துலா துலா அல்லது ஏற்றம் என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும். இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு "அச்சுலக்கை" எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு "ஆடுகால்" எனவும் அழைக்கப்படும். அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும். நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம். ஆறன்முள கொட்டாரம் ஆறன்முள கொட்டாரம் ("Aranmula Kottaram") அல்லது ஆறன்முள அரண்மனை‎ என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறன்முள கிராமத்தில் காணப்படும் வரலாறு சார்ந்த மற்றும் ‎பரம்பரையான ஒரு ‎பழைய அரண்மனையைக் குறிப்பதாகும். 150 ஆண்டுகளுக்கு ‎முன்னால் இந்த ஆறன்முள அரண்மனை ‎கட்டப்பட்டது. இந்த அரண்மனை "ஆறன்முள வடக்கே கொட்டாரம்" ‎என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண கோச ‎யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கு.‎ ஊர்மிளா மடோண்த்கர் ஊர்மிளா மதோண்ட்கர் ("Urmila Matondkar"; ) (இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை நகரில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பிறந்த ஒரு இந்திய பாலிவுட் நடிகை ஆவார். மதோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1977 ஆம் ஆண்டு "கர்ர்ம்" எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வயது வந்தவராக "நரசிம்மா" எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். அவர் "ரங்கீலா" (1995), "ஜுதாயி" மற்றும் "சத்யா" (1998) ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். இவை அனைத்துமே அவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. தீவிரமான நாகரிகப் பாணி மற்றும் நடனத் திறமை ஆகியவற்றிற்காக பெரும் அளவில் அறியப்பட்ட இவர், பல நேரங்களில் "பாலியல் குறியீடு" என்றே இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்பட சந்தர்ப்பங்களும் உள. இதைத் தொடர்ந்து உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த "கோன்" (1999), தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த "பியார் துனே கியா கியா" (2001), ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த "பூத்" மற்றும் இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த "ஏக் ஹசினா தி" (2004) ஆகியவை அடங்கும். "பூத்" திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர் "சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்; மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான "தேஜீப்" (2003), "பிஞ்சர்" (2003) "மைனே காந்தி கோ மாரா" (2005) மற்றும் "பஸ் ஏக் பல்" (2006) ஆகியவற்றிலும் நடித்தார். ஊர்மிளா மதோண்ட்கர் மும்பையில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆந் திகதி பிறந்தார். இவருடைய தாய் மொழி மராத்தி ஆகும். அவர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் "கார்ம் "எனும் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அவரது ஆரம்பகாலத் திரைப்படங்களில் மிகவும் மிகவும் புகழ்பெற்ற திரைப்படமாகத் திகழ்ந்தது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஷேகர் கபூரின் "மாசூம்" எனும் திரைப்படமாகும். வயது வந்த நடிகையாக "படே கர் கி பேட்டி" (Bade Ghar Ki Beti) என்னும் திரைப்படத்தின் மூலம் தமது திரைவாழ்க்கையை அரங்கேற்றினார். இதன் பின் அவர் ஷாருக்கான் ஜோடியாக "சமத்கார்" (Chamatkar) என்னும் காதல் திரைப்படத்தில் நடித்தார். 1989 இல், கமல்ஹாசனுடன் "சாணக்கியன்" எனும் திரைப்படத்தில் நடித்துப் பெரு வெற்றியும் கண்டார். தமது திகிலான மர்மப் படங்களுக்குப் பேர் போன ராம் கோபால் வர்மா என்னும் திரைப்பட இயக்குனருடன் அதிகப் படங்களில் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவருடன் இணைந்து ஊர்மிளா பணியாற்றிய முதல் படம் "அந்தம்" என்னும் தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படம், 1992 ஆம் ஆண்டு "துரோகி" எனும் பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமது முதல் பெரும் வெற்றிப் படமான தெலுங்குத் திரைப்படம் "காயம்" மற்றும் 1995 வருடத்துக்கான இசைத் திரைப்படமான "ரங்கீலா" போன்ற ஆர்.ஜி.வி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட பல திரைப்படங்களிலும் ஊர்மிளா நடித்துள்ளார். அத்துடன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "பைபிள் கி கஹான்யன்" (Bible Ki Kahaniyan) எனும் சின்னத்திரைத் தொடரிலும் நடித்துள்ளார். ரங்கீலா (1995) எனும் திரைப்படத்தின் மூலம் மிலி ஜோசி (Mili Joshi) எனும் பெயரில் மீண்டும் திரைக்கு வந்தார் ஊர்மிளா. இத்திரைப்படத்தில் ஆமிர் கான் ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் பல்வேறு தரப்பட்ட விமர்சகர்களாலும் விமர்சிக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் பாராட்டுக்களை மட்டுமன்றி பண வசூலிலும் சாதனை படைத்தது. பணத்தை இத்திரைப்படம் வசூல் செய்துள்ளது. கோமொலா எனும் இணையத்தளம் இவருடைய கவர்ச்சிகரமான நடிப்புத் திறனைப் பாராட்டியுள்ளது. இதற்காக அவர் தமது முதல் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்காகப் பரிந்துரைக்கப் பெற்றார். "ரங்கீலா" திரைப்படம் பன்னிரண்டு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது, அவற்றில் மதோண்ட்கர் சிறந்த நடிகைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப் பெற்றார். இதைத் தொடர்ந்து வந்த ஆர்ஜிவி திரைப்படங்களான "தௌட்" (1997), "சத்யா" (1999), "கோன்" (1999), "மஸ்த்" (2000), "ஜங்கிள்" (2000), "ப்யார் துனே க்யா கியா" (2001), "பூத்" (2003) மற்றும் "ஏக் ஹசினா தி" (2004) ஆகிய திரைப்படங்களில் ஊர்மிளா தொடர்ந்து நடித்துள்ளார்.. 1997 ஆம் ஆண்டு வருடம் அவர் நடித்த "ஜுதாயி" திரைப்படம் வெற்றி அடைந்தது; ஆனால், "தௌட்" , "அஃப்லாடூன்" போன்ற பிற வெளியீடுகள் அந்த அளவு வெற்றி பெறவில்லை. அவரது நடிப்புத் திறன் அவருக்கு பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தது. 1998வது வருடம் அவர் "சத்யா" திரைப்படத்தில் தமது நடிப்பிற்காக மற்றொரு பிலிம்பேர் பரிந்துரைப்பைப் பெற்றார். "சத்யா" விமர்சன ரீதியிலும் மற்றும் வணிக ரீதியிலும் இது வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரப்படத்தின் பண வசூல் 690.1 மில்லியன் ஆகும். 1999வது வருடம் மனப் பிறழ்வு அடைந்த நோயாளியாக நடித்த "கோன்" திரைப்படத்திற்காக அவர் பெரும் அளவில் பாராட்டப் பெற்றார். இது சுமாரான வெற்றியை அடைந்தது. "ஜானம் சம்ஜா கரோ" மேலும் வெற்றியடைந்தது; "ஹம் தும் பே மர்த்தே ஹைன்" மற்றும் "கூப் சூரத்" ஆகியவை வசூலில் சுமாரான வெற்றியடைந்தன. 2000 ஆம் ஆண்டுகளில் மடோண்தகர் தமது கதாபாத்திர சித்தரிப்புகளில் வலிமையான, பிரம்மாண்டமான, உளவியல் ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தி, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த "ப்யார் துனே க்யா கியா" திரைப்படத்தில் தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்ததற்காகப் பல சாதகமான விமர்சனங்களைப் பெற்றார் மற்றும் பல "சிறந்த வில்லன்" நடிகை விருதுகளுக்கான பரிந்துரைப்பையும் பெற்றார். அத்துடன் இத்திரைப்படமும் கூட பண வசூலில் பெரு வெற்றி கண்டது, இத்திரைப்படத்தின் பண வசூல் 2003 ஆம் ஆண்டு, அவர் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட "பிஞ்சர்" என்னும் படத்தில் அவர் 1947 இந்தியப் பிரிவினை கால கட்டத்தைச் சார்ந்த ஒரு வட இந்தியப் பெண்ணாக நடித்தார். கலீத் மொஹம்மத்தின் நாடக பாணியிலான "தெஜீப்" என்னும் திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக சபனா ஆசுமியுடன் இணைந்து நடித்தார். இருப்பினும் "பூத்" என்னும் திகிலூட்டும் திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காகவே அவர் முக்கியமாகப் பாராட்டப்பட்டார். இதில் மடோண்த்கர் ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைச் சித்தரித்தார். அவரது நடிப்புத் திறன் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது. அவர் சிறந்த செயல்திறனாளர் என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றுக்கொண்டார். மேலும், ஸ்டார் ஸ்க்ரீன் விருது (Star Screen Awards), சீ சினிமா விருது (Zee Cine Awards) மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளிலும் "சிறந்த நடிகை" க்கான விருதுகளைப் பெற்றார். அதன் பின் அவர் இத் திரைப்படத்திற்காக "ராஜிவ் காந்தி விருது" பெற்று தேசிய கௌரவமும் அடைந்தார். இது பாலிவுட்டில் அவரது சாதனைக்கு ஒரு அங்கீகாரமாக அமைந்தது. 2004 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் "ஏக் ஹசினா தி" என்னும் திரைப்படத்தில் இரக்கமில்லாத பழி வாங்குபவராக வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காக அவர் விமர்சன ரீதியான அங்கீரகாரம் பெற்றார். இதில் அவருடன் சைஃப் அலி கான் இணைந்து நடித்திருந்தார். இத் திரைப்படத்தில் அவர் காதலனால் ஏமாற்றப்பட்டு சிறையிலிடப்படும் ஒரு பெண்ணின் பாத்திரத்தைத் திறம்படச் சித்தரித்தார்; சைஃப் அலிகான் அந்தக் காதலனாக வேடமேற்றிருந்தார். இந்தப் பெண் பிறகு சிறையிலிருந்து தப்பித்து அவரைப் பழி வாங்குகிறாள். இந்தப் படத்தில் தமது நடிப்புத்திறனுக்காக மடோண்த்கர் மீண்டும் ஒரு பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இத்திரைப்படமும் கூட வணிக ரீதியாக வெற்றிகண்டது. இத்திரைப்படத்தின் பண வசூல் ஆகும். அடுத்த ஆண்டான 2005 ஆம் ஆண்டில் மற்றொரு திகில் படமான "நாயினா" என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து தமது திறமையை வெளிக்காட்ட முயன்றார்; எனினும், இத் திரைப்படம் தோல்வியுற்றது. இருப்பினும், ஜானு பருவாவின் "மேனே காந்தி கோ நஹின் மாரா" என்னும் கலைப் படத்தில் அனுபம் கேரின் மிகுந்த அக்கறை கொண்ட மகளாக அவர் நடித்தது சிறந்த வரவேற்பைப் பெற்றது; அவர் இரண்டாம் முறையாக சிறந்த நடிகைக்கான பாலிவுட் திரைப்பட விருதினைப் பெற்றார். வெற்றிகரமான நடிப்புத் தொழிலுக்கு அப்பால், அவர் ஒரு மிகச் சிறந்த நடனசிகாமணியாகவும் மதிக்கப்படுகிறார்; பல பாலிவுட் படங்களில் ஐட்டம் நம்பர் எனப்படும் கவர்ச்சி நடனங்களில் நடனமாடியுள்ளார். மிகவும் அறியப்பட்ட அவரது கவர்ச்சி நடனம் 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த "சைனா கேட்" என்ற படத்தில் "சம்மா சம்மா" என்ற பாடலுக்கு அவர் ஆடியதாகும். புகழ் பெற்ற ஏனைய பாடல்களவன; "லஜ்ஜா" என்னும் வெற்றிப் படத்தில் இடம் பெற்ற "ஆயியே ஆஜாயே" என்னும் பாடலாகும். 1975 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றிப் படமான "ஷோலே" யின் மறுவாக்கமான "ராம் கோபால் வர்மா கி ஆக்" என்னும் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூலப்படத்தில் "ஹெலன்" ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். 2007 ஆம் ஆண்டு, மடோண்த்கர் "ஆஷாவும் நண்பர்களும் வால்யூம் 1" என்னும் ஆஷா போன்ஸ்லேயின் இசைத் தட்டிற்காகக் குரல் அளித்தார். இதில் அவர் ஆஷாவுடன் "மெஹபூபா தில்ரூபா" என்னும் பாடலை இணைந்து பாடினார். உண்மையிலேயே, 1990 தொடக்கம் 2000 ஆம் ஆண்டுகள் வரை ஊர்மிளாவுக்கான அதிக பட்சமான பாடல்களை போன்ஸ்லே என்பவரே பாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டில், 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த படமான "கர்ஜ்" என்னும் திரைப்படத்தின் மறுவாக்கமான "கர்ஜ்ஜ்ஜ்" என்னும் திரைப்படத்தில் அவர் ஹிமேஷ் ரேஷாமியாவுடன் இணைந்த்து நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த "டெல்லி சவாரி" எனும் கார்ட்டூன் திரைப்படத்திலும் ஊர்மிளா மடோண்த்கர் நடித்துள்ளார். பின்னோக்குப் பொறியியல் பின்னோக்குப் பொறியியல் ("Reverse Engineering", RE) என்பது ஒரு கருவி, பொருள் அல்லது அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு, இயக்கம், செயல்பாடு ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டு அதன் தொழில்நுட்ப அடிப்படை கருத்துக்களை கண்டுபிடிக்கும் செயலாக்கம் ஆகும். அது, ஏதாவது ஒன்றை (எ.டு. ஒரு இயந்திரம், எலக்ட்ரானிக் கூறு அல்லது மென்பொருள்) எடுத்து, பராமரிப்பில் அதன் செயல்பாட்டினை பகுத்தறிதல் அல்லது அதன் எந்த பூர்வாங்க பாகத்தையும் பயன்படுத்தாமல், அந்த பொருள் செய்யும் அதே வேலையைச்செய்யும் புதிய கருவியை உருவாக்க முயற்சித்தல், என்பதாகும். வியாபார அல்லது இராணுவ இலாபத்திற்காக வன்பொருளை ஆய்ந்தறிதலில் இருந்து, பின்னோக்குப் பொறியியல் தோன்றியுள்ளது. பூர்வாங்கப் பொருள் உற்பத்தியில் பின்பற்றப்பட்ட யுக்திகள் தெரியாமலேயே பொருள் உற்பத்திக்கான வழிமுறைகளைக் கண்டறிதல் இதன் நோக்கமாகும். இதே முறைகள், தொழிற்சாலை அல்லது இராணுவம் தவிர மற்ற சட்டபூர்வ மென்பொருள் அமைப்புகளில், தவறான, முழுமைபெறாத அல்லது கிடைக்கப்பெறாத ஆவணங்களுக்குப்பதிலாகப் பயன்படுத்த, தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னோக்குப் பொறியியலுக்கான காரணங்கள்: கணினி சார்ந்த அமைப்புகள் (CAD)பிரசித்தி பெற்றுள்ளதால், CAD, CAM, CAE அல்லது மற்ற மென்பொருளில் 3Dல் பயன்படுத்த, தற்போதுள்ள 3Dன் பாகத்தின் உண்மையான மாதிரியை உருவாக்க பின்னோக்குப் பொறியியல் ஒரு ஒப்பேற்றும் முறையாக உள்ளது. ஒரு பொருளை அளந்து, பின்பு அதனை 3D மாதிரியாக மாற்றி அமைக்கும் பணியை பின்னோக்குப் பொறியியல் முறை மேற்கொள்ளுகிறது. CMMகள், லேசர் ஸ்கேனர்கள், கட்டமைப்புடன் கூடிய ஒளி டிஜிட்டலாக்கிகள் அல்லது கணினியால் இயங்கும் இட இயல்பு விளக்கம் போன்ற 3D ஸ்கேனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜடப்பொருளை அளக்கலாம். பொதுவாக, அளந்தறியப்பட்ட விவரம் தெளிவற்ற குறிப்பாக இருந்து, இட விவரங்களை முழுமையக அளிக்காததால், அவ்விவரம் மேலும் பயன்படும் வடிவில் உருவாக்கப்பட்டு முக்கோண முகப்புள்ளி வலை, NURBS பரப்புத் தொகுப்பு அல்லது ஒரு CAD மாதிரி போன்ற மாதிரிகளாகின்றன. பின்னோக்குப் பொறியியல் முறை, தற்போதுள்ள ஜடப்பொருளின் அமைப்பினை கணினி டிஜிட்டல் சூழலில் கொண்டுவருதல், உற்பத்திப் பொருள்களின் 3D எண் ஆவணங்களை உருவாக்குதல் அல்லது போட்டியாளார்களின் உற்பத்திப் பொருள்களைப்பற்றி தெரிந்துகொள்ளுதல் ஆகிய வணிகச்செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பு எவ்வாறு வேலை செய்கிறது, அது எந்த வேலையைச் செய்கிறது, அதில் என்னென்ன உட்பொருள்கள் உள்ளன ஆகியவற்றை பகுத்தறிதலிலும் விலையை மதிப்பீடு செய்யவும் சாத்தியமுள்ள காப்புரிமை சட்டமீறிய செயல்களைக் கண்டறியவும் பயன்படுகிறது. இதனோடு தொடர்புடைய பயன்மதிப்புப் பொறியியலும் வணிகத்தில் பயன்படுத்தப்படுகிறது. அது தயாரிப்புப் பகுத்தறிதலை மேற்கொள்ளுகிறது. ஆனால் விலை குறைப்பதற்கான வாய்ப்புகளைக் காண்பதே அதன் நோக்கமாகும். மென்பொருளின் "பின்னோக்குப் பொறியியல்" முறை என்பது வெவ்வேறான மக்களுக்கு வெவ்வேறான விஷயங்களாகும். பல்வேறு பயன்பாடுகளைப் பற்றி ஆய்ந்து தாவர/விலங்குகளின் அறிவியல்பூர்வமான பாகுபாட்டினை வரையறை செய்து எழுத சிக்கோப்ஸ்கை, க்ராஸ் ஆகியோரைத்தூண்டியது. அவர்கள் எழுதிவைத்திருப்பதாவது, "பின்னோக்குப் பொறியியல் முறை என்பது மறைபொருளாக உள்ள ஒன்றின் பிரதியாக உருவாக்க, ஒரு பொருளின் தொகுப்பிணை பகுத்தறியும் முறையாகும்." அது வளர்நிலைவாயிலாக பின்னோக்கிச் செல்லுதல் என்பதையும் காணலாம். இந்த மாதிரியில், மரபுசார் நீர்வீழ்ச்சி மாதிரியின் பின்னோக்கு/தலைகீழ் செயல்போல உட்படுத்தும் கட்டத்தின் வெளிப்பாடு (கருத்து வடிவில்) பகுப்பு கட்டத்திற்கு பின்னோக்கி இயக்கப்படுகிறது. பின்னோக்குப் பொறியியல் முறை என்பது கூர்ந்தாராய்வு முறையே. கருத்திற்கொள்ளப்பட்டுள்ள மென்பொருள் அமைப்பு மாற்றியமைக்கப்படுவதில்லை. (அதை மறுபொறியியலாக்கம் செய்யும்) உரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் மென்பொருளால் இயங்கும் அமைப்புகளின் பின்னோக்குப் பொறியியல் முறை, மீள்பொறியியல் ஆகியவற்றைக் தீர்மனிக்க மென்பொருள் சிதைவுபெறா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு முக்கிய வகைகள், பின்னோக்குப் பொறியியல் முறையில் தோன்றி செயல்பாட்டில் உள்ளன. முதலாவதாக மென்பொருளுக்கான மூலக்குறியீடு ஏற்கனவே உள்ளது. ஆனால் திட்டத்தின் மேல் மட்ட குணாதிசயங்கள் தரமற்ற ஆவணங்களாக உள்ளன அல்லது மேற்கொண்டு பயன்பெறா ஆவணங்களாக உள்ளன. இரண்டாவதாக, மென்பொருளுக்கான மூலக் குறியீடு கிடைக்கப்பெறாமல் மென்பொருளுக்கான ஏதேனும் ஒரு மூலக் குறியீட்டைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளுதல் பின்னோக்குப் பொறியியல் முறையாகக் கருதப்படுகின்றன. இரண்டாம் முறையின் பயன்பாடு பலரிடமும் பிரபலமாக உள்ளது. மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறை பதிப்புரிமை மீறலைத் தடுக்க, தூய அறை அமைப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். சார்ந்த குறிப்பாக, பொதுவாக மென்பொருள் பொறியியலில் கருப்புப் பெட்டி ஆய்வு பின்னோக்குப் பொறியியல் முறை மிகுதியாக உள்ளது. ஆய்வர் வழக்கமாக API பெற்றிருப்பர். ஆனால் அவர்களது இலக்கு, தன்னம்பிக்கையற்று உற்பத்திப் பொருள்களை வெளியிலிருந்து அனுப்புவதன்மூலம் ஏற்படும் கணினி குறைகள், பதிவுறா ஆவணங்களின் தன்மைகள் ஆகியவற்றைக் கண்டறிதலாகும். பின்னோக்குப் பொறியியல் முறையின் மற்ற நோக்கங்களில் பாதுகாப்புத் தணிக்கை, நகல் பாதுகாப்புக் களைதல் ("க்ராக்கிங்"), நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், இயந்திர மேலாண்மைத்திட்டம் போன்ற உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், வீட்டில் பழுதுபார்த்தல் அல்லது பழையவற்றை பதித்தல், சில கிராபிக் நுண்தகடுகளைப் போன்ற விலை மலிவான ஊனமடைந்த வன்பொருளின் கூடுதல் பண்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். சான்றுபெற்ற பின்னோக்குப் பொறியியல் முறை பகுப்பாளர் (CREA), என்பது IACRB ஆல் பின்னோக்குப் பொறியியல் முறை மென்பொருளில் திறன் உடையவர் என அளிக்கப்பட்ட சான்றாகும். இம்முறை "பின்னோக்குக் குறியீட்டுப் பொறியியல்" அல்லது RCE என குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Java பணித்தளத்திற்கான பைனரிகளைப் தொகுப்புநீக்கத்தை Jad ஐப் பயன்படுத்திச் செய்யலாம். பின்னோக்குப் பொறியியல் முறையில் புகழ்பெற்ற ஒன்று, பல ஆண்டுகளாக கணினி வன்பொருள் உலகில் மேலோங்கியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த IBM PC இணக்கத்தன்மை கொண்ட தொழிற்சாலையை துவங்கிய, முதல் PC BIOS ன் IBM அல்லாத செயல்பாடு ஆகும். "பின்னோக்குப் பொறியியல் முறையின் சவால்" என்பதைக் குறிக்கும் CORE என்பதே பின்னோக்குப் பொறியியல் முறை மென்பொருள் குழுவினரின் மகிழ்வதற்கான கண்டுபிடிப்புக்கான ஓர் உதாரணம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டம் (DMCA) சில கோப்பு அமைப்பு, மரபு முறை உள்வாங்கும் திறனை நோக்கமாகக் கொண்டுள்ள பின்னோக்குப் பொறியியல் முறையின் சில செயல்பாடுகளை, ஏமாற்றுத்தடுப்பிலிருந்து விலக்களிக்கிறது. ஆனால், இணைப்புக்கன்றி, உபயோகத்திற்காக ஏமாற்றுக்கட்டுப்பாடுகளை ஏற்கலாம் என்பதால், முக்கியமான வழக்குகளில் நீதியரசர்கள் இச்சட்டத்தை புறக்கணித்துள்ளனர். ஏமாற்றுக் கட்டுப்பாடுகளைத் தவிர, மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறை, பதிப்புரிமைச் சட்டத்தில் நடுநிலை உபயோகத்திற்கான தவிர்ப்பால், அமெரிக்காவில் பாதுகாக்கப்படுகிறது. Windows இல்லாத கணினி அமைப்புகள் பின்பற்ற, Windows கோப்புகள் பகிர்ந்து செயல்படத்தேவையான விவரங்கள் வெளியிடப்படாததால், Windows இல்லாத கணினி அமைப்புகள், Windows உள்ள கணினி அமைப்புகளின் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் உருவாக்கப்பட்ட சாம்பா மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறைக்கான சிறந்த உதாரணமாகும். வைன் திட்டம், Windows APIக்காக இதே வேலையைச் செய்கிறது. OpenOffice.org Microsoft Office கோப்பு அமைப்புகளுக்காகப் பணிசெய்யும் ஒரு பிரிவினர். GPL திறந்தவெளி-கருத்து பங்கேற்பில், தூய்மையான பின்னோக்குப் பொறியியல் முறையில் விண்டோஸ் செயலாற்ற எழுதப்பட்ட மென்பொருள் மற்றும் சக்தியைப் பயன்படுத்தி, NTபிரிவின் Windows OSகளுடன் உள்ள பைனரிகளை (ABI மற்றும் API) அளிக்க முயற்சிப்பதால், ReactOS திட்டம் அதன் இலக்குகளில் அதிக ஆர்வமாக உள்ளது. மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் பல்வேறுமுறைகளில் நிறைவேற்றப்படலாம். மென்பொருள் பின்னோக்குப் பொறியியல் முறையின் மூன்று முக்கியப்பிரிவுகள்: பல UML கருவிகள், UML வரைபடங்களை பின்னோக்குப் பொறியியல் முறையாக உருவாக்க, மூலக்குறியீட்டினை இறக்குமதி செய்யும் முறையைக்குறிக்கின்றன. UML கருவிகள் பட்டியலைக் காண்க. பின்னோக்குப் பொறியியல் என்பது ஒரு ஸ்மார்ட் கார்டைப் பகுப்பாய்வு செய்தலின் பரவலான மற்றும் அழிவு ரீதியான வடிவமாகும். தாக்குதல் நடத்துபவர் ஸ்மார்ட் கார்டின் ஒவ்வொரு அடுக்காக அறிந்துகொள்கிறார், பின்னர் ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியால் படங்களை எடுத்துக்கொள்கிறார். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு ஸ்மார்ட் கார்டின் முழு வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளைத் தெரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தும் எவ்வாறு செயல்படுகின்றன என அறிவதற்கு அவற்றை சரியான வரிசையில் கொண்டமைப்பதே தாக்குதல் நடத்துபவருக்கான பெரிய சிக்கல் ஆகும். பொறியாளர்கள், உதாரணமாக, பஸ்ஸ்க்ராம்ப்லிங் போன்ற முறைகளின் மூலமாக நினைவுப்பகுதிகளை கலப்பதன் மூலம் திறவுகோல்களையும் முக்கிய செயல்பாடுகளையும் மறைக்க முயற்சிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், ஸ்மார்ட் கார்டு இயக்கத்தில் இருக்கும்போதே கூட மின்னழுத்தங்களை அளவிட ஒரு சோதனை அம்சத்தை இணைப்பதும் சாத்தியமே. இந்த தாக்குதலைக் கண்டறியவும் தடுக்கவும் பொறியியலாளர்கள் சென்சார்களைப் பயன்படுத்துகின்றனர். பணத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டை சிதைப்பது மிகவும் கடினமாகும், மேலும் அந்த தொழில்நுட்ப உபகரணம் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். கூடுதலாக, நிழல் கணக்குகள் போன்ற பிற பாதுகாப்பு இயங்கமைப்புகளின் காரணமாக இதன் நன்மை குறைவாகவே உள்ளது. இராணுவ வீரர்களால் வழக்கமாக அல்லது நுண்ணறிவு நடவடிக்கைகளின் மூலமாக போர்க்களங்களில் கைப்பற்றப்பட்ட பிற நாடுகளின் தொழில்நுட்பங்கள், சாதனங்கள் அல்லது தகவல்கள் போன்றவற்றை நகலெடுக்க பின்னோக்குப் பொறியியல் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போரின் போது அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. WWII மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் போதான நன்கறியப்பட்ட எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்: அமெரிக்காவிலும் பிற பல நாடுகளிலும் ஒரு விமானம் அல்லது செயலாக்கம் வர்த்தக இரகசியங்களால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கூட விமானம் அல்லது செயலாக்கத்தின் பின்னோக்குப் பொறியியலாக்கம் சட்டப்பூர்வமான அனுமதியுடன் செய்யப்படும் வரை மட்டுமே சட்டத்திற்குட்பட்டதாகும். மற்றொருபுறம் காப்புரிமைகளைப் பொறுத்த வரை ஒரு கண்டுபிடிப்பின் பொதுமக்களிடையேயான வெளிப்படுத்தல் அவசியமாகிறது, மேலும் இதனால் காப்புரிமை பெறப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்வதற்கு அவற்றை பின்னோக்குப் பொறியியலாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஒரு போட்டியாளரின் தயாரிப்பில் காப்புரிமை மீறல்கள் அல்லது பதிப்புரிமை மீறல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவதே பின்னோக்குப் பொறியியலாளர்களின் ஒரு பொதுவான நோக்கமாகும். (எடுத்துக்காட்டுக்கு, ஆவணமாக்கப்படாத கோப்பு வடிவமைப்பு அல்லது ஆவணமாக்கப்படாத வன்பொருள் பாகங்களை ஆதரித்தல் போன்ற) இடைசெயல்தன்மை போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட பின்னோக்குப் பொறியியல் மென்பொருள் அல்லது வன்பொருள் பெரும்பாலும் சட்டப்புர்வமானதாகவே இருப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் காப்புரிமையாளர்கள் ஏதேனும் காரணத்திற்காக இதைப் போட்டியாக எடுத்து அவர்களின் தயாரிப்பு சார்ந்த பின்னோக்குப் பொறியியலாக்கம் ஏதேனும் அதில் உள்ளதா என கண்டறிய முயற்சிக்கின்றனர். மீதரவு மேனிலைத் தரவு அல்லது மேல்தரவு (ஆங்கிலத்தில் மெட்டாடேட்டா ("Metadata")), ' என்பது பொதுவாக "தரவுகளைப் பற்றிய ஒரு தரவு" அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை "தரவுகளின் தரவுகள்" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு (மெட்டாடேட்டா) என்பது, பார்வையாளர்கள் பார்க்க அல்லது அனுபவம் பெற விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றை விவரிக்கும் உரை, ஒலி அல்லது படமாகும். பார்வையாளர் என்பது, ஒரு நபராகவோ, குழுவாகவோ அல்லது கணினி மென்பொருள் நிரலாகவோ கூட இருக்கலாம். உண்மையான தரவுகளை கண்டுபிடிக்கவும் தெளிவுபடுத்தவும் மெட்டாடேட்டா (தரவுகளின் தரவு) உதவுவதால் அது முக்கியமானதாகிறது. மெட்டாடேட்டாவின் ஓர் உருப்படி, ஒரு தனி தரவையோ அல்லது உள்ளடக்க உருப்படியையோ அல்லது தரவுத்தளத் திட்டம் போன்ற பல உள்ளடக்க உருப்படிகள் மற்றும் பல படியமைப்புகளையோ தரவுத் தொகுப்பையோ விவரிக்கலாம். தரவு செயலாக்கத்தில், ஒரு பயன்பாட்டில் அல்லது சூழலில் கையாளப்படும் தரவுகளைப் பற்றிய தகவல்கள் அல்லது அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றை அளிக்கிறது. பொதுவாக இது முதன்மை தரவின் அமைப்பு அல்லது திட்டத்தை வரையறை செய்கிறது. எடுத்துக்காட்டாக, மேனிலைத் தரவுகளின் தனிப்பொருள்கள் அல்லது பண்புக்கூறுகள் (பெயர், அளவு, தரவு வகை, முதலியன) மற்றும் பதிவுகள் அல்லது தரவுக் கட்டமைப்புகள் (நீளம், புலங்கள், நிரல்கள் முதலியன) ஆகியவற்றைப் பற்றிய தரவுகள் மற்றும் தரவுகளைப் பற்றிய தரவுகள் (அது எங்கு வைக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது, உரிமைத்தன்மை முதலியன) ஆகியவற்றை ஆவணப்படுத்தும். தரவின் சூழல், தரம் மற்றும் நிலை அல்லது சிறப்புப் பண்புகள் ஆகியவற்றை விரித்துரைப்பதாகவும் மேனிலைத் தரவு (தரவுகளின் தரவு) இருக்கலாம். அது அதிக அல்லது குறைந்த குறிப்புள்ளடக்கம் கொண்டதாகப் (கிரானுலாரிட்டி அல்லது குறிநொய்மையுடன்) பதிவு செய்யப்படலாம். மேனிலைதரவிற்கான எடுத்துக்காட்டு கோப்புகளின் அமைப்புகளில் காணப்படுகின்றன. கோப்பு எந்த தேதியில் உருவாக்கப்பட்டது, கடைசியாக எப்போது மாற்றியமைக்கப்பட்டது, கோப்பு (அல்லது மேனிலைத்தரவே) கடைசியாக எப்போது அணுகப்பட்டது என்பவற்றைப் பதிவு செய்யும் மெட்டாடேட்டா, தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொறு கோப்புடனும் இணைந்துள்ளது. மேனிலைத் தரவு, தரவுகளுக்கான சூழலை அளிக்கிறது. மனிதர்கள் மற்றும் கணினிகள் தரவுகளைப் புரிந்துகொள்வது, பயன்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றை மேம்படுத்த மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, மெட்டாடேட்டா, மற்றவர் புரிந்துகொள்ளும்படி தரவுகளை கருத்தியலாக விவரிக்கக்கூடும், மற்றவர் பயன்படுத்தும்படி தரவுகளை தொடரியல் ரீதியாகவும் விவரிக்கக்கூடும், இருவகை விவரிப்புகளும் இணைந்து தரவுகளை எவ்வாறு கையாள்வது என முடிவெடுத்தலை எளிதாக்கும். தரவின் தன்மை, அவற்றைப் பயன்படுத்துவதற்கான சூழல், அவற்றின் அவசியம் ஆகியவற்றோடு தரவு தொடர்பான பணிகளை திறம்படச் செய்ய மெட்டாடேட்டா தேவைப்படுகிறது. தனியாகவோ மொத்தமாகவோ பயன்படுத்தவும், பல்வேறு பயனர்களால் பல்வேறு இலக்குகளை அடையும் தேவவக்கு பயன்படவும், தரவு வழங்குநர்கள் பெரும்பாலும் மெட்டாடேட்டாவின் பல புலங்களை பயனர்களும் அணுகும் வகையில் அளிக்கிறார்கள். இப்பயனர்கள், மனித "இறுதிப் பயனர்கள்" அல்லது பிற கணினி அமைப்புகளாக இருக்கலாம். மெட்டாடேட்டாவின் பயன்பாட்டினைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள "பயன்" எனும் பிரிவைப் பார்க்கவும். இந்த எடுத்துக்காட்டுகள், குறிப்பிட்ட டிஜிட்டல் உருப்படிகளினை விவரிக்கும் மெட்டாடேட்டாவை பட்டியலிடுகின்றன. மெட்டாடேட்டாவின் சில வரையறைகளுடன் தெளிவாகவும் முரண்பாடின்றியும் இருப்பதற்காக, இந்த எடுத்துக்காட்டுகள், புத்தகம் போன்ற ஒரு ஜடப்பொருளில் உள்ள தரவு போலல்லாமல், ஒவ்வொரு நிகழ்வும் டிஜிட்டலாக்கப்பட்ட வடிவில் விவரிக்கப்படுகின்றன. (டிஜிட்டல் வடிவில் இல்லாத கருத்து தகவல்களைப் பொறுத்தமட்டில், மெட்டாடேட்டா, உள்ளடக்கத்தினை விவரிக்கும் ஒன்றே தவிர, ஜடப்பொருள்ரீதியாக தெரிவிப்பதல்ல). பல நிகழ்வுகளில், மெட்டாடேட்டா உருப்படியின் உள்ளடக்கத்தினை(கருத்தியலாக) விவரிக்க பயன்படுவதையும் அந்த உருப்படி எவ்வாறு தோன்றியது (மெய்ப்பிக்கப்பட்டது) என்பதையும் கணினி அதைப் பயன்படுத்த தேவையான தகவல்கள் ஆகியவற்றையும் இந்த எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன. கணினி தொடர்பான விவரங்கள் பற்றிய தகவல்களின் கடைசித் தொகுப்பு, வழக்கமாக பயனர்க்குத் தெரியாதவகையில் மறைத்துவைக்கப்படுகிறது. ஆனால் உட்கோப்பின் பெயர், அமைவிடம், டிஜிட்டல் வடிவில் உள்ள உருப்படிக்கான உருவாக்க/அணுகல் எண்ணிக்கை ஆகியவை அதில் இருக்கும். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மெட்டாடேட்டாவின் கருத்து தனித்தன்மை கொண்டதாக அமைவதால்—"ஒருவரது தரவு மற்றொருவரது மெட்டாடேட்டா"— எடுத்துக்காட்டுகளை உண்மையானதாக கருதாமல் விளக்குவதற்கானதாக கருத வேண்டும். டிஜிட்டல் வீடியோ ரெகார்டர்களால் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது படங்களில், மெட்டாடேட்டா அதிக அளவில் உள்ளது. இவற்றில் தலைப்பு, இயக்குநர், நடிகர்கள், பொருளடக்கம், பதிவு செய்தலின் நீளம், விமர்சன மதிப்பீடு, பதிவுக்கான தரவு மற்றும் மூலம் ஆகியவை அடங்கும். கணினி அமைப்புகள் பயன்படுத்தும் மெட்டாடேட்டாவில் கோப்பின் பெயரும் தற்போதைய நிலையும் அடங்கும். (காணும் நிலை, எந்நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்ற தேதி) ஒரு புத்தகத்தின் மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டுகள், தலைப்பு, ஆசிரியர்(கள்), வெளியிடப்பட்ட நாள், பொருள் (விஷயம்), பிரத்யேக அடையாளம் (உலகத்தர புத்தக எண் (ஐ.எஸ்.பி.என்)), பக்க எண், உரையின் மொழி ஆகியவையாகும். எலக்ட்ரானிக் வடிவத்திற்கென உள்ள பிரத்யேக மெட்டாடேட்டாவில் பயன்பாடு (கடைசியாக திறக்கப்பட்டது, தற்போதுள்ள பக்கம், எத்தனை முறை படிக்கப்பட்டது) மற்ற பயனர்-வழங்கிய தரவுகளும் (தரம், குறிச்சொற்கள், மேற்கோள்கள்) ஆகியவை அடங்கும். கணினி அமைப்பில் பயன்படும் மெட்டாடேட்டாவில் உள்ளடக்கத்திற்கான வாங்குதல் மற்றும் டிஜிட்டல் உரிமை சார்ந்த விவரங்கள் இருக்கலாம். டிஜிட்டல் படங்கள், டிஜிட்டல் படங்களையும் கணினியில் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தி அமைக்கப்பட்ட படங்களையும் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் படங்களின் மெட்டாடேட்டாவில், அது உருவாக்கப்பட்ட நாள், நேரம், கேமரா அமைப்பு விவரம் (குவியத்தூரம், ஒளி பாய்வதற்கான துளை, எக்ஸ்போஷர்) ஆகியவை அடங்கும். பல டிஜிட்டல் கேமராக்கள் மெட்டாடேட்டாவினை, மாற்றத்தக்க வகையிலான் படக் கோப்பு வடிவமமப்பு (ஈ.எக்ஸ்.ஐ.எஃப்) அல்லது ஜே.பீ.ஈ.ஜீ போன்ற, அவற்றின் டிஜிட்டல் படங்களாக பதிவு செய்கின்றன. சில கேமராக்கள், எந்த சூழலில் படம்பிடிக்கப்பட்டது (உ.ம்.ஜீ.பீ.எஸ்லிருந்து) போன்ற அதிக மெட்டாடேட்டாவினை தாமாகவே சேர்த்துக்கொள்கின்றன. பெரும்பான்மையான படத் திருத்த மென்பொருளில், டிஜிட்டல் உருவத்தில் உள்ள சில மெட்டாடேட்டாவும், உருவத்தோற்றம் மற்றும் உரிமம் சார்ந்த உட்பொருளும் உள்ளன. ஒலிப்பதிவுகளும் மெட்டாடேட்டாவால் லேபிளிடப்படலாம். ஒலி வடிவமைப்புகள் அனலாகிலிருந்து டிஜிட்டலுக்கு மாறியபோது, இந்த மெட்டாடேட்டாவினை டிஜிட்டல் உள்ளடக்கத்திலேயே உட்பொதித்து வைக்க முடிந்தது. (மெட்டாடேட்டா ஏதும் இன்றியுள்ள டிஜிட்டல் உட்பொருள், ஒலிஅலை வடிவத்தில் உள்ள ஒரு கோப்பே ஆகும். டிஜிட்டல் ஒலி கோப்பினைப் பெயரிட, விவரிக்க, பட்டியலிட, உரிமைத் தகுதி அல்லது பதிப்புரிமையைக் குறிப்பிடவும் ஒலிப்பொருளடக்கத்தின் பயன்படும் பண்புகளை அனுமதிக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படலாம். (தரம், குறிச்சொற்கள், மற்ற துணை மெட்டாடேட்டா) மெட்டாடேட்டாவை அணுகும் ஓர் தேடுபொறியின் மூலம், ஒரு குழுவில் உள்ள குறிப்பிட்ட ஒலிக்கோப்பினைக் கண்டறியும் செயலை மெட்டாடேட்டா எளிதாக்குகிறது. பயனர் இடைமுகத்தை வழங்க, கணினியில் ஆடியோ பிளேயர் அல்லது ஆடியோ பயன்பாடு மெட்டாடேட்டாவையே பெரிதும் சார்ந்துள்ளது. வெவ்வேறான டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டதால், டிஜிட்டல் கோப்புகளில் விவரங்களை சேமித்துவைக்க ஒரு நிலையான, குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, எம்.பி3, ஒலிபரப்பு அலை, ஏ.ஐ.எஃப்.எஃப் கோப்புகள் ஆகியவை உள்ளிட்ட கிட்டத்தட்ட எல்லா டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகளும் மெட்டாடேட்டாவோடு சேகரிக்கக்கூடிய ஒரே மாதிரியான தரமான இட அமைப்புகளைப் பெற்றுள்ளன. எளிதாக அணுகி பயன்படுத்தும் வகையில், மெட்டாடேட்டாவை உருவாக்கும் அட்டவணையும் விளக்கத் தகவல்களும், ஒலிக்கோப்பில் நேரடியாக உருவாக்கப்படுவதால், டிஜிட்டல் ஒலிக்கோப்புகள் செயல்பட, இந்த "தகவலைப் பற்றிய தகவல்" சிறந்தவற்றில் ஒன்றாக அமைந்துள்ளது. வலைப்பக்கங்களை வரையறை செய்ய பயன்படும் எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, எளிய விளக்க உரை, தேதிகள் மற்றும் முக்கிய சொற்கள் முதல் டப்லின் கோர் மற்றும் ஈ-ஜி.எம்.எஸ் தரநிலை போன்ற மிகவும் நுண்ணிய தகவல்கள் வரையுள்ள, மெட்டாடேட்டாவின் பல்வேறு வடிவங்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆய அச்சுகள் கொண்டு பக்கங்களுக்கு புவியியல் குறிச்சொற்கள் சேர்க்கப்படலாம். மெட்டாடேட்டா, பக்கத்தின் மேற்குறிப்பிலோ அல்லது தனிப்பட்ட கோப்பிலோ சேர்க்கப்படலாம். நுண்ணிய வடிவமைப்பு(மைக்ரோ வடிவமைப்பு)கள், பயனர்கள் பார்க்க முடியாத, ஆனால் கணினிகளால் எளிதாக அணுக ஏதுவாக, மெட்டாடேட்டாவை தரவுப் பக்கத்தில் சேர்க்க அனுமதிக்கிறது. மெட்டாடேட்டா விளக்கங்களின் படிவரிசைகள் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக சூழல் அல்லது பொருள் ரீதியான புரிதலால் மிக அதிக விரிவான விளக்கங்கள் தேவையற்றதாகின்றன. எந்தவொரு குறிப்பிட்ட தரவின் பங்கும், சூழலைச் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, லண்டன் புவியியலைக் கருத்தில் கொள்ளும்போது, "ஈ8 3பிஜே" தரவாகவும் "அஞ்சல் குறியீடு" மெட்டாடேட்டாவாகவும் அமையும். ஆனால், நிலவியல் தரவினை கையாளும் தரவு மேலாண்மை தானியங்கி கணினி அமைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது, "அஞ்சல் குறியீடு" ஒரு தரவாகவும், "தரவ உருப்படிப் பெயர்" மற்றும் "ஏ முதல் இசட் வரையுள்ள 6 எழுத்துகள்" ஆகியவை மெட்டாடேட்டாவாகவும் இருக்கும். எந்தவொரு குறிப்பிட்ட சூழலிலும், மெட்டாடேட்டா, அது விவரிக்கின்ற தரவின் தன்மைகளை விவரிக்கிறதே தவிர தரவால் விவரிக்கப்படும் பொருளை அல்ல. ஆகையால், "ஈ8 3பிஜே" தொடர்புள்ள "லண்டனில் உள்ளது" என்ற தரவு, "ஈ8 3பிஜே" என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட உலகத்தில் உள்ள இடத்தினை விவரிப்பதே தவிர அந்தக் குறியீட்டை அல்ல. எனவே, "ஈ8 3பிஜே" தொடர்புள்ள விவரங்களை அளித்தாலுங்கூட(இது லண்டனில் உள்ள ஒரு இடத்தின் அஞ்சல் குறியீடு என நமக்கு தெரிவிக்கிறது), இது "ஈ8 3பிஜே"ஐ தரவாக இல்லாமல், உலகத்தில் ஒரு இடமாக விவரிப்பதால், பொதுவாக இது மெட்டாடேட்டாவாக கருதப்படமாட்டாது. மெட்டா என்பது, ஆங்கிலத்தில், பெயர்ச்சொல்லோடு தொடர்புடையதைப் பொறுத்து, அதோடு; உடன்; மூலமாக; இடையில்; பிறகு; பின்னால் ஆகியவற்றை தெரிவிப்பதாக உள்ள, கிரேக்க மொழியில் பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் வார்த்தை (μετ’ αλλων εταιρων) மற்றும் வார்த்தையின் முன்னிணைப்பு (μεταβασις) ஆகும். அறிவுத் தத்துவவியலில் இச்சொல்லானது "(அதன் சொந்த வகையைப்) பற்றியது" என பொருள்படுகிறது. இவ்வாறாக மெட்டாடேட்டா என்பது "தரவுகள் பற்றிய தரவு" ஆகும். வார்த்தை, மரபுவழி வரையறையாக இல்லாமல், உள்ளுணர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதன் விளைவாக, தற்போது பல வரையறைகள் உள்ளன. நேரடி மொழிபெயர்ப்பே பொதுவானது. உதாரணம்: "12345" என்பது தரவு. சூழல் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்றி இது அர்த்தமற்றதாகிறது. "12345" என்பதை "சிப் (ZIP) குறியீட்டின்" (மெட்டாடேட்டா) எனும் அர்த்தமுள்ள பெயர் கொடுக்கப்படும்போது, அதைப் புரிந்துகொள்ளமுடியும். மேலும், "12345" என்பது ஷெனெக்டெடி, நியூயார்க்கில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் தொழிற்சாலையைக் குறிக்கும் அஞ்சல் முகவரி) எனும் பொருளில் "சிப் குறியீடு" வைக்கப்படுகிறது. பெரும்பாலானோரைப் பொருத்தமட்டில், தரவுக்கும் தகவல்களுக்கும் உள்ள வேறுபாடு, செயல்பாட்டில் பொருத்தமற்ற தத்துவரீதியான ஒன்றாகவே உள்ளது. மற்ற வரையறைகளாவன: கீழ்க்காண்பவை போன்று மேலும் பல நயமான வரையறைகள் உள்ளன: இவை அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவைகள் மெட்டாடேட்டாவின் ஒரு நோக்கத்திலேயே கருத்தை செலுத்துகின்றன — "பொருள்கள்", "உருப்படிகள்" அல்லது "வளங்கள்" ஆகியவற்றைக் காண — சுருக்க வழிமுறைகளை உகந்ததாக்கல் அல்லது தரவுகளைப் பயன்படுத்தி கூடுதலாக கணக்கிடுதல் போன்ற மற்றவற்றை ஒதுக்கிவிடுகின்றன. அட்டவணைகளின் பெயர்கள், நிரல்கள், ப்ரோக்ராம்கள் மற்றும் இது போன்ற எந்தவொரு "தரவுகளைப் பற்றிய தரவுகளையும்" கணினி அமைப்புலகில் சேர்க்க, மெட்டாடேட்டா எனும் கருத்து விரிவாக்கப்பட்டுள்ளது. "கணினி அமைப்பு மெட்டாடேட்டா"வைப் பற்றிய பல்வேறு கருத்துகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்குமேலும், கணினி தொகுப்பின் தரவுகள், செயல்பாடுகள், பங்கேற்ற மக்களும் அமப்புகளும், தரவும் செய்முறைகளும், இருக்கும் இடம், தொடர்புகொள்ளும் முறைகள், எல்லைகள், நேரமும் நிகழ்வுகளும், ஊக்குவித்தலும் விதிமுறைகளும் போன்ற அனைத்து குணாதிசயங்களையும் விவரிக்கக்கூடியது மெட்டாடேட்டா என்ற அங்கீகாரம் உள்ளது: அடிப்படையாக, மெட்டாடேட்டா என்பது, "ஒரு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் தகவல்களின் பயன்பாடு, அத்தகவல்களை மேலாண்மை செய்யும் கணினி அமைப்புகள் ஆகியவற்றை விளக்கும் தரவு" ஆகும். மெட்டடேட்டாவின் மாதிரியை உருவாக்குவதென்பது, தொழில்நுட்ப உலகில் "வணிக நடவடிக்கை மாதிரி"யை உருவாக்குவதே ஆகும். வலையிலும் எச்.டி.எம்.எல், எக்ஸ்.எம்.எல் மற்றும் எஸ்.ஜீ.எம்.எல் ஆகியவற்றின் மார்க்-அப் தொழில்நுட்பத்தினை அளிப்பதற்கான டபுல்யூ3சீயின் வேலைப்பாட்டிலும், மற்ற தகவல் பகுதிகளில் இருப்பதைவிட தெளிவாக உள்ள மெட்டாடேட்டா எனும் கருத்து குறிப்பிடும்படியாக உள்ளது. மார்க்-அப் தொழில்நுட்பங்களில், மெட்டாடேட்டா, மார்க்-அப், தரவுகள் ஆகிய மூன்றும் உள்ளன. மெட்டாடேட்டா தரவுகளைப் பற்றிய குணாதிசயங்களை விவரிக்கின்றன. மார்க்-அப், குறிப்பிட்ட தரவின் வகையை அடையாளம் கண்டு, உடனடி ஆவணத்திற்கான கொள்கலமாக செயல்படுகிறது. விக்கிபீடியாவில் உள்ள இப்பக்கமே, இப்பயன்பாட்டிற்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். நூலின் தகவல்கள் தரவாக உள்ளன. அவை எவ்வாறு ஒருமித்துவைக்கப்படுகிறது, இணைக்கப்படுகிறது, சுட்டிக்காட்டப்படுகிறது, ஒப்பனைப்படுத்தப்படுகிறது, காண்பிக்கப்படுகிறது என்பது மார்க்-அப் ஆகும். இந்த மார்க்-அப் மற்றும் அதன் அம்சங்கள் மற்றும் சிறப்புப்பண்புகள் விக்கிபீடியாவில் உலகளவில் உள்ள மெட்டாடேட்டா ஆகும். திட்ட வடிவ வரையரை (எக்ஸ்.எஸ்.டி) நிகழ்வில் மெட்டாடேட்டாவையே சுட்டிக்காட்டப்படுவது போன்று, மார்க்-அப் சூழலில், குறைந்தபட்ச மெட்டாடேட்டாவைக்கொண்டு உகந்த ஆவணங்களை உருவாக்க மெட்டாடேட்டா கட்டமைக்கப்படுகிறது. மெட்டாடேட்டா அல்லது தரவு என்ற குழப்பத்தை தவிர்த்து, உகந்தவற்றை அளித்து சுட்டிக்காட்டப்படும் தரவுகளைக் கையாளும் சிறப்பு அம்சம் கொண்ட இயந்திரச் செயல்பாடுகளை அளிப்பது தரக்குறியீடு என்பதயும் கருத்தில் கொள்ளவேண்டும். மார்க்-அப் இல் உள்ள சுட்டிக்காட்டப்படுதல், மற்றும் ஐ.டி இயங்கமைப்புகள், தொடர்புள்ள தரவுகளிடையே சுட்டிக்காட்டப்படும் இணைப்புகள், முகவரி அல்லது தயாரிப்பு விவரங்கள் போன்ற தரவுகளை மீண்டும் கொடுக்கும் தரவு இணைப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது. அதன்பின், அவையெல்லாம் மெட்டாடேட்டாவைவிட, வெறும் தரவுகளும் மார்க்-அப் நிகழ்வுகளே ஆகும். அதேபோன்று மார்க்-அப் இயங்கமைப்பில் உள்ள வகைப்படுத்துதல், ஒழுங்கமைப்புகள், தொடர்புபடுத்தல்கள் போன்ற கருத்துகளும் உள்ளன. மார்க்-அப் மூலம் இப்படிப்பட்ட வகைபாடுகளுடன் தரவு இணக்கப்படலாம். அதன்வாயிலாக, மெட்டாடேட்டா என்பதென்ன, தரவுகள் என்பதென்ன என்ற வேறுபாடு தெளிவுபடுத்தப்படுகிறது. ஆகையால், ஒரு வகைபாட்டின் கருத்துகளும் விளக்கங்களும் மெட்டாடேட்டாவாக இருக்கலாம். ஆனால் ஒரு தரவின் உண்மையான வகைபாட்டுப் பதிவு, மற்றோர் தரவேயாகும். சில எத்துக்காட்டுகள் இவ்விவரங்களை விளக்கும். தடிமனாக உள்ளவை தரவு, சாய்வெழுத்தில் உள்ளவை மெட்டாடேட்டா, சாதாரண உரையில் உள்ளவை மார்க்-அப். இந்லைன் பயன்பாடாகிய எளிய மார்க்-அப் (எச்.டி.எம்.எல்) உடன் ஒப்பிடப்பட்ட தரவு (எக்ஸ்.எம்.எல்) மார்க்-அப் உடன் பயன்படுத்தப்பட்ட மெட்டாடேட்டாவை இரு உதாரணங்கள் காட்டுகின்றன. ஒரு எளிய எச்.டி.எம்.எல் அம்சம் உதாரணம்: ஒரு எக்ஸ்.எம்.எல் அம்சம் மெட்டாடேட்டா உதாரணம் ஒரு நபரின் நடுப்பெயர் வெற்று தரவாக இருக்கும் வரிசை அமைப்பு, அந்தத் தரவின் மெட்டாடேட்டா ஆகும். பொதுவாக இப்படிப்பட்ட வரையறைகள் எக்ஸ்.எம்.எல்லில் வரிசையில் வைக்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, இவ்வரையறைகள், முழு ஆவணத்திற்காகவும் மெட்டாடேட்டா உள்ள திட்ட வடிவ வரையறைகட்கு நகர்த்தப்படுகின்றன. மீண்டும் மார்க்-அப் இல் மெட்டாடேட்டா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது விளக்குகிறது. மெட்டாடேட்டா, தரவுத்தொகுப்புக்காக, ஒருமுறைமட்டும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வரையறைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இடம்பெறும் மார்க்-அப் உருப்படிகள் மெட்டாடேட்டாவாக இருப்பது அரிது, மாறாக அவை அதிக மார்க்-அப் தரவு அம்சங்களாகவே இருக்கக்கூடும். பொதுவாக, (சாதாரண) தரவையும் மெட்டாடேட்டாவையும் வேறுபடுத்திப்பார்க்க இயலாது, ஏனெனில்: தரவு எது மெட்டாடேட்டா எது, என குறிப்பிட வெளிப்படையான மார்க்-அப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர, பிற சூழலில் மேற்குறிப்பிட்ட எந்த வரைமுறை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என சொல்வதற்கில்லை. மெட்டாடேட்டா பல வெவேறான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இப்பிரிவு, பிரபலமான சிலவற்றை பட்டியலிடுகிறது. ஆதாரங்களைத் தேடலை வேகப்படுத்தவும், சிறந்தவையாக ஆக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மெட்டாடேட்டாவினைப் பயன்படுத்தும் தேடல் வினவல்கள், பயனர்களை, மிக சிக்கலான வடிகட்டல் செயல்களை கைமுறையாக செய்வதிலிருந்து காப்பாற்றுகின்றன. இப்போது, வலை உலாவிகள் (பிரபலமான மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் தவிர), பி2பி பயன்பாடுகள், ஊடக மேலாண்மை மென்பொருள் ஆகியவை தானாகவே மெட்டாடேட்டவினைப் பதிவிறக்கம் செய்து தேக்ககப்படுத்திக்கொள்வது வழக்கமாகிவிட்டதால், கோப்புகள் தேடப்படும் மற்றும் அணுகப்படும் வேகம் அதிகரிக்கப்படுகிறது. மெட்டாடேட்டா, கைமுறையாகவும் கோப்புகளுடன் இணைக்கப்படலாம். ஃபைல்நெட் அல்லது டாக்குமெண்டம் போன்ற ஆவணக்காப்புகளில், ஆவணங்களை ஸ்கேனிங் செய்யும் சூழ்நிலைகளில் இது நடைபெறும். ஆவணங்கள் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்டதும், பயனர் படத்தை ஒரு காணும் பயன்பாட்டின் மூலம் காண்கிறார், ஆவணங்களைப் பார்த்து படிக்கிறார் பின்னர் மெட்டாடேட்டா காப்புப்பகுதியில் தேக்கிவைப்பதற்கான ஆன்லைன் பயன்பாட்டில் மதிப்புகளை உள்ளிடுகிறார். மெட்டாடேட்டா, அது விவரிக்கும் தரவின் கூடுதல் தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது. இத்தகவல், விளக்கமாக இருக்கலாம் ("இப்படங்கள் பள்ளி மூன்றாம் நிலை வகுப்பு குழந்தைகளால் எடுக்கப்பட்டன.") அல்லது வழிமுறை ரீதியான தகவலாக இருக்கலாம் ("Checksum=139F"). மெட்டாடேட்டா, மொழியியல் பொருள் சார்ந்த இடைவெளியினை இணக்கும் பாலமாக உதவுகிறது. எவ்வாறு தரவுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, இத்தொடர்புகள் எவ்வாறு தானாகவே மதிப்பிட ம்டியும் என்பதை கணினிக்குச் சொல்வதன்மூலம், மிகச்சிக்கலான, பிரித்தெடுத்தல் மற்றும் தேடுதல் செயல்களை செயல்படுத்தமுடிகிறது. உதாரணமாக, ஒரு தேடுபொறி "வான்கோ (Van Gogh)" ஒரு "டச்சு ஓவியர்" என புரிந்துகொண்டால், அது "டச்சு ஓவியர்கள்" சார்ந்த வினவலுக்கு, வின்சட் வான்கோ (Vincent Van Gogh) வலைப்பக்கத்தை தொடர்புபடுத்தி, "டச்சு ஓவியர்கள்" என்ற அதே வார்த்தைகள் அப்பக்கத்தில் இல்லையென்றாலும், பதிலளிக்கமுடியும். இந்த அணுகுமுறை, அறிவுப் பிரதிநிதித்துவம் மொழியியல் பொருள்சார்ந்த வலை மற்றும் செயற்கை நுண்ணறிவுஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்துவதாயுள்ளது. சில குறிப்பிட்ட மெட்டாடேட்டா, இழப்பு ஒடுக்குதல்களை உகந்ததாக்க வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கணினி பின்னணியிலிருந்து முன்னணியைக் கூறும்படியான மெட்டாடேட்டாவை ஒரு வீடியோ பெற்றிருந்தால், பின்னணி, அதிக ஒடுக்கும்திறன் விகிதம்பெற, மிக தீவிரமாக ஒடுக்கப்படக்கூடும். சில மெட்டாடேட்டா, மாறும் உள்ளடக்க விளக்கத்திற்காக உள்ளன. உதாரணமாக, மிக முக்கியமான பகுதியைக்குறிக்கும் மெட்டாடேட்டாவை, ஒரு படம் பெற்றிருந்தால் — ஒரு நபர் இருக்கும் பகுதி — கைப்பேசியில் உள்ளதுபோல் இருக்கும் சிறுதிரையில் உள்ள இமேஜ் வியூவர், அப்படத்தை அப்பகுதிக்கு குறுக்கிச் செலுத்தமுடியும். இவ்வாறாக, பயனருக்கு மிகவும் ஆர்வமூட்டும் விவரங்களைக் காட்டுகிறது. சிறப்பு வெளியீடு சாதனங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் அல்லது உரை வடிவிலிருந்து பேச்சு வடிவத்துக்கு மாற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி, அவற்றின் விளக்கங்களைப் படிப்பதன் மூலம், கண்பார்வையற்றோர் வரைபடங்களையும் காட்சிப்படங்களையும் உணர இதேபோன்ற மெட்டாடேட்டா உள்ளன. மற்ற விளக்க ரீதியான மெட்டாடேட்டா தானியங்கி கருவிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, ஒரு "ஸ்மார்ட்" மென்பொருள் கருவி, தரவின் உட்பொருளையும் அமைப்பையும் தெரிந்துகொண்டால், அது தானாகவே மாற்றியமைத்து மற்றொரு கருவிக்கு உள்ளீடாக அதை அனுப்பமுடியும். இதன்விளைவாக, பயனர்கள் "செயலற்ற" கருவிகளில் உள்ள தரவுகளை பகுத்தறியும்போது, நகலெடு-மற்றும்- ஒட்டு என பல முறை செய்யவேண்டியதில்லை. மின்னணு கண்டுபிடிப்பில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய அங்கமாக மெட்டாடேட்டா மாறிக்கொண்டிருக்கிறது. மெட்டாடேட்டாவால் மின்னணு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலிருந்து பெறப்பட்ட, பயன்படுத்துதலும் கோப்பு அமைப்பும் முக்கிய ஆதாரமாக இருக்கலாம். சமீபமாக மாற்றப்பட்ட சிவில் முறைக்கான கூட்டரசு விதிகள் மெட்டாடேட்டாவை, சிவில் வழக்குகளின் அங்கமாகக் காணும் வழக்கமான ஒன்றாக மாற்றியுள்ளன. வழக்குகளில் ச்ம்பந்தப்பட்டவர் மெட்டாடேட்டாவை பாதுகாத்து வைத்திருந்து கண்டுபிடிப்பின் ஒரு அங்கமாக கொடுக்கவேண்டும். மெட்டாடேட்டாவை சீரழித்தல் ஒப்புதல் அளித்ததற்கான வகைசெய்யும். கிடைக்கும் தகவல்களிலிருந்து பயனுள்ள தகவல்களைக் காணவேண்டியிருப்பதால், மெட்டாடேட்டா உலகளாவிய வலையில் முக்கியமான ஒன்றாக உள்ளது. கைமுறையாக உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இசைவானதாக இருப்பதால் மதிப்புள்ளதாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு தலைப்பைப் பற்றிய வலைப்பக்கத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் இருந்தால், அத்தலைப்பைக் கொண்ட எல்லா வலைப்பக்கங்களிலும் அதே பதம் அல்லது சொற்றொடர் இருக்கவேண்டும். ஒரு தலைப்பு இரு பெயர்களில் இருப்பினும், ஒவ்வொன்றையும் பயன்படுதும்வகையில், மெட்டாடேட்டா பல வகைபாடுகளுக்கும் வகைசெய்கிறது. உதாரணமாக, சில நாடுகளில் எஸ்.யூ.விகள் தெரிந்திருப்பதுபோல, "பந்தய பயன்பாட்டு வண்டிகளைப்" பற்றிய கட்டுரையில், "4 சக்கர வண்டிகள்", "4டபுல்யூ.டீக்கள்" மற்றும் "நான்கு சக்கர வண்டிகள்" எனவும் குறிச்சொல்லிடப்பட்டு இருக்கும். ஆடியோ சி.டி மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டில், மியூசிக் பிரெய்ன்ஸ் பணித்திட்டமும் ஆல் மீடியா கைட்ஸின் ஆல் மியூஸிக்கும் அடங்கும். அதேபோல, எம்.பீ3 கோப்புகளில், ID3எனும் வடிவில் உள்ள மெட்டாடேட்டா குறிச்சொற்கள் உள்ளன. மெட்டாடேட்டா இவ்வாறு வகைப்படுத்தப்படலாம்: மெட்டாடேட்டாவின் வகைகளாவன; மெட்டாடேட்டாவை வெற்றிகரமாக உருவாக்கி உபயோகிக்க, பல முக்கியமான பிரச்சனைகளை கவனத்துடன் கையாள வேண்டும்: மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் (Microsoft Office) கோப்புகளில் அச்சிடக் கூடிய பொருட்களுக்குப் பின்னால் அசல் ஆசிரியரின் பெயர், ஆவணம் தயார் செய்யப்பட்ட தேதி மற்றும் அதை முடிப்பதற்கு செலவிடப்பட்ட நேரம் போன்ற மெட்டாடேட்டா அடங்கி இருக்கும். தவறான பயன்பாடு குறித்த கவலைகள், ரகசியக் காப்பு தேவைப்படும் தொழில்முறை சார்ந்த பழக்கங்கள் ஆகியவற்றில் தெரியாமல் நடந்த வெளியீடுகள் திறமையற்றதாகவோ அல்லது சீராகவோ இருக்கலாம். Microsoft Officeன் ஆவணங்களில் திட்ட பட்டியலில் "ஃபைலை" சொடுக்கிட்டு அதன் பிறகு "ப்ராப்பர்டீஸ்" என்பதை அழுத்தினால் மெட்டாடேட்டாவை பார்க்கலாம். மற்ற மெட்டாடேட்டாக்கள் தெரியும் படி இருக்காது. தடவியலில் செய்வது போல கோப்பின் வெளிப்புற பகுப்பாய்வு செய்தால் மட்டுமே தெரியும். Wordல் உள்ள தனித்துவமான மெட்டாடேட்டாவை வைத்து அசலான தொற்றுடைய ஆவணத்தை கண்டறிந்து 1999ம் ஆண்டு Microsoft Word சார்ந்த மெலிசா வைரஸை பரப்பியவர் பிடிபட்டார். திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலின் முதல் நிலைகளில் கூட உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை வைத்துக்கொள்வது அவசியம். தயாரிப்பு முறை முடிந்த பின்னரே மெட்டாடேட்டாவை இணைக்கத் தொடங்குவது பொருளாதார ரீதியாக சரியானதாக இருக்காது. உதாரணமாக, ஒரு டிஜிட்டல் புகைப்படக் கருவி மூலம் பதிவு செய்யப்படும் நேரத்தில் உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை உடனடியாக சேமிக்காவிட்டால், அதனை பிற்பாடு பிரித்தெடுப்பது மிகுந்த கடினமாக இருக்கும். ஆகையால், வளத்தயாரிப்பில் இருக்கும் வெவேறு குழுக்களும் ஏற்புடைய முறைகள் மற்றும் தரத்தை வைத்து ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். மெட்டாடேட்டாவை தரவு உள்ள அதே கோப்பில் "உட்புறமாகவோ" அல்லது வேறு ஒரு கோப்பில் "வெளிப்புறமாகவோ" சேமிக்கலாம். பொருளோடு பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா "பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா" எனப்படும். தரவுக் களஙஞ்சியத்தில் தரவுகளில் இருந்து "பிரிக்கப்பட்ட" மெட்டாடேட்டா சேமித்துவைக்கப்படும். இரண்டு வழிகளுக்கும் பயன்களும் பயன் குறைவுகளும் உண்டு: மேலும், தரவு வகை குறித்த கேள்வியும் உண்டு: XML போன்ற மனிதர்களால் படிக்கக் கூடிய வகையில் மெட்டாடேட்டாவை சேமிப்பது உபயோகமானது ஏனெனில், உபயோகிப்பவர்கள் அதனை புரிந்து கொண்டு எந்த வித விசேஷ கருவிகள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியும். மறுபக்கத்தில் இந்த வகைகள், சேமிப்பு அளவிற்காக தயார் செய்யப்படுவதில்லை; மாற்றுதல் மற்றும் சேமிப்புத் திறனை அதிகரிக்க மெட்டாடேட்டாவை பைனரி அல்லது மனிதர்களால் படிக்க இயலாத வகையில் சேமிப்பதே நல்லது. பொதுவாக, மெட்டாடேட்டாவில் இரண்டு வித்தியாசமான வகைகள் உண்டு. வடிவம் அல்லது கட்டுப்பாடு மெட்டாடேட்டா மற்றும் வழிநடத்தும் மெட்டாடேட்டா. பெட்டிகள், பொருளடக்கம் மற்றும் கட்டங்கள் ஆகிய கணினிகளின் வடிவத்தை விவரிக்க வடிவ மெட்டாடேட்டா உபயோகிக்கப்படுகிறது வழி நடத்தும் மெட்டாடேட்டா, மனிதர்கள் குறிப்பிட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது மற்றும் இயற்கையான மொழியில் சில முக்கிய வார்த்தைகளின் கோர்வையாக இது வெளிப்படுத்தப்படுகிறது. மெட்டாடேட்டாவை மூன்று முக்கிய பகுப்புகளாகப் பிரிக்கலாம்: மாறாக, டேவிட் மார்கோ மற்றொரு மெட்டாடேட்டா நிபுணர், மெட்டாடேடாவை இவ்வாறு வரையறுக்கிறார். “ஒரு நிறுவனத்தால் உபயோகிக்கப்படும் தரவுகளின் வடிவம், தரவுகளின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முறைகள், பொருள் தரவுகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட, நிறுவனத்துக்கு உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து கிடைக்கும் அனைத்து பொருள் தரவு மற்றும் அறிவுகளும் அடங்கும்”. மற்றவர்கள் இணைய சேவைகள், முறைகள் மற்றும் இடைமுகப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளனர். மொத்த சேக்மேன் வடிவமைப்பையும் மெட்டாடேட்டாவாக பிரதிபலிக்கலாம். (நிருவன கட்டமைப்பை பார்க்கவும்). மேலாண்மை தகவல் முறைகளுக்குத் தேவையான பல அல்லது அனைத்து தரவுகளும் அடங்கும் வகையில் மெட்டாடேட்டாவின் பரப்பை இது போன்ற வரையறைகள் விரிவாக்குகின்றன என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். இந்த பொருளில், அமைவடிவ தரவுதள மேலாண்மை (CMDB) மற்றும் நிறுவன கட்டமைப்பு மற்றும் IT பிரிவு மேலாண்மை ஆகிய ITIL பொருளோடு மெட்டாடேட்டா பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. மெட்டாடேட்டாவின் இந்த விரிவான வரையறைகளுக்கு முன்னுதாரணம் உண்டு. மூன்றாம் சந்ததி நிறுவன களஞ்சிய பொருட்கள் (CA பயன் கோட்டில் கடைசியாக சேர்க்கப்பட்டவை போன்று) தரவு வரையறைகளை மட்டுமன்றி (COBOL நகல்புத்தகங்கள், DBMS ஸ்கீமா) அந்த தரவுகளை உபயோகிக்கும் தரவு வடிவங்கள் மற்றும் வேலை கட்டுப்பாட்டு மொழி மற்றும் குழு வேலை உள்கட்டமைப்பு சார்புநிலைகள் ஆகியவற்றையும் சேமித்துவைக்கும். நிகழ்வு மற்றும் மாற்ற மேலாண்மை போன்ற ITIL சார்ந்த முறைகளின் தாக்க பகுப்பாய்வுக்கு ஆதரவு அளிக்கும் பிரதான கணக்கீடு சுற்றுப்புறத்தின் முழுமையான விவரத்தையும் இந்த பொருட்கள் (சில இன்னும் உற்பத்தியில் உள்ளன) அளிக்க முடியும். ITIL பின் பட்டியல் "தரவு மேலாண்மை" பதிப்பை உள்ளடக்குகிறது. இது மெயின்ஃப்ரேமில் மெட்டாடேட்டா பொருட்களின் பங்கை அங்கீகரிக்கிறது. இவை CMDBஐ பிரித்துக் கொடுக்கப்பட்ட கண்க்கீடு சமான அளவு போலக் காட்டுகிறது. தரவு வரையறைகளும் அடங்கும் படி தங்களது பரப்பை CMDB விற்பனையாளர்கள் விரிவாக்கவில்லை மற்றும் உலகில் பல இடங்களில் மெட்டாடேட்டா தீர்வுகள் கிடைக்கின்றது. ஆகவே, ஒவ்வொன்றின் பரப்பு மற்றும் பங்கை கண்டறிவது, இரண்டும் தேவைப்படும் பெரிய IT நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. மெட்டாடேட்டா சிக்கலானதாக இருப்பதனால், அதனை பின்தொடர எடுக்கப்பட்ட அனைத்து மைய முயற்சிகளும், அதிகப்படியாக பேசப்படும் உடமைகளை நோக்கியே இருக்கவேண்டும். சில உபயோகிப்பாளர்கள் டப்ளின் கோர் மெட்டா மாதிரியை உபயோகித்து வெற்றிகரமாக மெட்டாடேட்டாவை கையாண்டுள்ளனர். IDMSன் IDD (ஒருங்கிணைந்த தரவு அகராதி), IMS தரவு அகராதி மற்றும் ADABASன் பிரடிக்ட் போன்ற ஒரு குறிப்பிட்ட DBMS ஆதரவு அளிப்பவையே முதல் சந்ததி தரவு/மெட்டாடேட்டா களஞ்சிய கருவிகள். இரண்டாவது சந்ததி, பல வித்தியாசமான கோப்புகள் மற்றும் DBMS வகைகளுக்கு ஆதரவு அளிக்கும் ASGன் DATAMANAGER பொருட்கள் ஆகும். IBMன் DB2 போன்ற RDBMS இயந்திரங்களின் உபயோகிப்பது அதிகமாகியதை ஒட்டி 1990களின் முதலில் மூன்றாம் சந்ததி களஞ்சிய பொருட்கள் குறுகிய காலத்திற்கு புகழ்பெற்று விளங்கின. நான்காவது சந்ததி பொருட்கள் களஞ்சியத்தை மேலும் பிரித்தெடு, மாற்றும், ஏற்றும் கருவிகளோடு இணைக்கிறது மற்றும் கட்டமைப்பு மாதிரி கருவிகளோடும் இதனை சேர்க்க முடியும். தகவல் அளிக்கும் வழிகள், பயன்பாடுகள் போன்ற அனைத்திலும் மெட்டாடேட்டாவை உபயோகிப்பதை அனுமதிக்கும் வகையில் பிரிநிலைகள், அதிகபட்ச கற்பனை உருவகக் காட்சி, மேம்பட்ட வன்பொருள், பிரித்துக் கொடுக்கப்பட்ட கணக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஐந்தாம் தலைமுறை பொருட்கள் ஒரு புதிய தளத்திற்கு அனைத்து பொருட்களையும் கொண்டு செல்கின்றது. ஒவ்வொரு சார் தரவுத்தள முறைக்கும் மெட்டாடேட்டாவை சேமிப்பதற்கான அதற்கான முறைகள் உள்ளன. சார்-தரவுத்தள மெட்டாடேட்டாவிற்கான உதாரணங்களில் அடங்குபவை: தரவுத்தள வழக்கு மொழியில் இது போன்ற மெட்டாடேட்டா குழு பட்டியல் என அழைக்கப்படுகிறது. SQL தரம் கேடலாகை உபயோகிக்க codice_1 என்ற ஒரே மாதிரியான வழிகளைக் கூறுகிறது, ஆனால் மற்ற SQL தரத்தை பின்பற்றினாலும் இதை அனைத்து தரவுதளங்களும் உபயோகிப்பதில்லை. தரவுத்தளம் குறிப்பிட்ட மெட்டாடேட்டா உபயோக முறைகளின் உதாரணத்திற்கு ஆரகல் மெட்டாடேட்டாவை பார்க்கவும். மெடாடேட்டாவின் திட்டமுறை உபயோகம் JDBC அல்லது SchemaCrawler போன்ற API மூலம் சாத்தியமாகிறது. தரவு சேகரிப்புதளம் (DW) என்பது ஒரு நிறுவனத்தின் மின்னனு முறையில் சேமித்த தரவுகளின் களஞ்சியம். தரவு சேமிப்புதளங்கள் தரவுகளை சேமித்து மற்றும் கையாளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக அறிவாற்றல் (BI) என்பது அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு தரவுகளை உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது. தரவு சேமிப்புதளத்தின் நோக்கமானது, ஒரு நிறுவனத்தின் பல வகையான இயங்கு முறைகளில் இருந்து எடுக்கப்பட்ட சீராக்கப்பட்ட, ஒரு வடிவமுடைய, ஒரே மாதிரியான, ஒருங்கினைந்த, சரியான, சுத்தமான மற்றும் நேரத்திற்கேற்ற தரவுகளை சேமித்து வைப்பதாகும். நிறுவனம் முழுவதற்குமான எண்ணம், உண்மையின் ஒரே வடிவம் ஆகியவற்றை அளிக்க பிரித்தெடுக்கப்பட்ட தரவுகள் தரவு சேமிப்புதள சுற்றுப்புறத்தோடு ஒருங்கினைக்கப்படுகிறது. அறிக்கை அளித்தல் மற்றும் பகுப்பாய்வுத் தேவைகளுக்கு குறிப்பாக உதவும் வகையில் தரவுகள் வடிவமைக்கப்படுகிறது. ஒரு தரவு சேமிப்புத்தளம்/வர்த்தக அறிவாற்றல் முறையின் முக்கிய உட்பொருள் மெட்டாடேட்டா மற்றும் மெட்டாடேட்டாவை கையாள மற்றும் திரும்பி எடுக்க உதவும் கருவிகள். மெடாடேட்டா தரவு சேமிப்புதளத்தின் அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை வரையறுப்பதால், ரால்ஃப் கிம்பால் மெடாடேட்டாவை தரவு சேமிப்புதளத்தின் DNA எனக் கூறுகிறார். தரவு சேமிப்புதள கருவிகள் மற்றும் வர்த்தக அறிவாற்றல் பொருட்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மெட்டாடேட்டாவின் முக்கியத்துவமும் அதிகரிக்கும். தரவுகளை சேமிக்க சுலபமான ETL செயல்பாடுகளை உருவாக்கவும், இறுதி-உபயோகிப்பாளருக்கு வர்த்தக தகவல்களைக் காட்டவும் கூட வருங்காலத்தில் மெட்டாடேட்டா உபயோகிக்கப்படலாம். ETL செயல்பாட்டை உருவாக்கும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கூட வருங்காலத்தில் நடக்கக்கூடியதாக உள்ளது. தரவு மற்றும் தகவல்கள் அதிகரிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்கும் முறையில் உபயோகிக்க ஏற்கெனவே இருக்கும் ஏற்ற தகவல்களை தேடுவதில் மெட்டாடேட்டா மிக முக்கியமானதாகும். சுலபமான தேடும் கருவிகளான Google போன்றவை உருவாக்கப்படலாம். சேமிப்பு தரவுத்தளத்தின் நிறுவன எண்ணம் கூட மெட்டாடேட்டாவுக்குப் பொருந்தும். DW/BI முறையின் அனைத்து முறைகளும் ஒரே ஒற்றை நிருவன மெட்டாடேட்டா களஞ்சியத்தை உபயோகிப்பது என்பது சரியானதாக இருக்கும். வர்த்தகம் மற்றும் தரவில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் படி மெட்டாடேட்டா களஞ்சியத்தை வைத்திருப்பது தரவு சேமிப்புதள வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்ந்து நடக்கும் ஒரு முறையாகும் பல நேரங்களில் மெட்டாடேட்டா இரண்டு வகைகளில் பிரிக்கப்படுகிறது கணினி நிர்வாகிகளுக்கு பொருந்தும் உட்புற மெட்டாடேட்டா மற்றும் இறுதி-உபயோகிப்பாளர்களுக்கு பொருந்தும் வெளிப்புற மெட்டாடேட்டா. ரால்ஃப் கிம்பலின் படி மெட்டாடேட்டாவை இதே போன்று 2 வகைகளில் பிரிக்கலாம் – தொழில்நுட்ப மெட்டாடேட்டா மற்றும் வர்த்தக மெட்டாடேட்டா. தொழில்நுட்ப மெட்டாடேட்டா உட்புற மெட்டாடேட்டாவை குறிக்கிறது, வர்த்தக மெட்டாடேட்டா வெளிப்புற மெட்டாடேட்டாவைக் குறிக்கிறது. கிம்பால் முறைசார் மெட்டாடேட்டா என்ற மூன்றாவது வகையை சேர்க்கிறார். தரவு சேமிப்புத் தளத்தின் பின் அறை (ETL - பிரித்தல், மாற்றுதல் மற்றும் ஏற்றுதல் – DW/BI முறையின் அங்கம்), முன் அறை (அறிக்கைகள் மற்றும் BI பயன்பாடுகள்) மற்றும் முன் மற்றும் பின் அறையை இணைக்கும் காட்சியளிப்பு வழங்கி ஆகியவற்றிற்கு இது பொருந்தும். காட்சியளிப்பு வழங்கியில் தரவுகள் பரிமான வடிவத்தில் திரட்டு மீகானோடு சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்ப மெட்டாடேட்டா பொதுவாக வரையறைக்குட்பட்டது மற்றும் வர்த்தக தரவு விவரிப்புக்குட்பட்டது. ஒவ்வொரு மெட்டாடேட்டா வகைக்கான உதாரணங்கள்: நிச்சயமாக, BI பொருள் அடுக்கு வரையறை திடமான வர்த்தக ரீதியான மெட்டாடேட்டாவைக் கொண்டுள்ளது. கூடுதல் BI வர்த்தக மெட்டாடேட்டா கீழ்கண்டவற்றைக் கொண்டுள்ளது: தரவு சேமிப்பு தளத்திற்கான மெட்டாடேட்டாவுடன் தொடர்புப்படுத்தி விவரிக்கப்படுதல் எல்லைக்கு அப்பாற்பட்ட கோப்புகளை பற்றிய மெட்டாடேட்டாவை கிட்டத்தட்ட அனைத்து கோப்பு முறைகளும் வைத்துக்கொள்ளும். சில கணினிகள் மெட்டாடேட்டாவை செய்தி திரட்டுகளாக வைத்துக்கொள்ளும்; மற்றவை ஐநோட்கள் என்ற நிபுணத்துவம் வாய்ந்த வடிவங்கள் அல்லது கோப்பின் பெயரின் கூட வைத்துக்கொள்ளும். சுலபமான டைம்ஸ்டாம்ப்கள், மோட் பிட்கள் மற்றும் மற்ற செயல்பாட்டால் உபயோகிக்கப்படும் சிறப்பு நோக்க தகவல்களில் இருந்து ஐகான்ஸ் மற்றும் இலவச-எழுத்து கருத்துகள் மற்றும் திரட்டு இயல்பு விலை ஜோடிகள். வரை மெட்டாடேட்டா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் வலுவான மற்றும் திறந்த முனை மெட்டாடேட்டா இருப்பதனால், கோப்புகளை மெட்டாடேட்டாவை வைத்து தேடுவதற்கு உதவி புரிகிறது. யுனிக்ஸில் இருந்த தேடுதல் உபயோகம் ஒரு உதாரணமாக இருந்தது, ஆனால் நவீன கணினியில் பல நூறு ஆயிரம் கோப்புகளைத் தேடும் போது இது பயனற்றதாக இருந்தது. ஆப்பிள் கணினியின் மேக் OS X இயங்கு முறை, தனது பதிப்பு 10.4ல் ஸ்பாட்லைட் என்ற சிறப்பியல்பை வைத்து கோப்பு மெட்டாடேட்டாவை பிரித்தல் மற்றும் தேடுதலுக்கு ஆதரவு அளிக்கிறது. இதே போன்ற செயல்பாட்டை உருவாக்க Microsoft நிறுவனம் வேலை செய்து, SharePoint வழங்கியிலும் இருக்கும் படி தனது Windows Vista உடனடி தேடுதலை உருவாக்கியது. விரிவாக்கப்பட்ட கோப்பு இயல்புகளை உபயோகித்து Linux கோப்பு மெட்டாடேட்டாவை செயல்படுத்துகிறது. சுருக்கமாகவும் அல்லது அமைவடிவம் உள்ளதாகவும் இருக்கும் மென்பொருள் கட்டுமானங்களில் உபயோகிக்கப்படும் கட்டுப்பாடு தரவுகளை விவரிக்க மெட்டாடேட்டா சுலபமாக உபயோகிக்கப்படுகிறது. பல செயல்படுத்தக் கூடிய கோப்பு வகைகள் குறிப்பிட்ட, பொதுவாக அமைவடிவம் பெறக் கூடிய, நடத்தை சார்ந்த கணினி இயங்குநேர குணாதிசயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் “மெட்டாடேட்டா என்று அழைக்கப்படுவதை உள்ளடக்குகின்றன. ஆயினும், சேமிக்கப்பட்ட –திட்டமிட்ட கணக்கீடு கட்டுமானத்தின் பொதுவான அம்சங்களையும் திட்ட “மெட்டாடேட்டா”வையும் சரியான படி வித்தியாசப்படுத்துவது கடினமான அல்லது முடியாத காரியம். இயந்திரம் அதனை படித்து அதன் மேல் செயல்படத் தொடங்கினால் அது ஒரு கணக்கிடும் விதிமுறை மற்றும் அதற்கு முன் உள்ள “மெட்டா” என்பதற்கு முக்கியத்துவம் இருக்காது. ஜாவாவில், பிரதிபலிப்புக்கு ஆதரவு அளிக்கும் படி மற்றும் பிரிவுகளை இயக்கவியல் சார்ந்து இணைக்கும் ஜாவா இயந்திரம் மற்றும் ஜாவா தொகுப்பு கருவி ஆகியவை உபயோகிக்கும் கோப்பு வகைகள் மெட்டாடேட்டாவை கொண்டுள்ளது. ஜாவா இயக்குதளத்தில், தனது பொதுவான பதிப்பு J2SE 5.0 வில் இருந்து வளர்ச்சி கருவிகளால் உபயோகமாகும் கூடுதல் உரை விளக்கதை அனுமதிக்கும் மெட்டாடேட்டா உபயோகத்தை உள்ளடக்குகின்றன. MS-DOSல், COM கோப்பு வகை மெட்டாடேட்டாவை "சேர்ப்பதில்லை" , ஆனால் EXE கோப்பு வகை மற்றும் Windows PE வகை சேர்க்கிறது. இந்த மெட்டாடேட்டாவில் நிறுவனத்தின் பெயர், திட்டம் உருவாக்கப்பட்ட தேதி, பதிப்பு எண் மற்றும் மேலும் பல சேர்க்கப்படலாம். Microsoft .NET செயல்படும் வகையில், ஓடும் போது பிரதிபலிப்பை அனுமதிக்கும் கூடுதல் மெட்டாடேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. மெண்பொருள் உறுதி, மெண்பொருள் நவீனமயமாக்கல் மற்றும் மெண்பொருள் தேடுதல் ஆகிய நோக்கங்களுக்கான தற்போதைய பயன்பாடுகளை பிரதிபலிப்பதற்காக பொருள் மேலாண்மை குழு (OMG) மெட்டாடேட்டாவை வரையறுத்துள்ளது. OMG அறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (KDM) என்று அழைக்கப்படும் இந்த குறியீடு தான் OMG குழுமத்தில் “பின் புற மாதிரி” ஆகும். KDM என்பது, நடத்தை (திட்ட ஓட்டம்), தரவு மற்றும் வடிவம் ஆகியவை உள்ளிட்ட ஒரு மொத்த நிறுவன பயன்பாடின் ஒருங்கிணைந்த பார்வையை அளிக்கும் ஒரு பொதுவான மொழி-கட்டுப்பாடற்ற இடைப்பட்ட பிரதிநிதித்துவம். வர்த்தக விதிமுறை தேடுதல் என்பது KDMன் ஒரு பயன்பாடாகும் அறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (“மைக்ரோ KDM” எனப்படுவது), திட்டங்களின் மாறா நிலை ஆய்வு செய்ய உகந்ததாக இருக்கும், சிறு நரம்புடை கீழ் மட்ட பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குகிறது. Microsoft SharePoint, Microsoft Word மற்றும் மற்ற Microsoft Office பொருட்கள் உட்பட பல ஆவணங்களை உருவாக்கும் திட்டங்கள், ஆவண கோப்புகளிலேயே மெட்டாடேட்டாவை சேமிக்கிறது. கோப்பை உருவாக்கியவரின் பெயர் (இயங்கு முறையில் இருந்து பெற்றது), கடைசியாக கோப்பில் மாற்றங்கள் செய்தவர் பெயர், எத்தனை முறை அந்த கோப்பு அச்சடிக்கப்பட்டது, எத்தனை முறை அந்த கோப்பில் மறு ஆய்வு செய்யப்ப்பட்டது என்பதும் கூட இந்த மெட்டாடேட்டாவில் இருக்கும். மற்ற சேமிக்கப்பட்ட விஷயங்களான, அழிக்கப்பட்ட எழுத்துகள் (அழிக்கப்பட வேண்டாம் என்ற ஆணையின் போது சேமிக்கப்பட்டது), ஆவண கருத்துரைகள் ஆகியவையும் “மெட்டாடேட்டா” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது மற்றும் விநியோகிக்கப்பட்ட கோப்புகளில் கவனக்குறைவாக சேர்க்கப்பட்ட விஷயங்கள் சில சமயம் தேவையில்லாத வெளிப்பாடுகளுக்கு வழி வகுக்கும். ஆவண மெட்டாடேட்டா முக்கியமாக வழக்குகளில் முக்கியமானது. தனிப்பட்ட ஊறு விளைவிக்கக் கூடிய தரவுகள் அடங்கிய இந்த முக்கிய தகவலை (மெட்டாடேட்டா) வழக்கிற்கு தேவைப்படலாம். இந்த தரவு பல வழக்குகளில் இணைக்கப்பட்டு பல நிறுவனங்களை சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது. பல சட்ட நிறுவனங்கள் தற்போது மெட்டாடேட்டா அழிப்பு கருவிகளை உபயோகிக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படும் முன் இவை ஆவணங்களை சுத்தம் செய்கிறது. மின்ணனு கண்டுபிடிப்பு வழியாக முக்கிய தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் கசியும் அபாயத்தை இந்த முறை ஓரளவு தடுக்கிறது. முழுமையாகவும் மற்றும் மொத்தமாகவும் செய்யப்படத் தேவையான முறையான குறைதல் என்ற முறையில் மெட்டாடேட்டாவை வெளியேற்றுவது என்பது மட்டுமே உள்ள வேலையாகும். செயல்படுத்தக் கூடிய கோப்புகளின் பட்டியலுக்கு பொருள் கோப்பை பார்க்கவும். ஒரு டிஜிட்டல் நூலகத்தில் உள்ள பொருட்களை விவரிக்க அதிகபட்சமாக மெட்டாடேட்டாவின் மூன்று வகைகள் உபயோகிக்கப்படுகிறது: டிஜிட்டல் நூலகத்தின் தரத்தில் டப்ளின் கோர், METS, ஸ்கீமா மற்றும் OAI-PMH போன்றவை அடங்கும். மெட்டாடேட்டா அடங்கிய பட கோப்புகளின் உதாரணங்களில் மாற்றக் கூடிய பல கோப்பு வகை (EXIF) மற்றும் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பட கோப்பு வகை (TIFF) ஆகியவை அடங்கும். TIFF அல்லது EXIF கோப்புகளில் அடக்கப்பட்ட படங்களுடைய மெட்டாடேட்டா இருப்பது அந்த படத்தைப் பற்றிய கூடுதல் தரவுகளை பெறுவதற்கான ஒரு வழியாகும். படங்களை பொருட்களோடு கூட குறியீட்டிடும் படங்கள், தொடர்புடைய உணர்ச்சிகள் மற்றும் விவரிப்பு வாக்கியங்கள் ஆகியவற்றோடு தொடர்புப்படுத்துவது இணையம் உபயோகிப்பவர்கள் மொத்த படங்களையும் தேடுதலுக்கு பதிலாக படங்களை சுலபமாக கண்டறிய உதவுகிறது. இந்த தொடர்பு சேவைகளுக்கான முக்கிய உதாரணம் Flickr, இதில் உபயோகிப்பவர்கள் படங்களை சேர்த்து அதன் உட்பொருட்களை விவரிக்க முடியும். தளத்தின் மற்ற காப்பாளர்கள், அந்த குறியீடுகளை தேடலாம். Flickr ஃபோக்ஸோனமியை உபயோகிக்கிறது: ஓரு கட்டுப்படுத்தப்பட்ட சொல்லகராதிக்கு பதிலாக உபயோகத்தின் அடிப்படையில் சொல்லகராதியை சமூகம் வரையறுக்கும் ஒரு முக்கிய எழுத்து முறையாகும். உதாரணமாக, உபயோகிப்பவர்கள் நிறுவன தேவைகளுக்காக Adobeன் விரிவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இயங்குதள (XMP) மொழியை உபயோகித்து படங்களை தொடர்புபடுத்த முடியும். வெளிப்படுத்தும் கட்டுப்பாடுகளை விவரிக்க தொழில்நுட்ப மெட்டாடேட்டா தொடர்புகளை டிஜிட்டல் புகைப்படங்கள் அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளது. புகைப்பட RAW கோப்பு வகைகளான அடோப் பிரிட்ஜ் அல்லது ஆப்பிள் கணினியின் அபேர்சர் போன்றவர்ற்றை உபயோகித்து புகைப்படம் எடுப்பவர்கள் எடுக்கும் போது, அதன் பின் பதப்படுத்துதலுக்காக புகைப்படக் கருவி மெட்டாடேட்டாவை உபயோகிக்கலாம். இடம் சார் பொருட்களான (தரவுக்குழுக்கள், வரைபடங்கள், அம்சங்கள் அல்லது ஜியோஸ்பேடியல் அங்கம் உடைய வெறும் ஆவணங்கள்) ஆகியவற்றை விவரிக்கும் மெட்டாடேட்டா 1994லிருந்தே இருந்தது (MIT நூலக பக்கத்தின் FGDC மெட்டாடேட்டாவை பார்க்கவும்). இந்த வகை மெட்டாடேட்டா பற்றிய விவரிப்பு முழுமையாக ஜியோஸ்பேடியல் மெட்டாடேட்டா பக்கத்தில் உள்ளது. மெட்டாடேட்டா என்பதும் தரவு, ஆதலால் மெட்டாடேட்டாவிற்கு மெட்டாடேட்டா இருப்பதும் சாத்தியம் – “மெட்டா மெட்டாடேட்டா”. எழுத்து-இல்லாத தேடுதல் இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட பின்பக்க பொருளடக்கம் போன்ற இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட மெட்டா-மெட்டாடேட்டா, மெட்டாடேட்டாவாக ஒத்துக்கொள்ளப்படாது. ஐக்கிய அமெரிக்கா வழக்குகளில் மெட்டாடேட்டா சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பது மிகவும் அதிகமாகி உள்ளது. வழக்காளர்கள் மெட்டாடேட்டாவை கண்டறிதல் உள்ளிட்ட மெட்டாடேட்டா குறித்த பல கேள்விகளை நீதிமன்றங்கள் பார்த்துள்ளது. சிவில் முறைகளின் ஃபெடரல் விதிமுறைகள் மின்னணு ஆவணங்கள் பற்றிய விதிமுறைகளை மட்டும் குறிப்பிடுகின்றன. அதை தொடர்ந்து வழக்கு சட்டங்கள் வழக்காளர்கள் மெட்டாடேட்டாவையும் வெளியிட வேண்டும் என்பதை விவரிக்கின்றன. ஜெசி மெக்கார்ட்னி ஜெசி மெக்கார்ட்னி ("Jesse McCartney", பிறப்பு: ஏப்ரல் 9, 1987), அமெரிக்காவின் பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகராக உள்ளார். 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பாய் பேண்டு டிரீம் ஸ்ட்ரீட் குழுவின் உறுப்பினராக தனது கலைவாழ்வைத் துவக்கினார் ஜெஸ்ஸி மெக்கார்ட்னி. அதன் பின் தனியாக நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். தொலைக்காட்சித் தொடரான "சம்மர்லேண்டு" மற்றும் ஏபிசி குடும்பத் தொடரான "கிரீக்" நாடகத்திலும் தொடர்ந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்தார். ஜெஸ்ஸி மெக்கார்ட்னி, நியூயார்க்கின் ஆர்ட்ஸ்லி பகுதியில் ஸ்காட் மற்றும் ஜிஞ்சர் மெக்கார்ட்னி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் உள்ளூர் சமூக இசைக்குழுவில் பங்கேற்றார், அதன் பின் பத்தாவது வயதில் "தி கிங் அண்டு ஐ" மற்றும் "ஃபில் ஆஃப் தி பியூச்சர்" நட்சத்திரமான ரிக்கி உல்மேன் குழுவுடன் தேசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மெக்கார்ட்னி, மேடிசன் சதுக்க கார்டனில் தி ஹூ குழுவின் ரோஜர் டால்ட்ரே உடன் இணைந்து "கிறிஸ்துமஸ் கேரோல்" நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1998 முதல் 2001ம் ஆண்டு வரை, ஆடம் சாண்ட்லர், ஜூனியர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஏபிசி தயாரித்த தொடரான "ஆல் மை சில்ட்ரன்" தொடரில் நடித்தார் மெக்கார்ட்னி. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பின் "சம்மர்லேண்டு" என்ற குறுந்தொடரில் நடித்தார், இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்தொடர் தற்போது இயக்கத்தில் இல்லாத டபிள்யூபி நெட்வொர்க்கில் வெளியிடப்பட்டது. 2005ம் ஆண்டு டிஸ்னி தொலைக்காட்சியில், "தி சூட் லைஃப் ஆப் ஜேக் &கோடி" என்ற நிகழ்ச்சியில் தனது சொந்த கதாபாத்திரமாகவே தோன்றினார் மெக்கார்ட்னி. 2006ம் ஆண்டு கிங்டம் ஹார்ட்ஸ் II என்ற டிஸ்னி/ஸ்குயர் எனிக்ஸ் வீடியோ விளையாட்டில் "ரோக்சாஸ்" குரல் வழியாக பங்களித்தார். 2008ம் ஆண்டு, கிங்டம் ஹார்ட்ஸ் 358/2 டேஸ் விளையாட்டின் வாயிலாக கிங்டம் ஹார்ட்ஸ் II ரோக்சஸ் கதாபாத்திரத்துக்கு மீண்டும் குரல் கொடுத்தார். 2007ம் ஆண்டு, மெக்கார்ட்னி தனது சொந்த கதாபாத்திரமாகவே டிஸ்னி தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் "ஹன்னா மொன்டோனா" நிகழ்ச்சியில் தோன்றினார். 2008ம் ஆண்டு, "ஹார்டன் ஹியர்ஸ் ய ஹூ!" நிகழ்ச்சியின் ஜோஜோ மெக்டோட் குரல் வழியாக மெக்கார்ட்னிதோன்றினார். " இதுமட்டுமின்றி, தியோடருக்கு 2007ம் ஆண்டு வெளியான " ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ் என்ற திரைப்படத்திலும்," 2009ம் ஆண்டு வெளியான திரைப்படத்திலும் மெக்கார்ட்னி குரல் கொடுத்துள்ளார்." Alvin and the Chipmunks: The Squeakquel" அத்துடன், 2008ம் ஆண்டு வெளியான " டிங்கர் பெல்" என்ற திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்." 2008ம் ஆண்டு, நடிகை எலிசபத் ஹர்னாய்ஸ் உடன் இணைந்து இளவயதினருக்கான "கீத்" என்ற திரைப்படத்தில் மெக்கார்ட்னி நடித்தார். இத்திரைப்படத்தை டோட் ஏ. கெஸ்லர் இயக்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் மெக்கார்ட்னி. "கீத்" திரைப்படம் செப்டம்பர் 19, 2008ம் ஆண்டு வெளியானது. டிசம்பர் 2008ம் ஆண்டு வெளியான "என்டர்டெயின்மென்ட் வீக்லி" என்ற பத்திரிகையில், எதிர்ப்பு நாட்டின் இளவரசர் ஜூகோ கதாபாத்திரத்தில் இயக்குனர்எம். நைட் ஷியாமளன் இயக்கிய அடாப்டேஷன் ஆஃப்"" திரைப்படத்தில் நடிக்க மெக்கார்ட்னி மறுத்ததாக, செய்திகள் வெளியாகின. பிப்ரவரி 2009ம் ஆண்டு, மெக்கார்ட்னிக்கு பதிலாக பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது தேதிகள் வேறு நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டத்தால் நடிக்க இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. திரைப்படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டிய மெக்கார்ட்னி, திரைப்படப் பள்ளியில் இணைவதற்கும் விருப்பம் தெரிவித்தார். 2009ம் ஆண்டு, எதைப்பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத விளையாட்டுத்தனம் நிறைந்த கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் ஏபிசி குடும்ப தொலைக்காட்சி தொடரான "கிரீக் நாடகத்தில் மெக்கார்ட்னி நடித்தார்." 2009ம் ஆண்டில், விரைவில் வெளியாகும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கப்போவதாக (அது வென்சஸ் என்பது பின்னர் தெரியவந்தது) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் மூலம் தெரியப்படுத்தினார் Kingdom Hearts: Birth by Sleep 1999ம் ஆண்டு, அமெரிக்காவின் பாப் பாய் பேண்டு டிரீம் ஸ்ட்ரீட் இசைக் குழுவில் இணைந்த மெக்கார்ட்னி, 2002ம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக இருந்தார். தனியாக தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள, இந்த அனுபவம் தனக்கு "படிக்கல்லாக" இருந்தது என ஜெஸ்ஸி மெக்கார்னி கூறியிருக்கிறார். இந்தக் குழு தங்களது முதல் சிடி வெளியீட்டின் மூலம் கோல்டு ரெக்கார்டு பெருமையைப் பெற்றனர், இந்த சாதனையை ஆரோன் கார்டருடனான சுற்றுப்பயணத்தின் போது முறியடித்தனர். தனது பதினைந்தாவது வயதில், உள்ளூர் குழுவுடன் இணைந்து தனியாக தனது இசைப்பயணத்தைத் துவக்கினார் மெக்கார்ட்னி. அந்தக் குழுவில் தில்லான் காண்டோர் (கிட்டார்), பீட்டர் செம்மா (பாஸ்), கேட்டீ ஸ்பென்சர் (கீபோர்டு), அலெக்ஸ் ரெஸ்ஸேகு (டிரம்ஸ்), கரினா லாக்ரேவினெஸ் (பின்னணி குரல்), ஷாரிஸ்ஸீ ஃபிரான்சிஸ்கோ (பின்னணி குரல்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவை ஜிஞ்சர் மெக்கார்ட்னி மற்றும் ஷெர்ரி கோஃபின் காண்டோர் ஆகியோர் நிர்வகித்தனர். "பியூட்டிபுல் சோல்" என்ற மெக்கார்ட்னியின் முதல் ஆல்பத்தின் இணை தயாரிப்பாளர்களாக இவர்கள் இருந்தனர். ஜூலை 2004ம் ஆண்டு தனது முதல் ஆல்பத்தை மெக்கார்ட்னி வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பின்வரும் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன: "பியூட்டிபுல் சோல்", "டோண்ட் யூ" மற்றும் "ஒய் டோண்ட் யூ கிஸ் ஹெர்". 2004ம் ஆண்டு, ஆன்னே ஹேத்தவே உடன் இணைந்து மெக்கார்ட்னி பாடிய டூயட் பாடலான "டோண்ட் கோ பிரேக்கிங் மை ஹார்ட்", "எல்லா என்சான்டட்" இசைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது. மெக்கார்ட்னியின் முதல் தனி ஆல்பம் "பியூட்டிபுல் சோல்" , இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம், செப்டம்பர் 28, 2004 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது, ஓராண்டுகள் கழித்து ஐரோப்பாவில் வெளியானது. இந்த ஆல்பத்தை "பாப் ரெக்கார்டு" என்பதுடன் ட்விஸ்ட்ஸ் ஆஃப் அர்பன் என்றும் வகைப்படுத்தியிருந்தார். இந்த ஆல்பத்தில் இவர் எழுதிய நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. "பியூட்டிபுல் சோல்" ஆல்பம், "பில்போர்டு" 200 பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆல்பத்துக்கு அமெரிக்க ரெக்கார்டிங் துறைக்கான கூட்டமைப்பின் பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களுக்கு பத்து லட்சம் யூனிட்கள் அனுப்பப்பட்டதால், 2009ம் ஆண்டின் துவக்கத்தில் உயர்தர சான்றிதழை இந்த ஆல்பம் பெற்றது. 2006ம் ஆண்டின் மத்தியில், இந்த ஆல்பம் 15 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது. ஆல்பத்திலுள்ள சிங்கிள் ஆஃப் தி சேம் நேம் என்ற பாடல், "பில்போர்டு" ஹாட் 100 பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்தது. கடந்த 2005ம் ஆண்டின் டீன் சாய்ஸ் விருதுகள் பிரிவில் அதிக விருதுகள் வாங்கியவர்களில் மெக்கார்ட்னியும் ஒருவர். சாய்ஸ் கிராஸ்ஓவர் ஆர்டிஸ்ட், சாய்ஸ் ஆண் கலைஞர், சாய்ஸ் பிரேக்அவுட் ஆண் போன்ற விருதுகளை வென்றிருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டு, நிக்கெலோதியோன் கிட்ஸ் சாய்ஸ் விருதுகள் பட்டியலில் சிறந்த ஆண் பாடகர் விருதை வென்றுள்ளார். பியூட்டிபுல் சோல் எனப் பெயரிடப்பட்ட இவரது முதல் மிகப் பெரிய சுற்றுப் பயணம், 2005ம் ஆண்டு மே 2ம் தேதி கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ நகரில் உள்ள க்ரெஸ்ட் தியேட்டரில் தொடங்கியது. அமெரிக்கா முழுவதும் 56 இடங்களில் இசை நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்ட இச்சுற்றுப் பயணம், கலிபோர்னியாவின் மதேரா மாவட்டத்தில் 2005ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது. 2005ம் ஆண்டிலேயே, மெக்கார்ட்னி ஆஸ்த்ரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அத்துடன் 2005ம் ஆண்டின் கோடையில் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவுக்காக நிகழ்ச்சி நடத்தினார். ஜூலை 9ம் தேதி கலிபோர்னியாவின் சான்டா கிளாரா பகுதியில் உள்ள கலிபோர்னியாஸ் அமெரிக்கா அரங்கில் அவர் நடத்திய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு, "லைவ்: தி பியூட்டிபுல் சோல்" என்ற பெயரில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆல்பமாக வெளியிடப்பட்டது. "கீத்" திரைப்படம் முடிந்ததும், "ரைட் வேர் யூ வான்ட் மீ" என்ற தனது இரண்டாவது ஆல்பத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களை எழுதுவதில் முக்கிய பங்கு வகித்தார், அவற்றுள் ஒரு பாடல் தான் வெளியானது. "ரைட் வேர் யூ வான்ட் மீ" ஆல்பமானது, இவரது முதல் ஆல்பத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 15வயதிலிருந்து மெக்கார்ட்னியின் இசை மற்றும் தனிப்பட்ட அறிவு படிப்படியாக வளர்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. செப்டம்பர் 19, 2006ம் ஆண்டு ஹாலிவுட் ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியான இந்த ஆல்பம், "பில்போர்டு"  ௨௦௦ வரிசையில் 14து இடத்தைப் பிடித்தது. ஆல்பத்தில் வரும் தனிப்பாடலான "ரைட் வேர் யூ வான்ட் மீ" என்ற பாடல், ஜூலை 11, 2006முதல் ஒலிபரப்பாகத் தொடங்கியது. தனது ரெக்கார்டிங் நிறுவனத்திடமிருந்து சரியான ஆதரவு கிடைக்காததால், புதிய சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்று மெக்கார்ட்னியின் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை மெக்கார்ட்னி நடத்தினார். மெக்கார்ட்னியின் மூன்றாவது ஆல்பம் "டிபார்ச்சர்" , மே 20, 2008 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிடப்பட்டது. இசைக் கோர்ப்பில், இந்த ஆல்பம் அவரது முந்தைய ஆல்பங்களை விட மிக நேர்த்தியாக அமைந்தது. இந்த ஆல்பம், "பில்போர்டு"  200வரிசையில் 14வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆல்பத்தின் முக்கியப் பாடலான லீவிங்", மார்ச் 2008ல் வெளியிடப்பட்டது. "பில்போர்டு" ஹாட் 100 வரிசையில் (10)வது இடத்தை ஐந்து வாரங்களுக்கு பிடித்திருந்தது. இது மெக்கார்ட்னிக்கு மிகப் பெரிய புகழைத் தேடித் தந்தது. இந்தப் பாடலுக்கு பிளாட்டினம் சான்றிதழை ஆர்ஐஏஏ வழங்கியது. 30லட்சம் பிரதிகள் விற்பனையானதுடன், ஐட்யூன்ஸ் பதிவிறக்கத்தில் 20லட்சத்தைத் தொட்டது. இது தான் 2009ம் ஆண்டில் மெக்கார்ட்னியின் அதிக சான்றிதழ் அளிக்கப்பட்ட பாடல். அடுத்த பாடலான "இட்ஸ் ஓவர்", ஆகஸ்ட் 26, 2008அன்று வெளியிடப்பட்டது. முந்தைய பாடலின் வெற்றியை ஒப்பிடும் போது, சுமாரான வெற்றியையே இப்பாடல் பெற்றது. ஹாட் 100வரிசையில் 42 வது இடத்தை மட்டுமே பிடித்தது. மெக்கார்ட்னி தனது "டிபார்ச்சர்" ஆல்பத்தை பிரபலப்படுத்தும் விதமாக, ஜோர்டின் ஸ்பார்க்ஸ் உடன் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 2008 தொடங்கி, செப்டம்பர் வரை நீடித்தது. ஸ்பார்க்ஸ் உடன் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், தியேட்டர்களிலும், சிறிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது ஆல்பத்தை பிரபலப்படுத்தினார். மெக்கார்ட்னி தனது "டிபார்ச்சர்" ஆல்பத்தை ஏப்ரல் 7, 2009 அன்று மீண்டும் வெளியிட்டார். மறு வெளியீடு செய்யப்பட்ட "டிபார்ச்சர்: ரீசார்ஜ்டு" ஆல்பத்தில் "பாடி லேங்குவேஜ்", "ஆக்ஸிஜன்", "கிராஷ் & பர்ன்" மற்றும் "இன் மை வெய்ன்ஸ்" ஆகிய ௪ பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மீண்டும் வெளியிடப்பட்ட ஆல்பத்தில் "ஹவ் டூ யூ ஸ்லீப்?" பாடலின் ரீமிக்ஸ் பதிப்பும் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை ராப் பாடகர்/நடிகர் லுடாகிரிஸ் உடன் இணைந்து உருவாக்கினார். ஆல்பத்தின் மூன்றாவது தனிப்பாடலானது, மறுவெளியீடு செய்யப்பட்ட ஆல்பத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்ட "ஹவ் டூ யூ ஸ்லீப்?" ஆகும். இந்தப் பாடலானது, இரண்டாவது தனிப்பாடலைக் காட்டிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இது ஹாட் 100 வரிசையில் 26வது இடத்தைப் பிடித்தது. ஆல்பத்தின் நான்காவது பாடலும், மறுவெளியீடு செய்யப்பட்ட ஆல்பத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்டது. இப்பாடல் "பாடி லேங்குவேஜ்" என்ற டி-பெய்ன் பங்குபெற்ற பாடலின் புதிய வடிவமாகும். இந்தப் பாடல் வெளியிடப்பட்ட 13வது வாரத்தில் பில்போர்டு டான்ஸ்/கிளப் பாடல்கள் வரிசையில் 10வது இடத்தைப் பிடித்து, மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. தனது நான்காவது ஸ்டுடியோ ஆல்பத்தை நவம்பர் அல்லது டிசம்பர் 2009 துவக்கத்தில் உருவாக்கப்போவதாக, அக்டோபர் 10, 2009 அன்று மெக்கார்ட்னி உறுதியாக தெரிவித்தார் ஆல்பத்தின் உருவாக்கப் பணிகள் முடிந்து, 2010ம் ஆண்டின் ஜூன் -அக்டோபர் மாதங்களுக்கிடையே வெளியிடப்படும் என்றும், ஆல்பத்தின் முதன்மைப் பாடலை வெளியீட்டுத் தேதிக்கு 2 மாதங்களுக்கு முன்பே எதிர்பார்க்கலாம் என்றும் மெக்கார்ட்னி தெரிவித்தார். இதன் மூலம்,முதன்மைப் பாடல் ஏப்ரல் 2010ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் தனது "டிபார்ச்சர்" ஆல்பத்தைப் போலவே இருந்தாலும், R&B மற்றூம் அர்பன் ஆகியவை மேலும் கூடுதலாக இருக்கும் என்று மெக்கார்ட்னி தெரிவித்திருந்தார். ஜனவரி 2010ல், "டுநைட் இஸ் யுவர் நைட்" என்ற பாடல் முதன் முதலாக கசிந்தது. 2007ம் ஆண்டின் இறுதியில், பிரபலமான "பிளீடிங் லவ்" என்ற பாடலை ஒன் ரிபப்ளிக்கை சேர்ந்த ரியான்டெட்டர் உடன் இணைந்து மெக்கார்ட்னி எழுதினார், இப்பாடலை ஆங்கிலப் பாடகர் லியோனா லிவிஸ் உருவாக்கிய "ஸ்பிரிட்" என்ற முதல் ஆல்பத்திற்காக மெக்கார்ட்னியும் டெட்டரும் இணைந்து தயாரித்தனர். இந்தப் பாடல் 2009ம் ஆண்டின் கிராம்மி விருதுகள் பட்டியலில் ரெக்கார்ட் ஆஃப் தி இயர் பிரிவுக்காக பரிந்துரைக்கப்பட்டது. மெக்கார்ட்னி தனது சொந்தப் பதிப்பை தானே பதிவு செய்தார். இவை அவரது "டிபார்ச்சர்" ஆல்பத்தின் சில பதிப்புகளில் வெளியானது. இந்தப் பாடலின் உலகளாவிய வெற்றி, ஒரு பாடலாசிரியராக மெக்கார்ட்னிக்கு நல்ல அங்கீகாரத்தை வழங்கியது. இந்த வெற்றியின் மூலம் மெக்கார்ட்னிக்கு பல இசை நிறுவன நிர்வாகிகளிடமிருந்தும், பாடகர்களிடமிருந்தும் அதிக அழைப்புகள் வரத் தொடங்கின. டெட்டருடன் மீண்டும் ஸ்டுடியோவுக்குச் சென்று புகழ் பெற்றவர்களுக்காக பாடல்கள் எழுதுமாறு,"எக்ஸ்-ஃபேக்டர்" ஐ சேர்ந்தசைமன் கோவெல் கேட்டுக்கொண்டார். தனக்காக பாடல்கள் எழுதும்படி, மெக்கார்ட்னியின் 2008 ஆண்டு சுற்றுப்பயண நண்பரான "அமெரிக்கன் ஐடல்" சீசன் சிக்ஸ் வெற்றியாளர் ஜோர்டின் ஸ்பார்க்ஸ், மெக்கார்ட்னியிடம் கேட்டுக்கொண்டார். வனேஸா ஹட்க்ஜென்ஸ் 'டோன்ட் லீவ்' பாடலை ஆன்டோனியா அர்மேட்டோ மற்றும் டிம் ஜேம்ஸ் ஆகியோருடன் கூட்டிணைந்து மெக்கார்ட்னி எழுதினார்; தற்போது டோனிபிராக்ஸ்டனின் பல்ஸ் என்ற புதிய ஆல்பத்தில் கூட்டிணைந்து பணியாற்றுகிறார். 2005ம் ஆண்டு, "அனைவரும் ஒன்றுகூடுவோம்" என்ற பெயரிலான அறக்கட்டளை வாயிலாக 2004ம் ஆண்டின் ஆசிய சுனாமி மற்றும் 2005ம் ஆண்டு ஏற்பட்ட காத்ரினா சூறாவளி தாக்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 2005ம் ஆண்டில், அமெரிக்கா முழுவதும் உள்ள பொதுப்பள்ளிகளில் பயிலும் வசதியற்ற மாணவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் லிட்டில் கிட்ஸ் ராக் என்ற தொண்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக மெக்கார்ட்னி ஒப்பந்தம் மேற்கொண்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் கவுரவ இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தார். 2005ம் ஆண்டு தான் மேற்கொண்ட பேரிடர் நிவாரண சுற்றுப்பயணத்தின் போது நன்கொடைகளை அளித்தார், "போதை இல்லாத அமெரிக்காவின் குழந்தைகள்" என்ற பிரச்சாரத்துக்காக வானொலி நிகழ்ச்சிகள் வழங்கினார், புனித ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளராக உள்ளார், அத்துடன் தனது தாயாரின் தோழியால் துவக்கப்பட்ட "ஸ்பேஸ்" என்ற அறக்கட்டளையிலும் அங்கம் வகிக்கிறார். சிட்டி ஆஃப் ஹோப் புற்றுநோய் மையத்தின் நலனுக்காக, 2005ம் ஆண்டில் ஹோப் ராக்ஸ் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அக்டோபர் 25, 2009 அன்று நடந்த ஹோப் இசை நிகழ்ச்சியில் டிஸ்னி நட்சத்திரங்களான மிலே சைரஸ் மற்றும் டெமி லொவாடோ ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டார். தி புஸ்ஸிகேட் டால்ஸ் தி புசிகேட் டால்ஸ் (சுருக்கமாக பி.சி.டி ) ஓர் அமெரிக்க பாப் இசை மகளிர் குழு மற்றும் நடன சேர்ந்திசைக் குழுவாகும். இது 1995 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிண்டல் செய்யும் பாடகர் குழுவாக நடன அமைப்பாளர் ராபின் ஆண்டின் அவர்களால் நிறுவப்பட்டது. தேசிய அளவில் கவனம் பெற்றதன் விளைவாக, 2003 ஆம் ஆண்டில் இண்டெர்ஸ்கோப் ரிகார்ட்ஸ் நிறுவனத்துடன் பாடல் பதிவு ஒப்பந்தத்தை பேரம் பேசினார், அதன் மூலம் இந்தக் குழு இசை வர்த்தகத்தில் ஈடுபடும் உரிமை கொண்டதாக மாறியது. நிகோலே ஷ்ரெஸ்சிங்கர் மற்றும் மெலடி தார்ட்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி குழுவின் குரல் வளத்தை வலுப்படுத்தினார். அதன் பின்னர் குழுவானது ஆண்டின், இண்டெர்ஸ்கோப் மற்றும் பல்வேறு பங்காளிகளின் நேரடியான கண்காணிப்பில் மேற்பார்வையிலான ஒரு உலகளாவிய பிரபலத்தையும் வணிக முத்திரையையும் உருவாக்கியது. அவர்கள் நிகழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், ஓர் லாஸ் வேகாஸ் நிகழ்வையும் விற்பனைப் பொருட்களில் பெயரிடுதல் உட்பட பிறவற்றிலும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். 2005 ஆம் ஆண்டில் ஒரு இசைக் குழுவாக வெற்றியானது அவர்களின் "பி.சி.டி" என்ற முதல் இசைத் தொகுப்பின் மூலம் அடையப்பெற்றது, அமெரிக்காவில் சிறந்தவற்றில் ஐந்தாவதாக அது இடம்பெற்றது. அதில் "டோண்ட் சா", "பட்டன்ஸ்" மற்றும் "ஸிடிக்விடு" ஆகிய மூன்று வெற்றிகரமான பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் பின்னது குழுவுக்கு கிராமி விருதிற்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச்சில் கார்மிட் பாசர்ரின் விலகலுக்குப் பின்னர், குழுவானது ஐவர் குழுவானது. மேலும் அவ்வாண்டின் செப்டம்பரில் அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பை வெளியிட்டனர். "டால் டாமினெஷன்" என்ற அந்த ஆல்பத்தில் "வென் ஐ க்ரோ அப்", "வாட்சா திங்க் அபௌட் தட்", "ஐ ஹேட் திஸ் பார்ட்", "ஜெய் ஹோ!(யூ ஆர் மை டெஸ்டினி)", "பாட்டில் பாப்" மற்றும் "ஹஷ் ஹஷ்; ஹஷ் ஹஷ்" உள்ளிட்ட ஒற்றைப் பாடல்கள் இடம்பெற்றன. அவர்களது புகழுடைய வளர்ச்சிக் காலம் முழுதும், குழுவானது அதன் வெளிப்படையான செக்ஸி தோற்றத்திற்கும் வழக்கமான தெளிவான நடனங்களுக்கும், அத்தோடு முன்னணிப் பாடகரான ஷ்ரெஸ்சிங்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது மற்றும் குழுவின் அனைத்து முதன்மை மற்றும் பின்னணிக் குரல் பாடல்களை அவரைக் கொண்டு பாடச் செய்யப்பட்டது ஆகியவற்றிற்காக விமர்சிக்கப்பட்டது. குழுவின் பிரிதல் பற்றிய எண்ணற்ற வதந்திகள் இருந்ததாலும், குழுவானது தற்போது ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அக்குழுவானது 2010 ஆம் ஆண்டில் அவர்களது மூன்றாவது ஒலிப்பதிவு இசைத் தொகுப்பு, ஒரு புத்தம் புதிய குழு வரிசை மற்றும் ஒரு சுற்றுப்பயணத்தோடு திரும்ப வரவுள்ளது. ஆன்டின் 1990 ஆம் ஆண்டின் போது கிறிஸ்டினா ஆப்பிள்கேட் மற்றும் கார்லா காமா ஆகியோருடன் நவீன கிண்டல் நடனக்குழுவைப் பற்றிய கருத்தை ஆராயத் துவங்கியது. 1995 ஆம் ஆண்டில் நடனக் குழுவின் முதல் நிகழ்ச்சி நடந்தது. இந்தக் காலகட்டத்தில் அதன் உருவாகி வரும் வரிசையில் 1995 ஆம் ஆண்டில் துவக்கத்திலிருந்து பல உறுப்பினர்களைக் கண்டது. அவர்கள் எண்ணற்ற கௌரவக் குரல் பாடகர்களுடன், 1950கள் மற்றும் 1960களின் பிரபல இசைத் தரநிலைகளின் திரட்டுகளுடனும், அதேபோன்று உள்ளாடைகளுடனோ அல்லது பழம் பாணியிலான மாடல் அழகிகளின் ஆடைகளுடன் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அவர்கள் 1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்த லாஸ் ஏஞ்சல்ஸின் இரவு விடுதியான வைப்பர் ரூம் கிளப்பில் தர்ஸ்டே நைட் ரெசிடென்சியைப் பெற்றனர். குழுவானது 1999 ஆம் ஆண்டு ஜூனில் பரவலான பத்திரிகை விளம்பரத்தைப் பெற்றது. அப்போது "ப்ளேபாய்" பத்திரிகையில் புஸ்ஸிகேட் டால்ஸ் குழுவின் ஏழு தற்கால உறுப்பினர்களின் (கேஸி காம்பெல், கிவா டாவ்சன், அண்டோனீட்டா மாக்ரி, எரிகா ப்ரெக்லெஸ், காடி பெர்கோல்ட், எரிகா கூடீஸ் மற்றும் லிண்ட்ஸ்லே ஆலன்) அரைநிர்வாணப் படம் வெளியானது. மூன்றாண்டுகள் கழித்து டால்ஸ் தி ராக்ஸிக்கு குடி பெயர்ந்தனர். குழுவானது சர்வதேச அளவில் பிரபலமாகி பத்திரிகைகளில் தோன்றியது, MTV மற்றும் VH1 தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றது. புஸ்ஸிகேட் டால்ஸ்ஸின் சில உறுப்பினர்கள் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த "சார்லிஸ் ஏஞ்சல்ஸ்: புல் த்ரோட்டில்" (Charlie's Angels: Full Throttle) திரைப்படத்தில் "தி பிங்க் பாந்தர் தீம்" பாடலுக்கு நடனமாடினர். அவர்கள் பிங்கின் "டிரபுள்" இசை வீடியோவிலும் தோன்றினர். கிறிஸ்டினா ஆப்பிள்கேட், கிறிஸ்டினா அகிலேரா மற்றும் கார்மென் இலக்டிரா (அவர்களின் பல நிகழ்சிகளில் குழுவின் முன்னணி பாடகராக இருந்தார்) ஆகியோருடன் குழு "மாக்ஸிம்" இதழின் 2002 படப்பிடிப்பில் தோன்றியது, அவர்கள் மீதான பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது. அவர்களின் பிரபலத்தைத் தொடர்ந்து, இசைத் தயாரிப்பாளர்கள் ஜிம்மி லோவைன் மற்றும் ரோன் ஃபேர் குழுவுடன் ஈடுபட்டு அவர்கள் ஓர் வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு உதவினர். முன்னாள் நடனக் குழு ஓர் பிரபல இசைப் பதிவு குழுவாக உருவாயினர் மற்றும் லோவைன்னின் வர்த்தகப் பெயருடைய இண்டர்ஸ்கோப் ரிகார்ட்ஸ்சின் ஊழியர்களாகவும் ஆயினர். குழுவில் மறு-வார்ப்படத்திற்குப் பிறகு நிலைத்திருந்த குழு உறுப்பினர்கள் ஆண்டின், கார்மிட் பாசர், சியா பேட்டன், கேஸி கேம்ப்பல், ஆஷ்லி ராபர்ட்ஸ், ஜெசிக்கா சட்டா மற்றும் கிம்பர்லி வியாட் (உருவாக்கல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை பங்குகள்) மட்டுமே. 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஷ்ரெஸிங்கர், காயா ஜோன்ஸ் மற்றும் மெலடி தார்ண்டன் குரல் தேர்வுப் பதிவின் மூலம் குரல் பாடகர்களாக தோன்றியதன் மூலம் ஓர் இசைக் குழுவாக மாற்றத்தை முழுமையடையச் செய்தனர். எலக்டிரா, குழுவின் பிரபல இசைக் குழுவாக பரிணமித்தலில் அவரது ஈடுபாடு குறைவாக இருந்ததைப் பற்றி கேட்ட போது, கூறினார்: புஸ்ஸி கேட்டின் வர்த்தக ஒலிப்பதிவு செயல்முறைக்கு இணையாக, 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒரு ரெசிடெண்ட் லைவ் நிகழ்ச்சியானது லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பின் சீஸர்ஸ் அரண்மனை அருகில் ப்யூர் நைட் கிளப்பின் அண்மையில் "புஸ்ஸிகேட் டால்ஸ் லவுஞ்ச்சில்" துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 1995 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கிய கிண்டல்-பாணி நிகழ்ச்சியில் "பங்குபெற்ற உறுப்பினர்கள்" இடம்பெற்றனர். குறைந்தது எல்.ஏ நடனக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ராச்செல் ஸ்டெர்லிங், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்சிக்கு சென்றார். இந்த நடிப்புக் குழுவில் குரலிசைக் கலைஞர் ஜாமி பிரஸ்டென், ஹேய்லே ஸெல்நிக்கர், அமண்டா நோவாக், கோல்பி அம்ண்டா மற்றும் அலிசியா, முன்னாள் டால்கள் மெரிடெத், ஜெசிகா லீ, ராச்செல் ஸ்டெர்லிங், லாரல், லாரா டைனே, சிண்டி, ஆஷ்லே கேட்ஸ், பிரிகெட் நிகோலே, ஜெனிப்பர் அப்ரோண்டி, ஷீலா ஜாய் மற்றும் ஜாமி ரூய்ஸ் "Pussycat Dolls Present: Girlicious" லிருந்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில், சீஸர்ஸ் பேலஸ் ஹோட்டல், புஸ்ஸி கேட் டால்ஸ் லவுஞ்ச்சிற்கு சற்று எதிரில் புஸ்ஸி கேட் டால்ஸ் காஸினோவைத் திறந்தது. அது "டால்ஸ்-பாணி அரங்கத்தையும், விளையாட்டு அரங்கப் பணியாளர்கள், உபசரிக்கும் பெண்கள் மற்றும் நடனக்காரர்கள் ஆகியோருக்கு அதே பாணியிலான உடையையும் கொண்டிருந்தது. டால்ஸ் 2008 ஆம் ஆண்டு நவம்பரில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் "புஸ்ஸிகேட் டால்ஸ் லவுஞ்ச்" என்று அழைக்கப்பட்ட வழக்கமான வெள்ளி மற்றும் சனி இரவுகள் நிகழ்ச்சிகளுக்காக வைப்பர் ரூமுக்கும் திரும்பினர். 2003 ஆம் ஆண்டில், "பாப்ஸ்டாரின்" வெற்றியாளர்களான ஈடன்'ஸ் கிரஷ்ஷின் முன்னாள் உறுப்பினரான ஷ்ரெஸ்சிங்கர், ஒலிப்பதிவு குழுவின் முன்னணிப் பாடகராக ஆனார். அதே வருடத்தில், குரலிசைக் கலைஞர் தார்ண்டன் மற்றும் ஜோன்ஸ் ஆகியோரும் பாடல் குழுவின் குரல் வலுவைக் கூட்ட பணியமர்த்தப்பட்டனர். இசைக் குழுவின் முதல் வரிசை ஷ்ரெஸ்சிங்கர், தார்ண்டன், ஜோன்ஸ், ஆண்டின், பாசர், பாட்டென், காம்ப்பெல், வ்யாட், ராபர்ட்ஸ் மற்றும் சட்டா ஆகியோரைக் கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டில் இந்தக் குழு "ஷார்க் டேல்" மற்றும் "ஷால் வி டான்ஸ்?" ஆகிய திரப்படங்களுக்காக இரண்டு சவுண்ட் ட்ராக்கில் தோன்றியது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவு குழுவின் முதல் ஒற்றைப் பாடல் "ஷால் வி டான்ஸ்" ? ஆகும், அது "ஸ்வே" படத்தின் தாக்கத்தால் உருவான இசை வீடியோவைக் கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டில் குழு அறிமுகமாவதற்கு சற்று காலத்திற்கு முன், பேட்டன் மற்றும் காம்ப்பெல் ஆகியோர் அவர்களின் தனித்த நடன வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள குழுவை விட்டு விலகினர். பின்னர் 2005 ஆம் ஆண்டில், அவர்களது துவக்க இசைத் தொகுப்பை பதிவு செய்தப் பின்னர், ஜோன்ஸ் மாடலிங் மற்றும் ஒரு தனி இசை வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள குழுவை விட்டு விலகினார். ஆண்டின், குழுவிலேயே இண்டெர்ஸ்கோப்புடன் நிறுவனராக, மேலாளராக மற்றும் வர்த்தகக் கூட்டாளியாக நிலைத்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு குழு துவங்கப்படுகையில் இசை வரிசை ஷ்ரெஸ்சிங்கர், தார்ண்டன், பாசர், சட்டா, ராபர்ட்ஸ் மற்றும் வ்யாட் ஆகியோரைக் கொண்ட அறுவர் குழுவாக இருந்தது. செப்டம்பர் 13, 2005 அன்று அவர்கள் தங்களது அறிமுக ஆல்பமான "பி.சி.டி"யை வெளியிட்டனர், அது பில்போர்ட் 200 இல் ஐந்தாம் இடத்தைப் பெற்றது. அவர்களின் முதல் ஒற்றைப் பாடலான, "டோண்ட் சா" ஓர் வெற்றி பெற்ற பாடலாகும், இது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் முதல் இடத்தைப் பெற்றது. இது பில்போர்ட் ஹாட் 100 இல் அதிகபட்சமாக இரண்டாம் இடத்தைப் பெற்றது. அந்தப் பாடலை முதலில் டோரி அலமேஸ் பாடினார், அதில் ராப் பாடகர் பஸ்டா ரைம்ஸ் இடம்பெற்றிருந்தார். "ஸ்டிக்விடு" என்ற பாலட், அமெரிக்காவின் மற்றொரு சிறந்த ஐந்திலும் இடம்பெற்று, இங்கிலாந்தின் இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பெற்றதுமாக விளங்கியது. அது பின்னர் இருவராலோ அல்லது குழுவாகவோ நிகழ்த்தப்பட்ட சிறந்த பாப் பாடலுக்கான கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. "பீப்", பாடகர் வில்.ஐ.ஆம் தோன்றியது, குறைவான வெற்றியையே பெற்றது. ஆனால் சர்வதேச சந்தைகளில் முதலிடத்தை எட்டவில்லை. "பட்டன்ஸ்" (ராப் பாடகர் ஸ்னூப் டாக் இடம்பெற்றது) இங்கிலாந்தின் ஒற்றைப் பாடல்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை வென்றது; அடுத்த ஒற்றைக் குரல், "ஐ டோண்ட் நீட் அ மேன்" அவ்வளவாக வெற்றி பெறவில்லை, என்றாலும் ஆஸ்திரேலியா , அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தில் ஆகிய நாடுகளில் சிறந்த 10 பாடல்களில் இடம்பெற்றது. இந்தக் குழுவின் ஆல்பத்தில் இடம்பெற்ற ஆறாவது ஒற்றைப் பாடல் "வைட் அ மினிட்" 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவில் டிம்பாலாண்ட்டில் வெளியிடப்பட்டது, உலகம் முழுதும் சிறந்த 40 வெற்றிப் பாடல்களில் இடம்பெற்றது. இந்தக் குழு NBA வின் ABC நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2007 இன் போது, "ரைட் நவ்" இன் ஒரு வடிவத்தை பாடல் வரிகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பினும் NBA விற்காக தீம் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், "புஸ்ஸிகேட் டால்ஸ் பிரசெண்ட்: த சியர்ச் பார் த நெக்ஸ்ட் டால்" (Pussycat Dolls Present: The Search For the Next Doll) ரியாலிட்டி நிகழ்ச்சித் தொடரை வென்ற பின்னர், அசியா நிடலனோ பெயரளவில் மட்டும் குழுவின் ஏழாவது உறுப்பினரானார். அவருக்கு அடுத்த இசைத் தொகுப்பிலும் சுற்றுப் பயணத்திலும் பாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது டால்ஸ் குழு, தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் நிடலனோ பாடிய பதிப்பாக "லேடி மர்மல்மேட்" பாடலைப் பதிவு செய்யும் என ஒரு வதந்தி பரவியது. இது குழுவினாலோ நிர்வாகத்தாலோ எப்போதும் உறுதி செய்யப்படவில்லை. குழுவின் இறுதி நிகழ்ச்சியில், நிடலனோ டால்ஸ் முதன் முறையாக அவர்களின் நம்பர் ஒன் ஹிட் பாடலான "டோண்ட் சா" பாடலைப் பாடினார். அவர் பின்னர் மீண்டும் டால்ஸ் குழுவில் CW அப்ஃப்ரண்ட்ஸ் பார்ட்டியில் பாடினார். குழுவில் அவர் இருமுறை பாடியதை மட்டும் வைத்தே குழுவில் அவரது இடம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது, மேலும் குழுவின் லைவ் எர்த் நிகழ்ச்சிகளின் போது அவர் இடம்பெறாதது இதனை வலுப்படுத்தியது. அதே சமயம் சிறிது காலம் ஓர் இடைவேளை எடுத்துக் கொண்டும் 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை ஷ்செஸிங்கர் அவரது அறிமுக ஆல்பத்தில் பணியாற்றி வந்தார், அதற்கு "ஹர் நேம் இஸ் நிகோலே" எனப் பெயரிடுவதாக இருந்தது. புஸ்ஸிகேட் டால்ஸ் உடைந்திருந்த போது, ஷ்செஸிங்கர் நான்கு ஒற்றைப் பாடல்களை வெளியிட்டார், அவற்றில் ஒன்று கூட டால்ஸ்சுடனான பாடல்களின் அளவுக்கு வணிக ரீதியிலான வெற்றியைப் பெறவில்லை. அந்த ஆல்பம் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டிருந்தது, பின்னர் மீண்டும் 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது, அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. ஷ்செஸிங்கரின் ஆல்பத்திற்காக பதிவு செய்யப்பட்ட அவற்றில் சில பாடல்கள் டால்ஸின் இரண்டாவது ஆல்பத்தில் இடம் பெற்றன. மார்ச் 8, 2008 அன்று மற்றொரு உறுப்பினரான கார்மிட் பாசார் தன் வாழ்க்கைப் பணியை கைக்கொள்ள குழுவை விட்டு விலகினார். குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வலைப்பதிவில் அவரது முடிவினை அறிவித்தார். இந்தக் குழு, முறிவிற்குப் பிறகு முதன் முறையாகவும் ஐவர் குழுவாகவும் செயல்பட்டு, குவைத்தில் ஆபரேஷன் மைஸ்பேஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க துருப்புக்களுக்காக ஒரு நிகழ்ச்சியை வழங்கியது. மே 27, 2008 அன்று "வென் ஐ குரோ அப்" என்ற புதிய ஒற்றைப் பாடலுடன் இந்தக் குழு இசைக் காட்சிக்கு மீண்டும் திரும்பியது. அது யுஎஸ் ஹாட் 100 இல் ஒன்பதாவது இடத்தை அடைந்தது, மேலும் "பில்போர்ட்" ஹாட் டான்ஸ் கிளப் பிளேயில் முதல் இடத்தைப் பெற்றது. அப்பாடல் ஐரோப்பாவில் (இங்கிலாந்து தவிர) இசைப் பட்டியல்களில் சிறந்த பாடலின் இடத்தையும் உலகளவில் சிறந்த பத்து ஹிட் பாடல்களில் ஒன்றாகவும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த நகர்ப்புற மிஸ்ஸி எலியட் இன் ஒற்றைப் பாடலான "வாட்சா திங்க் அபௌட் தட்" அமெரிக்க இசைப் பட்டியல்களில் நுழையத் தவறியது, அது பப்ளிங் அண்டர் பட்டியலில் எட்டாம் இடத்தையே பெற்றது, ஆனால் இங்கிலாந்து உட்பட பல பிற நாடுகளில் சிரமப்பட்டு 20 சிறந்த பாடல்களில் இடம்பெற்றது. சிறிது கால தாமதத்திற்குப் பிறகு இரு ஒற்றைக் குரல் பாடல்களோடு வெளியிடப்பட்ட ஆல்பமான "டால் டாமினேஷன்" இறுதியாக ஒரு தரநிலையான பதிப்பாக செப்டம்பர் 19, 2008 அன்று வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அந்த ஆல்பத்தின் டீலக்ஸ் பதிப்பும் வெளியிடப்பட்டது. மேலும், அதில் ஒவ்வொரு பெண்களின் தனிப்பாடலுடன் கூடிய டிஸ்க்கும் இடம்பெற்றது. அந்த ஆல்பம் பில்போர்ட் 200 இல் நான்காம் இடத்தில் இடம்பெற்றது, அதன் முதல் வாரத்தில் 79,000 பிரதிகள் விற்றது அவர்களின் துவக்க ஆல்பத்தை விட பட்டியலிலான ஒரு நிலையை அதிகம் பெற்றது. ஆனால் குறைவான 20,000 பிரதிகளையே விற்றது. அது சிறந்த 100 பாடல்களில் ஏழு வாரங்களே நீடித்தது, ஒப்பிடுகையில் அவர்களின் துவக்க ஆல்பமானது சிறந்த 100 பாடல்களில் கிட்டத்தட்ட ஓராண்டு உயர்ந்த நிலையில் நீடித்தது. இன்னும் சில வெற்றிகரமான ஒற்றைப் பாடல்களுடன் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில், அது சிறந்த 100 பாடல்களில் மீண்டும் நுழைந்தது. இரு இதர ஒற்றைப் பாடல்களைக் கொண்டிருந்த ஆல்பத்தின் முதல் பதிப்பில், உலகளவில் சிறந்த 20 ஹிட் பாடல்களில் இடம்பெற்ற "ஐ ஹேட் திஸ் பார்ட்" மற்றும் நம்பர் ஒன் கிளப் பாடலான "பாட்டில் பாப்" ஆகியவற்றைக் கொண்டிருந்தது, அது அமெரிக்காவிலும் ஓஷனியாவிலும் குறைவான அளவே வெளியிடப்பட்டது. தி டால் டாமினெஷன் சுற்றுப் பயணம் என்ற பெயரில் ஓர் உலக சுற்றுப் பயணம் ஆல்பத்துடன் நிகழ்ந்தது, அது ஸ்காட்லாந்தின் அபர்டீனில் ஜனவரி 18, 2009 அன்று தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஷ்ரெஸ்சிங்கர் "பில்போர்ட்" இதழுக்கு உறுதிப்படுத்தியது, டால்ஸ் அவர்களுடைய தற்போதைய இசைத் தொகுப்பை மறு-வெளியீட்டை அவர்களின் இசையை "மக்களுக்கு ஓர் புதிய சுழற்சியைப் பெறும் வாய்ப்பினைப் கொடுக்க" செய்யவுள்ளனர் என்பதே. ஐரோப்பாவில் இசைத் தொகுப்பு மூன்று அல்லது நான்கு புதிய பாடல்களுடன் மறு-வெளியீடு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஓர் "டால் டாமினேஷன் 2.0" எனும் தொகுப்பு, மூல வடிவத்திலிருந்து ஆறு பாடல்கள் கூடுதலாக புதிய நான்கு பாடல்களுடனும் வெளியிடப்பட்டது. அப்படியிருக்க இங்கிலாந்து ஓர் ஆறு பாடல் ஈபியை, ["டால் டாமினேஷன்: தி மினி கலெக்க்ஷன்" ஐ ஏப்ரல் 27, 2009 அன்று மூலத்திலிருந்து நான்குப் பாடல்கள் கூடுதலாக ஒரு மறுகலப்பு மற்றும் ஓர் புதிய பாடலுடன் சிறப்புற்றிருந்தது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இசைத் தொகுப்பு மீண்டும் ஒருமுறை பட்டியிலிடப்பட்டது, இம்முறை "டால் டாமினேஷன் 3.0" என மூலத் தொகுப்புடன் கூடுதல் பாடல்களை குறுந்தகட்டில் உள்ளடக்கியதாக இருந்தது. அந்த வெளியீடானது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் குழுவின் ஒற்றைக் குரல்கள் எங்கு உயர் 20 தில் அனைத்து முறையும் சேர்ந்ததோ அளவோடு வெளியிடப்பட்டது. மறு பேக்கேஜ் செய்யப்பட்ட இசைத் தொகுப்பு மேலும் இரு ஒற்றைக் குரல்களைத் தோற்றுவித்தது: உலகம் முழுதுமான முதல் இடம் பெற்ற "ஜெய் ஹோ! (யூ ஆர் மை டெஸ்டினி)" (ஸ்லம்டாக் மில்லியனரின் ஒலித் தடத்தின் மீது சிறப்புடன் சேர்க்கப்பட்டது) மற்றும் ஈரோ-பாப் மறுக்கலப்பான "ஹஷ் ஹஷ்" (மறுத் தலைப்பிடப்பட்டது "ஹஷ் ஹஷ்; ஹஷ் ஹஷ்") உயர் 20 உலகளவில் அடைந்த ஒன்றினையும் கொண்டது. நிகோலே ஷ்செஸ்சிங்கர் மீதான சிறப்பு கலைஞர் என்கிற அழுத்தம் சர்ச்சையை ஏற்படுத்தியதானது இவ்விரு ஒற்றைகள் 'நிகோலே ஷ்செஸிங்கர் சிறப்பு' என பெயர்ப் பட்டியைக் கொண்டிருந்ததே. அது ஊடக யூகமான ஷ்செஸ்சிங்கர் குழுவினை அவரது சொந்த தனித்த வாழ்க்கைப் பணியை கைக்கொள்ள விட்டுச் செல்கிறார் என்பதை ஊக்கப்படுத்தியது. பின் வந்த வாரங்களில் குழுவில் உணர்ச்சிகரமான கொந்தளிப்பு உயர்ந்தது மேலும் பல உணர்ச்சிகரமான வெடிப்புகள் ஊடகத்தின் மீது விழுந்தது இதில் தார்ண்டன்னின் குழுவின் சுற்றுப் பயண தோற்றங்களின் போதான ஒன்றையும் உள்ளடக்கியது. உணர்ச்சிகரமான சூழலைத் தொடர்ந்து இசைத் தொகுப்பின் உயர்வு முடிவிற்கு வந்ததாக தோன்றியது மேலும் எந்தவொரு ஒற்றைப் பாடல்களும் வெளியிடப்படவில்லை. ஆகஸ்ட் 2, 2009 அன்று, நிறுவனர் ஆன்டின் அவரது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தை ஓர் அறிவிப்பினை வெளியிட கைக்கொண்டார். அது டால்ஸ் பொறாமையினாலும் ஷ்செஸ்சிங்கர் முன்னணி குரல் பாடல்களை பாடுவதாலும், அதைத் தொடர்ந்து உடைந்து விட்டதாக அதிகப்படியான வதந்திகளைப் பின்தொடர்ந்ததாகும். அவர் "புஸ்ஸிகேட் டால்ஸ் உடையவில்லை... மேலும் அவ்வாறெனில், நீங்கள் என்னிடமிருந்து முதலாவதாக கேட்பீர்கள், வதந்தியை அல்ல...இசைத் தொகுப்பு #3 வெளியிடப்படவுள்ளது!" என்று கூறினார். MTV விக்கான நேர்முகம் ஒன்றில், தார்ண்டன் கூறியது, "தற்போது புஸ்ஸிகேட் டால்ஸ் உடைந்துள்ளது. அது உண்மையில் ஓர் அதிகத் தேவையான உடைதல். அது நீங்கள் உங்கள் சகோதரிகளுடன் 24 மணி நேரமும் இருப்பது போன்றது மேலும் நீங்கள் உங்களுடைய சொந்தக் குளியலை எடுத்துக் கொள்வது போன்றது." தார்ண்டன் கூறியது, டால்ஸ் இறுதியாக அவர்களின் ஒருவருக்கொருவரின் திரும்பும் வழியைக் கண்டுகொள்வார்கள். அவர் எண்ணற்ற வேறுபட்ட கலைஞர்களுடன் வேறுபட்ட அணுகு வழிகளில் ஒரு தானாகவேத் தோன்றும் அமெரிக்க R&B பாடகர்-பாடலாசிரியர் கேரி ஹில்ஸனுக்கான இசை ஒளி நாடா "ஸ்லோ டான்ஸ்" உட்படவற்றில் பணிபுரிந்து வருகிறார். இடையில், ஷ்செஸ்சிங்கர் அவரது தாமதிக்கப்பட்ட துவக்க தனி இசைத் தொகுப்பும், 2007 லிருந்து தாமதிக்கப்பட்டதும், அடித்துண்டிலிருந்து மீண்டும் மறுபடியும் பணியாற்றப்படுவது மற்றும் புஸ்ஸிகேட் டால்ஸ்சின் மூன்றாவது இசைத் தொகுப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதில் தனது பணியினைத் துவக்கியுள்ளார். அக்டோபரில் வ்யாட் தொடர்ச்சியான புஸ்ஸிகேட் டால்ஸ்ஸில் எது உண்மையான பகுதியாக இருக்கும் என்பது பற்றிய நேர்முகங்களை துவங்கினார். அவர் "டெய்லி ஸ்டார்" இதழில் கூறியிருந்தார் அதாவது அவரது "குழுவில் நாளின் முடிவில் ஓர் பணியான பங்காகும், மேலும் அவர்கள் எல்லோரும் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு வைத்துள்ளனர்". அவர் மேலும் விளக்குகையில் அதாவது குழுவானது இயற்கையான முறையில் இணைக்கப்படவில்லை ஒன்று சேர்க்கப்பட்டது எனவே அவர் ஷ்செஸ்சிங்கரை ஓர் வர்த்தக ஓர் நண்பராக விட கூட்டாளியாகவே பார்த்தார். இந்த விமர்சனங்கள் குழுவின் நிலையை உயர்த்திக் காட்டியது, அதாவது இசைக் குழு தொடர்ச்சியாக யார் அதற்கு திரும்பி வந்தனர் அல்லது யார் அதன் பகுதியாக உள்ளனர் என்பது பற்றியெல்லாமல் செயல்படும் என்பதையே. அது மறு உறுதிப்படுத்தியதும் கூட எதுவெனில் குழுவில் அனைவரும் சமமற்ற பங்கினை அதனை வர்த்தக ரீதியான இசையாக வளர்க்கவும் பங்கு வகித்ததையேயாகும். பின்னர் அக்டோபர் 12, வ்யாட் [புஸ்ஸிகேட் டால்ஸ்] பிராட்வே ஷோவாகவும், அதற்கு [ராபின் ஆண்டின்], குழுவின் நிறுவுனர், புதிய உறுப்பினர்களை கொண்டு வருகிறார் மேலும் குழு தொடர்ச்சியாக செயல்படும் சில உறுப்பினர்கள் விலகிச் சென்றாலும் கூட என விவரித்தார். அவர் மேலும் தகவல்கள் படி குழு தற்போது உடைந்துக் கொண்டுள்ளது மற்றும் அதனால் அவர் அக்குழுவில் இப்போதும் உறுப்பினராக உள்ளார் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை, மேற்கொண்டு குழுவின் எதிர்காலம் பற்றி நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கு விதமாக உறுதிப்படுத்தினார். இது உட்பட குழுவின் பல இதர நேர்முகங்கள் மற்றும் தோற்றங்கள் தனித்தனியாக வதந்திகளுக்கும் ஊடக யூகங்களுக்கும் அதாவது குழு அதன் முன்னணிப் பாடகர் ஷ்செஸ்சிங்கர் உடனான மனதிற்கொவ்வாத உறவுமுறையினால் உடையவுள்ளது என்பதற்கு வழிவிட்டது. இருப்பினும் ஆண்டின் உடனடியாக ஊடகங்களுக்கு ஓர் அறிக்கையின் வாயிலாக பதிலளித்தார் டிசம்பரில் வ்யாட் மீண்டும் ஒருமுறை குழுவைப் பற்றியும் தற்போது பொழுதுபோக்கு இணையதளமான டிஜிட்டல் ஸ்பைகு என்ன நேர்கிறது எனபது பற்றியும் பேசினார். அவர் முன்னர் வந்த செய்திகளின்படி அவர் ஒலிப்பதிவு கூடங்களில் அவரது சொந்த எலக்டிரானிகா வகையினால் பாதிக்கப்பட்ட துவக்க தனித்த இசைத் தொகுப்பு மீது பணியாற்றி வருகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். நெருக்கடியாக அவர் வெளியிட்டது எதுவெனில் அவர் குழுவின் மூன்றாவது இசைத் தொகுப்பிற்கு என்ன நேர்கிறது என்பதை அவர் அதன் செலுத்து சக்தியாக அதன் பின்னால் இல்லையென்பதால் அறியவில்லை. அதிலும் கூட குறிப்பிடப்பட்டது "இரசிகர்கள் புது முகங்களை எதிர்பார்க்க வேண்டும்". அவர் குழுவில் அவரது பங்கினை மாற்ற இயலாதது என விவரித்து கூறியது "அவர் எப்போதும் [புஸ்ஸிகேட் டால்ஸ்] ஈடுபடுவார் அது அதன் நடன அமைப்புகளிலோ அல்லது படைப்பாற்றல் மிக்க இயக்கத்திலோ உதவிகரமாக இருக்கும்." ஆண்டின் பின்னர் "தி வெண்டி வில்லியம்ஸ்" நிகழ்ச்சியில் அவரது புதிய உடல் வலு DVD யை முன்னேற்றத் தோன்றினார். வில்லியம்ஸ் அச்சந்தர்ப்பத்தை ஆண்டினை குழுவின் சாட்டியுரைக்கப்பட்ட உடைதலைச் சூழ்ந்துள்ள வதந்திகளைப் பற்றி கேட்க எடுத்துக் கொண்டார். ஆண்டின் எதிர்வினையுடன் கூறினார் "[புஸ்ஸிகேட் டால்ஸ்] உடையவில்லை. உண்மையில் நாங்கள் புதிய இசைத் தொகுப்பை தயாரிக்கிறோம். ஷ்செஸ்சிங்கர் அங்கு தொடர்ந்து பணியாற்றுவார் என் உறுதி கூறினார். இருப்பினும் ஆண்டின் கூறியது அவர் ஒருசில புதிய முகங்களைக் கொண்டு வருகிறார் மற்றும் பல தற்போதிருக்கும் உறுப்பினர்கள் தனித்த இசை முயற்சிகளை கைக்கொள்ள வெளியேறலாம் என்றார். அவர் கூறினார் குழு மகளிர் அதிகாரமளித்தல் பற்றியது. ஒவ்வொரு மகளிர் உள்ளும் ஓர் புஸ்ஸிகேட் டால் வெளியேறக் காத்திருக்கிறது. பல இலட்சம் பெண்கள் அங்கு காத்திருக்கின்றனர் அவர்கள் அது எவ்வாறு உணரப்படுகிறது என அறிய விரும்புகின்றனர். நான் புதிய முகங்களை கொண்டு வர விரும்புகின்றனர்." சட்டாவும் கூட தனித்த இசைத் தொகுப்பிற்காக சம்பந்தமுள்ள பணிகளைச் செய்வதாக கூறப்படுகிறது. ஷ்செஸ்சிங்கர் மட்டுமே குழுவின் ஒரே உறுப்பினராக நிச்சயமாகத் திரும்ப வருவார் என்பது கவனிக்கப்பட வேண்டும் மற்றும் வ்யாட், தார்ண்டன் மற்றும் சட்டா அனைவரும் தனித்த இசைத் தொகுப்பிற்கான சம்பந்தமுள்ள பணிகளில் உள்ளனர் ஆயினும் பின்னர் கூறப்பட்ட மூன்று பேர்களில் எவரெவர் குழுவின் உறுப்பினர்களாக அவர்கள் 2010 ஆம் ஆண்டில் தி புஸ்ஸிகேட் டால்ஸ் திரும்பும் போது இருப்பர் எனக் கூறவில்லை. 2006 ஆம் ஆண்டில், தி புஸ்ஸிகேட் டால்ஸ் நிகழ் காட்சிகளை வட அமெரிக்காவில் பிளாக் அய்ட் பீஸ்சிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் நிகழ்த்தினர். அவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றவாறு இங்கிலாந்து, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகியவற்றில் சுற்றுப்பயணம் செய்தனர்.குழு சிங்கப்பூரிலும் வருடாந்திர சிங்ஃபெஸ்ட்டிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியது. ஆகஸ்ட் 8, 2006 அன்று, கோலா லம்பூர் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர்களின் இசை நிகழ்ச்சி ஆதரவாளர், அப்சல்யூட் எண்டெர்டெய்ண்மெண்ட் மீது மலேசிய கண்ணிய விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. "தி மலேய் மெயில்" பண்பாடு மற்றும் பாரம்பரிய அமைச்சர் தாடுக் மொஹமத் ஆரிஃப் அப்துல் ரஹ்மான் கூறியதாவது: " நான் புஸ்ஸிகேட் டால்ஸ் அரங்கத்தில் நடந்து கொண்டதானது மொத்தமாக கீழ்த்தரமான நாணமற்று இருந்தது என நம்புகிறேன்". இக்குற்றச்சாட்டு அபராதமாக RM5,000 (US$1,358) செலுத்தப்பட்டப் பிறகு தீர்க்கப்பட்டது. நவம்பர் 2006-ஜனவரி 2007 வரையிலான காலத்தில், புஸ்ஸிகேட் டால்ஸ் அவர்களின் PCD உலக சுற்றுப்பயணத்தை ரிஹானாவின் துவக்க செயல்பாட்டுடன் துவங்கினர். பிப்ரவரி 4, 2007 அன்று, புஸ்ஸிகேட் டால்ஸ் மான்செஸ்டெர் ஈவ்னிங் நியூஸ் அரேனாவில் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்டு பின்னர் MSN Music மூலம் ஒலிபரப்பப்பட்டது. புஸ்ஸிகேட் டால்ஸ் வட அமெரிக்காவிலும் சுற்றுப்பயணத்தை கிறிஸ்டியான அகுயிலேராவின் "பேக் டு பேஸிக்ஸ் டூரி" ன் ஆதரவு நடவடிக்கையாக டானிட்டி கேன் மற்றும் NLT உடன் நிகழ்த்தியது. அவர்கள் ரோமேனியா நாட்டின் புகாரெஸ்ட்டில் கோக்லைவ் திருவிழாவிலும் நிகழ்ச்சியைக் நிகழ்த்தினர் மற்றும் லண்டனின் வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் இங்கிலாந்து நாட்டு சுற்றுப்பயணத்தின் லைவ் எர்த் நிகழ்ச்சியையும் நிகழ்த்தினர். புஸ்ஸிகேட் டால்ஸ், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில், அவர்கள் தங்களின் டால் டாமினேஷன் இசைத் தொகுப்பிற்கு ஆதரவாக உலக சுற்றுப்பயணம் ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தனர். கேபிடல் ரேடியோ வுடனான ஓர் நேர்முகத்தில், நே-யோ குழுவுடன் அவரும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக பகிரங்கப்படுத்தினார். லேடி ககா மற்றும் குயின்ஸ்பெர்ரி ஆகியோரும் அரங்கத்தில் அவர்களை ஆதரித்தனர். சுற்றுப்பயணம் ஜனவரி 18 அன்று ஸ்காட்லாந்தின் அபெர்டீன் கண்காட்சி மையத்தில் துவங்கியது. குழு சமீபத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ்சின் சுற்றுப்பயணத்தின் வட அமெரிக்க பகுதியில் துவக்க நிகழ்ச்சியாக சுற்றுப்பயணம் செய்ததுThe Circus: Starring Britney Spears. 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில், "தி நியூயார்க் டைம்ஸ்" கூறியதாவது இண்டெர்ஸ்கோப் பிரதிநிதிகள் அவர்களின் சொந்த நிகழ் தொலைக்காட்சித் தொடரை தயாரிக்கும் பணியிலுள்ளனர், அது "சார்லி ஏஞ்சல்ஸ்" சின் இயக்குநரான மெக்ஜி மற்றும் "அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்" நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களாலும் மேற்பார்வையிடப்படுகிறது என்பதாகும். நிகழ்ச்சி, "Pussycat Dolls Present: The Search For the Next Doll" எனும் பெயர்க் கொண்டதானது, ஒலிப்பதிவுக் குழுவிற்கான புதியதோர் உறுப்பினரைத் தேடும். புதிய உறுப்பினர் அடுத்த இசைத் தொகுப்பில் பாடுவார் மற்றும் குழுவுடன் சுற்றுப்பயணம் செய்வார். நிகழ்ச்சியானது The CW தொலைக்காட்சியில் முதன்மைக் காட்சியாக மார்ச் 6, 2007 அன்று காட்டப்பட்டது. ஏப்ரல் 1 அன்று அது ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் முதன்மைக் காட்சியாகக் காட்டப்பட்டது. பருவத்தின் இறுதி அறிவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் வெற்றியாளர் அசியா நிடோலனோவாக இருப்பார். அதற்குப் பதிலாக ஜூலையில் அசியா நிடோலனோ "ஓர் தனித்த வாழ்க்கைப்பணியை மேற்கொள்ள முடிவெடுத்து விட்டார்" என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தின் ஒளிபரப்பு பிப்ரவரி 18, 2008 அன்று "Pussycat Dolls Present: Girlicious" எனத் தலைப்பிடப்பட்டுத் துவங்கியது. முன் தொடர்கள் போலல்லாது டால்ஸ்சில் சேருவதற்கு ஓர் புதிய உறுப்பினரைத் தேட முயற்சித்தது, இரண்டாம் தொடர் பெண்களுக்கு குரல் பரிசோதனையை கிர்லிசியோஸ் எனும் புதிய மூன்று உறுப்பினர் அனைத்து மகளிர் குழுவின் பகுதியாக்க முயற்சித்தது. இருப்பினும், நிகழ்ச்சியின் இறுதியில், கிர்லிசியோஸ் நால்வர் குழுவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. வரிசையானது நிகோலே கோர்டோவா, டிஃபானி ஆண்டெர்சன், கிறிஸ்டினா சேயர்ஸ் மற்றும் நடாலி மேஜியா ஆகியோரை உள்ளடக்கியது. குழு நிகழ்ச்சியின் இறுதிக்கு சற்றுப் பின்பு துவங்கியது. அவர்களின் துவக்க இசைத் தொகுப்பினை வெளியிட்டனர் மேலும் அவற்றின் ஹிப்-ஹாப் நகர்புற ஒலியினாலும் கவனிப்பினை பெரும்பாலும் கனடியன் மற்றும் பிரேசிலியன் நேயர்களிடமிருந்து பெற்றது. இருப்பினும் ஜூன் 2009 அன்று, நகர்புற இசை வகையிலிருந்து பாப் வகைக்கு திசை மாறிய பிறகு, ஆண்டினால் அறிவிக்கப்பட்டதானது, ஆண்டர்சன் குழுவை விட்டு விலகினார் மேலும் அது கிலிசியோஸ் மூவர் குழுவாக தொடரச் செய்யும் என்பதாகும். புஸ்ஸிகேட் டால்ஸ்சின் ஒலிப்பதிவுக் குழு உறுப்பினர்கள் "Pussycat Dolls Present:" இன் இரு பருவங்களிலும், ஒன்று கௌரவ நடுவராகவோ, பாடல்களை நிகழ்த்துபவர்களாகவோ அல்லது போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் காட்டப்பட்ட ஒளி நாடாச் செய்தியிலோ தோன்றினர். 2007 ஆம் ஆண்டில், இண்டெர்ஸ்கோப் ஓர் லண்டனை அடிப்ப்டையாகக் கொண்ட தற்செயலாக விளைந்த பயனாக பாரடிசோ கேர்ல்ஸ் எனும் குழுவை ஓர் திறந்த குரல் சோதனை மூலம் அமைத்தது. குழுவின் உண்மையான வரிசை முன்னணி பாடகர்களான அரியா காஸ்காவால் மற்றும் லாரென் பென்னட், ராப் இசைப் பாடகர் ஷார் மாயே அமோர் மற்றும் டி ஜே கெல்லி பெக்கெட் ஆகியோரைக் கொண்டதாக இருந்தது. ஆண்டின் மற்றும் ரான் ஃபேர் ஆகியோர் "Pussycat Dolls Present: The Search For the Next Doll" இன் இறுதிப் போட்டியாளர் செல்சி கோர்காவை மூன்றாவது குரல் பாடகராக சேர்க்க தேர்ந்தெடுத்தனர், அதன் மூலம் குழுவின் இறுதிப் போட்டி வரிசைக்கு கொண்டுச் சேர்த்தது. குழுவானது அதன் சர்வதேச துவக்க இன்னும் செய்ய வேண்டும் அதே சமயம் அவர்களது துவக்க இசைத் தொகுப்பையும் ஒற்றை மற்றும் இன்னும் வெளியிடப்பட வேண்டிய இசைத் தொகுப்பையும் வெளியிட வேண்டும். பிப்ரவரி 2008 வரை, தொலைக் காட்சித் தொடரின் ஓர் பகுதியாக The CW ஓர் நடைமுறையிலான காகித பொம்மை இணையதளமான Stardoll.com ஐ ஆதரித்தது. அதில் PCD வர்த்தக சின்னம் பொறித்த ஆடைகளில் PCD ஒலிப்பதிவுக் குழு உறுப்பினர்களின் ஒன்றையொன்று பாதிக்கக் கூடிய ஆடை அணிதலின் படங்களை உள்ளடகியது. இநத இணையத்தளம் ஏழுலிருந்து பதினேழு வரையிலான வயதுள்ள சிறுமிகளை குறிவைத்தது. The CW தொடரானது மூன்றாம் பருவத்திற்கு திரும்பாது என உறுதியளித்தது மேலும் குறைவான தர வரிசைகளால் ரத்து செய்யப்பட்டது. புஸ்ஸி கேட் டால்ஸ் "டோண்ட்-சா" வை மீண்டும் கணிணி விளையாட்டில் உள்ளடக்க கற்பனை மொழியான சிம்லிஷ்ஷில் ஒலிப்பதிவுச் செய்தனர் "The Sims 2: Pets" . 2006 ஆம் ஆண்டு நவம்பரில் அவை கணிணி விளையாட்டில் "Asphalt: Urban GT 2" குணசித்திர வடிவிலும் தோன்றின. 2006 இன் போது, இண்டெர்ஸ்கோப் கலிப்போர்னிய நிறுவனமான பாண்ட்மெர்ச்சை ஓர் வணிகப் பொருட்கள் வரிசையை விநியோகிக்க அமர்த்தியது. அதில் ஆடை மற்றும் இதர பொருட்களை உள்ளடக்கியவை, குழுவின் அதிகார பூர்வ இணையத்தளம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டில், இண்டெர்ஸ்கோப்புடனான வணிகப் பொருட்கள் ஒப்பந்தத்தில், பொம்மைத் தயாரிப்பாளர் ஹாஸ்ப்ரோ புஸ்ஸிகேட் டால்ஸ் மாதிரிகளைக் கொண்டு வரிசையான பொம்மைகளின் வரிசையை திட்டமிட்டிருந்ததானது, ஆறு முதல் ஒன்பது வயதினரிடையே விற்கப்போவதாக வதந்தியுடனிருந்தது. "டாட்ஸ் அண்ட் டாடர்ஸ்" மற்றும் "காம்பெயின் ஃபார் அ கமர்ஷியல்-ஃப்ரீ சைல்ட் ஹூட்" ஆகியக் குழுக்கள் வெற்றிகரமாக நிறுவனத்திடம் ஆதரவை நாடி திட்டத்தை நிறுத்தின. ஏனெனில் அவர்கள் புஸ்ஸிகேட் டால்ஸ் சிறார்களுக்கு பொருத்தமானவை அல்ல எனக் கருதியதனாலும், புஸ்ஸிகேட் டால்ஸ்சின் பாடல்கள், ஒளி நாடாக்கள் மற்றும் நிகழ் நிகழ்ச்சிகள் வெளிப்படையான பாலுணர்ச்சி இயல்புடனிருந்த காரணத்தினாலும். அவர்கள் ஸ்டில்லா வர்த்தகப் பெயரின் கீழ் புஸ்ஸிகேட் டால்ஸ்சின் அழகுப் பொருட்களை விற்பதற்கான எஸ்டி லாடெருடன் ஓர் உடன்படிக்கையை விவாதித்தனர். 2008 ஆம் ஆண்டில், ஆண்டின் மற்றும் கனடாவின் லா சென்சா நிறுவனமும் "ஷ்ஷ்ஷ்... பை ராபின் ஆண்டின்" என பெயரிடப்பட்ட கிண்டல்/புஸ்ஸிகேட் டால்ஸ் பாணியிலான உள்ளாடைகள் வரிசையினைத் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. அவரது டிவிட்டருக்கு இணங்க, ஆண்டின் விரைவில் ஓர் பணி முடிக்கப்பட்ட DVD யை PCD லவுஞ்ச் ரிவ்யூவிலிருந்து வெளியிடவுள்ளது (அவற்றில் அவர் வெளியிட்டது அதேப் போல கிறிஸ்டியானா சேயர்ஸ் மற்றும் நிகோலே ஷ்ரெஸ்சிங்கர் ஆகியோரது. அது உலகம் முழுதும் டிசம்பர் 15, 2009 வெளியிடப்படக் குறிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் இந்த இசைக்குழுவினர் பாலியல் வெளிப்பாட்டுடன் நடனமாடியதற்காக அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்தித்தனர். அவர்களது "டால் டாமினேசன் டூரின்" ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சி, முகம்சுளிக்கும் விதத்தில் இசைக்குழுவினரின் "கண்ணை உறுத்தும் ஆடை" மற்றும் "பாலியலைக் குறிப்பாகத் தெரிவிக்கும் மேடை நடைமுறைகள்" போன்றவற்றால் இஸ்லாமிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மலேசியாவில் இந்த இசைக்குழுவின் தோற்றத்திற்குப் பின்னால் இருந்த 'அப்சொலூட் எண்டெர்டெயின்மெண்ட்', நிறுவனத்திற்கு, இந்த சம்பவத்தினால் $3000 தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கிடையில் "எண்டெர்டையின்மெண்ட் வீக்லி" யின் மார்க்கியக்ஸ் வாட்சன், இசைக்குழுவின் முக்கியமான ஸ்வைப்பை, அவர்களது இசைக்குழுவின் தலைமைப் பாடகியாக இருக்கும் ஷ்செஸ்சிங்கரின் அதிகப்படியான வெளிப்பாட்டை வெளிப்படுத்தியதைப் பற்றி விமர்சித்தார். வாட்சன் கூறியபோது "இரண்டு வகையான பெண் குழுவினர் உள்ளனர்: அவர்கள் சூப்பர்ஸ்டாரால் நிலையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் (எ.டு. டெஸ்டினீ'ஸ் சைல்ட், த சுப்ரெமெஸ்) அல்லது அல்லது ஈர்க்கும் பிரபலங்களைக் கொண்டுள்ளனர் (த ஸ்பைஸ் கேர்ல்ஸ்). இவர்கள் [புஸ்ஸிகேட் டால்ஸ்] இரண்டு வகையிலும் சேர்த்தி இல்லை". பிற விமர்சனத்தில் அவர்களைக் குறிப்பிடும் போது "ஷ்செஸ்சிங்கர் ஒன்றும் பேஒன்ஸ் நோலெஸ் இல்லை" எனக் கூறப்பட்டது, மேலும் பல மக்கள் மற்ற நான்கு டால்களின் பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை. லைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால் லைவெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டாக்கால் ("Lightweight Directory Access Protocol" அல்லது "LDAP") என்பது TCP/IPயின் மீது இயங்கக்கூடிய கோப்பக சேவைகளின் வினவுதல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான ஒரு பயன்பாட்டு நெறிமுறை ஆகும். ஒரு கோப்பகம் என்பது தர்க்கரீதியான மற்றும் படிநிலையான செயல்முறையில் சீரமைக்கப்பட்ட கற்பிதங்களுடன் கூடிய பொருட்களின் தொகுப்பு ஆகும். இதற்கு எளிமையான எடுத்துக்காட்டு தொலைபேசிக் கோப்பகம் ஆகும். அதில் ஒவ்வொரு பெயருடனும் அதனுடன் தொடர்புடைய விலாசம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டிருக்கும். பெயர்களின் (தனிநபராகவோ அல்லது நிறுவனங்களாகவோ இருக்கலாம்) பட்டியலைக் கொண்டிருக்கும். ஒரு LDAP கோப்பகப் படிநிலையானது பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் மாதிரி சார்ந்து பல்வேறு அரசியல், புவியியல் சார் மற்றும்/அல்லது நிறுவனம்சார் வரம்புகளைப் பிரதிபலிக்கும். இந்நாளில் LDAP ஈடுபடுத்தல்கள் டொமைன் நேம் சிஸ்டம் (DNS) பெயர்களில் படிநிலையின் மிகவும் உச்சமான கட்டமைப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. கோப்பகத்தின் ஆழ்ந்த உட்பகுதி, மக்களைக் குறிப்பிடும் நுழைவுகள், நிறுவனம் சார்ந்த அலகுகள், பிரிண்டர்கள், ஆவணங்கள், மக்களின் குழுக்கள் அல்லது படிநிலை நுழைவைக் (அல்லது பல நுழைவுகள்) குறிப்பிடும் மற்றயவை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இதன் தற்போதைய பதிப்பு LDAPv3 ஆகும். இது இன்டர்நெட் எஞ்ஜினியரிங் டாஸ்க் ஃபோர்ஸ் (IETF) ஸ்டேண்டர்ட் டிராக் ரிக்வெஸ்ட் ஃபார் கமெண்ட்டுகள் (RFCs) கொண்ட வரிசையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. RFC 4510 இல் விவரங்களைக் கொண்டிருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி நெட்வொர்க்கிங் ஆகியவற்றுக்கு கோப்பக சேவைகளின் கருத்தை அறிமுகப்படுத்தின. எனினும் அவர்களின் கோப்பகத் தேவைகளின் புரிந்து கொள்ளுதல் 70 ஆண்டுகளாக தொலைபேசி கோப்பகங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்குப் பிறகு நன்றாக மேம்பட்டது. இந்த உள்ளீட்டின் உச்சநிலை விரிவான X.500 விவரக்கூற்றாக இருந்தது. இது 1980களில் சர்வதேச தொலைத்தொடர்புகள் ஒன்றியத்தால் (ITU) உருவாக்கப்பட்ட நெறிமுறைகளின் தொகுதி ஆகும். X.500 கோப்பகச் சேவைகள் X.500 கோப்பக அணுகல் நெறிமுறை (DAP) மூலமாக வழக்கமாக அணுகக்கூடியதாக இருந்தன. அதற்கு திறந்த அமைப்புகள் இடை இணைப்பு (OSI) நெறிமுறை அடுக்குத் தேவையாக இருந்தது. எளிமையான (மற்றும் தற்போது பரவலான) TCP/IP நெறிமுறை அடுக்கின் வழியாக X.500 கோப்பகச் சேவைகளை அணுகுவதற்கான லைட்வெயிட் மாற்று நெறிமுறையாக LDAP முதலில் எண்ணப்பட்டது. கோப்பக அணுகலின் இந்த மாதிரி DIXIE மற்றும் கோப்பக உதவி சேவை நெறிமுறைகளில் இருந்து பெறப்பட்டது. தனித்தியங்கும் LDAP கோப்பக செர்வர்கள் விரைவில் வெளிவந்தன. இந்த கோப்பக செர்வர்கள் DAP மற்றும் LDAP இரண்டையும் ஆதரிப்பதாக இருந்தன. LDAP வணிக முயற்சிகளில் பிரபலமான ஒன்றாக மாறியது மேலும் LDAP ஆனது OSI நெட்வொர்க் பயன்படுத்துவதன் தேவையை நீக்கியது. தற்போது DAP உள்ளடக்கிய X.500 கோப்பக நெறிமுறைகளை TCP/IPஇன் மீது நேரடியாகப் பயன்படுத்தலாம். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் டிம் ஹோவஸ், ஐசோடெ லிமிட்டடின் ஸ்டீவ் கில்லெ மற்றும் சர்வதேச செயல்பாட்டு அமைப்புகள் சர்க்கா 1993 இன் வெங்கியிக் யெயோங் ஆகியோர் மூலமாக இந்த நெறிமுறை முதலில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்த மேம்பாடு இன்டர்நெட் எஞ்ஜினியரிங் டாஸ்க் ஃபோர்ஸ் மூலமாக வந்தது. LDAP இன் ஆரம்பப் பொறியமைப்பு நிலைகளில் இது "லைட்வெயிட் டைரக்டரி பிரவுசிங் ப்ரோட்டோக்கால்" அல்லது "LDBP" என அறியப்பட்டது. நெறிமுறையின் நோக்கம், கோப்பக உலவல் மற்றும் தேடல் செயல்பாடுகளையும் தாண்டி கோப்பக புதுப்பித்தல் செயல்பாடுகளாக விரிவடைந்ததால் இதன் பெயர் மாற்றப்பட்டது. LDAP, X.500 இன் முந்தைய பதிப்புகள், XML எனேபில்ட் டைரக்டரி (XED), டைரக்டரி சர்வீஸ் மார்க்கப் லேங்வேஜ் (DSML), சர்வீஸ் ப்ரொவிசனிங் மார்க்கப் லேங்வேஜ் (SPML) மற்றும் சர்வீஸ் லொகேசன் ப்ரோட்டோக்கால் (SLP) ஆகியவை உள்ளடக்கிய அடுத்துவந்த இணைய நெறிமுறைகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு கிளையன்ட் LDAP சர்வரை இணைப்பதன் மூலமாக ஒரு LDAP செசனை ஆரம்பிப்பது. கோப்பக அமைப்பு முகவர் (DSA) என்று அறியப்படுகிறது. இது இயல்பிருப்பாக TCP போர்ட் 389 ஐப் பயன்படுத்துகிறது. பின்னர் கிளையண்டானது செயல்பாட்டுக் கோரிக்கையை சர்வருக்கு அனுப்புகிறது. பின்னர் சர்வர் பதில்களை அனுப்புகிறது. சில விதிவிலக்குகளுடன் கிளையண்டானது அடுத்த கோரிக்கையை அனுப்புவதற்கு முன்பு பதிலுக்காக காத்திருக்கத் தேவையில்லை. மேலும் சர்வர் பதில்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் அனுப்பலாம். கிளையன்ட் பின்வரும் செயல்பாடுகளை கோரிக்கையாக அனுப்பலாம்: கூடுதலாக சர்வர் "பரிந்துரையல்லாத அறிவித்தல்களை" அனுப்பும். அவை கோரிக்கைக்கான பதிலாக இருக்காது. எ.கா. இணைப்பைத் துண்டிக்கும் நேரத்திற்கு முன்பு வருவது. பாதுகாப்பான LDAP தொடர்புக்கான ஒரு பொதுவான மாற்று முறையாக SSL டன்னலைப் பயன்படுத்துதல் இருக்கிறது. இது LDAP URLகளில் URL ஸ்கீம் "ldaps" ஐப் பயன்படுத்துவதன் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. LDAP ஓவர் SSLக்கான இயல்பிருப்பு போர்ட் 636 ஆகும். LDAP ஓவர் SSL இன் பயன்பாடு, LDAP பதிப்பு 2 இல் (LDAPv2) பொதுவானதாக இருக்கிறது. ஆனால் இது ஏதேனும் ஒரு முறையான விவரக்கூற்றில் தரநிலைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. இந்தப் பயன்பாடு LDAPv2 உடன் தவிர்க்கப்பட்டது, அது அதிகாரப்பூர்வமாக 2003 இல் நிறுத்தப்பட்டது. LDAP ஆனது ASN.1 இன் வார்த்தைகளில் வரையறுக்கப்படுகிறது. மேலும் நெறிமுறைச் செய்திகள் பைனரி வடிவமான BER இல் குறியிடப்படுகின்றன. எனினும் இது பல ASN.1 களங்கள்/வகைகள் ஆகியவற்றுக்கான உரைசார் குறிப்பிடுதல்களைப் பயன்படுத்துகிறது. நெறிமுறையானது LDAP கோப்பகங்களை அணுகுகிறது. இது 1993 ஆம் ஆண்டு பதிப்பான X.500 மாதிரியைப் பின்பற்றுகிறது: நுழைவின் வாழ்நாளில் DN மாற்றமடையலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நுழைவுகள் படிநிலைக்குள்ளேயே நகர்த்தப்படும் போது, நம்பத்தகுந்த மற்றும் தெளிவாகக் கண்டறியப்படக்கூடிய நுழைவுகளுக்கு ஒரு UUID நுழைவின் "செயல்பாட்டுக் கற்பிதங்களின்" தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கலாம். LDAP தரவுப் பரிமாற்ற வடிவத்தில் (LDIF) (LDAP அதற்குள் ஒரு பைனரி நெறிமுறையாக இருக்கிறது) குறிப்பிடப்பட்டிருக்கும் போது ஒரு நுழைவு பின்வருவதைப் போன்று இருக்கலாம்: இதில் dn என்பது நுழைவின் பெயர் ஆகும்; இது ஒரு கற்பிதமாகவோ அல்லது நுழைவின் ஒரு பகுதியாகவோ இருக்கக் கூடாது. "cn=John Doe" என்பது நுழைவின் RDN (ரிலேடிவ் டிஸ்டிங்கஷ்ட் நேம்) ஆகும். மேலும் "dc=example,dc=com" என்பது மூல நுழைவின் DN ஆகும். இங்கு dc என்பது டொமைன் காம்பனண்டைக் குறிக்கிறது. இதன் மற்ற வரிகள் நுழைவின் கற்பிதங்களாக இருக்கின்றன. கற்பிதப் பெயர்கள் பொதுவாக நிமோனிக் ஸ்டிரிங்ஸாக இருக்கும். உதாரணமாக "cn" என்பது காமன் நேம், "dc" என்பது டொமைன் காம்பனண்ட், "mail" என்பது மின்னஞ்சல் முகவரி மற்றும் "sn" என்பது சர்நேமைக் குறிக்கும். ஒரு சர்வர் ஒரு குறிப்பிட்ட நுழைவில் இருந்து உபபடிநிலைத் தொடக்கத்தைக் கொண்டிருக்கும். எ.கா. "dc=example,dc=com" மற்றும் அதன் வழித்தோன்றல்கள். சர்வர்கள், மற்ற சர்வர்களின் மேற்கோள்களையும் கொண்டிருக்கலாம். அதனால் "ou=department,dc=example,dc=com" ஐ அணுகுவதற்கான முயற்சி, உபபடிநிலையின் அந்தக் கோப்பகத்தின் படிநிலையைக் கொண்டுள்ள சர்வருக்கு "சிபாரிசு" அல்லது "தொடர்வதற்கான மேற்கோளைத்" திரும்பத்தரலாம். கிளையன்ட் பின்னர் மற்றொரு சர்வரைத் தொடர்பு கொள்ளலாம். சில சர்வர்கள் "செயினிங்கையும்" ஆதரிக்கின்றன. அதாவது ஒரு சர்வர் மற்றொரு சர்வரைத் தொடர்புகொண்டு வெளியீடுகளைக் கிளையன்டுக்குத் திருப்பத்தரலாம். LDAP அரிதாக ஏதேனும் ஒரு வரிசையாக்கத்தை வரையறுக்கிறது: இதில் சர்வரானது ஒரு கற்பிதத்தின் மதிப்புகளைத் திரும்பத் தரலாம். ஒரு நுழைவில் கற்பிதங்கள் இருக்கலாம் மற்றும் நுழைவுகள் ஏதேனும் ஒரு வரிசையில் தேடல் செயல்பாட்டின் மூலமாகக் கண்டறியப்படலாம். இது முறையான வரையறைகளில் இருந்து பின்பற்றப்படுகிறது - ஒரு நுழைவு கற்பிதங்களின் தொகுப்பின் மூலமாக வரையறுக்கப்படுகிறது மற்றும் கற்பிதம் என்பது மதிப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. மேலும் தொகுப்புகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. கிளையன்ட் ஒவ்வொரு கோரிக்கைக்கும் நேர்மறை செய்தி ID ஐக் கொடுக்கும். மேலும் சர்வர் பதிலுடன் அதே செய்தி ID ஐக் கொண்டிருக்கும். பதிலானது வெற்றி, சில பிழை நிலை அல்லது சில சிறப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு எண்ணாலான முடிவுக் குறியீட்டை உள்ளடக்கியிருக்கும். பதிலுக்கு முன்பு சர்வரானது மற்ற முடிவுத் தரவுகளுடன் மற்ற செய்திகளை அனுப்பலாம் - எடுத்துக்காட்டாக, தேடல் செயல்பாட்டினால் கண்டறியப்படும் ஒவ்வொரு நுழைவும் அது போன்ற செய்திகளில் திரும்பத் தரப்படலாம். ஸ்டார்ட்TLS செயல்பாடு இணைப்பின் மீது போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பை (SSL இன் சந்ததி) நிறுவுகிறது. அது தரவு மறைதன்மை (மூன்றாம் தரப்பு கவனிக்கப்படுவதில் இருந்து தரவைக் காத்தல்) மற்றும்/அல்லது தரவு ஒருமைப்பாட்டைக் காத்தல் (அது தரவை மோசடிகளில் இருந்து காக்கும்) ஆகியவற்றை வழங்கலாம். TLS ஒப்பந்தத்தின் போது சர்வரானது அதன் அடையாளத்தை நிரூபிப்பதற்காக அதன் X.509 சான்றளிப்பை அனுப்புகிறது. கிளையன்டும் அதன் அடையாளத்தை நிரூபிப்பதற்காக சான்றளிப்பை அனுப்பலாம். இதனைச் செய்த பின்னர் கிளையன்ட் SASL/EXTERNAL ஐப் பயன்படுத்தலாம். SASL/EXTERNAL ஐப் பயன்படுத்துவதன் மூலமாக கிளையன்டானது குறைவான நிலையில் (TLS போன்றவை) வழங்கப்படும் அறிமுக ஆவணங்களில் இருந்து அதன் அடையாளத்தை சர்வர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை அனுப்பும். எனினும் தொழில்நுட்ப ரீதியாத சர்வரானது குறைவான நிலையில் நிறுவப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு அடையாளத்தகவலையும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கலாம். பொதுவாக சர்வரானது TLS இனால் நிறுவப்பட்ட அடையாளத் தகவலைப் பயன்படுத்தும். சர்வர்கள் பொதுவாக தரநிலை சாராத "LDAPS" ("பாதுகாப்பான LDAP", பொதுவாக "LDAP ஓவர் SSL" என அறியப்படுகிறது) நெறிமுறையையும் தனி போர்ட்டில் ஆதரிக்கிறது. இயல்பிருப்பாக 636 ஐப் பயன்படுத்தும். LDAPS, LDAP இல் இருந்து பின்வரும் இரண்டு வழிகளில் மாறுபடுகிறது: 1) ஒன்றன் மீது இணைப்பு, கிளையன்ட் மற்றும் சர்வர், ஏதேனும் ஒரு LDAP செய்தியைப் பரிமாற்றப்படுவதற்கு (ஸ்டார்ட் TLS செயல்பாடு இல்லாமல்) முன்பு TLS ஐ நிறுவும் மற்றும் 2) LDAPS இணைப்பு TLS க்ளோசரின் மீது நிறைவு செய்யப்பட வேண்டும். LDAPS, LDAPv2 உடன் பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் ஸ்டார்ட்TLS செயல்பாடு அப்போது வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. LDAPS இன் பயன்பாடு தடுக்கப்பட்டுவிட்டது. மேலும் நவீன மென்பொருள் ஸ்டார்ட்TLS ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும். பைண்ட் செயல்பாடு சர்வருக்கு கிளையன்டை உறுதிப்படுத்துகிறது. எளிமையான பைண்ட் ஆனது எளியவுரையில் பயனரின் DN மற்றும் கடவுச்சொல்லை அனுப்பும். அதனால் இணைப்பு போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பைப் (TLS) பயன்படுத்தி பாதுக்கப்படவேண்டும். சர்வர் பொதுவாக பெயரிடப்பட்ட நுழைவில் யூசர்பாஸ்வேர்டுக்கு எதிராக கடவுச்சொல்லைச் சோதிக்கும். அனானிமஸ் பைண்ட் (வெறுமையான DN மற்றும் கடவுச்சொல்லுடன்) இணைப்பை அனானிமஸ் நிலைக்கு மீளமைக்கிறது. SASL (எளிமையான உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு அடுக்கு) பைண்ட் பரவலான வரம்புடைய இயங்கமைப்பின் மூலமாக உறுதிப்பாட்டு சேவைகளை வழங்குகிறது. எ.கா. கெர்பரோஸ் அல்லது TLS உடன் அனுப்பப்படும் கிளையன்ட் சான்றளிப்பு. பைண்ட் மேலும் LDAP நெறிமுறைப் பதிப்பையும் அமைக்கிறது. பொதுவாக கிளையன்ட்டுகள் LDAPv3 ஐப் பயன்படுத்த வேண்டும். அது நெறிமுறையில் இயல்பிருப்பாக இருக்கும். ஆனால் LDAP லைப்ரரிகளில் எப்போதும் இருக்காது. பைண்ட் LDAPv2 இல் செசனின் முதல் செயல்பாடாக இருந்தது. ஆனால் இது LDAPv3 இல் (தற்போதய LDAP பதிப்பு) தேவையில்லை. தேடுவதற்காக மற்றும் நுழைவுகளைப் படிப்பதற்கான இரண்டிற்கும் தேடல் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. இதன் கூறுகள் பின்வருமாறு: |(givenName=John)(mail=john*))) "persons" ஆனது (objectClass codice_5 இன் மூலப்பொருட்கள்) "John" என்ற பெயரைப் பெற்றிருந்தாலோ அல்லது ஒரு மின்னஞ்சல் முகவரி "john" என்று ஆரம்பித்தாலோ தேர்ந்தெடுக்கும். சர்வர் பொருந்தும் நுழைவுகள் மற்றும் ஆற்றல்மிக்க தொடர்வதற்கான மேற்கோள்களை திருப்பி அனுப்பலாம். இவை ஏதேனும் ஒரு வரிசையில் திரும்பலாம். இறுதி முடிவு, முடிவுக்குறியீடைக் கொண்டிருக்கும். ஒப்பீட்டுச் செயல்பாடு DN, ஒரு கற்பிதப் பெயர் மற்றும் ஒரு கற்பித மதிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறது. மேலும் பெயரிடப்பட்ட நுழைவு அதே மதிப்புடன் அந்த கற்பிதத்தைக் கொண்டிருந்தால் சரிபார்க்கிறது. சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றுதல் DN - இவை அனைத்திற்குமே மாற்றப்பட வேண்டிய நுழைவின் DN தேவை. மாற்றுதல் மாற்றப்பட வேண்டிய கற்பிதங்களின் பட்டியலை எடுத்துக்கொள்கிறது. மேலும் கற்பிதங்களை அல்லது சில மதிப்புகளை அழித்தல், புதிய மதிப்புகளைச் சேர்த்தல் அல்லது தற்போதைய மதிப்பிற்கு பதிலாக புதிய மதிப்பை மாற்றுதல் ஆகிய மாறுதல்களைச் செய்யும். சேர்த்தல் செயல்பாடுகளும் கூடுதல் கற்பிதங்கள் மற்றும் அந்த கற்பிதங்களுக்கான மதிப்புகளைக் கொண்டிருக்கலாம். மாடிபை DN (நகர்தவு/நுழைவை மறுபெயர் செய்யவும்) புதிய RDN ஐ (ரிலேட்டிவ் டிஸ்டினிக்கியூஸ்டு நேம்) எடுத்துக்கொள்கிறது. கட்டயமற்ற புதிய மூலங்களின் DN, மேலும் நுழைவில் மதிப்பை(கள்) அழிப்பதா எனக் கூறும் கொடியின் பழைய RDN உடன் ஒத்திருக்க வேண்டும். சர்வரானது எஞ்சியுள்ள முழுமையான கோப்பக உபப்படிநிலைகளுக்கு ஆதரவளிக்கிறது. புதுப்பித்தல் செயல்பாடு என்பது மிகவும் நுண்ணியதாகும்: பிற செயல்பாடுகளானது புதிய நுழைவு அல்லது பழைய ஒன்று என ஏதாவது ஒன்றைப் பார்க்கிறது. மறுபுறம் பல்வகையான செயல்பாடுகளின் நடவடிக்கைகளை LDAP வரையறுப்பதில்லை: நீங்கள் ஒரு நுழைவைப் படித்து பிறகு திருத்தம் செய்தால் மற்றோரு கிளையன்ட் அதே நேரத்தில் நுழைவை திருத்தம் செய்யலாம். எனினும் சர்வர்கள் இதற்கு ஆதரவளிக்கும் நீட்சிகளை செயல்படுத்தலாம். விரிவாக்கப்பட்ட செயல்பாடுகள் என்பது ஒரு பொதுப்படையான LDAP செயல்பாடாகும். இதைப் பயன்படுத்தி புதிய செயல்பாடுகளை வரையறுக்கலாம். இரத்து, கடவுச்சொல் திருத்தம் மற்றும் ஸ்டார்ட் TLS செயல்பாடுகள் போன்றவை இதன் எடுத்துக்காட்டுகள் ஆகும். அபாண்டன் செயல்பாடு கோரிக்கைகளானது செய்தி ID மூலமாகப் பெயரிடப்பட்ட ஒரு செயல்பாடை சர்வர் இரத்து செய்கிறது. சர்வரானது அந்த கோரிக்கையை மதிக்கத் தேவையில்லை. எதிர்பாரதவிதமாக அபாண்டன் இரண்டுமன்றி வெற்றிகரமாக இரத்துசெய்யப்பட்ட செயல்பாடு பதிலை அனுப்புகிறது. அதே போன்ற இரத்து விரிவாக்கப்பட்ட செயல்பாடானது முடிவாகப் பதில்களை அனுப்பியவற்றை வரையறுக்கிறது. ஆனால் அனைத்து செயல்படுத்துதல்களும் இதற்கு ஆதரவளிப்பதில்லை. அன்பைண்ட் செயல்பாடானது எந்த முனைப்பான செயல்பாடுகளையும் புறக்கணிக்கிறது. மேலும் இணைப்பையும் முடிவுறச் செய்கிறது. இதற்கு எந்த பதிலும் கிடையாது. வரலாற்றுத் துவக்கத்தின் இப்பெயரானது பைண்ட் செயல்பாடின் எதிர் செயல்பாடு "கிடையாது" . கிளையண்டுகள் ஒரு பருவத்தை இணைப்பை நீக்குவதன் மூலம் எளிதாக பயனற்றதாக்கலாம். ஆனால் அவர்கள் அன்பைண்டைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். நேர்த்தியாக இணைப்பை நிறைவு செய்து சாதனத்திற்கு சுதந்தரமளிக்க சர்வருக்கு அன்பைண்ட் இடமளிக்கிறது. அது கிளையண்ட் புறக்கணித்த இணைப்பைக் கண்டுபிடிக்குவரை சில சமயத்திற்கு கொண்டிருக்க வேண்டும். மேலும் இது இரத்து செய்யப்பட வேண்டிய செயல்பாடுகளை இரத்து செய்வதற்கு சர்வருக்கு அறிவிக்கிறது. மேலும் இரத்து செய்யத் தேவையில்லாத செயல்பாடுகளுக்காக பதில் ஏதும் அனுப்புவதில்லை. LDAP URL வடிவமானது பல்வேறு கோணத்தில் கிளையண்டுகள் ஆதரவளிக்கையிலும் மேற்கோள்கள் மற்றும் தொடர்ச்சி குறிப்பிடுதல்களில் சர்வர்கள் மேற்கோள்களில் திரும்பும் போதும் தோன்றுகிறது (பார்க்க RFC 4516): கீழே விளக்கப்பட்டுள்ள பெரும்பாலான பொருள்கள் கட்டாயமற்றதாகும். எடுத்துக்காட்டாக "codice_7" என்பது இயல்பிருப்பு சர்வரில் நுழைவுக்கான தேடுதல்களைக் கொண்டிருக்கையில் (மூன்று ஸ்லாஷ், ஹோஸ்ட் புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் இரண்டு வினாக்குறிகள், கற்பிதங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க), "codice_8" என்பது codice_9 இன் ஜான் டோவின் நுழைவின் அனைத்து பயனர் கற்பிதங்களையும் மேற்கோளிடுகிறது. பிற URLகளில் சிறப்புத் தனிகுறியீடுகளில் கண்டிப்பாக சதவிகித-குறியீடு இடப்பட்டிருக்க வேண்டும். அதேப் போன்ற தரமற்ற codice_10 LDAP ஓவர் SSLக்கான URL ஸ்கீமா ஆகும். TLS உடனான LDAP உடன் இது கண்டிப்பாக வேறுபடக் கூடாது. தரமான codice_11 திட்டத்தைப் பயன்படுத்தி ஸ்டார்ட்TLS செயல்முறையைப் பயன்படுத்தி இது நிறைவேற்றப் பெறுகிறது. உபப்படிநிலையின் நுகளின் உள்ளடக்கங்கள், கோப்பகத் தகவல் படிநிலை (DIT) என்று அறியப்படும் ஸ்கீமா மூலம் செலுத்தப்படுகிறது. கோப்பக சர்வரின் ஸ்கீமாவானது சர்வர் வைத்திருக்கூடிய தகவலின் வகைப்பற்றிய விதிகளின் தொகுப்பை வரையறுத்து ஒழுங்குபடுத்துகிறது. கோப்பக ஸ்கீமாவானது பல மாறுபட்ட மூலப்பொருள்களை உட்கொண்டிருக்கிறது, அவையாவன:' கற்பிதங்கள், கோப்பகங்களில் தகவலை சேமிப்பதற்கான பொறுப்புள்ள மூலப்பொருள்களாகும். மேலும் ஒரு நுழைவில் எந்தக் கற்பிதங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான விதிகளை ஸ்கீமா வரையறுக்கிறது. அதாவது அந்தக் கற்பிதங்கள் கொண்டிருக்கும் மதிப்புகளின் வகைகள் மற்றும் எவ்வாறு அந்த மதிப்புகளை கிளையண்டுகள் செயலெதிர்செயல்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்து ஸ்கீமா விதிகளை வரையறுக்கிறது. ஒரு பொருத்தமான உபஸ்கீமா உபநுழைவைத் திரும்பப்பெறுவதன் மூலம் சர்வருக்கு ஆதரவளிக்கும் ஸ்கீமா மூலப்பொருள்களைப் பற்றி கிளையண்டுகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஸ்கீமாவானது "ஆப்ஜெக்ட் க்ளாஸை" வரையறுக்கிறது. ஓவ்வொரு நுழைவும் ஒரு ஆப்ஜெக்ட்க்ளாஸ் கற்பிதத்தை ஸ்கீமாவில் வரையறுக்கப்பட்ட பெயரிடப்பட்ட க்ளாஸ்களில் கொண்டிருக்கிறது. ஒரு நுழைவின் க்ளாஸ்களின் ஸ்கீமா வரையறையானது எந்த வகையான ஆப்ஜெக்டை நுழைவு விவரிக்கலாம் என்பதை வரையறுக்கிறது - எ.கா. ஒரு நபர், நிறுவனம் அல்லது டொமைன். கற்பிதங்களின் பட்டியலானது கண்டிப்பாக மதிப்புகளைக் கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மதிப்புகளைக் கொண்டிருக்கும் கற்பிதங்களின் பட்டியலின் வரையறையை ஆப்ஜெக்ட் க்ளாஸ் வரையறைகளும் வரையறுக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு நபரை சுட்டிக்காட்டும் ஒரு நுழைவானது "டாப்" மற்றும் "பெர்சன்" கிளாஸ்களுக்கு சார்ந்திருக்கலாம். "பெர்சன்" க்ளாஸின் உறுப்பினர் தகுதிக்கு "sn" மற்றும் "cn" கற்பிதங்களைக் கொண்டிருக்கு நுழைவுத் தேவைப்படலாம். மேலும் "யூசர்பாஸ்வேர்ட்", "டெலிபோன்நம்பர்" மற்றும் பிற கற்பிதங்களைக் கொண்டிருக்கும் நுழைவுகளுக்கும் இடமளிக்கிறது. நுழைவுகளானது பல்வகையான ஆப்ஜெக்ட்க்ளாஸஸ் மதிப்புகளைக் கொண்டிருப்பதில் இருந்து ஒவ்வொரு நுழைவும் அது சுட்டிக்காட்டும் ஆப்ஜெக்ட் க்ளாஸ்களின் இணைப்பில் இருந்து அமைக்கப்பட்ட கட்டாயமற்ற மற்றும் கட்டாயமான கற்பித தொகுப்புகளின் சிக்கலைக் கொண்டிருக்கிறது. ஆப்ஜெக்ட்க்ளாஸஸ் மரபுடைமையாய் இருக்கலாம். மேலும் ஒரு தனி நுழைவானது பல்வகையான ஆப்ஜெக்ட்க்ளாஸஸ் மதிப்புகளைக் கொண்டிருக்கலாம். இவை கிடைக்கக்கூடிய மற்றும் தேவையான கற்பிதங்களை நுழைவாகவே வரையறுக்கிறது. ஆப்ஜெக்ட்க்ளாஸின் ஸ்கீமாவிற்கு இணை என்பது பொருள் சார்ந்த நிரலாக்கத்தின் க்ளாஸ் வரையறை மற்றும் ஒரு இன்ஸ்டன்ஸ் ஆகும். இது முறையே LDAP ஆப்ஜெக்ட்க்ளாஸ் மற்றும் LDAP நுழைவை சுட்டிக்காட்டுகிறது. கோப்பக சர்வர்களானது நுழைவின் உபஸ்கீமா உபநுழைவு செயல்முறைசார்ந்த கற்பிதத்தின் மூலம் கொடுக்கப்பட்ட ஒரு அடிப்படை DN இல் நுழைவைக் கட்டுப்படுத்தும் கோப்பக ஸ்கீமாவை வெளியிடுகிறது. (ஒரு "செயல்முறைசார்ந்த கற்பிதமானது" பயனர் தகவலைக் காட்டிலும் கோப்பகத்தின் செயல்பாடுகளை விவரிக்கிறது. மேலும் இதை திட்டவட்டமாய் கோரிக்கையிடும் போது மட்டுமே தேடுதலில் இருந்து திரும்பக்கிடைக்கிறது.) சர்வர் நிர்வாகிகள், ஸ்கீமா மூலபொருள்களை வழங்குவதற்கு கூடுதலான மிகைப்படியாக ஸ்கீமா நுழைவுகளைக் கூட்டலாம். நிறுவனங்களினுள் இருக்கும் தனிப்பட்ட நபரை சுட்டிக்காட்டுவதற்கான ஸ்கீமாவானது வெள்ளைப் பக்க ஸ்கீமா என வரையறுக்கப்படுகிறது. சர்வர் செயல்பாடில் பல, உருவக்குனர் அல்லது நிர்வாகிகள் முடிவுக்கு விடப்பட்டுள்ளது. அதன் விளைவாக பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கு பரவலாக ஆதவளிக்கும் வகையில் சர்வர்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக சர்வரில் தரவு சேமிப்பு குறிப்பிடப்படவில்லை என்றால் தள கோப்புகள், தரவுத்தளங்கள், அல்லது சில பிற சர்வர்களுக்கு வாயிலாகவோ சர்வர் பயன்படுத்தப்படலாம். அணுக்கக் கட்டுப்பாடு தரவரையளவு செய்யப்படவில்லை. எனினும் அதற்கான வேலை நடந்து வருகிறது மற்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் உருமாதிர்களும் உள்ளன. பயனர்களின் கடவுச்சொற்களானது அவர்களது நுழைவுகளிலோ அல்லது வேறு பகுதிகளிலோ சேமிக்கப்பட்டிருக்கலாம். சர்வரானது விரும்பும் போது செயற்பாடுகளை செயல்படுத்துவதை நிராகரிக்கவோ பல்வேறு வரம்புகளை சுமத்தவோ முடிகிறது. LDAP இன் பெரும்பாலான பகுதிகள் விரிவாக்கமுடையதாக உள்ளது. எடுத்துக்காட்டுகள்: ஒருவரால் புதிய செயற்பாடுகளை வரையறுக்கமுடியும். கோரிக்கைகள் மற்றும் விடைகளைத் திருத்த "கட்டுப்பாடுகளால்" முடியலாம். எ.கா. சுருக்கமான தேடல் முடிவுகளுக்குக் கோரிக்கையிடுவது. புதிய தேடல் நோக்கங்கள் மற்றும் கட்டு முறைகளை வரையறுக்கலாம். கற்பிதங்கள், அதன் சொற்பொருளியலைத் திருத்துவதற்கான "ஆப்சன்ஸைக்" கொண்டிருக்கலாம். LDAP யாக இயங்குவிசையை சம்பாத்திருக்கும் போது விற்பனையாளர்கள் பிற சேவைகளுக்கு ஒரு அணுக்க நெறிமுறையாக அதை வழங்கலாம். செயற்படுத்துதல் பிறகு LDAP/X.500 உருமாதிரியின் போலிக்கு தரவை மாற்றியமைக்கிறது. ஆனால் இந்த உருமாதிரிகள் எவ்வளவு நெருக்கமாக தொடர்ந்து வரும் மாறுதல்களுக்கு பொருந்தியுள்ளது. எடுத்துக்காட்டாக SQL தரவுத்தளங்களை LDAP வழியாக அணுகுவதற்கு மென்பொருள் உள்ளது. இருந்தபோதும் LDAP காலதாமதமின்றி தற்காலிகமாக தன்னை அதனுள் பொருத்திக்கொள்வதில்லை. X.500 சர்வர்கள் LDAP க்கும் ஆதரவு தரலாம். அதுபோலவே முதலில் தரவு சேமிப்புகளில் பிற வகைகளில் வைக்கப்பட்டிருந்த தரவு, சில சமயங்களில் LDAP கோப்பகங்களுக்கு நகர்த்தப்படும். எடுத்துக்காட்டாக யுனிக்ஸ் பயனர் மற்றும் குழுத் தகவலை LDAP இல் சேமிக்கலாம். மேலும் அதை PAM மற்றும் NSS கலங்களின் வழியாக அணுகலாம். உறுதிப்பாடிற்காக LDAP பெரும்பாலும் பிற சேவைகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு LDAP சர்வர், கோரிக்கைகளுக்காக பிற சர்வர்களுக்கு மேற்கோள்களை திருப்பி அனுப்புவதில் இருந்து சர்வர் அதனுள்ளே பணியாற்றவோ/பணிசெய்யவோ முடிவதில்லை. LDAP நுழைவுகளுக்கான பெயர் அமைப்புமுறை தேவைப்படுகிறது. அதனால் ஒருவரால் கொடுக்கப்படுள்ள DN உடைமையாக்கியிருக்கும் சர்வரை கண்டுபிடிக்க இயலுகிறது. டொமைன் நேம் சிஸ்டத்தில் (DNS) இதைப் போன்ற அமைப்புமுறை ஏற்கனவே இருப்பதில் இருந்து சர்வர்களின் உயர்நிலைப் பெயர்கள், அவை X.500 இல் செய்வது போல் போலி DNS பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு நிறுவனம் example.org என்ற டொமைன் பெயரைக் கொண்டிருந்தால் அதன் உயர்நிலை LDAP நுழைவு பொருத்தமாக DNஐக் கொண்டிருக்கும் codice_12 ("dc" என்பது டொமைன் ஆக்கக்கூற்றை நினைவில் கொள்கிறது). LDAP சர்வரானது ldap.example.org எனப் பெயரிடப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தின் உயர்நிலை LDAP URL codice_13 என்று இருக்கும். உயர்நிலைக்கு கீழே, அதன் நுழைவுப்பெயர்கள், பொதுவாக DNS பெயர்களைக் காட்டிலும் நிறுவனங்களின் உட்புற அமைப்புமுறை அல்லது தேவைகளை எதிரொலிக்கும். LDAP சொல்லியலானது ஒருவரால் எளிதில் கையாள இயலாததாக இருக்கிறது. அவற்றில் சில தவறாய் புரிந்துகொள்ளுதல் காரணமாகும். பிற எடுத்துக்காட்டுகளாவன அதன் வரலாற்று துவக்கத்தின் காரணமாக அமைந்தது. மற்றவை X.500 அல்லாத சேவைகளுடன் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது. அதுவே மாறுபட்ட சொல்லியலாக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக "LDAP" சில சமயங்களில் நெறிமுறைகளை மேற்கோளிடுவதற்குப் பயன்படுகிறது. பிறநேரங்களில் நெறிமுறை மற்றும் தரவை மேற்கோளிடப் பயன்படுகிறது. ஒரு "LDAP கோப்பகம்" ஒரு தரவாகவோ அல்லது அணுக்க முனையாகவோ இருக்கலாம். ஒரு "கற்பிதமானது" கற்பித வகையாகவோ அல்லது கோப்பகத்தின் ஒரு கற்பிதத்தின் உட்பொருள்களாகவோ அல்லது ஒரு கற்பித விவரமாகவோ இருக்கலாம் ("ஆப்ஸன்ஸுடன்" கற்பித வகை). ஒரு "அடையாளமற்ற" மற்றும் ஒரு "அதிகாரப்பூர்வமற்ற" கட்டு எனபது மாறுபட்ட கட்டு முறைகளாகும். இவை இரண்டும் அடையாளமற்ற அதிகாரப்பூர்வமான நிலையைக் கொணர்கிறது. அதனால் இரண்டு வரையீடுகளும் இரு மாற்று வடிவங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. "uid" கற்பித்தலானது எண்குறியீடு பயனர் IDகளைக் காட்டிலும் பயனர் பெயர்களைக் கண்டிப்பாக வைத்திருக்கிறது. LDAP தற்போது ரிக்வெஸ்ட் ஃபார் கமெண்ட்ஸ் ஆவணங்களின் வரிசையில் குறிப்பிடப்படுகிறது: பின்வரும் RFCக்கள், LDAP-சார்ந்த சிறந்த தற்போதைய நடமுறை விவரங்களைக் கொண்டுள்ளன: பின்வருவன LDAPv3 விரிவாக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியளவு RFCக்களின் பட்டியல்: LDAPv2 பின்வரும் RFCக்களில் குறிப்பிடப்படுகிறது: பின்வரும் RFC மூலமாக LDAPv2 வின் வரலாற்று நிலை நகர்த்தப்படுகிறது: மந்திரா பேடி மந்திரா பேடி ("Mandira Bedi", பிறப்பு: ஏப்ரல் 1972) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். இவர் ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். மந்திரா பேடியின் பிறப்பிடம் மும்பையாகும். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர்களில் உள்ள பஞ்சாபின் ஒரு நகரமான பஸ்ஸில்காவின் காட்ரி குலத்தை அவரது பரம்பரையின் மூலமாகக் கொண்டுள்ளார். மும்பையின் கேத்ட்ரல் அண்ட் ஜான் கொனான் பள்ளியில் அவர் கல்வி பயின்றார். "சாந்தி" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் "டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே" யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான "கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி" இல் "மோனா" என்றழைக்கப்பட்ட "மந்திரா" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். டெர்மினேட்டர் சால்வேசன் "டெர்மினேட்டர் சால்வேசன்" ஒரு அமெரிக்க அறிவியல் புனையக்கதைத் திரைப்படம் ஆகும், இது "டெர்மினேட்டர்" தொடரின் நான்காவது பாகமாகும், இத்திரைப்படத்தை McG இயக்கினார், இதில் வருங்கால எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜான் கானர் பாத்திரத்தில் கிரிஸ்டியன் பேல் மற்றும் சைபோர்க் மார்கஸ் ரைட் பாத்திரத்தில் சாம் ஒர்த்திங்டனும் நடித்துள்ளனர். மேலும் ஒரிஜினல் 1984 திரைப்படத்தில் அண்டோன் யெல்சின் நடித்திருந்த இளவயது கைல் ரீஸ் பாத்திரமும் இத்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேபோல் T-800 மாடல் 101 டெர்மினேட்டரின் துவக்கமும் இதில் சித்திரிக்கப்பட்டது. "டெர்மினேட்டர் சால்வேசன்" 2018 இல் நடக்கிறது, இதில் மனித இனத்திற்கும் ஸ்கைநெட்டுக்கும் இடையே ஆன போர் மையப்படுத்தப்பட்டிருந்தது — கதைக்களத்தின் மூலப்பொருள் கருவியாக டைம் டிராவலைப் பயன்படுத்தி 1984 முதல் 2004க்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த முந்தைய பாகங்களில் இருந்து இக்கதைப் புறப்படுகிறது. ஆண்ட்ரிவ் ஜி. வஜ்னா மற்றும் மரியோ காஸ்ஸரிடம் இருந்து பதிப்புரிமைக்கான உரிமத்தை த ஹால்க்யோன் நிறுவனம் கையகப்படுத்தியதுடன், தயாரிப்புக்கு முந்தைய குழப்பங்களுக்குப் பிறகு, இதன் திரைக்கதைக்காக பல எழுத்தாளர்கள் பணிபுரிந்தனர், இதன் படப்பிடிப்பு மே 2008 இல் நியூ மெக்ஸிகோவில் தொடங்கி 77 நாட்கள் நடந்தது. இத்திரைப்படம், $200 மில்லியன் பட்ஜெட்டுடன் தற்போது வரலாற்றின் மிகவும் அதிக விலையுள்ள சார்பற்ற தயாரிப்பாக உள்ளது. மே 21, 2009 இல், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் "டெர்மினேட்டர் சால்வேசன்" வெளியானது, அதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தின் முற்பகுதியில் யுனைட்டடு கிங்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் வெளியானது. இத்திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சன திறனாய்வுகளையே பெற்றது, மேலும் தொடக்க நிதி எதிர்பார்ப்புகளைத் தோல்வியடையச் செய்து, அதன் முதல் வாரத்தில் $43 மில்லியன் வருவாயை மட்டுமே ஈட்டியது. இதன் இறுதி உலகளாவிய வருவாய் $372 மில்லியனாகும். 2003 இல், இறப்பு ஏற்படுத்தும் ஊசிமருந்து மூலம் மார்கஸ் ரைட்டின் (சாம் வொர்திங்டோன்) தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததாக சைபர்டைன் சிஸ்டத்தின் டாக்டர் செரினா கோகன் (ஹெலினா போன்ஹம் கார்டெர்) டெத் ரோவில் உறைந்திருந்த மார்கஸ் ரைட்டை (சாம் வொர்திங்டோன்) நம்பவைக்கிறார். ஒரு ஆண்டிற்குப் பிறகு, ஸ்கைநெட் அமைப்பு செயலாற்றத் தொடங்குகிறது, அதன் சொந்த இருப்புக்கு கேடாக மனிதர்களை அது உணருவதால், ஜட்ஜ்மெண்ட் டே என அறியப்படும் நிகழ்வில் பெரும்பாலான மனித இனத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டத் (பார்க்க "Terminator 3: Rise of the Machines" ) திட்டமிடுகிறது. 2018 இல், ஸ்கைநெட் தளத்தின் மேல் எதிர்ப்புக்குழு மூலம் தாக்குதலுக்கு தலைமை தாங்குகிறார் ஜான் கானர் (கிரிஸ்டியன் பேல்). மனித கைதிகளை ஜான் கண்டுபிடிக்கிறார், மேலும் வாழும் மனிதர்கள் மூலம் டெர்மினேட்டரின் ஒரு புதிய வகை உருவாக்கத்திற்காக திட்டமிடுகிறார், ஆனால் அணுஆயுத வெடிப்பில் தளம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட பிறகு விபத்தில் தப்பியவர்கள் மட்டுமே இதில் திட்டமிட்டார். எனினும், தளத்தின் இடிபாடுகளில் இருந்து மார்கஸ் வெளிப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸிற்கு நடக்கத் தொடங்குகிறார். ஒரு ஆணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலில் அமைந்திருக்கும் எதிர்ப்புக்குழுத் தலைமையகத்திற்கு ஜான் திரும்புகிறார், மேலும் அவரது கண்டுபிடிப்பினால் ஜெனரல் ஆஷ்டவுன் (மைக்கேல் ஐரன்சைட்), தற்போதைய தலைவர் எனக் கூறுகிறார். இதற்கிடையில், எதிர்ப்புக்குழு ஒரு ரேடியோ அதிர்வெண்ணை கண்டுபிடிக்கின்றனர், ஸ்கைநெட் இயந்திரங்களை இயக்கநிறுத்தம் செய்வதற்கு இது ஏற்றதாக இருக்கும் என நம்புகின்றனர். எதிர்ப்புக்குழுவின் ஆணைப் பணியாளர் ஒருவரை நான்கு நாட்களில் கொலைசெய்யப் போகும் ஸ்கைநெட்டின் திட்டங்களை சுட்டிக்காட்டும் ஒரு இடைமறிக்கும் "கொலைப் பட்டியலுக்கு" பதிலளிக்கும் வகையில் அவர்கள், நான்கு நாட்களில் சான் ப்ரான்ஸிஸ்கோவில் இருக்கும் ஸ்கைநெட் தளத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை நிறுவத் திட்டமிட்டிருந்தனர். பட்டியலில் கைல் ரீஸ்ஸைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் பெயர் இருப்பதை ஜான் அறிகிறார். ஸ்கைநெட்டிற்கு கைலின் முக்கியத்துவத்தைப் பற்றி எதிர்ப்புக்குழுத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஜானுக்குத் தெரிந்திருந்தது ஏனெனில் கைல் பின்னர் ஜானின் தந்தையாக மாறுகிறார் (பார்க்க "த டெர்மினேட்டர்" ). ஜான், அவரது அதிகாரி பார்னெஸ் (காமன்) மற்றும் அவரது மனைவி கேட்டை (ப்ரைஸ் தாலஸ் ஹோவர்ட்) சந்தித்திக்கிறார், மேலும் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கும் எதிர்ப்புக்குழு உறுப்பினர்களுக்கும் ரேடியோ ஒளிபரப்பு அனுப்புகிறார். மார்கஸ் லாஸ் ஏஞ்சல்ஸின் எஞ்சியுள்ள கட்டட இடிபாடுகளை அடைந்த பிறகு, கைல் ரீஸ் (ஆண்டோன் யெல்ச்சின்) மற்றும் அவரது பேசமுடியாத நண்பன் ஸ்டார் (ஜடகிரேஸ் பெர்ரி) உதவியுடன் T-600 டெர்மினேட்டரிடம் இருந்து மார்கஸ் காப்பாற்றப்படுகிறார். ஜட்ஜ்மெண்ட் டேயின் நிகழ்வுகளைப் பற்றியும், மேலும் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான போர் விளைவுகளைப் பற்றிய விவரங்களையும் மார்கஸுக்கு கைல் தெரிவிக்கிறார். மூவரும் ஜானின் ரேடியோ ஒலிபரப்பைக் கேட்டபிறகு, எதிர்ப்புக்குழுவினரைத் தேடுவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறுகின்றனர். பிறகு இயந்திரங்கள் நிகழ்த்திய தாக்குதலில் அவர்கள் உயிர்பிழைக்கின்றனர், ஆனால் கைல், ஸ்டார் மற்றும் பிற பல்வேறு மனிதர்கள் கைதிகளாக்கப் படுகின்றனர், இதற்கிடையில் எதிர்ப்புக்குழு A-10களில் இரண்டில் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுகிறது. கீழே விழுந்த விமானி ப்ளேர் வில்லியம்ஸை (மூன் பிளட்குட்) மார்கஸ் கண்டுபிடிக்கிறார், இருவரும் அவர்களது வழியில் ஜானின் தளத்திற்குச் செல்கின்றனர், ஆனால் மார்கஸ் காந்தசக்தியுள்ள கன்னிவெடி மூலம் காயமுறுகிறார். மார்கஸைக் காப்பாற்ற முயலுகையில், உண்மையில் ஒரு இயந்திரத்துக்குரிய அகவெலும்புக்கூடு, மின்சுற்றுகள் மற்றும் ஒரு பகுதி செயற்கையான பெருமூளைக்குரிய வெளிப்பகுதியுடன் மனித உடலுறுப்புடன் உள்ள மின்னியக்க மனிதன் என்பதை இவர் எதிர்ப்புக்குழுவினர் கண்டுபிடிக்கின்றனர். மார்கஸ் தான் ஒரு மனிதர் என நம்பினார், ஸ்கைநெட்டிடம் இருந்து கைலைக் காப்பாற்றுவதற்கு அவரை விடுவிக்கக் கோருகிறார், ஆனால் மார்கஸ் தன்னைக் கொல்ல வந்திருப்பதாக ஜான் நம்பினார், மேலும் அவரை அழிக்கக்கூறி ஆணையிட்டார். எனினும், ப்ளேர் அவரை விடுவித்து தளத்தில் இருந்து மார்கஸ் தப்பிப்பதற்கு உதவி புரிகிறார். அவரைப் பின் தொடர்ந்து சென்றதன் விளைவாக, ஸ்கைநெட்டின் ஹைட்ரோபோக்களிடம் இருந்து ஜானின் உயிரை மார்கஸ் காப்பாற்றுகிறார், ஸ்கைநெட்டின் தலைமையகத்தினுள் மார்கஸ் நுழைந்து அதன் பாதுகாப்புகளை செயலிழக்க செய்தால் அதன் மூலம் கைலை ஜான் காப்பாற்ற முடியுமென இருவரும் ஒரு உடன்படிக்கையை அமைக்கின்றனர். தாக்குதலை தாமதித்தால் அதன் மூலம் கைல் மற்றும் பிறக் கைதிகளைக் காப்பற்ற முடியுமென ஜான், ஆஷ்டவுனிடன் வேண்டுகோளிடுகிறார், ஆனால் ஜானின் ஆணையில் அவரை விடுவித்து அதை ஆஷ்டவுன் நிராகரிக்கிறார். எனினும், ஜானின் படைவீரர்கள் அவரிடம் விசுவாசம் காட்டி அவரது ஆணையை ஏற்று ஸ்கைநெட் தளத்தின் மேல் தாக்குதல் நடத்தாமல் தாமதிக்கின்றனர். இதற்கிடையில், மார்கஸ் தளத்தினுள் நுழைந்து கணினியுடன் இடைமுகமாக செயல்பட்டு, சுற்றளவு பாதுகாப்புகளை செயலிழக்கச் செய்கிறார், மேலும் இதன் மூலம் ஜான் சிறைக் கட்டிடத்தில் உட்புகுந்து மனிதக் கைதிகளை விடுவிக்க அனுமதிக்கப்படுகிறார். சமிக்கையை செயலிழக்கச்செய்யும் எதிர்ப்புக்குழுவின் திட்டம் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் எதிர்ப்புக்குழுத் தலைவர்களுடன் ஆணையக நீர்மூழ்கிக்கப்பல் அழிக்கப்படுகிறது. ஸ்கைநெட்டின் மூலமாக தான் உருவாக்கப்பட்டதை மார்கஸ் கண்டுபிடிக்கிறார், மேலும் ஜானைக் கொல்வதற்காக அவரை ஆசை காட்டி தளத்தினுள் வரவழைக்கும் மார்கஸின் நிரலாக்கப்பட்ட குறிக்கோளை அவர் அறியாமலே நிறைவு செய்ததையும் அறிகிறார். ஸ்கைநெட்டுடன் அவரைத் தொடர்பு படுத்தும் வன்பொருள் இணைப்பை மார்கஸ் கிழித்து எரிந்துவிட்டு, T-800 மாடல் 101 டெர்மினேட்டரை அழிக்கும் போரில் ஜானுக்கு உதவிபுரிகிறார். இந்த சண்டையில் இறக்கும் அளவிற்கு ஜான் காயமடைகிறார், ஆனால் பல்வேறு டெர்மினேட்டர் ஹைட்ரஜன் எரிபொருள் அறைகளை வெடிக்கச்செய்து ஸ்கைநெட் தளத்தை அழிக்கும் திட்டத்தில் வெற்றிபெறுகிறார், பிறகு அவர், மார்கஸ், கைல் மற்றும் ஸ்டார் ஆகியோர் வான்விடுகையில் வெளியேறுகின்றனர். ஜானின் உயிரைக் காப்பாற்ற கேட் முயற்சிக்கிறார், ஆனால் அவரது இதயம் மிகவும் சேதமடைந்திருந்தது. மார்கஸ் அவரது உயிரை தியாகம் செய்து திசுப்பொருத்தல் அறுவை மூலம் ஜானின் உயிரைக் காப்பதற்கு வழியுறுத்துகிறார். பிறகு ஜான் குணமடைந்து, இந்த சண்டையில் வெற்றியடைந்ததாகவும் நீண்ட காலப் போர் முடிவுற்றதாகவும் பிற எதிர்ப்புக் குழுவினர்களுக்கு ரேடியோ மூலம் தகவல் அனுப்புகிறார். 1999 இல், C2 பிச்சர்ஸ் பதிப்பக உரிமையை வாங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு "டெர்மினேட்டர்" திரைப்படங்களின் கதைகள் திட்டமிடப்பட்டு ஒரே காலத்தில் இரண்டையும் உருவாக்குவதாக இருந்தது. டேவிட் சீ. வில்சன் "டெர்மினேட்டர் 4" இன் கதையை எழுதும் போது, "Terminator 3: Rise of the Machines" இன் கதையை எழுதுவதற்கு டெடி சரஃபியன் பணியமர்த்தப்பட்டார், இதற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட கதையும் அவர் பெற்றார். எந்த மறு திருத்தங்களும் நடப்பதற்கு முன்பு, 2001 இல் ஸ்கைநெட் மற்றும் மனிதர்களுக்கு இடையே நடக்கும் முதல் தாக்குதல்களுக்கு பின் நடக்கும் பெருமாற்றத்தை அறிவிப்பதன் துவக்கமாக "T3" இருந்தது. அதற்குப் பிறகு, முதல் இரு திரைப்படங்களில் காணப்பட்ட போரை முதன்மையாக மையப்படுத்தி உடனடியாய் "T4" வெளியானது. வார்னர் பிரதர்ஸ் இத்திரைப்படத்தின் குறிப்பெயராக "புராஜெக்ட் ஏஞ்சல்" என்ற பெயரை வழங்கியது. 2003 இல் "டெர்மினேட்டர் 3" வெளியானதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களான ஆண்டிரிவ் ஜி. வஜ்னா மற்றும் மரியா கசார் இருவரும், மற்றொரு திரைப்படத்தில் ஜான் கானர் மற்றும் கேட் ப்ரீவ்ஸ்டெர் திரும்புவதாக நிக் ஸ்டாகில் மற்றும் க்ளேர் டேன்ஸ் ஆகியோருடன் ஒப்பந்தமிட்டனர். இயக்குனர் ஜோனதன் மோஸ்டவ் அந்தக் கையெழுத்துப் படிவத்தை உருவாக்க உதவினார், ஜான் பிரான்கடோ மற்றும் மைக்கேல் ஃபெரீஸ் ஆகியோர் கதையை எழுதினர், மேலும் 2005 இல் மற்றொரு திரைப்படத்தை நிறைவுசெய்த பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் அர்னால்ட் சுவாஸ்நேகரின் பங்கு குறைவாகவே இருக்கும் எனப் பின்னர் அறியப்பட்டது, இவர் கலிபோரினியாவின் ஆளுநரானதால் இவ்வாறு ஊகஞ்செய்யப்பட்டது. "டெர்மினேட்டர் 3" இல் செய்தது போலவே இத்திரைப்படத்திற்கு வார்னர் பிரதர்ஸை நிதியுதவியாகக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்கள் வழியுறுத்தப்பட்டனர். 2005 இல், வருங்காலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கதையில் ஸ்டாகில், ஜான் மற்றும் கேட் ஆகியோர் மீண்டும் நடிப்பதாக இருந்தது. 2006 இல், முதல் படமான "த டெர்மினேட்டரின்" விநியோகஸ்தரான மெட்ரோ-கோல்ட்வைன்-மேயர், ஸ்டுடியோவை ஹாலிவுட் நடிகர்களிடம் சாத்தியமான திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய CEO ஹேரி ஸ்லோனின் திட்டப்படி நான்காவது திரைப்படத்தை விநியோகிப்பதற்கு அமைக்கப்பட்டது. மே 9, 2007 இல், "டெர்மினேட்டர்" தொடருக்கான தயாரிப்பு உரிமைகளானது வஜ்னா மற்றும் கசாரிடம் இருந்து த ஹல்க்யோன் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய முத்தொகுப்பை தொடங்கலாமென தயாரிப்பாளர்கள் நம்பினர். சாண்டா மோனிகாவிடம் இருந்து ஒரு பாதுகாப்பு நிதி பசிஃபிகோர் மூலம் கடனுடன் நிதியுதவி செய்யப்பட்டு இந்த உரிமம் வாங்கப்பட்டது. ஜூலை 19 இல், MGM மற்றும் ஹால்க்கோன் துணை T சொத்துகளுக்கு இடையேயான வழக்கு காரணமாக இச்செயல்திட்டம் சட்டபடி புறக்கணிக்கப்பட்டது. டெர்மினேட்டர் திரைப்படங்களை விநியோகிப்பதற்காக, 30 நாட்கள் தடையுத்தரவை நீக்கும் உடன்படிக்கையை MGM கொண்டது. "டெர்மினேட்டர் 4" திரைப்படத்திற்காக உடன்படிக்கை செய்யும் போது, ஹால்க்கோன் அவர்களது முதல் முன்மொழிவை நிராகரித்தது, மேலும் MGM உடன்படிக்கைகளை விலக்கி வைத்தது. 30 நாட்கள் முடிந்த பிறகு, உடன்படிக்கைகள் விலக்கி வைக்கப்பட்ட காலம் இந்தக் கணக்கில் சேர்த்தியல்ல என்றும் இன்னும் தடையுத்தரவு நீக்கப்பட்ட காலம் தொடர்வதாகவும் MGM கூறியது. தடையுத்தரவு ஆணைக்காகவும், அவர்களை பிற விநியோகிஸ்தர்களை அணுக அனுமதிக்கும் ஆணையையும் நீதிமன்றத்திடம் ஹால்க்கோன் கேட்டது. பின்னர், வழக்கு நிறைவுசெய்யப்பட்டது, மேலும் நிதிக்கு முதல் நிராகரிப்பின் 30-நாள் உரிமை மற்றும் ஐந்தாவது "டெர்மினேட்டர்" திரைப்படத்தின் விநியோக உரிமையை MGM பெற்றது. இறுதியில், "டெர்மினேட்டர் சால்வேசனின்" அமெரிக்க விநியோக உரிமையைப் பெறுவதற்கு வார்னர் பிரதர்ஸ் $60 மில்லியன் செலுத்தியது; பெரும்பாலான சர்வதேச நாடுகளில் இத்திரைப்படத்தின் விநியோக உரிமையை சோனி பிச்சர்ஸ் $100 மில்லியனுக்கு மேல் செலுத்திக் கையகப்படுத்தியது. McG, அவரது விருப்பமான திரைப்படங்கள் பலவற்றுள் முதல் இரு திரைப்படங்களை இயக்குவதற்கு கையொப்பமிட்டார், மேலும் (அவரது திரைப்படங்களில் T-1000 இல் நடித்திருந்த) ராபர்ட் பேட்ரிக்கையும் அவரது திரைப்படங்களில் நடிகராக சேர்த்தார். எனினும், துவக்கத்தில் அவர் "ஒரு இறந்த குதிரையின் சவுக்கடி" பற்றி நிச்சயமற்று இருந்தார், இத்திரைப்படத்தில் கடவுள் அருள்வெளிப்பாடுக்கு பிந்தைய அமைவுகள் ஒரு மாறுபாட்டுக்கு போதுமானதாக இருக்குமென அவர் நம்பினார், அதனால் இது ஒரு தரக்குறைவான கதைதொடர்ச்சியாக இருக்காது என நம்பினார். "Terminator 2: Judgment Day" மற்றும் "Terminator 3: Rise of the Machines" இன் நிகழுவுகளின் யோசனைகளால் அவர்கள் வருங்காலத்தை திருத்தியமைத்து வருங்கால உலகத்தைப் பற்றிய அவர்களது காட்சியளிப்பை சாதகமாக்க ஏதுவாக இருந்தது. McG இத்தொடரின் இணை-உருவாக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார், அவர் இச்செயல்திட்டத்தைப் பற்றிய ஆசிர்வாதமும், சாபமும் இரண்டுமன்றி, அந்தப் புதிய இயக்குனரிடம் கேமரூன் கூறும் போது, ரிட்லே ஸ்காட்டின் "ஏலியன்" ஸில் "ஏலியன்களுடன்" இதே போன்ற சவாலை சந்தித்ததாக கேமரூன் கூறியுள்ளார். முந்தையத் திரைப்படங்களின் இரண்டு மூலப்பொருள்கள் அவர் தொடர்ந்து நிலைநிறுத்தியிருந்தார்; அதாவது ஜான் அதிகாரங்களுக்கு வெளியில் உள்ளவர், மேலும் யாராவது ஒருவர் வங்காலத்திற்காக காப்பாற்றப் படவேண்டும், இத்திரைப்படத்தில் அது கைல் ரீஸ் ஆகும். இத்திரைப்படத்திற்கான முதல் முழுமையான திரைக்கதையானது, முழுத் திரைக்கதையின் வரவைப் பெற்றவர்களான "டெர்மினேட்டர் 3" இன் எழுத்தாளர்கள் ஜான் பிரான்கடோ மற்றும் மைக்கேல் ஃபெரெஸ் இருவரால் எழுதப்பட்டது. பிரான்கட்டோ மற்றும் ஃபெரெஸின் கையெழுத்துப் படிவமானது, பால் ஹக்கீஸால் மீண்டும் எழுதப்பட்டது, மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று வாரத்திற்கு முன்பு, இதன் மற்றொரு திருத்தத்தை ஷான் ரியான் உருவாக்கினார். மேலும் படப்பிடிப்பில் ஜோனதன் நோலனும் கையெழுத்துப் படிவம் எழுதினார், கையெழுத்துப் படிவத்தில் அவரது பணி மிகவும் முக்கியமானது என McG எண்ணுவதற்கு இது வழிவகுத்தது; இத்திரைப்படத்தில் பேல் ஒப்பந்தம் ஆகி, இதில் தலைவராக கானரின் பாத்திரம் மாறிய பிறகு, இவர் இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் அந்தோனி ஈ. ஜுயூகெரும் கையெழுத்துப் படிவத்திற்கு தனது பங்களிப்பை வழங்கினார். அதனால், மாற்று எழுத்தாளர்களின் பரவலான பங்களிப்பால், ஆலன் டீன் போஸ்டெர் இதை அவரது பதிப்பாளரிடம் ஒப்படைத்த பிறகு, இதன் முழுமையான கதையையும் மாற்றி எழுதுவதற்கு முடிவெடுத்தார், ஏனெனில் அவர் முன்னதாகக் கொடுத்ததில் இருந்து இந்த படப்பிடிப்பு கையெழுத்துப் படிவம் மிகவும் மாறுபட்டு இருந்தது. இதன் முந்தைய கையெழுத்து வரைவுகளில், ஜான் ஒரு முக்கியமற்ற பாத்திரமாக இருந்தார். தயாரிப்பாளர் ஜேம்ஸ் மில்டன் விளக்குகையில், "ஏசு கிறிஸ்துவினால் "" ஈர்க்கப்பட்டுள்ளார், ஆனால் இது அவரது கதை. அந்த வழியில் பலர் உள்ளனர், இந்தப் [புதிய முக்கிய] பாத்திரமானது, ஜான் கானரின் தாக்கத்தினால் ஆனது" எனக் கூறினார். அசலான முடிவில் ஜான் கொல்லப்படுகிறார், எதிர்ப்புக்குழுவின் மூலம் மார்கஸின் இயந்திர உடலினுள் அவரது உருவம் மற்றும் தோல் ஒட்டவைக்கப்பட்டு அவருக்கு உயிர்கொடுக்கப்படுகிறது. எனினும், இணையத்தில் இந்த முடிவு வெளியான பிறகு, இத்திரைப்படத்தின் மூன்றாவது நடவடிக்கையை முழுவதுமாக மாற்ற வார்னர் பிரதர்ஸ் முடிவெடுத்தது. McG மற்றும் நோலன் இருவரும், ஸ்கைநெட்டைப் பற்றி அவருக்கு தெரிந்தவற்றை நம்பும் அவரது சில ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு பிற ஆதரவளிக்காதவர்களிடம் ஜானின் பாத்திரத்தில் கிறிஸ்துவின் மூலப்பொருளைத் தொடர்ந்தனர். McG இத்திரைப்படத்தின் கருப்பொருளை விவரிக்கையில், "இயந்திரங்களுக்கும் மனிதரிகளுக்கும் இடையில் கோடை எங்கு நீங்கள் வரைந்தீர்" எனக்கூறுகிறார். மனித இனம் இன்னும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது (கொலைக்காக) தண்டணை நிறைவேற்றப்பட்ட மார்கஸ் மற்றும் எவ்வாறு போர் மற்றும் துன்பம் மக்களிடம் உள்ள சிறப்பை வெளிக்கொணர்ந்தது என எடுத்துக்காட்டும் கைல் ரீஸ்ஸுக்கு இடையில் உள்ள நட்பானது, விமானத் தாக்குதலில் உயிர்வாழ்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றுவது போன்ற செய்கைகளின் மூலம் வெளிப்படுகிறது. மனித இனம் மற்றும் மார்க்கஸுக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பில் இருந்தும், கூடுதலாக இயந்திரங்களிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்ற ஜானின் முயற்சிகள் போன்றவற்றால் இத்தலைப்பு பெறப்படுகிறது. இத்திரைப்படத்தின் உண்மையான தலைப்பு "டெர்மினேட்டர் சால்வேசன்: த புயூச்சர் பிகின்ஸ்" என்பதாகும், ஆனால் படப்பிடிப்பின் போது இத்தலைப்பு கைவிடப்பட்டது. எழுத்து முழுவதும், இத்திரைப்படத்தில் ஜானின் மூலம் தெரிவிக்கப்படும் "ஐ'வில் பி பேக்" உள்ளிட்ட, இயக்கங்களின் மேற்கோளை எடுப்பதற்காகவும் அல்லது புகழுரைக்காக மூன்று திரைப்படங்களில் இருந்தும் காட்சிகளை நடிகர்கள் மற்றும் குழுவினர் பார்த்தனர். McG, மேற்கோள்களின் கருத்துக்களில் எதை உள்ளடக்கலாம் எதைக் கூடாது என தானாகவே முடிவெடுக்க உணர்ந்திருந்தார். ஒரு தொடக்க காட்சியில், ஜான் ஒரு டெர்மினேட்டருடன் சண்டையிட்டு ஹெலிக்காப்டரை வெடிக்கச் செய்யவதாக இருந்தது, இக்காட்சியானது அசல் திரைப்படத்தில் அவரது தாயார் சாரா ஒரு முடக்கப்பட்ட டெர்மினேட்டர் மூலம் துரத்தப்பட்டு அவரது காலை உடைப்பதற்கு, பிரதி உபகாரமாகத் தளமாக வைக்கப்பட்டிருந்தது. McG, ஜானின் திறமைகள் அனைத்தும் அவரது தாயாரிடம் இருந்து எதிரொலியாகச் செய்தார். "டெர்மினேட்டர் சால்வேசன்" $200 மில்லியன் பட்ஜெட்டைக் கொண்டிருந்தது, இது அந்தத் திரைப்படத்தை மிகவும் விலையுயர்ந்த சார்பற்ற தயாரிப்பாக்கியது. படத்தின் படப்பிடிப்பு மே 5, 2008 இல் நியூ மெக்சிகோவில் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு, அமெரிக்க விமானப்படை பணிக்குழு வழிகாட்டுதல் மற்றும் விமானம் ஆகியவற்றை வழங்குவதற்கு ஏற்றுக்கொண்ட பிறகு மாநிலத்தின் கிர்ட்லேண்ட் விமானப்படைத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தத் திரைப்பட உருவாக்குனர்கள் முதலில் ஏப்ரல் 15 இல் புடாபெஸ்ட்டில் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்களது பட்ஜெட் அதிகரித்துவிடும் என்பதன் காரணமாக, இருபத்தைந்து சதவீத வரி விலக்கு மற்றும் வட்டி விகித கேப் மற்றும் ஃப்ளோர் இல்லாமை ஆகியவை, திரைப்பட உருவாக்குனர்களை மலிவான நியூ மெக்சிகோவைத் தேர்ந்தெடுக்கச் செய்தது. ஜூலையில் 2008 திரைப்பட நடிகர்கள் சங்க வேலைநிறுத்தம் காரணமாக தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து வெளிப்புறக் காட்சிகளும் அதற்கு முன்பே முடித்தனர், அதனால் தயாரிப்பு மீண்டும் துவங்குவது எளிதானது. படப்பிடிப்பானது ஜூலை 20, 2008 இல் நிறைவடைந்தது, எனினும் சில காட்சிகள் ஜனவரி 2009 இல் எடுக்கப்பட்டன. மேலும், பாலேவிற்கு கை முறிந்தது மற்றும் ஒர்த்திங்டனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது, சிறப்புக் காட்சிவிளைவுகள் தொழில்நுட்ப வல்லுநர் மைக் மெனார்டிஸ் வெடி நிகழ்வுக் காட்சியைப் படப்பிடிப்பு நடத்தும் போது கிட்டத்தட்ட அவரது காலை இழந்தார். சாக்கடை மூடி ஒன்று காற்றில் வீசப்படுவது போல் ஒரு காட்சி தேவையாக இருந்தது, அது மெனார்டிஸைத் தாக்கியது, மேலும் அது அவரது பாதத்தில் ஒரு பகுதியை வெட்டியது. இது திரைப்படத்தின் அபாயத்தைச் சந்திக்கக்கூடிய பாணிக்கான சோதனை என McG குறிப்பிட்டிருந்தார். "நான் மரியாதையுடம் சொல்லிக்கொள்கிறேன், எனக்கு எல்லா இடத்திலும் நீலத் திரை, டென்னிஸ் பந்துகள் மற்றும் பல போன்ற "ஸ்டார் வார்ஸ்" அனுபவம் வேண்டாம். என்னிடம் அனைத்து இயந்திரங்களையும் உருவாக்குவதற்கு ஸ்டேன் வின்ஸ்டன் இருக்கிறார். நாங்கள் அரங்குகள், வெடிபொருள் ஆற்றல் ஆகிய அனைத்தையும் அமைத்திருக்கிறோம், வெடிபொருள் ஆற்றலால் நீங்கள் காற்றில் தட்டுவதைப் போல உணர்வீர்கள், மற்றும் அதன் வெப்பம் உங்கள் கண் புருவங்களைச் சிலிர்க்க வைப்பதாக இருக்கும். மேலும் அதனுடன் நீங்கள், இரட்டை மோதல்கள் மற்றும் அந்த வழியில் சில காயங்களைக் காணலாம், ஆனால் அதில் நீங்கள் ஒரு ஒற்றுமை மற்றும் உண்மைத்தன்மையை உணர்வீர்கள், அது "அபோகாலிப்ஸ் நவ்" வைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். "'அபோகாலிப்ஸ் நவ்வை" பர்பேங்கில் எடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் கூற முடியாது, இது நன்றாக இருந்தது என்று நீங்கள் உணரும்படி இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் பின்-தயாரிப்பின் போது டெக்னிகலரின் Oz செயல்பாடு பயன்படுத்தப்பட்டிருந்தது. இது இன்டர்பாசிடிவின் மீது பகுதியளவு வெள்ளி வைத்திருப்பாக இருக்கும், இது ப்ளீச் பைபாஸ் போன்றதே ஆகும், இது McG நினைத்திருந்த நவீன உலகத்தைப் பிரித்துக்காட்டுவதற்கு பயன்படுத்தபடலாம். இன்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக், CGI யதார்த்தத்தில் தெவிட்டாத ஒளியை உருவாக்குவதற்கு மற்றும் ஆன்-செட் ஃபூட்டேஜை நன்றாக-ஒருங்கிணைப்பதற்கு ஷேடர் செயல்திட்டங்களை உருவாக்கியிருந்தது. திரைப்பட உருவாக்குனர்கள் புறக்கணிக்கப்பட்ட உலகம் மற்றும் நியூக்ளியர் விண்டர் ஆகியவற்றின் காட்சி விளைவுகள் பற்றி பல அறிவியல் அறிஞர்களிடம் கலந்தாலோசித்தனர். McG ஒரிஜினல் "ஸ்டார் வார்ஸ்" ட்ரையாலஜியான "" மற்றும் "சில்ட்ரன் ஆஃப் மென்" , அத்துடன் "த ரோட்" நாவல் ஆகியவற்றை அவர் காட்சித்தாக்கத்திற்காகப் பார்த்தார். அவர் அவரது நடிகர்களுக்கும் அதனையும் அத்துடன் "டு ஆண்ட்ராய்ட்ஸ் ட்ரீம் ஆஃப் எலக்ட்ரிக் ஷீப்?" ஐயும் படிக்குமாறு அறிவுறுத்தினார், அது "சில்ட்ரன் ஆஃப் மேன்" போன்றதாகும், McG காட்சிகளை ஸ்டோரிபோர்ட் செய்து வைத்திருந்தார், அதனால் பொருத்தில்லாத, தொடர் காட்சியை ஒத்திருப்பதற்கு இது ஒன்றாகத் தொகுக்கப்பட்டது. காணரின் காட்சியான, T-800 க்கான திட்டங்களை அவர் கண்டறியும் ஸ்கைநெட் தளத்தின் மீது வெடிகுண்டில் சிக்கிக்கொள்ளும் இரண்டு-நிமிடக் காட்சியைப் படம் பிடிக்க இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. படப்பிடிப்பின் போது, பாலே, நிழற்படக்கலை இயக்குநர் ஷானெ ஹர்ல்பட் மீது கோபம் கொண்டார், அவர் மீது சினம் கொண்டு படத்திலிருந்து விலகிவடிவதாக அச்சுறுத்தினார். பாலே வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார் மற்றும் ஹர்ல்பட் உடனான அவரது பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார், அந்த நிகழ்வு நடந்ததற்குப் பிறகு அவர்கள் சில மணிநேரங்களில் படப்படிப்பைத் தொடர்ந்தனர். McG திரைப்படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்குவதற்காக சாத்தியமானவரை பல "ஆன்-கேமரா" மூலங்களைச் சேர்ப்பதற்கு விரும்பியதாக வெளிப்படுத்தார். அதனால் யதார்த்தமான, ஹார்வெஸ்டர் தாக்குதல் காட்சிக்காக முழுமையான எரிவாயு நிலையம் உருவாக்கப்பட்டது போன்ற பல அரங்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன, மேலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை டெர்மினேட்டர் தொழிற்சாலையாக உருவாக்கப்பட்டது, இதற்காக வடிவமைப்புக் குழுவினர் ரோபோ உற்பத்தி நிறுவனங்களிடம் மிகவும் யதார்த்தமான சித்தரிப்பிற்காக கலந்தாலோசித்தனர். 20 அடி-உயர மாதிரி கெர்னர் ஆப்டிகல் மூலமாக உருவாக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது, இது ஸ்கைநெட்டின் 30-அடுக்கு சேன் ஃபிரான்சிஸ்கோ-சார்ந்த சோதனைக்கூடத்தின் வெடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான இயந்திரங்கள் மார்டின் லாயிங்கினால் வடிவமைக்கப்பட்டிருந்தது, இவர் கேமரூனின் "டைட்டானிக்" மற்றும் "கோஸ்ட்ஸ் ஆஃப் த அபிஸ்" ஆகியவற்றில் பணிக்குழு உறுப்பினராக இருந்தவர். பல இயந்திரங்கள் எச். ஆர். ஜிகர் தாக்கத்தினைக் கொண்டிருந்ததாக McG விவரித்தார். McG திரையில் அபாயகரமான, தொட்டுணரக்கூடிய 2018 ஐ உருவாக்க நினைத்திருந்தார், மேலும் லாயிங் ரோபோக்களை கருப்பு நிறத்திலும் எதுவுமே புதிதானது அல்ல என்று எண்ணும்படியும் உருவாக்க இசைந்தார். லாயிங் காற்று மிதவைகளை உருவாக்கினார், அவை முந்தைய படங்களில் பயன்படுத்தப்பட்ட ஏரியல் ஹண்டர் கில்லர்களிம் சிறிய பதிப்புகளாக இருந்தன. இந்த காற்று மிதவைகள் 60-அடி-உயர ஹ்யுமனாய்டு ஹார்வஸ்டர்களுக்கு சமிக்ஞையை அனுப்பும். அவை மிகவும் பெரிதானவை மற்றும் மெதுவானவை, அதனால் அவர்கள் மனிதர்களை எடுப்பதற்கு மோட்டோடெர்மினேட்டர்களைப் பயன்படுத்தினர், மேலும் ஹேர்வெஸ்டர்கள் டிரான்ஸ்போர்ட்டர்களில் இடம்பெற்றன. லாயிங் அவர் ஆல்புகுவெர்கியூ வழியாக பயணிக்கும் போது கால்நடைப் போக்குவரத்தைப் பார்க்கும் வரை டிரான்ஸ்போர்ட்டர்களை எப்படி வடிவமைப்பது என்பதில் தெளிவில்லாமல் இருந்தார். காற்று, நிலம் மற்றும் கடல் ஆகியவற்றில் முழுமையான ஸகைநெட்டின் ஆதிக்கம் ஹைட்ரோபோவாக இருந்தது, அவற்றை லாயிங் விலாங்குமீன்களை மாதிரியாகக் கொண்டு உருவாக்கினார், மேலும் இது அனிமேட்ரானிக்ஸ் பணிக்குழுவின் மூலமாக வெளிப்புறத்தில் உலோகம்-போன்ற ரப்பருடன் உருவாக்கப்பட்டிருந்தது, அதனால் அவற்றை நீர்நிலைக் காட்சிகளில் பயன்படுத்த முடிந்தது. இந்த திரைப்படம் ரப்பர்-தோலுள்ள T-600கள் மற்றும் T-700கள் சிறப்புக்கூறுகளைக் கொண்டிருந்தது. McG T-600 இன் ஒரிஜினல் திரைப்படத்தில் கைல் ரீசேவின் விவரிப்பை ஒருங்கிணைத்தார், அவற்றை உயரமாகவும் பருமனாகவும் உருவாக்கியதன் மூலமாக அது குறிப்பிடுவதற்கு எளிமையாக இருந்தது. மனிதர்கள் டெர்மினேட்டர்களுடன் சண்டையிடும் காட்சிக்காக, நடிகர்கள் மோசன் கேப்சர் உடைகள் அணிந்த ஸ்டண்ட்மேன்களுடன் செயல்புரிந்தனர், பின்னர் அவை டிஜிட்டல் ரோபோவாக மாற்றப்பட்டன. மோட்டோடெர்மினேட்டர்களுக்காக, டகாட்டி வடிவமைப்பாளர்கள் ரோபோக்களை உருவாக்குவதற்கு நியமிக்கப்பட்டனர், மேலும் ஆன்-ஸ்கிரீன் ரோபோ, உண்மையான டகாட்டிகளை இயக்கும் ஸ்டண்ட்மென் மற்றும் மோட்டொடெர்மினேட்டர் மாதிரி வடிவமைப்பு அத்துடன் டிஜிட்டல் மோட்டோடெர்மினேட்டர் ஆகியவற்றின் இணைப்பாக இருந்தது. டெர்மினேட்டர் நோக்கு நிலைக் காட்சிகளை காட்சி விளைவுகள் ஸ்டுடியோவான இமாஜினரி ஃபோர்சஸ் உருவாக்கியிருந்தது, மேலும் அது இயந்திரத்திற்குத் தேவையான எளிமையான இடைமுகத்தை சித்தரிக்க முயன்றிருந்தது, மேலும் அது பல மென்பொருள் பிழைகள் மற்றும் முரண்பாடுகளைக் கொண்டிருந்தது, எனினும் "சால்வேசனின்" ரோபோக்கள் முந்தைய திரைப்படங்களின் டெர்மினேட்டர்களில் இருந்து மேம்பட்டதாக இல்லை. பெரும்பாலான சிறப்புக் காட்சி விளைவுகள் இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் மூலமாகச் செய்யப்பட்டது. டிஜிட்டல் தட்டுக்கள், மார்கஸ் எண்டோஸ்கெல்டன் மற்றும் டிஜிட்டல் T-600 ஆகியவற்றை உருவாக்கிய அசைலம் விசுவல் எஃபக்ட்ஸ்; மற்றும் பகலை இரவாக மாற்றும் காட்சிகளின் டிஜிட்டல் திருத்தம், சப்மேரைன் மற்றும் மார்கஸ் ரோபோ கையின் அழிவு ஆகியவற்றைச் செய்த ரைசிங் சன் பிக்ச்சர்ஸ் ஆகியவை உள்ளிட்டோர் மற்ற பங்களிப்பாளர்கள் ஆவர். "சால்வேசன்" ஸ்டான் விண்ஸ்டனின் இறுதித் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது, அவர் இதன் மூன்று திரைப்படங்களில் காட்சி விளைவுகள் மேற்பார்வையாளராகப் பணியாற்றியிருந்தார். அவர் பல் சாற்றுப்புற்று நோயினால் ஜூன் 15, 2008 இல் இறந்தார், மேலும் McG திரைப்படத்தின் எண்ட் கிரெடிட்ஸில் இதனை அவருக்குச் சமிர்ப்பித்திருந்தார். விண்ஸ்டனுக்குப் பதிலாக ஜான் ரோசன்கிராண்ட் மற்றும் சார்லி கிப்சன் நியமிக்கப்பட்டனர், மேலும் McG அவர்கள் "இதற்கு முன்பு அடையமுடியாத ஒன்றை அடைய முயற்சிப்பார்கள்" மற்றும் "அவர்கள் செயலாற்றும் எல்லைகளையும் தாண்டி பணிபுரிவார்கள்" என்று குறிப்பிட்டார். டேன்னி எல்ஃப்மேன் ஜனவரி 2009 இல் இசையமைக்கத் தொடங்கினார். இவருக்கு முன்பு, McG, மனிதர்கள் கருப்பொருளுக்குப் பணியாற்ற கஸ்டாவோ சாண்டாவ்லாலாவையும், ஸ்கைநெட்டின் கருப்பொருளுக்குப் பணியாற்ற தோம் யோர்கெவையோ அல்லது ஜான்னி கிரீன்வுட்டையோ நியமிக்க நினைத்திருந்தார். மேலும் அவர் ஹேன்ஸ் ஜிம்மர் உடன் திரைப்படத்தின் இசை தொடர்பாக கலந்துரையாட நினைத்திருந்தார், ஆனால் அவரால் சந்திப்பை ஏற்பாடு செய்ய இயலவில்லை. எனினும், அவர் "த டெர்மினேட்டர்" மற்றும் "டெர்மினேட்டர் 2" இசையமைப்பாளர் பிராட் ஃபையடெல் உடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஃபையடெல் அவரது படங்களில் பயன்படுத்திய ஒலிகள் திரும்ப இடம்பெறுவதில் McG ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் அந்தக் கருப்பொருள்கள் மற்றும் சூழ்நிலை ஒலிகளைப் பயன்படுத்த எல்ஃப்மேன் நினைத்தார், மேலும் "வாக்னேரியன் தரத்தை" அவற்றுக்குக் கொடுத்தார். ரீபிரைஸ் ரெகார்ட்ஸ் மே 19, 2009 இல் சவுண்ட்டிராக் வெளியிடப்பட்டது. சவுண்ட்டிராக்குக்கான பாடலை எழுதுவதில் பொதுமக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்திய போதும், அலைஸ் இன் செயின்ஸ்' "ரூஸ்டர்" மட்டுமே படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும். எனினும் சவுண்டிராக்கில் இடம்பெறாத ஆனால் "Terminator 2: Judgment Day" படத்தில் இடம்பெற்றிருந்த, கன்ஸ் N' ரோசஸ் இன் "யூ குட் பி மைன்" ஐ இத்திரைப்படத்தின் காட்சிகளில் சுருக்கமாகக் கேட்கலாம். நைன் இண்ச் நெயில்ஸ்' "த டே த வேர்ல்ட் வெண்ட் அவே" திரைப்படத்தின் திரையரங்கு மாதிரிக்காட்சியில் இடம்பெற்றிந்தது, ஆனால் அது திரைப்படம் அல்லது சவுண்ட்டிராக்கில் இடம்பெறவில்லை. சவுண்ட்டிராக் மார்ச் 2009 இல், தயாரிப்பாளர் மோரிட்ஸ் போர்மேன் $160 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு ஹால்சியோன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். மே 2007 இல் "டெர்மினேட்டரின்" உரிமையை பரிமாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்த போர்மேன், நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள் டெரெக் ஆண்டர்சன் மற்றும் விக்டர் கூபிகெக் ஆகியோர் உருவாக்கத்தைக் "கடத்தி" விட்டனர், மேலும் அந்த உருவாக்கத்திற்கான அவர்களது $2.5 மில்லியன் பங்கைக் கொடுக்க மறுக்கின்றனர் என அதில் குறிப்பிட்டிருந்தார். ஆண்டர்சன் மற்றும் கூபிகெக் இருவரும் பட்ஜெட் அதிகரித்ததன் காரணமாக அவருக்குப் பணம் தரவில்லை மற்றும் அவர்கள் $1 மில்லியன் கடனாக வைத்திருக்கிறார்கள் என போர்மேன் குற்றம் சாட்டினார். எனினும், ஒரு மாதங்களுக்குப் பிறகு "இணக்கமான" தீர்வு ஏற்பட்டது. தொடர்ந்த சிக்கல்கள் மே 20, 2009 இல் ஏற்பட்டது, "டெர்மினேட்டர்" உரிமைகள் பற்றி ஆண்டர்சன் மற்றும் கூபிகெக்குக்குத் தெரிவித்த செயல் தயாரிப்பாளர் பீட்டர் டி. கிரேவ்ஸ் மத்தியஸ்தம் செய்வதற்கான ஒப்பந்த மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார், அதில் அவர்கள் அவருக்கு $750,000 திருப்பித்தர வேண்டியிருக்கிறது என குற்றக் கூறப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படம் மே 21, 2009 இல் வட அமெரிக்காவில் வார்னர் பிரதர்ஸால் வெளியிடப்பட்டது. மே 14, 2009 இல் ஹாலிவுட்டில் கிராவ்மேன்'ஸ் சைனிஸ் தியேட்டரில் அமெரிக்கத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதுமட்டுமின்றி, சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் பல்வேறு வெளிநாட்டுப் பகுதிகளில் ஜூனில் வெவ்வேறு நாட்களில் திரைப்படத்தை வெளியிட்டது. எனினும், இதில் மெக்சிகோ ஒரு விதிவிலக்கு, இந்த நாட்டில் ஸ்வைன் ஃப்ளூ திடீர்த் தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக சோனி ஜூலை 31, 2009 இல் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இது முந்தைய R-தரமிடப்பட்டத் திரைப்படங்களைப் போலல்லாமல், "அறிவியல்-புனைவு வன்முறை, சண்டை மற்றும் மொழிநடை ஆகியவற்றின் செறிவான காட்சிகளுக்காக" மோசன் பிக்சர் அசோசியேசன் ஆஃப் அமெரிக்காவினால் இத்திரைப்படத்திற்கு PG-13 தரம் கொடுக்கப்பட்டது. திரைப்படத்தை PG-13 தரத்துடன் வெளியிடுவது என்ற முடிவு, ரசிகர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றில் இருந்து மிகவும் அதிகமான விமர்சனத்தை எதிர்கொண்டது. குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக இளம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பது நன்றாக இராது என McG நினைத்ததால், மார்கஸ் ஸ்க்ரூ டிரைவரினால் தாக்கும் ஒரு காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது, பின்னர் PG-13 தரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மூன் ப்ளட்கூடின் மேலாடையில்லாத காட்சி ஒன்றையும் நீக்கினார், ஏனெனில் "இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையே நிகழும் மிகவும் மென்மையான தருணம், இது "விட்னஸ்" திரைப்படத்தின் இறுதிக்காட்சிக்கு [முன்பு] கெல்லி மெக்கில்லிஸ்/ஹேர்ரிசன் ஃபோர்ட் நிகழ்வைப் பிரதிபலிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் ஒரு அதிரடித் திரைப்படத்தில் ஒரு பெண் மேலாடையின்றி தோன்றுவது காரணமின்றி செய்யப்பட்டதாகத் தோன்றியது, மேலும் எனக்கு அது போன்று கதை அல்லது பாத்திரங்களைச் சுருட்டுவதற்கு விருப்பமில்லை" என்றார். "லைவ் ஃப்ரீ ஆர் டை ஹார்ட்" போன்று PG-13 திரைப்படங்களில் நவீன கருனையுடன் கூடிய வன்முறையை நோக்கியிருப்பதன் காரணமாக தயாரிப்பாளர்கள் அந்த தரத்தை எதிர்பார்த்தனர். ரோட்டன் டொமேட்டோஸினால் சேர்க்கப்பட்ட 246 திறனாய்வுகள் சார்ந்து, "டெர்மினேட்டர் சால்வேசன்" எதிர்மறைத் தன்மையை நோக்கி இருக்கிறது என்பதற்கான விமர்சன ரீதியான எதிர்வினை ஒட்டு மொத்தமாக 33% ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீட்டைக் கொண்டிருந்தது. ரோட்டன் டொமேட்டோஸ் தவிர, சிறந்த செய்தித்தாள்கள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து பிரபலமான மற்றும் குறிப்பிடத்தக்க விமர்சகர்களை உள்ளடக்கிய "சிறந்த விமர்சகர்களிடம்" , திரைப்படமானது இதே போன்ற 32% ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீட்டைப் பெற்றது. ஒப்பிடுதலின்படி, மெட்டாகிரிட்டிக்கில், முக்கியமான விமர்சனங்களில் 100க்கு மதிப்பிட்ட இயலான தரநிலையில், இப்படத்திற்கு சராசரி மதிப்பாக 56 வழங்கப்பட்டுள்ளது, இது 39 விமர்சனங்களைப் பொருத்ததாகும். [220] அனைத்து மூன்று நிகழ்வுகளிலும் திரைப்படமானது அந்த வரிசையில் மிகவும் குறைவான தரவரிசையைப் பெற்றது. "சிகாகோ சன்-டைம்ஸ்" இன் ரோகர் எபர்ட் திரைப்படத்திற்கு 4 இல் 2 நட்சத்திரங்கள் வழங்கினார், "திரைப்படத்தை ஆராய்ந்த பிறகு, நான் இந்தக் கதையின் சுருக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்: ஒருவன் இறக்கிறான், அவனாகவே புத்துயிர்பெறுவதைக் கண்டறிகிறான், மற்றவர்களைச் சந்திக்கிறான், சண்டையிடுகிறான். அது கிட்டத்தட்ட இரண்டு மணிநேர இழப்பாக இருந்தது" என்று கூறியிருந்தார். "ஹாலிவுட் ரிப்போர்ட்டரின்" மைக்கேல் ரெசெட்ஷாஃப்பன், ஆர்னால்ட் சுவாஸ்நேகர் இல்லாமல் இது அதே போன்று இல்லை, மேலும் இது அதன் உயிர்த்துடிப்புள்ள மூலத்தை இழந்திருக்கிறது என்று எழுதியிருந்தார். அதே போல, "USA டுடே" வின் கிளாடியா ப்யுக் திரைப்படத்திற்கு 2/4 வழங்கியிருந்தார், மேலும் இது "உயிர்த் துடிப்புள்ள மூலங்கள் மந்தமான-[உட்புறத்துடன்]" "எதிர்பார்த்ததைப்போல்" இருக்கிறது என்று அழைத்தார். அவர், கிறிஸ்டியன் பாலேவின் நடிப்பு "ஒரு-பரிமாணமுடையதாக" இருந்தது, ஆனால் சாம் ஒர்த்திங்டன் மற்றும் ஆண்டன் யெல்சின் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது. "டோட்டல் ஃபிலிம்" ஸ் அதன் முடிவுடன் திறனாய்வில் திரைப்படத்திற்கு 4/5 வழங்கியிருந்தது: "டெர்மினேட்டர் கதை பின்-அபோகாலிப்டிக் துள்ளல் ஆற்றலுடன் மறுஊட்டம் கொண்டிருக்கிறது. கடந்த காலத்துக்கு கட்டு மீறிய மற்றும் முழுமையான வணக்கம் தெரிவிப்பதாக இருக்கிறது, மேலும் இது புதிய நோக்கத்திற்காக நிலத்தைப் பண்படுத்துவதாகவும் இருக்கிறது. கேமரூனின் தலைமையை McG கை கட்டி ஏற்றிருக்கிறார், மேலும் மதிப்புள்ள பின்தொடர்ச்சியில் பணியாற்றி இருக்கிறார்..." என்று முடிவுரைத்திருந்தது. "எம்பயர்" பத்திரிகையின் டெவின் ஃபராசியும், நேர்மறைத் தரவரிசையாக ஐந்துக்கு நான்கை வழங்கியிருந்தார், மேலும் அவர் "McG இறக்கும் தருவாயில் உள்ள உரிமையை உயிர்த்தெழச் செய்திருக்கிறார், ரசிகர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் பார்த்த உலோகக் கால் அழுத்தப்பட்ட மனித எலுக்கூட்டில் ஆரம்பித்து அவர்கள் விரும்பிய பின்-அபோகாலிப்டிக் அதிரடியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், CHUD இல், அவர் "ஜான் கான்னராக நட்சத்திரமாவதற்கான பாலேவின் ஆசை, இந்தத் திரைப்படத்தில் கிட்டத்தட்ட மிகவும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது; அது வழங்கப்பட்டிருக்கும் கதையின் வடிவத்தை முழுமையாக அழித்துவிட்டது" என்று கூறியிறுந்தார். மேலும், அவர் திரைப்படம் வீழ்ச்சியடையத் தொடங்கும் போது மூன்றாம் தரப்பு நடிப்பாக இருக்கிறது என்று வெளிப்படுத்தினார், எப்படி "McG மற்றும் நோலன் இறுதித் திரைப்படத்தில் சகதியில் புரண்டிருக்கிறார்கள், அதிரடிப் பொதுவியல்புகளைக் கொடுத்திருக்கிறார்கள் (அதே போல தொழிற்சாலையில் மற்றொரு டெர்மினேட்டர் சண்டை), அதேசமயன் அவர்களின் சொந்தத் தூண்டிலைக் காணமுடியவில்லை, அதனால் எக்ஸ்பாண்டட் யுனிவர்ஸ் நாவலில் இருந்து பெற்ற தாக்கத்தைக் காட்டிலும் இந்த திரைப்படம் அதிகமாகக் கொடுக்கிறது" என்றார். மாறாக ஜேம்ஸ் பெரார்டினல்லி, திரைப்படத்தின் சிறந்த பகுதியாக நிறைவுறுவதாகக் கருதுகிறார், முதல் மூன்றில் இரண்டு "நீட்டிப்பாகவும் இணைப்பில்லாமலும்" இருந்தாக உணர்ந்ததாகக் கூறினார், மேலும் மைய வில்லனின் குறைபாடு, T-800 தோன்றிய பிறகு சரியானது என்றார். "லாச் ஏஞ்சல்ஸ் டைம்ஸின்" பெட்சி ஷார்கீ, "[பாலேவின்] ஆற்றல்கள் அவருக்குப் பயன் தரவில்லை, அல்லது இங்கு திரைப்படமும்" மற்றும் "கதை பாலேவைச் சுற்றி நொறுங்கி விழுந்த போது, ஒர்த்திங்டன் அந்தப் பகுதிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்" என்று குறிப்பிட்டார். "நியூயார்க் டைம்ஸின்" ஏ.ஓ. ஸ்காட் இந்த திரைப்படம் "சில மற்ற பருவம் சார்ந்த உரிமைத் திரைப்படங்களில் இல்லாத முரட்டுத்தனமான ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது" மற்றும் "ஆற்றல் மிக்க, நியாயமான வேகத்தில் கதைபோக்கைக் கொண்டிருக்கிறது" என்றார். பென் லியோன்ஸ் மற்றும் பென் மாங்கீவிக்ஸ் இருவரும் அவர்களின் நிகழ்ச்சியான "அட் த மூவிஸில்" முறையே திரைப்படத்தைப் "பார்க்கலாம்" மற்றும் "தவிர்த்துவிடலாம்" எனக் கூறியிருந்தனர், இதில் இரண்டாமவர் "இதுவரை நான் கோடை காலத்தில் பார்த்த மிகவும் மோசமான பெரிய பட்ஜெட் படமிது" என்று குறிப்பிட்டார். இந்த திரைப்பட வரிசையின் முந்தைய மூன்று திரைப்படங்களில் நடித்திருந்த ஆர்னால்டு சுவாஸ்நேகர், "டெர்மினேட்டர் சால்வேசன்" "ஒரு சிறந்த திரைப்படம், நான் மிகவும் உற்சாகமடைந்தேன்" என்றார். இந்த வரிசையை உருவாக்கியவரான ஜேம்ஸ் கேமரூன், இதை ஒரு "ஆர்வமுள்ள திரைப்படமாகக்" கருதினார், மேலும் அவர் "நான் நினைத்திருந்ததைப் போல வெறுக்கத்தக்கதாய் இல்லை" என்றார், மேலும் ஒர்த்திங்டனின் நடிப்பைப் பாராட்டியிருந்தார். "த டெர்மினேட்டர்" மற்றும் "Terminator 2: Judgment Day" ஆகியவற்றில் சாரா காணராக நடித்திருந்த மற்றும் "டெர்மினேட்டர் சால்வேசனில்" அவரது குரலைக் கொடுத்திருந்த லிண்டா ஹேமில்டன், இந்தத் திரைப்படத்தை "அனைத்தும் சிறந்ததாக இருக்கட்டும்" என வாழ்த்தினார், ஆனால் இந்த வரிசை "மற்ற இரண்டு திரைப்படங்களில் சரியானதாக இருந்தது. இது ஒரு முழுமையான சுற்று, மேலும் இது அதனுடன் போதுமானது. ஆனால் பசுவிடன் பால் கறக்க [கறப்பதற்கு] முயற்சிப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்" என்று கருத்து தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் முதல் தேசம் முழுவதுமான US வெளியிடல் மே 21, 2009, வியாழக்கிழமை 12 A.M. ஆக இருந்தது, அதன் நடுஇரவுக் காட்சியில் $3 மில்லியன் வசூலித்தது மற்றும் அதன் முதல் நாள் காட்சியில் $13.3 மில்லியன் வசூலித்தது. இந்தத் திரைப்படம் கூடுதலாக அதன் 4-நாள் நினைவு நாள் ஆரம்ப வாரயிறுதியில் $42,558,390 வசூலித்தது, மேலும் "Night at the Museum: Battle of the Smithsonian" க்குப் பின்னர் #2 இடத்தைப் பெற்றிருந்தது, இதன் முந்தைய படங்களைக் காட்டிலும் மிகவும் குறைவான முதல் வார வசூலைப் பெற்றிருந்தது, மேலும் இந்த வரிசையில் #1 இடத்திற்குச் செல்லாத முதல் படமாகவும் அமைந்தது. "டெர்மினேட்டர் சால்வேசன்" அதன் சர்வதேச வெளியீடுகளில் மிகவும் அதிகமான வெற்றியைப் பெற்றது, ஜூன் முதல் வாரத்தில் அது வெளியிடப்பட்ட 70 பகுதிகளில் 66 இல் #1 இடத்தில் இருந்தது, மேலும் அதனைத் தொடர்ந்த வாரங்களில் மிகவும் அதிகமாக வசூமை ஈட்டிய படமாகவும் தொடர்ந்தது. இந்த திரைப்படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் $125,322,469, மற்றும் வெளிநாட்டில் $246,723,586 ஆகியவற்றுடன் சேர்த்து உலகளாவிய வசூல் $372,046,055 ஆகும். டிசம்பர் 2009 இல் இருந்து, இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் பதினான்காம் தரத்தையும், உள்நாட்டில் (அமெரிக்கா மற்றும் கனடா) இருபத்தி மூன்றாம் தரத்தையும் பெற்றிருந்தது, இந்தத் தரம் இந்த வரிசையில் இதற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உள்நாட்டு வசூலும் முதல் வாரயிறுதியும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதில் ஆரம்ப எதிர்பார்ப்பு குறைந்திருந்தது, அத்துடன் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தது. திரைப்படத்தின் DVD மற்றும் ப்ளூ-ரே டிஸ்க் டிசம்பர் 1, 2009 இல் வெளியிடப்பட்டது. DVD யில் மோட்டோடெர்மினேட்டர்கள் மீதான ஃபியூச்சரெட்டேவுடன், திரைப்படத்தின் அரங்க வெட்டுக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ப்ளூ-ரே அரங்க வெட்டு மற்றும் R-தர இயக்குநரின் வெட்டு இரண்டும் கொண்டிருந்தது, அது மூன்று நிமிடங்கள் நீள்வதாக (118 நிமிடங்கள்) இருந்தது, மேலும் அதிகபட்ச திரைப்பட முறை, திரைப்படம் ஓடும் போது இயக்குநர் McG அதுபற்றி பேசுவது கொண்ட வீடியோ விளக்கவுரை, ஃபியூச்சரெட்டேக்கள், ஒரு வீடியோ ஆவணத்தொகுப்பு மற்றும் அதிகாரப்பூர்வ திரைப்பட பிரிக்வல் காமிக்கின் முதல் வெளியீட்டின் டிஜிட்டல் காமிக் உள்ளிட்டவை கூடுதலாக இடம் பெற்றிருந்தன. இரண்டு பதிப்புகளுமே போர்ட்டபிள் மீடியா பிளேயர்களுக்கான அரங்க வெட்டுக்களின் டிஜிட்டல் காபியைஉள்ளடக்கியதாக இருந்தது. டார்கெட் ஸ்டோர்ஸ் மட்டுமே DVDயில் இயக்குநரின் வெட்டை வைத்திருப்பதற்கான சில்லறை விற்பனையாளராகும். அதன் முதல் வார சில்லறை விற்பனையில், "டெர்மினேட்டர் சால்வேசன்" ப்ளூ-ரே சார்ட்ஸில் முதல் இடத்தைப் பிடித்தது, மேலும் DVD சார்ட்ஸில் "நைட் அட் த மியூசியம்: பேட்டிள் ஆஃப் த ஸ்மித்சோனியனுக்கு" அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கூடுதலாக இது ஆலன் டீன் ஃபோஸ்டரால் நாவலாக்கப்பட்டது, டிமோத்தி சான் மூலமாக "" என்று தலைப்பிடப்பட்ட ஒரு முன்தொடர் நாவல் வெளியிடப்பட்டது. IDW பதிப்பகம் நான்கு-வெளியீட்டு முன்தொடர் காமிக் அத்துடன் ஒரு தழுவல் ஆகியவற்றை வெளியிட்டது. இது 2017 இல் கானர் ஒன்றிணைந்து எதிர்ப்பது, அத்துடன் ஸ்கைநெட்டைத் தோல்வி அடையச்செய்வதற்கு சாதாரண மக்கள் அவர்களின் சகிப்புத்தன்மை இல்லாத நிலையை ஆராய்வது ஆகிய பகுதிகள் இடம்பெற்றன. பிளேமேட்ஸ் டாய்ஸ், சைட்ஷோ கலெக்டிபிள்ஸ், ஹாட் டாய்ஸ், கேரக்டர் ஆப்சன்ஸ் மற்றும் DC அன்லிமிட்டட் உருவாக்கிய வணிகப்பொருட்கள் வெளியாயியன, அதேசமயம் கிறிஸ்லர், சோனி, பிஸ்ஸா ஹட் மற்றும் 7-எலெவன் ஆகியோருக்கிடையில் பொருள் வைப்பு கூட்டாளிகளாக இருந்தனர். மே 23, 2009 இல், சிக்ஸ் ஃபிளாக்ஸ் மேஜிக் மவுண்டைனில் திரைப்படத்தின் பெயரின் ஒரு திறந்து வைக்கப்பட்டது. திரைப்படம் வெளியான வாரத்திலேயே ஒரு மூன்றாம்-தரப்பு சூட்டர் அதே பெயரைக் கொண்ட வீடியோ கேம் வெளியிடப்பட்டது. கிறிஸ்டியன் பாலே அதற்கு குரல் கொடுக்க மறுத்துவிட்டார், அதனால் கிடியன் எமரி, ஜான் கானரின் பாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார். எனினும், அந்த விளையாட்டில் இடம்பெற்றிருந்த காமன் மற்றும் மூன் ப்ளட்கூட் ஆகிய குரல்களுக்கு முறையே பார்னெஸ் மற்ரும் பிளேர் வில்லியம்ஸ் குரல் கொடுத்தனர். திரைப்படத்தில் தோன்றாத போதும், ரோஸ் மெக்கொவான், ஒரு முன்னாள் உயர் நிலைப்பள்ளி ஆசிரியரான ஆங்கி சால்டர் பாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார். அந்த விளையாட்டு 2016 இல் அமைக்கப்பட்டிருந்தது, "Terminator 3: Rise of the Machines" இன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் "டெர்மினேட்டர் சால்வேசனுக்கு" முன்னர் நடைபெற்ற நிகழ்வுகள் அதில் இடம்பெற்றிருந்தது. ராணி முகர்ஜி ராணி முகர்ஜி () 21, மார்ச் 1978 இல் பிறந்தார், இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். "ராஜா கி ஆயேகி பாராத்" என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் "குச் குச் ஹோதா ஹே" என்கிற காதல் திரை படத்தில் தன்னுடைய முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அவரது மிகப்பெரிய வெற்றி படம் இதுவே மற்றும் இந்தப்படத்தில் சிறந்த துணைநடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எல்லா படங்களும் எதிர்பார்த்ததற்கு குறைவான வெற்றியையே கண்டது. பிறகு அவர் "சாத்தியா" என்கிற வணிகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்து அவரது நிலையை தக்கவைத்தார். இத்திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டில், அவருடைய இரு திரைப்படங்கள் "ஹம் தும்" மற்றும் "யுவா" , அவருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வழங்கியது அதுமட்டும் இல்லாமல் இத்திரைப்படங்களே இவருக்கு இரு மிக பெரிய விருதுகளை ஒரே வருடத்தில் வாங்கிய முதல் நடிகை என்ற புகழையும் கொடுத்தது. செவிடு, ஊமை மற்றும் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்த "பிளாக்" என்கிற படத்திற்கு அவருக்கு ஒருமனதான பாராட்டும் கிடைத்தது. அத்துடன் பல விருதுகளும் கிடைத்து அவர் பாலிவுட் படங்களில் ஒரு முன்னணி நடிகையாய் திகழ்ந்தார். முகர்ஜி பெங்காலி திரைக்குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை ராம் முகர்ஜி ஒரு பணியிலிருந்து விலகிய இயக்குனர் மற்றும் ஃபிலிம்மாலயை ஸ்டுடியோவின் ஒரு பங்குதாரரும் ஆவார், இவரின் தாயார் ஒரு பின்னணிப் பாடகி இவரின் சகோதரர் ஒரு படத் தயாரிப்பாளர், இப்போது இயக்குனராக மாறியுள்ளார். இவர் அத்தை, தேபாஷ்ரே ராய், தேசிய விருதுபெற்ற ஒரு பெங்காலி நடிகை மேலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி, காஜோல், ஒரு பிரபல பாலிவுட் நடிகை மற்றும் அவரின் மற்றொரு சகோதரர், அயன் முகர்ஜி "வேக் அப் சிட்" டின் எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார். முகர்ஜி ஒடிசி நாட்டியத்தைப் பயின்றவர், மேலும் நாட்டியத்தை பத்தாம் ஆண்டிலிருந்து பழகத்தொடங்கினார். ஜுகுவில் உள்ள "மனேக்ஜி கூப்பர் மேல்நிலைப் பள்ளியில்" முகர்ஜி பயின்றார், பிறகு மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் சேர்ந்தார். "ப்யார் பூல்" (1992) என்ற அவர் தந்தையின் பெங்காலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியபிறகு, முகர்ஜி அவரது நடிப்பை ஐந்து வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார், "ராஜா கி ஆயாகி பாரத்" (1997) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். வணிக ரீதியாக படம் வெற்றிப்பெறா விட்டாலும், கற்பழிப்புக்கு பலியான ஒருவராக அவரின் பாத்திரம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதனால் ஸ்டார் ஸ்கிரீன் விருதில் நடுவரின் சிறப்பு அடையாளத்தைப் பெற்றார். பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியுற்றதால் அவர் மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார். "குலாம்" மில் 1998 இல் முகர்ஜி திரும்பவும் வெற்றிபெற்றார், அமிர்கானுக்கு எதிராக; பாக்ஸ் ஆஃபீசில் படம் நன்றாக வந்தது. "ஆத்தி க்யா கன்டாலா" பாடல் முகர்ஜியை பிரபலமாக்கியது, மேலும் அவருக்கு "கன்டாலா பெண்" என்ற பட்டப்பெயரையும் வழங்கியது. அந்த வருடத்தில் தொடர்ந்து கரன் ஜோகர்ரின் முதலாவதாக இயக்கி வந்த, "குச் குச் ஹோத்தா ஹே" யில், ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிகண்டது, மேலும் தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை "சிறந்த துணை நடிகைக்காக" பெற்றார். மேலும் பல திட்டங்களில் நுழைந்து இவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக அவைகளில் பல பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை. இருப்பினும் "பதல்" 2000 இல் ஒரு நல்ல படமாக திகழ்ந்தது, இருப்பினும் அந்நேரத்தில் அவரால் அவரது பெயரை நிலைநாட்ட இயலவில்லை. 2001 இல், முகர்ஜி அப்பாஸ் முஸ்தானின் காதல் நாடகமான "சோரி சோரி சுப்கே சுப்கே" வில், சல்மான் கான மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்தார். ஓர் ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தது, மாற்று குழைந்தை பிறப்பு பற்றிய முதல் பாலிவுட் படமாகும். முகர்ஜியின் பாத்திரம் பிரியா மல்ஹோத்ரா, ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு தாயாக முடியாமல் வாடகைப் பெண்ணைக் கொண்டு குழந்தைபெறும் பெண்ணாக நடித்துள்ளார். Rediff.com கூறியதாவது, "அழுகை சோகத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் முடங்கியுள்ளார். அவரின் சிறப்புக்காக, "பார்திய நாரி" யில் அச்சடிக்கும் விதமான தியாகியாக தன்னையே எடுத்துச்சென்றார்." 2002 இல், குனால் கோஹிலியின் காதல் படமான "முஜ்சே தோஸ்தி கரோகே!" யில், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தியாவில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், வெளிநாடுகளி்ல் நல்ல வணிகத்தைப் பெற்றது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அவரை நுழையவிட்டது: யஷ் ராஜ் ஃப்லிம்ஸ். அடுத்த வருடத்தில், ஷாத் அலியின் பரபரப்பான "சாத்யாவில்" விவேக் ஓப்பராய்க்கு எதிராக முகர்ஜி நடித்தார். சுஹானி ஷர்மா என்ற பாத்திரத்தில், சிறு வயதிலேயே திருமணம் செய்து அதனால் துண்டிக்கப்பட்ட மற்றும் மனஉளைச்சல் கொள்ளும் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார், சிறந்த நடிப்பிற்கான ஃபிலிம்ஃபேர் க்ரிட்டிக்ஸ் விருதை பெற்றார், மேலும் பல பரிந்துரைப்புகள், அவருக்கு இது ஃபிலிம்ஃபேரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப்பைத் தந்தது. "பிபிசி" மானிஷ் காஜர் குறிப்பிட்டதாவது, "...ராணி முகர்ஜி...நடுத்தர குடும்ப பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக எடுத்து நிரூபித்துள்ளார்." ஆசிஸ் மிஷ்ராவின் படமான "சல்தே சல்தே" யில் ஷாருக்கானிற்கு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முகர்ஜி நடித்து 2003 இல் வெளிவந்த முதல் படம். "சாத்தியா" வைப் போன்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததாக இது காட்டியது, மேலும் அவர் அவரின் இரண்டாவது ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருதின் பரிந்துரைப்பைப் பெற்றார். அந்த ஆண்டில் மற்ற மூன்று படங்களுடன், முகர்ஜி "சோரி சோரி" யைத் தொடங்கினார், இதில் அவர் முதன்முதலில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அவரின் நகைச்சுவைத் திறன் பேசப்பட்டது. 2004 இல், மணிரத்திரனத்தின் "யுவா" வில் பெங்காலி மனைவியாக நடித்தது அவருக்கு அவரது இரண்டாவது சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுத் தந்தது. படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அவரது நடிப்பு ஒரு திறனாய்வில் இவ்வாறு எழுதப்பெற்றது, "கதாப்பாத்திரமானது ஒரு நடிகைக்கான சாராம்சம் மேலும் ராணி அதில் எதிர்பார்ப்பை விட மிகவும் நன்றாக நடித்துள்ளார்". காதல் மற்றும் நகைச்சுவைப் படமான "ஹம் தும்மில்" முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றார், அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. படமானது, 1989 ஆண்டின் "வென் ஹேர்ரி மெட் சால்லி" ..., குனால் கோலியால் தயாரிக்கப்பட்டது. முகர்ஜி ஏற்ற பாத்திரம் ரியா ஷர்மா, இன்றையத் தலைமுறைப் பெண், அவர் நிறைய விருதுகளைப் பெற்றார், இதில் அவரின் முதல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் உட்படும். "பிபிசி" அவரின் நடிப்பைப் பற்றி," ராணி விரைவில் அவர் தலைமுறையில் பல துறைகளில் திறமைவாய்ந்தவராக இருப்பார்." கடைசியாக வெளிவந்த இவரின் படம் யஷ் சோப்ராவின் லவ் சகா "வீர் ஜாரா", ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தாவுடன் நடித்தார். இப்படம், இந்தப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகளவில் பேசப்பட்டது, இந்திய அதிகாரியின் காதல் கதையைச் சொல்கிறது, வீர் பிரதாப் சிங்காக ஷாருக் நடித்தார், பிரீத்தி ஜிந்தா பாக்கித்தான் பெண்மணி ஜாராவாக நடித்தார். ராணி சாமியா சித்திக்யூ என்ற துணைப்பாத்திரத்தில் நடித்தார், இவர் ஒரு பாக்கித்தான் வக்கில், வீர் பிரதாப் சிங்கின் வழக்கை எடுத்து அவரைப் பற்றி அறிய முயற்சிக்கும் ஒருவர். 2005 இல், முகர்ஜி நான்கு பெரிய படங்களில் தோன்றினார்: சன்சய் லீலா பன்சாலியின் "பிளாக்" , ஷாத் அலியின் "பன்டி ஆர் பப்லி" , அமோல் பலேக்கரின் "பெஹ்லே" மற்றும் கேதன் மெக்தாவின் "" . "ப்ளாக்" கில் அவரது நடிப்பு முக்கியமாக பேசப்பட்டது. பன்சாலி முகர்ஜியிடம் இந்த கதையைக் கொண்டுவந்த போது, அவர் மறுத்துவிட்டார்.மேலும் அவர் குருடு செவிடாக நடிக்குமளவுக்கு போதுமான நம்பிக்கை எனக்கு இல்லை எனக் கூறினார். இயக்குனர் அவர்மீது நம்பிக்கை வைத்தவுடன், அவர் இதில் நடிக்க சம்மதித்தார் மற்றும் மும்பய் "ஹெலென் கெல்லர் கல்வி நிறுவனத்தில்" சைகை மொழியை இதற்காக கற்றார். ராணி முகர்ஜி இதற்காக நல்ல மதிப்புரையைப் பெற்றார் மற்றும் அவரது நல்ல நடிப்பிற்கு பலவற்றில் "சிறந்த நடிகை" க்கான விருதுகளைப் பெற்றார். "இந்தியா எப்எம்" குறிப்பிட்டதாவது, "ராணி இதுவரை நல்ல திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மறுக்க இயலாது. எந்த உரையாடலுமே இல்லாமல், இவரது நடிப்பின் மூலம் எல்லா உணர்ச்சிகளைம் வெளிக்காட்டினார் மேலும் பெரும் பரபரப்பை அவர் உண்டாக்கினார். நல்ல நடிகராக வேண்டும் என்பவர்களுக்கு இதுவே ஒரு நல்ல வழிகாட்டி". அவரின் அடுத்த வெளியீடு, "பன்டி ஆர் பப்லி" , மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. படமானது, பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிகரமாக ஓடினாலும், எல்லா வகையான திறனாய்வையும் பெற்றது, மேலும் ராணி முகர்ஜியின் நடிப்பு, ஒரு கட்டுரையில், "எப்பொழுதும் ராணி நன்றாகவே செய்துள்ளார், ஆனால் அவர் அழுகு அளவிற்கு போகவில்லை. இருப்பினும், ஐபா விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளில் "சிறந்த நடிகை" க்கான பரிந்துரைப்புகளைப் பெற்றார்.. மீரா நாயரின் ஹோலிவுட் படத்தில் முக்கிய பாத்திரம் முகர்ஜிக்கு வந்தது, "தி நமேசகே" (2007) "கபி அல்விதா நா கெஹ்னா" வின் தேதியுடன் ஒத்துப்போகாததால், இதில் அவர் நடிக்க இயலவில்லை. கரன் ஜோகரின் படமான கபி அல்விதா நா கெஹ்னா 2006 இல் வெளிவந்த இவரின் முதல் படம் "கபி அல்விதா நா கெஹெனா" வாகும், அதில் அமிதாப் பட்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரோன் கேர் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் பலதரப்பட்ட விமர்சனத்தைப் பெற்றாலும் வெளிநாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. நியூயார்க்கில் சந்தோஷமில்லாமல் வாழும் இரு கணவன் மனைவியைப் பற்றிய கதை, இது வெளிப்புற ஈர்ப்பை விளைவிக்கிறது. முகர்ஜி தன்னம்பிக்கையற்ற மற்றும் அவரக்கும் அவரது அபிஷேக் பச்சன் ஏற்று நடித்த கணவருக்குமான உறவில் கேள்விக்குறியோடு இருக்கும் மாயா தல்வாராக நடித்துள்ளார்; அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. "சிஎன்என்-ஐபிஎ" னிலிருந்து ராஜிவ் மசந்த் கூறியது, "ராணி மில்லியன் பக்ஸாக தெரிகிறார் மேலும் அதிக நாள் நினைவிலிருக்கும் வண்ணம் அவர் அந்த பாத்திரமாகவே மாறியுள்ளார்." அவர் "சிறந்த நடிகைக்கான" பல பரிந்துரைப்புகளைப் பெற்றார், மூன்றாவது வருடமாக அவர் சிறந்த நடிகைக்கான IIFA விருதைப் பெற்றார். முகர்ஜியின் அடுத்த வெளியீடு B.R. சோப்ராவின் "பாபுல்" . இந்தியாவில் படமானது பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை என்றாலும், வெளிநாட்டில் வெற்றிபெற்றது.. அவரின் விதவைக் கதாபாத்திரம் பலவிதமான விமர்சனத்தைத் தந்தது. முகர்ஜிக்கு 2007 இல் முதல் வெளியீடு, "தா ரா ரம் பம்" , இதில் அவர் வலியுள்ள இல்லத்திலிருக்கும் மனைவியாக மற்றும் முதன் முதலில் தாயாகவும் நடித்துள்ளார், இது பாதி வெற்றியடைந்தது. அவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது, ஒரு குறிப்பிட்ட விமர்சனத்துடன், "ராணி தொழில் ரீதியாக ஒரு தாய்/மனைவியாக நடித்துள்ளார்." அந்த வருடத்தில் கடைசி இரண்டு வெளியீடானது, ப்ரதீப் சேகரின் "லாக சுனாரி மே டாக்" அதில் அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்ணாக நடித்தார் மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் "சாவர்யா" வில் திரும்பவும் விபச்சாரியாக நடித்துள்ளார், இந்தியாவில் இது வணகரீதியாகவும் தோல்வியடைந்தது. குனால் கோஹிலின் "தோடா ப்யார் தோடா மேஜி" க்கில் முகர்ஜி நடித்தார், 27 ஜூன் 2008 இல் வெளிவந்தது, க்ரிடிக்ஸிடமிருந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது; இருப்பினும், பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை. அவரின் சமீபத்திய படமான, "தில் போலே ஹடிப்பா" டோரோன்டோ சர்வதேச பட நிகழ்ச்சியில் இடம்பெற்றது, யஷ் ராஜ் ஃப்லிம்ஸின் பேனரில் 18 செப்டம்பர் 2009 உருவாக்கப்பட்டது மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு ஓடியது. என்ன வந்தாலும், முதல் தரத்தில் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற கனவைக் கொண்ட பஞ்சாபி கிராமத்து பெண்ணாக வந்தார். மக்களிடையே இவர் நடிப்பு பொதுவாக நல்லவறேப்பைப் பெற்றது. படத்தில் ஷாகித் கபூர் மற்றும் அனுபம் கேர் நடித்திருந்தன. பல வருடங்களுக்கு முன்னால் ராணி அவரின் குடும்பப் பெயரை முகர்ஜீயிலிருந்து முகர்ஜியாக ஒலிமாற்றம் செய்தார். அந்நேரத்தில், இவர் நியூமராலஜிப்படியே பெயரை மாற்றிவைத்ததாக கூறப்பட்டது. 2006 இல், நியூமராலஜி ஒரு காரணமில்லை என்று அறிக்கைவிட்டார்; அவர் பாய்போர்ட்டில் பெயர் முகர்ஜி என எழுதப்பட்டதாகவும், மேலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் எனக் கூறினார். மும்பையில் முகர்ஜிக்கு மூன்று வீடுகள் இருந்தன, குழந்தப்பருவ வீடு உட்பட. அவருக்காகவும் அவர் பெற்றோருக்காகவும் ஜுகுவில் 2005 மத்தியில் பங்களா வாங்கினார். ட்விங்கில் கன்னா மற்றும் சுசன்னே ரோஷனால் வீட்டின் உட்புற வடிவமைப்பு இரண்டு வருடங்கள் தொடர்ந்தது. 2005 ஜூனில், முகர்ஜி பிரித்தானிய செய்தித்தாள் "தேசி எக்ஸ்ப்ரெஸ்" உடனான பேட்டியால் பரவலாக பேசப்பட்டார். முகர்ஜி அவரது முன்மாதிரியை பெயரிடச்சொன்னார்கள் அவர் அதற்கு, "அடோல்ஃப் ஹிட்லர்" என பதிலளித்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு "டைம்ஸ் நௌவ்" பேட்டியில், ஹிட்லர் பெயரை சொன்னதை மறுத்தார். 2006 நவம்பரில், முகர்ஜி "லாகா சுனாரி மே டாக்" படத்திற்காக வாரனாசியில் நடித்த போது அவித் ரசிகர்கள் செட்டில் நுழைந்தார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை விரட்டினர். மீடியாவில் முகர்ஜி பாதுகாவலர்களைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறினர். முகர்ஜி பின் அதற்காக மன்னிப்புக் கேட்டார். 2004 மார்ச்சில், முகர்ஜி ராஜஸ்தான் மணல் குவியலில் ஜாவான்களின் மதிப்பை அதிகரிக்கச் சென்றார். இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தொலைதூர இடங்களை ஊக்குவிக்க NDTV உடனிணைந்த இந்திய நட்சத்திரங்களின் வருகை நிகழ்ச்சி. 2005 பிப்ரவரியில், பிற பாலிவுட் நடிகர்களுடன் டீசுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவற்காக HELP! "Telethon Concert" இல் பங்கேற்றார். அவர் முற்றிலும் "டெம்ப்டேஷன்ஸ் 2005" நியூடெல்கி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னனி முடியாதவர்களுக்கான உரிமைக் குழுவான, நேஷனல் சென்டர் ஃபார் ப்ரொமோஷனல் ஆஃப் எம்ப்ளாய்மென்ட் ஃபார் ட்ஸ்ஸேபில்டு ப்யூப்பில் க்காக நிதித்திரட்ட நடிகை உதவினார் (NCPEDP). முகர்ஜி அவரின் பரிசுத் தொகையை, அதாவது ப்ரீத்தி ஜிந்தாவுடன் "கோன் பனேகா க்ரோர்பதி" யில் பெனெகா க்ரோர் பதி 2007 இல் அவரின் பகுதியான 50 லட்சத்தை ஹோலி ஃபேமிலி ஹாஸ்பிட்டலுக்கு வழங்கினார். அவர் இந்த நிலையம் இருதய நோய் உடைய குழந்தைகளுக்கானது என்று கூறினார். முகர்ஜி ஒரு மேடை நடிகர் மேலும் அவர் இரண்டு உலகப் பயணத்தில் கலந்துகொண்டார். அமிர் கான், ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா மற்றும் டுவிங்கில் கன்னாவுடன் 1999 இல் அவர் முதல் உலகப்பயணம் மேற்கொண்டார். இது "மேக்னிஃபீஷியன்ட் ஃபைவ் " என அழைக்கப்பட்டது. ஐந்து வருடங்கள் கழித்து, "டெம்ப்டேஷன்ஸ் 2004" வந்தது. அந்த நேரத்தில் பாலிவுட்டில் இதுவே வெற்றியாக இருந்தது. ராணி முகர்ஜி ஷாருக்கான், சாயிஃப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து உலகம் முழுவதும் பத்தொன்பது மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2005 இல், இந்திய பிரதமரே திரு மன்மோகன் சிங்குடன் க்ரேட் ஜெனெரல் பெர்வெஸ் முஷாரஃபில் டின்னருக்கு அழைக்கப்பட்ட பெருமையைப் பெற்றார். அந்த விருந்தினர் பட்டியலில் இருந்த ஒரே பாலிவுட் நடிகர் இவரே ஆவார். மெபோர்னேவில் இந்தியரின் கலாச்சாரத்தைக் காட்டும் ஒரு வகையில் 2010 காமென்வெல்த் விளையாட்டுகளின் சார்பாக, 2006 காமென்வெல்த் விளையாட்டுகளின் முடிவு விளையாட்டிற்கு இவர் பல பாலிவுட் நடிகர்களுடன் கலந்துகொண்டார். ஃபிலிம்ஃபேரின் 'முதல் பத்து நடிகைகள்' பட்டியலில் இரண்டுவருடங்களும் (2004-2005) முன்னணி வகித்தார் ராணிமுகர்ஜி. Rediff இன் 'சிறந்த பாலிவுட் பெண் நடிகைகள்' தொடர்ந்து மூன்று வருடங்கள் (2004-2006) இவர் முதல் இடத்தைப் பிடித்தார் , 2007 இல், இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். 2006 பிப்ரவரியில், "ஃபிலிம்ஃபேர் புதிணத்தில்" "பாலிவுட்டில் மிக சக்திவாய்ந்த பத்து பெயர்கள்" இல் எட்டாவது இடத்தை பிடித்தார், முந்தைய வருட வெற்றியின் காரணமாக, இவர் பத்தாவது இடத்தைப் பெற்றார், பட்டியலில் இருந்த ஒரே பெண்ணாவார். 2007 இல், இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். பெண்கள் சர்வதேச நாள் 2007 இல், "எல்லா காலத்திலும் எப்போதும் சிறந்த பாலிவுட் நடிகைகள்" பட்டியலில் ராணி நான்காவது இடத்தைப் பிடித்தார். யூகே புதினமான "ஆஸ்ட்டர்ன் ஐ" "ஆசியாவின் செக்ஸி பெண்" (செப்/2006) பட்டியலில் #36 ஐ இவருக்கு வழங்கியது. Rediff.com இல் முகர்ஜியின் சிறப்புகள் பலவாறு போற்றப்பட்டது, அவற்றில், "பாலிவுட்டின் மிக அழகான நடிகை" , "பாலிவுட்டில் நன்றாக உடையணியும் பெண்" மற்றும் "பல முகம் கொண்ட பெண்" . கரன் ஜோகரின் ஷோவான "காஃபி வித் கரன்" இல் மூன்றுமுறை முகர்ஜி தோன்றினார். அவர் கரீனா கபூர், ஷாருக்கான், கஜோல், மற்றும் மாதுரி தீக்சித் அகியோருடன் சர்ப்ரெஸ் கெஸ்ட்டாக தோன்றினார். டான்ய் ரியாலிட்டி ஷோவான 2009 இல் "டான்ஸ் ப்ரீமியர் லீக்" கின் மூலம் அவர் முதன் முறையாக சின்னத்திரையில் நுழைந்தார். ரஸ்கின் பாண்ட் ரஸ்கின் பாண்ட் ("Ruskin Bond", பி. மே 19, 1934) பிரித்தானிய வம்சாவளியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளராவார். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் ஆகியோரிடையே ஒரு தனிப்பெரும் முன்னோடியாகக் கருதப்படுகின்றார். 1992இல் ”அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன் டெஹ்ரா” ("Our trees still grow in Tehra") என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்திய சாகித்திய காதமியின் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1999 இல் குழந்தைகள் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ரஸ்கின் பாண்ட் இமாச்சல பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வேந்திய வான்படையில் பணியாற்றினார். அவருக்கு எல்லன் மற்றும் வில்லியம் பாண்ட் என்ற சகோதரியும் சகோதரரும் உண்டு. ரஸ்கினுக்கு 8 வயதான போது, அவருடைய பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. அவரது தாய் ஒரு இந்தியரை மீண்டும் மண்ம் புரிந்தார். அவருடைய தந்தைக்கு அடிக்கடி மலேரியாவும் ஜாண்டிசும் ஏற்பட்டு இறந்தார். இதன் பின்னர் ரஸ்கின் தன்னுடை பத்து வயதில் டெஹ்ராவில் உள்ள தன் பாட்டியிடம் சென்றுவிட்டார். தனது குழந்தைப் பருவத்தை இளைஞர் பருவத்தையும் சிம்லா, ஜாம்நகர், மசூரி, டெராடூன், மற்றும் லண்டன் ஆகிய ஊர்களில் கழித்தார். 1960கள் முதல் லாண்டோரில் வாழ்ந்தார். அவருடைய பல படைப்புகள் இமயமலை அடிவாரத்தில் உள்ள மலை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டவை. பாண்ட் அத்தகைய சூழலில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். அவரது முதல் புதினமான "த ரூம் ஆன் த ரூஃப்". அவருக்கு 17 வயதான போது எழுதப்பட்டு 21 வயதாகும் போது பிரசுரிக்கப்பட்டது. அது டெஹ்ராவில் கூரை மீது உள்ள அறை ஒன்றில் அவருடைய நண்பர்களுடன் வாடகைக்குத் தங்கி இருந்த அனுபவங்கள் சிலவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினர். "ரூம் ஆன் த ரூஃப்" அவருக்கு 1957 ஆம் ஆண்டுக்கான ஜான் லெவ்லின் ரைஸ் நினைவுப் பரிசைப் பெற்றுத் தந்தது. அது முதல் அவர் முன்னூற்றுக்கும் அதிகமான சிறு கதைகள், கட்டுகரைகள், புதினங்களும், குழந்தைகளுக்கான 30 நூல்களும் எழுதியுள்ளார். தனது சுயசரிதையினை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார் - ”சீன்ஸ் பிரம் எ ரைட்டர்ஸ் லைஃப்” என்ற பாகத்தில் ஆங்கிலேய-இந்தியாவில் அவர் வளர்ந்த பருவ வருடங்கள் பற்றி விவரிக்கிறார்; ”த லாம்ப் இஸ் லிட்” என்ற பாகத்தில் இதழ்களில் வெளியான அவருடைய கட்டுரைகள் மற்றும் தொடர்களைத் தொகுத்துள்ளார். தற்போது தனது தத்துக்குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் வாழ்ந்து வருகிறார். மேட் டாமன் மேத்யூ பைகே "மேட் " டாமன் (1970 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தவர்) என்பவர் ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் அறக்கொடையாளர் ஆவார். அவரது தொழில் பணி திரைப்படமான "குட் வில் ஹண்டிங்" கின் வெற்றியைத் தொடர்ந்து துவங்கியது, அப்படம் அவர் நண்பர் பென் அஃப்லெக்குடன் எழுதிய திரைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். ஜோடி சிறந்த சொந்த திரைக்கதைக்கான அகாடமி விருதினைப் பெற்றனர், மேலும் சிறந்த திரைக்கதைக்கான கோல்டென் குளோப் விருதையும் பெற்றனர். அப்பணிக்காக டாமன் அவரது முதன்மைப் பாத்திரத்தில் நடிப்பிற்குமான அகாடமி விருது உட்பட சிறந்த நடிகருக்கான பல்வேறு பரிந்துரைகளைப் பெற்றார். டாமன் புகழ்பெற்ற நடிகராக திரைப்படங்களான "சேவிங் பிரைவேட் ரயான்" , "தி டெலண்டட் மிஸ்டர்.ரிப்ளி" , ஓஷேன்ஸ் தொடர், "பார்ன்" தொடர், "சிரியானா" , "தி குட் ஷெப்பர்ட்" , "தி டிபார்ட்டெட்" , "தி இன்ஃபார்மெண்ட்!" மற்றும் "இன்விக்டுஸ்" போன்றவற்றில் நடிக்கச் சென்றார். அவர் பல்வேறு விருது நியமனங்களை அவரது திரைப்பட நடிப்பிற்காகப் பெற்றார் மேலும் ஒரு ஹாலிவுட் வாக் ஆஃப் ஃப்பேம்மில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவராக இருந்தார். டாமன் எல்லாக் காலத்திலும் அதிகம் சம்பளம் பெறும் முதல் முப்பதைந்து நடிகர்களில் ஒருவராவார். 2007 ஆம் ஆண்டில், "பீப்பிள்" இதழால் அவர் வாழும் கவர்ச்சிகரமான மனிதர் எனும் பெயர் பெற்றார். டாமன் அறக்கொடை பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவர், அதில் ONE பிராச்சாரம், H2O ஆஃபிரிக்கா ஃப்வுண்டேஷன் மற்றும் Water.org ஆகியவை உள்ளடங்கும். அவரது மனைவியான, லுசியானா போஸான் பர்ரோசோ மூலம் டாமனுக்கு இஸபெல்லா மற்றும் ஜியா என இரண்டு பெண் குழந்தையகளும்; பர்ரோசோவின் முந்தைய திருமணத்தின் மூலம் அலெக்ஸியா என்ற மகளும் உள்ளனர். மேட் டாமன் மாசாசுசெட்ஸ்சின் கேம்பிரிட்ஜ்ஜில், கெண்ட் டெல்ஃபர் டாமன் எனும் ஒரு பங்குத் தரகருக்கும், நான்சி கார்ல்ச - பைகே, ஓர் ஆரம்பக்கால சிறுவயது கல்வி பேராசிரியராக லெஸ்லே பல்கலைகழகத்தில் பணிபுரிந்தவருக்கும் மகனாவார். டாமன், பின்னிஷ், இங்க்லீஷ் மற்றும் ஸ்காட்டிஷ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். டாமனுக்கு கய்லீ எனும் ஒரு சகோதரர் உள்ளார். அவர் திறமை வாய்ந்த சிற்பக் கலைஞர் மற்றும் ஓவியராவார். அவர் மற்றும் அவரது குடும்பம் ந்யூடனில் அவரது வாழ்வின் முதல் இரு வருடங்களுக்கு வாழ்ந்தது, ஆனால் அவரது பெற்றோர் விவாகரத்து செய்தப் பிறகு, டாமன் மற்றும் அவரது சகோதரர் அவரது தாயாருடன் காம்பிரிட்ஜ்ஜிற்கு இடம் பெயர்ந்தனர். பென் அப்லெக், டாமனின் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பராகவும் பல திரைப்படங்களுக்கு கூட்டிணைவாளராகவும் இருந்தவர்க்கும், சுயசரிதைப் படமான "யூ காண்ட் பி நியூட்ட்ரல் ஆன் அ மூவிங் டிரெய்ன்" மற்றும் டாமன் வர்ணிப்பாளராக இருந்த "அ பியூப்பிள்ஸ் ஹிஸ்டரி ஆஃப் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்" ஆகியவற்றின் படைப்பாளியான எழுத்தாளரும் மற்றும் படைப்பாளியுமான ஹோவார்ட் சின்னிற்கும் பால்ய கால நண்பராவார். அவர் கேம்பிரிட்ஜ்ஜில், கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜே மற்றும் லாட்டின் பள்ளியில் படித்த போது பல நாடக தயாரிப்புகளில் 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெறும் முன் நிகழ்த்தினார். அவர் ஹார்வர்ட் பல்கலையில் 1988 முதல் 1992 வரை படித்தார், ஆனால் பட்டம் பெறவில்லை. அவர் அதற்குப் பதிலாக நடிப்புத் தயாரிப்புகளை நாடினர், அவற்றில் TNT யின் மூலப்படமான "ரைசிங் சன்" னிலும், "ஸ்கூல் டைய்ஸ்" எனும் தனியார் பள்ளி கூட்டு முயற்சி நாடகமும் உள்ளடங்கியது. ஹார்வர்ட்டில் இருந்தப்போது, அவர் ஆங்கிலம் பயின்றார் மற்றும் லோவெல் ஹவுசில் வாழ்ந்தார். அவர் பொதுவாக மாணவர் நாடகங்களில் பங்கேற்கவில்லை, ஆனால் "ஏ..." "மை நேம் இஸ் அலிஸ்" சில் தோன்றினார் (மகளீரால் வழமையாக நிகழ்த்தப்படும் மூன்று ஆண் வேடங்களில் ஒன்றில்). டாமன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி லாஸ் ஏஞ்செல்ஸ்சில் அவரது நடிப்பு தொழில் வாழ்வை தொடர்ந்து ஈடுபட்டது "Geronimo: An American Legend" ஒரு பெரும் வெற்றியாக எதிர்பார்க்கப்பட்டது. அவரது முதல் திரைப்படப் பாத்திரம் 1988 ஆம் ஆண்டில் அவர் பதினெட்டு வயதுடையவராக இருந்த போது, காதல் நகைச்சுவை படமான "மிஸ்டிக் பிஸ்ஸா" வில் ஒற்றை வரி வசனத்துடன் வெளிவந்தது. டாமன் பெரிய பங்குடைய "Geronimo: An American Legend" இல் ஜெனெ ஹாக்மான் மற்றும் ஜேசன் பாட்ரிக் ஆகியோருடன் நடிக்கும் முன் சிறிய பாத்திரங்களில் தேன்றினார். அவர் அடுத்ததாக ஓபியம்-போதைக்கு அடிமையான சிப்பாயாக 1996 ஆம் ஆண்டின் "கரேஜ் அண்டர் ஃப்யர்" ரில் தோன்றினார். அவர் 100 நாட்களில் இழக்க வேண்டப்பட்டார் (இரண்டு நாள் படப்பிடிப்பிற்கு மட்டும்). ஒரு சுய-பரிந்துரை உணவுப் பழக்கம் மற்றும் உடல் வலு உடல் பயிற்சிக்குரிய விதிமுறைகளை எடைக்குறைக்க பின்பற்றியப் பிறகு, டாமன் படப்பிடிப்பு முடிந்தப் பிறகு அவரது இதயம் சுருங்காமல் இருந்தது அதிர்ஷ்டவசமானது எனக் கூறப்பட்டார். டாமன் பல வருடங்களுக்குப் பிறகு அவரது குண்டிக்காய் அடுத்த சுரப்பியின் மீது இடப்பட்ட தொல்லையை சரிப்படுத்த சிகிச்சை செய்துக் கொண்டார், மேலும் அது அவரது கதாபாத்திரத்தை முறையாகப் தோன்றச் செய்யவும் தொழில் துறையினருக்கு அவர் எப்படி தனது பாத்திரத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவும் செய்யப் பயனுள்ளது எனக் கூறினார். 1995 ஆம் ஆண்டில், அவர் "கட்த்ரோட் ஐலாந்தில்" சிறியப் பாத்திரத்திற்கு ஒத்திகைப் பார்த்தார், ஆனால் வாய்ப்பை மறுத்தார். டாமனும் அப்லெக்கும் ஒரு இளம் கணித மேதையைப் பற்றிய ஒரு திரைக்கதையை எழுதினர், அதை அவர்கள் ஹாலிவுட் முழுதும் தீவிரமாக எடுத்துச் சென்றனர். எழுத்தாளர்/இயக்குநர்/நடிகர் ராப் ரெய்னர், திரைக்கதாசிரியர் வில்லியம் கோல்ட்மேன் மற்றும் அவர்களது நண்பர் எழுத்தாளர்/இயக்குநர்/ கெவின் ஸ்மித் ஆகியோரது அறிவுரையைப் பெற்று இருவரும் திரைக்கதையில் மாற்றங்களைச் செய்தனர். திரைக்கதை இறுதியாக "குட் வில் ஹண்டிங்" காக மாறியது, மேலும் ஒன்பது அகாடமி விருதுகளுக்கான நியமனங்களை பெற்றது, டாமன் மற்றும் அப்லெக் ஆகியோருக்கு சிறந்த மூல திரைக்கதை ஆஸ்கார்களை சம்பாதித்துக் கொடுத்தது. டாமன் அதே படத்திற்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார் மேலும் திரைப்படம் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்காரை சக-நடிகரான ராபின் வில்லியம்ஸ்சிற்கு வலையிட்டுப் பிடித்தது. டாமன் மற்றும் அப்லெக் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் சம்பளமாக $500,000 கொடுக்கப்பட்டது; திரைப்படம் $100 மில்லியனுக்கு மேல் வருவாயில் ஈட்டியது. டாமன் மற்றும் அப்லெக் ஆகியோர் தங்களது பாத்திரங்களை கெவின் ஸ்மித்தின் "ஜே அண்ட் சைலெண்ட் பாப் ஸ்டிரைக் பேக்" படத்தில் கேலி செய்தனர். டாமனை "குட் வில் ஹண்டிங்" படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தப் பிறகு இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் டாமனை 1998 ஆம் வருட இரண்டாம் உலகப் போர் திரைப்படமான "சேவிங் பிரைவேட் ரயான்" னில் முதன்மைப் பாத்திரமாக நடிக்கச் செய்தார். டாமன் பல்வேறு விரிந்த திரைப்பட பாத்திரங்களை தேர்வுச் செய்வதற்கு, அவரது கொலைக்கார தோற்றமான டாம் ரிப்லேயாக "தி டேலண்டட் மிஸ்டர் ரிப்லே" யிலிருந்து , அப்படத்திற்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் நியமனம் கிடைத்தலிருந்து, ஒரு வீழ்ந்த தேவதையாக பாப் பண்பாடு பற்றி ஒரு அறிவுஜீவியின் பேசும் பொருளாக இருந்ததான "டாக்மா" வரையிலும், அதில் அவர் அப்லெக்குடன் (1999)இணைந்து நடித்தார், பிணைந்த இரட்டையராக "ஸ்டக் ஆன் யூ" விலிருந்து, அவர் நண்பர் கேசே அப்லெக் மற்றும் கஸ் வான் ஸண்ட்துடன் இணைந்து எழுதிய குறைந்த வசனம் கொண்ட- குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பரிசோதனைப் படம் "கெர்ரி" வரை அறியப்பட்டவராவார். டாமன் இரு பெரும் படங்களின் திரைப்பட முகவாண்மையின் பகுதியாக இருந்துள்ளார். அவர் ஞாபக மறதி நோயுள்ள கொலைகாரன் ஜேசன் பர்ன்னாக வெற்றிகரமான அதிரடி திரைப்படங்களான "தி பர்ன் ஐடெண்டிடி" (2002), "தி பார்ன் சுப்ரிமேஸி" (2004) மற்றும் "தி பார்ன் அல்டிமேட்டம்" (2007), ஆகியவற்றில் நடித்தார். மேலும், எதிலும் நலமே காண்கிற இளம் திருடன் லினூஸ் கால்ட்வெல் ஆக, ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருக்கு எதிராக ஸ்டீவன் ஸோடெர்பர்க்கின் 2001 ஆம் ஆண்டு மறுத்தயாரிப்பான 1960 ஆம் ஆண்டின்ராட் பேக்கின் கும்மாள காவியத் திரைப்படமான "ஓஷன்ஸ் லெவன்" னில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். வெற்றிகரமான குற்ற நாடக நகைச்சுவை படங்கள் இரு பின் தொடர்ந்த நிகழ்வுகளாக விரிந்தன; "ஓஷன்ஸ் டுவெல்வ்" (2004) மற்றும் "ஓஷன்ஸ் தெர்ட்டீன்" (2007). ஆகும் அவை. இதரப் பாத்திரங்களுக்கிடையில், டாமன், வில்ஹெம் கிரிம்மின் கற்பனை வகையான டெர்ரி கில்லியம்மின் வடிவமான சாகசத் திரைப்படம் "தி பிரத்ர்ஸ் கிரிம்" மில் நடித்தார். மேலும், ஒரு ஆற்றல் நிபுணராக"சிரியானா" வில் நடித்தார். அவர் ராபர்ட் டி நீரோவுடன் "தி குட் ஷெப்பர்ட்" படத்தில் பணியிலிருக்கும் CIA அதிகாரியாக இணைந்து நடித்தார், மேலும் மார்டின் ஸ்கோர்செசெயின் "தி டெபார்டெட்" படத்தில் மாசாசுஸெட்ஸ்சின் மாகாண காவல் துறையின் இரகசியமாக இயங்கும் கொள்ளைக் கூட்டத்தினனாக நடித்தார், அது ஹாங்காங் காவல் துறையின் "இண்டெர்னல் அஃப்பேர்ஸ்" சின் மறுத் தயாரிப்பாகும். நடித்தார். அவர் பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் "யூத் விதவுட் யூத்" தில் பாராட்டப்படாத பாத்திரத்தில் குறைந்த நேரமே தோன்றக்கூடியதில் (2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது) இருந்தார், 2008 ஆம் ஆண்டு சே குவாராவின் வாழ்க்கை வரலாற்று படமான "சே" விலும், மேலும் கென்னத் லோனெகிரான்னின் 2009 ஆம் ஆண்டு படமான "மார்க்கெரட்" டில் துணைப் பாத்திரம் ஒன்றிலும் நடித்தார். டாமன் அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு வெளியிடப்பட்ட திரைப்படமான "போன்யோ ஆன் தி கிளிஃப் பை தி சீ" யின் ஆங்கில வகைக்கு ஒரு குரல் அளித்தார். அவர் அடுத்ததாக ஸ்டீவன் ஸோடெர்பெர்க்கின் அரசியல் கருப்புக் நகைச்சுவைப் படமான "தி இன்ஃப்பார்மண்ட்" டில் தோன்றினார்! அதில் அவருக்கு எதிராக மெலெனை லிண்ஸ்கி, நடித்தார், அது மத்திய இல்லினாய்ஸ்சில் 2008 ஆம் ஆண்டில் மே 3 ஆம் தேதி படப்பிடிப்பினைத் துவங்கியது. அவர் ஒரு கௌவரவத் தோற்றமாக "எண்டூரேஜ்" ஜின் ஆறாவது பருவ இறுதியில் அவராகவே தோன்றச் செய்யவும் செய்தார், அதில் அவர் வின்செண்ட் சேஸை அவரது அறக்கொடை OneXOne ற்கு நன்கொடைத் தருவதற்கு அழுத்தம் தர முயற்சிப்பவராக (ஒரு நிஜ வாழ்க்கை நிறுவனம் டாமன் அதற்கு தூதராக இருக்கிறார்), மேலும் அதிகமாக அவர் ஒத்துவராததாக காணப்படும் போது எரிச்சலடைபவராக தோன்றினார். டாமன் தென் ஆப்பிரிக்க தேசிய ரக்பி யூனியன் அணித் தலைவர் பிராங்கோயிஸ் பிய்னாராக கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய நெல்சன் மண்டேலா படமான "இன்விக்டுஸ்" நடித்தார். அது ஜான் கார்லினின் 2008 ஆம் ஆண்டுப் "பிளேயின்ங் தி எனிமி: நெல்சன் மாண்டேலா அண்ட் தி கேம் தட் சேஞ்ச்ட் அ நேஷன்" என்ற புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.மேலும் மார்கன் ஃபிரீமேனை மண்டேலாவாக தோற்றத்தில் கொண்டது. டாமனின் திரைப்பட திட்டங்கள் பலத் திரைப்படங்களை உள்ளடக்கியது. அவை 2010 ஆம் ஆண்டில் துவங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, அதில் அவரது திரு.ஆரோன் எனும் பாத்திரம் நாடக வகைத் திரைப்படமான "மார்க்கரெட்" டும் அடங்கும். அவர் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் "கிரீன் ஸோன்"னை திரைப்படமாக்கத் துவங்கினார். டாமன் மற்றும் இயக்குநர் பால் கிரீன்கிராஸ் ஆகியோர் மீண்டும் திரும்பி நான்காவது ஜேசன் பார்ன் திரைப்படமான" தி பார்ன் லிகேஸி" என திட்டமிட்டதை எடுக்கவும் கூடும். ஸ்டீவன் சோடன்பர்க் டாமன் நீண்டக் கால லிபரேஸின் காதல் ஆர்வம் கொண்ட, ஸ்காட் தோர்சென்னாக மைக்கேல் டக்ளஸ்சிற்கு எதிராக பியானோ வாத்தியக் கலைஞரின் வாழ்வை மையமாகக் கொண்ட எதிர்வரும் படமொன்றில் நடிக்கவுள்ளார் என்று உறுதிபடுத்தியுள்ளார். அப்லெக் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரிஸ் மூர் மற்றும் சீன் பெய்லி ஆகியோருடன் இணந்து டாமன் தயாரிப்பு நிறுவனமான லைவ்பிளானெட்டை நிறுவினார், அதன் மூலம் நால்வரும் விவரணப் பட வரிசையான "பிராஜெக்ட் கிரீன்லைட்" டை புதிய இயக்குநர்களிடமிருந்து பயனுள்ள திரைப்படத் திட்டங்களை கண்டுபிடிக்கவும் நிதியளிக்கவும் உருவாக்கினர். நிறுவனம் தோல்வியடைந்த கலப்பு-மர்ம தொடரான "புஷ்", "நெவெடா" ஆகியவற்றை இன்ன பிற திட்டங்களின் மத்தியில் உருவாக்கி வழங்கியது. பிராஜெக்ட் கிரீன்லைட் எம்மி விருதிற்கு தனித்து நிற்கும் நிகழ் நிகழ்ச்சிக்காக 2002, 2004 மற்றும் 2006 ஆண்டில் நியமனம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் அவர் முன்னணி பாத்திரத்திலோ அல்லது துணை நடிகராகவோ இடம்பெற்றவை, மொத்தமாக US$1.94 லிருந்து US$2.30 பில்லியனை வட அமெரிக்க வருவாயில் ஈட்டியது (அவரது பாத்திரங்களை கடுமையாக முன்னணி அல்லது துணைப் பாத்திரங்களாக கணக்கிட்டப் பிறகு) அது அவரை அனைத்து காலத்திலும் உயர் வருவாய் ஈட்டிய முப்பத்தைந்து நடிகர்களில் வைத்தது. 2007 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்டில் நிதி இதழான "ஃபோர்ப்ஸ்" நடிகர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்து அவர்களின் சம்பளத்திற்கு தொடர்புடைய அளவில் வருவாயில் சிறந்தச் செயல்பாட்டை உருவாக்கியது; அப்பட்டியல் டாமனை மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நடிகர்களில் மிக அதிகமான நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக பட்டியலிட்டது; டாமன் சராசரியாக US$29 ஐ அவரது கடைசி மூன்று படங்களில் அவர் ஈட்டிய ஒவ்வொரு டாலருக்கும் பெற்றதை வெளியிட்டது. டாமன் அவரது தொழில் வாழ்வில் பல நடிகையருடன் தொடர்பு வைத்திருந்தார். நடிகை வின்னோனா ரைடெருடன் டாமன் இரு வருட உறவினைக் கொண்டிருந்தார். அவர் ஒடேஸா விட்மயருடன் காதல் புரிந்து வந்தார், விட்மயர் தனிச் செயலாளராக பில்லி பாப் தார்ட்டன் மற்றும் அப்லெக் ஆகியோருடன் 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இருந்தாலும், ஊடகம் பலமுறை டாமன் நடிகை ஈவா மெண்டெஸ்சுடன் காதல் புரிந்ததாகக் கூறியது, இருவரும் எந்தவொரு உறவையும் மறுத்தனர். டாமன் அர்ஜெண்டினாவில் பிறந்த லூசியானா போஸான் பர்ரோசோவை மியாமியில் சந்தித்தார், அங்கு அவர் மதுபானக்கடையில் பணியாளராக பணியாற்றி வநதார். அவர்கள் தனிப்பட்ட மக்களிடையேயான சடங்கு ஒன்றில் 2006 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நியூயார்க் சிட்டி ஹாலின் அருகேயுள்ள மன்ஹட்டன் திருமண மையத்தில் திருமணம் செய்தனர். டாமன் போஸானின் முந்தைய திருமணம் மூலம் பிறந்த இளம் மகளான, அலெக்ஸியாவிற்கு மாற்றாந்தந்தையாக ஆனார். தம்பதிகளின் கூட்டாக முதல் குழந்தை, மகள் இஸபெல்லா, பிளோரிடாவில் மியாமியில் 2006 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதியும் . 2008 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி லூசியானா தம்பதிகளின் இரண்டாவது குழந்தையான ஜியா ஸவாலா டாமனை பெற்றெடுத்தார். டாமனின் ஆர்வங்கள் அவரது பாஸ்டன் ரெட் சாக்ஸ்க்கான ஆதரவும் அடக்கியுள்ளது. அணி 2007 உலகத் தொடரை வென்றப் பிறகு, அவர் நிகழ்வின் நினைவு DVD வெளியீட்டில் வர்ணனையைக் கொடுத்தார். டாமன், அவருடன் பலமுறை இணைந்து நடித்த சக-நடிகர்களான ஜார்ஜ் க்ளூனி மற்றும் பிராட் பிட், ஆகியோருடன் ONE னின்மூன்றாம் உலக நாடுகளில் எய்ட்ஸ் மற்றும் வறுமைக்கெதிரான பிரச்சாரத்தை ஆதரிக்கிறார். அவர் அவர்களின் அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். டாமன் OneXOne ற்கும், ஒரு இலாப நோக்கமற்ற சிறார் இல்லங்களை கானடா, அமெரிக்க ஒன்றியம் மற்றும் உலகம் முழுதும் ஆதரிக்க, காப்பாற்ற மற்றும் மேம்படுத்த உறுதியேற்ற அறக்கட்டளைக்கும் தூதுவராவார். டாமன் டானிக் மெயில்ஸ்டாப்பரின் ஒரு (முன்னாள் கிரீன்டைம்ஸ்) நிர்வாக உறுப்பினராவார், அது ஒவ்வொரு நாளும் அமெரிக்க இல்லங்களுக்கு அனுப்பப்படும் குப்பையான அஞ்சல்களை தடுக்க முயற்சிக்கும் நிறுவனமாகும். "ஓப்ரா வின்ப்ரே நிகழ்ச்சி" யில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி தோன்றிய போது, டாமன் நிறுவனத்தின் முயற்சியான மரங்கள் குப்பையான அஞ்சல்களுக்கும் உறைகளுக்கும் வெட்டப்படுவதை தடுப்பதை ஆதரவு தந்து நிறைவேற்ற உதவினார். டாமன் கூறினார்: " மதிப்பிட்டப்படி ஒரு நாளைக்கு அமெரிக்க பத்து காசில் அவர்கள் உங்கள் இல்லம் தேடி வரும் 70 விழுக்காட்டு குப்பை அஞ்சல்களை நிறுத்தலாம். அது செய்வதற்கு மிக எளிதானது, அளிப்பதற்கு பெரிய அன்பளிப்பு, உண்மையில் நான் எனது முழுக் குடும்பத்தையும் சேர்த்துள்ளேன். அது எனக்கு கடந்த விடுமுறை பருவத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அன்பளிப்பு மேலும் எனக்கு மிகவும் மனதளவில் அழுத்தமாக பதிந்தது அதனால் தற்போது நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளேன்." டாமன், ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட், டான் சியேட்டில் மற்றும் ஜெர்ரி வீண்டிராப் ஆகியோருடன் சின் நிறுவனர்களில் ஒன்றாவார், அந்த நிறுவனம் டார்ஃபர் போன்ற திரளான மக்கள் மீதான கொடுமைகளைத் தடுக்கவும், தடுத்து நிறுத்தவும் உலகத்தின் கவனத்தையும் வளங்களையும் கவனம் செலுத்துகிறது. அவர் H2O ஆஃப்பிரிகா பவுண்டேஷனின் நிறுவுனராவார், அது "ரன்னிங் தி சஹாரா" நெடும் பயணத்தின் நன்கொடைப் பிரிவாகும், அது வாட்டர்பார்ட்னர்ஸ்சுடன் இணைந்து Water.org கை 2009 ஆம் ஆண்டு ஜூலையில் உருவாக்கியது. நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் அவரது ABC தொலைக்காட்சி நிகழ்ச்சியான "ஜிம்மி கிம்மல் லைவ்" வின் முடிவின் அருகாமையில் பலமுறை கூறியது "மாட் டாமனுக்கு எனது மன்னிப்புக்கள், நாங்கள் நேரம் கடந்து விட்டோம்." நிகழ்ச்சி அதன் கடைசி விருந்தினரை நேரச் சிக்கல்களின் காரணமாக தோன்றச் செய்ய இயலாத போது இந்த வரி கேலிக்கிடமான வசைப்பாட்டு சந்தர்ப்பமாகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரு பகுதி கேலியினை நிகழ்த்தியது காட்டப்பட்டு மற்றும் ஒரு நீண்ட கிம்மலின் அறிமுகத்திற்குப் பிறகு டாமன் இறுதியாக நிகழ்ச்சியில் தோன்றினார், கிம்மல் மன்னிப்புடன் அவரது நேர்முகத்தை வெட்டி மேலும் நன்றி பாராட்டுதல்களுக்குப் போனார், டாமன் அவரை சபித்தார். அது பின்னர் கிண்டலாக முழுவதும் கிம்மல் மற்றும் டாமனால் திட்டமிடப்பட்டது எனத் அறுதி செய்யப்பட்டது. அச்சமயத்தில் கிம்மலின் பெண் நண்பியான நகைச்சுவை நடிகை சாரா சில்வெர்மானும் கூட இந்த வரியை 2007 MTV திரைப்பட விருதுகளின் போது பயன்படுத்தினார். சில்வெர்மானும் கூட அவர் பாடியப் பாடலான "நான் மாட் டாமனை புணர்கிறேன்" என்பதின் சுருக்கப்பகுதிகளை 2008 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியில் "ஜிம்மி கிம்மல் லைவ்" வில் ஒளிபரப்பினார். டாமன் அப்பாடலிலன் இறுதியில் சில்வர்மானுடன் தோன்றினார் அப்போது அவர் ஜிம்மிக்கு மன்னிப்பு கேட்கும்போது டாமன் இடைமறித்து. "ஜிம்மி, நாங்கள் நேரங்கடந்துவிட்டோம். மன்னியுங்கள்." கிம்மல் அவராகவே பின்னர் ஒரு இசை வீடியோ காண்பித்து அதில் ஒரு பாடல் மூலம் அதாவது அவர் "பென் அப்லெக்கை புணர்கிறேன்" என பதிலுரைத்தார். வீடியோ 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி ஒளிபரப்பப்பட்டது மற்றும் அப்லெக் டான் சியெட்டில், கேமரூன் டயஸ், ஹாரிசன் ஃபோர்ட், பிராட் பிட், ராபின் வில்லியம்ஸ் போன்ற மற்றும் இதர பல பிரபலங்களுடன் தோன்றினார். டாமன் "ஹார்ட்பால் வித் கிறிஸ் மாத்யூஸ்" சுடன் 2006 ஆம் ஆண்டு டிசம்பரில் தோன்றி ஈராக்கில் நடந்து வரும் யுத்தம் பற்றி விவாதித்தார். கிறிஸ் மாத்யூஸ்சுக்கு பதிலளிக்கும் விதமாக டாமன் கூறினார்: 2008 ஆம் ஆண்டில் செப்டம்பர் 10 ஆம் தேதி யூ டியூப்பில் அசோசியோடட் பிரஸ் வெளியிட்ட ஒரு வீடியோவில் டாமன் குடியரசு கட்சி துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலினை விமர்சித்தார். நேர்முகத்தின் பகுதிகளில் அவர் பாலினின் தயார் நிலையை சந்தேகித்து உணர்த்தியது ஒரு வேளை ஜான் மெக்கைன் அவரது முதல் பதவிக் காலத்தை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன என்பது பற்றியது. டாமன் அதனை பற்றி குறிப்பிடுவது "... மோசமான டிஸ்னி படம்... 'நான் அலாஸ்காவிலிருந்து வரும் ஒரு ஹாக்கி தாய் மட்டுமே இங்கு வெள்ளை மாளிகையை கைப்பற்ற வந்துள்ளேன்'. அது அபத்தம்... நான் அவர் உண்மையிலேயே டினோசார்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்தன என்பதை நினைக்கிறாரா என அறிய விரும்புகிறேன். ஏனெனில் அவர் அணுகுண்டு ஏவும் சங்கேத குறிகளை வைத்திருக்கப் போகிறவராவார்". அவர் மேலும் சொல்வது " நீங்கள் ஆயுள் காப்பீடு பாதுகாப்பு கணக்கு நிபுணரைப் போல் அட்டவணை இட வேண்டும். அங்கு மூன்றில் ஒரு வாய்ப்பு மெக்கெய்ன் அவரது முதல் பதவி காலத்தை முடிக்கப் இயலாது போகவுள்ளது, மேலும் அப்போது அதிபராக பாலின் வருவார்." முன்னதாக, டாமன் 2003 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட வரலாற்று அறிஞர் ஹோவார்ட் ஸின்னின் அ "ப்யூப்பிள்ஸ் ஹிஸ்டரி ஆஃப் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்" ஒலிப்புத்தக வடிவத்தினை வாசித்தார். வேதிச்சிகிச்சை வேதிப்பொருட்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை பொதுவாக வேதிச்சிகிச்சை எனப்படுகிறது. நுண்-உயிர்கள் அல்லது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிரபலமான பயன்பாட்டில், இது புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது செல்நச்சிய தரப்படுத்தப்பட்ட சிகிச்சைக்குரிய முறையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் சேர்க்கைக்கான ஆண்டிநியோபிளாஸ்டிக் மருந்துகளைக் குறிப்பிடுகிறது. அதன் புத்தாக்கவியல் சாராத பயன்பாட்டில், இந்த வார்த்தை ஆண்டிபயாடிக்குகளுக்கும் ("ஆண்டிபாக்டீரியல் வேதிச்சிகிச்சை" ) குறிப்பிடப்படலாம். இந்தப் பயன்பாட்டில் முதல் நவீன வேதியியல் உணர்விகள் மருந்துகள், பால் எர்ல்ரிச்சினின் ஆர்ஸ்பெனமைன் ஆகும். 1909 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இது ஒரு ஆர்சனிக் சேர்மம் ஆகும். மேலும் இது சிபிலிஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் டோமாக் மூலமாக சல்ஃபோனமைடுகளும், அலெக்சாண்டர் ஃபிளெமிங் மூலமாக பெனிசிலினும் கண்டறியப்பட்டது. புற்றுநோய் செல்களின் முக்கிய பண்புகளில் ஒன்றைத் துரிதமாகப் பிரித்து அழிப்பதன் மூலமாக வேதிச்சிகிச்சை செயல்படுகிறது. இந்த வழிமுறையானது எலும்பு ஊன், செரிமானப் பாதை மற்றும் மயிர்க்கால்கள் ஆகியவற்றின் செல்கள் இருக்கும் சாதாரண சூழ்நிலைகளிலும் துரிதமாகப் பிரிந்து செல்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது; இதன் விளைவாக வேதிச்சிகிச்சையினால் மைலோசப்ரசன் (இரத்த செல்களின் உற்பத்தி குறைதல்), மியூகோசிடிஸ் (செரிமானப்பாதையில் அகத்திரையில் அழற்சி ஏற்படுதல்) மற்றும் வழுக்கை (முடி உதிர்தல்) போன்ற மிகவும் பொதுவான பக்க விளைவுகள் ஏற்படும். செல்தேக்க வேதிச்சிகிச்சை மருந்துகளின் (கீழ் குறிப்பிட்டவைகளும் சேர்த்து) பிற பயன்பாடுகளானது தண்டுவட மரப்பு நோய், சருமத் தசையழற்சி, பல தசையழற்சி, தோல் முடிச்சு நோய், முடக்கு வாதம் மற்றும் மாற்றுத்திசு நிராகரித்தலின் ஒடுக்கம் (பார்க்க நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்கம் மற்றும் DMARDகள்) போன்ற தன் தடுப்பாற்று நோய்களின் சிகிச்சையாக இருக்கின்றன. புதிய புற்றுநோய்க்கெதிரான மருந்துகள், புற்றுநோய் செல்களில் அசாதரணமான புரதங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன; இது இலக்கு சிகிச்சை எனக் குறிப்பிடப்படுகிறது. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மருந்துக்கு முன்னரே கனிமங்களின் பயன்பாடும் தாவரம்-சார்ந்த மருந்துகளும் இருந்ததாக நம்பப்படுகிறது. எனினும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக முதன் முதலில் மருந்து பயன்படுத்தப்பட்டது. எனினும் அது உண்மையில் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. முதல் உலகப்போர் சமயத்திலும், இரண்டாம் உலகப்போர் சமயத்திலும் இரசாயனப் போர் முகவராக கடுகுவாயு பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இராணுவச் செயல்பாடுகளின் போது மக்களில் ஒரு குழுவினர் எதிர்பாராத விதமாக கடுகுவாயுவை முகர்ந்துவிட்டனர். பின்னர் அவர்களுக்கு இரத்த வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவானது கண்டறியப்பட்டது. ஒரு முகவர் புற்றுநோய்க்கான விளைவினைப் போன்றே, துரிதமாக-வளரும் இரத்த வெள்ளை அணுக்களை சேதப்படுத்தியதன் காரணமாகவே அவ்வாறு ஏற்பட்டது. ஆகையால், 1940களில், தீவிர நிணநீர் திசுக்கட்டிகளுடன் (சில வெள்ளை இரத்த அணுக்களில் புற்றுநோய்கள்) பல்வேறு நோயாளிகளுக்கு எரிச்சல் உண்டாக்கக்கூடிய வாயுவை முகர்வதற்கு முற்றிலும் மாறாக நரம்புகளில் மருந்துகள் கொடுக்கப்பட்டன. இது தற்காலிகமானதாக இருந்த போதும், அவற்றின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அந்த அனுபவம், ஆய்வாளர்களை புற்றுநோய்க்கு எதிராக அதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்தகூடிய மற்ற பொருட்களை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக்கியது. அதன் விளைவாக, புற்றுநோய் சிகிச்சைக்காக மற்ற பல மருந்துகள் கண்டறியப்பட்டன. மேலும் மருந்து உருவாக்கம் அதிலிருந்து பின்னர் பல பில்லியன் டாலர் துறையாக எழுச்சியடைந்தது. எனினும் ஆரம்பகால ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட வேதிச்சிகிச்சையின் கொள்கைகள் மற்றும் வரம்புகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோய் என்பது நுழைதல் மற்றும் நோய் இடம் மாறல் ஆகிய நடத்தை உடைய புற்றுத்திசுவுடன் இணைந்த செல்களின் கட்டுப்படுத்த இயலாத வளர்ச்சியாகும். புற்றுநோயானாது மரபுரீதியான ஏற்புத்திறன் மற்றும் சூழ்நிலைசார் நச்சுப்பொருட்கள் ஆகியவற்றுக்கு இடையில் இடைவினையின் காரணமாக ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. பரவலான பயன்பாட்டில், பெருமளவு "வேதியியல் உணர்வி" மருந்துகள் வேகமாக-பிரியும் செல்களை திறம்பட்ட இலக்காகக்கொண்டு, மைட்டாசிஸ் (செல்பிரிவு) அழிப்பு மூலமாகச் செயல்படுகின்றன. இந்த மருந்துகள் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது "செல்நச்சியம்" என்ற வார்த்தையில் அழைக்கப்படுகிறது. சில மருந்துகள் செல்கள் அபோப்டோசிசுக்கு ("திட்டமிட்ட செல் இறப்பு" என அழைக்கப்படுகிறது) உட்படுவதற்குக் காரணமாகின்றன. புற்றுத்திசு மற்றும் தனித்த இலக்காக (பிலடெல்பியா குரோமோசோம், இமாடினிப்பினால் இலக்காக்கப்படுதல் போன்ற சில சமீபத்திய எடுத்துக்காட்டுகளைத் தடைசெய்தல்) உருவாக்கப்படக்கூடிய தடுப்பாற்றல் செல்களின் குறிப்பிட்ட பண்புகளை அறிவியல் வல்லுநர்கள் கண்டறிய வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக, முடி வளர்ச்சிக்கு மற்றும் குடலுக்குரிய புறத்தோலியத்தின் (அகத்திரை) பரிமாற்றத்திற்கு பொறுப்பு வகிக்கக்கூடிய மற்ற வேகமாக-பிரிக்கப்பட்ட செல்களும் பொதுவாக பாதிக்கப்படுகின்றன. எனினும் சில மருந்துகள் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்த பக்க விளைவுப் புரொஃபைலைக் கொண்டிருக்கின்றன. சில சூழ்நிலைகளில் நோயாளிகளின் நன்மைக்காக சிகிச்சைக்குரிய முறைகளை மருத்துவர்கள் ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாக்கியது. வேதிச்சிகிச்சை செல் பிரித்தலைப் பாதிப்பதைப் போல, உயர் "வளர்ச்சி பின்னங்களுடன்" கட்டிகள் (நிணநீர் சுரப்பிப் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர மைலிகெனஸ் லியுகேமியா மற்றும் தீவிரமான நிணநீர் திசுக்கட்டிகள் போன்றவை) வேதிச்சிகிச்சையினால் மிகவும் தூண்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆகையால் பெரிய விகிதாச்சாரத்தில் இலக்காக்கப்பட்ட செல்கள் எந்த நேரத்திலும் செல் பிரித்தலுக்கு உட்படலாம். மந்தமான நிணநீர் திசுக்கட்டிகள் போன்ற குறைவான வளர்ச்சி வீதத்துடன் பரவும்புற்றுகள், வேதிச்சிகிச்சைக்கு பிரதிசெயல் புரிவதில் மிகவும் அளவாகச் செயல்படுகின்றன. "இளம்" கட்டிகளை (அதாவது, மிகவும் வேறுபடுத்தப்பட்டவை) மருந்துகள் மிகவும் ஆற்றலுடன் பாதிக்கின்றன. ஏனெனில் செல் வளர்ச்சியைச் சீராக்கும் இயங்கமைப்புகள் பொதுவாக இன்றும் பேணிக்காக்கப்படுகின்றன. கட்டிச் செல்களின் அடுத்தத் தலைமுறைகளுடன், வகைப்படுத்துதல் பொதுவாக இழந்து, வளர்ச்சி குறைவாக சீரமைக்கப்பட்டதாக இருக்கும். மேலும் கட்டிகள் பெரும்பாலான வேதியியல் உணர்விகளுக்குக் குறைவான ஏற்புத்தன்மை உடையதாக மாறியிருக்கும். சில திடமான கட்டிகளின் மையத்திற்கு அருகில், செல் பிரித்தல் ஆற்றலுடன் நிறுத்தப்படுகின்றன. அது வேதிச்சிகிச்சைக்கு அவற்றை உணர்வற்றதாக்குகிறது. திடமான கட்டிகளுடன் மற்றொரு சிக்கலாக உண்மையில் வேதியியல் உணர்வி மருந்து பொதுவாக கட்டியின் அடிப்படையைச் சென்றடையாது. இந்த சிக்கலுக்கான தீர்வுகள், ஊடுகதிர்ச் சிகிச்சை (குறுகிய சிகிச்சை மற்றும் தொலை சிகிச்சை இரண்டும்) மற்றும் அறுவைசிகிச்சை போன்றவை மேற்கொள்ளல் ஆகும். காலப்போக்கில் புற்றுநோய்ச் செல்கள், வேதிச்சிகிச்சைகளுக்கு அதிக தடுப்பாற்றால் உடையவையாக மாறிவிடும். அண்மையில், அறிவியல் வல்லுநர்கள், புற்றுநோய் செல்களின் புறப்பரப்பின் மீது சிறிய எக்கிகளைக் கண்டறிந்திருக்கின்றன. அவை செயல்திறனுடன் வேதிச்சிகிச்சையை செல்லின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. p-கிளைக்கோபுரதம் மற்றும் மற்ற சில வேதிச்சிகிச்சை வெளியேற்றம் எக்கிகள் மீதான ஆராய்ச்சி தற்போது நடைபெற்றுவருகிறது. வேதிச்சிகிச்சையின் உச்சவினையை மேம்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் p-கிளைக்கோபுரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதற்கான மருந்துகள் சோதனையில் இருக்கின்றன. இந்நாளில் வேதியியல் உணர்வி மருந்துகளைப் பயன்படுத்துவதை நிர்வகித்தலில் பல உத்திகள் இருக்கின்றன. வேதிச்சிகிச்சை நோய் நீக்கும் நோக்கத்துடன் செய்யப்படலாம் அல்லது இது வாழ்நாளை நீடிப்பது அல்லது மட்டுப்படுத்து அறிகுறிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டுச் செய்யப்படலாம். "கூட்டுச் சிகிச்சை முறை வேதிச்சிகிச்சை" என்பது ஊடுகதிர்ச் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை போன்ற மற்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகும். தற்போது பெரும்பாலான புற்றுநோய்களுக்கு இவ்வழியில் சிகிச்சை செய்யப்படுகின்றன. இதே போன்ற செயல்முறையான "இணைதல் வேதிச்சிகிச்சை"யில், நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான பல மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த மருந்துகள் அதன் இயங்கமைப்பு மற்றும் பக்க விளைவுகள் ஆகியவற்றில் மாறுபடுகின்றன. இதிலுள்ள பெரும் நன்மை, ஏதேனும் ஒரு முகவரின் தடுப்பாற்றலைக் குறைப்பதாகும். "புதியதுணையூக்கி வேதிச்சிகிச்சையில்" ("அறுவைமுன்" சிகிச்சை) ஆரம்ப வேதிச்சிகிச்சை அடிப்படைக் கட்டியைச் சுருக்குவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அங்கு குறிப்பிட்ட இடம் சார்ந்த சிகிச்சையின் (அறுவைசிகிச்சை அல்லது கதிரியக்கச் சிகிச்சை) மீள்தருகை குறைவான அழிவுடையதாகவோ அல்லது அதிகமான ஆற்றலுடையதாகவோ இருக்கிறது. "துணையூக்கி வேதிச்சிகிச்சை" (அறுவைக்கு "பின்" சிகிச்சை) புற்றுநோய் இருப்பதற்கான சிறு வாய்ப்பு இருக்கும் போது பயன்படுத்தப்படலாம். ஆனால் நோய் மீளலில் இடர்பாடுகள் இருக்கின்றன. கட்டி முன்னேற்றமடைந்தால் தடுப்பாற்றல் மேம்படுவதன் வாய்ப்புகளைக் குறைக்க இது உதவலாம். இது புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளில் பரவாமல் அழிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இது பொதுவாக புதிதாக வளரும் கட்டிகள் வேகமாக-பிரிதலில் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது. ஆகையால் மிகவும் எதிர்ப்புத் திறனற்றதாக இருக்கிறது. "நோய்க் குறி நீக்கல் வேதிச்சிகிச்சை" நோய் நீக்கும் நோக்கமின்றி செய்யப்படுகிறது. ஆனால் எளிமையாக கட்டியின் சுமையைக் குறைப்பதற்கு மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்குச் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்குரிய முறையில், சிறந்த நச்சுத்தன்மை புரொஃபைல் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வேதிச்சிகிச்சை முறைகளுக்கும், நோயாளி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான திறன்பெற்றவராக இருத்தல் அவசியம். செயல்திறன் நிகழ்நிலை என்பது பொதுவாக, நோயாளியால் வேதிச்சிகிச்சையைப் பெற முடியுமா அல்லது மருந்தளவுக் குறைப்பு தேவையாக இருக்குமா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு சிகிச்சையிலும் (பின்ன அழிவு) கட்டிகளின் செல்களில் மிகவும் குறைந்தளவு மட்டுமே அழிகின்றன. அதனால் கட்டியின் அளவைக் குறைவதற்கு தொடர் மருந்தளவுகள் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய வேதிச்சிகிச்சை முறைகளில் நோயாளியின் நச்சுத்தன்மையின் மூலமாக வரம்புக்குட்பட்ட, சிகிச்சைகளின் அதிர்வு மற்றும் கால வரையறையுடன் சுழற்சி முறையில் மருந்து சிகிச்சைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலான வேதியியல் உணர்வி மருந்துகளானது ஆல்கைலேற்று பொருட்கள், வளர்சிதைமாறுப்பகைகள், ஆந்த்ராசைக்ளின்கள், தாவர ஆல்கலாய்டுகள், டோபோய்சாமரேஸ் மட்டுப்படுத்திகள் மற்றும் பிற கட்டிக்கு எதிரான பொருட்களாகப் பிரிக்கப்படலாம். இந்த மருந்துகள் அனைத்தும் செல் பிரித்தல் அல்லது DNA தொகுப்பைப் பாதிக்கின்றன மற்றும் சில வழிகளில் செயல்படுகின்றன. சில புதிய மருந்துகள், DNAவுடன் நேரடியாகத் தலையிடுவதில்லை. இவை ஒரு செல் நோய் எதிரணுக்கள் மற்றும் சிலவகைப் புற்றுநோயில் (நீண்டகால மைலோஜனஸ் லியுகேமியா, இரையக குடலிய ஸ்ட்ரோமல் கட்டிகள்) மூலக்கூறு முறை பிறழ்தலை நேரடி இலக்காகக் கொண்டிருக்கும். புதிய டைரொசைன் கைனாஸ் மட்டுப்படுத்திகள் எ.கா. "இமாடினிப் மெசிலேட்" ("க்லேவெக்" அல்லது "க்லிவேக்" ) ஆகியவை உள்ளடக்கியவை ஆகும். இவை இலக்காக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். கூடுதலாக, கட்டிச் செல் நடத்தையை அந்த செல்களை நேரடியாகத் தாக்காமல் சரிப்படுத்தக்கூடிய வகையில் சில மருந்துகள் பயன்படுத்தப்படலாம். ஹார்மோன் சிகிச்சைகள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. உடற்கூறியல் சிகிச்சைக்குரிய இரசாயன வகையாக்க முறை குறியீடுகள் முக்கிய பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. செல்களில் இருக்கும் நிலைகளின் கீழ், பல மின்னெதிர் குழுக்களுக்கு ஆல்கைல் குழுக்களை இணைக்கும் திறன் பெற்றிருப்பதன் காரணமாக ஆல்கைலேற்றுப் பொருட்கள் இப்பெயர் பெற்றன. சிஸ்பிளேட்டின் மற்றும் கார்போபிளேட்டின் அத்துடன் ஆக்சாலிபிளேட்டின் போன்றவை ஆல்கைலேற்றுப் பொருட்கள் ஆகும். உயிரியல் ரீதியாக முக்கிய மூலக்கூறுகளில் அமினோ, கார்பாக்சில், சல்ஃபைட்ரில் மற்றும் பாஸ்பேட் குழுக்கள் ஆகியவற்றுடன் சக இணைப்புப் பிணைப்புகள் உருவாக்குவதன் மூலமாக அவை செல் செயல்பாட்டை அழிக்கின்றன. மற்ற பொருட்கள் மெக்லோர்த்தமைன், சைக்ளோபாஸ்பமைடு, குளோராம்புசில், ஐஃபோஸ்ஃபமைடு ஆகும். அவை செல்லின் DNAவை இரசாயன ரீதியாக மாற்றுவதன் மூலமாகச் செயல்படுகின்றன. எதிர்-உயிரினக்கழிவுகள், பியூரீன் ((அசாதியோப்ரின், மெர்காப்டோபியூரீன்)) அல்லது பிரிமிடின் ஆகியவையாக மாற்றுவிதங்களில் தோன்றுகின்றன. இவை DNAவின் கட்டமைப்புத் தொகுதியாகின்றன. அவை இப்பொருட்களை "S" பிரிவின் (செல் சுழற்சியில்) போது DNAவில் ஒருங்கிணைப்பதில் இருந்து காக்கிறது. மேலும் சாதாரண முன்னேற்றம் மற்றும் பிரித்தலைத் தடுத்து நிறுத்துகிறது. அவை RNA சேர்க்கையையும் பாதிக்கின்றன. அவற்றின் செயல்திறனின் காரணமாக, இந்த மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்படும் செல்தேக்கங்களாக இருக்கின்றன. இந்த ஆல்கலாய்டுகள் மைக்ரோடியூபுலே செயல்பாட்டைத் தடுப்பதன் மூலமாக கலங்கள் மற்றும் தொகுதிச் செல் பிரித்தலில் இருந்து வருவிக்கப்படுகின்றன. மைக்ரோடியூபுலேக்கள் செல் பிரித்தலுக்கு இன்றியமையாததாக இருக்கின்றன. மேலும் அவை இல்லாமல் செல் பிரித்தல் செய்ய முடியாது. வின்கா ஆல்கலாய்டுகள் மற்றும் டாக்சேன்கள் போன்றவை முக்கிய எடுத்துக்காட்டுகள் ஆகும். வின்கா ஆல்கலாய்டுகள், டியூப்லின் மீது குறிப்பிட்ட தளங்களைக் கட்டுகின்றன. மைக்ரோடியூபுலேக்களினுள் (செல் சுழற்சியில் M பிரிவு) டியூப்லினின் தொகுப்பைத் தடுக்கின்றன. அவை மடகாஸ்கர் பெரிவிங்கில், "காதராந்தஸ் ரோசியஸ்" (முன்பு "வின்கா ரோசியா" என்று அறியப்பட்டது) ஆகியவற்றில் இருந்து வருவிக்கப்படுகின்றன. பின்வருவன வின்கா ஆல்கலாய்டுகள் ஆகும்: போடோபில்லோடாக்சின் என்பது கல-வருவிக்கப்பட்ட சேர்மம் ஆகும். இது செரிமானத்துக்கு உதவுவதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் எடோபோசைடு மற்றும் டெனிபோசைடு ஆகிய இரு மற்ற செல்தேக்க மருந்துகள் உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அவை செல்லை G1 பிரிவில் (DNA உருவநேர்ப்படியின் ஆரம்பம்) நுழைவதைத் தடுக்கிறது மற்றும் DNAவின் (S பிரிவு) உருவநேர்ப்படியாகவும் இருக்கிறது. இதன் செயல்பாட்டின் துல்லியமான இயங்கமைப்பு இன்னும் அறியப்படவில்லை. இந்தப் பொருள் அமெரிக்கன் மேஆப்பிள்ளில் ("போடோபில்லூம் பெல்டாட்டம்" ) இருந்து முதன்மையாகப் பெறப்படுகிறது. அண்மையில் இது அரிதான ஹிமாலயன் மேஆப்பிளிலும் ("போடோபில்லூம் ஹெக்ஸாண்ட்ரம்" ) கண்டறியப்பட்டது. அதில் மிகவும் அதிகளவில் இருந்தது, ஆனால் இந்தத் தாவரம் அருகிவருகிறது. இதன் கிடைக்கும் தன்மை மிகவும் குறைவானதாகும். பொருட்களின் உருவாக்கத்தில் தொடர்புடைய மரபணுக்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றை மரபுசீரமைப்பு முறையில் உருவாக்க முடியலாம். மூலப்படிம டாக்சேன் என்பது இயற்கையாக உருவாகும் பாக்லிடேக்சல் ஆகும். டாக்சோல் என ஆரம்பத்தில் அறியப்பட்ட இது முதன் முதலில் பசிஃபிக் யூ மரத்தின் அடிமரத்தின் பட்டையில் இருந்து வருவிக்கப்படுகிறது. டோசிடேக்சல் என்பது பாக்லிடேக்சலின் பாதி-செயற்கையான ஒத்தபொருள் ஆகும். டாக்சேன்கள் மைக்ரோடியூபில்களின் நிலைப்புத்தன்மையை மேம்படுத்துகின்றன. நிறமிப்பிளப்பின் போது குரோமோசோம்களின் பிரிதலைத் தடுக்கின்றன. டோபோய்சோமரேஸ்கள் DNAவின் பரப்பியலைப் பராமரிப்பதற்கான இன்றியமையாத என்சைம்களாக இருக்கின்றன. வகை I அல்லது வகை II டோபோய்சோமரேஸ்களின் தடுப்பு சரியான DNA சூப்பர்காய்லிங் நிலைகுலைவின் மூலமாக DNAவின் படியெடுத்தல் மற்றும் உருவநேர்ப்படி இரண்டுடனும் குறுக்கிடுகிறது. "மூலக்கட்டுரையைக் காண்க: ஆண்டிநியோபிளாஸ்டிக்" இது இம்முனோசப்ரசண்ட் டாக்டினோமைசின் (இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது), டாக்சோரூபிகன், எபிரூபிகன், பிளியோமைசின் மற்றும் பல உள்ளடக்கியதாகும். முதல்நிலை உயிரணு அறுவடை மற்றும் ஆடோலோகஸ் அல்லது ஹேமடோபொயடிக் உயிரணு மாற்று, வேதியியல் உணர்வி மருந்துகளின் உயர் மருந்தளவுக்கு அனுமதிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு மருந்தளவுகள் முதன்மையாக ஹேமயோபொயடிக் சேதத்தினால் வரம்புக்குட்பட்டதாக இருக்கின்றன. திடமான கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் பல ஆண்டுகள் ஆராய்சியில், குறிப்பாக மார்புப் புற்றுநோயில், உயிரணு மாற்றம் மேற்கொள்ளப்படுவது உச்சவினையின் சில சான்றுகளைக் கொண்டிருக்கின்றன. மைலோமா, லிம்போமா மற்றும் லியூகேமியா போன்ற ஹேமடோலாஜிக்கல் பரவும்பற்றுகள், உயிரணு மாற்றுக்கான முக்கிய அடையாளமாக நீடித்திருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்ட பெருங்கிளை உட்செலுத்துதல் (மெலனோமாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது) அல்லது கல்லீரல் அல்லது நுரையீரலினுள் வேதிச்சிகிச்சையின் தனிமைப்படுத்தப்பட்ட உட்செலுத்துதல், சில கட்டிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த அணுகுமுறைகளின் முக்கிய நோக்கம் கட்டியுள்ள இடங்களில் பேரளவிலான "உள்பரவிய" சேதம் விளைவிக்காமல் மிகவும் உயர் மருந்தளவு வேதிச்சிகிச்சையை விநியோகித்தல் ஆகும். இந்த அணுகுமுறைகள் தனித்து கட்டுப்படுத்த உதவலாம் அல்லது நோய் இடம் மாறலைக் குறைக்கலாம். ஆனால் அவை வரையறையளவில் உள்பரவியவை "அல்ல". அதனால் பரவிய நோய் இடம் மாறல் அல்லது நுண் நோய் இடம் மாறல் ஆகியவற்றுக்கு இச்சிகிச்சை செய்யக்கூடாது. சிறப்பு இலக்காக்கப்பட்ட விநியோகக் கடத்திகள், கட்டிச் செல்களுக்கான வேதிச்சிகிச்சையின் செயல்திறனை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் மற்ற செல்களுக்கான செயல்திறன் நிலைகளையும் குறைக்கின்றன. இதன் விளைவாக கட்டி அழிதல் அதிகரிக்கலாம் (மற்றும்/அல்லது) நச்சுத்தன்மை குறையலாம். சிறப்பு இலக்காக்கப்பட்ட விநியோகக் கடத்திகள் கட்டி-குறிப்பிட்ட அல்லது கட்டி-இணைந்த வெளிப்புரதங்களுடன் இடைவினை புரிவதன் மூலமாக கட்டிச் செல்களுக்கான மாறுபட்ட உயர் பிணைப்பைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இலக்காக்கப்பட்ட பொருளில் கூடுதலாக அவை, வழக்கமான வேதியியல் உணர்வி முகவராகவோ அல்லது ஒரு கதிரியக்க ஐசோடோப் அல்லது நோய்த் தடுப்பாற்றல் ஊக்குவிக்கும் காரணியாகவோ முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றன. சிறப்பு இலக்காக்கப்பட்ட விநியோகக் கடத்திகள் அவற்றின் நிலைப்புத்தன்மை, தேர்ந்தெடுத்தல் மற்றும் இலக்கைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் மாறுபடுகின்றன. ஆனால் அடிப்படையில் அவை அனைத்தும் அதிகப்படியான செயல்திறன் மிக்க கட்டிச் செல்களுக்கு விநியோகிக்கப்படக்கூடிய மருந்தளவு அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. குறைக்கப்பட்ட உள்பரவிய நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் அவற்றை உடல்நலமில்லாத நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் அவை வழக்கமான உள்பரவிய அணுகுமுறைகளில் விநியோகிக்கப்படும் நச்சுத்தன்மையைக் காட்டிலும் வெகு தொலைவில் இருக்கக்கூடிய புதிய வேதியியல் உணர்வி மருந்துகளை எடுத்துச் செல்கின்றன. பாக்லிடாக்சல் போன்ற மோசமாக-கரையக்கூடிய மருந்துகளுக்கான பயனுள்ளதாக நானோ துகள்கள் வெளிப்படுகின்றன. புரத-கட்டமைப்பு பாக்லிடாக்சல் (எ.கா., அப்ராக்சேன்) அல்லது பற்று-பாக்லிடாக்சலானது 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வகித்தல் (FDA) மூலமாக வெப்பம் தாங்கவல்ல மார்புப் புற்றுநோய் சிகிச்சையாக அங்கீகரிக்கப்பட்டது. பொதுவாக பாக்லிடாக்சலில் காணப்படும் கிரெமொபோர் கடத்தியின் பயன்பாட்டையும் குறைக்க அனுமதித்தது. காந்தப் பொருட்களால் உருவாக்கப்படும் நானோதுகள்களும், காந்தக் களம் வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படக்கூடிய கட்டி இடங்களில் அடர்ந்த மருந்துகளாகப் பயன்படுத்தப்படலாம். வேதிச்சிகிச்சையின் "மருந்தளவு" சிக்கலானதாக இருக்கக்கூடும்: மருந்தளவு மிகவும் குறைவாக இருந்தால் அது கட்டிக்கு எதிராகச் செயல்திறன் அற்றதாக இருக்கலாம். அதேசமயம் அதிகப்படியான மருந்தளவுகள் காரணமாக, நச்சுத்தன்மையை (பக்க விளைவுகள், நியூட்ரோபில் அணுக்குறை) நோயாளியால் தாங்க இயலாத அளவிற்கு இருக்கலாம். இது பெரும்பாலான மருத்துவமனைகளில் விளக்கமான "மருந்தளவு செயல்முறைத் திட்டங்களை" உருவாக்குவதற்கு ஏதுவாக்கியது. அது சரியான மருந்தளவு மற்றும் நச்சுத்தன்மை ஏற்படும் சூழலில் சரிபடுத்துதல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதலைக் கொடுக்கும். தடுப்பாற்றல் சிகிச்சையில், வீரியமிக்க நோய்களின் சிகிச்சையில் குறைவான மருந்தளவுகளைப் பயன்படுத்துவதில் கொள்கைகள் இருக்கின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில் மருந்தளவு, நோயாளியின் இரத்த அளவுடன் தொடர்புடைய அளவீடான "உடல் புறப்பரப்புப் பகுதியுடன்" சரிப்படுத்தப்படுகிறது. BSA (உடல் புறப்பரப்புப் பகுதி) என்பது பொதுவாக நேரடியான அளவீட்டிற்கு பதிலாக நோயாளியின் எடை மற்றும் உயரத்தைப் பயன்படுத்தி கணித சூத்திரம் அல்லது நோமோகிராம் ஆகியவற்றால் கணக்கிடப்படுகிறது. பெரும்பாலான வேதிச்சிகிச்சையானது நரம்பூடாக விநியோகிக்கப்படுகிறது. எனினும் பல மருந்துகள் வாய்வழியாகச் செலுத்தப்படுகின்றன (எ.கா., மெல்பாலான், புசுல்ஃபான், கேபசிட்டாபைன்). சில நிகழ்வுகளில், கல்லீரல் அல்லது நுரையீரலினுள் தனிமைப்படுத்தப்பட்ட பெருங்கிளை உட்செலுத்துதல் (பொதுவாக மெலனோமாவில் பயன்படுத்தப்படுகிறது) அல்லது வேதிச்சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்ட உட்செலுத்துதல் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அணுகுமுறைகளின் முக்கிய நோக்கம் கட்டியுள்ள இடங்களில் பேரளவிலான உள்பரவிய சேதம் விளைவிக்காமல் மிகவும் உயர் மருந்தளவு வேதிச்சிகிச்சையை விநியோகித்தல் ஆகும். புற்றுநோய், புற்றுநோயின் நிலை, வேதிச்சிகிச்சையின் வகை மற்றும் மருந்தளவு, நரம்பூடான வேதிச்சிகிச்சை போன்றவை நோயாளியைச் சார்ந்து உள்நோயாளி அடிப்படையிலோ அல்லது வெளிநோயாளி அடிப்படையிலோ கொடுக்கப்படலாம். அடிக்கடி அல்லது நாட்பட்ட நரம்பூடான வேதிச்சிகிகிச்சை நிர்வகித்தல், பல்வேறு முறைகள், அணுகளைப் பராமரிப்பதற்கு வாஸ்குலேச்சரினுள் அறுவை சிகிச்சை மூலம் நுழைக்கப்படலாம். பொதுவாக-பயன்படுத்தப்படும் முறைகள் ஹிக்மேன் வரிசை, போர்ட்-எ-காத் அல்லது PICC வரிசை போன்றவையாகும். குறைவான நோய்த்தொற்றல் இடர்பாடு கொண்டிருக்கும் இவை, சிரையழற்சி அல்லது குழாய்க் கசிவு ஆகியவற்றுக்கு மிகவும் குறைவான புரளல் உடையவையாக இருக்கின்றன. மேலும் புறத்திய உடல்வடிகுழாயில் தொடர் நுழைவுக்கான தேவையை அழிக்கிறது. வேதிச்சிகிக்கையில் இருந்து தீங்குநிறைந்த மற்றும் இறப்பு ஏற்படுத்தும் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக வேதிச்சிகிச்சையின் மருந்தளவு வரம்புக்குட்பட்டதாக கொடுக்கப்படலாம். சில கட்டிகள் போதுமான வேதியியல் உணர்வி மருந்துகளின் உயர் மருந்தளவுகள் மூலமாக அழிக்கப்படலாம். எனினும் இந்த உயர் மருந்தளவுகள் கொடுக்கப்படுவதில்லை, ஏனெனில் இவை நோயாளிக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தலாம். வேதியியல் உணர்வி நுட்பங்கள் பயன்படுத்தப்படும் மருந்துகளின் வகையைச் சார்ந்து பக்க விளைவுகளின் வரம்புகளைக் கொண்டிருக்கின்றன. மிகவும் பொதுவான மருந்துகள் முக்கியமாக உடலில் இரத்த உயிரணுக்கள் மற்றும் வாய், வயிறு மற்றும் குடல்கள் ஆகியவற்றின் அகத்திரைச் செல்கள் போன்ற வேகமாக-பிரியும் செல்களைப் பாதிக்கின்றன. பொதுவான பக்க விளைவுகள் பின்வருமாறு: குறிப்பிட்ட உறுப்புக்களில் சேதமேற்படுவதால் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்: நடைமுறையில் அனைத்து வேதியியல் உணர்வி சிகிச்சைக்குரிய முறை நோய் எதிர்ப்பு மண்டலத்தில் அழுத்தம், பொதுவான எலும்பு ஊன் முடக்குவாதம் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்தவட்டுக்கள் ஆகியவைக் குறைவதற்கு வழிவகுத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாகலாம். இதில் இறுதி இரண்டும் ஏற்படும் போது இரத்தம் மாற்றுதல் மூலம் மேம்படுத்தலாம். நியூட்ரோபில் அணுக்குறையை (நியூட்ரோபில் கிரானுலோசைட்டின் எண்ணிக்கை 0.5 x 10/லிட்டருக்கும் கீழ் குறைதல்) செயற்கை G-CSF இன் (கிரானுலோசைட்-தொகுப்பு ஊக்குவிக்கும் காரணி எ.கா., ஃபில்கிராஸ்டிம், லெனோகிராஸ்டிம்) மூலமாக மேம்படுத்தலாம். சில சிகிச்சைக்குரிய முறையில் ஏற்படும், மிகவும் தீவிரமான மைலோ ஒடுக்கம் கிட்டத்தட்ட அனைத்து எலும்பு ஊன் முதல்நிலை உயிரணுக்களையும் (வெள்ளை மற்றும் சிகப்பு இரத்த உயிரணுக்களை உருவாக்கும் செல்கள்) அழித்துவிடும் "அல்லோஜெனிக்" அல்லது "ஆட்டோலகஸ்" எலும்பு ஊன் செல் மாற்றம் இதற்கு தேவையாக இருக்கிறது. (ஆட்டோலகஸ் BMTக்களில், சிகிச்சைக்கு முன்னர் நோயாளியிடமிருந்து இந்த செல்கள் நீக்கப்படுகின்றன. பின்னர் பெருக்கப்பட்டு மீண்டும் செலுத்தப்படுகின்றன; "அல்லொஜெனிக்" BMTக்களின் மூலம் வழங்கி ஆவார்.) எனினும் சில நோயாளிகளில் நோய் தொடர்ந்து உருவாகும். ஏனெனில் இது எலும்பு ஊனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. "டிரெமெடஸ் வெர்சிகோலர்" போன்ற சில மருத்துவ குணமுள்ள காளான்களை, வேதிச்சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் அழுத்தத்தை எதிர்ப்பதற்குப் பயன்படுத்த ஜப்பான் அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. வேதிச்சிகிச்சை-தூண்டிய குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல் (CINV) பொதுவானதாகும். ஆனால் குறைவான எமெட்டோஜெனிக் வேதிச்சிகிச்சைப் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த வாந்தியடக்கிகள் சமீப காலங்களில் இடர்பாடுகளைக் குறைப்பதாக இருக்கின்றன. மூளையில் வாந்தியெடுத்தல் உணர்வு மையத்தைத் தூண்டிவிடுதல் விளைவாக உதரவிதானம், உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூளை நரம்புகள் மற்றும் இரையகக்குடலியத் தசைகள் ஆகியவற்றில் இருந்து பிரதிசெயல்களின் சேர்க்கை, சுவாசித்தலில் தடையை உருவாக்குவது மற்றும் வயிற்றுப் பொருட்களின் கட்டாயமான வெளியேற்றம், குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல் என அறியப்படுகிறது. வாந்தியெடுத்தல் உணர்வு மையமானது, வேகல் மற்றும் உள்ளுறுப்பிய நரம்புகள், தொண்டை, பெருமூளைப் புறணி, காலினார்ஜிக் மற்றும் வெஸ்டிபுபார் மண்டலத்தில் இருந்து திசுநீர்த்தேக்கித் தூண்டல் ஆகியவற்றிலிருந்து உட்செல்லும் நரம்பு மற்றும் வேதியல் உணர்வு ஏற்பித் தூண்டல் மண்டலத்தில் (CTZ) இருந்து வெளிச்செல்லும் நரம்பு ஆகியவை மூலமாக நேரடியாகத் தூண்டுகிறது. CTZ வரம்புப் பின்பரப்பு, வெளிப்புற இரத்த-மூளைத் தடை ஆகியவற்றில் இருக்கிறது. ஆகையால் இது இரத்தத்தில் இருக்கும் பொருட்கள் அல்லது பெருமூளைச் சிரை முதுகுத்தண்டு சார்ந்த திரவத்தால் தூண்டப்பட்டு எளிதில் பாதிக்கப்படுகிறது. நரம்பியப்பரிமாற்றிகள் டோபாமைன் மற்றும் செரோடோனின் ஆகியவை CTZ ஐத் தூண்டுவதன் மூலமாக மறைமுகமாக வாந்தியெடுத்தல் உணர்வு மையத்தைத் தூண்டுகிறது. 5-HT மட்டுப்படுத்திகள் மிகவும் செயல்திறன் மிக்க வாந்தியடக்கிகள் ஆகும். புற்றுநோயுடன் கூடிய நோயாளிகளில் குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தலை நிர்வகித்தலில் ஒரே சிறந்த முன்னேற்றத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த மருந்துகள் குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தலின் ஒன்று அல்லது பல சமிக்ஞைகளை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வேதிச்சிகிச்சைக்குப் பிறகு முதல் 24 மணி நேரங்களின் போது தோன்றும் மிகவும் உணர்ச்சி மிகுந்த சமிக்ஞை 5-HT ஆகும். 5-HT சமிக்ஞையைத் தடுத்தல் தீவிரமான வாந்தி (வாந்தியெடுத்தல்) அல்லது வாந்தியில் தீவிரத்தன்மையைத் தடுப்பதற்கு ஒரு அணுகுமுறை ஆகும். ஆனால் ஒப்பிடுகையில் குறைந்த-காலமே நீடிக்கும். அங்கீகரிக்கப்பட்ட 5-HT மட்டுப்படுத்திகள் டோலசெட்ரோன் (ஆன்சிமெட்), கிரானிசெட்ரோன் (கைட்ரில், சான்குசோ) மற்றும் ஓன்டன்செட்ரோன் (ஜோஃப்ரன்) உள்ளடக்கியவை ஆகும். புதிய 5-HT மட்டுப்படுத்தி, பேலோனோசெட்ரோனும் (அலோக்சி) சிகிச்சைக்குப் பிறகு 2-5 நாட்களில் ஏற்படும் தாமதமான குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தலைத் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கிரானிசெட்ரோன் டிரான்ஸ்டெர்மால் ஒட்டு (சான்குசோ) 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் FDAவினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒட்டு வேதிச்சிகிச்சைக்கு 28-48 மணி நேரங்களுக்கு முன்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் வேதிச்சிகிச்சைக்குரிய முறையில் காலத்தைச் சார்ந்து 7 நாட்கள் வரை நீடிக்கலாம். புற்றுநோய் நோயாளிகளுக்கான குமட்டுதலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு மருந்து 2005 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. சப்ஸ்டேன்ஸ் P மட்டுப்படுத்தி அப்ரிபிட்டண்ட் (எமண்ட் என குறிக்கப்படுகிறது) ஆனது புற்று நோய் வேதிச்சிகிச்சையில் குமட்டுதலை செயல்திறனுடன் கட்டுப்படுத்தியது கண்டறியப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இரண்டு நீண்ட சோதனைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டவர்களில் இந்த மருந்தின் உச்சவினை விவரிக்கப்பட்டிருந்தது. சில ஆய்வுகள் மற்றும் நோயாளிக் குழுக்கள், வேதிச்சிகிச்சையின் போது மாரிஜுவானாவில் இருந்து உருவாக்கப்பட்ட கன்னாபினாய்டுகளின் பயன்பாடு பெருமளவு குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தலைக் குறைக்கின்றன மற்றும் நோயாளியினால் உணவு உட்கொள்ளவும் முடிந்தது என வாதிடுகின்றனர். மாரினோல் போன்ற மாரிஜூவானாவின் (டெட்ராஹைட்ரோகன்னாபினால் அல்லது THC) இயக்கப் பொருளின் சில செயற்கை வழிப் பொருள்கள் இந்தப் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தலாம். மருத்துவ குணமுள்ள கஞ்சா என அறியப்படும் இயற்கையான மாரிஜூவானாவும் சில ஆன்காலஜிஸ்டுகளால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் இதன் பயன்பாடு உலகம் முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது மற்றும் சட்ட விரோதமானதாக இருக்கிறது. வெற்றிகரமான வேதிச்சிகிச்சை மற்றும்/அல்லது கதிரியக்கச் சிகிச்சைக்கு பிறகு இரண்டாம்நிலை புதியத்திசு வளர்ச்சியின் முன்னேற்றம் ஏற்படுவதைக் காணலாம். மிகவும் பொதுவான இரண்டாம்நிலை புதியத்திசு வளர்ச்சி என்பது இரண்டால்நிலை தீவிரமான மைலாய்டு லியுகெமியா ஆகும். இது முதன்மையாக சிகிச்சைக்குப் பிறகு ஆல்கைலேற்று பொருள் அல்லது டோபோய்சோமரேஸ் மட்டுப்படுத்திகளுடன் மேம்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து இரண்டாம்நிலை புதியத்திசு வளர்ச்சி ஏற்படுதல் நிகழ்வுகள், பொதுவான மக்கள்தொகையில் 13.5 மடங்காக அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பாக நீண்ட லிம்போமாக்கள் போன்ற பெரிய கட்டிகளில், சில நோயாளிகளுக்கு புற்றுத்திசு செல்களின் துரிதமான உடைப்பினால் கட்டிச் சிதைவு நோய்க்குறி உருவாகலாம். பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் புரொபைலாக்சிஸ் கிடைத்த போதும் இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அபாயகரமான பக்க விளைவுகளைக் கொண்டதாக இருக்கிறது. வலி, தோல் சிவந்து விடுதல் (எர்த்மா), உலர்ந்த சருமம், சேதமடைந்த விரல் நகங்கள், உதடு உலர்ந்து விடுதல் (செரோஸ்டோமியா), நீர்ப்பிடிமானம் மற்றும் இனப்பெருக்கத் திறனற்ற நிலை உள்ளிட்டவை குறைவாகக் காணப்படும் பொதுவான பக்க விளைவுகள் ஆகும். சில மருந்துகள் ஒவ்வாமை அல்லது போலி ஒவ்வாமை விளைவுகளைத் தூண்டலாம். சில நோயாளிகளுக்கு களைப்பு அல்லது கவனிக்க இயலாமை போன்ற குறிப்பிட இயலாத நரம்புப் புலனுணர்வு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்; இது சில நேரங்களில் பின்-வேதிச்சிகிச்சை புலன் சார்ந்த வலுக்குறை என அழைக்கப்படுகிறது. இது நோயாளிகள் குழக்களால் "வேதி மூளை" எனக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட வேதியியல் உணர்வி மருந்துகள் உறுப்பு-சார்ந்த நச்சுத்தன்மையுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. அவை இதயகுழலிய நோய் (எ.கா., டோக்சோரூபிசின்), இடைத்திசு நுரையீரல் நோய் (எ.கா., பிலியோமைசின்) மற்றும் எப்போதாவது இரண்டாம்நிலை புதியத்திசு வளர்ச்சி (எ.கா., ஹாப்கின்சின் நோய்க்கான MOPP சிகிச்சை) ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும். நுட்பப் பகுப்பாய்வு நுட்பப் பகுப்பாய்வு என்பது, கடந்த காலச் சந்தைத் தரவுகளை ஆய்வு செய்து அதிலிருந்து எதிர்காலப் போக்குகளை முன்கணிக்கும் ஒரு பங்குப் பகுப்பாய்வுத் துறையாகும், இதில் குறிப்பாக விலை மற்றும் அளவு ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன. நுட்பப் பகுப்பாய்வின் கொள்கையானது நிதிச் சந்தைகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆய்வு செய்து அதிலிருந்து உருவாகிறது. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஓம்மா முனேகிசா (Homma Munehisa) உருவாக்கிய ஒரு முறையே நுட்பப் பகுப்பாய்வுக்கான பழைய, நன்கறியப்பட்ட எடுத்துக்காட்டாகும். அதுவே பின்னர் நீள்குச்சி நுட்பமாக மாறியது. மேலும் இப்போது அதுவே முதன்மையான விளக்க வரைப்படக் கருவியாக(நுட்பம்) உள்ளது. டௌ கோட்பாடானது (Dow Theory), சார்லசு டௌவின் (Charles Dow) சேகரிக்கப்பட்ட எழுத்துப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் டௌ இச்சோன்சின் இணை நிறுவுநரும் ஆசிரியருமாவார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அவரே நவீன நுட்பப் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான தூண்டலாக விளங்கினார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்களுக்கே உரித்தான நுட்பங்களை உருவாக்கிய ரால்ஃப் நெல்சன் எலியட் (Ralph Nelson Elliott) மற்றும் வில்லியம் டெல்பெர்ட் கேன் (William Delbert Gann) ஆகியோரே பகுப்பாய்வு நுட்பங்கள் துறையின் பிற முன்னோடிகள் எனக் கூறலாம். சமீபத்திய பத்தாண்டுகளில் பல நுட்பவியல் கருவிகள் மற்றும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை அதிகமாக கணினி-உதவி கொண்ட நுட்பங்களையே மையமாகக் கொண்டுள்ளன. நுட்பப் பகுப்பாய்வாளர்கள் நிதிச் சந்தைகளில் நிலவும் விலை அமைப்புகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றைக் கண்டறிய முயற்சித்து, அந்தப் போக்குகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். வல்லுநர்கள் பல்வேறு முறைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தினாலும், விலை விளக்க வரைபடங்கள் ஆய்வு மிகவும் முக்கியமானதாகும். வல்லுநர்கள் குறிப்பாக உச்சி தாழ் உச்சி (head and shoulders) எனப்படும் போக்கு அல்லது இருமுறை உச்சமடைந்து பின்வாங்கல் (double top reversal) போக்கு, ஆய்வுக் காட்டிகளான நகரும் சராசரிகள், வரைபடத்தில் பங்குகளின் ஆதார நிலைகளை தேடுகின்றனர். மேலும் ஆதரவுகள், பங்குகள் குறிப்பிட்ட விலையை தாண்ட இயலாநிலை, பங்குகள் உச்சிக்கும் தாழ்வுநிலைக்கும் செல்லும் இடைபட்ட பகுதி மற்றும் எச்சரிக்கை கொடிகள், தொடர் போக்கு அல்லது சமநிலை தினங்கள் போன்ற தெளிவற்ற வடிவாக்கங்களையும் ஆய்வு செய்கின்றனர். நுட்பப் பகுப்பாய்வாளர்கள் விலை அல்லது அளவின் (பங்கு கைமாறும் அளவு) கணிதவியல் வடிவ மாற்றங்களான காட்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த காட்டிகள் ஒரு சொத்தின் விலையானது ஏதேனும் ஒரு போக்கின் படி உள்ளதா என்பதையும், அவ்வாறிருப்பின் அதன் திசையையும் தீர்மானிக்க உதவுகின்றன. வல்லுநர்கள் விலை, அளவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்கின்றனர். எடுத்துக்காட்டுகளாக ஒப்புமை வலிமைக் குறியீடு மற்றும் எம் எ சி டி ஆகியவற்றைக் கூறலாம். தெரிவுகள் (வெளிப்படுத்தப்பட்ட மாறும் தன்மை) மற்றும் விலையுடனான வைத்தல்/அழைத்தல் விகிதங்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள உடன் தொடர்புகள் இத்துறையின் பிற பகுதிகளாகும். பிற வல்லுநர்கள் தங்கள் பகுப்பாய்வில், வைத்தல்/அழைத்தல் விகிதங்கள் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட மாறும் தன்மை போன்ற உணர்வுபூர்வமாக விரும்பும் காட்டிகளையும் சேர்த்துக்கொள்கின்றனர். வெற்றிகரமான வர்த்தகங்களின் எண்ணிக்கை நட்டத்திலியங்கும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வல்லுநர்கள் விலை நகர்வை முன்கணிக்க முயற்சிக்கின்றனர். முறையான இடர் கட்டுப்பாடு மற்றும் பண மேலாண்மை ஆகியவை பின்பற்றப்படும்பட்சத்தில் பங்குகள் சிறந்த பலன்களை கொடுக்கும். நுட்பப் பகுப்பாய்வுக்கான பல கோட்பாடுகள் உள்ளன. பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் (காட்டாக, நீள்குச்சி விளக்க வரைபட்ம், டௌ கோட்பாடு மற்றும் எலியட் அலைக் கோட்பாடு) பிற அணுகுமுறைகளைப் புறக்கணிக்கலாம். இருப்பினும் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளிலிருந்து தேவையான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நுட்பப் பகுப்பாய்வாளர்கள் கொடுக்கப்பட்ட கால அளவிற்கு ஒரு குறிப்பிட்ட கருவியானது எந்த வகையான சீரான அமைப்பினைக் காண்பிக்கிறது என்பதை முடிவு செய்ய தனது கடந்த கால அனுபவத்தினைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நுட்பப் பகுப்பாய்வு பெரும்பாலும் "அடிப்படைப் பகுப்பாய்விலிருந்து" வேறுபடுத்தப்படுகிறது. அடிப்படைப் பகுப்பாய்வு என்பது நிதி சந்தைகளில் விலைகளைப் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் காரணிகள் பற்றிய ஆய்வாகும். நுட்பப் பகுப்பாய்வு முதலீட்டாளர்கள் உணரும் முன்னதாகவே, அது போன்ற விலைகள் காண்பிக்கின்றன என்ற கருத்தியலைக் கொண்டுள்ளது. ஆகவே இது விலையின் செயலைப் பற்றிய ஆய்வு மட்டுமே என்றும் கூறலாம். சில வர்த்தகர்கள் நுட்ப அல்லது அடிப்படைப் பகுப்பாய்வை தனிப்பட பயன்படுத்துகின்றனர், அதே நேரம் பிறர் வர்த்தக ரீதியான முடிவுகளை எடுக்க இரண்டையும் பயன்படுத்துகின்றனர். நுட்பப் பகுப்பாய்வைப் பயன்படுத்துபவர்கள் சந்தை வல்லுநர்கள் என அழைக்கப்படுகின்றனர். சிலர் நுட்ப சந்தை பகுப்பாய்வாளர் அல்லது சந்தைப் பகுப்பாய்வாளர் என்ற சொல்லைப் பரிந்துரைக்கின்றனர். விளக்க வரைபட வல்லுநர் என்னும் பழைய சொல்லானது சில நேரம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்தத் துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கத்தின் காரணமாக அந்த சொல்லைப் பயன்படுத்துவது அரிதாகிவிட்டது. நுட்பப் பகுப்பாய்வானது, ஒப்பு வலிமை காட்டி, நகரும் சராசரிகள், தொடர்புப்போக்குகள், சந்தைகளுக்கிடையேயான மற்றும் சந்தைக்குள்ளான விலை உடன் தொடர்புகள், சுழற்சிகள் போன்ற விலை மற்றும் அளவு மாற்றங்களின் அடிப்படையிலான மாதிரிகள் மற்றும் வர்த்தக விதிகளைப் பயன்படுத்துகிறது. சிறப்பாகக் கூறினால் விளக்கப்பட அமைப்புகளின் புரிதலைக் கொண்டு அமைகிறது எனலாம். நுட்பப் பகுப்பாய்வானது, கடனீடுகள் மற்றும் இருப்புப் பகுப்பாய்வுகளுக்கான அடிப்படைப் பகுப்பாய்வின் அணுகுமுறைக்கு மாறானதாக உள்ளது. நுட்பப் பகுப்பாய்வு, நிறுவனம், சந்தை, நாணயம் அல்லது சரக்கு ஆகியவற்றின் உண்மையான இயல்பை "புறக்கணிக்கிறது", மேலும் அது வெறுமென "விளக்கப்படங்களை" மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது, அதாவது விலை மற்றும் அளவு ஆகியவை. ஆனால் அடிப்படைப் பகுப்பாய்வானது நிறுவனம், சந்தை, நாணயம் அல்லது சரக்கு ஆகியவற்றின் உண்மையான இயல்பைக் கருத்தில் கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஏதேனும் ஒரு பெரிய தரகு அல்லது வர்த்தகக் குழு அல்லது நிதி நிறுவனம் வழக்கமாக நுட்பப் பகுப்பாய்வு மற்றும் அடிப்படைப் பகுப்பாய்வு ஆகிய இரண்டு அணியையும் கொண்டிருக்கும். Technical analysis stands in contrast to the fundamental analysis approach to security and stock analysis. Technical analysis "ignores" the actual nature of the company, market, currency or commodity and is based solely on "the charts," that is to say price and volume information, whereas fundamental analysis does look at the actual facts of the company, market, currency or commodity. For example, any large brokerage, trading group, or financial institution will typically have both a technical analysis and fundamental analysis team. நுட்பப் பகுப்பாய்வானது வர்த்தகர்கள், தொழில்முறை வல்லுநர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரும்பாலும் செயல்மிகு தினசரி வர்த்தகர்கள் மற்றும் சந்தை ஆக்குநர்கள் மற்றும் டீலர்களால் பயன்படுத்தப்படுகிறது. 1960கள் மற்றும் 1970களில் கல்வியாளர்களால் அது பெரிதும் நிராகரிக்கப்பட்டது. சமீபத்திய ஒரு மறுஆய்வில், இர்வின் மற்றும் பார்க் நிறுவனங்கள் 95 நவீன ஆய்வுகளில் 56 ஆய்வுகள் அது நேர்மறை விளைவுகளை வழங்குவதாகக் கண்டறிந்துள்ளன. ஆனால் தரவு வேவு போன்ற விவகாரங்களால் அதன் நேர்மறை விளைவுகள் சந்தேகத்திற்குரியனவாக இருப்பதும் கவனிக்கப்பட்டுள்ளது. ஆகவே நுட்பப் பகுப்பாய்வுக்கு ஆதரவான ஆதாரங்கள் ஒரு முடிவை வழங்குவனவாக இல்லை. இன்றும் பல கல்வியாளர்கள் அதைப் போலி அறிவியல் எனக் கருதுகின்றனர். நுட்பப் பகுப்பாய்வுக்கான ஆதாரம் திடமானதாக இல்லை, மேலும் அது செயல்திறன் சந்தைக் கருத்தியலின் "பலவீனமான வடிவத்தில்" இசைவற்றதாகவும் உள்ளது என ஐகன் ஃபாமா (Eugene Fama) போன்ற கல்வியாளர்கள் கூறுகின்றனர். நுட்பப் பகுப்பாய்வானது எதிர்காலத்தை முன்கணிக்கும் திறனற்றது எனில், அது வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என பயனர்கள் கருதுகின்றனர். echnical analysis is widely used among traders and financial professionals, and is very often used by active day traders, market makers, and pit traders. In the 1960s and 1970s it was widely dismissed by academics. In a recent review, Irwin and Park[5] reported that 56 of 95 modern studies found it produces positive results, but noted that many of the positive results were rendered dubious by issues such as data snooping so that the evidence in support of technical analysis was inconclusive; it is still considered by many academics to be pseudoscience.[6] Academics such as Eugene Fama say the evidence for technical analysis is sparse and is inconsistent with the weak form of the efficient market hypothesis.[7][8] Users hold that even if technical analysis cannot predict the future, it helps to identify trading opportunities.[9] அந்நியச் செலாவணி சந்தைகளில், அடிப்படைப் பகுப்பாய்வை விடவும் இதன் பயன்பாடு பரவலாக உள்ளது. சில தனித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் நுட்ப வர்த்தக விதிகள் 1987 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் இசைவான இலாபங்களுக்கு வழிவகுத்திருக்கலாம் என அறிவிக்கின்றன, பெரும்பாலான கல்வியியல் பணிகள் அந்நியச் செலாவணி சந்தையின் அசாதாரணமான நிலையில் மட்டுமே கவனம் செலுத்தின. இதற்கு மத்திய வங்கியின் தலையீடே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சி, வெவ்வேறு வர்த்தக அறிகுறிகளை தொகுக்கப்பட்ட வர்த்தக அறிகுறியாகப் பயன்படுத்தும் அணுகுமுறை, இலாபத் தன்மையை அதிகரிக்கவும் ஏதேனும் ஓர் ஒற்றை விதியைச் சார்ந்திருக்கும் அளவைக் குறைக்கவும் உதவும் என பரிந்துரைக்கிறது.. In the foreign exchange markets, its use may be more widespread than fundamental analysis.[10][11] While some isolated studies have indicated that technical trading rules might lead to consistent returns in the period prior to 1987,[12][13][14][15] most academic work has focused on the nature of the anomalous position of the foreign exchange market.[16] It is speculated that this anomaly is due to central bank intervention.[17] Recent research suggests that combining various trading signals into a Combined Signal Approach may be able to increase profitability and reduce dependence on any single rule.[18]. ஒரு சந்தையின் விலை அதனுடன் தொடர்புடையை அனைத்து விவரங்களையும் காண்பிக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர், ஆகவே அவர்களின் பகுப்பாய்வானது புதிய நிகழ்வுகள் போன்ற "அக அம்சங்களைக்" காட்டிலும் பெரும்பாலும் "அக அம்சங்களில்" அதிக கவனம் செலுத்துகிறது. விலை செயல்பாடுகளும், முதலீட்டாளர்கள் மொத்தமாக சீரமைப்பை நோக்கிய போக்கைக் கொண்டுள்ளதால் மீண்டும் மீண்டும் நிகழும் போக்கைக் கொண்டுள்ளன – இதனால் வல்லுநர்கள் கண்டறியக்கூடிய வகையிலான போக்குகள் மற்றும் நிலைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தொடர்புடைய அனைத்து தகவல்களும் விலைகளால் முன்னரே உணர்த்தப்பட்டவை என்ற கூற்றின் அடிப்படையில், அடிப்படைப் பகுப்பாய்வைச் செய்வது தேவையற்றது என பிரத்யேக நுட்பப் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர் – செய்திகளும் செய்தி நிகழ்வுகளும் விலையை அதிகமாக பாதிப்பதில்லை என அவர்கள் கூறுகின்றனர். மேலும் கட்லர் போட்டெர்பா மற்றும் சம்மர்ஸ் ஆகியோரின் "வாட் மூவ்ஸ் ஸ்டாக் ப்ரைசஸ்?" என்னும் ஆராய்ச்சிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். மிக அதிகமாகப் பெரிய இலாபமிக்க நாட்களில் [பெரிய சந்தை நகர்வில்]...சந்தையின் நகர்வுக்குக் காரணமாக பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் தகவல்கள் அவ்வளவு முக்கியமல்ல. அதற்கடுத்த நாள்களிலான பத்திரிகை அறிக்கைகளும் எதிர்கால இலாபங்கள் அல்லது தள்ளுபடி வீதங்கள் எதனால் மாறக்கூடும் என்பதைக் கண்டுபிடித்துக் கூறுவதில் தோல்வியடைகின்றன. இந்தக் குறிப்பிடத்தக்க சந்தையின் நகர்வுக்கான காரணமாக அமைந்திருக்கும் அடிப்படை அதிர்ச்சிகளைக் கண்டறியவதற்கான திறன் நமக்கு இல்லை. இதனால் இது போன்ற அதிர்ச்சிகள் இருப்பு இலாபங்களிலான மாற்றங்களின் பெரும்பாலானவற்றுக்குக் காரணமாக அமைகின்றன எனும் கருத்தின் அடிப்படையில் இணக்கமாக உதவுவது கடினமாகிறது. நுட்பப் பகுப்பாய்வாளர்கள் விலைகளுக்கு ஒரு போக்கு உள்ளது என நம்புகின்றனர். வல்லுநர்கள், சந்தையானது உயரும், இறங்கும் அல்லது பக்கவாட்டில் (தட்டையானது) நகரும் போக்கைக் கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர். விலை போக்குகளுக்கான இந்த அடிப்படை வரையறையே டவ் கோட்பாட்டில் முன்வைக்கப்படும் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2002 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரையில் காணப்பட்ட AOL நிறுவனத்தின் போக்கானது, கடனீடுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கை அறிந்திருக்கும் ஒரு நுட்பப் பகுப்பாய்வாளர் அல்லது போக்கு கண்காணிப்பாளர் இந்த கடனீடுகளை விற்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். AOL இன் பங்குகளின் விலை தொடர்ந்து கீழ் நோக்கி சரிந்து வருகிறது. பங்குகள் உயரும் ஒவ்வொரு முறையும், விற்பனையாளர்கள் சந்தையில் நுழைந்து பங்குகளை விற்பார்கள். இதனாலேயே விலையில் இந்த "ஜிக்-ஜாக்" நகர்வு காணப்படுகிறது. "தாழ் உயர்வுகள்" மற்றும் "தாழ் இறக்கங்கள்" ஆகியவற்றின் வரிசை ஒரு பங்கானது கீழ் நோக்கி சரிகிறது என்பதைக் கூறாமல் கூறுகிறது. வேறுவிதமாகக் கூறுவதானால், பங்கானது விளிம்பு வரை இறங்கும் ஒவ்வொரு முறையும் அதன் முந்தைய ஒப்பீட்டு விலையிலிருந்து இன்னும் கீழே இறங்குகிறது. பங்கானது உயரும் ஒவ்வொரு முறையும் அதன் முந்தைய ஒப்பீட்டு உயர் விலையை அது அடைய முடியாது. இந்தத் தாழ் இறக்கங்கள் மற்றும் தாழ் உயர்வுகள் ஆகியவற்றின் தொடர்நிகழ்வு ஆகஸ்டு வரையில் நிகழவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பின்னர் AOL அந்த மாதத்தில் இருந்த ஒப்பீட்டில் குறைவான விலையை விட குறைவாக இல்லாதபடி விலையைக் குறைத்தது. அதே மாதத்தின் பிற்பகுதியில், மிகவும் சமீபத்திய ஒப்பீட்டு உயர் மதிப்பிற்கு சமமாக பங்குகளின் விலை அடையப்பெற்றது. இதில் ஒரு வல்லுநர், சரியும் போக்கானது சிறிதளவு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளை உணர்ந்து இந்த நிலையில் தொடர்ந்து பங்குகளை விற்பதை நிறுத்துவார். மொத்த முதலீட்டாளர்களின் தொகுதியானது, அவர்களுக்கு முன்பிருந்த முதலீட்டாளர்களின் அதே நடத்தையையே பின்பற்றுகின்றனர் என நுட்பப் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர். "அனைவரும் மைக்ரோசாஃப்ட்டுக்கு அடுத்ததாக இது வர வேண்டும் என விரும்புவர்," "இந்த பங்கு மீண்டும் 50 டாலர் விலையை அடைந்தால் அதை வாங்குவேன்" "இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் அதன் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும், பின்னர் இதன் பங்குகள் ராக்கெட் வேகத்தில் விலையேறும்" – இவை அனைத்தும் ஒரு சாமானிய முதலீட்டாளர் கொண்டிருக்கும் செண்டிமெண்ட்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒரு வல்லுநருக்கு, சந்தையில் இது போன்ற உணர்ச்சிகரமான போக்கு பகுத்தறிவற்றதாகத் தோன்றலாம், ஆனால் அவை இருக்கின்றன. அவ்வப்போது முதலீட்டாளர்களின் குணங்கள் மீண்டும் திரும்ப நிகழும்படி இருப்பதால், கண்டறியக்கூடிய (மற்றும் முன்கணிக்கக்கூடிய) தன்மை கொண்ட சீராக அமையக்கூடிய விலை அமைப்புகளைக் கொண்டு ஒரு விளக்கப்படத்தை உருவாக்க முடியும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். நுட்பப் பகுப்பாய்வு என்பது விளக்கப்படத்துடன் முடிந்துவிடுவதில்லை, அது எப்போதும் விலைப் போக்குகளை கருத்தில் கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, பல வல்லுநர்கள் முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட்கள் பற்றிய கணக்கெடுப்பைக் கண்காணிக்கின்றனர். இந்தக் கணக்கெடுப்புகள் சந்தையின் பங்கேற்பாளர்கள் எதிர்மறை மனப்போக்கு கொண்டவர்களா அல்லது நேர்மறை மனப்போக்கு கொண்டவர்களா என அவர்களின் மனப்போக்கை ஊகிக்கிறது. ஒரு போக்கானது தொடருமா அல்லது எதிர்திசையில் மாறக்கூடுமா என்பதைத் தீர்மானிக்க உதவியாக வல்லுநர்கள் இந்தக் கணக்கெடுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கணக்கெடுப்புகள் அதிக அளவிலான முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட்டுகளைக் காண்பித்தால் அவர்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதே வழக்கம். அதீத நேர்மறை மனப்போக்குகள் இருப்பதாகக் கூறும் கணக்கெடுப்புகள், எடுத்துக்காட்டுக்கு ஒரு உயரும் போக்கு மீண்டும் எதிர்திசையில் செல்லலாம் என்பதற்கான ஆதாரங்களாகும் முதலீட்டாளர்கள் அதிக நேர்மறை மனப்போக்கு கொண்டிருப்பவர்கள் எனில் அவர்கள் (அதிக விலையை எதிர்பார்த்து) மொத்த சந்தையையும் வாங்கியிருப்பார்கள் என்பதே இங்கு கருத்தாகும். மேலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் நேர்மறையான மனப்போக்குடையவர்களாக "உள்ளனர்", மேலும் அவர்கள் முதலீடு செய்தும் உள்ளனர், வாங்குவதற்கு இன்னும் சிலரே இருப்பதாக ஒருவர் கருதலாம். இது நேர்மறை செண்டிமெண்ட் இருப்பினும் வாங்குபவர்களைக் காட்டிலும் விற்பவர்களே அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கும். இது விலையானது சரியும் போக்கைக் கொண்டிருக்கும் எனப் பரிந்துரைக்கிறது, மேலும் இது முதலீட்டாளர் வர்த்தகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுமாகும். உலகளவில், நுட்பப் பகுப்பாய்வாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFTA) இந்தத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்காவில், தேசிய அளவிலான இரண்டு அமைப்புகள் உள்ளன: சந்தை வல்லுநர்கள் சங்கம் (MTA) மற்றும் தொழில்முறை நுட்பப் பகுப்பாய்வாளர்களின் அமெரிக்க சங்கம் (AAPTA). அமெரிக்காவும் சான் ஃபிரான்சிஸ்கோவின் நுட்பக் கடனீடு பகுப்பாய்வாளர்களின் சங்கத்தினால் (TSAASF) பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில், இந்தத் துறைக்காக நுட்பப் பகுப்பாய்வாளர்களின் அமைப்பு (STA) உள்ளது. கனடாவில் இந்தத் துறைக்கென நுட்பப் பகுப்பாய்வாளர்களின் கனடிய அமைப்பு உள்ளது. கூடுதல் பிரதான தொழில்முறை நுட்பப் பகுப்பாய்வு அமைப்புகள், கீழே உள்ள புற இணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. தொழில்முறை நுட்பப் பகுப்பாய்வு அமைப்புகள், நுட்பப் பகுப்பாய்வுத் துறையினை விவரிக்கும் அறிவு ஆணையத்தை உருவாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. நுட்பப் பகுப்பாய்வு எவ்வாறு மற்றும் எப்படி செயல்படக்கூடும் என்பதை வரையறுக்கும் விதமாக இந்தத் துறையின் மையமாக இந்த அறிவு ஆணையம் விளங்கும். முறையான ஆராய்ச்சிகள் மற்றும் துறைக்கான தரநிலைகளை உருவாக்குவதில் கல்வியாளர்களுக்கும் ஒழுங்குபடுத்து அமைப்புகளுக்கும் அது பயன்படக்கூடும். சந்தை வல்லுநர்கள் சங்கம் (MTA) ஒரு அறிவுக் களஞ்சியத்தை வெளியிட்டுள்ளது, மேலும் நுட்பப் பகுப்பாய்வாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் நிப்பான் நுட்பப் பகுப்பாய்வு சங்கம் ஆகியவை அறிவுக்களஞ்சியப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி அல்ல்து சரக்குகள் சந்தைகளில், போக்கின் திசையிலேயே வர்த்தகம் செய்வது என்பது மிகவும் செயல்திறன் வாய்ந்த வழியாக இருக்கும் என பல வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஜான் டபள்யு. ஹென்ரி (John W. Henry), லாரி ஹைட் (Larry Hite), எட் செய்கோட்டா (Ed Seykota), ரிச்சர்ட் டென்னிஸ் (Richard Dennis), வில்லியம் எக்கார்ட் (William Eckhardt), விக்டர் ஸ்பெரேண்டியோ (Victor Sperandeo), மைக்கேல் மார்க்கஸ் (Michael Marcus) மற்றும் பால் டுடோர் ஜோன்ஸ் (Paul Tudor Jones) (ஜாக் டி. ஸ்வேஜெர் எழுதிய மார்கெட் விசார்டுகள் (Market Wizards) என்னும் பிரபலமான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தை வழிகாட்டிகள் என அழைக்கப்படுபவர்களில் சிலர்) நுட்பப் பகுப்பாய்வு மற்றும் அதன் கருத்துகளைப் பயன்படுத்தி அதிக அளவு வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஒரு நுட்பப் பகுப்பாய்வாளரான ஜியார்ஜ் லேன் (George Lane), வால் ஸ்ட்ரீட்டில் "த ட்ரெண்ட்ஸ் இஸ் யுவர் ஃப்ரெண்ட்!" என்னும் ஒரு பிரபலமான வாக்கியத்தைப் பயன்படுத்தியிருந்தார். பல முதலீடற்ற வழிமுறை வர்த்தக அமைப்புகள் போக்கைப் பின்பற்றுதல் என்னும் கருத்தையே சார்ந்துள்ளன. பல பாதுகாப்பு நிதியிலும் இவ்வாறே நிகழ்கிறது. ஆராய்ச்சி மற்றும் தொழிற்துறை ஆகிய இரண்டிலும் ஒப்பீட்டில் சமீபத்திய போக்கு உருவாகியுள்ளது. அதன் படி மிகவும் மேம்பட்ட தானியங்கு வர்த்தக உத்திகள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் நுட்பப் பகுப்பாய்வு கொள்கைகளையே சார்ந்துள்ளன (மேலோட்டப் பார்வைக்கு வழிமுறையியல் வர்த்தகம் என்னும் கட்டுரையைக் காண்க). முதல் பயன்படுத்தத்தக்க வகைகள் உருவான 1990களின் முற்பகுதியிலிருந்து, செயற்கை நரம்பியல் வலையமைப்புகள் (ANNகள்) பிரபலமடைவது அதிகரித்துள்ளது. அவை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் மென்பொருள் அமைப்புகளாகும், அவை உயிரியல் நரம்பமைப்புகள் வேலை செய்யும் விதத்தைப் போன்றே உருவாக்கப்பட்டவை. தரவுகளிலுள்ள சிக்கலான வகையமைப்புகளையும் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் கொண்டவையாக இருப்பதால் அவை பயன்படுத்தப்படுகின்றன. கணிதவியல் ரீதியாக, அவை ஒட்டுமொத்த சார்பு தோராயமாக்கிகளாகும், அதாவது சரியான தரவுகள் கொடுக்கப்பட்டு சரியாக உள்ளமைக்கப்பட்டால், எவ்வகையான உள்ளீடு வெளியீடு தொடர்புகளையும் அவை கண்டறிந்து மாதிரியாக்கம் செய்யக்கூடும். இதனால் விளக்கப்படங்கள் அல்லது நுழைவு/வெளியேற்ற அறிகுறிகளை உருவாக்குவதற்கான தொடர் விதிகள் ஆகியவற்றினைப் புரிந்துகொள்வதில் உள்ள மனித செயல்பாடு அகற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படைப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் மாறிகளை உள்ளீடாகப் பயன்படுத்த முடிவதால் இது அடிப்படைப் பகுப்பாய்வுக்கு ஒரு பாலமாகவும் அமைகிறது. ANNகள் என்பவை கட்டாயமாக நேரியலற்ற புள்ளியியல் மாதிரிகளாக இருப்பதால், அவற்றின் துல்லியத்தன்மை மற்றும் முன்கணிப்புத் திறன்கள் ஆகியவற்றை கணிதவியல் மற்றும் சோதனை முறைகள் ஆகிய இரண்டு வழிகளிலும் சோதிக்க முடியும். பல்வேறு ஆய்வுகளில், பல்வேறு நுட்ப மற்றும் அடிப்படை உள்ளீடுகள் கொடுக்கப்பட்டு வர்த்தக அறிகுறிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நரம்பியல் வலையமைப்புகள், விதிகளின் அடிப்படையிலான வல்லுநர் அமைப்புகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் போது அவை, வாங்குதல்-நிறுத்துதல் உத்திகள் மற்றும் பாரம்பரிய நேரியல் தன்மை கொண்ட நுட்பப் பகுப்பாய்வு முறைகள் ஆகியவற்றை விட சிறப்பாக செயல்படுகின்றன என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இது போன்ற பின்பற்றக்கூடிய முறைகளின் மேம்பட்ட கணிதவியல் இயல்பின் காரணமாக நிதி பகுப்பாய்வுக்கான நரம்பியல் வலையமைப்புகளை கல்விச் சூழலில் மட்டுமே வரம்புப்படுத்தி வைத்துள்ளது, அதே நேரம் சமீபத்திய ஆண்டுகளில் பயனர்க்கெளிதான நரம்பியல் வலையமைப்பு மென்பொருள் உருவாக்கப்பட்ட காரணத்தால் வர்த்தகர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எளிதாகியுள்ளது. இருப்பினும், ஆய்வு செய்யப்படும் சந்தைக்கான சரியான நரம்பியல் வலையமைப்பு பரப்பியலைப் பொருத்துவதில் உள்ள சிக்கலின் காரணமாக, இதன் பெரிய அளவிலான பயன்பாடு சிக்கலானதாகவே உள்ளது. விதி-அடிப்படையிலான வர்த்தகம் என்பது, தெளிவான மற்றும் கண்டிப்பான விதிகளைப் பயன்படுத்தி வர்த்தகத் திட்டங்களை உருவாக்கும் ஓர் அணுகுமுறையாகும். சில பிற நுட்ப முறைகள் மற்றும் அடிப்படைப் பகுப்பாய்வின் அணுகுமுறைகள் போலன்றி, இது தனித்துவ உரிமையைக் குறைந்தபட்சமாகவே வைத்து, அனைத்து வர்த்தகங்களுக்குமான விதிகளின் ஒரு தொகுப்பை வரையறுக்கிறது. ஒரு தனித்துவமான கட்டாய விதிகளைப் பின்பற்றும் போது, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் மோசமான முடிவுகளின் வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதே இந்த அணுகுமுறைக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடாகும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வர்த்தகர் தனது ஒரு குறிப்பிட்ட நிதிக் கருவியின் விலையானது அதன் 50-நாள் நகரும் சராசரியை நெருங்கும் போதெல்லாம் ஒரு அதிகமாக வாங்க வேண்டும், மேலும் அதற்குக் கீழே செல்லும் போதெல்லாம் அதை விற்க வேண்டும் என்று கூறும் ஒரு விதியை உருவாக்கிக்கொள்ளலாம். வல்லுநர்களுக்குக் கிடைக்கக்கூடிய பிரதான தகவல் மூலங்கள் விலை, அளவு மற்றும் திறந்த ஒப்பந்தங்கள் ஆகியவையே ஆகும் என ஜான் மர்ஃபி (John Murphy) கூறுகிறார். காட்டிகள், செண்டிமெண்டல் பகுப்பாய்வு ஆகிய பிற தரவுகள் இரண்டாம்பட்சமானவையாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், பல நுட்பப் பகுப்பாய்வாளர்கள் தூய நுட்பப் பகுப்பாய்வையும் தாண்டி பிற சந்தை முன்கணிப்பு முறைகளையும் தங்கள் நுட்பப் பணிகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். நுட்பப் பகுப்பாய்வு மற்றும் அடிப்படைப் பகுப்பாய்வு ஆகியவற்றின் பிரிப்புக்காக 1980களின் மத்தியில் "பகுத்தறிவியல் பகுப்பாய்வாளர்" என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய ஜான் போலிங்கர் (John Bollinger) இந்த அணுகுமுறையை ஆதரிப்பவர்களில் ஒருவராவார். இதே போன்ற மற்றொரு அணுகுமுறை கலப்பு பகுப்பாய்வாகும் , இது அடிப்படைப் பகுப்பாய்வை நுட்பப்பகுப்பாய்வுடன் சேர்த்து பயன்படுத்துகிறது, சொத்து விவர மேலாளரின் செயல்திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். நுட்பப் பகுப்பாய்வு அவ்வப்போது பருமனறி பகுப்பாய்வுடனும் பொருளியலுடனும் சேர்த்தும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, சந்தைகளிடையேயான தொடர்புகளைக் கண்டறிய நரம்பியல் வலையமைப்புகள் பயன்படுத்தப்படலாம். சில சந்தை முன்கணிப்பாளர்கள் நிதி சோதிடத்தையும் நுட்பப் பகுப்பாய்வுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். 1998 ஆம் ஆண்டின் சிறந்த நுட்பப் பகுப்பாய்வு வெளியீடுக்கான சந்தை வல்லுநர்கள் சங்கம் டவ் விருதைப் பெற்ற, கிரிஸ் கேரலோனின் (Chris Carolan) "ஆட்டம் பேனிக்ஸ் அண்ட் கேலண்டர் ஃபெனாமினான்" என்னும் கட்டுரை நுட்பப் பகுப்பாய்வையும் நிலவின் சுழற்சிப் போக்கையும் எவ்வாறு தொடர்புப்படுத்தலாம் என்பதை விளக்குகிறது. https://www.mta.org/eweb/docs/1998DowAward.pdf] அது பயனற்றது, எனினும் பங்கு சந்தையில் உள்ள ஜனவரி விளைவு போன்ற சில காலண்டர் நிகழ்வுகள், வரி மற்றும் கணக்கியல் தொடர்பான காரணங்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. முதலீட்டாளர் மற்றும் செய்திமடல் வாக்கெடுப்புகள் மற்றும் பத்திரிகைகள் செண்டிமெண்ட் காட்டிகளைப் பற்றி அறிவிக்கின்றன, மேலும் அவற்றை நுட்பப் பகுப்பாய்வாளர்களும் பயன்படுத்துகின்றனர். மேலமைப்புகள் என்பவை பொதுவாக பிரதான விளக்கப்படத்தின் மேலே பொருத்தப்படுகின்றன. இந்தக் காட்டிகள் பொதுவாக பிரதான விலை விளக்கப்படத்திற்கு மேலே அல்லது கீழே காண்பிக்கப்படுகின்றன. நுட்பப் பகுப்பாய்வு என்பது உண்மையில் பயன்படுகிறதா இல்லையா என்பது முரண்பாடு மிக்க விவகாரமாகும். முறைகள் பெரிதளவில் வேறுபடுகின்றன, மேலும் ஒரே தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நுட்பப் பகுப்பாய்வாளர்கள் வெவ்வேறு முன்கணிப்புகளை வழங்கலாம். நேர்மறை விளைவுகளையே பெற்றதாக பல முதலீட்டாளர்கள் கூறுகின்றனர், ஆனால் கல்வி வட்டாரம் இதற்கு சிறிதளவு முன்கணிப்புத் திறனே உள்ளது எனக் கூறுகிறது. தற்கால ஆய்வுகள் அதிக நேர்மறைத் தன்மை கொண்டவையாக இருக்கலாம்: 95 நவீன ஆய்வுகளில் 56 ஆய்வுகள், நுட்பப் பகுப்பாய்வு நேர்மறை விளைவுகளைக் கொடுப்பதாக முடிவுக் கருத்தை வழங்கியுள்ளன. இருப்பினும் தரவு-வேவு பின்னூட்டம் மற்றும் பிற சிக்கல்களால் இந்தப் பகுப்பாவு கடினமானதாக உள்ளது. நரம்பியல் வலையமைப்புகளைப் பயன்படுத்தி செய்யப்படும் நேரியலற்ற முன்கணிப்பு அரிதாக திருப்தியளிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க அளவிலான முன்கணிப்பு விளைவுகளை வழங்கியுள்ளது. குறுகிய கால அந்நிய செலாவணி வீதங்களின் அளவுகளிலுள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றிய ஒரு ஃபெடெரல் ரிசர்வ் பணித்தாள், "ஒரு நாளிலான போக்குக் குறுக்கீடுகளை முன்கணிப்பதற்கு உதவிகரமான வலிமையான ஆதாரத்தை இந்த அளவுகள் வழங்குகின்றன," இருப்பினும் இந்த அளவுகளின் "முன்கணிப்புத் திறன்", "பரிமாற்ற வீதங்கள் மற்றும் ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து மாறுகின்றது" எனக் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின் படி, நுட்ப வர்த்தக உத்திகள் சீன சந்தையிடங்களில் மிகவும் செயல்திறனுடயவையாக காணப்பட்டன, மேலும் "இறுதியாக, 0.50 சதவீத பரிமாற்றச் செலவுக்கு அது காரணமான பின்னர், நாங்கள் நகரும் சராசரி குறுக்குமாற்ற விதி, சேனல் ப்ரேக் அவுட் விதி மற்றும் போலிங்கர் பேண்ட் வர்த்தக விதி ஆகியவற்றின் முரண்பட்ட வகையினால் உருவாக்கப்பட்ட வாங்குதல் போக்கிலான குறிப்பிடத்தக்க நேர்மறை விளைவுகளைக் கண்டுள்ளோம்" என அது கூறுகிறது. நாஜெர் ஜே. பல்சரா, க்ரே சென் அண்ட் லின் ஜெங் த சைனீஸ் ஸ்டாக் மார்க்கெட்: அன் எக்சாமினேஷன் ஆஃப் த ரேண்டம் வாக் மாடல் அண்ட் டெக்னிக்கல் ட்ரேடிங் ரூல்ஸ்" " நுட்பப் பகுப்பாய்வு விமர்சகர்களில் பிரபல அடிப்படைப் பகுப்பாய்வாளர்களும் அடங்குவர். எடுத்துக்காட்டுக்கு, பீட்டர் லின்ச்ச் (Peter Lynch) ஒருமுறை, "கடந்த காலத்தை முன்கணிப்பதற்கு விளக்கபடங்கள் சிறந்தவை" எனக் கூறியுள்ளார். வாரன் பஃபே, "விளக்கப்படங்களை தலைகீழாக வைத்த போது நுட்பப் பகுப்பாய்வு சரியாக வேலை செய்யவில்லை, மேலும் வெவ்வேறு பதிலும் கிடைக்கவில்லை" எனக் கூறியிருந்தார், "கடந்த கால வரலாறு என்பது வெறும் விளையாட்டு என்றால் பணக்கார மனிதர்கள் எல்லாம் இப்போது நூலகர்களாகத்தான் இருந்திருப்பார்கள்" என்றும் கூறியிருந்தார். ப்ரோக் (Brock) மற்றும் பலர் நிகழ்த்திய, மிகவும் பாதிப்பை உண்டாக்கிய 1992 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, 1999 ஆம் ஆண்டில் நுட்ப வர்த்தக விதிகள் தரவு வேவு மற்றும் பிற சிக்கல்களுக்கான சோதனைகளில் வெற்றிபெற்றது என்று ஆதரித்தது; அதன் மாதிரிக்கு ப்ரோக் மற்றும் பலர் பணிபுரிந்தனர், தரவு வேவுக்கு அந்தப் பணி மிகவும் கடினமானதாகும். அதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்டெர்டாம் பொருளியலாளர் ஜெர்வின் க்ரிஃபியோனின் (Gerwin Griffioen) கேள்வியைப் பற்றிய ஒரு பெரும் ஆய்வு பின்வரும் கருத்து முடிவை வழங்கியது: "அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய பங்கு சந்தைக் குறியீடுகளுக்கு, கூடுதல் தன்மை கொண்ட மாதிரியிலிருந்து செய்யப்படும் முன்கணிப்புகள், சிறிய அளவிலான பரிமாற்றச் செலவுகளைப் பின்பற்றிய பின்னர் இலாபகரமானதாக இல்லை. மேலும், CAPMகளை மதிப்பீடு செய்வதன் மூலம், போதிய அளவு அதிக பரிமாற்ற செலவுகளைப் பின்பற்றிய பகுதிகளுக்கு இலாபகரமானதாக அமைந்திருந்ததும் கண்டறியப்பட்டது, அதில் கிட்டத்தட்ட பொத்த பங்கு சந்தைக் குறியீடுகளுக்குமான மாதிரியிலிருந்து எடுக்கப்படும் முன்கணிப்புத் திறன்கள் திருப்திகரமான மற்றும் போதிய இடர் தவிர்ப்பு விளைவுகளை வழங்கவில்லை" எனவும் காண்பிக்கப்பட்டது பரிமாற்றச் செலவுகள் குறிப்பாக "உந்த உத்திகளுக்கே" பொருந்தக்கூடியவை; 1996 ஆம் ஆண்டின், தரவுகள் மற்றும் ஆய்வுகளின் ஒரு பெரிய மறுஆய்வு, குறைந்த பரிமாற்றச் செலவுகளைப் பின்பற்றுவதால் இது போன்ற உத்திகளின் மூலம் போதிய அதீதங்களைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமல் இருந்ததைக் காண்பித்தது. ஜர்னல் ஆஃப் ஃபைனான்ஸில் வெளியிடப்பட்ட ஒரு வெளியீட்டில், MIT லெபாரட்டரி ஃபார் ஃபினான்ஷியல் எஞ்சினீயரிங் நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர். ஆண்டிர்யூ டபள்யூ. லோ (Andrew W. Lo), ஹேரி மமாஸ்கி (Harry Mamaysky) மற்றும் ஜியாங் வாங் (Jiang Wang) ஆகியோருடன் பணிபுரிந்து, ""விளக்கப்படமமைத்தல்," என்றும் அறியப்படும் நுட்பப் பகுப்பாய்வானது, பல தசாப்தங்களாக நிதி நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்து வந்தது, ஆனால் இத்துறை அடிப்படைப் பகுப்பாய்வு போன்ற மிகவும் பாரம்பரியமான அணுகுமுறைகளைப் போன்று கல்வியியல் சோதனைகளில் அவற்றுக்கு இணையான நிலையை அடையவில்லை எனக் கண்டறிந்தனர். இதற்கு நுட்பப் பகுப்பாய்வின் அதிக தற்சார்புடைய இயல்பு ஒரு தடையாக உள்ளது--- இது காண்பவரின் கண்களில் பெரும்பாலும் வரலாற்றில் முன்னர் இருந்த விலை விளக்கப்படங்களின் வடிவியல் வடிவங்கள் நிலைத்திருக்கும் தன்மையைப் பற்றி விளக்குகிறது. இந்த வெளியீட்டில், அளவுருக்களற்ற கெர்னல் பின்னடைதல் முறையைப் பயன்படுத்தும் ஒரு முறையான நுட்ப வகையமைப்பு அறியும் முறையை முன்மொழிகின்றோம், மேலும் பெருமளவிலான அமெரிக்க பங்குகளுக்கு 1962 முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி நுட்பப் பகுப்பாய்வின் விளைவுத்திறனை மதிப்பீடு செய்கிறோம். நிபந்தனையற்ற சோதனை ரீதியிலான பகிர்வை, நிபந்தனைக்குட்பட்ட தினசரி பங்கு இலாபங்களுடன் ஒப்பிடுகையில்---அதாவது ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் அல்லது டபுள் பாட்டம்ஸ் போன்ற குறிப்பிட்ட நுட்ப காட்டிகளில் நிபந்தனைக்குட்பட்டவை---31-ஆண்டு மாதிரிக் காலத்தில், பல நுட்பக் காட்டிகள் கூடுதல் தன்மையுள்ள தகவல்களை வழங்குகின்றன மேலும் அவை சில நடைமுறை மதிப்புகளையும் கொண்டுள்ளன எனக் கண்டறிந்தோம்."" " " அதே வெளியீட்டில், டாக்டர். லோ இவ்வாறு எழுதுகிறார்: "பல கல்வியியல் ஆய்வுகள்...சந்தை விலைகளிலிருந்து மிகப் பயன்மிக்க தகவல்களை எடுப்பதற்கான மிகவும் செயல்திறன் மிக்க வழியாக நுட்பப் பகுப்பாய்வு இருக்கும்"" செயல்திறன் மிக்க சந்தைக் கருத்தியல் (EMH), கடந்த கால விலைகளைப் பயன்படுத்தி எதிர்கால விலைகளை முன்கணிக்க முடியாது எனக் கூறுவதன் மூலம், நுட்பப் பகுப்பாய்வின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து மாறுபடுகிறது. இதனால் நுட்பப் பகுப்பாய்வு செயல்திறன் மிக்கதல்ல என அது கூறுகிறது. பொருளியலாளர் எய்கன் ஃபாமா 1970 ஆம் ஆண்டு "ஜர்னல் ஆஃப் ஃபைனான்ஸில்" EMH பற்றிய கலந்தாய்வு வெளியீட்டை வெளியிட்டார். அதில் "சுருக்கமாக, செயல்திறன் மிக்க சந்தைகளுக்கான ஆதரவாக உள்ள ஆதாரங்கள் பரவலானவை, மேலும் (பொருளாதரத்தில் ஒரு வித தனித்தன்மை கொண்டவை) மேலும் அதற்கு முரணான ஆதாரங்கள் திடமானவை அல்ல" என்று கூறுகிறார். EMH ஆதரவாளர்கள், விலைகளே தேவையான தொடர்புடைய அனைத்து விவரங்களையும் காண்பித்துவிடும் எனில், சந்தையில் பயன்படுத்தப்படும் (நுட்பப் பகுப்பாய்வு உட்பட) எந்த முறையும் "சந்தையை வெல்ல முடியாது" எனக் கூறுகின்றனர். விலைகளைப் பாதிக்கும் மாற்றங்கள் சீரற்ற முறையில் நிகழ்கின்றன, மேலும் அவை முன்னரே அறிய முடியாதவையாக உள்ளன. பெரும்பாலான கல்வியியல் வெளியீடுகள், வர்த்தக செலவுகளைக் கருத்தில்கொண்ட பின்னர், வர்த்தக விதிகள் இலாபகரமானவை அல்ல என அறிவிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, பல முதலீட்டாளர்கள் கடந்த கால ஈட்டுதல்கள் அல்லது தடப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய சந்தை செயல்படும் விதத்தை, EMH புறக்கணிக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். எதிர்கால பங்கு விலைகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்பதால், எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய கடந்தகால விலைகள் பின்பற்றப்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்கள் குறிப்பிடுகின்றனர், நடத்தை நிதியியல் துறையிலான ஆராய்ச்சியையும் குறிப்பாக மக்கள் பகுத்தறிவற்றவர்கள், EMH அவர்களை அவ்வாறு மாற்றுகிறது என்ற கருத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். பகுத்தறிவற்ற நடைத்தைகள் பங்கு சந்தை விலைகளைப் பாதிக்கின்றன, மேலும் அந்த நடத்தைகள் முன்கணிக்கத்தக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கின்றன என வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். நடத்தை நிதியியல் கோட்பாடானது நுட்பப் பகுப்பாய்வின் நடைமுறையில் ஒன்று சேர்கிறது என ஆசிரியர் டேவிட் அரான்சன் (David Aronson) கூறுகிறார்: உணர்ச்சிவசப்படுதல், புலனுணர்வுப் பிழைகள், பகுத்தறிவற்ற முன்னுரிமைகள் மற்றும் குழு நடத்தையின் செயல்கள் ஆகியவற்றின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும் போது, நடத்தை நிதியியலானது அதீத சந்தை மாற்றத்தன்மை மற்றும் தெளிவற்ற தகவல்களால் பெறப்பட்ட அதீத இலாபங்கள் ஆகியவற்றுக்கான விளக்கத்தை சுருக்கமாக உரைக்கிறது... புலனுணர்வுப் பிழைகளும், குறிக்கோள் சார்ந்த TA [நுட்பப் பகுப்பாய்வு] உத்திகள் பயன்பட அனுமதிக்கும் முறையான விலை நகர்வுகளில் நிலவும் சந்தை செயல்திறனற்ற தன்மைகளை விளக்குகின்றன. தனி சந்தைப் பங்கேற்பாளர்கள் எப்போதும் பகுத்தறிவுடனே செயல்படுவதில்லை (அல்லது முழுமையான தகவல்களைக் கொண்டிருப்பதில்லை) என்ற நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த முடிவுகள் ஒன்றையொன்று சமநிலைப்படுத்துகின்றன, மேலும் இதனால் பகுத்தறிவு ரீதியான விளைவு கிடைக்கிறது (பங்குகளை வாங்கும் நேர்மறை மனப்போக்கு கொண்டவர்கள், பங்குகளை விற்பனை செய்யும் எதிர்மறை மனப்போக்கு கொண்டவர்களால் எதிர்கொள்ளப்படுகின்றனர், இதனால் விலையானது சமநிலையில் உள்ளது) என்ற பதிலை EMH முன்வைக்கிறது. இதே போல், சந்தைப் பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த ஆனால் முழுமையற்ற அனைத்து அறிவுகளையும் சந்தையில் பயன்படுத்துகின்றனர் என்பதால் விலையில் முழுமையான தகவல் பிரதிபலிக்கப்படுகின்றது. ரேண்டம் வாக் கருத்தியல் பலவீனமான வடிவ செயல்திறன்மிக்க சந்தைகள் கருத்தியலிலிருந்து தருவிக்கப்படலாம். இது சந்தை பங்கேற்பாளர்கள் கடந்தகால விலை நகர்வுகளில் காணப்படும் தகவல்கள் அனைத்தையும் முழுவதுமாக கருத்தில் கொள்கின்றனர் (இதே போல் பிற பொதுவான தகவல்களையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை) என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பிரின்ஸ்டன் பொருளியலாளர் பர்ட்டன் மால்கியேல் (Burton Malkiel) தனது "அ ரேண்டம் வாக் டௌன் வால் ஸ்ட்ரீட்" (A Random Walk Down Wall Street) என்னும் புத்தகத்தில், வகையமைப்பு பகுப்பாய்வு போன்ற நுட்ப முன்கணிப்புக் கருவிகள் தங்களைத் தாங்களே தோற்கடிக்கக்கூடியவையாக கருதப்பட வேண்டும் எனக் கூறுகிறார்: "இது போன்ற ஒரு ஒழுங்கியல் சந்தைப் பங்கேற்பாளர்களுக்குத் தெரிந்தவுடன், அது எதிர்காலத்தில் செயல்படுவதைத் தடுக்கும் விதத்தில் அவர்கள் செயல்படத் தொடங்கிவிடுவர் என்பதே இதில் உள்ள சிக்கலாகும்." 1999 ஆம் ஆண்டில் மால்கேயிலின் கருத்திற்கு பதிலாக, ஆண்டிரியூ லோ மற்றும் க்ரேக் மெக்கின்லே, இந்தக் கருத்தியலின் பயன்படுதன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சோதனை ரீதியான வெளியீடுகளை சேகரித்தார், அவை பங்கு விலை நகர்வுக்கான ஒரு சீரற்ற தன்மையற்ற முன்ன்கணிப்புக் கூறை வழங்கின. அதே சமயம் அவர்கள் கவனமாக, ரேண்டம் வாக்கை நிராகரிப்பதால் EMH செல்லாதது எனக் கருதுவதாகப் பொருளில்லை எனவும் குறிப்பிட்டுவிட்டனர். அதாவது சந்தைப் பங்கேற்பாளர்கள் முழுமையாக பகுத்தறிவு ரீதியானவர்கள் அல்ல மேலும் தற்போதைய விலை நகர்வுகள் கடந்த கால நகர்வுகளைச் சார்ந்தில்லை என்று கருதும் விதத்தில், EMH மற்றும் ரேண்டம் வாக் கோட்பாடு ஆகிய இரண்டுமே சந்தைகளின் மெய்த்தன்மையைப் புறக்கணிக்கின்றன என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஓர் உண்மையைக் கொண்டு கற்பனையாக ஒருவர் எந்த வகையிலான விளக்கப்படத்தையும் காண முடியும், ஆனால் இந்த வகையமைப்புகள் முன்கணிக்கக்கூடியவை என இது நிரூபிப்பதில்லை என விமர்சகர்கள் இதற்கு பதிலளிக்கின்றனர். இரண்டு கோட்பாடுகளுமே குறியீடு முதலீடுகள், உத்தி முதலீடுகள் போன்ற பிற வர்த்தக உத்திகளையும் இன்னும் பல பிற வர்த்தக முறைமைகளையும் செல்லாதது எனக் கருதுவதாக வல்லுநர்கள் தொடர்ந்து கருதுகின்றனர். சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகள் அவுரங்காபாத், மகாராட்டிரம் அவுரங்காபாத்((, "அரியணையால் கட்டப்பட்டது", எனும் பொருளுடையது, மொகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் பெயரால் அழைக்கப்படுவது), இந்தியாவின், மகாராஷ்டிர மாநிலத்தின், அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். நகரம் ஒரு சுற்றுலா மையப்பகுதியாக, பல வரலாற்று நினைவிடங்களால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளையும், அதே போல பீபீ கா மாக்பாராவையும் உள்ளடக்கியுள்ளது. அவுரங்காபாத் கோட்டத்தின் நிர்வாக அல்லது மராத்வாடா பகுதியின் தலைமையகமான அவுரங்காபாத் 'வாயில்களின் நகரம்' எனக் கூறப்படுகிறது. அத்தகையவற்றின் வலுவான இருத்தலை நகரைச் சுற்றி வருகையில் ஒருவர் கவனியாது இருக்க முடியாது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும் அவுரங்காபாத். அவுரங்காபாத் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அது கி.பி. 1610 ஆம் ஆண்டில் அகமத் நகரின் முர்தாஸா நிஸாம் ஷாவின் முதலமைச்சரான மாலிக் அம்பார் என்பவரால் கர்கி எனும் கிராமத்தின் நிலத்தில் நிறுவப்பட்டது. அவர் அதனை அவரது தலைநகராக ஆக்கிக் கொண்டார். மேலும் அவரது இராணுவத்தினர் அதனைச் சுற்றி தங்களது இருப்பிடங்களை எழுப்பினர். ஒரு பத்தாண்டிற்குள் கர்கி மக்கள் தொகை மிகுந்த, கவர்ச்சிகரமான நகரமாக வளர்ந்தது. மாலிக் அம்பார் கட்டடக் கலைக்கு கடுமையான காதலையும் திறனையும் பேணி வந்தார். அவுரங்காபாத் அம்பாரின் கட்டிடக் கலையின் சாதனை மற்றும் படைப்பாக்கமாகும். எனினும், 1621 ஆம் ஆண்டில், அது ஜஹாங்கீரின் பேரரசுக்குக்குரிய படைகளால் அழிக்கவும், எரிக்கவும் பட்டது. நகரத்தின் நிறுவனரான அம்பார் எப்போதும் பேரரசர் ஜஹாங்கீரால் கடுமையான பெயர்களுக்கு உரியவராக கருதப்பட்டு வந்திருந்தார். ஜஹாங்கீர் நினைவுக் குறிப்புகளில், அவர் எப்போதும் அம்பார் பெயரை ஈனன், சபிக்கப்பட்ட நபர், நாடோடி, அம்பார் சியாரி, கருப்பு அம்பார் மற்றும் அம்பார் படாக்துர் போன்ற பெயரடைகளைத் தவிர்த்துக் குறிப்பிடுவதில்லை. 1626 ஆம் ஆண்டில் மாலிக் அம்பார் இறந்தார். அவருக்கு பின் அவரது மகன் பதேஃக் கான் அரியணை ஏறினார், அவரால் கர்கி என்பது பதேஃக் நகராக மாற்றப்பட்டது. அதே வருடத்தில், மொகலாய அரசப் பிரதிநிதி கான் ஜஹான் லோடி, நகரத்தை நோக்கி முன்னேறினார், ஆனால், நிஸாம் ஷாவின் தளபதி ஹமீத் கான் அவருக்கு லஞ்சம் கொடுத்ததால் பர்ஹான்புருக்கு பின்வாங்கினார். அரசப் படைகளால் 1633 ஆம் ஆண்டில் தௌலதாபாத் கைப்பற்றலோடு, பதேஃக் நகர் உட்பட நிஸாம் ஷாஹியின் மேலாட்சிப் பிரதேசங்கள் மொகலாயகர்களின் உடைமைகளின் கீழ் வந்தது. 1653 ஆம் ஆண்டில் இளவரசர் அவுரங்கசீப் இரண்டாம் முறையாக தக்காண பிரதேசத்திற்கு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டப்போது, அவர் பதேஃக் நகரை அவரது தலைநகராக ஆக்கியும் அதனை அவுரங்காபாத் எனவும் அழைத்தார். அவுரங்கச்சீப்பின் ஆட்சி வரலாற்றுப் பதிவாளர்களால் அவுரங்காபாத் சில நேரங்களில் குஜிஸ்தா புன்யாட் என மேற்கோளிடப்படுகிறது. 1666 ஆம் ஆண்டு மார்ச்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 படையினரின் துணையோடு சிவாஜி அவரது ஆக்ரா பயணத்தின் வழியினூடே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார். அவுரங்காபாத்தின் ஆளுநரான சாஃப்ஷிக்கன் கான் அவரை மரியாதைக் குறைவாக நடத்தினார். இச் செயலுக்காக, அவர் ஜெய் சிங்கினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, சிவாஜியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வைக்கப்பட்டார். 1668 ஆம் ஆண்டில், நகரம் ஏறக்குறைய டிலேர் கானின் அரசப் படைகளுக்கும் அரசப் பிரதிநிதியான இளவரசர் மௌசம்மின் கட்டளைக்கு கீழ்ப்படிந்த படைகளுக்கும் இடையேயான மோதல் காட்சிக் களமாக மாறியது. 1681 ஆம் ஆண்டில், பர்ஹான்பூரை சூறையாடியப் பிறகு மராட்டியர்கள் அவுரங்காபாத்தை தாக்கும் நோக்கோடு அருகிலுள்ள சதாரா மலைகளில் கூடியிருந்தனர். இருப்பினும், இத் திட்டமானது அரசப் பிரதிநிதியான கான் ஜஹான் பஹதூரின் வருகையை அறிந்த பிறகு கைவிடப்பட்டது. அதே வருடத்தில், கான் ஜஹான் பஹதூர் அவுரங்காபாத்தைச் சுற்றி மராட்டியர்களின் எதிர்பாராத தக்குதல்களிலிருந்து அதனைக் காக்க மதிற்சுவரினை எழுப்பினார். அது பேரரசரின் ஆணைப்படி நடத்தப்பட்டது, மேலும் அதற்கு ரூபாய் மூன்று இலட்சம் செலவாகியது. இரண்டாண்டுகள் கழித்து பேரரசரே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார். பீபீ கா மக்பாரா எனும் நினைவுச் சின்னம் 1660 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பின் மகனான, ஆஸாம் ஷாவினால், அவரது தாய் தில்ராஸ் பானோ பேகம் மீதான அன்பாஞ்சலியாகக் கட்டப்பட்டது. 1692 ஆம் ஆண்டில், தற்போது கிலா ஆர்க்கில் இடிபாடுகளாக காணப்படும் - நகரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பெரிய நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மைனையைக் கட்டுவிக்க ஆணையிட்டார். கி.பி. 1696 ஆம் ஆண்டில் ஒரு கோட்டைச் சுவர் பேகம்புராவின் புறநகரப் பகுதிகளைச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பின் விரைவில் அவுரங்காபாத் மொகலாயர் கை வசமிருந்து நழுவியது. 1720 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பின் குறிப்பிடத்தக்க தளபதியான நிஸாம்-உல்-முல்க் ஆசிப் ஜா, தக்காண பிரதேசத்தில் அவரது சொந்த வம்சத்தை நிறுவிக்கொள்ளும் நோக்கோடு அவுரங்காபாத்திற்கு வருகைத் தந்தார். 1723 ஆம் ஆண்டில் அவர் டெல்லிக்கு விஜயம் செய்தார். ஆனால் 1724 2ஆம் ஆண்டில், பேரரசர் மொகமத் ஷாவின் ஆணைகளை எதிர்த்து திட்டத்தை மாற்றிக் கொண்டார். பின்னர் விரைவில் அவர் தனது தலைநகரை அவுரங்காபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம் மாற்றினார். பேரரசர் தக்காணத்தின் சுபேதாராகிய முபாரிஸ் கானுக்கு நிசாமை எதிர்க்கும் படி ஆணையிட்டார். ஒரு போர் சாகர்கேர்டாவின் அருகில் நிகழ்ந்தது. சாகர்கேடா பிற்காலத்தில் பதேஃக்கேர்டா என அழைக்கப்பட்டது. அதில் முர்பாரிஸ் கான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மொகலாயர்களின் பக்கத்தில் நின்று போரிட்ட சிந்த்கேட் ஜாதவர்களின் ஓர் இளம் வாரிசான ரகோஜியும் கொல்லப்பட்டார். முர்பாரிஸ் கானுக்கு ஜாதவர்கள் அளித்த ஆதரவால் சினம் கொண்ட நிஸாம், ஒரு துருப்புகளின் காவல் படையை ஜாதவர் குடும்பத்தைப் பிடிக்க டேயுல்கானுக்கு அனுப்பி வைத்தார். அத் திட்டத்தினை அறிந்துக் கொண்ட குடும்பம் சதாராவிற்கு தப்பிச் சென்று சத்ரபதி ஷாஹூவிடம் அடைக்கலம் நாடியது. ஷாஹூவின் தலையீட்டால் நிலப்பகுதி ஜாதவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் படைப் பிரிவிற்கும் தேவல்காவ்வின் அரசரான மான்சிங் ராவ்வைச் சார்ந்த அராபிய கொலைகார கூலிப்படையினருக்கும் இடையிலான போர்களமாகக் காட்சியளித்தது. அராபியர்கள் அரசரை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு, அவர்களது சம்பளப் பணம் நிலுவையிலுள்ள காரணத்தால் அவரைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தினர். இராணுவத் தளத்தின் தளபதியான பிரிகேடியர் மைனேயிடம் இச்சூழ்நிலை தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில், ஐந்தாவது குதிரைப்படைப் பிரிவு, ஆறாவது காலாட்படைப் பிரிவு மற்றும் பீரங்கிப் படை ஒன்றுடனும் அராபியர்கள் தங்களை முகாமிட்டுள்ள ரோஷன்கேட்டிற்குச் சற்று வெளியேயான, ஜஸ்வந்த்புராவை நோக்கி அணிவகுத்தார். கடுமையான எதிர்ப்பிற்குப் பின், அராபியர்கள் தோற்கடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர், மேலும் அரசரும் விடுவிக்கப்பட்டார். போர் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவப் பிரிவில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமுற்றனர். இறந்தவர்களில் லெப்டினண்ட். பாஸ்வெல், காயமுற்றவர்களில் லெப்டினண்ட். வான் மற்றும் காப்டன் பார்க்கர் ஆகியோர் அடங்குவர். பின்னர், இருவரும் தங்களது காயம் காரணமாக இறந்தனர். 1857 ஆம் வருடம் அவுரங்காபாத்தின் வரலாறு நாட்டின் பிறப் பகுதிகளைப் போல் பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிரம்பியதாக இருந்தது. பிரிட்டிஷ்ஷார் மோமினாபாத்திலிருந்து (அம்பேஜோகை) முதல் காலாட்படைப் பிரிவை அவுரங்காபாத்திற்கு, மூன்றாம் காலாட்படைப்பிரிவு மாலேகானுக்கு அணிவகுத்துச் செல்வதற்கு விடுவிக்கும் நோக்கில் நகர்த்தியது, மேலும் அதுவே அதிருப்தியைக் காட்டிய முதல் இராணுவப் பிரிவாகும். இரண்டாம் பீரங்கிப்படையும் சந்தேகத்திற்குள்ளானது. நகரத்தின் மக்களும் துருப்புகளுடன் இணைந்துக் கொள்வார்கள் எனும் அச்சமும் ஏற்பட்டது. இதனைத் தடுக்க, அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மேலும் இரு பீரங்கிப் படைகளின் பிரிவுகள் காம் நதியின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக் கட்டப்பட்டுள்ளதும், காலாட்படை முகாமிட்டுள்ள இடத்திலிருந்து இராணுவப் பாசறையைப் பிரிக்கவும் செய்வதான பாலத்தினைக் காக்க ஆணையிடப்பட்டது. பிரிட்டிஷ்ஷாரின் பக்கத்திலிருந்தான இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காலாட்படையைக் கலவரமடையச் செய்தது, மேலும் துருப்புக்கள் ஆணைகள் இன்றி வெளியேறி பாசறையை நோக்கி குறிப்பிட்ட நிலையில் அரண்களை அமைத்துக் கொண்டனர். ஹைதராபாத்திலுள்ள அதிகாரிகளுக்கு நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்கு குறித்து விரைவாய்த் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது, துருப்புக்களின் ஒரு குழு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு அணிவகுத்துச் செல்ல ஆணையிடப்பட்டது. இதனிடையில், பீரங்கிப் படையும் புரட்சிக்கான அறிகுறிகளைக் காண்பித்தது, ஆனால் அவுரங்காபாத்தை நோக்கிய பம்பாய் துருப்புக்களின் அணிவகுப்பு வதந்தி அமைதிப்படுத்தும் பலனைத் தந்தது. காலாட்படையின் வீரர்களும் அவர்களின் நிலைகளுக்குத் திரும்பினர். ஜெனரல் வூட்பர்ன்னின் கட்டளையின் கீழிருந்த புனேவின் படை மூன்று துருப்புக்களைக் கொண்டிருந்தது, அவை காப்டன் காலின் கீச் வரும் 14 ஆவது ஹுஸ்ஸார்ஸ், காப்டன் வூட்காம்ப்சினுடைய ஐரோப்பிய பீரங்கிப்படை மற்றும் கலோனல் போலியோட்டின் கீழான 24 வது பம்பாய் காலாட்படை ஆகியவையாகும். அவரது வருகையின் மீதான விளைவாக ஜெனரல் வூட்பர்ன் நேராக மூன்றாம் குதிரைப்படையின் முகாமிற்கு அணிவகுத்துச் சென்றார் மற்றும் பாதிக்கப்படாத படைப்பிரிவினை குதிரையிலிருந்து இறங்கச் செய்து அணிவகுப்பு ஒன்றை நடத்த ஆணையிட்டார். முதல் துருப்புக்களின் ரிஸ்ஸால்தார் புரட்சி செய்தவர்களின் பெயர்களை அழைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும் மூத்த ஜமாதாரின் பெயரினை கொடுக்கத் துவங்கியபோது, அவர் தனது வீரர்களை அவர்களது சிறு துப்பாக்கிகளில் தோட்டாவை நிரப்பும்படி ஆணையிட்டார். இச் சமயத்தில் ஜெனரல் அவரது பணியாளர்கள் மற்றும் ஆங்கில அதிகாரிகளுடன் பாதிக்கப்படாத துருப்புகளுடன் கலந்து விட்டனர், எனவே இரண்டாவதாக இருப்பவர்களை அடக்க துப்பாக்கிகளை பயன்படுத்த இயலாமற் போயிற்று. பின் வந்த குழப்பத்தில், சில துருப்புக்கள் பிரிந்துச் சென்று, குதிரைகளிடம் ஓடிச் சென்று தப்பியோடினர். அவர்கள் மீது பீரங்கி பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் ஹுஸ்ஸார்ஸ்கள் கொல்வதற்கு பின் தொடர்ந்து சென்றனர்; ஆனால் அவர்களில் பலர் தப்பிச் செல்வதில் வெற்றியடைந்தனர். குதிரைப்படையின் டபேதார், மிர் பிடா அலி எனும் பெயருடையவர், அவரது கட்டளை அதிகாரியான காப்டன் அப்பாட்டின் மேல் சுட்டார். இச் செயலுக்காக, முரசொலிப்பவர் தலைவர் ஒருவரால் விசாரணை செய்யப்பட்டார். இராணுவ நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். இராணுவ நீதிமன்றம் அதன் அமர்வுகளை தொடர்ந்தது. இத்தகைய துணிவுமிக்க 24 வீரர்கள் தண்டிக்கப்பட்டனர், அவர்களில் 21 பேர் சுடப்பட்டனர், 3 பேர் இரக்கமற்று பீரங்கிகள் மூலம் வெடித்துச் சிதறடிக்கப்பட்டனர். படைப்பிரிவின் அமைதியாகவிருந்த மூன்றில் இருபகுதியினர் ஏடலாபாத்திற்கு அணிவகுத்தனர், மேலும் அப்படைக்கான முழு வலிமையை அடையஇதர மூன்று குதிரைப்படைப் பிரிவுகளிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தியது. பின்னர் மூன்றாவது குதிரைப்படை போர் நடவடிக்கைகள் முழுதும் சர் ஹக் ரோஸ்சின் கீழ் பணி புரிந்தது. 19 ஆம் நூற்றாண்டில் லாலா தீன் தயாள் & பிறர் எடுத்த, பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து திரட்டப்பட்ட புகைப்படங்கள். "தக்காணத்தின் மேண்மைத் தாங்கிய ஹைதாராபாத் நிஸாமின் ஆட்சிகுட்பட்ட பகுதிகளின் காட்சி" . அவுரங்காபாத்திற்கான புவியியற் கோணம் வடக்கு 19° 53' 47" - கிழக்கு 75° 23' 54" ஆகும். நகரம் எல்லா திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தட்பவெப்ப நிலை: அவுரங்காபாத்தில் வருடாந்திர தட்பவெப்ப நிலைகள் 9 லிருந்து 40°செண்டிகிரேட் வரை பரவியிருக்கும், பெரும்பாலும் வருகை புரிவதற்கான வசதியான காலம் மழைக்காலமாகும். அக்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலானதாகும். எப்போதைக்கும் அதிகபட்ச உயர் தட்பவெப்பம் 1905 ஆம் ஆண்டில் மே 25 அன்றுப் பதிவான 46°செண்டிகிரேட் (114° பாரன்ஹீட்) ஆகும். குறைந்தபட்ச தட்பவெப்பம் 1911 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2 அன்றுப் பதிவான 2° செண்டிகிரேட் (36° பாரன்ஹீட்) ஆகும். குளிர் காலங்களில், மாவட்டமானது சில நேரங்களில் வட இந்தியா முழுவதுமாக கிழக்கே செல்லும் மேற்கத்திய குறுக்கீடுகளுடன் இணைந்த குளிர் காற்றால் பாதிக்கப்படும், அப்போது குறைந்தப்பட்ச தட்பவெப்ப நிலை சுமார் 2°செண்டிகிரேட்டிலிருந்து 4° செண்டிகிரேட் வரை கீழாகச் செல்லும்(35.6° பாரன்ஹீட்டிலிருந்து 39.2° பாரன்ஹீட்வரை). மழைப்பொழிவு: பெரும்பாலான மழைப்பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவ காலத்தில் ஏற்படுகிறது. மழையளவு 9.0 முதல் 693 வரையிலான மிமி/மாதம் வேறுபாட்டையுடையது. சராசரி வருடாந்திர மழையளவு 725 மிமி ஆகும். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அவுரங்காபாத் ஒரு வர்த்தக மையமாக உருவானதென்று நம்புவதற்கு ஆதாரம் இருக்கிறது. அது வடமேற்கு இந்தியாவின் கடலையும் நிலத் துறைமுகங்களையும் தக்காணப் பிரதேசத்துடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு பெரிய வர்த்தகப் பாதையில் இருக்கிறது. நகரமானது ஒரு பெரிய பட்டு மற்றும் பருத்தி ஜவுளி உற்பத்தி மையமாகும். உள்ளூரில் விளைந்த பருத்தி மற்றும் சிறப்பான பட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின ரகம் ஹிம்ரூ ஜவுளி என பெயர்ப் பெற்றுள்ளது. காலப் போக்கில் பட்டுத் தொழில் மறைந்து போனது, ஆனாலும் சில உற்பத்தியாளர்கள் அம் மரபினை வாழச் செய்ய முயற்சித்து வெற்றிக் கண்டனர். பைத்தானி பட்டுப் புடவைகளும் கூட அவுரங்காபாத்தில் தயாரிக்கப்படுகின்றன. துணியின் பெயர் பைத்தான் எனும் சிறு நகரத்திலிருந்து பெறப்பட்டதாகும். அவுரங்காபாத் நகரத்தில் 1889 ஆம் ஆண்டில் 700 பேருக்கு வேலைவாய்பளித்த ஒரு பருத்தி-நூற்றல் மற்றும் நெசவு ஆலை, அமைக்கப்பட்டது. 1900 ஆம் வருடத்தில் ஹைதாராபாத்-கோதாவரி பள்ளத்தாக்கு இரயில்வே திறக்கப்பட்டதுடன் பற்பல விதை நீக்கி பருத்தி ஆலைகள் துவக்கப்பட்டன. ஜால்னாவில் மட்டும் 9 பருத்தி-விதை நீக்கி தொழிற்சாலைகளும் 5 பருத்தி-பிரஸ்களும் இருந்தன. அது தவிர இரு விதை நீக்கி ஆலைகளும் அவுரங்காபாத் மற்றும் கன்னட்டில் இருந்தன. மேலும் ஒரு எண்ணெய்-பிரஸ்சும் அவுரங்காபாத்தில் இருந்தது. பருத்தி-பிரஸ்களிலும் விதை நீக்கி பருத்தி தொழிற்சாலைகளிலும் 1901 ஆம் வருடத்தில் பணியமர்த்தப்பட்ட மொத்த எண்ணிக்கையிலான நபர்கள் 1,016 பேர்களாவர். 1960 ஆம் ஆண்டுகள் வரை, அவுரங்காபாத் ஒரு நகரமாக தொழில் துறையில் பின் தங்கிய நிலையில் நலிவுற்றிருந்தது. 1960 ஆம் ஆண்டில், மராத்வாடா பகுதி மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது. இச் சமயத்தில்தான் மராத்வாடா பகுதியின் தொழில்துறை முன்னேற்றம், பின் தங்கிய பகுதிகளின் நலனுக்காக வரையறுக்கப்பட்ட திட்டத்தின் முன் செலுத்துதலின் மூலம் துவங்கியது. மேலும் அப்போதுதான் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) நிலங்களை கையகப்படுத்தியும் தான் வளர்க்கத் துவங்கிய தொழிற் பேட்டைகளை நிறுவவும் செய்தது. அவுரங்காபாத் தற்போது மாநில அரசின் மாநிலத்திற்கான சமமான தொழில்மயமாக்கலை நோக்கிய உன்னதமான முயற்சிகளின் எடுத்துக் காட்டாக உள்ளது. அவுரங்காபாத்தின் தொழிற்பேட்டைகளில் பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்: நன்கறியப்பட்ட இதரப் பெயர்களில் சில: கார்வேர், அஜந்தா பார்மா, AMRI, கிளென்மார்க், லூபின், விப்ரோ, ஆர்க்கிட் பார்மா, எண்டூரன்ஸ் சிஸ்டம்ஸ், ருசா இஞ்சினியரிங், இந்தோ ஜெர்மன் டூல் ரூம், சீகே டாய்க்கின் லிமிடெட், காஸ்மோஸ் பிலிம்ஸ், NRB பேரிங்க்ஸ், ஹிண்டால்கோ-அல்மெக்ஸ் ஏரோஸ்பேஸ், கேன்-பேக் இந்தியா, வர்ராக், டேகர்பிராஸ்ட், பிரிகோரிஃபிகோ அல்லானா, நாத் சீட்ஸ் ஆகியவையாகும். அவுரங்காபாத் - ஜல்னா இடைநிலப்பகுதி நாட்டின் பெரிய விதை நிறுவங்கள் சிலவற்றின் இருத்தலால் விதைகளின் இந்திய தலைநகராகக் கருதப்படுகிறது. மஹிகோ (ஆய்வு& மேம்பாடு + உற்பத்தி), நாத் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி), செமினிஸ் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி) மற்றும் மான்சாண்டோ (ஆய்வு&மேம்பாடு தற்போது) ஆகியவை தொழிலிலுள்ள சில பெரியப் பெயர்களாகும். வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் மதுபானம், நுகர்வோர் பொருட்கள், நெகிழி உற்பத்தி வழிமுறை,அலுமினியம் உற்பத்தி வழிமுறை விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் பல நிறுவனங்கள் அவுரங்காபாத்தில் அவர்களது உற்பத்தி தளங்களை வைத்துள்ளன. அவுரங்காபாத்தில், மருந்து நிறுவனங்களில் வோக்கார்ட்டின் ரெகாம்பினெண்ட் இன்சுலின் உற்பத்தி ஆலை ( வோக்கார்ட் உயிரியல் பூங்கா) யானது, இந்தியாவின் பெரிய உயிரியல் மருந்து ஆலையாக அமைந்துள்ளது. அவுரங்காபாத்திடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ITC வெல்கம்குரூப்பின் தி ராமா இண்டெர்நேஷனல், தி அஜந்தா அம்பாசிடர், தி தாஜ் ரெசிடென்ஸி, தி லெமண்ட்ரீ (முன்னாள் தி பிரெசிடெண்ட் பார்க்) மற்றும் அவுரங்காபாத் கிம்கானா போன்ற ஹோட்டல்களும் கூட உள்ளன. ஷேந்திரா, சிக்கல்தானா மற்றும் வலூஜ் MIDC தொழிற்பேட்டைகள் நகரத்தின் வெளியே அமைந்துள்ள முக்கிய தொழிற் பகுதிகளாகும். அத்துடன் பல்வேறு முக்கிய பன்னாட்டு குழுமங்கள் உற்பத்தி அல்லது உற்பத்தி வழிமுறை ஆலைகளை நகரத்தின் உள்ளும் புறமும் அமைத்திருக்கின்றன. இந் நகரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஐந்து "சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்" (SEZs) உள்ளன. அவையாவன வாகனத்தில் (பஜாஜ்), மருந்து (இன்ஸ்பிரா பார்மா சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் வோக்கார்ட்), அலுமினியத்தில் ஒன்றாக (ஹிண்டால்கோ அலுமினியம்) மேலும் ஒன்றாக இன்ஸ்பிரா உயிரியல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியனவாகும். சமீபத்தில் அவுரங்காபாத் மகாராஷ்டிராவில் (புனே மற்றும் நாசிக்கிற்குப் பிறகு) மராத்வாடா வாகனக் கூட்டம் (MAC) எனும் பெயருடைய வாகன கூட்டத்தை ஆதரிப்பதனால் மூன்றாவது வாகன கூட்ட நகரமாக ஆனது. மின்சார பொருட்கள் உற்பத்தியாளரான சீமென்ஸ் விரைவில் மெட்ரோ இரயில் பெட்டிகளை உற்பத்திச் செய்ய ஓர் ஆலையை நிறுவவுள்ளது. 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ஹைதராபாத் மாநிலத்தின் ஜல்னாவில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டப்போது மாவட்டத்தில் நவீன வங்கியானது துவங்கியதாகக் கூறப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று அவுரங்காபாத்தில் நிறுவப்பட்டது. பின்னர் 1945 ஆம் ஆண்டில் பாங்க் ஆஃப் ஹைதராபாத் 1350 வருடத்தைய ஹைதராபாத் ஸ்டேட் பாங்க் சட்டத்தின் படி நிறுவப்பட்டது. ஸ்டேட் பங்க் ஆஃப் ஹைதராபாத் முதன்மையாக அரசு வணிக நடவடிக்கைகளான அரசின் பணத்தைப் பெறுவது மற்றும் வைத்திருப்பது, மேலும் அரசு சார்பாகப் பணத்தை பிறர்க்கு அளிப்பது மற்றும் வழக்கமான பிற வணிக நடவடிக்கைகளான பரிமாற்றம், வெளிநாட்டு வரவு, முதலியவற்றையும் செய்கிறது. அரசின் பங்கு பத்திரங்களை வெளியிடும் அதன் பணியிலும் அதற்குகொரு முகவராக வேலைச் செய்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில், அவுரங்காபாத் நிதி நடவடிக்கைகளில் ஒரு திடீர் பாய்ச்சலைக் கண்டது. பெரும்பாலான பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறந்தன. அதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சிட்டி பாங்க், டாய்ச்ச பாங்க், ஐசிஐசிஐ பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா, எச் டி எஃப் சி பாங்க், முதலியவை இருந்தன. அதோடு கூட வட்டார ஊரக வங்கிகளான (பெயர்கள்). அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டின் போது இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி மற்றும் தானே கிராமின் வங்கி (இரண்டும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவால் ஆதரவளிக்கப்பட்டன) ஆகியவை இணைக்கப்பட்டு புதிய RRB மகாராஷ்டிரா கோதாவரி கிராமின் வங்கி எனும் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமையகம் அவுரங்காபாத் நகரத்தில் இருந்தது. அது செயல்படும் பகுதிகளான ஒன்பது மாவட்டங்களின் பெயர்களாவன: அவுரங்காபாத், ஜல்னா, ஜல்கோவான், துலே, நந்தர்பார், நாசிக், அஹ்மெத்நகர், தானே மற்றும் ரைகாட் ஆகியவையாகும். அவுரங்காபாத் மாநகராட்சியே (AMC) உள்ளூர் குடிமை நிர்வாக அமைப்பாகும். அது ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மாநகராட்சி குழுவின் பரப்பளவு சுமார் 54.5 கிமி. அது மாநகராட்சி தகுதிக்கு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் நாளிலிருந்து உயர்த்தப்பட்டது, மேலும் அதே சமயத்தில் விளிம்பிலுள்ள பதினெட்டு கிராமங்களை உள்ளடக்கி, அதன் நிர்வாகப் பகுதியின் மொத்த பரப்பளவை 138.5 கிமீ யாக ஆக்கிக்கொண்டு அதன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டது. நகரம் "பிரபாக்" எனும் பெயரிலான 99 தேர்தல் நகர வட்டங்களாக பிரிக்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நகர வட்டமும் ஒரு மாநகராட்சி உறுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது ("நகர்சேவக்" என்று அழைக்கப்படுபவர்) ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரு குழுக்கள், பொதுக் குழு மற்றும் நிலைக் குழு ஆகியன மேயர் மற்றும் சேர்மன் ஆகியோரால் முறையே தலைமை வகிக்கப்படுகின்றன. AMC அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிவு நீர்க் கால்வாய் வசதி, சாலை, தெரு விளக்குகள், உடல்நலம் பேணும் மையங்கள், துவக்கப் பள்ளிகள் முதலியவைகளை அளிப்பதற்கு பொறுப்பாகும். நிர்வாகமானது ஓர் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான மாநகராட்சி ஆணையரால் இதரப் பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் துணையுடன் நிர்வகிக்கப்படுகிறது. அவுரங்காபாத் மக்களவைக்கு ஓர் இடத்தைப் பங்களிக்கிறது. அவ்விடம் தற்போது சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினரான சந்திரகாந்த் கைரேவினால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு சட்டப்பேரவையிலும் இடம் உள்ளது. அது அவுரங்காபாத் மேற்கு தொகுதியாகும். அதன் உறுப்பினர் இராஜேந்திர டர்டா (இந்திய தேசிய காங்கிரஸ்) அவுரங்காபாத் கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் மகராஷ்டிர அரசின் அமைச்சராக தொழில்துறை இலாகாவையும் வைத்திருக்கிறார். சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்ட தொகுதி ஏற்பாடுகளில் அவுரங்காபாத் ஒரு மக்களவைத் தொகுதியையும், மூன்று சட்டப் பேரவை தொகுதிகளையும், அதாவது, அவுரங்காபாத் கிழக்கு, அவுரங்காபாத் மேற்கு மற்றும் அவுரங்காபாத் மத்தி ஆகியவற்றையும் பங்களிக்கிறது. சமீப கால சட்டப்பேரவை உறுப்பினர்களாக - அவுரங்காபாத் (கிழக்கு) - காங்கிரஸ் (இ) யின் இராஜேந்திர டர்டா, அவுரங்காபாத் (மத்தி) - பிரதீப் ஜெய்ஸ்வால் (சுயேச்சை) மற்றும் அவுரங்காபாத்(மேற்கு) - சஞ்சய் ஷிர்சாத், சிவ-சேனா ஆகியோர் உள்ளனர் அவுரங்காபாத்தின் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் வரைபடங்கள் பம்பாய் உயர் நீதிமன்ற அவுரங்காபாத் இருக்கை: பம்பாய் உயர் நீதி மன்றத்தின் அவுரங்காபாத் இருக்கை 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அவுரங்காபாத் இருக்கையின் கீழ் துவக்கத்தில் மகராஷ்டிராவின் ஒரு சில மாவட்டங்களே இருந்தன. பின்னர் 1988 ஆம் ஆண்டில், அஹ்மத்நகர் மற்றும் இதர மாவட்டங்கள் இருக்கையில் இணைக்கப்பட்டன. அவுரங்காபாத் இருக்கையின் நிர்வாக பரப்பு அவுரங்காபாத், அஹமதுநகர், துலே, ஜல்னா, ஜல்கோவான், பீட், பர்பானி, லாத்தூர் மற்றும் உஸ்மனாபாத் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அந்த இருக்கையில் மகாராஷ்டிரா மற்றும் கோவா வழக்குரைஞர் கழக அலுவலகங்களும் உள்ளன. அவுரங்காபாத் உயர் நீதிமன்ற இருக்கை அவுரங்காபாத் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அவுரங்காபாத் இருக்கை 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் வலுவைக் கொண்ட வழக்கறிஞர் கழகத்தினைக் கொண்டுள்ளது. அவுரங்காபாத் இருக்கையில் தற்போது 15 நீதிபதிகள் உள்ளனர். தற்போதைய இருக்கையின் கட்டடம் ஒரு மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் மத்தியில் அமைந்துள்ள சிறந்த மாளிகையின் முதல் நிலைக் கட்டடம் ரூபாய் 3.50 கோடி செலவில், 6,202.18 சதுர மீட்டர்கள் பரப்பில் கட்டப்பட்டு 1995 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. அவுரங்காபாத், மகாராஷ்டிராவின் மற்றும் இதர மாநிலங்களின் பல்வேறு பெரிய நகரங்களையும் சாலை வழியே நன்கு இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை NH-211 (துலே-அவுரங்காபாத்-சோலாப்புர்) நகரின் வழியேச் செல்கிறது. சாலை இணைப்பு உயர் தரமுள்ளது மேலும் புனே, நாக்புர், பீட், மும்பை ஆகியவற்றிற்கான சாலை இணைப்பு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒரு புதிய நாக்புர்-அவுரங்காபாத்-மும்பை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பயணிகள் போக்குவரத்து சேவையினை தேசியமயமாக்கும் திட்டம் ஸ்டேட் ஆஃப் ஹைதராபாத்தினால் 1932 ஆம் ஆண்டிற்கு முன்பே துவக்கப்பட்டது. அது பொதுச் சாலைப் போக்குவரத்து துறையின் முன்னோடிகளில் ஒன்றாகும். முதலாவதாக இரயில்வேயுடன் கூட்டாகச் செயலாற்றியது; அதற்குப் பின் தனித்த அரசுத் துறையானது. மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல், மராத்வாடா மாநிலப் போக்குவரத்து, மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்துடன் இணைக்கப்பட்டது. "மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து" (MSRTC) மற்றும் எண்ணற்ற இதர தனியார் பேருந்து நிர்வாகத்தினர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து சேவையை அளிக்கின்றனர். "அவுரங்காபாத் நகராட்சி போக்குவரத்து" (AMT) எனும் ஓர் உள்-நகரப் பேருந்து சேவையானது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் அதிகத்தொலைத் தூர-புறநகர தொழிற் பேட்டைப் பகுதிகளையும் இணைக்கிறது. AMT (அவுரங்காபாத் நகராட்சிப் போக்குவரத்து) உள்-நகர பேருந்துகள் நகரின் வெளிப்பகுதிகளையும் சேர்த்து நகர் முழுதும் பறக்கின்றன. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளையும், அருகிலுள்ள புறநகர் பகுதிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளன. AMT பேருந்து சேவை செலவைத் தாங்கக்கூடிய வகையிலும் (கட்டண அளவில்), திறன்மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகும் உள்ளன. AMT பேருந்துகள் காலை மற்றும் மாலை நெருக்கடி நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும்படியுள்ளது. நகரம் முழுதும் தொலையளவுக் கருவியுடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாக்கள் பறக்கின்றன. கட்டணங்கள் ஒரு தொலையளவுக் கருவியின் அடிப்படையிலானவை; ஓட்டுநரிடமிருக்கும் கட்டண அட்டையின் மூலம் கணிக்கப்படுகிறது. தற்போது அவுரங்காபாத்தில் சர்வதேச விமான நிலையமுள்ளது. சமீபத்தில் ஹஜ் புனிதப் பயணத்திற்குச் செல்லும் அனைத்து மக்களுக்கும் விமானங்கள் கிடைக்கச் செய்யப்பட்டன. அவுரங்காபாத் விமான நிலையம் டெல்லி, உதய்பூர், மும்பை, ஜெய்ப்பூர் அதே போல ஹைதராபாத் ஆகிய இடங்களை இணைக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது. ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே ஹைதராபாத் நிஸாமினால் நிறுவப்பட்டது. நிஸாமின் கேரண்டீட் ஸ்டேட் இரயில்வேயின் (Guaranteed State Railway) பகுதியாக, ஹைதராபாத் மாநில உத்திரவாதத்தின் கீழ் சொந்தமாகச் செயல்படும் ஒரு நிறுவனமாகும். ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வேயின் மூலதனம் மறுமீட்பு அடமான கடன் பத்திரங்களின் வெளியீடு மூலம் திரட்டப்பட்டதாகும். ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே (மீட்டர் கேஜ்) ஹைதராபாத் நகரம் முதல் மன்மாட் வரை 391 மைல்களுக்கு வடக்கு-மேற்கு திசையில் கிரேட் இந்தியன் பெனின்சுலா இரயில்வேயின் வட-கிழக்கு பிரிவில் ஓடியது. அது 1899 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. அவுரங்காபாத் (நிலையத்தின் குறியீடு: AWB ) இரயில் நிலையம் தென் மத்திய இரயில்வேயின் (SCR) நாண்டேட் வட்டாரத்தின் கச்சிகூடா-மன்மாட் பிரிவில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும். மன்மாட்-கச்சேகூடா அகன்றப் பாதை இரயில்வே இருப்புப் பாதை வரிசை அவுரங்காபாத் மாவட்டத்தின் போக்குவரத்திற்கு முக்கிய உயிர் நாடி போன்றது. அது மன்மாட்டிலுள்ள மும்பை-புஷாவல்-ஹவ்ரா நெடுஞ்சாலை வழியில் காணப்படுகிறது. இந்த இரயில்வே இருப்புப் பாதை வரிசையின் முக்கியத்துவம் மராத்வாடா பகுதியின் வளமான விவசாய நிலப்பகுதியின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது எனும் உண்மையில் பொதிந்துள்ளது. அது மும்பை மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள செகந்திராபாத் ஆகியவற்றிற்கிடையிலான இணைப்பாகவும் சேவையளிக்கிறது. இந்த இருப்புப் பாதை வரிசை மட்டுமே முன்பு போக்குவரத்திற்கான வழியென இருந்ததற்கு மராத்வாடா பகுதியில் நல்ல சாலைகள் இல்லை என்பதே காரணமாகும். இந்த இரயில்வே வழி 1900 ஆம் ஆண்டில் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் வட்டார ஏற்பாடுகளுக்குப் பின்னர், அது ஹைதராபாத் வட்டாரத்தின் இரு பிரிவாக பிரிவதைக் கண்டது, அவுரங்காபாத் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட SCR இன் நாண்டெட் வட்டாரத்தின் (NED) கீழ் வருகிறது. அவுரங்காபாத்திற்கு, மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பார்லி வைஜ்நாத், லத்தூர், உஸ்மனாபாத், கங்காகேட், முட்கேட், அடிலாபாத், நாக்புர், பசார், நிஸாமாபாத், நாசிக், மும்பை, புனே, தாவுந்த், மஹ்பூப்நகர், கர்நூல், கடப்பா, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஈரோடு, மதுரை, போபால், குவாலியர் மற்றும் கச்சிகூடா (KCG) ஆகியவற்றுடன் இரயில் இணைப்பு உள்ளது. ஆயினும் அங்கு இன்னும் மக்களிடமிருந்து இந்தோர், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் இதர பெரிய இந்திய நகரங்களுக்கு நேரடி இரயில் இணைப்பு கோரும் கோரிக்கைகள் உள்ளன. கச்சிகூடா மற்றும் மன்மாட் இடையிலான அஜந்தா எக்ஸ்பிரஸ் அம்ரித்சர் மற்றும் நாண்டெட்டிற்கு இடையிலான சச்காண்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்த நிலையத்தின் வழியே செல்லும் கௌரவமிக்க இரயில்களாகும். அந்த இரயில்கள் அதனை போபால் சந்திப்பு, நாக்பூர், ஜான்சி, குவாலியர் மற்றும் நியூ டெல்லி ஆகியவற்றுடன் இணைக்கிறது. மும்பைக்கு போய் வருவதற்கு மொத்த பயண நேரமாக 6½ மணி நேரங்கள் எடுக்கும் வேகமான மற்றும் மிக வசதியான அவுரங்காபாத் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலே மக்களின் விருப்பத்தேர்வாக உள்ளது. மும்பைக்கும் அவுரங்காபாத்திற்கும் இடையில் மூன்று இரவு நேர இரயில்களும் இரு பகல் நேர இரயில்களும் கூட பயணிக்கின்றன. அவுரங்காபாத் பிற நகரங்களை விட HYB க்கு (ஹைதராபாத்திற்குச் செல்ல) அதிக எண்ணிக்கையிலான இரயில்களைக் கொண்டுள்ளது. அஜந்தா எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் பை-வீக்லி எக்ஸ்பிரஸ், காகிநாடா எக்ஸ்பிரஸ், தேவகிரி எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் பாசஞ்சர், மன்மாட்-கச்சிகூடா பாசஞ்சர், ஓக்கா-இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் — இவையனைத்து இரயில்களும் AWB யை HYBt யுடன் இணைக்கின்றன. அவுரங்காபாத் புனேயின் அருகாமையின் காரணத்தினால் தக்காணத்தின் பெரிய கல்வி மையமாக மாற்றமடைந்துள்ளது. அவுரங்காபாத் மாநகராட்சியினால் நடத்தப்படும் பள்ளிகளும் தனியார் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான பள்ளிகளும் அவுரங்காபாத்திலுள்ளன. அவுரங்காபாத் உயர் நிலைக் கல்விக்கு பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. அதனிடம் ஐந்து பொறியியல் கல்லூரிகள் உள்ளன (ஒரு அரசு பொறியியல் கல்லூரி உட்பட), ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவையும் உள்ளன. DOEACC யின் ஒரு மண்டல மையமும் கூட இங்குள்ளது. அவுரங்காபாத் நகரத்தில் பாசறைப் பகுதியே பசுமை மிகுந்தப் பகுதியாகும். அதனிடம் ஒன்பது துளைகளுடைய கோல்ஃப் மைதானம் உள்ளது. மேலும் மராத்வாடா பகுதியின் ஒரே கோப்ஃப் மைதானமாகும். அவுரங்காபாத் பாசறை (சாவ்னி) 1819 ஆம் வருடத்தில் நிஸாம் படைகளுக்கு பயிற்சியளிக்க ஐரோப்பிய அதிகாரிகளுடன் துவங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மற்றும் நிஸாம் இடையில் ஓர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. மேலும் ஒரு முறையான பாசறையை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. பிகானீர் ரியாஸாதிற்குட்பட்ட அனைத்து கிராமங்களும் (பெயர்களாவன கரன்புரா, பாதாம்புரா, கேசார்சிங்புரா மற்றும் கோன்கன்வாடி) பிரிட்டிஷ்ஷாருக்கு கைமாற்றப்பட்டன. இன்று பாசறை 2584 ஏக்கர்களில் பரந்து விரிந்து, 2001 மக்கட்தொகையின்படி 19274 குடிமக்களுடன் உள்ளது. அவுரங்காபாத்தின் நகரத்தின் பண்பாடு ஹைதராபாத்தினால் வலுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நகரம் இன்னும் ஹைதராபாத்தின் இஸ்லாமிய பண்பாட்டின் சுவைகளையும் அழகியல்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் செல்வாக்கு உள்ளூர் மக்களின் மொழி மற்றும் உணவு முறைகளில் பிரதிபலிக்கிறது. இருப்பினும், மராத்தி மற்றும் உருது ஆகியவையே நகரின் முதன்மை மொழிகளாகும். ஆனால் அவை தக்ணி/ஹைதராபாத் உருது வழக்கு மொழியில் பேசப்படுகின்றன. வாலி தக்ணி வாலி அவுரங்காபாதி (1667-1731 அல்லது 1743) எனவும் அறியப்படுகிற அவுரங்காபாத்தின் முதல் தர உருதுப் புலவராவார். உருது மொழியில் பாடல் புனைந்த முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலவராவார். தலைசிறந்த புலவர்களான ஷா ஹடேம், ஷா அப்ரோ, மிர் டாகி மிர், ஸாக் மற்றும் ஸௌதா - ஆகியோர் அவரது ரசிகர்களுள் இருந்தனர். அவுரங்காபாத்தின் உணவு முக்லாய் அல்லது ஹைதராபாதி சமையல் வகைகளைப்போல் அதன் மணம் மிகுந்த புலாவ் மற்றும் பிரியாணியைப்போல் அதிகம் ஒத்திருக்கும். புத்துணர்ச்சி வாய்ந்த நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளால் சமைக்கப்பட்ட இறைச்சி சிறப்பு வாய்ந்தது, அதேபோல இன்பமூட்டும் இனிப்புகளுமாகும். உள்ளூர் சமையல் முறை முக்லாய் மற்றும் ஹைதராபாதி சமையல் முறை ஆகியவற்றின் கலப்பாகும், அது மராத்வாடா பகுதியின் நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளின் பாதிப்பில் உள்ளது. நான் காலியா இந்தியாவின் அவுரங்காபாத்துடன் சம்பந்தமுடைய உணவு வகையாகும். அதொரு பல்வகையான நறுமணப் பொருட்கள் மற்றும் சரக்குகளைச் சேர்த்து பக்குவம் செய்த உணவாகும். நான் என்பது தந்தூரியில் (சூடான கனப்பு) செய்யப்பட்ட ரொட்டியாகும். அதே சமயத்தில் காலியா என்பது ஆட்டிறைச்சி மற்றும் பல்வேறு நறுமணப்பொருட்களின் கலவையாகும். இந்த உணவு வகை முகம்மது பின் துக்ளக்கின் இராணு முகாமில் தொடங்கப்பட்டது. பின்னர் முகலாயர்களின் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் தக்காணத்தின் தௌலதாபாத் மற்றும் அவுரங்காபாத்தின் உள்ளும் புறமும் தங்களது தளங்களை வைத்திருந்தப்போது செய்யப்பட்டதாகும். அவுரங்காபாத்திலேயே தங்கி விட்ட சிப்பாய்கள் மற்றும் பாசறையில் பணிபுரிபவர்கள் உணவை புரந்தருளியது இன்று வரையொரு மரபாகத் தொடர்கிறது. தஹ்ரி : தஹ்ரி அல்லது தஹரி புலாவ்/பிரியாணி போன்றது. மேலும் அவுரங்காபாத் மற்றும் மராத்வாடாவில் மிகப் புகழ்பெற்றதாகும். தஹ்ரி அரிசியில் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுவதாகும், மரபாக பிரியாணியில் அரிசி இறைச்சியில் சேர்க்கப்படுவது போலல்லாததாகும். மராத்வாடா / தக்ணி சமையல் முறை என்பது புனேரி மற்றும் ஹைதராபாதி சமையல் முறைகளின் கலப்பாகும் (அது வழக்கமான தென்னிந்திய நறுமணப் பொருட்களான குழம்பு இலைகள், புளி மற்றும் தேங்காயை தங்களது உயர்வான சமையல் முறைகளில் அழகாக கலக்கப்படுவதாகும்). ஹைதராபாதி சமையல் முறைக்கு குறிப்பிட்ட வகையில் வேறுபட்டதானது, தக்காண சமையல் (மராத்வாடா, வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா) எளிமையானது இன்னும் முழுமையான முதல்தரமான விஷயமாகும். சமைக்கும் போது மசாலாப் பொடிகளுக்கும் அதன் சரியான கலவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, முகலாய் பண்டங்களில் அழுத்தம் வளமுள்ள ஒப்பனை மற்றும் சுவையூட்டுதலில் உள்ளது. அதேபோல முகலாய் பெரும்பாலும் குறைந்த வெப்பத்தில் தம்-பாணியில் தயாரிக்கப்படுவதாகும், தக்காண உணவு அதன் அரசு சமகாலத்திய உணவு போல் நேரம் நுகருகின்ற மற்றும் காராசாரமானது கிடையாது. முக்கிய உணவு பொருட்கள் கிடைப்பது, எளிதாக பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள் மற்றும் சில மூலப் பொருட்கள் வாடிஸ் (காயவைக்கப்பட்ட அரிசி/அவரை விதைகள்), பருவத்தின் காய்கறிகள் - வாங்கி (கத்தரிக்காய்கள்) பெரும்பாலான உணவு பட்டியல்களில் காணப்படுகின்றன, அதேபோல அப்பிரதேசத்தின் இதர அவரை விதைகள் அவற்றின் இருப்பை ஜுன்காக்கள் அல்லது பிட்லாக்களில் (பச்சையான தக்காளி குழம்பு பருப்பு பொடியுடன் கூடியது) காணும். பூண்டுடன் வேர்க்கடலையை பயன்படுத்துவது, மிளகாய் மற்றும் கொப்பரை தேங்காய்களுடன் சட்னி, தேச்கள் மற்றும் பசைகள்/குழம்புகள் உருவாக்கத்தில் (வெங்காயம் முக்கிய இடுபொருள்) காணப்படுவது போன்றது. ஆட்டிறைச்சியும் காட்டுக்கோழியும் அவற்றின் மென்மை மற்றும் சுவைக்கு (உள்ளூரில் காவ்ரன் கோழிகள் இழைச் சத்துக்களோடு பிராய்லர் கோழிகளோடு ஒப்பிடும்படி இருந்தாலும் அதன் சிறப்பான சுவைக்கு மிகவும் விரும்பப்படுகின்றன). உடன் உண்ணப்படக்கூடிய ஜ்வாரிச்சி அல்லது பாஜ்ரிச்சி பாக்ரி ரொட்டி, சப்பாத்திக்கள் மற்றும் தாபட்யா போன்ற வேறுவகைகள் நன்கறியப்பட்டவை, தளிபீத் பல்வேறு தானியங்களின் சேர்க்கையிலிருந்து தயாரிக்கப்பட்டது, வெண்ணெய்யுடன் நுகரப்படுகிறது. அவுரங்காபாத் பருத்தி மற்றும் பட்டின் பளபளப்பு பகட்டினாலான மாஷ்ரூ மற்றும் ஹிம்ரூ துணிவகைகளுக்கு பிரபலமானது. ஹிம்ரூ ஒரு பழமை வாய்ந்த நெய்யும் கைத்திறனாகும் மேலும் உண்மையில் கும் குவாப் என அறியப்பட்டது. வோல்வரின் (திரைப்படம்) எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸின் கற்பனைப் பாத்திரம் வோல்வரினைச் சார்ந்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-மென் தொடரின் நான்காவது பகுதியான இத்திரைப்படம் மே 1, 2009 அன்று உலகம் முழுவதும் வெளியானது. கவின் ஹூடால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் ஹக் ஜேக்மேன் தலைமைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் லீவ் ஸ்க்ரெய்பர், டானி ஹஸ்டன், வில்.ஐ.அம், லின் கொலின்ஸ், டைலர் கிட்ஸ்ச், டேனியல் ஹென்னி மற்றும் ரியான் ரெனால்ட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். "எக்ஸ்-மென்" திரைப்படத் தொடருக்கு முன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மரபுபிறழ்ந்த வோல்வரின் மற்றும் அவரது சகோதரர் விக்டர் க்ரீட் இருவருக்கும் உள்ள உறவு மற்றும் அவர்களது கடந்த கால வன்முறையை மையப்படுத்தியுள்ளது. மேலும் இக்கதைக்களமானது டீம் X உடன் இருந்த அவரது காலத்தில் துணைத்தளபதி வில்லியம் ஸ்ட்ரைகெருடன் சண்டைகளையும், வெப்பன் X நிகழ்ச்சியின் போது அழிக்க இயலாத உலோக அடமண்டியம் வோல்வரினின் எலும்புக்கூட்டில் பிணைக்கப்படுவதையும் விவரிக்கிறது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் கனடாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ஹூட் மற்றும் பாக்ஸின் செயற்குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இதன் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவுசெய்யப்படாத படப்பிடிப்புப் பதிவு இணையத்தில் வெளியானது. "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்" கலவையான திறனாய்வுகளைப் பெற்றது. இத்திரைப்படம் மற்றும் அதன் திரைக்கதை ஊக்கமூட்டுவதாக இல்லை என்றாலும் ஹக்ஜேக்மேனின் நடிப்பு விமர்சனங்களில் பாராட்டுப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் சிறந்த தொடக்கத்தை இது கொடுத்தது. அமெரிக்கா மற்றும் கனடாவில் $179 மில்லியன் வருவாயைக் கொடுத்ததுடன் உலகளவில் $373 மில்லியனுக்கு அதிகமாய் வருவாய் ஈட்டியது. 1845 ஆம் ஆண்டு கனடாவில் இளவயது ஜேம்ஸ் ஹவ்லெடின், நிலப்பணியாளரான தாமஸ் லோகனால் அவரது தந்தைக் கொல்லப்படுவதைக் காணுகிறார். இந்தப் பேரதிர்ச்சி சிறுவனின் திசு மரபு பிறழ்வுக்கு வழிவகுத்து ஜேம்ஸின் கைகளில் இருந்து கூர்எலும்பு வெளிநீட்டுகிறது. இதன் மூலம் அவரது தந்தையைக் கொலை செய்தவனை ஜேம்ஸ் கொலை செய்கிறார். கொலையாளி இறக்கும் தருவாயில் ஜேம்ஸின் உண்மையான தந்தை ஜான் ஹவ்லெட் அல்ல என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். அவரது தந்தையின் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மகனும் அவரது சகோதரனுமான விக்டர் கிரீட் உடன் ஜேம்ஸ் தப்பியோடுகிறார். அவர்களது அடுத்த நூற்றாண்டை அமெரிக்க இராணுவத்தில் போர்வீரர்களாகக் கழிக்கின்றனர். அப்போது அமெரிக்கக் குடிமுறைப் போர் மற்றும் உலகப் போர்கள் இரண்டிலும் மற்றும் வியட்நாம் போரிலும் சண்டையிடுகின்றனர். வியட்நாமில் ஒரு உள்ளூர் கிராமவாசியை விக்டர் கற்பழிப்பதைத் தடுத்தபிறகு அவரது தலைமை அதிகாரியை ஜேம்ஸ் கொலை செய்கிறார். விக்டரின் செயல்பாடுகளில் அவரின் எதிர்ப்புகள் விளைவாக ஜேம்ஸ் அவரது சகோதரருடன் சண்டையிடுகிறார். மேலும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும் படையின் மூலம் இருவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருவரையும் மேஜர் வில்லியம் ஸ்ட்ரைகெர் சந்திக்கிறார். குறிதவறாது சுடுபவரான ஏஜெண்ட் ஜீரோ, கூலிப்படையின் வேடு வில்சன், இடம் கடந்து செல்லும் ஜான் வரெய்த், வெல்ல முடியாத ஃப்ரெடு டக்ஸ் மற்றும் மின்னியக்க ஆற்றல் கொண்ட கிரிஸ் ப்ராட்லே ஆகியோரைக் கொண்ட ஒரு மரபுபிறழ்ந்தவர்களின் குழுவான டீம் X இல் உறுப்பினராகும் படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அந்த அணியில் இணைகின்றனர். ஆனால் அக்குழுவினரின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மற்றும் மனித வாழ்க்கையின் பாராமுகம் காரணமாக ஜேம்ஸ் அவர்களை விட்டு விலகுகிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லோகன் என்ற பெயருடன் கைலா சில்வர்போக்ஸ் என்ற அவரது கேர்ல்பிரண்டுடன் ஜேம்ஸ் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். துணைத்தளபதி ஸ்ட்ரைக்கர் லோகனை சந்தித்து அவர்களது அணியின் உறுப்பினர்களை யாரோ ஒருவர் கொலை செய்வதாகவும், வில்சன் மற்றும் ப்ராட்லே இருவரும் கொலை செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்கிறார். பின்னர் விரைவிலேயே கைலாவை விக்டர் கொலைசெய்து லோகனை மூர்க்கத்தனமாக அடித்துவிடுகிறார். அதே வழியில் விக்டரை வீழ்த்தவேண்டுமென லோகனுக்கு ஸ்ட்ரைக்கர் கோரிக்கை விடுக்கிறார். லோகன் அவரது எலும்புக்கூட்டை ஒரு மெய்நிகரான அழிக்க இயலாத உலோகமான அடமண்டியமுடன் வலுப்படுத்துவதற்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். செயல்முறைக்கு முன்பு கைலா லோகனுக்கு கூறியக் கதையை அடிப்படையாகக் கொண்டு "வோல்வரின்" என உள்வரையப்பட்ட கழுத்துப்பட்டையை லோகன் கேட்கிறார். இச்செயல்முறை முழுமையாக நிறைவடைந்த பிறகு லோகனின் நினைவாற்றலை அழிக்கும் படி ஸ்ட்ரைக்கர் ஆணையிடுகிறார். ஆனால் லோகன் அதைத் தற்செயலாய் ஒட்டுக்கேட்டு அங்கிருந்து சண்டையிட்டு வெளியேறும் போது ஜீரோவினால் பின் தொடரப்படுகிறார். தப்பியோடும் போது ஒரு வயதான பண்ணைய தம்பதிகளின் தானியக் களஞ்சியத்தில் லோகன் மறைந்துகொள்கிறார். அந்தத் தம்பதியினர் அவரைக் கண்டுபிடித்து அந்த இரவில் அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். அடுத்த நாள் பண்ணையில் லோகன் இருப்பதை ஜீரோ கண்டுபிடிக்கிறார். ஜீரோ அந்தத் தம்பதியினரை உணர்ச்சியற்று கொலை செய்கிறார். அதன் பிறகு லோகன் அவரைப் பின் தொடரும் இரு ஹம்வீஸ்கள் மற்றும் ஒரு ஹெலிக்காப்டரை தாக்குகிறார். அந்த சண்டையில் இருசக்கர வாகனம் மற்றும் அவரது அடமண்டியத்தால் வலுப்படுத்தப்பட்ட கூரெலும்புகளின் உதவியுடன், வோல்வரின் ஜீரோவைத் தோற்கடித்து கொலை செய்கிறார். வரெய்த் மற்றும் டக்ஸை லோகன் சந்தித்து "த ஐலேண்ட்" என அழைக்கப்படும் ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடம் இருக்கும் இடத்தைப் பற்றி லோகன் வினவுகிறார். அப்போது டக்ஸ் மிகவும் உடல்பெருத்துக் காணப்படுகிறார். மரபுபிறழ்ந்தவர்களின் மேல் சோதனைகளை ஸ்ட்ரைக்கர் நடத்துவதாக அவர் விளக்குகிறார். மேலும் அவருடைய புதிய ஆய்வுப் பொருளாக விக்டர் செயல்படுவதாகவும் கூறுகிறார். அவர்களின் ஒருவரான, ரெமி லீபியூ ("கம்பிட்") அங்கிருந்து தப்பித்து வந்திருந்ததால் அந்த இடத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். வரெய்த் மற்றும் லோகன் இருவரும் நியூ ஓர்லென்ஸில் கம்பிட்டை சந்தித்து தீவு இருக்கும் இடத்தைப் பற்றி வினவுகின்றனர். ஆனால் அவரை மீண்டும் பிடித்து தாக்க லோகன் அனுப்பப்பட்டிருப்பதாக கம்பிட் சந்தேகிக்கிறார். இதற்கிடையில் வரெய்த் விக்டரை எதிர்கொள்கிறார். மேலும் இருவரும் சண்டையிடத் தொடங்குகின்றனர். அதில் வரெய்த்தை விக்டர் கொலை செய்கிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக அவரது இரத்த மாதிரியை எடுத்துக் கொள்கிறார். லோகன் அவரது செழுமைப்படுத்தப்பட்ட கூரெலும்புகள் மூலம் விக்டரைத் தாக்கி கிட்டத்தட்ட அவரைக் கொலை செய்கிறார். எனினும் கம்பிட் அந்தச் சண்டையில் குறுக்கிட்டு விக்டர் தப்பிப்பதற்கு இடமளிக்கிறார். லோகன் மற்றும் கம்பிட் இருவரும் அவர்களது சண்டையைத் தொடர்கின்றனர். இச்சண்டையில் கம்பிட்டை லோகன் வீழ்த்துகிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக லோகன் வேலை செய்யவில்லை என கம்பிட்டை நம்பவைக்கிறார். இதனால் அவரை த்ரீ மைல் ஐலேண்டில் உள்ள ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடத்திற்கு கம்பிட் அழைத்துச் செல்கிறார். கைலா இறக்கவில்லை என்பதையும் ஸ்ட்ரைக்கரால் கடத்தப்பட்ட கைலாவின் சகோதரியின் பாதுகாப்பிற்கான பிரதிபலனாக ஸ்ட்ரைக்கருடன் கூட்டு சேர்ந்துள்ளதையும் லோகன் அறிகிறார். ஆனால் உண்மையில் கைலா, லோகனின் மேல் அன்பு செலுத்தவில்லை என்பதை அவர் இன்னும் அறிந்திருக்கவில்லை. லோகன் காட்டிக்கொடுப்பட்டதால் மனதளவில் புண்பட்டு அவரை விட்டு விலகுகிறார். சினம்கொண்டு விக்டருடன் அவர் சண்டையிடும் வாய்ப்பையும் லோகன் ஒதுக்குகிறார். விக்டர் அவரது பணிக்காக அமண்டியத்தைப் பிணைக்குமாறு கேட்டபோது விக்டர் செயல்முறையை தொடரப்போவதில்லை என்ற அடிப்படையில் ஸ்ட்ரைக்கர் அதை புறக்கணிக்கிறார். ஸ்ட்ரைக்கர் இருவரையும் காட்டிக்கொடுக்கையில் கைலா அவரை நம்பவைக்க முயற்சிக்கும் போது கைலாவை கொலை செய்ய விக்டர் முயற்சிக்கிறார். ஆனால் கைலாவின் அலறலைக் கேட்டு லோகன் அங்கு திரும்புகிறார். அந்த மூர்க்கத்தனமான சண்டையில் விக்டரை லோகன் வீழ்த்துகிறார். மேலும் கிட்டத்தட்ட விக்டரை கொலை செய்யமுயலுகையில் கைலா அவரது மனிதத்தன்மையை ஞாபகப்படுத்தியதால் அச்செயலை லோகன் நிறுத்திக்கொள்கிறார். அதற்குப்பதிலாக விக்டரை மூர்ச்சையாகும் படி லோகன் தாக்குகிறார் பிறகு சிறைப்படுத்தப்பட்டுள்ள மரபுபிறழ்ந்தவர்களை மீட்பதற்கு கைலாவிற்கு உதவுகிறார். வெப்பன் XI ஐ ஸ்ட்ரைக்கர் செயல்படுத்துகிறார். தொடக்கத்தில் வேட் வில்சனாக இருந்த அவர் இப்போது ஒரு "மரபுப்பிறழ்ந்த கொலைகாரராக" பிற மரபுபிறழ்ந்தவரிகளின் ஆற்றல்களுடன் அவரது கைகளில் பெரிய வெட்டுக்கத்திகளை உள்ளடக்கி ஒரு சூப்பர்-வீரராக இருந்தார். மேலும் ஸ்ட்ரைக்கரின் கட்டளைகளை ஏற்று நடக்கும் இவரை ஸ்ட்ரைக்கர் "த டெட்பூல்" எனக் குறிப்பிட்டார். மரபுபிறழ்ந்தவர்கள் தப்பித்தோடும் போது லோகன் வெப்பன் XI ஐ பிடித்துக்கொள்கிறார். ஆய்வுக்கூடத்தின் மலையூடு வழிகளின் மூலம் மரபுபிறழ்ந்தவர்கள் தப்பிக்கின்றனர். மூலையின் சொல்கேட்டு நடக்கும் இளவயது குருடரான ஸ்காட் சம்மர்ஸ் அவர்களுக்கு வழிகாட்டுகிறார். இந்த அமைப்பினரை பேராசிரிய சார்லஸ் சேவியர் அவரது பள்ளியில் பாதுகாப்பளிப்பதற்காக வரவேற்பளிக்கிறார். கைலா அவரது வயிற்றில் குண்டடிபடுகிறார். மேலும் ஸ்ட்ரைக்கரின் பாதுகாவலர்களிடம் இருந்து அடிபட்டு இறக்குதருவாயில் இருக்கும் அவர் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார். ஆய்வுக்கூடத்தின் குளிரூட்டும் கோபுரங்களின் ஒன்றில் மேல் சண்டையிடுவதற்கு லோகன் வெப்பன் XI ஐ கவர்ந்து செல்கிறார். அச்சண்டையில் விக்டர் அவருக்கு இடையில் புகுந்து உதவும் வரை லோகன் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் செல்கிறார். அவர்கள் வெப்பன் XI உடன் சண்டையிடுகின்றனர். மேலும் இதன் முடிவில் லோகன், வெப்பன் XI இன் தலையைத் துண்டித்து, குளிர்சாதன கோபுரத்தின் அடித்தளத்திற்கு உதைத்து தள்ளுகிறார். விக்டர் அவர்கள் ஆரம்பித்ததை முடிப்பதற்காக புறப்படுகிறார். மேலும் கோபுரம் இடிந்து விழுவதில் இருந்து கம்பிட் மூலமாய் லோகன் காப்பாற்றப்படுகிறார். காயமுற்ற கைலாவை காப்பதற்கு லோகன் அவரைத் தூக்கிச்செல்லுகையில், லோகனின் நெற்றியில் அடமண்டியத்தால் ஆன குண்டுகளை ஸ்ட்ரைக்கர் சுடுகிறார். இதனால் லோகன் மூர்ச்சையாகிறார். ஸ்ட்ரைக்கர் அவரது துப்பாக்கியை கைலாவின் மீது வைக்கிறார். ஆனால் கைலா அவரது மரபுபிறழ்ந்த இணங்க வைக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஸ்ட்ரைக்கரை துப்பாக்கியைக் கீழே போடும்படிச் செய்கிறார். பிறகு அவரின் பாதம் இரத்தம் சொட்டும் வரை நடக்கும் படியும் பிறகு மீண்டும் நடக்கும் படியும் கைலா ஆணையிடுகிறார். பிறகு கைலா அவரது காயங்களின் காரணமாக இறக்கிறார். லோகனின் மயக்கத்தில் இருந்து அவரை கம்பிட் மீட்டெடுக்கிறார். ஆனால் அடமண்டியம் குண்டுகளினால் சுடப்பட்டது அவரது மூலையில் முழுவதுமான நினைவிழப்பைத் தருகிறது. பேரழிவின் அக்காட்சியில் காவல்துறையினர் வரும்போது லோகனை அவருடன் வந்துவிடும் படி கம்பிட் அறிவுறுத்த முயல்கிறார். ஆனால் லோகன் அதை மறுத்து அவரது வழியில் செல்வதற்கு விரும்புகிறார். ஜேசன் ஸ்ட்ரைக்கர் (வில்லியம் ஸ்ட்ரைக்கரின் குளிர்செனிப்பு தொங்குதலில் வைக்கப்பட்டு இருக்கும் நரம்பு ரண சிகிச்சை செய்யப்பட்ட தொலையுணர்வு மகன்) உள்ளிட்ட, முந்தைய திரைப்படங்களில் இருந்த பாத்திரங்களின் இளைய வயதுடைய எண்ணற்ற கேமியோ தோற்றங்களை இத்திரைப்படம் உள்ளடக்கியிருந்தது. இத்திரைப்படத்தின் முன்னோட்டங்களில் காணப்பட்ட ஒரு இளவயது புயல்காற்றுக்கான கேமியோ பாத்திரம், திரைப்படம் வெளியாகும் போது நீக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் ரீதியாக புத்திளமையாகக் காட்டப்பட்ட பேட்ரிக் ஸ்டீவர்ட்டான, இன்னும் கால்களை இழக்காத இளவயது சார்லஸ் சேவியரின் கேமியோ பாத்திரமும் படத்தில் இல்லை. டாக்டர் கரோல் ஃப்ரோஸ் பாத்திரத்தில் ஆஷ்ஹெர் கெட்டி நடித்தார். சீட்டுவிளையாட்டு வீரர் டேனியல் நெக்ரெனு கேமியோ பாத்திரமாக வந்தார். டொரோண்டோவின் நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டிருந்ததால் ஃபில் ஹெல்முத் இவருடன் இணைய வேண்டுமென விரும்பியும் அது முடியவில்லை. எக்ஸ்-மென்னின் இணை-உருவாக்குனர் ஸ்டான் லீ, அவரும் கேமியோ பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். ஆனால் இறுதியில் திரைப்படத்தில் அவர் இடம் பெறவில்லை. டேவிட் பெனிஆஃப், ஒரு காமிக் புத்தக ரசிகராவார், 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் இவர் இதன் கையெழுத்துப் படிவத்தை எழுதத் தொடங்குவதற்கு முன்பே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த செயல் திட்டத்திற்காக முயற்சி செய்தார். கையெழுத்துப் படிவத்தை எழுதுவதற்கு ஆயத்தமாகையில், பேரி விண்டர்-ஸ்மித்தின் "வெப்பன் X" கதையை அவர் மீண்டும் படித்தார். அதே போல் கிரிஸ் க்ளார்மோண்ட் மற்றும் ஃப்ரான்க் மில்லரின் 1982 பாத்திரத்தின் மேல் எல்லைக்குட்ட தொடர் (அவரது விருப்பமான கதைக்களம்) ஆகியவற்றையும் மீண்டும் படித்தார். வெப்பன் Xக்கு முன்னாள் வோல்வரினின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் 2001 எல்லைக்குட்ட தொடர் "ஆரிஜின்ஸையும்" உத்வேகமாகக் கொண்டும் பணியாற்றிக் கொண்டிருந்தார். முந்தைய "எக்ஸ்-மென்" திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான பாத்திரப் பகுதிகளை விரும்பிய ஜேக்மேன் இந்த கையெழுத்து படிவத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டார். பாக்ஸிற்காக "ஹிட்மேனை" எழுதியிருந்த ஸ்கிப் உட்ஸ், பிறகு பெனிஆஃபின் கையெழுத்துப் படிவத்தை மறு ஆய்வு செய்து மீண்டும் எழுதுவதற்கு பணியமர்த்தப்பட்டார். பெனிஆஃப் "இருண்ட மற்றும் சிறிது அதிக மிருகத்தனமான" கதையை எதிர்பார்த்தார். R தரவரிசையை மனதிற்கொண்டு இதை எழுதினார், இருந்தபோதும் திரைப்படத்தின் இறுதி அமைவை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஏற்பதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் R-தரவரிசைக்கான தேவையை ஜேக்மேன் பார்க்கவில்லை. இத்திரைப்படத்தின் இறுதி தரவரிசை PG-13 ஆக இருந்தது. 2003 ஆம் ஆண்டில் நியூ லைன் சினிமாவில் ரெனால்ட்ஸ் மற்றும் டேவிட் எஸ். கோயர் மூலமான அவரது சொந்தத் திரைப்படத்திற்காக டெட்பூல் உருவாக்கப்பட்டது, ஆனால் அவர்கள் "பீளேடி: ட்ரினிட்டி" இல் கவனத்தை செலுத்தியதால் அச்செயல்திட்டம் வீழ்ச்சியடைந்தது மேலும் தயாரிப்புப் பணிகள் சிதைவுற்றது. கையெழுத்து படிவத்தில் ஜேக்மேன் விவரித்தது போல் வேடிக்கையாகப் பாத்திரத்தை பெனிஆஃப் எழுதியிருந்தார். ஆனால் அவரது சில தனித்தன்மையில் இருந்து அது விலகிச்செல்வது போல் இருந்தது. அதேவகையில் முந்தைய "எக்ஸ்-மென்" திரைப்படங்களில் திரைப்படத்தயாரிப்பாளர்கள் இட விரும்பிய பாத்திரம் கம்பிட் ஆகும். வோல்வரினைப் போன்றே கம்பிட் ஒரு "கட்டுப்பாடற்ற தனிநபராக" இருப்பதால் ஜேக்மேன் அப்பாத்திரத்தை விரும்பினார். அதைப்பற்றிக் கூறும் போது, தொடக்க முத்தொகுப்பில் வோல்வரின் மற்றும் பைரோவின் உறவு எதிரொலித்துள்ளது என்று கூறினார். இந்தக் கையெழுத்துப் படிவத்திற்காக டேவிட் அய்யர் பங்களித்திருந்தார். பெனிஆஃப் அவரது வரைவை 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் முடித்தார். மேலும் ஜேக்மேன் கூறுகையில் 2007 ஆம் ஆண்டில் "ஆஸ்திரேலியா" படப்பிடிப்பை தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டிருந்தபோதும் ஒரு ஆண்டு முன்பே படப்பிடிப்பு இருக்கும் எனத் தெரிவித்தார். 2007–2008 எழுத்தாளர்கள் கழகத்தின் அமெரிக்க வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு, ஜேம்ஸ் வேண்டெர்பில்ட் மற்றும் ஸ்காட் சில்வர் இருவரும் இறுதிநிமிடத்தில் மீண்டும் எழுதுவதற்காக பணியமர்த்தப்பட்டனர். 2008 ஆம் ஆண்டின் வெளியீட்டிற்காக 2007 ஆம் ஆண்டு ஜூலையில் செயல்திட்ட இயக்குனராக கவின் ஹூட் அறிவிக்கப்பட்டார். அலெக்சாண்டிரி அஜா மற்றும் லென் வைஸ்மென் ஆகியோரும் இப்பணியைச் செய்வதற்கு விரும்பிய போது, முந்தைய, "எக்ஸ்-மென்" மற்றும் "X2" இயக்குனர் பைரன் சிங்கர் மற்றும் "எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்" இயக்குனர் ப்ரெட் ரேட்னெர் ஆகியோரும் அவர்களுடைய உரிமையைத் திரும்பப்பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். "த லாஸ்ட் ஸ்டாண்டிற்காக" அணுகப்பட்ட ஜேக் சிண்டெர், "வாட்ச்மென்" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் இத்திரைப்படத்தை ஒத்துக்கொள்ளவில்லை. ஹூட்டின் முந்தையத் திரைப்படமான "டிசோட்சி" யின் முக்கிய பாத்திரம் மற்றும் லோகனுக்கு இடையே ஆன ஒற்றுமையை ஜேக்மேன் கண்டார். ஹூட் காமிக் ரசிராக இல்லாத போதும் ஜேக்மேனைப் பற்றி விவரிக்கையில், "வோல்வரினின் பாத்திரமானது, சிலவழிகளில் செயல்படும் ஒருவராக அவருடைய சிறந்த முறையீடு இருந்தது என்பது உண்மை, அவரது இயற்கைப்பண்பு மூலம் சுயவெறுப்புகளின் சிறப்பான பகுந்தளிப்பை நிறைவு செய்திருக்கிறார் மற்றும் அவரது சொந்த இயற்பண்புடன் நிலையான போரில் ஈடுபட்டுவருகிறார் என்பதை உணர்கிறேன்" எனக் கூறினார். இயக்குனர் விவரிக்கையில், அவரது விலங்குத்தன்மையுடைய மூர்க்ககுணம் மற்றும் உயர் மனிததன்மையுடைய தரங்களுக்கு இடையேயான வோல்வரினின் உள்ளடக்கிய போராட்டத்தை இத்திரைப்படத்தின் கருப்பொருள்கள் மையப்படுத்தியுள்ளன என விளக்கினார். ஹூட் முந்தைய திரைப்படங்களை அனுபவித்தார். ஆனால் தயாரிப்பு பணியில் தொடக்கத்தில் ஒரு மாறுபட்ட உணர்வை வெளிப்படுத்தினார். அக்டோபரில் வெளியீட்டு தேதி மற்றும் "எகஸ்-மென் ஆரிஜின்ஸின்" முன்னொட்டம், மே 1, 2009 என பாக்ஸ் அறிவித்தது. ஆரம்பப் படப்பிடிப்புகள் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிட்னியில் உள்ள பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆஸ்திரேலியாவின் நடந்தது. ஜனவரி 18, 2008 இல் நியூசிலாந்தில் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாக டன்பின் தேர்வுசெய்யப்பட்டது. உள்ளூர் பனிச்சறுக்காட்டத் தளத்தில் வெடிப்பொருள்களை சேமித்து வைப்பதற்கு பாக்ஸிற்கு இடமளித்ததற்காக தொழிலாளர் துறையின் முடிவு பற்றி குவிஸ்டவுன் லேக்ஸ் மாவட்டப் பேரவை விவாதம் செய்தது, இவ்வாறாக சர்ச்சை உருவானது. இதனால் பாக்ஸ், வெடிபொருள்கள் சிலவற்றை வேறொரு இடத்திற்கு மாற்றியது. ஹட்சனின் பண்ணையை வெடிக்கவைக்கும் காட்சிக்காக இந்த வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இக்காட்சிக்காக நான்கு கேமிராக்கள் தேவைப்பட்டன. தயாரிப்புக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு மறுதயாரிப்பு வல்லுனர்களின் ஆலோசனைக்கு இடமளிப்பதற்கு, ஜேக்மேன் மற்றும் பாலெர்மோவின் வூஸ் புரொடக்சன்ஸ் இருவரும் பேரவையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பாக்ஸ் (பெரும்பகுதி படப்பிடிப்பு இங்கு நடத்தப்பட்டது) மற்றும் நியூ ஆர்லியன்ஸ், லூசியானாவில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடத்திற்காக காக்கட்டோ தீவு பயன்படுத்தப்பட்டது; இங்குள்ள பிரமாண்டமான கட்டங்கள், டிஜிட்டல் முறையில் அமைவுகளை விரிவுபடுத்தும் பணத்தை சேமிக்க உதவியது. சிட்னியின் பொருளாதாரத்திற்காக, இத்திரைப்படத்தின் தயாரிப்பானது AUD$60 மில்லியனை கொடுக்கும் என ஊகஞ்செய்யப்பட்டது. முதன்மை படப்பிடிப்பு ஆனது மே 23 அன்று நிறைவுபெற்றது. மார்ச் 23 வரை இரண்டாவது அலகு நியூசிலாந்தில் படப்பிடிப்பைத் தொடர்ந்தது. மேலும் முதல் அலகின் சுற்றைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு படிப்பிடிப்புத் தொடரும் எனத் திட்டமிடப்பட்டது. நார்மண்டி லேங்கிங்ஸின் போது லோகனின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உள்ளிட்டவை, ப்ளாக்ஸ்மித்ஸ், நியூசவுத் வேல்ஸில் படம் பிடிக்கப்பட்டது. திரைப்படத்தின் இயக்கத்தின் ஹூட் மற்றும் பாக்ஸ் இருசாரருக்கும் விவாதம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டபின் அழுத்த சீர்குலைவுடன் இராணுவத்தில் பணிபுரிந்தவராக வோல்வரின் சித்தரிக்கப்பட்டிருந்தது விவாதங்களில் ஒன்றாக அமைந்தது. இதைப் போன்ற பளுவான கருப்பொருள்களின் மேல் ரசிகர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என செயற்குழுவினர் விவாதம் செய்தனர். தயாரிப்பாளர் லாரன் ஸ்சுலர் டோனரின் கணவர் ரிச்சர்ட் டோனர் குழுவின நெருக்கடிகளை எளித்தாக்க ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முன் இரண்டு பதிலமர்த்தப்பட்டவர்களை இந்த ஸ்டூடியோ கொண்டது. ஹூட் கருத்துரைக்கையில், "ஆரோக்கியமற்ற மற்றும் சில சமயம் மிகவும் கடுமையான வாக்குவாதம் போன்றவை, முன்புக்கு இப்போது சாதகமாக உள்ளது. [...] இந்த வாக்குவாதங்களால் இத்திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக நான் நம்புகிறேன். யாரும் எங்களைப் பற்றி பேசவில்லை என்றால், நாங்கள் பிரச்சினைகளில் இருந்திருப்போம்!" ஹூட் மேலும் கூறும்போது, அவரும் தாமஸ் ரூத்மன் இருவரும் ஆக்கப்பூர்வமான கலந்தாய்வுகளில் "ஆற்றல்நிறைந்த" மனிதர்களாக இருந்தனர். ஆனால் அவர்களுக்குள் "தொடர்ந்து நீடிக்கும்" வாதம் ஏதும் இருந்ததே இல்லை என்றார். 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் வானிலை மற்றும் "ஆஸ்திரேலியா"விற்கான ஹக் ஜேக்மேனின் விளம்பரப் பொறுப்புகள் போன்ற வேலைத்திட்ட கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு தயாரிப்பு வான்கோவருக்கு மாறியது. பெரும்பாலும் லார்ட் பைங் செக்கண்டரி ஸ்கூல் மற்றும் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடந்தது. அங்கு ரியான் ரெனால்ட்ஸுடனான காட்சிகள் நிறைவுற்றது போன்ற பணிகள் நடந்தன. இவர் முதன்மை படப்பிடிப்பின் போது வேறு பிற இரண்டு திரைப்படங்களிலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். கவின் ஹூட், இத்திரைப்படத்தில் பன்மடங்கான "இரகசிய முடிவுகள்" இருப்பதாகவும், மேலும் இத்திரைப்படத்தின் அச்சுக்கு அச்சு இந்த முடிவுகள் மாறுபடும் என அறிவித்தார். வோல்வரின் ஒரு கிழக்கத்திய பாரில் குடித்துக்கொண்டிருப்பதாக ஒரு பதிப்பு காட்டுகிறது. அந்தப் பாரின் பணியாளர், லோகனிடம் மறப்பதற்கு மது அருந்துகிறீர்களா என்று வினவுவியதற்கு, அவர் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக குடிப்பதாக பதில் கூறுகிறார். மற்றொரு காட்சியில் வெப்பன் XI, இடிந்த கோபுர கட்டடத்தின் மேல், அவரது துண்டிக்கப்பட்ட தலையை தொட முயற்சிக்கிறது. "வோல்வரினின்" ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சி விளைவுகளை அவர்கள் செய்திருந்தனர். இதற்காக மூன்று விளைவுகள் மேற்பார்வையாளர் மற்றும் 17 வேறுபட்ட நிறுவனங்கள் இத்திரைப்படத்தில் பணிபுரிந்தனர். இதில் மிகவும் முக்கியமானது ஹைடுரூலக்ஸ் வசதியாகும், இதை "எக்ஸ்-மென்" முத்தொகுப்பில் பணிபுரிந்திருந்தனர், திரீ மைல் ஐலேண்ட் மற்றும் கம்பிட்டின் ஆற்றல்களின் சண்டைகளுக்காக இது பொறுப்பெடுத்திருந்தது. பல ஆக்கக்கூறுகள் மொத்தமாக கணினியின் உருவாக்கப்பட்ட உருவப்படம் மூலமாக உருவாக்கப்பட்டன. அடமண்டியம் உட்செலுத்தும் இயந்திரம், கம்பிட்டின் விமானம் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட கூரெலும்புகளுடன் வோல்வரின் கதவைக் கிழிப்பது போன்ற காட்சிகள் இதில் உள்ளடக்கமாகும். சில காட்சிகளுக்காக CG கூரெலும்புகளும் உருவாக்கப்பட்டன. ஏனெனில் நெருக்கமான காட்சிகளில் முட்டுகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் இவ்வாறு உருவாக்கப்பட்டது. மேட் பெயிண்டிங்களின் பரவலான பயன்பாடும் இதில் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படத்தின் இறுதி காட்சிக்காக ஐந்து மாறுபட்ட மேட்களை இதில் மேட் வேர்ல்ட் டிஜிட்டல் உருவாக்கியது—அழிக்கப்பட்ட த்ரீ மைல் ஐலேண்டின் குறைபாடு இதன் மூலம் சித்தரிக்கப்பட்டது——மற்றும் ஆப்பிரிக்கா காட்சிகளுக்கான ஆதாரங்களாக, ஹாட்ச் ப்ரொடக்சன்ஸ் நிறுவன ஃபேவலாவின் உருவப்படங்களை கேவின் ஹூட் பயன்படுத்தினார். "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரினுக்கான" இசை ஹேரி கிரீக்சன்-வில்லியம்ஸால் உருவாக்கப்பட்டது, மால்கம் லுக்கரின் மூலம் தொகுக்கப்பட்டது, கோஸ்டா கோட்செலஸ் மூலம் பொறியமைக்கப்பட்டது. மேலும் மார்டின் டில்மனின் எலெக்ட்ரோ செல்லோவும் இதில் பயன்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் "Tracksounds.com" இன் கிரிஸ்டோபர் கோல்மன் உடனான நேர்காணலில், கிரீக்சன்-வில்லியம்ஸ் கூறுகையில், கவின் ஹூட் இந்த செயல்திட்டதில் ஈர்த்ததாகக் கூறினார். மேலும் கூறுகையில்: "சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோல்டன் குளோப்ஸ் இரவு விருந்தில் நான் அவரை சந்தித்தேன். அந்த இரவில் இருவரும் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருந்தோம். ஆனால் இருவருமே வெற்றிபெறவில்லை. "டிசோட்சி" க்காக அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். மேலும் இரவு விருந்தில் நான் அவருடன் பேசினேன், அவர் ஒரு உண்மையான சாதுர்யமான மற்றும் புத்திசாலியான மனிதராக தோன்றினார்...இசையிலும் அவ்வாறே நினைக்கத் தூண்டினார். அதனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் உண்மையில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். மேலும் "வோல்வரிக்கான" சாத்தியக்கூறுகளைப் பற்றியும் நாங்கள் கருத்துப் பரிமாறிக்கொண்டோம்." நேர்காணல் நடந்த அச்சமயத்தில், டோனி ஸ்காட்டின் மறுதயாரிப்பான "த டேக்கிங் ஆப் பெல்ஹாம் 1 2 3" இல் கிரீக்சன்-வில்லியம்ஸ் ஏற்கனவே இசையமைத்துக் கொண்டிருந்தார். ஆனால் "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்" முந்தைய வெளியீட்டு நாள், அந்த செயல்திட்டத்திலும் அவரை பணிபுரியக் காரணமாக அமைந்தது. அதே போல் டிஸ்னியின் வரவிருக்கும் "ஜி-ஃபோர்ஸுக்காகவும்" அவர் இசையமைத்தார். மார்ச் 2009 இன் பிற்பகுதியில் 20த் சென்சுரி-பாக்ஸில் நீயூமேன் இசை அரங்கத்தில் இசைப் பதிவுகளைக் கேட்டு எடுத்துரைக்க அங்கு "வெரைட்டி" இன் ஜான் பர்லிங்கம் இருந்தார். கிரீக்சன்-வில்லியம்ஸ் "78-பகுதி ஆர்கெஸ்ட்ரா மற்றும் 40-குரல் பாடகர்குழுவினரை (20 ஆண், 20 பெண்)" ஒளியைப் பதிவு செய்வதற்கு பயன்படுத்தினார். அவரது வருகையின் சமயத்தில், பாடகர் குழுவினர் முதல் டிராக்கான "லோகன் த்ரூ டைம்" என்பதை வலியுறுத்தி "ஸ்டான்சஸ் ப்ரம் ஆன் ஆக்ஸிடெண்ட் நோர்ஸ் பொயம் இன் ஓல்ட் ஐஸ்லேண்டிக்" ஐ பாடிக்கொண்டிருந்ததைக் பர்லிங்கேம் கவனித்தார். கிரீக்சன்-வில்லியம்ஸின் பாணியை இயக்குனர் கவின் ஹூட் எடுத்துரைக்கையில்: "இசைநாடகத்துக்குரிய அளவையைக் கொடுப்பதே ஹேரியின் சவாலாக இருந்தது. ஆனால் உள்ளார்ந்த மற்றும் மனிதத்தன்மையை வைத்திருக்க வேண்டுமென நினைத்தார். ஹேரியின் இசையானது, ஒரு விதமான தசைநார் போன்ற நம்பிக்கை மற்றும் வலிமையைக் கொடுக்கிறது. அது செயல்முறைக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இவர் மிகவும் பிரமாண்டமான ஆன்மாவையும் பெற்றிருக்கிறார்" என்று கூறினார். ஹீட், அவரது பதிவு செயல்திறனை "ஃப்ரிக்கிங் பிரில்லியண்ட்!" என்று அழைத்தார். மார்ச் 31, 2009 அன்று டைம்கோடு அல்லது வாட்டர்மார்க் ஏதும் இல்லாமல், சில நிறைவு பெறாத விளைவுகளைக் கொண்ட காட்சிகளுடன், தலைப்புகளுக்கான ஒரு மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் வார்படத்துடன், மேலும் மாறி மாறி நிகழும் ஒலி விளைவுகளுடன் இத்திரைப்படத்தின் ஒரு முழு-நீள DVD-தர படப்பிடிப்புப் பதிவு ஆன்லைனில் வெளியானது. படப்பிடிப்புப் பதிவில் இருக்கும் ஆய்வுக்குறியீடுகளைப் பயன்படுத்தி இது வெளியான மூலத்தை கண்டுபிடிக்கலாம் என ஸ்டுடியோ கூறியது. இந்த சட்ட விரோதமான பதிவேற்றம் பற்றி FBI மற்றும் MPAA விசாரணை செய்யத் தொடங்கின. "வோல்வரின்" திரையரங்குகளில் வெளியான நேரத்தில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பதிவு 4.5 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்படுள்ளதாக பாக்ஸ் தோராயமாக மதிப்பிட்டுக் கூறியது. இத்திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆஸ்திரேலிய காட்சி விளைவுகள் நிறுவனமான ரைசிங் சன் பிச்சர்ஸ் பற்றிய மேற்கோளை இப்பதிவு கொண்டிருந்தது. அந்நிறுவனம் திரைப்படத்தின் முழுப்பிரதியை தாங்கள் வைத்திருக்கவில்லை என மறுத்தது. செயற்குழுத் தயாரிப்பாளர் தாமஸ் ரோத்மன் குறிப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் திரைப்படத்தில் அதிகப்படுத்தப்பட்ட 10 நிமிடக் காட்சிகள் இந்த வெளியிடப்பட்ட பதிப்பில் இல்லை என குறிப்பிட்டார். எனினும் இத்திரைப்படத்தின் திரையரங்குப் பதிப்பானது, வெளியான படப்பிடிப்புப் பதிவில் இல்லாத எந்த கூடுதலான காட்சிகளையும் கொண்டிருக்கவில்லை. இரண்டு பதிப்புகளும் துல்லியமாக 107 நிமிடங்கள் ஓடின, ஆனால் இயக்குனர் கவின் ஹூட் கூறுகையில் "திரைப்படத்தின் வில்லனின் சிறப்புகளைக் கொண்ட மற்றொரு இறுதிக்காட்சி உள்ளது" எனக் கூறினார். பாக்ஸ் நியூஸிற்கான ஒரு வதந்தி பரப்பும் செய்தியாளரான ரோகர் ப்ரெட்மன், இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்த திரைப்படப் பிரதியை பயன்படுத்தி திறனாய்வை எழுதியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த அலைவரிசையானது, பாக்ஸின் உறவு நிறுவனமான நியூஸ் கார்பரேசனுக்கு சொந்தமானதாகும். மேலும் ஏற்கனவே வலையில் இருந்து நீக்கப்பட்ட திரைப்படத்தின் அசல் மூலத்தை கூட, எவ்வாறு கண்டுபிடித்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் என்பதையும் விளக்கியிருந்தார். பாக்ஸ் நியூஸின் வலைத்தளத்தில், அவரது பத்தியில் எழுதியிருந்த அந்த கட்டுரை, உடனடியாக நீக்கப்பட்டது. 7-எலெவன், பாப்பா ஜான்'ஸ் பிஸ்ஸா, மற்றும் எஸ்ச்சிக் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் விற்பனைப் பொருள்களில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஹக் ஜேக்மேனும் வோல்வரினாக காட்மில்க்? பிரச்சாரத்தில் பாவனை காட்டினார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஹாஸ்ப்ரோ வெளியிட்டது, அவை ஆக்சன் முகங்கள் மற்றும் உள்ளிழுத்துக்கொள்ளும் நகங்களுடன் கூடிய கையுறை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. ஏப்ரலில், மார்வெல், "வோல்வரின்: வெப்பன் X" என்ற புதிய காமிக் தொடரைத் தொடங்கியது. எழுத்தாளர் ஜேசன் ஆரோன், திரைப்படத்தின் நேரடியான தாக்கத்தை இது கொண்டிராத போதும் அத்திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் "வோல்வரின்" காமிக்ஸ் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண ஆர்வமாக இருந்தனர், என்று கூறினார். ராவன் மென்பொருள், திரைப்படத்தைச் சார்ந்த அதே பெயரில் வெளியிட்டது, அதை ஆக்டிவிசன் பிளிஸ்ஸார்ட் வெளியிட்டது. மார்க் குக்கென் ஹெய்ம் கையெழுத்துப்படிவத்தை எழுதியிருந்தார், அதே சமயம் ஹக் ஜேக்மேன், ஸ்க்ரெய்பர், மற்றும் வில்.ஐ.அம் ஆகியோர் திரைப்படத்தில் அவர்கள் ஏற்றிருந்த பாத்திரத்திற்கான குரலைக் கொடுத்தனர். கதைக்கரு திரைப்படத்திற்கு சம்பந்தமில்லா ஒன்றாக இருந்தது. சென்டினல்ஸ் மற்றும் வெண்டிகோ போன்ற காமிக்சிலிருந்து மற்ற வில்லன்களும், அத்துடன் மற்ற மூன்று "எக்ஸ்-மென்" திரைப்படங்களில் தோன்றிய மிஸ்டிக் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் ஹாட் டாய்ஸ், ஹக் ஜேக்மேனைப் போலிருந்த திரைப்படத்தைச் சார்ந்த 12 அங்குலத்தில் மிகவும் விளக்கமான உருவத்தை வெளியிட்டது. "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்" UK, டென்மார்க், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏப்ரல் 29, 2009 அன்று வெளியிடப்பட்டது; ஏப்ரல் 30, 2009 அன்று பிலிப்பைன்சிலும் மற்றும் டோமினிகன் குடியரசிலும்; மற்றும் மே 1, 2009 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவிலும் வெளியானது. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஏப்ரல் 27 அன்று அதன் உலக முதல் வெளியீடு எந்த இடத்தில் இடம் பெறலாம் என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தியது. அதன் இறுதியில், அரிசோனா, டெம்பேவில் டெம்பே மார்கட்பிளேசில் ஹார்கின்ஸ் முதல் வெளியீட்டை வென்றது. மெக்சிகோ நாட்டில் H1N1 ஃப்ளூ தீடீரெனத் தோன்றியதன் காரணமாக அங்கு மே இறுதிவரை வெளியீடு தாமதமானது. ஏப்ரல் 22 அன்று திரைப்படம் வெளியாவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு, "அயர்ன் மேனின்" விற்பனையளவைக் காட்டிலும் அதிகமாக "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்" இருந்ததாக அறிவிக்கப்பட்டது, "விற்பனை சுழற்சியில் அதே புள்ளியில் (திரைப்படம் வெளியாவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு) 3க்கு 1 என்ற கணக்கில் இருந்தது." அதன் முதல் நாள் பரவலான வெளியீட்டின் போது, "வோல்வரின்" $35 மில்லியன் ஈட்டியதாகத் தோராயமாகக் கணக்கிடப்பட்டது, இதில் இரவு நேரக் காட்சியில் மட்டும் கிட்டத்தட்ட $5 மில்லியன் ஈட்டியிருந்தது. அந்த வருவாய் அந்த திரைப்படத்தை இதுவரை அறிமுக நாளில் மிகவும் அதிகம்-வசூல் ஈட்டிய திரைப்படங்களில் 16 ஆவது இடத்தைப் பெற்றுத் தந்தது (நுழைவுச்சீட்டு-விலை வீக்கத்தில் 22 ஆவது இடம் பெற்றது). இது மொத்தமாக $85 மில்லியன் வருவாயை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் திரைப்படமானது. கோடை காலத்தின் ஆரம்பத்தில் இத்திரைப்படம் "த டார்க் நைட்", "ஸ்பைடர்-மேன் 3" மற்றும் "அயர்ன் மேன்" ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னால் தரவரிசையில் ஐந்தாவது இடம் பெற்றது. மேலும் இது காமிக் புத்தகத் தழுவல்களில் சிறந்த பத்தில் இடம் பெற்றது. இந்த உரிமையில் இறுதியாக வெளிவந்த படங்களான "எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்" அத்துடன் "X2" ஆகியவற்றைக் காட்டிலும் ஆரம்ப ஓட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த வரிசையில் முதல் திரைப்படமான "எக்ஸ்-மென்" னைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. உலகம் முழுவதும் ஆரம்ப ஒட்ட வசூல் $158.1 மில்லியனுக்கும் மேல் இருந்தது. ஆனால் ஃபாக்ஸ் சில சந்தைகளில் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே இருந்ததாகக் குறிப்பிட்டது. இதற்கு சில நாடுகளில் இணையத்தில் சட்ட விரோதமாக பதிவிறக்கம் செய்தல் சிக்கல்களினால் படப்பிடிப்புப்பதிவுக் கசிந்ததன் காரணமாக இருக்கலாம். எனினும் "ஸ்க்ரீன் இண்டர்நேசனல்" இதழின் "பைரசி இஸ்யூவுக்கான" ஒரு கட்டுரையில், திரைப்பட விமர்சகர் ஜான் ஹேசில்டன் இந்த விளக்கத்தின் மீது சந்தேகம் தெரிவித்தார். திரைப்படத்தின் ஆரம்பச் செயல்பாடு சில பகுதிகளில் மோசமானத் திருட்டுச் சிக்கல்களுடன் ஸ்வைன் ஃப்ளூவின் காரணமாக "நிலையற்றதாக" இருந்தது என்றால் மற்ற பகுதிகளில் அனைத்தையும் வைத்து ஒப்பிடப்பட்டிருக்கவில்லை என்று எழுதியிருந்தார். விமர்சகர்களிடம் இருந்து கலவையான திறனாய்வுகளைப் பெற்றிருந்த போதும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் மோஜோவின் படி, "வோல்வோரின்" அமெரிக்க மற்றும் கனடாவில் தோராயமாக $179,883,157 வருவாயை ஈன்றது. மற்ற பகுதிகளில் இது மற்றொரு $193,179,412 வருவாயை ஈன்றது. உலகம் முழுவதும் மொத்தமாக இது $373,062,569 வருவாயை ஈன்றது. செப்டம்பர் 15, 2009 அன்று ஃபாக்ஸ் ஹோம் எண்டர்டெயின்மெண்ட், "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரினை", DVD மற்றும் ப்ளூ-ரே டிஸ்க்காக வெளியிட்டது. ப்ளூ ரேவில் இரண்டு-டிஸ்க்குகள், ஹூட்டின் விளக்கவுரை, தயாரிப்பாளர் லாரன் ஷல்லர் டோன்னர் மற்றும் ரால்ப் விண்டரின் மற்றொரு விளக்கவுரை, "த ரூட்ஸ் ஆஃப் வோல்வரின்: எ கன்வர்சேசன் வித் எக்ஸ்-மென் கிரியேட்டர்ஸ் ஸ்டான் லீ அண்ட் லென் வெயின்" ஃபியூச்சரெட்டெ, "வோல்வரின் அன்லீஸ்டு: த கம்ப்ளீட் ஆரிஜின்ஸ்" ஃபியூச்சரெட்டெ, 10 பாத்திரங்கள் வரலாறு, மற்ற இரண்டு ஃபியூச்சரெட்டெக்கள், ஒரு ட்ரைவியா ட்ரேக், ஹூடின் விளக்கவுரையுடன் அழிக்கப்பட்ட காட்சிகள், இரண்டு மாற்று வரிசைகள், ஃபாக்ஸ் திரைப்பட அலைவரிசை ஆரம்ப ஃபியூச்சரெட்டெ மற்றும் ஐஎம்டிபி BD லைவ் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடக்கி இருந்தன. தொகுப்பின் இரண்டாவது டிஸ்க், டிஜிட்டல் நகலை உள்ளடக்கியிருந்தது. கூடுதலாக, திரைப்படத்தின் தரமான DVD நகல் கொண்ட வால்-மார்ட் தனிச்சிறப்பு 3-டிஸ்க் தொகுப்பும் வெளியிடப்பட்டது. இரண்டு-DVD சிறப்புப் பதிப்பு, இரண்டு விளக்கவுரைகள், ஸ்டான் லீ மற்றும் லென் வெயினுடன் ஃபியூச்சரெட்டெ, மூலங்கள் ஃபியூச்சரெட்டெ, அழிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட காட்சிகள் மற்றும் ஆண்டி-ஸ்மோக்கிங் உள்ளிட்டவைகளை முதல் டிஸ்க்கிலும்; திரைப்படத்தின் டிஜிட்டல் நகலை இரண்டாவது டிஸ்க்கிலும் கொண்டிருந்தது. ஒற்றை-டிஸ்க் DVD வெளியீடு, மூலங்கள் ஃபியூச்சரெட்டெ மற்றும் ஆண்டி-ஸ்மோக்கிங் PSA ஆகியவற்றைக் கொண்டிருந்தது. DVD வெளியான வாரத்தில் மிகவும் அதிகளவில் விற்பனையான மற்றும் அதிகளவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட DVD ஆக இருந்தது, மூன்று மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையானது, அவற்றில் 850,000 ப்ளூ-ரே ஆகும். முதல் ஆறு வாரங்களில் DVD ஆனது 3.79 மில்லியன் பிரதிகள் விற்று $64.27 மில்லியன் வருவாயை ஈன்றது. விமர்சன ரீதியான வரவேற்பு கலவையாகக் கருதத்தக்கதாக இருந்தது. ரோட்டன் டொமெட்டோஸ் தற்போது 36% தரவரிசையை அறிவித்திருக்கிறது அல்லது அதன் "சிறந்த விமர்சகர்கள்" 238 திறனாய்வுகளை (87 "ஃபிரெஸ்", 152 "ரோட்டன்") வழங்கிய போது 13% கொடுத்திருந்தது. மெட்டாகிரிடிக், "36 விமர்சனத் திறனாய்வில் இருந்து 100க்கு 43 மெட்டாஸ்கோர்" வழங்கியிருக்கிறது. ஒப்பிடுகையில் யாஹூ! மூவிஸ் தற்போது 13 விமர்சனத் திறனாய்வுகளில் இருந்து சராசியான "C+" கிரேடை வழங்கியிருக்கிறது. "டைம்" இன் ரிச்சர்ட் கோர்லிஸ் மற்ற வியக்கத்தகு திரைப்படங்களுக்கு இடையில் இந்த திரைப்படத்தில் நிலையைப்பற்றிக் கருத்து தெரிவிக்கையில், இது "O.K. ரகத்தைச் சேர்ந்தது, சிறந்ததல்ல, வியக்கத்தகுத் திரைப்படம் முதன்மையான எக்ஸ்-மேனின் முந்தையக் கதையைக் கூறுகிறது. மேலும் தெரிந்த ட்ரைலாஜியின் ஆரம்பத்துடன் சரியான இணைப்பில் நிறைவு செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டிருக்கிறது" என்றார். மேலும் அவர், "சூப்பர்ஹீரோ நம்பிக்கைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். தனித்து காமிக்-புத்தகத்தை-படிக்கும் குழந்தை மட்டுமே இது அனைத்தையும் உணர முடியும்" என்றார். "GQ" இன் ஜேம்ஸ் முல்லிங்கரும், கதையின் கட்டமைப்புப் பற்றி தெரிவிக்கையில், "திரைப்படம், வோல்வரின் எனவும் அறியப்படும் ஜேம்ஸின் [ஹோவ்லட்] மூலங்களை நயமின்றி விவரிப்பதற்கு முயன்றிருக்கிறது. அது ஒரிஜினல் "எக்ஸ்-மென்" சாகாவில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை மட்டுமே விவேகமாகக் கொண்டிருந்தது. அதைச் செய்கையில், இது முழுமையான துளைகள் உடைய, எளிதான தளத்தில் உருவாக்கியிருக்கிறது" என்றார். "நியூயார்க் போஸ்டின்" லோ லூமனிக், "மூலங்களை" நோக்கி பொதுவாக மிகுதியான சாதகமானவற்றைக் கொண்டிருப்பதாகக் தெரிவித்தார், மேலும் அவர் "எதிர்பார்த்த விதமாக, ஜேக்மேன், ஸ்க்ரெய்பருடன் நன்றாக-பொருந்துகிறார். அவர் சிறந்த முறையில் இகழ்ச்சிப் பார்வை பார்த்திருக்கிறார் மற்றும் நன்றாகக் கோரைப்பற்களை அணிந்திருக்கிறார். இரண்டு பேர், அணு உலையின் உச்சியில் இருக்கும் வலிமை மிக்க எதிரிக்கு எதிராக சதுக்கத்திற்கு முன்பு மூன்று கவர்ந்திழுக்கிறவகையில் போர்களை இடுகின்றனர்" என்றார். "த கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டரின்" பீட்டார் ரெய்னரும் கூட ஜேக்மேனின் நடிப்பைப் பாராட்டினார். அவர் "ஹக் ஜேக்மேன், ஆஸ்கார்களில் சிறப்பு உடை அணிந்த பாடல்-மற்றும்-ஆடலுடன் கூடிய மனிதனில் இருந்து கூரெலும்பு நகங்கள் மற்றும் "வெறித்தனமான பெருங்கோபம்" ஆகியவற்றுடன் கூடிய காட்டு விலங்குக்குரிய மனிதனாக சிறப்பாக மாறியிருப்பதை பறைசாற்றியிருக்கிறார்" என்று கூறினார். "USA டுடேவின்" கிளாடியா பக், திரைப்படத்தை "கண்கவர் சண்டை மற்றும் நகைச்சுவைத் துணுக்குகளுடன், சிறந்த-நடிப்புடன்" இருந்ததாகக் கருதினார். ரோகர் எபர்ட் திரைப்படத்திற்கு நான்கில் இரண்டு நட்சத்திரங்களை வழங்கியிருந்தார். மேலும் தலைப்புப் பாத்திரம் பற்றிய அவரது கருத்தை "நான் ஏன் இந்த மனிதரைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? அவருக்கு எந்த வலியும் இல்லை மற்றும் எவராலும் அவரைக் கொல்ல முடியாது. அதனால் அவர் முக்கியமாக ஆக்சன் வரிசைகளுக்கான கதைக் கருவியாக இருக்கிறார்" என்று தெரிவித்தார். ஜேம்ஸ் பெரார்டினல்லி, "வோல்வரினுக்கு" நான்கிற்கு இரண்டரை நட்சத்திரங்கள் வழங்கியிருந்தார், சண்டைக் காட்சிகள் பொருத்தமாக நடத்தப்படுகின்றன. ஆனால் நினைவில் நிற்கக்கூடியதாக இல்லை என்றார். மேலும் வோல்வரினின் கடந்த காலத்துடன் ஒப்பிட்டுக் கருதும்போது "அதில் இருந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டிருப்பது சிறிதளவு படைப்பாற்றல் சான்றாக இருக்கிறது" மற்றும் இந்த வெளிப்பாடுகள் வோல்வரினை "குறைவான கட்டாயத்துடன்" உருவாக்கியிருக்கிறது என்றார். ஒப்பிடுகையில், AMCயின் Filmcritic.com வலைத்தளத்தின் பில் கிப்ரான் திரைப்படத்திற்கு நேர்மறையாக "5 இல் 4.0 நட்சத்திரங்களைக்" கொடுத்திருந்தார், ஹட் ஜேக்மேன் "மிகவும் மிதமான முயற்சிகளை எடுக்கக்கூடிய திறன் படைத்தவராக இருந்த போதும், அவர் தனி ஆளாக, "எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரினுக்கு" 2009 கோடை காலத்தில் சிறப்பான ஆரம்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்" என்று கூறியிருந்தார். எனினும் அவர் ஹூட் மற்றும் அவரது திரைக்கதை ஆசிரியர்கள் எப்படி நம்பிக்கைகளை சிதைத்திருக்கிறார்கள் மற்றும் கையாண்டிருக்கிறார்கள் எனக்கூறித் தடைபடுத்தும் தூயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்" என வருவதுரைத்தார், மேலும் அவர் தொடர்ந்து "பல பாத்திரங்களை விவரிக்காமல் மற்றும் கண்டுகொள்ளாமல் முடிக்கப்படுகிற எதுவும், முழு பொழுதுபோக்குக்கு உறுதியளிக்காது" என்றும் கூறினார். "எக்ஸ்-மென்" திரைப்பட வரிசைகளின் உள்ளடக்கத்துடன் "வோல்வரின்" தொடர்பாக, CNN இன் டாம் சேரிட்டி, "பயனுள்ளதாய் ஆனால் தவிர்க்க இயலாத தேவைக்கு மிகுதியாய் இருக்கிறது, இந்த "வோல்வரின்" திரைப்படம் "எக்ஸ்-மென்" உரிமையை வாழ்க்கை ஆதரவுக்குப் போதுமான அளவிற்கு வைத்திருக்கிறது, ஆனால் திரைப்பட உருவாக்கிகள், இது தவிர்க்கக்கூடிய X-டிங்சனுக்குச் சென்றால், விரைவில் சில பரிணாமம் சார்ந்த மாற்றங்களுடன் வரவேண்டும்" என்று கருத்துரைத்தார். அதே போல, "த நியூயார்க் டைம்சின்" ஏ. ஓ. ஸ்காட் ""எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்" பெரும்பாலும் முந்தைய எபிசோடுகளின் பிரபலத்தில் காரனமாக வருவாயை ஈட்டிவிடும். ஆனால் சூப்பர்ஹீரோ திரைப்படம் தீவிர கற்பனை வறட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சமீபத்திய சான்றாக இருக்கிறது" என வெளிப்படுத்தியிருந்தார். மிகவும் எதிர்மறைக் குறிப்பாக, "த அப்சர்வரின்" பிலிப் ஃபிரெஞ்ச், திரைப்படமானது "மந்தமாக இருக்கிறது, எலும்பை-அழுத்தக்கூடிய, சிறப்பு விளைவுகளைக் கொண்டதாக இருக்கிறது" "மார்வெல் காமிக்ஸின் அனைத்தையும் படிக்கக்கூடிய கொடூரமான ரசிகர்கள் மட்டுமே இதை ஆர்வமுடன் ரசிப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார். "த டெய்லி டெலெகிராபின்" சுக்தேவ் சாந்து, ""வோல்வரின்" பெரும்பாலான திருப்தியற்ற வகை செயற்கையான போலித் தொகுப்பாக இருக்கிறது. வலிமையான விளம்பரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் உச்சத்தினால், இது சந்தேகமில்லாமல் முதலில் அனைவரையும் ஈர்க்கும்; எனினும் பின்னர், அபிப்ராய வார்த்தைகள் பரவலாக வெளிப்படும் போது, பரவலானத் தளர்வு நிலை மற்றும் நினைத்துப் பார்க்கையில் தெளிவாக உணரக்கூடிய நிலை ஏற்படலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். அதே போல IGNஇன் (UK) ஆர்லாண்டோ பார்ஃபிட், நடிகர்களின் நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளைப் பாராட்டியிருந்தார். ஆனால் திரைப்படம் சரியாக உருவாகாதது போல் உணர்வதாகக் குறிப்பிட்டார்: ""வோல்வரின்" உடன் களிப்புடன் பொழுதைக் கழிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஓரளவிற்கு திருப்தியற்றதாகவும் இருக்கிறது" என்றார். மேலும் "த ஹஃப்பிங்டன் போஸ்டின்" ஸ்காட் மெண்டல்சன் திரைப்படத்திற்கு "D" கிரேடு கொடுத்திருந்தார். "வோல்வரின் ["எக்ஸ்-மென்" ] திரைப்படங்களின் முக்கிய பாத்திரம் மேலும் நாம் ஏற்கனவே அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறோம், நாம் திரைப்பங்களில் உரிமை என்று சொல்லப்படுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும் கூறுகையில் "இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான தகவல்கள், உண்மையில் லோகான்/வோல்வரின் பாத்திரத்தின் மீது ஆர்வத்தைக் குறைப்பதாக இருக்கிறது" என்றார். "இங்க்" கின் டிரெவன் மெக்கீயும் இதை ஆதரிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார், "இந்தத் திரைப்படம் நம்மைப் பின்புறம் திருப்பி, பல கேமோஸ் மற்றும் இரண்டாம் நிலை பாத்திரங்களை முடிந்தவரை உட்செலுத்த முயன்றிருக்கிறது. திரைப்படத்தில் மரபு பிறழ்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்படுதல் ஈர்க்கக்கூடியதாக இல்லாததாகவும் சலிப்பூட்டுவதாகவும் இருக்கிறது..." என்றார். ஹூட், இதன் பின்தொடர்ச்சி ஜப்பானில் அமைக்கப்படலாம் என ஊகிப்பதாகத் தெரிவித்தார். பின் பயன்பாட்டுக் காட்சிகளில் ஒன்றில், லோகன் ஜப்பானில் உள்ள ஒரு பாரில் மதுஅருந்திக் கொண்டிருக்கிறார். அது போன்ற இடம் கிளேர்மோண்ட் மற்றும் மில்லரின் தொடர்களில் இடம்பெற்றிருந்தது, அது முதல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை, "நாம் செய்ய வேண்டியது என்னவெனில், யார் [லோகன்] அவர் மற்றும் எப்படி அவர் வோல்வரினாக மாறுகிறார் என்பதை நிறுவ வேண்டும்" என்று ஜேக்மேன் நினைத்திருந்தார். ஜேக்மேன், கிளேர்மண்ட்-மில்லர் தொடர்களானது அவரது விருப்பமான வோல்வரின் கதையாகக் குறிப்பிட்டிருந்தார். ஜப்பானிய ஆர்க்கில், ஜேக்மேன் பின்வருமாறு கூறினார் மற்றொரு வோல்வரின் திரைப்படம், "எக்ஸ்-மென்: த லாஸ்த் ஸ்டேண்ட்" இல் இருந்து தொடர்வதற்கு மாறான அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றார். டெட்பூல் மற்றும் கேம்பிட் ஆகியவற்றின் சேர்க்கையும் கூட அதன் சொந்த உப-உருவாக்கத்துக்கு சாதியமளிக்கக் கூடியதாக இருக்கலாம். "வோல்வரினின்" வெளியீட்டிற்கு முன்பு, லாரென் ஷல்லர் டோன்னர் திரைக்கதை எழுதுவதற்காக சைமன் பீயூஃபாய்யை அனுகினார், ஆனால் அவர் அதை ஒத்துக்கொள்வதற்கு போதுமான நம்பிக்கையைப் பெற்றிருக்கவில்லை எனக்கூறிவிட்டார். மே 5 அன்று அதன் ஆரம்ப வாரயிறுதி ஓட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பின்தொடர்ச்சியானது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டது. டெட்பூல் உப-உருவாக்கமும் வேட் வில்சனின் பாத்திரத்தின் தொடர்ச்சியில் நடிப்பதற்கு ரியான் ரெனால்ட்ஸ் உடன் உறுதி செய்யப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் ஷல்லர் டோன்னர், அந்தத் திரைப்படம் ""வோல்வரினில்" நாம் பார்த்த டெட்பூலின் பதிப்பைத் தவிர்த்து இருக்கும், மேலும் அதற்கு மேல் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். அதன் மறுதொடக்கமாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். "எக்ஸ்-மென்" னில் அவரது பணிக்கான அங்கீகரிக்கப்பட்டிராத, கிறிஸ்டோபர் மெக்குவாரி 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் "வோல்வரின்" பின்தொடர்ச்சிக்குத் திரைக்கதை எழுதுவதற்கு நியமிக்கப்பட்டார். லாரன் ஷல்டர்-டோன்னரின் படி, பின்தொடர்ச்சி, வோல்வரின் மற்றும் ஜப்பானிய குற்றத்தலைமையின் மகளான மேரிகோ ஆகியோருக்கு இடையில் உள்ள தொடர்பு மற்றும் அவருக்கு ஜப்பானில் என்ன நிகழ்கிறது என்பதை மையமாகக் கொண்டதாக இருக்கலாம். மேரிகோவின் தந்தை வைத்திருக்கும் "இந்த குச்சி-போன்ற ஆயுதத்தின் காரணமாக வோல்வரின் மாறுபட்ட சண்டை பாணியைக் கொண்டிருக்கலாம். சாமுராய், நிஞ்சா, காடனா பிளேக்ஸ், தற்காப்புக் கலைகள் - மனோ-ஏ-மனோவின் மாறுபட்ட வடிவங்கள், உச்சநிலை சண்டை ஆகியவை இடம்பெறலாம்" என்றார். மேலும் அவர் தொடர்ந்து: "நாங்கள் அதை நம்பத்தக்கதாக்க உருவாக்க நினைக்கிறோம், அதனால் நாங்கள் ஜப்பானில் படப்பிடிப்பை நடத்துவதற்கு மிகவும் சாத்தியமுண்டு என நினைக்கிறேன். மேலும் பாத்திரங்கள் ஜப்பானிய மொழியில் பேசுவதற்கு மாறாக ஆங்கிலத்தில் பேசுவார்கள் என நினைக்கிறேன், இது சப்டைட்டிலுடன் இடம்பெறும்" என்றார். 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் பீப்பிள்'ச் சாய்ஸ் விருதுகளில், திரைப்படத்தின் படப்பிடிப்பு 2011 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஆரம்பிக்கப்படலாம் என ஜேக்மேன் தெரிவித்தார். இந்தியாவில் வறுமை உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; இக்கணக்கு 1977-1978 ஆண்டுகளில் 51.3% ஆக இருந்ததிலிருந்தும், 1993-1994 ஆண்டுகளில் 36% ஆக இருந்ததிலிருந்தும் தற்பொழுது சரிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் (ஒரு நாளைக்கு 1.25 டாலர் என்பது அதற்கு ஈடான பொருள் வாங்கு திறன் நாளொன்றுக்கு 21.6 இந்திய உருபாய்), சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய உருபாய் 14.3 க்கும் கீழாக ஈட்டுவதுமாகும். ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர். இந்தியாவில் உயர்ந்த அளவில் இருக்கும் வறுமைக்கான காரணங்களாக சார்த்திக் கூறப்படும் காரணங்களில் அதன் பிரித்தானிய ஆட்சியின் கீழான வரலாறு, பெரும் மக்கட்தொகை மற்றும் குறைந்த கல்வியறிவு ஆகியவையாகும். மேலும் முக்கியமானவை இந்தியாவின் சமூக கட்டமைப்பு, இந்தியாவின் சாதியமைப்பு உட்பட, மற்றும் இந்தியாவின் சமூகத்தில் பெண்களின் பாத்திரம் ஆகியவையாகும். கடந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி விவசாயத்தை சார்ந்திருந்தது, அதன் விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டப் பொருளாதார கொள்கைகள் ஊக்கங்கெடுப்பதாக இருந்தது. 1950களிலிருந்து இந்திய அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்கள் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை, உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள், கடன்கள் பெற அணுகுவது, விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விலை ஆதரவுகள் மற்றும் கல்வி மேம்பாடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர். இத்தகைய வழிமுறைகள் பஞ்சத்தை ஒழிக்க, முழுமையான வறுமைக்கோட்டினை பாதியளவுக்கு மேல் குறைக்க, எழுத்தறிவின்மையை குறைக்கவும் மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினை குறைக்க உதவின. இருப்பினும், 1990களின் நடுப்பகுதிகளிலிருந்து 30 மில்லியன் மக்கள் பசியின் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் மேலும் 46% குழந்தைகள் எடை குறைவாக இருந்தனர். உலக வங்கி 456 மில்லியன் இந்தியர்கள் (மொத்த இந்திய மக்கட் தொகையில் 42% பேர்) தற்போது உலக வறுமைக் கோடான ஒரு நாளைக்கு $1.25 (வாங்கும் திறன் சமநிலை) கீழே வாழ்கின்றனர் என்று மதிப்பிடுகிறது. இது இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு உலக ஏழைகள் வாழ்கின்றனர் என்பதன் பொருளாகும். இருப்பினும், இது கணிசமான வறுமை 1981 இன் 60 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக 2005 ஆம் ஆண்டு குறைந்ததை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இருப்பினும் ரூபாய் மதிப்பு அதிலிருந்து குறைந்து வந்தது, அதேப்போல அதிகாரபூர்வமான 538/356 பிரதி மாத தரமானது அதே அளவில் நிலைப் பெற்றிருந்தது. வருமான சமமின்மை இந்தியாவில் (கினி குணகம்: 32.5 1999-2000 ஆண்டு) அதிகரித்து வருகிறது. வேறொரு வகையில், இந்திய திட்டக் குழு அதன் சுயமான அளவு கோலாக பயன்படுத்துகிறது, மேலும் 2004-2005 ஆண்டில் 27.5% மக்கட் தொகையினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக மதிப்பிட்டது, 1977-1978 ஆண்டில் 51.3% ஆகக் குறைந்தும் 1993-1994 ஆண்டில் 36% ஆகக் குறைந்தும் இருந்தது. இதற்கு ஆதாரமாக 61 ஆவது தேசிய மாதிரி ஆய்வு (NSS) இருந்தது மேலும் அதற்கு அளவு கோலாக மாத சராசரி நுகர்வுச் செலவு ரூபாய்க்கு கீழாக ரூபாய் 356.35 கிராமப் பகுதிகளுக்கும் மற்றும் ரூபாய் 538.60 நகரப் பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 75% ஏழைகள் கிராமப் பகுதிகளில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தினக் கூலிகள், சுய-வேலைவாய்ப்புள்ள குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் நிலமற்றத் தொழிலாளர்கள். இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் கடந்த இரு பத்தாண்டுகளில் நிலையாக வளர்ந்துள்ளது, அதன் வளர்ச்சி பல்வேறு சமூக குழுக்கள், பொருளியல் குழுக்கள், புவியியல் பகுதிகள் மற்றும் கிராம மற்றும் நகரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது சமமற்று உள்ளது. 1999 மற்றும் 2008 இடையில், வருடாந்திர வளர்ச்சி விகிதங்கள் குஜராத் (8.8%), ஹரியானா (8.7%) அல்லது டெல்லி (7.4%) ஆகியவற்றிற்கானது பீகார் (5.1%), உத்திரப் பிரதேசம் (4.4%) அல்லது மத்தியப் பிரதேசம் (3.5%) ஆகியவற்றியதை விட மிக அதிகமானது. கிராமப்புற ஒரிசா (43%) மற்றும் கிராமப்புற பீகார் (41%) ஆகியவற்றின் வறுமை விகிதங்கள் உலகின் மிக உச்சமானவற்றில் உள்ளடங்கியது. மூன்று வயதிற்குக் குறைவான (2007 ஆம் ஆண்டு 46%) இந்தியச் சிறாரிடையே ஊட்டச் சத்துக் குறைபாடு உலகின் இதர எந்த நாட்டை விடவும் அதிகளவில் உள்ளது. குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் இருப்பினும், நாட்டின் 1/4 மக்கட்தொகை அரசினால்-குறிப்பிடப்பட்ட துவக்க நிலை வறுமை அளவான ஒரு நாளைக்கு ரூபாய் 12 க்கு குறைவாக ஈட்டுகின்றனர் (ஏறக்குறைய USD $0.25). 2004-2005 ஆம் ஆண்டில் 27.5% இந்தியர்கள் தேசிய வறுமைக் கோட்டிற்கும் கீழே இருந்ததாக அதிகாரபூர்வ எண்ணிக்கை மதிப்பீட்டிருக்கிறது. அரசால் நடத்தப்பெறும் அமைப்பாக்கம் செய்யப்பெறாத தொழிலகங்களின் தேசியக் குழு (NCEUS) அளித்த ஒரு 2007 ஆண்டு அறிக்கைப்படி 77% இந்தியர்கள் அல்லது 836 மில்லியன் மக்கள் ரூபாய் ஒரு நாளைக்கு 20 ற்குக் கீழான (ஏறக்குறைய USD $0.50 சாதாரணமாகவும்; $2 வாங்கும் திறன் சமநிலை) வருமானத்தைப் பெற்று வாழ்கின்றனர். 2001 மக்கட் தொகை கணக்குப்படி, 35.5% இந்தியர்கள் வங்கிச் சேவைகளைப் பெற்றனர், 35.1% பேர் ஒரு வானொலி அல்லது சிறு வானொலிப்பெட்டி, 31.6% பேர் ஒருத் தொலைக்காட்சி, 9.1% பேர் ஒருத் தொலைபேசி, 43.7% பேர் ஒரு மிதிவண்டி, 11.7% பேர் ஒரு ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் அல்லது ஒரு மொபெட் மற்றும் 2.5% பேர் கார், ஜீப் அல்லது வேன், 34.5% பேர் இந்தச் சொத்துக்களில் எதையும் வைத்திருக்கவில்லை. இந்திய தொலைத்தொடர்புத்துறைக்கு இணங்க 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் தொலைபேசி அடர்த்தி 33.23% சதவீதம் இருந்தது, மேலும் 40% வருடாந்திர வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்திய வறுமை கோட்டிற்குக் கீழான மக்கள் தொகையின் அளவு விரிவாக ஏறியிறங்கியது, ஆனால் ஒட்டுமொத்த போக்கு கீழ் நோக்கியேயிருந்தது. இருப்பினும், வருமான அடிப்படையிலான வறுமையில் தோராயமாக மூன்று காலகட்டத்திலான போக்கு இருந்தது. 1950 முதல் 1970-மத்தி வரை: வருமான அடிப்படையிலான வறுமைக் குறைவில் நுணுகிக் காணக்கூடிய போக்கில்லை. 1951 ஆம் ஆண்டில் 47% இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகை வறுமைக் கோட்டிற்கு கீழேயிருந்தது. விகிதத் தொடர்பில் 1954-55 ஆண்டில் 64% ஆக உயர்ந்தது, 1960-61 இல் அது 45 சதவீதமாக குறைந்தது ஆனால் 1977-78 ஆண்டில் அது மீண்டும் 51 சதவீதமாக உயர்ந்தது. 1970-மத்தியிலிருந்து 1990 வரை : வருமான அடிப்படையிலான வறுமை குறிப்பிடத்தக்கவகையில் 1970 மத்தியிலிருந்து 1980களின் இறுதி வரை வீழ்ந்தது. வீழ்ச்சி 1977-78 மற்றும் 1986-87 க்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிடத்தகுந்ததாக, கிராமப்புற வருமான அடிப்படையிலான வறுமை 51% லிருந்து 39 சதவீதமாக குறைந்தது. அது மேலும் 34 சதவீதமாக 1989-90 இல் கீழிறங்கியது. நகர்புற வருமான அடிப்படையிலான வறுமை 1977-78 இல் 41 சதவீதமானது 1986-87 இல் 34 சதவீதமாக குறைந்தது, மேலும் அதிகமாக 1989-90 இல் 33 சதவீதமானது. 1991 ற்குப் பிறகு : இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்குப் பிந்தையக் காலம் பின்னடைவுகள் மற்றும் முன்னேற்றம் இரண்டையும் சான்றளித்தது. கிராமப்புற வருமான அடிப்படையிலான வறுமை 1989-90 இல் 34% லிருந்து 1992 ஆம் ஆண்டு 43 சதவீதமாக அதிகரித்தது. மேலும் 1993-94 இல் 37 சதவீதமாகப் பின்னர் வீழ்ச்சியடைந்தது. நகர்புற வருமான அடிப்படையிலான வறுமை 1989-90 இல் 33.4% லிருந்து 1992 ஆம் ஆண்டு 33.7 சதவீதமாக உயர்ந்தது, மேலும் 1993-94 இல் 32 சதவீதமாக வீழ்ந்தது. தவிர, தேசிய மாதிரி ஆய்வுத் தரவுகள் 1994-95 லிருந்து 1998வரையிலானது குறைவான அல்லது வறுமை குறைப்பு ஏற்படவில்லை என்பதை காட்டியது, ஆகையால், 1999-2000 வரையிலான சான்று வறுமை, குறிப்பாக கிராமப்புற வறுமை, சீர்த்திருத்தங்களுக்குப் பின்பு அதிகரித்தது. இருப்பினும், 1999-2000 க்கான அதிகாரபூர்வ மதிப்பீடுகள் 26.1 சதவீதமாக இருந்தது, ஒரு பரபரப்பூட்டுகிற வீழ்ச்சி அதிக விவாதங்களுக்கும் அலசல்களுக்கும் வழியேற்படுத்தியது. இது இந்தாண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு ஒரு புதிய ஆய்வு வழிமுறையை மேற்கொண்டதன் காரணமானது, அது உயர் மதிப்பீட்டிலான சராசரி நுகர்வையும் அத்தோடு விநியோக மதிப்பீட்டினையும் கடந்த கால தேசிய மாதிரி ஆய்வின் ஆய்வுகளில் இருந்ததை விட அதிக சமமாக இருந்ததற்கு வழியேற்படுத்தியது. சமீபகால தேசிய மாதிரி ஆய்வின் ஆய்வுகள் 2004-05 ஆண்டிற்கானது முழுமையாக 1999-2000 முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பிடத்தக்கது. மேலும் வறுமை, கிராமங்களில் 28.3 சதவீதமாகவும், நகர்புறங்களில் 25.7 சதவீதமாகவும் மற்றும் 27.5% ஆக நாடு முழுமைக்குமானது, ஒத்த மறு ஆய்வுக் கால நுகர்வினைப் பயன்படுத்திக் காட்டுகிறது. கலப்பு மறு ஆய்வு நுகர்வு முறையினை பயன்படுத்தியதில் ஒத்திசைவான மதிப்புக்கள் முறையே 21.8%, 21.7% மற்றும் 21.8% ஆகவிருந்தன. ஆகையால், வறுமை 1998 ற்குப் பிறகு குறைந்தது, இருப்பினும் இப்போதும் 1989-90 மற்றும் 1999-00களுக்கிடையில் குறிப்பிடத்தக்க வறுமைக் குறைப்பு ஏதேனும் இருக்கிறதா எனும் விவாதம் நடைபெற்றுவருகிறது. சமீபகால தேசிய மாதிரி ஆய்வின் ஆய்வுகள், ஆனால் முழுமையாக, 1999-2000 ஆய்வுகளோடு ஒப்பிடும் போது மதிப்பீடுகளைத் தோராயமாக கொடுக்க என வடிவமைக்கப்படுகின்றன. இவை 1993-94 லிருந்து 2004-05 வரையிலான காலகட்டத்தில் கிராமப்புற வறுமையில் ஏற்பட்ட பெரும்பாலான வீழ்ச்சி உண்மையில் 1999-2000 த்திற்குப் பிறகானது எனக் குறிப்பிடுகின்றன. சுருக்கமாக, தேசிய மாதிரி ஆய்வினால் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வ வறுமை விகிதங்கள்: ஓர் ஒவ்வாத அளவிற்கு பெரிய ஏழைகள் பங்காக கீழ் சாதி இந்துக்கள் உள்ளனர். எஸ்.எம்.மைக்கேலிற்கு இணங்க, தலித்துகள் ஏழைகளிலும் வேலையற்றோர்களிலும் பெரும் பகுதியாக அமைந்துள்ளனர். பலர் பரந்த-இந்திய சமூக கட்டமைப்பான சாதியமைப்பு ஒரு ஏழை கீழ்-வரிசை குழுக்கள் மிக வசதியான உயர்-வரிசை குழுக்களால் சுரண்டப்படும் அமைப்பாக காண்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில், நிலம் உயர்-வரிசை சொத்துரிமையாளர்களான குறிப்பிட்ட மேலாதிக்க சாதிக்காரர்களால்(பிராமணர்கள்,சத்திரியர்கள்)பெருமளவு வைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது, அது பொருளாதார ரீதியாக கீழ்-வரிசை நிலமற்ற தொழிலாளர்களையும் ஏழை கைவினைஞர்களையும், அவர்களை எப்போதும் அவர்களின் கடவுளால்-கொடுக்கப்பட்ட தாழ்வு நிலைக்காக இழிவுபடுத்துகிறபடியான சடங்குகளைச் செய்ய அழுத்தம் தருகின்றனர். வில்லியம் ஏ. ஹாவிலாந்திற்கு இணங்க, கிராமப்புறப் பகுதிகளில் சாதீயம் பரவலாகவுள்ளது, மேலும் தொடர்ந்து தலித்துக்களை பிரித்து வைக்கிறது. பிறர், இருப்பினும், சமூக சீர்த்திருத்தங்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பலன்களில் இட ஒதுக்கீட்டை அமல் செய்வதன் மூலமான தலித்துக்களின் நிலையான எழுச்சி மற்றும் அதிகாரமளித்தலை கவனித்துள்ளனர். இந்தியாவில் முன் எப்போதும் காணாத வகையில் சுபிட்சம் இஸ்லாமிய வம்சமான சிறந்த மொகலாயர்களின் ஆட்சிக் காலமிருந்தது. 1800 களில் மொகலாயர்களின் சகாப்தம் முடிவடைந்தது. " ஒரு குறிப்பிட்ட உண்மையாக தனித்து நிற்பதானது அத்தகைய இந்தியப் (காலப்)பகுதிகள் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழாக இன்றிருக்கும் நீண்ட காலமாகும் என்று ஜவகர்லால் நேரு கூறினார்.["http://web.archive.org/web/20080215011211/http://www.zmag.org/Chomsky/year/year-c01-s05.html]இந்தியப் பொருளாதாரம் திட்டமிட்டும் கடுமையாகவும் (குறிப்பாக ஜவுளி மற்றும் உலோகப்-பணிகள்)காலனிய தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகள், உற்பத்தி செய்யப்பட்ட அல்லது மெருகிட்ட இந்தியப் பொருட்கள் மீதான காப்பு வரிகள், வரிகள், மற்றும் நேரடி கைப்பற்றுதல்கள் மூலமாக தொழில்மயமாக்கலற்றதாக்கப்பட்டது, என்பது மொழியியல் அறிஞர் மற்றும் விமர்சகர் நோம் சோம்ஸ்கியினால் குறிக்கப்பெற்றதாக உள்ளது. இருப்பினும், பொருளாதார நிபுணர் ஆங்குஸ் மாடிசன், கூற்றிற்கிணங்க அத்தகைய விளக்கம் தேவை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றிலான மாறும் பங்குகளை புறக்கணிக்கிறது. 1830 ஆம் ஆண்டு, இந்தியா பிரிட்டனின் 9.5 சதவீதமான தொழில்துறை உற்பத்திக்கெதிராக 17.6% தினைக் கணக்கிட்டிருந்தது, ஆனால் 1900 ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு பிரிட்டனின் 18.5% ற்கு எதிராக 1.7% ஆகக் கீழிலிருந்தது. (தொழில்துறை தனி நபர் உற்பத்தியின் மாற்றம் இந்திய மக்கள் தொகையின் வளர்ச்சியினாலும் கூட அதிக தீவிரமானதாக இருக்கலாம்). இது ஐரோப்பா - குறிப்பாக பிரிட்டன் - உலகின் மீதப்பகுதிகளை விட முன்பே தொழில்மயமாக்கப்பட்டதின் காரணமாகக் கூட இருக்கலாம். இப்பார்வை கூறுவதானது இந்தியாவில் பிரிட்டிஷ் கொள்கைகள் கால நிலைகளை மோசமாக்கி பேரளவு பஞ்சத்திற்கு வழியேற்படுத்தியது, இரண்டையும் சேர்க்கும் போது, இந்திய காலனிகளில் பட்டினியால் 30-60 மில்லியன் இறப்பிற்கு வழிவிட்டது. சமூக தானிய வங்கிகள் கட்டாயப்படுத்தி கலைக்கப்பட்டன , நிலம் உள்ளூர் நுகர்வுகளுக்கான உணவுப் பயிர்களிலிருந்து பருத்தி, ஓவியம், தேயிலை மற்றும் தானிய ஏற்றுமதி பெரும்பாலும் விலங்குகளின் உணவிற்காக மாற்றப்பட்டன. ஆங்குஸ் மாடிசன் கூற்றுப்படி, "அவர்கள் வீணான போர் சமூக அரசமைப்பை அதிகாரவர்க்க-இராணுவ நிறுவனமாக மாற்றினர், இது கவனமாக வடிவமைக்கப்பட்டது பயன்முறைக் கோட்பாட்டாளர்களால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க மிகுந்த திறமையுடனிருந்தது. [...] இருப்பினும், நுகர்வு முறை மாறியது புதிய உயர் வர்க்கம் அந்தப்புரங்களையும் அரண்மனைகளையும், சிறப்பான மஸ்லின் துணிகளையும் தங்கத்தாலும் வெள்ளியாலும் உட்புறம் கொண்ட வாட்களையும் வைத்திருக்கவில்லை. இது சில வலியுடைய மறுஅனுசரிப்புக்களுக்கு மரபான கைத்தறித் துறையில் காரணாமாக்கியது. ஓரளவிற்கு பயன்தரத்தக்க முதலீடுகள் முகலாய இந்தியாவில் கிட்டத்தட்ட பூஜ்யமாக இருந்தவை உயர்ந்ததாக காணப்பட்டன: அரசு தானும் கூட பயன் தரத்தக்க முதலீடுகளை இரயில்வேக்கள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றில் செய்தது அதன் விளைவாக வளர்ச்சி இரண்டிலும் விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்திகளில் இருந்தது." $1,818; $3,259; $13,317; and $15,720. (எண்கள் 1990 சர்வதேச மாடிசன் டாலர்களில்) வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தியாவின் சராசரி வருமானம் 1947 ஆம் ஆண்டு தென் கொரியாவை விட மிக வேறுபட்டிருக்கவில்லை, ஆனால் தென் கொரியா 2000 களில் வளர்ந்த நாடாக உருவானது. அதே சமயத்தில், இந்தியா உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக விடப்பட்டது. இந்து வளர்ச்சி விகிதம் இந்திய பொருளாதாரத்தில் குறைவான வருடாந்திர வளர்ச்சி விகிதங்களை குறிக்க பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். அது 1950களிலிருந்து 1980கள் வரை 3.5% தேங்கி நின்றது, அதே சமயம் தனி நபர் வருமானம் சராசரியாக 1.3% யாக இருந்தது. அதே சமயம், பாகிஸ்தான் 8%, இந்தோனேஷியா 9%, தாய்லாந்து 9%, தென் கொரியா 10% மற்றும் தைவான் 12 சதவீதமாக வளர்ந்தன. இந்த வரையறை இந்தியப் பொருளாதார நிபுணர் ராஜ் குமார் கிருஷ்ணாவால் கோர்க்கப்பட்டது. லைசென்ஸ் ராஜ்விரிவான இந்தியாவில் 1947 முதல் மற்றும் 1990 களுக்கு இடையிலான காலத்தில் தொழில் துவங்க மற்றும் நடத்தத் தேவையான லைசென்ஸ்களைக், கட்டுப்பாடுகள் மற்றும் உடன் சார்ந்த சிவப்பு நாடாமுறையைக் குறிக்கிறது. லைசென்ஸ் ராஜ் இந்தியாவின் திட்டமிட்டப் பொருளாதார அமைப்பைக் கொண்டிருக்கும் முடிவின் விளைவாகும். பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே லைசென்ஸ்கள் கொடுக்கப்பட்டன. ஊழல் இந்த முறையின் கீழ் செழித்தது. இந்தியா 1950களில் இவற்றுடன் துவங்கியது: ஆனால் நாம் 1980களில் முடிவாகப் பெற்றது: வறுமை 1980களில் சீர்த்திருத்தங்கள் துவங்கியதிலிருந்து குறிப்பிடத்தகுந்தளவில் குறைந்துள்ளன. அத்தோடு: இது தவிர, இந்தியா தற்போது 40 மில்லியன் மக்களை அதன் நடுத்தர வர்க்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் சேர்த்துக் கொள்கிறது. "ஃபோர்காஸ்டிங் இண்டெர்நேஷனல்" நிறுவுனரான மார்வின் ஜே.செட்ரான் போன்ற பகுத்தாய்வு வல்லுநர்கள் மத்திய தர வர்க்கத்தில் தற்போது 300 மில்லியன் இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என எழுதுகிறார்; அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையிலிருந்து கடந்த பத்து வருடங்களில் உருவாகியுள்ளனர். தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், பெரும்பான்மை இந்தியர்கள் 2025 ஆம் ஆண்டு நடுத்தர வர்க்கத்தினராக இருப்பர். அதே காலகட்டத்தில் கல்வியறிவு விகிதங்கள் 52 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பிற பார்வை நோக்குகள் 1990களின் துவக்கத்தில் முனைப்பாக்கப்பட்ட பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் தற்போதைய நிகழ்வான கிராமப்புற பொருளாதார சிதைவுக்கும் விவசாய சிக்கல்களுக்குப் பொறுப்பாகும் என்று கருதுகின்றன. இதழியலாளர் மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான த இந்து தினசரிக்கான ஆசிரியர், பி சாய்நாத் அவரது இந்திய கிராமப்புற பொருளாதாரம் பற்றியக் கட்டுரைகளில் விவரிப்பதானது, வியக்கத்தக்க அளவில் சமமின்மை நிலை உயர்ந்துள்ளது, அதே சமயத்தில், பத்தாண்டுகளில் இந்தியாவின் பசி அதன் உச்ச அளவை அடைந்துள்ளது. அவர் கூடவும் குறிப்பிடுவதானது இந்தியா முழுமைக்குமான கிராம பொருளாதாரங்கள் சிதைந்துள்ளன, அல்லது சிதையும் முனையில் உள்ளன, இது 1990களிலிருந்து இந்திய அரசின் புதிய தாராளவாத கொள்கைகள் காரணமானது என்பதே. "தாரளமயமாக்கலின்" மனித விலை மிக அதிகமாகவுள்ளது. 1997 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான இந்திய கிராமப்புற மக்கள் தொகையினரின் பெரும் அலையிலான விவசாயத் தற்கொலைகள் மொத்தம் 200,000 க்கு அருகேயுள்ளது என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த எண்ணிக்கை விவாதத்திற்குட்பட்டு நிலைத்துள்ளது, சிலர் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது எனக் கூறுகின்றனர். விமர்சகர்கள் அரசினால் தூண்டப்பட்ட கொள்கைகளில் பழுது கண்டதானது, சாய்நாத் கூற்றுப்படி, கடன் வலையில் கிராமப்புற குடும்பங்கள் விழுவதை மிக அதிகளவிலான எண்ணிக்கையில் அதன் பயனாய் ஏற்படுத்தி, மிக அதிகமான விவசாய தற்கொலைகளை விளைவித்தது. பேராசிரியர் உட்சா பட்நாயக், இந்தியாவின் உச்ச விவசாய பொருளாதார நிபுணர் கூறியது போன்று, 2007 ஆம் ஆண்டின் சராசரி ஏழ்மைக் குடும்பம், அது 1997 ஆம் ஆண்டு செய்ததை விட வருடத்திற்கு சுமார் 100 கிலோகிராமிற்கு குறைவான உணவை, உட்கொண்டது. அரசுக் கொள்கைகள் விவசாயிகளை மரபு ரீதியான உணவுப் பயிர்களினிடத்தில், பணப் பயிர்களுக்கு மாறுவதை ஊக்குவித்ததானது, விவசாய இடுபொருட்களின் விலையில் மிக அதிகமான ஏற்றத்தை விளைவித்தது, அதேப்போல சந்தை சக்திகள் பணப் பயிர்களின் விலையை நிர்ணயித்தன. சாய்நாத் சுட்டிக் காட்டுவது, அளவுக்கு மீறிய பெரிய எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட விவசாய தற்கொலைகள் பணப் பயிர்களுடன் நேரிட்டது, ஏனெனில் உணவுப் பயிர்களான அரிசியின் விலை குறைந்தாலும், வாழ்வதற்கு மீதம் உணவு அங்கிருக்கும். அவர் மேலும் சுட்டிக் காட்டுவது சமமின்மை. இந்தியா எப்போதும் கண்டிராத வகையிலான உயர் விகிதங்களை அடைந்தது. சேடான் ஆஹ்யா செயல் இயக்குநர் மார்கன் ஸ்டான்லியின் கட்டுரை ஒன்றில் சுட்டிக் காட்டப்படுவது, 2003-2007 காலக் கட்டத்தில் 1 டிரில்லியன் டாலருக்கு நெருங்கிய செல்வ வளர்ச்சி இந்திய பங்குச் சந்தைகளில் இருந்தது, அதே சமயம் 4-7% மட்டுமான இந்திய மக்கட் தொகையே எவ்விதமான பங்கையும் கொண்டிருந்தது. விவசாயத்தில் பொது முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% க்கு சுருங்கியப் போதான சமயத்தில், பத்தாண்டுகளில் தேசம் மோசமான விவசாய சிக்கலால் பாதிக்கப்பட்டது, அதே சமயம் இந்தியா இரண்டாவது அதிகமான எண்ணிக்கையில் டாலர் பில்லியனர்களைக் கொண்டதாக உண்டானது. சாய்நாத் வாதிடுவதானது, விவசாய வருமானங்கள் திடீர் வீழ்ச்சியுற்றன. பசி மிக வேகமாக அதிகரித்தது. வெகு முன்னரே விவசாயத்தில் பொது முதலீடு ஒன்றுமில்லாத அளவிற்குச் சுருங்கியது. வேலை வாய்ப்புகள் திடீரென வீழ்ந்தன. விவசாயமல்லாத வேலை வாய்ப்புகள் தேங்கி நின்றன. (சமீப காலங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டம் மட்டுமே சில நிவாரணங்களைக் கொண்டு வந்துள்ளது.) மில்லியன் கணக்கான மக்கள் நகரங்கள் மற்றும் மாநகரங்களை நோக்கி நகர்கின்றனர், அங்கும் கூட, சில வேலைகள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு மதிப்பீட்டின் படி, 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமக் குடும்பங்கள், ஒன்று நிலமற்றவர், விளிம்பிற்கு கீழே, விளிம்பு நிலை அல்லது சிறு விவசாயிகளாக உள்ளனர். 15 வருடங்களில் நிலைமையை சிறப்பாக மாற்றும்படி ஒன்றும் நடை பெறவில்லை. அதனை நிறைய மோசமானதாக்க அதிகம் நடந்துள்ளது. அவர்களது வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் ஆழமான கடனிலிருந்தனர் - கடனிலிருந்த உழவர் குடும்பங்களின் எண்ணிக்கை தாராளவாத "பொருளாதார சீர்திருத்தங்களின் முதல் பத்தாண்டில் இரட்டிப்பாகியது, 26 சதவீத விவசாய குடும்பங்களிலிருந்து 48.6 சதவீதமாக உயர்ந்தது. அதே சமயத்தில், இந்தியா அனைத்து சமயங்களிலும் விவசாயத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துக் கொண்டேயிருந்தது (சீரான தாரளவாத நடைமுறை). சிறு விவசாயிகளுக்கு வாழ்க்கை மென்மேலும் கடினமானதாக ஆக்கப்பட்டது. 1950களின் துவகத்திலிருந்து, அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி ஏழை மக்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய உதவ முயற்சித்தது, நிலைநிறுத்தியது மற்றும் மெருகிட்டது. ஒருவேளை மிக அதிகபட்ச முக்கிய முயற்சியானது அடிப்படைப் பொருட்களை, குறிப்பாக உணவுப் பொருட்களை, நாடு முழுதும் கிடைக்கக் கூடியதாக, ஏழைகள் அவர்களின் வருமானத்தில் சுமார் 80 சதவீதத்தை உணவிற்கு செலவழிக்கின்றனர் எனும்போது, கட்டுப்படுத்தப்பட்ட விலைகளில் அளித்ததாகும். இந்தியாவில் வறுமை ஒழிப்பு பொதுவாக நீண்ட கால குறிக்கோளாக மட்டுமே கருதப்படுகிறது. அடுத்த 50 வருடங்களில் கடந்த காலத்தினை விட வறுமை ஒழிப்பானது மேம்பட்ட முன்னேற்றத்தினை, இது வளர்ந்து வரும் மத்திய தர வர்க்கத்தினாலான மெதுவாக கசிந்தொழுகும் விளைவினால் (பொருளாதார பலன்கள் படிப்படியாய் பரவலாவது) உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி மீதான அதிகரித்து வரும் முக்கியத்துவம், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மற்றும் மகளிர் மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியில் மெலிந்த பிரிவினர்க்கு அதிகாரமளிக்கும் போக்கின் அதிகரிப்பு, போன்றவைக் கூட வறுமை ஒழிப்பிற்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வறுமை குறைப்பு திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன எனக் கூறுவது தவறானது. நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி (இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் விடுதலை அடைந்தபோது முழுமையாக இல்லாத ஒன்று) இந்தியாவில் பொருளாதார சுபிட்சம் உண்மையில் மிக மனக்கிளர்ச்சியை உண்டாக்குகிறதை குறிக்கிறது, ஆனால் செல்வ விநியோகம் சமமானதாக இல்லை. ஒவ்வோர் ஆண்டும், தராளமயமாக்கலுக்குப் பிறகும், சோஷலிஸ மாதிரியிலிருந்து விலகியப் பிறகும், இந்தியா அதன் 60 லிருந்து 70 மில்லியன் மக்களை மத்தியதர வர்க்கத்தில் சேர்த்து வருகிறது. பகுத்தாய்வு நிபுணர்கள், "ஃபோர்காஸ்டிங் இண்டெர்நேஷனல்" நிறுவுனர், மார்வின் ஜே. செட்ரான் போன்றவர்கள், 390 மில்லியன் இந்தியர்கள் மத்தியதர வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என எழுதுகிறார்; அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கடந்த பத்தாண்டுகளில் வறுமையிலிருந்து உருவாகியவர்கள். தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, பெரும்பான்மையான இந்தியர்கள் 2025 ஆம் ஆண்டு மத்தியதர வர்க்கமாக இருப்பர். கல்வியறிவு விகிதங்கள் 52 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக தராளமயமாக்கலின் துவக்க பத்தாண்டுகளின் போது உயர்ந்துள்ளது (1991-2001). இந்தியாவில் வறுமை பற்றிய விளக்கம் ஐக்கிய நாட்டு உலக உணவு திட்டத்தினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதன் உலகப் பசி அட்டவணையில், அது இந்திய அரசின் வறுமைப் பற்றிய விளக்கத்தினை கேள்விக்குட்படுத்திக் கூறியது: உண்மையில் கலோரி இழப்பு கிராமப்புற மக்கள் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களின் பங்கு வேகமாகக் குறைந்து வருகிறது எனக் கூறப்படும் போதான கால கட்டத்தில் உயர்ந்து வருவதானது, அதிகாரபூர்வ வறுமை மதிப்பீடுகளுக்கும் கலோரி இழப்பிற்கும் இடையிலான தொடர்பற்றதன்மை உயர்ந்து வருவதை அழுத்தமாய்க் கூறுகிறது. அதே சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய வறுமை குறைந்துள்ளது; வறுமை குறைப்பு அளவு அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. அதே சமயத்தில் 1993-94 மற்றும் 2004-05 ற்கும் இடையிலான வறுமை உயரவில்லை என்பதில் ஒரேமனதான முடிவு இருந்தாலும், ஒருவர் இதர பண-சமபந்தமற்ற பரிமாணங்களை கருத்திற்கொள்ளும் போது தெளிவானதாக இல்லை (உடல் நலம், கல்வி, குற்றம் மற்றும் உள்கட்டமைப்பிற்கான அணுகும் முறை போன்றவற்றில்). இந்தியா அனுபவிக்கும் வேகமான பொருளாதார வளர்ச்சியுடன், கிராமப்புற மக்கள் தொகையினரின் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாநகரங்களை நோக்கி இடம்பெயர்வது தொடர்ந்து சாத்தியமாக நிகழக்கூடியது, நீண்ட காலத்தில் நகர்புற வறுமை விவகாரத்தை மேலும் குறிப்பிடத்தக்கதாக ஆக்கும். சிலர், இதழியலாளர் பி. சாய்நாத் போன்றோர், அதேப் போல ஒட்டு மொத்த வறுமை உயர்ந்திருக்கவில்லை என்றப் போதும், இந்தியா ஐக்கிய நாட்டு மனிதவள மேம்பாட்டு அட்டவணையில் படு பாதாளமான தகுதிநிலையிலேயே நிலைத்திருக்கிறதென்ற பார்வையை வைத்திருக்கின்றனர். இந்தியா 2007-08 ஐக்கிய நாட்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் 132 இடத்தில் நிலைப்பெற்றிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலானவற்றில் இதுவே நாட்டின் கீழான தகுதி நிலையாகும். 1992 ஆம் ஆண்டு, இந்தியா 122 வது இடத்தில் அதே அட்டவனையில் இருந்தது. சூழ்நிலை முக்கியமாகச் சுட்டிக்காட்டும் வழிமுறைகளான ஒட்டுமொத்த நலம் அறியும் கூறுகளான ஊட்டச் சத்துக் குறைவான மக்களின் எண்ணிக்கை, (இந்தியா அதிகமான எண்ணிக்கையிலான 230 மில்லியன் ஊட்டச் சத்து குறைவான மக்களைக் கொண்டுள்ளது மற்றும் உலக பசி அட்டவணையில்119 பேரில் 94 வது) மேலும் ஊட்டச் சத்து குறைபாடுள்ள சிறார் (இந்தியாவின் 5 வயதிற்கு குறைவான சிறார்களில் 43%பேர் எடைக்குறைவோடு (BMI<18.5) உள்ளனர் இது உலகிலேயே அதிகமானது) 2008 வரை , போன்றவைகளால் கூட வாதிடப்படலாம். பொருளாதார நிபுணர் ப்ரவீண் விசாரியா இந்தியாவில் ஒட்டுமொத்த வறுமை குறைந்துள்ளதென்று எடுத்துக்காட்டிய பல புள்ளிவிவரங்களின் சட்டப்பூர்வ தன்மையை பாதுகாத்தார், அதேப் போல இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவினால் செய்யப்பட்ட பிரகடமான இந்தியாவில் வறுமை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்பதையும் கூட ஆதரித்தார். அவர் 1999-2000 ஆய்வு நன்கு வடிவமைக்கப்பட்டது மற்றும் கண்காணிக்கப்பட்டது என்று வலியுறுத்தினார். மேலும் அவைகள் இந்தியாவின் வறுமையைப் பற்றி முன்பு எண்ணிய கருத்தின்படி கொள்வதுடன் பொருந்துவதாக தோன்றவில்லை என்ற காரணத்தினாலேயே அவ்வாறு உணர்ந்தார், அவை ஒட்டுமொத்தமாக கருத மறுக்கப்படக் கூடாது. நிக்கோலஸ் ஸ்டெர்ன், உலக வங்கியின் உப தலைவர், வறுமை குறைப்பு புள்ளிவிவரங்களை ஆதரித்து பதிப்புக்களை வெளியிட்டார். அவர் வாதிடுவதானது உயர்ந்து வரும் உலகமயமாக்கல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் நாட்டில் வறுமை குறைப்பிற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளது என்பதே. இந்தியா, சீனாவுடன் இணைந்து, உலகமயமாக்கலின் தெளிவானப் போக்குகளுடன் வளர்ச்சியை துரிதப்படுத்தும் தனி நபர் வருமானத்துடன் அதிகரிப்பதைக் காட்டியுள்ளன.. அரசினால் நடத்தப்படும் அமைப்பாக்கமற்ற துறையின் தேசியத் தொழில் நிறுவனங்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின்படி 77% இந்தியர்கள் அல்லது 836 மில்லியன் மக்கள் தினசரி ரூபாய் 20க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர் (சாதாரணமாக USD 0.50, வாங்கும் திறன் சமநிலை USD 2.0) பெரும்பாலோர் "முறைப்படுத்தப்படாத தொழிலாளர் துறையில் வேலை அல்லது சமூக பாதுகாப்பு இன்றி, கீழான வறுமையில் வாழ்கின்றனர்." மெக்கின்ஸி குளோபல் இன்ஸ்டியூட்டின் ஓர் ஆய்வுப்படி 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தது, ஓராண்டிற்கு ரூபாய் 90,000 ற்கு கீழான குடும்ப வருமானத்தில் 93% இந்திய மக்கள் தொகை அல்லது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு டாலரில் வாழ்ந்தது. 2005 வாக்கில் அந்த அளவு பாதி 54% ற்கு அருகே குறைக்கப்பட்டது. 103 மில்லியனுக்கும் மேலான மக்கள் ஒரு தலைமுறைக் கால முடிவில் நம்பிக்கையற்ற நிலையிலிருந்த வறுமையிலிருந்து நகர மற்றும் கிராமப்புற பகுதியிலிருந்தும் கூட வெளியே வந்தனர். அவர்கள் அடுத்த 20 வருடங்களில் இந்தியா 7.3% வருடாந்திர வளர்ச்சியை சாதிக்கும் எனில், 456 மில்லியனுக்கும் மேலான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்படுவர் என கணித்துள்ளனர். ஜனரஞ்சக கருத்துக்களுக்கு முரண்பாடாக, கிராமப்புற இந்தியா இந்த வளர்ச்சியிலிருந்து பலனடைந்தது: உச்சமான கிராமப்புற வறுமை 1985 ஆம் ஆண்டு 94% லிருந்து 2005 ஆம் ஆண்டு 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மேலும், அவர்கள் அது 2025 ஆம் ஆண்டு 26 சதவீதமாகக் குறையும் என்று கணித்தனர். "இந்தியாவின் பொருளாதார சீர்த்திருத்தங்கள்" மற்றும் அதன் விளைவான உயர்ந்த வளர்ச்சி நாட்டின் மிக வெற்றிகரமான வறுமை எதிர்ப்பு திட்டங்கள் என்று அறிக்கை முடிவடைகிறது. "நியூயார்க் டைம்ஸ்" சிற்கு இணங்க, இந்தியாவின் சுமார்42.5% சிறார்கள் இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி, உலக சுகாதார நிறுவனத்தால் செய்யப்பட்ட மதிப்பீடுகளை சுட்டி, கூறுகிறது " சுமார் 49 விழுக்காட்டு உலகின் குறை எடை சிறார், 34 விழுக்காட்டு வளர்ச்சி குன்றிய சிறார் மற்றும் உலகின் 46 விழுக்காட்டு எடை இழந்த சிறார், இந்தியாவில் வாழ்கின்றனர்." உலக வங்கியும் கூட குறிப்பிட்டதானது "சிறார்களில் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கான கீழுள்ள காரணி பெரும்பாலும் வறுமையாக இருக்கும் போது, தெற்காசிய நாடுகளால் அனுபவிக்கப்பட்ட உயர் பொருளாதார வளர்ச்சியானது, சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்காவிலுள்ளவற்றுடன் ஒப்பிடும் போது, தெற்காசிய சிறார்களுக்கு உயர் ஊட்டச் சத்து அந்தஸ்திற்கு இடம் மாறவில்லை." இந்திய உச்ச நீதிமன்றத்திற்கான ஒரு சிறப்புக் குழு இந்தியாவின் சிறார் ஊட்டச் சத்து குறைபாடு சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகளை விட இரு மடங்கு பெரிதானது. விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ் "விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்" என்பது எம்மி விருது வெற்றி பெற்ற,டிஸ்னி சேனலிற்கு உரித்தான தொடர் ஆகும். டிஸ்னி சேனலில் இது அக்டோபர் 12, 2007 அன்று முதன்முறை ஒளிபரப்பானது. சிறந்த குழந்தைகள் நிகழ்ச்சிக்கான 2009 ஆம் ஆண்டின் எம்மி விருதை இதுவென்றது.[2] இந்தத் தொடரை டோடு ஜே. கிரின்வால்டு உருவாக்கினார். மேலும் இதில் மந்திர சக்திகளுடன் உள்ள மூன்று உடன்பிறந்தவர்களாக [4] செலினா கோம்ஸ், டேவிட் ஹென்ரி மற்றும் ஜேக் டி. ஆஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இதன் மூன்றாவது பருவத்திற்காக உயர் வரைவில் இத்தொடரின் படப்பிடிப்பு ஆரம்பித்தது.[5] விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ், அலெக்ஸ் (செலினா கோமஸ்), அவரது இளைய சகோதரர் மேக்ஸ் (ஜேக் டி. ஆஸ்டின்) மற்றும் அவர்களது மூத்த சகோதர் ஜஸ்டின் (டேவிட் ஹென்ரி) ஆகியோரைக் கொண்ட ரூசோ குடும்பத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அலெக்ஸின் நெருங்கிய நண்பரான ஹார்ப்பரும் (ஜெனிபர் ஸ்டோன்) இக்கதைக் கருவில் இடம்பெறுகிறார். இந்த மூன்று ரூசோ உடன்பிறந்தவர்களும் மந்திரக்கலையில் பயிற்சி பெற்றவர்கள். மேலும் இவர்கள் அவர்களது இத்தாலிய-அமெரிக்கத் தந்தையும் முன்னாள் மந்திரவாதியுமான ஜெர்ரி (டேவிட் டெலூயிஸ்) மற்றும் மெக்சிக்கன்-அமெரிக்கன் தாயார் தெரசாவுடன் (மரியா கானல்ஸ் பெரெரா) வாழ்கின்றனர். இந்த உடன்பிறந்தவர்கள் அவர்களுக்கு மந்திரம் தெரியுமென்ற மருமத்தைப் பாதுகாக்க வேண்டும். மேற்பார்வையில்லாமல் மந்திரக்கலையைப் பயன்படுத்துவதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அவர்களது மந்திரக்கலைத் திறனை வயது வந்தப் பிறகும் தக்கவைத்துக் கொள்ளமுடியும். ஒரு மந்திரக்கலைப் போட்டியின் மூலம் இது வரையறுக்கப்படுகிறது. பொதுவான எபிசோடுகள், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மந்திரக்கலையைப் பயன்படுத்தும் அலெக்ஸ் மற்றும் ஜஸ்டின்னை சுற்றியே பிண்ணப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தொடங்கியதை விட அதிகமான பிரச்சினைகளுடன் நிறைவு செய்வர். இத்தொடரை டோட் ஜெ. கிரீன்வால்டு உருவாக்கி, செயற்குழுத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் "ஹன்னா மோண்டா" வின் முதல் பருவத்தின் போது எழுத்தாளர் மற்றும் ஆலோசனைத் தயாரிப்பாளராக பணிபுரிந்த பிறகு நிகழ்ச்சியை உருவாக்கத் தொடங்கினார். இட்'ஸ் எ லாஃப் புரொடக்சன்ஸ் மற்றும் டிஸ்னி சேனல் ஒரிஜினல் புரொடக்சன்ஸ் மூலம் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. இதன் கருப்பொருள் பாடலானது ஜான் அடேர் மற்றும் ஸ்டீவ் ஹாம்டனால் எழுதப்பட்டது. இது டெக்னோ-பாப் பாணியிலானப் பாடலாகும். மேலும் செலினா கோம்ஸ் அதில் நடித்திருந்தார். கலிபோர்னியாவின் ஹாலிவுட்டில் உள்ள ஹாலிவுட் சென்டர் ஸ்டுடியோஸில் இத்தொடர் படமாக்கப்பட்டது. இது முக்கியப் பாத்திரங்களாக ஒரு கலவையான குடும்பம் அல்லது லத்தின் குடும்பத்தைக் கொண்டிருந்த டிஸ்னி சேனலின் முதல் நிகழ்ச்சியாக இருந்தது. ஆகஸ்ட் 28, 2009 அன்று டிஸ்னி சேனலில் இத்தொடரைச் சார்ந்த டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை, புவேர்ட்டோ ரிக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரம் ஆகிய இடங்களில் "விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்: த மூவி" படம் பிடிக்கப்பட்டது.[11] இத்திரைப்படம் அதன் முதல் காட்சியில் 11.4 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. இதனால் இத்திரைப்படம் டிஸ்னி சேனலின் இரண்டாவது சிறந்தத் திரைப்படமாக தரப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் இத்தொடரைச் சார்ந்த விற்பனையாக்கம் வெளியிடப்படும்.[12] 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இத்தொடரைச் சார்ந்த வீடியோ விளையாட்டு மற்றும் சவுண்ட் டிராக் வெளியிடப்பட்டது.[13] செப்டம்பர் 10, 2009 அன்று ஜெர்மனியின் நிகழ்ச்சியின் முழுமையான முதல் பருவம் வெளியானது மற்றும் பிரான்சில் 03 மார்ச் 2010 அன்று வெளியாக இருக்கிறது.[16] அக்டோபர் 5, 2009 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரேசிலில் புத்தகங்களாக நிகழ்ச்சியின் முதல் பருவம் வெளியானது.[17] மார்ச் 3, 2010 அன்று ஆஸ்திரேலியாவில் பருவம் 1, பகுதி 1 வெளியாக இருக்கிறது. அக்டோபர் 12, 2007 அன்று டிஸ்னி சேனலில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 2009 அன்று "ஹெல்பிங் ஹேண்ட்" எபிசோடானது, 4.5 மில்லியன் பார்வையாளர்களுடன், மாலை 7:00 (கிழக்குதிசை நேரம்) மணிக்கு ஒளிபரப்பப்பட்டு அதிகப்படியான ரசிகர்களைப் பெற்று டிஸ்னி சேனலின் முந்தைய சாதனையை முறியடித்தது.[29] 2009 ஆண்டு ஜூலை மாதத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களுடன், அதிகமான ரசிகர்கள் பார்த்த எபிசோடாக "பெயிண்ட் பை கமிட்டி" பெயர் பெற்றது. இந்த எபிசோடின் தரவரிசையை நிர்ணயிக்கும் "பிரின்சஸ் புரொடக்சன் புரோகிராமிற்கு" [30] காட்சிபடுத்தப்பட்ட பிறகு இந்த எபிசோடு ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியானது, பின்வரும் நாடுகளில் உள்ள பின்வரும் அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டது: கூட்டு வட்டி கூட்டு வட்டி என்பது மூலதனத்தோடு வட்டியைச் சேர்க்கும் பொழுது ஏற்படுகிறது, சேர்ந்த வட்டியும் அந்த நொடி முதல் "அதுவும்கூட தானே" வட்டியைச் சம்பாதிக்கின்றது. மூலதனத்தோடு சேர்ந்துவிடும் இந்தக் கூடுதலான வட்டி "கூட்டு கலத்தல்" என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டி கூடுதலாகிக் கொண்டே வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ள ஒருகடன்: இதன்படி, $100 எனத் துவங்கக்கூடிய கடன் முதல் மாதம் மற்றும் ஒவ்வொரு மாதமும் 1% வட்டி என்ற கணக்கில் முதல் மாத இறுதியில் இருப்பு $101 ஆகவும், இரண்டாம் மாத இறுதியில் $102.01 ஆகவும் பெருகிக் கொண்டே இருக்கும். வட்டி விகிதத்தை முழுமையாக வரையறை செய்வதற்கும், அதனைப் பிற வட்டி விகிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், வட்டி விகிதம் "மற்றும்" கூட்டு நிகழ்வெண் ஆகியவை நிச்சயம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். ஏனெனில் வட்டி விகிதங்களைப் பலர் வருடாந்திர விழுக்காடாகவே கருதுவதால், பல அரசாங்கங்கள் நிதி நிறுவனங்களிடம் முன்பணமோ அல்லது சேமிப்போ அதன் சம வருடாந்திர கூட்டு வட்டி விகிதத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதையே முக்கியமாக கேட்கின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய உதாரணத்தில் வருடாந்திர வட்டி வீதம் ஏறத்தாழ 12.68% மாக உள்ளது. இந்த சம வருடாந்திர விகிதத்தை "வருடாந்திர விழுக்காட்டு விகிதம்" (ஏபிஆர்) எனவும், "வருடாந்திர சம விகிதம் (" ஏஈஆர்) எனவும், "வருடாந்திர விழுக்காடு தருதல்" எனவும், "விளைவிக்கும் வட்டி விகிதம்" எனவும், "விளைவிக்கும் வருடாந்திர விகிதம்" எனவும் மேலும் பல்வேறு வகையான சொற்றொடர்களால் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கடன் பெறுவதற்கான முன்தொகை கட்டணத்தை வசூலிக்கும் பொழுது, ஏபிஆர்-வருடாந்திர விழுக்காட்டு விகிதப்படி செலவு-விலையையும் கூட்டு வட்டியையும் சேர்த்து சரிசம விகிதத்திற்கு மாற்றிவிட வேண்டி வழக்கமாகக் கணக்கிடப்படும். இத்தகைய அரசாங்கத்தின் கோரிக்கைகள், கடன்பெறும் போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் உண்மையான செலவுகளைச் சுலபமாக ஒப்பிட்டுப் பார்க்க உதவிபுரிகின்றன. வழங்கப்படும் எந்த ஒரு வட்டி விகிதம் மற்றும் தொடர்ந்து கூடிவரும் தொகைக்கும், ஒரு "சரிசமமான" விகிதம் அடுத்து வரும் பல்வகை கூட்டு நிகழ்வெண் அடிப்படையில் அமைந்திருக்கும். கூட்டு வட்டி தனிவட்டியைவிட மாறுபட்டிருக்கும், அதில் வட்டியானது மூலதனத்தில் சேர்க்கப்படாது (கூடுதலாகிக்கொண்டு வருவதில்லை). நிதி மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் கூட்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டதாகவே இருக்கும் மற்றும் தனிவட்டி அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக அமைவதில்லை. (ஒருசில நிதிக்கணக்குகளில் தனிவட்டிக் கூறுகள் வேண்டுமானால் உள்ளடங்கியிருக்கலாம்) சேர்ந்துக்கொள்வதன் விளைவு, அதன் சேர்ந்துக்கொள்ளும் வட்டியின் நிகழ்வுநிலை மற்றும் பொருந்திவரும் கால நேரத்தின் வட்டியைச் சார்ந்திருக்கிறது. ஆகையால், ஒரு சட்டபூர்வ ஒப்பந்தத்தின் கீழ் திருப்பித்தரவேண்டிய வட்டியுடன் கூடிய முதல், அடுத்தடுத்துக் கூடிவரும் நிகழ்வு (வருடாந்திரம், அரைவருடாந்திரம், காலாண்டு, மாதாந்திரம், தினப்படி, இன்னபிற) "மற்றும்" வட்டி விகிதம் துல்லியமாக வரையறை செய்யப்பட வேண்டும். பலவகையான வழக்குமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப உபயோகப் படுத்தப்படலாம், ஆனால் நிதி மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டின் அடிப்படைகள் பின்வரும் வழக்கமான முறைகளில் பொதுவாகப் பின்பற்றப்படும்: காலவேளை தோறும் வட்டி விகிதம்: ஒவ்வொரு கால வேளைக்கும் விதிக்கப்பட வேண்டிய வட்டியானது (மற்றும் தொடர்ந்து சேர்ந்துக்கொள்வது) மூலதனத் தொகையால் வகுக்கப்பட்டுக் கணக்கிடப்படும். காலவேளைக்குத் தக்க வட்டி விகிதம் கணக்கீடுகளின் அடிப்படையில் பயன்படுத்தப் படலாம் மற்றும் அபூர்வமாகவே பிறவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படலாம். பெயரளவில் வருடாந்திர விகிதம் அல்லது பெயரளவில் வட்டி விகிதம் கால வேலைக்கேற்ற விகிதமாக, அதாவது ஓர் ஆண்டுக்குரிய காலத்தின் எண்ணிக்கையால் பெருக்கப்படும். எடுத்தக்காட்டாக, மாத விகிதம் 1% என்ற பெயரளவில் வருட விகிதம் 12%க்குச் சமமாக இருக்கும். விளைவிக்கும் வட்டி விகிதம்: இது வருடாந்திர சேர்ந்துவிடுதலை பொருந்தச் செய்வதாகப் பிரதிபலிக்கும். வேறு வகையில் சொல்வதென்றால், முதலைக் கொண்டு வகுத்து ஒரு வருடத்தின் கடைசியில் சேர்ந்துவிட்ட செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டியைக் குறிக்கும். பொருளியல் நிபுணர்கள் பொதுவாக ஒப்பீடு செய்வதற்கு நடைமுறைக்கு உகந்த ஆண்டு விகிதங்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர். நிதி மற்றும் வணிகத்தில், பெயரளவில் வருடாந்திர விகிதம் எவ்வாறாயினும் ஒருமாற்றாக மேற்கொள்ளப்படும். கூட்டு நிகழ்வெண் மேற்கொள்ளப்படும் பொழுது, ஒரு கடன் பெயரளவில் முழுமையாகக் குறிப்பிடப்படும் (ஒரு வழங்கப்பட்ட கடனுக்கு வட்டியின் பலன் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட வேண்டும்) ஆனால் பெயரளவு விகிதம் வேறுபட்ட கூட்டு நிகழ்வெண் கொண்டிருந்தால் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. கடன்கள் மற்றும் நிதி இதர "வட்டி இல்லா"க் கட்டணங்களைக் கொண்டிருக்கலாம், மேலே குறிப்பிட்ட நிபந்தனைகள் இத்தகைய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ள முயற்சிக்காது. வருடாந்திர விழுக்காட்டு விகிதம் மற்றும் வருடாந்திர விழுக்காட்டின் ஆக்கவிளைவு போன்ற இதர சொற்றொடர்கள் குறிப்பிட்ட சட்ட வரையறைகளைக் கொண்டிருக்கலாம் மேலும் அதனதன் அதிகாரத்தின் எல்லையை ஒட்டி அவை ஒப்பிட்டு பார்க்கவும் பார்க்கப்படாமலும் போகலாம். மேலே குறிப்பிட்ட நிபந்தனைகள் (மற்றும் பிற ஒத்த சொற்றொடர்கள்) பொருத்தமற்றும், உள்ளூர் பழக்கவழக்கம் அல்லது சந்தை தேவைகளுக்கு ஏற்பவும், எளிமையின் பொருட்டும் அல்லது பிற காரணங்கள் பொருட்டும் வேறுபட்டு இருக்கும். பணத்தின் கால மதிப்பிற்குத் தக்கபடி சூத்திரங்கள் விரிவான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. பின்வரும் சூத்திரத்தில் "i" என்பது காலத்திற்குறிய நடைமுறை வட்டி விகிதம். "FV" மற்றும் "PV" இரண்டும் ஒரு தொகையைப் பற்றிய "i" எதிர்கால மற்றும் நிகழ்கால மதிப்பைக் குறிப்பிடுகிறது. "n" காலங்களின் எண்ணிக்கைப் பற்றி குறிப்பிடுகிறது. இவைகளே அடிப்படை சூத்திரங்களாகும்: மேலுள்ள சூத்திரம், ஒரு மூதலீட்டின் தற்போதை மதிப்பினை ("PV" ) " n " காலங்களுக்கு நிர்ணயித்த வட்டி விகிதத்தில் ("i" ) ஏற்படவிருக்கும் எதிர்கால மதிப்பை ("FV" ) கணக்கிடுகிறது. மேலுள்ள சூத்திரம், "n " காலங்களுக்கு வட்டி விகிதம் ("i" ) ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட எதிர்கால மதிப்பை "(FV)" ஏற்படுத்துவதற்கு தேவையான தற்போதைய மதிப்பு "(PV) " என்ன என்பதை கணக்கிடுகிறது.. மேலுள்ள சூத்திரம், ஏற்படவிருக்கும் "n" காலத்திற்கு பின்னர் ஒரு "PV" யின் துவக்க முதலீடு "FV" மதிப்பீட்டைத் திரும்பச் செலுத்தினால் ஏற்படவிருக்கும் கூட்டு வட்டி விகிதத்தை கணக்கிடுகிறது. மேல் கண்ட சூத்திரம், கொடுக்கப்பட்டிருக்கும் "PV" மற்றும் வட்டி விகிதப்படி ("i" ), ஒரு "FV" யை பெறுவதற்கான காலங்களின் எண்ணிக்கையை கணக்கிடுகிறது. லாக் செயல்முறை எந்த அடிப்படையிலும் அமையலாம், உதாரணமாக, இயல்பான லாக் (ln) கூட்டு வட்டியை கணக்கிட அறியும் சூத்திரம்: இதில், பயன்படும் உதாரணம்: ஒரு தொகை $1500.00 வங்கி ஒன்றில் சேமிப்பில் வைக்கப்பட்டது; அதன் வட்டி விகிதம் வருடம் தோறும் 4.3% சதவிகிதமாகும்; அது ஒவ்வொரு காலாண்டும் கூட்டு வட்டியில் கணக்கிடப்படும். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அதன் இருப்புத்தொகையைக் கண்டுபிடிக்கவும். A. மேற்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி, அதில் P = 1500, r = 4.3/100 = 0.043, n = 4 மற்றும் t = 6: அதன்படி, ஆறு வருடங்களுக்குப் பிறகு இருப்பானது தோராயமாக $1,938.84 ஆக இருக்கும். கூட்டு வட்டிக்குரிய தொகை காணும் செயல்முறை கால நேர அடிப்படையில் நிகழ்வுஎண் காணும் செயல்முறை ஆகும். formula_7 காலைவேளை formula_9 அதிகரிக்க, வட்டி விகிதம் ஓர் உயர் வரம்பான formula_13 ஐ எட்டும்.. இந்த விகிதம் "தொடர்ச்சியான சேர்ந்துவிடுதல்" என்று அழைக்கப்பெறும், கீழே காண்க. "A"("0" ) என்னும் முதல் ஓர் எளிய குணகமாக (துணைக் காரணம்) இருப்பதால், எளிமைக்காக அது அவ்வப்போது கைவிடப் படுகின்றது, அதற்கு பதிலாக அது, விளைவாக குவியும் வழிமுறைவட்டிக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. தனி மற்றும் கூட்டு வட்டிக்காண குவியும் வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பு: "A" ("t" ) என்பது தொகை காணும் வழிமுறையாகும் மற்றும் "a" ("t" ) என்பது குவியும் வழிமுறை காண்பதாகும். தொடர்ச்சியான சேர்ந்துவிடுதல் என்பது சேர்ந்துவிடும் காலம் முடிவுறாமல் சிறிதாக இருக்கும் என்பதாக எண்ணப்பட்டுவிடும்; எனவே ஒரு வரம்பு "n" முடிவிலாமையை கருத்தில் கொண்டு ஏற்படுவதாகும். இந்த வரையறையின் கணிதச் சான்றுக்கு நிகழ்வுஎண் காணும் வழிமுறை விளக்கங்களை ஆராய வேண்டும். தொகை காணும் வழிமுறையானது வட்டி விகிதம் ஒரு தொடரான கூட்டு விகிதம் சொல்லவேண்டி அதனை வட்டியின் வலிமை என்று அழைக்கலாம். வருடாந்திர வட்டி வலிமையானது மாதந்திர வட்டி வலிமையைக் காட்டிலும் பன்னிரண்டு மடங்கு அதிகமானதாகும். ஒரு வருடத்திற்கு பலன்தரும் வட்டி விகிதமானது இந்த "i" யைப் பயன்படுத்தி தொகை காணும் வழிமுறையை பின்வரும்படி எழுதலாம்: அல்லது லாகரித்மிக் அல்லது தொடர்ச்சியான சேர்ந்துவிட்ட வருவாய் ஆகியவற்றையும் பார்க்கவும். கணிதத்தில், குவியும் வழிமுறைகள் "e" யின் இயல்பான மடக்கை எண்அடிப்படையில் அடிக்கடி சொல்லப்படும். இந்த நுண்கணித முறைகளானது வட்டி சூத்திரங்கள் கையாளும்முறையை எளிதாக்க பயன்படுகிறது. எந்த தொடரான வித்தியாசமான குவியும் செயல்முறையின் "a(t)" படி வட்டி வலிமை,அல்லது பொதுவாக மடக்கை எண் படி அல்லது தொடர்ச்சியான சேர்ந்துவிட்ட வருவாய் பின்வரும் வழிமுறையில் ஒரு காலநேர செயல்முறையாக விளக்கப்படுகிறது: அதுவே குவியும் செயல்முறையின் இயல்பான மடக்கை எண்படி காலநேர மாறுதல் விகிதமாகும். மாறுதலையாக: மேற்கூறிய சூத்திரம் ஒரு வித்தியாசமான சரிசம வடிவளவாக எழுதப்படும் பொழுது, வட்டியின் வலிமை ஓர் எளிய தொகையின் மாறுதல் பற்றிய குணகமாக உள்ளது. ஒரு நிரந்தர வருடாந்திர வீதம் "r" என கூட்டு வட்டி காண, வட்டியின் வலிமை நிலைத்திருக்கும் மற்றும் குவியும் செயல்முறை அவ்வலிமையைப் பொறுத்து ஓர் எளிய சக்தியாக, அதாவது e: என்பதாக இருக்கும். வட்டியின் வலிமை வருடாந்திர பலன்தரும் வட்டி விகிதம் அதைவிடக் குறைவாக இருக்கும், ஆயினும் வருடாந்திர பலன்தரும் கழிவு விகிதத்தை விட அதிகமாக இருக்கும். அது e- பிடிப்பிலுள்ள காலத்திற்கு எதிரிடையாக இருக்கும். வட்டி விகிதங்களின் எண்மானம் என்பதையும் பார்க்கவும் நாள் என்னும் மரபு வழக்கு காண்க ஒரு சேர்தலின் அடிப்படையிலிருந்து மற்றொரு சேர்தலின் அடிப்படைக்கு வட்டி விகிதத்தை மாற்ற, பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படும்: இங்கு "r" என்பது ஒரு கூட்டு நிகழ்வெண் உடன் வட்டிவீதம் பற்றி விளக்கயுரைக்கும் "n" மற்றும் "r" என்பது ஒரு கூட்டு நிகழ்வெண் உடன் வட்டிவீதம் பற்றி விளக்கயுரைக்கும் "n" . வட்டியானது தொடர் சேர்ந்துவிட்டவையாக வரும் பொழுது: இங்கு "R" என்பது ஒரு தொடர் கூடுதலாக உள்ள ஆதாரத்தின் வட்டி விகிதமாகும் "r" என்பது ஒரு வட்டிவிகிதம் அதனுடன் கூட்டு நிகழ்வெண் "n" விளக்கமாக இருக்கும், யு.எஸ். அடமானங்கள் வட்டியானது மாதம் தோறும் கூடுதல் ஆகும், பின்வரும் வாதம்படி திருப்பிச் செலுத்தும் தொகைகள் பற்றிய சூத்திரம்: I = குறிப்பு சதவிகித வட்டி விகிதம் i = மாதாந்திர சதவிகித வட்டி விகிதம் = I/12 (ஆகையால் APR = (1+i)^12) T = வருடங்களில் குறிப்பிட்ட காலம் Y= IT X = 1/2 I T = 1/2 Y n = 12 T = மாதங்களில் குறிப்பிட்ட காலம் L =முதல் அல்லது கடன் தொகை P = மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை ஒரு மாதம் காலம் இருப்பின் அப்பொழுது formula_30 ஆகையாலே formula_31. இரு மாதகாலம் என்று இருப்பின் அப்பொழுது formula_32 ஆகையாலே formula_33. n மாதங்கள் என்று இருப்பின் அப்பொழுது இது சுருக்கப்படும் குறிக்கும் பட்சம் formula_34 மற்றும் வேற்றுமையை கருத: formula_35 ஆகையாலே formula_36 இந்த சூத்திரம் அமெரிக்க அடமானம் மற்றும் அதற்கான மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை பற்றிய சூத்திரமாகும் இதையே வங்கிகளும் பயன்படுத்துகின்றன. ஒருசில சதவிகிதம் வரை சரியாக கண்டுபிடிக்கும் ஒரு சூத்திரமான இது வழக்கமான அமெரிக்க குறிப்பு விகிதங்களை formula_37 மற்றும் காலங்கள் (T=10-30 வருடங்கள்) என்பதை கவனிப்பதன் மூலம் அறியலாம் அதன் மாதாந்திர குறிப்பு வீதம் ஒன்றுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியதாகும்: formula_38எனவே அந்த formula_39அதனால் வருவது ஒரு சுருக்கம் ஆகையால் formula_40 அது ஒரு துணை உருமாறிகளை வரைஅறை செய்ய உதவும் formula_41 formula_42. formula_43 என்பது formula_44 தவணைகளில் செலுத்தப்படும் ஒரு வட்டியில்லா கடனுக்கு செலுத்த வேண்டிய மாத திருப்பிச் செலுத்தும் தொகையாகும். இத்தகைய உருமாறிகளைப் பொருத்தவரையில் தோராயமான கணக்கு இவ்வாறு எழுதப்படலாம் formula_45 வழிமுறைformula_46 இரட்டிப்பாகும்: formula_47மேலும் பல இரட்டிப்புகள் விரிவாக்க என்பது உணரக்கூடும் formula_48. அது மேலும் இரட்டிப்புகளாக formula_49விரிவாக்கமாக உடனடி செய்யலாம் ஒற்றைக் காலம் formula_48கூடுதல்formula_51 ஆகும் இதை விளக்குவதை விட வசதியாக இருப்பதை நிரூபிக்கும் formula_52 ஆகையால் formula_53 இது மேலும் இவ்வாறு விரிவாகலாம்: formula_54 அதில் பன்மை வடிவங்கள் காட்டும் பருவங்கள் அவைகள் உயர்ந்த பட்ச நிலையில் formula_55 இரட்டிப்புகளாக இருக்கலாம். formula_56 அது வழங்கப்படும் 1% அதற்கும் மேல் தகுதி வாய்ந்திருக்கும். 30 வருட காலம் மற்றும் குறிப்பு வீதம் 4.5% என இருக்கும் ஒரு அடமானத்திற்கு நாம் இவ்வாறு கண்டறியலாம்: formula_57 formula_58 formula_59 அது formula_60 என்னும் தோராயத்தை ஜனவரி 2009 ஆம் ஆண்டில் ஒரு வழக்கமான அமெரிக்க அடமான வரையறையை சரியானது என அறிவுறுத்துகிறது. இந்தச் சூத்திரம் அதிக வீதங்கள் மற்றும் நீண்ட காலங்கள் எனில் குறைவானத் துல்லியமானதாக இருக்கும். $120,000 கடன்தொகைக்கான 30 வருட காலம் மற்றும் குறிப்பு வட்டி 4.5% ஆக இருக்கும் ஒன்று நாம் இவ்வாறு கண்டறியலாம்: formula_61 formula_62 ஆகையால் formula_63 துல்லியமான திருப்பிச் செலுத்தும் தொகை formula_64ஆகையால் ஏறத்தாழ என்பது ஒரு சதவீதம் என்பதன் ஆறில் ஒன்று விட மிகைமதிப்பீடாகும். ஒரு தோராயமான சூத்திரமான formula_45 தருவது formula_66 அது துல்லியமான விடைக்கு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்கும். தோராயமான formula_67 விலிருந்து குறைந்த மதிப்பீட்டை விளைவிக்கிறது. formula_68 விரிவாக்கத்தில் அடுத்த திருத்தத்தை வைத்துப் பார்க்கையில் அது formula_69 என்னும் ஒரு தோராயமான சூத்திரத்தை விளைவிக்கிறது இது ஒரு சென்ட்டில் பத்தில் இரு பாகங்களை குறைத்துவிடும். விவாதிக்கப்பட்ட எளிய சூத்திரமான formula_60 ஆரம்பகால 2009 களில் இருந்த வழக்கமான அமெரிக்க அடமானங்களுக்கான ஒரு சதவிகிதத்தைக் காட்டிலும் சிறப்பானதாகும். formula_71 என்னும் தோராயமானது அத்தகைய அடமானங்களுக்கு சுமார் 10% க்கும் குறைவாக மதிப்பிடப்படும். கூட்டு வட்டி ஒரு காலத்தில் மிக மோசமான தகாத வட்டிவகை எனக் கருதப்பட்டது மற்றும் ரோமானியர் சட்டத்தால் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது, மேலும் பல்வேறு பிற நாடுகளின் பொது சட்டங்களும் கூட அதேபோல் கண்டித்தது. ரிச்சர்ட் விட்டின் புத்தகமான "எண்ணியல் வினாக்கள்", 1613 ஆம் ஆண்டில் வெளியானது, கூட்டு வட்டி வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. அது முழுமையாக கூட்டு வட்டிக்கே அர்ப்பணிக்கப்பட்டது, (முன்னர் உறுப்பியல்ஆய்வு என்றே கருதப்படும்), எனினும் முன்பெல்லாம் எழுத்தாளர்கள் கூட்டு வட்டியை பற்றி சுருக்கமாக ஒரே ஒரு அத்தியாயத்தில் அதுவும் கணித இயல் பாடநூலில் குறிப்பிடுவர். விட்டின் புத்தகம் 10% பற்றிய அட்டவணைகள் கொண்டுள்ளது (அதுவே கடன்களில் அதிக அளவு தரப்படும் வட்டி விகிதமாகும்) மற்றும் வேறு நோக்கங்களுக்கான பிற வட்டி விகிதங்கள், அதாவது சொத்து குத்தகைகள் பற்றிய மதிப்பீடு பற்றியதாகும். விட் இலண்டன் கணிதஇயலின் பயிற்சியாளர் ஆவார் மற்றும் அவரது புத்தகம் அதன் தெளிவான கூற்றுகள், ஆழ்ந்த உள்நோக்கு மற்றும் கணக்கீட்டில் துல்லியம், அவைகளுடன் 124 விடைகாணப்பட்ட எடுத்துக்காட்டுகள் கொண்டு புகழ்பெற்றது. குரான் தெளிவாக குறிப்பிடுவது யாதெனில் கூட்டு வட்டி என்பது ஒரு பெரும் பாவம் ஆகும். தகாத வட்டிமுறை (கொடிய வட்டி), அரபிக் மொழியில் அது "ரிப" என்றழைக்கப்படும், அதுவும் ஒரு குற்றமாகவே கருதப்படும்: பைபிளின் ஒரு பகுதியில் அதிக வட்டியைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு (கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் டெஸ்ட் -ஜி எம் ஏ டி, உச்சரிக்கையில் ஜி-மேட்), என்பது வணிக பட்டப்படிப்புகளில் கல்விசார் வெற்றிபெறும் திறனை சோதித்தறிய கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் கணினிவழி தரநிர்ணய சோதனையாகும். பொதுவாக, எம் பி ஏ கல்வித்திட்டத்துக்கான நுழைவுத்தேர்வு நெறிமுறைகள் பலவற்றுள் ஒன்றாக வணிகக் கல்வி நிறுவனங்கள் இத்தேர்வைப் பயன்படுத்துகின்றன. உலகம் முழுவதும் பலதரப்பட்ட இடங்களில் இது கணினி வாயிலாக நடத்தப்படுகிறது. பரவலான கணினி வலையமைப்பு நிறுவப்படாத வெளிநாடுகளில், ஜி-மேட் தற்காலிகமாக கணினியை அடிப்படையாகக் கொண்ட தேர்வுமையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையிலும், உள்ளூர் தேர்வு மையங்களில் காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நடத்தப்படும் தேர்வாகவும் திகழ்கிறது. 2009 ஆகஸ்டு நிலவரப்படி இத்தேர்வுக்கான கட்டணம் உலகமெங்கும் 250 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[0] தேர்வுஎழுதுவோர் காலங்காலமாக தனது கல்வியிலும் வேலையிலும் பெற்றுள்ள சொல்வள, கணித மற்றும் பகுத்துணரும் எழுத்துத்திறன் போன்றவைகளை இத்தேர்வானது அளவிடுகிறது. தேர்வில் பங்குபெறுவோர் மூன்று சோதனை பகுதிகளில் கேள்விகளுக்கு விடையளிக்கின்றனர். இவர்களுக்கு இரு விருப்ப இடைவேளைகளும் அனுமதிக்கப்படுகின்றன; [1]பொதுவாக இத்தேர்வு நிறைவடைய நான்கு மணிநேரங்கள் தேவைப்படுகிறது. இம் மதிப்பெண்கள் (பெரும்பாலான கல்வி நிறுவனங்களில்) தேர்வுக்குட்படுவோர் தேர்வு எழுதும் நாளிலிருந்து பல்கலைக்கழக தேர்வு வரை (அதாவது, ஒப்புதல் வரை விண்ணப்ப தேதி வரை அல்ல )அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகின்றன. இத்தேர்வில் பெறக் கூடிய அதிகபட்ச மதிப்பெண் 800 ஆகும். அக்டோபர் 2009 உடன் முடிவடைந்த மூன்று வருடங்களில் சராசரி மதிப்பெண் 538.5 ஆக உள்ளது. பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (அனாலிடிகல் ரைட்டிங் அஸ்செஸ்மன்ட், AWA) பகுதியே முதலில் விடையளிக்கக் கூடியது. அளவறி பகுதியும் சொல்வள பகுதியும் அதைத் தொடர்ந்து வருகின்றன. இத்தேர்வின் பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (AWA) பகுதி இரு கட்டுரைகளைக் கொண்டது. முதல் கட்டுரையில் மாணவர்கள் ஒரு விவாதத்தை பகுத்துணரும் விதமாகவும், இரண்டாவதில் மாணவர் ஒரு பிரச்சினையை பகுத்துணரும் விதமாகவும் தேர்வு அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் முப்பது நிமிடங்களுக்குள் எழுதப்பட வேண்டியனவாகவும் 0-6 வரையிலான அளவையால் மதிப்பிடக் கூடியனவாகவும் இருக்கின்றன. இரு மதிப்பீட்டாளர்களால் திருத்தப்பட்டு 0-6 வரையிலான மதிப்பெண்கள் அளிக்கப்படும் இக்கட்டுரைகளுக்கு ஏற்ற நிலை மதிப்பெண் 0.5 புள்ளிகளாகவும், சராசரி மதிப்பெண் 4.1 புள்ளிகளாவும் உள்ளது. இருவர் அளிக்கும் மதிப்பெண்களின் வித்தியாசம் ஒரு புள்ளிக்குக் குறைவானதாக இருக்கும் பட்சத்தில், அவ்விரு மதிப்பெண்களின் சராசரி கண்டுபிடிக்கப்படுகிறது. மதிப்பெண்களுக்கிடையே ஒரு புள்ளிக்கும் அதிகமான வித்தியாசம் காணப்படின் அவ்விரு கட்டுரைகளும் மூன்றாவது மதிப்பீட்டாளர் ஒருவரால் திருத்தப்பட வேண்டும். முதல் மதிப்பீட்டாளர் வேன்டேஜ் லேர்னிங் எனும் நிறுவனத்தின் தனியுரிமைக் கணினி நிகழ்ச்சியான இன்டலிமெட்ரிக் ஆகும். இது ஆக்கப்பூர்வ எழுத்துத்திறன் மற்றும் 50-க்கும் அதிகமான மொழியியல் மற்றும் அமைப்புக் கூறுகளின் சொற்றொடர் இலக்கணத்தைப் பகுத்தாய்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பீட்டாளர்கள் மனிதர்கள் ஆவர். இவர்கள் தேர்வுக்குட்படுபவரின் சிந்தனைத் தரத்தையும், சாதகமான தருணத்தில் அவர்கள் தெரிவிக்கும் சீர்மிகு கருத்தின் வலிமையையும் மதிப்பிடுகின்றனர். எழுத்துமுறை ஆங்கில மரபின் மீதான புலமை மதிப்பிடுதலில் பெரும் பங்காற்றும் பொழுதும், ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் பெற்றிராத தேர்வுக்குட்படுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு மதிப்பீட்டாளர்கள் பயிற்றுவிக்கப்படுவதால், சிறிய பிழைகள் எதிர்பார்க்கபடும் ஒன்றாகவே இருக்கின்றன.[6] தேர்வின் பகுத்துணர்ந்து எழுதுதல் பகுதியின் இரண்டு கட்டுரைகளும் தலா 0 (குறைந்தபட்சம்) முதல் 6(அதிகபட்சம்) வரையுள்ள அளவைகளால் மதிப்பிடப்படுகின்றன: அளவறி பகுதியானது 75 நிமிடங்களுக்குள் விடையளிக்கப்பட வேண்டிய 37 பன்முகத் தெரிவு வினாக்களை உள்ளடக்கியது. இருவகை வினாக்கள் இதில் காணப்படுகின்றன: புதிர் விடுவித்தல் மற்றும் தரவு நிறைவு. அளவறி பகுதி 0 முதல் 60 புள்ளிகள் வரை மதிப்பிடப்படுகிறது. அக்டோபர் 2009 உடன் முடிவடைந்த மூன்று வருடங்களில் சராசரி மதிப்பெண் 35.8/60 ஆக உள்ளது; 50க்கு அதிகமாகவும் 7 க்குக் குறைவாகவும் மதிப்பெண்கள் பெறுவது அரிதானதாய் இருக்கிறது.[7] [8] புதிருக்கு தீர்வு== இத்தேர்வு காரணங்காணல் திறனளவை சோதித்தறிகிறது. புதிர் விடுவிப்பு அல்லது பிரச்னைக்கு தீர்வு வினாக்கள் கணிதம், அடிப்படை இயற்கணிதம் மற்றும் துவக்கநிலை வடிவவியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்முகத்தெரிவு புதிர்களை உள்ளடக்கியன. புதிர்களை விடுவித்து அளிக்கப்பட்டுள்ள ஐந்து விடைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியதே நிபந்தனையாகும். புதிர்களுள் சில சாதாரண கணித கணிப்புகளாகும்; ஏனையவை கணிதத் தீர்வுகளை நாடும் நிஜ வாழ்க்கை பேச்சுவழக்குப் புதிர்களாக அளிக்கப்படுகின்றன. இப்பகுதி வழக்கத்திற்கு மாறான வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி காரணங்காணல் திறனளவை சோதிக்கிறது. விடையளிக்க உதவும் தகவல்களை அளிக்கும் தொடர்புடைய விபரங்கள் இரண்டினை உள்ளடக்கிய வினாக்கள் தேர்வுக்குட்படுவோருக்கு வழங்கப்படுகிறது. வினாவிற்கு விடையளிப்பதற்கு இரண்டில் ஒரு விவரம் மட்டுமே போதுமானதாக உள்ளதா; மாறாக இரு விபரங்களுமே இன்றியமையாதவைகளா; அல்லது வினாவிற்கு விடையளிக்கும் வகையில் இவ்விவரங்கள் தரப்படவில்லையா என்பதைத் தேர்வுக்குட்படுவோர் நிர்ணயிக்க வேண்டும்; தரவு நிறைவு என்பது ஜி-மேட் தேர்வுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த கணித வினா வகையாகும். ஒவ்வொரு வகையும் வினாக்களின் தொடர்ச்சியாக இரு எண்களிடப்பட்ட விபரங்களை உள்ளடக்கியன. "இருக்கிற" என்ற வார்த்தையை "இருக்கவேண்டும்" என்ற வார்த்தையால் மாற்றியமைக்க வேண்டியதே இக்கேள்விகளின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கான எளிய வழியாகும் - தரப்பட்டுள்ள விடைகள் சாத்தியமானவைகளாக இருக்கின்றனவா என்பதை இவ்வினாக்கள் வினவவில்லை. மாறாக அவை விதிப்படி சரியான விடைகளையே தேர்ந்தெடுக்கக் கூறுகின்றன. சொல்வள பகுதியானது 75 நிமிட காலநேரத்துக்குள் விடையளிக்கப்பட வேண்டிய 41 பன்முகத் தெரிவு வினாக்களை உள்ளடக்கியது. இதில் மூன்று வித வினாக்கள் காணப்படுகின்றன: வாக்கியத்தை திருத்துதல், குறைகாண் காரணங்காணல் மற்றும் படித்துப் புரிதல். சொல்வள பகுதி 0 முதல் 60 புள்ளிகள் வரை மதிப்பிடப்படுகிறது. அக்டோபர் 2009 உடன் முடிவடையும் கடந்த 3 வருடங்களில் பெறப்பட்ட சராசரி மதிப்பெண் 28.0/60 ஆக இருக்கிறது; 44 க்கு மேலும் 9 க்குக் கீழும் மதிப்பெண்கள் பெறுவது அரிதானதாய் இருக்கிறது. வாக்கியம் திருத்துதல் பகுதி அமெரிக்க ஆங்கில இலக்கணம், பயன்பாடு மற்றும் நடையைப் பற்றிய தேர்வுக்குட்படுவோரின் ஞானத்தை சோதிக்கிறது. பகுதி அல்லது முழுவதும் அடிக்கோடிடப்பட்ட வாக்கியத்தின் கீழே பட்டியலிட்டுக் கொடுக்கப்படும் ஐந்து தொடர்புள்ள விடை தெரிவுகளை உள்ளடக்கியது இவ்வாக்கியம் திருத்துதலெனும் பகுதி. முதல் விடைத் தெரிவு வாக்கியத்தின் அடிக்கோடிடப்பட்ட பகுதியை அப்படியே ஒத்திருக்கிறது. மீதமுள்ள நான்கு விடைத் தெரிவுகள் அடிக்கோடிடப்பட்ட வாக்கியப் பகுதியை உணர்த்தும் பலவித சொற்றொடர்களை உள்ளடக்கியது. வாக்கியத்தின் சொற்றொடர் அமைத்தலில் வலு இல்லாதிருப்பின் முதல் விடைத் தெரிவையே தேர்ந்தெடுக்கும்படி தேர்வுக்குட்படுவோர் அறிவுறுத்தப்படுகின்றனர். மாறாக வாக்கியத்தின் அசல் சொற்றொடர் வழுவோடு அமைந்திருப்பின், மீதமுள்ள நான்கு தெரிவுகளில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும்படி தேர்வுக்குட்படுவோர் அறிவுறுத்தப்படுகின்றனர். வாக்கியத் திருத்த வினாக்கள் மூன்று துறைகளில் தேர்வுக்குட்படுவோரின் தேர்ச்சியை நிர்ணயிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது: சரியான நடை, பயனுள்ள நடை, மற்றும் சிறந்த சொல்தேர்வு."சரியான நடை " என்பது வாக்கியத்தின் இலக்கண நயத்தையும் சொல்லமைப்பையும் குறிக்கிறது. "பயனுள்ள நடை " என்பது தெளிவும் கருத்துச்செறிவும் நிறைந்த எண்ணங்களின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. "சிறந்த சொல்தேர்வு " என்பது அகராதி அர்த்தம் மற்றும் சொல் பிரயோகத்தின் தருணத்தோடு ஒப்பிடும்பொழுது உணரப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் பொருத்தத்தையும், துல்லியத்தையும் குறிக்கிறது.[13] இப்பகுதி தர்க்கரீதியான சிந்தனையை சோதிக்கும் வண்ணம் அமைக்கப்பெற்றுள்ளது. குறைகாண் ஆய்வு வினாக்கள், பகுப்பாய்வு செய்யப்படவேண்டிய வாதம் ஒன்றை தேர்வுக்குட்படுவோருக்கு அளிக்கின்றன. தேர்வுக்குட்படுவோர் முடிவை நிர்ணயிக்கவும், அனுமானங்களை அடையாளங்காணவும், வாதத்தின் பலம் மற்றும் பலவீனங்களை உணரும் விதத்தில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. சுருக்கமான அறிக்கைகளையோ வாதங்களையோ அளித்து அவ்வறிக்கை அல்லது வாதத்தின் அமைப்பையோ சாராம்சத்தையோ மதிப்பிடக் கோரும் வண்ணம் இப்பகுதி அமைந்துள்ளது. இவ்வகை வினாக்கள் சிறு பத்திகள் அல்லது வாசகங்கள் மூலம் காரணங்காணலை பகுப்பாய்ந்து மதிப்பிடுமாறு தேர்வுக்குட்படுவோரை பணிக்கின்றன. சில வினாக்களுக்கு அனைத்து விடைத் தெரிவுகளுமே கேட்கப்பட்ட வினாவின் விடையாய் இருக்கத்தக்கவை. தேர்வுக்குட்படுவோர் வினாவுக்கான சிறந்த விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்விடை சாத்தியமில்லாததாகவோ, தேவையை மிஞ்சியதாகவோ, பொருத்தமற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருந்து இயல்பறிவு மதிப்பீடுகளை அவமதிக்கும்படியான அனுமானங்களுக்கு வழிவகுக்காத ஒன்றாக இருத்தல் அவசியம். இப்பகுதி குறைகாண் அணுகுதல் திறமையை சோதிக்கிறது. படித்துப் புரிதல் பகுதி தேர்வுக்குட்படுவோருக்கு வாசிப்பதற்காக கொடுக்கப்பட்ட பத்தியைக் குறிக்கிறது. இப்பத்தி எதைப்பற்றி வேண்டுமானாலும் இருப்பதோடு அதன் வினாக்கள் தேர்வுக்குட்படுவோர் எவ்வளவு நன்றாக அப்பத்தியையும், அது கொடுக்கும் தகவலையும் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சோதிக்கிறது. பெயருக்கேற்றவகையில், அது எழுதுமொழி பகுதியொன்றின் பொருள் மற்றும் தர்க்கரீதியான சொல்லமைப்பின் மீதான தேர்வுக்குட்படுவோரின் புரிதலை நிர்ணயிக்கிறது. ஜி மேட் சமூகவியல்கள், உயிரியல், இயற்பியல் மற்றும் வர்த்தகம் ஆகிய தலைப்புகளைச் சார்ந்த 200 முதல் 300 வார்த்தைகளைக் கொண்ட வாசிப்புப் பத்திகளைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு தலைப்பும் அதன் சாராம்சத்தைப் பொறுத்தவாறு இரண்டு அல்லது மூன்று வினாக்களை உள்ளடக்கியுள்ளது. வினாக்கள் பத்தியின் முக்கிய கருத்தைப் பற்றியும், அதை எழுதியவரின் எண்ண ஓட்டம், பத்தி தெரிவிக்கும் தர்க்கரீதியான கருத்து மற்றும் எழுத்தாளரின் கருத்து அல்லது தொனியைப் பொறுத்தும் எழுப்பப்படுகின்றன. பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு (ஏ டபிள்யு ஏ) நீங்கலாக அளவறி பகுதியையும் சொல்வள பகுதியையும் உள்ளடக்கிய "மொத்த மதிப்பெண்" 200 முதல் 800 வரை மாறுபடுகிறது. தேர்வுக்குட்படுவோரில் மூன்றில் இரு பங்கினர் 400 முதல் 600 வரையுள்ள மதிப்பெண்களைப் பெறுகின்றனர். மதிப்பெண் பரவல் மணி வளைகோடு-ஐ ஒத்திருக்கிறது. இதன் திட்ட விலக்கம் தோராயமாக 100 புள்ளிகளில் அமைந்திருக்கிறது. அதாவது 68% தேர்வு எழுதுபவர்கள் 400 முதல் 600 மதிப்பெண்கள் பெறும்படிக்கும், இடைநிலை மதிப்பெண் 500க்கு அருகில் அமையும் வண்ணமும் ஆரம்பத்தில் இத்தேர்வு வடிவமைக்கப்பட்டது. 2005/2006 வருடத்தின் சராசரி மதிப்பெண் 533 ஆகும். அளவறி மற்றும் சொல்வள பகுதிகள் கணினி வழி சோதனையை உள்ளடக்கியது. முதல் கேள்வி கடினமான ஒன்றாக இருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் அடுத்துவரும் சில வினாக்கள் 500-ன் மட்டத்தில் அமைந்திருக்கின்றன. தேர்வுஎழுதுவோர் சரியாக விடையளிக்கும் பட்சத்தில் அடுத்து வரும் கேள்விகள் கடினமானதாக அமையும். தேர்வுஎழுதுவோர் தவறாக விடையளிக்கும் பட்சத்தில் அடுத்து வரும் கேள்விகள் இலகுவாக அமையும். வினாக்கள் மாணவரின் மதிப்பெண்ணைப் பொறுத்து மிகப்பெரிய வினா வங்கி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் வினாக்களைப் விதிகளுக்கப்பாற்பட்டு பதிவு செய்வதை தடுக்க இவ்வினாக்கள் முறையாக நிகழ்நிலைப் படுத்தப்படுகின்றன. இறுதி மதிப்பெண் தேர்வுக்குட்படுவோரால் விடையளிக்கப்பட்ட இறுதி வினாவைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை-(அதாவது, கணினிவழி கேள்விகள் எட்டுகின்ற கடினத்தைப் பொறுத்தவரை). மதிப்பெண் கணித்தலுக்குப் பயன்படுத்தப்படும் நெறிமுறை அதைவிட சிக்கலானதாக இருக்கிறது. தேர்வுஎழுதுவோர் சிறுபிள்ளைத்தனமான பிழை ஒன்றினை செய்துவிடும் பட்சத்தில் கணினியானது அதனை ஒரு நெறி பிறழ்வாக உணர்கிறது. தேர்வுக்குட்படுவோர் முதல் வினாவை விட்டுவிட்டாரென்றாலும் அவரது மதிப்பெண் வீச்சு அடிமட்டபாதிக்குக் கீழே விழவேண்டுமென்பது அவசியமற்றது. மேலும் காலியாக விடப்பட்ட வினாக்கள் (அதாவது எழுதப்படாது விடப்பட்டவை) தவறாக விடையளிக்கப்பட்டவைகளை விட தேர்வுக்குட்படுவோரை அதிகம் பாதிக்கும். இது தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண்ணளிக்கும் எஸ் ஏ ட்டி தேர்விலிருந்து முரண்பட்டதாகும். ஒவ்வொரு சோதனைப் பகுதியும் தேர்வுக்குட்படுவோரை மதிப்பிடுவதற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இவற்றின் பிரயோகம் பொருத்தமாக இருக்குமா என்பதை அனுமானிப்பதற்கு ஏதுவாகவும் பல சோதனை வினாக்களைக் கொண்டுள்ளது. சொல்வள மற்றும் அளவறி பகுதி மதிப்பெண்கள் 0 முதல் 60 வரை மாறுபடுகின்றன. பகுத்துணர்ந்து எழுதுதலின் மதிப்பீடு மதிப்பெண்கள் 0 முதல் 6 வரை வேறுபட்டு இரு ஜி மேட் கட்டுரைகளின் சராசரி மதிப்பெண்களை காட்டுகின்றன. சொல்வளம் மற்றும் அளவறி பகுதிகளிலிருந்து வேறுபடும் விதமாக கட்டுரைகள் மதிப்பிடப்படுவதோடு, அவற்றின் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து மதிப்பெண்கள் மற்றும் புறக்கணிப்புகள் தேர்வுக்குட்படுவோரின் மதிப்பெண் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றன. இது முந்தைய கொள்கையான கடந்த மூன்றாண்டுகால மதிப்பெண்கள் மற்றும் புறக்கணிப்புகளை மதிப்பெண் அறிக்கையில் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டுள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஏற்கத்தக்க மதிப்பெண் விபரத்தையோ அல்லது விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களைப் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களையோ வெளியிடுவதில்லை. இருப்பினும் சில கல்வி நிறுவனங்கள் தங்களது கடந்த மாணவர் சேர்க்கையின் சராசரி மற்றும் இடைநிலை மதிப்பெண்களை மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழும் வகையில் வெளியிடுவதுண்டு. சிறப்பு வாய்ந்த வணிகக் கல்வி நிறுவனங்கள் அனைத்தின் சராசரி மதிப்பெண்ணும், பிரபல சஞ்சிகைகளிலும், தரவரிசை சேவைகளிலும் பட்டியலிடப்படுவது போல 600 களின் அதிக மதிப்புகளாகவோ 700 களின் குறைந்த மதிப்புகளாகவோ காணப்படுகின்றது. குறைந்த தேர்வு மதிப்பெண்ணை சரிகட்டுவதற்கு உத்வேகமளிக்கும் நிஜ வாழ்க்கை சாதனைகள், தலைசிறந்த மேற்கோள்கள் அல்லது தொடர்புகள், குறிப்பிடத்தக்க வலிமையான கருத்தை உடைய கட்டுரைகள், அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்திருத்தல் ஆகியன உதவுகின்றன. வணிகக் கல்வி நிறுவனங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க வசதியாக ஒரு தரநிர்ணயம் செய்யப்பட்ட தேர்வை உருவாக்கும் குறிக்கோளோடு ஒன்பது வணிகக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட குழுமமாக 1953-ல் அவதரித்தது, இன்று மேலாண்மைப் பட்ட நுழைவு மன்றம் என்றழைக்கப்படும் கிராஜுவேட் மேனேஜ்மன்ட் அட்மிஷன் கவுன்சில்(ஜிஎம்ஏசி). ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்தில், இம்மதிப்பீட்டுத் தேர்வு (தற்பொழுது மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு என்றழைக்கப்படுவது), 2000-த்துக்கும் சற்று அதிகமானவர்களாலேயே பங்கேற்கப்பட்டது; தற்பொழுதோ வருடந்தோறும் 2000,000 க்கும் அதிகமானவர்களால் எழுதப்படுகிறது. ஆரம்பத்தில் 54 பள்ளிகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்ட இத்தேர்வு தற்பொழுது 1,500 கல்வி நிறுவனங்களாலும் உலகமெங்கும் 1,800 நிகழ்ச்சிகளாலும் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. 2005-க்குப் பின் , ஜிஎம்ஏசி இத்தேர்வை நிர்வகித்து வருகிறது. 2006 ஜனவரி 1 ல், இத்தேர்வின் வினாக்கள் தயாரிப்பு மற்றும் கேட் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றை ஏ சி டி இன்க் என்ற நிறுவனத்துக்கும், உலகமெங்கும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணியை பியர்ஸன் வியு என்ற நிறுவனத்துக்கும் அளித்து வியாபார நிலையை மாற்றியிருக்கிறது ஜிஎம்ஏசி. ஸ்கோர்டாப்.காம் என்ற இணையதளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து எதிர்காலத்தில் எம் பி ஏ மாணவராகும் வாய்ப்புள்ள சுமார் 6000 பேரை உள்ளடக்கிய ஒரு மோசடி சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக 2008 ஜூன் 23-ல், ஜி எம் ஏ சி-யால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜி-மேட் நடப்பு தேர்வு வினாக்களின் நேரடி ஒளிபரப்பை பார்த்துவிட்டதாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. அவ்வுறுப்பினர்களின் மதிப்பெண்களை செல்லாததாக்குதல், அவர்களது மதிப்பெண்களை ஏற்றுக்கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துதல் மற்றும் வருங்கால தேர்வுகளில் அவர்கள் பங்கேற்பதைத் தடுத்தல் என பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை ஜி எம் ஏ சி அவர்கள் மீது திணித்துள்ளது. ஸ்கோர்டாப் இணையதளத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு ஏமாற்றியவர்கள் மட்டுமே பாதிப்பிற்காளாவர், என்று ஜூன் 27 -ல் ஜி எம் ஏ சி விண்ணப்பதாரர்களுக்கு தைரியமூட்டியது. மோசடியை முன்னிட்டு தேர்வு எழுதியவர்கள் 84 பேரின் மதிப்பெண்கள் செல்லாதவையாக்கப்பட்டதாக "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் " என்ற பத்திரிக்கை பின்னர் அறிவித்தது. மேலும் தேர்வு எழுதுவோர் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தைக் கொடுத்து தங்களுக்குப் பதிலாக வேறு நபரை தேர்வு எழுதச் சொல்லும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஜி எம் ஏ சி இவ்வருடத்திலிருந்து ஃபியுஜிட்சு "பாம் செக்யூர்" (கை நாள அலகீடு நுட்பம்) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உள்ளங்கைஅகல அலகீடு உபகரணங்களை முதலில் கொரியா மற்றும் இந்தியாவில் உள்ள தேர்வுமையங்களும், அதைத் தொடர்ந்து 2008-ன் இலையுதிர் காலத்திலிருந்து அமெரிக்காவும் பெற இருக்கின்றன. 2009 மே மாதத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களிலும் அவற்றை ஒருங்கிணைப்பு செய்ய ஜி எம் ஏ சி திட்டமிட்டுள்ளது. 2013 ல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அடுத்த தலைமுறை ஜி மேட்டுக்கான திட்டங்களை ஜி எம் ஏ சி அறிவித்துள்ளது. பன்னாட்டளவில் காணப்படும் வேற்றுமைகள் உறுதியாகக் கருத்தில் கொள்ளப்படும். தேர்வு எழுதுவோர் உடன்நிகழ் செயலாக்கம் வாயிலாகவோ அல்லது தேர்வு மையங்களுள் ஒன்றை அணுகியோ ஜி-மேட் தேர்வுக்குப் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வினை திட்டமிட ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையத்தில் முன்பதிவு செய்திருத்தல் அவசியம். ஜி-மேட்டின் மூன்றாம் நபர் தேர்வு தயாரிப்பு உபகரணங்களாக ஜி-மேட் நூல்கள் வாயிலாக சுயமாகக் கற்றல், ஜி-மேட் தயாரிப்புப் பயிற்சி வகுப்புகள் (நேரடி அல்லது உடன் நிகழ்), மற்றும் தனிமுறை பயிற்சி உள்ளிட்டவைகள் நடைமுறையில் உள்ளன. டாக்ட் டாக்ட்.காம் (Tagged.com) என்பது 2004 ஆம் ஆண்டில் நிறுவிய ஒரு சமூக வலையமைப்பு தளமாகும். "டாக்ட்" என்பது ஏமாற்றும் நோக்குடன் மொத்தமாக அஞ்சல்கள் அனுப்பக்கூடிய தளமாகவும்,ஃபிசிங் மற்றும் எரிதங்கள் அடங்கிய தளமாகவும் மற்றும் ஓர் "மின்-மடல் மோசடி" புரியும் வலைத்தளமாகவும் இருப்பது குறித்து அதனால் துன்புற்ற பல நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களை உடைய தளமாக இருக்கிறது, என நுகர்வோர் மோசடி எதிர்ப்பு வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள். இதன் தலைநகரம் அமெரிக்கா வில் உள்ள, கலிபோர்னியா மாநிலத்தின், சான் பிரான்சிஸ்கோ நகரமாகும். டாக்ட் இன்க். என்ற அமைப்பினை 2004 ஆம் ஆண்டின் மத்தியில் கிரேக் த்செங் என்பவரும் அவர் தோழர் ஜோஹன் ச்லேயியர்-ஸ்மித் என்பவரும் இணைந்து நிறுவினர். அவர்கள் ஒரு "பதின்ம யாகூ (Yahoo) அல்லது அடுத்த நிலை எம் டிவி" போன்ற வலையமைப்பை உருவாக்க வேண்டும் என கனவு கண்டனர். இந்தத் தொழில்முனைவோர் ஜோடி அதற்கு முன்னராக அவிவோன், இன்க்., என்ற பாடபுத்தகங்களை ஒப்பிடும் நிறுவனத்தை இணையாக நிறுவியிருந்தனர். இதற்கு முன்னால் த்செங் ஜம்ப்ஸ்டார்ட் டெக்னாலஜிஸ், என்ற அடைகாப்புக்கருவி பிணையதளத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக, அதன் கூட்டு நிறுவனராக இருந்தார், பிறகு கேன்-ஸ்பாம் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான எரிதம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் அதற்காக $900,000 அபராதம் விதிக்கப்பெற்றார், அந்நாட்களில் அதுவே சட்ட விரோதமான எரிதம் புரிவதற்கான மிகவும் அதிகமான அபராதத்தொகை ஆகும். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து த்செங் வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் A.B.பட்டம் பெற்றவராவார். ச்லேயியர்-ஸ்மித் என்பவரும் கூட இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து A.B. பட்டம் பெற்றவராவார். முதலில் அமெரிக்க பதின்ம வயதினரை குறிவைத்து, உலக அளவில் 13 வயதும் அதற்கும் மேற்பட்ட இளம் வயதினருக்காக அக்டோபர் 2006 ஆம் ஆண்டில் டாக்ட் (Tagged) அமைப்பு செயல்படுகிறது மேலும் இன்றும் அந்நிறுவனம் 18 வயதுக்கும் கீழ் உள்ள பயனர்களுக்கு மிகவும் கடினமான பாதுகாப்பை அளித்து வருகிறது. 16 வயதுக்கும் மேற்பட்ட பயனர்களும், பொது மக்களும் 13 மற்றும் 14 வயதுக்குட்பட்ட பயனாளிகளின் வலைப்பதிவு விவரங்களை பார்க்க இயலாது. அதே போல் 15-16 வயதுக்குட்பவர்களின் வலைப்பதிவு விவரங்களும் தனியாருக்கு உரிமையானதாக பாதுகாக்கப்படுகிறது, அவற்றை பொது மக்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பார்க்க இயலாது. பதின்ம வயதினரை நண்பர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டுவோருக்கு இருக்கும் ஒரே வழி அவர்கள் மின் அஞ்சல் விலாசத்தை அல்லது பட்டப்பெயரை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்வதாகும். அவர்கள் விடுத்த வேண்டுகோளை, இளம் பயனர்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களுடைய விருப்பமாகும். இருப்பினும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகள், முழுமையாக வெற்றியடையவில்லை. பிப்ரவரி, 2009 ஆம் ஆண்டில், ஒரு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், அவர் tagged.com. என்ற வலைத்தளத்தில் சந்தித்த ஒரு 14 வயது சிறுமியுடன் உடல் உறவு கொண்டதற்காக கைதானார். 32 வயதான அவர் 100 க்கும் மேற்பட்ட 17 ஆண்டுகளுக்கும் குறைவான வயது கொண்ட பெண்களை தோழிகளாக கொண்டிருந்தார். மார்ச் 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக வலையமைப்பு தளங்களான டாக்ட், பேஸ்புக், லிங்க்ட்இன், பெபொ, ஹி5 ஆகிய தளங்களுடன் வணிக ரீதியில் மின் அஞ்சல் இணைப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுக சேவைகளுக்காக (APIs) கூட்டுத்தொழில் புரிவதற்கு முன்வந்தது மேலும் அது இப்பொழுதும் செயல்பாட்டில் உள்ளது. இதர கூட்டாண்மைகளில் ஸ்லைட், ராக்யு, போட்டோபக்கெட், மீபோ, ராஸ்ஸி (Razz) மற்றும் ஜன்க்ல் (Jangl) போன்றவை அடங்கும். தற்போது "டாக்ட்" வலையமைப்பில் 40 ஊழியர்கள் பணியில் உள்ளனர் டாக்ட் (Tagged) வலையமைப்பு சோசியல் மீடியா அட்வெர்டைசிங் கண்சொர்டியம் என்ற அமைப்பின் உறுப்பினராகும், இந்த அமைப்பு வணிகம் மற்றும் தொழில் முறைகளுக்கு இடையேயான ஒரு சங்கமாகும். இச்சங்கம் தங்களுடைய ஒப்பந்தங்கள் மற்றும் தரமுறைகளை குவிமையம் கொண்டு, அதனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சியாகும். செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில், ஹிட்வைஸ் என்ற அமைப்பு அளித்த அறிக்கையின் படி அமெரிக்காவில், மாதம் தோறும் வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் சந்தை பகுப்பின் அடிப்படையில், தரவரிசையில் Tagged.com 3ஆவது மிகப்பெரிய சமூக வலையமைப்பு தளமாக இருந்தது. சோசியல் நெட்வொர்கிங் வாச் என்ற அமைப்பின் படி, மாதம் தோறும் வருகை தந்த சிறப்பு பார்வையாளர்களின் அடிப்படையில், ஹிட்வைஸ் அமைப்பு, சமூக வலையமைப்பு தளங்களில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், Tagged.com 4 ஆவது இடத்தை பிடித்ததாகவும், மற்றும் ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டில் கோம்ச்கோர் என்ற அமைப்பின் படி அத்தளம் முதல் பத்து வலையமைப்பு தளங்களின் கீழ் வந்ததாகவும் கூறியுள்ளது. ஒரு இலவச கணக்கை துவங்குவதற்கு முன்னர் கையொப்பமிட்ட பிறகு, "டாக்ட்" பயனர்கள் அவர்களுடைய சுயவிவரப்பக்கத்தை விருப்பமைவு செய்துகொள்ளலாம், அதில் பயனர்கள் அவர்களுடைய படங்கள் மற்றும் ஆல்பங்களை பதிவேற்றலாம், இதர பயனர்களிடமிருந்து செய்திகளை (மடல்களை) பெறவோ அல்லது அனுப்பவோ செய்யலாம், அவர்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களுக்கு பிடித்த செயல்பாடுகளைப்பற்றி தெரிவிக்கலாம், ஒவ்வொருவருக்கும் மாயமான கண் சிமிட்டுதல்களை அனுப்பலாம், மேலும் அவர்களுடைய நிகழ் நிலை செயல்பாடுகளைப் பற்றி புதுப்பித்துக்கொண்டே இருக்கலாம், அப்படி அவர்களுடைய நண்பர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் மற்றும் செயல்பாடுகளைப்பற்றி தொடர்ந்து தெரிவித்துக்கொண்டே போகலாம். பயனர்கள் தமது சுயவிவரப்பக்கத்தை வேறு யார் யார் பயனர்கள் அண்மையில் பார்த்தார்கள், மற்றும் மாயமான இணைப்புப் புரிகளை அவர்களுடைய நண்பர்களுக்கு அனுப்புவது, மேலும் மிகவும் அதிகமாக பார்த்த வீடியோ படக்காட்சிகளை அனுப்புவது, மிகவும் அதிகமான தரவரிசை கொண்டது மற்றும் மிகவும் அதிகமாக விரும்பிய படங்கள் போன்ற வெவ்வேறு அடிப்படைகளில் அலசிப்பார்க்கலாம். பயனர்கள் தமது நண்பர்களுக்கு மாயமான பரிசுகளை வழங்கலாம். பரிசுகளாக "தங்கம்" வாங்கி அளிக்கலாம், பயனர்கள் தங்கத்தை உண்மையான பணத்தைக்கொண்டும் வாங்கலாம் (இத்தளம் பேபால், கேஷ், அமேசன் போன்ற அமைப்புகள் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கட்டணங்களை செலுத்த அனுமதிக்கிறது) அல்லது சில சிறப்பான சேவைகள் அல்லது பணிகளை முடித்துக்கொடுப்பதன் மூலமும் வாங்கலாம். பல காட்சி சார் அரட்டை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது அவற்றில் நிகழ் நேரத்தில் நேரடியாகவே பயனர்களின் வயது மற்றும் மன நிலைக்குத் தகுந்தார்ப்போல் வெவ்வேறு அறைகளை பயன்படுத்திக்கொண்டு ஆன்லைனில் (இணைப்பில்) பேசலாம். உறவுகள் மற்றும் டேடிங் போன்ற பழக்கங்களை வலுப்படுத்தும் நோக்குடன், டாக்ட் (Tagged) வலையமைப்பு பயனர்களை "லவ்", "கண் சிமிட்டுதல்", "என்னை சந்திக்கவும்" போன்ற மடல்களை அனுப்பவும் பெறவும் அனுமதி வழங்குகிறது மேலும் ஒரு தரவரிசைப்படுத்தும் கருவி மூலமாக தன்னிச்சையாக பயனர்கள் வழங்கிய படங்களை அவர்களுடைய கவர்ச்சியைப்பொறுத்து வரிசைப்படுத்தி வழங்கி வருகிறது. இந்த வலையமைப்பில் ஜ்ய்ங்க (Zynga) போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடலாம், எடுத்துக் காட்டாக "போகர்", "பெட்ஸ்" போன்ற வகைகள், மேலும் அவற்றில் கலந்துகொண்டு உண்மையாகவே மாய உலகில் மனிதர்களை வளர்ப்பு விலங்குகளாக பணத்தைக் கொண்டு வாங்கலாம், மற்றும் "மாபியா வார்http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D&action=editஸ்" போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். அக்டோபர் 30, 2009, அன்று டாக்ட் அமைப்பு மேலும் புதிதாக எளிதான முறை கொண்ட அனுமதி வழங்கும் செயல்பாடுகளை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். டைம் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று "டாக்ட்" வலையமைப்பை "உலகத்தின் மிகவும் எரிச்சலூட்டும் வலைத்தளம்" என்று நச்சரித்தது. "டாக்ட்" அமைப்பு அதன் பயனர்களிடம் அவர்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்டு வாங்குகிறது, அவர்களுடைய மின் அஞ்சல் முகவரி பதிவேட்டை அனுமதி இல்லாமல் திறந்து தொடர்பு கொள்வதற்கான நபர்களின் பெயர்களை அறிந்து கொள்வதும் மேலும் சிலர் அந்த வலைத்தளத்திற்கு வராதவர்களாக இருந்தும் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தலும், அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டு சேர்த்திருப்பதாக கூறுவது அல்லது அவர்களுக்கு அழைப்பவர்கள் சிலர் "டாக்ட்" மூலமாக படங்களை அனுப்பியிருப்பதாக கூறும் மின் அஞ்சல்கள் போன்ற செயல்பாடுகள் காரணமாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இவ்வாறான செயல்முறைகள் தொழில் நுட்ப செய்தி ஊடகங்களில் மற்றும் இதர பயனர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுபோன்ற மின் அஞ்சல்கள் யாவும் எரிதம் வகையாகும் என ப்ளாக் வெப் 2.0. என்ற நிறுவனம் கலந்துரையாடியுள்ளது. இது அடிக்கடி ஒரு நச்சுயிரியின் சாயலைப்போல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அவற்றில் நகரங்களில் புகழ்பெற்ற இணையதளம் ஆன Snopes.com என்ற தளமும் அடங்கும். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த வழக்கத்தை "காண்டாக்ட் ச்க்ராபிங் (தொடர்பு செதுக்கல்)" என சுட்டுகிறது. ஜூலை 2009 ஆம் ஆண்டில், நியூயார்க் அட்டார்னி ஜெனரல் (அரசு முதன்மை ஆதரவுரைஞர்) ஆன ஆன்றியூ குமோ "ஏமாற்றும் நோக்கத்துடன் கூடிய மின் அஞ்சல் சந்தைப்படுத்தும் முறையைப் பயன்படுத்தியதற்கும் மேலும் அவருடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையில் குறுக்கிட்டதையும் கண்டித்து" Tagged.com வலைத்தளத்திற்கு எதிராக வழக்கு போடப்போவதாக தெரிவித்தார். செய்தித்தாள்களில் வெளிவந்த படி, Tagged.com வலைத்தளம் "ஏமாற்றும் நோக்கத்துடன் மின் அஞ்சல் மூலமாக பொருட்களின் விற்பனைகளை ஊக்குவித்து வருவதாகவும், அடையாளங்களை திருடுவதாகவும் மற்றும் ஒரு தனி நபரின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதாகவும்" செயல்பட்டு வருகிறது. Tagged.com வலைத்தளம் மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் (அரசு முதன்மை ஆதரவுரைஞர்) இவர்களுக்கிடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. மேலும் அதன் மூலம் Tagged.com வலைத்தள அமைப்பு $500,000 அபராதம் கட்டவும் மேலும் அதன் பொருட்களை விற்பனைக்காக ஊக்குவிக்கும் வழக்கங்களை மாற்றியமைக்கவும் முன்வந்தது. அதே நேரத்தில், டெக்சாஸ் மாநிலம் கட்டாயப்படுத்திய சில செயல்பாட்டுக்களை "டாக்ட்.காம்" வலைத்தளம் நிறைவேற்றி அடிபணிந்தது. ஒப்பந்தப்படி, "டாக்ட்.காம்" வலைத்தளம் அபராதம் மற்றும் இதர கட்டணமாக $250,000 களை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் படி அவர்கள் பயனர்களிடம் இருந்து பெற்ற மின் அஞ்சல் முகவரி பதிவேட்டில் இருந்து பெற்ற தகவல்களை வெளியிடும் போது, அவற்றை "தெளிவானதாகவும் வெளிப்படையானதாகவும்" வைத்துக்கொள்ள வேண்டும், மற்றும் தெளிவாக அந்த படிநிலையை தவிர்க்கும் முறையை வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் அனுப்ப இருக்கும் குறிப்பிடும் படியான மின் அஞ்சல் செய்திகளை ஒளிவு மறைவில்லாமல் பயனர்களுக்கு காட்ட வேண்டும் என்ற நிபந்தனைகள் அடங்கும். பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் இருந்து, கட்டார் நாட்டின் கடல் (Qtel) என்ற ஒரே ISP அமைப்பு, மக்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்தமையால், Tagged.com என்ற வலைத்தளத்தை தடை செய்தது. இந்த "டாக்ட்.காம்" வலைத்தளம் கட்டார் நாட்டில் பார்வையாளர்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்திய பத்து வலைத்தளங்களில் ஒன்றாக இருந்து வந்தது. பதின்ம வயதினருக்காக மட்டுமே என்று தொடங்கிய இந்த தளத்தில், அமெரிக்காவில் மிகவும் அதிகமான "டாக்ட்" உறுப்பினர்கள் 35-49 வயதை சார்ந்தவர்களாக காணப்படுகிறார்கள். தற்போது அமெரிக்காவில் அதன் மொத்த உறுப்பினர்களில் 8% மட்டுமே பதின்ம வயதினராக காணப்படுகிறார்கள். கோன்த்காஸ்ட் என்ற அமைப்பின் பார்வையாளர்கள் போக்குவரத்து குறித்த கருத்துப்படி, டாக்ட் வலைத்தளமானது மாதம் தோறும் 7.6 மில்லியன் அமெரிக்க பயனர்களும் மற்றும் உலக அளவில் 26 மில்லியன் பயனர்களும் பார்வை இடக்கூடிய அளவில் அமைந்துள்ளது என குறிப்பிடுகிறது.