தலைப் பொடுகு தலைப்பொடுகு ("dandruff") என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். சருமத்தின் செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான். தலையினை சுத்தம் செய்த பிறகு சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 4,87,000 செல்கள் உதிர்க்கப்படும். ஆனால் சில மக்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இந்த உதிர்தல் ஏற்படும். இது காலம் காலமாக தொடர்வதாக இருக்கலாம் அல்லது சில தூண்டுதல் காரணிகளால் ஏற்படக்கூடும். இதன் விளைவாக சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 8,00,000 செல்கள் உதிர்க்கப்படலாம். இதன் காரணமாக சிவத்தல் மற்றும் எரிச்சல் சேர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக (Seborrheic dermatitis) ஏற்படும். இந்த இன மக்கள், இந்தப் பகுதியினைச் சேர்ந்த மக்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களை இந்த பொடுகு பாதிக்கிறது. பொதுவாகவே, பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது. ஏறக்குறைய மக்கள் தொகையில் பாதியளவிற்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக அரிப்பினை ஏற்படுத்தக் கூடியது. முதிர்ந்த சிவப்பணுக்கள் இந்த பொடுகுத் தோற்றத்தில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பொடுகுத் தொந்தரவின் அளவுகள் சராசரியாக இருப்பினும் காலங்களைப் பொறுத்து இதன் பாதிப்பு சற்று மாறுபடுகிறது. முக்கியமாக குளிர்காலங்களில் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பொடுகுத் தொந்தரவின் பல பாதிப்புகளை சில ஷாம்பு வகைகளைக் (முடியினை சுத்தம் செய்யும் பொருள்) கொண்டு தீர்க்க முடிந்தாலும், இதற்கு உண்மையான சிகிச்சை இல்லை. பொடுகுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மற்றும் உடலியியல் ஆகிய இரு வழிகளிலும் தங்களை பரிசோதிக்க வேண்டும். தலையில் அரித்தல் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படுவதே பொடுகுத் தொல்லையின் அறிகுறிகளாகும். சிவப்பு மற்றும் சற்று அரிப்பு ஏற்படுவது போன்ற சருமத்தின் உணர்ச்சிகள் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும். பொடுகினை ஏற்படுத்தும் சில தூண்டு காரணிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பொடுகுத் தொந்தரவு வயது முதிர்ந்தோரின் பாதியளவு மக்கள் தொகையில் ஏற்படுகிறது. மேற்தோல் அடுக்கு தொடர்ச்சியாக தன்னைத்தானே வெளியேற்றி வருவதால், இறந்த செல்கள் வெளிப்புறமாக புறந்தள்ளப்பட்டு உதிரும். பலருக்கு இந்த உதிர்தல் மிகவும் குறைவாக இருக்கும் இதனை கண்களால் பார்த்து அறிவதே கடினம். ஆனால் சில வேளைகளில் பல காரணங்களால் இதே நிகழ்வு பல மடங்கு வேகத்தில் நடைபெறும். அப்போது அந்த உதிர்தலை காண இயலும். உத்தேசமாக கூறவேண்டுமாயின், பொடுகினால் பாதிக்கப்பட்டவர்களின் சரும செல்கள் விரைவாக முதிர்வடைந்து 2 முதல் 7 நாட்களுக்குள் உதிர்ந்து விழுகின்றன. ஆனால் இதே நிகழ்வு பொடுகுப் பிரச்சினை இல்லாதவர்களுக்கு ஒரு மாத காலத்தில் நடைபெறுகிறது. இதன் முடிவு இறந்த சரும செல்கள் அதிகளவில் உதிர்ந்து சிறிய எண்ணெய் பிசுக்குகளாக வெள்ளை நிறத்தில் தலை, சருமம் மற்றும் துணிகளில் திட்டுக்களாகத் தோன்றும். பின்வரும் காரணங்களுக்கும் பொடுகிற்கும் தொடர்புள்ளது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 1. சருமம் மற்றும் சரும எண்ணெய் சுரப்பி 2. வளர்சிதை மாற்றத்தில் துணை பொருட்களாக உருவாகும் தோல் நுண்ணுயிர்கள் 3. ஏற்புத்திறன் மற்றும் ஒவ்வாமை உணர்திறன் இந்த பொடுகானது தலை சீவும் போது முதுகு, பின் கழுத்து, பின் காது போன்றவற்றில் வெள்ளை செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்குத் தலையில் நுரைமக் கழுவி (சாம்பு) போட்டுக் குளித்து எவ்வளவுதான் விரட்டினாலும் தீர்ந்தது போல் தோன்றும். ஆனால் திரும்பவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதே பகுதியில் மீண்டும் தோன்றும். சாம்புடன் சிறப்புப் பொருட்கள் சேர்க்கப்பட்டு பொடுகினைக் கட்டுப்படுத்துகின்றனர். பூசண எதிர்ப்பிகள் பல்வேறு வகைகளில் பொடுகினைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவற்றுள் கேடோகோனஸோல், சிங்க் பைரிதியோன் மற்றும் செலினியம் டிசல்ஃபைட் போன்றவை மிக முக்கியமானவை. கேடோகோனஸோல் ஷாம்பூவில் அதிகளவில் பயன்படுகின்றன. இந்த கேடோகோனஸோலின் செயல்பாடு மற்றும் தாக்கும் திறனில் மற்ற பூசண எதிர்ப்பிகளைக் காட்டிலும் சிறப்பாக அமைந்திருப்பதால் பொடுகுப் பிரச்சினைக்கான சிகிச்சை முறையில் இவை முன்னிலையில் உள்ளன. அத்துடன் இது தோல் ஒவ்வாமையினால் ஏற்படும் ஊறல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சிஃக்ளோபிரோக்ஸ் என்ற பொருளும் பொடுகினைத் தடுக்க பயன்படும் காரணிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகும். நிலக்கரி தார் சருமத்தின் மேற்புறத்தில் இறந்த செல்களை உதிர்த்துவிட்டு, சரும செல்களின் வளர்ச்சியினை குறைக்கும். பாரம்பரிய இந்திய மற்றும் சீன மருத்துவ முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. முட்டை எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் குறித்த சான்றுகள் தெளிவாக இல்லை. சில குறிப்பிட்ட இடங்களில் தேயிலை மர எண்ணெய் பயனபடுத்தப்படுகிறது. வானொலி அதிர்வெண் தொலைநோக்கி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி (ரேடியா தொலைநோக்கி), வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கி ஆகும். வானியல் ஆய்வில் பொதுவாக ஒளியியல் தொலைநோக்கி (கண்ணாடி தொலைநோக்கி) மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும்; மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் தருணங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது. விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். சி.எஃப்.எல் விளக்கு சி.எஃப்.எல் விளக்குகுமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது. யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம். எஸ்தோனியாவைப் போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம். குமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. வழக்கமான குமிழ் பல்புகளைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன. மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடுவதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். மின் விளக்கு ரோட்டா வைரசு மழலையருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் முக்கிய கரணி இந்த ரோட்டா வைரசே ("Rotavirus") ஆகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வாணாளில் முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்த வைரசால் பாதிக்கப்படுவது திண்ணம். பாதிக்கப்பட்ட மழலையருக்கு வாந்தி, நீா்த்த பேதி (Watery Diarrhoea) ஏற்படும். உடலில் நீா் அளவு(Dehydration) குன்றி பல குழந்தைகள் மரணத்தைத் தழுவ நேரிடும். இந்திய மருத்துவமனைகளில் கடும் வயிற்றுப்போக்கிற்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளுள் ஐந்தில் ஒருவர் இவ்வைரசு தொற்றுக்கு ஆளானவரே. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாய்வழி தடுப்பு மருந்து (oral vaccine) அறிமுகப்படுத்தப்பட்டு மழலை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலும் வாய்வழி தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோய்கண்ட மழலையருக்கு மறுநீரேற்றமே (Rehydration) சிகிச்சை ஆகும். தாய்மார்கள் தாய்ப்பால் தருவதைத் தொடர ‌வேண்டும். வயிற்றால் போகிறதே என தாய்ப்பால் கொடுக்காமலோ நீா் தராமலோ இருந்து விடக் கூடாது. இதுவே மழலையின் உயிர்க்கிறுதி ஆவதை உறுதி செய்து விடும். கடுமையான நீரிறக்கத்தில் குழந்தையின் உச்சிக்குழி (Bregma) மிகவும் குழி விழிந்து காணப்படும். வாயில் எச்சில் இன்றி வாய் உலா்ந்து இருக்கும். வியா்வை இருக்காது. கண்கள் ஈரப்பசையின்றி காய்ந்து போகும். மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்நிலைக்குச் சிரை (vein) மூலம் நீரேற்றம் செய்ய வேண்டியிருக்கும். அவெத்தா அவெஸ்தா (Avesta) என்பது சரத்துஸ்திரர்களின் புனித நூலாகும். தற்போது நமக்குக் கிடைத்திருப்பது பழைய நூலின் ஒரு பகுதியே ஆகும். முழு நூல் அலெக்சாண்டரின் பெர்சியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டு விட்டதாய் நம்பப்படுகிறது. இது புனித அவெத்தா (ஜெந்த் அவெஸ்தா) எனவும் அழைக்கப்படுகிறது. தற்போதைய சென்-அவெத்தாவில் 5 பாகங்கள் உள்ளன. உலக குருதிக் கொடையாளர் நாள் உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும். உலக குருதி வழங்குநர் நாள் திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் திருநெல்வேலி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவில். இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம், கொடி மரம், வசந்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, வாகனசாலை, களஞ்சிய அறை, இராஜகோபுரம், கோபுர மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விநாயகர், சந்தான கோபாலர், நாகபூசனி, முருகன், சனீஸ்வரன், துர்க்கை, பைரவர், சண்டேஸ்வரீ, காத்தவராயர் ஆகிய பரிவார மூர்த்திகளும் அவற்றிற்கான தனியான கோயில்களையும் கொண்டு விளங்குகின்றது. இவ்வாலயமும் சைவக்குருமார்களின் பரிபாலனத்தில் உள்ள ஆலயங்கள் ஒன்று. ஐசோபார் ஐசோபார்கள் ("isobar") அல்லது சமபாரங்கள் என்பவை ஒரே திணிவெண்ணைக் கொண்ட (A) ஆனால் வெவ்வேறு அணு எண்ணைக் (Z) கொண்ட தனிமங்களின் அணுக்களைக் குறிக்கும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகள், நொதுமிகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும் வெவ்வேறு தனிமங்களை இந்த சமபாரங்கள் குறிக்கும்.எடுத்துக்காட்டாக O மற்றும் N அணுக்கருக்கள் இரு சமபாரங்களைக் குறிக்கும். சமபாரங்கள் வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள், எனவே அவற்றின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் மாறுபட்டு அமையும். சமபாரங்களுக்கு எடுத்துக்காட்டுகள்: S, Cl, Ar, K, மற்றும் Ca. இவற்றின் அணுக்கள் அனைத்தும் 40 அணுக்கருனிகளைக் ("nucleon") கொண்டுள்ளன, ஆனாலும் இவை வேறுபட்ட புரோத்தன்களையும் (நேர்மின்னிகளையும்), இலத்திரன்களையும் (எதிர்மின்னிகளையும்) கொண்டுள்ளன. ஐசோபார் என்ற சொல் "ஐசோஸ்" ("isos", "சமம்" மற்றும் "பாரோஸ்" ("baros", "எடை") என்ற இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து பிறந்தது. சென்னைக் கடற்கரை சென்னைக் கடற்கரை (ஆங்கிலம்: Chennai Beach), முன்பு மதராஸ் கடற்கரை என்றழைக்கப்பட்ட இந்த இடம் தென்னக இரயில்வே வலையமைப்பில் உள்ளது. இந்த நிலையம் சென்னைப் புறநகர் இருப்பு பாதையை கையாள்கிறது. சென்னை உயர்நீதிமன்ற கடற்கரை என்கிற பெயர் பின்னர் சென்னை கடற்கரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னைத் துறைமுகம் இங்கு உருவாக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை நிலையம் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கு ஆகிய பகுதிகளுக்கு செல்ல இங்கிருந்து பறக்கும் இரயில் செல்கிறது. வரதட்சணை வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை: வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும். அறிவியல் விரோத மாக ஸ்டவ் வெடித்து மருமகள் மட்டும் சாகிற பிரச்னைக்கு இவ்வாறாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ் திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப் படுத்தப்பட்டது. 2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில் திருமணத்துக்காக கொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துச் சீதன முறை சிறுவர் திருமணம் சிறுவர் திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது திருமண வயதை அடையாத ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும். இதில் திருமண வயது என்பது நாடுகளுக்கிடையில் சட்டங்களின் அடிப்படையில் மாறுபடுகிறது. இந்திய நாட்டுச் சட்டப்படி பெண்ணிற்கு என்றால் 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் முடிவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் திருமணங்கள் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பதிவுத் திருமணம் பதிவுத் திருமணம் என்பது அரசின் பதில் ஆளாக, அரசு ஊழியர் ஒருவர் திருமணத்தை நடத்தவோ, பதிவு செய்யவோ, அல்லது ஏற்கவோ செய்யும் நிகழ்வினைக்குறிக்கும். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது. எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது. இந்தியாவில் இந்து, கிறித்துவ, இசுலாமிய சமயங்கள் என ஒவ்வொரு சமயத்துக்கும் தனித்தனியான திருமணப் பதிவுச் சட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872 , சிறப்புத் திருமணச் சட்டம் 1954 , முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும். இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் www.tnreginet.net வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/ ) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும். கொடுவாள் பூனை கொடுவாள் பூனை ("saber-toothed tiger") முற்றும் அழிந்து போன வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய ஒரு விலங்கு ("pre-historic animal"). இவை கொடுவாள் புலி என்று தவறாக அறியப்படுகின்றன. இவற்றுள் பூனைக் குடும்பத்தில் உள்ள 3 துணைக்குடும்பங்களும் பைப்பாலூட்டிகளோடு தொடர்புடைய 2 குடும்பங்களும் அடக்கம். இவற்றின் மேல்த்தாடையில் "(Maxilla)" உள்ள கோரைப் பற்கள்"(canine teeth)" இரண்டும் கொடுவாள் போல நீண்டுள்ளன. வாயை மூடினாலும் இப்பற்கள் வெளியே நீண்டு தெரியும். இவை கம்பளி யானை போன்ற இதர வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகளைக் கொன்று தின்னதாக நம்பப்படுகிறது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் பீட்டர் வில்ஹம் லுண்ட் என்பவர் 1841 இல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டர் சிற்றினக் கொடுவாள் பூனை ஒன்றின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்தார். 42 மில்லியன் ஆண்டுகாலம் இப்புவியில் வாழ்ந்திருந்த இவ்வுயிரிகள் கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது. இக் காலகட்டத்தில் தான் இதர வரலாற்றுக்கு முந்தைய பெரிய விலங்குகளும் அழிந்தன. இவற்றின் அழிவுக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. மனிதர்களால் நிச்சயமாக இவை அழிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவ்விலங்கு வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் கொடுங்கனவாக "(nightmare)" இருந்தது அவனுடைய குகை ஓவியங்களில் புலனாகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அரளி அரளி, அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்றரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அலரி உள்ளது. மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. சூழல் வெப்பநிலை சூழல் வெப்பநிலை (Ambient Temperature) என்பது சுற்றுப்புறத்தின் வெப்ப நிலையை குறிக்கும். ஒரு மூடிய அறையினுள் சூழல் வெப்பநிலையும் அறை வெப்பநிலையும் ஒன்று தான். மூடிய அறைக்கு வெளியே, சூழல் வெப்பநிலையானது இடத்தைப் பொறுத்தும், பருவநிலையைக் பொறுத்தும் பெரிதாக மாறும். வெ. துரையனார் வெ. துரையனார் அடிகள் (மே 12, 1891 - சனவரி 5, 1973) தென்னாப்பிரிக்காவில் பிறந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். துரையனார் அடிகளார் வெங்கடாசலம் பிள்ளை, செல்லத்தாச்சி ஆகியோருக்கு மகனாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால் என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு என்ற ஊரில் துரையனார் அடிகள் பிறந்தார். இவரின் இளமைப்பெயர் துரைசாமி என்பதாகும். தமிழறிஞர் மறைமலையடிகளாரிடம் தமிழ் படிக்க வந்த பிறகு தம் பெயரைத் துரையனார் அடிகள் என மாற்றிகொண்டவர். தந்தை வெங்கடாசலம் பிள்ளையின் முன்னோர்கள் மொரீசியசு, தென்னாப்பிரிக்காவிற்கு வணிகம் செய்யச் சென்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் நடத்திய கால்பந்து கிரிக்கெட், குத்துச்சண்டை முதலிய தற்காப்புக்கலைகளில் நன்றாகப் பயின்றவர் துரையனார் அடிகள். மகாத்மா காந்தி நடத்திய அமைதிவழி சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு 1909 ஆம் ஆண்டில் துரையனார் அடிகள் சோகன்சுபர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு திங்கள் அந்தச் சிறையில் இருந்த பிறகு நீதியரசர் வெர்னோன் முன்னிலையில் நிறுத்தபட்டு, அடையாளச் சீட்டு கொளுத்தியமைக்கும், இல்லாமைக்கும் ஆறு மாதம் தண்டிக்கப்பெற்று, உள்ளூர்ச் சிறைச்சாலையில் பதினைந்து நாளும் டீப்குளுஃப் சிறையில் ஆறு மாதங்களும் அடைக்கப்பெற்றார். துரையனார் தமிழ் படிக்கவென தம் தாயாருடன் தமிழ்நாடு வந்தார். சென்னையில் பல்லாவரத்தில் வாழ்ந்த மறைமலை அடிகளாரிடம் நன்கு தமிழ் கற்றார். பின்னர் மறைமலை அடிகளாரிடம் கருத்து மாறுபட்டு வெளியேறி, சுவாமிமலை வந்து 1912 முதல் தங்கியிருந்தார். சுவாமிமலையில் தங்கியிருந்த பொழுது கும்பகோணம் பகுதியில் நடந்த பல்வேறு இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டார். குறிப்பாகக் கிலாபத்து இயக்கம், மதுவிலக்கு இயக்கம், தீண்டாமை இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். 1930 இல் திருச்சியில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தியபொழுது கைதுசெய்யப்பட்டு, கடலூர்ச் சிறையில் அடைக்கப்பெற்றார். பின்னர் துரைசாமியார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தப்படி கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர். துரைசாமியார் சட்டமறுப்பு இயக்கத்தில் (1932) ஈடுபட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, திருச்சியிலும், பின்னர் மதுரைச் சிறையிலும் இருந்தார்கள். மதுரைச்சிறையில் இருந்தபொழுது துரையனாரின் துணைவியார் துளவம்மாள் இறந்துவிட்டார். 1936 இல் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரசுக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 இல் குடந்தை நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துரையனார் 05.01.1973 இல் மறைந்தார். புனித யோசேப்பு புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் ("Saint Joseph"), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார். யோசேப்பு தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார். இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாவும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார். யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். (மத்தேயு 1:18-21,24-25) ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். (மத்தேயு 2:13-14,19-21) இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள். (மத்தேயு 13:54-56) தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக்கா 2:4-7) குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். (லூக்கா 2:21-22) ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். (லூக்கா 2:41-46) கிறிஸ்தவ புனிதர்களில், புனித கன்னி மரியாவுக்கு அடுத்ததாக புனித யோசேப்பு வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். புனித யோசேப்பு அகில உலகத் திருச்சபை, கற்பு, கல்வி, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம் ஆகியவற்றுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார். விழாக்கள்: கத்தோலிக்கத் திருச்சபையில் இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அவை, 1. புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் (மார்ச் 19), 2. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் (மே 1). திருக்காட்சி பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிழக்கு மரபுவழி திருச்சபையினர் புனித யோசேப்பின் விழாவை சிறப்பிக்கின்றனர். ஹௌரா பாலம் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி ஆற்றின் மேல் உள்ள பாலம் ஹௌரா பாலமாகும் . இதற்கு இடப்பட்ட உண்மையான பெயர் நியூ ஹௌரா பாலம் என்பதாகும், ஏனெனில் இது ஹௌரா மற்றும் அதன் இரட்டை நகரமான கொல்கத்தா (கல்கத்தா) வை இணைக்கிறது. இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவரும், கவிஞருமான ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக ஜூன் 14, 1965 ல் ரவீந்திர சேது என்று பெயர் மாற்றப்பட்டது. இருந்தபோதிலும் இது ஹௌரா பாலம் என்றே பிரபலமாக இன்றும் அறியப்படுகிறது. ஹூக்ளி நதி பாலத்தின் நான்கில் ஒன்றாகும், மற்றும் பிரபலமான மேற்கு வங்காளம், கொல்கத்தாவின் சின்னமாக உள்ளது. மற்ற பாலங்கள் வித்யாசாகர் சேது (இரண்டாவது ஹூக்ளி பாலம் என்று அழைக்கப்படுகிறது), விவேகானந்தா சேது மற்றும் புதிதாக கட்டப்பட்ட பொறியியல் அற்புதம் நிவேதிதா சேது ஆகியவையாகும். அமைதியற்ற காலநிலை வங்காள விரிகுடா பகுதியில் இருந்த போதிலும்,வாகன நெரிசலால் ஏற்படும் 80,000 வாகனங்களின் போக்குவரத்து எடையையும், 1,000,000 மேற்பட்ட பாதசாரிகளின் எடையையும் தாங்குகிறது. இதன் வகையில் உலகின் ஆறாவது மிகப் பெரிய பாலமாகும். கி.பி.19 ஆம் நூற்றாண்டளவில், ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளிலிருந்த கல்கத்தா மற்றும் ஹௌரா பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார நிலையங்களாக இருந்தன, ஹூக்ளி நதியில் பாலம் கட்டும் எண்ணம் தோன்றியது. 1862 ல் பெங்கால் அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனத்தின் ஜார்ஜ் ட்ரன்பால் என்பவரிடம் ஹூக்ளி நதியில் பாலம் கட்ட உள்ள சாத்தியக்கூறுகளை பற்றி கண்டறியுமாறு கேட்டுக் கொண்டது- ஹௌராவில் நிறுவனத்தின் ரயில் நிலையத்தை இவர் தான் நிறுவினார். 29 மார்ச்சில் பெரிய வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகளுடன் அறிக்கை தாக்கல் செய்தார். அங்கே ஆழமாக சேறு உள்ளது. பாலம் கட்டப்படவில்லை சர் லெஸ்லி ப்ராட்போர்ட் 1874 ல் பிரபலமான மிதக்கும் பாண்டூன் பாலத்தை கட்டினார். மிதக்கும் பாண்டூன் பாலமானது மரத்தினால் பாண்டூனில் உருவாக்கப்பட்டது. நதி போக்குவரத்துத் தாமதத்தைக் குறைக்க பாலம் திறக்கப்பட்டது. ஹூக்ளி நதியில் நீர்மட்டம் காரணமாக பாலம் கரை தூண்களை சார்ந்திருந்தது. அதிகமான நீர்மட்டம் ஏற்படும் நேரங்களில் இவை செங்குத்தாக மற்றும் மாட்டு வண்டிகள் தங்கள் வழியை கடக்க முடியாமலும் இருந்தன, இதன் விளைவாக போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. மிதவைப் பாலம்]] ஆற்று நீரோட்டத்தைப் பாதுக்கும் என்றும் இதனால் தூர்படிவுகளை ஏற்படுத்தும் என்றும் கூட அஞ்சப்பட்டது. நாளாக அதிகமாகும் போக்குவரத்துக்கு பாலம் போதாதது ஆகியது. இந்த காரணங்களால் பெங்கால் அரசு 1933 ல் மிதவை பாண்டூன் பாலத்தை மாற்ற முடிவு செய்தது. 25 ஆண்டுகள் சேவைக்காக கட்டப்பட்ட மிதவை பாண்டூன் பாலம் பிப்ரவரி 1943 ல் தனது 69 ஆண்டுகால நீண்ட சேவையை முடித்துக் கொண்டது. புதிய ஹௌரா பாலத்தின் உருவாக்கம் 1973 ல் தொடங்கியது. "பிடிமான சாகாப்தம்" நடைமுறையில் இருந்த காலம் என்பதால் பொறியியலாளர்கள் ஆடும் பாலங்களை விட பிடிமானமான பாலங்கள் திண்மையானவை என்று கருதினர். பிரிட்டிஷ் பொறியியலாளர்களால் இந்தியாவில் விட்டுச் செல்லப்பட்ட உலகத்தின் சிறப்பான மிதவை விட்டமுள்ள பாலம் இதுவாகும். நதியின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நீர்மவிசை, பொங்கும் அளவு மற்றும் பெருகி வரும் போக்குவரத்து காரணங்களாலும், ரெண்டெல் பால்மர் & ட்ரிட்டன் 1500 அடி நீளம் மற்றும் 71 அடி ஊர்தி வசதி மற்றும் இரண்டு 15 அடி பிடிமானமான நடைபயண வசதி கொண்ட பிடிமான பாலங்களுக்கான வடிவமைப்புகளுடன் வந்தனர். பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற மேற்கோள் காட்டுபவைகளின் அடிப்படையில், ஒப்பந்தம் டார்லிங்டனில் உள்ள க்லீவ்லேண்ட் பாலம் & பொறியியல் கோ.லிட் டுக்கு இந்தியாவில் தயாரிக்கபட்ட உலோகங்களை கொண்டு பாலம் கட்டுமாறு அறிவுறுத்தப்பட்டு வழங்கப்பட்டது, அவர்களும் ஏற்றுக் கொண்டனர். 26,500 டன் மொத்தமாக உபயோகிக்கபட்ட உலோகத்தில், டாட்டா அயன் மற்றும் ஸ்டீல் நிறுவனம் 23,500 டன் உலோகம் மற்றும் கட்டுமான கல்கத்தாவின் நான்கு வேறுபட்ட கடைகளிலிருந்து பிரைத்வாயிட், பர்ன் மற்றும் ஜெசாப் கோ. மூலம் முடிக்கப்பட்டது. தாழ்ந்த இரண்டு பெரிய ஆழ்குழிகளே (முதல் நிலை கட்டுமானத்தில்) தற்போதும் நிலத்தில் தோண்டப்பட்ட மிகப்பெரிய ஆழ்குழிகளாகும். சேற்றை சுத்தம் செய்யும் போது, எல்லா வகையான அரிதான பொருள்கள் கண்டெடுக்கபட்டன, இவற்றில் நங்கூரங்கள், மண் இரும்புகள், பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், பித்தளைப் பாத்திரங்கள், பலதரப்பட்ட நாணயங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. 40 இந்திய க்ரேன் ஓட்டுனர்கள் பயிற்றுவிக்கப்பட்டு 8 மணி நேரம் மூன்று சுழற்சி முறையில் வேலை செய்தனர். ஒரு நாளைக்கு ஒரு அடி அல்லது அதற்கு மேலாக மூழ்கி ஆழ்குழி தோண்டும் பணி நடைபெற்றது. ஒரு இரவு, சேற்றைத் தோண்டும்போது அது ஆழ்குழியை நகர்த்தியது, நிலத்தின் ஆட்டம் காரணமாக அதற்கடியிலுள்ள மண் இரண்டு அடி அளவிற்கு உள் சென்றது. இந்த ஆட்டத்தின் விளைவாக கிதிர்பூரில் உள்ள நிலநடுக்கப்பதிவு கருவி நிலநடுக்கத்தை பதிவு செய்தது மற்றும் கரையோரத்திலிருந்த ஒரு இந்துக் கோவிலும் அழிந்தது; அதுவும் பின்னதாக மீள்கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த சவால் விடும் சூழ்நிலைகள் இருந்தபோதும், ஆழ்குழியானது உணமையான இடத்தில் கட்டப்பட்டது. கட்டுமானத்தைத் தொடரக்கூடிய விதமாக, ஆழத்தில் அஸ்திவாரங்களைச் சூழ நீர் இருக்காமல் தடுக்க, 500 க்கு மேற்பட்ட மக்கள் காற்று நடவடிக்கைக்கான வேலைகளைச் செய்தனர். காற்று அழுத்தமானது சதுர அங்குலத்துக்கு சுமார் 40 பவுண்டுகள் (2.8 பார்) இருந்தது. நவம்பர் 1938 ல் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்தது. 1940 ன் முடிவில் தாங்கு விட்டங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1941 கோடைகால-பகுதியில் முடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் நீளமும், 2000 டன் எடையும் கொண்ட, நிறுத்திவைக்கப்பட்ட தாங்கி இடைத்தூரத்தின் இரண்டு பாதிகளும் 1941 டிசம்பரில் கட்டப்பட்டன. 16 நீரழுத்த உயர்த்திகள் ஒவ்வொன்றும் 800 எடை அளவு கொண்டவை, இவை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட தூண்களை ஒன்றிணைக்க உதவின. மேல்தட்டு உலோக வேலைகள் முடிந்த பிறகு தரைவழி அமைக்கும் பணிகள் தொடங்கின. புதிய ஹௌரா பாலமானது இறுதியாக பிப்ரவரி 1943 ல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பழைய பாண்டூன் மிதவைப் பாலமானது திரும்பிப் பெறப்பட்டது. மே 1946 இல், பாலத்தின் மீது தினசரி போக்குவரத்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது, 27,400 வாகனங்கள், 121,100 பாதசாரிகள் மற்றும் 2,997 கால்நடைகள் சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து லண்டன் பாலத்தை விட 20% அதிகமாக அதே காலகட்டத்தில் இருந்தது, தலைநகரங்களில் மிகவும் பரபரப்பான பாலமாக இன்றும் உள்ளது. பாலத்தின் முடிவு செலவுத் தொகை ₤2,500,000 எனக் கணக்கிடப்பட்டது. புதிய ஹௌரா பாலமா னது 1937 க்கும் 1943 க்குமிடையில் கட்டப்பட்டது, 450 மீ தாங்கி இடைத்தூரம் கொண்டது. தொழில்நுட்ப ரீதியாக மிதவை விட்டங்களை தாங்கி நிற்கும் பாலமாகும், குடையாணி மூலம் நட்டுகளும் போல்ட்டுகளும் இல்லாமல் கட்டப்பட்டது. தற்போது தரைப் பாலமாக உபயோகிக்கப்படுகிறது, முன்பு {0இரும்புப்{/0} பாதையும் இருந்தது. இப்பாலத்திற்கு சகோதிரி பாலங்கள் நதியின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, வித்யாசாகர் சேது மற்றும் விவேகானந்தா சேது என்பவையாகும். ஹௌரா பாலம் கொல்கத்தாவின் நுழைவாயிலாகும். உலகப்போர் II இன் போது ஹூக்ளி நதியின் மீது அமைக்கப்பட்டு கொல்கத்தாவிற்கு தொழில் நகரமான ஹௌராவிற்கு இடையே இராணுவ போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. மிதவை விட்டமான பாலம் நகரங்களை அதன் இரயில்வே சந்திப்பின் மூலம் இணைக்கிறது, ஹௌரா சந்திப்பு உலகத்தின் மிக சுறுசுறுப்பான இரயில்வே சந்திப்பு ஆகும். 705 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலம் கொண்ட பாலம். 26,500 MTக்கு மேலான மிகவும்-வலிமையான ஸ்டீல் இரண்டு தூண்களினால் தாங்கி நிற்கப்படுகிறது, ஒவ்வொன்றும் தரையிலிருந்து 90 மீட்டர் நீளமுடையது. கோடை காலங்களில் ஒரு மீட்டர் வரை விரிவடைவது ஒரு பொறியியல் அதிசயமாகும். எட்டு வழிப்பாதை பாலம் 80,000 வாகனங்களையும், 1,000,000 மேலான பாதசாரிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கான விலங்குகளையும் தினந்தோறும் கொண்டு செல்கிறது. நதியின் நடுவில் இருந்து பார்க்கும்போது மிகச்சிறந்த தோற்றம் தரும் (ஆனால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது). ஹௌரா சந்திப்பின் கீழே நதியை கடந்து செல்லும் படகு மூலம் பாலத்தின் காட்சிகளை காணமுடியும். வழிப்படுத்தல் நெறிமுறை வழிப்படுத்தல் நெறிமுறை ("routing protocol") என்பது வழிப்படுத்திகள் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன என்பதை குறிக்கும் ஒரு நெறிமுறை. கணினி வலையமைப்பில் இரண்டு கணுக்களுக்கு இடையில் பரவவிடப்பட்ட தகவலானது எந்த வழியை வழிப்படுத்தி நெறிமுறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கிறது என்பதை இது தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வழிப்படுத்தியும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வலையமைப்புடன் மட்டும் முன்னதான அறிவைப் பெற்றிருக்கும். ஒரு வழிப்படுத்தி தனக்கு அடுத்துள்ளதுடன் முதலாவதாக தகவலை பரிமாறிக் கொள்ளும், பிறகு வலையமைப்பிற்குப் பரிமாறும். இவ்வாறு வழிப்படுத்திகள் வலையமைப்பின் இடவியல் பற்றி அறிவை பெற்றுக் கொள்கின்றன. இணைய நெறிமுறை பாவனையில் (பல இருந்தாலும்) மூன்று வகைகளை பெரியளசில் பயன்படுத்தப்படுகின்றன: பல வழிப்படுத்தல் நெறிமுறைகள் கருத்துக்கான வேண்டுகோள் ("Request for Comments") என வரையறுக்கப்பட்டுள்ளன. விஸ்கி விஸ்கி (whisky or whiskey) என்பது, நொதிக்கப்பட்ட தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை மதுபானமாகும். பார்லி, மால்ட்டு பார்லி, ரை, மால்ட்டு ரை மற்றும் கோதுமை மக்காச்சோளம் (சோளம்) போன்ற வெவ்வேறு தானியங்களில் இருந்து பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. கருவாலி மரத்தினால் செய்யபட்ட மர பீப்பாய்களில் விஸ்கிகள் பதப்படுத்தப் படுகின்றன. ஆனால் அமெரிக்கச் சோள விஸ்கி இவ்வாறு பதப்படுத்தப் படுவதில்லை. விஸ்கி அவற்றின் தோற்ற பகுப்பின் பிரிவுகளில் பங்கு கொள்ளும் மற்றும் பல்வறு பகுதிகள் மற்றும் வகைகளை கொண்டும் கண்டிப்பாக ஓழுங்கு படுத்தபட்ட சக்தி அளிக்கும் பானமாக உலகம் முழுவதும் உள்ளது. பல்வேறு வகைகள் மற்றும் பரிவுகளை ஒன்றினைத்து தானியங்களிலிருந்து வடிகட்டுதல் மூலம் அதிகபடியாக சக்தியை சோளத்திற்கு 80% ஆல்கஹாலுக்கு குறைவாகவும் மற்ற தானியங்களுக்கு 90% ஆல்கஹாலும் கொடுக்க இயலும், தண்ணீர் சேர்ப்பதற்க்கு முன்பாக அவற்றின் சில தாணிய மணங்களை வைத்து தானிய நடுநிலை சக்தியுள்ள அல்லது வோட்கா வாக பிரிவதை தடை செய்ய முடியும். விஸ்கி 60% சுவையை அதை பதபடுத்தும் முறையில் இருந்து பெறுகிறது. எந்த வகையான மரங்களை உபயோகபடுத்துகிறோம் என்றும் காய்ச்சுயும் முறைகளை பொறுத்தும் வகைபடுத்த படுகின்றன.0/} பர்பன் விஸ்கி நன்றாக காய்ச்சபட்டு கருவேலி பீப்பாய்களில் அடைக்கப்பட்ட விஸ்கிக்கு ஒரு உதாரணமாகும், இந்த பர்பன் உபகரணங்களை கொண்டு ஸ்காட்ச் விஸ்கிகளின் உற்பத்தி காலமும் குறைக்கப்பட்டது. விஸ்கி என்பது காலிக் எடுக்கபட்ட ஆங்கிலத்தின் "உஷ்பௌக்ஹ்" என்ற சொல்லின் குறு வடிவமாகும். (ஐரிஸ் "யூசி பீதா " மற்றும் ஸ்காட்ஷ் "யூச்ஜி பீதா" ) ஐரிஸின் மிக பழமையான யூசி, " தண்ணீர்", மற்றும் பீதாடு, " வாழ்க்கைகாக" ஆகியவற்றை ஒருங்கினைத்த " வாழ்க்கைகான தண்ணீர்" என்ற சொல்லுக்கு இணையாக சொல்லப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் லட்டீனில் "அக்குவ விடெ " என கூறப்பட்ட காய்ச்சிவடித்த பானங்கள் என்பதை குறிக்கிறது. இதற்கு முன்பு இந்த சொல்லின் எழுத்துகூட்டு "இஸ்கியூபியா" (1706) மற்றும் "இஸ்கிபியா" என்றும் இருந்தது. விஸ்கி என்பது 1405ஆம் ஆண்டு ஐரிஷின் ஆனல்ஸ் ஆப் குலோன்மானாஷின் பதிவுகளின் படி கிறிஸ்துமஸ் அன்று தலைவனின் இறப்பை விவரிக்கும் பகுதியில் அளவுக்கு அதிகமான ஆல்கஹாலை எடுத்து கொள்வது என்று இருந்தது. ". ஸ்காட்லாந்தில் விஸ்கி தயாரிப்புக்கான சூல்நிலை 1494 ஆம் ஆண்டு எஸ்செக்கர் ரோல் என்பவர் ""அரசனின் ஆணைப்படி ஆல்கஹாலை உருவாக்குவதற்காக பெரையர் ஜான் கோர்" " க்கு அனுப்பிய மால்ட் மூலம் உருவானது . காய்ச்சி வடிக்கும் கலையானது சபடமியாவில் (தற்பொழுது ஈராக்) உள்ள பாபிலோனியன்ஸ் இடம் இருந்து குறைந்த பட்சம் கி.மு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது, நீண்ட காலமாக வாசணை பொருள்களையும் மற்றும் நறுமண பொருள்களையும் காய்ச்சி வடித்து குடிக்க தக்க பானங்களை கண்டுபிடித்தனர். மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்து அயர்லாந்து பகுதிகளுக்கு ஐரிஸ் சமயபரப்பாளர்கள் வாயிலாக 6 ஆம் நூற்றாண்டு மற்றும் 7 நூற்றாண்டு ஆம் இடையில் காய்ச்சி வடிக்கும் கலையானது கண்டு கொள்ள முடிந்தது. காய்ச்சி வடிக்கும் முறையானது ஆப்ரிக்காவில் இருத்து ஐரோப்பாவிற்கு மூர்ஸ் வாயிலாக பெறப்பட்டது, இவற்றின் பயன்பாடுகள் முனஷ்டிரிஷ் மூலம் பரப்பப்பட்டது, அதிகமாக மருத்துவ பயன்பாட்டிற்கும், வயிற்று வலி, வாதம் மற்றும் பெரியம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பயன் படுத்தப்பட்டது. 1100 மற்றும் 1300 இடையில் இம்முறையானது ஐயர்லாந்தில் 12 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒதுக்கப்பட்ட காய்ச்சி வடிப்பர்களிடம் இருந்து ஐயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்திற்குப் பரவியது. வாற்கோதுமை பீர்க்கு பதிலாக மாற்று திராட்சை மது தயாரிக்க பிரிட்டன் வைத்து இருந்த சில திராட்சைகள் விஸ்கியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 1494 ஆம் ஆண்டு மேல் கூறியது போல் ஸ்காட்லாந்தின் எக்ச்சையெர்,ப்ரைர் ஜான் காருக்கு வழங்கிய மால்ட் சுமார் 1500 பாட்டில்களை உருவாக்க போதுமானதாக இருந்தது, அதன் மூலம் வியாபாரமும் வெற்றிகரமாக நடந்தது. ஸ்காட்லாந்தின் அரசன் ஜேம்ஸ் IV (r. 1488-1513) ஸ்காட்ச் விஸ்கியை நன்று விரும்புவராக இருந்தார், 1506 ஆம் ஆண்டு டுண்டீ என்ற நகரத்திலிருந்து ஸ்காட்ச் விஸ்கியை கில்ட் ஆப் சர்ஜன் பார்பேர்ஸ் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1536 மற்றும் 1541 இடையில் இங்கிலாந்து அரசன் ஹென்றி VIII துறவிகளை பொது மக்களாக்கி அனுப்பி துறவி மடங்களை ஒழித்தார் துறவி மடங்களை விடுத்து வீடுகளிலும், பண்ணைகளிலும் விஸ்கி தயாரிப்புகான அமைப்புகளை அமைத்து புதிதாக-விடுவிக்கபட்ட துறவிகள் அவர்களுக்கு தேவைகளுக்கான பணம் பெற்றனர். அந்த நேரத்தில் வடிகட்டும் முறை குழந்தை பருவத்தில் இருந்தது விஸ்கியும் சிறு வயதில் இருந்தது, இதன் விளைவாக தற்போது உள்ள விஸ்கியை விட சுவை கடினமாகவும் மிருகத்தனமாகவும் இருத்தது. மறுமலர்ச்சி சாகப்த்திலும் விஸ்கி சக்தியுள்ள மற்றும் நீர்த்த சில நேரங்களில் கொடுமையாவும் இருந்தது. அதிகமாகவோ அல்லது சந்தோஷ காரணங்களுக்காகவோ ஒருவர் அருந்தும் விஸ்கியானது பல வருடங்களை மறக்க செய்யும் அளவுக்கு தனது தன்மையை வெளிபடுத்தியது. 1707 ஆம் ஆண்டு ஒன்றிணைப்பு சட்டத்தின் படி இங்கிலாந்தும்,ஸ்காட்லாந்தும் ஒன்றிணைந்ததது, அப்போது அவற்றின் வரியும் அதிகரித்தது. 1975 ஆம் ஆண்டு இங்கிலீஷ் மால்ட் டேக்ஸ்க்கு பிறகு ஸ்காட்லாந்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடவோ அல்லது நிறுத்தவோ நிர்பந்திக்கப் பட்டன. ஸ்காட்ச் விஸ்கிகள் அரசாங்க தீர்வைக்காக பலிபீடங்களிலும், சவப்பெட்டிகளிலும், எங்கு இடம் இருந்தாலும் மறைத்து வைக்கப் பட்டன. ஸ்காட்டிஸ் சுத்திகரிப்பாளர்கள், இரவு நேரங்களில் வீட்டிற்க்கு வெளியில் தான் விஸ்கியை காய்ச்சுவார்கள் ஏனென்றால் காய்ச்சும் போது புகை வருவது தெரியாமல் இருக்கும் என்று. இந்த காரணத்தினால் இந்த குடி நிலவொளி குடி என அறியப்பட்டது. இந்த நிலையில் ஸ்காட்லாந்து விஸ்கியின் வெளியீடு சட்டத்திற்க்கு புறம்பானதாக கருதப்பட்டது. அமெரிக்க புரட்சியின் போது விஸ்கியானது நாணயமாக அமெரிக்காவில் கருதப்பட்டது. அதிகப்படியாக அனைவரும் உபயோகிப்பதனால் மேலும் ஒரு தீர்வை வரி வசூலிக்கப்பட்டது. 1974 ல் விஸ்கி எதிர்ப்பு கலகம் ஏற்பட்டது. வடிகட்டுதலை முறைபடுத்த (கட்டணமாக) ஸ்காட்டிஷ் நிலவொளி உற்பத்தியை நிறுத்த 1823 ல் யூகே தீர்வை வரி ஒன்றை உருவாக்கியது. 1831 ல் ஏனியஸ் காபேய் காபேய் ஸ்டில் மூலம் தரமான மற்றும் திறனுள்ள விஸ்கி வடிகட்டுதலை உருவாக்கினார். 1850 ல் அண்ட்ரூ உஷர் பாரம்பரிய விஸ்கியுடன் புதிய காபேய் ஸ்டிலை சேர்த்து முதல் ஸ்காட்டிஷ் கலப்பு விஸ்கியை கண்டுபிடித்தார். இந்த தானிய விஸ்கியை கண்ட ஐரிஸ் வடிமனையாளர்கள் ஏளனம் செய்தனர், இதை தங்களுடைய மால்ட் விஸ்கியுடன் இணைத்து கொண்டனர். இந்த புதிய கலவை விஸ்கி இல்லை என்று பல ஐரிஸ்கள் வாதிட்டனர். 1880 ல் பைலொக்ஸ்ரா சிதலடைக்கும் பூச்சிகளை கொண்டு பிரான்ஸ் பிராண்டி தொழிற்சாலைகளில் உள்ள திராட்சை பயிர்களை அழித்தனர், இதன் விளைவாக பல சந்தைகளில் விஸ்கி முதன்மை பானமாக விற்கப்பட்டது. விஸ்கி மற்றும் விஸ்கி சார்ந்த பொருள்கள் பெரும்பாலும் தானியம் விளையும் இடங்களில் உருவாக்கபட்டவை. மூலப்பொருள்கள் , ஆல்காஹாலிக் கலவை, தரம் ஆகியவற்றில் வேறுபட்டு இருந்தன. மால்ட் மற்றும் கூலங்கள் பல வழிகளில் சேர்க்கபடுகின்றன விஸ்கிகள் புட்டியில் பக்குவமாவது இல்லை, பீப்பாய்களில் மட்டுமே பக்குவமாகின்றன, எனவே விஸ்கிகளின் "வயது" என்பது வடித் தெடுத்தப்பதற்கும், புட்டியில் அடைப்பதற்கும் இடைப்பட்டதாகும் பீப்பாய்கள் எவ்வாறு விஸ்கிகளின் சுவையையும், வேதியியல் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதை பிரதிபலிக்கின்றன. பல ஆண்டுகளாக புட்டியில் அடைக்கபட்ட விஸ்கிகள் அரியது , ஆனால் "பழமையானதும்" அல்ல, அதே சமயத்தில் தற்போது மரத்தினால் பக்குவ படுத்தபட்ட விஸ்கிகளை விட "சிறந்ததாக" இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 40% அல்லது 40 % இணையான ஆல்கஹாலிக் சக்தியுடனே பல விஸ்கிகள் விற்கப் படுகின்றன.abv அமெரிக்க விஸ்கிகள் நொதிக்கப்பட்ட தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கப்படுகின்றன. அதனால் விஸ்கிகளுக்கு உண்டான பொதுவான பண்புகளும், சுவை மற்றும் மணத்தையும் பெற்றுள்ளன. ஒன்றிணைந்த விதிமுறைகளின் படி பொதுவாக பட்டியலிட பட்ட வகைகள் அமெரிக்க விஸ்கிகளில் "பெயரிடப்பட்ட வகைகள்" 80 % அளவுக்கு ஆல்கஹால் இல்லாமல் காய்ச்சி வடிக்க வேண்டும். கார்ன் விஸ்கிகளை தவிர கருகிய புதிய கருவாலி மரத்தினாலான கொள்கலன்களை விட "பெயரிடப்பட்ட வகைகள்" பழமையானதாக இருக்க வேணடும். கார்ன் விஸ்கிகளை பழமையாக்க வேண்டிய அவசியம் இல்லை, பழமையாக்கபட்டு இருந்தால் அவற்றை புதிய கருகாத கருவாலி மரத்தினாலான கொள்கலன்களிலோ அல்லது உபயோகப் படுத்தபட்ட கொள்கலன்களிலோ இருக்க வேண்டும். கார்ன் விஸ்கிகளை பழமையாக்குவது எப்போதும் சுருக்கமான ஒன்றாகும் எ.கா 6 மாதங்கள் 2 அல்லது அதற்கு மேலாக பழமையாக்கபட்ட "பெயரிடப்பட்ட வகைகள்" விஸ்கிகள் "ஸ்டிரெய்ட்" என்று கூடுதாலாக அழைக்கப்படும் . எ.கா "ஸ்டிரெய்ட் ரெய் விஸ்கி". "ஸ்டிரைட் விஸ்கி "( எந்த வித தானியங்களும் இல்லாமல்) என்ற விஸ்கி கருகிய புதிய கருவாலி மரத்தினாலான கொள்கலனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடம் காய்ச்சி வடிக்கபட்டு 80% அளவுக்கு ஆல்கஹால் மிகாமலும் இதோ ஒரு தானியத்திலிருந்து 51 % குறைவாகவும் பெறப்படுகிறது. கலவை செய்யபட்ட அமெரிக்க விஸ்கிகள் ஸ்டிரைட் விஸ்கியுடன் பழமையாக்கபடாத விஸ்கி, தானிய சக்தி நடுநிலையுள்ள, சுவையையும், வண்ணத்தையும் கொண்டதாகும். ஜாக் தேனியலின் டென்னீசீ விஸ்கி சந்தையில் கிடைக்கும் இந்த வகையான விஸ்கிகளுக்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும். காய்ச்சி வடிக்கும் போது வட அமெரிக்காவில் பர்பன் விஸ்கியை எல்லா முறைகளிலும் ஒன்றாக புளிப்பாக கூலாக்குவது போல, டென்னீசீ விஸ்கியை கொள்கலனில் பழமையாக்குவதற்க்கு முன்பாக கரித்துண்டுகளினால் வடிகட்ட வேண்டும். டென்னீசீ விஸ்கியின் ஏற்றுக் கொள்ள கூடிய வித்தியாசம் என்னவென்றால் சுகர் மாபில், கரித்துண்டுகள் மூலமாக வடிகட்ட பட்டு தனிதன்மை வாய்ந்த சுவையையும், மணத்தையும் தருகின்றன. மிக முக்கியாமன வித்தியாசம் என்னவென்றால் கொள்கலன்களை மறுமுறை உபயோகிக்க பர்பன் விஸ்கி உற்பத்தியில் அனுமதி இல்லை ஒழுங்கு முறைகளினால் வரையறுக்க படவில்லை என்றாலும் டென்னீசீ விஸ்கி 1941 ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசால் அங்கீகரிக்கபட்டது. கனடியன் விஸ்கிகள் மற்ற விஸ்கி வகைகளை விட மென்மையானதாகவும், லேசானதாகவும் இருக்கும். கனடியன் விஸ்கிகளின் மற்றும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் ரெய்யை மால்ட் செய்வதன் மூலம் அவற்றிக்கு நல்ல மணமும் மென்மையும் கிடைக்கிறது. கனடியன் சட்ட விதிகளின் படி கனடியன் விஸ்கிகள் தானிய கூழிலிருந்து நொதிக்கபட்டு வடிகட்ட பட்டு மேலும் கனடாவில் தயாரிக்க பட்டவையாக இருக்க வேண்டும், 3 வருடத்திற்கு குறைவாக பழமையாக்க பட்டதாகவும், மேலும் நல்ல மணம், சுவை, கனடியன் விஸ்கிகளுக்கு உண்டான பண்புகளுடன் இருக்க வேண்டும். "கனடியன் விஸ்கி", "கனடியன் ரெய் விஸ்கி" மற்றும் "ரெய் விஸ்கி" ஆகியற்றில் உற்பத்திக்காக பயன்படுத்தபடும் ரெய் மற்றும் தானியங்கள் இவற்றில் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு சம விகிதத்தில் உள்ளன. பினிஷ் விஸ்கி கலாச்சாரமானது சில வருடங்களுக்கு முன்னால் தோன்றி இன்றும் நடைமுறையில் உள்ளது. பினிஷ் விஸ்கி கலாச்சாரமனாது நிலையான வாழ்க்கை முறையினாலும், பொதுவான உணவு பழக்கத்தினாலும் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. விற்பனையும், உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகபடியாக உயர்ந்துள்ளது. தற்போது 2 வடிமனைகள் பின்லாந்திலும், மூன்றாவது கட்டுமானத்திலும் உள்ளது. பின்லாந்தில் விஸ்கியின் சில்லரை வியாபாரம் ஸ்டேட் ஆல்கஹால் மோனோபோலி Alko மூலம் கட்டுபடுத்தபட்டு, சக்தியான ஆல்கஹாலிக் பானங்களின் விளம்பரம் தடை செய்ய பட்டுள்ளது. மோனோபோலி ஸ்டேட்ஸ் ஆல்கோவின் விஸ்கிகள் மீதான விளம்பர தடை இருந்தாலும் அது மக்களின் விஸ்கி உபயோகிக்கும் முறையை தடை செய்ய முடியவில்லை மாறாக அவற்றின் உபயோகத்தை அதிகபடுத்தியுள்ளது. மரபுவழியாக விஸ்கி தயாரிக்க பயன்படும் தானியங்களை கொண்டே ஜெர்மன் விஸ்கி தயாரிக்கப்படுகிறது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தான் ஜெர்மன் முறை விஸ்கி தயாரிக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. இந்த தயாரிப்பு வழக்கமானது ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய நாடுகளில் தயாரிக்கப்படும் சிங்கிள் மால்ட், பிள்ண்ட்ஸ், பர்பன் வகைகளை ஒத்திருந்தது. நிலையான எழுத்துகோர்வை இல்லாமலே ஜெர்மன் விஸ்கிகள் "விஸ்கி" (whisky) மற்றும் "விஸ்கி"(whiskey) மேலும் "வெஸ்கி" (whessky) ஒரு விளையாட்டு வார்த்தையான விஸ்கி மற்றும் ஹெசென் என்ற நகரத்தில் உருவானதாலும் இந்த பெயர் பெற்றது. ஜெர்மனியில் 10கும் மேற்பட்ட விஸ்கி தயாரிக்கும் வடிமனைகள் உள்ளன. இந்தியன் விஸ்கி என்பது ஆல்கஹால் குடிபானமாகும், இது "விஸ்கி" என்ற பெயரில் இந்தியாவில் அறிய படுகிறது. பெரும்பாலும் இந்தியன் விஸ்கி கழிவுச் சர்க்கரை பாகுலிரிந்து நொதிக்கப்பட்டு வடித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது, இந்திய துணைகண்டங்களின் வெளியே இது ஒரு வகையான ரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.இந்தியாவில் 90 % "விஸ்கி" கழிவுச் சர்க்கரைக் பாகுலிரிந்து பெறப்படுகிறது, எனினும் மால்ட் மற்றும் தானியக் கூழிலிருந்து வடித்துப் பிரித்தெடுக்கும் முறையை இந்தியா தற்போது தொடங்கியுள்ளது. கசவுலி டிஸ்டில்லரி 1820 க்கு பிறகு ஹிமாலய மலைப் பகுதிகளில் நிறுவப்பட்டு தொடங்கபட்டது. முதன்மை விஸ்கி தரமானது "சோலன் நம். 1 "என்ற பெயரில் அறிய பட்டது சோலன் என்ற நகரத்திற்கு அருகில் உருவானதால் இந்த பெயர் வைக்க பட்டது. இது தான் இது வரை சிறப்பாக விற்க்கபட்ட இந்தியன் விஸ்கியாக இருந்தது, ஆனால் 1980 ன் தொடக்கதில் பெரிய வடிமனைகளின் போட்டியால் மூடப்பட்டது. இந்த வடிமனையில் உருவாக்கபட்ட பிற விஸ்கிகள் டிப்ளமட் டீலக்ஸ், கோலனெல்'ச் ஸ்பெஷல், பிளாக் நைட் மற்றும் சம்மர் ஹால். File:IrishWhiskey.jpg|right|thumb|200px|பல்வேறு ஐரிஸ் விஸ்கிகள் பெரும்பாலும் ஐரிஸ் விஸ்கிகள் மூன்று முறை வடிக்கப்படுகின்றன, அவற்றில் சில விதிவிலக்குகளும் உள்ளன. பாரம்பரியாமாக பாட் ஸ்டில் முறை உபயோகப் படுத்தினாலும், கலப்பு முறையில் கிரைன் விஸ்கியை தயாரிக்க காலம் ஸ்டில் எனற முறை தற்காலத்தில் உபயோகப் படுத்தபடுகிறது. சட்டத்தின் படி ஐரிஸ் விஸ்கிகள் ஐர்லாந்தில் தயாரிக்க பட்டவையாக இருக்க வேண்டும், 3 வருடத்திற்க்கு மிகுதியாக மர பீப்பாய்களில் பழமையாக்க பட்டதாகவும், நடைமுறையில் 3 அல்லது 4 முறை வழக்கத்தில் உள்ளவையாகவும் இருந்து இருக்க வேண்டும். அன்பீடேட் மால்ட் என்பது எப்போதும் உபயோகப் படுத்தபடும், கொன்னிமாரா பீடேட் மால்ட் விஸ்கி அதிலிருந்து விதிவிலக்காகும். ஐர்லாந்தில் நிறைய வகை விஸ்கிகள் பொதுவாக உள்ளன: சிங்கிள் மால்ட், சிங்கிள் கிரைன், பிளண்டெட் விஸ்கி மற்றும் ஐர்லாந்தின் தனித்துவமான பியூர் பாட் ஸ்டில் விஸ்கி பியூர் பாட் ஸ்டில் என்று ஐர்லாந்தில் உபயோகிக்கபடும் முறை மூலம் உருவாக்கப்படும் விஸ்கியானது 100 % சுத்தமான பார்லி, மிக்ஸ்டு மால்டேல் மற்றும் காப்பரால் செய்யபட்ட பாட் ஸ்டில் வடிகட்டுதல் ஆகும். "கிரீன்" அன்மால்டேட் பார்லி மூலம் பாட் ஸ்டில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட விஸ்கி காரமாகவும், ஐரிஷின் தனிதன்மையுடனும் உள்ளது. சிங்கிள் மால்ட்டை போலவே பியூர் பாட் ஸ்டிலும், கிரைன் விஸ்கியும் கலவையாக விற்க படுகிறது. சிங்கிள் மால்ட் அல்லது பியூர் பாட் ஸ்டியின் கலவையான விஸ்கிக்கு எந்த விதமான தனி சிறப்பும் இல்லை. சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் என்பது ஜப்பனிஸ் விஸ்கிகளுக்கான மாதிரியாகும், ஜப்பனிஸ் பிள்ண்ட்டட் விஸ்கிகளுக்கு இவை எடுத்துக்காட்டாகும். மால்ட்டட் பார்லியின் கூல் இதன் அடிப்படையாகும், சிறிதளவு நிலக்கரியுடன் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து பாட் ஸ்டில் முறையில் (ஸ்காட்லாந்தை விட குறைவாக) வடிக்கப் படுகிறது. ஜப்பனிஸ் விஸ்கி ஏற்றுமதியாளர்கள் மேற்கில் உள்ள விஸ்கிகள் ஸ்காட்ச் வகையைச் சார்ந்தவை என்று நினைத்தனர் ஆனால் அவை ஸ்காட்லாந்தில் தயாரிக்கப் பட்டவை அல்ல, அவை கீழ்தரமான விஸ்கிகளாக இருந்தன,ஜப்பனிஸ் விஸ்கிளுக்கான சந்தை உள்நாட்டில் மட்டுமே இருந்தது. தற்போது ஜப்பனிஸ் விஸ்கிகள் சர்வதேச விருதுகள் பலவும், தரத்திற்க்கான நற்பெயரையும் பெற்றுள்ளன. File:Scotch whiskies.jpg|right|thumb|200px|பல்வேறு ஸ்காட்ச் விஸ்கிகள் ஸ்காட்ச் விஸ்கிகள் பொதுவாக இரண்டு முறை வடிக்கப்படுகிறது, ஒரு சில மூன்று முறையும் வடிக்கப்படுகிறது. சர்வதேச சட்டமானது " ஸ்காட்ச்" என்று ஏதேனும் குறிக்க பட்டு இருந்தால் அது ஸ்காட்லாந்தில் வடிக்கப் பட்டதாகவும், குறைந்தது 3 வருடங்கள் முதிர்ச்சியடைந்தாகவும், ஒரு நாள் கருவாலி பீப்பாய்களில் வைக்கபட்டதாகவும், மேலும் சில குறிபிட்ட காரணங்களையும் குறிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பீப்பாய்களிலிருந்து பெறப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியின் பாட்டிலில் அதன் வயதை குறிக்கும் வாக்கியம் இருந்தால் அது கலவை விஸ்கியின் குறைந்த வயதை குறிக்கிறது. சுவைக்காவும், மென்மைக்காவும் ஒரு நிமிடத்தில் சேர்க்கபடும் மூலங்களை சிங்கிள் மால்ட் வயதை புறக்கணிக்க எடுத்து கொள்கிறது. ஸ்காட்சின் அடிப்படை வகைகள் மால்ட் மற்றும் கிரைனாகும் இவற்றை ஒன்றிணைத்து கலவைகள் தயாரிக்கப் படுகின்றன. பல மற்றும் எல்லாவற்றிலும் இல்லாத போதிலும் ஸ்காட்ச் விஸ்கிகள் மால்ட்களை நிலக்கரி புகையின் மூலம் தனித்தன்மையான புகை மணத்தை ஸ்காட்ச்க்கு தருகின்றன. கலவைகளினால் சந்தை ஆதிக்கபட்டுள்ளது, ஸ்காட்ச் விஸ்கிகளின் அதிகப் படியான விலை சிங்கிள் மால்ட்ஸ் ஆகும். ஸ்காட்ச் விஸ்கிகள் 5 பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது, ஹைலேண்ட், லோலேண்ட், இஸ்லே, ஸ்பேசய்ட் மற்றும் காம்பிள்டவுன். 1894 ல் நிறுத்தப்பட்ட வெல்ஷ் விஸ்கியின் உற்பத்தியை, 2000ல் வேல்ஸில் உள்ள பெண்டிரைன் டிஸ்டில்லரி பெண்டிரைன் சிங்கிள் மால்ட், வெல்ஷ் விஸ்கி என்ற பெயரில் தொடங்கியது. முதல் பாட்டில் 1 மார்ச் 2004 அன்று செயிண்ட் டேவிட்ஸ் டேய் க்கு விற்பனைக்கு வந்தது, தற்போது இந்த விஸ்கி உலகம் முழுவதும் விற்கப் படுகிறது, பெர்கான் பியாகான்ஸ் நேஷனல் பார்க்கில் பெண்டிரைன் டிஸ்டில்லரி அமைந்துள்ளது மேலும் மிகச் சிறிய டிஸ்டில்லரியாக கருதப்படுகிறது. பிரான்ஸில் உள்ள பிரிட்டனியில் டிஸ்டில்ரே டெஸ் மென்ஹிர்ஸ், கல்லிஅன், கிளான் அர் மோர், காரில்ஸ், மற்றும் வாரன்ஹம் என்ற 5 வடிமனைகள் ஸ்காட்லாந்தின் முறையை பயன் படுத்தி விஸ்கிகளை தயாரிக்கின்றன. பிரன்ச் தீவில் உள்ள கார்ஸியா என்ற இடத்தில் தயாரிக்கப் படும் பியட்ரா & மாவிலா ( P&M ) என்ற விஸ்கியானது பிரிவரி பியட்ரா மற்றும் டிஸ்டிலரி மாவிலாவின் இணை தயாரிப்பாகும். கஷ்கொட்டை மாவின் மூலம் கூல் செறிவூட்டப் படுகிறது. மஸ்கட் காஸ்கில் பி & எம் முழு வளர்ச்சியடைகிறது ( டொமைன் ஜெண்டைல். ஸ்யில் ஆப் மேன்லிருந்து வரும் "மான்ஸ் ஸ்பிரிட்டானது " யுஎஸ்எ (USA) வில் இருக்கும் விர்ஜின் விஸ்கியை போன்றது, எங்கேயோ வடிக்கப் பட்டு பெயரளவில் துவக்கம் பெற்ற நாட்டில் மறுபடியும் வடிக்கப் படுகிறது. ஸ்பெயினில் 1948 ஆம் ஆண்டு தொடங்கபட்ட டிவொய்சி (DYC) என்று பெயரிடப் பட்ட டிஸ்டில்லரி உள்ளது. 3 விதமான விஸ்கிகள், 2 பிளண்டட் மற்றும் ஒரு பியூர் மால்டை தயாரிக்கிறது. குறைந்த அளவு உபயோகிக்கும் பியூர் மால்ட் 50 அனிவர்சரி என அழைக்கப் படுகிறது. ஸ்வீடனில் ஒரு புதிய டிஸ்டில்லரி மாக்மயிரா( Mackmyra) 2006 முதல் ஆரம்பிக்க பட்டு பொருள்களை விற்பனை செய்து வருகிறது. காவ்காஸஸ் பகுதியை சேர்ந்த பாரம்பரிய பிராண்டி தயாரிக்கும் நிறுவனம் தனது 2 விஸ்கி தயாரிக்கும் டிஸ்டில்லரிகளை ரஷ்யாவில் தொடங்கி உள்நாட்டு சந்தையில் நுழைய முடிவு செய்துள்ளது. ஸ்டவரோபோலை சேர்ந்த பிரஸ்கோவேஸ்கி டிஸ்டில்லரி ஐரிஸ் டெக்னாலஜி மூலம் தனது பொருள்களை உருவாக்க உள்ளது, கிஷ்லைர், டாகிஸ்டான் என்ற "ரஷ்யன் விஸ்கி" ஸ்காட்ச்-இன்ஸ்பய்ர்டு சிங்கிள் மால்ட் பானத்தையும், பிளண்டட் மற்றும் வீட் வெரைடிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. தைவானின் வைலன் நகரில் உள்ள கிங் கார் நிறுவனம் ஒரு விஸ்கி டிஸ்டில்லரியை சமீபத்தில் துவங்கி கவலான் சிங்கிள் மால்ட் விஸ்கியை விற்பனை செய்து வருகிறது. நியூ சொவ்த் வேல்ஸில் கிரிங்காங்கில் உள்ள ஆஸ்திரேலியன் ஸ்பிரிட் டிஸ்டில்லிங் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா சிங்கிள் மால்ட் விஸ்கிகளை தயாரிக்கிறது. இவை அமெரிக்கன் ஓக் பேரல்களில் பதப்படுத்தபடுகின்றன. 2004 ல் உற்பத்தியை துவக்கியது. நியூ டிஸ்டில்லரி எக்யூப்மெண்ட் ஆஸ்திரேலியன் பாணியில் "ஸ்டாக்மான்ஸ் விஸ்கி" மற்றும் "கன் ஆலே" என்ற சோர் மாஸ் விஸ்கிகளின் உற்பத்தியை உயர்த்தியுள்ளது. 2006 க்கு பிறகு இங்கிலாந்தில் உள்ள நார்போல்க் என்ற இடத்தில் முதல் விஸ்கியை (மால்ட் ஸ்பிரிட் எதிராக) தயாரித்து 2009 நவம்பரில் வெளிவந்தது. 100 வருடங்களில் இது தான் இங்கிலாந்தின் முதல் சிங்கிள் மால்ட்டாகும். இங்கிலிஷ் விஸ்கி நிறுவனம் மூலம் செயிண்ட் ஜார்ஜ் டிஸ்டில்லரி இதை தயாரித்தது. லிவர்பூல் மற்றும் பிரிஸ்டால் இதற்கு முன்பு இங்கிலிஷ் விஸ்கி தயாரிப்பின் மையங்களாக இருந்தன. ஸ்காட்ச் விஸ்கியில் உபயோகிக்கபடும் தானியங்கூழுக்கு ஈஸ்ட் அங்கிலா ஆதாரமாக இருந்தது. கிங் ஹென்றி II 12ம் நூற்றாண்டில் ஐயர்லாந்தின் மீது படையெடுக்கும் போது அவரது வீரர்கள் ஐரிஷின் வார்த்தையான "யூசி பீயதா " பொருள் " வாட்டர் ஆப் லைப்" உச்சரிக்க கஷ்ட பட்டதால் "விஸ்கி" என்ற வார்த்தை தோன்றியாதாக நம்பப்படுகிறது. அதற்கு பிறகு, உச்சரிப்பு "விஸ்கியாபா" ( ஐரிஷில் வரும் ஒலியை போன்று) "விஸ்கி" என்று மாறியது. இந்த பெயரானது லாடினின் காலிகில் உள்ள கால்கியூ கொண்டு உருவாக்கப் பட்ட ""அக்குவா வீடே"" வாக்கியமாகும், அர்த்தம் "வாட்டர் ஆப் லைப்" ("water of life"). ஒரு காலத்தில் அனைத்து விஸ்கியும் "இ" என்ற எழுத்து இல்லாமல் "விஸ்கி" என்று அழைக்க பட்டது. 1870 களில் காபே ஸ்டில் மூலமாக ஸ்காடிச் டிஸ்டில்லரிஸ்லிருந்து சந்தைக்கு வரும் ஸ்காடிச் விஸ்கிகளின் மதிப்பு குறைவாகவே இருந்தது. ஐரிஸ் மற்றும் அமெரிக்கன் டிஸ்டில்லரிஸ் தனது தரமிக்க பொருள்களை வேறுபடுத்தி காட்ட "விஸ்கி" யில் ஒரு "இ" யை அதிகமாக இணைத்துக் கொண்டன. தற்போது உச்சரிக்கபடும் "விஸ்கி (whisky)" (பன்மை "விஸ்கீஸ்) (whiskies)" ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஜப்பானில் உபயோகபடுத்தப் பட்ட டிஸ்டில்டு விஸ்கீஸை பொதுவாக குறிக்கிறது, "விஸ்கே (whiskey)" ஐயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உபயோகபடுத்தப் பட்ட ஸ்பிரிட் டிஸ்டில்டுகளை குறிக்கிறது. 1968 ல் பியூரோ ஆப் ஆல்கஹால், டாபாக்கோ மற்றும் பயர்ஆம்ஸ் விஸ்கி என்பதை அமெரிக்க உச்சரிப்பின் படி விளக்கியது, இவை பாரம்பரிய முறையில் தயாரிக்கப் பட்ட விஸ்கிகளை "whiskey" பிரித்தறிய உதவியது மற்றும் நிறைய யூ.எஸ் (U.S) ஸ்டில் தயாரிப்பாளர்கள் இந்ந பழமை வாய்ந்த உச்சரிப்பை உபயோகிக்கின்றனர். இயர்லி டைம்ஸ், மாக்கர்ஸ் மார்க் மற்றும் ஜார்ஜ் டைகிள் போன்றவை வேறுபட்டு ஸ்காட்டிச் மரபை சுட்டி காட்டுகின்றன. விக்டோரியன் எரா க்கு பிறகு ஐரிஸ் விஸ்கி தான் உலகின் பிரபலமான விஸ்கியாக இருந்தது. ஐரிஸ் விஸ்கிகளில் டுப்லின் விஸ்கிகள் "கிராண்ட்ஸ் க்ரஸ்" விஸ்கிகளாக பொருட் படுத்தபட்டது. டுப்லின் விஸ்கிகளை மற்ற விஸ்கிகளிலிருந்து வேறுபடுத்த டுப்லின் டிஸ்டில்ரிஸ் விஸ்கே "whiskey" என்ற உச்சரிப்பை பின்பற்றின. மற்ற ஐரிஸ் டிஸ்டில்லரிகள் பொருந்தும் படி பின்பற்றின. ஐர்ஷின் கடைசி விஸ்கி "whisky" பாடி யாக இருந்தது, 1966 ல் "இ" பின்பற்றின. "ஸ்காட்ச்" என்பது "ஸ்காட்ச் விஸ்கி" க்கான உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட பெயராகும், ஸ்காட்லாந்தில் குறைவாக உபயோகிக்கப்படுகிறது, பிளண்டட் விஸ்கி என்பது " விஸ்கி" என்றும் சிங்கிள் அல்லது வாட்டட் மால்ட் விஸ்கி என்பது " மால்ட்" என்றும் இருந்தது. சில லடின் - அமெரிக்கன் நாடுகளில் "விஸ்கி " "வீ-ஸ்கீ " wee-சகி என்பது புகைப்படகாரர்கள் உபயோகிக்கும் சிரிப்பு , ஆங்கிலத்தில் "சீஸ்" என்று இருந்தது. உருகுயான் பிலிம் "விஸ்கி" மூலமாக இந்த பெயரை பெற்றது. விஸ்கி மற்றும் மற்ற வடிக்கபட்ட பானங்கள் காக்னாக் மற்றும் ரம் வகை பானங்கள் அதிகப் படியான சுவை மணச்சேர்மங்கள் 200 முதல் 300 வரை உண்டு என்பதை வேதியியல் பகுப்பாயிவின் மூலம் அறியலாம். சுவைமண வேதிப் பொருள்களானது கார்போனைல் மூலங்களையும், ஆல்கஹால், கார்பாலிக் ஆசிட் மற்றும் அதன் எஸ்டர்ஸ், நைட்ரஜன் மற்றும் சல்பர் மூலங்களையும், டானின் மற்றும் பாலிபானலிக் மூலங்களையும், டெர்ப்பைன் மற்றும் ஆக்ஸிஜன் ஹிட்ரோசைக்லிக் மூலங்களையும் மற்றும் பேட்ட்டி ஆஸிட்களின் எஸ்டர்ஸ்களையும் கொண்டதாகும். நைட்ரஜன் மூலப்பொருள்கள் பைரிடைன்ஸ், பிக்கோலைன்ஸ் மற்றும் பைராசைன்ஸ் ஆகியவற்றை கொண்டது. பியூசல் ஆயில் மற்றும் கான்க்நெர் அளவை பொருத்தே விஸ்கியின் சுவைமணம் உணரப் படுகிறது. எத்தனாலை விட பியூசல் ஆயிலில் ஆல்கஹால் அதிகமாகவும், டாக்சில் ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு மணமும் சுவையும் இருக்கும். அதிகப் படியான பியூசல் ஆயில் விஸ்கியில் இருந்தால் அது குறையாகும். தேவையற்ற பியூசல் ஆயிலை நீக்க நிறைய வடிகட்டும் முறைகள் இயக்கப் படுகின்றன. காய்ச்சி வடித்த பொருளிலிருந்து தேவையற்ற பொருள்களை நீக்க அமெரிக்கன் டிஸ்டில்லர்ஸ் கரித்துண்டு, கற்கள், மணல், துணி போன்றவற்றை இரண்டாம் கட்ட வடிகட்டுதலை பயன்படுத்துகிறார்கள். நியூட்ரல் கிரைன் ஸ்பிரிட் அல்லது கிரைன் நியூட்ரல் ஸ்பிரிட் என்ற சுத்தமான எத்தனாலை (குறைந்த சுவையுடைய) பிரிக்க கனடியன் டிஸ்டில்லர்ஸ் காலம் ஸ்டில் முறையை உபயோகப் படுத்துகின்றனர். நியூட்ரல் கிரைன் ஸ்பிரிட்யை சுவைமணமுள்ள விஸ்கிகளுடன் கலந்து சுவைமணம் மீட்டெடுக்கப் படுகிறது. ஆக்டால் வடிக்கப்ட்ட பானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப் படுகிறது, ஆக்டல்ஹைடைதில் ஆக்டால் இவைகளில் பிரபலமானதாகும். (1,1-டைதோக்சிதானே) இந்த விஸ்கிகள் மால்ட் விஸ்கிகளுடன் அதிக அளவு தொடர்புடையவை. இந்த ஆக்டல் ச்செரிக்கு முக்கியமான சுவை சேர்மமாகும், மற்றும் பழவகையான மணத்தையும் வழங்குகிறது. வடிக்கப் பட்ட எல்லா பானங்களிலும் பட்டரி சுவை போன்ற டைக்டோன் டையாசிடைல் (2,3-புடனிடையோன்) இருக்கும். பிராண்டிகள் மற்றும் ரம்மை விட குறைவாகவும், வோட்க்காவை விட அதிகமாகவும், விஸ்கிகள் மற்றும் காக்னாக்ஸ் மாதிரியாக இருக்கும். விஸ்கி லாக்டோன் (3- மீத்தைல்-4 -ஒக்ட்ன்லைட்) எல்லா வகையான கருவாலி மரத்திலும் காணப்படுகிறது. இந்த லாக்டோன் வலிமையான தேங்காய் மணத்தை கொண்டுள்ளது. விஸ்கி லாக்டோன் என்பது க்ர்கஸ் லாக்டோன் என்றும் அறியப் படுகிறது. கருகிய கருவாலி மரங்களில் பினோலிக் சேர்மம் வணிக ரீதியாக அதிகமாக உள்ளன. ஒரு படிப்பு 40 விதவிதமான பினோலிக் சேர்மத்தைப் பிரிக்கிறது. குமரின் ஸ்கொபோலிடின் விஸ்கியில் உள்ளது, பர்பன் விஸ்கியில் அதிகமாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. உப்புச் சத்தியாகிரகம் உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை ("Salt March") என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த "முழு விடுதலை" என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது. காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பிந்தைய நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது. விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புகளில் இவை இடம் பெற்றன. உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 80,000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்புச் சத்யாக்கிரகத்தின் விளைவாகச் சிறையிலடைக்கப்பட்டனர். இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் ஆங்கிலேயரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது. மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களைச் சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாகப் போராட வழிவகுத்தது, ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து பெரியளவிலான சலுகைகளை வெல்லத் தவறியது. உப்புச் சத்தியாகிரகப் பிரச்சாரம் காந்தியின் கோட்பாடான வன்முறையற்ற அறப்போர் என்ற அறநெறியை அடிப்படையாகக் கொண்டது, அதை அவர் "உண்மைச்-சக்தி" என வரையறுத்தார். சத்தியாகிரகம் என்ற சமற்கிருதச் சொல்லில் சத்யம் என்பது உண்மையையும் கிரகம் என்பது சக்தியையும் குறித்தது. 1930 களின் துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அதன் முக்கியச் செயல்முறையாகச் சத்யாக்கிரகத்தைத் தேர்வு செய்து ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய விடுதலையை வெல்லவும் அதற்கான நடவடிக்கையை அமைப்பாக்கம் செய்யவும் காந்தியை நியமித்தது. காந்தி 1882 இல் ஆங்கிலேயர் விதித்த உப்புச் சட்டத்தைச் சத்யாக்கிரகத்தின் முதல் இலக்காகத் தேர்ந்தெடுத்தார். தண்டிக்கான உப்பு நடைப்பயணமும் தாராசனாவில் அறவழியில் போராடிய நூற்றுக்கணக்கான பொது மக்களைப் பிரித்தனிய காவலர்கள் அடித்ததும், சமூக மற்றும் அரசியல் அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களின் மீதான சட்ட அநீதியாக எடுத்துக் காட்டியது. காந்தியின் சத்தியாக்கிரகப் போதனைகளும் தண்டி நடைப்பயணமும் அமெரிக்க மனித உரிமைச் செயல்வீரர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீதும், மேலும் 1960 களில் அவரது கருப்பர்கள் மற்றும் இதர சிறுபான்மை குழுக்களின் உரிமைகளுக்கான போரிலும் கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருந்தது. டிசம்பர் 31, 1929 நள்ளிரவில், இந்திய தேசிய காங்கிரஸ் லாகூரின் ராவி நதிக்கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியது. இந்திய தேசிய காங்கிரஸ், காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவால் வழிகாட்டப்பட்டு, ஜனவரி 26, 1930 இல் வெளிப்படையாக "விடுதலைப் பிரகடனம்" அல்லது "முழு விடுதலையை" வெளியிட்டது. இவ்விடுதலைப் பிரகடனமானது மக்களின் மீதான வரிகளைத் தடுத்து நிறுத்தத் தயாராவதை உள்ளடக்கியிருந்தது, மேலும் அறிக்கையானது: இது இந்திய மக்களின் பிரிக்க இயலாத, பிற மக்களைப் போல, விடுதலைப் பெறவும் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்க்கையின் தேவைகளைப் பெறவும், அதனால் வளர்ச்சியின் முழு வாய்ப்புக்களைக் கொள்ளவுமான உரிமையுடையது என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மேலும் நம்புவது எந்தவொரு அரசும் இந்த உரிமைகளை மக்களுக்கு மறுக்கிறது மற்றும் அவர்களை ஒடுக்குகிறது எனில் மக்களுக்கு இதற்கு மேலும் அவ்வரசினை மாற்ற அல்லது ஒழிக்கும் உரிமையுள்ளது. இந்தியாவின் ஆங்கிலேய அரசு இந்திய மக்களின் சுதந்திரத்தை மறுப்பதோடு அல்லாமல், மக்களின் மீதான சுரண்டலில் தனது அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது, மேலும் இந்தியாவை பொருளாதார, அரசியல், பண்பாட்டு மற்றும் ஆன்மீக ரீதியில் சீரழித்துள்ளது. ஆதலால் நாம் நம்புவது, இந்தியா ஆங்கிலேயர் தொடர்பைத் துண்டித்துப் "பூர்ண ஸ்வராஜ்" அல்லது முழு விடுதலையை அடைய வேண்டும். காங்கிரஸ் செயற்குழு, காந்திக்குச் சட்ட மறுப்பு நடவடிக்கையை அமைக்கும் பொறுப்பினைக் கொடுத்தது, அத்தோடு காந்தியின் எதிர்பார்க்கப்பட்ட கைதினைத் தொடர்ந்து தானே பொறுப்பினை எடுத்துக் கொள்ளத் தயாராகவும் இருந்தது. காந்தியின் திட்டமானது சட்ட மறுப்பினை அறவழியில் ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தைக் குறிவைத்துத் துவங்குவதாக இருந்தது. 1882 உப்புச் சட்டம் ஆங்கிலேயருக்கு உப்பின் சேகரிப்பிற்கும் உற்பத்திக்கும் ஒட்டுமொத்த உரிமையைக் கொடுத்தது, அதன் கையாளுகையை அரசு உப்புக் கிடங்குகளிலும் உப்பு வரி விதிப்பதிலும் வரையறுத்தது. உப்புச் சட்டத்தை மீறுவது ஒரு குற்றச் செயலாகக் கருதப்பட்டது. உப்பானது கடற்கரையில் வாழ்பவர்களுக்கு (கடல் நீர் ஆவியாவதிலிருந்து) இலவசமாகக் கிடைத்து வந்தாலும் கூட, இந்தியர்கள் அதனைக் காலனிய அரசிடமிருந்து நுகர வற்புறுத்தப்பட்டனர். காந்தி தனது அறப் போரின் முதல் நடவடிக்கையாக ஆங்கிலேயரின் உப்பு வரி மீதான உப்புச்சட்டத்தைத் தேர்வு செய்ததற்குக் காங்கிரஸ் செயற்குழுவினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேரு மற்றும் திவ்யலோச்சன் சாகூ ஆகியோர் ஒரு தெளிவற்ற முடிவினைக்(அவ நம்பிக்கையை) கொண்டிருந்தனர். சர்தார் பட்டேல் உப்புச்சட்டத்திற்குப் பதிலாக நிலவருவாய்ச் சட்டத்தைப் புறக்கணிக்க ஆலோசனை தெரிவித்தார். இருப்பினும் காந்தி உப்பு வரியைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கான காரணங்களைக் கொண்டிருந்தார். உப்பு வரி ஆழமான குறியீடாயமைந்த தேர்வாக, உப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொருவராலும் பயன்படுத்தப்படுகிறது. அரசு வருமானத்தில் 8.2% உப்பினால் கிடைக்கிறது. காற்று, நீர் இவற்றுக்கு அடுத்தபடியாக உப்பு வாழ்க்கையின் மிகத் தேவையான ஒன்றாக உள்ளது.மேலும் இச்சட்டம் மிகக் குறிப்பாக ஏழ்மையிலும் ஏழ்மையான இந்தியர்களை மிகவும் பாதிக்கிறது. காந்தி இந்த எதிர்ப்பு முழு விடுதலை என்ற நமது கருத்து கீழ்மட்ட இந்தியர்களுக்கு விளங்கிடும்படியான காட்சியாய் அமையலாம் என உணர்ந்தார். மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் காரணமாக, அவர்களைச் சமமாகப் பாதித்த ஒன்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஏற்படுத்தும் என நம்பினார். பின்னர் காந்தியின் இத்தேர்வு மிகச் சரியானதென நேரு உள்ளிட்ட தலைவர்கள் உணர்ந்தனர். மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்களுடன், வன்முறையற்ற சட்ட மறுப்பிற்கு நீண்ட காலப் பொறுப்பினைக் கொண்டிருந்தார், இந்திய சுதந்திரத்தை அடைவதற்கான அடிப்படையாக "அறப்போர்" என்பதை வரையறுத்தார். "அறப்போர்" மற்றும் "முழு விடுதலை" இவற்றின் "வழிமுறைகளுக்கும் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பானது விதைகளுக்கும் மரங்களுக்கும் இடையிலானதைப் போலப் பிணைக்கப்பட்டிருந்தது. இது குறித்து "கைக்கொள்ளப்படும் வழிமுறைகள் தூய்மையற்றதாக இருப்பின் மாற்றமானது முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்காது. மிக எதிர்மறையானதாக இருக்கலாம். நமது அரசியல் சூழல்களில் தூய்மையான வழிமுறைகளால் கொண்டுவரப்படும் மாற்றம் உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவிடலாம் எனக் காந்தி எழுதினார்." சத்தியாக்கிரகம் எனபது சம்ஸ்கிருத சொற்களான "சத்ய" (உண்மை) மற்றும் "ஆக்ரஹா" (உறுதியாகப் பற்றியிருத்தல்) ஆகியவற்றின் சேர்ப்பு ஆகும். காந்திக்கு, சத்தியாக்கிரகம் வெறும் "துன்பமேற்கிற எதிர்ப்பை" விட வன்முறையற்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவூட்டுவதாக ஆனது. அவரது சொற்களில்: உண்மை (சத்யம்) அன்பை பொருளாகக் கொள்கிறது மற்றும் உறுதியை (ஆக்ரஹா) உண்டு பண்ணுகிறது ஆகையால் சக்திக்கு ஒத்ததொன்றாகப் பலனளிக்கிறது. ஆகையால் நான் இந்திய இயக்கத்தைச் சத்தியாக்கிரகம், என அழைக்கத் துவங்கினேன், மேலும் கூறுவதென்றால் பிறந்துள்ள சக்தியானது உண்மை மற்றும் அன்பு அல்லது வன்முறை இவற்றிலிருந்து ஏற்பட்டது, "துன்பமேற்கிற எதிர்ப்பை", ஆங்கிலத்தில் எழுதுகையில் கூட நாம் பலமுறை தவிர்த்திருக்கிறோம் அதற்குப் பதிலாக “சத்தியாக்கிரகம்”... எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். அவரது முதல் குறிப்பிடத்தக்க முயற்சி இந்தியாவில் பெரும் அறப்போரை வழிநடத்திய, 1920-1922ஆம் ஆண்டுகளில் நடந்த ஒத்துழையாமை இயக்கமாகும். அது இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட எழுச்சியூட்டியதில் வெற்றியடைந்தாலும், சௌரி சௌராவில் வன்முறை வெடித்து, ஆயுதமற்ற 22 காவற்துறையினரை ஒரு கும்பல் கொன்றது. காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறிப் போராட்டத்தை நிறுத்தி வைத்தார். அவர் இந்தியர்கள் இன்னும் வெற்றிகரமான வன்முறையற்ற எதிர்ப்பிற்குத் தயாராகவில்லை என முடிவெடுத்தார். பர்தோலி சத்தியாக்கிரகம் 1928 இல் நடந்தது அதிக வெற்றிகரமானது. அது ஆங்கிலேய அரசைச் செயல்படவிடாமல் செய்வதில் வென்றது. மேலும் குறிப்பிடத்தக்க சலுகைகளை வென்றது. மிக முக்கியமாக, விரிவான ஊடகச் செய்திகளின் காரணமாக, அது ஒரு பிரச்சார வெற்றியை அதன் அளவு விகிதத்தை விடக் கடந்து பெற்றது. பின்னர் காந்தி கூறியது பர்தோலியின் வெற்றி அவரது அறப்போர் மற்றும் விடுதலை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது: "படிப்படியாகவே நாம் பர்தோலியில் கிடைத்த வெற்றியின் முக்கியத்துவத்தை அறியச் செய்வோம்...பர்தோலி அதற்கு வழிகாட்டியுள்ளது. மற்றும் தெளிவாக்கியுள்ளது. விடுதலை வேரில் பதிந்துள்ளது, மேலும் அது மட்டுமே நோய் தணிக்கும்..."" காந்தி தண்டி நடைப்பயணத்திற்கு அதிகளவில் பர்தோலியிலிருந்து பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார், அது பர்தோலி போராட்டத்தில் பங்கேற்ற அதே கிராமங்கள் வழியே சென்றது. பிப்ரவரி 5 இல், காந்தி சட்ட மறுப்பினை உப்புச் சட்டங்களை மறுப்பதன் மூலம் துவங்கலாம் என்று செய்தித்தாள்கள் அறிவித்தன. உப்பு அறப்போர் மார்ச் 12 இல் துவங்கி காந்தி ஏப்ரல் 6 இல் தண்டியில் உப்புச் சட்டத்தை உடைத்தப் பிறகு முடிவடையும். காந்தி ஏப்ரல் 6 இல் பேரளவில் உப்புச் சட்டங்களை உடைக்க தேர்வு செய்தததற்கு மறைமுகமான காரணம்- 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராகக் காந்தி தேசியக் கடையடைப்பை (ஹர்த்தாலை) துவக்கிய "தேசிய வாரத்தின்" முதல் நாள் ஆகும். காந்தி வழக்கமான அறிக்கைகளைச் சபர்மதியிலிருந்து விடுத்தும், அவருடைய வழக்கமான பிரார்த்தனை கூட்டங்களின் மூலமும் ஊடகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமும் உலக முழுதுமான ஊடகங்களை நடைபயணத்திற்குத் தயாராக்கினார். அவர் கைதினை எதிர் நோக்கித் தொடர்ந்து விடுத்த அறிக்கைகளினால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன, அந்நிகழ்வு நெருங்கிவருகையில் மேலும் அவர் பரபரப்பூட்டுகிற மொழியில் "நாம் வாழ்வா சாவா போராட்டத்தில் நுழைகிறோம்; ஒரு புனிதப் போரை; நாம் அனைவரும் அனைத்தையும் தழுவிய தியாகங்களை நிகழ்த்தி அதில் நாம் நம்மையே பலியிட அளிக்கிறோம் எனக் கூறினார். இந்திய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க செய்தித் தாள்களிலிருந்து டஜன் கணக்கான செய்தியாளர்கள், திரைப்பட நிறுவனங்களிலிருந்தும், இந்நிகழ்ச்சிக்கான செய்திகளைச் சுறுசுறுப்பாகச் சேகரித்தனர். நடைப்பயணத்திற்காக மட்டும், காந்தி கடுமையான ஒழுக்கத்தை விரும்பினார். மேலும் சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சையைக் கடைபிடிக்கவும் விரும்பினார். அந்தக் காரணத்திற்காக, அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நடை பயணத்திற்காகத் தேர்வு செய்யவில்லை, ஆனால் அவரது சொந்த ஆசிரமத்தில் குடியிருந்தவர்களை, காந்தியின் கடுமையான ஒழுக்க தரநிலைகளில் பயிற்சிப் பெற்றிருந்தவர்களைத் தேர்ந்தெடுத்தார். 24 நாள் நடைப்பயணம் 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது. நடைப்பயணத்தின் வழி, ஒவ்வொரு நாளின் மாலையில் பயணம் நிற்கும் இடம், ஆகியவை கடந்த காலத் தொடர்புகள் மற்றும் நேரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டது. காந்தி சாரணியர்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் நடைப் பயணத்திற்கும் முன்பே அனுப்பினார். ஆதலால் அவர் தனது ஒவ்வொரு ஓய்விடத்திலும் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கேற்ப திட்டமிட முடிந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிகள் அட்டவணையிடப்பட்டன மேலும் இந்திய மற்றும் அந்நிய ஊடகங்களில் இது குறித்து வெளியிடப்பட்டன. மார்ச் 2, 1930 இல் பதினோரு கோரிக்கைகளை ஏற்றால் நடைப் பயணத்தை நிறுத்துவதாகக் கூறி,காந்தி அரசப் பிரதிநிதி இர்வின் பிரபுவிற்கு கடிதமொன்றை எழுதினார், அதில் நிலவரியை மதிப்பிடுவதை குறைப்பது, இராணுவ செலவை வெட்டுவது, அந்நியத் துணி மீது சுங்க வரி விதிப்பது மற்றும் உப்பு வரியை நீக்குவது ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன. இர்வினுக்கான வலுவான கோரிக்கை உப்பு வரி பற்றியது: கடிதமானது உங்கள் இதயத்தினை இம்மாதத்தின் பதினோராம் நாள் தொடவில்லை என்றால் நான் ஆசிரமத்தின் சக பணியாளர்களுடன் மேற்சென்று உப்புச் சட்டங்களின் விதிகளைப் புறக்கணிப்பதைச் செயல்படுத்துவோம். நான் இந்த உப்பு வரியை ஏழை மனிதனின் பார்வையிலிருந்து முழுமையாக மிகத் துன்பம் விளைவிப்பதாகக் கருதுகிறேன். இம்மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான விடுதலை இயக்கமானது, இந்தத் தீமையுடன் துவக்கம் செய்யப்படுகிறது. இர்வின் இந்த உப்பு எதிர்ப்பைத் தீவிரமான ஆபத்தாக எடுத்துக் கொள்ளவில்லை, "தற்போது உப்பு போராட்டத்தின் வாய்ப்பு என்னை இரவுகளில் விழித்திருக்கச் செய்யவில்லை என லண்டனுக்கு எழுதினார்.மேலும் அரசப் பிரதிநிதி கடிதத்தை அசட்டை செய்தார் மற்றும் காந்தியை சந்திக்க மறுத்தார். நடைப்பயணம் மேலே தொடர்ந்தது. காந்தி இதனை" நான் மண்டியிட்டு ரொட்டி கேட்டேன் ஆனால் அதற்கு மாற்றாக எனக்குக் கற்களே கிடைத்தன" என நினைவு கூறுகிறார்." நடைப்பயணத்தின் முந்தைய நாட்கள் ஏராளமான இந்தியர்களைச் சபர்மதிக்கு வந்து வழக்கமான மாலை பிரார்த்தனைக் கூட்டங்களில் காந்தி பேசுவதைக் கேட்க இழுத்தது. ஓர் அமெரிக்க கல்வியாளரின் தி நேஷனுக்கு எழுதியதில் கூறப்பட்டிருந்ததாவது "60,000 பேர் நதியின் கரைகளில் காந்தியின் போர்க்கோலம் தரிக்கக் கோரும் அழைப்பினைக் கேட்கத் திரண்டனர். இந்தப் போர்க்கோலம் தரிக்கக் கோரும் அழைப்பு ஒருவேளை எப்போதும் செய்யப்படாத மிக நினைவு கூறத்தக்க போருக்கானதாகும்." மார்ச் 12, 1930 இல் காந்தி மற்றும் 78 ஆண் சத்தியாக்கிரகிகள் அவர்களின் துவக்க முனையான சபர்மதி ஆசிரமத்திலிருந்து மேலிருந்த கடற்கரை கிராமமான குஜராத்தின் தண்டிக்கு கால் நடையாகக் கிளம்பிச் சென்றனர். அரசின் அதிகாரபூர்வ செய்தித்தாளான தி ஸ்டேட்ஸ்மேனின் கூற்றுப்படி, அது வழக்கமான காந்தியின் நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற கூட்டத்தை விடக் குறைந்தே இருந்தது. 100,000 பேர் அகமதாபாத்திலிருந்து சபர்மதியை பிரிக்கின்ற சாலையில் கூடியிருந்தனர் எனக் கூறியது. முதல் நாள் நடைப்பயணம் அஸ்லாலி கிராமத்தில் முடிந்தது. அங்கு காந்தி சுமார் 4,000 பேர் இருந்த கூட்டத்தில் பேசினார். அஸ்லாலி, மற்றும் இதர கிராமங்களைக் கடந்து சென்ற நடைப்பயணத்தில் தன்னார்வலர்கள் நன்கொடை வசூலித்தனர்; புதிய அறப்போராளிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். மேலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ஒத்துழையாமையை விரும்பிய கிராம அதிகாரிகளிடமிருந்து பதவி விலகலைப் பெற்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் நுழைந்தபோது, நடைப்பயணம் செய்பவர்களை மத்தளம் மற்றும் கைத்தாளமிட்டு மக்கள் வரவேற்றனர். காந்தி உப்பு வரியை மனித நேயமற்றது எனத் தாக்கிப் பேசினார், மேலும் அறபோரை "ஏழை மனிதனின் போர்" என வர்ணித்தார். ஒவ்வொரு இரவும் அவர்கள் திறந்த வெளியில் தூங்கினர், கிராமவாசிகளிடம் எளிய உணவு மற்றும் தங்குவதற்கும் தூய்மை செய்துகொள்வதற்கும் ஓரிடம் தவிர கூடுதலாக எதையும் கோரவில்லை. காந்தி இந்நடைப்பயணம் ஏழைகளை விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைக்கும் என உணர்ந்தார், அது இறுதி வெற்றிக்குத் தேவையானது. ஆயிரக்கணக்கான சத்தியாக்கிரகிகளும் சரோஜினி நாயுடு போன்றத் தலைவர்களும் அவருடன் இணைந்தனர். கூட்டமானது சுமார் 2 மைல் நீளமிருந்தது. நடைப்பயணத்தின் போது அறப்போரளிகள் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடலைப் பாடிக்கொண்டே நடந்தனர். ஒவ்வொரு நாளும், நடைப்பயணத்தில் இணைந்த மக்கள் எண்ணிக்கைப் பெருகியது. சூரத்தில், 30,000 மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்கள் தண்டியின் இருப்புப் பாதை முனையை அடைந்தப் போது 50,000 ற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். காந்தி வழியில் செல்லும் போது நேர்முகப் பேட்டிகளைக் கொடுத்தும் கட்டுரைகளை எழுதியும் வந்தார். அந்நிய இதழியலாளர்கள் அவரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அடிக்கடி உச்சரிக்கும் பெயராக ஆக்கினர். "மூன்று மும்பை திரைப்பட நிறுவனங்கள் செய்திச் சுருள் படமெடுக்க குழுக்களை உடன் அனுப்பின. (1930 இன் கடைசியில் டைம் இதழ் அவரை "ஆண்டின் சிறந்த மனிதர்" எனக் குறித்தது). தி நியூயார்க் டைம்ஸ் பெரும்பாலும், இரு முன் பக்க கட்டுரைகளை ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7 இல் வெளியிட்டதுடன் அனைத்து நாட்களும் உப்பு நடைபயணத்தைப் பற்றி எழுதியது. மார்ச் மாத இறுதியில் "வலிமைக்கெதிரான உரிமைக்கான இப்போராட்ட களத்தில்நான் இந்த உலகின் இரக்கத்தை விரும்புகிறேன்" எனக் காந்தி அறிவித்தார்". ஏப்ரல் 5 இல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தபோது, காந்தி அசோசியேடட் பிரஸ் நிருபர் ஒருவரால் நேர் முகம் செய்யப்பட்டார். அவர் குறிப்பிட்டதாவது: நான் அரசிடமிருந்தான எனது முகமனை நடைப்பயணம் முழுதும் தலையிடாக் கொள்கையை அவர்கள் மேற்கொண்டதற்காகத் தடுத்து வைக்க இயலாது... நான் விரும்புவது நான் நம்பக்கூடியது இந்தத் தலையிடாமை உண்மையான இதய மாற்றமோ அல்லது கொள்கையின் காரணமாகவோ அல்ல என்பதே. அவர்களால் திட்டமிட்டு எம் உணர்வுகளுக்குச் சட்டமன்றத்தில் காட்டப்பட்ட மரியாதையின்மையும் அவர்களின் ஆணவமிக்க நடத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி எவ்விலை கொடுத்தாவது இதயமற்ற இந்தியச் சுரண்டல் கொள்கையைத் தொடரச் செய்வதேயாகும். மேலும் ஒரேயொரு விளக்கமாக, நான் இந்தத் தலையிடாமையின் மீது கூறுவது, ஆங்கிலேய அரசு, வலிமைமிக்கதாக இருந்தாலும், உலகின் கருத்துக்களுக்கும் மாறுதல்களுக்கும் உள்ளாகக்கூடியது, அது தீவிரமான அரசியல் போராட்டத்தை ஒடுக்குவதை பொறுப்பதில்லை, சட்ட மறுப்பும் ஐயத்திற்கிடமின்றி அது போன்றதே, மறுப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் வரை மேலும் அவசியமானதாகவும் வன்முறையற்றதாகவும் உள்ளது... அரசானது நடைப்பயணத்தைப் பொறுத்தது போன்று, நாளைமுதல் எண்ணற்ற மக்களால் உப்புச் சட்டங்கள் உண்மையாக உடைக்கப்படும்போது பொறுக்குமா என்பதைக் காண வேண்டும். தொடர்ந்த காலையில், ஒரு பிரார்த்தனைக்குப் பிறகு, காந்தி கையளவு உப்புபை எடுத்து உயர்த்திப் பிடித்து அறிவித்தார், "இதனுடன், நான் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன். அவர் பிறகு அதனைக் கடல் நீரில் கொதிக்க வைத்து, சட்டத்தை மீறி உப்பெடுத்தார். அவர் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் அதேபோல உப்பினைக் கடற்கரை முழுதும் "எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு" தயாரிக்கத் துவங்குமாறும், மேலும் கிராமவாசிகளிடம் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பெடுப்பதையும் பரிந்துரைத்தார். இந்தியா முழுதும் பேரளவில் சட்ட மறுப்பானது பரவியது. இலட்சக்கணக்கானவர் உப்புச் சட்டங்களை உடைத்து, உப்பு தயாரித்தனர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பானவகையில் உப்பை வாங்கினர். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவின் கடற்கரை முழுதும் உப்பு விற்கப்பட்டது. காந்தியால் தயாரிக்கப்பட்ட சிட்டிகையளவு உப்பு கூட ரூபாய் 1,600 ற்கு விற்கப்பட்டது (அக்காலத்தில் $750 க்கு இணையானது). பதிலாக, ஆங்கிலேய அரசு அம்மாதத்தின் இறுதிக்குள் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைச் சிறையிலடைத்தது. நடைபயணமாகத் துவங்கியது விரைவில் பேரளவிலான சத்தியாக்கிரகமாக மாறியது. அந்நியத் துணிகளும் பொருட்களும் புறக்கணிக்கப்பட்டன. பரவலாக அறியப்படாத வனச் சட்டங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய மாகாணங்களில் மறுக்கப்பட்டன. குஜராத்தி விவசாயிகள் வரி கொடுக்க மறுத்தனர், அவர்களின் நிலங்களையும் பயிர்களையும் இழக்கும் அபாயத்தைச் சந்தித்தனர். மிட்னபூரில், பெங்காலிகள் சௌகிதார் வரியை கொடுக்க மறுத்துச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேய அரசு கூடுதல் சட்டங்களுடன், செய்தித் தொடர்பைத் தணிக்கைக்கு உட்படுத்தியும் காங்கிரஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களைச் சட்டத்திற்கு புறம்பானதாகவும் அறிவித்தது. இது போன்ற வழிமுறைகள் எதுவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பின்னடையச் செய்யவில்லை. பெசாவரில், காந்தியின் முஸ்லிம் சீடரான கான் அப்துல் கப்பார் கான் தலைமையில் குடாய் கிட்மத்கர் என்றழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற 50,000 படைவீரர்களால் (அறப்போராட்ட செயல்வீரர்கள்)அறப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. ஏப்ரல் 23, 1930 இல் கான் அப்துல் கப்பார் கான் கைது செய்யப்பட்டார். குடாய் கிட்மத்கரின் குழுவொன்று பெசாவரின் கிசா கானி (கதைச் சொல்லிகள்) பஜாரில் கூடியிருந்தனர். ஆயுதம் தரிக்காத இந்தக் கூட்டத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடுமாறு ஆங்கிலேய அரசு ஆணையிட்டது. அதில் 200-250 எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர். பஷ்டூன் சத்தியாக்கிரகிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறவழிப் பயிற்சியின்படி, துருப்புகள் அவர்கள் மீது சுட்டப்போது குண்டுகளைச் சந்தித்தனர். ஒரு ஆங்கிலேய இந்திய இராணுவப் பிரிவு, பெயர்பெற்ற ராயல் கார்வால் துப்பாக்கியால் கூட்டத்தைப் பார்த்துச் சுட மறுத்தனர். இதனால் முழு படைப்பிரிவும் கைது செய்யப்பட்டது, மேலும் பலர் ஆயுள் தண்டனை உட்பட கடும் தண்டனைப் பெற்றனர், காந்தி, இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அவரது நெருங்கிய கூட்டாளி இராசகோபாலாச்சாரி, பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநராகப் பதவி வகித்தவர்; கிழக்கு கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டார். அவரது குழு சென்னை மாகாணத்திலுள்ள திருச்சிராப்பள்ளியிலிருந்து கடலோரச் சிற்றூரான வேதாரண்யத்திற்கு நடைபயணத்தைத் தொடங்கியது. அங்கு இராஜாஜி சட்ட விரோதமாக உப்பை எடுத்தார். அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். 1930 இன் சட்ட மறுப்பானது விடுதலைப் போரில் முதல் முறையாகப் பெண்களைப் பேரளவில் பங்கேற்கச் செய்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சத்தியாக்கிரகத்தில் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர். காந்தி ஆண்கள் மட்டுமே உப்பு நடைப்பயணத்தில் பங்கேற்கக் கோரினார், ஆனால் இறுதியில் பெண்கள் இந்தியா முழுதும் உப்பினை தயாரித்தும் விற்கவும் செய்தனர். மூத்த காந்திய செயல்வீரரான உஷா மேத்தா, "எமது வயதான மாமி/அத்தைகளும் மூத்த-மாமி/அத்தைகளும் மற்றும் பாட்டிமாரும் அவர்களின் வீட்டில் உப்புத் தண்ணீரைக் கொண்டு வந்து சட்டத்திற்குப் புறம்பான உப்பினைத் தயாரித்தனர். பிறகு நாங்கள் உப்புச் சட்டத்தினை உடைத்து விட்டோம்!எனக் கூச்சலிட்டனர்." என விமர்சித்தார். விடுதலைப் போரில் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு இர்வினைப் பொறுத்தவரை " புதிய மற்றும் தீவிரமான செயல்பாடாக" இருந்தது. "காங்கிரசின் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவும் மறியலில் உதவவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இல்லங்களின் தனிமையிலிருந்து வெளிவந்தனர்... அவர்களின் இத்தகைய போராட்டங்களின் போதான பங்கேற்பு காவற்துறையினரை ஓர் மகிழ்வற்ற செயலைச் செய்யத் தேவையை ஏற்படுத்தியது." என ஒரு அரசு அறிக்கை பெண்களின் பங்கேற்பு பற்றிக் கூறியது. கல்கத்தா (தற்போது கொல்கொத்தா), கராச்சி, மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறை வெடித்தப் பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதான தனது முந்தைய ஒத்துழையாமை இயக்க வாய்ப்புகளைப் போலல்லாமல் இம்முறை காந்தி "இடங்கொடுக்கவில்லை". வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் வேண்டுகோள்விட்ட அதே நேரத்தில், காந்தி சிட்டகாங்கில் கொல்லப்பட்டவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களது பெற்றோர்களை நோக்கி வாழ்த்தி "அவர்களின் மகன்களின் பூர்த்தியான தியாகம்... ஒரு வீரனின் மரணம் துன்பத்திற்கான விஷயம் அல்ல. என்றார். ஆங்கிலேய அரசின் ஆவணங்கள் ஆங்கிலேய அரசானது சத்தியாக்கிரகத்தினால் கலங்கியது என்பதைக் காட்டியது. அறவழி எதிர்ப்பானது ஆங்கிலேயரைக் காந்தியைச் சிறையிலடைப்பதா வேண்டாமா எனும் குழப்பத்தில் விட்டது. இந்தியாவில் தங்கியிருந்த ஒரு ஆங்கிலேயக் காவல் அதிகாரியான ஜான் கோர்ட் கர்ரி, தனது நினைவுக் குறிப்புகளில், தான் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக 1930 இல் பொறுப்பேற்றிருந்தபோதும் வெறுப்புணர்ச்சிக்கு ஆளானதாக எழுதினார். ஆங்கிலேய அரசில் கர்ரியியும் மற்றவர்களும், வெட்ஜ்வுட் பென் என்ற இந்தியாவின் அரசு செயலர் உட்பட, அறவழியில் போராடுபவர்களை விட வன்முறையாளர்களுடன் சண்டையிடவே விருப்பப்பட்டனர். காந்தி மேற்கொண்ட தனது சுறுசுறுப்பான ஈடுபாட்டினை நடைப்பயணத்திற்குப் பிறகு தவிர்த்தார், இருந்தாலும் இந்தியா முழுதுமான படிப்படியான வளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தார். அவர் தண்டிக்கு அருகில் தற்காலிக ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கிருந்தபடியே, பெண் தொண்டர்களைப் பம்பாயில் (தற்போது மும்பை) மதுக் கடைகளையும் அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கச் செய்யவும் வலியுறுத்தினார். அவர் அந்நியத் துணிகளைக் கொண்டு ஒரு சொக்கப்பனை கொளுத்தச் செய்ய வேண்டினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புறக்கணிக்கப் பட்டு வெறுமையடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்." காந்தி தனது அடுத்த பெரிய நடவடிக்கையாக, குஜராத்தின் தாராசனா உப்பு நிறுவனத்தைத் திடீர்த் தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். அவர் மீண்டும் இர்வின் பிரபுவிற்கு கடிதம் எழுதித் தனது திட்டங்களைக் கூறினார். மே 4 நள்ளிரவில், காந்தி மெத்தையில் மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சூரத்தின் மாவட்ட நீதிபதி, இரு இந்திய அதிகாரிகள் மற்றும் முப்பது கனரக ஆயுதங்தாங்கிய காவல்துறையினருடன் வந்திறங்கினார். அவர் 1827 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி புனா (தற்போது புனே) அருகில் தங்கவைக்கப்பட்டார். தாராசனா சத்தியாக்கிரகம் திட்டமிட்டப்படி நடந்தது, அப்பாஸ் தியாப்ஜி என்ற ஒரு ஓய்வு பெற்ற எழுபத்தியாறு வயது நீதிபதி காந்தியின் மனைவி கஸ்தூரிபாயைத் தனது அருகில் வைத்துக் கொண்டு நடைப்பயணத்தை வழிநடத்தினார். இருவரும் தாராசனாவை அடையும் முன்பே கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களின் கைதிற்குப் பிறகு, நடைப்பயணம் சரோஜினி நாயுடு ஒரு பெண் கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தலைமையில் தொடர்ந்தது. அவர் சத்தியாக்கிரகிகளை எச்சரித்தார், "நீங்கள் எந்தச் சூழலிலும் எவ்விதமான வன்முறையையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் அடிக்கப்படுவீர்கள், ஆனால் நீங்கள் எதிர்க்கக் கூடாது; நீங்கள் ஒரு கரத்தைக் கூட அடிகளைத் தடுத்து விலக்க உயர்த்தக் கூடாது." துருப்புகள் சத்தியாக்கிரகிகளை ஒரு சம்பவத்தில் எஃகு முனைக் கொண்ட தடிகளைக் கொண்டு அடித்தனர் அது சர்வதேச கவனத்தைப் பெற்றது. யுனைடெட் பிரஸ் நிருபர் வெப் மில்லர் கட்டுரையில் எழுதியவை: ஒரு நடைபயணிகூட ஒரு கரத்தைக் கூட அடியிலிருந்து விலக்க உயர்த்தவில்லை. அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தனர். நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூடப்படாத மண்டைகளில் காயம் ஏற்படுத்தும் ஒலிகளைக் கேட்டேன். காத்திருந்த வேடிக்கை பார்த்திருக்கும் கூட்டம் தேம்பியது. மற்றும் அவர்களது மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு அடியின் வலிக்கும் அனுதாபம் தெரிவிக்கும்படி செய்தனர். அடிபட்டவர்கள் கைகால்களை நீட்டியவாறு விழுந்தனர், உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்றோ அல்லது சுருண்டு நெளிந்தனர். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நிலம் மெத்தை மீது கிடத்தப்பட்ட உடல்களால் நிரம்பியது. அவர்களது வெள்ளை ஆடைகளில் பெரிய இரத்தக் கறைகள் படிந்தன. மீதமிருந்தவர் வரிசையை உடைக்காமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர். விதல்பாய் படேல், முன்னாள் அவைத் தலைவர், அடிபடுவதை கண்டுக் கூறினார், "ஆங்கிலேயப் பேரரசு மீண்டும் இந்தியாவுடன் நட்புறவை உண்டாக்கும் செயலை எப்போதோ இழந்துவிட்டது. மில்லரின் கதையைத் தணிக்கை செய்ய ஆங்கிலேயரின் முயற்சிகளையடுத்து, அது இறுதியாக உலகம் முழுதும் 1,350 செய்தித்தாள்களில் தோன்றியது, மேலும் அமெரிக்க மேலவையில் அதிகாரபூர்வமாக வாசிக்கப்பட்டது. உப்பு சத்தியாக்கிரகம் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியடைந்தது. நடைப் பயணத்தைக் காண்பிக்கும் செய்திச் சுருளை இலட்சக்கணக்கானோர் கண்டனர். டைம் இதழ் காந்தியை அதன் 1930 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்தது. காந்தியின் உப்பு வரியை மறுத்துக் கடல் நோக்கிய நடைப் பயணத்தை "சில நியூ இங்கிலாந்தவர்களின் ஒருமுறை ஆங்கிலேய தேநீர் வரியை மறுத்தது போன்றது" என ஒப்பிட்டது." சட்ட மறுப்பு 1931 இன் முற்பகுதி வரை தொடர்ந்தது, காந்தி சிறையிலிருந்து இறுதியாக இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்த விடுவிக்கப்பட்டார். இருவரும் சம தகுதியில் பேச்சு வார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை. பேச்சு வார்த்தைகள் 1931 இன் இறுதியில் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்கு வழிவிட்டது. உப்பு சத்தியாக்கிரகம் குடியாட்சி அந்தஸ்தையோ அல்லது விடுதலையையோ நோக்கி மிகக்குறைவான முன்னேற்றத்தையே கொடுத்தது, மேலும் ஆங்கிலேயரிடமிருந்து எவ்விதமான பெரிய சலுகைகள் எதையும் வென்றெடுக்கவில்லை. அது முஸ்லிம்களின் ஆதரவையும் பெறத் தவறியது-பல முஸ்லிம்கள் சத்தியாக்கிரகத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாக்கிரகம் அதிகாரபூர்வ கொள்கையாக இருப்பதை முடிவிற்கு கொண்டுவர 1934 இல் தீர்மானித்தனர். நேரு மற்றும் இதர காங்கிரஸ் உறுப்பினர்கள் காந்தியிடமிருந்து மேலும் விலகினர். காந்தி காங்கிரசிலிருந்து விலகியிருந்து தனது ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் செலுத்தச் சென்றார், அதில் அவரது தீண்டாமையை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளும் அடங்கியிருந்தன. இருப்பினும் 1930 களின் மத்தியில் ஆங்கிலேயர் மீண்டும் இப்பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்த போதும், விடுதலைக்கான காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளிலிருந்த நியாயத்தை இந்திய, ஆங்கிலேய மற்றும் உலகின் கருத்துக்கேற்ப படிப்படியாக அங்கீகரிக்கத் துவங்கியது. 1930 களில் சத்தியாக்கிரகம் ஆங்கிலேயரின் இந்தியா மீதான முழுமையான கட்டுப்பாட்டை இந்தியர்களைச் சார்ந்ததாக மாற்றியது.- உப்பு சத்தியாக்கிரகம் ஆங்கிலேயர் இந்தியர்களின் மீதான தனது முழுக் கட்டுப்பாட்டை இழந்ததற்கான குறிப்பிடத்தகுந்த அடியாகும். நேரு உப்பு சத்தியாக்கிரகத்தை காந்தியுடனான தனது கூட்டணியில் அதிக பட்ச நீர்க் குறியீடு எனக் கருதினார். மேலும் அதன் நீடித்த முக்கியத்துவம் இந்தியர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் உணர்ந்தார்: இயல்பிலேயே, இத்தகைய இயக்கங்கள் ஆங்கிலேய அரசு மீது மிகப் பெரிய அழுத்தத்தை விளைவித்தது மேலும் அரசு இயந்திரத்தை ஆட்டுவித்தது. ஆனால் உண்மையான முக்கியத்துவம், எனது நினைவிற்கு, நமது சொந்த மக்களின் மீது ஏற்படுத்திய பாதிப்பில் இருக்கிறது. மேலும் குறிப்பாகக் கிராம மக்களின் மீது...ஒத்துழையாமை அவர்களைக் கீழ்மையிலிருந்து வெளியேற்றியது; அவர்களுக்குத் தன்மானத்தையும் தற்சார்பையும் கொடுத்தது...அவர்கள் துணிச்சலாகச் செயல் புரிந்தனர்; மேலும் மிக எளிதாக அநீதியான ஒடுக்குமுறைக்கு அடிபணியவில்லை; அவர்களது புறப்பார்வை விரிவடைந்தது; அவர்கள் சிறிதளவு இந்தியா முழுமைக்குமாக என்ற வரையறையில் சிந்திக்கத் துவங்கினர்...அதொரு நினைவு கூறத்தக்க மாற்றமாகும் மேலும் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அதற்கான பாராட்டுதலுக்கு உரித்தானது." முப்பதாண்டுகள் கழித்து, சத்தியாக்கிரகம் மற்றும் தண்டிக்கான நடைப் பயணம் அமெரிக்க மனித உரிமை செயல்வீரரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீதும், மற்றும் அவரது 1960 களின் கருப்பர்களுக்கான மனித உரிமை போராட்டத்தின் மீதும் வலுவான தாக்கத்தை விளைவித்தது: பெரும்பாலான மனிதர்களைப் போல், நான் காந்தியைப் பற்றிக் கேட்டிருக்கிறேன், ஆனால் அவரைத் தீவிரமாகப் படித்ததில்லை. படித்தப்போது நான் அவரது அறவழி எதிர்ப்பு பிரச்சாரங்களினால் ஆழமாகக் கவரப்பட்டேன். நான் குறிப்பாக அவரது கடற்கரைக்கான உப்பு நடைப் பயணத்தினாலும் எண்ணற்ற உண்ணா நோன்புகளாலும் செயற்படத் தூண்டப்பட்டேன். "சத்தியாக்கிரகம்" எனும் முழுக் கருத்துருவமும் எனக்கு மிக ஆழமான முக்கியத்துவமுடையது. நான் காந்தியின் தத்துவத்தில் ஆழமாக உண்மையை நாடி ஆய்வு செய்யும் போது, எனது அன்புச் சக்தியின் மீதான சந்தேகங்கள் படிப்படியாகக் குறைந்தன, மேலும் நான் முதல் முறையாக அதன் சாத்தியத்தைச் சமூக சீர்த்திருத்த தளங்களில் கண்டேன். பெரும் உப்பு நடைப்பயணத்தை நினைவு கூறத்தக்கவகையில், மகாத்மா காந்தி ஃபவுண்டேஷன் 75ஆவது நினைவு தினத்தில் மறு-அரங்கேற்றம் ஒன்றைப் பரிந்துரைத்தது. அந்நிகழ்வு "நீதி மற்றும் விடுதலைக்கான பன்னாட்டு நடை" என அறியப்பட்டது". மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தியும் உடன் வந்த பல நூறு நடைப்பயணிகளும் தண்டிக்கு அதே வழியினைப் பின்பற்றினர். அகமதாபாத்தில் மார்ச் 12, 2005 அன்று துவங்கிய நடைப்பயணம் சோனியா காந்திமற்றும் பல இந்திய மைய அமைச்சர்கள் உட்பட பலரும் முதல் ஒரு சில கிலோமீட்டர்கள் நடந்தனர். பங்கேற்பாளர்கள் தண்டியில் ஏப்ரல் 5 இரவு தங்கினர், அத்துடன் ஏப்ரல் 7 இல் நினைவு தினம் நிறைவடைந்தது. 75 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டித் தண்டி நடைப்பயண நிகழ்வுகள் குறித்த நினைவு அஞ்சல் தலை வரிசைகள் ஏப்ரல் 5, 2005 இல் வெளியிடப்பட்டன. இவை 5 இந்திய ரூபாய் மதிப்புக் கொண்டவை.. தண்டி நடைப்பயணத்தை நினைவு கூறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பணத்தில் காந்தியடிகள் தொண்டர்களுடன், தண்டி யாத்திரை மேற்கொண்ட படம் அச்சிட்டுள்ளது. கோஹினூர் கோஹ்-இ-நுர் (, பெர்சியன்/உருது: کوہ نور, ), பெர்சிய மொழியில் இதன் பொருள் "மலையின் ஒளி" ஆகும். இது கோஹினூர் , கோஹ்-இ நூர் அல்லது கோஹ்-இ-நுர் என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இது ஒரு காலத்தில் உலகில் அதிகம் அறியப்பட்ட வைரமாக இருந்த 105 கேரட் (21.6 கிராம்) வைரம் ஆகும். கோஹினூர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது, மேலும் அவர்கள் இதை போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர். இது இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது. வைரத்தின் தோற்றம் தெளிவின்றி இருந்தாலும், வதந்திகள் நிறைய காணப்படுகின்றன. பல ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது, மேலும் இது பண்டைய சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இந்துப் புராணங்களின் அடிப்படையில்,கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் இவருடைய மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரத்தை சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கத்தை அளிக்கின்றது என்று புராணம் கூறுகின்றது. ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார். சத்ரஜித் சந்தேகம் கொண்டு, "கழுத்தில் நகை அணிந்து காட்டுக்குச் சென்ற எனது சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்" என்று கூறியிருந்தார். கிருஷ்ணர் தனது கௌரவத்தைக் காக்க, ஜாம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, தனது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்துடன் கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, சமயந்தகாவை ஏற்க மறுத்தார். வாரலாற்று சான்று, கோஹினூர் வைரம் காகதீய பேரரசின் குண்டூர் மண்டலத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியதாக பரிந்துரைக்கின்றது, அது உலகின் பழமையான வைரம் உற்பத்தி செய்யும் இடமாகும். 1730 ஆம் ஆண்டில் பிரேசிலில் வைரங்கள் கண்டுபிடிக்கும் வரையில் வைரங்களுக்கான நன்கறிந்த ஒரே ஆதாரமாக இந்த மண்டலம் மட்டுமே இருந்தது. "கோல்கொண்டா" வைரம் என்ற சொல்லானது வைரத்தின் மிகத் தூய்மையான வெண்ணிறம், தெளிவு மற்றும் ஒளி ஊடுருவல் ஆகியவற்றை விவரிக்கின்றது. அவை மிகவும் அரிதானவை மற்றும் அதிகம் புகழ்பெற்றவை. வைரமானது தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் பரித்தலா கிராமத்திற்கு அருகிலுள்ள கொல்லூர் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த வைரமானது காகத்தீய அரசர்களின் சொத்தானது. கி.பி 1320 ஆம் ஆண்டில் டெல்லியில் கிஜிலி வம்சம் முடிவடைந்து, கியாஸ் உத் தின் துக்ளக் ஷா I அவர்கள் டெல்லி அரியணையில் மகுடம் சூடினார். துக்ளக் அவரது தளபதி உலுக் கானை 1323 ஆம் ஆண்டில் காகதீய அரசன் பிரதாபருத்ராவைத் தோற்கடிக்க அனுப்பினான். உலுக் கானின் படையெடுப்பு புறமுதுகிட்டு ஓடியது, ஆனால் அவர் ஒரு மாதத்தில் பெரிய படை மற்றும் இராணுவ பலத்துடன் திரும்பினார். தயார்நிலையற்ற காகதீய படை தோற்கடிக்கப்பட்டது. காகதீய அரசாங்கத்தின் தலைநகரம் ஒருகல்லு (தற்போது வாரங்கல்) பலமாதங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு மற்றும் அழிக்கப்பட்டது. தங்கம், வைரங்கள், முத்துக்கள் மற்றும் தந்தங்கள் மூட்டை மூட்டையாக டெல்லிக்கு யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன. கோஹினூர் வைரம் அவற்றில் ஊக்கப் பொருளானது. அதிலிருந்து, வைரமானது தொடர்ந்து வந்த டெல்லி சுல்தான் ஆட்சியாளர்களின் கைகளில் மாறியது, இறுதியாக 1526 ஆம் ஆண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபர் கைகளுக்கு வந்தது. கோஹினூர் வைரத்தின் முதல் உறுதியான வரலாற்றுக் குறிப்பு ஒரு அடையாளம் காணக்கூடிய பெயரால் 1526 இலிருந்து குறிப்பிடப்பட்டது. பாபர் அவரது நினைவுகளில் குறிப்பிடுகிறார், "பாபுர்நாமா", என்ற அந்தக் கல்லானது 1294 ஆம் ஆண்டில் பெயர் அறியப்படாத மால்வாவின் ராஜாவிடன் இருந்ததது. பாபுர் வைரக் கல்லின் மதிப்பை இரண்டு நாள்களுக்கான முழு உலகத்தின் கதிப்பாக வைத்திருந்தார். பாபூர்ணமா எவ்வாறு மால்வாவின் ராஜா தனது மதிப்புமிக்க சொத்தை அலா உத் தீன் கிஜ்லிக்கு அளிக்க நிர்பந்திக்கப்பட்டார் என்பதை விளக்குகின்றது; பின்னர் அது டெல்லி சுல்த்தானை ஆண்ட பரம்பரைகளால் சொந்தம் கொண்டாடப்பட்டது, இறுதியாக அந்த சாம்ராஜ்யத்தின் இறுதி அரசனை வென்றதைத் தொடர்ந்து, அது 1526 ஆம் ஆண்டில் பாபர் வசம் வந்தது. இருப்பினும், பாபூர்ணமா 1526-30 ஆண்டுகளில் எழுதப்பட்டது; இந்தத் தகவலுக்கான பாபரின் ஆதாரம் அறியப்படவில்லை, மேலும் அவர் தனது காலத்தின் வதந்தியை விளக்கியிருக்கக் கூடும் மற்றும் வாராங்கல் பேரரசுடன் மால்வா ராஜாவை இணைத்தும் கூறியிருக்கலாம். அந்த நேரத்தில் அவர் அந்தக் கல்லின் தற்போதைய பெயரைக் கொண்டு அழைக்கவில்லை, ஆனால் 'பாபரின் வைரம்' என்பதன் அடையாம் பற்றி விவாதங்களிடையே முரண்பாடாக அது வைரமாகப் பார்க்கப்பட்டு பின்னர் கோஹினூர் வைரமானது. பாபர் மற்றும் ஹூமாயூன் இருவரும் தங்களின் நினைவுகளில் 'பாபரின் வைரத்தின்' தோற்றத்தை மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வைரமானது குவாலியரின் கச்சவாஹா ஆட்சியாளர்களிடம் இருந்தது, பின்னர் அது தோமரா வரிசையால் மரபுரிமையாகப் பெறப்பட்டது. தோமராக்களின் இறுதி அரசனான விக்ரமாதித்யா சிக்கந்தர் லோடியால் தோற்கடிக்கப்பட்டார், இவர் டெல்லி சுல்த்தான் ஆவார் மற்றும் டெல்லியில் வசித்த டெல்லி சுல்த்தானின் ஓய்வுரிமை பெற்றவரானார். லோடியின் வீழ்ச்சியில் முகலாயர்களின் பதிலாக்கத்தால், அவரது வீடு முகலாயர்களால் சூறையாடப்பட்டது மற்றும் இளவரசர் ஹூமாயூன் குறுக்கிட்டு சமரசம் செய்து அவரது சொத்தை மீட்டு அவரை டெல்லியை விட்டு வெளியேற்றி சித்தவூரில் உள்ள மேவாருக்கு நாடுகடத்தவும் அனுமதித்தார். ஹூமாயூனின் பண்பினால், இளவரசர் விக்ரமாதித்யாவிற்கு சொந்தமான கோஹினூர் போன்ற வைரங்களில் ஒன்று ஹூமாயூனுக்கு அளிக்கப்பட்டது. ஹூமாயூன் மிகவும் மோசமான அதிர்ஷ்டத்தை தனது வாழ்க்கை முழுவதும் அனுபவித்தார். ஷேர் ஷா சூரி ஹூமாயூனை தோற்கடித்தார், அவர் பீரங்கி வெடிவிபத்தில் உயிரிழந்தார். அவரது மகன் ஜலால் கான், அவரது மந்திரியால் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததால் அவரது மைத்துனரால் கொலைசெய்யப்பட்டார், அவர் வெற்றியின் அடியால் துரதிர்ஷடவசமாக கண்களில் தாக்கப்பட்டதால் தனது இந்தியாவின் பேரரசர் உரிமையை இழந்தார். ஹூமாயூனின் மகன் அக்பர் அந்த வைரத்தை தன்னிடம் வைத்ததில்லை, பின்னர் ஷாஜகான் மட்டுமே அதை அவரது கருவூலத்திலிருந்து வெளியே எடுத்தார். அக்பரின் பேரனான ஷாஜகான் அவரது மகன் ஔரங்கசீப் மூலமாக கவிழ்க்கப்பட்டார், அவர் அவரது மூன்று சகோதரர்களைத் திட்டமிட்டு கொலை செய்தார். முகலாய பேரரசர் ஷாஜகான், தாஜ் மஹால் கட்டிடத்திற்குப் பிரசித்தி பெற்றவர், அவர் அந்தக் கல்லை தனது மயில் மகுடத்தில் ஆபரணமாக வைத்திருந்தார். அவரது மகன் ஔரங்கசீப் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆக்ரா கோட்டையின் அருகே சிறைப்படுத்தியிருந்தார். அவர் அந்த கோஹினூர் வைரத்தை ஜன்னல் அருகே வைத்திருந்தார், எனவே ஷாஜகான் தாஜ் மஹாலை அந்த வைரத்தின் பிரதிபலிப்பால் மட்டுமே பார்க்க முடிவதாக இருந்தது என்று புராணம் கூறுகின்றது. பின்னர் அதை ஔரங்கசீப் தனது தலைநகர் லாகூர் கொண்டு சென்று, அதை தனது சொந்த பாத்ஷாஹி மசூதியில் வைத்தார். அது 1739 ஆம் ஆண்டில் நடேர் ஷாவின் படையெடுப்பு வரையில் அங்கேயே இருந்தது, மேலும் அது ஆக்ரா மற்றும் டெல்லியை உலுக்கியது. 1739 ஆம் ஆண்டில் அவர் மயில் மகுடத்துடன் கோஹினூர் வைரத்தை பெர்சியாவிற்குக் கொண்டு சென்றார். நடேர் ஷாz திடீரென "கோஹினூர்!" என உரக்கக்கூறியது குற்றம்சாட்டும் வகையில் இருந்தது, அப்போது அவர் இறுதியாக பிரபல வைரக்கல்லை பெற்றார், மேலும் இதுவே அந்த வைரமானது தற்போதைய பெயரை எவ்வாறு அடைந்தது என்பதைக் குறிக்கின்றது. 1739 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பெயருக்கான எந்தவிதக் குறிப்பும் இல்லை. புராணத்தில் அளித்துள்ளபடி, கோஹினூர் வைரத்தின் மதிப்பீட்டை நடேர் ஷாவின் கூட்டாளிகளில் ஒருவர் கூறியது, "ஒரு வலிமையான மனிதன் ஐந்து வைரக்கற்களை எடுத்துக் கொண்டு, ஒன்றை வடக்கு, ஒன்றை தெற்கு, ஒன்றை கிழக்கு மற்றும் ஒன்றை மேற்கு நோக்கி வீசி, பின்னர் கடைசி ஒன்றை விண்ணை நோக்கி நேராக வீசினார் எனில், அவற்றுக்கு இடையேயான இடங்கள் தங்கம் மற்றும் மாணிக்கக் கற்களால் நிரப்படும், இதற்கு ஒப்பானதே கோஹினூர் வைரம் ஆகும்." 1747 ஆம் ஆண்டில் நடேர் ஷாவின் படுகொலைக்குப் பின்னர், அந்தக் கல்லானது ஆப்கானிஸ்தானின் அஹ்மத் ஷா அப்தாலியின் கைகளுக்கு வந்தது. 1830 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் பதவியிறக்கப்பட்ட ஆட்சியாளர் ஷா ஷூஜா, கோஹினூர் வைரத்துடன் தப்பியோடினார். பின்னர் அவர் லாஹூர் வந்தடைந்து பஞ்சாப்பின் சீக்கிய மஹாராஜா (அரசன்) ரஞ்ஜித் சிங்கிடம் அதை அளித்தார்; அதற்குப் பதிலாக மகாராஜா ரஞ்ஜித் சிங் ஆப்கானை மீண்டும் வென்று ஷா ஷூஜாவை மீண்டும் அரியணை ஏற்றினார். ரஞ்ஜித் சிங் பஞ்சாப்பின் ஆட்சியாளராக தன்னை மேம்படுத்தினார், மேலும் 1839 ஆம் ஆண்டில் தனது மரணப்படுக்கையிலிருந்து ஒரிசாவிலுள்ள ஜகன்னாத் கோயிலுக்கு கோஹினூரை அளிக்க விரும்பினார். ஆனால் இந்த கடைசி நிமிட உயில் பற்றி சர்ச்சை இருந்தது, மேலும் அது செயல்படுத்தப்படவில்லை. மார்ச் 29, 1849 ஆம் ஆண்டில், லாகூர் கோட்டையில் பிரிட்டிஷ் தனது கொடியைப் பறக்கவிட்டு, பஞ்சாப் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் அங்கமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தக் கையகப்படுத்தலை அதிகாரப்பூர்வமாக்கும் சட்டபூர்வ உடன்படிக்கையான லாகூர் ஒப்பந்தத்தின் நெறிமுறைகளில் ஒன்று, பின்வருமாறு இருந்தது: இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் லார்டு டல்கௌசி இருந்தார். மற்ற யாரையும் விட, கோஹினூரை பிரிட்டிஷார் கைப்படுத்துவதில் டல்கௌசி மிகுந்த பொறுப்புடன் இருந்தார், இதில் தனது சிறப்பான ஆர்வத்தை தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் காண்பிக்கத் தொடர்ந்தார். இந்தியாவில் டல்ஹௌசியின் பணி சில நேரங்களில் விவகாரங்களில் இருந்தது, மேலும் மற்றவற்றை விடவும் அவரது வைரம் கையகப்படுத்தல் சில சமகால பிரிட்டிஷ் ஆளுநர்களால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வைரம் இங்கிலாந்து ராணியிடம் பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்ற சில பரிந்துரைகளும் இருந்தன, அந்த வைரமானது போரில் சீர்குலைந்திருந்ததாக டல்கௌசி வன்மையாக உணர்ந்தார் மேலும் அதை தொடர்ந்து சீர்படுத்தினார் என்பது தெளிவாகின்றது. அவரது நண்பர் சர் ஜியார்ஜ் கூப்பர் அவர்களுக்கு 1849 ஆகஸ்டில் அவர் கடிதம் எழுதினார், அதில் அவர் குறிப்பிட்டது: டல்கௌசி, 1850 ஆம் ஆண்டில் வைரத்தை மஹாராஜா ரஞ்ஜித் சிங்கின் இளம் வழித்தோன்றல் துலீப் சிங் அவர்களால் மகாராணி விக்டோரியாவிற்கு வழங்குமாறு ஏற்பாடு செய்தார். மஹாராஜா துலீப் சிங்க், மஹாராஜா ரஞ்ஜித் சிங் மற்றும் அவரது ஐந்தாவது மனைவி மஹாராணி ஜிந்த் கௌர் ஆகியோரின் இளைய மகன் ஆவார். 13 வயதான துலீப் ஆபரணத்தை வழங்க இங்கிலாந்துக்குப் பயணித்தார். கோஹினூரை ராணி விக்டோரியாவிற்கு வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியானது, போரில் தோற்றவர் வைரத்தை மாற்றிக்கொள்ளும் நீண்ட வரலாற்றில் இது சமீபத்தியது ஆகும். துலீப் சிங் டாக்டர் ஜான் ஸ்பென்ஸ் லாக்கின் பாதுகாவலில் தங்க வைக்கப்பட்டார். லாக்கின் பிரிட்டிஷ் இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றினார், அவர் சில ஆண்டுகள் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பணியாற்றினார், மேலும் அவர் ஸ்காட்லாந்தின் ஆர்க்னே தீவுகளின் ஸ்ட்ரோம்னெஸ் சவுத்எண்டை இருப்பிடமாகக் கொண்டவர். அவரது குடும்பம் ஸ்ட்ரோம்னெஸ்ஸில் 1800களின் தொடக்கத்திலிருந்து லாக்கின்ஸ் இன்னை நடத்தி வந்தது. டாக்டர் லாக்கின், அவரது மனைவி லீனா மற்றும் இளம் துலீப் சிங் ஆகியோர் கோஹினூர் வைரத்தை ராணி விக்டோரியாவிடம் ஒப்படைப்பதற்காக இங்கிலாந்து பயணித்தனர். சரியான நேரத்தில் கவர்னர் ஜெனரல் கோஹினூர் வைரத்தை லாக்கினிடமிருந்து பெற்றார், அவர் லாஹூரில் ராஜ அரண்மனையில், கோட்டையின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார், அத்துடன் தோஷக்னா அல்லது அரச கருவூலமும் அளிக்கப்பட்டது, அக்கருவூலத்தை லாக்கின் தோராயமாக £1,000,000 ( இல் அது £ மதிப்பிட்டார், இதில் கோஹினூர் அடங்கவில்லை, 6 ஏப்ரல் 1848 அன்று, 7 டிசம்பர் 1849 தேதியிட்ட ரசீதின் கீழ், நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களின் வருகையில் குறிப்பிட்டார் – உள்ளூர் வாசி எச்.எம் லாரென்ஸ், சி.சி. மான்செல், எச்.எம் லாரென்ஸின் இளைய சகோதரர் ஜான் லாரென்ஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலாளர் சர் ஹென்றி எல்லியாட் ஆகியோர் இருந்தனர். அந்த ஆபரணம் ராணி விக்டோரியாவிற்கு வழங்குவதற்காக ஜான் லாரென்ஸ் மற்றும் சி.சி. மான்செல் ஆகியோரின் பாதுகாப்பில் இங்கிலாந்து அனுப்பப்பட்டது, எச்.எம் .எஸ் மெடேயாவின் தலைமையிலான கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கப்பல் பம்பாயிலிருந்து கிளம்பியது. நீண்ட தூர கப்பல் பயணம் சிக்கல் மிகுந்ததாக இருந்தது - கப்பலில் காலரா ஒரு தடையாக இருந்தது, கப்பல் மொரீசியஸ் வந்தடைந்த போது உள்ளூர் வாசிகள் அதனைக் கிளம்புவதற்கு வற்புறுத்தினர் மேலும் அவர்கள் தங்களின் கவர்னரிடம் கப்பல் பதிலளிக்கவில்லை எனில் அதனை அழிக்க ஆயுதத் தாக்குதல் நடத்தக் கோரினர். அதன் பின்னர் சிறிது இடைவெளியில் கப்பல் கடும் புயலால் தாக்கப்பட்டு பன்னிரெண்டு மணி நேரம் நீடித்தது. பிரிட்டன் வந்து சேர்ந்ததும், பயணிகளும் அஞ்சல்களும் பிளைமவுத் துறைமுகத்தில் இறக்கிவிடப்பட்டனர், ஆனால் கோஹினூர் கப்பலிலேயே இறக்கப்படாமல், போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தை அடையும் வரையில் அப்படியே இருந்தது, அங்கிருந்து லாரன்ஸ் மற்றும் மான்செல் இருவரும் வைரத்தை எடுத்துக்கொண்டு இலண்டன் நகரிலுள்ள இந்தியா இல்லத்திற்குச் சென்று, பின்னர் அதை HEIC இன் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பாதுகாப்பில் ஒப்படைத்தனர். சீக்கியப் போரின் முடிவின் நெறிமுறைகளின் பகுதியான 3 ஜூலை 1850 அன்று கோஹினூர் வைரத்தை ராணியிடம் ஒப்படைத்தலுடன், HEIC இன் 250 ஆவது ஆண்டுவிழாவும் சேர்ந்து வந்தது. டாக்டர் லாக்கின் 1854 ஆம் ஆண்டில் ராணி விக்டோரியாவிடம் இருந்து வீரத்திருத்தகைப் பட்டத்தைப் பெற்றார், மேலும் அவர் சர் ஜான் ஸ்பென்ஸர் லாக்கின் என்று அறியப்பட்டார் (அவர் தனது மையப் பெயரில் 'r' ஐ சேர்த்து அதனை ஸ்பென்ஸ் (Spence) என்பதிலிருந்து ஸ்பென்ஸர் (Spencer) என்று மாற்றினார்). வைரமானது இப்போது இங்கிலாந்தின் அரசரின் பெண் துணையால் மணிமுடியில் அணிகலனாக அமைக்கப்படுகின்றது, மேலும் தற்போது ராணி எலிசபெத்தின் மகுடத்தில் உள்ளது. துலீப் சிங் 1853 ஆம் ஆண்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டார், ஆனால் அவர் மீண்டும் 1888 ஆம் ஆண்டில் சீக்கிய மதத்திற்கு மாறினார், 1854 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு டாக்டர் லாக்கின் மற்றும் அவரது மனைவியுடன் பயணித்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து வந்த போதுமான ஊக்கத் தொகை அவருக்கு ஓய்வான, மகிழ்ச்சியான மற்றும் உயர்தர வாழ்வுக்கு வழிவகுத்தது, அவர் அரச குடும்பத்துடன் விண்ட்சோர் மற்றும் ஆஸ்போர்ன் ஆகியவற்றின் வழக்கமான பார்வையாளராக இருந்தார். அவர் ராணி மற்றும் இளவரசர்களுக்கு நண்பராக மாறினார், மேலும் அவர் அரச குடும்பத்திற்குப் பின்னர் அடுத்ததான முன்னுரிமையில் நடத்தப்பட்டார். இளவரசர் ஆல்பர்ட் அவருக்குக்காக அரச சின்னத்தை வடிவமைத்தார், இருப்பினும் ராணுவக்கல்லூரியில் அது ஒருபோதும் பதிவுசெய்யப்படவில்லை. அவர் 1861 ஆம் ஆண்டில் பிரிட்டன் குடியுரிமையை வழங்கினார் மற்றும் 25 ஜூன் 1861 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட மிகவும் பெருமைமிக்க இந்திய நட்சத்திர முதல் வீரமிக்க இராணுவ அதிகாரிகளில் ஒருவராக நியமித்தார், அப்போது இராணியால் பின்வரும் அறிவிப்பு வெளியானது: அவர் 1866 ஆம் ஆண்டில் கட்டளையிடும் நைட் கிராண்ட் காமாண்டராக உருவாக்கப்பட்டார். 18 ஏப்ரல் 1863 அன்று இறந்த சர் ஜான் ஸ்பென்ஸர் லாக்கினின் இறுதி ஊர்வலத்தில் முக்கியமான துக்கம் அனுஷ்டிப்பவராக இளவரசர் இருந்தார், மேலும் லாக்கின் இங்கிலாந்தின் சஃப்போல்க்கிலுள்ள ஃப்லெக்ஸிஸ்டவ்வில் எரிக்கப்பட்டார். ! சில நிமிடங்கள் அவர் தேம்பியவாறே தனது பாதுகாவலர் அறைக்கு வந்து, 'லாகூர் ஒப்பந்தத்தை வேண்டினார்', அதில் தான் விரும்பியதை அனுமதிக்கும் படி இருப்பதைக் குறிப்பிட்டார்!" - லேடி லாக்கின்ஸ் ரீகலக்ஷென்ஸ், எடித் டல்ஹௌசி லாக்கின். பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிற்கு பஞ்சாப் மகாராசா ரஞ்சித் சிங் அன்பளிப்பாக வழங்கினார். சிலர் ராஜா ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங் (வைரத்தை சொந்தமாக வைத்திருந்தவர்) அவர்களால் கோஹினூர் வைரம் அளிக்கப்பட்டது என்றும்; சில இந்திய வரலாற்றாளர்கள், இளவரசர் துலீப் சிங் சிறுவனாக இருந்ததால் பிரிட்டிஷ் அறிவுரையாளர்களின் வற்புறுத்தல் இன்றி அவர் வைரத்தை அளித்திருக்க மாட்டார் என்று விவாதிக்கின்றனர். அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றப்பட்ட வைரமானது 1850 ஆம் ஆண்டில் இளம் நாடுகடத்தப்பட்ட இளவரசர் மூலமாக அரசியிடம் லார்டு டல்ஹௌசியால் அளிக்கப்பட்டது. கோஹினூர் வைரமானது ஒரு சாபத்தையும் கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என்றும் நம்பப்படுகின்றது. அதை வைத்திருந்த அனைத்து ஆண்களும் ஒன்று அவர்களது மகுடத்தை இழந்தனர் அல்லது பிற துரதிஷ்டங்களில் பாதிக்கபட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக தனது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்திற்கான ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது. சாபத்தின் சாத்தியக்கூறானது வைரத்தின் உரிமையைச் சார்ந்திருப்பதாக முந்தைய இந்து நூல், 1306 ஆம் ஆண்டில் வைரத்தின் முதல் அங்கீகரிக்கப்பட்ட தோற்றமாகக் கூறுவது: "யார் இந்த வைரத்தை வைத்திருக்கின்றாரோ அவர் உலகை வெல்லலாம், ஆனால் அதன் துரதிஷ்டங்கள் அனைத்தும் வெளிப்படும். கடவுள் அல்லது பெண் மட்டுமே அதன் தீமைகளிலிருந்து விலகி அதனை அணிய முடியும்". 1851 ஆம் ஆண்டில் இலண்டனின் ஹைட் பார்க்கில் கிரேட் எக்ஸிபிஷன் நிகழ்ந்த போது பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு அந்த கோஹினூர் வைரத்தைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. "த டைம்ஸ்" வெளியிட்ட செய்தியறிக்கை: வைரமானது பொதுவானதாக இல்லாததால் தோற்றத்தில் ஏமாற்றம் அளிக்கின்றது. 1852 ஆம் ஆண்டில், அம்ஸ்டர்டாமில் விக்டோரியாவின் வேண்டியவரான இளவரசர் ஆல்பர்ட்டின் தனிப்பட்ட மேற்பார்வையில், மற்றும் ஜேம்ஸ் டென்னண்ட் அவர்களின் தொழில்நுட்ப இயக்கத்தில், வைரமானது அதன் 186 1/16 காரட்கள் (37.21 கி) இலிருந்து 105.602 காரட்டுகளாக (21.61 கி) அதன் துல்லியத்தை அதிகரிக்க வெட்டப்பட்டது. ஆல்பெர்ட் பரவலாக விவாதித்து, மிகுந்த சிரத்தை எடுத்தார் மற்றும் இந்த செயல்பாட்டிற்கு £8,000 செலவு செய்தார், அது வைரத்தின் எடையை பெருமளவு அதிகமான 42% ஆகக் குறைத்தது -- ஆனாலும் அந்த முடிவில் ஆல்பர்ட் திருப்தியடையவில்லை. அந்த வைரமானது பெரும்பாலும் ராணி விக்டோரியா அணிந்த உடைஊசியில் பொருத்தப்பட்டது. அது ஏனைய மகுட ஆபரணங்கள் உள்ள டவர் ஆப் லண்டனில் வைப்பதற்குப் பதிலாக விண்ட்சோர் கேஸ்ட்டில் வைக்கப்பட்டது. ராணி விக்டோரியா இறந்த பின்னர், அது ராணி அலெக்ஸாண்டிராவின் புத்தம் புதிய வைர மகுடத்தில் வைக்கப்பட்டது, அவர் அதை தனது கணவர் கிங் எட்வர்ட் VII அவர்களின் முடிசூட்டு விழாவில் அணிந்தார். இராணி அலெக்ஸாண்டிரா தனது மணிமுடியில் வைரத்தைப் பயன்படுத்தும் முதல் இராணியாக இருந்தார், அவரைத் தொடர்ந்து ராணி மேரியும், பின்னர் ராணியின் தாய் ராணி எலிசபெத்தும் அதை அணிந்தனர். 2002 ஆம் ஆண்டில், மகுடமானது அவர் படுக்கையில் இருந்ததால் அவரது சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டது. வைரத்தின் அளிக்கப்பட்டுள்ள வரலாற்றில், பல நாடுகள் அதற்கு உரிமை கோருகின்றன. 1976 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிரதமர் ஜல்ஃபிகார் அலி பூட்டோ இங்கிலாந்து பிரதமர் ஜிம் காலஹன் அவர்களிடம் கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானிற்குத் திருப்பி அளிக்குமாறு கேட்டார். அதற்கு பிரதமர் அமைதியாக பூட்டோவிடம் "இல்லை" எனப் பதிலளித்தார், மேலும் இங்கிலாந்து, மேலும் பல நாடுகளிலுள்ள பிரிட்டிஷ் அரசியல் நிபுணர்கள், இந்தக் உரிமையை நிறுத்தும் விதமாக, 'இந்த கதையை முடிக்க' பொதுக்கூட்டம் நடத்தக் கோரினர். மற்ற உரிமைகள் இந்தியாவால் கோரப்பட்டுள்ளன. அந்த வைரமானது இன்னமும் இலண்டன் டவரில் உள்ளது. ! த பெஸ்ட் யூவில் எவர் சீ!" என்று பாடுகின்றார், மேலும் ஐஸ்வர்யா ராய், அழகான ஆபரணங்களைப் பார்த்த பின்னர், பதிலளிக்கும் விதமாக, "ஒன்லி த கோஹினூர் இஸ் பெட்டர்!" என்று பாடுகின்றார் வெப்பப் பரிமாற்றி வெப்பப் பரிமாற்றி ("Heat exchanger") என்பது ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு வெப்ப ஆற்றலைப் பரிமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சாதனம் ஆகும். அவ்வூடகங்கள் திடமான சுவற்றால் பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று எப்போதும் கலவாமல் இருக்கலாம். அல்லது அவை ஒன்றாகக் கலங்கும் வண்ணம் நேரடித் தொடர்பிலும் இருக்கலாம். வெப்பப் பரிமாற்றிகள் அறையைச் சூடாக்குதல், குளிர்ப்பதனப் பயன்பாடு, வெளி வெப்பச் சீர்மை, மின் உற்பத்தி நிலையங்கள், வேதித் தொழிற்சாலைகள், பெட்ரோலிய வேதி ஆலைகள், பாறைநெய் தூய்விப்பாலைகள் மற்றும் இயற்கை எரிவாயுச் செயல்பாடு ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பப் பரிமாற்றிக்கு ஒரு பரவலான எடுத்துக்காட்டு, காரில் உள்ள ரேடியேட்டர் ஆகும். கார் எந்திரத்தைக் குளிர வைக்கும் பாய்மம் அல்லது நீர் அதிக வெப்பநிலையில் இருந்து ரேடியேட்டரின் வழியாகப் பாயும் காற்றுக்கு வெப்பத்தை மாற்றுகிறது. வெப்பப் பரிமாற்றிகளை அவற்றின் பாய்வு அமைப்பைப் பொறுத்து வகைப்படுத்தலாம். "இணை-பாய்வு" வெப்பப் பரிமாற்றிகளில், இரண்டு பாய்மங்களும் ஒரே முனையில் பரிமாற்றியினுள் நுழையும். மேலும் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று இணையாக எதிர் முனைக்குச் செல்லும். "எதிர்-பாய்வு" வெப்பப் பரிமாற்றிகளில், பாய்மங்கள் எதிரெதிர் முனைகளில் இருந்து பரிமாற்றியினுள் நுழையும். இந்த எதிரோட்ட வடிவமைப்பு மிகவும் செயல்திறன் வாய்ந்தது. இதன் மூலம் பெருமளவு வெப்பத்தைச் சூடான ஊடகத்தில் இருந்து பரிமாற்றம் செய்யலாம். பார்க்க எதிர்பாய்வு முறைப் பரிமாற்றம். "குறுக்கு-பாய்வு" வெப்பப் பரிமாற்றியில், பாய்மங்கள் பரிமாற்றியினுள் ஒன்றிற்கொன்று செங்குத்தான திசையில் பயணிக்கும். வெப்பப் பரிமாற்றிகளின் செயல்திறனை அதிகரிக்க, இரண்டு பாய்மங்களுக்கு இடையில் இருக்கும் சுவற்றின் பரப்பளவு அதிகமாக இருக்கும்படியும், அதே சமயம் பரிமாற்றியின் மூலமாகப் பாய்மங்கள் செல்வதற்கான தடை குறையும் வண்ணமும் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு திசை அல்லது இரு திசைகளிலும் துடுப்புகள் அல்லது நெளிவுகள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் பரப்பளவை அதிகரித்தும், பாய்வை வழிப்படுத்தியும், அல்லது துருவளைப் பாய்வைத் தூண்டியும் பரிமாற்றியின் செயல்பாட்டில் தாக்கத்தை உண்டாக்கலாம். இரண்டு பாய்மங்களுக்கு இடையிலே வெப்பப் பரிமாற்றத்திற்குத் தூண்டுதலாய் இருப்பது அவற்றின் வெப்பநிலை வேறுபாடே. ஒவ்வொரு நிலையிலும் அந்த வெப்பநிலை வேறுபாடு வேறு வேறாக இருக்கும். ஆனால் மொத்தத்தில் ஒரு சராசரி வெப்பநிலை வேறுபாட்டை வரையறுக்க முடியும். பெரும்பாலான எளிமையான அமைப்புகளில், இது லாக் சராசரி வெப்பநிலை வேறுபாடு (LMTD) எனப்படுகிறது. சில நேரங்களில் LMTD நேரடியாகக் கிடைப்பதில்லை, அதனால் NTU முறை பயன்படுத்தப்படுகிறது. கூடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றிகள் தொடர் குழாய்களைக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழாய்களில் ஒரு தொகுப்பு திரவத்தைக் கொண்டிக்கும், அது வெப்பமாகவோ அல்லது குளிராகவோ இருக்க வேண்டும். இரண்டாவது திரவம் குழாய்களின் இடையே ஓடும், அதனால் இது வெப்பத்தை வழங்கக் கூடியதாகவோ அல்லது தேவைப்படும் வெப்பத்தை உட்கிரகிக்கக் கூடியதாகவோ இருக்கலாம். குழாய்களின் தொகுப்பு குழாய்க் கட்டு என அழைக்கப்படுகிறது, மேலும் அது எளிய, நீளவாக்கில் துடுப்பிடப்பட்ட மற்றும் பல போன்ற பல்வேறு வகை குழாய்களினால் உருவாக்கப்படலாம். கூடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றிகள் வழக்கமாக உயர் அழுத்தப் பயன்பாடுகளில் (அழுத்தங்கள் 30 க்கும் அதிகமாக இருப்பவை மற்றும் வெப்பநிலைகள் 260 °C க்கும் அதிகமாக இருப்பவை) பயன்படுத்தப்படுகின்றன. இது கூடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றிகள் அவற்றின் வடிவம் காரணமாக திடமாக இருப்பதன் காரணமாக ஏற்படுவது ஆகும். கூடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றிகளின் குழாய்களை வடிவமைக்கும் போது பல்வேறு வெப்ப வடிவமைப்புச் சிறப்புக் கூறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை பின்வருமாறு: மற்றொரு வகை வெப்பப் பரிமாற்றி தகடு வெப்பப் பரிமாற்றி ஆகும். பல, சன்னமான, ஓரளவு பிரிக்கப்பட்ட தகடுகளைக் கொண்டு ஒரு பரிமாற்றி உருவாக்கப்படுகிறது, அது வெப்பத்தைப் பரிமாற்றுவதற்காக மிகவும் அதிகமான புறப்பரப்புப் பகுதிகள் மற்றும் திரவ பாய்வு வழிகளைக் கொண்டிருக்கிறது. கூடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றியைக் காட்டிலும் இடம் கொடுப்பதில் இந்த அடுக்குத் தகட்டு ஏற்பாடு மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கலாம். இணைப்பிறுக்கி மற்றும் பற்ற வைத்தல் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள் தகடு வகை வெப்பப் பரிமாற்றியை நடைமுறைக்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கின்றன. HVAC பயன்பாடுகளில், இந்த வகையில் பெரிய வெப்பப் பரிமாற்றிகள் "தகடு மற்றும் சட்டம்" என அழைக்கப்படுகின்றன; திறந்த கண்ணிகளில் பயன்படுத்தும் போது, இந்த வெப்பப் பரிமாற்றிகள் பொதுவாக குறிப்பிட்ட காலத்தில் பிரித்தெடுத்தல், தூய்மை செய்தல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றை அனுமதிப்பதற்காக இணைப்பிறுக்கி வகையாக இருக்கும். அமிழ்த்துப் பற்றவைக்கப்பட்ட மற்றும் வெற்றிட பற்றவைக்கப்பட்ட தகடு வகைகள் போன்ற பல நிரந்தரமாகப் பிணைக்கப்பட்ட தகட்டு வெப்பப் பரிமாற்றிகள் இருக்கின்றன, மேலும் அவை குளிர்பதனம் செய்தல் போன்ற மூடிய கண்ணிப் பயன்பாடுகளுக்காக பொதுவாக குறிப்பிடப்படுகின்றன. தகட்டு வெப்பப் பரிமாற்றிகள் அவை பயன்படுத்தும் தகடுகளின் வகைகளினாலும் மற்றும் அவற்றின் தகடுகளின் அமைவடிவங்களினாலும் வேறுபடலாம். சில தகடுகள் "செவ்ரான்" அல்லது மற்ற அமைப்புகளுடன் முத்திரையிடப்பட்டிருக்கலாம், அதில் மற்றவைகள் இயந்திரத் துடுப்புகள் மற்றும்/அல்லது வரிப்பள்ளங்களைக் கொண்டிருக்கலாம். மூன்றாவது வகை வெப்பப் பரிமாற்றி மீளாக்க வெப்பப் பரிமாற்றி ஆகும். இதில், செயல்பாட்டில் இருந்து வெப்பம் (வெப்ப ஊடகம்) செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் திரவங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதே வகைத் திரவம் வெப்பப் பரிமாற்றியின் இரண்டு பக்கங்களிலும் பயன்படுத்தப்படுகிறது (இந்த வெப்பப் பரிமாற்றிகள் தகடு மற்றும் சட்டமாகவோ அல்லது கூடு மற்றும் குழாயினால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம்). இந்தப் பரிமாற்றிகள் வாயுக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, திரவங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் முக்கிய காரணி வெப்பப் பரிமாற்றத் தளத்தின் வெப்பத் திறன் ஆகும். மேலும் காண்க: முரணோட்ட முறைப் பரிமாற்றம், ரிஜெனரேட்டர், ஊட்டு நீர் முன் சூடாக்கி நான்காவது வகை வெப்பப் பரிமாற்றி இடைநிலைத் திரவம் அல்லது வெப்பத்தை வைப்பதற்கான திடமான அறையைப் பயன்படுத்துகிறது, அது பின்னர் வெளியிடுவதற்காக வெப்பப் பரிமாற்றியின் மற்றொரு பக்கத்திற்கு நகர்த்தப்படுகிறது. சூடான மற்றும் குளிர்ந்த திரவங்களின் மூலமாக நயமான இழைகளின் சுழற்சியுடன் கூடிய பெரிய சக்கரங்களைக் கொண்டிருக்கும் வெப்பமாறா சக்கரங்கள் மற்றும் திரவ வெப்பப் பரிமாற்றிகள் ஆகிய இரண்டும் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த வகை வெப்பப் பரிமாற்றி அலகின் செயல்திறனை அதிகரிப்பதற்காக துடுப்புகளைக் கொண்டிருக்கும் "இடையீட்டு" வழிகளைப் பயன்படுத்துகின்றன. நேரான துடுப்புகள், குத்தளவுத் துடுப்புகாள் மற்றும் அலையுருவான துடுப்புகள் போன்ற பல்வேறு துடுப்பு அமைவடிவங்களுடன் குறுக்குப் பாய்வு மற்றும் பரிமாற்றகப் பாய்வு இணைந்தது உள்ளிட்ட வடிவமைப்புகள் இருக்கின்றன. தகடு மற்றும் துடுப்பு வெப்பப் பரிமாற்றிகள் பொதுவாக அதிகளவு வெப்பப் பரிமாற்றச் செயல்திறனை வழங்கும் அலுமினியக் கலப்புலோகத்தால் உருவாக்கப்படுகின்றன. இந்த உலோகமானது அமைப்பை குறைவான வெப்பநிலையில் இயக்க முடிவதற்கும் மற்றும் உபகரணத்தின் எடை குறைவாக இருப்பதற்கும் அனுமதிக்கிறது. தகடு மற்றும் துடுப்பு வெப்பப் பரிமாற்றிகள் பெரும்பாலும் இயற்கை எரிவாயு, ஈலியம் மற்றும் ஆக்சிஜன் நீர்மமாக்கல் ஆலைகள், காற்றுப் பிரித்தல் ஆலைகள் மற்றும் மோட்டார் மற்றும் ஆகாய விமான இன்ஜின்கள் போன்ற போக்குவரத்துத் துறைகள் ஆகியன போன்ற குறைவான வெப்பநிலை உள்ள சேவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தகடு மற்றும் துடுப்பு வெப்பப் பரிமாற்றிகளின் நன்மைகள் பின்வருமாறு: தகடு மற்றும் துடுப்பு வெப்பப் பரிமாற்றிகளின் குறைபாடுகள்: இது திரவத்தின் (பொதுவாக நீர்) பொழிவு மூலமாக வாயுவானது மேல்நோக்கிக் கடக்கும் படி இருக்கும் வெப்பப் பரிமாற்றி ஆகும், மேலும் திரவமானது பின்னர் குளிர்ச்சியடைவதற்கு முன்னர் வேறு எங்கேனும் எடுத்துச் செல்லப்படுகிறது. இது பொதுவாக வாயுக்களைக் குளிர்ச்சியூட்டவும் சில தூய்மையற்ற தனமைகளை நீக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, ஆகையால் ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது. இது பரவலாக எஸ்பிரெஸோ இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது, அதில் எஸ்பிரெசோவின் பிரித்தெடுத்தலில் பயன்படுத்துவதற்கான மிகவும் சூடாக்கப்பட்ட நீரை குளிர்விப்பதற்கான ஆற்றல் சேமிப்பு முறையாக இது பயன்படுத்தப்படுகிறது. (வேஸ்ட் ஹீட் ரெகவரி யூனிட்ஸ்) விரய வெப்ப மீட்சி அலகுகள் (WHRU) என்பது பொதுவாக நீர் அல்லது எண்ணெய்கள் போன்ற இயங்கும் ஊடகத்துக்கு பரிமாற்றப்படும் சமயத்தில் வெப்பமான வாயு ஸ்ட்ரீமில் இருந்து வெப்பத்தை மீட்ப்பதற்கான வெப்பப் பரிமாற்றி ஆகும். வெப்பமான வாயு ஸ்ட்ரீம் ஆனது வாயு விசைச்சுழலி அல்லது டீசன் இன்ஜினில் இருந்து வெளிப்படுத்தப்படும் வாயு அல்லது தொழிற்சாலை அல்லது சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து விரயமாகும் வாயுவாக இருக்கலாம். மற்றொரு வகை வெப்பப் பரிமாற்றி "(இயக்க ஆற்றல்) தள்ளப்பட்ட புறப்பரப்பு வெப்பப் பரிமாற்றி" என அழைக்கப்படுகிறது. இது முக்கியமாக அதிக-பாகுநிலைப் பொருட்கள், படிகமாக்கல் செயல்பாடுகள், நீராவியாகுதல் மற்றும் அதிக-கறைபடியும் பயன்பாடுகள் ஆகியவற்றுடன் சூடாக்க அல்லது குளிர்விக்கப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து புறப்பரப்புத் தள்ளப்படுவதால் இவை நீண்டகாலம் இயங்கும் நிலையை அடைகின்றன, ஆகையால் செயல்பாட்டின் போது கறைபடிதல் தவிர்க்கப்படுகிறது மற்றும் உறுதிவாய்ந்த வெப்பப் பரிமாற்ற விகிதத்தையும் அடைய முடிகிறது. இதில் பயன்படுத்தப்படும் சூத்திரம் Q=A*U*LMTD ஆகும், இதில் Q= வெப்பப் பரிமாற்ற விகிதம். ஒற்றைப் பிரிவில் திரவங்களை சூடாக்குதல் அல்லது குளிர்வித்தலில் கூடுதலாக, வெப்பப் பரிமாற்றிகள் திரவம் ஆவியாவதற்காக (அல்லது கொதிப்பதற்காக) சூடாக்கப்படலாம் அல்லது திரவத்துக்கு நீராவி மற்றும் உறைய வைப்பதற்கான தேக்கிகளாக பயன்படுத்தப்படலாம். இரசாயன ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள், மறு கொதிகலன்கள் ஆகியவற்றில் காய்ச்சிவடித்தல் கோபுரங்களுக்கான வெப்ப உள்நுழைவுக்கு பொதுவாக வெப்பப் பரிமாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. காய்ச்சிவடித்தல் அமைப்புகள் பொதுவாகக் காய்ச்சி வடித்த நீராவிகள் திரவத்திற்குத் திரும்புவதற்கு தேக்கிகளைப் பயன்படுத்துகின்றன. ஸ்டீம்-இயக்கப்படும் விசைக்சுழலிகளைக் கொண்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் பொதுவாக ஸ்டீமினுள் நீரைக் கொதிக்க வைப்பதற்காக வெப்பப் பரிமாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பப் பரிமாற்றிகள் அல்லது நீரிலிருந்து ஸ்டீம் உருவாக்குவதற்கான அதுபோன்ற அலகுகள் கொதிகலன்கள் அல்லது ஸ்டீம் உருவாக்கிகள் என அழைக்கப்படுகின்றன. அழுத்த நீர் உலைகள் என அழைக்கப்படும் அணுமின் உற்பத்தி நிலையங்களில், சிறப்புப் பெரிய வெப்பப் பரிமாற்றிகள், வெப்பத்தை முதன்மை (அணு உலை) அமைப்பில் இருந்து இரண்டாம்நிலை (ஸ்டீம் உலை) அமைப்புக்குக் கடத்துகின்றன, நீரில் இருந்து ஸ்டீம் உருவாக்கப்படும் செயல்பாடுகள் ஸ்டீம் உருவாக்கிகள் என அழைக்கப்படுகின்றன. அனைத்து தொல்படிவ எரிபொருட்கள் மற்றும் ஸ்டீம் இயக்கப்ப்டும் விசைச்சுழலிகள் பயன்படுத்தும் அணுமின் உலைகள் மறு பயன்பாட்டிற்காக வெளிப்படும் ஸ்டீமில் இருந்து செறிபொருளாக (நீர்) மாற்றுவதற்கான புறப்பரப்புத் தேக்கிகளை கொண்டிருக்கின்றன. இரசாயன மற்றும் மற்ற ஆலைகளில் ஆற்றல் மற்றும் குளிர்திறனைப் பேணிக்காப்பதற்கு, மீளாக்க வெப்பப் பரிமாற்றிகள் குளிர்ச்சியாக இருக்கும் ஒரு ஸ்ட்ரீமில் இருந்து காய்ச்சி வடித்த குளிர்வித்தல் மற்றும் முன் வெப்பமாக்கப்பட்ட மறு கொதிகலன் நுழைவு போன்ற வெப்பமாக இருக்கும் மற்றொரு ஸ்ட்ரீமுக்குப் பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படலாம். இந்த வார்த்தை பிரிவு மாற்றங்களை அவற்றின் கட்டமைப்பில் கொண்டிருக்கும் பொருட்களுடன் கூடிய வெப்பப் பரிமாற்றிகளுக்கும் குறிப்பிடப்படலாம். இது பொதுவாக இந்த நிலைகளுக்கு இடையில் சிறிய கொள்ளளவு மாறுபாடுகளின் காரணமாக திடமான பிரிவில் இருந்து திரவப் பிரிவுக்கு மாற்றுகிறது. இந்த பிரிவு மாற்றம் தாங்கியாக வினைத்திறன் மிக்கதாக செயல்படுகிறது, ஏனெனில் இது நிலையான வெப்பநிலையில் ஏற்படுகிறது, ஆனால் தொடர்ந்து வெப்பப் பரிமாற்றி கூடுதல் வெப்பத்தை ஏற்பதற்கு அனுமதிக்கிறது. இதனை உயர் ஆற்றல் ஆகாய விமான மின்னணுவியலில் பயன்படுத்துவதற்கான ஆய்வு நடைபெறுவது இதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். நேரடித் தொடர்பு வெப்பப் பரிமாற்றிகள் தனித்துப் பிரிக்கும் சுவர் இல்லாமல் இரண்டு பிரிவுகளின் வெப்ப மற்றும் குளிர் ஸ்ட்ரீம்களுக்கு இடையில் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்வது தொடர்புடையதாக இருக்கிறது. ஆகையால் அதுபோன்ற வெப்பப் பரிமாற்றிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: பெரும்பாலான நேரடித் தொடர்பு வெப்பப் பரிமாற்றிகள் வாயு- திரவ வகையின் கீழ் வரும், அதில் வெப்பம் வாயு மற்றும் திரவத்துக்கு இடையில் துளிகள், படச்சுருள்கள் அல்லது தெளிப்புக்கள் ஆகிய வடிவங்களில் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. [2] அது போன்ற வகை வெப்பப் பரிமாற்றிகள் வெளி வெப்பச் சீர்மை, ஈரப்பதமூட்டல், நீரைக் குளிர்வித்ஹல் மற்றும் ஒடுக்கு ஆலைகள் ஆகியவற்றில் தலையாயதாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பப் பரிமாற்றிகளின் பரவலானப் பயன்பாடுகளுள் ஒன்று கட்டடங்கள் மற்றும் வாகனங்களின் குளிர்ப் பதனம் செய்தல் ஆகும். இந்த வகுப்பு வெப்பப் பரிமாற்றிகள் அவற்றின் உட்புறக் குழாய் பொதுவாக நெளிந்திருப்பதன் காரணமாக பொதுவாக "காற்றுச் சுருள்கள்" அல்லது வெறுமே "சுருள்கள்" என அழைக்கப்படுகின்றன. திரவத்தில் இருந்து காற்று அல்லது காற்றில் இருந்து திரவ HVAC சுருள்கள் வழக்கமாக மாற்றம் செய்யப்பட்ட குறுக்குப்பாய்வு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. வாகனங்களில், வெப்பச் சுருள்கள் பொதுவாக ஹீட்டர் கோர் என அழைக்கப்படுகின்றன. இந்த வெப்பப் பரிமாற்றிகளின் திரவப் பக்கத்தில், நீர், நீர்-கிளைக்கோல் கரைசல், ஸ்டீம் அல்லது குளிர்பதனப் பொருள் ஆகியவைப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் திரவங்கள் ஆகும். "வெப்பச் சுருள்களில்" , சூடான நீர் மற்றும் ஸ்டீம் ஆகியவை மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த சூடாக்கப்பட்ட திரவம் எடுத்துக்காட்டாக கொதிகலன்களில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. "குளிர்விப்புச் சுருள்களில்" , குளிர்ந்த நீர் மற்றும் குளிப்பதனப் பொருள் ஆகியவை மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். குளிர்ந்த நீர் மிகவும் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்விப்பானில் இருந்து விநியோகிக்கப்படுகிறது, ஆனால் குளிப்பதனப் பொருள் அருகில் இருக்கும் தேக்கி அலகில் இருந்தே வரவழைக்கப்பட வேண்டும். குளிர்ப் பதனப் பொருள் பயன்படுத்தப்படும் போது, குளிர்விப்புச் சுருள் ஆவி அமுக்கக் குளிர்பதனச் சுழற்சியில் ஆவியாக்கியாக இருக்கிறது. குளிர்ப்பதனப் பொருள்களில் இந்த நேரடி விரிவாக்கங்கள் பயன்படுத்தப்படும் HVAC சுருள்கள் பொதுவாக "DX சுருள்கள்" என அழைக்கப்படுகின்றன. காற்றுப் பக்க HVAC சுருள்களில், அவற்றை சூடாக்குதலுக்குப் பயன்படுத்துல் மற்றும் அவற்றை குளிர்விப்பதற்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் இருக்கின்றன. சைக்ரோமெட்ரிக்சின் காரணமாக, உச்ச அளவு காற்றுப் பாய்வுகள் தவிர்த்து, குளிர்விக்கப்பட்ட காற்றானது பொதுவாக அதற்கு வெளியே ஈரப்பத உறைவைக் கொண்டிருக்கும். சிறிதளவு காற்றை சூடாக்குதல் நீரை வைத்திருப்பதற்காக காறுப்பாய்வின் திறனை அதிகரிக்கிறது. அதனால் வெப்பச் சுருள்களில் அவற்றின் காற்றுப்பக்கத்தில் அதன் ஈரப்பத உறைவு பற்றி கவனம் கொள்ளத் தேவையில்லை, ஆனால் குளிர்விப்புச் சுருள்கள் போதிய அளவில் வடிவமைக்கப்பட்டிருக்க "வேண்டும்" மற்றும் அவற்றின் குறிப்பிட்ட "உள்ளுறை" (ஈரப்பதம்) மற்றும் "புலனறி" (குளிர்விப்பு) சுமைகளைக் கையாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நீக்கப்படும் நீரானது "செறிபொருள்" என அழைக்கப்படுகிறது. பல தட்ப வெப்பநிலைகளில், நீர் அல்லது ஸ்டீம் HVAC சுருள்கள் உறை நிலைகளுக்கு வெளிப்படுத்தப்படலாம். உறைதலின் மீது நீரானது விரிவடைவதன் காரணமாக, இது குறிப்பிட்ட அளவில் விலை அதிகமானதாக மற்றும் சன்னாமான சுவரைக் கொண்ட வெப்பமாற்றிகளில் மாற்றம் செய்வதற்குச் சிரமமாக இருக்கலாம், இது வெறும் ஒரு உறைதலிலேயே எளிதாகப் பழுதாகலாம் அல்லது அழிந்துவிடலாம். அதே போன்று, சுருள்களின் உறைதல் பாதுகாப்பு HVAC வடிவமைப்பாளர்கள், நிறுவுபவர்கள் மற்றும் இயக்குபவர்கள் ஆகியவர்களுக்கு முக்கிய விசயமாக இருக்கிறது. வெப்பப் பரிமாற்றத் துடுப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட குளிர்வித்தலுடன் இடம்பெறும் பதித்தலின் அறிமுகம், நீர் மூலக்கூறுகளை குளிரான காற்றிலேயே வைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு குளிர்விப்பு இயந்திர அமைப்பில் பனிக்கட்டியாதல் இல்லாமல் குளிர்ப்பதனம் அடைவதற்கு அனுமதிக்கிறது. நேரடி எரிதல் உலைக்களங்களில் வெப்பப் பரிமாற்றிகள், பொதுவாக பல தேக்கிகளில் 'சுருள்களாக' இல்லாமல் இருக்கும். மாறாக, வாயுவில் இருந்து காற்று வெப்பப் பரிமாற்றிகளாக இருக்கும் அவை பொதுவாக முத்திரையிடப்பட்ட இரும்புத் தாள் உலோகத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்த வெப்பப் பரிமாற்றிகளின் ஒரு பக்கத்தில் எரியும் பொருட்கள் கடந்து செல்லும் மற்றும் மற்றொரு பக்கத்தில் காற்றானது சீர்படுத்தப்படும். "விரிசலான வெப்பப் பரிமாற்றி" யாக இருந்தால் அதன் காரணமாக அபாயகரமான சூழல் ஏற்படும், உடனடி கவனம் தேவை, ஏனெனில் அத்தையை சூழலில் எரியும் பொருட்கள் கட்டத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சுருள் வெப்பப் பரிமாற்றி (SHE), எழுச்சுருள் வடிவ (சுருளிடப்பட்ட) குழாய் அமைவடிவத்தில் குறிப்பிடப்படலாம், மிகவும் பொதுவாக, இந்த வார்த்தையானது பரிமாற்றக-பாய்வு ஏற்பாடுகளில் இரட்டை வழி வடிவத்துக்கு சுருளிடப்படும் இரண்டு தட்டையான புறப்பரப்புக்குக் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு வழிகள் ஒவ்வொன்றும் ஒரு நீண்ட வளைவான பாதையைக் கொண்டிருக்கும். இரண்டு திரவப் போர்ட்டுகள் சுருளின் வெளிப்புற அச்சுக்களில் தொடுநிலையாக இணைக்கப்பட்டிருக்கும், மேலும் அச்சுப் போர்ட்டுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இது விருப்பத்தேர்வாகும். SHE இன் முக்கிய நன்மை அதில் மிகவும் செயல்திறன் மிக்க விதத்தில் இடத்தைப் பயன்படுத்த முடிவது ஆகும். இந்தப் பண்பு பொதுவாக செயல்பாடுகளில் மற்ற மேம்பாடுகளை அடைவதற்காக நெம்புதிறன் உடையதாக மற்றும் ஓரளவு மறுஒதுக்குதல் உடையதாக இருக்கிறது, இது வெப்பப் பரிமாற்றி வடிவமைப்பின் நன்கு அறியப்படும் பரிமாற்றத்தைச் சார்ந்தது. (இதில் குறிப்பிடத்தக்க பரிமாற்றம் மூலதனச் செலவும் இயக்கச் செலவும் ஆகும்.) கச்சிதமான SHE ஆனது சிறிய கால்தடத்தைக் கொண்டிருப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், மேலும் ஆகையால் குறைவான அனைத்து சுற்று மூலதனச் செலவுகள் அல்லது ஒரு அதிக அளவுள்ள SHE, குறைவான அழுத்த இழப்பு, குறைவான ஏற்றுதல் ஆற்றல், உயர் வெப்பச் செயல்திறன் மற்றும் குறைவான ஆற்றல் செலவுகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்குப் பயன்படுத்தப்படலாம். சுருள் வழிகளில் தாள்களுக்கு இடையில் உள்ள தொலைவு ஸ்பேசர் ஸ்டூட்ஸ் பயன்படுத்தி பராமரிக்கப்படுகின்றன, அவை உருட்டுதலுக்கு முன்னர் பற்றவைத்து இணைக்கப்படுகிறது. முக்கிய சுருள் தொகுப்பு உருட்டப்பட்டவுடன், மாற்று உச்சி மற்றும் கீழ் முனைகள் பற்றவைக்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு இணைப்பும் தட்டையான இணைப்பிறுக்கி மூலமாக மூடப்படுகிறது அல்லது உடலுக்கு கூம்பு மூடியிட்டு இறுக்கப்படுகிறது. இது இரண்டு திரவங்கள் கலந்துவிடாமல் இருப்பதற்கு உறுதியளிக்கிறது. கசிவு ஏற்பட்டால், அது சூழலுக்கு மூடியாக இருக்கும் வெளி எல்லையாக இருக்கும் அல்லது வழியானது அதே திரவத்தைக் கொண்டிருக்கும். SHEக்கள் பொதுவாக திடப்பொருட்களைக் கொண்டிருக்கும் திரவங்களை சூடுபடுத்துவதில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் ஆகையால் அவை வெப்பப் பரிமாற்றியின் உட்புறக் கறைகளுக்கு வழித்தடங்களைக் கொண்டிருக்கின்றன. குறைவான அழுத்த இழப்பானது SHE க்கு எளிதாக கறைபடிதலைக் கையாளும் திறனை வழங்குகின்றன. SHE ஆனது “சுய தூய்மையடைதல்” இயந்திர அமைப்பைப் பயன்படுத்துகிறது, அதனால் கறைபடிந்த புறப்பரப்புகளின் காரணமாக திரவத் திசைவேகத்தில் பரவாநிலை அதிகரிப்பு ஏற்படும், ஆகையால் கறைபடிந்த புறப்பரப்பின் மீது இழுவிசை (அல்லது திரவ உராய்வு) அதிகரிக்கும், ஆகையால் அது அடைப்பு இடம்பெயர்வதற்கு உதவுகிறது, மேலும் வெப்பப் பரிமாற்றியைத் தூய்மையாக வைத்திருக்கிறது. "வெப்பப் பரிமாற்றப் புறப்பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் உட்புறச் சுவர்கள் பொதுவாக ஓரளவுக்குத் தடித்ததாக இருக்கும், அவை SHE ஐ மிகவும் உறுதி வாய்ந்ததாக்கும், மேலும் தேவைப்படுகிற சூழல்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் திறனை வழங்குகிறது." அவற்றையும் கூட சூளையைப் போன்று எளிதாகத் திறந்து எளிதாகச் சுத்தப்படுத்திவிடலாம், அதில் கறைபடிவதால் ஏற்படும் அமைப்புகள் அழுத்தக் கழுவுதல் மூலமாக நீக்கப்படலாம். சுருள் வெப்பப் பரிமாற்றியில் பின்வரும் மூன்று முக்கிய பாய்வுகளின் வகைகள் இருக்கின்றன: SHE ஆனது பாஸ்டியர் முறைப் பாதுகாப்பு, டைஜெஸ்டர் வெப்பமாதல், வெப்ப மீட்பு, முன்-வெப்பப்படுத்தல் (பார்க்க: ஈடு செய்தல்) மற்றும் தங்கு தடையின்றி குளிர்வித்தல் போன்ற பயன்பாடுகளுக்குச் சிறந்ததாக இருக்கிறது. கசடு சிகிச்சைக்கான, SHEக்கள் பொதுவாக மற்ற வகை வெப்பப் பரிமாற்றிகளைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். பல மாறிகள் தொடர்புபடுவதன் காரணமாக, உகந்த வெப்பப் பரிமாற்றிகளைத் தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருக்கிறது. கைக் கணக்கீடுகள் சாத்தியமுள்ளதாக இருக்கின்றன, ஆனால் பல மறு செய்கைகள் பொதுவாக தேவைப்படுகின்றன. அதே போன்று, வெப்பப் பரிமாற்றிகள் பொறியாளர்களாக இருக்கும் அமைப்பு வடிவமைப்பாளர்களாலோ அல்லது உபகரண வணிகர்களாலோ கணினி நிரல்களின் வழியாக மிகவும் பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பொருத்தமான வெப்பப் பரிமாற்றிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, அமைப்பு வடிவமைப்பாளர்கள் (அல்லது உபகரண வணிகர்கள்) முதலில் ஒவ்வொரு வெப்பப் பரிமாற்றி வகைக்கான வடிவமைப்பு வரம்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். செலவு பொதுவாக முதல் அளவுகோளாக மதிப்பிடப்பட்ட போதும், பல்வேறு மற்ற முக்கியமான தேர்ந்தெடுப்பு அளவுகோள்கள் இருக்கின்றன, அவை பின்வருமாறு: சரியான வெப்பப் பரிமாற்றியைத் (HX) தேர்ந்தெடுப்பதற்கு, மாறுபட்ட வெப்பப் பரிமாற்றி வகைகள் மற்றும் அந்த அலகு இயக்கப்படவேண்டிய சூழல் ஆகியவற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். உற்பத்தித் துறையில் பொதுவாக, பல்வேறு மாறுபட்ட வகை வெப்பப் பரிமாற்றிகள் வெறும் ஒரு செயல்பாடாகவோ அல்லது இறுதிப் பொருளைத் தருவிப்பதற்கான அமைப்பாகவோ பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்-சூடாக்குதலுக்கான கெட்டில் HX, 'தூக்கு' திரவம் மற்றும் தகட்டுக்கான இரட்டைக் குழாய் HX மற்றும் இறுதிக் குளிர்வித்தலுக்கான சட்ட HX. வெப்பப் பரிமாற்றி வகைகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் போதுமான அளவுக்கு அறிந்திருப்பதுடன், பொருத்தமான தேர்ந்தெடுப்பு செயல்பாட்டை உகந்ததாக்க உருவாக்கலாம். தகடு மற்றும் குழாய் வெப்பப் பரிமாற்றியின் முழுமையான சோதனை, ஊடுகடத்தும் ஆற்றல் அல்லது ஹீலியம் வாயு முறைகள் மூலமாக தொடர்புடைய இடத்தில் சோதிக்கப்படலாம். இந்த முறைகள் குறுக்குத் தூய்மைக்கேடு மற்றும் இணைப்பிறுக்கிகளின் நிலை ஆகியவற்றைக் காப்பதற்குத் தகடுகள் அல்லது குழாய்களின் முழுமையை உறுதி செய்கின்றன. வெப்பப் பரிமாற்றி குழாய்களின் நிலை நெறிபடுத்தல் எட்டி கரண்ட் சோதனை போன்ற அழிவிலாச் சோதனைகள் மூலமாக நடத்தப்படலாம். நீர் பாய்வு மற்றும் படிவுப் பொருள்களின் மெக்கானிக்குகள் பொதுவாக கணிக்கீட்டுத் திரவ இயக்கங்கள் அல்லது CFD மூலமாக உருவகப்படுத்துவார்கள். கறைபடிதல் சில வெப்பப் பரிமாற்றிகளில் திவிர பிரச்சினையாக இருக்கிறது. ஆற்று நீர் பொதுவாக குளிர் நீராகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் விளைவாக உயிரிய சிதைப் பொருட்கள் வெப்பப் பரிமாற்றி மற்றும் உருவாக்க அடுக்குகளில் நுழைகின்றன, இது வெப்பப் பரிமாற்றக் குணகத்தைக் குறைத்துவிடுகின்றன. மற்றொரு பொதுவான சிக்கல் அளவு ஆகும், அது கால்சியம் கார்பனேட் அல்லது மெக்னீசியம் கார்பனேட் போன்ற இரசாயனங்களின் படிந்திருக்கும் அடுக்குகளில் உருவாகின்றன. கறைபடிதல் வெப்பப் பரிமாற்றி மூலமாக திரவங்கள் செல்லும் போது மற்றும் குழாய்களின் புறப்பரப்பின் மீதான தூய்மையற்ற திரவக்கரைசலின் படிவினால் ஏற்படுகிறது. இந்தத் தூய்மையற்ற கரைசலின் படிதலுக்குப் பின்வருவன காரணமாக இருக்கலாம்: கறைபடிதலின் விளைவுகள் வெப்பப் பரிமாற்றியின் வெப்பக் குழாய்களைக் காட்டிலும் குளிரான குழாய்களில் அதிகமாக இருக்கும். ஏனேனில் மாசுக்கள் குளிரான திரவத்தில் மிகவும் குறைவாகவே கரைவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ஏனெனில், பெரும்பாலான பொருட்களில் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக கரைதிறன் அதிகரிக்கும். குறிப்பிடத்தக்க விதிவிலக்காக கடின நீர் இருக்கிறது, இதில் மேற்கூறிய கூற்றுக்கு எதிர்ப்பதம் உண்மையாக இருக்கிறது. கறைபடிதல் வெப்பம் பரிமாற்றப்பட வேண்டியதற்கான குறுக்குப் பிரிவு சார்ந்த பகுதியைக் குறைக்கிறது, மேலும் வெப்பப் பரிமாற்றிக்கிடையில் வெப்பத்தைப் பரிமாற்றுவதற்கான தடுப்பாற்றல் அதிகரிப்பதற்குக் காரணமாகிறது. இது கறைபடிதல் அடுக்கின் வெப்பக் கடத்துத்திறன் குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது. இது வெப்பப் பரிமாற்றியின் ஒட்டுமொத்த வெப்பப் பரிமாற்றக் குணகம் மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது. மாறாக இது, ஏற்றுதல் மற்றும் பராமரிப்புச் செலவுகளில் அதிகரிப்புக்குக் காரணமாகலாம். கறைபடிதல் கட்டுப்பாட்டுக்கான வழக்கமான அணுகுமுறை, காலமுறைப் பரிசோதனைக் கூடச் சோதனையுடன் உயிர்கொல்லிகள் மற்றும் அளவுக்கெதிரான இரசாயனத்தின் "அறியாத" பயன்பாட்டின் சேர்க்கையாக இருக்கிறது. இது பொதுவாக துரிதப்படுத்தல் அமைப்பு அரித்தல் மற்றும் நஞ்சுக் கழிவு அதிகரித்தல் ஆகியவற்றின் பண்பைக் கொண்ட பக்க விளைவுகளுடன் கூடிய இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாட்டின் விளைவுகளாக இருக்கிறது, இது தேவையற்ற சிகிச்சைகளின் அதிகரித்த செலவுகளில் குறிப்பிடப்படுவதில்லை. எனினும், நியோசென்ஸ் FS உணர்கருவி போன்ற திரவச் சூழ்நிலைகளில் தொடர்ந்த கறைபடிதல் நெறிபடுத்தலுக்கான தீர்வுகளும் இருக்கின்றன, இவை உகந்த இரசாயனத்தைப் பயன்படுத்துதல் மற்றும் தூய்மைப்படுத்தல் திறனைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை அனுமதிக்கின்றன. தகடு வெப்பப் பரிமாற்றிகள் பிரிக்கப்பட வேண்டும் மற்றும் காலமுறை தோறும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். குழாய் வெப்பப் பரிமாற்றிகள் அமிலத் தூய்மைப்படுத்தல், மண்ணூதையிடல், உயர்-அழுத்த நீர் ஜெட், புல்லட் தூய்மைப்படுத்தல் அல்லது துளையிடுத் தண்டுகள் போன்ற முறைகளின் மூலமாக தூய்மைப்படுத்தப்படலாம். வெப்பப் பரிமாற்றிகளுக்கான பெருமளவிலான குளிர் நீர் அமைப்புகளில், தூய்மையாக்கல் போன்ற நீர் சிகிச்சை, கூடுதல் இரசாயனங்கள் மற்றும் சோதனை, வெப்பப்பரிமாற்ற உபகரணத்தின் கறைபடிதலைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நீர் சிகிச்சையும் வெப்பப் பரிமாற்றம் மற்றும் மற்ற உபகரணத்தின் கறைபடிதல் மற்றும் அரித்தலைக் குறைப்பதற்கு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பலவற்றுக்கான ஸ்டீம் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் உயிரி கறைபடிதலில் இருந்து காப்பதற்காக நீர் போர்ன் அலைவு நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. இரசாயனங்களின் பயன்பாடு இல்லாமல், இந்த வகை நுட்பம் வெப்பப் பரிமாற்றிகளில் குறைவான-அழுத்த இழப்பை வழங்குவதற்கு உதவியாக இருக்கின்றது. மனித நுரையீரல் அதன் பரிமாண விகிதத்துக்கு பெரும் புறப்பரப்புப் பகுதியின் காரணமாக உச்ச நிலையில் திறன் வாய்ந்த வெப்பப் பரிமாற்றியாகவும் செயல்படுகிறது. வெளிப்புற சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட (மனிதர்கள் போன்ற) உயிரிகளில், விந்தகத்துக்கான தமனியானது பாம்பினிஃபார்ம் நரம்பு என்று அழைக்கப்படும் நரம்புகளின் வலைக்கண்ணியால் சூழப்பட்டிருக்கிறது. இது விந்தகத்துக்கான இரத்தத் தலைகளைக் குளிர்விக்கிறது, அதே சமயம் திரும்பவரும் இரத்தத்தை மீண்டும் வெப்பப்படுத்துகிறது. "முரணோட்ட முறை" வெப்பப் பரிமாற்றிகள் இயல்பாகவே மீன் மற்றும் திமிங்கலங்களின் சுழற்சி முறையில் ஏற்படுகின்றன. சூடான இரத்தத்தை எடுத்துச் செல்லும் தோலுக்கான தமனிகள், குளிர்ந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தோலில் உள்ள நரம்புகளுடன் உள்முறுக்கியதாக இருக்கின்றன, இதனால் சூடான தமனி சார்ந்த இரத்தம் குளிர்ந்த சிரையின் இரத்தத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றுகின்றன. இது குளிர்ந்த நீரில் ஒட்டு மொத்த வெப்ப இழப்பைக் குறைக்கிறது. வெப்பப் பரிமாற்றிகள் திமிங்கல எலும்புகளின் பற்கலிலும் அவற்றின் வாயில் அதிகளவிலான நீர் பாயும் போது தோன்றுகின்றன. நீர்ப் பறவைகள் அவற்றின் கால்கள் நீரில் இருக்கும் போது வெப்ப இழப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதே போன்ற அமைப்பைப் பயன்படுத்துகின்றன. வெப்பப் பரிமாற்றிகள் பெரிய அளவிலான தொழிற்துறைச் செயல்பாடுகளில் குளிர்வித்தல் மற்றும் சூடாக்குதல் ஆகிய இரண்டுக்கும் தொழிற்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பப் பரிமாற்றியின் வகை மற்றும் அளவு ஆகியவற்றைப் பயன்படுத்துவது திரவத்தின் வகை, அதன் பிரிவு, வெப்பநிலை, அடர்த்தி, கூழ்மநிலை, அழுத்தங்கள், இரசாயன சேர்க்கை மற்றும் பல்வேறு மற்ற வெப்பவியக்கவிசையியல்புகள் ஆகியவை சார்ந்த செயல்பாடுகளுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கலாம். பல தொழிற்துறை செயல்பாடுகள், ஆற்றலின் விரயம் அல்லது வெப்ப ஸ்ட்ரீமை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றன, வெப்பப் பரிமாற்றிகள் இந்த வெப்பத்தை மீட்பதற்குப் பயன்படுத்தப்படலாம், மேலும் செயல்பாடுகளில் மாறுபட்ட ஸ்ட்ரீமில் வெப்பப்படுத்துவதால் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம். இந்த நடைமுறை தொழிற்துறையில் பெருமளவு பணத்தைச் சேமிக்கின்றது, மற்றவகையில் வெப்பப் பரிமாற்றிகளில் இருந்து மற்ற ஸ்ட்ரீம்களுக்கு வெப்பம் விநியோகிக்கப்படுவது மிகவும் விலை மதிப்புடைய மற்றும் சூழ்நிலைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிப்புற மூலங்களில் இருந்து வருவதாக இருக்கும். வெப்பப் பரிமாற்றிகள் பல தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றில் சில பின்வருமாறு: வீணாகும் நீரைக் கையாளுதல் துறையில், வெப்பப் பரிமாற்றிகள் காற்றில்லா டைஜெஸ்டர்களினுள் உகந்த வெப்பநிலைகளைப் பராமரிப்பதில் இன்றியமையாத பங்குவகிப்பதாக இருக்கின்றன, அதனால் வீணான நீரில் இருந்து மாசுபடுத்திகளை நீக்குவதற்கான நுண்ணுயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இந்தப் பயன்பாடுகளின் பொதுவான வகை வெப்பப் பரிமாற்றிகள், இரட்டைக் குழாய் வெப்பப் பரிமாற்றி மற்றும் தகடு மற்றும் சட்ட வெப்பப் பரிமாற்றி ஆகியவை ஆகும். வணிக ரீதியான ஆகாய விமானங்களில், வெப்பப் பரிமாற்றிகள் குளிர்ந்த எரிபொருளை வெப்பப்படுத்துவதற்கு இன்ஜினின் எண்ணெய் அமைப்பில் இருந்து வெப்பத்தை எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துகிறது, அத்துடன் பாகங்களில் எரிபொருள் உறைதலில் நீர் சிக்கிக் கொள்ளும் சாத்தியக்கூறுகளையும் குறைக்கிறது. 2008 இன் ஆரம்பத்தில், போயிங் 777 ரக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 38 ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. 2009 இன் ஆரம்பத்தில், ஆகாய விமான இயக்குபவர்களுக்கு அனுப்பப்பட்ட போயிங்-அப்டேட்டில், குறிப்பிட்ட ரோல்ஸ்-ராய்ஸ் இன்ஜின் எண்ணெய்-எரிவாயுப் பாய்வு வெப்பப் பரிமாற்றிகளில் பிரச்சினைக் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற வெப்பப் பரிமாற்றிகள் அல்லது GE இனால் செய்யப்பட்ட போயிங் 777 ஆகாய விமானம் அல்லது பிராட் மற்றும் ஒயிட்னி இன்ஜின்கள், இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படவில்லை. எளிமையான வெப்பப் பரிமாற்றி திரவப் பாய்வுடன் கூடிய இரண்டு நேர் குழாய்களாகக் கருதப்படலாம், அவை வெப்பம் சார்ந்து இணைக்கப்பட்டிருக்கலாம். குழாய்கள் சம நீளம் "L" உடையதாக இருப்பதாகக் கொள்வோம், வெப்பக் கொள்திறன் formula_1 (வெப்பநிலையில் ஒரு அலகுக்கான ஆற்றல் ஒரு அலகுக்கான நிறை மாற்றம்) உடன் கூடிய திரவங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது மற்றும் குழாய்களின் மூலமாக திரவங்களின் நிறை பாய்வு விகிதம் formula_2 (ஒரு அலகு நேரத்துக்கான நிறை) ஆக இருக்கும், அதில் கீழ்க்குறியீடு "i" குழாய் 1 அல்லது குழாய் 2க்குப் பயன்படுத்தப்படலாம். குழாய்களுக்கான வெப்பநிலை ப்ரொஃபைல்கள் formula_3 மற்றும் formula_4 ஆக இருக்கின்றன, அதில் "x" என்பது குழாய் நெடுகிலும் உள்ள தொலைவாக இருக்கிறது. ஆய்வு நிலையை யூகம் செய்யும் போது, வெப்பநிலை ப்ரொஃபைல்கள் அந்த நேரத்தில் செயல்படவில்லை எனக்கொள்வோம். ஒரு குழாயின் திரவத்தின் சிறிய கன அளவில் இருந்து வெப்பத்தின் பரிமாற்றம் மட்டுமே அதே நிலையில் மற்றொரு குழாயின் திரவ அடிப்படைக் கூறாக இருக்கிறது எனவும் கொள்வோம். அந்தக் குழாயில் வெப்ப மாறுபாடுகளின் காரணமாக குழாய் நெடுகிலும் வெப்பப் பரிமாற்றம் எதுவும் இருக்காது. நியூட்டனின் குளிர்வித்தல் விதி மூலமாக, திரவத்தின் சிறிய கன அளவின் ஆற்றலில் மாறுபாட்டின் விகிதம் அவற்றுக்கு இடையில் வெப்பநிலையில் மாறுபாடுகளுக்கு சரிசம விகிதமாக இருக்கிறது மற்றும் மற்றொரு குழாயின் ஒத்திசைவான அடிப்படைக்கூறு: இதில் formula_7 என்பது ஒரு அலகு நீளத்தின் வெப்ப ஆற்றல் மற்றும் γ என்பது இரண்டு குழாய்களுக்கு இடையில் ஒரு அலகு நீளத்தின் வெப்ப இணைப்பு மாறிலி. உட்புற ஆற்றலில் இந்த மாற்றத்தின் விளைவாக திரவ மூலப்பொருளின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். பாய்வு முழுதும் எடுத்துச்செல்லப்படும் திரவ மூலப்பொருளுக்கான மாற்றத்தின் நேர விகிதம் என்பது: இதில் formula_10 என்பது "வெப்ப நிறைப் பாய்வு விகிதம்". வெப்பப் பரிமாற்றியைக் கட்டுப்படுத்தும் வகையீட்டுச் சமன்பாடுகள் தற்போது கீழ்க்கண்டவாறு எழுதப்படலாம்: அமைப்பு ஆய்வு நிலையில் இருப்பதால், நேரத்தின் சார்பாக வெப்பநிலையில் பகுதியளவு மூலத்தில் இருந்து பெறப்பட்டவைகள் ஏதுமில்லை மற்றும் குழாய் நெடுகிலும் வெப்பப் பரிமாற்றம் இருக்காது என்பதால், வெப்பச் சமன்பாட்டில் கண்டறியப்படுவதாக "x" இல் இரண்டாவது மூலத்தில் இருந்து பெறப்பட்டவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு இரட்டை முதல்-வரிசை வகையீட்டுச் சமன்பாடுகள் இணங்குவதற்குத் தீர்வளிக்கலாம்: இதில் formula_15, formula_16, formula_17 மற்றும் "A" மற்றும் "B" ஆகிய இரண்டு இன்னும் முழுமையாக்கத்தின் உறுதி செய்யப்படாத மாறிலிகள் ஆகும். formula_18 மற்றும் formula_19 ஆகியவை x=0 இல் வெப்பநிலைகள் எனக் கொள்வோம், மேலும் formula_20 மற்றும் formula_21 ஆகியவை x=L இல் குழாயின் இறுதியில் வெப்பநிலைகளாகக் கொள்வோம். ஒவ்வொரு குழாயிலும் சராசரி வெப்பநிலைகள் வரையறுக்கப்படுவது பின்வருமாறு: மேற்கண்ட தீர்வுகளைப் பயன்படுத்தும் போது, வெப்பநிலைகள் பின்வருமாறு: மேற்கண்ட வெப்பநிலைகளில் ஏதேனும் இரண்டைத் தேர்ந்தெடுப்பது முழுமையாக்கம் நீக்கப்படுவதின் மாறிலிகளை அனுமதிக்கின்றன, மேலும் அவை மற்ற நான்கு வெப்பநிலைகள் கண்டறியப்படுவதற்கு அனுமதிக்கின்றன. மொத்த ஆற்றல் பரிமாற்றப்படுவது என்பது ஒரு அலகு நீளத்தின் உட்புற ஆற்றல் மாற்றத்தின் நேர விகிதத்துக்கான வெளிப்பாடுகளை முழுமையாக்குவதன் மூலமாகக் கண்டறியப்படுகிறது: ஆற்றலின் பாதுகாப்புச் செயலினால், இரண்டு ஆற்றல்களின் கூட்டல் பூஜ்யமாக இருக்கிறது. அளவு formula_26 என்பது லாக் மீன் வெப்பநிலை மாறுபாடாக அறியப்படுகிறது, மேலும் இது வெப்ப ஆற்றலைப் பரிமாற்றுவதில் வெப்பப் பரிமாற்றியின் செயல்திறனின் அளவாக இருக்கிறது. ஹயபுசா ஹயபுசா ("Hayabusa", ஜப்பானிய மொழியில் はやぶさ 'கழுகு' என்று அர்த்தம்) என்பது சப்பானிய ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி. இது 25143 இட்டோகாவா என்ற பூமியை ஒத்த சிறு கோள் ("Asteroid") ஒன்றின் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவர சப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பப்பட்டது. இவ்விண்கலம் 2003 மே 9 ஆம் நாள் எம். வி ராக்கெட் மூலம் (M.V. Rocket) ஜப்பானின் காகோஷிமா (Kagoshima) ஏவுகணை விண்வெளித் தளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டு ஆறு பில்லியன் மைல்கள் (5 பில்லியன் கி.மீ) சுற்றுப் பயணம் செய்து செப்டம்பர் 2005 இல் இட்டோகவா என்ற சிறுகோளை அடைந்தது. அக்கோளில் தரையிறங்கியதும், அக்கோளின் வடிவம், சுழற்சி, நிலவுருவவியல், நிறம், அடர்த்தி, வரலாறு போன்றவற்றை ஆராய்ந்தது. நவம்பர் 2005 இல் அக்கோளின் மாதிரிகளைச் சேகரிக்க முற்பட்டது. சேகரிப்பு தொழில்நுட்பம் சரியாக இயங்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், ஓரளவு தூசி சேகரிப்புக் கலத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனையடுத்து சேகரிப்புக் கலன் பாதுகாப்பாக மூடப்பட்டு விண்கலம் 2010, ஜூன் 13 ஆம் நாளன்று பூமிக்குத் திரும்பியது. இது தெற்கு ஆஸ்திரேலியாவின் இவ்விண்கலம் மினெர்வா என்ற பெயருடைய ஒரு சிறு தரையிறங்கி (Mini-Lander MINERVA -Micro Nano Experimental Robot Vehicle for Asteroid) ஒன்றையும் கொண்டு சென்றது. ஆனால் அது இட்டகோவாவில் தரையிறங்கவில்லை. ஹயபுசா உளவிய சிறுகோளின் பெயர் இட்டோகாவா என்று ஜப்பான் மொழியில் பெயரிடப்பட்டது. இக்கோளின் அளவு: (540 மீட்டர்X270 மீட்டர்X210 மீட்டர் (1800'X900'X700'). விண்ணுளவி முரண் கோளை நெருங்கிய நாள் : 2005 செப்டம்பர் மாத நடுவில். ஆனால் தளத்தில் மண் மாதிரியை உறிஞ்ச முயன்ற போது ஏற்பட்ட ஒரு கருவியின் பிழையால் திட்டமிட்டபடிப் போதிய அளவு மண் மாதிரி சிமிழில் சேமிப்பாக வில்லை என்று அஞ்சப் படுகிறது. ஓரளவு தூசி மட்டும் உள்ளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சோதனைக்குச் சிமிழைத் திறக்கும் போதுதான் தூசியின் இருப்பு உறுதி செய்யப்படும். ஹயபுசா விண்கலம் மண்மாதிரிகளைச் சேமித்த விண்சிமிழை தெற்கு ஆஸ்திரேலியாவின் பாலவனத் தளத்தில் பாதுகாப்பாய் இறங்கிடத் திட்டமிட்ட 'ஊமெரா இராணுவத் தளத்தில் ("Woomera Military Zone") விழ வைத்தது. விண்சிமிழ் ஆஸ்திரேலியப் பாலையில் வந்திறங்கிய தேதி ஜூன் 13, 2010. வெப்பக் கவசம் பூண்ட விண்சிமிழ் (Heat-Resistant Capsule) பாராசூட் குடையால் தூக்கி வரப்பட்டு சிதையாமல் இறங்கி வீழ்ந்தது. அதே சமயத்தில் சிமிழை இறக்கிய ஹயபுசா விண்ணுளவி வெப்பக் கவசமில்லாமல் சூழ்வெளி வளிமண்டலத்தில் வரும்போது உராய்வுச் சூட்டில் எரிந்து வானத்தில் சுடர் ஒளி வீசி மறைந்தது கலிலேயோ, நியர்-ஷூமேக்கர் போன்ற வேறு விண்கலங்கள் சிறுகோள்களை நோக்கிச் சென்றிருந்தாலும், ஹயபுசா திட்டம் வெற்றியளித்தால், முதற்தடவையாக சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்த வந்த விண்கலம் என்ற பெருமையைப் பெறும். 2000 ஆம் ஆண்டில் நியர் சூமேக்கர் விண்கப்பல் 433 ஈரோஸ் (Astroid: 433 Eros) என்ற சிறுகோளில் கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது. ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது. மினெர்வா என்னும் மிகச் சிறு 'சுய இயக்கு வாகனத்தைத்' (Robotic Vehicle) ஹயபுசா தூக்கிச் சென்றது. இதன் எடை 590 கிராம் (10 செ.மீ. உயரம், 12 செ.மீ. விட்டம்). 2005 நவம்பர் 12 இல் இந்த வாகனம் இட்டோகாவாவில் இறங்குவதற்கு பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமிக்கை ஆணை வருவதற்குள் ஹயபுசாயின் 'உயரமானி' (Altimeter) சிறுகோளிலிருந்து 44 மீட்டர் உயரம் என்று அறிந்து இயங்க ஆரம்பித்தது. மினர்வா வாகனம் சரியான உயரத்தில் இறங்காமல் ஹயபுசா மேலேறும் தருணத்தில் கீழிறங்கத் துவங்கியது. அதனால் இந்த சிறு வாகனம் இட்டோகாவாவில் இறங்க முடியவில்லை. பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பது, கடன் அம்சங்களை ஒரு தொகுப்பில் சேர்ப்பதன் மூலம் இடரைப் பகிர்ந்தளித்து, பின்னர் அந்தத் தொகுப்பினால் ஆதரிக்கப்படும் புதிய பாதுகாப்புப் பத்திரங்களை வழங்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி செயலாக்கமாகும். "பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்" என்ற சொல்லானது, முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளைப் பெறப் பயன்படுத்தப்படும் நிதியியல் அம்சங்களின் வடிவமே பாதுகாப்புப் பத்திரங்களாகும் என்ற உண்மையிலிருந்து வந்திருக்கிறது. சொத்துவிவர இடரானது பொது கூட்டக நிறுவனக் கடனைப் போலல்லாமல் மெதுவாக நிலைமாறும் பணப்புழக்கத்தினால் சமாளிக்கப்படுவதால், காலம் மற்றும் கட்டமைப்பைச் சார்ந்த நிலைமாறும் தன்மையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்ட கடனின் கடன் தரமானது நிலையற்றதாக உள்ளது. பரிவர்த்தனையானது முறையாகக் கட்டமைக்கப்பட்டு, தொகுப்பானது எதிர்பார்த்தபடி செயல்பட்டால், கட்டமைக்கப்பட்ட கடனின் பகுதிகளின் கடன் இடரும் மேம்படும்; முறையாக கட்டமைக்கப்படாவிட்டால், அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வியக்கத்தக்க அளவிலான கடன் வீழ்ச்சி மற்றும் இழப்பைச் சந்திக்கும். பணப்புழக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கும் வரை, அனைத்து சொத்துகளையும் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலாம். ஆகவே, பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் செயலாக்கங்களினால் கிடைக்கும் பாதுகாப்புப் பத்திரங்கள் சொத்து-ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன (ABS). இந்தக் கண்ணோட்டத்தில், பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பதை ஒரு ABS ஐ வழங்கும் விளைவைத் தரக்கூடிய நிதி செயலாக்கம் என வரையறுக்கலாம். பாதுகாப்புப் பத்திரமயமாக்கலானது பெரும்பாலும் சிறப்புத் தேவை கருவியைப் (SPV) பயன்படுத்திக்கொள்கிறது, அதை சிறப்புத் தேவை முழுமைத்தொகுதி (SPE) அல்லது சிறப்புத் தேவை நிறுவனம் (SPC) என்றும் அழைக்கப்படுகிறது, இதனால் திவாலாகும் ஆபத்து குறைக்கப்படுகிறது, மேலும் அதனால் சாத்தியக்கூறுள்ள கடன் வழங்குநர்களிடமிருந்து குறைந்த வட்டி வீதத்தைப் பெற முடிகிறது. வரவு வழித்தோன்றல்கள் சில நேரங்களில், பின்புலத்திலுள்ள சொத்து விவரங்களின் வரவுத் தரத்தை மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றன, இதனால் அது இறுதி முதலீட்டாளர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும். பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பது 1970களின் பிற்பகுதியில் அதன் உத்தேச தொடக்கங்களில் உருவானது. அது 2008 இன் 2ஆம் காலாண்டில் அமெரிக்காவினது $10.24 ட்ரில்லியன் மற்றும் ஐரோப்பாவினது $2.25 ட்ரில்லியன் என கணக்கிடப்பட்ட கடனளவைக் கொண்டிருந்த முக்கிய நிதி மூலத்திற்கான உத்தேசத் தொடக்கங்களிலிருந்து உருவானது. 2007 இல் ABS இன் வழங்கல் தொகை அளவு அமெரிக்காவில் $3,455 பில்லியனாகவும் ஐரோப்பாவில் $652 பில்லியனாகவும் இருந்தது. பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் அதன் மிக அடிப்படையான வடிவத்தில் சொத்துகளுக்கு நிதியளிக்கும் ஒரு முறையாகும். அந்த சொத்துகளை "மொத்தமாக" விற்காமல், சொத்துகள் ஒரு தொகுப்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் அந்தத் தொகுப்பானது பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. அந்தப் பங்குகள் இடரைப் பங்கிட்டுக்கொண்டு அந்த சொத்துகளின் செயல்திறனுக்கு வெகுமதி அளிக்கும் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இதை ஒரு கூட்டக நிறுவனம் அதன் ஒரு இலாபமிக்க வணிகப் பிரிவை ஒரு தனி நிறுவனமாக விற்றல் அல்லது "வழித்தோன்றலாக்குவதைப்" போன்றதாகக் கருதலாம். அவர்கள் அந்தப் பிரிவு மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய இலாப நட்டம் அனைத்திற்குமான தங்கள் உரிமைத் தகுதியை, தற்போதுள்ள ரொக்கத்திற்காக வர்த்தகம் செய்கின்றனர். பின்வருவது ஓர் அடிப்படை எடுத்துக்காட்டாகும். XYZ வங்கி 10 நபர்களுக்கு ஒருவருக்கு $100,000 தொகையைக் கடனாக வழங்குகிறது, அதை அவர்கள் வீடுகளை வாங்கப் பயனப்டுத்துகின்றனர். XYZ வீடு வாங்கும் 10 நபர்களின் வெற்றி மற்றும்/அல்லது தோல்வியில் முதலீடு செய்துள்ளது - அவர்கள் பணத்தை மீண்டும் செலுத்தி கடனை அடைத்தால், XYZ க்கு இலாபம். மற்றொரு விதமாகப் பார்க்கையில் XYZ வங்கிக்கு, சில கடனாளிகள் கடனடைக்காமல் போகும் ஆபத்துக்கும் சாத்தியமுள்ளது. அந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கான பரிவர்த்தனையில், கடனாளிகள் XYZ க்கு அவர்கள் பெறும் கடன் தொகைக்கான வட்டியுடன் கூடுதலாக பிரீமியமும் செலுத்துகின்றனர். XYZ வங்கி இந்த பத்து கடன்களையும் ஒரு தொகுப்பில் வைக்கும். அவர்கள் இந்தத் தொகுப்பை ஒரு பெரிய முதலீட்டாளரான ABC க்கு விற்பார்கள். பின்னர் ABC அந்தத் தொகுப்பை (எது அதிக ஆபத்துள்ள கடன், எது குறைந்த ஆபத்துள்ள கடன் என) சமமான பங்குகளாகப் பிரிக்கும். அந்தப் பங்குகள் பின்னர் பிற சிறு முதலீட்டாளர்களுக்கு (பத்திரங்களாக) விற்கப்படும். "சொத்து பாதுகாப்புப் பத்திரமயமாக்கலானது 1970களில் அடமானத் தொகுப்புகளின் கட்டமைக்கப்பட்ட நிதி வழங்கலில் தொடங்கியது. அதற்கு முன்பான பல பத்தாண்டுகளுக்கு, வங்கிகள் இன்றியமையாத சொத்து விவர வழங்குநர்களாக இருந்தன; அவை கடன்கள் முதிர்ச்சியடையும் வரை அல்லது அடைக்கப்படும் வரை கடன்களை நிறுத்தி வைத்தன. இந்தக் கடன்கள் வைப்புத்தொகைகள், சில நேரங்களில் கடன் ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்பட்டன, கடன் என்பது வங்கியின் (குறிப்பிட்ட சொத்தின் மீதான உரிமை கோரலாக இல்லாத) நேரடி கடன் பொறுப்பாகும். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வைப்புத் தொகை நிறுவனங்கள் வீட்டுக் கடன்களுக்கான தேவைகள் அதிகரித்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறின. வங்கிகளும் பிற நிதி இடை நிறுவனங்களும் சந்தை வாய்ப்பை உணர்ந்து, அடமான நிதியளிப்புக்கான மூலங்களை அதிகரிக்கும் வழிகளைத் தேடின. முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக முதலீட்டு வங்கிகள் இறுதியில் முதலீட்டு கருவியை உருவாக்கின, அது தனிப்படுத்தப்பட்டு அடமானத் தொகுப்புகள், பகுதிகளாக இருந்த கடன் ஆபத்துகள் மற்றும் பின்புலத்திலுள்ள கடன்களின் கட்டமைக்கப்பட்ட பணப்புழக்கம் ஆகியவற்றை வரையறுத்தன. இருப்பினும், செயல்திறன் மிக்க அடமான பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் கட்டமைப்புகளை உருவாக்க பல ஆண்டுகள் ஆனது, கடன் உருவாக்குபவர்கள் செயலாக்கமானது பிற வகை கடன்களாகவும் மாற்றப்படக்கூடும் என்பதை விரைவில் உணர்ந்தனர்." 1970 பிப்ரவரியில், அமெரிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, அடமான ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனையை உருவாக்கியது. கவர்ன்மெண்ட் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் (GNMA அல்லது ஜின்னி மே) அடமானக் கடன்களின் சொத்துகளினால் ஆதரிக்கப்பட்ட பாதுகாப்புப் பத்திரங்களை விற்றது. அடமானமல்லாத சொத்துகளின் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலுக்கு வசதியாக இருக்கும் வகையில், வணிகங்கள் தனியார் வரவு மேம்பாடுகளைப் பதிலீடு செய்தன. முதலில், அவை சொத்துத் தொகுப்புகளை அதீத-பிணையில் வைத்தன; அதனையடுத்து குறுகிய காலத்தில், அவை தமது மூன்றாம் தரப்பினர் கட்டமைப்பு மேம்பாடுகளை மேம்படுத்தின. அடமானச் சந்தையில் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் உத்திகள் 1985 இல் அடமானமல்லாத சொத்துகளுக்கு - வாகனக் கடன்களுக்கு, முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டன. அளவைக் கருதுகையில், ஒரு சொத்துத் தொகுப்பு அடமானத்திற்கு இரண்டாம்பட்சமே ஆகும், வாகனக் கடன்கள் கட்டமைக்கப்பட்ட நிதியளிப்புக்கான சரியான பொருத்தமாகும்; அவற்றின் முதிர்ச்சிகள், அவற்றின் அடமானங்களை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறுகியதாகும், இதனால் பணப்புழக்கத்திற்கான காலம் மிகவும் முன்கணிக்கத்தக்கதாக ஆனது, மேலும் அவற்றின் செயல்திறனின் நீண்ட வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கின. இந்த பழைய வாகனக் கடன் ஒப்பந்தம், மேரின் மிட்லேண்ட் வங்கியினால் தொடங்கப்பட்ட $60 மில்லியன் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலாகும், மேலும் அது 1985 இல் சர்ட்டிஃபிகேட் ஃபார் ஆட்டோமொபைல் ரிசீவபில்ஸ் ட்ரஸ்ட்டினால் (CARS, 1985-1) பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்டது. முதல் குறிப்பிடத்தக்க வங்கிக் கடன் அட்டை விற்பனை 1986 இல் சந்தைக்கு வந்தது, அதில் தனிப்பட்ட முறையில் $50 மில்லியன் நிலுவைக் வங்கி அட்டைக் கடன்கள் இருந்தன. இந்தப் பரிவர்த்தனை, பலன் போதிய அளவு அதிகமாக இருந்தால், கடன் தொகுப்புகள், உண்மையான அடமானச் சந்தையில் ஏற்படுவதுடன் ஒப்பிடுகையில் எதிர்பார்க்கப்படும் அதிக இழப்புகள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றைக் கொண்டு சொத்து விற்பனைகளை ஆதரிக்கும் என முதலீட்டாளர்களுக்கு விளக்கியது. இந்த வகை விற்பனை - வழங்குபவர் உதவும் வகையிலான செய்கைகளைப் பற்றிய ஒப்பந்த அடிப்படையிலான பொறுப்புகள் எதுவும் இன்றி - வங்கிகள் கணக்குப்பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகளுக்கான விற்பனை நடைமுறைகளைப் பெற அனுமதித்தது, அதே நேரத்தில் வங்கிகள் அசல் சேவைக் கட்டணங்களையும் தக்கவைத்துக்கொள்ளவும் அனுமதித்தது. இந்த தொடக்க நிலை பரிவர்த்தனையின் வெற்றிக்குப் பின்னர், முதலீட்டாளர்கள் கடன் அட்டை பெறத்தக்கவைகளை பிணையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர், மேலும் வங்கிகள் பணப்புழக்கங்களை இயல்பாக்க கட்டமைப்புகளை உருவாக்கின. 1990களில் சில பழைய பிரபலமான தனியார் பரிவர்த்தனைகளில் தொடங்கிய பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் தொழில்நுட்பமானது, ஆயுள் மற்றும் பேரழிவு உள்ளிட்ட மறுகாப்பீடு மற்றும் காப்பீடு சந்தைகளின் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்பாடு, கத்ரீனா சூறாவளி மற்றும் ரெகுலேஷன் XXX ஆகியவற்றினால் ஏற்பட்ட பின்புலத்திலுள்ள சந்தைகளின் குறுக்கீடுகளையடுத்து 2006 இல் கிட்டத்தட்ட $15bn வழங்கல்களுக்கு வழிவகுத்தது. மாற்று இடர் மாற்றத்தின் பரந்த பகுதியிலான செயல்பாட்டின் முக்கியப் பகுதிகளில், பேரழிவுப் பத்திரங்கள், ஆயுள் காப்பீட்டு பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் மற்றும் மறுகாப்பீட்டு சைட்கார்கள் ஆகியவை அடங்கும். சமூக மறுவாழ்வுச் சட்டக் (CRA) கடன்களின் முதல் பொது பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் 1997 இல் தொடங்கியது. CRA கடன்கள் குறைந்த மற்றும் மிதமான வருவாய் கடன் பெறுபவர்கள் மற்றும் அதனுடன் நெருங்கிய அம்சத்தைக் கொண்டவர்களை இலக்காகக் கொண்டிருந்தன. பத்திரச் சந்தை அமைப்பின் கணக்கீட்டின்படி, 2004 இன் இறுதி நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த நிலுவைத் தொகை $1.8 ட்ரில்லியனாக இருந்தது. இந்தத் தொகையானது மொத்த நிலுவைப் பத்திரச் சந்தை கடனின் அளவில் சுமார் 8 சதவீதமாகும், மேலும் இது அமெரிக்காவின் அடமானம் தொடர்பான கடன்களின் அளவில் ($5.5 ட்ரில்லியன்) 33 சதவீதமாகவும், கூட்டக நிறுவனக் கடனின் மொத்த அளவில் ($4.7 ட்ரில்லியன்) 39 சதவீதமாகவும் இருந்தது. சாதாரணமாக, கடந்த பத்தாண்டுகளில், (1995-2004) ABS நிலுவைத் தொகை ஆண்டுக்கு 1 சதவீதம் அதிகரித்துவருகிறது, இதில் அடமானம் தொடர்பான கடன் மற்றும் கூட்டக நிறுவனக் கடன் ஆகியவை ஒவ்வொன்றும் 9 சதவீதம் அதிகரித்துவருகின்றன. சொத்து ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்களின் மொத்த பொது வழங்கல் வலுவாகவே உள்ளது, அது பல ஆண்டுகளிலான சாதனைகளைப் படைத்துள்ளது. 2004 இல் இருந்த வழங்கல் அளவான சுமார் $0.9 ட்ரில்லியனே இதுவரையிலான சாதனை அளவாகும். 2004 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த சந்தையின் பெரும் துறைகளாக கடன் அட்டை ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் (21 சதவீதம்), இல்ல சமப்பங்கு ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் (25 சதவீதம்), வாகன ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் (13 சதவீதம்) மற்றும் பிணையாக்கப்பட்ட கடன் பொறுப்புகள் (15 சதவீதம்) ஆகியவை இருந்தன. பிற சந்தைப் பகுதிகளில் மாணவர் கடன் ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் (6 சதவீதம்), உபகரணக் குத்தகைகள் (4 சதவீதம்), உருவாக்கப்பட்ட வீடுகள் (2 சதவீதம்), சிறு வணிகக் கடன்கள் (கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் கேஸ் ஸ்டேஷன்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் கடன்கள்) மற்றும் விமான குத்தகைகள் ஆகியவையாகும். மிகவும் சமீபத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களினால் உற்பத்தி செய்யப்படும் உபரி ஆற்றலை பாதுகாப்புப் பத்திரமயமாக்குவதற்கான ஒரு முயற்சி ஜோசப் ப்ராண்ட் ஆர்சனியா மற்றும் அவரது குழுவினரால் செய்யப்பட்டுவருகிறது. 80களின் பிற்பகுதியில் மட்டுமே பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் ஐரோப்பாவில் ஏற்பட்டது. அப்போது இங்கிலாந்தில் அடமானங்களின் முதல் பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் தொடங்கியிருந்தது. இந்தத் தொழில்நுட்பமானது 90களின் பிற்பகுதி அல்லது 2000 இன் முற்பகுதியில் மட்டுமே சூடுபிடித்தது, அதற்கு யூ.கே. மார்ட்டேஜ் மாஸ்டர் ட்ரஸ்ட்ஸ் (அமெரிக்க கடன் அட்டைகள் கருத்திலிருந்து உருவான அம்சம்), காப்பீட்டு ஆதரவு பரிவர்த்தனை (காப்பீட்டு பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் குரு எம்மானுவேல் இசான்ச்சோ அவர்களால் பயன்படுத்தப்பட்ட கருத்துகள் போன்றவை) அல்லது மிகவும் புரிந்துகொள்ளக் கடினமான சொத்து வகைகள் (எடுத்துக்காட்டுக்கு கிரேக்க அரசாங்கத்தில் ஃபிலிப்பைன் டேப்பர்னாக்ஸால் செயல்படுத்தப்பட்ட லாட்டரி பரிசுக்கான பெறத்தக்கவைகளின் பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்) போன்ற சொத்து வகைகளில் செயல்படுத்தப்பட்ட புதிய முறை கட்டமைப்புகளுக்கே நன்றி கூற வேண்டும். இரண்டாம் நிலை அடமானக் கடன் சிக்கலினால் ஏற்பட்ட க்ரெடிட் க்ரன்ச் சிக்கலின் விளைவாக, பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்ட கடன்களால் ஆதரிக்கப்பட்ட பத்திரங்களுக்கான சந்தை 2008 இல் மிகவும் பலவீனமானது, அதன் பிறகு பத்திரங்களுக்கு அரசாங்க ஆதரவுள்ள முகமை உத்தரவாதமளிக்கும் வரை இது நீடித்தது அதன் விளைவாக வீட்டு அடமானங்கள், மாணவர் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் வணிக அடமானங்கள் ஆகிய வடிவங்களில் முன்னர் பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்ட கடன்களுக்கான வட்டிவீதங்கள் அதிகரிக்கின்றன. ஒப்பந்தத்திற்குட்பட்ட சொத்துகளை தொடங்குபவர் முதலில் வைத்திருப்பார். பொதுவாக இது மூலதனத்தைத் திரட்ட, கடன் மறுகட்டமைக்க அல்லது அதன் நிதி நிலையைச் சரிசெய்ய முயற்சிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். வழக்கமான கூட்டக நிதிக் கருத்துகளின்படி, இது போன்ற ஒரு நிறுவனம் புதிய மூலதனத்தைத் திரட்ட மூன்று வழிகளைக் கொண்டிருக்கும்: கடன், பத்திர வழங்கல் அல்லது பங்கு வழங்கல். இருப்பினும், பங்கு வழங்கல்கள் நிறுவனத்திலான உரிமையாளர் கட்டுப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யலாம், ஆனால் கடன் அல்லது பத்திர நிதியளிப்பானது, நிறுவனத்தின் வரவுத் தரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டி வீத அதிகரிப்பினால் பெரும்பாலும் தடுக்கப்படக்கூடிய அளவு அதிக செலவுடையனவாக உள்ளன. நிலையான வருமான உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பகுதிக்கு நிறுவனம் முழுமைக்குமான வரவுத்தரத்தை விட அதிக வரவுத்தரம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு குத்தகை நிறுவனம் இயல்பான $10m மதிப்புள்ள் குத்தகைகளை வழங்கியிருக்கலாம், மேலும் இதிலிருந்து அந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பணப்புழக்கத்தைப் பெறும். அது குத்தகைகளின் முந்தைய செலுத்துத் தொகையைக் கேட்க முடியாது, மேலும் இதனால் தேவைப்பட்டால் தனது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். குத்தகைகளிலிருந்து வரும் பணப்புழக்கங்களுக்கான உரிமைகளை வேறு தரப்பினருக்கு அந்த நிறுவனத்தால் விற்க முடிந்தால், அது அந்த வருமானத் தொடரை இன்று மொத்தத் தொகையில் மாற்றித்தரலாம் (உண்மையில் எதிர்கால பணப்புழக்கத்தின் தற்கால மதிப்பை இன்று பெறுதல்). தொடங்குபவர் என்பது, மூலதனத்தின் போதுமானதன்மைக்கான தேவைகளைக் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு வங்கி அல்லது பிற நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், இந்தக் கட்டமைப்பானது வழக்கமாக மிகவும் சிக்கலாகிறது, ஏனெனில் சொத்துகளை வாங்க தனி நிறுவனம் அமைக்கப்படுகிறது. பொருந்தக்கூடிய வகையில் பெரிய சொத்துவிவரம் "தொகுப்பாக்கப்பட்டு" "சிறப்புத் தேவை கருவி " அல்லது "SPV "க்கு (வழங்குபவருக்கு ), சொத்துகளுக்கு நிதியளிக்கும் குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட வரி விலக்கு நிறுவனம் அல்லது அறக்கட்டளைக்கு விற்கப்படுகிறது. சொத்துகள் வழங்குபவருக்கு மாற்றப்பட்ட பின்னர், தொடங்குபவருக்கு வழக்கமாக ஆதாரங்கள் எதுவும் இருப்பதில்லை. வழங்குபவர் "திவால் தொலைவில்" இருக்கிறார் என்றால், தொடங்குபவர் திவால் நிலைக்குச் சென்றால், வழங்குபவரின் அனைத்து சொத்துகளும் தொடங்குபவரின் வரவாளர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படாது என்று பொருளாகும். இதைச் செய்வதற்காக, வழங்குபவரின் கட்டுப்படுத்தும் ஆவணங்கள் கட்டுப்படுத்துகின்றன அதன் நடவடிக்கைகளை, பாதுகாப்புப் பத்திரங்களின் வழங்கல்களைப் பூர்த்தி செய்ய வேண்டியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்துகின்றன. இது போன்ற ஒரு மாற்றம் என்பது, விற்பனை, நிதியளிப்பு, பகுதியளவு விற்பனை அல்லது பகுதியளவு விற்பனை மற்றும் பகுதியளவு நிதியளிப்பு என்று இருக்கும்பட்சத்தில் கணக்கியல் தரநிலைகள் கட்டுப்படுத்துகின்றன. ஒரு விற்பனையில், தொடங்குபவர், மாற்றப்பட்ட சொத்துகளை அதன் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து நீக்க அனுமதிக்கப்படுகிறார்: நிதியளிப்பில் சொத்துகள் தொடங்குபவரின் சொத்துகளாகவே இருப்பதாகக் கருதப்படுகின்றன. அமெரிக்க கணக்கியல் தரநிலைகளின் படி, தொடங்குபவர் வழங்குபவருக்கு முழங்கை அளவு தொலைவிலேயே இருந்து ஒரு விற்பனையை முடிக்கிறார், இதில் வழங்குபவர் "தகுதிப்படுத்தும் சிறப்புத் தேவை அமைப்பு " அல்லது "qSPE " என வகைப்படுத்தப்படுகிறார். இந்த கட்டமைப்பு விவகாரங்களினால், வழக்கமாக தொடங்குபவருக்கு பரிவர்த்தனையின் கட்டமைப்பை அமைப்பதில் முதலீட்டு வங்கியின் (ஏற்பாடு செய்பவரின் ) உதவி தேவைப்படுகிறது. தொடங்குபவரிடமிருந்து சொத்துகளை வாங்க முடியவேண்டுமானால், வழங்கல் SPV, வாங்குதலுக்கு நிதியளிப்பதற்காக வர்த்தகம் செய்யக்கூடிய பாதுகாப்புப் பத்திரங்களை வழங்குகிறார். முதலீட்டாளர், (அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களை இலக்காக வைத்து) தனியார் வழங்கல் மூலமாகவோ அல்லது திறந்த நிலை சந்தையின் மூலமாகவோ பாதுகாப்புப் பத்திரங்களை வாங்குகிறார். அப்போது பாதுகாப்புப் பத்திரங்களின் செயல்திறனானது சொத்துகளின் செயல்திறனுடன் நேரடியாகத் தொடர்புடையதாகிறது. வரவுத் தரமிடல் முகமைகள், உருவாக்கப்படும் கடன் பொறுப்புகளின் புறக் கண்ணோட்டங்களை வழங்குவதற்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பத்திரங்களை தரமிட்டு, முதலீட்டாளர் இன்னும் தெளிவான முடிவை எடுக்க உதவுகின்றன. நிலையான சொத்துகளுக்குரிய பரிவர்த்தனைகளில், ஒரு வைப்புத் தொகையாளர் அடிப்படையிலுள்ள பிணைகளைச் சேகரித்து, பாதுகாப்புப் பத்திரங்களைக் கட்டமைப்பதில் உதவுகிறார், மேலும் பாதுகாப்புப் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதற்காக நிதியியல் சந்தைகளுடன் பணிபுரிகிறார். வைப்புத்தொகையாளருக்கு ஒழுங்குமுறை AB இன் படி, கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வழக்கமாக, வழங்கும் தரப்பினரின் இலாப வட்டியின் 100% ஐ வைப்புத்தொகையாளர் வைத்துக்கொள்கிறார், மேலும் அவரே முழு மூலகர்த்தாவாக அல்லது பரிவர்த்தனையைத் தொடங்கும் மூலகர்த்தாவுக்கு துணையாக இருப்பார். நிர்வகிக்கப்பட்ட (வர்த்தகமாக்கப்பட்ட) சொத்துகளுடனான பரிவர்த்தனையில், சொத்து மேலாளர்கள் அடிப்படை பிணைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைத்து, பாதுகாப்புப் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதற்காக பாதுகாப்புப் பத்திரங்களைக் கட்டமைப்பதில் நிதியியல் சந்தைக்கு உதவுகின்றனர். சில ஒப்பந்தங்களில் மூன்றாம் தரப்பினர் உத்தரவாதமளிப்போரும் இருப்பார், அவர் ஒரு கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, சொத்துகள், அசல் மற்றும் வட்டி செலுத்துத்தொகைகளுக்கான பகுதியளவு உத்தரவாதங்களை வழங்குகிறார். பாதுகாப்புப் பத்திரங்கள் நிலையான வட்டிவீதத்துடனோ அல்லது மாறும் வட்டி வீதத்துடனோ வழங்கப்படலாம். நிலையான வட்டிவீத ABS, வழங்கலின் போது "கூப்பனை" (வீதம்) அமைக்கிறது. இது கூட்டக பத்திரங்களைப் போன்றதே ஆகும். மாறும் வட்டிவீத பாதுகாப்புப் பத்திரங்கள் மெதுவாக நிலைமாறும் அல்லது மெதுவாக நிலைமாறா சொத்துகளால் ஆதரிக்கப்படலாம். நிலையான வட்டிவீத பாதுகாப்புப் பத்திரங்களுக்கு மாறாக "மாறுபவைக்கான" வீதங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, யூ.எஸ். கருவுல வீதம் அல்லது பெரும்பாலும் வழக்கமாக லண்டன் இண்டெர்பேங்க் வழங்கும் வீதம் (LIBOR) ஆகியவை போன்ற நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளைப் பொறுத்து, குறைந்தோ அதிகரித்தோ தனது மதிப்பைச் சரிசெய்துகொள்ளக்கூடியவையாகும். மாறும் வட்டிவீதமானது குறியீட்டிலான நகர்வு மற்றும் சேர்க்கப்பட்ட இடரையும் உள்ளடக்கக்கூடிய ஒரு கூடுதல் நிலையான குறைமதிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிப்பதாக இருக்கும். பாதுகாப்பற்ற வழக்கமான கூட்டகப் பத்திரங்களைப் போலன்றி, பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற பாதுகாப்புப் பத்திரங்களானவை, "வரவு மேம்படுத்தப்பட்டவை" ஆகும், அதாவது அவற்றின் வரவுத் தரமானது தொடங்குபவரின் பாதுகாக்கப்படாத கடன் அல்லது அடிப்படை சொத்து தொகுப்பின் வரவுத் தரத்தை விட அதிகமாகும். இதனால், முதலீட்டாளர்கள் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பணப்புழக்கங்களைப் பெறுவதற்கான சாத்தியம் அதிகரிக்கப்படுகிறது, மேலும் அதனால் பாதுகாப்புப் பத்திரங்களின் வரவுத் தரம் தொடங்குபவரின் வரவுத் தரத்தை விட அதிகமாகிறது. சில பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள், மூன்றாம் தரப்பினர் வழங்கும், பிணைமுறிப் பத்திரங்கள் மற்றும் தாய் உத்தரவாதங்கள் போன்ற புற வரவு மேம்படுத்தல் அம்சத்தைப் பயன்படுத்துகின்றன (இருப்பினும் இவை வட்டிகளிலான முரண்பாடு உருவாகலாம்). தனிநபர் பாதுகாப்புப் பத்திரங்கள் பெரும்பாலும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன அல்லது துணை வரிசையைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் மற்றொன்றிலிருந்து வேறுபட்ட வெவ்வேறு அளவிலான வரவு பாதுகாப்பு அல்லது இடர் வாய்ப்பு உள்ளது: இதில் பொதுவாக ஒரு மூத்த ("A") வகை பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் ஒன்று அல்லது மேற்பட்ட இளைய துணை ("B", "C", போன்ற) வகைகள் உள்ளன. இவை "A" வகைக்கான பாதுகாப்பு அடுக்குகளாகச் செயல்படுகின்றன. SPV பெறும் ரொக்கத்திற்கு மூத்த வகைகளுக்கே முதல் உரிமை உண்டு, மேலும் அதிக அளவிலான மூத்த வகைகள் மீண்டும் செலுத்தப்பட்ட பின்னரே அதிக இளைய வகைகள் மீண்டும் செலுத்தல்களைப் பெறத் தொடங்குகின்றன. இந்த வகைகளின் ஒன்றுக்குள் ஒன்று அடங்கும் (கேஸ்கேடு) விளைவினால், இந்த அமைப்பானது சில நேரங்களில் பணப்புழக்க நீர் வீழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது. அடிப்படை சொத்துத் தொகுப்பானது கடனிடுகளின் மீதான செலுத்துத் தொகைகளைச் செலுத்துவதற்குப் போதியதாக இல்லாது போகும்பட்சத்தில் (கடன் கோரல்களின் பட்டியலுக்குள் கடன்கள் அடைக்கப்பட முடியாமல் போகும் போது), இழப்பானது துணை பகுதிகளால் முதலில் உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது, இழப்புகளின் மதிப்பு துணைப் பகுதிகளின் மொத்த மதிப்புக்கும் அதிகமாகாதவரை உயர் மட்ட பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. மூத்த பாதுகாப்புப் பத்திரங்கள் வழக்கமாக AAA தரமிடப்பட்டவையாகும், அதாவது குறைவான ஆபத்தைக் கொண்டவை, அதே நேரம் குறைந்த வரவுத் தரமிடல் கொண்ட குறைவான வரவுத் தரம் கொண்ட துணை வகைகள் குறைவான வரவுத் தரமிடலைப் பெறுகின்றன, அதாவது அதிக ஆபத்துடையவை. பெரும்பாலான இளைய வகை (பெரும்பாலும் சமப்பங்கு வகை என அழைக்கப்படுவது) அதிக செலுத்துத் தொகை ஆபத்துக்குட்பட்டதாகும். சில சந்தர்ப்பங்களில், இது, தொடங்குபவரால் சாத்தியமுள்ள இலாபப் பாய்வாக தக்கவைத்துக்கொள்ளப்படும் ஒரு சிறப்பு வகை அம்சமாகும். சில சந்தர்ப்பங்களில் சமப்பங்கு வகையானது, (நிலையான அல்லது மாறக்கூடிய) கூப்பனைப் பெறுவதில்லை, ஆனால் பிற அனைத்து வகைகளும் செலுத்தி முடிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள பணப்புழக்கத்தையே (இருந்தால்) பெறுகிறது. அடிப்படை சொத்துகளிலான முந்தைய திரும்பச் செலுத்தல்களை உள்வாங்கிக்கொள்ளும் சிறப்பு வகையும் இருக்கலாம். அடிப்படை சொத்துகள், சொத்து விற்கப்படும் ஒவ்வொரு முறையும் திரும்பச் செலுத்தப்படும் உள்ளம்சம் கொண்ட அடமானங்களாக உள்ள இதுவே பெரும்பாலான நிகழ்வாக உள்ளது. முந்தைய திரும்பச் செலுத்தல்கள் ஏதேனும் இருந்தால் அது இந்த வகைக்குச் செலுத்தப்படுவதால், பிற முதலீட்டாளர்களுக்கு முன்கணிக்கத்தக்க அதிக பணப்புழக்கத்தப் பெறுவார்கள் எனலாம். அடிப்படை சொத்துகள் அடமானங்கள் அல்லது கடன்கள் எனில், இரண்டு தனித்தனி "நீர் வீழ்ச்சிகள்" இருக்கும். காரணம், அசல் மற்றும் வட்டி ரசீதுகள் எளிதில் ஒதுக்கப்பட்டு பொருத்தப்பட முடியும். ஆனால் சொத்துகள், வாடகை ஒப்பந்தங்கள் போன்ற வருமானத்தின் அடிப்படையிலான பரிவர்த்தனைகளாக இருந்தால் வருவாயில் எவ்வளவு வருமானம் என்பதையும் எவ்வளவு அசல் திரும்பச் செலுத்தல் என்பதையும் வேறுபடுத்தி அறிவது முடியாததாகக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து வருமானமும் பத்திரங்களிலான பணப்புழக்கங்கள் நிலுவைகளாகும் போது, நிலுவைகளைச் செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது. வரவு மேம்படுத்தல்கள், ஒரு பாதுகாப்புப் பத்திரத்துக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட பணப்புழக்கங்களுக்கு அதிக அல்லது குறைவான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் ஆபத்தை பாதிக்கின்றன. கூடுதல் பாதுகாப்பானது, ஒரு பாதுகாப்புப் பத்திரம் அதிக தரமிடலை அடைய உதவலாம், அதே சமயம் குறைவான பதுகாப்பானது, வெவேறு வகையில் விரும்பப்படும் ஆபத்துகளுடனான புதிய பாதுகாப்புப் பத்திரங்களை உருவாக்க உதவலாம், மேலும் இந்த வெவ்வேறு பாதுகாப்புகள், பாதுகாப்புப் பத்திரங்களை அதிக கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டவையாக ஆக்க உதவலாம். துணைவகைகளுடன் கூடுதலாக, வரவானது பின்வருவனவற்றின் மூலமும் மேம்படுத்தப்படலாம்: ஒரு சேவையர் , செலுத்துத்தொகைகளை வசூலித்து கட்டமைக்கப்பட்ட நிதி ஒப்பந்தத்திற்கு முக்கிய அம்சமான சொத்துகளைக் கண்காணிக்கிறார். பொதுவாக பெரும்பாலும் தொடங்குபவரே சேவையராக இருப்பார், ஏனெனில் சேவையருக்கும் தொடங்குபவருக்கு இருப்பதான அதே திறன்கள் இருப்பது அவசியம், மேலும் அவர் கடன் திரும்பச் செலுத்தல்கள் சிறப்புத் தேவை கருவிக்கு செலுத்தப்படுகிறதா என உறுதிப்படுத்த விரும்புவார். சேவையர், முதலீட்டாளர்களுக்கான பணப்புழக்கங்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கலாம். ஏனெனில் அதுவே, வசூலிக்கப்பட்ட வருவாய்கள், கட்டணங்கள் மற்றும் கடன்களின் மீதான பிற பெறத்தக்கவைகளைப் பாதிக்கக்கூடிய வசூல் கொள்கையைக் கட்டுப்படுத்துகிறது. செலுத்துத் தொகைகள் மற்றும் செலவுகள் போக மீதமிருக்கும் வருமானமானது வழக்கமாக, ஒதுக்கப்பட்ட அல்லது பரவிய கணக்கில் ஓரளவுக்கு ஒன்று சேர்க்கப்படுகிறது, மேலும் அதற்கு அதிகமாக வரும் தொகை விற்பவருக்குக் கொடுக்கப்படுகிறது. பத்திரத் தரமிடல் முகமைகள், பிணையாக்கப்பட்ட தொகுப்பின் செயல்திறன், வரவு மேம்படுத்தல்கள் மற்றும் கடன் திரும்பத் தவறுகை ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து ஆதரவு கடனிடுகளின் தரமிடல்களை வெளியிடுகின்றன. வழங்குபவர் கட்டமைக்கப்பட்ட அறக்கட்டளையாக இருக்கும்பட்சத்தில், ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதியாக அறங்காவலர் உள்ளார். அவர் வழங்குபவரிடம் பிடிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான வாயிற்காவலராக செயல்படுகிறார். அறங்காவலரும், பொதுவாக முழுக்க தொடங்குபவராலேயே சொந்தமாக இருக்கும் SPV இன் ஒரு பகுதியே எனினும், அறங்காவலருக்கு சொத்துகளையும் சொத்துகளை வைத்திருப்பவர்களையும், வழக்கமாக முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் நம்பிக்கை ரீதியான கடமை உள்ளது. கூட்டக பத்திரங்களை போலன்றி, பெரும்பாலான பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள் மெதுவாக நிலைமாறக்கூடியவை, அதாவது கடன் பெறப்பட்ட அசல் தொகையானது, கடனின் முதிர்ச்சி நேரத்தின் போது மொத்தமாக செலுத்தப்படாமல், கடனின் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் மெதுவாக மீண்டும் செலுத்தப்படுகிறது. முழுவதுமாக மெதுவாக நிலைமாறும் பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள் பொதுவாக, இல்லச் சமப்பங்கு கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் மாணவர் கடன்கள் போன்ற முழுவதுமாக மெதுவாக நிலைமாறக்கூடிய சொத்துகளால் பிணையாக்கப்படுகின்றன. முழுவதும் மெதுவாக நிலைமாறக்கூடிய ABS இல், முன் செலுத்தல் நிச்சயமற்ற தன்மையானது முக்கியமான விவகாரமாகும். சாத்தியமுள்ள முன்செலுத்தல் வீதமானது, அடிப்படை சொத்துத் தொகுப்பின் வகையைப் பொறுத்து பரவலாக வேறுபடுகிறது, பொதுவான முன்செலுத்தல் செயல்பாட்டை வரையறுக்கும் முயற்சியில் பல முன்செலுத்தல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. PSA முன்செலுத்தல் மாதிரி ஒரு பிரபலமான எடுத்துக்காட்டாகும். கட்டுப்படுத்தப்பட்ட மெதுவாக நிலைமாறும் கட்டமைப்பு என்பது, அடிப்படட சொத்துகள் மெதுவாக நிலைமாறக்கூடியனவாக இல்லாத நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு முன்கணிக்கத்தக்க திரும்பச் செலுத்தல் செயல் திட்டத்தை வழங்கும் ஒரு முறையாகும். வட்டி செலுத்துத் தொகைகள் செலுத்தப்படக்கூடிய காலமான முன் நிர்ணயிக்கப்பட்ட "சுழற்சிக்" காலத்திற்குப் பின்னர், இந்த பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள், முதலீட்டாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட வழக்கமான செலுத்துத் தொகைகளின் தொடர் வரிசையாக அசலைத் திரும்ப வழங்க முயற்சிக்கின்றன, வழக்கமாக இது ஓராண்டு ஆகும். விரைவில் மெதுவாக நிலைமாறும் நிகழ்வு என்பது கடன் விரைவில் முடிக்கப்படும் ஆபத்து ஆகும். மற்றொரு புறம், புல்லட் அல்லது ஸ்லக் கட்டமைப்புகள் முதலீட்டாளர்களுக்கு அசலை ஒரே செலுத்துத் தொகையில் திரும்பி வழங்குகிறது. மிகவும் பொதுவான புல்லக் கட்டமைப்பு பெரும்பாலும் சாஃப்ட் புல்லட் என அழைக்கப்படுகிறது, அதாவது, இறுதி புல்லட் செலுத்துத் தொகையானது எதிர்பார்க்கப்படும் முதிர்வுத் தேதியில் வழங்கப்படுவதற்கான உத்தரவாதமளிக்கப்படாது; இருப்பினும், இந்த பாதுகாப்புப் பத்திரங்களின் பெரும்பகுதி சரியான நேரத்தில் வழங்கப்படும். இரண்டாம் வகை புல்லட் கட்டமைப்பு ஹார்ட் புல்லட் ஆகும், இதில் அசல் தொகையானது எதிர்பார்க்கபடும் முதிர்வுத் தேதியில் வழங்கப்படுவதற்கான உத்தரவாதமளிக்கப்படுகிறது. கடின புல்லட் கட்டமைப்புகள் பொதுவாக இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன: முதலீட்டாளர்களுக்கு மென் புல்லட் கட்டமைப்புகள் வசதியாக உள்ளது, மேலும் உத்தரவாதத்திற்காக கடின புல்லட் பாதுகாப்புப் பத்திரங்களின் பலன்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள் பெரும்பாலும் தொடர்ச்சியான செலுத்துப் பத்திரமாகக் கட்டமைக்கப்படுகின்றன, இந்தப் பத்திரங்கள் முதிர்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடர்ச்சியான விதத்தில் செலுத்தி முடிக்கப்படுகின்றன. அதாவது, ஓராண்டு சராசரி ஆயுளைக் கொண்டிருக்கக்கூடிய முதல் பகுதியானது அது முடிவடையும் முன்பு அனைத்து அசல் தொகைகளையும் பெற்றுவிடும், மேலும் இதுவே தொடர்கிறது. விகிதப் பத்திரக் கட்டமைப்புகள், ஒவ்வொரு பகுதியையும் அசலின் ஒரு விகித அளவிலான பங்கை பாதுகாப்புப் பத்திரத்தின் ஆயுள் முழுவதற்கு செலுத்துகின்றன. தொடங்குபவர்கள் (எ.கா., அடமானங்களின் தொடங்குபவர்கள்), அவர்கள் உருவாக்கிய சொத்துகளின் நீண்ட காலத்திற்கான ஆபத்துகளை தாங்கிக்கொள்ளமாட்டார்கள், மேலும் அவர்கள் தொடங்குதல் மற்றும் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலுடன் தொடர்புடைய கட்டணங்களினாலேயே இலாபமடைவார்கள் என்பதால், அவர்கள் வரவுத் தரத்திற்கான குறைவான ஊக்கமும் கடன் அளவுக்கான அதிக ஊக்கமும் கொண்டுள்ளனர். முதன்மை அறக்கட்டளை என்பது ஒரு வகை SPV ஆகும், அது குறிப்பாக சுழலும் கடன் அட்டை நிலுவைகளைக் கையாளப் பொருத்தமானவையாகும், மேலும் அவை வெவ்வேறு பாதுகாப்புப் பத்திரங்களை வெவ்வேறு காலத்தில் கையாளக்கூடிய நெகிழ்தன்மையைக் கொண்டுள்ளன. வழக்கமான ஒரு முதன்மை அறக்கட்டளை பரிவர்த்தனையில், கடன் அட்டை பெறத்தக்கவைகளின் தொடங்குபவர் ஒருவர், அந்த பெறத்தக்கவைகளின் ஒரு தொகுப்பை அறக்கட்டளைக்கு மாற்றித் தருகிறார், பின்னர் அறக்கட்டளையானது அவர்களது பெறத்தக்கவைகளின் ஆதரவில், பாதுகாப்புப் பத்திரங்களை வழங்குகின்றனர். பெரும்பாலும் அறக்கட்டளை வழங்கும் பல பகுதிகளையுடைய பாதுகாப்புப் பத்திரங்கள் அனைத்தும் பெறத்தக்கவைகளின் ஒரு தொகுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்தப் பரிவர்த்தனைக்குப் பின்னர், வழக்கமாக தொடங்குபவர் பெறத்தக்கவைகளுக்கான சேவையை தொடர்ந்து வழங்குவார், இந்த நிகழ்வில் இது கடன் அட்டையைக் குறிக்கும். குறிப்பாக, முதன்மை அறக்கட்டளையில் பல்வேறு வகையான ஆபத்துகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பணப்புழக்கங்களின் நேரமானது பெறத்தக்கவைகளின் மீதான செலுத்துத் தொகைகளின் நேரத்திலிருந்து வேறுபடலாம். எடுத்துக்காட்டுக்கு, கடன் அட்டை ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு இருக்கலாம், ஆனால் கடன் அட்டை ஆதரவு பெறத்தக்கவைகள் வழக்கமாக அதை விட விரைவாகவே செலுத்தப்படுகின்றன. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு இந்த பாதுகாப்புப் பத்திரங்கள் வழக்கமாக ஒரு சுழற்சிக் காலம், ஒன்று குவியும் காலம் மற்றும் மெதுவாக நிலைமாறும் காலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த காலங்களில் மூன்றுமே, பெறத்தக்கவைகளின் வரலாற்று ரீதியான அனுப்வத்தை அடிப்படையாகக் கொண்டவை. சுழற்சிக் காலத்தின் போது, கடன் அட்டை நிலுவைகளின் மீதான அசல் செலுத்துத் தொகைகள் கூடுதல் பெறத்தக்கவைகளை வாங்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று குவிதல் காலத்தின் போது, அந்த செலுத்துத் தொகைகள் ஒரு தனிக் கணக்கில் குவிகின்றன. மெதுவான நிலைமாறும் காலத்தில், புதிய செலுத்துத் தொகைகள் முதலீட்டாளர்களிடையே செலுத்தப்படுகிறது. மொத்த முதலீட்டாளர் மற்றும் விற்பனையாளரின் ஆர்வமானது கடன் அட்டைகளால் பெறப்படும் பெறத்தக்கவைகளுக்கு மட்டுமே என வரம்புகொண்டுள்ளது, ஆனால் அதே சமயம் கணக்கிற்கு விற்பவர் (தொடங்குபவர்) உரிமையாளராக இருப்பது இரண்டாவது ஆபத்தாகும். இதனால் விற்பவர் கணக்கின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவார் என்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம். பொதுவாக இதைத் தீர்க்க, முதலீட்டாளர்களைப் பாதுகாக்க, பாதுகாப்புப் பத்திரமயமாக்கலில் எழுதப்பட்ட ஒரு மொழி உள்ளது. பெறத்தக்கவைகளின் மீதான செலுத்துத் தொகைகளின் தொகுப்பு சமநிலையைக் குறைக்கலாம், மேலும் குறை பிணையாக்கத்தின் போது மொத்த முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் குறைத்துவிடுவது மூன்றாவது ஆபத்தாகும். இதைத் தடுக்க, பெரும்பாலும் குறைந்தபட்ச விற்பனை வட்டி தேவைப்படுகிறது, இதனால் முன்பே நிலைமாறல் எதுவும் ஏற்படாமல் காக்கப்படும். 2000 இல் சிட்டிபேங்க், கடன் அட்டை ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்களுக்கான ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது, அது வழங்கல் அறக்கட்டளை என அழைக்கப்பட்டது, அதற்கு வரம்புகள் இல்லை, ஆனால் சில நேரங்களில் வழங்கப்படும் ஒவ்வொரு பாதுகாப்புப் பத்திரங்களின் வரிசைக்கும் ஒரு மூத்த மற்றும் துணைப் பகுதி இருக்க வேண்டிய அவசியமுள்ள முதன்மை அறக்கட்டளைகளுக்கு வரம்புகள் இருக்கக்கூடும். வழங்கல் அறக்கட்டளைக்கு பிற நன்மைகளும் உள்ளன: மூத்த/துணை பாதுகாப்புப் பத்திரங்களை வழங்குவதில் அவை அதிக நெகிழ்தன்மையை வழங்குகின்றன, மேலும் ஓய்வூதிய நிதிகள் அவர்களால் வழங்கப்பட்ட முதலீட்டுத் தர பாதுகாப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யத் தகுதியானவை என்பதால் தேவையை அதிகரிக்கவும் செய்யலாம், மேலும் பாதுகாப்புப் பத்திரங்களை வழங்குவதற்கான செலவையும் அவை குறைக்க முடியும். இந்த சிக்கல்களின் காரணமாக வழங்கல் அறக்கட்டளைகளே இப்போது கடன் அட்டை ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்களின் பெரிய வழங்குநர்களிடையே பெரும்பான்மையான கட்டமைப்புகளாக உள்ளன. கடனளிப்போர் அறக்கட்டளைகள் பொதுவாக வாகன ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் REMICகள் (ரியல் எஸ்டேட் அடமான முதலீட்டு வழிகள்) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. கடனளிப்போர் அறக்கட்டளைகள் என்பன பாதுகாப்புப் பத்திரமயமாக்கலின் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுழை வழி அறக்கட்டளைகள் போன்றவையே ஆகும். தொடங்குபவர் ஒருவர் கடன்களை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து, அதை கடனளிப்போர் அறக்கட்டளைக்கு விற்கிறார், அது இந்தக் கடன்களின் ஆதரவைக் கொண்ட பாதுகாப்புப் பத்திர வகைகளை வழங்குகிறது. செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், பாதுகாப்புப் பத்திரங்களின் மீதான அசல் மற்றும் வட்டி ஆகியவை விகிதத்தின் அடிப்படையில் அந்தக் பாதுகாப்புப் பத்திரங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன. உரிமையாளர் அறக்கட்டளையில், வழங்கப்பட்ட பாதுகாப்புப் பத்திரங்களின் வெவ்வேறு வகைகளுக்குப் பெற்ற அசல் மற்றும் வட்டியை ஒதுக்கீடு செய்வதில் அதிக நெகிழ்தன்மை உள்ளது. உரிமையாளர் அறக்கட்டளையில் துணை பாதுகாப்புப் பத்திரங்களுக்கான நிலுவையிலுள்ள வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டுமே மூத்த பாதுகாப்புப் பத்திரங்களை செலுத்தப் பயன்படுத்தப்படலாம். இதனால், உரிமையாளர் அறக்கட்டளைகள் வழங்கப்பட்ட பாதுகாப்புப் பத்திரங்களின் முதிர்வு, ஆபத்து மற்றும் மீட்சி அம்சங்களை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க முடியும். வழக்கமாக செலவுகள் போக மீதமுள்ள வருமானம் ஏதேனும் இருப்பின், அது குறிப்பிட்ட அளவு வரும் வரை ஒதுக்கீட்டுக் கணக்கில் வைக்கப்படுகிறது, அதன் பின்னர் அனைத்து வருமானமும் விற்பவருக்கு வழங்கப்படுகிறது. உரிமையாளர் அறக்கட்டளைகள், பிற வகைகளுக்கு அதிக பிணையாக்கத்தை விட்டுச் செல்கின்ற அசலுக்கு முன்பு, பாதுகாப்புப் பத்திரங்களை செலுத்துவதற்காக அதீத ஒதுக்கீடுகள் மற்றும் அதீத நிதி வருவாய்களைப் பயன்படுத்தி பிணையாக்கம் செய்வதன் மூலம் வரவு ஆபத்துகளை மட்டுப்படுத்த உதவுகின்றன. நிதியளிப்பு செலவுகளைக் குறைக்கிறது : பாதுகாப்புப் பத்திரமயமாக்கலின் மூலமாக BB என தரமிடப்பட்ட, ஆனால் AAA க்கு சமமான மதிப்புள்ள பணப்புழக்கத்தைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம், AAA வீதங்களிலமைந்த கடனைப் பெற சாத்தியமுள்ளது. பணப்புழக்கத்தை பாதுகாப்புப் பத்திரமயமாக்குவதற்கு இதுவே முதல் காரணமாகும், மேலும் இது கடன் பெறுதல் செலவுகளின் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். அடிப்படைப் புள்ளிகளின் நூறின் மடங்களை BB மற்றும் AAA கடன்களுக்கிடையே உள்ள வேறுபாடு எனலாம். எடுத்துக்காட்டுக்கு, மூடி'ஸ் நிறுவனம் 2002 ஜனவரியில் ஃபோர்ட் மோட்டார் க்ரெடிட்ஸின் தரமிடல்களை தரமிறக்கியது, ஆனால் ஃபோர்டு மோட்டார் க்ரெடிட் ஜனவரி 2002 மற்றும் ஏப்ரல் 2002 ஆகியவற்றால் வழங்கப்பட்ட மூத்த வாகன ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள், தொடர்ந்து AAA என்றே தரமிடப்பட்டன. அதற்கு அதன் அடிப்படையிலமைந்துள்ள பிணைகள் மற்றும் பிற வரவு மேம்படுத்தல்களே காரணமாகும். சொத்து-கடன் பொறுப்பு பொருந்தாமையைக் குறைக்கிறது : "தேர்வு செய்யப்படும் கட்டமைப்பைப் பொறுத்து, பாதுகாப்புப் பத்திரமயமாக்கலானது நிதியளித்தலுக்குட்படும் வாய்ப்புகளை நீக்குவதன் மூலம், காலம் மற்றும் விலையிடல் அடிப்படைகள் ஆகிய இரண்டினைப் பொறுத்தமட்டிலும் சரியாகப் பொருந்தும் நிதியளிப்பை வழங்கக்கூடும்" பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பொறுப்புப் புத்தகம் அல்லது நிதியளிப்புகள் ஆகியவை கடன்பெறுவதிலிருந்து வந்தவையாக இருப்பது அவசியமாகிறது. இதற்கு பெரும்பாலும் அதிக செலவாகிறது. பாதுகாப்புப் பத்திரமயமாக்கலானது, இது போன்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுய நிதியளிப்பு சொத்துப் புத்தகத்தை உருவாக்க அனுமதிக்கிறது. குறைவான மூலதன தேவைகள் : சில நிறுவனங்கள், சட்ட, ஒழுங்குமுறை அல்லது பிற காரணங்களால் தங்கள் உதவி ஆதரவுகளுக்கு ஒரு வரம்பு அல்லது எல்லையை வைத்துக்கொள்கின்றன. அவற்றின் சொத்துகளில் சிலவற்றைக் பாதுகாப்புப் பத்திரமயமாக்குவதன் மூலம், இந்த நிறுவனங்கள் சொத்தின் "ஈட்டும் திறனைத்" தக்கவைத்துக்கொள்கின்ற அதே சமயத்தில், தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் உள்ள சமப்பங்கின் அளவுகளைக் குறைக்க முடிகிறது. இதில் கணக்கியல் தேவைகளுக்காக அந்த சொத்துகளை விற்பனை எனக் காண்பிக்கப்படுகிறது. இலாபங்களில் ஏற்படும் மாட்டிக்கொள்ளுதல்கள் : ஒரு தொகுப்பு பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்டுவிட்டால், அந்த நிறுவனத்திற்கான இலாபங்களின் அளவுகள் இப்போது சிக்கிக்கொள்கின்றன, இதனால் இலாபத்தின் ஆபத்து உருவாவதில்லை, அல்லது அதீத இலாபத்தின் ஆதாயம் இப்போது தவிர்க்கப்படுகிறது. மாற்ற ஆபத்துகள் (வரவு, மாறும்தன்மை, முன்செலுத்தல், மறுமுதலீடு, சொத்து செறிவாக்கம்): பாதுகாப்புப் பத்திரமயமாக்கலால், ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாத தரப்பினரிடமிருந்து விரும்பும் தரப்புக்கு ஆபத்தை மாற்றிவிடுவது சாத்தியமாகிறது. பேரழிவுப் பத்திரங்களும் பொழுதுபோக்கு பாதுகாப்புப் பத்திரமயமாக்கள்களும் இதற்கான இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அதே போல, வணிகத்தின் ஒரு பகுதியை பாதுகாப்புப் பத்திரமயமாக்குவதன் மூலம் (இதன் மூலம் இலாபத்தின் ஒரு பகுதியையும்), நிறுவனத்தின் நிலுவைகள் விரைவாக வெளிச்செல்ல முடிகிறது, மேலும் மேலும் இலாபமிக்க வணிகத்தை உருவாக்க முடிகிறது. இருப்புநிலைக் குறிப்புக்கு வெளியே : பல வகையான வழித்தோன்றல் அம்சங்கள் கடந்தகாலத்தில் "இருப்புநிலைக் குறிப்புக்கு வெளியே அமைந்தவை" எனக் குறிப்பிடப்பட்டன. இந்தச் சொல்லானது, வழித்தோன்றல் அம்சங்களைப் பயன்படுத்துவதால் இருப்புநிலலக் குறிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதைக் குறிக்கிறது. சர்வதேச அளவிலுள்ள பல்வேறு கணக்குப்பதிவு தரநிலைகளிடையே வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இருப்புநிலைக் குறிப்பில் வழித்தோன்றல் அம்சங்களை நேர்த்தியான மதிப்பில் பதிவு செய்வதற்கான தேவையை நோக்கிய பொதுவான போக்கு உள்ளது. அடிப்படையிலுள்ள சொத்துகள் அல்லது கடன் பொறுப்புகளுக்கெதிரான பாதுகாப்பாக வழித்தோன்றல் அம்சங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், கணக்குப்பதிவு சரிசெய்தல்கள் பாதுகாப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட அம்சத்தின் மீதான இலாபம்/நட்டமானது அடிப்படையிலுள்ள சொத்துகள் மற்றும் கடன்பொறுப்புகளைப் போலவே வருவாய் கூற்றின் கீழே பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஒரு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவமும் உள்ளது. குறிப்பிட்ட கடன் வழித்தோன்றல் தயாரிப்புகள், குறிப்பாக கடன் திரும்பாமை மாற்றங்கள், இப்போது ஏறக்குறைய உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சந்தைத் தரநிலை ஆவணமாக்கலைக் கொண்டுள்ளன. கடன் திரும்பாமை மாற்றங்களின் சந்தர்ப்பத்தில், இந்த ஆவணமாக்கமானது சர்வதேச மாற்றங்கள் மற்றும் வழித்தோன்றல் அம்சங்களுக்கான் சங்கத்தால் (ISDA) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இது போன்ற வழித்தோன்றல் அம்சங்களை இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான நீண்டகாலமாக வழங்கப்பட்டுவரும் ஆவணமாக்கத்தைக் கொண்டுள்ளது. வருவாய்கள் : பாதுகாப்புப் பத்திரமயமாக்கலினால் நிறுவனத்திற்கான உண்மையான சேர்த்தல்கள் ஏதுமின்றி ஒரு வருவாய்கள் திருப்பத்தை பதிவு செய்வது சாத்தியமாகிறது. பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் நடைபெறும்போது, பெரும்பாலும் தொடங்குபவருக்கும் (மூல நிறுவனம்) SPE க்கும் இடையே ஓர் "உண்மையான விற்பனை" இடம்பெறுகிறது. "உண்மையான விற்பனையானது" மூல நிறுவனத்துக்குரியதாகவே இருக்க இந்த விற்பனையானது அடிப்படையிலுள்ள சொத்துகளின் சந்தை மதிப்புக்கானதாக இருக்க வேண்டும், அப்போது தான், அது மூல நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பில் பிரதிபலிக்கப்படும், இதுவே அந்த காலாண்டுக்கான வருவாய்களை விற்பனை அளவினால் அதிகரிக்கும். எந்தவிதத்திலும் சட்டத்திற்குப் புரம்பாக இல்லாதபட்சத்தில், இதுவே மூல நிறுவனத்தின் இலாபத்தைக் காண்பிக்கும் மதிப்பாக இருக்கும். ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை : எதிர்கால பணப்புழக்கங்கள் ஒரு நிறுவனத்தின் கணக்குப்பதிவில் (எடுத்துக்காட்டுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒழுங்குபடுத்து இருப்புநிலைக் குறிப்பிலான எதிர்கால உபரிக்கான முழு வரவை எப்போதுமே பெற்றுவிடுவதில்லை) முழு வரவையும் பெறாமல் போகலாம், மேலும் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலானது சிறப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்கால உபரியை ஏற்றுக்கொள்ளக்கூடிய உடனடி ரொக்க சொத்தாக மாற்றுகிறது. எளிதில் மாறும்தன்மை : எதிர்கால பணப்புழக்கங்கள் வெறும் இருப்புநிலைக் குறிப்பு மதிப்புகளாகவே இருக்கலாம், அவை நடப்பில் செலவிடுவதற்காகக் கிடைக்காமல் இருக்கலாம், புத்தகமானது பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்டுவிட்ட பின்னர் செலவிடவோ அல்லது முதலீட்டுக்கோ ரொக்கமானது உடனடியாகக் கிடைக்கக்கூடும். இதனால் சிறந்த வீதங்களில் சிறப்பாக இருக்கக்கூடிய மறுமுதலீட்டுப் புத்தகம் உருவாக்கப்படுகின்றன. சொத்துவிவரப் பட்டியலின் தரத்தைக் குறைக்கலாம் : எடுத்துக்காட்டுக்கு, AAA ஆபத்துகள் பாதுகாப்புப் பத்திரமயமாக்கப்பட்டால், இதனால் எச்ச ஆபத்தின் உள்ளடக்கத் தரத்தை மிகவும் மோசமாக்கும். செலவுகள் : மேலாண்மை மற்றும் அமைப்பு செலவுகள், சட்ட கட்டணங்கள், ஒப்பந்த எழுத்தாக்கக் கட்டணங்கள், தரமிடல் கட்டணங்கள் மற்றும் வெளி நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பது செலவு மிக்கதாக உள்ளது. வழக்கமாக முன் எதிர்நோக்காத செலவுகளுக்கான ஊக்கப்படி என்பது பாதுகாப்புப் பத்திரமயமாக்கலில் இன்றியமையாததாகும், குறிப்பாக அது ஒழுங்கற்ற பாதுகாப்புப் பத்திரமயமாக்கலாக இருக்கும்பட்சத்தில். அளவு வரம்புகள் : பாதுகாப்புப் பத்திரமயமாக்கலுக்கு பெரும்பாலும் பெரிய அளவிலான கட்டமைத்தல் தேவைப்படுகிறது, மேலும் இதனால், சிறு மற்றும் நடுத்தர அளவு பரிவர்த்தனைகளுக்கு இது விலைத்திறன் மிக்கதாக இருக்காது. ஆபத்துகள் : பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பது கட்டமைக்கப்பட்ட பரிவர்த்தனை என்பதால், அதில் சம கட்டமைப்புகள், குறிப்பாக தக்கவைக்கப்பட்ட பகுதிகள் உள்ள கட்டமைப்புகளுக்கு முன் செலுத்தல் போன்ற பலவீனமாக்கப்படும் ஆபத்துக்குட்பட்ட வரவு மேம்படுத்தல்கள், அதுமட்டுமின்றி வரவு இழப்பு ஆகியவையும் இருக்கலாம். அதிக மீட்சி வீதங்களில் வருவாய் (ஆபத்து சரிசெய்யப்பட்ட அடிப்படையில்) பெறுவதற்கான சாத்தியக்கூறுக்கான வாய்ப்பு உயர் தர வரவு மேம்படுத்தப்பட்ட சொத்துகளின் சிறப்புத் தொகுப்பில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு : கூட்டக நிறுவனங்களுக்கான (எடுத்துக்காட்டுக்கு) அதிக தரமிடல்களைப் பெறுவதற்கான கட்டாயமான தேவைகளின் காரணமாக, அதிக தரமிடப்பட்ட முழுமைத் தொகுதிகள் காணப்படுகின்றன. இருப்பினும், பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்கள் பெரிய அளவிலான AAA, AA அல்லது A தரமிடப்பட்ட பத்திரங்களை உருவாக்க அனுமதிக்கின்றன, மேலும் ஆபத்துக்கு எதிரான முதலீட்டாளர்கள் அல்லது அதிக தரமிடப்பட்ட சொத்துகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டிய முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு முதலீட்டு விருப்பங்களின் பெரிய தொகுப்புக்கான அணுகல் உள்ளது. சொத்துவிவர வகையாக்கம் : பாதுகாப்புப் பத்திரமயமாக்கலைப் பொறுத்து, பாதுகாப்பு நிதிகள் மற்றும் அதே போல, பிற நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பினர்கள் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலின் மூலம் உருவாக்கபப்ட்ட பத்திரங்களிலேயே முதலீடு செய்ய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை பிற பத்திரங்கள் மற்றும் பாதுகாப்புப் பத்திரங்களுடன் தொடர்பற்றவையாக இருக்கலாம். மூல நிறுவனத்திலிருந்து வரக்கூடிய வரவு ஆபத்தைத் தனிப்படுத்தல் : பாதுகாப்புப் பத்திரமயமமாககப்பட்ட சொத்துகளானவை தொடங்கும் நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து தனிப்படுத்தப்பட்டவை (குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாகவேனும்) என்பதால், பாதுகாப்புப் பத்திரமயமமக்கலின் கீழ், அடிப்படையிலுள்ள ஆபத்துகள் வேறுபடுவதன் காரணமாக, பாதுகாப்புப் பத்திரமயமாக்கலுக்கு "மூல" நிறுவனத்தினதை விட அதிக வரவுத் தரமிடல் கிடைக்க சாத்தியமுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சிறிய வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள அடமானக் கடன்களுக்கான ஆபத்தை விட அதற்குள்ள ஆபத்து அதிகமாக இருப்பதாகக் கருதலாம்; அடமானக் கடன்கள் வங்கிக்குரியனவாகவே இருக்கும் நிலையில், கடன் பெற்றவர்கள் சிறப்பாக அதிக வட்டியை செலுத்தலாம் (அல்லது, வங்கி தனது கடன் வழங்குநர்களுக்கு அதிக வட்டி செலுத்துவதால் குறைந்த இலாபமே பெற வாய்ப்புள்ளது). மாறத்தக்க தன்மை சார்ந்த ஆபத்துகள் கடன்/திருப்ப முடியாமை : கடன் திருப்ப முடியாமை ஆபத்து என்பது கடன் பெறுபவரால் சரியான நேரத்தில் வட்டி கடன் பொறுப்புகளைச் செலுத்த முடியாமல் போகும் நிலை ஆகும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ABS க்கு, கடன் திருப்ப முடியாமை என்ற நிலையானது, அடிப்படையிலுள்ள பிணைகளின் பராமரிப்பு கடன் பொறுப்புகள் விள்ளக்க ஏட்டில் விவரிக்கப்பட்ட அளவுக்கு போதாமல் போகும் நிலையின் போது ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பாதுகாப்புப் பத்திரத்தின் கடன் திருப்ப முடியாமை ஆபத்துக்கான முக்கிய அடையாளங்காட்டி வரவுத் தரமிடல் ஆகும். ABS இன் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதமாக தரமிடப்படுகின்றன, இதில் பெரும்பாலான வழங்கல்களின் மூத்த வகைகள் அதிக தரமிடல்களைப் பெறுகின்றன, அதே சமயம் துணை வகைகள் அதற்கேற்ப குறைந்த கடன் தரமிடல்களைப் பெறுகின்றன. இருப்பினும், 2007-2008 ஆம் ஆண்டின் கடன் சிக்கலானது பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் செயலாக்கத்தில் உள்ள ஒரு சாத்தியமுள்ள குறையை வெளிப்படுத்தியுள்ளது - கடன் தொடங்குபவர்கள் அவர்களின் கடன்களுக்கான மீத ஆபத்துகளை தக்கவைத்துக்கொள்வதில்லை, ஆனால் அவர்கள் கடன் வழங்கல் மற்றும் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலின் போது குறிப்பிடத்தக்க அளவிலான கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர், இது எழுத்து ஒப்பந்தத் தரநிலைகளை மேம்படுத்த ஊக்கப்படுத்துவதில்லை. நிகழ்வு ஆபத்து முன்செலுத்தல்/மறுமுதலீடு/விரைவான மெதுவான மாறுதல் : பெரும்பாலான சுழலும் ABSகள் விரைவாக மெதுவான மாற்றத்துக்கான ஆபத்துக்குரியவையாகவே உள்ளன. இந்த ஆபத்தானது குறிப்பிட்ட விரைவு மாற்ற நிகழ்வுகள் அல்லது பாதுகாப்புப் பத்திரங்களை முதிர்வுக்கு முன்பே நிரந்தரமாக செலுத்திவிட வழிவகுக்கும் செலவின நிகழ்வுகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வழக்கமாக, அடிப்படையிலுள்ள கடன் பெற்றவர்களின் போதாத செலுத்துத் தொகைகள், போதாத கூடுதல் நிலையான வருவாய்த் துறைகள் ஆகியவை செலவின நிகழ்வுகளில் அடங்கும்: சொத்து ஆதரவு பாதுகாப்புப் பத்திரங்கள், அடிப்படையிலுள்ள கடன்களின் மீதான கடன் திருப்பாமை வீதம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக உயரும் நிகழ்வு, வரவு மேம்படுத்தல்களின் குறைவை குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் தாழ்த்தும் நிகழ்வு மற்றும் வழங்குநர் (ஸ்பான்சர்) அல்லது சேவையரின் பகுதியிலான திவால் நிகழ்வு ஆகியவற்றைப் பரப்புகின்றன. நாணய வட்டி வீத ஏற்ற இறக்கங்கள் : அனைத்து நிலையான வருவாய் பாதுகாப்புப் பத்திரங்களைப் போலவே, ABS வட்டி வீதங்களின் மாற்றங்களுக்கேற்ப மாறுகிறது. வட்டிவீதத்திலான ஏற்ற இறக்கங்கள் மாறும் வீத ABS விலைகளை, நிலையான வீத பாதுகாப்புப் பத்திரங்களை விடக் குறைவாகவே பாதிக்கின்றன. ABS வீதமானது சரிசெய்துகொள்ளக் குறிப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் அட்டவணையானது பொருளாதாரத்தில் ஏற்படும் வீத மாற்றங்களைப் பிரதிபலிப்பதே இதற்குக் காரணமாகும். மேலும், வட்டி வீத மாற்றங்கள், சில வகை ABS களை ஆதரித்துவரும் அடிப்படையிலுள்ள கடன்களின் முன்செலுத்தல் வீதங்களையும் பாதிக்கலாம், இது பலனைப் பாதிக்கலாம். இல்ல சமப்பங்கு கடன்கள் வட்டி வீதங்களைப் பொறுத்து நுட்பமாக மாறும் இயல்பைக் கொண்டுள்ளன, ஆனால் வாகன கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் ஆகியவை பொதுவாக வட்டி வீதங்களால் நுட்பமாக பாதிக்கப்படுவதில்லை. ஒப்பந்த உடன்படிக்கைகள் நெறிசார் தீங்கு : வழக்கமாக முதலீட்டாளர்கள், பாதுகாப்புப் பத்திரமயமாக்கலின் கீழுள்ள சொத்துகளை விலையிடுவதற்கு ஒப்பந்த மேலாளரையே நம்பியுள்ளனர். மேலாளருக்கு அவரது செயல்திறனைப் பொறுத்து கட்டணம் வழங்கப்பட்டால், சொத்துவிவரப் பட்டியலிலுள்ள சொத்துகளின் விலைகளை உயர்த்திக் குறிப்பிடுவதற்கான உந்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலாளர் ஒப்பந்தத்தின் அதீதப் பரவல் குறித்து வாதிடும் போது, மூத்த பாதுகாப்புப் பத்திரதாரரிடையே கருத்து முரண்பாடுகள் எழலாம். சேவை ஆபத்து : சேவையர் செலுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டால், செலுத்துத் தொகைகளின் மாற்றம் அல்லது வசூல் தாமதமாகலாம் அல்லது குறையலாம். இந்த பரிவர்த்தனையில் ஒரு மாற்று சேவையரையும் ஈடுபடுத்திவைத்திருப்பதன் மூலம் இந்த ஆபத்து மட்டுப்படுத்தப்படுகிறது. சமீபத்தில், மூன்று முன்னணி தரமிடல் நிறுவனங்களின் பாதுகாப்புப் பத்திரங்களின் தரமிடல் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. 2009 ஜூலையில், அமெரிக்காவின் பெரிய பொது ஓய்வூதிய நிதி, கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. அது $1 பில்லியன் இழப்புகள் தொடர்பான வழக்காகும், அந்த வழக்கு தொடுத்த தரப்பினர் கூறியபடி, இந்த மூன்று முன்னணி தரமிடல் நிறுவனங்களின் "மனம் போன போக்கிலான துல்லியமற்ற" வரவுத் தரமிடல் காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டது. ஸ்டீபனி மக்மஹோன் ஸ்டீபனி மரீ மக்மஹோன்-லெவெஸ்க் (செப்டம்பர் 24, 1976 அன்று பிறந்தார்) அவரது கன்னிப் பெயரான ஸ்டீபனி மக்மஹோன் என்பதால் நன்கு பிரபலமானவர், இவர் உலக மல்யுத்த பொழுதுபோக்கின் நிறைவேற்று துணைத் தலைவர், ஆக்கபூர்வ விருத்தி மற்றும் நடவடிக்கைகள்., தொழில்முறை மல்யுத்த நபர் மற்றும் சிற்சில சமயங்களில் மல்யுத்த வீரர். அவர் WWE தலைவர் மற்றும் CEO வின்ஸ் மக்மஹோன் மற்றும் லின்டாமக்மஹோன் ஆகியோரின் மகளும், ஷேன் மக்மஹோனின் இளைய சகோதரியும், பால் லெவெஸ்க் (ட்ரிப்பிள் ஹெச்சின்) மனைவியுமாவார். 1999 இல் மக்மஹோன் தி அண்டர்டேக்கர் உடன் கதைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனத்துடன் தோன்றத்தொடங்கினார். டெஸ்டில் திரையில் தோன்றிய சிறிது கால உறவுக்குப் பின்னர், அவர் ட்ரிப்பிள் ஹெச்சுடன்—இவரையே திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் மக்மஹோன் திருமணம் செய்தார்— இணைக்கப்பட்டார்-இது மக்மஹோன் ஹெல்ம்ஸ்லே ஃபாக்ஷன் கதைத்திட்டத்தில் முடிந்தது. அந்த நிறுவனத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த காலத்தின்போது, ஒருதடவை அவர் WWF பெண்கள் சாம்பியன்ஷிப் நடத்தினார். 2001 இல், தி இன்வேஷன் காலத்தின்போது எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தினை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் உரிமையாளராக இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் ஸ்மேக்டவுன் பொது மேலாளர் ஆனார், ஆனால் தனது தந்தையார், வின்ஸுடன் "ஐ குவிட்" போட்டி நடந்தபின்னர், ஒழுங்காக தொலைக்காட்சியில் தோன்றுவதை நிறுத்தினார். பல ஆண்டுகளாக இடையிடையில் தோன்றிய பின்னர், 2008 இல் "ரா" வில் அதன் வர்த்தகச் சின்ன பொது மேலாளராகத் தொடர்ச்சியாகத் தோன்றத்தொடங்கினார். ஸ்டீபனி மரீ மக்மஹோன் செப்டம்பர் 24, 1976 அன்று ஹார்ட்ஃபோர்ட், கனெக்டிகட்டில் லின்டா மற்றும் வின்ஸ் மக்மஹோன் ஆகியோருக்கும் பிறந்தார். 13 வயதில், உலக மல்யுத்த கூட்டமைப்பு (WWF) விற்பனைப்பொருள் விளம்பர ஏடுகளில் டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகளின் மாதிரியாகத் தோன்றினார். பின்னர், ஸ்டீபனி போஸ்டன் பல்கலைக்கழகம் சென்றார், அங்கு தகவல்தொடர்புகளில் ஒரு பட்டம் பெற்றார். 1998 இன் பட்டம் பெற்றபின்னர், WWF இல் முழு நேரமாக பணிபுரியத் தொடங்கினார். 1999 இன் ஆரம்பப்பகுதியில், WWF எழுத்தாளர் வின்ஸ் ருஸ்ஸோவின் கருத்துப்படி, வின்ஸ் மற்றும் தி அண்டர்டேக்கர் ஈடுபடுகின்ற திரையில் தோன்றும் கதைத்திட்டத்தின்போது, வின்ஸ் மக்மஹோனின் இனிமையான, கள்ளமற்ற மகளாக ஸ்டீபனி மக்மஹோன் அறிமுகமானார். தி அண்டர்டேக்கர் தீய எண்ணத்துடன் மக்மஹோனைப் பின்தொடர்ந்து கடத்தினார், ஸ்டீன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினால் காப்பாற்றப்படுவதற்கு முன்னர் விளையாட்டரங்கின் நடுவில் வைத்தும் அவரை திருமணம் செய்ததில் உச்சத்தினை அடைகிறது. மக்மஹோன் அதன்பின்னர் மல்யுத்த வீரர் டெஸ்டுடன் திரையில் தோன்றும் உறவைத் தொடங்கினார், இது டெஸ்டுக்கும், மக்மஹோனின் மூத்த சகோதரர் ஷேனுக்குமிடையில் போட்டி மனப்பான்மையை வளர்த்தது. சம்மர்ஸ்லாமில், "லவ் ஹெர் ஓர் லீவ் ஹெர் மேட்சி"ல் ஷேனை டெஸ்ட் தோற்கடித்த பின்னர், செப்டம்பர் 20, 1999 அன்று ஜெஃப் ஜரட் மற்றும் டெப்ராஜோடியைத் தோற்கடித்து ஸ்டீபனி மற்றும் டெஸ்ட் இருவரும் ஓரணியாக முன்னேறினர். இறுதியில் இந்த ஜோடியினர் நிச்சயிக்கப்பட்டனர், ஆனால் மோதிரம் மாற்றும் விழாவின்போது ட்ரிப்பிள் ஹெச் ஒரு வீடியோவைக் காண்பித்தார், அதில் டிரிப்பிள் ஹெச் மக்மஹோனுக்கு போதைமருந்து கொடுத்து லாஸ் வேகாஸ், நெவடாவுக்குக் கொண்டுசென்று, அங்குவைத்து இருவரும் வாகனமொன்றில் நடந்த விழாவில் திருமணம் செய்துள்ளது காண்பிக்கப்பட்டது. முதலில் மக்மஹோன் ட்ரிப்பிள் ஹெச்சை வெறுப்பதுபோல தோன்றியது, ஆனால் இறுதியில் அவரது பக்கம் சாய்ந்தது தெரிந்தது, மேலும் அந்த திருமணமானது, முன்னர் குறிப்பிடப்பட்ட கடத்தல்களுக்காக அவரது தந்தையாருக்கு எதிரான பழிவாங்கல் திட்டம் என்றும் ஆகவே அவரது கதாபாத்திரம் வில்லியாகவும் செல்கிறது என்றும் தெரிந்தது. 1999 இல் ஆர்மகெடான் நிகழ்வில் ட்ரிப்பிள் ஹெச் வின்ஸ் மக்மஹோன் மீது தாக்குதல் நடத்தி காயங்கள் ஏற்படுத்தியதன் காரணமாக, 2000 இல், வின்ஸ் மக்மஹோன் திரையில் தோன்றவில்லை, ட்ரிப்பிள் ஹெச் மற்றும் மக்மஹோன் இருவரும் WWF இன் திரை உரிமையாளர்களாகினர், அந்தக் காலம் "மக்மஹோன்-ஹெல்ம்ஸ்லே சகாப்தம்" எனப்படுகிறது, இதன்போது மக்மஹோன்-ஹெல்ம்ஸ்லே ஃபாக்ஷன் முன்னிலை வகித்தது. டோரி மற்றும் D-ஜெனரேஷன் X உதவியுடன் சாம்பியன் ஜாக்குலினைத் தோற்கடித்த பின்னர், WWF சாம்பியன்ஷிப்பை ட்ரிப்பிள் ஹெச்சும், 0}WWF பெண்கள் சாம்பியன்ஷிப்பை மக்மஹோனும் நடத்தினர். மக்மஹோன் குடும்பத்திலேயே ஒரேயொரு ரசிகர்-விரும்பியாக லின்டா மக்மஹோனை விடுத்து, மல்யுத்தமேனியா 2000 இல் தனது த ராக் பட்டத்துக்காக ட்ரிப்பிள் ஹெச் போராடியபோது மக்மஹோனின் அப்பாவும் சகோதரரும் உதவியபோது அவர்களுடன் மக்மடோன் சமாதானமானார். ஆகஸ்ட் 21, 2000 அன்று "ரா" வில், ஸ்டீபனி தனது WWF பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை லிடாவிடம் இழந்தார். 2000 இன் பிற்பகுதியில், மக்மஹோன், ட்ரிப்பிள் ஹெச் மற்றும் குர்ட் ஏஞ்சல் தோன்றும் முக்கோக காதல் கதைத்திட்டம் ஆரம்பித்தது. மக்மஹோனின் விசுவாசத்தை அவருக்கு வழங்கும், குறைந்த குத்தைத் தொடர்ந்து "பெடிக்ரீ" யுடன் ஆங்கிளை ட்ரிப்பிள் ஹெச் தோற்கடித்தபோது இந்த கதைத்திட்டமானது அன்ஃபார்கிவனில் தொடர்ந்தது. மக்மஹோன் பின்னர் ஆங்கிளின் மேலாளராகி, ஆங்கிள் WWF சாம்பியன்ஷிப்புக்காக நோ மெர்சியில் த ராக்கைத் தோற்கடித்தபோது அவரது பக்கத்தில் இருந்தார். இந்தக் கூட்டணி சிறிது காலமே இருந்தது, இருப்பினும் நோ மெர்சியில் ஸ்டீபனி மீது த ராக் தனது "ராக் பாட்டம்" வழிகாட்டலை நடத்தியதால், ட்ரிப்பிள் ஹெச் ஆங்கிளைத் தாக்கினார், அந்த சமயத்தில் ஸ்டீபனி ஆங்கிளை நிர்வகித்த காரணத்தால் அவர் காயப்படுத்தப்பட்டார் என்று இது அவரது பிழையெனக் கருதப்படுகிறது. மக்மஹோன்களுக்கு இடையே இருந்த உள் பிணக்குகள், லின்டா மக்மஹோனை ஆழ்மயக்க நிலைக்கு இட்டுச்சென்றது, வின்ஸ் விவாகரத்துச் செய்யவென கேட்டு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர் சக்கர நாற்காலியில் இருக்கும் நிலை வந்தது, இந்த நேரத்தில் ட்ரிஷ் ஸ்ட்ராடஸுடன் வின்ஸ் பொது இடங்களில் காதல் கொள்ள சந்தர்ப்பமாகியது. ஸ்டீபனி எளிதாக ஸ்ட்ராடஸுடன் சண்டைபிடித்து, அவரை நோ வே அவுட்டில் தோற்கடித்தார். அடுத்த சில வாரங்களாக, ஸ்ட்ராடசை விட தாம் மக்மஹோனையே விரும்பியதாக வின்ஸ் தெளிவுபடுத்தினார், இது மக்மஹோன் ஸ்ட்ராடசை மிரட்டவும், வார்த்தைகளால் திட்டவும் அனுமதித்தது. மல்யுத்தமேனியா X-செவனில், வீதிச் சண்டையில் ஷேன் மக்மஹோன் வின்ஸைத் தோற்கடித்தார். இந்த போட்டியின்போது, ஸ்ட்ராடஸ் வின்ஸை அடித்து, ஸ்டீபனியை இருக்கையிலிருந்து துரத்தினார், அவரது வின்ஸின் மாறா பெண்களை வெறுக்கும் நடத்தையால் வெளிப்படையாகவே சலனமேற்பட்டது. மக்மஹோன் தமது சகோதரர் ஷேனுடன் சேர்ந்து தாம் எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தை வாங்கிவிட்டதாகவும்,WWF ஐ (உண்மையில் இந்தசமயத்தில் ECW சொத்துக்களின் உரிமை மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்தது) திவாலாக்கும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார், உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் (WCW) திரையில் தோன்றும் உரிமையாளராக ஷேன் ஆனார், தி அலியன்ஸ் என அழைக்கப்படும் "சூப்பர்குழு"வைத் உருவாக்குவதற்கு இரு பணிமுறைப் பட்டியல்களும் ஒன்றாகின. அவருடைய சகோதரர் ஷேன், முன்னாள் WCW சாம்பியன் புக்கர் டி., ராப் வன் டாம், குர்ட் ஏஞ்சல் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின் ஆகியோரைக் கொண்ட அவருடைய அணியான "தி அலியன்ஸ்", தி அண்டர்டேக்கர், கேன், பிக் ஷோ, கிறிஸ் ஜெரிகோ மற்றும் த ராக் ஆகியோரைக் கொண்ட "அணி WWF" ஆல் சர்வைவர் தொடரில் ஃபைவ்-ஆன்-ஃபைவ், வின்னர் டேக்ஸ் ஆல் நீக்கப் போட்டியில் தோற்கடிக்கப்பட்டது. தி அலியன்ஸ் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான இரவு, WWF தொலைக்காட்சியிலிருந்து ஷேனும், ஸ்டீபனியும் துரத்தப்பட்டார்கள். ரசிகர்களுக்குப் பிடித்ததாக ட்ரிப்பிள் ஹெச் மீள்வருகை செய்தபோது ஜனவரி 2002 இல் மக்மஹோன் மீண்டும் திரும்பினார், ஆனால் எப்போதுமே குறைகூறும் மற்றும் உணர்ச்சிவசப்படும் மனைவியாக மக்மஹோன் நடித்ததால் இந்த ஜோடிக்கிடையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. அந்தக் கதையின் ஒருபகுதியாக, தமது திருமண வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ட்ரிப்பிள் ஹெச்சை ஏமாற்றும் நோக்கில், மக்மஹோன் தாம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதை அடுத்து, தம்பதியினர் "விவாகரத்துப் பெற்றனர்". அவர் பொய் சொல்லியுள்ளார் என்பது பின்னர் ட்ரிப்பிள் ஹெச்சுக்குத் தெரியவர, புதுப்பித்தல் விழாவின்போது பூஜைபீடத்திலேயே அவரை விட்டு விலகுகிறார். இதன் விளைவாக, ட்ரிப்பிள் ஹெச் ராயல் ரம்பிளை வென்ற பின்னர், அதே வரிசையில் படம்பிடிக்கப்பட்ட ட்ரிப்பிள் ஹெச்சின் மல்யுத்தமேனியா WWF தோற்கடிக்கமுடியாத சாம்பியன் இல், நோ வே அவுட்டில் குர்ட் ஏஞ்சல் மற்றும் ட்ரிப்பிள் ஹெச் ஆகியோருக்கு இடையிலான போட்டியில் தம்மை சிறப்பு விருந்தினர் நடுவராக மக்மஹோன் நியமித்தார். ஆங்கிள் வென்றாலும்கூட, மக்மஹோனின் தவறான மத்தியஸ்தத்துக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் தலைப்பை மீண்டும் பெறுவதற்காக அடுத்த இரவில் ட்ரிப்பிள் ஹெச் அவரைத் தோற்கடித்தார். மக்மஹோன் அதன்பின்னர் இப்போதைய சாம்பியனும், முன்னாள் எதிரியுமான கிறிஸ் ஜெரிகோவுடன் இணைந்தார். மக்மஹோனின் தலையீடுகள் இருந்தாலும், மார்ச் 17 அன்று நடந்த மல்யுத்தமேனியா X8 இல் ஜெரிகோ ட்ரிப்பிள் ஹெச்சிடம் தோற்றார். "ரா" வின் மார்ச் 25 அத்தியாயத்தில், மக்மஹோன் தடுத்து நிறுத்தப்பட்டால் அவர் WWF ஐவிட்டு வெளியேறவேண்டி ஏற்படும் என்ற நிபந்தனையுடன், தோற்கடிக்கமுடியாத சாம்பியன்ஷிப்புக்காக ட்ரிப்பிள் த்ரெட் போட்டியில் பங்கேற்ற ஜெரிகோ மற்றும் மக்மஹோன் ஆகியோர் ட்ரிப்பிள் ஹெச்சிடம் தோற்றனர்; போட்டியில் ட்ரிப்பிள் ஹெச் மக்மஹோனைத் தடுத்து நிறுத்தினார். ஜூலை 18, 2002 இல், ஸ்மேக்டவுன் பொது மேலாளராக மக்மஹோன் WWF (உலக வனவிலங்கு காப்பு நிதியிலிருந்தான சட்டநடவடிக்கையை அடுத்து மறுபெயரிடப்பட்ட WWE) க்குத் திரும்பினார்!. அவருடைய மக்மஹோன்-ஹெம்ஸ்லே சகாப்த வில்லி கதாபாத்திரத்துக்கு முரணாக, அந்த சமயத்தில் ரசிகருக்குப் பிடித்த மல்யுத்த வீரகளுக்கு சலுகைவழங்கத் தொடங்கியதால், ஸ்டீபனி ரசிகருக்கு பிடித்தவராகினார். அவர் "ரா" பொது மேலாளர் எரிக் பிஸ்கோஃபுடன் 2002 முழுவதுமே முரண்பட்டார், இருப்பினும் எதிரிகள் இருவரும் ஒரு ஹாலோவீன் கொண்டாட்டத்தில் விவரிக்க முடியாத ஒரு முத்தத்தைப் பகிர்ந்தனர், இந்த கொண்டாட்டத்தில் மக்மஹோன் ஒரு சூனியக்காரி போல உடையணிந்திருந்தார், பிஸ்சஃப் முகமூடியணிந்து அவருடைய அப்பாபோல மாறுவேடத்திலிருந்தார். மக்மஹோன் WWE அமெரிக்க சாம்பியன்ஷிப்புக்கு திரும்பியதற்காகவும் WWE டாக் அணி சாம்பியன்ஷிப்பின் உருவாக்கத்துக்காகவும் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. "ஸ்மேக்டவுனை" ஆதரித்து ஹல்க் ஹோகன் பாடியதுடனும் அவருக்கு பாராட்டளிக்கப்பட்டது, இதனால் அவருக்கும் அவரது தந்தைக்குமிடையே முறுகல் ஏற்பட்டது. இதேவேளை, சேபிளுடனான காதல் தொடர்வதைத் தடுப்பதற்காக, வின்ஸ் மக்மஹோன் ஸ்டீபனியின் முயற்சிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கினார். நோ மெர்சியில் நடந்த எப்போதும் முதலாவது "தந்தை-மகள் ஐ குவிட் போட்டி"யில் இந்த சண்டை உச்சத்தை அடைந்தது. அவர்களின் போட்டியில், மக்மஹோனுக்கு துணையாக WWE இன் CEO ஆன அவரது தாயார் லின்டா மக்மஹோன் இணைந்தார், சேபிளுடன் வின்ஸ் மக்மஹோன் இணைந்தார். வலதுபக்கத்தில் ஸ்டீபனி சார்பாக லிண்டா ஒரு துண்டில் எறிந்தபோது ஸ்டீபனி தோற்றார், ஏனெனில் ஈய குழாய் ஒன்றைப் பயன்படுத்தி அவரின்மீது வின்ஸ் வைத்திருந்த அடைப்பை அவர் விடுவிக்கவில்லை. இந்தப் போட்டியில் தோற்றதன் விளைவாக, WWE தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக ஸ்டீபனி தோன்றவில்லை. அக்டோபர் 2005 இல் அதிர்ச்சியான திருப்பமாக தனது தந்தையுடன் சேர்ந்து ஸ்டீபனி மீண்டும் ஒரு தடவை வில்லியாகத் திரும்பிவந்தார், அவருடைய அம்மா "ரா" அறிவிப்பாளர் ஜிம் ரோஸ்ஸை வேலையை விட்டு நீக்கினார். உண்மையில் கர்ப்பமாக இருந்த மக்மஹோனும் கூட "ரா" வின் மார்ச் 6, 2006 அத்தியாயத்தில் மீண்டும் வந்தார், அதில் மேடைக்குப் பின்னால் ஷான் மைக்கேல்ஸை அணுகி, வயிற்று வலி இருப்பதாகக் கோருகிறார். மைக்கேல்ஸ் அவருக்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக நகர்ந்தபோது, மக்மஹோன் தனது மார்புக் கச்சிலிருந்து குறியிடப்படாத ஒரு பதார்த்தத்தை இழுத்தெடுத்து, அதை தன்னுடைய தண்ணீர்ப் போத்தலில் ஊற்றினார். ஷேனுக்கு எதிராக அந்த இரவில் பின்னர் நடந்த போட்டியின்போது, இந்தப் பதார்த்தம் மைக்கேல்ஸுக்கு குழப்பமான ஒரு நிலையை ஏற்படுத்துகிறது, இதன்விளைவாக அவர் தோற்றார். மக்மஹோன் ஏப்ரல் 1, 2006 அன்று நடந்த WWE ஹால் ஆஃப் ஃபேம் தொடக்க விழாவிலும், மல்யுத்தமேனியா 22 இல் மேடைக்குப் பின்னான விளக்கவுரையிலும் தனது குடும்பத்துடன் தோன்றினார். தனது தந்தையின் "பட்டில் ஆஃப் த பில்லியனர்ஸ்" போட்டிக்கு முன்னர் அவரைச் சந்திக்க, மக்மஹோன் மல்யுத்தமேனியா 23 இல் ஏப்ரல் 2007 இல் மேடைக்கு பின்னான நிகழ்ச்சியொன்றிக்கு மீண்டும் வந்தார். தனது இறப்பையே தோற்கடித்தபின்னர், அவருடைய தந்தை "ரா" வுக்கு திரும்பிய பின்னர், தனது தந்தைக்கு சட்டவிரோதமான ஒரு குழந்தை இருப்பதை ஸ்டீபனி பொதுவில் தெரிவித்தார், அக்குழந்தை WWE பணிமுறைப்பட்டியலில் இருந்தது. செப்டம்பர் 3, 2007அன்று ஒளிபரப்பப்பட்ட, ரேப் செய்யப்பட்ட "ரா" வின் பதிப்பில், து, ஸ்டீபனி தனது தாயார் லின்டா மற்றும் சகோதரர் ஷேன் ஆகியோருடன் பல தடவைகள் தோன்றி அக்குழந்தை குறித்து திரு.மக்மஹோனுடன் வாக்குவாதப்பட்டார், அக்குழந்தை ஹார்ன்ஸ்வாகிள் எனப் பின்னர் வெளிப்படுத்தப்பட்டது.. "ராவின் 15 ஆவது ஆண்டு நிறைவுவிழா" அத்தியாயத்தில், ஒரு பிரிவில் அவர் ஷேனுடன் சேர்ந்து தோன்றினார்—அவரது தந்தையார் வின்ஸ் மற்றும் ஹார்ன்ஸ்வாகிள் ஆகியோரையும் ஈடுபடுத்தி—இந்த அத்தியாயமானது, தனது தந்தையாரை அவமானப்படுத்துவதற்கான தனது உண்மையான கணவர் ட்ரிப்பிள் ஹெச்சை மக்மஹோன் முத்தமிடுவதோடு முடிந்தது. திரைக்கதை எழுதப்பட்ட பின்னர் After the scripted severe injuries sustained by வின்ஸ் on the June 23 3-hour edition of "ரா" வின் ஜூன் 23 3-மணிநேர பதிப்பில், கடும் காயங்களுக்கு வின்ஸ் உள்ளானார், அந்த 'குழப்பமான நேரத்"தில் ரா சூப்பர் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று கோரிக்கைவிடுவதற்கு ஷேன் தோன்றினார். ஷேனின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது, அதன்பின்னர் அடுத்து இரு வாரங்களாக,ஒற்றுமையைக் காண்பிக்குமாறு ஸ்டீபனியும் ஷேனும் சூப்பர் நட்சத்திரங்களை வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து வந்த வாரத்தில், புதிய ரா பொது மேலாளராக மைக் அடமில்லைத் தாம் தேர்வுசெய்திருப்பதாக ஷேன் அறிவித்தார். பொது மேலாளராக அடமிலை பதவி இறக்கம் செய்த பின்னர், ஸ்டீபனி வெகுவிரைவில் வர்த்தகச் சின்னத்தின் பொறுப்பாளராகி, அடுத்துவந்த வாரங்களில் கிறிஸ் ஜெரிகோவுடன் பெரும் வாய்த்தர்க்கங்களில் ஈடுபட்டார், கிறிஸ் ஜெரிகோவை வேலையை விட்டும் நீக்கினார் (இருப்பினும் அவர் மீண்டும் அதே பதவிக்கு அமர்த்தப்பட்டார்). அவருடைய தந்தை வின்ஸ் திரும்பிய பின்னர், குடும்பமானது ராண்டி ஆர்டனுடன் சண்டை பிடித்தது, வின்ஸைப் பந்தயம் கட்டுவதன்மூலம் மூலம் ராண்டி ஆர்டன் கதையைத் தொடங்கினார். சில வார மோதல்களின் பின்னர், ஆர்டப் மற்றும் அவரது கூட்டணி த லெகசி, தலைமையில் ஷேனைப் பந்தயம் கட்டி, ஸ்டீபனியில் RKO ஐ நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து, விளையாட்டரங்கிலிருந்து அவர், மக்மஹோனின் உண்மையான வாழ்க்கைக் கணவரான ட்ரிப்பிள் ஹெச்சால் துரத்தப்பட்டார்.. The rivalry between Orton and The Legacy against continued at ட்ரிப்பிள் ஹெச் மற்றும் theமக்மஹோன்களுக்கு எதிரான ஆர்டன் மற்றும் த லெகசியின் போட்டியானது மல்யுத்தமேனியா XXV இல் தொடர்ந்தது, இங்கே WWE சாம்பியன்ஷிப்பை ட்ரிப்பிள் ஹெச் ஆர்டனுக்கு எதிராகக் கைப்பற்றினார். அடுத்த மாதத்தில், சாம்பியன்ஷிப்பை பாக்லாஷில் ஆர்டன் வென்றார். மக்மஹோன் தனது WWF தொழிலை, நியூ யார்க்கிலுள்ள WWE விற்பனை அலுவலகத்துக்கான ஒருகணக்கு நிறைவேற்று அதிகாரியாகத் தொடங்கினார். அந்த நிறுவனத்தில் இருந்த ஆரம்ப ஆண்டுகளில், அவர் வரவேற்புப் பணி, ஆக்கபூர்வ வடிவமைப்பு, தொலைக்காட்சித் தயாரிப்பு மற்றும் வளையத்தில் சாகசம் காட்டுபவர் ஆகியவற்றைச் செய்தார். 2002 அளவில் அவர் பெற்ற தொழிலான தொலைக்காட்சி எழுத்து இயக்குநராக தனது நேரத்தைக் கழித்த பின்னர், 2006 இல் கிரியேட்டிவ் ரைட்டிங்கின் உயர் துணைத் தலைவராக பதவி உயர்த்தப்பட்டார். மார்ச் 2008 இல் பதிவிடப்பட்ட WWE SEC கோப்புகளின்படி, மக்மஹோனின் 2007 ஆம் ஆண்டுக்குரிய சம்பளம் அண்ணளவாக 677,125 டாலர்கள். 2007 இல் மக்மஹோன், டாலண்ட், கிரியேட்டிவ் ரைட்டிங் மற்றும் லைவ் இவண்ட்ஸ் நிறைவேற்று அதிகாரி துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அந்தப் பதவியில் இருந்த காலத்தில், உள்ளார்ந்த முறையற்ற பாலியல் தொடர்பு கோணத்தை அவர் நிராகரித்தார். அவரின் கருத்துப்படி, அவருடைய குழந்தையின் தந்தை தாம்தான் என்று வின்ஸ் வெளித்தெரிவிக்க இருந்தார்; அவர் அதற்கு மறுப்புச் சொன்னபோது, ஷேனை அக்குழந்தையின் தந்தையாக இருக்கும்படி அழுத்தம் கொடுத்தார், ஆனால் அந்த திட்டத்தையும் மக்மஹோன் மறுத்தார். ஜூலை 2001 இல் மக்மஹோன் மார்பு உட்பதித்தல்களைப் பெற்றார். அக்டோபர் 2001 கொடுத்த நேர்காணலில், "எனது முதல் கவலை ஆரோக்கிய சிக்கல்கள் பற்றியது" என அவரின் தாயார் லின்டா இந்த உட்பதித்தல் பற்றிக் கருத்துக் கூறினார். ஸ்டீபனி இந்த செயன்முறை குறித்து முற்று முழுதாக ஆராய்ந்துள்ளார், நான் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் பதில் வைத்திருக்கிறார், ஆகவே அவர் செய்ய விரும்பும் ஒன்று அது, அதை அவர் தொடரட்டும், அவருக்கு எனது முழு ஆதரவு உள்ளது என நான் சௌகரியமாக உணர்ந்தேன்" என்றார். அக்டோபர் 2002 இல் "த ஹொவார்ட் ஸ்டேர்ன் ஷோ" வில் அவர் தோன்றியபோது, தாம் இன்னமும் பெரிய உட்பதித்தல்களைப் பெற எண்ணம் கொண்டிருந்தாகவும், அந்த வேளையில் அவர் தனது எடையை இழந்திருந்த காரணத்தால் அவற்றைச் சிறியதாக செய்ததாகவும் மக்மஹோன் கூறினார். 2001 இல் WWF ஐ விட்டு வெளியேறிய ஜொவனீ "சைனா" லாரரை அங்கிருந்து வெளியேற்றுவதை அவர்தான் தொடக்கிவைத்ததாகவும் மக்மஹோன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பால் "ட்ரிப்பிள் ஹெச்" லெவெஸ்க்குடன் பல அண்டுகளாக காதல்வயப்பட்டிருந்த லாரர், தாம் அங்கிருந்து வெளியேறுவது சம்பளம் காரணமாக அல்ல, ஆனால் தாம் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டுமென மக்மஹோன் விரும்பியதாலேயே சென்றதாகக் கூறினார். ட்ரிப்பிள் ஹெச்சுடன் தனது உறவு இருந்தபோது, மக்மஹோனுக்கும் அவர்மீது காதல் இருந்தது, எனவே என்னிடமிருந்து பறித்துவிட்டார் என லாரர் கூறினார். மக்மஹோனும் லெவெஸ்க்கும் 2000 இல் அவர்களது திரைக்கதை காதலின்போது டேட்டிங்கைத் தொடங்கினர், 2003 இல் காதலர் தினம் அன்று அவர்கள் நிச்சயம் செய்தனர். ஜனவரி 8, 2006 அன்று, மக்மஹோனும், லெவெஸ்க்கும் தமது முதலாவது குழந்தையை ஜூலை 27, 2006 அன்று எதிர்பார்ப்பதாக WWE அறிவித்தது. மக்மஹோன் தனது கர்ப்பகாலம் முழுவதும் WWE இல் பணிபுரிந்து, பயணங்களில் ஈடுபட்டார், ஜூலை 24, 2006 அன்று 8 பவுண்டு, 7 அவுன்ஸ் (3.8 கி.கி) பெண் குழந்தை, ஆரோரா ரோஸ் லெவெஸ்க்கைப் பெற்றெடுத்தார். இந்த தம்பதியினர் தமது இரண்டாவது குழந்தையாக, முர்பி கிளைர் லெவெஸ்க் என்று பெயரிடப்பட்ட மகளை ஜூலை 28, 2008 அன்று பெற்றனர். மக்மஹோன் "த ஹவார்ட் ஸ்டேர்ன் ஷோ" , "ஜிம்மி கிம்மல் லைவ்!," மற்றும் "ஒபீ மற்றும் அந்தோனி" ஆகியவற்றிலும் வந்தார். நவம்பர் 2001 இல், மக்மஹோன் "த வீக்கஸ்ட் லிங்" கின் சிறப்பு அத்தியாத்தில் தோன்றினார், இதில் WWF நபர்கள் தங்களுக்குரிய அறக்கொடைகளுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டனர். இதில் அவர் கடைசி இரண்டுக்கு வந்தார், ஆனால் ட்ரிப்பிள் ஹெச்சிடம் தோற்றார். ஆகஸ்ட் 14, 2005 அன்று, MTVஇன் "புங்'" டின் பருவம் ஐந்தின் இறுதிப்போட்டியில், மக்மஹோன் (அவருடைய பெயர் தவறுதலாக "Stephani" என எழுதப்பட்டது), ஸ்டாசி கீப்லருடன் ("Stacey" என தவறுதலாக எழுதப்பட்டது) தோன்றினார், இங்கு ட்ரிப்பிள் ஹெச் மீது விளையாடப்பட்ட வேடிக்கை விளையாட்டுக்கு உதவினார். நவம்பர் 11, 2009 அன்று, மக்மஹோன் அத்தியாயத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவுடன் இணைந்து தோன்றி வரகு வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது. வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாகும். கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார். கல்லீரலைக் காக்கும் வரகு ! வருடு ஊடுருவு நுண்ணோக்கி வருடு ஊடுருவு நுண்ணோக்கி அல்லது வாருதல்வகை புரையூடுருவு நுண்ணோக்கி ("Scanning Tunneling Microscope") என்பது ஒரு பொருளின் மேற்பரப்பினை மிகவும் துல்லியத்துடன் மிக அணுகிப் பார்க்கக்கூடிய ஒரு நுண்ணோக்கி ஆகும். அதாவது அதிக பகுதிறனுடன் (பிரித்தறியும் திறனுடன்) பார்க்கமுடியும். இதன் மூலம் தனித்தனி அணுக்களையும் அறிய முடியும். ஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் ஊசி யையும் உடன் ஒரு கணினியையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ மின்னோட்டம் பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும். ஊசிமுனையின் அணுக்களைப் பரப்பின் எலக்ட்ரான் மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும். வருடு ஊடுருவு நுண்ணோக்கியை ஒத்த பல நுண்ணோக்கிகள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும். வெபர் சோதனை வெபர் சோதனை ("Weber test") எனப்படுவது காது கேட்கும் திறனை விரைவில் சோதிக்கும் பரிசோதனைகளுள் ஒன்று. இச்சோதனைக்கு எர்ன்ஸ்ட் ஹைண்ட்ரிக் வெபர் (1795–1878) என்பவரின் நினைவாக வெபர் சோதனை எனப் பெயரிடப்பட்டது. நடுக் காதில் ஏற்படும் காது கேட்கும் திறனிழப்பையும், ஒரு பக்க காது கேட்கும் திறனிழப்பு ஆகியவற்றை கண்டறியப் பயன்படுகிறது. கடத்தல் செவி திறனைக் கடத்துவது நடு செவியிலுள்ள பட்டை சிற்றெலும்பு (incus), சம்மட்டியுருவெலும்பு (malleus), ஏந்தியுருவெலும்பு (stapes) ஆகியவை ஆகும். உணர்நரம்புச் செவி திறனை (Sensorineural hearing ability) கடத்துவது உட் செவிலுள்ள நத்தை எலும்பு (cochlea), உட் தளச்சவ்வு (internal basilar membrane) மற்றும் நத்தை எலும்பிலுள்ள நரம்பு ஆகியவை ஆகும். காதுமடல், காது குழாய் மற்றும் காதுச் சவ்வு ஆகியவை ஒலியை நடுக் காதிற்கு கடத்துகிறது, உணர்நரம்புச் செவி திறனைக் காது மெழுகு பாதுகாக்கிறது. அதிரும் இசைக்கவையின் அடிப்பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரின் நெற்றிப்பொட்டில் வைத்து அவரிடம் எந்தக் காதில் ஒலி நன்றாகக் கேட்கிறதென வினவ வேண்டும். எந்தக் காதில் சத்தமாய்க் கேட்கிறதோ அந்தக் காதில் கடத்தல் குறைபாடு உள்ளதெனப் பொருள். நரம்புணர்ச்சி குறைபாட்டிலோ இயல்பான காதில் சத்தமாய்க் கேட்கும். வெபர் சோதனை மற்றும் ரினி சோதனை (Rinne test) ஆகியவை சேர்ந்தே செய்யப்பட்டு, காதின் கேட்கும் திறனின் தன்மையும், இழப்பும் கண்டறியப்படுகிறது. வெபர் சோதனைக்கு இசைக்கவைகள் பயன்படுத்தப்படுகின்றன. (பொதுவாக 256 Hz or 512 Hz அதிர்வெண் கொண்டவை வெபர் அதிர்வு சோதனையிலும்; 512 Hz அதிர்வெண் கொண்டவை ரினி கேட்கும் திறன் சோதனையிலும் பயன்படுத்தப்படுகிறது) இசைக்கவைகள் நெற்றியின் நடுப்பகுதியில் அல்லது மேலுதட்டுக்கு மேலே மூக்கிற்குக் கீழே பல்லின் மீது அல்லது நெற்றியின் மேலே காதிலிருந்து சம தூரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் நோயாளியின் எந்தக் காதில் அதிக சப்தம் கேட்கிறது என வினவப்படுகிறது. ஆரோக்கியமான காதுகளுக்கு, இரு பக்கமும் ஒரே மாதிரியான சப்தம் கேட்கும். பாதிக்கப்பட்ட காதுகளுக்கு, கடத்தும் திறன் குறைவால் அதிக இரைச்சல் கேட்கும். இதிலிருந்து பாதிக்கப்பட்ட காதுகள் கண்டறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நன்றாக கேட்கும் காதுகளுக்கு அதிக இரைச்சல் கேட்டால், உணர்நரம்புச் செவி திறன் எனக் கண்டறியப்படுகிறது. நேயாளியால் கேட்கும் திறனை அறிய முடியவில்லை எனில் ரினி சோதனையும் சேர்த்து நடத்துப்பட்டு, மருத்துவரே கேட்கும் திறனைச் சோதிப்பார். ரினி சோதனையில் பயன்படுத்தப்படும் இசைக்கவை (பொதுவாக 512 Hz) இரண்டு காதுகளுக்குப் பின்பும் எலும்பின் மீது, கேட்கும் ஒலி குறையும் வரை வைக்கப்படுகிறது. உடனே காதின் மீது இசைக்கவை வைக்கப்பட்டு, அதிர்வு கேட்பது எப்போது குறைகிறது என கேட்கப்படுகிறது. ஆரோக்கியமான காதுகளுக்கு வெளியே ஏற்படும் அதிர்வு ஒலியானது, காதுகளுக்குப் பின்னால் ஏற்படும் அதிர்வு ஒலியைவி்ட அதிகமாக இருக்கும். மாறி இருந்தால், காதுகளின் கேட்கும் திறனில் குறைபாடுள்ளது என அறியலாம். நோயாளியின் எந்தக் காதில் இசைக்கவையின் அதிர்வு அதிகம் கேட்கிறதோ, அந்தக் காதின் ஒரு பக்க காது கேட்கும் திறன் குறைவு என அறியலாம். இதற்குக் காரணம் காற்றின் மூலமல்லாமல், எலும்பின் மூலம் ஒலி அதிகம் கடத்தப்படுகிறது, அதாவது காதின் கடத்தும் திறன் குறைபாடுடன் உள்ளது.இது நடுக்காதிலுள்ள எலும்புகளில் ஏற்படும் பாதிப்பால் உண்டாகிறது. அதே நேரத்தில் உட்செவியில் உள்ள பகுதிகளில் பாதிப்பு இல்லாததால், எலும்பின் மீது ஏற்படும் அதிர்வு உணரப்படுகிறது. காற்றின் மூலம் கடத்தப்படும் ஒலி சரியாகக் கேட்கும் போதும், காது கேட்கும் திறனில் குறைபாடிருந்தால், அது நரம்புணர்ச்சியால் ஏற்படுகிறது. நரம்புணர்ச்சியில் குறைபாடிருந்தால் எலும்பின் மூலம் கடத்தப்படும் ஒலியின் அளவு குறைவாக இருக்கும்.. வெபர் சோதனை இரண்டு காதுகளில் உள்ள கேட்கும் திறனிலுள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது. காது கேட்கும் திறனின் அளவைக் கண்டறியததால், இச் சோதனை நன்றாகக் கேட்கக்கூடிய காதுகளைக் கண்டறியப் பயன்படுவதில்லை. இரண்டு காதுகளின் கேட்கும் திறனும் ஒரே மாதிரியிருந்தால் இரண்டுமே இயல்பான காதுகளாகவே கருதப்படுகிறது. அதே நேரத்தில் காற்றின் மூலம் பரவும் ஒலியில் ஏற்படும் தடைகளை எளிய முறையில் கண்டறியப்பயன்படுகிறது. பூங்கனி (இதழ்) பூங்கனி என்பது வவுனியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்த சிறுவருக்கான மாத இதழாகும். இது 2005 ஏப்ரலில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள், போட்டிகள், தொடர்கதைகள், சிறுவர்களின் படைப்புகள் என பல்வேறு விடயங்களைத் தாங்கி வெளிவந்தது. இதன் ஆசிரியர் கே. ஆர். றஜீவன் ஆவார். ஷாரன் ஸ்டோன் ஷாரோன் ஒய்வோன் ஸ்டோன் (மார்ச் 10, 1958இல் பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகையாவார், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் பேஷன் மாடலும் ஆவார். "பேசிக் இன்ஸ்டிங்க்ட்" என்னும் காமத் திகில் திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக சர்வதே அங்கீகாரத்தைப் பெற்றார். "காசினோ" ன்னும் திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக திரைச்சித்திர நாடகத்துக்கான கோல்டன் குளோப் சிறந்த நடிகை விருதை வென்றதோடு சிறந்த நடிகைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஸ்டோன் பென்னிசில்வேனியாவில் உள்ள மீட்வில்லியில் பிறந்தார். டாரத்தி (நே லாசன்) என்னும் கணக்கர் மற்றும் குடும்பபெண்ணுக்கும் ஜோசப் ஸ்டோன் என்னும் கருவிகள் மற்றும் அச்சுகள் தயாரிப்பவருக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாமவராவார். ஸ்டோன் 1975இல் பெனிசில்வேனியாவின் சேகர்டவுனில், பென்சில்வேனியவின் எடின்பரோ பல்கலைக்கழகத்துடன் கல்வித் திட்டத்துக்காக தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் சேகர்டவுன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்- உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எடின்பரோவில் கொஞ்ச காலம் தொடர்ந்தார். தன் இளமைக்காலத்தில் ஒரு விரைவு உணவு விடுதியில் பணியாற்றினார். மீட்வில்லியில் மிஸ் கிராபோர்டு கவுண்டி பட்டத்தை ஸ்டோன் வென்றார். அலங்கார அணிவகுப்பிற்கு வந்த நடுவர்களில் ஒருவர் அவரை பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, பேஷன் மாடலாக மாறுவதற்கு நியூ யார்க் நகரத்துக்கு இடம்பெயரச் சொன்னார். அவருடைய தாயாரும் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, தன் அத்தையுடன் மீட்வில்லியில் இருந்து நியூ ஜெர்சிக்கு 1977ஆம் ஆண்டு சென்றார். நியூஜெர்சிக்கு வந்த நான்கே நாட்களில் நியூயார்க்கில் உள்ள ஃபோர்டு மாடலிங் ஏஜன்சி/0}யுடன் ஒப்பந்தம் ஆனது. ஃபோர்டுடன் ஒப்பந்தமான பின், சில ஆண்டுகளுக்கு மாடலிங்கில் செலவிட்டு, பர்கர் கிங், கிளெய்ரால் மற்றும் மேபெலைன் போன்ற தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றினார். ஐரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கையில், மாடலிங்கில் இருந்து விலகி நடிகையாக முடிவு செய்தார். அதனைப் பற்றி பின் ஒருகாலத்தில் தெரிவிக்கையில், "அதனால் என் பைகளை தூக்கிக் கொண்டு நியூயார்க்கிற்கே திரும்பினேன், அங்கே ஊடி ஆலன் படத்தில் ஒரு கூடுதல் பாத்திரத்தில் நடித்துவிடலாம் என வரிசையில் நின்றேன்", என்றார். நடிப்புத் திறமைச் சோதனையின் போது, மைக்கேல் பீவரைச் சந்தித்தார், அங்கே அவரது அலங்கார அணிவகுப்பை அவர் அங்கீகரித்தார், இருவரும் நண்பர்களாயினர். "ஸ்டார்டஸ்ட் மெமரீஸ்" (1980) என்னும் படத்தில் சிறிய பாத்திரத்தில் தோன்றினாலும், நெஞ்சில் என்றும் நிற்கும்படி நடித்திருந்தார், அதற்குபின் ஒரு வருடம் கழித்து "டெட்லி பிளசிங்" (1981) என்னும் திகில் திரைப்படத்தில் அனைவரும் பேசும்படியான பங்கை ஆற்றிச் சென்றார். பிரஞ்சு இயக்குநர் கிளாடு லீலோச் ஸ்டார்டஸ்ட் மெமரீஸ் படத்தில் ஸ்டோனைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டு தன் "லே உன்ஸ் ஏ லே அத்ரீஸ்" (1982) படத்தில் ஜேம்ஸ் கான் பாத்திரத்தில் நடிக்கவைத்தார். திரையில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தோன்றியதால் பாராட்டுகள் வெகுவாக காணப்படவில்லை. அவரது அடுத்த பாத்திரமாக, ரியான் ஓ நீல், ஷெல்லி லாங், மற்றும் சிறுவனான டிரு பேரிமோர் ஆகியோர் நடித்த "இர்ரெகன்சிபில் டிபரன்சஸ்" (1984) என்னும் படத்தில் அமைந்தது. ஒரு வெற்றிப்பட இயக்குநர் மற்றும் அவரது திரைக்கதை எழுத்தாளரான மனைவிக்கும் இடையே உள்ள திருமண பந்தத்தை முறிக்கும் வளர்ந்துவரும் நடிகையாக நடித்துள்ளார். இதன் கதையானது இயக்குநர் பீட்டர் போக்டானோவிக் மற்றும் அவரது செட் வடிவமைப்பாளரான மனைவி போலி பிளாட் மற்றும் போக்டனோவிக்கின் படமான "த லாஸ்ட் பிக்சர் ஷோ" (1971) திரைப்படத்தில் நடித்த இளம் நாயகியான சிபில் ஷெப்பர்டு ஆகியோரிடையே நடந்த நிஜக் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும், இப்படத்தில் ஒரு சகநடிகையாக ஸ்டோனின் மாமியாரான கிளோரிஸ் லீச்மேன் நடித்திருந்தார், அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதும் வழங்கப்பட்டது. ஸ்டோன், ஸ்கார்லெட் ஓஹரா பாத்திரத்தில் கோகைன் போதைப்பழக்க அடிமையாக நடித்திருப்பது தான் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தியது, அதில் வரும் இசை உச்சக்கட்டம் "கான் வித் த விண்டின்" ரீமேக்காக அமைக்கப்பட்டிருக்கும். 1980களின் மற்ற வருடங்களில் "ஆக்ஷன் ஜேக்சன்" (1988), "கிங் சாலமன்ஸ் மைன்ஸ்" (1985) மறும் "ஆலன் குவாட்டமைன் மற்றும் த லாஸ்ட் சிட்டி ஆப் கோல்டு" (1987) ஆகிய படங்களில் நடித்திருந்தார். "ஆலன் குவாட்டர்மெயின் மற்றும் த லாஸ்ட் சிட்டி ஆப் கோல்டு" படத்தில் அவரது நடிப்பிற்காக மோசமான நடிகைக்குறிய ரேசி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். "அபவ் த லா" (1988) திரைப்படத்தில் ஸ்டீவன் சீகலின் மனைவி கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். "மேக்னம், P.I." -இன் இரண்டு பாக திரைப்படமான "எக்கோஸ் ஆப் மைன்டு" எனத் தலைப்பிடப்பட்டதில் ஒத்துப்பிறந்த இரட்டையர்களாக, அதில் ஒன்று டாம் செல்லக்'கின் காதலியாக வருவதாக நடித்திருந்தார். 1988இல் "வார் அன்ட் ரிமம்பிரன்ஸ்" என்னும் குருந்தொடரை படமாக்குவதில் ஜேனிஸ் ஹென்ரி என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். "டோடல் ரீகால்" (1990) என்னும் திரைப்படத்தில் அர்னால்டு ஸ்வார்சனெகருடன் நடித்திருந்தது ஸ்டோனுக்கு ஒரு தொழில்வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. படத்தின் வெளியீட்டுடன் தொடர்புபடுத்தும்படிக்கு "பிளேபாய்" -இல் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டார், அதில் அப்படத்திற்காக அவர் தயார் செய்திருக்கும் தசைகளைக் காட்டும்படிக்கு (பலுதூக்குவது போலும் டே குவோன் டோ கற்கும்படியும்) காட்சியமைத்திருந்தார். 1999இல், "பிளேபாயில்" நூற்றாண்டின் 25 கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக மதிப்பிடப்பட்டிருந்தார். "பேசிக் இன்ஸ்டிங்க்ட்" (1992) படத்தில் அறிவுமிக்க, இருபாலுணர்வும் உள்ளவராக சீரியல் கொலைகாரியாக கேதரின் டிரேமெல் பாத்திரத்தில் நடித்திருந்தது அவரை மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்த்தியது. டிரேமல் பாத்திரத்துக்காக ஸ்டோன் பலநாள் காத்திருந்தார், அதற்காக பல பெரிய வாய்ப்புகளையும் இழந்தார் (அதே பாத்திரம் ஸ்டோனுக்கு வழங்கப்படும் முன் 13 நடிகைகள் மற்றும் 150 பெண்களுக்கு வழங்கப்படுவதற்கு சோதிக்கப்பட்டது). அதே முன்னணியில் இருந்த நடிகைகளான கீனா டேவிஸ், மிக்கேல் பீவர், மெக் ரியான், மெலனி கிரிபித், கெல்லி லிஞ்ச், ஜெனிபர் ஜேசன் லீ மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோர்க்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்ட போது நிர்வாணத் தோற்றம் தேவைப்பட்டதால் அவர்கள் மறுத்துவிட்டனர். திரைப்படத்தின் மிகவும் பேர்போன காட்சியில், டிரேமலை ஒரு போலீசார் விசாரிக்கையில் குறுக்காக வைத்திருக்கும் கால்களை விரித்து தான் உள்ளாடை அணியவில்லை என்பதை காண்பிப்பாள். ஸ்டோன் படம் திரையிடப்பட்ட போது, அந்த காட்சியில் தன் வல்வத்தை தானே அந்த கால் விலக்கும் காட்சியில் பார்த்தபோது, எழுந்து திரையோட்ட அறைக்குச் சென்று இயக்குனர் பால் வெர்ஹோவெனை அறைந்தார். இந்த காட்சியில் உள்ளாடை இல்லாமல் காட்டப்படுவதை தான் ஒத்துக் கொண்டதாகவும், தானும் விர்ஹோவனும் இந்த காட்சியைப் பற்றி தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து விவாதித்திருந்தாலும், அக்காட்சியை இவ்வளவு அப்பட்டமாக காட்டுவார்கள் என்பதைத் தான் அறியாதிருந்ததாக தெரிவித்தார். "காலை விலக்கிக்காட்டும் காட்சி வருவதும் எனக்குத் தெரியும், நான் நிர்வாணப்படுத்தப்படப் போவதற்காகத் தான் இந்த காட்சி என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் இந்தளவுக்கு என் பெண்ணுறுப்பை இந்த காட்சியில் நீங்கள் பார்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது" எனக் கூறினார். பின் , திரையிடப்படுகையில் அக்காட்சியைப் பார்க்கும் போது அதிர்ந்து போனேன் என்றார். தெரியாதவர்கள் பலர் நிறைந்த அறையில் பார்த்தது மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சிமிக்கதாகவும் இருந்தது, அதனால் அறைக்குள் சென்று அவரை அறைந்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன்." இதைத் தவிர்த்து, அதற்கு முன் மற்றொரு பேட்டியில், தெரியாதவர்களுடன் சேர்ந்து முதல்முறை படம் பார்த்தது "ஒரே கூத்தாக இருந்தது" என்றார். அவரைப் பிடிக்கும், குறிப்பாக கால்கள் இடையே எடுத்த காட்சிக்குப்பின் அவர் பத்திரிகைக்கு கூறிய பொய்களை அடுத்து, அதுவும்முழுக்கமுழுக்க பொய் சொன்னதை அடுத்து எனக்கு பிடிக்காமல் போனது" என்று கூறினார். நடிகையுடன் பின்னர் நட்பு கொந்டிருந்த திரைக்கதை எழுத்தாளர் ஜோ எஸ்டர்ஹாஸ், "ஹாலிவுட் அனிமல்" என்னும் நினைவுக் குறிப்பு ஒன்றில் எந்தளவுக்கு நிர்வாணமாக காட்டப்படும் என்பது நடிகைக்கு நன்றாகவே தெரியும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, "பீப்பிள்" பத்திரிகையில் உலகின் 50 அழகானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். 1992இல், போட்டோகிராபர் ஜார்ஜ் ஹரல், ஸ்டோன், ஷெரிலின் ஃபென், ஜூலியன் சான்ட்ஸ், ராகுயில் வெல்ச், எரிக் ராபர்ட்ஸ் மற்றும் சீன் பென் ஆகியோர் அடங்கிய போட்டோகிரஃப் தொடரை எடுத்தார். இந்த படங்களில் 1930களில் இருந்த ஸ்டைலை மீண்டும் உருவாக்கி, அதில் நடிகர்களின் ஒப்பனைகள், முடி அலங்காரம் மற்றும் அலங்காரத் தோரணை அனைத்தையும் அந்த காலத்தில் உள்ளது போல் அமைத்திருந்தார் . நவம்பர் 1995இல், 6925 ஹாலிவுட் Blvdஇல் உள்ள ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்மில் ஸ்டோனுக்கு ஸ்டார் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதே ஆண்டில், "எம்பயர்" பத்திரிகை திரைப்பட வரலாற்றில் 100 செக்சியான நட்சத்திரங்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. அக்டோபர் 1997இல், எல்லா காலத்திற்கும் சிறந்த நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் சிறந்த 100 திரைப்பட நட்சட்திரங்களில் ஒருவராக தரமளிக்கப்பட்டிருந்தார். 1995இல், மார்டீன் ஸ்கார்ஸீஸின் "காசினோ" வில் ராபர்ட் டி நீரோவுடன் "ஜிஞ்சர்" என்ற பாத்திரத்தில், நடித்ததற்காக, திரைச்சித்திர நாடகத்திற்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றார். அப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக அகாடமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். 2001 இல், ஜெர்மன் பட இயக்குனர் லேனி ரீப்ன்ஸ்டால் வாழ்க்கை சரிதைப் படத்துடன் தொடர்பு படுத்தப்பட்டார். வெற்றிப்பட இயக்குனர் பால் வீர்ஹோவனும் ரீபன்ஸ்டாலும் ஸ்டோனை படத்தில் ரீபன்ஸ்டாலாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். வீர்ஹோவன் இது பற்றி கூறுகையில், ஸ்டோனுடன் இதைப் பற்றி தான் விவாதித்ததாகவும் அவர் இதில் மிகவும் ஆர்வமக இருந்ததாகவும் விவரித்தார். அதனைத் தொடர்ந்து, வீர்ஹோவன் இந்த பிரஜக்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும், தயாரிப்பாளர்கள் முடிவுசெய்ததைவிட மிகவும் விலையுயர்ந்த திரைக்கதை ஆசிரியர் வேண்டும் என கேட்டார். 2001இன் இறுதியில் வலை இரத்தப்போக்குக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அது முதுகெலும்புச் சிரையின் பிளவால் ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாக சிதைந்த அனூரிசம் போலும் இல்லை, அதே வேளை ஒரு இரத்தநாள சம்பந்தமான உட்சிதைவு போல் சிகிச்சையளிக்கப்படும். 2001இல் HBO திரைப்படமான "இப் தீஸ் வால்ஸ் குட் டாக் 2" கில் எல்லன் டி ஜென்ரஸ் என்னும் எதிர்நாயகி கதாப்பாத்திரத்தில் ஒரு லெஸ்பியன் குடும்பம் நடத்த முயற்சிப்பதாக நடித்திருந்தார். 2003இல், "த பிராக்டீஸ்" ஸில் எட்டாவது காட்சியில் இருந்து மூன்று பாகங்களில் தோன்றினார். சிறந்த நடிப்புகளுக்காக, நாடகத் தொடர்களின் மிகச்சிறந்த கெஸ்ட் நடிகைக்காக எம்மி விருதைப் பெற்றார். "கேட்வுமன்" (2004) என்ற படத்தில் மீண்டும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க முயற்சித்து திரும்பி வந்தார்,ஸ்டோன், இருந்தாலும் அந்த படம் ஒரு சிக்கல் மிக்கதாகவும் வர்த்தகரீதியாக தோல்வியையும் அடைந்தது. வழக்குக்குண்டான வருடங்களுக்கு பின், "Basic Instinct 2: Risk Addiction" மார்ச் 31, 2006 இல் வெளிவந்தது. படத்தில் வந்த நிர்வாணக் காட்சிகளில் ஸ்டோன் செய்த பிரச்சனையால் தான் படத்தை வெளியிடுவது நீண்ட தாமதமானதாக காரணம் சொல்லப்பட்டது; அவர்களுக்கு குறைவாக தேவைப்படுகையில், ஸ்டோனுக்கு அதிகம் தேவைப்பட்டதாம். கும்பலான செக்ஸ் காட்சி ஒன்று அமெரிக்காவில் வெளியிடுவதற்கு MPAAவிடம் இருந்து R தரம் பெறுவதற்காக வெட்டப்பட்டது; பிரச்சனைக்குள்ளான இந்த காட்சி லண்டனை மையமாகக் கொண்ட யூ.கே. பதிப்பில் தொடர்ந்து இருந்தது. ஒரு பேட்டியாளரிடம், "மிகவும் வித்தியாசமான அடக்குமுறை காலத்தில் நாங்கள் இருக்கிறோம், ஒரு பாப்கார்ன் படம் விவாதத்திற்குரிய களத்தை ஏற்படுத்தினால், அது நன்றாகவா இருக்கும்?" எனக் கூறினார். $70 மில்லியன் டாலர்களுக்கு அதன் பட்ஜட் அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் முதல் வார வசூலில் வெறும் 10 சதவீதமே பெற்று $3,200,000 மட்டுமே வசூலானது, தொடர்ச்சியாக வந்த வாரங்களில் வெத்து வேட்டாக மாறியது. மொத்தத்தில் 17 நாட்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் ஓடியது, மொத்த உள்ளூர் வசூலாக 6 மில்லியன் டாலர் மட்டுமே வசூல் செய்தது. "பேசிக் இன்ஸ்டிங்க்ட் 2" தோல்வியடைந்ததை அடுத்து "Basic Instinct " மூன்றாவது பகுதிய தானே இயக்கி நடிக்க விரும்புவதாக தெரிவித்தார், ஸ்டோன். "அல்ஃபா டாக்" என்னும் படத்தில் புரூஸ் வில்லிஸ் உடன் நடித்தார், அதில் ஒலிவியா மாசர்ஸ்கி பாத்திரத்தில், நிஜ வாழ்வில் கொலை செய்யப்பட்டவரின் தாயாக நடித்திருந்தார். அந்த பாத்திரத்திற்காக ஒரு தடித்த ஆடையை அணிந்திருந்தார் ஸ்டோன். பிப்ரவரி 2007இல் வெளியான "வென் எ மேன் பால்ஸ் இன் த பாரஸ்ட்" என்ற புதிய படத்தில் நோயால் வாடிப்போனவராக நடித்திருந்தார், அதனை முன்னேற்றும்படு அவர் அதனை "ப்ரோசாக் சமூகம் என்று அழைத்தார். அதனை "ஒரு கண்ணீர் மல்கிய அனுபவம்" என்றார். "இது போன்ற அனுபவத்தை பெறும் விதமாக நாம்... ஒரு புரோசாக் சமூகத்தில் வாழ்கிறோம் என நாம் அடிக்கடி சொல்லப்படுகிறோம். நாம் இதனை எப்படி உணர்கிறோம் என்பதை அறிய இது போன்ற பணிகளை நாம் செய்கிறோம்." டிசம்பர் 2006இல், நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்ற நோபல் பீஸ் பிரைஸ் கன்சர்ட்டை ஏஞ்சலிகா ஹஸ்டனுடன் நடத்தினார். கன்சர்ட்டில் நோபல் அமைதி பரிசு வெற்றியாளர்களான முகமது யூனிஸ் மற்றும் கிரேமீன் வங்கி ஆகியோருக்கு பெருமிதம் சேர்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. 2007இல், ஸ்ட்ரோக் பற்றிய அறிகுறிகளை விளக்கும் ஒரு தொலைக்காட்சி விளம்பர படத்தில் நடித்தார். ஸ்டோன் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் நகரில் வாழ்ந்து வருகிறார், நியூசிலாந்தில் ஒரு கால்நடைகள் பண்ணையையும் வைத்திருந்தார். மார்ச் 2006இல், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை பரப்புவதற்கு இஸ்ரேலுக்கு பயணம் செய்து, அங்கு நோபல் அமைதி பரிசு பெற்றவரான ஷைமன் பெரஸ் உடன் சேர்ந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்றார். ஸ்டோனுக்கு நீரிழிவு நோய் உள்ளது, அவருக்கு ராஸ்ப்பெரிகள் பிடிக்குமாம். ஏப்ரல் 2004இல், தேசிய லெஸ்பியன் உரிமைகள் மையம் வழங்கிய ஸ்பிரிட் விருதை சான் பிரான்சிஸ்கோவில் பெற்றார், அது லெஸ்பியன், கே மற்றும் HIV/AIDS மக்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் ஈடுபாட்டுக்காக வழங்கப்பட்டது, அதோடு கைலி மினோக் உடன் "கான்ட் கெட் யூ அவுட் ஆப் மை ஹெட்ஸ்" நிகழ்ச்சியை கேன்ஸில் நடந்த AIDS ஆராய்ச்சிக்காக நடத்தியிருந்தார் ஸ்டோன். சான் பிரான்சிஸ்கோவின் மேயர் கேவின் நியூசம்மிடம் விருது பெற்றார். அவரது பெற்றோர் பெண்ணிய மதிப்புகளை கற்றுத் தந்து வளர்த்ததாகக் கூறப்படுகிறது. "ஒரு பெண்ணாக இருப்பதால் எனது ஏதாவது விருப்பங்களையோ எனது சாதனைகளையோ செய்ய்துவிட முடியும் என்று ஒருபோதும் சொல்லி என்னை என் தந்தை வளர்க்கவில்லை. தந்தையைப் போல் புளு - காலர், நடுத்தர வர்க்க உலகத்தில் வாழ்வது ஒரு பெரிய விஷயம் தான்." ஜனவரி 28, 2005இல், டான்சானியாவில் உள்ளவர்களுக்கு கொசு வலைகள் வாங்குவதற்கு 1 மில்லியன் டாலர்களை வாக்குறுதிகளாகப் பெற்றுத் தந்தார், அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோசின் உலக பொருளாதார குழுமத்தை ஆப்பிரிக்கா மற்றும் ஏழ்மைக்கான முன்னேற்பாடற்ற நிதி சேகரிப்பு மேடையாக மாற்றியது. UNICEF உள்ளிட்ட பல கண்காணிப்பு நிறுவனங்கள், டான்சானிய அதிபர் பென்ஞ்சமின் மிகாபாவின் வார்த்தைகளுக்கு சாதாரணமாக செயல்படுத்தியுள்ளார் என ஸ்டோனை விமர்சித்தனர், ஏனென்றால் மலேரியாவைத் தடுப்பதற்கான காரணங்கள் பற்றியோ, விளைவுகள் பற்றியோ முறைகள் பற்றியோ அவர் ஆராயவே இல்லை; அப்படி செய்திருந்தால், பல ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பொது மருத்துவமனைகள் மூலம் இலவச படுக்கை வலைகளை மக்களுக்கு விநியோகித்து வருவதை தெரிந்திருப்பார். வாக்குறுதியளிக்கப்பட்ட 1 மில்லியன் டாலரில் 250,000 டாலர்கள் மட்டுமே மொத்தத்தில் வசூலானது. டான்சானியாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த 1 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான படுக்கை வலைகளை நிவிர்த்தி செய்ய மீதம் 750,000 டாலர்களை UNICEF வழங்கியது. இதனால் மற்ற UNICEF திட்டங்களின் பணமும் மாற்றிவிடப்பட்டது. பிரபல பொருளாதார வல்லுநர் சேவியர் சாலா-இ-மார்டீன்- கூறுகையில், படுக்கை வலைகளுக்கு என்ன நேர்கிறது என்பதை பெருமளவு அதிகாரிகளுக்கே தெரிவதில்லை என கூறியிருந்தார். சில உள்ளூர் விமான நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன. சொன்னபடி, இவை கல்யாண ஆடைகளாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளூர் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. 61வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவின் போது, மே 25, 2008இல் ஹாங் காங்கின் "கேபிள் என்டர்டெயின்மண்ட் செய்திகளில்" சிகப்பு கம்பள பரிமாற்றத்தில் ஸ்டோன் பேசிய கருத்துகளுக்கு பெருமளவில் விமர்சிக்கப்பட்டார். 2008 சிகுவான் பூகம்பத்தைப் பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது: கண்காணிப்பாளர்களும் இந்த பூகமத்தின் மையப்பகுதியை கவனிக்கையில் இதன் வென்சுவான் கவுன்ட்டியின் மையப்புள்ளியாக இருக்கும் ங்குவா திபத் மற்றும் கியாங் தன்னாதிக்க பகுதியானதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையாக பாரம்பரிய திபத்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவரது கருத்துகளுக்கு பின் "ஹாலிவுட் ரிப்போர்ட்டர்" ஒருவர், சீனாவின் மிகப்பெரிய திரையரங்குகள் இணைப்பு கொண்ட ஒரு நிறுவனம் ஸ்டோனின் படங்களை இனி திரையிடப் போவதில்லை என அறிவித்ததாக கூறியிருந்தார். UME சினிபிளக்ஸ் செயினின் நிறுவனரும் ஹாங்காங் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான ங்க் சீ யூன் ஸ்டோனின் கருத்துகள் "தகாதவை" எனக் குறிப்பிட்டிருந்தார், அதோடு UME சினிபிளக்ஸ் செயின் எதிர்காலத்தில் எப்போதும் ஸ்டோனின் படங்களை வெளியிடாது என்றும் அறிவித்தார். சீனப் பொதுமக்களின் அமளியை அடுத்து ஸ்டோனின் படம் தாங்கிய கிறிஸ்டியன் டியோர் விளம்பரங்கள் அனைத்திலும் ஸ்டோன் விலக்கப்பட்டார். 2008 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா விருந்தினர் பட்டியலில் இருந்தும் ஸ்டோன் நீக்கப்பட்டார், அவரை நிரந்தரமாக நீக்கிவிடவும் அதன் நிகழ்ச்சி நடத்துபவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். டியோர் சீனா ஸ்டோனின் பெயரில் ஒரு மன்னிப்பை கேட்டது, ஆனால் "நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை" என நியூயார்க் டைம்சுக்கு அளித்த பேட்டியில் ஸ்டோன் மறுத்துவிட்டார். "உண்மையற்ற ஒன்றுக்கோ முகதாட்சணியத்துக்கோ நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை", என்று கூறிய போதும் தான் ஒரு "முட்டாள் போல் கத்தியதாக" ஒத்துக் கொண்டார். அவரது இந்த நடத்தைக்கு பின் தலாய் லாமா தானாகவே விலகிக் கொண்டார். 1990களின் ஆரம்பகட்டத்தில், விஞ்ஞானத்துவ சர்ச்சின் உறுப்பினராக இருந்தார். சக நடிகர் ரிச்சர்டு கிரே அவரை தலாய் லாமாவுக்கு அறிமுகப்படுத்திய பின் அதுவரை இருந்த மதத்தில் இருந்து திபத் புத்த மதத்துக்கு மாறினார். சர்வதேச வாழ்க்கை சர்ச்சின் அங்கீகரிக்கப்பட்ட போதகரும் ஆவார். ஜார்ஜ் இங்க்லண்ட் ஜூர்., என்ப்வருக்கு முதலில் திருமணம் செய்திருந்தார், ஆனால் அதன்பின் தொலைக்காட்சி தயாரிப்பாளர் மைக்கேல் கிரீன்பர்கிற்காக அவரை பிரிந்தார். 1984இல், கிரீன்பர்குடனான திரும்மணத்தை முறித்து; ஸ்டோனுக்கு இரண்டாவது கணவரானார். திருமணம் மூன்று வருடங்களுக்கு நிலைத்திருந்தது. "த வேகாஸ் ஸ்டிரிப் வார்" என்ற டிவி திரைப்படத்தை அவர் தயாரிக்கையில் ராக் ஹட்சன் மற்றும் ஜேம்ஸ் எர்ள் ஜோன்சுடன் ஸ்டோனும் நடித்தார், 1984 ஆம் ஆண்டு அதே செட்டில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்களுக்கு பின் பிரிந்து 1990இல் இவர்களது விவாகரத்து முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 14, 1998இல், "சான் பிரான்சிஸ்கோ கிரானிகில்" என பின்னாளில் அழைக்கப்பட்ட { 0}சான் பிரான்சிஸ்கோ எக்சாமினரின் செயல்நிலை இயக்குனரான "பில் பிரான்ஸ்டீனை" திருமணம் முடித்தார். ஸ்டோனும் பிரான்ஸ்டீனும் ஜனவரி 2004இல் விவாகரத்தாயினர். மே 22, 2000இல் பிறந்த ரோன் ஜோசப் பிரான்ஸ்டீன் என்ற வளர்ப்பு மகனும் உண்டு. மே 7, 2005இல் இரண்டாவது மகனாக லேர்டு வோன் ஸ்டோனையும் தத்தெடுத்தார். ஜூன் 28, 20006இல் மூன்றாவது மகன் குயின் கெல்லியை தத்து எடுத்தார். 2005இல், "Basic Instinct 2: Risk Addiction|பேசிக் இன்ஸ்டிங்க்ட் 2" , படத்துக்காக அளித்த தொலைகாட்சி பேட்டியில் இருபால்கலப்பு கலவியில், தனக்கு ஆர்வம் உள்ளதாகத் தெரிவித்தார், "நடுத்தர வயது ஒரு திறந்த மனதின் காலம்" என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் பெண்களையே தான் "டேட்" செய்த்தாக தெரிவித்தார். "பேசிக் இன்ஸ்டிங்க்ட்" படத்தை படமாக்குகையில், சில காட்சிகளை எடுக்கையில் கேமராவின் தூரப் பார்வையில் தன் தோழிதான் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். "நேகட் இன்ஸ்டிங்க்ட்" என்னும் சுயசரிதை புத்தகத்தில் அதன் ஆசிரியர் பிராங்க் சேனல்லோ ஸ்டோனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் குளியலறையில் நடந்த பாலியல் உறவு பற்றி விவரிக்கிறார். இங்கிலாந்தில் மார்ச் 18, 2006 அன்று மைக்கேல் பார்கின்சன் உடனான டாக் ஷோவில் பேட்டியளிக்கையில் தான் ஒரு "நேரடியானவர்" எனக் குறிப்பிட்டார். இருந்த போதும், ஜனவரி 2008இல், ஒரு உரையில் "அனைவருக்கும் இருபாலுறவு என்பது ஒரு எல்லை வரை தான். இப்போது ஆண்கள் பெண்களைப் போல் நடந்து கொள்கிறார்கள், எனக்கு பழைய மாதிரி ஆண்களை மட்டுமே பிடிக்கும் என்பதால், ஒரு உறவு வைத்துக் கொள்வது கடினமானது. எனக்கு ஆண்மை, உண்மையாக இருக்கையில் பிடிக்கும், ஆனால் அது இப்போது பெண்களில் இருக்கிறது" எனக் கூறினார். அச்சுக்கலை அச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி, கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும் தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும். அச்செழுத்துக்களை வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும் வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர். பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன், அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை. இக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக் கலைஞர்கள் மற்றும் எழுத்தர் வகைப்பணியாளர்கள் கைக்கொள்ளுகின்றனர். எண்ணிமக் காலம் (Digital Age) வரை அச்சுக்கலை ஒரு சிறப்புத் தொழிலாகவே இருந்தது. எண்ணிமமாக்கம் புதிய தலைமுறைக் காட்சிய வடிவமைப்பாளர்கள் மற்றும் சாதாரண பயனர்களுக்கு அச்சுக் கலையைத் திறந்துவிட்டது. இங்கிலாந்தில் உள்ள கோல்செசுட்டர் நிறுவனத்தின் வரைய வடிவமைப்புத்துறைத் தலைவரான டேவிட் ஜூரி என்பார், "அச்சுக்கலை என்பது தற்காலத்தில் ஒவ்வொருவரும் கைக்கொள்ளுகின்ற ஒன்று" என்கிறார். பண்டைய காலங்களில் முத்திரை குத்துவதற்கும், நாணயங்களை வார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட அச்சுக்கள் அச்சுக்கலையின் தோற்றத்தைக் குறிக்கின்றன. கிமு இரண்டாவது ஆயிரவாண்டுகளையும், அதற்குப் பிந்திய காலங்களையும் சேர்ந்தனவும், ஒழுங்கற்ற இடைவெளிகளில் பதிக்கப்பட்டனவுமான எழுத்துக்களைக் கொண்ட செங்கற்கள் மெசொப்பொத்தேமியாவைச் சேர்ந்த உருக், லார்சா ஆகிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை, ஆப்பெழுத்தாலான உரைகளை உருவாக்குவதற்கு திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அச்சுருக்களைப் பயன்படுத்தியமைக்கான சான்றுகளாகக் கொள்ளப்படலாம். கி.மு. 1850 மற்றும் 1600 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த சுட்ட களிமண்ணினால் ஆனதும் பல குறியீடுகளைக் கொண்டதுமான வட்டத் தட்டு கிரீசின் கிரீட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. பாயிஸ்டோஸ் வட்டு (Phaistos Disc) என அறியப்படும் இந்த வட்டில் உள்ள குறியீடுகளும் அச்சுப்பதித்தல் மூலம் உருவாக்கப்பட்டவையே. ரோமானிய ஈயக் குழாய் கல்வெட்டுகள் நகரும் அச்செழுத்துக்களைக் கொண்டு அச்சுப் பதிக்கப்பட்டவை என்ற கருத்து இருந்தது. ஆனால் சரி அல்ல என்று அண்மையில், ஜெர்மன் அச்சுக் கலைஞர் ஹெர்பெர்ட் பிரேக்கினால் (Herbert Brekle) எடுத்துக்காட்டப்பட்டது. அடையாள விதத்தின் முக்கிய ஆதாரத்தை பாயிஸ்டோஸ் வட்டின் அதே உத்தியில் உருவாக்கப்பட்ட 1119 ஆம் ஆண்டின் லத்தின் புருஃபென்னிங் அபே கல்வெட்டு (Pruefening Abbey inscription) போன்ற இடைக்கால அச்சு கலைப்பொருட்கள் மூலமாக சந்திக்க முடிந்தது. வடக்கிலுள்ள இத்தாலிய நகரமான சிவிடேலில் (Cividale) சுமார் 1200 ஆம் ஆண்டு பழமையான வெனிசு வெள்ளியிலான பலிபீடத்திற்கு பின்புறம் இருக்கும் நிலையடுக்கு உள்ளது. இதில் தனிப்பட்ட எழுத்துக்கள் துளியிடப்படுவதன் மூலம் அச்சிடப்பட்டிருக்கும். அதே முறையான உத்தி 10வது முதல் 12வது நூற்றாண்டு பைஜன்டைன் (Byzantine) ஸ்டரோதெகா (staurotheca) மற்றும் லிப்சனோதிகாவில் (lipsanotheca) தெளிவாகக் கண்டறியப்பட்டது. இடைகாலத்து வடக்கிலுள்ள ஐரோப்பாவில் நியாயமாய் பரவியிருந்த விரும்பும் முறையில் ஒற்றை எழுத்துப் பதிகற்களை தொகுப்பதன் மூலம் தனிப்பட்ட எழுத்து பதி கற்கள் வடிவமைக்கப்பட்டன. 15வது நூற்றாண்டு மத்தியில் ஐரோப்பாவில் ஜெர்மன் கோல்ட்ஸ்மித் ஜொஹென்னஸ் குட்டென்பெர்க் (Johannes Gutenberg) மூலமாக இயந்திரமுறை அச்சுப்பொறியுடன் சேர்ந்து நவீன நகரும் விதமும் கண்டுபிடிக்கப்பட்டது. ஈயம்-சார்ந்த கலப்புலோகத்தில் இருந்து பெறப்பட்ட அவரது அச்சு பாகங்கள் அச்சிடும் செயல்பாடுகளுக்கு ஏதுவாக இருப்பதால் இன்றும் கலப்புலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு பிரதிகள் அச்சிட வேண்டியுள்ள உரைகளுக்கு பல்வேறு தரங்களைக் கொண்ட எழுத்து அமுக்கிகளுடன் வார்ப்பு மற்றும் மலிவான பிரதிகள் உடைய பிரத்யேக தொழில் நுட்பங்களை குட்டென்பெர்க் உருவாக்கினார்; இந்த தொழில்நுட்ப முன்னேற்றமானது அச்சு புரட்சியை உடனடியாய் வெற்றிகரமாய் தொடங்குவதற்கான கருவியாக மாறியது. 11வது நூற்றாண்டில் சீனாவில் நகரும் விதத்துடன் அச்சுக்கலை தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 1230 ஆம் ஆண்டு கோரியோ வம்சத்தின் போது கொரியாவில் உலோக பாணி முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இவையிரண்டுமே கை அச்சு அமைப்புகளாக இருந்ததால் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய ஈய பாணி மற்றும் அச்சுப்பொறியின் அறிமுகத்திற்குப் பிறகு மேற்கூரிய முறை கைவிடப்பட்டது. தற்காலப் பயன்பாட்டில் அச்சுக்கலையின் நடைமுறை மற்றும் ஆய்வு மிகவும் விரிவடைந்து எழுத்து வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டின் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்கிறது. இவற்றுள் சில: எண்முறைப் பரிமாற்றம் மற்றும் அச்சுக்கலை பயன்பாடுகளின் பரவலான எல்லைகளில் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக வலைப் பக்கங்கள், LCD செல்லிடத் தொலைப்பேசித் திரைகள், மற்றும் கையடக்க வீடியோ விளையாட்டுகளிலும் இடம்பெறுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் விதத்தின் காரணமாக "அச்சு எங்கும் உள்ளது" என்ற சொற்றொடரை அச்சுக் கலைஞர்கள் கூறுவதற்கு வழிவகுத்தது. பாரம்பரியமான அச்சுக்கலை பின்வரும் நான்கு கொள்கைகளைக் கொண்டுள்ளது: மீண்டும் நிகழ்தல், மாறுபாடு, அணிமை மற்றும் அச்சுத்தொடர் நிலை ஆகியவை ஆகும். பாரம்பரிய அச்சுக்கலையில் உரையானது எளிதில் படிக்கக்கூடிய, ஒரு சீரான மற்றும் வாசிப்பவரின் விழிப்புணர்வு இல்லாமல் அனைத்து வேலைகளையும் மறைமுகமாக செய்து திருப்திபடுத்துவதற்கு "இயற்றப்படுகிறது" . குறைவான கவனச்சிதறல்கள் மற்றும் நேரின்மைகளுடன் அச்சுத் தொகுப்பு பொருட்களின் பகிர்வில் கூட தெளிவு மற்றும் ஒளிவின்மை வழங்குவது இலக்காக உள்ளது. அச்சைத்(கள்) தேர்வு செய்வது எழுத்து வடிவ அமைப்பியலில் முக்கிய நோக்கமாக உள்ளது—உரைநடை புனைவு, புனைவு-இல்லாமை, தலையங்கம், கல்வி, சமயம், அறிவியல், ஆன்மீகம் மற்றும் வணிகரீதியான எழுத்துகள் இவையனைத்திற்கும் ஏற்றவாறு அச்சுமுகங்கள் மற்றும் அச்சுருகளின் தேவைகளும் பண்பியல்புகளும் மாறுபடுகின்றன. வரலாற்று காலங்களுக்கு இடையில் எண்ணத்தகுந்த மீட்சி இருப்பதுடன் புறச்சேர்வின் நீண்ட செயல்பாடு மூலமாக பெறப்படும் வரலாற்று "வகை" த் திட்டத்தை பொறுத்து வரலாற்று பொருட்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட உரை அச்சுமுகங்கள் அடிக்கடி தேர்வு செய்யப்பட்டன. நிக்கோல்ஸ் ஜென்சன், ஃபிரான்செஸ்கோ கிராஃபியோ (அல்தின் அச்சுமுகங்களுக்கான உருமாதிரியை உருவாக்கிய துளை வெட்டுபவர்) மற்றும் க்ளாடு கிராமன்ட் போன்ற பாரம்பரிய மாடல்களை நெருக்கமாக சார்ந்து இன்றைய வடிவமைப்புக் கலைகளை எதிரொளிக்கும் வடிவமைப்பு பெறுமதிகளுடன் செரிஃப் செய்யப்பட்ட "உரை ரோமன்கள்" அல்லது "புத்தக ரோமனின்" கலையின் நிலையுடன் தற்போதைய புத்தகங்கள் தொகுக்கப்படுகின்றன. இவற்றுடன் பெரும்பாலான பிரத்யேக தேவைகள், செய்தித்தாழ்கள் மற்றும் பத்திரிகைகள் கச்சிதமாக சார்ந்திருக்கின்றன. நெருக்கமாக-சந்திக்கும் செரிஃப் செய்யப்பட்ட உரை அச்சுருக்கள் இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பக்க இடைவெளியின் அதிகப்படியான இணக்கம், எளிதில் படிக்கக்கூடிய தன்மை மற்றும் திறன் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றது. சான்ஸ் செரிஃப் உரை அச்சுருக்கள் பெரும்பாலும் ஆரம்பப் பத்திகள், முக்கியமில்லாத உரை மற்றும் சிறு கட்டுரைகள் மொத்தத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கட்டுரையின் உரைக்கு பொருந்தும் பாணியுடைய உயர் திறனுடைய செரிஃப் செய்யப்பட்ட அச்சுருவுடன் தலைப்புகளுக்கான இணை சான்ஸ்-செரிஃப் விதமே இதன் தற்போதைய பாங்காக உள்ளது. அச்சுக்கலை என்பது ஒலிப்பமைப்பு மற்றும் மொழியியல், எழுத்து அமைப்புகள், எழுத்து அதிர்வெண்கள், சொல்லொலிக் கூறியல், ஒலிப்புமுறை சார்ந்த கட்டுதல்கள் மற்றும் மொழியியல் சார்ந்த தொடரியல் மூலமாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அச்சுக்கலை என்பது பிரத்யேக பண்பாட்டு மரபுகளுக்கு ஆதாரமாக உள்ளது. எடுத்துக்காட்டாக பிரென்சில் ஒரு வாக்கியத்தில் முக்கால் புள்ளி (:) அல்லது அரைப்புள்ளி (;) இடுவதற்கு முன்பு இடைவெளி உண்டாக்காத எழுத்தை (non-breaking space) இடுவது மரபாகும். ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. அச்சுக்கலையில் "நிறம்" என்பது பக்கத்தில் உள்ள மையின் மொத்த அடர்த்தியாகும். இது முக்கியமாக வழிகாட்டலின் அச்சுமுகம் அல்லது அளவு மூலமாக வரையறுக்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் எழுத்து இடைவெளி மற்றும் ஓரங்களின் ஆழத்தையும் அறியமுடியும். பக்கத்தின் எழுத்து அமைவு, தொனி அல்லது அதிலுள்ள விசயத்தின் நிறம் மற்றும் வெள்ளை இடைவெளியுடன் எழுத்தின் இடைவெளி மற்றும் பிற வரைப்பட விளக்க மூலங்களானது கூறப்படும் செய்திக்கு "உணர்வு" அல்லது "ஒத்திசைவு" தெரிவிப்பதற்கு ஒருங்கிணைக்கப்படுகிறது. பிணைக்கப்பட்ட ஓரங்கள், காகிதத் தேர்வு மற்றும் அச்சிடும் முறைகளுடன் அச்சிடப்பட்ட ஊடக அச்சுக் கலைஞர்கள் அக்கறை கொண்டுள்ளனர். ஒவ்வொரு தனிப்பட்ட வரியுரு அல்லது எழுத்துமுறையானது எழுத்துருவின் பிற அனைத்து வரியுருக்களில் இருந்தும் தெளிவானதாகவும் பிரித்தரியக்கூடியதாகவும் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு அச்சுமுக வடிவமைப்பாளரின் முதன்மை கவனமாக தெளிவு உள்ளது. தெளிவு என்பது தேவைப்படும் அளவில் தேவைப்படும் பயனுக்காக தேவையான தெளிவுடன் அச்சுமுகத்தை தேர்வு செய்வதற்கு அச்சுக் கலைஞரின் கவனத்தில் ஒரு பகுதியாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக நன்கு அறியப்படும் வடிவமைப்பான புருஷ் ஸ்கிரிப்ட் பல தெளிவற்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பல எழுத்துக்கள் தவறுதலாகப் புரிந்துகொள்ளும்படியும் பாடநூலுக்குரிய புத்தகத்தில் பயன்படுத்த முடியாதபடியும் உள்ளது. எளிதில் படிக்குந்தன்மை என்பது அச்சுக் கலைஞர் அல்லது தகவல் வடிவமைப்பாளரின் முக்கிய கவனமாக உள்ளது. தெளிவான அர்த்தத்தைத் தருவதற்கு பாடநூலுக்குரிய பொருள் காட்சியளிப்பின் முழுமையான செயல்பாடாக இது குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டுள்ளது. பக்கத்திற்கு தேவையான வரி நீளம் மற்றும் நிலை ஆகியவற்றுடன் சேர்ந்து மிகவும் அனுகூலமான உள்-எழுத்து, உள்-வார்த்தை மற்றும் குறிப்பாக உள்-வரி இடைவெளி, கவனமான தலையங்கப் “பகுதி” மற்றும் தலைப்புகள், இணைப்பக்கங்கள் மற்றும் குறிப்புதவி இணைப்புகளின் உரைக் கட்டமைப்பின் தேர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு வாசகர் தகவலை எளிதாகப் படிக்கமுடியும். வால்டர் டிரேசி அவரது "லெட்டர் ஆஃப் கிரிடிட்" மூலமாக இரண்டு கருத்துக்களுக்கு இடையில் உள்ள தெளிவான வேறுபாடுகளை வழங்கியுள்ளார். இந்த … ‘விதத்தின் இரண்டு நோக்கங்களும்’ … ‘அதன் பயன் திறனுக்கு அடிப்படையாக உள்ளது. “தெளிவு” என்பது “படிக்குந்தன்மை” வாய்ந்தது என்ற பொதுவான அர்த்தம் இருப்பதால் இவை – சில தொழில்சார்ந்த அச்சுக்கலையிலும் பயன்படுத்தப்படுகின்றன – “தெளிவு” என்பது அனைதிற்கும் தேவைப்படுகிறது என விதங்களின் பயன் திறன் பற்றிய விவாதமும் செய்யப்படுகிறது. ஆனால் தெளிவு மற்றும் படிங்குந்தன்மை இரண்டும் வேவ்வேறு என்றாலும் வகையின் நோக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தெளிவின் மூலம் தனியாக அல்லாமல் இவை இரண்டும் சேர்ந்து எழுத்து மற்றும் வகையின் செயல்பாட்டை மிகவும் துல்லியமாக விளக்க உதவுகிறது என்பது நன்கு விளங்குகிறது. … அச்சுக்கலையில் தெளிவுத்தன்மையுடனும் கண்டுணரக்கூடிய தரமுடைய தெளிவின் வரையறையை நாம் எழுது வேண்டியிருக்கிறது – எடுத்துக்காட்டாக சிறிய வகை h ஐக் குறிப்பாக பழைய பாணியுடைய இட்டாலிக்கில் சிறிய அளவுகளில் படிப்பது கடினமாகும் அந்த எழுத்து பார்ப்பதற்கு b போன்று இருக்கும்; அல்லது வகைப்படுத்தப்பட்ட விளம்பரத்தில் உள்ள உரு 3 என்பது 8 ஐப் போலவே இருக்கும் என நாம் கூறலாம். … காட்சி அளவுகளில் தெளிவு முடிவுறுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றன; அதாவது 8 முனை அளவில் நிலையற்று இருக்கும் எழுத்து 24 முனையில் போதுமான தெளிவைக் கொண்டுள்ளது.’ மேற்கூறியவை மக்களுக்கு ஏற்ற வாசிக்கும் தூரம் மற்றும் உகம ஒளியை 20/20 பார்வையுடன் கொண்டுள்ளது. பார்வைக்கூர்மை மற்றும் சார்பற்ற சோதனையில் பார்வைத் தர அட்டவனையின் இணையானது தெளிவின் கருத்து இலக்கை குறிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது. ‘அச்சுக்கலையில் … பத்திரிகை அல்லது செய்தித்தாளின் பத்திகள் அல்லது புத்தகத்தின் பக்கங்களை எந்த கடினமும் திணறலும் இல்லாமல் நீண்ட நேரம் படிக்க முடிந்தால் நாம் அதை வாசிப்பதற்கு நல்ல தரத்துடன் உள்ளது எனக் கூறலாம். பார்வைக் கச்சிதத்தின் தரத்தை இச்சொல் விவரிக்கிறது – உரையின் நீண்ட அளவையுடைய பகுதியின் புரிதல் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் வாசகர்கள் அடிக்கடி பயன்படுத்தாத ஆனால் ஒரு விசயத்திற்கான தகவலைத் தேடும் தொலைப்பேசி உதவிக் கையேடுகள் அல்லது விமான கால-அட்டவனைகள் போன்றவை புரிதலுக்கு முக்கியமற்று உள்ளன. பார்வைத் திறனின் இரண்டு நோக்கங்களின் மாறுபாடு என்பது உரை அமைப்பிற்கான சான்ஸ்-செரிஃப் வகைகளின் பொருத்தத்திற்கு பொதுவான விவாதமாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சான்ஸ்-செரிஃப் முகத்தைக் கொண்ட எழுத்துக்களை அவர்களால் துல்லியமாக படிக்க முடியும். ஆனால் வாசிக்குந்தன்மை குறைவாக இருப்பதன் காரணமாக எவரும் ஒரு பிரபலமான நாவலை அமைப்பதற்கு எண்ண மாட்டார்கள்.’’ தெளிவு என்பது ‘புலப்பாட்டைக் குறிக்கிறது’ மற்றும் வாசிக்குந்தன்மை என்பது ‘புரிந்துகொள்ளும் திறனைக் குறிக்கிறது’. அச்சுக் கலைஞர்கள் இவை இரண்டையும் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளனர். "தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுமுகம் கண்டிப்பாகத் தெளிவுடன் இருக்க வேண்டும். அதாவது எந்த முயற்சியும் இல்லாமல் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும். சிலசமயங்களில் தெளிவு என்பது அச்சு அளவில் சாதாரணமாக விசயமாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இந்த விசயம் அச்சுமுக வடிவமைப்பை சார்ந்தே உள்ளது. பொதுவான அச்சுமுகங்களானது வெகுவாக சுருக்கப்பெற்ற, விரிக்கப்பெற்ற, அலங்கரிக்கப்பெற்ற அல்லது பிரித்தெடுக்கபட்ட அச்சுமுகங்களைக் காட்டிலும் மிகவும் தெளிவுடன் இருக்கும் அடிப்படை எழுத்து வடிவங்களுக்கு உண்மையாக இருக்கும். "எனினும் தெளிவான அச்சுமுகம் கூட மோசமான அமைப்பு மற்றும் இடம் காரணமாக வாசிக்க முடியாத நிலையை அடைந்துவிடும். அதேபோன்று குறைவான தெளிவுடைய அச்சுமுகம் கூட நல்ல வடிவமைப்பின் வழியாக மிகவும் நன்றாக வாசிக்குந்தன்மையைப் பெறுகிறது." தெளிவு மற்றும் வாசிக்குந்தன்மையின் ஆய்வுகளானது அச்சு அளவு மற்றும் அச்சு வடிவமைப்பு உள்ளிட்ட பரவலான காரண எல்லைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக செரிஃப் மற்றும் சான்ஸ்-செரிஃப் வகையை ஒப்பிடுகையில் "இட்டாலிக் வகை" மற்றும் ரோமன் வகை, வரி நீளம், வரி இடைவெளி, நிற வேறுபாடு, வலது-கை முனையின் வடிவமைப்பு (எடுத்துக்காட்டாக எண்பிப்பு, நேர் வலது கை முனை) மற்றும் எல்லைக்குட்படுத்தப்பட்ட இடது மற்றும் இரண்டு சொல்லை இணைக்கும் இணைப்புக் குறியிடப்பட்டது போன்ற வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கலாம். 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தெளிவு ஆராய்ச்சி வெளியிடப்படுகிறது. எனினும் பல தலைப்புகளில் பெரும்பாலான ஒற்றுமைகளும் இசைவுகளும் இருந்தாலும் சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடுடைய கசப்பான பகுதிகளைப் பெரும்பாலும் உருவாக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, செரிஃப் அல்லது சான்ஸ் செரிஃப் இவை இரண்டில் எது மிகவும் தெளிவான தன்மையை வழங்குகிறது என்ற தீர்வை எவராலும் கொடுக்க முடியவில்லை என அலெக்ஸ் பூல் கூறியுள்ளார். ஜஸ்டிபைடு "விசஸ்" அன்ஜஸ்டிபைடு வகை போன்ற பிற தலைப்புகளில் இணைப்புக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் டைஸ்லக்சியா (Dyslexia) போன்ற வாசிக்கும் கடினத்தன்மையுடைய மக்களுக்கான பொருத்தமான எழுத்துருக்கள் தொடருந்து விவாதத்தின் பொருளாகவே இருந்து வருகின்றன. hgredbes.com, பேன் காமிக் சான்ஸ், UK நேசனல் லிட்டர்சி ட்ரஸ் மற்றும் மார்க் சிம்பன்சன் ஸ்டுடியோ போன்ற வலைத்தளங்கள் மேற்கூரிய விசயங்களைப் பற்றிய அவர்களது விவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இதைப் பற்றிய விளக்கமான நன்கு-ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையையும் வழங்கியுள்ளனர். தெளிவு என்பது வழக்கமாக வாசிக்கும் வேகம் மூலமாக அளவிடப்படுகிறது. இதனுடன் புரிதல் மதிப்புகளைப் பயன்படுத்தி அதன் பயன் திறன் சரிபார்க்கப்படுகிறது (அதாவது விரைவான அல்லது கவனமற்ற வாசிப்பு இல்லாமல் சரிபார்க்கப்படுகிறது). எடுத்துக்காட்டாக 1930கள் முதல் 1960கள் வரை ஏராளமான ஸ்டுடியோக்களை வெளியிட்ட மைல்ஸ் டின்கர் வேகமாக வாசிக்கும் சோதனையைப் பயன்படுத்தினார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பயன் திறன் வடிகட்டியாக இருந்து முன்னுக்குப் பின் முரணான வார்த்தைகளை கோர்வையாகப் படிக்க வேண்டியிருந்தது. பிரைன் கோ மற்றும் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோருடன் பேராசியர் ஹெர்பர்ட் ஸ்பென்சரின் கீழ் ராயல் கலைக் கல்லூரியின் அச்சு அலகின் வாசிக்குந்தன்மைப் பகுதியில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். வாசிக்குந்தன்மைக்கான கண் இயக்கத்தில் விழிகளின் தாளத்தில் இதை உருவாக்குவது முக்கியம் என வெளிப்படுத்திய கருத்துக்களில் இதுவும் ஒன்றாகும் - குறிப்பாக ஒரே சமயத்தில் சுமார் மூன்று வார்த்தைகளை (உதாரணமாக, கொணரப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது) வாசிக்கும் திறமை மற்றும் கண்ணின் லட்சணம் குறைந்தால் அதற்கு கண் சோர்ந்து விட்டது எனப் பொருளாகும். அதேப் போன்று ஒரு வரியை மூன்று அல்லது நான்கு முறைக்கும் அதிகமான முயற்சியைக் கண் எடுத்துக் கொண்டாலும் இதுவே பொருளாகும். அதற்கும் மேலாக வாசிக்கும் போது திணறலோ தவறுகளோ ஏற்படுவதை உணர முடியும் (எ.கா. இரட்டிப்பு). இந்த நாட்களில் தெளிவு ஆராய்ச்சியானது குறைவான விமர்சனப் பிரச்சினைகளை சந்தித்தது அல்லது பிரத்யேக வடிவமைப்புத் தீர்வுகள் சோதனை செய்யப்பட்டது (எடுத்துக்காட்டாக, புதிய அச்சுமுகங்கள் உருவாக்கப்படும் போது). பார்வை வலுக்குறையுடன் மக்களுக்கான அச்சுமுகங்கள் (எழுத்துருக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன) மற்றும் நெடுஞ்சாலைக் குறிக்கான அச்சுமுகங்கள் அல்லது தெளிவு அடிப்படை வேறுபாடுகளை உண்டாக்கும் பிற சூழ்நிலைகள் உள்ளிட்டவை இக்கட்டான பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பெரும்பாலான தெளிவு ஆராய்ச்சி இலக்கியம் என்பது ஓரளவு கோட்பாடளவில் உள்ளது — பல்வேறு காரணிகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முறையிலோ சோதனை செய்யப்பட்டு விட்டது (அதனால் தவிர்க்க இயலாதவாறு மாறுபட்ட காரணிகள் உள்நிலையில் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன). ஆனால் பல சோதனைகளில் வாசித்தலின் உருமாதிரி அல்லது பார்வை உணர்தலின் இல்லாமையுடன் நிறைவேற்றப்படுகிறது. எழுத்தின் மொத்த வடிவமும் (பவுமா) வாசிக்குந்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாகும் என சில அச்சுக்கலைஞர்கள் நம்புகின்றனர். மேலும் இணை எழுத்துமுறை அங்கீகாரக் கோட்பாடு என்பது தவறாகவோ குறைவான முக்கியத்துவத்துடனோ அல்லது முழுமையான படத்தில் இல்லாததாகவோ இருக்கலாம். மக்கள் வாசிக்கும் போது எவ்வாறு எழுத்துக்களை புரிந்துகொள்கின்றனர் என்பதைப் பொருத்து பவுமா அடையாளம் காணல் மற்றும் எழுத்துவாரியான அடையாளம் காணல் ஆகியவற்றிற்கு இடையில் ஆய்வுகள் புகழ்பெற்று அவை இணை எழுத்துவாரியான அடையாளம் காணலுக்கு சாதகமாக இருந்தன. இது புலனறிவு உளவியலாளர்கள் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவு ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் பின்வருமாறு: எழுத்து-இடைவெளி, வார்த்தை இடைவெளி அல்லது முதன்மை ஆகியவை மிகவும் நெருக்கமாகவோ அல்லது மிகவும் இடைவெளி விட்டோ இருப்பதன் மூலம் வாசிக்குந்தன்மையில் இணக்கம் ஏற்படுகிறது. செங்குத்து இடைவெளிகள் தாரளமாக உரையின் வரிகளைப் பிரிக்கும் போது இது மேம்பட்டு கண்கள் ஒரு வரியில் இருந்து அடுத்த வரியை அல்லது முந்தைய வரியை எளிதாக பிரித்துப் பார்ப்பதற்கு வசதியாக அமைகிறது. மிகவும் நெருக்கமாகவோ அல்லது மிகவும் இடைவெளி விட்டோ மோசமாக வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்கள் மோசமான தெளிவின்மையை விளைவாகத் தருகின்றன. அச்சுக்கலை என்பது அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களின் மூலம் ஆகும். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற காலம்சார்ந்த வெளியீடுகளில் ஈர்ப்பும் தனிச்சிறப்பும் உடையத் தோற்றத்தைப் பெறுவதற்கு அச்சுக்கலை சார்ந்த மூலங்கள் பயன்படுகிறது. இது வாசகர்களுக்கு இந்த வெளியீடு உயிர்த்துடிப்புள்ள விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. நடைக் கையேடை வகைப்படுத்துவதன் மூலம் அச்சுமுகங்களின் சிறிய சேகரிப்பைக் கொண்டு காலம் சார்ந்த வெளியீடுகள் தரப்படுத்தப்படுகின்றன. வெளியீட்டின் பிரத்யேக மூலங்களில் ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படுவதோடு சிறிய பெரிய எழுத்துக்கள், அளவுகள், இட்டாலிக், போல்ட்பேஸ் மற்றும் பிற அச்சுக்கலை சார்ந்த பண்புகளும் நிலையாக உருவாக்கப்படுகின்றன. "த கார்டியன்" மற்றும் "த எக்னாமிஸ்ட்" போன்ற சில வெளியீடுகள் அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கதை (ஏற்றவாறு உருவாக்குதல்) ஏற்படுத்துவதற்கு அச்சு வடிவமைப்பாளருக்கு பணியளிக்கப்படுகிறது. மாறுபட்ட கால இடைவெளிகளில் வெளியாகும் வெளியீடுகள் அவர்களது குறிப்பிட்ட தொனி அல்லது பாணியைப் பெறுவதற்கு அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக "USA டுடே" அவர்களது அச்சுமுகங்கள் மற்றும் நிறங்களின் பயன்பாட்டில் போல்டான, வர்ணமயமான ஓப்பிடுவதற்கு நவீன பாணியுடைய அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களது செய்தித்தாளின் பெயர் இடம்பெற்றுள்ள இடம் வர்ணமயமான பின்னணியில் இருக்கும். அதற்கு மாறாக, "த நியூயார்க் டைம்ஸ்" மிகவும் பாரம்பரியமான அணுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மிகவும் குறைவான நிறங்கள், குறைவான அச்சுமுக மாறுவிகிதங்கள் மற்றும் அதிகமான பத்திகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் முன்பக்க அட்டையின் தலைப்புகள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் விதமாய் மிகவும் பெரிய அச்சுமுகங்களைக் கொண்டிருக்கும். அவைப் பத்திரிகை பெயர்த் தலைப்பின் அருகில் இடம்பெற்றிருக்கும். தோற்ற அச்சுக்கலை என்பது கலை வடிவமைப்பில் ஒரு வலிமையான மூலமாகும். இதில் வாசிக்குந்தன்மைக்கு குறைவான கவனமும், கலைசார்ந்த வடிவ அச்சுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. அச்சு என்பது எதிர்மறை இடைவெளி, அச்சு மூலங்கள் மற்றும் படங்கள், வார்த்தைகள் மற்றும் உருவங்களுக்கு இடையில் தொடர்புகள் மற்றும் வசனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாகும். அச்சு மூலங்களின் நிறம் மற்றும் அளவு ஆகியவை எழுத்து அச்சுக்கலையைக் காட்டிலும் மிகவும் நடைமுறையில் இருப்பதாகும். பெரும்பாலான தோற்ற அச்சுக்கலையானது பெரிய அளவுகளில் சுரண்டுதல்கள் வகையாக உள்ளது. இதில் எழுத்தின் வடிவமைப்பு விவரங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. நிறம் என்பது ஒரு விசயத்தின் தொனியை இயற்கையாக பரிமாறுவதற்கு ஒரு உணர்ச்சிவயமான விளைவாக செயல்படுகிறது. தோற்ற அச்சுக்கலை சூழப்பெற்ற நிலைகள்: ஆப்ரஹாம் லிங்கனைக் கொலை செய்தவனைத் தேடுவதை உணர்த்தும் சுவரொட்டியானது புகைப்படக்கலையுடன் ஒருங்கிணைத்து ஈயம் மற்றும் ஓவியம் செதுக்குதல் விதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அச்சுக்கலையானது விளம்பரம் சார்ந்த பொருட்கள் மற்றும் விளம்பரங்களில் இன்றியமையாத பகுதியாக நீண்ட காலங்களாக உள்ளது. விளம்பரத்தின் கருப்பொருள் மற்றும் பாங்கை அமைப்பதற்கு வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் அச்சுக்கலையைப் பயன்படுத்துகின்றனர்; எடுத்துக்காட்டாக வாசகருக்கு ஒரு குறிப்பிட்ட தகவலைத் தெரிவிப்பதற்கு போல்டான, பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். அச்சானது ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தைக் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறம், வடிவங்கள் மற்றும் உருவங்கள் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது. இன்று பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் வணிகப்பெயரை எதிரொளிக்கும் விளம்பரங்களில் அச்சுக்கலைப் பயன்படுத்தப்படுகிறது. வாசகர்களுக்கு மாறுபட்ட தகவல்களை கூறுவதற்கு விளம்பரங்களில் எழுத்துருக்கள் பயன்படுகின்றன. முதல்தரமான எழுத்துருக்கள் ஒரு வலிமையான மனோபாவத்தைத் தெரிவிப்பதற்கு பயன்படுகிறது. ஆனால் பெரும்பாலான நவீன எழுத்துருக்கள் தெளிவான நடுநிலையான பார்வையைக் கொண்டுள்ளன. அறிக்கைகள் மற்றும் ஈர்க்கும் கவனத்தை உருவாக்குவதற்கு போல்ட் எழுத்துருக்கள் பயன்படுகின்றன. கல்வெட்டு எழுத்துக்களின் வரலாறு எழுத்தின் வரலாறு, எழுத்து வடிவங்களின் பரிணாமம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றுடன் உள்ளார்ந்து பிணைக்கப்பட்டதாக இருக்கிறது. தற்போது கணினி மற்றும் பல்வேறு செதுக்கல் மற்றும் மண்ணூதையிடல் நுட்பங்களின் பரவலானப் பயன்பாடு கையால் செதுக்கிய நினைவுச்சின்னத்தை அரிதாக்கி விட்டது. மேலும் அமெரிக்காவில் மீதமிருக்கும் சில எழுத்து செதுக்குபவர்கள் வீணாக்கப்படுகின்றனர். நினைவுச்சின்ன எழுத்துக்கள் திறம்பட இருப்பதற்கு அது அதன் உட்பொருளில் கவனமாகக் கையாளப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்துக்களின் விகிதாச்சாரங்களில் பார்ப்பவர்கள் அதிகரிப்பதைச் சார்ந்து அளவு மற்றும் தொலைவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு அனுபவம் மிக்க எழுதுபவர் இந்த நுணுக்கங்களை அதிகமான பயிற்சி மற்றும் அவரது கைவினையின் கவனிப்பு ஆகியவற்றின் மூலமாக புரிந்து கொள்வார். கையால் வரையப்பட்ட எழுத்துக்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டப்பணிக்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் வரைபவரின் கைவண்ணத்தில் வளமையாகக் குறிப்பிடத்தக்கதாகவும் அளவிடற்கரிய அழகுடையதாகவும் இருக்க சாத்தியமுண்டு. ஒவ்வொன்றையும் செதுக்குவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகலாம். அதனால் தானியங்கு மண்ணூதையிடல் செயல்பாடு தொழில்துறைத் தரநிலையாக மாறிவருவதில் வியப்பேதுமில்லை. மண்ணூதையிடல் எழுத்தை உருவாக்குவதற்கு இரப்பர் பாயானது கணினிக் கோப்பில் இருந்து லேசர் மூலமாக வெட்டப்பட்டு கல்லில் ஒட்டப்படுகிறது. மணலானது பின்னர் திறந்த மேற்பரப்பினுள் சொரசொரப்பான வரிப்பள்ளம் அல்லது தடத்தில் இடப்படுகிறது. எதிர்பாராதவிதமாக இந்த லேசர் வெட்டியுடன் கூடிய இந்த கோப்புகள் மற்றும் இடைமுகத்தை உருவாக்கும் பெரும்பாலான கணினிப் பயன்பாடுகள் பெரும்பாலான அச்சுமுகங்களைக் கொண்டிராமல் இருக்கின்றன. மேலும் பொதுவாக அச்சுமுகங்களின் மட்டமான பதிப்புகளைக் கொண்டிருக்கின்றன. நிமிடங்களில் தற்போது இதனைச் செய்ய முடிந்த போதும் மனங்கவர்கிற கட்டமைப்பு மற்றும் உளி-வெட்டு எழுத்தின் வடிவவியல் குறைபாடுகள் அதன் தனிப்பட்ட உட்பகுதித் தளங்களின் இடையே மிதமான பங்களிப்பை அளிக்கின்றன. தரவு பகுப்பாய்வு தரவுப் பகுப்பாய்வு என்பது பயனுள்ள தகவலை உயர்த்தி உரைத்தல், அறிவுறுத்தப்படும் முடிவுகள் மற்றும் ஆதரவுடைய முடிவை எடுத்தல் போன்ற இலக்குகளைப் பெற தரவை ஆய்வு செய்யும், தூய்மைப்படுத்தும், உருமாற்றும், மாதிரியமைக்கும் செயல்பாடாகும். தரவுப் பகுப்பாய்விற்கு பல்வேறு பெயர்கள், மாறுபட்ட தொழில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் செயல்துறைகளின் கீழ் சூழ்ந்துள்ள பல்வகைப்பட்ட தொழிற்நுட்பங்களுடைய பல பண்புக்கூறுகளும் அணுகுமுறைகளும் உண்டு. தரவுச் செயலாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தரவுப் பகுப்பாய்வு தொழிற்நுட்பமாகும். இது முற்றிலும் விளக்கமுறையான நோக்கங்களைக் காட்டிலும் வருவதுரைப்பதற்கான மாதிரியமைத்தல் மற்றும் அறிவைக் கண்டறிதலில் பயன்படுத்தப்படுகிறது. தொழில் நுண்ணறிவிலும் தரவுப் பகுப்பாய்வு பயன்படுகிறது. இதனால் தொழில் தகவல்களைப் பெறுவதை மிகவும் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. புள்ளியியல் பயன்பாடுகளில் சிலர் தரவுப் பகுப்பாய்வை விளக்க முறை புள்ளியியல், ஆராய்வதற்கான தரவுப் பகுப்பாய்வு மற்றும் உறுதிபடுத்துகிற தரவுப் பகுப்பாய்வு எனப் பிரிக்கின்றனர். EDA ஆனது தரவிலும் ஏற்கனவே இருக்கும் கருதுகோள்களை உறுதிபடுத்தும் அல்லது தவறைக் கண்டுபிடிக்கும் CDAவிலும் உள்ள புதிய பண்புகளைக் கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. வருவதுரைக்கும் பகுப்பாய்வு - வருவதுரைக்கும் உய்த்தறிதல் அல்லது வகைப்படுத்துதலுக்கான புள்ளியியல் பயன்பாடு அல்லது அமைப்புக்குரிய உருமாதிரிகளை இலக்காகக் கொண்டுள்ளது. உரைப் பகுப்புகளானது கட்டமைப்பற்ற தரவின் பகுதிகளாக இருக்கும் உரை மூலங்களில் இருந்து பெறப்படும் வகைப்படுத்தப்படும் தகவலுக்கு புள்ளியியல், மொழியியல் மற்றும் கட்டமைப்பு தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இவையனைத்தும் பகுப்பாய்வின் வகைகள் ஆகும். தரவு ஒருமைப்பாடு என்பது தரவுப் பகுப்பாய்விற்கு முன்னோடியாக செயல்படுகிறது. மேலும் தரவுப் பகுப்பாய்வானது தரவுப் பார்வைஏற்பி (data visualization) மற்றும் தரவுப் பரவல் (data dissemination) ஆகியவற்றிற்கு மிகவும் நெருக்கமான வகையில் செயல்படுகிறது. "தரவுப் பகுப்பாய்வு" என்ற சொல் சில சமயங்களில் அதன் பொருளையே குறிக்கும் தரவு மாதிரியாக்கம் எனவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்பகுதி இக்கட்டுரைக்கு தேவையற்றதாகும். அணுக்கருவியல் அற்றும் துகள் இயற்பியலில் வழக்கமாக தரவுக் கையகப்படுத்துதல் அமைப்பு வழியான சோதனை வழிக் கருவியில் இருந்து தரவு உருவாகிறது. பின்னர் அது செயல்படுத்தப்படும் நிலை வழக்கமாக "தரவு குறுக்கம்" எனப்படுகிறது. அளவீடுகளில் பயன்படுத்துவதற்கும் பெளதீக முறையில் முக்கியத் தகவலைப் பெறுவதற்கும் தரவுக் குறுக்கம் பயன்படுகிறது. குறிப்பாக மிகப்பெரிய துகள் இயற்பியல் சோதனைகளிலும் இதற்காக எழுதப்பட்ட மென்பொருள் மூலமாக தானியக்க, தொகுதி-முறை செயல்பாட்டை நிறைவேற்றுவதற்காகவும் தரவுக் குறுக்கம் அடிக்கடி நடைபெறுகிறது. அதன் காரணமாக விளையும் தரவான "என்-டியூபில்ஸ்" பின்னர் ROOT அல்லது PAW போன்ற பிரத்யேகமான மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி இயற்பியல் வல்லுநர் மூலமாக நுண்ணாய்வு செய்யப்பட்டு கோட்பாடுடன் இந்த சோதனையின் முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கோட்பாடளவிளான உருமாதிரிகளை சோதனைகளின் முடிவுகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்ப்பது கடினமாகும். அதனால் Geant4 போன்ற மோன்டே கர்லோ உருவகப்படுத்துதல் மென்பொருளில் உள்ளீடாக இவைப் பயன்படுத்தப்படுகின்றன. கொடுக்கப்பட்ட கோட்பாடளவிலான விளைவின் உருவகப்படுத்தப்பட்ட விளைவை உணரியின் பிரதிசெயல் ஊகிக்கிறது பின்னர் அது சோதனைத் தரவுடன் ஒப்பிடப்படுகிறது. பண்பார்ந்த ஆராய்ச்சியில் உரை, நேர்காணல் எழுத்துப்படிகள், புகைப்படங்கள், ஓவியம், உய்த்துணர்வுகளின் (மக்கள் இன அமைப்பியல்) களக் குறிப்புகள் மற்றும் பலவற்றிற்கு பண்பார்ந்த தரவுப் பகுப்பாய்வு (QDA) பயன்படுத்தப்படுகிறது. தரவுப் பகுப்பாய்வு என்பது ஒரு செயல்முறை ஆகும். இது பல்வேறு பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டப்படுகிறது: தரவுத் தூய்மையாக்கல் என்பது தரவை ஆய்வு செய்யிம் போது ஒரு முக்கியமான செய்முறையாகும். மேலும் இதில் தவறான தரவானது -தேவைப்பட்டால், விரும்பத்தக்கதாக இருந்தால், சாத்தியமுடையதாக இருந்தால் திருத்தப் படுகிறது. தரவைப் பதிவு செய்யும் நிலையிலேயே தரவு தூய்மையாக்கல் நிறைவேற்றப்படுகிறது. இது நிறைவேற்றப்பட்டால் எந்த துறைசார்ந்த முடிவுகள் உருவாக்கப்பட்டதைக் காட்டிலும் இது முக்கியமானதாகிறது. Adèr (ref) மூலமாக வழிநடத்தும் கோட்பாடு வழங்கப்படுகிறது: தரவின் பின் தொடர்ந்து வரும் திருத்தங்களின் போது தகவல் கண்டிப்பாக எப்போதும் ஒன்றாக மீட்கக்கூடியதாகவே உள்ளது. மற்றொரு வகையில் கூறினால் இது கண்டிப்பாக எப்போதும் எந்த தரவுத் தொகுப்புத் திருத்தங்களையும் அகற்றும் சாத்தியமுள்ளதாக உள்ளது. ஆகையால் தரவுத் தூய்மையாக்கல் படியின் எந்த நிலையிலும் தகவலை இழப்பதைத் தடுக்க இது முக்கியமான ஒன்றாகும். அனைத்து தகவலும் கண்டிப்பாக சேமிக்கப்படவேண்டும் (உதாரணமாக மாறியைத் திருத்தும் போது கண்டிப்பாக துவக்க மதிப்புகளும் புதிய மதிப்புகளும் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். போலியான தரவுத் தொகுப்பிலோ அல்லது வேறு மாறியின் பெயரிலோ சேமிக்கப்பட்டிருக்கும்). மேலும் தரவுத் தொகுப்பில் செய்யப்படும் அனைத்து திருத்தங்களும் கவனமான முறையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக சின்டாக்ஸ் அல்லது விவரக் குறிப்பாக (log) ஆவணப்படுத்தப்படும். துவக்கத் தரவுப் பகுப்பாய்வு மற்றும் முக்கிய பகுப்பாய்வு நிலைக்கு இடையில் மிகவும் முக்கியமான மேம்பாடாக உள்ளது. இந்த துவக்க தரவுப் பகுப்பாய்வின் போது எந்த பகுப்பாய்வில் இருந்தும் ஒன்று தவிர்க்கப்படுகிறது. அவை உண்மையான ஆராய்ச்சி வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக உள்ளன. துவக்க தரவுப் பகுப்பாய்வு நிலை என்பது தொடர்ந்து நான்கு வினாக்கள் மூலமாக வழிநடத்தப்படுகிறது: தரவின் தரம் கண்டிப்பாக வெகு விரைவாக சரிபார்க்கப்பட வேண்டும். பல்வகையான பகுப்புகளைப் பயன்படுத்தி தரவுத் தரம் மதிப்பிடப்படுகிறது: அதிர்வெண் எண்ணிகள், விளக்கமுறையான புள்ளியியல் (நடுத்தரம், திட்ட விலக்கம், இடைநிலை), நியமத்திறன் (கோணல், முகட்டளவை, அதிர்வெண் செவ்வகப்படங்கள், ஒழுங்கான நிகழ்தகவு பகுதிகள், தொடர்புகள் (இயைபுபடுத்தல்கள், சிதறும் பகுதிகள்) ஆகியனவாகும்.
பிற துவக்கத் தரவுத் தர சரிபார்த்தல்கள் பின்வருமாறு: துவக்க தரவுப் பகுப்பாய்வு நிலையின் போது தரவுத் தரத்தை மதிப்பிடுவதற்கு பகுப்புகளின் தேர்வைப் பொறுத்து முக்கிய பகுப்பாய்வு நிலையில் பகுப்புகள் நடத்தப்படுகின்றன. என பிலிப் கோட்லெர் கூறியுள்ளார். அளவை வழித்துறைகளின் தரமானது ஆய்வின் இலக்காகவோ அல்லது ஆராய்ச்சி வினாவாகவோ இல்லாத சமயத்தில் கண்டிப்பாக துவக்கத் தரவு பகுப்பாய்வின் போது மட்டுமே சரிபார்க்கப்பட வேண்டும். அளவை வழித்துறையின் அமைப்புமுறையானது இலக்கியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அமைப்புமுறைக்கு தொடர்பு கொண்டுள்ளதா என ஒருவர் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.
அளவைத் தரத்தை மதிப்பிடுவதற்கு இரு வழிகள் உள்ளன: தரவின் தரம் மற்றும் அளவைகளை மதிப்பிட்ட பிறகு விடுபட்ட தரவிற்கு பொறுப்பேற்க ஒருவர் முடிவெடுக்கலாம் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளில் துவக்க நிலைமாற்றங்கள செயல்படுத்தலாம். எனினும் இது முக்கியப் பகுப்பாய்வு நிலையின் போதே நிறைவேற்றப்படுகிறது.
மாறிகளின் சாத்தியமான நிலைமாற்றங்கள் பின்வருமாறு: ஒருவர் கண்டிப்பாக குறிப்பின்றி அமைத்தல் செய்முறையை வெற்றிகரமாக சரிபார்க்க வேண்டும். உதாரணமாக பின்னணி மற்றும் நிலையான மாறிகளை சரிபார்ப்பதன் மூலம் குழுக்கள் முழுவதும் சரிசமமாக பங்கிடப்படுகிறது.
இந்த ஆய்வு மற்றும்/அல்லது குறிப்பின்றி அமைத்தலின் பயன்பாடு தேவையில்லை என்றால் ஒருவர் கண்டிப்பாக தொடர்புடைய மாதிரிமுறையை வெற்ற்கரமாக சரிபார்க்க வேண்டும். உதாரணமாக பங்குத் தொகையின் உள் அமைப்புகள் அனைத்தையும் சரிபார்ப்பதன் மூலம் மாதிரி சுட்டிக் காட்டப்படுகிறது.
பின்வரும் பிற சாதகமான தரவு சிதைவுகள் கண்டிப்பாக சரிபார்க்கப்பட வேண்டும்: ஏதாவது அறிக்கை அல்லது கட்டுரையில் மாதிரியின் அமைப்புமுறை கண்டிப்பாக துல்லியமாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய பகுப்பாய்வு நிலையின் போது உள் அமைப்பு பகுப்புகள் செயல்படுத்தும் போது மாதிரியின் அமைப்புமுறையைத் துல்லியமாக வரையறுப்பது என்பது இதில் மிகவும் முக்கியமாகும் (மேலும் குறிப்பாக உள் அமைப்புகளின் அளவு).
தரவு மாதிரியின் பண்பியல்பு பின்வருவனவற்றைப் பார்ப்பதன் மூலம் மதிப்பிடப்படுகிறது: இறுதி நிலையின் போது துவக்கத் தரவுப் பகுப்பாய்வின் கண்டுபுடிப்புகள் ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் தேவையான, விரும்பத்தகுந்த, சாதகமான சீர்திருத்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் முக்கியத் தரவுப் பகுப்புகளின் துவக்கத் திட்டம் கண்டிப்பாக மிகவும் விரிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் அல்லது மீண்டும் எழுதப்பட வேண்டும்.
இதைச் செய்வதற்கு முக்கியத் தரவு பகுப்புகள் பற்றிய பல்வேறு முடிவுகள் கண்டிப்பாக உருவாக்கப்படுகின்றன: பல்வேறு பாகுபடுத்தல்கள் ஆரம்பத் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு சமயத்தில் பயன்படுத்தப்படலாம். அவை பின்வருமாறு: பாகுபடுத்தலுக்கான கணக்கினுள் மாறிகளின் அளவீட்டு நிலைகளை எடுப்பதற்கு இது முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஒவ்வொரு நிலையிலும் சிறப்பு புள்ளிவிபர நுட்பங்கள் இருக்கின்றன:
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல் "தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:" தாராக்கள்(Ducks) & வாத்துக்கள்(Geese) = சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines) = = மேலும் காண்க = = மேற்கோள்கள் = காக்கேசிய இனம் காக்கேசிய இனம் ("Caucasian race") அல்லது கௌகேசிய இனம் (Caucasoid, Europid) (Europoid) எனவும் அழைக்கப்படுகிறது) என்ற சொல் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, வடகிழக்கு ஆப்பிரிக்கத் தீபகற்பம், மேற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியா ஆகிய இடங்களில் வாழும் சில மக்கள் அல்லது அனைத்து மக்களின் இனம் அல்லது தோற்ற அமைப்புகளைக் குறிக்கிறது. ஒரு இனத்திற்கும் மற்றொரு இனத்திற்கும் உள்ள மேன்மையை நிலைநாட்டும் அறிவியல் சார்ந்த இனப்பாகுப்பாடு கோட்பாட்டில் இந்த வகைப்படுத்தல் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்லான "Caucasian" ("race" என்ற சொல் இதனுடன் அரிதாக இணைத்து பயன்படுத்தப்படுகிறது) என்பது சிலநேரங்களில் இப்பகுதிகளில் வாழும் ஐரோப்பியர்கள் மற்றும் பிற வெள்ளைநிற தோற்றமுறைடைய மக்களை மட்டுமே குறிக்கிறது. மேலும் வெள்ளை மக்களின் பல்வேறு வகையான வரையறைகளுக்கு உகந்ததாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல அறிவியல் மற்றும் பொது சூழல்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக "வெள்ளை" என்ற மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்துடனும் குறிப்பாக அமெரிக்க ஒன்றிய சூழலில் வெள்ளை அமெரிக்கர் எனப்படுகிறது. "காக்கேசிய இனம்" அல்லது "வெரிடாஸ் காக்கேசியா" (Varietas Caucasia) கோட்பாடானது ஜெர்மன் அறிவியலாளர் மற்றும் பண்டைய மனித இன நூலருமான ஜோஹான் ஃப்ரெட்ரிச் புளூமென்பாக் (Johann Friedrich Blumenbach) மூலமாக தோராயமாக 1800 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. புளூமென்பெர்க் தான் ஆதிவகையினராக கருதும் காக்கேசிய மக்களுக்கு (காக்கேசிய மண்டலத்தில் உள்ளவர்களுக்கு) இப்பெயரை இட்டார். அவரது வகைப்படுத்துதலானது காக்கேசிய இனத்தின் மண்டை ஓட்டியலை முதன்மையாகச் சார்ந்திருந்தது. "கெளகேசாய்டு இனம்" என்ற சொல் ஆரம்பத்தில் பெளதீக மானுடவியலில் மக்களின் உடல் அளவையியல்களின் குறிப்பிட்ட அளவைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. மங்கோலிய இனம் மற்றும் நெக்ராய்டு இனம் ஆகியவற்றுடன் கெளகேசாய்டு இனம் "மிகப்பெரிய இனங்களில்" ஒன்றாக நம்ப்பப்படுகிறது. கௌகேசாய்டு இனமானது ஏராளமான "உள் இனங்களை" உள்ளடக்கியது. கெளகேசாய்டு மக்கள் வழக்கமாக மொழிசார்ந்த பிரதேசங்களைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்: ஆர்ய இனம் (இந்தோ-ஐரோப்பிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), செமித்திய இனம் (செமித்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள்) மற்றும் ஹாமிட்டிக் இனம் (பெர்பர்-கஷிட்டிக்-எகிப்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) ஆகியவை ஆகும். பல்வகையில் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உள் இனங்கள் நூலாசிரியர்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. கபாலத்தின் வடிவம் மூலமாகவும் மற்றொரு வழியில் உள் இனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன: நார்டிக், மத்தியத் தரைக்கடல் பகுதி, ஆல்பைன், தினாரிக், கிழக்கு பால்டிக், அரபிட், துரனிட், ஈரானிட் மற்றும் ஆர்மெனாய்டு ஆகிய உள் இனங்கள் கபாலத்தின் வடிவம் மூலமாக வகைப்படுத்தப்படுகின்றன. 19வது நூற்றாண்டு இந்திய மக்களை வகைப்படுத்தலில் அவர்கள் "ஆஸ்ட்ராலாய்டாக" கெளகேசியர் அல்லாத திராவிடர்களாக அல்லது தனிப்பட்ட திராவிட இனமாகக் கருதப்பட்டனர். மேலும் உயர்-சாதி கெளகேசாய்டு "ஆரியர்கள்" மற்றும் உள்நாட்டு திராவிடர்களுடன் குலக்கலப்பு மாறல் விகிதத்தைக் கொண்டிருப்பதாகவும் ஊகம் செய்யப்பட்டனர். இதை வேறுபடுத்தும் தனிச்சிறப்பாக கார்லெடோன் எஸ். கோன் அவரது 1939 ஆம் ஆண்டு "த ரேசஸ் ஆஃப் ஈரோப்" பில் "திராவிடர்களையும்" கெளகேசாய்டாக வகைப்படுத்தியுள்ளார். அவர்கள் "கெளகேசாய்டின் கபால அமைப்பையும்" மற்ற பிற உடல்சார்ந்த பண்புகளையும் (எ.கா. மூக்குகள், கண்கள், முடி) பெற்றிருப்பதால் அவரது மதிப்பீடு இவ்வாறு இருந்துள்ளது. கோன் தனது "த லிவ்விங் ரேசஸ் ஆஃப் மேனில்" கூறும் போது "இந்தியா கெளகேசிய இன பிரதேசத்தின் கிழக்குக் கோடியிலுள்ள நாடாக உள்ளது" எனக் கூறியுள்ளார். சாரா ஏ. டிஷ்கோஃப் மற்றும் கென்னத் கே. கிட் ஆகியோர் கூறுகையில்: "மனித இனநூலர்கள் பலரின் கருத்து வேறுபாட்டின் விளைவாக இந்த வகைப்படுத்தலானது பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் மூலமாக பயன்பாட்டில் எஞ்சியுள்ளது" என்று கூறியுள்ளனர். கொலின் ரென்ஃபிரிவ் எழுதிய சைண்டிஃபிக் அமெரிக்கன் என்ற 1989 ஆம் ஆண்டு கட்டுரையில் "செமித்தி இனம்" மற்றும் "ஆரிய இனத்துடன்" "திராவிட இனத்தையும்" சேர்த்து மூன்று முக்கிய உட்பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார். அவர்கள் "ஆரம்பகால-கெளகேசிய இனம்" என விளக்கியுள்ளார். சுமார் 9,000 BCE இல் வட ஆப்பிரிக்காவில் இருந்து குடிமாற்றம் செய்கையில் மேற்கூரிய மூன்று இனங்களாக அவர்கள் பிரிந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்—"செமித்தியர்கள்" தங்களை பாலஸ்தீன நகரத்தில் இருந்து விரிவுபடுத்திக் கொண்டனர். "ஆரியர்கள்" தங்களை கேட்டல் ஹியூக்கில் இருந்து விரிவுபடுத்திக் கொண்டனர். "திராவிடர்கள்" தங்களை தற்போது தெற்கு ஈரானாக இருக்கும் இடத்திலிருந்து விரிவுபடுத்திக் கொண்டனர். 1920 ஆம் ஆண்டு ஹெச்.ஜி. வெல்ஸ் என்பவர் மத்தியத் தரைக்கடல் பகுதி இனத்தை "ஐபீரிய இனமாக" க் குறிப்பிட்டுள்ளார். "ஆரியர்" , "செமித்தியர்" மற்றும் "ஹாமிட்டிக்" ஆகிய உள் இனங்களுடன் சேர்ந்து கெளகேசிய இனத்தை நான்காவது உள் இனமாக அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய மனித இனத்தின் மிகவும் கலப்படமற்ற மனித இனமாக ஐபீரிய இனத்தின் பாஸ்குவேஸ் (Basques) மக்களையும் அவர்கள் குரோ-மேக்னோன்ஸ் சந்ததிகளில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (பண்டைய ஐபீரிய மொழியின் காரணமாக மத்தியத் தரைக்கடல் பகுதி இனத்தை ஐபீரிய இனமாக வெல்ஸ் அழைத்தார். மேலும் பாஸ்குவேஸ் மொழியுடன் அவர்கள் ஒத்திருப்பதால் சிலர் அதை நம்புகின்றனர்). 1994 ஆம் ஆண்டில் அவரது "த ஹிஸ்டரி அண்ட் ஜியோகிராஃபி ஆஃப் ஹியூமன் ஜென்ஸ்" புத்தகத்தில் மக்கள்தொகை மரபுபியலர் எல். லூகா காவலி-ஃபோர்ஜா கூறுகையில் பாஸ்குவேஸ் தொடக்க குரோ-மேக்னோன்ஸின் சந்ததியில் இருந்து வந்தவர்கள் என்ற கருதுகோள்களுக்கு “பல பகுதிகளில் இருந்து ஆதரவு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அறிவியல் இனப்பாகுபாடில் கூட "கெளகேசிய" இனத்தின் ஏற்புடைமை பற்றி உலகளவில் ஒருமித்த கருத்து ஏதும் இல்லை. 1870 ஆம் ஆண்டு தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லே எழுதுகையில் "'கெளகேசியனின்' முட்டாள்தனமான வகைப்பாடு" என்பது உண்மையில் எக்ஸாந்தோசோரோய் (Xanthochroi) மற்றும் மெலனோசோரி (Melanochroi) வகைகளின் கலப்பே என எழுதியுள்ளார். மருத்துவ அறிவியலில் மனித இனம் சார்ந்த இயல்புக்கு மாறாக வேறுபடுகின்ற மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்குப் பதிலளிக்கையில், இனம்சார்ந்த பகுப்புகளில் கெளகேசிய இனமானது மருத்துவரீதியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பதற்கான மிகப்பெரிய விவாதம் காணப்படுகின்றது. பல்வேறு செய்தித்தாள்கள் (எ.கா. "நேச்சர் ஜெனிட்டிக்ஸ்" , "ஆர்க்கிவ்ஸ் ஆப் பீடியாட்ரிக்ஸ் & அடோல்சென்ட் மெடிசின்" மற்றும் "பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்" ஆகியவை) குறிப்பேடுகளை வெளியிட்டு அதில் ஆராய்ச்சியாளர்கள் கண்டிப்பாகவும் கவனமாகவும் அவர்களது மக்கள்தொகையை வரையறுக்க வேண்டுமெனவும் இந்த வகைகளானது இனம் சார்ந்த வேறுபாடுகளைக் காட்டிலும் சமுதாயப் பொருளியல் சார்ந்த வகுப்பின் வேறுபாடுகளை அளவிடுவது மற்றும் மருத்து சிகிச்சையின் அணுக்கம் சிறுபான்மையினரை தாக்காதவாறு பாதிக்கும் என்பதாலும் பரவல்-சார்ந்த சமுதாயக் கட்டுமானங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும் அதில் தெரிவித்தன. ஆனால் சில செய்தித்தாள்கள் (எ.கா. "ஜர்னல் ஆஃப் கார்ஸ்ட்ரோனென்டோரோலொஜி அண்ட் ஹெப்பாடோலொஜி" (Journal of Garstroentorology and Hepatology) மற்றும் "கிட்னி இண்டர்நேசனல்" போன்றவை) தொடர்ந்து கெளகேசியர்கள் போன்ற இனம்சார்ந்த பகுப்புகளைப் பயன்படுத்தினர். அமெரிக்க ஒன்றியத்தில் "Caucasian" என்ற சொல்லானது அரசாங்கம் மற்றும் மக்கள் ‎தொகைக்கணக்கு பணியகத்தின் மூலமாக வரையறுக்கப்பட்டுள்ளதன் படி, "வெள்ளை அமெரிக்கர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இனப்பிரிவை விளக்குவதற்காகவே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது." 1917 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்க ஒன்றியத்திற்கு குடிபெயர்வது தேசியப் பூர்வீகப் பங்கு மூலமாக கட்டுப்படுத்தப்பட்டது. "அமெரிக்காவிற்கும் பகத் சிங் தின்ட்டிற்கும்" (United States v. Bhagat Singh Thind) (1923) இடையேயான வழக்கில் உச்சநீதி மன்றம் ஆசிய இந்தியர்கள் – ஐரோப்பியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போல் இல்லாத – "கெளகேசியர்" களாக உள்ளனர் என்றும், ஆனால் அவர்களில் பெரும்பாலான மக்கள் "வெள்ளை" யாக இருந்தாலும் தங்களை வெள்ளை மக்கள் எனக் கருத முடியாது என்றும் தீர்ப்பளித்தது. அவர்களை அயல்நாட்டிலிருந்து குடியேறிய குடிமக்கள் என்பதையும், பின்னர் வெள்ளையர்களுக்கு சார்பற்றவர்கள் எனவும் வரையறுப்பது இதில் முக்கியமானதாகியது. 1946 ஆம் ஆண்டு நீதிமன்றமும் அரசாங்கமும் அவர்களது கருத்துக்களை மாற்றிக் கொண்டனர். 1965 ஆம் ஆண்டில் குடியேற்ற சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு ஆசியாவில் இருந்து குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தும் ஆரம்ப கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அமெரிக்க ஒன்றியத்தின் தேசிய மருத்துவ நூலகம் கடந்த கால இனமாக "கெளகேசியர்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் "இனம்" என்ற சொல்லின் மூலமாகப் புதிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அச்சொல்லை பயன்படுத்தியதை நிறுத்தி விட்டு "ஐரோப்பியர்" என்ற சொல்லை வழக்கத்திற்குக் கொண்டு வந்தது. மவுண்ட் ரஷ்மோர் மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம் கட்ஸோன் போர்க்லம் (1867–1941) என்பவரால் சௌத் டகோடா நகரில் கீஸ்டோன் என்ற இடத்தில் கிரானைட் சிற்பமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். அமெரிக்க ஒன்றியத்தின் 150 ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் வண்ணம் முன்னாள் அமெரிக்க ஒன்றிய அதிபர்களின் தலைகளை (இடமிருந்து வலம்): ஜார்ஷ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர் ரூஸ்வெல்ட் (1858–1919), மற்றும் ஆப்ரகாம் லிங்கன் (1809–1865) சிற்பமாக கொண்டு அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் நினைவிடத்தில் அமையப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த நினைவிடம் பரப்பளவிலும் கடல் மட்டத்திலிருந்து உயரத்திலும் உள்ளது. அமெரிக்க ஒன்றிய உள்நாட்டுத்துறை செயலகமான தேசிய பூங்கா சேவை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தோராயமாக இரண்டு மில்லியன் மக்கள் இந்த நினைவிடத்தைப் பார்வையிட வருகின்றனர். லகோடா சியோக்ஸ் "சிக்ஸ் க்ராண்ட்ஃபாதர்ஸ்" என்று முதலில் அறியப்பட்டது. 1885 ஆம் ஆண்டு காலத்திலான படையெடுப்பின் போது நியூ யார்க் நகரத்தின் சிறப்புமிக்க வழக்கறிஞராக இருந்த சார்லஸ் ஈ. ரஷ்மோர் என்பவரின் நினைவாக இந்த மலைக்கு மவுண்ட் ரஷ்மோர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் சௌத் டகோடா மாவட்டத்தில் உள்ள ப்ளாக் ஹில்ஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்க ரஷ்மோர் சிற்பவேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிக்குழு மற்றும் அதிபர் கால்வின் கூலிட்ஜ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த திட்டம் அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிக்குழுவின் ஒப்புதலைப் பெற்றது. சில சேதங்களுடன் எந்தவித இறப்பும் இல்லாமல் இந்த சிற்ப வடிவமைப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கி 1941 ஆம் ஆண்டில் முடிவுற்றது. "சிக்ஸ் கிராண்ட்ஃபாதர்ஸ்" என்று இருந்த போது, லகோடா தலைவர் ப்ளாக் எல்க் என்பவரின் புனிதப் பயணம் முடிவுற்ற ஹார்னே பீக் என்ற வழியின் ஒரு பகுதியாக இந்த மலை இருந்தது. 1875 ஆம் ஆண்டு முதல் 1877 ஆம் ஆண்டு வரை இருந்த தொடர்ச்சியான இராணுவ படையெடுப்புகளைத் தொடர்ந்து அமெரிக்க ஒன்றியம் இந்த பகுதியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது, 1868 ஆம் ஆண்டின் லேரமீ கோட்டை உடன்படிக்கை என்ற உரிமை சாசனம் அடிப்படையில் தற்போதும் விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன ("சர்ச்சைகள்" என்ற பகுதியைக் காண்க). வெள்ளை நிற அமெரிக்க குடியேற்றத்தார் இந்த சிகரத்தை கோகர் மவுண்டைன் (Cougar Mountain), சுகர்லோஃப் மவுண்டைன் (Sugarloaf Mountain), ஸ்லாபர் மவுண்டைன் (Slaughterhouse Mountain), மற்றும் கீஸ்டோன் க்ளிஃப்ஸ் (Keystone Cliffs) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். ரஷ்மோர், டேவிட் ஸ்வான்ஸே (இவரது மனைவி கேரீ எழுத்தாளர் லாரா இன்கால்ஸ் வில்டர் மற்றும் பில் சைல்ஸ் ஆகியோரின் சகோதரி ஆவார்) ஆகியோரின் பயணத்தின் போது மவுண்ட் ரஷ்மோர் என்று பெயர் மாற்றப்பட்டது. 1923 ஆம் ஆண்டு மவுண்ட் ரஷ்மோரை சௌத் டகோடாவின் சுற்றுலாத் தளமாக மாற்றும் சிந்தனை வரலாற்றாசிரியர் டோனே ராபின்சன் அவர்களுக்கு உதித்தது. சிற்ப கலைஞர் குட்ஸோன் போர்கலம் என்பவரை ப்ளாக் ஹில்ஸ் பகுதிக்கு பயணம் செய்து அங்கு சிற்பம் செதுக்க இயலுமா என்பது பற்றி உறுதியளிக்குமாறு 1924 ஆம் ஆண்டு ராபின்சன் அறிவுறுத்தினார். ஜார்ஜியாவின் ஸ்டோன் மவுண்டேன் பகுதியில் பாஸ்-ரிலீஃப் நினைவுச்சின்னத்தை கான்பிடரேட் தலைவருகளுக்காக கான்பிடரேட் மெமோரியல் கார்வின்ங் என்ற பெயரில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டு உருவாக்கும் முயற்சியில் போர்க்லம் இருந்தார். நீடில்ஸ் என்று அறியப்படும் கிரானைட் தூண்களாக சிற்பங்களை வடிவமைப்பது ஆரம்ப திட்டமாக இருந்தது. ஊசி போன்ற தூண்கள் மிக மெல்லியதாக இருந்ததால் அவை சிற்பத்தை தாங்குவது கடினம் என்று போர்க்லம் உணர்ந்தார். தென்கிழக்கு பகுதியை நோக்கியவாறு மற்றும் அதிகளவு சூரிய ஒளி படும் விதத்தில் இருந்த மவுண்ட் ரஷ்மோர் பகுதியை தேர்வு செய்தார். மவுண்ட் ரஷ்மோரைக் கண்ட பிறகு, "இந்த வானத்தை நோக்கி அமெரிக்க பயணிக்கும்" என்று போர்க்லம் கூறினார். 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவு ஆணையத்தை அமெரிக்க கூட்டாட்சி மன்றம் (Congress) அங்கீகரித்தது. குடியரசுக் கொள்கையைச் சார்ந்த இரண்டு நபர்களுடன் ஒரு மக்களாட்சி கொள்கையின் நபரும் அவர்களுடன் வாஷிங்டனையும் சேர்ந்து உருவமாக வைக்குமாறு அதிபர் கூலிட்ஜ் வற்புறுத்தினார். அமெரிக்க ஒன்றியத்தின் முதல் 150 ஆண்டுகள் வரலாறு பற்றிய நினைவாக அமெரிக்க ஒன்றியத்தின் அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடோர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரின் பிரம்மாண்டமான 60-அடி (18 மீ) சிற்பங்களை குட்ஸோன் போர்க்லம் மற்றும் 400 பணியாளர்கள் இணைந்து 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் 1941 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை செதுக்கினர். குடியரசை பாதுகாத்தல் மற்றும் தங்களது காலத்தில் குடியரசை வலியுறுத்த பங்கு கொண்டதற்காக இந்த அதிபர்களை போர்க்லம் தேர்வு செய்தார். தாமஸ் ஜெபர்சனின் உருவம் முதலில் வாஷிங்கடன் உருவத்தின் வலது புறத்தில் அமைந்து இருந்தது வேலை முடிந்த பிறகு இந்த பாறை பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டது இதன் காரணமாக ஜெபர்சன் உருவம் வெடிப் பொருட்களால் உடைக்கப்பட்டு புதிய உருவம் வாஷிங்டன் உருவத்திற்கு இடது புறத்தில் செதுக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நேஷனல் பார்க் சர்விஸ் அமைப்பு மவுண்ட் ரஷ்மோரை தங்களது அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொண்டது. இதன் அகக்கட்டமைப்பை செம்மைப்படுத்துவதன் மூலம் பொறியாளர் ஜூலியன் ஸ்பாட்ஸ் இந்த திட்டத்திற்கு உதவினார். எடுத்துக்காட்டாக, இவர் வைத்திருந்த புதிய தரம் கொண்ட நான்கு சக்கர வண்டியின் காரணமாக பணியாளர்கள் மவுண்ட் ரஷ்மோரின் உச்சிக்கு எளிதாக சென்றடைந்தனர். 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வாஷிங்டனின் முகம் முழுமையாக முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. தாமஸ் ஜெபர்சனின் முகம் 1936 ஆம் ஆண்டிலும், ஆப்ரகாம் லிங்கனின் முகம் 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியிலும் அர்ப்பணிக்கப்பட்டது. மக்கள்-உரிமைகளின் தலைவர் சூசன் பி. அந்தோனியின் தலையையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க ஒன்றியத்தின் கூட்டாட்சி மன்றத்தில் ஒரு மசோதா 1937 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ஆனால் கூட்டரசு கோட்பாட்டின் நிதி ஒதுக்கீட்டின் படி இந்த தலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது இதன் படி இவைகள் முன்பே தொடங்கப்பட்டதாக இந்த மசோதாவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டில் தியோடோர் ரூஸ்வெல்ட்டின் முகம் அர்ப்பணிக்கப்பட்டது. சிற்பக் கலையுடன் தொடர்புடைய கருவிகள் மற்றும் ஒரே மாதிரி காட்சியமைப்பு கொண்ட உருவங்களை வெளிப்படுத்தும்- ஸ்கல்படர் ஸ்டூடியோ 1939 ஆம் ஆண்டில் போர்க்லம் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இரத்த நாளத்தில் அடைப்பு காரணமாக 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போர்க்லம் இறந்தார். இவரது மகன் லிங்கன் போர்க்லம் இந்த திட்டத்தை தொடர்ந்தார். தலைப் பகுதியிலிருந்து இடுப்பு பகுதி வரை செதுக்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் போதுமான அளவு தொகை ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் செதுக்குவது முடிக்கப்பட்டது. லூசியானா பர்சேஸ் பகுதி வடிவத்தில் டெக்லரேசன் ஆப் இண்டிபெண்டன்ஸ், யூ.எஸ். கன்ஸ்டியூஸன், லூசியானா பர்சேஸ் நினைவாக எட்டு-அடி உயரமுள்ள எழுத்துக்களையும் மற்றும் பானாமா கால்வாய் பகுதிக்காக கையகப்படுத்தப்பட்ட அலாஸ்கா முதல் டெக்சாஸ் வரையிலான மற்ற ஏழு பகுதிகளின் பெயர்களையும் கொண்டிருக்கும் மிகப்பெரிய பலகையை அமைப்பது என்று போர்க்லம் திட்டமிட்டு இருந்தார். இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 989,992.32 அமெரிக்க டாலர்களாகும். இவ்வளவு பெரிய சிற்ப செதுக்குதல் பணியினை நிறைவேற்றும் போது ஒருவரும் இறக்க வில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரலாற்று இடங்கள் பற்றிய தேசிய பதிவேட்டில் மவுண்ட் ரஷ்மோர் பட்டியலிடப்பட்டது. 1934 ஆம் ஆண்டின் கல்லூரி பருவங்களின் குழுவில் வெற்றியாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்த மாணவர் வில்லியம் ஆண்ட்ரூ புர்கெட் எழுதிய கட்டுரை, 1973 ஆம் ஆண்டு சிற்பத்தின் உச்சியில் வெண்கல தகட்டில் வைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு அதிபர் ஜார்ஜ்.ஹச். டபிள்யூ. புஷ் அதிகாரப்பூர்வமாக மவுண்ட் ரஷ்மோரை அர்ப்பணித்தார். செதுக்கப்பட்ட முகங்களுக்கு பின் பதினாறு பீங்கான் பூச்சு மரச்சட்டங்களுடன் காப்பறைகள் சேர்ந்து பாறைக்கு உள்ளே செங்குத்தான பள்ளதாக்காக வெட்டப்பட்டுள்ளது. இந்த மரச்சட்டங்களில் சுதந்திரம் பற்றிய அறிவிப்பு மற்றும் அரசியலமைப்பு பற்றிய எழுத்து வடிவங்கள், நான்கு அதிபர்கள் மற்றும் போர்க்லம் பற்றிய வாழ்கை வரலாறு, மற்றும் அமெரிக்க ஒன்றியத்தின் வரலாறு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஹால் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பகுதிக்கு செல்லும் வழியாக அறைகள் உருவாக்கப்பட்டன; காப்பறைகள் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பார்வையாளர் மையம், லிங்கன் போர்க்லம் அருங்காட்சியகம் மற்றும் அதிபர்களின் சுவடு ஆகியவற்றை கொண்ட பார்வையாளருக்கான வசதிகள் மற்றும் சுற்றிப் பார்க்கும் வசதிகளுடன் 1998 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தை பராமரிப்பதற்கு விரிசல்களைக் கண்டறியவும் சரிசெய்யவும் மலை ஏறுபவர்கள் ஆண்டுதோறும் தேவைப்படுகின்றனர். மரப்பாசிகளை நீக்குவதற்காக இந்த நினைவுச்சின்னம் சுத்தம் செய்யப்படவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் கருவிகளை தயார் செய்யும் ஜெர்மன் தயாரிப்பாளர் கார்செர் ஜிஎம்பிஹெச் (GmbH) தண்ணீரை வேகமாக அடித்து இலவசமாக சுத்தம் செய்யும் செயலை 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி மேற்கொண்டார். 1876-77 கிரேட் சியோக்ஸ் போருக்கு பிறகு லகோடோ பகுதிகளை அமெரிக்க ஒன்றியம் கைப்பற்றியதால் மவுண்ட் ரஷ்மோர் அமெரிக்க ஒன்றியத்தை பிறப்பு நாடாக கொண்டவர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியது. ப்ளாக் ஹில்ஸ் பகுதியை லகோடோவிடம் வாழ்நாள் முழுவதும் இருக்குமாறு 1868 ஆம் ஆண்டின் லேரமீ கோட்டை உடன்படிக்கை அளித்தது. 1971 ஆம் ஆண்டில் நினைவுச்சின்னத்தில் அமெரிக்கன் இந்தியன் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு "மவுண்ட் க்ரேஸி ஹார்ஸ்" என்ற பெயருடன் வேலை உருவாக காரணமாக இருந்தது. இதில் பங்கேற்றவர்களில் இளம் வயதினர், பெற்றோரின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் லகோடோவின் பழம்பெரும் மனிதர் ஜான் ஃபயர் லாமி டீர் இருந்தனர், மலையின் உச்சியில் ஊழியர்களுடன் இறை வழிபாடு செய்தனர். அதிபர்களின் முகங்கள் மீது அடையாளக்குறி மூலம் மறைப்பர் என்றும் ப்ளாக் ஹில்ஸ் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் முடிவு செய்யும் வரை அழுக்கடைந்த நிலையிலே இருக்கும் என்று லாமே டிர் கூறினார். பூங்காவிற்கான கண்காணிப்பாளராக அமெரிக்காவைப் பிறப்பிடமாக கொண்ட ஒருவர் 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பொருள் விளக்கத்திற்காக பல்வேறு வளாகங்களை திறக்கப் போவதாகவும் மற்றும் நான்கு அதிபர்களும் ஒரு வளாகம் மற்றும் ஒரே ஒரு மையத்தில் இருப்பார்கள் என்றும் ஜெரார்ட் பேக்கர் தெரிவித்தார். அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஒரு பிரபலமானவரின் நினைவாக ப்ளாக் ஹில்ஸில் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் மேலும் மவுண்ட் ரஷ்மோருக்கு பதிலளிக்கும் வண்ணம் க்ரேஸி ஹார்ஸ் மெமோரியல் கட்டப்பட்டது. லகோடோ தலைவர்களுக்கு ஆதரவாகவும் மற்றும் மவுண்ட் ரஷ்மோரை விட பெரிதாக இருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது மேலும் த க்ரேஸி ஹார்ஸ் மெம்மோரியல் பவுண்டேசன் ஒன்றிணைந்த நிதிகளை வாங்க மறுத்தது. இருந்த போதிலும் இந்த நினைவுச்சின்னம் சர்ச்சைக்கான முக்கிய காரணமானது குறிப்பாக அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட குழுக்களிடையேயும் இருந்தது. இந்த நினைவுச்சின்னம் சர்ச்சையை எரிச்சல் உண்டுபண்ணுகிற நிலைக்கு மாற்றியது ஏனெனில் இவற்றின் விதியின் கருத்திற்கு எதிராக இனவெறி மேன்மை சட்டமுறைமை உடையதாக குறிப்பாக தெரிவிக்கிறது என்று சிலர் வாதத்தில் ஈடுபட்டனர். இந்தியப் பகுதிகளை கைப்பற்றிய போது இருந்த நான்கு அதிபர்களை போர்க்லம் தனது விருப்பத் தேர்வுடன் மலைகளில் செதுக்கப்பட்டது. கு குல்ஸ் குலன் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்த காரணத்தினால் கட்ஸோன் போர்க்லம் தானாக சர்சைகளில் சிக்கிக் கொள்வார். 2009 ஆம் ஆண்டு "ரீகார்விங் ரஷ்மோர்: ரேங்கிங் த பிரசிடெண்ட்ஸ் ஆன் பீஸ், ப்ராஸ்பெர்டி அண்ட் லிபர்டி" என்ற தனது புத்தகத்தை எழுத்தாளர் இவன் இலாண்ட் என்பவர் வெளியிட்டார், இந்த நினைவுச்சின்னத்தில் உள்ள நான்கு அதிபர்களில் மூவரின் தலைமைப் பதவிக் காலம் பற்றிய புதிய ஆய்வை இந்த புத்தகம் பரிந்துரைத்தது. சௌத் டகோடோ வட்டத்தில் ப்ளாக் ஹில்ஸ் பகுதியின் மற்ற இடங்களில் உள்ள தாவரம் மற்றும் விலங்கினங்களைப் போல மவுண்ட் ரஷ்மோரிலும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருந்தன. டர்கே வல்ச்சர், பால்ட் ஈகிள், ஹவாக், மற்றும் மெடோவால்ர்க் போன்ற பறவைகள் மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றி பறக்கும், மலையின் விளிம்புகளின் எப்போதாவது இந்த பறவைகள் கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். சிறிய பறவைகளான பாடும்பறவைகள், நத்ஹாட்ச் மற்றும் வுட்பெக்கர் போன்றவை பசுமை மாறாத இந்த பகுதிகளை வாழும் இடமாக கொண்டிருந்தன. எலி, குழிபறித்து வாழும் அணில், அணில், கீரியினப் பிராணி, முள்ளம்பன்றி, ரக்கூன், நீர்வாழ் எலியுருவ விலங்கு, பாட்கர், கொயோட், பெரிய கொம்புகளைக் கொண்ட ஆடு, மற்றும் பாப்கேட் போன்ற நிலத்தில் வாழ்கின்ற பாலூட்டி விலங்குகள் இங்குள்ளன. தவளைகள் மற்றும் பாம்புகளின் இனங்களும் இந்த பகுதியை வாழிடமாகக் கொண்டுள்ளன. இந்த நினைவுச்சின்னத்தில் உள்ள இரண்டு ஓடைகளான க்ரிஸ்ஸி பியர் மற்றும் ஸ்டார்லிங் பாசின் ஓடைகளில் லாங்கோஸ் டேஸ் மற்றும் ப்ரூக் ட்ரவுட் போன்ற மீன்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் விலங்குகள் இந்த பகுதியில் அதிகமாக இல்லை: ஆடுகளின் இனத்திலிருந்து தோன்றிய மலை ஆடு கஸ்டர் ஸ்டேட் பார்க் பகுதிக்கு 1924 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. குன்றுப் பகுதிகளில் உள்ள ஊசியிலை மரங்களில் ஒன்றான பொண்டெரோசா பைன் வகை மரங்கள் இந்த நினைவுச்சின்னத்தைச் சுற்றி சூரிய ஒளியிலிருந்து நிழல்களை வழங்கும் வகையில் உள்ளன. பர் ஓக், ப்ளாக் ஹில்ஸ் ஸ்ப்ரூஸ் மற்றும் காட்டன்வுட் போன்ற மற்ற மரங்களையும் உள்ளடக்கியது. மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றி புற்செடிகளின் ஒன்பது இனங்கள் உள்ளன. ஸ்னாப்ட்ராகன், சன்ஃப்ளவர் மற்றும் வியோலெட் போன்றவற்றை உள்ளடக்கிய காட்டு மலர்கள் அதிகமாக உள்ளன. உயரமான மட்டங்களில் தாவரங்களின் வாழ்கை அடர்த்தியற்று இருக்கும். எனினும் தோராயமாக ஐந்து சதவீத தாவர இனங்கள் மட்டுமே ப்ளாக் ஹில்ஸ் பகுதிக்கு சேராத நிலையில் உள்ளன. ஆண்டில் ஒரு முறை மட்டுமே இந்த பகுதி மழைப் பொழிவைப் பெறுகிறது இது விலங்குகள் மட்டும் தாவரங்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மரங்கள் மற்றும் மற்ற தாவரங்கள் மேல்மட்ட வழிந்தோடுதலை தடுக்க உதவி புரிகின்றன. அணைகள், நீரொழுக்கு மற்றும் வசந்த காலங்களில் கீழ்நோக்கி செல்லும் தண்ணீரை அணைகள் மூலம் பாதுகாக்கப்பட்டு விலங்குகளுக்கு நீர் அளிக்கும் இடமாக உருவாக்கப்படுகிறது. மணற் கற்பாறை மற்றும் சுண்ணாம்புக்கல் போன்றவை நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நீர்த்தேக்கங்களை உருவாக்கவும் உதவி புரிகின்றன. மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றியுள்ள போண்டெரொசா காடுகளில் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்டுத் தீ ஏற்படுகிறது. இது எரிந்த நிலையில் உள்ள மரங்களின் மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இது நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு குப்பைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. பெரிய அளவிலான காட்டுத் தீ நிகழ்ச்சிகள் நிகழ்வது அபூர்வம் ஆனால் முந்தைய காலங்களில் நிகழ்ந்துள்ளது. மவுண்ட் ரஷ்மோர் கிரானைட் மூலம் அதிகமாக அமையப்பட்டுள்ளது. சௌத் டகோட்டா வட்டத்தின் ப்ளாக் ஹில்ஸ் பகுதியில் ஹார்னே பீக் வடமேற்கு பகுதியில் உள்ள பாதோலித் கிரானைட் பகுதியில் இந்த நினைவுச்சின்னம் செதுக்கப்பட்டுள்ளது, எனவே ப்ளாக் ஹில்ஸின் மையப்பகுதியில் நிலவியல் பகுதிகளை உருவாக்குவதற்கு மவுண்ட் ரஷ்மோர் வெளிப்படையாக உள்ளது. 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ப்ரிகேம்பிரியன் காலத்தில் பாதோலித் கற்பாறைகள் மைக்கா வகை இளகல் பாறைகளாக மாறியது. கரடு முரடான பாறைகலிருந்து சிறிய பெக்மாடைடாக பிரிக்கப்பட்ட கிரானைட் ஹார்னே பீக் பகுதியுடன் தொடர்புடையது. அதிபர்களின் முன் தலையில் உள்ள மெல்லிய நிறமுடைய கோடுகள் இவற்றினால் ஏற்பட்டவையாகும். ப்ளாக் ஹில்ஸ் கிரானைட்கள் ப்ரிகேம்பிரியன்களுக்கு பிந்தைய காலங்களில் அரித்து அழிக்கப்பட்டது , ஆனால் காம்பரியன் காலங்களில் இவைகள் மணற்கற்கள் மற்றும் மற்ற படிவங்களாக புதைவுற்றது. பலேஸோயிக் காலங்களில் இந்த பகுதி புதைவுற்ற நிலையில் இருந்தது, எனினும் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டெக்டோனிக் காலங்களில் மீண்டும் அரிக்கப்பட்டு வலுவூட்டப்பட்டது. ப்ளாக் ஹில்ஸ் பகுதி நீண்டு குறுகிய நிலப்பரப்புள்ள பகுதிகளாக வலுவூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மலைப்பகுதிகளில் ஏற்பட்ட அரிப்புகள் அடிப்பகுதியிலிருந்து கிரானைட்டை உருக்குதல் மற்றும் மற்ற மெல்லிய பாறை வகைகளிலிருந்து சிற்ப வேலைகளை மேற்கொள்ள அனுமதித்தது. வாஷிங்டன் சிற்பத்தின் கீழே உள்ள பாறைகள் கிரானைட் மற்றும் கருமையான பாறைகளுக்கு இடையே உள்ள தொடர்பை காட்டுகிறது. போர்க்லம் இந்த மவுண்ட் ரஷ்மோரை பல காரணங்களாக தேர்ந்தெடுத்தார். இந்த மலையில் உள்ள பாறைகள் மென்மையான, மற்றும் சிறப்பாக துகளாக்கப்பட்ட கிரானைட்டைக் கொண்டிருக்கும். நீடித்து உழைக்ககூடிய கிரானைட் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அழியக்கூடியது, இது இந்த சிற்பங்களை வலிமையுடன் பாதுகாக்க போதுமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த பகுதியில் இது மிகப்பெரிய மலையாகும் கடல்மட்டத்திலிருந்து உயரத்தில் வானில் தோன்றுகிறது. ஏனெனில் இந்த மலை தென்கிழக்கு பகுதியை நோக்கி உள்ளது, இதன் மூலம் வேலையாட்கள் நாட்களின் அதிகமான நேரங்களில் சூரிய ஒளியை பெறும் அனுகூலம் பெற்றிருந்தனர். சௌத் டகோடாவில் சுற்றுலாத்துறை இரண்டாவது பெரிய துறையாக உள்ளது, இங்கு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மவுண்ட் ரஷ்மோர் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் இந்த நினைவிடத்தை பார்வையிட்டுள்ளனர். ரஷ்மோர் இசை குழுக்களின் இறுதி நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் வீடாக உள்ளது. மேலும் ஸ்டர்கிஸ் மோட்டர்சைக்கிள் ராலி நிகழ்ச்சியின் வாரங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவர்கிறது. அமாண்டா பைன்ஸ் அமாண்டா லாரா பைன்ஸ் ( பிறப்பு: ஏப்ரல் 3, 1986 ) ஒரு அமெரிக்க நடிகை, நிக்கலோடியோனில் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவையாளர், ஆடை வடிவமைப்பாளர், பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். 1990களின் மத்தியில் இருந்து பிற்பகுதி வரை மற்றும் 2000ங்களில் முற்பகுதியில் நிக்கலோடியோனில் ("ஆல் தட்" மற்றும் "த அமாண்டா ஷோ" ) பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியதற்குப் பிறகு, பைன்ஸ் திரைப்பட வாழ்க்கைக்கு மாறினார், "ஷீ'ஸ் த மேன்" (2006) மற்றும் "ஹேர்ஸ்ப்ரே" (2007) உள்ளிட்ட பதின்வயது ரசிகர்களைக் குறிவைத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். 2006 இல், பைன்ஸ் "டீன் பீப்பிளின்" "25 ஹாட்டஸ்ட் ஸ்டார்ஸ் அண்டர் 25" இல் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் 2007 இல், அவர் 21 வயதுக்கு கீழ் 5வது அதிகமாக சம்பளம் வாங்கும் பிரபலமாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தார், அப்போது அவருடைய வருவாய் $2.5 மில்லியனாக இருந்தது. பைன்ஸ் உதவி பல்மருத்துவர் மற்றும் அலுவலக மேலாளரான லின் (நீ ஆர்கான்) மற்றும் பல் மருத்துவர் மற்றும் ஸ்டேண்ட்-அப் நகைச்சுவை செய்பவரும் ஆன ரிக் பைன்ஸ் ஆகியவர்களின் மகளாகப் பிறந்தார், மேலும் கலிபோர்னியா, தவுசண்ட் ஓக்ஸில் வளர்ந்தார். பைன்ஸ், கரப்பொருத்தரான டாம்மி (1974 இல் பிறந்தார்) மற்றும் UCLA வில் வரலாறில் இளங்கலை பெற்றவரும் நடிகருமான ஜில்லியன் (1983 இல் பிறந்தவர்) ஆகிய இரண்டு மூத்த உடன்பிறப்புக்களைக் கொண்டிருக்கிறார். பைன்ஸின் தாய்வழிப் பாட்டன் பாட்டிகள் ஓண்டாரியோ, டொரண்டோவை சேர்ந்தவர்கள் மற்றும் அமாண்டா ஐரிஷ், போலிஷ், ரஷ்ய மற்றும் ரோமானிய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவரது தந்தை கத்தோலிக்கர் மற்றும் அவரது தாயார் யூதர் ஆவர்; அவர் அவரை யூதர் என விவரிக்கிறார், ஆனால் "நான் இன்னும் [மதத்தை] முடிவு செய்யவில்லை. நான் சரியாக எதை நம்புகிறேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை" என்றும் குறிப்பிடுகிறார். 1993 இல், பைன்ஸ் நகைச்சுவை முகாமில் ஆர்சனியோ ஹால் மற்றும் ரிச்சர்ட் ப்ரயோர் ஆகியோர் மூலமாக நடிகைக்கான பயிற்சி பெற்றார், மேலும் ஏழு வயதில் தொழில் ரீதியாக நடிக்கத் தொடங்கினார், அப்போது அவர் பஞ்சா கிரஞ்ச் மிட்டாய்களுக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றினார். அவரது குழந்தைப் பருவத்தில், அவர் "அன்னீ" , "த சீக்ரட் கார்டன்" , "த மியூசிக் மேன்" மற்றும் "த சவுண்ட் ஆஃப் மியூசிக்" போன்றவற்றின் மேடைப்பதிப்புகளிலும் தோன்றினார். நடிப்பு வகுப்புகள் எடுத்துக் கொண்ட பிறகு, பைன்ஸ் நிக்கலோடியோனின் "ஃபிகர் இட் அவுட்" மற்றும் "ஆல் தட்" (இரண்டும் 1996 இல்) ஆகியவற்றின் வழக்கமான நடிகர்களுள் ஒருவராக இருந்தார். பைன்ஸ் "ஆல் தட்டில்" அது 2000 த்தில் அதன் இரத்து செய்யப்படலாம் என்ற ஊகம் வரும் வரை அதன் வழக்கமான நடிகர்களில் ஒருவராகத் தொடர்ந்தார், எனினும் அவர் படப்பிடிப்பு நடந்தவரை படப்பிடிப்புக்குச் சென்றார், மேலும் அவரது சொந்த நிகழ்ச்சியான "த அமாண்டா ஷோ" என்ற நிகழ்ச்சிக்கும் தயாராகி வந்தார், அதுவும் நிக்கலோடியோனுக்கானது. "த அமாண்டா ஷோ" வில் அமாண்டா பைன்ஸ், நீதிபதி ட்ரூடியுடன் விளையாடுதல் உள்ளிட்ட காமிக்கல் ஸ்கிட்டுகள் மற்றும் ஸ்கெட்ச்சுகள் ஆகியவற்றின் இணைப்பு இடம்பெற்றிருந்தது, அந்த நீதிபதியானது "நீதிபதி ஜூடியைச்" சார்ந்ததாக இருந்தது, அது எப்போதும் சிறுவர்களுக்கு சாதகமாக இருக்கும் படியும் மற்றும் பெனலோப் டேண்ட்டை அமாண்டா-மனப்பற்றுடைய ரசிகராகக் காட்டப்பட்டிருந்தது. பைன்ஸ் அவரது முதல் திரைப்பட அறிமுகத்தை 2002இன் மிதமான பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற "பிக் ஃபேட் லியர்" மூலம் தந்தார், அதில் அவர் ஃபிராங்கி முனிஸ் உடன் நடித்திருந்தார். அவரது முதல் தனி முன்னணி பாத்திரம் 2003 இன் "வாட் எ கேர்ல் வாண்ட்ஸ்" படத்தில் டாப்னே ரெனால்ட்ஸாக நடித்ததாகும். அதில் அவர் கோலின் ஃபர்த்,ஆலிவர் ஜேம்ஸ் மற்றும் கெல்லி பிரஸ்டன் ஆகியோருடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பைன்ஸ் த WB டெலிவிசன் நெட்வொர்க்கின் சூழல்நகைச்சுவை "வாட் ஐ லைக் அபவுட் யூ" வில் நடித்தார், மேலும் 2003இன் "Charlotte's Web 2: Wilbur's Great Adventure" மற்றும் 2005இன் CGI அனிமேட்டட் நகைச்சுவை "ரோபோட்ஸ்" ஆகியவற்றில் குரல் கொடுத்தார். மேலும் அவர் டெனியல்லெ வார்னராக "த நைட்மேர் ரூம்" எபிசோடிலும் மற்றும் கிறிஸ்டல் டுப்ரீயாக "ஆர்லிஸ்" ஸிலும் இணை-நடிகையாக நடித்தார். பைன்ஸ் லிண்ட்சே லோஹன், ஹிலாரி டஃப், அலெக்ஸில் பிளெடல், ராவன்-சிமோன், இவான் ராசெல் உட், ஓல்சன் இரட்டையர்கள் மற்றும் மேண்டி மூர் ஆகியோர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இளம் பெண் நட்சத்திரங்கள் ஒன்பது பேருடன் ஒருவராக வேனிட்டி ஃபேரின்|"வேனிட்டி ஃபேரின்" ஜுலை 2003 பதிப்பின் மேலட்டையில் தோன்றினார். அவர் அவர்களுடன் அடிக்கடி ஒப்பிடப்பட்ட போதும், பைன்ஸ் அது பற்றி, "அது உயர்நிலைப் பள்ளி விருந்தில் ஹாட் கேர்லாக இருப்பது போல் இருந்தது. நான் அந்தப் பெண்ணாக முடியாது. நான் பயங்கரமான முகப்பருவுடன் வளர்ந்தேன், மேலும் பாதுகாப்பற்று உணர்ந்தேன். நான் அப்போது உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பேன். நான் என்னை அழகானவளாக எப்போதும் நினைத்திருக்கவில்லை, மேலும் ஆண்களுக்கும் என்னைப் பிடிக்காது. அதனால் தான் நான் நகைச்சுவை செய்ய ஆரம்பித்தேன்" என்று தெரிவித்தார். பைன்ஸ் மேலும் பதின்வயது ரசிகர்களுடன் அவரது ஒப்புமையை அவர் "அவர்களுடன் சிலவற்றில் மிகவும் ஒத்துப்போகக் கூடியவராக இருக்கிறார்... முக்கிய பங்கு அல்லது என்னவாக இருந்தாலும்" என்று தெரிவித்தார். 2006 இல், பைன்ஸ் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "ட்வெல்ஃப்த் நைட்டினைச்" சார்ந்த நகைச்சுவையான "ஷீ'ஸ் த மேனில்" நடித்தார்; அந்தத் திரைப்படத்தில், பைன்ஸ், மகளிருக்கான அணியின் வீழ்ச்சியின் காரணமாக ஆண்களுக்கான சோக்கர் அணியில் அவரது சகோதரர் போன்று வேடமேற்கும் பாத்திரத்தில் நடித்தார். தயாராப்பாளர்கள் முதலில் மெக்கார்த்தி மற்றும் பைன்ஸ் ஆண் உருவத்தில் இருப்பதற்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்துவிட்டு பாடகர் ஜெஸ்ஸே மெக்கார்த்தியை பைன்ஸின் சகோதரராக நடிக்க வைக்க நினைத்தனர், ஆனால் மெக்கார்த்தியினால் நடிக்க முடியவில்லை. அந்தத் திரைப்படத்தில் ஜேம்ஸ் கர்க் அவரது சகோதரராக நடித்தார். அந்த திரைப்படத்தின் வெளியீட்டு நேரம் வாக்கில், பைன்ஸ் அவர் மிகவும் முதிர்ந்த பாத்திரத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிடார், மேலும் அவர் அவரது நடிப்புத்திறமையை மேம்படுத்தி வருவதாகவும் மற்றும் ஒரு நடிகையாக முதிர்ச்சியடைந்து வருவதாக நம்புவதாகவும் தெரிவித்தார், அது பற்றி கூறிய அவர் ஒவ்வொரு பாத்திரத்திலும் "சிறந்ததாகப் பெறுவதாகக்" கூறினார். பைன்ஸ் மற்றொரு காதல் நகைச்சுவையான "லவ்ரெக்ட்" இல் நடித்தார், அது "ஷீ'ஸ் த மேனுக்கு" முன்னரே படம் பிடிக்கப்பட்டு விட்டது ஆனால் அதற்குப் பிறகு வெளியானது, அமெரிக்காவிற்கு வெளியில் 2005 மற்றும் 2006 இல் திரையரங்குகளில் வெளியானது, மேலும் அமெரிக்காவில் ஜனவரி 21, 2007 இல் ABC ஃபேமிலி நெட்வொர்க்கில் ஒளிபரப்பானது. மேலும் அவர் "ஹேர்ஸ்பிரே" வில் பென்னி பிங்கல்டனாக நடித்தார், இது அதே பெயரில் வெளிவந்த பிராட்வே மியூசிகலின் திரைப்படத் தழுவல் ஆகும். அவரது முதல் இசைசார் பாத்திரமாக இருந்த அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2006 இல் டொரண்டோவில் தொடங்கியது, மேலும் அது ஜூலை 20, 2007 இல் வெளியிடப்பட்டது. பைன்ஸ் அது பற்றிக் கூறுகையில், அவர் "பெரிய பொதுத்தோற்றத் திரைப்படத்தில் வேடிக்கையான, நகைச்சுவையான பகுதியில்" தோன்றியதாகக் குறிப்பிட்டார். பைன்ஸ் அடுத்து மற்றொரு நகைச்சுவையான "சிட்னி ஒயிட்டில்" நடித்தார், அது செப்டம்பர் 21, 2007 இல் வெளியானது. அந்தத் திரைப்படம் "ஸ்னோ ஒயிட் அண்ட் தெ செவன் ட்வார்ஃப்ட்ஸைச்" சார்ந்திருந்தது, அதில் பைன்ஸ் கல்லூரி கிரீக் சிஸ்டத்தில் முதலாமாண்டு மாணவியாக, சாரா பாக்ஸ்டன் மற்றும் மேட் லாங்க்குடன் இணைந்து நடித்தார். 2008 இல், பைன்ஸ், மார்புப் புற்றுநோய்க்கான ஹெர்செப்டின் மருந்தை உருவாக்கும் ஹார்ரி கோன்னிக் ஜூனியரின் பாத்திரத்தின் உதவி மாணவராக லைஃப்டைம் தொலைக்காட்சித் திரைப்படம் "லிவிங் ப்ரூஃபில்" நடித்தார். ஏப்ரல் 2009 இல், பைன்ஸ் "கேண்ண்ட்" என்று தலைப்பிடப்பட்ட ABC சூழல்நகைச்சுவைக்கான முன்னோட்டக் காட்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ஆனால் அந்தத் தொடர் நெட்வொர்க்கின் வீழ்ச்சியான நிலையினால் உருவாக்கப்படாமல் தோல்வியடைந்தது. பைன்ஸ் 2009 இல் நகைச்சுவையான "போஸ்ட் கிரேடில்" முதலில் பெண் முன்னணி நடிகையாக நடிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு பதிலாக அலெக்சிஸ் பிலெடல் மாற்றப்பட்டார். ஜூன் 2009 இல், பைன்ஸ், ஸ்கிரீன் ஜெம்ஸுடன் இரண்டு படங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த இரண்டு திரைப்படங்களில் முதலாவதான பதின் நகைச்சுவை ஈசி ஏவில் எம்மா ஸ்டோன் மற்றும் லிசா குட்ரோ ஆகியோருடன் நடிக்கிறார், மேலும் இரண்டாவதில் நட்சத்திரப் பாத்திரத்தில் நடிக்கிறார். பைன்ஸ் மேலும் அவரது பென்னி பிங்கில்டன் பாத்திரத்தை "ஹேர்ஸ்பிரேவின்" பெரிய திரை பின்தொடர்ச்சியில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். 2007 இல், பைன்ஸ், ஆடை மற்றும் துணைப்பொருட்களைக் கொண்ட அவரது சொந்த ஆடை வரிசை "டியரை" உருவாக்குவதற்கு ஸ்டீவ் & பார்ரி'ஸ் (அது அதன் உற்பத்தி வெளியீடுகளை அதன் வழக்கமான யூனிவர்சிட்டி ஆடைகள் மற்றும் ஸ்வெட்ஷர்ட்டுகளிற்கு வெளியே விரிவாக்கியது) உடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த வரிசை ஆகஸ்ட் 15, 2007 இல் கடைகளில் அறிமுகமானது. அந்த ஆடை வரிசை 2008 இல் ஸ்டீவ் & பார்ரி'ஸ் அதிகாரம் 11 திவால்நிலையைத் தாக்கல் செய்த போது தடைபட்டது, மேலும் ஜனவரி 2009 இல் வணிகத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறியது. பைன்ஸ் பல்கலைக்கழகத் துவக்கநிலையை ஆரம்பித்தார், மேலும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் தவுசண்ட் ஓக்ஸ் உயர்நிலைப் பள்ளியின் சார்பற்ற படிப்பு செயல்திட்டத்தில் (எனினும் அவர் சில காலங்கள் தவுசண்ட் ஓக்ஸில் லா ரெய்னா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்) பட்டம் பெற்றார், மேலும் அவர் எதிர்காலத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் கலிபோர்னியா, ஹாலிவுட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சிறிதுகாலத்திற்குக் குடிபெயர்ந்த போதும் அவ்வப்போது அவரது சொந்த நகரமான தவுசண்ட் ஓக்ஸிற்குச் சென்று வருகிறார். பைன்ஸ் ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் ஆர்வமுடையவராக இருக்கிறார், அது பற்றி குறிப்பிடும் போது "பயணத்தின் போது அவருடைய ஒப்பனைப்பையை இழந்து விடுவதாக பெரிய கனவு காணும் பெண்ணாக" அவர் இருப்பதாகத் தெரிவித்தார் 2007 இல், அவர் மற்றொரு ஹாலிவுட் நட்சத்திரம் சினமடையும் வகையில் அவருக்கு எதிராகப் பேசினார். "நான் எந்தளவுக்கு வெளியில் வரவேண்டுமோ அந்தளவிற்கே வெளியில் வருகிறேன் என நினைக்கிறேன்... அது அதிகமாக இருந்ததில்லை. எனக்கு நடனமாடுதல் மற்றும் மற்ற செயல்கள் எனக்குப் பிடிக்கும், ஆனால் குடிப்பதென்பது உங்களுக்கு எந்த வழியிலும் சரியானதல்ல. அது உங்களது தோலுக்கு நல்லதல்ல; அது உங்களை பயங்கரமான உணரவைக்கும். அதனால், குடித்தல் வகையில், கூடாது" என்றார். அவர் இந்தக் கருத்துக்களை 2007 கோடைகாலம் முழுவதும் டாக் ஷோ நிகழ்ச்சிகள் மற்றும் பல பத்திரிகை நேர்காணல்களில் கூறி வலிமைப்படுத்தி வந்தார். அக்சஸ் ஹாலிவுட்டில் அவர், "நான் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருக்க விரும்புகிறேன், மேலும் கிளப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றார். டிசம்பர் 2007 இல் ஒரு நேர்காணலில், பைன்ஸ் ஆல்கஹால் பற்றி அவரது பெற்றோர்கள் எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று விளக்கினார். மேலும் கூறிய அவர் அவரது சமூக நேரத்தை எப்படி செலவழிப்பது என்று "மறு ஆய்வு" செய்துவருவதாகத் தெரிவித்தார். "காஸ்மோபாலிடனின்" ஜனவரி 2009 பதிப்பில், பைன்ஸ், "நான் கிளப் காட்சிகளுக்கு எதிரானப் பெண்ணாக அறியப்பட வேண்டும். ஆனால் நான் சமநிலையைத் தேடிவருகிறேன். நான் எனக்கு வேண்டுமென்றால் குடிக்க முடியும் நடனமாட முடியும். நீங்கள் வெளியே சென்று மக்கள் மற்றும் ஆண்களைச் சந்திக்க வேண்டும். நான், கேளிக்கைத் தேவையான அந்தச் சூழலில் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். பைன்ஸ் "மேக்சிம்" பத்திரிகையின் பிப்ரவரி 2010 வெளியீட்டின் அட்டையில் உள்ளாடையுடன் தோன்றினார், உட்புறத்தில் அவரது புகைப்படங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன. அது பற்றி, "ஒவ்வொரு கோணமும் ... கவர்ச்சியாக இருந்தது என நான் நினைக்கிறேன்" என்றார், மேலும் அந்தப் புதிய தோற்றம் "நான் யார்" என்பதைக் காட்டுகிறது என்றார். பைன்ஸ் நிக்கலோடியோன் கிட்'ஸ் சாய்ஸ் விருதுகளில் பிலிம்ப் விருதுகளை 2000 த்தில் இருந்து 2004 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வென்றார், அதில் 2001 இல் "ஆல் தட்" டுக்காக விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான விருது, 2002 மற்றும் அதனைத்தொடர்ந்த ஆண்டுகளில் "த அமாண்டா ஷோவிற்காக" விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகளை வென்றார். 2003 இல், அவர் "பிக் ஃபேட் லியாருக்காக" விருப்பமான திரைப்பட நடிகை விருதையும் வென்றார், மேலும் 2004 இல் "வாட் எ கெர்ல் வாண்ட்ஸுக்காக" விருப்பமான திரைப்பட நடிகை விருதை வென்றார். பைன்ஸ் 2008 கிரிட்டிக்'ஸ் சாய்ஸ் விருதுகளில் "ஹேர்ஸ்பிரே" குழுமத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார். மெய்நிகர் விசைப்பலகை மெய்நிகர் விசைப்பலகை என்பது பயனர் வரியுருக்களை உள்ளீடாகச் செலுத்த அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் ஆகும். மெய்நிகர் விசைப்பலகை பல்வேறு உள்ளீட்டு சாதனங்கள் மூலம் இயக்கப்படுகிறது, குறிப்பாக உண்மையான விசைப்பலகை, கணினிச் சுட்டி, தலைச் சுட்டி மற்றும் கண் சுட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது. பருநிலை விசைப்பலகையை இயக்க இயலாத, உடலில் குறைபாடுகள் கொண்ட பயனர்கள் மேசைக் கணினிகளில் உள்ளீடு செய்வதற்காக கண்டுபிடிக்கபட்ட மாற்றுவழி உள்ளீட்டு இயங்கமைப்பாகும். வேறுபட்ட வரியுரு வகைகள் அல்லது எழுத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியாக மாற வேண்டிய இரண்டு அல்லது பலமொழி பேசும் பயனர்களுக்காக பயன்படுத்தப்படுவது இந்த திரை விசைப்பலகைகளின் மற்றொரு முக்கிய பயன்பாடாகும். வன்பொருள் விசைப்பலகைகள் இருமுக திட்ட அமைப்புகளுடன் இருக்கும் போதிலும் (எடுத்துக்காட்டு பல்வேறு நாட்டின் திட்ட அமைப்புகளிலுள்ள சிரிலிக்/இலத்தீன் எழுத்துகள்), பல்வேறு கணினி அமைப்புகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்யும் போது இந்த திரை விசைப்பலகைகள் மாற்றுப் பொருளாக உள்ளன மேலும் எப்போதாவது இருமுக திட்ட அமைப்புகளுடன் வருகின்றன. விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள தரநிலையான திரை விசைப்பலகைப் பயன்பாடுகளில் பருநிலை விசைப்பலகையிலிருந்து திட்ட அமைப்புகளை மாற்ற முடிகிறது (இதற்கு பொதுவாக alt-shift விசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை பயனர்கள் தம் விருப்பப்படியும் அமைத்துக்கொள்ளலாம்). இதன் மூலம் ஒரே நேரத்தில் விசைப்பலகையின் வன்பொருள் மற்றும் மென்பொருள் திட்ட அமைப்புகளும் மாற்றப்படுகின்றன. பயனர் தற்போது எந்த திட்ட அமைப்பில் உள்ளார் என்பதை கணினித் தட்டிலுள்ள குறியீடு காண்பிக்கும். லினக்ஸ் இயக்க முறைமையும் விசைப்பலகை-திட்ட அமைப்புகளை வேகமாக கைமுறையாக மாற்றும் முறையை ஆதரிக்கிறது, லினக்ஸ் இயக்க அமைப்பின் பிரபலமான திரை விசைப்பலகைகளான ஜிடிகீபோர்ட் (gtkeyboard), மேட்ச்பாக்ஸ்-கீபோர்ட் அல்லது கேவிகேபிடி (Matchbox-keyboard or Kvkbd) போன்றவை இந்த செயல்முறையில் சரியாக செயல்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, கேவிகேபிடி இந்த திட்ட அமைப்பை விசைப்பலகை முன்னுரிமைகளில் இயல்பான திட்ட அமைப்பின்படி அல்லாமல் முதலில் வரையறுக்கப்பட்ட திட்ட அமைப்பின் படி வரையறுக்கிறது. இதனால் பட்டியலில் முதலில் இருக்கும் திட்ட அமைப்பு இயல்பானதாக இல்லாவிட்டால் பயன்பாடு தவறான வரியுருக்களைக் காண்பிக்கிறது. சுருக்க விசை திட்ட அமைப்பை செயல்படுத்தினால், பயன்பாடானது மற்றொரு விசைப்பலகை திட்ட அமைப்பு முறையில் வெளியீடுகளை மாற்றிவிடும், ஆனால் திரையில் உள்ள திட்ட அமைப்பு மாறாது. இதன் காரணமாக பயனர் தான் எந்த விசைப்பலகை திட்ட அமைப்பை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அறியாத நிலை ஏற்படும். இந்த சிக்கல்கள் சரிசெய்யப்படாத வரையில், பல-மொழி / பல-எழுத்துக்களை பயன்படுத்தும் பயனர்களிடம் இந்த லினக்ஸ் விசைப்பலகைகள் பயனற்றதாகவே இருக்கும். பருநிலை விசைப்பலகைகள் இல்லாத கருவிகளில் (தனிநபர் டிஜிட்டல் உதவிப்பொருள் (personal digital assistant) அல்லது தொடுதிரை கொண்ட அலைப்பேசிகள் (touchscreen equipped cell phones) பயனர் உள்ளீடு அளிப்பதற்காக இந்த கருவிகளின் இயக்க அமைப்புகளுடன் தொடர்புடைய மெய்நிகர் விசைப்பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். கணினி விசைப்பலகை கொண்டுள்ள பொத்தான்களை விட குறைவான பொத்தான்களைக் கொண்டுள்ள அமைப்புகளுக்காக இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் முன்மாதிரி மென்பொருள் என்ற முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் பண்புகளின் படி மெய்நிகர் விசைப்பலகைகள் வகைப்படுத்தப்படும்: 2008 ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஒளியியல் மெய்நிகர் விசைப்பலகை உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. இது மனிதனின் கை மற்றும் விரல் இயக்கங்களை ஒளியியல் முறையில் கண்டறிந்து பகுப்பாய்வு செய்து ஒரு பரப்பில் வரையப்பட்ட பொத்தான்கள் போன்ற, உண்மையில் இல்லாத உள்ளீட்டு கருவியில் செயல்களாக செயல்படுத்துகிறது. சுட்டி அல்லது விசைப்பலகை போன்ற மனிதனால் அதிகமாக இயக்கப்படும் உள்ளீட்டு கருவிகளை உருவாக்க அனுமதிக்கிறது. அனைத்து இயந்திர உள்ளீட்டுக் கருவிக் கூறுகளுக்குப் பதிலாகவும் நடப்பு பயன்பாட்டுக்கும் பயனர்களின் உடற்கூறியல் பராமரிப்பு வேகத்திற்கும் எளிமைக்கும் குழப்பமற்ற தன்மைக்கும் உகந்ததாக்கப்பட்ட இதுபோன்ற மெய்நிகர் சாதனங்களைப் பயன்படுத்தலாம். இணையதளத்தில் குறிப்பாக இணையகங்களில் அயல்நாட்டு விசைப்பலகையில் பயனர்கள் தங்களது சொந்த மொழியில் உள்ளீடு அளிப்பதற்காக சில ஜாவாஸ்கிரிப்ட் மெய்நிகர் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விசை அமுக்கல்களைப் பதிவு செய்தல் (keystroke logging) போன்ற சில ஆபத்துகளைக் குறைப்பதற்காக மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெஸ்ட்பாக்'ஸ் online banking service நிறுவனம் ஒரு கடவுச்சொல்லை அளிப்பதற்காக ட்ரெசரிடைரக்ட் (TreasuryDirect) போன்ற ஒரு மெய்நிகர் விசைப்பலகையைப் பயன்படுத்துகிறது. வழக்கமான விசை அமுக்கல்களைக் கண்காணிப்பதை விடவும் இந்த மெய்நிகர் விசைப்பலகை மூலம் உள்ளீடாக கொடுக்கப்பட்ட தரவைப் பெற சுட்டி மற்றும் காட்சியை தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் (malware) கண்காணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் திரைப்பிடிப்புகளைப் பதிவு செய்தல் அல்லது ஒவ்வொரு முறை சுட்டி சொடுக்கும் போதும் பதிவு செய்தல் போன்ற முறைகளின் மூலம் இது சாத்தியம். ஏதேனும் வகையில் பயன்பட வேண்டுமானால் இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாடு அல்லது வலைப் பக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட செய்நிரலுக்காக வடிவமைக்கப்பட்டதல்லாத மெய்நிகர் விசைப்பலகைகள் உட்பட அனைத்து நிரல்களிலும் வேலை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்ட பொதுப்படையான மெய்நிகர் விசைப்பலகையால் சாதாரண விசைப்பலகைகளில் ஏற்படும் விசை அமுக்கல்களைப் போன்ற அதே அமுக்கல்களையே இந்த மெய்நிகர் விசைப்பலகைகளும் உருவாக்கும் என்பதால் அவற்றால் இவ்வகையான அமுக்கப் பதிவு நிரலைத் தோற்கடிக்க முடியாது. அதனால் சாதாரண விசைப்பலகை உள்ளீடுகளைக் கண்டறிவது போல் இவற்றையும் கண்டறிய முடியும். திரை விசைப்பலகைகள் மூலம் பயனர் பயன்படுத்தும் சுட்டிச் சொடுக்குகள் கடவுச்சொல்லை ஆதார உலாவுதல் மூலம் வெளிப்படையாக அறிவிக்கும், ஏனென்றால்: வணிக நெறிமுறைகள் வணிக நெறிமுறைகள் (பெருநிறுவன நெறிமுறைகள் எனவும் அறியப்படுகிறது) என்பது பயன்படு நெறிமுறைகளின் ஒரு வடிவமாகும், இது வணிக சூழ்நிலைகளில் ஏற்படும் நெறிமுறைசார் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அல்லது நெறிமுறைசார் சிக்கல்களை ஆராய்வதாகும். இது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது முழுவதுமாக தனிநபர்கள் மற்றும் வணிக அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. பயன்படு நெறிமுறைகள் என்பது மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் வணிக நெறிமுறைகள் போன்ற பல துறைகளில் நெறிமுறைசார் கேள்விகளை நிர்வகிக்கும் ஒரு நெறிமுறைகள் துறை ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துவரும் நேர்மையுணர்வில்-கவனம் செலுத்தப்பட்ட சந்தையிடங்களில், நெறிமுறைசார் வணிக செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான (நெறிமுறையியல் எனப்படுகிறது) தேவை அதிகரித்துவருகிறது. அதேசமயம், புதிய பொது முனைப்புகள் மற்றும் சட்டங்கள் (எ.கா. அதிகப்படியான-புகையுமிழும் வாகனங்களுக்கு அதிக UK சாலை வரி விதிப்பு) வழியாக வணிக நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தொழில்துறையில் கட்டாயப்படுத்தப்படுகிறது. வணிகங்கள் பொதுவாக நெறிமுறையற்ற முறையில் செயல்படுவதால் குறைந்த-கால ஆதாயங்களை அடையமுடியும்; எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் திடீரெனப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்கலாம். வணிக நெறிமுறைகள் நெறி சார்ந்த மற்றும் விரிவான முறை கட்டுப்பாடு ஆகிய இரண்டாகவும் இருக்கலாம். பெருநிறுவன நடைமுறை மற்றும் தொழிற்துறை தனிப்பண்பாக, இந்தத் துறை பிரதானமாக நெறிசார்ந்ததாக இருக்கிறது. கல்வித்துறையில் விரிவான முறை அணுகுமுறைகளும் செயல்படுத்தப்படுகின்றன. வணிக நெறிமுறைசார் சிக்கல்களின் எல்லை மற்றும் அளவு ஆகியவை பொருளாதாரம் சாராத சமூக மதிப்புகளுடன் முரணாக அறியப்படும் வணிகங்களுக்கான அளவை பிரதிபலிக்கிறது. வரலாற்று ரீதியாக, 1980கள் மற்றும் 1990களின் போது முக்கிய நிறுவனங்களுக்குள் மற்றும் தர்க்கரீதியில் ஆகிய இரண்டிலுமே வணிக நெறிமுறைகளில் ஆர்வங்கள் வியக்கத்தக்கவகையில் துரிதமாயின. எடுத்துக்காட்டாக, இந்நாளில் பெரும்பாலான முக்கிய பெருநிறுவன வலைத்தளங்கள் பொருளாதாரம் சாராத சமூக மதிப்புகளை பல்வேறு தலைப்புகளின் கீழ் (எ.கா. நெறிமுறைகள் குறியீடுகள், சமூக பொறுப்புணர்வு உரிமை ஆவணங்கள்) மேம்படுத்துவதற்கு அழுத்தமான ஈடுபாடு காட்டி வருகின்றன. சில சூழ்நிலைகளில், நிறுவனங்கள் வணிக நெறிமுறைசார் பரிசீலனைகளின் ஒளியில் அவர்களது அடிப்படை மதிப்புகளை மறுவரையுறுத்துக் கொள்கிறார்கள் (எ.கா. BPயின் "பியாண்ட் பெட்ரோலியம்" சூழ்நிலைசார் விவாதம்). மேலும் காண்க: பெருநிறுவன தவறாகப்பயன்படுத்துதல், பெருநிறுவன குற்றம். நிகழ்வுகள்: கணக்குப்பதிவு அவதூறுகள், என்ரான், வேர்ல்ட்காம் மனித வள மேம்பாட்டில் (HRM) நெறிமுறைகள், முதலாளி-பணியாளர் தொடர்புகளைச் சுற்றி ஏற்படும் முதலாளி மற்றும் பணியாளருக்கு இடையே எழும் உரிமைகள் மற்றும் கடமைகள் போன்ற நெறிமுறைசார் சிக்கல்களை உட்கொண்டிருக்கிறது. மேற்கண்ட அனைத்தும் பணியாளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகவும் உள்ளன. ஒரு முதலாளி அல்லது எதிர்கால முதலாளி இனம், வயது, பாலினம், மதம் அல்லது மற்ற பாகுபாட்டு நடவடிக்கை அடிப்படையில் பணியாளரைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ கூடாது. ஓர் உற்பத்திப் பொருளைப் பற்றிய வெறும் தகவலை (மற்றும் அதற்கான அணுகல்) வழங்கும் ஏற்பாட்டுக்கும் அப்பாற்பட்ட சந்தைப்படுத்துதலானது நமது மதிப்புகள் மற்றும் நடவடிக்கைகளைக் கையாளவும் வாய்ப்புள்ளது. சமூகம் இதை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்வதாகக் கருதுகிறது, ஆனால் நெறிமுறைசார் கோட்டினை எங்கு ஏற்படுத்துவது? என்ற கேள்வி இருக்கிறது சந்தைப்படுத்துதல் நெறிமுறைகள் ஊடக நெறிமுறைகளுடன் கலந்ததன்மை கொண்டதாக உள்ளன, ஏனெனில் சந்தைப்படுத்துவதற்கு ஊடகம் மிகவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஊடக நெறிமுறைகள் என்பது மிகவும் அகன்ற தலைப்பாகவும் வணிக நெறிமுறைகளுக்கு அப்பாலும் செல்கிறது. மேலும் காண்க: மெமெஸ்பேஸ், தகவலைக்குழப்புதல், விளம்பர நுட்பங்கள், தவறான விளம்பரம், விளம்பரக் கட்டுப்பாடு நிகழ்வுகள்: பெனெட்டான். வணிக நெறிமுறைகளின் இந்தப் பகுதி, பொதுவாக நிறுவனத்தின் கடமையான தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி செயல்பாடுகள் தீங்கேற்படக் காரணமில்லாதவாறு உறுதியளிப்பதுடன் தொடர்புடையதாகும். இந்தப் பகுதியில் உண்மையிலிருந்து விளையக்கூடிய சில மிகவும் தீவிரமான குழப்பநிலை, ஏதேனும் ஒரு தயாரிப்பு அல்லது உற்பத்தி செயல்பாட்டில் பொதுவாக ஓரளவிற்கு அபாயம் இருக்கும் என்பதாகும், மேலும் அதன் அனுமதிக்கப்பட்ட அளவை வரையறுப்பதும் மிகவும் கடினமானதாக இருக்கிறது, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவு தவிர்ப்புத் தொழில்நுட்பங்களின் மாறும் நிலை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்பாட்டின் மாறும் சமூக உணர்தல் ஆகியவற்றைச் சார்ந்திருக்கலாம். மேலும் காண்க: தயாரிப்பு கடமைப்பொறுப்பு நிகழ்வுகள்: ஃபொர்ட் பிண்டோ அவதூறு, போபால் பேரழிவு, கல்நார் / கல்நார் மற்றும் சட்டம், அமெரிக்காவின் பீனட் கார்ப்பரேசன். அறிவு மற்றும் செயல்திறன் ஆகியவை மதிப்புடையவை ஆனால் அதனை சுலபமாக பொருளாக "அடைய" முடியாது. யாருக்கு ஒரு கருத்துக்கான அதிக உரிமை இருக்கிறது, பணியாளருக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திற்கா அல்லது அந்தப் பணியாளருக்கா? ஒரு தாவரம் விளையும் நாடா அல்லது தாவரத்தின் மருத்துவ சக்தியைக் கண்டுபிடித்து உருவாக்கிய நிறுவனமா என்பதெல்லாம் கண்கூடாகும் இதன் விளைவாக உரிமைத்தகுதிக்கான உரிமைத்தகுதி நிலைத்தன்மை கோரல் மற்றும் நெறிமுறை சார்ந்த விவாதங்கள் ஆகியவை எழுந்தன. நிகழ்வுகள்: மனித ஜீனோம் பணித்திட்டத்தில் தனியார் மற்றும் பொதுமக்களின் ஆர்வம் நெறிமுறைகளும் தொழில்நுட்பமும் கணினி மற்றும் உலகளாவிய வலை ஆகிய இரண்டும் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஆகும். இந்த தொழிநுட்பத்தில் இருந்து பல நெறிமுறைசார் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதில் தகவலை அணுகுவது மிகவும் சுலபமானதாக இருக்கிறது. இது தரவுச் செயலாக்கம், பணியிடக் கண்காணிப்பு மற்றும் அந்தரங்க நுழைவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. அத்துடன் மருத்துவ தொழில்நுட்பமும் மேம்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இந்த மருந்துகள் நோயாளியாவதிலிருந்து காக்கின்றன, மேலும் பொதுவாகக் கிடைக்கும் மருந்துகள் ஏதுமில்லை. இது பல நெறிமுறைசார் கேள்விகளை எழுப்பியுள்ளது. குழுவாக ஒன்றிணைந்து இருப்பது இங்கு சிக்கல்களாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் வணிக நெறிமுறைசார் விசயங்களில் மிகவும் பரவலாகவும், உலகளாவிய பார்வையுடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். 1970களில் வணிக நெறிமுறைகள் ஒரு துறையாக வெளிப்பட்ட போதும், பத்தாண்டு கால சர்வதேச மேம்பாடுகளைத் திரும்பிப் பார்க்கையில், 1990களின் பிற்பகுதி வரை சர்வதேச வணிக நெறிமுறைகள் வெளிப்படவில்லை. வணிகத்தின் சர்வதேச உள்ளடகத்தில் பல புதிய நடைமுறைச் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. நெறிமுறைசார் மதிப்புகளின் கலாச்சாரம் சார்ந்த சார்புடைமை போன்ற கருத்தியல் ரீதியான சிக்கல்கள் இந்தத் துறையில் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. அத்துடன் இங்கு மற்ற பழைய சிக்கல்களும் இணைந்துள்ளன. சிக்கல்கள் மற்றும் உபதுறைகள் பின்வருமாறு: வெளி நாடுகள் பொதுவாக, பொருட்களை அவற்றின் சாதாரண விலையைவிட மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தல் மூலாக போட்டி மிரட்டலுக்காக அவற்றின் சேமிப்புகளைப் பயன்படுத்துகின்றன. இது உள்நாட்டுச் சந்தைகளில் பிரச்சினைகள் ஏறுபடுவதற்கு வழிவகுக்கலாம். இதில் வெளிநாட்டுச் சந்தைகளுடன் போட்டியிட்டு விலை நிர்ணயிக்க உள்நாட்டுச் சந்தைகளுக்கு சிரமமாக இருக்கலாம். 2009 இல், சர்வதேச வர்த்தக ஆணையம் சேமித்துவைப்பதற்கு எதிரான சட்டங்களை ஆய்வு செய்தது. சேமிப்பு பொதுவாக நெறிமுறைசார் சிக்கல்களை ஏற்படுத்துவதைக் காணமுடிகிறது, பெரிய நிறுவனங்கள் மற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிறுவனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தத் தெளிவற்று வரையறுக்கப்பட்ட பகுதி, அநேகமாக வணிக நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் அதற்கு தொடர்புடையதாக மட்டுமே இருக்கிறது, இங்கு இது அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் தத்துவம் ஆகியவற்றின் துறைகளினுள் வணிக நெறிமுறையாளர்களின் துணிகர முயற்சியாக இருக்கிறது, இது பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கான வெவ்வேறு அமைப்புகளின் சரியானவை மற்றும் தவறானவைகளில் கவனம்கொள்கிறது. ஜொஹன் ராவ்ல்ஸ் மற்றும் ராபர்ட் நோசிக் இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள் ஆவர். வணிக நெறிமுறைகளை பணியாளர், வணிக நிறுவனங்கள் மற்றும் ஒட்டு மொத்த சமூகம் ஆகியவற்றின் கண்ணோட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய கண்ணோட்டங்களில் இருந்து ஆராய முடியும். பெரும்பாலும், ஒரு சாராரின் சேவை செய்யும் ஆர்வம் மற்றவ(ர்களுக்கு)ருக்கு கேடு விளைவிப்பதாக இருப்பது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களிடையே முரண்பாடு இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு பணியாளருக்கு நல்லதாக இருக்கலாம், அதேசமயம் இது நிறுவனம், சமூகம் ஆகியவற்றுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கலாம், அல்லது இதற்கு எதிர்மாறாக இருக்கலாம். சில நெறிமுறையாளர்கள் (எ.கா., ஹென்றி சிட்ஜ்விக்) முரணான ஆர்வங்களின் ஒத்திசைவாக்கம் மற்றும் இணக்கம் ஆகியவையாக நெறிமுறையின் அடிப்படைப் பங்களிப்பைக் காண்கிறார்கள். தத்துவ ஞானிகள் மற்றும் பலர் சமூகத்தில் வணிக நெறிமுறையின் நோக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, சிலர் வணிகத்தின் அடிப்படை நோக்கம் அதன் உரிமையாளருக்கு அல்லது பொது-வர்த்தக நிறுவனமாக இருக்கும் சூழ்நிலையில் அதன் பங்குதாரர்களுக்கு இயன்றவரை அதிகமாக திரும்பக் கிடைத்தலாக இருக்க வேண்டும் எனக்கருத்து தெரிவிக்கிறார்கள். ஆகையால், இந்த கண்ணோட்டத்தின் கீழ், அந்த நடவடிக்கைகள் இலாபத்தை மட்டுமே அதிகரிப்பதாக இருக்கும், மேலும் பங்குதாரர் மதிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனெனில் யாரேனும் மற்றவர்கள் செயல்பாடு இலாபங்களின் மீது வரிவிதிப்பதாக இருக்கும். நிறுவனங்களில் எல்லாவற்றுக்கும் மேலாக இயன்றவரை அதிகப்படியான இலாபத்தை உருவாக்குபவர்கள் மட்டுமே போட்டிச் சந்தையிடங்களில் தொடர்ந்திருப்பதற்கு சாத்தியமிருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். எனினும், சிலர் சட்டத்தினை மதிப்பதற்கு மற்றும் அடிப்படை ஒழுக்க விதிகளுக்கு வணிகங்களுக்கு சுய-ஆர்வம் இன்னும் தேவை என்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் அதைச் செய்யத் தவறுவதால் ஏற்படும் விளைவுகள் அபராதங்கள், உரிமத்தின் இழப்பு அல்லது நிறுவன நன்மதிப்பு ஆகியவற்றில் மிகவும் விலைமதிப்புடையதாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க பொருளியலாளர் மிக்ஸில்டன் ஃபிரெயிட்மேன் இந்த கண்ணோட்டத்தின் முன்னணி ஆதரவாளராக இருக்கிறார். சிலர் நிறுவனங்கள் அறமுறை அமைப்பாக இருப்பதற்கான ஆற்றல் வாய்ந்தவை அல்ல என முடிவு செய்கிறார். இதன் கீழ், நெறிமுறைசார் நடத்தை தனிப்பட்ட மனிதர்களில் தேவையாக இருக்கிறது, ஆனால் வணிகம் அல்லது பெருநிறுவனத்திற்கு தேவையில்லை. மற்ற கருத்தியலாளர்கள், வணிகங்கள் அறநெறிக் கடைமைகள் உடையவை, அவை அதன் உரிமையாளர் அல்லது பங்குதாரர்களின் சேவை ஆர்வங்களுக்கும் மேலாக நன்றாக விரிவாக இருக்கின்றன, மேலும் இந்தக் கடமைகள் எளிமையாக சட்டத்தை மதிப்பதையும் மீறி அதிக விசயங்களைக் கொண்டிருக்கின்றன என வாதிடுகிறார்கள். பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், இடம்சார்ந்த சமூகம் அல்லது ஒட்டுமொத்த சமூகம் உள்ளிட்ட வணிகங்களின் வழிகாட்டுதலில் ஆர்வம் உள்ள நபரான நடுநிலை முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுபவருக்கு வணிகத்தில் அறமுறையான பொறுப்புணர்வு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். நடுநிலை முதலீட்டாளர்களை முதன்மையான மற்றும் இராண்டாம்நிலை நடுநிலை முதலீட்டாளர்கள் எனப் பிரிக்க முடியும். முதன்மையான நடுநிலை முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் போன்ற நேரடியாக செயல்பாட்டை விளைவிக்கக் கூடிய நபர்கள் ஆவர், அதே சமயம் இரண்டாம்நிலை நடுநிலை முதலீட்டாளர்கள் என்பவர்கள் அரசாங்கம் போன்ற நேரடியாக செயல்பாட்டை விளைவிக்காதவர்கள் ஆவர். அவர்கள், நடுநிலை முதலீட்டாளர்கள் எப்படி வணிகம் இயக்கப்படுகிறது என்பது தொடர்புடைய சில உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் எனக் கூறுகிறார்கள், மேலும் சிலர் இதில் ஆட்சிமுறையின் உரிமையும் கூட உள்ளடங்கி இருப்பதாகக் கருத்து தெரிவிக்கிறார்கள். சில கருத்தியலாளர்கள் வணிகத்துக்கான சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆகையால் நிறுவனங்கள் பகுதியளவு-ஜனநாயகக் கழகங்களாக இருக்க வேண்டும், மேலும் பணியாளர்கள் மற்றும் மற்ற நடுநிலை முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை குறிப்பாக அரசியல் தத்துவத்தில் ஒப்பந்தக் கோட்பாட்டினைப் புத்துயிரளிப்பதற்கு பிரபலமான பின்தொடர்வாக மாறியிருக்கிறது, இது பெருமளவு ஜான் ராவ்ல்ஸின் "எ தியரி ஆஃப் ஜஸ்டிஸ்" மற்றும் 1980களில் வெளிப்பட்ட "தர இயக்கத்தின்" ஒரு அம்சமாக வணிகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கருத்தொற்றுமை-சார்ந்த அணுகுமுறையின் வருகை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டது. பேராசிரியர்கள் தாமஸ் டொனால்ட்சன் மற்றும் தாமஸ் டன்ஃபீ வணிகத்துக்கான ஒப்பந்தக் கோட்பாட்டின் ஒரு பதிப்பை முன்மொழிந்தனர், அதை அவர்கள் தொகுக்கப்பட்ட சமூக ஒப்பந்தங்கள் கோட்பாடு என அழைத்தனர். i) பெரும-கொள்கைகள், அனைத்து அறிவார்ந்த மக்களாலும் உளகலாவிய கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் ii) சிறும-கொள்கைகள், ஆர்வமுள்ள குழுக்களுக்கு இடையில் உள்ள நடப்புநிலை ஒப்பந்தங்களால் முறைப்படுத்தப்படுவது ஆகியவற்றின் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி, குழுக்களுக்கு இடையில் "நியாயமான ஒப்பந்தத்தை" உருவாக்குவதால் முரணான ஆர்வங்களுக்கு சிறந்த தீர்வு காணலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் ஒப்பந்தக் கோட்பாடுகளின் ஆதரிப்பவர்கள் மையப்புள்ளியைத் தவற விட்டுவிட்டார்கள் எனக் கூறுகின்றனர், அதாவது, வணிகம் ஒரு நபரின் உடைமையாகும், மேலும் அது சிறு-நிலையோ அல்லது சமூக நீதிகளை விநியோகிப்பதற்கான வழியோ அல்ல என்பதாகும். நெறிமுறைசார் சிக்கல்கள் நிறுவனங்கள் பலவற்றுடன் உடன்பட வேண்டியிருக்கும் போது ஏற்படலாம் மற்றும் சிலநேரங்களில் மாறுபட்ட நடைமுறைகள் கொண்ட நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்நிலைகளில் முரணான சட்ட அல்லது கலாச்சார வழக்கங்களின் காரணமாக ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், எடுத்துக்காட்டாக, நிறுவனம் அதன் சொந்த நாட்டின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டுமா அல்லது அது வணிகத்தை மேற்கொள்ளும் வளரும் நாட்டில் உள்ள கண்டிப்பு குறைவான சட்டங்களைக் கடைபிடிக்க வேண்டுமா? போன்ற சில கேள்விகள் எழும். இதனை விளக்குவதற்கு, அமெரிக்க சட்டப்படி நிறுவனங்களில் உள்நாட்டளவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இலஞ்சம் கொடுப்பது சட்டவிரோதமானதாக இருக்கிறது; எனினும், உலகின் மற்ற பகுதிகளில், வணிகத்தில் வழக்கமாகச் செய்யப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியாக கையூட்டு இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பணியாளர் பாதுகாப்பு, பணி நேரங்கள், ஊதியங்கள், பாகுபாடு மற்றும் சூழ்நிலைசார் பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவை தொடர்பான விசயங்களிலும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் சிலநேரங்களில் நெறிமுறைகளுக்கான கிரெஷாமின் விதி பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது, அது சரியான நெறிமுறைசார் நடைமுறைகள் இருந்தால் தவறான நெறிமுறைசார் நடைமுறைகள் வெளியேறிவிடும் என்பதாகும். இது போட்டியான வணிகச் சூழ்நிலைகளில் வலியுறுத்தப்படுகிறது, அதில் நிறுவனங்கள் தொடர்ந்திருப்பதற்கு ஒருவரால் அங்கீகரிக்கப்படுவது என்பது அவர்களின் முக்கிய பங்கு இலாபங்களை மிகுதியாக்குவது மட்டுமே என்பதாலாகும். மிகவும் விரிவான உடன்பாடு மற்றும் நெறிமுறைகள் செயல்திட்டங்கள் ஆகியவற்றின் பகுதியாக, பல நிறுவனங்கள் பணியாளர்களின் நெறிமுறைசார் நடத்தைக்குத் தொடர்புடையதாக இருக்கும் உட்புற கொள்கைகளை வடிவமைக்கின்றன. இந்த கொள்கைகள் பெரிதும்-பரவிய மொழியில் விரிவான எளிமையான அறிவுரைகளாக இருக்கலாம் (பொதுவாக பெருநிறுவன நெறிமுறைகள் அறிக்கை என அழைக்கப்படுகிறது) அல்லது அவை குறிப்பிட்ட நடத்தைசார் தேவைகள் கொண்ட மிகவும் விவரமான கொள்கைகளாக இருக்கலாம் (பொதுவாக பெருநிறுவன நெறிமுறைகள் குறியீடுகள் என அழைக்கப்படுகிறது). அவை பொதுவாக பணியாளர்களிடம் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை அடையாளங்காணுவதற்கு மற்றும் வணிகம் செய்வதன் தொடர்ச்சியில் ஏற்படும் சில மிகவும் பொதுவான நெறிமுறைசார் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான வழிகாட்டுதலை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற கொள்கை பெருமளவில் நெறிமுறைசார் விழிப்புணர்வு, பயன்பாட்டில் இசைவுத்தன்மை மற்றும் நெறிமுறைசார் பேரழிவுகளைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. அதிகரித்துவரும் நிறுவனங்களின் எண்ணிக்கையால் வணிக நடத்தை தொடர்பான ஆய்வரங்குகளில் பங்குகொள்வதும் பணியாளர்களுக்கு தேவையாய் இருக்கிறது, அவை பொதுவாக நிறுவனத்தின் கொள்கைகள், குறிப்பிட்ட நிகழ்வாய்வுகள் மற்றும் சட்டத் தேவைகள் ஆகியவற்றின் விவாதங்கள் உள்ளடக்கியவையாக இருக்கும். ஆயினும் சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களிடம் நிறுவனத்தின் நடத்தை விதிகள் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உறுதியளிக்க வலியுறுத்துகின்றன. பல நிறுவனங்கள், பணியாளர்கள் நெறிமுறை பிறழ்ந்த நடத்தையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்நிலைசார் காரணிகளை மதிப்பிடுகிறார்கள். போட்டியான வணிகச் சூழ்நிலைகள் நெறிமுறை பிறழ்ந்த நடத்தையைத் திணிக்கலாம். வர்த்தகம் போன்ற துறைகளில் பொய்பேசுதல் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சாலோமன் பிரதர்ஸின் நெறிமுறை பிறழ்ந்த நடவடிக்கைகள் சூழ்ந்த சிக்கல்கள் இருக்கின்றன. நெறிமுறை பிறழ்ந்த நடத்தை ஆளுகையுள்ள பெருநிறுவனக் கொள்கைகளை அனைவரும் ஆதரிப்பதில்லை. சிலர் நெறிமுறைசார் சிக்கல்கள் பணியாளர்கள் அவர்களது சொந்த முடிவுகளைப் பயன்படுத்துவது சார்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது என வலியுறுத்துகிறார்கள். மற்றவர்கள் பெருநிறுவன நெறிமுறைகள் கொள்கைகள் பயனோக்கு தொடர்புகளில் அடிப்படை மூலமாக இருக்கிறது, மேலும் அவை முக்கியமாக நிறுவனத்தின் சட்டப் பொறுப்புடைமையை வரம்புக்குட்பட்டதாக்குகின்றன அல்லது ஒரு நல்ல பெருநிறுவனக் குடிமகனாகத் தோற்றம் கொடுப்பதன் மூலமாக நேர்த்தியான பொதுச் சலுகை அளிக்கின்றன என நம்புகின்றனர். கருத்தளவில், ஒரு நிறுவனம் அதன் பணியாளர்கள் விதிகளைப் பின்பற்றுவதனால் வழக்கு எதிர்கொள்ளலைத் தவிர்க்கும். ஒரு வழக்கு தொடுக்கப்படும்பட்சத்தில், பணியாளர் தங்கள் நெறிமுறைக் கொள்கைகளைச் சரியாகப் பின்பற்றியிருந்தால் இந்த சிக்கல் உருவாகியிருக்காது என அந்த நிறுவனம் வாதாடலாம். சிலநேரங்களில் நிறுவனத்தின் நெறிமுறைக் கோட்பாட்டுக்கும் நிறுவனத்தின் உண்மையான நடைமுறைகளுக்கும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆகையால், அது போன்ற நடத்தை திட்டவட்டமாக நிர்வாகத்தால் ஒப்புதலளிக்கப்பட்டதா இல்லையா எனத் தெரியாது, அதன் மோசமான பலனாக, இது கொள்கை ஏமாற்றலை உருவாக்கிவிடும், மேலும், அதன் சிறந்த பலனாக, அது வெறும் சந்தைப்படுத்துதல் கருவியாகச் செயல்படும். வெற்றிகரமாக இருப்பதற்கு, பெரும்பாலான நெறிமுறையாளர்கள் தெரிவிக்கும் நெறிமுறைகள் கொள்கை பின்வருமாறு: நெறிமுறைகள் அதிகாரிகள் (சிலநேரங்களில் "உடன்பாட்டு" அல்லது "வணிக நடத்தை அதிகாரிகள்" என அழைக்கப்படுகிறார்கள்) 1980களின் மத்தியில் நிறுவனங்களால் முறைப்படி நியமிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர் மோசடி, ஊழல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் அவதூறுகள் ஆகியவற்றால் அல்லலுற்றது, இந்தப் புதிய பதவியின் உருவாக்கத்துக்கான வினையூக்கிகளுல் ஒன்றாக அமைந்தது. இது பாதுகாப்புத் துறை முனைப்பின் (DII) உருவாக்கத்துக்கு வழிவகுத்தது, இது நெறிமுறைசார் வணிக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான மற்றும் உறுதிசெய்வதற்கான பான்-துறை முனைப்பாகும். நிறுவனங்களின் நெறிமுறைகள் மேலாண்மைக்கான தொடக்கக் குறியீடுஇலக்கை DII அமைக்கிறது. 1991 இல், நெறிமுறைகள் & உடன்பாடு அதிகாரிகள் சங்கம் (ECOA) -- வணிக நெறிமுறைகளுக்கான அமைப்பில்(MA வில் உள்ள வால்தாமில் உள்ள பெண்ட்லி கல்லூரியில்) நிறுவப்பட்டது, இது முதலில் நெறிமுறைகள் அதிகாரிகள் சங்கமாக (EOA) இருந்தது, தொழில்சார் சங்கமான இது, நிறுவனங்கள் நெறிமுறைசார் சிறப்பான நடைமுறைகளை அடைவதற்கான முயற்சிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்புவகிக்கிறது. உறுப்பினர்கள் எண்ணிக்கை துரிதமாக (தற்போது ECOA வில் 1,100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்) அதிகரித்தது, மேலும் இது விரைவில் சார்பற்ற நிறுவனமாக நிலைகொண்டது. நிறுவனங்கள் நெறிமுறைகள்/உடன்பாடு அதிகாரிகளை நியமிப்பதற்கு முடிவெடுப்பதில் மற்றொரு சிக்கலான காரணி 1991 இல் நிறுவனங்களுக்கான பெடரல் தீர்ப்பளிப்பு வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டதாகும், இது நிறுவனங்கள் (பெரிய அல்லது சிறிய, வணிகரீதியான மற்றும் வணிகரீதியற்ற) பெடரல் குற்றச்செயலில் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் தண்டனைக் குறைப்பை அடைவதற்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய தரங்களை அமைக்கிறது. தீர்ப்பளிப்பதில் நீதிபதிகளுக்கு உதவும் நோக்கில் இது இருந்த போதும், சிறந்த நடைமுறைகளை நிறுவுவதற்கான தாக்கம் மிகப்பரவலானதாக இருந்தது. 2001-04 க்கு இடையில் பல்வேறு பெருநிறுவன அவதூறுகள் எழுந்ததால் (என்ரான், வேர்ல்காம் மற்றும் டைகோ போன்ற பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன), சிறிய மற்றும் நடுத்தர-அளவுள்ள நிறுவனங்கள் கூட நெறிமுறைகள் அதிகாரிகளை நியமிக்கத் தொடங்கின. அவர்கள் பொதுவாக தலைமை செயல் அதிகாரியின் கீழ் பணிபுரிவர், மேலும் அவர்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகளின் நெறிமுறைசார் உள்ளடக்கங்களை மதிப்பிடுதல், நிறுவனத்தின் நெறிமுறைசார் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளை உருவாக்குதல் மற்றும் பணியாளர்களுக்கு தகவலைப் பரப்புதல் ஆகியவற்றுக்கு பொறுப்பாவார்கள். அவர்கள் குறிப்பாக மறைக்கப்படாத அல்லது தடுக்கப்பட்ட நெறிமுறைசார் பிறழ்ச்சி மற்றும் சட்ட விரோதமான நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள். அமெரிக்காவில் இந்தப் போக்கு ஓரளவிற்கு சார்பனெஸ்-ஆக்ஸ்லெ சட்டத்தின் காரணமாக ஏற்படுகிறது, இது மேற்கண்ட அவதூறுகளின் விளைவாக இயற்றப்பட்ட சட்டமாகும். நிறுவனத்தின் முடிவுகளால் எவ்வாறு பங்குதாரர்களின் முதலீடுகள் பாதிக்கப்படலாம் என்பதைக் கண்காணிப்பதற்காக இடர்பாட்டு மதிப்பிடு அதிகாரிகள் அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்புடைய போக்காக இருக்கிறது. சந்தையிடங்களில் நெறிமுறைகள் அதிகாரிகளின் செயல்பாடு தெளிவானதாக இல்லை. சட்டமியற்றக்கூடிய தேவைகளின் விளைவாக அடிப்படையில் நியமனம் உருவாக்கப்பட்டால், ஒருவரிடம் குறைந்தபட்சம் சில காலங்களுக்காவது மிகச்சிறிய அளவு விளைவுத்திறனையே எதிர்பார்க்க முடியும். பகுதியளவில், இது மாறாமல் நெறிமுறைசார் நடத்தை மீது மதிப்பினை வழங்கும் பெருநிறுவன கலாச்சாரத்தின் விளைவினால் ஏற்பட்ட நெறிமுறைசார் வணிக நடைமுறைகளின் காரணமாக ஏற்படுகிறது, இது பொதுவாக நிறுவனத்தின் உயர் மட்டத்திலிருந்து தோன்றும் கலாச்சாரமும் நிலையும் ஆகும். அநேகமாக, நெறிமுறைசார் நடத்தையை மனதில் ஆழப்பதியவைப்பதற்கு, நெறிமுறை சார் மேற்பார்வையிடுதலுக்கென ஒரு பதவியை அமைப்பது மட்டும் போதுமானதாக இருக்காது: பொது மேலாண்மையில் இருந்து இசைவான ஆதரவுடன் கூடிய மிகவும் உள்பரவிய செயல்திட்டம் தேவையாய் இருக்கிறது. நெறிமுறைசார் நடத்தைக்கான அடித்தளம் பெருநிறுவன கலாச்சாரம் மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் செல்கிறது, மேலும் இதில் நபரின் முந்தைய ஒழுக்கப் பயிற்சி, நபரை பாதிக்கும் மற்ற நிறுவனங்கள், நிறுவனத்தின் போட்டியான வணிகச்சூழல் மற்றும் உண்மையில் ஒட்டுமொத்த சமூகமும் கூட பெருமளவில் சார்ந்ததாக இருக்கிறது. 1970களில் வணிக நெறிமுறைகள் தர்க்கரீதியான கட்டுப்பாடாக வெளிப்பட்டது. தர்க்கரீதியான வணிக நெறிமுறைகளுக்கான பதிவேடுகள் அல்லது கலந்தாய்வுகள் நடைபெற்றிருக்காததால், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கைகளை பொது மேலாண்மை வெளியீடுகளில் வெளியிட்டுள்ளனர், மேலும் மேலாண்மையின் சங்கம் போன்ற பொதுக் கலந்தாய்வுகளில் பங்குகொண்டுள்ளனர். காலப்போக்கில், பல்வேறு சமநிலையில்-திறனாய்வு செய்யப்பட்ட பதிவேடுகள் தோன்றின, மேலும் அதிகமான ஆய்வாளர்கள் இந்தத் துறைக்குள் நுழைந்துள்ளனர். குறிப்பாக, 2000ங்களின் முற்பகுதியில் ஏற்பட்ட பல்வேறு பெருநிறுவன அவதூறுகளுக்குப் பிறகு அறிவு செறிந்தவர்களுக்கு இடையில் வணிகத் தலைப்புகளில் அதிகமான ஆர்வம் ஏற்பட்டது. 2009 இல் இருந்து, முன்னணி A+ வெளியீடுகளாகக் கருதப்படும் ஜர்னல் ஆஃப் பிசினஸ் எத்திக்ஸ் மற்றும் பிசினஸ் எத்திக்ஸ் குவார்டர்லி ஆகியவற்றுடன் பல்வேறு வணிக நெறிமுறைகள் வெளியீடுகள் வெளியிடப்பட்டதில் பதினாறு தர்க்கரீதியான பதிவேடுகள் ஈடுபட்டிருந்தன. உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பான சர்வதேச வணிக மேம்பாட்டு நிறுவனம் என்பது வணிக மேம்பாட்டில் உரிமை ஆவணத்தை (CBD) வழங்கும், 217 நாடுகள் மற்றும் அனைத்து 50 ஒருங்கிணைந்த மாநிலங்கள் ஆகியவற்றுக்கு பிரதிநிதியாக இருக்கும் சுய-சீரமைப்பு அமைப்பாகும், இது நெறிமுறைசார் வணிக நடைமுறைகள் மற்றும் தரநிலைகளில் கவனம்கொள்கிறது. இந்த ஆவணம் ஹார்வார்ட், MIT மற்றும் ஃபுல்பிரைட் ஆகியவற்றின் உயர்நிலை கல்வியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இயக்கப்படுகிறது, மேலும் இது பொருளாதாரம், அரசியல், சந்தைப்படுத்துதல், மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் வணிக நெறிமுறைகளுக்கு சார்புடையதாய் இருக்கும் வணிக மேம்பாட்டின் சட்ட அம்சங்கள் உள்ளிட்ட இளங்கலை-நிலை பயிற்சி வகுப்புப் பணியினையும் செய்கிறது. IBDI ஆசியாவின் சர்வதேச வணிக மேம்பாட்டு நிறுவனமும் கூட இதனை மேற்பார்வையிடுகிறது, இது 20 ஆசிய நாடுகளில் வாழும் நபர்களில் வருவாய்க்கான வாய்ப்புக்கான அவரது CBD அல்லது CIBD ஆவணத்தை வழங்குகிறது. தி காட்ஸ் ஆஃப் பிசினஸ்|"தி காட்ஸ் ஆஃப் பிசினஸ்" என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர். டோட் ஆல்பர்ட்சனின் கருத்துப்படி, வணிக நெறிமுறைகள் மீதான சமயப்பார்வைகளின் வரலாற்றுரீதியான மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வணிக நெறிமுறைகளுக்கான தரநிலை அறிமுகங்களில் சிலநேரங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், சமய மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் வணிக நடத்தை மற்றும் வணிக மதிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மீது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்வருவன இதற்கான எடுத்துக்காட்டுகளில் அடங்கும்: வணிக நெறிமுறைகள் வணிகத்தின் தத்துவத்தில் இருந்து வேறுபடுத்தப்படவேண்டும், அது தத்துவசார்பு, அரசியல் மற்றும் வணிகம் மற்றும் பொருளாதாரத்தின் நெறிமுறைசார்|வணிகம் மற்றும் பொருளாதாரத்தின் நெறிமுறைசார் அடித்தளத்தாங்குகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தத்துவத்தின் பிரிவாகும். வணிக நெறிமுறைகள் அனுமானத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது, எடுத்துக்காட்டாக, தனியார் வணிகத்தின் நெறிமுறைசார் செயல்பாடு சாத்தியமானதாகும் -- கட்டுப்பாடற்ற சமதர்மவாதிகள், ("வணிக நெறிமுறைகள்" என்பவை ஒரு முரண்தொடை என வாதிடுபவர்கள்) போன்று அந்த அனுமானத்தை எதிர்ப்பவர்கள், வணிக நெறிமுறையின் முறையான புலத்திலடங்காத வரையறையின் படி இவ்வாறு செயல்படுகின்றனர். வணிகத்தின் தத்துவமானது, வணிகத்தின் சமுகப் பொறுப்புணர்வுகள்; வணிக மேலாண்மைக் கோட்பாடு; தனித்துவம் மற்றும் பொதுக்கூட்டுடைமையின் கோட்பாடுகள்; சந்தையிடங்களில் பங்குபெறுபவர்களுக்கு இடையில் தன்னிச்சை மனப்போக்கு; சுய ஆர்வத்தின் பங்கு; புலனாகாத கை கோட்பாடுகள்; சமூக சுயமுடிவுகளின் தேவைகள்; மற்றும் இயல்பான உரிமைகள், குறிப்பாக வணிக நிறுவனங்களுக்கு தொடர்புடையவைகளின் சொத்து உரிமைகள் போன்ற என்னென்ன துறைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்ற கேள்வியைக் கொண்டுள்ளது. வணிக நெறிமுறைகள் அரசியல் பொருளாதாரத்துடனும் தொடர்புடையதாக இருக்கிறது, இதில் அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து பொருளாதாரத் திறனாய்வாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் பொருளாதார நடவடிக்கைகளின் பங்கீட்டு விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இது பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து யார் இலாபமடைந்தார் யார் நட்டமடைந்தார் என்ற கேள்வியை எழுப்புகிறது, மேலும் இது விளைவு விநியோகச் சந்தை அல்லது வெறும் நெறிமுறைசார் மைய விவகாரங்களாகவும் உள்ளது. ஸ்டீவன் ஜெரார்ட் ஸ்டீவன் ஜார்ஜ் ஜெரார்ட், MBE (; பிறந்தது 30 மே 1980), என்பவர் ஒரு இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அவர் இங்கிலாந்து நாட்டு ப்ரீமியர் லீக் சங்கமான லிவர்பூல் மற்றும் இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்காகவும் விளையாடுகிறார். அவர் தனது தொழில் வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் சென்டிரல் மிட் ஃபீல்ட்டிலேயே விளையாடினார், இருப்பினும் ஃபெர்ணாண்டோ டோரசின் 2007 லிவர்பூல் வருகைக்குப் பின் அவர் முக்கியமாக இரண்டாவது ஸ்டிரைக்கராக அவரது அணிக்கும் மற்றும் இங்கிலாந்து அணிக்கு விங்கராகவும் 2006 ஆம் ஆண்டு முதல் பயன்படுகின்றார். ஜெர்ரார்ட், தனது தொழில் வாழ்க்கைக் காலம் முழுதும் அன்ஃபீல்ட்டில் செலவிட்டவர், தனது துவக்கத்தை 1998 ஆம் ஆண்டில் செய்தார் மேலும் தனது இடத்தை முதல் அணியில் 2000-01 ஆண்டு பருவத்தில் உறுதிப்படுத்திக் கொண்டார், சாமி ஹய்பியாவிற்குப் பிறகு லிவர்பூல் அணித் தலைவராக 2003 ஆம் ஆண்டில் ஆனார். அவரது கௌரவங்களில் இரு எஃப் ஏ கோப்பை வெற்றிகள், இரு லீக் கோப்பை வெற்றிகள், ஒரு UEFA கோப்பை வெற்றி மற்றும் 2005 ஆம் ஆண்டில் UEFA சாம்பியன்ஸ் லீக் வெற்றி ஆகியன அடங்கும். 13 மே 2009 வரை, ஜெரார்ட் தற்போதைய ஃபுட்பால்ல் ரைட்டர்ஸ் அஓஷியேஷன் ஃபுட்லாலர் ஆஃப் தி இயர் விருதை வைத்திருப்பவரும் ஆவார். ஜெரார்ட் தனது சர்வதேச துவக்கத்தை 2000 ஆம் ஆண்டில் துவக்கி, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 2000 மற்றும் 2004 மட்டுமல்லாமல் 2006 FIFA உலகக் கோப்பையிலும் இங்கிலாந்தை பிரதிநிதித்தார், அங்கு அவர் இரு கோல்களுடன் அணியின் உயர் கோல் அடிப்பு எண்ணிக்கையைக் கொண்டவராக இருந்தார். லிவர்பூல் கால்பந்து ரசிகர் ஓட்டெடுப்பான 'ஹூ ஷுக் தி காப்'பில் ஜெரார்ட் 100 ஆட்டக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மெர்செசைட், விஸ்டன் இல் பிறந்த ஜெரார்ட் உள்ளூர் அணியான விஸ்டன் ஜூனியர்களுக்காக விளையாடத் துவங்கினார் அங்கு அவர் லிவர்பூல் ஸ்கவுட்களால் கவனிக்கப்பட்டார். ஒன்பதாம் வயதில் ரெட்ஸ்சின் இளைஞர் அகாடெமியில் இணைந்தார். ஜெரார்ட் அதன் பிறகு முயற்சிகளை பல்வேறு சங்கங்களுடன் பதினாலாம் வயதில் செய்தார் ஆனால் அவரது வெற்றி உடனடியாகக் கிடைக்கவில்லை- ஜெரார்ட் எப்போதும் இங்கிலாந்து பள்ளி மாணவர் அணியில் சேரவில்லை. ஜெரார்ட்டின் முயற்சிகள் மான்செஸ்டர் யுனைடெட்டையும் உள்ளிட்டிருந்தது அதைப் பற்றி தனது 2006 ஆம் ஆண்டு சுயசரிதையில் கூறியது "லிவர்பூலை வற்புறுத்தி YTS ஒப்பந்தத்தை எனக்குத் தரச் செய்யவே." அவர் தனது முதல் தொழில் ரீதியான ஒப்பந்தத்தை லிவர்பூல் 5 நவம்பர் 1997 ஆம் ஆண்டு கையொப்பமிட்டார். ஜெரார்ட் தனது லிவர்பூல் முதல் அணி துவக்கத்தை 29 நவாம்பர் 1998 இல் பிளேக்பர்ன் ரோவர்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் கடைசி நிமிட மாற்றாக வெகார்ட் ஹெக்கெம் காகச் செய்தார். அவர் தனது துவக்கப் பருவத்தில் பதிமூன்று தோற்றங்களைச் செய்தார், காயமடைந்த அணித் தலைவர் ஜேனீ ரெட்ன்னாப்பிற்காக மிட் ஃபீல்ட் நிலையை இட்டு நிரப்பினார் மேஎலும் ரைட் விங்கில் விளையாட்டினார், ஆனால் அவர் களத்தில் நின்ற சிறிதே நேரத்தில் அவரது பதட்டம் காரணமாக அவரது ஆட்டம் தடைப்பட்டதால் பற்றாக்குறையுடன் பங்களிப்புச் செய்தார். ஜெரார்ட் நவம்பர் 2008 "தி கார்ட்டியன் " நேர்முகத்தில் நினைவுக்கூர்ந்தார், " நான் சரியான நிலையில் இல்லை மெல்லும் எனது ஆழத்தில் இல்லை." லிவர்பூல் அதிகார வர்க்கம் குறைவில்லாமல் திருப்தியுடன் அவர்ர் மேம்படுவார் என்றிருந்தது. ஜெரார்ட் தன்னைத்தானே முக்கியமாக டிபஃன்ஸ் ஆட்டக்காரராகக் கண்டார், அணியை முன்னெடுத்துச் செல்லாமல் சரியான தந்திரங்களைக் கையாண்டு தடுப்பாட்டம் ஆடுவதையே காணுற்றார். ஜெரார்ட் ரெட்னாப்புடன் கூட்டுச் சேர்ந்து செண்ட்ரல் மிட்ஃபீல்ட்டில் 1999-2000 பருவத்தில் விளையாடினார். உள்ளூர் விளையாட்டை எவர்டன்னுடன் பெஞ்சில் அமர்ந்து துவங்கியப் பிறகு, அவர் இரண்டாம் பாதியில் ராபி ஃப்வ்லரை இடம் மாற்றினார், ஆனால் அவரது முதல் ரெட் கார்ட்டை எவர்டன்னின் கெவின் காம்ப்பல் மேல் லேட் ஃபவுல் செய்ததால் பெற்றார். அப்பருவத்தின் பின் பகுதியில் ஜெரார்ட் தனது முதல் சீனியர் கோலை 4-1 வென்ற ஷெப்பீல்ட் வெட்னெஸ்டே எதிரானப் போட்டியில் இட்டார். இருப்பினும், அவர் தொடர்ச்சியான கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார், அதை விளையாட்டு ஆலோசகர் ஹான்ஸ்-வில்ஹென் முல்லர்-வொஹல்ஃபார்த் பீன்னர் நோய் கூறு அறிந்து அவரது பதின் பருவத்தில் அதிகப்படியான வளர்ச்சியுடன் அளவுக்கு மீறிய விளையாட்ட்டின் விளைவாக ஏறப்ட்டது என்றார். அவர் பிறகு இடுப்பு காயங்களில் பாதிப்புற்றதால் அதற்கு நான்கு அறுவைச் சிகிச்சைகள் தேவைப்பட்டன. 2000–01 இல், அவர் அனைத்துப் போட்டிகளிலும் ஐம்பது துவக்கங்களைச் செய்தார் மேலும் பத்து கோல்களை அடித்தார் லிவர்பூல் லீக் கோப்பை யை வென்றது, எஃப் ஏ கோப்பை, மற்றும் 2001 UEFA கோப்பையை வென்றது. ஜெரார்ட் சாமி ஹய்பியா யாவை மாற்றி லிவர்பூல் அணித் தலைவராக அக்டோபர் 2003இல் ஆனார், அதற்கு மேலாளர் ஜெரார்ட் ஹௌலியர் கூறினார் அவர் கண்டறிந்தது ஜெரார்ட் தலைமைப் பண்புகளைக் முன்பே காட்டினார், அனால் முதிர்ச்சி தேவைப்பட்டது . அவர் தனது ஒப்பந்தத்தை சங்கத்தில் நீடிக்க புதிய நான்காண்டுகள் ஒப்பந்தத்தைத் தேர்வு செய்தார். ஹௌலியர் 2003-04 பருவ கோப்பையற்று போனப் பிறகு விலகினார், மேலும் ஜெரார்ட் பருவமற்றக் காலத்தில் செல்சிக்கு செல்லப் போவதாக பேசப்பட்டார். . அவர் ஒப்புக்கொண்டது அவர் "லிவர்பூலின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையவில்லை," மேலும் அதனால் "எனது தொழில் வாழ்க்கையில் முதன் முதலாக வேறிடம் செல்லக்கூடிய சாத்தியங்களைச் சிந்தித்தேன்." இறுதியில், ஜெரார்ட் செல்சியிடமிருந்தான £20 மில்லியன் அளிப்பை மறுத்து லிவர்பூலிடமும் புதிய பயிற்சியாளரான ரபேல் பெனிடெஸ்சிடமும் தங்க முடிவெடுத்தார். லிவர்பூல் 2004-05 பருவத்தில் காயங்களால் பாதிக்கப்பட்டு, மேலும் ஒரு கால் காயம் மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிராக செப்டம்பர் லீக் போட்டியொன்றில் ஏற்பட்டதால் துன்பப்பட்ட ஜெரார்ட்டை நவம்பர் கடைசி வரை ஓய்வில் வைத்தது. அவர் திரும்பி வந்து கடைசி ஐந்து நிமிடங்களில் சாம்பியன்ஸ் லீக் பிரிவுப் போட்டி ஒலிம்பியாகாஸ் எதிரானது ஒன்றில் கோலடித்து லிவர்பூலின் நாக்-அவுட் முறை ஆட்டத்தின் சுற்றுக்கு காப்பாற்றினார். அவர் கூறினார் இதுதான் அவரது மிக முக்கியமான, சிறப்பானது அல்ல என்றாலும் லிவர்பூலிற்கு இது நாள் வரையானது. எனினும், ஜெரார்ட் 2005 லீக் கோப்பை இறுதியாட்டத்தில் 27 பிப்ரவரி அன்று, தானே சொந்த கோல் ஒன்றை அடித்தார் அது லிவர்பூல்லின் செல்சிக்கு எதிரான 3–2 கணக்கில் பாதகமாக தோல்வியை உறுதி செய்தது. இரண்டாம் பகுதி ஆறு நிமிடங்களில்2005 சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் ஏ.சி.மிலன் னுக்கு எதிராக, லிவர்பூல் மூன்று கோல்கள் பின்னடைவிலிருந்து 3-3 என்றச் சமநிலைக்கு கூடுதல் நேரத்திற்குப் பிறகு மீண்டதில் ஜெரார்ட் ஒரு கோல் அடித்தார். லிவர்பூலின் மூன்றாம் கோல் பெனால்டியாக ஒரு ஃபவுல்லாக பெறப்பட்டது ஜென்னேரோ கட்டுஸோ ஜெரார்ட்டை மிலனின் பெனால்டி பகுதியில் ஃபவுல் செய்தப் போது அளிக்கப்பட்டது. ஜெரார்ட் பெனால்டி அடியில் பங்கேற்கவில்லை, அதில் லிவர்பூல் 3–2 என்றக் கணக்கில் வென்று இருபது ஆண்டுகளில் முதல் CL டிராபியை கைப்பற்றினர், இருந்தாலும் அவர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார் பின்னர்UEFA கிளப் ஃபுட்பாலர் ஆஃப் தி இயர் விருதினைப் பெற்றார். லிவர்பூலிடம் இருந்த ஒப்பந்தம் பற்றிய விஷயங்களைப் பற்றிக் கேட்டப்போது, ஜெரார்ட் இறுதிப் போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார், "நான் எப்படி இம்மாதிரியான இரவிற்குப் பிறகு வெளியேற முடியும்?" ஆனால் பேச்சுவார்த்தைகள் விரைவில் நின்று போயின மேலும் 5 ஜூலைஇ 2005 இல் லிவர்பூல் மற்றொரு பெரிய அளிப்பைசெல்சியிடமிரூந்து மறுத்தப் பிறகு, ஜெரார்ட் சங்கத்தின் சாதனை அளவான £100,000-ஒரு-வாரத்திற்கு என்ற அளிப்பை நிராகரித்தார். லிவர்பூல் தலைமை நிர்வாகி ரிக் பாரி சங்கம் ஜெரார்ட்டை இழந்து விட்டது என ஒப்புக் கொண்டார், இவ்வாறு கூறி, "தற்போது நாம் மேலே செல்ல வேண்டும். நாம் நமது சிறந்ததைச் செய்து விட்டோம் ஆனால் அவர் அதைத் தெளிவாகச் சொல்லி விட்டார் அவர் வெளிச் செல்ல விரும்புகிறார் மேலும் நான் நினைப்பது அது இறுதியாக நன்றாகத் தெரிகிறது" அடுத்த நாள், ஜெரார்ட் புதிய நான்காண்டுகளுக்கான ஒப்பந்தமொன்றை கையொப்பமிட்டார் பாரி முன்னால் நடந்த பேச்சு முறிவிற்கு இரு தரப்பிற்கும் இடையேயான தகவல் தொடர்பின்மையே காரணம் என்றார். ஜெரார்ட் 2005–06 இல் இருபத்தி மூன்று கோல்களை 53 தோற்றங்களில் போட்டார், மேலும் ஏப்ரலில் முதல் லிவர்பூல் வீரராகஜான் பேர்ன்ஸ் பிறகு 1988 லிருந்து தேர்வான PFA வருடாந்திர வீரர் ஆவார். 2006 இல் எஃப் ஏ கோப்பை யில் இருமுறை இறுதியாட்டத்தில் வெஸ்ட் ஹாம் யுனைடெட், எதிராக கோலடித்தார், அதில் சமன் செய்து ஆட்டத்தை கூடுதல் நேரத்திற்கு இழுத்தது உட்பட அடங்கியது, மேலும் லிவர்பூல் அவர்களது இரண்டாவது தொடர் பெரிய டிராபியை பெனால்டிகளில் பெற்றனர். இக்கோல்கள் அவரை ஒரேடொரு எஃப் ஏ கோப்பை, லீக் கோப்பை, UEFA கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டங்களில் கோலடித்தவராக மாற்றியது. ஜெரார்ட் அடித்த பெனால்டியினால் லிவர்பூல் லீக் போட்டியாளரான செல்சியை2006–07 சாம்பியன்ஸ் லீக் அரை-இறுதியில் வெளியேற்றியது, அவர்களை மூன்று பருவங்களில் இரண்டாவது முறையாக திரும்ப உதவியது, அதில் அவர்கள் மிலனிடம் 2-1 என்ற கணக்கில் தோற்றனர். ஜெரார்ட் 2007 ஆகஸ்ட்டில் முன்காலில் மெல்லிய எலும்பு முறிவிற்கு உள்ளானர் அது சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுப் போட்டிடவுலோஸ் எஃப்.சி எதிரானது, ஆனால் நான்கு தினங்கள் கழித்து முழுமையாக செல்சிக்கு எதிரான 1-1 சமநிலை ஆட்டத்திற்கு விளையாட திரும்ப வந்தார். 28 அக்டோபர் 2007 இல், ஜெரார்ட் லிவர்பூலிற்கான தனது 400 வது ஆட்டத்தை அர்செனல் லுக்கு எதிரான லீக் போட்டியொன்றில் ஆடினார், அதில் அவர் கோலடித்தார். அவர் லிவர்பூலின் ஆட்டங்களில் ஒன்றைத் தவிர நவம்பர் மாதத்தில் உள்நாடு மற்றும் ஐரோப்பிய ஆட்டங்களில் கோலடித்தார் மேலும் சாம்பியன்ஸ் லீக்கில் Olympique de Marseille உடனான வெளியாட்டத்தில் 11 டிசம்பரில் அடிக்கப்பட்ட ஒரே கோலையும் அடித்து, ஜான் ஆல்டிரிட்ஜ் னால் 1989 இல் செய்ததற்குப் பிறகு லிவர்பூலின் முதல் ஆட்டக்காரராக ஏழு ஆட்டங்களில் தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் கோலடித்தவரானார். அவர் தனது 300வது பிரிமீயர் லீக் தோற்றத்தை 13 ஏப்ரல் 2008, பிளாக்பர்ன் ரோவர்ஸ் எதிரான போட்டியொன்றில் துவக்க கோல் அடித்துச் செய்தார் மேலும் பருவத்தை இருபத்தி-இரண்டு லீக் கோல்களை அடித்து நிறைவுச் செய்தார், அவரது 2006–07 பருவ மொத்தத்தை விடக் கடந்தார். ஜெரார்ட் PFA வருடாந்திர அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் மேலும் அவர் PFA வருடாந்திர வீரர் விருதிற்கு நியமனம் செய்யப்பட்டவர்களுள் தனது அணி சகாவான, ஃபெர்னாண்டோ டோரஸ் உடன் ஒருவராவார். ஜெரார்ட் பருவத்தின் துவக்கத்தில் இடுப்பு அறுவைச் சிகிச்சைகு செல்ல வேண்டியிருந்தது, ஆனால் பிரச்சினை தீவிரமானதல்ல மற்றும் விரைவாக பயிற்சிக்கு திரும்பினார். லிவர்பூலிற்காக அவர் அடித்த நூறாவது கோலாக காணப்பட்டதை ஸ்டோக் சிட்டி க்கு எதிராக 20 செப்டம்பரில் அடித்தார், ஆனால் அது டிர்க் குய்ட் ஆஃப்சைட் என அறிவித்தப் பிறகு அனுமதிக்கப்படவில்லை. அந்த மைல்கல்லை அவர் பதினொரு நாட்கள் கழித்து 3–1 சாம்பியன்ஸ் லீக் பிரிவு PSV க்கு எதிரான ஆட்டமொன்றில் எட்டினார். அவர் தனது 100 வது தோற்றத்தை லிவர்பூலுக்காக 10 மார்ச் 2009 இல் ரியல் மாட்ரிட் டிற்கு எதிராக செய்தார் மேலும் 4–0 வெற்றியில் இருமுறை கோலடித்தார். எஇயலுடனான வெற்றிக்கு நான்கு நாட்கள் கழித்து, ஜெரார்ட் ஓல்ட் டிராஃபோர்ட் டில் முதல் முறையாக பெனால்டி இடத்திலிருந்து கோலடித்து, லிவர்பூலை முன்னிலை பெறச்செய்து 4-1 வெற்றியை மான்செஸ்டர் யுனைடெட் மீது பெற்றுத் தந்தார். இத்தகைய முடிவுகளுக்குப் பிறகு, மும்முறை FIFA வருடாந்திர வீரர் ஸினேடென் ஸிடானெ லிவர்பூல் அணித் தலைவரை புகழ்ந்து, கூறினார் "உலகின் சிறப்பானவர் அவர்தானா? அவர்மெஸ்ஸி மற்றும் ரொனால்டொ வுக்கான கவனத்தை பெறாவிட்டலும் சரி, நான் கருதுவது அவருக்கு கிடைக்க வேண்டும்." 22 மார்ச் 2009 இல், ஜெரார்ட் பிரிமீயர் லீக்கில் அவரது முதல் மும்முறை தொடர் கோலை ஆஸ்டன் வில்லா எதிராக, 5-0 வெற்றியில் அடித்தார். 13 மே 2009 இல், ஜெரார்ட் 2009 ஆண்டிற்கானஃபுட்பால் ரைட்டர்ஸ் அசோஷியேஷன் ஃபுட்பாலர் ஆஃப் தி இயர் , ஆக அறிவிக்கப்பட்டார், பத்தொன்பது ஆண்டுகளில் முதல் லிவர்பூல் ஆட்டக்காரராக விருதினைப் பெற்றார். ஜெரார்ட் இதழியலாளர்களால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டின் இரட்டையர் ரியான் கிக்ஸ் மற்றும் வானே ரூனியை முந்தினார், ரியான் கிக்சை 10 ஓட்டுக்களில் தோற்கடித்தார். விருதினை பெறுகையில் அவர் கூறியது"நான் மகிழ்ச்சியடைகிறேன் ஆனால் நான் சிறிதளவு ஆச்சர்யமடைந்தேன்," அவர் விமர்சித்தார். "இந்த லீக்கில் உள்ள வீரர்களின் தரத்தைப் நீங்கள் கண்டால், இது போன்ற விருதினைப் பெற பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்." ஜெரார்ட் தனது சர்வதேச துவக்கத்தை உக்ரைனிற்கு எதிராக 31 மே 2000 இல் செய்தார். அந்தக் கோடையில் யூரோ 2000 ற்கு அழைக்கப்பட்டார், மாற்று ஆட்டக்காரராக 1–0 வெற்றியை செருமனி மீதானதில் தோன்றினர் இங்கிலாந்து பிரிவு நிலையிலேயே வெளியேறும் முன்னர். ஜெரார்ட் தனது முதல் சர்வதேச கோலை ஜெர்மனி மீதான 5–1 வெற்றியில் 2002 உலகக் கோப்பை தகுதிப் போட்டி ஒன்றில் செப்டம்பர் 2001 இல் இட்டார், மேலும் அதேசமயத்தில் இங்கிலாந்து தகுதி பெற்றாலும் , ஜெரார்ட் அணியிலிந்து அவரது தொடந்து வரும் இடுப்பு பிரச்சினையினால் லிவர்பூலின் பருவத்தின் கடைசி போட்டியில் இப்ஸ்விச் சிற்கெதிரானதில் எழும்பிச் செல்லும்போது ஏற்பட்டதால் விலக்கப்பட்டார். அவர் வழக்கமான துவக்க வீரராக Euro 2004 இருந்தார், ஒரேயொரு முறை கோலடித்து - சுவிட்சர்லந்திற்கு எதிராக - இங்கிலாந்து போர்த்துக்கல்லினால் காலிறுதியில் பெனால்டி முறையில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் முன் கோலடித்தார். அவர் தனது முதல் உலகக் கோப்பை யில் 2006 மேலும் 2 கோல்களை, இரண்டும் பிரிவு ஆட்டங்களில், டிரினிடாட்&டொபேகோ மற்றும் ஸ்வீடனுக்கு எதிராக, இருந்தாலும் அவரது ஸ்பாட் கிக் கோல் கீப்பர்ரிக்கார்டோ வினால் தடுக்கப்பட்டது, இங்கிலாந்து மீண்டும் போர்ச்சுகல்லிடம் காலிறுதியில் பெனால்டியில் மண்டியிட்டது. அவர்தான் இங்கிலாந்தின் அதிக பட்ச போட்டித் தொடர் கோல் போட்டவராக இருந்தார். ஜெரார்ட் இங்கிலாந்தின் துணை-அணித் தலைவராக பயிற்சியாளர் ஸ்டீவ் மெக்லாரனால் ஆக்கப்பட்டார், மேலும் அதேப் போல அணித் தலைவராக ஜான் டெர்ரி இடம் நிரப்பிய போது, இங்கிலாந்து வரிசையாக ரஷ்யா மற்றும் குரோஷியா விடம் வீழ்ந்தது அது அவர்களின் யூரோ 2008 ற்கு தகுதி பெறும் நம்பிக்கையைத் தகர்த்தது. புதிய பயிற்சியாளர் ஃபேபியோ கப்பல்லோ 2008 இன் முற்பகுதியில் பொறுப்பேற்றார், ஜெரார்ட் ஒரு முயற்சி ஓட்டமாக அணித் தலைவர் பதவிக்கு வாய்ப்பளிக்கப்பட்டார் ஆனால் கப்பல்லோ டெர்ரியை அப்பாத்திரத்தில் நிலைக்கச் செய்தார். ஜெரார்ட் பின்னர் இங்கிலந்தின் துணை அணித் தலைவராக ரியோ ஃபெர்டினண்டினால் இடம் மாற்றப்பட்டார். ஜெரார்ட் மேலும் தனது சர்வதேச கோல் கணக்கை அதிகரித்தார் அவர் இங்கிலாந்தை2010 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெறச் செய்தப் போது இருமுறை கோல் இட்டார், இங்கிலாந்து குரோஷியாவை வெம்ப்லி அரங்கத்தில் 5-1 என தோற்கடித்தது. ஜெரார்ட் மற்றும் அவரது மனைவி, ஃபேஷன் இதழியலாளர் அலெக்ஸ் குரான், கிளிவேடன் மாளிகையில் இருப்பதுபக்கிங்ஹாம்ஷையர் 16 ஜூன் 2007 அன்று திருமணம் முடித்தனர். அவருக்கு ஒரு மூத்த சகோதரர், பால் (எவர்டன்னின் முன்னாள் கோல் கீப்பர்பால் ஜெரார்ட்) குழப்பத் தேவையில்லை, மற்றும் ஒன்று விட்டச் சகோதரர் ஆண்டனிகார்டிஃப் சிட்டி எஃப்.சி.க்காக விளையாடுபவர் ஆகியோர் உள்ளனர். செப்டம்பர் 2006 இல், ஜெரார்ட், தனது சுயசரிதையை "ஜெரார்ட்: மை ஆட்டோகிராஃபி" , அது ஆண்டின் சிறந்த விளையாட்டுத் துறை புத்தகத்தைபிரிட்டிஷ் புக்ஸ் விருதில் பெறச் சென்றது. சுயசரிதை "நான் ஜான்-பால்லிற்காக விளையாடுகிறேன்." என்று முடியும். ஜெரார்ட்டின்ன் பத்து வயது ஒன்று விட்ட சகோதரன் ஜான் பால் கில்ஹூலே 1989 இன்ஹில்ஸ்புரோ டிராஜெடி யில் கொல்லப்பட்டார் அப்பொது ஜெரார்ட் ஏறக்குறைய 9 வயதில் இருந்தார். "அது அறிவதற்கு கடினமானது உங்கள் ஒன்று விட்டச் சகோதரன் ஒருவன் இறந்து விட்டன் என்பது," ஜெரார்ட் கூறினார். "அவரது குடும்பத்தினரின் எதிவினையை காண்பதே என்னை நான் இன்று விளையாட செலுத்தியது." 1 அக்டோபர் 2007 இல், ஜெரார்ட் மெதுவாக சென்றப் போதும் விபத்தில் சிக்கினார்சௌத்ஃபோர்ட்டில் அவர் செலுத்திச் சென்ற கார் பத்து வயது சைக்கிள் ஓட்டிச் சென்ற பையன் மீது மோதியது, அவன் தெருவில் விழுந்தான் அது ஜெரார்ட்டின் பாதையை தவிர்க்க இயலாமல் மறித்து விட்டது. அவர் பின்னர் பையனை மருத்துவமனையில் காணச் செல்லும் போது ஒரு ஜோடி காலணிகளில் அவனது விருப்ப ஆட்டக்காரர், வானே ரூனி யின் கையெழுத்துக்களைத் தாங்கியதை பரிசளித்தார் அதன் பிறகு தங்கி இதர இளம் ரசிகர் நோயாளிகளுக்கு ஆட்டோகிராஃப் இட்டுத் தந்தார். கவுன்சிலோர்ஸ் ஆஃப் நோஸ்லே ஓட்டளித்து ஜெரார்ட்டை ஒரு ஃப்ரீமேன் ஆஃப் தி பாரோவா ஆக 13 டிசம்பர் 2007, செய்தனர் மேலும் இரு வாரங்கள் கழித்து அவருக்கு மெம்பர்அர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்ப்பயர் பை தி குயின் என ராணியின்புது வருட கௌரவங்களில், விளையாட்டிற்கான சேவைகளுக்கு வழங்கப்பட்டது. அவர் ஒரு கௌரவ டாக்டர் பட்டத்தை லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலையில் 26 ஜூலை 2008 இல் அவரது விளையாட்டிற்கான பங்களிப்பிற்காகப் பெற்றார். 29 டிசம்பர் 2008 இல், ஜெரார்ட் சௌத் போர்ட்டில் லவுஞ் இன் னிற்கு வெளியே பிரிவு 20 தாக்குதல்களின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரும் மற்ற இருவரும் பின்னர் தாக்குதல்கள் நிகழ்வுக்காக குற்றஞ் சாட்டப்பட்டனர் உண்மையில் உடல் ரீதியிலான பாதிப்பு மற்றும் மோதல், மதுக்கடையின் இசை ஜாக்கிக்கு பல் உடைப்பு மற்றும் நெற்றியில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிகழ்வில் தொடர்புடையது அது. மூன்று பேரும் காவல்துறையிடமிருந்து நீதிமன்ற பிணை அளிக்கப்பட்டனர் மேலும் நார்த் செஃப்டன் மாஜிஸ்டிரேட்டின் நீதிமன்றத்தில் 23 ஜனவரி 2009 இல் ஆஜராகும்படி கோரப்பட்டனர், அங்கு அவர்கள் குற்றமற்றவர் என முறையிட்டனர். வழக்கு 20 மார்ச் வரை ஒத்தி வைக்கப்பட்டது அப்போது தாக்குதல் குற்றச் சாட்டு கைவிடப்பட்டது ஆனால் ஜெரார்ட் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் மோதல் காரணமான விசாரனைக்குத் தோன்றும் படி கோரப்பட்டார். 3 ஏப்ரலில், ஜெரார்ட் குற்றமற்றவர் என முறையிட்டார். வழக்கு விசாரணைக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்திற்கு வந்தது. ஜெரார்ட்டின் சக பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் ஜெரார்ட் தனது அறியாமையை தொடர்ந்தார். ஜெரார்ட் மாரிக்கஸ் மெக்கீயை தாக்கியதை ஒப்புக் கொண்டார் அது தற்காப்பிற்கானது மேலும் ஜூலை 24, ஜெரார்ட் ஜூரிகளால் குற்றமற்றவர் என அறியப்பட்டார். தீர்ப்பிற்குப் பிறகு, ஜெரார்ட் தான் மீண்டும் கால்பந்து விளையாடப் போவதை முன் எடுப்பதாகவும் அனுபவத்தை பின் தள்ளப் போவதாகவும் கூறினார். "12 ஜனவரி 2010 வரை சரி பார்க்கப்பட்டது" 352||76||28||10||20||7||106||32||510||126 352||76||28||10||20||7||106||32||510||126 ^ FIFA சங்க உலக சாம்பியன்ஷிப் பின் இரு தோற்றங்கள் மற்றும் ஒரு கோலை உள்ளடக்கியது வென்றது (10) இரண்டாம் நிலை (6) ஜெரார்ட் பலமுறை இரண்டிற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்பாலன் டி' ஆர் மற்றும் FIFA உலக ஆண்டு ஆட்டக்காரர் - பொதுவாக இரண்டும் கால்பந்து உலகின் கௌரவமிக்க விருதுகளாகக் கருதப்படுகின்றன. யூரிக் அமிலம் யூரிக் அமிலம் (அல்லது யூரேட் ) என்பது, கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன ஒரு கரிமச் சேர்மமாகும், CHNO என்பது அதன் மூலக்கூறு வாய்பாடாகும். யூரிக் அமிலமானது இரட்டை புரோட்டான்(சார்) அமிலமாகும், அதன் pKa1=5.4 மற்றும் pKa2=10.3 ஆகும்.. இதனால், அமிலக்காரக் குறியீடு (pH) மதிப்பு அதிகமுள்ள வலிமை மிகுந்த காரங்களில் இது இரட்டை மின்சுமையேறிய முழு யூரேட் அயனியை உருவாக்குகிறது, ஆனால் உயிரியல் அமிலக்காரக் குறியீட்டில் அல்லது கார்பானிக் அமிலம் அல்லது கார்பனேட் அயனிகளின் முன்னிலையில் அது ஒற்றை மின்சுமையுடைய ஹைட்ரசன் அல்லது அமில யூரேட் அயனியை உருவாக்குகிறது, அதன் pKa2 மதிப்பானது கார்பானிக் அமிலத்தின் pKa1 மதிப்பை விட அதிகமாகும். அதன் இரண்டாம் அயனியாக்கம் மிகவும் வலிமை குறைந்தது என்பதால் யூரேட் உப்பு முழுவதும் நீராற்பகுப்புக்கு உட்பட்டு மீண்டும் ஐதரசன் யூரேட் உப்புகள் மற்றும் கட்டற்ற காரமாக மாறுகிறது. இந்நிலையில் அதன் அமிலக்காரக் குறியீடு மதிப்பு நடுநிலைக்கு அருகாமையிலான மதிப்பைக் கொண்டுள்ளது. அது பியூரின் வினைசெயல் தொகுதி இருப்பதால் அது அரோமேட்டிக் சேர்மமாகும். பைசைக்ளிக், ஹெட்ரோசைக்ளிக் பியூரின் வழிப்பொருளாக யூரிக் அமிலம், கார்பாக்சிலிக் அமிலங்களைப் போல புரோட்டானேற்றம் செய்வதில்லை. கீல்வாத படிவுகளாக உயிரினங்களுக்குள்ளே உருவான அம்மோனியம் ஹைட்ரஜன் யூரேட் படிகங்களிலுள்ள ஹைட்ரசன் யூரேட் அயனியின் மீதான எக்ஸ் கதிர் விளிம்பு ஆய்வுகள், பியூரின் கட்டமைப்பின் டாட்டமரின் 2 நிலையில் உள்ள கீட்டோ-ஆக்சிஜன் ஐதராக்சில் தொகுதியாக இருப்பதாகவும் 1 மற்றும் 3 ஆம் நிலையில் உள்ள பக்க நைட்ரசன் அணுக்கள், ஆறு உறுப்பு கொண்ட பை-உடனிசைவு-நிலையான வளையத்திலுள்ள அயனி மின்சுமையைப் பகிர்ந்துள்ளதையும் காண்பிக்கின்றன. இவ்வாறு, பெரும்பாலான கரிம அமிலங்கள் முனைவுள்ள ஹைட்ரஜன்–ஆக்சிசன் பிணைப்பின் அயனியாக்கத்தினால் புரோட்டானிறக்கம் செய்யப்படுகின்றன, வழக்கமாக உடனிசைவு நிலைத்தன்மையின் ஏதேனும் ஒரு வடிவத்துடன் (இதன் விளைவாக ஒரு கார்பாக்சிலேட் அயனி உருவாகிறது) காணப்படும் இந்த அமிலமானது, ஒரு நைட்ரசன் அணுவில் புரோட்டனிறக்கம் செய்யப்படுகிறது, மேலும் pK1 மதிப்பை அதிகரிப்பதற்காக எலக்ட்ரான் திரும்பபெறும் தொகுதியாக டாட்டாமெரிக் கீட்டோ/ஹைட்ராக்சி தொகுதியைப் பயன்படுத்துகிறது. ஐந்து உறுப்பினர் வளையத்திலும் கீட்டோ தொகுதி ஒன்று உள்ளது (8 வது நிலையில்), அது இரண்டு இரண்டாம் நிலை அமினோ தொகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது (7 ஆம் மற்றும் 9ஆம் நிலைகளில்), மேலும் அதிக pH மதிப்பில் இந்த இரண்டில் ஒன்றை புரோட்டானிறக்கமானது pK2 மற்றும் டைப்ரோட்டிக் அமிலமாக இதன் குணம் ஆகியவற்றை விளக்கக்கூடும். ஒத்த டாட்டொமெரிக் மறு ஒழுங்கமைப்பு மற்றும் பை-உடனிசைவு நிலைத்தன்மை ஆகியவை அயனிக்கு ஓரளவு நிலைத்தன்மையைக் கொடுக்கிறது. பொதுவாக யூரிக் அமிலம், அதன் காரங்கள் மற்றும் கார மண் உலோக உப்புகள் ஆகியவற்றின் நீரிலான கரைதிறன்கள் மிகவும் குறைவாக உள்ளன, மேலும் அனைத்துமே குளிர் நீரைக் காட்டிலும் வெந்நீரில் அதிக கரைதிறனைக் காட்டுகின்றன, இதன் மூலம் அவை மறுபடிகமாக்கம் செய்கின்றன. எத்தனாலிலான அமிலம் மற்றும் அதன் உப்புகளின் கரைதிறன் புறக்கணிக்கத்தக்க அளவு மிகவும் குறைவாகும். எத்தனால் நீர் கலவைகளிலான கரைதிறன்கள் தூய எத்தனால் மற்றும் தூய நீரின் இறுதி மதிப்புகளுக்கிடையேயான மதிப்புகளாக உள்ளன. கொடுக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து, குறிப்பிடப்பட்ட ஓரலகு நிறை கொண்ட சேர்மத்தைக் கரைக்க எவ்வளவு நிறை கொண்ட நீர் தேவை என்பதைக் குறிப்பிடுகின்றன. எண் குறைய குறைய குறிப்பிடப்பட்ட கரைப்பானில் அதிக கரைபொருள் கரைகிறது. யூரிக் அமிலம் சாந்தைன் மற்றும் ஹைப்பாக்சாந்தைன் ஆகியவற்றின் சாந்தைன் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இவை பியூரினிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. யூரிக் அமிலமானது திசுக்களுக்கு சாந்தைன் அல்லது ஹைப்போக்சாந்தைன் ஆகியவற்றை விட அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். ஹைப்பாக்ஸிக் நிலைகளில் யூரிக் அமிலம் வெளியிடப்படுகிறது. மனிதர்களில் மற்றும் உயர் விலங்குகளில், யூரிக் அமிலமே பியூரின் வளர்சிதைமாற்றத்தின் ஆக்சிஜனேற்ற இறுதி விளைபொருளாகும், அது சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகிறது. பிற பெரும்பாலன பாலூட்டிகளில், யூரிக் அமிலத்தை யூரிகேஸ் நொதி மேலும் ஆக்சிஜனேற்றம் செய்து அலண்டாயினைக் கொடுக்கின்றன. உயர் விலங்குகளில் யூரிகேசின் இழப்பானது, அஸ்கார்ப்பிக் அமில உற்பத்தித் திறனிழப்பைப் போன்றதேயாகும். யூரிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகிய இரண்டுமே வலிமையான ஒடுக்கிகளாகும் (எலக்ட்ரான் வழங்கிகள்) மேலும் அவை ஆற்றல் மிக்க ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருள்களாகும். மனிதர்களில் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புத் திறனில் பாதிக்கும் மேல், யூரிக் அமிலத்தினாலேயே கிடைக்கிறது. டால்மேட்டியன் நாய்க்கு, கல்லீரல் யூரிக் அமிலம் எடுத்துக்கொள்ளும் திறனில் ஒரு மரபணு குறைபாடு உள்ளது, இதனால் அலாண்டாயினாக மாறும் அளவு குறைகிறது, மேலும் இதனால் இந்த இன நாய்கள், சிறுநீரில் அலாண்டாயினுக்கு பதிலாக யூரிக் அமிலத்தை வெளியேற்றுகின்றன. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும் பாலைவன வாழ் பாலூட்டிகள் சிலவற்றிலும் (எ.கா., கங்காரு எலி), யூரிக் அமிலமானது பியூரின் வளர்சிதைமாற்றத்தின் இறுதி விளைபொருளாக உள்ளது. ஆனால் மலத்தில் உலர்ந்த பொருளாக இது வெளியேறுகிறது. இதில் ஒரு சிக்கலான வளர்சிதைமாற்றப் பாதை சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது இது ஆற்றலைப் பொறுத்தமட்டில், யூரியா (யூரியா சுழற்சியிலிருந்து வருவது) அல்லது அம்மோனியா போன்ற பிற நைட்ரஜன் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிக ஆற்றல் செலவாகும் பாதையாகும். ஆனால் நீர் இழப்பைக் குறைப்பதே இதன் பெரிய நன்மையாகும். மனிதர்களில், யூரிக் அமில வெளியேற்றத்தின் சுமார் 70% சிறுநீரக்த்தின் மூலமாகவே நிகழ்த்தப்படுகிறது, மேலும் 5-25% மனிதர்கள் பலவீனமான சிறுநீரக கழிவு நீக்கத்தையே கொண்டுள்ளனர், இதனால் ஹைப்பர்யூரிகெமியா உருவாகிறது. மக்களில் ஒரு பகுதியினருக்கு, யூரிக் அமிலத்தை சிறுநீரகத்தின் மூலமாக வெளியேற்றுவதற்குப் பொறுப்பான புரோட்டின்களில் சடுதிமாற்றத்தைக் கொண்டுள்ளனர். இது தொடர்பான ஒன்பது ஜீன்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவை: "SLC2A9" ; "ABCG2" ; "SLC17A1" ; "SLC22A11" ; "SLC22A12" ; "SLC16A9" ; "GCKR" ; "LRRC16A" ; and "PDZK1" . "SLC2A9" ஜீனானது யூரிக் அமிலம் அதே சமயம் ஃப்ரக்டோஸ் ஆகிய இரண்டின் போக்குவரத்துக்குமே முக்கியமானதாகும். மனித இரத்த பிளாஸ்மாவில் யூரிக் அமிலத்தின் குறிப்பு வரம்பு 3.6 mg/dL (~214µmol/L) மற்றும் 8.3 mg/dL (~494µmol/L) (1 mg/dL=59.48 µmol/L) ஆகும். அமெரிக்க மருத்துவக் கழகத்தில் இந்த வரம்பே இயல்பானதாகக் கருதப்படுகிறது. இரத்த பிளாஸ்மாவிலுள்ள யூரிக் அமில செறிவுகளின் இயல்பான அளவுக்கு அதிகமான குறைவான அளவுகள் முறையே ஹைப்பர்யூரிகேமியா மற்றும் ஹைப்போயூரிகேமியா என அழைக்கப்படுகின்றன. இதே போல், சிறுநீரிலுள்ள யூரிக் அமில செறிவுகள் இயல்பான அளவுக்கு அதிகமான குறைவான அளவுகள் இருந்தால் அவற்றை ஹைப்பர்யூரிகோசுரியா மற்றும் ஹைப்போயூரிகோசுரியா. இது போன்ற இயல்பற்ற யூரிக் அமில செறிவுகள் மருத்துவ நிலைகளல்ல, ஆனால் பல்வேறு மருத்துவ நிலைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. யூரிக் அமிலத்தின் அதீத சீரம் சேர்தல், கீல்வாதம் எனப்படும் ஒரு வகை மூட்டுவலிக்கு வழிவகுக்கக்கூடும். அதிக சீரம் யூரிக் அமில அளவு (ஹைப்பர்யூரிகேமியா) பியூரின் அதிகமுள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளல், அதிக ஃப்ரக்டோஸ் உள்ளெடுப்பு (ஃப்ரக்டோசின் க்ளைசெமிக் எண் (GI) எதுவாக இருந்தாலும்) மற்றும்/அல்லது சிறுநீரகத்தின் செயல்பாட்டின் பலவீனம் உருவாகலாம். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் பூரித அளவுகளால் யூரேட் சிறுநீரகத்தில் படிகமாகும் போது, ஒரு வகை சிறுநீரகக் கற்களை உண்டாக்கலாம். இந்த யூரிக் அமில கற்கள் கதிர்வீச்சினால் கண்டறியப்பட முடியாதவையாகும், ஆகவே வயிற்றுப்பகுதியிலான எளிய x-கதிர் அல்லது CT ஸ்கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி இவற்றைக் கண்டறிய முடியாது. இந்தக் காரணத்தினால், அவை உள்ளனா என்பதை அல்ட்ராசவுண்ட் முறையின் மூலமே கண்டறிய வேண்டும். மிகப் பெரிய கற்கள் x-கதிர்கள் மூலம் கண்டறியப்படலாம், அவற்றைச் சுற்றியுள்ள சிறுநீரக திசுக்களின் இடமாற்றத்தால் இது முடிகிறது. கீல்வாதமுள்ள சில நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் யூரிக் கற்களைப் பெறுகின்றனர். சீரம் யூரிக் அமில அளவு as 6 mg/dL (~357µmol/L) என்ற அளவில் குறைவாக இருப்பதால் கீல்வாதம் ஏற்படலாம், ஆனால் ஒருவருக்கு சீரம் அளவுகள் 9.6 mg/dL (~565µmol/L) என்ற அளவில் அதிகமாக இருந்தாலும், அவருக்கு கீல்வாதம் இல்லாமல் இருக்கலாம். லெஸ்க்-நையான் நோய்க்குறித்தொகுப்பு என்பது ஒரு அரிதான குறைபாடாகும். இது மிக அதிக சீரம் யூரிக் அமில அளவுகளுடனும் தொடர்புடையதாக உள்ளது. இது உள்ள நோயாளிகளுக்கு தசைப்பிடிப்பு என்னும் தேவையற்ற நேரத்திலான அசைவுகள் மற்றும் புலனுணர்வு குறைதல் மற்றும் கீல்வாதத்தின் பல வகைகள் ஆகியவை காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ஆக்சிஜனேற்றியாக செயல்படக்கூடும் எனினும், அதீத சீரம் சேர்தல் இதயகுழலிய நோயுண்டாவதுடன் தொடர்புடையதாக உள்ளது. இது (எ.கா., ப்ரோ-அக்சிஜனேற்றியாக செயல்படுவதன் மூலம்) விளைவுண்டாக்கக்கூடியதா அல்லது யூரேட்டின் ஆகிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாக்கும் விளைவுடையதா என்பது இன்னும் அறியப்படவில்லை. இன்சுலின் எதிர்ப்புத் திறனுடன் கூடிய அதிக சீரம் யூரிக் அமிலத்தின் அளவுகள் 20ஆம் நூற்றாண்டின் முற்காலத்திலிருந்தே அறியப்பட்டதாகும், இருப்பினும் அதிக சீரம் யூரிக் அமில அளவுகளை நீரிழிவு நோய்க்கான ஒரு காரணியாக உணர்ந்தது எப்போது என்பது இன்னும் விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது. உண்மையில், ஹைப்பெர்யூரிகேமியா எப்போதுமே அதற்கு முன்பிருந்தது என்பதைக் காட்டிலும் இன்சுலின் எதிர்ப்புத் திறனின் விளைவாகவே கருதப்பட்டுவந்துள்ளது. இருப்பினும், அதிக சீரம் யூரிக் அமிலமானது உடல் பருமன், டைஸ்லிப்பிடீமியா மற்றும் ஹைப்பர்டென்ஷன் சார்ந்தல்லாத, வகை 2 நீரிழிவுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என ஒரு எதிர்காலத்திய தொடர் கவனிப்பு ஆய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்பின் சில கூறுகளுடன் ஹைப்பர்யூரிகேமியா தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, மேலும் அது நொயின் ஒரு கூறாகவே இருக்கிறது என்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்பில், ஃப்ரக்டோசினால் தூண்டப்பட்ட ஹைப்பர்யூரிகேமியா ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என சமீபத்திய ஆய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்பில், ஃப்ரக்டோசினால் தூண்டப்பட்ட ஹைப்பர்யூரிகேமியா ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என சமீபத்திய ஆய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் (சர்க்கரை மற்றும் அதிக ஃப்ரக்டோஸ் சோள கூழ்மத்தால் இனிப்பூட்டப்பட்ட பழச் சாறுகள், மற்றும் குளிர்பானங்கள் போன்ற) ஃப்ரக்டோஸ் உள்ள பானங்களின் உட்கொள்வதன் அளவு மற்றும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அளவு ஆகிய இரண்டின் அதிகரிப்புடன் இது இசைவாக உள்ளது. நாள்பட்ட வயிற்றுப்போக்கு, முரட்டுத்தமான உடற்பயிற்சி, நீரிழப்பு மற்றும் விலக்கு புரோட்டின் சுமை ஆகியவை போன்ற இரண்டாம் நிலைக் காரணங்கள் இல்லாமல் தோன்றும் யூரிக் அமிலக் கற்கள் உடல் பருமனுக்கு இரண்டாம் நிலையாகக் கருதப்படுகின்றன, மேலும் வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்பில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காணப்படுகிறது. உணவிலான அமில அளவுகள் அதிகரிப்பு, கல்லீரல் மற்றும் தசைகளில் எண்டோஜெனியஸ் அமில உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இதனால் சிறுநீரகத்திற்கான அமிலச் சுமையும் அதிகரிக்கிறது. அம்மோனியா வெளியேற்றத்தை (ஒரு தாங்கல் சேர்மம்) பலவீனப்படுத்துவனவாகக் கருதப்படும் சிறுநீரக கொழுப்பு உள்வடிகட்டல் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்தச் சுமையானது மிக மோசமாக கையாளப்படுகிறது. இதனால் சிறுநிரானது முழுமையாக அமிலத் தன்மையடைகிறது, மேலும் கரையாததாகவும் ஆகிறது, மேலும் படிகமாகி இதனால் கற்கள் உருவாகின்றன. மேலும் இயற்கையாக உள்ள ஊக்கிகள் மற்றும் தடுப்புக் காரணிகள் ஆகியனவும் பாதிக்கப்படலாம். அதிக யூரிக் கற்கள் இருப்பதை இது விளக்குகிறது, மேலும் வகை 2 நீரிழிவு உள்ள நோயாளிகளின் சிறுநீர் அமிலத் தன்மை இருக்கலாம். யூரிக் அமில படிகங்கள், "விதை படிகங்களாக" செயல்படும் (ஹெட்ரோஜீனியஸ் நியூக்ளியாக்கம்) கால்சியம் ஆக்சலேட் கற்களின் உருவாக்கத்தையும் ஏற்படுத்தலாம். யூரிக் அமிலத்தின் குறைவான சீரம் அளவுகள் தண்டுவட மரப்பு நோயுடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. தண்டுவட மரப்பு நோய் (MS) நோயாளிகளின் சீரம் அளவுகள் ~194µmol/L என்ற அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, உயர் அளவுகளில்லாத நோயாளிகளில் சராசரி அளவு ~160µmol/L என்றும் தடைப்பட்ட நோயாளிகளில் ~230µmol/L என்றும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான நிலையிலான சிரம் யூரிக் அமில அளவு ~290µmol/L ஆகும். மாற்றக் காரணி: 1 mg/dL=59.48 µmol/L 1998 ஆம் ஆண்டி ஒரு ஆய்வு 20 மில்லியன் நோயாளிகளின் ஆவணப் பதிவுகளைக் கொண்ட புள்ளிவிவரப் பகுப்பாய்வை முடித்தது, அது கீல்வாதமுள்ள நோயாளிகள் மற்றும் தண்டுவட மரப்பு நோய் உள்ள நோயாளிகளின் சீரம் யூரிக் அமில மதிப்புகளை ஒப்பிட்டது. இரண்டு தொகு நபர்களின் மதிப்புகளிலும் இடைசேரல் (ஒன்றுடன் ஒன்று கலந்து) காணப்பட்டது. MS உள்ள விலங்கு (எலி) மாதிரிக்கான சிகிச்சை மற்றும் தடுப்பில் யூரிக் அமிலம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தண்டுவட மரப்பு நோய் உள்ள நோயாளிகளின் சீரம் யூரிக் அமிலத்தின் அதிக அளவுகள், வாய்வழியான இனோசின் கூடுதல் உட்கொள்ளலால் குறைவு வீதங்களின் குறைவை உண்டாக்கியது, மேலும் தீய விளைவுகள் ஏதும் இல்லை என 2006 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வு கண்டறிந்தது. யூரிக் அமிலம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் குறிப்பானாக இருக்கலாம், மேலும் ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருளாக சக்தியுள்ள சிகிச்சைப் பங்கையும் கொண்டிருக்கலாம். மற்றொரு புறம், அஸ்கார்பேட் போன்ற பிற வலிமையான ஆக்சிஜனொடுக்கப் பொருள்களைப் போல, யூரிக் அமிலம் ப்ரோ ஆக்சிஜனேற்றியாகவும் செயல்பட முடியும், குறிப்பாக அதிக அளவுகளில் செயல்படும் போது. இதனால், பக்கவாதம் மற்றும் பெருந்தமனித் தடிப்பு போன்ற ஆக்சிஜனேற்ற அழுத்தத்துடன் தொடர்புடைய நோய்களில் யூரிக் அமிலத்தின் அதிக அளவுகள் பாதுகாப்பு பதில்வினையா அல்லது முதன்மைக் காரணமாக உள்ளதா என்பது தெளிவற்றுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, ஹைப்பர்யூரிகேமியா தூண்டும் ஆக்சிஜனேற்ற அழுத்தமானது வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்புக்கான காரணமாகும் என சில ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்துள்ளனர். மற்றொரு புறம் ப்ளாஸ்மா யூரிக் அமில அளவுகள் உயர் விலங்கினங்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் நீடித்த வாழ்வுடன் உடன் தொடர்புள்ளவையாக உள்ளன. இது யூரேட்டின் ஆக்சிஜனேற்றப் பண்புகளின் செயல்பாடாக இருக்கலாம். குறைவான யூரிக் அமில அளவுகளுக்கு (ஹைப்போயூரிகேமியா) பல காரணங்கள் இருக்கலாம். உணவில் குறைவான துத்தநாகம் எடுத்துக்கொள்வதால் யூரிக் அமில அளவுகள் குறையலாம். கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த விளைவு அதிகமாகக் காணப்படுகிறது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புள்ள நோயாளிகளுக்கு அதிப்ஃபாசுஃபேட்டி ரத்த நோய்த் தடுப்புக்கான செவெலேமர் என்னும் மருந்து சீரம் யூரிக் அமில அளவைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கலாம். குறைவாக உள்ள அல்லது போதாமல் உள்ள துத்தநாகத்தின் அளவுகளைச் சரிசெய்வது சீரம் யூரிக் அமில அளவை அதிகரிப்பதற்கு உதவலாம். யூரிக் அமில அளவை அதிகரிக்க இனோசின் பயன்படுத்தப்படலாம். யூரிக் அமிலத்தில் அதிகமாக உள்ள நைட்ரஜன் காரணமாக பறவைகளின் எச்சம் விவசாயத்திற்கான சிறந்த உரமாகப் பயன்படுகிறது. குறிப்பிட்ட சில மின்மினிப் பூச்சி இனங்களில் படிக வடிவ யூரிக் அமிலம் எதிரொளிப்பானாகப் பயன்படுகிறது. சிறுநீரில் உள்ள யூரிக் அமிலம் குழந்தைகளின் அரைக்கச்சைகளில் உலர்ந்து இளஞ்சிவப்பு நிற துகளாகப் படியலாம். ஆனால் அது தீங்கற்றதாகும். பார்கின்சனின் நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்த, யூரேட்டுக்கு ஆக்சிஜனேற்றப் பண்புகள் இருக்கு வாய்ப்புள்ளதா ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது.