகளிலும் 91.5 மெகாஹெர்ட்சிலும் ஒலிபரப்பு செய்கிறது.1998 இதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் சின்னத்துரை எழில்வேந்தன் ,வாமலோஷன் ,எஸ்.ஜே .ராம்பிரசன்,ஜானு செல்லத்துரை ,ஜீவா ,கௌரிஷங்கர்  ஆகியோர் கடமையாற்றினர் . சக்தி பண்பலையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் பங்கஜ் அத்வானி பங்கஜ் அர்ஜான் அத்வானி (Pankaj Advani, பி. பூனா, 24 சூலை 1985) இசுனூக்கர் மேசைக்கோற் பந்தாட்டம், ஆங்கிலக் கோற்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் உலக வாகையாளர். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆங்கிலக் கோற்பந்தாட்டத் தனிநபர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். சிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள் (நூல்) சிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள் எனும் நூல் முனைவர் இரா.விஜயராகவன் அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டதாகும். இந் நூலினுள் சிந்தனையைத் தூண்டும் 85 வினாக்களும் அவற்றிற்கான தெளிவான விடைகளும் தரப்பட்டுள்ளன. கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசக் காரணம், கை விரல்களை வளைக்கும் போது நெட்டி முறியக்காரணம் போன்று பல அவசியம் அறிய வேண்டிய தகவல்கள் உள்ளன. பெருங்கற்காலம் பெருங்கற்காலம் என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களால், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன. இவ்வாறான பெருங்கல் நினைவுச் சின்னங்களை அமைத்த காலம் புதிய கற்காலத்திலும், செம்புக்காலம், வெண்கலக்காலம் உள்ளிட்ட அதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளிலும் மக்கள் அமைத்தனர். இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனலாம் எனச் சிலர் கருதுகின்றனர். இக் காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புக்கள் கற்பதுக்கை (cist), கற்கிடை (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன. மிகப் பழமையான பெருங்கற்காலப் பண்பாடு துருக்கியின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கிமு ஒன்பதாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை இப்பகுதிகளில் தொடக்க வேளாண்மை, கால்நடை வளர்ப்புக் கால கட்டங்களைச் சேர்ட்ந்தவை. இங்கிருந்தே ஐரோப்பாவில் புதியகற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்தது. இங்கு காணப்படும் பெருங்கல் அமைப்புக்களே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானவை எனினும், ஐரோப்பியப் பெருங்கற் பண்பாடு இதிலிருந்தே வளர்ச்சியடைந்ததா என்பது தெளிவாகவில்லை. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 தொடக்கம் கிபி 200 வரையாகும் என மதிப்பிடப்படுகிறது. இது புதிய கற்காலத்துக்குப் பிற்பட்ட வளர்ச்சியாகும். இக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்லாயுதங்கள் பயன்படவில்லை. இக்கால மக்கள் இரும்பைப் பயன்படுத்த அறிந்திருந்தனர். நுண்கற்காலம் நுண்கற்காலம் என்பது நுண்கற்கருவிகளை மக்கள் பயன்படுத்திய காலம் ஆகும். நுண்கற்கருவிகள் என்பன கற்பட்டடைக் கழிவுகள், தற்செயலாக உருவான கற்பொருட்கள் என்பவற்றிலிருந்து வேறுபடுத்தக்கூடிய வகையில் போதிய அளவு வேலைப்பாடுகளுடன் கூடிய மிகவும் சிறிய கற்கருவிகளைக் குறிக்கும். தீக்கல், சிறு உருளைக் கற்கள் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் இக் கருவிகள் பெரும்பாலும் ஒரு சதம மீட்டர் நீளம் கொண்டவையும் அரை சதம மீட்டர் அளவு அகலம் கொண்டவையும் ஆகும். நுண்கற்கருவிகளின் பயன்பாடு பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியிலும், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலப்பகுதிகளிலும் இருந்து வந்தது. வேளாண்மையின் அறிமுகத்தோடு நுண்கற்கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. எனினும், வேட்டைத் தொழிலில் ஈடுபட்டிருந்த சமூகங்களில் இவ்வகைக் கற்கருவிகளின் பயன்பாடு தொடர்ந்தும் இருந்து வந்தது. அதியமான் நெடுமிடல் அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் சேனைத்தலைவனாக இருந்தவன். பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். மேலும், பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231).இவன் அதிகன் என்றும் இலக்கியங்களில் குறிப் பிடப்படுகின்றான். இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் தோற்றது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது. அதியமான் நெடுமிடல் அஞ்சி என்னும் இயற்பெயர் கொண்டவன் இந்த மன்னன். மதுரைக்கு மேற்கே உள்ள வத்தலகுண்டு பெரியகுளம் பகுதி அக்காலத்தில் நெடுங்களநாடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை பிழையா விளையுள் நாடு என்று பதிற்றுப்பத்து புகழ்கிறது. அதன் மன்னனே நெடுமிடல் ஆவான். நெடுங்களநாடு அதியமான்களின் பூர்வீகமாக இருக்கலாம். பசும்பூண் பாண்டியன், கொங்கு நாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவ்வாறு கைப்பற்றி தகடூரில் நிலையான ஆட்சியை நிறுவினான். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுவதால் அதியரின் முன்னோர் பாண்டிய நாட்டின் பகுதியாகிய நெடுங்களநாட்டினர் என்பது உறுதியாகிறது. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களில் முதன்மையானவராக தகடூர் அரசரான அஞ்சியரசர்கள் நிலைகொண்டனர். தலையாலங்கானத்து போரில் ஈடுபட்டவர்கள். தலையாலங்கானத்து போர் அரிமணவாயில் உறத்தூர் போர் தற்போது அரிமளம் பிழையா விளையுள் நாட்டு போர் துளு நாட்டு பாழிப் போர் பாண்டிய நாட்டின் உட்பிரிவுகளாகிய நாடுகளில் பாரியின் பரம்பு நாட்டுக்கு வடக்கே கோனாடு என்று ஒரு நாடு இருந்தது. அங்கே பெருந்திரலார் என்பவர் வாழ்ந்து வந்தார். மக்கள் தலைவராக இருந்த அவருக்கும் கோனாட்டு மன்னனாக இருந்த எவ்வி என்பவருக்கும் கருத்து வேறுபாடு மிகுந்து இருந்தது. நீடூர் என்னும் எவ்வியின் ஊரக இருந்தது. ஆவுடையார் கோவில் பகுதியில் இருந்த மிழலை நாடு எவ்வியினுடையது. (இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.) எவ்வியின் வேண்டுகோளுக்காக அவரின் நண்பனாக இருந்த நெடுமிடல் சமாதானத்தால் வேறுபாட்டைக் களையமுயன்றார். பெருந்திரலார் தகாது பேசி சினமூட்டியதால் போர் மூண்டது. அரிமணவாயில் உறத்தூர் போர் தற்போது அரிமளம் என்னும் இடத்தில் நடந்தபோரில் எவ்வியின் சார்பாக போரிட்டு வென்றார். பரணர் பாடல் அகநானூறு 266) இல் இந்த செய்தி உள்ளது. பெருந்திரலார்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன தற்போது புதுக்கோட்டை வட்டத்தில் இருக்கின்றன. தலையாலங்கானத்து செறு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் சிறு வயதில் அரியணை ஏறினான். சிறுவன் என்று அண்டை நாட்டு மன்னர் அச்சுறுத்த எண்ணினர். நெடுஞ்செழியன் சிறுவன் என இகழ்ந்து சோழநாட்டைஆட்சி செய்த இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை பொதிகை பகுதியை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவர்கள் அனைவரும் ஒன்றாக பாண்டிய நாட்டின் மீது போர்தொடுத்து தலையாலங்கானம் என்னுமிடத்தில் சண்டை இட்டனர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் வென்றான் என்பது குறிப்பிடத்தக்கது. தலையாலங்கானத்து போரில் சேனைத் தலைவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி ஆவான். பசும்பூண் பாண்டியன், கொங்கு தேசத்தின் சில பகுதிகளை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் பணிந்தனர். பாண்டியனுக்கு நெடுமிடல் அஞ்சி சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு பகுதிகளை வென்று கைப்பற்றியதை, அகநானூறு (செய்யுள் 253: 4-5)பேசுகிறது. அவ்வேளையில் சேர நாட்டு அரசர்கள் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு நிற்காமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சங்க காலத்திலே பல சிற்றசர்கள் கொங்கு பகுதியை ஆண்டனர். ஆகவே, சேர, சோழ, பாண்டிய அரசர் அச்சிற்றரசர்களை எளிதில் வெற்றிகண்டு கொங்கு நாட்டைச் கொஞ்சம் கொஞ்சமாக கைவசப் படுத்திக் கொண்டு இருந்தனர். கொங்குநாட்டை சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே, அது காரணமாகச் சேர அரசர், பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான். பாண்டிய நாட்டின் மேற்கெல்லையாக பண்டியநாடும் சேரநாடும் சந்திக்கும் எல்லைப்பகுதியில் அளநாடு என்னும் வளம் மிக்க பகுதி இருந்தது. இன்றைய தேனி கம்பம் சின்னமனூர் பகுதியே எவ்வாறு அழைக்கப்பட்டது. அளநாட்டின் வழியாகச் சென்று எல்லை காவல் படையத்தாக்கினான் நெடுமிடல் அஞ்சி. சேரர்படை தோற்று ஓடியது. செய்தியறிந்த சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பெரும் யானைப்படையுடன் வந்தான். நெடுமிடல் அஞ்சியின் பிழையா விளையுள்நாட்டை யானைப்படையின் கால்களால் மித்திகச் செய்து அழித்தான். பெருவழி என்று அழைக்கப்படும் வழியாக வைகை கரைவழியே படை நடத்திச் சென்று சேரன் அழிவை ஏற்படுத்தினான். வத்தலகுண்டு பெரியகுளம்பகுதி பெறும் அழிவை சந்தித்தது. அவ்வாறு நடந்த சில போரில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் பதிற்றுப்பத்து நாலாம் பதின் வாயிலாக அறிகிறோம். துளு நாட்டு நன்ன அரசர் வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்ய முயன்றார்கள். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் எதிரிகளாயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்குப் பக்கத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். மிஞிலி நன்னுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப் பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான். அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் மரணமடைந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது 1. • நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, (பதிற்றுப்பத்து 32-10) நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, (பரணர் பாடல் அகநானூறு 266) வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ... ... நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் (பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11) நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14) என்று அகப்பாட்டுக் கூறுகிறது. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககாலக் மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ. 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவனது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது. அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது. பொருள்:- பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன். திணை வாகை; துறை அரச வாகை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது. அதியமான் பொகுட்டெழினி அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது. அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை. இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். தகடூர் யாத்திரை (நூல்) தகடூர் யாத்திரை என்பது, சேரமன்னன் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிசில் கிழார், பொன்முடியார் ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னனைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. உ. வே. சாமிநாதையர், என் சரித்திரம் என்னும் தனது தன்வரலாற்று நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்றும் முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது. பல்வேறு மூலங்களில் இருந்தும் இதுவரை 48 பாடல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. பல நூல்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்த பாடல்களைக் கொண்ட நூலாகிய "புறத்திரட்டு" என்னும் தொகுப்பில் இருந்து தகடூர் யாத்திரைப் பாடல்கள் சில கிடைத்தன. இது தவிர "நீதித் திரட்டு என்னும் இன்னொரு நூலிலிருந்தும் சில பாடல்களைப் பெற முடிந்தது. நச்சினார்க்கினியர், பேராசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியோர் தமது உரைகளில் தகடூர் யாத்திரையில் இருந்து பாடல்களை மேற்கோளாகக் கொடுத்துள்ளனர். இவ்வுரை நூல்களில் இருந்து பாடல்கள் மட்டுமன்றி இந்நூலின் அமைப்புப் பற்றிய சில தகவல்களும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பாக்களுக்கு இடையே உரைநடைச் சொற்கள் பயின்றுவருவது குறித்த தொல்காப்பியச் சூத்திரத்துக்கு விளக்கமளிக்கும்போது எடுத்துக்காட்டுக்காகத் தகடூர் யாத்திரையைக் குறிப்பிட்டுள்ளதால் இந்நூலில் பாடல்களுடன் உரைநடைச் சொற்களும் விரவிக் காணப்பட்டது என்பது பெறப்படுகின்றது. அத்தோடு "பழமையான கதை பொருளாகச் செய்யப்படுவது" என்பதற்கு எடுத்துக் காட்டாகப் பெருந்தேவனாரின் பாரதமும், தகடூர் யாத்திரையும் தொல்காப்பிய உரை நூலில் கூறப்பட்டிருப்பது, முன்னர் நிகழ்ந்து வாய்வழியாக வந்த ஒரு நிகழ்வைப் பிற்காலத்தில் பாடியதே தகடூர் யாத்திரை என்று பொருள்படுவதாகவும், சேரமான், அதியமான் போர் குறித்த வாய்வழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தகடூர் யாத்திரை எழுதப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர் இதனை மறுப்போரும் உளர். அஞ்சியத்தை மகள் நாகையார் என்னும் புலவர் தம் பாடல் ஒன்றில் அஞ்சி புகழைப் பாடும் நூலைப் பாணன் ஒருவன் புதிய பண்ணிசை கூட்டிப் பாடியதாகவும், அந்த இசைப்பாடல் இன்பம் தருவது போலத் தலைவன் தந்த இன்பம் தனக்கு இனிமையாக இருப்பதாகத் தலைவி ஒருத்தி தன் தோழியிடம் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடபுலவியனார் குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு மட்டும் புறநானூறு 18, 19எண் கொண்ட பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவை. குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். பாணர்களின் இசைக் கருவிகளை இயம் என்பர். எனவே இயனார் என்னும் சொல் இசைவாணரைக் குறிக்கும். இவற்றால் இந்தப் புலவர் சேரநாட்டு இசைக்கலைஞர் எனத் தெரியவருகிறது. இயம் என்னும் சொல் இசைக் கருவிகளை உணர்த்தும். இயனார் என்பவர் இசைக்கருவிகளை முழக்குபவர். குடபுலம் நாட்டுப்பகுதியிலிருந்து வந்தவர் ஆகையால் இவரைக் குடபுலவியனார் என்றனர். 'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம். உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசினோரே' உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார். வானம் பார்த்து விளையும் நிலம் உடம்பில் உயிரைப் படைக்கும் இறைவனாகிய உழவனின் முயற்சிக்குப் பயன்படாது. நிலத்தில் நீர் தேங்கச் செய்தால் உழவனாகிய இறைவனுக்குப் பயன்படும். எனவே நிலம் நெளிந்து குழிபட்டுள்ள பகுதிகளில் நீரைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அது பயிர்களுக்குப் பாய்ச்சப் பயன்படும். அதனால் விளைச்சல் அதிகமாகும்) மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர் கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்துச் செல்வம் நாம் துய்ப்பது. இறந்தபின் அடையும் உலகத்துச் செல்வம் இந்த உலகில் நம் புகழ் நிலைத்திருப்பது. இரண்டு உலகங்களின் செல்வத்தையும் ஒருங்கு பெறவேண்டுமென்றால் நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுகிறார். வாகைப் பூ சூடி அரசன் தன் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி வாகை எனப்படும். இந்தப் புலவர் முந்தைய பாடலில் போர் வெற்றியைப் புறந்தள்ளியவர். (தலையாலங்கானம் என்னுமிடத்தில்) தம்மை எதிர்த்த ஏழு அரசர்களின் கொட்டத்தை நெடுஞ்செழியன் அடக்கினான். இந்த வெற்றியை 'இன்ன விறலும் உளதுகொல்' என்று புலவர் ஏளனம் செய்கிறார். இது வெட்டியாகாது என்பதற்குப் புலவர் காட்டும் காரணங்கள் இவை. பாதமி பாதமி ("Badami", , இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டாட்சியர் பிரிவு ஆகும். முன்னர் வாதாபி என அழைக்கப்பட்ட இவ்விடம் கிபி 540க்கும் 757 க்கும் இடையில் பாதமிச் சாளுக்கியரின் தலை நகரமாக இருந்தது. இப்பகுதி, பழங்காலக் பாதாமி குடைவரைக் கோவில்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இது, அகத்தியர் ஏரியைச் சூழ்ந்து அமைந்துள்ள சிவப்பு மணற்கல் பாறைப்பொலிவுகளுக்கு இடைப்பட்ட குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 6ஆம் நூற்றாண்டுக்கும் 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இன்றைய கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆண்ட முற்காலச்சாளுக்கியரின் தலைநகரமாக பாதமி விளங்கியது. இது கிபி 540 ஆம் ஆண்டில், சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியால் நிறுவப்பட்டது. இம்மன்னனின் மக்களான கீர்த்திவர்மன், முதலாம் மங்களேசன் ஆகியோர் இங்குள்ள குடைவரைகளைக் கட்டுவித்தனர். இங்கிருந்து ஆண்ட சாளுக்கிய மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன் இரண்டாம் புலிகேசி ஆவான். இவன் பல மன்னர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான். எனினும் பல்லவர்களது காஞ்சீபுரத்தை அவனால் கைப்பற்ற முடியவில்லை. பாதமி குகைக் கோயில்கள் அல்லது குடைவரைகள் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டவை. இங்குள்ள நான்கு இத்தகைய கோயில்கள் சாளுக்கிய மன்னர்களுடைய சமயப் பொறையைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. முதலாம் குடைவரை சிவனுக்காக எடுக்கப்பட்ட கோயில். இரண்டாம், மூன்றாம் குடைவரைகள் விட்டுணு கோயில்கள். நான்காவது சமண சமயத்துக்கானது. இங்கே சமணத் தீர்த்தங்கரர்களுடைய புடைப்புச் சிற்பங்கள் கணப்படுகின்றன. ஆழமான பாறைக் குடைவுகளில் செதுக்கபட்ட இந்துக் கடவுளரின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள் இப்பகுதியெங்கும் உள்ளன. கட்டிடக்கலை நோக்கில் பாதமியிலுள்ள கட்டிடங்கள் தென்னிந்தியக் கட்டிடக்கலையின் தொடக்ககாலப் பாணிக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. இரண்டாம் புலிகேசி இரண்டாம் புலிகேசி (கிபி 610 - 642) சாளுக்கிய மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான். இவனுடைய காலத்தில் சாளுக்கியப் பேரரசு தக்காணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியது. இவனது இயற்பெயர் எறெயா (இறையா). முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவர் சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் மகன் ஆவான். கிபி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் கட்டி அரசன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது சிற்றப்பனார் மங்களேசன் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான். மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன. பதவி ஆசை காரணமாக, எரேயா (இறையா) பருவமடைந்த பின்னரும் அவனுக்கு உரிய அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான். எரேயா (இறையா) வாதபியை விட்டுச் சென்று வானவப் (கோலார்) பகுதியில் மறைந்திருந்து கொண்டு தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். வேட்டவடக்கூர் கல்வெட்டுக் கூறுவதன்படி எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். எரேயா (இறையா) இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான். வானவாசி கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை போரில் வெற்றி கொண்டார். என்றாலும், ஹர்ஷவர்தனரை போரில் தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின் ஆட்சி விரிவாகா வண்ணம் தடுத்து நிறுத்தியது வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்மர் சாளுக்கிய நாட்டின் மீது நடத்திய போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். இரண்டாம் புலிகேசியின் கி.பி. 634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆய்ஹோளே (அய்யாபாளைய) கல்வெட்டில் இவர் வெங்கி நாட்டை வென்று, பின்பு பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் புலிகேசி இந்து அரசராக இருந்தபோதிலும், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழ் அழுத்தம் சூழ் அழுத்தம் "(Ambient pressure)" என்பது ஒரு பொருளின் மீது அதனைச் சுற்றியுள்ள வளிமமோ நீர்மமோ செலுத்தும் அழுத்தம் ஆகும். அழுத்தத்திற்கான அனைத்துலக முறை அலகு பாஸ்கல் ஆனது மிகவும் சிறியதான ஒன்று என்பதால் பொதுவாகப் பூமியின் சூழ் அழுத்தம் கிலோ பாஸ்கல் அலகு கொண்டு குறிக்கப்படும். பருவநிலை மாற்றங்கள் காரணமாகக் கடலளவில் சூழ் அழுத்தம் எங்கும் நிலையான ஒன்றாக இராது என்றாலும், ஏறத்தாழ 100 கி.பாஸ்கல் என்று எடுத்துக் கொள்ளலாம். "பார்" என்னும் அளவை கொண்டும் சூழ் அழுத்தம் குறிக்கப்படுவதுண்டு. ஒரு பார் என்பது 100 கி.பாஸ்கல் அளவுக்குச் சமமானது. ஒரு சதுர அங்குலப் பரப்பில் 14.7 பவுண்டு விசை என்னும் அலகிலும் பொதுவாக சூழ் அழுத்தம் வழங்கப்படும். கடலடியில் ஆழமாகச் செல்லச் செல்ல, சூழ் அழுத்தமானது அதிகமாகும். நீர் காற்றை விட அடர்த்தியானது என்பதால் கடலடியில் அழுத்தம் கடலுக்கு மேலே இருப்பதை விட அதிகமாகும். காற்று மண்டலத்தில், உயரே செல்லச் செல்ல, சூழ் அழுத்தம் குறையும். நிலவும் சூழ் அழுத்தத்தைக் கொண்டு தரையில் இருந்து எவ்வளவு உயரம் என்பதைக் கணக்கிடவும் முடியும். நோய்களின் தரவுத்தளம் நோய்களின் தரவுத்தளம் (Diseases database) என்பது ஒரு இலவசமான வலைத்தளம் ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்து, இலண்டனில் இருந்து சேவையை வழங்குகிறது. ஆகத்து 2000 இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம். நுளம்பர் நுளம்பர் என்னும் மரபினர் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கும் 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்தியாவில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். தொடக்கத்தில் நுளம்பபாடி இன்றைய ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குள் அடங்கியிருந்தது. பிற்காலத்தில் இது தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவடைந்தது. தொடக்ககால நுளம்பபாடி, "நுளம்பபாடி 1000" என அழைக்கப்பட்டது. விரிவடைந்த பின்னர் இது "நுளம்பபாடி 32000" எனப்பட்டது. விரிவடைந்த நுளம்பபாடியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனத்பூர் பகுதி, கர்நாடக மாநிலத்தில் அடங்கும் சித்திரதுர்க்கா, தும்கூர், பெல்லாரி, பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளும், தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் அடங்கும் தர்மபுரி, கிருட்டிணகிரி, வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளும் அடங்கியிருந்தன. நுளம்ப மரபினர், கங்கர்களுக்கும், ராட்டிரகூடர்களுக்கும் அடங்கியே ஆட்சிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் தங்களைப் பல்லவர்களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். ஏமாவதித்தூண் கல்வெட்டு மூலம் இவர்களுடைய மரபு பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களாக, ஆகியோரின் பெயர்கள் கிடைக்கின்றன. சிவரஞ்சனி (திரைப்படம்) சிவரஞ்சனி கனடாவில் உள்ள கலைஞர்களினால் இந்தியக் கலைஞர்களையும் இணைத்து இந்தியாவிலும், கனடாவிலும் படமாக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜனகன் பிக்சர்ஸ் சிறீமுருகன் ஏற்கனவே உயிரே உயிரே,ப்சுகம் சுகமே, புது உறவு போன்ற படங்களை தயாரித்தவர். பிரபல எழுத்தாளரான குரு அரவிந்தன் எழுதிய " உன் மனம் கல்லோடி" என்ற புதினம்தான் இத்திரைப்படமாகியது. திரைக்கதை, வசனம் என்பனவற்றை குரு அரவிந்தனே எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் அமிர்த கணேஷ் (இந்தியா), நீதன் (கனடா), கே.ஆர்.வத்சலா (இந்தியா), ஸ்ரீமுருகன் (கனடா), கோவை பாபு (இந்தியா), கதிர் துரைசிங்கம் (கனடா) முதலான பலர் நடித்திருக்கிறார்கள். இசையை கபிலேஷ்வர் (கனடா) வழங்க, செந்தில்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்கம் எஸ்.மதிவாசன் - மூர்த்தி இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். உறவு (திரைப்படம், கனடா) கனடாவில் கவின் க்லாலயாவினால் தயாரிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றத் திரைப்படம். புலம்பெயர் வாழ்வில் கணவன் - மனைவி உறவு சிதைவடைவதற்கான உளவியல் ரீதியான காரணங்களை முன்வைக்கும் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு போன்ற முக்கியமான பொறுப்புகளை கலைஞர் வி. திவ்வியராஜன் ஏற்றுள்ளார். சுதாகர், சங்கீதா, நவம், சித்திரா, சிறீமுருகன், நர்த்தனன், தம்பிராஜா சேகர், கதிர் துரைசிங்கம், பாலா(குட்டி) இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களுக்கான மெட்டுக்களை திவ்வியராஜன் வழங்க, பயாஸ் சவாஹீர் இசை அமைத்துள்ளார். பாரதி, சேரன் யாத்த பாடல்களுடன் திவ்வியராஜன் இயற்றி பாடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. நடன அமைப்பை திருமதி திவ்வியராஜன் கவனித்துள்ளார். ஒளிப்பதிவை ஜீவன் ஜெயராமும், படத்தொகுப்பை கீர்த்தனன் திவ்வியராஜனும் கவனித்திருக்கிறார்கள். பிலு மோடி பிலு மோடி ("Piloo Mody", 14 நவம்பர், 1926 - 29 சனவரி 1983) இந்திய எழுவரல் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். இராஜாஜி உள்ளிட்டோருடன் சேர்ந்து சுதந்திரா கட்சியை நிறுவியவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருமுறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் உறுப்பினராக இருந்துள்ளார். பிலு மோடி சோராசுதிர மதத்தைச் சேர்ந்த பார்சி குடும்பத்தில் பிறந்தவர், ஹிமாசலப் பிரசேத்தின் டேராடூன் நகரில் உள்ள டூன் பள்ளியில் கல்வி கற்றவர். பின்னர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) கட்டிடக் கலையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பிலு மோடி இந்தியாவில் எழுவரப் பார்வை கொண்ட அரசியல்வாதிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். எழுவரல் (ஆங்கில வழக்கில் லிபரல்) பார்வை என்பது பொருளாதார மற்றும் சமூக விசயங்கள் இரண்டிலும் தாராளமய பார்வை கொண்டிருப்பதாகும். சிறிய அளவிலான அரசு, தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசின் செலவினங்களில் கட்டுப்பாடு, தனிமனித வாழ்க்கை முடிவுகளில் அரசு தலையிடாமல் இருத்தல் போன்றவை எழுவரல் அரசியலில் குறிப்பிடத்தக்க கோட்பாடுகள். ஆகஸ்டு 1959 இல் பிலு மோடி, இராஜாஜி, ஜி. ரங்கா ஆகியோர் முயற்சியில் சுதந்திரா கட்சி துவங்கப்பட்டது. 1960களில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த இந்திய பேராயக் கட்சிக்கு மாற்றாக விளங்கிய கட்சிகளில் சுதந்திரா கட்சியும் ஒன்றாகும். பிலு மோடி குஜராத் மாநிலம் கோதராவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மற்றும் ஐந்தாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னாளில் சுதந்திராக் கட்சி, பாரதிய க்ராந்தி தளத்தில் (பி.கே.டி) இணைந்தபோது, அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். 1975-இல் இந்திரா காந்தி ஆட்சியில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் பிரதமராக விளங்கிய சுல்ஃபிக்கார் அலி புட்டோ, பிலு மோடியின் நெருங்கிய நண்பராவார். இருவரும் பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்களாகயிருந்தனர். புட்டோ மறைந்த பின்னர், அவர் நினைவாக மோடி எழுதிய "சுல்பி மை ஃபிரண்டு" என்னும் புத்தகம் பிரபலமாக விளங்கியது. பிலு மோடியின் மனைவி வீனா மோடி கல்வி வளர்ச்சி, கலைகள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உடையவராக அறியப்படுகிறார். பிலு மோடியின் சகோதரர் ருசி மோடி டாடா எஃகு நிறுவனத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். 1983-இல் மறைந்த பிலு மோடியின் பெயரில் ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியும், ஒரு பன்னாட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டியும் நடத்தப்படுகின்றன. பசுமைவழிச் சாலை பசுமைவழிச் சாலை (ஆங்கிலம்:Greenways Road) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் சாலையும் நகரப்பகுதியும் ஆகும்.இதே பெயரில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் விரைவான கூட்ட நகர்வு அமைப்பு தடத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அடையார் ஆற்றினை ஒட்டியமைந்துள்ள இச்சாலையில் தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் போன்ற உயரதிகாரிகளுக்கு மாளிகைகள் அமைந்துள்ளன. மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டத்தின் மாவட்ட நீதிபதி / தாசில்தார் அலுவலகங்களும் இச்சாலையில் அமைந்துள்ளன. இங்குள்ள குறிபிடத்தக்க வளாகங்கள்: டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவுப் பூங்கா, தமிழ்நாடு இயல் இசை நாடக கல்லூரி, குச்சிப்புடி ஆர்ட் அகாதெமி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், அண்ணா மேலாண்மைக் கழகம். இங்கு யேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூடமும் சபரிமலைக் கோவிலை யொட்டி வடிவமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலும் அமைந்துள்ளன. இவற்றையொட்டியப் பகுதி டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை என அண்மையில் மறுபெயரிடப்பட்டுள்ளது. இச்சாலையினையும் அடையார் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள (எல்பின்ஸ்டன் பாலம்) திரு.வி.க பாலத்திற்கும் இடையே உள்ள அடையார் பாலச்சாலை தற்போது டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை என்று அழைக்கப்படுகிறது. இச்சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சினிடோன் என்ற சென்னையின் மிகப் பழமையான திரைப்பிடிப்புக் கூடம் ிருந்தது. இது பின்னர் நெப்ட்யூன் இசுடூடியோ என்றும் சத்யா இசுடூடியோ என்றும் பெயர்மாறி தற்போது சத்தியபாமா எம்ஜியார் மாளிகை என்று வழங்கப்படுகிறது. இவ்வளாகத்திலேயே டாக்டர் எம்ஜியார் ஜானகி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அந்தோணியார் வட்டம் அந்தோணியார் வட்டம் என்னும் சிற்றூர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலூள்ள கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது. திங்கள் நகரிலிருந்து அழகியமண்டபம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் நடுத்தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோர் நாடார் சமுதாயாத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறித்தவர்கள் ஆவர். கடந்த இரு தலைமுறையினர் கட்டுமானத் தொழிலாளிகளாக இருந்து வந்தனர். கேரளாவிற்கு வேலைக்குச் சென்றனர். தற்போது நிலைமை மெல்ல மாறுகிறது. ஏன் இவர்கள் கட்டுமானத் தொழிலாளிகளாக மாறினர் என்று ஆராயும் போது வருணாச்சார சாதியக் கொடுமையினால் புகுத்தப்பட்டது என்று தெரிகிறது. ஊரின் நடுவே புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இதனை அருட்பேரவை நிர்வகித்து வருகிறது. பங்கு பல அன்பியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தோணியார் வட்டம் பங்கு கல்குறிச்சிப் பங்கின் கிளைப்பங்காக கோட்டாறு மறை மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாலயத்திற்கு புனித அந்தோணியார் சமூகக் கூடம் (St. Antony’s Community Hall) ஒன்று உள்ளது. 0.70 ஏக்கர் பரப்பளவில் கல்லறைத் தோட்டம் ஒன்றும் அமைந்துள்ளது. கல்லறைத் தோட்டத்தில் ஒரு சிறிய குருசடி அமைந்துள்ளது. ஊரின் சந்திப்பில் புனித அந்தோணியார் குருசடி அமைந்துள்ளது. கிறித்துமசு பண்டிகையின் போது r>0.70 ஏக்கர் பரப்பளவில் கல்லறைத் தோட்டம் ஒன்றும் அமைந்துள்ளது. கல்லறைத் தோட்டத்தில் ஒரு சிறிய குருசடி அமைந்துள்ளது. ஊரின் சந்திப்பில் புனித அந்தோணியார் குருசடி அமைந்துள்ளது. கிறித்துமசு பண்டிகையின் போது பொரும் பொருட்செலவில் குடில் அமைக்கப்படும் வழக்கம் உள்ளது. புனித அலோசியசு சகோதரிகள் மடம் (St. Aloysius Convent) ஒன்றும் அமைந்துள்ளது. புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி (St. Antony’s Middle School) ஒன்றும் செயல்பட்டு வருகிறது. ஊரின் வரலாறு பற்றி பெரியளவில் வெளி வரவில்லை அந்தோணியார் வட்டம் ஊரின் வழியே அந்தோணியார் வட்டம் – ஆழ்வார்கோவில் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை முன்னோர் காலத்தில் வேணாடு அரசன் ஆழ்வார்கோவில் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டது.அந்தோணியார் வட்டம் ஊரை அடுத்த திருவிதாங்கோட்டின் புனித சவேரியார் கட்டிய கோயிலும் புனித தோமையார் கட்டிய அரைப்பள்ளியும் குறிப்பிடத் தக்கன. இம்மக்கள் எப்போது கிறித்துவர்கள் ஆனார்கள் என்ற விவரம் இல்லை. எரிபந்த நோய் எரிபந்த நோய் ("blast disease") எனப்படுவது நெல்லின் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளிலும் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்க்காரணி மக்னிபொத்தோ கிறைசியா ("Magneporthe grisea") எனும் பூஞ்சணம். ஆரம்ப நிலையில் இலை ஊதா கலந்த பச்சை நிறத்தில் தோன்றிபின் நீல வடிவில் தோன்றும்.நோய் வளர்ச்சியடைந்த நிலையில் புள்ளிகள் வெண்மை கலந்த சாம்பல் நிறமையப் பகுதியையும் பளுப்பு நிற ஓரங்களையும் கொண்டு கண் வடிவில் காணப்படும். நிலமட்டத்திற்கு மேலுள்ள பகுதிகளில் அறிகுறிகள் தென்படும். இலை மடலிலும் கணுக்களிலும் தாக்க அறிகுறிகள் தோன்றலாம். இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 இந்திய நிறுமங்கள் சட்டம்-1956 ("The Companies Act 1956") என்பது, இந்தியாவில் நிறுமங்களை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். நிறுமம் (Company) என்பது சில நபர்கள், தாமாகவே முன்வந்து கூட்டாக இணைந்து ஏதேனும் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டு அதில் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் அமைப்பு. இந்திய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற இத்தகைய கூட்டமைப்புகள், நிறுமம் என்ற அந்தஸ்தை பெறுகின்றன. இவ்வாறு பதிவு செய்து கொள்வதால் பின்வரும் நன்மைகள் கிட்டுகின்றன: 1.சுயேச்சையான ,சட்டபூர்வமான அமைப்பு 2.வரையறுக்கப்பட்ட பொறுப்பு 3.எப்போதும் தொடர்ந்து நீடித்தல் உறுப்பினர்கள் வரலாம் - போகலாம் .ஆனால் நிறுவனம் அப்படியே இருக்கும். எப்படி மனிதர்கள் வந்தாலும் போனாலும் ஆறு மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறதோ அது போல நிறுமமும் எப்போதும் இருக்கும். சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மனிதனை சட்டம் மட்டுமே அழிக்க முடியும்.ஒரு நிருமத்தைப் பதிவு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக இறந்துவிட்டாலும் கூட நிறுமம் அப்படியே இருக்கும்.இறந்து போன உறுப்பினர்களின் சட்டபூர்வமான வாரிசுகள் , நிறுமத்தைத் தொடர்ந்து நடத்துவார்கள்.(அரசன் இறந்து விட்டான்.அரசாங்கம் வாழட்டும்! - என்பது போல) 4.பங்குகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஓர் உறுப்பினர் , தாம் வைத்திருக்கும் பங்குகளை பிறருக்கு விற்கலாம்.பொது நிறுமத்தின் பங்குகளை , சந்தையில் விற்கும் பிற பொருட்களைப் போல,வாங்கவோ விற்கவோ முடியும். 5.கணக்கில் அடங்காத உறுப்பினர்கள் தனிப்பட்ட நிறுமங்களின் அதிக பட்ச எண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருந்தாலும் பொது நிறுமங்களில் எத்தனை உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். 6.ஏராளமான மூலதனத்தைப் புரட்டும் வசதி தனியொரு மனிதனால் புரட்ட முடியாத மிக அதிகமான மூலதனத்தை பல்வேறு மனிதர்கள் கூட்டாகச் சேருவதால் புரட்ட முடியும்.மேலும் , ஒருவரின் பொறுப்பு வரையறுக்கப் பட்டிருப்பதால் அவருக்கு பெரும் நட்டம் எதுவும் வந்து விடாது. 7.நிறுமம், தனது பெயரிலேயே சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை நிறுமம் என்பது சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மனிதன் ஆகும்.இயற்கை மனிதனைப் போலவே நிறுமமும் தன பெயரில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்.ஒரு நிறுமம், பிற மனிதர்களின் மீதோ அல்லது பிற நிறுமங்களின் மீதோ வழக்கு தொடரலாம்.அதே போல் மற்றவர்களும் ஒரு நிறுமத்தின் மீது வழக்கு தொடரலாம். 8.நிறுமத்தை நிர்வாகம் செய்வதும் கட்டுப்படுத்துவதும் எளிது. ஒரு நிறுமத்தை அதன் இயக்குனர் குழு நிர்வாகம் செய்கிறது. = உள்ளடக்கம் = இந்திய நிறுமங்கள் சட்டத்தின்படி , பலவிதமான வடிவங்களில் நிறுமங்களை உருவாக்கி பதிவு செய்து கொள்ளலாம். அடிப்படையான இரண்டு வகைகள் : இந்த இரண்டு வகையிலும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் மற்றும் அளவற்ற பொறுப்பு நிறுமம் ஆகிய இரண்டு வகைகளும் உருவாக்கப்படலாம். வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமங்களின் பொறுப்பைப் பொறுத்து கீழ் காணும் நிரும வகைகள் உருவாகின்றன: இவை தவிர பாராளு மன்றத்தின் சிறப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நிறுமங்கள், இலாப நோக்கம் இல்லாத நிறுமங்கள் மற்றும் அரசு நிறுமங்கள் எனவும் பல்வகை நிறுமங்கள் உள்ளன. ஒரு நிறுமத்தின் பங்குகளை வாங்கிக்கொள்பவர் , அந்த நிறுமத்தின் உறுப்பினர் ஆகிறார். வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் பங்குகளை வைத்திருப்பவர் , பங்குகளின் முக மதிப்புக்கு சமமான தொகையை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தி இருப்பார். ஒருவேளை இந்த நிறுமம் நட்டத்தில் மூழ்கி விட்டால் உறுப்பினர்களின் நிலை என்ன?அவர்கள் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் முக மதிப்பை செலுத்தி இருந்தால் அதுவே போதும்.முக மதிப்பை முற்றிலுமாக செலுத்தாதவர்கள் , அந்தத் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.தனியார் நிறுவனம் போல எல்லா நட்டத்தையும் தனியொரு மனிதன் தாங்க வேண்டியதில்லை. தனிப்பட்ட நிறுமத்திற்கும் பொது நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்: தனிப்பட்ட நிறுமம் பொது நிறுமமாக மாறுதல்: = வெளி இணைப்புகள் = நூலகக் கட்டிடம் நூலகக் கட்டிடம் என்பது நூலகம் ஒன்றின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வசதிகளை உள்ளடக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்படும் கட்டிடத்தைக் குறிக்கும். நூலகங்களை அமைக்கும் வழக்கம் மிகப் பழைய காலத்திலேயே இருந்திருந்தாலும், கல்வி வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி வளர்ச்சியடைந்தமை, அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதிகரித்த அறிவுத் தேவைகள் என்பன நூலகங்களின் தேவையை அதிகரித்துள்ளன. நூலகச் செயற்பாடுகளின் சிக்கல்தன்மை அதிகரித்துக்கொண்டு வந்தபோது அச் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளும் அவற்றுக்கு ஏற்றாற்போல அமைய வேண்டியதாயிற்று. இதனால் இவ்வசதிகளை வழங்கும் கட்டிடங்களும் நூலகத்தின் தேவைகளுக்காகச் சிறப்பாக்கம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் நூலகங்களுக்கெனச் சிறப்புத் தன்மை கொண்ட கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டினர். ஒரு நூலகத்தின் முக்கியமான செயற்பாடு பலவகையான நூல்களைச் சேமித்து வைப்பதும் அவற்றைப் பேணுவதும் ஆகும். அத்தோடு, நூலகத்தின் பயனர்கள் நூல்களை எடுத்து வாசிப்பதற்கான வசதிகள்; நூல்களைப் பயனர்கள் இரவல் வாங்குவதற்கான வசதிகள்; நூலகப் பணியாளர்களுக்கான வசதிகள்; பயனர்களுக்கும் பணியாளருக்குமான உணவு வசதிகள், கழிப்பறை வசதிகள்; நீர், மின்சாரம், மற்றும் பிற தேவைகளை வழங்குவதற்கான வசதிகள், கட்டிடப் பராமரிப்புக்கான வசதிகள் என்பனவும் நூலகக் கட்டிடம் ஒன்றிற்கு அவசியமானவை. எல்லா நூலகங்களுமே ஒரே மாதிரியான பயனர்களுக்காக அமைக்கப்படுவதில்லை என்பதோடு அவற்றின் சேவை நோக்கங்களும் வேறுபட்டு அமைய முடியும். இதனால் நூலகங்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றுக்கான கட்டிடங்களும் பொருத்தமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். பல்வேறு வகையான நூலகங்களுள் பின்வருவனவும் அடங்கும்: சிலவகை நூலகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான பயனர்களுக்கு மட்டுமே சேவை புரிகின்றன. எடுத்துக்காட்டாக சிறுவர் நூலகங்கள் சிறுவர்களுக்காகவும், கல்விசார் நூலகங்கள் உயர் கல்வித்துறை சார்ந்தோருக்கும் சேவை புரிகின்றன. இதனால் இவற்றுக்கான கட்டிடங்களிலும் சிறப்புச் செயற்பாட்டுப் பகுதிகள் தேவைப்படுகின்றன. சிறுவர் நூலகங்களை கதை சொல்வதற்கான இடவசதிகள், சிறுவர்கள் தூங்குவதற்கான வசதிகள் முதலியவற்றுடன் வடிவமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளமுடியும். அதேவேளை பொது நூலகங்கள் பரந்த பயனர் குழுக்களுக்குச் சேவை புரிகின்றன. கல்வித்தரம், வயது போன்ற வேறுபாடுகள் இன்றி எல்லாவகையான பயனர்களும் பொது நூலகங்களைப் பயன்படுத்துவதனால், பொது நூலகக் கட்டிடங்களில் எல்லோருக்கும் தேவையான வசதிகள் ஒருங்கே அமைந்திருக்கும். பெரிய நகரங்களில் உள்ள பொது நூலகங்கள் அந்நகரங்களின் ஒரு மதிப்புக்குரிய சின்னமாக அமைவதனால் அக்கட்டிடங்களை மிகுந்த அழகியல் அம்சங்களைக் கொண்டவையாகவும் அந்நகரங்களின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்துவனவாகவும் அமைக்கின்றனர். சில சமயங்களில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் படியும் வடிவமைக்கிறார்கள். பொதுவாக ஒரு நூலகத்தில் பல வகையான செயற்பாட்டுப் பகுதிகளும் அவற்றுக்குச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட இடவசதிகளும் இருக்கும். இவற்றைப் பின்வரும் பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்: நூல் சேமிப்புப் பகுதி நூலகத்தின் அளவையும் தன்மையையும் பொறுத்துப் பல பிரிவுகளாக அமையும். இவற்றுள், அச்சு நூல்கள் சேமிப்புப் பகுதி, அச்சல்லாத பிற சேமிப்புகளுக்கான பகுதி, பருவ இதழ்களுக்கான பகுதி என்பன முக்கியமானவை. சேமிப்புப் பகுதியில் நூல்கள் எடுப்பதற்கு வசதியாக அடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அடுக்குகள் சுவரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது நடுவிலே தனியாக நிற்கும்படி வைக்கப்பட்டிருக்கலாம். நடுவில் இருக்கும் அடுக்குகளில் இரண்டு பக்கங்களிலும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் இதனால் இவ்வடுக்குகளின் இரு புறமிருந்தும் புத்தகங்களை எடுக்கக்கூடிய வகையில் நடைவழி இருக்கும். இவ்வாறு சேமிப்பில் இருக்கும் நூல்களின் அளவைப் பொறுத்து அடுக்குகள் வரிசை வரிசையாக இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் பல தட்டுக்களை உடையதாக இருக்கும். பயனர்கள் நேரடியாக அடுக்குகளிலிருந்து நூல்களை எடுக்கும் வசதிகள் உள்ள நூலகங்களில் அடுக்குகளுக்கு இடையிலான வழி அகலம் கூடியதாகவும், தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு பயனருக்கு தரையில் நின்றபடி எட்டி எடுக்கக்கூடிய அளவுக்கும் இருக்கும். பணியாளர்களே நூல்களை எடுத்துக் கொடுக்கும் நூலகங்களில் வழியின் அகலம் குறைவாக இருக்கலாம் என்பதுடன், அடுக்குகளின் உயரமும் கூடுதலாக இருக்கலாம். பணியாளர் ஏணிகளைப் பயன்படுத்தி நூல்களை எடுப்பர். பல நூலகங்களில் இரண்டு வகையான நடை முறைகளும் இருப்பது உண்டு. இத்தகைய பயன்பாட்டு வேறு பாடுகளைக் கருத்தில் கொண்டே சேமிப்புப் பகுதிக்கான இடவசதி ஒதுக்கப்படும். கே. கே. நகர் கே. கே. நகர் என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: சுற்றுச் சூழல் சட்டங்கள் சுற்றுச் சூழல் மாசுபடுவதைக் குறித்து உலக மக்கள் அனைவரும் கவலைப் படுகின்றனர்.உலக அரசுகளும் சுற்றுச் சூழல் மாசு படுவதைத் தடுக்க,தவிர்க்க தங்களால் ஆனதைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசு இதற்காக கீழ் காணும் சட்டங்களை இயற்றி உள்ளது கே. கே. நகர், சென்னை கே. கே. நகர் (அல்லதுகலைஞர் கருணாநிதி நகர்) தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட நகர்ப்பகுதியாகும். அசோக் நகர் நகர்ப்பகுதி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையம் 5 கி.மீ தொலைவில் உள்ளது.1970 ,80களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வடிவமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட இப்பகுதி 5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 15 செக்டர்களும் 102 தெருக்களும் உள்ளன.  ஈக்காட்டுத்தாங்கல் ஈக்காடுத்தாங்கல் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒன்றாகும். கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டி புதிய பொருளியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வணிக வளாகங்களை உள்ளடக்கி எழுந்த புதிய நகர்ப்பகுதியாகும். இப்பகுதி கணினிசார் எண்ம இயந்திரங்களின் தொழிற்பேட்டை என செல்லமாக வழங்கப்படுகிறது. எஸ்.ஏ.ஜே சிஎன்சி மேசினிங் சென்டர், ஹாரிசன்சு ஆட்டோமேசன் அண்ட் மோல்ட்சு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒலிம்பியா டெக் பார்க் என்ற பல்மாடி வளாகம் மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றினைக் கொண்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியின் படப்பிடிப்புத் தளம் இங்குள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஈக்காட்டுத்தாங்கல் விளங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது. தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)" இதன் பொருள், 'ஊர், பெயர், தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே' என்பதாகும். மனிதன் ஆரம்ப காலங்களில் மரங்களைத் தங்கும் இடங்களுக்குப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினர். பாலைவனங்களில் இருக்கக்கூடிய ஈச்சம் மரங்கள் அபூர்வமாகத் தமிழகத்திலும் அதிகமாகக் காணப்பட்டு உள்ளன. தங்கல் என்ற குறில், நெடில் தாங்கலாக மாறி பல இடங்களில் வந்து உள்ளது. ஈச்சம் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வாழ்ந்த மனிதன் தான் வாழ்கின்ற இடத்திற்கு ஈச்சந்தங்கல் என்ற பெயரிட்டு ஈச்சந்தங்கல் காலப்போக்கில் ஈக்காட்டுத்தாங்கலாக மாறி உள்ளது.  கோட்டூர்புரம் கோட்டூர்புரம் சென்னையின் அடையார் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் நகர்ப்பகுதி. ஆற்றின் வடக்கு நோக்கிய வளைவில் அமைந்துள்ளதால் செய்மதி படங்களில் எளிதாக அடையாளம் காணலாம். சென்னையின் பிற பகுதிகளுடன் எளிதாக இணைக்கப்படாது இருந்தமையால் 60,70களில் மிக அமைதியான குடியிருப்புப் பகுதியாக இருந்தது. கோட்டூர்புரப் பாலம் அமைக்கப்பட்டு சாமியர்சு சாலையுடன் இணைக்கப்பட்டபின் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. சிறப்பு கல்வி நிறுவனங்களான இ.தொ.க,அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றை அண்மையில் கொண்டிருக்கும் இப்பகுதியில் புதிய தலைமுறை தொழிற்நுட்பங்களை கையாளும் மிகப் பெரும் நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. முழுமையும் கணினிமயமாக்கப்பட்ட பிர்லா கோளரங்கம் இங்கு அமைந்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இங்கு வாழ்ந்து வந்தார். செட்டிநாட்டரசர் மற்றும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ. சி. முத்தையாவின் மாளிகை இங்குள்ளது. இவரது மாளிகையை அடுத்த வளாகத்தில் அபிராமி-சிவகாமி கல்யாண மண்டபமும் எம்ஏசி ஸ்பின் துடுப்பாட்ட மையமும் அமைந்துள்ளன. இப்பகுதி முன்பு அமைதியான குடிப்பகுதி என்பதால் பல புகழ்பெற்ற கலைஞர்கள் இங்கு வாழ்ந்தனர். முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு இங்கு உள்ளது. மிகத்தொன்மையான கோவில்கள்,பெருமாள் கோவில் (1000 ஆண்டுகள் பழையது), பொன்னியம்மன் கோவில் (400 ஆண்டுகள் பழையது) அண்மையில் உள்ள கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளன. கோட்டூர்புரம் அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. 2015 ஆம்ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்டது.  பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி "(P.S.G College of Arts and Science)" கோவை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஜி.ஆர்.கோவிந்தராஜலு, ஜி.ஆர்.தாமோதரன் ஆகியோரால் துவக்கப்பட்டது. பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் நினைவாக பூசாகோ என்னும் பெயர் வைக்கப்பட்டது. பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி மஸீதா புன்னியாமீன் எம். எச். எஸ். மஸீதா (மஸீதா புன்னியாமீன்) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர். இலங்கையின் தென்மாகாணத்தில் காலியைப் பிறப்பிடமாகவும், மத்தியமாகாணத்தில் கண்டி உடத்தலவின்னையை வாழ்விடமாகவும் கொண்டவர். பல இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ள இவர், இலக்கியத்தில் கட்டுரை, சிறுகதை, கவிதை என பல்வேறு துறைகளில் பங்களிப்பினை நல்கி வருகின்றார். இவரின் பிரபலமான நூல்களில் ‘மூடுதிரை’ சிறுகதைத் தொகுதி ஈண்டு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தென்மாகாணம் காலி மாவட்டத்தில் கட்டுகொடை எனும் இடத்தைச் சேர்ந்த முஹம்மட் ஹம்ஸா, ஜெஸீமா தம்பதியினரின் புதல்வியான இவர் தனது ஆரம்பக் கல்வியை கட்டுகொடை உஸ்வதுல் ஹஸனா வித்தியாலயம், காலி மல்ஹா ரசூலியா தேசிய பாடசாலை ஆகியவற்றில் பெற்றார். கற்கும் காலத்திலிருந்தே கவிதை, சிறுகதை என எழுதிவரும் இவர், மாணவியாக இருக்கும்போதே மாவட்ட ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை பெற்றுள்ளார். இவர் 'உந்துசக்தி' விஞ்ஞான சஞ்சிகையின் ஆசிரியையுமாவார். இந்நூல் கிழக்கிலங்கையைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயாவுடன் இணைந்து எழுதியது. தெய்வம் தந்த வீடு தெய்வம் தந்த வீடு 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர். "தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார். நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா) நடித்தார். துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ். என். தனரத்தினம், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம், வி.சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்தார்கள். பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். வீரமணி ஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார். விஜயாள் பீற்றர் இலங்கை வானொலியில் கே. எம். வாசகர் தயாரிப்பாளராக இருந்த போது பல வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்த பிரபலமான நடிகை. தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். குட்டுவன் கண்ணனார் குட்டுவன் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை 179ஆம் பாடலாக உள்ளது. கடமானைத் துரத்தித் துரத்தி உன் வேட்டைநாய்(ஞமலி) களைப்பால் இளைப்பு வாங்குகிறது. பகல் பொழுதும் போய்விட்டது. இனி உன் ஊருக்குச் செல்லவேண்ணடாம். உதோ எம் ஊர் தெரிகிறது. (தங்கிச் செல்லலாம்) என்கின்றனர் தலைவியும் தோழியும். மூங்கில் வரைத்தேனைக் கிழிக்கும். அந்த மூங்கிலை யானை வளைத்து உண்ணும். தலைவி தலைவனின் தேனைச் சுவைப்பாள். தலைவன் தலைவி மூங்கிலை வளைந்து உண்பான். தலைவி தன் கையால் உதோ என்று சுட்டிக் காட்டும் அவளது ஊர் இப்படிப்பட்டதாம். சாந்தோம் சாந்தோம் (Santhome) சென்னையில் மைலாப்பூர் பகுதியில் உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் செயிண்ட் தாமசு என்ற கிறித்தவ புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசு கிறித்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். கி.பி 72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு இத்தாலிய உலகப்பயணி மார்கோ போலோ 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார். இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி, சாந்தோம் இடைநிலைப் பள்ளி, செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி. சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும், மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. உருசியா மற்றும் இசுப்பானிய நாட்டு துணைத் தூதரகங்களும் இங்கு உள்ளன. சென்னை சாந்தோம் தேவாலயம்  குட்டுவன் கீரனார் குட்டுவன் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் காணப்படுகிறது. அது புறநானூறு 240 எண் கொண்ட பாடலாக உள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் இறந்து போனதை எண்ணி இரங்கும் பாடல் இது. யானை, குதிரை, தேர், நாட்டுப் பகுதிகள்(வயல்கள்), ஊர்கள் முதலானவற்றையெல்லாம் ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிவந்தான். அவனைக் காலன் என்னும் கண்ணிலி(இரக்கமில்லாதவன்) தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவனுடன் அவனது மனைவியரும் சென்றுவிட்டனர். இதனை அறிந்து மரப் பொந்தில் வாழும் கூகை 'சுட்டுக் குவி' என்று குழறுகிறது. கள்ளிச் செடிகள் நிறைந்த சுடுகாட்டில் அவனது உடலைத் தீக்கு இரையாக்கிவிட்டனர். புலவர்கள் தம்மைப் புரக்கும் புரவலரைக் காணாமல் ஊர் ஊராகத் திரியலாயினர். என் செய்வர்? அந்தோ! ஜாஃபர்கான் பேட்டை ஜாஃபர்கான் பேட்டை (Jafferkhanpet) சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அடையார் ஆற்றினை அடுத்து அமைந்துள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். அதன் அண்மையில் கிண்டி, கே கே நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை,ஈக்காடுதாங்கல் ஆகிய சுற்றுப்பகுதிகள் உள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் பிரிவு இங்கு இறங்குகிறது. அடையார் பாலத்தை அடுத்தமைந்துள்ள காசி சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு காசி மற்றும் விஜயா திரையரங்குகள் உள்ளன. இதன் அருகில் உதயம் தியேட்டர் உள்ளது. காசி சிக்னல் அருகில் சென்னையில் மிக பிரபலமான ராஜம் & கம்பனி டிவி ஷோ ரூம் உள்ளது. சைவ உணவக குழு மமான சரவணபவன் உணவகம் இங்கு இயங்கி வருகிறது.  நூலக அடுக்கு நூலக அடுக்கு (Library shelf) என்பது, நூலகங்களில் சேமித்து வைத்திருக்கும் நூல்களை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்படி அடுக்கி வைப்பதற்குப் பயன்படும் ஒரு தளவாடம் எனலாம். ஒரு நூலகத்தில் நூல் சேமிப்புப் பகுதி முக்கியம் பெறுவதுபோல், நூல் சேமிப்புப் பகுதியில் நூலக அடுக்குகள் முக்கியம் பெறுகின்றன. நூலகங்களில் நூல் சேமிப்புப் பகுதிக்குத் தேவையான இடத்தின் அளவைக் கணிப்பதில் பயன்படவிருக்கும் அடுக்குகளின் விபரங்கள் இன்றியமையாதவை ஆகும். முக்கியமாக ஒரு அடுக்கின் கொள்ளளவு எவ்வளவு என்பதை அறிய வேண்டியது முக்கியமானது. இங்கே கொள்ளளவு என்பது ஒரு அடுக்கில் அடுக்கி வைக்கக்கூடிய நூல்களின் எண்ணிக்கை ஆகும். அத்துடன் அடுக்கொன்றின் அளவுகளும் இடத்தேவைக் கணிப்பீட்டுக்கு அவசியமான தரவு ஆகும். ஒரு அடுக்கின் அளவு அதன் அகலம், ஆழம், உயரம் என்பவற்றை உள்ளடக்கியது. அடுக்கொன்றின் கொள்ளளவு ஒரு அலகு நீளத்தில் கொள்ளக்கூடிய நூல்களின் எண்ணிக்கையினால் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக ஒரு அடுக்கின் கொள்ளளவு ஒரு மீட்டருக்கு 125 என்றால் ஒரு மீட்டர் அகலம் கொண்ட அடுக்கொன்றில் 125 நூல்களை அடுக்கமுடியும். இந்த எண்ணிக்கை ஒரு மீட்டர் நீளத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்துள்ள எல்லாத் தட்டுக்களிலும் உள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதால் ஒரு அடுக்கின் கொள்ளளவு அது கொண்டுள்ள தட்டுக்களின் எண்ணிக்கையிலும் தங்கியுள்ளது. தட்டுக்களின் எண்ணிக்கை அடுக்கின் கொள்ளளவைக் கூட்டும் ஆயினும் அடுக்குகளின் எண்ணிக்கயை ஒரு வரையறைக்குள் மட்டுமே கூட்ட முடியும். தட்டுக்களின் எண்ணிக்கை பொதுவாகப் பின்வருவனவற்றில் தங்கியுள்ளது: நூலகத்தைப் பயன்படுத்தும் பயனர்களைப் பொறுத்து நூலக அடுக்குகளின் மொத்த உயரம் அமையும். எடுத்துக்காட்டாக, சிறுவர் நூலகங்களிலும், பள்ளி நூலகங்களிலும் சிறுவர்கள் அடுக்குகளிலிருந்து தாமாகவே நூல்களை எடுக்கவேண்டின் அடுக்கில் உள்ள கடைசித் தட்டு சிறுவர்களுக்கு எட்டும்படி அமைதல் வேண்டும். இதனால் அடுக்குகளின் மொத்த உயரம் குறைவாக இருக்கும். எனவே அதற்கேற்றபடி தட்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். புத்தகங்களின் உயரம் ஒரே அளவாக இருப்பதில்லை எனினும் சிலவகை நூல்கள் மற்ற வகைகளை விட அளவிற் சிறையனவாக இருப்பதையும் வேறு சிலவகை நூல்கள் பொதுவாகப் பெரிதாகவே இருப்பதையும் காண முடியும். எடுத்துக்காட்டாக கதைப் புத்தகங்கள் அளவில் சிறியன, குறைவான உயரங்கொண்டவை. அதேவேளை கலைக்களஞ்சியங்கள், சில கட்டிடக்கலை தொடர்பான நூல்கள் போன்றவை அளவில் பெரியவை, கூடிய உயரமும் கொண்டவை. இதனால் இரண்டு தட்டுகளுக்கு இடைப்பட்ட ஆகக் குறைந்த தூரம் புத்தகங்களின் வகைகளைப் பொறுத்து வேறுபடக்கூடும். நூல்களை நூலகப் பணியாளர்களே எடுத்துக் கொடுக்கும் முறை உள்ள நூலகங்களில் அல்லது ஒரு நூலகத்தின் சில பகுதிகளில் அடுக்குகளின் உயரம் கூடுதலாக இருக்கவும் அதனால் அடுக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அடுக்கின் அளவுகளில் அடுக்கின் அகலம் ஒரு அடுக்குக் கொள்ளக்கூடிய நூல்களின் அளவைப் பாதிக்கும் எனினும் மொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையான நூல்களை வைப்பதற்குத் தேவையான இடவசதியின் அளவைப் பாதிப்பதில்லை. ஆனால், இடவசதியின் அளவைத் தீர்மானிப்பதில் அடுக்குகளின் ஆழம் முக்கியமானது. அடுக்குகளின் ஆழம் கூடும்போது குறித்த நீள அலகுகள் கொண்ட அடுக்குகளை வைப்பதற்குக் கூடிய இடம் தேவைப்படும். நூல்களின் வகைக்குத் தக்கபடி தேவைப்படும் ஆழம் வேறுபடுகின்றது. கதைப் புத்தகங்கள் போன்ற வகைகளுக்குக் குறைந்த ஆழமுள்ள அடுக்குகளே போதுமானது. சில வகை நூல்கள் பொதுவாகக் கூடிய அகலம் கொண்டவையாக இருப்பதால் அவற்றை வைப்பதற்குக் கூடிய ஆழம் கொண்ட அடுக்குகள் தேவை. நூலக அடுக்குகள் பொதுவாக 200 சமீ, 250 சமீ, 300 சமீ, 400 சமீ போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. சில நூல் வகைகளுக்குத் தேவையான அடுக்கின் ஆழங்களை எடுத்துக்காட்டுக்காகக் கீழேயுள்ள அட்டவணை தருகிறது. நூலக அடுக்குகள் பல வகைப் பொருட்களினால் செய்யப்படுவதுடன், வடிவமைப்புக்களும் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் பின்வருவனவற்றை முக்கியமானவையாகக் கருதலாம்: கபிலப் புள்ளி நோய் கபிலப் புள்ளி நோய்(Brown spot disease) எனப்படுவது நெல்லின் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளிலும் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி கொக்கிலியோபோறசு மியாபீனசு ("Cochlioborus miyabeanus") எனும் பூஞ்சணம். நாற்றுமேடையில் நாற்றுக்கள் கருகுதல். ஆரம்பநிலையில் இலை மற்றும் இலை மடல்களில் நீள்வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும். தனித்தினியாகக் காணப்படும் இப்புள்ளிகள் நோய் முற்றிய நிலையில் ஒன்றிணைந்து அழிந்த இழையங்களாக மாறும். புள்ளிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். வி. எஸ். வெற்றிவேல் வி. எஸ். வெற்றிவேல் என்பவர் தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், பழையனூரில் பிறந்த இவர், தேனி மாவட்டம், வடுகபட்டியில் படித்து, தற்போது தேனியிலுள்ள அரசு வங்கி ஒன்றில் சிறுசேமிப்புத் துறை முகவராகப் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், மேடை நாடகங்களுக்கான கதை, வசனம், பாடல் போன்றவைகளை எழுதி தேனியில் பல மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். சில திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் எழுத்தாக்கத்திற்காக சில விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். ராபர்ட் ஈ. ஓவார்ட் ராபர்ட் ஈ. ஓவார்ட் அல்லது ராபர்ட் ஈ. ஹோவார்ட் ("Robert Ervin Howard", ஜனவரி 22, 1906 – ஜூன் 11, 1936) ஒரு அமெரிக்க எழுத்தாளர். பல்வேறு பாணிகளில் காகிதக்கூழ் புனைவுகளை எழுதியவர். கோனான் தி பார்பாரியன் என்ற கற்பனைப் பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றவர். கனவுருப்புனைவுவின் வாட்களும் மாந்திரீகமும் ("swords and sorcery") உட்பிரிவின் தந்தையெனக் கருதப்படுகிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஹோவார்ட் தனது 23ம் வயதில் முதல் படைப்பினை வெளியிட்டார். அதன் பின்னர் பல இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் அவரது கதைகள் வெளியாகின. முக்கியமாக "வியர்ட் டேல்ஸ்" என்ற காகிதக்கூழ் இதழில் இவரது பல படைப்புகள் வெளியாகின. படைப்புலகில் வெற்றி கண்டு தனது முதல் புதினத்தை பதிப்பிக்கும் வேளையில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தாய் காச நோயினால் பாதிக்கப்பட்டவர். அவரது உடல்நிலை மோசமாகி ஆழ்மயக்க (கோமா) நிலைக்குச் சென்று விட்டார் என்ற செய்தி கேட்ட ஹோவர்ட் தனது முப்பதாவது வயதில் தனது தலையில் துப்பாக்கியில் சுட்டு இறந்து போனார். சில வருடங்களே இலக்கியப் படைப்பில் ஈடுபட்டிருந்தாலும், ஆங்கில இலக்கிய உலகில் ஹோவார்டின் தாக்கம் மிகப்பெரியது. அவர் உருவாக்கிய கோனான் தி பார்பாரியன் பாத்திரம் உலகப்புகழ் பெற்றது. கனவுருப்புனைவுப் பாணியில் ஜே. ஆர். ஆர். டோல்கீனுக்கு இணையான தாக்கம் உடையவராக ஹோவார்ட் கருதப்படுகிறார். டோல்கீன் உயர் கனவுருப்புனைவு பாணியின் தந்தை என்று கருதப்படுவது போல ஹோவார்ட் வாட்களும் மாந்திரீகமும் பாணியின் மூல கர்த்தாவாகக் கருதப்படுகிறார். 20ம் நூற்றாண்டில் பல அறிபுனை, கனவுருப்புனைவு எழுத்தாளர்களின் படைப்புகளில் ஹோவார்டின் தாக்கம் தென்படுகிறது. விருகம்பாக்கம் விருகம்பாக்கம் ("Virugambakkam") இந்திய மாநகரம் சென்னையில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும்.இப்பகுதியில் சிறந்த பள்ளிகள், சந்தைகள், திரைப்படக் கலைஞர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைபிடிப்புத் தளங்கள் உள்ளன. விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி வேகமாக வளர்ந்தது. 1970களில் இது சென்னை மாநகரத்தில் சேர்க்கப்பட்டது. இங்கு கிடைக்கும் தூய நிலத்தடி நீருக்காக பலர் குடிபெயர்ந்தனர். சென்னையில் ஆவடி தவிர்த்து இங்குதான் இயற்கை வாயு கிடைக்கிறது. விருகம்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.கிழக்கில் வடபழநி, வடக்கில் கோயம்பேடு, தென் மேற்கு மற்றும் மேற்கில் ஆழ்வார் திருநகர், தென்கிழக்கில் கே கே நகர் ஆகிய சுற்றுப்பகுதிகள் அமைந்துள்ளன. இதன் மேற்கு எல்லை சென்னை மாநகராட்சியின் எல்லையாகவும் விளங்குகிறது. வே. ராமசாமி வே. ராமசாமி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஏலேய், செவக்காட்டுச் சித்திரங்கள்,கிணத்துக்குள் முளைத்த மருதாணி ,பூமாரியும் தக்காளி செடியின் ஐந்து பழங்களும் போன்ற நூல்களை எழுதி உள்ளார் . ரெட்டைசுழி,வாகை சூட வா மற்றும் நய்யாண்டி படங்களில் பாடல் எழுதியுள்ளார். கலப்பை என்ற பதிப்பகம் நடத்தி வருகிறார். மேற்கு மாம்பலம் மேற்கு மாம்பலம் அல்லது பழைய மாம்பலம் தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். சென்னையின் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான இது சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது. மாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம் என்று மாறியது. இங்குள்ள சில பள்ளிகள்: சென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து வழிபாட்டுத்தலங்கள் இப்பகுதியில் ஒரு பள்ளிவாசலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும் உள்ளன. வள்ளலார் நகர் வள்ளலார் நகர் அல்லது தங்கசாலை (Mint) இந்திய மாநகரம் சென்னையின் வட பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுப் பகுதியாகும். சென்னை தொடருந்து நிலையத்தின் சரக்குப் பிரிவு இங்கிருப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையாகும். மேலும் சென்னையின் தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான அரசு இசுடான்லி பொது மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வள்ளலார் நகர் எனப்பெயர் வரக்காரணம், வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் சிறு பிள்ளையாயிருக்கும் பொழுது, தனது அண்ணனுடன் அப்பகுதியிலொன்றான ஏழுகிணறு என்னுமிடத்திலுள்ள, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் வசித்து வந்தார். தனது ஒன்பதாவது வயதிலேயே அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் துலுக்காணத்து ரேணுகை அம்மனுக்கு பாமாலைகள் சூட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் பாரிமுனையிலுள்ள புகழ்பெற்ற கந்த கோட்டத்திலும் பல பாடல்கள் புனைந்துள்ளார். இவ்வாறு தமிழ்நாட்டின் புகழ் பெற்ற துறவிகளில் ஒருவரான வள்ளலாரின் பிள்ளைப் பிராயம் இங்கிருந்தே துவங்கியதால் இப்பகுதிக்கு வள்ளலார் நகர் என்னும் பெயர் வந்தது. வெள்ளையர் ஆட்சியின் போது, தங்கக்காசுகள் ("Mint") இங்கே உருவாக்கப்பட்டிருந்ததனால் தங்கசாலை என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1980களில் வள்ளலார் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறைத் தலைமையகமும் அரசாங்க அச்சகமும் இயங்கி வருகின்றன. டிரஸ்ட் புரம் டிரஸ்ட்புரம் (Trustpuram) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியாகும். கோடம்பாக்கத்தை சேர்ந்த இப்பகுதி சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் வடபழநி ஆகும். சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7,8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.  பட்டினப்பாக்கம் பட்டினப்பாக்கம் ("Foreshore Estate") தமிழ்நாடு, சென்னை மாநகரில் தெற்கே வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதியாகும். இதன் மேற்கு பகுதியில் மயிலாப்பூரும், தென் பகுதியில் அடையாறும், வடக்கு பகுதியில் சாந்தோமும் அமைந்துள்ளது. சென்னை வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், சீனிவாசபுரம், முள்ளிமாநகர், நம்பிக்கைநகர், ராஜீவ்காந்தி நகர் போன்ற மீனவர் குடியிருப்புகளும் நிறைந்துள்ள பகுதியாகும். விநாயக சதுர்த்தி பண்டிகையின் முடிவில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் இது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலுள்ளது. இந்திய மக்களவைத் தொகுதியில் தென்சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்டதாகும். குறைந்து செல்லும் இறுதிநிலை பயன்பாட்டு விதி ஒரு நுகர்வோர் ஒரு பண்டத்தை அல்லது ஒரு பொருளை தொடர்ந்து நுகர்வதால் அந்த பண்டத்தில் இருந்து கிடைக்கக்கூடிய இறுதிலை பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். எடுத்துக்காட்டாக பசியோடு இருக்கும் ஒருவர் பழம் ஒன்றை சாப்பிடுகிறார் என்றால் அவரது பசியானது சற்றுகுறையும். மேலும் அவர் இரண்டாவது பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறார் என்றால் அதில் இருந்து கிடைக்கும் பயன்பாடானது சற்று குறைந்து இருக்கும். எப்படி என்றால் அந்தே நேரத்தில் அவரது பசியானது சற்று குறைந்திருக்கும், பசி குறையும் பொழுது அந்த பண்டத்தின் தேவையும் குறையும். அதனால் பண்டத்தின் தேவை குறையும்பொழுது இயல்பாக இறுதிநிலையானது தானாகவே குறைந்து விடும், இதுவே குறைந்து செல்லும் இறுதிநிலை பயன்பாட்டு விதி. 1. பொருளியலின் பல விதிகளுக்கு இறுதிநிலைப் பயன்பாட்டு விதி அடிப்படையானதாகும். தேவை விதி, இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் செயல்பாட்டினால் தோன்றியதாகும். ஒரு பண்டத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக நுகரும் பொழுது அதன் ஒவ்வொரு அலகிலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். இது இறுதிநிலைப்பயன் பாட்டுவிதியின் செயல்பாட்டினால் தோன்றுவதாகும். பயன்பாடு குறைவதால் நுகர்வோர் குறைவான விலையையே கொடுக்க விரும்புகிறார். 2. குறைந்து செல் இறுதி நிலைப்பயன்பாட்டு விதி பணத்திற்கும் பொருந்தும். ஏற்கனவே ஏராளமான பணத்தைப் பெற்றுள்ள செல்வந்தர் ஒருவர் மேலும் மேலும் வருமானமாகப் பணத்தை கூட்டிக் கொண்டே சென்றால் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு குறையும் ஆனால் பணத்தின் இறுதிநிலைப்பயன்பாடு மாறாது நிலையாக இருக்கும் என்று மார்ஷல் கருதுகிறார். 3. இவ்விதி பணக்காரர்களுக்கு அதிக வரிவிதிக்க ஒரு ஆயுதமாக நிதி அமைச்சருக்கு உதவுகிறது. 4. இவ்விதி உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் அறியாமலேயே வழிகாட்டியாக செயல்படுகிறது. அவ்வப்போது தாங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் வடிவம் போன்றவற்றில் மாற்றங்களைச் செய்கின்றனர். இதனால் அவை புதுப்பண்டங்கள் போல காட்சி அளித்து நுகர்வோரைக் கவருகின்றன. இல்லையெனில் நுகர்வோர் பழைய பண்டத்தையே தாங்கள் நுகருவதாக கருதுவர். இதனால் இச்சூடிநநிலையில் இறுதிநிலைப்பயன்பாட்டு விதி நுகர்வோரின் மனதில்செயல்படுகிறது. தண்டையார்பேட்டை தண்டையார்பேட்டை (Tondiarpet) இந்திய மாநகரம் சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும் முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வங்கிகளின் கிளைகளும் பள்ளிகளும் உள்ளன. மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதி ஒரு பிரபலமான பதினேழாம் நூற்றாண்டில் இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவரால் பெயர் பெறுகிறது. குணங்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகில் அமைந்துள்ள அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் "தொண்டி ஆவர் நாயகன்" என்ற பொருள் பட, அவரை "தொண்டியார்" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் ராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர். பூங்கா நகர் பூங்கா நகர் (Park Town) இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதியாகும்.ரிப்பன் கட்டிடத்தை அடுத்துள்ள மக்கள் பூங்காவினைக் கொண்டு இப்பகுதி "பூங்கா நகர்" என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் இது வெள்ளையர் நகர் (White Town) என அறியப்பட்டிருந்தது. பூங்கா நகர் சென்னை புறநகர் இருப்புவழி,சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்,சென்னை மெட்ரோ ஆகிய இருப்புவழிகளின் சந்திப்பு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. தவிர நீள்தொலைவு இருப்புவழி முனையமான சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துடன் இவற்றை இணைக்கிறது. பல முதன்மையான அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன.அவற்றில் சில: சுங்கச்சாவடி (சென்னை) சுங்கசாவடி (Tolgate /Tollgate ) இந்திய மாநகர் சென்னையின் ஓர் சுற்றுப் பகுதி. திருவொற்றியூர் அண்மையில் அமைந்துள்ள இப்பகுதி சென்னை நகரின் வடக்கு எல்லையை வரையறுக்கிறது. மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையம் சுங்கச்சாவடியில் அமைந்துள்ளது.இதன் அருகாமையிலேயே தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை இருக்கிறது. இங்கிருந்து நகரின் பல பாகங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணையில் இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள்,அவற்றின் எண்கள்,மற்றும் சேருமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:  இராசராச அதியமான் இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட அரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன. விடுகாதழகிய பெருமாள் விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும் சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது. விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான். இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம் இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம் (டிபென்ஸ் மெடல்லர்ஜிகல் ரிசேர்ச் லாபரேடரி, "Defence Metallurgical Research Laboratory") என்பது இந்திய நடுவண் அரசின் கீழ் அமைந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) ஒரு அங்கமாகும். டி. ஆர். டீ. ஓ இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஹைதராபாத் தலைநகரில் காச்சிகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி வளாகமாகும். இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இந்த அமைப்பு பல விதமான புத்தியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்தி, இந்தியாவின் பாதுகாப்பிற்குத் தேவைப்படும் உலோகங்களையும், மூலப்பொருள்களையும், கருவிகளையும் இந்த அமைப்பு தயாரித்து வழங்குகிறது. இவ்வாய்வுக்கூடம் 1963 ஆம் ஆண்டில் ஹைதராபாதில் இந்த வளாகத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி உருவாக்கிய இந்த அமைப்பில் பொறியியல் துறை சார்ந்த பல அலகுகள் செயல்படுகின்றன. உலோகவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் இந்த அமைப்பின் டிபென்ஸ் மெடல்லர்ஜிகல் ரிசேர்ச் ஆய்வுக்கூடம் செயல்படுகிறது. பல ஆண்டுகளாக மிகவும் நவீனமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல புதுமைகளை சாதித்துள்ளது. இவற்றில் தூள் உலோகவியல், தூள் உலோகவியல் சார்ந்த உலோகங்களையும், கலப்பு உலோகங்களையும் உருவாக்கி அவற்றை தேவைக்கு ஏற்ற வடிவத்தில் புனைதல்; மேற்காப்பு கவசங்கள், எறிகணைக்கருவிகள் ஆகியவற்றைத் தயாரித்தல், விண்வெளியில் செலுத்தும் கலன்களுக்கான இலேசான கலப்புலோகங்களை தயாரித்தல், காந்தப் பொருட்களைத் தயாரித்தல் ஆகிய பல செயல்முறைகள் அடங்கும். இவை அனைத்திற்கும் பயன் படும் வகையில் வேறு பற்பல நிறுவனங்களும் இங்கே அமைக்கப் பெற்றுள்ளன, அவற்றில் சில மிச்ற தாது நிகம் (Mishra Dhatu Nigam Ltd), கன கலப்புலோகப்போருட்கள் தயாரிக்கும் ஆலை (Heavy Alloy Penetrator Plant), கூட்டமைவுகள் தயாரிப்பு மையங்கள் (Composites Production Centre), இரும்பல்லாத உலோகங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Non-Ferrous Technology Development Centre), மேம்பட்ட ஆராய்ச்சி அனைத்துலக நிலையம் (Advanced Research Centre International), ஆகியவையும் செயல் படுகின்றன. அதி நவீனமான தொழில் நுட்பத்துடன் கூடிய வருங்காலப் பொருட்களையும் (futuristic)உருவாக்கி வருகிறது. அவற்றில் சில: வெப்பக்காப்புக் கண்ணாடி வெப்பக்காப்புக் கண்ணாடி (Insulating glass) என்பது, வெளியில் இருந்து கட்டிடங்களுக்கு உள்ளோ அல்லது உள்ளிருந்து வெளியேயோ வெப்பம் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காக உருவாக்கப்படும் கண்ணாடிக் கூட்டுத் தகடு ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகளை அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், அவற்றுக்கிடையே சிறிது இடைவெளி இருக்குமாறும் வைத்துப் பொருத்திச் செய்யப்படுகிறது. பொதுவாக, இவற்றில் மூன்று அல்லது இரண்டு கண்ணாடித் தகடுகளைப் பயன்படுத்துவது வழக்கம். வெப்பக்காப்புக் கண்ணாடிகள் கட்டிடங்களில் சாளரக் கண்ணாடிகளாகவும், திரைச் சுவர்க் கண்ணாடிகளாகவும் பயன்படுகின்றன. வெப்பக்காப்புக் கண்ணாடியை, 1865-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தாமசு இசுடெட்சன் என்பவரால் காப்புரிமை செய்யப்பட்டது. 1930களில் அன்றாட பயன்பாட்டிற்கு வந்தது, லிப்பி ஓவன்சு போர்டு கிளாசு நிறுவனத்தால் 1944களில் விற்பனை செய்யப்பட்டது. 1941-ம் ஆண்டு தெர்மோப்ளேன் என்ற முத்திரையோடு தற்போதுள்ள கண்ணாடிகளைப் போல உருவாக்கப்பட்டது. கண்ணாடித் தகடுகளிடையே இடைவெளியைப் பேணுவதற்காக கண்ணாடிகளுக்கு இடையே அவற்றின் விளிம்பை அண்டி நாற்புறமும் அலுமினியக் நீள்சதுரக் குளாய் வடிவச் சட்டங்களை வைத்துக் கண்ணாடிகளை ஒட்டுப்பொருள் கொண்டு ஒட்டிவிடுவர். இப்பொருத்து காற்று, ஆவி, நீர் என்பன புகாதவாறு இறுக்கமாக இருக்கும். சில தேவைகளுக்காக கண்ணாடிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு வேறு சடத்துவ வளிமங்களால் நிரப்பட்டுவதும் உண்டு. ஒற்றைக் கண்ணாடித் தகடு வெப்பத்தைப் பெருமளவு கடத்தவல்லது. இரட்டைக் கண்ணாடிகளில் இடையே காற்று இருப்பதனாலேயே வெப்பம் கடத்தப்படுவது குறைகிறது. வெப்பம் கடத்துதிறனை மேலும் குறைப்பதற்காக கண்ணாடிகளுக்கு நிறமூட்டுவது, கண்ணாடியின் மேற்பரப்பில் சிறப்புப் பூச்சுகளைப் பூசுவது போன்ற நுட்பங்களும் உள்ளன. குதிரைத் தறியனார் குதிரைத்தறியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குதிரைத்தறி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இவர். குதிரை கட்டுமிடமாக இருந்த ஓர் இடம் நாளடைவில் ஊராக மாறிக் குதிரைத்தறி என்னும் பெயர் கொண்ட ஊராயிற்று. குதிரைத்தறியனாரின் பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 296 எண்ணுள்ள பாடல். கொன்றைப் பூ மலரும் மாரிக் காலத்திலும் அவர் வரவில்லையே என்று தலைமகள் நொந்துகொள்ளும் செய்தியைத் தரும் பாடல் இது. பிரிந்தோர் இரங்கும் காலத்திலும் வினையையே நினைக்கிறாரே என்று அவள் நினைந்து வருந்துகிறாள். போருக்குச் செல்லும் யானையின் முகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஓடை என்னும் பொன்னணி போல, மாலை வளையம் போல மலர்திருக்கும் வேங்கைப் பூ, கற்பாறையின் மேல் தொங்கியதாம். யானை போல் கரும்பாறை. யானையின் பொன்னோடை போல் வேங்கைப் பூவின் சரம். 'வினையே ஆடவர்க்கு உயிரே' என்று தொல்காப்பியம் கூறும் வாழ்க்கை நெறியை இந்தத் தலைவன் கடைப்பிடிப்பதை நினைவுகூரலாம். ஏ என்னும் உரிச்சொல் பெற்று என்னும் பொருளைத் தரும் என்று தொலகாப்பியம் கூறுகிறது. (778) பெற்று என்றால் பெருமை என்று பொருள். இப்பாடல் 'ஏ கல்' என்று மலையிலுள்ள பெரிய பாறாங்கல்லைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் காலத் தமிழுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. குப்பைக் கோழியார் குப்பைக் கோழியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடல் தொடரால் பெயர்பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கத்தொகைப் பாடல்களில் இடம் பொற்றுள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 305. இந்த அடியில் அமைந்துள்ள தொடரைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஊடல் முடிவுக்கு வரத் தலைவன் அல்லது தலைவி விட்டுக்கொடுத்தாக வேண்டும். பிறர் தலையிட்டுத் தீர்த்துவைக்க முடியாது. குப்பையில் கோழிகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டால் அதனை விலக்குவார் யார்? தாமே சண்டையை நிறுத்திக்கொண்டால்தான் உண்டு. அது போல ஊடல் சண்டையில் நாமே விட்டுக்கொடுத்தால்தான் உண்டு. இது தலைவி கண்ட தெளிவு. பக்டீரியா இலைவெளிறல் பக்டீரியா இலைவெளிறல்(Bacteria leafblight) எனப்படுவது நெல்லில் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி சாந்தோமோனசு ஒறைசே ("Xanthomonus orizae") எனும் பக்டீரியா. இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிப் பின் வெளிறியது போர் மாறும். கல்விசார் கட்டிட வசதிகள் கல்விசார் கட்டிட வசதிகள் என்பது, கற்றல், கற்பித்தல் முதலிய கல்வித் தேவைகளுக்கான கட்டிடங்களையும் அவற்றோடிணைந்த பிற வசதிகளையும் குறிக்கும். ஒரு காலத்தில் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மை கொண்ட கட்டிட வசதிகள் தேவை என்னும் கருத்து இருந்ததில்லை. முற்காலத்தில் மரபுவழிக் கல்வி முறையில் மாணவர்களுக்குக் கல்வி புகட்டல் மர நிழலிலும், வீட்டுத் திண்ணைகளிலும், கோயில் மண்டபங்களிலும் இடம் பெற்றுவந்தன. நவீன கல்வி முறைகளைப் பின்பற்றும் தற்காலத்தில் கூட இந்தியா, இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பிள்ளைகளைகளுக்கு மர நிழல்களில் வகுப்புக்கள் நடைபெறுவது உண்டு. எனினும் தற்காலத்தில் கல்விசார் செயல்பாடுகளின் பலவகையான பிரிவுகளுக்கு, ஒவ்வொன்றுக்கும் தனியே சிறப்பாக்கம் பெற்ற கட்டிடவசதிகள் தேவை என்கின்றனர் கல்வியாளர்கள். தற்காலத்தில் மனித வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் கல்வித்தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறான முறைகள் தேவை என்னும் நிலை உள்ளது. எடுத்துக் காட்டாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகளும், கல்லூரி வகுப்பறைகளும் அடிப்படையிலேயே வேறுவேறான தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. கல்விசார் உளவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் இவை தொடர்பான சிந்தனை மாற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன. அது மட்டுமன்றி கல்வி தொடர்பான கருத்துருக்களிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வகுப்பறை என்பது ஆசிரியர்களை மையமாகக் கொண்ட ஒரு இடம் என்னும் நிலை தற்காலத்தில் மாறிவருகிறது. கற்றலில், கணினித் தொழில் நுட்பத்தின் பயன்பாடு, காணொளி வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் என்பன கல்வி முறைகள் பற்றியும், கல்விக்கான இட வசதிகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றியும் புதிய சிந்தனைகள் உருவாகி வருகின்றன. வெவ்வேறு வகையான கல்வித் தேவைகளுக்குச் சிறப்பாக அமைந்த வசதி வகைகள் பல வகைகளாக உள்ளன. எளிமையான சமூகங்களில் இத்தகைய வகைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், முன்னேறிய நாடுகளிலும், சிக்கலான சமூகத் தேவைகள் கொண்ட தற்காலச் சமுதாயங்களிலும் கல்வி வசதி வகைகள் கூடிய எண்ணிக்கையில் உள்ளன. சில அடிப்படையான வசதி வகைகளாக, போன்றவற்றைக் குறிப்பிடலாம். சுழல் கதவு சுழல் கதவு என்பது, கட்டிடங்களில் வாயிற் கதவாகப் பயன்படும் ஒரு வகைக் கதவு ஆகும். இது ஒரு உருளை வடிவான சுற்றடைப்புக்குள், அதன் மையத்தில் அமைந்த தண்டொன்று பற்றிச் சுழலும் படி அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று அல்லது நான்கு படல்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது முதன் முதலில் பல மாடிகள் உயரம் கொண்ட வாயிற் கூடங்களைக் கொண்ட கட்டிடங்களில் புகைபோக்கி விளைவினால் வாயில் கதவுகளினூடாக ஏற்படக்கூடிய வேகமான காற்று உள்ளிழுப்பைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. வழமையான கதவுகளில், ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்து மூடப்படும் போது வெளியிலிருந்து காற்று உள்ளே வருவதோ அல்லது உள்ளிருந்து காற்று வெளியேறுவதோ நடைபெறுகிறது. இதனால் வெப்பப் பரிமாற்றமும் இடம்பெற்றுக் குளிர்பதனம் அல்லது சூடாக்கத் தொகுதிகளின் சுமையைக் கூட்டுகிறது. சுழல் கதவுகளில் இவ்வாறு நடை பெறுவதில்லை ஆதலால், இவ்வகைக் கதவுகள் ஆற்றல் சேமிப்புத் தேவை உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. சுழல் கதவு அமைப்பின் தளம் வட்ட வடிவமானது. இவ்வட்டத்தின் ஒரு பகுதியில் கதவின் சுற்றடைப்புக்குள் செல்வதற்கான வாயிலும், அதற்கு நேரெதிராக அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியும் இருக்கும் இரண்டும் ஒரே அளவு கொண்டதாக இருக்கும். இத் திறந்த பகுதிகள் தவிர இரண்டு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் வட்டத்தின் பகுதிகளில் உலோகச் சட்டகங்களில் பொருத்தப்பட்ட வளைவான கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். கதவுக்கு மேல் வட்ட வடிவான கவிகை (canopy) இருப்பது வழக்கம். மேற்படி வட்ட வடிவான சுற்றடைப்பின் மைய அச்சில் ஒரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். மூன்று அல்லது நான்கு படல்கள் ஒன்றுக்கொன்று சம அளவான கோணத்தில் இருக்கும்படி படல்களின் ஒரு பக்க விளிம்பு இத் தண்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இத் தண்டை அச்சாகக் கொண்டு சுழலக்கூடியதாக அமைக்கப்படும் இப் படல்களின் எதிர் விளிம்புகள் அவை சுழலும்போது வளைவான பக்கத் தடுப்புக்களைத் தடவிச் செல்லுமாறு இருக்கும். இத்தொகுதியில், உட்செல்லும் வழியினதும், வெளியேறும் வழியினதும் அகலங்கள் இரண்டு அடுத்தடுத்த படல்களின் வெளி விளிம்புகளுக்கு இடையிலான வளைவுத் தூரத்திலும் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும். இதன்மூலம் சுழற்சியின் எல்லா நிலைகளிலும் கட்டிடத்தின் உட் பகுதிக்கும் வெளிப் பகுதிக்கும் இடையே நேரடியான தொடர்பு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தலாம். படல்களும் கண்ணாடியிடப்பட்ட உலோகச் சட்டங்களாகவே இருப்பது வழக்கம். இது இரண்டு பக்கங்களிலுமிருந்து அடுத்த பக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். பக்கத் தடுப்புக்களுக்கும், படல்களுக்குமான சட்டங்கள் அலுமினியத்தாலோ அல்லது எஃகினாலோ செய்யப்படலாம். அழகுக்காக இச் சட்டங்கள் துருவேறா எஃகுத் தகடுகளால் மூடப்படுவதும் உண்டு. சுழல் கதவுகள் செயற்பாட்டைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகையில் பயனர்கள் தன்முயற்சியால் படல்களைச் சுழற்றி இயக்குவர். இரண்டாம் வகையில் படல்கள் தன்னியக்கமாகச் சுழலுமாறு அமைக்கப்படும். கைகளால் இயக்கும் வகையில் யாராவது படல்களை வேகமாகச் சுழற்றிவிடாமல் இருப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டு முறைமை அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். தன்னியக்கக் கதவுகளில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேகத்தில் கதவு சுழலும் வகையில் அமைந்திருக்கும். தன்னியக்கச் சுழல் கதவுகள் பயனர்கள் அண்மையில் வரும்போது மட்டும் சுழலக்கூடிய வகையில் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை விடப் பல பாதுகாப்புத் தேவைக்காக அமைக்கப்படும் உணரிகளும் உள்ளன. இது மெதுவாக நடபவர்களை உணர்ந்தறிந்து சுழல் வேகத்தைத் தன்னியக்கமாகக் குறைத்தல், அசையும் கூறுகளுக்கு இடையே உடல் உறுப்புக்கள் அல்லது உடை சிக்கிக்கொள்ள நேரும்போது அதை உணர்ந்து சுழற்சியை நிறுத்துதல் போன்ற தேவைகளுக்கு இத்தகைய உணரிகள் பயன்படுகின்றன. தீப் பிடிப்பது போன்ற அவசர காலங்களில் சுழல் கதவின் படல்களைச் சாதாரண கதவுகளைத் திறப்பதுபோல் முற்றாகத் திறந்துவிடக் கூடிய வசதிகளுடன் கூடிய சுழல் கதவுகளும் உள்ளன. இது கூடிய எண்ணிக்கையானவர்களை வெளியேற்றுவதற்கு வசதி அளிக்கிறது. குங்குமப்பூ குங்குமப்பூ ("Saffron") என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு ("saffron crocus", "குரோக்கசு சட்டைவசு") என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். "குரோக்கசு சட்டைவசு" பூவில் மூன்று சூலகமுடிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சூல்வித்திலையின் நுனியில் உள்ளன. இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலகமுடிகளும் சூல் தண்டுகளும் (சூலக அவற்றின் வழங்கித் தாவரங்களுடன் இணைப்பவை) சமையலில் உணவுக்குச் சுவையூட்டும், வண்ணமூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக (எடையின் அடிப்படையில்) குங்குமப்பூ இருந்து வருகிறது. இச்செடி தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியாவாகும். குங்குமப்பூவின் கசப்புச் சுவை மற்றும் அயடபோர்ம் ("iodoform") அல்லது வைக்கோல் போன்ற மணத்திற்கும் அதில் உள்ள பைக்ரோக்குரோசின் ("picrocrocin"), சாஃபிரானல் ("safranal") ஆகிய வேதிப் பொருள்களே காரணம். குங்குமப்பூவில் கரோட்டின் வகை சாயமான ("carotenoid dye") குரோசின் ("crocin") இருப்பதால் அது உணவு வகைகளுக்கும் துணிகளுக்கும் தங்கம் போன்ற-மஞ்சள் வண்ணத்தைச் சேர்க்கப் பயன்படுகின்றது. குங்குமப்பூ ஆங்கிலத்தில் "saffron" என்றழைக்கப்படுகிறது இச்சொல் இலத்தீன் சொல்லான ' என்பதிலிருந்து தோன்றிய 12 ஆம் நூற்றாண்டின் பழைய பிரான்சியச் சொல்லான "safran" என்பதிலிருந்து தோன்றியதாகும். "Safranum" என்ற இலத்தீன் சொல் زعفران (za'ferân) என்ற பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்தது. முதலில் இச்சொல் அரபியச் சொல்லான زَعْفَرَان ("za'farān") என்பதிலிருந்தே வந்தது என்று சிலர் வாதிடுகிறார்கள்.(இந்த அரபியச் சொல் பெயர் உரிச்சொல்லான أَصْفَر ("aṣfar", "மஞ்சள்") என்பதிலிருந்து உருவானது). இருப்பினும் பாரசீகச் சொல்லான زرپران ("zarparān" ) - "மஞ்சள் இலைகளைக் கொண்டுள்ள" என்பதன் அரபிய மொழியாக்கப்பட்ட வடிவமே زَعْفَرَان ("za'farān") என்ற ஒரு மாறுபட்ட பெயர் வரலாற்றையும் சிலர் முன்வைக்கின்றனர். ' என்ற இலத்தீன் சொல்லே இத்தாலியச் சொல்லான "zafferano" என்ற சொல்லுக்கும் "azafrán" என்ற எசுப்பானிய சொல்லுக்கும் மூலமாகும். வீட்டில் வளர்க்கப்படும் சாஃப்ரன் குரோக்கசு ("குரோக்கசு சட்டைவசு") செடியானது இலையுதிர் காலத்தில் பூக்கின்ற பல்லாண்டுத் தாவரம் ஆகும், இது காட்டில் வளர்வதில்லை. அநேகமாக இது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டதும் கிழக்கு மத்தியத்தரைப் பகுதியில் காணப்படுவதுமான இலையுதிர் காலத்தில் பூக்கும் "குரோக்கசு கார்ட்ரைட்டியனசு" ("Crocus cartwrightianus" ) என்ற வகையின் மலட்டு வடிவ மும்மடிய நிலையாக இருக்கலாம். நீளமான சூலகமுடிகளை உருவாக்க விரும்பிய பயிர்த்தொழிலாளர்கள் "குரோக்கசு கார்ட்ரைட்டியன்சு" (cartwrightianus) செடியை மிகப்பரந்த செயற்கைத் தேர்வு முறைக்கு உட்படுத்தியபோது உருவாகியதே சாஃப்ரன் குரோக்கசு இனமாகும். இவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருப்பதால், இவற்றின் ஊதாநிறப் பூக்கள் வளம் மிக்க விதைகளை உருவாக்குவதில்லை. இவற்றின் இனப்பெருக்கத்திற்கு மனித உதவி தேவைப்படுகிறது. அதற்கு நிலத்துக்குக் கீழே இருக்கும் குமிழ் போன்ற மாச்சத்துச் சேமிக்கும் தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து திரும்பவும் நடவேண்டும். இவ்வாறு நடப்படும் ஒரு தண்டுக்கிழங்கு ஒரு பருவம் வரை வாழும், இவை ஒவ்வொன்றும் இம்முறையில் பிரித்து நடுவதன் மூலம் பத்து வரையிலான புதிய தாவரங்களைக் கொடுக்கும். இந்தத் தண்டுக் கிழங்குகள் சிறிய, பழுப்பு நிறமான 4.5 செ.மீ வரையிலான விட்டத்தைக் கொண்ட சிறு கோள வடிவம் கொண்டவையாகும். இவை இணையான அமைப்பு கொண்ட நார்களாலான அடர்த்தியான காப்புறையைக் கொண்டிருக்கும். கோடைகாலத் தூக்கத்துக்குப் பின்னர் இளவேனில் காலத்தில், இந்தத் தாவரத்தில் 5 முதல் 11 வரையிலான குறுகலாகவும், கிட்டத்தட்ட செங்குத்தாகவும் பச்சை இலைகள் துளிர்க்கின்றன. ஒவ்வொரு இலையும் 40 சென்டிமீட்டர் வரையிலான நீளம் கொண்டதாக இருக்கும். இலையுதிர் காலத்தில் ஊதாநிற மொட்டுகள் தோன்றுகின்றன. இவை அக்டோபர் மாதத்தில், (பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் தமது விதைகளை வெளியிட்டுவிட்ட பின்னரே), மிகச்சிறந்த நிறமுடைய பூக்களை உருவாக்குகின்றன. அவற்றின் நிறம் மென்மையான ஊதாவிலிருந்து அடர்த்தியான, பல வரிகளாக அமைந்த சாம்பல் கலந்த மென்மையான ஊதா நிறம் வரை வேறுபடுகின்றது. பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 செண்டிமீட்டருக்கும் குறைவாக உள்ளன. ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகளை உடைய சூல்தண்டுகள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ குறுக்களவுள்ள, பளிச்சென்று தெரியும், கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் காணப்படுகின்றன. "குரோக்கசு சட்டைவசு" மத்தியத்தரைக் கடல் மாக்குவிசு (வட அமெரிக்க புதர்க்காடுகளை ஒத்தவை) பகுதிகளிலும் அவற்றை ஒத்த காலநிலை நிலவும் பகுதியிலும் அதிகமாக வளர்கின்றன. இப்பகுதிகளில் ஓரளவு வறண்ட நிலங்களில் வெப்பமான, உலர்ந்த கோடைத் தென்றல் காற்று வீசும் காலநிலை நிலவுகிறது, இது போன்ற காலநிலையே குங்குமப்பூ வளர மிக ஏற்ற காலநிலையாகும். இருப்பினும் இவை குளிர்காலங்களிலும் − 10°செ அளவு வரையிலான உறைபனிகளையும் தாங்கி வாழக்கூடியவை. மேலும் குளிர்மிகுந்த பனிக்கட்டி மூடியிருக்கும் சூழலிலும் சிறிது காலம் வாழக் கூடியவையாகும். 1000-1500 மி.மீ அளவிலான சராசரி ஆண்டு மழை பொழிவைக் கொண்டுள்ள காஷ்மீர் போன்ற குளிச்சியான சூழல்களில் குங்கப்பூ பயிரிட நீர்ப்பாசனம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, ஈரானில் இச்செடிகள் வளர்கின்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் கிரேக்க நாடு (ஆண்டு மழைபொழிவு 500மி.மீ.) மற்றும் எசுப்பானியா (ஆண்டு மழைபொழிவு 20 மி.மீ.) ஆகிய நாடுகளிலுள்ள குங்குமப்பூச் செடி வளர்கின்ற இடங்கள் மிகவும் வறண்டவை. ஆனால் இவ்விடங்களில் மழைக் காலம் சாகுபடிக்கு உகந்தவாறு அமைந்திருப்பதால் பயிரிடல் சாத்தியமாகிறது. குங்குமப்பூ சாகுபடிக்கு காலநேரமே மிக முக்கியம் - வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் இதற்கு மிக உகந்தவையாகும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழை பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது. பூக்கின்ற காலத்தில் மழை அல்லது குளிரான காலநிலை இருந்தால், அது நோயைத் தூண்டி விளைச்சலைக் குறைக்கும். தொடர்ச்சியான ஈரம் கொண்ட அல்லது வெப்பமான காலநிலை தாவரங்களுக்குத் தீங்கை விளைவிக்கும். மேலும் முயல்களும் எலிகளும் பறவைகளும் குழிகள் தோண்டி பயிர்களை நாசம் செய்கின்றன. இவை தவிர உருளைப் புழுக்களும், இலைத் துருக்களும், தண்டுக்கிழங்கு அழுகல்களும் பிற அச்சுறுத்தல்களாகும். நிழல் மிகுந்த சூழ்நிலைகளில் இத்தாவரங்கள் சரியாக வளருவதில்லை. நல்ல சூரிய ஒளியில் அவை மிகச்சிறப்பாக வளர்கின்றன. எனவே சூரிய ஒளியை நோக்கி சரிவாக அமைந்த நிலப்பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது (அதாவது, வட அரைக்கோளப் பகுதிகளில் தெற்குச் சாய்வுள்ள நிலங்கள்). வட அரைக்கோளத்தில் பெரும்பாலும் சூன் மாதத்திலேயே விதைப்பு நடக்கிறது. அங்கு தண்டுக்கிழங்குகள் 7 முதல் 15 செ.மீ. வரையிலான ஆழத்தில் நடப்படுகின்றன. கிழங்குகள் எவ்வளவு ஆழமாக நடப்படுகின்றன, தண்டுக்கிழங்குகளுக்கு இடையே எவ்வளவு இடைவெளி விடப்படுகிறது, காலநிலை ஆகிய இம்மூன்றும் விளைச்சலைப் பாதிக்கின்ற முக்கியமான காரணிகளாகும். அதிக ஆழத்தில் நடப்பட்ட மூலத் தண்டுக்கிழங்குகள் உயர் தரமான குங்குமப்பூக்களை விளைவிக்கின்றன, எனினும் இவை குறைவான மொட்டுகளையும் சேய்த் தண்டுக்கிழங்குகளையும் கொடுக்கின்றன. இத்தாலிய பயிர்த்தொழிலாளிகள் 15 செ.மீ. ஆழத்திலும் 2–3 செ.மீ இடைவெளியிலுள்ள வரிசைகளிலும் கிழங்குகளை நடுவதன் மூலம் இழைகளின் விளைச்சலை அதிகரிக்கிறார்கள். 8–10 செ.மீ. ஆழம் பூ மற்றும் தண்டுக்கிழங்கு விளைச்சலுக்கு உகந்ததாகும். கிரேக்க, மொராக்கிய மற்றும் எசுப்பானிய பயிர்த்தொழிலாளிகள் தங்கள் இடங்களுக்கு ஏற்ற வேறுபட்ட ஆழங்கள் மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்துகின்றனர். குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருள்களைக் கொண்ட, எளிதில் தூள்தூளாகக் கூடிய தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர்பாய்ச்சப்பட்ட, நன்கு நீர் வடிக்கப்பட்ட சுண்ணாம்பு நிறைந்த களி மண் வகைகள் (clay-calcareous) உகந்தவை. பாரம்பரியமான மேட்டுப்பாத்தி முறைகளில் நீர் வடிதல் சிறப்பாக உள்ளது. முற்காலத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு 20–30 டன்கள் எருவைச் சேர்ப்பதன் மூலம் மண்ணின் கரிம வளம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு எரு சேர்க்காமலே தண்டுக்கிழங்குகள் நடப்பட்டன. கோடைகாலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள், இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் அவை பூக்கின்றன. காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடையை மிக வேகமாகச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன. தோராயமாக 150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் கிடைக்கின்றன. 12 கி உலர்ந்த குங்குமப்பூவைப் பெற (புதிதாக சாகுபடி செய்த குங்குமப்பூ 72 கி எடை இருக்கும்) 1 கிலோ பூக்கள் தேவைப்படுகின்றன. புதிதாகப் பறிக்கப்பட்ட ஒரு பூவிலிருந்து சராசரியாக 30 மி.கி. (0.46 கி) உலரா குங்குமப்பூ அல்லது 7 மி.கி. (0.11 கி) உலர்ந்த குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவில் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்கள் உள்ளன. இதில் பல ஆவியாகாத செயல்மிகு கூறுகளும் உள்ளன. இவற்றில் சியாக்காந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள் ஆகியவை உள்ளிட்ட பல பொருள்களும், கரோட்டின் வகையினங்களும் உள்ளன. எனினும், குங்குமப்பூவின் தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு நிறத்திற்கு பெரும்பாலும் ஆல்ஃபா (α) குரோசினே காரணம். இந்தக் குரோசின் டிரான்சு-குரோசெட்டின் இரு-(β-டி-ஜெண்டியோபயோசில்) எசுத்தர் (முறையான (ஐ.யு.பி.ஏ.சி) பெயர்: 8,8-டயப்போ-8,8-கரோட்டினாய்க் காடி) ஆகும். இதிலிருந்து குங்குமப்பூவின் நறுமணத்திற்குக் காரணமாக உள்ள இந்தக் குரோசின் கரோட்டின் வகையின குரோசெட்டினின் (carotenoid crocetin) டைச்செண்டியோபியோசு எசுத்தராகும் (digentiobiose ester) என்பது தெரிகிறது. குரோசின்கள் நீர் விரும்பும் கரோட்டின் வகைகளின் ஒரு தொடர். இவை குரோசெட்டினின் மானோகிளைக்கோசில் (monoglycosyl) அல்லது டைகிளைக்கோசில் பாலீன் எசுத்தர்கள் ஆகும். குரோசெட்டின் என்பது ஓர் இணைக்கப்பட்ட பாலீன் டைகார்பாக்ஃசிலிக் அமிலம். இது நீர் வெறுக்கும் தன்மையுள்ளது.; ஆகவே எண்ணெயில் கரையக்கூடியது. குரோசெட்டினை நீரில் கரையக்கூடிய இரண்டு செண்டியோபயோசுகளுடன் (இவை சர்க்கரைகள்) எசுத்தராக்கப்படும் போது உருவாகும் விளைபொருள் நீரில் கரையக்கூடியதாகவே இருக்கும். இதன் விளைபொருளான α-குரோசின் ஒரு கரோட்டின் வகையின நிறப்பொருளாகும். உலர்ந்த குங்குமப்பூவின் நிறையில் 10% க்கும் கூடிய அளவில் இது இருக்கலாம். இந்த எசுத்தராக்கப்பட்ட இரு செண்டியோபயோசுகளின் காரணமாக α-குரோசின், அரிசி உணவுகள் போன்ற நீர் அடிப்படையான (கொழுப்பில்லாத) உணவுகளுக்கு வண்ணமூட்டுவதற்கு உகந்ததாகிறது. குங்குமப்பூவின் சுவைக்கு கசப்பான குளுக்கோசைட்டு பிக்ரோகுரோசினே காரணமாகும். பிக்ரோகுரோசின் (வேதியியல் வாய்பாடு: ; முறையான பெயர்: 4-(β-டி-குளுக்கோபைரனோசிலாக்ஃசி)-2,6,6- டிரைமீத்தைல்சைக்ளோஃகெக்ஃசு-1-ஈன்-1-கார்பொக்சல்டிஃகைட்) என்பது சாஃப்ரானல் (முறையான பெயர்: 2,6,6-டிரைமீத்தைல்சைக்ளோஃகெக்ஃசா-1,3-டையீன்-1- கார்பொக்சல்டிஃகைட்) எனப்படுகின்ற ஓர் ஆல்டிஃகைடு துணைக்கூறு, ஒரு கார்போஐதரேட்டு ஆகியவற்றின் கூட்டு ஆகும். இதற்கு பூச்சிக்கொல்லிப் பண்புகளும் உயிர்க்கொல்லிப் பண்புகளும் உள்ளன. இவை உலர்ந்த குங்குமப்பூவின் நிறையில் 4% வரையிலான அளவு இருக்கலாம். பிக்ரோகுரோசின் என்பது கரோட்டின் வகையான சியாகாந்தினின் (zeaxanthin) குறைக்கப்பட்ட ஒரு வடிவமென்பது குறிப்பிடத்தக்கது (ஆக்சிசனேற்ற பிளவு மூலம் உருவாக்கப்படும்). மேலும் இது டெர்ப்பீன் அல்டிஃகைட்டு சாஃப்ரானலின் கிளைக்கோசைடாகும். சிவப்பு நிறமுள்ள சியாக்காந்தின் மனித விழித்திரையில் இயற்கையாகவே காணப்படுகின்ற ஒரு கரோட்டின் வகையின நிறப்பொருள்களில் ஒன்று. அறுவடைக்குப் பின்னர் குங்குமப்பூவை உலர்த்தும்போது வெப்பத்தினாலும் நொதியச் செயற்பாட்டாலும் பிக்ரோகுரோசின் பிரிந்து டி-குளுக்கோசும், ஒரு கட்டற்ற சாஃப்ரானல் மூலக்கூறும் உருவாகின்றன. எளிதில் ஆவியாகும் எண்ணெயான சாஃப்ரானலே குங்குமப்பூவின் தனித்துவ நறுமணத்திற்கு பெருங்காரணமாக உள்ளது. பிக்ரோகுரோசினை விட சாஃப்ரானல் கசப்பு குறைவானதாகும். இது உலர்ந்த குங்குமப்பூவின் சில மாதிரிகளில், எளிதில் ஆவியாகும் பகுதியின் நிறையில் 70% வரையிலான அளவைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவின் நறுமணத்துக்குக் காரணமாக உள்ள இரண்டாவது கூறு 2-ஐதராக்ஃசி-4,4,6-டிரைமீத்தைல்-2,5-சைக்ளோஃகெக்சாட்டீன்-1-ஒன் ஆகும். "குங்குமப்பூ, உலர்ந்த வைக்கோல் போல மணம் கொண்டது" என விவரிக்கப்படுவதற்கு இதன் நறுமணமே காரணமாகும். சாஃப்ரானலைவிட இது குறைந்த அளவிலேயே காணப்படுகின்ற போதிலும், குங்குமப்பூவின் நறுமணத்துக்கு இதுவே மிகுந்த சக்திவாய்ந்த பங்களிப்பை வழங்குவதாக வேதியியலாளர்கள் கண்டுபிடித்தனர். உலர்ந்த குங்குமப்பூ அடிக்கடி மாறும் பி.எச் அளவுகளால் அதிகம் பாதிக்கப்படும் தன்மை கொண்டது. ஒளியும், ஆக்சிஜனேற்ற காரணிகளும் இருக்கும்போது வேதியியல் வகையில் விரைவாகப் பிரிகை அடைகின்றன. ஆகவே வளிமண்ட ஆக்சிசனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு உலர்ந்த குங்குமப் பூவை காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டியது கட்டாயமாகும். குங்குமப்பூ ஓரளவு வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகும். குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முற்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் குங்குமப்பூவுக்கு முன்னோடி காட்டுக்குரிய "குரோக்கசு கார்ட்ரைட்டியானசு" ஆகும். வழக்கத்துக்கு மாறாக நீளமான சூலகமுடிகளைக் கொண்டவற்றைத் தெரிந்தெடுத்ததன் மூலம் விவசாயிகள் காட்டுக்குரிய மாதிரிகளை இனவிருத்தி செய்தனர். இவ்வாறு வெண்கலக் காலத்தில் கிரீட் தீவில் "குரோக்கசு கார்ட்ரைட்டியானசின்" மலட்டு வகையான "குரோக்கசு சட்டைவசு" வகை உருவானது. குங்குமப்பூ முதன்முதலில் அசிரிய மன்னன் அசுரினிப்பாலின் ஆணைப்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தாவரவியல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சுமார் 90 நோய்களுக்கான சிகிச்சையில் குங்குமப்பூவின் பயன்பாடு 4,000 ஆண்டுகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வடமேற்கு ஈரானில் உள்ள, வரலாற்றுக்கு முந்தைய இடங்களில், 50,000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்களில் குங்குமப்பூவிலான நிறப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர், சுமேரியர்கள் தமது மருந்துகளிலும், மாய பானங்களிலும் காட்டில் வளருகின்ற குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்கள். மினோவ மாளிகை நாகரிகத்தின் கி.மு 2 ஆம் நூற்றாண்டு உச்சகாலத்துக்கு முன்னர் குங்குமப்பூ நீண்ட தூர வர்த்தகப் பொருளாக இருந்தது. கி.மு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக புராதன பாரசீகர்கள், பாரசீக குங்குமப்பூவை ("குரோக்கசு சட்டைவசு" 'Hausknechtii') டெர்பினா, இஸ்ஃபஹான், கோரசான் ஆகிய இடங்களில் பயிரிட்டார்கள். இந்த இடங்களில் குங்குமப்பூ நூல்கள் துணிகளாக நெசவு செய்யப்பட்டன. அவை தெய்வங்களுக்குச் சமயச்சடங்குகளில் படையலாக்கப்பட்டன; மேலும் சாயங்களிலும், நறுமணத் திரவியங்களிலும், மருந்துகளிலும், உடல் கழுவும் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டன. பாரசீகத்தில் குங்குமப்பூ நூல்களை படுக்கைகள் முழுதும் தூவுவதற்கும், துக்க மனநிலைக்கான ஒரு சிகிச்சையாக சூடான தேனீரில் கலந்து குடிக்கவும் பயன்பட்டன. வெறிமயக்கப் பொருளாகவும், பாலுணர்ச்சி ஊக்கியாகவும் குங்குமப்பூவை பாரசீகர்கள் பயன்படுத்துவது குறித்து பாரசீகர் அல்லாதவர்கள் பயமும் கொண்டார்கள். மகா அலெக்சாண்டர் தனது ஆசியப் போர் நடவடிக்கைகளின் போது, போர்க் காயங்களைக் குணப்படுத்தும் மருந்தாக தனது கரைசல்கள், சாதம் மற்றும் குளியல்களில் பாரசீக குங்குமப்பூவைப் பயன்படுத்தினார். அலெக்சாண்டரின் படைவீரர்கள் பாரசீகர்களிடமிருந்து குங்குமப்பூக் குளியல் பழக்கத்தைப் பழகி, அதனைக் கிரேக்க நாட்டுக்குக் கொண்டுவந்தார்கள். தெற்காசியாவிற்கு குங்குமப்பூவின் வருகை பற்றி விளக்கும் முரண்பட்ட கோட்பாடுகள் உள்ளன. 900–2500 ஆண்டுகளுக்கு முன்னதாக இது வந்ததாக காஷ்மீரி மற்றும் சீன ஆவணப் பதிவுகள் கூறுகின்றன. பண்டைய பாரசீகப் பதிவுகளை ஆய்வுசெய்கின்ற வரலாற்றாளர்கள் இது கி.மு 500 -க்கு சிறிது காலம் முன்னர் பாரசீகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வருகை பாரசீகர்கள் காஷ்மீர் மீது படையெடுத்து குடியேறியதனாலோ அல்லது புதிய பூங்காக்களிலும் தோட்டங்களிலும் குங்குமப்பூ பயிரிட அவற்றின் தண்டுகளை மாற்று நடவு செய்ததனாலோ நிகழ்ந்திருக்கலாம். பின்னர் காஷ்மீர் குங்குமப்பூவை ஒரு சாயமாகவும், மனச்சோர்வுக்கான ஒரு சிகிச்சையாகவும் போனீசியர்கள் விற்பனை செய்தார்கள். அங்கிருந்து, உணவுப்பொருள்களிலும் சாயங்களிலும் குங்குமப்பூவின் பயன்பாடு தெற்காசியா முழுவதும் பரவியது. இந்தியாவிலுள்ள புத்தத் துறவிகள் கௌதம புத்தரின் இறப்புக்குப் பின்னர் குங்குமப்பூ வண்ணத்திலான அங்கிகளை ஏற்றுக்கொண்டனர். இருந்தபோதிலும், அந்த அங்கிகள் விலையுயர்ந்த குங்குமப்பூவால் சாயமேற்றப்படாமல் செலவு குறைந்த மஞ்சள் அல்லது பலாப்பழத்தால் சாயமேற்றப்பட்டது.. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குங்குமப்பூவைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது "ஞாழல் பூ" என அழைக்கப்படுகிறது. தலைவலியைக் குணப்படுத்த, வலியில்லாத குழந்தை பிறப்பு, இன்னும் பலவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ பாரசீகத்திலிருந்து மங்கோலிய படையெடுப்பாளர்களுடன் சீனாவுக்கு வந்தது என சில வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். அதே சமயம், கி.மு 200–300 காலத்திய மருத்துவப் பெருநூலான "ஷென்னாங் பென்கவோஜிங்" ("Shennong Bencaojing" - 神農本草經—"ஷென்னாங் கிரேட் ஹெர்பல்", இதை "Pen Ts'ao" அல்லது "Pun Tsao" என்றும் அழைப்பர்) உட்பட பல பழமைமிக்க சீன மருத்துவ உரைகளிலும் குங்குமப்பூ குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் பிரசித்தி பெற்ற "யான்" ("தீ") பேரரசர் (炎帝) ஷென்னாங் எழுதியதாகக் கருதப்படும் மரபு உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கான, 252 தாவர வேதியியல் அடிப்படையான மருத்துவ சிகிச்சைகளை ஆவணப்படுத்துகிறது. இருப்பினும் கி.பி 3 ஆம் நூற்றாண்டளவில், குங்குமப்பூவின் பிறப்பிடம் காஷ்மீர் என சீனர்கள் குறிப்பிட்டார்கள். எடுத்துக்காட்டாக, சீன மருத்துவ நிபுணரான வான் ஜென், "குங்குமப்பூவின் வாழ்விடம் காஷ்மீரில் உள்ளது. அங்குள்ள மக்கள் முக்கியமாக இதை புத்தருக்கு படைப்பதற்காக வளர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார். தனது காலத்தில் எவ்வாறு குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் வான் குறிப்பிட்டுள்ளார்: "[சாஃப்ரன் குரோக்கசு] பூவானது சில நாட்களுக்கு பின்னர் வாடுகிறது. அதன் பின்னர் குங்குமப்பூ பெறப்படுகிறது. இதன் ஒரேசீரான மஞ்சள் வண்ணத்துக்காக மதிப்பு பெற்றுள்ளது. ஒயினுக்கு நறுமணமூட்டவும் இதைப் பயன்படுத்தலாம்." கி.மு 1500-1600க்கு முன்பே, மினோவர்கள் தமது மாளிகைச் சுவரோவியங்களில் குங்குமப்பூவைச் சித்தரித்துள்ளனர். அந்த ஓவியங்கள் குங்குமப்பூ ஒரு குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டதைக் காண்பிக்கின்றன. பின் வந்த கிரேக்க புராணக்கதைகள் சிலிசியா ("Cilicia") வுக்கான கடற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அப்பயணங்களில் கிரேக்க சாகசக்காரர்கள் உலகத்தின் மிகவும் பெருமதிப்பு மிக்கதெனத் தாங்கள் நம்பிய குங்குமப்பூவையே சேகரித்து எடுத்துவர எண்ணுகின்றனர். இன்னொரு புராணக் கதை குரோக்கசு மற்றும் இசுமைலாக்ஃசு ஆகியோரைப் பற்றிக் கூறுகிறது. இக்கதையில் குரோக்கசு மதிமயக்கப்பட்டு முதல் சாஃப்ரன் குரோக்கசு செடியாக மாற்றப்படுகிறான். புராதன காலத்து மத்தியத்தரைக் கடல் பகுதி மக்கள் —எகிப்திலுள்ள நறுமணப்பொருள் தயாரிப்பவர்கள், காசாவிலுள்ள மருத்துவர்கள், ரோட்சு, மற்றும் கிரேக்க "ஃகெட்டரே" விலைமகள்கள் உள்ளடங்கலாக—தமது நறுமணமூட்டிய தண்ணீர்கள், நறுமணப் பொருள்கள், களிம்புகள், கலவைகள், கண்ணிமைச் சாயக்கலவைகள் (மசுக்காராக்கள்), தெய்வீகப் படையல்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்கள். பிந்தைய ஹெல்லனிய எகிப்தில் ("Hellenistic Egypt"), கிளியோபாட்ரா உடலுறவில் அதிக இன்பம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக குளியலுக்கு குங்குமப்பூவைப் பயன்படுத்தினார். எகிப்திய சிகிச்சையாளர்கள் அனைத்து வகையான இரைப்பை குடல்சார்ந்த நோய்களுக்கும் குங்குமப்பூவை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தினர். சிடோன் மற்றும் டயர் போன்ற லேவண்ட் நகரங்களில் ஒரு துணிச் சாயமாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது. ஆலஸ் கார்னேலியஸ் செல்சஸ் என்பவர் காயங்கள், இருமல், வலி மற்றும் சிரங்கு ஆகியவற்றுக்கான மருந்துகளிலும், மித்ரிடேட்டியம் ("mithridatium") மருந்திலும் குங்குமப்பூவைச் சேர்த்துள்ளார்களெனக் குறிப்பிட்டுள்ளார். உரோமர்கள் குங்குமப்பூவின் மீது அதீத காதல் கொண்டவர்கள். ரோமக் குடியேற்றவாசிகள் தெற்கு காலில் ("Gaul") காலனிகளை அமைத்த போது தம்முடன் குங்குமப்பூவையும் எடுத்துச் சென்றனர். ரோமர்களின் ஆட்சி முடியும் வரை அங்கு மிகப்பரந்தளவில் இச்செடி பயிரிடப்பட்டிருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு மூர் இன மக்களுடன் அல்லது கி.பி 14 ஆம் நூற்றாண்டில் அவிக்னான் போப்பாண்டவர் பதவிக் காலத்துடன் குங்குமப்பூவானது பிரான்சுக்குத் திரும்பி வந்தது என்று மாறுபட்ட கோட்பாடுகள் கூறுகின்றன. ஐரோப்பிய குங்குமப்பூப் பயிர் செய்கை ரோமர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது. இஸ்லாமிய நாகரிகத்தின் பரவலால் எசுப்பானியம், பிரான்சு மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் குங்குமப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் கறுப்பு இறப்பு காலத்தின்போது, மருந்துக்கான குங்குமப்பூ தேவை மிக உயர்ந்தது. அதிகளவான குங்குமப்பூவை வெனிசிய மற்றும் ஜெனோவிய கப்பல்கள் வழியாக ரோட்ஸ் போன்ற தென் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதி நிலங்களிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்று குங்குமப்பூவை ஏற்றி வந்த கப்பல்களில் ஒன்றை மேன்மக்கள் திருடியதால் பதினான்கு வாரங்களுக்கு நீடித்த "குங்குமப்பூப் போர்" மூண்டது. இந்தப் போர் மற்றும் அதனால் விளைந்த மூர்க்கத்தனமான குங்குமப்பூக் கடற்கொள்ளை பற்றிய பயம் ஆகியவற்றின் காரணமாக பேசல் நகரில் குங்குமப்பூப் பயிர் செய்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது, இதனால் பேசல் நகரம் செழித்தது. இதன் பின்னர் குங்குமப்பூ பயிர் செய்கையும், வர்த்தகமும் நியூரம்பெர்க் நகருக்குப் பரவியது. இங்கு, குங்குமப்பூ கலப்படம் அதிகமாக இருந்ததால் "சாஃரான்ஸ்சு" ("Safranschou" ) என்னும் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, குங்குமப்பூக் கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர், குங்குமப்பூ பயிரிடல் இங்கிலாந்து முழுவதும - குறிப்பாக நார்ஃபால்க் மற்றும் சஃப்பால்க் பகுதிகளில் - பரவியது. எசெக்சில் உள்ள சாஃப்ரன் வால்டன் சந்தை நகரம் (குங்குப்பூ பயிரிடலால் இப்பெயர் ஏற்பட்டது) குங்குமப்பூ பயிரிட்டு வர்த்தகம் செய்யும் இங்கிலாந்தின் பிரதான மையமாக வளர்ந்தது. இருப்பினும், புதிதாகத் தொடர்பு ஏற்பட்ட கிழக்கு மற்றும் வெளி நாடுகளிலிருந்து சாக்கலேட், காப்பி, தேயிலை மற்றும் வனிலா போன்ற அதிகளவு வேற்றுநாட்டுப் பொருள்களின் வருகையால் ஐரோப்பிய நாடுகளில் குங்குமப்பூவின் பயிர் செய்கையும் பயன்பாடும் குறைந்தது. தெற்கு பிரான்சு, இத்தாலி மற்றும் எசுப்பானியம் ஆகிய நாடுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு பயிர் செய்கை நீடித்திருந்தது. ஸ்வெங்ஃபெல்டர் தேவாலயக் (Schwenkfelder Church) குடிபெயர்வாளர்கள் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றபோது தங்களுடன் குங்குமப்பூ தண்டுக்கிழங்குகளை ஒரு பெட்டியில் எடுத்துச் சென்றனர். இவ்வாறு ஐரோப்பியர்களே குங்குமப்பூவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தார்கள். ஸ்வெங்ஃபெல்டரைச் சேர்ந்தவர்கள் பலரும் முன்னர் ஐரோப்பாவில் பரந்தளவில் குங்குமப்பூவை பயிரிட்டு வந்திருந்தனர். 1730 ஆம் ஆண்டளவில், பென்சில்வேனியா டச்சுக்காரர்கள் குங்குமப்பூவை கிழக்கு பென்சில்வேனியா முழுவதுமாக பயிரிட்டிருந்தார்கள். கரீபியப் பகுதிகளின் எசுப்பானிய காலனியர்கள் இந்த புதிய அமெரிக்க குங்குமப்பூவை பெருமளவில் வாங்கியதாலும் குங்குமப்பூவுக்கான கிராக்கி அதிகரித்ததாலும் பிலடெல்ஃபியா பண்டச் சந்தை விலைப் பட்டியலில் குங்குமப்பூவின் விலை தங்கத்துக்கு நிகராக உயர்ந்தது. 1812 ஆம் ஆண்டு போரின் போது குங்குமப்பூ சரக்குக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டன; இதனால் கரீபியப் பகுதிகளுடனான குங்குமப்பூ வணிகம் வீழ்ச்சியுற்றது. எனினும் பென்சில்வேனிய டச்சுக்காரர்கள் உள்ளூர் வணிகத்துக்காகவும், தங்கள் கேக்குகள், நூடுல்ஸ் மற்றும் கோழி அல்லது நன்னீர் மீன் உணவுகளில் பயன்படுத்துவதற்காகவும் குறைந்த அளவுகளில் குங்குமப்பூவைத் தொடர்ந்து பயிரிட்டு வந்தனர். அமெரிக்காவில் குங்குமப்பூப் பயிர் செய்கை - முக்கியமாக லான்காஸ்டர் கவுண்டி, பென்சில்வேனியாவில் - தற்காலம் வரையிலும் தொடர்ந்தது. குங்குமப்பூவின் நறுமணம், சிறிதளவு புல் அல்லது வைக்கோல் போன்ற குணங்களைச் சிறிதளவு கொண்டு, உலோகம் சார்ந்த தேனை நினைவூட்டுவதாகவும் மற்றும் அதன் சுவை வைக்கோல் போன்றும் இனிப்பாகவும் உள்ளதாகவும் வல்லுநர்கள் விவரிக்கின்றனர். குங்குமப்பூவானது உணவுகளுக்கு பளபளப்பான மஞ்சள்-செம்மஞ்சள் வண்ணத்தையும் வழங்குகிறது. குங்குமப்பூ ஈரானிய (பாரசீக), அரபிய, மத்திய ஆசிய, ஐரோப்பிய, இந்திய, துருக்கிய மற்றும் கார்ன்வால் மக்களின் சமையல்களில் பெருமளவில் பயன்படுகிறது. இனிப்புத் தின்பண்டங்களிலும் குடிவகைகளிலும் குங்குமப்பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குசம்பப்பூ (கார்தாமஸ் டிங்டோரியஸ்-"Carthamus tinctorius" - இது பெரும்பாலும் "போர்த்துகேய குங்குமப்பூ" அல்லது "açafrão" என விற்கப்படும்), அனாட்டோ (annatto) மற்றும் மஞ்சள் (குர்குமா லாங்கா -"Curcuma longa" ) ஆகியவை பொதுவாக குங்குமப்பூவுக்கு மாற்றுப் பொருள்களாக பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக வெகு காலமாகப் பயன்பட்டுள்ளது. நவீன மருத்துவம் கூட குங்குமப்பூவில் புற்றுநோய் எதிர்ப்பு (புற்றுநோயை-அடக்குகின்ற), விகார எதிர்ப்பு (விகாரத்தைத் தடுக்கின்ற), நோய் எதிர்ப்பை மாற்றுகின்ற மற்றும் ஆக்சிசனேற்றத் தடுப்பான்-போன்ற இயல்புகள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது. குங்குமப்பூவானது, கரும்புள்ளிச் சேதம் ("macular degeneration") மற்றும் மாலைக்கண் நோய் ஆகியவற்றைக் குறைப்பது மட்டுமின்றி பிரகாசமான வெளிச்சத்தின் நேரடித் தாக்கத்திலிருந்தும் விழித்திரை அழுத்த நோயிலிருந்தும் கண்களைக் காக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குங்குமப்பூ குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில் துணிச்சாயமாகவும் நறுமணப்பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குங்குமப்பூ பயிரிடலில் பெரும்பகுதி மேற்கில் மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து கிழக்கில் காஷ்மீர் வரையிலான நில மண்டலத்தில் நடக்கிறது. உலகளவில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 300 டன்கள் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். பல்வேறு குங்குமப்பூ வகைகளைப் பயிர் செய்யும் ஈரானே அதிகமாக குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் நாடாகும். இந்நாடு உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது. ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவை. இது ஒரு காற்பந்து மைதானத்தின் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கைக்குச் சமமானது (ஒரு கிலோகிராமுக்கு 110,000-170,000 பூக்கள் அல்லது இரண்டு காற்பந்து மைதானங்கள் தேவை). 150,000 பூக்களைப் பறிப்பதற்கு நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஈரப்பதத்தைப் பிரித்தெடுத்தலின் மூலம் அடுத்து சூலக முடிகள் விரைவாக உலர்த்தப்பட்டு, காற்றுப்புகாத கொள்கலன்களில் அடைக்கப்படுகின்றன. குங்குமப்பூவின் மொத்தவிலையும் சில்லறை விலையும் பவுண்டு ஒன்றுக்கு 500 முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை (1,100–11,000 அமெரிக்க டாலர்கள்/கி.கி) உள்ளன—இது பவுண்டு ஒன்றுக்கு £2,500/€3,500 அல்லது கிலோகிராம் ஒன்றுக்கு £5,500/€7,500 என்பதற்குச் சமம். அண்மையில் கனடாவில் குங்குமப்பூவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 18,000 கனடிய டாலர்களாக உயர்ந்தது. மேற்கத்திய நாடுகளில், சராசரியான சில்லறை விலை பவுண்டு ஒன்றுக்கு $1,000/£500/€700 (கிலோகிராம் ஒன்றுக்கு $2,200/£1,100/€1,550) ஆகும். ஒரு பவுண்டில் 70,000 முதல் 200,000 வரையிலான இழைகள் இருக்கும். பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும். உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. 'எசுப்பானிய சுப்பீரியர்' (Spanish Superior) என்றும், 'கிரீம்' (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட எசுப்பானிய நாட்டு குங்குமப்பூ வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை. இவை அரசாங்கம் விதித்துள்ள தரநிலைகளால் தரப்படுத்தப்படுகின்றன. மிகுந்த தீவிரமான பயிர்வகைகள் ஈரானில் தோன்றியவையாக உள்ள நிலையில், இத்தாலிய குங்குமப்பூ வகைகள் எசுப்பானிய வகைகளை விட ஓரளவு அதிக சக்தியுள்ளவை. இந்தியாவிலிருந்து குங்குமப்பூவைப் பெறுவதில் மேலை நாட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தடைகள் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, உயர் தர குங்குமப்பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தடை செய்துள்ளது. இவை தவிர நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் (எ.கா. இயற்கை உரமிட்டு வளர்க்கப்படுபவை) கிடைக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது. நுகர்வோர்கள் குறிப்பிட்ட சில பயிர்வகைகளை உயர்தரம் எனக் குறிக்கிறார்கள். அதிக சாஃப்ரானல், குரோசின் உள்ளடக்கம், வடிவம், வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் , அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் "அக்குய்லா" குங்குமப்பூ ("zafferano dell'Aquila"), இத்தாலியின் லோக்கீலா பகுதிக்கு அருகில் உள்ள நவெல்லி பள்ளத்தாக்கில் எட்டு ஹெக்டேர் பரப்பளவில் பிரத்யேக முறையில் வளர்க்கப்படுகிறது. இதைப் புனித விசாரணை-காலகட்ட எசுப்பானியாவிலிருந்து வந்த ஒரு டாமினிக்கிய துறவி இத்தாலியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ஆனால், இத்தாலியில் தரத்தையும் அளவையும் பொருத்த வரை மிகப்பெரிய அளவில் குங்குமப்பூ பயிர் செய்யும் இடம் சார்டினியாவில் உள்ள சான் கவினோ மான்ரியாலெ ("San Gavino Monreale") பகுதியில் உள்ளது. இப்பகுதியில் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் (இத்தாலிய உற்பத்தியின் 60%) குங்குமப்பூச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இது மிக உயர்ந்தளவு குரோசின், பிக்ரோகுரோசின், சாஃப்ரானல் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது. மற்றொன்று காஷ்மீரி "மாங்ரா" அல்லது "லசா" குங்குமப்பூ ("குரோக்கசு சட்டைவசு" 'காஷ்மீரியானஸ்') ஆகும். நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகைகளில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரில் அடுத்தடுத்து வந்த வறட்சி காலங்கள், கருகல் நோய்கள், பயிர் செய்கையில் தோல்விகள் ஆகியவையும் ஏற்றுமதிக்கு இந்தியாவின் தடையும் சேர்ந்து இவற்றின் விலை அதிகமாகக் காரணமாகின்றன. வலிமையான சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் குங்குமப்பூ வகை உலகின் அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது. குங்குமப்பூ அதன் குரோசின் (வண்ணம்), பிக்ரோகுரோசின் (சுவை), சாஃப்ரானல் (நறுமணம்) ஆகியவற்றின் உள்ளடக்கங்களை ஆய்வுகூடங்களில் அளப்பதன் மூலம் தரப்படுத்தப்படுகிறது. சூலகமுடி அல்லாத பொருள்களும் ("பூவுக்குரிய கழிவுப் பகுதி"), உயிரியல் சாராத பொருள் ("சாம்பல்") போன்ற மற்ற புறம்பான பொருள்களும் கலந்திருப்பதைக் கண்டறிதலும் இதில் முக்கியமாகக் கருதப்படுகிறது. தேசிய தரநிலைகள் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பான தர நிர்ணயத்துக்கான சர்வதேச நிறுவனம் தரநிலைகளை அமைக்கிறது. ஐ.எஸ்.ஓ 3632 பிரிவு பிரத்தியேகமாக குங்குமப்பூவுக்கானதாகும். இது, சோதனை அடிப்படையிலான நிறச் செறிவு பொருத்து நான்கு வகையான தரங்களை அமைக்கிறது, அவை: IV (மிகமோசமானது), III, II, மற்றும் I (மிகச்சிறந்த தரம்) ஆகியவையாகும். குங்குமப்பூவின் மாதிரிகள், குரோசினுக்கான பிரத்தியேக ஒளிக்கதிர் ஆய்வுக் கருவியின் அளவீட்டின் மூலம் அவற்றிலுள்ள குரோசின் உள்ளடக்கத்தின் அகத்துறிஞ்சல் வலுவை அளவிடுவதன் மூலமாக தரப்படுத்தப்படுகின்றன. அகத்துறிஞ்சல் வலுவானது formula_1 என வரையறுக்கப்படுகிறது (பீயர்-லாம்பர்ட்டு விதி -Beer-Lambert law). இதில் formula_2 என்பது அகத்துறிஞ்சல் வலுவாகும். மேலும் இது கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட அலைநீலம் கொண்ட ஒளியினுடைய, பொருளின் ஒளி ஊடுபுகவிடும் தன்மையின் அளவைக் குறிக்கிறது. (formula_3 என்பது மாதிரியிலிருந்து வெளியேறுகின்ற ஒளியின் செறிவுக்கும் விழும் ஒளியின் செறிவுக்கும் உள்ள விகிதமாகும்). தரப்படுத்துபவர்கள் உலர் குங்குமப்பூ மாதிரிகளின் 440-நா.மீ அலைநீளம் கொண்ட ஒளிக்கான அகத்துறிஞ்சல் வலு மதிப்புகளை அளக்கிறார்கள். அகத்துறிஞ்சல் வலுவின் மதிப்பு அதிகமாக இருப்பது குரோசின் செறிவு அதிகமாக உள்ளதையும் அதிக வண்ணங்கொடுக்கும் ஆற்றலையும் குறிக்கிறது. இந்தத் தரவுகள் உலகெங்கும் உள்ள சான்றளிக்கப்பட்ட சோதனை ஆய்வுகூடங்களில் நிறமாலை ஒளிமானியியல் அறிக்கைகள் வழியாக அளக்கப்படுகின்றன. இந்த வண்ணத் தரங்கள் 80 ஐ விடக் குறைந்த அகத்துறிஞ்சல் வலு மதிப்பு (வகை IV குங்குமப்பூக்களுக்குரியது) முதல் 190 அல்லது அதிலும் அதிகமான அகத்துறிஞ்சல் வலு மதிப்பு (வகை I க்கு உரியது) வரை உள்ளன. உலகின் மிகச்சிறந்த மாதிரிகள் (மிகச்சிறந்த பூக்களிலிருந்து பறிக்கப்பட்ட, சூலகமுடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக சிவப்பு-மெரூன் நுனிகள்) 250 க்கும் மேற்பட்ட அகத்துறிஞ்சல் வலு மதிப்புகளைக் கொண்டுள்ளன. குங்குமப்பூ வகைகளுக்கான சந்தை விலைகள் நேரடியாக இந்த ஐ.எஸ்.ஓ புள்ளிகளைப் பொருத்தே அமைகின்றன. எனினும் பல விவசாயிகளும், வணிகர்களும், நுகர்வோர்களும் இதுபோன்ற ஆய்வுகூட தரவுகளை ஏற்பதில்லை. அவர்கள் வைன் சுவைத் தேர்வாளர்கள் பின்பற்றுவதைப் போன்ற ஒரு தரப்படுத்தும் அவர்களுக்கு நிறைவுதரும் முறையை விரும்புகிறார்கள். இதில் இழைகளின் தொகுதிகளை மாதிரிகளாகக் கொண்டு அவற்றின் சுவை, நறுமணம், இசையுந்தன்மை மற்றும் பிற இயல்புகளைப் பொருத்து தரப்படுத்துகின்றனர். தரக்கட்டுப்பாட்டிலும் தரநிலையாக்கத்திலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், வரலாற்றுக் காலங்களிலிருந்து தொடரும் குங்குமப்பூக் கலப்படம், குறிப்பாக விலைகுறைந்த வகைகளில் தற்காலத்திலும் தொடர்கின்றது. குங்குமப்பூக் கலப்படமானது முதன் முதலில் ஐரோப்பாவின் மத்திய காலப்பகுதியில் ஆவணமாக்கப்பட்டது. அப்போது கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவை விற்பனை செய்தவர்கள் "சாஃரன்சு" சட்டத்தின் படி தூக்கிலிடப்பட்டார்கள். குங்குமப்பூவுடன் பீட்டுக் கிழங்குகள், மாதுளை நார்கள், சிவப்புச் சாயமிடப்பட்ட பட்டு நார்கள் அல்லது சாஃப்ரன் குரோகசின் சுவையற்ற, மணமற்ற மஞ்சள் மகரந்தக் கேசரங்கள் போன்ற புறப் பொருள்களைக் கலப்பது போன்றவை பொதுவான கலப்பட முறைகளாகும். பிற முறைகளில் குங்குமப்பூ இழைகள் தேன் அல்லது காய்கறி எண்ணெய் போன்ற பாகுப் பொருள்களில் ஊற வைக்கப்படுகின்றன. எனினும், தூளாக்கப்பட்ட குங்குமப்பூவில் மஞ்சள், சிவப்பு மிளகு, செறிவைக் குறைக்கின்ற நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படும் பிற தூள்கள் ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. வேறுபட்ட தர குங்குமப்பூ வகைகளைக் கலந்து தவறான பெயர்ச்சீட்டுகள் ஒட்டி விற்பதன் மூலமாகவும் கலப்படம் செய்யப்படுகிறது. இவ்வாறு இந்தியாவில் பெரும்பாலும் உயர் தரமான காஷ்மீரி குங்குமப்பூவானது விலைகுறைவான ஈரானிய இறக்குமதி வகைக் குங்குமப்பூவுடன் கலக்கப்படுகிறது. இந்தக் கலவைகள் பின்னர் சுத்தமான காஷ்மீர் குங்குமப்பூ எனக் கூறி சந்தையிலேற்றப்படுகிறது. இவ்வாறான செய்கையின் அதிகரிப்பால் காஷ்மீர் விவசாயிகளுக்கு பெரும் வருமான இழப்பு உண்டாகிறது. புத்தகப்புழு (ஓவியம்) புத்தகப்புழு ("The Bookworm") என்பது 1850 ஆம் ஆண்டில் செருமன் ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் (Carl Spitzweg) என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, பழமைவாத மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதே நேரம், பரந்த உலகில் சுற்றிலும் நடப்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் கல்விமான் ஒருவரினூடாக அவ்வாறான மனப்போக்கைக் கேலியும் செய்கிறது. ஓவியத்தில், ஒழுங்கற்ற முறையில் உடையணிந்த ஒர் வயதான புத்தக விரும்பி, நூலக ஏணி மேல் ஏறி நிற்கிறார். அவர் தமது கைகளுக்கு அடியிலும் கால்களுக்கு இடையிலும் பல புத்தகங்களைச் செருகி வைத்தபடி, இன்னொரு புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டு நிற்கிறார். தனது சூழலையே மறந்தவராக அவர் தனது ஆராய்ச்சியில் மூழ்கிப்போயிருக்கிறார். சரியாக வைக்கப்படாத கைக்குட்டை ஒன்று சட்டைப் பையிலிருந்து அலங்கோலமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. உள்நோக்கிய மனப்போக்கைக் காட்டும் ஓவியங்களோடு கூடிய உட்கூரையும் பிற அழகூட்டல் கூறுகளும் ஒருகாலத்தில் அந்த நூலகம் இருந்த உயர்வான நிலையைக் காட்டினாலும், படத்தில் தூசி படிந்து காணப்படுகிறது. ஓவியத்தின் வலது கீழ் மூலையில் நிறம் மங்கிப்போன ஒரு புவிக் கோளம் காணப்படுகிறது. கல்விமான் கையில் வைத்திருக்கும் நூல் மேலேயிருந்து வரும் மென்மையான பொன்னிற ஒளிக் கற்றைகளால் ஒளியூட்டப்படுகிறது. இவ்வாறான ஒளி இசுப்பிட்சிவெக்கின் ஓவியங்களில் காணப்படும் அவரது முத்திரை எனலாம். தரை காட்டப்படாததால், கல்விமான் ஏறி நிற்கும் ஏணியின் உயரம் படத்தில் தெரியவில்லை. எனினும் புவிக்கோள மாதிரியை வைத்து தரையின் இடத்தை ஓரளவு ஊகிக்கமுடியும். நூலகத்தின் மொத்த அளவு தெரியாவிட்டாலும், கல்விமான் மீவியற்பியல் பகுதியிலிருந்து புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது மேலே கணப்படும் பெயர்ப் பலகையில் இருந்து தெரிகிறது. இது ஓரளவுக்கு நூலகத்தின் அளவைக் கோடிட்டுக் காட்டுவதுடன், புத்தக விரும்பியின் மறு உலகத் தன்மையையும் உணர்த்துகிறது. சாலிகிராமம், சென்னை சாலிகிராமம் () இந்திய மாநகர் சென்னையின் மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி. வடபழநி மற்றும் விருகம்பாக்கத்தை அடுத்து அமைந்துள்ளது. இப்பகுதி திரைப்படத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. பிரசாத் திரைப்பிடிப்புத் தளம், அருணாச்சலம் திரைப்பிடிப்புத் தளம் மற்றும் இன்னபிற திரைப்பட தயாரிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகளுக்கான நிறுவனங்கள் ஆகியன இங்கு நிறைந்துள்ளன. பல திரைப்படக் கலைஞர்களும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். சூரியா மருத்துவமனை, பரணி மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவமனைகள் இங்குள்ளன. அருணாச்சலம் சாலையில் பல வங்கிகள்,வணிக வளாகங்கள்,கடைகள் நிறைந்துள்ளன.  வேதி வினைகலன் வேதி வினைகலன் ("Chemical Reactor") என்பது வேதி வினைகள் நிகழ்த்தப்படுவதற்காக உருவாக்கப்படும் கலன் ஆகும். வேதிப் பொறியியலின் இன்றியமையாத ஒரு உறுப்பாக வேதி வினைகலன்கள் உள்ளன. இவற்றை வடிவமைப்பதில் பல்வேறு வேதிப்பொறியியல் கூறுகள் பங்குபெறுகின்றன. வேதிவினையின் முடிவாய் விழையும் பொருள் அதிகளவில் உற்பத்தியாகும் வண்ணம் செயல்திறன் கொண்டதாய் இவை வடிவமைக்கப்படும். வேதி வினைகலன்களை இரண்டு வகைப்படுத்தலாம். இவ்விருவகை வினைகலன்களுமே தொகுப்பு மற்றும் தொடர் வினைகளுக்கு பயன்படுத்த இயன்றனவாகும். வினைகலனின் பொதுவாக மூன்று வடிவமைப்பு வகைகள் உள்ளன. அவையாவன: மேலும், வினையூக்கியூடிய வினைகலன்கள் பல சிறப்பு வினைகளுக்குத் தேவைப்படுகின்றன. இவை மேற்கண்ட மூவகை வடிவைப்பில் ஏதாவதொரு வகையினதாயிருக்கும். வினைகலன்களில் நிகழ்ந்தேறும் வினைகளை, மாற்றும் காரணிகளாவன: அடுக்கு விளைவு அடுக்கு விளைவு ("stack effect") என்பது; கட்டிடங்கள், புகைபோக்கிகள், எரிவளிம அடுக்குகள், போன்றவற்றில் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளுக்கும் மிதப்பாற்றலால் உருவாக்கப்படும் காற்றின் ஓட்டத்தைக் குறிக்கும். வெப்பநிலை, நீர்த்தன்மை என்பவற்றால் ஏற்படும் வளியின் அடர்த்தி வேறுபாடுகள் இந்த மிதப்பாற்றலை உருவாக்குகிறது. இது நேர் அல்லது எதிர்மறை மிதப்பாற்றலாக இருக்கக்கூடும். வெப்பநிலை வேறுபாடும், அமைப்பின் உயரமும் கூடக்கூட மிதப்பாற்றலும் அதிகரிக்கும். இதனால் அடுக்கு விளைவும் கூடுதலாக இருக்கும். அடுக்கு விளைவை புகைபோக்கி விளைவு என்றும் குறிப்பிடுவது உண்டு. இது கட்டிடங்களுக்குள் இயற்கைக் காற்றோட்டத்துக்கு உதவுவதுடன், காற்று ஊடுருவலையும் ஏற்படுத்துகின்றது. கட்டிடங்கள் முற்றாகவே இறுக்கமாக மூடப்பட்டிருப்பதில்லை. தரைத் தளத்தில் கதவுகள் இருக்கும். இவற்றினூடாகவும் காற்று உட்செல்ல முடியும். கட்டிடங்களின் கீழ்ப்பகுதிகளில் வளி சூடாகும்போது அடர்த்தி குறைவதால் அது மேல்நோக்கிச் செல்கிறது. இருக்கக்கூடிய படிக்கட்டு வெளிகள் முதலியவற்றினூடாக மேல் தளங்களுக்குச் செல்லும் இச் சூடான வளி சாளரங்கள் மற்றும் இடைவெளிகளூடாக வெளியேறும். கீழ் மட்டத்திலிருந்து வளி மேலெழுந்து செல்வதால் கீழ் மட்டங்களில் அமுக்கம் குறையும். இதனால் குளிர்ந்த வெளிக் காற்று கீழ் மட்டத்திலுள்ள கதவுகள் போன்ற வெளிகளினூடாகக் கட்டிடங்களுக்குள் வரும். குளிரூட்டப்படும் கட்டிடங்களில் இது மறுதலையாக நடைபெறும். எனினும் இதில் வெப்பநிலை வேறுபாடுகள் குறைவாக இருப்பதால் அடுக்கு விளைவு முன்னதைப் போல் வலுவாக இருபதில்லை. உயரமான நவீன கட்டிடங்களில், புறக்கூடு கூடிய அளவு இறுக்கமாக மூடப்பட்டிருப்பதால் அடுக்கு விளைவு குறிப்பிடத்தக்க அமுக்க வேறுபாட்டை ஏற்படுத்தலாம். இதனை ஈடு செய்வதற்கு வடிவமைப்பில் உரிய கவனம் செலுத்தவேண்டி இருக்கும். பொறிமுறைக் காற்றோட்ட வழிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டி இருக்கலாம். படிக்கட்டுகள், குளாய்வழிகள், உயர்த்திவழிகள் போன்றவை அடுக்கு விளைவை ஊக்குவிக்கின்றன. பிரிசுவர்கள், தளங்கள், தீத்தடுப்பு ஒழுங்குகள் போன்றவை இவ்விளைவைக் குறைக்க உதவலாம். தீத்தடுப்பைப் பொறுத்தவரை, அடுக்கு விளைவைக் குறைப்பது முக்கியமானது ஏனெனில் அடுக்கு விளைவினால் தீ கீழ்த் தளங்களிலிருந்து மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. சாளக்கிராமம் சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம்.சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது. சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது, ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன. சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர். கரும்பலகை கரும்பலகை என்பது அழித்து அழித்து எழுதக்கூடிய ஒரு எழுது பரப்பு ஆகும். தொடக்கத்தில் கரும்பலகைகள் "சிலேட்" எனப்படும் இயற்கைக் கற்பலகைகளால் செய்யப்பட்டது. எனினும் இது பிற நாடுகளுக்கும் பரவிப் பரவலான பயன்பாட்டுக்கு வந்தபோது, மரப் பலகைகளில் கறுப்புப் பூச்சுப் பூசிக் கரும் பலகைகளாகப் பயன்படுத்தினர். சுவரின் ஒரு பகுதியில் கறுப்பு மை பூசிக் கரும் பலகையாகப் பயன்படுத்துவதும் உண்டு. கரும்பலகையில் எழுதுவதற்கு கல்சியம் சல்பேட்டு என்னும் வேதியியல் சேர்வையினால் செய்யப்படும் சிறிய உருளை வடிவான குச்சிகள் பயன்படுகின்றன. இவை வெண்ணிறமாக இருப்பதால் வெண்கட்டிகள் என அழைக்கப்படுகின்றன. கரும்பலகைகள் பலவிதமான அமைப்புக்களில் உள்ளன. அத்துடன் அவ்வக்காலத்துத் தேவைகளைப் பொறுத்தும் கரும்பலகைகளின் வடிவமைப்புக்கள் மாறி வந்துள்ளன. நிரந்தரமான, முழுச் சுவர்களால் சூழப்பட்ட வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகள் பொதுவாக ஒரு பக்கச் சுவரில் பொருத்தப்படுவது வழக்கம். முதலில் கரும்பலகைகளை மரத்தினால் செய்து சுவரில் நிரந்தரமாகப் பொருத்திப் பயன்படுத்தினர். இதன் அளவும் வசதிக்கு ஏற்றபடி அமையும். வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலுள்ள பாடசாலைகள் பலவற்றில் வகுப்பறைக் கட்டிடங்கள் அரைச் சுவர்களுடன் அமைவதுண்டு. தேவையேற்படும்போது பல வகுப்பறைகளை ஒன்றாக்கி பரீட்சை மண்டபம் முதலியனவாகப் பயன்படுத்தும் தேவைகளுக்காக வகுப்பறைகளுக்கு இடையில் நிரந்தரமான பிரிசுவர்களும் இருப்பதில்லை. இதனால் கரும்பலகைகளை நிரந்தரமாகச் சுவரில் பொருத்தும் சாத்தியம் கிடையாது. இவ்வாறான வேளைகளில் தனியான தாங்கிகளுடன் கூடியவைய கரும்பலகைகள் பயன்பட்டன. இவ்வாறான கரும்பலகைகள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டன. இவற்றுட் சிலவற்றில் கரும் பலகையும் தாங்கியும் தனித்தனியாக இருக்கும். மூன்று கால்களைக் கொண்ட தாங்கியை நிறுத்தி, அதில் பொருத்தப்பட்டிருக்கும் முளைகளின்மீது கரும்பலகையை வைத்துப் பய்ன்படுத்துவர். பொதுவாக இவ்வாறான வடிவமைப்புக்களில் கரும்பலகையின் உயரத்தை மாற்றும் வசதிக்காக பலகையைத் தாங்கும் முளைகளை ஏற்றியோ இறக்கியோ வைப்பதற்கான வசதிகள் இருப்பதுண்டு. கரும்பலகையின் இரண்டு பக்கங்களிலும் மை பூசப்பட்டிருப்பதால் ஒரு பக்கத்தில் எழுதியதை அழிக்காமல் மறு பக்கம் திருப்பி வைத்துப் பயன்படுத்த முடியும். தனியான தாங்கிகளைக் கொண்ட வேறொரு வகையில் கரும்பலகை தாங்கியில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இரண்டு கால்களையும் மேலே ஒரு நீள்சதுர வடிவான சட்டத்தையும் கொண்டிருக்கும் இவ்வகையில், சட்டத்துக்குள் பொருந்தும் படியான அளவைக் கொண்ட கரும்பலகை அதன் கிடை அச்சுப்பற்றிச் சுழலக் கூடிய வகையில் பொருத்தப்படும். இதன்மூலம் கரும்பலகையைச் சுழற்றுவதன் மூலம் பலகையின் இரண்டு பக்கங்களையும் இலகுவாகப் பயன்படுத்த முடியும். சார் மணி சார் மணி அல்லது ஜார் மணி (tsar-kolokol, "சார் கொலோகோல்") (Tsar Bell) உலகின் மிகப் பெரிய மணி. இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் உத்தியோகபூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733-35 ஆம் ஆண்டளவில் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகெயில் ஆகியவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் நிறை 445,170 பவுண்ட் (201,924 கி.கி) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர் (20.1 அடி). அத்துடன் அதன் விட்டம் 6.6 மீட்டர்கள் ஆகும். இந்த மணியினை 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர். 1737 ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாகவே இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் இம்மணியானது ஒலிப்பதில்லை. ஐரோப்பிய கலைவடிவில் உருவான் இம்மணியின் வெளிப்புறத்தில் இயேசு கிறித்து, மேரி மாதா, திருமுழுக்கு யோவான், புனிதர்கள், அரசவை குருமார்களின் மற்றும் தேவதைகளின் உருவங்களும், அழகிய கொடிகளும் செதுக்கப்பட்டுள்ளது. செனாய் நகர் செனாய் நகர் (Shenoy Nagar) தமிழகத் தலைநகர் சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். அமிஞ்சிக்கரைக்கு வடக்கே அண்ணாநகருக்கும் கீழ்ப்பாக்கத்திற்கும் இடையே இப்பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்துறைகளில் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் பில்ரோத் மருத்துவமனை அமைந்துள்ளது.  சூளைமேடு சூளைமேடு (Choolaimedu): சென்னையில் அமைந்துள்ள ஓர் முதன்மையான குடியிருப்பு மற்றும் வணிக சுற்றுப் பகுதி ஆகும். இதன் எல்லைகளாக கோடம்பாக்கம், வடபழநி, அமைந்தக்கரை, மகாலிங்கபுரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகியவை உள்ளன. ஒரு காலத்தில்,புலியூர் கிராமத்தின் பகுதியாக இருந்த இது இன்று வணிக மற்றும் குடியிருப்பு மையமாகத் திகழ்கிறது. பச்சையப்பர் காலத்தில், இன்றைய சூளைமேட்டில் செங்கல் சூளைகள் பல இருந்தன. அதனால், இது சூளைமேடு என பெயர் பெற்றது.சென்னையின் இரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளான ஆற்காடு சாலையையும், நெல்சன் மாணிக்கம் சாலையையும் சூளைமேடு இணைக்கிறது. நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் சூளைமேட்டிற்கு அருகாமையில் உள்ளது. இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பொறியியல் கல்லூரி மற்றும் பனிமலர் பல்தொழில் நுட்பப் பயிலகம் ஆகியன சூளைமேட்டிற்கு அண்மையில் உள்ள கல்வி நிறுவனங்களாகும். இவை மட்டுமின்றி பல பள்ளிகளும் இங்கு உள்ளன. ஆத்ரேயபுர சாலையில் சூளைமேடு காவல் நிலையம் உள்ளது. அரசு கிளை நூலகமும், அம்மா உணவகமும், சூளைமேடு நெடும்சாலையில் அமைந்துள்ளது.சங்கராபுரம் 3 வது தெருவில், சூளைமேடு தபால் நிலையம் உள்ளது. சூளைமேடு நெடுஞ்சாலையும் நெல்சன் மாணிக்கம் சாலையும் வணிக வளாகங்களைக் கொண்டிருக்கும் முக்கிய சாலைகளாகும்.இரண்டு பெரிய கோவில்கள், மூன்று தேவாலயங்கள் மற்றும் இரண்டு மசூதிகளுடன் அனைத்து சமயத்தினரும் நல்லிணக்கத்துடன் சகோதர, சகொதரிகளாக வாழும் முக்கிய பகுதியாக இது விளங்குகிறது.  சௌகார்பேட்டை சௌகார்பேட்டை (Sowcarpet) இந்திய மாநகரம் சென்னையின் வடபகுதியில் உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். மிகவும் பரபரப்பான வணிக மையமாகத் திகழும் இங்கு பல மொத்த விற்பனை சந்தைகள் அமைந்துள்ளன. சென்னையின் மிகப் பழைமையான பகுதிகளில் ஒன்றான இப்பகுதியில் தொன்மையான கட்டிடங்களையும் குறுகலானத் தெருக்களையும் காணலாம்.இங்கு விற்பனை செய்யப்படாத பொருளே இல்லை என்னுமளவிற்கு வணிகச் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுகிறது. இங்கு கணிசமான வட இந்தியர்கள் வசிப்பதால் "சோட்டா மும்பை" எனவும் அழைக்கப்படுகிறது.1950களில் குசராத், இராசத்தானிலிருந்து குடிபெயர்ந்த மார்வாரிகள் அடகு வியாபாரம்,மொத்த விற்பனை முகமைகளில் ஈடுபடுகின்றனர். பல கடைகள் இந்தி அல்லது குசராத்தி பெயர்ப்பலகைகளைத் தாங்கி நிற்பதைக் காணலாம்.நாராயண முதலித் தெரு,கோவிந்தப்ப நாயக்கன் தெரு மற்றும் ரத்தன் பசார்,காசிச் செட்டி தெரு ஆகியன சில முக்கிய சாலைகளாகும். சென்னை கந்தக்கோட்டம், ஏகாம்பரேசுவரர் ஆலயம், ரேணுகா பரமேசுவரி ஆலயம் இங்குள்ள சிறப்பான கோவில்களாகும். சமண வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.தேவாலயம் ஒன்றும் மசூதி ஒன்றும் உள்ளது. சௌகார்பேட்டையின் கிழக்கில் பாரி முனையும் மேற்கு எல்லையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையமும் உள்ளன.  குழற்றத்தனார் குழற்றத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தத்தனார் என்பது இவர் பெயர். குழலிசையால் இவர் மக்களைக் கவர்ந்ததால் இவரைக் குழல் தத்தனார் என்றனர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை 242 எண் கொண்ட பாடல். திருமணத்துக்குப் பின்னர் கணவனும் மனைவியுமாக வாழும் வாழ்க்கையைக் கற்பு வாழ்க்கை என்கின்றனர். தான் வளர்த்த மகள் கணவனோடு இனிதாக வாழும் வாழ்க்கையைக் கண்டுவந்த செவிலி அம் மகளைப் பெற்ற தாயிடல் அவள் வாழும் பாங்கை எடுத்துக் கூறுகிறாள். அவள் சிற்றூரில் வாழ்கிறாள். அங்குக் காட்டுக்கோழியின் சேவல் தூறலுக்காகப் புதருக்கு அடியில் ஒதுங்கியது. தூறல் நின்ற பின்னர் புதரில் இருந்த நீர்த் திவலைகள் அதன் மேல் விழுந்தன. உடனே அது தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டது. அப்போது அதன்மேல் இருந்த நீர்த்திவலைகள் சிதறின. இப்படிப்பட்ட சிற்றூரில் அவள் வாழ்கிறாள். அவளது கணவன் அந்நாட்டு வேந்தன் அனுப்பிவைத்த வெளியூர்ப் பணிமேற் சென்றுள்ளான். அவள் அவனுடன் அவனது தேரில் அப்போது செல்ல முடியவில்லை. குளம்பனார் குளம்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 288 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. குளம்பா தாயனார் என்னும் புலவர் குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்தப் புலவர் குளம்பனார் குளம்பா என்னும் ஊரிலிருந்து வந்தவர் ஆதலால் குளம்பனார் என்னும் பெயரைப் பெற்றுள்ளார். தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொண்டு இவளை அடைக என்று சொல்ல விரும்பும் தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவன் காதில் விழுமாறு சொல்கிறாள். மயில் அருவித் துளியில் நனையும். அது பரக்கிளையில் ஏறி நின்றுகொண்டு ஆடி வெயிலில் தன்னைப் புலர்த்திக்கொள்ளும். இப்படிப்பட்ட நாட்டுக்குத் தலைவர் அவர். அவர் பிரிவால் என் நெற்றி பசந்துகிடக்கிறது. இதனை உணராத தாய் வேலனை அழைத்துவந்து நிறைநாழி நெல்லை அவன் முன் வைத்து, தன்னை ஒத்த செம்முது பெண்டிர் பலரையும் கூட்டிக், கட்டு என்னும் கழற்சிக்காயை உருட்டிப் பார்த்துக் காரணம் சொல்லும்படி கேட்டால், தினைப்புனம் காக்கும்போது நெடுவேள் முருகன் வருத்தினான் என்று வேலன் சொன்னால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவு என்னாவது? குளம்பா தாயனார் குளம்பா தாயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். சங்கப் பால் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 253 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. முதுபாலை என்பது கணவனுடன் வெளியூர் செல்லும்போது வழியில் பாலைநிலத்தில் மனைவி கணவனை இழந்து புலம்பும் நிலையைக் கூறுவது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எனக்காக யாரும் அவலம் கொள்ளவேண்டா. போரில் வெற்றி கண்ட இளைஞர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலை நேர்ந்துள்ளது. மூங்கில் வெட்டுவோர் அதன் நெல்-கதிர்களை வெட்டி எறிந்து சிதறிக் கிடப்பது போல என் கையில் உள்ள வளையல்களைச் சிதறிக்கிடக்கும்படி உடைத்துப் போட்டுவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு என் சுற்றத்தாருடன் நான் வாழ்வேன் என நினைக்கிறாயா? சொல்லுங்கள். - இவ்வாறு ஒரு பெண் புலம்புவதாக இவரது பாடல் கூறுகிறது. எல்சென்போர்ன் முகடு சண்டை எல்சென்போர்ன் முகடு சண்டை ("Battle of the Elsenborn Ridge") என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இச்சண்டையில் ஆர்டென் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த எல்சென்போர் முகட்டை நாசி ஜெர்மனியின் படைகள் கைப்பற்றாமல் அமெரிக்கப் படைகள் பாதுகாத்தன. ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடித்து ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற டிசம்பர் 1944 அன்று ஜெர்மானியப் படைகள் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கின. பல்ஜ் போர்முனையின் வடகளத்தின் ஒரு பகுதி எல்சென்போர்ன் முகடு. இதனைக் கட்டுப்படுத்துவோர் ஆண்ட்வெர்ப் நகருக்குச் செல்லும் தரைவழிச் சாலைப் பிணையத்தைக் (road network) கட்டுப்படுத்த இயலுமென்பதால், இம்முகட்டைக் கைப்பற்றுவது ஜெர்மானியர்களுக்கு அவசியமானது. டிசம்பர் 16ம் தேதி எல்சென்போர்ன் முகட்டை ஜெர்மானியப் படைகள் தாக்கின. அடுத்த பத்து நாட்கள் கடும் சண்டை நடைபெற்றாலும் ஜெர்மானியர்களால் முகட்டைக் கைப்பற்ற முடியவில்லை. முகட்டைப் பாதுகாத்த அமெரிக்கப்படைகளும், தாக்கிய ஜெர்மானியப் படைகளும் சரிநிகர் பலத்துடன் இருந்ததால், பத்துநாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. இறுதியில் பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் இம்முகட்டைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டனர். இச்சண்டையில் இருதரப்புக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் ஜெர்மானியர்கள் தங்கள் இழப்புகளை ஈடுகட்டும் நிலையில் இல்லை. ஜெர்மனி தனது எஞ்சியிருந்த கடைசி இருப்புப் படைகளை பல்ஜ் சண்டையில் ஈடுபடுத்தியிருந்தது. எனவே இச்சண்டையின் இழப்புகளால் அமெரிக்கர்களை விட ஜெர்மானியர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருந்தது. சமச்சீர்க் கல்வி சமச்சீர் கல்வி முறை ("சமச்சீர் கல்வி"; "சமச்சீர்க் கல்வி") என்பது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப் பட்டிருக்கும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, மாநில அளவில் இருந்து வந்த நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகள் ஒன்றாக்கப்பட்டன. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். இதுவரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை இருந்த இக்கல்விமுறை 2014-2015ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பிற்க்கும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. 2006 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. முத்துக்குமரன் தலைமையிலான குழு சமர்ப்பித்த 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக "பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன." தாய்மொழி கல்வித் திட்டத்தை அரசு கைவிடக் காரணம், அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத சூழல் ஆகும். இந்தச் சூழலுக்கு காலனித்துவம், பொருளாதாரம், கல்வி வணிக மயப்படுத்தப்படல், அரச கொள்கைகள் என பல காரணங்கள் உண்டு. 2010-11 கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்திடவும் திமுக தலைமையில் பதவி வகித்த தமிழக அரசு முடிவு செய்ததது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு சமச்சீர் பாடங்கள் தரமானதாக இல்லை என்றும் மறு ஆய்வுக்குப் பின் அவை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சூன் 10, 2011 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது உயர்நீதி மன்றம்.இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 13 சூன், 2011 அன்று செய்தது. அவ்வழக்கில் கல்வியாளர்கள் எதிர்த்தரப்பாகத் தங்களையும் விசாரிக்கக் கோரி மனு தொடுத்தனர். இவ்வழக்கில் 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடரச் சொல்லியும் இதர வகுப்புகளுக்குத் தேவையா என நிபுணர்குழு அமைக்குமாறும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர்குழு சமச்சீர்ப் பாடநூல்கள் தரமற்றவை என்று அறிக்கையளித்தது. இதனைக் கொண்டு மாநில அரசு மீண்டும் சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைக் கைவிட்டது. ஆனால் ஜூலை 18, 2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துமாறு ஆணையிட்டுத் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது எனவும் அறிவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஜூலை 19, 2011 அன்று மேல்முறையீடு செய்தது. எனினும் இவ்வழக்கில் சமச்சீர்க் கல்வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் எனவும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தரவேண்டும் என்றும் ஆனால், தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சமச்சீர்க் கல்விப் பாடநூல்களைத் தருவதற்கு ஆகஸ்ட் 10 இறுதிநாளாக்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இறுதித் தீர்ப்பு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், "சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நான்குவகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கல்வியாளர்களால் ஆராயப்பட்டு அவற்றை நீக்கும் எண்ணத்துடன் அறிமுகப்படுத்தபட்டது. சமச்சீர்க் கல்வித் திட்ட செயலாக்கம் குறித்து ஆதரவான மற்றும் எதிர்நிலைகள் எடுக்கப்பட்டன. அதிமுக தலைமையிலான அரசு 2011 ல் பதவியேற்றபின் முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. அதோடு நில்லாமல் பழைய புத்தகங்களை குறுகிய காலத்தில் அச்சடிக்க புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஏற்கெனவே ரூxxx கோடி செலவில் சமச்சீர் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அரசு குழு அமைத்து ஒருவாரகாலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் ஜூலை 18 அன்று நடைபெற்ற அமர்வில் தள்ளுபடி செய்தது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே எல்லா வகுப்புக்கும் அமல்படுத்த ஆணையிட்டது. மேலும் மாணவர்களுக்கான புத்தகங்களை சூலை 22க்குள் விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேசமயம் ஆட்சேபனைக்குரிய பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சூலை 19 அன்று மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஷியாம்சுந்தர், மணிமேகலை, சேஷாத்திரி உள்பட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு? தாக்கல் செய்தனர். இதன் தீர்ப்பு சூலை 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு தடை வித்திக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை சூலை26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4உடன் முடிந்த தருவாயில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், "சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் வழக்கில் கொண்டுவர வேண்டும்" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, கன்னடம், தெலுங்கு போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் வந்தது. அம்மொழிகளும் சமச்சீர் கல்வியில் இடம்பெறவேண்டும் என்று தமுமுக போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 'உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும்" என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார். சமச்சீர்க் கல்வி திட்டத்தின் கீழ் முதன் முதலில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சூன் 4, 2012ல் வெளியாயின. அதில் மாநில அளவில் தஞ்சை மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார். இவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று இதுவரை யாரும் பெறாத வகையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். நான்கு பாடங்களில் சதமடித்தார்.. இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த அஞ்சலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகிய மாணவியர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் மாநில தரவரிசையில் இடம்பெறவில்லை. முன்னதாக இத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சியடைந்தனர். போசளப் பேரரசு போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசு ("Hoysala Empire") பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹளபீடினைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர். போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான கர்நாடகவின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். 12 ஆம் நூற்றாண்டில், மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ சாளுக்கிய‌ர்க‌ளுக்குள் ம‌ற்றும் கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும் ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் த‌மிழ்நாட்டிலிருக்கும் விளைச்சல் நிலங்கள் நிறைந்த காவிரியாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். 13ம் நூற்றாண்டிலே, அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு ஆந்திரப்பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலக்கட்டம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் கன்னடத்திலும்,சமசுக்கிரத்திலும் வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் சமண, இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்னுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது. இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். பட்டப்பெயர்கள் "மத்தவிலாசன்" "சித்திரகார புலி" "சங்கீரண கதி" "சத்ருமல்லன்" "அவனிபாஜன்" "பரிவாதனி" என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன். மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம். மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும். மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம். மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான். தமிழ் இணைய நூற்கடைகள் தமிழ்ப் புத்தங்களை - குறிப்பாக இலக்கியம், வரலாறு போன்ற - உலகெங்கும் தபால்வழியில் பெற கீழ்கண்ட இணையவழி புத்தகக்கடைகள் உள்ளன. இவற்றில் கடன் அட்டை, வங்கி அட்டை (ATM), பணவிடை போன்ற பலவழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. உலக மொழிகளின் பட்டியல் பாடி பாடி இந்திய மாநகரம் சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஒன்றாகும். சென்னையின் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையே செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பாடி என வழங்கும் இவ்வூர், அம்பத்தூர் காவல் உதவிக் கண்காணிப்பாளரின் கீழ்வரும் கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். பாடிக்கெனத் தனி அஞ்சலகம் உண்டு. இதன் அஞ்சலக எண்: 600050. அருகில் கொரட்டூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இவ்வூர், அம்பத்தூர் நகராட்சியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது; எனினும், இன்றும் பல அரசுத் துறை செயல்பாடுகள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தே நடைபெறுகிறது. தமிழகத் தேர்தல் தொகுதிப் பிரிவின்படி இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தின் முதல் தொகுதியாக உள்ள அம்பத்தூர் தொகுதியில் அடங்கியுள்ளது. பாடியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. லூகாசு டிவிஎசு, வீல்சு இந்தியா, சுந்தரம் ஃபாசுனர்சு, சுந்தரம் கிளேட்டன், பிரேக்சு இந்தியா போன்ற தொழிலகங்கள் சிலவாகும். இங்கிருந்த மிகப் பிரபலமான பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி மூடப்பட்டது. இப்பகுதி மக்களுக்கும் அண்மையிலுள்ள கொரட்டூர்,மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், திருமங்கலம்,வில்லிவாக்கம், கொளத்தூர், ஐசிஃப் பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பதில் இத்தொழிற்சாலைகள் பெரும் பங்காற்றுகின்றன. இங்குள்ள அருள்மிகு திருவலிதாயம் கோவில் சென்னைக்கருகில் உள்ள குரு பகவான் தலமாகும். இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படவட்டம்மன் கோவில் மற்றுமொரு புகழ்பெற்ற கோவிலாகும். வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் ("Volgograd State Medical University") உருசியாவின் வோல்கோகிராட் மாநிலத்தில் வோல்கா நதிக்கரையின் அருகில் அமைந்துள்ளது. வண்ணாரப்பேட்டை வண்ணாரபேட்டை (Washermanpet) இந்திய நகரம் சென்னையின் வடபகுதியில் உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். துவக்கத்தில் சென்னையின் வண்ணான் துறைகள் பல இங்கு இருந்த காரணத்தால் இப்பெயர் அமைந்தது. தி.நகர்,புரசைவாக்கம் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னர் இதுவே துணி வியாபார மையமாக இருந்தது. இப்பகுதி நகைக் கடைகளுக்கும் தீப்பெட்டி தொழிலுக்கும் புகழ்பெற்றது. வண்ணாரப்பேட்டை ஆங்கில வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடபுறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினத்திற்கு (இப்போதுள்ள ஜார்ஜ் டவுன்) வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பகுதி இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்தது. கொரட்டூர் கொரட்டூர் (Korattur) (13 06' 48.95N, 80 11'32.87E) இந்திய மாநகரம் சென்னையின் வடமேற்கில் அமைந்த புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். அம்பத்தூர் நகராட்சியைச் சேர்ந்த இப்பகுதி சென்னை - மும்பை இருப்புவழியில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் கிராமமொன்றாக இருந்த இப்பகுதி இன்று பரபரப்பான நகர்ப்பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல ஏரிகள் தூர்ந்து அங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் வடிகாலின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்குள்ள குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: லாக்டிக் அமிலம் லாக்டிக் அமிலம் "(Lactic Acid)" என்பது CH3CH(OH)COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய திண்ம நிலையில் இது வெண்மை நிறத்துடனும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது. நீர்ம நிலையில் இது நிறமற்றதாக உள்ளது. இயற்கை முறையிலும் செயற்கையாகவும் லாக்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஐதராக்சில் குழுவும் அதற்குப் பக்கத்தில் கார்பாக்சில் குழுவும் இடம்பெற்றிருப்பதால் லாக்டிக் அமிலத்தை ஆல்பா ஐதராக்சி அமிலம் என வகைப்படுத்துகிறார்கள். இதனுடைய இணை காரமாகக் கருதப்படும் லாக்டேட்டு பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரைசலில் கார்பாக்சில் குழுவிலிருந்து ஒரு புரோட்டானை இது அயனியாக்கி லாக்டேட்டு அயனியை CH3CH(OH)CO−2 உருவாக்குகிறது. அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் லாக்டிக் அமிலத்தின் pKa மதிப்பு ஓர் அலகு குறைவாகும். இதன் பொருள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் லாக்டிக் அமிலம் பத்து முறை அதிகமாக புரோட்டான் நீக்கம் செய்கிறது. α- ஐதராக்சில் மற்றும் கார்பாக்சிலேட்டு குழுக்களுக்கு இடையிலான மூலக்கூற்றிடை ஐதரசன் பிணைப்பு காரணமாக உயர் அமிலத்தன்மை உண்டாகிறது. லாக்டிக் அமிலம் சமச்சீர்மையுடன் காணப்படுகிறது. இரண்டு ஒளியியல் மாற்றியங்க்களைக் கொண்டுள்ளது. L-(+)-லாக்டிக் அமிலம் அல்லது (S)-லாக்டிக் அமிலம் மற்றும் இதனுடைய ஆடி மாற்றியன்களான D-(−)-லாக்டிக் அமிலம் அல்லது (R)-லாக்டிக் அமிலம் என்பன அவ்விரண்டுமாகும். இவ்விரண்டு மாற்றியங்களின் சம அளவு கலவை DL-லாக்டிக் அமிலம், அல்லது சுழிமாய் லாக்டிக் அமிலம் எனப்படுகிறது. லாக்டிக் அமிலம் நீருறிஞ்ச்சும் தன்மை கொண்டது ஆகும். எத்தனாலுடன் அதனுடைய உருகு நிலைக்கும் சற்று அதிகமான வெப்ப நிலையில் 17 அல்லது 18 பாகை செல்சியசு வெப்பனிலையில் கலக்கிறது. D-லாக்டிக் அமிலம் மற்றும் L-லாக்டிக் அமிலம் இரண்டும் உயர் உருகு நிலை கொண்டிருக்கின்றன. விலங்குகளில் லாக்டேட்டு டி ஐதரசனேசு நொதி வழியாக பைருவேட்டிலிருந்து நிலையாக எல்-லாக்டேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரணமான வளர்ச்சிதை மாற்ற செயல்முறையின் போது நிகழும் நொதித்தல் செயல்முறையிலேயே இந்த உற்பத்தி நிகழ்கிறது. லாக்டேட்டு வெளியேற்றப்படும் வீதத்தைக் காட்டிலும் லாக்டேட்டு உற்பத்தி வீதம் அதிகரித்தாலொழிய இதன் அடர்த்தி அதிகரிக்காது. பல்வேறு காரணிகள் இதை முறைப்படுத்துகின்றன. மோனோகார்பாக்சிலேட்டு இடமாற்றிகள், அடர்த்தி மற்றும் லாக்டேட்டு டி ஐதரசனேசு நொதியின் ஓரினவடிவம் மற்றும் திசுக்களின் ஆக்சிசனேற்ற திறன் உள்ளிட்டவை இக்காரணிகளில் அடங்கும். பொதுவாக ஓய்வு நேரத்தில் இரத்தத்தில் லாக்டேட்டு அளவு 1-2 மில்லிமோல்/லிட்டர் ஆகும். இது தீவிர உழைப்பின்போது 20 மில்லிமோல்/லிட்டர் ஆகவும் அதற்கும் மேற்பட்ட கடும் உழைப்பெனில் 25 மில்லிமோல்/லிட்டர் ஆகவும் இருக்கும் தொழிற்சாலைகளில் லாக்டிக் அமில பாக்டிரியாக்கள் லாக்டிக் அமில நொதித்தல் செயல்முறையை மேற்கொள்கின்றன. குளுக்கோசு, பிரக்டோசு அல்லது காலக்டோசு உள்ளிட்ட எளிய கார்போவைதரேட்டுகளை இவை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. இந்த பாக்டிரியாக்கள் வாய் பகுதியிலும் வளர்கின்றன. இவை உற்பத்தி செய்யும் அமிலத்தன்மை பற் சொத்தைக்கு காரணமாகிறது. லாக்டேட்டு ஏற்றப்பட்ட லாக்டேட் ரிங்கர் கரைசல் மற்றும் ஆர்ட்மானின் கரைசல் ஆகியவற்றின் பகுதிப் பொருள்களில் லாக்டேட்டும் ஒரு முக்கிய கூறாகும். நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிற இக்கரைசல்களில் சோடியம் மற்றும் பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் லாக்டேட்டு மற்றும் குளோரைடு போன்ற எதிர்மின் அயனிகளும் காய்ச்சி வடிகட்டிய நீரில் கரைக்கப்பட்டுள்ளன. பொதுவாக மனித இரத்தத்துடன் சம அழுத்தம் கொண்ட இக்கரைசல்கள். விபத்துக் காயம், அறுவை சிகிச்சை, அல்லது தீவிபத்து ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் இரத்த இழப்புக்குப் பிறகான சிகிச்சையில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்கார்பிக் அமிலம் அஸ்கார்பிக் அமிலம் ("Ascorbic acid") ஒரு சர்க்கரை அமிலம் ஆகும். அஸ்கார்பிக் அமிலம் அல்லது "உயிர்ச்சத்து சி" என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் மோனோசாக்கரைட் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களாகும். அஸ்கார்பிக் அமிலத்தை உருவாக்கத் தேவைப்படும் என்சைம்களுள் ஒன்று மனித பரிணாமத்தின்போது ஏற்பட்ட நிலைமாற்றத்தில் இழந்துவிட்ட அஸ்கார்பிக் அமிலத்தை உருவாக்கச் செய்கிறது, இது உணவு மற்றும் விட்டமினிலிருந்து பெறப்பட வேண்டும். மற்ற பெரும்பாலான விலங்குகளால் தங்கள் உடல்களில் இந்த உட்பொருளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு அவற்றிற்கு உணவிலிருந்து தேவைப்படுவதில்லை. உயிரணுக்களில், இது அதனுடைய குறைக்கப்பட்ட வடிவத்தில் குளதாதயோன் உடனான எதிர்வினையால் தக்கவைக்கப்படுகிறது, இதனை புரோட்டீன் டைசல்பைட் ஐஸோமெரேஸ் மற்றும் குளுடாரெடாக்ஸின் ஆகியவற்றால் விரைவுபடுத்தலாம். அஸ்கார்பிக் அமிலம் ஒரு குறைவுபடுத்தும் துணைப்பொருள் என்பதுடன் இதனால் ஹைட்ரஜன் பெராக்சைட் போன்ற எதிர்வினையாற்ற உயிர்வாயு உயிரினங்களை சமன்செய்கிறது. இதனுடைய நேரடியான உயிர் வளியேற்ற விளைவுகளுக்கும் மேலாக அஸ்கார்பிக் அமிலம் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் என்சைமான அஸ்கார்பேட் பெராக்ஸிடேஸிற்கான அடுத்துள்ள அடுக்காகவும் இருக்கிறது, இந்த செயல்பாடு தாவரங்களிலான அழுத்த சமாளிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அஸ்கார்பிக் அமிலம் தாவரங்களின் எல்லா பாகங்களிலும் உயர் அளவுகளில் காணப்படுகிறது என்பதுடன் குளோரோபிளாஸ்டுகளில் 20 மில்லிமோலார் செறிவுகளை எட்டக்கூடியவையுமாகும். மருந்தியல் மரபியல் மருந்தியல் மரபியல் "(pharmacogenetics)" என்பது பலவகைப்பட்ட மருந்துகள் பலதரப்பட்ட மனிதர்களில் வெவ்வேறு வகையான விளைவுகளை உண்டாக்குவதைப் பற்றியும் மனித மரபியலில், மரபணுக்களில் இருக்கும் மரபுக்குறியீட்டு (genetic code) வேறுபாட்டைப் பயன்படுத்திப் புதிய மருந்துகளைக் கண்டறியும் மருந்தியலின் (pharmacology) புதிய துறை ஆகும். மருந்து ஒன்றாக இருப்பினும் அது ஒவ்வொரு மனிதரிலும் உண்டாக்கும் விளைவு வேறுவேறாக இருக்கும். இதற்கான காரணம் : மருந்துகள் நொதிகளின் தொழிற்பாட்டால் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாகின்றன. நொதிகள் எல்லாம் புரதங்கள். இப்புரதங்கள் மரபியல் குறியீட்டைக் கொண்ட டி.என்.ஏ வினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. எல்லா மனிதரின் மரபியல் குறியீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே மருந்துகள் ஒவ்வொரு மனிதரிலும் உண்டாக்கும் விளைவும் வேறுவேறாக இருக்கின்றன. குளுக்கோசு 6- பாஸ்ஃபட்டேசு டிஹைட்ரோஜினேசு (G6PD) எனும் நொதிக்குறைபாடு உள்ள மனிதர்களுக்கு மலேரியாவிற்கு எதிரான மருந்துகள் கொடுத்தால் அவர்களுக்கு மிகக் கடுமையான குருதிச்சிதைவு (hemolysis) ஏற்படும். நோய்நீக்கல் குறியீட்டெண் நோய்நீக்கல் குறியீட்டெண் "(therapeutic index)" என்பது ஒரு மருந்தின் நோய்நீக்கும் அளவையும் அதே மருந்து மனித உடலில் நச்சுத்தன்மை உண்டாக்கும் அளவையும் ஒப்புமைப்படுத்துவதாகும். இது 50 விழுக்காட்டு மக்களில் நச்சுத் தன்மை உண்டாக்கும் மருந்தின் அளவை (TD), 50 விழுக்காட்டு மக்களில் நோய்நீக்கும் குறைந்தபட்ச பயனுறு மருந்தளவால் (ED) வகுக்கக் கிடைப்பதாகும். ஒரு மருந்தின் நோய்நீக்கல் குறியீட்டு எண் குறைவாக இருந்தால் அது கவனமாகத் தரப்பட வேண்டிய மருந்தாகும். இந்த மருந்துகளின் அளவைக் கட்டுப்படுத்தி மனித உடலுள் செலுத்த வேண்டும். பேசின் பாலம் தொடருந்து நிலையம் பேசின் பிரிட்ஜ் (Basin Bridge) அல்லது பேசின் பாலம் இந்திய மாநகரம் சென்னையின் வடபகுதியில் ஓட்டேரி நளாவும் பக்கிங்காம் கால்வாயும் இணையும் இடமாகும்.இங்கு சென்னை படகு குழாம் படகு வலித்தல் போட்டிகளை நடத்துகிறது. பேசின் பாலம் சென்னை புறநகர் இருப்புவழியில் ஓர் தொடர்வண்டி நிலையமாகும். சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த முதல் தொடர்வண்டி சந்திப்பாகும். இந்நிலையத்தில் இருப்புவழி மூன்று வழிகளில் பிரிகிறது:முதலாவது ஆவடி மற்றும் அரக்கோணம் நோக்கியும் இரண்டாவது எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி நோக்கியும் மூன்றாவது சென்னைக் கடற்கரை நோக்கியும் பிரிகின்றன. சென்னையின் வடக்கே உள்ள வெளியூர்களுக்கு பேசின் பிரிட்ஜ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. இந்த தொடருந்து நிலையம் 1979ஆம் ஆண்டு மின்மயமாகபட்டது. சரத்துஸ்தர் சரத்துஸ்தர் (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் கி.மு. 11 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் கி.மு. 1750வில் இருந்து கி.மு. 1500 குள் அல்லது 1400 கி.மு..வில் இருந்து 1200 கி.மு. குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். இவர் இயக்கிய காதா சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும். சரத்துஸ்திர புனித நூல் அவெத்தாபடி இவரது பிறப்பு "ஆர்யாணம் வைச்சா" என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது ஆப்கானித்தானில் பிறந்ததாக நம்புகிறார்கள். சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா. கர்நாடக வங்கி கர்நாடக வங்கி (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಬ್ಯಾಂಕ್ ಲಿಮಿಟೆಡ್) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது மங்களூர் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மஹாபலேஷ்வர் மல்லேசுவரம் மல்லேசுவரம் ("Malleswaram", மல்லேஸ்வரம்) என்னும் பகுதி இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் பெங்களூரு பெரு நகரத்தில் வடமேற்கே அமைந்துள்ள பகுதி. இங்கு "காடு மல்லேசுவரா" கோயில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. முன்னர் இவ்வூர் மல்லபுரா என அழைக்கப்பட்டது. 1898 ஆம் ஆண்டு கொடுசூரி நோய் பரவிய காலத்தில், பெங்களூரு நகரத்தின் நடுவே இருந்து வெளியே போய் குடியிருக்கப் பலர் விரும்பியதால் இப்பகுதி வளர்ச்சி பெற்றது. பசவனகுடியும் மல்லேசுவரமும் பெங்களூரு நகரத்தின் பழைய குடியிருப்புப் பகுதிகள். இதனை மைசூரு நாட்டரசின் திவானாக இருந்த சேசாத்திரி ஐயர் என்பவர் திட்டமிட்டு வளர்த்தெடுத்தது என்பர். வயலின் வாசிப்பில் புகழ்பெற்ற திருமாகூடலு சௌடைய்யா நினைவாக, வயலின் வடிவத்தில் அமைந்த சௌடைய்யா நினைவு அரங்கு ("The Chowdiah Memorial Hall") இங்கு உள்ளது. இது பல கலைநிகழ்வுகளுக்கு ஒரு நடுவகமாக உள்ளது. மலாக்கா மலாக்கா (ஆங்கிலம்: Malacca, மலாய்: Melaka) மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலம். வரலாற்றுச் சிறப்புகள் பெற்றது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயரும் மலாக்கா. யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவித்தது. 20 அக்டோபர் 2010 அன்று, மலாக்கா பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி அமைப்பினால் அமைக்கப்பட்ட 'அபிவிருத்தி செய்யப்பட்ட மாநிலத்தின்' குறியீட்டை மலாக்கா சந்தித்ததாகவும், "மேலகா மஜூ 2010" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் அறிக்கை 2015 இன் அறிக்கையின்படி, 99.5% இளைஞர்களின் கல்வியறிவு விகிதம், நன்கு அறியப்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. 2016 இல், மலாக்கா மலேஷியா வாழ பாதுகாப்பான இடத்தில் ஆக. 2017 ஆம் ஆண்டில் மாநில குற்ற விகிதங்கள் 15.5 சதவீதம் குறைந்து, 3,096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்த மாநிலமாக மலேசியா 1.08 சதவீதமாகவும், ஜூலை 26, 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாநில சமூக பொருளாதார அறிக்கை 2017 அறிக்கை வெளியிட்டது. சமீபத்திய ஆண்டுகளில், மலாக்கா பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. நகரம் ஆசியா மற்றும் உலக முதல் சுற்றுலா செல்லும் இடங்கள் ஒன்றாக ஃபோர்ப்ஸ் மற்றும் லோன்லி பிளானட் உட்பட பல வெளியீடுகள் மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது. மலாக்கா மலேஷியா 10 சிறந்த செல்லுமிடங்கள் ஒன்றாக Tripadvisor பட்டியலிடப்பட்ட. Waze ஆப் விருது 'என்ற இயக்ககத்தில் சிறந்த நகரம்' கொண்டு மலாக்கா அங்கீகரித்தனர். உலகளவில், வரலாற்று நகரம் சிட்னி, லிஸ்பன், மற்றும் பார்சிலோனா போன்ற பிற முக்கிய பெருநகரங்கள் விட உயர்ந்த தர வரிசையில் உள்ளது. நகரம் சிறந்த தெரு கலை நகரங்களின் 15 போன்ற HuffPost மூலம் அங்கீகாரம் பெற்றுள்ளது. கூடுதலாக, நேரம் பத்திரிகை வாழ மற்றும் ஓய்வு பெற சிறந்த இடங்களில் ஒன்றாக மலாக்கா வைக்கப்படும். மலாக்கா மாநிலத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் எனும் மூன்று மாவட்டங்கள். தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும் இருக்கின்றன. வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும் தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா நகரம் அமைந்து உள்ளது. மலேசிய வரலாற்றில் மலாக்கா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம் ஆகும். 1402 ஆம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இவர் பின்னாளில் இசுலாமியச் சமயத்தைத் தழுவி, தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் சிங்கப்பூரின் கடைசி ராஜாவாகவும் இருந்தவர். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக். 1401 ஆம் ஆண்டு, ஜாவாவில் இருந்த, மஜாபாகித் பேரரசு சிங்கப்பூரின் மீது படை எடுத்தது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூரை ஆட்சி செய்த பரமேஸ்வரா அங்கிருந்து தப்பிப் போனார். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா பிரமித்துப் போனார். பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது நல்ல ஒரு சகுனம் என்று கருதினார். எனவே, அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது. பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயரும் மலாக்கா. அந்த மரத்தின் பெயரையே பரமேஸ்வரா அந்த இடத்திற்கும் வைத்து விட்டார். இதுதான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு. இந்தக் காரணங்கள் மட்டும் அல்ல. மற்றொரு காரணமும் உள்ளது. மலாகாட் என்றால் அரபு மொழியில் சந்தை என்று பொருள். மலாக்காவிற்கு வந்த அரபு வணிகர்கள் மலாகாட் எனும் பெயரிட்டு மலாக்காவை அழைத்து இருக்கலாம். அதனால் மலாகாட் எனும் சொல் மலாக்கா என்று மாறியதாகவும் சொல்லப் படுகிறது. பின்னர், அங்கு வாழ்ந்த மீனவர்களையும் உள்ளூர் வாசிகளையும் ஒன்றிணைத்து, ஓர் ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியை பரமேஸ்வரா தோற்றுவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் செய்யப் போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன் படுத்தி வந்தன. அந்தக் கப்பல்கள் மலாக்கா துறைமுகத்தில் அணைந்து போகும் வகையில், சில சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் நிறைய வணிகக் கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் தொடங்கின. இந்தக் கால கட்டத்தில் நிறைய சீனர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கின. மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட பரமேஸ்வரா சீனர்களுக்குச் சிறப்புச் செய்ய மலாக்காவில் ஒரு குன்றுப் பகுதியையே ஒதுக்கிக் கொடுத்தார். அந்தக் குன்றுப் பகுதிதான் இப்போதைய புக்கிட் சீனா "Bukit China". மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தடம் பதித்த சீனப் பாரம்பரிய இலக்கு. 1424 ஆம் ஆண்டு பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா காலமானார். அவர் புக்கிட் லாராங்கான் "Bukit Larangan" எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டார். இந்த இடம் சிங்கப்பூரில் கென்னிங் ஹில் "Fort Canning Hill" என்று இப்போது அழைக்கப் படுகிறது. அவருக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ மகாராஜா எனும் சுல்தான் முகம்மது ஷா அரியணை ஏறினார். கடல் கடந்து வணிகர்கள் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சியாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது. 1446 ஆம் ஆண்டிலும் 1456 ஆம் ஆண்டிலும் சியாம் மலாக்கா அரசின் மீது படை எடுத்தது. அப்போது மலாக்காவின் முதல் அமைச்சராக துன் பேராக் என்பவர் இருந்தார். இவர் அரசியல் ஞானத்தைப் பயன்படுத்தி சியாம் படைகளைப் பின் வாங்கச் செய்தார். அந்தச் சமயத்தில் மலாக்கா அரசு சீன நாட்டுடன் நல்ல அணுக்கமான உறவு முறையை வைத்து இருந்தது. இந்த மலாக்கா-சீன அரசியல் உறவுகள் தான் சியாம் நாட்டின் ஆக்கிரமிப்புத் தன்மைக்குத் தடை போட்டு வந்தன. தென் கிழக்கு ஆசியாவில் மலாக்கா ஒரு முக்கிய இடமாக விளங்கத் தொடங்கியது. சீனக் கடலோடி செங் ஹோ மலாக்காவிற்கு சில முறைகள் வந்து சென்றுள்ளார். 1456ல் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சி செய்யும் போது ஹாங் லீ போ எனும் சீன இளவரசி மலாக்காவிற்கு 500 உதவியாளர்களுடன் வந்து சேர்ந்தார். இவர் சீனாவின் மிங் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர். மலாக்கா வந்த சில நாட்களில் இவர் சுல்தான் மன்சூர் ஷாவை திருமணம் செய்து கொண்டார். சுல்தான் மன்சூர் ஷா மலாக்காவை 1456 லிருந்து 1477 வரை ஆட்சி செய்தவர். அதன் பின்னர் இளவரசி ஹாங் லீ போவுடன் வந்த உதவியாளர்கள் மலாக்கா வாழ் மக்களுடன் நட்புறவுடன் பழகினர். காலப் போக்கில் உள்ளூர் வாசிகளை மணந்து கொண்டனர். தனித் தனி குடும்பங்களாக மலாக்கா புக்கிட் சீனாவில் குடியேறினர். அதன் வழி பெரானாக்கான் Peranakan எனும் ஒரு புதிய சந்ததியினர் மலாக்காவில் தோன்றினர். இப்போது அவர்கள் பாபாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆண்களைப் "பாபா" என்றும் பெண்களை "நோஞ்ஞா" என்றும் அழைக்கின்றனர். இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, [சுமத்திரா]]வின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. அதனால் பன்னெடும் காலமாக மலாக்காவின் எதிரியாக இருந்து வந்த தாய்லாந்து எனும் சியாமினால் மலாக்காவின் மீது படை எடுக்க முடியவில்லை. இந்தச் சமயத்தில் ஜாவாவை ஆண்டு வந்த மாஜபாகிட் பேரரசும் சரிவு காணத் தொடங்கியது. அது மட்டும் அல்ல. தென் கிழக்கு ஆசியாவில் இசுலாமிய சமயம் பரவுவதற்கு மலாக்கா ஒரு கேந்திர களமாகவும் விளங்கியது. 1511 ஏப்ரல் மாதம் அல்பான்சோ டி அல்புகர்க்கு என்பவர் போர்த்துக்கலின் முடியேற்ற நாடான கோவாவில் இருந்து புறப்பட்டு மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார். ஏன் அவர் மலாக்கா பேரரசின் மீது போர் புரிய வந்தார் என்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. லோபெஸ் டி செக்குயிரா எனும் போர்த்துகீசிய மாலுமி 1509ல் மலாக்கா வந்திருந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி அவர் அங்கு வந்தார். போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர். அப்போது மலாக்காவின் சுல்தானாக முகமது ஷா இருந்தார். சுல்தானிடம் லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறை சரியாக அமையவில்லை. அதனால் சுல்தான் முகமது ஷா கோபம் அடைந்தார். இருந்தாலும் அந்தக் கோபத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய சுல்தான் முகமது ஷா சூழ்ச்சி செய்தார். இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார். அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர். ஆகவே பழி வாங்கும் திட்டத்துடன் தான் அல்பான்சோ டி அல்புகர்க்கு, மலாக்காவின் மீது படை எடுத்தார். மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் நடந்தது. போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் முகமது ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்தப் போரில் சுல்தான் முகமது ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் சில அரச நேய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் ஓடி மறைந்து கொண்டார். பகாங் என்பது மலேசியாவில் ஒரு மாநிலம். மலேசியாவின் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் இந்த மாநிலத்தில் தான் உள்ளன. அதன் பின்னர் காட்டிற்குள் இருந்தவாறு போர்த்துகீசியர்களின் மீது சுல்தான் முகமது ஷா அடிக்கடி மறைவுத் தாக்குதல்கள் நடத்தினார். அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசியர்களுக்குப் பெரும் சிரமங்களைக் கொடுத்தன. இதற்கு இடையில் மலாக்காவில் போர்த்துகீசியர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா. அந்தக் கோட்டையின் சிதைவுற்றப் பாகங்களை இன்றும் மலாக்காவில் பார்க்க முடியும். அவற்றை வரலாற்று நினைவுச் சின்னங்களாகக் கருதி, மலாக்கா வாழ் மக்கள் இதுகாறும் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்கள். மலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் அடுத்தக் கட்டமாக சியாம் நாட்டுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப் பட்டனர். அதன் பொருட்டு தீவிரமான முயற்சிகளில் இறங்கினார்கள். ஏனென்றால், சியாம் எந்த நேரத்திலும் மலாக்காவைத் தாக்கும் தயார் நிலையிலேயே இருந்து வந்தது. சீன மிங் அரசர்களின் பாதுகாப்பு மட்டும் மலாக்காவிற்கு இல்லாமல் இருந்திருக்குமானால், சியாம் நாடு நிச்சயமாக மலாக்காவின் மீது எப்போதோ படை எடுத்து இருக்கும். அந்தச் சமயத்தில் சியாம் நாட்டை மன்னர் ராமாதிபோடி ஆண்டு வந்தார். மன்னர் ராமாதிபோடியிடம் சமாதானம் பேசி நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள போர்த்துகீசியர்கள் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் 1511 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டுவார்த்தே பெர்ணாண்டஸ் Duarte Fernandez எனும் தூதரைச் சியாம் நாட்டின் அயோத்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மன்னர் ராமாதிபோடியும் முகம் சுளிக்காமல் அந்தத் தூதரைச் சகல மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அனுப்பினார். இவை அனைத்தும் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய நான்கே மாதங்களில் நடந்து முடிந்தவை. பகாங் காட்டிற்குள் மறைந்து வாழ்ந்து வந்த சுல்தான் முகமது ஷா, பின்னர் பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தார். ஜாவா தீவின் வடக்கே ரியாவ் தீவுக் கூட்டங்கள் உள்ளன. அங்குதான் இந்தப் பிந்தான் தீவும் இருக்கிறது. அங்கு இருந்தவாறு சுல்தான் முகமது ஷா அடிக்கடி மலாக்கா போர்த்துகீசியர்கள் மீது சின்னச் சின்னத் தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசிய ஆளுமையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அந்தத் தாக்குதல்கள் அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. அது மட்டும் அல்ல. மலாக்காவின் போர்த்துகீசிய அரசாங்கத்திற்கு அது ஒரு பெரிய சவாலாகவும் விளங்கி வந்தது. இந்த அச்சுறுத்தலை அடியோடு களைந்து விட வேண்டும் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தனர். ஒரு பெரும் படையைத் திரட்டி பிந்தான் தீவிற்கு அனுப்பினர். இது 1526ல் நடந்தது. அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் என்பவர் தலைமை தாங்கினார். பிந்தான் தீவையே அழித்து விட வேண்டும் என்று போர்த் தளபதிக்கு கட்டளை இடப்பட்டது. அதன் படியே அவரும் செய்து முடித்தார். அந்தப் போருக்குப் பின்னர் சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் சுமத்திராவில் உள்ள கம்பார் எனும் இடத்திற்குத் தப்பித்துச் சென்றனர். அங்கேயே அவர் தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார். 1526ல் சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாற்றுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றிய பின்னர் அதன் வாணிபச் சூழ்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மலாக்காவை நிர்வாகம் செய்வதிலும் அவர்களுக்கு பற்பல சிரமங்கள் ஏற்பட்டன. மலாக்கா ஒரு சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்த போது பல தரப் பட்ட சமயத்தவர்கள் பாரபட்சம் இல்லாமல் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். ஆனால், போர்த்துகீசியர்கள் வந்த பின்னர் மற்ற சமூகத்தினர் மலாக்காவிற்கு வர தயக்கம் காட்டினர். அவர்களின் பாதுகாப்பிற்கு முறையான உத்தரவாதம் இல்லாமல் போனதே அதற்கு முக்கியமான காரணம். ஆசிய வாணிகத்தைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் எனும் போர்த்துகீசியர்களின் தலையாய இலட்சியம் மலாக்காவில் நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாக ஆசிய வாணிக வலைப் பின்னலையே அவர்கள் நலிவுறச் செய்து விட்டனர். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று மேலை நாட்டு வணிகர்கள் ஒதுங்கிப் போகும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது. அதனால் பெருவாரியான வணிகர்கள் மலாக்காவிற்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். மாறாக வேறு வாணிக மையங்களுக்குச் செல்லத் தொடங்கினர். அதனால் மலாக்காவின் வாணிகக் கேந்திரம் பாதிப்பு அடைந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் பிரான்சிஸ் சேவியர் எனும் புனிதப் பாதிரியார் மலாக்காவிற்கு வருகை தந்தார். இவர் உலகில் மிகவும் புகழ் பெற்ற கிறித்துவ சமயத் திருத்தொண்டர். 1545லிருந்து 1549ஆம் ஆண்டுகளில் பல மாதங்கள் அவர் மலாக்காவில் தங்கிச் சமயத் தொண்டுகள் செய்தார். கிறிஸ்துவ சமயப் போதனைகளைச் செய்தார். கிறிஸ்துவத் திருச்சபைகளைக் கட்டுவதற்கு பல அரிதான முயற்சிகளை மேற்கொண்டார். கிறிஸ்துவ சமயம் மலாக்கா மக்களைச் சென்று அடைவதற்குப் பல வகைகளில் திருப்பணிகள் செய்து உள்ளார். பிரான்சிஸ் சேவியர் அவர்களின் சிலை மலாக்கா குன்றில் இன்றும் இருக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிலையின் ஒரு பக்கக் கரம் உடை பட்டுப் போனது. மலாக்கா வாழ் கிறிஸ்துவ மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உடனே மலாக்கா அரசாங்கம் பொருள் உதவி செய்து அந்தச் சிலையைப் புனரமைப்பு செய்து கொடுத்தது. 1641 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார். 1798 ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. இருப்பினும் மலாக்காவை ஒரு பெரிய வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. ஏனென்றால் அவர்களுடைய பிரதான வாணிப இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தது. ஆகவே அவர்களுடைய சிந்தனை, சித்தாந்தம், செல்வாக்கு அனைத்தும் பத்தேவியாவைச் சுற்றிச் சுற்றியே வலம் வந்தன. மலாக்காவை இரண்டாம் பட்சமாகவே கருதினர். டச்சுக்காரர்கள் மலாக்காவில் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் "(Stadthuys)" எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள் தான். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 லிருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது. அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946ல் நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் "(Straits Settlements)" உருவானது. இந்த அமைப்பில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயன் யூனியன் எனும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா சேர்க்கப் பட்டது. மலாக்கா மாநிலம் ஒரு சட்ட மன்றத்தினால் நிர்வாகம் செய்யப் படுகின்றது. மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மாநிலத் தேர்தல்கள் மலேசிய நாட்டின் பொதுத் தேர்தலின் போது நடைபெறும். இதுவரை 13 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மலாக்கா மாநிலச் சட்ட மன்றத்தில் 28 பேர் உறுப்பினர்களாகச் செயல் படுகின்றனர். இவர்களில் 23 உறுப்பினர்கள் ஆளும் பாரிசான் நேசனல் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஐவரும் கெஅடிலான் எனும் கட்சியைச் சேர்ந்தவர்கள். மலாக்கா மாநிலத்தின் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மாநில அமைச்சராக மகாதேவன் சன்னாசி இருக்கின்றார். இவர் காடேக் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்தவர். மாநிலத்தின் தலைமைப் பதவியில் கவர்னர் எனும் யாங் டி பெர்த்துவா நெகிரி இருக்கின்றார். மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்த்துவா நெகிரியை மலேசிய நாட்டின் பேரரசர் அவர்கள் நியமனம் செய்கின்றார். மாநில அரசாங்கத்தின் தலைமைப் பீடமாக இருப்பது முதல் அமைச்சர் துறை. இந்தத் துறை மாநில நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கின்றது. 2010ல் மலாக்கா மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவர் இட்ரிஸ் ஹாருண். மலாக்கா மாநிலத்தின் நிர்வாகம் சிறப்பாகச் செயல் பட, அந்த மாநிலம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் மக்களின் பிரச்சினையை மாவட்ட அதிகாரிகளும் துணை மாவட்ட அதிகாரிகளும் கவனித்துக் கொள்கின்றனர். மலாக்கா மாநிலத்தில் சுற்றுலாத் துறையும் உற்பத்தித் துறையும் மிக மிக முக்கியமான துறைகளாக விளங்குகின்றன. மாநிலத்திற்கு அதிகமாக வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகவும் இருக்கின்றன. "Visiting Malacca Means Visiting Malaysia" என்பது மலாக்கா மாநிலத்தின் சுலோகம் ஆகும். தமிழில் "மலாக்காவைப் பார்த்தால் மலேசியாவைப் பார்க்கலாம்" என்று பொருள். மலாக்கா மாநிலம் மலேசியாவிலேயே மிகுந்த கலாசாரப் பாரம்பரியங்களையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட மாநிலம் ஆகும். சீனா, ஆத்திரேலியா, போர்த்துகல், நெதர்லாந்து, இங்கிலாந்து, கொரியா, சப்பான் போன்ற நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுப் பயணிகள் வருகின்றனர். மலாக்கா கைவினைப் பொருட்களை அதிகமாக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பல சமூகத்தவரின் உணவு வகைகள் தாராளமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. மலேசியாவிலேயே உணவுப் பொருட்கள் மிக மலிவாகக் கிடைக்கின்ற இடம் மலாக்கா என்று சுற்றுப் பயணிகள் சொல்கின்றனர். சுற்றுப் பயணிகள் அதிகமானோர் வருவதால் மலாக்கா மாநிலத்திற்கு அதிகமாக வருமானமும் கிடைக்கின்றது. சுற்றுலாத் துறையைத் தவிர உற்பத்தித் துறையும் மலாக்கா மாநிலத்திற்கு அதிகமான வருவாயைத் தேடித் தருகிறது. அமெரிக்கா, செருமனி, சப்பான், தைவான், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தொழில் துறை நிறுவனங்கள் ஏராளமான தொழில்சாலைகளைத் திறந்து இருக்கின்றன. பெரும்பாலானவை பயனீட்டாளர் பொருள்கள், தொழில் நுட்பத் தளவாடப் பொருள்கள், வாகன உபரிப் பாகங்கள், மின்னியல் சாதனங்கள், கணினி உபரிப் பாகங்கள் போன்றவற்றைத் தயாரித்து வெளிநாடுகளில் உள்ள தங்களின் பிரதான நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. ஏறக்குறைய 500 முதல் 800 வரையிலான தொழிற்சாலைகள் ஆயர் குரோ, பத்து பிரண்டாம் தொழில் பேட்டைகளில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளன. பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியும் வருகின்றன. மலாக்கா மாநிலம் ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கே மட்டும் 25 க்கும் மேற்பட்ட தொழில் பேட்டைகள் உள்ளன. 2007 ஆம் ஆண்டு மலாக்காவின் மக்கள் தொகை 770,000. தனியார் மருத்துவக் கல்விக்கு மலாக்கா முதலிடம் வகிக்கிறது. மலாக்கா மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் புக்கிட் பாரு புற நகர்ப் பகுதியில் மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்தக் கல்லூரியில் இது வரை 1500 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர். புக்கிட் பெருவாங் புற நகர்ப் பகுதியில் பல்லூடகப் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. மலேசியாவில் இருக்கும் ஒரே பல்லூடகப் பல்கலைக்கழகம் இது தான். இந்தப் பலகலைக்கழகத்தில் கணினியியல் படிப்பதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருகின்றனர். மலாக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மலேசியாவிலேயே இளம் குற்றவாளிகளுக்கான கல்விக் கூடம் மலாக்காவில் தான் உள்ளது. மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தெலுக் மாஸ் எனும் இடத்தில் அந்தக் கல்விக் கூடம் செயல் பட்டு வருகின்றது. அதன் பெயர் ஹென்றி கர்னி கல்விக் கூடம் ஆகும். இப்பள்ளியில் பல தரப் பட்ட தொழில் திறன்கள் சொல்லித் தரப் படுகின்றன. மலாக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு மலாக்கா அனைத்துலப் பள்ளியும் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி 1993 ஆம் ஆண்டு திறக்கப் பட்டது. மலாக்கா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள்: இந்த இரு அரசாங்க மருத்துவமனைகளும் மலாக்கா மணிப்பால் மருத்துவ கல்லூரிக்கு பயிற்சி தரும் மருத்துவமனைகளாக விளங்குகின்றன. மலாக்கா மாநிலம் 3 மாவட்டங்களாகவும் 4 உள்ளாட்சி மன்றங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. மலாக்கா அறுநூறு ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாநகரம். அதனால் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி மலாக்கா நகரம் உலகப் பாரம்பரிய பட்டியலில் இணைக்கப் பட்டது. இந்த நகருடன் பினாங்குத் தீவின் தலைப் பட்டினமான ஜோர்ஜ் டவுனும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றது. 1400-ஆம் ஆண்டிலிருந்து, தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள். மலாக்காவின் மலாய்க்காரர்கள் பாரம்பரியக் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். மலாக்காவில் இரண்டு அரும் பொருள் காட்சியகங்கள் உள்ளன. ஒன்று பாபா நோஞ்ஞா பாரம்பரிய அரும் பொருள் காட்சியகம். மற்றொன்று மலாக்கா சுல்தான்களின் அரண்மனை பாரம்பரிய அரும் பொருள் காட்சியகம். பல வகையான உணவுப் பொருட்களுக்கு மலாக்கா புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் உணவுப் பொருட்கள் மலிவாகவும் கிடைக்கிறது. சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரில் இருந்தும் சுற்றுப் பயணிகள் வந்து மலாக்கா உணவுகளைச் சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். மலாய்க்காரர்களின் "ஈக்கான் அசாம் பெடாஸ்" எனும் உரைப்புளிப்பு மீன், "சம்பால் பெலாச்சான்", "செஞ்சாலுக்" போன்றவை அனைத்து சமூகத்தவரையும் கவர்ந்தவை. இந்த உணவு வகைகள் மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்றவை. "சாத்தே செலுப்" எனும் சாத்தே உணவுக்கு மலாக்கா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு தென்னை ஓலைக் குச்சியில் நான்கைந்து கோழி இறைச்சித் துண்டுகள் செருகப் படும். அவை அனலில் வாட்டி எடுக்கப் பட்டு கச்சான் குழம்பில் தொய்த்து பரிமாறப்படும். அதுதான் சாத்தே. பெரும்பாலும் சாத்தே செய்வதற்கு கோழி இறைச்சியும் மாட்டு இறைச்சியும் பயன் படுத்தப் படும். மலாக்காவில் சீன, இந்திய, போர்த்துகீசிய, டச்சு, ஆங்கில உணவுகளும் கிடைக்கும். "நோஞ்ஞா லாக்சா" எனும் கறிக் குழம்பும் சுவையான உணவுப் பொருளாகும். 16-ஆம் 17-ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆட்சியாளர்களாக மலாக்காவில் தடம் பதித்தவர்கள் போர்த்துக்கிசியர்கள். இவர்களின் சந்ததியினர் மலாக்காவில் பண்டார் ஹிலிர் எனும் இடத்தில் இன்றும் வாழ்கிறர்கள். அவர்கள் வாழும் இடத்தைப் போர்த்துகீசிய குடியேற்றப் பகுதி என்று அழைக்கிறார்கள். அத்துடன் சில ஆயிரம் சீக்கியர்களும் மலாக்காவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்தில் மலேசிய வாழ் சீக்கியர்கள் ஜாலான் தெமாங்கோங்கில் உள்ள சீக்கிய ஆலயத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். மலாக்காவிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் குருபோங் எனும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. இங்கே தான் புகழ்பெற்ற அருள்மிகு சன்னாசிமலை ஆலயம் உள்ளது. இது 150 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஓர் ஆலயம் . இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சன்னாசிமலைத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகின்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு காவடிகள் எடுத்து சிறப்புகள் செய்கின்றனர். இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான சீனர்களும் காவடிகள் எடுக்கிறார்கள். சன்னாசிமலைத் திருவிழாவில் பல்லாயிரம் பக்தர்கள் திரண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். தற்பொழுது மலாக்காவில் வசித்துவரும் மலாக்கா செட்டி சமூகத்தவர் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களாவர். மலாக்காவில் குடியேறிய செட்டி சமூகத்தவர் தங்கள் வழிபாட்டிற்காக அப்பகுதியில் சில இந்துக் கோயில்களை அமைத்து வழிபட்டனர். மிகப் பழமை வாய்ந்த சில கோயில்கள். தற்போது, இந்த ஆலயங்களை மலாக்காவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்போது மலாக்காவில் இரயில் சேவை இல்லை. இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் மலாக்கா மாநகரம் வரையில் இரயில் போக்குவரத்து இருந்தது. ஜப்பானியர் ஆட்சி காலத்தின் போது இரயில் தண்டவாளங்கள் பிரிக்கப் பட்டு பர்மா எனும் மியன்மாருக்கு அனுப்பப் பட்டன அங்கே வரலாற்றுப் புகழ் சயாம் மரண இரயில்பாதைக்குப் பயன் படுத்தப் பட்டன. மலாக்கா மாநகரில் “மலாக்கா சென்றல்” எனும் பிரதான பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் ஜாலான் துன் அப்துல் ரசாக் எனும் சாலைக்கும் ஜாலான் பாங்லிமா அவாங் சாலைக்கும் இடையில் கம்பீரமாக வீற்றுள்ளது. இது 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் டிரான்ஸ் நேசினல், சிட்டி ஹாலிடேய்ஸ், மாயாங் சாரி போன்ற பேருந்து நிறுவனங்கள் 24 மணி நேர சேவைகளை வழங்கி வருகின்றன. மலாக்காவில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, அலோர் ஸ்டார், கோத்தா பாரு, குவாந்தான், ஹாட்ஞாய் போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவைகள் உள்ளன. பத்து பிரண்டாம் எனும் இடத்தில் விமான நிலையமும் உள்ளது. இந்த வட்டாரத்தின் முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவைகள் உள்ளன. விமானிகள் பயிற்சிக் கழகமும் இங்கே இருக்கிறது. அண்மையில் இந்த விமான நிலயத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு, அனைத்துல விமான நிலையமாகத் தரம் உயர்த்தப் பட்டது. வடக்கு-தெற்கு விரைவுசாலையை இணைக்கும் சந்திப்பு இடமாக ஆயர் குரோ விளங்குகிறது. சிம்பாங் அம்பாட் எனும் இடத்திலும் ஜாசின் எனும் இடத்திலும் வெவ்வேறு சந்திப்புகள் உள்ளன. வியாசர்பாடி ஜீவா வியாசர்பாடி ஜீவா (Vyasarpadi Jeeva) தொடர்வண்டி நிலையம் தென்னிந்தியாவின் தொன்மையான நிலையங்களில் ஒன்றாகும். முதன்முதலில் ஆற்காட்டிற்கு இங்கிருந்துதான் தொடருந்து விடப்பட்டது.தற்போதைய நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் பழைய நிலையத்தின் இடிபாடுகளைக் காணலாம். ஓர் இருப்புவழிச் சந்திப்பான இங்கிருந்து நான்கு தடங்களில் பிரிகிறது. தெற்கத்திய வழி சென்ட்ரலுக்குச் செல்கிறது. கிழக்கு வழி சென்னை கடற்கரைச் சந்திப்பிற்குச் செல்கிறது. வடக்கத்திய வழி கொருக்குப்பேட்டை மற்றும் கூடூர் செல்கிறது. மேற்கத்திய வழி பெரம்பூர் மற்றும் அரக்கோணம் செல்கிறது. இந்தச் சுற்றுப் பகுதியின் பெயர் வியாசர்பாடி ஆகும். ஆயினும் தொடர்வண்டி நிலையத்திற்கு இடத்தின் பெயருடன் மூத்த பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் பெயரும் இணைந்து அவரது நினைவாக வியாசர்பாடி ஜீவா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்குள்ள டான் பாசுகோ பள்ளியும் அதனுடன் இணைந்த தேவாலயமும் மிகவும் பிரசித்தமானவை. இந்த உரோமன் கத்தோலிக்க தேவாலயம் இத்தாலிய கட்டிட வடிவமைப்புடன் கவினுற கட்டப்பட்டுள்ளது.தவிர அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது.இங்குள்ள ரவீசுவரர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகத் தொன்மையான கோவிலாகும். தி. அ. முத்துசாமிக் கோனார் தி. அ. முத்துசாமிக் கோனார் (1858-1944) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும் வடமொழியும் கற்றார்.இசை, சமயக் கல்வி ஆகியவற்றிலும் நல்ல புலமை பெற்றவர். யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கதிரைவேற் பிள்ளையிடம் அஷ்டாவதானம் கற்றார். பலதுறைப் புலமை உடைய இவர் திருச்செங்கோடு மலைக்குப் படி அமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தவர். படி மேஸ்திரியாகவும் வேலை செய்துள்ளார். படிப்படியாக இலக்கியத்துறையில் நுழைந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'திருச்செங்கோட்டு விவேகதிவாகரன்' என்னும் இதழை நடத்தினார். 'கொங்கு வேள்', 'கொங்கு மண்டலம்' ஆகியவையும் இவர் நடத்திய இதழ்கள். 'கொங்கு நாடு' என்னும் தலைப்பில் முதன்முதலாகக் கொங்கு நாட்டு வரலாறு எழுதியவர் இவர். 'கார்மேகக் கவிஞர்' எழுதிய 'கொங்கு மண்டல சதகம்' நூலை ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பித்ததோடு அந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார். திரு. வி. கலியாணசுந்தரனார் இவரை, "ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து உரைகண்டே ஊன்றும் அச்சுத் தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக விருந்தளித்த செல்வன்" என்று பாராட்டி உள்ளார். பொ. வேல்சாமி பொ. வேல்சாமி (பி. மே 12, 1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா நாயக்கர், பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய 'நிறப்பிரிகை' இதழின் ஆசிரியர் குழுவில் அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து இயங்கியவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். எழிலரசி எழிலரசி (பிறப்பு: மார்ச் 20, 1968), தமிழ்ப் பெண் கவிஞர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் பிறந்தவர். வே.மு.பிச்சாண்டி, சரஸ்வதி ஆகியோர் இவரது பெற்றோர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தொடக்க காலத் தமிழ் நாவல்களில் பெண் சித்திரிப்பு' என்பது இவரது ஆய்வாகும். ஸ்திரீ தர்மம் என்னும் பெண்களுக்கான இதழ் குறித்து எம்.பிஎல் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார். நாட்டுப்புறவியல் பட்டயச் சான்றிதழ் ஆய்வுக்காகக் குயவர் குடும்பம் ஒன்றை இனவரைவியல் நோக்கில் பதிவு செய்துள்ளார். தற்போது அரசு கலைக்கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். காலச்சுவடு, தக்கை, ஆனந்த விகடன் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன. இவரது கவிதைத் தொகுப்பு 'மிதக்கும் மகரந்தம்' என்பதாகும். செ. இராசு புலவர் செ. இராசு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் 02.01.1938 இல் பிறந்தவர். சேர்ந்தவர். தகப்பனார் ந.சென்னியப்பன், தயார் நல்லம்மாள்.இவர்தம் மனைவி பெயர் கெளரி அம்மாள். இவருக்கு கணிப்பொறித் துறையில் பணிபுரியும் மூன்று ஆண்மக்கள் உண்டு. பள்ளிக் கல்வியை திருப்பூர், கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர்(1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். ஈரோட்டில் 1959 இல் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். ,1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1982 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார். பள்ளியில் தமிழாசிரியாராகப் பணியேற்றது முதல் இவரின் பன்முகத் திறன்களைப் பட்டை தீட்டியவர்கள்; சுவடிப்பயிற்சி - பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர்; கல்வெட்டுப் பயிற்சி - பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா; தொல்லியல் பயிற்சி - தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமி. தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டு கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி ,பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர்.கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர். கொங்கு நாடு தொடர்பான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும் எழுதியும் உள்ளார். கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள் ஆகியவை அவர் பதிப்பில் சிறந்தவை. பஞ்சக் கும்மி என்னும் நூல் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவு குறித்த இவர் எழுதிய நூல் பல வரலாற்று ஆதாரங்களைக் கொண்டதாகும். வட்டார வரலாற்றுத் துறையில் பெரிதும் ஈடுபட்டுப் பல நூல்களை உருவாக்கி உள்ளார். கொங்கு வட்டாரத்தில் உள்ள கோயில்கள், கொங்கு வேளாளர் குலங்கள் குறித்துப் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.. இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன.செய்திகள் 100 மேல் வந்துள்ளன. இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர்,கல்வெட்டியல் கலைச்செம்மல்,திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன. இவர் மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை(4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர். இவர் எழுதிய ""தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்"" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வரலாறு, தொல்பொருளியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளில் ஒன்றாக உ. வே. சா விருதையும் அளிக்கத் தொடங்கியது. இந்த உ.வே.சா விருதை முதலில் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. அறை (இடம்) அறை () என்பது, கட்டிடங்கள் அல்லது அது போன்ற வேறு அமைப்புக்களில் சுவர்களால் பிரித்து வேறாக்கப்பட்டுள்ள ஒரு இடம் ஆகும். இவ்வாறான இடப் பிரிவுகளின் அளவு, தன்மை பயன்பாடு என்பவை வேறுபாட்டு இருந்தாலும் எல்லாவற்றையும் அறை என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடலாம். எல்லாவகையான கட்டிடங்களிலும் அறைகள் உள்ளன. பெரும்பாலான கட்டிடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் இருக்கும். பெரிய கட்டிடங்களில் அறைகள் நூற்றுக்கணக்கிலும் இருக்கக்கூடும். சில கட்டிடங்களில் உட்பிரிவுகள் இல்லாவிட்டால் முழுக்கட்டிடமுமே ஒரு அறையாகும். சிறிய குடிசை வீடுகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மேற்கூறியவாறான இடப்பிரிவுகளின் அளவு மிகவும் பெரிதாக இருந்தால் அவற்றைக் கூடம், மண்டபம் போன்ற பெயர்களால் குறிப்பிடுவது வழக்கம். அறைகள் அவற்றில் பயன்பாட்டைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வீடுகளில், படுப்பதற்குப் பயன்படும் அறை, படுக்கையறை என்றும், சமைப்பதற்குப் பயன்படும் அறை சமையலறை என்றும், உணவு உண்பதற்குப் பயன்படும் அறை சாப்பாட்டறை என்றும் அழைக்கப்படுகின்றன. எல்லா அறைகளிலும் அடிப்படைக் கூறுகளாக தரை, சுவர்கள், கூரை என்பன காணப்படும். அரைகளின் பயன்பாடு, தேவை, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து அறைகளில் சாளரங்கள், உட்கூரைகள் போன்ற கூடுதல் அம்சங்களும் இருப்பதுண்டு. மனிதர்கள் வாழ்வதற்கும், இருந்து வேலைகளைச் செய்வதற்கும் பயன்படும் அறைகள் நல்ல காற்றோட்டம், போதிய வெளிச்சம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் இத்தகைய அறைகளில் சாளரங்கள் அமைக்கப்படும். பொருட்களைக் களஞ்சியப் படுத்துவதற்கான அறைகள் போன்றவற்றுக்கு சாளரங்கள் அவசியம் இல்லை. கட்டிட அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் விதிமுறைகள் மக்களின் பொதுவான நன்மைகருதி, அறைகளுக்கான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுக்கான ஆகக்குறைந்த அளவுகள் எவ்வளவு இருக்கவேண்டும் என விதிப்பது உண்டு. இந்த அளவுகளும், அறைகளின் பயன்பாட்டுக்கேற்ப வேறுபடும். பொதுவாக வீடுகள் தொடர்பான இவ்வாறான விதிகள் படுக்கையறை, சமையலறை போன்றவற்றின் அளவுகளில் கூடிய கவனம் செலுத்துகின்றன. பிற கட்டிட வகைகள் தொடர்பிலும் அறைகளின் அளவுகளுக்கான சிறப்புத்தேவைகள் இருக்கும். பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவை, சமையலறை தவிர்ந்த ஏனைய மனிதர் வாழக்கூடிய அறைகளின் அகலம் 7 அடிகளுக்குக் (2134 மிமீ) குறைவாக இருக்கக்கூடாது என விதித்துள்ளது. அத்துடன் இவ்விதிகளின்படி இவ்வாறான அறைகளில் தரையில் இருந்து உட்கூரையின் உயரமும் 7 அடிக்குக் (2134 மிமீ) குறைவாக இருக்கக்கூடாது. வீடுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அறையாவது 120 சதுர அடிகளுக்குக் (13.9 சதுர மீட்டர்) குறையாத பரப்பளவு கொண்டதாக இருக்கவேண்டும் என்பதும், மனிதர் வாழக்கூடிய ஏனைய அறைகள் 70 சதுர அடிகளுக்குக் (6.5 சதுர மீட்டர்) குறைவாக இருக்கக்கூடாது என்பதும் பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவையின் ஆலோசனைகளில் அடங்குகின்றன. மனிதர்கள் வாழ்வதற்கும், நீண்டநேரம் இருந்து பணிபுரிவதற்குமான அறைகளுக்குத் தேவையான சாளரங்களின் அளவுகள் தொடர்பாகவும் கடைப்பிடிக்கவேண்டிய விதி முறைகள் உள்ளன. பொதுவாக ஒரு அறையின் பரப்பளவின் குறிப்பிட்ட பங்கு அல்லது நூற்றுவீத அளவுக்குச் சமமான பரப்பளவு கொண்ட சாளரங்கள் அமைக்கப்படவேண்டும் என விதிக்கப்படுவது உண்டு. கட்டிட விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொதுவான வடிவமைப்பு நடைமுறைகளில் சில அறைகளிலிருந்து வெளியிலுள்ள காட்சிகளைப் பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்படுவது விரும்பப்படுகிறது. இவ்வறைகளில் பெரிய அளவான சாளரங்களை அமைத்து இத்தேவையை நிறைவு செய்கின்றனர். சில அறைகள் கூடிய தரத்தையும், அழகையும் தரக்கூடிய கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி முடிப்புச் செய்யப்படுகின்றன. முக்கியத்துவம் குறைந்த அறைகளில், சீமெந்துப் பூச்சே முடிப்பாக அமைவது உண்டு. சில சமயங்களில் இது நிறமூட்டப்பட்டிருக்கும். முக்குயமான அறைகளில், விலையுயர்ந்த முடிப்புக்களைப் பயன்படுத்துவர். வெண்களி ஓடுகள்; கருங்கல், சலவைக்கல் போன்றவற்றிலாலான ஓடுகள்; கம்பளத் தரைவிரிப்புக்கள், மரப் பலகைகள், ஓடுகள் என்பன போன்ற பலவகையான முடிப்புக்கள் உள்ளன. இது போல நிறப்பூச்சுக்கள், வெண்களி ஓடுகள், சுவர்த் தாள்கள், மரப் படல்கள் போன்ற ஏராளமான முடிப்புக்களுடன் அறைகள் உள்ளன. அழகு மட்டும் அறைகளுக்கான முடிப்புக்களை முடிவு செய்வதற்கான காரணியாக அமைவதில்லை. செலவு, நீடித்துழைக்கும் தன்மை, இலகுவாகத் தூய்மை பேணக்கூடிய தன்மை; உடற்பயிற்சி, விளையாட்டு, நடனம் போன்ற செயற்பாடுகளுக்கு தரைகள் சற்று மீள்தன்மையுடன் கூடியவைக்யாக இருக்கவேண்டிய தேவை; குளிரான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கும் போது தரை வெதுவெதுப்பாக இருக்கவேண்டியமை போன்ற பலவும் அறைகளுக்கான முடிப்புக்களைத் தெரிவு செய்வதில் கவனிக்கப்படுகின்றன. ஒரு கட்டிடத்தில் அறைகளின் அமைவிடங்கள் தற்செயலாகவோ அல்லது எழுந்தமானமாகவோ அமைவதில்லை. பல காரணிகளால் அறைகள் குறிப்பிட்ட இடங்களில் அமைகின்றன. முன்னர் எடுத்துக்காட்டியவாறு சாளரங்களின் தேவை இருக்கும்போது அறைகள் வெளிச் சுவர்களை அண்டி அமைந்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. உள்ளேயிருந்தபடி வெளிக் காட்சிகளைப் பார்க்கக்கூடிய வசதிகள் வேண்டும்போது வெளியே நல்ல காட்சிகள் இருக்கக்கூடிய கட்டிடத்தின் பகுதிகளில் அறைகள் அமைக்கப்படுகின்றன. அறைகளுக்குள் நிகழும் செயற்பாடுகள் எப்போதும் அவ்வறைகளோடு மட்டும் தொடர்புடையவையாக இருப்பதில்லை. இச் செயற்பாடுகள் பிற அறைகளின் செயற்பாடுகளோடு தொடர்புகளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சமையலறையில் நிகழும் சமைத்தல் செயற்பாடு சாப்பாட்டு அறையின் உணவு அருந்தும் செயற்பாட்டோடு தொடர்புடையது. இலகுவாக உணவுகளைக் கொண்டுவந்து பரிமாறும் வசதிகளுக்காக இவ்வறைகள் அருகருகே இருப்பது வசதியாக இருக்கும். இவ்வாறான தேவைகளும் பிற அறைகள் தொடர்பில் அறைகளின் அமைவிடம் அமைவதற்குக் காரணமாக உள்ளன. சமூக, பண்பாட்டுத் தேவைகளும் அறைகளின் இட அமைவில் தாக்கம் கொண்டுள்ளன. பொதுப் பகுதி, ஓரளவு பொதுத் தன்மை கொண்ட பகுதி, தனிப்பட்ட பகுதி போன்ற வேறுபாடுகளும் அறைகளின் அமைவிடத் தன்மைக்குக் காரணமாகின்றன. பொதுவாக வீடுகளிலும், பிறவகைக் கட்டிடங்களிலும் வெளியாரை வரவேற்கும் அறைகள் வாயிலை அண்டி அமைவதையும், வெளியாரோடு தொடர்பற்ற பகுதிகள் வாயிலோடு நேரடித் தொடர்பின்றி அமைவதையும் காணமுடியும். சில பண்பாடுகளில் வீடுகளிலும், பிற பொதுக் கட்டிடங்களிலும்கூட ஆண்கள் பெண்களுக்கான அறைகளின் அமைவிடங்களில் சில வேறுபாடுகள் இருப்பதைக் காண முடியும். எடுத்துக்காட்டாகப் பெண்களுக்கான பகுதிகள் ஆண்களுடையவற்றைக் காட்டிலும் கூடிய அளவுக்குப் பொதுப் பகுதிகளிலிருந்து விலகி அமைந்திருப்பது உண்டு. இந்தவகையில், மரபு வழியான நம்பிக்கைகளின் தாக்கமும் அறைகளின் இட அமைவில் இருப்பதுண்டு. சோதிடம், மரபுவழிச் சிற்பநூல்கள் போன்றவற்றில் அறைகளின் அமைவிடங்களுக்கான விதிகள் உள்ளன. இவையும் ஒரு கட்டிடத்தில் அறையொன்றின் அமைவிடத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைவது உண்டு. குறமகள் குறியெயினி குறமகள் குறி எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாலை நிலத்துப் பெண்ணை எயினி என்பர். குறி சொல்லும் பெண்ணாக இருந்தமையால் இவரைக் குறியெயினி என்றனர். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கெள்ளுமாகையால் குறிஞ்சி நிலக் குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவால் பேசப்படுகிறாள். குறமகள் இளவெயினி என்னும் புலவர் பெயரிலும் இந்தப் பெயர் அமைப்பை உணரலாம். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 357 எண் கொண்ட பாடலாக உள்ளது. திருமணம் காலம் தாழ்கிறது. தோழிக்குத் தலைவியைப் பற்றிய கவலை. தலைவி பொறுத்திருப்பேன் என்கிறாள். மலைச்சோலைப் பாறையில் ஏறி மயில் ஆலிற்று. அப்போது அங்கிருந்த சுனையில் பூத்திருந்த நீலமலர் அவரும் நானும் நீராடும்போது எங்களைப் பார்த்து ஆடியது. நான் சூடியிருந்த நீலமலர்க் கண்ணியும் நீரலையில் ஆடியது. நான்தானே நீராடினேன். இப்போது அவர் பிரிந்தாலும் நானே தாங்கிக்கொள்வேன் - என்கிறாள் தலைவி. மனித நூலகத் திட்டம் மனித நூலகத் திட்டம் என்பது நூற்களுக்குப் பதிலாக மனிதர்களை தெரிவு செய்து பகிர்தல் ஆகும். நூற்களைப் போல, அல்லது நூற்களை விட கூடுதலான தகவல் அறிவு மனிதர்களிடம் இருக்கிறது. ஆகையால் மனிதர்களிடம் உரையாடி, பகிர்ந்து அறிவை வளர்க்க முடியும் என்ற கருத்துவின் அடிப்படையில் அமைந்ததே மனித நூலகத் திட்டம் ஆகும். இது ரொறன்ரோ நூலத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு மனிதரை நாம் தெரிவு செய்து, அவருடன் உரையாட முடியும். பயனியர் புரடக்சன்சு பயனியர் புரடக்சன்சு ("Pioneer Productions") என்பது ஒரு ஐக்கிய இராச்சியத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உருவாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 500 மணித்தியாலங்களுக்கு மேலான அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளைத் தயாரித்து உள்ளது. பல பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளாராக உள்ளன. லான்சரேத் முகடு சண்டை லான்சரேத் முகடு சண்டை ("Battle of Lanzareth ridge") என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் அமெரிக்கப் படையின் கண்காணிப்பாளர்களின் சிறு குழு ஒன்று நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்களை ஒரு நாள்முழுவதும் தடுத்து தாமதப்படுத்தியது. டிசம்பர் 16, 1944 அதிகாலையில் ஜெர்மனியின் பல்ஜ் தாக்குதல் தொடங்கியது. தரைப்படைகளுக்கு முன்னேறும் பாதைகளில் உள்ள முக்கியமான இடங்களைக் கைப்பற்ற ஜெர்மானிய வான்குடை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பல்ஜ் போர்க்களத்தின் வடமுனையிலிருந்த பெல்ஜியத்தின் லான்சரேத் முகட்டை சுமார் 500 வான்குடை வீரர்கள் கைப்பற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரு அமெரிக்க கள நோட்ட (reconnaissance) பிளாட்டூன்களும், ஒரு பீரங்கி கண்காணிப்பாளர் குழுவும் ஜெர்மானியர்களை எதிர்த்துத் தாக்கினர். எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் அமெரிக்க வீரர்கள் ஜெர்மானியத் தாக்குதலைச் சமாளித்தனர். டிசம்பர் 16ம் தேதி மாலையில் தான் ஜெர்மானியர்களால் லான்சரேத் முகட்டைக் கைப்பற்ற முடிந்தது. லான்சரேத் முகட்டிலிருந்த அமெரிக்கப் படைவீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். அமெரிக்கர்கள்களின் இந்த எதிர்பாராத எதிர்ப்பால் பல்ஜ் தாக்குதலின் வடகளத்திற்கான ஜெர்மானிய கால அட்டவணை 20 மணி நேரம் தாமதமாகியது. இக்காலதாமதம் பல்ஜ் தாக்குதல் தோல்வியடைவிதில் சிறு பங்கு வகித்தது. லான்சரேத் முகட்டு சண்டை நெடு நாட்களுக்குப் பிரபலமடையாமல் இருந்தது. போர் முடிந்து பல வருடங்கள் கழித்து இச்சண்டையில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கிய லெப்டினப்ட் லைல் பொக்கின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, இதில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பல்ஜ் தாக்குதலில் ஜெர்மானிய கவசப் படைகளை 20 மணி நேரம் தாமதப் படுத்தியவர்கள் அவர்கள் தான் என்றும் அதிகாரபூர்வ ஆவணங்களில் அங்கீகாரம் கிட்டியது. முக்கோணவியல் முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் ("Trignometry") ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பல கணித கேள்விகளை தீர்ப்பதற்கு ஒரு கருவியாக உதவுகின்றது. முக்கோணவியலின் அடிப்படைகளை கண்டுபிடித்ததில், நிறுவியதில் இந்தியக் கணிதவியலாளர்களான ஆரியபட்டர், பிரம்ம குப்தன், மாதவன், நீலகண்டன் ஆகியவர்களின் பங்களிப்பு அடித்தளமானது. சுமேரிய வானியிலாளர்கள் வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்து கோணங்களின் அளவுகளை அறிமுகப்படுத்தினர். அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோனியர்களும் முக்கோணங்களின் பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்கள் தான் முக்கோணவியலை ஒரு முறையான அறிவியலாக வடிவமைத்தனர். கிரேக்க அறிவியலாளர் ஹிப்பார்க்கஸ் முக்கோணவியலின் தந்தையென அறியப்படுகிறார். கிரேக்க கணிதவியலார்கள் யூக்ளிடு, ஆர்க்கிமிடீஸ் இருவரும் நாண்கள், வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர். ஹிப்பார்க்கசைத் தொடர்ந்து, தாலெமி ஒரு வட்டத்துக்குள் அமையும் நாண் குறித்த கருத்துக்களைத் தனது கண்டுபிடிப்புகளில் விரிவுபடுத்தினார். பிறகு ஆர்யபட்டர் தனது சோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டரின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான "'த திரியாங்குலிஸ்சில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார். வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன. 1595 இல் ஜெர்மானிய கணிதவியலாளர் பார்த்தொலொமியஸ் பிட்டிஸ்கசால் அவரது "திரிகோணமெட்ரியா" (Trigonometria) இல் "திரிகோணமிதி" என்ற பெயர் இத்துறைக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லியோனார்டு ஆய்லர் முக்கோணவியலுக்குள் சிக்கலெண்களை முழுவதுமாக ஒருங்கிணைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் கிரெகரி மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் மெக்லாரின் ஆகிய இருவரின் கண்டிபிடிப்புகள் முக்கோணவியல் தொடர்களின் மேம்பாட்டுக்குத் துணை செய்தன. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் டெயிலர், பொதுமைப்படுத்தப்பட்ட டெயிலரின் விரிவைக் கண்டுபிடித்தார். முக்கோணவியலில் சைன், கொசைன், டேன்ஜெண்ட், கோசீக்கெண்ட், சீக்கெண்ட், கோடேன்ஜெண்ட் என ஆறு அடிப்படைச் சார்புகள் வரையறுக்கப்படுகின்றன. இவற்றை ஒரு செங்கோண முக்கோணம் அல்லது ஓரலகு வட்டம் வாயிலாக வரையறுக்கலாம். இந்த ஆறு சார்புகளில் முதல் மூன்று சார்புகளின் தலைகீழ்ச் சார்புகளாக முறையே அடித்த மூன்று சார்புகளும் அமையும். ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் "A" -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்: செங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது. நாம் எடுத்துக்கொண்ட கோணம் "A" -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  a. செங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( "A" மற்றும் "C") பொதுவான பக்கம். இதன் நீளம்  b. இச் செங்கோண முக்கோணத்தில் முக்கோணவியல் சார்புகள் பின்வருமாறு வரயறுக்கப்படுகின்றன: ஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும். மேலும் ஒரே படத்தின் மூலம் அனைத்து முக்கியமான கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும் காண முடிகிறது. ஓரலகு வட்டத்தின் மீதமையும் ஒரு புள்ளி (x, y) எனில் அப்புள்ளியை முனையாகக் கொண்ட வட்டத்தின் ஆரத்தைச் செம்பக்கமாகக் கொண்டு வரையப்படும் செங்கோண முக்கோணத்தின் மற்ற இரு பக்க நீளங்கள் x, y. செம்பக்கத்தின் அளவு 1 அலகு. எனவே சைன் மற்றும் கொசைனின் வரையறை: இவ்விரண்டிலிருந்து மற்ற நான்கு சார்புகளையும் காணலாம். ABC முக்கோணத்தின் மூன்று கோணங்கள் "A","B","C" களுக்கு எதிரமையும் மூன்று பக்கங்கள் முறையே "a","b","c" . முக்கோணவியல் சார்புகளுக்கான பொதுவிதிகளில் முக்கியமான சில: இங்கு "R" , முக்கோணத்தின் சுற்றுவட்ட ஆரம். ஆய்லரின் வாய்ப்பாடு: இதிலிருந்து சைன், கொசைன் மற்றும் டேன்ஜெண்ட்ற்கான வாய்ப்பாடுகள்: ஆகிய எளிய வாய்ப்பாடுகளைக் கையாண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும். முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்தி கோள்களுக்கிடையேயான தொலைவு, சிகரங்களின் உச்சியளவு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றிற்கிடையேயான தூரம் முதலானவை கணக்கிடப்படுகின்றன. மேலும், தேசப்பட உருவாக்கம் மற்றும் அட்ச, தீர்க்க ரேகைகளைக் கொண்டு ஓரிடத்தின் அமைவிடத்தை அறிந்திடும் பயன்கள் இவற்றால் உண்டாகின்றன. இக்கருவியானது ஒரு பொருளை உற்றுநோக்குவோரின் பார்வைக் கிடைக்கோடு மற்றும் அப்பொருளுக்கிடைப்பட்ட கோணம் ஆகியவற்றை அளவிட உதவுகிறது. ஒன்றுக்கொன்று செங்குத்தாகக் காணப்படும் இரு சக்கரங்கள் தியோடலைட் கருவியில் உள்ளன. இவ்விரு சக்கரங்களிலும் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். மேலும், இக்கருவியில் ஒரு தொலைநோக்கி அமைப்பும் உள்ளது. இவற்றின் மூலம் கிடைமட்டக் கோணங்கள் மற்றும் நேர்க்குத்துக் கோணங்கள் ஆகியவை அளவிடப்படுகின்றன. தொலைநோக்கியைப் பயன்படுத்தித் தேவையான புள்ளியின் கோண அளவினை அளக்க முடியும். பார்வைக் கோடு என்பது ஒரு புள்ளியை உற்றுநோக்கும்போது, பார்வைக்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட நேர்க்கோடாகும். கிடைமட்டப் பார்வைக் கோட்டிற்கும் மேலே காணப்படும் பார்வைக் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் ஏற்றக் கோணம் (Angle of Elevation) எனப்படும். கிடைமட்டப் பார்வைக் கோட்டிற்கும் கீழேயுள்ள பார்வைக் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணத்திற்கு இறக்கக் கோணம் (Angle of Depression) என்று பெயர். உற்றுநோக்குபவர் ஒரு பொருளை நோக்கும்போது உண்டாகும் ஏற்றக் கோணமானது,அப்பொருளிலிருந்து உற்றுநோக்குபவரை நோக்கும் போது ஏற்படும் இறக்கக் கோணத்திற்குச் சமமாகும். உயிரித் தொழில்நுட்பம் உயிரித் தொழில்நுட்பம் ("Biotechnology") என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம். உயிரித் தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் 1970களில் உருவாக்கப்பட்டது என்றாலும் இந்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். 21ம் நூற்றான்டில் உயிரித் தொழில்நுட்பமானது அடிக்கடி மரபுப் பொறியியலுடன் சுட்டியனுப்பப்படுகின்றது. எனினும் இந்த சொல் மிக அகலமாக எல்லைகளைக் கொன்டது. மனித இனத் தேவைகளுக்காக உயிரினங்களில் சிறுமாற்றஞ்செய்யப்பட்ட நடைமுறை வரலாற்றை கொண்டது. உள்நாட்டு பயிர்களின் தரத்தை அதிகரிக்க செயற்கைத் தேர்வு, மற்றும் கலப்பின முறை தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. உயிரித் தொழில்நுட்பத்தின் அனைத்து உபயோகங்களும் உயிரியல் பொறியியலை தழுவியது. நவீன அணுகுமுறையின் புதிய உத்திகளின் காரணமாக பாரம்பரிய தொழிற்சாலைகள் புதிய பயன்களை பெறுகின்றன. இவைகள் உற்பத்திப்பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன் படுகின்றன. 1970ம் ஆண்டுக்கு முன்பாக உயிரித் தொழில்நுட்பம் பெரும்பாலும் உணவு தயாரித்தல் மற்றும் வேளாண்மை துறைகளில் மட்டுமே பயன்பட்டது. 1970க்கு பின்பு மேற்கத்திய அறிவியல் சார் நிறுவனத்தால் உயிரித் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. உயிரித் தொழில்நுட்பத்தில் மரபிழைச் சீரமைப்பு நுட்பம், திசு வளர்த்தல் மற்றும் கிடைமட்டமான மரபணு இடமாற்றம் ஆகிய உத்திகள் அடங்கும். உயிரித் தொழில்நுட்பமானது மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல், கருவியல் மற்றும் உயிரணு உயிரியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்தது. மேலும் இவைகள் வேதிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைகளுடன்ம் இணைந்திருக்கும். உயிரித்தொழில்நுட்பத்துக்குப் பலவிதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. உயிரியல் பன்மயமத்தின் மீதான ஐக்கிய நாட்டு கருத்தரங்கு (UN Convention on Biological Diversity) உருவாக்கியுள்ள வரைவிலக்கணப்படி, காணவும் : உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு பற்றிய தனிக் கட்டுரை கி.மு. 2,000 - எகிப்தியர்களும் சுமேரியர்களும் வெண்ணை செய்வதிலும் Brewing-லும் நிபுணத்துவம் அடைகிறார்கள். கி. மு. 300 - கிரேக்கர்கள் ஒட்டுத் தாவரங்களை (grafting techniques for plant breeding) செய்யும் முறையை அறிகிறார்கள். கி. பி. 100 - சீனர்கள், தூளாக்கப்பட்ட chrysanthemum-களிலிருந்து முதல் பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிக்கின்றனர். கி. பி. 1663 - ராபர்ட் ஹூக்கின் திசுள் (Cell) கண்டுபிடிப்பு. 1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின் பாக்டீரியா கண்டுபிடிப்பு. 1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு. 1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால் ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு; ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார். 1865 - ஜான் கிரிகோர் மெண்டல், பரம்பரை விதிகள் (Law of heridity) ஐக் கண்டுபிடிக்கிறார். 1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். 1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின் பென்சிலின் நுண்ணுயிர்கொல்லி (Antibiotic) கண்டுபிடிப்பு. 1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும் முதன்முதலில் DNAவின் இரட்டை சுருளமைப்பு (Double helix) வடிவத்தை விவரிக்கிறார்கள். 1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபுக்குறியீடுகளைக் கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள். 1970 - முதல் restriction enzyme-ஐ அமெரிக்க நுண்ணுயிரியலாளர் டேனியல் நேதன்ஸ் (Daniel Nathans) கண்டுபிடித்தார். Restriction enzyme-கள் மரபியல் பண்புகளைத் தரும் வேதிப்பொருட்களை (genetic material) பல துண்டுகளாக வெட்ட உதவுவதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கிறது. 1972 - DNA துண்டுகளை ஒட்ட உதவும் DNA லைகேஸ் ( DNA ligase ) முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது. 1973 - Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர். இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது. 1978 - Recombinant மனித இன்சுலின் (Insulin) முதன்முதலில் உருவாக்கப்படுகிறது. 1980 - முதல் செயற்கை recombinant DNA மூலக்கூறினை உருவாக்கியதற்காக Paul Berg, Walter Gilbert, Fredrick Sanger ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1981 - முதல் transgenic விலங்கு 'the golden carp', சீன விஞ்ஞானிகளால் படி எடுக்கப்படுகிறது (Cloned). 1982 - கால்நடைகளுக்கான முதல் recombinant DNA தடுப்பு மருந்து உருவாக்கம். Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர். 1983 - உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம் நான்கு வெவ்வேறு ஆராய்ச்சிக்குழுக்களால் தனித்தனியே உருவாக்கப்பட்டது (மேரி-டெல் கில்டொன், வாஷிங்டன் பலகலைக்கழகம், செயின்ட் லூயிஸ், அமெரிக்கா; ஜெஃப் ஷெல், மார்க் வான் மொன்டகு, பெல்ஜியம்; ரொபெர்ட் ஃப்ரேலி, ஸ்டீஃபன் ரொஜர்ஸ், ரொபெர்ட் கொர்ஷ், மான்சான்டோ, செயின்ட் லூயிஸ், அமெரிக்கா; ஜான் கெம்ப், திமோதி கால், விஸ்கான்சின் பல்கலைகழகம், அமெரிக்கா) 1990 - உலகின் முதல் மனித மரபணுத்தொகைத் திட்டம் தொடங்குகிறது. 1997 - டோலி - படியெடுக்கப்பட்ட முதல் பாலூட்டி - பிறப்பு. 1998 - கிட்டத்தட்ட 30,000 ஜீன்களின் இருப்பிடத்தை வரையறுக்கும் முதல் 'மாதிரி மனித மரபு ரேகை' அறிவிப்பு. (First draft of Human Genome) 2000 - அமெரிக்க விஞ்ஞானிகள் Craig Venter மற்றும் Francis Collins முதல் முழுமையான மனித மரபு ரேகையை உலகுக்கு அறிவிக்கிறார்கள். காணவும்: உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றிய தனிக் கட்டுரை மரபன் திருத்தப் பயிர்கள் ("மதி பயிர்கள்") அல்லதுor ( உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள்") என்பவை மரபணுப் பொறியியலால் அப்பயிரின் மரபன் திருத்தப்பட்ட வேளாண் பயிர்களாகும். பெருபாலான பயிர்களில் அவற்றில் இயல்பாக இல்லாத புதிய பண்பை அறிமுகப்படுத்தப்படுகிறது.தௌணவுப் பயிர்களில் பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, தகைவுள்ள சுற்றுச்சூழல் நிலைமை தாங்கல், வேதிப்பொருள் எதிர்ப்பு (எ. கா: களைகொல்லி எதிர்ப்பு,), அழிவுக் குறைப்பு, அல்லது பயிரின் ஊட்டவளச் செழுமை ஆகிய பண்புகளைச் சுட்டிக் கட்டலாம். எடுத்துகாட்டுகளாக, உணவல்லாத பயிர்களில் தாவர வழி மருந்துசார் முகமைப் பொருள்கள், உயிரி எரிபொருள்கள், தொழிலகப் பயன்பொருள்கள், உயிரியல் சீராக்கம் ஆகியவற்றைக் கூறலாம். உழவர் படிப்படியாக மதி பயிர்த் தொழில்நுட்பத்தை ஏற்றுவருகின்றனர். 1996 முதல் 2011 வரையிலான கால இடைவெளியில் 94 மடங்கு மொத்த மதி பயிர்களின் பயிரீட்டு நிலப்பரப்பு உயர்ந்தது அதாவது, முதல் 1,600,000 kmவரை (395 மில்லியன் ஏக்கர்கள்) ஆக உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டளவில்10% அளவு உலகப் பயிரீட்டு நிலங்கள் மதி பயிர்களால் பயிரிடப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டளவில், 395 மில்லியன் ஏக்கர்களில்(160மில்லியன் எக்டேர்கள்) வணிகவியலாக 11 வேறுபட்ட மதி பயிர்கள் அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டீனா, இந்தியா, கனடா, சீனா, பராகுவே, பாக்கித்தன், தென் ஆப்பிரிக்கா,ஔராகுவே, பொலிவியா, ஆத்திரேலியா, பிலிப்பைன்சு, மயன்மார், பர்க்கினா பாசோ, மெக்சிகோ, எசுப்பானியா போன்ற 29 நாடுகளில் 2011 ஆம்ஆண்டில் பயிரிடப்பட்டுள்ளன. மரபன் திருத்த உணவுகள் என்பன மரபணுப் பொறியியலால் அந்த உணவாக்க உயிரிகளின் மரபனில் சிறப்பு மாற்றங்கள் அறிமுகப்படுத்திய உணவுகள் ஆகும். இந்த நுட்பங்கள் பயிர்களில் புதிய பண்புகளை அறிமுகப்படுத்தி உணவின் மரபியல் கட்டமைப்பில், முன்பு தெரிந்தெடுப்பு பயிர்வளர்ப்பிலும் சடுதிமாற்ற பயிர்வளர்ப்பிலும் இயலாத, கூடுதல் கட்டுபாட்டை உருவாக்கின. மதி உணவுகளின் வணிக விற்பனை, கால்கீன் குழுமம் மெதுவாகப் பழுக்கும் தக்காளியைச் சந்தையில் விற்றபோது1994 இல் தொடங்கியது. இதுநாள்வரை மதி உணவுகள் ஆக்கம் முதன்மையாக உயர்தேவை உள்ள காசுப் பயிர்களிலேயே குவிந்து உள்ளது. இவற்றில் மதி சோயா அவரை, மதி மக்கச்சோளம், மதி கனோலா, மதி பருத்திகோட்டி எண்ணெய் ஆகியன அடங்கும். இவை நோயீனி எதிர்ப்பும் களைக்கொல்லி எதிர்ப்பும் நல்ல ஊட்டவளமும் உள்ளனவாக திருத்தப்பட்டவை ஆகும். மதி கால்நடைகள் செய்முறையில் உருவாக்கப்பட்டாலும், அவை 2013 நவம்பர் வரை சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை. அண்மையில் அறிவியலான பொதுக்கருத்தேற்பு நடப்பில் கிடைக்கும் மதி பயிர்வழி உணவு இயல்பு பயிர்வழி கிடைக்கும் உணவை விட கூடுதலான இடர் தருவதில்லை என ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு மதி உணவும் அறிமுகப்படுத்தும் முன்பு ஒரு சோதனைவழி சோதிக்கப்படபவேண்டும். என்றாலும், மக்கள் மதி உணவு பாதுகாப்ப்பனது என அறிவியலாளர்களைப் போல ஏற்றுக்கொள்வதில்லை. மதி உணவுக்கான சட்ட, ஒழுங்குமுறை நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. சில நாடுகள் தடை செய்துள்ள்ன; சில நாடுகள் குறைந்த அளவில் ஏற்பு தந்துள்ளன; பிற நாடுகள் பல்வேறு ஒழுங்குமுறைகளால் இசைவு பல்வேறு அளவுகளில் தந்துள்ளன. நுண்ணுயிர்கள் பின்வரும் பணிகளுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. தோல் பதனிடுதல், உணவு பதப்படுத்துதல் (பாலாடைக்கட்டி, மது, நொதித்தல்) புதிய சிறந்த பண்புகளைக் கொண்டுள்ள (ஆடை) நூலிழை தயாரிப்பு மற்றும் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு முதலிய துறைகளில் உயிரித் தொழில்நட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. மரபுப் பொறியியல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை இத்தொழில்நுட்பப் பயன்பாட்டால் உருவாகும் இடர்களை மதிப்பிட்டு மேலாளும் அணுகுமுறைகளிலும் மர்புத் திருத்த உயிரிகளையுல் பயிர்களையும் மீன்களையும் உருவாக்கி வெளியிடுவதிலும் அக்கறை கொள்கிறது. ஒவ்வொருநாட்டு அரசும் இதில் பலவகைகளில் வேறுபடுகிறது. அமெரிக்காவுக்கு ஐரோப்பாவுக்கும் இடையில் இவ்வொழுங்குமுறையில் கணிசமான வேறுபாடுகள் நிலவுகின்றன.மரபுத் திருத்தப் பொருள்களின் கருதும் பயனுக்கு ஏற்ப இவ்வொழுங்குமுறை ஒரே நாட்டிலும் கூட வேறுபடுகிறது. எடுத்துகாட்டாக உணவுக்காகப் பயன்படாத பயிர் உரிய உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் உள்நாட்டுக்கு ஒருபோக்கையும் ஏற்றுமதிக்கு ஒருபோக்கையும் கடைபிடிக்கிறது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்குச் சில மரபுத் திருத்த உயிரிகளையே ஏற்கும் அதேவேளையில், ஏற்றுமதிக்குப் பல மரபுத் திருத்த உயிரிகளுக்கு ஒப்புதல் தந்துள்ளது.மரபுத் திருத்தப் பயிர்களைப் பயிரிடல் , அவை மரபுத் திருத்தாத பயிர்களுடன் ஒருங்கே நிலவுதல் குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஒருங்கு நிலவிடல் ஒழுங்குமுறைகளின்படி, மரபுத் திருத்தப் பயிர்களுக்கான ஊக்க நல்கைகள் வேறுபடுகின்றன. அமெரிக்கப் பேராயத்துக்குப் பிறகு 1988 இல், தேசியப் பொது மருத்துவ அறிவியல் நிறுவனமும் தேசிய நலவாழ்வு நிறுவனங்களும் ஒரு நிதியளிப்பு முறையை உயிரித்தொழில்நுட்ப்ப் பயிற்சி தருவதற்காக நிறுவின. இந்த நிதிக்காக நாடளாவிய பல்கலைக்கழகங்கள் தம் நிறுவன்ங்களில் உயிரித்தொழில்நுட்பதிட்டங்களைச் செயல்படுத்த போட்டியிடுகின்றன. ஒவ்வொரு தகுதியான விண்ணப்பமும் ஐந்தாண்டுகளுக்கு நிதியளிக்கப்படுகின்றன. இந்நிதிக்கான புதிப்பிப்பும் போட்டிவழியே தான் நிகழ்த்தப்படுகிறது. பட்டப்படிப்பு மாணவர்கள் உயிரித்தொழில்நுட்பத் திட்டப் பயிற்சிக்காகப் பொட்டியிடுகின்றனர்; ஏற்கப்பட்டால், அவர்களின் முனைவர் பட்ட ஆய்வின்போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நல்கையும் பயிற்சியும் நலக்காப்பீட்டு உதவியும் தரப்படுகின்றன. இந்தவகைப் பயிற்சியை பத்தொன்பது நிறுவனங்கள் நல்குகின்றன. இளவல் பட்ட மட்ட்த்திலும் சமுதாயக் கல்லூரிகளிலும் கூட உயிரித்தொழில்நுட்ப்ப் பயைற்சிகள் அளிக்கப்படுகின்றன. உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது . இது பொதுவாக உடுவில் அம்மன் கோயில் எனவும் அறியப்படுகிறது. ஏறக்குறைய தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் உடுவில் கிராமத்தில் கட்டுவயல் அல்லது வேம்படிவயல் என் அழைக்கப்பட்ட வயற்பரப்பிலே அல்லிக்கிழங்கு அகழ்ந்தெடுப்பதற்காக வயல் உழும்பொழுது கலப்பை ஒரு பெரிய கல்லிலே பட்டபோது அதிலிருந்து உதிரம் பெருகியதால் உழவு செய்தவர் மயக்கமடைந்தார். அப்போது "நான் கண்ணகை அம்மன். என்னை எடுத்து வழிபாடு செய்" என ஓர் அசரீரி ஒலித்தது. அப்போது அவர் மயக்கம் தெளிந்து அச்சிலையை எடுக்க அது பெரிய முண்டாகிருதியாகக் காணப்பட்டதால் அந்த இடத்திலேயே அதை வைத்து சிறு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். கண்ணகை அம்மன் வந்து தங்கிய இடங்களைக் குறிப்பிடும் பாடலில் அங்கணாக் கடவை முதல் உடுவில் உட்பட பல ஊர்கள் உள்ளமை இவ்வாலயத்தின் பழமையைப் புலப்படுத்துவதாக அமைகின்றது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து வந்த இராமர் என்ற அந்தணரால் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டது. இவரது வழித்தோன்றல்களால் பராமரிக்கப் பட்டுவரும் இக்கோயிலில் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சோமசுந்தரப் பெருமானுக்குக் கோயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பரிவார மூர்த்திகள், திருமஞ்சனக்கிணறு, மடைப்பள்ளி உட்பட ஏனைய திருப்பணிகள் செய்யப்பட்டன. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரா பௌர்ணமியைத் தீர்த்தமாகக் கொண்டு 11 நாட்கள் திருவிழா நடைபெறும். பத்தாம், பதினோராம் நாட்களில் முறையே தேர், தீர்த்தத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மானிப்பாய் இந்துக் கல்லூரி மானிப்பாய் இந்துக் கல்லூரி ("Manipay Hindu College") இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும். 1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார். பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன. சத்யா சத்யா என்பது கீழ்காண்பவைகளில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம்: பெருமாள் முருகன் பெருமாள் முருகன் (பி.1966) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஏழு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் வெளியாகியுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் 2010இல் எழுதி பதிப்பித்த மாதொருபாகன் நாவல் பன்னாட்டு நிறுவனமான போர்ட் பௌண்டேஷனுக்குத் தொடர்புள்ள நிறுவனமான இந்தியா பௌண்டேஷன் ஃபார் ஆர்ட்ஸிடம் நிதி பெற்று, வரலாற்றாதாரமற்ற நிகழ்வுகளை வரலாற்று நாவல் என்றெழுதி, திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு வரலாற்றறிஞர்களும்அமைப்புகள் அந்நாவலுக்கு 2015இல் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இனி எந்த நாவலையும் கட்டுரையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் பொது மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்து, முகநூலில் தெரிவித்தார். ஒரு சாதியைச் சார்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான காளி, பொன்னா பற்றியது இக்கதை. குழந்தை இல்லாததால் திருச்செங்கோட்டு தேர்த் திருவிழாவில் அடுத்த ஆணுடன் உறவு கொண்டு பொன்னா குழந்தை பெற முயல்வது போல் கதை எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இரா.பெருமாள்முருகனை 2015 ஜனவரி 12 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்து “மாதொரு பாகன்’’ நூலின் பிற்கால பிரதிகளைதிரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் புதிய பதிப்பு வந்தாலும் திருச்செங்கோடு குறித்த விவரங்கள் இருக்கக்கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது . இது அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. ஒப்பந்தம் என்றாலும் உடன்பாடு என்றாலும் அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. . பஜ்ரங் லால் தாக்கார் பசுரங் லால் தாக்கர் ("Bajranglal Takhar", பிறப்பு: 5 சனவரி 1981, சிக்கார் மாவட்டம், ராஜஸ்தான்), துடுப்புப் படகோட்ட விளையாட்டு வீரர். இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர். சீனாவின் குவாங்சோவில் நடைபெறும் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனியாள் துடுப்புப்படகு வலிக்கும் (individual sculls) விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். 2006 தோகா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் இராஜஸ்தான் ("Rājasthān", தேவநாகரி: राजस्थान,என்பது இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. ஜெய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இதுதவிர உதயப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகியன முக்கிய நகரங்கள் ஆகும். இராஜஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். இம்மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா தன் முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. பின்னர் இரண்டாம் முறையாக அதே இடத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்தது. இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள இராஜஸ்தான், பாகித்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இராஜஸ்தானுக்கு அண்மையில் உள்ளன. இராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது. ராஜத்தானில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், உதய்ப்பூர், பிகானேர், கோட்டா, பரத்பூர் எனும் ஏழு கோட்டங்களில் அடங்கும். அவைகள் பின்வருவன; ஜெய்ப்பூர், ஜெய்சல்மேர், அஜ்மீர், உதயப்பூர், கோட்டா, பரத்பூர் மற்றும் சோத்பூர் நகரங்களாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 68,548,437 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 75.13% மக்களும், நகர்புறங்களில் 24.87% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.31% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 35,550,997 ஆண்களும் மற்றும் 32,997,440 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 928 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 519 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.11 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 79.19 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 52.12 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,649,504 ஆக உள்ளது. பில் பழங்குடி மக்கள் தொகை 28,05,948 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 60,657,103 (88.49 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 6,215,37 (9.07%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 96,430 (0.14%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 872,930 (1.27%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 622,023 (0.91%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 12,185 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 4,676 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 67,713 (0.10%) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், இராசஸ்தானி, மார்வாரி, குஜராத்தி, உருது, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழியும் பேசப்படுகிறது. குடிசை குடிசை என்பது சூழலில் கிடைப்பனவும், நீண்ட காலம் நிலைத்து இராதவையுமான பொருட்களால் அமைக்கப்படும் சிறிய இருப்பிடங்களைக் குறிக்கும். குடிசைகள் மனிதரின் இருப்பிடக் கட்டிடங்களின் மிகவும் பழைய வளர்ச்சிநிலை ஒன்றாக இருப்பினும், இன்றும் இவை உலகின் பல பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். "குடிசை" என்னும் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் காணப்பட்டவிட்டாலும், ஒத்த வேர்ச் சொற்களில் இருந்து பிறந்த "குடில்" என்னும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில், மக்கள் வாழ்ந்த குடிசைகளை ஒத்த இருப்பிடங்கள் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்பட்டன. இவை பல்வேறு வகையான குடிசைகளைக் குறித்தன எனலாம். குடில், குரம்பை, குறும்பு போன்றவை சங்க காலத்தில் குடிசை வகைகளைக் குறித்த சொற்களாகும். குடங்கர், குடிசல், குடிஞை, குடீரம், கைநிலை, சாளை, சிறகுகுடில், தொக்கடி, படலிடம், பண்ணை, புல்வீடு, மயடம், மாடம், குடிசில், என்னும் சொற்களும் குடிசையோடு ஒத்த பொருள் கொண்ட சொற்களாக, மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் காணக்கிடக்கின்றன. இவற்றுட் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கிழந்துவிட்டன. ஆனால், குடிசை என்னும் சொல் ஒரு பொதுவான சொல்லாகத் தற்காலத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொல்பழங்கால மனிதன் இயற்கையான குகைகளிலிருந்து வெளியேறித் தாங்களாகவே தமது வாழிடங்களை அமைக்க முற்பட்ட தொடக்க காலங்களில் இவ்வாழிடங்கள் விரைவில் அழியக்கூடிய பொருட்களால் ஆனவையாகவே இருந்திருக்கும். அக்கால மனிதர் இன்னும் வேட்டையாடுபவர்களாகவும், உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்பவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் இடத்துக்கிடம் அலைந்து திரிந்தனர். அதனால் முறையான வாழிடங்களை அமைத்து இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு. வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர் மனிதர் ஓரிடத்தில் தொடர்ந்து வாழத் தலைப்பட்டபோது, தங்களுக்கான வாழிடங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இத்தொடக்ககால வாழிடங்கள் குடிசைகளே. முதலில் இவை ஏற்கனவே அறிமுகமானவையும் விரைவில் அழியக்கூடியனவுமான பொருட்களினால் ஆனவையாக இருந்தன. இதனால் இவற்றின் எச்சங்கள் எதுவும் தொல்லியல் சான்றுகளாகக் கிடைக்கவில்லை. அண்மைக் கிழக்குப் பகுதிகளில் நத்தூபியப் பண்பாட்டு மக்கள் உலர் கற்கட்டுமான முறையில் அமைக்கப்பட்டவையும் ஒரு பகுதி நிலத்துக்குக் கீழ் அமைந்தவையுமான குழி வீடுகள் எனப்படும் குடிசைகளைக் கட்டி வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. வட்டவடிவம் கொண்ட இவை கிமு 9000 க்கு முற்பட்டவை. இப்பகுதியில் கிமு 9000 க்கும் கிமு 7000 க்கும் இடைப்பட்ட காலத்தில் குழைத்த குழைமண் கற்களைக் கொண்டு குடிசைகள் அமைக்கப்பட்டன. இக்காலத்திலேயே குடிசைகள் செவ்வகத் தள அமைப்பைக் கொண்டவையாகவும் மாற்றம் பெற்றன. இப்பகுதியில் காணப்படும் குடிசைகள் தொடர்பான தொல்லியல் எச்சங்களே தற்போது அறியப்பட்டவற்றுள் மிகப் பழையன. எனினும், இது போன்ற குடிசை அமைப்புக்களும் படிவளர்ச்சியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கால கட்டங்களில் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்விடத் தடயங்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தில் மக்கள் வட்ட வடிவம், முட்டை வடிவம் அல்லது நீள்வட்ட வடிவம் கொண்ட குடிசைகளை அமைத்து வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகளின்படி சங்ககாலத்துக்கு முந்திய தமிழ் நாட்டில், மரம் மற்றும் இலை தளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குடிசைகளும், குழி தோண்டிக் கற்கள் அடுக்கிக் கட்டிய குடிசைகளும் இருந்ததாகத் தெரிகிறது. இக் குடிசைகளின் கூரைகள் பற்றியோ அல்லது அவற்றைத் தாங்கிய அமைப்பு முறை பற்றியோ அறிந்து கொள்வதற்கான போதிய தொல்லியல் தகவல்கள் கிடைக்காவிட்டாலும். வட்டமான தளவடிவத்துக்கு நடுவில் ஒற்றைத் தூண் நட்ட குழிகள் இருப்பதால் கூரை அதன் நடுவில் முதன்மையாகத் தாங்கப்பட்டமை தெரிகிறது இதனால் கூரை கூம்பு வடிவம் கொண்டதாக இருந்திருக்கும் என ஊகிக்க முடியும். தற்காலக் குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை. குடிசைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் அவை அமையும் சுற்றாடலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றன. குடிசைகள் மிகப்பல வேறுபட்ட வடிவங்கள் உடையவையாகக் காணப்படுகின்றன. தட்பவெப்பநிலை, கட்டிடப்பொருட்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பம், புவியியல் அம்சங்கள், பாதுகாப்புத் தேவைகள், பொருளாதார நிலை, பண்பாடு என்பன குடிசைகளுக்கு வடிவம் கொடுப்பதில் பங்காற்றுகின்றன. இவற்றுள் பண்பாடே தலையாய இடம் வகிக்கின்றது என்று "அமாசு ராப்பபோர்ட்" (Amos Rapoport) என்பவர் தனது ஆய்வுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார். மருந்துப்போலி மருந்துப்போலி அல்லது 'மருந்துக்குப் போலி' அல்லது 'ஆறுதல் மருந்து' ("Placebo") அல்லது 'வெற்று மருந்து' என்பது இதன் வேறு பெயர்களாகும், உண்மையான மருந்துகளால் அல்லது மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய போலியான மருந்துகள் அல்லது மருத்துவ நடவடிக்கைகள் ஆகும். மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளில் இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஏமாற்றுவேலை அல்லது வஞ்சகத்திலேயே தங்கியுள்ளது எனலாம். பொதுவான மருந்துப்போலிகள் சடத்தன்மையான, விளைவுகள் எதையும் தரும் ஆற்றலற்ற மாத்திரைகள், போலி அறுவைச் சிகிச்சை, மற்றும் பொய்யான தகவல்களின் அடிப்படையிலான சில நடைமுறைகள் ஆகும். எனவே இதனை ஒரு போலி அல்லது தூண்டப்பட்ட மருத்துவக் குறுக்கீடு எனலாம். ஒரு பொதுவான மருந்துப்போலியானது, ஒரு சடத்தன்மையான மாத்திரையை நோயாளிக்குக் கொடுத்து, அதனைப்பற்றிய உண்மையைக் கூறாது, அந்த மாத்திரையை உட்கொள்வதால், அவரது நோய் குணமாகும் எனக் கூறுதலாகும். இவை எவ்வித மருத்துவப் பண்பும் இல்லாத ஒரு பொருளாகவோ அல்லது குறிப்பிட்ட நோய்க்கான மருந்தாகவோ இருக்காமல் போனாலும், இதைத் தரும் போது நோயாளிகள் ஏதோ ஒரு வகையில் மனநிறைவுற்று அவரிடம் உளவியல் மாற்றம் ஏற்பட்டு அது அவரின் உடலிலும் மாற்றங்களை உண்டு செய்வது அறியப்பட்டுள்ளது. அந்த நோயாளியும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவாராக இருந்து, அதனை நோய் தீர்க்கும் இயல்புடைய மாத்திரைதான் என முற்றாக நம்பும்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றமேற்படுவதாக உணருவார். இதனை 'மருத்துப்போலித் தாக்கம்' என்பர். இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றபோதிலும், மருத்துவத்தில் இதன் பயன்பாடும், மருத்துவ ஆய்வுகளும் தொடர்ந்து பரவலாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் இது அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய ஒரு பொதுவான நிகழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் எந்த ஒரு உண்மையான மருத்துவ நடவடிக்கையிலும்கூட இப்படியான நம்பிக்கை ஒரு பகுதியாக இருக்கின்றது. மருந்துப்போலித் தாக்கமானது உடல் சார்ந்த நலத்தில் மூளையின் பங்கையும், நோயாளியின் ஏற்கும் தன்மையையும் சுட்டி நிற்கிறது. இருப்பினும், இந்த முறையானது மருத்துவத்தில் சிகிச்சைக்காகப் பயன்படும்போது, மருத்துவர்கள் தாம் தொழிலை ஆரம்பிக்கையில் எடுக்கும் Hippocrates இன் உறுதிமொழியை மீறுவதாகவும், நோயாளி மருத்துவருக்கிடையிலான நேர்மைத் தன்மையை சீர் குலைப்பதாகவும் கருதப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பத்துக்கான பிரித்தானியப் பாராளுமன்றக் குழு, மருந்துப்போலியைப் பற்றிய தனது அறிக்கையில், இதில் நோயாளி குறிப்பிட்டளவு ஏமாற்றப்படுவதாயும், முழுமையான மருந்துப்போலி சிகிச்சையானது தவறான மருத்துவ முறை என்றும் கூறியுள்ளது. மருத்துவ முறைகளின் ஆரம்பம் தொட்டே, இந்த மருந்துப்போலி ஏதோ ஒரு வகையில் மருத்துவத்துடன் இணைந்தே இருக்கின்றது. 1955 இல் Henry K. Beecher என்பவர் எழுதிய The Powerful Placebo என்ற வெளியீட்டுக்குப் பின்னர், இந்த மருந்துப்போலி நடைமுறை மருத்துவத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால் 2001 இல் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ சோதனை ஆய்வின் மதிப்பீடானது, மேற்கூறப்பட்ட கருத்தை கேள்விக்குள்ளாக்கியது. அந்த ஆய்வறிக்கையானது, மருந்துப்போலி நடவடிக்கைகளால், வலி போக்கப்படுவதும் அது தொடர்பான சில பலன்களும் தவிர, சிகிச்சையின் விளைவுகளை நிறுவுவதற்கு எந்த ஆதாரமுமில்லை எனக் கூறியது. அந்தக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்புகள் வந்த போதிலும், அந்தக் கட்டுரையை எழுதியவர்கள் மீண்டும் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தி ஒரு அறிக்கையை 2010 இல் வெளியிட்டார்கள். அனேகமான மருத்துவப் போலி தொடர்பான ஆய்வுகள் ஆய்வின் தொடக்கம் முதல், முடிவு வரையிலான வேறுபாடுகளை மட்டும் கணக்கிலெடுத்த வேளையில், அந்தக் கட்டுரை ஆசிரியர்கள், நோய்த்தாக்கத்தின் இயற்கையான நோய் அதிகரிப்பையும், மருத்துவப்போலி தாக்கத்தையும் வேறுபடுத்தியறிய, மருத்துவப்போலி சிகிச்சைக்குட்பட்ட ஒரு பிரிவினரையும், சிகிச்சைக்குட்படுத்தாத ஒரு பிரிவினரையும் தங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர். புதியதொரு மருந்தைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் அம் மருந்தை வெற்று மருந்தோடு பலமுறை ஒப்பிட்டுப் பார்ப்பர். வெற்று மருந்தைப் போல் இக்குறிப்பிட்ட மருந்து உளவியல் விளைவுகளால் உடலியங்கியல் விளைவுகளை உண்டு செய்கின்றதா அல்லது உண்மையிலேயே உடலியங்கியல் விளைவுகளைத் தான் உண்டு செய்கின்றதா என ஆய்வு செய்து அறிவார்கள். ஓப்பிய எதிர் மருந்துகள் கொடுப்பதன் மூலம் வெற்று மருந்து உளவியல் விளைவுகளால் உண்டாக்கும் உடலியங்கியல் விளைவுகளைத் தடுக்கலாம். இந்தியாவில் மருந்துப்போலியை கண்டரிய பார்மாசெக்யூர் நிறுவனம் இணையதளத்தில் இலவச சேவையை தந்துள்ளது. மருந்து அட்டையில் குறிப்பிட்டுள்ள ஒன்பது இலக்கு எண்ணை, அதன் இணையதளத்தில் தேடினால் போலியானதா என்பது பற்றிய தகவல் கிடைக்கும். இச்சேவையை கைப்பேசியின் குறுஞ்செய்தி மூலமாக 9901099010 என்ற எண்ணிற்கு மருந்து அட்டையின் ஒன்பது இலக்க எண்ணை அனுப்பி பெறலாம். placebo இறையியல் இறையியல் ("Theology") என்னும் சொல் "இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு" என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில் "சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு" எனவும் அதை விளக்கலாம். இறையியலை உருவாக்குவோர் இறையியலார் (theologians) எனப்படுவர். இவர்கள் சமயம் தொடர்பான பொருள்களைப் புரிந்துகொள்ள, விளக்கியுரைக்க, விமர்சனம் செய்ய மெய்யியல், வரலாறு, மக்களினவியல், ஆன்மீகவியல் போன்ற பல துறைகளின் உதவியோடு ஆய்வினை மேற்கொள்வர். இறையியல் கீழ்வரும் பல குறிக்கோள்களை அடையும் வண்ணம் ஆக்கப்படுகிறது: தமிழில் இறையியல் என்னும் சொல் பெரும்பாலும் கிறித்தவப் பின்னணியில் உருவானது. பழைய வழக்குப்படி, இது "தேவ சாஸ்திரம்" அல்லது "வேத சாஸ்திரம்" என்றும் "மறையியல்" என்றும் அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது. இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. θεολογία (theologia) என்னும் கிரேக்கச் சொல் θεός = theos (= கடவுள்), λόγος (logos) (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞரும் இடைக்காலக் கிறித்தவ அறிஞரும் இச்சொல்லுக்கு அளித்த பொருள் கிறித்தவ மரபில் ஊன்றியது. பின்னர் பிற சமயங்களும் தம் சமய மரபு ஆய்வைக் குறிக்க "இறையியல்" என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயின. "இறையியல்" என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்கு மட்டுமே பயன்படுத்துவதா அல்லது எந்த சமய மரபுக்கும் பயன்படுத்தலாமா என்பது பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. ஒருசிலர் கருத்துப்படி, இறையியல் என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்குரியதாகக் கொள்வதே சரி. வேறுசிலர் எந்த மதங்கள் "கடவுள்" பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை மனிதர் அறிந்து அப்பண்புகள் குறித்து ஆய்வு நிகழ்த்த இயலும் என்று கருதுகின்றனவோ அவை மட்டுமே "இறையியல்" நிகழ்த்துகின்றன என்பர். கடவுள் குறித்துப் பேசாத சமய மரபுகளில் "இறையியல்" உள்ளது என்பது முரணாகும் என்பது இவர்கள் வாதம். குறியிறையார் குறியிறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஓடி விளையாடும் சின்னஞ்சிறு புதல்வர்களை இப்புலவர் 'குறியிறைப் புதல்வர் என்று குறிப்பிடுகிறார். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இவருக்குக் குறியிறையனார் என்று அவரது பாடலிலுள்ள தொடரைக்கொண்டு பெயர் சூட்டியுள்ளார். தலைவன் குற்றமில்லாதவன் என்று பசப்பித் தோழி தலைவியின் துன்பத்தைப் போக்க முயல்கிறாள். தலைவி ஒப்புக்கொள்ளவில்லை. அவன் தனக்குப் பகையாயின பாங்கை இயற்பழித்துக் கூறுகிறாள். சின்னஞ்சிறு ஆண் குழந்தைகள் எழுந்து நடக்கும் பருவத்தில் ஆடையின்றித் திரிவர். அக் குழந்தை தன் ஆண்குறியைத் தானே தொடாமல் இருப்பதற்காக அதன் அரைஞாண் கயிற்றில் சில தொங்கல்களைக் கோத்திருப்பர். குழந்தை அதனைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். தன் குறிகளைத் தொடாதிருக்க அரைஞாணில் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தத் தொங்கலுக்குக் குறியிறை என்று பெயர். யானைக் குழவி சிறிதாக இருக்கும்போது சின்னஞ்சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். அதுவே பெரிதான பிறகு அவர்களும் பெரியவர்கள் ஆகி அவர்கள் விதைத்த தினையை மேயும் பகையாக மாறிவிடும். அதுபோலத் தலைவன் தலைவியோடு நகைத்துக்கொண்டு விளையாடிய காதல் விளையாட்டு பகையாக மாறிவிட்டதாம். போர் விளைவு போர் விளைவு "(Bohr effect)" எனும் ஹீமோகுளோபினின் தனிப்பண்பை 1904 ஆம் ஆண்டு டச்சு நாட்டு உடலியங்கியல் அறிஞரான கிறிஸ்டியன் போர் (இயற்பியல் அறிஞர் நீல்ஸ் போரின் தந்தை) விவரித்தார். இவ்விளைவின் படி, குருதியில் புரோட்டான்களின் செறிவும் கரியமில வாயுவின் செறிவும் அதிகமாகும் போது ஹீமோகுளோபின் - ஆக்ஸிஜன் இடையிலான கவர்ச்சி குறைகிறது. ஆகவே ஆக்சிஜன் ஹீமோகுளோபினில் இருந்து பிரிந்து திசுக்களுக்குக் கிடைக்கிறது. பிரதமர் தேசிய நிவாரண நிதி 1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் "பிரதமரின் தேசிய நிவாரண நிதி". தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. குறுங்கீரனார் குறங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகையில் 382-ம் பாடலாக அமைந்துள்ளது. "வருவேன்" என்று தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. முல்லைப் பூவும், தளவம் பூவும் பூத்து மணம் பரப்புகின்றன. பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பவில்லை. அதை எண்ணித் தலைவிக்குக் கவலையாக உள்ளது. அவளது கவலையைப் போக்கத் தோழி அதனை 'வம்புப் பெய்யும் மாரி' என்று சொல்லித் தலைவியை ஏமாற்ற முயல்கிறாள். இது மாரிக் காலமாயின் அவர் வந்திருப்பாரே என்றும் கூறுகிறாள். இப்படிச் சொன்னால் தலைவி சற்று ஆறுதல் கொள்வாள் என்பது தோழியின் நம்பிக்கை. எகாக்கா கிளெசுக்கா எகாக்கா கிளெசுக்கா (இசுபொட்டட் எல்க்/Spotted Elk), (1826 - டிசம்பர் 29, 1890) ஒரு முக்கிய அமெரிக்க முதற்குடிமக்கள் தலைவரக இருந்தவர். இவர் போரிலும், பேச்சுவார்த்தையிலும் திறமை மிக்கவராக விளங்கினார். 1890 ம் ஆண்டு, தெற்கு டகோட்டாவில், இவரும் இவரோடிருந்த 150 பேரும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையால் படுகொலை ((Wounded Knee Massacre)) செய்யப்பட்டார்கள். கிறித்தவ இறையியல் கிறித்தவ இறையியல் ("Christian Theology") என்பது கடவுள் தம்மை இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தியுள்ளார் என்னும் உண்மையை மையப் பொருளாகக் கொண்டு, அதன் உட்கிடக்கையை அறிவியல் முறைப்படி ஆய்ந்து விளக்குதல் ஆகும். கடவுளின் வெளிப்பாட்டை மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து அறிந்து உணர்ந்து ஏற்று அதனடிப்படையில் கிறித்துவின் சீடர்களாக வாழ்ந்திட இறையியல் துணைபுரிகிறது . கிறித்தவ இறையியல் விவிலிய விளக்கம், பகுத்தறிவு ஆய்வு, கருத்து மெய்ப்பித்தல் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு, கிறித்தவ நம்பிக்கையை விளங்கிக்கொள்கிறது; விளக்குகிறது; விமர்சிக்கிறது; வளர்த்தெடுக்கிறது. கிறித்தவ இறையியலை ஆக்குவோர் அச்செயல் வழியாகத் தம் கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தவும் இயலுகிறது. கிறித்தவ நம்பிக்கையைப் பிற சமய மரபுகளோடு ஒப்பிட்டும், அதை மறுப்பாரின் கருத்துகளுக்குப் பதிலளித்து அதைக் காத்தும், கிறித்தவம் தூய்மையடையச் செய்தும், கிறித்தவ நம்பிக்கை பரவிட வழிசெய்தும், கிறித்தவ மரபுச் செல்வங்களை ஆழ்ந்து ஆய்ந்து அவற்றின் ஒளியில் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இறையியலார் உதவுகின்றனர். கிறித்தவ இறையியலின் முக்கியமான அடிப்படை அது நம்பிக்கையையும் பகுத்தறிவையும் இணைத்துப் பார்ப்பதில் அடங்கும். நம்பிக்கை என்பது இரு பொருள்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. முதல் பொருள் நம்பிக்கைக் கோட்பாடு ("tenets of faith") ஆகும். கிறித்தவ சமயம் ஒருசில உண்மைகளை மக்களுக்கு அறிவிக்கிறது. அந்த உண்மைகளை மக்கள் ஏற்று அவற்றின்படி வாழ வேண்டும் என்று கிறித்தவ மக்கள் குழு (திருச்சபை) கற்பிக்கிறது. நம்பிக்கையின் இரண்டாம் பொருள் தம்மையே மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் உண்மையானவர், அன்புடையவர் என்பதால் அவர்தம் வெளிப்பாட்டை உண்மையென்று மனதார, உள உறுதியோடும் பணிவோடும் ஏற்று அதன்படி ஒழுகுதல் ஆகும். இது பணிந்து ஏற்கும் நம்பிக்கை ("faith as trust") என்று கூறப்படும். கடவுளுக்குப் பணிந்து, அவர் கூறுவதை உண்மையென ஏற்கும் அதே நேரத்தில் அந்த உண்மைகள் பகுத்தறிவுக்கு எதிராகப் போக நேரலாமே என்றொரு சிக்கல் எழுவது இயல்பு. பகுத்தறிவும் சரி, பணிந்து ஏற்கும் நம்பிக்கையும் சரி, இரண்டிற்கும் ஊற்றாக இருப்பவர் கடவுளே என்பதால் அவை இரண்டும் தமக்குள் முரண்பட முடியாது என்பது கிறித்தவ உறுதிப்பாடு. அவ்வாறு முரண்பாடு எழுவதாகத் தோன்றினால், ஒருவேளை நாம் இறைவெளிப்பாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றிருக்கலாம், அல்லது நமது பகுத்தறிவு எப்படியோ தவறிப்போயிருக்கலாம். எனவே, சரியான புரிதலும், தவறுநீக்கலும் நிகழும்போது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான முரண்பாடு மறைந்துவிடும். ஆக, கிறித்தவ இறையியலாக்கத்தில் இரு தவறுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. பகுத்தறிவு மிதமிஞ்சிப் போவது ஒரு தவறு. நம்பிக்கை பகுத்தறிவின் துணை வேண்டாம் என்று கருதுவது மற்ற தவறு. இதையே சற்று விரிவாகக் கூறுவதாயிருந்தால், பகுத்தறிவு இவ்வுலகு சார்ந்த உண்மைகளைக் கண்டுகொள்வதில் தேர்ச்சியுள்ளது. அதே நேரத்தில் மனிதர் தம் பகுத்தறிவின்படி எப்போதும் நடப்பதில்லை என்பது துயரமான ஓர் உண்மையே. மனிதரை மனிதர் அடிமைகளாக நடத்துவது அறநெறிக்கு ஒவ்வாதது என்று நம் பகுத்தறிவு நமக்குக் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை அடிமைகளாக நடத்தியது உலகெங்கும் நடந்துள்ளது. இங்கே பகுத்தறிவு உண்மையைக் காணத் தவறிவிட்டது என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும். விவிலியத்தின் முதல் நூல் "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" என்று தொடங்குகின்றது. . கடவுள் ஆறு நாட்களில் அனைத்தையும் படைத்தார் என்னும் கூற்று ஆங்குளது. சில கிறித்தவர்கள் இந்த விவிலியக் கூற்றை எழுத்துக்கு எழுத்து அப்படியே பொருள்கொண்ட நேரங்கள் உண்டு. ஆனால் அறிவியல் நமக்குத் தரும் சான்றுகள்படி, இவ்வுலகும் பல்லாயிரக் கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களும் உருவாகி இன்றைய நிலையை அடைய எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆயின. இங்கே நம்பிக்கையும் பகுத்தறிவும், படைப்புக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகிறது. இந்த முரண்பாட்டைக் களைவது எப்படி? கிறித்தவ இறையியலின்படி, விவிலிய நூல்கள் எழுத்துக்கு எழுத்து பொருள்கொள்ளக் கூடியவை அல்ல . ஏனென்றால் விவிலியம் என்பது கடவுளின் வெளிப்பாட்டை உள்ளடக்கியிருக்கிறது என்பது அறிவியல் தொடர்பான உண்மைகளை நமக்கு அளிப்பதற்கன்று. எனவே, மனித பகுத்தறிவு நமக்கு அறிவியல் தொடர்பான உண்மைகளை அறிவிக்கும்போது அந்த உண்மைகளுக்கும் ஊற்றாக இருப்பவர் கடவுளே என்பதை நாம் ஏற்பதாக இருந்தால், நம்பிக்கை என்பது மாற்றமடைய வேண்டும்; தூய்மைப்பட வேண்டும். கிறித்தவ நம்பிக்கையும் அறிவியலும் அவ்வப்போது மோதிக்கொண்டன என்பதை வரலாறு காட்டுகிறது இவ்வாறு, கிறித்தவ இறையியல் மனித பகுத்தறிவையும் ஏற்கிறது, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளைக் கடவுள் நமக்கு அறிவிக்க முடியும் என்பதையும் ஏற்கிறது. இவை இரண்டிற்கும் இடையே முரண்பாடு இல்லை எனவும், கடவுளுக்குப் பணிந்து அவர்தம் வெளிப்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு முரணானதன்று எனவும் இறையியல் காட்டுகிறது. கிறித்தவ இறையியலும் சமய நம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையன; ஆனால் அவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு. சமய நம்பிக்கை என்பது மக்களின் அன்றாட வாழ்வில் கடவுள் நம்பிக்கை வெளிப்படுவதையும் அவர்கள் சமய உண்மைகளைக் கடைப்பிடிப்பதையும் குறிக்கும். ஆனால் இறையியல் என்பது சமய நம்பிக்கையினின்று ஒரு படி அகன்று நிற்பது. சமய நம்பிக்கை என்றால் என்னவென்னும் கேள்வியை இறையியல் எழுப்புகிறது. சமய நம்பிக்கை பொருத்தமான விதத்தில் வெளிப்படுகிறதா அல்லது அங்கே மிகைப் போக்குகள் உளவா என்பதை இறையியல் விமர்சனக் கண்ணோடு நோக்குகிறது. சமய நம்பிக்கையின் அடிப்படைகள் யாவை என்னும் கேள்வியையும் இறையியல் எழுப்புகிறது. இறையியலை மருத்துவப் படிப்புக்கு ஒப்பிடுவதாக இருந்தால், சமய நம்பிக்கை என்பது நோயாளரைப் பராமரித்து அவர்கள் நலம்பெற அருகிருந்து உதவுவதற்கு சமம். நோயாளரைப் பராமரிப்பது ஒரு கலை; மருத்துவப் படிப்பு ஓர் அறிவியல் துறை. சமய நம்பிக்கை என்பது மெய்ம்மை என்றால், இறையியல் என்பது கொள்கை. கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் இறையியலார் இறைநம்பிக்கையின் உட்கிடக்கை பற்றிச் சிந்தித்தார்கள். கடவுள் என்றால் யார்? இயேசு கிறித்து யார்? கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்? - இவை போன்ற கேள்விகள் இறையியலின் மைய விவாதப்பொருள்கள் ஆயின. கடவுள் ஒருவரே. ஆயினும் அக்கடவுள் தம்மை மூன்று ஆள்களாக வெளிப்படுத்தியிருக்கிறார் (திரித்துவம்) என்னும் உண்மையைக் கிறித்தவ இறையியல் வகுத்தளித்தது . இந்த உண்மையின் அடிப்படை விவிலியத்தில் உள்ளது. ஆனால், அந்த உண்மையை ஆய்வுக்கு உட்படுத்தி, பகுத்தறிவின் கூரிய ஒளியை அங்கு பாய்ச்சி விளக்கம் அளித்த பணி இறையியலைச் சார்ந்தது. கடவுள்பற்றிய இரு பெரும் உண்மைகளைக் கிறித்தவ இறையியல் தொடக்க காலத்தில் வரையறுத்தது: 1) ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார். அம்மூவரும் தந்தை, மகன் (இயேசு கிறித்து), தூய ஆவி ஆவர். இவர்கள் மூவரும் மூன்று தனித்தனிக் கடவுளர் அல்ல, மாறாக ஒரே கடவுள் இவ்விதத்தில் தம்மை மனிதருக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் விவிலியத்தில் உள்ளன. ஆனால் அவற்றை ஆய்ந்து, பகுப்பாய்வு செய்து, இறுதியாக ஒரு சுருக்கமான வாய்பாடாக எடுத்துரைக்க இறையியல் பெரும் துணையாயிற்று. 2) இரண்டாவது பேருண்மை இயேசு கிறித்துவைப் பற்றியதாகும். நாசரேத்து இயேசு என்பவர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலசுத்தீனம் என்னும் நாட்டில் மனிதராகப் பிறந்தார். ஆனால் அவர் கடவுளாகவும் இருந்தார். எனவே, இயேசு ஒரே ஆள் என்றாலும் அவரிடத்தில் மனித இயல்பும் இறை இயல்பும் இணைந்துள்ளன. அவர் இரண்டு ஆள்கள் அல்ல, மாறாக ஒரே ஆள்தான். ஆனால், அவர் முழுமையாகக் கடவுளும் முழுமையாக மனிதருமாக இருக்கின்றார். இந்த இரு மறை உண்மைகளும் கிறித்தவத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இறையியல் துணையோடு நிறுவப்பட்டன. அதிகாரப் பூர்வமாகத் திருச்சபையால் கற்பிக்கப்பட்டன. நடுக்காலத்தில் (Middle Ages) கிறித்தவ இறையியலார் கிறித்தவர் எத்தகைய அறவாழ்வு வாழ வேண்டும் என்பதில் கருத்தைச் செலுத்தினர். மனித வாழ்வில் சில அடிப்படையான நற்பண்புகள் விளங்கும்போதுதான் அவர்கள் உண்மையான மனிதராக, கிறித்தவராக வாழ்கின்றனர் எனலாம். எனவே, அத்தகைய நற்பண்புகளை அடையாளம் கண்டு, அவற்றை மக்கள் கடைப்பிடிக்குமாறு எடுத்துரைக்கும் பணியைக் குறிப்பாக நடுக்கால இறையியல் ஆற்றியது. இந்நற்பண்புகள் அறநெறி சார்ந்தவை நான்கு, இறையுறவு சார்ந்தவை மூன்று என்பது இறையியல் மரபு. அறநெறி நற்பண்புகள் நீதி, பகுத்துணர்வு, அளவுடைமை, ஊக்கம் ("justice, prudence, temperance, fortitude") என்பவை ஆகும். இறையுறவு சார்ந்த நற்பண்புகள் பணிந்து ஏற்கும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ("faith, hope and charity [love]") என்பவை ஆகும். பின்னர், புரோட்டஸ்தாந்து சீர்திருத்த காலம் வந்தது. அப்போது சபை சீர்திருத்தம் தொடங்கியது. அப்போதைய இறையியல் திருச்சபையின் அதிகார அமைப்பில் கருத்தைச் செலுத்தியது. வழிபாடு எவ்வாறு அமைய வேண்டும், கிறித்தவரின் ஆன்மிக வாழ்வு மேம்பட என்ன செய்ய வேண்டும் போன்ற பொருள்களை ஆய்வதில் இறையியலார் கவனம் செலுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் இரு உலகப் போர்கள் நடந்து முடிந்த நிலையில், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவை பெருவளர்ச்சி கண்டன. இப்பின்னணியில் இன்றைய கிறித்தவ இறையியல் மனித மைய சிந்தனையாக வடிவெடுத்துவருகிறது. நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் எழுந்துள்ள சூழ்நிலையில் மனிதன் என்றால் யார்? இன்றைய மனிதருக்குக் கிறித்தவ நம்பிக்கையும் சமயமும் எச்செய்தியை அளிக்க இயலும்? இன்றைய உலகு கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ற உலகாக மாற வேண்டும் என்றால் மனிதர் என்ன செய்யலாம்? - இவை போன்ற கேள்விகள் இன்றைய கிறித்தவ இறையியல் எழுப்புகின்ற கேள்விகள் ஆகும். அகுமதிய்யா முசுலிம் சமூகம் அகுமதிய்யா முசுலிம் சமூகம் அல்லது அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா ("Ahmadiyya Muslim Community", "Jama'at Ahmadiyya", , "al-Jamā'a al-Ahmadīya al-Muslima", உருது: "احمدیہ جماعت") என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட அகமதியா இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்). இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது. கூற்றங் குமரனார் கூற்றங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை 244 எண்ணுள்ள பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தோழி தலைவியின் நிலையைத் தாய்க்கு அறத்தொடு நின்று எடுத்துரைக்கத் தலைவி ஒப்புதல் தரும் பாடல் இது. அசுணம் வண்டிசையில் மயங்கித் திளைக்கும் நாட்டை உடையவன் தலைவன். தலைவி தோழியிடம் சொல்கிறாள் செயலைத் தளிர்(அசோகந்தளிர்) போன்ற என் மாமை அழகு மாறிப் பசலைநிறம் படர்ந்துள்ளது. இதனைத் தலைவனுக்குச் சொல். அல்லது முருகு அயர முயலும் அன்னைக்கு உண்மையை எடுத்துச் சொல். இந்த இரண்டில் ஒன்றையும் செய்யாமல் இருக்கும் நீ கொடியை என்று தோழியைத் தலைவி தாக்கி எடுத்துரைக்கிறாள். மாரிக்கால முடிவில் கூதளம் பூ பூக்கும் கூதிர் காலத்தில் பூ மணத்தால் தேனிருக்கும் இடத்தை அறிந்த வண்டினம் பாடிக்கொண்டே செல்லும். அந்தப் பாடலின் இசையில் மயங்கி அசுணம் என்னும் விலங்கு கேட்டு மகிழும். இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி, KG, FRS (பிறப்பு 21 சூன் 1982), வேல்சு இளவரசர் சார்லசுவிற்கும் வேல்சு இளவரசி டயானாவிற்கும் பிறந்த முதல் மகனாவார்.ஐக்கிய இராச்சியத்தின் பட்டத்து அரசி எலிசபெத் II மற்றும் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோரின் பேரனும் ஆவார். அவரது தந்தையை அடுத்து ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆட்சித் தலைமைக்கு உரிமை உடையவர். ஐக்கிய இராச்சியத்தின் பல பள்ளிகளில் தமது கல்வியை மேற்கொண்டு இறுதியில் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கல்வி இடைவெளிகளில் சிலி, பெலீசு மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் காலம் கழித்தவர், இராணுவத்தில் சேர்ந்தார்.இவரது இளவலான வேல்சு இளவரசர் ஹாரியுடன் குதிரைப்படையில் துணைநிலை படையதிகாரியாக (lieutenant) பணியாற்றினார். இரண்டாண்டுகள் கழித்து கிரான்வெல் அரச வான்படை கல்லூரியில் வானூர்தி ஒட்டல் பயிற்சி பெற்றார். 2009ஆம் ஆண்டு, வான்படைக்கு மாற்றப்பட்டு பறத்தல் துணைநிலை அதிகாரியாக உயர்வு பெற்றார். அங்கு உலங்கு வானூர்தி பறத்தலில் தேடல் மற்றும் நிவாரணப்படையில் சேரும் எண்ணத்துடன் பயிற்சி பெற்றார். 2010 இலையுதிர்காலத்தில், தமது பயிற்சிகளை முடித்து துணை வானூர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.ஏப்ரல் 29, 2011 அன்று, இவர் தமது நீண்டநாள் தோழி கேட் மிடில்டனை இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் மணந்தார். ச. அ. சாமிநாத ஐயர் ச. அ. சாமிநாத ஐயர் (இறப்பு: 1899) தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பிரும்மஞானர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இவர் தஞ்சை மக்கள் பேரவை (Tanjore Peoples Association) என்கிற கட்சியை துவக்கினார். அமாசு ராப்பப்போர்ட் அமாசு ராப்பபோர்ட் (Amos Rapoport), ஒரு கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைப் பேராசிரியரும் ஆவார். வீடுகளின் வடிவத்துக்கும், பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும், அதன் விளைவாக இவர் 1969 ஆம் ஆண்டில் எழுதிய "வீட்டு வடிவமும் பண்பாடும்" "(House Form and Culture)" என்னும் தலைப்பிட்ட நூலும் பெரிதும் அறியப்பட்டவை. இத்துறையில் ஒரு முன்னோடி ஆய்வான இவரது ஆய்வு கட்டிடக் கலை ஆய்வாளர்களில் கவனத்தை மிகக் குறைவாகவே பெற்றுவந்த குடிசை வீடுகள் முதலியவற்றை உள்ளடக்கிய நாட்டார் கட்டிடக்கலை தொடர்பில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. இது, உயர் பண்பாட்டுகளுக்குரிய கட்டிடங்களை மட்டுமே கட்டிடக்கலையாகப் பார்த்த நிலையை மாற்றி பல்வேறு இன மக்களின் மரபுவழிக் கட்டிடக் கலையின் பால் பலரையும் ஈர்த்தது என்று கூறலாம். அமாசு ராப்பப்போர்ட் போலந்து நாட்டில் உள்ள வார்சோ நகரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்ற ராப்பப்போர்ட், 1954 ஆம் ஆண்டில் கட்டிடக்கலையில் இளநிலைப் பட்டம் (B. Arch) பெற்றார். பின்னர் ரைசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டமும் (M. Arch) பெற்றார். 1962ஆம் ஆண்டில் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து நகரம் மற்றும் பிரதேசத் திட்டமிடலில் பட்டப்பின் பட்டயக் கல்வியும் பெற்றார். 1952 ஆம் ஆண்டிலிருந்து 1961 ஆம் ஆண்டுவரை பல அலுவலகங்களிலும் கட்டிடக்கலைத்துறையில் பணிபுரிந்தார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, பேர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஆசுத்திரேலியாவில் உள்ள சிட்னிப் பல்கலைகழகம், மெல்பேர்ன் பல்கலைக்கழகம், விசுக்கோன்சின் - மில்வோக்கி பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள இவர், இசுரேல், துருக்கி, பெரிய பிரித்தானியா, ஆர்சென்டீனா, பிரேசில், கனடா, மெக்சிக்கோ, பியுட்டோ ரிக்கோ, இந்தியா, சுவிட்சர்லாந்து, போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். துங்கபுரம் துங்கபுரம் ("Thungapuram") தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர்ஊராட்சிஒன்றியம், குன்னம்வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். சுருள் கதவு சுருள் கதவு என்பது, பெரிய அளவு கொண்ட வாயில்களில் அமைக்கப்படும் ஒருவகைக் கதவு ஆகும். உலோகங்களினால் செய்யப்படும் இவ்வகைக் கதவுகளைத், திறக்கும்போது கதவின் படல் மேல்நோக்கிச் சென்று வாயிலுக்கு மேலேயுள்ள தண்டொன்றில் சுருட்டப்படுகின்றது. மூடும்போது இச் சுருள் விரிந்து வாயிலை மறைக்கும் படி கீழ்நோக்கி வரும். பெரிய அளவுள்ள பொருட்களை உள்ளே கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ள தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் போன்ற இடங்களிலும், பெரிய ஊர்திகள் கட்டிடங்களுக்குள் சென்றுவர வேண்டிய இடங்களிலும் சுருள் கதவுகள் பயன்படுகின்றன. வீடுகளிலும் உள்ளே வண்டிகளை நிறுத்தும் இடங்களின் வாயில்களில் சுருள் கதவுகள் பயன்படுவதுண்டு. வழமையான பிணைச்சல்களோடு கூடிய கதவுகளைத் திறந்து மூடுவதற்கு தனியாக இடம் தேவைப்படுகிறது. இவ்விடங்களைப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. சிறிய பிணைச்சல் கதவுகளைப் -பொறுத்தவரை இது பெரிய பிரச்சினையாகக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் பெரிய, அகலமான கதவுகள் தேவைப்படும் இடங்களில் பிணைச்சல் கதவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறுமதியான இடப்பரப்பை வீணாக்கவேண்டி இருக்கும். அத்துடன் அவ்வாறான பெரிய கதவுகளின் நிறையும் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றைத் தாங்குவதற்காக ஒழுங்குகளைச் செய்வதிலும், திறந்து மூடுவதிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரும். சுருள் கதவுகள் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைக்ன்றன. சுருள் கதவுகள், எஃகு, அலுமினியம், துருவேறா எஃகு போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. சாதாரண எஃகுக் கதவுகள் உறுதியானவை ஆனால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம், துருவேறா எஃகு இதற்குத் தீர்வாக அமையும் எனினும், இவ்வுலோகம் விலை கூடியது. அதனால் எல்லா இடங்களுக்கும் பொருத்தமாக அமையாது. அலுமினியத்தினால் செய்யப்படும் கதவுகள் துருப்பிடிப்பதில்லை. விலை சாதாரண எஃகிலும் கூடுதல் எனினும் துருவேறா எஃகை விட மலிவு. ஆனால் எஃகைப்போல் வலுவானது அல்ல. எனவே, தேவைக்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதாவது ஒரு உலோகக் கதவைப் பயன்படுத்துவர். சுருள் கதவின் படல்கள், ஒடுக்கமானதும் நீளமானதுமான உலோகத் தகடுகளைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. ஒடுங்கிய இத் தகடுகலைப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட குறுக்குவெட்டு வடிவத்துடன் கூடிய பட்டிகளாக உருவாக்குவர். இப்பட்டிகளின் நீளப்பக்கங்களை ஒன்றோடொன்று கொழுவிப் படலை உருவாக்க முடியும். பொதுவாக இப்பட்டிகள் 75 சமீ, 100 சமீ போன்ற அகலங்களைக் கொண்டவையாக அமையும். நீளம் கதவின் அகலத்துக்குத் தக்கபடி வேறுபடும். பட்டிகளின் அகலம் குறைவாக இருப்பின் படலைத் தண்டில் இறுக்கமாகச் சுருட்ட முடியும். இப்பட்டிகளில் துளைகள் இட்டு இயற்கை ஒளியும் காற்றும் உள்ளே வருவதற்கு வழி செய்வதும் உண்டு. இவ்வாறான துளைகள் ஊடாக தூசி முதலியன உட்செல்லக்கூடும் என்பதாலும், வளிப்பதனம் செய்யப்பட்ட இடங்களில் அமைக்கப்படும் கதவுகளில் துளைகள் இடமுடியாது என்பதாலும், ஒளியை மட்டும் உள்ளே செல்ல விடும் வகையில் கண்ணாடிகள் இடப்பட்ட மிகச் சிறிய சாளரங்கள் அமைக்கப்படுவதும் உண்டு. வளிப்பதனம் செய்யப்பட்ட இடங்களிக்கான கதவுகள் வெப்பக்காப்புச் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இதனால் சுருள் கதவுகளில் வெப்பக்காப்புச் செய்யப்பட்ட கதவுகளும், வெப்பக் காப்புச் செய்யப்படாத கதவுகளும் கிடைக்கின்றன. வெப்பக்காப்புச் செய்யப்படாத கதவுகளின் படல்கள் ஒற்றைத் தகட்டினால் ஆனவை. வெப்பக்காப்புக் கொண்ட கதவுகளில் பட்டிகள் இரட்டைத் தகடுகளினால் செய்யப்பட்டு இரண்டு தகடுகளுக்கும் இடையே வெப்பக்காப்புப் பொருள் நிரப்பப்படும். இவ்வெப்பக்காப்புப் பொருளின் தடிப்பு 25 மிமீ வரை இருக்கும். தடிப்பு அதிகமானால் படலைத் தண்டில் சுருட்டும்போது சுருள் மிகவும் பெரிதாகிவிடும். இந்திய தேசிய தொழிற் கொள்கை ஒரு நாட்டின் தொழில் கொள்கை என்பது, அந்நாட்டின் தொழில்துறை நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்கான கொள்கைகள், செயல் முறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தக் கூடிய சட்ட திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஆதாரங்கள் பற்றிய கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் பற்றி வரையறுத்துக் கூறுவதாகும். இந்தியாவின் முதல் தொழில்துறைக் கொள்கை தீர்மானம், 1948 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொழில் கொள்கை (Industrial Policy Resolution -1948), கலப்புப் பொருளாதாரத்திற்கு வித்திடுவதாய் அமைந்தது. தனியார் துறைக்கென சில தொழில்களும் பொதுத் துறைக்கென சில தொழில்களும் ஒதுக்கப் பட்டன. தொழில் துறைகள், அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதன்படி தொழில் துறைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டன. அரசாங்கம் தனது முழுப் பொறுப்பில் வைத்திருக்க விரும்பும் தொழில்கள் அட்டவணை - அ (A) ல் வகைப்படுத்தப் பெற்றன. அரசாங்கம் சில தொழில்களில் தானே முதன்மையாக இருக்வேண்டும் என விரும்பியது. இவற்றில் தனியார் நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கலாம். இத்தகைய தொழில்கள் அட்டவணை - ஆ (B) ல் வரிசைப் படுத்தப்பட்டன. ஏனைய தொழில்கள் அனைத்தும் தனியார் துறைக்கு விடப்பட்டன. [அட்டவணை - இ (C)] பதினேழு தொழில் துறைகள் இதில் இடம் பெற்றன பன்னிரு தொழில்கள் இதன் கீழ் வந்தன மேற்கண்ட இரண்டு அட்டவணைகளிலும் வராத பிற தொழில்கள் இதில் இடம் பெற்றன. இவற்றிற்கு தனியாரின் பங்களிப்புகள் வரவேற்கப்பட்டன. தேசிய தொழில்கொள்கை - 1956 (Industrial Policy Statement - 1977) இல் சில விரும்பத்தக்க விடயங்கள் இருந்தாலும் இக்கொள்கையைக் கடை பிடித்ததால் சில முரண்பாடுகளும் தோன்றி உள்ளதாக 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனதா அரசு நினைத்தது. "வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள வேறுபாடு அதிகரித்து விட்டது என்றும் உண்மையான முதலீட்டு விகிதம் குறைந்து விட்டது என்றும் " புதிய அரசு எண்ணியது. எனவே, தொழில்கொள்கை அறிக்கை -1977 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இக்கொள்கையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 1956 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொழில் கொள்கையையே பின்பற்றுவது என்று அரசு முடிவு செய்தது. தொழில்துறை வளர்ச்சியே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. திரு நரசிம்மராவ் தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் தனது தொழில் கொள்கையை வெளியிட்டது. இதன் முக்கிய நோக்கங்கள்: கீழ் காணும் தொழில் துறைகளுக்கு கண்டிப்பாக உரிமம் பெறவேண்டும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் இந்தியா தனக்கு வேண்டிய பொருட்களில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது. முக்கிய அம்சங்கள் : இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அலவுகளின் மீதான தடைகளை நீக்கும் பணி 1991 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதுவரையில் 715 பொருட்களின் மீதான தடைகள் விலக்கப் பட்டுவிட்டன. ஏற்றுமதிக்கு நிகரான பொருட்கள் மற்றும் இடைனிலைப் பொருட்களுக்கு இத் திட்டம் மேலும் நீட்டிக்கப் படுகிறது (ஏற்றுமதிக்கான உற்பத்திப் பிரிவுகள்/ ஏற்றுமதிக்கான தயாரிப்புப் பிரிவுகள்/ மின்னியல் வன்பொருள் தொழில் நுட்பப் பூங்கா/மென்பொருள் தொழில் நுட்பப் பூங்கா) வெளி நாட்டு வாணிபத்திற்கான தலைமை இயக்குனரின் (DGFT) 29 அலுவலகங்களில் விண்ணப்பங்கலளை மென்பொருள் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும். மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெறும் வசதி உருவாக்கப்படும் 2002-07 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் விவசாயத் துறை குடிசைத் தொழில்கள் மற்றும் கைத்தொழில்கள் சிறுதொழில் துறை தோல்பொருட்கள் துறை ஜவுளித் துறை ஆபரணங்கள் மின்னியல் வன்பொருள் பூங்கா இரசாயனங்கள் மற்றூம் மருந்துப் பொருட்கள் திட்டங்கள் வெளினாடுகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களில் ஓராண்டுக்குமேல் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை தடையின்றி இறக்குமதி செய்துகொள்ளும் வசதி இந்தியாவில் பங்குச் சந்தைகள் இந்தியாவில் தற்போது பங்குவர்த்தகம் இரு பெரும் பங்குச்சந்தைகளில் நடை பெறுகிறது. அவை: இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை. இவை தவிர பண்டகப் பொருட்கள் வர்த்தகம் நடக்கும் பண்டச் சந்தைகளும் (commodity exchanges) வேறு சிறு பங்குச் சந்தைகளும் உள்ளன. மும்பையில் உள்ள பங்குத் தரகர்கள் இணைந்து இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பைப் பங்குச் சந்தையைத் தோற்றுவித்தார்கள். 1894 ஆம் ஆண்டில் அகமதாபாத் பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. கல்கத்தா பங்குச் சந்தை 1908 ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது. Securities Contracts (Regulations) Act, 1956. இன் படி கீழ்காணும் பங்குச் சந்தைகள் அங்கீகாரம் பெற்றன: 2011 மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு என்பது சனவரி 22-23, 2011 திகதிகளில் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாநாடு ஆகும். இந்த மாநாட்டை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசிய மாணவர்கள் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம் ஒழுங்கு செய்துள்ளது. இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் வரலாறும், வாழ்வியலும் சிறப்பாக ஆய்வு செய்யப்பபட்டது. தமிழ் செம்மொழி அகவை திருத்த மாநாடு தமிழ் செம்மொழி அகவை திருத்த மாநாடு என்பது கோலாம்பூரில் இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழி 1,5000 ஆண்டுகள் பழமையானது என்ற வரையறையை எதிர்த்தும், தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றதை வலியுறுத்தியும் தமிழ் ஆவலர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் வேண்டுகோள்கள் இந்திய ஒன்றிய அரசு, தமிழக அரசு, மலேசிய இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு முன்வைக்கப்பட்டது. மலேசிய இந்திய காங்கிரசு மலேசிய இந்திய காங்கிரசு ம.இ.கா ("Malaysian Indian Congress" அல்லது ’’MIC’’) என்பது மலேசியாவில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிஙப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் “மலாயா இந்தியர் காங்கிரஸ்” என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.கா. மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.ம.இ.காவைத் தோற்றுவித்த ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.தமிழர்களின் கல்வித் தகுதிக்குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன. பூத் சிங் ம.இ.கா. தலைவராக இருந்த காலத்தில் "Malayan Union" எனும் மலாயா ஒன்றியத்தில் சேர்வதற்கு மலாயா இந்தியர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பிரித்தானியர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்த கசப்புணர்வுகளே காரணம் ஆகும்.ம.இ.காவின் மூன்றாவது தலைவர் கே.இராமநாதன் காலத்தில், ம.இ.காவில் பொதுவான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது.1951 ஆம் ஆண்டு ம.இ.கா.வின் நான்காவது தலைவராக கே.எல்.தேவாசர் பொறுப்பு ஏற்றார். மலேசிய அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் கூட்டுறவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார். அதனால் மலாய்க்காரர்களின் அம்னோ கட்சி, சீனர்களின் ம.சீ.ச. கட்சியுடன் இணைந்து போகும் தனமைகளை முன் நிறுத்தினார். 1952 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட ம.இ.காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.டத்தோ ஓன் ஜாபார் தலைமையில் மலாயா சுயேட்சை கட்சியில் "Independent Malayan Party (IMP)" ம.இ.கா இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிட்டின.1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் பொறுப்பேற்ற பிறகு ம.இ.கா.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு பரந்த அடிப்படையில் ம.இ.கா. புதுத் தோற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31ஆம் நாள் மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. அந்த மெர்டேகா சுதந்திர ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. அதில் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார். இந்தக் காலக்கட்டத்தில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டவர் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.அதனால் பல ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் நின்றனர்.நடுத்தெருவிற்கு வந்து நின்ற தமிழ்க் குடும்பங்கள் ஆயிரம் ஆயிரம். இதைப் பார்த்த முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் தோட்டத் துண்டாடல் சட்டத்தையும் நிறைவேற்றினார். மலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மலேசிய இந்தியர்களின் நலன்களில் அதிகமாகக் கவனம் செலுத்திய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகும்.தோட்டங்கள் துண்டாடப் பட்டதினால் இந்திய இனம் தடுமாறிப் போய் நின்றக் கட்டத்தில் ம.இ.கா. தீவிரமாகக் களம் இறங்கியது. துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார்.அல்லும் பகலும் அலைந்து பணத்தைச் சேர்த்தார். அரசாங்கச் சலுகைகளைப் பயன் படுத்தவில்லை. அத்துடன் அரசாங்க வாகனங்களையும் பயன் படுத்தவில்லை. தன் சொந்த வாகனங்களைப் பயன் படுத்தினார். அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் "National Land Finance Cooperative Society (NLFCS)" எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது. துன் சம்பந்தனின் தன்னலமற்ற சேவைகளினால் ஆயிரம் ஆயிரம் இந்தியர் குடும்பங்கள் இப்போது நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. துன் சம்பந்தன் அவர்களை மலேசிய இந்தியர்கள் கர்ம வீரர் காமராசராக நினைக்கின்றார்கள். மலேசியாவில் Bank Buruh எனும் தொழிலாளர் வங்கி உருவாவதற்குக் காரணமாக இருந்தவரும் துன் சம்பந்தன் அவர்களே.1973ஆம் ஆண்டில் இருந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பணியாற்றி வருகின்றார். வீட்டு வடிவமும் பண்பாடும் (நூல்) வீட்டு வடிவமும் பண்பாடும் (House Form and Culture) என்பது கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியருமான அமாசு ராப்பப்போர்ட் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல் ஆகும். பிரென்டிசு-ஆல் பண்பாட்டுப் புவியியல் தொடரின் ஒரு பகுதியாக இந்நூல் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. உலகெங்கிலும் வாழும் பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்தில் இருக்கும் வீடுகளின் வடிவங்களைப் பண்பாட்டுக் காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதை இந்நூல் நிறுவமுயல்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் அறுபதுகளில், உலகம் முழுவதிலும் உள்ள சாதாரண மக்களுடைய கட்டிடங்களைக் கட்டிடக்கலையின் ஆய்வுப் பரப்புக்குள் கொண்டு வருவதில் இந்நூலின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகள் ஒரு சூழல் வடிவமைப்பாளரின் நோக்கில், தொடக்கநிலை மற்றும் நாட்டார் கட்டிடங்கள், குடியிருப்புக்கள் என்பவை தொடர்பில் செய்த ஆய்வுகளின் விளைவே இந்நூல் என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இத்தகைய கட்டிடங்களை உருவாக்கும் காரணிகள் அவற்றுக்குத் தெளிவானவையும், அடையாளம் காணத்தக்கவையுமான இயல்புகளை அளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அவற்றிலிருந்து தற்காலத்துக்குத் தேவையான பாடங்களைப் பெற்றுக்கொள்வதே ஆசிரியரது நோக்கமாகக் காட்டப்படுகிறது. வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்னும் கேள்விக்கு விடையாகப் பல்வேறு காரணிகளை முன்வைத்துக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. தட்பவெப்ப நிலையும் அதன் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையுமே வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கிறது என்பது ஒரு கொள்கை. கட்டிடப் பொருட்கள், கட்டுமானமுறை, தொழில்நுட்பம் என்பனவே இக் காரணிகள் என்பது இன்னொரு கருத்து. கட்டிடக்களம், பாதுகாப்புத் தேவைகள், பொருளாதாரம், சமயம், என்பவற்றையும் இத்தகைய காரணிகளாக முதன்மைப்படுத்திய கோட்பாடுகள் உள்ளன. இக் காரணிகள் வீட்டு வடிவத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் ராப்பப்போர்ட், முதன்மைக் காரணியாக விளங்குவது பண்பாடே என்கிறார். உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல சமுதாயங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி எடுத்துக் கொண்ட பொருளை விளக்குகிறது இந்த நூல். அரைப்பேரச்சு பேரச்சு என்பது ஒரு நீள்வட்டத்தின் பெரிய விட்டமாகும். விட்டமானது அதன் குவியங்கள் மற்றும் மையத்தின் ஊடாக செல்லும் கோடாகும், இது நீள்வட்டத்தின் மிக அகலமான அமைப்பில் முடியும்.அரைப்பேரச்சு ("semi-major axis") என்பது இதன் அரைவாசி ஆகும். ஆகவே இது மையத்திலிருந்து நீள்வட்டத்தின் குவிய விளிம்புக்கான தூரமாயிருக்கும். கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது . இயேசு கிறித்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை என்னும் இக்கட்டுரை உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது. கிரேக்கத்தில் "எக்ளேசியா" (ekklesia - ἐκκλησία) என்றும் இலத்தீனில் ecclesia என்றும் அமைந்த மூலச் சொல்லுக்கு "மக்கள் கூட்டம்/குழு/அவை/சபை" (assembly, congregation, church community) என்பது பொருள். ஆங்கிலத்தில் church என்றுள்ள சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்த "cirice" என்னும் சொல்லின் திரிபு. அச்சொல் "kirika" என்னும் மேற்கு செர்மானிய மூலத்திலிருந்து வருவது. அதற்கும் அடிப்படையாக இருப்பது கிரேக்க மூலம். கிரேக்க மொழியில் kurios (κύριος) என்பது "ஆண்டவர்", "தலைவர்", "மேல்நர்" என்னும் பொருள்தரும். இச்சொல் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு கிறித்துவைக் குறிக்க கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. "ஆண்டவராகிய இயேசு கிறித்துவைச் சார்ந்தவர் குழு/சபை" என்பது கிரேக்கத்தில் ekklēsia kuriakē (ἐκκλησία κυριακή =congregation of the Lord). இவ்வாறு church என்னும் சொல் "திருச்சபை" என்றும், திருச்சபையினர் கூடி வந்து வழிபாடு நடத்துகின்ற "கோவில்" என்றும் இருபொருள்கள் பெறலாயிற்று. கத்தோலிக்க என்னும் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து வருவதே. இலத்தீனில் catholicus என்பதன் கிரேக்க மூலம் katholikos (καθολικός). அதன் பொருள் "பொதுவான", "எங்கும் பரந்த", "அனைத்தையும் உள்ளடக்குகின்ற" என்பது. உரோமையை மைய இடமாகக் கொண்ட கிறித்தவ திருச்சபை "கத்தோலிக்க" என்னும் பெயரைத் தன் அடைமொழியாகக் கொண்டது. எனவே அத்திருச்சபை உரோமை கத்தோலிக்க திருச்சபை" (Roman Catholic Church = R.C. Church) என்னும் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இன்றைய உலகில் கத்தோலிக்க திருச்சபையே பிற கிறித்தவ சபைகளைவிட விரிந்து பரந்து காணப்படுகிறது. அதன் தலைவராகிய போப்பாண்டவரும் உலகறிந்த தலைவராக உள்ளார். இக்கட்டுரையில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சிகள் கால வரிசையில் (Timeline) பட்டியலிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகளே குறிக்கப்படுவதால் இந்தியா , இலங்கை போன்ற தனி நாடுகளின் திருச்சபை வரலாறு பற்றிய விவரமான வரலாற்றினை வேறு இடங்களில் காணலாம். இயேசு கிறித்துவால் தோற்றுவிக்கப்பட்ட சபை திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. அத்திருச்சபை கத்தோலிக்க திருச்சபையில் உறைகிறது என்பது கத்தோலிக்க கொள்கை. பிற கிறித்தவ சபைகளிலும் கிறித்தவக் கொள்கைகளும் பண்புகளும் உள்ளன என்பதைக் கத்தோலிக்கர் மறுப்பதில்லை. என்றாலும், தன்னகத்தே கிறித்தவ வெளிப்பாட்டின் முழுமை உள்ளது என்பது கத்தோலிக்க சபையின் உறுதிப்பாடு. கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது, இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையில் அவ்வப்போது பெரும் பிளவுகள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம். கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்: (தொடர்ச்சி): தமிழ்வாணன் தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார். . வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "துணிவே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார். தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து சவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார். இவருடைய ஒரு பக்க கட்டுரைகள் இன்றும் பிரபலமானவை. குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள். கலோரி கலோரி (Calorie) அல்லது கனலி என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு ஒரு கனலி ஆகும். தற்போது வெப்பம் அல்லது ஆற்றல் ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொருத்து அமையும். நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனலியை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு கிராம் புரத உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு கிராம் கொழுப்பு உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது. 10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும். உடலின் முக்கிய எரிபொருட்களாக மாவுச் சத்து, ஸ்டார்ச்சு, சர்க்கரை ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும். பொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு. எசாயா (நூல்) எசாயா ("Isaiah") என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். எசாயா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יְשַׁעְיָהו (Yeshayahu) எனவும், கிரேக்கத்தில் Ἠσαΐας (Ēsaïās) எனவும், இலத்தீனில் Isaias எனவும் ஒலிக்கப்படும். எசாயா என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது. இந்நூலின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பு இசையாஸ் ஆகமம் அல்லது ஏசாயா என்னும் பெயர் கொண்டிருந்தது. எசாயா கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்தவர். அவர் சிறப்பான முறையில் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர். எசாயா என்னும் மாபெரும் இறைவாக்கினர் பெயரால் வழங்கப்படும் இந்நூலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இக்காலத்தில் தென் நாடாம் யூதா வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் யூதாவுக்கு வரவிருந்த அழிவுக்கு, அசீரியாவின் ஆற்றலைவிட, அந்த நாடு கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே உண்மையான காரணம் என்று எசாயா உணர்ந்தார். எனவே அவர் எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களாலும், அம்மக்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடாவிடில் இருளும் அழிவுமே காத்திருக்கின்றன என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார். இப்பகுதி யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புது வாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இசுரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு வலியுறுத்தப் பெறுகின்றன. இப்பகுதியில் காணப்பெறும் "ஆண்டவரின் ஊழியன்" பற்றிய பாடல்கள் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்த பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இசுரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலுயுறுத்தப்படுகின்றது; நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம் பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது. எசாயா 49:15-16
"ஆண்டவர் கூறுவது இதுவே:
பால்குடிக்கும் தன் மகவைத்
தாய் மறப்பாளோ?
கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது
இரக்கம் காட்டாதிருப்பாளோ?
இவர்கள் மறந்திடினும்,
நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை
நான் பொறித்து வைத்துள்ளேன்." விக்கிமூலத்தில் எசாயா நூல்
பரமேசுவரா பரமேசுவரா ("Parameswara", 1344-1414) மலாக்கா பேரரசை உருவாக்கியவர். 1389 இல் இருந்து 1398 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவருடைய மற்ற பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா. இவர் துமாசிக் எனும் இடத்தில் இருந்து வந்து மலாக்காவை 1402-இல் உருவாக்கினார். துமாசிக்கின் புதிய பெயர் சிங்கப்பூர். பரமேஸ்வரன் (परमेश्वर) எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன். மலாக்கா வரலாற்றைப் பற்றி இதுவரையிலும் மூன்று பதிவுகள் மட்டுமே சான்றுகளாகக் கிடைத்து உள்ளன.Historical records referring to Parameswara are attributable to 3 sources முதலாவது பதிவு கோர்டின்கோ டி எரேடியா "(Gordinho D'Eredia)" எனும் போர்த்துகீசிய மாலுமியின் பதிவு. 1600 ஆம் ஆண்டு வாக்கில் பதியப் பட்டது. அதில் பரமேஸ்வரா எனும் பெயர் பெர்மிச்சுரி "(Permisuri)" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்தப் பதிவு செஜாரா மெலாயு "(Sejarah Melayu - Malay Annals)". மலாக்கா பேரரசு உச்சத்தில் இருந்த போது மலாக்காவில் என்ன நடந்தது என்பதை அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளில் காண முடிகிறது. இருப்பினும் அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளை 1612 ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகம் மறுதொகுப்புச் செய்தது. மலாக்கா எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது; மலாக்காவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு; மலாக்கா எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், பரமேஸ்வரா எனும் பெயர் செஜாரா மெலாயுவின் எந்த ஓர் இடத்திலும் இடம் பெறவில்லை. ஆகவே, செஜாரா மெலாயு மறுதொகுப்புச் செய்யப்பட்டதால் வலுவான சான்றுகள் தேக்க நிலையை அடைகின்றன. அடுத்தப் பதிவு சுமா ஓரியண்டல் "(Suma Oriental)" எனும் பதிவு. 1513 ஆம் ஆண்டு பதியப்பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் "(Tom Pires)". இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது. பரமேஸ்வரா என்பவர் ஸ்ரீ விஜயா பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவை செக்குயிம் டார்க்சா "(Xaquem Darxa)" என்றும் மொடவார்க்சா "(Modafarxa)" என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார். ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு, 14-ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன. ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன. திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடமிருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவிலிருந்து விரட்டப் பட்டது. ஜாவாவில் சிங்கசாரி எனும் ஓர் அரசு உருவானதும் ஸ்ரீ விஜயா பேரரசுவின் செல்வாக்கு சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது. சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது. இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்: இந்தச் சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி என்று அழைக்கப் படுகின்றது. பின்னர், ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கிலிருந்து மலாயுவிற்கு மாற்றியது. இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும், மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர், ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர், பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன், பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தக் கட்டமாகப் பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்குச் சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரை தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். இவரைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்தது. 1324-இல் பிந்தான் தீவிலிருந்து வந்த நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். இதனால் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் எனும் பெயரில் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. உருவாக்கியவர் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் எனும் ஊராட்சி நீல உத்தமனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1403-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக நியமனம் செய்தார். அதைச் சீனா ஏற்றுக் கொண்டது. நீல உத்தமனுக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவானா "(Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana)" எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது. நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். அந்தச சமயத்தில் சிங்கப்பூர் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் காலக் கட்டத்தில் மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல் அமைந்தது. ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார். மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். அப்படி போய்க் கொண்டு இருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்தச் செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது. அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுந்ததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசி மாலிக் உல் சாலி (Malik ul Salih)என்பவரைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல். பரமேஸ்வரா இறக்கும் வரையில் ஓர் இந்துவாக வாழ்ந்தார். மறைந்தும் போனார். ஆனால், தன்னுடைய குடிமக்களை மற்ற சமயங்களில் சேர்வதற்கு ஆதரவு வழங்கினார். பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் உள்ளது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414 இல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார். சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று அழைக்கப் பட்டார். அவரைப் பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டு இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரைச் சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார். 1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது. இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது. ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல். அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார். ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர். சீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன. பரமேஸ்வரா சில முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே (r. 1402–1424)(சீன மொழியில்: 永樂) எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார். பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்கள் செங் ஹோ என்பவரும் இங் சிங் என்பவரும் மலாக்கா வந்துள்ளனர். சீனா-மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா பாதுகாவலராக விளங்கியது. அதனால் சியாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கியது. 1411 ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று யோங்லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டினார்கள். பரமேஸ்வரா சீனாவிற்கு வந்து அடைந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு நல்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்பு ஏடுகள் மிங் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளில் காணப் பெறலாம். சீன மொழியில் எழுதப் பட்டிருப்பதின் ஆங்கில மொழியாக்கம்: மேலே காணப்படுவதின் தமிழாக்கம் மிங் அரசருக்கு மலாக்கா வழங்கிய அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள். பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு: தமிழ்நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரி, துருக்கி, குஜாராத், கோவா, மலபார், ஒரிசா, ஸ்ரீ லங்கா, வங்காளம், சயாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத்தீவுகள். 16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் "“யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்”" என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும். பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான். வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான். அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது. மலாக்காப் பேரரசு தென்கிழக்காசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர். மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்காசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன. 1447 இல் கர்த்தாவிஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார். மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தாவிஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459 இல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது. 1470 இல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளிலிருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர். பதிப்பிக்காமல் விட்டுச் செல்லப் பட்ட பலேம்பாங் அரச வரலாற்றுப் பதிவேடுகளிலிருந்து கிடைத்த ஆவணங்கள். தெற்கு கன்னடம் மாவட்டம் தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பட்டத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது. ஏ. எல். நஜிமுத்தீன் ஏ. எல். நஜிமுத்தீன் (பிறப்பு: நவம்பர் 23, 1953) இலங்கை எழுத்தாளரும், ஆய்வாளரும், நூலாசிரியருமாவார். நஜீமுத்தீன் மாத்தளை அரசினர் ஆண்கள் பாடசாலை, மாத்தளை சாகிராக் கல்லூரி, மாத்தளை புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முதலியாராகக் கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இவரின் மனைவி மிஸ்ரியா. இவரின் பிள்ளைகள் நஸ்மினா, நாசிக் அஹமட், பாத்திமா ஹப்ஸா, ஆயிசா ஹானி. இவரின் முதல் சிறுகதை 1972 இல் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து பல சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாடல்கள் பற்றி இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளிவரும் சினிமா மாத இதழில் தொடராக வெளிவந்தன. ஆரம்பகாலத்தில் அறிவியல் கதைகள் புனைவதிலும் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தற்போது முஸ்லிம் சமூகத்தின் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். மலேசியத் தமிழர் அமைப்புகள் பட்டியல் படலை படலை என்பது மதில் அல்லது வேலியால் சூழப்பட்ட ஒரு இடத்துக்குள் நுழைவதற்கான வாயிலை அல்லது அவ்வாயிலில் திறந்து மூடத்தக்கவகையில் அமைக்கப்படும் கதவைக் குறிக்கும். படலை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைவதையோ வெளியேறுவதையோ கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது. படல் என்பதற்கு "பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு", "மறைப்புத் தட்டி" என்று பொருள் தருகிறது மதராசுப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி. படலை என்னும் சொல்லும் படல் என்பதிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும். முற்றப் படலை படலைப் பந்தல் பூப் பறித்துப் போடும் கூடை பூமாலை முற்காலத்தில் படலைகள் பனை ஓலை, பனம் மட்டை, மரக்கழிகள் போன்றவற்றைப் பிணைத்துக் கட்டுவதன் மூலம் அமைக்கப்படன. இன்றும் இவ்வாறான படலைகளைக் காண முடியும் ஆயினும் தற்காலத்துப் படலைகள் மரப்பலகை, இரும்பு, அலுமினியம் போன்றவற்றால் செய்யப்படுகின்றன. கொன்றுண்ணல் சூழலியலில் கொன்றுண்ணல் அல்லது இரை பிடித்துண்ணல் (predation) என்பது, தாக்கப்படும் உயிரினமான ஒரு இரைக்கும் (prey), தாக்கும் உயிரினமான ஒரு இரை பிடித்துண்ணி அல்லது கொன்றுண்ணிக்கும் (predator) இடையிலான உயிரியல் தொடர்பு என விளக்கப்படுகின்றது. கொன்றுண்ணிகள் உண்பதற்கு முன் இரையைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் விடலாம். ஆனாலும் இரை பிடித்துண்ணும் செயல் முறையில் இரையானது இறுதியில் இறப்புக்குள்ளாகி, அவற்றின் இழையங்கள் இரை பிடித்துண்ணியினால் உட்கொள்ளப்பட்டுவிடும். இன்னொரு வகை இறந்த உயிர் எச்சங்களை உண்ணுதல் (பிணந்தின்னல்) ஆகும். இவ்விரு உண்ணும் நடத்தைகளையும் வேறுபடுத்துதல் சில சமயங்களில் கடினமானது. எடுத்துக் காட்டாகச் சில ஒட்டுண்ணிகள் ஓம்புயிர்களில் உணவைப் பெற்றுக்கொண்டபின் அவற்றின் இறந்த உடல்களில் இளம் ஒட்டுண்ணிகள் உணவு பெறுவதற்காக அங்கேயே முட்டைகளையும் இடுகின்றன. கொன்றுண்ணலின் முக்கியமான இயல்பு, இரை உயிர்களில் கொன்றுண்ணிகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். பிணந்தின்னிகள், கிடைப்பதை உண்கின்றனவேயன்றி உண்ணப்படும் உயிரினங்களில் நேரடியான தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவது இல்லை. கொன்றுண்ணி வகைப்பாடுகள் எல்லாவற்றினதும் பொது அம்சம், கொன்றுண்ணிகள், இரை உயிரினத்தின் வாழ்திறனைக் குறைக்கின்றன என்பதாகும். அதாவது கொன்றுண்ணல், இரையுயிர்களின் வாழுவதற்கான வாய்ப்புக்களையோ, இனம் பெருக்குவதற்கான வாய்ப்புக்களையோ அல்லது இரண்டையுமோ குறைக்கின்றது. எந்த அளவுக்குக் கொன்றுண்ணிகள் தமது இரையுயிர்கள் மீது உணவுக்காகத் தங்கியுள்ளன, அவற்றுடன் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளன என்னும் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துவது சூழலியலாளருக்குப் பயன்படக்கூடியது. கொன்றுண்ணிகள் எதை உண்கின்றன என்பதில் கவனம் செலுத்துவதை விட அவை எந்த முறையில் உணவு பெறுகின்றன என்பதும், அவற்றுக்கும், இரையுயிர்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளும் இவ் வகைப்படுத்தல் முறைக்கு அடிப்படையாக அமைகின்றன. உண்மையான கொன்றுண்ணலில் ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தைக் கொன்று உண்கின்றது. இதில், இரையுயிர் உடனடியாகவே இறந்துவிடுகிறது. சில கொன்றுண்ணிகள் இரைக்காக அவற்றைத் தேடிச் சென்று வேட்டையாடுகின்றன. வேறு சில, மறைந்து தாக்கும் கொன்றுண்ணிகள் போல, இரைகள் தாக்கும் தொலைவில் வரும்வரை ஒரே இடத்தில் காத்திருக்கின்றன. சில கொன்றுண்ணிகள், உண்பதற்கு முன் இரையைத் துண்டுதுண்டாகப் பிய்த்து விடுகின்றன. வேறு சிலவோ முழு இரையையும் முழுதாகவே விழுங்குகின்றன. முதல் வகைக்குச் சிங்கம் போன்றவற்றையும் இரண்டாவது வகைக்குப் பாம்பையும் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சில முறைகளில், இரை, கொன்றுண்ணியின் வாயில் அல்லது சமிபாட்டுத் தொகுதியிலேயே இறக்கிறது. காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறைக் கண்காணிப்பாளர் என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார். வருவாய் கோட்டம் இந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் ("REVENUE DIVISION") அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக துணை ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் "துணை ஆட்சியர்" என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் "வருவாய்க் கோட்ட அலுவலர்" என்றும் அழைக்கப்படுகிறார். வருவாய் கோட்டாட்சியரின் கடமைகளையும், பொறுப்புகளையும், வருவாய் துறை நிர்ணயம் செய்துள்ளது. வட்டம் (தாலுகா) வட்டம் அல்லது தாலுகா இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில மண்டல துணை வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும், எழுத்தர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படுகிறது. மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு கூகைக் கோழியார் கூகைக் கோழியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 364 எண் கொண்ட பாடலாக உள்ளது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இவருக்கு இவரது பாடலிலுள்ள 'கூகைக் கோழி' என்னும் பெயரைக்கொண்டு இவருக்குக் கூகைக் கோழியார் என்று பெயர் சூட்டியுள்ளார். காஞ்சி என்னும் சொல் நிலையாமையைக் குறிக்கும். பெருங்காஞ்சி என்பது பெரிய நிலையாமை அதாவது கையறவைக் குறிக்கும். கையறவு என்பது ஒருவர் காலமான நிலை. யாருடைய கையறவை இவர் பாடியுள்ளார் என்னுமிடத்திலுள்ள எழுத்து செல்லரித்துப்போய் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. காலமான அந்த வள்ளல் பாடினி அணிந்துகொள்ள வாடாமல் இருக்கக்கூடிய பொன்மாலைகளைப் பரிசிலாக வழங்கினானாம். பாணர்களுக்குத் தாமரை வழங்கினானாம். அந்தத் தாமரை கேணியில் பூக்காத பூவாம். தீக்கொழுந்து எரிவது போல் இருக்குமாம். தீயில் சுட்டெடுத்த ஆட்டுக்கறித் துண்டுகளும், நறவுக் கள்ளும் நாவுக்குச் சுவையாகத் தருவானாம். பெற்றவர்கள் கள்ளை உண்டும், கறியைத் தின்றும் மகிழ்வதோடு மற்றவர்களுக்கு வழங்கியும் மகிழ்வார்களாம். அந்த அளவுக்கு மிகுதியாகத் தருவானாம். கிடைந்நதற்கு அரியனவற்றை அவன் உரிமையாக்கித் தருவானாம். இவன் இறந்த பின் இவனது உடலை வெளியில் எறியாமல் தாழியில் இட்டுப் புதைத்துவிட்டார்களாம். அதனால் கூகைக்கோழி மனம் தாங்க முடியாமல் அமைதியின்றிப் புழுங்கிற்றாம். எஸ். எம். ஏ. ஹசன் எஸ்.எம்.ஏ. ஹசன் (பிறப்பு: மே 27, 1927) இலங்கை எழுத்தாளரும், ஆய்வாளரும், கல்வியியலாளரும், நூலாசிரியருமாவார். எஸ்.எம்.ஏ. ஹசன் இலங்கையில் ஒரு ஓய்வுபெற்ற கல்வியியலாளரும், எழுத்தாளரும், நூலாசிரியருமாவார். மே 27, 1927ஆம் ஆண்டு கண்டியில் ஹீரஸ்ஸகல எனும் பிரதேசத்தில் பிறந்த இவர், ஹனா எனும் துணைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் மனைவி சித்தி சர்தாபி ஹசன். இவரது பிள்ளைகள் ஜெய்னுல் இம்ரானி, முஹம்மத் ரூமி, முஹம்மத் ரிஸ்மி. இவரது முதல் ஆக்கம் 1944ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. 1958, 1964 காலப்பகுதியில் கண்டி மாவட்ட வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் வாரந்தோறும் வெளிவந்த இஸ்லாமிய உலகம் எனும் பகுதிக்கு பொறுப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். தொழில் ரீதியாக பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய இவர், ஓய்வுபெறும்போது கண்டி மாவட்ட கல்விப் பணிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரால் எழுதப்பட்ட கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் எனும் திறனாய்வு நூலுக்கு 1975ம் ஆண்டு சாகித்தியமண்டலப் பரிசு கிடைத்தது. பனிக்குருடு பனிக்குருடு "(snow blindness)" என்பது பனியடர்ந்த பகுதிகளில் பனியால் எதிரொளிக்கப்படும் புற ஊதாக்கதிர்களை (UV rays) வெறும் கண்களால் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினையைக் குறிக்கும். பொதுவாக இந் நோயின் அறிகுறிகள் சில மணி நேரங்கள் கழித்து தான் ஆரம்பிக்கும். அத்தோடு இரண்டு மூன்று நாட்களுக்குள் தானாகவே இந்த அறிகுறிகள் மறைந்து விடும். கண்வலி, எரிச்சல், கண்ணீர் வடிதல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கூசுதல் (photophobia) முதலியன. ஒளிரும் சாயத்தைப் பயன்படுத்தி விழிவெளித்திரையில் உள்ள புண்களைக் கண்டறியலாம். நோயரை மேலும் வெளிச்சத்திற்கு உட்படுத்தக் கூடாது. இரண்டு மூன்று நாட்களுக்கு குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும். வலி நிவாரணி மருந்துகளைத் தரலாம். ஆரம்பத்தில் உணர்வு மரக்கச் செய்யும் மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றின் நீடித்த பயன்பாடு புண் ஆறுவதைத் தாமதப்படுத்தும். பந்த் பந்த் அல்லது துளுநாட்டு சத்திரியர் (துளு: ಬಂಟರ; கன்னடம்: ಬಂತವರು) என்றழைக்கப்படுவோர் துளு மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் துளுநாட்டைச் சேர்ந்தவர்கள். பந்த் என்றால் துளு மொழியில் வீரர் என்று பொருள். பந்துகள் இந்து மதத்தினர் ஆவர். இவர்களின் முதல் தெய்வம் ஆதி சக்தி எனினும், பிற தெய்வங்களான சிவன், விஷ்ணுவையும் வணங்குகின்றனர். மேலும் வினாயகர், கிருட்டினன், முருகன், மாரியம்மன் போன்ற கடவுள்களையும் வணங்குவர். அனைத்து கடவுள்களும் ஆதி சக்தியின் வடிவமே என்று எண்ணுகின்றனர். இவர்கள் தங்கள் நாடான துளுநாடு பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்புகின்றனர். இவர்களின் அடிப்படை உணவு அரிசி உணவாகும். மீன் போன்ற அசைவ உணவுகளையும் உண்பர். கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இந்த பந்த் மக்களின் பாரம்பரிய வீடுகளான குத்தூ வீடுகள் புகழ்பெற்றவை. சேலம் பா. அன்பரசு சேலம் பா. அன்பரசு (பி. செப்டம்பர் 6, 1942 - 2009) ஒரு தமிழக எழுத்தாளர். சேலத்தைச் சேர்ந்தவர். கல்வெட்டு, வட்டார வரலாறு, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுப் பல நூல்களை எழுதியுள்ளார். தகடூர் (தருமபுரி) அதியமான் பெருவழி நாவல்தாவளத்துக்குக் காதம் 27 என்பதைக் காட்டும் மைல்கல்லைப் புலவர் மா.கணேசன் உதவியுடன் 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். மனஓசை (இதழ்) மனஓசை 1981 முதல் 1991 வரை தமிழில் வெளிவந்த இடதுசாரி இயக்க இலக்கிய இதழ். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி) என்னும் மார்க்சிய-லெனினியக் கட்சியின் கலை இலக்கிய மக்கள் திரள் அமைப்பான 'மக்கள் கலாச்சாரக் கழகம்' இந்த இதழை நடத்தியது. பத்து ஆண்டுகளாகச் செயல்பட்ட இவ்விதழுக்கு நிரந்தரமாய் ஓர் ஆசிரியர் குழு தொடரவில்லை. ஆசிரியர் குழுவின் சேர்மானம் குறைந்தும் கூடியும் தொடர்ந்தது. ஆரம்பம் முதல் பங்கேற்றவர் சூரியதீபன் என்கிற பா. செயப்பிரகாசம் ஆவார். நீண்ட காலமாக ஆசிரியர் குழுவில் சுரேஷ் என்கிற பேராசிரியர் சீனிவாசன், வசந்தன், சங்கர் என்கிற திருஞானம், இளமுருகு என்கிற பெருமாள்முருகன் ஆகியோர் அங்கம் வகித்தனர். 1970களின் பிற்பாதியில் மனஓசை என்னும் பெயரில் இதழைத் தொடங்கி நடத்தியவர் முல்லை அம்பரீடன் என்பவர் ஆவார். அவரிடம் அனுமதி பெற்று மக்கள் கலாச்சாரக் கழகம் இப்பெயரைப் பயன்படுத்திக் கொண்டது. நெற்குத்திப் பாடல் நெற்குத்திப் பாடல் எனப்படுவது பழங் காலத்தில் உணவுக்காக நெல்லினை உரலில் குத்தும் போது உடற்களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடப்படும் பாடல்கள் ஆகும். இயற்கைத் தேர்வு இயற்கைத் தேர்வு ("natural selection") என்பது சுற்றுச்சூழலின் பண்புகளைப் பொறுத்து ஒரு சனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள், மற்றும் மரபியல் குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது அறிவியல் சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் சார்லஸ் டார்வின் என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே பரிணாம வளர்சிக்கான ஒரு மத்திய பொறிமுறை. எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த சந்ததிகளூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு உயிரினம் தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் உயிரணுக்களின் மூலக்கூற்று உயிரியல், ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும். இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும். இயற்கைத் தேர்வு (Natural selection) என்ற சொற்பதம் முதன் முதலில் சார்ல்ஸ் டார்வினால் அவர் 1859 இல் எழுதிய உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) என்ற நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கைத் தேர்வானது இயற்கைச் சூழலிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை வெற்றியை நிர்ணயிக்கும் செயற்பாடாகும். உதாரணமாக வேகமாக ஓடும் முயலால் இரைகௌவிகளிடமிருந்து தப்பி வாழ முடியும். காலப்போக்கில் வேகமாக ஓட முடியாத முயல்கள் இரைகௌவிகளிடம் பிடிபட்டு கொன்றுண்ணலால் அழிவடைய வேகமாக ஓடும் முயல்களின் இனப்பெருக்கத்தால் உருவாகும் முயல்களே தப்பும். எனவே முயல் கூட்டமொன்றில் வேகமாக ஓடும் முயல்களின் மரபணு நிலைத்திருத்தல் இயற்கைத் தேர்வுக்கு உதாரணமாகும். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth ("Biston betularia") எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica அல்லது betularia எனப்படும் வெளிர் நிற வகையும், carbonaria எனப்படும் கருமை நிற வகையும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் மரங்களிலுள்ள பாசிக்காளான்களின் (Lichen) வெளிர் நிறத்தையொத்த அந்துப்பூச்சியின் வகை அதிகளவில் காணப்பட்டது. இதற்குக் காரணம் மரத்தண்டிலுள்ள பாசிக்காளான்களின் நிறத்தோடு ஒத்திருந்ததால், வெளிர் நிறமானவை பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ந்த கைத்தொழில் புரட்சியின் பின், திடீரென ஏற்பட்ட தொழிற்சாலைகளின் மாசினால், மரத்தின் தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் கருமை நிறம் கொண்ட தனியன்கள் மான்செஸ்டர் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில், 1895 ஆம் ஆண்டளவில், இந்த அந்துப்பூச்சியில், 98 % கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் மிகவும் விரைவான மாற்றமாகும். சூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே மரபணு இருக்கையில் அமைந்துள்ள ஒரு மரபணுவின் இரு மாற்றுரு வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான மாற்றுரு ஆட்சியுடையதாக மாற்றம் பெற்று விட்டது. ஐரோப்பாவில் உள்ள இந்த உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமாக ("insularia") உருவாகியுள்ளதாகவும், அது வேறு மாற்றுருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது. கருமை நிறத்திற்குரிய மாற்றுரு சூழல் மாசு நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல் மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாக பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற மாற்றுருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது. இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது. மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் பூச்சியுண்ணும் பறவைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் பூச்சிகளிலோ, அல்லது பட்டாம்பூச்சிகளிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை. மேற்கூறிய நிகழ்விலிருந்து தக்கன பிழைத்தல் என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும். லோஷீம் இடைவெளிச் சண்டை லோஷீம் இடைவெளிச் சண்டை ("Battle of Losheim Gap") என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் ஜெர்மனி-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ள குறுகலான லோஷீம் பள்ளத்தாக்கைக் கைப்பற்றின. பெல்ஜியத்தின் மீது படையெடுக்க இந்த பள்ளத்தாக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் இந்த பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முடியாமல் போனதால், பல்ஜ் தாக்குதலுக்கான ஜெர்மானிய கால அட்டவணையில் தாமதம் ஏற்பட்டது.