படிக அமைப்பு கனிமவியல் மற்றும் படிகவுருவியலில், படிக அமைப்பு என்பது ஓர் படிகத்தில் அணுக்கள் குறிப்பிட்ட அமைப்பில் உள்ளதைக் குறிப்பதாகும்.படிகம் (crystal) என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் ஓர் அணிக்கோவை அமைந்துள்ள ஒரு திண்மமாகும். அவ்வணிக்கோவையின் முனைகள் கொண்டு ஓர் பெட்டி அமைக்கப்படுமானால் அது ஓர் "அலகுஅறை"யாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.இந்த அலகுஅறைகள் அணிக்கோவையை நிரப்புகின்றன. இந்த அலகுஅறையின் நீள,அகலங்கள் மற்றும் கோணங்கள் அணிக்கோவையின் "வரையளவு"களாக குறிக்கப்படுகின்றன.படிகத்தின் சமச்சீர் பண்புகள் மூன்று அச்சுகளிலும் அமைகிறது. படிகத்தின் கட்டமைப்பும் சமச்சீர்மையும் பிளவு, இலத்திரன் பிணையமைப்பு மற்றும் ஒளி குறித்த பண்புகள் என அதன் பண்புகளை வரையறுக்கின்றன. படிகங்களில் அணுக்கள் அல்லது அயனிகள் ஒழுங்கான முப்பரிமான அமைப்பில் அமைந்துள்ளன. படிகத் திடப்பொருள் அல்லது படிகத்தில் உள்ள மிகச்சிறிய மீண்டும் மீண்டும் தோன்றக் கூடிய முப்பரிமாண வடிவமைப்பு அலகுக் கூடு எனப்படும். அலகுக் கூடு என்பது படிகத் திடப் பொருளின் எளிமையான அடிப்படைப் பகுதியாகும். அலகுக் கூட்டினை அறிவதன் மூலம் படிகத்தின் அமைப்பையும் அதில் அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தையும் அறியலாம். ஓர் அலகுக் கூடு அதன் அணிக்கோவை அளவுகளால் வருணிக்கப்படும், இவை அதன் கன நீளங்கள் (நீளம், அகலம், உயரம்) மற்றும் அவற்றிற்கு இடையிலான கோணங்கள் ஆகும். அலகுக் கூட்டில் அணுக்களின் இடங்கள் ஒரு அணிக்கோவை புள்ளியிலிருந்து அவ்வணுவின் தொலைவுகளால் (xi , yi , zi) தரப்படும். ஒரு படிக அணிக்கோவையில் உள்ள திசையன்களையும் அணுத்தளங்களையும் ("ℓmn") என்ற மூவெண் மில்லர் சுட்டெண் குறியீட்டால் விவரிக்கலாம். இந்த "ℓ", "m" மற்றும் "n" என்ற திசைச் சுட்டெண்கள் ஒன்றுக்கொன்று 90° விலகியிருக்கும், எனவே அவை செங்குத்தானவைகள் ஆகும். வரையறைப்படி, ("ℓmn") என்பது அலகுக்கூட்டின் ஆய அச்சுகளில் a/"ℓ", a/"m" மற்றும் a/"n" என்ற மூன்று புள்ளிகளிலோ, அல்லது அவற்றின் பிற பன்மடிகளிலோ, வெட்டும் ஒரு தளத்தைக் குறிக்கும். அதாவது, மில்லர் சுட்டெண்கள் ஒரு அலகுக்கூட்டோடு ஒரு தளத்தின் வெட்டுப்புள்ளிகளின் "எதிர்விகிதச்சமன்"களாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுட்டெண்கள் சுழியம் என்றால் அத்தளம் அந்தந்த அச்சுகளை வெட்டவில்லை என்பது பொருள் (அதாவது முடிவிலியில் வெட்டு, அல்லது அத்தளம் அவ்வச்சிற்கு இணை ஆகும்). இணைத் தளங்களின் மில்லர் சுட்டெண்கள் சமமாகவே இருக்கும். ஏதேனும் ஒரு ஆய அச்சினை உள்ளடக்கிய ஒரு தளத்தின் மில்லர் சுட்டெண்களைக் கணக்கிட அத்தளத்திற்கு இணையான வேறொரு தளம் கொள்ளப்படும். ஒரு தளத்தின் மில்லர் சுட்டெண்கள் தமக்குள் பொதுக்காரணின் இல்லா முழுஎண்கள் ஆகும். எதிர்ம சுட்டெண்கள் அவற்றின் மீது இடப்படும் கோட்டினால் குறிக்கப்படும், (13) இவ்வாறு. ஒரு செங்குத்து ஆய திட்டத்தில், ஒரு தளத்தின் மில்லர் சுட்டெண்கள் அத்தளத்தின் செங்குத்து திசையனின் கார்ட்டீசியன் கூறுகள் ஆகும். ("ℓmn") சுட்டெண்களால் குறிக்கப்படும் இணை அணிக்கோவை தளங்கள் இரண்டிற்கு இடையிலான குறைவான செங்குத்து தொலைவு "d" பின்வரும் வாய்ப்பாட்டால் தரப்படும்: formula_1 அணிக்கோவைகளின் அச்சு அமைப்பினைக்கொண்டு படிக அமைப்புகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அணிக்கோவையும் மூன்று அச்சுகளிலும் ஓர் குறிப்பிட்ட அமைப்பைக் கொண்டிருக்கும். நியாயமான பயன்பாடு நியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் "நியாயமான பயன்பாடு" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது: விமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்ற ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்: ஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை. சனியின் நிலவுகள் சனியின் நிலவுகள் ("Moons of Saturn") கம்பீரமான டைட்டன் முதல் சிறு சிறு நிலவுதுண்டுகள் வரை பலவகைப்பட்டது. சனியின் 62 நிலவுகளுக்கு வட்டப்பாதை உண்டு , இதில் ஐம்பத்தி இரண்டுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன மற்றும் இதில் பல மிக சிறியவை.சனியின் வலயத்தில் நூற்றுகணக்கான நிலவுதுண்டுகள் உள்ளன. தடிமனான வலயங்கள் மற்றும் உருண்ட வடிவம் ஆக,வேண்டிய புவிஈர்ப்பு விசை உள்ள, ஏழு நிலவுகளுடன்(இந்நிலவுகள் சூரியனை வட்டபாதையில் சுற்றி இருந்தால் குட்டி கிரகங்கள் ஆகியிருக்க கூடும்) சூரிய குடும்பத்தின் வினோதமான அமைப்பு சனியின்வுடையது . இந்நிலவுகளில் குறுப்பிடப்பட வேண்டியவை டைட்டன் மற்றும் என்சலடசு. சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய நிலவான டைடனில் பூமியை போன்ற மற்றும் ஹைட்ரோகார்போன் ஏரிகள் , நதி பின்னல்கள் உள்ளன.என்செலடுசின் தென் துருவத்தில் தண்ணீர் இருக்கலாம் என்று கணிக்க பட்டிருக்கிறது. சனியின் பூமத்திய பலகையிலிருந்து சிறிதும் விலகாமல் , சுற்று பாதையில் சுழல்கின்றன சனியின் இருபத்தி மூன்று ஒழுங்கான நிலவுகள்.முக்கியமான ஏழு துனைகொள்களுடன்,நான்கு சிறு நிலவுகள் பெரிய நிலவுடன் வட்டப்பாதையை பங்கிட்டு கொள்கிறது மற்றும் இரண்டு நிலவுகள் ஒரே வட்டப்பாதையில் சுழல்கின்றன.இறுதியாக,சனியின் வலயத்தின் இடுக்கில் இரண்டு நிலவுகள் சுழல்கின்றன. மீதமுள்ள முப்பத்தி எட்டு சிறிய ஒழுங்கில்லா துணை கோள்கள் , சனியிலிருந்து மிக தொலைவில் , மிக சாய்வான வட்டப்பாதையில், கடிகார திசை அல்லது கடிகார எதிர்த்திசையில் சுழல்கின்றன.இந்நிலவுகள் விசையில் சிக்கிய சிறு கிரகங்களாகவோ அல்லது கிரக துண்டுகளாகவோ இருக்கலாம் . ஒழுங்கில்லா இந்நிலவுகளின் வட்டப்பாதை திறன் பொறுத்து இவைக்கு இனுஇட்,நோர்ஸ் அல்லது கள்ளிக் பிரிவுகளின் புராணங்களிலிருந்து பெயர்கள் சூட்ட படுகின்றன. சனியின் வளையங்களில் , நுண்ணிய அளவிலிருந்து பல நூறு மீட்டர் அளவு கொண்ட பனி பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனால் சனியின் நிலவுகளின் எண்ணிக்கை சொல்வது கடினம்,ஏனெனில் இச்சிறு துண்டுகளுக்கும்,நிலவுகளுக்கும் செரியான பிரிவு இல்லை. நூற்றி ஐம்பது நிலவுதுண்டுகள் சனியின் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக் கோளின் துணைக்கோள்கள் சுற்றுவட்டக் காலத்தைக் கொண்டு, சிறிய சுற்றுவட்டக் காலம் முதலாக நீண்ட சுற்றுவட்டக் காலம் வரை, இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. எலிசபெத் பிளாக்பர்ன் எலிசபெத் எலன் பிளாக்பர்ன் ("Elizabeth Helen Blackburn", பிறப்பு: நவம்பர் 26, 1948) என்பவர் சான் பிரான்சிஸ்கோ நகரின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ஆவார். ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இவர் நிறப்புரிகளைப் பாதுகாக்கும் முனைக்கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டவர். நிறப்புரிகளின் முனைகளில் காணப்படும் முனைக்கூறுகளும், டெலொமியர்களை உருவாக்கப் பயன்படும் டெலொமெரேஸ் என்ற நொதியமுமே நிறப்புரிகளைப் பாதுகாக்கின்றன என்று பிளாக்பெர்ன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவருக்கும், இவரது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்டர், மற்றும் ஜாக் சொஸ்டாக் ஆகிய இருவருக்கும் சேர்த்து பகிர்ந்தளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள், திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி. , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும். காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள், கூத்தாநல்லூர் (நகராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, நோக்கர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நோக்கர் எனப்படும் சாதிப்பிள்ளைகள் இனக்குழு மக்கள் தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,சேலம்,தர்மபுரி,தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் இவர்கள் 7 ஆயிரத்து 559 பேர் வசிக்கின்றனர். தமிழ், தெலுங்கு கலப்பினமாக இவ்வினத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தெலுங்கையும், பிறரிடம் பேசும்போது தமிழையும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். சமூக நிலையில் கல்வி விழிப்புணர்ச்சியில் மிகுந்த பின்னடைவில் உள்ள சமூகம். கிட்டத்தட்ட கல்வியறிவு என்பதே இல்லாத சமூகம், தொடர்ச்சியான இடம்பெயர்ந்தே வாழ்வதால் இம்மக்களால் கல்வியறிவு பெற இயலவில்லை என்றாலும் இவர்களுக்கென சொந்த ஊரும் அதில் நிலபுலண்களும் இருப்பதுண்டு. வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் இம்மக்கள் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலைச் செய்து வந்தனர். மக்களிடையே பித்தளைப் பாத்திரத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் அத்தொழில் நலிவடைந்து தற்போது கிடைக்கின்ற கூலி வேலையைச் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி(மன்னிக்கவும் இப்போ இது கிட்டத்தட்ட பிச்சை மாதிரி) கேட்க மாட்டார்கள், மேலும் இது வரி வசூல் போன்ற அதிகார தோரணையாகவே இருக்கும் அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்... சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர். வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம். வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர். இவ்வின மக்கள் ஆண்டில் பாதி நாட்களுக்கு மேல் வரி வசூலிப்பதற்காக இடம் பெயரும் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்வதால் இவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாமல் போய்விடுகிறது. இவர்கள் தொடர்பான ஒரு கதை உண்டு, வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் மலையாள தேசத்தில் சென்று மிகப்பெரிய நிலையை அடைவார் நிறைய செல்வங்களை சேர்த்துக்கொள்வார், அங்கேயே வேற்று சாதி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் அதனால் அவரை சொந்த ஊரில் வன்னியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பின் அவ்வூர் கோவில் கட்டுவதற்கு நிலைப்படி வைக்கும் போது ஒவ்வொரு நாளும் அது விழுந்துவிடும், இது விழாமல் நிற்க கர்ப்பிணி பெண்ணை பலி கொடுக்க வேண்டுமென்பார்கள், அதற்கு வேறு யாரும் ஒத்துக்கொள்ளாததால் இவர் தன் மனைவியை பலி தர ஒத்துக்கொள்வார், ஆனால் அதற்கு பதில் தன் சந்ததிகளுக்கு வன்னியர்களின் வாழ்விலும் சாவிலும் பங்கிருக்க வேண்டுமென சடங்கு நடத்தும் உரிமையையும் வரிவசூல் உரிமையையும் கேட்பார்கள்... அதற்கு ஒத்துக்கொண்ட பின் நிறைமாத கர்ப்பிணியை பலிகொடுக்க கோவில் நிலைப்படி நிலையாக நிற்கும்... இது ஒரு கதை இதன் உண்மைதன்மை தெரியவில்லை... வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது. தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இது சேலம் மாவட்டம் மல்லிகுந்தம் இராம கவுண்டன் என்பவரிடம் உள்ளதாக தொல்லியல் அறிஞர் நடனகாசிநாதன் குறிப்பிடுகிறார். இப்பட்டயம் 1708 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்.உடையார்பாளையம் சமீன்தாரால் இது வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செப்பேடுகள் ஈரோடு,காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ளாதாகவும் அறியமுடிகிறது. அறுபத்துநான்கு அடிகள் கொண்ட இரண்டுபக்க செப்பேட்டில் அது வழங்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இப்பட்டயமும் விருதும் கொண்டுவரும் சாதிப் பிள்ளைக்கு தடையில்லாமல் தலைக்கட்டு ஒன்றுக்கு முக்குறுணி அரிசியும் ஊருக்கொரு ஆடும் பண்ணியும் கொடுக்க வேண்டியது. அப்படி கொடாமல் யாதாமொருவர் தடை செய்தவர்கள் கங்கைக் கரையில் காறாம் பசுவைக் கொன்ற தோசத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில் வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில் தமிழ்நாடு, மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வஸ்தராஜபுரம் என்ற சிறிய ஊரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில். இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா தனது இரு தேவியரான பூர்ணா புஷ்கலாம்பாளுடன் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளன்று இக்கோவிலில் பூஜை, பஜனை மற்றும் பிரார்த்தனை எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறைக்கு அடுத்த குத்தாலத்தில் ராமச்சந்திர ஐயர் என்பவர் வாழ்ந்து வந்தார். தனது குல தெய்வமான வஸ்தராஜபுரம் ஐயனாரின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட அவருக்கு ஒருமுறை குடும்பத்தாருடன் மிகவும் அவசரான நிலையில் வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்படிக் கிளம்பிய அவர் வீட்டின் பின் புறக் கதவை மூடுவதற்கு மறந்துவிட்டார். வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் வீட்டுக் கதவும் திறந்தே இருந்தது. ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் அப்பெரியவரின் கனவில் சாஸ்தா தோன்றி, "உன் வீட்டுக் கதவைத் திறந்தே வைத்துவிட்டு வந்திருக்கிறாயே, நானல்லவோ காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். திடுக்கிட்டு விழித்துக் கொண்ட பெரியவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போதுதான் "தான் பின்புறக் கதவை மூடாமலே வந்துவிட்ட விஷயம் தெரிந்தது. பேச நா எழாமல், தனது உடைமைகளைக் பாதுகாத்துக் கொடுத்த ஐயனாரைக் கண்ணீர் மல்க வணங்கினார். சூ சி சூ சி என்பவர் சோங் வம்சக் காலத்தைச் சேர்ந்த கான்பூசிய அறிஞர் ஆவார்.இவர் கொள்கைச் சிந்தனைக் குழுவின் முக்கியமானவரும், சீனாவின் பகுத்தறிவுவாதப் புதுக்கான்பூசியத்தில் செல்வாக்கு மிகுந்தவரும் ஆவார். இவர் எழுதிய நான்கு நூல்களும், விடயங்களை ஆராய்ந்தறியும் முறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும், கான்பூசிய அடிப்படைக் கருத்துருக்களைத் தொகுத்ததும் இவர் சீன மெய்யியலுக்கு அளித்த பெரும் பங்களிப்பு ஆகும். சூ சியின் குடும்பத்தினர் ஊய் பிரிவைச் சேர்ந்த வூ யுவான் கவுன்டியைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தையார் அரசில் உயர் பதவி வகித்து வந்தார். அவர் தொழில் பார்த்துவந்த பூசியான் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். அரசின் கொள்கை தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இவரது தந்தையார் 1140 ஆம் ஆண்டில் பணியிலிருந்து நீங்கினார். சூ சி வீட்டில் இவரது தந்தையிடமே கல்வி பயின்றார். 1143 ஆம் ஆண்டில் இவரது தந்தையார் இறக்கவே சூ சி, அவரது தந்தையின் நண்பர்களான ஊ சியான், லியு சீகுய், லியூ மியான்சி என்பவர்களிடம் கல்வி பயின்றார். பெரியாற்றுத் தேசியப் பூங்கா பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் பரவியுள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர்கள். இதில் 350 ச.கி.மீ பெரியாறு வனவிலங்குக் காப்பகமாக (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரியாறு வில்லார்டு பாயில் வில்லார்டு இசுட்டெர்லிங் பாயில் (Willard Sterling Boyle, வில்லார்ட் ஸ்டேர்லிங் பொயில், ஆகஸ்டு 19, 1924 - மே 7, 2011) ஒரு கனடிய அறிவியலாளர். இவர் மின்மம் வழிந்துநகர் கருவி ("charge-coupled device", CCD) என்னும் நுண்மிண்மக் கருவியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். அக்டோபர் 6, 2009 அன்று அறிவித்த 2009 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இக்கண்டுபிடிப்புக்காக இவர் தன் உடன் கண்டுபிடிப்பாளராகிய சியார்ச்சு இ. சுமித் ("George E. Smith") என்பவரோடும் ஒளிநார் தொலைதொடர்புத் துறையில் ஒளிநார் பண்புகள் பற்றி ஆய்வு செய்த சார்லசு காவோ ("Charles Kao") என்பவரோடும் சேர்ந்து பெற்றார். இவர் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார். இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார் . பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943 இல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார்.. பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947 இல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948 இல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950 இல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் (பி.எச்.டி) பட்டமும் பெற்றார். பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (ரேடியேசன் லாபு,Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார் 1953 இல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962 இல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார், குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964 இல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார். 1969 இல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973 இல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974 இல் "ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும்" (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006 இல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார். அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம் அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம் ( American Society for Testing and Materials ) அல்லது அ.மூ.ப.கு ( ASTM) என்பது மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள், அமைப்புகள், மற்றும் சேவைகள் ஆகியவற்றின் தன்னார்வ ஒருமித்த தொழில்நுட்ப தரநிலைகளை உருவாக்கி, வெளியிடும் ஒரு உலகளாவிய தரநிலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் பிலடெல்பியா வடமேற்கில் சுமார் 5 மைல் (8 கி.மீ.) தொலைவில், பென்சில்வேனியாவில் மேற்கு கோன்ஷோஹோக்கேனில் அமைந்துள்ளது. காப்பு நிலை காப்பு நிலை (Conservation status) என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:மிக அருகிய இனம் (CR), அருகிய இனம் (EN), அழிவாய்ப்பு இனம் (VU). தவிர கிபி 1500 இலிருந்து இனஅழிவு காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த அற்றுவிட்ட இனங்கள், இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது. நவாசா தீவு நவாசா தீவு (ஆங்கிலம்: Navassa Island) (பிரெஞ்சு: La Navase) கரிபியன் கடலில் உள்ள ஓர் சிறிய ஆளில்லாத தீவாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா தனது மீன் மற்றும் வனத்துறை மூலம் ஆட்கொண்டுள்ளது. ஆயின் எயிட்டி இத்தீவை 1801இலிருந்து தனது பகுதியாக இருந்ததாக உரிமை கோருகிறது.. ராட்டர்டேம் ராட்டர்டேம் நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும். ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது சாங்காய் துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரோல் கிரெய்டர் கரோல் கிரெய்டர் ("Carol Greider", பிறப்பு: ஏப்ரல் 15, 1961) என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர். இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முதன் முதலாக ஆராய்ந்தவர். நிறப்புரிகள் எவ்வாறு காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக பிளாக்பர்ன், மற்றும் ஜாக் சோஸ்டாக் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவின் சான் டியேகோவில் பிறந்தவர் கிரெய்டர். அவரது குடும்பம் சான் டியேகோவில் இருந்து டேவிஸ் என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தது. சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1983 இல் உயிரியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1987 இல் மூலக்கூற்று உயிரியலில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிளாக்பேர்னின் கீழ் முனைவர் பட்டத்தையும் முடித்தார். பெர்க்லியில் பணியாற்றும் போது டெலொமெரேசு என்ற நொதியத்தை பிளாக்பெர்ன் உடன் இணைந்து கண்டுபிடித்தார். பால்மைரா பவளத்தீவு பால்மைரா பவளத்தீவு () ஐக்கிய அமெரிக்காவினால் ஆளப்படும் பவளத்தீவாகும். இத்தீவு () வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. இப்புவியியல் அமைப்பில் பவளப்பாறையைத் தவிர இரு ஆழமற்ற கடற்காயல்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மணல் மற்றும் பாறை தீவுத்திடல்கள் உள்ளன.ஆட்கள் வசிக்காத இத்தீவு "பால்மைரா பவளத்தீவு தேசிய வனவாழ்வு உய்விடமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றுவர அரசின் அனுமதி தேவை. 2005இல் உலகெங்குமிருந்து அறிவியலாளர்கள் சிலர் இங்கு சுற்றுப்புறச் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. ஜாக் சோஸ்டாக் ஜாக் வில்லியம் சோஸ்டாக் ("Jack William Szostak", பிறப்பு: நவம்பர் 9, 1952) என்பவர் உயிரியலாளரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபியல் பேராசிரியரும் ஆவார். நிறப்புரிகள் எவ்வாறு முனைக்கூறுகளினால் காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக எலிசபெத் பிளாக்பர்ன், மற்றும் கரோல் கிரெய்டர் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சொஸ்டாக் லண்டனில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். கனடாவின் மக்கில் பல்கலைக்கழகத்தில் தனது 19வது அகவையில் கல உயிரியலில் பட்டப்படிப்பை முடித்தார். நியூயோர்க்கில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்று ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் தனது தனிப்பட்ட ஆய்வுகூடத்தை அமைத்தார். சோஸ்டாக் மரபியல் துறையில் தனது பெரும் பங்களிப்பை வழங்கினர். உலகின் முதலாவது காடி ("yeast") செயற்கையான நிறப்புரியை ("chromosome) உருவாக்கியமைக்காக இவர் அறியப்படுகிறார். இன்று இவரது ஆய்வுகூடத்தில் பூமியில் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. அத்துடன், செயற்கையான உயிரணுக்களை ஆய்வுகூடத்தில் உருவாக்கும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார். குறிக்கோளுரை குறிக்கோளுரை (இத்தாலியம் :motto) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும். இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை வாய்மையே வெல்லும் என்பதாகும். இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு. காட்டாக, இராபர்ட் லூயி ஸடீவன்சன் எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும். பீர்மேடு பெருமேடு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. பெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ("Sir Venkatraman Ramakrishnan", பிறப்பு: 1952), தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் ("ribosome") எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும். நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ராமகிருஷ்ணன். இவருக்கு முன்னர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் நோபல் பரிசைப் பெற்றிருந்தனர். இவருக்கு 2011 திசம்பர் 31 இல் பிரித்தானிய அரசு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. வெங்கட்ராமன் 1952 இல் சிதம்பரத்தில் சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார். அவரது தந்தையின் பணி காரணமாக குஜராத்திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள வடோதரா நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார். இயற்பியலில் பட்டப்படிப்பை பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் 1976 இல் ஐக்கிய அமெரிக்காவில் ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் சான் டியேகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் உயிரியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி 1978 இல் முடித்தார். வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜல‌ஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார் . இவரது தமைக்கையார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது. 2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுத்தொகை 10 மில்லியன் க்ரோனர் (14 இலட்சம் அமெரிக்க டாலர்) பரிசை வென்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ’’அவர்கள் உருவாக்கிய முப்பரிமாண மாதிரிகள் வெவ்வேறு நுண்ணுயிர்-எதிரிகள் எவ்வாறு ரைபோசோம்களுடன் பிணைப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குகின்றன; இக்கண்டுபிடிப்புகள் புதிய நுண்ணுயிர்-எதிரிகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன’’ என்று நோபல் பரிசுகளை அளிக்கும் ராயல் சுவீடிஷ் அகாதெமி ஆவ் சயன்சசு தெரிவித்துள்ளது. ராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய, 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது. ரைபோசோம்களின் அமைப்பினடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்குதலில் இவரது ஆய்வு பயன்படுகிறது.
வினோத் கண்ணா வினோத் கண்ணா (6 அக்டோபர் 1948 – 27 ஏப்ரல் 2017) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் "முகல்-ஏ- ஆசம்" அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் பட்டபடிப்பை முடித்தார். வினோத் கண்ணா 1968ஆம் ஆண்டு சுனில் தத் நடித்த "மன் கா பிரீத்" என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.அதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 2002இல் இந்திய ஆய அமைச்சரவையில் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். ஆறு மாதங்களில் இந்திய வெளிவிவகாரத் துறையில் மாநில அமைச்சராக மாற்றப்பட்டார். 2004ஆம் ஆண்டில் மீண்டும் தமது தொகுதியில் வென்ற வினோத் கண்ணா 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார். வினோத் கண்ணா தனது முதல் மனைவி கீதாஞ்சலியை கல்லூரியில் சந்தித்தார். [15] 1971 ஆம் ஆண்டில் கன்னா அவரை திருமணம் செய்து கொண்டார் [48] இத்திருமணத்தின் மூலம் ராகுல் மற்றும் அக்ஷய் பிறந்தனர் . இருவரும் பாலிவுட் நடிகர்கள் ஆனார்கள். 1975 ஆம் ஆண்டில் அவர் ஓஷோவின் சீடராகவும், 1980 களின் முற்பகுதியில் அமெரிக்காவில் ஒரேகனில் உள்ள ரஜினீஸ்புறம் சென்றார். அங்கே ரஜினீஸ் சீடர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் 1984-85இந்தியாவிற்கு துரத்தி அடிக்கப்பட்டனர் . இவ்வாறாக ரஜினீஸ்உறவும் முறிந்தது .முதல் மனைவி கீதாஞ்சலியின் உறவும் முறிந்து விவாகரத்து அளிக்கப்பட்டது . 1990 ஆம் ஆண்டில்,கன்னா தொழிலதிபர் ஷரயு டஃப்தாரி மகளான கவிதா டஃப்தாரியை மணந்தார். [51] இந்த திருமணத்தின் மூலமாக 1991 இல் ஷாக்ஷியும் ,பின்னர் ஷிராதா என்ற ஒரு மகளும் பிறந்தனர் வினோத்கன்னா கடுமையான வயிற்று போக்கு வியாதியால் துன்பம் அடைந்தார் .எனவே குர்கானில் உள்ள ரெலியன்ஸ் மருத்துவ மனையில் ஏப்ரல்2 , 2017 இல் சேர்ப்பிக்கப்பட்டார் .ஆனால் அவருக்கு சிறுநீர் பையில் புற்று நோய் தாக்கி இருந்ததால் ஏப்ரல் 27 ,2017 இல் மரணம் அடைந்தார் . அன்றே வோர்லி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார் திருமீயச்சூர் திருமீயச்சூர் என்பது மயிலாடுதுறையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிற்றூர். இங்கு குடி கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதாம்பாள் உடனுறை ஸ்ரீ மேக நாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும். இக்கோவில் அமைந்துள்ள இடத்தைக் கீழ்க்கண்ட இணைய தளத்தின் மூலம் காணலாம். http://wikimapia.org/#lat=10.953495&lon=79.641352&z=13&l=0&m=s&v=9 இரைபோசோம் இரைபோசோம்கள் அல்லது ஐங்கரிமக் கருக்காடியகங்கள் என்பன நிலைக்கருவுள்ள உயிரிகளில் காணப்படும் உயிரணுக்களின் உள்ளே காணப்படும் நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். இதன் இயக்கத்தாலேதான் டி.என்.ஏ-வில் உள்ள குறிப்புகள் புரதங்களாக உருவெடுக்கின்றன. இரைபோசோம்கள் விளைவிக்கும் புரதங்கள் உயிரினங்களில் நடைபெறும் எல்லா உயிர்வேதியியல் வினைகளையும் கட்டுப்படுத்துகின்றன. இரைபோசோம்கள் டி.என்.ஏ இழைத்தொடரின் குறியீடுகளைக்கொண்டு குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கப் பயன்படும் அமைப்பாகும். இந்தப் புரதங்கள் உருவாக்கும் இரைபோசோம்களில் (ஐங்கரிமக் கருக்காடியகங்களில்) 50 உக்கும் மேலான வெவ்வேறு வகைப் புரதங்களும் "ரைபோசோமிய ஆர்.என்.ஏ" எனப்படும் பொருள்களும் இருக்கும். ரைபோசோமிலேயே உள்ள புரதங்களை ரைபோசோமியப் புரதங்கள் (ribosomal proteins) என்பர். "ரைபோசோம்" என்னும் சொல் ரைபோ கரு அமிலம் (ribonucleic acid) என்னும்சொல்லோடு "பருப்பொருள்" அல்லது "உடல்" என்னும் பொருள் படும் கிரேக்கச் சொல்லாகிய "சோமா" (soma meaning "body") என்னும் சொல்லும் சேர்ந்து ரைபோ + சோம் = ரைபோசோம் என்று பெயர் பெற்றது. ரைபோ நியூக்கிளிக் காடியில் ரைபோசு (ribose) என்னும் ஐந்து கரிம அணுக்கள் உள்ள ஒருவகை ஒற்றை இனிப்பியம் (சக்கரை) உள்ள நியூக்கிளியோட்டைடுகள் இருப்பதால் "ஐங்கரிமக் கருங்காடி அகம்" என்றும் இந்த ரைபோசோம் அழைக்கப்படும். குறிப்பேந்தி ஆர்.என்.ஏயின் (mRNA) உதவியால் புரதங்கள் உருவாகின்றன, ஆனால், இந்த குறிப்பேந்தி ஆர்.என்.ஏ-க்கள் டி.என்.ஏ-வில் இருந்து குறிபெயர்க்கப்படுகின்றன. ஆகவே நேரடியாக டி.என்.ஏ-விலிருந்து புரதங்கள் உருவாக்கப்படுவதில்லை. இடையே தொழிற்படும் குறிப்பேந்தி ஆர்.என்.ஏ-வும் புரதம் உருவாக்க வினையூக்கியாக இயங்கும் ரைபோசோமும் தேவைப்படுகின்றது. பாக்டீரியா, ஆர்க்கீயா, யூக்காரியோட்டு ஆகிய மூன்று வகை உயிரினத் தொகுதிகளிலும் உள்ள ரைபோசோம்கள் குறிப்பிடத்தக்கவாறு வெவ்வேறு கட்டமைப்பும் ஆர்.என்.ஏ (ஐங்கரிமக் கருக்காடி)களும் கொண்டுள்ளன. ஆனால் யூக்காரியோட்டு உயிரணுக்களின் இழைமணியில் (மைட்டோகோன்றியா)வில் உள்ள ரைபோசோம்கள் பாக்டீரியாவில் உள்ளதை ஒருவாறு ஒத்துள்ளது. இவ்வொற்றுமையானது பல்தோகுதி உயிரின வளர்ச்சியின் உட்தொடர்புகளை சுட்டிக்காட்டுகின்றது ரைபோசோம்கள் தனித்தனி அமினோக் காடிகளைப் பிணைத்து பாலிபெப்டைடு (polypeptide) தொடர்களாக மாற்றுகின்றன. ரைபோசோம்கள் குறிப்பேந்தி ஆர்.என்.ஏ (messenger RNA) மூலக்கூற்றுடன் பிணைத்துக்கொள்கின்றன. இதன் துணையால் சரியான அமினோக் காடிகள் வரிசையைக் கோக்க முடிகின்றது. இந்த அமினோக்காடிகள், கடத்து-ஆர்.என்.ஏ-வுடன் (transfer RNA) ஒட்டிக்கொண்டு சென்று குறிப்பேந்தி ஆர்.என்.ஏ "சொல்லும்" வரிசைப் படி சரியாகப் புரதத் தொடர்களை அடுக்குகின்றன. குமரகம் குமரகம் ("Kumarakom") கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா கிராமமாகும். இது வேம்பநாடு ஏரியில் உள்ள தீவுக்கூட்டமாகும். குமரகம் உயிரின வளம் நிறைந்த பகுதி. குமரகம் பறவைகள் காப்பகம் இங்கு அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரியே கேரளத்தின் மிகப்பெரிய காயல் ஆகும். இங்கு பல வகையான உப்பு நீர், நன்னீர் வாழ் உயிரினங்கள் உள்ளன. வேளாண்மை, மீன் பிடித்தல், சுற்றுலா ஆகியனவே இங்கு மக்களின் முதன்மையான தொழில்கள். இங்கு பல வகையான படகுகள், படகு வீடுகள் (கெட்டு வள்ளம்) உள்ளன. இங்கு படகுப் போட்டியும் நடப்பதுண்டு. மாட்டுப்பட்டி அணை மாட்டுப்பட்டி அணை கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாருக்கு அருகே அமைந்துள்ள அணை. இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. கருவுட்பருனி கருவுட்பருனி அல்லது நியூக்கிளியோலசு (இலங்கை வழக்கு: புன்கரு, ஆங்கிலம்: nucleolus) என்பது உயிரணுவின் உள்ளே காணப்படும் உயிரணுக் கருவின் உள்ளே மூடும் சவ்வு உறை ஏதும் இல்லாத பருத்த ஒரு அமைப்பு. இதனுள் புரதங்களும், கருக்காடிகளும் உள்ளன. கருவுட்பருனியைச் சுருக்கமாக "கருப்பருனி" என்றும் அழைக்கலாம். ரைபோசோமிய ஆர்.என்.ஏ இந்த கருவுட்பருனியினுள் படியெடுக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது. அதே போல ரைபோசோமிய உட்கூறுகளும் இங்கு உருவாக்கப்படுகின்றன. கருவுட்பருனியை எதிர்மின்னி நுண்நோக்கிகள் வழி காண இயலும். கருப்பருனியின் இயக்கத்தை அறிய உடனொளிர்வு புரதக் குறியீடு (fluorescent protein tagging) பயன்படுத்தலாம். இந்த கருப்பருனி பிறழ்ந்து இயங்க நேரிட்டால் பல நோய்கள் உண்டாகலாம். இந்தக் கருவுட்பருனி உயிரணுக் கருவின் கிட்டத்தட்ட 25 % கனவளவை உள்ளடக்கியிருக்கின்றது. கருப்பருனியில்தான் ரைபோசோமிய ஆர். என்.ஏ உருவாவதற்குத் தேவையான மரபணுக்கூறுகளைத் தாங்கியிருக்கும் நிறப்புரிகளின் பல்வேறு உட்கூறுகள் (பகுதிகள்) ஒன்று சேர்கின்றன. கருப்பருனியில், உயிரணுக்களின் புரத விளைவிப்பாலை எனக் கூறப்படும் ரைபோசோம் உருவாவதற்குத் தேவையான ரைபோசோமிய ஆர்.என்.ஏ-க்களும், புரதங்களும் உருவாகின்றன. இதனை உயிரணுவின் கருவின் கரு எனலாம். முதலாம் சுலைமான் முதலாம் சுலைமான், ஓட்டோமான் பேரரசின் பத்தாவது சுல்தானும், அப் பேரரசில் மிக நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவரும் ஆவார். இவர் கிபி 1520 ஆம் ஆண்டில் இருந்து 1566 இல் அவர் இறக்கும்வரை ஆட்சி நடத்தினார். மேலை நாடுகளில் இவர் "பெருஞ் சிறப்புப்பெற்ற சுலைமான்" என்றும், ஓட்டோமான் பேரரசின் சட்ட முறைமையை முற்றாக மாற்றியமைத்தவர் என்ற வகையில் கீழை நாடுகளில் "சட்டவாக்குனர்" என்ற பொருள்படும்படியும் அழைக்கப்படுகிறார். சுலைமான் 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் முன்னணிப் பேரரசராக இருந்ததுடன், ஓட்டோமான் பேரரசு படைத்துறை, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் அதன் மிக உயர்ந்த நிலையில் இருந்தபோது அதனை வழி நடத்தினார். இவர் ஓட்டோமான் படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்று கிறித்தவர்களின் பலம் வாய்ந்த இடங்களான பெல்கிரேட், ரோட்சு, அங்கேரியின் பெரும் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினார். எனினும் 1529ல் வியன்னாவில் இவரது படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது. பாரசீகருடன் ஏற்பட்ட பிணக்குகளின் பின்னர் இவர், மையக் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளையும் ஓட்டோமான் பேரரசுடன் இணைத்துக்கொண்டார். வட ஆப்பிரிக்காவிலும் மேற்கே அல்சீரியா வரையிலான பெரும் பகுதிகளை அவர் கைப்பற்றினார். இவரது ஆட்சியின் கீழ், ஓட்டோமான் கப்பல்கள் நடுநிலக்கடல், செங்கடல், பாரசீகக் குடா ஆகிய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. அரிகேசவநல்லூர் அரிகேசவநல்லூர் ("Arikesavanallur") என்பது தமிழ்நாடு, திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை குல தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் உறையும் தெய்வமான தர்மதேவதை, ஐயப்பனின் அம்சம் எனக் கூறுவர். தாமசு இசுடைட்சு தாமசு ஆர்தர் இசுடைட்சு ("Thomas Arthur Steitz", பிறப்பு: ஆகத்து 23, 1940 – அக்டோபர் 9, 2018) என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியற்பியல், மற்றும் உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். 2009 ஆண்டில் ரைபோசோம்கள் குறித்த ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கும் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆடா யொனாத் ஆகியோருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஸ்டைட்ஸ் 2007 ஆம் ஆண்டில் காயிர்ட்னர் பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார். ஒகையோ பல்கலைக்கழகம் ஒகையோ பல்கலைக்கழகம் (பெரும்பாலும் சுருக்கமாக OU அல்லது Ohio, 1999இல் இருந்து அலுவல்முறையில்OHIO) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஏதென்சு நகரில் 1800 ஏக்கர் பரப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமாகும். கி.பி 1804ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்விக்கழகம் ஒகையோ மாநிலத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவதாகவும் வடமேற்கு பகுதியின் முதலாவதாகவும் விளங்குகிறது. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா, இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும். பரோடாவை ஆண்ட முன்னாள் மன்னர் மகாராசா சாயாசிராவ் கெயிக்வார்ட் நினைவாக 1949ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் நிறுவப்பட்டது. அதன் முன்னர் பரோடா அறிவியற் கல்லூரி என அறியப்பட்டிருந்தது. 1881ஆம் ஆண்டிலிருந்து இயங்கிய அக்கல்லூரியில் அரவிந்தர் மற்றும் முனைவர் சாம் பித்ரோடா முதலானோர் படித்துள்ளனர். 2009இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1971ஆம் ஆண்டு இங்கு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அடா யோனத் அடா யோனத் ("Ada Yonath", எபிரேயம்: עדה יונת; பிறப்பு: 22 சூன், 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம்" (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர். வீஸ்மேன் அறிவியல் கழகத்தின் ஹெலன் மற்றும் மில்டன் ஏ.கிம்மேல்மேன் உயிரியல் மூலக்கூற்று கட்டமைப்பு மற்றும் உருவாக்கல் மையத்தின் நடப்பு இயக்குனராக உள்ளார். "ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" இவருக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் 2009ஆம் ஆண்டுக்கான வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றிருக்கும் ஒன்பது இசுரேலியர்களில் இவரே முதல் பெண்மணி என்பதும் இதற்கு முந்தைய 45 ஆண்டுகளில் வேதியியலில் நோபல்பரிசு பெற்ற முதல் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது. ராய் கிளாபர் ராய் கிளாபர் ("Roy Jay Glauber", செப்டம்பர் 1, 1925 – திசம்பர் 26, 2018) ஒரு அமெரிக்க கொள்கைநிலை இயற்பியலாளர் ஆவார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒளியியல் அறிவியலுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். நியூயார்க் நகரத்தில் பிறந்த இவர், 2005-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு பகுதியை "ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக் கோட்பாடு"-க்காக பெற்றார். இன்னொரு பகுதியை ஜான் ஹால் மற்றும் தியோடர் ஹன்ச் ஆகியோர் பெற்றனர். சின்னார் கானுயிர்க் காப்பகம் சின்னார் கானுயிர்க் காப்பகம் (அல்லது சின்னார் வனவிலங்குக் காப்பகம்) கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது. சின்னாறும் பாம்பாறும் இக்காப்பகத்தின் குறிப்பிடத்தக்க நீராதாரங்கள் ஆகும். இங்கு தூவானம் அருவி அமைந்துள்ளது. இங்கு 11 பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. முதுவர், புலையர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களாவர். வேளாண்மை இவர்களின் முக்கியத் தொழில். 34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும் 52 வகையான ஊர்வனக்களும் இப்பகுதியில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 965 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. அங்குல் எழுத்துமுறை கொரிய அகரவரிசை, 한글 பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி ko அல்லது hangɯ̽l என்று அழைக்கப்படுகிறது. அங்குல் எழுத்துக்கள் தென் கொரியா (ஒலி பெயர்ப்பு முறையில் Hangeul எனப்படுகிறது) மற்றும் 조선글(Chosŏn'gŭl) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி-ko|d͡ʑos⁽ʰ⁾ʌngɯ̽l/조선문자 (Chosŏn Muntcha) அல்லது ko|d͡ʑos⁽ʰ⁾ʌnmunt͡sa. கொரியாவின் பகுதியான வட கொரியாவில், இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கொரிய மொழி 15 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இது 1443ஆம் ஆண்டு ஜோசன் (Joseon) வம்சத்தைச் சேர்ந்த செஜோங் (Sejong) பேரரசரால்   உருவாக்கப்பட்டது. தற்போது தென் கொரியாவிலும், வட கொரியாவிலும், சீனாவின் ஜிலின் மாகாணத்திலும், கொரியாவின், யான்பியன்னிலும் (Yanbian), சாங்பாயிலும் (Changbai) இம்மொழியின் நெடுங்கணக்கு எழுத்து முறை அதிகாரமொழியாகவும், இணை அதிகாரமொழியாகவும் பயன்பட்டு வருகிறது.  தென் கொரியாவில், முதன்மையாக கொரிய மொழிக்கு கங்குல் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது.  1990களின் போது ஹஞ்ஜா மொழியில், சீன எழுத்துக்களின் பயன்பாடு வீழ்ந்தது. அதன் பாரம்பரிய மற்றும் நவீன வடிவங்களில், 19 மெய்யெழுத்துக்களும் 21 உயிர் எழுத்துக்களும் உள்ளன. இவை லத்தீன் எழுத்துக்கள் போல் தொடர்ச்சியாக எழுதப்படுவதில்லை. அங்குல் எழுத்துக்கள் இணைந்து தொகுதிகளாக்கப்படுகின்றன. உதாரணம்:   இது   ㅎ h, ㅏa மற்றும் ㄴ n என்ற எழுத்துக்களின் தொகுப்பாகும்.  ஒவ்வொரு அசையும் குறைந்தது இரண்டு முதல் ஆறு எழுத்துக்கள் கொண்ட தொகுதியாக உள்ளன. அவற்றுள் குறைந்தது ஓர் உயிரெழுத்து மற்றும் ஓர் மெய்யெழுத்தாவது இருக்க வேண்டும். பின்னர் இந்தத் தொகுதிகள், கிடைமட்டமாக எழுதப்படும் பொழுது இடமிருந்து வலமாகவும், செங்குத்தாக எழுதப்படும் பொழுது மேலிருந்து கீழாகவும் எழுதப்படும். ஒவ்வொரு கொரிய வார்த்தையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசைகள் கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப தொகுதிகள் எண்ணிக்கை அமையும். இதுவரை 11,172 தொகுதிகளுக்கான தனித்துவ சாத்தியங்கள் அறியப்பட்டுள்ளன.   கொரிய வார்த்தைகளில் 11,172 சாத்திய அங்குல் அசைகளின் பயன்பாடு உள்ளது. அடிக்கடி பயன்படும் 256 வார்த்தைகளின் வளர் அலைவெண் 88.2%. உயர்மட்ட 512 வார்த்தைகள் 99.9% ஏற்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின், தொடக்கம் வரை அங்குல் என்ற பெயர் உயரடுக்கு மக்களால் கொச்சையானதாகக் கருதப்பட்டது. பாரம்பரிய ஹஞ்ஜா எனப்படும் ஹான் எழுத்து முறை அவர்களால் ஏற்றுக்கொள்ளப்ப்ப்பட்டதாக இருந்தது.  அங்குல் எழுத்துமுறையானது, ஜோசோன் (Joseon) வம்சத்தின் நான்காவது அரசனான சீஜோன் (Sejong) மாமன்னரால் அறிவிக்கப்பட்டது. இது அரசர் அறிஞர்களுடனும் செய்த சிறிய திட்டமாக அறியப்படுகிறது. இருப்பினும், சியோஜோ அதைத் தாம் தனியாக உருவாக்கி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அங்குல் உருவாக்கப்படுவதற்கு முன்னர், கொரியாவில் வாழ்ந்த ஜோசொன் இன மக்கள் முதன்மையாக மரபுசார் சீன மொழியில் எழுதினார்கள். இடு (idu), ஹையங்சல் (hyangchal), குகீயோல் (gugyeol) மற்றும் கக்பில் (gakpil) ஆகியவற்றுக்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது. பொது மக்களிடையே கல்வியறிவை மேம்படுத்துவதற்காக அங்குல் என்ற தனித்துவமான எழுத்துக்களை ஸேஜிங் மன்னர் உருவாக்கினார். சீஜோங்கின் சீரிய நோக்கத்தினால், பிரபலமான கலாச்சாரத்தின் நுழைவாயிலாகவும், குறிப்பாக பெண்களாலும், எழுத்தாளர்களாலும், அங்குல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. யோன்சாங்குன், பத்தாவது மன்னர், கல்வியறிவற்றோருக்கு அரசின் தகவல்களை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, 1504 ல் அங்குல் ஆவணங்கள் தடை செய்யப்பட்டன. ஜுங்க்ஜோங் மன்னரின் (Jungjong), அயன்முன் ("Eonmun - ,") அமைச்சகத்தை 1506ல் ஒழித்தார். 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அங்குல் எழுத்துமுறை புத்துயிர் பெற்றது. காஸா ("gasa") இலக்கியம், சியோ (Sijo) ஆகியவை வளர்ந்துள்ளன. 17 ஆம் நூற்றாண்டில், அங்குல் நாவல்கள் ஒரு பெரிய பாணியாக மாறியது. 1796 இல் ஐசக் டிட்சிங்(Isaac Titsingh) அங்குல் எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதிய முதல் புத்தகம் மேற்கு ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. ஹயாஷி ஷீஹீ (Hayashi Shihei) எழுதிய, மூன்று நாடுகளின் ஒரு விளக்கம் எனும் பொருள்படும் சங்கோகு சுரான் ஸுசேட்சு ("Sangoku Tsūran Zusetsu") என்ற புத்தகம் அவருடைய சிறிய நூலகத்தில் இடம் பெற்றது. 1785 ஆம் ஆண்டில் ஜப்பானில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் ஜோசோன் இராச்சியம் பற்றியும், அங்குல் எழுத்துமுறை பற்றியும் விவரித்தது. 1832 ஆம் ஆண்டில், கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளின் ஒத்துழைப்புடன் கிழக்கத்திய மொழிபெயர்ப்பு நிதியம், டிட்சிங்கின் மறைவுக்குப்பின் அவரது நூல்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது. 19 ஆம் நூற்றாண்டில், காபோ (Gabo) சீர்திருத்தவாதிகளின் உந்துதலால், மேற்கத்திய சமயப்பரப்பாளர் பள்ளிகளிலும் இலக்கியங்களிலும் அங்குல் ஊக்குவிக்கப்பாட்டது. 1894 ஆம் ஆண்டில் முதன்முறையாக அங்குல் அதிகாரப்பூர்வ மொழியானது. 1895 இல் தொடக்க பள்ளி நூல்களில் அங்குல் மொழி பயன்படுத்தப்பட்டது. மேலும், 1896 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டோங்னிப் சின்மண் ("Dongnip Sinmun"), ஹாங்குல் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட முதல் பத்திரிகை ஆகும். 1938 ஆம் ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கொரிய மொழி தடை செய்யப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் கொரிய மொழிப் பிரசுரங்கள் தடை செய்யப்பட்டன. வட கொரியாவிலும், தென் கொரியாவிலும், 99% எழுத்தறிவை அரசாங்க ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இருப்பினும், தென் கொரியாவின் பழைய தலைமுறையினரில் 25% பேர் ஹங்குல் மொழியில் எழுத்தறிவு பெற்றிருக்கவில்லை. சியோலில் உள்ள ஹுன்மிஞியோன்ஜியம் (Hunminjeongeum) சங்கம் ஆசியாவின் எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு ஹங்குல் பயன்பாட்டைப் பரப்பியது. 2009 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுலாவேசியில்(Sulawesi) உள்ள பா-பாவ் (Bau-Bau) நகரில் அங்குல் அதிகாரப்பூர்வமற்ற மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சியா-சியா (Cia-Cia) மொழி எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தென்கொரியாவில் சியோல் நகருக்கு வந்த இந்தோனேசியாவின் சியா-சியா மொழியினர் தென் கொரியா ஊடகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தனர். சியோலின் மாநகர முதன்மையர் ஓ சே-ஹூன் (Oh Se-hoon) அவர்களை வரவேற்றார். இந்தோனேஷியாவில் ஹங்குல் பரப்புவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக அக்டோபர் 2012 இல் உறுதி செய்யப்பட்டது. நவீன எழுத்து முறையில், பின்வரும் எழுத்துக்கள் மற்றும் எழுத்து தொகுப்புக்கள் காணப்படுகின்றன: திசை கோட்டுருக்கள்: அங்குல் எழுத்துக்கள், சில சீன எழுத்து வனப்புடைமை விதிகளை ஏற்றுக்கொண்டன. எர்ட்டா முல்லர் எர்ட்டா முல்லர் ("Herta Müller", ஹெர்ட்டா மியூல்லர், பிறப்பு: ஆகத்து 17, 1953) என்பவர் ருமேனியாவில் பிறந்த செருமனிய புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவர் ருமேனியாவின் கம்யூனிச அரசாட்சியைப் பற்றியும் அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் எழுதியமைக்காக அறியப்படுகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. ருவாண்டா இனப்படுகொலை ருவாண்டா இனப்படுகொலை ("Rwandan Genocide") என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன. கெஞ்சியின் கதை "கெஞ்சி மானோகட்டாரி"யின் ஒரு பகுதியை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சுமாட்சு கெஞ்சோ என்பவர். இதன் பின் ஒரு அத்தியாயம் தவிர்ந்த ஏனைய பகுதிதிகளை ஆர்தர் வாலி என்பவர் மொழிபெயர்த்தார். முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு எட்வார்ட் சீடென்சுட்டிக்கர் என்பவரால் செய்யப்பட்டது. இவரது மொழிபெயர்ப்பு ஆர்தர் வாலியினதைக் காட்டிலும் நேரடியான மொழிபெயர்ப்பாக இருந்தது. மிக அண்மையில், 2001 ஆம் ஆண்டில் ரோயால் டைலர் என்பவர் செய்த மொழிபெயர்ப்பும் கூடியவரை மூல ஆக்கத்தின் தன்மைகளை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மாருதீ சூருனென் என்பவர் இதனை பின்னிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இக்கதை, குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை உயர்குடிப் பெண்களுக்கு வழங்குவதற்காகப் பகுதி பகுதியாகவே எழுதப்பட்டது. இது தற்காலப் புதினங்களில் காணப்படும் பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு மையப் பாத்திரமும், முக்கியமானவையும் முக்கியத்துவம் குறைந்தவையுமாகிய மேலும் பல கதைமாந்தர்களும் இருத்தல்; முக்கிய பாத்திரங்கள் தொடர்பான சிறப்பான பாத்திரப் படைப்பு; மையப் பாத்திரத்தின் வாழ்க்கைக் காலத்தையும் அதற்கு அப்பால் சில காலங்களையும் உள்ளடக்கிய குறித்த காலப் பகுதியில் இடம்பெறும் தொடரான நிகழ்வுகள் என்பன இத்தகைய கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக் கதையில் கதைக்கரு எதுவும் இல்லை. மாறாக ஒரு உண்மை வாழ்க்கையில் நிகழ்பவற்றைத் தொடராக எடுத்துக்கூறும் வகையில் கதை அமைந்துள்ளது. கதைமாந்தரின் வயதும் கதை ஓட்டத்துடன் உயர்ந்துகொண்டு செல்கிறது. மூலக் கதையில் எந்தக் கதைமாந்தருக்கும் வெளிப்படையான பெயர்கள் வழங்கப்படாதது அதனை வாசிப்பவர்களுக்கும், மொழி பெயர்ப்பவர்களுக்கும் உள்ள தலையாய சிக்கல் ஆகும். மாறாகக் கதைமாந்தர்களின் செயற்பாடு அல்லது வகிக்கும் பங்கு குறித்த பெயர்களே தரப்படுகின்றன. இத்தகைய பெயர்களுள் "இடது அமைச்சர்", "அதியுத்தமர்", "வாரிசு" போன்றவை அடங்குகின்றன. ஆனால், கதை நீண்ட காலத்தினூடாக நகரும் போது இப் பெயர்களால் குறிக்கப்படுபவர்கள் வெவ்வேறானவர்களாக அமைகின்றனர். சிவப்பு அறைக் கனவு சிவப்பு அறைக் கனவு "(Dream of the Red Chamber: எளிய சீனம்: 红楼梦; மரபுவழிச் சீனம்: 紅樓夢; பின்யின்: Hónglóu mèng)" என்பது சீன நாட்டார் இலக்கியத்தில் ஒரு தலை சிறந்த புதினப் படைப்பு ஆகும். சீனாவின் பெரும் தொன்மை வாய்ந்த புதினங்கள் நான்கில் இதுவும் ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சிங் வம்சக் காலத்தில் வாழ்ந்த சாவோ சுவேச்சின் என்பவர் இப்புதினத்தை எழுதியதாகக் கருதப்படுகிறது. இந்தப் புதினம் தொடக்கத்தில் கல்லின் கதை என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. இப் புதினம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் துறையை சிவப்பியல் என்கின்றனர். சீன இலக்கியத்தின் தலைசிறந்த நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டு பொதுவாக சீனப் புனைகதையின் உச்சக்கட்ட புதினமாக இது அங்கீகரிக்கப்படுகிறது . சிவப்பு மாளிகையின் கனவு என்ற தலைப்பிலும் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1791 ஆம் ஆண்டில் இந்தப் புதினம் அச்சுப்பிரதியாக வெளியிடப்படும் வரை பல்வேறு தலைப்புகளில் கையெழுத்துப் படியாகவே வலம் வந்தது. புதினத்தின் முதல் 80 அத்தியாயங்களை சாவோ சியாச்சின் மற்றும் கௌ இ ஆகியோர் எழுதியிருந்தனர். முதல் மற்றும் இரண்டாவது அச்சிடப்பட்ட பதிப்புகளை வெளியிட முயற்சிகள் மேற்கொண்ட இருவரும் செங் வெயுவான் துணையுடன் கூடுதலாக 40 அத்தியாயங்களைச் சேர்த்து நாவலை முடித்தனர் . சாவோ சியாச்சினின் சொந்த குடும்பத்தின் எழுச்சி மற்றும் சரிவையும், கிங் வம்சத்தின் விரிவாக்கத்தையும் பிரதிபலிக்கின்ற ஓர் அரை சுயசரிதையாக சிவப்பு அறைக் கனவு கருதப்படுகிறது . புதினத்தின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் விவரித்துள்ளது போலவே, அவரது இளமைப் பருவத்தில் அவர் அறிந்த நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னமாகக் கருதப்படுவது போன்ற தோற்றத்தை புதினம் தருகிறது. இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள பெருமளவு பாத்திரங்களுக்காகவும், அதன் உளவியல் நோக்குக்காகவும் மட்டுமன்றி, 18 ஆம் நூற்றாண்டின் சீன உயர்குடியினரின் வாழ்க்கை, சமூக அமைப்பு என்பன போன்ற செய்திகளை துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கவனித்து எழுதப்பட்டுள்ளதாலும் இப்புதினம் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த புதினமாக அமைகின்றது . இப் புதினம் செந்நெறிச் சீன மொழியில் எழுதப்படுவதற்குப் பதிலாக நாட்டார் சீன மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இதன் படைப்பாளி சீனக் கவிதை, பாரம்பரிய செந்நெறிச் சீன மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவராக இருந்தபோதிலும், அரை பாரம்பரிய சீனமொழியில் எழுதியுள்ளார். புதினத்தின் உரையாடல் பகுதிகளை பெய்கிங் மண்டரின் வட்டார வழக்கிலும் எழுதியுள்ளார். இதுவே பின்னர் தற்கால நவீன சீனப் பேச்சுமொழிக்கு அடிப்படையாக அமைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மொழியியலாளர்கள் இப்புதினத்திலுள்ள சொற்களை, சொற்களஞ்சியமாகத் திரட்டி புதிய தரப்படுத்தப்பட்ட மொழியாக சீன மொழியை உருவாக்கினர். சீர்திருத்தவாதிகள் இப்புதினத்தைப் பயன்படுத்தி நாட்டார் இலக்கிய எழுத்தைப் பாதுகாக்க முயன்றது . ஒரு சிறந்த குடும்பத்தின் உறுப்பினரான சாவோ சியாச்சின் கிங் வம்சத்து மன்னருக்காக பணியாற்றினார். பேரரசின் பலம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து 1740 களில் சிவப்பு அறைக் கனவு புதினத்தை எழுதுவதற்கான பணிகளைத் துவக்கினார். 1763 அல்லது 1764 இல் சாவோ இறந்தபோது புதினத்தின் 80 அத்தியாயங்களை எழுதி முடித்திருந்தார். அநேகமாக எஞ்சிய அத்தியாயங்களுக்கான முன் வரைவை அவர் எழுதிவைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிவப்பு அறைக் கனவு புதினத்தின் உரை வரலாறு மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளாகியுள்ளது . தொடர்ந்து மிகவும் ஆழமான விமர்சன ஆய்வுகள், விவாதங்கள் மற்றும் கணிப்புகள் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளது. சாவோவின் வாழ்நாளில் புதினத்தின் முதல் 80 அத்தியாயங்கள் கையெழுத்து வடிவத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன . செங் வெயுவான் மற்றும் கௌவ் இ வெளியிட்ட முதலாவது அச்சிடப்பட்ட பதிப்பில் ஆசிரியரால் அங்கீகரிக்கப்படாத திருத்தங்கள் மற்றும் திருத்தங்கள் இருந்தன . நாவலின் கடைசி 30 அத்தியாயங்களை சாவோ தனிப்பட்ட முறையில் அழித்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் காவோவின் அசல் முடிவின் பகுதிகள் 120 ஆவது அத்தியாயத்தில் செங்-கௌவ் பதிப்புகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் . மேலும், கவனமான இப்பாடத் திருத்தம் கௌவ் இயின் அசல் கையெழுத்தால் எழுதப்பட்டிருக்கலாம் . 1791 ஆம் ஆண்டு வரை இந்த புதினமானது வெறும் கிறுக்கல் கையெழுத்துக்களில் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.முந்தைய கையால் எழுதப்பட்ட பதிப்புகள் 80 வது அத்தியாயத்தில் கடைசியாக திடீரென்று முடிவடைகின்றன. முந்தைய பழைய பதிப்புகளில் பார்த்துப் படியெழுதிய கருத்துரைகள், உரை விளக்கங்கள் போன்ற குறிப்புகள் சிவப்பு அல்லது கருப்பு மையால் அறியப்படாத நபர்களால் எழுதப்பட்டிருந்தன. இந்தக் கருத்துரையாளர்கள் அனைவரின் கருத்துகளும் பெரும்பாலும் புதினத்தின் ஆசிரியர் என்ற ஒருவரைப் பற்றியே அதிகம் கருத்துத் தெரிவித்தன. அவர்களில் சிலர் சாவோவின் சொந்த குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் என இப்போது நம்பப்படுகிறது. மிகவும் பிரபலமான வர்ணனையாளரான சியான்சாய் என்பவர் புதினத்தின் உள்கட்டமைப்பு தொடர்பாகவும் அசல் கையெழுத்துப் படியின் முடிவையும் தெரிவித்திருந்தார். ஆனால் அக்குறிப்புகள் இப்போது இழக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்துப்பிரதிகள் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட பதிப்புகள் ஆகும் இவை மாதிரி பதிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தனித்தனியாகக் கிடைத்துள்ள 12 கையெழுத்துப் படிகளில் சில பாத்திரங்கள், அமைப்புமுறைகள் போன்ரவற்றில் ஒன்றுக்கொன்று சிறிய அளவிலேயே மாறுபடுகின்றன. 1791 ஆம் ஆண்டில், கௌவ் இ மற்றும் செங் வெயுவான் ஆகியோர் புதினத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை கொண்டு வந்தனர். கல்லின் கதை என்ற தலைப்பிலான அக்கதையை இவர்கள் சிவப்பு அறை கனவு என்ற பெயரில் ஒரு முழுமையான பதிப்பாக வெளியிட்டனர். அசல் கையெழுத்துப்படிகளில் 80 அத்தியாயங்கள் மட்டுமே இருந்தன. 1791 இல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பில் 120 அத்தியாயங்களில் புதினம் முடிக்கப்பட்டிருந்தது. முதல் 80 அத்தியாயங்களும் கையெழுத்துப்படியின் திருத்தங்களாகவும் எஞ்சிய 40 அத்தியாயங்களும் புதியதாக சேர்க்கப்பட்டும் இருந்தன. 1792 ஆம் ஆண்டில், செங் மற்றும் கௌவ் 1791 பதிப்பில் இருந்த தவறுகளைத் திருத்தி இரண்டாவது பதிப்பை வெளியிட்டனர். ஆசிரியரின் கையெழுத்துப் படியில் இருந்த முடிவை ஒருங்கிணைத்து புதினத்தை முடித்திருந்ததாக தெரிவித்துள்ளார் . கடைசி 40 அத்தியாயங்கள் மற்றும் இரண்டாவது பதிப்பின் முன்னுரை தொடர்பான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். உ சிக் தனது 1921 ஆம் ஆண்டு கட்டுரை ஒன்றில் சிவப்பு அறை கனவின் முடிவு உண்மையில் கௌவ் இ யால் எழுதப்பட்டது என்று வாதிட்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் புதினத்தின் 120 அத்தியாயங்களுக்கான கையெழுத்துப் படிகள் கிடைக்கப்பட்டதனால் செங்,கௌவ் ஆகியோரின் ஈடுபாடு மட்டும் புரிந்தது. கடைசி 40 அத்தியாயங்களும் ஆசிரியரால் எழுதப்பட்டதுதானா என்பதில் ஐயங்கள் தொடர்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நவீன ஆய்வுகளின் முடிவில், புதினத்தின் முதல் 80 அத்தியாயங்கள் ஒருவராலும், கடைசி 40 அத்தியாயங்கள் வேறு ஒருவராலும் எழுதப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த பதினம் ஐந்து பாகங்களைக் கொண்டது. முதல் மூன்று பாகங்கள், 'சாவோ சுவச்சின்' என்பவரால் எழுதப்படது. கடைசி இரண்டு பாகங்கள், 'காவோ' என்பவர் 'சாவோ'வின் குறிப்புகள் கொண்டு எழுதி முடித்தார் என கருதப்படுகிறது. . இந்த ஐந்து பாகங்களிடையே 120 அத்தியாயங்கள் உள்ளன. முதல் மூன்று பாகங்கள் 80 அத்தியாயங்களையும், கடைசி இரண்டு பாகங்கள் 40 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இந்த புதினம் 'சியா' பரம்பரைப் பற்றின வரலாறு ஆகும். இந்த பரம்பரையில் இரண்டு கோமகன்கள் உள்ளன - கோமகன் நிங்-கோ மற்றும் கோமகன் ஜுங்-கோ. கோமகன் நிங்-கோவின் மூத்த பேரன், சியா ப்யூ, சிறு வயதில் காலமானார். ஆதலால் அவரது இரண்டாவது பேரன், சியா சிங் அடுத்த தலைவர் ஆகிறார். அவருக்கு இறையியல் நாட்டம் உள்ளதால், தனது பட்டத்தை தன் மகன் சியா சென்னுக்கு கொடுத்துவிட்டு துறவியாகிறார். கோமகன் ஜூங்-கோவின் மகன், சியா டேய்க்கும், கோமகள் சியா சீ (லேடி டோவேகர்)கும் கல்யாணம் நடக்கிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், சியா ஷே, சியா செங் மற்றும் மகள், சியா மின். சியா ஷேக்கு ஒரு மகன் சியா லியன், மற்றும் துணை மனைவி மூலம் ஒரு மகள், யிங் சுன் . சியா செங். லேடி வேங்கை மணக்கிறார், இந்த தம்பதியருக்கு, இரண்டு மகன்கள், சியா சு மற்றும் சியா போ-யூ. துனை மனைவியுடன் பிறந்த மகளின் பெயர் டான் சுன். சியா போ-யூ, இந்த கதையின் நாயகன், பிறக்கும் போது வாயில் பச்சை மாணிக்கத்துடன் பிறந்தான் எனக் கூறப்படுகிறது. சியா லியன், லின் ஜுஹாயை மணக்கிறார். ஆனால் ஒரு மகள் லின் டா-யூவை தன் கணவரிடம் விட்டுவிட்டு இளம் பருவத்திலே காலமாகிறார். லேடி டோவேகர் அழைப்பின் பெயரில், ஜூஹாய் தன் மகளுடன் சியா வீட்டில் வாழ்கிறார். சியா பரம்பரை உயர்குடியிலே மிகவும் செல்வமுடையவர்கள். மிகவும் பரந்து விரிந்த குடும்பம் இவர்களுடையது தான். போ-யூவின் அத்தை சுயே மற்றும் அவள் மகள் சுயே போ-சாய் சியா குடும்பத்துடன் வாழ்கின்றனர். கள்ளங்கபடமற்ற போ-யூ இரண்டு பெண்களிடமும் நன்றாக பழகுகிறான், ஆனால் அவனுக்கு டா-யூ மீது பற்று அதிகம். இருவரும் காதல் வசப்படுகின்றனர். இதற்கிடையே போ-யூவின் தங்கை டான் சுன், அரசரின் துணை மனைவியாகிறாள். இதன் காரணமாக சியா பரம்பரையின் செல்வாக்கு மீண்டும் கூடுகிறது. சியா குடும்பத்தின் பெரியவர்களான, லேடி டோவேகர், சியா செங் மற்றும் லேடி வேங், போ-சாயை, போ-யூவுக்கு மணமுடிக்க முடிவு செய்கிறார்கள். இவர்களை பொருட்டு, பச்சை மாணிக்கமான போ-யூவுக்கு ஏற்ற தங்க அணிகலன் போ-சாயே ஆவால். ஆனால் போ-யூ, உடல் நலம் குன்றிய தனது அத்தை மகளாகிய டா-யூவை விரும்புகிறான் என அறிகிறார்கள். ஆகையால் அந்த பெரியார்கள் ஒரு சதி திட்டம் தீட்டி, டா-யூவை போ-யூக்கு மணந்து தருவதாக பொய்யான வாக்குறுதியை போ-யூவுக்கு தருகிறார்கள். அவர்கள் தீட்டிய திட்டம், மணமகள் முகத்திரை அணியும் மரபுடைய வழக்கம் உள்ளதால், முகத்திரைக்குள் போ-சாயை மணமகளாக்கினால் போ-யூவால் அடையாளம் கண்டு கொள்ள இயலாது என்பது தான். திருமணச் செய்தி டா-யூவின் காதுகளுக்கு எட்டியதும், மன வருத்தத்தினாலும் வெறுப்பினாலும் உடல்நலம் குன்றி, உயிர் மாண்டாள். இதையறியாத போ-யூ தனக்கும் டா-யூவுக்கும் கல்யாணம் என்னும் நினைப்பில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். கல்யாணத்திற்கு பின், உண்மையை அறிய வந்த போ-யூவுக்கு பித்து பிடித்தது. இந்நிலையில், பேரசரின் துனை மனைவி டான் சுன் இறக்கிறாள். சியா சே மாகாண அதிகாரிகளுடன் சதித்திட்டம் தீட்டீயதால், அந்த குடம்பத்தின் அரசகுல மரியாதை பரிக்கப்படுகிறது. சியா சே மற்றும் சியா செங்கின் சொத்துக்கள் பரிக்கப்படுகின்றன. போ-யூவின் உடல்நலக் குறைவு அதிகரித்து, மரணத் தருவாயில் இருந்தான். அப்போது ஒரு துறவி, தொலைந்த போ-யூவின் பச்சை மாணிக்கத்துடன் தோன்றினார். போ-யூ, திடீரென்று தெளிவுற்று பின்னர் மயங்கி விழுந்தான். கொடுங்கனவுக்குப் பின் விழித்தான். தன் மனைவி போ-சாய் கருவுற்றிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல், போ-யூ வீட்டை விட்டு வெளியேறி துறவி பூண்டான். இந்த புதினம் நிறைய கதைமாந்தர்கள் உள்ளன. ஏறக்குறைய 400 பாத்திரங்கள் கொண்ட இந்த புதினத்தில் முக்கிய கதைமாந்தர்கள் மட்டும் 40 ஆகும். சாஃனாமா சாஃனாமா என்பது பாரசீகப் புலவர் பெர்தோவ்சி என்பவர் கிபி 1000 ஆவது ஆண்டளவில் எழுதிய மிகப்பெரிய தொகைநூல் ஆகும். இது ஈரானின் தேசிய இதிகாசமாகவும் விளங்குகிறது. இந்நூல், உலகம் தொடங்கியதிலிருந்து பாரசீகத்தை கிபி 7ம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றும் வரையிலான ஈரானின் தொன்மங்களையும், வரலாற்றையும் கூறுகிறது. இதன் இலக்கியச் சிறப்பு ஒருபுறம் இருக்க, அரபு மொழிக் கலப்பற்ற தூய பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந் நூல், பிற்காலத்தில் பெருமளவு அரபு மொழிச் செல்வாக்கிலிருந்து பாரசீக மொழியை மீட்டெடுப்பதற்குப் பேருதவியாக அமைந்தது. இப் பாரிய நூல், பாரசீக மொழி பேசுபவர்களால் ஒரு தலை சிறந்த படைப்பாகக் கருதப்படும் அதே வேளை, இது பாரசீகத்தின் வரலாறு, பண்பாட்டு விழுமியங்கள், பண்டைய மதங்கள் (சோரோவாசுட்டிரியனியம்), ஆழ்ந்த நாட்டுணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு நூலாகவும் உள்ளது. பெர்தோவ்சி, நூலை எழுதி முடிக்கும்போது பாரசீகம் தனது சுதந்திரத்தை இழந்துவிட்டிருந்தது. இந்நூலில் நினைவு கூரத்தக்க பல சாதனையாளர்கள் இடம்பெற்றிருந்தாலும், பாரசீக நாடே உண்மையான சாதனையாளராகக் காட்டப்பட்டுள்ளது. இதனால் பாரசீக நாட்டுக்கு இது ஒரு முக்கிய நூலாகக் கருதப்படுகின்றது. சோரோவாசுட்டிரியனியத்தின் தோற்றத்திலிருந்து அதன் இறுதி அரசன் முசுலிம்களால் தோற்கடிக்கப்படும் வரையான வரலாறு இடம்பெற்றிருப்பதனால், இன்று உலகில் எஞ்சியிருக்கும் 200,000 அளவிலான சோரோவாசுட்டிரியருக்கும் இந் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்று. பிளிம்சால் கோடு பிளிம்சால் கோடு என்பது கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப்பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் குறிக்கும். இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூகசீர்திருத்தவாதியும் ஆவார். அவர் வாழ்ந்த காலத்தில் கப்பல் முதலாளிகள் கப்பலுக்கு அதன் மதிப்பைவிட மிகுதியாகக் காப்பீடு செய்து விட்டு கப்பல்களின் அதிக எடை ஏற்றிச் செலுத்தினர். இதனால் கப்பல் நீரில் செல்வதை விட முழுகினால் அதிக லாபம் கிடைத்ததால் அவ்வாறு செய்தனர். இதனால் மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இத்தகைய அதிக எடை ஏற்றிச் செலுத்தப்பட்ட கப்பல்கள் மரணக்கப்பல்கள் என்னும் பொருள்படி (coffin ships) என்று அழைக்கப்பட்டன. சாமுவேல் பிளிம்சால் சாமுவேல் பிளிம்சால் ("Samuel Plimsoll", 10 பிப்ரவரி 1825 - 3 சூன் 1898) ஒரு ஆங்கிலேய அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இன்று கப்பல்களில் பயன்படுத்தப்படும் பிளிம்சால் கோடு என்னும் பாதுகாப்புக் கோட்டினை நடைமுறைப் படுத்தியதற்காகப் போற்றப்படுகிறார். இவருடைய காலத்தில் அதிக பாரம் ஏற்றப்பட்ட கப்பல்கள் கடலில் செலுத்தப்பட்டன. இவை கப்பலின் மதிப்பை விட அதிகமாக காப்பீடு செய்யப்பட்டிருந்தன. இக்கப்பல்கள் இருப்பதைக் காட்டிலும் மூழ்கினால் அதிக லாபம் கிடைத்தது. இதனால் கப்பல் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படாமல் அதிக எடை ஏற்றிப் பயன்படுத்தினார். பிளிம்சால் இதற்கு எதிராகப் போராடி பாதுகாப்புக் கோடு நடைமுறைக்கு வரப் பாடுபட்டார். இதனால் இக்கோடுகள் பிளிம்சால் கோடுகள் எனப்படுகின்றன. சென் புத்தமதம் சென் புத்தமதம் "(ஆங்கிலம்: Zen; சீனம்: 禪; பின்யின்: Chán)" மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907) காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. பின்னர் இப்பிரிவு சீனாவிலிருந்து தெற்கு வியட்நாம், வடகிழக்கு கொரியா, கிழக்கு சப்பான் போன்ற பகுதிகளுக்குப் பரவியது. சப்பானில் இப்பிரிவு சப்பானிய சென் என்று அழைக்கப்படுகிறது. சப்பானியர்களின் அன்றாட வாழ்வும் கலை, இலக்கியம், ஓவியம், கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் சென் புத்தமதத்தின் பாதிப்பு உள்ளது. சென் புத்தமதம் அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவ அறிவை முதன்மைப்படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இம்மதம் சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தருமன் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காகச் சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது. சென் ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ஆம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. சென் என்ற சொல்லானது மத்திய அல்லது பண்டைய சீனச் சொல்லான 禪 (சான்) என்ற சொல்லின் சப்பானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும். இது தியானம் ("தியானம்") என்ற இந்தியப் பயன்பாட்டு சொல்லின் வேர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. . சென்னை அறிந்து கொள்ள முதலில் மனத்தூய்மை வேண்டும். புத்தரின் போதனைகளை நடைமுறையில் கடைபிடித்து ஆசை, கோபம், அறியாமை போன்றவையால் வரும் துன்பங்களிலிருந்து தானும் விடுபட்டு மற்றவர்களையும் விடுவிப்பதே சென் புத்தமதத்தின் இறுதி குறிக்கோளாகும். தன் இயற்கையை அறிவதற்கு சென் புத்தமதம் பல்வேறு வழிமுறைகளைப் போதிக்கிறது. கடுமையான சுய கட்டுப்பாடு, தியான நடைமுறை, புத்தரின் சுய ஞானோதயம் மற்றும் தினசரி வாழ்வில் இந்த நுண்ணறிவின் தனிப்பட்ட வெளிப்பாடு, குறிப்பாக மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவது என்பவற்றை சென் புத்தமதம் வலியுறுத்துகிறது . அதேபோல வார்த்தைகளிலும் கோட்பாடுகளிலும் மனதைத் தேடுவதை சென் புத்தமதம் வலியுறுத்தவில்லை . மாறாக, நேரடியாக மனதைக் குறிவைத்து தன் இயற்கை முழுவதையும் அறிந்து கொள்ள முடியும் என்பது சென் புத்தமதத்தின் அடிப்படைக் கருத்தாகும் . மகாயானக் கோட்பாட்டின் ஆதார மூலங்களான குறிப்பாக உள்ளத்தின் விரிவே உலகமாகத் தோன்றுகிறது என்று கூறும் யோகாச்சாரம் மற்றும் அனைவருக்குள்ளும் புத்தநிலையை அடையக்கூடிய தன்மை உள்ளார்ந்த நிலையில் இயற்கையாகவே உள்ளது எனக்கூறும் ததாகதகர்ப சூத்திரங்கள் உள்ளிட்டவை சென் புத்தமத போதனைகளில் அடங்கியுள்ளன. உட்கார்ந்த நிலையில் தியானம் செய்யும் போது, பயிற்சியாளர்கள் பொதுவாக தாமரை நிலை, அரை தாமரை நிலை, பர்மிய, அல்லது செய்சா எனப்படும் சப்பானிய தோரணை போன்ற நிலைகளில் அமர்ந்து தியானா முத்ராவைப் பயன்படுத்தித் தியானம் செய்வர். மூச்சின் எண்ணிக்கையை அறிவது அல்லது மூச்சை மனதின் ஆற்றல் மையத்தை நோக்கி நகர்த்த முயற்சிப்பது போன்ற செயல்களால் மனதை ஒருங்கினைக்க பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனாபானாசதி என்பது புத்தபகவானால் அருளப்பட்ட தியானமுறைகளுள் ஒன்றாகும். விழிப்புடன் மூச்சினை அவதானித்தல் என்பது இதன் பொருளாகும். ஆனா, ஆபானா, சதி என்னும் சொற்களின் கூட்டு ஆனாபானாசதியாகும். ஆனா என்பது உட்சுவாசத்தினையும், ஆபானா என்பது வெளிச் சுவாசத்தினையும், சதி என்பது விழிப்புடன் அவதானித்தலையும் குறிக்கிறது. இப்பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு பயிற்சியாளர் அமைதியான ஓரிடத்தில் சதுர அல்லது வட்டவடிவ பாயில் பத்மாசனமிட்டு அமர்ந்து தனது கண்களை மூடிக் கைகளை மடியில் வைத்து மனத்தை உடல் உணர்வுகளிற் செலுத்தி தியானம் மேற்கொள்வார். சிலர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபடியும் இப்பயிற்சியை மேற்கொள்வர். இது மனத்தினை ஓரளவு அமைதியுறச் செய்வதற்கு உதவுகிறது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் தியானம் புரிதலை சுவோசாங் (坐禅) என்று சீனத்திலும், சாசென் (坐禅) என்று சப்பானிலும், சுவாசியோன் (坐禅) என்று கொரியாவிலும் அழைக்கின்றனர். அமைதியாக எண்ணங்களற்று உட்கார்ந்திருப்பது சென் புத்தமத சோட்டோ பிரிவின் முதன்மையான தியான நடைமுறையாகும். தியானிப்பாளர்கள் சிந்தனையின் ஓட்டம் குறித்து எந்த தலையீடும் இல்லாமல் மனதை அறிந்துகொள்ள முயல்வது இப்பயிற்சியாகும். சப்பானிய புத்தமத துறவியான தோகெனின் முறை என்று இம்முறை அழைக்கப்படுகிறது . சாசென்னுக்ககாக அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படும் முறையும் இதுவேயாகும் . சப்பானிய மொழியில் இம்முறையை சிக்காந்தசா என்று அழைக்கிறார்கள். சில ஆலயங்களில் மும்முரமான கூட்டு தியானப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. சப்பானிய மொழியில் இதை செசின் என்கிறார்கள். புத்த துறவிகள் ஒவ்வொரு நாளும் தினமும் பல மணி நேரம் தியானம் செய்வதை வழக்கமாக கொள்வர். இத்தகைய தீவிரமான தியானக் காலத்தில் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தியானக் காலம் முழுவதும் ஓய்வுக்காகவும் உணவு முதலிய இதர காரணங்களுக்காகவும் அதே மனநிலையுடன் கூடிய 30-50 நிமிட குறுகிய கால இடைவெளிகள் விடப்படுவதுண்டு. இரவு தூக்கத்திற்காக ஏழு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் ஒதுக்கி வைக்கப்படுகிறது. சப்பான், தைவான், மற்றும் மேற்கு நாடுகளில் நவீன பௌத்தமத நடைமுறைகளில் மாணவர்கள் பொதுவாக இத்தகைய தீவிர கூட்டுத்தியான நடைமுறை அமர்வுகளில் கலந்து கொள்கின்றனர், இவை பொதுவாக 1, 3, 5, அல்லது 7 நாட்கள் நீளம் கொண்டவையாக இருக்கின்றன. இத்தகைய கூட்டு தியானங்கள் பல சென் மையங்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக புத்தருக்கான நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இத்தீவிர தியானங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. குழுக்களாக மேற்கொள்ளப்படும் சென் தியானத்தின் ஒரு தனித்துவமான அம்சம் கியோசாகு என்ற மெல்லிய நீண்ட மரத்தாலான குச்சியின் பயன்பாடாகும் . பயிற்சியாளர்களை விழிப்புடன் வைத்திருக்க இக்குச்சியால் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சாங் வம்சத்தின் தொடக்கத்தில் மௌனமாக ஞானம் பெறுவதை நடைமுறையாகக் கொண்டிருந்த நேரத்தில் கோன் எனப்படும் விடுகதைகள் போடும் நடைமுறை பிரபலமடைந்தது.இது லிஞ்ச் மற்றும் காடோங் பிரிவுகளுக்கு இடையேயான நடைமுறையில் சில வேறுபாடுகளுக்கு ஆதாரமாகியது. சின்னச் சின்ன கதைகள், வினோதமான வேடிக்கை நிகழ்ச்சிகள், கவிதைகள் போன்ற செயல்கள் மூலம் தொடர்புபடுத்தி சட்டென மனதை அறியச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்குரு மாணவர்களுக்கு போதித்தலை நிகழ்த்துவது இம்முறையின் சிறப்பாகும். சென்குரு பெற்ற உள்ளுணர்வை அவருடைய மாணவரிடத்தில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி புத்தமத போதனைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களிம் முன்னேற்றம் சோதிக்கவும் படுகிறது. கோன்-விடுகதைகள் உட்கார்ந்த தியானநிலையிலும் நடை தியானத்திலும் போதும் அன்றாட வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோன் நடைமுறையி குறிப்பாக சப்பமிய ரின்சாய் பிரிவில் வலியுறுத்தப்படுகிறது, மற்ற பிரிவுகளிலும் சென் கிளையின் போதனையைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சென் மாணவரின் தேர்ச்சி ஒரு தனிப்பட்ட நேர்காணலில் (ஜப்பானிய மொழியில் டோகூசன் (独 参), டெய்சான் (代 参) அல்லது சன்சென் (参禅)) அவனுக்குக் கொடுக்கப்பட்ட கோன் விடுகதையின் கோணத்தில் வழங்கப்படுகிறது. ஒரு கோன் விடுகதைக்கு தனித்துவமான பதில் இல்லை என்றாலும் அதை மாணவர்கள் புரிந்துகொண்டு அளிக்கும் பதில்களை விளக்கி ஆய்வு செய்து அவர்கள் சென் கருத்துகளைப் பிரிந்து கொள்ள திட்டமிடப்படுகிறது. வேண்டும். மாணவனின் பதிலை சென்குரு ஏற்றுக்கொண்டோ அல்லது மறுத்தோ சரியான பாதையை மாணவனுக்கு அரிமுகப்படுத்துவார். இருவருக்குமிடையிலான இடைவினை சென் புத்தமதத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுவே தவறான புரிதலுக்குக்கும் சுரண்டலுக்கும் வழிவகுக்கிறது . கிங் வம்சத்திற்குப் பின்னர் (1644-1912) பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு, 20 ஆம் நூற்றாண்டில் சீன பௌத்தத்தினை நன்கு அறிந்த நபரான எச்யூன் (虛雲) (1840-1959) மூலமாக புத்தம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதைத் தொடர்ந்து 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் சாங் கருத்துகள் நிலையான வளர்ச்சி பெற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. வியட்நாமியின் மரபார்ந்த வரலாற்றுக் கணக்கின் படி 580 ஆம் ஆண்டில் வினிடூரிசி (வியட்நாம்: ì-ni-đa-lưu-chi) என்ற இந்திய துறவி சீன சாங்ஙின் மூன்றாவது மூதாதையர் செங்கானுடன் தன்னுடைய பயிற்சியை முடித்துக் கொண்டு வியட்நாம் சென்றார். இவர்கள் மூலமாக வியட்நாமில் புத்தமதக் கருத்துகள் பரவின. முன்னதாக சீன புத்தமத துறவிகளால் தாவோயிசமும் ஞானம் பெறும் வழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. சீயோன் கொரியாவில், கொய்லாவின் சாய்ந்த சில்லா காலத்தில் (7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுகள்) கொரியத் துறவிகள் சீன புத்தத்தையும் யோகமுத்திரையையும் பிரதானமாகக் கருதி புதிதாக வளரும் சென் பாரம்பரியத்தை கற்றுக்கொள்ள சீனாவுக்குச் செல்லத் தொடங்கினர். கோன் விடுகதைகள் போடும் நடைமுறையும் புதிய சென் மையங்களும் வியட்நாமிற்குள் பிரவேசித்தன. 12 ம் நூற்றாண்டு வரை சென் ஒரு தனிப் பிரிவாக சப்பானில் அறிமுகப்படுத்தப்படவில்லை, மியோன் எய்சாய் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இறுதியாக லின்யி வழியை தொடங்குவதற்காக சப்பானுக்குத் திரும்பினார் , ஆனால் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இது இறுதியில் அழிந்துவிட்டது. ரின்சாய் பிரிவின் ஓட்டோகான் வழிமுறையைத் தொடங்குவதற்கு முன்பே நாம்போ சோமியொவும் லின்யி போதனைகளை சீனாவில் கற்றிருந்தார். 1215 ஆம் ஆண்டில் சமகாலத்தைச் சேர்ந்த எய்சாய் சீனாவிற்குச் சென்றார். அங்கு தியாங்டோங் ரூயிங்ஙின் மாணவராகச் சேர்ந்தார். இவர் சப்பானுக்குத் திரும்பிய பின்னர் சப்பானிய கிளையான சோட்டோ பிரிவு உதயமானது. சமகாலத்தில் சப்பான் நாட்டில் சோட்டோ (曹洞), ரின்சாய் (临 済) மற்றும் ஓபாக்கு (黃 檗) ஆகிய மூன்று பாரம்பரியப் பிரிவுகள் இருந்தன. இவற்றில், சோட்டோ மிகப்பெரியது, ஓபாக்கு மிகச்சிறியதாகவும் ரின்சாய் நடுத்தர பிரிவாகவும் கருதப்பட்டன. இப்பிரிவுகள் மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. சோட்டோ பிரிவுக்கு இரண்டு தலைமை ஆலயங்களும், ரின்சாய் பிரிவுக்கு 14 தலைமை ஆலயங்களும் ஓபாக்கு பிரிவுக்கு ஒரு ஆலயமும் என மொத்தமாக 17 தலைமை ஆலயங்கள் தோன்றின. நாரிந்தர் கப்பானி ஒளி இழையியலின் தந்தை என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படும் நாரிந்தர் சிங் கப்பானி "(Narinder Singh Kapany)" பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்ற நகரத்தில் பிறந்தவர். தொற்றுநோய் மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும். நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது. பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது. சுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன. பல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம். நோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் உயிரினம் பற்றி, நோயின் இயல்புபற்றி, நோய் கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, நோய்க்காரணியின் நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும். உதாரணமாக எய்ட்சு எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் வைரசானது (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த வைரசை பரப்ப முடியும். தாம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த நோயைக் காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும். அதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய நோய்க்காரணியின் தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், நோய் விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும். சிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய தடுப்பூசி முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, நோய்க்காவியை (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம். ஒரு தொற்று நோயானது புதிதான ஒரு நோய்க்காரணியாலோ, அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதான ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு நோய்க்காரணியாலோ ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. ஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது கொள்ளைநோய் (epidemic) எனப் பெயரிடப்படும். அதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது உலகம்பரவுநோய் (pandemic) என அழைக்கப்படும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது. இவற்றில் 90% இறப்பை, நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia), இன்ஃபுளுவென்சா போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், எய்ட்சு என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், காசநோய் (Tuberculosis), மலேரியா (Malaria), தட்டம்மை அல்லது சின்னமுத்து (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன . மெய்சி மீள்விப்பு 1866 ஆம் ஆண்டில், சட்சுமா பகுதியின் தலைவரான சாய்கோ தாக்காமோரியும், சோசூ பகுதியின் தலைவர் கிடோ தக்கயோசியும் இனைந்து உருவாக்கிய சட்சுமா-சோசூ கூட்டணியே மெய்சி மீள்விப்புக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இவ்விரு தலைவர்களும் பேரரசர் கோமேய்க்கு ஆதரவு வழங்கினர். சாக்கோமோட்டோ ரியோமா என்பவர் அப்போது ஆட்சியில் இருந்த தொக்குகாவா சொகுனாட்டே அரசை எதிர்ப்பதற்காகவும், பேரரசரின் ஆட்சியை மீள்விப்பதற்காகவும் இவர்களை ஒன்றிணைத்தார். 1867 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பேரரசர் கோமெய் காலமானதைத் தொடர்ந்து அதே ஆண்டு பெப்ரவரி மூன்றாம் தேதி அவரது மகன் பேரரசர் மெய்சி அரியணை ஏறினார். இக் காலப்பகுதியில் சப்பான் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிலிருந்து, முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கு மாற்றம் பெற்றதுடன் அதனை மேனாட்டுச் செல்வாக்குக்குள் கொண்டுவந்தது. சாம்பா சாம்பா என்பது ஒரு பிரேசில் நாட்டு நடனமும் இசை வகையும் ஆகும். இது ஆப்பிரிக்க, ஐரோப்பிய மூலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. பிரேசிலின் தலையாய பண்பாட்டு வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, பிரேசிலின் தேசிய அடையாளத்துக்கான சின்னமாகவும் விளங்குகிறது. பாகிய, "சாம்பா டி ரோடா" எனும் சாம்பா வகை 2005 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ மனிதத்தின் மரபுகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இட்துவே இன்று ரியோ டி செனெய்ரோவில் ஆடப்பட்டு வரும் கரியோக்கா என்னும் சாம்பா வகையின் அடிப்படையாகும். நிறப்பிரிகை நிறப்பிரிகை ("dispersion") எனப்படுவது வெண்ணிறமாகத் தென்படும் ஒளி அதன் உட்கூறாக அமைந்துள்ள ஒளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு. பகல் (சூரிய) ஒளி ஒரு முப்பட்டகத்தின் வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு (Red), இறுதியில் தான் ஊதா (Violet) கிடைக்கின்றது. குன்றக்குடி அடிகள் குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். தமிழ்நாடு தஞ்சாவூரில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர். அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான ரா. பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள் ஆவார். பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944 ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தார். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள். 1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார். அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்". 1954 ஜூலை 10 ஆம் நாள் இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம் நாள் கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார். வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972 இல் சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்". பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, "மணிமொழி", "தமிழகம்", "அருளோசை" முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் "மக்கள் சிந்தனை", "அறிக அறிவியல்" ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன. அடிகளார் எழுதிய சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேறியுள்ளன. அவரது இறுதிக்காலத்தில் தினமணியில் "எங்கே போகிறோம்?" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். மன்னார் வளைகுடா மன்னார் வளைகுடா (Gulf of Mannar) என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளையும் கற்பாறைகளையும் கொண்ட இராமர் பாலம் மன்னார் வளைகுடாவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையில் இருந்து பிரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன. 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இந்த தீவுகள் நிர்வாக காரணங்களுக்காக என நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. சிகப்பு மேகம் சிகப்பு மேகம் (ஆங்கிலம்: "Red Cloud", இலக்கோட்டா: Maȟpíya Lúta), (1822 - டிசம்பர் 10, 1909) ஒரு சிறந்த அமெரிக்க முதற்குடிமக்களின் தலைவர். இவர் ஐக்கிய அமெரிக்கா படைக்கு எதிரான போர்களில் வெற்றிகளை ஈட்டியவர். பின்னர், இவரும், முதற்குடி மக்களும் முகாங்களில் (reservations) அடைக்கப்பட்டனர். அங்கும் இவர் தமது போராட்டத்தை முன்னெடுத்தார். தாங் அரசமரபு தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907), சீனாவின் அரசமரபுகளில் ஒன்று. இது சுய் வம்சத்தைத் தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் அரசமரபுக் காலத்துக்குப் பின் வந்தது ஐந்து அரசமரபுகளும் பத்து அரசுகளும் காலம். தாங் அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான வூ செட்டியான் என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் அரசமரப ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும். முன்னர் சாங்கான் என அழைக்கப்பட்ட இன்றைய சியான் நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் மக்கள்தொகை கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த ஆன் அரசமரபு காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தார்ஃபூர் இனப்படுகொலை தார்ஃபூர் இனப்படுகொலை எனப்படுவது தாஃர்பூர் இல் 400 000 மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வாகும். சூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள். ஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். வானமாதேவி, கடலூர் வானமாதேவி ("Vanamadevi"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். இதன் பெயரில் மற்றொரு ஊராட்சி காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடலூர் - சங்கராபுரம் (மா.நெ- 68) ([SH-68) மாநில நெடுஞ்சாலையில் கடலூரி்லிருந்து 11 கி.மீ தொலைவில் வானமாதேவி ஊராட்சி உள்ளது இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1797 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.69% ஆண்கள், 49.31% பெண்கள் ஆவார்கள். வானமாதேவி மக்களின் சராசரி கல்வியறிவு 57.69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61.07%, பெண்களின் கல்வியறிவு 38.29% ஆகும். வானமாதேவி மக்கள் தொகையில் 14.24% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கடலூரி்லிருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு செல்லும் நகர பேருந்து வானமாதேவி ஊராட்சி வழியாக செல்கிறது. மேலும் கடலூர் - பண்ணுருட்டி (வழி) பாலூர் பேருந்தில் வானமாதேவி பேருந்து நிறுத்தத்தை அடைந்து, கெடில ஆற்று பாலத்தை கடந்து 1 கி.மீ சென்றால் வானமாதேவி ஊராட்சியை சென்று அடையலாம். சிலம்பிநாதன்பேட்டை சிலம்பிநாதன்பேட்டை ("Silambinathanpettai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ணுருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். காடாம்புலியூர் - புலியூர் சாலையில் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி உள்ளது இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51.15% ஆண்கள், 48.84% பெண்கள் ஆவார்கள். வானமாதேவி மக்களின் சராசரி கல்வியறிவு 49.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65.83%, பெண்களின் கல்வியறிவு 34.16% ஆகும். வானமாதேவி மக்கள் தொகையில் 12.82% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கடலூரி்லிருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு நேரடி நகர பேருந்து செல்கிறது. மேலும் கடலூர் - பண்ணுருட்டி (வழி) பாலூர் பேருந்தில் பாலூர் பேருந்து நிறுத்தத்தை அடைந்து, குறிஞ்சிப்பாடி - பாலூர் சாலையில் நடுவீரப்பட்டு மற்றும் பத்திரக்கோட்டை கடந்து வலது பக்கம் செல்லும் காடாம்புலியூர் சாலையில் 2 கி.மீ சென்றால் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியை சென்று அடையலாம். இசுரேல் கெல்ஃபாண்ட் இசுரேல் கெல்ஃபாண்ட் ("Israel Gelfand", , – அக்டோபர் 5, 2009) என்பவர் சோவியத் மற்றும் அமெரிக்கக் கணிதவியலர். கணிதத்தில் குலக் கோட்பாடு, ஒப்புநிறுத்துக் கோட்பாடு ("Representation Theory"), நேரியல் இயற்கணிதம் ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்த அறிஞர். இவர் சோவியத் ஒன்றியத்தின் உயர் பெருமையாகிய லெனின் புகழ்வரிசைப் பதக்கமும் ("Order of Lenin"), கணிதத்துறையின் வுல்ஃவ் பரிசையும் ("Wolf Prize") பெற்றார். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஃவெல்லோவாகவும் (அரச குமுக சிறப்பாளராகவும்) தேர்வு செய்யப்பெற்றார். மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் நெடிய ஒரு தலைமுறை முழுவதும் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த இவர் தன்னுடைய 76 ஆம் அகவைக்கு சற்று முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். எம்.ஐ.டி-யிலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் நியூ செர்சியில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்கப் பேராசிரியராகப் ("Distinguished Professor") பணி ஏற்றார். அன்றைய உருசியப் பேரரசின் கீழிருந்த உக்ரைனில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் கெல்ஃபாண்ட். பள்ளிப் படிப்பின் போதே கணிதத்தில் மிகத் திறமையுடையவராக இருந்த இசுரைல் உயர் பள்ளிக்குச் செல்லாமலேயே மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்பின் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவரது ஆய்வுநிலைப் படிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரும்புகழுடைய ஆந்திரே கோல்மோகொரோவ் ஆவார். தொகை வடிவவியல் (integral geometry) என்னும் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் இன்று மருத்துவத்தில் உடல் உள்ளுறுப்புகளை நுண்படம் எடுக்கும் அணுக்காந்த ஒத்ததிர்வு படக் கலையிலும் (Magnetic Resonance Imaging, MRI), கணிவழி குறுக்குவெட்டு புதிர்க்கதிர்ப் படம் (CAT) எடுத்தல் முதலியவற்றிலும் பெரிதும் பயன்படுகின்றன. அமர்த்தியா சென் அமார்த்ய குமார் சென் ("Amartya Sen", பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் நோபல் பரிசு ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள். விண்மீன் ஆண்டு விண்மீன் ஆண்டு என்பது விண்ணில் நிலைத்திருக்கும் விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு பூமி சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவு ஆகும். மாறாக ஓர் குறிப்பிட்ட விண்மீன்களின் அமைப்பிற்கு சூரியன் தனது நீள்வட்ட பாதையில் மீண்டும் வரும் கால அளவுமாகும். இது பகல் 12:00 1 சனவரி 2000 (J2000.0)அன்று . இது J2000.0 இன் சராசரி காலநிலை ஆண்டை விட . 2024.5128 நீளமானது. ஆங்கிலத்தில் இதனை "sidereal year" எனக் குறிப்பர். ( "sidus" இலத்தீனத்தில் "விண்மீன்"). காலநிலை ஆண்டு காலநிலை ஆண்டு (அல்லது சூரிய ஆண்டு) என்பது சூரியன் (பூமியிலிருந்து பார்க்கும்போது) பருவகாலங்களில் அதே இடத்திற்கு மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் கால அளவு ஆகும்;காட்டாக வேனிற்கால சம இரவு நாளிலிருந்து மீண்டும் அதே வேனிற்கால சம இரவு நாளுக்கு வர எடுக்கும் நேரம். புவியின் நீள்வட்டப்பாதை நகர்தலினால் இப்பாதையின் எந்த புள்ளியிலிருந்து இவ்வாண்டு கணக்கெடுக்கப்படுகிறது என்பதனைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை காலநிலை ஆண்டுகளின் நேரத்தில் வேறுபாடுகள் உள்ளன. காட்டாக, சூரியன் வடக்கிலிருந்து தென்திசை திரும்பும் நாளை அடிப்படையாக கொண்ட காலநிலை ஆண்டிற்கும் சம இரவு நாட்களை அடிப்படையாகக் கொண்ட காலநிலை ஆண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதனால் சராசரி காலநிலை ஆண்டு வரையறுக்கப்படுகிறது. சிறப்பாக குறிப்பிடப்படாவிடின், காலநிலை ஆண்டு என்பது சராசரி காலநிலை ஆண்டையே குறிக்கும். தவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது. அழகுப் போட்டி அழகுப் போட்டி என்பது முதன்மையாக போட்டி போடுபவரின் உடல் அழகை மதிப்பீடு செய்து ஒருவரை சிறந்த அழகு உடையவராக தெரிவு செய்யும் போட்டி ஆகும். பொதுவாக ஒருவரின் உடல் அழகோடு, அவருடைய ஆளுமை, திறங்கள் போன்றவையும் மதிப்பீட்டுக்கு உள்ளாகின்றன. பெரும்பான்மையான போட்டிகள் பெண்களுக்குரியவை. உடல் கட்டுதல் உடல் கட்டுதல் என்பது சீரிய உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளால் ஒருவரின் உடலை கட்டுடலாக மாற்றியமைப்பதைக் குறிக்கிறது. உடல் கட்டுதல் ஒரு போட்டி நிகழ்வாகவும் இருக்கிறது. உடல் கட்டுதல் விளையாட்டுத்துறை, படைத்துறை, மல்லாடல், திரைப்படத்துறை போன்றவற்றுக்கும் பயன் மிக்கதாக இருக்கின்றது. உற்சாகமூட்டல் உற்சாகமூட்டல் என்பது பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாட்டு அணிகளை உற்சாமூட்டு செயற்பாடாகும். உற்சாகமூட்டல் ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். சீருடற்பயிற்சிகள், நடனம், வித்தைகள் ஆகியவற்றின் கூறுகளின் கூட்டாக இது அமைகிறது. வல்லுனர் மல்லாடல் வல்லுனர் மல்லாடல் அல்லது புரொஃபொசனல் மல்லாடல் (Professional wrestling) என்பது ஒரு நிகழ் கலை ஆகும். முன்னரே முடிவு செய்யப்பட்ட போட்டிகளை, பார்வையாளர்கள் முன் பாவனை செய்து மகிழ்விப்பதே இக் கலையாகும். இக் கலை நடிப்புச் சண்டை, நாடகக் கூறுகள், வேடம், வித்தைகள் போன்றவற்றின் கூறுகளைக் கலந்தது. வட அமெரிக்காவிலும், யப்பானில் மிகவும் வரவேற்ப்பைப் இது பெற்றிருக்கிறது. உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மல்லாடலை நிகழ்த்துவதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. இசுரீட் பைட்டர் இசுரீட் பைட்டர் (Street Fighter) என்பது ஒரு புகழ்பெற்ற நிகழ்பட ஆட்டம் ஆகும். இவர்களை வீதிச் சண்டையாளர் எனலாம். சிறப்பு அசைவுகள் அல்லது திறமைகள் கொண்ட வீரர்களுக்கு இடையேயான போட்டியாக இது அமைகிறது. உலகின் பல பாகங்களைப் பிரதிநிதிப்படுத்தி வீரர்கள் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்டம் 1987 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், 1991 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது பதிப்பே நல்ல வரவேற்பைப் பெற்று, ஆட்டக்காரர் மத்தியில் இன்றும் மிக புகழ்பெற்ற ஒன்றாக இருக்கின்றது. அனிமே அனிமே ("Anime") என்பது சப்பானில் உருவாகும் இயங்குபடங்கள் ஆகும். சப்பானுக்கு வெளியே அனிமே என்பது சப்பானிய இயங்குபடத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. அனிமே 1917 ஆம் ஆண்டில் தொடங்கியது. மங்காவைப் போல அனிமேக்களுக்கும், சப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுடன் உலகம் முழுவதிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதனை விநியோகிப்பவர்கள் இதனைத் தொலைக்காட்சிகளூடாகவும், நேரடியாக நிகழ்படங்களாகப் பதிவு செய்தும், இணையவழியாகவும் வெளியிடுகின்றனர். அனிமே என்பது ஒரு கலை வடிவம். இது அனிமேஷன் (animation), என்றும் அழைக்கப்படுகிறது. இது திரைப்படத்தில் உள்ளது போன்ற விரிதல், சுழல்தல் எனும் அனைத்து வகை அசைவுகளையும் உள்ளடக்கிய உயிராட்ட விரிசுழற்படம். ஆனால் அது ஒரு வகைமை அல்லது பாணி என்று தவறாக வகைப்படுத்தப்படுகிறது. ஜப்பானிய மொழியில் அனிமே என்பது உலகெங்கிலும் இருந்து அனைத்து வகையான அசைவூட்டங்களையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில், அனிமே () என்பது பின்வரும் வரையறைகளைக் குறிக்கும் கட்டுப்பாட்டுக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது டேஸின் அனிமே ("dessin animé") என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து அசைவூட்டம் எனும் பொருளுடைய அனிமேஷன் என்ற வார்த்தை பெறப்பட்டதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன ஆங்கிலத்தில், அனிமே-ஒரு பொதுவாக நிறைவான பெயர்ச்சொல்லாக செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அசைவூட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, ஜப்பானசைவூட்டம் என்பது 1970 கள் மற்றும் 1980 களில் பரவலாக இருந்தது. 1980 களின் நடுப்பகுதியில், அசைவூட்டமானது, ஜப்பானசைவூட்டத்தைத் தடுக்கத் தொடங்கியது. தற்போது, குறிப்பிட்ட காலகட்டங்களில் தயாரான ஜப்பானிய அசைவூட்டத்தை வேறுபடுத்தி அடையாளம் காண ஜப்பானசைவூட்டம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அசைவூட்டத்தின் முதல் வடிவமைப்பு 1917 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது. இது முதலில் நாடகக் காட்சி வடிவில் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாள், நிப்பான் தொலைக்காட்சியில் "மோலின் சாகச செயல்" எனும் பொருள்படும் "மோகுரா நோ அபன்சுரு (Mogura no Abanchūru)" என்ற தலைப்பில், முதல் தொலைக்காட்சி மற்றும் முதல் வண்ண அசைவூட்டபடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 களில் தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது முதல் இது ஒரு பிரபலமான ஊடகமாக இருந்து வருகிறது. அசைவூட்டபட வீடியோ படைப்பு வடிவமைப்புகள்: பொதுவாக அசைவூட்டபடங்கள் வீட்டு ஊடக வெளியீட்டிற்கு முன்னர் திரையரங்குகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளியிடப்படவில்லை இணையத்தின் வெளிப்பாடு சில அசைவூட்டபட தயாரிப்பாளர்களை "அசல் இணைய அசைவூட்டம் (ஓ.என்.ஏ.-ONA)" என்ற வடிவத்தில் தங்களின் படைப்புகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் வழிவகுத்தது. 1980 களில் அசைவூட்ட வெளியீடுகளின் வீட்டு விநியோகம் விஎச்எஸ் (VHS) மற்றும் சீரொளிக் குறுந்தகடு வடிவமைப்புகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சீரொளிக் குறுந்தகடு மற்றும் விஎச்எஸ் வடிவங்களில் டிவிடி (DVD) வடிவமைப்பு மூலம் பல்வேறு தனித்துவ மேற்செல் நன்மைகள் வழங்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கூறுகள்: டிவிடி வடிவமைப்பில் உள்ள பின்னடைவுகள்: ஆரம்பகால ஜப்பானிய அசைவூட்ட படம் கட்சுடோ ஷாஷின் (Katsudo Shashin) ஆகும். இது அறியப்படாத படைப்பாளரால் உருவாக்கப்பட்ட நாளிடப்படாத தயாரிப்பு ஆகும். அசைவூட்டப்படத் தயாரிப்பாளர்கள், ஓடன் ஷிமோகவாவும் (Öten Shimokawa), சைதரௌ கிடாயாமாவும் (Seitarou Kitayama) பல அசைவூட்டப் படைப்புகளைத் தயாரித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 1923ஆம் ஆண்ட்டின் மாபெரும் காந்தோ (Kantō) பூகம்பம் ஜப்பானின் உள்கட்டமைப்பில் பரவலான அழிவை ஏற்படுத்தியது. அதில் ஏற்பட்ட ஷிமோகாவா கிடங்கின் அழிவால் ஆரம்பகால அசைவூட்டப் படைப்புகளில் பெரும்பாலானவை அழித்தன. 1930 களில் அசைவூட்டப் படத்துறை ஜப்பானில் நேரடி-தொழிற்துறைக்கு ஒரு மாற்று வடிவமாக உருவெடுத்தது. இத்துறை பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் வரவாலும், பல அசைவூட்டப்படதயாரிப்பாளர்களின் போட்டியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோபுரோ ஓபூஜியும் (Noburō Ōfuji), யாசுஜி முரடாவும் (Yasuji Murata), செல் (cel) அசைவூட்டத்தை விட வெட்டுருக்களின் உதவியுடன் இயக்கப்படும் தொடரறுகருவி (cut out) எனும் மலிவான அசைவூட்டத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதிக அளவு அசைவூட்டத் தயாரிப்புகளை மேற்கொண்டனர். மற்ற படைப்பாளிகள், கென்சோ மசோகாவும் (Kenzō Masaoka), மிட்சுயோ ஸியோவும் (Mitsuyo Seo), அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் இராட்சத அடி எடுத்து வைத்தனர். அரசாங்கம் இவர்களை கல்விக் குறும்படங்களையும், கல்விசார் பிரச்சாரப் படங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியது. இவர்கள் அரசாங்கம் அளித்த உத்தரவினாலும், ஆதரவினாலும் பெருமளவில் பயனடைந்தனர். 1933இல் மசோகா ஜப்பானின் முதல் அசைவூட்டப் பேசும்படம், சிகாரா தோ ஒன்னா யோ நோ நாகாவைத் (Chikara to Onna no Yo no Naka) தயாரித்து வெளியிட்டார். 1940 வாக்கில், ஷின் மகாஹா ஷுடன் (Shin Mangaha Shudan) மற்றும் ஷின் நிப்பான் மாங்ககா (Shin Nippon Mangaka) உட்பட பல அசைவூட்டப்படக் கலைஞர்களின் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. 1944 ஆம் ஆண்டில், முதல் முழுநீள அசைவூட்டத் திரைப்படம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர், "மமோடரோவின் ("Momotaro") தெய்வீக கடல் போர் வீரர்கள்." இப்படமானது பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் கடற்படையின் ஆதரிப்பு விளம்பரப் பொருள் ஆதரவுடன் சீயோவால் (Seo) இயக்கப்பட்டது. இப்படம் அதிக அளவு வசூல் சாதனை செய்தது. 1937 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி (Walt Disney) கம்பெனியால் வெளியிடப்பட்ட "வெண்பனியும் ஏழு குள்ளர்களும் ("Snow White and the Seven Dwarfs")" என்ற திரைப்படம் பெருத்த வெற்றி பெற்றது. இவ்வெற்றி பல ஜப்பானிய அசைவூட்டப் படத்தயாரிப்பாளர்களிடையே செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960 களில், மங்கா கலைஞரும், அசைவூட்டப் பணியாளருமான ஒஸாமு தேஸுகா (Osamu Tezuka) டிஸ்னியின் அசைவூட்ட நுட்பங்களைத் தழுவி புதிய நுட்பத்தை ஏற்படுத்தினார். இதனால் நொடிக்கு இருபத்திநான்கு சட்டகம் என கேமரா பதிவு செய்யும் நிலைத்த பட சட்டகங்களின் எண்ணிக்கையும், செலவுகளும் குறைவடைந்தன. தயாரிப்பு செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த பல அசைவூட்டப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். குறைவான கால எல்லைக்குள் சிக்கனமான பொருள் செலவில் அசைவூட்டப் படங்களைத் தயாரிக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று அவர் எண்ணினார். "மூன்று கதைகள்" எனும் முதல் அசைவூட்டத் திரைப்படம், 1960 இல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. "உடனடி வரலாறு" எனும் ப்பொருளில் "ஓட்டோகி மங்கா நாட்காட்டி ("Otogi Manga Calendar")" எனும் முதல் அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடர், 1961 முதல் 1964 வரை ஒளிபரப்பப்பட்டது. ஒஸாமு தேஸுகாவின் அசைவூட்டக் கலை வெளிப்பாடுகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இவர் "அசைவூட்டத் திரைப்படங்களின் வரலாற்று சாதனையாளர்" என்றும், "அசைவூட்டத் திரைப்படங்களின் அறிவுத் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார். கேளிக்கைப் பூங்கா கேளிக்கைப் பூங்கா என்பது பெரும் தொகை மக்களை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு சவாரிகளையும், பொழுதுபோக்குக்களையும் கொண்ட ஒரு இடம் ஆகும். சிறுவர்கள், இளையோர்களை சிறப்பாக கவரும் வண்ணம் இந்த பூங்காக்கள் அமைகிறன. பொதுவான நகர பூங்காக்களில் இருந்து இவை பெரிதும் மாறுபட்டவை. இங்கு செல்வதற்கு கட்டணம் அறவிடப்படுகிறது. துரித உணவு துரித உணவு என்றால் என்ன? புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது தேசிய சத்துணவுக் கழகம். துரித உணவு அறிமுகம் ஏன்? துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன என்று உல்லா உசிதாலோ, பிர்ஜோபையட்நென் மற்றும் பெக்கா புஸ்கா போன்ற ரஸ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பேகர், பிசா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமானோர் குண்டர்களாக சத்தற்ற நோயாளிகளாக நீரழிவு நோய் நிபுணர் மருத்துவ மனைகளில் வரிசையில் காத்துக்கிடப்பர். அதிகமான முதலீடு உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மையுமே என்று கூறி அதற்குத் தகுந்தாற்போன்று உணவு முறையையும் உடற்பயிற்சியையும் முன்வைக்கிறது. உலகம் முழுவதும் துரித உணவு பரவி வருகிறது. இத்தகைய துரித உணவு உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்வதற்கே உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1988 லிருந்து 1997 வரை ஆசிய நாடுகளில் இத்தகைய உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டொலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது. அதேபோல் லத்தின் அமெரிக்காவில் இடப்பட்ட அமெரிக்க மூலதனமானது 222 மில்லியன் டொலர்களிலிருந்து 3.3 பில்லியன் டொலர் வரை அதிகரித்திரிக்கிறது. இது விவசாயத்தில் அமெரிக்கா இடும் மூலதனத்தை விட அதிகமாகும். ஆக இவற்றிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது. உலக அளவில் உணவு உற்பத்தி சத்தற்ற ஊளைச் சதையர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது.மக்கள் உண்மையான சத்தைப் பெற ஏகாதிபத்திய நாடுகளும்ஃ நிறுவனங்களும் விரும்பவில்லை என்பது தெளிவு. ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள், பழங்கள் உண்பது இளைய தலைமுறையிடம் குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டின் எதிர்காலத் தூண்கள் நோய்ஞ்சான்களாகவும் ஊளைச் சதையர்களாகவும் மாறிவருகின்றனர். மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறம், பட்டினியால் பரிதவிக்கும் நோய்ஞ்சான்களாகவும் இன்னொருபுறம் வேண்டாத ஊளைச் சதையுடனும் அளவற்ற நீரழவு நோய் போன்ற தொற்று நோய் அல்லாத நோய்களுடன் மக்களை உருவாக்குகின்றன. இச்சதியை நாம் எப்போது புரிந்துகொண்டு விடுபடப் போகிறோம். உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் ஃ பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும். உலகமயமாக்கல் கொள்கைகள் பெற்றெடுத்த குழந்தையே துரித உணவு. உலகம் முழுவதும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டுக் கம்பனிகளும் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் MSG(Mono Sadium Glautamate ) என்னும் இரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீசா, பர்கர், பிறைட்றைஸ் ,நூடில்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகின்றது. MSG இன் வாசனை மூளையின் ஹைபோதலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோ தலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ணவேண்டுமென்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களை சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா,பீசா,குல்சா,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் அஜினோமோற்றோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஏற்படும் தீமைகள் 1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2. ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் குறைவு எனப் பல பிரச்சினைகள் ஏற்படும். 3.தலைவலி, மனச்சோர்வு,உடற்சோர்வு, உடல் எடைஅதிகரிப்பு உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும். 4. விபரீதங்கள்,உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி,மூட்டுவலி நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். 5.இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கு அதில் முக்கிய இடம் உண்டு.பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு. துரித உணவு அல்லது வேக உணவு என்பது விரைவாக சமைத்து வழக்ககூடிய உணவைக் குறிக்கிறது. மேற்குநாடுகளில் மக்டொனால்ட்ஸ், கெண்டக்கி ஃபிறைட் சிக்கின் போன்ற உணவகங்களில் விரைவாக வழங்கப்படும் உணவுகளைக் குறிக்கிறது. சாலையோரத்தில் விறகப்படும் உணவுகளையும் இது குறிக்கிறது. பி. ஜெ. ஓரூக் பற்றிக் யேக் ஓரூக் ("P. J. O'Rourke", பிறப்பு: நவம்பர் 14, 1947, ஐக்கிய அமெரிக்கா) ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியாளர். இவர் 15 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் தாராண்மியவாதக் கொள்கைகளைக்க்கு சார்பானவர். எலினோர் ஒசுட்ரொம் எலினோர் ஒசுட்ரொம் ("Elinor Ostrom", பிறப்பு: ஆகஸ்ட் 7, 1933) என்பவர் அமெரிக்க அரசியல் அறிவியலாளர். இவர் 2009 ஆம் ஆண்டுக்கான அமெரிக்கரான ஒலிவர் வில்லியம்சன் என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, இவருக்கு இந்த பரிசை வழங்கப்பட்டது. பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார். சம இரவு நாள் சம இரவு நாள்("Equinox") என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. "ஈக்வீ"("equi") எனபது "சமம்" என்றும் "நாக்சு"("nox") என்பது "இரவு" என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும். நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது. புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன. பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பு: குளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும் ஒலிவர் வில்லியம்சன் ஒலிவர் ஈட்டன் வில்லியம்சன் ("Oliver Eaton Williamson", பிறப்பு: செப்டம்பர் 27, 1932) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பொருளியலாளர், பேராசிரியர். 2009 ஆம் ஆண்டில் இவருக்கு மற்றொரு அமெரிக்கரான எலினோர் ஒசுட்ரொம் என்பவருடன் சேர்த்து வழங்கப்பட்டது. சந்தைச் செயற்பாடுகளான மூலப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி போன்றவை, ஒற்றை நிறுவனத்தின் உள்ளே மேற்கொள்ளப்படுகின்ற போது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைகின்றன என்பதை ஆய்வு செய்ததற்காக வில்லியம்சனுக்கு பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வில்லியம்சன் தனது பட்டப்படிப்பை முகாமைத்துவத் துறையில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் 1955இல் பெற்றார். முதுகலாஇமாணிப் பட்டத்தை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1960 இலும், முனைவர் பட்டத்தை 1963 இல் கார்னெஜி மெலன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1965 முதல் 1983 சரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் 1988 முதல் பேராசிரியராகப் பணியாற்றி, தற்போது ஹாஸ் வர்த்தகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கதிர்த்திருப்பம் கதிர்த்திருப்பம் ("Solstice") என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள் புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை சோல்சுடைசு (சோல் - கதிரவன்,சிசுடைர் - நிற்றல்) என குறிக்கின்றனர். சூன் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை "வேனில் கால கதிர்த்திருப்பம்" எனப்படுகிறது. அன்று பகல்பொழுது மிக கூடுதலாக இருக்கும். சூன் 21 அன்று இது நிகழ்கிறது. திசம்பர் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை "குளிர்கால கதிர்த்திருப்பம்" எனப்படுகிறது. அன்றைய தினம் பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கும். திசம்பர் 21 அன்று இது நிகழ்கிறது. உலகின் பல பாகங்களிலும் இந்நாட்கள் விழாக்களாகவும் விடுமுறை நாட்களாகவும் கொண்டாடப்படுகின்றன. கிருத்துவ சமயத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் குளிர்கால கதிர்த்திருப்பத்திற்கு மூன்று நாட்களில் உள்ளதைக் காண்க. இந்து தொன்மவியலில் தை மாதம் துவங்கும் நாளாக இது கருதப்படுகிறது; தட்சிணாயன சங்கிராந்தி, பொங்கல் விழா என கொண்டாடப்படுகிறது. வேனிற்கால கதிர்த்திருப்பம் ஆடி மாதம் துவங்கும் நாளாக கருதப்படுகிறது; உத்தராயண சங்கிராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. பகீரா கிப்லிங்கி பகீரா கிப்லிங்கி ("Bagheera kiplingi") என்பது மெக்சிக்கோ, கொஸ்டா ரிக்கா, குவாத்தமாலா உட்பட நடு அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை பாயும் சிலந்தி ("jumping spider") வகை ஆகும். இச்சிலந்திகளின் உணவு வகை ஏனைய சிலந்திகளின் உணவு வகைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன. பொதுவாக சிலந்திகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். இவை மட்டுமே தாவர உணவுகளை உண்ணும் சிலந்திகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6 மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது. இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2009 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன. அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. தூக்கமின்மை தூக்கமின்மை ("Insomnia", இன்சோம்னியா) என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோய்அறிகுறி, தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகின்ற கோளாறுகளினால் ஏற்படும் நோய் அறிகுறியாகும். உறக்கமின்மையை ஒரு நோயாக நம்மால் கருத முடியாது. அதனை அறிகுறிகள் மூலம் ஆய்ந்து உணர்தலும் கடினமாகும். தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை நீட்டிப்பதிலும் இடையூறுகள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று நாம் விவரிக்கலாம். இது தேவையான நேரம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் ஏற்படுகின்றது. இதன் விளைவு விழித்து இருக்கும் நேரங்களில் நம்மால் சரிவர செயல்பட முடிவதில்லை. வேறு எந்த காரணமும் இல்லாமல் ஏற்படுகின்ற தூக்கமின்மை (கரிமங்களுடன் அல்லது கரிமங்கள் அல்லாமல்) என்கின்ற உறக்க நோய் பிரைமரி இன்சோம்னியா (முதல் நிலை தூக்கமின்மை) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறை 2007 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 64 மில்லியன் அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தது. தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் 41% அதிகம் காணப்படுகின்றது. தூக்கமின்மையின் அளவுகோல்கள் வேறுபட்டு இருந்தாலும், அது தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, நிலையற்ற (transient), தீவிரமான (acute), மற்றும் நாட்பட்ட/ நீடித்த (chronic) தூக்கமின்மை என மூன்று வகைப்படும். இவற்றை முறையே எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்று கடுமையான/ தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறலாம். தூக்கமின்மையின் பாங்குகள் அதன் நோய் முதலியவைச் சார்ந்தே வருகிறது. தூக்கமின்மை மூன்றில் ஒரு நபருக்கு ஏற்படுகிறது. தூக்கமின்மை கீழ் வருவனவற்றால் ஏற்படக்கூடும்: பாலிசோம்னோகிராபியை கொண்டு மேற்கொள்ளும் உறக்கத்தைப் பற்றிய ஆய்வுகள், இரவில் தூக்கமின்மையால் அவதிப்படும் மக்களிடத்தில் கார்டிசோல் மற்றும் அட்ரினோகார்டிகோடிராபிக் இயக்கு நீர் அளவுகள் அதிகரித்து காணப்படுகின்றன என்று கூறுகின்றன. தூக்கமின்மையால் பாதிக்கப் படாதவர்கள் ஆனால் ஆழ்ந்த தூக்கமில்லாதவர்களை விட இவர்களுக்கு வளர்திசை வினை மாற்றங்கள் அதிகமாகவே நடைபெறுகின்றது. பாசிடிரோன் எமிஷன் டோமோகிராப்பி (PET) அலகிடுகள் கொண்டு மூளை வளர்திசை வினைமாற்றங்களை அறியும் படிப்பு, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர் பகல் மற்றும் இரவுகளில் வளர்திசைமாற்றங்களை அதிக அளவில் உணர்கின்றனர் என்று கூறுகின்றது. இதில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த மாற்றங்கள் தூக்கமின்மையின் விளைவால் ஏற்படுகிறதா? அல்லது இவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறதா? என்பதுதான். மிகவும் நேசித்த ஒருவரின் திடீர் மரணத்திற்கு பின்னர், அது பல ஆண்டு காலங்கள் கழித்தும் இருந்தாலும் கூட, ஒருவர் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டால் அந்த பளுவினால் ஏற்படும் தூக்கமின்மை சில சமயங்களில் நெடும் காலத்திற்கு பாதிக்கின்றது. தூக்கமின்மையின் தாக்க அளவும், அதன் விளைவுகளும் ஒவ்வொரு மனிதருக்கு ஏற்றவாறு மாறுகிறது. இது அவர்களின் மன நலம், உடல் நிலை, மனப் பாங்கு மற்றும் மனோபாவத்தைப் பொறுத்தே அமைகிறது. மனிதனுக்கு வயது ஏற ஏற அவன் தூங்க வேண்டிய நேரம் குறையலாம் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவன் நீண்ட நேரம் தூங்குகின்ற திறனை வயது ஏற ஏற இழக்கிறான். அது அவனுக்கு நீண்ட நேரம் தூக்கம் தேவையா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது இல்லை. சில வயது முதிர்ந்த தூக்கமற்றவர்கள் இரவு முழுவதும் தங்கள் படுக்கையில் புரண்டு புரண்டு படுகின்றனர். சில சமயங்களில் படுக்கையில் இருந்து கீழேயும் விழுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தூக்கமும் குறைகின்றது. தேசிய உறக்க நிறுவனம் 2002 ஆம் ஆண்டு நடத்திய, "ஸ்லீப் இன் அமெரிக்கா" என்ற கணக்கெடுப்பில், 58% பெரியவர்களிடம் தூக்கமின்மையின் அறிகுறிகள் ஒரு சில இரவுகளிலிருந்து ஒரு வாரம் வரை நீடித்திருந்தது தெரிய வந்துள்ளது. வயது முதிர்ந்த பெரியவர்களிடம் (48%), இன்சோம்னியா ஒன்றில் பாதி அளவாகக் காணப்படுகிறது. ஆனால் இவர்கள், தங்களை விட வயது குறைந்தவர் எதிர்கொள்ளும் தூக்கமின்மையின் தீவிரத்தைவிட குறைவான அளவைத் தான் எதிர்கொள்கிறார்கள் (45% vs. 62%). 2003 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு, 55 முதல் 84 வயது வரை உள்ளவர்களுக்கு தூக்கமின்மை வருவதற்கான காரணம் மருத்துவம் சார்ந்தே இருக்கிறது என்று புலப்படுத்தியுள்ளது. தூக்கம் சார்ந்த மருந்துகளின் நிபுணர்கள் பல்வேறு விதமான தூக்க ஒழுங்கின்மைகளின் காரணங்களை அறியும் தகுதிபெற்றவர்கள். சில சமயங்களில் "டிலெய்ட் ஸ்லீப் பேஸ் சின்ட்றோம்" (தாமதமான தூக்க ஒழுங்கின்மை அறிகுறிகள்) உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்படும் நோயாளிகள் தூக்கமின்மை நோயால் அவதிப்படுகின்றனர் என்று தவறாக கணிக்கப்படுகிறார்கள் ] ஒருவன் தூங்குவதற்கு மட்டும் சிரமப்பட்டு கொண்டு, ஆனால் தூங்க ஆரம்பித்தவுடன் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ளும் போது, சிர்காடியன் இசைவு ஒழுங்கின்மை தான் அதற்கு காரணம் என அறியப்படுகிறது. 1.1 மில்லியன் அமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில், இரவுநேரங்களில் ஏழு மணி நேரம் உறங்குபவரின் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது; ஆனால் 6 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ உறங்குபவரின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது. எட்டரை மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உறங்குபவரின் இறப்பு விகிதம் 15% அதிகரித்துள்ளது. கடுமையான தூக்கமின்மை - பெண்களிடத்தில் மூன்றரை மணிநேரத்திற்கும் குறைவாகவும், ஆண்களிடத்தில் நான்கரை மணி நேரத்திற்கும் குறைவாகவும் தூக்கம் காணப்படுபவர்களின் இறப்பு விகிதமும் 15% ஆக இருக்கிறது. கோமோர்பிட் ஒழுங்கின்மைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் ஓரளவிற்கு தூக்கமின்மையால் உண்டாகும் இறப்பு விகிதத்தைக் குறைக்கமுடிந்துள்ளது. உறக்க நேரத்தையும் தூக்கமின்மையையும் கட்டுப்படுத்தும் தூக்க மாத்திரைகளின் உபயோகமும் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். நான்கரை மணி நேரம் தூங்குவது கூட இறப்பு விகிதத்தை மெல்லிய அளவில் அதிகப்படுத்துகிறது. இதனால் முதல் வகை முதல் மத்திய வகை வரையான தூக்கமின்மை ஒருவரின் ஆயுளை அதிகப்படுத்தலாம் என்றும், கடுமையான தூக்கமின்மை வகை இறப்பு விகிதத்தை குறைவாகவே பாதிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நோயாளி உட்கொள்ளும் தூக்க மாத்திரையின் அளவு காலத்தைப் பொறுத்து அவனது இறப்பு உள்ளது. தூக்கமின்மையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கையில் சில சமயங்களில் அவனது ஆயுட் காலம் நீடிக்கவும் செய்கிறது. தூக்கமின்மையின் விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பினும் அது தரும் சற்று நீடித்த ஆயுட் காலம் என்பது அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஒரு சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழரை மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களிடம் இறப்பு விகிதம் ஏன் அதிகரிக்கிறது என்பது புலப்படாத ஒன்றாகும். தூக்கத்தின் போது சுவாசக்கோளாறுகளும் மருந்துகளால் குணமடையும் சோர்வும் குறைபாடுடைய உறக்க தரத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு மனிதன் நான்காவது கட்டம் அல்லது டெல்டா ஸ்லீப் என்ற கட்டத்தை அடையாத பொழுதில் இந்த தர குறைபாடு ஏற்படுகிறது. இதில் அவன் பழைய நிலையை அடைய வேண்டிய தன்மைகள் கிடைக்காமல் போகிறது. இந்த நான்காம் கட்டத்தை சாதாரண வாழ்கை வாழ்பவர் தங்கள் மூளையில் கோளாறுகள் ஏற்படுவதன் மூலம் அடைய முடியாமல் போகிறது. தூங்கும் மனிதனின் சுவாசத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை ஸ்லீப் அப்னியா ("sleep apnea") என்று அழைப்பர். இது நல்ல உறக்கத்தை கெடுக்கிறது. இந்த நிலையில் தூங்குபவரின் சுவாசக் குழாயிலுள்ள தசைகள் செயல் திறன் இழந்து சமயங்களில் பகுதி அளவு உரு குலைகின்றது. இடையூறுடைய ஸ்லீப் அப்னியா கொண்டுள்ளவர்கள் தூங்கும் போது விழிப்பதையோ அல்லது சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதையோ தங்கள் நினைவில் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் நாள் முழுவதும் மந்தமான நிலையில் தான் இருப்பார்கள். மத்திய ஸ்லீப் அப்னியா, மத்திய நரம்பு மண்டலத்தில் நடைபெறும் சுவாச போக்குவரத்தை பாதிக்கிறது. இதனால் தூங்குபவன் தூக்கதிலிருந்து எழுந்து தனது சுவாசத்தை மீண்டும் சரியாக சுவாசித்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்று இருக்கக் கூடிய அப்னீ பெருமூளை இரத்த நாளங்கள் நிலை, இதய செயலிழப்பு மற்றும் முன்னதாகவே முதிர்ச்சியடையும் நிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. கடுமையான சோர்வு "ஹைபோதலமிக்-பிட்யூட்டரி-அட்ரினல் ஆக்சிஸ்" செயலாக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறது. இதனால் அதிக அளவில் கார்டிசோல் சுரக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் கெட்டுப்போகிறது. இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிப்பது தூக்ககத்தை கலைக்கிறது. இதனை நாக்டர்னால் பாலியூரியா என்று அழைப்பர். தூக்கமின்மை பல சமயங்களில் மற்ற நோய்களினால் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளால் அல்லது மனவுளைச்சல் காரணமாக ஏற்படுகின்றது. தூக்கமின்மைக்கு சிகிச்சை தரும் முன்னர் மருந்துகளால் அல்லது மன உளைச்சலால் அது ஏற்படுகிறதா என்று முதலில் கண்டறிய வேண்டும். உறக்கம் தரக்கூடிய சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுவே மருந்துகள் தருவதற்கு முன்னர் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கையாகும். தூக்கமின்மைக்கான உறக்க ஊக்கிகளை விட பலமடங்குகள் மேலானவை மருந்துகள் இல்லாமல் கையாளும் நடவடிக்கைகள். ஏனெனில் தூக்கமின்மை உடையவர்கள் உறக்க ஊக்கி மருந்துகளை நோயினை பொறுத்து ஏற்று கொள்வதுடன் நோயாளிகள் அவற்றை சார்ந்து வாழ ஆரம்பித்து விடுகின்றனர். மருந்துகளை தொடராமல் போகும் நிலையில் மீளுயர்வு நிறுத்த விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே தூக்க ஊக்கிகளின் உபயோகம் குறைந்த காலத்திற்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. மருந்துகள் இல்லாத நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற விளைவுகள் பல காலத்திற்கு நிலைத்த முன்னேற்றத்தைத் தருகின்றன. தூக்கமின்மையைக் கட்டுப்படுத்தவும் அதனை குணமாக்கவும் முதல் கட்ட மற்றும் நீடித்த நடவடிக்கையாக பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளாவன உறக்க சூழ்நிலைகளை சார்ந்து வருகின்றன. அவை, தூண்டுணர்வுகளை கட்டுப்படுத்துதல், நடவடிக்கையில் தலையிடுதல், தூக்கத்தை வரையறைப்படுத்தும் சிகிச்சை, நோயைப் பற்றி நோயாளிகளுக்கு போதிப்பது மற்றும் ஓய்வுறும் சிகிச்சை ஆகியன ஆகும். தற்காலத்தில் நடத்திய ஆய்வுகள் தூக்க ஊக்கிகளை விட தூக்கமின்மையைக் கட்டுப்படுத்துவதில் "நினைவுற்ற நிலையில் நடத்தை சிகிச்சை" ("cognitive behaviour therapy") ஆற்றல் கொண்டுள்ளது என்று கண்டு பிடித்துள்ளது. இந்தச் சிகிச்சையில் நோயாளிகள் தூங்குவதற்கு உதவும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். தூக்கத்தைப் பற்றிய தவறான கருத்துகளையும் இந்த சிகிச்சை நீக்குகின்றது. தூக்க ஊக்கிகள் சிறிது காலத்திற்கு மட்டும் தான் தூக்கமின்மையை போக்குவதில் செயல்திறன் கொண்டுள்ளன. நாட்கள் செல்ல செல்ல மருந்துகளை ஏற்றுக்கொண்டு தூக்கமின்மை நிலைத்திருக்க ஆரம்பித்துவிடுகிறது. அறிந்து நடந்து கொள்ளும் சிகிச்சை வழி செயல்பட்டால் தூக்கமின்மையை எளிதாக குணமாக்குவதுடன் மட்டுமல்லாமல் அதனை முழுமையாகவும் நீக்க முடிகிறது. CBT உடன் தூக்க ஊக்கிகளையும் கூடுதலாக சேர்த்துக்கொள்வது தூக்கமின்மையை போக்குவதில் எந்த பயனும் அளிப்பதில்லை. இந்த CBT முறை மருந்துகள், தூக்க ஊக்கிகளை விட நெடுநாள் பயன் தரக்கூடிய ஆற்றல் கொண்டது. குறைந்த காலஅளவே பயன்படுத்தப்படும் சொல்பிடம் (ஆம்பியன்) போன்ற தூக்க ஊக்கிகளோடு ஒப்பிடுகையில், அதே கால அளவில் பயன்படுத்தப்படும் CBT செயல்திறனுடன் ஆற்றல் புரிகின்றது.. ஆகவே முதல் வழி சிகிச்சையாக CBT பரிந்துரை செய்யப்படுகிறது. தூக்கமற்ற பலர் தூக்க மாத்திரைகளையும் மற்ற தூக்க மருந்துகளையும் சார்ந்து வாழ்கின்றனர். எல்லா தூக்க மருந்துகளும் மனதை அடிமையாக்கும் சக்தி கொண்டவை. இதன் மூலம் ஒருசில காலத்திற்கு பின்னர் நோயாளிகள் தங்களால் மருந்துகளில்லாமல் தூங்க முடியும் என்பதை நம்ப மறுக்கின்றனர். "பென்சோடையசெபின்"கள் மற்றும் "நான்பென்சோடயசெபின்" போன்ற நோய் தணிக்கும் மருந்துகள் ஒரு தர தூக்க ஊக்கிகள் போல இருந்து உடலை அடிமையாக்குகின்றன. மருந்துகளை சரியாக தரம் பிரிக்கவில்லை என்றால், மருந்துக்கு அடிபணியும் உடலை மீட்கவே முடியாது. பென்சோடையசெபின், நான்பென்சோடையசெபின் போன்ற தூக்க ஊக்கி மருந்துகள் பல பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. அவை, பகல் முழுவதிலும் சோர்வு, சாலை விபத்துகள், சுயநினைவில்லாமல் செயலாற்றுதல், கீழே விழுதல் அதனால் எலும்பு முறிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். வயது முதிர்ந்தவர்கள் இந்த பக்க விளைவுகளால் உடனே பாதிக்கப்படுகின்றனர். ஒரு முறையான கண்ணோட்டத்தில் ஒப்பிட்டுப்பார்க்கையில், பென்சோடையசெபின்கள் மற்றும் நான்பென்சோடையசெபின்கள் ஒரே மாதிரி செயல்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றமின்றி தமக்குரிய பலனை சோர்வுநீக்கி மாத்திரைகளைப் போலவே தருகின்றன. பென்சோடையசெபின்கள் பாதிப்பூட்டும் பக்கவிளைவுகளைப் குறிப்பிடும்படி உண்டாக்குவதில்லை. நெடுங்காலமாக தூக்கமின்மைக்கு தூக்க ஊக்கிகளை உட்கொள்பவர்கள் நெடுங்காலமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளாதவர்களை விட நன்றாக தூங்குவதில்லை. சொல்லப்போனால், தூக்க ஊக்கி மருந்துகளை நெடுங்காலமாக உட்கொள்ளுபவர்கள் இரவுகளில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு தூக்க ஊக்கி மருந்துகளை உட்கொள்ளாதவர்களை விட அதிகமாகவே விழித்திருக்க நேரிடுகிறது. மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பென்சோடையசெபின் தூக்க ஊக்கிகள் மற்றும் நான்பென்சோடையசெபின்கள் தனிமனிதனுக்கு அபாயங்கள் பலவற்றை விளைவிப்பதுடன் பொது ஆரோக்கியத்திற்கும் தீமைகள் பல விளைவிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊக்கிகள் நீண்ட காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் செயல் திறன்களை காட்டுவதில்லை. மருந்துகளுக்கு அடிமையாதல், விபத்துகள் மற்றும் பல அபாயகரமான பக்க விளைவுகளை இந்த தூக்க ஊக்கிகள் உண்டாக்குகின்றன. இந்த தூக்க ஊக்கிகளை காலப்போக்கில் மெதுவாக நிறுத்துவதன் மூலம் நல்ல உடல் நிலை பெறுவதுடன் நல்ல தரமான தூக்கமும் கிடைக்க வழி செய்கிறது. இந்த தூக்க ஊக்கிகள் சில நாள்கள் மட்டும் குறைந்த அளவே பரிந்துரைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்தக் கால அளவிலேயே அது தனது ஆற்றலை சரிவர காட்டுவதாக இருக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த மருந்துகள் தவிர்ப்பது மிகவும் நல்லது. வழக்கமாக தூக்கமின்மைக்கு பரிந்துரைக்கும் தூக்க ஊக்கி வகை பென்சோடையசெபின் ஆகும். பென்சோடையசெபின்கள் குறிப்பற்ற GABAA ஏற்பிகளை தேர்ந்தெடுத்து தங்களை இணைக்கின்றன. அவை டேமாசெபம், பிலூனிடிராசெபம், டிறையாசொலம், பிலூராசெபம், மிடாசொலம், நைற்றாசெபம் மற்றும் குவாசெபம் ஆகிய மருந்துகளை உள்ளடக்கியதாகும். சிறிது காலத்திற்கு பிறகு இம்மருந்துகள் சகிக்கும் திறன், உடல் அடிமைப்படுத்தல் மற்றும் மருந்தை தொடரா நிலையில், பென்சோடையசெபின் திரும்பப்பெறும் நோய் குறித்தொகுப்பை உண்டாக்குகின்றன. குறிப்பாக இவற்றை பயன்படுத்தும் காலம் நிறைவுற்ற பிறகும் கூட நெடுங்காலம் இதன் விளைவுகள் தொடர்கின்றன. சுயநினைவை இழக்கச் செய்யும் பென்சோடையசெபின்கள் லேசான தூக்கத்தை உண்டாக்குகின்றன. ஆழ்ந்த நிலையில் தூக்கம் கொள்ள இது வழிவகுப்பது இல்லை. இதனை REM தூக்கம் என்று அழைப்பர். குறைந்த காலத்திற்கு தனது திறனை காட்டும் தூக்க ஊக்கிகளை தொடர்ச்சியாக உபயோகிப்பது மற்றொரு சிக்கல் ஆகும். இதனால் காலை நேரத்தில் மீளுயர்வு ஏக்கம் உண்டாக நேரிடுகிறது. [[சொல்பிடேம், சலேபிலோன், சொபிகிலோன், ஈஸ்சொபிகலோன் போன்ற பென்சோடையசெபினற்ற தூக்க ஊக்கி மருந்துகள் புதிய வகை மருந்துகளாகும். பென்சோடையசெபின்களற்றவை பென்சோடையசெபின்கள் போல பென்சோடையசெபின் ஆற்றல் காட்டும் GABA ஏற்பிகள் மீது தங்கள் திறனைக் காட்டுகின்றன. ஆனால் இந்த வேலைக்கு சில பென்சோடையசெபின்களற்றவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவை, GABA GABAA ஏற்பிகளின் ஒரு பகுதி மீது செயல் பட்டு தூக்கத்தை வரவழைக்க உதவுகின்றன. இதனால் இவை பென்சோடையசெபின்களை விட பக்க விளைவுகள் ஏற்படுத்தாத பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது. சொபிகிலோனும் ஈசொபிகிலோனும் பென்சோடையசெபின்கள் மருந்துகள் போலவே தங்களை α, α, α மற்றும் α GABA பென்சோடையசெபின்கள் ஏற்பிகளுடன் எந்த நோக்கமுமின்றி இணைத்துக் கொள்கின்றன. சொல்பிடேம் ஒருசிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க, சலேபிலோன் மிகக்குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் α தன் பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கின்றன. இதனால் [[உறங்கும் அமைப்பு|தூங்கக்கூடிய சூழலை]] இவை பென்சோடையசெபின்களை விட அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இம்முறையில் பக்க விளைவுகளும் குறைந்தே இருக்கின்றன. இவற்றிடையே இத்தகைய மாறுபாடுகள் இருந்தாலும் கூட பென்சோடையசெபின் பெரியதா அல்லது பென்சோடையசெபினற்றவை பெரியதா என்ற விவாதம் எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த மருந்துகள் மனதை தன் பால் ஈர்த்து சார்ந்திருக்க வைப்பதுடன் உடலையும் தன் வசப்படுத்துகிறது. பென்சோடையசெபின்களை விட இவற்றின் வீரியம் மற்றும் பக்க விளைவுகள் குறைந்து இருந்தாலும் இவை நினைவாற்றலை குறைத்து அறிந்து செயல்படும் திறனையும் குறைத்து, காலை நேரங்களில் தூக்க கலக்கத்துடன் செயல்படவைக்கின்றன. அமிடிரிப்டைளின், டாக்சபின், மிர்டாசபின் மற்றும் டிராசொடோன் போன்ற உளச்சோர்வு போக்கிகள் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கின்றன. அதனால் இவை தூக்கமின்மைக்கு சிகிச்சை செய்ய உரிய மருந்தாக இல்லாவிட்டாலும் இதனை மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மருந்துகளில், ஆண்டி ஹிச்டமிநேர்ஜிக், ஆண்டிகொலிநெர்ஜிக் மற்றும் ஆண்டி அட்ரிநேர்ஜிக் பண்புகள் கொண்ட பொருட்கள் இருப்பதால் பக்க விளைவுகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. சில மருந்துகள் தூக்க பழக்க வழக்கங்களையே மாற்றுகின்றன. பென்சோடையசெபின்கள் போலவே, சோர்வு போக்கிகளும் உடலைத் தன்னைச் சார்ந்து இருக்கச் செய்கின்றன; இந்த மருந்தின் நிறுத்தம் மீளுயர்வு தூக்கமின்மையை உண்டாக்குகின்றது. நாளடைவில் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மிர்டாசபின் தாமத தூக்கத்தை குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகின்றது. சோர்வு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளின் தூங்குகின்ற கால அளவையும், தூங்கும் திறனையும் அதிகப்படுத்துகிறது. மெலடோனின் இயக்கு நீர் மற்றும் குறைநிரப்பிகள் சில வகை தூக்கமின்மை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மெலடோனின் தூக்கத்தை வரவழைக்கவும் தூங்கி விழிக்கின்ற சுழற் சக்கரத்தை சீர் செய்யவும் சொபிகிலோன் மருந்துக்கு நிகரானது ஆகும். மெலடோனின் குறிப்பிடும்படியான பயனாக இருப்பது தூக்க பாங்கினை மாற்றுகின்ற மற்ற மாத்திரைகள் போல் அல்லாமல், தூக்க பாங்கினை மாற்றாமல் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மற்றொரு பயன், இது ஒருவரது செயல் திறனை குறைப்பது இல்லை. ரேமல்டியான் (ரோஸ்ரேம்), டாசிமேல்டியான் போன்ற மெலடோனின் முதன்மை இயக்கிகள் ஒருவனை தன்னைச் சார்ந்தே இயங்குகின்ற அளவிற்கு கொண்டு வந்து விடுவதில்லை. இதன் பக்க விளைவுகள் மிகக் குறைந்தே காணப்படுகிறது. காலை நேர தூக்கக் கலக்கமும் பெரிய அளவில் இருப்பதில்லை. ஜெட் லேகினால் ஏற்படும் தூக்கமின்மையை குணப்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மற்ற காரணங்களால் ஏற்படும் தூக்கமின்மையை குணப்படுத்த இது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. 5-HTP, எல்-டிரிப்டோபான் போன்ற இயற்கை பொருட்கள் செரடோனின்- மெலடோனின் பாதையை பலப்படுத்துகிறது. இதனால் தூக்கமின்மை போன்ற பல தூக்க ஒழுங்கின்மைகளினால் அவதிப்படும் நோயாளிகள் பயனடைகிறார்கள். ஆண்டி ஹிச்டமின்கள் மற்றும் டைபென்ஹைட்ரமின் டைலிநோல் PM போன்ற பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை 50 மி.கி. அளவில் பயன்படுத்தலாம் என்று FDA கூறியுள்ளது. [[இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென் ஆபிரிக்கா]] மற்றும் பல நாடுகளில் இது 25 மி.கி. அளவே சேர்க்கப்படலாம். இது எளிதாக கிடைக்கக்கூடிய மருந்துகள் என்றாலும் இதன் ஆற்றல் நாளடைவில் குறையத்தான் செய்கிறது. இதன் விளைவால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும் நாளை காட்டிலும் இவற்றை உட்கொள்கையில் அதிகமான அடுத்த நாள் தூக்கக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வகை மருந்து நோயாளிகளை தங்கள் வசப்படுவதில்லை. பென்சோடயபின் தூக்க ஊக்கிகளின் மாற்றாக சிப்ரோஹெப்டடின் மருந்தை தூக்கமின்மை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். சிப்ரோஹெப்டடின் பென்சோடையபின்களை விட மேலானதாக இருப்பதால் தூக்கமின்மை நோய் சிகிச்சையில் சிப்ரோஹெப்டடின் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சிப்ரோஹெப்டடின் தூக்கத்தின் தரத்தையும் நேரத்தையும் அதிகப்படுத்துகிறது. கெட்டியாபின், ஒலேன்சாபின், ரிஸ்பெரிடன் போன்ற இயல்பற்ற மனக்குழப்ப நீக்கிகள் குறைந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டால், அவை தூக்கத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் அதே சமயம் அவை நரம்புகளுக்கும், சுய நினைவுடன் செயல்படும் திறனிற்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது தூக்கமின்மை நோய் சிகிச்சைக்கு ஒத்து வராத ஒரு மருந்தாகும். தூக்க ஊக்கியாக செயல் படும் ஆற்றலை ஒரு சில காலத்திற்கு பிறகு கெட்டியாபின் இழக்கிறது. தூக்கத்தின் அளவு கெட்டியாபின் உட்கொள்ளும் அளவை பொறுத்தே உள்ளது. அதிக அளவில் (300 மி.கி. - 900 மி.கி.) மன குழப்ப நீக்கிகள் மன குழப்பத்தை நீக்கவே உட்கொள்ளப்படுகின்றன. இதுவே குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் போது, (25 மி.கி. - 200 மி.கி.) அது தூக்கத்தை வரவழைக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி 300 மி.கி. உட்கொள்ளும் போது அவன் தனது மனக்குழப்பங்களில் இருந்து விடுதலை பெறுகிறான். அதே மருந்தை அவன் 100 மி.கி. உட்கொள்ளும் போது அவனுக்கு தூக்கம் வருகிறது. புலனாய்வு மருந்தாக பயன் தரும் எப்லிவான்சரின் மிகக் குறைவான பக்க விளைவுகளுடன் வரும் ஒரு மனக் குழப்ப நீக்கியாகும். சில தூக்கமற்றவர்கள் வலேரியன், கமொமில் (சாமந்தி), லாவெண்டர் (சுகந்தி), ஹாப்ஸ் மற்றும் பாஷன் பூக்கள் போன்ற [[மூலிகைகளை உபயோகிக்கின்றனர். வலேரியன், பல ஆய்வுகளுக்கு பிறகு தூக்கத்தை உண்டாக்குதற்கு ஓரளவு திறன் கொண்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கானபீக்களும் தூக்கமின்மையை போக்குவதில் திறம் வாய்ந்தனவையாகக் கருதப்படுகின்றன. பாலியூரியாவால் ஏற்படுகின்ற நள்ளிரவு விழிப்புகள் அல்லது மது உட்கொள்ளுதளின் மூலம் வருகின்ற தொக்கிய நிலை போன்ற மற்ற விளைவுகளும் காலையில் உற்சாகத்துடன் எழுந்திருப்பதற்குத் தடையாக இருக்கின்றன. [[மக்னீசியம்]] பற்றாக்குறை அல்லது குறைப்பாட்டினால் கூட தூக்கமின்மை விளைய நேரிடுகிறது. ஆனால் மக்னீசியம் தூக்கமின்மையை உண்டாக்கும் என்பதை இன்னும் நிச்சயமாக யாரும் குறிப்பிட்டு சொல்லவில்லை. போதுமான அளவு மக்னீசியம் உடலில் இல்லாத பொழுது நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றி மக்னீசியத்தை பெற்றால் தூக்கமின்மை நீங்கும். [[பகுப்பு:நோய்கள்]] [[de:Schlafsucht]] பாலூர், கடலூர் பாலூர் [ஆங்கிலம்: Palur] இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி வட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் 11.751669° N 79.625291° E ஆகும். கடலூர் - சங்கராபுரம் (மா.நெ- 68) ([SH-68) மாநில நெடுஞ்சாலையில் பண்ணுருட்டியிலுருந்து 10 கி.மீ தொலைவிலும், கடலூரி்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் பாலூர் கிராமம் உள்ளது. பாலுரிலிருந்து குறிஞ்சிபாடிக்கு முதன்மை மாவட்ட சாலை (ஆங்கிலம்: Major District Road) ஒன்று செல்கிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3949 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 47.3% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68.1%, பெண்களின் கல்வியறிவு 38.1% ஆகும். பாலூர் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ரா. கிருஷ்ணசாமி ரா. கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு (சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், முதல் சட்டமன்றத்திற்கு 1952 இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும், 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962 சட்டமன்றத் தேர்தலில், ராஜபாளையம் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பி. ராமசந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார். இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 1926இல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில், சேலம் பெ. வரதராஜுலு நாயுடு தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா. கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார். வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார். இவர் கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார். ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவிடம் "சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி பார்வையில் எளியராகி பண்பில் உயர்ந்தோராகி நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள்ராகி" -புலவர் விவேகானந்தன்- ரா.கி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பா "நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும் ஆணவமில்லா வேந்தே ! அயர்வில்லா தேசபக்தி. நீணெடுங்காலம் கொண்டோய் ! நீ எமை விட்டுச் சென்று நாணடந்தாலும் நாங்கள் நாளெல்லாம் நினைப்போம் உன்னை." பசவ பிரேமானந்த் பசவ பிரேமானந்த் ("Basava Premanand", பெப்ரவரி 17, 1930 - அக்டோபர் 4, 2009) உலகெங்கும் அறியப்பட்ட இந்திய கேரளத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் இறைமறுப்பாளரும் ஆவார். பிரேமானந்த் கேரளத்தின்கோழிக்கோட்டில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இறையியல் சமூகத்தின் உறுப்பினர்கள். 1940களில், பிரேமானந்த் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற பள்ளிப்படிப்பை விட்டார். அடுத்த ஏழு ஆண்டுகள் சாந்திநிகேதன் போன்ற கல்வியமைப்பையொத்த சிறீ ச்டீலா குருகுலத்தில் படித்தார். 1975 வாக்கில் இந்திய இறைமாந்தர் சத்திய சாயி பாபாவுடன் மோதி அவரது இறைத்தன்மையை பொய்மை என நிறுவுவதில் முழுநேரம் ஈடுபட்டார். அவர் தமது மந்திரவாத ஆற்றல்களை பயன்படுத்தி அத்தகைய இறைமாந்தரால் செய்துகாட்டுவதாகக் கூறப்படும் "விந்தைகளை" அறிவியல் வழியே செய்ய முடிவதைக் காட்டி விளக்கினார். "குரு உடைப்பாளர்கள் (Guru Busters)", என்ற பிரித்தானிய ஆவணப்படத்தில் பிரேமானந்த் மனித ஆற்றலுக்கு மீறியதாகக் கருதப்படும் உடலை அந்தரத்தில் மிதப்பது, உடலைத் துளைப்பது மற்றும் உயிருடன் புதைந்திருப்பது, விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற விந்தை செயல்களை செய்து காட்டியுள்ளார். 1982ஆம் ஆண்டில் மகாராட்டிர லோக் வித்யான் நடத்திய "விஞ்ஞான் யாத்ரா" (அறிவியலுக்கான நடை)யிலும் 1987ஆம் ஆண்டில் "பாரத் ஜன் விஞ்ஞான் ஜாதா"விலும் பங்கு கொண்டு பகுத்தறிவு பரவலுக்கு வழிவகுத்தார். எண்பதுகளிலிருந்து இருந்தது, இறந்தது எல்லாமே கோயம்புத்தூரில். "கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு" என பிரேமானந்த் விடுத்த அறைகூவல் அவரைப் போலவே வெல்லப்பட முடியாமல் இன்னமும் சவால் விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறது. சோரா சோரா ("Sohra", முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும். 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சோரா என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது சோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி (Khasi) மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது. சோராவின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீட்டர். சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது. யாழன் ஆதி யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். "சாம்பல்" என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். இலங்கை சட்டக் கல்லூரி இலங்கை சட்டக் கல்லூரி ("Sri Lanka Law College") 1874 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரி கொழும்பில் அல்ஸ்டோர்ப் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்துவத்துனைப் பெறுவதற்கு சட்டக்கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையில் சட்டமாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். # வேல்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (சுருக்கமாக யுசிஎஸ்டி அல்லது க ப சான் டியேகோ) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியேகோ நகரில் "லா ஹொயா" என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியேகோ 1960ஆம் ஆண்டு முன்பிருந்த ஸ்கிரிப்ஸ் கடலியல் கழகதின் அருகே நிறுவப்பட்ட,கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பத்து பொது வளாகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் கடலியல் உதவித்தொகை பெறும் மற்றும் வான்வெளியியல் உதவித்தொகை பெறும் ஆய்வு கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளம் ("Southern Hemisphere") என்பது நில நடுக்கோட்டின் தென்பகுதியில் உள்ள புவியின் அரைக்கோளமாகும். புவியின் தெற்கு அரைக்கோளத்தில் நான்கு கண்டங்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ,(அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவின் பகுதி, ஆப்பிரிக்காவின் பகுதி) நான்கு பெருங்கடல்கள் (தென் அட்லாண்டிக், இந்திய, தென் பசிபிக் மற்றும் தென்முனை), பெரும்பான்மையான ஓசியானியாஅடங்கியது. ஆசியா கண்டத்து பல தீவுகளும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளன. புவியின் ஓட்டப்பாதையின் சாய்வு காரணமாக வேனில் காலம் திசம்பர் 21 முதல் மார்ச் 21 வரையும் கூதிர் காலம் சூன் 21 முதல் செப்டம்பர் 21 வரையிலும் உணரப்படுகிறது.செப்டம்பர் 22 வேனிற்கால சம இரவு நாள் மற்றும் மார்ச் 21 கூதிர்கால சம இரவு நாள். கிழக்கு அரைக்கோளம் கிழக்கு அரைக்கோளம் ("Eastern Hemisphere") என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும். இந்நிலப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன. இதன் எதிரிடையான மேற்கு அரைக்கோளத்தில் இரு அமெரிக்காக்கள் உள்ளன. தவிர இப்பகுதி பண்பாடு மற்றும் அரசியல் புவியியலில் 'பழைய உலகம்' என அழைக்கப்படுகிறது. நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு,மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா ,ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது. இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளடங்குகிறது. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி சேர்க்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் நீக்கப்படுகின்றன. அண்டார்டிக்காவின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது கிழக்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது. மேற்கு அரைக்கோளம் மேற்கு அரைக்கோளம் ("Western Hemisphere"), என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும். இது குறிப்பாக அமெரிக்காக்கள் (அல்லது பதிய உலகம்) மற்றும் அவற்றை அடுத்துள்ள நீர்பரப்பினைக் குறிக்கும். இந்த அரைக்கோளத்தில் உள்ள ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா மற்றும் ஆசியா பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன.இக்காரணங்களால் சிலநேரங்களில் அமெரிக்க அரைக்கோளம் எனவும் குறிப்பிடப்படும். அரசியல்சார் புவியியலில் சிலநேரங்களில், அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட"மேற்கு அரைக்கோளம்" "மேற்கு உலகம்" எனவும் அறியப்படுகிறது. நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு, மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது. இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் நீக்கப்படுகின்றன. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி நீக்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் சேர்க்கப்படுகின்றன. அண்டார்டிக்காவின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. மேற்கு அரைக்கோளத்தில் உள்ளது மேற்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது. அரவிந்த் குப்தா அரவிந்து குமார் குப்தா (பிறப்பு:04 டிசம்பர் 1953) பொம்மை-உருவாக்குபவர், என்று அனைவராலும் அறியப்படும் எழுத்தாளர், பொறியாளர், அறிவியலாளர். இவர் துவக்கியுள்ள அரவிந்து குப்தா பொம்மைகள் (http://arvindguptatoys.com/) என்ற வலைத்தளம் பள்ளி அளவிலான அடிப்படை-அறிவியல் பரிசோதனைகளை எளிய, அதிக செலவில்லாத பொருள்களைக் கொண்டு செய்யும் முறைகளை செவ்வனே விளக்குகிறது. மேலும் இவர் உலகின் மிகச்சிறந்த கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும் மொழிபெயர்த்து இலவசமாக வெளியிடுகின்றார். 1970-ஆம் ஆண்டு கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பி.டெக். பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது பி.டெக். படிப்பு ஐந்தாண்டு காலப் படிப்பாக இருந்தது. பி.டெக். படித்துள்ள அரவிந்த், பூனாவிலுள்ள டெல்கோ நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தார். பின்னர் அங்கு ஒரு வருட படிப்பு-விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியேறிய அரவிந்த், லோரி பேக்கர், அனில் சடகோபால் ஆகியோருடன் வேலை செய்து விட்டு பின்னர் குழந்தைகளுடன் இயங்குவது, குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பது இவற்றையே தன் முழு-நேரத் தொழிலாக ஆக்கிக் கொண்டார். பீஷ்ம சாஹ்னி, பேகம் அக்தர், அனில் அகர்வால், அனில் சடகோபால், லவுரி பேக்கர், யேன் மிர்டில் ஆகியோர் தன் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரவிந்த் குப்தா கூறியுள்ளார். பூனாவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA) வருகை-புரியும் ஆசிரியராக, அறிவியல் பொம்மைகள் செய்யும் வேலையிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளார். தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் ("Indian Rivers Inter-link") என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும். இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவ் அவர்களின் சீறிய ஆய்வின் பேரில் முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாக்ப் பிரிக்கப்பட்டுள்ளன. இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது. இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளுடன் இணைப்பது. மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது. விவசாயத்தை நம்பி உள்ள இந்திய நாட்டில் நீர்ப்பாசனத்திற்கு பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையையே நம்பியுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. அதே காலத்தில் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழை பொழிந்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது. இப்படி வீணாகும் நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும், விவசாயத்திற்கான பாசன வசதியும் பெறமுடியும்.மற்றும் நீர் வழி போக்குவரத்து அதிகரிக்கும் ,மீன் பிடி தொழில் பெருகும்  தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இன்னும் எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் எற்படவில்லை. ஆனால் மாநில அளவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள கால தாமதத்திற்காகச் சொல்லப்படும் காரணங்கள்: அஃறிணை அஃறிணை () என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இது அல்+திணை என்று பிரிக்கப்படும்; உயர்திணை அல்லாதது என பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன. உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை "விரவுப்பெயர்கள்" என வழங்கப்படுகின்றன.26 வகை விரவுப்பெயர்களை காணலாம். கொள்வனவு ஆற்றல் சமநிலை கொள்வனவு ஆற்றல் சமநிலை அல்லது பொருள் வாங்குதிறன் சமநிலை ("purchasing power parity") என்பது இரு நாடுகளின் வாங்கும் (கொள்வனவு) திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு ஆகும். கஸ்டாவ் காசல் என்பவர் 1918ஆம் ஆண்டு ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கொள்கையின்படி இதனை வடிவமைத்தார். மிகவும் எளிதான வகையில் அளவிடும்போது: formula_1 இங்கு: அதாவது,ஓர் ஒத்திருக்கும் பொருள் இரு நாடுகளிலும் அந்நாட்டு நாணயத்தில் ஒரே விலையைக் கொண்டிருக்குமாறு நாணயமாற்றுவீதம் சரிசெய்யப் படும். காட்டாக, கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நாணயமாற்று வீதம் USD/CDN 1.50 ஆக இருக்கும்போது, ஓர் சாக்கெலெட் பட்டை கனடாவில் C$1.50 விற்குமென்றால் அதே அளவுள்ள சாக்லெட் பட்டை ஐக்கிய அமெரிக்காவில் US$1.00 விற்கப்பட வேண்டும்.(அதாவது, இரு நாடுகளிலும் சாக்லெட்டின் விலை US$1.00) இக்கொள்கை ஏட்டளவில் எளிதாக இருப்பினும் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் உள்ளன. இரு நாடுகளின் கொள்வனவு திறனை கணக்கிட எடுத்துக்கொள்ளும் பொருள்களின் கூடை ஒப்பிடக்கூடியதாக இருக்குமாறு அடையாளம் காணுவதில் பல சர்ச்சைகள் எழுகின்றன. தவிர,நாள்பட்ட கணக்கீடுகளில் அந்நாடுகளில் நிலவும் விலையேற்றமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சூரிய நாட்காட்டி சூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம். சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது. கீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்: மேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. புவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன. இந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. சூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது. 89 ஆண்டு 89 (LXXXIX ) என்பது பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் தொடங்கும் ஒரு பொது ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "ஃபுல்வசு மற்றும் அட்ராடைனசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Fulvus and Atratinus") எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 842" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 89 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது 89வது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 88 ஆகும். ஹர் கோவிந்த் கொரானா அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா ("Har Gobind Khorana", , சனவரி 9, 1922 - நவம்பர் 9, 2011) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் அவர் ஆற்றிய ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர். 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சில் கான்கார்ட் நகரில் இவர் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் கிராமத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பம் வறுமையில் வாடிய போதும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தந்தை மிகுந்த ஆர்வம் காட்டினார். சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மூல்டான் என்ற ஊரில் அமைந்திருந்த டி.ஏ.வி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 'இரத்தன்லால்' என்ற ஆசிரியர் இவரைக் கவர்ந்தவராக விளங்கினார். பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்த இவர் லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். இங்கு பேராசிரியரும் சிறந்த ஆய்வாளருமான 'மதன்சிங்' என்பவரின் மேற்பார்வையில் 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1945- இல் இந்திய அரசின் உதவித்தொகை கிடைக்கப்பெற்று இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இங்கு 'ரோஜெர் ஜே.எஸ்.பீர்' என்பவர் இவருக்கு வழிகாட்டியாய் விளங்கினார். இங்கு வந்த பிறகு மேலைநாட்டுக் கலாச்சார வழியைப் பின்பற்ற ஆரம்பித்தார். 1948-49 களில் சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். விலாடிமிர் பிரிலாக் என்ற பேராசிரியர் இவருடைய முன்னேற்றத்திற்கும் அறிவியல் ஆர்வம், பணியில் ஈடுபாடு, அதற்கேற்ற திறன்களை வளர்ப்பது ஆகியவற்றின் வழிகாட்டியாக விளங்கினார்.1952-ல்கனடா சென்ற குரானா, அங்கு சுவிஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மகள் எஸ்தர் எலிசபெத் சிப்லர் என்ற மங்கையின் நட்பு கிடைத்தது. பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். 1949 இறுதியில் இந்தியா இந்தியா திரும்பினார். இந்தியாவில் பல மாதங்கள் வேலையின்றி வாடிய குரானா மேற்கொண்டு ஆய்வு செய்யும் எண்ணத்தோடு மீண்டும் இங்கிலாந்து சென்றார். முனைவர் ஜி.டபிள்யூ.கென்னெர், நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர் அலெக்சாண்டர் டாட் என்பவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952-ல் பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம் என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார். முனைவர் ஷ்ரம் அவர்கள் அளித்த உற்சாகத்தினாலும் முனைவர் ஜேக் கெம்பெல் அவர்களின் ஆலோசனையுடன் பாஸ்பேட் எஸ்டர்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் மேலும் பலரும் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்த போதும் 'முனைவர் கோர்டன் எம். டெனெர்' என்பவர், குழுவின் ஆய்வு முன்னேற்றதிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார். 1960-ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து அனைத்து ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர் வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். அவர் 1959இல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். அடுத்த ஆண்டில் குரானா அமெரிக்கா சென்று விஸ்கான்சின் பல்கலைக்கழக நொதி ஆய்வு நிறுவனத்தில் தமது நோபல் பரிசு சக ஆய்வாளர் மார்சல் நோரென்பர்க் உடன் சேர்ந்து செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர்களின் ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1968இல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி (Holley) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் 1970இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது. எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகள் (bacteria) மனித மற்றும் விலங்கினங்களின் குடற் பகுதியில் இருப்பது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே அதன் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். குரானாவும் அவருடைய குழுவினரும் இந்நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக முயன்று இந்நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர் 1976 ஆகஸ்டில் இச்செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியில் செருக, அது இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தமது ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவுக்கும் அவருடைய குழுவிலிருந்த 24 உதவியாளர்களுக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. நோபல் பரிசுடன் கூட கொரானா மேலும் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார். விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத்துறை, இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து 2007-ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கியது. இது கொரானாவின் பெயரில் தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்திய மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை, மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு முதலியவற்றில் முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. 2009 -ல் கொரானாவை இந்நிகழ்வுக்கு வரவழைத்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள். கொரானா 2011 நவம்பர் மாதம் 9 ஆம் நாள் மாசசூசெட்ஸ் கன்கார்ட் என்ற இடத்தில் தன்னுடைய 89 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அறிவியல் ஒளி, டிசம்பர் 2011 இதழ் ஜியோவன்னி சுகியாபரெல்லி ஜியோவன்னி வர்ஜினியோ சுகியாபரெல்லி ("Giovanni Virginio Schiaparelli", 14 மார்ச்சு 1835 – 4 ஜூலை 1910) இத்தாலிய வானியலாளர் மற்றும் அறிவியல் வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவர் டுரின் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லின் ஆய்வகத்தில் கல்வி பயின்றார். 1859-1860 ஆம் ஆண்டுகளில் இவர் புல்கோவோ ஆய்வகத்தில் பணியாற்றினார். அதன் பிறகு நாற்பதாண்டுகளுக்கு மேல் பிரேரா ஆய்வகத்தில் பணியாற்றினார். மேலும் இவர் இத்தாலியப் பேரரசின் செனட் உறுப்பினராகவும், அகாடமியா டி லிங்சை, அக்காடெமியா டெல்லே சைன்ஸ் டி டுரினோ அண்ட் த ரீஜியோ இன்ஸ்டிடியூட்டோ லோம்பார்டோவின் உறுப்பினராகவும், குறிப்பாக செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வில் நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவரது உறவினரின் மகளான எல்சா ஸ்கையாபரெலி புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். ஸ்கையாபரெலியின் பங்களிப்புகளில் இவரது செவ்வாய் கிரகத்தின் தொலைநோக்கி கண்காணிப்பும் அடங்கும். இவரது ஆரம்ப கண்காணிப்புகளில் செவ்வாய் கிரகத்தின் "கடல்கள்" மற்றும் "கண்டங்களுக்குப்" பெயரிட்டுள்ளார். 1877 ஆம் ஆண்டில் "பெரும் எதிர்ப்பின்" போது இவர் செவ்வாய் கிரகப் பகுதிகளில் நீள்கட்டமைப்புடைய அடர்ந்த வலையமைப்பை கண்டறிந்தார். அதை இவர் இத்தாலியின் "கனாலி" என அழைத்தார். இது "சேனல்கள்" என பொருளுடையது ஆனால் இது "கேனல்ஸ்" என தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டது. "கேனல்ஸ்" என்பது செயற்கையான உருவாக்கத்தைக் குறிக்கும். "கனாலி" என்பது இது நிலத்தின் இயற்கை உருவ அமைப்பாக இருகக்கூடும் என்ற உந்துதல் என்று பொருள்படும். இந்த தவறான மொழிபெயர்ப்பிலிருந்து செவ்வாய் கிரகத்தின் "கேனல்ஸ்" பிரபலமானதும் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது பற்றி பல்வேறு யூகங்கள் தருவிக்கப்பட்டன. இதனால் விரைவில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது பற்றிய பல கருத்தாக்கங்கள், யூகங்கள் மற்றும் வாய்மொழிக்கதைகள் பரவின. செயற்கையான வாய்க்காலை மிகவும் ஆர்வமுடன் ஆதரித்தவர்களிடையே அமெரிக்க வானியலாளர் பெர்சிவல் லோயெல் புகழ்பெற்றவர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை செவ்வாய் கிரகித்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதை நிரூபிக்கும் முயற்சியிலேயே செலவழித்தார். எனினும் பின்னர் இத்தாலிய வானியலாளர் வைசென்சோ செருல்லியின் நன்றி கூறும் விதமான ஆய்வின் பலனாக அறிவியலாளர்கள் புகழ் பெற்ற வாய்க்கால்கள் உண்மையில் வெறும் ஒளியியல் திரிபுக்காட்சிகளே என உறுதிப்படுத்தினர். ஸ்கையாபரெலியின் புத்தகமான "லைப் ஆன் மார்ஸில்" அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: ""உண்மையான வாய்க்காலின் வடிவம் நமக்கு மிகவும் பழக்கமான ஒன்று. ஆனால் மண்ணிலுள்ள பள்ளங்கள் 100, 200 கிலோமீட்டர்கள் அகலமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களில் நேர் திசையில் விரிந்து பரவியும், மிகவும் ஆழமாகவும் இல்லாதவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். " "நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி செவ்வாய் கிரகத்தில் மழை இல்லாத போது இந்த வாய்க்கால்களே முக்கிய இயக்க அமைப்பாக இருந்து கோளினுடைய வறண்ட பகுதிக்கு தண்ணீரை (மற்றும் அதன் உயிர்களின் வாழ்வுடன்) பரப்பலாம்." " சூரிய மண்டலப் பொருட்களை ஆய்வுசெய்தவரான ஸ்கையாபரெலி இரட்டை நட்சத்திரங்களில் ஆய்வு செய்து ஏப்ரல் 26, 1861 அன்று 69 ஹெஸ்பெரியா என்ற சிறுகோளைக் கண்டறிந்தார். மேலும் பெர்செய்ட்ஸ் மற்றும் லியோனிட்ஸ் விண்கற்கள் பொழிவுக்கு வால் நட்சத்திரங்களுடன் தொடர்புள்ளது என மெய்ப்பித்தார். எடுத்துக்காட்டாக அவர் லியோனிட்ஸ் விண்கற்கள் பொழிவின் வட்டப்பாதை டெம்பெல்-டட்டில் வால் நட்சத்திரத்தின் பாதையுடன் பொருந்துவதை நிரூபித்தார். இந்த ஆராய்ச்சிகள் அவருக்கு விண்கற்கள் பொழிவு வால் நட்சத்திரங்களின் சுவடுகளாக இருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்க வழிகோலியது. பின்னர் அது துல்லியமான உண்மை என நிரூபிக்கப்பட்டது. ஸ்கையாபரெலி மரபு சார் வானியல் வரலாற்றில் சிறந்த அறிஞராக இருந்தார். யூடோக்சஸ் ஆப் நைடஸ் மற்றும் கால்லிப்பஸினுடைய பொது மையக் கோளங்களை பல பிற்கால வானியலாளர்கள் கருதியதைப் போல அவற்றை பௌதிகப் பொருளாக அல்லாமல் நவீன ஃபோரியர் தொகுதிகளுக்கான வழிமுறையின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும் என இவரே முதலில் உணர்ந்தார். இவரது ஒன்றுவீட்ட உறவினராகிய எல்சா சுகியாபரெல்லி குறிப்பிட்த் தக்க வடிவமைப்பாளர் ஆவர். இவர் அவுதே மேலுடையாக்கத்தில் புகழ்பெற்றவர். சந்திர நாட்காட்டி சந்திர நாட்காட்டி (lunar calendar) சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும். மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முழுமையான சந்திர நாட்காட்டி இசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகளின் முதன்மை விடயம் அவை பருவகாலங்களுடன் ஒத்துக்கொள்ளாமையும் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் (நெட்டாண்டுகளில் 12 நாட்கள்)தள்ளிப்போவதும் ஆகும். சூரிய நாட்காட்டியுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும். இது பெரும்பான்மையும் சமய வழிபாடுகளுக்கு மட்டுமே பாவித்தாலும் சவுதி அரேபியாவில் வணிக பயன்பாட்டிற்கும் பாவிக்கப்படுகிறது. ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன. இசுலாமிய நாட்காட்டியைத் தவிர்த்து பிற அனைத்து சந்திர நாட்காட்டிகளும் உண்மையில் சூரியசந்திர நாட்காட்டிகள் ஆகும். அதாவது மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன. சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும். சர்வதேச அளவில் அன்றாட பயன்பாட்டுக்குக் கிரெகொரியின் நாட்காட்டியே பயன்படுகின்றனர். எனினும், மதம் சார்ந்த பண்டிகைகள்/விழாக்களுக்கு, உலக அளவில் சந்திர நாட்காட்டி அல்லது சூரியசந்திர நாட்காட்டியையே பின்பற்றுகின்றனர். உதாரணத்திற்கு எந்த நாள் ஆண்டின் முதல்நாள் என்பதில் ஒவ்வொரு நாட்காட்டியும் மாறுபடுகிறது. சீன நாட்காட்டி போன்ற சிலவற்றில் சந்திரனின் பிறை குறிப்பிட்ட நேரவலயத்தில் நேரும் நிகழ்வு மாதத்தின் முதல்நாளாகக் கொள்ளப்படுகிறது. பெரும்பான்மையான சந்திரநாட்காட்டிகளில், சந்திரனின் பிறைநிலை முதலில் காணப்படும் நேரத்தில் துவங்குகிறது. சி. பி. முத்தம்மா சி. பி. முத்தம்மா ("Chonira Belliappa Muthamma", கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 ஆவது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர். கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் 1924 ஆம் ஆண்டு பிறந்தார் . மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்பின்படிப்பை முடித்தார். ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த வெளியுறவுத்துறையில் பணிபுரிய விரும்பி அரசுபணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார் முத்தம்மா. வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அளவு கடந்த ஆர்வத்தோடு பணியில் சேர்ந்த முத்தம்மா ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு ஆளாக நேர்ந்தது. வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று பணித்தது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் அவளது திறமையான பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால் அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு குறித்தான விதி எண் 18 திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது. இந்த இரண்டு விதிகளூம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே பணியிலமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானதென்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறதென்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், "அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15 அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாட்டை வலியுறுத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம், மத, இன, சாதி, பால் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் காரணமாக எவரொருவர்க்கும் பாகுபாடு காட்டக் கூடாதென வலியுறுத்தினாலும், அதன் பதினான்காம் பிரிவு சமத்துவக் கொள்கையை அறிவுறுத்தினாலும், பல சந்தர்ப்பங்களில் மனுதாரர் ஒரு பெண் என்ற அடிப்படையில் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு சிரமமடைந்துள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழுவின் உறுப்பினர்களும் பெண்களுக்கெதிரான பாகுபாடு காட்டியுள்ளனர். இந்தக் கருத்துக்களின் ஒரு சில பகுதிகளாவது உண்மையாக இருந்தால் நிர்வாகத்தின் சிந்தனையிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதிக்கு முரணான ஆண் ஆதிக்கம், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் கோலோச்சுகிறது என்பது புலனாகிறது. இத்தகைய பாலியல் அநீதிகள் இழைக்கப்பட்டால் அது ஒடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகின்றது. ஒரு பெண் திருமணத்திற்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியமாகும். தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியை சரிவர செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்? விதி 18 அரசியல் சாசனத்தின் 16 ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமணமான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோர முடியும் என்றால் திருமணமான பெண்ணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியல்லவா இத்தகைய நடவடிக்கைகள்? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்துவம் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதை அல்லவா இது காட்டுகிறது." என்று எடுத்துரைத்த நீதிபதி மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென சொல்லி பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இத்தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட விதிகள் திருத்தியெழுத வாய்ப்பாக அமைந்தது. 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) ஆகும். இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் கீழ்கண்ட நலவாரியங்களை உள்ளடக்கியது. ரக்பி கால்பந்து ரக்பி கால்பந்து (Rugby football) என்பது, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். இன்று இது வெறுமனே "ரக்பி" என அழைக்கப்படுவதுண்டு. பண்டைக்கால கிரேக்கத்தில் ரக்பி கால்பந்தை ஒத்த எப்பிசுக்குரோசு என்னும் ஒரு விளையாட்டு விளையாடப்பட்டு வந்தது. வேல்சிலும் மத்திய காலப்பகுதியில் விளையாடப்பட்ட இதுபோன்ற ஒரு விளையாட்டு "கினாப்பன்" அல்லது "கிரியாப்பன்" என அழைக்கப்பட்டது. ரக்பிக்கு முன்னோடியாக ஐரிய நாட்டில் விளையாடப்பட்ட விளையாட்டை அவர்கள் "கையிட்" என அழைத்தனர். கோர்னியர்களும் இது போன்ற ஒன்றை வெண்கலக் காலத்தில் இருந்து விளையாடி வந்தனர். கிழக்கு அங்கிலியரும், பிரான்சியரும் கூட இதை ஒத்த விளையாட்டுகளை விளையாடினர். 1750க்கும் 1859 ஆம் ஆண்டுக்கும் இடையில் ரக்பி பாடசாலையில் விளையாடப்பட்ட கால்பந்து விளையாட்டில் பந்தைக் கைகளால் தொட அனுமதிக்கப்பட்டது. ஆனால், பந்தைக் கைகளில் வைத்தபடி எதிர்த்தரப்புஇலக்கை நோக்கி ஓடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அக்காலத்தில் விளையாட்டில் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை குறித்த வரையறை எதுவும் இருக்கவில்லை. சில வேளைகளில் ஒரு விளையாட்டில் நூற்றுக் கணக்கானவர்களும் பங்குபற்றினர். பந்தைக் கையில் கொண்டு ஓடலாம் என்னும் புதிய முறை 1859க்கும், 1865 ஆம் ஆண்டுக்கும் இடையில் அறிமுகமானது. வில்லியம் வெப் எல்லிசு என்பவரே 1823 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு விளையாட்டில், முதன் முதலாக உள்ளூர் விதிகளுக்கு மாறாக கையில் பந்தைக் கொண்டு ஓடியவராகக் குறிப்பிடப்படுகிறார். இதற்குச் சில காலத்தின் பின்னர் இவ்விளையாட்டுக்கான விதிகள் எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது உள்ளூரில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மட்டுமே இருந்தன. 1870ல் முதன் முதலாக எழுத்து மூலமான விதிகளை உருவாக்கியவர்கள் ரக்பி பாடசாலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏறத்தாழ இக் காலப்பகுதியில், ரக்பி பாடசாலையின் தலைமை ஆசிரியரான தாமசு ஆர்னோல்ட் என்பவரின் செல்வாக்குப் பிற விடுதிப் பாடசாலைகளிலும் பரவலாயிற்று. சமநிலைக் கல்வியில் விளையாட்டும் ஒரு பகுதியாக அமையவேண்டும் என்ற அவரது கருத்து இயல்பாகவே ரக்பி விதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் பரவ வழிகோலியது. பின்னர் இது உலகம் முழுவதிலும் பரவியது. நுண்ணுயிர் எதிர்ப்பி ஒரு பொதுவான பயன்பாட்டில், நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) ( அல்லது நுண்ணுயிர்கொல்லி என்னும் சொல்லானது நுண்ணுயிரைக் கொல்லும் அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதான துணைப்பொருள் அல்லது உட்பொருள் எனப் பொருள்படும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பூஞ்சை மற்றும் ஓரணு உயிரி உள்ளிட்ட நுண்ணுயிர்ப் பொட்களால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் எதிர்-நுண்ணுயிர் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.. "நுண்ணுயிர் எதிர்ப்பி" என்ற சொற்றொடரினை, 1942ஆம் ஆண்டு செல்மன் வாக்ச்மேன், அதிகபட்சமான வீரியக் குறைப்பில் பிற உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்கு எதிர்நிலையினதாக செயல்படும் நுண்ணுயிர்ப்பொருளால் உருவாக்கப்பட்ட எந்தத் துணைப்பொருளையும் விவரிப்பதற்காக உருவாக்கினார். இந்த வரையறையானது, நுண்மங்களை அழிக்கின்ற, ஆனால் நுண்ணுயிர்ப் பொருட்களால் உருவாக்கப்படாத (செரிமான நிணநீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்றவை) இயல்பாகவே தோன்றுகின்ற துணைப்பொருளை உள்ளிடவில்லை. மேலும் சல்ஃபோநமைட்கள் போன்ற கூட்டிணைப்பு எதிர்-நுண்ம உட்பொருட்களையும் உள்ளிடவில்லை. பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 2000 அணுநிறைக்கும் குறைவான மூலக்கூறு எடை கொண்டு உண்மையில் சிறிய மூலக்கூறுகளாகவே இருக்கின்றன. மருத்துவ வேதியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இப்போது அரைக் கூட்டிணைப்புகளாக உள்ளன. பீட்டா-லாக்டமில் காணப்படுபவை போன்றவை அசலான உட்பொருட்களிலிருந்து பெறப்படும் வேதியியல் வழி மேம்படுத்தப்பட்டவையாகும் (இது "பென்சிலியம்" என்ற உறுப்பில் பூஞ்சையால் உருவாக்கப்படும் பென்சிலின், செபாலோஸ்போரின் மற்றும் கார்பாபெனிம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது). அமினோகிளைகோஸைட் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வாழும் உயிர்ப்பொருளிலிருந்து இப்போதும் உருவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன; மற்றவை முற்றிலும் கூட்டிணைப்பு முறையில் உருவாக்கப்படுகின்றன. சல்போனமைட்ஸ், குயினோலோன் மற்றும் ஆக்ஸாலோலிடினோன். மேலும் இந்த தோற்றுவாய்-சார்ந்த வகைப்பாட்டிலிருந்து இயற்கையான, அரைகூட்டிணைவான மற்றும் கூட்டிணைவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இரண்டு பெரிய குழுக்களாக நுண்ணுயிர்ப்பொருள்களின் விளைவின்படி பிரிக்கலாம். இவற்றில் நுண்மங்களை அழிப்பவை பாக்டீரிசைடல் துணைப்பொருட்களாகும், அதேநேரத்தில் அவை பாக்டீரியல் வளர்ச்சியை முடக்க மட்டுமே செய்வது பாக்டீரியோஸ்டேடிக் துணைப்பொருட்கள் எனப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் தொற்று நோய்களை நாட்டுப்புற மருத்துவத்தின் அடிப்படையிலேயே பலரும் குணப்படுத்திக்கொண்டனர். புராதன சீன மருத்துவத்தில் தொற்றிற்கான குணப்படுத்தல்களாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற உட்பொருட்களைக் கொண்டிருக்கும் தாவரங்களைக் கொண்டு சிகிச்சையளிப்பது என்பதானது, 2500 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. புராதன எகிப்தியர்கள், புராதன கிரேக்கர்கள் மற்றும் இடைக்கால அரேபியர்கள் உள்ளிட்ட வேறு பல பண்டைய கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு பூஞ்சைகளையும் தாவரங்களையும் பயன்படுத்தி உள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் சின்சோனா மரப்பட்டை மலேரியாவிற்கான சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த நோய் "பிளாஸ்மோடியம்" என்னும் உறுப்பின் புரோட்டோசான் ஒட்டுண்ணிகளால் ஏற்படுவது. இந்த நோய்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான அறிவியற்பூர்வமான முயற்சிகள், கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சையின் உருவாக்கம், இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பி வளர்ச்சியில் சாதனைக் கற்களாக உள்ளன. உண்மையில் நுண்ணுயிர் எதிர்மை (antibiosis) என்று அறியப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மங்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளாகும். 'உயிரெதிரி' என்று பொருள் கொள்வதான ஆண்டிபயாஸிஸ் என்ற சொல்லினை இந்த மருந்துகளால் ஏற்பட்ட அரிய நிகழ்வை விளக்குவதற்கான பெயராக பிரெஞ்சு நுண்மவியலாளர் வைலமின் அறிமுகப்படுத்தினார். (காற்றிலிருந்து உருவாகும் பேசில்லஸ் "பேசில்லஸ் அந்த்ராஸிஸின்" வளர்ச்சியை தடுக்கும் என்பதை லூயி பாஸ்டரும் ராபர்ட் கோச்சும் கண்டுபிடித்தபோது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பன 1877ஆம் ஆண்டு முதன்முதலாக விளக்கப்பட்டது.). 1942ஆம் ஆண்டில் அமெரிக்க நுண்ணுயிரியலாளரான செல்மன் வாக்ஸ்மேன், இந்த மருந்துகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்று மறுபெயரிட்டார். ஒரு அறிவியலாக கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி முன்னேற்றத்தின் கதை 1880களில் பால் என்ரிச் என்னும் ஜெர்மானிய ஆய்வாளருடன் தொடங்குகிறது. டாக்டர் என்ரிச், சில குறிப்பிட்ட வர்ணங்கள் மனிதர்கள், விலங்குகள் அல்லது நுண்ம உயிரணுக்களில் கலந்து வண்ணமேற்படுத்தலாம் என்பதைக் கவனித்தார். அவர் மனித உறுப்புகளை பாதிக்காமல் நுண்மங்களில் கலந்து அவற்றை கொல்லக்கூடிய தேர்வு மருந்தாகச் செயல்படுவதற்கான வாய்ப்பைச் சில குறிப்பிட்ட வர்ணங்கள் அல்லது வேதிப்பொருட்கள் கொண்டிருக்கலாம் என விளக்கினார். பல பரிசோதனைகளுக்குப் பின்னர் பல்வேறு உயிர்ப்பொருட்களுக்கு எதிரான வர்ணங்களின் நூற்றுக்கணக்கான சோதனைகளால் சல்வர்சான் என்ற மருத்துவரீதியான பயன்மிக்க, மனிதன் உருவாக்கிய நுண்ணுயிர் எதிர்ப்பியினை அவர் கண்டுபிடித்தார். இருப்பினும், சல்வர்சானின் எதிர்மறையான பக்கவிளைவு பின்னாளிள் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி பென்சிலினுடன் இணைந்திருந்தமையானது இதை நுண்ணுயிர் எதிர்ப்பிக்காக பயன்படுத்துவதை மாற்றியமைத்தது. நுண்ணுயிர் எதிர்ப்பிப் புரட்சியின் தோற்றுவாயாகக் குறிப்பிடும் எர்லிச்சின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து 1932ஆம் ஆண்டு டோமக் புரோன்டோசில் என்பதனைக் கண்டுபிடித்தார். புரோன்டோசில் என்னும் வர்த்தகரீதியான முதல் எதிர்- நுண்ம நுண்ணுயிர் எதிர்ப்பியினை ஜெர்மனியில் உள்ள ஐஜி ஃபர்பன் கூடத்தின் பேயர் ஆய்வுக்கூடங்களில் கெர்ஹார்ட் டோக்மாக்கால் என்பதனை (இவர் 1939ஆம் ஆண்டு தன்னுடைய முயற்சிகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்) வழி நடத்திய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியது. முதல் சல்போனமைட் மருந்தின் கண்டுபிடிப்பும் உருவாக்கமும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் யுகத்தை துவக்கின. நுண்ணுயிர்ப் பொருட்களுக்கு இடையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புகள் மீதான முந்தைய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்ப் பொருட்களால் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாஸ்டர் "நுண்மங்களுக்கு இடையில் உள்ள எதிர்ப்பொருட்களில் நம்மால் ஊடுருவ முடியும் என்றால் அது 'நோய்நீக்கிகளுக்கான மிகப்பெரிய நம்பி்க்கையினை வழங்க வாய்ப்பிருக்கிறது" என்பதை உணர்ந்தார். 1875ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜான் டிண்டால், "பென்சிலியம் எஸ்பிபி." என்னும் நுண்ம எதிர்ப்பொருட்களை விளக்கினார். இருப்பினும் அவருடைய ஆராய்ச்சியை, 1928ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளெமிங் பென்சிலினைக் கண்டுபிடிக்கும்வரையிலும், அறிவியல் சமூகம் பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பின்னர் எர்ன்ஸ்ட் செய்ன் மற்றும் ஹோவார்ட் ஃப்ளோரி ஆகியோர் பி.பிரெவிஸ்ஸிலிருந்து கிரேமிசைடின் என்ற பெயர் கொண்ட மற்றொரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பி போன்ற துணைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிளெமிங்கின் ஆராய்ச்ச்சியில் ஆர்வம் காட்டினர். 1939ஆம் ஆண்டு ரெனே துபோ கிரேமிசைடினைத் தனிமைப்படுத்தினார். இவை, இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில், காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதில் அதிகபட்சமான பயன் கொண்டிருப்பதை நிரூபிக்க வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும். ஃப்ளோரி மற்றும் செய்ன் ஆகியோர் பென்சிலினைப் பிரித்தெடுப்பதில் வெற்றிபெற்றனர். இந்த பிரித்தெடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பி பரந்த அளவிலான நுண்மங்களுக்கு எதிராக எதிர் பாக்டீரியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பது நிரூபணமானது. இது குறைவான நச்சுத் தன்மையைக் கொண்டிருந்தது. இதனால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுதல் குறைந்தது. மேலும் இதன் செயல்பாடு, சல்போனமைட்களாக கிடைத்த கூட்டிணைப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி வகையைப் போன்று அல்லாமல், சீழ் போன்ற உயிர்ப்பொருள் உட்பொருட்களால் தடுக்கப் பெறவில்லை. பென்சிலினின் உருவாக்கம் இதே போன்ற திறன்களுடன் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி உட்பொருட்களுக்கான தேடலில் ஆர்வத்தை தூண்ட வழியமைத்தது. 1945ஆம் ஆண்டு, எர்ன்ஸ் செய்ன், ஹோவார்ட் ஃப்ளோரி மற்றும் அலெக்ஸாண்டர் பிளெமிங் தங்களுடைய பென்சிலின் கண்டுபிடிப்பிற்காக, நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். எதிர் நுண்ம உட்பொருட்களை கவனத்தோடும், முறையாகவும் தேடிய அணுகுமுறைக்கு வித்திட்டவர் என துபோவுக்கு ஃப்ளோரி நன்றி தெரிவித்தார். இதுபோன்ற முறைமை பென்சிலின் ஆராய்ச்சியின் ஃப்ளோரியால் புத்தாக்கம் செய்யப்பட்ட கிரேமிசைசின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது. நுண்ணுயிர் எதிர்ப்பியின் செயல்பாட்டின் மீதான மதிப்பீடு எதிர் நுண்ணுயிர் சிகிச்சையின் வெற்றிக்கு மிகத் தேவையானதாகும். உயிர்ப்பொருள் பாதுகாப்பு இயக்கவியல்கள், தொற்றின் இடவமைப்பு போன்ற நுண்ணுயிரியல் அல்லாத காரணிகள் நோய் உள்ளுறைபவையாக இருக்கின்றன என்பதோடு அவசியமான மருந்தியக்கத் தாக்கியல் (pharmacokinetics) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் மருந்தியக்கவியலின் உடைமைப் பொருட்களாக இருக்கின்றன. அடிப்படையிலேயே, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மத்திற்கு எதிரான அபாயமான அல்லது நுண்மக் கொல்லிச் செயல்பாடு கொண்டவை அல்லது நுண்மத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நுண்மத்தடுப்பான் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்படுத்தல்கள் ஆய்வகச் செயல்பாட்டையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடைமுறையில் இவை இரண்டுமே நுண்மம்சார் தொற்றினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திறன் கொண்டவை.'செயற்கையான சூழ்நிலைகளில் செயல்பாட்டின் அளவீட்டை மதிப்பிடுவதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாட்டு பண்பாக்கமானது, குறைந்தபட்ச தடுப்பாக்கச் செறிவாக்கம் மற்றும் எதிர்-நுண்மங்களில் குறைந்தபட்ச நுண்மக் கொல்லிச் செறிவை அளவிடுவது போன்ற எதிர்-நுண்மங்களின் திறனுடைய சிறந்த குறிகாட்டிகளாக உள்ளன. இருப்பினும், மருத்துவ நடைமுறைகளில் இந்த அளவீடுகள் மட்டுமே மருத்துவ முடிவுகளை முன்னூகிப்பதற்கு போதுமானவையாக இருப்பதில்லை. நுண்ணுயிர் எதிர்ப்பியின் மருந்தியத் தாக்கியலின் விபரங்களை எதிர்-நுண்மச் செயல்பாட்டுடன் இணைப்பதன் மூலம் சில மருந்தியல் அளவைகள் மருந்துத் திறனின் குறிப்பிடத்தகுந்த குறிகாட்டிகளாக விளங்குகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு செறிவு-சார்ந்ததாக உள்ளன. மற்றும், அவற்றின் பண்பாக்க எதிர்-நுண்மச் செயல்பாடு, உயர் நுண்ணுயிர் எதிர்ப்பியானது செறிவாக்கங்களோடு நேர்முறையாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், குறிப்பிட்ட கால அளவிற்கு குறைந்தபட்ச தடுப்பு ஊனீர் செறிமானமாக்கத்தை தக்கவைப்பது மிக அவசியமானதாகும். நுண்ணுயிர் எதிர்ப்பியின் கொல்திறனுக்கான ஆய்வக மதிப்பீடு, நுண்ணுயிர் எதிர்ப்பியல் செயல்பாட்டின் நேரம் அல்லது செறிவாக்கச் சார்பை தீர்மானிக்க தேவையாக உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாக அவற்றின் செயல்பாட்டு இயக்கம், வேதியியற் கட்டுமானம் அல்லது செயல்பாட்டு பிரிவுப்பகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மச் செயல்பாடுகள் அல்லது வளர்ச்சி நிகழ்முறைகளை இலக்காகக் கொள்கின்றன. நுண்ம உயிரணுச் சுவரைக் குறிவைப்பவை (பென்சிலின்கள், செபாலோஸ்போரின்கள்), அல்லது உயிரணு மேற்புறச்சவ்வை குறிவைப்பவை (பாலிமிக்ஸின்கள்) அல்லது அத்தியாவசிய நுண்ம நொதிகளில் குறுக்கிடுபவை (குயினலோன்கள், சல்போனமைடுகள்) ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இயல்பாகவே நுண்மக்கொல்லிகளாகவே உள்ளன. இவற்றில், அமினோகிளைகோசைட்கள், மேக்ரோலிட்கள் மற்றும் டெட்ராசைக்ளின்கள் போன்ற புரதக் கூட்டிணைப்புகளை இலக்காக கொள்பவை வழக்கமாக நுண்ம நிலைப்பொருளாக இருக்கின்றன. மேற்கொண்டு வகைப்படுத்தல் என்பதானது, அவை இலக்கு வைப்பவற்றைப் பொறுத்து அமைகின்றது. "குறுகலான-பிரிவுப்பகுப்பு" நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அலகு-எதிர்மறை அல்லது அலகு-நேர்மறை நுண்மம் போன்ற நுண்ம வகைகளையே இலக்காகக் கொள்கின்றன. அதேசமயத்தில், பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரந்த அளவிலான நுண்மஙகளை இலக்காகக் கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மூன்று புதிய வகைகளிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருத்துவப் பயன்பாட்டிற்கு வெளிப்பட்டுள்ளன. இப்புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பின்வரும் மூன்று வகைகளில் அமைகின்றன: (1) சைக்ளிக் லிப்போபெப்டைட்ஸ் (டெப்தோமைசின்), (2) கிளைசைக்ளின்ஸ் (டைஜிசைக்ளின்), மற்றும் (3) ஆக்ஸாசோலிடினோன்ஸ் (லைனிசாலிட்). இவற்றில், டைஜிசைக்ளின் என்பது, ஒரு பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பியாகும்; மற்ற இரண்டும் அலகு நேர்மறை தொற்றுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த முன்னேற்றங்கள் தற்போதுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான நுண்ம எதிர்ப்பிற்கு எதிர்வினை புரியும் என்று நம்பிக்கை அளிக்கின்றன. 1939ஆம் ஆண்டு ஃபுளோரி மற்றும் செய்ன் ஆகியோரின் முன்னோடியான முயற்சி, மருந்திற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முக்கியத்துவம், மற்றும் அவற்றின் மீதான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு போன்றவற்றிற்கு வழியமைத்துள்ளது. தயாரிப்புச் செயல்முறையானது, நுண்ணுயிர்ப்பொருட்களைப் பரந்த அளவுகளில் சோதனையிடுவது மற்றும் அவற்றின் சோதனை மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புற்றுள்ளது. தயாரிப்பு என்பது, வழக்கமாக காற்றோட்டமான நிலையில் நொதிக்கவைக்கப்படுதலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. வாய்வழியான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சாதாரணமாகவே உட்செலுத்தப்படுகின்றன. நாள்பட்ட மற்றும் தீவிரத் தொற்றுகளுக்கு சிரைவழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுகின்றன. சில சமயங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுமருந்துகள் அல்லது களிம்புகள் போன்று வெளிப்புறப் பயன்பாடும் கொண்டுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாகப் பாதுகாப்பானவை மற்றும் நன்கு நீடிக்கக்கூடியவை என்று கருதப்படினும், அவை பரந்த அளவிற்கான எதிர்மறையான விளைவுகளுடனும் தொடர்புற்றுள்ளன. பக்க விளைவுகள் என்பவை பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இலக்கான உடலுறுப்புகளைப் பொறுத்து, பல்வேறு வகைகளாகவும், மாறுபடுபவையாகவும் மிகவும் தீவிரமானவையாகவும் உள்ளன. புதிய மருந்துகளின் பாதுகாப்பு விபரங்கள் நன்கு நிறுவப்படாது இருக்கலாம். எதிர்மறையான விளைவுகள் காய்ச்சல் மற்றும் குமட்டல் துவங்கி பல ஒவ்வாமை எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கலாம். மிகப் பொதுவான பக்க விளைவுகளுள் ஒன்று வயிற்றுப் போக்காகும். இது சில நேரங்களில் "க்ளோஸ்ரிடியம் டிஃபைசலால்" என்னும் நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இது செரிமானச் சுரப்பியின் வழக்கமான சமநிலையை நுண்ணுயிர் எதிர்ப்பி தொந்திரவுக்கு உட்படுத்துவதால் ஏற்படுகிறது, இதுபோன்ற நோய்விளைக்கும் நுண்மங்களின் அதிகமான வளர்ச்சி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அளிக்கப்படுகையில் உயிர்ச் சார்பிகளை உட்செலுத்துவதன் மூலம் தனிமைப்படுத்தப்படுகின்றன. . நுண்மத் தொகுப்பின் நுண்ணுயிர் எதிர்ப்பி-தூண்டிய குறுக்கீடு என்பது, இயல்பான கருப்பை சுரப்பியின் உட்பொருட்களாக காணப்படலாம். மேலும்,கருப்பையின் வாய்ப்பகுதியில் ஈஸ்ட் உயிரிகளின் அதிக வளர்ச்சிக்கு வழியமைக்கலாம். இதர பக்க விளைவுகள் மற்ற மருந்துகளுடான ஒருங்கிணைந்த செயல்பாட்டிலிருந்து ஏற்படலாம். முறைப்படுத்திய வீரிய மருந்துகளுடன் குயினோலன் நுண்ணுயிர் எதிர்ப்பியை அளிக்கையில், தசைநார் சேதத்திற்கான அபாயம் அதிகரிக்கலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளின் திறனுடன் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறுக்கீடு என்பது இரு வழிகளில் உண்டாகிறது. செரிமானச் சுரப்பியின் மேம்படுத்துதல், சினைப்பருவ இயக்குநீர் (Oestrogen) குறைவாக உறிஞ்சப்படுவதை விளைவிக்கலாம். மேலும், கல்லீரல் நொதிகளின் தூண்டுதலானது, மருத்துவத்தின் செயல்படும் உட்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, மருந்தின் பயனை பாதிக்கலாம். இருப்பினும், பெரும்பாலான ஆய்வுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கர்ப்பத்தடைகளோடு குறுக்கிடாது என்றே குறிப்பிடுகின்றன. மிகச் சிறிய சதவிகிதத்திலான பெண்களே கர்ப்பத் தடை மாத்திரைகளின் குறைவான அளவுப் பயனை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் இவற்றை எடுத்துக்கொள்கையில் கர்ப்பத்தடை மருந்துகளின் தோல்வி விகிதம் அதிகரிக்கிறது. மேலும், செரிமானச் சுரப்பியில் ஏற்படும் குறுக்கீடு கர்ப்பத்தடையை பாதிக்கிறது என்பதை முற்றாக நிரூபிப்பதற்கான ஆய்வுகள் இல்லை. எதி்ர்பூஞ்சை மருந்தான கிரைசியோஃபல்வின் மற்றும் பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிக்கான ரிஃபாம்பிசின் ஆகியவற்றால் கல்லீரல் நொதிகளின் தூண்டுதல் மூலமான ஒருங்கிணைந்த வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரையுடனான ஒருங்கிணைப்பு கொள்ளலாம் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, இத்தகைய எதிர் நுண்ம மருத்துவங்களைப் பயன்படுத்துகையில் கூடுதலான கர்ப்பத்தடை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றனர். மது அருந்துதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அல்லது வளர்ச்சிதை மாற்றத்தில் குறுக்கிடலாம். இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயல்நீக்கம் செய்யும் கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டினைப் பாதிக்கலாம். மேலும், மெட்ரோனைடசால், டைனிடஸால், செபாமண்டோல், கெட்டாகானசோல், லேட்டமஃபோக்ஸ், செப்பெராசோன், செபானோக்ஸிம், மற்றும் ஃபுரோஸோலைடோன் உள்ளிட்ட சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மதுவுடன் வேதியியல் ரீதியாக எதிர்வினை புரியலாம். இதன் மூலம், கடுமையான வாந்தி, குமட்டல் மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சினை உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் உருவாகலாம். எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்கையில் மது அருந்துவது நல்லதல்ல. மேலும் சில சூழ்நிலைகளில், டாக்ஸிசைக்ளின் மற்றும் எரித்ரோமைசின் சச்சினேட் ஆகியவற்றின் ஊனீர் அளவுகள் மது அருந்துவதால் குறி்ப்பிடத்தகுந்த அளவிற்குக் குறைந்துபோகலாம். நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்புக்கள் என்பவை, முன்னர் அபாயமானவையாக அறியப்பட்ட நுண்ணுயிர்களுக்கான எதிர்ப்பிகளின் அளவுகளை நீட்டிக்கவும் மற்றும் அவற்றின் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுத்த உயிர்ப்பொருட்களின் அடிப்படையிலான செய்முறையில் அமைந்தவை. "ஒரு-முறை அற்புத குணப்படுத்தி" எனப் பயன்படும் பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குத் தற்போது நுண்மங்கள் மிகுந்த எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றின் திறன் குறைந்துள்ளது. மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தமக்குள்ளாகவே நுண்மங்களின் தொகுப்பிற்கான எதிர்ப்பை வளர்க்க உதவும் தேர்ந்தெடுத்த அழுத்திகளாகச் செயல்படுகின்றன என்பதோடு சந்தேகத்திற்குரிய நுண்மங்களையும் தடுக்கின்றன. 1943ஆம் ஆண்டு நிகழ்ந்த லூரியா-டெல்புருக் பரிசோதனை , நுண்மங்களின் தொகுப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நிலைமாற்றத்தினை நிரூபித்தது. நுண்மங்கள் நீடித்திருத்தல் திறனுள்ள தடுப்பினால் ஏற்படுகிறது. எந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பும் உயிரியல் செலவினத்திற்குக் காரணமாகலாம். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு நுண்மங்களின் பரவலானது, இத்தகைய தடுப்போடு தொடர்புற்ற குறைச் செயற்பாட்டின் இடையூறுக்கு ஆளாகலாம், இது நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லாதபோது நுண்மங்கள் நீடித்திருப்பதற்கான தீமைகளை நிரூபிக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பில் இத்தகைய உள்ளுறையும் மூலக்கூறு இயக்கவியல்கள் மாறுபடலாம். இயல்பான தடுப்பு நுண்மங்களின் மரபார்ந்த உருவாக்கத்தின் விளைவாக இவை இயல்பாகவே ஏற்படலாம். நுண்ணுயிர் எதிர்ப்பி இலக்காகக் கொள்ளும் புரதத்தை இலக்காக்கிக் கொள்வதில் நுண்ம உயிரணுக்கள் தோல்வியுறலாம். இத்தகைய தடுப்புக்கள் நுண்ம உயிரணுவில் ஏற்படும் நிலைமாற்றம் அல்லது கூடுதல்-உயிரணுக்கள் மற்றும் மரபணு பெறுதல் ஆகியவற்றினால் ஏற்படுகிறது. இவை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தயாரிப்பில், நுண்ம எதிர்ப்பி தடுப்பு அழுத்தத்திற்கு ஒத்வையாகவும் மற்றும் தடுப்பு இயக்கவியல்களை வளர்ப்பவையாகவும் உள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு இயக்கவியல்களின் பரவலானது, மரபணு பரிமாற்றத்தால் முந்தைய தலைமுறைகள் மற்றும் மரபணு மறுகலவையாக்கத்தினால் பெறப்பட்ட நிலைமாற்றங்களின் நெடுகிடையான மாற்றீட்டின் மூலமாக ஏற்படுகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு, பலதரப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான துணைத் தடுப்புக்களில் ஏற்படக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பை இலக்காக்கும் மரபணுக்களை பரிமாறிக்கொள்கிறது. இவற்றுடன் தொடர்புறாத நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வேறுபட்ட மரபணுக்களைச் சுமந்திருக்கின்றன. பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பிகளிலும் பிளாஸ்மிட் அணுக்கள் காணப்படுகின்றன. மாறாக, நுண்மங்களுக்குள்ளாக மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான குறுக்குவெட்டு-தடுப்பு என்பது, ஒரே தடுப்பு இயக்கவியலானது ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பொறுப்பேற்பதால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியை முறையற்றும், அதிக அளவிலும் பயன்படுத்துவது, தடுப்பு நுண்மங்கள் உருவாவதன் காரணிக்கு பங்களிப்பதாக அமையும். தகுதிவாய்ந்த மருத்துவவியலாளரின் வழிகாட்டுதல்கள் அன்றி தனி நபர்கள் தாமாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்வதனால் இப்பிரச்சினைகள் மேலும் மோசமடைகின்றன. மனித சிகிச்சைக்குத் தேவையற்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விவசாய வளர்ச்சி மேம்படுத்திகளாகப் பயன்படுகின்றன. சில நேரங்களில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவற்றின் பயன்பாட்டிற்கான உத்திரவாதமற்ற நிலையிலும் அறிகுறிகளுக்கென்று தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. சிகிச்சையின்றி தீர்வளிக்கக் கூடிய தொற்றுக்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஒருமுறை-அற்புத குணவூக்கிகளான பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு 1950ஆம் ஆண்டுகள் துவங்கி நுண்ணுயிர்த் தடுப்போடு தொடர்புற்றுள்ளது. மருத்துவமனைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பலதரப்பட்ட-நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நுண்மங்கள் அதிகரிப்பதோடு தொடர்புறுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு (எடுத்துக் காட்டாக பயணத்தின்போது தொற்றுக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள பயணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பியை மிகையாக பயன்படுத்துவது மற்றும் மருத்துவர்கள் தமது பரிந்துரைப்பில் நோயாளியின் எடை விபரத்தை நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்தும் முன்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளக் தவறுவது ஆகியவை) நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான பரிந்துரைப்பின் திறனைக் கடுமையாக பாதிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை முழுமையாக எடுத்துக்கொள்ளத் தவறுதல், சரியான தினசரி இடைவெளியில் துல்லியமான முறையில் பரிந்துரைக்க தவறுதல் அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறுதல் அல்லது தொற்று ஏற்பட்டுள்ள உறுப்புக்கள் குணம் அடையப் போதுமான அளவு ஓய்வளிக்கத் தவறுதல் ஆகியவற்றையும் உள்ளிடும். இத்தகையவை அனைத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் தடுப்பினால் நுண்மத் தொகுப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாகலாம். உரிய முறையில் அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பியின் தவறான பயன்பாட்டின் மற்றொரு வடிவமாகும். நச்சுயிரித் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தலும் அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு பொதுவான உதாரணம், இது சாதாரண ஜலதோஷம் போன்றவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. சுவாச உறுப்பு தொற்று குறித்த ஒரு ஆய்வு, அத்தொற்று தமக்கு இருப்பதாக நம்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரி்ந்துரைப்பபதாக அறிவிக்கிறது. இருப்பினும் அம்மருத்துவர்கள் அத்தகைய நோயாளிகளுள் நால்வரில் ஒருவரை மட்டுமே சரியாக நோய் கண்டறிகின்றனர் என்றும் அது உரைக்கிறது. மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சார்ந்த வேறு பல காரணிகளும் மற்றும் அவற்றின் குறுக்கீடுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உரிய முறையில் அல்லாது பரிந்துரைப்பதின் காரணமாக இருக்கலாம். சுவாச உறுப்பு தொற்றிற்கான தொடர்ச்சியான தீர்வை கண்டுபிடிக்கும் சமயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை 48 மணிநேரங்களுக்கு தாமதிக்கச் செய்வது நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாட்டைக் குறைக்கும். இருப்பினும் இந்த உத்தியானது நோயாளியின் திருப்தியைக் குறைத்துவிடலாம். நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் சில நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பபட்ட காலநிலையை மேம்படுத்துமாறு பரிந்துரைக்கின்றன. அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ), மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனங்கள் (என்டிஹெச்) மற்றும் சில உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவை, நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு குறித்த அமெரிக்க உள்முகமை வேலைக்குழு அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் மிகையான பயன்பாடு குறித்த பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் அவற்றின் பிரச்சினைகளை செயல்பாட்டு ரீதியாக அறிவிக்கும் நோக்கம் கொண்டுள்ளன. கீப் ஆண்டிபயாடிக்ஸ் ஒர்க்கிங் என்பது ஒரு என்ஜிஓ பிரச்சாரக் குழு. பிரான்ஸில், 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு "நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தானியங்கிகள் அல்ல" என்ற அரசு பிரச்சாரம் நுண்ணுயிர் எதிர்ப்பி பரிந்துரைப்புகளை குறிப்பாக குழந்தைகளிடத்தில் தேவையில்லாமல் செய்யப்படுவதை குறிப்பிட்ட அளவிற்கு குறைத்திருக்கிறது. பிரிட்டனில், 'துரதிருஷ்டவசமாக எந்த அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் உங்கள் ஜலதோஷத்தை நீக்குவதில்லை' என்பதைக் குறிப்பிடும் என்ஹெச்எஸ் சுவரொட்டிகள் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. பல நோயாளிகளும், நச்சுயிரித் தொற்றை குணப்படுத்த உதவும் என்று நம்புவதால், தங்கள் மருத்துவரிடமிருந்து முறையற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கேட்டுப்பெறுகின்றனர். விவசாயத்தில் வளர்ச்சி மேம்படுத்திகளாக, சிகிச்சைக்காக அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 70 சதவிகிதத்ததிற்கும் அதிகமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோயில்லாத நிலையில் விலங்குகளுக்கு (எ.கா.கோழிகள், பன்றிகள் மற்றும் ஆடுகள்) உணவாகத் தரப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. விலங்கு உணவு தயாரிப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்துவது "சல்மோனல்லா" எஸ்பிபி. "கேம்பிலோபேக்டர்" எஸ்பிபி., "எஷிரிச்சியா கோலி" , மற்றும் "எண்டரோகோகஸ்" எஸ்பிபி. உள்ளிட்ட நுண்மங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்போடு தொடர்புற்றுள்ளன. சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டுள்ள முடிவுகள், இத்தகைய நுண்மத் தடுப்புக்கள், பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்வினையாற்றாது மனிதர்களிடத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக் காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளன. இத்தகைய நடைமுறைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பிரச்சினைகளின் எதிர்விளைவாக சில நிறுவனங்கள் (எ.கா.தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோபயாலஜி (ஏஎஸ்எம்)), அமெரிக்கன் பப்ளிக் ஹெல்த் அசோஸியேஷன் (ஏபிஹெச்ஏ) மற்றும் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (ஏஎம்ஏ) ஆகியவை விலங்கு உணவு தயாரிப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கு அல்லாத பயன்பாடுகள் ஆகிய அனைத்தையும் நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளன. இருப்பினும், பொதுவாகவே, நுண்ணுயிர் எதிர்ப்பிகளி்ன் பயன்பாட்டை வரம்பிற்கு உட்படுத்துவதற்கான நெறிமுறை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தாமதமாகின்றன. அமெரிக்க விலங்கு உணவு தயாரிப்பில் சிகிச்சைக்காக அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு உள்நாட்டு மசோதாக்கள் (S.742 மற்றும் H.R. 2562) முன்மொழியப்பட்டுள்ளன. ஆயினும், அவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதாக்களுக்கு தி அமெரிக்கன் ஹோலிஸ்டிக் நர்ஸஸ் அசோஸியேஷன், தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் மற்றும் தி அமெரிக்கன் பப்ளிக் ஹெல்த் அசோஸியேஷன் (ஏபிஹெச்ஏ) உள்ளிட்ட பொதுச் சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் 2003ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி மேம்படுத்திகளாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. நுண்மத் தொற்றுக்களை பாதுகாப்பான முறையில் குணப்படுத்தும் உட்பொருட்களை அடையாளம் காண்பதானது, எளிய பூஞ்சை மற்றும் நச்சுயிரித் தொற்றுக்களின் சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில், சிக்கலானவை. உயிர் வேதியியலில் பெரும் முன்னேற்றங்களுக்கு வழியமைத்துள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி ஆராய்ச்சிகள் நுண்ம உயிரணு மற்றும் அவற்றின் மூலக்கூறு மற்றும் பாலூட்டிகளின் உயிரணுக்களுக்கு இடையிலுள்ள பெரும் வேறுபாடுகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளன. நுண்ம நச்சுத்தன்மை கொண்டுள்ள பல உட்பொருட்கள், மனித உயிரணுக்களில் அத்தகைய நச்சுத்தன்மை அற்றவையாக உள்ளன என்று இவை விளக்குகின்றன. இதற்கு முரணாக, பூஞ்சை உயிரணு மற்றும் பாலூட்டிகளின் உயிரணு அடிப்படைகளில் உயிர் வேதிமங்கள் மிகப் பொதுவானவையாக உள்ளன. இது பாலூட்டிகளின் உயிரணுக்களைப் பாதிக்காது, பூஞ்சை உயிரணுக்களை பாதிக்கும் சிகிச்சைப்பூர்வமான உட்பொருட்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டைத் தடைசெய்வதாக உள்ளது. இதைப் போன்ற பிரச்சினைகள் நச்சுயிரி நோய்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சைகளிலும் இருந்து வருகின்றன. இவை தொடர்பான கட்டுரைகளுக்குக் காண்க: பூஞ்சையாக்கம், பூஞ்சை-எதிர் மருந்து மற்றும் நச்சுயிரி-எதிர் மருந்து. பலமருந்துக் கூட்டின் தடுப்பு உயிரியப் பொருட்கள் (Multi Drug Resistant Organism) என்பவை, பொதுவாக வழமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருத்துவ அளவுகளால் பாதிக்கப்படாத நுண்மங்களை - குறிப்பாக அண்மைக் காலம் வரையிலும் அவற்றிற்குச் சிகிச்சையளிக்க பயன்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை- குறிப்பிடுகின்றன. இத்தகைய உயிர்ப்பொருட்களின் வளர்ச்சியானது, மாற்று எதிர்-நுண்ம சிகிச்சைகளுக்கான தேவையை உருவாக்கி உள்ளது. நுண்மங்களைத் தாக்குவதற்கான குறிப்பிட்ட நச்சுயிரிகளின் பயன்பாடான விழுங்கல் சிகிச்சை (phage therapy) அமெரிக்கா மற்றும் மேற்கத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இவை, நுண்மச் சூழலியலின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும், குடல் மற்றும் பிற நுண்ணியிர்சார் சூழ்நிலைகளில் குறிப்பிடத் தக்க அளவில், அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.. இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி பெருமளவிற்கு சிறிய குறிப்புகளாகவே உள்ளன. மூலப்பதிப்புகள் பொதுவாக அணுக்கமற்று உள்ளன. 1940ஆம் ஆண்டுகளில் பென்சிலினின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டிற்கான சிகிச்சை உத்திகளை மாற்றிக்கொண்டன. இருப்பினும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜார்ஜியா குடியரசில் உள்ள இலியாவா இண்ஸ்டியூட் ஆஃப் பாக்டீரியோபேஜ், நுண்ம மற்றும் நச்சுயிரி முறை சிகிச்சையின் பயன்பாட்டினைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இண்ட்ராலைடிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அறக்கட்டளைகள் தற்போது இத்தகைய சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. இருப்பினும், நச்சுயிரிகளின் மரபணுக் கட்டமைப்புக் குறித்த அக்கறையானது, இத்தகைய சிகிச்சையின் நோக்கங்களை வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது. நுண்மங்கள் மற்றும் அவை சார்ந்த சிகிச்சைகள் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பின் நோக்கங்களை தீர்ப்பதற்கான சாத்தியத்தை வழங்குகின்ற அதே நேரத்தில் மருத்துவத்தில் அவற்றிற்கான இடம் இன்னும் கேள்விக்குறியதாகவே உள்ளது. "பாக்டீரியோசின்" என்னும் மருந்து வழமையான சிறிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மாற்றாக வளர்ந்துவருகிறது.. பாக்டீரியோசின் மருந்தின் பல்வேறு வகைகள் சிகிச்சைப்பூர்வமான துணைப்பொருட்களாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய மூலக்கூறு பாக்டீரியோசின்கள் (உதாரணத்திற்கு மைக்ரோசின் மற்றும் லாண்டிபயாடிக்) வழக்கமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஒத்தவையாக இருக்கலாம். கோலிஸின் போன்ற பாக்டீரியோசின்கள் மிகவும் குறுகலான-பிரிவுப்பகுப்பாக இருக்கின்றன மற்றும் சிகிச்சைக்கு முந்தைய புதிய மூலக்கூறு அறுதியிடலைக் கோருகின்றன. பெரிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாதகமான ஒரு விடயம் அவை, சவ்வுகளை கடப்பது மற்றும் உடல் முழுவதும் படிப்படியாக பயணிப்பது ஆகியவற்றில் சிக்கலைக் கொண்டிருப்பதேயாகும். இதனால், அவை வெளிப்புற அல்லது குடல்வழிப் பயன்பாட்டினையே பெரும்பாலும் கொண்டுள்ளன.. இவை அமினோ அமிலங்கள் நிறைந்த புரதக் கூறுகளானதால், சிறிய மூலக்கூறுகளைக் காட்டிலும் நுணுக்கமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.. ஊட்டச்சத்து திரும்பப்பெறுதல் என்பதானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்றியமைத்தல் அல்லது அவற்றைக் கூடுதலாக அளிப்பதற்கான சாத்தியமுள்ள ஒரு உத்தியாகும். இரும்புச்சத்து கிடைக்கப்பெறுவதனால் நுண்மங்கள் பெருக்கதிற்கு மனித உடல் வரம்பிட இயலும்.. உடலிலிருந்து இரும்புச்சத்தை விடுவிப்பதற்கான இயக்கவியல் (நச்சுப்பொருட்கள் மற்றும் சைடெரோபோர்ஸ் போன்றவை) நோய் விளைக்கும் கிருமிகளுக்குப் பொதுவானதாகும். அந்தோபிலா அந்தோபிலா (Anthophila) அல்லது பூநாடி (அந்தோ-பூ, பிலா- நாடல்) அல்லது கொங்குதேரி என்பது அறிவியல் வகைப்பாட்டில் விலங்குலகில் ஆறுகாலிகள் தொகுதியில் பூச்சிகள் வகுப்பில் படல்ச் சிறகிகள் வரிசையில் "அப்போவைடியீ" பெருங்குடும்பத்தில் அடங்கிய பறக்கும் பூச்சிவகை உயிரி ஆகும். இது குளவிகளுக்கும் எறும்புகளுக்கும் நெருக்கமான உயிரினமாகும். தேனீ இப்பிரிவைச் சேர்ந்தது. தாவரங்களில் பொலன்சேர்க்கை, தேன் திரட்டல், தேன்மெழுகு ஆக்கம் தொடர்பாக பூநாடிகளைப் பற்றிப் பலரும் அறிவர். இவை ஒற்றைத்தொகுதி மரபு (monophyletic) சார்ந்தவை. இவற்றில் ஒன்பது குடும்பங்கள் அடங்கும் ஏறத்தாழ 20,000 அறியப்பட்ட இனங்கள் உள்ளன.]]. இவற்றுள் பல விவரிக்கப்படாதவையாக உள்ளதுடன் இவற்றின் உண்மையான எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இவை அண்டார்ட்டிக்கா தவிர்ந்த எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள வாழிடத் தொகுதிகள் அனைத்திலும் இவ்வகைப் பூச்சிகளால் பொலன்சேர்க்கை நிகழும் பூக்கும் தாவரங்கள் அமைந்துள்ளன. சில பூநாடிகள் இனங்களில் தேனீக்களும் கொடுக்கில்லா ஈக்களும் இசைவண்டுகளும் கூட்டங்கூட்டமாக சமூக வாழ்க்கையை மேற்கொள்கின்றன. பூநாடிகள் பூக்களின் தேன், பூந்தாது அல்லது பொலந்தூளை உண்கின்றன. சிறப்பாகத் தேன் இவற்றுக்கு ஆற்றல் ஊட்டுகிறது; பூந்தாது புரதம் முதலிய பிற ஊட்டப் பொருள்களை வழங்குகின்றன. பூந்தாதுக்கள் பெரும்பாலும் இவற்றின் இளவுயிரிகளாகிய குடம்பிகளுக்கு உணவாகின்றது. தேனீ பொலன்சேர்க்கை சூழலியலாகவும் பயிர் விளைச்சலுக்கு வணிகவியலாகவும் முதன்மையானதாகும்; காட்டுத் தேனீக்கள் அருகிவருவதால், அதை ஈடுகட்ட செயற்கைத் தேன்கூடுகளில் தேனீ வளர்ப்பு வணிகவியலாகப் பெருகி வருகிறது. பூநாடிகளுள் மிகவும் சிறிய இனம் "டிரைகோனா மினிமா" என்பதாகும். இவற்றுக்குக் கொடுக்குகள் இருப்பதில்லை. இவ்வினத்தைச் சேர்ந்த வேலையாள் பூச்சிகள் 2.1 மிமீ (5/64") நீளம் கொண்டவை. உலகில் காணப்படும் மிகப்பெரிய பூநாடியான "மெகாச்சிலே புளூட்டோ" என்னும் இனமாகும். இவ்வினத்தின் பெண் பூச்சிகள் 39 மிமீ (1.5") வரை நீளமாக வளர்கின்றன. வடவரைக் கோளத்தில் மிகப் பொதுவாகக் காணப்படுபவை.இவை ஆலிக்ட்டைடீ குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாகும். இவை சிறியனவான இவற்றைப் பெரும்பாலும் குளவிகளுடன் அல்லது ஈக்களுடன் குழம்பிக்கொள்கிறார்கள். முதுகெலும்புக் கொன்றுண்ணிகளில், தேனீ உண்ணும் பறவைகளும் தும்பிகளும் குள்ளநரிகளும் பூச்சிக் கொன்றுண்ணிகளாகும். பூநாடிகளுக்குத் தும்பிக்கை போன்ற உறிஞ்சுகுழல்கள் உள்ளன. இவை பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி எடுப்பதற்கு அவற்றுக்கு உதவுகின்றன. இவற்றுக்கு அமைந்துள்ள உணர்கொம்புகள் இப் பெரும்குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பூச்சிகளுக்கும் உள்ளதுடன், ஆண் பூச்சிகளுக்குப் 13 உடல் கண்டங்களும், பெண் பூச்சிகளுக்கு 12 உடல் கண்டங்களும் காணப்படுகின்றன. எல்லா பூநாடிகளும் ஈரிணை இறக்கைகளைக் கொண்டனவாக உள்ளன. இவற்றுள் பின்புற இறக்கைகள் இரண்டும் சிறியவை. சில இனங்களில் ஒரு பாலினமோ அல்லது ஒரு சாதியோ சிறிய இறகுகளைக் கொண்டிருப்பதுண்டு. இவ்வாறு சிறிய இறகுகளைக் கொண்டிருப்பவை பறப்பதற்குத் தொல்லைப்ப்படுவனவாக அல்லது பறக்க இயலாதனவாக இருக்கின்றன. எனினும் இறக்கைகள் இல்லாத பூநாடிகள் கிடையா. பூநாடிகளில் மிகவும் அதிகமாக அறியப்படுபவை தேனீக்கள் ஆகும். இவை பூக்களில் இருந்து தேனைத் திரட்டுகின்றன. இத்தேனை மனிதர்கள் தமது தேவைக்காக எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனுக்காகத் தேனீக்களை வளர்த்தல் தேனீவளர்ப்பு எனப்படுகின்றது.தேனீ வளர்ப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக, அத்தாவது குறைந்தது பண்டைய எகுபதியர், பண்டைய கிரேக்கர் காலம் முதலே, நடைமுறையில் உள்ளது. தேந்திரட்டல், பொலன்சேர்க்கையைத் தவிர, தேனீக்கள் தேன்மெழுகையும் அரசக்குழைவை எனும் கூழ்மப் பொருளையும் புரொபோலிசுவையும் தருகின்றன. இவை தொன்மவியல், நாட்டுப்புறவியல், அனைத்துக் கட்ட வளர்ச்சிநிலைக் கலை இலக்கியங்கள் ஆகியவற்றில் பண்டு முதல் இன்று வரை பாத்திரம் வகித்துவருகின்றன. இது குறிப்பாக வடக்கு அரைக்கோளத்தில் தேனீ வளர்ப்பு கூடுதலாக நடப்பில் இருந்துவருவதால் அப்பகுதிக்கு மிகவும் பொருந்தும். உயர்சமூக உயிரியாகிய அப்பினே/கார்பிகுலேட்டு அப்பிடே 87 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவிலும் அப்பிடேவின் அல்லோடாபினி 53 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவிலும் தோன்றியுள்ளன காலக்டிடே பிந்தைய ஒலிகோசீன் காலத்தில் (~25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில்) இருந்து தொடக்கநிலை மையோசீன் கால வரையிலான புதைபடிவங்களால் அறியப்பட்டுள்ளது. மெலிட்டிடே தொடக்கநிலை புத்துயிரிக் காலத்தில் இருந்தே நிலவியமை "பலயேமேக்கிரோபிசு இயோசெனிக்கசு" புதைபடிவங்களில் இருந்து அறியப்பட்டுள்ளது. மெகாச்சில்லிடே நடு புத்துயிரிக் காலத்தில் இருந்தே இலைவெட்டுகளின் புதைபடிவத் தடயங்களால் அறியப்பட்டுள்ளது. ஆந்திரேனிடே இயோசீன் - ஒலிகோசீன் இடையிலான காலத்தில் இருந்தே, அதாவது 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிரிந்தே பூப்படிவங்களால் அறியப்பட்டுள்ளன. காலிக்டிடே தொடக்கநிலை புத்துயிரிக் காலத்தில் with species இது ஆம்பரில் புதைபடிவமாக்க் கிடைத்துள்ளது. சுடெனோடிரைட்டிடே புதைபடிவ கூடுகளின் உயிர்க்களங்களில் இருந்து பிளிசுட்டோசீன் காலம் முதலே அறியப்பட்டுள்ளது. மேலிடான கிண்ண வடிவப் பூக்களில் வண்டுகல் பொலன்சேர்க்கையை நிகழ்த்தின. எனவே விலங்குவழிப் பொலன்சேர்க்கை எனும் விலங்கு- தாவரக் இணைவினை தேனீக்கள் தோன்றும் முன்பாகவே தோன்றிவிட்டது. ஒரே புதுமை தேனீக்கள் பொலன்சேர்க்கையைத் திறம்பட நடத்த தேவையான சிறப்பு பொலன்சேர்க்கை உறுப்புகளைப் புறநிலையாகவும் நட்த்தை வழியிலும் கொண்டமைந்ததே ஆகும். மேலும் இவை பொல்ன்சேர்க்கையில் மற்ரவற்ரை விட பேரளவில் ஈடுபடுகின்றன. இனைபடிமலர்சி முறையில், பூக்கள் பூக்குழல்களை நீளமாகப் பெற்றதோடு தேனும் செறிவாக அமையப் பெற்றன.அதேபோல, தேனீக்களும் தேன் நுகர்வதற்கேற்ப, நீளமான நாக்குகளைப் பெற்றன. தேனீக்கள் பூந்தாதைச் சேர்த்துக் கொண்டுசெல்லும் பொலன்பைகளையும் பொலன் தழுவும் மயிரிழைகளையும் பெற்றன. இவற்ரின் வகையும் இருப்பிடமும் தேனீக்களின் இனத்துக்கினம் வேறுபடுகிறது. பெரும்பாலானவற்ரில் பொலனிழை பின்ன்ங்கால்களிலோ அடிவயிற்றிலோ அமைகின்றன; அப்பிடே குடும்பத்தின் சிலவற்றில் பொலன்பைகளும் பின்ன்ங்கால்களிலேயே அமைகின்றன; சிலவற்றில் மட்டும் பொலன்பைகளே இருப்பதில்லை. அவை, மாறாக தம்முடலில் பொலந்தூளைத் திரட்டுகின்றன. This drove the adaptive radiation of the angiosperms, and, in turn, the bees themselves. தேனீக்கள் பூக்களுடன் மட்டுமே இணைபடிமலர்ச்சி அடையவில்லை; அவை சில உண்ணிகளுடன் கூட இணைபடிமர்ச்சி அடைந்துள்ளன. இந்தக் கவைவரைபடம் தெபேவிக் குழுவினர் (2012) ஆய்வைச் சார்ந்தது; இவர்கள் இந்த வகைப்பாட்டுக்கு மூலக்கூற்றுத் தொகுதிதோற்றவியலைப் பயன்படுத்தினர். அதன்வழி, பூநாடிகள் கிரேபிரானிடே குடும்பத்தில் இருந்து தோறியதாகவும் எனவே இவை இணைதொகுதி மரபினவென்றும் விளக்கிக் காட்டியுள்ளனர். எடெரொகைனைடேவில் இவற்றை வைத்தல் இன்னமும் உறுதிப்படவில்லை. சிறிய உள்குடும்பமாகிய மில்லினினே இவர்களது பகுப்பாய்வில் கருதப்படவில்லை. இந்தப் பூநாடிகளின் கவைவரைபடம் எடுதேக் குழுவினரின் (2013) வகைபாட்டில் இருந்து பெறப்பட்ட்தாகும். இது முதைய டாசிப்போடைடே குடும்பத்தையும் மெகானோமிலிடே குடும்பத்தையும் மெலிட்டிடே குடும்பத்தின் உள்குடும்பங்களாக்க் கருதுகிறது. அடைப்பில் ஆங்கிலப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. தருமபுரம் தருமபுரம் இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்து தொன்மவியலில் தருமதேவன் இயமன் இங்கு வழிபட்டது ஊர் காரணமாயிற்று. இறைவன் யாழ்முறிநாதர் என்ற பெயரிலும் இறைவி மதுரமின்னம்மை என்ற பெயரிலும் கோவில் கொண்டுள்ளனர். இக்கோவில் தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் இயங்குகிறது. சூரியசந்திர நாட்காட்டி சூரியசந்திர நாட்காட்டிகள் ("Lunisolar calendars") சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன. சீன,எபிரேய,இந்து நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.சப்பானிய நாட்காட்டி 1873 வரை சூரியசந்திர நாட்காட்டியாக இருந்தது.சீன,எபிரேய நாட்காட்டிகள் காலநிலை ஆண்டு|காலநிலை ஆண்டுடன் ஒருங்கிணைவதால் காலங்களை அவை பின்தொடர்கின்றன.புத்த,இந்து நாட்காட்டிகள் விண்மீன் ஆண்டு|விண்மீன் ஆண்டுடன் ஒருங்கிணைவதால் அவை முழுநிலவின்போதுள்ள விண்மீன் மண்டலங்களை பின்பற்றுகின்றன.திபெத்திய நாட்காட்டி சீன மற்றும் இந்திய நாட்காட்டிகளின் தாக்கத்தை உள்வாங்கியுள்ளது.செருமனியிலும் கிருத்துவ மதமாற்றத்திற்கு முன்னர் சூரியசந்திர நாட்காட்டியை பயன்படுத்தி வந்தனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாகும்;சூரியசந்திர நாட்காட்டி யல்ல.யூலியின் நாட்காட்டி மற்றும் கிரெகொரியின் நாட்காட்டி சூரிய நாட்காட்டிகளாகும்.இவற்றில் சந்திரனின் பிறைநிலைகள் குறிக்கப்படுவதில்லை.ஆனால் கிருத்துவ பண்டிகையான உயிர்த்த ஞாயிறு நாளை சூரியசந்திர நாட்காட்டியை ஒட்டியே தீர்மானிக்கிறார்கள். வானமாதேவி, காட்டுமன்னார்கோயில் வானமாதேவி (அங்கிலம்: "Vanamadevi"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். இதன் பெயரில் மற்றொரு ஊராட்சி கடலூர் அருகில் உள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45C) சேத்தியாத்தோப்புலிருந்து 10 கி.மீ தொலைவில் வானமாதேவி ஊராட்சி உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1769 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.8% ஆண்கள், 49.2% பெண்கள் ஆவார்கள். வானமாதேவி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். வானமாதேவி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் வானமாதேவி ஊராட்சி வழியாக செல்கிறது. மேலும் கடலூரிலிருந்து வடலூர் வழியாக கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் இவ்வூராட்சி வழியாக செல்கிறது. வானமாதேவி வானமாதேவி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: சிமா சியான் சிமா சியான் (Sima Qian) (கிமு 145 அல்லது 135 – கிமு 86) என்பவர், சீன வம்சக் காலத்துப் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். மஞ்சள் பேரரசர் தொடக்கம் பேரரசர் ஆன் வூடி வரையான 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியை உட்படுத்திய "பெரும் வரலாற்றாளர்கள் பற்றிய பதிவுகள்" என்னும் இவரது சீன வரலாறு பற்றிய நூல் பெரிதும் போற்றப்படுவது. இதனால், இவர் சீன வரலாற்றுவரைவியலின் தந்தை எனப்படுகின்றார். இவரது ஆக்கங்கள் பிற்காலத்தின் சீன வரலாற்றுவரைவியலுக்கு அடிப்படையாக அமைந்தன. சிமா சியான் இன்றைய சாங்சியின், ஆன்செங்குக்கு அருகின் இருந்த லாங்மென் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது குடும்பம் வரலாற்று வரைவாளர் குடும்பம் ஆகும். இவரது தந்தையாரும் பேரரசர் ஆன் வூடியின் அரசில் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். இவரது பணி அரச நூலகத்தை மேலாண்மை செய்வதும், நாட்காட்டி கவனித்தலும் ஆகும். தந்தையின் செல்வாக்கு காரணமாக சிமா சியான் தனது 10 ஆவது வயதிலேயே பழைய எழுத்தாக்கங்களைப் படித்திருந்தார். இவர் அக்காலத்தில் பெயர் பெற்ற கான்பூசியப் பெரியார்களான கொங் ஆங்குவோ, டொங் சொங்சூ ஆகியோருக்கு மாணவராக இருந்தார். இருபதாவது வயதில் அவரது தந்தையாரின் உதவியுடன் சிமா சியான் நாடு தழுவிய பயணம் ஒன்றைத் தொடங்கினார். இப் பயணத்தின்போது இவரது முதன்மை ஆக்கமான "சிசி"க்காக பல பயனுள்ள நேரடி வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார். பழைய கதைகள் வதந்திகள் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வதும், பழைய நினைவுச் சின்னங்களுக்குச் செல்வதுமே இவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சாண்டொங், யுனான், எபெய், செசியாங், சியாங்சு, சியாங்சி, உனான் ஆகிய இடங்களுக்கு இவர் பயணம் செய்தார். சூபித்துவம் சூபித்துவம் ("sufism", சூஃபிசம்) அல்லது தஸவ்வுப் (),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது., இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றப்பாடு என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாகும்.. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது. இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' (; ) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.வரலாற்று ரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும். இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்." ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர். மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து முதலாவது குலாபாஉர் ராஷிதீன் கலீபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது. இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன. சூபித்துவம் (தஸவ்வுப்) மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது. இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது. சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்ய, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன. சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர். "இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்". பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது), துறவறம் உடன் தொடர்புகொண்டிருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களிடையே ஆதரவைப் பெற்றது,முக்கியமாக ஆரம்பகால உமையாக்களின் உலகப்பற்றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகள் பாரசீகம், துருக்கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது. சூபி என்ற சொல் இரண்டு தோற்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.பொதுவாக, மூலச்சொற்கோவையில் இருந்து ஸபா(صَفا)என்று கண்டறியப்பட்டுள்ளது.இதன் அரபு மொழிபெயர்ப்பு "தூய்மை" என்பதாகும்.அடுத்த தோற்றம்,சூப்(صُوف)"கம்பளி" என்பதாகும்.இது ஆரம்ப கால முஸ்லிம் துறவிகள் அணிந்திருந்த எளிய போர்வையை குறிக்கின்றது. இவ்விரண்டும் சூபி என்ற சொல்லால் இணைக்கப்பட்டுள்ளது. "சூபி என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி குறிப்பிடுகிறார். அஹ்லுஸ்ஸுப்பா ("நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்") என்ற வார்த்தையிலிருந்து சூபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக ஏனையோர் பரிந்துரைக்கின்றனர். அஹ்லுஸ்ஸுப்பா என்போர் முஹம்மது நபியின் வறுமையான தோழர்களாவதுடன், இவர்கள் அன்றாட ஸிக்ர் கூட்டங்களில் இருந்தவர்களாவர். அப்துல் கரீம் இப்ன் கவ்ஸின் குசைரி மற்றும் இப்னு கல்தூன் ஆகிய இருவரும் சூப் என்ற மொழிசார்ந்த வார்த்தையை தவிர ஏனைய சாத்தியங்களை நிராகரிக்கின்றனர். சூபி என்ற வார்த்தை சோபியா (σοφία) என்ற அறிவு என்ற கருத்தையுடைய கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாக மத்திய காலத்திற்குரிய அறிஞர் அபுரய்ஹான் அல்-பிரூனி குறிப்பிடுகிறார். சூபிசம் பாதைக்குள் பிரவேசிப்பதற்கு, தேடுபவர் ஓர் குருவை தேடுவதன் மூலம் இது ஆரம்பிக்கின்றது. குருவின் உடனான தொடர்பு ஏற்படுவதன், மாணவனின் தேவையான வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. குரு உண்மையானவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறார். இவர், இதே சூபி வழியிலுள்ள இன்னுமொரு குருவிடம் இருந்து கற்பிப்பதற்கு, முஹம்மது நபி வரையில் செல்லக்கூடிய முறியாத அங்கீகாரத்தை(இஜாஸா) பெற்றிருக்க வேண்டும். பிரபலமான சூபிகளில் ஒருவரான அலி-ஹுஜ்விரி போன்றவர்கள்,இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடர்கின்றதுடன், அலி அவர்கள் சூபிசத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளின் செய்காக காணப்படுகிறார் என குறிப்பிடுகிறார்.சூபிசம் பயிற்சியாளர்கள், அதன் ஆரம்ப நிலை சூபிச முன்னேற்றத்தை திறமையான முறையில் கொண்டிருக்கின்றனர், இதில் இஸ்லாமிய சிந்தினைக்கு மேலதிமாக ஒன்றுமில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஒரு கண்ணோட்டத்தின் படி, இதன் தோற்றமும், முன்னேற்றமும் குர்ஆனில் இருந்து நேரடியாக பெறப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் அனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூபிசத்தால் செயற்படுத்தப்பட்டது. அப்துல்லாஹ் பின் பய்யாஹ் (பி. 1935) – சவூதி அரேபியா ஹபீப் அலி அல் ஜிப்ரி (பி. 1971) – யெமன் ஹபீப் உமர் பின் ஹபீச் (பி. 1962) – யெமன் முஹம்மத் அலவி அல் மாலிகி (1944–2004) – சவூதி அரேபியா அப்துல் ஹாமித் கிஷ்க் (1933–1996) – எகிப்து அப்துல் காதிர் ஸூபி (பி. 1930) – தென் ஆபிரிக்கா ஜிப்ரீல் புவாத் ஹத்தாத் (பி. 1960) – லெபனான் முஹம்மத் அல் யாகூபி (பி.. 1963) – சிரியா முஹம்மத் இப்னு அல்ஹபீப் (1876–1972) – மொரோக்கோ முஹம்மத் ஸெய்யித் தன்தாவி (1928–2010) – எகிப்து நூஹ் ஹா மீம் கெல்லர் (பி 1954) – ஜோர்தான் வஹ்பா துஹைலி (பி. 1932) – சிரியா யூசுப் அன் நபானி (1849–1932) – பலஸ்தீன் அப்துல்ஹகீம் முராத் (பி. 1960) – ஐக்கிய இராச்சியம் பிரித்ஜொஃப் ஷொவ்ன் (1907–1998) – சுவிஸ் முஹம்மத் இம்தாத் ஹுஸைன் பிர்ழதா (பி. 1946) – ஐக்கிய இராச்சியம் கிழக்கு ஐரோப்பா ஜுஸைன் ஹில்மி இஷாக் (1911–2001) – துருக்கி கலாநிதி தைக்கா ஷுஐபு ஆலிம் ஸித்தீக்கீ (பி. 1930) – தமிழ்நாடு, இந்தியா அப்துல் லதீப் சவ்தூரி புல்தாலி (1913–2008) – பங்களாதேஷ் அஹமத் ரஸா கான் (பி. 1943) – இந்தியா மெஹர் அலி ஷா (1859–1937) – இந்தியா கமருஸ் ஸமான் அஸ்மி (பி. 1946) – இந்தியா ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் (1909–1968) - இந்தியா ஸெய்யித் அப்துல் ஹை பின் அப்துர் ரஹ்மான் முஹம்மத் கோயாத்தங்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் (1927–2005) - இந்தியா ஸெய்யித் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (பி. 1941), அக்கரைப்பற்று- இலங்கை தாஹிருல் காதிரி (பி. 1951) – பாகிஸ்தான் முஹம்மத் அப்துல் அலீம் ஸித்தீக்கி (1892–1954) – சிங்கப்பூர் முஹம்மத் மா ஜியான் (1906–1978) – சீனா ஸெய்யித் முஹம்மத் நகீப் அல் அத்தாஸ் (பி. 1931) – மலேசியா நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழீழ அரசு ("Provisional Transitional Government of Tamil Eelam") என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. பன்னாட்டு அமைப்பாக நிறுவப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே, ஐக்கிய இராச்சியம் உட்படப் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக விசுவநாதன் உருத்திரகுமாரன் உள்ளார் இவ்வமைப்பின் அங்கத்தவர்களைத் தெரிவதற்காக இலங்கை தவிர்த்து வெளிநாடுகளில் வதியும் இலங்கைத் தமிழரிடையே மே 2010 இல் தேர்தல்கள் இடம்பெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்காக வி. உருத்திரகுமாரன் தலைமையில் பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று 2009 ஜூன் 16 அமைக்கப்பட்டது. போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு 2010, மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின், பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் வலைதளம் பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். ராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார். ராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சமீன்தார்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும், தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார். 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். ஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே ஆண்டு பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார். 1923 ஆம் நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கிப் சிறப்பித்தது. பனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையை வளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னை நகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார். பனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார். அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றன. மகரந்தச் சேர்க்கை மகரந்தச்சேர்க்கை ("pollination") என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்கள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன. வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தத்தூள்கள் நேரடியாகவே சூல்கள்மீது இடப்படுகின்றன. வித்துத் தாவரங்களின் பூக்களில் உள்ள சூல்முடியே சூல்வித்திலைகளின் ஏற்கும் பகுதியாகும். வித்துமூடியிலிச் சூல்களில் ஏற்கும் பகுதி சூல்துளை எனப்படுகின்றது. பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்தில், மகரந்தச்சேர்க்கை ஒரு முக்கிய படி ஆகும். இவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் மரபியல் பல்வகைமைத் தன்மை கொண்ட தாவரங்கள் உருவாகின்றன. மகரந்தச்சேர்க்கை பற்றிய ஆய்வு தாவரவியல், தோட்டக்கலை, பூச்சியியல், சூழலியல் போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கின்றது. மகரந்தச்சேர்க்கையை, பூக்களுக்கும், மகரந்தக்காவிகளுக்கும் இடையிலான இடைவினையாகக் கொண்டு முதலில் ஆய்வு செய்தவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தியன் கொன்றாட் இசுப்பிரெங்கெல் என்பவராவார். மகரந்தச்சேர்க்கையின் விளைவான கருக்கட்டல் மூலம் உருவாகும் "காய்த்தல்" தோட்டக்கலையிலும், வேளாண்மையிலும் முக்கியமான ஒன்றாகும். மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்குத் தேவையான ஊடகத்தை அல்லது காவியைப் பொறுத்து, இது வகைப்படுத்தப்படலாம். அனேகமாக, கிட்டத்தட்ட 80% மான மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு உயிருள்ள காவி அல்லது உயிரினம் பயன்படுவதாக நம்பப்படுகின்றது. அதாவது ஆண் பாலணுக்களான மகரந்த மணிகளை, பெண் பாலணுக்களான சூல்வித்திலைகளுக்கு கொண்டு செல்வதில் வேறொரு உயிரினம் பயன்படுகின்றது. அப்படியான காவிகளைக் கவர பூக்கள் விசேடமான இயல்புகளைக் கொண்டுள்ளன. காவிகளைக் கவரும் விதமாக அவை அழகான கவர்ச்சிகரமான பூவிதழ்களைக் கொண்டிருக்கும். நறுமணம், மற்றும் அவற்றிற்கான உணவான தேன் என்பவற்றைக் கொண்டிருக்கும். பூக்களில் உணவுண்ணும்போது, அல்லது இனவிருத்திக்கான செயலில் ஈடுபடும்போது, அல்லது எதிரிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடமாக பூவை பயன்படுத்தும்போது, இவை பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகின்றன. இயற்கையில் கிட்டத்தட்ட 200,000 வகையான விலங்கு மகரந்தக்காவிகள் இருக்கின்றன. அவற்றில் அனேகமானவை பூச்சியினங்களாகும். எறும்பு, வண்டு, தேனீ, குளவி (wasp), பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி (moth), இருசிறகிப் பூச்சிகள் என்பன காவிகளாகத் தொழிற்படும் பூச்சி இனங்கள் ஆகும். பறவைகளும், வெளவாலும் மகரந்தச் சேர்க்கையில் காவியாகத் தொழிற்படும் சில முதுகெலும்பிகளாகும். மனிதர்களும் மகரந்தச் சேர்க்கையில் உதவுகின்றனர். பூக்களைத் தொடும்போது அவர்கள் தம்மை அறியாமலே கூட மகரந்தத்தைக் காவ முடியும். சில சமயம் தெரிந்தே, செயற்கையான மகரந்தச் சேர்க்கை முறையில் செயல்பட முடியும். வேறு எந்தவொரு உயிரினத்தின் துணையுமின்றி மகரந்தச் சேர்க்கை நடைபெறலாம். 10% மான பூக்கும் தாவரங்களில் மட்டுமே வேறு விலங்குகளின் உதவியின்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்வதாக அறியப்படுகின்றது. பொதுவாக இவ்வகையான மகரந்தச் சேர்க்கை காற்றின் துணையுடன் நிகழும். புற்கள், ஊசியிலை மரங்கள் (conifers), இலையுதிர்க்கும் மரங்கள் போன்றன காற்றின் அசைவினால் மகரந்த மாற்றீட்டைப் பெறுகின்றன. நீர்வாழ் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் நீர் உதவுகின்றது. நீரினுள் வெளியேறும் மகரந்தமானது, பெண் பாலணுவில் பெறப்பட்டு கருக்கட்டலுக்கு உட்படும். வித்துமூடியிலித் தாவரங்களில் காற்றினால் நிகழும் மகரந்தச் சேர்க்கை மட்டுமே நிகழும். உயிரற்ற ஊடகத்தால் நிகழக்கூடிய 20% மகரந்தச் சேர்க்கயில் 98% காற்றினாலும், 2% நீரினாலும் நிகழும். தாவரங்களில் மகரந்தச் சேர்க்கையானது முக்கியமாக இரு வகை பொறிமுறையில் நிகழும். அவையாவன தன் மகரந்தச் சேர்க்கை, அயன் மகரந்தச் சேர்க்கையாகும். இயற்கையிலேயே இந்த பொறிமுறைகள் நிக்ழவதாயினும், மனிதரால் இதனை கட்டுப்படுத்தி, விரும்பிய பொறிமுறையில் செயற்கையாக மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்த முடியும். ஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாயின் அது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும். தன் மகரந்தச் சேர்க்கை நிகழும் தாவரங்களில், பொதுவாக, ஒரே பூவில் மகரந்தக்கேசரமும் (stamen), சூல்வித்திலையும் (carpel) காணப்படும். இது பொதுவாக தற்கருக்கட்டலுக்குட்படும் தாவரங்களைக் கொண்ட இனமாக இருக்கும். மகரந்தக் கேசரத்தில் இருக்கும் மகரந்தம், நேரடியாகவே சூல்வித்திலையில் இருக்கும் ஒட்டும் தன்மை கொண்ட சூல்முடி (அல்லது குறி அல்லது சூல்மூடி) (Stigma) யில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறையில் ஈடுபடும். சில அவரை இனத் தாவரங்கள், புல் வகைத் தாவரங்கள், ஓர்கிட் வகைத் தாவரங்கள் இவ்வாறான தன் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரங்களாக இருக்கும். இவற்றின் பூக்கள் சில சமயம் பூவிதழ்களாக் மூடப்பட்ட ஆண், பெண் பாலுறுப்புகளைக் கொண்டிருக்கும். தொடர்ந்து தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படும் தாவர இனங்களில் வேறுபாடுகள் தோன்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவும், அவை வீரியம் குறைந்தவையாகவும் வர நேரிடலாம். ஒரு தாவரத்தில் இருக்கும் சூல்வித்தானது, வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கருக்கட்டப்படுமாயின் அது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும். இந்த பொறிமுறைக்கு ஒரு பூவிலிருந்து, இன்னொரு பூவிற்கு மகரந்தம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமாதலால் காவிகளின் தேவை அவசியமாகின்றது. அனேகமான தாவரங்கள் அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுவதனால் தாவர மரபியல் வேறுபாடுடைய இனங்கள் உருவாக முடிகின்றது. இவ்வகையான தாவரங்களில் பெண் பூக்கள் ஒரு தனியனிலும், ஆண் பூக்கள் வேறொரு தனியனிலும் இருப்பதுண்டு. ஒரே தாவரத்தில் இரு பகுதிகளும் இருக்குமாயின், சில சமயம், சூல்வித்து முதிர்ச்சியடைந்து மகரந்தத்தை ஏற்கும் தன்மையடைய முன்பாகவே மகரந்தம் முதிர்ச்சியுற்று விழுந்து விடுவதுண்டு. உருவவியல் காரணிகளும் தன் மகரந்தச் சேர்க்கையை நடைபெற விடாமல் தடுக்கக் கூடும். சூல்முடியானது மகரந்தக்கேசரத்தின் உயரத்தை விட அதிகமாக இருப்பின், மகரந்தச் சேர்க்கைக்கு, வேறொரு காரணியின் தேவை ஏற்பட்டு, அதன் காரணமாக அயன் மகரந்தச் சேர்க்கை நிகழும் வாய்ப்பு அதிகரிக்கும். மகரந்தம் மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றும் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும். ஒவ்வொரு மகரந்தமணியும் பதியக் கலங்கள், ஒரு பிறப்பாக்கிக் கலம், ஒரு குழாய்க்கரு, ஒரு பிறப்பாக்கிக் கரு என்பவற்றைக் கொண்டிருக்கும். பெரும்பாலான தாவரங்களின் மகரந்த மணி ஒவ்வொன்றிலும் ஒரு பதியக் கலமே இருக்கும். சில தாவரங்களில் பல பதியக் கலங்கள் இருப்பது உண்டு. பிறப்பாக்கிக் கரு பிரிந்து இரண்டு ஆண் பாலணுக் கலங்களை உருவாக்கும். இந்தக் கலக் கூட்டத்தைச் சுற்றி செலுலோசினால் ஆன கலச் சுவர் இருக்கும். மகரந்தம் நுண்வித்திக்கலனில் உற்பத்தியாகிறது. மகரந்தமணிகள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும், மேற்பரப்புத் தன்மைகளுடனும் காணப்படுகின்றன. பைன் போன்ற தாவரங்களின் மகரந்தமணிகள் சிறகமைப்புக் கொண்டவை. மிகச் சிறிய மகரந்தமணிகள் 6 மைக்குரோமீட்டர் (0.006 மிமீ) விட்டம் கொண்டவை. காற்றினால் பரவும் மகரந்தமணிகள் 90 - 100 மைக்குரோமீட்டர் வரையான விட்டம் கொண்டவையாக இருக்கலாம். மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல் எனப்படுகின்றது. இது, தொல்லுயிரியல், தொல்லியல், சட்டமருத்துவத் தடயவியல் போன்ற துறைகளுக்கும் பயனுள்ள ஒரு துறையாக உள்ளது. மகரந்தத்தின் ஸ்போரோபோல்லேனின் எனகூடிய வெளிச்சுவர் படிமம் ஆவதற்கு துணை புரிகிறது. இது மற்ற பகுதிகளை அழித்து விடுகிறது. மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல், இவ்வாறாக கிடைக்கின்ற படிம மகரந்த துகள்களைக்கொண்டு, பழங்கால வாழ்வியல் மாற்றங்களையும் மற்றும் பழங்கால வானியல் காலநிலைகளையும் அறிந்துகொள்ளஉதவுகிறது. சீன நாட்காட்டி சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி "நல்லநாள்" தெரிந்தெடுக்கவும் பயனாகிறது. சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி() எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது. சீன நாட்காட்டியை ""விவசாய நாட்காட்டி"" () கிரெகொரியின் நாட்காட்டியை ""பொது நாட்காட்டி"" () என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" () எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" ()எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை "புதிய நாட்காட்டி" () எனவும் சீன நாட்காட்டியை "பழைய நாட்காட்டி"() எனவும் கூறுவதும் உண்டு. 2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது. ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் ( "shí'èr shēngxiào", "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது "shí'èr shǔxiàng", "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig). தற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் "Wǔnián" ஆண்டாகும். சந்திர சுற்றுப்பாதையின் முறையற்ற தண்மை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதலே அறியப்படுகிறது என்றாலும், 619ஆம் ஆண்டு வரை மாதங்களின் துவக்கம், சூரியன் மற்றும் சந்திரனின் சராசரி இயக்கத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது. இந்து நாட்காட்டியைப் போலவே, சீன நாட்காட்டியும் சூரியசந்திர நாட்காட்டயே. சீன நாட்காட்டியில் ஒரு நாள் என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் உள்ளது போல நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை கணக்கிடப்படும். நவீன சீனாவில் ஒரு நாளை, மேற்கத்திய பாணியில் மணி-நிமிடம்-நொடி என பிரித்துள்ளனர். ஆனால் பழைய தரம் இன்னும் சில வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாட்கள் பல்வேறு வகையான வாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை சீன நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒன்பது முக்கிய திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் ஏழு திருவிழாக்கள் நிலவு நாட்காட்டியை கொண்டும், மற்ற இரண்டு திருவிழாக்கள் சூரிய விவசாய நாட்காட்டியினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய நிலவு நாட்காட்டியின் துல்லியமற்றத்தன்மையினால் விவசாயிகள் உண்மையில் பயிர்களை பயிரிடும் காலத்தை தீர்மானிக்க சூரிய நாட்காட்டியை பயன்படுத்தினர். இருப்பினும் பாரம்பரிய நிலவு நாட்காட்டியே விவசாயிகளின் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. க்விங் மிங் திருவிழா மற்றும் குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா ஆகியவை முக்கியமான விடுமுறை தினங்கள் ஆகும். பாலணு பாலணு அல்லது புணரி (Sex cell or Gamete) என்பது, பாலியல் அடிப்படையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில், கருக்கட்டலின்போது, இன்னொரு பாலணுவுடன் சேரும் ஆற்றலுள்ள ஒரு கலம் ஆகும். ஒரு இனம் உருவவியல் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட வகையான பாலணுக்களை உருவாக்குமாயின், அவை "பெண் புணரி" அல்லது கருமுட்டை என்றும், "ஆண் புணரி" அல்லது விந்து எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு உயிரினத்தின் ஒரு தனியன் ஒரு வகைப் பாலணுவை மட்டும் உருவாக்குமாயின், அவை உருவாக்கும் பாலணுக்களின் தன்மைக்கேற்ப பெண், ஆண் தனியன்களாக இருக்கும். பெண் பெரிய பாலணுவையும், ஆண் சிறிய பாலணுவையும் உருவாக்குகின்றன. ஆண் பாலணு "விந்து" எனவும், பெண் பாலணு "கருமுட்டை" எனவும் அழைக்கப்படுகின்றன. இது, ஆண், பெண் பாலணுக்கள் வெவ்வேறு அளவுகளில் அமையும், மாறுபட்ட பாலணு இணைவு அல்லது பல்லினப் புணரித்தன்மை நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். மனித இனத்தின் நிலையும் இத்தகையதே. மனித இனத்தில் கருமுட்டைகள், விந்துக்களிலும் 20 மடங்கு பெரியவை. மாறாக, ஒத்த பாலணு இணைவு என்பதில் ஆண், பெண் பாலணுக்கள் இரண்டும் ஒரே அளவையும் வடிவத்தையும் கொண்டவை. பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத் தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை மரபணுக்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில், சாதாரண உயிரணுக்களில் 23 சோடி நிறப்புரிகள் இருக்கும். இவற்றில் ஒரு சோடி நிறப்புரிகள் பாலின வகையை, அதாவது ஒரு குறிப்பிட்ட தனியன் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கும். பாலினத்தைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் பாலின நிறப்புரிகள் எனவும், ஏனையவை தன்நிறப்புரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பாலின நிறப்புரிகள் X, Y என இருவகைப்படுகின்றன. அவற்றில் XX நிறப்புரிச் சோடிகள் இருப்பின் பெண்ணாகவும், XY நிறப்புரிச் சோடிகள் இருப்பின் ஆணாகவும் இருக்கின்றன. பாலணுக்கள் உருவாகும்போது, ஒவ்வொரு பாலணுவும் சாதாரண உயிரணுவில் இருக்கும் நிறப்புரிச் சோடிகளில் இருந்து, ஒவ்வொரு நிறப்புரியை மட்டுமே பெற்று உருவாதலால், 23 தனி நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டை X நிறப்புரிகளை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y நிறப்புரிகளைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பாலின வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே ஆகும். பால் வகையைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y நிறப்புரியைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும். இந்திய வானியற்பியல் நிலையம் இந்திய வானியற்பியல் நிலையம் (இந்திய வானியற்பியல் கழகம்), வானியல், வானியற்பியல், இவை தொடர்பான இயற்பியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மை நிறுவனமாகும். இதன் முதன்மை வளாகம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது. இதைத் தவிர இந்நிலையத்தின் அங்கங்களாக உள்ள ஆய்வரங்கங்களும் ஆய்வகங்களும்: மகரந்தக்காவி மகரந்தக்காவி ("pollinator") என்பது ஒரு பூவின் ஆண் மகரந்தக்கூட்டில் இருந்து, இன்னொரு பூவின் சூல்மூடிக்குக் காவிச் செல்லும் ஒரு உயிரியைக் குறிக்கும். இதன் மூலம், மகரந்த மணிகளினால், பெண் பாலணுக்கள் கருவுறுவதற்கு இவை உதவுகின்றன. எவ்வகையான மகரந்தக்காவிகளைத் தம்பால் ஈர்க்கின்றன என்பதைப் பொறுத்துத் தாவரங்கள் வெவ்வேறு மகரந்தச்சேர்க்கை அறிகுறி வகைகளுள் அடங்குகின்றன. இவ்வறிகுறிகள் பொதுவாக, பூவின் அளவு, அல்லிவட்டத்தின் ஆழமும் அகலமும், நிறம், மணம், தேனின் அளவு, தேனின் சேர்மானம் போன்ற இயல்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, பறவைகள், நீண்ட ஒடுக்கமான குழாய்களாக அமைந்த செந்நிறமும், மிகுதியான தேனையும் கொண்ட பூக்களினால் கவரப்படுகின்றன. ஆனால், இவை அகலமானவையும், குறைவான தேனையும், மிகுதியான மகரந்தத்தையும் கொண்ட பூக்களினால் கவரப்படுவதில்லை. இத்தகைய பூக்கள் வண்டுகளைக் கவர்கின்றன. இவ்வாறான இயல்புகளை சோதனைக்காக மாற்றும்போது மகரந்தக்காவிகளின் வருகை குறையலாம். அந்தோபிலா வகையைச் சேர்ந்த பல இனங்கள் மகரந்தக்காவிகளாகச் செயற்படுகின்றன. இவை இதற்காகச் சிறப்பாக்கம் பெற்றுள்ளன. தேனீக்கள் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குச் சென்று தேனையும், மகரந்த மணிகளையும் சேகரிக்கின்றன. மகரந்தக் கூடுகளில் உரசுவதன் மூலம் இவை மகரந்தமணிகளைச் சேகரிக்கின்றன. மகரந்தம் இவற்றின் பின் கால்களில் காணப்படும் மகரந்தக் கூடை என்னும் அமைப்பினுள் சேர்கின்றது. தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் செல்வதால் ஒரு பூவில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த மணிகள் இன்னொரு பூவின் சூல்மூடிகளைச் சென்றடைகின்றன. பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி என்பவற்றை உள்ளடக்கிய லெபிடோப்டெராக்கள் குறைந்த அளவில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை உணவுப் பயிர்களுக்கான முக்கிய மகரந்தக்காவிகள் அல்ல. ஆனால், பலவகை அந்துப்பூச்சிகள், காட்டுப்பூக்களிலும், புகையிலை போன்ற சில வணிகத் தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை தவிர குளவிகள், வண்டுகள் என்பனவும், சில சமயங்களில் எறும்புகளும்கூட மகரந்தக் காவிகளாகச் செயல்படுகின்றன. வௌவால்கள் சில வெப்பவலயப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகின்றன. இவற்றுடன் பல்வேறு பறவைகளும் மகரந்தக் காவிகளாகத் தொழிற்படுகின்றன. இவற்றுடன், குரங்குகள், லெமூர்கள், ஊர்வன, பல்லிகள் போன்ற முதுகுநாணிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு ஓரளவு உதவுகின்றன. மந்திரம் அறிவியல் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பு, மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இயற்கையின் சீற்றத்தில இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் இருந்தனர். அப்போது மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் மீறிய ஆற்றல் இருக்கிறது என்று நம்பி அவ்வாற்றலின் துணையுடன் இயற்கையின் பலன்களைப் பெற முயற்சித்தான். பின்னர் அவ்வாற்றலைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்த வழிமுறைகளை மேற்கொண்டனர். இவ்வாறு கையகப்படுத்திய ஆற்றலை சில சூத்திரங்கள் அல்லது வாய்ப்பாட்டுக்களாக சுருக்கி உச்சரிப்பதன் மூலம் பெறலாம் என்று நம்பினான். அதுவே மந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு அவர்களுடைய சூத்திரமும், சைகையும் முறையாக அமையும் போது ,அவர்கள் தொடர்பு கொள்ளப் போகும் சக்தி தனக்கு கீழ்ப்படிந்து நடக்கும் என்று நம்பினான். இதற்கு பலவிதமான சடங்குகளையும், வழிபாடுகளையும், கடுமையான உடல் வருத்தும் செயல்களையும் மேற்கொண்டனர். இது ஆதிகால மக்களின் தொழில்நுட்ப பற்றாக்குறையை போக்க தோன்றிய ஒரு கற்பனைத் தொழில் நுட்பம் என்று சொல்லலாம். பிரேசர் (Frazer) பல்வேறு பண்பாடுகளில் மந்திரம் எத்தகைய வடிவங்களைக் கொண்டுளளது என்று ஆய்வு செய்து அவற்றின் தன்மைகளை விளக்கியுள்ளார். ஆதிகால மக்களின் வாழ்க்கையில் மதம், தெய்வம், வழிபாடு, என்று எதுவும் இல்லை. மந்திரம் மட்டுமே இருந்தது. இந்த மந்திரம் ஆக்க நிலை சார்ந்ததாகவோ (Positive) அல்லது எதிர்மறை சார்ந்ததாகவோ (Negative) இருக்கலாம். இந்த மந்திரத்தின் செயல்பாடுகள் இரு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார் முதல் கோட்பாடு ஒத்தவிதி (Law of similarity) எனப்படும். இவ்விதியோடு தொடர்புடைய மந்திரம் ஒத்த மந்திரம் (Homeopathic magic) அல்லது பாவனை மந்திரம் (Imitative magic of Mimic magic) எனப்படும். இரண்டாவது கோட்பாடு தொடர்பு அல்லது தொற்று விதி (Law of contact) எனப்படும். இதனோடு தொடர்புடைய மந்திரம் தொற்று மந்திரம் (Contagious magic) எனப்படும். பழங்கால மக்களின் கற்பனை தொழில்நுட்பமாக விளங்கிய மந்திரம் 1. விருப்பம் 2. செயல் 3.சொல் என்று மூன்று உடகூறுகளாக பெரும்பாலும் அமைந்தது. இவற்றுள் விருப்பம் என்றது அடைய வேண்டிய பயனைக் குறிக்கும். செயல் என்பது மந்திர சடங்கு (Magic rites) ஆகும். சொல் என்பது மந்திர சொற்கள் (Spells) மற்றும் மந்திர சூத்திரங்களைக் (Formulae) குறிக்கும். காலப்போக்கில் ஆதிகால மக்கள் மந்திர ஆற்றலை அவரவர் விருப்பம் போல் பயன்படுத்த தொடங்கினர். அவற்றின் அடிப்படையில் தூய மந்திரம்(White Magic), தீய மந்திரம்(Black Magic), உற்பத்தி மந்திரம்(Productive Magic), பாதுகாப்பு மந்திரம்(Protective Magic), அழிப்பு மந்திரம் (Destructive Magic) என பலவாறாக அமைந்தன. வேளாண்மை, வேட்டை, யுத்தம், மருத்துவம் ஆகிய துறைகளில் தனிமனிதன் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் தூய மந்திரம் பயன்படுத்தப் படுகின்றது. செழிப்பை வேண்டிச் செய்யப்படும் செழிப்புச் சடங்குகள் யாவும் தூய மந்திரத்தினுள் அடங்கும் உற்பத்தி மந்திரமும் தூய மந்திரத்தின் நோக்கங்களையே அடிப்படையாக கொண்டது. தீய மந்திரம் பகைவனைக் கொல்லவும், இடையூறு செய்யவும், பயன்படுத்தப்படுகின்றது. சூனியம்(witch craft), பில்லிசூனியம்(Sorcery), ஏவல் சூனியம்(voodoo), போன்றவே கெட்ட ஆவி, பேய், ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு, அல்லது சமூகத்திற்கு எதிராக ஏவுவது ஆகும். இயற்கையின் கொடூரங்களிலிர்ந்து காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு மந்திரம் பயனபடுத்தப்படுகின்றது. தங்களிடமுள்ள குறைகள், தீமைகள் போன்றவற்றை பிற உயிர்கள் அல்லது பொருட்களுக்கு மாற்றிவிட மாற்றுவிக்கும் மந்திரம் (Transferecne of evil) பயன்படுகிறது. மழை வேண்டுமென்றால் மழை வருவது போல் பாவனை செய்து சடங்கு நடத்தினால், ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்று நம்பினர். அதைப் போல் குழந்தைப் பிறந்தவுடன் தொப்புள் கொடியை பொட்டலமாக கட்டி ஆலமரத்தில் தொங்கவிட்டால் மரத்தோடு தொடர்பு கொண்டு மரத்தைப் போல் செழித்து வளருவான் என்றும் நம்பினார்கள். பொருளாதார நலனே தொடக்ககாலத்தில் நோக்கமாய் இருந்தது. வேட்டையிலும், மீன்பிடித்தலிலும், வணிகம் செய்வதிலும் நல்ல பலன் கிடைக்கவும், பயிர்கள் செழித்து வளரவும், கால்நடைகள் பெருகவும் மந்திரம் பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு மந்திரமே ஓர் உற்பத்தி கருவியாக விளங்கியதால் ஆதிகால மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றிலும் மந்திரம் நீக்கமற நிறைந்திருந்தது. இவை மக்களின் பொருளாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருந்தது. பல தீய மந்திரங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஒரு மனிதனுக்கு இடையூறு செய்ய ஒரு உருவ பொம்மையை செய்து அதை அந்த மனிதனாக பாவித்து சில மந்திரங்களைக் கூறி உறுப்புக்களை ஊசியால் குத்தினால் அவனை ஊனப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு மனிதனின் காலடி மண்ணை எடுத்து நெருப்பில் போடுவது,ஒருவரோடு தொடர்புடைய பொருட்களை ஊறு செய்வது, தலைமுடியை எடுத்து மந்திரம் கூறி அழைப்பது போன்றவே மூலம் ஒருவருக்கு தீங்கிழைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கி.பி. 16ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் தோன்றிய அறிவியல் புரட்சியானது மனித வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களான நியூட்டன் விதிகள், டார்வின் விளக்கங்கள், பிரான்சிசு பேக்கன், டெக்கார்ட் போன்ற தத்துவியலாளர்களின் சிந்தனைகள் இந்த உலகத்தை எத்திரமாக பார்க்க தூண்டின. மனிதன் இயற்கையை அடக்கி ஆள முடியும் என்றும், மனிதன் இயற்கையை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை என்று கூறியது. மனித உடல் ஒரு இயந்திரம், இந்த உலகம் ஒரு கடிகாரம் எந்திரத்தில் உள்ள பகுதிகள் இணைந்து செயல்படுவது போல் இந்த உலகம் செயல்படுகின்றது என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டது. பல்வேறு விதிகளால் உலகம் ஆளப்படுகின்றது, எனவே உலகத்தை பலவேறு அளவு முறைகளாலும் ஆராய்ச்சியாலும், ஆதாரங்களாலும் அளந்து விடலாம் என்று நம்பப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியால் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் புரட்சியும் ஏற்பட்டன. எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் அளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை எழுந்தது. இந்த பின்னனியில் தான் தொன்று தொட்டே ஆதிமனிதன் பின்பற்றி வந்த மந்திர சடங்குகள் போன்ற தொழில்நுட்பம் அர்த்தமற்றவைகளாகவும், மூடத்தனமான செயல்பாடுகளாகவும அடையாளப்படுத்தப்பட்டன. அறிவியல் வளர்ச்சி மக்கள் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்று முத்திரை குத்தின. அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில் நுட்பங்களின் அபரிமிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று அறுதியிட்டு கூறியது. இதன் விளைவாக புராதன சமூகத்தில் காணப்பட்ட சமயம், சமூகம் சர்ந்த மூடநம்பிக்கைகள், மந்திரத்தில் மனிதனுக்கு இருந்த நம்பிக்கைகள் படிப்படியாக மறைந்து வருகின்றது. மதம் ஒழுக்கநெறி, கலை, இலக்கியம் போன்றவை மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று ஒதுங்கியது. இதனால ஒருசில படித்தவர்கள் மத்தியிலும், அறிவியல் புலத்திலும், மந்திரங்கள், சடங்குகள் சார்ந்த நம்பிக்கைகள் அறிவியலுக்கு புறம்பானதாக கருதப்பட்டன. ஒருசில முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரி கட்சிகளும், மார்க்சியவாதிகளும், இதை ஒரு இயக்கமாகவே முன்னேடுத்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நடத்திய பகுத்தறிவு இயக்கம் நாத்தீக விமர்சனங்களாகவும், மூட நம்பிக்கைகளை கிண்டல் கேலி செய்யும் பேச்சுக்களாலும், பத்திரிக்கை மூலமாகவும, மேடை பேச்சின் மூலமாக பகுத்தறிவு வாதமாக மந்திரத்தை எதிர்த்தது. மாய வித்தை மாய வித்தை அல்லது செப்பிடு வித்தை என்பது நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று. இது ஒரு நிகழ்த்து கலை. மீவியற்கை போன்று, அல்லது முடியாதது போன்று தோன்றும் செயல்களைச் செய்து பார்வையாளர்களை மகிழ்விப்பதே இக்கலையாகும். இக் கலையைச் செய்பவரை மாய வித்தைக்காரர் அல்லது மந்திரவாதி என்பர். மந்திரமா- தந்திரமா என ஒன்றும் புரியாமல் காண்போரைத் திகைக்க வைக்கும் இக்கலையினைச் சாலவித்தை, இந்திர சாலம், கண்கட்டி வித்தை, மாயவித்தை, கரடி வித்தை, மாஜிக் என்று பலவாறாகக் கூறுவர். செப்பிடு வித்தைக் கலையில் அனைத்துக் காட்சிகளும் ஒளிவு மறைவானவை. காட்சியைக் காண்போர் இதனை உண்மை என நம்பும் வண்ணம் அக்காட்சிகள் அமையும். இக்கலையில் கையாளப்படும் தந்திரங்கள் மிகவும் எளிமையனவை ஆனால் பார்வையாளர்களைத் திகைக்க வைப்பவை. செப்பிடு வித்தைக் கலை நான்கு வகைப்படும். அவை: பேதை உள்ளான் பேதை உள்ளான் ("Ruff") என்பது கரைப்பறவைகள் ("shore birds or wader"s) வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவில் அடங்குவன. இப்பறவையின் விலங்கியல் பெயர் "Philomachus pugnax". ஆங்கிலத்தில், இப்பறவையின் ஆண் Ruff என்றும் பெண் பறவை Reeve என்றும் அழைக்கப்படுகின்றது. இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி ("winter visitor") ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வி ("passage migrant"). பெரும்பான்மையாக ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்யும் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 32.8 இலட்சம் சோடி உள்ளான்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. (பேதை உள்ளான்கள் சோடியாக இருப்பதில்லை; குடிபெயர்வதும் இல்லை -- இங்கே சோடி என்று குறிப்பிடப்படுவது அவற்றின் மொத்த எண்ணிக்கையை உணர்த்துவதற்குத் தான்!) பேதை உள்ளான்கள் நீண்ட கழுத்து, சிறிய தலை, நுனியில் சற்று-சரிந்த சிறிய அலகு, பானை வயிறு, சற்றே-பெரிய ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறக் கால்கள் கொண்ட கரைப்பறவைகள். ஆண் பறவை பெண் பறவையை விட சற்று பெரியது. ஆண் பறவை, பவளக்காலி எனப்படும் Red shank - ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும்; பெண் பறவை, மர உள்ளான் எனப்படும் Wood sandpiper - ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும். இப்பறவை பால் ஈருருமை (sexual dimorphism) உடையது: கோடையில் (அதன் இனப்பெருக்கக் காலத்தில்) ஆணின் கழுத்தைச் சுற்றி வெண்ணிறத்திலோ பிற நிறத்திலோ சிறகுத்தொகுதி காணப்படும். இவற்றின் பழுப்பு நிற வால் மற்ற உள்ளான்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டும். பேதை உள்ளான்கள் வட ஐரோப்பா, சைபீரியாவிலுள்ள ஆர்க்டிக் துந்துரா சமவெளிப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் மிகுந்த பனிக்காலங்களில் இவை அப்பகுதிகளை விட்டு குடிபெயர்கின்றன: பெரும்பாலும் தென் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் கடற்கரை-சதுப்பு நிலங்களுக்குச் செல்கின்றன; தெற்காசியா, ஆத்திரேலியா நோக்கியும் இவை குடிபெயர்வதுண்டு. இந்தியாவில், குறிப்பாக கோடிக்கரை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பேதை உள்ளான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆண் உள்ளான்கள் லெக் என்றழைக்கப்படும் ஒருவித கோதாவில் இறங்கித் தம் வீரியத்தைக் காட்டுகின்றன; இங்கு மூன்று விதமான ஆண் உள்ளான்கள் காணப்படுகின்றன: இனப்பெருக்கக் காலங்களில், பேதை உள்ளான் ஆண்கள் கழுத்துப்பட்டை போன்ற சிறகுத்தொகுதியுடனும் (இச்சிறகுத்தொகுதிகள் அடர் நிறத்திலோ (எல்லையரசர்கள்) வெண்ணிறத்திலோ (துணைக்கோள் ஆண்கள்) இருக்கும்; மூன்றாம் வகை விளிம்பு-நிலை ஆண்கள் பெண் உள்ளான்களை ஒத்திருக்கின்றன) கொண்டை போன்ற தலைப்பகுதியுடனும் வகை வகையான நிறங்கள் கொண்ட தாடைப்பகுதியுடனும் காட்சியளிக்கின்றன. கோதாவிற்கு வரும் பெண் உள்ளான், திறமையான ஆணைத் தேர்ந்தெடுத்து அதனுடன் கலவியில் ஈடுபடுகிறது; பின்னர் அப்பெண் உள்ளான் லெக்கை விட்டு வெளியேறிச் சென்றுவிடும். கூடு கட்டுவதிலோ குட்டிகளை வளர்ப்பதிலோ ஆண் உள்ளான் எவ்வித பங்கும் கொள்வது "இல்லை". புற்கள், சதுப்புநிலச் செடிகளுக்கு இடையில் எளிதில் தெரியாத வண்ணம், தரையில் கூடு கட்டுகிறது பெண் உள்ளான்; இதன் கூடு தரையில் ஒரு பள்ளம் எடுத்து அதைச்சுற்றி புற்களிட்டு கட்டப்படுகிறது. பெண் உள்ளான் சராசரியாக நான்கு முட்டைகளை இடுகிறது; 20-23 நாட்களுக்குப் பிறகு முட்டை பொரிந்து குஞ்சு வெளிவருகிறது. குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதும் பெண் உள்ளானே. சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் குட்டி உள்ளான் பறக்கத் தொடங்கி விடும். பேதை உள்ளான்கள் குளிர்காலங்களில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரையிலும் காணப்படுகின்றன; இவை கிழக்கே இந்தியா வரையிலும் குடிபெயர்கின்றன. (இந்தியாவுக்குக் கிழக்கே இவை அரிதாகவே செல்கின்றன) மிகுதியான எண்ணிக்கையில் இவை குடிபெயர்வது ஆப்பிரிக்காவுக்குத்தான். (சில பேதை உள்ளான்கள் 15,000 கி.மீ. வரை பறந்து செல்கின்றன). ஆண் உள்ளான்கள் தனியாகவும் பெண் உள்ளான்கள். சிறு உள்ளான்கள் தனியாகவும் குடிபெயர்கின்றன.http://www.avibirds.com/ சூலை முதல் இவற்றின் பெயர்வு தொடங்கும்; முக்கிய, பெரும் பெயர்வுகள் சூலை இறுதியில் தொடங்கி நடு-செப்டம்பர் வரை நிகழ்கின்றன (நவம்பர் வரை இது நீள்வதுண்டு). நடு-பெப்ருவரி யில் தொடங்குகின்றது; முக்கியப் பெயர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையிலும் தொடர்கிறது. பெரும்பாலான கரைப்பறவைகளின் உணவான பூச்சிகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் ஆகியவையே பேதை உள்ளான்களின் உணவும்; குடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் விதைகளையும் இவை உண்கின்றன. இக்காலக் கட்டத்தில் அரிசி, மக்காச்சோளம் ஆகிய தானிய விதைகள் இவற்றின் உணவாகும். ஈக்கள், வண்டுகள் போன்ற தரை-வாழ், நீர்-வாழ் பூச்சிகளும் அவற்றின் முட்டைப்புழுக்களுமே பேதை உள்ளான்களின் இனப்பெருக்க கால முக்கிய உணவாகும். குடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் பூச்சிகள் ( கேடிசு ஈக்கள், நீர்-வண்டுகள், மே ஈக்கள், வெட்டுக்கிளிகள்), வெளியோடுடைய உயிரிகள், சிலந்திகள், நத்தை போன்ற மெல்லுடலிகள், புழுக்கள், தவளைகள், சிறு மீன்கள் ஆகிய உயிரி வகை உணவுகளும் அரிசி, மக்காச்சோளம், பிற தானியங்கள், செட்சு, புல்வகைகள், நீர்த்தாவரங்கள் ஆகிய தாவர உணவு வகைகளும் இவற்றின் உணவாக அமைகின்றன. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புழங்கிய கழுத்துப்பட்டைப் பாணியை ஒத்த கழுத்துப்பட்டை போல இவற்றின் சிறகுத்தொகுதி உள்ளதால் Ruff என்ற பெயர் வந்தது. புத்தூர் இளையபெருமாள் கோயில் ராஜபாளையம் அருகில் உள்ள புத்தூர் என்னுமிடத்தில் இளையபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நெடுங்காலமாக குலதெய்வமாக இருந்து வருகிறது. அவரம்பட்டியைச் சேர்ந்த சாலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வரு வருடமும் ஆனி மாதம் குருபூஜை செய்து வருகின்றனர். இம் மலையில் சுவாமிகளாக முருகர், அய்யனார், மீனாச்சிஅம்மன், கருப்பசாமி, விநாயகர், மற்றும் பல சுவாமிகள் உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட தமிழ்நாடு அரசு பல குழுக்களை அமைத்திருந்தது. குழுக்கள் முழுப் பட்டியல் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்த முதலில் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்கள் சம்மதிக்காததால் இந்த மாநாட்டுக்கு ஈடாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன. "கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்." மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்தார். ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்தது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்தார். தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது." பூச்சியியல் பூச்சியியல் ("Entomology") என்பது, பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடைப்படையிலான ஆய்வுத்துறை ஆகும். இது கணுக்காலியியலின் ஒரு பிரிவாக உள்ளது. இதுவரை விவரிக்கப்பட்டுள்ள சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாகக் கருதப்படும் பூச்சிகள் மனிதர்களுடனும், புவியில் உள்ள பிற வகை உயிரினங்களுடனும் பலவகையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இது உயிரியலில் ஒரு சிறப்புத் துறை ஆகும். விலங்கியலுள் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற பல துறைகளைப் போலவே பூச்சியியலும் ஒரு வகைப்பாட்டியல் அடிப்படையிலான பிரிவு. பூச்சிகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் பூச்சியியலுள் அடங்கும். இதனால் பூச்சியியல் பலவாறாக வேறுபட்டு அமைந்த தலைப்புக்களிலான விடயங்களை உள்ளடக்குகின்றது. இவற்றுள், மூலக்கூற்று மரபியல், நடத்தை, உயிர்விசையியல், உயிர்வேதியியல், தொகுதியியல், உடற்கூற்றியல், வளர்ச்சி உயிரியல், சூழலியல், உருவியல், தொல்லுயிரியல், மானிடவியல், வேளாண்மை, ஊட்டம், சட்டமருத்துவ அறிவியல் என்பவை சார்ந்த தலைப்புக்களும் அடங்கும். பூச்சியியல், வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே ஏறத்தாழ எல்லா மனிதப் பண்பாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தேனீ வளர்ப்பு முதலிய வேளாண்மை சார்ந்த துறைகளிலேயே இது தொடர்புபட்டிருந்தது. எனினும் இது தொடர்பிலான அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கின. இதுவரை காலமும் இருந்த பூச்சியியலாளர்களில் பட்டியல் மிகவும் நீளமானது. சார்லசு டார்வின், விளாடிமிர் நபோக்கோவ், கார்ல் வொன் பிரிசுக், ஈ. ஓ. வில்சன் போன்ற குறிப்பிடத்தக்க மனிதர்களும் இப்பட்டியலில் அடங்குவர். நீர்ப்பாலூட்டியியல் நீர்ப்பாலூட்டியியல் என்பது, கடல்வாழ் பாலூட்டிகள் தொடர்பான ஒரு அறிவியல்துறையாகும். திமிங்கிலம், கடற்பசு போன்ற சீட்டாசீ அறிவியல் வகைப்பாட்டு வரிசையைச் சேர்ந்த ஏறத்தாழ எண்பது வகையான உயிரினங்களைப் பற்றி இத்துறை ஆய்வு செய்கின்றது. நீர்ப்பாலூட்டியியலாளர் அல்லது இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் இக் கடல்வாழ் பாலூட்டிகளின் படிமலர்ச்சி, பரம்பல், உருவவியல், நடத்தை, சமுதாய இயக்கம், மற்றும் இதுபோன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். செந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க மீனவர்கள், தமது வலைகளில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர். ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அரிசுட்டாட்டில், மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து இந்த நீர்வாழ் பாலூட்டிகள் தொடர்பான குறிப்புக்களை எடுத்துள்ளார். இவரது "விலங்குகளின் வரலாறு" என்னும் நூலில், இவர் பாலீன் திமிங்கிலங்களுக்கும், பற்களுள்ள திமிங்கிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்துக் குறித்துள்ளார். இப் பிரிப்பு இன்றைய வகைப்பாட்டியலிலும் பயன்படுகின்றது. எபிரேய நாட்காட்டி எபிரேய நாட்காட்டி ("Hebrew Calendar") அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறித்தவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இசுரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது. யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம்(intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும். பன்னிரு வழமையான மாதங்கள்:"நிசன் "(30 நாட்கள்), "இயார்" (29நாட்கள்), "சிவன்" (30 நாட்கள்), "தம்முஸ்" (29 நாட்கள்), "அவ்" (30 நாட்கள்), "எலுல்" (29 நாட்கள்), "தீஸ்ரே" (30 நாட்கள்), "செஷ்வன்" (29 அல்லது 30 நாட்கள்), "கிஸ்லெவ்" (29 அல்லது 30 நாட்கள்), "தெவேத்" (29 நாட்கள்), "சேவத்" (30 நாட்கள்) மற்றும் "அதார்" (29 நாட்கள்). நெட்டாண்டுகளில் இம்மாதம் "அதார் II" என வழங்கப்பட்டு இதற்கு முன்னர் (சேவத் மாதத்தின் பின்னர்) "அதார் I" (30 நாட்கள்) மாதம் சேர்க்கப்படுகிறது. ஆண்டு நிசன் மாதத்தில் துவங்குகிறது. நிசன் 15 அன்று வரும் முழுநிலவு அன்று பார்லி அறுவடை பண்டிகை (நமது அறுவடை பண்டிகை பொங்கல் போன்று)ஆண்டு துவக்கத்தை வரவேற்கிறது. இந்த பண்டிகை எப்போதும் இளவேனில் காலத்தில் அமையுமாறு நெட்டாண்டுகளில் இடைச்செருகல் மாதம் சேர்க்கப்படுகிறது. ரூனிக் நாட்காட்டி ரூனிக் நாட்காட்டி சந்திரனின் 19 ஆண்டு சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எக்காலத்திற்குமான நாட்காட்டியாகும். ரூன் என்பது இலத்தீன் எழுத்துக்களை அங்கீகரிப்பதற்கு முன்னர் செருமானிய சார்பு மொழிக்குடும்பங்களில் இருந்துவந்த எழுத்துக்களாகும்.இவ்வெழுத்துக்களை பாவித்து மரச்சட்டங்களில் பண்டைய சுவீடன் மக்கள் பாவித்த இந்நாட்காட்டி அவ்வெழுத்துக்களை காரணமாகக் கொண்டு ரூன் கோல் அல்லது ரூன் பஞ்சாங்கம் என வழங்கப்பட்டது.கிடைத்துள்ள மிகப் பழமையான மரச்சட்டம் 13வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது. ஓர் ரூனிக் நாட்காட்டியில் சின்னங்கள் கொண்ட பல வரிகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டிருக்கும்.சிறப்பு நாட்களான கதிர்த்திருப்பங்கள்,சம இரவு நாட்கள் மற்றும் கிறித்தவ விடுமுறைகள் போன்றவை கூடுதல் வரிகளாக குறிக்கப்பட்டிருக்கும். நாட்காட்டியில் காலநிலை ஆண்டு மற்றும் நெட்டாண்டுகளைக் குறித்த செயல்பாடு இல்லை.ஒவ்வொரு ஆண்டின் கூதிர்கால கதிர்திருப்பத்திற்கு பிறகு ஏற்படும் முதல் முழுநிலவு அன்று ஆண்டு துவங்குகிறது.இந்நாள் பழஞ்சமய விருந்து மற்றும் சந்தை நாளாகும். துவக்கநிலை செருமானிய (ரூனிக்)மொழியில் 16 எழுத்துக்கள் (ரூன்கள்) இருந்தன.சந்திரனின் 19 ஆண்டுக்கால சுழற்சியை நாட்காட்டியில் குறித்திட மேலும் மூன்று எழுத்துக்கள் தேவைப்பட்டன. இதனை தீர்க்குமாறு மூன்று கூடுதல் எழுத்துக்கள் அர்லாக் (17),த்விமதுர் (18) மற்றும் பெல்க்டார் (19)உருவாக்கப்பட்டன. பிரைம்ஸடாவ் (மொழிபெயர்ப்பு: முதன்மை கோல்) நார்வே நாட்டு பழமையான நாட்காட்டி கோலாகும்.இவற்றில் ரூன்களுக்குப் பதிலாக படிமங்கள் செதுக்கப்பட்டன.மிகப் பழமையான நாட்காட்டி கோல் 1457 ஆண்டிற்குரியது;அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டிகள் தற்போதைய பாவனையில் இல்லாதிருப்பினும் எஸ்தோனிய நாட்டு பழமைவிரும்பிகள் 1978ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூனிக் நாட்காட்டிகளை பதிப்பித்து வருகிறார்கள். மூலக்கூற்று மரபியல் மூலக்கூற்று மரபியல் என்பது மரபணுக்களின் அமைப்பையும், செயற்பாடுகளையும் மூலக்கூற்று மட்டத்தில் ஆய்வு செய்யும் உயிரியலின் ஒரு துறை ஆகும். இத்துறை மரபணுக்கள் எவ்வாறு ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என ஆய்வு செய்கிறது. இத்துறை ஆய்வுகளுக்கு, மரபியலையும், மூலக்கூற்று உயிரியலையும் பயன்படுத்துகின்றது. மூலக்கூற்று மரபியலில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று மூலக்கூறுகளை மரபுவழிக் கோலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்துவது ஆகும். அத்துடன் இது உயிரினங்களைச் சரியான அறிவியல் வகைப்பாடு செய்வதற்கும் பயன்படுகிறது. இது மூலக்கூற்றுத் தொகுதியியல் எனப்படுகின்றது. மரபுவழிக் கோலங்களைத் தீர்மானிக்க உதவுவது மட்டுமன்றி, மூலக்கூற்று மரபியல், சிலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய மரபுசார் திடீர்மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக உள்ளது. மூலக்கூற்று மரபியலாளர்களுக்கு உதவக்கூடிய முதல் கருவிகளுள் ஒன்று முன்னோக்கு மரபியல் சலிப்பு ஆகும். இந்த நுட்ப முறையின் நோக்கம், ஒரு குறித்த வகையான இயல்புகளை உருவாக்கும் திடீர் மாற்றங்களை அடையாளம் காண்பது ஆகும். பெருநகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன. ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை பெருநகராட்சி (அ) சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. தேர்வு நிலை நகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன. ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. முதல் நிலை நகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன. ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலை நகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன. ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. உயிர்விசையியல் உயிர்விசையியல் என்பது, விசையியல் கொள்கைகளை உயிரினங்களில் பயன்படுத்தும் ஒரு துறையாகும். உயிரினங்களின் பொறிமுறைகளையும், உயிரியல் முறைமைகளில் பொறியியல் கொள்கைகளின் பயன்பாட்டையும் ஆய்வு செய்யும் உயிர்ப்பொறியியலும் இதற்குள் அடங்குகிறது. இந்த ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும், மூலக்கூறுகள் மட்டத்திலிருந்து, திசுக்கள், உறுப்புக்கள் என்பன வரை பல மட்டங்களில் நடத்துகின்றனர். நியூட்டன் விசையியலின் சில எளிமையான பயன்பாடுகள் ஒவ்வொரு மட்டத்திலும் சரியான அண்னளவாக்க முடிவுகளைத் தரக்கூடும் ஆயினும், துல்லியமான விபரங்களைப் பெறுவதற்கு, தொடர் விசையியலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். தாவரங்களிலும், தாவர உறுப்புக்களிலும் உயிர்விசையியல் கொள்கைகளைப் பயன்படுத்துதல் ஒரு தனியான இணைத்துறையாக வளர்ச்சியடைந்துள்லது. இது "தாவர உயிர்விசையியல்" எனப்படுகின்றது. பயன்பாட்டு விசையியல் துறைகளான வெப்பஇயக்கவியல், தொடர் விசையியல், இயந்திரப் பொறியியல் துறைகளான பாய்ம விசையியல், திண்ம விசையியல் என்பன உயிர்விசையியல் ஆய்வில் முக்கிய பங்காற்றுகின்றன. கணுக்காலியியல் கணுக்காலியியல் என்பது, விலங்குத் திணையின், கணுக்காலிகள் தொகுதி தொடர்பாக ஆய்வு செய்யும் உயிரியல் துறை ஆகும். கணுக்காலிகள் தொகுதியுள், பூச்சிகள், எட்டுக்காலிகள், வெளியோட்டினங்கள் போன்ற பொருத்துக் கால்களைக் கொண்ட பிற இனங்களும் உள்ளடங்குகின்றன. ஒட்டுண்ணியியலுடன் சேர்த்து ஆய்வு செய்யப்படும் இத்துறை மருத்துவத் துறைக்கு மிகவும் முக்கியமானது. மருத்துவக் கணுக்காலியியல் என்பது கணுக்காலிகளின் ஒட்டுண்ணித் தாக்கம் குறித்து ஆய்வு செய்கிறது. பூச்சியியல், எட்டுக்காலியியல், போன்ற துறைகள் கணுக்காலியியலின் துணைத்துறைகளாகும். ஓப்பன் வெட்வேர் ஓப்பன்வெட்வேர்(OpenWetWare) அல்லது "தளையற்ற ஞானப்பொருள்" என்பது " உயிரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் தளையற்ற ஆய்வு,கல்வி,பதிப்புகள் மற்றும் விவாதத்தை வளர்க்கும்" நோக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் விக்கி யாகும். எம்.ஐ.டி பட்டமேற்படிப்பு மாணவர்களால் ஏப்ரல் 20,2005ஆம் ஆண்டு ஓப்பன்வெட்வேர் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் எம்.ஐ.டியில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கு மட்டுமே சேவை புரிய அமைக்கப்பட இத்தளம் சூன் 22,2005 முதல் அனைத்து ஆய்வகங்களுக்கும் பயன்படத் தொடங்கியது. ஏப்ரல் 16,2007 அன்றைக்கான நிலவரப்படி இத்தளத்தில் 100 ஆய்வுக் கூடங்களும்40 கல்விக் கூடங்களும்இணைந்துள்ளனர்.ஆய்வுக்கூடங்களைத் தவிர,அறிவியல் சங்கங்களும் இணைந்துள்ளன. ஓப்பன்வெட்வேர் லினக்ஸ் வழங்கிகளில் மீடியாவிக்கி பயன்பாட்டில் இயங்குகின்றது.அனைத்து உள்ளடக்கங்களும் குனூ தளையறு ஆவண உரிமத்தின் அடிப்படையிலும் கிரியேட்டிவ் காமன்ஸ் சேர்அலைக் உரிமத்தின்கீழும் கிடைக்கின்றன. போர் குற்றம் போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர்ப் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களைக் கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும். மேலும் நாட்டிற்குள்ளும், அனைத்துலக ரீதியிலும் ஆயுதப் போராட்டங்கள் தொடர்பான அனைத்துலகச் சட்டங்கள் எனலாம். இவ்விதிகளின் படி சில மீறல்கள் மிகவும் பாரதூரமானவை. அப்படி மீறுபவர்கள் உள்ளுரிலும், அனைத்துலக மட்டத்திலும் அக்குற்றங்களுக்கு அவர்களே பொறுப்பாகின்றனர். போரில் ஈடுபடாதவர்கள் அல்லது போரில் தொடர்ந்தும் ஈடுபடாதவர்களைப் பாதுகாப்பதற்காக இவை இயற்றப்பட்டன. ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தினால் அது சர்வதேச போர்க் குற்றமாகும் என பராக் ஒபாமா அறிவித்தார். அதாவது எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களின் மீதே போர் விமானத்தை பயன்படுத்துதல் போர்க்குற்றம் என்ற செய்தியை கோடிட்டு காட்டியுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தினார். விக்ரம் நாட்காட்டி விக்ரம் நாட்காட்டி (விக்ரம் சம்வாட், அல்லது பிக்ரம் சம்பாத்), (தேவநாகரி:विक्रम संवत) இந்திய பேரரசன் விக்கிரமாதித்தன் நிறுவிய நாட்காட்டியாகும். நேபாளத்தின் அலுவல்முறை நாட்காட்டியாகவும் இந்தியாவில் பலரும் பாவிக்கும் நாட்காட்டியாகவும் உள்ளது.நேபாளத்தில் விக்ரம் சம்வாத் தவிர அங்கு பழங்காலத்தில் நிலவிய "நேபாள் சம்பாத்தும்" கிரெகொரியின் நாட்காட்டியும் அங்கு பயன்படுத்தப்படுகிறது. சந்திரகுப்த விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் பொதுவான கருத்துக்கு மாறாக, உண்மையில் இந்த நாட்காட்டி உஜ்ஜைனை ஆண்டுவந்த விக்கிரமாதித்தனால் கி.மு 56ஆம் ஆண்டில் அவன் சகா வம்சத்தவர்களை வெற்றி கண்டதைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்டது.. இது சந்திர நாட்காட்டியை பின்பற்றிய இந்து நாட்காட்டியாகும்.விக்ரம் நாட்காட்டி 56.7 ஆண்டுகள் சூரிய நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியை விட கூடுதலாகும்.காட்டாக,விக்ரம் சம்வாட் 2056 கிரெகொரியின் நாட்காட்டியில் கி.பி 1999 ஆண்டு துவங்கி 2000ஆம் ஆண்டு முடிவடைந்தது.வட இந்தியாவில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் துவங்கும் சைத்ரா மாதத்தின் அமாவாசையன்று ஆண்டு துவங்குகிறது. இரானிய நாட்காட்டி இரானிய நாட்காட்டி பெர்சியா என வழங்கப்பட்ட ஈரானின் நாட்காட்டிகளைக் குறிக்கும். இவை ஈரான் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இரானிய சமூகங்களிலும் பாவிக்கப்படுகிறது. தற்போதைய இரானிய நாட்காட்டி புவி நெடுங்கோடு 52.5°கி (அல்லது GMT+3.5h)உள்ள இரானிய நேர வலயத்தில் அறிவியல்படி தீர்மானிக்கப்பட்ட வேனிற்கால சம இரவு நாள் அன்று துவங்குகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியை விட துல்லியமாக ஆண்டுத் துவக்கத்தை தீர்மானிக்கிறது. மனித வரலாற்றின் பல நிகழ்வுகளை பதிந்திருக்கும் இரானிய நாட்காட்டி நிர்வாக,காலநிலை மற்றும் சமய காரணங்களுக்காக பலமுறை மாற்றம் கண்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்நாட்காட்டி சிலசமயங்களில் "சூரிய ஹிஜ்ரி" என அழைக்கப்படுகிறது. ஆண்டுகளை குறிப்பிடும்போது "AP"("Anno Persico" என்பதன் சுருக்கம்) என்று பின்னொட்டு தரப்படுகிறது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் 21க்கு ஒருநாள் அண்மையில் துவங்குகிறது. கிரெகொரியின் ஆண்டைக் காண இரானிய நாட்காட்டி நாளுடன் 621 அல்லது 622 (ஆண்டின் எப்பகுதியில் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து) கூட்டவேண்டும். இந்தியத் தேசிய நாட்காட்டி இந்தியத் தேசிய நாட்காட்டி (சில நேரங்களில் சக சம்வாட் எனவும் அறியப்படும்) இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ் (Gazette of India), அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது குழப்பமாக இந்து நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது; தவிர சக சகாப்தம் பல நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நெட்டாண்டுகளில், சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு மற்றும் ஆண்டு மார்ச் 21 அன்றே துவங்கும். சூரியன் மெதுவாக நகரும் ஆண்டின் முன்பகுதியில் உள்ள மாதங்கள் அனைத்துமே 31 நாட்களைக் கொண்டிருக்கும்.இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட மாதம் எந்த நாட்காட்டியைக் குறிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு. ஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன. ஆண்டு 0 விற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி 78 ஆகும்.இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு எனில் சக ஆண்டும் நெட்டாண்டு ஆகும். 1957ஆம் ஆண்டு நாட்காட்டி சீரமைப்பு குழுவினரின் பரிந்துரையின்படி இந்த நாட்காட்டி 1957 மார்ச், 22-ம் தேதி முதல் தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இசுலாமிய நாட்காட்டி இசுலாமிய நாட்காட்டி ("Islamic calendar") அல்லது முஸ்லிம் நாட்காட்டி ("Muslim calendar") அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி ("Hijri calendar") அல்லது 'ஹிஜ்ரா நாட்காட்டி (; "அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ"; பாரசீகம்: تقویم هجری قمری ‎ "தக்வீமே ஹெஜிரே கமரீ") ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும். ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும். இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் ஓட்டத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர். இசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (சல்) அவரிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது, மேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன. ரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அதில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயனிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுன்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக்கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர். இசுலாமிய மாதங்களில் "ஷவ்வால்" மற்றும் "துல் ஹஜ்" ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும். "ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர்" எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , "துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா" எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. "துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய" நாளாகும். அன்று தான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் ஒன்று திரளுவார்கள். "முஹர்ரம், ரஜப், துல் கஃதா" மற்றும் "துல் ஹஜ்" ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும். இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் அடிப்படையில் அமைந்ததாலும், முகம்மது நபி (சல்) அவர்களின் அறிவிப்பின் படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். பின்வரும் நபிமொழி அதனை உறுதிப்படுத்துகிறது. முகம்மது நபி (சல்) அவர்கள் கூறினார்கள்: "நாம் (அன்றய கால மக்கள்) உம்மி சம்தாயமாவோம். எழுதுவதையும் அறிய மாட்டோம், விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேலை "இருபத்தொன்பது நாட்களாகவும்" சில வேலை "முப்பது நாட்களாகவும்" இருக்கும்!" பார்க்க:- ஹதீஸ் நூல்: சகீ அல் புகாரி; ஹதீஸ் எண்: 1913 ; அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும். சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும். இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின் படி ஒரு நாளின் ஆரம்பம் சூரியன் மறையும் நேரமாகும். அதாவது ஒரு நாளின் முதல் பகுதி இரவு பின்னர் தான் பகல் என்று நம்புகின்றனர். முகம்மது நபியவர்களின் போதனைகளும் இதையே தெளிவு படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அரபா நாளின் தொடக்கத்திலேயே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது அன்றைய பகற் பொழுதுக்கு முந்திய சூரியன் மறையும் நேரத்துடனான முன்னிரவு வேளையிலேயே தொடங்கப்படுவது வழமை. முதற் பிறையானது மறையும் நேரம் சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்கு பின்னர் இருப்பதால் முதல் பிறையை பார்த்த பின் தான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பம் ஆகுகின்றது என்பது அவரகளது நம்பிக்கையாக உள்ளது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மதுரையிலுள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரி புதுடெல்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியுடன் அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை உடன் இணைக்கப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் மேலாண்மையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். சர்வதேச தரச் சான்றிதழ் (ISO 9001:2000) பெற்றுள்ள இக்கல்லூரி மறைந்த கருமுத்து தியாகராசன் செட்டியார் அவர்களால் மதுரையில் நிறுவப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு மத்திய,மாநில அரசு மானியங்களுடன் கல்லூரி மேலாண்மையும் நிதியுதவி செய்துள்ளது. 1987ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு தன்னாட்சி உரிமம் வழங்கப்பட்டது. மதுரை மாநகரிலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான நிலங்களுக்கும், திருப்பரங்குன்றம் மலைக் குன்றுகளுக்கும் இடையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் இக்கல்லூரிக்கான கட்டிடங்கள் அமைந்துள்ளது. தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் அறிவியலில் ஒன்பது பட்டப்படிப்புப் பாடங்களும் பதினோரு பட்டமேற்படிப்பு பாடங்களும் நடத்தப்படுகின்றன. பொறியியல் துறைகள் அறிவியல் துறைகள் தவிர,கட்டிட வடிவமைப்புத் துறையில் இளநிலை பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. 2007-2008 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வகையில் பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது. சாப் எஸ்ஏபி ஏஜி ஜெர்மனியின் வால்டோர்ஃப் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஐரோப்பாவின் பெரிய மென்பொருள் நிறுவனம் ஆகும். இது இதன் SAP ERP Enterprise Resource Planning (ERP) மென்பொருள் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டது. SAP "சிஸ்டம் அனாலிஸிஸ் அண்ட் ப்ரோக்ராம் டெவலப்மெண்ட்" (") என்ற பெயரில், ஐந்து முன்னாள் IBM பொறியாளர்களால் (டயட்மர் ஹோப், ஹன்ஸ்-வெர்னெர் ஹெக்டார், ஹஸ்சோ ப்ளாட்னெர், க்ளாஸ் E. சிர்ரா மற்றும் க்ளாஸ் வெலன்ரியுத்தர் ஆகியோர்) படென்-உர்டெம்பெர்க்கின் மேன்ஹெய்மில் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கணினித் துறையை விட்டு சிராக்ஸ் வெளியேறியதன் ஒரு பகுதியாக, Xerox நிறுவனம் தங்கள் வணிக முறைமைகளை இடம்பெயரச் செய்ய IBM நிறுவனத்தை அமர்த்தியது. IBM நிறுவனம் இந்த மாற்றத்தை ஈடு செய்யும் விதமாக, IBM SDS/SAPE மென்பொருளைப் பெற்றது, அறிக்கைகளின் படி, ஒப்பந்தத்தின் மதிப்பு $80,000 ஆகும். SAPE மென்பொருளானது IBM நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு தரப்படவேண்டிய 8% பங்குகளுக்கு ஈடாக கொடுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரிஸ் (ICI) நிறுவனமே SAP நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர் நிறுவனம் ஆகும். இந்தச் சுருக்கம் பின்னர் " ("சிஸ்டம்ஸ் அப்ளிகேஷன்ஸ் அண்ட் ப்ராடக்ட்ஸ் இன் டேட்டா ப்ராசசிங்") என்ற பெயரைக் குறிப்பதாக மாற்றியமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில், "SAP GmbH" நிறுவப்பட்டு, பின் வந்த ஆண்டுகளில் இதன் தலைமையகத்தை வால்டோர்ப்புக்கு மாற்றியது. 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு பின்னர் "SAP AG" என்பது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பெயரானது (AG என்பதுஆக்சியன்கெசல்சாப்டின் சுருக்கம்). 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், SAP GmbH என்பது SAP AG ஆக மாற்றப்பட்டு (ஜெர்மன் சட்டப்படி அமைந்த ஒரு பெருநிறுவனம்), மேலும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் பொது வர்த்தகத்தை தொடங்கியது. பங்குகள் ஃப்ரேங்க்ஃபர்ட் மற்றும் ஸ்டுட்கார்ட் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. 1234—ஹோப், ப்ளாட்னெர், சிர்ரா மற்றும் ஹெக்டார் -- ஆகிய நான்கு நிறுவன உறுப்பினர்களும் செயற்குழு குழுமத்தை உருவாக்கினர். 1995 ஆம் ஆண்டில், SAP ஜெர்மன் பங்குக் குறியீடான DAX இல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, SAP டெள ஜோன்ஸ் STOXX 50 இல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், பேராசிரியர். டாக்டர். ஹென்னிங் காகெர்மான் குழுமத்துடன் இணைந்தார்; 1993 ஆம் ஆண்டில் டாக்டர். பீட்டர் சென்கி இந்த குழும உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டு முதல் க்ளாஸ் ஹெய்ன்ரிச்சும் ஜெரார்ட் ஓஸ்வால்டும் SAP செயற்குழு உறுப்பினராக உள்ளனர். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், 1998 ஆம் ஆண்டில், தலைமையில் முதல் மாற்றம் ஏற்பட்டது. டயட்மர் ஹோப் மற்றும் க்ளாஸ் சிர்ரா மேற்பார்வை சம்பந்தப்பட்ட குழுமத்திற்கு மாற்றப்பட்டு டயட்மர் ஹோப் மேற்பார்வை சம்பந்தப்பட்ட குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஹென்னிங் காகர்மான் உபதலைவராகவும் ஹேஸ்ஸோ பிளாட்னெருக்குப் பின்னர் SAP நிறுவனத்தின் CEO வாகவும் பொறுப்பேற்றார். வெர்னர் ப்ராண்ட் 2001 ஆம் ஆண்டில் SAP நிறுவனத்தில் SAP நிர்வாகக்குழும உறுப்பினராகவும் தலைமை நிதிநிலை அலுவலராகவும் சேர்ந்தார். 2002 ஆம் ஆண்டிலிருந்து லியோ அபோத்தெகர் SAP நிர்வாகக்குழு உறுப்பினராகவும் உலகளாவிய வாடிக்கையாளர் தீர்வுகள் மற்றும் செயல்பாடுகளின் தலைவராக உள்ளார், 2007 ஆம் ஆண்டு துணை CEO ஆக நியமிக்கப்பட்டார், மேலும் 2008 ஆம் ஆண்டு காகர்மானுக்கு இணையாக இணை-CEO ஆனார். 2003 ஆம் ஆண்டில் ஹென்னிங் காகர்மான் SAP நிறுவனத்தின் ஒரே CEO யாக பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அவரது ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புக்களில் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காகர்மானைத் தொடர்ந்து நிர்வாகக் குழுமத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டிய ஷாய் அகாசியும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், லியோ அபோத்தெகெர் SAP மேற்பார்வையிடு குழுமத்திற்கு இணை-CEO வாக அறிவிக்கப்பட்டார் மேலும் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து SAP நிறுவனத்தின் நிர்வாகக் குழுமத்திற்கு எர்வின் கன்ஸ்ட், பில் மெக்டெர்மாட் மற்றும் ஜிம் ஹகமான் ஸ்னாப் ஆகிய மூன்று புதிய உறுப்பினர்கள் கார்ப்பரேட் அலுவலர்களாக பொறுப்பேற்றனர்.. 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஹென்னிங் ஓய்வு பெற்றதால் லியோ ஒரே CEO வாக பொறுப்பேற்றார். 1973 ஆம் ஆண்டில், SAP R/1 சொல்யுஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து, 1979 ஆம் ஆண்டில், SAP R/2 மென்பொருளை SAP நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 1981 ஆம் ஆண்டில், SAP நிறுவனம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்ட தீர்வுகளை சந்தைக்குக் கொண்டுவந்தது. 1992 ஆம் ஆண்டில் R/2 இலிருந்து R/3 க்கு மாறிய பிறகு, SAP கிளையண்ட்-சேவையக கட்டமைப்புகளுக்கு மெயின்ப்ரேம் கணினியியலின் போக்கினைப் பயன்படுத்தியது. mySAP.com தளத்தைத் தொடங்கிய SAP நிறுவனத்தின் இணைய உத்தியின் வளர்ச்சி, வணிக செயல்பாட்டு கருத்துக்களை (இணையத்துடன் இணைத்ததால்) மறுவடிவமைத்தது. 1999 ஆம் ஆண்டில் SAP இண்டஸ்ட்ரி வாரத்தின் மிகச்சிறந்த நிர்வாகத் திறனுள்ள நிறுவனம் என்ற விருதினைப் பெற்றது. SAP உலகின் மிகப்பெரிய மென்பொருள் வணிக நிறுவனமும் வருமானத்தைப் பொறுத்தவரை மூன்றாவது பெரிய சுயசார்பு மென்பொருள் வழங்கும் நிறுவனமாக உள்ளது. இது மூன்று புவியியல் மண்டலங்களில் இயக்கப்படுகிறது – EMEA அதாவது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா; அமெரிக்காஸ் (SAP அமெரிக்கா, பென்சில்வேனியாவின் நியூட்டன் சதுக்கத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது) வட அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா இணைந்தது; மற்றும் ஆசிய பசிபிக் ஜப்பான் (APJ), இது ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஆசியாவின் பகுதிகளை உள்ளடக்கியது. கூடுதலாக, SAP நிறுவனம் 115 துணை நிறுவனங்களின் வலையமைப்பைக் கொண்டு இயங்கிவருகிறது, மேலும் ஜெர்மனி, வட அமெரிக்கா, கனடா, சீனா, ஹங்கேரி, இந்தியா, இஸ்ரேல் மற்றும் பல்கேரியா, துருக்கி என உலகளாவிய அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வசதிகளையும் கொண்டுள்ளது. SAP நிறுவனத்தின் வேலைவாய்ப்புத் தளமான Recruit121.com அதன் தொழில் மேம்பாடுகளையும் மற்றும் அவற்றின் விளக்கங்களையும் பெற முடியும். SAP நிறுவனம் செயலாக்க தொழில்கள், தனித்தியங்கும் தொழில்கள், நுகர்வோர் தொழில்கள், சேவைசார் தொழில்கள், நிதியியல் சேவைகள் மற்றும் பொது சேவைகள் போன்ற ஆறு தொழில் துறைகளில் கவனம் செலுத்துகிறது. இது 25க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு தொழிலக தீர்வுகள் தொகுப்புகளையும் இடைநிலை மற்றும் சிறு வணிகங்களுக்கு 550 க்கும் மேற்பட்ட மைக்ரோ-மேம்பாட்டுத் தீர்வுகளையும் வழங்குகிறது. சேவை சார்ந்த கட்டமைப்பு ERPயை (Enterprise Resource Planning) மென்பொருள்-சார்ந்த மற்றும் இணைய சேவைகள்-சார்ந்த வணிக நடவடிக்கைகளை நோக்கி நகர்த்துகிறது. பொருந்தும் தன்மை, நெகிழும் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் போன்றவற்றை இது அதிகரிக்கிறது. இந்த E-SOA நோக்கிய நகர்வு, நிறுவனங்கள் மென்பொருள் கூறுகளை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது, மேலும் உள்ளமைந்த ERP வன்பொருள் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது, இதனால் சிறிய அல்லது இடைநிலை நிறுவனங்கள் மிகவும் கவரப்பட்டு ERP ஐ ஏற்றுக்கொள்ள உதவுகிறது. SAP நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை தகவல் அறிக்கையின் படி, "சேவை சார்பு கட்டமைப்பை நேரடியாக தீர்வுகளில் கட்டமைக்கும் மற்றும் SAP அல்லது SAP அல்லாத தீர்வுகளுக்கும் ஏற்ற தமது சொந்த சேவை சார்ந்த கட்டமைப்புகளை நிறுவனங்கள் மேம்படுத்துவதற்கான ஆதரிப்பதற்கான தொழில்நுட்பத் தளத்தையும் (SAP NetWeaver) வழிகாட்டுதல்களையும் வழங்கும் ஒரே தொழில் பயன்பாட்டு மென்பொருள் நிறுவனமாக SAP நிறுவனம் விளங்குகிறது." SAP E-SOA, கிளையண்ட் சான்றிதழ்-அடிப்படையிலான அங்கீகாரமே அனைத்து SAP தொழில்நுட்பங்களுக்கு இடையில் ஆதரவளிக்கும் முறையாகவும், (பயனர்பெயர்/கடவுச்சொல் ஆகியவற்றுடன் கூடுதலாக) அங்கீகார ஒற்றை உள்நுழைவு முறையாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக கெர்பரோஸ் மற்றும் லாகான் டிக்கெட்ஸ் SAP சேவை சார்ந்த கட்டமைப்புடன் இணக்கத் தன்மையற்றவை. SAP நிறுவனத்தின் தயாரிப்புகள் Enterprise Resource Planning (ERP) சார்ந்தவையாகவே உள்ளன. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு SAP ERP ஆகும். SAP நிறுவனத்தின் நடப்புப் பதிப்பு SAP ERP 6.0 ஆகும், மேலும் அது SAP வணிகத் தொகுமத்தின் பகுதி ஆகும். இதன் முந்தைய பெயர் R/3 என்று இருந்தது. இது ஒரு நிகழ்நேரத் தீர்வு இல்லை என்றாலும், SAP R/3யில் உள்ள "R" என்பது ரியல்டைம் என்பதைக் குறிக்கும். இதிலுள்ள 3 என்ற எண் தரவுத்தளம், பயன்பாட்டு சேவையகம் மற்றும் கிளையண்ட் (SAPgui) ஆகியவற்றை உள்ளடக்கிய 3-அடுக்கு கட்டமைப்பைக் குறிக்கும். மெயின் ஃப்ரேம் கட்டமைப்பில் இயங்கும் R/2 R/3 மென்பொருளின் முன்னோடி ஆகும். R/2 வின் வருகைக்கு முன் இருந்த System RF பின்னர் R/1 என பெயரிடப்பட்டது. SAP நிறுவனத்தில் வணிகத் தொகுமத்தில் உள்ள ஐந்து நிறுவனப் பயன்பாடுகளில் SAP ERP ஒன்று. மற்ற நான்கு பயன்பாடுகள் பின்வருமாறு: NetWeaver தளம், ஆளுகை, இடையூறு மற்றும் இணக்கம் (GRC) தீர்வுகள், டூயட் (மைக்ரோசாப்டுடன் இணைந்து வழங்கப்பட்டது), செயல்திறன் மேலாண்மை தீர்வுகள் மற்றும் RFID போன்றவை SAP நிறுவனம் வழங்கும் பிற முக்கிய தயாரிப்புகள் ஆகும். SAP நிறுவனம், இணைய சேவைகள் வடிவில் அதன் பயன்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் SOA செயல்திறன்களையும் (எண்டெர்பிரைஸ் SOA என அழைக்கப்படுகிறது) வழங்குகிறது. SAP நிறுவனத்தின் தயாரிப்புகள் Fortune 500 நிறுவனங்களால் பொதுவாக பயன்படுத்தப்பட்ட போதிலும், SAP நிறுவனம் இப்போது SAP Business One மற்றும் SAP Business All-in-One போன்ற இதன் தயாரிப்புகள் மூலம் சிறிய மற்றும் இடைநிலை நிறுவனங்களைக் (SME) குறிவைத்து செயல்படுகிறது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி SAP Business ByDesign என்ற புதிய தயாரிப்பை SAP நிறுவனம் அறிவித்தது. SAP Business ByDesign சேவையை உள்ளடக்கிய ஒரு மென்பொருளாகும் (SaaS), அது தேவைகளுக்கு ஏற்றார்போல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட Enterprise Resource Planning (ERP) தீர்வுகளை வழங்குகிறது. SAP Business ByDesign முன்னர் "A1S" என்ற குறியீட்டின் மூலம் அனைவராலும் அறியப்பட்டது. 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 25க்கும் மேற்பட்ட தொழில்களில் 41,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 100,600க்கும் மேல் SAP மென்பொருளை நிறுவியிருப்பதாக SAP நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், SAP நிறுவனம் அதன் அனைத்திற்கும் பொருந்தும் ஒரே அளவைக் கொண்டிருக்கும் தன்மையிலான தயாரிப்பு உத்திகளை விவரிக்கும் முறைகளில் குறை கூறப்பட்டு வருகிறது, குறிப்பாக நிறுவனங்களை இணைப்பவர்கள் மற்றும் கையகப்படுத்துபவர்களுக்கு இது பெரும் இடையூறாக உள்ளது. SAP மென்பொருளின் உத்திக்கு தொழில் கூட்டுகளே மையமாக உள்ளன, மேலும் அதன் 35 ஆண்டுகளின் மென்பொருள் தீர்வு வழங்குநர்கள், மதிப்பு கூட்டத்தக்க மறுவிற்பனையாளர்கள், விநியோகிப்பாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் கூட்டாளர்கள் ஆகியோரால் உருவான பெரிய வலையமைப்பு, தொழிற்துறையின் மிகப்பெரிய சூழலமைப்பாக அதனை மாற்றியது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கலிபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோ நகரில் திறக்கப்பட்ட, SAP நிறுவனத்தின் துணை கண்டுபிடிப்பு ஆய்வகமானது நாவெல், கொஸ்ட்ரா மற்றும் வொண்டர்வேர் போன்ற சார்பற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் (ISVகள்) system integrators (SIs) மற்றும் அதன் தொழில்நுட்பக் கூட்டாளர்களுடனான இணைப் பணித்திட்டங்களுக்கான செயல்திறன் மிக்க பணிச் சூழலை வழங்கியது, அது தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் SAP உடன் ஒருங்கிணைந்த பணி புரிய உதவியாக உள்ளது. சிஸ்கோ (Cisco), ஹெவ்லெட்-பேக்கர்டு (Hewlett-Packard), இண்டெல் (Intel) மற்றும் நெட்ஆப்(NetApp) ஆகிய துணை நிறுவனர்களுடன் உருவாக்கப்பட்ட, இந்த ஆய்வகமானது தொழிற்துறை SOA மாதிரியின் அடிப்படையில் இணைய/அக இணையத்தால் அணுகக்கூடிய வணிகப் பயன்பாடுகளுக்கான செயல்நிலை சூழ்நிலை மற்றும் நிகழ்நேர செயல்திறனை வழங்குகின்றது. SAP நிறுவனத்தின் கூட்டாளர்களில், வேறுபட்ட-துறைகளுடன் பலநாடுகளில் கல்சல்டிங் திறனுடன் உலகளாவிய சேவைகள் வழங்கும் கூட்டாளர்களும் உள்ளடங்குவர், உலகளாவிய மென்பொருள் கூட்டாளர்கள் SAP வணிகத் தொகுமத் தீர்வுகளை முழுமையடையச் செய்யும் ஒருங்கிணைந்த தயாரிப்புகளை வழங்குகின்றனர், மேலும் உலகளாவிய தொழில்நுட்பக் கூட்டாளர்கள் விற்பனையாளர் வன்பொருள், தரவுத்தளம், சேமிப்பக அமைப்புகள், நெட்வொர்க்குகள் மற்றும் மொபைல் கணினி தொழிநுட்பங்கள் உள்ளிட்ட SAP தொழில்நுட்பத்திற்கு ஆதரவு வழங்கும் பரவலான தயாரிப்புகளால் பயனர் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். SAP நிறுவனம் CSC, கேப்ஜெமினி, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், டெலாய்ட், IBM, பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ், ஹெவ்லெட்-பேக்கர்ட், சீமென்ஸ் ஐடி சொல்யுஷன்ஸ் அண்டு சர்வீசஸ் மற்றும் அக்செஞ்சர் போன்ற நிறுவனங்களுடன் கூட்டிணைந்து R3 க்கான மதிப்பீடுகள், நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது. சிறு வணிகங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான SAP தீர்வுகள் அதன் உலகாளவிய கூட்டாளர் வலையமைப்பு மூலமாக அளிக்கப்படுகின்றன. 2008 ஆம் ஆண்டில், SAP நிறுவனம் $4.9 பில்லியன் தொழில்நுட்ப சேவை வழங்கும், இந்தியாவைத் தலைமையிடத்தைக் கொண்ட HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் SAP தீர்வுகளை வழங்குவதற்காக உலகளாவிய சேவை கூட்டாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.. SAP கூட்டாளர் தொடர்பான திட்டமான, SAP நிறுவன கூட்டாளர் குடும்பத் திட்டமானது, மதிப்பு கூட்டத்தக்க மறுவிற்பனையாளர்கள் (VARகள்), தன்னிச்சையான மென்பொருள் விற்பனையாளர்கள் (ISVகள்) ஆகியோர் உள்ளிட்ட கூட்டாளர்கள் இலாபமடையவும், SAP தீர்வுகளை பரவலான வாடிக்கையாளர்களிடையே செயல்படுத்தல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல், மேம்படுத்தல் மற்றும் வழங்கல் போன்ற அவர்களின் செயல்பாடுகளில் வெற்றிகரமாக விளங்கவும் உதவக்கூடிய, வணிக மேம்பாட்டு ஆதாரங்களையும் திட்ட இலாபங்களின் தொகுப்பை வழங்குகின்றது. SAP நிறுவன கூட்டாளர் குடும்பம், "சிறிய மற்றும் நடுத்தர வணிகப் பயன்பாட்டு சந்தைக்கான பாதை மேம்பாட்டில் புதுமுயற்சிகளுக்கான புதிய தரநிலையை அமைத்துள்ளது" என கார்ட்னர் அமைப்பு குறிப்பிடுகிறது. SAP டெவலப்பர் வலையமைப்பு (SDN) என்பது டெவலப்பர்கள், ஆலோசகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் வணிக பகுப்பாய்வாளர்கள் ஆகியோர், ABAP, Java, .NET, SOA மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை வல்லுநர் வலைப்பதிவுகள், விவாத மன்றங்கள், பிரத்தியேக பதிவிறக்கங்கள் மற்றும் குறியீட்டு மாதிரிகள், பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப நூலகம் வாயிலாக பெற்றுக்கொள்ளும் மற்றும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சமூகம் ஆகும். The வணிக செயலாக்க வல்லுநர் (BPX) சமூகம் என்பது, வணிக செயலாக்க வல்லுநர்கள், வணிக முனைப்பையும் IT மதிப்பையும் அதிகரிக்கும் வகையில் நிறுவன SOA செயல்படும் விதத்தை எளிதாக்கும் வகையிலான சிறந்த தகவல், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை, பகிர்வதற்கான ஒருங்கிணைந்த சூழல் ஆகும். SAP நிறுவனச் சேவைகள் சமூகம் வாடிக்கையாளர்களிலிருந்து வரும் உறுப்பினர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றும் கூட்டாளர்கள் ஆகியோருக்கு நிறுவன சேவைகளை வரையறுக்கும் தளமாக சேவையாற்றுகின்றது. துறை மதிப்பு வலையமைப்புகள் (IVN) துறை தொடர்பான வாடிக்கையாளர் சவால்களைத் தீர்ப்பதற்கு கண்டுபிடிக்க துணைபுரியம் மற்றும் தீர்வுகளை உருவாக்கிவாடிக்களையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் SAP ஆகியவற்றுடன்ஒன்றிணைத்துக் கொண்டுவருகின்றன. தற்போது பதினோறு IVNகள் செயல்பாட்டில் உள்ளன (எ.கா. வங்கியியல், இரசாயனம், நுகர்வோர் தயாரிப்புகள், உயர் தொழில்நுட்பம், பொதுத்துறை, சில்லறை விற்பனை). 2008 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், SAP நிறுவன கூட்டாளர்கள் மற்றும் SAP நிறுவனத்திடமிருந்து SAP வாடிக்கையாளர் சான்றளிக்கப்பட்ட SAP தீர்வுகளைக் கண்டறியும் ஆன்லைன் சந்தைப்பகுதியாக SAP எக்கோஹப்SAP EcoHub தொடங்கப்பட்டது. SAP TechEd இது SAP நிறுவனத்திடமிருந்து வரும் முதன்மை தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயலாக்க கல்வியியல் விவாதம் ஆகும். ஒவ்வொரு இலையுதிர்க்காலத்தில், ஆயிரக்கணக்கான வலை மற்றும் பயன்பாட்டு டெவலப்பர்கள், மதிப்பீடு மற்றும் செயலாக்க வல்லுநர்கள், வணிக செயலாக்க வித்தகர்கள், IT மேலாண்மை, கணினி நிர்வாகிகள் மற்றும் வியாபார அறிஞர்களின் ஆழமான விரிவுரைகள், செயல்நிலை பயிற்சிகள் மற்றும் வலையமைப்பு வாய்ப்புகளுக்கு ஆகியவற்றுக்காக ஒன்றிணைகின்றனர். இந்த விவாதங்களில் SAP ஆன்லைன் சமூகங்களின் அனுபவங்களும் இணைக்கப்பட்டிருக்கும். R&D தேவைகள், துறை செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றுக்காக SAP நிறுவனத்தின் செயல்பாட்டு மையங்கள் வேறுபட்ட நிறுவன மையங்களாகப் பிரிந்துள்ளன. SAP லேப்கள் தயாரிப்பு உருவாக்கத்திற்கே முதன்மைப் பொறுப்பாக உள்ளன, ஒவ்வொரு நாடுகளிலும் பரவியுள்ள துறை நிறுவனங்கள் விற்பனை, சந்தைப்படுத்தல், விவாதங்கள் போன்ற துறை செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கின்றன. SAP AG நிறுவனத்தில் உள்ள தலைமை அலுவலகம் தயாரிப்பு உருவாக்கம் தொடர்பான பிரதான பொறியியல் செயல்பாடுகள் போன்ற அனைத்து மேலாண்மைக்கும் பொறுப்பேற்கின்றது. SAP வாடிக்கையாளர் ஆதரவு, உலகளாவிய செயல்நிலை ஆதரவு (AGS) என்றும் அழைக்கப்படுகின்றது, இது உலகளாவிய SAP வாடிக்கையாளர்களுக்கு ஆதரவை வழங்கும் உலகளாவிய நிறுவனமாகும். SAP லேப்ஸ் என்பது முதன்மை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். SAP மேம்பாட்டு நிறுவனம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பெரும்பாலான லேப்ஸ் இருப்பிடங்கள் SAP ஆராய்ச்சி குழுமங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அனைத்தும் இல்லை. பெரிய லேப்ஸ், அமெரிக்க ஒன்றியத்தின் பலோ ஆல்ட்டோ; இந்தியாவின் பெங்களூர் மற்றும் குர்கோன்; இஸ்ரேலின் ரானனா மற்றும் கர்மியல்; கனடா மற்றும் சீனாவின் ஷாங்ஹாய் ஆகியவற்றில் உள்ளன. SAP லேப்ஸ் இந்தியா http://www.sap.com/india/company/saplabs/index.epx, ஜெர்மனியின் வால்டோர்ஃப் நகரில் அமைந்துள்ள தலைமையகத்திற்கு வெளியே அமைந்துள்ள பணியாளர்களின் எண்ணிக்கையின் படி மிகப்பெரிய மேம்பாட்டுப் பிரிவாகும். பிற SAP லேப்ஸ் இருப்பிடங்கள் பிரான்ஸ், பல்கேரியா மற்றும் ஹங்கேரி ஆகியவற்றில் அமைந்துள்ளன. ஒவ்வொரு SAP லேப்பும் பரவலான நிபுணத்துவத் துறைகளையும் மையங்களையும் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக பல்கேரியாவின் சோபியா நகரிலுள்ள SAP லேப்ஸ் Java அடிப்படையிலான SAP மென்பொருள் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது. அமெரிக்க ஒன்றியத்தில் அமைந்துள்ள SAP லேப்ஸ், அதன் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி ஒருமுகப்படுத்தலுக்கு பிரபலமானது. பயனர் குழுமம் என்பது, SAP சூழல் அமைப்பிலுள்ள SAP வாடிக்கையாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர்களின் தற்சார்புடைய இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும், அவை அவற்றின் உறுப்பினர்களுக்கு கல்வி, SAP தயாரிப்புகள் வெளியீடுகள் மற்றும் இயக்கங்களில் தலையீடு, சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் சந்தைத் தேவைகளுக்கான புரிதலை வழங்குகின்றன. அமெரிக்காவின் SAP பயனர்கள் குழுமம் (ASUG), ஜெர்மன் பேசும் SAP பயனர் குழுமம் (DSAG), SAP ஆஸ்திரேலிய பயனர் குழுமம் (SAUG) மற்றும் SAP UK & அயர்லாந்து பயனர் குழுமம் ஆகியவை பயனர் குழுமங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.. மேலும் உள்ள SAP பயனர் குழுமங்கள், SAP பயனர் குழுமங்கள் பட்டியலில் காணலாம். 2007 ஆம் ஆண்டில், SAP பயனர் குழுவின் செயற்குழு வலையமைப்பு (SUGEN), SAP பயனர் குழுமங்களிடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறை பகிர்வு மற்றும் உத்தித் தலைப்புகளுக்கான SAP மென்பொருள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டிணைப்பை வளர்க்கவும் தொடங்கப்பட்டிருக்கின்றது. SAP போட்டியாளர்கள் பெரும்பாலும் நிறுவன வளத் திட்டமிடல் மென்பொருள் துறையில் உள்ளனர். SAP, வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, சந்தைப்படுத்தல் & விற்பனை மென்பொருள், தயாரித்தல், சேமித்தல் & தொழிற்துறை மென்பொருள், மற்றும் வழங்கல் சங்கிலி மேலாண்மை & சரக்குப்பரிமாற்ற மென்பொருள் பிரிவுகள் ஆகியவற்றிலும் போட்டியிடுகின்றது. SAP நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ஆரக்கிள் கார்ப்பரேஷன், முறைகேடு மற்றும் முறையற்ற போட்டிகளுக்காக கலிபோர்னியா நீதிமன்றத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி SAP நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது. புகாரில் டெக்ஸாஸ் துணை நிறுவனமான, SAP TN நிறுவனத்தின் (SAP நிறுவனத்தால் வாங்கப்படுவதற்கு முன்னர் டுமாரோநவ் என்ற பெயரில் இருந்தது) மீது, சட்டப்பூர்வமான ஆரக்கிள் தயாரிப்பு வரிசைகளுக்கு தள்ளுபடிச் சலுகைகளை வழங்குவதாகவும், ஆரக்கிள் வலத்தளத்தில் இருந்து தொகுப்புகள் மற்றும் ஆதரவு ஆவணங்களை முறைப்பட்டியான பதிவிறக்கம் செய்ய முந்தைய ஆரக்கிள் வாடிக்கையாளர்களின் கணக்கைப் பயன்படுத்தியதாகவும் அவற்றை SAP நிறுவனத்தின் தேவைக்குப் பயன்படுத்தியதாகவும் கூறியது.. பின்னர் ஆரக்கிள் தனது வழக்கில் குறிப்பிட்டிருந்த புகார்களை விட சிறிதளவு தவறு செய்திருந்ததாக SAP நிறுவனம் ஒப்புக்கொண்டது. SAP முறையற்ற பதிவிறக்கங்களை ஒப்புக்கொண்டது; இருப்பினும் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட அறிவுசார் சொத்து திருட்டு எதையும் ஏற்கவில்லை. SAP நிறுவனம் அதன் முக்கிய போட்டியாளரான ஆரக்கிள் நிறுவனத்திற்கு எதிராக கட்டமைப்பில் வளர்கிறது என்று அறியப்படுகின்றது, அது 2004 ஆம் ஆண்டு முதல் அதன் 30 சிறிய போட்டியாளர்களைக் கையகப்படுத்த 20 பில்லியன் US டாலர்கள் வரை செலவு செய்து கொண்டிருக்கின்றது. SAP, 2002 ஆம் ஆண்டு முதல் தனது ஆண்டு இலாபத்தை 370% அதிகரிக்க முடிந்துள்ளது. நிறுவனத்தின் இயல்பான கட்டமைப்பு வளர்ச்சியில் சில வழிதவறல்கள் இருந்தன, 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, SAP வணிக நுண்ணறிவு மென்பொருள் சந்தையில் முன்னணியில் இருந்த பிசினஸ் ஆப்ஜெக்ட்ஸ் நிறுவனத்தை $6.8 பில்லியனுக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. 2008 ஆம் ஆண்டில் பராமரிப்பு ஒப்பந்தங்களின் கட்டணத்தை SAP அதிகரித்தன் மூலம் அதன் பயனர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கியது. இந்த சிக்கலானது பயனர் குழுமங்களுக்கிடையே ஆழ்ந்த விவாதங்களுக்கான பொருளாக இருக்கின்றது. புளூடூத் புளூடூத் என்பது டேட்டா பரிமாற்றத்திற்கான வயர்லெஸ் தொழில்நுட்ப தரநிலை (ஸ்டாண்டர்ட்) ஆகும். இது இருபது, முப்பது மீட்டர் வரை வேலை செய்கிறது. நிலையான மற்றும் மொபைல் சாதனங்களிலிருந்து 2.4 -2.485 GHz ) UHF ரேடியோ அலைவரிசை மூலமாக டேட்டா அனுப்பப்படுகிறது.  புளூடூத் சமிக்ஞைகள் சுவர்களை கடக்க முடியாது. 1994 ஆம் ஆண்டு எரிக்ஸன்  நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த டச்சு மின் பொறியியலாளர் ஜாப் ஹார்ட்ஸன் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இந்த தொழில்நுட்பம் முதலில் RS-232 தரவு கேபிள்களுக்கு ஒரு வயர்லெஸ் மாற்றலாக தயாரிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு, கணினி, நெட்வொர்க்கிங் மற்றும் மின்னணுவியல் நிறுவங்களிலிருந்து 30,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்டிருக்கும் ப்ளூடூத் SIG மூலமாக ப்ளூடூத் நிர்வகிக்கப்படுகிறது. ஐஇஇஇ (IEEE) 802.15.1 என்கிற  ப்ளூடூத் தரநிலையாக நிர்ணயித்தது, ஆனால் இந்த தரநிலையை  ஐஇஇஇ பராமரிப்பதில்லை. புளூடூத் SIG இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. புளூடூத் சாதனங்களை  விற்கும் நிறுவனங்கள் Bluetooth SIG தரங்களை சந்திக்க வேண்டும். பிறப்பிடம்: 1989 இல் ஸ்வீடனில் லுண்ட் என்கிற நகரத்தில், எரிக்சன் மொபைல் நிறுவனத்தில் நில்ஸ் ரைட்பெக் (CTO), மற்றும் யோஹன் உல்மான் ஆகியவர்களால் வேலை தொடங்கப்பட்டது. இரண்டு காப்புரிமைகல் (SE 8902098-6, 1989-06-12 மற்றும் SE 9202239, 1992-07-24) வெளியிட பட்டன. இந்த இரண்டு காப்புரிமைகள் படி, வயர்லெஸ் ஹெட்செட்களை உருவாக்குவதுதான் இந்த வேலையின் நோக்கம். டோற்ட் விங்ரென், ஜாப் ஹார்ட்ஸ்ன்,  மற்றும் ஸ்வென் மேட்டிஸன் ஆகியவர்கள் இந்த வேலையில் ஈடுபட்டார்கள். இந்த தொழில்நுட்பம் UHFஐ  அடிப்படையாக கொண்டிருக்கும் என்று முடுவு செய்தார்கள். பெயர் இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டு மன்னர் ஹரால்ட் புளுடூத் அவர்களின் பெயர் ஆகும். இவர் பல டேனிஷ் பழங்குடியினரை ஒற்றைப் பேரரசாக இணைத்தார். புளுடூத் தொடர்பு பல நெறிமுறைகளை ஒருங்கிணைக்கிறது என்பதை இந்த பெயர் காட்டுகிறது. 1997 ஆம் ஆண்டு இன்டெல்லின்  ஜிம் கர்தாச் இந்த பெயரை பரிந்துரைத்தார். அவரும் மொபைல் ஃபோன்களை கம்ப்யூட்டர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். அந்த காலத்தில் ​​அவர் கிங் ஹரால்டு புளூடூத்தைப்பற்றி ஃபிரான்ஸ் ஜி. பெங்டஸ்ஸான் எழுதிய வரலாற்று நாவலை (The Long Ships) படித்துக்கொண்டிருந்தார். நிறுவுதல் புளூடூத் 2402-2480 மெகா ஹெர்ட்ஸ் அல்லது 2400-2483.5 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் இயங்குகிறது. இது  ஒரு கட்டுப்படுத்தப்படாத  அலைவரிசை. புளூடூத் மூலம் பரிமாற்றப்படும் டேட்டா  பாக்கெட்டுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாக்கெட்டும் 79 நியமிக்கப்பட்ட புளூடூத் சேனல்களில் ஒன்று மூலம் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு சேனலுக்கும் 1 MHz அலைவரிசை கொடுத்திறார்கள்.  வழக்கமாக விநாடிக்கு 800 முறை சேனல் மாற்றப்படுகிறது. இந்த விதமான தொழில்நுட்பம்  frequency hopping என்று சொல்லப்படுகிறது. புளூடூத் லோ என்ர்ஜி  என்கிற தரநிலை ஒவ்வொரு சேனலுக்கும் 2 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொடுக்கிறது. இது 40 சேனல்களுக்கு இடமளிக்கிறது. புளுடூத் என்பது முக்கியமாக குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி குறைவான எல்லைக்குள்ளான (ஆற்றல் வகையைப் பொறுத்து: 1 மீட்டர், 10 மீட்டர், 100 மீட்டர்) தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தரநிலையாகும். இது பயன்படுத்தப்படும் இரு சாதனங்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை ட்ரான்சீவர் மைக்ரோசிப்களை அடிப்படையாகக் கொண்டது. புளுடூத் உதவியால் இந்த சாதனங்கள் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் இருக்கும் போது அவை ஒன்றையொன்று தொடர்புகொள்ள முடியும். இந்தச் சாதனங்கள் ரேடியோ (அலைபரப்பு) தகவல்தொடர்பைப் பயன்படுத்துவதால் அவை ஒன்றுக்கொன்று தெரியும் படியோ அல்லது ஒன்றுக்கொன்று நேராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் வகை 2 ஐச் சேர்ந்த சாதனங்கள் வகை 1 ஐச் சேர்ந்த ட்ரான்சீவருடன் (transceiver) இணைந்தால், வகை 2 ஐச் சேர்ந்த நெட்வொர்க்குடன் ஒப்பிடும் போது அவற்றின் எல்லையானது நீட்டிக்கப்படுகிறது. வகை 1 ஐச் சேர்ந்த சாதனங்களின் அதிக உணர்திறன் மற்றும் அலைபரப்புத் திறனின் காரணமாக சாத்தியமாகிறது. புளுடூத்தைப் பயன்படுத்த ஒரு சாதனம் குறிப்பிட்ட புளுடூத் பயன்வகைகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இவையே தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் மற்றும் பயன்களை வரையறுக்கின்றன. புளுடூத்தின் பெரும்பாலான பயன்பாடுகளில் இவையும் அடங்கும்: இன்றைய அலுவலகங்களிலும் வீடுகளிலும் மற்றும் பயணத்தின் போதும் புளுடூத் மற்றும் வைஃபை (Wi-Fi) அதிகமாகப் பயன்படுகின்றன: நெட்வொர்க்குகளை அமைத்தல், அச்சிடுதல், அல்லது விளக்கக் காட்சிகள் மற்றும் கோப்புகளை PDAகளிலிருந்து கணினிகளுக்கு அனுப்புதல் போன்ற பயன்கள் முக்கியமானவை. இரண்டுமே உரிமமற்ற கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் பதிப்புகளாகும். Wi-Fi என்பது வீட்டில் பயன்படும் சாதனம் மற்றும் அதன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். இவற்றின் பயன்பாடுகளின் வகை டபிள்யூலேன் (WLAN) எனப்படும் கம்பியில்லா அகப் பரப்பு வலையமைப்புகள் என அறியப்படுகின்றன. வைஃபை (Wi-Fi) பணிபுரியும் இடங்களிலுள்ள பொதுவான அகப் பரப்பு வலையமைப்பு அணுகலுக்கான வடத்தின் பயன்பாட்டுக்கான ஒரு மாற்றாகவே உருவாக்கப்பட்டது. புளுடூத் தொழில்நுட்பம் நிலையாக ஓரிடத்தில் இல்லாத சாதனம் மற்றும் அதன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இவற்றின் பயன்பாடுகளின் வகை கம்பியில்லா தனிப்பரப்பு வலையமைப்பு (WPAN) என அறியப்படுகிறது. புளுடூத் என்பது, எந்தச் சூழலிலும் செய்யப்படும் பல வகையான தனிப்பட்ட செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் வடத்தின் (cabling) பயன்பாட்டுக்கான மாற்றாக உள்ளது. தொலைபேசிகள், Wii, ப்ளேஸ்டேஷன் 3, Lego மைண்ட்ஸ்ட்ராம்ஸ் NXT (Lego Mindstorms NXT) மற்றும் சமீபத்தில் சில உயர் தொழில்நுட்பமுள்ள கடிகாரங்கள், மோடம்கள் மற்றும் தலையணிகள் (headsets) போன்ற பல தயாரிப்புகளில் புளுடூத் உள்ளது. குறைந்த-கற்றையகல சூழல்களில் ஒன்றுக்கொன்று அருகிலுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கிடையே தகவலை பரிமாறிக்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் பயன்மிக்கது. பொதுவாக புளுடூத் தொழில்நுட்பம் தொலைபேசிகளில் (அதாவது, ஒரு புளுடூத் தலையணியின் உதவியுடன்) ஒலித் தரவைப் பரிமாறிக்கொள்ள அல்லது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கணினிகளில் (கோப்புகளைப் பரிமாறிக்கொள்ள) பைட் தரவைப் பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது. சாதனங்களுக்கிடையே சேவைக் கண்டறிதல் மற்றும் சேவை அமைப்பதை புளுடூத் நெறிமுறைகள் எளிதாக்குகின்றன. புளுடூத் சாதனங்கள் தாம் வழங்கும் சேவைகள் அனைத்தையும் எளிதில் விளம்பரம் படுத்தக்கூடியவை. பாதுகாப்பு, நெட்வொர்க் முகவரி மற்றும் அனுமதி உள்ளமைப்பு போன்ற பெரும்பாலானவற்றை பிற நெட்வொர்க் வகைகளை விட மிகுந்த தானியங்குத் தன்மையுடன் செயல்பட வைக்க முடியும் என்பதால் சேவைகளைப் பயன்படுத்துவது எளிதாகிறது. வை-ஃபை (Wi-Fi) என்பது ஒரு பழமையான ஈத்தர்நெட் நெட்வொர்க் ஆகும். பகிரப்பட்ட வளங்களை அமைக்கவும் கோப்புகளை அனுப்பவும் ஆடியோ இணைப்புகளை அமைக்கவும் (எடுத்துக்காட்டுக்கு, தலையணிகள் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனங்கள்) இதற்கு உள்ளமைப்பு தேவைப்படுகிறது. புளுடூத் பயன்படுத்தும் ரேடியோ அதிர்வெண்களையே வை-ஃபை (Wi-Fi) தொழில்நுட்பமும் பயன்படுத்துகிறது. ஆனால் இதில் அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுவதால் வலிமையான இணைப்பு சாத்தியமாகிறது. வை-ஃபை (Wi-Fi) என்பது சில நேரம் "கம்பியில்லா ஈத்தர்நெட்" (wireless Ethernet) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் ஒப்புமை வலிமைகள் மற்றும் பலவீனங்களைக் குறிப்பிடுவதால், இந்த விளக்கம் மிகத் துல்லியமானது. வை-ஃபை (Wi-Fi) தொழிநுட்பத்திற்கு கூடுதல் அமைப்பு தேவைப்படுகிறது. முழு-அளவிலான நெட்வொர்க்குகளை இயக்க இது மிகவும் பொருத்தமானது; மேலும் இது புளுடூத்தை விட வேகமான இணைப்பை உண்டாக்க உதவுகிறது, பேஸ் ஸ்டேஷனிலிருந்து சிறந்த வரம்பையும் மற்றும் சிறந்த பாதுகாப்பையும் வழங்குகிறது. ஒரு தனிநபர் கணினி, (கைபேசி சுட்டிகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற) பிற புளுடூத் சாதனங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள அதில் புளுடூத் அடாப்டர் (adapter) இருக்க வேண்டும். சில மேசைக் கணினிகளும் சமீபத்திய மடிக்கணினிகளும் ஓர் உள்ளமைக்கப்பட்ட புளுடூத் அடாப்டருடன் கிடைக்கின்றன, பிற கணினிகளுக்கு தனியாக டாங்கிள் (dongle) வடிவத்தில் ஓர் அடாப்டர் தேவைப்படும். அதற்கு முன்பிருந்த IrDA க்கு, ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு தனி அடாப்டர் தேவைப்படும், ஆனால் புளுடூத் தொழில்நுட்பத்தில் பல சாதனங்கள் கணினியுடன் ஒரு அடாப்டர் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். Apple, 2002 ஆம் ஆண்டில் வெளியிட்ட மேக் ஓஎஸ் எக்ஸ் வி10.2 (Mac OS X v10.2) இலிருந்து புளுடூத்தை ஆதரிக்கிறது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) தளத்தில் விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 மற்றும் அதற்குப் பின்னர் வந்த வெளியீடுகள் அனைத்தும் புளுடூத்துக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் வெளிவந்தன. முந்தைய பதிப்புகளுக்கு, பயனர்கள் புளுடூத் அடாப்டர்களுக்கான இயக்கிகளைத் தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது அவை மைக்ரோசாஃப் (Microsoft) நிறுவனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை. [21] மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் (Microsoft) புளுடூத் டாங்கிள்கள் (புளுடூத் கணினி சாதனங்களின் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட்டவை) வெளிப்புற சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை ஆகவே அவற்றுக்கு குறைந்தபட்சம் விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 (Windows XP Service Pack 2) தேவைப்பட்டது. லினக்ஸில் (Linux) இரண்டு பிரபலமான புளுடூத் செயல்படுத்தல் நெறிமுறைகள் இருந்தன. அவை ப்ளூஸ் (BlueZ) மற்றும் அஃபிக்ஸ் (Affix) ஆகியவையாகும். ப்ளூஸ் (BlueZ) [22] செயல்படுத்தல் நெறிமுறைகள் பெரும்பாலான லினக்ஸ் (Linux) கெர்னல்களில் (kernels) உள்ளமைக்கப்பட்டிருந்தன. மேலும் அது குவால்கம் (Qualcomm) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அஃபிக்ஸ் (Affix) செயல்படுத்தல் நெறிமுறை நோக்கியா (Nokia) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. FreeBSD இல் அதன் 5.0 வெளியீட்டில் இருந்து புளுடூத் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. NetBSD இல் அதன் 4.0 வெளியீட்டில் இருந்து புளுடூத் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அதன் புளுடூத் செயல்படுத்தல் நெறிமுறை OpenBSD இல் அமைக்கப்பட்டுள்ளது. புளுடூத் செயல்படுத்தப்பட்ட ஒரு கைபேசி பல சாதனங்களுடன் இணை சேர முடியும். சிறந்த சாதன ஆதரவுடன் அம்ச செயலம்சத்திற்கான பரவலான ஆதரவுக்காக தி ஓபன் மொபைல் டெர்மினல் தளத்தின் (OMTP) மன்றம் சமீபத்தில், "புளுடூத் அக இணைப்புத்தன்மை" எனத் தலைப்பிடப்பட்ட ஒரு பரிந்துரைத் தாளை வெளியிட்டுள்ளது; அந்தத் தாளைப் பதிவிறக்க கீழே உள்ள புற இணைப்புகள் பிரிவைப் பார்க்கவும். புளுடூத் குறிப்புவிவரம் 1994 ஆம் ஆண்டில் ஜாப் ஹார்ட்ஸன் மற்றும் ஸ்வென் மேட்டிஸன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஸ்வீடனில் உள்ள லண்ட் என்ற இடத்திலுள்ள எரிக்சன் மொபைல் தளங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள். குறிப்புவிவரமானது அதிர்வெண்-துள்ளல் பரப்புக் கற்றை தொழில்நுட்பத்தை (Frequency-hopping spread spectrum technology) அடிப்படையாகக் கொண்டது. இந்தக் குறிப்புவிவரங்கள் புளுடூத் சிறப்பார்வக் குழுவால் (சிறப்பார்வக் குழு-SIG) முறைப்படுத்தப்பட்டன. SIG முறையாக 1998 ஆம் ஆண்டு மே 20 அன்று அறிவிக்கப்பட்டது. தற்போது உலகளவில் 11,000 நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. எரிக்சன் (Ericsson), ஐபிஎம் (IBM), இண்டெல் (Intel), தோஷிபா (Toshiba) மற்றும் நோக்கியா (Nokia) ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்கின. பின்னர் பல பிற நிறுவனங்கள் இணைந்தன. இதன் 1.0 மற்றும் 1.0B ஆகிய பதிப்புகள் பல சிக்கல்களைக் கொண்டிருந்தன, உற்பத்தியாளர்கள் அவர்களின் தயாரிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமப்பட்டனர். 1.0 மற்றும் 1.0B ஆகிய பதிப்புகளும் இணைத்தல் செயல்பாட்டில் கட்டாய புளுடூத் வன்பொருள் சாதன முகவரி (BD_ADDR) பரப்பலைக் கொண்டிருந்தன (நெறிமுறை மட்டத்தில் பெயர் தெரியாத வகையில் ரெண்டர் செய்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தது). இது புளுடூத் சூழல்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. இந்தப் பதிப்பு 1.1 பதிப்புடன் பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டதாக இருந்தது. மேலும் முக்கியமான மேம்பாடுகள் பின்வருமாறு: புளுடூத் குறிப்புவிவரத்தின் இந்தப் பதிப்பு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது. இது முந்தைய பதிப்பு 1.2 உடன் பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டது. வேகமான தரவுப் பரிமாற்றத்திற்கான மேம்படுத்தப்பட்ட தரவு வீதமே (EDR) இதிலுள்ள முக்கியமான வேறுபாடு ஆகும். EDR இன் சராசரி வீதம் சுமார் வினாடிக்கு 3 மெகாபிட்களாகும் இருப்பினும் நடைமுறையில் அதன் தரவுப் பரிமாற்ற வீதம் வினாடிக்கு 2.1 மெகாபிட்களாகும். [26] தரவுப் பரப்பலுக்கான ஒரு வித்தியாசமான ரேடியோ தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் வெளியீடு-உள்ளீடு விகிதம் பெறப்படுகிறது. தரநிலையான, அல்லது அடிப்படை வீத பரப்பலானது 1 Mbit/s என்ற மொத்த பரப்புத் தரவு வீதத்திலான ரேடியோ சமிக்ஞையின் காஸியன் அதிர்வெண்-மாற்றப் பண்பேற்றத்தைப் (GFSK) பயன்படுத்துகிறது. π/4-DQPSK மற்றும் 8DPSK ஆகிய இரண்டு மாறிகளுடனான, GFSK மற்றும் கட்ட-மாற்றப் பண்பேற்றம் (PSK) ஆகியவற்றின் சேர்க்கையை EDR பயன்படுத்துகிறது. இவை முறையே 2 மற்றும் 3 Mbit/s என்னும் மொத்தப் பரப்பல் தரவு வீதங்களைக் கொண்டவை. 2.0 குறிப்புவிவரத்தின் படி, பின்வரும் நன்மைகளை EDR வழங்குகிறது: புளுடூத் சிறப்பார்வக் குழு (SIG) "புளுடூத் 2.0 + EDR" என்ற பெயரில் குறிப்புவிவரத்தை வெளியிட்டுள்ளது, EDR என்பது விருப்பத்தின் அடிப்படையிலான அம்சம், அது இல்லாமலும் இருக்கலாம் என இந்தப் பெயர் தெரிவிக்கிறது. 2.0 குறிப்புவிவரத்தில் EDR மட்டுமின்றி, சில பிற சிறிய மேம்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் அந்தத் தயாரிப்புகள் உயர் தரவு வீதத்தை ஆதரிக்காமல் "புளுடூத் 2.0" உடன் இணக்கத்தன்மையுடன் இருப்பவை எனக் கூறப்பட்டது. வணிக ரீதியான சாதனமான, HTC TyTN பாக்கெட் PC தொலைபேசி மட்டுமே அதன் தரவுத் தாளில் "EDR இல்லாத புளுடூத் 2.0" எனக் குறிப்பிட்டுள்ளது. புளுடூத் பிரதான குறிப்புவிவரம் பதிப்பு 2.1 ஆகும். இது பதிப்பு 1.2 உடன் முழுவதுமான பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டது. மேலும் 2007 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று புளுடூத் SIG அதை ஏற்றுக்கொண்டது. இந்தக் குறிப்புவிவரத்தில் பின்வரும் அம்சங்களும் அடங்கும்: 3.0 குறிப்புவிவரத்தை [40] 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று Bluetooth SIG ஏற்றுக்கொண்டது. இதன் முக்கியமான புதிய அம்சம் AMP (மாற்று MAC/PHY) ஆகும், ஓர் அதிவேகப் பரிமாற்றமாக 802.11 சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் குறிப்புவிவரத்தில் AMP க்கு 802.11 மற்றும் UWB ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் எதிர்பார்க்கப்பட்டன ஆனால் UWB சேர்க்கப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று, புளுடூத் SIG முழுவதும் கூடுதல் நெறிமுறைத் தொகுப்புகளுடன் புதிய புளுடூத் குறை ஆற்றல் அம்சத்தை வழங்கியது, அது நடப்பிலுள்ள பிற புளுடூத் நெறிமுறைத் தொகுப்புகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருந்தது. முதலில் இருந்த விப்ரீ ("Wibree") "Bluetooth ULP" (சிறப்பு குறை ஆற்றல்) என்ற பெயர்கள் வழக்கழிந்து இறுதியில் "புளுடூத் குறை ஆற்றல்" எனப் பெயர் வந்தது. 2007 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று, நோக்கியா (Nokia) மற்றும் Bluetooth SIG ஆகியவை இணைந்து விப்ரீ (Wibree) என்பது, Bluetooth குறிப்புவிவரத்தின் ஒரு பகுதியாகவும் சிறப்பு-குறை ஆற்றல் Bluetooth தொழில்நுட்பமாகவும் இருக்கும் என அறிவித்தன. அழைப்பவர் ID தகவலைக் காட்டும் கடிகாரங்கள், விளையாட்டு சென்சார்களை அணிந்திருப்பவர்உடற்பயிற்சியின் போது அவர்களின் இதயத் துடிப்பு வீதமறிதல் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகிய சூழல்களில் இது பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவ சாதனங்கள் பணிக் குழுவும் இந்த சந்தைக்கு உதவும் வகையிலான ஒரு மருத்துவ சாதனங்கள் பயன்வகையையும் அதனுடன் தொடர்புடைய நெறிமுறைகளையும் உருவாக்குகிறது. சாதனங்கள் ஒரு ஆண்டு வரையிலான பேட்டரி ஆயுளைப் பெற வேண்டும் என்பதற்காக புளுடூத் குறை ஆற்றல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. புளுடூத் 3.0 இன் அதிவேக (AMP) அம்சம், 802.11 ஐ அடிப்படையாகக் கொண்டது, ஆனால் AMP செயல்முறையானது பிற ரேடியோ அம்சங்களுடனும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அது முதலில் UWB க்காகவே உருவாக்கப்பட்டது, ஆனால் புளுடூத்திற்காக உருவாகப்பட்ட UWB க்கு பொறுப்பான வை-மீடியா கூட்டணி, மார்ச் 2009 ஆம் ஆண்டில் அதைக் கைவிட்டதாக அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று, வை-மீடியா கூட்டணி, வை-மீடியா புற அலைக் கற்றை (UWB) குறிப்புவிவரங்களுக்கான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்துகொள்வதாக அறிவித்தது. எதிர்கால அதிவேக மற்றும் ஆற்றல் மேம்படுத்தப்பட்ட செயல்படுத்தல்கள் உள்ளிட்ட தனது நடப்பு மற்றும் எதிர்கால குறிப்புவிவரங்கள் அனைத்தையும் வை-மீடியா Bluetooth சிறப்பார்வக் குழு (SIG), கம்பியில்லா USB மேம்படுத்துநர் குழு மற்றும் USB செயல்படுத்துநர் மன்றம் ஆகியோருக்கு மாற்றிக்கொடுக்கும். தொழில்நுட்பம் மாற்றிக்கொடுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாக அம்சங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக கொடுத்து முடித்த பின்னர், வை-மீடியா கூட்டணி இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். "புளுடூத் என்பது பிரதான நெறிமுறைகள், கேபிள் இடமாற்று நெறிமுறைகள், தொலைபேசியியல் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஓர் அடுக்கு நெறிமுறைக் கட்டமைப்பு என வரையறுக்கப்படுகிறது." [49] பின்வருவன அனைத்தும் புளுடூத் தொகுப்புகளுக்குமான கட்டாய நெறிமுறைகளாகும்: LMP, L2CAP மற்றும் SDP. கூடுதலாக பின்வரும் நெறிமுறைகள் உலகளவில் ஆதரிக்கப்படுபவை: HCI மற்றும் RFCOMM. இணைப்பு மேலாண்மை நெறிமுறை (LMP) என்பது இரண்டு சாதனங்களுக்கு இடையிலான ரேடியோ இணைப்பின் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுகிறது. மேலும் இது கண்ட்ரோலரில் செயல்படுத்தப்படுகிறது. தர்க்கவியல் இணைப்புக் கட்டுப்பாடு & இசைவாக்க நெறிமுறை (L2CAP) என்பது இரு வெவ்வேறு உயர் நிலை நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இரண்டு சாதனங்களுக்கு இடையிலான பன்முக தர்க்கவியல் இணைப்புகளுக்குப் பயன்படுகிறது. பரப்பப்படும் தொகுப்புகளுக்கான துண்டாக்கல் மற்றும் மறுதொகுப்பமைத்தல் அம்சங்களை வழங்குகிறது. அடிப்படைப் பயன்முறையில் இயல்பான MTU க்கு 672 பைட்டுகள் மற்றும் குறைந்தபட்ச கட்டாய ஆதரவுள்ள MTU க்கு 48 பைட்டுகளுடனான 64kB வரையில் உள்ளமைக்கக்கூடிய செலுத்துச்சுமை கொண்டிருக்கும் தொகுப்புகளை L2CAP வழங்குகிறது. மறுபரப்பல் & பாய்ச்சல் கட்டுப்பாடு பயன்முறைகளில், மறுபரப்பல்கள் மற்றும் CRC சோதனைகளைச் செய்வதன் மூலம், ஒரு சேனலுக்கான நம்பகமான அல்லது ஒத்திசைவற்ற தரவுக்கு ஏற்றபடி L2CAP ஐ உள்ளமைக்க முடியும். Bluetooth பிரதான குறிப்புவிவரத்தின் பின்னிணைப்பு 1 இல், பிரதான குறிப்புவிவரத்துடன் இரண்டு கூடுதல் L2CAP பயன்முறைகளைச் சேர்த்துள்ளது. இந்தப் பயன்முறைகள் அசல் மறுபரப்பல் மற்றும் பாய்ச்சல் கட்டுப்பாட்டுப் பயன்முறைகளை வன்மையாக மறுத்தலிக்கின்றன: இந்தப் பயன்முறைகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள நம்பகத்தன்மையானது, மறுபரப்பல்களின் எண்ணிக்கை மற்றும் தள்ளுதல் நேர முடிவு (இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னரே, தொகுப்புகளை ரேடியோ அனுப்பும்) ஆகியவற்றை உள்ளமைப்பதன் மூலம் விருப்பத்தின் அடிப்படையில் மற்றும்/அல்லது கூடுதலாக குறை அடுக்கு புளுடூத் BDR/EDR காற்று இடைமுகத்தால் உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஆயத்தமான வரிசையமைத்தல் அம்சத்திற்கு தாழ் அடுக்கு உத்தரவாதமளிக்கிறது. ERTM அல்லது SM ஆகியவற்றில் உள்ளமைக்கப்பட்ட L2CAP சேனல்களை மட்டுமே AMP தர்க்கவியல் இணைப்புகளின் மூலம் இயக்க முடியும். சேவை கண்டறிதல் நெறிமுறை (SDP) சாதனங்கள் ஒன்றுக்கொன்று எந்த வகையான சேவைகளை ஆதரிக்கும் மற்றும் அவற்றை இணைக்க என்ன அளவுருக்களைப் பயன்படுத்த வேண்டும் போன்றவற்றைக் கண்டறிய இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு கைபேசியை ஒரு புளுடூத் தலையணியுடன் இணைக்கும் போது, எந்த புளுடூத் பயன்வகைகளை அந்தத் தலையணி ஆதரிக்கும் (தலையணி பயன்வகை, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பயன்வகை, மேம்பட்ட ஆடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகை போன்றவை) என்பதையும் அவற்றை இணைக்கத் தேவையான நெறிமுறை இணைப்பான் (மல்டிப்ளெக்ஸர்) அமைப்புகளையும் நிர்ணயிக்க SDP பயன்படுகிறது. ஒவ்வொரு சேவையும் ஒரு ஒட்டுமொத்த தனித்துவ அடையாளங்காட்டியால் (UUID) அடையாளங்காணப்படுகிறது. இதில் (16 பிட்ஸ் முழு 128 பிட்டைக் காட்டிலும்) குறைந்த வகை UUID நிர்ணயிக்கப்பட்ட அலுவலக ரீதியான சேவைகள் (Bluetooth பயன்வகைகள்) வழங்கப்படுகின்றன ஹோஸ்ட்/கண்ட்ரோலர் இடைமுகம் (HCI) என்பது ஹோஸ்ட் செயல் தொகுப்புக்கும் (எ.கா., ஒரு PC அல்லது கைபேசி OS) கண்ட்ரோலருக்கும் (புளுடூத் IC) இடையேயான தரநிலையாக்கப்பட்ட தகவல்தொடர்பு ஆகும். இந்த தரநிலையே ஹோஸ்ட் செயல்படுத்தல் நெறிமுறை அல்லது கண்ட்ரோலர் IC குறைந்தபட்ச ஏற்பில் ஒன்றையொன்று மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. பல HCI பரப்பல் அடுக்குத் தரநிலைகள் உள்ளன ஒரே கட்டளை, நிகழ்வு மற்றும் தரவுத் தொகுப்புகளை அனுப்ப ஒவ்வொன்றும் ஒரு வேறுபட்ட வன்பொருள் இடைமுகத்தைப் பயன்படுத்துகின்றன. USB (PCகளில்) மற்றும் UART(கைபேசிகள் மற்றும் PDAகளில்) ஆகியவையே பொதுவாக பெரும்பாலும் பயன்படுபவையாகும். எளிய செயலம்சத்தைக் கொண்டுள்ள புளுடூத் சாதனங்களில் (எ.கா., தலையணிகள்) ஹோஸ்ட் செயல் தொகுப்பும் கண்ட்ரோலரும் ஒரே மைக்ரோப்ராசசரில் செயல்படுத்தப்பட முடியும். இந்த சூழலில் HCI என்பது ஓர் அக மென்பொருள் இடைமுகமாகச் செயல்படுத்தப்பட்டாலும் அது விருப்பத்தின் அடிப்படையிலானது. ரேடியோ அதிர்வெண் தகவல்தொடர்புகள் (RFCOMM) என்பது ஒரு கற்பனை தரவுத் தொகுப்போடைத் தொடரை உருவாக்கப் பயன்படும் கேபிள் இடமாற்று நெறிமுறை ஆகும். RFCOMM பைனரி தரவுப் பரிமாற்ற அம்சத்தை வழங்குகிறது. மேலும் புளுடூத் அடிப்படைக்கற்றை அடுக்கிலான EIA-232 (முன்னர் RS-232 என அறியப்பட்டது) கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்குப் போட்டியாக உள்ளது. RFCOMM தொழில்நுட்பமானது TCP ஐப் போலவே பயனருக்கு ஒரு எளிய நம்பகமான தரவுத் தொகுப்பைவழங்குகிறது. பல தொலைபேசியியல் தொடர்பான பயன்வகைகளில் AT கட்டளைகளுக்கான ஒரு கேரியராக அது பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அது ஒரு புளுடூத் வழியாக OBEX பயண அடுக்காகவும் விளங்குகிறது. RFCOMM இன் பரந்துபட்ட ஆதரவு மற்றும் பெரும்பாலான இயக்க முறைமைகளுக்கான API பொதுவாகக் கிடைத்தல் போன்ற காரணங்களால் பல புளுடூத் பயன்பாடுகள் RFCOMM ஐப் பயன்படுத்துகின்றன. கூடுதலாக தகவல்தொடர்புக்கு ஒரு தொடர் முனையத்தைப் பயன்படுத்திய பயன்பாடுகள் RFCOMM இன் பயனை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும். புளுடூத் நெட்வொர்க் மூடியசூழல் நெறிமுறை (BNEP) என்பது பிற நெறிமுறை செயல் தொகுப்புகளின் தரவை ஒரு L2CAP சேனல் வழியே அனுப்ப BNEP பயன்படுகிறது. தனிப்பட்ட பரப்பு நெட்வொர்க்கிங் பயன்வகையில் IP தொகுப்புகளைப் பரப்புதலே அதன் முக்கியமான பயனாகும். கம்பியில்லா LAN இல் உள்ள SNAP செயல்பாட்டை ஒத்த செயல்பாட்டையே BNEP பயன்படுத்துகிறது. ஆடியோ/காட்சி கட்டுப்பாடு பரப்புதல் நெறிமுறை (AVCTP) என்பது தொலைநிலைக் கட்டுப்பாட்டுப் பயன்வகை AV/C கட்டளைகளை ஒரு L2CAP சேனல் வழியாக அனுப்பப் பயன்படுகிறது. ஒரு ஸ்டீரியோ (stereo) தலையணியில் உள்ள இசைக் கட்டுப்பாட்டு பொத்தான்கள் மியூஸிக் ப்ளேயரைக் கட்டுப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்துகின்றன ஆடியோ/காட்சி தரவு பரப்புதல் நெறிமுறை (AVDTP) என்பது மேம்பட்ட ஆடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகை L2CAP சேனல் வழியாக இசையை ஸ்டீரியோ தலையணிக்கு தொடர்ந்து அனுப்புவதாகும். வீடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகையில் பயன்படுவதற்காக உருவாக்கப்பட்டது. தொலைபேசியியல் கட்டுப்பாட்டு நெறிமுறை-பைனரி (TCS BIN) என்பது புளுடூத் சாதனங்களிடையே குரல் மற்றும் தரவு அழைப்புகளை நிறுவ, அழைப்புக் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை வரையறுக்கும் பிட்-அடிப்படையிலான நெறிமுறையாகும். கூடுதலாக "புளுடூத் TCS சாதனங்களின் தொகுப்புகளைக் கையாள்வதற்கான நகர்தன்மை மேலாண்மை வழிமுறைகளை TCS BIN வரையறுக்கிறது." கார்ட்லெஸ் தொலைபேசிப் பயன்வகையில் மட்டுமே TCS-BIN பயன்படுகிறது. அது செயல்படுத்துநர்களைக் கவரத் தவறியது. இவ்வாறு வரலாற்றில் இருந்த ஒரு ஆர்வமாக மட்டுமே விளங்குகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் பிற தரநிலைகள்-உருவாக்க நிறுவனங்களால் வரையறுக்கப்படுகின்றன, மேலும் புளுடூத்தின் நெறிமுறை செயல்தொகுப்பில் பொருத்தப்படுகின்றன. இதனால் தேவையான போது மட்டுமே புளுடூத் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும். ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளில் இவையும் அடங்கும்: ஒரு முதன்மை புளுடூத் சாதனம் கம்பியில்லா பயனர் குழுவில் உள்ள சுமார் ஏழு சாதனங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். எட்டு வரையிலான சாதனங்களைக் கொண்டுள்ள இந்த நெட்வொர்க் குழுவை பைக்கோநெட் (piconet) என்பர். ஒரு பைக்கோநெட் (piconet) என்பது தனிப்பயனுக்கான ஒரு கணினி நெட்வொர்க் ஆகும், அது ஒரு பிரதான சாதனம் சுமார் ஏழு வரையிலான பிற செயலிலுள்ள சாதனங்களுடன் இணைய புளுடூத் தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது. மேலும் 255 வரையிலான கூடுதல் சாதனங்களையும் அது நிர்வகிக்கலாம். அவை செயலில்லாமல் அல்லது ஓய்வில் வைத்திருக்கப்பட வேண்டும். பிரதான சாதனம் எந்த நேரமும் அவற்றைச் செயல்படவைக்க முடியும். பிரதான மற்றும் பிற சாதனங்களிடையே எந்த நேரத்திலும் தரவு பரிமாற்றம் செய்ய முடியும், இருப்பினும் சாதனங்கள் அவற்றின் பதவிகளையும் மாற்றிக்கொள்ளலாம். இரண்டாம் நிலை சாதனம் எந்த நேரத்திலும் பிரதான சாதனமாக மாறலாம். பிரதான சாதனம் ஒவ்வொரு சாதனத்திலும் இருந்து மாறி மாறி வட்டமடிக்கும் முறையில் சுற்றி வரும். (பிரதான சாதனத்திலிருந்து பிற பல சாதனங்களுக்கு ஒரே நேரத்தில் தகவல் பரப்ப முடியும், ஆனால் அவ்வாறு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.) புளுடூத் குறிப்புவிவரத்தில், இரண்டு அல்லது மேற்பட்ட பைக்கோநெட்களை இணைத்து ஒரு ஸ்கேட்டர்நெட்டை உருவாக்க முடியும். இதில் சில சாதனங்கள் ஒரு பைக்கோநெட்டில் பிரதான சாதனமாகவும் அதே நேரம் மற்றொன்றில் இரண்டாம் நிலை சாதனமாகவும் செயல்பட்டு ஒரு பாலமாக செயல்படும். பல USB புளுடூத் அடாப்டர்கள் கிடைக்கின்றன, அவற்றில் சிலவகைகளில் IrDA அடாப்டரும் சேர்ந்திருக்கும். இருப்பினும் பழைய (2003க்கு முந்தைய) புளுடூத் அடாப்டர்கள், குறைவான சேவைகளை மட்டுமே வழங்கின. தனிச் சாதன புளுடூத் அம்சம் மற்றும் குறை-ஆற்றலுள்ள் புளுடூத் ரேடியோ வடிவம் ஆகியவற்றையே அவை கொண்டிருந்தன. இது போன்ற சாதனங்கள் கணினிகளை புளுடூத் மூலம் இணைக்க முடியும். ஆனால் இவை நவீன அடாப்டர்கள் வழங்குமளவுக்கு பல சேவைகளை வழங்குவதில்லை. புளுடூத் முறைமைகளில் மூன்று வகையான பிழைத்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எந்த புளுடூத் சாதனமும் தேவைப்படும் போது பின்வரும் தகவல்களை அனுப்ப முடிய வேண்டும்: எந்த சாதனமும் இணைப்பதற்குப் பிற சாதனங்களைத் தேடியறிய முடியும் மேலும் எந்தச் சாதனமும் அது போன்ற தேடியறிதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளமைக்கப்பட முடியும். இருப்பினும் இணைக்க முயற்சிக்கும் சாதனம் அந்தச் சாதனத்தின் முகவரியை அறியுமெனில் அது எப்போதும் நேரடி இணைப்புக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும், தேவைப்படும் போது மேலே உள்ள பட்டியல்களில் உள்ள தகவகளை அனுப்பவும் முடியும். சாதனத்தின் சேவைகளைத் தேடியறியும் செயலின் போது, அதன் உரிமையாளரின் ஒப்புதல் அல்லது இணைசேர்ப்பு ஆகியவை தேவைப்படலாம். ஆனால் அந்தச் சாதனம் வரம்பெல்லைக்குள் இருக்கும் வரை இணைப்பு உண்டாக்குவது எப்போதும் சாத்தியமே. சில சாதனங்கள் ஒரு நேரத்தில் ஒரே ஒரு சாதனத்துடன் மட்டுமே இணைய முடியும். மேலும் அதனுடன் இணைவதால் அந்த ஒரு சாதனத்திலிருந்து இணைப்பு துண்டிக்கப்படும் வரை பிற சாதனங்களுடன் இணைவதும் பிற சாதனங்களின் விசாரணையில் புலப்படுவதும் தடுக்கப்படும். ஒவ்வொரு சாதனமும் ஒரு தனிப்பட்ட 48-பிட் முகவரியைக் கொண்டிருக்கும். இருப்பினும் இந்த முகவரிகள் பொதுவாக சாதன விசாரணைகளில் காண்பிக்கப்படாது. மாறாக எளிய புளுடூத் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயனரே அமைத்துக்கொள்ளலாம். பிற பயனர் சாதனங்களைத் தேடும் போதும் இணைசேர்க்கப்பட்ட சாதனங்களின் பட்டியலிலும் இந்தப் பெயரே காண்பிக்கப்படுகிறது. பெரும்பாலான தொலைபேசிகள் இயல்பாக புளுடூத் பெயராக அதன் உற்பத்தியாளர் மற்றும் மாடல் பெயரையே கொண்டுள்ளன. பெரும்பாலான தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் Bluetooth பெயர்களை மட்டுமே காண்பிக்கும் மேலும் தொலைநிலை சாதனங்கள் பற்றிய கூடுதல் தகவல் பெற சிறப்பு நிரல்கள் தேவைப்படும். இது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு வரம்பெல்லைக்குள் T610 என்ற பெயரில் பல தொலைபேசிகள் இருக்கலாம் (பார்க்க புளுஜாக்கிங்). சாதனங்களின் இணைசேர்ப்பால், இணைப்புத் "திறவுகோல்" எனப்படும் பகிரப்பட்ட ரகசியத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு தொடர்பை நிறுவ முடியும். இந்தச் செயல்பாடு "இணைசேர்ப்பு" என அழைக்கப்படுகிறது. ஓர் இணைப்புத் திறவுகோலை இரண்டு சாதனங்களும் சேமித்து வைத்துக்கொண்டால், அவை "பிணைக்கப்பட்டவை" எனப்படும். ஒரு பிணைக்கப்பட்ட சாதனத்துடன் மட்டுமே தகவல் பரிமாறிக்கொள்ள விரும்பும் சாதனம் பிற சாதனத்தின் அடையாளத்தை குறியாக்கவியல் முறையில் அங்கீகரித்துக்கொள்ளலாம். மேலும் இதனால் அது முன்னரே இணைசேர்க்கப்பட்ட அதே சாதனம் தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஓர் இணைப்புத் திறவுகோல் உருவாக்கப்பட்டுவிட்டால் அந்த சாதனங்களிடையே அங்கீகரிக்கப்பட்ட ACL இணைப்பைக் குறியாக்கம் செய்ய முடியும் இதனால் வெளியில் பரப்பப்படும் தரவு பிறரால் ஒட்டுக்கேட்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இணைப்புத் திறவுகோல்களை இரண்டில் எந்த சாதனமும் எந்த நேரத்திலும் அழிக்க முடியும், இவ்வாறு ஏதேனும் ஒரு சாதனம் இப்படி திறவுகோலை அழித்துவிட்டால் அவற்றுக்கிடையே உள்ள பந்தம் கண்டிப்பாக நீக்கப்படும்; இதனால் ஓர் இணைப்புத் திறவுகோலைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சாதனம் நடப்பில் அது முன்னர் பிணைக்கப்பட்டிருந்த சாதனத்துடன் இணைப்பில் இல்லாமல் போனதை அறியாமலே இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக புளுடூத் சேவைகளுக்கு, ஒரு தொலைநிலை சாதனத்துடன் சேவையை வழங்க அனுமதிக்கும் முன்பு இணைசேர்க்கும் கட்டாயம் போன்ற குறியாக்கம் அல்லது அங்கீகரிப்பு தேவைப்படுகிறது. கூறு அனுப்பும் பயன்வகை போன்ற சில சேவைகளில் அங்கீகரிப்பு அல்லது குறியாக்கம் போன்ற தேவைகள் இல்லை. இதனால் பயனர் சேவை பயன்பாட்டு சந்தர்ப்பங்களிலான அனுபவத்தில் இணைசேர்ப்பு என்ற குறுக்கீடு இருப்பதில்லை. புளுடூத் 2.1. இல் பாதுகாப்பான எளிய இணைசேர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இணைசேர்ப்பு செயலமைப்புகள் பெருமளவு மாறிவிட்டன பின்வரும் பத்திகள் இணைசேர்ப்பு செயலமைப்புகளை விளக்கும்: பின்வரும் காரணங்களினால் SSP எளிமையானதாகக் கருதப்பட்டது: புளுடூத் 2.1, க்கு முன்பு வரை குறியாக்கம் தேவைப்படவில்லை மேலும் எப்போதும் அதை அணைத்துவிட முடியும் என்ற வசதியும் இருந்தது. மேலும், குறியாக்கத் திறவுகோல் சராசரியாக 23.5 மணி நேரத்திற்கு மட்டுமே சிறந்தது; ஒரு ஒற்றைக் குறியாக்கத் திறவுகோலை இந்த நேரத்திற்கு அதிகமாக பயன்படுத்தினால் எளிய XOR பாதிப்புகள் குறியாக்கத் திறவுகோலை மீட்டெடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இணைப்புத் திறவுகோல்கள் சாதன கோப்பு முறைமையில் சேமிக்கப்படலாம். ஆனால் புளுடூத் சில்லில் சேமிக்க முடியாது. பல புளுடூத் சில்லு உற்பத்தியாளர்கள் இணைப்புத் திறவுகோல்களை சாதனத்தில் சேமிப்பதை அனுமதிக்கின்றனர்; இருப்பினும் சாதனம் அகற்றப்படக்கூடியது எனில் அது அகற்றப்படும் போது அந்த இணைப்புத் திறவுகோலும் சாதனத்துடன் சென்றுவிடும். இந்த நெறிமுறையானது உரிமமற்ற ISM கற்றையில் 2.4-2.4835 GHz இல் இயங்குகிறது. 2.45 GHz கற்றையைப் பயன்படுத்தும் பிற நெறிமுறைகளுடன் குறுக்கிடாமல் இருக்க Bluetooth நெறிமுறையானது கற்றையை 79 சேனல்களாகப் பிரிக்கிறது (ஒவ்வொன்றும் 1 MHz அகலமுள்ளதாகப் பிரிக்கப்படுகிறது) மற்றும் சேனல்களை வினாடிக்கு 1600 வரையிலான மடங்குக்கு மாற்றுகிறது. 1.1 மற்றும் 1.2 ஆகிய பதிப்புகளில் அமைக்கப்பட்ட செயல்படுத்தல்கள் 723.1 kbit/s என்ற அளவிற்கு வேகத்தை அடைந்தன. பதிப்பு 2.0 இன் செயல்படுத்தல்கள் புளுடூத் மேம்பட்ட தரவு வீதத்தைக் (EDR) கொண்டிருந்தன மேலும் 2.1 Mbit/s வேகத்தை அடைந்தன. தொழில்நுட்ப ரீதியாக பதிப்பு 2.0 சாதனங்கள் உயர் ஆற்றல் நுகர்வுடையவை ஆனால் மூன்று மடங்கு வேகம் கொண்ட வீதத்தால் பரப்பல் நேரம் குறைகிறது. இதனால் 1.x சாதனங்களின் ஆற்றல் நுகர்வில் பாதியாக இவற்றின் ஆற்றல் நுகர்வு குறைகிறது (இரண்டுக்கும் ஒரே டிராஃபிக் சுமை இருப்பதாகக் கருதினால்). புளுடூத் நெறிமுறையானது, ரகசியத்தன்மை, அங்கீகரிப்பு மற்றும் திறவுகோல் தருவித்தல் ஆகியவற்றை SAFER+ ரகசியக்குறியீட்டுத் தடுப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் வழிமுறைகளைக் கொண்டு செயல்படுத்துகிறது. புளுடூத்தில் திறவுகோல் உருவாக்கம் என்பது பொதுவாக புளுடூத் PIN ஐ அடிப்படையாகக் கொண்டது. அதை இரண்டு சாதனங்களிலும் உள்ளிட வேண்டும். இரண்டு சாதனங்களில் ஒன்று நிலையான PIN ஐக் கொண்டிருந்தால் (எ.கா., தலையணிகள் அல்லது அதே போன்ற வரம்புள்ள பயனர் இடைமுகம் கொண்ட சாதனங்களுக்கு) இந்த வழிமுறையானது சிறிது மாற்றப்படலாம். இணைசேர்ப்பின் போது E22 வழிமுறையைப் பயன்படுத்தி, துவக்கும் திறவுகோல் அல்லது முதன்மைத் திறவுகோல் ஒன்று உருவாக்கப்படுகிறது. தொகுப்புகளைக் குறியாக்கம் செய்ய E0 தொகுப்போடை ரகசியக் குறியீடு பயன்படுத்தப்படுவதால், ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. மேலும் இது ஒரு குறியாக்கவியல் ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முன்னர் உருவாக்கப்பட்ட ஓர் இணைப்புத் திறவுகோல் அல்லது முதன்மைத் திறவுகோல். காற்றிடைமுகத்தின் மூலமாக அனுப்பப்படும் தரவின் குறியாக்கத்திற்கு, பின்னர் பயன்படும் அந்தத் திறவுகோல்கள், இரண்டு சாதனங்கள் அல்லது ஒரு சாதனத்தில் உள்ளிடப்படும் இந்த புளுடூத் PIN ஐ நம்பியுள்ளன. புளுடூத்தின் தீங்குகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய மேலோட்டத்தை அண்ட்ரீஸ் பெக்கெர் (Andreas Becker) வெளியிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் தேசிய நிறுவனம் (NIST), புளுடூத் பாதுகாப்புக்கான ஒரு வழிகாட்டியை வெளியிட்டது. அது புளுடூத் இன் பாதுகாப்பு குறித்த வாய்ப்புகள் திறன்கள் மற்றும் புளுடூத் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயல் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான பல வழிகாட்டல்களை வழங்குகிறது. புளுடூத் பல நன்மைகளைக் கொண்டுள்ளது எனினும் அது சேவை மறுக்கப்படும் பாதிப்பு, ஒட்டுக்கேட்டல் பாதிப்பு, இடை மனித ஒட்டுக்கேட்டல் பாதிப்பு, செய்தி அறிவிப்பு மற்றும் தவறான உள்ளடக்கம் பரிமாறப்படுதல் போன்ற பல சிக்கல்களுக்கு இதில் வாய்ப்பு உள்ளது. பயனர்கள்/நிறுவனங்கள் அவற்றின் ஏற்கத்தக்க இடர் பற்றிய மதிப்பீட்டைச் செய்து கொள்ள வேண்டும். மேலும் புளுடூத் சாதனங்களின் இயக்க சுழற்சியில் பாதுகாப்பு முறைகளைப் புகுத்த வேண்டும். NIST ஆவணத்தில் ஆபத்துகளை மட்டுப்படுத்த உதவும் பாதுகாப்பு விவரப்பட்டியல் மற்றும் பாதுகாப்பான புளுடூத் பைக்கோநெட்கள், தலையணிகள் மற்றும் ஸ்மார்ட் கார்டு ரீடர்கள் ஆகியவற்றை நிறுவவும் பராமரிக்கவுமான பரிந்துரைகள் ஆகியவை அடங்கியுள்ளன. புளுஜாக்கிங் என்பது எதிர்பாராத ஒரு பயனருக்கு புளுடூத் கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் தேவையில்லாமல்ஒரு படம் அல்லது செய்தியை அனுப்பும் செயலாகும். பொதுவான பயன்பாடுகளில் குறுங்செய்திகளும் (எ.கா., "உங்களை புளுஜாக் செய்தாயிற்று!") அடங்கும். [58] புளுஜாக்கிங் என்பதில் சாதனத்திலிருந்து எந்தத் தரவும் நீக்கப்படவோ மாற்றப்படவோ செய்யும் செயல்கள் அடங்காது. 2001 ஆம் ஆண்டில், பெல் ஆய்வகத்தின் ஜேக்கப்சன் மற்றும் வெட்ஸெல் ஆகியோர் புளுடூத்தின் இணைசேர்ப்பு நெறிமுறையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்தனர். மேலும் குறியாக்க முறையில் உள்ள தீங்குக்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டினர். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஏ.எல். டிஜிட்டல் லிமிட்டட் நிறுவனத்தின் பென் மற்றும் ஆடம் லாரி (Ben and Adam Laurie) ஆகியோர் புளுடூத் இன் பாதுகாப்பில் உள்ள முக்கிய குறைபாடுகள் தனிப்பட தரவு வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் எனக் கண்டனர். இருப்பினும் இது போன்ற புகார் செய்யப்பட்ட பாதுகாப்பு சிக்கல்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் சில எளிய புளுடூத் இல் செயல்படுத்தல்களை மட்டும் கொண்டுவரப்பட்டது தவிர அதன் நெறிமுறையில் எந்த மாற்றத்தையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஒரு சோதனையில் ட்ரைஃபைனைட் குழுவின் மார்ட்டின் ஹெர்ஃபட் (Martin Herfurt), ஒரு CeBIT திறந்த வெளிகளில் களச் சோதனையைச் செய்ய முடிந்தது. அதன் மூலம் உலகுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த சோதனைக்கு புளுபக் எனப்படும் ஒரு புதிய தாக்குதல் முறை பயன்படுத்தப்பட்டது. இது, புளுடூத் தகவல்தொடர்புகளின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எழுந்த பல நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும். 2004 ஆம் ஆண்டில் புளுடூத்தைப் பயன்படுத்திய கைபேசிகளில் வைரஸ் புகுந்து இருப்பது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS ) இல் கண்டறியப்பட்டது. [66] இந்த வைரஸ் பற்றி காஸ்பர்ஸ்கை லேப் (Kaspersky Lab) முதலில் விவரித்தது, மேலும் முன்பின் தெரியாத மென்பொருள் நிறுவப்படும் முன்பு அது சரியானது தானா என உறுதிப்படுத்திக்கொள்ள பயனர்களைக் கேட்டுக்கொண்டது. ஒரு கருத்தை நிரூபிக்கும் விதமாக, "29A" எனப்படும் வைரஸ் குறியீடுகளை எழுதும் ஒரு குழுவால் இந்த வைரஸ் எழுதப்பட்டு வைரஸ் எதிர்ப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு இந்த வைரஸ் இந்த அமைப்பை விட்டு வெளியில் பரவவில்லை என்பதிலிருந்து அதை ஒரு சாத்தியக்கூறுள்ள (ஆனால் மெய்யானதல்ல) புளுடூத் அல்லது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS) ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட வேண்டும். 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் சோதனை (Bluetooth ஸ்னிப்பிங் என்பதையும் காண்க), திசையியல் ஆண்டென்னாக்கள் மற்றும் சமிக்ஞை பெருக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வகை 2 புளுடூத் ரேடியோவின் வரம்பெல்லையை 1.78 கி.மீ. (1.08 மைல்) வரை நீட்டிக்க முடியும் எனக் காட்டியது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிமுகப்படுத்துகிறது ஏனெனில், பாதிப்பை உண்டாக்குபவர்கள் அது பாதிப்புக்கு சாத்தியக்கூறுள்ள புளுடூத் -சாதனங்களை எதிர்பாராத தொலைவிலிருந்து அணுக உதவுகிறது. ஓர் இணைப்பை நிறுவ, பாதிப்படைபவரிடமிருந்து பாதிப்பை உண்டாக்குபவர் தகவலைப் பெறவும் முடிய வேண்டும். ஒரு புளுடூத் சாதனத்தின் புளுடூத் முகவரி மற்றும் எந்த சேனல்களில் பரப்பல் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பாதிப்பை உண்டாக்குபவர் அறியாத வரை அவர் சாதனத்தை எவ்விதத்திலும் பாதிக்க முடியாது. 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லாஸ்கோ என அழைக்கப்பட்ட ஒரு மொபைல் தீம்பொருள் வார்ம் (malware worm) கண்டறியப்பட்டது. அது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS) ஐப் (60 வரிசைகளின் பணித்தளத்தைச் சேர்ந்தது) பயன்படுத்தும் கைபேசிகளைக் குறிவைத்துப் பரவத் தொடங்கியது. அது புளுடூத் -செயலாக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி எண்ணிக்கையில் தானாகப் பெருகி பிற சாதனங்களுக்கும் பரவக்கூடியது. அது தானாகவே நிறுவிக்கொள்ளக்கூடியது மேலும் மொபைல் பயனர் பிற சாதனத்திலிருந்து கோப்பைப் (velasco.sis ) பெற ஒப்புக்கொண்டதும் செயல்படத் தொடங்குகிறது. இது தன்னை நிறுவிக்கொண்டவுடன் பிற புளுடூத் -செயலாக்கப்பட்ட சாதனங்களையும் பாதிக்க முயற்சிக்கும். அதுமட்டுமின்றி, இது பிற சாதனத்திலுள்ள . SIS கோப்புகளையும் பாதிக்கிறது இதனால் அகற்றும் வசதியுள்ள ஊடகத்தைப் (பாதுகாப்பான டிஜிட்டல், சிறிய ஃப்ளாஷ் போன்றவை) பயன்படுத்துகையில் பிற சாதனங்களுக்கும் பரவக்கூடும். இந்த வார்ம் சாதனத்தைச் செயலிழக்கும் நிலைக்கும் ஆளாக்கக்கூடும். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் வணிக ரீதியான புளுடூத் சாதனங்களிடையேயான PIN-அடிப்படையிலான இணைசேர்ப்புக்கு எதிரான முடக்க பாதிப்புகளின் உண்மையான செயல்பாட்டின் விளைவுகளை வெளியிட்டனர், இந்தப் பாதிப்புகள் நடைமுறையில் மிக வேகமானதாக நிகழும் என்பதையும் புளுடூத் ஒத்தத் திறவுகோல் நிறுவல் முறையின் பாதிப்புக்குட்படக்கூடிய தமையையும் இது உறுதிப்படுத்தியது. இந்த பாதிக்கும் தன்மையைச் சரிசெய்ய, அவர்கள் ஒரு செயல்படுத்தலைக் கொண்டுவந்தனர், அது கைபேசிகள் போன்ற குறிப்பிட்ட வகை சாதனங்களில் வலிமையான ஒரே போன்றதல்லாத திறவுகோல் உருவாக்கம் என்பது சாத்தியமே என நிரூபித்தது. 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், யானிவ் ஷாகெட் மற்றும் அவிஷாய் ஊல் ஆகியோர், ஒரு புளுடூத் இணைப்புக்கான PIN ஐப் பெறுவதற்கான செயல் மற்றும் செயலில்லா முறைகள் இரண்டையும் விளக்கும் ஒரு தாளை வெளியிட்டனர். பாதிப்பு உண்டாக்குபவர் முதலில் நடக்கும் இணைசேர்ப்பின் போது இருந்தால், செயலிலா பாதிப்பானது ஒரு பொருத்தமான வசதிகளைக் கொண்டுள்ள பாதிப்பு உண்டாக்குபவர், தகவல்தொடர்புகளை ஒட்டுக்கேட்கவும் ஏமாற்றவும் அனுமதிக்கிறது. செயலுள்ள முறையானது, நெறிமுறையின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ளிடப்பட வேண்டிய ஒரு சிறப்பாக உருவாக்கப்பட்ட செய்தியைப் பயன்படுத்தி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலைச் சாதனங்களின் இணைசேர்ப்பு செயல்பாடுச் செயல்பாட்டை திரும்பத் திரும்ப நிகழவைக்கச் செய்கிறது. அதன் பின்னர் PIN ஐ க்ராக் செய்ய முதல் முறை பயன்படுத்தப்படலாம். பாதிப்பின் போது சாதனங்களைப் பயன்படுத்துபவர் சாதனம் கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் PIN ஐ உள்ளிட வேண்டும் என்பதே இந்த பாதிப்பின் முக்கியமான பலவீனமாகும். மேலும், வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான புளுடூத் சாதனங்களில் காலம் தொடர்பான அம்சங்கள் இருப்பதில்லை என்பதால் இந்த செயலுள்ள பாதிப்புக்கு பெரும்பாலும் தனிப்பயன் வன்பொருள் தேவைப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேம்ப்ரிட்ஜ்ஷைரின் காவலர்கள், திருடர்கள் புளுடூத் -செயலாக்கப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்தி கார்களில் விடப்பட்ட பிற சாதனங்களைத் தடமறிகின்றனர் என எச்சரித்துள்ளனர். இது போல ஏதேனும் மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களை விட்டுச் சென்றால், மொபைல் நெட்வொர்க்கிங் இணைப்புகள் எல்லாம் முடக்கப்பட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு காவலர்கள் பயனர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செக்யூர் நெட்வொர்க் மற்றும் F-செக்யூர் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையானது சாதனங்கள் பெரும்பாலும் புலப்படும் வகையில் விடப்படுவதைக் குறித்து எச்சரிக்கிறது, மேலும் பரவும் பல வகையான புளுடூத் சேவைகள் மற்றும் இதனால் புளுடூத் வார்ம்களும் எளிதில் பரவ வாய்ப்பமைகிறது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களையும் வழங்கியது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், லக்ஸெம்பர்கிஷ் ஹேக்.லூ (Luxemburgish Hack.lu) பாதுகாப்பு மாநாட்டில் கெவின் ஃபினிஸ்டெர் மற்றும் தியரி ஜோலெர் ஆகியோர் மேக் ஓஎஸ் எக்ஸ் வி 10.3.9 (Mac OS X v10.3.9) மற்றும் v10.4. ஆகியவற்றில், புளுடூத் மூலமான ஒரு தொலைநிலை ரூட் ஷெல்லைப் பற்றி விளக்கி வெளியிட்டனர். அவர்கள் முதல் புளுடூத் PIN மற்றும் ஊல் மற்றும் ஷாகெட் ஆகியோரின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இணைப்புத் திறவுகோல்கள் க்ராக்கர் ஆகியவற்றையும் விளக்கிக்காட்டினர். 2.4 GHz முதல் 2.4835 GHz வரம்பெல்லையிலான மைக்ரோ அலை ரேடியோ அதிர்வெண் கற்றையை புளுடூத் பயன்படுத்துகிறது. ஒரு புளுடூத் ரேடியோவிலிருந்து வரக்கூடிய அதிகபட்ச ஆற்றல் வெளியீடு, முறையே வகை 1, வகை 2, மற்றும் வகை 3 சாதனங்களுக்கு 100 mW, 2.5 mW மற்றும் 1 mW ஆகும். இதில் கைபேசிகள் வகை 1 ஐச் சேர்கின்றன, பிற இரண்டு வகைகள் இன்னும் குறைவான ஆற்றலை உமிழ்பவை. அதே போல், வகை 2 மற்றும் வகை 3 புளுடூத் சாதனங்கள் கைபேசிகளை விட குறைவான தீங்குகளுக்கு உட்படுபவை எனக் கருதப்படுகின்றன, மேலும் இந்த வகை சாதனங்களை வகை 1 ஐ கைபேசிகளுடன் ஒப்பிடலாம். ஹோலி கோலி ("Holi") அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இட்ந்தத்யு வின் மேற்கு வங்காளம்,வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும். "துல்ஹேதி", "துலாந்தி" அல்லது "துலேந்தி" எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது "சோட்டி ஹோலி" (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் "காம தகனம்" அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை ("துலாந்தி") மார்ச் 11 ஆம் தேதியன்றும் ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது. பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும். வைணவ இறையியலில், இரண்யகசிபு அசுர்ர்களின் அரசன். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இவ்வரத்தின்படி இவனை இரவிலோ பகலிலோ வீட்டிலோ வெளியிலோ மண்ணிலோ விண்ணிலோ விலங்காலோ மனிதனாலோ நடைமுறையாலோ கோட்பாட்டாலோ கொல்ல இயலாது.இதனால் இவன் செருக்கு மிகுந்து வானகத்தையும் மண்ணகத்தையும் போரிட்டு வென்றான். எவரும் கடவுளைத் தொழாமாமல் தன்னை வழிபடவேண்டும் என ஆணையிட்டான். இருந்தாலும் இவனது மகன் பிரகல்லாதனே திருமாலின் பற்றாளன் (பக்தன்). இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபட்டு வந்தான். பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லத காயத்தோடு விளங்கினான். பாம்புகளுக்கு இடையில் பசியோடு ஓரறையில் தனியாக அடைத்தபோதும் உயிர்வாழ்ந்தான். தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன. இறுதியாக, பிரகல்லாதனை அவனது தங்கை மடியில் அமரச் செய்து தீயில் இறுத்த ஆணையிட்டான். அவள் தீயில் காப்பாக வாழும் துப்பட்டாவை அணிந்தவள். இதை பிரகல்லாதன் எற்று தனக்கு ஓர் ஊறும் நேராவண்ணம் காத்திடுமாறு திருமாலை வழிபட்டுத் தப்பினான்.தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடவே, அவள் தீயில் மடிய, பிரகல்லாதன் மட்டுமே தப்பிப் பிழைத்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர். தங்கை ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது. பின்னர் திருமால் பாதி மனித, பாதி சிங்க வடிவில், அதாவது நரசிங்க வடிவில், வந்து அந்தியிருட்டில் (பகலோ இரவோ அல்லாத நேந்ரத்தில்) வந்து, வீட்டின் தாழ்வாரப் படிகளில் (வீட்டிலோ வெளியிலோ அமையாத இட்த்தில்) அவ்னை தன் மடியில் வைத்து (மண்ணிலும் விண்ணிலும் இல்லாதபடி) கருவியும் கோட்பாடும் ஆகாத தன் விரல்நகங்களால் கிழித்துக் கொன்றார். கண்ணன் பிறந்து வளர்ந்த விரிந்தாவனத்திலும் மதுராவிலும் இந்தத் திருவிழா 16 நாட்களுக்கு இராதா கண்ணன் தெய்வீக்க் காதலைக் கொண்டாடும் அரங்கபஞ்சமி வரை கொண்டாடப்படுகிறது . கண்ணனே கோபியருடன் விளையாடி இத்திருவிழாவைப் பரவலாக்கியதாக நம்பப்படுகிறது. கண்ணன் தன் தோலின் நிறம் கருப்பாகவும் இராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தன் தாயாரிடம் பூசலிட்டதாகவும் நம்ப்ப்படுகிறது. இதனால் அவரது தாயார் இராதைக்கு முகத்தில் வண்ணம் பூசிட முடிவு செய்த்தாகவும் கூறப்படுகிறது. கொண்டாட்டங்கள் வழக்கமாக காதற்பருவமான இளவேனிற் காலத்தில் நிகழ்கின்றன. ஹோலிப் பண்டிகை உருவானதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது. இக்கதை காதல் கடவுளான காமதேவனைப் பற்றியது. பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் பூக்கணையைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தபோது காமனின் உடல் அழிந்தது. சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் ஆற்றல் செறிந்த அவரது பார்வையைத் தாங்கமுடியாமல் காமனின் உடல் சாம்பலானது. காமனின் மனைவி ரதியின் (மனக்கிளர்ச்சி) வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார். ஆனால் உணர்வுவழி மட்டுமே அன்பை வெளிப்படுத்தக்கூடிய, ஆனால்உடல்வழி காமத்தை வெளிப்படுத்த முடியாத, அருவ உருவத்தை அவருக்கு உருவாக்கினார். இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே ஹோலிப் பெருந்தீ கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது. அண்டத்தில் ஒளியின் (தேஜாவின்) திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன. ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியதற்கான பழைய பனுவல் மேற்கோளை, 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத நாடகமான இரத்தினாவளியில் காணலாம். ஹோலியோடு பல சடங்குகள் பிணைந்துள்ளன. அவற்றில் முதலாவது ஒருவ்ர் மீத் ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவல், நிறமும் நறுமணமும் கலந்த நீரைப் பீய்ச்சிகள் (பீச்காரிகள்) வழியாகப் பீய்ச்சுதல் ஆகியவை அமையும். இந்தப் பீய்ச்சிகள் பெரிய உறிஞ்சிகளைப் போலவோ வேகமாக நீரை வெளியேற்றும் நுண்குழல்களைப் போலவோ அமைந்திருந்தன. ஓலிமிலான், பைதாக்குகள் போன்றவற்றில் இது பல நாட்களுக்கு முன்பே தொடங்கி விழா சர்ந்தும் இராதா-கிருஷ்ணன் காப்பியக் காதல் சார்ந்தும் அமையும் பலகுழுவிசைப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஓரி எனும் நாட்டர் பாடல்களும் கூட பாடப்படுகின்றன. "Aaj biraj mein Holi re rasiya", போன்ற சில செவ்வியல் பாடல்களும் பலதலைமுறைகளாக இந்நாட்டர் பாடல்களில் விரவியுள்ளன. பல நாட்கள் முன்பாகவே, கஜ்ஜாக்கள், அப்பளங்கள், பலவகை நொறுக்குத் தீனிகள், கஞ்சிகள், மாப்பூரிகள், மாத்திரிகள், பூரணப் போலிகள், தயிர் வடைகள் ஆகியவை ஹோலி விருந்தினருக்குப் படைக்க செய்யப்படுகின்றன. ஹோலியன்று இரவு, கிளர்வூட்டும் பாற்குழைவைகளில் கலக்க, கன்னபீசுகள் எனும் பாலடைகள் பாலைக் கடைந்து செய்யப்படுகின்றன . இப்பண்டிகையின் முதன்மையான அழுத்தம் ஹோலிகா தகனம் அல்லது ஹோலிப் பெருந்தி மூட்டலில் குவிகிறது. பெருந்தீ மூட்டும் இம்மரபின் தோற்றம் ஒலிகா, ஓலகா, புதானா போன்ற அரக்கிகளின் எரித்தழிப்பில் தோன்றியதாகவும் சிலரால் மாடன் எரித்தழிப்பில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. ஹோலியன்று மரபாக பெருந்தீ மூட்டுவது, இந்துமத புராணத்தின்படி பக்த பிரஹலாதனைக் கொல்ல முயற்சித்த அரக்கன் இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகாவை எரிப்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக செய்யப்படுவதாகும். விஜயதசமி (தசரா) அன்று இராவண தகனம் செய்வது போன்று திருவிழாக்களில் உருவ பொம்மையை எரிக்கும் பிற பண்டிகைகள் ஹோலி பண்டிகை ஒத்துள்ளன. உலகம் முழுதும் பல மதங்களிலும் தீய சக்திகளின் அழிவை ஹோலிகா தகனம் போன்று குறிப்பால் உணர்த்துகிறார்கள். தற்போது பிரஜா மண்டலத்தின் சில பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உருவ பொம்மை எரிப்பது அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக அதனையொத்த பிற வடிவங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் தெரு மூலைகள், பொது இடங்கள், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மரத்தாலான உருவப் பொம்மைகளைக் காணலாம். இந்த சடங்குகளைச் செய்த பிறகு இதனை தீமூட்டி அந்தத் தீயை மக்கள் "வணங்குவார்கள்". அதற்கு அடுத்த நாள் இந்த வெற்றியை துலேந்தி தினமாகக் கொண்டாடுவார்கள். அனைத்து வகை வண்ணங்கள் அபீர் மற்றும் குலால் போன்றவை கொண்டாட்டத்தின் முதன்மைப் பொருட்களாக உள்ளன. அடுத்து பீய்ச்சிகளைப் பயன்படுத்தி வண்ணம் கலந்த நீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த நீர் என்பது நறுமனப் பூக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது. தேசுப் பூக்களை மரங்களிலிருந்து முதலில் பறித்து வெயிலில் காய வைத்து அரைத்துப் பின்னர் அதனுடன் நீர் சேர்த்து ஆரஞ்சு-மஞ்சள் வண்ணங்கள் கொண்ட நீராகத் தயாரிக்கின்றனர். இலட்சக்கணக்கில் கோள வடிவங்களால் மூடப்பட்ட சிவப்பு பொடி, உடனடியாக உடைக்கப்பட்டு கொண்டாட்டப் பகுதி முழுவதும் பொடியால் நிரப்பப்படும். மற்ற மரபான ஹோலிப் பொருட்கள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. நேபாளத்தில் தாஷைன் (இந்தியாவில் இது தசரா என்று அழைக்கப்படுகின்றது) மற்றும் திஹார் அல்லது தீபாவளி (இந்தியாவிலும் தீபாவளி என்றே அழைக்கப்படுகின்றது) போன்றவை போலவே ஹோலி மிக முதன்மையான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் 80% மேற்பட்ட மக்கள் இந்துக்கள், அங்கு பெரும்பாலான இந்துத் திருவிழாக்கள் தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் மதங்களைக் கடந்து ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். அதாவது முஸ்லீம்கள் கூட இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவர்கள் கூட அவர்களின் லெண்ட் நேரத்தில் ஹோலி வந்தபோதும் அதனைக் கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஹோலி தினம் நேபாளத்தில் தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும். மக்கள் வெளிவந்து தங்கள் அருகில் குடியிருப்பவர்களுடன் ஒருவொருக்கொருவர் நிறங்களைத் தூவுதல் மற்றும் நீரைப் பீய்ச்சுதல் மூலம் ஹோலியைக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் லோலா (நீரடைக்கப்பட்ட பலூன் எனப் பொருள்படும்) எனப்படும் நீரடைக்கப்பட்ட பலூனை வீசிக்கொள்வது மிகவும் பரவலான செயல்பாடுகளில் ஒன்றாகும். மேலும் பலர் மக்கள் தங்கள் அருந்தும் பானத்திலும் உணவிலும் 'பாங்க்' (கடைந்த பாற்பாகைக்) கலந்து சிவராத்திரியைக் கடைபிடிப்பார்கள். இத்திருவிழாவின் போது வெவ்வேறு வண்ணங்களின் கலவையில் விளையாடுவதால் அனைத்துக் கவலைகளும் கலைந்து வாழ்க்கை மிகவும் வண்ணமயமாக மாறும் என நம்பப்படுகிறது. பஞ்சாபில் சீக்கியர்கள் இதே போன்ற பண்டிகையை ஹோலா மொஹல்லா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகை அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உண்மையில் அனந்தபூர் சாஹிப் ஹோலி கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒன்றாகும். வெளிநாட்டு மக்கள் கூட பஞ்சாப் சென்று வடக்கத்திய முறையில் ஹோலி கொண்டாடுகிறார்கள். ஹோலி சமயத்தில் பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்குப் பெயர்பெற்ற இலத் மர் ஹோலியானது ராதா ராணி கோவிலின் நீண்ட வளாகத்தில் கொண்டாடப்படுகின்றது. இலத் மர் ஹோலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் பெண்கள் ஆண்களைத் தடியால் அடிப்பார்கள். மேலும் உணர்ச்சிப்பூர்வமாக ஹோலி பாடல்களைப் பாடுவார்கள் அல்லது ஸ்ரீ ராதே அல்லது ஸ்ரீ கிருஷ்ணா என உரக்கக் கூறுவார்கள். பிரஜ் மண்டலத்தில் பாடப்படும் ஹோலி பாடல்கள் தூய பிரஜ் மொழியில் பாடப்படுகின்றன. பர்சானாவில் கொண்டாடப்படும் ஹோலியில் பெண்கள் ஆண்களைத் தடிகளுடன் விரட்டுவது தனித்துவமான ஒன்றாகும். ஆண்கள் கூட பெண்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களை அழைக்கும் விதமாக தூண்டல் பாடல்களைப் பாடுவார்கள். பெண்கள் அதை எதிர்க்கும் விதமாக இலத்தி எனப்படும் நீண்ட தடிகளைக் கொண்டு அடிபட முடியாதபடி தடுப்புக்க வசத்தை அணிந்துள்ள ஆண்களை அடிப்பார்கள். உ.பி.யில் உள்ள சுல்தான்பூரில் ஹோலி வேடிக்கையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்குள்ள அனைத்து ஊர்களின் மக்களும் ஒன்றிணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள். கிருஷ்ண பகவான் பிறந்த இடமான மதுரை,விருந்தாவன் ஆகிய இடங்களில், இந்நாட்களில் மரபுப்படி சிறப்புப் பூசைகளைச் செய்து பகவான் கிருஷ்ணரை வணங்குகிறார்கள். இங்கு திருவிழா பதினாறு நாட்களில் நிறைவடைகிறது. பிரஜ் மண்டலம் முழுதும் மற்றும் அதன் அருகிலுள்ள ஹத்ராசு, அலிகார், ஆக்ரா போன்ற பகுதிகளில் ஏறக்குறைய மதுரை, விருந்தாவன், பார்சானாவில் கொண்டாடப்படுவது போன்றே ஹோலி கொண்டாடப்படுகின்றது. உத்திரப் பிரதேசத்தின் வடகிழக்கு மாவட்டமான கோரக்பூரில் இந்நாள் ஹோலி தினமாகக் காலையில் சிறப்பு பூசைகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மிகவும் மகிழ்ச்சியான, வண்ணமயமான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது "ஹோலி மிலன்" எனப்படுகிறது. இதில் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஹோலி பாடல்களைப் பாடி நிறப்பொடிகளைப் (அபீர்) பூசுவதன் மூலம் தங்கள் நல்லுணர்வினை வெளிப்படுத்துகிறார்கள். இந்துக்களின் நாள்காட்டிப்படி ஆண்டின் கடைசி பங்குனி மாதத்தின் இறுதி நாளில் ஹோலி வருவதாகவும் கருதப்படுகின்றது. ஹோலியன்று மக்கள் மாலையில் புது ஆண்டு இந்து நாள்காட்டியுடன் (பஞ்சாங்கம்) அடுத்த ஆண்டிற்கான திட்டமிடுதலில் ஈடுபடுவார்கள். பீகாரில் மற்ற வட இந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படும் அதே புத்துணர்வுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இங்கும் ஹோலிகா பற்றிய பாரம்பரியக் கதைகள் பொதுவாகவே உள்ளன. பங்குனி மாதத்தின் பெளர்ணமி மாலையில் மக்கள் நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் சாண வரட்டிகள், அராட் அல்லது ரேடி, ஹோலிகா மரக்கட்டைகள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள்,தேவையற்ற காய்ந்த இலைகள் ஆகியவற்றை அந்த நெருப்பில் போட்டு எரிப்பார்கள். தொடர்ந்து மரபைக் கடைபிடிக்கும் மக்கள் தங்கள் வீட்டினை அந்நாளில் தூய்மைப்படுத்துவார்கள். ஹோலிகா சமயத்தில் மக்கள் நெருப்புக்கு அருகில் ஒன்று கூடுவார்கள். அங்குள்ள மூத்த குடிமகன் அல்லது புரோகிதர் தீபமேற்றுவார். பின்னர் அவர் மற்றவர்களையும் அழைக்கும் விதமாக மற்றவர்கள் மீது வண்ணங்களைப் பூசுகிறார். பண்டிகையின் அடுத்த நாள் வண்ணங்களுடனும் நிறைய கேளிக்கைகளுடனும் கொண்டாடப்படுகின்றது. சிறுவர்களும் இளைஞர்களும் இந்த திருவிழாவில் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகின்றனர். பொதுவாக இத்திருவிழா வண்ணங்களுடனே கொண்டாடப்பட்டபோதும் சில இடங்களில் மக்கள் சகதிகளிலும் ஹோலியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். நாட்டுப்புறப்பாடல்கள் உரத்த பண்களில் பாடப்படும். மேலும் மக்கள் மத்தள (டோலக்) இசைக்கேற்ப ஹோலியின் ஆர்வத்தில் நடனமாடுவார்கள். திருவிழா மனநிலையைப் பெருகச் செய்ய, கடைந்த பாற்பாகு (பாங்க் பகோராஸ்), தண்டை போன்ற சுவைமிக்க பல்வேறு பண்டங்களை கலந்து உண்பர். டோல் பூர்ணிமா தினத்தன்று அதிகாலையில், மாணவர்கள் குங்குமப்பூ நிறத்தில் ஆடைகளை உடுத்தி நறுமணமிக்க பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவார்கள். அவர்கள் ஏக்தரா, டூப்ரி, வீணை போன்ற இசைக் கருவிகளை இசைத்து பாடிக்கொண்டே நடனமாடுவார்கள். அது பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். மேலும் அந்த நினைவுகள் பல ஆண்டுகட்கு நினைவில் இருக்கும். ஹோலிப் பண்டிகை 'டோல் ஜத்ரா', 'டோல் பூர்ணிமா' அல்லது 'வசந்தகாலத் திருவிழா' போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. திருவிழாவில் கிருஷ்ணா மற்றும் ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நகரம் அல்லது ஊரில் உள்ள முதன்மையான தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு சென்று மிகவும் கண்ணியமான முறையில் கொண்டாடுவர். பக்தர்கள் அச்சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஊஞ்சலாட்டுவார்கள். அப்பொழுது பெண்கள் அவற்றைச் சுற்றி நடனமாடிப் பக்திப்பாடல்களைப் பாடுவார்கள். அப்போது ஆண்கள் அவர்களின் மீது வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சி அபீர் எனும் நிறப்பொடிகளைத் தூவுவர். வீட்டின் தலைவர் கிருஷ்ண பகவான் மற்றும் அக்னிதேவனை வணங்கி நோன்பு இருப்பார். பின்னர் அவர் கிருஷ்ணர் சிலையில் குலால் நிறங்களைப் பூசி, கிருஷ்ணர் மற்றும் அக்னிதேவனுக்கு "போக்" எனப்படும் படையலைப் படைப்பார். இதன் பிறகு மரபான சடங்குகள் நடைபெறும். சாந்திநிகேதனில் ஹோலிப் பண்டிகை சிறப்பான இசையைக் கொண்டுள்ளது. மால்போவா, கீர் சந்தேஷ், பாசந்தி சந்தேஷ் (குங்குமப்பூ உடன்),குங்குமப்பூ பால், பாயசம் உள்ளிட்டவை மரபான பண்டங்கள் ஆகும். ஒரிசா மக்களும் ஹோலியை இதே விதமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அங்கு கிருஷ்ணர், இராதை சிலைகளுக்கு பதிலாக பூரியில் உள்ள ஆலயத்தின் கடவுளான ஜகந்நாதர் சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிறங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றது. பங்குனி மாதத்தின் முழு நிலவு நாளில் வரும் முதன்மை இந்துத் திருவிழாவான ஹோலிப் பண்டிகை குளிர்கால வேளாண் அறுவடை காலத்தின் அறிகுறியாகும். கிராமங்களின் முக்கிய இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நெருப்பு மூட்டப்படும். தீமை அழிந்து நன்மை வெற்றியடைந்ததின் அறிகுறியான நெருப்பு மூட்டும் நிகழ்வை மக்கள் பாட்டுபாடி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஹோலியை மிகுந்த ஆர்வத்தோடு நெருப்பைச் சுற்றி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணனும் மற்ற மாடு மேய்க்கும் சிறுவர்களும் வெண்ணெய் திருடியதையும் மற்ற 'கோபியர்கள்' அதை தடுக்க முயன்றதையும் நினைவு கூறும் வகையில் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் தெருவில் உயரத்தில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் வெண்ணெய் நிரம்பிய பானையை ஆண்கள் மனிதப் பிரமிடுகள் மூலமாக அடைந்து அதை உடைக்க முயற்சிப்பார்கள். அச்சமயம் பெண்கள் நிறம் கலந்த நீரை அவர்கள் மீது தெளித்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். இந்த நேரத்தில் கிருஷ்ணர் தங்கள் வீடுகளுக்கு வெண்ணெய் திருடுவதற்காக வரலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறங்களால் நனைக்கப்பட்ட ஆண்கள் பெரிய ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கேலி செய்யப்படுவார்கள். இறுதியாக பானையை உடைப்பவரே அந்தச் சமூகத்தில் அந்த ஆண்டின் ஹோலி மன்னனாக முடிசூட்டப்படுவார். பல இடங்களில், கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வழக்கப்படி தங்கள் சகோதரியின் கணவர் மீது கேலியான சினம்கொண்டு தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதில் அவர்களை அடிப்பார்கள். மேலும் அவரை நிறங்களால் அமிழ்த்த முயற்சிப்பார்கள், மாறாக சகோதரியின் கணவர் மாலையில் இனிப்புப் பண்டங்களை அவர்களுக்குக் கொடுப்பார். மகாராட்டிரத்தில் ஹோலிப் பண்டிகை முக்கியமாக ஹோலிகாவை எரிப்பது தொடர்புடையதாகவே இருக்கின்றது. ஹோலி பெளர்ணமி இங்கு சிம்கா எனவும் கொண்டாடப்படுகிறது. திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இளைஞர்கள் சுற்றியுள்ள இடங்களுக்கு சென்று விறகுக் கட்டைகள், பணம் போன்றவற்றைச் சேகரிக்கின்றனர். ஹோலி தினத்தன்று சுற்றுப்புறத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அனைத்து விறகுக் கட்டைகளும் பெரிய குவியலாக அடுக்கி வைக்கப்படுகின்றன. மாலையில் அவற்றிற்கு நெருப்பு மூட்டப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டாரும் இனிப்புகளும் முழுமையான உணவுகளும் தயார் செய்து அக்னிக் கடவுளுக்குப் படைப்பார்கள். பூரன் போலி என்பது இங்கு முதன்மையான உணவுப் பண்டமாகும். மேலும் சிறுவர்கள் " ஹோலி ரே ஹொலி புரானச்சி போலி " எனக் கத்துவார்கள். சிம்கா அனைத்து தீமைகளையும் அழித்தலுடன் தொடர்புடையது. "வட இந்தியாவைப்" போல் இரண்டாவது நாளில் வண்ணங்களைக் கொண்டு கொண்டாடாமல், இங்கு மரபான அரங்கபஞ்சமி அன்று வண்ணங்களுடன் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மணிப்பூர்வாசிகள் ஹோலிப் பண்டிகையை ஆறு நாட்கள் கொண்டாடுகின்றனர். இது வைணவ மதத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பண்டிகையான யாசாங்குடன் இணைந்துவிட்டது. மரபுவழியில், பங்குனி முழுநிலவு இரவில், 'தாபல் சோங்க்பா' என்றழைக்கப்படும் ஒரு குழு நாட்டுபுற நடனமும் அதனோடு கூட நாட்டுபுறப் பாடல்களும் பாடுவர்; உள்ளூரைச் சார்ந்த மேளக்காரர்களின் பண்ணுக்கேற்ற தாளங்களையும் இளைஞர்கள் இரவில் நிகழ்த்துவார்கள். இருப்பினும் இப்போது இந்த நிலவொளிக் கொண்டாட்டம் நவீன இசைக்குழுக்களையும் ஒளிர் விளக்குகளையும் கொண்டிருக்கின்றன. கொண்டாட்டத்திற்கு எரியவிடுவதற்காக கொப்புகளும் வைக்கோலும் வைத்துக் கட்டிய கூரை வேய்ந்த குடிசையும் ஒழுங்குச் செய்யப்படுகின்றன. ஆண்கள், தங்களோடு சேர்ந்து 'குலால்' விளையாடுவதற்காகப் பெண்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும். கிருஷ்ணர் கோவில்களில் பக்தர்கள் வெள்ளை, மஞ்சள் நிற மரபான தலைப்பாகைகளை அணிந்துக்கொண்டு பக்திப் பாடல்களைப் பாடியும் நடனங்கள் ஆடியும் 'குலால்' விளையாடுகின்றனர். பண்டிகையின் கடைசி நாளின் போது இம்பாலுக்கு அருகில் இருக்கும் முக்கிய கிருஷ்ணர் கோவிலிற்குச் செல்ல பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும்; அங்கு பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கொச்சியிலுள்ள மட்டன்சேரி பகுதியில் 22 வேறுபட்ட சமுதாயத்தினர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்கின்றனர். மேலும் மேற்குக் கொச்சியிலிருக்கும் சேர்லை பகுதியில் கொங்கனிப் பேசும் கௌட சாரஸ்வாத் பிராமணர்களும் (GSB) ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் அதை கொங்கனியில் உக்குளி என்றும் அல்லது மலையாளத்தில் மஞ்சள் குளி என்றும் அழைக்கின்றனர். இது கோசரிபுரம் திருமலைக் கோவில் என்றழைக்கப்படும் மதிப்புவாய்ந்த கொங்கனிக் கோவிலில் நடத்தப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டின் உக்குளி 23 மார்ச் 2008 அன்று சேர்லையில் கொண்டாடப்பட்டது. பாகல்கோட்டில் ஹோலிப் பண்டிகை இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகையன்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது. மேலும் பெங்களூரில் 2009 ஆம் ஆண்டில் டாட்டா அறிவுரைப் பணிகள், காக்னிசென்ட் தொழில்நுட்பத் தீர்வுகள் போன்ற சில பன்னாட்டுக் குழுமங்கள் ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தன. குழந்தைகளும் பெரியோர்களும் ஹோலியை ஒரே வகையில் கொண்டாடுகின்றனர். காஷ்மீரில் குடிமக்களும் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கூட ஹோலியைக் கொண்டாடுகின்றனர். இங்கு ஹோலி என்பது கோடைப் பயிர்களை அறுவடை தொடங்குவதைக் குறிக்க மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் இப்பண்டிகை வண்ணம் கலந்த நீரையும் தூளையும் பீய்ச்சியும் எறிந்தும் பாடலோடும் ஆடலோடும் கூடக் கொண்டாடப்படுகின்றது. இந்த மண்டலமும் அதற்கு ஏற்ற ஹோலிப் பண்டிகையைக் கொண்டிருக்கின்றது. இங்கு இப்பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கொண்டாடப்படுகின்றது. ஆண்டுகள் செல்ல செல்ல ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிற்கு அருகிலிருக்கும் நாடுகள் போன்ற பல பகுதிகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஹோலி முக்கியமான பண்டிகையாகிவிட்டது. வசந்த காலப் பருவ மாற்றத்தின்போது நச்சுயிரி சார்ந்த காய்ச்சலும் சளியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எறிவதால் உண்டாகும் மருத்துவப் பயன்கள் கிடைப்பதால், இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைச் செய்யப்படும் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், மற்ற மருத்துவ மூலிகைகளினால் மரபு முறையில் செய்யப்படுகின்றன. இப்பண்டிகையின் போது "தண்டை" என்றழைக்கப்படும் ஓரு சிறப்பு பானம் செய்யப்படும். சிலநேரங்களில் அதில் "பாற்பாகைக்" ("கான்னாபீசு சதிவா"வுடன் ) கலந்து தருவர். ஈர வண்ணங்களுக்காக மஞ்சள் வண்ண நீரைத் தயாரிக்க, பாரம்பரிய பலாஷ் மலர்களைக் கொதிக்கவைத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைப்பர். இதுவும் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இக்கொண்டாட்டத்தின் வணிகநோக்குப் பார்வை, செயற்கை வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. இது சில நேரங்களில் நஞ்சாகவும்கூட இருக்கலாம். முன்பு ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த இளவேனிற்காலத்தில் அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாகத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைச் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டில் தில்லியில் இருக்கும் நச்சுத் தொடர்பு இயக்கம், வட்டவரன் போன்ற சூழல் ஆர்வக் குழுக்களால் பண்டிகையில் பயன்படுத்தப்படும் வேதி சாயங்களைப் பற்றிய ஒரு உண்மை அறிக்கை வெளியிடப்பட்டது. அவர்கள் கண்டுப்பிடித்த ஆய்வில் ஹோலி நிறங்கள் தயாரிக்கப்படும் அனைத்து மூன்று முறைகளிலும் உள்ள பாதுகாப்பு சிக்கல்களாக பசைகள், உலர்வண்ணங்கள், நீர்வண்ணங்கள் ஆகியவை பயன்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர். பசைகளை ஆய்வு செய்கையில், உடல்நலக்கேட்டை அதிகம் உண்டாக்கக்கூடிய நச்சு நிறைந்த வேதிப் பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர். கருப்புப் பசைகளில் சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்கக்கூடிய காரீய ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது. காசினோசனிக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்ட இரண்டு நிறங்களாக அலுமினியம் புரோமைடைக் கொண்ட வெள்ளி, பாதரச சல்பேட்டைக் கொண்ட சிவப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. நீலப் பசையில் பயன்படுத்தப்படுகின்ற பிரசியன் நீலம் அயற்பொருளைத் தொடும்போது உண்டாகும் தோலழற்சியை உண்டாக்குகிறது. பச்சையில் இருக்கும் மயில் துத்தம் கண் ஒவ்வாமை, அதைப்பு, தற்காலிகக் குருட்டுத் தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது. குலால்சு என்றும் அழைக்கப்படும் உலர்ந்த நிறங்களில் அதிக எடையுள்ள உலோகங்களுடன் பயன்படுத்தப்படுகின்ற நிறங்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள், தற்காலிக குருட்டுத்தன்மை ஆகியவற்ரை விளைவிக்கும் நச்சு நிறைந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்படும் கல்நார் அல்லது சிலிக்கா ஆகிய இரண்டும் உடல்நலக் சிக்கல்களை உண்டாக்குவன. செந்தியன் ஊதா நிற மூலப்பொருட்களை ஈரமான வண்ணங்களில் பயன்படுத்துவதால் அவை தோல் நிறமாற்றம் தோல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது. அவை எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது பற்றியே தெரியாத வணிகரால் அடிக்கடி விற்கப்படுவதால் இந்த வண்ணங்களின் தரத்தையும் மூலப்பொருள்களையும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. ஹோலியை இயற்கையான முறையில் கொண்டாடுவதற்காக இந்த அறிக்கை சில குழுக்களை ஊக்கப்படுத்தியது. டெல்லியிலுள்ள மேம்பாட்டிற்கான மாற்றுகள், பூனாவிலுள்ள கல்பவிருட்சம், கிளின் இந்தியா பரப்புரை ஆகியவை சேர்ந்து பாதுகாப்பான இயற்கையான மூலபொருட்களிலிருந்து குழந்தைகள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வண்ணங்களைத் தயாரிப்பதற்குக் கற்றுக்கொள்ள உதவுவதற்கான பரப்புரைகளைத் தொடங்கினார்கள். அதேசமயத்தில் தேசியத் தாவர ஆராய்ச்சி நிறுவனம் போன்ற சில வணீக நிறுவனங்கள் "மூலிகை" சாயங்களைக் கொடிய மாற்றுக்களை விட விலை அதிகமாக இருந்தபோதிலும் அவற்றை விற்பனைச் செய்யத் தொடங்கி விட்டன. எனினும் இந்தியக் கிராமப்புறங்களின் பெரும்பகுதிகளில் இயற்கையான வண்ணங்களின் கிடைக்கும் தன்மையைப் பொருத்து, அவற்றைப் பயன்படுத்துவதை (வண்ணங்களைவிட கொண்டாட்டத்தின் மற்ற பகுதிகளில்) எப்போதும் கடைசி முயற்சியாகத்தான் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய "ஹோலிகா தகனம்" கொண்டாட்டத்திற்காக உண்டாக்கும் நெருப்பே, ஹோலி கொண்டாட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த நிகழ்வு வன அழிப்புக்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு காலக்கட்டத்தில் மட்டும் 30,000 விழவெரித் தீக்கள் உண்டாக்கப்படுவதால் ஏற்படும் ஒவ்வொரு நெருப்பிலும் தோராயமாக 100 கி.கி மரக்கட்டைகள் எரிக்கப்படுகின்றன என்று உள்ளூர் சிறுபக்கச் செய்தித்தாளில் ஒன்றில் கருத்துரை வெளியிடப்பட்டது. இந்த மரக்கட்டை பயன்பாட்டைத் தடுப்பதற்காக மரக்கட்டைகளுக்கு பதிலாக தேவையில்லாத பொருட்களை எரித்தல் அல்லது ஒரே சமூகத்தினர் பல சிறிய நெருப்புக்களை மூட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு நெருப்பை மூட்டுதல் உள்ளிட்ட பல வழிமுறைமைகள் முன்மொழிப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதும் ஏதோ ஒரு சில சமுதாயத்தின் முக்கியப் பிரிவினர், மற்ற இடங்களில் கொண்டாடப்படும் இதே போன்ற கொண்டாட்டங்களில் பல எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டி தேவையில்லாத பொருட்களை எரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.