வெசுட்டர்ன் படிவு ]] வெசுட்டர்ன் படிவு (Western blot) என்னும் செய்நுட்பம் மூலக்கூற்று உயிரியலில், குறிப்பிட்ட ஒரு புரத வெளிப்படும் அளவை அல்லது நாம் வெளிபடுத்த விரும்பும் புரதம் சரியான புரதமா? இல்லையா? என கண்டுபிடிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். பொதுவாக இம்முறையைப் பாவித்து நோய்களைக் கண்டறியலாம் (எ.கா.HIV). இவ்விடத்தில் "பிளாட்" என்பது புரதங்களை சவ்வுப்படலத்தில் பெயர்த்து இடுதலைக் குறிக்கின்றது. புரதங்களைச் சவ்வினுள் இடம் பெயர்வு நிகழ்வுக்கு நைட்ரோ செல்லுலோசு அல்லது பி.வி.டி.எப். (Nitrocellulose or PVDF) என்னும் சவ்வுகள் பயன்படுகின்றன. புரதப் படிவுக்கு பின்வரும் நிலைகள் இன்றியமையாதவை. ௧. புரதப் பிரித்தெடுத்தல். ௨. சவ்விற்குள் இடம்பெயர்த்தல் ௩. தடுத்தல் ௪. முதனிலை எதிருடல் ௫.இரண்டாம் நிலை எதிருடல் ௬. அறிதல் அல்லது காணுதல். புரதம் பகுத்தெடுத்தல் புரதக் கூழ்ம மின்புல புரைநகர்ச்சி புரத குறியீட்டு சாயம் (Sample buffer) திரிசு- எச்.சி. இல்.( Tris-HCL)- 62.5mM எசு.டி.எசு (SDS)- 2% கிளிசரால் (Glycerol)- 10% டி.ரி.ரி (DTT)- 50mM புரோமொபினால் புளு (Bromophenol blue) அல்லது பினால் ரெட் (Phenol Red)= 0.01% பெயர்வு இடைமம் (Transfer Buffer) pH-8.5 திரிசு பேசு (Tris base)- 25mM கிலைசின் (Glycine) 0.2M மெத்தனால்- 20% திரிசு பேசு- 24.2g உப்பு - 80g 1 litter (pH: 7.6) பாவிக்கும் போது 1X ஆக மாற்றப்பட வேண்டும் கொழுப்பற்ற உலர்ந்த பால்(Nonfat Dry Milk) அல்லது போவைன் சீரம் அல்புமின் (Bovine Serum Albumin) தடுக்கும் இடைமம் (Blocking Buffer) 1X TBS. 0.1% Tween மற்றும் 5%- கொழுப்பற்ற உலர்ந்த பால் or போவைன் சீரம் அல்புமின் அலசும் இடைமம் (Washing Buffer) 1X TBS. 0.1% Tween வெசுட்டர்ன் படிவு காணும்பொருட்கள் (Western Blot Detection System) இரண்டாவது எதிர்- எதிருடல் மற்றும் இதனுடன் இணைக்கப்பட்ட Horesradish peroxidase (HRP)(secondary anti-rabbit antibody conjugated with HRP)(முதனிலை எதிருடல் எவ்வகை உயிரினத்தில் பெறப்பட்டதை பொருத்து இரண்டாம் நிலை எதிருடல் அமையும். சில வேளைகளில் முயல், கழுதை, குதிரை அல்லது எலி போன்றவற்றில் இருந்து உண்டாக்க்கப்பட்ட இரண்டாம் நிலை எதிருடல் பாவிக்கப்படும்). எதிர்-பயாட்டின் எதிருடல் மற்றும் இதனுடன் இணைக்கப்பட்ட Horesradish peroxidase (HRP)- (anti-biotin antibody conjugated to HRP) மிளிரும் வேதிபொருள்கள் மற்றும் பெரோசிடு - LumiGLO chemiluminescent reagent and peroxide முன் சாயமிட்ட புரத அளவிகள் (prestained protein marker) சவ்வு: நைட்ரோ செல்லுலோசு அல்லது பி.வி.டி.எப். (Nitrocellulose or PVDF) 1. 5 mM Tris-HCl, pH 7.4 - pH பராமரிக்க 2. 2mM EDTA - மின்மமேறிகளை இழுக்கும் முகவராக (chelating agent) . ஏனெனின் அனைந்து நொதிகளும் மின்மமேறிகளை (எ.கா. MgCl2 ) ஒரு உதவி பொருளாக தனது செயலுக்கு பயன்படுத்துகிறது. அவைகளை EDTA தனது கட்டுபாட்டில் இழுப்பதால் நொதிகளின் செயல்கள் கட்டுப்படுத்தபடுகிறது. 3. 10 µl Protease Inhibitor Cocktail (1000 x stock) - புரத அழிவை தடுக்க 4. 10 mg/ml benzamidine 5. 5 mg/ml leupeptin 6. 5 mg/ml trypsin inhibitor - புரத அழிவை தடுக்க புரத பகுத்தலுக்கு உட்படுத்தப்படும் திசுவை இவ் இடைமத்தை கொண்டு நன்றாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து உயிரணுக்களாக பிரிக்கப்பட்ட திசுவை 30-45 நிமிடம் பனிக்கட்டியில் நிலை நிறுத்தவேண்டும். பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்பட்டு, நீர்ம பகுதியில் உள்ள புரதங்கள்புதிய குழாய்களுக்கு மாற்றப்பட வேண்டும். புரத அடர்வை (protein concentration) கண்டுப்பிடித்து மிக சரியான அளவில் புரதக் கூழ்ம மின்புல புரைநகர்ச்சி என்னும் நுட்பம் மூலம் நகர்த்தப்படும். புரத அடர்வை அறிய இலவ்ரி முறை (Lowry method) அல்லது பிராட்போர்ட் முறையின் (Bradford method) மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்றைய நாட்களில் முன் சாயமிடப்பட்ட புரத அளவிகள் (Prestaind protein Marker) இருப்பதால் , புரத அளவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். பெயர்வு இடைமம் (Transfer Buffer) pH-8.5 திரிசு பேசு (Tris base)- 25mM கிலைசின் (Glycine) 0.2M மெத்தனால்- 20% பெயர்வு இடைமத்தை கொண்டு கூழ்மத்தில் உள்ள புரதங்கள் சவ்விற்க்கு இடம் பெயர்த்தப்படும். இடம் பெயர்வு நிகழ்வுக்கு நைட்ரோ செல்லுலோசு அல்லது பி.வி.டி.எப். (Nitrocellulose or PVDF) என்னும் சவ்வுகள் பயன்படுகின்றன. இவ்விடத்தில் பி.வி.டி.எப். சவ்வு சிறந்ததாக கருதப்படுகிறது. இவ் இடைமத்தில் உள்ள மெத்தனால், புரதங்களில் உள்ள SDS எய் நீக்குவதற்கும், அதே வேளையில் புரதங்களை சவ்விற்க்கு விரைவாக மாற்றுவதற்கு உதவுகிறது . பெயர்வு நிகழ்வு இரு முறைகளில் மாற்றப்படலாம். ௧. ஈரம் முறை (Wet transfer)- இம்முறையில் பெயர்வு நிகழ்வுக்கு பயன்படும் பொருள்கள் அனைத்தும் இடைமத்தில் முழ்கிய நிலையில் இருக்கும். ௨. அரை- உலர்ந்த முறை (Semi-dry method)- மிகு சிறிய அளவில் இடைமத்தைக்கொண்டு பெயர்வு நிகழ்வு நடைபெறும். இவ்விரு முறைக்கென தனியான சிறப்பான பொருட்கள் கொண்டு பெயர்வு நிகழ்வு நடைபெற வேண்டும். பெயர்வு நிகழ்வு 100 V மின் ஓட்டத்தில் 1- 1.30 மணி நேரத்தில் முடிந்து விடும். பெயர்வு நிகழ்வு சரியான முறையில் நடைபெற்று உள்ளதா என அறிய பொன்சு (Ponceu) என்னும் சிகப்பு நிற சாயத்தை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். இச்சாயம் சவ்வினுள் உள்ள புரதங்களோடு இணைந்து சிகப்பு நிறத்தில் தெரியும். பின் இச்சவ்வு கடினநீர் கொண்டோ அல்லது அலசும் இடைமத்தை (Wash buffer) கொண்டு கழுவப்படும் போது, சாயங்கள் நீக்கப்படும். மேலும் இச்சயத்தை பல முறை மீண்டும் மீண்டும் பாவிக்கலாம் தடுக்கும் இடைமம் 1X TBS. 0.1% Tween மற்றும் 5%- கொழுப்பற்ற உலர்ந்த பால் or போவைன் சீரம் அல்புமின் தடுக்கும் இடைமத்தை பயன்படுத்தி சவ்வினுள் பெயர்த்தப்பட்ட புரதங்களின் பின்புலத்தை தடுக்க அல்லது பூசுதல் வேண்டும். இதற்க்கு 5%- கொழுப்பற்ற உலர்ந்த பால் அல்லது போவைன் சீரம் அல்புமின் பாவிக்க வேண்டும். வேசுட்டர்ன் படிவில் இந்நிலை மிக இன்றியமையாதது ஆகும். தடுத்தல் அல்லது பூசுதல் என்னும் முறையால் சவ்வினுள் உள்ள பின்புலங்கள் (Background of the membrane) தடுக்கப்படுவதால், நாம் விரும்பாத புரதங்களை (Non-specific Binding) அறிதல் அல்லது காணுதல் நிலையில் தவிர்கலாம். இந்நிலை அறைவெப்பநிலையில் 1-3 மணி நேரமும், அல்லது 4C வெப்பநிலையில் இரவு முழுவதும் நிலைநிறுத்தப்பட வேண்டும். பின் சவ்வை அலசும் இடைமத்தை (1X TBS, 0.1% Tween) கொண்டு 5-10 நிமிடம் மூன்று முறை கழுவப்படவேண்டும். எதிருடல் (Antibody) என்பது நமது அல்லது விலங்கு உடல்களில் பாதுகாப்பு அரண்களாகும். இவைகள் உடலில் உள் வரும் நோயூட்டிகளை (pathogen) எதிர்த்து உடலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. முதனிலை எதிருடல் என்பது நாம் காண விரும்பும் புரதத்தினை எலி அல்லது முயல் உடலில் செலுத்தி, அவற்றிக்கு எதிராக பெரும் எதிருடல் ஆகும். இவைகளில் ஒரு வடிவாக்க எதிருடல் (Mono-clonal antibody) அல்லது பல வடிவாக்க எதிருடல் (Poly-clonal antibody) என இரு வகைப்படும். இரண்டாம் எதிருடல் என்பது முதனிலை எதிருடல் இணைவதற்காக பயன்படுத்தப்படும் எதிருடல் ஆகும். முதனிலை எதிருடலை அலசும் இடைமத்தை கொண்டு நாம் விரும்பிய அளவில் நீர்த்து, அதனை தடுக்கும் இடைமத்தை கொண்டு தடுக்கப்பட்டுள்ள சவ்வினுள் சேர்க்க வேண்டும். பொதுவாக 1/500, 1/1000, 1/1500, அல்லது 1/2000 கொண்ட அளவில் நீர்க்கலாம். முதனிலை எதிருடல் சேர்க்கப்பட்ட சவ்வினை ஒரு மணி நேரம் அறை வெப்பநிலையிலோ அல்லது 4C இரவு முழுவதும் நிலைநிறுத்தப்படவேண்டும். பின் சவ்வை, அலசும் இடைமத்தை கொண்டு 5-10 நிமிடம் என மூன்று முறை கழுவப்படவேண்டும். இரண்டாம் நிலை எதிருடலை அலசும் இடைமத்தை கொண்டு நாம் விரும்பிய அளவில் நீர்த்து, அதனை முதனிலை எதிருடல் சேர்க்கப்பட்ட சவ்வினுள் சேர்க்க வேண்டும். பொதுவாக 1/1000 அல்லது 1/2000 கொண்ட அளவில் நீர்க்கலாம். இரண்டாம் நிலை எதிருடல் சேர்க்கப்பட்ட சவ்வினை ஒரு மணி நேரம் அறை வெப்பநிலையிலோ அல்லது 4C இரவு முழுவதும் நிலைநிறுத்தப்படவேண்டும். பின் சவ்வை, அலசும் இடைமத்தை கொண்டு 5-10 நிமிடம் என மூன்று முறை கழுவப்படவேண்டும். காணும் நிலையில் இடப்படும் மிளிரும் வேதிபொருள்கள் மற்றும் பெரோசிடு (LumiGLO chemiluminescent reagent and peroxide) இடப்படுவதால், இவைகள் இரண்டாம் நிலை எதிருடலில் இணைக்கப்பட்டுள்ள Horesradish peroxidase (HRP) பிரிக்கப்படுகின்றன. இதனால் வெளியிடப்படும் மிளிரும் தன்மையெய் படசுருள் கொண்டு காணலாம். நாம் விரும்பும் புரதம் மிகையாக இருந்தால், மிகையான குறியீடுகளும் (Signal) இல்லையெனில் குறைவாக இருக்கும். http://en.wikipedia.org/wiki/Western_blot சித்த ரகசியம் (நூல்) சித்த ரகசியம் (நூல்) நோய் வராமல் உடலைக் காப்பது, நோய் தீர்க்கும் மூலிகைகள், பத்திய முறைகள், வர்ம மருத்துவம், யோகமுறைகள் என அனைத்தையும் எளிமையாகச் சொல்லும் இந்த சித்த ரகசியம் நூல்(ISBN 978-81-8368-208-1) சித்த மருத்துவப் பெருமைகளையும் சேர்த்து அளிக்கும் நூலாக 104 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவத் துறையில் பட்டமேற்படிப்பு படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் இந்நூலாசிரியர் மருத்துவர்.பி.சுகுமாரன். எனும் 7 தலைப்புகளில் எளிமையான நடையில் சித்த மருத்துவம் குறித்து இந்த நூலில் பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் அட்டாங்க யோகம், சித்தர்களின் பேராற்றல்கள், சித்த மருந்துப் பிரயோகங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. உயிர்த் தாது, வளி(வாதம்), அழல்(பித்தம்), ஐயம்(கபம்) போன்றவை விளக்கப்பட்டு வாத, பித்த, கப் உடலைக் கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் அறுசுவைகளின் செயல்களைத் தெரிவித்து, அதன் அதிகரிப்பாலும் குறைவாலும் ஏற்படும் விளைவுகள் சொல்லப்பட்டு நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை, மருந்துகள், பத்தியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வரும் பொதுவான சில நோய்களுக்கான அறிகுறிகளும், அதற்கான கைமுறை மருந்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நோய்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டு அந்நோய்க்கான எளிமையான மருந்துகள் சொல்லப்பட்டுள்ளன. sidha இத்தலைப்பில் கழுத்துக்கு மேலே முன்புறம் உள்ள 26 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை மார்புப்புறம் உள்ள 34 வர்மங்கள், கழுத்துக்கு மேலே, பின்புறம் உள்ள 11 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை முதுகுப்புறம் உள்ள 16 வர்மங்கள், கையில் முன்பக்கம் உள்ள 10 வர்மங்கள், காலில் உள்ள 11 வர்மங்கள் என வர்மம் குறித்து படத்துடன் சிறு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. காயகற்பம் எனும் மருந்துகள் குறித்த விளக்கம் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன. பலவகையான யோகங்கள் குறித்து சிறு படங்களுடன் சிறிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில மூலிகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு அதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளன. - தமிழ் மருத்துவம் எனப் போற்றப்படும் சித்த மருத்துவம் குறித்து எளிமையாகச் சொல்லப்பட்டுள்ள நூல் இது. கார்பன் வரவினம் கார்பன் வரவினங்கள் (Carbon Credit) என்பவை பசுமைக்குடில் வாயுக்களின் குவிப்பு வளர்ச்சியைக் குறைப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் செய்யப்படும் முயற்சிகளின் ஒரு முக்கியமான அம்சமாகும். ஒரு கார்பன் வரவினம் என்பது ஒரு டன் கார்பனுக்கு சமமானதாகும். கார்பன் வர்த்தகம் என்பது உமிழ்வு வர்த்தக அணுகுமுறையின் ஒரு பயன்பாட்டு முறையாகும். பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் வரம்பிடப்படுகின்றன. பின் உமிழ்வு அளவை ஒதுக்கீடு செய்ய சந்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்பின் இருக்கும் கருத்து என்னவென்றால், தொழில்துறை மற்றும் வர்த்தக செயல்முறைகளை, கரியமில வாயு மற்றும் பிற பசுமைக்குடில் வாயுக்களை காற்றில் உமிழ்வதற்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படாத நிலையில் இருப்பதைக் காட்டிலும், குறைவான உமிழ்வுகள் அல்லது குறைந்த "கார்பன் செறிவு" அணுகுமுறைகளுக்கான திசையில் செலுத்துவது தான். பசுமைக்குடில் வாயுக் குறைப்பு திட்டங்கள் வரவினங்களை உருவாக்க முடியும் என்பதால், இந்த அணுகுமுறையானது உலகெங்கிலுமான கார்பன் குறைப்பு திட்டங்களுக்கு நிதியாதாரத்தை திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட முடியும். கார்பன் வரவினங்களை, தங்களது கார்பன் உமிழ்வுதடத்தை தன்னார்வ அடிப்படையில் குறைக்க விரும்பும் வர்த்தகரீதியான மற்றும் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பல நிறுவனங்களும் உள்ளன. இந்த கார்பன் வரன்படுத்தும் நிறுவனங்கள், தனித்தனியான திட்டங்களிடம் இருந்து வரவினங்களை சேகரித்து வைத்திருக்கும் முதலீட்டு நிதியம் அல்லது கார்பன் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து, வரவினங்களை கொள்முதல் செய்து கொள்கின்றன. இந்த வரவினங்களின் தரம் என்பது ஒரு பகுதியில், கார்பன் திட்டத்திற்கு ஆதரவு அமைப்பாக செயல்படும் நிதியம் அல்லது மேம்பாட்டு நிறுவனத்தின் தரநிர்ணய செயல்முறை அல்லது தொழில்திறத்தின் அடிப்படையிலானதாகும். இது அவர்களின் விலையில் பிரதிபலிக்கும்; தன்னார்வ அலகுகள் பொதுவாக கடுமையான தரப் பரிசோதனை சுத்த மேம்பாடு செயல்முறை மூலம் விற்கப்படும் அலகுகளைக் காட்டிலும் மதிப்பு குறைவானதாக இருக்கும். கார்பன் வரவினங்களில் இரண்டு தனித்துவமான வகைகள் உள்ளன: கார்பன் சமப்படுத்தும் வரவினம் (COC) மற்றும் கார்பன் குறைப்பு வரவினம் (CRC). கார்பன் சமப்படுத்தும் வரவினங்கள் காற்று, சூரிய ஒளி, நீர் மற்றும் உயிரி எரிபொருள்களில் இருந்தான எரிசக்தி உற்பத்தியின் தூய வடிவங்களைக் கொண்டதாகும். கார்பன் குறைப்பு வரவினங்கள், நமது வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உயிரியல்ரீதியாக பிரித்து (காடுகளை வளர்ப்பது, மற்றும் பாதுகாப்பது) சேமிப்பது மற்றும் சேகரிப்பதையும், கடல் மற்றும் மண்ணில் இருந்தும் பிரித்தெடுத்து சேமிப்பது மற்றும் சேகரிப்பதையும் அடக்கியதாகும். இரண்டு அணுகுமுறைகளுமே உலகளாவிய கார்பன் உமிழ்வு நெருக்கடிகளைக் குறைப்பதற்கான திறம்பட்ட வழிகளாக அறியப்பட்டுள்ளன. மரபு எரிபொருள்களின் எரிப்பு தான் தொழில்துறைரீதியாக பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக மரபு எரிபொருட்களை (நிலக்கரி, நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சாரம், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்) சார்ந்திருக்கும் மின்சாரம், சிமிட்டி, இரும்பு, ஆடை, உரம் மற்றும் பல பிற துறைகள். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் (HFC) போன்றவை தான் இந்த தொழிற்சாலைகளால் உமிழப்படும் பிரதான பசுமைக்குடில் வாயுக்களாகும். இவை அனைத்துமே அகச்சிவப்பு சக்தியை தக்க வைக்கும் வளி மண்டலத்தின் திறனை அதிகரித்து காலநிலையைப் பாதிக்கின்றன. உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வின் ஒரு விளைவே இந்த கார்பன் வரவினங்கள் குறித்த கருத்து பிறந்ததற்கான காரணம் ஆகும். காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு தெரிவித்திருப்பன பின்வருமாறு: "கார்பனுக்கு ஒரு நேரடியான அல்லது மறைமுகமான விலை வழங்கும் கொள்கைகள் தயாரிப்பாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பசுமைக்குடில்வாயு குறைந்த தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்வதற்கு ஊக்கத்தொகைகளை உருவாக்க முடியும். " "இத்தகைய கொள்கைகள் பொருளாதார கருவிகள், அரசாங்க நிதியாதாரம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியும்". 170க்கும் அதிகமான நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமான கியோட்டோ நெறிமுறையில் இந்த வழிமுறை முறையாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த மாராகேஷ் இணக்கங்கள் (Marrakesh Accords) மூலம் சந்தை வழிமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. சில தொழில்துறை மாசுப்பொருட்களைக் குறைப்பதற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதான அமெரிக்க அமில மழைத் திட்டத்தினை ஒத்த வகையில் இந்த வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கான பசுமைக்குடில் வாயுக்களுக்கான அதிகப்பட்ச அளவு 'வரம்பு' அல்லது ஒதுக்கீடுகளின் மீது ஒப்புக்கொண்டது. இது இணைப்பு I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள், அதேபோல், தங்கள் நாட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் நிறுவியவற்றில் இருந்து வெளியாகும் உமிழ்வுகள் மீது ஒதுக்கீட்டு வரம்புகளை நிர்ணயிக்கின்றன. தங்கள் சொந்த நாட்டின் 'பதிவகங்கள்' மூலம் நாடுகள் இதனை நிர்வகிக்கின்றன. இந்த பதிவகங்கள் UNFCCC மூலம் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன; கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் வரவின ஏற்பு வரம்பு ஒன்று உள்ளது. இதன்படி ஒவ்வொரு அலகும் அதன் உரிமையாளருக்கு ஒரு மெட்ரிக் டன் கரியமில வாயு அல்லது அதற்கு சமமான பசுமைக்குடில் வாயுவை வெளியிடுவதற்கான உரிமையை வழங்குகிறது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்த அளவுக்கு இந்த உமிழ்வை செய்யாத ஆபரேட்டர்கள் பயன்படுத்தாத ஒதுக்கீட்டு அளவை கார்பன் வரவினங்களாக விற்பனை செய்யலாம். தங்களது ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த உமிழ்வினை வெளியிட நேரும் வணிக நிறுவனங்கள் கூடுதல் ஏற்பு வரம்புகளை வரவினங்களாக கொள்முதல் செய்யலாம். தனிப்பட்ட முறையிலோ அல்லது வெளிப்படையான சந்தை வழியாகவோ. கால வளர்ச்சியில் எரிசக்திக்கான தேவை அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மொத்த உமிழ்வுகள் வரம்புக்குள் தான் இருந்தாக வேண்டும். இந்த ஏற்பு வரம்புகளை விற்கவும் வாங்கவும் அனுமதிப்பதன் மூலம், ஒரு ஆபரேட்டர் தனது உமிழ்வுகளை குறைப்பதற்கு, 'சுத்தம் காக்கும்' எந்திரங்கள் மற்றும் நடைமுறைகளில் முதலீடு செய்வது அல்லது ஏற்கனவே கூடுதல் 'கொள்திறன்' கொண்டிருக்கும் இன்னொரு ஆபரேட்டரிடம் இருந்து உமிழ்வுகளை கொள்முதல் செய்வது ஆகிய இரண்டு வழிகளில், சிறந்த செலவு குறைந்த வழியை பயன்படுத்த முடியும். 2005 முதல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக அதன் ஐரோப்பிய வர்த்தக திட்டம் (EU ETS) மூலம் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் CO வர்த்தகத்திற்கு கியோட்டோ வகைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் இதன் நிர்ணய அதிகாரம் பெற்றதாய் இருக்கிறது. 2008 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்குபெற்றவர்கள் புரோட்டோகாலின் இணைப்பு I மூலம் உறுதிப்படுத்தப் பெற்றுள்ள பிற வளர்ந்த நாடுகளுடன் இணைப்பு கொண்டு, ஆறு மிக முக்கிய மனித இனத்தால் உருவாகும் பசுமைக்குடில் வாயுக்களை வர்த்தகம் செய்வது கட்டாயம் ஆகும். கியோட்டோ நெறிமுறைகளை உறுதிப்படுத்தாதிருக்கும் அமெரிக்காவிலும், மற்றும் மார்ச் 2008 முதல் உறுதிப்படுத்தல் அமலாக்கத்திற்கு வந்ததான ஆஸ்திரேலியாவிலும், இதேபோன்ற திட்டங்கள் கருதப்பட்டு வருகின்றன. ஒரு வரவினமானது வரம்பு-மற்றும்-வர்த்தக திட்டத்தின் தேசிய நிர்வாகிகள் மூலம் ஆரம்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதான அல்லது ஏலம் விடப்பட்டதான உமிழ்வு ஏற்புவரம்பாக இருக்கலாம். அல்லது உமிழ்வுகளின் ஒரு சமப்படுத்தப்பட்ட அளவாக இருக்கலாம். இத்தகைய சமப்படுத்தல் அல்லது குறைப்பு நடவடிக்கைகள், கியோட்டோ நெறிமுறையை உறுதி செய்திருப்பதோடு தனது கார்பன் திட்டத்தை UNFCCC அங்கீகாரம் பெற்ற வகைமுறைகளில் ஒன்றின் மூலமாக தரப் பரிசோதனை செய்வதற்குரிய தேசிய ஒப்பந்தத்தை அமலாக்கம் செய்திருக்கக் கூடிய எந்தவொரு வளரும் நாட்டிலும் செய்யப்படலாம். அங்கீகாரம் கிட்டியதும், இந்த அலகுகள் சான்றிதழ் பெற்ற உமிழ்வு குறைப்புகள் அல்லது CERகள் என்று அழைக்கப்படுகின்றன. கியோட்டோ வர்த்தக காலத்திற்கு முன்கூட்டியே இந்த திட்டங்கள் கட்டுமானம் செய்யப்படுவதற்கும் வரவினங்களைப் பெறுவதற்கும் நெறிமுறைகள் அனுமதிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இருக்கும் ஆபரேட்டர்கள் பசுமைக்குடில் வாயு குறைப்பு வரவினங்களை கொள்முதல் செய்வதற்கு மூன்று வகைமுறைகளை கியோட்டோ நெறிமுறை வழங்குகிறது: இந்த கார்பன் திட்டங்கள் ஒரு தேசிய அரசாங்கத்தாலோ அல்லது நாட்டிற்குள் இருக்கும் ஒரு ஆபரேட்டர் மூலமோ உருவாக்கப்படலாம். யதார்த்தத்தில், அநேக பரிவர்த்தனைகள் தேசிய அரசாங்கங்களால் நேரடியாக மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக தங்களின் நாடுகளால் ஒதுக்கீட்டு அளவு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆபரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. வர்த்தக நோக்கங்களுக்கு, ஒரு ஏற்பு வரம்பு அல்லது CER ஒரு மெட்ரிக் டன் CO உமிழ்வுக்கு சமமானதாய் கருதப்படுகிறது. இந்த ஏற்பு வரம்புகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது சர்வதேச சந்தை நிலவரத்தின் படியோ விற்கப்பட முடியும். இந்த வர்த்தகமும் விநியோகமும் சர்வதேச அளவில் நடைபெறுவதால் ஏற்பு வரம்புகள் நாடுகளிடையே பரிவர்த்தனை செய்யப்பட அனுமதிக்கிறது. ஒவ்வொரு சர்வதேச பரிவர்த்தனையும் UNFCCC மூலம் சோதிப்பு அங்கீகாரம் செய்யப்படுகிறது. ஒரு சந்தை விலையை கண்டறிய உதவவும் புழக்கத்தை பராமரிக்கவும் ஏற்பு வரம்புகளுக்கான ஒரு உடனடி சந்தையையும், அத்துடன் வருங்கால கொள்முதலுக்கான சந்தையையும் வழங்கும் பொருட்டு காலநிலை பரிவர்த்தனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கார்பன் விலைகள் பொதுவாக ஒரு டன் கரியமில வாயு அல்லது அதற்கு நிகரான வாயுக்களுக்கு (COe) யூரோக்களில் ஏலவிலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. பிற பசுமைக்குடில் வாயுக்களும் வர்த்தகம் செய்யப்படலாம். ஆனால் இவை அவற்றின் உலக வெப்பமயமாக்கல் திறனைப் பொறுத்து கரியமில வாயுவின் நிர்ணயித்தல் பெருக்கல் தொகைகளாகக் குறிப்பிடப் பெற்று வர்த்தகம் செய்யப்படும். இந்த அம்சங்கள் வணிகத்தில் ஒதுக்கீட்டின் நிதித் தாக்கத்தை குறைக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஒதுக்கீடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கின்றன. நடப்பில் கார்பன் ஏற்பு வரம்புகளில் பரிவர்த்தனையில் ஈடுபடும் ஐந்து பரிவர்த்தனை மையங்கள் உள்ளன: சிகாகோ காலநிலை பரிவர்த்தனை மையம், ஐரோப்பிய காலநிலை பரிவர்த்தனை, நோர்ட்பூல், பவர்நெக்ஸ்ட் மற்றும் ஐரோப்பிய எரிசக்தி பரிவர்த்தனை மையம் ஆகியவை. சமீபத்தில் நோர்ட்பூல், சான்றிதழ் பெற்ற உமிழ்வு குறைப்புகள் என்று அழைக்கப்படும் ஒரு CDM கார்பன் திட்டத்தால் உருவாக்கப்படும் சமப்படுத்தல்களை வர்த்தகம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை பட்டியலிட்டது. பரிவர்த்தனை மையங்களில் விற்கப்படத்தக்க வரவினங்களை உருவாக்கும் உமிழ்வு குறைப்பு, சமப்படுத்தல், மற்றும் காடுகள் உருவாக்க திட்டங்களில் இப்போது பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. CantorCO2e என்னும் குறைந்தது ஒரு தனியார் மின்னணு சந்தையேனும் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. உமிழ்வு நிர்வாகம் என்பது லண்டன் நகரின் மிகவும் துரித வளர்ச்சி காணும் நிதி சேவைகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இப்போது 30 பில்லியன் யூரோக்கள் மதிப்புடையதாக இருக்கும் இச்சந்தை, ஒரு தசாப்த காலத்திற்குள் 1 டிரில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. "கார்பன் உலகின் மிகப்பெரிய பண்டச் சந்தையாக இருக்கும். அத்துடன் அது உலகின் ஒட்டுமொத்த மிகப் பெரிய சந்தையாகவும் ஆகலாம்" என்று பார்க்ளேஸ் கேபிடல் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சந்தைகள் பிரிவு தலைவரான லூயிஸ் ரெட்சா கணிப்பு வெளியிட்டுள்ளார். கணக்கின்றி எரிசக்தி உபயோகிப்பதும் அதனால் விளையும் உமிழ்வு அளவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே வரவினங்களை வாங்க வேண்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேவை மற்றும் விநியோக விதிகள் சந்தை விலையை மேலே தள்ளும். இது விற்பனைக்குரிய கார்பன் வரவினங்களை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகமான குழுக்களை ஊக்கப்படுத்தும். கியோட்டோ ஒதுக்கீட்டு அளவு அலகு (AAU) அல்லது அதற்கு ஏறக்குறைய சமமான ஐரோப்பிய ஒன்றிய ஏற்புவரம்பு (EUA) போன்ற தனிப்பட்ட ஏற்புவரம்பு, CER போன்ற ஒரு சமப்படுத்தலில் இருந்து மாறுபட்ட சந்தை மதிப்பைக் கொண்டிருக்கலாம். CERகளுக்கு ஒரு மேம்பட்ட இரண்டாம் நிலைச் சந்தை இல்லாததும், விலை நிர்ணயிப்பதில் சிக்கலளிக்கும் விதமாக திட்டங்களுக்கு இடையே சீரான செயலமைப்பு இல்லாததும், அத்துடன் துணையுதவி கோட்பாடு மற்றும் அதன் ஆயுள்காலம் குறித்த பிரச்சினைகளுமே இதற்குக் காரணம். கூடுதலாக, சுத்த மேம்பாட்டு வகைமுறையின் கீழ் ஒரு கார்பன் திட்டத்தால் உருவாக்கப்படும் சமப்படுத்தல்கள் மதிப்பில் குறைந்த திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஏனெனில் இந்த நெகிழ்வுற்ற வகைமுறைகள் மூலம் எத்தனை சதவீத ஏற்புவரம்பை பூர்த்தி செய்யலாம் என்பதில் EU ETS ஆபரேட்டர்கள் வரம்புபடுத்தப் பெற்றுள்ளனர். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை திறம்பட குறைக்க அவசியமான நடத்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார உற்பத்தி அமைப்புகளிலான மாற்றங்களை ஊக்குவிக்க போதுமான அளவிற்கு கார்பனின் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று யேல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் நோர்டாஸ் வாதிடுகிறார். கார்பனின் விலையை அதிகரிப்பது நான்கு இலக்குகளை சாதிக்கும். முதலாவதாக, உயர்ந்த கார்பன் வகை பொருட்கள் மற்றும் சேவைகளை ரொம்பவும் அவசியமானால் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து நுகர்வோருக்கு இது சமிக்ஞைகள் வழங்கும். இரண்டாவதாக, எந்த கச்சா பொருட்கள் அதிகமான கார்பனை பயன்படுத்துகின்றன (நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்று) மற்றும் எவை குறைவாக பயன்படுத்துகின்றன அல்லது பயன்படுத்துவதேயில்லை (இயற்கை எரிவாயு அல்லது அணு சக்தி போன்று) ஆகியவை குறித்த சமிக்ஞைகளை உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கின்றன; இதனால் நிறுவனங்களை குறைந்த-கார்பன் கச்சாப் பொருட்களை பயன்படுத்த தூண்ட முடியும். மூன்றாவதாக, கண்டுபிடிப்பாளர்களும் புதுமை படைப்பாளிகளும் புதிய குறைந்த-கார்பன் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கவும் அறிமுகப்படுத்தவும் அவசியமாயிருக்கும் சந்தை ஊக்கத்தொகைகளை இது வழங்கும். மிக முக்கியமான நான்காவது என்னவென்றால், உயர்ந்த கார்பன் விலை மேற்சொன்ன மூன்று பணிகளையும் செய்ய அவசியமான தகவல்களின் மீது நிதியாதாரம் திரட்டுகிறது. சந்தை வகைமுறையின் மூலமாக, உயர்ந்த கார்பன் விலை பொருட்களின் கார்பன் உள்ளடக்கத்திற்குத் தக்கவாறு அவற்றின் விலையை உயர்த்தும். தங்கள் “கார்பன் கால்தடத்தை” குறைக்கும் நம்பிக்கையுடன் செயல்படும் மனச்சாட்சியுடனான நுகர்வோர்கள், தங்களுடைய கார்பன் ஒப்பீட்டளவை துல்லியமாகக் கணக்கிட முடிவதற்கான வாய்ப்பு இன்று மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக 250 மைல்கள் வேகத்தில் ஓட்டுவதற்கும் 250 மைல்கள் பறப்பதற்கும் இடையில் உள்ள கார்பன் கால்தட வித்தியாசத்தைக் கூறலாம். ஒரு ஒத்திசைந்த கார்பன் வரி ஒரு பொருளின் விலையை அந்த பொருளின் உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் உமிழப்படும் CO அளவுக்கேற்றவாறு துல்லியமாய் அதிகப்படுத்தும். கோதுமை வளர்ப்பது, அதனை அரைப்பது, போக்குவரத்து செய்வது, ரொட்டித் துண்டு வேகவைப்பது இவை அனைத்திலிருந்தும் 0.01 டன் கார்பன் உமிழ்வு வருகிறதென்றால், அப்போது ஒரு டன் கார்பனுக்கு விதிக்கப்படும் $30 வரி ஒரு ரொட்டித் துண்டின் விலையை $0.30 உயர்த்தும். இந்த “கார்பன் கால்தடம்” விலை தானியங்கு முறையில் கணக்கிடப்படுகிறது. அப்போதும் நுகர்வோருக்கு விலையில் எவ்வளவு பகுதியை கார்பன் உமிழ்வுகளுக்கு தாங்கள் கொடுக்கிறோம் என்பது தெரியாது தான் என்றாலும், தங்களது கார்பன் கால்தடத்திற்கான சமூக செலவை தாங்கள் செலுத்துகிறோம் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் முடிவுகள் மேற்கொள்ள முடியும். கார்பன் உமிழ்வுகளின் சமூக செலவின் அடிப்படையில் உகந்த விலையாக ஒரு டன்னுக்கு சுமார் 30 அமெரிக்க டாலர் விலை வைக்கலாம் என்பதாய் நோர்தாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். பணவீக்கத்துடன் இதன் விலையும் உயரும். கார்பனுக்கான சமூக செலவு என்பது கார்பன் உமிழ்வுகளின் ஒரு கூடுதல் டன்னால் விளையும் கூடுதல் சேதார அளவாகும். ... சரியான கார்பன் விலை, அல்லது சரியான கார்பன் வரி என்பது கார்பன் உமிழ்வுகளின் மீதான சந்தை விலை (அல்லது கார்பன் வரி) ஆகும். கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்கு பெருகும் செலவுகளை காலநிலை சேதாரங்களைக் குறைப்பதால் பெருகும் அனுகூலங்களைக் கொண்டு இது சமப்படுத்துகிறது. ... ஒரு நாடு ஒரு டன் கார்பனுக்கு $30 கார்பன் வரி விதிக்க விரும்புமானால், அப்போது ஒரு கேலன் கேஸோலினுக்கு அது 9 சென்டுகள் வரி விதிப்பதாய் இருக்கும். இதேபோல், நிலக்கரி மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்திற்கு வரி கிலோவாட்டுக்கு சுமார் 1 சென்ட் ஆக இருக்கும். அல்லது நடப்பு சில்லரை விலையின் 10 சதவீதமாக இருக்கும். அமெரிக்காவில் கார்பன் உமிழ்வுகளின் தற்போதைய அளவுகளின் படி, ஒரு டன் கார்பனுக்கு $30 வரி என்பது ஒரு ஆண்டுக்கு $50 பில்லியன் வருவாயை உருவாக்கும். காற்று மாசுபாட்டுக்கு ஆகும் செலவுக்கு உரிய நிதி மதிப்பை அளிப்பதன் மூலம் பசுமைக்குடில் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான ஒரு சந்தையை கார்பன் வரவினங்கள் உருவாக்குகின்றன. உமிழ்வுகள் வணிக நடைமுறையின் ஒரு உள்முக செலவாக ஆவதோடு வரவு செலவு அறிக்கையிலும் கச்சாப்பொருட்கள் மற்றும் பிற கடன்கள் மற்றும் சொத்துகள் ஆகியவற்றோடு காணத்தக்கதாய் ஆகிறது. உதாரணமாக, வருடத்திற்கு 100,000 டன்கள் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் கொண்ட ஒரு ஆலையை ஒரு வணிகம் கொண்டுள்ளது எனக் கருதுவோம். இந்த வணிகம் இணைப்பு I இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசாங்கத்தின் கீழ் வருகிறது. அந்த அரசாங்கம் அந்த வணிகம் உற்பத்தி செய்யக் கூடிய உமிழ்வுகளுக்கு வரம்பு நிர்ணயித்து சட்டத்தை இயற்றியுள்ளது. அச்சட்டத்தின்படி அந்த ஆலைக்கு வருடத்திற்கு 80,000 டன்கள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒன்று இந்த தொழிற்சாலை தனது உமிழ்வுகளை 80,000 டன்கள் அளவுக்குக் குறைக்கிறது. அல்லது அதிகப்படியான அளவைச் சரிக்கட்ட கார்பன் வரவினங்களைக் கொள்முதல் செய்கிறது. மாற்று வழிகளுக்காகும் செலவுகளைக் கணக்கிட்ட பின், அந்த வருடத்தில் புதிய எந்திரங்களில் முதலீடு செய்வது பொருளாதாரரீதியாக உகந்ததல்ல என்றோ அல்லது சாத்தியமல்ல என்றோ வணிகம் தீர்மானிக்கலாம். அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக கார்பன் வரவினங்களை விற்க அங்கீகாரம் பெற்றிருக்கும் அமைப்புகளிடம் இருந்து பகிரங்க சந்தையில் இருந்து கார்பன் வரவினங்களை வாங்கிக் கொள்ள அது தேர்வு செய்யலாம். மாற்று எரிசக்தி ஆதாரங்களை உற்பத்தி செய்வதால் விளையும் பாதிப்புகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய காற்றாலை டர்பைனை தயாரிப்பதற்கும் போக்குவரத்து செய்வதற்கும் நுகரப்படும் எரிசக்தி மற்றும் உமிழப்படும் கார்பன் ஆகியவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதற்கு ஒரு கார்பன் வரவினம் வழங்கப்படுவதை தடுக்கலாம். கார்பன் வரவினங்கள் மற்றும் கார்பன் வரிகள் இரண்டுமே தமக்குரிய அனுகூலத்தைக் கொண்டுள்ளன. கார்பன் வரிகளுக்கான ஒரு மாற்றாக கியோட்டோ நெறிமுறையில் கையெழுத்திட்ட நாடுகள் வரவினங்களை தேர்வு செய்தன. வரி-திரட்டும் திட்டங்கள் மீதான ஒரு விமர்சனம் என்னவென்றால், அவை பல சமயங்களில் உரிய முறையில் கொண்டு செலுத்தப்படுவதில்லை. எனவே இதற்கென அரசாங்கம் திரட்டும் வரி நிதியில் கொஞ்சம் அல்லது அனைத்துமே திறனற்ற வகையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு அனுகூலமற்ற வகையிலோ பயன்படுத்தப்படலாம். உமிழ்வுகளை ஒரு சந்தை பண்டமாக அணுகுவதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதும் நிர்வகிப்பதும் வணிகங்களுக்கு எளிதாகிறது. அதே சமயத்தில் பொருளாதார நிபுணர்களும் வர்த்தகர்களும் நன்கு புரிந்து கொள்ளப்பட்ட சந்தை தத்துவங்கள் மூலம் வருங்கால விலை நிர்ணய அமைப்பை கணிக்க முயல முடியும். இவ்வாறாக ஒரு கார்பன் வரியைக் காட்டிலும் ஒரு பரிவர்த்தனை செய்யத்தக்க கார்பன் வரவினத்தின் முக்கியமான அனுகூலங்கள் என்னவென்றால்: ஒரு கார்பன் வரியின் அனுகூலங்களாவன: கியோட்டோ நெறிமுறையின் துணையுதவி கோட்பாட்டின் படி (The principle of Supplementarity) ஒரு நாடு கார்பன் வரவினங்களை வாங்குவதற்கு முன்னதாக உமிழ்வுகளின் உள்முகக் குறைப்பு நடைபெற வேண்டும். ஆயினும் ஒரு நெகிழ்வுற்ற வகைமுறையாக இது சுத்த மேம்பாட்டு வகைமுறையையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வரம்புபட்ட ஸ்தாபகங்கள் வரம்புக்கு வெளியிலான துறைகளில் தன்னார்வ அடிப்படையில் உண்மையான, அளவிடத்தக்க, நிரந்தரமான உமிழ்வுக் குறைப்புகளை உருவாக்க முடியும். CO-நிகரான பசுமைக்குடில் வாயு உமிழ்வு உண்மையாகவே குறைக்கப்பட்டுள்ளது என்பதை நிறுவுவதே ஒரு சிக்கலான செயல்முறை என்கிற உண்மையில் இருந்து தான் கார்பன் வரவினங்கள் குறித்த அநேக விமர்சனங்கள் பிறக்கின்றன. ஒரு கார்பன் திட்ட கருத்தாக பரிணாமமுற்ற இந்த செயல்முறை கடந்த 10 ஆண்டுகளில் மேலும் மேலும் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கார்பன் திட்டம் உண்மையான, அளவிடத்தக்க, நிரந்தரமான உமிழ்வுக் குறைப்புக்கு சட்டப்பூர்வமாக இட்டுச் சென்றிருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்வதற்குரிய முதல் படி CDM செயல்முறையின் வழிமுறைகளைப் புரிந்து கொள்வதாகும். இந்த செயல்முறையின் மூலமாகத் தான் திட்ட ஆதரவாளர்கள் உமிழ்வுக் குறைப்பு உருவாக்கத்திற்கான தங்கள் கருத்துகளை ஒரு உரிய செயல்பாட்டு பொறுப்பின் (DOE) மூலம் சமர்ப்பிக்கின்றனர். CDM நிர்வாக வாரியம், CDM வழிமுறை குழு மற்றும் அவற்றின் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு திட்டத்தையும் திறனாய்வு செய்து, அத்துடன் கூடுதலமைவான குறைப்புகளில் உண்மையாகவே அது எவ்வாறு விளைகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. எந்த கார்பன வரவினத்திற்கும் கூடுதலமைவு என்கிற ஒரு கருத்தை நிரூபணம் செய்வதும் மிக முக்கியமாகும். கார்பன் வரவினங்கள் மூலம் வருவாய் இல்லாதிருந்திருந்தால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்குமா என்கிற கேள்விக்கு கூடுதலமைவு கருத்து விடையளிக்கிறது. எவ்வாறிருந்தாலும் வழக்கம் போல் நிகழ்ந்திருக்கக் கூடிய திட்டங்களுக்கு "கூடுதலான" திட்டங்களில் இருந்து வரக் கூடிய கார்பன் வரவினங்கள் மட்டுமே மொத்தமாய் சுற்றுச்சூழல் நன்மைக்கு பங்களிப்பு செய்திருப்பதாய் கணக்கில் கொள்ளத்தக்கது. கார்பன் வரவினங்கள் மூலம் வருவாய் கிட்டாதிருந்தாலும் கூட பெரும் நிதி வருவாய்களை ஈட்டித் தரக் கூடிய கார்பன் திட்டங்கள்; அல்லது கட்டுப்பாடுகளின் நிர்ப்பந்தத்தால் செய்யப்படுபவை; அல்லது ஒரு துறையில் பொதுவான நடைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டங்கள் எல்லாம் கூடுதலமைவாய் கருதப்பட மாட்டாது. கூடுதலமைவை முழுமையாய் நிர்ணயம் செய்வதற்கு நிபுணத்துவ திறனாய்வும் அவசியப்படுகிறது. கார்பன் சமப்படுத்தல் திட்டங்கள் கூடுதலமைவு தன்மையையும் நிரூபணம் செய்தால் தான் கார்பன் வரவினம் செயல்முறை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தலைமையேற்றுச் செல்வதாக கூறப்படுவதற்கு அர்த்தமிருப்பது உறுதிப்படும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உலக வள ஆதார நிறுவனம்/பராமரிக்கத்தக்க வளர்ச்சிக்கான உலக வர்த்தக கவுன்சில் (WRI/WBCSD) கூறுவது: "பசுமைக்குடில் வாயு உமிழ்வு வர்த்தகத் திட்டங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உற்பத்தி ஆதாரங்களில் இருந்தான உமிழ்வுகளுக்கு வரம்பிடுவதன் மூலம் செயல்படுகின்றன. இந்த திட்டங்களின் கீழ், திட்ட எல்லைக்குட்படாத ஆதாரங்களில் நிகழும் திட்ட- அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு வர்த்தகம் செய்யத்தக்க 'சமப்படுத்தல் வரவினங்கள்' வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சமப்படுத்தல் வரவினமும், உமிழ்வு வரம்புக்குட்பட்ட அந்த உற்பத்தித் தளங்களை வரவினத்தால் குறிக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு நேர் விகிதாச்சாரத்தில் அதிகமாக உமிழ அனுமதிக்கிறது. பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளில் மொத்த அதிகரிப்பை பூஜ்யமாக்குவதை சாதிப்பது தான் இதன் பின்புல யோசனை. ஏனெனில் அதிகரித்த உமிழ்வுகளின் ஒவ்வொரு டன்னும் திட்ட அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு குறைப்புகள் மூலம் 'சமப்படுத்தல்' செய்யப்படுகின்றன. சிக்கல் என்னவென்றால் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளைக் குறைக்கும் (வரலாற்று அளவுகளுடன் ஒப்பிட்டு) பல திட்டங்கள் ஒரு பசுமைக்குடில் வாயு இல்லாதிருந்தால் கூட காலநிலை மாற்றத்தை தணிப்பது குறித்த கவலை ஏதும் இன்றி நிகழ்ந்தேறியிருக்கும் என்பது. அந்த திட்டம் 'எப்படியானாலும் நடந்திருக்கக் கூடிய ஒன்று தான்' எனும்பட்சத்தில், அதன் பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு சமப்படுத்தல் வரவினங்களை வழங்குவது உண்மையில் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளில் மொத்தமாய் பார்க்கையில் ஒரு அதிகரிப்பை தான் குறிக்கும். இது பசுமைக்குடில் வாயு திட்டத்தின் உமிழ்வு இலக்கை பலவீனப்படுத்துவதாய் அமையும். எனவே திட்ட அடிப்படையிலான பசுமைக்குடில் வாயுக் குறைப்புகளை உணர்ந்து கொள்ளும் பசுமைக்குடில் வாயுத் திட்டங்களின் வெற்றிக்கும் ஒருங்கிணைப்புக்கும் கூடுதலமைவு மிக முக்கியமானதாகும்." சுற்றுச்சூழல்ரீதியான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் வணிகங்கள் மீது கட்டுப்பாடுகளாக திணிக்கப்படுகின்றன. உமிழ்வுகளை நிர்வகிப்பதற்கான இந்த அணுகுமுறை குறித்து பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். கியோட்டோ வகைமுறை தான் கார்பன் வரவின நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேசரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரே வகைமுறையாகும். அத்துடன், முக்கியமாக, இது கூடுதல் திறம் மற்றும் ஒட்டுமொத்த திறம்பட்டநிலைக்கான சோதனைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. அதன் ஆதரவு அமைப்பான UNFCCC மட்டும் தான், உமிழ்வு கட்டுப்பாடு அமைப்புகளின் ஒட்டுமொத்த திறம்பாட்டின் மீதும் உலகளாவிய உத்தரவு அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கிறது. கியோட்டோ பரிவர்த்தனை காலம் 2008 முதல் 2012 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செயலுறுத்துவதாய் இருக்கிறது. முன்பு ஆரம்பித்த EU ETS அமைப்பின் முதல் கட்டம், அதற்குப் பிந்தைய மூன்றாவது கட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சர்வதேச ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளவற்றில் ஒத்துழைப்பு கிட்டலாம். ஆனாலும் பசுமைக்குடில் வாயுக்கள் தொடர்பான கியோட்டோ நெறிமுறைக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளில் என்ன ஒப்புக்கொள்ளப்படும் என்பது குறித்த பொதுவான நிச்சயமற்ற நிலை ஒன்று நிலவுகிறது. வணிக முதலீடு என்பது பல சமயங்களில் பல தசாப்தங்களுக்கும் கூட நீளக் கூடியது என்பதால், இது முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கு கூடுதல் அபாயத்தையும் நிச்சயமற்ற நிலையையும் சேர்க்கிறது. உலகளாவிய உமிழ்வுகளில் பெரும் பங்கிற்கு பொறுப்பான பல நாடுகள் (முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா) கட்டாய வரம்புகளைத் தவிர்த்திருப்பதால், கார்பன் வரம்பு கொண்ட நாடுகளின் வணிகங்கள் வரம்பு நிறுவாத நாடுகளுடன் ஒப்பிடுகையில் தங்களின் கார்பன் செலவுகள் நேரடியாக தங்கள் மீது சுமத்தப்படுவதால் தங்களுக்கு வணிகரீதியாக அனுகூலமின்மை தோன்றுவதாக உணரலாம். உமிழ்வுகளின் தேசிய அளவிலான உற்பத்தியில் அர்த்தமுள்ள குறிப்பிடத்தக்க குறைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய ஒதுக்கீட்டு அளவுகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது வரம்பு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் பின்னிருக்கும் ஒரு முக்கியமான கருத்துரு ஆகும். இது ஒட்டுமொத்த உமிழ்வு அளவு குறைக்கப்படுவதை மட்டுமல்லாமல், உமிழ்வு பரிவர்த்தனை செலவுகள் பரிவர்த்தனை அமைப்பின் அனைத்து தரப்புக்கும் சரியாக பகிரப்படுவதையும் உறுதி செய்கிறது. ஆயினும், வரம்புக்குட்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தாங்களாகவே தங்களது கடமைப்பாடுகளை வலுவிழக்கச் செய்ய தலைப்படலாம். EU ETS இல் பல நாடுகளுக்கான 2006 மற்றும் 2007 தேசிய ஒதுக்கீட்டு திட்டங்களில் இதனைக் காண முடிந்தது. இந்த திட்டங்கள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டதோடு ரொம்பவும் தளர்வாய் இருந்ததற்காக ஆரம்பத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் மூலம் நிராகரிக்கவும் பட்டன. ஏற்புவரம்புகளுக்கான சட்டவிலக்கு அளிப்பது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. EU ETS க்குள் இருக்கும் நாடுகள் தங்களது உள்வணிகங்களுக்கு அநேக அல்லது அனைத்து ஏற்புவரம்புகளையும் இலவசமாய் அளித்திருக்கின்றன. மின்சார உற்பத்தியாளர்கள் இந்த உமிழ்வு 'கட்டணங்களை' தங்களது வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதன் மூலம் 'எதிர்பாரா அதிர்ஷ்ட' லாபத்தைப் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. EU ETS தனது இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கியோட்டோ உடன் இணையும் போது, கூடுதலான ஏற்புவரம்புகள் ஏலமிடப்படும் என்பதால் இந்த சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு அர்த்தமுள்ள சமப்படுத்தல் திட்டத்தை ஸ்தாபிப்பது சிக்கலானதாய் இருக்கிறது: CDM வகைமுறைக்கு வெளியேயான தன்னார்வ சமப்படுத்தல் நடவடிக்கைகள் திறம்பட கட்டுப்படுத்தப்படுவதில்லை. இந்த கட்டுப்படுத்தப்படாத நடவடிக்கைகளில் சமப்படுத்தல்கள் குறித்து விமர்சனங்கள் உள்ளன. வரம்பு நிறுவாத நாடுகளில் இருக்கும் சில தன்னார்வ பெருநிறுவன திட்டங்கள் மற்றும் சில தனிநபர் கார்பன் சமப்படுத்தல் திட்டங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். CDM வரவினங்களின் சோதனை அங்கீகாரம் குறித்தும் கவலைகள் இருக்கின்றன. கூடுதலமைவை (Additionality) துல்லியமாகக் கணக்கிடுவது குறித்தது ஒரு கவலை. ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் பெற எடுக்கும் முயற்சிகள் மற்றும் நேரம் தொடர்பானவை மற்ற கவலைகள். சில திட்டங்களின் பயனளிக்கும் தன்மைக்கு சோதிப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது குறித்தும் கேள்விகள் எழலாம்; பல திட்டங்கள் அவை தணிக்கை செய்யப்பட்டதன் பிறகு எதிர்பார்த்த நன்மைகளை சாதிப்பதில்லை என்று தோன்றுகிறது. அத்துடன் CDM வாரியம் குறைந்த எண்ணிக்கையிலான CER வரவினங்களுக்கு மட்டும் தான் ஒப்புதல் அளிக்க முடியும். உதாரணமாக, ஒரு திட்ட வெளியீடு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் அதிக காலம் எடுக்கலாம். அல்லது ஒரு காடுவளர்ப்பு திட்டம் நோய் அல்லது தீயால் குறைக்கப்படலாம். இந்த காரணங்களால், சில நாடுகள் உள்நாட்டில் அமலாக்கம் செய்கையில் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. காடு வளர்ப்பு அல்லது நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் போன்ற வகையான சில கார்பன் குறைப்பு நடவடிக்கைகளை அனுமதிப்பதில்லை. நருடோ இது நருடோ உஜுமகி என்பவனின் கதையைச் சொல்கிறது. இவன், தனது கிராமத்தில் தலைவராகவும், அனைவரிலும் மேலான வலிமை கொண்டவராகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிஞ்ஜாவான ஹொக்கேஜ் போல விளங்க ஆசையுற்று அதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு ஒரு இளம் நிஞ்ஜா. இது கிஷிமோடோ எழுதி 1997ஆம் வருடம் "அகமாரு ஜம்ப்" இதழில் வெளியான ஒரு ஓரங்க சித்திரக்கதையை அடிப்படையாகக் கொண்ட தொடர். 1999ஆம் வருடம் ஜப்பானின் "வீக்லி ஷோனென் ஜம்ப்" பத்திரிகையின் 43வது இதழில் மேங்காவை ஷுயெஷாவால் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இது வரை 47 "டங்கோபோன் " தொகுப்புக்கள் வெளியான பிறகும் தற்சமயம் வரை மேங்கா தொடராக வெளி வந்து கொண்டிருக்கிறது. பின்னாளில், மேங்கா ஒரு அசைவூட்டுப் (anime) மாற்றப்பட்டு ஸ்டுடியோ பையிரெட் மற்றும் அனிப்ளெக்ஸ் ஆகியவற்றால தயாரிக்கப்பட்டது. முதலில் இது ஜப்பான் முழுவதும் நிலம் சார்ந்த தொலைக்காட்சியான ஜப்பான் டிவி டோக்கியா வலையமைப்பில் ஒளிபரப்பானது; பிறகு அசைவூட்டப படக்காட்சிக்கான செயற்கைக் கோள் தொலைக்காட்சியான அனிமேக்ஸ் நெட்வொர்க்கிலும் 2002வது வருடம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி ஒளிபரப்பப்பட்டது. முதலில் ஒளிபரப்பான தொடர் 220 நிகழ்வுகளை (எபிசோடுகள்) கொண்டிருந்தது. இதன் அடுத்த பாகமான "நருடோ ஷிப்புடென் " 2007ஆம் வருடம் பிஃப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் இன்று வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த அசைவூட்டத் தொடர்கள் மட்டும் அல்லாமல் பையிரட் ஸ்டுடியோ ஆறு திரைப்படத் தொடர்களையும், பல ஒரிஜினல் விடியோ அனிமேஷன் (ஓவிஏக்கள்)களையும் உருவாக்கியுள்ளது. இதன் மற்ற வர்த்த வெளியீடுகளாவன: பல நிறுவனங்கள் தயாரித்துள்ள லைட் நாவல்கள், ஒளிக்காட்சி (விடியோ) விளையாட்டுக்கள் மற்றும் வர்த்தக அட்டைகள் (டிரேடிங் கார்டுகள். மேங்கா மற்றும் அசைவூட்டம் ஆகிய இரண்டையும் வட அமெரிக்கத் தயாரிப்புக்காக விஜ் மீடியா உரிமம் வழங்கியுள்ளது. விஜ், தனது "ஷோனென் ஜம்ப் " பத்திரிகையிலும், தனிப்பட்ட புத்தகங்களாகவும், இந்தத் தொடரை வெளியிட்டு வருகிறது. 2005வது வருடம் அசைவூட்டத் தொடர் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் , கானடாவிலும் ஒளிரப்பாகத் துவங்கியது. பிறகு, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவிலும், முறையே 2006 மற்றும் 2007ம் வருடங்களில் துவங்கியது. இந்தத் தொடரிலிருந்து வெளியான திரைப்படங்கள் மற்றும் ஒவிஏக்களும் விஜ்ஜால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதலாவது திரையரங்குகளில் வெளியானது. 2009வது வருடம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி வட அமெரிக்காவில் "நருடோ ஷிப்புடெனின் " முதல் டிவிடி வால்யூம் வெளியானது. அதே வருடம் அக்டோபர் மாதம் முதல் டிஸ்னி எக்ஸ்டியில் ஒலிபரப்பாகத் துவங்கியது. மேங்கா அதன் 44 தொகுப்பு வரையிலும், 89 மில்லியன் பிரதிகள் ஜப்பானில் விற்பனையாகியிருக்கிறது. விஜ்ஜினுடைய "ஷொனென் ஜம்ப்" பத்திரிகையில் தொடராக வெளிவரும் "நருடோ" அந்த நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையாகும் மேங்கா தொடரில் ஒன்றாக உள்ளது. இதன் ஆங்கில மொழியாக்கம் முதலில் "யூஎஸ்ஏ டுடே" யிலும் பிறகு புக் லிஸ்டில் பல முறையும் தோன்றியுள்ளது. இதன் 11வது தொகுப்பு 2006ம் வருடத்திய க்வில் விருது வென்றது. இந்தத் தொடரில் சாகசம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுக்கிடையே மிகவும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படும் சமன்பாடு, மற்றும் கதாபாத்திரங்களின் குண அமைப்பு ஆகியவற்றை விமர்சகர்கள் வெகுவாகப் புக்ழ்ந்திருக்கிறார்கள். இருப்பினும் வழக்கமான "ஷோனென்" கதை தனிமங்களையே இது பயன்படுத்துவதாக விமர்சனமும் செய்துள்ளனர். நருடோ உஜுமகி ஒரு இளைஞன். இவனுக்குள் ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாய் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் தொடங்குவதற்குப் 12 வருடங்களுக்கு முன்னால் இந்த ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாய் கொனொஹாகுரே என்னும் நிஞ்ஜா கிராமத்தைத் தாக்கி பலரைக் கொன்றது. இதற்குப் பதிலாக கொனொஹாகுரே கிராமம் மற்றும் அதன் நிஞ்ஜா ராணுவத்தின் தலைவனுமான நாலாவது ஹொகேஜ் தனது உயிரைத் தியாகம் செய்து, நருடோ பிறந்த குழந்தையாக இருந்தபோது அவன் உடலுக்குள் அந்த வேதாளத்தைப் பூட்டி வைத்து விட்டார். ஆனால், கொனொஹாகுரேவோ, நருடோவே அந்த வேதாள ஓநாய் என்பது போலத் தவறாகக் கருதி அவனது குழந்தைப் பருவம் முழுதும் அவனைத் தவறாகவே நடத்தியது. நாலாம் ஹோக்கேஜ் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக வரும் மூன்றாம் ஹோக்கேஜ் இட்ட ஒரு கட்டளை, ஓநாயின் தாக்குதலை யாரும் எவரிடத்தும் கூறக் கூடாதென விதிக்கிறது. பல வருடங்களுக்குப்பிறகு, ஓடிப்போன ஒரு துரோகி நிஞ்ஜாவான முஜுகி என்பவன் தடைசெய்யப்பட்ட சுருள் ஒன்றை திருடுமாறு நருடோவைத் தந்திரத்தால் வளைக்கிறான். ஆனால், அவன் ஆசிரியர் இருகோ யுமினோ அதைத் தடுத்து விடுகிறார். முஜுகியிடமிருந்து நருடோவைக் காப்பாற்றும் முயற்சியில் இருகோ கிட்டத்தட்ட இறந்தே விடும்போது, சுருளில் இருக்கும் சக்தியை உபயோகித்து நருடோ மிஜூகியைத் தோற்கடிக்கிறான். இது சக்தி நிழல் உருவெடுக்கும் உத்தி யான அமானுஷ்ய ஜுட்ஸு சக்தி யாக உருவெடுக்கிறது. இதன் மூலம் அவன் தன்னிடமிருந்தே பல உருவங்களை உருவாக்குகிறான். இந்தச் சண்டையின்போதுதான் நருடோ தனக்குள் வேதாள் ஓநாய் இருப்பதை உணர்கிறான். இதில் பிரதானமான கதை நருடோ மற்றும் அவனது நண்பர்களின் வளர்ச்சியைப் பின் தொடர்கிறது. நருடோ சசுகே உசிஹா மற்றும் சகுரோ ஹருனோ என்னும் இருவரிடம் நட்பு கொள்கிறான். இவர்கள் ககாஷி ஹடாகே என்னும் பெயர் கொண்ட அனுபவம் வாய்ந்த "சென்செய்" தலைமையில் குழு ஏழு என்ற பெயரில் ஒரு மூவர் குழுவை அமைக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிஞ்ஜா குழுக்களைப் போலவே, குழு ஏழும் கிராமத்தார்கள் வேண்டிக் கொள்வதன் பேரில் மெய்க்காப்பாளர்களாக இருப்பதைப் போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒரு முக்கியப் பணியாற்றும்போது, இந்தத் தொடரில் தான் சந்திக்கும் பிற கதாபாத்திரங்களையும் நருடோ தனக்கு நண்பர்களாக்கிக் கொள்கிறான். அவர்கள் புதிய ஆற்றல்களைப் பெறுகிறார்கள். ஒருவரை ஒருவரும் மற்றும் கிராமத்தாரையும் நன்கு அறிந்து கொள்கிறார்கள். இந்த அனுபவங்களினால், கொனொஹாகுரே கிராமத்தில் ஹொக்கேஜ் ஆக வேண்டும் என்ற நருடோவின் கனவும் கனியும் காலம் நோக்கிப் பயணம் தொடர்கிறது. இதைப் போல பல சாகசங்களை ஆற்றிய பிறகு, குழு ஏழின் உறுப்பினர்களை ஒரு நிஞ்ஜா தேர்வில் கலந்து கொள்ள ககாஷி அனுமதி அளிக்கிறார். இதன் மூலம், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டு, மேலும் கடினமான சாகசங்களில் ஈடுபடலாம். இந்தத் தேர்வின்போது, கொனாஹாகுரேவில் மிகவும் தேடப்படும் தீயவனான ஒரொகிமரு கொனாஹோவைத் தாக்கி மூன்றாம் ஹோக்கேஜை கொன்று பழி தீர்த்துக் கொள்கிறான். இதன் காரணமாக மிகவும் புகழ் பெற்ற நிஞ்ஜாவான ஜிரையா தன் பங்காளியான சுனாடேவை ஐந்தாவது ஹொக்கேஜ் ஆவதற்காகத் தேடுகிறார். அவ்வாறு தேடும்போது, ஒரோகிமருவும் சசுகே உசிஹாவை, அவன் பரம்பரையான சக்திப் பாராம்பரியத்திற்காக அடைய விரும்புகிறான் என்று தெரிய வருகிறது. தன் இனம் முழுவதையுமே அழித்த தன் சகோதரன் இடாசி யை அழிக்க ஒரோகிமரு சக்தி அளிப்பான் என்று நம்பி, சசுகே அவனிடம் செல்கிறான். சசுகேவைக் கொனாஹாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்காக நருடோ உள்ளிட்ட ஒரு குழுவை சுனாடே அனுப்புகிறார். ஆனால், நருடோவால், அவனை வீழ்த்த முடிவதில்லை. நருடோ சசுகேவை விடுவதில்லை; அடுத்த முறை சசுகேவுடன் போரிடும்போது தேவையான சக்தி பெற தன்னைத் தயார் செய்து கொள்ளும் முயற்சியில், கொனாஹாவை விட்டு வெளியேறி ஜிரையாவிடம் இரண்டரை வருடங்கள் பயிற்சி பெறச் செல்கிறான். பயிற்சிக் காலத்திற்குப் பிறகு, அகாட்சுகி என்னும் ஒரு மர்மமான நிறுவனம் சக்தி வாய்ந்த, ஒன்பது வால் மிருகங்களைக் கைப்பற்ற முயல்கிறது; இவற்றுள் நருடோவிற்குள் அடைபட்டிருக்கும் ஒன்பது வால் கொண்ட வேதாள ஓநாயும் அடக்கம். கொனாஹாகாகுரேவிலிருந்து, குழு ஏழு உள்ளிட்டு பல நிஞ்ஜாக்களும் அகாட்சுகியின் அங்கத்தினர்களை எதிர்த்துப் போராடி தங்கள் குழுவின் உறுப்பினனான சசுகேயையும் தேடுகிறார்கள். காரா என்னும் ஒரு வால் கொண்ட மிருகத்திடமிருந்து அவர்கள் தங்கள் புரவலரைக் காப்பாற்றியபோதும், அவற்றில் ஏழு மிருகங்களை அகாட்சுகி கைப்பற்றி விடுகிறான். இதனிடையில் சசுகே ஒரோகிமருவிற்கு துரோகமிழைத்துப் பழி வாங்க இடாசியை எதிர் கொள்கிறான். இந்தப் போரில் இடாசி இறந்து விட்டாலும், கொனாஹாகாகுரேவின் தலைமையால் அவன் இனம் முழுவதையும் அழிக்கும்படி இடாசி ஆணையிடப்பட்டதாகப் பிற்பாடு அகாட்சுகியின் நிறுவனர் மதரா உசிஹா சசுகேவிடம் கூறுகிறார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமடையும் சசுகே கொனாஹாகாகுரேவை அழிக்க அகாட்சுகியுடன் இணைந்து கொள்கிறான். இதனிடையே, பல அகாட்சுகி அங்கத்தினர்கள் கொனாஹாகாகுரே நிஞ்ஜாக்களால் தோற்கடிக்கப்படவே, அதன் தலைவனான பெயின் நருடோவைக் கைப்பற்ற கிராமத்திற்குப் படையெடுக்கிறான். இருப்பினும் நருடோ பெயினின் அனைத்து உருவங்களையும் தோற்கடிக்கிறான்; நிஜமான பெயினிடம் போய்விடுமாறு கூறி அவனைச் சம்மதிக்க வைக்கிறான். கொனாஹாகாகுரே மீண்டும் அமைக்கப்படுகிறது. கிராமத்தார்களை பெயினிடமிருந்து காப்பதற்காக தன் சக்தி அனைத்தையும் செலவழித்து விட்டதால், சுனுடே மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விடவே அந்த கிராமத்தின் ஹொக்கேஜ் பதவியிலிருந்து விலக்கப்படுகிறாள். இதனால், முதியவரான டான்சோ விரைந்து அந்தப் பதவியைக் கைப்பற்றுகிறார். மசாஷி கிஷிமோடோ முதலில் "நருடோ" வை"அகமாரு ஜம்ப்" 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஒரிதழுக்காக உருவாக்கினார். அதற்கு மிக நேர்மறையான விளைவுகளும், வாசகர்களின் ஆதரவான ஓட்டெடுப்பும் இருந்தபோதிலு, கிஷிமோடோ, "(அந்த) ஓவியம் மோசமாக இருக்கிறது; கதை கந்தல்!" என்றுதான் நினைத்தார். முதலில் "ஹாப் ஸ்டெப் விருது" க்காக கிஷிமோடோ "கராகுரி" யைத்தான் தயார் செய்து கொண்டிருந்தார். அதன் ஆரம்ப வரைவுகளில் திருப்தி அடையாத அவர் வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க விரும்பி, பிறகு மேங்கா தொடராக "நருடோ" வை உருவாக்கினார். சக்கரங்கள் மற்றும் கைக்குறிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது "நருடோ" வுக்கு மிகவும் ஜப்பானிய சாயல் அளித்து விடும் என்று கிஷிமோடோ கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், அது நன்கு அனுபவிக்கும் வகையில் படிக்கத் தகுந்ததாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதலில் "நருடோ" வை உருவாக்கும்போது மற்ற "ஷோனென் " மேங்காக்களையும் அவற்றின் செல்வாக்கு சிறிது தமது படிமத்தில் பெறுவதற்காக பார்த்தார். ஆயினும், அவர் தனது கதாபாத்திரங்களை முடிந்தவரை தனித்துவம் கொண்டவைகளாகவே வடிக்க முயன்றார். கதாபாத்திரங்களை வெவ்வேறு குழுக்களாக அவர் பிரித்தது, அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு சுவையூட்டுவதற்காகத்தான். கிஷிமோடோ குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் "தீவிரமாக" ஒரு குறிப்பிட்ட குண நலனில் மிக அதிகமான ஆர்வமும், இருப்பினும் மற்றொன்றில் கொஞ்சம் கூடத் திறமையின்றியும் இருப்பது போல அமைக்க விரும்பினார். கதையில் வில்லன்களைப் புகுத்தியது, கதாபாத்திரங்களின் ஒழுக்க மதிப்புகளுக்கு மாற்றான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு மதிப்பீடுகளில் இருக்கும் வேற்றுமையே கதையின் வில்லன்கள் உருவாக்கப்பட்டதற்கு பிரதான காரணம் என்று கிஷிமோடோ ஒப்புக் கொள்கிறார். "போராட்டத்தின் போது நான் அவர்களைப் பற்றி நினைப்பதே இல்லை" என்று கிஷிமோடோ கூறும் அளவு இந்த வேறுபாடு உள்ளது. ஒரு கதாபாத்திரத்தை படமாக வடிக்கும்போது, கிஷிமோடோ மிகக் கச்சிதமாக ஐந்து அம்சம் கொண்ட ஒரு செயற்பாட்டைப் பின்பற்றுகிறார்: கருத்து, ஆரம்பக் கோட்டு வரைவுகள், பட வரைவுகள், மசியிடுவது, ஒளி பேதம் காட்டுவது, நிறம் அளிப்பது. அவர் பொதுவாக "டாங்கோபான்" அட்டையையும். "வீக்லி ஷோனென் ஜம்ப்" அட்டையையும் மற்றும் இதர ஊடகங்களையும் அலங்கரிக்கும் அசலான மேங்கா படங்களை வரையும்போதும் இந்த வழிமுறைகளைத்தான் கடைப்பிடிக்கிறார். ஆனால் இதற்காக அவர் பயன்படுத்தும் கருவிப் பெட்டி அவ்வப்போது மாறுகிறது. உதாரணமாக, "வீக்லி ஷோனென் ஜம்ப்" அட்டைப் படத்திற்கு ஒரு படம் வரைவதற்காக ஒரு காற்றுத் தூரிகை பயன்படுத்தினார்.. ஆனால், அதை மிகுந்த அளவில் சுத்தம் செய்யத் தேவைப்பட்டதால், பிறகு அதை உபயோகிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார். 28வது வால்யூமுடன் தொடங்கும் மேங்காவின் பாகம் IIவிற்காக, "மிக அதிக அளவில் உருக்குலைப்பை" கடைப்பிடித்து "உதாரணமான மேங்கோ பாணியை மிகைப்படுத்தி விடக் கூடாது" என்று தான் முயன்றதாக கிஷிமோடோ குறிப்பிட்டார். மேலும், வாசகர்கள் தங்கு தடையின்றிப் படிப்பதற்கு வசதியாக புத்தக அமைப்புகளை அவர் அமைத்தார். தான் வரையும் முறைமை, "பழமையான மேங்கோ பாணியிலிருந்து" வேறுபட்டு "மேலும் இயற்கையாக" மாறியதாக கிஷிமோடோ கூறினார். "நருடோ" ஒரு "ஜப்பானிய மாய உலகில்" நடைபெறுவதால், கதையை "எளிதில் எடுத்துச் செல்வதற்கு" அதற்கென்று ஒரு முறைப்படுத்தப்பட்ட வகையில் சில விதிகளை தான் வைத்ததாக கிஷிமோடோ கூறினார். ஜப்பானில் மிகுந்த காலமாக அறிமுகம் பெற்றிருந்த சீன ராசிச் சக்கரக் குறியீடுகள் பாணியில் வரைவதற்கு கிஷிமோடோ விரும்பினார்; ராசிச் சக்கர கைக்குறிகள் இதிலிருந்து வந்தவைதாம். "நருடோ" வுக்கான பின்புலத்தை அமைக்கும்போது, கிஷிமோடோ தொடக்கத்தில் தொடரின் முதன்மையான வடிவமைப்பான, கொனொஹாகாகுரே கிராமத்திற்கான வடிவமைப்பில் கவனம் செலுத்தினார் இந்த கொனொஹாகாகுரேவுக்கான வடிவமைப்பை "மிகவும் தன்னிச்சையாக, அதிகம் யோசிக்காமல்" வடித்ததாக கிஷிமோடோ அடித்துக் கூறுகிறார்; ஆனால், இயற்கைக் காட்சிகள் ஜப்பான் ஒகயமா ப்ரிஃபெக்சர் பகுதியில் உள்ள தன் வீட்டின் அடிப்படையிலேயே உருவாக்கியதாக ஒப்புக் கொள்கிறார். கிஷிமோடோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குட்பட்டு இதை வரையறுக்காது நவீன தனிமங்களையும் இந்தத் தொடரில் புகுத்தினார், உதாரணமாக பெரும் அங்காடிகள். ஆனால், குண்டு வீசும் ஆயுதங்களையும் வாகனங்களையும் கதையிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டார். இதற்காக மேற்கோள் நூல்களுக்கு, ஜப்பானிய கலாசாரம் மற்றும் அவற்றின் உட்பொருள் ஆகியவற்றில் கிஷிமோடோ தாமே ஆராய்ச்சி மேற்கொள்கிறார். தொழில் நுட்பத்தைப் பொறுத்த வரையில் "நருடோ" வில் சுடுகலன்கள் ஏதும் இருக்காது என்று கிஷிமோடோ கூறினார். தானியங்கி வாகனங்கள், விமான ஊர்திகள் மற்றும் "குறைந்த வேகத்தில் செயல்படும்" , அதாவது எட்டு-பிட் கொண்ட, ஆனால் "நிச்சயமாக 16-பிட்" அல்லாத கணினிகளைத் தாம் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். மேலும், இந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்தின் வரைவுப் படம் மற்றும் உரை தமது மனக் கண்ணில் ஒரு காட்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், இந்தத் தொடரை முடிப்பதற்கு நீண்ட காலமாகலாம் என்றும் அவர் கூறுகிறா, காரணம், "இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இதில் உள்ளன." "நருடோ"வின் பாகம் I அளிக்கும் பிரதான கருத்து என்னவென்று அவரிடம் வினவியபோது, நருடோ அதில் மேம்படும் நிலையைச் சுட்டிக் காட்டி, மக்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் மையக் கருத்து என்று கூறினார். முதலாம் பாகத்தில், காதலில் மிகுந்த கவனம் செலுத்த முடியாததால், இரண்டாம் பாகத்தில், மிகுந்த கடினமாக இருப்பினும், இந்தக் கருத்தை வலியுறுத்த நேர்ந்தது. ஷுயெஷாவின் "வீக்லி ஷொனென் ஜம்ப்" பத்திரிகையில் 1999வது வருடம் "நருடோ" முதன் முதலாக வெளியானது. இதன் முதல் 238 அத்தியாயங்கள் பாகம் I என்று அறியப்படுகின்றன. இவை "நருடோ" கதையின் முதற்பகுதியாக அமைந்துள்ளன. மேங்காவின் அத்தியாயங்கள் 239 தொடங்கி 244 வரை "கெய்டன்" தொடரை உள்ளடக்கியுள்ளன. இதில் ககாஷி ஹடாகேயின் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இதையடுத்து வரும் அத்தியாயங்கள் அனைத்தும் பாகம் II பகுதியைச் சேர்ந்துள்ளன. இது, முதலாம் பாகத்தில் இருந்த கதையை இரண்டரை வருட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து கொண்டு செல்கிறது. வட அமெரிக்கா வில் விஜ் மீடியா தங்களது மேங்கா திரட்டு பத்திரிகையான "ஷொனென் ஜம்ப்" பத்திரிகையில் 2003ஆம் ஆண்டு ஜனவரி இதழில் ஆங்கில வடிவில் அளிக்கப்பட்ட முதல் அத்தியாயத்துடன் "நருடோ" வைத் தொடராக்கினார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளின் வெளியீடுகளுக்கான இடைவெளியைக் குறைப்பதற்காக, விஜ் "நருடோ நேஷன்" என்ற திட்டத்தைத் துவக்கியது. இதில் ஒரு மாதத்தில் மூன்று தொகுப்புக்கள் என்று 2007ஆம் வருடம் கடைசி நாலு மாதங்களும் வெளியிட்டது. இதற்கான முக்கிய காரணம், ஜப்பானிய பதிப்பு வெளியாகும் நேரத்தில் உள்ள இடைவெளியைக் குறைத்து அதனுடன் சேர்ந்து கொள்வதன் மூலம், தமது வாசகர்களும் ஜப்பானிய வாசகர்கள் பெறும் அனுபவத்தைப் போன்றே பெறலாம் என்பதுதான் என்று விஜ்ஜின் பொருள் மேலாளர் காமி ஆலென் கூறினார். 2009வது ஆண்டிற்கும் இதையொத்த ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதில் இரண்டாம் பாகத்திலிருந்து பதினொரு தொகுப்புக்கள் பிஃப்ரவரி முதல் ஏப்ரல் வரை வெளியிடப்பட்டு, ஜப்பானிய தொடர் வெளியீட்டின் கால அளவை எட்டிப்பிடித்து விடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஜீலை மாதம் நாற்பத்தைந்தாவது தொகுப்பு வெளியாவதைத் தொடர்ந்து "நருடோ" காலாண்டு அடிப்படையில் வெளியாகும். 47 "டங்கோபோன்" ஜப்பானில் உள்ள ஷெயிஷாவால் முதல் இருபத்தேழு "டங்கோபோன்" முதலாம் பாகம் எனவும் ஆகவும், மீதமுள்ள பத்தொன்பது இரண்டாம் பாகம் எனவும் வெளியாகி உள்ளன. முதல் "டாங்கோபோன்" 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் வெளியானது.. மேலும், "நருடோ" திரைப்படங்களில் ஒன்றின் அடிப்படையில் "மேங்காவுக்கு எதிரான" பல "டாங்கோபோன்" ஷெயிஷாவால் வெளியிடப்பட்டுள்ளன. "ஷெயிஷா காப்ஸ்யூல்" என்னும் தங்களது வலைத்தளத்தில் ஜப்பானிய மொழியில் இந்தத் தொடரை அலைபேசியில் இறக்கிக் கொள்ளும் வசதியுடன் ஷெயிஷா வெளியிட்டுள்ளது. மேங்காவின் ஆங்கில வடிவத்தின் 45 தொகுப்புக்களை விஜ் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வெளியானது. மேலும், விஜ் மீடியா இருபத்தேழு தொகுப்புக்கள், இதில் இரண்டாம் பாகத்திற்கு முன்னால் உள்ள "நருடோ" வின் கதை முழுதுமாக இருக்குமாறு, 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் நாள் ஒரு பெட்டியில் வைத்து வெளியிட்டுள்ளது. ஹயாடோ டேட் இயக்கி, ஸ்டுடியோ பையிரெட் மற்றும் டிவி டோக்கியோ தயாரிப்பில் உருவான "நருடோ" வின் அசைவூட்ட வடிவம், முதலில் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாளன்று ஜப்பானின் டிவி டோக்கியோவில் வெளியாகி 220 நிகழ்வுகள் வரை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் எட்டாம் தேதி முடிவடைந்தது. இதன் முதல் 135 நிகழ்வுகள் மேங்காவின் முதல் 27 தொகுப்புக்களில் இருந்து தழுவப்பட்டது. மீதமுள்ள 80 நிகழ்வுகள் மூல மேங்காவில் இல்லாத புதிதாக எழுதப்பட்டவை. இந்த தொடரின் நிகழ்வுகள் ஒளிப்பேழைகளாகவும் வெளியாகியுள்ளன. முதல் ஒளிப்பேழைத் தொடர் மட்டுமே விஹெச்எஸ் வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து தொடர்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு நிகழ்வுகள் உள்ளன. 2009 வருடம் இந்தத் தொடர்கள் 3 டிவிடி பெட்டிகளிலும் தொடராக சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதியதாக வந்திருக்கும் ஒளிக்காட்சித் தொடர், "நருடோ, தி பெஸ்ட் சீன்" . இது அசைவூட்ட முறையில் வந்திருக்கும் முதல் 135 நிகழ்வுகளிலிருந்து சிறந்தனவற்றை தேர்ந்தெடுத்ததாகும். இந்த அசைவூட்டத் தொடரை ரீஜன் 1 என்பதில் ஒளி பரப்பவும், பகிர்மானம் கொள்ளவும் விஜ் உரிமம் வழங்கியுள்ளது. இந்த அசைவூட்டத்தின் ஆங்கில வடிவம் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முடிவடைந்தது. இது மொத்தம் 209 நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வுகள், கார்டூன் நெட்வொர்க் கின், டுனாமி, (அமெரிக்க ஐக்கிய நாடு), ஒய்டிவியின் பயோனிக்ஸ் (கனடா), மற்றும் ஜெடிக்ஸ் (ஐக்கிய இராச்சியம்) ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. ஒய்டிவி இன்னமும் புதிய நிகழ்வுகளை ஞாயிறு நள்ளிரவுகளில் முதல் ஒளிபரப்பாகவும், மற்றும் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் மறு ஒளிபரப்பாகவும் அளிக்கிறது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் நாள் தொடங்கி, தொடரை ஒளிப்பேழைகளிலும் விஜ் வெளியிட்டது. ஒளிப்பேழைத் தொகுப்புக்கள் ஐந்து எபிசோடுகளைக் கொண்டிருப்பதால், இவற்றின் முதல் 26 தொகுப்புக்களில் நான்கு நிகழ்வுகள் உள்ளன. வெட்டாத வடிவங்கள் ஒளிப்பேழைப் பெட்டித் தொடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் 12-15 நிகழ்வுகள் உள்ளன. கதையின் போக்கில் சற்று மாறுபாடும் காணப்படுகிறது. அமெரிக்க ஒளிபரப்பில், சில சமயங்களில் மது, ஜப்பானிய கலாசாரம், மறைமுகமான பாலியல் குறியீடுகள் மற்றும் ரத்தம் மற்றும் மரணம் போன்றவை வெட்டுக்குள்ளாயின. ஆனால், ஒளிப்பேழைப் பதிப்புக்களில் இவை இடம் பெற்றுள்ளன. மற்ற வலைப்பின்னல்கள் கார்ட்டூன் நெட்வொர்க் செய்த தொகுப்புக்களைத் தவிர, வேறு வகையிலும் கதையை வெட்டித் தொகுத்துள்ளன. உதாரணமாக, ரத்தம், மொழி, புகைபிடித்தல் போன்றவற்றை ஜெடிக்ஸ் நிர்தாட்சண்யமாக வெட்டி விட்டதைக் குறிப்பிடலாம். இத்தொடர்களுக்கான உரிமம், ஹுலு, ஜூஸ்ட் மற்றும் க்ரன்ச்சிரோல் ஆகிய வலைத்தளங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை நேரடிக் கணினி முறைமையில் நிகழ்வுகளை அவற்றின் ஜப்பானிய ஒலித் தடங்கள் மற்றும் ஆங்கில துணைத் தலைப்புக்களுடன் வெளியிடுகின்றன. இது "நருடோ" மூல அசைவூட்டத்தின் தொடர்ச்சியாகும். இது "நருடோ" மேங்காவை அதன் 28ஆம் தொகுப்பு முதல் பின்தொடர்கிறது. "நருடோ: ஷிப்புடென்", தொலைக்காட்சிக்காகத் தழுவப்பட்டு ஜப்பானில் 2007ஆம் ஆண்டு பிஃப்ரவரி 15 அன்று முதலில் ஒளிபரப்பானது. இதனை ஹயாடே டேட் இயக்கத்தில் பையரெட்டா ஸ்டுடியோ உருவாக்கியது.. "நருடோ ஷிப்புடென்" தொடரை முதன்முதல் ஜப்பானுக்கு வெளியே ஒளிபரப்பிய தொலைக்காட்சி வலைப்பின்னல் ஏபிஎஸ்-சிபிஎன். இது "நருடோ:ஷிப்புடென்" தொடரின் முதல் 40 நிக்ழ்வுகளை 2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வரை ஒளிபரப்பியது. 2009ஆம் ஆண்டு ஜனவரி எட்டு முதல் டிவி டோக்கியோ புதிய நிகழ்வுகளை இணைய தள தாரை வழியாக நேரடியாகவே மாதாந்திர வாடிக்கையாளர்களுக்காக ஒளிபரப்பத் துவங்கியது. இதில் ஒவ்வொரு நிகழ்வும், அதன் இணையான ஜப்பான் நிகழ்வு வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, ஆங்கிலத் துணைத் தலைப்புக்களுடன் கிடைக்கப் பெறுகிறது. இந்த தொடருக்கான அதிகார பூர்வமான வலைத்தளத்தில், ஆங்கில துணைத்தலைப்புக்களுடனான எபிசோடுகளை 2009ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் தேதி முதல் விஜ் வழங்கத் துவங்கியது. வலைத் தளமேற்றப்படும் நிகழ்வுகளில் பழையனவும் உண்டு; ஜப்பானிலிருந்து கிடைக்கப்பெறும் புதிய நிக்ழ்வுகளும் உண்டு. 2009ஆம் வருடம் அக்டோபர் மாதம் துவங்கி "நருடோ: ஷிப்புடென்" தொடரின் ஆங்கில மொழியாக்கம் ஒவ்வொரு வாரமும் டிஸ்னி எக்ஸ்டியில் ஒளிபரப்பாகத் துவங்கியது. இந்த தொடர் ரீஜன் 2 ஒளிப்பேழையாக ஜப்பானில் வெளியாகிறது. இது ஒரு தகட்டில் நாலு அல்லது ஐந்து நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் கதையோட்டத்தைப் பொறுத்து தற்சமயம் நாலு ஒளிப்பேழைத் தொடர் வெளியீடுகள் உள்ளன. "நருடோ ஷிப்புடென்" ஒளிப்பேழையின் ஏழாவது தொகுப்பில் ஒரு சிறப்பு விடயமும் உள்ளது. இது தொடரின் "ஹரிகேன்!" என்றழைக்கப்படும் இரண்டாவது முடிவாகும். ""கொனொஹா அகாடமி" வரலாறுகள்" . வழக்கமான ஒளிப்பேழைத் தொடர்கள் தவிர, ககாஷி ஹடாகேயின் குழந்தைப் பருவத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்ட நிகழ்வுகள் 119-120 ஆகியவை என்று பெயரிடப்பட்ட ஒரு ஒளிப்பேழையாக வெளியிடப்படும். 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று தொடரின் முதல் வட அமெரிக்க ஒளிப்பேழை வெளியானது. "நருடோ" வுக்கான இசைப்பதிவுகள் டோஷியோ மசுடாவால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டன. முதலாவதாக வந்த "நருடோ அசல் ஒலித்தடம்" 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் வெளியானது. இது அசைவூட்டத்தின் முதற்பருவத்தில் வந்த 27 தடங்களைக் கொண்டிருந்தது. "நருடோ அசல் ஒலித்தடம் II" என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ஒலித்தடம் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 அன்று வெளியானது. இதில் 19 தடங்கள் இருந்தன. "நருடோ அசல் ஒலித்தடம் III" என்று அழைக்கப்பட்ட மூன்றாவது ஒலித்தடம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 அன்று வெளியானது. இதில் இருபத்தி மூன்று தடங்கள் இருந்தன. தொடரின் ஆரம்ப மற்றும் முடிவுப் பகுதிகளின் மையக் கருத்துக்கள் அனைத்தையும் கொண்ட இரண்டு ஒலித்தடங்கள் ""நருடோ: மிகவும் பிரபலத் தொகுப்புக்கள்" " மற்றும், ""நருடோ: மிகவும் பிரபலத் தொகுப்புக்கள் II" " எனப் பெயரிடப்பட்டு, 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டு ஆகிய தினங்களில் வெளியானது. இத்தொடரில் உள்ள அனைத்து ஒலித்தடங்களிலிருந்தும் எட்டு தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, "நருடோ இன் ராக் - தி வெரி பெஸ்ட் கலெக்ஷன் - இன்ஸ்ட்ருமெண்டல் வர்ஷன்" - என்று பெயரிடப்பட்டு 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 அன்று வெளியானது. முதல் அசைவூட்டத் தொடரின் மூன்று திரைப்படங்களும் அவை ஒவ்வொன்றும் வெளியிடப்படுவதற்கு அருகாமையில் வெளியிடப்பட்ட ஒரு ஒலித்தடத்தைக் கொண்டுள்ளன. பல நாடகக் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குரல் கொடுக்கும் நடிகர்கள், மூல நிகழ்வுகளை நடிக்கிறார்கள். "நருடோ: ஷிப்புடென்" னின் ஒலித்தடங்களை யசுஹாரு டகனாஷி தயாரித்துள்ளது. இதில் முதலாவதான, "நருடோ ஷிப்புடென் அசல் ஒலித்தடம்" 2007ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் நாள் வெளியானது. "நருடோ ஆல் ஸ்டார்ஸ் " 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 அன்றுவெளியானது. இதில் பத்து மூல "நருடோ " பாடல்களை மீண்டும் இசையாக்கம் செய்து தொடரின் கதாபாத்திரங்கள் பாடியுள்ளனர். இதன் இணையான இரண்டு படங்களிலும் அவற்றிற்கான ஒலித்தடங்கள் இருந்தன. இதில் முதலாவாது 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி மற்றும் இரண்டாவது 2008ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் நாள் அன்றும் வெளியாகின. "நருடோ" நான்கு மூல ஒளிக்காட்சி அசைவூட்டங்கள் கொண்டுள்ளது. முதல் இரண்டு, "ஃபைண்ட் தி க்ரிம்ஸன் ஃபோர்-லீஃப் க்ளாவர்!" மற்றும் "மிஷன்:ப்ரொடெக்ட் தி வாடர்ஃபால் வில்லேஜ்!" , முறையே "ஷோனென் ஜம்ப்" ஜம்ப் ஃபியஸ்டா 2003ஆம் ஆண்டும் மற்றும் ஜம்ப் ஃபியஸ்டா 2004ஆண்டும் ஒளிபரப்பாயின. பின்னர் இவை ஒளிப்பேழைகளாகவும் வெளியாயின. இரண்டாவதன் ஆங்கில வட்டாரவழக்கு ஒளிப்பேழையை 2007ஆம் ஆண்டு மே 22 அன்று விஜ் வெளியிட்டது. மூன்றாவது ஓவிஏ," ஃபைனலி எ க்ளேஷ்!" "ஜோனின் வர்சஸ் ஜோனின்!!" "இண்டிஸ்க்ரிமினேட் க்ராண்ட் மெலீ டூர்னமென்ட் மீட்டிங்", "" விளையாடுத் தள ஒரு ஒளிக்காட்சி விளையாட்டு என்னும் ஒரு கூடுதல் தகட்டுடன் இணைந்து வெளியானது. நான்காவது, "கொனாஹா ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்" முதல் "நருடோ" திரைப்படத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறு ஒளிக்காட்சியாகும். வட அமெரிக்காவில், முதல் படத்திலிருந்து பெறப்பட்ட "டீலக்ஸ் எடிஷன்" ஒளிப்பேழையில் இது சேர்க்கப்பட்டது. இந்தத் தொடர் ஆறு திரைப்படங்களையும் உருவாக்கியுள்ளது; முதல் மூன்றும் முதல் அசைவூட்டத் தொடரிலிருந்தும், மீதமுள்ளவை "நருடோ: ஷிப்புடென் " னிலிருந்தும் உருவாயின. முதல் திரைப்படமான "" 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று ஜப்பானில் வெளியானது. இதில் புதிய இளவரசி ஃபுன் திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது அதன் நடிகர்களைக் காப்பாற்ற எப்படி குழு ஏழு பனி நிலத்திற்குச் செல்கிறது, எப்படி நருடோ அவளது விசிறியாகிறான் என்பதை விவரிக்கிறது. ஜப்பானில் வெளியான திரைப்படத்துடன் ஒரு இலவச இணைப்பாக, ஒரு சிறு மூல அசைவூட்ட ஒளிக்காட்சியான "கொனாஹா ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்" சேர்க்கப்பட்டது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் நாள் ஜப்பான் திரையரங்குகளில் "" வெளியானது. முதல் படம், நருடோ, ஷிகாமரு மற்றும் சகுரா ஆகிய மூவரும் தாங்கள் ஒரு பணியின் நிமித்தமாகச் செல்லும்போது சுங்காகுரே கிராமத்தினருக்கும், ஆயுதப் படையினருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதைச் சித்தரிக்கிறது. இதற்கு முந்தைய படத்தைப் போலல்லாது, "லெஜண்ட் ஆஃப் தி ஸ்டோன் ஆஃப் ஜெலல்" அமெரிக்க ஐக்கிய நாட்டில் திரைப்படமாக வெளியாகாது, நேரடியான ஒரு ஒளிக்காட்சியாகவே வெளியானது. கார்ட்டூன் நெட்வொர்க்கில் இது 2008ஆம் ஆண்டு ஜுலை 26 அன்று ஒளிபரப்பானது. ஒளிப்பேழையாக 2008ஆம் ஆண்டு ஜுலை 29 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது படமான "" 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் நாள் வெளியானது. இது சந்திர நிலத்தின் வருங்கால இளவரசன் ஹிகாரு ட்சுகியைக் காப்பதற்கு நருடோ, சகுரா லீ மற்றும் ககாஷி ஆகியோர் பணிக்கப்படுவதை சித்தரிக்கிறது. இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி, ஒளிப்பேழையாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 அன்று வெளியானது. இந்த முதல் மூன்று படங்களையும் கொண்ட ஒரு ஜப்பானிய ஒளிப்பேழைப் பெட்டியை சோனி நிறுவனம் 2008ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி வெளியிட்டது. இந்தத் தொடரின் நாலாவது படம்"" 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் நாலாம் தேதி வெளியானது. இது தன் மரணத்தைப் பற்றிய அகக்காட்சிகள் பெறத்துவங்கும் துறவி ஷியோனைக் காப்பதற்கு நருடோ பணிக்கப்படும் வரலாற்றைக் கூறுகிறது. ஐந்தாவது திரைப்படம்"" 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியானது. இதில் வான நாட்டிலிருந்து ஒரு நிஞ்ஜா கொனாஹாவைத் தாக்குவதையும், அவர்களைத் தடுப்பதற்காக நருடோவும் சசுகேவும் - இதில் பின்னவர் இரண்டரை வருடம் முன்பே சென்று விட்டாலும் - எப்படி இணைகிறார்கள் என்பதும் விவரிக்கப்படுகிறது. அண்மையில் வெளிவந்த திரைப்படம்"", 2009ஆம் வருடம் ஆகஸ்ட் முதலாம் நாள் ஜப்பானில் வெளியானதாகும். மசாடொஷி குசாகாபெ எழுதிய மூன்று "நருடோ" இளஞர்களுக்கான புதினங்கள் ஜப்பானில் ஷெயிஷாவால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரண்டினை வட அமெரிக்காவில் விஜ் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது, குழு ஏழு தாங்கள் ஒரு பணி நிமித்தமாகச் செல்லும்போது, கொலைகாரர்களான ஜபுஜா மற்றும் ஹாகு ஆகிய இருவரையும் எதிர்கொள்வதைச் சித்தரிக்கிறது. இது ஜப்பானில் 2002ஆம் ஆண்டு டிசம்பர் 16, அன்றும், வட அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டு நவம்பர் 21, அன்றும் வெளியானது. அசைவூட்டத்தின் இரண்டாவது அசல் ஒளிக்காட்சியை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது புதினம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று ஜப்பானிலும், 2007ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பிரசுரமானது. கடைசியாக வந்துள்ள நாவல், தழுவலாகும். இது 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பிரசுரமானது. இவை தவிர, டிரேசி வெஸ்ட் எழுதி, மேங்கா சித்திரங்கள் கொண்ட சேப்டர் புத்தகங்கள் என்னும் புதிய புதினங்களையும் விஜ் பிரசுரிக்கத் துவங்கியுள்ளது. இவை தொடர்களைப் போல் அல்லாமல், இப்புதினங்கள் ஏழு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு நாவல்களும் 2008ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி வெளியாயின. இதுவரை ஏழு புதினங்கள் பிரசுரமாகியுள்ளன. நிண்டெண்டோ, சோனி மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பல முனையங்களில் (கன்சோல்) "நருடோ" ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் தோன்றியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை, சண்டை விளையாட்டு க்களே. இதில் விளையாடுபவர் "நருடோ" அசைவூட்டம் மற்றும் மேங்காவை நேரடி அடிப்படையாகக் கொண்டுள்ள குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் ஒன்றைக் கட்டுப்படுத்துகிறார். விளையாடுபவர் தமது விளையாட்டின் முறைமையைப் பொறுத்து, ஒரு பாத்திரத்தை, விளையாட்டின் செயற்கை அறிவு, (Artificial Intelligence), அல்லது மற்றொரு விளையாடுபவர் கட்டுப்படுத்தும் இன்னொரு பாத்திரத்திற்கு எதிராக வைக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்தியேகமாக உள்ள- அவை "நருடோ" அசைவூட்டம் அல்லது மேங்காவில் பயன்படுத்திய - உத்திகளைப் பயன்படுத்தி செய்யும் அடிப்படைத் தாக்குதல்களினால் எதிராளியின் சக்தியைப் பூஜ்யமாக்குவதுதான் இந்த விளையாட்டின் குறிக்கோள். "நருடோ" வில் முதல் விளையாட்டு "நருடோ:கொனாஹா நின்போச்சா " என்பதாகும். இது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 அன்று ஜப்பானில் வொண்டர்ஸ்வான் கலர் என்பதற்காக வெளியானது. பெரும்பான்மையான "நருடோ" ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் ஜப்பானில்தான் வெளியாகியுள்ளன. முதன் முறையாக ஜப்பானுக்கு வெளியில் வெளியான விளையாட்டுக்கள்: "" தொடர் மற்றும் "" தொடர் ஆகியவையாகும். இவை வட அமெரிக்காவில், "நருடோ: க்ளாஷ் ஆஃப் நிஞ்ஜா " மற்றும் "நருடோ: நிஞ்ஜா கௌன்சில்" போன்ற தலைப்புகளில் வெளியாகின. என்பது "நருடோ" தொடர்களின் அடிப்படையில் உருவான அட்டைகள் சேகரிக்கும் விளையாட்டு. பண்டாய் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு முதலில் ஜப்பானில் 2003ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் அறிமுகமானது. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, இந்த விளையாட்டு வட அமெரிக்காவில் ஆங்கிலத்திலும் வெளியாகத் துவங்கியது.. இது இரண்டு பேர் விளையாடுவதற்கானது. விளையாடுபவர்கள் வடிவமைக்கப்பட்ட 15 அட்டைகளையும், ஒரு விளையாட்டுப் பாய், யாருடைய ஆட்டம் என்பதைக் குறிக்கும் ஒரு "ஆட்டக்குறியான்" மற்றும் முடிவுகளை எடுக்க சுண்டி விடப்படும் ஒரு "நிஞ்ஜா தட்டு நாணயம்" ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வெல்வதற்கு, விளையாட்டில் தங்கள் செயல்பாடுகளின் மூலமாக ஒருவர் பத்து "போர் விருது"களைப் பெற வேண்டும் அல்லது, எதிராளியிடம் உள்ள அட்டைகள் தீர்ந்து விடுமாறு செய்ய வேண்டும். இதில் சீட்டுக்கள் "தொடர்" எனப் பெயரிட்ட பிரிவுகளில் வெளியாகின்றன. இவை நாலு விதமான முன்பே அமைக்கப்பட்ட 50 அட்டைகள் கொண்ட பெட்டிகளில் வெளியாகின்றன. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு ஆரம்ப அட்டைக்கட்டு, விளையாட்டுப் பாய், ஒரு ஆட்டக்குறியான் மற்றும் ஒரு நிஞ்ஜா தட்டு நாணயம் என்னும் ஒரு எஃகுத் தகடு ஆகியவை இருக்கும். 10 அட்டை கூடுதல் தொகுப்புக்களில், கூடுதல் அட்டைகள் கிடைக்கப்பெறுகின்றன. சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கப்பெறும் இத்தொகுப்புக்களில் ஒவ்வொரு தொடருக்குமான நாலு தொகுப்புப் பெட்டிகளும் இருக்கும். சேகரிக்கப்படக் கூடிய உலோகச் சிறுபெட்டிகளிலும் சீட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல கூடுதல் தொகுப்புக்களும் , பிரத்தியேகமான விளம்பர அட்டைகளும் ஒரு உலோகப் பெட்டியில் வைத்துக் கிடைக்கப் பெறுகின்றன. 2006ஆம் வருடம் அக்டோபர் திங்கள் வரையிலும், ஜப்பானில் 417 பிரத்யேக அட்டைகளைக் கொண்ட பதினேழு தொடர்கள் வெளியாகி விட்டன. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலும் இவற்றில் பத்து தொடர்கள் வட அமெரிக்காவில் வெளியாகியுள்ளன. "நருடோ" தொடருக்கு பிற்சேர்க்கைகள் எனப்படும் துணைப் புத்தகங்கள் பல வெளி வந்து விட்டன. "ஆர்ட் ஆஃப் நருடோ: உஜுமாகி" என்னும் ஒரு கலைப்புத்தகம் முதல் பாக மேங்காவின் சித்திரங்களைக் கொண்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளிலும் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தைப் பொறுத்த வரையில், "பெயிண்ட் ஜம்ப்: ஆர்ட் ஆஃப் நருடோ" என்னும் ஒரு புத்தகத்தினை, வாசகர் ஊடாடும் வகையில் வடிவமைத்து, 2008ஆம் வருடம் ஏப்ரல் நாலாம் நாள் ஷெயிஷா வெளியிட்டது. இதில் கடைசியாக வந்துள்ள புத்தகம் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் மூன்றாம் நாள் "நருடோ " என்னும் பெயரில் வெளியானது. முதல் பாகத்திற்கான எனப்படும் மற்றும் வழிகாட்டு நூல்களின் தொடர் ஒன்று ஜப்பானில் மட்டும் வெளியாயுள்ளது. மூன்றாவது தரவுப் புத்தகம் மற்றும் மேங்காவின் இரண்டாம் பாகத்தினைத் தழுவிய புத்தகம் ஒன்றும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தப் புத்தகங்களில் கதாபாத்திரங்களின் சித்திரங்கள், ஜுட்சு வழிகாட்டு முறைமைகள் மற்றும் கிஷிமோடோ உருவாக்கிய வரை படிவங்கள் ஆகியவை உள்ளன. அசைவூட்டத்தைப் பொறுத்த வரையில், "நருடோ அனைம் ப்ரொஃபைல்ஸ்" என்னும் வழிகாட்டுத் தொடர் நூல்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அசைவூட்ட நிகழ்வுகள் உருவான விதம் பற்றியும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பற்றிய விளக்கங்களும் உள்ளன. அக்டோபர் 4, 2004 என்னும் ஒரு மேங்கா விசிறி புத்தகம் வெளியானது. இதை விஜ் வட அமெரிக்காவில் "நருடோ: தி அஃபிஷியல் ஃபேன்புக் " என்ற பெயரில் 2008ஆம் ஆண்டு பிஃப்ரவரி மாதம் 19 அன்று பிரசுரித்தது. ஜப்பான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளிலுமே "நருடோ " நல்ல வரவேற்பைப் பெற்றது. 36ஆம் தொகுப்பு வரையில், ஜப்பானில் 71 மில்லியன் பிரதிகள் விற்றன. இதுவே, 2008ஆம் ஆண்டில் 89 மில்லியனாக உயர்ந்தது. 2008வது வருடம், 43வது தொகுப்பு 1.1 மில்லியன் பிரதிகள் விற்றது. இது ஜப்பானில் மிகுந்த அளவு விற்பனையாகும் சித்திரப் புத்தகங்களில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. 41,42 மற்றும் 44 ஆகிய தொகுப்புக்கள் முதல் 20 இடங்களுக்குள் இருந்தாலும், குறைந்த அளவு பிரதிகளே விற்றன. மேங்கா, மொத்தமாக, ஜப்பானில் 2008வது வருடம் 4.2 மில்லியன் பிரதிகள் விற்று, மிகுந்த அளவில் விற்பனையாகும் தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. 2009ஆம் வருடத்தின் முதற் பகுதியில், இது 3.4 மில்லியன்கள் விற்று, ஜப்பானில் மிக அதிகமாக விற்பனையாகும் மேங்காவில் மூன்றாம் இடத்தில் இருந்தது. அந்தக் கால கட்டத்தில், 45வது தொகுப்பு, 1.1 மில்லியன் பிரதிகள் விற்று ஐந்தாவது இடத்தில் இருந்தது. 46ஆம் தொகுப்பு 864,708 பிரதிகள் விற்பனையாகி ஒன்பதாம் இடத்திலும், 44வது தொகுப்பு 40ஆம் இடத்திலும் இருந்தன. "நருடோ" மேங்கா தொடர் என்பது விஜ்ஜின் முதன்மையான சொத்துகளில் ஒன்றாகி விட்டது. காரணம், 2006வது வருடத்தின் மொத்த மேங்கா விற்பனையில் இது பத்து சதமாக இருந்தது. வட அமெரிக்காவில் இதை முதன்மையான மேங்கா சொத்தாக ஐசிவி2 பல முறை பட்டியலிட்டிருக்கிறது. விஜ் வெளியிட்ட ஏழாவது தொகுப்பு, 2006ஆம் வருடம் "தலைசிறந்த வரைவியல் புதினம்" என்னும் விருதுக்காகத் தேர்வானபோது, க்வில் விருது பெறும் முதல் மேங்கா வெளியீடாக திகழ்ந்தது. மேங்கா தொடரின் மிக உயர்ந்த மதிப்பு நிலையை 11ஆம் தொகுப்பு பெற்றிருந்த வேளையில், "யூஎஸ் டுடே புக்லிஸ்ட்" பட்டியலிலும் மேங்கா இடம் பெற்றது. 28வது தொகுப்பு, அது வெளியான முதல் வாரத்தில் 17வது இடத்தைப் பிடித்தது. மற்ற மேங்காக்களை விட சிறப்பான ஆரம்ப கால வாரங்கள் 28வது தொகுப்புக்கு அமைந்தன. இது 2008ஆம் வருடத்தின் மிக அதிகமாக விற்பனையான மேங்கா புத்தகமாகவும், வட அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனையான புத்தக வரிசையில் இரண்டாவதாகவும் திகழ்ந்தது. 29வது தொகுப்பு வெளியானதும் அது 57வது இடம் பெற்றது. அச்சமயம் 28வது தொகுப்பு 139வது இடத்திற்கு இறங்கி விட்டது. 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டயமண்ட் காமிக்ஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் அளித்த "மேங்கா டிரேட் பேபர்பேக் ஆஃப் தி இயர்" என்னும் விருதை 14வது தொகுப்பு பெற்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 31 தொகுப்புக்கள் பிரசுரமாகி மேங்கா தொடர் 2008ஆம் வருடம் முதல், முதன்மையான மேங்கா சொத்தாகவும் பட்டியலில் இடம் பெற்றன. வலைத் தளத் தேடல்களில் யாஹு தேடல் இயந்திரத்தில் தேடப்படும் சொற்களில், "நருடோ" என்ற வார்த்தை 2007வது வருடம் நாலாவது இடத்திலும் 2008வது வருடம் பத்தாவது இடத்திலுமாக இருந்தது. "நருடோ கலெக்டர் விண்டர் 2007/2008" இதழில் "நருடோ" வின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கிஷிமோடோ இவ்வாறு கூறினார்: " அமெரிக்க நேயர்கள் நிஞ்ஜா என்பதன் பொருள் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கர்களுக்கு நல்ல ரசனை உணர்வு இருப்பதை இது காட்டுகிறது... காரணம், தங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவற்றைக் கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது." இந்தத் தொடரானது பல மதிப்பீட்டாளர்களிடமிருந்து பாராட்டு, விமர்சனம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. சில மேங்கா தொகுப்புக்கள் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மீதே கவனம் செலுத்தி, விசிறிகளின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்கிறது என்று ஐஜிஎன்னின் ஏ.ஈ.ஸ்பேரோ குறிப்பிட்டார். சண்டைக் காட்சிகள், நகைச்சுவை மற்றும் அருமையான சித்திர வேலைப்பாடுகள் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க வகையில் கிஷிமோடா இணைக்கும் திறனையும் அவர் புகழ்ந்தார். "நியோ" என்னும் அசைவூட்ட மேங்கா பத்திரிகை, நருடோவின் கதாபாத்திரத்தை "எரிச்சலூட்டு"வதாக வ்ர்ணித்தது. ஆனால், ஒரு "நோய் என்று குறிப்பிடும் அளவுக்கு வாசகர்களை அடிமைப்படுத்தி விட்டதற்கு" அந்தத் தொடரில் கதாபாததிரங்கள் வடிவமைக்கப்பட்ட முறையே காரணம் என்றும் அது கூறியது. "அனைம் ந்யூஸ் நெட்வொர்க்" கின் (ஏஎன்என்) கார்ல் கிம்லிங்கர், ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் நடிப்பிலும் தோற்றத்திலும் தன் பிரத்தியேகத் தன்மையை வெளிக்காட்டுவதாக, கதாபாத்திரங்களின் வடிவமைப்பைப் புகழ்ந்தார். "மகா மடையன் போல் தோற்றமளிக்கும் ஒரு கதாபாத்திரம்" சண்டையிடும்போது எப்படி "மிக நிதானமாக" தோன்றுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், சில தொகுப்புக்களில் இந்த சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் கதை மேற்கொண்டு செல்லாமல் தேங்கி விடுவதாகவும் கிம்லிங்கர் குறிப்பிட்டார். இருப்பினும், இவற்றில் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் உணர்ச்சி மிகுந்து விளங்குவதையும் அவர் பாராட்டினார். மேங்காலைஃப்.காம் வலைத்தளத்தின் ஜேவியர் லுகோ, பல வால்யூம்கள் வெளியிடப்பட்ட பின்னரும் இந்தத் தொடரின் சுவாரசியம் தொடர்ந்து நீடிப்பதைப் பாராட்டினார். மேலும், இந்தத் தொடரில் வரும் எதிரிகள் மற்றும் மேங்காவின் சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார். கிஷிமோடோவின் கலைவேலைப்பாடுகள், "கதை சொல்லப்படும் முறைக்கு மிகச் சரியான விதத்தில் உணர்வு பூர்வமாகவும், விறுவிறுப்பானதாகவும்" அமைந்திருப்பதாக லுகோ கருத்து தெரிவித்தார். ஏஎன்என்னின் கேசி பிரியன்சா வேறொரு வகையில் இரண்டாம் பாகம் தொடங்கும் விதத்தைப் புகழ்கிறார். இதில் கதாபாத்திரங்கள் புதிய தோற்றம் மற்றும் திறன்களைக் கொண்டு மிகவும் அற்புதமாக உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டார். வாசகர்கள் நன்கு அனுபவிக்கும் வகையில் கதைக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் சரியான சமன்பாடு அமைத்திருப்பதாகவும் பிரியன்சா புகழ்ந்தார். இருப்பினும், எல்லா தொகுப்புகளும் இதே தரத்தில் இருப்பது என்பது அடிக்கடி நிகழ்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மேனியா எண்டர்டெயின்மெண்டைச் சார்ந்த பிரயானா லாரன்ஸ் கூறுகையில், இரண்டாம் பாகத்தில் மேங்கா "வயதுக்கு வந்து விட்டதாக" உணர்கிறான், காரணம் பல கதாபாத்திரங்கள் வளர்ந்து விடுகின்றன; ஆனால், தொடரில் இன்னும் நகைச்சுவைப் பகுதிகள் இருக்கின்றன என்று உரைத்தார். ஆயினும், விஜ் தன் மொழி பெயர்ப்பில் சில ஜப்பானிய சொற்களை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பிற சொற்களை அப்படியே விட்டு விட்டு சீரற்ற முறையில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, டிவி அசாஹி யின் அண்மைய தலையாய 100 அசைவூட்ட நிகழ்ச்சிப் பட்டியலில் 17வது இடத்தை "நருடோ" பிடித்தது. ஜப்பானில் மிக அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாக "நருடோ ஷிப்புடென்" பல முறை திகழ்ந்திருக்கிறது. யூனிவர்சிடி ஆஃப் சாண்டோ டோமஸ் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடத்திய மூன்றாவது அமெரிக்க விருது நிகழ்ச்சியில், "தலைசிறந்த முழுநீள அசைவூட்ட நிரல் விருது" என்னும் விருதை "நருடோ" வின் அசைவூட்ட ஆக்கம் வென்றது. 13 நிகழ்வுகளுடன் விஜ் முதலில் வெளியிட்ட ஒளிப்பேழைத் தொகுப்பு, அமெரிக்க அசைவூட்ட விருதுகள் என்பதற்குச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட தொகுப்பாக நியமனமானது. 2009ஆம் ஆண்டு முழுவதும் அதிக அளவில் விற்பனையான அசைவூட்டச் சொத்துக்களில் மூன்றாவது இடத்தையும் அது பிடித்தது. யுஎஸ்டி மெடிசின் ஆடிட்டோரியத்தில் பிஃப்ரவரி 19, 2008 நடந்த யுஎஸ்டிவி ஸ்டூடன்ட்'ஸ்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் 2009 நிகழ்ச்சியில் "பெஸ்ட் ஃபுல் அனிமேடட் ப்ரோக்ராம்" எனும் விருதுக்காக "நருடோ" பெயரளிக்கப்பட்டது. ஐசிவி2வின் 2009ஆம் வருடத்திய முதல் பகுதியின் "முதல் பத்து அசைவூட்டச் சொத்துக்கள்" என்னும் பட்டியலில் "நருடோ" இரண்டாவது சிறந்த அசைவூட்ட உரிமம் பெற்று விளங்கியது. ஜப்பானிய அசைவூட்டத் தொலைக்காட்சி மதிப்பீடுகளில், "நருடோ: ஷிப்புடென்" தொடரின் நிகழ்வுகள் பல முறை தோன்றியுள்ளன. "நருடோ:ஷிப்புடென் " தொடரின் ஒளிப்பேழை விற்பனையும் சிறந்த முறையில் இருந்து வந்துள்ளது. இது ஜப்பான் அசைவூட்ட ஒளிப்பேழை மதிப்பீடுகளில் பல முறை இடம் பெற்றுள்ளது. "நருடோ: ஷிப்புடென்" தொடரின் எபிசோடுகள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 160,000 நேயர்களைப் பெற்றுள்ளன. 2009ஆம் ஆண்டு பிஃப்ரவரித் திங்கள் முதலாக, ஹுலுவின் நிகழ்ச்சி மற்றும் சானல்களில் "நருடோ" 20வது இடத்தைப் பிடித்து வந்திருக்கிறது. 2009ஆம் ஆண்டு பிஃப்ரவரித் திங்கள், இது ஜூஸ்ட்டில் முதலாவதாக இருந்தது. பிஃப்ரவரி மாதத்தில் ஜூஸ்ட் பட்டியலில், "நருடோ: ஷிப்புடென்" முதல் இடத்திலும், "நருடோ" இரண்டாவது இடத்திலும் இருந்தன. ஐஜிஎன் வரிசைப்படுத்திய டாப் முதல் 100 அசைவூட்டத் தொடர் பட்டியலில், "நருடோ" அசைவூட்டம் 38வது சிறந்த அசைவூட்ட நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதனை மதிப்பீடு செய்தவர்கள், இத்தொடர் சண்டைக் காட்சிகளிலேயே பிரதான கவனம் செலுத்துவதாகவும், பின்னணியை விட சண்டைக் காட்சிகளுக்கே அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பதால்தான் இவ்வாறு நிகழ்வதாகவும் குறிப்பிட்டனர். இசைப் பின்னணி, அது வசனங்களுடன் சற்றே இடையூறு செய்தாலும், சண்டைக் காட்சிகளில் அவற்றிற்கு சிறந்த முறையில் பொருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் மிக நீண்ட சண்டைக் காட்சிகளுக்காக மார்டின் தெரான் இதை விமர்சித்துள்ளார். இருப்பினும், இவற்றில் பெரும்பான்மையானவை "ஒரே மாதிரியான ஷோனென் கருத்துக்களை" உடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒலித் தடங்கள் கதை சொல்லப்படும் முறையில் உணர்வோட்டதையும், கிளர்ச்சியையும் மிகச் சிறப்பாக மேம்படுத்துவதாக புகழப்பட்டுள்ளன. டி.ஹெச்.ஈ.எம். அனைம் ரெவ்யூஸ் சார்ந்த க்ரிஸ்டினா கார்பெண்டர், இந்தத் தொடரின் கதாபாத்திரங்கள் "விரும்பத்தக்கவைகளாக" இருப்பதாகக் கருதினாலும், அவற்றில் பல ஷொனென் மேங்காவின் "ஒரே மாதிரியான வடிவமைப்பை" மீறவில்லை என்றும் விமர்சித்தார். மேலும் அவர் கிஷிமோடொவை "அதிக பட்சமாக ஒரு சராசரி ஒவியராகத்தான்" கருதினார். அவரது ஓவிய பாணி, அசைவூட்டத்திற்கு மாறும்போது அதன் தரம் மிகவும் குறைந்து விடுவதாகவும் கடிந்துரைத்தார். இருப்பினும், டி.ஹெச்.ஈ.எம். அனைம் ரெவ்யூஸ் சார்ந்த இரண்டாவது மறு ஆய்வாளரான டெரிக் எல்.டக்கர் அசைவூட்டம் செய்பவர்கள் தங்கள் பணியை மிகச் சிறந்த முறையில் செய்தாலும், "மேங்காவின் ரசிகர்கள் விரும்பும் கலைத் தரத்தில் மிகக் குறைவாகவே விட்டு விடு"வதாக கூறினார். ஆனால், அசைவூட்டம் என்பது "ஒரு கலந்து கட்டி"யானது என்று அவர் முடிவாக உரைத்தார். மேலும் அவர் கூறுகையில், சண்டைக் காட்சிகள் நல்ல முறையில் அனுபவிக்கத் தக்கதாய் இருப்பினும், அவை அதிக அளவில் இருப்பதால், கதையை மேற்கொண்டு எடுத்துச் செல்ல நேரம் பிடிக்கிறது என்றும் குறிப்பிட்டார். சில விமர்சகர்கள், "மறை நீர்வீழ்ச்சிப் போர்' மிகவும் சிறப்பானது என்று கருதினார்கள். காரணம், இது பிரதானமான "நருடோ " தொடரின் ஆரம்பகால நிகழ்வுகளுக்குத் திரும்பச் செல்வதான முறையில் இருப்பதுதான். இது "நருடோ" உரிமத்திற்கு ஒரு மிகச் சாதாரணமான மேற்கூட்டு என்று ஏஎன்என்னின் விமர்சகர் கூறினார். காரணம், "அது தொடருக்கு நியாயம் வழங்கவில்லை" என்றார். இருப்பினும், தனது முந்தைய நிக்ழ்வுகளிலிருந்து தொடர் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை நேயர்கள் கண்டு கொள்ள இது உதவும் என்றும் அவர் கூறினார். டிவிடி டாக் கைச் சேர்ந்த டாட் டௌக்லஸ் இதன் ஒளிப்பேழையானது மொத்தமாகப் பார்க்கையில் நன்றாக இருந்தாலும், தொடரின் பொதுவான கதையோட்டத்தின் ஆழத்தை இது பெறவில்லை என்பதாக விமர்சித்தார். புதிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அசைவூட்டத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை விமர்சித்த ஆக்டிவனைம் சார்ந்த டேவிட் சி.ஜோன்ஸிடமிருந்து "நருடோ:ஷிப்புடென்" நல்ல பாராட்டைப் பெற்றது. இந்தத் தொடர் மேலும் மனப்பூர்வமாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். தரவுச் செயலாக்கம் தரவுச் செயலாக்கம் என்பது தரவில் இருந்து குறிப்பிட்ட வடிவங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் தரவு இரட்டிப்பு அடைவதுடன், அதிகப்படியான தரவு திரட்டப்பட்டதன் காரணமாக, இந்த தரவைத் தகவல்களாக மாற்றுவதற்கு தரவுச் செயலாக்க கருவிகள் மிகவும் பயன்படுகின்றன. விற்பனை, கடுமையான மேற்பார்வை, மோசடிகளைக் கண்டுபிடித்தல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு போன்ற மிகவும் பரவலான ஆய்வு நடைமுறைகள் உள்ள துறைகளில் பொதுவாக இவை பயன்படுத்தப்படுகின்றன. வெளிப்படையான வடிவங்களை உடைய தரவு மாதிரிகளில் தரவுச் செயலாக்கத்தைப் பயன்படுத்தும் போது, அதில் தரவின் விவரிக்கப்படாத மாதிரிகளைப் பயன்படுத்துவதனால் தேவைப்படும் துறைக்குத் தொடர்பில்லாத வெளியீடுகள் உண்டாக்கப்படலாம் என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல, ஒரு வேளை குறிப்பிட்ட வடிவங்கள் "செயலாக்கம்" செய்யப்பட்ட மாதிரியில் இடம்பெறவில்லை என்றால், தரவுச் செயலாக்கத்தில் தேவைப்படும் துறையில் குறிப்பிட்ட வடிவங்களை தேடிப்பெற முடியாது. போதுமான அனுபவமற்ற "நுகர்வோர்கள்" "வியக்கத்தக்க திறன்கொண்டதாக" தரவுச் செயலாக்கத்தை நினைக்கும் மனப்பாங்கு உடையோராக உள்ளனர், மேலும் அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை அனைத்தையும் பார்க்க முடியக்கூடிய ஸ்படிகப் பந்தாக நினைக்கிறார்கள். மற்ற கருவிகளைப் போல, பொருத்தமான மூலப்பொருளுடன் இணைந்தால் மட்டுமே இது செயல்படும், இந்த நிலையில் பயனர் முதலில் குறிப்பிட்ட மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட தரவைச் சேகரிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட தரவுத் தொகுப்பில் குறிப்பிட்ட வடிவங்களைக் கண்டறிவது, தரவு உருவாக்கப்பட்டதில் இருந்து ஒட்டு மொத்த குறிப்பிட்ட வடிவத்தைச் சுட்டிகாட்டுவதையே குறிக்கும் என்ற கட்டாயம் இல்லை. இதனால், செயல்பாட்டின் முக்கிய பகுதியாக மற்ற தரவு மாதிரிகளின் குறிப்பிட்ட வடிவங்களுடன் சரிபார்த்தல் மற்றும் உறுதிப்படுத்துதல் இருக்கிறது. தரவுச் செயலாக்கம் என்ற பெயர் தொடர்புடையதாகவும் ஆனால் எதிர்மறையாக உள்ள அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது, அதாவது அதிக எண்ணிக்கையிலான தரவில், சுட்டிக்காட்டப்படாமலும் இருக்க வாய்ப்புள்ள ஆனால் அவ்வாறு தோன்றக்கூடிய குறிப்பிட்ட வடிவங்களை ஆழ்ந்து தேடுவததக் குறிக்கவே இவ்வவறு பயன்படுத்தப்படுகிறது. மற்ற அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தும் குழப்பத்தைத் தவிர்க்க, "டேட்டா டிரெட்ஜிங்" மற்றும் "டேட்டா ஸ்னூப்பிங்" போன்ற பெயர்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. எனினும், கற்பிதக் கொள்கையின் உருவாக்கம் மற்றும் தெளிவுப்படுத்தலின் போது இந்த டிரெட்ஜிங் மற்றும் ஸ்னூப்பிங் கண்டுபிடிப்பு ரீதியான ஆய்வுக்கு பயன்படும் கருவியாக இருக்கலாம் (சில நேரங்களில் பயன்படுத்தப்படும்) என்பது குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் தரவிலிருந்து குறிப்பிட்ட வடிவங்களை "கைமுறையாகப்" பிரித்தெடுத்து வந்தனர், ஆனால் நவீன காலங்களில் அதிகரித்து வரும் தரவின் அளவு அதிகப்படியான தானியங்கு அணுகு முறைகளை அவசியமாக்கியது. பேயீஸ் தேற்றம் (1700கள்) மற்றும் ரெக்ரஸ்ஸன் பகுப்பாய்வு (1800கள்) உள்ளிட்ட முந்தைய முறைகள் தரவில் குறிப்பிட்ட வடிவங்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. விரைவான வளர்ச்சி, எங்கும் நிறைந்திருக்கும் இயல்பு மற்றும் கணினி தொழில்நுட்பத்தின் அதிகரித்துவரும் ஆற்றல் போன்றவை தரவு சேகரித்தல் மற்றும் சேமித்து வைத்தலை அதிகரித்தன. தரவுத் தொகுப்புகள் அளவிலும் சிக்கலான தன்மையிலும் வளர்ச்சி அடைந்துவிட்டதால், மறைமுகமான மற்றும் தானியங்கு தரவு செயல்முறையுடன் நேரடியாக செயல்படும் தரவு ஆய்வுகளும் அதிகரித்துவருகிறது. இது கணினி அறிவியலில் நிகழ்ந்த நியூரல் நெட்வொர்க்ஸ், க்ளஸ்டரிங், ஜெனிடிக் வழிமுறைகள் (1950கள்), முடிவெடுத்தல் கிளையமைப்புகள்(1960கள்) மற்றும் சப்போர்ட் வெக்டார் மெசின்ஸ் (1980கள்) போன்ற மற்ற கண்டுபிடிப்புகளால் துணையுதவி செய்யப்பட்டது. தரவுச் செயலாக்கம் என்பது, இந்த முறைகளை பயன்படுத்தும் செயல்பாடாகும், இவை மறைந்த நிலையிலுள்ள வகைகளைக் கண்டறியும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது நடைமுறை உடன் தரவுக்கு செயபடுத்தப்படும். இது விமான பயணிகளின் பயணத்தகவல்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்தரவு மற்றும் பல்பொருள் அங்காடி ஸ்கேனர் தரவுகளைப் பயன்படுத்தி சந்தை ஆராய்ச்சி அறிக்கைகள் வழங்குவது போன்ற அதிக அளவிலான தரவுகளை ஆராய்வதற்கு தொழிற்துறை, அறிவியல் அறிஞர்கள் மற்றும் அரசுத்துறைகள் போன்றவற்றில் பல வருடங்களாக உபயோகப் படுத்தப்படுகிறது. (எனினும், இந்த அறிக்கைகள் எல்லா நேரங்களிலும் தரவுச் செயலாக்கமாகக் கருதப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது). திரளான பண்புகளைக் கூர்ந்து கவனித்துப் பகுத்தாய்வதற்கு உதவியாக இருப்பதே தரவுச் செயலாக்கத்தை பயன்படுத்துவதன் முதன்மையான காரணமாகும். இதைப்போன்ற தரவுகள் தெரியப்படாத இடைத் தொடர்புகளைக் கொண்டுள்ளதால் நேரிடைத் தொடர்பு சிக்கலுக்கு உட்பட்டவையாகும். தரவுச் செயலாக்கத்தின் தவிர்க்க முடியாத உண்மை என்னவெனில் ஆய்வுசெய்யப்படும் தரவின் (உப-)தொகுப்பு(கள்) குறிப்பிட்ட துறையின் முழுமையான வெளிப்பாடாக இல்லாமல் இருக்கலாம், மேலும் அதன்காரணமாக துறைகளின் மற்ற பகுதிகளில் உள்ள முக்கியமான தொடர்புகள் மற்றும் பண்புகளின் எடுத்துக்காட்டுகள் இல்லாமல் இருக்கலாம். இந்த வகையான சிக்கலை அணுக, இந்த ஆய்வுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தரவுகளுக்கான சாய்ஸ் மாடலிங் போன்ற பரிசோதனை சார்ந்த மற்றும் பிற அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மிகுதியாக்கப்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில், பரிசோதனை வடிவமைப்பை உருவாக்கும் போது உள்ளார்ந்த தொடர்புகள் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தப்படலாம் அல்லது நீக்கப்படலாம். தரவுச் செயலாக்கத்தின் தரத்தை விளக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக 1999 ஐரோப்பியன் க்ராஸ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் ப்ராசஸ் ஃபார் டேட்டா மைனிங் (CRISP-DM 1.0) மற்றும் 2004 ஜாவா டேட்டா மைனிங் தரம்(JDM 1.0) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை வளர்ந்துவரும் தரநிலைகளாகும்; இந்தத் தரநிலைகளின் பிந்தைய பதிப்புகள் உருவாக்கத்தில் உள்ளன. இந்த தர நிர்ணய முயற்சிகளைச் சார்பின்றி, இலவசமாக கிடைக்கும் ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் முறைமைகளான ரேபிட்மைனர், வேக்கா, KNIME மற்றும் R திட்டப்பணிகள் போன்றவை தரவுச் செயலாக்கச் செயல்பாடுகளை வரையறுக்கும் முறை சாரா தரநிலைகளாக பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான இந்த முறைகள் PMML (பிரெடிக்டிவ் மாடல் மார்க்அப் லேங்க்வேஜ்) இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யத்தக்க திறன் பெற்ற மாதிரிகளாக இருக்கின்றன, அவை தரமான வழிகளில் தரவுச் செயலாக்க மாதிரிகளை வெளிப்படுத்துவதாக உள்ளன, அதனால் இவற்றை வெவ்வேறு புள்ளி விவர பயன்பாடுகளுக்கு இடையில் பங்கிட முடியும். PMML என்பது டேட்டா மைனிங் க்ரூப்பினால் (DMG) உருவாக்கப்பட்ட ஒரு XML அடிப்படையிலான மொழி ஆகும், DMG பல தரவுச் செயலாக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சார்பற்ற குழு ஆகும். PMML பதிப்பு 4.0 ஜூன் 2009 இல் வெளியிடப்பட்டது. தொழில் துறை ஏற்பட்ட செயல்முறையில் தரநிலைகள் மற்றும் இடைச் செயல் திறனுடன் கூடுதலாக, தொழில் ரீதியான மற்றும் கலை சார் நடவடிக்கைகளும், தோற்றுவித்தலிலும் கடுமையான முறைகள் மற்றும் மாதிரிகளிலும் மிகுதியான பங்களிப்புக்களைக் கொண்டுள்ளன; "இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜி அண்ட் டெசிஷன் மேக்கிங்" பத்திரகையின் 2008 பதிப்பின் ஒரு கட்டுரையில் இந்த பரிணாமத்தை முழுதும் விவரித்து ஆய்வு செய்த ஒரு இலக்கியம் சார்ந்த மதிப்பீடின் வெளியீடு சுருக்கமான வெளியிடப்பட்டிருந்தது. த அசோசியேசன் ஃபார் கம்ப்யூட்டிங் மெசினரி'ஸ் ஸ்பெசல் இண்ட்ரஸ்ட் க்ரூப் ஆன் நாலெட்ஜ் டிஸ்கவரி அண்ட் டேடா மைனிங் (SIGKDD) இந்த துறையில் முதன்மையான தொழில்ரீதியான அமைப்பாக இருக்கிறது. 1989 இலிருந்து அவர்களால் வருடாந்திர சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது, மேலும் அதன் செயல்முறைகள் வெளியிடப்படுகிறது, மற்றும் 1999 இலிருந்து "SIGKDD ஆய்வுகள்" என்ற தலைப்பில் ஆண்டிற்கு இரண்டு முறை கலை சார் செய்திப்பத்திரிகை வெளியிடப்படுகிறது. தரவுச் செயலாக்கம் தொடர்பான மற்ற கணினி அறிவியல் மாநாடுகள் பின்வருமாறு: 1989 இல் க்ரிகோரி பயடெட்ஸ்கி-ஷபிரோ தரவுத்தளங்களில் நுண்ணறிவுக் கண்டுபிடிப்பு (KDD) என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினார், அவர் ஆர்வமான, மாற்றம் செய்யப்பட்ட, பயனுள்ள புதிய தரவவக் கண்டறியும் செயல்பாட்டை விவரிக்க இதனைப் பயன்படுத்தினார். இந்த செயல்பாட்டில் பல நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன, ஆனால் தோராயமாக மூலத் தரவின் முன்-செயலாக்கம், தரவைத் தேடி எடுத்தல் மற்றும் முடிவுகளைப் புரிந்துணர்தல் போன்ற படிநிலைகளைக் கொண்டதாக அவை உள்ளன. KDD செயலாக்கத்திற்கான நோக்கம் தெரிந்தவுடன், ஒரு இலக்குத் தரவுத் தொகுப்பு திரட்டப்பட வேண்டும். தரவுச் செயலாக்கம் ஏற்கனவே தரவில் உள்ள வெளிப்படையான குறிப்பிட்ட வடிவ வகைகளை மட்டுமே கண்டறிய முடியும் என்பதால், இலக்குத் தரவுத் தொகுப்பு இந்த குறிப்பிட்ட வடிவங்களை உள்ளடக்கும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும், மேலும் இதில் மீதமுள்ள தரவு ஏற்கத்தக்க நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும். தரவுக்கான ஒரு பொதுவான மூலம் டேட்டா மார்ட் அல்லது டேட்டா வேர் ஹவுஸ் ஆகும். இலக்குத் தொகுப்பு பின்னர் தூய்மைப்படுத்தப்படுகிறது. தூய்மைப்படுத்துதல் முக்கியமற்ற மற்றும் இழந்த தரவுகளைக் கண்டறிந்த அறிதல்களை நீக்கிவிடும். ஒரு உய்த்தறிதலுக்கு ஒரு வெக்டர் என்ற அளவில், தூய்மைப்படுத்தப்பட்ட தரவானது பின்னர் அம்ச வெக்டர்களாகக் குறைக்கப்படுகிறது. ஒரு அம்ச வெக்டார் என்பது ஒரு மூலத் தரவு உய்த்தறிதலின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். எடுத்துக்காட்டாக, முகத்தைக் கொண்டுள்ள 100px க்கு 100px அளவுள்ள ஒரு கருப்பு வெள்ளை படம் 10,000 பிட்டுகள் மூலத் தரவைக் கொண்டிருக்கும். அந்தப் படத்தில் கண்கள் மற்றும் வாயைக் இடமறிவதன் மூலம் இது ஒரு அம்ச வெக்டாராக மாற்றப்படலா. தொடர்ந்த செயல்பாடு ஒவ்வொரு வெக்டாருக்குமான தரவை 10,000 பிட்டுகளிலிருந்து இடங்களுக்கான மூன்று குறியீடுகள் என்ற அளவில் குறைக்கும், மேலும் எடுப்பதற்கான தரவுத்தொகுப்பின் அளவு குறிப்பிடுமளவு குறையும், இதனால் செயலாக்க சிரத்தையும் குறையும். தேர்ந்தெடுக்கப்படும் அம்சம்(ங்கள்), என்ன நோக்க(ம்)ங்கள் இருக்கின்ற(து)ன என்பதைச் சார்ந்தது; வெளிப்படையாக, "சரியான" அம்சம்(கள்) தேர்ந்தெடுப்பு வெற்றிகரமான தரவுச் செயலாக்கத்திற்கு அடிப்படை ஆகும். அம்ச வெக்டார்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன, அவை "பயிற்சித் தொகுப்பு" மற்றும் "பரிசோதனைத் தொகுப்பு" ஆகும். பயிற்சித் தொகுப்பு தரவுச் செயலாக்க நெறிமுறை(களின்) "பயிற்சிக்கு" பயன்படுத்தப்படுகிறது, பரிசோதனைத் தொகுப்பு கண்டறியப்பட்ட குறிப்பிட்ட வடிவத்தின் துல்லியத்தன்மையைச் சோதிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. தரவுச் செயலாக்கம் பொதுவாக பின்வரும் நான்கு பிரிவுகளிலான பணிகளைக் கொண்டுள்ளது: தரவிலிருந்து நுண்ணறிவு கண்டுபிடித்தலின் இறுதிப் படிநிலை, பரவலான தரவுத் தொகுப்புகளில் நிகழும் தரவுச் செயலாக்க வழிமுறைகளால் உருவாக்கப்படும் குறிப்பிட்ட வடிவங்களை சோதனை செய்தல் ஆகும். தரவுச் செயலாக்க வழிமுறைகளால் கண்டறியப்படும் அனைத்து வடிவங்களும் சரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவான தரவுத் தொகுப்பில் இல்லாத வடிவங்களை பயிற்சித் தொகுப்பில் தரவுச் செயலாக்க வழிமுறைகள் கண்டறிவது என்பது மிகவும் பொதுவானதாகும், இது மேற்பொருந்துதல் என அழைக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய, மதிப்பீட்டில் தரவுச் செயலாக்க நெறிமுறை பயிற்சியில் அல்லாத தரவுத் தொகுப்பின் பரிசோதனைத் தொகுப்பு பயன்படுத்தப்படும். கற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்கள் இந்த பரிசோதனைத் தொகுப்பில் ஈடுபடுத்தப்படும், மேலும் வெளியான வெளியீடு எதிர்பார்க்கப்படும் வெளியீட்டுடன் ஒப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு தரவுச் செயலாக்க வழிமுறை உண்மையான அஞ்சலில் இருந்து ஸ்பேம் அஞ்சலை வேறுபடுத்த முயற்சிப்பதற்கு மாதிரி மின்னஞ்சல்களின் பயிற்சித் தொகுப்பின் மூலம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெற்றவுடன், பயிற்சி பெற்றிராத கற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்கள் பரிசோதனைத் தொகுப்பு மின்னஞ்சல்களில் ஈடுபடுத்தப்படும், இந்த வடிவங்களின் பிழையின்மையை எத்தனை மின்னஞ்சல்களை அவை சரியாக வகைப்படுத்தி உள்ளன என்பதை வைத்து கணக்கிடலாம். ROC வளைவுகள் போன்ற பல புள்ளியியல் முறைகள் நெறிமுறையை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படலாம். கற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்கள் எதிர்பார்க்கப்பட்ட தரத்தை அடையவில்லை என்றால், அதன் முன்-செயலாக்கத்திலும் தரவுச் செயலாக்கத்திலும் மாற்றங்கள் செய்து மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்கள் எதிர்பார்க்கப்பட்ட தரத்தை எட்டினால், இறுதிப் படிநிலை கற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களை மாற்றம் செய்து அவற்றை நுண்ணறிவாக மாற்றுவதாகும். 1960 களின் முற்பகுதியில் இருந்து, சில ஒருங்கிணைந்த விளையாட்டுக்களுக்கான முன்கணிப்புகள் கிடைத்தன, அவை மேசை அடித்தளங்கள் (எடுத்துக்காட்டு 3x3-செஸ்) எனவும் அழைக்கப்பட்டன, அவை ஏதேனும் ஒரு தொடக்க அமைவடிவத்துடன், சிறிய அட்டை புள்ளிகளும் பெட்டிகளும், சிறிய அட்டை ஹெக்ஸ் மற்றும் செஸ்ஸில் சில முடிவு விளையாட்டுகள், புள்ளிகளும் பெட்டிகளும் மற்றும் ஹெக்ஸ் கொண்டவையாக இருந்தன; தரவுச் செயலாக்கத்தில் ஒரு புதிய பகுதி ஆரம்பமானது. இவை இந்த முன்கணிப்புகளிலிருந்து மூலம் மனிதன் பயன்படுத்தக் கூடிய பயன்பாடுகளாக பிரித்தெடுக்கப்பட்டவை. தற்போதுள்ள குறிப்பிட்ட வடிவம் கண்டறியும் அணுகுமுறைகள் இதில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான முழுமையான தேவைப்படும் உயர் நிலை பிரித்தெடுத்தலாக இல்லை. மாறாக, முந்தைய கலை அறிவுடன், அதாவது முன்-அட்டவணை அடிப்படையிலான அறிவுடன் நன்கு வடிவமைக்கப்பட்ட சிக்கல்களுக்கு அட்டவணை அடிப்படையிலான பதில்களின் ஆழமான ஆய்வுடன் இணைந்து தரவுத்தளத்திலான விரிவான ஆய்வு பயன்படுத்தப்படுகிறது, இதில் இணக்கமான ஆழமான வடிவங்கள் கிடைக்கின்றன. புள்ளிகள் மற்றும் பெட்டிகளில் பெர்ல்கேம்ப் மற்றும் பல மற்றும் செஸ் முடிவு விளையாட்டுகளில் ஜான் நன் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்களுக்கான குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும், எனினும் அவர்கள் அட்டவணை அடிப்படையிலான உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கவில்லை ஈடுபடுவதும் இல்லை. வாடிக்கையாளர் உறவு மேலாண்மை பயன்பாடுகளில் தரவுச் செயலாக்கம் மிகவும் முக்கியமாக பங்களிக்கிறது. ஒரு வெற்றி நிகழ்வாய்ப்பு அல்லது வாடிக்கையாளரை அழைப்பு மையம் அல்லது மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாக சீரற்ற முறையில் தொடர்புகொள்வதை விட, ஒரு வழங்கலுக்கு பதில்வினை புரியக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக முன்கணிக்கப்பட்ட வேய்ப்புகளில் ஒரு நிறுவனம் கவனம் செலுத்தி அதன் முயற்சிகளைச் செய்யலாம். வாய்ப்புள்ள அனைத்து சலுகைகளிலும் எந்த வழியில் மற்றும் எந்த சலுகை ஒரு தனிநபர் மிகவும் விரும்பி, பதில்வினை புரியத் தூண்டுவதாக உள்ளது என முன்கணிக்க உதவும்படியாக, திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இடையில் வளங்களை மேம்படுத்த பல நுண்ணிய முறைகள் உள்ளன. கூடுதலாக, சிக்கலான பயன்பாடுகள் அஞ்சல் தானியங்குவதற்குப் பயன்படுத்தப்படலாம். தரவுச் செயலாக்கத்தில் இருந்து (வாய்ப்புள்ள வெற்றி நிகழ்வாய்ப்பு/வாடிக்கையாளர் மற்றும் தொடர்பு ஏற்படும் வழி/சலுகை) வெளியீடுகள் கிடைக்கப்பெற்ற பிறகு இந்த "சிக்கலான செயல்பாடு" தானே மின்னஞ்சலை அல்லது சாதாரண அஞ்சலை அனுப்புகிறது. இறுதியாக, சிலநேரங்களில் பல மக்கள் சலுகை இல்லாமல் செயலை மேற்கொள்ளும் போது, சலுகை கொடுக்கப்பட்டால் எந்த மக்கள் மிகவும் அதிகமாக செயலாற்றுவார்கள் என்பதைத் தீர்மானிக்க உதவியாதரவளிக்கும் மாதிரியாக்கபயன்படுத்தப்படலாம். வாடிக்கையாளர் தரவுத் தொகுப்பில் தானாகவே கூறுகளை அல்லது குழுக்களைக் கண்டறிய தரவுக் கொத்தாக்கலும் பயன்படுத்தப்படலாம். தரவுச் செயலாக்கத்தைப் பயன்படுத்தப்படும் வணிகங்களுக்கு முதலீடு திரும்ப வரக்கூடும், எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்கணிப்பு மாதிரிகள் விரைவில் மிகவும் அதிகமாகலாம் எனவும் அவை உணர்ந்துள்ளன. எந்தெந்த வாடிக்கையாளர்கள் மாறுவார்கள் என முன்கணிப்பதற்கு மாறாக, ஒரே மாதிரி இருக்கும், ஒரு வணிகம்ஒவ்வொரு மண்டலத்திற்கும் மற்றும் வாடிக்கையாளர் வகைக்கும் தனித்தனியாக மாதிரி உருவாக்க முடியும். பின்னர் எந்தெந்த வாடிக்கையாளர்கள் மாறுவார்கள் என்ற பட்டியலில் உள்ள அனைத்து மக்களுக்கும் சலுகையை அனுப்புவதற்கு பதிலாக, எந்த வாடிக்கையாளர்களுக்கு சலுகை வேண்டும் என்பதைப் பொருத்து அவர்களுக்கு மட்டும் அவை அனுப்பப்படலாம். மேலும் இறுதியாக, எந்தெந்த வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நன்மை அடைவார்கள் மற்றும் எந்தெந்த வாடிக்கையாளர்கள் சலுகைகள் அனுப்பப்பட்ட உடன் நன்மை அடைவார்கள் என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த அளவுள்ள மாதிரிகளைப் பராமரிப்பதற்காக, அவர்கள் மாதிரி பதிப்புகளை பராமரிக்க வேண்டும், மேலும் "தானியங்கு தரவுச் செயலாக்கத்தை" பயன்படுத்த வேண்டும். தரவுச் செயலாக்கம் மனித வளங்கள் துறைகளில் மிகவும் வெற்றிகரமான பணியாளர்களின் சிறப்பியல்புகளைக் கண்டறிய உதவிகரமாக இருக்க முடியும். மிகவும் வெற்றிகரமான பணியாளர்கள் எந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து வந்துள்ளனர் என்பது போன்ற தகவல் கிடைப்பதால், HR அவற்றைக் கருத்தில் கொண்டு பணியமர்த்தல் செயலைச் செய்யல. கூடுதலாக, உத்தியியல் தொழிற்துறை மேலாண்மைப் பயன்பாடுகள் இலாபம் மற்றும் குறை வரம்புப் பங்கீடு இலக்குகள் போன்ற பெருநிறுவன அளவிலான குறிக்கோள்களை உற்பத்தித் திட்டங்கள் மற்றும் மனிதவள நிலைகள் போன்ற செயல்முறைசார்ந்த முடிவுகளாக மாற்றுவதற்கு உதவுகிறது. தரவுச் செயலாக்கத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு, அதன் சில்லறை விற்பனை பயன்பாட்டுடன் தொடர்புடையது, இது மார்கெட் பேஸ்கட் அனாலிசிஸ் என பொதுவாக அழைக்கப்படுகிறது. ஒரு துணிக்கடை வாடிக்கையாளர் வாங்கிய பொருள்களைப் பதிவு செய்வதாகக் கொண்டால், ஒரு தரவுச் செயலாக்க அமைப்பினால் அந்த வாடிக்கையாளர்களில் யாரெல்லாம் காட்டன் சட்டைகளை விட பட்டுச் சட்டைகளை விரும்புகிறார்கள் எனக் கண்டறிய முடியும். எனினும் சில தொடர்புகளுக்கான விளக்கங்கள் சிக்கலாக இருக்கலாம், இருப்பினும் அதன் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்வது எளிதாகும். இந்த எடுத்துக்காட்டு பரிமாற்றம் சார்ந்த தரவில் இணைப்பு விதிகளைக் கையாளுகிறது. அனைத்து தரவுகளும் பரிமாற்றம் சாந்தவையாக இருப்பதில்லை, மேலும் தர்க்க ரீதியான அல்லது தெளிவற்ற விதிகளும் தரவுத்தளத்தில் இருக்கலாம். ஓர் உற்பத்திப் பயன்பாட்டில், ஒரு தெளிவற்ற விதி, தயாரிப்பில் 73% குறிப்பிட்ட குறைபாடு அல்லது சிக்கல் இருந்தால் அடுத்த ஆறு மாதங்களில் இரண்டாம் நிலை சிக்கல் ஏற்படலாம் எனக் குறிக்கும். மார்கெட் பேஸ்கட் அனாலிசிஸ் ஆல்ஃபா நுகர்வோரின் வாங்கும் முறைகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆல்ஃபா நுகர்வோர்கள் என்பவர்கள் ஒரு பொருளுக்குப் பின்னணியில் உள்ள தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய, பொருட்களை ஏற்றுக்கொள்ளும் மக்களாவர், மேலும் அவர்கள் இறுதியாக மீதியுள்ள சமூகத்திடம் அந்த பொருள் பற்றிய மதிப்பைப் பரப்புவர். இந்த வகைப் பயனர்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தரவின் பகுப்பாய்வுகள் நிறுவனங்களுக்கு எதிர்கால விற்பனைப் போக்கை முன்கணிக்கவும், கையிருப்புத் தேவைகளை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கும் உதவுகின்றன. தரவுச் செயலாக்கம் வகைப்படுத்திய வணிகத் துறையில் மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கிறது. வகைப்படுத்திகள் பல ஆண்டுகள் முன்பிருந்து, மில்லியன் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் பரிமாற்றங்களின் வரலாற்றைக் கொண்டிருப்பன. தரவுச் செயலாக்கக் கருவிகளால், வாடிக்கையாளர்களுக்கு இடையில் வடிவங்களைக் கண்டறிய முடியும், மேலும் அவை நிகழவிருக்கிற அஞ்சல் பிரசாரங்களுக்கு பதில்வினை புரியக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள வாடிக்கையாளரைக் கண்டறிய உதவுகின்றன. ஒருங்கிணைப்புச் சுற்று உற்பத்தி வரிசையுடன் தொடர்புடைய தரவுச் செயலாக்கத்தின் எடுத்துக்காட்டு "மைனிங் IC டெஸ்ட் டேட்டா டு ஆப்டிமைஸ் VLSI டெஸ்டிங்" தாளில் விவரிக்கப்படுகிறது. இந்த தாளில் இறப்பு நிலை செயல்முறை பரிசோதனை சிக்கலுக்கு தரவுச் செயலாக்கம் மற்றும் முடிவு பகுப்பாய்வு ஆகியவற்றின் பயன்பாடுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தாளில் குறிப்பிடப்பட்டிருந்த பரிசோதனைகள், இறப்புத் தோல்வியின் வகைகளின் நிகழ்தகவியல் மாதிரிகளை உருவாக்க வரலாற்று ரீதியான இறப்பு-சோதனைத் தரவு எடுப்பதற்கு ஒரு முறைமையைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் செயல்திறனை விவரித்திருந்தன, மேலும் அவை பின்னர் அடுத்ததாக சோதனைக்கு எது இறப்புத் தோல்வியடையும் என்பதையும் சோதனையை எப்போது முடிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியான சோதனைத் தரவின் பரிசோதனைகள் சார்ந்துள்ள இந்த முறை, முதிர்ந்த IC பொருட்களில் இலாபத்தை அதிகரித்ததாக நிரூபிக்கப்பட்டதுஆற்றலைக் காண்பிக்கும். சமீபத்திய ஆண்டுகளில், தரவுச் செயலாக்கம் அறிவியல் மற்றும் பொறியியலின் உயிர் தகவல் தொழில்நுட்பம், மரபியல், மருத்துவம், கல்வி மற்றும் மின்னாற்றல் பொறியியல் போன்ற பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித மரபியல் பகுதி ஆய்வில், முக்கியமான நோக்கம் மனித DNA தொடர்வரிசையின் உள்-தனிப்பட்ட மாறுபாடுகளுக்கும் எளிதில் நோய் பாதிப்படைதலுக்கான வாய்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். எளிமையான மொழியில் கூறுவதானால், தனிநபரின் DNA தொடர்வரிசையில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு புற்று நோய் போன்ற பொதுவான நோய்களை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இதன் மூலம் கண்டறியப்படுகிறது. இது நோய் அறுதியிடல், நோய்களைத் தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை மேம்படுத்த உதவுவதற்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பம் பல்-காரணி பரிணாமவியல் குறைத்தல் என அழைக்கப்படுகிறது. மின்னாற்றல் பொறியியல் துறையில், தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பங்கள் பரவலாக உயர் மின்னழுத்தக் கருவிகளில் கட்டுப்பாட்டுக் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டு கண்காணிப்பின் நோக்கம் கருவியின் கடத்தாப் பொருளின் செயல்பாட்டு நிலையில் முக்கியத் தகவலைப் பெறுவதாகும். செல்ஃப் ஆர்கனைசிங் மேப் (SOM) போன்ற தரவுக் கொத்தாக்கல் முறைகள் மின்மாற்றியின் ஆன்-லோட் டேப்-சேஞ்சர்ஸ்(OLTCS) அதிர்வு கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது. அதிர்வு கண்காணித்தலைப் பயன்படுத்தும் போது, டேப் சேஞ்சர் தொடர்புகள் மற்றும் இயக்க இயந்திர நுட்பத்தின் கட்டுப்பாடுகள் பற்றிய தகவல் அடங்கிய சமிக்ஞையை உருவாக்கும் டேப் சேஞ்ச் செயல்பாட்டை இதனால் கண்காணிக்க முடியும். ஐயத்திற்கிடமின்றி, வெவ்வேறு டேப் நிலைகள் வெவ்வேறு சமிக்ஞைக உருவாக்கும். எனினும், துல்லியமாக ஒரே டேப் நிலைக்கான சாதாரண கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்கு இடையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் இருக்கும். SOM அசாதரணக் கட்டுப்பாடுகளை கண்டறிவதற்கும், அசாதாரண நிலைகளின் இயல்பை மதிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தரவுச் செயலாக்க தொழில்நுட்பங்கள் ஆற்றல் மின் மாற்றிகளுக்கான மறைந்துவிடும் வாயுப் பகுப்பாய்வுகளில் (DGA) பயன்படுத்தப்படுகிறது. DGA பல ஆண்டுகளாக ஆற்றல் மின்மாற்றிகளுக்கான பகுப்பாய்வாக இருக்கிறது. SOM போன்ற தரவுச் செயலாக்க தொழில்நுட்பங்கள் தரவை பகுப்பாய்வு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இரட்டை முக்கோணம் போன்ற தரநிலையான DGA விகித தொழில்நுட்பத்துக்கு தெளிவற்றதாக இருக்கும் போக்குகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகின்றன. அறிவியல்/பொறியியலில் தரவுச் செயலாக்கம் பயன்படுத்தப்படும் நான்காவது பகுதி கல்வி சார்ந்த ஆராய்ச்சி ஆகும், இதில் தரவுச் செயலாக்கம் மாணவர்களின் நடவடிக்கைகளில் எந்த நடவடிக்கைகளின் காரணமாக அவர்களது கற்றுக்கொள்ளும் திறன் குறைகிறது என்பதை ஆராயும் காரணிகளிலும், மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்ந்து நினைவில் வைத்திருக்கும் திறன் காரணமான காரணிகளைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது.. சமூக பயன்பாட்டில் இதே போன்ற ஒரு எடுத்துக்காட்டாக நிபுணத்துவம் கண்டறியும் முறைமைகளில் தரவுச் செயலாக்கம் பயன்படுத்தப்படுகிறது, அதில் குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், தனித்திறன் வாய்ந்த விவரிப்பாளர்கள் பிரித்தெடுக்கப்படுவார்கள், நெறிப்படுத்தப்படுவார்கள் மற்றும் வகைப்படுத்தப்படுவார்கள், அதனால் வல்லுநர்களை எளிதாகக் கண்டறிவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக, தரவுச் செயலாக்கம் கல்வி சார் நினைவுத்திறனை வளப்படுத்துகிறது. தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பப் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான மற்ற எடுத்துக்காட்டுகள், துறை உள்ளார்ந்த இயல்புகளைக் கொண்டு எளிதாக்கப்படும் உயிர் மருத்துவவியல் தரவு மருத்துவ சோதனைத் தரவை எடுத்தல், SOM பயன்படுத்தி போக்குவரத்துப் பகுப்பாய்வு செய்தல் ஆகியவையும் மற்றும் பலவுமாகும். தீங்கு விளைவிக்கும் மருந்தின் விளைவின் கடுமையான கண்காணிப்பில், உப்சாலா கண்காணிப்பு நிலையம் 1998 இலிருந்து தரவுச் செயலாக்க முறைகளை, WHO உலகளாவிய தரவுத்தளத்தில் இருந்த 4.6 மில்லியன் சந்தேகத்திற்குரிய தீங்கு விளைவிக்கும் மருந்தின் விளைவு நிகழ்வுகளில், நெருக்கடி நிலையில் மருந்து பாதுகாப்பு விசயங்களின் அறிக்கை வடிவங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில், இதுபோன்ற முறை, அதிகளவிலான மின்னணு உடல்நலப் பதிவுகளின் சேர்கரிப்புகளை எடுப்பதற்கு உருவாக்கப்பட்டது, அந்த பதிவுகள் மருத்துவ ரீதியாக நோய் மூலம் கண்டறிவதில் தொடர்புடைய உடலியல் சார்ந்த வடிவங்களுக்கானது. இடம் சார் தரவுச் செயலாக்கம் இடம் சார் தரவுக்கான தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பத்தின் பயன்பாடாகும். இடம் சார் தரவுச் செயலாக்கம் தரவுச் செயலாக்கத்தில் உள்ள அதே செயல்முறையையே பின்பற்றுகிறது, இதன் இறுதி நோக்கம் புவியியலில் வடிவங்களைக் கண்டறிவதாகும். இது வரை, தரவுச் செயலாக்கம் மற்றும் புவிசார் தகவல் முறைகள் (GIS) ஆகிய இரண்டும் இரண்டு தனித்தனி தொழில்நுட்பங்களாக இருக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் காட்சி மற்றும் தரவுப் பகுப்பாய்வுக்கும் அதன் சொந்த முறைகளையும், கலாச்சாரத்தையும் மற்றும் தனித்த அணுகுமுறைகளையும் கொண்டுள்ளன. குறிப்பாக, மிகவும் வழக்கமான GIS மிகவும் அடிப்படையான இடம் சார் ஆய்வு செயல்முறைகளை மட்டுமே கொண்டுள்ளது. IT, டிஜிட்டல் மேப்பிங், தொலைநிலை உணர்தல் மற்றும் GIS இன் உலகளாவிய பரவல் போன்றவற்றின் முன்னேற்றத்தால், புவியியல் ரீதியாக குறிப்பிடப்பட்ட தரவில் அளவற்ற அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளது, இது புவி சார் ஆய்வுகள் மற்றும் மாதிரிப்படுத்தலுக்கு தரவால் இயக்கப்படும் தூண்டும் அணுகுமுறைகளின் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்துகின்றன. தரவுச் செயலாக்கம், மிகப்பெரிய தரவுத்தளத்தில் மறைந்த வடிவங்களில் பகுதியளவு தானியங்கு தேடுதலாக இருக்கிறது, இது GIS சார்ந்த முடிவு எடுத்தலில் பயன்படுத்தும் போது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆதாயங்களை வழங்குகிறது. சமீபத்தில், இந்த இரு தொழில்நுட்பத்தையும் இணைக்கும் பணி மிகவும் முக்கியமானதாக இருந்தது, குறிப்பாக பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருந்த குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த மற்றும் புவியியல் சார்பான குறிப்புகளையுடைய அதிகளவிலான தரவுத்தளங்களில் அதிகளவிலான தகவல்கள் மறைந்திருந்தது உணரப்பட்டது. பின்வருவனவும் அந்த நிறுவனங்களில் அடங்கும்இடையில்: புவியியல் சார் தரவுக் களஞ்சியங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. மேலும், ஏற்கனவே உள்ள GIS தரவுத் தொகுப்புகள் அவ்வப்போது அம்சம் மற்றும் பண்புக்கூறு சார் கூறுகளாக பிரிக்கப்படுகின்றன, அவை வழக்கமாக கலப்பினத் தரவு மேலாண்மை முறைமைகளில் காப்பகப்படுத்தப்படுகின்றன. தொடர்பு ரீதியான (பண்புக்கூறு) தரவு மேலாண்மை மற்றும் பிரதேசவியல் ரீதியான (அம்சம்) தரவு மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிமுறையியல் தேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுகின்றன. புவியியல் தரவு வடிவமைப்புகளின் இந்த வரம்பு மற்றும் மாறுபட்ட தன்மையுடன் தொடர்புள்ளதாக இருக்கும் நிலையில், தனித்த சவால்களும் இருக்கின்றன. டிஜிட்டல் புவியியல் தரவுப் புரட்சியானது, பழைய "வெக்டார்" மற்றும் "ராஸ்ட்டர்" வடிவங்களையும் தாண்டி புதிய வகை தரவு வடிவமைப்புகளை உருவாக்குகிறது. புவியியல் தரவுக் களஞ்சியத்தில் படம் சார் மற்றும் புவியியல் ரீதியான-குறிப்புகளையுடைய மல்டி மீடியா போன்ற கட்டமைப்பற்ற தரவுகளும் அதிக அளவில் இருக்கின்றன . புவியியல் அறிவுக் கண்டுபிடிப்பு மற்றும் தரவுச் செயலாக்கத்தில் ஆராய்ச்சி தொடர்பான பல முக்கிய சவால்கள் இருக்கின்றன. மில்லர் மற்றும் ஹேன் ஆகியோர் இந்தத் துறையில் வளர்ந்துவரும் ஆராய்ச்சித் தலைப்புகளை பின்வரும் பட்டியலில் வெளியிட்டிருக்கிறார்கள்: மொத்த தகவல் விழிப்புணர்வு (TIA) திட்டம், பாதுகாப்பான விமானம் (கணினி-துணை கொண்டு பயணிகள் முன்கண்காணிப்பு முறை (CAPPS II) என்று முன்னர் அழைக்கப்பட்டது), பகுப்பாய்வு, பரவல், காட்சியாக்கம், அப்பாலறிதல், பொருள் சார்ந்த மேம்பாடு (ADVISE) மற்றும் பன் மாகாண தீவிரவாதத்திற்கெதிரான தகவல் பரிமாற்றம் (MATRIX) உள்ளிட்ட முந்தைய தரவுச் செய்லாக்க செயல்திட்டங்கள் அமெரிக்க அரசால் தீவிரவாதத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க அரசியலமைப்பின் 4 ஆம் சட்டத்திருத்தத்துக்கு எதிராக இவை இருப்பதாய் எழுந்த சர்ச்சையின் காரணமாக இந்த செயல்திட்டங்கள் தொடரப்படவில்லை, எனினும் பல செயல்திட்டங்கள் வெவ்வேறு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு வேறு வடிவங்களில் அல்லது வேறு பெயர்களில் தொடர்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிராகப் போரிடும் சூழலில் இரண்டு நம்பத்தகுந்த தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பங்கள் "வகை செயலாக்கம்" மற்றும் "பொருள் சார் தரவுச் செயலாக்கம்" ஆகியவை ஆகும். "பேட்டர்ன் மைனிங்" ஒரு தரவுச் செயலாக்க தொழில்நுட்பம், அவை ஏற்கனவே உள்ள குறிப்பிட்ட வகைகளைத் தேடுகின்றன. இந்தச் சூழலில் "வகைகள்" பொதுவாக தொடர்பு விதிகள் எனப்படுகின்றன. தொடர்பு விதிகளைத் தேடுவதற்கான முதல் நோக்கம், பல் பொருள் அங்காடி பரிமாற்றத் தரவில் ஆய்வு செய்ய விரும்புவதிலிருந்து வந்தது, இது வாடிக்கையாளர் வாங்கிய பொருட்களை வைத்து அவர்களின் பண்புகளை ஆராய்தல் என்பதே அதன் நோக்கமாக இருந்த். எடுத்துக்காட்டாக, "பீர் => முறுக்குகள் (80%)" என்ற தொடர்பு விதி, பீர் வாங்கும் ஐந்து வாடிக்கையாளர்களில் நான்கு பேர் முறுக்குகளையும் வாங்குகிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. தீவிரவாத நடவடிக்கையைக் கண்டறிவதற்காண ஒரு கருவியாக வகை செயலாக்கத்தைக் கருதும் சூழலில், தேசிய ஆராய்ச்சி கவுன்சில் பின்வரும் வரையறையை வெளியிட்டது: ""வகை-சார் தரவுச் செயலாக்கம் தீவிரவாத நடவடிக்கைக்கு தொடர்புடைய வகைகளை (முரண்பட்ட தரவு வகைகளும் சேர்த்து) பார்க்க வேண்டும், இந்த வகைகள் இரைச்சலான பெருங்கடலில் இருந்து வரும் சிறிய சமிக்ஞையாகக் கூட இருக்கலாம்."" இசைத் தகவல் மீட்பு (MIR) போன்ற புதிய துறைகளிலும் பேட்டர்ன் மைனிங் பயன்படுத்தப்படுகிறது, இவற்றில் பௌதிக மற்றும் அதற்கு மாறான தன்மை கொண்ட களங்களில் பெறப்படும் வகைகள் கண்டறியப்பட்டு, அவை செம்மை அறிவுக் கண்டறிதல் தேடல் தொழில்நுட்பத்துக்கு வழங்கப்படுகின்றன. "பொருள்-சார் தரவுச் செயலாக்கம்" ஒரு தரவுச் செயலாக்கத் தொழில்நுட்பம், தரவில் இரு தனிநபர்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைத் தேடுவதுடன் தொடர்புடையது. தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் சூழலில், தேசிய ஆராய்ச்சி கவுன்சில் பின்வரும் வரையறையை வெளியிட்டது: ""பொருள்-சார் தரவுச் செயலாக்கம் மற்ற தகவலைச் சார்ந்து கண்காணிக்க மற்றும் கருதப்பட வேண்டிய ஒரு தொடக்கநிலைத் தனிநபர் அல்லது மற்ற தரவுப் பரிமாற்றப் புள்ளி தரவைத் தொடங்குவதைப் பயன்படுத்துகிறது, இதில் அதிக சாதக நிலையைக் கருதுகிறது, தொடக்கநிலைத் தரவுடன் மற்ற நபர்கள் யார் அல்லது நிதிப் பரிமாற்றங்கள் அல்லது மற்ற இயக்கங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடர்புள்ளனவா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாக உள்ளது."" தரவுச் செயலாக்கம் என்பது அறநெறி ரீதியில் நடுநிலையானது என சில நபர்கள் நம்புகிறார்கள்.. இருப்பினும், தரவுச் செயலாக்கத்தைப் பயன்படுத்தக்கூடிய வழிகள் தனியுரிமை, சட்ட இணக்கம் மற்றும் அறநெறிகள் சம்பந்தமாக கேள்விகளை எழுப்பலாம். குறிப்பாக, தரவுச் செயலாக்கத்தில், மொத்த தகவல் விழிப்புணர்வு திட்டம் அல்லது ADVISE போன்றவற்றிலுள்ளது போல, தேசிய பாதுகாப்பு அல்லது சட்ட அமலாக்க நோக்கங்களுக்கான அரசாங்க அல்லது வர்த்தக ரீதியான தரவுத் தொகுதிகள் தனியுரிமை விவகாரங்களை எழுப்பியுள்ளன. தரவுச் செயலாக்கத்திதிற்கு தரவு தயாரிப்பு தேவைப்படும், இது நம்பகத்தன்மை மற்றும் தனியுரிமைக் கடமைகளைக் கொண்டிருக்க வேண்டிய தகவல் அல்லது வகைகளை வெளிக்கொண்டு வரலாம். இது நடைபெறுவதற்குரிய பொதுவான வழி தரவு ஒன்று சேர்த்தலாகும். தரவானது அவ்வப்போது மாறக்கூடியதாகவும், வெவ்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்பட்சத்தில் அவற்றை பகுப்பாய்வு செய்ய வசதியாக ஒன்றிணைக்கையில் இந்த தரவு ஓன்று சேர்த்தல் என்ற செயல் நிகழ்கிறது. இது இயல்பில் தரவுச் செயலாக்கமல்ல, ஆனால் பகுப்பாய்வு நோக்குக்காவும் அதற்கு முன்னரும் செய்யப்படும் தரவு தயாரிப்பின் விளைவாக இருக்கும். ஒரு தனிநபரின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலானது தரவை ஒன்று சேர்க்கும்போது தரவு சேகரிப்பவர் அல்லது புதிதாக ஒன்றாக்கப்பட்ட தரவு தொகுப்பிற்கான அணுகல் உள்ளவர் குறிப்பிட்ட தனிநபர்களை, குறிப்பாக தரவு உண்மையில் இனம்காணப்படாததாக இருந்தபோது, அடையாளம் காணக்கூடியவராகும்போது வருகிறது. தரவைச் சேகரிக்கும் முன்னர் ஒரு தனிநபருக்கு பின்வருவனவற்றை அறியச் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது: HIPAA போன்ற ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளின் பத்திகளின் மூலம் அமெரிக்க உயர் சட்டப்பேரவையின் மூலம் இந்தத் தனியுரிமை விவகாரங்களுக்கு ஓரளவு கவனமளிக்கப்பட்டுள்ளன. சுகாதாரக் காப்பீட்டு நகர்த்தலுக்கான இணக்கத்தன்மை மற்றும் உத்தரவாத சட்டமானது (HIPAA), தரவைக் கொடுக்கின்ற நபர்களுக்கு, அவர்கள் வழங்கும் தகவல் மற்றும் அந்தத் தகவலைப் பெறுகின்ற அமைப்புகளால் அவை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றிய "தெரியப்படுத்தப்படும் அனுமதி" வழங்கப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறது. பயோடெக் பிசினஸ் வீக்கின் ஒரு கட்டுரையின் படி, “நடைமுறையில் HIPAA சட்டமானது நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சித் துறையில் உள்ள ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விடச் சிறப்பான பாதுகாப்பு எதையும் வழங்குவதில்லை என AAHC கூறுகிறது. மிகவும் முக்கியமாக, தெரியப்படுத்தப்பட்ட அனுமதியின் மூலம் பாதுகாப்பை வழங்குவதான இந்த விதியின் குறிக்கோளானது நோயாளிகள் மற்றும் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப் படிவங்களை நிரப்புவதில் உள்ள சிக்கலான தன்மையால் சிதைந்துள்ளது, இது சராசரி மனிதர்களின் புரியும் திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.” (40) தரவு ஒன்று சேர்த்தல் செயல்களின் போது, தரவு எவருடையது என்பதைத் தெரியாமல் பார்த்துக்கொள்வதன் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது. தரவானது எவருடையது என்பது தெரியாமல் போகும் வகையில், ஒருவர் கூடுதலாக தரவை மாற்றியமைக்கலாம், இதனால் நபர்கள் யார் என்பது எளிதாகத் தெரிந்துகொள்ளப்படாது. இருப்பினும், இந்த அடையாளம் நீக்கப்பட்ட தரவுத் தொகுப்புகளிலேயே ஒருவர் யாரென அடையாளம் காண போதுமான தகவல்கள் இருக்கலாம், AOL நிறுவனம் தற்செயலாக வெளியிட்ட தேடல் வரலாறுகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, பத்திரிகையாளர்கள் பல நபர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஒவ்வொரு ஆண்டும், பல நிறுவனங்கள் சந்தை இடங்களைச் சார்ந்த கணக்கெடுப்புகளை நிகழ்த்தி, தற்போதைய தரவுச் செயலாக்க சந்தை இடத்தின் தேவைகள் மற்றும் அவற்றைக் கையாளும் கருவிகள் மற்றும் விற்பனையாளர்களின் ஒப்பீடுகள் ஆகியவை தொடர்பான அறிக்கைகளை உருவாக்கி வெளியிடுகின்றன. இது போன்ற வருடாந்தர அறிக்கைகளில் சில, பின்வருமாறு: தரவுச் செயலாக்கம் என்பது தரவைப் "பகுப்பாய்தல்" பற்றியதாகும்; தரவில் இருந்து தகவலைப் பெறுதல் பற்றிய தகவலுக்கு, காண்க: 40. பயோடெக் பிசினஸ் வீக் எடிட்டர்ஸ். (ஜூன் 30, 2008). BIOMEDICINE; HIPAA பிரைவசி ரூல் இம்பெட்ஸ் பயோமெடிக்கல் ரீசர்ச். பயோடெக் பிசினஸ் வீக். லெக்ஸிச்நெக்ஸிஸ் அகடெமிக்கில் இருந்து 17 நவம்பர் 2009 இல் பெறப்பட்டது. ஏஞ்சலினா ஜோலி ஏஞ்சலினா ஜோலி (இயற்பெயர் ஏஞ்சலினா ஜோலி வோய்ட் , பிறப்பு: ஜூன் 4, 1975) அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார். 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த "லுக்கிங் டூ கெட் அவுட்" என்கிற திரைப்படத்தில் குழந்தையாக, தனது அப்பா ஜோன் வோய்ட் உடன் தோன்றியதன் மூலம் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தாலும், குறைந்த முதலீட்டில் தயாரான "சைபோர்க் 2" (1993) திரைப்படத்தின் மூலம் தான் அவரது பிரதான நடிப்பு வாழ்க்கை துவங்கியது. ஒரு பெரிய படத்தில் அவரது முதல் பிரதான பாத்திரம் என்பது "ஹேக்கர்ஸ்" (1995) திரைப்படத்தில் நிகழ்ந்தது. விமர்சனரீதியாக பாராட்டுப் பெற்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களான "ஜார்ஜ் வாலஸ்" (1997) மற்றும் "ஜியா" (1998) ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார். அத்துடன் "கேர்ள், இன்டர்ரப்டட்" (1999) என்கிற குணச்சித்திரப் படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வென்றார். "லாரா கிராப்ட்: டோம்ப் ரைடர்" (2001) என்னும் காணொளி விளையாட்டு நாயகி லாரா கிராப்டாக அவர் தோன்றிய பின் ஜோலி பரந்த புகழைப் பெற்றார். அன்று முதல் இவர் ஆங்கிலத் திரையுலகின் மிகவும் அறியப்பட்ட மிகவும் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். "மிஸ்டர் & மிசஸ் ஸ்மித்" (2005) திரைப்படமும் "குங் ஃபு பான்டா" (2008) என்னும் அசைவூட்டத் திரைப்படமும் அவரது மிகப்பெரும் வர்த்தக வெற்றிப் படங்களாக அமைந்தன. ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின், ஜோலி இப்போது நடிகர் பிராட் பிட் உடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினர் உலகளவில் ஊடகங்கள் கவனம் ஈர்ப்பவர்களாய் திகழ்கின்றனர். ஜோலிக்கும் பிட்டுக்கும் மடோக்ஸ், பாக்ஸ், சகரா ஆகிய மூன்று தத்தெடுத்த குழந்தைகளும், ஷிலோ, க்னாக்ஸ், விவியென் ஆகிய மூன்று ரத்தவழி குழந்தைகளும் உள்ளனர். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜோன் வோய்ட், மர்செலின் பெர்ட்ரான்ட் தம்பதியருக்கு மகளாய் ஜோலி பிறந்தார். தந்தை வழியில், ஜோலி செக்கோஸ்லேவாக்கிய மற்றும் ஜெர்மனிய வம்சாவளியைச் சேர்ந்தவர். தாயின் வழியில் பிரெஞ்சு-கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1976 ஆம் ஆண்டில் ஜோலியின் பெற்றோர்கள் பிரிந்த பிறகு, ஜோலியும் அவர் சகோதரரும் தாயினால் வளர்க்கப்பட்டனர். குழந்தையாக இருந்த சமயத்தில், தனது தாயுடன் ஜோலி நிறைய திரைப்படங்களைப் பார்த்து வந்தார். இது தனது நடிப்பு ஆசைக்கு மிகவும் உத்வேகமளித்ததாய் பின்னர் அவர் விளக்கமளித்தார். ஜோலியிடம் அவரது தந்தை செல்வாக்கு செலுத்தவில்லை. ஜோலிக்கு பதினொரு வயதான போது, அந்த குடும்பம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபெயர்ந்தது. தான் நடிக்க விரும்புவதாய் தீர்மானித்த ஜோலி லீ ஸ்ட்ராஸ்பெர்க் மேடைநடிப்புப் பயிலகத்தில் பயிற்சி பெற பதிவு செய்தார். இரண்டு ஆண்டுகள் இங்கு பயிற்சி பெற்ற இவர் பல்வேறு மேடைத் தயாரிப்புகளில் தோன்றினார். 14 ஆம் வயதில், தனது நடிப்பு வகுப்புகளை கைவிட்ட இவர் ஒரு இறுதிச்சடங்கு நிர்வாகியாகும் கனவைக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில், கறுப்பு ஆடை அணிந்து கொண்டார். தனது முடிக்கு கருஞ்சிவப்பு சாயமிட்டுக் கொண்டார். இரண்டு வருடங்களின் பின், தனது தாயின் வீட்டிற்கு சில கட்டிடங்கள் தள்ளி ஒரு வாகனப் பட்டறைக்கு மேலே ஒரு குடியிருப்பு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். மீண்டும் திரைப் படிப்புகளுக்கு திரும்பிய அவர், உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். சமீப காலங்களில் இந்த காலகட்டம் குறித்து குறிப்பிடுகையில், "நான் இன்னும் மார்பில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு முரட்டு இளைஞியாகத் தான் உணர்கிறேன், எப்போதும் அப்படித்தான் உணர்வேன்” என்று கூறியிருக்கிறார். பின்பு பெவர்லி ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் (பிற்காலத்தில் மோரெனோ உயர் நிலைப் பள்ளி) ஒரு மாணவியாக இருந்த காலத்தையும் அப்பகுதியின் மிகவும் வசதி படைத்த குடும்ப குழந்தைகளிடையே தனிமைப்பட்டு தான் உணர்ந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். ஜோலியின் தாய் சற்று கண்ணியமான வருமான அளவை மட்டுமே கொண்டு பிழைத்து வந்தார். ஜோலி பல சமயங்களில் கைமாறிய உடைகளையே உடுத்தினார். ரொம்பவும் ஒல்லியாக இருந்தது, கண்ணாடிகள் அணிவது மற்றும் பல்வளைகள் அணிந்தது ஆகியவை காரணமாக மற்ற மாணவர்களும் இவரை கேலி செய்தனர். மாடலிங் துறையில் இவரது ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்றபோது இவரது சுயமரியாதை இன்னும் சுருங்கிப் போனது. அவர் உடலில் வெட்டிக் கொள்ளத் துவங்கினார். இது குறித்து பின்னர் கூறுகையில், "சில காரணங்களால், நானே என்னை வெட்டிக் கொள்வதும் வலியை உணர்வதும் செய்து கொண்டிருந்தேன். ஒருவேளை உயிர் கொண்டிருப்பதை உணர்வதாலோ அல்லது ஒரு வகை சுதந்திரத்தை உணர்வதாலோ, அது எனக்கு ஒருவகை சிகிச்சை போல் அமைந்திருந்தது" என்று அவர் தெரிவித்தார். ஜோலி வெகு காலம் தனது தந்தையிடம் இருந்து ஒதுங்கியே வாழ்ந்தார். இருவரும் சமரசம் செய்து கொள்ள முயன்றனர். தந்தை இவருடன் "லாரா கிராப்ட்: டோம் ரெய்டர்" (2001) படைப்பில் உடன் தோன்றினார். 2002 ஆம் ஆண்டு ஜூலையில், தனது பெயரிலிருக்கும் வோய்ட் என்கிற துணைப்பெயரை நீக்கி விட்டு "ஏஞ்சலினா ஜோலி" என்று சட்டப்பூர்வமாய் தனது பெயரை மாற்றிக் கொள்வதற்கு ஜோலி விண்ணப்பித்தார்; இந்த பெயர் மாற்றம் செப்டம்பர் 12, 2002 அன்று அதிகாரப்பூர்வமாகியது. அதே ஆண்டு ஆகத்து மாதத்தில், தனது மகளுக்கு "தீவிரமான மனநலப் பிரச்சினைகள்" இருந்ததாக வோய்ட் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். தனது தந்தையுடன் இனி உறவினைத் தொடர தனக்கு விருப்பமில்லை என்று பின்னர் ஜோலி சுட்டிக்காட்டினார். "நானும் எனது தந்தையும் பேசிக் கொள்வதில்லை. அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" என்று ஜோலி கூறினார். தனது தந்தையிடம் இருந்து தான் ஒதுங்கியதற்கான காரணங்களை தான் விளம்பரப்படுத்த விரும்பாததன் காரணம் தனக்கு ஒரு தத்துப் பிள்ளை இருக்கிறான் என்பதாலேயே என்றும், வோய்ட் உடன் உறவைப் பேணுவதை ஆரோக்கியமானதாக தான் கருதவில்லை என்றும் ஜோலி தெரிவித்தார். 14 வயதாகும் போது ஜோலி ஒரு நாகரிக அணிவகுப்பு மங்கையாக தனது வாழ்க்கையைத் துவக்கினார். முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டனில் நாகரிக விளம்பரத் தொழிலில் அவர் ஈடுபட்டார். அந்த சமயத்தில் ஏராளமான இசை காணொளிகளிலும் தோன்றினார். மீட் லோஃப் ("ராக் & ரோல் ட்ரீம்ஸ் கம் த்ரூ"), அன்டோனெலோ வென்டிடி ("அல்டா மரியா"), லென்னி கிராவிட்ஸ் ("ஸ்டாண்ட் பை மை வூமன்"), மற்றும் தி லெமன்ஹெட்ஸ் ("இட்ஸ் எபவுட் டைம்") ஆகியோரது காணொளிகள் இதில் அடங்கும். 16 வயதில், மீண்டும் நாடகத்தின் பக்கம் திரும்பிய ஜோலி தனது முதல் பாத்திரமாக ஜெர்மானிய அல்லிராணியாக நடித்தார். ஒருவரைப் போல் நடந்து கொள்வதற்கு அவரை உற்றுக் கவனிக்கும் பழக்கத்தை தனது தந்தை பின்பற்றுவதைக் கவனித்த ஜோலி தனது தந்தையிடம் இருந்து அப்பழக்கத்தைக் கற்றுக் கொண்டார். இந்த காலத்தில் அவர்களது உறவு குறைந்த உரசலுடன் இருந்தது. பின் ஜோலியின் சகோதரர் எடுத்த ஐந்து மாணவர் படங்களில் ஜோலி தோன்றினார். ஆனால் ஜோலியின் தொழில்முறை திரைப்பட வாழ்க்கை 1993 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. "சைபோர்க் 2" என்கிற குறைந்த நிதியாதாரத்தில் தயாரான திரைப்படத்தில் தனது முதல் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஏறக்குறைய ஒரு எந்திர மனுசி போல் செயல்படும் இவர் போட்டி உற்பத்தியாளரின் தலைமையகத்திற்குள் தனது கவர்ச்சியைப் பயன்படுத்தி உள்ளே சென்று பின் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொள்ள வேண்டும். பின் "வித்அவுட் எவிடென்ஸ்" படத்தில் துணைப் பாத்திரம் ஏற்றார். அதனைத் தொடர்ந்து, தனது முதல் ஹாலிவுட் படமான "ஹேக்கர்ஸ்" (1995) படத்தில் ஜோலி கேத் லிபி என்னும் பாத்திரத்தில் நடித்தார். இச்சமயத்தில் தான் தனது முதல் கணவரான ஜானி லீ மில்லரை ஜோலி சந்தித்தார். ஜோலியிடம் அவரது தந்தையான ஜோன் வோய்ட்டின் அழகிய சொரூபமான தோற்றம் இருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது". இந்த படம் திரையரங்குகளில் லாபம் ஈட்டித் தர தவறினாலும், பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. 1996 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான "லவ் இஸ் ஆல் தேர் இஸ்" படத்தில் ஜினா மலாஸிஸியாக ஜோலி தோன்றினார். இப்படத்தை ஒருவகையில் "ரோமியோ ஜூலியட்" டின் தற்கால மெல்லிய தழுவலாகக் கூறலாம். நியூயார்க்கின் பிராங்ஸ் பகுதியில் இருக்கும் இரண்டு போட்டி இத்தாலிய குடும்ப உணவக உரிமையாளர்களுக்கு இடையே நிகழ்வதாக கதை அமைந்தது. "மோஜவே மூன்" (1996) அத்தியாயத் திரைப்படத்தில் எலினோர் ரிக்பி என்னும் ஒரு இளம்பெண்ணாக ஜோலி நடித்தார். இதில் தனது தாய் மீது மிகுந்த பாசம் காட்டும் டேனி எய்லோவின் பாத்திரத்தின் மீது ஜோலி காதல் கொள்கிறார். தாயாக ஆனி ஆர்சர் நடித்தார். 1996 ஆம் ஆண்டில், ஜோலி மார்கரெட் "லெக்ஸ்" சடோவ்ஸ்கி என்னும் பாத்திரத்திலும் நடித்தார். தங்களை பாலியல் தொந்தரவு செய்த ஒரு ஆசிரியரை உதைத்த ஐந்து இளம் பெண்கள் உருவாக்கும் ஒரு அசாதாரண உறவு பற்றிய இந்த "ஃபாக்ஸ்ஃபயர்" என்னும் படத்தில் அந்த ஐந்து பேரில் ஜோலியும் ஒருவர். பாத்திரப் படைப்பு அபத்தமாய் இருந்தாலும் ஜோலியின் இருப்பு இந்த அரைத்த மாவை அரைக்கும் நிலையிலிருந்து படம் மீள்வதற்கு உதவியிருக்கிறது என்று இவரது நடிப்பு குறித்து "லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்" எழுதியது. 1997 ஆம் ஆண்டில், பிளேயிங் காட் என்னும் திரைப்படத்தில் டேவிட் டசோவ்னி உடன் ஜோலி நடித்தார். கதை லாஸ் ஏஞ்சல்சின் நிழல் உலகத்தில் நிகழ்வதாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அதன்பின் தொலைக்காட்சி திரைப்படமான "ட்ரூ வூமன்" படத்தில் அவர் தோன்றினார். 1997 ஆம் ஆண்டில் வந்த "ஜார்ஜ் வாலஸ்" வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் கார்னெலியா வாலஸ் பாத்திரத்தை ஜோலி ஏற்று நடித்த பின் அவரது தொழில் வாய்ப்புகள் மேம்படத் துவங்கின. இந்த படத்திற்காக இவர் கோல்டன் குளோப் விருதினை வென்றதோடு எம்மி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸாக கேரி ஸினிஸி நடித்திருந்தார். ஜான் ஃபிரான்கென்ஹெய்மர் இயக்கிய இந்த படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, மற்ற விருதுகளுடன் சேர்ந்து, தொலைக்காட்சிக்கென உருவான சிறந்த குறுந்தொடர்/அசைவுப் படத்திற்கான கோல்டன் குளோப் விருதினையும் பெற்றது. 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் சுடப்பட்டு முடங்கிப் போன முன்னாள் பிரிவினைவாத ஆளுநரின் இரண்டாவது மனைவி பாத்திரத்தில் ஜோலி நடித்திருந்தார். 1998 ஆம் ஆண்டில் எச்பிஓ'வின் "ஜியா" படத்தில் ஜோலி நடித்தார். இதில் ஜியா கரன்கி என்னும் நாகரிக விளம்பர மங்கை பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். பாலியல் வாழ்க்கை, போதை மருந்துகள், உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்த இந்த படம், தனது போதை பழக்கத்தின் காரணமாக கரன்கியின் வாழ்க்கை, தொழில் அழிந்தமை, அவரது வீழ்ச்சி, எயிட்சு பாதித்தமையால் சாவு ஆகியவற்றை காலவரிசையில் பதிவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒரு கோல்டன் குளோப் விருதினை வென்ற ஜோலி எம்மி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார். அத்துடன் தனது முதலாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதினையும் அவர் வென்றார். லீ ஸ்ட்ராஸ்பெர்க்'கின் வழிமுறை நடிப்பை பின்பற்றி ஜோலி தனது முந்தைய பல படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் காட்சிகளுக்கு இடையிலும் அந்த பாத்திரத்திலேயே இருக்க விரும்புவார் என்பதாகக் கூறப்பட்டது. இதனால் கையாளுவதற்கு கடினமானவர் எனும் பேரும் அவருக்குக் கிட்டியது. "ஜியா" வைத் தொடர்ந்து, நியூயார்க்கிற்கு இடம்பெயர்ந்து விட்ட ஜோலி கொஞ்ச காலத்திற்கு நடிப்பதையே நிறுத்தி விட்டார். காரணம் "கொடுக்க இனி எதுவுமில்லை" என்று அவர் கருதினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்பட உருவாக்கம் பயில பதிவு செய்த அவர் எழுத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டார். தன்னை ஒருங்குபடுத்திக் கொள்ள இது உதவியதாக பின்னர் அவர் தெரிவித்தார். 1998 நிழல் உலகத் திரைப்படமான "ஹெல்'ஸ் கிச்சன்" படத்தில் குளோரியா மெக்நீரியாக நடித்ததன் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். அதே ஆண்டின் பிற்பகுதியில் "பிளேயிங் பை ஹார்ட்" படத்தில் தோன்றினார். இதில் சீன் கானரி, கிலியன் ஆன்டர்சன், ரியான் பிலிப் மற்றும் ஜோன் ஸ்டீவர்ட் ஆகியோர் அடங்கிய நிகழ்ச்சிக் குழுவின் பாகமாக நடித்தார். இந்த திரைப்படம் அதிகமான அளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக ஜோலி ரொம்பவும் பாராட்டப் பெற்றார். தேசிய திறனாய்வு வாரியம் வழங்கும் திருப்புமுனையான நடிப்புக்கான விருதினை ஜோலி வென்றார். 1999 ஆம் ஆண்டில், மைக் நெவெல்லின் நகைச்சுவைக் குணச்சித்திரத் திரைப்படமான "புஷிங் டின்" படத்தில் ஜோலி நடித்தார். இதில் ஜான் குஸாக், பில்லி பாப் தோன்டன், கேட் பிளாஞ்செட் ஆகியோர் நடித்திருந்தனர். தோன்டனின் ஆள்மயக்கும் மனைவியாக ஜோலி நடித்தார். இந்த படம் கலவையான வரவேற்பை விமர்சகர்களிடம் இருந்து பெற்றது. குறிப்பாக ஜோலியின் பாத்திரம் விமர்சனத்திற்குள்ளானது. அதன்பின் ஜோலி "தி போன் கலெக்டர்" (1999) படத்தில் டென்ஸெல் வாஷிங்டன் உடன் இணைந்து நடித்தார். இது ஜெஃப்ரி டீவர் எழுதிய ஒரு மர்ம புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். தனது காவலதிகாரி தந்தையின் தற்கொலையில் மனப் பிரமையுற்றிருக்கும் நிலையில், ஒரு தொடர் கொலைகாரனைப் பிடிக்க உதவும் அமேலியா டோனாகி என்னும் ஒரு காவல் அதிகாரி பாத்திரத்தில் ஜோலி நடித்தார். இந்த படம் உலகளவில் 151 மில்லியன் டாலர் தொகையை வசூலித்தது. ஆனால் விமர்சனரீதியாக தோல்விப் படமாகும். அடுத்ததாக ஜோலி, "கேர்ள், இன்டரப்டட்" (1999) படத்தில் லிசா ரோவ் என்னும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மனநோயாளியாக துணைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இது சுசானா கெய்சன் என்னும் மன நோயாளியின் கதையைச் சொல்லும் ஒரு படமாகும். இது கெய்சனின் மூல நினைவுப் புத்தகமான "கேர்ள், இன்டரப்டடின்" தழுவலாகும். பிரதான பாத்திரம் ஏற்றிருந்த வினோனா ரைடருக்கு மறுவாழ்வு தரும் என்பதாக நம்பப்பட்ட இந்த படத்தில் , அதற்குப் பதிலாய் ஹாலிவுட்டில் ஜோலியின் இறுதி திருப்புமுனையை குறிக்கும் படமாக இது அமைந்தது. தனது மூன்றாவது கோல்டன் குளோப் விருது, தனது இரண்டாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஒரு அகாதமி விருது ஆகிய விருதுகளை ஜோலி வென்றார். 2000 ஆவது ஆண்டில், "கோன் இன் 60 செகண்ட்ஸ்" என்னும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தில் ஜோலி தோன்றினார். இதில் நிகோலஸ் கேஜ் என்னும் கார் திருடனின் முன்னாள் பெண் நண்பி சாரா வேலாண்ட் என்னும் பாத்திரத்தில் ஜோலி நடித்திருந்தார். இது சிறிய பாத்திரம் தான். லிசா ரோவ் என்னும் கனமான பாத்திரத்திற்குப் பிறகு இந்த படம் ஒரு வரவேற்கத்தக்க நிவாரணமாக அமைந்தது என்று பின்னர் ஜோலி விளக்கினார். அதுவரையான காலத்தில் ஜோலியின் மிக அதிக வருவாயைக் கொணர்ந்த படமாக அது ஆனது. சர்வதேச அளவில் 237 மில்லியன் டாலர்களை இது சம்பாதித்துக் கொடுத்தது. தனது நடிப்புத்திறனுக்காக ஜோலி மிகவும் மதிக்கப்பட்டாலும், இக்காலம் வரை ஜோலியின் திரைப்படங்கள் பரந்த அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கவில்லை. ஆனால் "லாரா கிராப்ட்: டோம்ப் ரெய்டர்" (2001) அவரை ஒரு சர்வதேச நட்சத்திர நாயகி ஆக்கியது. பிரபல "டோம்ப் ரெய்டர்" காணொளி விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் லாரா கிராஃப்ட் என்னும் நாயகி பாத்திரத்திற்காக ஜோலி பிரித்தானிய பேச்சுவழக்கை கற்றுக் கொள்ளவும் தீவிரமான தற்காப்புக் கலை பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டியிருந்தது. ஜோலி பொதுவாக அவரது உடல்ரீதியான நடிப்பிற்காக பாராட்டப்பட்டார் என்றாலும் இந்த படம் பெரும்பாலும் எதிர்மறை திறனாய்வுகளையே உருவாக்கியது. ஆயினும் இந்த படம் சர்வதேசரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்து உலகெங்கிலும் $275 மில்லியன் தொகையை ஈட்டிக் கொடுத்ததோடு, ஒரு அதிரடி பெண் சண்டை நட்சத்திரமாக சர்வதேச அளவில் ஜோலியின் பெயரை உயர்த்தியது. அதன்பின் "ஒரிஜினல் சின்" (2001) திரைப்படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெண்ணாக ஜூலியா ரசல் எனும் பாத்திரத்தில் அன்டோனியோ பன்டெரெசிற்கு ஜோடியாக நடித்தார். இது கார்னெல் வூல்ரிச் எழுதிய "வால்ட்ஸ் இன்டூ டார்க்னெஸ்" புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படம் விமர்சனரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது. 2002 ஆம் ஆண்டில், "லைஃப் ஆர் சம்திங் லைக் இட்" படத்தில் லெனி கெரிகான் பாத்திரத்தில் நடித்தார். இது இன்னும் ஒரு வாரத்தில் மரணத்தை தழுவப் போவதாகக் கூறப்படும் ஒரு சுறுசுறுப்பு மிகுந்த தொலைக்காட்சி செய்தியாளர் குறித்த படமாகும். இந்த படம் விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஜோலியின் நடிப்பு நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. லாரா கிராஃப்ட் பாத்திரத்தில் ஜோலி மீண்டும் 2003 ஆம் ஆண்டில் லாரா கிராப்ட் டோம்ப் ரெய்டர் படத்தில் நடித்தார். இந்த தொடர்வரிசை திரைப்படம் மூலப் பட அளவிற்கு வருமானம் ஈட்டித் தரவில்லை என்றாலும், சர்வதேச திரையரங்கு வசூலாய் 156 மில்லியன் டாலர் தொகையை சம்பாதித்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜோலி "பியான்ட் பார்டர்ஸ்" என்னும் ஆப்பிரிக்காவின் உதவித் தொழிலாளர்கள் குறித்த படத்தில் நடித்தார். மனிதாபிமான நிவாரண விடயத்தை ஊக்குவிப்பதில் ஜோலியின் அக்கறையை பிரதிபலித்தபோதிலும், இந்த படம் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றி பெறாமல் போனது. 2004 ஆம் ஆண்டில், "டேகிங் லைவ்ஸ்" என்னும் திகில் படத்தில் இதான் ஹாக் உடன் ஜோலி நடித்தார். இதில் இலியானா ஸ்காட் என்னும் பாத்திரத்தை இவர் ஏற்றிருந்தார். ஒரு தொடர் கொலைகாரனை பிடிப்பதற்காக மோன்ட்ரியல் சட்ட அமலாக்கத் துறையால் அழைக்கப்படும் ஒரு மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக இதில் அவர் நடித்திருந்தார். இந்த படம் கலவையான வரவேற்பை பெற்றது. அத்துடன் டிரீம்ஒர்க்ஸ் தயாரிப்பு படமான "ஷார்க் டேல்" (2004) என்னும் அசைவூட்டப் படத்தில் வரும் லோலா என்கிற நன்னீர் வளர்ப்பு மீனுக்கு குரலும் ஜோலி அளித்திருக்கிறார். அத்துடன் கெர்ரி கோன்ரானின் "ஸ்கை கேப்டன் அன்ட் தி வேர்ல்டு ஆஃப் டுமாரோ" (2004) திரைப்படத்திலும் சற்று நேரம் ஜோலி தோன்றுவார். இது முழுக்கவும் ஒரு நீலத்திரைக்கு முன்னதாக நடிகர்கள் நடித்த கற்பனை சாகசத் திரைப்படமாகும். அத்துடன் 2004 ஆம் ஆண்டில், "அலெக்ஸாண்டர்" என்னும் படத்தில் ஒலிம்பியாசாகவும் நடித்தார். இது பேரரசர் அலெக்சாண்டரின் வாழ்க்கை குறித்து ஆலிவர் ஸ்டோன் எடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இந்த படம் உள்நாட்டில் தோல்வியுற்றது. அலெக்சாண்டரின் இருபால் பாலியல் விருப்ப குணாதிசய விவரிப்பை ஏற்றுக் கொள்ளாதது தான் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாமல் போனதன் காரணம் என்று ஸ்டோன் தெரிவித்தார், ஆனால் அமெரிக்காவிற்கு வெளியே சர்வதேச அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் 139 மில்லியன் டாலர் வசூல் செய்தது. 2005 ஆம் ஆண்டில் ஜோலி நடித்த ஒரே திரைப்படம் "மிஸ்டர் & மிசஸ் ஸ்மித்" என்கிற அதிரடி நகைச்சுவைப் படமாகும். டோக் லிமான் இயக்கிய இத்திரைப்படம், சுவாரஸ்யமில்லாமல் திருமண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியர், தாங்கள் இருவருமே ரகசிய கொலைப்படையாளர் என்பதை கண்டுகொள்வதாக செல்கிறது. பிராட் பிட் ஜோடியாக ஜேன் ஸ்மித் என்கிற பாத்திரத்தில் ஜோலி நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் பொதுவாக நாயகன் நாயகி இடையேயான ரசாயனம் பொதுவாக பாராட்டப்பட்டது. உலகளவில் 478 மில்லியன் டாலர் வசூல் செய்த இந்த திரைப்படம், 2005 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும். அதன்பின் ராபர்ட் டி நெய்ரோவின் "தி குட் ஷெப்பர்டு" (2006) திரைப்படத்தில் ஜோலி தோன்றினார். இது அமெரிக்க உளவுத் துறையின் ஆரம்ப கால வரலாறு குறித்த படமாகும். எட்வர்ட் வில்சன் பார்வையில் விரிவதாக அமைக்கப்பட்டது. இந்த பாத்திரத்தில் மேட் டமோன் நடித்தார். வில்சனின் கவனிக்கப்படாத மனைவி மார்கரெட் ரஸெல் என்னும் துணைப் பாத்திரத்தில் ஜோலி நடித்தார். 2007 ஆம் ஆண்டில், "எ ப்ளேஸ் இன் டைம்" என்கிற ஆவணப் படத்தின் மூலம் தனது இயக்குநர் முயற்சியில் ஜோலி காலடி எடுத்து வைத்தார். இது உலகெங்கும் இருக்கும் 27 இடங்களின் வாழ்க்கையை ஒற்றை வாரத்தில் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படம் ட்ரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அத்துடன் தேசிய கல்வி கழகம் மூலமாக, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. மைக்கேல் வின்டர்பாட்டமின் ஆவணப் பட வகை நாடகமான "எ மைட்டி ஹார்ட்" (2007) படத்தில் ஜோலி மேரியானே பியர்ல் பாத்திரத்தில் நடித்தார். இது பாகிஸ்தானில் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" செய்தியாளர் டேனியல் பியர்ல் கடத்தி கொல்லப்பட்டது குறித்த படமாகும். மேரியானே பியர்லின் நினைவிதழான "எ மைட்டி ஹார்ட்" அடிப்படையில் அமைந்த இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. "தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்" ஜோலியின் நடிப்பு குறித்து "மரியாதையுடனும் ஒரு வித்தியாசமான பேச்சுத் தொனியை முழுமையாக உள்வாங்கியும்" செய்யப்பட்டிருப்பதாகக் கூறிப் பாராட்டியது. இந்த படம் ஜோலிக்கு நான்காவது கோல்டன் குளோப் விருதினை வென்று தந்ததோடு மூன்றாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுக்கான பரிந்துரையையும் வென்றது. ராபர்ட் ஸெமெகிஸ் உருவாக்கிய அசைவூட்டக் காவியமான "பியோவல்ஃப்" (2007) படத்தில் கிரென்டெலின் தாயாகவும் ஜோலி நடித்தார். 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடித் திரைப்படமான "வான்டட்" படத்தில், ஜேம்ஸ் மக்கவாய் மற்றும் மோர்கான் ஃப்ரீமேன் உடன் ஜோலி இணைந்து நடித்தார். இது மார்க் மில்லர் எழுதிய ஒரு வரைகலை புதினத்தின் தழுவலாகும். இந்த படம் பெரியளவில் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றதோடு, சர்வதேச வெற்றிப் படமாகவும் நிரூபணமானது. உலகெங்கிலும் 342 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. ட்ரீம்ஒர்க்ஸ் தயாரித்த அசைவூட்டப் படமான "குங் ஃபு பான்டா" (2008) படத்தில் மாஸ்டர் டைக்ரெஸ் குரலையும் ஜோலி வழங்கினார். உலகளவில் 632 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய இந்த படம், இன்று வரை ஜோலியின் மிக உயர்ந்த வருவாய் ஈட்டிய படமாக இருக்கிறது. அதே ஆண்டில், ஜோலி கிளின்ட் ஈஸ்ட்வுட்'டின் நாடகமான "சேஞ்ச்லிங்" (2008) படத்தில் நாயகி கிறிஸ்டின் கோலின்ஸ் ஆக நடித்தார். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரங்கேற்றம் கண்டது. 1928 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண் ஒருவர் கடத்தப்பட்ட தனது மகனுடன் மீண்டும் இணைகிறார், அதன்பின் அவன் ஒரு மோசடி ஆசாமி என்பது அவளுக்கு தெரிய வருகிறது. இந்த உண்மைக் கதையின் அடிப்படையில் இந்தப் படைப்பு உருவானது. தனது இரண்டாவது அகாதமி விருது பரிந்துரையை ஜோலி பெற்றார். அத்துடன் பாப்தா (BAFTA) விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். கம்போடியாவில் "டோம்ப் ரெய்டர்" திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஜோலி தனிப்பட்ட முறையில் முதன்முதலில் அறிந்து கொண்டார். இறுதியில் சர்வதேச பிரச்சினைக் களங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தை அணுகினார். இந்தப் பகுதிகளின் நிலைமைகளை மேலும் அறிந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிடத் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில், தனது முதல் களப் பார்வையிடல் பயணத்தை துவக்கிய இவர், சியரா லியோன் மற்றும் தான்சானியாவுக்கு 18 நாள் பயணம் மேற்கொண்டார். தான் பார்த்த விடயங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சிகரமானவையாக இருந்தன என்பதை அவர் பின்னர் வெளிப்படுத்தினார். அடுத்த வந்த சில மாதங்களில் இரண்டு வாரங்கள் கம்போடியாவுக்கு திரும்பிய அவர், பின் பாகிஸ்தானில் இருந்த ஆப்கான் அகதிகளை சந்தித்ததோடு சர்வதேச ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அளித்த அவசர கோரிக்கைக்கு மறுமொழியாய் அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையளித்தார். தனது பயணங்கள் தொடர்பான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதை வலியுறுத்திய அவர், தனது அத்தனை பயணங்களின் போதும் ஒரு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு களப் பணியாளருக்கு வழங்கப்படும் அதே அடிப்படையான வேலை மற்றும் வாழ்க்கை வசதிகளையே பகிர்ந்து கொண்டார். ஜெனிவாவில் உள்ள ஐநா அகதிகளுக்கான அமைப்பின் தலைமையகத்தில் ஆகஸ்டு 27, 2001 அன்று அவ்வமைப்பின் நல்லெண்ண தூதராக ஜோலி அறிவிக்கப்பட்டார். ஜோலி உலகெங்கிலும் களப் பணிகளில் பங்கேற்றிருக்கிறார். 30க்கும் அதிகமான நாடுகளில் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மனிதர்களுடன் சந்தித்திருக்கிறார். இவர் எதைச் சாதிக்கும் நம்பிக்கை கொண்டிருந்தார் எனக் கேட்டபோது ஜோலி, நடந்ததை கண்டு அஞ்சாமல் வாழ்ந்து காட்டுவதற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று கூறினார். 2002 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள தாம் ஹின் அகதி முகாமையும் ஈக்வடாரில் உள்ள கொலம்பிய அகதிகள் முகாமையும் ஜோலி பார்வையிட்டார். பின்னர் கொசோவோவில் இருக்கும் பல்வேறு ஐநா அகதிகள் அமைப்பின் இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கென்யாவில் முக்கியமாக சூடானில் இருந்தான அகதிகள் கொண்டதான ககுமா அகதிகள் முகாமுக்கும் சென்று பார்வையிட்டார். நமீபியாவில் "பியாண்ட் பார்டர்ஸ்" படப்பிடிப்பு நடந்தபோது அங்கோலாவின் அகதிகளுடன் ஜோலி சந்திப்பு நிகழ்த்தினார். 2003 ஆம் ஆண்டில், தான்சானியாவுக்கு ஆறு நாள் பயணத்தை ஜோலி மேற்கொண்டார். இங்கு காங்கோ அகதிகள் இருந்த மேற்கத்திய எல்லை முகாம்களுக்கு இவர் பயணம் செய்தார். அத்துடன் இலங்கைக்கும் ஒரு வார பயணத்தை இவர் மேற்கொண்டார். பின்னர் வடக்கு காகசஸ் பகுதிக்கு இவர் பயணம் செய்து தனது நான்கு நாள் ரஷ்ய பயணத்தை முடித்தார். இவரது "பியான்ட் பார்டர்ஸ்" திரைப்படம் வெளிவந்த அதே சமயத்திலேயே "நோட்ஸ் ஃபிரம் மை டிராவல்ஸ்" என்கிற தொகுப்பு புத்தகத்தையும் இவர் வெளியிட்டார். இது அவரது ஆரம்ப களப் பணிகள் (2001-2002) பற்றிய குறிப்புகளை காலக்கிரம வரிசையில் அடக்கியிருந்தது. 2003 டிசம்பரில் ஜோர்டானில் தனிப்பட்ட பயணத்தின் போது ஜோர்டானின் கிழக்கத்திய பாலைவனத்தில் ஈராக்கிய அகதிகளை பார்வையிட அவர் கோரினார். அந்த மாதத்தின் பிற்பகுதியில் சூடான் அகதிகளைச் சந்திக்க அவர் எகிப்துக்கு சென்றார். அமெரிக்காவிற்குள் தனது முதல் ஐநா பயண சமயத்தில், 2004 ஆம் ஆண்டில் அரிசோனாவுக்கு சென்ற ஜோலி, மூன்று இடங்களில் கைது செய்யப்பட்டிருந்த புகலிடம் கோருவோரை பார்வையிட்டதோடு, பீனிக்ஸில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சவுத்வெஸ்ட் கீ புரோகிராம் என்னும் இடத்திற்கும் பார்வையிட்டார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சாத் சென்ற அவர், எல்லைப் பகுதிகளுக்கும் மேற்கு சூடானின் டார்ஃபர் பகுதியில் இருந்து சண்டைக்கு தப்பி ஓடி வந்த அகதிகள் முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டார். நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் அந்த பகுதிக்கு திரும்பிய அவர், இந்த முறை நேரடியாகவே மேற்கு டார்ஃபர் பகுதிக்கு சென்றார். அத்துடன் 2004 ஆம் ஆண்டிலும், ஜோலி தாய்லாந்தில் உள்ள ஆப்கன் அகதிகளை சந்தித்தார். அத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறைக் கால சமயத்தில் லெபனானுக்கும் தனிப்பட்ட முறையில் சென்று வந்தார். பெய்ரூட்டில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பு பிராந்திய அலுவலகத்தை பார்வையிட்ட அவர், சில இளம் அகதிகளையும் லெபனான் தலைநகரில் இருந்த புற்றுநோயாளிகளையும் சந்தித்தார். 2005 ஆம் ஆண்டில், ஜோலி ஆப்கன் அகதிகள் இருந்த பாகிஸ்தானிய முகாம்களைப் பார்வையிட்டார். அத்துடன் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் பிரதமர் சௌகத் அஸிஸையும் சந்தித்தார். 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த காஷ்மீர் பூகம்பத்தின் தாக்கத்தைக் காண நவம்பர் வார இறுதி நன்றி தெரிவிப்பு சமயத்தில் பிராட் பிட் உடன் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தார். 2006 ஆம் ஆண்டில் ஜோலியும் பிட்டும் ஹைதிக்கு பறந்து சென்று, அங்கு ஹைதியில் பிறந்த ஹிப் ஹாப் இசைக் கலைஞரான வைஸ்லெஃப் ழான் (Wyclef Jean) நிறுவியிருக்கும் தொண்டு நிறுவனமான யெலே ஹைதி (Yéle Haïti)ஆதரவில் இயங்கும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் "எ மைட்டி ஹார்ட்" படப்பிடிப்பு நடந்தபோது, புதுடெல்லியில் இருந்த ஆப்கன் மற்றும் பர்மா அகதிகளை ஜோலி சந்தித்தார். 2006 கிறிஸ்துமஸ் நாளை கோஸ்டா ரிகாவின் சான் ஜோஸில் கொலம்பிய அகதிகளுடன் செலவிட்ட அவர் அங்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார். 2007 ஆம் ஆண்டில் டார்ஃபரில் இருந்தான அகதிகளுக்கு பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதை மதிப்பீடு செய்ய மீண்டும் இரண்டு நாள் பயணம் வந்தார் ஜோலி. இதனையடுத்து சாத் மற்றும் டார்ஃபரில் உள்ள மூன்று நிவாரண அமைப்புகளுக்கு $1 மில்லியன் தொகையை ஜோலி மற்றும் பிட் நன்கொடையளித்தனர். சிரியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட ஜோலி, ஈராக்கிற்கும் இருமுறை பயணம் செய்தார், அங்கு ஈராக் அகதிகளையும் அத்துடன் பன்னாட்டு படைகள் மற்றும் அமெரிக்க துருப்புகளையும் அவர் சந்தித்தார். காலப் போக்கில், அரசியல் மட்டத்தில் மனிதாபிமான விடயங்களை ஊக்குவிப்பதில் ஜோலி கூடுதல் ஈடுபாடு செலுத்தினார். வாஷிங்டன் டிசியில் உலக அகதிகள் தினத்தில் இவர் தொடர்ந்து கலந்து கொண்டதோடு, 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இவர் அழைப்பு சொற்பொழிவாளராகவும் பங்கேற்றார். அமெரிக்க தலைநகரிலும் மனிதாபிமான நலன்களுக்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை ஜோலி துவங்கினார். 2003 முதல் குறைந்தது 20 முறைகளேனும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர் சந்தித்தார். 2005 ஆம் ஆண்டில் ஜோலி "அகதி மற்றும் குடியேற்ற குழந்தைகளுக்கான தேசிய மையம்" என்னும் அமைப்பின் ஸ்தாபகம் குறித்து அறிவித்தார். சட்டப்பூர்வமான பிரதிநிதித்துவம் ஏதுமின்றி புகலிடம் கோரும் குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவியை வழங்கும் அமைப்பாக இது இருக்கும் என்று கூறிய அவர் அதன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக 500,000 டாலர் தொகையை நன்கொடையளித்தார். மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் அகதிகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு உதவ பல்வேறு மசோதாக்களுக்கு அவர் வலியுறுத்தினார். தனது அரசியல் ஈடுபாடு தவிர, தனது பிரபல அந்தஸ்தையும் கூட வெகுஜன ஊடகங்களின் வழியே மனிதாபிமான விடயங்களுக்காக ஜோலி பயன்படுத்தத் துவங்கினார். எம்டிவி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அவர் படமாக்கினார். "தி டைரி ஆஃப் ஏஞ்சலினா ஜோலி & டாக்டர் ஜெஃப்ரி ஸாக்ஸ் இன் ஆப்பிரிக்கா" என்னும் இந்த படத்தில் மேற்கு கென்யாவில் கோடியில் அமைந்திருக்கும் சில குக்கிராமங்களுக்கு இவரும் பிரபல பொருளாதார நிபுணரான டாக்டர் ஜெஃப்ரி ஸாக்சும் பயணம் செய்வதாக சித்தரிக்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், ஜோலி/பிட் அறக்கட்டளையை நிறுவியிருப்பதாக ஜோலி அறிவித்தார். இது குளோபல் ஆக்‌ஷன் ஃபார் சில்ரன் மற்றும் டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் ஆகிய அமைப்புகளுக்கு தலா 1 மில்லியன் டாலர் தொகையை ஆரம்ப நன்கொடையாக அளித்தது. 2006 ஆம் ஆண்டில் கிளின்டன் குளோபல் இனிஷியேட்டிவ் திட்டத்தில் நிறுவப்பட்ட "எஜூகேஷன் பார்ட்னர்ஷிப் ஃபார் சில்ரன் ஆஃப் கான்ஃபிளிக்ட்" அமைப்பிற்கும் ஜோலி இணைத் தலைவராக இருக்கிறார். போரில் பாதிப்புறும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு இந்த அமைப்பு நிதியுதவி செய்கிறது. ஜோலியின் மனிதாபிமான பணிகளுக்காக அவர் பரந்த அங்கீகாரம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில் ஐநா செய்தியாளர் கழகத்தால் புதிதாய் உருவாக்கப்பட்ட உலகின் சிறந்த குடிமகன் விருதை முதன்முதலில் பெற்றவர் ஜோலி ஆவார். அத்துடன் 2005 ஆம் ஆண்டில், யுஎன்ஏ-யுஎஸ்ஏ அமைப்பு இவருக்கு "உலகளாவிய சிறந்த மனிதாபிமானி விருதினை" (Global Humanitarian Award) வழங்கியது. கம்போடியாவில் இவர் செய்த சூழல் பாதுகாப்பு பணிக்காக கம்போடிய அரசரான நோரோடோம் ஷிஹமோனி ஜோலிக்கு கம்போடிய குடியுரிமையை ஆகஸ்டு 12, 2005 அன்று வழங்கினார். பதாம்பாங்கின் வடமேற்கு மாகாணத்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைப்பதற்கு 5 மில்லியன் டாலர் தொகையை ஜோலி உறுதியளித்திருந்ததோடு அந்த பகுதியில் சொத்தும் கொண்டிருக்கிறார். 2007 ஆம் ஆண்டில், அயலுறவுகளுக்கான குழுவில் ஜோலி உறுப்பினரானார். அத்துடன் சர்வதேச மீட்புக் குழுவிடம் இருந்து ஃப்ரீடம் விருதையும் அவர் பெற்றார். மார்ச் 28, 1996 அன்று ஜோலி பிரித்தானிய நடிகரான ஜானி லீ மில்லரை மணந்து கொண்டார். இவர் "ஹேக்கர்ஸ்" (1995) திரைப்படத்தில் உடன் நடித்தவராவார். அடுத்து வந்த வருடத்தில் ஜோலியும் மில்லரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 3, 1999 அன்று விவாகரத்து செய்து கொண்டனர். ஆயினும் அவர்கள் தொடர்ந்து நன்றாய் பழகி வந்தனர். "புஷிங் டின்" (1999) திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்க நடிகரான பில்லி பாப் தோன்டனை ஜோலி சந்தித்தார். இதனையடுத்து இருவரும் மே 5, 2000 அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்கிடையேயான அன்பினையும் காதல் பரிமாற்றத்தையும் அடிக்கடி பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டதின் விளைவாக இவர்களின் உறவானது பொழுதுபோக்கு ஊடகங்களில் ஒரு பிரபலமான விடயமானது. ஆயினும் திடீரென்று ஜோலியும் தோன்டனும் மே 27, 2003 அன்று விவாகரத்து செய்து கொண்டனர். தனது இருபால் விருப்பம் குறித்து ஜோலி கூறியிருக்கிறார். "ஃபாக்ஸ்ஃபயர்" (1996) திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜென்னி சிமிசு உடன் தனக்கு பாலியல் தொடர்பு இருந்ததாக அவர் வெகுகாலமாய் ஒப்புக் கொண்டிருந்தார். 2005 ஆரம்பத்தில், நடிகர்கள் பிராட் பிட் மற்றும் ஜெனிபர் அனிஸ்டன் இடையே விவாகரத்து நேர ஜோலி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோது மிகப் பிரபலமுற்ற ஹாலிவுட் சர்ச்சையில் ஜோலி சிக்கினார். "மிஸ்டர் & மிசஸ் ஸ்மித்" (2005) படப்பிடிப்பு சமயத்திலேயே பிட்டுக்கும் ஜோலிக்கும் இடையே தொடர்பு மலர்ந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் இதனை மறுத்த ஜோலி ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தாங்கள் காதலில் விழுந்தது உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இது குறித்து 2005 நேர்காணல் ஒன்றில் அவர் விளக்கினார். ஜோலியும் பிட்டும் தங்களது உறவின் தன்மை குறித்து வெளிப்படையாக கருத்து கூறாமலே இருந்த நிலையில், 2005 முழுவதிலும் வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அனிஸ்டன் விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தின் பின் ஏப்ரலில் இவர்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாயின. அதில் பிட், ஜோலி மற்றும் அவரது மகன் மடோக்ஸ் மூவரும் கென்யா கடற்கரையில் இருந்தனர். கோடையில் ஜோலியும் பிட்டும் அதிகளவில் ஒன்றாக காணப்பட்டனர், பொழுதுபோக்கு ஊடகங்களில் அநேகமானவை அவர்களை ஒரு தம்பதியாகவே கருதின. ஜனவரி 11, 2006 அன்று, பிட்டின் குழந்தையை தான் சுமந்து கொண்டிருப்பதை பீபுள் நாளிதழிற்கு ஜோலி உறுதி செய்தார். இதன்மூலம் அவர்களுக்கிடையேயான உறவையும் முதன்முறையாக பகிரங்கமாக உறுதிப்படுத்தினார். 2002, மார்ச் 10 அன்று ஜோலி தனது முதல் குழந்தையாக, ஏழு மாத குழந்தையான மடோக்ஸ் சிவானைத் தத்தெடுத்தார். இந்த குழந்தை ஆகஸ்டு 5, 2001 அன்று கம்போடியாவில் பிறந்தது. இதன் இயற்பெயர் ரத் விபோல். இந்த குழந்தை ஆரம்பத்தில் பதாம்பாங்கில் உள்ள ஒரு உள்ளூர் அனாதை இல்லத்தில் வாழ்ந்திருந்தது. 2001 ஆம் ஆண்டில் லாரா கிராப்ட்:டோம்ப் ரெய்டர் படப்பிடிப்புக்காகவும் மற்றும் ஐநா அகதிகள் அமைப்பு களப் பணி பயணத்திற்காகவும் கம்போடியாவுக்கு இருமுறை இவர் சென்ற சமயத்தில் தத்தெடுக்க விண்ணப்பம் செய்ய ஜோலி தீர்மானித்தார். தனது இரண்டாவது கணவரான பில்லி பாப் தோன்டனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், மடோக்ஸின் மொத்த பாதுகாப்பு பராமரிப்பையும் ஜோலியே கவனித்தார். ஜோலியின் மற்ற பிள்ளைகள் போலவே, மடோக்ஸும் குறிப்பிடத்தக்க பிரபலத்தை எட்டியிருப்பதோடு பரபரப்பு சிற்றூடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கிறார். 2005 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று, எத்தியோப்பியாவில் இருந்து சகரா மர்லே என்னும் ஆறு மாத பெண் குழந்தையை ஜோலி தத்தெடுத்தார். சகரா ஜனவரி 8, 2005 அன்று பிறந்தார். ஆரம்பத்தில் குழந்தையின் தாய் வைத்திருந்த பெயர் யெம்ஸ்ரக் என்பதாகும். பின்னர் அனாதை இல்லம் ஒன்றில் டேனா ஆடம் என்கிற சட்டப்பூர்வமான பெயர் வழங்கப்பட்டது. ஆடிஸ் அபாபாவில் உள்ள வைடு ஹரிஸோன்ஸ் ஃபார் சில்ரன் அனாதை இல்லத்தில் இருந்து ஜோலி இக்குழந்தையை தத்தெடுத்தார். அமெரிக்காவுக்கு திரும்பிய கொஞ்ச காலத்தில், உடலில் நீர்ச்சத்து இல்லாதது மற்றும் சத்துக் கோளாறு காரணமாக சகரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தது. சகராவின் ரத்தவழி தாயார் மென்டெவபி தவித் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் அவர் தன் மகளைத் திரும்பிக் கோருகிறார் என்றும் 2007 ஆம் ஆண்டில் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் பின்னர் அந்த செய்திகளை மறுத்த அப்பெண், ஜோலியால் தத்தெடுக்கப்பட சகரா மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாக கூறினார். ஜோலி தத்தெடுக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு மகளை பெறும் போது பிராட் பிட் உடனிருந்ததாக கூறப்பட்டது. தானும் பிட்டும் இணைந்து தான் சகராவை தத்தெடுக்கும் முடிவை எடுத்ததாக பின்னர் ஜோலி சுட்டிக் காட்டினார். ஜனவரி 19, 2006 அன்று, கலிபோர்னியாவின் ஒரு நீதிபதி ஜோலியின் இரண்டு குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுத்துக் கொள்ள பிட் செய்திருந்த கோரிக்கைக்கு ஒப்புதலளித்தார். அவர்களது துணைப்பெயர்கள் முறைப்படி ஜோலி-பிட் என்று மாற்றப்பட்டன. ஷிலோ நோவெல் என்னும் ஒரு பெண் குழந்தையை மே 27, 2006 அன்று ஒரு சிசேரியன் அமர்வின் மூலம் ஜோலி பெற்றெடுத்தார். புதிதாய் பிறந்த தங்கள் பெண் குழந்தை ஒரு நமீபிய கடவுச்சீட்டு கொண்டிருக்கும் என்பதை பிட் உறுதி செய்தார். பரபரப்பு செய்தி சேகரிப்பாளர்கள் குழந்தையின் மதிப்புமிகுந்த புகைப்படங்களை எடுப்பதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக, தானே ஷிலோவின் முதல் படங்களை கெட்டி இமேஜசை விநியோகஸ்தராய் கொண்டு விற்பனை செய்ய ஜோலி முடிவு செய்தார். "பீபுள்" 4.1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வட அமெரிக்க உரிமைகளுக்காக செலுத்தியது. பிரிட்டிஷ் இதழான "ஹலோ!" சர்வதேச உரிமைகளை சுமார் 3.5 மில்லியன் டாலர் தொகைக்கு பெற்றது. அனைத்து வருவாயும் ஜோலி மற்றும் பிட் மூலம் பெயர் அறிவிக்கப்படாத தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளிக்கப்பட்டது. நியூயார்க்கின் மேடேம் துஷாட்ஸ் மியூசியம் இரண்டு வயதான ஷிலோவின் மெழுகுப் பொம்மையை திறந்தது. மேடேம் துஷாட்ஸ் மெழுகில் உருவாக்கிய முதல் குழந்தை இதுவே. மார்ச் 15, 2007 அன்று, ஜோலி பாக்ஸ் தியென் என்னும் மூன்று வயது பையனை வியட்நாமில் இருந்து தத்தெடுத்தார். நவம்பர் 29, 2003 அன்று பிறந்திருந்த இந்த குழந்தை பிறந்தவுடனேயே உள்ளூர் மருத்துவமனையில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்டதாகும். அங்கு அந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் பாம் குவாங் சாங் எனப் பெயரிடப்பட்டிருந்தது. ஹோ சி மின் சிட்டியில் இருக்கும் டாம் பின் அனாதை இல்லத்தில் இருந்து ஜோலி இந்த சிறுவனை தத்தெடுத்தார். பாக்ஸ் என்பது தான் அந்த சிறுவனின் முதல் பெயர் ஆகும். அது தனது தாய் இறப்பதற்கு முன்பு யோசனையளித்த பெயர் என ஜோலி தெரிவித்தார். பிராந்திய ஊடகங்களில் பல மாதங்கள் தொடர்ந்து ஊகங்கள் வந்த நிலையில், 2008 கேன்ஸ் திரைப்பட விழா சமயத்தில், தான் இரட்டை குழந்தைகளை எதிர்நோக்கியிருப்பதாக ஜோலி உறுதிப்படுத்தினார். ஜூலை 12, 2008 அன்று பிரான்சில் உள்ள நைஸ் என்ற இடத்திலிருக்கும் லென்வால் மருத்துவமனையில் சிசேரியன் பிரிவில் நாக்ஸ் லியோன் என்கிற ஒரு ஆண்குழந்தையையும், விவியென் மர்செலின் என்னும் ஒரு பெண் குழந்தையையும் ஜோலி. நாக்ஸ் மற்றும் விவியனின் முதல் படங்களுக்கான உரிமை "பீபுள்" மற்றும் "ஹலோ!" பத்திரிகைகளுக்கு இணைந்து 14 மில்லியன் டாலர் தொகைக்கு விற்கப்பட்டது - இது இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிக செலவு வைத்த பிரபலங்களின் புகைப்படங்களாகும். இந்த பணம் ஜோலி-பிட் அறக்கட்டளைக்கு சென்றது. தனது தந்தை ஜோன் வோய்ட்டின் பிரபலம் காரணமாக தனது சிறு வயது முதலே ஜோலி ஊடகங்களில் இடம்பிடித்து வந்தார். ஏழு வயதில் ஜோலியின் தந்தை இணைந்து எழுதி நடித்த, "லுக்கிங் டு கெட் அவுட்" படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் ஜோலி நடித்தார். அத்துடன் அகாதமி விருதுகள் விழாவுக்கு தந்தையுடன் ஒரு இளம் வயதுப் பெண்ணாக ஜோலி 1986 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் சென்றிருக்கிறார். ஆயினும், தனது நடிப்பு வாழ்க்கையை துவக்கியபோது, தனது திரைப் பெயராக "வோய்ட்" பயன்படுத்தாதிருக்க ஜோலி தீர்மானித்தார். ஏனென்றால் ஒரு நடிகையாக தனது சொந்த அடையாளத்தை நிறுவ வேண்டும் என்று அவர் விரும்பினார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சர்ச்சையில் சிக்குவது குறித்து ஜோலி ஒருபோதும் கூச்சமுற்றவரில்லை என்பதோடு தனது பொது பிம்பத்தை "முரட்டுப் பெண்" என்பதாக ஒருங்கமைத்துக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் அகாதமி விருதுகள் விழாவில் ஏற்று பேசிய சமயத்தில், ’இந்த தருணத்தில் எனது சகோதரருடன் நான் மிகவும் காதலில் இருக்கிறேன்’ என்று ஜோலி அறிவித்ததும், அதோடு சேர்ந்து அந்த இரவில் அவருடன் இவர் நெருக்கமாய் நடந்து கொண்டதும், ஜோலிக்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் ஹேவன் உடன் முறையற்ற உறவு இருப்பதாக பிராந்திய சிற்றூடகங்களில் வதந்திகளைப் பற்ற வைத்தது. தமது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆதரித்துக் கொள்ள வேண்டியிருந்தது, இதனால் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவின் வழியாக இருவரும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்வது வழக்கம் என்று ஜோலியும் ஹேவனும் பின்னர் நேர்முகங்களில் விளக்கமளித்தனர். ஜோலி ஒரு மக்கள் தொடர்பு பணியாளரையோ அல்லது ஒரு முகவரையோ பணியமர்த்திக் கொள்ளவில்லை. நேர்காணல்களில் தன்னை மிகவும் வெளிப்படையாக பேசுபவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாலும், தனது காதல் வாழ்க்கையையும் பாலியல் விருப்பத்தையும் பகிரங்கமாக விவாதித்ததாலும், மற்றும் ஒருமுறை "அநேகமாக ஒரு பெண் ரசிகையுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்" என்று கூறியதாலும் வெகு விரைவில் அவர் பிராந்திய சிற்றூடகங்களின் விருப்பத்திற்குகந்த நபராக ஆகி விட்டார். அவரது மிகவும் பிரத்யேகமான உடல் அம்சமாக, ஜோலியின் உதடுகள் குறிப்பிடத்தகுந்த அளவு ஊடக கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பில்லி பாப் தோன்டன் உடனான அவரது மிகவும் விளம்பரத்திற்குள்ளான திருமணம் மற்றும் அதனையடுத்து உலகளாவிய அளவில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கான ஒரு ஆலோசகராக மாறியது ஆகியவற்றின் மூலமும் ஜோலி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஐநா அகதிகளுக்கான அமைப்பின் நல்லெண்ண தூதர் பாத்திரத்தை ஏற்ற பிறகு, உலகளவில் மனிதாபிமான பிரச்சினைகளில் வெளிச்சம் பாய்ச்ச தனது பிரபலத்தை ஜோலி பயன்படுத்தத் துவங்கினார். 2004 ஆம் ஆண்டு முதல் வானூர்தி பாடங்களை கற்று வரும் ஜோலி தனியார் விமான ஓட்டி உரிமம் (கருவி தரமதிப்பீட்டுடன்) வைத்துள்ளதோடு சிர்ரஸ் SR22 விமானம் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார். ஜோலி புத்த மதத்தை சார்ந்திருப்பதாக ஊடகங்கள் ஊகித்தன. ஆனால் தனது மகன் மடோக்ஸ்க்கு தான் புத்தம் கற்பிப்பதன் காரணம் இதனை அவனது கலாச்சாரத்தின் ஒரு பாகமாக தான் கருதுவது தான் என்று ஜோலி தெரிவித்தார். தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது குறித்து ஜோலி திட்டவட்டமாக தெரிவித்ததில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று 2000 ஆவது ஆண்டில் கேட்கப்பட்டபோது, ஜோலி "நம்பிக்கை உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும். எனக்கு என்று ஒரு கடவுள் இருக்க அவசியமில்லை" என்று பதிலளித்தார். 2005 ஆம் ஆண்டு தொடங்கி, பிராட் பிட் உடனான ஜோலியின் உறவு உலகளவில் மிக அதிகமாக தகவல் விவரிப்புக்குள்ளாகும் பிரபலங்களின் கதைகளில் ஒன்றாக ஆனது. 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜோலி தனது கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவர்களை சுற்றிய ஊடகங்களின் பார்வை "பைத்தியக்காரத்தனம் என்கிற அளவுக்கு உச்சத்தை எட்டியது. இதனை அவர்களது கட்டுரையில் "பிராஞ்சலினா காய்ச்சல்" என்று ராய்டர்ஸ் ஊடகம் குறிப்பிட்டது. ஊடக கவனத்தை தவிர்க்கும் முயற்சியாக, அப்போது "ஏசு கிறிஸ்துவுக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான குழந்தை" என்று விவரிக்கப்பட்டதான, ஷிலோவைப் பெற்றெடுக்க இந்த தம்பதியர் நமீபியா சென்று விட்டனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஜோலியின் இரண்டாவது கர்ப்பமும் மீண்டும் ஒரு ஊடக அரற்றலைத் தூண்டியது. இரண்டு வாரங்கள் ஜோலி நைஸில் இருக்கும் ஒரு கடலோர மருத்துவமனையில் செலவிட்டார். குழந்தை பிறப்பு குறித்த செய்தி சேகரிக்க செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் நடைபயிலும் இடத்திற்கு வெளியே முகாமிட்டிருந்தனர். இன்று உலகெங்கிலும் மிகவும் அறியப்பட்ட பிரபலங்களில் ஒருவராய் ஜோலி இருக்கிறார். கியூ ஸ்கோர் கூற்றுப்படி, 2000 அன்று ஜோலி ஆஸ்கர் வென்றதன் பின், அமெரிக்காவில் கருத்து கணிப்பு செய்தவர்களில் 31% பேர் தங்களுக்கு ஜோலியைத் தெரியும் என்று கூறினர். 2006 வாக்கில் இந்த எண்ணிக்கை அமெரிக்கர்களில் 81% ஆக அதிகரித்திருந்தது. 2006 ஆம் ஆண்டில் ஏசிநீல்சன் 42 சர்வதேச சந்தைகளில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், உலகளாவிய அளவில் வர்த்தக பெயர்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு மிக உகந்த பிரபல தெரிவாக ஜோலி மற்றும் பிராட் இணை கண்டறியப்பட்டது. 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டில், டைம் 100 என்னும் உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் ஜோலி இடம்பிடித்தார். 2006 ஆம் ஆண்டின் "பீபுள் 100 மிகவும் அழகானவர்கள்" இதழில் உலகின் மிகவும் அழகிய பெண்ணாக ஜோலி விவரிக்கப்பட்டார். அத்துடன் 2007 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியான "100 கிரேட்டஸ்ட் செக்ஸ் சிம்பல்ஸ்" நிகழ்ச்சியில் எல்லா காலங்களிலுமான மிகப்பெரும் பாலியல் அடையாளமாக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெறும் நடிகை ஜோலி தான் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகம் தெரிவித்தது. ஒரு படத்திற்கு 15 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாக அது தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் வருடாந்திர பிரபலங்கள் 100 பேர் பட்டியலில் ஜோலி முதலிடம் பிடித்தார். முன்னதாக 2007 ஆம் ஆண்டில் இவர் 14 ஆவது இடத்தையும், 2008 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார். ஜோலியின் எண்ணற்ற உடல் பச்சைகள் பெரும் ஊடக கவனத்திற்கான பொருளாக இருந்து வந்திருக்கின்றன. அத்துடன் நேர்முகம் காண்பவர்களும் இந்த விஷயத்தை நிறைய கேட்டிருக்கிறார்கள். தான் படத்தில் நிர்வாணமாய் நடிப்பதை எதிர்க்கவில்லை என்கிற நிலையில், தனது உடலில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான பச்சைகள் திரைப்பட உருவாக்குநர்களை நிர்வாண அல்லது காதல் காட்சிகளை திட்டமிடும்போது மிகவும் புதுமையாக சிந்திக்கும் திறனுடையவர்களாக ஆக்குவதாக ஜோலி கூறியிருக்கிறார். ஜோலி தயாரிப்புகள் பலவற்றிலும் அவரது பச்சைக் குறிகளை மறைக்க ஒப்பனைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜோலி இப்போது பதின்மூன்று பிரபல பச்சைகளை வைத்திருக்கிறார். தனது மேல் இடது புஜத்தில் ஆறு இணை புவியியல் ஆயங்களையும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். இது அவரது குழந்தைகளின் பிறந்த இடங்களைக் காட்டுவதாகும். காலப் போக்கில், தனது பச்சைகளில் பலவற்றையும் அவர் மறைத்தார் அல்லது அகற்றி விட்டார். பிரையன் ஆடம்ஸ் பிரையன் ஆடம்ஸ் , OC, OBC (பிரையன் கை ஆடம்ஸ் நவம்பர் 5, 1959 இல் பிறந்தார்) கனடாவைச் சேர்ந்த ராக் பாடகர்-பாடல் எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஆவார். "ரெக்லெஸ்" மற்றும் "இட்ஸ் ஒன்லி லவ்" ஆகியவற்றுக்காக 28வது கிராமி விருதுகளுக்காக முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டு 1992 இல் "ஒரு திரைப்படத்துக்கு, தொலைக்காட்சிக்காக அல்லது மற்ற திரை மீடியாவுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடலுக்குறிய" விருதை வென்றார். அவர் ஜூனோஸ், MTV, ASCAP, அமெரிக்கன் மியூசிக் மற்றும் ஐவோர் நோவெல்லொ என பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடைய சொந்த அமைப்பு மூலம் உலகமெங்கும் உள்ள மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் செய்த பிரபலமான இசை மற்றும் பொதுச் சேவைக்காக ஆர்டர் ஆஃப் கனடா மற்றும் ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற விருதுகளையும் பெற்றார். ஆடம்ஸ் கனடாவின் ஹால் ஆஃப் ஃபேமிற்காக 1998 இல் தேர்வு செய்யப்பட்டார், மற்றும் ஏப்ரல் 2006 இல் கனடாவின் ஜூனோ விருதுகளுக்காக இசை ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றார். "பாபி" படத்துக்காக ஆடம்ஸ் எழுதி அரேத்தா பிராங்கிளின் மற்றும் மேரி J. பிளிட்ஜ் ஆகியோர் பாடிய பாடல் 2007 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதை ஐந்தாவது முறையாகப் பெற்றுத் தந்தது, அதோடு படங்களூக்காக இசை அமைத்ததற்காக மூன்று முறை அகடமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆங்கிலேய பெற்றொருக்க்கு கனடா நாட்டு ஒன்டோரியொவின் கிங்ஸ்டனில் ஆடம்ஸ் பிறந்தார். அவருடைய பாட்டியிடம் இருந்து ஒரு மால்டீஸ் பரம்பரை சொத்தையும் பெற்றார். ஆடம்ஸின் தகப்பனார் ஒரு சட்ட அறிஞர், அவருடைய பெற்றோருடன் சேர்ந்து உலகமெங்கும் பயணம் செய்தார். தொடர்ச்சியாக, அவரது இளமைக்காலத்தில் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும், சில காலம் பைரிலும் வளர்ந்தார், போர்சுகலில், ;லிஸ்பானுக்கு; அருகில் இருந்ததால் அங்கே போர்சுகீஸிய மொழியையும் கற்றார். 1973இல், ஆடம்ஸின் குடும்பம் கனடாவிற்குத் திரும்பி, வடக்கு வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் தஞ்சமானது. அவரது இசை இலக்குகள் டீன் ஏஜ் வயதிலேயே தொடங்கிவிட்டதாக "ரோலிங் ஸ்டோன்" பத்திரிக்கையின் கார்லோ டி'அகஸ்டினோவிடம், "என் உயர்நிலைப் பள்ளியில், பெண்களே அசந்து போகும் அளவுக்கு இசையில் தேர்ந்திருந்தேன்", என விளக்கினார். பாத்திரங்கள் கழுவுதல், டப்பா உணவு விற்றல், பதிவு கடைகளில் பணியாற்றுதல் என பல வேலைகள் செய்தார், தனது 15வது வயதில், ஆடம்ஸ் தன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு ஷாக் மற்றும் ஸ்வீனி டாட் போன்ற இரவு நேர கிளப்களின் பேண்ட்களில் சேர்ந்து இசை அமைத்தார், "இஃப் விஷஸ் வேர் ஹார்ஸஸ்" என்ற ஆல்பத்தில் முதன்மை பாடகராக பதினைந்து வயது ஆடம்ஸ் பாடினார். டிரம் வாத்திய கலைஞர் ஜிம் வாலஸ் உடன் வான்கூவர் மியூசிக் கடையில் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பு பாடல் எழுதும் உறவை ஏற்படுத்தி இன்று வரை தொடர்ந்து வருகிறது. அதன்பின் நீல் டயமண்ட் ,கிஸ், பிரிஸம், போன்னி ரைட், ராட் ஸ்டீவார்ட், கார்லி சைமன் மற்றும் லவர்பாய் போன்ற பல கலைஞர்களுக்காக பாடல்கள் எழுதினார்கள். ஆடம்ஸும் வாலன்ஸும் கிளப் காட்சியில் திழைத்து, நிகழ்ச்சிகளின் போது வான்கூவர் ஸ்டூடியோக்களில் இணைந்து பணியாற்றினர். "மெக்லீனின்" பத்திரிக்கை ஒன்றில் ஒ' ஹாரா, "வாலன்ஸ் ஒரு நல்ல பாடகர், ஆடம்ஸ் ஒரு இசை மதிப்புக்குரிய வழித்தடத்தை அமைக்கிறார், இருவரும் இணைந்து உடனடியாக கலக்குகின்றனர்," எனக் குறிப்பிட்டிருந்தார் 1978இல், தன் 18வது வயதில், டொரண்டோவில் உள்ள A&M ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு சில டெமோ ரெக்கார்டிங்குகளை அனுப்பி வைத்திருந்தார். மிக விரைவில் அவர்களுடன் ஒரு டாலர் தொகைக்கு ஒப்பந்தமிட்டார். 1978 வில் எழுதப்பட்ட முதல் டெமோக்கள் சில ஆண்டுகள் பரவிக்கிடந்தன, குறிப்பாக "ஐம் ரெடி" (" கட்ஸ் லைக் எ நைப்" மற்றும் பின்னர் அவரது MTV அன்பிளக்ட் வெளியீடு மற்றும் "ரிமம்பர்", ஆகியவை அவரது முதல் ஆல்பத்தில் பதிவாகி இருந்தன. அவரது முதல் ஆல்பம் வெளியாகும் முன்பே இரு பாடல்களும் மற்ற கலைஞர்களால் வெளியிடப்பட்டன. அதோடு இதே நேரத்தில் தான் "லெட் மீ டேக் யூ டேன்சிங்" என்ற பாடலின் டெமோவும் பதிவு செய்யப்பட்டது. அவரது பெயரிடப்பட்ட முதல் ஆல்பம் பிப்ரவரி 1980இல் வெளியிடப்பட்டது, அதோடு தான் ஆடம்ஸ் மற்றும் சக-எழுத்தாளர் ஜிம் வாலன்ஸின் நீண்ட நாள் உறவு தொடங்கியது. "ரிமம்பர்" மற்றும் "வேஸ்டின்' டைம்" தவிர பல ஆல்பங்கள் டொரண்டோவில் உள்ள மண்டா ஸ்டூடியோவில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 29, 1979 வரை பதிவு செய்யப்பட்டத, ஆடம்ஸும் வாலன்சும் இணைத் தயாரிப்பாளர்களாக இருந்தனர். 1986 ஆம் ஆண்டு கனடாவில் அவருடைய ஆல்பத்துக்கு கோல்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது. "யூ வாண்ட் இட் யூ காட் இட்" என்ற ஆடம்ஸின் இரண்டாவது ஆல்பம் பாப் கிளியர் மவுண்டைனின் இணைத் தயாரிப்புடன் வெளியான முதல் ஆல்பமாக இரண்டே வாரங்களில் நியூயார்க் சிட்டியில் பதிவு செய்யப்பட்டது. அது 1981இல் வெளியிடப்பட்டது, அதில் FM ரேடியோவில் ஹிட்டான "லோன்லி நைட்ஸ்" பாடலும் அடங்கியிருந்தது, ஆனால் அவருடைய மூன்றாவது ஆல்பத்திலேயே சர்வதேச அங்கீகாரமும் பிரபலமும் வியாபாரமும் பெற்றுவிட்டார். இதே நேரத்தில் கிஸ்ஸுக்கான "வார் மெஷின்" மற்றும் "ராக் அன்ட் ரோல் ஹெல்" மற்றும் போன்னி ராயிட்டிற்காக "நோ வே டு டிரீட் எ லேடி" போன்ற பாடல்களையும் மற்ற பிராண்டுகளுக்காக ஆடம்ஸ் எழுதியுள்ளார். ஜனவரி 1983இல் வெளியிடப்பட்ட "கட்ஸ் லைக் எ நைஃப்" ஆல்பம், முன்னணியில் இருந்த ஒற்றைகளையும் பின்னுக்கு தள்ளி ஆடம்ஸுக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. "ஸ்ட்ரெயிட் பிரம் த ஹார்ட்" பில்போர்டு ஹாட் 100 இல் பத்தாவது இடத்தைப் பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது. மற்றொரு ஒற்றைப் பாடலான "கட்ஸ் லைக் எ நைஃப்" பதினைந்தாவது இடத்தைப் பெற்றது. "திஸ் டைம்" பாடலும் ஹாட் 100இல் இடம்பெற்றது. ஆல்பத்தில் இருந்த நான்கிற்கு ,மட்டும் மியூசிக் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. "கட்ஸ் லைக் எ நைஃப்" கடும் பிரச்சனைகளைத் தாண்டி ஆடம்ஸின் மிகுந்த அங்கீகாரம் பெற்ற பிரபலமான பாடலாக உருவெடுத்தது. அதிகமாக தொலைக்காட்சி சேனல்களில் அதன் மியூசிக் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. [பில்போர்டு 200 ஆல்பம் அட்டவனையில் எண் எட்டைத் தொட்ட இந்த ஆல்பம், கனடாவில் பிளேட்டினம், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிளேட்டினம் மற்றும் ஆஸ்திரேலியா-வில் தங்கம் வென்றது. பாப் கிளியர் மவுண்டைன் மற்றும் ஆடம்ஸால் இணைத் தயாரிப்பு செய்யப்பட்ட "ரெக்லெஸ்" என்னும் ஆல்பம் பில்போர்டு 200-இல் உச்சத்தைத் தொட்டது. நவம்பர் 1984இல் வெளியிடப்பட்ட ஆல்பம் ஒற்றைகளில், "ரன் டு யூ", மற்றும் "சம்மர் ஆஃப் '69" போன்றவற்றையும் கொண்டிருந்தது. "இட்ஸ் ஒன்லி லவ்" என்னும் ஹிட் தனிப்பாடல், இருவர் அல்லது குழுவால் பாடப்பட்ட சிறந்த ராக் கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 1986இல் சிறந்த மேடை நிகழ்ச்சிக்காக MTV விருதை இந்த பாடல் வென்றது. ஆல்பம் வெளியிடப்பட்ட ஆல்பத்தில் ஆடம்ஸ் சிறந்த ஆண் ராக் பாடகருக்காக பரிந்துரைக்கப்பட்டார். அமெரிக்காவின் சிறந்த விற்பனையான ஆல்பமாகத் திகழ்ந்தது, பிளேட்டினம் தரத்துக்கு ஐந்து முறை சான்றிதழ் அளிக்கப்பட்டது. "ரெக்லெஸ்" ஆல்பத்தில் ஒற்றைப் பாடல்களான "ரன் டு யூ", "ஹெவன்", "சம்மர் ஆஃப் '69", "ஒன் நைட் லவ் அஃபேர்", மற்றும் "இட்ஸ் ஒன்லி லவ்", எ டூயட் வித் டீனா டர்னர் ஆகியவை அடங்கியிருந்தன. பாப் கிளியர் மவுண்டைன் மற்றும் ஆடம்ஸால் இணைத் தயாரிப்பு செய்யப்பட்ட ரெக்லெஸ் என்னும் ஆல்பம் பில்போர்டு 200-இல் நம்பர் ஒன்னாக உச்சத்தைப் பிடித்தது.{2/} "ரெக்லெஸின்" வெற்றிகரமான தனிப்பாடலாக "ஹெவன்" அமையும், பாப் அட்டவணைகளில் வெளியிடப்பட்ட நேரத்தில், பில்போர்டு ஹாட் 100-இல் நம்பர் ஒன்னையும் மெயின்ஸ்ட்ரீம் ராக் அட்டவணையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. டிசம்பர் 1984இல், ஆடம்ஸ், கீத் ஸ்காட், டேவ் டெய்லர், பாட் ஸ்டீவர்டு மற்றும் ஜானி பிளிட்ஸ் ஆகியோர் அடங்கிய டூரிங் பேண்டுடன் சேர்ந்து சிகாகோ, டெட்ராயிட், நியூ யார்க் மற்றும் பிலேடெல்பியா ஆகிய நகரங்களில் கச்சேரிகள் நடத்தினார். 1985 இன் ஆரம்ப காலத்தில், அமெரிக்கா முழுவதும் ஒரு பயணத்தைத் தொடங்கினார் ஆடம்ஸ், பின் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் இறுதியில் கனடா ஆகிய நாடுகளிலும் தொடர்ந்தார். நான்கு ஜூனோ விருதுகளை வென்றபின் ஆடம்ஸ், நாடு முழுவதும் எல்லா பெரிய நகரங்களிலும் கனடியன் பயணத்தைத் தொடங்கினார். தெற்கு வழியாக அமெரிக்க மேற்கு கடற்கரை நோக்கி, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பலேடியத்தில் பொருத்தப்பட்ட இரண்டு நாட்கள் உச்சக்கட்டத்தை எட்டினார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், எத்தியோப்பியாவிற்கு பஞ்சத்தில் வாடுபவர்களுக்கு நிவாரணம் அளிக்க ஆடம்ஸ் பயணித்தார். ஆடம்ஸ் கனடா நாட்டுக் கலைஞர்களின் வடக்கு வெளிச்சங்கள் எனப் பெயரிடப்பட்ட பிரமாண்ட குழுவில் அங்கமாக இருந்து, "டியர்ஸ் ஆர் நாட் எனஃப்" என்ற பாடலைப் பதிவு செய்து ஆப்பிரிக்க பஞ்ச நிவாரணத்துக்காக அமைத்துக் கொடுத்தார். ஆடம்ஸ் பின் ஒரு ஐம்பது நகர சுற்றுப்பயணத்திற்காக ஐரோப்பாவுக்கு சென்று, டீனா டர்ன்ர் என்ற ராக் பாடகியுடன் ஏப்ரலில் லண்டன் திரும்பியதும் லண்டனில் உள்ள ஹாம்மர்ஸ்மித்தில் மூன்று முழுவதும் விற்றுத்தீர்ந்த ஷோக்களை நடத்தினார். "வேர்ல்டு வைடு இன் 85" எனத் தலைப்பிடப்பட்ட சுற்றுப்பயணத்தை ஒக்லாஹாமாவில் தன் முதல் காலடி வைத்துத் தொடங்கிய ஆடம்ஸ் அக்டோபர் 1985இல் நிறைவு செய்தார். பின்னர் கனடாவின் வான்கூவரை சந்தித்த ஆடம்ஸ், நியூயார்க்கில் இரண்டு விற்றுத்தீர்ந்த கச்சேரிகளில் பாட அமெரிக்க கிழக்கு கடற்கரைக்கு திரும்பினார். "ரெக்லெஸைத்" தொடர்ந்து "இன்டூ த பயர்" என்ற ஆல்பத்தை 1987இல் வெளியிட்டார் (1987இல் இசை பார்க்கவும்). பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் உள்ள கிளிப்ஹாங்கர் ஸ்டூடியோவில் ஆல்பம் பதிவு செய்யப்பட்டு, லண்டனில் AIR ஸ்டூடியோவில் மற்றும் வான்கூவரின் வேர்ஹவுஸ் ஸ்டூடியோவில் கலவை செய்யப்பட்டது. இந்த ஆல்பத்தில் "ஹீட் ஆஃப் த நைட்" மற்றும் "ஹார்ட்ஸ் ஆன் பயர்" ஆகிய ஹிட் பாடல்களுடன் அட்லாண்டிக்கின் இரு பக்கங்களின் டாப் 10 பாடல்கள் அடங்கியிருந்தன. ஆடம்ஸின் அடுத்த ஆல்பம், "வாக்கிங் அப் த நெய்பர்ஸ்" , ஆடம்ஸால் இணைத் தயாரிப்பு செய்யப்பட்டு, 1}மட் லாஞ்சால் உலகமெங்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நகல்கள் விற்பனையானது, பில்போர்டு 200-இல் ஆறாவது இடத்தையும் பிடித்தது.. அட்லாந்டிக்கின் மறு பக்கத்திலும் மாபெரும் வெற்றிபெற்று, இரு பெரும் ஐரோப்பிய சந்தைகள், யூகே மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் நம்பர் 1 ஆனது. ஆல்பம் செப்டம்பர் 1991இல் வெளியிடப்பட்டு, அதில் "(எவ்ரிதிங் ஐ டூ) ஐ டூ இட் பார் யூ" என்ற பவர்பாலட் பாடலைக் கொண்டிருந்தது. இந்தப் பாடல் கெவின் கோஸ்ட்னர் மற்றும் ஆலன் ரிக்மேன் ஆகியோர் நடித்த திரைப்படத்தில் படமாக்கப்பட்டது. இந்த தனிப்பாடல் அமெரிக்கா, யூகே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பெரிய சந்தைகள் உட்பட உலகமெங்கும் முதலிடத்தைப் பிடித்தது. UK சிங்கிள்ஸ் சார்ட்டில் "(எவ்ரிதிங் ஐ டூ) ஐ டூ இட் பார் யூ" பாடல் பதினாறு வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது. மைல்ஸ் பிரோவர் பிக்சர்ஸ் லோகோவையும் அவர் தான் வடிவமைத்தார். அமெரிக்காவில் நான்கு மில்லியன் நகல்கள் விற்று சாதனைபடைத்தது. தன் சுற்றுப்பயணத்தின் மூலம் ஆடம்ஸ் மேலும் தன் ஆல்பத்தை முன்னேற்றினார், அக்டோபர் 4, 1991இல் உலகை எழுப்புவோம் என்பதை, வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்டில் தொடங்கினார். டிசம்பர் 18, 1991இல் அதற்கு முன் இல்லாத அளவு சிறப்பான நிகழ்ச்சிகளை ரெய்க்ஜாவிக், ஐஸ்லாண்ட்டிலும் பின் ஜனவரி 10-இல் அமெரிக்காவில் ரிட்ஸ் தியேட்டரில் நடந்த கச்சேரியிலும் நடத்தினார். அவை இருபது நிமிடங்களில் விற்றுத் தீர்த்த நிகழ்ச்சிகளாகும். பென் ஈ கிங் மற்றும் நோநா ஹெண்டிரிக்ஸ் ஆகிய இசை மேதைகளும் கலந்து கொண்டனர். கனட நாட்டு கால்பதிப்புடன் தொடங்கிய ‘வேக்கிங் அப் த வேர்ல்டு’ சுற்றுப்பயணம் சிட்னியில் ஆரம்பித்து, ஜனவரி 13, 1992இல் நோவா ஸ்கோடியாவில், பின் 31ஆம் தேதி வான்கூவர், கனடாவில் நின்று கொண்டே பார்க்க வேண்டிய கச்சேரியாக முழுமைபெற்றது. பிப்ரவரி 1992 இல், ஏழு தேதிகளுக்காக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, சிட்னியில் நடந்த செய்தியாளர் சந்திப்புடன் தொடங்கினார். பிப்ரவரி 21இல், சுற்றுப்பயணம் ஜப்பானுக்கு தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆறு நக்ரங்களில் ஒரு டஜன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரையன் கேல்கரியின் மச் மியூசிக்கின் டெரி டேவ் முல்லிகனுடனான ஒரு நேர்க்காணலை ஒலிப்பதிவு செய்து, மார்ச் மாத நடுவில் ஒலிபரப்ப திட்டமிட்டார். சுற்றுப்பயணம் ஜூன் 1992-இல் பல ஐரோப்பிய நாடுகள் வழியாக சுற்றுப்பயணம் தொடர்ந்தது, இத்தாலி, ஜெர்மனி, ஹாலந்து மற்றும் ஸ்காண்டினேவியா போன்ற நாடுகள் சென்று, 1992இல் முதன்முறையாக ஹங்கேரியிலும் துருக்கியிலும் பாடினார் (where he filmed his video for "டூ ஐ ஹேவ் டு ஸே த வேர்ட்ஸ்? என்ற அந்த பாடலை அங்கு தான் படமாக்கினார்"). நீண்ட சுற்றுப்பயணத்தின் போது, "வேக்கிங் அப் த நெய்பர்ஸ்" என்ற ஆல்பத்தின் தனிப்பாடல்களும் வெளியாயின: அமெரிக்காவில் "கான்ட் ஸ்டாப் திஸ் திங் வி ஸ்டார்டட்" என்ற ராக் பாடல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அவ்வேளையில் ""டூ ஐ ஹேவ் டு ஸே த வேர்ட்ஸ்? என்கிற பவர் பாலட்" 11வது இடத்தைப் பிடித்திருந்தது. UKவில், மிட் டெம்போவான "தாட் ஐ டைட் அன்ட் கான் டு ஹெவன்" மிகவும் வெற்றிகரமான தனிப்பாடலாக "(எவ்ரிதிங் ஐ டு) ஐ டூ இட் பார் யு"விற்கு பின் டாப் 10ஐ பிடித்திருந்தது. 1993 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, சுற்றுப்பயணம் அமெரிக்காவில் நடந்தது. மார்ச் முதல் மே வரை அமெரிக்காவில் நடைபெற வந்ததற்கு முன், 1993இன் பிப்ரவரியில் ஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்றது. நவம்பர் 1993இல் "ஸோ பார் ஸோ குட்" எனத் தலைப்பிடப்பட்ட ஒருங்கிணைக்கப்ப்பட்ட ஆல்பத்தை ஆடம்ஸ் வெளியிட்டார், அது மீண்டும் யூகே, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பலநாடுகளில் அட்டவணையில் முதலிடத்தைப் பெற்றது. அதில் ஒரு புத்தம்புதிய பாடலாக "ப்ளீஸ் பர்கிவ் மீ" பாடல் இடம்பெற்றிருந்தது, அது ஆஸ்திரேலியாவின் மற்றோரு நம்பர் 1 இடத்தையும் அமெரிக்கா, யூகே மற்றும் ஜெர்மனி நாடுகளில் டாப் 3 இடத்தையும் பெற்றது. 1994இல் அவர் ராட் ஸ்டீவர்ட் மற்றும் ஸ்டிங் ஆகியோருடன் இணைந்து தனிப்பாடலான "ஆல் ஃபார் லவ்", மற்றும் ஒரு திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பவர் பாலட் ஒன்றையும் இயற்றினார். அந்த தனிப்பாடல் உலகமெங்குமுள்ள பட்டியல்களில் முதலிடத்தைப் பிடித்தது. ஆடம்ஸின் 3வது திரைப்பட பாடலான "ஹேவ் யூ எவர் ரியலி லவ்ட் எ வுமன்?" என்கிற பாடலைத் தொடர்ந்து அது 1995இல் வெளியானது (பாடல் "டான் ஜுவான் டிமார்கோ" ) என்கிற திரைப்படத்தின் மோசன் பிக்சர் சவுண்ட்டிராக்குடன் வெளியிடப்பட்டது). அது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மற்றொரு நம்பர் 1 ஆகவும் யூகே மற்றும் ஜெர்மனியில் டாப் 5ஐயும் பிடித்தது. ஜூன் 1996இல் வெளியிடப்பட்ட "18 டில் ஐ டை" என்கிற ஆல்பம் "த ஒன்லி திங் தட் லுக்ஸ் குட் இன் மி" மற்றும் "லெட்ஸ் மேக் எ நைட் டு ரிமம்பர்" என்கிற யூகே டாப் 10 தனிப்பாடல்களஈயும் கொண்டிருந்தது. அமெரிக்காவின் "பில்போர்டு" 200இல் நம்பர் முப்பத்திரண்டைப் பிடித்திருந்த ஆல்பம் மூன்று வாரங்கள் தொடர்ந்து அந்த இடத்தைப் பிடித்திருந்தது. அது ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றிகண்டு அதோடு யூகே பட்டியல்களிலும் இடம்பிடித்தது, அதுவே ஆடம்ஸின் தொடர்ச்சியான மூன்றாவது #1 ஆக அமைந்தது. இந்த ஆல்பத்துக்கு அமெரிக்காவில் பிளேட்டினம் வழங்கப்பட்டதுடன் RIAAவின் சான்றிதழையும் பெற்ற இந்த் ஆல்பம் தான், ஆடம்ஸின் கடைசியான் ஸ்டூடியோ முயற்சியாகும். "18 டில் ஐ டை" பாடல் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்று முறையும் யூகேவில் இரண்டு முறையும் பிளேட்டினம் பெற்றது. டிசம்பர் 1997 -இல் ஆடம்ஸ்: "பேக் டூ யூ", "எ லிட்டில் லவ்" மற்றும் "வென் யூ லவ் சம்ஒன்" என்ற மூன்று பாடல்கள் அடங்கிய "MTV அன்பிளக்டு" என்ற ஆல்பத்தை வெளியிட்டார். "ஐ'யம் ரெடி" என்பது "பேக் டு யூ" என்கிற தனிப்பாடலைத் தொடர்ந்து வந்ததாகும், "கட்ஸ் லைக் எ நைஃப்" பாடலின் ஒலிப்பதிப்பாகும். ஆல்பம் ஜெர்மனியில் டாப் 10 வெற்றியைப் பெற்றது, அதே வேளையில் யூகேயில் டாப் 20 ஐ பெற்றன இந்த இரு ஒற்றைப் பாடல்களும். "ஆன் எ டே லைக் டுடே" 1998இல் வெளியிடப்பட்டது, அதுவே RIAAவால் சான்றிதழ் அளிக்கப்படாத "கட்ஸ் லைக் நைஃப்" ஆல்பத்தை அடுத்து வந்த முதல் ஸ்டூடியோ ஆல்பமாகும். இருந்த போதும் ஜெர்மனியில் டாப் 5ஐயும் யூகேவில் பிளேட்டினம் சான்றிதழ் பெற்றது. இரந்டு பிரிட்டிஷ் டாப் 10 தனிப்பாடல்களில் இரண்டு பாடல்களை அளித்தது: "கிளவுட் நம்பர் நைன்" மற்றும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஆல்பத்தில் இருந்து மெலனி Cயுடன் ஒரு டூயட் பாடலான "வென் யூஆர் கான்", ஆகியவை. "ஆன் எ டே லைக் டுடே" வெளியீட்டுக்கு பின், "த பெஸ்ட் ஆஃப் மீ" என்ற ஆல்பத்தை வெளியிட்டார் ஆடம்ஸ், அது "த பெஸ்ட் ஆப் மீ" என்ற தலைப்பு பாடல், மற்றும் டோன்ட் கிவ் மி அப் என்ற டான்ஸ் பாடல் அடங்கிய மிகப்பெரிய ஹிட் கலெக்ஷனாகும். ஆல்பம் ஜெர்மனியில் டாப் 10ஐ எட்டியது, யூகேவில் பிளேட்டினமும் கனடாவில் மூன்று முறை பிளேட்டினமும் பெற்றது. "பெஸ்ட் ஆஃப் மீ" ஆல்பத்தின் தனிப்பாடல் அமெரிக்காவில் தனியாக வெளியிடப்படாததால் அமெரிக்காவைத் தவிர எல்லா இடங்களிலும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. 2002இல், டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன் திரைப்படமான "ஸ்பிரிட்: ஸ்டாலியன் ஆப் த சிமரான்" படத்துக்கு ஆடம்ஸ் எழுதி இசையமைத்தார். படத்தின் ஒலிப்பதிவில் பாடல்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ""ஹியர் ஐ அம்" என்ற தனிப்பாடல் ஒலிப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட மிக வெற்றிகரமான தனிப்பாடலாகும், பிரிட்டிஷ் டாப் 5வது இடத்தையும், ஜெர்மனில் டாப் 20 ஹிட்டாக ஆனது. 2002 இல் ரஷிய மொழிப் படமான "ஹவுஸ் ஆப் ஃபூல்ஸில்" சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்தார். "ஆன் எ டே லைக் டுடே" வெளியிடப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து, செப்டம்பர் 2004 இல் "ரூம் சர்வீஸ்" வெளியானது. அது ஜெர்மனியில் முதலிடத்தைப் பிடித்து, யூகேவில் நம்பர் நான்கைப் பிடித்தது, ஐரோப்பாவில் முதல் வாரத்திலேயே 440,000 நகல்கள் விற்றது. "ஓபன் ரோடு" என்ற தனிப்பாடல், ஆல்பத்தின் மிக வெற்றிகரமான பாடலாகும், கனடாவின் நம்பர் ஒன்னாக உச்சத்தைத் தொட்டது, யூகேவில் இருபதாவது இடத்தைப் பிடித்தது. மே 2008இல், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது ஆனால் பில்போர்டு 200இல் #134-ஐப் பிடித்தது. 2005இல், "பாடல் திரட்டு" , ஒன்றை இரண்டு புதிய பதிவுகள் அடங்கிய முதல் 2-டிஸ்க் தொகுப்பை வெளியிட்டார். US வெளியீட்டில் பமீலா ஆண்டர்சனுடன் பாடப்பட்ட டூயட்டான "வென் யூ ஆர் கான்" என்ற புதுப்பாடல் பதிப்பு அடங்கியுள்ளது. 2005-இலும் பமீலாவின் FOX சிட்காம் "ஸ்டேக்கிடு" ஆல்பத்தின் இரண்டாவது சீஸனுக்கான மறுப்பதிவு செய்த தீம் பாடலை மறுபதிவு செய்தார். 2006இல், "நெவர் லெட் கோ" என்ற தீம் பாடலை எழுதிப் பாடினார் ஆடம்ஸ், அது கெவின் காஸ்ட்னர் மற்றும் அஷ்டோன் கட்சர் ஆகியோர் நடித்த "த கார்டியன்" படத்தில் இறுதிப் பெயர் பட்டியலில் இடம்பெற்றது. ஆடம்ஸ் "பாபி" திரைப்படத்திற்கான "நெவர் கோனா பிரேக் மை பெயித்" பாடலில் இணை எழுத்தாளராக பங்கேற்றார். இந்தப் பாடலை அரேத்தா பிராங்கிளின் மற்றும் மேரி ஜே. பிளிட்ஜ் ஆகியோர் பாடினர், அது அவருக்கு 2007 ஆம் ஆண்டுக்குறிய கோல்டன் குளோப் விருதைப் பெற்றுத் தந்தது. மார்ச் 17, 2008 ஆம் ஆண்டு ஆடம்ஸ் அவரது பதினோறாவது ஆல்பத்தை சர்வதேச அளவில் வெளியிட்டார். அதன் பெயரும் "11" என்றே அழைக்கப்பட்டது. மே 13, 2008இல் அமெரிக்காவில் வால்-மார்ட மற்றும் சாம்ஸ் கிளப் சில்லரைக் கடைகளிலும் பிரத்யேகமாக செளியிடப்பட்டது. "ஐ தாட் ஐ ஹேட் ஸீன் எவ்ரிதிங் இந்த ஆல்பத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் தனிப்பாடல் ஆகும். ஆடம்ஸ் ஒரு 11-நாள், 11-நாடு ஐரோப்பிய இசை முன்னேற்ற சுற்றுப்பயணத்தை ஏற்படுத்தி இந்த ஆல்பத்தை வெளியிட்டார். ஆல்பம் கனடாவின் நம்பர் ஒன் ஆல்பமாக (அவரது ஆல்பத்தில் இந்த இடத்தை பிடித்த முதல் ஆல்பம் இதுவே ஆகும், அதற்கு முன் 1991இல் "வேக்கிங் அப் த நெய்பர்ஸ்" என்ற ஆல்பம் ஜெர்மனியில் 2 வது இடத்தை அடைந்தது. அமெரிக்காவில் ஆல்பம் எட்டாவது இடத்தைப் பிடித்தது. மே 2009 இல் பிரையன் ஆடம்ஸ் அவாரது டிவிட்டர் கணக்கில் தான் பாரிஸில் ஒரு புதிய ஆல்பத்தை எழுதி பதிவு செய்ய தொடந்க்கிவிட்டதாக எழுதியிருந்தார். கனடாவின் ரெக்கார்டிங் வரிசையில் ஜூலை 2, 2009 அன்று ‎கனடா போஸ்ட் ஸ்டாம்ப்ஸ் வழங்கப்பட்ட நான்கு இசைக் கலைஞர்களில் ஆடம்ஸ் ஒருவராவார். மொத்தம் ஒன்னரை மில்லியன் பிரையன் ஆடம்ஸ் ஸ்டாம்புகள் அச்சிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ள்ளது. ஆடம்ஸின் பல மனிதநேய பணிகள் "த பிரையன் ஆடம்ஸ் பவுண்டேசன்" நிறுவனத்துக்கு அர்ப்பணிக்க்கப்பட்டது, அதன் மூலம் உலக்மெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் கற்பித்தல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, இவை அனைத்துக்கும் கல்வி ஒன்றே ஒரு குழந்தைக்கு தரப்படக்கூடிய சரியான பரிசு என்கிற நோக்கமே அடிப்படை. தொண்டு நிறுவனத்தின் உலகளாவிய ஆதரவு மற்றும் அகன்ற சேவையால், போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் மனம் அல்லது உடலால் நோய்வாய்ப்பட்டவர்கள் என பெரியவர்களுக்கும் உதவக்கூடிய நலத்திட்டப்பணிகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. தொண்டு நிறுவனமானது அவரது போட்டோகிராபிக் செயல்பாடுகளால் மட்டுமே முழுமையாக ஆடரவு அளிக்கப்பட்டு வருகிறது. 1980களில், பல நலத்திட்டங்களுக்க்கு உதவக்கூடிய வகையில் பிரச்சாரங்கள் மற்றும் பணம் சேகரிப்பது போன்றவற்றுக்காக கச்சேரிகள் போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1985இல் பிலேடெல்பியாவில் இருந்து அமெரிக்க லைவ் எயிட் மாற்றத்தை ஆடம்ஸ் திறந்து வைத்ததே நலப்பணிக்காக அவர் தோன்றிய மாபெரும் நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்த வருடத்தின் ஜூன் மாதத்தில் ஸ்டிங், U2 மற்றும் பீட்டர் கேப்ரியல் ஆகியோருடன் இணைந்து இரு வாரம் நடக்கும் அம்னஸ்டி இண்டர்நேஷனலுக்காக "எ கான்ஸ்பிரசி ஆஃப் ஹோப்" சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார் ஆடம்ஸ். அதற்கு அடுத்த நிகழ்ச்சியாக அம்ன்ஸ்டிக்காக பிப்ரவரி 1987இல் பால் மெக்கார்ட்னி, ஸ்டிங் மற்றும் டைர் ஸ்ட்ரெயிட்ஸ் மற்றும் பலருடன் இணைந்து ராக் பார் அம்னஸ்டி அமைந்தது. அமெரிக்க பகுதியான வைவ் எயிட்டில் இசையமைத்தாலும் வெம்பிளே ஸ்டேடியத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெறவில்லை; இருந்தாலும் ஜூன் 1987இல் எல்டன் ஜான், ஜார்ஜ் ஹாரிசன், ரிங்கோ ஸ்டார் மற்றும் பலருடன் இணைந்து பிரின்ஸ் டிரஸ்டின் 5வது ஆண்டுவிழாவில் ராக் காலாவுக்காக இசையமைத்தார். அதற்கு அடுத்த ஆண்டே நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாள் பார்ட்டி கச்சேரிக்காக வெம்பிளே ஸ்டேடியத்தில் பாடுவதற்காக மீண்டும் அழைக்கப்பட்டார். ரோஜர் வாடர்ஸ்)க்கான மைக்கேல் கோமன்' உடன் (அவரது பாடல் எழுதும் பார்ட்னருடன்) ஜெர்மனியின் பெர்லின் "சுவர்" க்கான அட்டகாசமான நிகழ்ச்சியில் இன்னும் பல விருந்தினருடன் இணைந்து பெர்லின் சுவரின் நினைவுக்காக ஆடம்ஸ் உதவினார். வாட்டர்ஸ், ஜோனி மிட்ஸல், சிந்தி லாபர், வேன் மோரிசன், பால் காரக்மற்றும் பல்ருடந்ன் இணைந்து "த டைம்ஸ் இஸ் டர்னிங்" என்ற பாடலைப் பாடினார். மெயின்ஸ்ட்ரீம் ராக் பாடல்களில் பிங்க் பிளாய்டின் "யங் லஸ்ட்" டையும் பாடி #7ஐயும் அடைந்தார். ஜனவரி 29, 2005இல் CBCயுடன் இணைந்து 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களாக டொரண்டோவில் நிவாரணநிதி கச்சேரி ஒன்றை நடத்தினார். அமெரிக்காவில் லைவ் எயிட் நடைபெற்று இருபது ஆண்டுகள் கழித்து கனடாவின் லைவ் 8 , அன்டாரியோ நிகழ்ச்சியில் ஆடம்ஸ் இசையமைத்தார். அதே ஆண்டில் கத்தாரில் நடந்த கச்சேரியில் பங்கேற்று உலகின் மிகப் பிரபலமான கித்தார் கலைஞர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்து கையெழுத்திட்டுக் கொடுத்தனர். அதன் ஏலம் மூலம் £1.5மில்லியன் ($2,617,000) வசூலானது. கத்தாரின் "ரீச் அவுட் டூ ஏசியா" என்ற ஆசியக்கண்டத்தின் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட பிரச்சாரத்துக்காக அந்த பணம் செலவிடப்பட்டது. அதன் ஒரு பகுதிப் பணம் தாய்லாந்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கும் சிறிலங்காவில் புதிய விளையாட்டு மையம் கட்டுவதற்குமான அவரது சொந்த பிராஜக்ட்களுக்காக செலவிடப்பட்டது. அவை இரண்டுமே இந்தியப் பெருங்கடல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டவையாகும். ஜனவரி 29, 2009இல் பாகிஸ்தானின் கராச்சியில் பின்தங்கிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காக ஷெசாத் ராய் நடத்திய கச்சேரியில் கலந்து கொண்டு அங்கு முதன் முதலாக இசைக்கச்சேரி நடத்திய முதல் மேற்கத்திய கலைஞர் என்ற பெருமையை ஆடம்ஸ் பெற்றார். அந்த கச்சேரியின் சில நிதி 2005 பாகிஸ்தான் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. அக்டோபர் 18, 2008 அன்று இஸ்ரேல் பாகிஸ்தான் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நம்பிக்கை ஏற்படுத்த ஒரு குரல் இயக்கத்தின்/0 ஒரு பகுதியாக டெல் அவிவ் மற்றும் ஜெரிகோவில் ஆடம்ஸ் பாடினார்.|ஒரு குரல் இயக்கத்தின்/0} ஒரு பகுதியாக டெல் அவிவ் மற்றும் ஜெரிகோவில் ஆடம்ஸ் பாடினார்.]] பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான இரு-நிலை தீர்வுக்கு உதவும் அமைதி கச்சேரி பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலில் நிறுத்திவைக்கப்பட்டது. 1990களில், கிரீன்பீஸில் சேர்மனான டேவிட் மெக் டக்கார்ட்டுடன் இணைந்து தெற்கு பெருங்கடல் திமிங்கல காப்பகத்துக்காக பிரச்சாரம் மேற்கொண்டார், காப்பகம் அமைப்பதற்காக உலகமெங்கும் உள்ள அரசியல்வாதிகளை உற்சாகப்படுத்தி "ஆம்" என ஓட்டளிக்க 500,000 போஸ்ட் கார்டுகளை இருவரும் விநியோகித்தனர்). PETA என்கிற விலங்கு உரிமைகள் சார்பாகவும் சில நேரங்களில் விலங்குகளை பராமரிப்பது தொடர்பான கடிதங்களை எழுதுவார் ஆடம்ஸ். KFCஇன் கனடா நாட்டு CEOவிற்கு நவம்பர் 2007இல் மிகவும் மனிதநேயமிக்க கொல்லும் முறையை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார். 17 ஆண்டுகளாக ஆடம்ஸ் ஒரு சைவம் சாப்பிடுபவர், PETA'வின் சைவம் சாப்பிடுபவர்களில் மிகவும் செக்ஸியானவர் என்ற பட்டத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். மே 25, 2005இல், மைத்துனர் ஜானி ஆர்மிடேஜுடன் இணைந்து லண்டனின் ராயல் மார்ஸ்டன் மருத்துவமனைக்காக ராக் பை த ரிவர் என்ற தலைப்பில் கச்சேரியும் ஏலமும் நடத்தி £1.3M வசூல் செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு மே 15இல், ஹோப் நிறுவன நிகழ்ச்சியில் (வடிவமைப்பாளர் பெல்லா பிராய்டால் நடத்தப்பட்டது) பங்கேற்க லண்டன் வந்தார் ஆடம்ஸ், அந்நிகழ்ச்சியில் வசூலான பணத்தில் ஒரு பகுதியான £250,000 பாலஸ்தீனிய அகதி குழந்தைகளுக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டது. அதனை அடுத்த ஜூன் மாதம், பொது மக்களில் இருந்த தனி நபர்களை ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுத்து லண்டனில் நடைபெற்ற மூன்று வெவேறு நலநிதி ஏல நிகழ்ச்சிகளில் அவருடன் பாடுவதற்காக வாய்ப்பளித்தார். சேகரிக்கப்பட்ட நலநிதியில் இருந்து NSPCC, தேவையில் உள்ள குழந்ததைகள், மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் ஹாஸ்பிடல் ஆகியவற்றுக்காக £50,000 வழங்கப்பட்டது. பிப்ரவரி 28, 2008இல் கனடாவின், டொரண்டோவில் ஏர் கனடா சென்டரில் ஒன் நைட் லைவ் நிகழ்ச்சியில் ஜோஷ் கிரோபன், சாரா மெக்லாக்லான், ஜான் ஆர்டேன் மற்றும் ரியான் டென் ஆகியோருடன் இணைந்து சன்னிபுரூக் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணிக்காக பாடினார். ஜார்ஜியாவின் அமைதிக்காக ட்பிலிசியில் செப்டம்பர் 19, 2008இல் சிறப்பு வெளியரங்க கச்சேரியில் ஆடம்ஸ் இசையமைத்தார். CMT'யின் கிராஸ்ரோட்ஸில் புதிய ஹிட்டாகியுள்ள பசுமை டிராக்டரின் ஜேசன் அல்டீனுடன் இணைந்து தோன்றவிருக்கிறார். ஆடம்ஸின் போட்டோக்கள் பிரிட்டிஷ் வோக், லுவோமோ வோக், ல்வுமோ வோக், வேனிட்டி ஃபேர், ஹார்பர்ஸ் பஜார், ஐச்குயர், இன்டர்வியூ பத்திரிக்கை மற்றும் i-D மற்றும் பல பத்திரிகைகளில் வெளியானது. அவரது மற்ற போட்டோகிராபிக் முயற்சிகள் ஜெர்மனியின் பெர்லின் நகரை மையமாகக் கொண்ட பேஷன்/கலை பத்திரிகையான ஜூ மேகஸினிலும் பதிப்பிக்கப்பட்டன. ஜூன் 1, 2005இல், "அமெரிக்கன் வுமன்" என்னும் பதிப்பை கேல்வின் கிளீனுடன் இணைந்து அவரது போட்டோக்கள் அடங்கிய முதல் புத்தகமாக வெளியிட்டார்; அதன் வருமானங்கள் நியூயார்க் நகரின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் மையத்தின் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. அதைப் போன்றே மற்றொரு புத்தகத்தை டிசம்பர் 1999இல் "மேட் இன் கனடா" என்ற பெயரிலும் 2000இல் ஹேவன் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். அவரது புத்தகங்கள் அனைத்தும் நோயால் மரணமடைந்த அவரது நண்பர் டோனாவுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டன. ஒரு போட்டோகிராபராக தன் இசை சகாக்களான மிக் ஜாகர், ராட் ஸ்டீவர்ட், ராபர்ட் பிளான்ட், ஜாஸ் ஸ்டோன், பிளாசிடோ டொமிங்கோ, செலைன் டியான், பில்லி ஐடல், மோபி, ஏமி வைன்ஹவுஸ்,t ஆகியோருடனும் ஆடம்ஸ் பணிபுரிந்துள்ளார்.A.T.u., ஆனி லென்னாக்ஸ், பீட்டர் கேப்ரியல், லென்னி கிரேவிட்ஸ் {1டேக் தாட்{/1} மற்றும் மொர்ரிஸி ஆகியோரும் அடங்குவர். நவம்பர் 27, 2000 அன்று ராயல் ஆல்பர்ட் ஹாலில்/0 த ஹூ|ராயல் ஆல்பர்ட் ஹாலில்/0} த ஹூவுடன் மேடையில் இசையமைத்தார் பிரையன். அந்த கச்சேரியின் DVDயும் வழங்கப்பட்டது. DVD கைப்பிரதியில் பேண்ட் மற்றும் அவரது போட்டோக்களை பிரையன் வெளியிட்டிருந்தார். 2002இல் ராணி எலிசபெத் IIஇன் பொன் விழா கொண்டாட்டத்துக்கு மற்ற போட்டோகிராபர்களுடன் சேர்ந்து ஆடம்ஸும் அழைக்கப்பட்ட்டிருந்தார்; இந்த நிகழ்ச்சியின் போட்டோகிராப்களில் ஒன்று கனடாவின் தபால் தலையாக 2004இல் பயன்படுத்தப்பட்டது, மீண்டும் 2005இல் (ராணி எலிசபெத்தின் II உறுதித் தபால்தலை (கனடா) என்பதைப் பார்க்கவும்), ராணி எலிசபெத் IIஇன் மற்றொரு படமும் இளவரசர் பிலிப்புடையதும் இப்பொழுது லண்டனில் தேசிய புகைப்படக் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் மற்றும் காது கேளாமல் போவது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் "ஹியர் த வேர்ல்டு" என்ற தொண்டு நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வ போட்டோகிராபராக பிரையன் ஆடம்ஸ் ஆதரவளிக்கிறார். அவர்களது அட்டைப் படத்துக்கு ஆடம்ஸ் தானே படம்பிடித்து வழங்கி வருகிறார, அது கேட்டல் பற்றிய தலைப்புக்கென பிரத்யேகமாக வெளிவரும் ஒரு கலாச்சார மற்றும் வாழ்க்கை முறை காலாண்டு பத்திரிகையாகும். ஃபோட்டோகிராபிக் கண்காட்சிகளாவன: கோப்பு பகிர்மான காப்புரிமை அத்துமீறலுக்கான சட்டஉரிமைக் கோரல் வழக்குகளில் முதன்முதலாக ஒரு சட்டக்குழுவுக்கு முன் முக்கிய பதிவு லேபிள்களில் வழக்குப் பதிவு செய்ததில் "சம்படி" என்பது 24 பாடல்களில் ஒன்றாகும். 24 பாடல்களை அத்துமீறியதாக 2007 வழக்கு ஒன்றில் ஜேமி தாமஸ் என்ற நான்கு பேரில் ஒருவரான ஒரு தாய் கண்டுபிடிக்கப்பட்டார், சேதங்களுக்கு அபராதமாக 222,000 டாலர்கள் செலுத்தும்படி (ஒரு பாடலுக்கு 9,250 டாலர்கள்) விதிக்கப்பட்டார். இரண்டாவது வழக்கு, 2209 இல், தாமஸ் என்பவரை குற்றவாளியாக கண்டறிந்தது நீதிமன்றம், சேதங்களுக்காக ($80,000/பாடல்) என 1,920,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டார். யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்) யோகாவின் அடிப்படைத் தத்துவம் முதல் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா உதவும் முறைகள் என அனைத்தையும் இந்த “யோகா கற்றுக் கொள்ளுங்கள்” நூல்(ISBN 978-81-8368-612-9) விளக்குகிறது. 120 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 60 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் கணபதி ராம்கிருஷ்ணன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களையும் எழுதி வருகிறார். எனும் 5 தலைப்புகளில் எளிமையான நடையில் யோகா குறித்து இந்த நூலில் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் பகுதியான இதில் யோகா என்றால் என்ன என்பது குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. இத்தலைப்பில் மனநலம் குறித்து விளக்கப்பட்டு அதுவே உடல் நலத்திற்கு உதவுகிறது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. யோகாவில் இருக்கும் மூன்று நிலைகளான ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. உடலுக்கு வலிமையும், உள்ளத்துக்குத் தெளிவையும் அளிக்கும் நூற்றுக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன போதும் 69 ஆசனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களில் மிக முக்கியமான ஆசனங்கள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதுடன் அதற்கான பலன்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியில் 12 முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சில மூச்சுப் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்து அதனால் ஏற்படும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன. - இன்று உலகம் முழுவது பரவி வரும் யோகாசனப் பயிற்சி முறை குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பயிற்சிப் படங்களில் இருப்பவர் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வேதிப்பொருள் வேதிப்பொருள் "(chemical substance)" என்று குறிப்பிடப்படும் ஒரு பருப்பொருள் நிலையான வேதியியல் இயல்பும் குறிப்பிடத்தக்க வேதியியல் பண்புகளையும் கொண்ட ஒரு சேர்மமாகும். வேதிப் பிணைப்புகளை உடைக்காமல் இவற்றை தனித்துப் பிரிக்க இயலாது . வேதிப் பொருட்கள் எளிய பொருட்களாக, மூலக்கூறுகளாக, வேதிச் சேர்மங்களாக, உலோகக் கலவைகளாக இருக்கலாம். தூய பொருட்கள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கிறார்கள். வேதிப்பொருட்கள் பெரும்பாலும் தூய நிலையில் உள்ள பொருட்களைக் குறிப்பிடுகின்றன. எளிதில் நாம் காணக்கூடிய ஒரு வேதிப்பொருள் தூய்மையான நீராகும். ஆற்று வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டாலும் சோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டாலும் நீரானது ஒரே இயைபைக் கொண்டதாக உள்ளது. இவற்றில் ஐதரசனும் ஆக்சிசனும் அதே விகிதத்தில் கலந்துள்ளன. வைரம், தங்கம், உண்ணும் உப்பு, சர்க்கரை போன்றன தூய்மையான நிலையில் கிடைக்கும் பிற வேதிப் பொருட்களாகும். பெரும்பாலும் நடைமுறையில் எந்த பொருளும் முழுமையாக தூய்மையான நிலையில் கிடைப்பதில்லை. பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கம் கருதியே வேதியியல் தூய்மை பார்க்கப்படுகிறது. பொதுவாக வேதிப் பொருட்கள் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் கிடைக்கின்றன. வெப்பநிலை அல்லது அழுத்த மாற்றங்கள் மூலம் அவை ஓர் நிலையினின்றும் மற்றொரு நிலைக்கு மாறக்கூடியனவாக உள்ளன. வேதி வினையின் விளைவாக ஒரு வேதிப்பொருளை வேறொரு வேதிப்பொருளாக மாற்ற இயலும். ஆற்றலின் வடிவங்களான வெப்பமும் ஒளியும் பருப்பொருள்கள் அல்ல. எனவே இவை வேதிப்பொருட்களாக கருதப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வேதியியல் இயைபு கொண்ட எந்தவொரு பொருளையும் வேதிப்பொருள் என்று வரையறுக்கலாம் என்று பொது வேதியியல் பாடப்புத்தகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரையறையின் படி ஓர் இரசாயனப் பொருள் என்பது ஒரு தூய இரசாயனத் தனிமமாக அல்லது ஒரு சுத்தமான இரசாயன சேர்மமாக இருக்க முடியும். ஆனால் இந்த வரையறைக்கு விதிவிலக்குகள் உள்ளன; வேறுபட்ட பண்புகள் மற்றும் நிலையான இயைபு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் தூய்மையான பொருளை வரையறுக்க முடியும். வேதித் தொகுப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள வேதிப்பொருட்களின் பட்டியலில் நிலையான இயைபு அல்லாத பல கலப்புலோகங்களும் இடம்பெற்றுள்ளன. விகிதவியல் அளவுகளில் அமையாத சேர்மங்கள் சிலவும் நிலையான இயைபு விதிகளுக்கு விலக்காக உள்ளன. இவற்றை சேர்மம் அல்லது கலவை என்று வேறுபடுத்திப் பார்த்தல் கடினமாக இருக்கும். உதாரணம் பல்லேடியம் ஐதரைடு. இரசாயனங்கள் அல்லது இரசாயன பொருட்கள் குறித்த பரந்த வரையறைகள் மேலும் பல உள்ளன. எடுத்துக்காட்டாக: இரசாயனப் பொருள்" என்பது ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அடையாளம் கொண்ட எந்தவொரு கரிம அல்லது கனிம பொருளையும் குறிக்கிறது . ஒரு இரசாயன வினை அல்லது இயற்கையில் தோன்றுதல் ஆகிய நிகழ்வுகளால் முழுமையாக அல்லது பகுதியாக இணைந்திருக்கும் எந்தவொரு பொருளும் வேதிப்பொருள் எனப்படுகிறது. நிலவியலில் சீரான இயைபுகளுடன் காணப்படும் சேர்மங்கள் கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதே சமயம் பல கனிமங்களின் (வெவ்வேறு பொருள்களின்) இயற்பியற் கலவைகள் பாறைகள் என வரையறுக்கப்படுகின்றன. இருப்பினும் பல தாதுக்கள் பரசுபர அடிப்படையில் திண்ம கரைசல்களில் கரைந்து விகிதவியல் அளவுகளில் கலக்காமல் ஒரு ஒற்றை பாறையாகவும் உருவாகின்றன. பெல்சுபார்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அனார்தோகிளேசு என்பது ஒரு கார அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். இங்குள்ள கார உலோகம் சோடியம் அல்லது பொட்டாசியம் இரண்டில் ஒன்றாக மாறி இருக்கலாம். இரசாயன பொருட்கள் என்பவை வரையறுக்கப்பட்ட இயைபு கொண்ட அல்லது உற்பத்தி செயல்முறையில் உருவான தூய பொருட்கள் மற்றும் கலவைகளையும் சேர்க்கலாம் என விதிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய முறைப்படுத்தலான வேதிப்பொருட்கள் பதிவு மதிப்பிடு அங்கீகரிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு இவற்றை மூன்றாக வரையறை செய்துள்ளது. ஒற்றைப்பகுதிப் பொருட்கள், பலபகுதிப் பொருட்கள், அறியப்படாத பகுதி அல்லது மாறுபடும் பகுதி வேதிப்பொருட்கள் என்பன அவையாகும். பிந்தைய இரண்டும் பலபகுதி வேதிப்பொருட்களை உடைய பொருட்களாகும். இவற்றின் அடையாளம் நேரடி வேதிப் பகுப்பாய்வுகள் மூலம் அல்லது தனி தயாரிப்பு செயல்முறை மூலம் நிறுவப்படுகின்றன. உதாரணமாக மரக்கரி அதிக அணைவும் பகுதி பலபடியும் சேர்ந்த கலவையாகும். இது தயாரிப்பு செயல்முறை மூலம் வரையறுக்கப்படுகிறது. பலபடிகள் பெரும்பாலும் வேறுபட்ட மோலார் நிறைகளுடன் கூடிய கலவைகளாகத் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வேதிப் பொருள்களாகக் கருதப்படுகின்றன. எனினும் ஒரு பலபடி அறியப்பட்ட அதனுடைய முன்னோடி அல்லது வினைகள் மற்றும் மூலக்கூற்று நிறை பகிர்வு மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாலி எத்திலீன் என்பது மிக நீண்ட CH2- சங்கிலிகள் திரும்ப திரும்ப தோன்றும் ஒரு கலவையாகும். பல வேறுபட்ட மோலார் நிறை பகிர்வுகளுடன் இவை விற்கப்படுகின்றன. குறை அடர்த்தி பாலி எத்திலீன், நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், மீவுயர் மூலக்கூற்று எடை பாலி எத்திலீன் எனபன அவையாகும். மரைக்காயர் முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், பாண்டியர் கால ஆவணங்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், இடானியர், பிரான்சியர் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சே நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகம்மது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகம்மது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது. இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சே, சுமாத்திரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. மரக்கலத்தின் மூலம் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததால் மரக்கலராயர் என்றழைக்கப்பட்டு மரக்காயர் > மரைக்காயர் என்றானது. வரவு நல்ல உறவு வரவு நல்ல உறவு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , ரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம் குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனது பணி ஓய்வு பணத்தை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார் ஒரு தந்தை. பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன மகன்களும் மகளும் தந்தையை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். உறவுகள் வேண்டாம் என்று இருக்கும் தந்தை மீது பாசத்தைக் காட்டினாலும் அவர் மனம் மாறாததால், பிள்ளைகள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பிள்ளைகள் பிரிந்ததும் பாசத்தை நாடும் தந்தை மனம் மாறி மீண்டும் குடும்பத்தினர் இணைகிறார்கள். எச்.ஐ.வி எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - Human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை தீ நுண்மம் (வைரசு) ஆகும். இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம். இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும். உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர் இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன . ஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்த எச்.ஐ.வி கிருமிகளை முற்றாக அழிக்கவல்ல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ள அதே வேளையில், இந்தக் கிருமிகளின் வேகத்தைக் குறைத்து, அவற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மரு‌ந்துக‌ள் த‌ற்போது பாவனையில் உள்ளன. எனவே வேறு நோய்களுக்குரிய சந்தர்ப்பவாத தொற்றுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் அந்நோய் ஏற்பட்டிருப்பின், அதற்கான சிகிச்சையுடன், இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் எ‌ச்.ஐ‌வி. பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம் என அறியப்படுகிறது. எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மியை‌க் கட்டுப்படுத்தும் மருந்துகள் "ஆண்டி ரெட்ரோ (Antiretroviral) வைரஸ் மருந்துகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் எச்.ஐ.வி வைரசின் நோயேற்படுத்தும் தன்மை, இறப்புவீதம் போன்றவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாயினும், இந்த மருந்துகள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர் ‌சிற‌ந்த மரு‌த்துவ‌ரிட‌ம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். இது நோயா‌ளி உ‌ட்கொ‌ள்ளு‌ம் மரு‌ந்து உட‌லி‌ல் செ‌ய்யு‌ம் ஆற்றலை அறிந்து கொள்ளவும், அ‌ந்த மரு‌ந்துகளா‌ல் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்க ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கவும் உதவும். ஒரு முறை "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாக இரு‌ந்தது. த‌ற்பேது இம்மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. உட‌லி‌ல் எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மிக‌ள் எ‌ங்கு இரு‌‌ந்து கொ‌ண்டு நோயை‌ப் பர‌ப்பு‌கி‌ன்றன எ‌ன்பதை ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். எனவே ‌விரை‌‌வி‌ல் எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மிக‌ளை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க‌க் கூடிய மரு‌ந்துக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம். எதுவாக இரு‌ந்தாலு‌ம், நோ‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் தெ‌ரி‌ந்த உட‌ன் மரு‌‌த்துவமனையை அணு‌கி த‌ங்களது நோ‌‌ய்‌க்கான ‌சி‌கி‌ச்சையை மே‌ற்கொ‌ள்வது அவ‌சிய‌ம். இ‌ந்த நோ‌ய் ந‌ம்மை தா‌க்‌கியது வெ‌ளி‌யி‌ல் தெ‌ரி‌ந்தா‌ல் ந‌ம்மை எ‌ன்ன ‌நினை‌ப்பா‌ர்களோ எ‌ன்று அ‌ஞ்‌சி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ச‌ரிய‌ல்ல. மேலு‌ம், எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் ப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யி‌ல் எ‌ங்கு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌க் கூடாது எ‌ன்று உ‌த்தரவு உ‌ள்ளது. எனவே, தை‌ரியமாக வெ‌ளியே வ‌ந்து ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று கொ‌ள்ள வே‌ண்டியது கடமையாகு‌ம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "உலகக்கோப்பை காற்பந்து" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன. ஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் சூரிக்கு நகரில் உள்ளது. ஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு ஃபிஃபா பேராயம் ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு பொறுப்பாகின்றது. உலகக்கோப்பை காற்பந்து நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது. ஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும். தனது உலகளாவிய கட்டமைப்பைத் தவிர (தலைமையகம், செயற்குழு, பேராயம்...) ஃபிஃபா உலகின் பல்வேறு கண்டங்களிலும் வட்டாரங்களிலும் கால்பந்தாட்டத்தை மேலாண்மையிட ஆறு கூட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது. தேசியச் சங்கங்கள் மட்டுமே ஃபிஃபாவின் உறுப்பினர்களாவர்; கண்ட கூட்டமைப்புகளல்ல. இருப்பினும் இந்த கண்டக் கூட்டமைப்புகள் ஃபிஃபாவின் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், கண்டக் கூட்டமைப்பில் அத்தேசிய சங்கம் உறுப்பினராக இருப்பது ஃபிபாவில் உறுப்பினராக முற்படு தேவையாக உள்ளது. மொத்தமாக, ஃபிஃபா 209 தேசிய சங்கங்களையும் அவர்களது ஆடவர் அணிகளையும் அங்கீகரித்துள்ளது; 129 மகளிர் அணிகளை அங்கீகரித்துள்ளது. ஃபிஃபாவில் ஐக்கிய இராச்சியத்தின் உள்நாடுகள், பாலத்தீனம் போன்ற 23 அங்கீகரிக்கப்படாத அமைப்புக்களையும் நாடுகளாக ஏற்றுக்கொள்வதால் ஐக்கிய நாடுகளை விட கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர். ஃபிஃபாவில் உறுப்பினராகாத ஒன்பது இறையாண்மையுள்ள நாடுகளாவன:மொனக்கோ,வாத்திகன் நகரம்,ஐக்கிய இராச்சியம், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், கிரிபாத்தி, துவாலு, பலாவு, நயாரு பட்டடக்கல் பட்டடக்கல் என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்துல் உள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பாதமியில் இருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன. பட்டடக்கல், தென்னிந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. இவர்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருக்கும் கோயில்களைக் கட்டினர் . இங்கே மொத்தம் பத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று சமணர்களுடையது. நான்கு கோயில்கள் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியிலும், இன்னொரு நான்கு நாகரப் பாணியிலும் அமைந்துள்ளன. மிகுதி ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது. பட்டடக்கல்லைப் புண்ணிய தலமாகக் கருதிய வாதாபி சாளுக்கிய அரசர்கள் இங்கு முடிசூட்டிக் கொண்டனர். இங்கு முடிசூட்டிக்கொண்ட சாளுக்கிய அரசர்களில் முதலாமவன் விஜயாதித்தன் ஆவான். இராஷ்டிரகூடர் மற்றும் கல்யாணிச் சாளுக்கியர் ஆட்சி காலத்திலும் பட்டடக்கல் முக்கிய நகரமாக இருந்துள்ளது. கட்டிடக்கலையில் ஐகொளெ ஒரு பள்ளி என்றால், பாதாமியை ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியாகவும், பட்டடக்கல்லை ஒரு கட்டிடக்கலைப் பல்கலைக் கழகமாகவும் கருதலாம். சாளுக்கியர் பாணி ஐகொளெயில் (கிபி 450) உருவாகியது. அக்காலத்துச் சிற்பிகள் பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளை வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நாகரப் பாணியையும், திராவிடப் பாணியையும் கலந்து இன்னொரு தனித்துவமான பாணியை உருவாக்கினர். ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் பாதாமியில் இருந்து பட்டடக்கல்லுக்கு மாறின. பட்டடக்கல்லில் பல கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: ஒன்று விருபாட்சர் கோயில் வெற்றித் தூணில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு (733–745) இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டு. மற்றொன்று சங்கமேசுவரர் கோயிலில் உள்ளது. கிபி 1162 ஆம் ஆண்டில் கன்னடத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் சங்கமேசுவரர் கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் விஜயாதித்தன் மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1987 இல் யுனெஸ்கோ பட்டடக்கல்லை உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்தது. பட்டடக்கல்லின் நினைவுச் சின்னத் தொகுதியுள் 10 நினைவுச் சின்னங்கள் அடங்கியுள்ளன: மறவர் (இனக் குழுமம்) மறவர் குலம் என்பது தமிழகத்தில் வாழும் தேவர் எனும் சாதிய அமைப்பின் ஒரு பிரிவாகும். மறவர், கள்ளர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர். தமிழகத்தின் தொன்மையான போர்க்குடியினர் மறவர் குலத்தோர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி போர் புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர். தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர். செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் . ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் பூலித்தேவன் மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர். செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்கள். மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இது போன்ற பிரிவுகள் அடங்கும். தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர். என்றி பவர் ஐயர் ஹென்றி பவர் ஐயர் (திசம்பர் 18 1812 -1885) என்பவர் கிறித்துவர்களின் வேதநூலான வேதாகமத்தைத் (Bible) தமிழில் மொழிபெயர்த்த ஒரு குழுவின் தலைவராகச் செயல்பட்டவர். கிறித்தவ ஆன்மிகப் பணிகளுடன், சில தமிழ் இலக்கியப் படைப்புகளையும் செய்தவர். தமிழ் கிறிஸ்தவ வேதாகம மொழிபெயர்ப்புகளில் “சீகன்பால்க் மொழிபெயர்ப்பு”, ”பப்ரிசியுசின் மொழிபெயர்ப்பு”, ”இரேனியுஸ் மொழிபெயர்ப்பு”, ”பெர்சிவல்” அல்லது ”பரீட்சை மொழி பெயர்ப்பு” என பல இருக்கின்றன. சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயர் என்பவரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஹென்றி பவரின் மொழிபெயர்ப்புதான். இது ”பவர் மொழிபெயர்ப்பு”, அல்லது ”ஐக்கிய மொழிபெயர்ப்பு” என்று அழைக்கப்படுகிறது. பிரான்கோயிஸ் பூவியர் (Francois Bouvier) ஒரு பிரஞ்சுப் போர் வீரர். இந்தியாவில் நடைபெற்ற சண்டையில் கைதியானவர். இந்தியப் பெண்ணான ஜஸ்ட்டீனா (Justina) வை திருமணம் செய்து இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தவர். இத்தம்பதியர்களுக்கு, சென்னை , சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் சீயோன் ஆலயத்தை அடுத்துள்ள இல்லத்தில் ஹென்றி பவர் ஐயர் பிறந்தார். (அருட்திரு.ஹென்றி பவர், 1813ஆம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய.மேரி ஆலயப் பதிவேடு கூறுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார், 1812ஆம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பவர் ஐயரின் கல்லறையில், 18-12-1812ல் பிறந்ததாகவும், 2-9-1885ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.). இவர் பட்டாளத்தார் அனாதையர் ஆண் ஆசிரமத்தில் (Military Male Orphan Asylum) கல்வி பயின்றார். சென்னை ஆளுநரின் காரியதரிசி கர்னல். ஜான் கார்பிறே (Col. John Carfrae), இளைஞரான பவரை நேசித்ததால், பவருக்கு அநேக உதவிகளைச் செய்தார். மேலும், பேருபகாரியான கர்னல். ஜான் கார்பிறே, 1832ஆம் ஆண்டு, பவரை இங்கிலாந்துக்குத் தன்னோடு கூட்டிச் சென்றார். 1833ஆம் ஆண்டு, லண்டன் மிஷனெரி சங்கம் (LMS) நடத்தும் ஊழியரைப் பயிற்றுவிக்கும் கலாசாலையில் பவர் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்பு, 1837ஆம் ஆண்டு, இந்தியா திரும்பினார். அருட்திரு. ஹென்றி பவர் எம்மா டெய்லர் (Emma Taylor) என்ற பெண்ணை 09-05-1838 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு, - என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பவரின் முதல் மனைவி 1844ஆம் ஆண்டு இறந்ததால், எலிசா ஜெஸி பிளக்கர் (Eliza Jessie Blacker) என்ற பெண்ணை 10-05-1847 அன்று மறுமணம் செய்தார். இவர்களுக்கு, என ஆறு பிள்ளைகள் என மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தன. முதலில் திரிப்பசூரில் ஊழிய வேலையைத் துவக்கினார். பின்பு, 1838ஆம் ஆண்டு, புரசைவாக்கத்துக்குக் குடிபெயர்ந்தார்.1842 ஆம் ஆண்டு, சுவிசேஷப் பிரபல்ய சங்கத்தில் (SPG) சேர்ந்து, 1843 ஆம் ஆண்டு, உதவி குருவாகவும், 1845 ஆம் ஆண்டு, குருவாகவும் அபிசேகம் பெற்றார். பவர் ஐயர், தஞ்சாவூருக்கு அருகாமையில் கிறிஸ்தவ சமய ஊழியரைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு ‘வேதியர்புரம்’ என்றும் பெயரிட்டார். 1858 ஆம் ஆண்டு, வேதியர்புரத்தை விட்டு நீங்கி, வேதாகம மொழி பெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1864 ஆம் ஆண்டு, மொழிபெயர்ப்பு வேலையோடு வேப்பேரியிலுள்ள பரி. பவுல் ஆலயக் குருவாகவும் நியமனம் பெற்றார். 1871 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை ஏற்றார். ஆங்கிலத் திருச்சபையின் (Church of England), ஜெபப்புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவிலும் ஓர் அங்கத்தினர் ஆனார். இந்த வேலை இரண்டு வருடங்கள் நடை பெற்றது. ஜெபப்புத்தக மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், அதாவது, 1872ஆம் ஆண்டு, திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டு, பின்பு திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் வேப்பேரி ஆலயத்திற்கு வந்தார். 1877ஆம் ஆண்டு, கான்டர்பெரி பேராயர், பவர் ஐயருக்கு ‘இறையியற் கலைஞர்’ (Doctor of Divinity), என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் ஐயர் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் ஊழியம் (ஆன்மிகப் பணி) செய்வதையே பெரிதும் விரும்பினார். - மேலும் ஹென்றி பவர் நன்னூலிடத்தும், திருக்குறளிடத்தும் அதிக ஈடுபாடு உடையவராயிருந்ததால், “தமிழ் இலக்கணம் என்றால் அது பவணந்தியாரின் நன்னூலே! தமிழ் முதல்தர இலக்கியம் என்றால் அது திருவள்ளுவரின் திருக்குறளே”, என்ற கருத்தினை குறித்து வைத்துள்ளார். பவர் ஐயரின் ஆராதனைகள் சடங்காச்சாரமற்றவையாக உள்ளன என்ற சிலரின் குற்றச்சாட்டாலும், விரோதப் போக்காலும், வேப்பேரியிலிருந்து சாந்தோமுக்கு மாற்றப்பட்டார். அத்துடன் வேப்பேரி குருமனையை விட்டும் நீங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இவ்விதமான மாற்றங்களாலும், இன்னல்களாலும் பவர் உடல் நலக் குறைவுக்குள்ளானார். இறுதி காலத்தில் குற்றாலத்திற்கு வந்து, அங்கு சிறிது காலம் வசித்தார். அதன் பின்பு 1885 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரின் உடல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை , மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. துடுப்பாட்டத்தின் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் "அறிந்த" வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலக்கட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, தொழில்ரீதியில் காமன்வெல்த் நாடுகள்]] எங்கும் விளையாடப்பட்டு வருகின்றது. கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.இது யாராலும் அறியப்படாத ஒரு உண்மை ஆகும். கிரிக்கெட் எப்படி தோன்றியது என்பதற்கு எந்த வித பலமான ஆதாரமும் இல்லை.என்றாலும், இந்த விளையாட்டு சாக்சன் அல்லது நார்மன் காலத்தில், வேல்ட் என்ற அடர்ந்த காடுகள் மற்றும் சம வெளிகளில் (இங்கிலாந்துக்கு தென் மேற்கு பகுதி மற்றும்கென்ட், சயாதுக்சுக்கு அருகில்) வாழ்ந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இடைக்காலங்களில் வேல்ட் பகுதியின் மக்கள் சிறு வேளாண்மைத் தொழிலிலும், உலோகப் பொருட்களை கொண்டு வேலை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது.. குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிர்க்கெட் விளையாட்டு, பல தலைமுறைகளுக்கு அவ்வாறே இருந்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரியவர்கள் இந்த ஆட்டத்தை ஆடினார்கள் என்று நம்மால் கேள்விப்பட முடியவில்லை. பவுல்ஸ் மிக பழமை வாய்ந்த ஆட்டம் என்பதால், கிரிக்கெட் பவுல்சில் இருந்து பிறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு பந்து அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் மட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதனை தடுத்து இலக்கில் இருந்து தள்ளிப்போகும் அளவுக்கு அந்த பந்தை இந்த ஆட்டத்தில் அடிக்கவேண்டும். ஆடு மேயும் இடங்களிலும், சம வெளிகளிலும் விளையாடப்பட்டு வந்த இந்த ஆட்டம், ஆரம்பத்தில் செம்மறி ஆட்டிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிளி உருண்டைகளை பந்தாகக் கொண்டும், (அல்லது ஒரு கல் அல்லது இரு சிறிய மரத்துண்டு); ஓர் குச்சி அல்லது ஒரு வளைந்த கோலைக் கொண்டோ அல்லது பண்ணையில் இருக்கின்ற ஒரு கருவியை மட்டையாக பயன்படுத்தி விளையாடினர்; மற்றும் முக்காலி, ஒரு மரத்ததண்டு, வாயிற்கதவு (எ.கா., விக்கெட் கேட்) ஆகியவற்றை விக்கேடாக பயன்படுத்தினர்.. "கிரிக்கெட்" என்ற சொல்லுக்கு நிறைய மூலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த ஆட்ட வரலாற்றில் அதாவது 1598 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு,("கீழே பார்க்கவும்" ) "கிரேக்கேட்" என்று அழைக்கப்பட்டது. இடைக்கால டச் மொழியில் "கிரிக்" ("-எ" ), என்ற சொல் குச்சி என்ற பொருள் தரும்; மேலும் தொன்மை ஆங்கிலத்தில் "கிரிக்" அல்லது "க்ரைசி " ஊன்று கட்டை அல்லது கம்பு என்ற பொருளைத்தருகின்றது.. "கிரிக்ஸ்டேல்" என்ற இடைக்கால டச் சொல், நீண்ட குறைந்த உயர முக்காலிகளைக் குறிக்கிறது. இவை தேவாலயங்களில் முட்டிப்போட்டு வேண்ட உதவியாக இருந்தன. இந்த முக்காலியைப் போலவே இரண்டு தண்டுகள், விக்கெட் வீழ்த்த ஆரம்ப கிரிக்கெட்டில் உபயோகப்படுத்தப் பட்டது. போன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஹெயனர் கில்மெய்ச்டார் என்ற மொழியியலாளர்,"கிரிக்கெட்" இடைகால டச் மொழி "மெட் தே (க்ரிக் கேட்)சென்" (அதாவது, "குச்சி துறத்தலை கொண்டு "), என்ற சொல்லை கொண்டு உருவானது என்று குறிப்பிடுகிறார். இது ஆட்டத்தில் உள்ள டச் தொடர்பை குறிக்கிறது. இன்னொரு வழியில் பார்க்கப்போனால் கவுண்டி ஆப் பிளான்டர்ஸ், டச்சி ஆப் பர்கண்டி உடன் வணிக தொடர்பு கொண்டிருந்த போது இடைக்கால டச் சொற்கள் தென் கிழக்கு இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.. இதற்கு முன்னர் ஏகப்பட்ட குறிப்புகள் இருந்தாலும், 1598 ஆம் ஆண்டு ஒரு பள்ளியில் இருந்த ஒரு நிலத்தின் மேல் இருந்த உரிமை பிரச்ச்சனையாயால் எழுந்த சட்ட வழக்கு மூலம் இந்த ஆட்டத்தை பற்றிய குறிப்பு அதிகாரப்பூர்வமாக முதல் முதலில் பதிவாகி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பகுதியில் அவரும் அவரது நண்பர்களும், அவர் பள்ளியில் க்ரேக்கட் விளையாடியதாக ஒரு 59 வயதான ஜான் டெறிக் சாட்சியம் அளித்தார், இவர் இறப்புகளை பரிசோதனை செய்யும் ஒரு ஆய்வாளர். இந்த பள்ளி ராயல் கிராம்மர் ஸ்கூல், கில்ட்போர்ட் ஆகும், மேலும் திரு. டெறிக்கின் சாட்சியம் இந்த விளையாட்டு சர்றேவில் 1550 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருங்கின்றது என்று ஐயம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.. முதன் முதலில் பெரியவர்கள் விளையாடியதாக இருந்த குறிப்பு 1611 ஆம் ஆண்டைக் காட்டியது. சச்செக்சில் இரண்டு பேர், தேவாலயத்துக்கு செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக பதிவாகி இருந்தது.. அதே ஆண்டில், கிரிக்கெட் பற்றி இருந்த அகராதி குறிப்பு அதனை சிறுவர்களின் விளையாட்டு என்று குறிப்பிடுகின்றது. இதனால் கிரிக்கெட் பெரியவர்களால் ஒரு சிறு காலத்திற்கு முன்னர் தான் விளையாட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.. கிரிக்கெட் பெரியவர்களால் விளையாடப்பட்டது என்பதை குறிக்க ஆங்கிலேய உள்நாட்டுப் போர் வரை நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆட்டம் சமய தலைவர்கள் வட்டாரத்தில் விளையாடப்பட்டது என்பதை சொல்கின்ற குறிப்புகள் இந்த ஆட்டம் மாவட்ட ரீதியாக விளையாடப்பட்டது என்பதை குறிக்க மறுக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஆட்டத்தை மையமாகக் கொண்டு ஆடிய தீவிர சூதாட்டங்களைப் பற்றியும் எந்த வித குறிப்பும் இல்லை. இதனால் பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கிராமங்களில் மட்டுமே கிரிக்கெட்ஆடப்பட்டது என்றும் மாவட்டங்களில் கிரிக்கெட் ஆடப்படவில்லை என்றும் கருத்தில் கொள்ளப்படுகிறது. 1648 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிந்தவுடன் புதிய புனிதர்களின் அரசாங்கம் சட்ட ஒழுங்கில்லாத கூட்டுகளை ஒடுக்கியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது கால்பந்து போன்ற விளையாட்டுகளை அடியுடன் ஒடுக்கியது. இதற்கு முன்னர் இருந்ததை விட ஓய்வு நாளை ஒழுங்கான முறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டுவந்தது. கீழ் தள மக்களுக்கு ஓய்வு நாள் மட்டும் தான் எஞ்சிய நாளாக இருந்தது. ஆதலால் இந்த பொதுநல நாடுகளில் (காமன் வெல்த்) கிரிக்கெட்டின் ஆதிக்கம் சரிந்து இருந்தது. இப்படி இருக்கையில், கட்டணம் செலுத்தி பொதுப் பள்ளிகளுக்கு சென்றவர்கள் கிரிக்கெட்டை தடை இன்றி வின்செஸ்டர், புனித பால் போன்ற பள்ளிகளில் விளையாடினர். ஒலிவர் க்ரோம்வேல்லின் அரசாங்கம் கிரிக்கெட்டை தடை செய்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அரசாட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாட்சி புரிந்தவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஓய்வுநாளுக்கு இழுக்கு என்று கூறி தடை விதிக்கவில்லை.. 1660 ஆம் ஆண்டு, ரெஸ்டோரேஷனுக்கு பிறகு(பழைய நிலைக்கு கொண்டுவந்த பிறகு) கிரிக்கெட் விளையாட்டு தன் பால் நிறைய சூதாடிகளின் கவனத்தை திருப்பியது. இவர்கள் பெரிய பந்தயங்களைக்கொண்டு ஆடத் துவங்கினர். 1664 ஆம் ஆண்டு "கவேலியே" நாடாளுமன்றம் கேமிங் ஆக்ட் 1664 நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்த சட்டம் பந்தய பணத்தின் அளவை £100 ஆக குறைத்தது. பெரும் புதையலாக அந்த காலத்தில் கருதப்பட்ட இந்த தொகை தற்போது £ க்கு சமம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டாக திகழத் துவங்கியது. 1967 ஆம் ஆண்டு சச்செக்சில் நடந்த ஒரு பெரிய போட்டியை பற்றி செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை, பதினோரு பேர் கொண்டு ஆடப்பட்ட ஆட்டம் ஒரு பக்கத்திற்கு 50 கினியச்களை கொண்டு ஆடப்பட்டது என்று தெரிவிக்கிறது.. 1696 ஆம் ஆண்டு ஊடகச் சுதந்திரம் வழங்கிய பிறகு கிரிக்கெட் பற்றி முதல் முதலாக இப்படிப்பட்ட அறிக்கை செய்தித்தாள்களில் வெளிவந்தது. ஆனால் நெடுங்காலத்துக்கு பிறகுதான் கிரிக்கெட் பற்றி தெளிவான மற்றும் அடிக்கடி தெரிவிக்க கூடிய அறிக்கைகளை அச்சகங்களால் பெற முடிந்தது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் செய்தி தாளில் வெளிவந்த செய்திகள் ஆட்டத்தை பற்றி குறிக்காமல் பேட்டிங்கை பற்றி மட்டும் குறிப்பிட்டு வெளிவந்தன.. சூதாட்டம் தான் முதன் முதலில் ஆதரவாளர்களை இந்த விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. சூதாடுபவர்கள் தங்கள் பந்தய பணம் பத்திரமாக இருப்பதற்காக தங்கள் சொந்த குழுவை ஏற்பாடு செய்து கொண்டனர். இந்த குழுக்கள் " கவுண்டி குழுக்கள்: என்று அழைக்கப்பட்டன. இவை 1660 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டன. கவுண்டி பெயர்களை பயன்படுத்தி நடந்த முதல் விளையாட்டு 1709 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கு முன்னரே இப்படி பட்ட ஆட்டங்கள் நடந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. 1697 ஆம் ஆண்டு நடந்த போட்டி சச்செக்சுக்கும் வேறொரு மாவட்டத்துக்கும் நடுவே நடந்திருக்கலாம்[1]. 1725 ஆம் ஆண்டு முதல், இந்த ஆட்டத்திற்கு உயர்குடியினரும், வணிகர்களும் தான் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்தக் காரணத்தினால் கூட செய்திப்பிரிவினர் இந்த ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர் என்று கூட சொல்லலாம். சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் இரண்டாம் கோமான், சார் வில்லியம் கேஜ், ஏழாவது பரோநெட், ஆலன் பரோட்ரிக், எட்வர்ட் ஸ்டேட் போன்ற பெரும் புள்ளிகள் இந்த ஆட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில் தான், தாமஸ் வேமார்க் போன்ற தனிப்பட்ட ஆட்டக்காரரை பற்றி செய்தி வெளியீடுகள் செய்திகளை பரப்பின.[5]. வட அமெரிக்காவுக்கு, பதினேழாம் நூற்றாண்டில் கிரிக்கெட், ஆங்கிலேயர்கள் மூலம் பரவியது, இது வட இங்கிலாந்துக்கு பரவுவதற்கு முன்னரே பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் உலகின் மற்ற இடங்களுக்கு இது பரவியது. மேற்கிந்திய தீவுகளுக்கு குடியேற்ற நாட்டினராலும், இந்தியாவுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தாலும் நூற்றாண்டின் முதல் பகுதியில் இது கொண்டுவரப்பட்டது.. 1788 ஆம் ஆண்டில் குடியேற்றங்கள் ஆரம்பித்த உடனேயே இது ஆஸ்திரேலியாவில் பரவ துவங்கிவிட்டது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இந்த ஆட்டம் நியூசிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் பரவியது. மட்டை, பந்து, விக்கெட், ஆட்ட காலத்தின் அளவுகோல்கள், ஓவர்கள், எப்படி ஆட்டம் இழப்பது போன்ற அடிப்படை சட்டங்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன. 1728 ஆம் ஆண்டில், ரிச்மண்டின் கோமான் மற்றும் ஆலன் பரோட்ரிக் "ஆர்டிகல்ஸ் ஆப் அக்ரீமென்ட்" என்ற நடத்தை திட்டத்தை செயலாக்கப்படுத்தினர். இது பந்தயபணம் கொண்டு ஆடி ஹெயிப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது.. முதன் முதலில் 1744 ஆம் ஆண்டில் கிரிக்கெட் சட்டங்கள் உருவாக்கப்பட்டு பின்னர்,1774 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டன. இந்த சமயத்தில் lbw, நடு ஸ்டம்ப், மட்டையின் அகலம் குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் "கூடியிருக்கும் உயர் மனிதர்களுள் இருவரை நடுவர்களாக சீமான்கள் தேர்ந்தெடுத்த பின்னர், அந்த இரண்டு பேரும் எழகின்ற எல்லா தரப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும், என்று கூறின." . இந்த கோட்பாடுகள் "ஸ்டார் அண்ட் கார்டர் க்ளப்" குழுவின் உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. இவர்கள் தான் லார்ட்சில் MCC யையும் 1787 ஆம் ஆண்டு நிறுவினர். MCC உடனடியாக சட்டத்தின் பாதுகாவலனாக தந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்று வரை காலத்துக்கு ஏற்றவாறு பரிசீலனை செய்து புது சட்டங்களை ஏற்றி வருகின்றது. இங்கிலாந்து முழுவதும் பரவிய கிரிக்கெட் முதன் முதலில் 1751 ஆம் ஆண்டு யோர்க்ஷயரில் விளையாடப்பட்டது. 1760 ஆம் ஆண்டுக்கு பின்னர் தரையில் உருட்டி விட்ட பந்து வீச்சு முறை (பவுல்சில் உள்ளவாறு) பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. பந்து எறியும் முறை, லைனில் எப்படி வேறுபாடுகள் காட்ட முடியும், நீளம், வேகம் ஆகிய அனைத்திலும் மாற்றம் வந்தன. 1772 ஆம் ஆண்டு முதல் மதிப்பெண் அட்டவணை வழக்கில் வந்தது. அது முதல் விளையாட்டு வளர்ச்சியைப்பற்றி நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் மிக பிரபலமான சங்கங்கள் லண்டன் மற்றும் டார்ட்போர்டில்இருந்தன. இன்றும் நிலைத்து இருக்கின்ற ஆர்டிலேறி மைதானத்தில் நாட்டில்ன்டேல்ல் லண்டன் தனது ஆட்டங்களை ஆடியது. சச்செக்சில் இருந்த ச்ளிண்டன் ரிச்மண்டின் கோமானால் ஆதரிக்கப்பட்டிருந்த பொழுது அங்கு இருந்த நட்சத்திர வீரர் ரிச்சர்ட் நியூலாந்து ஆவார். மைடேன்ஹெட், ஹோர்ன்சர்ச், மெய்ட்ஸ்டோன், செவென்ஓக்ஸ் , ப்றோம்லே, ஆடிங்டன், ஹாட்லோ மற்றும் சேர்ட்செய் போன்ற பல புகழ் பெற்ற சங்கங்களும் இருந்தன. ஆனால் ஹாம்ப்ஷயரில் இருந்த ஹாம்பெல்டன் சங்கம் தான் மிக பழமைவாய்ந்த சம்கமாக இருந்தது. இது 1756 ஆம் ஆண்டு மத குழுவினரால் துவங்கப்பட்டது. 1760 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சங்கம் தான் பெற்ற ஆதரவால் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு கிரிகெட் ஆட்டத்திற்கு நன்மை தந்ததுடன் MCC உருவாகவும் லோர்ட்ஸ் கிரிக்கெட் கிரௌண்ட் 1787 ஆம் ஆண்டில் திறக்கவும் காரணமாக இருந்தது. மாஸ்டர் பேட்ஸ்மேன் ஜான் ஸ்மால், வேக பந்து வீச்சாளர் தாமஸ் ப்றேட் போன்ற அற்புத ஆட்டக்காரர்களை ஹாம்பெல்டன் உருவாக்கியது. இவர்களின் கை தேர்ந்த போட்டியாளராக விளங்கியவர் சேர்ட்செய் மற்றும் சர்றேவின் பந்து வீச்சாளர், எட்வர்ட் "லம்பி" ச்டேவன்ஸ், இவரால் பரந்க்கும் பந்து வீச்சு முறை பிரபலம் அடைந்தது என்று கூறுகின்றனர். இந்த பந்து வீச்சை அதாவது பளைடெட், பிட்ச்ட், டெலிவெரி முறைகளை சமாளிக்க தான் நேர் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. "ஹாக்கி மட்டையை" போல் வளைந்து இருந்த மட்டை, பந்தை தரையில் உருட்டி விட்ட பொழுது தான் உதவியாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில், பெரிய அளவு போட்டிகள் ஏழு வருட போரின் காரணத்தால் நின்று போன போதுதான் கிரிக்கெட் முதன் முதலில் சர்ச்சையை சந்தித்தது. இது விளையாட்டு வீரர்கள் குறைந்ததாலும் முதலீட்டுதாரர்கள் குறைந்ததாலும் ஏற்பட்டது. ஆயினும் இந்த விளையாட்டு நிலைத்து இருந்தது. இடைப்பட்ட 1760 களில் "ஹாம்பெல்டன் காலம்" முறையே பிறந்தது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரிக்கெட் மேலும் ஒரு சர்ச்சையை சந்திக்க நேரிட்டது. நேபோலியானிக் போர்களால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டன. இந்த முறையும் ஆட்டக்காரர்கள் குறைவாலும் போதிய முதலீடுகள் இல்லாததாலும் ஆட்டம் தடைப்பட்டது. 1760 களில் நடந்ததிப் போலவே இந்த ஆட்டம் நிலைத்திருந்தது. மேலும் படிப்படியாக தனது இடத்தை 1815 ஆம் ஆண்டு முதல் தக்கவைத்துக்கொள்ள துவங்கியது. ரீஜென்சி காலத்தில் சர்ச்சையின் மூலமாக MCC திகழ்ந்தது. இது லோர்ட் பிரெடெரிக் போக்லேர்க் மற்றும் ஜார்ஜ் ஒச்பல்டேஸ்டன் இடையே இருந்த பகைமை காரணத்தால் மூண்டு இருந்தது. 1817 ஆம் ஆண்டில் இவர்களிடையே இருந்த கேள்விகளும் பொறாமைகளும் மேச் பிக்சிங் சர்ச்சையை உருவாக்கியது. இந்த சமையத்தில் மிக நல்ல ஆட்டக்காரரான வில்லியம் லாம்பர்ட் லோர்ட்ஸ் கிரிக்கெட் ஆடுகளத்தில் அவர் ஆயுள் முழுதும் போட்டியில் கலந்துகொள்ள தடை செய்யப்பட்டார். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே சூதாட்ட சர்ச்சைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 1820 களில் ரவுண்ட் ஆர்ம் பவுலிங்கை சேர்க்க கோரி கிரிக்கெட் ஆட்டம் தானே ஒரு சர்ச்சையை உண்டி பண்ணியது. கவுண்டி சங்கங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த ஆட்டம் பல அடிப்படை மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. நவீன மாவட்ட சங்கங்கள்,1839 ஆம் ஆண்டில் சச்செக்சில் ஆரம்பித்து பத்தொன்பதாம் நோற்றாண்டு முழுதும் நிறுவப்பெற்றன. இந்த முதல் மாவட்ட சங்கம் ஆரம்பித்த உடனேயே வில்லியம் கிளார்க் ஆல் இங்கிலாந்து லெவனை 1846 ஆம் ஆண்டு நிறுவினார். இது ஒரு பணம் சம்பாதிக்கும் வழியாக இருந்தாலும், அதுவரை உயர் தர ஆட்டக்காரர்கள் சென்றிராத மாவட்டங்களிலும் கிரிக்கெட் ஆட்டத்தை பிரபலம் அடையச் செய்தது இந்த முயற்சி. இதே போன்று பல அணிகள் உருவாக்கப்பட்டன. இதே முறை முப்பது ஆண்டு காலத்திற்கு நீடித்து இருந்தது. ஆயினும் கவுண்டிகளும் MCC யும் நிலைத்தே இருந்தன. ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியால் மத்திய மற்றும் இறுதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிரிக்கெட் வளர்ச்சிப்பெற்றது. இதனால், நெடுந்தொலைவில் இருந்து இரு அணிகள் வந்து அதிக பயண சோர்வில்லாமல் போட்டியிட முடிந்தது. பார்வையாளர்களும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து ஆட்டத்தை காண ஆரம்பித்தனர். 1864 ஆம் ஆண்டு ஒரு புதிய பந்து வீச்சு புரட்சி ஏற்பட்டது. இதனால் ஓவர் ஆர்ம் பவுலிங் சட்டப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் விஸ்டன் க்ரிக்கேடர்ஸ் அல்மனாக் முதன் முதலில் வெளிவந்தது. "கிரேட் கிரிக்கெட்டர்" என்று அழைக்கப்பட்ட, W G கிரேஸ், முதல் ரக ஆட்ட அறிமுகத்தை 1865 ஆம் ஆண்டு பெற்றார். அவரது அபாரமான ஆட்டம் கிரிக்கெட்டை பெரிதும் வளர்ச்சி பெற செய்தது. அவர் பல நுண்ணியமான நுணுக்கங்களை ஆட்டத்துக்குள் புகுத்தினார். இது முக்கியாமாக பேட்டிங் நுட்பங்களில் புரட்சி ஏற்படுத்தியது. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, அமெரிக்கா மற்றும கனடாவுக்கும் இடையே 1844 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த போட்டி நியூயர்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் கிரிக்கெட் க்ளப்பில் நடந்தது. 1859 ஆம் ஆண்டில் ஆங்கிலேய முன்னணி வீரர்களைக்கொண்ட குழு ஒன்று முதன் முதலில் வட அமேரிக்காவுக்கு கடல் தாண்டி சுற்றுபயணம் சென்றது. 1862 ஆம் வருடம் முதல் ஆங்கில அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டது. 1868 ஆம் ஆண்டில் மே மாதத்தில் துவங்கி அக்டோபர் வரை ஆஸ்திரேலிய அபார்ஜின்அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டது. இதுவே கடல் கடந்து போட்டியில் கலந்து கொண்ட முதல் ஆஸ்திரலிய அணியாகும். 1877 ஆம் ஆண்டு ஆஸ்திரலியா சென்ற இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளை முழு ஆஸ்திரேலியன் XI க்கு எதிராக விளையாடியதி. இதை டெஸ்ட் போட்டியின் ஜனனம் என்று கருதலாம். இதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்தில் முதன் முறை சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெற்றி வாகை சூடி வீடு திரும்பினர். இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படவில்லை என்றாலும், அதற்கு பின்னர் ஏராளமானவை விளையாடப்பட்டன. 1882 ஆம் ஆண்டில், தி ஓவலில், தி ஆஷேஸ் என்ற மிகப் பெரிய வரலாறு காணுகின்ற போட்டி உருவானது. உலகில் மூன்றாவது டெஸ்ட் விளையாடும் நாடாக தென்னாப்பிரிக்கா 1889 ஆம் ஆண்டில் உருவெடுத்தது. 1890 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வமான கவுண்டி சாம்பியன்ஷிப்இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை அடிப்படையாக கொண்டு மற்ற நாடுகள் தங்களை வழிமுறை படுத்திக்கொண்டன. 1892-93 இல் ஆஸ்திரேலியா ஷேப்பீல்த் கேடயத்தைநிறுவியது. தென்னாப்பிரிக்காவில் கூரி கோப்பை, நியூ சிலாந்தில் ப்ளங்கெட் கேடயம், இந்தியாவில் ரஞ்சி கோப்பையும் நிறுவப்பட்டன. 1890 ஆம் ஆண்டு முதல், முதல் உலகப்போர் வரை இருந்த காலம் நினைவில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் கிரிக்கெட்டை ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆடின. மேலும் இது அமைதிக் காலமாக இருந்ததால் இந்த ஆட்டத்தை மேலும் ரசிக்க முடிந்தது. இந்த நிலை முதல் உலகப்போரால் குலைந்தது. இந்த காலம் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. இந்த சமயத்தில் கிரேஸ், வில்ப்ரெட் ரோட்ஸ், C B ப்ரை, K S ரஞ்சித்சின்ஜி, விக்டர் ட்ரம்பர்போன்ற தலையாய வீரர்கள் விளையாடினர். நான்கு பந்துகளை கொண்டிருந்த ஒரு ஓவர் 1889 ஆம் ஆண்டில் ஐந்து பந்தாக மாற்றப்பட்டது. இது ஆறு பந்துகளாக 1900 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகள் ஒரு ஓவருக்கு எட்டு பந்து என்று வைத்து சோதனை செய்து பார்த்தன. 1922 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓவர் ஒன்றுக்கு எட்டு பந்துகள் என்று மாற்றப்பட்டது. 1924 ஆமாண்டு நியூசிலாந்துக்கு பரவிய இந்த திட்டம் 1937 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கும் பரவியது. இங்கிலாந்தில் சோதனைக்காகவே இந்த முறை 1939 ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்த சோதனை முறையை மீண்டும் 1940 ஆம் ஆண்டு நடத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் முதல் ரக கிரிக்கெட் இரண்டாம் உலகப்போரினால்நிறுத்திவைக்கப்பட்டது. அது திரும்பவும் ஆட துவங்கியபோது இங்கிலாந்து ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து என்ற முறையையே கையாண்டது. 1947 கிரிக்கெட் சட்டங்கள் ஆட்டத்துக்கு ஏற்றவாறு ஒரு ஓவர் ஆறு அல்லது எட்டு பந்துகளை கொள்ளலாம் என்று விதித்தன. 1979/80 ஆஸ்திரேலியன் மற்றும் நியூசிலாந்து சீசன்கள் முடிவு பெற்றதும், ஆறு பந்து கொண்ட ஓவர் முறையே உலகெங்கும் பயன் படுத்த துவங்கினர். தற்போது, அதாவது 2000 ஆமாண்டு வெளிவந்த சட்டம் ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து மட்டுமே என்று குறிப்பிடுகின்றது. 1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இம்பீரியல் கிரிக்கெட் மாநாட்டில் (இவ்வாறு தான் முதலில் அழைக்கப்பட்டது ) முதலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் தான் உறுப்பினர்களாக இருந்தன. இரண்டாம் உலக போருக்கு முன்னர் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து டெஸ்ட் போட்டி நாடுகளாக இருந்தன. போருக்கு பின்னர் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டி நாடாக மாறியது. சர்வதேச ஆட்டம் இருபதாம் நூற்றாண்டில் முடிவில் மேலும்பல நாடுகள் சேர்ந்ததன் மூலம் சுவாரஸ்யம் ஆனது. அவற்றுள் முக்கிய மூன்று நாடுகள் இலங்கை, சிம்பாப்வே, மற்றும் வங்காள தேசம் ஆகும். இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டி முதல் ரக ஆட்டமாக திகழ்ந்தது. அனால் இதுவும் பல பிரச்சனைகளை சந்தித்தது. இங்கிலாந்தின்டவுக்லஸ் ஜார்டின் கால் கோட்பாட்டை வைத்து ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் ஆட்டத்தை "பாடிலைன்சீரிஸில்" (1932-33) சரிகாட நினைத்தார். சர்வதேச கிரிக்கெட், தென்னாப்பிரிக்க இனவொதுக்கலால் பெரும் சரிவை கண்டது. 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பிரச்சனையால் தென்னாப்பிரிக்கா பொதுநல நாடுகள் சங்கத்திலிருந்து வெளி வந்தவுடன், அது அந்த கால விதிமுறைப்படி சர்வதேச கிரிக்கெட் மாநாட்டை (ICC)விட்டும் வெளியேற நேர்ந்தது. 1968 ஆம் ஆண்டு கிரிக்கெட் இனவொதுக்கலை மேலும் தீவிரமாக எதிர்க்க துவங்கியது. இங்கிலாந்து அணியில், பேசில் ட'ஒலிவேரா என்ற ஒரு கருப்பு வீரர் இடம் பெற்றதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 1970 ஆம் ஆண்டு ICC உறுப்பினர் தென்னாப்பிரிக்காவை கால வரைமுறை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆனால், அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிக பலமான அணியாக தென்னாப்பிரிக்க அணிதான் இருந்தது. உயர் தர போட்டியில் இருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் அணிகளாக திரண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிக அளவு பணத்தை வாரி இறைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை "கலக காரர்களை சுடுப்பயணம்" என்று அழைத்தனர். இதற்கு ICC , தென்னாப்பிரிக்கா செல்கின்ற எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அவரை அட்டவணையில் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக்குவது என்ற முடிவை தெரிவித்தது. விளையாட்டு வீரர்கள் 1970 களில் மிக குறைவான சம்பளத்தைப் பெற்றதால் அவர்களில் பெரும்பாலோர் இந்த தென்னாப்பிரிக்க சுற்று பயணத்துக்கு ஒற்றுக்கொண்டனர். இவற்றில் ஆட்டத்திலிருந்து கூடிய விரைவில் ஒய்வு பெற இருந்த நிறைய வீரர்கள் கலந்து கொண்டனர். ஆதலால் அவர்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த கலகக்காரர்களின் சுற்றுபயணம் 1980 களிலும் நடைப்பெற்றது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசியல் முன்னேறத் துவங்கியது. கூடவே இனவொதுக்கீடுகளும் முடிவுக்கு வர ஆரம்பித்தது. நெல்சன் மண்டேலாவின் தலைமைக்கு கீழ் "வானவில் நாடாக" திகழும் தென்னாப்பிரிக்கா சர்வதேச விளையாட்டுக்குள் மீண்டும் 1991 ஆம் ஆண்டு நுழைந்தது. உயர் தர வீரர்கள் சந்தித்த பண பிரச்சனையால் 1977 ஆமாண்டு மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய செய்தி வட்டாரத்தின் அதிபதியாக விளங்கிய கெர்ரி பாக்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திலிருந்து தனக்கு தேவையான தொலைகாட்ட்சி உரிமத்தை பெறமுடியாமல் தவித்தார். குறைவான சம்பளம் வாங்கும் வீரர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த பாக்கர் உலகின் உயர் தர வீரர்கள் பலருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதில் சர்வதேச கிரிக்கெட்டின் வழிமுறைக்கு வெளியே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ஆட இந்த வீரர்கள் ஒத்துக்கொண்டு இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த சிறந்த தென்னாப்பிரிக்க வீரர்களுள் சிலரை உலக தொடர் கிரிக்கெட் தேர்வு செய்து மற்ற உயர் தார் ஆட்ட வீரர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் ஆட வைத்தது. இது 1979 ஆம் ஆண்டு வரைதான் நீடித்து இருந்தது. கலகார ஆட்டக்காரர்கள் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பெற்றனர். பலரும் அவர்களின் டேஹ்சிய அணி அவர்களை விட்டு விட்டு முன்னேறி இருப்பதையும் கண்டனர். இந்த உலக தொடர் கிரிக்கெட்டின் விளைவால் விளையாட்டு வீரர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது, வண்ணமயமான கருவித்தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகள் இரவு நேரங்களிலும் ஆடப்பட துவங்கின. 1960 களில் ஆங்கிலேய மாவட்ட அணிகள் ஒரே ஒரு இன்னிங்க்ஸ் கொண்டு விளையாட துவங்கின. இதில் ஒரு இன்னிங்க்ஸிலே அதிக அளவு ஓவர்களை கொண்டு விளையாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 1963 ஆரம்பிக்கப்பட்ட இந்த வகை போட்டிகள் குறைந்த ஓவர்களை கொண்டு இருந்தாலும் 1969 ஆமாண்டு முதல் பிரபலம் அடைய துவங்கியது. தேசிய அளவில் உருவாக்கப்பட்ட லீக் மாவட்ட சாம்பியன்ஷிப்களில் நடந்த போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தது. இந்த முறையான ஆட்டத்துக்கு நிறைய விசிறிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் நிறைய நன்மைகளை கொண்டிருந்தன. இதனால் ஒரே நாளில் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக தரமுடிகிறது. இது இளைஞர்கள் மத்தியிலும் நேரம் அதிகம் இல்லாதவர்கள் இடையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கிரிக்கெட் விளையாட்டில் பணமும் குவிய துவங்கியது. முதல் குறைந்த ஓவர் கொண்ட சர்வதேச போட்டி 1971 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் களத்தில் நடைபெற்றது. இது மழை காரணத்தால் தவற விடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு பதிலாக ஆரம்ப நாட்களில் விளையாடப்பட்டது. இது ஒரு சோதனையாக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் முறையாக நடத்தப்பட்டது. ஆனால் இதுவே மிக பிரபலம் ஆனது. லிமிடட் ஓவர்ஸ் இன்டர்நேஷனல்ஸ் (LOI அல்லது ODI (ஒரு நாள் சர்வதேச போட்டிகள்)) அன்று முதல் இன்று வரை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு ஆதரவாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உலக கோப்பையை 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கேற்றது கொண்டன. கிரிக்கெட் பற்றிய செய்திகளை நிறைய வெளியிட ஆர்வத்தை தொலைக்காட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியது இந்த குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள். புது வகையான தொழில் முறைகளை கொண்டு வெளியிடப்பட்ட LOI போட்டிகளின் வெற்றியைக்கண்டு அதே போல் டெஸ்ட் போட்டிகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தனர். ஆழ்ந்த புள்ளி விவரவியல் தருதல், படம் மூலம் ஆராய்ந்து கூறுதல், ஸ்டம்ப்களில் சிறு கேமராக்கள் புகுத்துதல், ஆடு களத்தின் பல இடங்களில் புகைப்பட சாதனங்களைப் பொருத்துதல், விரைந்து பார்க்கக்கூடிய அளவிலான ஒளிப்பதிவு மற்றும் கணினியை கொண்டு ஒரு பந்தில் டெலிவரியை இன்னும் நுட்பமாக கவனிக்க உதவும் மற்றும் போட்டி நடுவரின் தீர்ப்புகளை புரிந்து கொள்ள உதவும் கிராபிக்ஸ் ஆகியவை தற்கால தொழில் நுட்பங்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில், 1992 ஆம் ஆண்டில் முதன் முதலில் ரன் அவுட்களை தொலைக்காட்சி சாதனம் மூலம் சரி பார்க்க மூன்றாவது நடுவர்நியமிக்கப்பட்டார். இப்போது இந்த மூன்றாவது நடுவரின் திறன் ஸ்டம்ப்பிங், பந்தை பிடித்தல், எல்லையைத் தாண்டும் பந்தை கவனித்தல் ஆகிய இடங்களிலும் உதவியாக இருக்கிறது. இதுவரை மூன்றாம் நடுவர் lbw முறை ஆட்டம் இழப்பதை நிர்ணயம் செய்ய கூப்பிட படுவதில்லை. இப்பொழுது நேரடி அலைவரிசை மூலம் இதனை கண்காணிக்கும் வசதிகளும் வந்து விட்டன.(அதாவது, ஹாக்-ஐ) ஒரு பந்து போகும் திசையை துல்லியமாக கணிக்க இது பெரிதும் உதவுகிறது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஆகட்டும், அல்லது அதனை பார்வையிடுபவர்கள் ஆகட்டும் அல்லது அதனை படம் பிடித்து உலகிற்கு காட்டும் செய்தியாளர்கள் ஆகட்டும் கிரிக்கெட் என்றுமே இதனை அதிக அளவில் தான் பார்த்து வருகிறது. ICC கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக முழு மூச்சாக இறங்கி உலகமெங்கும் மேலும் பல டெஸ்ட் போட்டி நாடுகள் உருவாக பல முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்த வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது ICC. 2004 ஆம் ஆண்டில் ICC சர்வதேச கோப்பை முதல் ரக கிரிக்கெட்டை முதன் முதலில் 12 நாடுகளுக்கு கொண்டுவந்தது. ஜூன் 2001 இல் ICC "டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையை" அறிமுகப்படுத்தியது. மேலும் அக்டோபர் 2002 இல் இது "ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஷிப் அட்டவணையையும் " அறிமுகப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த இரு அட்டவணைகளில் முதல் இடத்தை வகித்து வருவது ஆஸ்திரேலியாதான். கிரிக்கெட் தற்போது கண்டிருக்கும் புதுமை Twenty20(ட்வென்டி ட்வென்டி)ஆகும், இது பெரும்பாலும் மாலைநேர பொழுதுபோக்காக ஆடப்படுகிறது. இந்த ஆட்ட முறை பெரும் அளவில் பார்வையாளர்களை ஆட்டகளத்திற்கும் தொலைக் காட்சியின் பக்கத்தில் இழுத்து வந்திருக்கிறது. ஆரம்ப ICC ட்வென்டி 20 உலக கோப்பைபோட்டி, 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதனை பின் தொடர்ந்து மற்றொரு போட்டி 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் ட்வென்டி20 லீக்கள் - அதிகாரபூர்வம் இல்லாத இந்தியன் கிரிக்கெட் லீக், 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அதிகாரபூர்வமான இந்தியன் பிரீமியர் லீக், 2008 இல் துவங்கப்பட்டது. இவற்றின் வருகை கிரிக்கெட்டின் வருங்காலத்தை பற்றி அலச பெரிதும் வழிவகுத்தன. பரதவர் பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.இவர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். பரதவர், பரவர், அல்லது பரதர் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். இலங்கையில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் இந்து பரதவர்களும் உள்ளார்கள். ஆட்டக் கோட்பாடு ஆட்டக் கோட்பாடு ("Game theory") என்பது பயன்படு கணிதத்தின் ஒரு கிளைத் துறையாகும். அது சமூக அறிவியலிலும் மிகவும் அதிகமாக பொருளியலிலும் அதே போல உயிரியல், பொறியியல், அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகள், கணிப்பொறி அறிவியல் மற்றும் தத்துவம் ஆகிய பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபரின் தெரிவின் வெற்றியானது மற்றவர்களின் தெரிவுகளைச் சார்ந்ததாக இருக்கும் "செயல் உத்தியியல் சூழ்நிலைகளில்" காணப்படும் செயல் பண்புகளை கணிதவியல் ரீதியாக அறிந்து முன்வைக்க விளையாட்டுக் கொள்கை முயற்சிக்கிறது. ஒருவரின் ஆதாயம் எதிரியின் இழப்பைப் பொறுத்து அமைகின்ற வகையிலான (ஜீரோ சம் கேம்கள்) போட்டிகளைப் பகுப்பாய்வு செய்யவே இது முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது பல திட்ட அளவைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படும் பல பரந்துவிரிந்த இடைசெயலம்சங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கப்பட்டது. தற்போது இத்துறை "சமூக அறிவியலின் பகுத்தறிதல் ரீதியான பகுதிக்கான ஒரு வகை குடை போன்றதும் 'ஒருங்கிணைக்கப்பட்ட துறையும்' ஆகும். இங்கு 'சமூகம்' என்பது பரந்துபட்ட பொருளில் பொருள்கொள்ளப்படுகிறது. அது மனித விளையாட்டுப் போட்டியாளர்களையும் அதே போல் மனிதர்-அல்லாத விளையாட்டுப் போட்டியாளர்களையும் (கணினிகள், விலங்குகள், தாவரங்கள்) சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது". விளையாட்டுக் கொள்கையின் பாரம்பரியமான பயன்பாடுகள் இவ்வகை விளையாட்டுகளில் சமநிலையைக் கண்டறிய முயற்சிக்கின்றன. அவ்வாறான ஒரு சமநிலையில் விளையாட்டில் பங்கு பெற்ற ஒவ்வொரு போட்டியாளரும் பின்னர் மாற்றிக்கொள்ளாத வகையிலான ஒரு குறிப்பிட்ட உத்தியைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்தக் கருத்தைப் பயன்படுத்துவதைச் செயல்படுத்தும் முயற்சியில் பல்வேறு சமநிலைக் கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன (அவற்றுள் நாஷ் சமநிலை மிகவும் பிரபலமானதாகும்). இந்தச் சமநிலைக் கருத்துகள், பயன்படுத்தப்படும் துறைக்கேற்ப வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்படுகின்றன. எனினும் அவ்வப்போது அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துவதும் ஒரு சேர நிகழ்வதும் பொதுவாக உள்ளது. இந்த முறை விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை. குறிப்பிட்ட சமநிலைக் கருத்துகளின் சரியாக இருக்கும் தன்மை, அனைத்து சமநிலைகளும் ஒருங்கிணைந்த நிலையில் அதன் சரியாக இருக்கும் தன்மை மற்றும் பொதுவாக கணிதவியல் மாதிரிகளின் பயன்படுதன்மை ஆகியவை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. முன்னரே சில மேம்பாடுகள் நிகழ்ந்திருந்தாலும் விளையாட்டுக் கொள்கை எனும் துறை 1944 ஆம் ஆண்டில் ஜான் வான் நியூமன் மற்றும் ஆஸ்கர் மார்கென்ஸ்டெர்ன் ஆகியோரின் "தியரி ஆஃப் கேம்ஸ் அண்ட் எக்கனாமிக் பிஹேவியர்" எனும் புத்தகம் வெளிவந்தபோதே இத்துறை குறிப்பிடும்படி உருவானது. இந்தக் கொள்கையை 1950களில் பல கல்வியாளர்கள் பரந்துபட்ட நோக்கில் மேம்படுத்தினர். பின்னர் விளையாட்டுக் கொள்கையானது 1970களில் பிரத்தியேகமாக உயிரியலில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் 1930களிலேயே சில முன்னேற்றம் இருந்ததாக அறியப்படுகிறது. விளையாட்டுக் கொள்கையானது பல துறைகளில் முக்கியமான ஒரு கருவியாகக் கருதப்பட்டுவந்தது. விளையாட்டுக் கொள்கையாளர்கள் எட்டு பேர் பொருளியலில் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். மேலும் ஜான் மேய்னர் ஸ்மித் உயிரியலில் விளையாட்டுக் கொள்கையைப் பயன்படுத்தியதற்காக க்ரஃபூர்ட் பரிசைப் பெற்றார். விளையாட்டுக் கொள்கையில் ஆய்வு செய்யப்படும் விளையாட்டுகள் என்பவை நன்கு வரையறுக்கப்பட்ட கணிதவியல் பொருள்கூறுகள் ஆகும். ஒரு விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டியாளர்களின் தொகுப்பும், அந்தப் போட்டியாளர்களுக்கு நிகழ்த்த வாய்ப்புள்ள நகர்வுகளின் தொகுப்பும் (அல்லது உத்திகள்) மற்றும் குறிப்பிட்ட தொடர்சேர்க்கையிலான நகர்வுகளுக்கான அவற்றுக்கே உரிய விளைவுகள் பற்றிய குறிப்பு விவரங்களும் இருக்கும். மிகவும் இணைசெயலம்சம் கொண்ட விளையாட்டுகளை விளக்க சிறப்பியல்புச் சார்பு வடிவமும் இணைசெயலம்சம் இல்லாத விளையாட்டுகளை வரையறுக்க விரிவான மற்றும் இயல்பான வடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டுகளை சில முக்கிய வரிசைகளின் படி சூத்திரப்படுத்த விரிவான வடிவம் பயன்படுத்தப்படலாம். இவ்வகையில் விளையாட்டுகள் கிளையமைப்பாக (இடப்புறத்தில் உள்ளதைப் போல) விளக்கப்படுகின்றன. விளையாட்டுகளை சில முக்கிய வரிசைகளின் படி சூத்திரப்படுத்த விரிவான வடிவம் பயன்படுத்தப்படலாம். உச்சியால் பட்டியலிடப்பட்ட ஓர் எண்ணால் போட்டியாளர் குறிப்பிடப்படுகிறார். உச்சியிலிருந்து செல்லும் கோடுகள் அந்தப் போட்டியாளருக்கான சாத்தியமுள்ள செயல்களைக் குறிக்கின்றன. விளைவுகள் கிளையமைப்பின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சித்தரிக்கப்பட்டுள்ள விளையாட்டில் இரண்டு போட்டியாளர்கள் உள்ளனர். "போட்டியாளர் 1" முதலில் செயல்பட்டு "F" அல்லது "U" ஐத் தேர்வு செய்கிறார். "போட்டியாளர் 2" , "போட்டியாளர் 1 இன் செயலைக் கண்டு " A" அல்லது " R" ஐத் தேர்வு செய்கிறார். ஒருவேளை " போட்டியாளர் 1", " U" ஐத் தேர்வு செய்து, " போட்டியாளர் 2", " A" ஐத் தேர்வு செய்தால், " போட்டியாளர் 1" 8 மற்றும் " போட்டியாளர் 2" 2 என்ற புள்ளிகளைப் பெறுகின்றனர்." விரிவான வடிவங்களால் ஒருநேர நகர்வுகள் உள்ள விளையாட்டுகள் மற்றும் முழுமையற்ற தகவலைக் கொண்ட விளையாட்டுகள் ஆகியவற்றையும் விளக்க முடியும். இதை விளக்க ஒரு புள்ளியிட்ட கோடு இரு வேறு முனைகளை, அவை ஒரே தகவல் தொகுப்பினைச் சேர்ந்தவை (அதாவது, போட்டியாளர்கள் தாங்கள் எந்தப் புள்ளியில் உள்ளனர் என்பதை அறியமாட்டார்கள்) எனக் குறிப்பிடும் வகையில் இணைக்கிறது அல்லது அவர்களைச் சுற்றி ஒரு மூடிய கோடு வரையப்படுகிறது. இயல்பான (அல்லது செயலுத்தியியல் வடிவம்) விளையாட்டு வழக்கமாக ஒரு அணியின் மூலம் விளக்கப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் உத்திகள் மற்றும் விளைவுகள் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன (வலப்புறம் உள்ள எடுத்துக்காட்டைக் காண்க). மிகவும் பொதுவாக அதை ஒவ்வொரு போட்டியாளருக்கும் சாத்தியமுள்ள செயல் தொடர்களுடன் கூடிய ஒரு விளைவைக் கொண்டுள்ள ஒரு சார்பின் மூலம் விளக்கலாம். இந்த எடுத்துக்காட்டில் இரு போட்டியாளர்கள் உள்ளனர். ஒருவர் வரிசையையும் மற்றொருவர் செங்குத்து வரிசையையும் தேர்வு செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரு உத்திகள் உள்ளன. அவை வரிசை மற்றும் செங்குத்து வரிசையால் குறிக்கப்படுகின்றன. இதில் விளைவுகள் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள முதல் எண் வரிசை போட்டியாளர் (நமது எடுத்துக்காட்டில் போட்டியாளர் 1) பெற்ற விளைவாகும். இரண்டாவதுள்ளது செங்குத்து வரிசை போட்டியாளர் (நமது எடுத்துக்காட்டில் போட்டியாளர் 2) பெற்ற விளைவாகும். ஒருவேளை போட்டியாளர் 1 "மேலேயும்" போட்டியாளர் 2 "கீழேயும்" நகர்ந்து விளையாடினால். போட்டியாளர் 1 க்கு விளைவுப் புள்ளிகள் 4 மற்றும் போட்டியாளர் 2 க்கு 3 எனவும் கிடைக்கிறது. ஒரு விளையாட்டு இயல்பான வடிவத்தில் விளக்கப்படும் போது, ஒவ்வொரு போட்டியாளரும் ஒரே நேரத்தில் அல்லது குறைந்தபட்சம் ஒருவர் செயலை மற்றொருவர் அறியாவண்ணமாக செயல்படுகின்றனர் எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. போட்டியாளர்களுக்கு பிற போட்டியாளர்களின் தெரிவைப் பற்றி சில தகவல் தெரியுமானால், அந்த விளையாட்டு விரிவான வடிவில் விளக்கப்படுகிறது. மாற்றத்தக்க பயன்பாட்டைக் கொண்டுள்ள இணைசெயல் தன்மை கொண்ட விளையாட்டுகளுக்கு தனிப்பட்ட நபருக்கான விளைவுப் புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சிறப்பியல்புச் சார்பானது ஒவ்வொரு சேர்க்கைக்கும் விளைவுப் புள்ளியைத் தீர்மானிக்கிறது. ஒரு வெற்று சேர்க்கைக்கான விளைவுப்புள்ளி 0 என்பது தரநிலையான கருதுகோளாகும். இந்த வடிவத்தின் தோற்றமானது இந்த முன்னேற்றத்துக்கான வேராக அமைந்த வான் நியூமன் மற்றும் மார்கென்ஸ்டெர்ன் ஆகியோரின் புத்தகத்தில் காணப்படுகிறது. அவர்கள் சேர்க்கைத் தன்மை கொண்ட இயல்பு வடிவ விளையாட்டுகளை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு சேர்க்கையானதுformula_1 உருவாகும் போது அது அதற்கு நிரப்பியான சேர்க்கைக்கு எதிராக விளையாடுகிறது என்ற ஊகத்தினடிப்படையில் செயல்பட்டனர்(formula_2) அதாவது இதில் அவை இரண்டும் 2-போட்டியாளர்கள் விளையாடும் ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போல செயல்படுகின்றன. formula_1 இன் சமநிலை விளைவுப்புள்ளி "சிறப்பியல்பு கொண்டதாகும்". இப்போது இயல்பு வடிவ விளையாட்டுகளில் இருந்து சேர்க்கை மதிப்புகளை வருவிக்க பல்வேறு மாதிரிகள் உள்ளன. ஆனால் சிறப்பியல்புச் சார்பு வடிவத்திலுள்ள அனைத்து விளையாட்டுகளையுமே இவ்வாறு இயல்பு வடிவ விளையாட்டுகளில் இருந்து வருவிக்க முடியாது. முறையாக, ஒரு சிறப்பியல்புச் சார்பு விளையாட்டானது (TU-விளையாட்டு எனவும் அழைக்கப்படுகிறது) ஒரு இணையாகவே கொடுக்கப்படுகிறதுformula_4. இதில் formula_5 என்பது போட்டியாளர்களையும் formula_6 என்பது சிறப்பியல்புச் சார்பையும் குறிக்கிறது. சிறப்பியல்புச் சார்பு வடிவமானது மாற்றத்தக்க பயன்பாடு எனும் கருதுகோள் இல்லாத விளையாட்டுகளுக்கென பொதுவாக்கப்பட்டுள்ளது. சிறப்பியல்பு சார்பு வடிவமானது சாத்தியமுள்ள சேர்க்கை உருவாக்கத்திற்கான புறத்தன்மையை புறக்கணிக்கிறது. பங்கீட்டுச் சார்பு வடிவத்தில் ஒரு சேர்க்கைக்கான விளைவுப்புள்ளியானது அதன் உறுப்பினர்களை மட்டுமே சார்ந்ததல்ல. அது அவருடன் சேர்ந்து பங்கேற்கும் மீதமுள்ள போட்டியாளர்கள் செயல்படும் விதத்தையும் சார்ந்தது. விளையாட்டுக் கொள்கையானது மனிதர்களிலும் விலங்குகளிலும் பரந்துபட்ட நடத்தைகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான தொகுப்புகளின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்காக இது முதலில் பொருளியலில் உருவாக்கப்பட்டது. சமூக அறிவியல்களில் விளையாட்டுக் கொள்கையின் பயன்பாடானது மிகவும் விரிவடைந்துள்ளது. மேலும் விளையாட்டுக் கொள்கை அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் உளவியல் நடத்தைகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுக் கோட்பாட்டுப் பகுப்பாய்வு என்பது முதலில் 1930களில் ரொனால்டு ஃபிஷெர் என்பவரால் முதலில் விலங்குகளின் நடத்தைகளை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது (இருப்பினும் சார்லஸ் டார்வினும் சில முறைசாரா விளையாட்டுக் கோட்பாட்டு அறிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளார்). இந்தப் பணியானது "விளையாட்டுக் கொள்கை" என்ற பெயர் வருவதற்கு முன்னான காலத்திலேயே நடந்துள்ளது. ஆனால் அதற்கு இந்தத் துறையின் முக்கிய அம்சங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. பொருளியலிலான மேம்பாடுகள் பின்னாளில் ஜான் மேய்னர் ஸ்மித் அவர்களால் "எவல்யூஷன் அண்ட் த தியரி ஆஃப் " எனும் அவரது புத்தகத்தில் பெரிய அளவில் உயிரியலில் பயன்படுத்தப்பட்டது. நடத்தையை முன்கணித்தல் மற்றும் விளக்குதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதுடன் விளையாட்டுக் கொள்கையானது நன்னெறி அல்லது சரியான நடத்தை தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் முயற்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், பொருளியல் மற்றும் தத்துவத்தில், சிறந்த அல்லது சரியான நடத்தையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்க விளையாட்டுக் கொள்கையை பயன்படுத்தியுள்ளனர். இவ்வகையான விளையாட்டுக் கொள்கை ரீதியலமைந்த விவாதங்கள் பிளேட்டோ அவர்களின் காலத்திலேயே காணப்பட்டன. அரசியல் அறிவியலில் விளையாட்டுக் கொள்கையின் பயன்பாடானது வளப்பிரிப்பு, அரசியல் பொருளாதாரம், பொதுத் தெரிவு, போர் பேரம், நேர்மறை அரசியல் கோட்பாடு மற்றும் சமூகத் தெரிவுக் கோட்பாடு போன்றவற்றின் அரசியலுடன் ஒத்துப்போகும் பகுதிகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு துறைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் விளையாட்டுக் கொள்கை மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். அவற்றில் இதில் பெரும்பாலும் வாக்காளர்கள், மாநிலங்கள், சிறப்பார்வக் குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். அரசியல் அறிவியலில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக் கொள்கைக்கு பழைய எடுத்துக்காட்டுகளுக்கு ஆண்டனீ டௌன்ஸ் அவர்களின் பணிகளைக் காண்க. அன் எக்கனாமிக் தியரி ஆஃப் டெமாக்ரசி எனும் அவரது புத்தகத்தில், அரசியல் செயலாக்கத்திற்கு அவர் ஹோட்டெலிங் நிறுவன இருப்பிட மாதிரியைப் பயன்படுத்துகிறார். டௌன்சியன் மாதிரியில், அரசியல் வேட்பாளர்கள் ஒற்றைப் பரிமாணக் கொள்கை அமைப்பிலான சித்தாந்தங்களுக்கு உறுதியளிக்கின்றனர். இதில் அரசியல் வேட்பாளர்கள் ஒரு சராசரி வாக்காளர் விரும்பும் சித்தாந்தத்தை எவ்வாறு பின்பற்றுகின்றனர் என இந்தக் கொள்கையாளர் விளக்குகிறார். மிகவும் சமீபத்திய எடுத்துக்காட்டுகளுக்கு, ஸ்டீவன் ப்ராம்ஸ், ஜியார்ஜ் செப்லிஸ், ஜீன் எம். க்ராஸ்மேன் மற்றும் எல்ஹனான் ஹெல்ப்மேன் அல்லது டேவிட் ஆஸ்டன்-ஸ்மித் மற்றும் ஜெஃப்ரி எஸ். பேங்க்ஸ் ஆகியோரின் புத்தகங்களைக் காண்க. ஜனநாயகத்தில் நிகழ்த்தப்படும் பொது மற்றும் திறந்த நிலை விவாதங்கள் அவர்களின் நோக்கங்களைப் பற்றிய தெளிவான மற்றும் நம்பகமான தகவல்களைப் பிற மாநிலங்களுக்கு வழங்கும் என்பதே உள்நாட்டு அமைதிக்கான விளையாட்டுக் கொள்கை ரீதியான விளக்கம் ஆகும். இதற்கு மாறாக ஜனநாயக ரீதியிலல்லாத தலைவர்களின் நோக்கங்கள், விளைவுக்கான சலுகைகள் என்னவாக இருக்கும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பது போன்றவற்றை அறிவது கடினம். இதனால் கட்சியிலுள்ள ஒருவருக்கு ஜனநாயகமற்ற கொள்கையில் கருத்து வேறுபாடு இருப்பினும், நம்பிக்கையின்மையும், சலுகைகள் அளிப்பதற்கு விருப்பமின்மையும் நிலவக் கூடும் . பொருளியலாளர்கள் பல்வேறு பரந்துபட்ட பொருளாதார நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்ய நீண்டகாலமாகப் பயன்பாட்டிலுள்ள விளையாட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றனர், ஏலங்கள், பேரம், இருமுனைச் சந்தை, வளப் பிரிப்பு, குறை விற்பனையாளர் சந்தை, சமூக நெட்வொர்க் உருவாக்கம் மற்றும் வாக்களிப்பு முறைமைகள் போன்றவை இதிலடங்கும். பொதுவாக இந்த ஆராய்ச்சியானது விளையாட்டுகளில் சமநிலைகள் எனப்படும் செயலுத்திகளின் குறிப்பிட்ட சில தொகுப்புகளையே மையமாகக் கொண்டுள்ளன. இந்தத் "தீர்வுக் கருத்துகள்" பொதுவாக பகுத்தறிவுக்கு ஏற்றபடி எது தேவையானது என்பதனடிப்படையில் அமைந்துள்ளன. இணைசெயல் தன்மையற்ற விளையாட்டுகளில், இவற்றில் மிகப் பிரபலமானது நாஷ் சமநிலை ஆகும். பல உத்திகளின் தொகுப்பில் ஒவ்வொரு உத்தியும் மற்ற உத்திகளுக்கு மறுவினை புரிகின்றன எனில் அவை நாஷ் சமநிலையில் உள்ளதாகக் கருதப்படும். ஆகவே நாஷ் சமநிலையிலான உத்திகளின் படியே அனைத்து போட்டியாளர்களும் விளையாடினால், திசைதிருப்புவதற்கான ஒரு பக்க அழுத்தமானது எவருக்கும் இருக்காது, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும் நிலையில் அவர்களால் கையாளக்கூடிய சிறப்பான உத்தி அதுவே ஆகும் என்பதே இதற்குக் காரணமாகும். விளையாட்டின் விளைவுப்புள்ளியானது ஒவ்வொரு தனி போட்டியாளரின் பயன்பாட்டையும் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மாதிரியாக்கல் சூழ்நிலைகளில் விளைவுப்புள்ளியானது பணத்தைக் குறிக்கிறது. இங்கு அதை தனிநபரின் பயன்பாட்டைச் சார்ந்தது என்று கருதலாம். இருப்பினும் இந்தக் கருதுகோள் தவறாகவும் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பொருளாதாரச் சூழ்நிலையினை அடிப்படைச் சாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டை உணர்த்துவதன் மூலமே பொருளாதாரத்திற்கான விளையாட்டுக் கொள்கையைப் பயன்படுத்துவதற்கான முன்மாதிரி தொடங்குகிறது. இதில் ஒன்று அல்லது மேற்பட்ட தீர்வுக் கருத்துகள் தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் விளக்கப்பட்ட விளையாட்டில் எந்தெந்த செயலுத்தி தொகுப்புகள் சரியான வகையைச் சேர்ந்த சமநிலைகளாகும் என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார். இயல்பாக இந்தத் தகவல் என்ன பயனைக் கொடுக்க வேண்டும் என்று ஒருவர் வியக்கலாம். பொருளியலாளர்களும் வணிகப் பேராசிரியர்களும் இரண்டு முதன்மையான இரண்டு பயன்களைப் பரிந்துரைக்கின்றனர்: "விளக்கத் தன்மை கொண்டவை" மற்றும் "பரிந்துரைப்பு விதிகள் ரீதியானவை" ஆகியனவாகும். உண்மையான மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று நமக்குத் தெரிவிப்பதே அனைவருமறிந்த முதல் பயனாகும். சில கல்வியாளர்கள் விளையாட்டுகளின் சமநிலையைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவர்களால் ஆய்வு செய்யப்படும் அந்த விளையாட்டில் வருவதைப் போன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் போது உண்மையான சராசரி மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை கணிக்க முடியும் என்று நம்புகின்றனர். விளையாட்டுக் கொள்கையின் இந்தக் குறிப்பிட்ட கோணக் கருத்து சமீபத்தில் விமர்சனத்திற்குட்பட்டுள்ளது. கோட்பாட்டாளர்கள் கருத்தில் கொண்ட கருதுகோள்கள் பெரும்பாலும் மீறப்படுவதால் அவை முதலில் தவறாக விமர்சிக்கப்பட்டன. விளையாட்டுக் கோட்பாட்டாளர்கள் போட்டியாளர்கள் தங்கள் வெற்றியினை அதிகப்படுத்தும் விதத்திலேயே செயல்படுவார்கள் என்று கருதலாம் (ஹோமோ எகனாமிக்கஸ் மாதிரி). ஆனால் நடைமுறையில் மனித செயல்பாடுகள் பெரும்பாலும் இந்த மாதிரியினை விட்டு விலகலாம். இந்த நிகழ்விற்கான விளக்கங்கள் பல உள்ளன. பகுத்தறிவின்மை, கவனமாகக் கருத்தில் கொள்ளுதலுக்கான புதிய மாதிரிகள் அல்லது (பொதுநலத்தின் அம்சத்தைப் போன்ற) இன்னும் வேறுபட்ட நோக்கங்கள். விளையாட்டுக் கோட்பாட்டாளர்கள் இயற்பியலில் பயன்படுத்தப்படும் கருதுகோள்களுடன் தங்கள் கருதுகோள்களை ஒப்பிட்டு அதற்கேற்றவாறு மறுசெயல்புரிகின்றனர். இவ்வாறு அவர்களது அனுமானம் எப்போதும் பொருந்துவதாக இருப்பதில்லை. அவர்கள் விளையாட்டுக் கொள்கையை இயற்பியல் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் மாதிரிகளின் இலட்சிய நெருங்கிய அம்சப் பண்பொத்தவையாகக் கருதலாம். இருப்பினும் தனிப்பட்ட நபர்கள் சமநிலை செயலுத்திகளின் படி செயல்படுவதில்லை என்பதை சில சோதனைகள் விளக்கிக் காட்டியுள்ளதால் விளையாட்டுக் கொள்கையின் இவ்வகையான பயன்பாடானது கூடுதல் விமர்சனத்திற்குள்ளானது. எடுத்துக்காட்டு நிகழ்வாக, பூரான் விளையாட்டு, கெஸ் 2/3 ஆஃப் த எவ்ரேஜ் விளையாட்டு மற்றும் இயக்குநர் கேம் ஆகிய விளையாட்டுகளில் நபர்கள் வழக்கமாக நாஷ் சமநிலையில் செயல்படுவதில்லை. இந்த சோதனைகளின் முக்கியத்துவம் குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. மாற்றாக சில ஆசிரியர்கள் நாஷ் சமநிலையானது மனிதக் குழுக்களுக்கான கணிப்புகளை வழங்குவதில்லை என வாதிடுகின்றனர். அதற்கு மாறாக நாஷ் சமநிலையில் இருக்கும் குழுக்கள் ஏன் அந்நிலையில் உள்ளன என்பதற்கான விளக்கத்தை வழங்குகின்றனர். இருப்பினும் குழுக்கள் இந்தப் புள்ளியை எவ்வாறு அடைகின்றன என்பது இன்றும் பதிலளிக்கப்படாத கேள்வியாகவே உள்ளது. இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சில விளையாட்டுக் கோட்பாட்டாளர்கள் பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கையின் பக்கம் திரும்பியுள்ளனர். இந்த மாதிரிகள் போட்டியாளர்களின் கோணத்திலிருந்து பகுத்தறிவு அல்லது கட்டுப்படுத்தப்பட்ட மெய்த்தன்மை ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு அமையவில்லை. அதன் பெயர் பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கை என இருந்தாலும் அது இயற்கைத் தேர்வு எனும் கருத்தை உயிரியல் ரீதியாக கருத்தில் கொண்டிருக்கவில்லை. பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கையானது உயிரியல் மற்றும் கலாச்சார பரிணாமத்தின் மாதிரிகளையும் சேர்த்துள்ள ஒரு அம்சமாக உள்ளது. மேலும் தனிநபர் கற்றல் தொடர்பான மாதிரிகளையும் கொண்டுள்ளது (எடுத்துக்காட்டாக கற்பனை விளையாட்டு இயக்கவியல்). மற்றொரு புறம் விளையாட்டுக் கொள்கையானது மனிதர்களின் நடத்தைக்கான கணிப்புக் கருவியாகக் கருதவில்லை. ஆனால் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது பற்றிய பரிந்துரையைக் கொடுக்கும் ஒன்றாகவே கருதுகின்றனர். ஒரு விளையாட்டின் நாஷ் சமநிலையானது மற்ற போட்டியாளர்களின் செயல்களுக்கான சிறந்த பதில்வினையைக் கொண்டுள்ளது என்பதால் நாஷ் சமநிலையின் ஒரு பகுதியாக உள்ள உத்தியின் படி செயல்படுவது சரியானதாக உள்ளது. இருப்பினும் விளையாட்டுக் கொள்கைக்கான இந்தப் பயன்பாடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. முதலில் மற்றொருவர் சமநிலையில் இல்லாத வகையில் செயல்பட வேண்டும் என ஒருவர் எதிர்பார்த்தால் அவர் சமநிலையில் இல்லாத வகையில் செயல்படுவது என்பது சரியானதாக இல்லாமல் போகலாம். எடுத்துக்காட்டுக்கு கெஸ் 2/3 ஆஃப் த எவ்ரேஜ் என்பதைக் காண்க. இரண்டாவதாக ப்ரிசனர்ஸ் டைலெம்மா விளையாட்டு மற்றொரு எதிர்விதமான எடுத்துக்காட்டை வழங்குகிறது. ப்ரிசனர்ஸ் டைலெம்மா விளையாட்டில் ஒவ்வொரு போட்டியாளாரும் அவரது சுய ஆர்வத்தின் படி செயல்படும் போது அவ்வாறு சுய ஆர்வத்தின் படி செயல்படாமல் இருந்திருந்தால் அடையடக்கூடிய விளைவுகளை விட மோசமான விளைவுகளையே அடைகின்றனர். பொருளாதாரத்தைப் போலன்றி உயிரியலில் உள்ள விளையாட்டுகளின் விளைவுப்புள்ளிகள் அவற்றின் பொருத்தத் தன்மைக்கு உரியதாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. கூடுதலாக மெய்த்தன்மையின் நம்பிக்கைக்கு உரியதாக உள்ள சமநிலைகள் சிறிதளவே கவனத்தில் கொள்ளப்பட்டு வந்தன. அதற்கு மாறாக பரிணாமவியல் விசைகளால் கட்டுப்படுத்தப்படும் சமநிலைகளே அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட்டன. உயிரியலில் காணப்படும் பிரபலமான சமநிலை "பரிணாமவியல் நிலைத்தன்மை உத்தி" (அல்லது ESS) எனப்படுகிறது. அது ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் முதலில் அதன் நோக்கம் நாஷ் சமநிலையின் உளவியல் ரீதியான அவசியங்கள் எதையும் கருத்தில் கொள்வதாக இல்லை. ESS ஒவ்வொன்றும் ஒரு நாஷ் சமநிலையாகும். உயிரியலில் விளையாட்டுக் கொள்கையானது பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது முதலில் தோராயமான 1:1 பாலின விகிதங்களின் பரிணாமத்தை (மற்றும் நிலைத்தன்மையை) விளக்கப் பயன்படுத்தப்பட்டது. தங்கள் பேரக்குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பவர்களாகக் கருதப்படக்கூடிய நபர்களின் மீது செயல்படும் பரிணாமவியல் விசைகளின் ஒரு விளைவே இந்த 1:1 பாலின விகிதமாகும் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக உயிரியலாளர்கள் விலக்குகளின் தகவல்தொடர்பின் படிப்படியான வளர்ச்சியை விளக்க பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கை மற்றும் ESS ஆகியவற்றைப் பயன்படுத்தினர். சமிக்ஞை செய்யும் விளையாட்டுகள் மற்றும் பிற தகவல்தொடர்பு உள்ள விளையாட்டுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், விலங்குகளிடையே தகவல்தொடர்பு எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பது பற்றிய கருத்து கிடைத்துள்ளது. எடுத்துக்காட்டுக்கு, இரையின விலங்குகள் பல ஒன்றாகச் சேர்ந்து வேட்டையாடும் விலங்கைத் தாக்கும் நிகழ்வான பல விலங்கினங்களில் காணப்படும் இந்தத் தாக்கும் குணமானது, ஒருங்கிணைவில் தன்னிச்சையாக ஏற்படும் எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. நாடுகளுக்கிடையேயான பிரதேசச் சண்டை தொடர்பான குணத்தைப் பகுப்பாய்வு செய்ய கோழிச் சண்டை விளையாட்டுகளை உயிரியலாளர்கள் பயன்படுத்தினர். மேய்னர் ஸ்மித், தனது "எவல்யூஷன் அண்ட் த தியரி ஆஃப் கேம்ஸ்" என்னும் புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு எழுதுகிறார்: "[p]தோராயமாக, விளையாட்டுக் கொள்கையானது அதன் உருவாக்க நோக்கமாக இருந்த பொருளாதாரத்தின் குணாம்சங்களைக் காட்டிலும் உயிரியல் துறைக்கு எளிதாகப் பொருந்தும் வகையில் மாற்றம் பெற்றுவிட்டது". பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கை இயற்கையில் உள்ள மிகவும் சீரற்ற தன்மையுடன் காணப்படும் நிகழ்வுகளை விளக்கப் பயன்படுத்தப்பட்டுவந்தது. உயிரியல் சார்ந்த பொதுநலத் தன்மை என்பது அது போன்ற ஒரு நிகழ்வாகும். இதுவே தனக்கு தீங்கை விளைவிக்கக்கூடிய ஒரு உயிரிக்கே மற்றொரு உயிரி நன்மை செய்யும் வகையில் செயல்படும் விதமான ஒரு சூழ்நிலையாகும். இது பொதுநலத் தன்மை தொடர்பாக நிலவிவந்த வழக்கமான நம்பிக்கைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். ஏனெனில் இது போன்ற செயல்கள் விழிப்புநிலையில் செய்யப்படுவதில்லை. ஆனால் ஒட்டுமொத்த சரியான தன்மையையும் இந்தப் பரிணாமவியல் தகவமைப்புகள் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை இரவு வேட்டையில் தமக்குக் கிடைத்த இரத்தத்தை உணவு கிடைக்காத தங்கள் இனத்தாருக்கு வாயிலிருந்து எதிர்க்களிப்பின் மூலம் ஊட்டும் குணமுள்ள நோய்பரப்பும் வௌவால்கள் முதல் தங்கள் வாழ்நாள் முழுதும் ராணி தேனீக்காகவே உழைத்து வாழ்வில் ஒரு முறையும் கலவியில் ஈடுபடாத பணியாள் தேனீக்கள் வரை, தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிலும் தனது கூட்டாளிகளுக்கு வேட்டையாடும் ஒரு மிருகம் வருவதை அறிவித்து எச்சரிக்கும் வெர்வெட் குரங்கு வரையிலுள்ள பல இனங்களில் காணலாம். இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒரு இனத்தின் தக்கதாக இருக்கும் தன்மையை அதிகரிக்கின்றன. ஆனால் அது ஒரு தனி விலங்கு ஆபத்துக்குட்பட்டே நடக்கின்றன. பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கை இரத்த சம்பந்தம் தொடர்பான தேர்ந்தெடுத்தல் என்னும் கருத்தைக் கொண்டு இந்தப் பொதுநலத் தன்மையை விளக்குகிறது. இவ்வாறு பொதுநலத் தன்மை கொண்ட விலங்குகள் அவை உதவும் பிற விலங்குகளிலிருந்து வேறுபட்டு நடத்தப்படும். அவை தமது சொந்தங்களால் கனிவாக நடத்தப்படும். ஹாமில்டன் விதி c இதே போல் இந்தக் கெழுவானது செயல்படும் களத்தின் எல்லையையே பெரிதும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டுக்கு யாருக்காக நன்மை புரிய வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதென்பது, உறவான உயிரிகள் மட்டுமன்றி அனைத்து உயிர்வாழிகளையும் உள்ளடக்கியுள்ளது. விளையாட்டுக் களத்திலுள்ள வேற்றுமைப் பண்பிற்கு அனைத்து மனிதர்களிடையேயும் உள்ள இந்த வேறுபாடானது தோராயமாக 1% மட்டுமே காரணமாக அமைவதாகக் கருதுகிறோம், சிறிய புலத்தில் அமைகின்ற இதற்கான கெழு ½ ஆனது 0.995 என ஆகிறது. அதே போல் மரபியல் சார்ந்த இயல்பைத் தவிர்த்து பிற தகவல்கள் (எ.கா. அதிசனனவியல், மதம், அறிவியல் இன்னும் பல) விளையாட்டுப் புலமானது பெரியதாகும் மற்றும் முரண்பாடுகள் குறையும் நேரத்தில் இருந்தபடியே நிலைத்திருக்கின்றன எனக் கருதப்படுகிறது. விளையாட்டுக் கொள்கை இப்போது தர்க்கம் மற்றும் கணினி அறிவியல் துறைகளில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. பல தர்க்கக் கோட்பாடுகள் அவற்றின் அடிப்படையாக விளையாட்டுப் பொருள்கோள் கருத்துகளைக் கொண்டுள்ளன. மேலும் கணினி அறிவியலாளர்கள் இடைத்தொடர்பு கொள்ளத்தக்க கணினி செயல்பாடுகளை மாதிரியாக்கம் செய்ய விளையாட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் விளையாட்டுக் கொள்கையானது பல-கருவி முறைமைகளுக்கான கோட்பாட்டு அடிப்படையையும் வழங்குகிறது. இது மட்டுமின்றி ஆன்லைன் வழிமுறைகளிலும் விளையாட்டுக் கொள்கையானது மிகவும் முக்கியமான பங்கை வகித்து வந்தது. குறிப்பாக, k-சர்வர் சிக்கலானது முற்காலத்தில் "நகரும் செலவுகளைக் கொண்ட விளையாட்டுகள்" மற்றும் "கோரிக்கை-பதில் விளையாட்டுகள்" எனக் குறிக்கப்பட்டது . சீரற்றதாக்கப்பட்ட வழிமுறைகளின் குறிப்பாக ஆன்லைன் வழிமுறைகளின் கணிப்பியல் சிக்கல் தன்மையிலுள்ள எல்லைகளை நிரூபிப்பதற்கான விளையாட்டுக் கொள்கை ரீதியான உத்தியாவோ தத்துவம் ஆகும். வழிமுறையியல் விளையாட்டுக் கொள்கைத் துறையானது சிக்கலான தன்மை மற்றும் வழிமுறை வடிவமைப்பு ஆகியவற்றுக்கான கணிணி அறிவியல் ரீதியான கருத்துக்களை விளையாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கோட்பாடு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது. இணையத்தின் வளர்ச்சியால் விளையாட்டுகள், சந்தைகள், கணிப்பியல் ரீதியான ஏலங்கள், இரு முனையிடை (பியர்-டு-பியர்) முறைமைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் தகவல் சந்தை ஆகியவற்றிலுள்ள சமநிலையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் உருவாவது ஊக்குவிக்கப்பட்டது. விளையாட்டுக் கொள்கையானது தத்துவத்திலும் பல வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. , இன் இரண்டு வெளியீடுகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் [28] மரபின் தத்துவ ரீதியான அம்சத்தை உருவாக்க விளையாட்டுக் கொள்கையைப் பயன்படுத்தினார். அவ்வாறு செய்கையில் அவர் பொதுவான அறிவுத்திறனில் முதல் பகுப்பாய்வை நிகழ்த்தி அதனை விளையாட்டு மற்றும் ஒருங்கியக்க விளையாட்டுகளைப் பகுப்பாய்வு செய்வதில் பயன்படுத்தினார். மேலும் அவர் முதலில் சிக்னலிங் விளையாட்டுகளின் அம்சங்களைக் கொண்டு இதன் பொருளைப் புரிந்துகொள்ளலாம் எனப் பரிந்துரைத்தார். பிற்காலத்திய இந்தப் பரிந்துரையானது லூயிஸ் (, ) போன்ற தத்துவ அறிஞர்களால் பின்பற்றப்பட்டது. விளையாட்டுக் கோட்பாட்டு ரீதியான அம்சத்திற்கான இன் பங்களிப்பைத் தொடர்ந்து உல்மேன் மார்கலிட் (1977) மற்றும் பிச்சியெரி (2006) ஆகியோர் சமூக சராசரி அம்சங்களுக்கான கோட்பாடுகளை உருவாக்கினர். அவை தம்மை பல வகையான நோக்கம் கொண்ட விளையாட்டிலிருந்து ஒருங்கியக்க விளையாட்டாக மாறுவதன் விளைவாக விளையும் நாஷ் சமநிலையில் இருப்பதாக வரையறுக்கின்றன. விளையாட்டுக் கொள்கையானது தத்துவவாதிகளை இடைத்தொடர்புத் தன்மை சார் அறிவுத் தத்துவவியலைச் சார்ந்து சிந்திக்கும் வகையில் மாற்றியது: அதாவது ஒரு குழுவில் உள்ள மக்கள் பொதுவான நம்பிக்கைகள் அல்லது அறிவைக் கொண்டிருந்தால் என்ன பொருள் மற்றும் ஏஜெண்ட்டுகளின் இடைசெயல்களினால் விளையும் சமூக அளவிலான விளைவுகளுக்கு இந்த அறிவால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றவாறு சிந்திக்கும்படி மாற்றியது. இத்துறையில் பணிபுரிந்த தத்துவவாதிகளில் பிச்சியெரி (1989, 1993), ஸ்கிர்ம்ஸ் (1990), மற்றும் ஸ்டால்னேக்கர் (1999) ஆகியோரும் அடங்குவர். நன்னெறி தர்மத்தில், தாமஸ் ஹாப்ஸ் தொடங்கிய பணித்திட்டத்தைப் பின்பற்ற முயற்சித்துள்ளனர். அது சுய-ஆர்வத்திலிருந்து நன்னெறிகளை வருவிப்பது பற்றியதாகும். ப்ரிசனர்ஸ் டைலெம்மா போன்ற விளையாட்டுகள் நன்னெறி மற்றும் சுய-ஆர்வத்திற்கிடையே தோற்ற அளவிலான முரண்பாட்டைக் கொண்டுள்ளதால், சுய-ஆர்வத்திற்குத் தேவைப்படும் ஒருங்கியக்கமானது இந்தப் பணித்திட்டத்திற்கு ஒரு முக்கியக் கூறாக உள்ளது என்பதை விளக்கவும் முயற்சித்துள்ளனர். இந்தப் பொது உத்தியானது அரசியல் தத்துவத்தில் பொது சமூக ஒப்பந்தக் கருத்துக்கோணமாகும் (எடுத்துக்காட்டுகளுக்கு மற்றும் ஆகியவற்றைக் காண்க. பிற ஆசிரியர்கள் நன்னெறி மற்றும் அது சார்ந்த விலங்குகள் நடத்தை ஆகியவை பற்றி வளர்ந்துவரும் மனித மனப்போக்குகளை விளக்க பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கையைப் பயன்படுத்த முயற்சித்துள்ளனர். நன்னெறி தொடர்பான வளர்ந்துவரும் மனப்போக்குகளுக்கான விளக்கம் வழங்கும் நோக்கத்தில், இந்த ஆசிரியர்கள் ப்ரிசனர்ஸ் டைலெம்மா, ஸ்டாக் ஹண்ட் மற்றும் நாஷ் பார்கெயினிங் விளையாட்டு ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர் (காண்க, எ.கா., மற்றும் ). விளையாட்டுக் கொள்கையின் சில பகுதிகளில் கருத்தில் கொள்ளப்படும் சில கருதுகோள்கள் தத்துவத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு சவால் விடப்பட்டுள்ளன. உளவியல் சார்ந்த தன்முனைப்பியலானது சுய-ஆர்வமாகக் குறைக்கப்பட்ட பகுத்தறிவு என்பது தத்துவவாதிகளுக்கிடையே உள்ள விவாதத்திற்குரிய கருத்தாகவே உள்ளது. ("உளவியல் சார்ந்த தன்முனைப்பியல்#விமர்சனம் என்பதைக் காண்க" ) ஒரு விளையாட்டில் போட்டியாளர்கள் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள ஒப்புதல்களை ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் அது "ஒருங்கியக்க" விளையாட்டாகும். எடுத்துக்காட்டாக சட்ட முறைமைகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியைப் பின்பற்றியே நடந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றன. ஆனால் ஒருங்கியக்கத் தன்மை இல்லாத விளையாட்டுகளில் இது சாத்தியமல்ல. பெரும்பாலும் ஒருங்கியக்கமுள்ள விளையாட்டுகளில் போட்டியாளர்கள் "தகவல்தொடர்புகொள்வது" அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒருங்கியக்கத் தன்மை இல்லாத விளையாட்டுகளில் அது அனுமதிக்கப்படுவதில்லை. இருகூறு தேர்வளவையினடிப்படையிலான இந்த வகைப்பாடு நிராகரிக்கப்பட்டது . இந்த இரு வகை விளையாட்டுகளில் ஒருங்கியக்கத் தன்மையற்ற விளையாட்டுகளால் சூழ்நிலைகளை மிகத் தெளிவான அளவில் மாதிரியாக்கம் செய்ய முடியும். இதனால் அவை துல்லியமான முடிவுகளையும் கொடுக்கின்றன. ஒருங்கியக்கத் தன்மை கொண்ட விளையாட்டுகள் பெரிய அளவில் விளையாட்டையே மையமாகக் கொண்டது. இந்த இரண்டு அணுகுமுறைகளையும் இணைக்க குறிப்பிடத்தக்க அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாஷ் திட்டம் எனப்படும் ஒன்று ஒருங்கியக்கத் தன்மை கொண்ட தீர்வுகளில் பலவற்றை ஒருங்கியக்கத் தன்மையற்ற சமநிலைகளாக நிறுவியுள்ளது. "கலப்பின" விளையாட்டுகளில் ஒருங்கியக்கத் தன்மை கொண்ட மற்றும் ஒருங்கியக்கத் தன்மை அல்லாத இருவிதமான கூறுகளும் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, போட்டியாளர்களின் சேர்ப்பு ஒருங்கியக்க விளையாட்டில் உருவாக்கப்படுகிறது, ஆனால் போட்டியாளர்கள் விளையாடும் போது ஒருங்கியக்கமற்ற விதத்திலேயே விளையாடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட உத்தியைக் கையாள்வதற்கான விளைவுப்புள்ளிகள் விளையாடுபவரைச் சாராமல் பயன்படுத்தப்படும் பிற உத்திகளைச் சார்ந்தே இருக்கும்பட்சத்தில் அது சமச்சீரான விளையாட்டு எனப்படும். உத்திகளுக்கான விளைவுப்புள்ளிகளை மாற்றாமல் போட்டியாளர்களின் அடையாளங்களை மாற்ற முடியுமெனில் அது சமச்சீரான விளையாட்டு எனப்படும். பொதுவாக ஆய்வு செய்யப்படும் 2×2 விளையாட்டுகளில் பெரும்பாலானவை சமச்சீரானவையாகும். சிக்கன், ப்ரிசனர்ஸ் டைலெம்மா மற்றும் ஸ்டாக் ஹண்ட் ஆகியவற்றின் தரநிலையான விளக்கங்களுமே சமச்சீர் விளையாட்டுகளாகும். சில குறிப்பிட்ட சமச்சீர் தன்மையற்ற விளையாட்டுகளையும் இவ்வகை விளையாட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக சில கல்வியாளர்கள் கருதுகின்றனர். இந்த விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் மிகவும் பெரும்பாலான விளைவுப்புள்ளிகள் சமச்சீர் தன்மை கொண்டவையாகவே உள்ளன. விளையாடும் இரண்டு போட்டியாளர்களுக்குமே ஒத்த உத்தித் தொகுப்புகள் இல்லாத வகையிலான விளையாட்டுகளே பொதுவாக ஆய்வு செய்யப்படும் சமச்சீர் தன்மையற்ற விளையாட்டுகளாகும். எடுத்துக்காட்டுக்கு அல்டிமேட்டம் விளையாட்டும் அதே போல் டிக்டேட்டர் விளையாட்டும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வெவ்வேறு உத்திகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒத்த தன்மையுள்ள உத்திகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரு விளையாட்டு சமச்சீரற்ற தன்மை கொண்ட ஒன்றாக இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது. எடுத்துக்காட்டுக்கு வலப்பக்கம் காண்பிக்கப்பட்டிருக்கும் விளையாட்டு சமச்சீரற்ற தன்மை கொண்டது. இருப்பினும் இரு போட்டியாளருக்கும் ஒத்த தன்மையுள்ள உத்தித் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. பூச்சியக் கூடுதல் விளையாட்டுகள் என்பவை மாறாத கூடுதல் விளையாட்டுகளில் ஒரு வகைச் சிறப்புடையவையாகும். அவற்றில் போட்டியாளர்களின் விருப்பத் தேர்வானது கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது. பூச்சியக் கூடுதல் விளையாட்டுகளில் அனைத்து போட்டியாளர்களுக்குமான இலாபமானது ஒவ்வொரு உத்தி சேர்க்கைகளுக்கும் பூச்சியத்துடன் சேர்க்கப்படுகிறது (முறைசார விதத்தில் கூறுவதானால் ஒரு போட்டியாளர் மற்றவர் எவ்வளவு செலவடைகின்றாரோ அவ்வளவே மற்றவர் பெறுகிறார்). போக்கர் ஒரு பூச்சியக் கூடுதல் விளையாட்டை (ஹௌஸ்களின் வெட்டுப்படுதலுக்கான சாத்தியக்கூறுகளைப் புறக்கணித்தபட்சத்தில்) விளக்குகிறது. ஏனெனில் இதில் ஒருவர் பெறுவது மிகச் சரியாக, மற்றொருவர் இழந்ததற்குச் சமமாகவே உள்ளது. மேட்ச்சிங் பென்னிஸ் மற்றும் கோ மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பழம் போர்டு விளையாட்டுகள் ஆகியவையும் பிற பூச்சியக் கூடுதல் விளையாட்டுகளில் அடங்கும். விளையாட்டுக் கொள்கையாளர்கள் ஆய்வு செய்த விளையாட்டுகளில் பெரும்பாலானவை (பிரபலமான ப்ரிசனர்ஸ் டைலெம்மா உட்பட) பூச்சியக் கூடுதலற்ற விளையாட்டுகளாகும். ஏனெனில் சில விளைவு முடிவுகள் பூச்சியத்தை விடக் குறைவான அல்லது அதிகமானவையாக உள்ளன. எளிமையாகக் கூறுவதானால் பூச்சியக் கூடுதலற்ற விளையாட்டுகளில் ஒரு போட்டியாளர் பெறும் ஆதாயம் மற்றொரு போட்டியாளருடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக் கூடுதல் விளையாட்டுகள் என்பவை திருட்டு, சூது போன்றவை தொடர்பானவை, ஆனால் வர்த்தகத்திலிருந்து இலாப சாத்தியங்களுள்ள அடிப்படைப் பொருளாதார சூழ்நிலைகளுடன் தொடர்புடையவை அல்ல. எந்த ஒரு விளையாட்டையும், (பெரும்பாலும் "போர்டு" எனப்படும்) ஒரு போலி போட்டியாளரைச் சேர்ப்பதன் மூலம் (சமச்சீரற்ற தன்மை கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ள) பூச்சியக் கூடுதல் விளையாட்டாக மாற்றுவது சாத்தியமே, அந்த போலி போட்டியாளாரின் இழப்புகள் போட்டியாளர்களின் நிகர வெற்றிகளை ஈடுசெய்வதாக இருக்கும். ஒருநேர நிகழ் விளையாட்டுகளில், போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் செயல்படுவர் அல்லது அவர்கள் ஒரே நேரத்தில் செயல்படாவிட்டால், பின்னதாகச் செயல்படும் போட்டியாளருக்கு முதலில் செயல்படும் போட்டியாளர்களைப் பற்றித் தெரியாது (இதனால் இது "மொத்தத்தில்" இவர்களை ஒரு நேர செயல்படுபவர்களாகக் கருதச் செய்கிறது). தொடர் நிகழ் விளையாட்டுகளில் (அல்லது செயல் விளையாட்டுகள்) பின்னதாகச் செயல்படும் போட்டியாளருக்கு முதலில் செயல்படும் போட்டியாளர்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். இது முன்னதாக விளையாடிய போட்டியாளர்களைப் பற்றிய சரியான தகவலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது மிகக் குறைந்த அளவு அறிவாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு முன்னதாக விளையாடிய போட்டியாளர் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யவில்லை என்பதை ஒரு போட்டியாளர் அறியலாம், வாய்ப்புள்ள மற்ற செயல்களில் அந்த போட்டியாளர் எதைச் செயல்படுத்தினார் என்பது தெரிந்திருக்காது. மேலே விவாதிக்கப்பட்ட வேறுபட்ட விளக்கப்படுத்தலே ஒரு நேர நிகழ் விளையாட்டுகளுக்கும் தொடர் நிகழ் விளையாட்டுகளுக்கும் உள்ள வேறுபாடாகும். பெரும்பாலும் ஒரு நேர நிகழ் விளையாட்டுகளை விளக்க இயல்பான வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன. தொடர் நிகழ் விளையாட்டுகளை விளக்க விரிவான வடிவம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக இது கண்டிப்பான விதியல்ல. தொடர் நிகழ் விளையாட்டுகளின் ஒரு முக்கிய துணைத் தொகுப்பானது சரியான தகவல்களைக் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டுள்ளது. ஒரு விளையாட்டில் அனைத்து போட்டியாளர்களும் பிற அனைத்து போட்டியாளர்களின் முந்தைய செயல்பாடுகளை அறிந்திருந்தால் அது சரியான தகவலைக் கொண்ட விளையாட்டாகும். இதனால் தொடர் நிகழ் விளையாட்டுகள் மட்டுமே சரியான தகவலைக் கொண்ட விளையாட்டுகளாக இருக்க முடியும். ஏனெனில் ஒரு நேர நிகழ் விளையாட்டுகளில் அனைத்து போட்டியாளர்களும் பிற அனைத்து போட்டியாளர்களின் செயல்பாடுகளை சரியாக அறிந்திருப்பதில்லை. விளையாட்டுக் கொள்கையில் ஆய்வு செய்யப்படும் விளையாட்டுகளில் பெரும்பாலானவை சரியான தகவலற்ற விளையாட்டுகளே ஆகும். இருப்பினும் அல்டிமேட்டம் விளையாட்டுகள் மற்றும் செண்டிப்பேட் விளையாட்டு ஆகியவை உள்ளிட்ட சரியான தகவலைக் கொண்ட விளையாட்டுகளுக்கான ஆர்வத்தைத் தூண்டும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன. சதுரங்கம், கோ, மன்கலா மற்றும் அரிமா ஆகியவையும் சரியான தகவலைக் கொண்ட விளையாட்டுகளில் அடங்கும். சரியான தகவலானது பெரும்பாலும் முழுமையான தகவலுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் அவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற கருத்துகளாக உள்ளன. முழுமையான தகவல் தெரிந்திருப்பது என்றால், அனைத்து போட்டியாளரும் மற்ற போட்டியாளர்களின் உத்திகள் மற்றும் விளைவுப்புள்ளிகள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டும். இதில் அவர்களின் செயல்களை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருளியலாளர்கள் மற்றும் யதார்த்த உலக விளையாட்டுப் போட்டியாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட விளையாட்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயல்பாடுகளோடு முடியக்கூடியவை. சுத்த கணிதவியலாளர்கள் அவ்வளவாகக் கட்டுப்படவில்லை. மேலும் கணவியல் கோட்பாட்டாளர்கள் குறிப்பாக அனைத்து செயல்பாடுகளும் முடிவடைந்த "பின்னரும் கூட" வெற்றி பெற்றவர் யாரென்பது (அல்லது பிற விளைவுப்புள்ளி) தெரியாமலே இருக்கக்கூடிய மற்றும் பல முடிவிலா எண்ணிக்கையிலான செயல்பாடுகளைக் கொண்டுள்ள விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அது போன்ற ஒரு விளையாட்டை சிறப்பாக எவ்விதத்தில் விளையாட வேண்டும் என்பது இதில் மையமாக இருப்பதில்லை. ஆனால் வெற்றிக்கான உத்தியைக் கொண்டுள்ள போட்டியாளர் ஒருவரா அல்லது மற்றொருவரா என்பதே மையமாக உள்ளது. (தேர்வு செய்தலின் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையைப் பயன்படுத்தி, சரியான தகவலைக் கொண்டும், அதே நேரத்தில் அதன் ஒரே விளைவு "வெற்றி" அல்லது "தோல்வி" என இரண்டில் ஒன்றாக மட்டுமே இருக்கக்கூடிய மேலும் இவற்றில் "இரண்டுக்கும்" போட்டியாளர் வெற்றி உத்திகளைக் கொண்டிருக்காத வகையிலான விளையாட்டுகளும் உள்ளன என்பதை நிரூபிக்க முடியும்.) புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு, இவ்விதத்திலான உத்திகள் இருப்பதென்பது விளக்கத் தன்மை கொண்ட கணவியல் கோட்பாட்டில் முக்கிய விளைவுகளைக் கொண்டுள்ளது. விளையாட்டுக் கொள்கையின் பெரும்பகுதியானது, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான போட்டியாளர்கள், செயல்பாடுகள், நிகழ்வுகள், விளைவுகள், போன்றவற்றைக் கொண்டுள்ள தொடர்ச்சியற்ற விளையாட்டுகளைப் பற்றியதாகவே உள்ளது. இருப்பினும் பல கருத்துகளை நீட்டிக்க முடியும். தொடர்ச்சியான விளையாட்டுகளில் போட்டியாளர்கள் தொடர்ச்சியான உத்திக் குழுவில் இருந்து ஓர் உத்தியைத் தேர்வு செய்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக கோர்னாட் போட்டியானது, போட்டியாளர்களின் உத்திகள், பின்ன அளவுகள் உட்பட எதிர்க்குறியற்ற அளவுகளில் இருக்கும்படியான வகையில் மாதிரியாக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பர்சியூட் மற்றும் எவேஷன் விளையாட்டுகள் போன்ற வகையீட்டு விளையாட்டுகள் தொடர்ச்சியான விளையாட்டுகளாகும். தனிநபர் முடிவெடுக்கும் சிக்கல்கள் சில நேரங்களில் "ஒரு போட்டியாளர் விளையாட்டுகள்" எனக் கருதப்படுகின்றன. இந்த சூழ்நிலைகள் விளையாட்டுக் கோட்பாட்டியல் ரீதியாக இல்லாதபட்சத்தில், முடிவெடுத்தல் கோட்பாட்டின் சித்தாந்தத்தில் உள்ள ஒரே கருவியை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி அவை மாதிரியாக்கப்படுகின்றன. இரண்டு அல்லது மேற்பட்ட போட்டியாளர்கள் இடம்பெறும்பட்சத்தில் மட்டுமே ஒரு சிக்கல் விளையாட்டுக் கொள்கை ரீதியானதாகக் கருதப்படுகிறது. சீரற்ற முறையில் செயல்படும் ஒரு போட்டியாளர் "வாய்ப்பு சார் செயல்களைச்" செய்கிறார். மேலும் அது "இயல்பான செயல்பாடுகள்" எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது . பொதுவாக இந்தப் போட்டியாளர் மூன்றாவது போட்டியாளராகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அப்படியானால் அது இர் போட்டியாளர் விளையாட்டாகிவிடும், ஆனால் அவர் விளையாட்டில் தேவைப்படும் போது ஒரு பகடையின் பங்களிப்பையே வழங்குவார். முடிவிலா எண்ணிக்கையிலான போட்டியாளர்களைக் கொண்டுள்ள விளையாட்டுகள் n-நபர் விளையாட்டுகள் என அழைக்கப்படுகின்றன . சில விளையாட்டுகளின் விளையாடப்படும் போக்கானது இலக்கு அல்லது பொருள் எனப்படும் மற்றொரு விளையாட்டை உருவாக்குவதற்கான விதிகளை உருவாக்க உதவும்பட்சத்தில் அவை மெட்டா-விளையாட்டுகள் எனப்படுகின்றன. மெட்டா-விளையாட்டுகள் உருவாக்கப்படும் விதித் தொகுப்பின் பயன்பாட்டு மதிப்பை அதிகரிக்க முயற்சிக்கிறது. மெட்டா-விளையாட்டுகளின் கோட்பாடானது வடிவமைப்புக் கோட்பாட்டின் இயங்கம்சத்துடன் தொடர்புடையதாகும். விளையாட்டுக் கொள்கையின் முதல் கலந்துரையாடல் ஜேம்ஸ் வால்டெக்ராவே அவர்கள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றது 1713. இந்தக் கடிதத்தில், வால்டெக்ராவே அவர்கள் லெ ஹெர் என்ற கார்டு விளையாட்டின் இருவர் விளையாடும் வகைப்பதிப்புக்கான மினிமேக்ஸ் கலவையான உத்தித் தீர்வை வழங்குகிறார். ஜேம்ஸ் மேடிசன் வெவ்வேறு நச்சாக்க அமைப்புகளின் கீழ், நிலைகள் நடந்துகொள்ளும் சாத்தியமுள்ள விதத்தைப் பற்றிய விளையாட்டுக் கொள்கை ரீதியான பகுப்பாய்வாக நாம் இன்று கருதும் கருத்தை உருவாக்கினார். 1838 ஆம் ஆண்டில் அண்டோயின் அகஸ்டின் கோர்னாட்டின் "Recherches sur les principes mathématiques de la théorie des richesses" ("வளம் பற்றிய கோட்பாட்டின் கணிதவியல் தத்துவங்களிலான ஆராய்ச்சிகள்" ) என்ற வெளியீடு வெளிவருவதற்கு முன்பு பொதுவான விளையாட்டுக் கொள்கை பகுப்பாய்வு பின்பற்றப்படவில்லை. இந்தப் பணித்திட்டத்தில் கோர்னாட் நாஷ் சமநிலையின் வகைக்கு மட்டுமே பொருந்தக்கூடியவகையில் வரையறை கொண்ட ஓர் இருதலை மேலாதிக்க நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு தீர்வை வழங்குகிறார். கோர்னாட்டின் பகுப்பாய்வானது வால்டெக்ராவேவின் பகுப்பாய்வை விட மிகவும் பொதுத்தன்மை கொண்டது எனினும், ஜான் வான் நியூமன் தொடர்ச்சியாக சில வெளியீடுகளை 1928 ஆம் ஆண்டில் வெளியிடும் வரை, விளையாட்டுக் கொள்கை என்பது ஒரு தனித்துவமான துறையாக விளங்கவில்லை. பிரெஞ்சு கணிதவியலாளர் எமிலி போரல் அதற்கு முன்பு விளையாட்டுகள் தொடர்பான சில பணித்திட்டங்களை செய்திருந்தார், விளையாட்டுக் கொள்கை என்பதைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவராகக் கருதப்படக்கூடிய உரிமை வான் நியூமனுக்கே உண்டு. வான் நியூமன் மிகவும் அறிவுக்கூர்மையுள்ள கணிதவியலாளராவார், அவரது பணிகள் கணவியல் முதல் அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் உருவாக்கத்திற்கத்திற்கும் இறுதியாக கணினிகளை உருவாக்கும் அவரது செயல்களுக்கும் மிகவும் முக்கியமான அவரது கணக்கீடுகள் வரை பரந்துவிரிந்திருந்தன. விளையாட்டுக் கொள்கை தொடர்பான வான் நியூமனின் பணித்திட்டமானது, நியூமன் மற்றும் ஆஸ்கார் மார்கென்ஸ்டன் ஆகியோர் எழுதி 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த "தியரி ஆஃப் கேம்ஸ் அண்ட் எக்கனாமிக் பிஹேவியர்" என்ற புத்தகத்தில் முடிவடைந்தது. இந்தப் பெரிய பணித்திட்டமானது இரு நபர் பூச்சியக் கூடுதல் விளையாட்டுகளுக்கான பரஸ்பர நிலைத்தன்மை கொண்ட தீர்வுகளைக் கண்டறிவதற்கான முறைகளைக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், விளையாட்டுக் கொள்கை பற்றிய பணிகள் அனைத்தும் ஒருங்கியக்கத் தன்மை கொண்ட விளையாட்டுக் கொள்கையிலேயே கவனம் செலுத்தின, அது தனிநபர் குழுக்களுக்கள் முறையான உத்திகள் பற்றி அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள முடியும் எனக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான விரும்பத்தக்க உத்திகளைப் பகுப்பாய்வு செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது. 1950 ஆம் ஆண்டில் ப்ரிசனர்ஸ் டைலெம்மாவின் முதல் விவாதம் தோன்றியது. மேலும் RAND கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இந்த விளையாட்டைப் பற்றிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட இதே நேரத்தில், ஜான் நாஷ் போட்டியாளர்களின் உத்திகளுக்கான பரஸ்பர நிலைத்தன்மைக்கான தேர்வளவைகளை உருவாக்கினார். அது நாஷ் சமநிலை எனப்பட்டது. மேலும் அது வான் நியூமன் மற்றும் மார்கென்ஸ்டன் ஆகியோர் முன்மொழிந்த தேர்வளவைகளைக் காட்டிலும் பரந்துபட்ட விளையாட்டுகளுக்குப் பொருந்தக்கூடியதாக இருந்தது. இந்தச் சமநிலையானது ஒருங்கியக்கத் தன்மை கொண்ட விளையாட்டுகளோடு கூட, ஒருங்கியக்கத் தன்மை இல்லாத விளையாட்டுகளின் பகுப்பாய்வையும் அனுமதிக்கும் வகையில் போதுமான அளவு பொதுத்தன்மையுடன் உள்ளது. விளையாட்டுக் கொள்கையானது 1950களில் ஒரு பெரும் குழப்பமான நிகழ்வைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்திலேயே பிரதான அம்சம், விரிவான வடிவ விளையாட்டு, கற்பனைத்தனமான விளையாட்டு, திரும்பத் திரும்ப விளையாடப்படும் விளையாட்டுகள் மற்றும் ஷேப்லி வேல்யு ஆகியவை உருவாக்கப்பட்டன. மேலும் இந்தக் காலகட்டத்திலேயே தத்துவம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் விளையாட்டுக் கொள்கையின் பயன்பாடு நிகழ்ந்தது. 1965 ஆம் ஆண்டில் ரெயின்ஹார்ட் செல்டென் துணை விளையாட்டின் சரியான சமநிலை என்னும் தீர்வுக் கருத்தை அறிமுகப்படுத்தினார், அது நாஷ் சமநிலையை மேலும் சீர்ப்படுத்தியது (அவர் பின்னாளில் நடுங்கும் கை சரியான தன்மை என்னும் கருத்தையும் அறிமுகப்படுத்தினார்). 1967 ஆம் ஆண்டில் ஜான் ஹார்சன்யி முழுமையான தகவல்கள் மற்றும் பேயெசியன் விளையாட்டுகள் போன்ற கருத்துகளை உருவாக்கினார். நாஷ், செல்டென் மற்றும் ஹார்சன்யி ஆகியோர் பொருளாதாரவியல் விளையாட்டுக் கொள்கையிலான அவர்களது பங்களிப்புகளுக்காக, 1994 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகளை வென்றனர். 1970களில் விளையாட்டுக் கொள்கையானது உயிரியலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இதற்கு ஜான் மேய்னர் ஸ்மித்தின் பணிகளும் அவரது பரிணாமவியல் நிலைத்தன்மை உத்தியுமே பெரும் காரணங்களாக இருந்தன. மேலும் கூடுதலாக உடன் தொடர்புடைய சமநிலை, நடுங்கும் கை சரியான தன்மை மற்றும் பொதுவான அறிவு ஆகிய கருத்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. 2005 ஆம் ஆண்டில் தாமஸ் ஸ்கெல்லிங் மற்றும் ராபர்ட் ஆமன் ஆகிய விளையாட்டுக் கொள்கையாளர்கள் நோபல் பரிசு பெற்றவர்களான நாஷ், செல்டென் மற்றும் ஹார்சன்யி ஆகியோரைப் பின்பற்றினர். ஸ்கெல்லிங் பரிணாமவியல் விளையாட்டுக் கொள்கைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளான செயல்மிகு மாதிரிகளில் பணிபுரிந்தார். ஆமன், சமநிலைக் கருத்துக்கே அதிகமாகப் பங்களித்தார். அவர் சமநிலை மாற்றம், உடன் தொடர்புள்ள சமநிலை ஆகியவற்றை அறிமுகம் செய்தார். மேலும் பொதுவான அறிவு பற்றிய கருதுகோள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவை பற்றிய விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொண்டார். 2007 ஆம் ஆண்டில் ரோசர் மையர்சன் லீயனிட் ஹர்விக்ஸ் மற்றும் எரிக் மாஸ்கின் ஆகியோருடன் இணைந்து "இயங்கம்ச வடிவமைப்புக் கோட்பாட்டுக்கான அடிப்படைகளை உருவாக்கியதற்காக" பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். சரியான சமநிலை பற்றிய கருத்து, ஒரு முக்கியப் புத்தகம் பட்டப்படிப்புக்கான புத்தகம் ஆகியவை மையர்சன்னின் பங்களிப்புகளில் அடங்கும், அந்தப் புத்தகம்: "கேம் தியரி, அனாலிசிஸ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்" . கம்பியற்ற தகவல்தொடர்பு கம்பியற்ற தகவல்தொடர்பு என்பது மின்சார கடத்திகள் அல்லது "கம்பிகளின் பயன்பாடின்றி தகவலை தூரத்திற்கு பரிமாற்றுவது ஆகும்". செயல்படும் தூரங்கள் குறைந்த தூரமாக (தொலைக்காட்சியின் தொலைநிலை கட்டுப்படுத்தி போன்று சில மீட்டர்கள்) அல்லது நீண்டதூரமாக (ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களைக் கொண்ட வானொலித் தகவல்தொடர்புகள் போல) இருக்கலாம். கம்பியற்ற தகவல்தொடர்பானது பொதுவாக தொலைத்தொடர்புகளின் கிளையமைப்பாகவே பார்க்கப்படுகின்றது. இது பல்வேறு வகையான நிலையான, நகர்வு மற்றும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய இரு-வழி வானொலிகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மிய உதவியாளர் கருவிகள் மற்றும் கம்பியற்ற பிணையமாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. புவியிடங்காட்டி அலகுகள், மோட்டார் வண்டி நிறுத்துமிடக் கதவுகள், கம்பியற்ற கணினிச் சுட்டிகள், விசைப்பலகைகள் மற்றும் தலையணிகள், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகியவை கம்பியற்ற தகவல்தொடர்புத் தொழிநுட்ப எடுத்துக்காட்டுக்கள் ஆகும். கம்பியற்ற செயல்பாடுகள் கம்பிகளைப் பயன்படுத்தி சாத்தியமற்றதாக அல்லது நடைமுறை சாத்தியமற்றதாக உள்ள தொலை தூர தகவல்தொடர்புகள் போன்ற சேவைகளை அனுமதிக்கின்றன. இந்தச் சொல்லானது பொதுவாகத் தொலைத்தொடர்புத் துறையில் தொலைத்தொடர்பு அமைப்புகளை (உ.ம். ரேடியோ அலைப்பரப்பிகள் மற்றும் ஏற்பிகள், தொலைநிலை கட்டுப்படுத்திகள், கணினி வலையமைப்புகள், வலையமைப்பு முனையங்கள், இன்னும் பல.) குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றது. இவை பல வடிவான ஆற்றலை (உ.ம். ரேடியோ அதிர்வெண் (RF), அகச்சிவப்பு ஒளி, லேசர் ஒளி, புலப்படக்கூடிய ஒளி, ஒலி சம்பந்தமான ஆற்றல், இன்னும் பல.) கம்பிகளை பயன்படுத்தாமல் தகவலைப் பரிமாற்றப் பயன்படுத்துகின்றன. தகவலானது இந்த முறையில் குறுகிய மற்றும் நீண்ட தூரங்கள் இரண்டிற்கும் பரிமாற்றப்படுகின்றது. "கம்பியற்ற" என்ற வார்த்தையானது மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது மேலும் பரவலாக உணரப்படுகின்ற வார்த்தையானது மின்காந்த அலையில் அல்லது ரேடியோ அதிர்வெண்ணில் (பல கம்பி வடிவங்களுக்கு மாற்றாக) சமிக்ஞையை அவற்றின் பகுதி அல்லது முழு தகவல்தொடர்பு பாதை வழியாகக் கொண்டுசெல்லும் தகவல்தொடர்பை விவரிக்கப் பயன்படுகின்றது. இன்று பயன்பாட்டில் உள்ள கம்பியற்ற உபகரணத்திற்கான பொதுவான எடுத்துக்காட்டுகள், பின்வருகின்றன: கம்பியற்ற வலையமைப்பு (அதாவது, பல்வேறு வகையான உரிமமற்ற 2.4 GHz WiFi சாதனங்கள்) பல்வேறு தேவைகளை நிறைவேற்றப் பயன்படுகின்றது. அநேகமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் பயணம் செய்யும் மடிக்கணினிப் பயனர்களுக்கு இணைப்பை வழங்குவது மிகவும் பொதுவான பயன்பாடாக உள்ளது. மற்றொரு பொதுவான பயன்பாடு மொபைல் வலையமைப்புகளுக்கு செயற்கைக்கோள் வழியாக இணைப்பை வழங்குவதாகும். கம்பியற்ற பரிமாற்ற முறை என்பது கண்டிப்பாக அடிக்கடி இருப்பிடங்களை மாற்ற வேண்டிய ஒரு LAN பகுதிக்கான வலையமைப்பு செயலைச் செய்வதற்கான தர்க்க விருப்பம் ஆகும். பின்வருவன கம்பியற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் சரியான சூழ்நிலைகள்: "கம்பியற்ற தகவல்தொடர்பானது" பின்வருபவை மூலமாக இருக்கலாம்: பயன்பாடுகள், புள்ளிக்குப்புள்ளி தகவல்தொடர்பு, ஒரு புள்ளியிலிருந்து பல்வேறு புள்ளி தகவல்தொடர்பு, ஒளிபரப்பு, செல்லுலார் வலையமைப்புகள் மற்றும் பிற கம்பியற்ற வலையமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும். "wireless" என்ற சொல்லை "cordless" என்ற சொல்லுடன் இணைத்து குழம்பிக்கொள்ளக் கூடாது, இச்சொல் பொதுவாக மின்னூட்டப்பட்ட மின்சார அல்லது மின்னணு சாதனங்களைக் குறிப்பிடப் பயன்படுகிறது. இந்தச் சாதனங்கள் எந்த கம்பி அல்லது கார்டு இல்லாமல் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மின் ஆதாரங்களில் (உ.ம். மின்கலத் தொகுப்பு) இருந்து முதன்மை மின் வழங்கலுக்கு கம்பியற்ற சாதனத்தை குறிப்பிட்ட வரம்பிலான தூரத்தில் தொடர்பை ஏற்படுத்தி இயக்க முயலுகின்றன. கார்ட்லெஸ் தொலைபேசிகள் போன்ற சில கம்பியற்ற சாதனங்களும், கார்ட்லெஸ் தொலைபேசிகளில் இருந்து தொலைபேசி அடிப்படை அமைப்பிற்கு சில வகையான கம்பியற்ற தகவல்தொடர்பு இணைப்பு வழியாகத் தகவலைப் பரிமாற்றுவதில் கம்பியற்றதைப் போன்றே உள்ளன. இது "cordless" என்ற சொல்லின் பயன்பாட்டில் சில முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக டிஜிட்டல் மேம்படுத்தப்பட்ட கார்ட்லெஸ் தொலைத்தொடர்புகள். கடந்த ஐம்பது ஆண்டுகளில், கம்பியற்ற தகவல்தொடர்புகள் துறையானது பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வலிமையான மாற்றங்களை அனுபவித்துள்ளது. உலகின் முதல் கம்பியற்ற தொலைபேசி உரையாடல் 1880 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பொழுது அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லும்சார்லஸ் சம்னர் டெயிண்டரரும் போட்டோபோனைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றனர். அது தகுந்தபடி பண்பேற்றம் செய்யப்பட்ட ஒளிக்கற்றைகள் (இவை மின்காந்த அலைகளின் குறுகிய வெளிப்பாடுகள்) வழியாக கம்பியற்ற முறையில் குரல் உரையாடல்களை நிகழ்த்தும் ஒரு தொலைபேசி ஆகும். இந்த தொலைக் காலகட்டத்தில், மின்சாரத்தை வழங்கும் பயன்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. மேலும் லேசர்கள் அறிவியல் புதினத்தில் கூட கற்பனைப்படுத்தப்படாமல் இருந்தன. அவற்றின் கண்டுபிடிப்புக்கான எந்த நடைமுறை பயன்பாடுகளும் இல்லை. இவை சூரிய ஒளி மற்றும் நல்ல காலநிலை ஆகிய இரண்டின் கிடைக்கும் தன்மையால் அதிகம் வரையறுக்கப்பட்டிருந்தது. வெற்று இட கண்ணாடித் தகவல்தொடர்பைப் போன்றே, போட்டோபோனுக்கும் அதன் அலைபரப்பி மற்றும் ஏற்பி ஆகியவற்றிற்கு இடையே தெளிவான சூரியஒளி தேவைப்படுகின்றது. போட்டோபோனின் முதன்மையாளர்கள் இராணுவத் தகவல்தொடர்புகளிலும் பின்னர் கண்ணாடி இழைத் தகவல்தொடர்புகளிலும் அவர்களின் முதல் நடைமுறைப் பயன்பாடுகளைக் கண்டறியும் முன்னர் பல பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். "wireless" என்ற சொல்லானது வானொலி ஏற்பியை அல்லது டிரான்சீவரை (இரட்டைப் பயன் ஏற்பி மற்றும் அலைபரப்பி சாதனம்) குறிப்பதற்காகவே பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது, ஆரம்பத்தில் கம்பியற்ற தந்தித் துறையில் அதன் பயன்பாடு நிறுவப்பட்டது; இப்போது அந்த வார்த்தையானது செல்லூலர் தொலைபேசி வலையமைப்புகள் மற்றும் கம்பியற்ற அகன்றவரிசை இணையம் போன்றவற்றில் நவீன கம்பியற்ற இணைப்புகளை விவரிக்கப் பயன்படுகின்றது. அது கம்பியின்றி செயல்படுத்தப்படுகின்ற "கம்பியற்ற தொலைநிலைக் கட்டுப்பாடு" அல்லது "கம்பியற்ற ஆற்றல் பரிமாற்றம்" போன்ற எந்த வகையான செயல்பாடுகளைக் குறிக்கவும் பொதுவாகப் பயன்படுகின்றது. அது அந்தச் செயல்பாட்டை நிறைவேற்றப் பயன்படுகின்ற குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை (உ.ம். வானொலி, அகச்சிவப்பு, மீயொலி) பொறுத்தது அல்ல. க்யூக்லியல்மோ மார்க்கோனி மற்றும் கார்ல் பெர்டினாண்ட் ப்ரௌன் ஆகியோர் அவர்களின் கம்பியற்ற தந்தியின் பங்களிப்பிற்காக 1909 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். டேவிட் ஈ. ஹூயூஸ், ஹெர்ட்சின் சோதனைகளுக்கு எட்டு ஆண்டுகள் முன்னதாக, சாவி கொடுத்து இயக்கப்படுகிற அலைபரப்பியைப் பயன்படுத்தி வானொலி சமிக்ஞைகளை சில நூறு யார்கள் தூரத்திற்கு அனுப்பினார். இது மேக்ஸ்வெல்லின் பணியை அறிந்துகொள்வதற்கு முந்தையதாக இருப்பதால், அவரது சாதனையானது "தூண்டல்" விளைவாகவே எடுத்துக்கொள்ளப்பட்டதால் ஹூயஸின் சமகாலத்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. 1885 ஆம் ஆண்டில், டி. ஏ. எடிசன் அவர்கள் தூண்டல் பரப்புகைக்கான அதிர்வுப் பொறி காந்தத்தைப் பயன்படுத்தினார். 1888 ஆம் ஆண்டில், எடிசன் அவர்கள் சமிக்ஞை அமைப்பை லேயிக் பள்ளத்தாக்கு ரெயில்ரோட்டில் அமைத்தார். 1891 ஆம் ஆண்டில், மின் தூண்டலைப் பயன்படுத்தும் இந்த முறைக்கு எடிசன் கம்பியற்ற காப்புரிமையைப் பெற்றார் (). "கம்பியற்ற தொழில்நுட்ப வரலாற்றில்" , 1888 ஆம் ஆண்டில் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் அவர்களின் மின்காந்த அலைகள் பற்றிய கொள்கையின் செயல்முறை விளக்கம் முக்கியமானதாக இருந்தது. மின்காந்த அலைகளின் கொள்கைகளானது ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சியிலிருந்து முன்கணிக்கப்பட்டவை. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்க்கோடுகளில் பயணிக்கின்றன என்பதையும், அவற்றை சோதனை உபகரணம் மூலமாக பெற முடியும் என்பதையும் ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார். சோதனைகள் ஹெர்ட்ஸ் அவர்களால் பின்தொடரப்படவில்லை. ஜகதீஷ் சந்திர போஸ் இந்தக் காலகட்டத்தில் முந்தைய கம்பியற்ற கண்டறியும் சாதனத்தை உருவாக்கினார். மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளைப் பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார்.. நிக்கோலா தெஸ்லா போன்ற பிந்தைய கண்டுபிடிப்பாளர்களால் கம்பியற்ற வானொலி தகவல்தொடர்பு மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் செயலாக்கப்பட்டன. ஒளி, வண்ணங்கள், AM மற்றும் FM வானொலி மற்றும் மின்னணுச் சாதனங்கள் ஆகியவை மின்காந்த நிறமாலையைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவில் பொது வளமாகக் கருதப்படுகின்ற, தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தக் கிடைக்கின்ற அதிர்வெண்கள் பெடரல் தகவல்தொடர்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. எந்தெந்த அதிர்வெண் வரம்புகளை எந்தெந்தத் தேவைக்காக யாரால் பயன்படுத்தலாம் என்பதை இந்த ஆணையம் தீர்மானிக்கின்றது. இந்த மாதிரியான கட்டுப்பாடு அல்லது தனியார் மயமாக்கப்பட்ட மின்காந்த நிறமாலை போன்ற மாற்று ஏற்பாடுகள் இல்லாத நிலையில் குழப்பமே விளையும், உதாரணமாக, விமானச் சேவைகள் பணிபுரிவதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்டிருக்காது, தன்னார்வ வானொலி ஆப்பரேட்டர் விமானத்தைத் தரையிறக்கும் விமானியின் பணியில் குறுக்கிடுவர். கம்பியற்ற தகவல்தொடர்பு நிறமாலையின் அளவு 9 kHz முதல் 300 GHz வரையில் பரவியிருக்கின்றது. (மேலும் நிறமாலை மேலாண்மையைக் காண்க) கம்பியற்ற தொழில்நுட்பமானது வீடுகள் அல்லது அலுவலக் கட்டடங்களுக்கான பாதுகாப்பு அமைப்புகளில் கடினமான கம்பிஅமைப்புச் செயல்படுத்தல்களுக்கு துணையாக அல்லது பதிலாக அமையலாம். நவீன தொலைக்காட்சிகள் கம்பியற்ற (பொதுவாக அகச்சிவப்பு) தொலைநிலைக் கட்டுப்பாடு கருவிகளைப் பயன்படுத்துகின்றன. இப்பொழுது ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. செல்லுலார் தொலைபேசி மற்றும் மோடம்கள் ஆகியவை கம்பியற்ற தொழில்நுட்பத்திற்கான நன்கு அறிந்த உதாரணங்களாகக் கூறலாம். இந்த சாதனங்கள் உலக அளவில் பல இடங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள ஆப்பரேட்டர்களை அனுமதிக்க வானொலி அலைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த கருவிகளிலிந்து வரும் குரல் மற்றும் தரவு ஆகிய இரண்டையும் பரிமாற்றப் பயன்படும் சமிக்ஞையை பரப்ப மற்றும் பெறத் தேவையான உபகரணம் அமைந்த செல்லுலார் தொலைபேசி தளம் உள்ள எங்கிருந்தும் அவற்றை பயன்படுத்த முடியும். Wi-Fi (கம்பியற்ற மாறாப்பண்பிற்கு) என்பது மடிக்கணினிகள், PDAகள் மற்றும் பிற சாதனங்களுக்கு இணையத்தை எளிதாக இணைக்க இயக்கப்பட்டுள்ள கம்பியற்ற LAN தொழில்நுட்பம் ஆகும். தொழில்நுட்ப ரீதியாக IEEE 802.11 a,b,g,n என்று அறியப்படுகின்றது, Wi-Fi என்பது குறைந்த செலவு மற்றும் தரநிலையான ஈத்தர்நெட் மற்றும் பிற கம்பி அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் வேகத்தை நெருங்குகின்ற வேகத்தையும் கொண்டிருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் பல Wi-Fi ஹாட்ஸ்பாட்டுகள் மிகவும் பிரபலமாகியுள்ளன. பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாதக்கட்டணச் சேவையை அளிக்கின்றன. அதே வேளையில் மற்றவர்கள் தங்களின் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க அதை இலவசமாக வழங்கத் தொடங்கிவிட்டனர். கம்பியற்ற ஆற்றல் பரிமாற்றம் என்பது ஒரு செயலாக்கம் ஆகும். இதன் மூலம் மின் ஆற்றலானது மின் மூலத்திலிருந்து உள் கட்டமைக்கப்பட்ட மின் மூலமற்ற மின் சுமைக்கு இரண்டையும் இணைக்கும் கம்பிகளின் பயன்பாடு இல்லாமல் பரிமாற்றப்படுகின்றது. கம்பி இரைச்சலுடன் வாடிக்கையாளரின் அழைப்பிற்கு பதிலளித்தல் சலிப்படையச் செய்ததால், கணினி சார்ந்த சாதனங்களின் பல உற்பத்தியாளர்கள் தங்களது நுகர்வோரைத் திருப்திப்படுத்தும் அடிப்படையில் கம்பியற்ற தொழில்நுட்பத்திற்குத் திரும்பினர். முதலில் இந்த உற்பத்திப் பிரிவுகள் கணினி மற்றும் விசைப்பலகை மற்றும் சுட்டி ஆகியவற்றிற்கு இடையே தொடர்புகொள்ள பெரிய, உயர்வான வரம்புக்குட்பட்ட டிரான்சீவர்களைப் பயன்படுத்தின. இருப்பினும் மிகச்சமீபத்திய தலைமுறைகள் சிறிய, உயர்தர சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். சிலர் ப்ளூடூத் அமைந்தவற்றையும் பயன்படுத்துகின்றனர். சில பயனர்கள் கம்பி இணைக்கப்பட்ட சாதனங்களின் இடையூறுகளை பற்றிய புகார் தெரிவிக்கத் தொடங்கியதால் இந்த அமைப்புகள் எங்கும் வியாபிக்கத் தொடங்கியது. கம்பியற்ற சாதனங்கள் கம்பியில் இணைக்கப்பட்ட சாதனங்களை விடவும் சற்று மெதுவாகப் பதிலளிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இருப்பினும் இந்த இடைவெளி குறைந்து கொண்டிருக்கின்றது. கம்பியற்ற விசைப்பலகைகளின் பாதுகாப்பு குறித்த தொடக்கக் கருத்துக்கள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளப்பட்டன. கம்பியற்ற தொழில்நுட்பமானது தங்களின் சோதனைகளில் குறுக்கிடுவதாகப் பல விஞ்ஞானிகள் புகாரளித்துள்ளனர். பொருத்தமான ஒன்று கம்பி வழியான பதிப்பில் கிடைக்காததால் அவை பொருத்தமான சாதனங்களை குறைவான அளவில் பயன்படுத்துமாறு அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. பல மாதிரிகளின் தயாரிப்பு சீராகக் குறைந்ததால், குறிப்பாக டிரேக்பால்களைப் பயன்படுத்துகின்ற விஞ்ஞானிகளிடையே பொதுவாக இது நடைமுறைக்கு வந்தது. தி மேட்ரிக்ஸ் "தி மேட்ரிக்ஸ்" என்பது, லேரி மற்றும் ஆன்டி வச்சோவ்ஸ்கி எழுதி இயக்கிய, கேயானு ரீவ்ஸ், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், கேரி-ஆன் மோஸ், ஜோ பன்டோலியானோ மற்றும் ஹ்யூகோ வீவிங் ஆகியோர் நடித்த அறிவியல் புனைகதை-அதிரடித் திரைப்படமாகும். இது முதலாவதாக மார்ச் 31, 1999ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியானது என்பதுடன் "தி மேட்ரிக்ஸ்" படவரிசை, சித்திரக்கதை புத்தகங்கள், ஒளித் தோற்ற விளையாட்டுக்கள் (வீடியோ கேம்ஸ்) மற்றும் அசைவூட்டத்தின் (அனிமேஷன்) முதல் பகுதியாகும். எதிர்காலத்தில் மனிதர்களால் உணரப்படும் யதார்த்தம் உண்மையில் மேட்ரிக்ஸ்தான் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது: மனிதர்களின் உடல் வெப்பம் மற்றும் மின்னணு செயல்பாடு ஆகியவை ஆற்றல் மூலாதாரமாக பயன்படுத்தப்படுகையில் மனித மக்கள்தொகையைக் குறைத்து அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் சென்ஷென்ட் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலியாக்க உண்மை ஆகும். இதைக் கற்றுக்கொள்வதற்கு, கணினி செய்நிரலரான "நியோ" இயந்திரங்களுக்கு எதிரான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, "கனவு உலகத்திலிருந்து" நிஜ உலகத்திற்கு சுதந்திரம் பெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இந்தப் படம் சைபர்பன்ங் மற்றும் ஹேக்கர் இணை கலாச்சாரம்; தத்துவரீதியான மற்றும் மதரீதியான கருத்தாக்கங்கள்; "அலீஸின் அற்புத உலக சாதனை" க்கான இறுதி அஞ்சலி, ஹாங்காங் அதிரடி சினிமா, ஸ்பாகட்டி மேற்கத்தியர்கள், இருள் உலக புனைவு மற்றும் ஜப்பானிய அசைவூட்டம் ஆகியவற்றிற்கான பல குறிப்புகளையும் உள்ளிட்டிருக்கிறது. கணிப்பொறி செய்நிரலரான தாமஸ் ஏ.ஆண்டர்சன் "நியோ" என்ற புனைபெயரில் ஒரு ஹேக்கராக ரகசிய வாழ்க்கை நடத்துகிறார், அத்துடன் "மேட்ரிக்ஸ் என்றால் என்ன?" என்பதற்கான கேள்விக்கு விடை காணவும் விரும்புகிறார். அவருடைய கணிப்பொறி திரையில் தோன்றும் மறையீட்டு செய்திகளும், மூன்று உளவாளிகளை அவர் எதிர்கொள்ள நேரிடுவதும் புதிரான ரகசிய அறையில் ஹேக்கராக இருக்கின்ற மார்பியஸால் வழிநடத்தப்படும் குழுவிற்கு அவரை அழைத்துச்செல்கிறது, மார்பியஸ் அவருக்கு மேட்ரிக்ஸைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்: ஒரு சிவப்பு மாத்திரையை விழுங்கினால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம், நீல மாத்திரையை விழுங்கினால் அவருக்கு தெரிந்த உலகத்திற்கே அவர் திரும்பச் செல்லலாம். நியோ சிவப்பு மாத்திரையை விழுங்கும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார், அத்துடன் அடுத்தடுத்து தன்னுடைய உடலானது திரவம் நிரப்பப்பட்ட உறை ஒன்றில் இருப்பதையும், இதேபோன்ற உறைகளைக் கொண்டு மூடப்பட்ட நீண்ட இயந்திர கோபுரத்தோடு கம்பிகளாலும் குழாய்களாலும் அவருடைய உடல் இணைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறார். இந்த இணைப்புக்கள் நீக்கப்படுகின்றன, அவர் மார்பியஸால் மீட்கப்பட்டு அவருடைய ஹாவர்கிராப்டான "நெபுகண்ட்நெசருக்கு" அழைத்துச்செல்லப்படுகிறார். நியோவின் கைவிடப்பட்ட பௌதீக உடல் மீண்டும் காப்பாற்றப்படுகிறது, மார்பியஸ் இந்த சூழ்நிலையை விளக்குகிறார். மார்பியஸ் நியோவிடம் அந்த வருடம் 1999 இல்லை என்றும், ஆனால் 2199க்கு அருகாமையில் வந்திருக்கக்கூடியது என்றும் தெரிவிக்கிறார், அத்துடன் மனிதகுலம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அறிவுத்திறனுள்ள இயந்திரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் சூரிய சக்தியை நிறுத்தும் முயற்சியாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட கெட்டியான கருநிற மேகங்களால் வானம் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்கள் அணுக்கரு உருகலுடன் சேர்த்து அவற்றின் ஆற்றல் மூலாதாரமாக மனித உயிர்களைப் பயன்படுத்துகின்றன, பின்னாளில் இவை உறைகளில் வைத்து எண்ணிலடங்கா மக்களை வளர்த்து அவற்றின் உயிர்மின்னணு ஆற்றல் மற்றும் உடல் வெப்பத்தை அறுவடை செய்துகொள்கின்றன. பிறப்பிலிருந்து நியோ இருந்துவரும் உலகம் மேட்ரிக்ஸ், தாங்கள் பிடித்துவைக்கும் மனிதக் கூட்டத்தை தங்களுக்கு அடிபணிந்து வைக்க 1999ஆம் ஆண்டில் இயந்திரங்களால் உருவாக்கப்பட்டதன்படி இது ஒரு மறைபொருளான போலியாக்க உண்மை கட்டமைப்பாக இருக்கிறது. மார்பியஸூம் அவருடைய குழுவினரும் மேட்ரிக்ஸிலிருந்து மற்றவர்களைப் "பிரித்து" அவர்களை இயந்திரங்களுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளும் சுதந்திர மனிதர்களைச் சேர்ந்த குழுவினராவர். மேட்ரிக்ஸிற்குள்ளாக, போலியாக்கத்திற்குள்ளான பௌதீக விதிகளின் இயல்பு குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு அதிமானுட திறன்களை அளிக்கிறது. மேட்ரிக்ஸ் மீதான தனது வரம்பற்ற கட்டுப்பாட்டின் மூலம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடியவர் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட "மீட்பர்" நியோதான் என்று மார்பியஸ் நம்புகிறார். நியோ இந்தக் குழுவின் உறுப்பினராக பயிற்றுவிக்கப்படுகிறார். முன்னதாக நியோவை மேட்ரிக்ஸோடு இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவருடைய மண்டையோட்டுக்குப் பின்னால் இருக்கும் சாக்கெட் அவருடைய மூளைக்குள் அறிவை நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கு உதவுகிறது. இந்த முறையில் அவர் பல்வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்கிறார், தனது குங்பூ திறன்களை மேட்ரிக்ஸ் போன்று உருவாக்கப்பட்ட மெய்நிகர் தோற்ற (வர்ச்சுவல் ரியாலிட்டி) "வடிவமைப்புள்ள" சூழ்நிலையில் மார்பியஸோடு சண்டையிட்டு வெளிப்படுத்துகிறார், தனது வேகத்தினால் குழுவினரின் பாராட்டுதலைப் பெறுகிறார். அதற்கும் மேலான பயிற்சி மேட்ரிக்ஸிற்குள்ளேயே இருக்கும் முக்கியமான அபாயங்களை நியோவிற்கு அறிமுகப்படுத்துகிறது. அங்கே ஏற்படும் காயங்கள் நிஜ உலகத்திலும் பிரதிபலிக்கின்றன; அவர் மேட்ரிக்ஸில் கொல்லப்பட்டார் என்றால், அவருடைய பௌதீக உடலும் உயிரிழக்கும். உளவாளிகள் இருப்பதைப் பற்றியும் அவர் எச்சரிக்கிறார், போலியாக்கத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துபவர்களைத் தேடி அழிக்கின்ற இவர்கள் நேரடியாக மேட்ரிக்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் எவருடைய மெய்நிகர் உடலையும் எடுத்துக்கொண்டுவிடும் வகையிலான வேகமான மற்றும் சக்திவாய்ந்த சென்ஷென்ட் கணினி செய்நிரல்கள் ஆவர். நியோ ஒருநாள் "மீட்பராக" தன்னுடைய திறன்களை முற்றிலும் புரிந்துகொள்வார் என்று மார்பியஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார், அவருக்கு இவர்கள் இணையாக இருக்கமாட்டார்கள். இந்தக் குழு மேட்ரிக்ஸில் நுழைந்து, இந்த மீட்பரின் முடிவான தோற்றத்தை தீர்க்கதரிசனம் செய்த பெண்ணான ஆரக்கிளை சந்திக்க நியோவைக் கூட்டிச்செல்கிறது. அவர் நியோவிடம் மேட்ரிக்ஸை கையாளக்கூடிய "இயற்கையான திறனை" அவர் பெற்றிருப்பதாக கூறுகிறார், ஆனால் அவர் ஏதோ ஒன்றிற்காக, தன்னுடைய மறுபிறவிக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அவருடைய குறிப்புக்களிலிருந்து, தான் மீட்பர் அல்ல என்று நியோ அனுமானித்துக்கொள்கிறார். நியோவை குருட்டுத்தனமாக நம்பும் மார்பியஸ் நியோவைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார் என்றும் கூறுகிறார். மேட்ரிக்ஸிலிருந்து வெளியேற பாதுகாப்பான "வழியாக" இருக்கும் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புக்கு திரும்புகையில் இந்தக் குழு உளவாளிகளாலும் ஸ்வாட் பிரிவாலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. உளவாளி ஸ்மித் நியோவை சுற்றி வளைக்கிறார், ஆனால் மார்பியஸ் அவரைக் கீழே தள்ளிவிட்டு எல்லோரையும் வெளியேறுவதற்கு உத்தரவிடுகிறார். நியோவும் மற்றவர்களும் தப்பிச்செல்லும்விதமாக மார்பியஸ் தாமாகவே பிடிபட்டுக்கொள்கிறார். குழு உறுப்பினர் சைபர் என்பவரால் தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை குழுவினர் தெரிந்துகொள்கின்றனர், இவர் நிஜ உலகத்தில் கஷ்டப்படுவதைக் காட்டிலும் தன்னுடைய முந்தைய இயல்பான வாழ்வையே விரும்பினார், இதனால் மேட்ரிக்ஸிற்கு நிரந்தரமாக திரும்புவதற்கு மாற்றாக மார்பியஸை ஒப்படைப்பதற்கு உளவாளிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். சைபர் தோற்கடிக்கப்படுகிறார், ஆனால் அவரது துரோகம் நியோ, டிரினிட்டி, டேங்க், மற்றும் மேட்ரிக்ஸிற்குள்ளான அரசு அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்ட மார்பியஸ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருடைய மரணத்திற்கும் வழிவகுக்கிறது. உளவாளிகள் அவரிடமிருந்து உண்மை உலகத்திலுள்ள சுதந்திரமடைந்த மனிதர்களின் பூமிக்கு அடியில் இருக்கும் ஸியான் தலைமைக் கணினிக்குள் நுழைவதற்கான அனுமதி குறித்த குறியீடுகளைப் பெற முயற்சிக்கின்றனர். நியோவும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்கு திரும்பி தங்களது தலைவரைக் காப்பாற்ற அந்தக் கட்டிடத்தைத் தாக்குகின்றனர். நியோ மேட்ரிக்ஸை கையாளுவதில் மிகுந்த நம்பிக்கையோடும் அதைப் பற்றி அதிகம் தெரிந்தவராகவும் காணப்படுகிறார், முடிவில் ஒரு உளவாளி அவர் மீது குண்டுமழை பொழிகிறார். மார்பியஸும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்குள் நுழைய சுரங்கப்பாதை நிலைய தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் நியோ வெளியேறுவதற்கு முன்பு உளவாளி ஸ்மித்தால் தாக்கப்படுகிறார். அவர் உண்மையாக எழுந்து முடிவில் ஸ்மித்தை தோற்கடிக்கிறார், ஆனால் ஸ்மித் வேறொரு உடலைப் பெற்று அங்கிருந்து தப்பிச்செல்கிறார். மற்றொரு தொலைபேசி வழியைத் தேடி நகரத்தின் வழியாக ஓடுகின்ற நியோவை உளவாளிகள் துரத்துகின்றனர், அதேசமயத்தில் "சென்டினல்" இயந்திரங்கள் நிஜ உலகத்தில் நெபுகண்ட்நெசர் நிலையை நெருங்குகின்றன .நியோ வழியை அடைகின்றார், ஆனால் உளவாளி ஸ்மித்தால் எதிர்கொள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார். நிஜ உலகத்தில் இருக்கும் டிரினிட்டி நியோவிடம், "மீட்பர்" என்று அறியப்படும் ஒருவரிடம், தற்போது நியோவாக அறியப்பட்டிருப்பவர், தான் காதலில் விழுவேன் என்று ஆரக்கிளால் தனக்கு சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். அவர் நியோவின் மரணத்தை ஏற்க மறுத்து அவரை முத்தமிடுகிறார். நியோவின் இதயம் மீண்டும் துடிக்கிறது, மேட்ரிக்ஸிற்குள்ளாகவே நியோ புத்துயிர்ப்படைகிறார்; உளவாளிகள் அவரை சுடுகின்றனர், ஆனால் அவர் அவரது உள்ளங்கையை உயர்த்தி குண்டுகளை காற்றிலேயே நிறுத்துகிறார். நியோவால் உண்மையில் பச்சைக் குறியீடுகளாக இருக்கும் ஓடைக் கோடுகளான மேட்ரிக்ஸை உணர முடிகிறது. உளவாளி ஸ்மித் அவரைக் கொல்வதற்கான இறுதி முயற்சியில் இறங்குகிறார், ஆனால் அவரது குத்துக்கள் பயனற்று தடுக்கப்படுகின்றன, நியோ அவரை அழிக்கிறார். மற்ற இரண்டு உளவாளிகளும் தப்பிச்செல்கின்றனர், கலத்தின் உட்பகுதிக்குள் ஏற்கனவே ஊடுருவிவிட்ட சென்டினல்களை அழிப்பதற்கு கலத்தில் இருக்கும் இஎம்பி ஆயுதத்தை நோக்கி நியோ சரியான நேரத்திற்கு நிஜ உலகத்திற்கு திரும்புகிறார். ஒரு சுருக்கமான பகுதி நியோ மேட்ரிக்ஸிற்கு திரும்பிவிட்டதைக் காட்டுகிறது, தொலைபேசியில் "எதுவும் சாத்தியம்" என்பதை மேட்ரிக்ஸிற்குள்ளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதாக அவர் உறுதியளிக்கிறார். அவர் தொலைபேசியை வைத்துவிட்டு வானத்தில் பறந்துசெல்கிறார். "தி மேட்ரிக்ஸ்" வார்னர் பிரதரஸும் மற்றும் ஆஸ்த்ரேலிய வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸும் இணைந்து தயாரித்ததாகும், சில காட்சிகள் ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள ஃபாக்ஸ் ஸ்டுடியோவிலும், அந்த நகரத்திலும் படமாக்கப்பட்டன. மரபான அமெரிக்க நகரங்களைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக அடையாளம் தெரியக்கூடிய பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதிலும், சிட்னி ஹார்பர் பாலம், அன்சாக் பாலம், ஏடபிள்யூஏ கோபுரம், மார்டின் பிளேஸ் மற்றும் காமன்வெல்த் வங்கி கிளை ஆகியவை சில காட்சிகளில் தெரிகின்றன, டெல்ஸ்ட்ரா மற்றும் ஐபிஎம் கார்ப்பரேஷனின் சிட்னி அலுவலக கட்டிடங்களும் தெரிகின்றன. இடதுபக்க போக்குவரத்து மற்றும் (அமெரிக்க ஆங்கிலமான "elevator" மற்றும் "authorized" என்பதற்கு மாறாக) "Lift" மற்றும் "authorised" போன்ற ஆஸ்த்ரேலிய ஆங்கில கலைச்சொல் மற்றும் எழுத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவை படமாக்கப்பட்ட இடங்களுக்கான மறைகுறிப்புகளாகும். இயக்குநர்களின் சொந்த நகரமான சிகாகோ, இலினாய்ஸிற்கான நுட்பமான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன, நுட்பமாக இணைக்கப்பட்ட சிகாகோ அடிவானத்தின் படம், நகர வரைபடங்கள், சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் உளவாளி ஸ்மித்திற்கும் நியோவிற்கும் இடையே நடக்கும் சண்டையின்போது ரயில் சென்று சேருமிடம் "லூப்" என்று சொல்லப்படுகிறது, இவற்றுடன் ஆடம்ஸ் ஸ்ட்ரீட் பிரிட்ஜ், கிணறுகள் மற்றும் ஏரிகள், பிரங்க்ளின் அண்ட் எரி, ஸ்டேட் அண்ட் பால்போ மற்றும் வெபாஷ் அண்ட் லேக் போன்ற ஊர் பெயர்கள். திரைப்படத்தின் தொடக்கத்தில் உளவாளி ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க டிரினிட்டி பயன்படுத்தும் கூரை அமைப்பு "டார்க் சிட்டி" படத் தயாரிப்பில் எஞ்சியவை, இந்தப் படங்களின் கருசார்ந்த ஒற்றுமைகளின் காரணமாக இவை குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கின்றன. "தி ஆர்ட் ஆஃப் த மேட்ரிக்ஸ்" கூற்றுப்படி, அதிரடிக் காட்சிகளில் குறைந்தது ஒரு காட்சியமைப்பு மற்றும் பல்வேறு குறுகிய காட்சிகள் இறுதியில் நீக்கப்பட்டன, இன்றுவரை அவை சேர்க்கப்படவில்லை. வச்சோவ்ஸ்கி சகோதரர்கள், சம்பந்தப்பட்ட அனைவரும் இந்தப் படத்தின் கருசார்ந்த பின்னணியை புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். உதாரணத்திற்கு, இந்தப் படத்தில் வட்டுக்களை மறைத்துவைக்க பயன்படுத்தப்பட்ட புத்தகமான, 1981ஆம் ஆண்டில் பிரெஞ்சு தத்துவவாதி ஜீன் போத்ரிலார்த் எழுதிய "சிமுலக்ரா அண்ட் சிமுலேஷன்" பெரும்பாலான முதன்மை நடிகர்கள் மற்றும் குழுவினரால் படிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. நடிகர் வில் ஸ்மித் "வைல்ட் வைல்ட் வெஸ்ட்" படத்திற்காக இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார் என்பதுடன், படத்தின் அதிரடியான புல்லட் டைம் சிறப்புக் காட்சியமைப்புகளின் மீதிருந்த சந்தேகவாதமும் இதற்கு காரணமாக இருந்தது. அந்த நேரத்தில், தான் "ஒரு நடிகனாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை" என்றும், அந்தக் கதாபாத்திரம் தனக்கு வழங்கப்பட்டிருந்தால், தான் "அதை வீணாக்கியிருப்பேன்" என்றும் பின்னாளில் தெரிவித்தார். நிக்கலஸ் கேஜும் "குடும்பக் கட்டாயத்தின்" காரணமாக இந்தக் கதாபாத்திரத்தை மறுத்துவிட்டார். கீனு ரீவ்ஸ் நடிப்பதற்கு முன்பாக, சாண்ட்ரா புல்லக் டிரினிட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார், ஏனெனில் நியோ கதாபாத்திரத்திற்கு நடிக்கவிருப்பவரைப் பற்றிய பரிசீலனை குறித்து அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தப் படத்தில், மேட்ரிக்ஸிற்குள்ளாகவே இருக்கும் குறியீடுகள் கீழ்நோக்கி-ஓடும் பச்சைநிற எழுத்துக்களாக தொடர்ந்து காட்டப்பட்டன. இந்தக் குறியீடு அரை-அகல கேனா எழுத்துக்கள் மற்றும் மேற்கத்திய லத்தீன் எழுத்துக்கள் மற்றும் எண்களின் கண்ணாடி பிம்பங்களாக உள்ளிடப்பட்டிருந்தது. ஒரு காட்சி அமைப்பில், ஒரு விண்டோவில் கீழ்நோக்கி ஓடும் வடிவம் நீக்கப்படுவது இந்தக் குறியீட்டை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. பொதுவாக, இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மேட்ரிக்ஸிற்குள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் அதனுடைய தனித்துவமான பச்சைநிறத்தை நோக்கி செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது, அதேசமயம் உண்மை உலகத்தில் அமைக்கப்படும் காட்சிகளின்போது நீல நிறத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. மேலும், சட்டக-வடிவங்கள் மேட்ரிக்ஸிற்குள்ளான காட்சிகளுக்கு அதன் செட்டுகளில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன, இது குளிர்ச்சியான, தர்க்கரீதியான மற்றும் செயற்கை இயல்புள்ள சூழ்நிலையை குறிப்பிடும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டது. இந்த "இலக்கமுறை மழை", "மேட்ரிக்ஸ்" மீது தாக்கம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட "கோஸ்ட் இன் தி ஷெல்" படத்தில் வரும் இதே விதமான கணினி குறியீ்ட்டை நினைவூட்டுவதாக இருந்தன.(கீழே பார்க்கவும்). கணினிகளுடனான இந்த பச்சை வண்ணத்தின் தொடர்பு பொதுவாக பழைய ஒரு நிற கணினி தெரிவிப்பிகளில் பச்சைக் கீற்றை தருவிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தப் படம் "புல்லட் டைம்" எனப்பட்ட கட்புல விளைவின் பயன்பாட்டை பிரபலப்படுத்தியதற்காக அறியப்படுகிறது, இது புகைப்பட கருவி சாதாரண வேகத்தில் காட்சி சுற்றி நகருவதைப் போன்று தோன்றும் மெதுவான-அசைவிலான கணநேர முன்னேற்றத்தைக் கண்டுகொள்வதற்கு பார்வையாளருக்கு உதவுகிறது. இந்த விளைவுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முறை, நிறைய எண்ணிக்கையிலான புகைப்பட கருவிகள் ஒரு பொருளை சுற்றி அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரே நேரத்தில் தூண்டப்படுகின்ற டைம்-ஸ்லைஸ் படப்பிடிப்பாக அறியப்படும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட பழமையான புகைப்படக் கலையோடு தொடர்புடையதாகும். ஒவ்வொரு புகைப்பட கருவியும் உறைநிலை-படமாக்க புகைப்பட கருவியாகுமே தவிர சலனப்பட கருவி அல்ல என்பதுடன் இது ஒளித்தோற்ற தொடருக்கு ஒரே ஒரு சட்டகத்தை மட்டுமே பங்களிப்பாக வழங்குகிறது. இந்தப் படத்தில் இருப்பதைப்போன்று, காட்சிகளின் தொடர் பார்க்கப்படும்போது, பார்வையாளர் முப்பரிமாண நிகழ்கணத்தின் இரு பரிமாண "ஸ்லைஸ்களில்" என்னவிதமான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும். இதுபோன்ற "டைம் ஸ்லைஸ்" திரைப்படத்தைப் பார்ப்பது, சிலையைச் சுற்றி நடந்தபடி அது பல்வேறு கோணங்களில் எப்படி இருக்கிறது என்பதைப் போன்ற நிஜ-வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையதாகும். உறைநிலை படமாக்க கருவிகளின் நிலைகள் எடுத்து முடிக்கப்பட்ட காட்சியில் தடங்களற்று தோன்றும் புகைப்பட கருவி சலனத்தை உருவாக்க எந்த ஒரு தடங்களற்ற வளைவிலும் மாறுபடலாம், ஒவ்வொரு புகைப்பட கருவியின் படம்பிடிக்கும் நேரமும் சற்றே மாறுபடலாம், இதனால் ஒரு சலனக் காட்சி எடுத்துமுடிக்கப்படுகிறது (எனினும் திரைப்பட நேரத்தின் மிகவும் குறுகிய காலகட்டத்திற்கும் மேலாக). "தி மேட்ரிக்ஸில்" உள்ள காட்சிகள் சில முற்றிலும் உறைநிலை கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்களோடு உள்ள "டைம்-ஸ்லைஸ்" எஃபெக்ட் அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. ஃபிலிம் இடைச்செருகல் உத்திகள் வெளிப்படையான "கேமரா சலனத்தின்" நீர்மத்தன்மையை மேம்படுத்துகின்றன. நிலையில்லாத சலனத்தை சேர்த்துக்கொள்ளும் "புல்லட் டைம்" காட்சிகளை உருவாக்க வச்சோவ்ஸ்கி சகோதரர்களாலும், கட்புல விளைவு மேற்பார்வையாளர் ஜான் கேதாவாலும் இந்த விளைவு மேற்கொண்டு விரிவாக்கப்பட்டது, இதனால் முற்றிலும் உறைநிலையில் இருப்பதைக் காட்டிலும் காட்சியை மெதுவான மாறுபடும் சலனத்தோடு இருக்கச் செய்ய முடிகிறது. மிகவும் சிக்கலான கேமரா வழிகளை நோக்கி இயந்திர கதியில் பொருத்தப்பட்ட காட்சிகளுக்கு அப்பால் நகரவும், விரும்பிய இடங்களை நோக்கி நெகிழ்வோடு நகர்த்துவதற்குமான முப்பரிமாண காட்சியாக்க திட்டமிடல் முறைகளுக்கு மானெக்ஸ் விஷூவல் எஃபெக்ட்ஸில் உள்ள என்ஜினியர்கள் முன்னோடியாக இருந்தனர். நேர்கோடற்ற இடைச்செருகல், இலக்க முறை கலப்பு மற்றும் கணினி உருவாக்கிய "மெய்நிகர்" காட்சியமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மேம்பட்ட நீர்மநிலைக் கிடைக்கிறது. இந்தத் திரைப்படம் ஃப்ரீபிஎஸ்டி கிளஸ்டர் ஃபேர்மில் முப்பரிமாணமாக்கப்பட்டது. "தி மேட்ரிக்ஸில்" வரும் புல்லட் டைம் காட்சிகளின் நோக்கம் வர்ச்சுவல் புகைப்பட கருவியில் படம்பிடிக்கப்பட்டதன்படி "பருப்பொருள் கடந்த மனம்" வகைப்பட்ட நிகழ்வுகளை படைப்பாக்கரீதியாக விளக்குவதேயாகும். இருப்பினும், இந்த அசலான தொழில்நுட்ப அணுகுமுறை முன்னூகிக்கப்பட்ட உளக்காட்சிகளை பௌதீகரீதியாக கட்டுப்படுத்துவது என்பதுடன் இறுதி முடிவானது உண்மையான மெய்நிகர் கருவியின் திறன்களை மட்டுமே வெளிக்காட்டுகிறது. "தி மேட்ரிக்ஸின்" ' புல்லட் டைம் காட்சிகளில் ஃபோட்டோகிராமடிக் மற்றும் பிம்ப-அடிப்படையிலான கணினி-உருவாக்கிய பின்னணி அணுகுமுறைகளின் வளர்ச்சியானது, பின்னர் வந்த தொடர்களான "தி மேட்ரிக்ஸ் ரீலோடேட்" மற்றும் "தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்" ஆகியவற்றில் பின்னாளைய புத்தாக்கங்களை வெளிப்படுத்துவதன் களமாக அமைந்தது. மெய்நிகர் படமாக்கம் (கணிப்பொறி உருவாக்கிய படங்கள்-கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் முப்பரிமாண உருவாக்கம்) மற்றும் ஹை-டெஃபினிஷன் "யுனிவர்சல் படப்பிடிப்பு" நிகழ்முறை ஆகியவை உறைநிலை கேமரா தொடர்களை பயன்படுத்துவதை முற்றிலும் மாற்றியமைத்தது, இதனால் "மெய்நிகர் கேமராக்களை" மிகவும் அருகாமையில் உணர முடியும். இந்தத் திரைப்படத்தின் இசை டான் டேவிஸால் அமைக்கப்பட்டது. இந்தப் படத்தில் கண்ணாடிகள் தொடர்ந்து தோன்றுவதை அவர் கவனித்திருந்தார்: நீலம் மற்றும் சிவப்பு மாத்திரைகளின் பிம்பங்கள் மார்பியஸின் கண்ணாடிகளில் காணப்பட்டன; நியோ உளவாளிகளால் பிடித்துச் செல்லப்படுவகு டிரினிட்டி மோட்டார்சைக்கிளினுடைய முன்பக்க கண்ணாடியின் வழியாக காட்டப்பட்டது; உடைந்த கண்ணாடி தாமாகவே ஒட்டிக்கொள்வதை நியோ உணர்கிறார்; மேசைக்கரண்டி வளைகையில் அதில் காணப்படும் பிம்பங்கள் சிதைகின்றன; மிக உயரமான கட்டிடத்தை அணுகும் ஹெலிகாப்டரின் பிரதிபலிப்புகள் கட்டிடத்தில் காணப்படுகின்றன. (இந்தத் திரைப்படம் "த்ரோ தி லுக்கிங் கிளாஸ்" என்று தொடர் தலைப்பிடப்பட்ட "அலீஸின் அற்புத உலக சாகசங்கள்" என்ற புத்தகத்தை தொடர்ந்து குறிப்புகளாக காட்டுகிறது.) டேவிஸ் தனது இசையை உருவாக்கும்போது இந்த பிரதிபலிப்புகளின் கருப்பொருட்களில் கவனத்தை செலுத்தினார், ஆர்க்கெஸ்ட்ராவிற்கு இடையிடையே மாற்றியமைத்ததோடு எதிர்துருவ கருத்தாங்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சி செய்தார். டேவிஸின் இசைக்கும் மேலாக "தி மேட்ரிக்ஸ்" இசைத்தொகுப்பு ரம்ஸ்டீன், ராப் டோகன், ரேஜ் அகெய்ன்ஸ்ட் தி மெஷின், புரப்பல்லர்ஹெட்ஸ், மினிஸ்ட்ரி, டெஃப்டோன்ஸ், தி ப்ராடிஜி, ராப் ஜோம்பி, மீட் பீட் மேனிஃபெஸ்டோ, மற்றும் மர்லின் மேன்ஸன் ஆகியோரின் நாடகங்களில் இருந்து வந்த இசையையும் சேர்த்துக்கொண்டது. டூ்க் எலிங்டன், டான்ஜோ ரெய்ன்ஹார்ட் மற்றும் மாஸிவ் அட்டாக் போன்ற மற்றவை இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன, ஆனால் இசைத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. "தி மேட்ரிக்ஸ்" மார்ச் 31, 1999ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்டது. இது வட அமெரிக்காவில் 171 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது, வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபீஸ்களில் 292 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாகவும், உலகம் முழுவதிலும் 463 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியது, பின்னாளில் இது அமெரிக்காவில் மட்டும் மூன்று மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையான முதல் டிவிடி என்ற பெயரைப் பெற்றது. மொத்த மேட்ரிக்ஸ் தொகுப்பு ஹெச்டி டிவிடியாக மே 22, 2007 இல் வெளியிடப்பட்டது, புளூரே அக்டோபர் 14, 2008 இல் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பத்து வருடங்களுக்குப் பின்னர், மார்ச் 31, 2009 இல் டிஜிபுக் வடிவத்தில் புளூரேயில் பத்தாவது ஆண்டுநிறைவாக் வெளியிடப்பட்டது. "தி மேட்ரிக்ஸ்" பொதுவாகவே, ஹாங்காங் அதிரடி சினிமா, புத்தாக்க விஷுவல் எஃபெக்ட் மற்றும் கற்பனையாக்க காட்சியமைப்பு ஆகியவற்றின் "புனைதிறன்மிக்க" கலவையோடு வழங்கப்பட்டிருப்பதாக சினிமா விமர்சகர்களிடமிருந்து ஒருமனதான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 122 விமர்சனங்களின் மாதிரிகள் அடிப்படையில், 7.4/10 என்ற சராசரி விகிதத்தோடு 86 சதவிகித விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கியிருக்கின்றனர் என்று "ரோட்டன் டொமாட்டோஸ்" தெரிவித்திருக்கிறது. 28 மாதிரிகளின் அடிப்படையில், 68 சதவிகித தேர்ந்தெடுத்த விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தைத் தெரிவித்திருக்கின்றனர் என்று இந்த வலைத்தளம் தெரிவித்திருக்கிறது. மையநீரோட்ட விமர்சனங்களிலிருந்து 100க்கு என்ற விகிதத்தில் இயல்பாக்கப்பட்ட தரவரிசையை வழங்கிய "மெட்டாகிரிட்டிக்" கில், 35 விமர்சனங்களில், இதனுடைய டிவிடி வெளியீடு சார்ந்த 73 என்ற சராசரியை இந்தப் படம் பெற்றிருக்கிறது. "வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் செய்தியில் அசல்தன்மை இல்லையென்று ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் புத்துருவாக்க முறைகளைத் தொடங்கியிருக்கிறார்கள் எனலாம்," என்று "சைட் அண்ட் சவுண்டில்" விமர்சித்திருந்த பிலிப் ஸ்ட்ரிக், இந்தத் திரைப்படத்தின் விவரங்களுக்காகவும், இதனுடைய "ஆச்சரியப்படுத்தும் விதத்திலான பிம்பங்களின் வெளிப்பாட்டிற்காகவும்" பாராட்டினார். ரோஜர் எபர்ட் இந்தப் படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் அனுமானங்களுக்காக பாராட்டினார், ஆனால் மூன்றாவது பகுதி அதிரடியிலேயே கவனம் செலுத்தியதை விரும்பவில்லை. அதேபோன்று, "பொழுதுபோக்குரீதியான புனைதிறனுள்ள" வெவ்வேறு உண்மைகளுக்கு இடையே மாறிச்செல்வதற்காகவும், ஹ்யூகோ வீவிங்கின் "வசீகரமான விசித்திர" நடிப்பு, மற்றும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்காகவும் "டைம் அவுட்" பாராட்டியிருந்தது, ஆனால் "உறுதியளிக்கப்பட்ட அனுமானத்திலிருந்து இந்தப் படம் வழக்கமான அதிரடி படமாக மாறுகையில் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுள்ளது... இதுவும் மற்றொரு நீளமான, உயர் கருத்தாக்கமுள்ள உணர்ச்சி நாடகம்" என்று முடிவுக்கு வந்தது. மற்ற விமர்சகர்கள் ஒப்பீ்ட்டுரீதியாக நகைச்சுவையின்மை மற்றும் திரைப்படத்தின் சுய-மோகம் ஆகியவற்றிற்காக விமர்சித்திருந்தனர். 2001ஆம் ஆண்டில், "தி மேட்ரிக்ஸ்" அமெரிக்க திரைப்படக் கல்லூரியின் "100 வருடங்கள்...100 திரில்கள்" பட்டியலில் 66வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. 2007ஆம் ஆண்டில், கடந்த 25 வருடங்களில் சிறந்த அறிவியல் புனைகதை படைப்பு என்று "எண்டர்டெயிண்மெண்ட் வீக்லி" "தி மேட்ரிக்ஸை" அழைத்தது. "எல்லா நேரத்திலும் சிறந்த 500 படங்கள்" என்ற எம்பயரின் தரவரிசையில் இந்தப் படம் 39 வது இடத்தைப் பெற்றிருந்தது. சில அறிவியல் புனைகதை படைப்பாளிகள் இந்தப் படத்தை விமர்சித்திருந்தனர். சைபர்பன்க் புனைவில் முக்கியமானவரான வில்லியம் கிப்ஸன் இந்தப் படத்தை "நீண்டநாட்களாக நான் உணராத கபடமில்லாத மகிழ்ச்சியான அனுபவம்" என்றதோடு "நியோ நிச்சயமாக என்னுடைய எல்லா காலத்திற்குமான அறிவியல் புனைகதை கதாநாயகன்" என்றார். ஜோஸ் வேடன் இந்தப் படத்தை "என்னுடைய நம்பர் ஒன்" என்றதோடு இதனுடைய கதைசொல்லல், கட்டுமானம் மற்றும் ஆழம் ஆகியவற்றிற்காக பாராட்டினார், அத்துடன் முடிவாக "எந்த அளவிற்கு நீங்கள் இதற்கு கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு இது சிறப்பானது" என்றார். பட இயக்குநர் டேரன் அரனோஃப்ஸ்கி, "நான் "மேட்ரிக்ஸ்" படத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்[...] நான் நினைத்தேன்,'இபபோதெல்லாம் எந்தவிதமான அறிவியல் புனைகதை திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்?' வச்சோஸ்வ்கி சகோதரர்கள் அடிப்படையிலேயே 20 ஆம் நூற்றாண்டின் எல்லாவிதமான அறிவியல் புனைகதை கருத்தாக்கங்களையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள், அவற்றை இந்த கிரகத்தில் இருக்கும் அனைவரும் நுகரும் விதமாக சுவைமிக்க பாப் கலாச்சார சாண்ட்விட்சாக மாற்றிவிட்டனர்." இயக்குநர் எம். நைட் ஷியாமளன் வச்சோஸ்வ்ஸ்கி சகோதரர்களுக்கு இந்தப் படத்தின் மீதிருந்த பேரார்வத்தை பாராட்டுகிறார், "நீங்கள் "மேட்ரிக்ஸைப்" பற்றி நினைப்பது எதுவாக இருந்தாலும், அது அங்கே காட்சியாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வம் அப்படிப்பட்டது! அவர்கள் விவாதித்துக்கொள்வதை நீங்களே பார்க்கலாம்!" "மேட்ரிக்ஸ்" திரைப்படம் திரைப்பட எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் எடிட்டிங், விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒலியமைப்பு ஆகியவற்றிற்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது. 1999 இல், இது சிறந்த அறிவியல் புனைகதை திரைப்படம் மற்றும் சிறந்த இயக்கம் ஆகியவற்றிற்கான சாட்டர்ன் விருதை வென்றது. "மேட்ரிக்ஸ்" திரைப்படம் சிறந்த ஒலியமைப்பு மற்றும் விஷூவல் எஃபெக்ட்களில் சிறந்த சாதனை ஆகியவற்றிற்கான பாஃப்தா விருதுகளை வென்றதோடு, கூடுதலாக ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் எடிட்டிங் பிரிவுகளில் பரிந்துரைகளையும் பெற்றது. சமீபத்திய திரைப்படங்கள், இலக்கியம், வரலாறு மற்றும் வேதாந்தம், அத்வைதம் இந்துயிசம், யோகா வசிஷ்டா இந்துயிசம், யூதயிசம், மெசய்யானிசம், பௌத்தம், நாஸ்டிசிசம், கிறிஸ்துவம், இருத்தலியம், நிகிலிஸம், மற்றும் மறைபொருள் நற்பேறு ஆகியவை உள்ளிட்ட தத்துவங்களை "மேட்ரிக்ஸ்" திரைப்படம் பார்வைக்குறிப்புகளாக உருவாக்கியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் அனுமானம் 0}பிளாட்டோவின் ஆலிகரி ஆஃப் தி கேவ், எட்வின் அபாட் அபாட்டின் ஃபிளாட்லேண்ட், ரெனே தெகார்த்தேவின் ஈவிள் ஜூனியஸ், ஜார்ஜஸ் குர்ட்ஜிஃபின் "தி ஸ்லீப்பிங் மேன்" , காண்டின் ஃபினோமினனுக்கு எதிரான நோமினன், மற்றும் பிரைன் இன் எ வாட் சிந்தனை பரிசோதனை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன, அதே சமயத்தில் ஜேன் போத்ரிலார்த்தின் "சிமுல்கரா அண்ட் சிமுலேஷன்" புத்தகம் இந்தத் திரைப்படத்தில் தோன்றுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிலிப் கே.டிக், மற்றும் வில்லியம் கிப்ஸன் எழுதிய "நியூரோமான்ஸர்" போன்றோரின் சைபர்பன்க் போன்ற சில படைப்புக்களின் ஒப்புமைகளும் காணப்படுகின்றன. பின் நவீனத்துவ சிந்தனையில் "மேட்ரிக்ஸின்" பொருள் விளக்கங்கள், கடுமையாக வணிகமயமாக்கப்பட்டுள்ள, ஊடகங்களால் இயக்கப்படுகின்ற, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், தற்கால அனுபவத்திற்கான ஒரு உருவகமாக்கமே இந்தப் படம் என்பதை நிரூபிப்பதற்கு தொடர்ந்து போத்ரிலார்த்தின் தத்துவத்தை இது பார்வைக் குறிப்பாக தருகிறது. 1980களின் பிற்பகுதியிலிருந்து புத்தகத் தொடர்களிலும் கட்டுரைகளிலும் விளக்கிக் கூறப்பட்ட பிராச்சா எடினரின் மேட்ரிக்ஸியல் கோட்பாட்டின் தாக்கம் கிரைசில்டா பொல்லக் போன்ற கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வர்ஃபெல் போன்ற திரைப்படக் கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களின் ஊடாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. ஜப்பானிய இயக்குநரான மமரு ஓஷியின் "கோஸ்ட் இன் தி ஷெல்" ஒரு வலுவான தாக்கமாகும். தயாரிப்பாளரான ஜோயல் சில்வர், வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் தனக்கு அதனுடைய உயிர்ச்சித்திரத்தைக் காட்டி, "இதை நாங்கள் உண்மையாக்க விரும்புகிறோம்" என்று கூறி "தி மேட்ரிக்ஸிற்கான" தங்களுடைய நோக்கத்தை முதல்முறையாக விளக்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். "கோஸ்ட் இன் தி ஷெல்" தயாரிப்பாளரான, புரடக்ஸன் ஐ.ஜியைச் சேர்ந்த மித்ஷுஷிகா இஷிகாவா, இந்த உயிர்ச்சித்திரப் படத்தின் உயர்-தரமான காட்சியமைப்புகள் வச்சோவ்ஸ்கி சகோதரர்களுக்கு ஏறபட்ட தாக்கத்திற்கு வலுவான மூலாதாரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர், "...சைபர்பன்க் திரைப்படங்கள் மூன்றாம் நபருக்கு விளக்கிச் சொல்ல மிகவும் சிக்கலானவை. சினிமா ஸ்டுடியோக்களுக்கு எடுத்துச்செல்ல எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு சிக்கலானதாக இருக்கும் வகையைச் சார்ந்ததாக "தி மேட்ரிக்ஸும்" இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். "கோஸ்ட் இன் தி ஷெல்" அமெரிக்காவில் அங்கீகாரம் பெறத் தொடங்கியதிலிருந்து வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இதை ஒரு மேம்படுத்தல் கருவியாக பயன்படுத்திக்கொண்டனர். "மேட்ரிக்ஸிற்கும்" 1990களின் பிறபகுதியில் வெளிவந்த "ஸ்ட்ரேன்ஞ் டேஸ்" , "டார்க் சிட்டி" மற்றும் "தி ட்ரூமன் ஷோ" போன்ற மற்ற திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். கிராண்ட் மாரிசனின் சித்திரக்கதை தொடரான "தி இன்விஸிபிள்ஸ்" உடனுடம் ஒப்பீடுகள் செய்யப்பட்டன; வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இந்தத் திரைப்படத்தை உருவாக்க தன்னுடைய படைப்பைப் பற்றி குறிப்பிடாமலேயே விட்டுவிட்டனர் என்று மாரிசன் நினைத்தார். மேலும், இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்தினுடைய ஒற்றுமை நீண்டநாட்களுக்கு ஒளிபரப்பான "டாக்டர் ஹூ" தொடரில் வரும் சாதனத்திற்கு பொருந்தக்கூடியதாக இருந்ததும் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இருப்பதைப் போன்று, இந்தத் தொடரின் மேட்ரிக்ஸ் (1976 ஆம் ஆண்டில் வெளியான "தி டெட்லி அஸாஸின்" என்ற தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது) ஒருவர் தனது தலையில் இணைக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி நுழையக்கூடிய பெருந்திரளான கம்ப்யூட்டர் அமைப்பாகும், இது உண்மை உலகத்தின் வெளிப்பாடுகளைக் காணவும், பௌதீக விதிகளை மாற்றுவதற்கும் பயனர்களை அனுமதிக்கிறது; ஆனால் அங்கே கொல்லப்பட்டால், அவர்கள் உண்மையில் இறந்துவிடுவார்கள். "தி மேட்ரிக்ஸ்" திரைப்படம் ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் அதிரடிப் படங்களின் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்காப்புக் கலை திரைப்படங்களை தயாரித்து புகழடைந்த ஹாங்காங் அதிரடி சினிமாவிலிருந்து பிரபலமான சண்டைப் பயிற்சியாளர்களை (யோன் வூ-பிங் போன்றவர்கள்)சினிமா சண்டைக் காட்சிகளுக்கு வேலைக்கமர்த்தும் புதிய முறையை இது உருவாக்கியது. "தி மேட்ரிக்ஸ்" திரைப்படத்தின் வெற்றி, இதேபோன்ற நுட்பங்களுடன் கூடிய சண்டைக் காட்சிகளை விரும்பும் திரைப்படைப்பாளிகளின் அதிக தேவைக்கு உரியவர்களாக இந்த பயிற்சியாளர்களையும் அவர்களுடைய உத்திகளையும் உருவாக்கியது: உதாரணத்திற்கு, வயர் ஒர்க் "எக்ஸ்-மென்" (2000) திரைப்படத்திற்கு பணியமர்த்தப்பட்டார், யோன் வூ-பிங்கின் சகோதரரான யோன் சேங்-யான் "டேர்டெவில்" (2003) திரைப்படத்திற்கு பயிற்சியாளராக இருந்தார். "தி மேட்ரிக்ஸ்" திரைப்படத்தைத் தொடர்ந்து வந்த படங்கள் ஸ்லோ மோஷன், ஸ்பின்னிங் கேமராக்கள், கதாபாத்திரத்தை உறைநிலையில் வைக்க அல்லது வேகத்தைக் குறைக்க புல்லட் டைம் எஃபெக்ட் மற்றும் கேமரா அவர்களைச் சுற்றி வருவது ஆகியவற்றை ஏராளமாக பயன்படுத்தினர். தோட்டாக்களின் நகர்வை தனிப்படுத்திக் காட்டுவதற்கு நேரத்தை போதுமான அளவிற்கு குறைத்துக்கொள்ளும் திறனானது சில வீடியோ கேம்களில் மைய ஆட்ட இயக்கமாக பயன்படுத்தப்பட்டது, உதாரணத்திற்கு, இந்த சிறப்பம்சம் வெளிப்படையாகவே "பு்லலடம் டைம்" என்று குறிப்பிடப்பட்ட "மாக்ஸ் பெய்ன்" போன்றவை. "தி மேட்ரிக்ஸ்" திரைப்படத்தின் சிறப்பம்சமான ஸ்பெஷல் எஃபெக்டானது, ஸ்கேரி மூவி"," Deuce Bigalow: Male Gigolo", " ஷ்ரெக்"," மெய்ன் ஹுன் நா" போன்ற நகைச்சுவைத் திரைப்படங்கள் மற்றும்" Kung Pow: Enter the Fist"; " தி சிம்ப்ஸன்" மற்றும் " ஃபேமிலி கை" போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்; " எஃப்எல்சிஎல்" என்ற ஓவிஏ தொடர்; மற்றும் " கான்கர்ஸ் பேட் ஃபர் டே" போன்ற ஒளித்தோற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் பலமுறை நையாண்டி செய்யப்பட்டுள்ளது." இந்தப் படத்தில் மையநீரோட்ட வெற்றி "தி மேட்ரிக்ஸ் ரீலோடட்" மற்றும் "தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்" ஆகிய இரண்டு தொடர்களை உருவாக்க காரணமானது. இவை அடுத்தடுத்து ஒரே தவணையில் படம்பிடிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக 2003ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. முதல் படத்தின் அறிமுகக் கதை பெரிய அளவிலான இயந்திர ராணுவம் மனித உறைவிடமான ஸியானைத் தாக்குவதிலிருந்து தொடர்கிறது. நியோவும், மீட்பராக தன்னுடைய பங்கு மற்றும் அவர் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற தீர்க்கதரிசனம் ஆகியவற்றோடு மேட்ரிக்ஸின் வரலாற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்கிறார். இந்தத் தொடர்கள் நீளமான மற்றும் மிகவும் மூர்க்கமான அதிரடிக் காட்சிகளை சேர்த்துக்கொண்டுள்ளது என்பதுடன், புல்லட் டைம் மற்றும் விஷூவல் எஃபெக்டுகளில் மேம்பாடுகளையும் கொண்டிருந்தது. ஒன்பது உயிர்ச்சித்திரமாக்க குறும்படங்களின் தொகுப்பான "அனிமேட்ரிக்ஸூம்" வெளியிடப்பட்டது, இதில் பெரும்பாலானவை இந்த மூன்று தொடர்வரிசைக்கும் வலுவான தாக்கமாக விளங்கிய ஜப்பானிய உயிர்ச்சித்திர பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த "அனிமேட்ரிக்ஸ்" வச்சோவ்ஸ்கி சகோதரர்களால் மேற்பார்வையிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இவற்றில் நான்கு பாகங்களை மட்டுமே எழுதினர் என்பதோடு இவற்றில் எதையும் அவர்கள் இயக்கவில்லை; இந்த புராஜக்டில் பெரும்பாலானவை உயிர்ச்சித்திரமாக்க உலகில் குறிப்பிடத்தகுந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகும். இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இவற்றில் நான்கு வெளியிடப்பட்டன; இவற்றில் ஒன்று வார்னர் பிரதர்ஸ். திரைப்படமான "டிரீம்கேட்சரோடு" திரையரங்குகளில் காட்டப்பட்டது; மற்றவை ஒன்பது குறும்படங்களுடன் சேர்த்து டிவிடியாக வெளியிடப்பட்டன. இந்தப் படங்களில் சில இவற்றின் டிவிடி வெளியீ்ட்டிற்கு முன்பாக பிரிட்டன் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. இந்த உரிமை மூன்று ஒளித்தோற்ற விளையாட்டுகளையும் உள்ளிட்டிருந்தது: "எண்டர் தி மேட்ரிக்ஸ்" (2003), இது இந்த வீடியோ கேமிற்கென்றே எடுக்கப்பட்ட துணுக்குக் காட்சிகளைக் கொண்டிருந்ததோடு "தி மேட்ரிக்ஸ் ரீலோடட்" எடுக்கப்படுவதற்கு முன்னும் எடுக்கப்பட்டபோதுமான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக தருகிறது; "தி மேட்ரிக்ஸ் ஆன்லைன்" (2004) "தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸிற்" கு பின்னரும் தொடர்கின்ற கதையைக் கொண்டிருக்கும் ஒரு எம்எம்ஓஆர்பிஜி;மற்றும்"The Matrix: Path of Neo" , நவம்பர் 8, 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இது இந்த மூன்று படங்களின் ஊடாகவும் நியோ மேற்கொள்ளும் பயணத்தின் அடிப்படையிலான சூழ்நிலைகளில் கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது. "தி மேட்ரிக்ஸ்" உலகில் அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதை தொழிலில் பிரபலமானவர்களால் எழுதப்பட்டும் வரையப்பட்டும் உள்ள இலவச சித்திரக்கதை தொகுப்புக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கின்றன. இந்த சித்திரக்கதைகளுள் சில தி மேட்ரிக்ஸ் காமிக்ஸ் என்ற பெயரில் இரண்டு அச்சிடப்பட்ட தொகுப்புகளாக கிடைக்கின்றன. ஹெட்ஜ் நிதி ஹெட்ஜ் நிதி என்பது, நீண்டகாலத்திற்கு மட்டுமான முதலீட்டு நிதிகளை விட பரந்த அளவிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு நிதி என்பதுடன், பொதுவாக இதனுடைய முதலீட்டு நிர்வாகிக்கு செயல்திறன் கட்டணத்தை செலுத்துவதும் ஆகும். ஒவ்வொரு ஹெட்ஜ் நிதியும் அது மேற்கொள்ளும் முதலீட்டு வகைகள் மற்றும் முறைகளைத் தீர்மானிக்கின்ற தனதேயான முதலீட்டு வியூகங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு பிரிவாக உள்ள ஹெட்ஜ் நிதி பங்குகள், கடன் மற்றும் சரக்குகள் உள்ளிட்ட பரந்த அளவிலான முதலீடுகளில் முதலீடு செய்கிறது. இந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல், பல்வேறுவிதமான முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் முதலீடுகளில், குறிப்பாக குறுகிய விற்பனை மற்றும் தருவிப்புகள் ஆகியவற்றில், இணைந்திருக்கும் சில அபாயங்களிலிருந்து தடுப்பதே ஹெட்ச் நிதிகள் ஆகும். குறிப்பாக குறுகிய விற்பனை மற்றும் தருவிப்புகள் ஆகியவற்றில். இருப்பினும் "ஹெட்ஜ் நிதி" என்ற பதம் அவற்றின் முதலீடுகளைப் பாதுகாக்காத சில குறிப்பிட்ட நிதிகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது, குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் எனில், அவற்றின் முதலீடுகளிலிருந்து மறுபயனாக கிடைப்பவற்றை அதிகரிக்கும் எதிர்பார்ப்போடு, அபாயத்தை குறைப்பதற்கு பதிலாக அவற்றை அதிகரிக்கச் செய்யும் குறுகிய விற்பனை மற்றும் பிற "அபாய தவிர்ப்பு" முறைகளைப் பயன்படுத்தும் நிதிகளைக் குறிக்கிறது. ஹெட்ஜ் நிதிகள் வரம்பிற்குட்பட்ட தொழில்முறையாளர்கள் அல்லது வசதியான முதலீட்டாளர்களுக்கு மட்டுமே வகைமாதிரியாக திறந்திருக்கிறது. இது, குறுகிய விற்பனை, தருவிப்புகள், லீவரேஜ்கள், கட்டண அமைப்பு மற்றும் நிதியில் உள்ள வட்டியின் நீர்மத்தன்மை ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்துகின்ற ஒழுங்குமுறைகளிலிருந்து பல நீதித்துறை வரம்புகளிலும் இவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கின்றன. செயல்திறன் கட்டணம் மற்றும் நிதியின் வரம்பில்லாத அமைப்போடு வழக்கமான முதலீட்டு நிதியிலிருந்து ஹெட்ஜ் நிதியை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஹெட்ஜ் நிதியின் மொத்த சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்களுக்கு இருக்கலாம் என்பதுடன், இந்த நிதியின் நிகர சொத்து லீவரேஜின் காரணமாக இன்னும் வழக்கமான உயர்நிலையிலேயே இருக்கிறது. அதிக லாபமுள்ள தரநிலைகள் மற்றும் துன்புறுத்தும் கடனோடு தருவிப்புகளுக்குள்ளான வர்த்தகம் போன்ற சில குறிப்பிட்ட சிறப்புச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூகவியலாளர், எழுத்தாளர் மற்றும் நிதித்துறை பத்திரிக்கையாளரான ஆல்ஃபிரட் டபிள்யூ.ஜோன்ஸ் 1949 இல் முதல் ஹெட்ஜ் நிதியை உருவாக்கிய பெருமைக்குரியவராவார். தனிநபர் சொத்தினுடைய விலை மாறுபாடுகள் ஒட்டுமொத்த சந்தையின் காரணமாக ஏற்படும் ஆக்கக்கூறாகவும், சொத்தானது தாமாகவே நிகழ்த்திக்கொள்ளும் செயல்திறனின் காரணமாக ஏற்படும் ஆக்கக்கூறாகவும் பார்க்கப்படலாம் என்று கருதினார். ஒட்டுமொத்த சந்தை மாறுபாட்டின் விளைவையும் சமன்படுத்துவதற்கு, சந்தையைவிட சொத்து வலுவானதாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்தவரினுடைய சொத்துக்களை வாங்கியும், சந்தையைவிட பலவீனமடையும் என்று எதிர்பார்த்த குறுகியகால சொத்துக்களை விற்பனை செய்தும் அவர் தன்னுடைய பங்குப் பட்டியலை சமன்செய்துகொண்டார். ஒட்டுமொத்த சந்தையின் காரணமாக ஏற்படும் விலை மாறுபாடுகள் தணிக்கப்படக்கூடியவை என்பதை அவர் கண்டார், ஏனென்றால், ஒட்டுமொத்த சந்தையும் அதிகரித்தால், குறுக்கப்பட்ட சொத்துக்களின் மீதான நஷ்டம் வாங்கப்பட்ட சொத்துக்களின் மீது கிடைக்கும் கூடுதல் லாபத்தினால் தணிக்கப்படும். ஒட்டுமொத்த சந்தை மாறுபாடுகளின் காரணமாக ஏற்படும் அபாயத்தின் ஒரு பகுதி 'தவிர்க்கப்படுகிறது' என்பதால் இது ஹெட்ஜ் நிதி ஆனது. மைய புள்ளிவிவரத்துறை இல்லாதது, ஹெட்ஜ் நிதிகளின் ஒற்றை வரையறையின்மை, மற்றும் இந்தத் துறையின் வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக தொழில்துறை அளவின் மதிப்பீடு பரவலாக மாறுபடுகிறது. அளவீட்டின் ஒரு பொதுவான குறிப்பானாக, இந்த தொழில்துறை 2008 ஆம் ஆண்டு கோடையில் இது உச்சத்தில் இருந்தபோது ஏறத்தாழ 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இது கையாண்டிருக்கலாம். இந்த கடன் துன்பம் வர்த்தக இழப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்களால் நிதிகளிலிருந்து சொத்துக்கள் திரும்பப்பெறப்பட்டது ஆகியவற்றின் கலவையான எதிர்விளைவால் இது சொத்துக்கள் நிர்வாகத்தின் கீழ் (ஏயுஎம்) வருவதற்கு காரணமாக அமைந்தது. ஒரு ஹெட்ஜ் நிதி நிர்வாகியானவர், நிர்வாக கட்டணம் மற்றும் செயல்திறன் கட்டணம் (ஊக்கத்தொகை கட்டணம் என்றும் அறியப்படுவது) ஆகிய இரண்டையும் நிதியிலிருந்து வகைமாதிரியாகப் பெற்றுக்கொள்வார். ஒரு வகைமாதிரியான மேலாளர் "2 மற்றும் 20" என்ற கட்டணத்தை வசூலிப்பார், இது ஒவ்வொரு ஆண்டும் மொத்த சொத்து மதிப்பில் 2 சதவிகித நிர்வாகக் கட்டணத்தையும், நிதியின் லாபத்தில் 20 சதவிகித செயல்திறன் கட்டணத்தையும் குறிக்கிறது. மற்ற முதலீட்டு நிதிகளுடன், இந்த நிர்வாக கட்டணமானது நிதியின் மொத்த சொத்து மதிப்பின் சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. நிர்வாகச் செலவுகள் வருடத்திற்கு, 2 சதவிகிதம் என்ற நிரந்தர அளவுடன் 1 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கிறது. நிர்வாகக் கட்டணங்கள் வழக்கமாக வருடாந்திர சதவிதமாக வெளிப்படுத்தப்படுகின்றன ஆனால் மாதாந்திரமாகவோ அல்லது காலாண்டு முறையிலோ கணக்கிடப்படுகின்றன. நிர்வாகியின் செயல்பாட்டுச் செலவை சமாளிப்பதற்கான நிர்வாகச் செலவிற்கு பெரும்பாலான ஹெட்ஜ் நிதி நி்ர்வாகிகள் வழங்கும் தொழில் மாதிரிகள், ஊழியர்களின் போனஸிற்கான செயல்திறன் கட்டணத்தை விட்டுவிடுகின்றன. இருப்பினும், பெரிய நிதிகளில், நிர்வாகக் கட்டணங்கள் நிர்வாகியின் லாபத்தினுடைய குறிப்பிடத்தக்க பங்கினை உருவாக்கித் தருகின்றன. செயல்திறன் கட்டணங்கள் (அல்லது "ஊக்கத்தொகை கட்டணங்கள்") ஹெட்ஜ் நிதியின் குணவியல்புகளைத் தீர்மானிப்பவற்றுள் ஒன்றாகும். நிர்வாகியின் செயல்திறன் கட்டணம் நிதியின் லாபங்களின் சதவிகிதத்தில் கணக்கிடப்படுகிறது, வழக்கமாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்படாத லாபங்களிலிருந்து. லாபங்களை உருவாக்கிக்கொள்ள நிர்வாகிக்கு ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம், நேரடிக் கட்டணங்கள் செய்வதைக் காட்டிலும் செயல்திறன் கட்டணங்கள் நிர்வாகி மற்றும் முதலீட்டாளின் அக்கறைகள் மிக நெருக்கமாக ஒன்றுபடுகின்றன. பெரும்பாலான நிர்வாகிகளின் தொழில் மாதிரிகளில், செயல்திறன் கட்டணமானது ஊழியர்களின் போனஸ்களுக்காக பெரிய அளவிற்கு கிடைத்துவிடுகின்றன என்பதோடு இதனால் நன்றாக செயல்படும் மேலாளர்களுக்கு அதிகபட்ச அளவிற்கு பயன்தரக்கூடியதாகவும் இருக்கும். சில பதிப்பகங்கள் உயர்பதவியிலிருக்கும் ஹெட்ஜ் நிதி நிர்வாகிகளின் வருவாய்களுடைய வருடாந்திர மதிப்பீடுகளை பதிப்பித்திருக்கின்றன. வகைமாதிரியாக, ஹெட்ஜ் நிதிகள் செயல்திறன் கட்டணமாக வருவாயில் 20 சதவிகிதத்திற்கு விதிக்கின்றன. இருப்பினும், இந்த அளவு அதிக கட்டணம் விதிக்கும் மேலாளர்களையே பெரும்பாலும் குறிக்கிறது. உதாரணத்திற்கு ஸ்டீவன் கோஹனின் எஸ்ஏசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் 35 முதல் 50 சதவிகிதம் வரையிலான செயல்திறன் கட்டணங்களை விதிக்கிறது, ஜிம் சைமண்ஸின் மெடாலியன் ஃபண்ட் 45 சதவிகித செயல்திறன் கட்டணம் விதிக்கிறது. செயல்திறன் கட்டணம் பலபேராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது, இதில் முதலீட்டாளர் வாரன் பஃபட்டும் ஒருவராவார், இவர் பங்கு இழப்பீட்டிற்கு எந்த ஒரு வாய்ப்பையும் வழங்காமல் லாபத்தில் பங்கேற்க நிர்வாகிகளை அனுமதிப்பதன் மூலம், செயல்திறன் கட்டணங்கள் உயர் அளவிலான நீண்டகால வருவாய்களை இலக்காக கொள்வதைக் காட்டிலும் அதிகப்படியான அபாயமுள்ள விஷயங்களை கையாள நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது என்று கருதுகிறார். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்தும் முயற்சியில் கட்டணங்கள் வழக்கமாக உயர் குறியீ்ட்டு அலகால் வரம்பிற்குட்படுத்தப்பட்டன. ஹெட்ஜ் நிதி ஆதாய அமைப்பு அதிகமும் கவர்ச்சியானதாக இருக்கையில் ஹெட்ஜ் நிதிகளை "... பிரத்யேகமான சொத்து வகையினமாக அல்லாமல் பிரத்யேகமான 'கட்டண முறையாக'" பார்ப்பதே சிறந்தது என்று நகைச்சுவையாக சொல்லப்படுவதுண்டு. ஒரு உயர் குறியீட்டு அலகு (அல்லது "நஷ்டம் மாற்றித்தரப்படுதல் நிபந்தனை") செயல்திறன் கட்டண கணக்கீட்டிற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது. நிதியானது முன்னதாக எட்டிய அதிகபட்ச மொத்த சொத்து மதிப்பிற்கும் அதிகமான நிதியின் மொத்த சொத்து மதிப்பில் (என்ஏவி) ஏற்படும் அதிகரிப்புகளில் மட்டுமே நிர்வாகி செயல்திறன் கட்டணத்தைப் பெறமுடியும் என்பதையே இது குறிக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு நிதி புதிய சொத்து மதிப்பில் 100 அமெரிக்க டாலர்களுக்கு வெளியிடப்படுகிறது என்போம், பின்னர் முதல் ஆண்டில் அதன் மதிப்பு 120 அமெரிக்க டாலர்களுக்கு உயர்கிறது என்றால், செயல்திறன் கட்டணமானது 20 அமெரிக்க டாலர்கள் வருவாயில் செலுத்தப்பட வேண்டும். அடுத்த வருடத்தில் அது 110 அமெரிக்க டாலர்களுக்கு குறைகிறது என்றால் கட்டணங்கள் செலுத்தப்பட மாட்டாது. மூன்றாவது வருடத்தில் மொத்த சொத்து மதிப்பு 130 அமெரிக்க டாலர்களுக்கு உயர்கிறது என்றால், அந்த ஆண்டில் 110 இல் இருந்து 130 அமெரிக்க டாலர்களுக்கு உயர்ந்த முழு வருவாயைக் காட்டிலும் 120 இல் இருந்து (உயர் குறியீ்டடு அலகு) 130 வரையிலான 10 அமெரிக்க டாலர்கள் வருவாயிலிருந்து மட்டுமே செலுத்தப்படும். இந்த அளவீடு நிர்வாகியின் அக்கறைகளை அவருடைய முதலீட்டாளர்களோடு மிக நெருக்கமாக கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டவை என்பதோடு விரைவான வர்த்தகத்தை தேடிச்செல்ல நிர்வாகிகளுக்கான ஊக்கத்தொகையை குறைக்கும் நோக்கத்தோடும் இருக்கிறது. உயர் குறியீட்டு அலகு பயன்படுத்தப்படவில்லை என்றால், மாற்று வருடங்களில் 100 அமெரிக்க டாலர்கள் மற்றும் 110 அமெரிக்க டாலர்களுக்கு முடிவுறும் நிதி மற்ற வருடங்களுக்கான செயல்திறன் கட்டணத்தை உருவாக்கித் தரும், இது நிர்வாகிகளுக்குத்தான் லாபமானதே தவிர முதலீட்டாளர்களுக்கு அல்ல. இந்த செயல்முறை முதலீட்டாளர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்காது: நிதியின் மதிப்பில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கான சதவிகிதத்தை இழந்துவிடும், நிர்வாகி அந்த நிதியை மூடிவிடலாம் என்பதோடு, அந்த இழப்பு சரிசெய்யப்படும் வரை காத்திருந்து செயல்திறன் கட்டணம் இல்லாமல் வேலையைத் தொடர்வதைக் காட்டிலும் முற்றிலும் புதியதான நிலையில் அவர் மீண்டும் தொடங்கலாம். இந்த தந்திரமானது, தன்னுடைய புதிய நிதியின் முதலீட்டாளர்களின் நிதியைக் கொண்டு தன் மீது நம்பிக்கை வைக்கும்படி தூண்டும் நிர்வாகியின் திறன் பொறுத்த விஷயமாகும். சில நிர்வாகிகள் தடை விகிதத்தைக் குறிப்பிடுகின்றனர், இவை டி-பில் இலாபம், எல்ஐபிஓஆர் அல்லது நிலையான சதவிகிதம் போன்ற பென்ச்மார்க் விகிதத்தை நிதியின் வருடாந்திர செயல்திறன் தாண்டும்வரை அவர்கள் செயல்திறன் கட்டணம் விதிப்பதில்லை என்று குறிப்பிடுகின்றனர். மாற்று முறையைவிட, வழக்கமாக குறைந்த அபாயம், முதலீடு போன்றவை, உயர் வருவாயை வழங்கும் மேலாளரின் திறனுக்கான செயல்திறன் கட்டணங்களோடு இது தொடர்புடையதாக இருக்கிறது. "லேசான" தடையில், செயல்திறன் கட்டணமானது தடை விகிதம் சரிசெய்யப்பட்டால் ஒட்டுமொத்த வருடாந்திர வருவாயின் மீதும் விதிக்கப்படுகிறது. "கடுமையான" தடையில், தடை விகிதத்திற்கும் மேற்பட்ட லாபத்தில் மட்டுமே செயல்திறன் கட்டணம் விதிக்கப்படும். 2008 ஆம் ஆண்டு கடன் குழப்ப பிரச்சினைகளுக்கு முன்பாக, ஹெட்ஜ் நிதிகளுக்கான தேவை அளிப்பை விஞ்சுவதற்கான நோக்கம் கொண்டிருப்பதோடு, தடை விகிதத்தை மிகவும் அரிதானதாகச் செய்திருக்கிறது. சில நிதிகள் முதலீட்டாளர்கள் நிதியிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றால் அவர்கள் மீது திரும்பப் பெறும் கட்டணத்தை ("திரும்ப எடுத்தல் கட்டணம்" அல்லது "திருப்பியளித்தல் கட்டணம்") விதிக்கின்றன. முதலீட்டு தேதி அல்லது முதலீட்டின் குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கும் திரும்ப எடுத்தல்களைத் தொடர்ந்து திரும்பப் பெறுதல் கட்டணம் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தின்போது விதிக்கப்பட்ட மாட்டாது. இந்தக் கட்டணத்தின் நோக்கம் குறுகிய-கால முதலீ்ட்டை பலவீனப்படுத்துவதே ஆகும், இதனால் வியாபாரத்தில் கைமாறும் மொத்த பணத்தொகை (டேர்ன்ஓவர்) குறைக்கப்படுவதோடு மிகவும் சிக்கலான, மாறுபாடடையாத அல்லது நீண்ட-கால வியூகங்களைப் பயன்படுத்த உதவுகிறது. இந்தக் கட்டணம், மோசமான செயல்திறன் காலங்களுக்குப் பின்னர் நிதியிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு முதலீட்டாளர்களை அறிவுறுத்துகிறது. நிர்வாகம் மற்றும் செயல்திறன் கட்டணத்தைப் போன்று அல்லாமல், திரும்ப எடுத்தல் கட்டணங்கள் வழக்கமாக நிதியால் திரும்ப எடுக்கப்பட்டுவிடுகிறது, ஆகவே, நிர்வாகியைக் காட்டிலும் மீதமிருக்கும் முதலீட்டாளர்களுக்கு இது பயன்மிக்கதாக இருக்கிறது. ஹெட்ஜ் நிதி பல்வேறு வர்த்தக வியூகங்களைப் பின்பற்றுகிறது, இவை எந்தவிதமான நிலையான முறையையும் பயன்படுத்தாமல் பல்வேறு முறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஹெட்ஜ் நிதி அதனுடைய வழங்கல் ஆவணங்களில் உள்ள அறிக்கைகளின் வழியாக ஒரு குறிப்பிட்ட வியூகம், குறிப்பிட்ட முதலீட்டு வகைகள் மற்றும் லீவரேஜ் ஆகியவற்றில் தன்னைத்தானே நியமித்துக்கொள்கிறது, இதன்மூலமாக முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியின் இயல்பு குறித்த சில அறிகுறிகள் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு வியூகத்தையும் பல்வேறுவிதமான கூறுகளிலிருந்து உருவானதாக கூறலாம்: இந்த நான்கு வியூக குழுக்களும் முதலீட்டு பாணிகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என்பதோடு அவற்றிற்கே உரிய அபாயம் மற்றும் லாப குணவியல்புகளையும் கொண்டிருக்கின்றன. ஹெட்ஜ் நிதியின் மிகவும் பொதுவான முத்திரை "நீண்டகால/குறுகியகால ஈக்விட்டி" ஆகும், அதாவது பொதுப் பங்கு மாற்றகத்தில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் நீண்டகால மற்றும் குறுகியகால நிலைகள் ஆகிய இரண்டையுமே எடுத்துக்கொள்ளும் நிதி என்பதை இது குறிக்கிறது. (மேக்ரோ, வர்த்தகம்) குளோபல் மேக்ரோ நிதிகள், பொதுவாக வருவாயை உருவாக்குவதற்கான அனைத்து சந்தைகள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி உலகளாவிய பேரளவு பொருளாதார எதிர்நோக்கலுக்கு முயற்சிக்கின்றன. (ஈக்விட்டி ஹெட்ஜ்)ஈக்விட்டி சந்தைக்கான வெளிப்படுத்தலோடு கூடிய அபாய தவிர்ப்பு முதலீடுகள். (பிரத்யேக சூழ்நிலைகள்) எதிர்பார்க்கப்பட்ட சில குறிப்பிட்ட கூட்டாண்மை நிகழ்வுகளால் ஏற்படும் விலை திறனின்மைகளைத் துணிந்து பயன்படுத்திக்கொள்கிறது. (விலைமாறுபாட்டு வர்த்தகம், சந்தை சமநிலை) தவறான விலைகளில் விற்கப்படும் சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு இடையேயான விலை திறனின்மைகளைத் துணிந்து பயன்படுத்திக்கொள்வது. சில வகையான ஹெட்ஜ் நிதிகளில் முதலீடு செய்வது நெறிமுறைப்படுத்தப்பட்ட நிதிகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அபாயகரமான கருத்தாகும், இருந்தபோதிலும் "ஹெட்ஜ்" என்பதே பந்தயம் அல்லது முதலீட்டின் அபாயத்தைக் குறைப்பதற்கானதுதான். பல ஹெட்ஜ் நிதிகளும் பின்வரும் குணவியல்புகளைப் பெற்றிருக்கின்றன: பெரும்பாலான நாடுகளில் உள்ள ஹெட்ஜ் நிதி முதலீட்டாளர்கள், இந்தக் காரணிகளின் அபாய தாக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ளக்கூடிய முதலீட்டாளர்கள் போலியானவர்களாக இருக்க விரும்பினர். இந்த அபாயங்கள் சார்ந்து கிடைக்கும் பரிசுகளின் காரணமாக அவர்கள் இவற்றை மேற்கொள்ள விரும்புகின்றனர்: லீவரேஜ் லாபங்களையும் நஷ்டங்களையும் பெரிதுபடுத்துகிறது; குறுகியகால விற்பனை புதிய முதலீட்டு வாய்ப்புக்களை திறந்துவிடுகிறது; அபாயகரமான முதலீடுகள் உயர் லாபங்களை வழங்குகின்றன; ரகசியத்தன்மை போட்டியாளர்களால் போலிசெய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது; அத்துடன் நெறிமுறை இன்றி இருப்பது செலவுகளைக் குறைப்பதோடு முற்றிலும் வணிகரீதியான முடிவுகளை எடுப்பதற்கான அதிகப்படியான சுதந்திரத்தை முதலீட்டு நிர்வாகிக்கு வழங்குகிறது. செயல்பாட்டிற்கு பொருத்தமான கடின உழைப்பு ஹெட்ஜ் நிதியை அறுதியிடுகின்ற ஒரு அணுகுமுறையாகும். ஒரு ஹெட்ஜ் நிதி என்பது அதனுடைய முதலீ்ட்டாளர்களின் பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்கின்ற வாகனமாகும். இந்த நிதியும்கூட அதனுடைய முதலீட்டு பங்குப்பட்டியல் மற்றும் ரொக்கத்தைத் தவிர ஊழியர்களையோ சொத்துக்களையோ வைத்துக்கொள்வதில்லை. இந்தப் பங்குப் பட்டியல், அசல் தொழிலாகவும் ஊழியர்களையும் கொண்டுள்ள முதலீட்டு நிர்வாகியால் நிர்வகிக்கப்படுகிறது. முதலீட்டு நிர்வாகியும், ஹெட்ஜ் நிதியின் செயல்பாடுகள் பல்வேறு மற்ற சேவை வழங்குநர்களிடத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான சேவை வழங்குநர்கள்: ஒரு குறிப்பிட்ட ஹெட்ஜ் நிதியின் சட்டபூர்வ கட்டமைப்பு - குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் எனில் இதனுடைய உறைவிடம் மற்றும் பயன்படுத்தப்பட்ட சட்டபூர்வ தனியுரிமை - வழக்கமாக நிதியின் எதிர்பார்க்கப்பட்ட முதலீட்டாளர்களுடைய வரிவிதிக்கப்படும் சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுகிறது. நெறிப்படுத்தல் பரிசீலனைகளும் இதில் பங்காற்றுகின்றன. பல ஹெட்ஜ் நிதிகளும் ஆஃப்ஷோர் (கரை கடந்த) நிதி மையங்களில் நிறுவப்படுவதால் இந்த நிதியால் அதனுடைய பங்குப்பட்டியல் மதிப்பில் ஏற்படும் உயர்விற்கான வரிசெலுத்தலை தவிர்க்க முடியும். ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டை பணமாக்கும்போது அது உருவாக்கும் எந்த ஒரு லாபத்தின்மீதும் வரிசெலுத்த வேண்டியவராவார், முதலீட்டு நிர்வாகி, வழக்கமாக பிரதான நிதி மையத்தின் அடிப்படையில் நிதியை நிர்வகிக்க பெறப்பட்ட கட்டணங்களின் மீது வரிசெலுத்துவார். 2008 ஆம் ஆண்டின் முடிவில், ஹெட்ஜ் நிதியின் எண்ணிக்கையில் பாதி பதிவுசெய்யப்பட்ட ஆஃப்ஷோராக இருந்தன. கேமேன் தீவுகளைத் (67 சதவிகித எண்ணி்க்கையிலான ஆஃப்ஷோர் நிதிகள்) தொடர்ந்து பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (11 சதவிகிதம்) மற்றும் பெர்முடா (11 சதவிகிதம்) ஆகியவை மிகவும் பிரபலமான ஆஃப்ஷோர் இடங்களாக இருக்கின்றன. மற்ற ஆஃப்ஷோர் மையங்கள் ஐஸில் ஆஃப் மேன், லக்ஸம்பர்க் மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு பிரபலமான ஆஃப்ஷோர் இடமாகும் (நிதிகள் பெரும்பாலும் டெலாவேரில் பதிவுசெய்யப்படுகின்றன), இது ஆன்ஷோர் நிதிகளின் 64 சதவிகித எண்ணிக்கையை கொண்டதாக இருக்கிறது, இதைத்தொடர்ந்து ஐரோப்பா 16 சதவிகிதம் கொண்டதாக இருக்கிறது. நிதிகளுக்கு உள்ளேயான முரண்பாடுகளில், முதலீட்டு மேலாளர்கள் நிதிசார்ந்த திறமையின் பிரதான குவிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைப் பெறும் விதமாக பிரதானமாக ஆன்ஷோரிலேயே அமைந்திருக்கின்றனர். அமெரிக்க கிழக்குக் கடற்கரையிலிருந்து வரும் மொத்த ஹெட்ஜ் நிதி முதலீட்டோடு -முதன்மையாக நியூயார்க் நகரம் மற்றும் கனெக்டிகட்டின் கோல்ட் கோஸ்ட் பகுதி - இது ஹெட்ஜ் நிதி நிர்வாகிகளுக்கான முன்னணி இடவமைப்பாகிவிட்டது. 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 7000 முதலீட்டு நிர்வாகிகள் இருந்திருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஹெட்ஜ் நிதி நிர்வாகிகளுக்கு லண்டன், ஐரோப்பிய ஹெட்ஜ் நிதி முதலீடுகளின் மூன்று காலாண்டுகள், ஏறத்தாழ 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் 2008 ஆம் ஆண்டின் முடிவில் ஒரு முக்கியமான ஐரோப்பிய முன்னணி மையமாக இருக்கிறது. ஆசியா, மிக முக்கியமாக சீனா உலகளாவிய ஹெட்ஜ் நிதி தொழில்துறைக்கான நிதி மூலாதாரமாக மிக முக்கியமான பங்கை ஏற்றுள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஆசிய ஹெட்ஜ் நிதிகளை நிர்வகிப்பதற்கான முன்னணி மையங்களாக இருக்கின்றன. அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் சாதகமான வரி செலுத்துகையைப் பெறுவார்கள் என்ற அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த வரிசெலுத்தும் முதலீட்டாளர்களைக் இலக்காகக் கொண்டு வரையறு கூட்டாண்மைகள் ஹெட்ஜ் நிதிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன. வரையறு கூட்டாண்மையின் பொதுவான கூட்டாளி வகைமாதிரியான முதலீட்டு நிர்வாகியாக இருப்பார் (இது சிலசமயங்களில் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷனாக இருப்பினும்), முதலீட்டாளர்கள் வரையறு கூட்டாளிகளாக இருப்பர். ஆஃப்ஷோர் கூட்டாண்மை நிதிகள் அமெரிக்காவைச் சாராத முதலீட்டாளர்கள் மற்றும் வரி செலுத்தாத (ஓய்வூதிய நிதி போன்று) அமெரிக்க தனியுரிமை நிறுவனங்களுக்கென்று பயன்படுத்தப்படுகின்றன, இதுபோன்ற முதலீட்டாளர்கள் ஒரு வரையறு கூட்டாண்மையில் முதலீடு செய்வதிலிருந்து இதே வரி பலன்களைப் பெறுவதில்லை. யூனிட் டிரஸ்ட்கள் ஜப்பானிய முதலீட்டாளர்களிடத்தில் சந்தையிடப்படுகின்றன. வரிவிதிப்பு தவிர்த்து, பயன்படுத்தப்படும் தனியுரிமை வகையானது நிதியின் இயல்பின் மீது குறிப்பிடத்தக்க உறவைக் கொண்டிருப்பதில்லை. பல ஹெட்ஜ் நிதிகளும் மாஸ்டர்-ஃபீடர் நிதிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டமைப்பில், முதலீட்டாளர்கள் ஃபீடர் நிதியில் முதலீடு செய்வார்கள், அடுத்தடுத்து அதனுடைய சொத்துக்கள் முழுவதையும் மாஸ்டர் நிதியில் முதலீடு செய்வார்கள். மாஸ்டர் நிதியின் சொத்துக்கள் பின்னர் வழக்கமான முறையில் முதலீட்டு நிர்வாகியால் நிர்வகிக்கப்படும். இதேபோன்ற மாஸ்டர் நிதியில் முதலீடு செய்வதற்கு இது சில ஃபீடர் நிதிகளை அனுமதிக்கிறது என்பதுடன்(எ.கா., ஆஃப்ஷோர் கூட்டாண்மை நிதி, அமெரிக்க வரையறு கூட்டாண்மை மற்றும் யூனிட் டிரஸ்ட்), எல்லா முதலீட்டாளர்களுக்கும் நல்லமுறையில் சாத்தியமுள்ள வரிவிதிப்பை வழங்கும் அதேசமயத்தில் ஒற்றை தனியுரிமையின் சொத்துக்களை நிர்வகிப்பதன் பலனை முதலீட்டு நிர்வாகி பெற உதவுகிறது. ஹெட்ஜ் நிதியின் அடித்தளத்தை அமைக்கவேண்டிய முதலீட்டு மேலாளர், வரையறு கூட்டாண்மையின் பொது கூட்டாளியாகவோ அல்லது கூட்டாண்மை நிதியில் "நிறுவுனர் பங்குகளின்" உரிமைதாரராகவோ ஹெட்ஜ் நிதியி்ல் வட்டியைப் பெற்றுக்கொள்ளலாம். நிறுவுனர் பங்குகளுக்கு உண்மையில் எந்தவித பொருளாதார உரிமைகளும் இல்லை என்பதோடு முதலீட்டு நிர்வாகியை தேர்வு செய்வது போன்ற வரம்பிற்குட்பட்ட விவகாரங்களில் மட்டுமே ஓட்டளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நிதியின் வியூக முடிவுகள் நிதியின் இயக்குநர்கள் அவையால் எடுக்கப்படுகிறது, இது சுதந்திரமான ஆனால் பொதுவாக முதலீட்டு நிர்வாகிக்கு விசுவாசமானதாகும். ஹெட்ஜ் நிதிகள் வரம்பற்ற வகையைச் சேர்ந்தவை, இந்த வகையில் இந்த நிதி கூடுதல் கூட்டாண்மை உரிமைகள் அல்லது பங்குகளை அவ்வப்போது நேரடியாக புதிய முதலீட்டாளர்களிடத்தில் விநியோக்கும், இவை ஒவ்வொன்றின் விலையும் ஒரு உரிமை/பங்கிற்கான மொத்த சொத்து மதிப்பிலானதாக இருக்கும். இந்த முதலீட்டைப் பணமாக்குவதற்கு, முதலீட்டாளர் அந்த நேரத்தில் நிலவுகின்ற உரிமை/பங்கிற்கான மொத்த சொத்து மதிப்பில் வட்டிகள் அல்லது பங்குகளை திரும்பப் பெறுவார். ஆகவே, உள்ளுறையும் முதலீடுகளின் மதிப்பு அதிகரித்தது என்றால் (உரிமை/பங்கிறாகான மொத்த சொத்து மதிப்பும் அதிகரிக்கும்) பிறகு அந்த முதலீட்டாளர் முதலீட்டிற்கு அளித்ததைவிட பெரிய தொகையை திரும்பப் பெறுதலின் மீது பெறுவார். முதலீட்டாளர்கள் பங்குகள் அல்லது உரிமைகளை தங்களுக்குள்ளாக வர்த்தகம் செய்துகொள்வதில்லை என்பதோடு ஹெட்ஜ் நிதிகள் திரும்பப் பெறுதலுக்கு முன்பாக முதலீட்டாளர்களிடத்தில் லாபங்களை பகிர்ந்துகொள்வது இல்லை. இது, முதலீட்டாளர்களுக்குள்ளாக வர்த்தகம் செய்துகொள்ளப்படும், அதன் லாபங்களைப் பகிர்ந்துகொள்ளும் வரம்பிற்குட்பட்ட எண்ணிக்கையிலான பங்குகளைக் கொண்டிருக்கும் வரம்பிற்குட்பட்ட நிதியோடு முரண்படுகிறது. நம்பகமான முறையில் மதிப்பிடுவற்கான அல்லது உண்மையில் பணமாக்கவியலாத சொத்துக்களை ஹெட்ஜ் நிதி கொண்டிருக்கும் இடத்தில் (நிதியின் திரும்பப் பெறுதல் நிபந்தனைகளை ஒப்பிடும் வகையிலும்), இந்த நிதி "சைட் பாக்கெட்டை நிறுவிக்கொள்ளலாம்". சைட் பாக்கெட் என்பது நிதியின் முக்கியமான பங்குப் பட்டியலிலிருந்து பணமாக்கமுடியாத சொத்துக்களை நிதி பிரித்தெடுக்கின்ற இயக்கமுறை என்பதோடு சைட் பாக்கெட்டில் உள்ள சொத்துக்களில் மட்டும் பங்கேற்கின்ற புதிய வகையிலான உரிமைகள் அல்லது பங்குகளோடு முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது. இந்த உரிமைகள்/பங்குகள் முதலீட்டாளரால் திரும்பப் பெறப்பட இயலாதவை. நிதியால் சைட் பாக்கெட் சொத்தை விற்க முடிகிறது என்றால், இந்த நிதி சைட் பாக்கெட் உரிமை/பங்குகளை பொதுவாக திரும்பப் பெறும் என்பதோடு அடுற்கடுத்ததாக கிடைக்கும் லாபங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. முதலீட்டாளர்கள் திரும்பப் பெறுவதை தேர்வுசெய்தால் நிதியில் இருக்கும் முதலீட்டாளிரின் உரிமத்தை மதிப்பிடுவதற்கான தேவைகளோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தெரிவிப்பதற்கென்று சைட் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொத்துக்களை மதிப்பிடவோ அல்லது விற்கவோ இயலாமல் முதலீட்டாளர் திரும்பப் பெறுகிறார் என்றால், அந்த நிதியை அவருடைய திரும்பப் பெறுதல் லாபங்களின் கணக்கீடு துல்லியமானதாக இருக்கும் என்று நம்ப இயலாது. மேலும், இந்த திரும்பப் பெறுதல் லாபங்கள் நிதியின் பணமாக்கல் சொத்துக்களை விற்பதன் மூலம் மட்டுமே பெறப்படக்கூடியவை. பணமாக்கவியலாத சொத்துக்கள் எதிர்பார்த்ததைவிடவும் குறைவான மதிப்பிற்கு அடுத்தடுத்து குறைந்துபோனால், மீதமிருக்கும் முதலீட்டாளர்கள் முழு நஷ்டத்தையும் சுமப்பார்கள், அதேசமயம் திரும்பப் பெற்ற முதலீட்டாளர்களுக்கு எதுவும் நஷ்டமில்லை. ஆகவே சைட் பாக்கெட்கள் எல்லா முதலீட்டாளர்களும் அதே நேரத்தில் நிதியில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதை நிதி உறுதிசெய்துகொள்ள உதவுகிறது, சம்பந்தப்பட்ட சொத்துக்களை பணமாக்கவியலாமல் போவது எந்த ஒரு நஷ்டத்தையும் சமமாக சுமக்கும் என்பதுடன் முக்கியமான பங்குப்பட்டியல் வகையில் அதேநேரத்தில் சந்தா செலுத்தல் மற்றும் திரும்பப் பெறுதலைத் தொடர்வதற்கான நிதியையும் அனுமதிக்கும். இதே காலகட்டத்தில் சந்தா செலுத்துவதற்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. சைட் பாக்கெட்கள் அவசரகால நடவடிக்கையாக நிதிகளால் பொதுவாக பயன்படுத்தப்பட்டன. அவை 2008 செப்டம்பரில் லேமன் பிரதர்ஸின் சரிவைத் தொடர்ந்து ஹெட்ஜ் நிதியால் உரிமைகொள்ளப்பட்ட குறிப்பிட்ட வகையிலான சொத்துக்களுக்கான சந்தை சரிந்தபோது விரிவான அளவிற்கு பயன்படுத்தப்பட்டன என்பதோடு விற்பதிலிருந்து நிதிகளைத் தடுக்கவும் அல்லது இந்த சொத்துக்களுக்கான சந்தை மதிப்பைப் பெறவும் பயன்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட வகையிலான நிதி தங்களது வழக்கமான தொழிலில் சைட் பாக்கெட்களைப் பயன்படுத்தின. உதாரணத்திற்கு, காப்பீட்டு தயாரிப்புகளில் முதலீடு செய்யப்படும் நிதி இயற்கைப் பேரழிவுகளோடு சம்பந்தப்பட்ட, அத்தகைய இயற்கைப் பேரழிவுகளைத் தொடர்ந்து சைட் பாக்கெட் ஆவணங்களிடத்தில் செல்லலாம். சேதம் மதிப்பிடப்பட்டவுடன், அந்த ஆவணமானது சில துல்லியங்களுடன் மீண்டும் ஒருமுறை மதிப்பிடப்படலாம். கூட்டாண்மை ஹெட்ஜ் நிதிகள் ஐரிஷ் பங்கு மாற்றகம் போன்ற சிறிய பங்கு மாற்றகங்களில் தங்களுடைய பங்குகளை பட்டியலிடுகின்றன, இது சில முதலீட்டாளர்களால் கேட்கப்படும் நெறிமுறை மேற்பார்வையை குறைந்த அளவிற்கு வழங்குவதற்கானதாகும். பட்டியலிடப்பட்ட ஹெட்ஜ் நிதிகளில் உள்ள பங்குகள் பொதுவாக இந்த மாற்றகங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. ஒரு நிதி பட்டியலிடப்படுதல் பட்டியலிடப்படுவதிலிருந்து அல்லது ஒரு முதலீட்டு நிர்வாகியிடத்தில் பங்குகளின் துவக்கநிலை பொது வழங்கலில் ("ஐபிஓ") இருந்து வேறுபட்டதாகும். இருப்பினும் "ஹெட்ஜ் நிதி ஐபிஓ", என்று பரவலாக தெரிவிக்கப்படும், ஃபோர்ட்ரஸ் இண்வெஸ்ட்மெண்ட் குரூப் எல்எல்சியின் ஐபிஓ முதலீட்டு நிர்வாகியின் விற்பனைக்கானதே தவிர, நிர்வகிக்கப்படும் ஹெட்ஜ் நிதிகளுக்கானது அல்ல. ஹெட்ஜ் நிதிகள் தங்களுடைய போட்டி நுனியில் வழங்குவது மற்றும் பொதுமக்கள் கற்பனையில் அவற்றின் சின்னம் என்பது அவை பல்வேறுவிதமான வரையறைகள் மற்றும் வகைப்பாடுகளில் காலூன்றியிருக்கின்றன என்பதுதான்; அவற்றின் கையாளுகைகள் நன்றாக முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன, அதேசமயம் மற்றவை நெறிமுறையற்று அல்லது மிகவும் சாதகமான சூழ்நிலைக்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருக்கும் "பொது" முதலீட்டு நிறுவனம் அமெரிக்க ஆவணங்கள் மற்றும் மாற்றக ஆணையத்தில் (எஸ்இசி) பதிவுசெய்ய வேண்டும். பரஸ்பர நிதிகள் பொதுவான பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு நிறுவனங்களாகும். பதிவுசெய்தல் மற்றும் தெரிவித்தல் தேவைகளுக்கும் மேலாக, முதலீட்டு நிறுவனங்கள் குறுகிய கால விற்பனை மற்றும் லீவரேஜைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மீதான தீவிர வரையறைகளுக்கு உட்படுபவையாகும். ஊக்கத்தொகை அல்லது செயல்திறன் கட்டணங்கள் விதிப்பதன் மீதான தடை உட்பட பொது முதலீட்டு நிறுவன நிர்வாகிகள் மீது பல்வேறு வரம்புகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஹெட்ஜ் நிதிகள் முதலீட்டு நிறுவனங்கள், அவை சட்டத்தில் உள்ள விதிவிலக்குகள் காரணமாக முதலீட்டு நிறுவனங்களுக்கான வகைமாதிரி நெறிமுறைகளை தவிர்த்துவிடுகின்றன. இரண்டு முக்கியமான விதிவிலக்குகள் 1940 ஆம் ஆண்டு முதலீட்டு நிறுவனச் சட்டத்தின் பிரிவுகள் 3(சி)1 மற்றும் 3(சி)7 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விதிவிலக்குகள் 100 அல்லது அதற்கும் குறைவான முதலீட்டாளர்கள் (ஒரு "3(சி) 1 நிதி") மற்றும் "தகுதிவாய்ந்த வாங்குநர்களாக" (ஒரு "3(சி) 7 நிதி") முதலீட்டாளர்கள் உள்ள நிதிகளுக்கானதாகும். ஒரு தகுதிவாய்ந்த வாங்குநர் என்பவர் முதலீட்டுச் சொத்துக்களில் 5,000,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வைத்திருக்கும் தனிநபர் ஆவார். (சில நிறுவனமய முதலீட்டாளர்களும் உரிமம் பெற்ற முதலீட்டாளர்களாக அல்லது தகுதிவாய்ந்த வாங்குநர்களாக இருக்கின்றனர்.) ஒரு 3(சி)1 நிதி 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைக் கொண்டிருக்க முடியாது, அதேசமயம் ஒரு 3(சி)7 நிதியானது வரம்பற்ற முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கலாம். 1933 ஆம் ஆண்டு ஆவணங்கள் (செக்யூரிட்டிகள்) சட்டத்தின் வெளிப்படுத்தல் தேவைகள், நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைக் கோரினால் மட்டுமே பொருந்தக்கூடியது, 1934 ஆம் ஆண்டின் ஆவணங்கள் மாற்று சட்டத்தின் காலாண்டு தெரிவித்தல் தேவைகள் அந்த நிதி 499க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே தேவைப்படுவதாகும். 499 முதலீட்டாளர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு 3(சி)7 நிதி எஸ்இசியிடம் தனது ஆவணங்களை பதிவுசெய்ய வேண்டும். 3(சி)(1) அல்லது 3(சி)(7)க்கு உடன்படும் விதமாக, ஹெட்ஜ் நிதிகள்1933 ஆம் ஆண்டு ஆவணங்கள் சட்டத்தின் கீழ் தனியார் விற்பனைகள் வழியாக மூலதனத்தை அதிகரித்துக்கொள்கின்றன, அத்துடன் வழக்கமாக பங்குகள் விற்கப்படுவது நெறிமுறைகள் டி இன் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டியதில்லை. ஹெட்ஜ் நிதியில் உரிமம் பெறாத முதலீட்டாளர்களை வைத்திருப்பதற்கு சாத்தியம் இருப்பினும், முதலீட்டு நிறுவன சட்டத்தின்படி கிடைக்கும் விதிவிலக்குகள், நெறிமுறை டி இல் அடங்கியிருக்கும் தடைகளோடு ஒருங்கிணைக்கப்படுகின்றன, இது ஹெட்ஜ் நிதிகள் முற்றிலும் உரிமம் பெற்ற முதலீட்டாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதற்கானதாகும். ஒரு உரிமம் பெற்ற முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1,000,000 அமெரிக்க டாலர்கள் மொத்த மதிப்புள்ள தனிநபர்கள் அல்லது, மாற்றாக, கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொன்றிலும் 2,000,000 அமெரிக்க டாலர்கள் குறைந்தபட்ச வருமானம் உள்ளவர்கள் என்பதோடு நடப்பு ஆண்டில் அதே வருமானத்தை எட்டுவதற்கான நியாயமான எதிர்பார்ப்பு உள்ளவர்களாவர். வங்கிகளுக்கும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களிலான குறைந்தபட்ச மொத்த மதிப்பு 5,000,000 அமெரிக்க டாலர்களாகும். ஹெட்ஜ் நிதி நிர்வாகிகளை பதிவு செய்ய வலியுறுத்தும் முயற்சிகளும் இருக்கவே செய்கின்றன. இந்த முன்மொழியப்பட்ட தேவைகளைச் சுற்றிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஊக்கத்தொகை கட்டணம் விதிக்கப்படும் வாடிக்கைதாரர் ஆலோசகர்கள் சட்டம் விதி 205-3 இன் கீழ் "தகுதிவாய்ந்த வாடிக்கைதாரராக" இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த வாடிக்கைதாரராக இருப்பதற்கு, ஒரு தனிநபர் ஆலோசகரைக் கொண்டு செய்த முதலீட்டு சொத்தில் 750,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 1.5 அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட மொத்த மதிப்பைக் கொணடிருக்க வேண்டும், அல்லது முதலீட்டு ஆலோசகரின் குறிப்பிடத்தக்க உயர்மட்ட ஊழியர்களுள் ஒருவராக இருக்க வேண்டும். 2004 டிசம்பரில், முதலீட்டு ஆலோசகர்களாக முதலீ்ட்டு ஆலோசகர்கள் சட்டத்தின்கீழ் பிப்ரவரி 1, 2006க்குள் எஸ்இசியில் பெரும்பாலான ஹெட்ஜ் நிதி ஆலோசகர்களை பதிவுசெய்யக் கோரும் விதிமுறை மாற்றத்தை எஸ்இசி வெளியிட்டது. சிறிய விதிவிலக்குகளுடனான இந்தத் தேவை 14க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் 25,000,000 அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகையை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு பொருந்துவதாகும். விரைவாக வளர்ந்துவரும் தொழில்துறைக்கென்று உருவாகிவரும் தனது நெறிப்படுத்தல் விதிமுறைகளின் ஒரு பகுதியாக ஹெட்ஜ் நிதிகளை கண்காணிப்பதற்கென்று "அபாய அடிப்படையிலான அணுகுமுறையை" ஏற்றுக்கொள்வதாக எஸ்இசி குறிப்பிட்டது. இந்தப் புதிய விதியானது இரண்டு அதிகாரிகளின் எதிர்ப்போடு முரண்பாட்டிற்குரியதாக இருந்தது. இந்த விதிமாற்றத்திற்கு ஒரு ஹெட்ஜ் நிதி நிர்வாகியால் சவால் விடுக்கப்பட்டது, அத்துடன், ஜூன் 2006 இல் கொலம்பியா மாகாணத்தின் அமெரிக்க மேல்முறையீ்ட்டு நீதிமன்றம் இதைத் தள்ளுபடி செய்ததோடு, மறுமதிப்பீடு செய்யப்படுவதற்கு இந்த அமைப்பிடமே திருப்பி அனுப்பியது. பார்க்க கோல்ட்ஸ்டீன் எதிராக. எஸ்இசி. நீதிமன்றத்தின் முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக, 2007 இல் எஸ்இசி விதிமுறை 206(4)-8ஐ ஏற்றுக்கொண்டது. முன்னதாக சவால் விடுக்கப்பட்ட விதியைப் போன்று அல்லாமல், விதிமுறை 206(4)-8 "கூடுதல் ஆவண சமர்ப்பிப்பு, தெரிவித்தல் அல்லது வெளிப்படுத்தல் கடப்பாடுகளை விதிக்காது" ஆனால் அலட்சியப்படுத்தல் மற்றும் மோசடி நடவடிக்கைக்கான "அமல்படுத்தல் நடவடிக்கையின் அபாயத்தை" அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2007 பிப்ரவரியில், நிதிச் சந்தைகளிலான அதிபரின் வேலைக் குழு ஹெட்ஜ் நிதிகளின் மீதான அதிகப்படியான நெறிமுறையை நிராகரித்தது என்பதுடன் இந்தத் தொழில்துறை இதற்குப் பதிலாக தன்னார்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் என்று கூறியது. ஹெட்ஜ் நிதிகள் பல வகையிலும் தனியார் ஈக்விட்டி நிதிகளைப் போன்றே இருக்கின்றன. இரண்டுமே லேசான முறையில் நெறிப்படுத்தப்பட்ட ஆவணங்களில் முதலீடு செய்யப்படும் தனியார் மூலதனக் குவிப்புகள் என்பதோடு நிதியின் லாபங்களைக் கொண்டு தங்களுடைய நிர்வாகிகளுக்கு ஈட்டுத்தொகை அளிக்கின்றன. பெரும்பாலான ஹெட்ஜ் நிதிகள் பணமாக்கக்கூடிய சொத்துக்களிலேயே முதலீடு செய்யப்படுகின்றன என்பதோடு, சில மாதங்களுக்கான நோட்டீல் கோருதலுடன் இந்த நிதியில் நுழையவோ அல்லது வெளியேறவோ முதலீட்டாளர்களை அனுமதிக்கின்றன. தனியார் ஈக்விட்டி நிதிகள், துவக்கநிலை நிறுவனங்கள் போன்ற எளிதில் பணமாக்கவியலாத சொத்துக்களிலேயே பிரதானமாக முதலீடு செய்கின்றன, மேற்படி முதலீட்டாளர்கள் இந்த நிதியின் மொத்த நிபந்தனைகளின்படி "மாட்டிக்கொண்டுவிடுபவர்கள்" ஆகிறார்கள். ஹெட்ஜ் நிதிகள் தொடர்ந்து தனியார் ஈக்விட்டி நிறுவனங்களின் பெறப்பட்ட நிதிகளிலேயே முதலீடு செய்கின்றன. 2004 ஆம் ஆண்டிற்கும் பிப்ரவரி 2006க்கும் இடையே, சில ஹெட்ஜ் நிதிகள், எஸ்இசியின் புதிய பதிவுசெய்தல் தேவைகளிலிருந்து தங்களை விதிவிலக்கு செய்துகொள்ள 25 மாத லாக்-அப் விதிகளை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டன, இது தனியார் ஈக்விட்டி நிதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கென்று இருந்த பதிவுசெய்தல் விதிவிலக்கின் கீழ் வந்தது. ஹெட் நிதிகளைப் போன்று பரஸ்பர நிதிகளும் முதலீட்டு மூலதனத்தின் (அதாவது., பணத்தை மக்கள் முதலீடு செய்ய விரும்பும் பணம்) திரட்சிகள் ஆகும். இருப்பினும், இவை இரண்டிற்குமிடையில் பல வேறுபாடுகள் உள்ளன, அவை: ஆஃப்ஷோர் அடிப்படையிலான சில ஹெட்ஜ் நிதிகள் தங்களது விலைகளை "ஃபினான்ஷியல் டைம்ஸில்" வெளியிட்டிருக்கின்றன, ஆனால் பெரும்பாலானவை முறைப்படி விலையை நிர்ணயிக்கும் முறையை வைத்திருக்கவில்லை. மேலும், வேண்டுவோருக்கு கிடைக்கும் வகையில் பரஸ்பர நிதிகள் விவரக் குறிப்பேட்டை வைத்திருக்க வேண்டும் (மின்பதிப்பு மூலமாகவோ அல்லது அமெரிக்க அஞ்சல் வழியாகவோ) என்பதுடன் தங்களுடைய சொத்துப் பகிர்மானத்தை வெளிப்படுத்தியாக வேண்டும், ஆனால் ஹெட்ஜ் நிதிகள் இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஹெட்ஜ் நிதிகள் வழக்கமாக தினசரி பணமாக்கல் முறையை வைத்திருப்பதில்லை, ஆனால் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கென்று மொத்த லாபங்கள் உருவாக்கப்படுமிடத்தில் (மொத்தக் கட்டணம்) "லாக் அப்" காலகட்டத்திற்கு மாறாக, சிபிஏக்கள் மற்றும் அமெரிக்க வரி டபிள்யு-படிவங்களின் வழியாக காலக்கெடு முடிவுறுகையில் முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. ஹெட்ஜ் நிதி முதலீட்டாளர்கள் இந்தக் கொள்கைகளை சகித்துக்கொள்கின்றனர், ஏனென்றால் பரஸ்பர நிதிகளுக்கு எதிர்நிலையில் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு அதிக மொத்த லாபத்தை ஹெட்ஜ் நிதி உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில், பரஸ்பர நிதி தொழில் ஹெட்ஜ் நிதிகளில் மட்டும் வழக்கமாக காணப்படக்கூடிய அம்சங்களோடு பரஸ்பர நிதி தொழில் தயாரிப்புகளை உருவாக்கியிருக்கிறது. சில வர்த்தக வியூகங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பரஸ்பர நிதிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கிரிஸ்லி குறுகியகால நிதி (ஜிஆர்இஸட்இஸட்எக்ஸ்), இது எப்போதுமே குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுகிறது, அதேசமயம் விலைமாறுபாட்டு வர்த்தக நிதி (ஏஆர்பிஎஃப்எக்ஸ்) இணைப்பு விலைமாறுபாட்டு வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற நிதிகள் எஸ்இசியால் நெறிப்படுத்தப்படுபவை, ஆனால் அவர்கள் ஹெட்ஜ் நிதி வியூகங்களையும், பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பையும் வழங்குகின்றனர். அத்துடன், ஒருசில பரஸ்பர நிதிகள், நிர்வாகிக்கான இழப்பீட்டு நிதியின் செயல்திறனைப் பொறுத்து அமையும்போது செயல்திறன்-அடிப்படையிலான கட்டணங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், 1940 ஆம் ஆண்டு முதலீட்டு ஆலோசகர்கள் சட்டத்தின் பிரிவு 205(பி)இன்படி, இதுபோன்ற இழப்பீடுகள் "ஆதாரக் கட்டணங்கள்" என்றே அழைக்கப்படும் வகையில் வரம்பிற்குட்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகளின் கீழ், கட்டணங்கள் உயர்வது மற்றும் தாழ்வதன்படி நீண்டகாலத்திற்கு செயல்திறன் அடிப்படையிலானதாக இருக்கும். உதாரணத்திற்கு, டிஎஃப்எஸ் கேப்பிடல் ஸ்மால் கேப் ஃபண்ட் (டிஎஃப்எஸ்எஸ்எக்ஸ்) அதன் வரம்புகள் மற்றும் படிப்படியான நிலையோடு அதன் செயல்பாட்டைப் பொறுத்து நிர்வாகக் கட்டணத்தைக் கொண்டிருக்கிறது, அதேபோன்ற ஹெட்ஜ் நிதிக்கு "0 மற்றும் 50" கட்டணமாக: ஒரு 0 சதவிகித நிர்வாகக் கட்டணம் அந்த நிதி அதனுடைய பென்ச்மார்க் குறியீட்டைக் காட்டிலும் அதிக செயல்திறனைக் கொண்டிருந்தால் 50 சதவிகித செயல்திறன் கட்டணத்தோடு இணைந்திருக்கிறது. இருப்பினும், 125 bp அடிப்படை கட்டணம் குறைவான செயல்திறன் காரணமாக 50 சதவிகிதம் குறைக்கப்படுகிறது (ஆனால் பூஜ்ஜியத்திற்கு குறைவாக அல்ல), அதிக செயல்திறன் காரணமாக 50 சதவிகிதம் அதிகரிக்கச் செய்யப்படுகிறது (ஆனால் 250 bpக்கும் அதிகமாக அல்ல). பல ஆஃப்ஷோர் மையங்களும் ஹெட்ஜ் நிதிகளின் அடித்தளத்தளத்தை ஊக்கப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. இப்படிச் செய்ய அவர்கள் சில தொழில்முறை சேவைகள், ஒரு சாதகமான வரிச் சூழல், மற்றும் தொழில்-தோழமையுள்ள நெறிமுறை ஆகியவற்றின் சில கலவையை வழங்குகின்றனர். கேமன் தீவுகள், டப்ளின்,லக்ஸம்பர்க், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் மற்றும் பெர்முடா ஆகியவை பிரதான மையங்கள். இந்தத் தொழில்துறையின் மதிப்பிடப்பட்ட 1.225 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏயுஎம்மில் ஏறக்குறைய கால்பங்கோடு உலக ஹெட்ஜ் நிதிகளின் 75 சதவிகிதத்திற்கு கேமன் தீவுகள் உறைவிடமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆஃப்ஷோர் மையங்களின் தேவைகளுக்கு இணக்கமான முறையில் ஹெட்ஜ் நிதிகள் கணக்குகளை ஃபைல் செய்யவும் தங்களது தொழிலை நடத்தவும் வேண்டும். சில விதிகள் சில்லறை முதலீட்டாள்ர்களுக்கான நிதிகளின் கிடைப்புத்தன்மை (டப்ளின்), வாடிக்கைதாரர் இரகசியத்தன்மையின் பாதுகாப்பு (லக்ஸம்பர்க்) மற்றும் நிதி நிர்வாகியிடமிருந்து நிதி சுதந்திரமானதாக இருக்கவேண்டியதன் தேவை குறித்த தடைகளின் மீது அக்கறை கொண்டிருக்கின்றன. சோரோஸ் நிதி போன்ற பல ஆஃப்ஷோர் ஹெட்ஜ் நிதிகளும் வரையறு கூட்டாண்மையைக் காட்டிலும் பரஸ்பர நிதிகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஹெட்ஜ் நிதிகள் நெறிமுறையிலிருந்து விதிவிலக்கு பெற்றிருக்கின்றன. இருப்பினும், இந்த நிதிகள் தொடர்பாக 110வது காங்கிரஸில் (2007-08) சில மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: இந்த மசோதாக்களில் எதுவும் இன்றுவரை தீவிர பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஹெட்ஜ் நிதி தொழில்துறையை தடம் காணுவதற்கான பல குறியீடுகளும் இருக்கின்றன, இவை மூன்று முக்கிய பிரிவுகளுக்குள் வருகின்றன. அவற்றின் வரலாற்று வளர்ச்சி முறையில் அவை முதலீடு செய்யப்பட இயலாதவை, முதலீடு செய்யப்படக்கூடியவை மற்றும் பிரதி என்பவையாக இருக்கின்றன. பாரம்பரிய ஈக்விட்டிகளின் முதலீட்டில், குறியீடுகள் மையமான மற்றும் ஐயப்பாடான பங்காற்றுகின்றன. அவை பரவலாக பிரதிநிதித்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதோடு எதிர்கால வர்த்தகங்கள் மற்றும் இடிஎஃப்கள் போன்ற தயாரிப்புகள் மிகவும் வளர்ச்சியுற்ற சந்தைகளில் அவற்றை முதலீடு செய்யக்கூடிய அணுகலை வழங்குகின்றன. இருப்பினும் ஹெட்ஜ் நிதிகள் எளிதில் பணமாக மாற்றப்பட இயலாத, மாறுபடுகின்ற மற்றும் நிலையில்லாதவை, இவை இதனை திருப்திகரமான குறியீடாக உருவாக்குவதற்கு கடினமானவையாக்குகின்றன. முதலீடு செய்யப்பட இயலாத குறியீடுகள் பிரதிநிதித்துவம் வாய்ந்தவை, ஆனால் பல்வேறு சார்புநிலைகளின் காரணமாக அவற்றின் குறிப்பிடப்பட்ட வருவாய்கள் நடைமுறையில் கிடைக்கவியலாமல் போகலாம். வரையறு பிரதிநிதித்துவங்களின் செலவில் முதலீடு செய்யப்படக்கூடிய குறியீடுகள் பணமாக்கும் இயல்பை எட்டுகின்றன. பிரதி குறியீடுகள் ஹெட்ஜ் நிதிகளின் சில புள்ளிவிவர துணைப்பொருட்கள் பிரதிசெய்வதைக் கோருகின்றன, ஆனால் அவை நேரடியாக அவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. இந்த அணுகுமுறைகளில் எதுவும் முற்றிலும் திருப்திகரமானவை அல்ல. முதலீடு செய்யப்பட இயலாத குறியீடுகள் இயல்பில் குறிப்பீட்டுத் திறன் வாய்ந்தவை என்பதோடு, ஹெட்ஜ் நிதி தரவுத்தளத்திலிருந்து சராசரி, மீடியன் அல்லது எடை சராசரி போன்ற சில அளவீடுகளைப் பயன்படுத்தி சில ஹெட்ஜ் நிதி தரவுத்தளத்தின் செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டவை. இந்த தரவுத்தளம் பரவலான தேர்வு முறைகளையும் கட்டுமான முறைகளையும் கொண்டிருக்கின்றன என்பதோடு ஒற்றை தரவுத்தளம் மட்டுமே எல்லா நிதிகளையும் பெற்றுவிடுவதில்லை. இது வேறுபட்ட குறியீடுகளுக்கு இடையிலான தெரிவிக்கப்பட்ட செயல்திறனில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுக்கு வழியமைக்கிறது. இவை பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கம் கொண்டவை என்றபோதிலும், முதலீடு செய்யப்படவியலாத குறியீடுகள் நீளமான மற்றும் பெரிய அளவிற்கு தவிர்க்கப்பட இயலாத சார்புநிலைகளின் பட்டியலால் பாதிக்கப்படுகின்றன. ஒரு தரவுத்தளத்தில் நிதியின் பங்கேற்பு தன்னார்வத்திலானது, இது சுய-தேர்வு பக்கச்சார்பிற்கு வழியமைக்கிறது, ஏனென்றால் தெரிவிப்பதற்கென்று தேர்வுசெய்யப்பட்ட இந்த நிதிகள் ஒட்டுமொத்தத்தில் வகைமாதிரி நிதியாக இல்லாமல் போகலாம். உதாரணத்திற்கு, மோசமான முடிவுகள் காரணமாக அல்லது அவர்கள் ஏற்கனவே இலக்கு அளவை எட்டிவிட்டதன் காரணமாக சிலர் தெரிவிப்பதில்லை என்பதோடு மேற்கொண்டு பணத்தின் அளவை அதிகரிக்கச் செய்ய விரும்புவதில்லை. பல ஹெட்ஜ் நிதிகளின் குறுகிய ஆயுள்காலம், எஞ்சியிருத்தல் சார்புநிலை பிரச்சினையை அதிகரிக்கச் செய்யும் பல புதிய நுழைவாயில்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பல விலகிச்செல்லும் இயல்புகளையும் கொண்டிருக்கின்றன என்பதைக் குறிக்கிறது. தற்காலத்திலும் எஞ்சியிருக்கும் நிதிகளை மட்டும் நாம் ஆய்வு செய்வோம் என்றால் நாம் கடந்தகால லாபங்களை மிகையாக மதிப்பிட்டுவிடுவோம், ஏனென்றால் மிக-மோசமாக செயல்படும் நிதிகள் எஞ்சுவதில்லை என்பதோடு நிதியின் இளமைக்காலத்திற்கும் நிதியின் செயல்திறனுக்கும் இடையிலுள்ள கண்கானிக்கப்பட்ட இணைவு இந்த பக்கச்சார்பு உறுதியானதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. ஒரு நிதி முதல்முறையாக தரவுத்தளத்தில் சேர்க்கப்படும்போது, இதனுடைய எல்லாவிதமான அல்லது பகுதியளவிற்கான விவரத் தரவானது தரவுத்தளத்தில் நிகழ்வுக்குப் பிந்தையதாக பதிவுசெய்யப்படுகிறது. நிதிகள் சாதகமான நிலையில் இருக்கும்போது அவை தங்களுடைய முடிவுகளை மட்டுமே பதிப்பிக்க வாய்ப்பிருக்கிறது, இதனால் நிதிகளின் உள்ளுறை காலத்தின்போது நிதிகளால் வெளிப்படுத்தப்படும் செயல்திறன்கள் ஏற்ற இறக்கம் உள்ளவையாக இருக்கின்றன. இது "உடனடி வரலாற்றுச் சார்புநிலை" அல்லது "மறுநிரப்புச் சார்புநிலை" எனப்படுகிறது. முதலீடு செய்யப்படக்கூடிய குறியீடுகள் என்பவை குறியீட்டெண்ணின் வருவாய் பங்குதாரர்களுக்கு கிடைக்கக்கூடியது என்பதை உறுதிசெய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை குறைப்பதற்கான முயற்சியாகும். முதலீடு செய்யப்படக்கூடிய குறியீட்டெண்ணை உருவாக்குவதற்கு, குறியீட்டெண் வழங்குநர் நிதிகளை தேர்வுசெய்யவும், குறியீட்டெண்ணின் செயல்திறனை வழங்கும் கட்டமைக்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது தருவிப்பு ஆவணங்களை உருவாக்கவும் செய்கிறார். முதலீட்டாளர்கள் இந்தத் தயாரிப்புகளை வாங்கும்போது குறியீட்டெண் வழங்குநர் உள்ளுறையும் நிதிகளில் முதலீடு செய்கிறார். இது ஹெட்ஜ் நிதி பங்குப் பட்டியலின் நிதிக்கு சில வழிகளில் முதலீடு செய்யப்படக்கூடிய குறியீட்டெண்ணை ஒரேவிதமானதாக்குகிறது. குறியீட்டெண் கட்டமைப்பாளருக்கு ஏற்புடைய நிபந்தனைகளின் மீதான முதலீடுகளை ஏற்கின்ற ஹெட்ஜ் நிதிகள் மட்டுமே இந்த குறியீட்டெண்ணில் சேர்க்கப்படுகின்றன, இதனால் வழங்குநரானவர் தயாரிப்புகளை இதன் அடிப்படையில் விற்பனை செய்யலாம். இது, ஒரு குறியீட்டிற்கு கவர்ச்சிகராமான சொத்தாக இருக்கும் குறியீடுகளில் முதலீடு செய்யப்பட இயலாதவை என்பதற்கு உத்திரவாதமளிக்கிறது, ஏனென்றால் இது நடைமுறையில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் தேர்வுகளுக்கு மிகவும் தொடர்புடையதானதாக குறியீட்டை உருவாக்குகிறது. இருப்பினும், முதலீடு செய்யப்படக்கூடிய குறியீடுகள் ஹெட்ஜ் நிதியின் மொத்த உலகையும் வெளிப்படுத்துவதில்லை. மிகவும் வெற்றிகரமான நிர்வாகிகளை அவை மிகத் தீவரமாக குறைத்து மதிப்பிடலாம், ஏனெனில் இவை குறியீ்ட்டு நிபந்தனைகளை ஈர்ப்பவையாக இருப்பதில்லை என்று அவை கண்டுகொண்டிருக்கலாம், உதாரணத்திற்கு குறைக்கப்பட்ட கட்டணங்கள் அல்லது பெருஞ்சுமையான திரும்பப் பெறுதல் நிபந்தனைகள் வழங்குநரால் கேட்கப்படுவதன் காரணம் ஆகியன. பல்வேறு முறைகளில் உள்ள பிரச்சினையே இந்த துறை அணுகுமுறைக்கான சமீபத்திய கூடுதல் சேர்ப்பாகும். அசல் ஹெட்ஜ் நிதிகளின் செயல்திறனை பிரதிபலிப்பதற்கு பதிலாக இவை கடந்தகால ஹெட்ஜ் நிதி வருவாய்களின் பகுப்பாய்விற்கான புள்ளிவிவர அணுகுமுறையை பின்பற்றுகின்றன என்பதோடு பல்வேறுவிதமான முதலீடு செய்யப்படக்கூடிய நிதிசார்ந்த சொத்துக்களின் மாறுதல்களுக்கு ஹெட்ஜ் நிதி வருவாய்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்ற மாதிரியை உருவாக்குவதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்த மாதிரியானது பிறகும் இந்தச் சொத்துக்களின் முதலீடு செய்யப்படக்கூடிய பங்குப்பட்டியலை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. இது குறியீட்டெண்ணை முதலீடு செய்யப்படக்கூடியதாக்குகிறது என்பதுடன், கொள்கையளவில் அவை கட்டமைக்கப்படுகின்றவற்றிலிருந்து ஹெட்ஜ் நிதி தரவுத்தள பிரநிதித்துவமாக இருக்கலாம். இருப்பினும், அவை புள்ளிவிவர மாதிரியாக்க நிகழ்முறையில் நம்பிக்கை வைக்கின்றன. பிரதி குறியீடுகள் குறுகியகால விவரத்தைக் கொண்டிருக்கின்றன என்றால் நடைமுறையில் இந்த நிகழ்முறை இன்னும் சாத்தியமாகக்கூடியவையாக இல்லை. 1998ஆம் ஆண்டில் நீண்டகால மூலதன நிர்வாகத்தின் (எல்டிசிஎம்) தோல்வியின் விளைவாக ஹெட்ஜ் நிதிகள் அதிகபட்ச தீவிர கண்காணிப்பிற்குள் வந்தன, இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மூலம் பெயில்அவுட் ஒருங்கிணைப்பை (நிதியளிப்பு அல்ல) அத்தியாவசியமாக்கியது. ஹெட்ஜ் நிதிகள் எல்டிசிஎம் சரிவுகளால் வெளியில் தெரியவந்த அமைப்புக் குலைவு அபாயங்களைக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். ஹெட்ஜ் நிதிகளால் தங்களுடைய வருவாயை அடைவதற்கு பயன்படுத்தப்படும் (தருவிப்புகள் மூலமான) மிதமிஞ்சிய லீவரேஜ், அமைப்புக் குலைவிற்கான ஹெட்ஜ் நிதிகள் பங்களிப்பின் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. இசிபி (யூரோப்பியன் சென்ட்ரல் பேங்க்) நிதி நிலைப்புத்திறன் மற்றும் அமைப்புக் குலைவிற்காக ஹெட்ஜ் நிதி அபாயத்தின் மீது ஜூன் 2006ஆம் ஆண்டில் எச்சரிக்கையை வெளியிட்டது: "... பரந்த ஹெட்ஜ் நிதி முதலீட்டு வியூகங்களுக்குள்ளான தனிநபர் ஹெட்ஜ் நிதிகளின் அதிகரித்துவரும் ஒரேவிதமான நிலைப்புத்தன்மை நிதி நிலைப்புத்திறனுக்கான மற்றொரு பெரிய அபாயமாகும், இது சாத்திமுள்ள தீர்வுகளின் அடிப்படை அம்சம் இல்லாதபோதிலும் தீவிர கண்கானிப்பிற்கு அதிகாரமளிக்கிறது. பரந்த ஹெட்ஜ் நிதி முதலீட்டு வியூகங்களும் அதிக அளவிற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன என்ற ஆதாரத்தினால் இந்த அபாயம் மேலும் பெரிதுபடுத்தப்பட்டது, அதனால் இது மேற்கொண்டு கும்பலான வர்த்தகத்திலிருந்து ஒழுங்குமுறையற்று வெளியேறுவதன் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் சாத்தியத்தை அதிகரிக்கச் செய்தது." இருப்பினும் இந்த இசிபி அறிக்கை நிதித் தொழில்துறைகளின் பாகங்களால் முரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அமைப்புக் குலைவு அபாயத்தின் சாத்தியம் ஜூலை 2007 ஆம் ஆண்டில் ஏறக்குறைய குலைவுற்றுவிட்ட இரண்டு பியர் ஸ்டெர்ன்ஸ் ஹெட்ஜ் நிதிகளால் பெரிதுபடுத்தப்பட்டன. இந்த நிதிகள் அடமானம்-திருப்பியளிக்கும் ஆவணங்களில் முதலீடு செய்யப்பட்டன. இந்த நிதிகளின் நிதிசார்ந்த பிரச்சினைகள் பியர் ஸ்டெர்ன்ஸிடமிருந்து வந்த நிதிகளுள் ஒன்றில் பணத்தை செலுத்துவேண்டியதை அவசியமாக்கியது ஆனால் வெளிப்புற உதவி கிடையாது. 1998ஆம் ஆண்டில் நீண்டகால மூலதன நிர்வாகத்தின் சரிவுக்குப் பின்னர் இதுதான் மிகப்பெரிய நிதி பிணையமீட்பு ஆகும். அமெரிக்க ஆவணங்கள் மற்றும் மாற்றக ஆணையம் இதை விசாரணை செய்து வருகிறது. தனியாராக உள்ள லேசாக நெறிமுறைப்படுத்தப்பட்ட தனியுரிமைகளின் ஹெட்ஜ் நிதிகள் தங்களுடைய நடவடிக்கைகளை மூன்றாம் நபருக்கு வெளிப்படுத்த வேண்டிய கடமைப்பாடு கொண்டவை அல்ல. இது, வெளிப்படுத்தல்களுக்கான நெறிமுறையாக்க தேவைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் பரஸ்பர நிதிக்கு (அல்லது யூனிட் டிரஸ்ட்) முரணானதாகும். ஹெட்ஜ் நிதி முதலீட்டாளர் வழக்கமாக நிதியின் முதலீட்டு ஆலோசகரை நேரடியாக அணுகக்கூடியவராவார், அத்துடன் அவர் சில்லறை முதலீட்டு நிதிகளில் உள்ள முதலீட்டாளர்களைக் காட்டிலும் மிகவும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும் சலுகையையும் பெறுகிறார். இது ஊகிக்கப்பட்ட அபாயங்களின் விவரமான ஆலோசனைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை உள்ளிட்டிருக்கலாம். இருப்பினும், இந்த உயர்மட்ட வெளிப்படுத்தல் முதலீ்ட்டாளர் அல்லாதோருக்கு கிடைக்காது என்பதுடன், இது ஹெட்ஜ் நிதியின் மதிப்பிற்குரிய ரகசியத்தன்மைக்கு பங்களிக்கவும் செய்கிறது, அதேசமயம் சில ஹெட்ஜ் நிதிகள் முதலீட்டாளர்களுக்கும்கூட மிகவும் வரையறுக்கப்பட்ட வெளிப்படைத்தன்மைகளையே வழங்குகின்றன. சில ஹெட்ஜ் நிதிகள், முக்கியமாக அமெரிக்க நிதிகள் தங்களுடைய சொத்துக்களுக்கான மேற்பார்வையாளராகவோ அல்லது நிர்வாகியாகவோ (நிதியின் மொத்த சொத்து மதிப்பை கணக்கிடுபவர்) மூன்றாம் நபர்களை பயன்படுத்துவதில்லை. இது விருப்பங்களின் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதுடன் அதன் உச்சகட்டமாக இது மோசடி செய்வதற்கும் வழிவகுக்கலாம். ஒரு சமீபத்திய உதாரணத்தில், சர்வதேச நிர்வாக கூட்டாண்மையைச் சேர்ந்த கிர்க் ரைட் ஏறத்தாழ 180 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாடிக்கைதாரரை ஏமாற்றிய குற்றச்சாட்டான அஞ்சல் மோசடி மற்றும் பிற ஆவணங்கள் விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். 2008 ஆம் ஆண்டு டிசம்பரில், பெர்னார்ட் மடோஃப் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் போன்ஸி தி்ட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். கடந்த ஐந்தாண்டுகளில் ஓரளவிற்கு ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருந்த ஹெட்ஜ் நிதியின் செயல்திறன் மாற்று முதலீ்ட்டுத் தொழிலுக்கான அழைப்பாக அமைந்தது. இரண்டு காரணங்களுக்காக ஆல்ஃபா அரிதானதாக தோன்றக்கூடியதானது. முதலில், வர்த்தகம் செய்யப்பட்ட அளவுகளில் ஏற்படும் அதிகரிப்பு ஹெட்ஜ் நிதி செயல்திறனின் மூலாதாரமாக இருக்கும் சந்தை ஒழுங்கின்மைகளைக் குறைத்துவிடுகிறது. இரண்டாவது, ஊக்கத்தொகை மாதியானது நிறைய நிர்வாகிகளைக் கவர்கிறது, இது இந்தத் தொழில்துறையில் இருக்கும் திறமைகளை நீர்த்துப்போகச் செய்கிறது, இருப்பினும் இந்தக் காரணங்கள் விவாதத்திற்கு உட்பட்டிருக்கின்றன. 2006 ஜூனில் செனட் நீதிமன்ற ஆணையம் ஹெட்ஜ் நிதிகளுக்கும் தனிப்பட்ட பகுப்பாய்விற்கும் இடையில் உள்ள தொடர்புகளை விசாரணை செய்யத் தொடங்கியது. அமெரிக்க ஆவணங்கள் மற்றும் மாற்றக ஆணையமும் (எஸ்இசி) ஹெட்ஜ் நிதிகள் மூலம் உள்ளிருப்போர் வர்த்தகத்தை விசாரிப்பதன் மீதான மூலாதாரங்களில் கவனத்தை செலுத்துகிறது. விளம்பரம் மற்றும் மையப்படுத்தப்பட்ட சேகரிப்பின் காரணமாக செயல்திறன் புள்ளிவிவரங்கள் பெறுவதற்கு கடினமானவையாக இருக்கின்றன. இருப்பினும் சுருக்க விவரங்கள் பல்வேறு பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது காணக்கிடைக்கின்றன. செயல்திறன் எவ்வாறு அபாயத்தின் அளவோடு சரிசெய்யப்பட வேண்டும் என்ற கேள்வி ஏராளமான மற்றும் முரண்பாடான ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது. வழக்கமான குறிப்பான்கள் (ஷார்ப், டிரெனார், ஜென்ஸன்) லாபங்கள் ஒரு முறைப்படியான விநியோகத்தைப் பின்பற்றும்போது சிறந்த முறையில் செயல்படுகின்றன. இந்த முறையில், அபாயமானது ஸ்டேண்டர்டு டீவியேஷன் முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. துரதிஷ்டவசமாக, ஹெட்ஜ் நிதி லாபங்கள் சாதாரணமாக விநியோகிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதோடு, ஹெட்ஜ் நிதி லாபத் தொடர்கள் தாமாகவே ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. தொடர்விளைவாக, வழக்கமான செயல்திறன் அளவீடுகள், அவை ஹெட்ஜ் நிதிகளுக்கு பயன்படுத்தப்படும்போது கோட்பாட்டுரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதோடு, அவற்றை கிடைக்கக்கூடிய லாபத் தொடரின் குறுகியகால இயல்பினால் குறிப்பிடப்பட்டதையும்விட குறைந்த அளவிற்கான நம்பகத்தன்மை உள்ளவையாக்குகின்றன. சில புதிய செயல்திறன் அளவீடுகள் இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கான முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: கிரிகோரியோ அண்ட் கேயியின் மேம்படுத்தப்பட்ட ஷார்ப் விகிதம் (2003), கீட்டிங் அண்ட் ஷாத்விக்கின் ஒமேகா (2002), ஷர்மாவின் மாற்று முதலீடுகள் அபாய சரிசெய்தல் செயல்திறன் (2004), மற்றும் கப்லான் அண்ட் நோயல்ஸின் கப்பா (2004). இருப்பினும், மிகவும் உரிய முறையிலான முழு செயல்திறன் அளவீட்டில் ஒருமனதான ஏற்பு இல்லை என்பதுடன் வழக்கமான செயல்திறன் அளவீடுகளே இப்போதும் இந்தத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. நவீன பங்குப் பட்டியல் கோட்பாட்டின்படி, தர்க்கரீதியான முதலீட்டாளர்கள் சராசரி/மாறுபாடு திறன் உள்ள பங்குப்பட்டியலை வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள் (அதாவது, பங்குப்பட்டியல்கள் ஒரு யூனிட் அபாயத்திற்கு அதிகப்படியான வருவாயை அளிக்கின்றன, ஒரு யூனிட் வருவாய்க்கு குறைந்த அளவிற்கான அபாயத்தை வழங்குகின்றன). ஹெட்ஜ் நிதிகளின் (குறிப்பாக சந்தை சமநிலை மற்றும் இதேபோன்ற பங்குகளின்) கவர்ச்சிகரமான அம்சங்களுள் ஒன்று அவை சிலசமயங்களில் ஈக்விட்டிகள் போன்ற பாரம்பரிய சொத்துக்களோடு மிதமான அளவிற்கு தொடர்புள்ளவையாக இருக்கின்றன என்பதுதான். அதாவது ஹெட்ஜ் நிதிகள் வெவ்வேறு வகையில் முதலீடு செய்பவையாக முதலீட்டு பங்குப் பட்டியல்களில் முற்றிலும் மதிப்புவாய்ந்த பங்காற்றுகின்றன என்பதோடு ஒட்டுமொத்த பங்குப்பட்டியல் அபாயத்தையும் குறைக்கின்றன. இருப்பினும், ஒருவர் அதிகப்படியான சொத்து விகிதத்தை ஹெட்ஜ் நிதிகளில் முதலீடு செய்ய விரும்பாமைக்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவை: முதலீட்டாளர்களின் பங்குப் பட்டியல்களில் தகுதிவாய்ந்த உள்ளடங்கல்களில் போதுமான அளவிற்கு பரவலாக முதலீடு செய்யக்கூடியவை என்று சில ஆய்வுகள் ஹெட்ஜ் நிதியை பரிந்துரை செய்கின்றன, ஆனால் இது விவாதத்திற்குரியதாகும், உதாரணத்திற்கு பங்கு குறியீட்டெண் நிதி, பங்குப்பத்திர குறியீட்டெண் நிதி மற்றும் ஹெட்ஜ் நிதிகளாக கருதப்படக்கூடியவற்றை உள்ளடக்கிய வாய்ப்புத் தொகுதியின் மீதான சராசரி-மாறுபாட்டு அனுகூலமாக்கல் கணக்கீட்டை மேற்கொண்ட மார்க் கிரிட்ஸ்மன். இவர், சராசரி மாறுபாட்டு திறனுள்ள பங்குப்பட்டியல், செயல்திறன் கட்டணங்களின் காரணமாக ஹெட்ஜ் நிதிகளின் பகிர்மானம் எதையும் உள்ளிட்டிருக்கவில்லை என்பதைக் கண்டார். இதை நிரூபிப்பதற்கு, ஹெட்ஜ் நிதி செயல்திறன் கட்டணங்களை விதிப்பதில்லை என்ற அனுமானத்தைப் பயன்படுத்தி இந்த அனுகூலமாக்கல் கணக்கீட்டை மீண்டும் செய்துகாட்டினார். இந்த இரண்டாவது அனுகூலமாக்கல் கணக்கீட்டின் முடிவு 74 சதவிகித ஹெட்ஜ் நிதிகள் பகிர்மானமாக இருந்தது. ஒரு பரவலான முதலீட்டு பங்குப்பட்டியலில் ஹெட்ஜ் நிதிகளின் கவர்ச்சியைக் குறைக்கும் மற்றொரு காரணி ஈக்விட்டி ஏற்பு சந்தைகளின்போது, மதிப்பை சேர்த்துக்கொள்வதற்கு அவற்றின் பங்குப்பட்டியலினுடைய பகுதியை முதலீட்டாளர் கேட்கும்போது மட்டும் குறைவான அளவிற்கு செயல்திறன் உள்ளவையாக இருப்பதாகும். உதாரணத்திற்கு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பரில் கிரடிட் சூஸி/டிரிமாண்ட் ஹெட்ஜ் நிதி குறியீட்டெண் 9.87 சதவிகிதத்திற்கு குறைந்தது. இதேவிதமான குறியீட்டெண் வரிசையின்படி, "அர்ப்பணிக்கப்பட்ட குறுகியகால சார்புநிலைகள்" நிதிகளும்கூட 2008 ஆம் ஆண்டு செப்டம்பரின்போது -6.08 சதவிகித வருவாயைக் கொண்டிருந்தன. வேறு வகையில் சொல்வதென்றால், குறைந்த சராசரியுள்ள பரஸ்பர தொடர்பு ஹெட்ஜ் நிதிகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றச்செய்யலாம், இது குழப்பமான காலகட்டத்தில் பலன்தராது, உதாரணத்திற்கு 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட லேமன் பிரதர்ஸின் சரிவு. ஹெட் நிதிகள் 2008 ஆம் ஆண்டில் ஏமாற்றமளிக்கும் லாபங்களை அளித்தன, ஆனால் ஹெட்ஜ் நிதியின் சராசரி லாபமான -18.65 சதவிகிதம் (ஹெச்எஃப்ஆர்ஐ நிதி எடைமான மொத்த குறியீட்டெண் வருவாய்) ரொக்கம் தவிர்த்து பெரும்பாலான சொத்துக்களால் உருவாக்கப்பட்ட லாபங்களைக் காட்டிலும் சிறந்ததாக இருந்தது. எஸ்&பி 500 மொத்த லாபம் 2008 இல் -37.00 சதவிகிதமாக இருந்தது என்பதுடன், உலகிலேயே இதுதான் சிறப்பாக செயல்பட்ட ஈக்விட்டி குறியீடுகள் ஆகும். சில ஈக்விட்டி சந்தைகள் தங்களது மதிப்பில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இழந்தன. பெரும்பாலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கூட்டாண்மை கடன் குறியீடுகளும் 2008 இல் பாதிக்கப்பட்டன, சராசரியான ஹெட்ஜ் நிதியைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மோசமான இழப்புக்களை சந்தித்தன. பரஸ்பர நிதிகளும் 2008 ஆம் ஆண்டில் ஹெட்ஜ் நிதிகளைக் காட்டிலும் மோசமாகவே செயல்பட்டன. லிப்பரின் கூற்றுப்படி, சராசரியான அமெரிக்க உள்நாட்டு ஈக்விட்டி பரஸ்பர நிதி 2008 ஆம் ஆண்டில் 37.6 சதவிகிதத்திற்கு குறைந்தது. சராசரியான சர்வதேச ஈக்விட்டி பரஸ்பர நிதி 45.8 சதவிகிதத்திற்கு வீழ்ந்தது. துறைசார்ந்த பரஸ்பர நிதியின் சராசரி 39.7 சதவிகிதத்திற்கு வீழ்ந்தது. சீன பரஸ்பர நிதியின் சராசரி 52.7 சதவிகிதம் சரிந்தது, லத்தீன் அமெரிக்க பரஸ்பர நிதி 57.3 சதவிகிதத்திற்கு சரிந்தது. குடியிருப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் 2008 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதிக்கப்பட்டன. மொத்தத்தில், ஹெட்ஜ் நிதிகள் 2008 ஆம் ஆண்டில் அபாயகரமான முதலீட்டு தேர்வுகள் நிலவிய காலத்திலும் சிறப்பாகவே செயல்பட்டன. ஹெவ்லட்-பேக்கர்ட் ஹெச்பி என்று பொதுவாக குறிப்பிடப்படும் ஹெவ்லட் -பேக்கர்ட் நிறுவனம் அமெரிக்கா, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவை தலைமையிடமாக கொண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனமாகும். ஹெச்பி உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் செயல்படுகிறது. கம்ப்யூட்டிங், சேமிப்பு மற்றும் நெட்வொர்க்கிங் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் சேவைகளை உருவாக்குவதிலும் தயாரிப்பதிலும் ஹெச்பி நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. பர்சனல் கம்ப்யூட்டிங் சாதனங்கள், நிறுவன சர்வர்கள், அதுசார்ந்த சேமிப்பு சாதனங்கள், அத்துடன் பிரிண்டர்கள் மற்றும் பிற படமாக்கல் தயாரிப்புகள் இதன் பிரதான தயாரிப்பு வரிசைகளில் அடங்கியிருக்கின்றன. ஹெச்பி தனது தயாரிப்புகளை வீட்டு உபயோகப்பொருட்கள், சிறிய மற்றும் பெரிய தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விநியோகம், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அலுவலக-அளிப்பு சில்லறை வியாபாரிகள், சாப்ட்வேர் கூட்டாளிகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப விற்பனையாளர்களின் வழியாக சந்தையிடுகிறது. 2006 இல் ஹெச்பி ஆண்டு வருவாயாக 91.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தெரிவித்திருந்தது, இது ஐபிஎம்மின் 91.4 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடுகையில் விற்பனை வகையில் ஹெச்பி உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப விற்பனையாளராக இருப்பதைக் காட்டுகிறது. 2007 இல் இதனுடைய 104 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயானது, வரலாற்றிலேயே 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட வருவாயைக் காட்டிய முதல் ஐடி நிறுவனமாக ஹெச்பியை உருவாக்கியுள்ளது. போட்டியாளரான டெல் நிறுவனத்தையும் வி்ஞ்சிய ஹெச்பி, பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையில் உலகளவில் மிகப்பெரிய விற்பனையாளராக உள்ளது, சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களான கார்ட்னர் மற்றும் ஐடிசி ஆகியோர் தெரிவித்துள்ள ஜனவரி 2008 ஆம் ஆண்டு கூற்றுப்படி; ஹெச்பி ஏறத்தாழ 3.9 சதவிகித சந்தைப் பங்கைப் கைப்பற்றியிருப்பதோடு 2007 ஆம் ஆண்டின் முடிவில் ஹெச்பிக்கும் டெல்லுக்கும் இடையிலான இடைவெளி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு விரிவடைந்திருக்கிறது எனலாம். ஹெச்பி உலகிலேயே ஆறாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமாகவும் இருக்கிறது. 1999 இல் தனது தொழிலின் ஒரு பகுதியாக அஜிலண்ட் டெக்னாலஜிஸை துணைநிறுவனமாக கொண்டது, 2002 இல் காம்பாக் நிறுவனத்தை இணைத்துக்கொண்டது, 2008 இல் ஒன்றுசேர்ந்த வருவாய்களான 118.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வழிவகுத்த மற்றும் 2009 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் 500 தரவரிசையில் 9 வதாக வந்தது ஆகியவற்றிற்கு வழியமைத்த 2008 இல் இடிஎஸ் ஐ வாங்கியது ஆகியவை பிரதான நிறுவன மாற்றங்களாகும். நவம்பர் 2009 இல் 3காம் ஐ வாங்கப்போவதாக ஹெச்பி அறிவித்தது. வில்லியம் (பில்) ஹெவ்லட் மற்றும் டேவிட் (டேவ்) பேக்கார்ட் ஆகிய இருவரும் 1935 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்களாவர். பெரும் பொருளாதார மந்தம் நிலவிய காலத்தில் ஸ்டான்போர்டில், காலஞ்சென்ற போராசிரியர் ஃபிரெடெரிக் டெர்மனிடம் அவர்கள் ஃபெலோஷிப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பாலோ ஆல்டோவிற்கு அருகாமையில் இருந்த கேரேஜில் இந்த நிறுவனம் உருவானது. ஹெவ்லட்-பேக்கர்டை உருவாக்குவதற்கு டெர்மனே அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் என்று கருதப்படுகிறது. 1939 இல், 538 அமெரிக்க டாலர்கள் துவக்கநிலை முதலீட்டில் பேக்கர்டின் கேரேஜில் ஹெவ்லட்-பேக்கர்ட் நிறுவனத்தை நிறுவினர். ஹெவ்லட்டும் பேக்கர்டும் தங்களுடைய நிறுவனம் ஹெவ்லட்-பேக்கர்ட் என்று அழைக்கப்பட வேண்டுமா அல்லது பேக்கர்ட் ஹெவ்லெட் என்று அழைக்கப்பட வேண்டுமா என்பதை நாணயத்தை சுண்டிப்பார்த்து முடிவு செய்தனர். பேக்கர்ட் நாணயத்தை சுண்டிப்பார்த்தலில் வென்றார் என்றாலும் தங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு "ஹெவ்லட்-பேக்கர்ட்" என்றே அவர்கள் பெயரிட்டனர். ஆகஸ்ட் 18, 1947 இல் ஹெச்பி கார்ப்பரேட் நிறுவனமானது, நவம்பர் 6, 1957 இல் பொதுப்பங்கு நிறுவனமானது. அவர்கள் பணியாற்றிய பல திட்டப்பணிகளிலேயே, நிதிசார்ந்து வெற்றி பெற்ற முதல் தயாரிப்பு ஹெச்பி200ஏ மாடல் பிரிசிஸன் ஆடியோ ஆஸிலேட்டர் ஆகும். அவர்களுடைய கண்டுபிடிப்பு சர்க்யூட்டின் அதிமுக்கியமான பகுதியில் வெப்பநிலையை சார்ந்த மின்னோட்டத் தடை சாதனமாக ஒரு சிறிய ஒளி விளக்கைப் பயன்படுத்துவது ஆகும். போட்டியாளர்கள் குறைந்த அளவு நிலைப்புத் திறனுள்ள மின்னோட்டத் தடை சாதனத்தை 200 டாலர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தபோது 200ஏ மாடலை 54.40 டாலர்களுக்கு விற்க அவர்களுக்கு இது உதவியது. இந்த மாடல் 200 ஜெனரேட்டர்கள் தொடரானது, டியூப்-அடிப்படையிலான ஆனால் பல வருட வடிவ மாறுபாடுகளுடன் 200ஏபி ஆக 1972 இல் உருவாகும்வரை தொடர்ந்து விற்பனையானது. 33 வருடங்களில் நீண்டகாலத்திற்கு அடிப்படை எலக்ட்ரானிக் வடிவமாக விற்பனையான ஒரே தயாரிப்பு இதுவாகத்தான் இருக்கும். வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்த நிறுவனத்தின் தொடக்க காலத்திய வாடிக்கையாளர்களுள் ஒருவராவார், இந்த நிறுவனம் "ஃபேண்டேஸியா" என்ற படத்திற்கு திரையரங்குகளில் நிறுவப்பட்டுள்ள ஃபேண்டாசவுண்ட் சரவுண்ட் ஒலி அமைப்பிற்கு சான்றளிக்க பயன்படுத்துவதற்கு மாடல் 200பி ஆஸிலேட்டர்கள் (ஒவ்வொன்றும் 71.50 டாலர்கள்) எட்டினை வாங்கியது. இந்த நிறுவனம் முதலில் குறிப்பிட்ட எதிலும் கவனத்தை குவிக்கவில்லை, தொழிற்சாலைகள் மறறும் விவசாயத்திற்கான பரந்த அளவிலான எலக்ட்ரானிக் தயாரிப்புகளில் ஈடுபட்டது. முடிவில் அவர்கள் உயர்தரமான எலக்ட்ரானிக் சோதனை மற்றும் அளவீட்டு சாதனத்தில் கவனத்தை செலுத்த தீர்மானித்தனர். 1940களில் இருந்து 1990கள் வரை எலக்ட்ரானிக் சோதனை சாதனங்களிலேயே இந்த நிறுவனம் கவனத்தை செலுத்தியது - சிக்னல் ஜெனரேட்டர்கள், வோல்டாமீட்டர்கள், ஆஸிலோஸ்கோப்ஸ், அதிர்வெண் கவுண்டர்கள், வெப்பமானிகள், நேர தரநிலைமானிகள், அலை பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் பல கருவிகள். அளவீட்டு அளவு மற்றும் துல்லியத்தை நோக்கி வரம்புகளை முன்னெடுத்துச் செல்வதே இதன் தனித்துவமான அம்சம்; பல ஹெச்பி சாதனங்களும் மற்ற ஒப்பீட்டு சாதனங்களோடு பொருத்திப் பார்க்கையில் மிகவும் உணர்மிகுந்த, துல்லியமான மற்றும் நுட்பமான கருவிகளாகும். நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 200ஏ ஆல் அமைத்துக்கொள்ளப்பட்ட முறையைத் தொடர்ந்து, சோதனைக் கருவிகள் "A" என்ற எழுத்தைத் தொடர்ந்து மூன்று அல்லது ஐந்து இலக்க எண்களைக் கொண்டு லேபிள் இடப்பட்டன. மேம்பட்ட வடிவங்கள் "B"இல் இருந்து "E" வரையிலான முன்னொற்றுக்களை வைத்திருந்தன. தயாரிப்பு அளவு பரவலாக வளர்ந்ததால் துணைப்பொருட்கள், சப்ளைகள், சாப்ட்வேர் மற்றும் உபரி பாகங்களுக்கான பெயர்களோடு தொடங்கும் தயாரிப்பு பொருளின் பெயரை ஹெச்பி பயன்படுத்தத் தொடங்கியது. சிலிக்கான் பள்ளத்தாக்கின் குறியீட்டு நிறுவனராக அங்கீகரிக்கப்படும் ஹெச்பி ஃபேர்சைல்ட் செமிகண்டக்டரை உருவாக்க வில்லியம் ஷாக்லேயை மூன்று வருடங்களுக்குப் பின்னர் "டிரைட்டரஸ் எய்ட்" கைவிட்ட 1957 வரை செமிகண்டக்டர் சாதனங்களை இது உற்சாகத்தோடு ஆராய்ச்சி செய்திருக்கவில்லை. ஏறத்தாழ 1960 இல் நிறுவப்பட்ட ஹெவ்லட்-பேக்கர்டின் ஹெச்பி கூட்டுப் பிரிவு, பிரதானமாக உள்புறப் பயன்பாட்டிற்காக செமிகண்டக்டர் சாதனங்களை உருவாக்கியது. கருவிகளும் கால்குலேட்டர்களும் இந்த சாதனங்களைப் பயன்படுத்திய சில தயாரிப்புகளாகும். சில உயர்தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு 1960களில் சோனி மற்றும் யோககவா எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் ஹெச்பி கூட்டாளியாக சேர்ந்தது. ஹெச்பி-போன்று காணப்படும் தயாரிப்புகளை ஜப்பானில் உருவாக்குவதற்கு அதிக செலவுபிடித்ததால் இந்தத் தயாரிப்புகள் பெரிய அளவிற்கு வெற்றிபெறவில்லை. ஹெச்பி தயாரிப்புகளை ஜப்பானில் சந்தையிட 1963 இல் ஹெச்பியும் யோககவாவும் கூட்டு வர்ததகத்தில் (யோககவா-ஹெவ்லட்-பேக்கர்ட்) ஈடுபட்டன. ஹெச்பி 1999 இல் ஹெவ்லட்-பேக்கர்டின் யோககவா எலக்ட்ரிக்ஸ் பங்குகளை வாங்கியது. டிஜிட்டல் சாதனங்களில் நிபுணத்துவம் பெற டைனக் என்ற சிறிய துணை நிறுவனத்தை ஹெச்பி உருவாக்கியது. ஹெச்பியின் லோகோவான "hp" என்பதை மேல்நோக்கி தலைகீழாக மாற்றுவதால் வந்த "dy" என்ற லோகோவைக் கொண்டு புதிய நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டது. முடிவில் டைனக் என்ற பெயர் டைமக் என்று மாற்றப்பட்டு, 1959 இல் ஹெச்பி அதை இணைத்துக்கொண்டது. ஹெச்பி தனது கருவிகளுடன் டிஜிட்டல் சாதன கார்ப்பரேஷன் மினிகம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்தது. டிஇசியைக் கொண்டு தொழில் செய்வதைக் காட்டிலும் மற்றொரு சிறிய குழுவை உருவாக்குவது சுலபமானது என்று தீர்மானித்த பின்னர், ஹெச்பி 2100 / ஹெச்பி 1000 மினிகம்ப்யூட்டர் வரிசைகளோடு கணிப்பொறி சந்தையில் ஹெச்பி நுழைந்தது. இன்றும் பயன்படுத்தப்படுகின்ற இண்டல் x86 கட்டமைப்போடு ஒருவகையில் ஒற்றுமையுடைய ரிஜிஸ்டர்கள் உருவாக்கித்தரும் எளிய நினைவகப் பிரிவுகள் அடிப்படையிலான வடிவத்தைக் கொண்டிருந்தன. இதை மாற்றியமைப்பதற்கான ஒருசில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இந்தத் தொடர் 20 வருடங்களுக்கு தயாரிக்கப்பட்டது என்பதுடன் ஹெச்பி 9800 மற்றும் ஹெச்பி 250 தொடர் டெஸ்க்டாப் மற்றும் பிஸினஸ் கம்ப்யூட்டர்களின் முன்னோடியாகவும் இருந்தது. பிஸினஸ் கம்ப்யூட்டிங் சர்வருக்கான மேம்பட்ட ஸ்டேக்-அடிப்படையிலான ஹெச்பி 3000, பின்னாளில் ஆர்ஐஎஸ்சி தொழில்நுட்பம் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது, சமீபத்தில் சந்தையிலிருந்து ஓய்வுபெற்றது இது ஒன்றுதான். ஹெச்பி 2640 நுட்பமும் அறிவுப்பூர்வமும் வாய்ந்த டெர்மினல்கள் தொடர் ஏஎஸ்சிஐஐக்கான ஃபார்ம்-அடிப்படையிலான இண்டர்ஃபேஸ்களையும், திரை லேபிள் இடப்பட்ட செயல்பாட்டு விசைகளையும் அறிமுகப்படுத்தியது, இவை இன்று பெட்ரோல் நிரப்பிடங்கள் மற்றும் வங்கி ஏடிஎம்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகி்ன்றன. கம்ப்யூட்டிங் உருவாக்க நாட்களில் இது கிண்டலுக்கு ஆளானாலும் விற்பனை வகையில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப விற்பனையாளரான ஐபிஎம்மையும் இறுதியில் ஹெச்பி விஞ்சிவிட்டது. 1968 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெவ்லட்-பேக்கர்ட் 9100ஏ பர்சனல் கம்ப்யூட்டர், உலகின் முதல் சந்தையிடப்பட்ட, பெரிய அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்ட கம்ப்யூட்டரை உற்பத்தி செய்தவர்களாக "வயர்ட்" பத்திரிக்கையால் ஹெச்பி அடையாளம் காணப்பட்டது. ஹெச்பி இதை டெஸ்க்டாப் கால்குலேட்டர் என்றே அழைத்தது, ஏனெனில் பில் ஹெவ்ல்ட, இவ்வாறு கூறியிருந்தார் "நாம் இதை கம்ப்யூட்டர் என்று அழைத்தால் இது நமது வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர் குருக்களால் மறுக்கப்பட்டுவிடும், ஏனென்றால் இது பார்ப்பதற்கு ஐபிஎம் போன்று இல்லை. அதனால் நாங்கள் இதை கால்குலேட்டர் என்று அழைக்கவே முடிவெடுத்திருக்கிறோம், அதனால் இதுபோன்ற முட்டாள்தனங்கள் காணாமலே போய்விடும்." அந்த நேரத்தில் ஏற்பட்ட என்ஜினியரிங் வெற்றியால் லாஜிக் சர்க்யூட் எந்த ஒரு இண்டக்ரேட்டட் சர்க்யூட்டும் இல்லாமல் உருவாக்கப்பட்டடது; சிபியுவை அசெம்பிள் செய்வது முற்றிலும் தனித்தனி சாதனங்களைக் கொண்டே செய்யப்பட்டது. சிஆர்டி திரையமைப்பு, மேக்னடிக்-கார்ட சேமிப்பகம், மற்றும் பிரிண்டர் ஆகியவற்றுடன் இதன் விலை கிட்டத்தட்ட 5000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த மெஷினின் விசைப்பலகை இடையிடையே குறுக்காக அறிவியல் கால்குலேட்டரைப் போன்றும், உடன் இணைக்கப்பட்ட மெஷினுடனும் இருந்தது. அகரவரிசை விசைப்பலகை இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உண்மையில் ஹெச்பியில் பணியாற்றிய நேரத்திலேயே ஆப்பிள் I கம்ப்யூட்டரை வடிவமைத்தவருமான ஸ்டீவ் வோஸ்னியாக் தனது படைப்பை இவர்களிடம்தான் வர்த்தகத்தில் நுழைவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கினார், ஆனால் அவர்கள் தங்கள் நிறுவனம் அறிவியல், தொழில் மற்றும் தொழிற்துறை சந்தையிலேயே இருக்க விரும்புவதாக கூறி ஒரு நிறுவனமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிறுவனம் பல்வேறுவிதமான தயாரிப்புக்களுக்கு உலகளாவிய மதிப்பைப் பெற்றது. அவர்கள், 1972 இல் உலகின் முதலாவது "கைக்கடக்கமான அறிவியல் எலக்ட்ரானிக் கால்குலேட்டர்" (ஹெச்பி-35), 1974 இல் முதலாவது "கைக்கடக்கமான நிரல்படுத்தக்கூடியது" (ஹெச்பி-65), 1979 இல் முதலாவது "அல்ஃபாநியூமரிக், நிரல்படுத்தக்கூடிய, நீ்ட்டித்துக்கொள்ளக்கூடியது" (ஹெச்பி-41சி), மற்றும் முதலாவது குறியீட்டு மற்றும் கிராபிக் கால்குலேட்டரான ஹெச்பி-28சி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர். அவர்களுடைய அறிவியல் மற்றும் பிஸினஸ் கால்குலேட்டர்களைப் போன்று அவர்களுடைய ஆஸிலோஸ்கோப்கள், லாகிஜ் அனலைசர்கள் மற்றும் பிற அளவீட்டுக் கருவிகள் உறுதி மற்றும் பயன்பாட்டுத் திறனுக்கான பாராட்டுதல்களைப் பெற்றன (பிந்தைய தயாரிப்புகள் அஜிலெண்டின் தயாரிப்பு வரிசையின் உபதயாரிப்பின் பகுதியாக இருந்து வருகின்றன). இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் வடிவமைப்பு கோட்பாடு "பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கான வடிவமாக" இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. 98x5 தொடர் தொழில்நுட்ப டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் 9815 மற்றும் மலிவான 80 வரிசையுடன் 1975 இல் தொடங்கின, மீண்டும் தொழில்நுட்ப கம்ப்யூட்டர்கள் 1979 இல் 85 உடன் தொடங்கின. இந்த மெஷின்களை தொடங்கியவுடன் உடனடியாக கிடைக்கக்கூடிய வகையில் இவை BASIC நிரலாக்க மொழி இன் வடிவத்தைப் பயன்படுத்தின என்பதுடன் சேமிப்பகத்திற்கு பிராப்ரைட்டரி மேக்னடிக் டேப்பைப் பயன்படுத்தின. ஹெச்பி கம்ப்யூட்டர்கள் பின்னாளில் வந்த ஐபிஎம் பர்சனல் கம்ப்யூட்டர்களின் செயல்திறன்களோடு ஒற்றுமையுடையவைகளாக இருந்தன, இருப்பினும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் வரமபுகளால் விலையை அதிகமாகவே நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. 1984 இல், டெஸ்க்டாப்பிற்கான இன்க்ஜெட் மற்றும் லேசர் பிரிண்டர்களை ஹெச்பி அறிமுகப்படுத்தியது. இதனுடைய ஸ்கேனர் தயாரிப்பு வரிசையுடன் இவை பின்னாளில் வெற்றிகரமான பலசெயல்திறனுள்ள தயாரிப்புகளாக உருவாக்கப்பட்டன, இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை தனித் தயாரிப்புகளான பிரிண்டர்/ஸ்கேனர்/காப்பியர்/ஃபேக்ஸ் மெஷின்கள் ஆகியவையாகும். ஹெச்பியின் வியக்கத்தக்க வகையில் பிரபலமடைந்த லேசர் பிரிண்டர்களின் லேசர்ஜெட் வரிசையினுடைய பிரிண்ட் செய்யும் இயக்கவியல், ஜெராக்ஸ் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கேனன் பாகங்களிலேயே (பிரிண்ட் என்ஜின்கள்) ஏறத்தாழ முற்றிலும் சார்ந்திருந்தன. பிரிண்ட் செய்வதற்கான இயக்கவியலுக்கு ஏற்ப தகவலை புள்ளிகளாக மாற்றும் ஹார்டுவேர், ஃபேர்ம்வேர் மற்றும் சாப்ட்வேரை ஹெச்பி உருவாக்கியது. மார்ச் 3 1986, ஹெச்பி HP.com என்ற டொமைன் பெயரை பதிவுசெய்தது, இது இண்டர்நெட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒன்பதாவது டொமைன் ஆகும். இணையத்தள புகழ் கூடத்தில் இரண்டெழுத்து டொமைன் பெயரை சொந்தமாகப் பெற்றுள்ள உலகளாவிய ஒரு சில மிகப்பெரிய கார்ப்பரேஷன்களுள் ஒன்று என்ற நிலையை இன்று இது ஹெச்பிக்கு பெற்றுத்தந்திருக்கிறது. 1987 இல், ஹெவ்லட்டும் பேக்கர்டும் தங்களுடைய தொழிலை உருவாக்கிய பாலோ ஆல்டோ காரேஜ் கலிபோர்னியா மாநிலத்தின் வரலாற்று நிலக்குறியீடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில் ஹெச்பி தங்களுடைய கம்ப்யூட்டர் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தியது, இது துவக்கத்தில் வாடிக்கையாளர்களை அடைய பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் தொழில் வாடிக்கையாளர்களை இலக்காக நிர்ணயித்தது. ஹெச்பியும் மற்ற நிறுவனங்களை வாங்கியதன் மூலமாகவே வளர்ந்தது, 1989 இல் அப்பல்லோ கம்ப்யூட்டரையும், 1995 இல் கன்வெக்ஸ் கம்ப்யூட்டரையும் விலைக்கு வாங்கியது. அந்த பத்தாண்டுகளின் பிற்பகுதியில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக ஆன்லைனில் விற்க தனி துணைநிறுவனமாக ஹெச்பி hpshopping.com ஐ திறந்தது; 2005 இல் ஹெச்பி இதற்கு "HP Home & Home Office Store." என்று மறுபெயரிட்டது. 1999 இல் கம்ப்யூட்டர்கள், சேமிப்பகம் மற்றும் இமேஜிங் சம்பந்தப்படாத தொழில்கள் அனைத்தும் ஹெச்பியிலிருந்து அஜிலண்ட் என்ற துணைநிறுவனமாக உருவானது. அஜிலண்டின் தனி துணை நிறுவனமாக்கம் சிலிக்கான் பள்ளத்தாக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய துவக்கநிலை பொதுப்பங்கு வெளியீடு ஆகும். இந்த தனி துணைநிறுவனம் 30,000 ஊழியர்களுடன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிறுவனத்தை உருவாக்கியது, இது அறிவியல் கருவிகள், செமிகண்டக்டர்கள், ஆப்டிகல் நெட்வொர்க்கிங் சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் வயர்லஸ் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான எலக்ட்ரானிக் சோதனை கருவிகள் ஆகியவற்றை தயாரித்தது. ஜூலை 1999 இல் ஹெச்பி, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியில் முதல் பெண் சிஇஓவான கார்லா ஃபியோரினாவை சிஇஓவாக நியமித்தது. இந்த நிறுவனம் தொழில்நுட்ப உலகத்தின் இரண்டாவது மில்லினியத்தில் காலடி எடுத்து வைத்தபோது ஃபியோரினா சிஇஓவாக பணிபுரிந்தார். அவரது பதவிக்காலத்தில், சந்தையானது ஹெச்பியின் மதிப்பை அந்த நேரத்தில் மற்ற நிறுவனங்களுடன் பாதியாகக் குறைத்தது என்பதுடன் நிறுவனம் பெரிய அளவிற்கான வேலை இழப்பிற்கு ஆளானது. 2005 இல் ஹெச்பி இயக்குநர்கள் அவை அவரை பதவியிறங்கும்படி கேட்டுக்கொண்டது, அவர் பிப்ரவரி 9, 2005 இல் ராஜினாமா செய்தார். ஹெச்பி 2002 இல் காம்பாக்குடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பை எதிர்த்த பில் ஹெவ்லட்டின் மகன் வால்டருடனான வாங்குதல் போராட்ட முயற்சிக்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது. காம்பாக்கும்கூட 1997 இல் டான்டம் கம்ப்யூட்டர்ஸ் (ஒரு முன்னாற் ஹெச்பி ஊழியரால் தொடங்கப்பட்டது) மற்றும் 1998 இல் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றை வாங்கியிருந்தது. இந்த வியூகத்தைப் பின்பற்றி பல வெவ்வேறு சந்தைகளிலும் டெஸ்க்டாப்கள், லேப்டாப்கள் மற்றும் சர்வர்களில் ஹெச்பி ஒரு பெரிய சக்தியாக விளங்கியது. காம்பாக்குடனான இணைப்பிற்குப் பின்னர், புதிய பங்கு வெளியீட்டு குறியீடு இரண்டு முந்தைய குறியீடுகளான, "HWP" மற்றும் "CPQ" ஆகியவற்றின் கலவையாக "HPQ" என்றானது, இது கூட்டணியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதோடு H ewlett-P ackard மற்றும் Compaq ஆகிய இரண்டு நிறுவனங்களின் முக்கிய எழுத்துக்களையும் காட்டியது (தயாரிப்புகளிலும் லோகோவிலும் இருக்கும் காம்பாக்கின் "Q" என்ற லோகோ பிரபலமானதாகும்). மே 2006 இல், "கமப்யூட்டர் மீண்டும் பர்சனல் ஆகிவிட்டது" பிரச்சாரத்தை ஹெச்பி தொடங்கியது. பிசி என்பது ஒரு பர்சனல் தயாரிப்பு என்ற உண்மையை திரும்பக் கொண்டுவருவதாக இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரம் வைரல் மார்க்கெட்டிங், நுட்பமான காட்சியமைப்புகள் மற்றும் அதனுடைய சொந்த வலைத்தளம் (www.hp.com/personal) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டது. சில விளம்பரங்களில் 0}ஃபாரல், பெட்ரா நெம்கோவா, மார்க் பர்நெட், மார்க் க்யூபன், ஜே-சி, க்வன் ஸ்டெபனி, மற்றும் ஷான் ஒயிட் உள்ளிட்ட நன்கறியப்பட்ட ஆளுமைகள் தோன்றினர். மே 13, 2008 இல் ஹெச்பியும் எலக்ட்ரானிக் டேட்டா சிஸ்டம்ஸூம் ஹெச்பி இடிஎஸ் ஐ வாங்கவிருப்பதன் அடிப்படையில் ஒரு இறுதி உடன்பாட்டில் கையெழுத்திடுவதாக அறிவித்தன. ஜுன் 30 இல் 1976 ஆம் ஆண்டு ஹார்ட்-ஸ்காட்-ராடினோ எதிர்நம்பிக்கை மேம்பாடுகள் சட்டத்தின் கீழான காத்திருப்பு காலம் முடிந்துவிட்டதாக ஹெச்பி அறிவித்தது. "இந்த நடவடிக்கைக்கு இன்னமும் இடிஎஸ் பங்குதாரர்கள் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை தெளிவுபடுத்தல்கள் ஐரோப்பிய ஆணையத்திடமிருந்தும் மற்ற அமெரிக்கா அல்லாதவர்களிடமிருந்தும் தேவைப்படுகிறது. சட்ட அதிகாரமும் அதுசார்ந்த திருப்தி அல்லது மற்ற மூடுதல் நிபந்தனைகளின் உரிமைதுறத்தல் ஆகியவை இணைப்பு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன." இந்த உடன்படிக்கை ஆகஸ்ட் 26, 2008 இல் இறுதி வடிவம் பெற்றது என்பதுடன் இடிஎஸ் "இடிஎஸ் ஒரு ஹெச்பி நிறுவனம்" என்று மறுபெயரிடப்படும் என்பதையும் அது வெளிப்படையாக அறிவித்தது. செப்டம்பர் 23, 2009 வரை இடிஎஸ் ஹெச்பி எண்டர்பிரைஸ் சர்வீஸஸ் என்றே அறியப்பட்டிருந்தது. 11 நவம்பர் 2009 இல் 3காமும் மற்றும் ஹெவ்லெட்-பேக்கர்டும் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ரொக்கமாக கொடுத்து 3காமை ஹெவ்லட்-பேக்கர்ட் வாங்கவிருப்பதாக அறிவித்தன. ஒரே இடத்தில் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வது நோக்கிய தங்களது பாதையை முன்னோக்கி செலுத்துவதற்கு தொழில்நுட்ப பெருநிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட இணைத்துக்கொள்ளுதல் மற்றும் வாங்குதலின் தொடர்வரிசைக்கிடையே இந்த வாங்குதல் அளவு மிகப்பெரியதாகும். 2007 இல் தொடங்கிய பொருளாதார குழப்பங்களிலிருந்து, தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுடைய தற்போதைய சந்தையின் இடத்திற்கும் அப்பால் விரிவாக்குவதில் உள்ள நெருக்கடியை தொடர்ந்து உணர்ந்துகொண்டிருக்கின்றனர். முன்னதாக ஐபிஎம் ஆதிக்கம் செலுத்திய தொழில்நுட்ப ஆலோசனை தொழில் பகுதிகளில் ஊடுருவ டெல் நிறுவனம் சமீபத்தில் பீரட் சிஸ்டம்ஸை வாங்கியிருக்கிறது. ஹெவ்லட் பேக்கர்டின் சமீபத்திய நகர்வு சிஸ்கோவால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட எண்டர்பிரைஸ் நெட்வொர்க்கிங் கியர் சந்தையில் ஊடுருவுவதாக இருக்கிறது. ஹெச்பியின் உலகளாவிய செயல்பாடுகள் அமெரிக்கா, கலிபோர்னியா, பாலோ ஆல்டோவில் உள்ள அதனுடைய தலைமையகங்களிலிருந்து இயக்கப்படுகிறது. இதனுடைய அமெரிக்க செயல்பாடுகள் அமெரிக்கா, டெக்ஸாஸ், ஹோஸ்டனில் உள்ள அதன் தொழிலகத்திலிருந்து இயக்கப்படுகிறது-இந்த தளம் உண்மையில் இது வாங்கிய காம்பாக்கிற்கு சொந்தமானதாகும். லத்தீன் அமெரிக்க செயல்பாடுகள் அமெரிக்கா, ஃப்ளோரிடா, மியாமியிலிருந்தும், ஐரோப்பிய செயல்பாடுகள் சுவிட்சர்லாந்து, ஜெனீவாவிலிருந்தும், ஆசிய-பசிபிக் செயல்பாடுகள் சிங்கப்பூரிலிருந்தும் இயக்கப்படுகின்றன. இது கலிபோர்னியா சாண்டியாகோ மற்றும் டெக்ஸாஸ், பிளானோவிலும் பெரிய அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்கிறது-ஹெச்பி விலைக்கு வாங்கிய இடிஎஸ்ஸின் முன்னாள் தலைமையகம். இது சமீபத்தில் வாங்கிய 3காம் மாசசூசெட்ஸ், மார்ல்போரோவிற்கு தொழிலாளர் தளத்தை விரிவுபடுத்தவிருக்கிறது. பிரிண்டர்கள், ஸ்கேனர்கள், டிஜிட்டல் கேமராக்கள், கால்குலேட்டர்கள், பிடிஏக்கள், சர்வர்கள், ஒர்க்ஸ்டேஷன் கம்ப்யூட்டர்கள், மற்றும் வீடு மற்றும் சிறிய தொழில்களின் பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர்கள் வரிசை ஆகியவற்றில் ஹெச்பி வெற்றிகரமாக செயல்படுகிறது; கம்ப்யூட்டர்களில் பலவும் 2002 இல் காம்பாக் உடனான இணைப்பிலிருந்து வந்தவையாகும். ஹெச்பி இன்று ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் மட்டுமல்லாது வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் ஐடி உள்கட்டுமானத்திற்கு உதவுதல் ஆகியவற்றில் முழுவீச்சில் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டுள்ளது. ஹெச்பியின் இமேஜிங் மற்றும் பிரிண்டிங் குரூப் (ஐபிஜி) "பிரிண்டர் ஹார்டுவேர், பிரிண்டிங் சப்ளை மற்றும் ஸ்கேனிங் சாதனங்களுக்கான இமேஜிங் மற்றும் பிரிண்டிங் சிஸ்டம்களை அளிப்பதில் உலகில் முன்னணி வகிக்கிறது என்பதுடன் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்களிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரையிலான வாடிக்கையாளர் பிரிவுகள் வரையிலுமான தீர்வுகளை வழங்குகிறது" ஐபிஜியுடன் இணைந்த தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பம், இன்க்ஜெட் மற்றும் லேசர்ஜெட் பிரிண்டர்கள், நுகர்பொருட்கள் மற்றும் அதுசார்ந்த தயாரிப்புகள், ஆஃபீஸ்ஜெட் ஆல்-இன்-ஒன் பலசெயல்திறன் பிரிண்டர்/ஸ்கேனர்/ஃபேக்ஸ்கள், பெரிய வடிவத்திலான பிரிண்டர்கள், இண்டிகோ டிஜிட்டல் பிரஸ், ஹெச்பி வெப் ஜெட்டாமின் பிரிண்டர் மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர், ஹெச்பி அவுட்புட் மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் சூட், லைட்ஸ்கிரைப் ஆப்டிகல் ரெக்கார்டிங் டெக்னாலஜி, ஹெச்பி ஃபோட்டோஸ்மார்ட் டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் ஃபோட்டோ பிரிண்டர்கள், ஹெச்பி ஸ்பாம், மற்றும் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட தயாரிப்புகள் சேவையான ஹெச்பி ஸ்நாப்ஃபிஷ் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. டிசம்பர் 23, 2008 இல், 4" x 6" புகைப்படங்களை அச்சிட உதவும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சாப்ட்வேர் பயன்பாடான ஐபோனிற்கு ஹெச்பி ஐபிரிண்ட் ஃபோட்டோவை வெளியிட்டது. http://vsslfpro.zcce.compaq.com/plmcontent/NACSC/SML/default.htm அனுப்பப்படும் யூனிட் அளவு மற்றும் வருடாந்திர வருவாயின் அடிப்படையில் "பர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனம்" என்று ஹெச்பியின் பர்சனல் சிஸ்டம்ஸ் குரூப் (பிஎஸ்ஜி) கூறிக்கொள்கிறது. பிஎஸ்ஜி தொழில் பிசிக்கள் மற்றும் துணைப்பொருட்கள், நுகர்வோர் பிசிக்கள் மற்றும் துணைப்பொருட்கள் (ஹெச்பி பெவிலியன், காம்பாக் பிரிசாரியோ, வூடூபிசி), கைக்கடக்கமான கம்ப்யூட்டிங் (எ.கா.,ஐபெக் பாக்கெட் பிசி) மற்றும் டிஜிட்டல் "இணைப்புள்ள" பொழுதுபோக்கு (எ.கா.,ஹெச்பி மீடியாஸ்மார்ட் டிவிக்கள், ஹெச்பி மீடியாஸ்மார்ட் சர்வர்கள், ஹெச்பி மீடியாவால்ட்ஸ். டிவிடி+ரைட்டர் டிரைவ்கள்) ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. ஆப்பிளின் ஐபாடை ஹெச்பி நவம்பர் 2005 வரை மறுவிற்பனை செய்துவந்தது. ஹெச்பி எண்டர்பிரைஸ் பிஸினஸ் (இபி) தொழில்நுட்ப சேவைகள் (முன்பு இடிஎஸ் என்று அறியப்பட்டிருந்தது), ஹெச்பி சாப்ட்வேர் மற்றும் தீர்வுகள், மற்றும் எண்டர்பிரைஸ் ஸ்டோரேஜ் அண்ட் நெட்வொர்க்கிங் குரூப் (இஎஸ்என்) ஆகியவற்றை சேர்த்துக்கொண்டிருக்கிறது. எண்டர்பிரைஸ் ஸ்டோரேஜ் அண்ட் சர்வர்ஸ் குரூப் (இஎஸ்எஸ்) சேமிப்பகம் மற்றும் சர்வர்கள் போன்ற "பின்னணி வேலை" தயாரிப்புகளை மேற்பார்வையிடுகிறது. ஹெச்பி சாப்ட்வேர் & சொல்யூஷன்ஸ் என்பது நிறுவனத்தின் எண்டர்பிரைஸ் சாப்ட்வேர் பிரிவாகும். பல வருடங்களாக, ஹெச்பி தனது எண்டர்பிரைஸ் மேனேஜ்மெண்ட் சாப்ட்வேரான ஹெச்பி ஓபன்வியூஐ தயாரித்து சந்தையிடுகிறது. பெரும் தொழில் வாடிக்கையாளர்களுக்கான தனது சாப்ட்வேர் வழங்கல்களை அதிகப்படுத்த பொதுமைப்படுத்தப்பட்ட, எச்சரி்க்கையான வியூகத்தின் ஒரு பகுதியாக ஹெச்பி மொத்தத்தில் 12 சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்கியிருக்கிறது. இந்தப் பிரிவு தனது சாப்ட்வேரை நான்கு பிரிவுகளில் சந்தையி்ட்டிருக்கிறது: பிஸினஸ் டெக்னாலஜி ஆப்டிமைசேஷன் சாப்ட்வேர், இன்ஃபர்மேஷன் மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர், பிஸினஸ் இன்டலிஜென்ஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மீடியா சாப்ட்வேர் அண்ட் சொல்யூஷன்ஸ். ஹெச்பி நெட்வொர்க்கிங் தொழில் யூனிட்டான "புரோகியூர்" நெட்வொர்க் ஸ்விட்ச்சஸ், வயர்லஸ் அக்ஸஸ் பாய்ண்ட்ஸ், மற்றும் ரவுட்டர்கள் குடும்பத்திற்கு பொறுப்பாகும்.. இவை தற்போது இஎஸ்என் இன் தொழில் யூனி்ட்டாகும். ஹெச்பியின் வியூக தொழில்நுட்ப அலுவலகம் நான்கு முக்கியமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது: நிறுவனத்தின் 3.6 பில்லியன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டை வழிநடத்துவது, நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப சமூகத்தின் மேம்பாட்டை ஊக்கப்படுத்துவது, நிறுவனத்தின் வியூகம் மற்றும் கார்ப்பரேட் மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிகாட்டுவது மற்றும் உலகளாவிய கார்ப்பரேட் சந்தையிடல் செயல்பாடுகளை நிறைவேற்றுவது. இந்த அலுவலகத்தின் கீழ் ஹெச்பியின் ஆராய்ச்சி கரமான "ஹெச்பி ஆய்வகங்கள்" இருக்கின்றன. 1966 இல் நிறுவப்பட்ட ஹெச்பி ஆய்வகங்களின் செயல்பாடு புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதும் ஹெச்பியின் தற்போதைய வியூகங்களுக்கும் அப்பால் செல்லக்கூடிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதுமாக இருக்கிறது. சமீபத்திய ஹெச்பி ஆய்வக தொழி்ல்நுட்பத்தின் உதாரணம் மெமரி ஸ்பாட் சிப் ஆகும். ஹெச்பி ஐடியாலேப் மேற்கொண்டு, நுகர்வோர்கள் மற்றும் மேம்பாட்டு சமூகத்திடமிருந்து வரும் திறந்தநிலை பின்னூட்டங்களை ஊக்கப்படுத்துவதற்கு முந்தைய கண்டுபிடிப்புகள் குறித்த வலைத்தள விவாத களத்தையும் வழங்குகிறது. மற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கான முழுமையான ஐடி-உதவித் தீர்வுகளை வழங்கும் "நிர்வகிக்கப்பட்ட சேவைகளையும்" ஹெச்பி வழங்குகிறது. உதாரணத்திற்கு, அவர்களுடைய டப்ளின் அலுவலகத்தில் பேங்க் ஆஃப் அயர்லாந்திற்கான ஐடி உதவிகள், மைக்ரோசாப்டிற்கு விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம், எக்ஸ்சேஞ்ச், ஷேர்பாய்ண்ட் மற்றும் இஎம்இஏ சந்தைகளுக்கான மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் தயாரிப்புகளுக்கு அவர்கள் "தொழி்ல்முறை" யிலான மற்றும் "பிரீமியர்" உதவிகளையும் வழங்குகின்றனர். பில் மற்றும் டேவ் ஆகியோரைப் போன்று நண்பர்களும் ஊழியர்களுமாக அறியப்படும் இதன் நிறுவனர்கள், "ஹெச்பி வழி" எனப்படும் பிரத்யேகமான நிர்வாக பாணியை உருவாக்கினர். பில்லின் வார்த்தைகளில் சொன்னால், ஹெச்பி வழி என்பது "ஒரு மைய தத்துவம்... இது தனிநபருக்கான ஆழ்ந்த மரியாதை, அதிகபட்ச தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, சமூக பொறுப்பிற்கான கடமைப்பாடு, இந்த நிறுவனம் மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நலனுக்கான தொழில்நுட்ப பங்களிப்புகளை வழங்கவே இருந்துவருகிறது என்ற கண்ணோட்டம் ஆகியவற்றை உள்ளி்ட்டிருக்கிறது." பின்வருபவை ஹெச்பி வழியின் கொள்கைகளாகும்: ஹெவ்லட்-பேக்கர்டின் சான்றளிக்கப்பட்ட தொழில்முறை திட்டம் (ஹெச்பி-சிபி) தொழில்நுட்ப திறமைகள், விற்பனை போட்டித்திறன்கள் மற்றும் பரிந்துரைத்தலுக்கும் பரவச்செய்தலுக்கும் தேவைப்படும் வி்ற்பனை போட்டித்திறன்கள் மற்றும் அறிவு, ஹெச்பியால் விற்கப்படும் சேவை மற்றும் உதவி தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கென்று உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜூலை 2007 இல் நிறுவனம் 2004 இல் நிர்ணயிக்கப்பட்ட, 1 பில்லியன் பவுண்டுகள் எலக்ட்ரானிக்குகள், டோனர்கள் மற்றும் லின்க் கேட்ரிட்ஜ்கள் மறுசுழற்சி செய்யும் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்தது. 2010 ஆம் ஆண்டிற்குள் மேற்கொண்டு 2 பில்லியன் பவுண்டுகள் ஹார்டுவேரை மறுசுழற்சி செய்வது என்ற புதிய இலக்கை இது அமைத்துக்கொண்டுள்ளது. 2006 இல் இந்த நிறுவனம் இதற்கு நெருக்கமான போட்டியாளரைக் காட்டிலும் 73 சதவிகிதம் அதிகமான, 187 மில்லியன் பவுண்டுகள் எலக்ட்ரானிக்ஸ்களை மீட்டுள்ளது. 2008 இல், ஹெச்பி தனது அளிப்புச் சங்கிலி உமிழ்வு டேட்டாவை வெளியிட்டது - இது முதலாவது தொழிற்துறையாகும். செப்டம்பர் 2009 இல், "நியூஸ்வீக்" அமெரிக்காவின் 500 மிகப்பெரிய கார்ப்பரேஷன்களின் 2009 ஆம் ஆண்டு பசுமைத் தரவரிசையில் ஹெச்பிக்கு முதலாவது இடத்தை அளித்தது. environmentalleader.com இன் கூற்றுப்படி "தனது பசுமையில்ல வாயு வெளியீ்டு (ஜிஹெச்ஜி) குறைப்பு திட்டங்களின் காரணமாக ஹெவ்லட்-பேக்கர்ட் தனது முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதுடன் தரவரிசையின்படி இதனுடைய அளிப்பு சங்கிலியுடனான பசுமையில்ல வாயு வெளியீ்ட்டை தெரிவித்த முதலாவது பெரிய ஐடி நிறுவனமுமாகும். மேலும், கிரீன்பீஸ் இந்த நிறுவனம் சரியாக செயல்படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தாலும், ஹெச்பி தனது தயாரிப்புகளில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் முயற்சிகளையும் எடுத்துள்ளது." ஹெச்பி பல நிதியுதவிகளை செய்கிறது. இவற்றில் வால்ட் டிஸ்னி வேர்ல்டின் எப்காட் பார்க்கிற்கு செய்யும் உதவி நன்கறியப்பட்டதாகும்.Mission: SPACE மற்றவற்றை ஹெவ்லட்-பேக்கர்டின் வலைத்தளத்தில் காணலாம் . 1995 முதல் 1999 வரை அவர்கள் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பின் மேல்சட்டை வழங்குநராக இருந்தனர். அவர்கள் பிஎம்டபிள்யு வில்லியம்ஸ் ஃபார்முலா 1 அணிக்கான வழங்குநராகவும் இருந்தனர். சான் ஜோஸ் ஷார்க்ஸ் என்ஹெச்எல் ஹாக்கி அணியின் வீடான சான் ஜோஸில் ஹெச்பி பெவியனுக்கான பெயரிடும் உரிமை ஏற்பாடுகளையும் ஹெவ்லட்-பேக்கர்ட் வைத்திருக்கிறது. அஜிலண்ட் டெக்னாலஜிஸ், ஹெச்பி அல்ல, 1939 இல் அசல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நேரடி தயாரிப்பு மரபுரிமையை தக்கவைத்திருக்கிறது. அஜிலண்டின் தற்போதைய எலக்ட்ரானிக் உபகரணங்கள் துறை ஹெச்பியின் மிக முற்காலத்திய தயாரிப்புகளின் வழிவந்தவையாகும். தங்களுடைய கருவியாக்க போட்டித்திறன்கள் நன்றாக நிறுவப்பட்ட பின்னரே ஹெச்பி கம்ப்யூட்டர் தொழிலில் இறங்கியது. 2002 இல் காம்பாக்கை வாங்கிய பின்னர், ஹெச்பி குறைந்த செயல்திறனுள்ள வீட்டு டெஸ்க்டாப்புகள் மற்றும் லேப்டாப்களில் "காம்பாக் பிரிசாரியோ" என்ற பிராண்டை தக்கவைத்திருக்கிறது, தொழில் டெஸ்க்டாப்புகள் மற்றும் லேப்டாப்புகளிலான "ஹெச்பி காம்பாக்" பிராண்ட மற்றும் இண்டல்-அமைப்புக்கட்டுமான சர்வர்களிலான "ஹெச்பி புரோலியண்ட்". ("ஹெச்பி பெவிலியன்" பிராண்ட் வீட்டு பொழுதுபோக்கு லேப்டாப்புகள் மற்றும் எல்லா வீட்டு டெஸ்க்டாப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.) சேமிப்பக சிஸ்டம்களில் டிஇசியின் "ஸ்டோரேஜ்வொர்க்ஸ்" என்ற பிராண்டை ஹெச்பி பயன்படுத்துகிறது; டான்டமின் "நான்ஸ்டாப்" சர்வர்களி்ல் தற்போது "ஹெச்பி இண்டெக்ரிட்டி நான்ஸ்டாப்" என்று பிராண்ட் இடப்பட்டுள்ளது. செப்டம்பர் 5, 2006 இல், ஹெச்பியின் பொதுக்குழு அதன் தலைவர் பேட்ரிஷியா டன்னின் உத்தரவின் பேரில் தகவல் கசிவின் மூலாதாரத்தைக் கண்டுபிடிக்கும் விதமாக அவை உறுப்பினர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்களை விசாரிப்பதற்கு தனிப்பட்ட பாதுகாப்பு நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதை நியூஸ்வீக் வெளிக்கொணர்ந்தது. அதன்படி, இந்த பாதுகாப்பு நிபுணர்கள் பிரீடெக்ஸ்டிங் எனப்படும் உளவு உத்தியைப் பயன்படுத்தும் தனியார் துப்பறிவாளர்களை வேலைக்கு அமர்த்தினர். இந்த பிரீடெக்ஸ்டிங், ஹெச்பி அவை உறுப்பினர்களையும் ஒன்பது பத்திரிக்கையாளர்களையும் (சிஎன்இடி, "நியூயார்க் டைம்ஸ்" மற்றும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" பத்திரிக்கையாளர்கள் உட்பட) அவர்களுடைய தொலைபேசி பதிவுகளை பெறும் விதமாக போலியாக்கம் செய்தது. இந்தத் தகவல் கசிவு ஹெச்பியின் நீண்டகால வியூகத்தோடு தொடர்புடையது என்பதுடன், ஐனவரி 2006 இல் வெளிவந்த சிஎன்இடி கட்டுரையின் ஒரு பகுதியாக பதிப்பிக்கப்பட்டிருந்தது. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு ஆளான பெரும்பாலான ஹெச்பி ஊழியர்களும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.