இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். (கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு சாமியாடுதல் என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு அருள் வாக்குகள் என்று பெயர்). சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். இந்த கோயிலின் தல வரலாறு இதுதான். வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்கின்றனர். கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவைகளுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன. மதுரையிலிருந்து - கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகர் இருக்கிறது. இங்கிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து இருக்கன்குடிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரயில் பயணத்தில் மதுரை யிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம். கரு கரு () எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பார்த்தால், வெளித் தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள் என்று கொள்ளலாம். மூலப் பொருளாகவும் கொள்ளலாம். ஒருவர் பேசும் பொழுது குறிப்பிட்ட நபரின் பேச்சின் போக்கு எவ்விதமாக இருந்தப் போதிலும் அப்பேச்சின் உள்நோக்கம் அல்லது அவரது பேச்சு எதனை மையப்படுத்தியதாக இருக்கின்றதோ, அதனை “பேச்சின் கரு” எனலாம். இங்கே பேச்சின் உட்பொருளை “பேச்சின் கருப் பொருள்” என்றழைக்கப்படுகின்றது. பேசுவோரைப் பொருத்தும் பேசும் பொருளைப் பொருத்தும் பேச்சின் உற்பொருள் "கரு" வெளிப்படையானதாகவோ வெளிப்படையற்றதாகவோ இருக்கலாம். விகிதம் விகிதம் (Ratio) என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினை குறிக்கும். இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். விகிதங்களுக்கு அலகில்லை. a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் குறிப்பர். "a" முகப்பெண் எனவும், "b" பின்னுறுப்பு எனவும் அழைக்கப்படும். விகிதத்தில் வரிசை முக்கியமானது. a:b ≠ b:a. சில நேரங்களில் விகிதமானது பரிமாணமில்லாத வகுத்தல் ஈவாக குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஒரு பழக் கிண்ணத்தில் எட்டு ஆரஞ்சுகளும் ஆறு எலுமிச்சம் பழங்களும் உள்ளன எனில்: *ஆரஞ்சுக்கும் எலுமிச்சம் பழத்திற்குமுள்ள விகிதம் 8:6 (4:3) விகிதக் கருத்துரு தோன்றக் காரணமான எண்ணங்கள் எழுத்தறியாக் கலாச்சாரத்துக்கு முன்னமேயே வழக்கில் இருந்திருக்கின்றன. எனவே, விகிதக் கருத்துருவின் மூலத்தைக் கண்டறிதல் என்பது இயலாததாகும். எடுத்துக்காட்டாக, ஒரு கிராமமானது மற்றொரு கிராமத்தைவிட இருமடங்கு பெரியதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது அடிப்படை இயல்பு. அதனால் விகிதக் கருத்துருவானது வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய சமுதாயத்தால் அறியப்பட்டிருந்திருத்தல் வேண்டும். எனினும் பண்டைய கிரேக்கச் சொல்லான λόγος ("logos") என்பது, "விகிதம் (ratio)" என்ற சொல்லின் மூலமாகக் கருதப்படுகிறது. துவக்ககால மொழிபெயர்ப்பாளர்கள் இதனை இலத்தீன் மொழியில் "விகிதம் (ratio)" எனத் தந்தனர். விகிதம் குறித்த யூக்ளிடின் கூற்றுகளுக்கான சமீபகால விளக்கம், விகிதங்களின் கணக்கிடுதலுக்கு ஏற்றதாக உள்ளது இடைக்கால அறிஞர்கள், விகிதம் மற்றும் சம விகிதங்களைக் குறிப்பதற்கு "விகிதசமன் (proportio: proportion") என்ற சொல்லைப் பயன்படுத்தினர். துவக்ககால ஆதாரங்களிலிருந்து சேகரித்த விகிதக் கருத்துக்களை, யூக்ளிட் தனது எலிமென்ட்சு நூலில் அளித்துள்ளார். பித்தகோரசின் வழியாளர்கள் எண்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஒரு விகித மற்றும் விகிதசமக் கோட்பாட்டினை உருவாக்கினர். ஆனால் அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு இன்றைய விகிதமுறு எண்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக அமைந்திருந்தது. அவர்களால் வடிவவியலில் கண்டறியப்பட்ட அளவுக்கிணங்கா எண்களுக்கு (விகிதமுறா எண்கள்) அக்கோட்பாடு பொருந்தவில்லை. அளவுக்கிணங்கா எண்களுக்குப் பொருந்தாத இக்கோட்பாட்டைக் கண்டறிந்தவர் நீடியோசின் யூடாக்சசு ஆவார். காலத்தால் முந்தைய இந்த அளவுக்கிணங்கிய எண்களுக்கான விகிதசமக் கோட்பாட்டிற்கொத்த விரித்துரைப்பு, எலிமெண்ட்சு நூலின் புத்தகம் VII இல் காணப்படுகிறது யூக்ளிடின் எலிமெண்ட்சின் புத்தகம் V இல் விகிதம் தொடர்பான 18 வரையறைகள் உள்ளன. மிகவும் சாதாரணமான, பயன்பாட்டிலுள்ள கருத்துகளையே அவர் இவ்வரையறைகளில் பயன்படுத்தியுள்ளதால், அக்கருத்துக்களுக்கெனத் தனிப்பட்ட வரையறைகளை அவர் தரவில்லை. தற்காலச் சொற்பயன்பாட்டில், "அளக்கும்" என்பது இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளவாறு யூக்ளிடால் வரையறுக்கப்படவில்லை. எனினும், ஒரு அளவை அளவீட்டின் அலகாக எடுத்துக் கொண்டு மற்றொரு அளவை இந்த அலகின் முழுஎண் மடங்காக எழுத முடிந்தால், முதல் அளவானது இரண்டாவதை அளக்கும் என அறிந்து கொள்ளலாம். இந்த வரையறைகள் புத்தகம் VII இல் மூன்றாவது மற்றும் ஐந்தாவது வரையறைகளாக கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சொற்பயன்பாட்டுடன் தரப்பட்டுள்ளதைக் காணலாம். கணிதரீதியாக இவ்வரையறை அவ்வளவாக சீராக இல்லையென்பதால் சிலர் இதனை யூக்ளிட் தந்ததல்ல; அவரது பதிப்பாளர்களால் இணைக்கப்பட்டது என்று கருதுகின்றனர். நவீனக் குறியீட்டில், தரப்பட்டுள்ள இரு அளவுகள் "p" , "q"; "m"/"n" ஒரு விகிதமுறு எண் எனில், "np" ஆனது, "mq" ஐ விடச் சிறியதாக அல்லது சமமானதாக அல்லது பெரியதாக இருப்பதைப் பொறுத்து, "p" : "q" ஆனது முறையே, "m"/"n" ஐ விடச் சிறியதாக அல்லது சமமாக அல்லது பெரியதாக இருக்கும் எனலாம். விகித சமம் குறித்த யூக்ளிடின் வரையறைப்படி, ஒரு விகிதமுறு எண்ணைவிடச் சிறியதாக, சமமாக அல்லது பெரியதாக இருப்பதில் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ள இரு விகிதங்கள் சமமாகும். தற்காலக் குறியீட்டில், "p", "q", "r" , "s" தரப்பட்டுள்ள அளவுகள்; "m" , "n" நேர்ம முழுஎண்கள் எனில், தற்காலக் குறியீட்டில், இவ்வரையறையின்படி, இது நான்கு அளவுகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது: இரு உறுப்புகள் கொண்ட விகிதத்தை அவ்விகிதத்திலுள்ள எண்களைக் கொண்ட பின்னமாக எழுதலாம். எடுத்துக்காட்டு: 2:3 விகிதத்தில் ஒப்பிடப்படும் முதல் அளவானது, விகிதத்தின் இரண்டாம் அளவில் formula_1 பங்காகும்.. 2 ஆரஞ்சுகளும் 3 ஆப்பிள்களும் விகிதத்தில் எழுதப்பட்டால்: இவ்விகிதங்களை பின்னங்களாகவும் எழுதலாம்: 1:4 விகிதத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை நீருடன் கலக்க வேண்டுமெனில் ஒரு பங்கு ஆரஞ்சு பழச்சாற்றுடன் நான்கு பங்கு நீர் கலக்க வேண்டும். சேர்க்கப்பட்ட நீரில் 1/4 பங்கு ஆரஞ்சுப் பழச்சாறு ஆகும். ஆனால் மொத்தக் கலவையில் ஆரஞ்சு பழச் சாற்றின் அளவு 1/5 ஆகும். a:b ≠ b:a; a/b ≠ b/a என்பதால், விகிதம் அல்லது பின்னம் இரண்டிலும் எதனுடன் எது ஒப்பிடப்படுகிறது என்பதில் தெளிவு அவசியம். இரண்டுக்கும் மேற்பட்ட அளவுகள் கொண்ட விகிதங்களையும் பின்னங்களாக எழுதலாம். ஆனால் ஒரு பின்னத்தால் இரு அளவுகளை மட்டுமே ஒப்பிட முடியும் என்பதால், அவற்றை ஒரே பின்னமாக எழுத முடியாது. இரண்டுக்கும் மேற்பட்ட அளவுகளைக் கொண்ட விகிதங்களில் இரு எண்களுக்கு ஒரு பின்னமெனக் கொண்டு பின்னங்களாக எழுதலாம். 2:3:7 என்ற விகிதத்தில் ஒரு விகிதத்திலுள்ள அனைத்து எண்களையும் ஒரே எண்ணால் பெருக்கினால் விகிதம் எந்தவிதத்திலும் மாற்றமடையாது. எடுத்துக்காட்டாக 3:2 விகிதமும், இதனை நான்கால் பெருக்கக் கிடைக்கும் 12:8 விகிதமும் சமமானது. பொதுவாக விகித பின்னங்கள் மீச்சிறு பொதுப் பகுதியெண்ணால் எளியவடிவிற்குக் குறைக்கப்படுவதும், நூறின் பங்குகளாக (விழுக்காடு) எழுதப்படுவதும் வழக்கிலுள்ளது. ஒரு கலவையில் A, B, C, D ஆகிய நான்கு பொருட்கள் 5:9:4:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அதில் B இன் 9 பங்குகளுக்கு, C இன் 4 பங்குகளுக்கு மற்றும் D இன் 2 பங்குகளுக்கு A இன் அளவு 5 பங்குகளாகும். 5+9+4+2=20 என்பதால், மொத்தக் கலவையில் 5/20 பங்கு A, 9/20 பங்கு B, 4/20 பங்கு C, 2/20 பங்கு D உள்ளது. ஒவ்வொரு பொருளின் அளவையும் மொத்தப் பங்கான 20 ஆல் வகுத்து 100 ஆல் பெருக்கி விழுக்காடாக மாற்றினால் கலவையில் ஒவ்வொரு பொருளின் அளவு: 25% A, 45% B, 20% C, 10% D (25:45:20:10). ஒரு பழக்கூடையில் இரு ஆப்பிள்களும் மூன்று ஆரஞ்சுகள் மட்டுமே இருந்து, வேறெந்தவிதப் பழங்களும் இல்லையென்றால், அக்கூடை இரு பங்கு ஆப்பிள்களும் மூன்று பங்கு ஆரஞ்சுகளும் கொண்டதாகும். முழுக்கூடையின் formula_5 அல்லது 40% ஆப்பிள்களும், formula_6 அல்லது 60% ஆரஞ்சுகளுமாக உள்ளன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பொருளை முழுப்பொருளுடன் ஒப்பிடுவது "வீதம்" அல்லது "விகிதப்படி" (proportion) எனப்படும். இரு அளவுகள் மட்டும் கொண்ட விகிதத்தை ஒரு பின்னமாக, குறிப்பாக பதின்ம பின்னமாக எழுதமுடியும். எடுத்துக்காட்டாக, பழைய தொலைகாட்சிப் பெட்டிகளின் திரையின் நீள-அகல விகிதம் 4:3. இதனை பின்னவடிவில் 4/3 எனவும், பதின்ம பின்ன வடிவில் 1.33:1 அல்லது சுருக்கமாக 1.33 (இரு பதின்ம இலக்கங்களுக்குத் தோராயப்படுத்தல்) எனவும் எழுதலாம். தற்கால தொலைகாட்சிப் பெட்டிகளின் திரையின் நீள-அகல விகிதம் 16:9 அல்லது 1.78. இவ்வாறு பதின்ம பின்னத்தில் எழுதுவதால் ஒப்பீடு எளிதாகிறது. 1.33, 1.78 இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த தொலைக்காட்சிப் பெட்டி அகலமான பிம்பத்தைத் தரும் என்பதை அறிவது எளிது. ஒரு விகிதத்திலுள்ள அனைத்து உறுப்பெண்களின் பொதுக்காரணிகளால் அவற்றை வகுப்பதன் மூலம் அவ்விகிதத்தை எளியவடிவிற்குச் சுருக்கலாம். 40:60 விகிதத்தின் உறுப்பெண்கள் 40, 60 இன் பொதுக்காரணி 20 ஆல் வகுக்கக் கிடைக்கும் விகிதம் 2:3. இவற்றை எழுதும்முறை: முழுஎண்களை உறுப்பெண்களாகக் கொண்ட ஒரு விகிதத்தை மேற்கொண்டு எவ்விதத்திலும் சுருக்கமுடியாதெனில், அவ்விகிதம் எளிய வடிவம் கொண்டது எனப்படும். சில சமயங்களில் ஒரு விகிதத்தை 1:"x" அல்லது "x":1 வடிவில் எழுதுவது விகிதங்களை ஒப்பிடுவதற்குப் பயனுள்ளதாக இருக்கும். இதில் "x" ஒரு முழுஎண்ணாக இருக்க வேண்டுமென்பதில்லை. எடுத்துக்காட்டு: 4:5 விகிதத்தின் இரு உறுப்பெண்களையும் சில விகிதங்கள் அளவுக்கிணங்கா அளவுகளுக்கிடையே உள்ளவையாக இருக்கும். இவ்வளவுகளின் விகிதம் ஒரு விகிதமுறா எண். இதற்கான முதல் எடுத்துக்காட்டைக் கண்டறிந்தவர்கள் பித்தகோரசின் வழியாளர்கள் ஆவர். "a:b" = ("a+b"):"a" ஐ formula_7 என பின்ன வடிவில் எழுதி நேர்மத் தீர்வுகாணக் கிடைக்கும் பொன்விகிதம் formula_8 ஒரு விகிதமுறா எண். "a" , "b" இரண்டில் ஏதாவது ஒன்று விதமுறா எண்ணாக இருந்தால்தான் அவை பொன்விகிதத்தில் இருக்கமுடியும். வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும். வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவமியற்றி வந்தார். இதையறிந்த அசுரன் கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயன்றான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அந்த அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது. இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். அவள் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள். மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான். இந்து சமயக் கோயிலில்கள் அனைத்திலும் செய்யப்படும் தினசரி பூசைகள் இந்தக் கோயிலிலும் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் தை மாதச் சங்கராந்தி, தைப்பூசம், மாசி மாத மகா சிவராத்திரி, பங்குனி மாத உத்திரம், சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி மாத விசாகம், ஆடி மாத அமாவாசை, ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா , ஐப்பசி மாத தீபாவளி, கார்த்திகை மாத கார்த்திகை விழா, மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் சித்திரை மாதக் கடைசி செவ்வாய்க் கிழமை துவங்கி வைகாசி மாத முதல் செவ்வாய்க் கிழமை வரையிலான எட்டு நாட்கள் சிறப்பு சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் போது அனைத்துப் பக்தர்களும் முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயிலுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, கோழி போன்றவை பலியிட்டு அசைவ உணவு அன்னதானம் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. (பொதுவாக மாரியம்மன் கோயில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதில்லை என்றாலும் இந்த அம்மனை அசைவ உணவு உண்பவர்கள்தான் அதிகமாக வணங்கி வருகின்றனர் என்பதால் இந்த வழக்கம் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமியின் பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பலரும் மாரியம்மனுக்குத்தான் பலியிடும் வழக்கத்தை நேர்த்திக்கடனாக செய்து வருகின்றனர்.) சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக் கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்று இதைக் காண அதிக அளவில் மக்கள் கூடுகிறார்கள். சித்திரைத் திருவிழாவின் போது பொழுது போக்கிற்காக ராட்டினங்கள், சர்க்கஸ் மற்றும் பல வேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் இந்தப் பகுதி மக்கள் வாங்கிச் செல்வதற்காக குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என்று பல வகையான வணிகக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழா இந்தத் திருவிழா ஒன்று மட்டும்தான். இந்தத் திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் அனைத்திலும் இருந்து மக்கள் வந்து செல்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு அரசால் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கௌமாரியம்மன் கோயில் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில் க்குத் துணைக் கோயிலாக இருக்கிறது. இந்த இரு கோயில்களின் துணைக் கோயிலாக வீரபாண்டி செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டிக்கு இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன. சுயமரியாதைத் திருமணம் சாத்திரங்கள், சாதகங்கள் பார்க்காமல், சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும். இந்தியாவில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படி செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தையாகப் போற்றப்பட்ட பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்த அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 17-01-1968ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 20-01-1968ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது. கொடுமுடி ச. சண்முகன் கொடுமுடி ச. சண்முகன் ஒரு ஆய்வாளர், தமிழறிஞர். இவரது தமிழர் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வோடு "பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்" இத்துறையில் ஒரு முக்கிய ஆக்கம். இவர் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பின்னர் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை, சிற்பக்கலலூரியில் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். இவர் கட்டிடப் பொறியியலில் அளக்கையியல், பொறியியல் வரைவியல், மண்விசையியல் ஆகிய பட்டப் படிப்புக்கான பாட நூல்களை இயற்றியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட களஞ்சியம் காலாண்டிதழில் பல பொறியியல் கட்டுரைகளையும் தமிழில் கலைசொல்லாக்கம் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.இவர் அறிவியல் களஞ்சியத்தில் கட்டிடப் பொறியியல் துறையின் பதிப்பாசிரியராக பணிப்ரிந்தார். அறிவியல் களஞ்சியத் திட்டமிடலிலும் உருவாக்கத்திலும் தொடக்கநிலையில் பெரும்பங்கு வகித்துள்ளார். ஜோசப் கோயபெல்ஸ் பால் யோசப் கோயபெல்ஸ் (Paul Joseph Goebbels) (29 அக்டோபர் , 1897 – 1 மே , 1945) செருமனியின் மிக முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவர். அடால்ப் இட்லருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் செருமானிய ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவர் 1921இல் ஏடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் "18ஆம் நூற்றாண்டின் நாடகக் கதைகளை" ஆய்வறிந்ததின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர். தன் உணர்ச்சிமிகு பேச்சாற்றலின் மூலம் செருமனிக்கு யூதப்பகைமையை உணர்த்தியததற்காகஅறியப்படுகிறார். இவரின் யூதப்பகைமைக்குச் சான்றாக கிரிஸ்டல்நாக்ட் (கிரிஸ்டல் நைட்-Crystal Night) கொடூரநிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இவர் பல புதினங்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் பொதுவுடமைவாதிகளையும், சோசலிசவாதிகளையும் எதிர்ப்பதாகவும், ஸ்ட்ரோமப்டேலுங் "எஸ் ஏ" அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தன. 1923இல் நாட்சி அரசியலில் நுழைந்த இவர் 1928களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் 1933இல் இட்லர் அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கை பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் செருமானியர் பலரை போரில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1943ஆம் ஆண்டில் அச்சு நாடுகளுக்கு எதிராக உலகநாடுகள் திரும்புகையில் அவற்றுக்கு எதிராக செருமானியர் திரும்புமாறு தன் பரப்புரை மூலம் ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. கோயபெல்ஸ், இட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தார். இட்லர் இவரைத் தனக்குப் பின்வரும் அதிகாரப்பூர்வ வேந்தராக அறிவித்துவிட்டு இறந்தார். அவர் இறந்தபின் கோயபெல்ஸ் 1 மே, 1945 அன்று தன் மனைவி மகதா, ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது. முதலில் ஆறு குழந்தைகளுக்கும் மார்பின் என்ற மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பின் அவர்களின் வாயில் அவர் மனைவி சயனைட் நஞ்சை திணித்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, அவர் மனைவி சயனைட் நஞ்சை உட்கொண்டார் எனவும் கோயபெல்ஸ் இட்லரைப் போல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனவும் பல்வேறு நிச்சயமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. "எஸ் எஸ்" காவலரை சுடச்சொல்லி ஆணையிட்டு, அக்காவலர் சுட்டப்பின் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இறப்பின் மர்மத்தைத் தழுவி "டவுன்பால்" (Downfall) என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்: "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது." பாமினி சுல்தானகம் பாமினி சுல்தானகம் ("Bahmani Sultanate") என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம் ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சன்னி இசுலாம் பேரரசு ஆகும். டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அவைகள் அகமதுநகர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும். இந்த ஐந்து சுல்தானகங்கள் பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன. பாமினி சுல்தான்கள், தென்னிந்தியப் பகுதிகளை 191 ஆண்டுகள் ஆண்டனர். பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது.அவர்களின் பெயர்களுக்கு பின்வரும் சா(shah=ஷா) என்பது மரபுப் பெயராகும். 1. அலாவுதின் பாமன் சா - கி.பி. 1347 - 1358 2. முதலாம் முகம்மது ஷா - கி.பி. 1358 - 1375 3. அலாவுதின் முசகிது சா - கி.பி. 1375 - 1378 4. தாவுத் சா I - கி.பி. 1378 - 1378 5. இரண்டாம் முகம்மது சா - கி.பி. 1378 - 1397 6. கியாசுதின் தோமதன் சா - கி.பி. 1397 - 1397 7. சம்சுதின் தாவுத் சா II - கி.பி. 1397 - 1397 8. தசிவுதின் பைரோசு சா - கி.பி. 1397 - 1422 9. சிகாபுதின் அகம்மது சா I - கி.பி. 1422 - 1436 10. அலாவுதின் அகம்மது சா II - கி.பி. 1436 - 1458 11. அலாவுதின் உமாயுன் சா - கி.பி. 1458 - 1461 12. நிசாமுதின் அகம்மது சா III - கி.பி. 1461 - 1463 13. சம்சுதின் முகம்மது சா III - கி.பி. 1463 - 1482 14. சிகாபுதின் மமூத் - கி.பி. 1482 - 1518 15. அகம்மது சா IV - கி.பி. 1518 - 1520 16. அலாவுதின் சா - கி.பி. 1520 - 1523 17. வைவுல்லா சா - கி.பி. 1523 - 1526 18. கலீம்வுல்லா சா - கி.பி. 1526 - 1538 சியா முஸ்லீம்களான பாமினி சுல்தான்கள், இரானிய மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் எனக்கருதப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் பாரசீக மொழி பேசும் பாரசீகப் பண்பாட்டையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. கிரிஸ்டல்நாக்ட் கிரிஸ்டல்நாக்ட் (Krystallnacht)கிரிஸ்டல் நைட் ("Crystal Night") அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் நாசி ஜெர்மனியில் 1938 , நவம்பர் 9 இரவு முதல் [[நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் "91 யூதர்கள்" கொல்லப்பட்டனர் மற்றும் "25000" த்திலிருந்து "30000" பேர் வரை கைது செய்யப்பட்டு [[நாசி கைதிகள் சிறைச்சாலை]]களில் அடைக்கப்பட்டனர். இது நவம்பர் நிகழ்வு என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி [[இட்லர்|இட்லரின்]] யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் "200 " [[யூத தொழுகைக் கூடம்|யூத தொழுகைக் கூடங்கள்]] அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது. [[பகுப்பு:நாசிசம்]] [[பகுப்பு:படுகொலைகள்]] [[பகுப்பு:1938 நிகழ்வுகள்]] தைமூர் தைமூர் (9 ஏப்ரல் 1336 - 18 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது. தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை. வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார். ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில் , முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் , இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சமர்கந்து . இதுவே துருக்கிய- மங்கோலிய இனத்தைச்சேர்ந்த தைமூரின் தலைநகரம் ஆகும். 1335-இல் தைமூரின் முதல் படையெடுப்பு பாரசீகம் மீதாகும். பின்னர் தற்கால பாக்தாத், அனதோலியாவின் தென்கிழக்கு துருக்கி, சிரியா, நடு ஆசியாவின் ருசியாவின் பகுதிகள், ஜார்ஜியா, ஆர்மீனியா, துருக்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பாகிஸ்தான், ஆப்கானித்தான் ஆகும். அதன்பின் அவர் வெற்றி பெற்ற இடம் தில்லி ஆகும். மேலும் பஞ்சாப், மீரட், மற்றும் லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். கி.பி.1400 இல் தைமூர், துருக்கி நாட்டுக்குள் புகுந்து சுல்தான் இரண்டாம் பயோசியத்தை வெற்றி கண்டார். தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகள் காண காரணமாகும். இரக்கம் காட்டுவதோ,எதிரிகளை எனோதானோ என்று விட்டு விடுவது தைமூருக்கு பிடிக்காத ஒன்று ஆகும்.தைமூரை பொருத்தவரையில் தலை வேறு உடல் வேறாக இருப்பவனே எந்தப்பிரச்சனையும் இல்லாத எதிரி ஆகும். இதையே தைமூரின் வீரர்களும் பின்பற்றினர். எதிரிகளை தீர்த்துக்கட்டுவதை வேகமாக முடிக்க வேண்டும் என்பதும் தைமூரின் கொள்கைகளில் ஒன்று."யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுறவாகச் செயல்பட்டால்தான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும்" என்று தைமூர் தன் படை வீரர்களிடம் வழக்கம். பஞ்சாப் பிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளைச்சீவ அவன் ஆணையிட்டபோது ஒவ்வொரு வீரனும் கிளம்பினான்.அப்போது தொழுகைக் காலங்களில் தைமூருக்காகப் குர் ஆனை ஓதும் முதியவர் ஒருவர் அப்படியே அமர்ந்திருக்க "என்ன பெரியவரெ! சும்மா உட்காந்திருந்தால் எப்படி? நீங்களும் ஒரு வாளை எடுத்துக்கொண்டு போய் ஒத்துழைக்கலாம் அல்லவா?" - என்று தைமூர் சொல்ல அவரின் சகாக்கள் எறும்பைக்கூட மிதிக்க யோசிக்கும் பெரியவரை ஒருவரின் வயிற்றில் வாளை செலுத்த வைத்தார்களாம். தைமூர் போர்குணங்கள் கொண்டவனாக இருந்தலும், சில நகைப்பை வரவழைக்கும் செயல்களையும் செய்துள்ளார்.இந்தியாவை கைப்பற்றியதும்,யானைகளுக்கு பச்சை,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணங்களை அடித்து காவலுக்காக தனது கூடாரத்தின் முகப்பில் நிறுத்தினாராம். தைமூர் ஒரு இராணுவ பேரறிவாளனாக அறியப்படுகிறார். மேலும் மத்திய ஆசியாவில் அவரது ஆட்சி காலத்தில் அயல்நாடோடிகளின் விசுவாசமான ஒரு பின்தொடர்பைப் பெற்று அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவதற்கான விசித்திரமான திறமையுடன் ஒரு சிறந்த படையாட்சித் திறலாளராகவும் தைமூர் திகழ்ந்தார்.உள்ளுணர்வால் மட்டுமல்லாமல் அவர் அசாதாரணமான அறிவார்ந்தவராகவும் விளங்கினார் . சமர்கந்து மற்றும் அவரது பல பயணங்களில், புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டலின் படி, பாரசீக, மங்கோலிய மொழி மற்றும் துருக்கிய மொழி ஆகிய மொழிகளைக் தைமூரால் கற்றுக்கொள்ள முடிந்தது தைமூர் பல நகரங்களை வெற்றி கண்டபோதும் இந்தியாவிற்கு வந்ததே பெரிய சரித்திர நிகழ்வாக மாறியது. ஏனெனில் இயற்கை அரண்களான இமயமலைத்தொடர் மற்றும் ஆழமான சிந்து நதியையும் கடந்து படையெடுத்தவர்கள் அலெக்சாந்தர்,கஜினி போன்று மிக சிலரே. செப்டம்பர் 22,1398 இல் டெல்லி நகரை கைப்பற்ற வந்தார் தைமூர். சிந்து நதியை பொருட்படுத்தாத தைமூர் பல படகுகளை ஒன்றாக இணைத்து சிந்து நதியை கடந்தார். சிந்து நதியை கடந்த தைமூர் ஐந்து நதிகள் இணையும் பஞ்சாப் பகுதியில் தனது ஆக்ரமிப்பை ஆரம்பித்தார்.சுமார் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பஞ்சாப் நகரத்தில் அடிமைகளாக பிடித்தார் தைமூர். ஒருமுறை முகமது ஷா, சில வீரர்களுடன் இருந்த தைமூரை விரட்டி அடித்தார். அதனால் கோபமுற்ற தைமூர் பஞ்சாபில் பிடித்த ஒரு லட்சம்அடிமைகளையும் வெட்டி வீழ்த்த ஆணையிட்டார். பின் டிசம்பர் 17,1398 இல் தைமூர், மல்லூகான் இக்பாலின் உதவியோடு டெல்லி அரியனையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரை கைப்பற்றினார். இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் போரிடும் போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்குள்ளானது. அதை சரி செய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டை பெயரெ "தைமூர் இ லெங்" -'நொண்டி தைமூர்' ஆகும். இப்படி மற்றவர்கள் அழைப்பது தைமூருக்கும் தெரியும். ஆனால் தன் எதிரில் நின்று யாரும் அழைக்க மாட்டேன் என்கிறார்களே என்று தன் ஆட்களிடம் அலுப்புச்சிரிப்புடன் கூறிப்பிடுவாராம் தைமூர். இந்தியாவிற்கு வந்து தங்கிய தைமூர் குதுப்மினார் மற்றும் குவ்வாத்-அல்-இஸ்லாம் மசூதியை சுற்றி பார்த்து 'இந்தியர்கள் சாதாரனமானவர்கள் அல்ல' என்றாராம். திரும்பி செல்லும் போது இந்தியக் கட்டிட கலைஞர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார். பல லட்சம் பேரை வெட்டிவீழ்த்திய தைமூர் மிக எளிய முறையில் இறந்தார்.சீனாவை கைப்பற்ற திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர் சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து 1405 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரை விட்டார். இந்தியக் கட்டிட கலைஞர்கள் துருக்கி சென்றவுடன் சில மாதங்களிளேயே துருக்கிய மற்றும் பெர்ஷிய கலைநுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லரை கட்டப்பட்டது.இந்தியக் கட்டிட கலைஞர்கள் சமர்கன்ட் நகரில் 'குர் அமிர்' என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டிமுடித்தார்கள். இவரிடம் இருந்துதான் மிக பெரிய அளவில் கல்லரைக்கட்டும் பழக்கம் மொகலாயர்களிடம் வந்தது. தைமூருக்கு பதினெட்டு மனைவிகளும் இருபத்து நான்கு துணைவியர்களும் இருந்துள்ளனர் ஒப்புமை குறிகை ஒப்புமை குறிகை என்பது ஒரு தொடர் குறிப்பலையின் கணியத்தின் நேர மாறி பண்பு இன்னுமொரு கணியத்தின் நேர மாறிப் பண்புடன் ஒப்பிட்டு பதியப்படும் குறிப்பலை ஆகும். எ.கா ஒரு ஒலியால் ஒரு ஒலிவாங்கியின் மென்றகடில் (diaphragm) ஏற்படும் அழுத்த வேறுபாடே அதற்கு ஒப்ப மின்னழுத்த அல்லது மின்னோட்ட வேறுபாடுகளை மின்சுற்றில் ஏற்படுத்தி அந்த ஒலியைப் பதிவு செய்கிறது. ஆகையால் மின்னழுத்த குறிப்பலை ஒப்புமை குறிப்பலை எனப்படுகிறது. குறிகை குறிகை என்பது நேரம், இடம் அல்லது வேறு எதாவது சாரா மாறிகளுடன் மாறும் ஒரு கணியம். நகர்வு, ஒலி, படம், நிகழ்படம் என பலதரப்பட்டவை குறிப்பலைகள் ஆகும். கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்: ஒலிக் குறிப்பலை எடுத்துக்காட்டு: இங்கு formula_4 formula_5 formula_6 ஆகியவற்றை ஒலிக் குறிப்பலையின் வீச்சு, அதிர்வெண், தறுவாய் ஆகியவற்றின் சார்புகளாக கொள்ளலாம். யூத தொழுகைக் கூடம் தொழுகைக் கூடம் ("Synagogue"; ) என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும். இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம். யூத மதத்தில் "10 யூதர்கள்" (மின்யான் ["Minyan"]) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை "தொழுகைக் கூடம்" என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல் வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் "ஷுல்" ("shul", செப வீடு) எனவும், ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய யூதர்கள் "இஸ்நோகா" (esnoga) என்றும் பாரசீகம் மற்றும் கரெய்ட் யூதர்கள் அரமேய மொழி தழுவிய "கெனிசா" என்ற சொல்லையும் "தொழுகைக் கூடம்" என்ற பொருளில் அழைத்து வந்தனர். அரபு மொழி யூதர்கள் "நிஸ்" (Knis) என்று அழைத்துவந்தனர். கிரேக்கச் சொல்லான "சினகாக்" ("synagogue") ஆங்கிலத்திலும் (இடாய்ச்சு மொழி, பிரெஞ்சு மொழி ஆகியவற்றிலும்) அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது கடவுளிடம் இருந்து மோசே சினாய் மலையில் இருந்து பெறப்பட்டதாக விவிலியத்தில் குறிப்பிடப்படும் பத்துக் கட்டளைகளில் தொழுகைக் கூடம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெடிப்பதிர்வு கடத்தி வெடிப்பதிர்வு கடத்தி (Detonating cord, detonation cord, detacord, det. cord, detcord, primer cord அல்லது sun cord) என்பது உயர் ஆற்றல் வெடிமருந்துத் தொகுதிகளுக்கிடையில் அதிர்வைக் கடத்தப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுள்ள மெல்லிய குழாய் வடிவக் கடத்தி ஆகும். பல வெடிமருந்துத் தொகுதிகளை ஒரே வெடித்தல் தொடக்கத்தைக் கொண்டு வெடிக்க வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. ஓரிடத்தில் கெற்பு மூலம் வெடித்தலைத் தொடங்கி ஏனைய தொகுதிகளுக்கு வெடிப்பதிர்வைக் கடத்துவதன் மூலம் அனைத்துத் தொகுதிகளையும் கெற்பின்றியே வெடிக்க வைக்கலாம். வெடிப்பதிர்வு கடத்தியின் உறைக்குள் மையத்தில் உயர்சக்தி வெடிமருந்து தூள்வடிவில் அடைக்கப்பட்டிருக்கும். கடத்தி நெகழ்தன்மையுடையதாய் இருக்க வேண்டுமென்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக PETN எனும் உயராற்றல் வெடிமருந்தே வெடிப்பதிர்வு கடத்திகளிற் பயன்படுத்தப்படுகிறது. வெடிப்பதிர்வு கடத்தியின் ஓரிடத்தில் கிடைக்கும் வெடிப்பதிர்வினால் கடத்தியினுள் உள்ள உயராற்றல் வெடிமருந்து வெடிக்கிறது. இந்த அதிர்வு அக்கடத்தியுடன் தொடுகையுற்றுள்ள வெடிமருந்துத் தொகுதிகளுக்கும் கிடைக்கிறது. அவ்வெடிப்பதிர்வு அத்தொகுதிகளை வெடிக்கச் செய்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வெடிமருந்துத் தொகுதிகளை ஒரேயடியாக வெடிக்கச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் இக்கடத்தி பயன்படுத்தப்படுகிறது. இதைவிட ஊக்கி வெடிமருந்தாகவும் வெடிப்பதிர்வு கடத்தி பயன்படுத்தப்படுகிறது. அதாவது உணர்திறன் குறைந்த உயர்சக்தி வெடிமருந்துகளின் (எ.கா: TNT) தாக்கத்தை அதிகரிப்பதற்கு உணர்திறன் கூடிய வெடிமருந்துகள் ஊக்கியாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. அவ்வகையில், சுருட்டி முடிச்சாகக் கட்டப்பட்ட வெடிப்பதிர்வு கடத்தி ஊக்கியாகப் பயன்படத்தப்படும் சந்தர்ப்பங்களுமுண்டு. திரி என்பது ஒரு முனையில் கிடைக்கும் நெருப்புப் பொறியை மறுமுனைவரைக் கடத்துவது. இதன் மையத்தில் இருக்கும் எரிமருந்து எரிந்து அத்தீப்பொறியைக் கடத்தும். ஆனால் வெடிப்பதிர்வு கடத்தி, தான் வெடித்து அதன்மூலம் வெடிப்பதிர்வைக் கடத்தும். வெளிப்பார்வைக்கு திரியும் வெடிப்பதிர்வுக் கடத்தியும் ஒன்றாகத் தோற்றமளிக்கும். நெகிழ்திறன், பருமன், வெளியுறையின் நிறங்கள் என்பவற்றைக் கொண்டு இரண்டையும் வேறுபடுத்த முடியாது. மாறாக இவற்றின் குறுக்குவெட்டுமுகப் பரப்பைப் பார்த்தே வேறுபடுத்த முடியும். திரியின் குறுக்குவெட்டுமுகப் பரப்பின் மையத்திலுள்ள மருந்து கரிய நிறத்தில் இருக்கும் அதேவேளை வெடிப்பதிர்வு கடத்தியின் மையத்திலுள்ள மருந்தின் நிறம் வெள்ளை நிறத்திலிருக்கும். கெற்பு கெற்பு (அல்லது வெடிதூண்டி) (Detonator) எனப்படுவது வெடிமருந்துத் தொகுதியொன்றின் வெடித்தலைத் தொடக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெடிபொருள் ஆகும். இவை வெடிக்கவைக்கப்படும் முறைகளைக் கொண்டு பொறிமுறைக் கெற்பு (அல்லது சாதாரண கெற்பு), மின்சாரக் கெற்பு என வகைப்படுத்தப்படுகிறது. இவை பயன்படுத்தப்படும் தேவையைக் கொண்டு இராணுவப் பயன்பாட்டுக் கெற்பு, வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்பு என வகைப்படுத்தப்படுகிறது. ஒருபக்கம் அடைக்கப்பட்ட சிறிய மெல்லிய குழாயொன்றினுள் உணர்திறன் கூடிய வெடிமருந்துக் கலவைகள் அடைக்கப்பட்டிருக்கும். அடைக்கப்பட்டிருக்கும் முனைப்பக்கமாக வெடிப்பதிர்வைத் தரக்கூடிய உயர்சக்தி வெடிமருந்தும், அதற்கு மேல் தொடக்க வெடிமருந்தாக சிறப்பு இரசாயனக் கலவைகளும் அடுக்கப்பட்டிருக்கும். இத் தொடக்க வெடிமருந்தானது தீப்பொறியொன்று கிடைக்கும்போது வெடித்தலைத் தொடக்கி அடுத்திருக்கும் உயர்சக்தி வெடிமருந்தை வெடிக்க வைக்கும். திறந்த முனையிலிருந்து பார்த்தால் முதலில் தொடக்கி வெடிமருந்து அடுக்குக் காணப்படும். திறந்த முனையூடாக தீப்பொறி கிடைக்கும்போது கெற்பு வெடிக்கிறது. தீப்பொறியை வழங்குவதற்காக கெற்பின் முனையில் வெடிப்பியொன்று பொருத்தப்படலாம் அல்லது திரி மூலம் தீப்பொறி கிடைக்கும் வகையில் செய்யலாம். மின்சாரம் மூலம் வெடிக்கவைக்கப்படும் கெற்புகளே மின்சாரக் கெற்புகள் எனப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட சாதாரண கெற்பிலுள்ள தொடக்கி வெடிமருந்துக்கு தீச்சுவாலை கிடைத்தால் கெற்பு வெடிக்கும். இந்நிலையில் சாதாரண கெற்பின் திறந்தமுனையில் மின்சார வெடிப்பியொன்றைப் பொருத்திவிட்டால் அது மின்சாரக் கெற்பு ஆகிவிடுகிறது. மின்சார வெடிப்பியானது தங்குதன் இளையொன்றைக் கொண்டிருக்கும். அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும். மின்சாரம் கிடைத்தவுடன் தங்குதன் இளை சூடாக அதைச்சுற்றியுள்ள மருந்து தீப்பற்றுகிறது. இதுவே மின்சார வெடிப்பியின் செயற்பாடு. இத்தீச்சுவாலையைத் தொடர்ந்து கெற்பு வெடிக்கிறது. இராணுவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் கெற்புகள் இராணுவப் பயன்பாட்டுக் கெற்புகள் எனப்படும். வர்த்தகத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் கெற்புகள் வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்புகள் எனப்படுகின்றன. கிணறு தோண்டுதல், பாறையுடைத்தல், சுரங்கம் தோண்டுதல், கட்டடங்களைத் தகர்த்தல் என வர்த்தகத் தேவைகளின்போது இக்கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தகத் தேவைகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்தவையாதலால், வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்புகள் கூடியளவு வெடிப்பதிர்வை வெளியிட வேண்டியுள்ளன. பொதுவாக வர்த்தகக் கெற்புகளில் உணர்திறனும் வெடிப்பதிர்வும் அதிகமாகக் கொண்ட PETN எனும் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. எர்மன் கோரிங் எர்மன் வில்லெம் கோரிங் (ஹெர்மன் வில்லெம் கோரிங், "Hermann Wilhelm Goring") (ஜனவரி 12, 1893- அக்டோபர் 15, 1946) ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது தண்டனை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்காவின் (தற்பொழுதுள்ள நமிபியா) கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்தவர். கோரிங் இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார். வெடிப்பி வெடிப்பி என்பது தீப்பொறி ஒன்றை உருவாக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறு வெடிபொருள் ஆகும். இது அனைத்துவிதமான வெடிபொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உயர்சக்தி வெடிமருந்துகளைக் கொண்ட வெடிபொருட்களில் கெற்பை வெடிக்க வைப்பதற்கான தீப்பொறியை வழங்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை துப்பாக்கி ரவைகள், எறிகணைகள், ஏவுகணைகள் போன்றவற்றில் உந்துவிசை வெடிமருந்தை எரியச் செய்வதற்கான தீப்பொறியை வழங்கும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. கொஞ்சம் தெளிவாக எடுத்துக்காட்டோடு விளக்கினால், ஓர் எறிகணையில் இரண்டுவிதமான தேவைக்காக வெடிப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. எறிகணையைப் பீரங்கியிலிருந்து இலக்கு நோக்கி ஏவுவதற்கு எறிகணையிலுள்ள உந்துவிசை வெடிமருந்தை எரிய வைக்க வேண்டும். இதற்கு வெடிப்பியொன்றே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதுகையில் அதிலுள்ள உயர்சக்த வெடிமருந்து வெடிக்க வேண்டும். அவ்வெடிமருந்தை வெடிக்க வைக்கும் கெற்புக்குத் தீப்பொறியைக் கொடுப்பதற்கும் வெடிப்பிதான் பயன்படுத்தப்படுகிறது. வெடிப்பிகள் தொழிற்படும் முறையைக் கொண்டு இரண்டாக வகைப்படுத்தலாம்: பொறிமுறை வெடிப்பிகள், மின்சார வெடிப்பிகள் என்பனவே அவை. இவ்வெடிப்பிகள் பொறிமுறை (mechanically) மூலம் தூண்டல் ஏற்பட்டுத் தொழிற்படுகின்றன. வெடிப்பியினுள் உணர்திறன் கூடிய இரசாயனக் கலவையொன்று அடைக்கப்பட்டிருக்கும். மூடப்பட்டிருக்கும் முனையில் அடியாணி (Striker) அல்லது சுடும் ஊசி (Firing Pin) விசையோடு மோதுகையில் வெடிப்பியினுள்ளிருக்கும் உணர்திறன் கூடிய இரசாயனக் கலவை தூண்டப்பட்டு எரிகிறது. இதன்மூலம் ஏற்படும் தீப்பொறி வெடிப்பியின் திறந்த முனையூடு கடத்தப்படுகிறது. துப்பாக்கி ரவைகளின் அடிப்பாகத்தின் மையத்தில் வட்டமாக இருப்பதுதான் வெடிப்பி. துப்பாக்கியிலுள்ள அடியாணி அவ்வெடிப்பியில் மோதுகையில் தீச்சுவாலை உருவாக்கப்பட்டு ரவைக்கோதினுள் இருக்கும் கரிமருந்து எரிக்கப்படுகிறது. அதன்மூலம் ஏற்பட்ட உந்துதலால் ரவை நுனியிலுள்ள குண்டு துப்பாக்கிக் குழலைவிட்டுப் புறப்படுகிறது. அதேபோல் உயர்சக்தி வெடிமருந்துகளை வெடிக்க வைக்கும் சந்தர்ப்பத்திலும் இவ்வெடிப்பிகள் பயன்படத்தப்படுகின்றன. ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதும்போது அடியாணியொன்று வெடிப்பியில் மோதி தீச்சுவாலையை ஏற்படுத்துகிறது. அத்தீச்சுவாலையைப் பெற்ற கெற்பு வெடிப்பதன்மூலம் எறிகணையிலுள்ள வெடிமருந்து முழுவதும் வெடிக்கிறது. இவ்வெடிப்பிகள் மின்சாரம் மூலம் தூண்டல் ஏற்பட்டுத் தொழிற்படுகின்றன. மின்சாரம் கிடைத்ததும் சூடாகும் தங்குதன் இளையொன்று இவ்வெடிப்பியில் காணப்படும். அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய உணர்திறன் கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும். தங்குதன் இளைக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதைச்சுற்றியுள்ள மருந்து எரிந்து தீச்சுவாலை உருவாக்கப்படுகிறது. மின்சார வெடிப்பிகள் பெரும்பாலும் மின்சாரக் கெற்புகளிற் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலியத் தமிழர் இத்தாலியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் இத்தாலியில் வசிப்பவர்கள். இத்தாலியில் 25,000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். இலங்கையில் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பல எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். போட்சுவானா தமிழர் போட்சுவானா தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் போட்சுவானா நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். 20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தென் ஆபிரிக்காவில் இருந்த இந்தியர்கள் போட்சுவானாவுக்கு வணிக நோக்கில் இடம்பெயர்ந்தனர். இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையானோர் இவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். தொழில் வாய்ப்புக்கள் தேடி மிகவும் பின்னர் இடம்பெயர்ந்தோரும் உள்ளனர். போட்சுவானா தமிழ் கலாச்சார கழகம் ஒன்றும் இங்கு இயங்குகிறது. அதன் தலைவர் க. சுதர்சன். வியட்நாமியத் தமிழர் வியட்நாமியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் வியட்நாம் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். வியட்நாம் போருக்கு முன்னர் 3000 வரையான தமிழர்கள் இருந்தனர். அதன் பின்னர் சில நூறு தமிழர்களே இங்கு வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் வணிகத்துக்காக இங்கு வந்த செட்டியார்கள் ஆவர். தமிழர்கள் பெரும்பாலும் கோ சி மின் நகரத்தில் வசிக்கின்றனர். இங்கு தமிழர்கள் கட்டிய மாரியம்மன் கோயில் உள்ளது இங்கு சிறுபான்மையானோரால் பேசப்படும் சாம் மொழிக்கும், குறிப்பாக அதன் எழுத்துக்கும் தமிழுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சாம் எழுத்துக்கள் தமிழ் மொழியின் வட்டெழுத்துக்கு ஒத்தவை. குவைத்தில் தமிழர் குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 10 000 மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர். இங்கு வந்து தொழில் புரிபவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நாடு திரும்பி விடுவர். இவர்கள் இலங்கைத் தமிழர் இனவழிப்பைக் கண்டனப் பொதுக் கூட்டங்களை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.பெரு வாரியான தமிழர்கள் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத் தமிழர் ஐக்கிய அரபு அமீரகத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 10,000க்கு மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடித் தமிழர்கள் இங்கு வந்தனர். இங்கு வந்து தொழில் புரிபவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நாடு திரும்பி விடுவர். இங்கு வசிப்பவர்களில் கணிசமானவர்கள் தமிழ் முஸ்லீம்கள் ஆவர். சவூதி அரேபியாவில் தமிழர் சவூதி அரேபியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 1.4 மில்லிய இந்தியர்கள் வசிக்கின்றனர். அதில் கணிசமான தொகையினர் தமிழர்கள் ஆவர். இலங்கைத் தமிழர்களும் கணிசமான தொகையினர் வசிக்கின்றனர். இங்கு குடியுரிமை பெறுவதென்றால், ஒருவர் இசுலாமியராக இருக்க வேண்டும் என்பது சட்டம். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர். சுவீடன் தமிழர் சுவீடன் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சுவீடன் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். சுவீடனில் 2000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். இலங்கையில் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பல எதிர்ப்புப் போராட்டங்களை இவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பின்லாந்து தமிழர் பின்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் பின்லாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். பின்லாந்து நாட்டில் சில நூறு தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். "முதன்மைக் கட்டுரை: கலேவலா" கலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். கலேவலா தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது. நியூசிலாந்து தமிழர் நியுசிலாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் நியுசிலாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். நியுசிலாதில் 3000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். தாய்லாந்து தமிழர் தாய்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் தாய்லாந்தில் வசிப்பவர்கள் ஆவர். தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டம் ஒன்றும் கண்டெக்கப்பட்டுள்ளது. கிபி 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் தமிழரின் கட்டிட சிற்பக்கலைப் பாணியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு நடக்கும் சடங்குகளில் திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்கள் மந்திரம் போன்று ஓதப்படுகின்றன. தங்கம், கப்பல், பூட்டன் என பல தமிழ்ச் சொற்களும் தாய் மொழியில் உள்ளன. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 2 "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto ) (GTA)" என்பது வாகனங்களை திருடிச்செல்லும் கும்பலில் ஒருவராக பங்குபெற்று விளையாடும் ஒரு விடியோ ஆட்டம் (காணொலி விளையாட்டு) ஆகும், அதை ஸ்கார்ட்லாந்தை சார்ந்த விளையாட்டு நிரலொழுங்கு ஆயத்தச்செயலர் (game programmer) டேவ் ஜோன்ஸ் (Dave Jones) முதலில் உருவாக்கினார், பிறகு, டான் ஹௌசெர் (Dan Houser) மற்றும் சாம் ஹௌசெர் (Sam Houser), மற்றும் விளையாட்டு வடிவமைப்பாளர் (game designer) சச்சரி கிளார்க் (Zachary Clarke) போன்றவர்களும் அதை மேம்படுத்தினார்கள், இது அடிப்படையாக ராக்ஸ்டார் நார்த் (Rockstar North) (முன்பு டிஎம்ஏ டிசைன் (DMA Design என்று பெயர் கொண்டது)) என்ற நிறுவனத்திற்காக உருவாக்கியது மற்றும் ராக்ஸ்டார் கேம்ஸ் (Rockstar Games) என்ற அமைப்பினர் வெளியிட்ட விடியோ ஆட்டம் (காணொலி விளையாட்டு) ஆகும். இந்த விளையாட்டு (ஆட்டம்) நடிப்பு, சாகசம், வாகனம் செலுத்துதல், மற்றும் அவ்வப்போது வேடம் புனைதல், இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் பந்தயம் வைத்தல் போன்ற அம்சங்கள் கொண்ட கலவையாகும் மேலும் வயது வந்தவர்களுக்கு மட்டுமான உள்ளடக்கம் மற்றும் வன்முறையான கருப்பொருள்கள் கொண்டவையாக இருப்பதால் பலவிதமான சர்ச்சைகளுக்கு உட்பட்டதாகும். இவ்விளையாட்டு பல வேறுபடும் முதல் மாந்தர்களை மையமாகக்க்கொண்டது, அவர்கள் குற்றங்கள் புரியும் பாதாள உலகத்தில் இருந்துகொண்டே மேலும் உயர்ந்த நிலைகளை அடைந்திடும் முயற்சிகளில் ஈடுபடுவதோடு, மேலும் அந்த நிலைகளை அடைவதற்கான நோக்கங்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் வேறுபடும். பொதுவாக எதிர்ப்பைத் தூண்டுபவர்கள் முந்தைய மாந்தர்களை அல்லது அவர்களுடைய நிறுவனங்களை ஏமாற்றிய பாத்திரங்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக விளங்குபவர்களாக இருப்பார்கள். டிஎம்ஏ டிசைன் (DMA Design) என்ற நிறுவனம் இந்த தொடரை துவங்கியது மற்றும், தற்போது தன் சொந்த முயற்சியிலான ஒன்பது கணினி சார் விளையாட்டுக்களுடன் மிகவும் அண்மையில் வெளிவந்த முனையத்தின் தவணைகளில் நிறுவுவதற்கான அசலான விளையாட்டுப்பதிப்பிற்கான இரு விரிவான தொகுப்புகளையும் அளித்துள்ளது, அதாவது "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" இன், இரு விரிவாக்க தொகுப்புகள் வெளியாயின. திரைப்பட உலகில் பிரபலங்களான மைகேல் மாட்சன் (Michael Madsen), ரே லியோட்டா (Ray Liotta), பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds), டென்னிஸ் ஹோப்பர் (Dennis Hopper), காரி பிஸி (Gary Busey), ஸாமுவெல் எல். ஜாக்சன் (Samuel L. Jackson), க்றிஸ் பென் (Chris Penn), ஜேம்ஸ் வுட்ஸ் (James Woods), ஜோ பன்டோலியானோ (Joe Pantoliano), பிரான்க் வின்சென்ட் (Frank Vincent), ராபர்ட் லோக்கியா (Robert Loggia), க்யல் மச்லச்லன் (Kyle MacLachlan) மற்றும் பீட்டர் போன்டா (Peter Fonda) போன்றவர் அனைவரும் இத்தொடரில் பல பாத்திரங்களுக்காக வெவ்வேறு தவணைகளில் குரல் கொடுத்துள்ளார்கள். தொடரின் பெயர் மற்றும் அதன் விளையாட்டுக்கள் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" என்ற பெயரை தழுவியதாகும், அச்சொல் இயக்கூர்தி திருட்டுக்களை குறிப்பதாகும். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" என்ற பெயர் அமெரிக்காவில் வழங்கும் வாகனங்கள் இயக்கூர்திகள் திருடுபோவதைக்குறிக்கும் சட்டம் சார்ந்த சொல்லாகும். இவ்விதமான விளையாட்டுக்கள் விளையாடுபவர்களை ஒரு பெரிய நகரத்தின் குற்றவாளியின் பாத்திரத்தை ஏற்க அனுமதி அளிக்கிறது, மாதிரியாக, ஒரு தனி நபர், அவன் இவ்விளையாட்டின் மூலமாக படிப்படியாக திட்டமிட்ட குற்றங்கள் புரிந்து தன் நிலையை உயர்த்திக்கொள்கிறான். விளையாடுபவர்களுக்கு பல வேறுபட்ட நோக்கங்கள் கூடிய செயல்பாடுகளை அந்நகரத்து பாதாள உலக முக்கியபுள்ளிகள் அவனுக்கு உத்தரவு இடுவார்கள் மேலும் அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றினால் மட்டுமே அவனால் மேலும் உள்ளடங்கிய கதையை வழிநடத்திச்செல்ல இயலும். கொலை கொள்ளை போன்ற மற்றும் இதர குற்றங்களை புரிவதை தூண்டுவதை வழக்கமாக கொண்டுள்ள இந்த விளையாட்டு, சில நேரங்களில் வாடகை வண்டிகளை ஓட்டுவது, (தீயணைப்பது) நெருப்புடன் விளையாடுவது, சுங்கம் வாங்கிகளாக பணிபுரிவது, சாலையில் ஓட்டப்பந்தயம் நிகழ்த்துவது, பேருந்தை ஓட்டுவது அல்லது நிலையிறக்கை வானூர்தியில் பறக்க கற்றுக்கொள்வது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. பிறகு வந்த தலைப்புகளில் குறிப்பாக "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ 2" வெளியீட்டிற்குப்பின் வந்தவை, விளையாடுபவரை மேலும் கொடியவனாக்கும் தன்மை உள்ளடங்கிய நிகழ்வுகளை வழங்கி, அதில் அவர்கள் ஒரு எதிர்பாராத நிகழ்வை சந்தித்து, அதில் இருந்து மீள்வதற்கும் தெரிந்து கொள்ளவேண்டும் (எ.கா. ஏமாற்றப்படுதல் மற்றும் இறந்து போனதாக விட்டுச்செல்வது), இது போன்ற செயல்பாடுகள் அவனை மேலும் ஒரு வெறியனாக தூண்டிவிடுகிறது, அவன் தன்னை தனது குற்றங்கள் புரியும் ஏணியில் மேலும் மேலும் ஏறிக்கொண்டு முன்னேறுகிறான் மற்றும் இறுதியில் கதையின் முடிவில் இந்த பாத்திரமானது வெற்றிவாகை சூடுவதுடன் நிறைவடையும். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரானது, மிகவும் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் அலைந்து திரிவதற்கான அமைப்புடன் கொண்ட "மணல்பெட்டி விளையாட்டுக்கள் ("sandbox games")" சார்ந்த விளையாட்டு வகையாகும், அது "விளையாடும் நபருக்கு முடிவெடுப்பதற்கான அளவில்லாத சுதந்திரத்தை வழங்கும் தன்மை கொண்டது மேலும் அவன் என்ன செய்ய நினைக்கிறான் மற்றும் எப்படி செய்ய நினைக்கிறான் என்பதை முடிவு செய்வதற்கு ஏதுவாக பன்முறை வழிகளில் செயல்படுத்த அதற்கான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயுதங்கள் அவனுக்கு தாராளமாக வழங்கப்படும். மற்ற பரம்பரையான ஒரே பாதையில் செல்லும் தொடராக அமைந்த விளையாட்டுக்களுக்கு பதிலாக, அவை நேரோட்ட விளையாட்டுமுறை சார்ந்தவை, ஆனால் "ஜிடிஏ அமைப்பில் (GTA)" விளையாடுபவர் எந்த நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யலாம், மற்றும் வெவ்வேறு பாத்திரங்களுடன் கூடிய அவர்களுடைய உறவுகளை அவர்கள் தெரிவு செய்வது போலவே அதற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்கலாம். விளையாட்டின் போது எப்போது வேண்டுமானாலும் எந்த நகரத்திற்கும் இடையே அலைந்து திரியலாம், மற்றும் திறந்த உலக வெளிப்பாடு கொண்ட விடியோ விளையாட்டுக்கான எடுத்துக்காட்டுக்களாக இவை அமைகின்றன, மேலும் இவற்றோடு எந்த கட்டிடத்தையும் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம் என்பதால் முக்கியமான கதையின் போக்குடன் இதர துணை நோக்கங்களையும் கூடுதலாக அடைய இயலும் அமைப்பு கொண்டதாக இவ்விளையாட்டு உள்ளது. இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன: சில நோக்கங்கள் நேரோட்ட, நீண்டு வளையும் திட்டம் கொண்டதாகவும், மேலும் விளையாட்டின்போது, நகரங்களில் உள்ள சில இடங்களை திறக்க வேண்டிய கட்டாயம் கதைப்போக்கில் இருந்துகொண்டே இருக்கலாம். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" மற்றும் அதற்குப்பின் வந்த விளையாட்டுக்கள் கூடுதலான குரலோசை நடிப்பு கொண்டவை ஆகும், மற்றும் அவற்றில் "வானொலி நிலையங்களில்இருந்து", இசை பொழிந்து கொண்டே இருப்பது போல உருவாக்குதல், டிஸ்க் ஜாக்கியுடன் பாடல்களை கேட்டுக்கொண்டே வாகனத்தை ஒட்டி செல்வது மற்றும் ஆடுவது, வானொலி நிருபர்கள், விளம்பரங்கள், பேசும் வானொலி, பாப் இசை, மற்றும் அமெரிக்க கலாச்சாரம் போன்றவை அடங்கியதாகும். ஒரு நடமாடும் நகரத்தை உருவகப்படுத்தும் முனைப்பில், ஒரு நகரத்தின் சூழலை வெளிப்படுத்தும் பொருட்டு, வாகனங்களை ஓட்டிச்செல்லுதல் என்பது விளையாடும் நபருக்கு தேவைப்படும் அளவிற்கு தூண்டுதாலாக அமையும், அதற்காக போக்குவரத்து குறியீடுகளை போற்றும் பாதசாரிகள் அடங்கிய சாலைகள் காட்சியில் வைக்கப்படுகின்றன. மேலும் இது போன்ற இயல்பான நிகழ்வுகளை புகுத்தி, திறந்த நிலை கொண்ட ஒரு சூழல் வரவழைக்கப்படுகிறது, இது போன்று சூட்ச்சுமம் பல இதர விளையாட்டுக்களிலும் பயன் படுத்தியது உண்டு, எடுத்துக்காட்டாக "சிம்ப்சன்ஸ் ஹிட் அண்ட் ரன்", ஆனால் அதில் குற்றவாளிகள் மற்றும் வன்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ " தொடரை பின்வரும் நெறிமுறைகள் அடிப்படையில் பகுக்கலாம், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" வின் அசலான வெளியீட்டிற்குப்பின் வந்தவற்றில் ஒரு அங்கீகரிக்கத்தக்க தலைப்பிற்கு பின் வரும் எண்ணிக்கைகள் உள்ளிட்ட அடிப்படையிலும், (எ.கா. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" ) மற்றும் ஒரு அளவிற்கு, பயன்படுத்திய எழுத்து வரைகலைகளுக்கான எஞ்சின் அல்லது பொறியின் அடிப்படையிலும் பகுக்கலாம். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" , "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ " தொடரின் முதல் விளையாட்டு, ஸ்கார்ட்லாந்தை சார்ந்த வீடியோ கேம் மேம்படுத்துபவர்களான டிஎம்ஏ டிசைன் (DMA Design) என்ற நிறுவனத்தினர் உருவாக்கியது, மற்றும் அது மைக்ரோசாப்ட் டிஒஎஸ்/விண்டோஸ் 1997/1998 (Microsoft DOS/Windows) மற்றும் ப்ளேஸ்டேசன் போன்ற நிறுவனங்கள் /கருவிகளுக்காக வெளியானது. இந்த விளையாட்டு மூன்று கற்பனையான நகரங்களில் நடைபெறுகிறது, லிபர்ட்டி சிட்டி, சான் அன்றியாஸ் மற்றும் வைஸ் சிட்டி. ஒரு குறைந்த அளவிலான கேம் பாய் கலர் போர்ட்டும் பிறகு அதற்காக வெளியானது. அதற்குப்பின்னர், இரு விரிவாக்க தொகுப்புகள், இரண்டும் "" என்ற பெயரில் வழங்கப்பட்டன. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" வெளியானது வரை, தலைமுறை பற்றிய கோட்பாடு முதலில் இல்லாமல் இருந்தாலும், இரண்டாவதாக வெளியான விரிவாக்கப்பதிப்பான "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ: லண்டன், 1961" ஆனது, முதல் தலைமுறையின் கீழ் வெளியான "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" நெறிமுறையின் கடைசி பதிப்பாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த தொடரின் இரண்டாவது விளையாட்டு, "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ 2" ஆனது, மைக்ரோசாப்ட் விண்டோஸ், ப்ளேஸ்டேசன் மற்றும் ட்ரீம்காஸ்ட் நிறுவனங்களுக்காக மேம்படுத்தியது மற்றும் 1999 ஆண்டில் வெளியானது. தேர்ச்சிபெறாத வருங்காலத்தில் அமைந்த இந்த விளையாட்டு, புதுப்பிக்கப்பட்ட எழுத்து வரைகலைகளுடனும் மேலும் ஒருவாறு வேறுபடும் விளையாட்டு உத்தியுடனும், பல் வேறுபடும் குற்றம் புரியும் அமைப்புகளுடன் விளையாடுபவரின் போக்கின்படி விளையாட்டுக்கள் அமைந்தது. ஒரு குறைந்த அளவிலான கேம் பாய் கலர் போர்ட்டும் பிறகு அதற்காக தயாரிக்கப்பட்டது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரின் மற்ற விளையாட்டுக்கள் போல் அல்லாமல், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ 2" இருநூறு ஆண்டுகள் கொண்ட தலைமுறையைக் குறிக்கும் ஒரே ஒரு விளையாட்டு வெளியீடாக திகழ்ந்தது. ப்ளேஸ்டேசன் கன்சொலுக்கான "T" தரவரிசையை பெற்ற விளையாட்டும் அது ஒன்றே ஆகும். ரோமன் எண்ணுக்கு பதிலாக தலைப்பில் இலக்கம் கொண்ட ஒரே தொடரும் அதுவே ஆகும். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" அக்டோபர் 2001 அன்று வெளியானது மேலும் அது உரிமையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அந்த வேளையில் அந்த விளையாட்டு கதைப்படி லிபர்ட்டி சிட்டியில் நடைபெறுகிறது, அது ஒரு விதத்தில் நியூ யார்க் சிட்டியைஆதாரமாக கொண்டும், அத்துடன் இதர அமெரிக்க நகரங்களின் தனிமங்களை கொண்டதுமாக உருவானது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" முந்தைய தலைப்புகளில் வந்த மேலில் இருந்து கீழ் நோக்கும் கண்ணோட்டம் அல்லாமல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்துடன் கூடிய தொடராக அமைந்தது, (இருந்தாலும், பார்வையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த காமெரா கோணத்திலும் பார்க்க ஒரு வசதியும் இருந்தது). முதல்முறையாக, இந்த பெரிய மணல் பெட்டி விளையாட்டின் வெவ்வேறு இடங்களுக்கு வாகனத்தை செலுத்தும் பிரச்சினை, ஒரு நிரந்தரமான ஜிபிஎஸ் (GPS) முறைகொண்ட சிறு-வரைபடத்தின் (mini-map) பயன்பாட்டால் சரியானது, அம்முறையானது விளையாடுபவர் இருக்கும் இடம் மற்றும் இதர இலக்குகளை பெரிதுபடுத்திக்காட்டும் தன்மை கொண்டது. எழுத்து வரைகலையும் ஒரு புதிய முப்பரிமாண விளையாட்டு இயந்திரத்தை பயன்படுத்தி நவீனமாக்கப்பட்டது. இந்த கேம்ப்லே இயந்திரம் "ஜிடிஏ III இன் (GTA III)" ஆராயவேண்டிய உலகத்தை, ஒரு குறிக்கோளுடன்-கூடிய அணுகுமுறை மூலமாக, பன்மடங்கு விரிவாக்கியது. பன்மைவிளையாடுபவர் முறை கைவிட்டது. (மூன்றாவது கட்சியின் மாதிரிகள் பிற்பாடு வெளியானது, அதன் மூலம் பன்மை விளையாடுபவர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க இயன்றது), ஆனால் "ஜிடிஏ III (GTA III)" குரல்-நடிப்பு மற்றும் கதை கருத்து போன்ற இதர தகுதிகளில் மேம்பாட்டு அடைந்தது (முந்தைய விளையாட்டுகளில், நிலைகளுக்கு இடையே பேச்சுக்குரல் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது, மற்றும் இதர தொடர்புகளுக்காக கீழே துணை தலைப்புகளை திரையின் அடிபாகத்தில் ஓடவைத்து நிகழ்த்த வேண்டியதாக அமைக்கப்பட்டிருந்தது). இதன் வெற்றிக்குப்பிறகு "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III", "Grand Theft Auto: Vice City" 2002 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த விளையாட்டானது வைஸ் சிட்டி என்ற இடத்தில், அடிப்படையாக மியாமி, ப்ளோரிடா என்ற இடத்தை சார்ந்தது, மேலும் 1986 ஆம் ஆண்டில் நிகழ்வதாகவும் உருவாக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்று வந்த கொக்கேன் வணிகத்தை அடிப்படையாக கொண்டு இந்த விளையாட்டு அமைக்கப்பட்டது. "வைஸ் சிட்டி" என்ற விளையாட்டு மூலம் தான் முதல் முறையாக விளையாடுபவருக்கு அனைத்து வகையான பறக்கும் கடல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற பறக்கும் வாகனங்களை அறிமுகப்படுத்திய முதல் விளையாட்டாகும். மேலும் பல வகையான நவீன வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் அதில் அறிமுகமானது. "Grand Theft Auto: San Andreas", இது அக்டோபர் 2004 ஆம் ஆண்டில் வெளியானது, மற்றும் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு உருவானது, கலிபோர்னியாவின் திருட்டு கும்பல்களின் வாழ்க்கைமுறையை சித்தரிக்கிறது மேலும் கிராக் கோக்கையினால் ஏற்பட்ட மருந்துப்பழக்க அடிமைத்தனத்தினால் வந்த கொள்ளை நோய்களின் எழுச்சியை குவிமையப்படுத்துகிறது. இந்த கட்டுக்கதை சான் அன்றியாஸ் என்ற இடத்தை தழுவியதாக அமைந்தது, அடிப்படையாக அது கலிபோர்னியா மற்றும் நேவாடாவை சார்ந்த நகரங்களை மையமாக கொண்டது, குறிப்பாக லாஸ் ஏஞ்செல்ஸ் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களை மையமாக கொண்டது. கதையில் அவை முறையாக லொஸ் சண்டோஸ், சான் பிறரோ, மற்றும் லாஸ் வென்டுராஸ் ஆகும். இந்த விளையாட்டில் லொஸ் சண்டோஸ் மற்றும் சான் பிறரோவுக்கு இடையே மேலும் லொஸ் சண்டோஸ் மற்றும் லாஸ் வென்டுராசுக்கு இடைய நாட்டுப்புறங்கள் இருப்பதாகவும், மேலும் லாஸ் வென்டுராஸ் மற்றும் சான் பிறரோவிக்கு இடையே ஒரு பாலைவனம் இருப்பதாகவும் அமைந்தது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" (அலுவல் முறைசாராது "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ அட்வான்ஸ்" ) என அறியப்படுவது, அதாவது கேம் பாய் அட்வான்ஸ், இதுவும் 2004 ஆம் ஆண்டில் வெளியானது. அசலில், இது "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" இன் மேலிருந்து கீழ் வரையான மாற்றியமைத்த விளையாட்டாக இருந்தாலும், காலப்போக்கில் அதுவே ஒரு அசல் விளையாட்டாக உருவெடுத்தது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" மற்றும் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ 2" வின் கேம் பாய் கலர் போர்ட்டுகள் போல் அல்லாமல், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் நிறைந்ததாக பொதுவாக இவ்வகை "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரில் காணப்படுகின்றன. இந்த விளையாட்டிற்கு ஈஎஸ்ஆர்பி (ESRB) யில் இருந்து "ம"(M) தரக்குறிப்பு படிநிலை கிடைத்தது. இந்த விளையாட்டை டிஜிட்டல் எக்லிப்ஸ் என்ற இதர வெளிப்புற மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தியது. 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், ராக்ஸ்டார் ப்ளேஸ்டேசன் போர்டபிளுக்காக, ராக்ஸ்டார் லீட்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கிய இரு விளையாட்டுக்களை வெளியிட்டது "Grand Theft Auto: Liberty City Stories" மற்றும் இது "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" க்கு முந்தைய பாகமாக 1998 ஆம் ஆண்டின் லிபர்ட்டி சிட்டியை ஆதாரமாக கொண்டு அமைந்ததாகும். 6 ஜூன் 2006 அன்று இதற்காக ராக்ஸ்டார் நிறுவனம் ஒரு ப்ளேஸ்டேசன் 2 போர்டை வெளியிட்டது. 31 அக்டோபர் 2006 அன்று ப்ளேஸ்டேசன் போர்டபிளுக்காக "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ:வைஸ் சிட்டி " வெளியானது. "Grand Theft Auto: Vice City Stories" மேலும் அது வைஸ் சிட்டி 1984 நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு, இரு வருடங்கள் முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளை சித்திரிப்பதாகும். இதற்காக 6 மார்ச் 2007 அன்று ஒரு ப்ளேஸ்டேசன் 2 போர்ட் அடங்கிய விளையாட்டு வெளியானது. இது மூன்றாவது தலைமுறை தொடரின் கடைசி தவணை முறையை குறிப்பதாகும், மற்றும் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" நெறிமுறையின் இறுதி விளையாட்டு. மூன்றாம் தலை முறையின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ "விளையாட்டுகளின்" காலவரிசை முறை பட்டியல்:(வெளியான. தேதிகளுடன் சம்பந்தப்படாதது) ஆறு மாத தாமதத்திற்குப்பிறகு, "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" 29 ஏப்ரல் 2008 அன்று வெளியானது. ஒரே நேரத்தில் சோனி மற்றும் மைக்ரோசொப்ட் இரு நிறுவனங்களின் முனையங்களுக்காக இதுவே முதல் முறையாக சேர்ந்து வெளியிட்ட "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" விளையாட்டு ஆகும். ஆகஸ்ட் 2008 ஆம் ஆண்டில், ராக்ஸ்டார் கணினி பயன்படுத்துவோருக்காக "ஜிடிஏ IV (GTA IV) வெளியிடப்போவதாக அறிவித்தது." "ஜிடிஏ IV (GTA IV)" பயன்பாட்டுக்கான விளையாட்டு இயந்திரம் ராக்ஸ்டார் அட்வான்ஸ்ட் கேம் எஞ்சின் ஆகும் (ஆர்ஏஜிஈ என்றும் அறியப்படுவது (RAGE)) இது "ரோக்ஸ்டார் கேம்ஸ் ப்ரெசென்ட்ஸ் டேபிள் டென்னிஸ்" மற்றும் தி இயுபோரியா பிசிக்ஸ் என்ஜின் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தியதாகும். இந்த விளையாட்டும் மீண்டும் மாற்றியமைத்த லிபர்ட்டி சிட்டியில் நடைபெறுவதாகும், அது நியூ யார்க் சிட்டியைப் போலவே காணப்படுகிறது, முன்னர் இருந்ததை விட கூடுதலாக இது தெரிகிறது. மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்துடன் ஒரு "உத்திபூர்வ இணைப்பு" வைத்துக் கொண்டதாகவும், அதன் மூலம் விளையாட்டின் உள்ளடக்க நிகழ்வுகளுக்கு அவர்கள் உரிமை கொண்டாடுவதாகவும் அவர்களுடைய எக்ஸ்பாக்ஸ் லைவ் சேவைகளைப்பற்றிய X06 நிகழ்ச்சியில் தெரிவித்தனர். இந்த உள்ளடக்கம் "Grand Theft Auto IV: The Lost and Damned" 17 பிப்ரவரி 2009 அன்று வெளியானது மேலும் அது குறிப்பாக எக்ஸ்பாக்ஸ் 360 உரிமையாளர்களுக்கு அவர்களுடைய வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு வழங்கியதாக கூறப்பட்டது. இந்த விரிவாக்கத்தில் புதிய மூலகங்களும் சேர்க்கப்பட்டு மேலும் ஜோன்னி க்லேபித்ஸ், "தி லோஸ்ட்" மோட்டார் சைக்கிள் கும்பலின் துணைத்தலைவரை மையமாக் கொண்டது ஆகும். இத்தொடரின் இரண்டாவது "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" பதிவிறக்கம் செய்யத்தகுந்த உள்ளடக்கம் "Grand Theft Auto: The Ballad of Gay Tony" என அழைக்கப் பெற்றது மேலும் அக்டோபர் 29, 2009 அன்று வெளியானது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ: எபிசோட்ஸ் ப்ரம் லிபர்ட்டி சிட்டி" என்பது எக்ஸ்பாக்ஸ் 360 கன்சொலுக்காக வெளியான ஒரு தொகுப்பாகும் மேலும் அதே வேளையில் "தி பல்லட் ஓப் கே டோனியும்" வெளியானது. அதில் "தி லோஸ்ட் அண்ட் டாம்ன்ட்" மற்றும் "தி பல்லட் ஓப் கே டோனி" ஒரே தட்டில் அடங்கும் மேலும் அதற்கு "ஜிடிஏ IV" இன் அசல் தட்டு தேவைப்படாது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" விடியோ ஆட்டங்களில் முதல்முறையாக வலைத்தளத்தில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டே விளையாட்டில் விருப்பம் கொண்டவர்கள் பலர் ஆட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய ஒரே ஒரு விடியோ ஆட்டமாகும். இது போன்ற மிகையான ஆட்டங்களில், ஒரு விருப்பமைவு செய்த பாத்திரம் விளையாட்டில் விளையாட பயன்படுத்தப்பட்டது, இப்படி விளையாட்டில் சம்பாதித்த பணத்தை அடுத்த உயர் மட்டத்திற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும், மேலும் உயர்ந்த மட்டங்களில் மேலும் உயர்ந்த வகையான விருப்பமைவு செயல்பாடுகள் கிடைக்கப்பெறும். ப்ளேஸ்டேசன் 3 அல்லது எக்ஸ்பாக்ஸ் 360 கன்சோல் அமைப்புகளில் திரையை பிரிக்கவோ அல்லது (LAN) வசதியுடன் பல ஆட்டக்காரர்கள் ஆடுவதற்கோ இயலாது ஆனால் தனியாள் கணினி அமைப்பில் (LAN) வசதியுடன் பல ஆட்டக்காரர்கள் கலந்துகொள்ளலாம். 16 நபர்கள் (32 தனியாள் கணினியில்) வரை சேர்ந்து விளையாடலாம், மேலும் எடுத்துக்காட்டாக மரணப்போட்டி, போலீசும் திருடர்களும், ஓட்டப்பந்தயங்கள், பேரம் முறித்தல், மற்றும் குற்றமிழைப்பணிகள் போன்ற விளையாட்டுக்களில் கலந்து கொள்ளலாம். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ: சைனாடவுன் வார்ஸ்" என்பது முதன்முதலாக நின்டெண்டோ DS கன்சோலை பயன்படுத்த இயலும் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" விளையாட்டாகும் மேலும் அது E3 நின்டெண்டோ பிரஸ் கூட்டத்தில் ஜூலை 15, 2008 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டம் பல புதிய அம்சங்கள் கொண்டது, எடுத்துக்காட்டாக டச் ஸ்க்ரீன் மினி-கேம்ஸ்.(திரை ஸ்பரிச இயக்க சிறு ஆட்டங்கள்) இந்த விளையாட்டு 17 மார்ச் 2009 அன்று வடக்கு அமெரிக்காவிலும் மற்றும் 20 மார்ச் 2009 அன்று ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியானது. PEGI மற்றும் BBFC போன்ற முறையே ஐரோப்பிய மற்றும் ஐக்கிய பேரரசு நாடுகளின் தர நிர்ணய அமைப்புகள் இந்த ஆட்டத்திற்கு 18+ மதிப்பெண்களும் மற்றும் வடக்கு அமெரிக்காவை சார்ந்த ESRB அமைப்பு இதற்கு "M" குறியீடும் நல்கியுள்ளது. இதற்கான ஒரு ப்ளேஸ்டேசன் போர்டபிள் PSP தொகுப்பும் பிறகு 22 ஜூன் 2009 அன்று அறிவித்தது மேலும் அது வடக்கு அமெரிக்காவில் 20 அக்டோபர் 2009 அன்று வெளியானது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனர், டான் ஹௌசெர் இதற்கிடையில் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரின் அடுத்த ஆட்டம் விரைவில் வெளியிட இருப்பதாகவும், அதை மேம்படுத்தும் குழு அதற்கான இடம் மற்றும் கதை அம்சங்களை ஏற்கனவே தெரிவு செய்துவிட்டனர் என்றும் அறிவித்தார், ஆனால் அது எந்த கன்சோலுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. கால வரிசைப்படி வெளியான நான்காம் தலைமுறை கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ விளையாட்டுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: † ஒவ்வொரு விளையாட்டின் தலைப்பும் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" என்ற தலைப்புடன் தொடங்கப்படுவது முக்கியமாகும் பச்சை நிறத்தில் உள்ள விளையாட்டுக்கள் ஒருபுதிய தலைமுறையை சார்ந்தது, மற்றும் மஞ்சள் வண்ணத்தில் பின் தொடரும் விளையாட்டுக்கள் யாவும் அதே தலைமுறையை கொண்ட பச்சை வண்ணத்தை சார்ந்தது. இந்த தொடர் எதிர்மறை விமர்சனங்களுக்கு அதிகமாக ஆளாகியிருக்கிறது. முன்னாள் வக்கீலான ஜாக் தோம்ப்சன் கொலைக் குற்றத்திக்கு ஆளான பல குடும்பங்களுக்காக வாதாடும் போது அக்குடும்பத்தினரின் பிரியமான நபர்களின் இழப்பிற்கு "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரே காரணம் என்றும் மேலும் அதற்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று பல முறை முயற்சி செய்தார். இது போன்ற வழக்குகளில் அவருடைய நடத்தைக்காக, 2008 ஆம் ஆண்டில் தோம்ப்சன் வக்கீல் தொழிலில் இருந்து நீக்கப்பெற்றார் மேலும் அவர் மீது $43,000 க்கும் மிகையாக ப்ளோரிடா பார் அசோசியேஷன் அபராதமும் விதித்தது.]] 20 அக்டோபர் 2003 அன்று, ஆரோன் ஹமேல் மற்றும் கிம்பெர்லி பேடே என்ற இரு இளம் வயதினர்களை, விடலைப் பருவத்தினரான வில்லியம் மற்றும் ஜோஷ் புக்க்நேர் என்பவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள் (மேலும் புலன் ஆய்வு செய்பவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் அவர்கள் இவ்வாறு செய்ததற்கு "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" தூண்டியதாக கூறியுள்ளனர்), இதை கேட்டு முந்தையவர்களின் குடும்பத்தினர் பதிப்பாளர்களான ராக்ஸ்டார் கேம்ஸ், டேக்-டூ இன்டெர்ஆக்டிவ், சில்லறை விற்பனையாளர் வால்-மார்ட், மற்றும் ப்ளேஸ்டேசன் 2 தயாரிப்பாளரான சோனி கம்ப்யூட்டர் என்டர்டைன்மென்ட் அமெரிக்கா நிறுவனங்களுக்கு எதிராக US$246 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ராக்ஸ்டார் மற்றும் அதன் நிறுவனரான, டேக்-டூ, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எதிர்வழக்கு தொடர்ந்தனர், அவர்கள் அமெரிக்க மாநில நீதி மன்றத்தில் 29 அக்டோபர் 2003 அன்று கூறியதாவது "யோசனைகள் மற்றும் நோக்கங்கள் மற்றும் குறிப்பாக புக்கநேர் மேலுள்ள 'கருதற்பாடுடைய உள்ளத்தின் பாதிப்புகள்' யாவும் பேச்சு சுதந்திரத்தின் கீழ் செய்த முதல் மாற்றங்கள் மூலமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்கள்." மரணம் அடைந்த குடும்பத்தினரின் வக்கீலான, ஜாக் தோம்ப்சன், அதை ஏற்க மறுத்தார், ஆனால் இந்த வழக்கை டென்னஸீ மாநிலத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாதாடுவதற்காக இடமாற்றம் செய்வதற்கு முயன்றும் இயலாமல் போய்விட்டது. இரு நாட்களுக்குப்பிறகு, வாதிகள் இவ்வழக்கை தன்னிச்சையாக திரும்பிப்பெறுவதாக கூறியதால், இந்த வழக்கு முடிவுற்றதாக அறிவித்தது. பெப்ரவரி 2005 அன்று, "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகித்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்குதொடுக்கப்பட்டது, அதில் இந்த விளையாட்டுகள் காரணமாக ஒரு விடலைப்பருவத்தினன் அலபாமா காவல் நிலையத்தை சார்ந்த மூன்று போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்றதாக கூறியது. 17 வயதான தேவின் மூரே ஒரு திருட்டுப்போன வாகனத்தைப்பற்றி தகவல் அறிந்துகொள்ள கேள்விகளை கேட்பதற்கு, அலபாமாவை சார்ந்த போலீசார் அவனை ஜூன் 2003 அன்று அழைத்து சென்றபோது, அந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது மூரே ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியை பிடுங்கி அவனை சுட்டுக்கொன்றான், மேலும் அவனுடன் இன்னொரு போலீஸ் அலுவலரையும் பணி புரிபவரையும் சுட்டுவிட்டு, அங்கிருந்து ஒரு போலீஸ்காரிலேயே தப்பித்துச்சென்றான். மூரீன் வக்கீலான, ஜாக் தோம்ப்சன், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோவின் இயல்பான வரைப்பட விளக்கங்கள் காரணமாகவே, மேலும் அவன் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பான் — அதன் காரணமாகத்தான் அவன் கொலை செய்ய துணிந்தான் என்று கூறினார், மேலும் மூரின் குடும்பத்தினர் அதற்கு ஒப்புதல் அளித்தார்கள். " இந்த பேரழிவை ஈடு செய்யுமாறு ஜாஸ்பர், அலபாமாவில் உள்ள கேம்ஸ்டோப் மற்றும் வால் மார்ட் நிறுவனங்களின் கிளைகள், இந்த கடைகளில் இருந்தே ஜிடிஏ III மற்றும் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி "முறையாக வாங்கப்பட்டன, மேலும் இந்த விளையாட்டின் பதிப்பாளரான டேக் டூ இன்டெர்ஆக்டிவ் மற்றும் ப்ளேஸ்டேசன் 2 தயாரிப்பாளர்களான சோனி கம்ப்யூட்டர் என்டர்டைன்மென்ட் நிறுவனங்களில் இருந்து நட்ட ஈடு " கேட்டு வழக்கு தொடரப் பட்டுள்ளது." " "தற்போது இந்த வழக்கை எந்த நீதிபதி மூருக்கு தூக்கு தண்டனை வழங்கினாரோ, அவரே விசாரணை செய்து வருகிறார்." மே 2005 ஆம் ஆண்டில், தோம்ப்சன் "க்லென் பெக்" அளித்துவரும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் அதாவது சிஎன்என் (CNN) நின் ஹெட்லைன் நியூஸ் இல் காட்சி அளித்தார். தோம்ப்சன் தேவின் மூரேவைப் பற்றி குறிப்பிட்டார் பின்னர் மேலும் சொன்னார், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" ஐ பொறுத்தவரை, மற்றும் "Grand Theft Auto: Vice City" "என் மனதில் எவ்வகையான ஐயமும் இல்லை [...] தேவின் மூர் அவனுடைய போலீசை சுட்டுக்கொல்லும் நிகழ்வு அடங்கிய விளையாட்டு போலி உருவாக்கியில் பெற்ற பயிற்சி காரணமாகவே அவன் மூன்று போலீஸ்காரர்களை பாயேட், அலபாமாவில் சுட்டுக்கொன்றான், இப்போது அவர்கள் இறந்து மண்ணோடு கலந்து விட்டார்கள், இல்லாவிட்டால் அவன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் டேக்-டூ, சோனி, வால்-மார்ட், மற்றும் கேம்ஸ்டாப் மீது அவர்கள் தேவின் மூரேக்கு கொன்று குவிப்பதற்கான பயிற்சி அளித்ததற்கு வழக்கு தொடர உள்ளோம். அவன் வன்முறையில் இதுவரை ஈடுபட்டதற்கான வரலாறே இல்லை. ஒரு குற்றத்திலும் பதிவு ஆகவில்லை" செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில், தோம்ப்சன் இன்னுமொரு வழக்கை கொண்டுவந்தார், கோடி போசி என்பவன் இந்த விளையாட்டை கண்மூடித்தனமாக விளையாடி வந்ததாகவும், அதன் தாக்கம் காரணமாக அவன் அவனது தந்தை தேல்பர்ட் பால் போசி, வளர்ப்பு அம்மாவான திர்யோன் சச்மிட், மற்றும் வளர்ப்பு சகோதரியான மாறிலி சச்மிட் என்பவர்களை அல்புக்யுஎர்க்யே, நியூ மெக்ஸிகோ வில் உள்ள பண்ணையில் கொன்றான். பாதித்த குடும்பங்கள் கேட்டுக்கொண்டபடி வழக்கு பதிவானது. வழக்கு விசாரணை நடக்கும் போது, போசெயின் தரப்பினர்கள் அவனை அவன் அப்பா மிகவும் அடித்தார் என்றும் மற்றும் அவன் வளர்ப்பு அம்மா அவனை துன்புறுத்தினாள் என்றும் கூறினார்கள். போசி அப்போது கொலை நடந்த சமயத்தில் சோளோப்ட் என்ற மருந்தையும் உட்கொண்டு வந்தார். அவன் அப்படி அந்த "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ:வைஸ் சிட்டி" என்ற விளையாட்டில் கண்மூடித்தனமாக இருந்திராவிட்டால், இப்படி ஒரு சம்பவம் நடந்தே இருக்காது என்று வாதாடினார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக கோடி போசி, ராக்ஸ்டார் கேம்ஸ், டேக்-டூ இன்டெர்ஆக்டிவ், மற்றும் சோனி. நட்ட ஈடாக US$600 மில்லியன் கோரப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், ஆறு வயதான ஒரு சிறுவன், தனக்கு கார் ஓட்ட இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொண்டதாக கூறியவன், வீட்டுக்காரை பத்து மைல்கள் தூரம் வரை ஒட்டிசென்றபிறகு விபத்துக்குள்ளானான். கின்னஸ் உலக சாதனைகள் 2009 மற்றும் 2008 கேமேர்ஸ் எடிசன் (பதிப்பு) படி, வரலாற்றில் மிகவும் சர்ச்சைகள் ஏற்படுத்திய விளையாட்டு இது ஒன்றே ஆகும், 4,000 த்துக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் அதைப்பற்றி வெளிவந்துள்ளன, அவற்றில் வன்முறையை தூண்டுவதாகவும், விளையாடுபவர்களின் மனதை கெடுப்பதாகவும், மற்றும் நிஜ வாழ்க்கையில் உண்மையான குற்றங்களுக்கு வித்திடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" க்குப்பின் வெளிவந்த ஒவ்வொரு விளையாட்டு கன்சோலிலும் (தேற்று) பல விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆறாவது தலைமுறை விடியோ விளையாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கன்சோல் தவணை முறைகள் இருந்தன. இந்த தலைமுறையில் வெளிவந்த விளையாட்டுக்களில் எழுந்த சர்ச்சைகள் மிகையான வன்முறை, வெறுப்பு ஏற்பட்டு குற்றங்களை புரிவது, மேலும் வேண்டும் என்றே உடலுறவு நிகழ்வுகளில் நாட்டம் கொள்ளவைப்பது. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" வெளிவந்தபிறகு கருத்து வேறுபாடுகள் மற்றும் முறையீடுகள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. இந்த விளையாட்டை மக்களிடையே கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்புகளுடன் உள்ளூர் புத்தகப்பதிப்புகளில் பரபரப்பான கதைகளை கட்டிவிட்ட விளம்பரப்பிரியர் மாக்ஸ் கிளிப்போர்ட்டுக்கு இதில் ஒரு பங்கு உண்டு. பரம்பரையாக வரும் "கதாநாயகன்" வேடங்களுக்கு எதிராக சட்டத்திற்கு அப்பாற்பட்ட சட்ட விரோதமான செயல்பாடுகளின் மீது அதிக கவனம் செலுத்தியதும் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் முக்கிய கதாபாத்திரம் வெறும் தற்காலிகமான பின்விளைவுகள் கொண்ட செயல்பாடுகளைச் செய்யும்போது கூட, வன்முறையில் ஈடுபட்டு, பல விதமான குற்றங்கள் புரிவது, அதிலும் போலீஸ்காரர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களை காரணமில்லாமல் கொலைசெய்வது சகஜமாக காணப்படுகிறது. இது போன்ற வன்முறைகளை தூண்டிவிடும் விளையாட்டுக்களை எதிப்பவர், எடுத்துக்காட்டாக ஹில்லாரி க்ளிண்டன் மற்றும் ஜூலியா போஸ்மான் போன்றோர், வாதாடுவது என்ன என்றால் போகப்போக விளையாடுபவர்கள் இது போன்றே நடக்க தொடங்கி விடுவார்கள் என்பதே, அதே வேளையில் இவற்றை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் சொல்வது என்ன என்றால் இது அவர்களுக்கு ஒரு உணர்ச்சி வயப்படவைக்கும் வெளிப்பாடாகும் என்றும் மேலும் நிஜ வாழ்க்கையிலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு மிகவும் தீவிரமான விளைவுகள் ஏற்பட வழி வகுக்கும் என்பதாகும். மகளிருக்கு எதிராக காணப்படும் வன்முறைகளுடன் மற்றும் அவர்களை சுரண்டி எடுக்கும் மனப்பாங்கும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இது அப்படி தூண்டுவதாக காணப்படவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரமான கிளாட் என்பவர் தேவைப்பட்டால், விலைமாதர்களின் சேவைகளை நாடலாம் மேலும் அவர்களிடமே திருடவோ அல்லது விளையாடுபவர் விரும்பினால் அவர்களை கொன்று குவிக்கவோ செய்யலாம். இந்த செயல்முறையானது அதற்குப்பிறகு வெளியான ஒவ்வொரு விளையாட்டு பதிப்பிலும் புகுத்தப்பட்டுள்ளது மேலும் அவை "IV" ஆவது பதிப்பில் வரைகலையின் உதவியுடன் மேலும் வன்முறைகளில் ஈடுபடுவதாக காணப்படுகிறது. இந்த தொடரின் ஆறாவது விளையாட்டு பதிப்பும், "Grand Theft Auto: Vice City", சர்ச்சைக்கு உள்ளாகியது. ஒரு குறிப்பிட்ட நோக்கம், அதில் விளையாடுபவர் ஹைத்தி மற்றும் க்யூபன் குடிமக்கள் ஆகிய இரு கும்பல்களுக்கிடையே போராட்டத்தை தூண்ட வைப்பது, இது மிகவும் சர்ச்சைக்கு வித்திட்டது. ஹைத்திய மற்றும் க்யுபாவை சார்ந்த அவதூறுகளை எதிர்க்கின்ற குழுக்கள் கடுமையாக இந்த விளையாட்டை விமர்சனம் செய்தனர். ஜீன்-ராபர்ட் லபோர்ச்ச்யூன் என்ற ஹைத்திய அமெரிக்க கிராஸ்ரூட்ஸ் கோயலிசன் அமைப்பு சொன்னது என்னவென்றால் "ஒரு விளையாட்டானது ஒரு மனிதனின் வாழ்க்கையை உறிஞ்சும் படி வடிவமைக்கக்கூடாது, அது ஒரு பழங்குடியினரை அழிக்கும் அளவிற்கு வடிவமைக்கக்கூடாது," இது போன்ற மற்றும் இதர காட்சியாமைப்புக்களுக்காக, மேலும் விளையாட்டில் விளையாடுபவர் மற்றும் ஹைத்தி கும்பல்களுக்கிடையே நடந்த வாக்குவாதம் சூடேறியபோது, எதிர்ப்பை தூண்டும் வசனங்ககளான "ஹைதிய முட்டாள்களை கொன்று குவியுங்கள்" போன்றவை அடங்கியது வருந்தத்தக்கதாகும். ஹைத்திய அமெரிக்க கிராஸ்ரூட்ஸ் கோயலிசன் என்ற குழுவினர் வழக்கு தொடருவதாக அறிவித்ததன் விளைவாக, ராக்ஸ்டார் நிறுவனம் இந்த வசனத்தில் இருந்து "ஹைத்திய" என்ற சொல்லை, இந்த விளையாட்டின் துணை தலைப்புகளில் இருந்து நீக்கி விட்டனர். "சான் அன்றியாஸ்" என்ற விளையாட்டில் பாலுணர்வை தூண்டும் ஒரு கில்மிஷம் இருந்தது, அது விளையாட்டில் இருந்து துண்டித்து நீக்கப்பட்டது, ஆனால் அது விளையாட்டின் ரகசிய நிரற்றொடர்களில் தொடர்ந்து இருந்து வந்தது, மேலும் அது விளையாட்டின் கன்சோல் (முனையங்கள்) மற்றும் விண்டோஸ் பதிப்புகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "ஹாட் காபி மோட்" என்று ஒலியுடன் கூடிய அந்த சிறு விளையாட்டு, விளையாடுபவர்களை அவர்களுடைய விளையாட்டுத் தோழிகளுடன் உறவுகொள்ள அனுமதித்தது. அதன் வெளியீட்டிற்குப்பிறகு,"Grand Theft Auto: San Andreas" , மிதவாதிகள் எப்படியோ விளையாட்டில் உள்ள பயன்படுத்தப்படாத நிரற்றொடர்களை கண்டுபிடித்தார்கள் மேலும் அலுவல்முறை சாரா வகையில் அதன் திட்டுகளை விண்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பகுப்புகளுக்கு எக்ஸ்பாக்சுடன் (அத்துடன் கூடிய ஒரு நவீன மோட்சிப்புடன்) {துண்டு பதிப்புகளை} மற்றும் ப்ளேஸ்டேசன் 2 பதிப்புடன் செயல்பாட்டை மீண்டும் காண்பிக்கும் நிரற்றொடர்களை கொண்டு விளையாடுபவர்களை இந்த கில்மிஷங்களில் ஈடுபடவைக்கும் காட்சிகள் கண்டறியப்பட்டன. ("ஹாட் காபி" என்ற சங்கேத முறையில் (இடக்கரடக்கல் மங்கலம் கொண்ட பயன்பாடு) விளையாட்டில் பாலுணர்வு சம்பந்தப்பட்ட காட்சிகள்). இந்த விளையாட்டின் இறுதி பதிப்பில் இது போன்ற கில்மிஷங்கள் விளையாடும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படவில்லை ஆனால் விளையாட்டின் சங்கேத முறைகளில் ஒரு பகுதி அப்படியே இருக்கும்படி விட்டுவைக்கப்பட்டது. இதனால் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற செயல்பாட்டை தரப்படுத்தும் வகையில் (Adults Only) ஈஎஸ்ஆர்பி (ESRB) என்ற அமைப்புடன் வழி வகை செய்வதற்கான நடவடிக்கைகள் இது போன்ற பதிப்புகளுக்காக ஏற்பட்டது. டேக்-டூ இன்டெர்ஆக்டிவ் அமைப்பினை இந்த வயது முதிர்ந்தவர்களுக்கான என்ற தரக்கட்டுப்பாட்டை (M rating) ஒழுங்குமுறைப்படுத்தி திரும்பவும் வெளியிடுவதற்கு வலுக்கட்டாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்காரணங்களால், "ஹாட் காபி" சங்கேத முறை பயன்பாட்டிற்காக டேக் டூ அமைப்பிற்கு எதிராக ஒரு வழக்கும் தொடர்ந்தார்கள். ஆறாவது தலைமுறையின் அமைப்பினைப்போலவே விளையாட்டுத்தொடர் மேலும் தொடர்ந்ததால், அப்போது ஏற்பட்டதைப் போலவே, ஏழாவது தலைமுறை விளையாட்டுக்களும், அவற்றை சுற்றியுள்ள பல விதமான சர்ச்சைகளுக்கு பேர்போனது. இந்த விளையாட்டை சுற்றியுள்ள ஒரு சர்ச்சையானது, குடித்துக்கொண்டும் மற்றும் வாகனம் ஒட்டிக்கொண்டும் போவதற்கு இந்த புதிய பதிப்பில் இடமளித்ததால், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதற்கு தாய்க்குலம் எழுப்பிய எதிர்ப்புக்குரல் (Mothers Against Drunk Driving) (MADD) ஆகும். MADD அமைப்பானது, இது போன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் (ஈஎஸ்ஆர்பி போன்ற) (ESRB) அமைப்பிடம் விளையாட்டின் தரத்தை "M" குறியீடு பதினேழு வயதுக்குட்பட்டவர்களைக் குறிப்பதில் இருந்து "AO," குறியீட்டுக்கு, அதாவதுவயது வந்தவர்களுக்கு மட்டும் உகந்தது எனப்படுவது, மாற்றுவதற்கு கோரிக்கை அளித்தார்கள், ஏன் என்றால், அவர்கள், பதினேழு வயது வந்த சிறுவர்களுக்குக்கூட, அது ஒவ்வாதது என்று நினைத்தார்கள், எந்த விதத்திலும், வகையிலும், உருவிலும், ஏன் கதையில் வருவதாக இருந்தும் ஒருவருக்கும் தொந்தரவு விளைவிக்க இயலாத வடிவிலும் கூட, சிறுவர்கள் குடிகார ஓட்டுனராக அனுபவம் பெறக்கூடாது என்று அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இதற்கு ராக்ஸ்டார் அடிபணிந்திருந்தால், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" ஆட்டம் இந்த தொடரில் "M" தரவரிசையில் இருந்து அதாவது பதினேழு மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினரில் இருந்து "AO" தரத்திற்கு அதாவது பதினெட்டு மற்றும் அதற்கு மேல் வயதினருக்கு, தரம் குறைக்கப்பட்ட இரண்டாவது தொடராக இருந்து இருக்கும். கடைசி விளையாட்டில், குடித்து வாகனம் ஒட்டுதல் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வாகும், ஆனால் முதல் மாந்தர் நிகோ பெல்லிக் (Niko Bellic) சத்தமாக (மற்றும் குடிகாரக்குரலில்) இது போல் செய்வது ஒரு "தீய யோசனையாகவும்" மற்றும் அதை அவன் "புரிந்து கொள்ள வேண்டும்" என்று ஒரு விதமான குற்ற உணர்வுடன் கூறுவது, அது போல் அவன் திருடும்போதோ அல்லது கொலைசெய்யும் போதோ, உணர்வதாக தெரியவில்லை. "" என்கிற விரிவாக்கப்பதிப்பின் உள்ளடத்திற்கு எதிராக அமெரிக்க பெற்றோர்களின் குழுவான இயல்பறிவு ஊடகம் என்னும் அமைப்பு, பொது மக்கள் சார்பாக ஒரு எச்சரிக்கையினை விடுத்தது, ஏனெனில் அவர்கள் வெளியிட்ட வெட்டப்பட்ட காட்சி அமைப்புகள் ஒன்றில் ஒரு காட்சி முழுமையான முன்பக்க நிர்வாண காட்சி கொண்டாதாக இருந்தது. அவர்கள் கூறியதாவது, இந்த விளையாட்டு முந்தைய விளையாட்டுப்பதிப்புகளை விட மேலும் மோசமான சர்ச்சை கிளப்பக்கூடியதாக உள்ளது, ஏன் என்றால் அதில் "முழுமையான முன்பக்க ஆண் நிர்வாண காட்சி" அமைந்திருக்கிறது என்றனர். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" போன்ற விடியோ விளையாட்டுக்கள் வெளியிடுவதை சில விமர்சகர்கள் விடியோ ஆட்டங்களின் வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நிகழ்ச்சியாக கருதுகின்றனர், எடுத்துக்காட்டாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிட்ட "டூம் (Doom)" என்ற நிகழ்வைப்போல. அதற்குப்பின் வெளிவந்த அதைப்போன்ற சூத்திர அடிப்படைகள் கொண்ட வாகனங்கள் ஓட்டுவது மற்றும் சுடுவது போன்ற கேம்ஸ் (விளையாட்டுகள்) அடங்கிய விடியோ விளையாட்டுகள் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோவின் முளைவகை (clones) என அறியப்படுகின்றன. சில விளையாட்டு பதிப்புகள் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ III" வெளியீட்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியிட்டிருந்தாலும், சில விமர்சகர்கள் இது போன்ற முத்திரை சீட்டினை "ஓட்டுனர்" தொடர்களுக்கும் அளிக்க முன்வந்தனர். கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ முளைவகைகள் முப்பரிமாண (3D) நடிப்பு-சாகசங்கள் நிறைந்த விளையாட்டாக அமைந்திருக்கும், அவற்றை விளையாடுபவர்களுக்கு அதன் பரந்து விரிந்த உலகத்தை ஆராயும் பொழுது, யார் வேண்டுமானாலும் எந்த விதமான வாகனத்தையும் எடுத்து ஓட்டலாம், எந்த கருவியையும் அல்லது ஆயுதத்தையும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற சுதந்திரம் விளையாடுபவர்களுக்கு வழங்கி இருந்தது கேள்விக்குறி ஆனது.. இது போன்ற விளையாட்டுக்களில் வன்முறை மற்றும் குற்றம் தொடர்புடைய நிகழ்வுகள் மிகையாக அடங்கியிருப்பதை காணலாம். "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோவின் முளைவகைகளாக" காணப்படும் சில விளையாட்டுக்கள் "சைன்ட்ஸ் ரோ (Saints Row series) தொடர்" , "", "தி காட்பாதர் II (The Godfather II)", "தி கேட்வே (The Getaway)" , "The Getaway: Black Monday", "கிராக்டௌன் (Crackdown)", "Mafia: The City of Lost Heaven" , "மாபியா II(Mafia II)" , "வீல்மான் (Wheelman)" , "True Crime: Streets of LA" , "True Crime: New York City" , "Scarface: The World Is Yours" , "தி சிம்ப்சன்ஸ் ஹிட் அண்ட் ரன்", மற்றும் "ஜஸ்ட் காஸ் (Just Cause)" போன்றவை "ஜிடிஏ (GTA)" பாணியை பின்பற்றுவனவற்றுள் அடங்கும். 2001 ஆம் ஆண்டில் இருந்தே "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" தொடர் வணிகரீதியிலும் மற்றும் விமரிசனங்கள் மூலமாகவும், மகத்தான வெற்றியை பெற்றுவருகிறது. அதற்கு அனைத்து அல்லது மிகையான விளையாட்டுக்களில், நிறைந்த மதிப்பெண்கள் மற்றும் சிறந்த பாராட்டுக்கள் கிடைத்த வண்ணம் உள்ளன மேலும் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட பிரதிகள், மார்ச் 2008, வரை விற்கப்பட்டுள்ளது. "தி டைம்ஸ் ஆன்லைன்" "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" , அண்மையில் வெளியான கனசோலின் (முனையம்) தவணைப்பதிப்பு, ஐக்கிய பேரரசில் மட்டும் முதல் நாள் விற்பனையில் 609,000 க்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டதாக அறிவித்துள்ளது. அதன் முதல் வாரத்தில், "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" சுமாராக 6 மில்லியன் பிரதிகள்வரை உலக அளவில் விற்கப்பட்டது மேலும் அதன் மூலம் $500 மில்லியனுக்கும் மேல் வருவாய் ஈட்டியது. இந்த தொடர் பல சாதனைகளை முறியடித்துள்ளது, அதனால் கின்னஸ் உலக சாதனைகள் நிறுவனம் இத்தொடருக்கு "கேமேர்ஸ் எடிசன் 2008" பதிப்பில் பத்து விருதுகள் அளித்து கௌரவித்துள்ளது. அவற்றில் ஒரு விடியோ ஆட்டத்திற்கான தொடரில் மிகவும் அதிகமான விருந்தாளி நட்ச்சத்திரங்கள் நடித்தது, ஒருமித்து குரல்கொடுத்த மிகப்பெரிய படிவம் கொண்ட வீடியோ விளையாட்டுத்தொடர், ("ஜி டி ஏ (GTA): சான் அன்றியாஸ்)" ), மிகப்பெரிய ஒலிப்பதிவுத்தடம் ("ஜி டி ஏ: சான் அன்றியாஸ்)," ) மற்றும் அனைத்து நேரங்களிலும் மிகவும் வெற்றிகரமாக துவக்கம் கண்டது ("ஜி டி ஏ IV)" போன்றவை அடங்கும். மேலும் கின்னஸ் உலக சாதனைகள் அவர்களுடைய மிகவும் உயர்ந்த 50 விளையாட்டு முனையங்களை வெளியிடுவோரின் பட்டியலில், இதுவரை என்றென்றைக்குமாக துவக்கத்திலேயே தாக்கத்தை விளைவிப்பதற்கும் மேலும் தொடர்ந்து மரபுரிமைப் பேறு கொள்வதற்கும் ஆக "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ" விற்கு மூன்றாவது இடத்தை அளித்துள்ளது. † இந்த தொடரில் "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" என்ற பதிப்புக்கு மட்டும் தான் முதல் மற்றும் ஒரே ஒரு முறையான விளையாட்டுக்கான தரத்திற்கு ஐ ஜி என் நிறுவனத்தின் பத்துக்கு பத்து மதிப்பெண் கிடைத்துள்ளது. இது இந்த தொடருக்கு மிகவும் தனிப்பட்டதாகும், ஏன் என்றால் ஐ ஜி என் நிறுவனம் இதுவரை யாருக்கும் பத்துக்கு பத்து அளித்ததில்லை. "கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ IV" க்கு முன்னால் மிகவும் அருகாமையில் ஐ ஜி என் "10" மதிப்பெண்கள் அளித்தது 1999 ஆம் ஆண்டிலாகும், மற்றும் இது "சௌல்காலிபர் (Soulcalibur)" என்ற விளையாட்டிற்காகும். இருந்தாலும், 2008 ஆம் ஆண்டின் பின் பகுதியில், மேலும் இன்னுமொரு விளையாட்டிற்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கிடைத்தது."Metal Gear Solid 4: Guns of the Patriots" . எம். துரைராஜ் எம். துரைராஜ் (பிறப்பு: நவம்பர் 1, 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரும் மலேசியத் தகவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவருமாவார். தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள தெம்மாப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் அப்பாவின் அழைப்பை ஏற்று 18 வயதில் சிங்கப்பூருக்குச் சென்றவர். பின்னர் மலேசியாவில் வசிக்கத் தொடங்கி விட்டார். 1963 ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முதலில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கிய போது, அந்தச் செய்தியைத் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்குண்டு. இவரது 'பாதைகளும் பயணங்களும்' எனும் 600 பக்க அநுபவ நூல் மலேசியாவிலும், தமிழகத்திலும், லண்டன் தமிழ்ச் சங்கத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் வெளியீடு கண்டுள்ளது. அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இருந்தவர். பகல் நிலவு பகல் நிலவு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் முரளி,ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மணிரத்னம் ஆல் இயக்கப்பட்டது. கூகலூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,684 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5894 ஆண்கள், 5790 பெண்கள் ஆவார்கள். கூகலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55.09% ஆகும். கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி. கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம். கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர். விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை (கொங்குத் தமிழ்) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் மஞ்சள், நெல்,கரும்பு,வாழை போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர். ஆல்பிரடு அரசல் வாலேசு ஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் ("Alfred Russel Wallace", 8 சனவரி 1823 - 7 நவம்பர் 1913) இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார். காளிங்கராயன் வாய்க்கால் காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் அவர்களால் 1271ஆம் தொடங்கப்பட்டு 1283ஆம் முடிக்கப்பட்டது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கிமீ). பவானி காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டது. 56 மைல்கள் பயணித்து நொய்யல் ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் இவ்வாய்க்கால் சேர்கிறது. இவ்வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டம் சிறப்பாக பயனடைகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 534 அடியாகும், முடியுமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 412 அடியாகும். இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்திலிருந்து முடியுமிடம் வரையில் 36 மைல்கள்தானெனினும், இயற்கையாய் அமைந்த சிறுசரிவின் முழுப்பயனைப் பெறவேண்டியும் மிகுதியான நிலப்பகுதிகள் பாசனம் பெறவேண்டியும், இதனை வளைவுகளுடன் 56 மைல்கள் ஓடுமாறு செய்தார் காளிங்கராயர். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாய்க்கால் மாசுக்களால் பாதிப்படைந்துள்ளது. 2007-ல் 12 கோடி ரூபாய் செலவில் இதை மேம்படுத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தேசிய வேளாண்மை மற்றும் கிராம்புற அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. 2008ல் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வாய்க்காலில் மாசுவை குறைக்க வாய்க்காலின் வலது கரையில் காங்கிரிட் சுவர் கட்டப்படும் என்றார். இதற்காக 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இந்து நாளிதழில் காளிங்கராயன் வாய்க்காலுக்கு 725 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வந்த கட்டுரை வெண் பொசுபரசு (ஆயுதம்) வெண் பொசுபரசு என்பது தீப்பற்றவைக்கும் ஆயுதம். இது படிக அமைப்பு மாற்றப்பட்ட பொசுபரசு தனிமத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது. இது எறிகணை, குண்டு, கண்ணிவெடி போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டும் போது இலக்குகள் தீப்பற்றி எரிவதுடன் பலத்த சேதத்தையும் விளைவிக்க கூடியது. இவ் ஆயுதம் Convention on Certain Conventional Weapons படி போரில் பொது மக்கள் மீதோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிகளிலோ பயன்படுத்ப்படக்கூடாது என தடைசெய்யப்பட்ட ஆயுதம் ஆகும். இதை இலங்கைப் படைத்துறை ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்வது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் (பாகிஸ்தான்) ஐதராபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அடுத்த பெரிய நகராகும். இது சிந்து ஆற்றின் கரையில் உள்ளது. இது பாகிஸ்தானின் ஆறாவது பெரிய நகரமாகும். 1947 -1955 வரை இந்நகரம் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது. கடற்கரை பள்ளி கடற்கரை பள்ளி அல்லது கடற்கரை மசூதி (kadarkarai Palli or Kadarkarai Masudhi) என அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின் காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான இஸ்லாமிய மசூதி ஆகும். இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதியும், இந்தியாவின் இரண்டாவது மசூதியும் ஆகும். இஸ்லாமியர்களின் இறுதி நபியான முகம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் முதல் கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபூபக்கர் (ரலி) என்பவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஒரு வியாபார குழு 633 ஆம் ஆண்டு சுமார் 224 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முதன்முதலாக காயல்பட்டினம் நகரில் வந்து தங்கியது. முகம்மது கல்ஜி என்பவர் அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று வந்தார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனான அபிராம ராஜா அதிராஜ ராஜா ஜெயவீர ராஜுக்கர் என்பவர் அவர்களை வரவேற்று, அவர்கள் தங்குவதற்க்கும் வழிசெய்தார். பின் அங்கேயே தங்கி வியாபாரத்தில் ஈடுபட்ட அந்தக் குழுவினர், தங்கள் வழிபாட்டுக்காக, ஒரு மசூதியை கட்டினர். இதுவே கடற்கரை பள்ளி என அழைக்கப்படுகின்றது. இது இரண்டாவது கலீபாவான உமர் (ரலி) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மசூதி கட்டப்பட்ட ஆண்டை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், இது தோராயமாக 633 முதல் 640 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மாலிக் பின் தீணார் என்பவரால் கேரள மாநிலம் கொடுங்கலூரில் 612 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, இந்தியாவின் முதல் மசூதியான சேரமான் ஜுமா மசூதிக்கு அடுத்து கட்டப்பட்ட இதுவே இந்தியாவின் இரண்டாவது மசூதி ஆகும். மேலும் இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதி ஆகும். இன்று இந்த மசூதி கோஸ்மாரி தர்கா அருகில் உள்ளது. இதன் பல பகுதிகள் இயற்கை சீற்றங்களினால் அழிந்துவிட்ட நிலையில் எஞ்சிய பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. ஆனால் இங்கு இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் இந்த மசூதியின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறுகின்றன. இதில் முதலாவது கல்வெட்டு, இந்த மசூதிக்கு பாண்டிய மன்னன் நிலம் கொடுத்ததை நினைவு கூறுகின்றது. அடுத்தது அந்நாளில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியாவரான செய்யது அஹமது பின் சஹீது இப்நு முகம்மது கரீம் மதானி என்பவரை பற்றி கூறுகின்றது. சேரமான் ஜுமா மசூதி www.kayalpatnam.com ரேஞ்சர் திட்டம் ரேஞ்சர் திட்டம் ("Ranger program") என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். ரேஞ்சர் விண்கலங்கள் தாம் எடுத்த படிமங்களை பூமிக்கு அனுப்பியவுடன், சந்திரனின் மேற்பரப்பில் மோதுமாறு வடிவமைக்கப்பட்டன. மொத்தம் 9 ரேஞ்சர் விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $170 மில்லியன்கள் ஆகும். ஒவ்வொரு ரேஞ்சர் விண்கலமும் தன்னுடன் ஆறு கமராக்கள் கொண்டு சென்றன. பெர்முடா முக்கோணம் பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி, அங்கே நிறைய வானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர் களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர். நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன. இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர் அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; [சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது. இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன. முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத்தான் குறிப்பிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பின், "ஃபேட்" இதழ் 'நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது. பல வானூர்திகள் மற்றும் கப்பல்கள் தொலைந்து போனதை இஃது எழுதியிருந்தது. பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின் குண்டு வீசும் ஐந்து வானூர்திகள் கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின்போது தொலைந்து போனதும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மறைவுகள் நிகழும் பிரபலமான முக்கோணப் பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரைதான்."அமெரிக்கன் லெஜன்" இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது. "நாங்கள் இப்போது எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை" என்று வானூர்தி ஓட்டி கூறியதாக அச்செய்தி தெரிவித்தது. கப்பற்படை விசாரணைக் குழுவின் அதிகாரிகள் வானூர்திகள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை தான் பிளைட் 19 காணாமல் போன சம்பவத்துடன் அமானுட விஷயங்களை இணைத்து எழுதப்பட்ட முதல் கட்டுரை. ஆனால் வின்சென்ட் காடிஸ் என்கிற மற்றுமொரு ஆசிரியர் 1964 பிப்ரவரியில் "அர்கோசி " இதழில் எழுதும்போது தான், பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை "மரண பெர்முடா முக்கோணம்" (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) என்னும் ஈர்க்கும் தலைப்பின் கீழ் எழுதினார். அடுத்த ஆண்டில் அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்" , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார். ஜான் வாலஸ் ஸ்பென்சர் ("லிம்போ ஆஃப் தி லாஸ்ட்" , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் ("தி பெர்முடா டிரையாங்கிள்" , 1974); ரிச்சார்டு ஒயினர் ("தி டெவில்'ஸ் டிரையாங்கிள்", 1974), ஆகியோரின் மற்ற பல படைப்புகளும் வெளியாயின. எல்லாமே எக்கெர்டினால் கோடிட்டுக் காட்டப்பட்ட அதே அமானுட விஷயங்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டன. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு நூலகரும் "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்டரி: சால்வ்டு" (1975) புத்தக ஆசிரியருமான லாரன்ஸ் டேவிட் குசெ தான் இந்த போக்கினை மறுதலித்தார். குசெவின் ஆய்வு பெர்லிட்ஸ் பதிவுகளுக்கும் ஆரம்ப சம்பவங்களில் பார்த்தவர்கள், இருந்தவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இருந்தான கூற்றுகளுக்கும் இடையில் இருந்த எண்ணற்ற துல்லியமின்மைகளையும், குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. பல சம்பவங்களில் தொடர்புபட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படாமல் போனதை குசெ சுட்டிக் காட்டினார். உலகம் சுற்றும் படகுப்பயணியான டொனால்டு குரோஹர்ஸ்ட் தொலைந்து போன சம்பவத்தை இதற்கொரு உதாரணமாய் காட்டினார். இச்சம்பவத்தை பெர்லிட்ஸ் ஒரு மர்மம் என கூறியிருக்க, இதற்கு மாறான உண்மைக்கு தெளிவான சான்று இருந்தது. மற்றுமொரு உதாரணம், "அட்லாண்டிக்" துறைமுகத்தில் இருந்து தாது-கப்பல் ஒன்று மூன்று நாட்கள் அடையாளமின்றி தொலைந்து போனதாக பெர்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் "பசிபிக்" கடலில் இருந்து அதே பெயரிலான கப்பல் ஒரு துறைமுகத்தில் இருந்து மூன்று நாட்கள் சுவடில்லாமல் தொலைந்திருந்தது. முக்கோணத்தின் மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார். பல சமயங்களில் அவரது ஆராய்ச்சி எளிமையானது. சம்பவம் நடந்த தேதிகளில் வெளியான பொதுவான செய்தித்தாள்களை பார்ப்பார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை போன்ற பொருத்தமான நிகழ்வுகளை, வாகனங்கள் தொலைந்த கதைகளில் குறிப்பிடாதவற்றை கண்டறிவார். குசெ இவ்வாறு முடிவுக்கு வந்தார்: "தி பெர்முடா டிரையாங்கிள்" என்னும் ஜான் சிம்மன்ஸ் தயாரித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்முடா முக்கோண பகுதியில் அசாதாரணமான பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள் மூழ்கினவா என்று கடல் காப்பீடு நிறுவனமான லாயிட்'ஸ் ஆஃப் லண்டன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. லாயிட்'ஸ் ஆப் லண்டன், அங்கு பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்று கண்டறிந்தது. அமெரிக்க கடலோரக் காவல்படையின் பதிவுகள் அவர்களது முடிவை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில், இந்த பகுதியில் வழக்கமாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் காணாமல் போனதாகக் கூறப்படும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகும். கடலோரக் காவல்படையும் அதிகாரப்பூர்வமாக இந்த முக்கோணம் குறித்து பல சந்தேகங்கள் கொண்டுள்ளது. முக்கோணம் குறித்து எழுதும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல சம்பவங்களுக்கு முரண்படுகிற பல ஆவணத் தொகுப்புகளை தங்களின் விசாரணைகள் மூலம் சேகரித்து, வெளியிடுவதாகவும் அது தெரிவிக்கிறது. 1972 ஆம் ஆண்டில் மெக்சிகோ வளைகுடாவில் "வி.ஏ.ஃபாக்" என்னும் கப்பல் வெடித்து மூழ்கிய இத்தகையதொரு சம்பவத்தில், கடலோரக் காவல்படை இந்த சிதறல்களை படம் பிடித்ததோடு பல உடல்களையும் மீட்டது. ஒரு முக்கோணக் கதை ஆசிரியரோ, தனது அறையில் ஒரு காபி கோப்பையுடன் அமர்ந்திருந்த கேப்டன் தவிர மற்றவர்கள் மாயமானதாகக் கூறியிருந்தார். பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் "தி கேஸ் ஆஃப் பெர்முடா டிரையாங்கிள்" என்னும் அத்தியாயத்தில் இது குறித்து மிகவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. "நாங்கள் உண்மையான மூலங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களிடம் போனால், மர்மம் கரைந்து போய் விடுகிறது. விஞ்ஞானம் முக்கோணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் முதலில் இந்த கேள்விகளே உண்மையானதல்ல. ...உலகின் மற்ற எங்கும் போலத்தான் இங்கும் கப்பல்களும் விமானங்களும் செயல்படுகின்றன." எர்னஸ்ட் டேவ்ஸ் மற்றும் பேரி சிங்கர் ஆகிய ஆய்வாளர்கள், மர்மங்களும் அமானுடங்களும் எவ்வளவு பிரபலமானவையாகவும் ஆதாயமளிப்பவையாகவும் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்முடா முக்கோணம் போன்ற தலைப்புகளில் ஏராளமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. அமானுடத்திற்கு ஆதரவான சில விஷயங்கள் பல சமயங்களில் தவறாக வழிநடத்துகின்றன அல்லது துல்லியமற்றவையாக இருக்கின்றன, இருப்பினும் அதன் உற்பத்தியாளர்கள் அதனை தொடர்ந்து சந்தைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது. அதற்கேற்றாற்போல, சந்தையும் முக்கோண மர்மத்தை ஆதரிக்கும் புத்தகங்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கிறது, சந்தேகம் எழுப்பும் நல்ல ஆய்வு விடயங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இறுதியாக, இப்பிராந்தியத்தின் எந்த நிலப்பரப்பில் செல்லும் வாகனங்களும் அல்லது நபர்களும் காணாமல் போனதற்கு எந்த சான்றும் இல்லை. முக்கோணத்திற்குள் அமைந்திருக்கும் ஃப்ரீபோர்ட் நகரம் ஒரு பெரும் கப்பல்துறைமுகத்தையும் வருடத்திற்கு 50,000 விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையத்தையும் கையாள்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக முக்கோணம் குறித்த எழுத்தாளர்கள் ஏராளமான அமானுட கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். புராணவகை தொலைந்த கண்டமான அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம் கூறுகிறது. சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இந்த பகுதி சில வரையறைகளின்படி முக்கோணத்திற்குள் அமைகிறது. ஆவியூடாடும் எட்கர் கெய்ஸின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அட்லாண்டிஸ் ஆதாரம் 1968 ஆம் ஆண்டு கண்டறியப்படும் என்று அவர் கணித்துக் கூறியது, பிமினி பாதையின் கண்டுபிடிப்பைத் தான் குறித்ததாகக் கொண்டனர். நம்புபவர்கள் இதனை ஒரு பாதை, சுவர் அல்லது வேறு கட்டமைப்பின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள், ஆயினும் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக அமைந்தது என்கிறார்கள். பிற எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வெளிக்கிரகவாசிகளை காரணம் காட்டுகிறார்கள். இந்த கருத்தினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அறிவியல் புனைவுத் திரைப்படமான "க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைன்ட்" என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தினார். புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார். முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார். பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர் சித்தாந்தப்படுத்தினாலும், அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. காந்த துருவங்களுடன் தொடர்புபட்ட இயல்பான காந்த மாறுபாடுகளை மட்டும் திசைகாட்டிகள் கொண்டுள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் காந்த (திசைகாட்டி) வடக்கும் புவியியல்ரீதியான (உண்மையான) வடக்கும் எங்கு ஒன்றாக அமைந்திருக்கிறது என்றால் விஸ்கோன்சின் தொடங்கி மெக்சிகோ வளைகுடா வரையிலான ஒரு கோட்டிலுள்ள இடங்களில்தான். கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார்கள். திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் இரண்டு வகையாக இருக்கலாம்: போர் நடவடிக்கைகள், கடற்கொள்ளை நடவடிக்கைகள். எதிரிகளின் பதிவுக் குறிப்புகள் பல சம்பவங்களின் போது சோதிக்கப்பட்டிருக்கின்றன; பல கப்பல்கள் மூழ்கியதற்கு உலகப் போர்களின் போதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள் காரணமாகக் கூறப்பட்டு பல்வேறு உத்தரவு பதிவுப் புத்தகங்களில் ஆவணப்பட்டிருக்கின்றன. இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை. ஒரு கப்பல் அல்லது சிறு படகை நடுக்கடலில் முற்றுகையிட்டு கொள்ளையிடுவது தான் கடற்கொள்ளை என்று வரையறுக்கப்படுகிறது. இது இன்று வரை நடந்து வரும் ஒரு நடவடிக்கையாகும். சரக்கு திருடும் கடற்கொள்ளை மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக நிகழ்கிறது. அதே சமயத்தில் மருந்து கடத்தல்காரர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு சொகுசுப் படகுகளை கடத்துகிறார்கள். கரீபியனில் ஊழியர்கள் மற்றும் படகுகள் கடத்தலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். கரீபியன் பகுதியில் கடற்கொள்ளை என்பது சுமார் 1560கள் தொடங்கி 1760கள் வரை சாதாரண நிகழ்வுகளாக இருந்தது. எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர். வளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும். இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது. ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து செல்கிறது. சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும். இது தான் "விட்ச்கிராஃப்டு" படகுக்கு டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கடற்கரையில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே இப்படகு பழுதடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில் இல்லை. விமானம் அல்லது கப்பல் காணாமல் போவதற்கு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் போது கூறப்படும் காரணங்களில் மிக அதிகமானது மனிதத் தவறாகும். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, மனிதர்கள் தவறு செய்வார்கள் என்பது அறிந்ததே. இது பெரும் துயரச் சம்பவத்தில் சென்று முடிகிறது. இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள் விதிவிலக்கல்ல. உதாரணமாக "வி.ஏ.ஃபாக்" 1972 ஆம் ஆண்டில் தொலைந்து போனதற்கு ஆவியாகும் பென்ஸின்|பென்சீன் கழிவை சுத்தப்படுத்துவதற்கு முறையான பயிற்சி இல்லாதிருந்ததை கடலோரக் காவல் படை ஒரு காரணமாக சுட்டிக் காட்டியது . வர்த்தக அதிபரான ஹார்வே கனோவர் தனது பயணப் படகான "ரெவோனோகை" இழந்ததற்கு மனிதப் பிடிவாதமும் காரணமாய் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர் தெற்கு புளோரிடாவில் ஜனவரி 1, 1958 அன்று புயலின் விளிம்பில் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார். ஆய்வு செய்வதற்கு உடைந்த வாகனம் கிடைக்காது போய்விடுவதால் பல இழப்புகள் இன்னும் தீர்மானத்திற்கு வர முடியாததாகவே தொடர்கின்றன. இது பல அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் காட்டப்படும் ஒரு உண்மையாகும். வெப்ப மண்டலச் சூறாவளிகள் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாய்க் காணப்படும் சக்திவாய்ந்த புயல்களாகும். இது ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிற்கும் பில்லியன்கணக்கான டாலர்கள் சேதாரத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. 1502 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கோ டி போபடில்லாவின் ஸ்பெயின் குழுக் கப்பல்கள் மூழ்கியது தான் சூறாவளிப் பேரழிவின் முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவம். இந்த புயல்கள் கடந்த காலத்தில் முக்கோணம் தொடர்பான ஏராளமான சம்பவங்களுக்கும் காரணமாய் அமைந்திருக்கின்றன. சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன் ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) மீது மையம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், நீரின் அடர்த்தியை குறைப்பதினால் குமிழிகள் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்ட கப்பலை மூழ்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து எழும் எந்த உடைந்த பாகங்களும் துரிதமாக வளைகுடா நீரோடையால் சிதறச் செய்யப்படுகின்றன. திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது. இது உண்மையாய் இருந்தால், ஒரு கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக எச்சரிக்கையின்றி மூழ்கக் காரணமாகி விடும். அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது. தென்கிழக்கு அமெரிக்க கடற்கரையை ஒட்டிய ப்ளேக் ரிட்ஜ் பகுதியிலும் இச்சேகரங்கள் மிகுதியாய் காணப்படுகின்றன. ஆயினும், பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த 15,000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெளியீடுகள் எதுவும் இருந்ததாக விபரமில்லை என்று அவர்களது ஆய்வறிக்கைகளில் இன்னொன்று தெரிவிக்கிறது. கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. உலகின் பல கடல்களில், முரட்டு அலைகள் கப்பல்கள் மூழ்குவதற்கும் எண்ணெய் கப்பல்கள் கவிழ்வதற்கும் காரணமாய் அமைந்துள்ளன. இந்த அலைகள் மர்மமானவையாக கருதப்படுவதோடு சமீப காலம் வரை ஒரு மூடநம்பிக்கையாகவும் கருதப்பட்டு வந்தது. ஆயினும், முரட்டு அலைகள் காணாமல் போன விமானத்திற்கு காரணமாக முடியாது. பிளைட் 19 என்பது குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும். இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது. போர்க்கப்பலில் இருந்தான விமான பாதை, கிழக்கே 120 மைல், வடக்கே 73 மைல்கள் பின் மீண்டும் இறுதியாக 120 மைல் பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவை திரும்பவில்லை. விமானம் அசாதாரண நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும், விமானம் பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட். சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. "புரியாத காரணங்கள் அல்லது விளைவுகளால்" நிகழ்ந்ததாக கடற்படை அறிக்கை இந்த விபத்து குறித்து கூறுவது குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. டெய்லரின் தாய் தனது மகனின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவே, அவர்களை "புரியாத காரணங்கள்" என்று எழுதச் செய்ததாக நம்பப்படுகிறது. உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார். இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை. பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன, ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன. சம்பவம் நடந்து முடிந்த சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை. 1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் எடை கொண்ட இருதூண்கப்பல் "மேரி செலஸ்டி" மர்மமான முறையில் தொலைந்து போனது. பல சமயங்களில் இச்சம்பவம் தவறாக முக்கோணத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது. கப்பல் போர்ச்சுகல் கடலோரத்தில் தொலைந்திருந்தது. இந்த சம்பவம் அநேகமாக "மேரி செலஸ்டி" என்னும் அதே பெயரிலான 207 டன் துடுப்புக் கப்பல் 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெர்முடா கடலோரத்தில் தரை தட்டி பின் விரைவாக நீருக்குள் மூழ்கிய சம்பவத்துடன் குழப்பப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் "மேரி செலஸ்டி" என்னும் ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்" (உண்மையான "மேரி செலஸ்டி" சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை சேர்க்கப்பட்டது) என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார். 1881 ஆம் ஆண்டில் "எலன் ஆஸ்டின்" ஒரு அநாதையாக வந்த கப்பலைக் கண்டார். அதில் மீட்பு ஊழியர்களை நிறுத்தி, அதனுடன் சேர்ந்து நியூயார்க் வர முயற்சி செய்தார். இந்த அநாதைக் கப்பல் திரும்பவும் மீட்பு ஊழியர்கள் இன்றி தோன்றியதாகவும், திரும்பவும் இரண்டாவது முறையாக மீட்பு ஊழியர்களுடன் காணாமல் போனதாகவும் சிலர் விவரிக்கின்றனர். அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. 1918, மார்ச் 4 ஆம் தேதிக்கு பிந்தையதொரு காலத்தில் பார்படோஸ் தீவுகளில் இருந்து கிளம்பிய யுஎஸ்எஸ் "சைக்ளோப்ஸ்" என்னும் கப்பல் ஒரு சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் காணாமல் போனது. எந்த ஒரு ஒற்றை கருத்திற்கும் வலுவான ஆதாரமில்லை எனினும், பல்வேறு சுதந்திரமான கருத்துகள் உலவுகின்றன. சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள். தியோடோசியா பர் அல்ஸ்டான் என்பது முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியான ஆரான் பர்ரின் மகளாவார். அவர் காணாமல் போனதுடன் முக்கோணத்திற்கு தொடர்பு இருப்பதாய் சில சமயங்களில் கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டிசம்பர் 30, 1812 அன்று சென்ற "பேட்ரியாட்" கப்பலில் அவர் ஒரு பயணியாக இருந்தார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கடற்கொள்ளை மற்றும் 1812 ஆம் ஆண்டுப் போர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று காரணமாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே போல் முக்கோணத்திற்கு நன்கு வெளியே டெக்சாஸ் பகுதியில் அவர் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கருத்தும் நிலவுகிறது. எஸ்.வி. ''ஸ்ப்ரே" என்னும் ஒரு அநாதையாய் நின்ற மீன்பிடி படகினை கடல் பயணக் கப்பலாக மாற்றிய ஜோஸ்வா ஸ்லோகம் என்பவர், அதனை 1895 மற்றும் 1898 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல்முறையாய் உலகெங்கும் தனியாளாக சுற்றிவரும் தனது சாதனை முயற்சியை நிறைவு செய்யப் பயன்படுத்தினார். 1909 ஆம் ஆண்டில், ஸ்லோகம் வினியார்டு ஹேவனில் இருந்து வெனிசூலாவுக்கு பயணத்தை துவக்கினார். அவரையும் சரி "ஸ்ப்ரே" யையும் சரி அதற்குப் பின் காணவில்லை. அவர்கள் காணாமல் போன போது பெர்முடா முக்கோண பகுதியில் இருந்தார்கள் என்பதற்கோ, அல்லது அமானுட நடவடிக்கை இருந்ததற்கோ சான்று எதுவும் இல்லை. 1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐந்து கலக்கூம்புகள் கொண்ட பாய்மரக் கப்பலான "கரோல் ஏ. டீரிங்" வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே ஜனவரி 31, 1921 வாக்கில் அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது. அந்த சமயத்தின் வதந்திகளும் இன்ன பிறவும் "டீரிங்" கடற்கொள்ளைக்கு பலியாகி இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டின. மருந்துக் கடத்தல் தடை சமயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்பட்டதுடன் இச்சம்பவத்திற்கு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன் ஏறக்குறைய அதே சமயத்தில் காணாமல் போன எஸ்.எஸ்."ஹெவிட்" என்னும் இன்னொரு கப்பலுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. டிசம்பர் 28, 1948 அன்று, டக்ளஸ் டிசி-3 விமானம் ஒன்று பூர்டோ ரிகோவின் சான் ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் மறைந்து போனது. விமானம் அல்லது அதில் பயணித்த 32 பேர் குறித்த எந்த சுவடும் அதற்குப் பின் கிடைக்கவில்லை. பயணிகள் விமானத்துறை வாரிய விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்ட ஆவணத்தில், விமானம் காணாமல் போனதற்கான ஒரு சாத்தியமுள்ள குறிப்பு கிடைத்தது. ஆனால் இது முக்கோண எழுத்தாளர்களால் அதிகம் தொடப்படவில்லை. சான் ஜூவானில் இருக்கும் போது விமானத்தின் மின்கலங்கள் சோதிக்கப்பட்டபோது அவை மின்னூட்டம் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் மறுமின்னூட்டம் செய்யாமலேயே மீண்டும் விமானத்தில் கொண்டு வைக்க விமான ஓட்டி உத்தரவிட்டார். இது ஒருவேளை முழுமையான மின்சார துண்டிப்புக்கு இட்டுச் சென்றதா இல்லையா என்பது ஒருபோதும் அறியப்படாதது. அசோர்ஸில் இருந்து பெர்முடா செல்கையில் ஜனவரி 30, 1948 அன்று ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. பெர்முடாவில் இருந்து ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு பறந்து செல்கையில் ஜனவரி 17, 1949 அன்று இன்னொரு பயணிகள் விமானம் காணாமல் போனது. இரண்டுமே தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கிய ஒரே ரக பயணிகள் விமானங்கள் ஆகும். "எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன்" என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது. 1963, பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு அதில் இருந்து எந்த தகவலும் இல்லை."மரைன் சல்பர் குவீன்" தான் வின்சென்ட் கேடிஸ் 1964 ஆம் ஆண்டில் எழுதிய "அர்கோசி" இதழ் கட்டுரை யில் குறிப்பிடப்பட்ட முதல் வாகனம் ஆகும். ஆனால் அவர் அதில் "காணமுடியாத இடத்திற்கு சென்று விட்டது" என்று விட்டு விட்டார். ஆனால் கடலோரக் காவல் படையின் அறிக்கை கப்பல் மோசமாகப் பராமரிக்கப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதோடு, அது கடலுக்குள் செல்ல உகந்த கப்பல் அல்ல என்பதால் கடலுக்குள்ளேயே சென்றிருக்கக் கூடாது என்று அறிவித்தது. முக்கோணப் பகுதியில் 1921 ஆம் ஆண்டில் மிகப் பிரபல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது (சிலர் அதற்கு சில வருடங்கள் கழித்து என்கிறார்கள்). ஜப்பானிய கப்பலான "ரய்ஃபுகு மரு" (சிலர் இதனை "ரய்குகே மரு" என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்) அப்படியே அனைத்து பாகங்களும் மொத்தமாக மூழ்கிவிட உள்ளே சென்று விட்டது. முன்னதாக அது "கத்திக்கூம்பு போல் இப்போது அபாயம் தெரிகிறது, விரைவாய் உதவிக்கு வாருங்கள்!" என்பது போன்ற அபாய சமிக்ஞை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. "கத்திக்கூம்பு" என்பது அநேகமாக நீரலைக் கூம்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. உண்மையில், கப்பல் முக்கோணப் பகுதிக்கு அருகிலேயே இல்லை. அத்துடன் "கத்திக்கூம்பு" என்கிற வார்த்தையும் கப்பலின் அபாய சமிக்ஞையில் இல்லை. 1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக் கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக் கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது . 1955 ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவ பட்டியல்களோ ஆகஸ்டு இறுதிவாக்கில் பெர்முடா அருகில் "எடித்" என்னும் ஒரே ஒரு புயல் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. மற்ற புயல்களில் "புளோரா" கிழக்கே வெகு தொலைவில் வந்தது, "கேதி" படகு மீட்கப்பட்ட பின் தான் வந்தது."எடித்" இந்த படகை கட்டுப்பாடிழந்து கடலுக்குள் போகச் செய்ய நேர்ந்த சமயத்தில் "கன்னிமரா IV" காலியாகத் தான் இருந்தது. துறைமுகத்தில் தான் நின்று கொண்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமாய் ஆவணப்படுத்தப்பட்டவை தவிர, மேலே குறிப்பிடப்பட்ட பிரபல முக்கோண நிகழ்வுகள் பின்வரும் படைப்புகளில் இருந்து வருகின்றன. முக்கோணப் பகுதிக்குள் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள் இந்த மூலங்களில் "மட்டும்"தான் காணப்படுகின்றன: பின்வரும் இணையதளங்கள் பெர்முடா முக்கோணத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரபலமாய் இருக்கும் கருத்துக்கு ஆதரவான உள்ளடக்கத்தையோ அல்லது அமெரிக்க கடற்படை அல்லது அமெரிக்க கடலோரக் காவல்படையால் நடத்தப்பட்டது போன்ற விசாரணைகள் அல்லது ஆய்வுகளின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வெளியிடப்பட்ட ஆவணங்களையோ கொண்டிருக்கின்றன. சில ஆய்வுகளின் நகல்கள் இணையத்தில் இல்லை. அவை கேட்டுப் பெறத்தக்கவையாக இருக்கின்றன. உதாரணமாக, பிளைட் 19 அல்லது யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ் தொலைந்தது தொடர்பான ஆய்வுகளை நேரடியாக அமெரிக்க கடற்படை வரலாற்று மையத்தில் இருந்து கேட்டுப் பெறலாம். இங்குப் பட்டியலிடப்பட்டிருக்கும் அநேக படைப்புகள் பெருமளவில் மறுபதிப்பில் இல்லாதவை. முக்கோணப் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சில சம்பவங்களுக்கான ஆதார உள்ளடக்கமாக இந்தப் புத்தகங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கவை. ரோஸ் கோபுரம் ரோஸ் கோபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 77 மாடிக் கட்டிடம் ஆகும். 333 மீட்டர் (1,093 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படும் கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். தொடக்கத்தில் இக் கட்டிடத்தை 380 மீட்டர் (1,247 அடி) உயரம் கொண்டதாகக் கட்டத் திட்டமிட்டிருந்தனர். எனினும், பின்னர் வடிவமைப்புக் காலத்தில் இதன் உயரம் குறைக்கப்பட்டது. கட்டுமான வேலைகள் 2004 ஆம் ஆண்டில் தொடங்கின. 2006 அக்டோபர் 24 ஆம் தேதி கட்டிடம் அதன் முழு உயரத்தை அடைந்தது. அக் கட்டிடத்தில் அமைந்துள்ள விடுதி "ரோஸ் ரொட்டானா சூட்ஸ்" ஆகும். காளிங்கராயன் காளிங்கராயனின் இயற்பெயர் லிங்காய கவுண்டர். இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் இனத்தை சார்ந்த சாத்தாந்தை என்னும் கூட்டத்தை சேர்ந்தவர். 20 வயது ஆனதும் அப்பொழுது கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் (1265-1280) படையில் சேர்ந்தார். தனது செயலாற்றலால் விரைவில் தலைமைப்பதவியை அடைந்தார். பாண்டிய மன்னன் இவரை உத்திர மந்திரி (தலைமை அமைச்சர்) ஆக்கினார். மேலும் காளிங்கராயன் என்ற பட்டத்தையும் வழங்கினார். இவரின் உண்மைப்பெயரான லிங்காய கவுண்டர் என்பதால் அல்லாமல் காளிங்கராயன் என்ற பெயராலயே இவர் அறியப்படுகிறார். இவரின் சிறப்பை இன்றளவும் சொல்லுவது இவரின் பணிகளே. பவானியையும் நொய்யலையும் இணைத்து இவர் வெட்டிய பாசன கால்வாய் காளிங்கராயன் வாய்க்கால் என அறியப்படுகிறது. இக்வாய்காலை அமராவதி ஆற்றுடன் இணைக்க இவர் முடிவெடுத்து அத்திபாளையம் அருகே அணை கட்டினார். எனினும் அவரின் இத்திட்டம் நிறைவேறவில்லை. அத்திபாளையத்தில் உள்ள அணை ஓட்டை அணை என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இருகலப்பாசி இருகலப்பாசிகள் (இலங்கை வழக்கு: தயற்றம், ஆங்கிலம்: Diatoms) என்னும் சொல் இரண்டு எனப்பொருள் தரும் கிரேக்க மொழிச்சொற்களில் இருந்து உருவானது:: διά (dia, ட'யா) = "through" ("ஊடே")+ τέμνειν (temnein, டெம்னைன்) = "to cut" ("வெட்டு"), அதாவது "பாதியாய் பகுப்பது" ("cut in half" ) பாசிகளிலேயே மிகவும் தனித்தன்மை கொண்டவை. இவற்றின் அமைப்பு சலவைக் கட்டிகளை இட்டுவைக்கும் டப்பிக்களைப் போல, மேலே ஒரு கலமும் கீழே ஒரு கலமுமாக இருக்கும். இதன் கலங்கள் சிலிக்கா செல்களால் அமைந்தவை. ஒவ்வொறு சிற்றினமும் தங்களுக்கே உரிய பல்வேறு வேலைப்பாடுகள் மிகுந்த கல மேற்கூரையைக் கொண்டிருக்கும். இந்த வேலைப்பாடுகளே ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொன்றைக் கண்டுபிடிக்க வகைப்பாட்டியலில் உதவுகிறது.இருகலப் பாசிகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இருகலப்பாசிகளின் இருப்பு அதனை சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழலை பொருத்ததாகும். ஒவ்வொரு சிற்றினமும் தங்களுக்குரிய சூழ்நிலைக்கூறுகளுக்குள் (Ecological Niche) மட்டும் வாழும். இருகலப்பாசிகளின் இத்தகைய பண்புகள் இவற்றை மிகவும் சிறந்த உயிர் சுட்டிக்காட்டியாக (Bioindicator) உபயோகிக்க உதவுகின்றது. இருகல பாசிகளின் கல அமைப்பு சிலிகாவாலனது, அவை நைட்ரிக் அமிலத்தையும் எதிர்த்து நிற்க கூடியது. ஒவ்வொரு நீர் நிலையில் உள்ள இருகல பாசியின் வடிவமும் தனி தன்மை உடையது. அது மட்டுமின்றி ஒரே நீர் நிலையில் வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு வடிவ இருகலப்பாசிகள் காணப்படும். இந்தியாவில் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியவர் சென்னையை சேர்ந்த எம்.ஓ.பி. ஐயங்கார். இவர் இந்திய பாசியியல் துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவர் அனைத்து வகையான பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினாலும். "இருகலப் பாசிகள்" பற்றிய ஆராய்ச்சியை இவரது மாணவர்கள் தொடங்கி வைத்தனர். இவரை தொடர்ந்து டி.வி. தேசிகாச்சாரி, குசராத்தை சேர்ந்த எச்.பி. காந்தி, மகாராட்டிராவை சேர்ந்த பி.டி. சரோட் மற்றும் என். டி. காமத் என்பவர்கள் இந்தியாவில் காணப்படும் இருகலப் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள். ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் போது இருகலப் பாசிகள் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வெடிப்பதன் மூலம் குருதி ஓட்டத்திற் கலந்து உடலின் பல்வேறு திசுக்களை அடைகின்றன. குறிப்பாக, என்பு மச்சையில் இவற்றின் இருப்பை தடயவியல் வல்லுநர்கள் பரிசோதிப்பர். ஒருவரை வேறு ஏதேனும் வழியிற் கொன்று விட்டு நீரிற் தூக்கிப் போட்டிருப்பின், அவரது எலும்பு மச்சையில் இருகலப்பாசி இருக்காது. ஏனென்றால் இருகலப்பாசி என்பு மச்சையை அடைய உயிருள்ள குருதி ஓட்டம் தேவை. மிலெனியம் கோபுரம் (துபாய்) மிலெனியம் கோபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. 60 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம் 285 மீட்டர்கள் (935 அடி) உயரம் கொண்டது. 2006 ஆம் ஆண்டில் இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 301 மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளையும், 106 இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளையும் கொண்ட இக் கட்டிடத்தின் அருகிலேயே இதற்கான 10 மாடிகளைக் கொண்ட, 471 தானுந்துகளுக்கான தரிப்பிட வசதி உண்டு. பாசி எரிபொருள் பாசி எரிபொருள் எனபது பாசிகளை அறுவடை செய்து பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எரிபொருளைக் குறிப்பதாகும். பாசி எரிபொருளுக்கு மூன்றாம் தலைமுறை எரிபொருள் என்று பெயரும் உண்டு. இம்முறையான எரிபொருள் தயாரிப்பு சுற்றுப்புறச்சூழலுக்குத் தீங்கு விளைக்காமல் நிலைத்த மேம்பாடுடன் தயாரிக்கப்படுகின்றது. எரிபொருளுக்காகப் பெட்ரோலியத்தைத் தாண்டி வேறு ஊற்றுக்களை நோக்கி ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இதற்கான ஆய்வுகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர்வாழ் உயிரினமான பாசிகளில் (ஆல்கே/Algae) இருந்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமலும், அதே சமயம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடியதுமான விலையிலும் புத்தம்புதிய உயிரி டீசலைத் தயாரித்துள்ளார்கள் வேதியியலாளர்கள். அண்மையில் அமெரிக்க வேதியியல் அமைப்பின் 237வது தேசியக் கூட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பாசிகளில் இருந்து உயிரி டீசல் தயாரிக்கும்போது இதுவரை உற்பத்திச் செலவு மட்டுமே தலையாய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி உற்பத்திச்செலவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் பாசிகள் அபரிமிதமாகக் கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு இருக்காது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்திமுறையின்படி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்குக் குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும். உயிரி டீசல் தயாரிப்பில் தற்போது திரவ வினையூக்கி பயன்படுத்தப்படுகின்றது. புதிய கண்டுபிடிப்பின்படி திடநிலையிலான வினையூக்கி பயன்படுத்தப்படும். திடநிலையிலான வினையூக்கிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் என்பதும், உயிரி டீசல் தயாரிப்பினைத் தொடர்ச்சியாகச் செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. பழைய முறையில் உயிரி டீசல் உற்பத்தி செய்யும்போது திரவ வினையூக்கிகளை அமிலத்துடன் நடுநிலையாக்கல் வினைசெய்து பிரித்தெடுக்கவேண்டி இருந்தது. இதனால் உற்பத்தியை இடையிடையே நிறுத்த வேண்டி இருந்தது. புதிய முறை தொடர்ச்சியான உற்பத்தி முறை. ஓர் ஏக்கரில் விளைந்த சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைக்காட்டிலும் 300 முதல் 400 மடங்கு அதிகமான உற்பத்தியைப் புதிய முறையில் ஈட்ட முடியும் என்கிறார் இதுபற்றிய அறிக்கையை அளித்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் பென் வென். நிலைத்த மேம்பாடு 'நிலைத்த மேம்பாடு' அல்லது 'நிலையான வளர்ச்சி' என்பது மனித தேவைகளுக்காக மூலப்பொருள் உபயோகிக்கும் பொழுது சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்காமலும் மேலும் அடுத்தவரும் தலைமுறைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை பாதுகாப்பது ஆகும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் , பேண்தகைமை(SUSTAINABILITY) எனப்படுவது இயற்கை வளங்களோடு ஒத்த பொருளாதாரத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.1987 இல் 'நிலையான வளர்ச்சி' என்னும் சொல் Brundtland ஆணைய அறிக்கையில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.1992 இல் ரியோ டி ஜெனீரோ நகரத்தில் நடந்த புவி உச்சிமாநாட்டின் அறிக்கையான நிகழ்ச்சி 21, தகவல்,ஒருங்கிணைப்பு, பங்கேற்பு என்னும் மூன்று முக்கிய அம்சங்களை நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என பிரகடனம் செய்தது. நிலையான வளர்ச்சியின் மூன்று தூண்களாக இணைப்புகள் ,தலைமுறைக்கும் தொடரும் சமத்துவம் மற்றும் சுறுசுறுப்பான இயக்கு திறன் ஆகியவை விளங்குகின்றன. மக்கள்தொகை வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் நகர்வுச் சுதந்திரம் நகர்வுச் சுதந்திரம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன. இது ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுதல், எங்கே அனுமதிக்கப்படுகிறார்களோ அங்கு பயணம் செய்தல், உரிய ஆவணங்களுடன் எந்நேரமும் நாட்டுக்குத் திரும்பி வருதல் என்பவற்றுடன், குறித்த நாட்டுக்குள்ளேயே தாம் விரும்பிய எந்த இடத்துக்குச் செல்வதற்கும், வாழ்வதற்கும், அங்கே வேலை செய்வதற்குமான உரிமைகளைக் குறிக்கிறது. இது அடிப்படை மனித உரிமையாக சிலரால் கருதப்படும் ஒரு சுதந்திரம் ஆகும். நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கும் வசிப்பதற்குமான முழுமையான சுதந்திரம் பெரும்பான்மையானோருக்கு இல்லை. இத்தகைய சுதந்திரம் வேண்டும் என்று சில அமைப்புகள் வலியுறுத்தி வந்த போதிலும், அந்தக் கோரிக்கைக்கு ஒரு நாட்டினதும், பன்னாட்டு அமைப்புகளினதும் ஆதரவு இல்லை. வெவ்வேறு வாழ்தரம் உள்ள நாடுகள், கீழ் வாழ்தரம் உள்ள நாடுகளில் இருந்து குடிவரவை விரும்பவதில்லை. முழுமையான சுதந்திரம் இருந்தால், நிலையான நிர்வாகம் செய்வதும் கடினாமக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஒரு குடிமை நாட்டுக்குள்ளேயே நகர்வதற்கு பெரும்பான்மை நாடுகளில் சுதந்திரம் உண்டு. எனினும் பல நாடுகளில் இச்சுதந்திரமும் இல்லை. குறிப்பாக சீனாவில் ஒரு கிராமத்தார் நகரத்துக்கு சுதந்திரமாக அனுமதி இன்று நகர முடியாது. நகர்வு சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்டவரின் இடத்துக்குள் செல்வதற்கான சுதந்திரம் என்று பொருள் படாது. ஊடகச் சுதந்திரம் ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது. நாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல் கூடல் சுதந்திரம் கூடல் சுதந்திரம் என்பது பிற மனிதர்களுடன் கூட, கூடி கருத்து வெளிப்படுத்த, பரப்ப, செயற்படுவதற்கான சுதந்திரம் ஆகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக, அரசியல் சுதந்திரமாக, குடியுரிமையாக கருதப்படுகிறது. கூடல் சுந்தந்திம், வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட உரிமையுடன் சேர்த்து பாக்கப்படுவதுண்டு. எமிரேட்ஸ் கிரவுன் எமிரேட்ஸ் கிரவுன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள 63 மாடிகளைக் கொண்ட வதிவிடக் கோபுரம் ஆகும். இதன் உயரம் 296 மீ (971 அடி). இதன் கட்டுமான வேலைகள் 2005 இல் தொடங்கி 2008 இல் நிறைவெய்தின. இது, துபாயில் உள்ள கட்டிடங்களில் 6 ஆவது உயரமான கட்டிடமும், உலகில் 45 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும். 21ம் நூற்றாண்டுக் கோபுரம் 21ம் நூற்றாண்டுக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 269 m (883 ft) உயரம் கொண்ட இக் கட்டிடம் உலகின் மூன்றாவது உயரமான வதிவிடக் கட்டிடம் ஆகும். இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன. இதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. டபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது. அல் காசிம் கோபுரங்கள் அல் காசிம் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 53 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கொண்ட தொகுதி ஆகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள சேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரில் உள்ள கிறிஸ்லர் கட்டிடத்தின் தோற்றத்தை ஒத்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இக் கோபுரங்கள் ஒவ்வொன்றும் உயரமானவை. நவம்பர் 2007 இல் அவற்றின் முழு உயரத்தை எட்டிய இக் கட்டிடங்கள் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டன. த ஹார்பர் விடுதியும் வதிவிடமும் த ஹாபர் விடுதியும் வதிவிடமும் என்பது 256 மீட்டர்கள் (840 அடி) உயரமும் 59 தளங்களையும் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வதிவிடங்களையும் விடுதியையும் கொண்ட இக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தில் 261 வதிவிட அலகுகள் உள்ளன. இவற்றுள், 24 பெரிய தனி அறைகளும், 6 ஒரு படுக்கையறை கொண்ட அலகுகளும், 170 இரண்டு படுக்கையறை அலகுகளும், 55 மூன்று படுக்கையறை அலகுகளும் அடங்கும். இது, எமிரேட்ஸ் ஹொட்டேல்ஸ் அண்ட் ரெசிடென்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தொகுதி. 2007 நவம்பர் முதலாம் தேதி திறக்கப்பட்ட போது இது, எமிரேட்ஸ் மரீனா ஹொட்டேல் அண்ட் ரெசிடென்ஸ் என அழைக்கப்பட்டது. துபாய் மரீனா பகுதியில் பல கட்டிடங்களின் பெயர்களில் "மரீனா" என்னும் சொல் இருந்ததால் அப் பெயர் மாற்றப்பட்டது. To prevent confusion from their constumers, and to keep the nautical theme, the words "Emirates Marina" were changed to "The Harbour." தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் (), ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது துபாய் மால் என்னும் வணிகத் தொகுதி, பழைய நகர், பூர்ஜ் துபாய் ஏரி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. 303 மீட்டர் உயரத்துடன் கூடிய இக் கட்டிடத்தில் 63 தளங்கள் உள்ளன. இக் கோபுரம், பூர்ஜ் துபாய் என்னும் உலகின் உயரமான கட்டிடத்தை உள்ளடக்கிய, பூர்ஜ் துபாய் வணிகப்பகுதி பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2008 ஏப்ரலில் முழு உயரத்தை அடைந்த இக் கட்டிடம் துபாயின் ஆறாவது உயரமான கட்டிடமும், உலக அளவில் 36 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும். இது செப்டெம்பர் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது. அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள் அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்திலுள்ள துபாய் மரீனா பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதியாகும். இத் தொகுதி அல் ஃபத்தான் கோபுரம், ஒயாசிஸ் கடற்கரைக் கோபுரம் என்னும் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. இரண்டு கோபுரங்களும் அதிகார அடிப்படையிலான 245 மீ (804 அடி) உயரத்தையும், கூரை வரை 230 மீ (755 அடி) உயரத்தையும் கொண்டுள்ள இவ்விரு கோபுரங்களும் துபாயின் ஏழாவது உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன. இவை 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படன. த டவர் (துபாய்) த டவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. 243 மீட்ட உயரம் கொண்ட இக்கட்டிடம் 54 மாடிகளைக் கொண்டது. பிரமிட் வடிவ உச்சியுடன் அமைந்துள்ள இக் கட்டிடம் 2002 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பெயர்பெற்ற எமிரேட்ஸ் கோபுரங்கள் இதற்கு அண்மையில் அமைந்துள்ளன. ஆல்பிரட் ரோசன்பெர்க் ஆல்பிரட் ரோசன்பெர்க் ( ), (ஜனவரி 12, 1893 – அக்டோபர் 16, 1946), பால்டிக் ஜெர்மானியக் கோட்பாட்டாளரும் ஜெர்மன் நாசிக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாவார். இவர் கட்டிடக்கலையை ரஷ்யாவிலிருந்த (தற்போது எசுத்தோனியாவிலுள்ள) "ரிகா தொழிற்கல்வி" நிலையத்திலும், பொறியியலை "மாஸ்கோ உயர் தொழில்நுட்பப் பள்ளி"யிலும் பயின்றார். அதே பள்ளியில் 1917 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். ரஷ்யப்புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அவ்வேளையில் இவர் ரஷ்யப்புரட்சி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளித்தார். "டீட்ரிக் எக்கார்ட்" என்னும் தேசிய ஜெர்மன் தொழிலாளர் கட்சித் தலைவர் இவரை இட்லரிடம் அறிமுகம் செய்தார். அது முதல் நாசி அரசாங்கத்தின் செயல் வடிவங்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். இனவெறிக்கொள்கை, யூதப்பகைமை, வெர்செய்ல் ஒப்பந்தங்களை மீறுதல் போன்ற செயல்களில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது. கிருத்துவத்தை வெறுத்த ரோசன்பெர்க், கிருத்துவத்தை நடைமுறைக்குகந்த சமயமாக "(Positive Christianity)" மாற்ற முனைந்தார். இவருக்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமைக்கப்பட்ட நியூரம்பெர்க் விசாரணை ஆணையத்தினால் போர் விதிமீறல் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அக்டோபர் 16, 1946 இல் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். பார்க் பிளேஸ் (துபாய்) பார்க் பிளேஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்திருக்கும், கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம் ஆகும். இது 56 மாடிகளைக் கொண்டது. இக் கட்டிடம் 234.1 மீ (768 அடி) உயரமானது. 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டிடம் தற்போது (2009) துபாயின் 10 ஆவது உயரமான கட்டிடம் ஆகும். ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ரைக்ஸ்ஃபியூரர் எஸ் எஸ் () சிறப்பு பதவியாக ஜெர்மனியில் 1925 லிருந்து 1945 வரையுள்ள இடைப்பட்டக் காலத்தில் சுத்ஸ்டாஃபல் (எஸ் எஸ்-SS) படைப்பிரிவினரின் அதிகபட்ச அதிகாரம் கொண்டப் பதவியாக பயன்படுத்தப்பட்டது. 1926 ல் "பெர்ச்டோல்ட்" என்பவரால் இப்பதவி அறிமுகப்படுத்தப்பட்டது அதன் பின் 1929 முதல் ஹைன்ரிச் இம்லர் இப்பதவியை வகித்தார். "எஸ் எஸ்" அமைப்பின் தலைமைத் தளபதி நிலையைக் குறிக்கும் இச்சொல் சாதரணமாக 1934 வரை அழைக்கப்பட்டு வந்த்து. ஹைன்ரிச் இம்லர் ஸ்ட்ரோமப்டேலுங் ( எஸ் ஏ-SA) அமைப்பினருக்கும் அதன் தலைவர் "எர்னஸ்ட் ரோம்" என்பவருக்கும் எதிராக நிகழ்த்திய நீள் கத்திகளுடைய இரவு ("Night of the Long Knives") என்ற நிகழ்வுக்குப்பின்னர் இப்பதவி ஜெர்மன் இராணுவ உயர் தளபதியின் பதவி (ஜெனரல் பீல்டு மார்ஷல்) அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்பட்டது. ஒரே காலத்தில் எவரும் "ரைக்ஸ்ஃபியூரர்" மற்றும் "எஸ் எஸ்" தலைமை என்ற இரு பதவிகளையும் வைத்திருந்ததில்லை இதை நிருபித்தவர் இம்லர் மட்டுமே. 1925 முதல் 1945 வரையள்ள "20" வருட காலங்களில் இப்பதவியை "5" பேர் வகித்தனர் அதில் "இருவர்" மட்டுமே எஸ் எஸ் அமைப்பிலிருந்து வந்தவர்கள் அதில் "ஒருவர்" ஹைன்ரிச் இம்லர் (1929-1945). கடைசியாக பதவி வகித்தவர் "கார்ல் ஹன்க" (1945) இவர் இரஷ்யப் படையினரால் போரில் கொல்லப்பட்டார். சம்பந்தபுரம் சம்பந்தபுரம் ("Sambandhapuram") என்பது தமிழ் நாட்டில் துய்யம்பூந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பசுமை நிறைந்த அழகிய ஊர்.இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வேளாண்மை முக்கிய தொழில் ஆகும். இவ்வூர் கீழ்பவானி அணை பாசனத்திட்டத்தின் மூலம் நீர் பாசன வசதி பெறுகிறது. இவ்வூர் ஈரோட்டில் இருந்து தெற்கே 15 கிமீ தொலைவில் ("ஈரோடு பழனி நேர்வழி நெடுஞ்சாலை") அவல்பூந்துறைக்கு மேற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைந்து உள்ளது. இது கொப்பரை தேங்காய் விற்பனைக்கு தமிழக அளவில் பெயர் பெற்ற சந்தைக்கூடம் ஆகும். சம்பந்தபுரம் அஞ்சல் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை வழி, துய்யம்பூந்துறை அஞ்சல் நிலையம் வழி வருகின்றது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 638115. தொலைபேசி குறியீடு 0424. மரீனா டெரஸ் மரீனா டெரஸ் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு 38 மாடிக் கட்டிடம் ஆகும். 183 மீ (600 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி நிறுவனமான "இமார்" இதனைக் கட்டுவித்தது. கனடாவைச் சேர்ந்த, எச்.ஓ.கே கனடா என்னும் கட்டிடக்கலை நிறுவனம் இதனை வடிவமைத்தது. மக் 214 கோபுரம் மக் 214 கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள ஜுமேரா லேக் டவர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரி 40 மாடிக் கட்டிடம் ஆகும். இதன் உயரம் 155 மீ (509 அடி). இக் கோபுரம் 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. துசித் ரெசிடென்ஸ் ரொஷானா கோபுரம் எனவும் அழைக்கப்படும் துசித் ரெசிடென்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 35 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இக் கட்டிடம் 174 மீ (571 அடி) உயரமானது. இதன் அமைப்பு வேலைகள் 2007 ஆம் ஆண்டில் முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாக நிறைவெய்தியது. இசுக்கை கார்டன்சு இசுக்கை கார்டன்சு (Sky gardens) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் துபாய் அனைத்துலக நிதி மையம் பகுதியில் அமைந்துள்ள 45 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இக் கட்டிடம் 160 மீ (525 அடி) உயரம் கொண்டது. 2008 ஆம் ஆண்டில் இக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. துபாய் மால் விடுதி துபாய் மால் விடுதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் உள்ள 37 மாடிகள் கொண்ட ஒரு கட்டிடமாகும். இதன் உயரம் 192 மீ (629 அடி). இக் கட்டிடம் 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆண்-பெண் இருபால் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் சிஐஏ ஆதார புத்தகம் எழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல் எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008 Table 1. ஆற்றல் நுகர்வு அடிப்படையிலான நாடுகள் பட்டியல் இப்பட்டியல் நாடுகளின் தனிமனித ஆற்றல் நுகர்வை பல அலகுகளில் அளிக்கிறது. பொதுவாக இவ்வகை கணக்கிட்டில் ஆற்றல் ஒரு கிலோகிராம் பெட்ரோலியத்தில் இருந்து உருவாகும் ஆற்றலை ஒரு அலகாக கொண்டு கணக்கிடப்படுகிறது. இதையே கிலோஎ/ஆண்டு குறிக்கப்படுகிறது. உமி நீக்கி உமி நீக்கி என்பது தானியங்களில் உள்ள உமியையும் தவிட்டையும் நீக்கி அதன் விதைப் பகுதியை பிரித்து எடுக்கும் இயந்திரம் ஆகும். எ.கா நெல்லின் கோதையும் தவிட்டையும் அரிசியில் இருந்து பிரித்து எடுக்கும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நெல்லை அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்றால், அங்கே உமி நீக்கி அரிசி ஆக்கித் தருவர். விதைக் கலப்பை விதைக் கலப்பை என்பது விதைகளை சீராக விதைக்கும் ஓர் இயந்திரம். இவ்வியந்திரம் குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும். இது ஒரு பழமை வாய்ந்த கண்டுபிடிப்பு ஆகும் பண்டை சுமேரியன், சீனப் நாகிரங்களிலே இது பயன்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் இயந்திரவியல், இலத்திரனியவில் தொழில்நுட்பங்கள் இதை மேம்படித்தி உள்ளன. இணை அறுவடை இயந்திரம் இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும். முந்திய காலத்தில் மனிதர்களே இந்த செயற்பாடுகளில் உழைப்பு செலுத்த வேண்டி இருந்தது. அதன் பின்னர் அறுவடை இயந்திரம் (binder), கதிரடி இயந்திரம், உமி நீக்கி போன்ற இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. பின்னர் இவை எல்லாவற்றையும் ஒருங்கே செய்யும் இணை அறுவடை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. இவ்வியந்திரங்கள் பெரும்பாலும் மேற்குநாடுகளிலும், கம்பனி வயல்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். இந்திரா நூயி இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி ("Indra Krishnamurthy Nooyi", பிறப்பு: அக்டோபர் 28, 1955) உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நூயி, ஸ்டீவன் ரெயின்முந்த் அவர்களுக்குப் பின்னர் அக்டோபர் 1, 2006 முதல் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, அவர் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியிலிருந்து தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டார். போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது. பார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது. 2008 ஆம் ஆண்டு, நூயியின் பெயரை அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் வெளியிட்டது. இந்திரா நூயி ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSS இல் நிறைவு செய்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டம் பெற்றார். இந்தியாவில் நூயியின் தொழில் வாழ்க்கை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் மேட்டூர் பியர்டுசெல் என்ற ஆடை நிறுவனத்திலும் தயாரிப்பு மேலாளர் பதவிகளை வகித்ததன் மூலம் தொடங்கியது. 1978 ஆம் ஆண்டு அவர் யேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பொது மற்றும் தனியார் மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1980 ஆம் ஆண்டு பட்டம் பெற்று, நூயி போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (BCG) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். மேலும் மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவரி ஆகியவற்றில் திட்டம் தொடர்பான பதவிகளை வகித்தார். மேலும் அவர் பெப்சிகோ இயக்குநர்கள் குழுமத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார், நூயி சர்வதேச மீட்புக் குழு, கேட்டலிஸ்ட் மற்றும் லிங்கோலன் சென்டர் பார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் உறுப்பினராகவும் சேவை புரிகின்றார். அவர் யாலே கார்பரேஷனின் தொடர் ஆய்வாளராகவும், டிரஸ்ட்டீஸ் ஆப் ஐசென்ஹோவர் பெலோஷிப்ஸின் போர்டு உறுப்பினராகவும் இருக்கின்றார், மேலும் தற்போது அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சிலின் தலைவராகவும் சேவையாற்றுகின்றார். 2007 ஆம் ஆண்டு, அவர் இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூசண் விருதை பெற்றுக் கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் பெலோஷிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூயி பெப்சிகோநிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் சேர்ந்தார், பின்னர் 2001 ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO ஆக பதவியேற்றார். நூயி அவர்கள் நிறுவனத்தின் உலகளாவிய திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கின்றார், மேலும் 1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார், டிரைகான் இப்போது யூம்! பிராண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டில் டிரோபிகானா நிறுவனத்தைக் கையகப்படுத்தி குவாக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைத்ததில் முதன்மைப் பொறுப்பை எடுத்துக்கொண்டார், இந்நிறுவனமும் கடோரேட் இடமிருந்து பெப்சிகோவிற்கு வாங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அவர் பெப்சிகோவின் 44 ஆண்டுகால வரலாற்றில் ஐந்தாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். வணிக அதிகாரிகள் அவரது ஆழமாக வழிநடத்தும் திறன் மற்றும் இதயப்பூர்வமான உழைப்பு மற்றும் வேடிக்கை ஆகியவற்றைக் கண்டு வியப்படைகின்றனர். பிசினஸ்லீக் பத்திரிக்கையின் படி, அவர் 2000 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரி பதவி ஏற்றதிலிருந்து, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 72 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது, அதன் நிகர லாபம் 2006 ஆம் ஆண்டில் இருமடங்குக்கும் அதிகமாக $5.6 பில்லியனாக இருந்தது. வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் வெளிவந்த கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலில் நூயியின் பெயர் இடம்பெற்றது, மேலும் டைம் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த உலகில் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார். போர்பஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 3 ஆவது பெண் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குரூப், இந்திரா நூயியின் பெயரை 2009 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆகக் குறிப்பிட்டிருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில், இந்திரா நூயி $14,917,701 ஐ மொத்த சம்பளமாகப் பெற்றார், அதில் அடிப்படைச் சம்பளமான $1,300,000, போனஸ் $2,600,000, வழங்கப்பட்ட பங்குகள் $6,428,538 மற்றும் விருப்பமாக வழங்கப்பட்டவை $4,382,569 ஆகியவை உள்ளடங்கும். 2009 ஆம் ஆண்டின் போர்பஸ் ஆய்வறிக்கையின் படி இந்திரா நூயி உலகின் 3 ஆவது மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாகக் குறிப்பிடப்பட்டார். ஜனவரி 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார், இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது. நூயி USIBC இன் போர்டு இயக்குநர்களை வழிநடத்துகின்றார், இது அமெரிக்க தொழில்துறையைப் பிரதிபலிக்கும் 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டமைப்பு ஆகும். நீள் கத்திகளுடைய இரவு நீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) (ஜெர்மன்: ) அல்லது முனகும் பறவையின் செயல் (Humming Bird) என்று கூறப்படும் இந்நிகழ்வு நாசி ஜெர்மனியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 ,1934, வரையிலுள்ள காலத்தின் இடையில் நாசி நிர்வாகத்தினரால் நடந்த நீக்குதல் நிகழ்வினால் பல ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ),ஊர்க்காவல் படைப்பரிவைச்சார்ந்த காவிச்சட்டையினர் அரசியல் கொலையுண்டனர். இந்நிகழ்வை இந்த சங்கேத வார்த்தைகொண்டு (ஹம்மிங் பேர்ட்) நாசிக்கள் அழைத்தனர். இச்செயல் அடால்ப் இட்லர் அந்தப் படைப்பிரிவின் தலைவர் எர்ன்ஸ்ட் ரோம் என்பவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அப்படைப்பிரிவினர் அதன் தலைமையாளருடன் தனித்து தன்னாட்சிப் பெற்ற பிரிவாக, பல தெருக்கலவரங்களிலும், ஆட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதே இட்லரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் ரெய்க்ஸ்வியர் எனப்படும் ஜெர்மன் இராணுவப்பிரிவில் பலர் துணை வேந்தராகிய பிரான்ஸ் வோன் பேப்பன் க்கு ஆதராவாக செயல்படுபவர்களை கண்டு களைந்தெடுக்கவும் இட்லர் இந்த செயல்களை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த செயல் மூலம் சுமார் "85 முதல் 100 வரையிலான" உயிரிழப்புகள் மற்றும் "1000 க்கும் அதிகாமானோர்" கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்செயல்கள் சுத்ஸ்டாப்பெல் ( எஸ் எஸ்) படைப்பரிவைச்சார்ந்தவர்களாலும் மேலும் கிஸ்டாப்போ எனும் உளவுப் பிரிவு காவல்துறையினராலும் இது நிகழ்த்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்தவர் ஹைன்ரிச் ஹிம்லர். தன் உட்கட்சிப் பிரிவு செயல்பாடுகளாயிருந்தாலும் அவற்றை ஒடுக்க மனித உரிமைக்கு எதிரான செயல்களை பயன்படுத்துவதில் இட்லர் தயங்கியதில்லை என்பதற்கு இது சான்று. இந்த நிகழ்வின் மூலம் இட்லர் ஜெர்மானிய மக்களின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிபதியாக விளங்கினார். உலக வணிக மைய வதிவிடம் உலக வணிக மைய வதிவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய் பன்னாட்டு மாநாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 38 மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். 2008 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உலக வணிக மைய வதிவிடம் ஜுமேரா லிவிங் என்னும் நிறுவனத்தால் மேலாண்மை செய்யப்படுகின்றது. இக் கோபுரத்தின் மொத்த உயரம் 158 மீ (518 அடி). இக் கட்டிடம் ஒரு ஐந்து நட்சத்திரத் தரம் உள்ள வதிவிட வசதிகளைக் கொண்டுள்ளது. இக் கட்டிடம் துபாயின் முதல் உயரமான கட்டிடமான உலக வணிக மையக் கட்டிடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2005 இல் தொடங்கிய அத்திவார வேலைகள் 2006 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நிறைவெய்திக் கட்டிடத்தின் நிலமேற் பகுதி வேலைகள் தொடங்கின. இக் கட்டிடம் பழைய உலக வணிக மைய விடுதி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. உலக வணிக மைய விடுதி உடைப்பு வேலைகள் 1 ஏப்ரல் 2005 இல் இடம்பெற்றன. துபாயில் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும். த மொனார்ச் அலுவலகக் கோபுரம் த மொனார்ச் அலுவலகக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் உள்ள ஒரு 40 மாடிகளைக் கொண்ட கோபுரம் ஆகும். இக் கட்டிடம் 160 மீ (526 அடி) உயரம் கொண்டது. இக் கட்டிடத்தின் கட்டுமான வேலைகள் 2007 ஆம் ஆண்டில் நிறைவேறின. லேக் டெரஸ் லேக் டெரஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகமான துபாயில் ஜுமேரா லேக் டவர்ஸ் பகுதியில் உள்ள ஒரு 40 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 187 மீ (614 அடி) மொத்த உயரம் கொண்ட இக் கட்டிடம் 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. கப்ரிகோர்ன் கோபுரம் கப்ரிகோர்ன் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 46 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 185 மீ (605 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2003 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. ரெய்க்ஸ்வியர் ரெய்க்ஸ்வியர் என்ற பெயரில் 1919 முதல் 1935 வரை இயங்கிய ஜெர்மனியின் தேசிய இராணுவம் அழைக்கப்பட்டது. அதன் பின் வியர்மாக்ட் எனப் பெயர்மாற்றப்பட்டது. முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் பேரரசு (German Empire) முற்றிலுமாக சிதையுண்டது. பலர் தங்கள் இருப்பிடங்களை தாங்களே அமைத்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். பலர் தொண்டர்ப் படைப்பிரிவு (Free Corps) என்று ஒன்றை தொண்டு அமைப்பாக அமைத்து அதன் மூலம் புரட்சிகளில் ஈடுபட்டனர். புதியதாக அமைந்த வெய்மர் குடியரசுக்கு இராணுவ அமைப்புத் தேவைப்பட்டது. மார்ச் 6, 1919 இல் சட்டவரைவின் மூலம் "ரெய்க்ஸ்வியர்" என்ற இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டுப் பிரிவாக "ரெய்க்சீர்" மற்றும் ரெய்க்மெரைன் பிரிக்கப்பட்டது. ரெய்க்சீரில் 4 இலட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர். செப்டம்பர் 30, 1919 இல் இவ்வமைப்பு இடைக்கால இராணுவப்பிரிவாக செயல்பட்டது. ஜனவரி 1, 1921 இல் இந்த இராணுவ அமைப்பு கலைக்கப்பட்டு வெர்செய்ல் உடன்படிக்கை]யின்படி (1 இலட்சம் வீரர்களே இருக்க உடன்படிக்கை அனுமதித்தது) "ரெய்க்ஸ்வியர்" அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. இது இரண்டு படைப்பிரிவை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. மற்றப் பிரிவுகளான ரெய்க்மெரைன், "கடற் படை", "படைக்கலன்கள்" போன்ற பிரிவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. 1933 முதல் 1934 வரையில் இட்லர் ஜெர்மனியின் வேந்தரான காலத்தில் இப்படைப்பிரிவின் அதிகாரம் நாசிகளின் கைகளுக்குக் கிடைக்கும் வகையில் நீள் கத்திகளுடைய இரவு என்ற இரகசிய நிகழ்வு ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ) தலைவர் எர்னஸ்ட் ரோம் எனபவருக்கு எதிராக நடத்தப்பட்டு அதன் முடிவில் எர்னஸ்ட் ரோம் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1935 ல் இது விய்ர்மாக்ட் எனப் பெயர் மாற்றம் பெற்று மக்களால் அறியப்பட்டது. மரீனா ஹைட்ஸ் கோபுரம் மரீனா ஹைட்ஸ் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு வதிவிடக் கட்டிடம் ஆகும் இக் கட்டிடம் 208 மீ (684 அடி) மொத்த உயரம் கொண்டது. மரீனா ஹைட்ஸ் கோபுரத்தின் கட்டுமான வேலைகள் 2006 ஆம் ஆண்டில் முடிவுற்றன. இக் கட்டிடத்தின் நிலத் தளத்தில் சில்லறை வணிகத்துக்கான இடவசதிகள் உள்ளன. ஒரு வணிக மையம், தானுந்துத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகள், இளைப்பாறு வசதிகள் என்பனவும் டெரசிலும், 30 ஆவது தளத்திலும் அமைந்துள்ளன. தமானி விடுதி மரீனா தமானி விடுதி மரீனா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் பாரசீகக் குடாக் கடலைப் பார்த்தபடி அமைந்துள்ளது. தமானி விடுதி மரீனா அமைந்திருக்கும் துபாய் மரீனா பகுதி உயர் மட்டத்தினர் வாழும் பகுதியாகும். இது துபாய் ஊடக நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஜெபல் அலி சுதந்திர வலயமும், அப் பகுதியில் அமையவுள்ள புதிய துபாய் உலக நடுவண் வானூர்தி நிலையமும் இதற்கு அண்மையிலேயே உள்ளன. செருமானியப் பேரரசு ஜெர்மன் பேரரசு (German Empire) 1871 முதல் 1918 வரையுள்ள காலங்களில் ஜெர்மனி, 18 ம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரரசர் "முதலாம் வியெம்மால்" நிர்மாணிக்கப்பெற்ற இடங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியை உள்ளடக்கிய பகுதிகள் ஜெர்மன் போரரசாக விளங்கியது. முதலாம் உலகப்போரினால் ஏற்பட்டத் தோல்வியாலும் பேரரசர் "இரண்டாம் வியெம்மின் " (நவம்பர் 28, 1918) பதவித் துறப்பாலும் இப்பேரரசு ஜெர்மன் குடியரசாக சிதறுண்டது. இந்த இடைப்பட்ட "47 வருட காலங்களில்" இப்பேரரசு தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் அதீத வளர்ச்சி கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகச்சிறந்த நாடாக ஜெர்மன் புரட்சிகளினாலும், உலகப்போரின் தாக்கத்தினாலும் வீழும்வரைத் திகழ்ந்தது. இதன் கிழக்கு எல்லைகளாக இரஷ்யப்பேரரசும், மேற்காக பிரான்சும், தெற்காக ஆஸ்திரிய-அங்கேரி நாடுகளும் எல்லைகளாக அமைந்திருந்தன. இதன் அதிகாரப்பூர்வப் பெயராக "டியுச்சஸ் ரெய்க்" என்று 1871 முதல் 1943 வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று 1871 முதல் 1918 வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது "ஜெர்மன் ரெய்க்" ஆனது. ரெய்க் என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் மூன்றாம் ரெய்க் என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார். 1848 ல் ஜெர்மன் பேரரசு "புருஷ்யப் பிரதமர் " ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின் அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். புருஷ்யா மேலோங்கிய நிலையில் இருக்க ஜெர்மனியை உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க பிஸ்மார்க் "மூன்று போர்களை" ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று. 1864 ல் டென்மார்க்குக்கு எதிரான "இரண்டாம் ஷில்ஸ்விக் போர்", 1866 ல் ஆஸ்திரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் "இரண்டாம் பிரஞ்சு பேரரசை" எதிர்த்து "பிராங்கோ-புருஷ்யப் போர்" ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன. மேன்டுவா மாகாணம் மேன்டுவா மாகாணம்(இத்தாலியம்: "Provincia di Mantova") என்பது, லோம்பார்டி நிருவாக மண்டலத்திலுள்ள ஒரு மாகாணமாகும். இதன் கீழ் ஏறத்தாழ எழுபது நகராட்சிகள் (அல்லது) நகரியங்கள் உள்ளன. இதன் தலைநகரம், மேன்டுவா நகரியம் ஆகும். இத்தலைநகரியப் பெயரிலேயே இம்மாகாணம், மேன்டுவா மாகாணம் என்றழைக்கப்படுகிறது. அல் அத்தார் வணிகக் கோபுரம் அல் அத்தார் வணிகக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 38 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 158 மீ (518 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 1999 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அல் சீஃப் கோபுரம் அல் சீஃப் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 215 மீ (705 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2005 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. ஹாரிசான் கோபுரம் ஹாரிசான் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 190 மீ (623 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. சைபா கோபுரங்கள் சைபா கோபுரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வதிவிடக் கோபுரங்கள் ஆகும். ஷைபா கோபுரம் 1 இவற்றுள் அதிக உயரம் கொண்டது. 155 மீட்டர் (509 அடி) மொத்த உயரமும் 34 மாடிகளையும் கொண்டது. மற்றக் கோபுரமான ஷைபா கோபுரம் 2, 27 மாடிகளுடன் 135 மீட்டர் (443 அடி) உயரம் கொண்டது. இதன் கட்டுமான வேலைகள் 2008 இல் நிறைவேறின. "சைபா கோபுரம் 1", 268 வதிவிட அலகுகளைக் கொண்டது. இரண்டு கோபுரங்களுக்கும் பொதுவாக நீச்சல் குளம், உடற் பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளும் உள்ளன. வெள்ளை ரோசா வெள்ளை ரோசா ("The White Rose", ஜெர்மன்: die Weiße Rose) என்பது நாசி ஜெர்மனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழுவாகும். இக்குழுவில் மியூனிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் அவர்களின் மெய்யியல் பேராசிரியரும் அங்கம் வகித்தனர். இவர்கள் ஜூன் 1942 முதல் பெப்ரவரி 1943 ஆம் ஆண்டு வரையில் ஜெர்மனியின் தலைவர் அடால்ப் இட்லருக்கு எதிராக அநாமதேயத் துண்டுப்பத்திரிகைகளை வெளியிட்டு வந்ததன் மூலம் புகழ் பெற்றனர். இக்குழுவின் ஆறு முக்கிய உறுப்பினர்கள் நாசி ஜெர்மனியின் இரகசியக் காவல்துறை அமைப்பான கெஸ்டாப்போக்களினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பெப்ரவரி 22, 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இவர்களின் ஆறாவது துண்டுப் பத்திரிகையின் வாசகங்கள் ஜெர்மனியில் இருந்து ஸ்காண்டினேவியாவினூடாகக் கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டு "மியூனிக் மாணவர்களின் அறிக்கை" என்று பெயரிடப்பட்டு ஜூலை 1943 இல் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளினால் விமானங்கள் மூலம் ஜெர்மனி மீது வீசப்பட்டன. இன்று, வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் ஜெர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன. உழவு இயந்திரம் உழவு இயந்திரம்,(Tractor) உழுவுந்து, இழுவை இயந்திரம், தானுந்துக் கலைப்பை என்பது வயலை உழுவதற்குப் பயன்படும் இயந்திரமாகும். கலப்பையில் மாட்டைப் பூட்டி உழுவது போல, கலப்பைப் பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தால் உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது. ஈரானின் மாகாணங்கள் ஈரான் 30 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார். 1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகாணங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004ஆம் ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது. பெப்ரவரி 20, 2009 வான்கரும்புலிகள் கொழும்பில் தாக்குதல் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினர். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்றும் இதனால் இறைவரி திணைக்கள கட்டிடம் சேதமடைந்ததாகவும் அங்கிருந்த பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தளம் தெரிவித்தது. சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பாக்க: கதிரடி இயந்திரம் கதிரடி கருவி என்பது தானியங்களில் இருந்து கதிரை பிரிக்கும் கருவி ஆகும். சில இயந்திரங்கள் உமி, தவிடு ஆகியவற்றையும் நீக்கி விதையை மட்டும் தரும். இந்தவகை இயந்திரங்கள் பயிர்கள் அறுவடையின் போது வயல்களில் ஓட்டிச் செல்லப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் அதிக அளவில் நேரம் மிச்சமாகிறது. இத்தகைய இயந்திரங்கள் பிரித்தெடுக்கும் தானியக் கதிர்களை கால்நடைகள் உண்பதில்லை என பொதுவாக கருத்து உண்டு. இந்த இந்தந்திரங்கள் பெரும்பாலும் டீசல் எண்ணெயில் இயங்குபவை. இவை மனித மற்றும் கால்நடைகளின் உழைப்பினை மிகவும் குறைத்தன. இந்த இயந்திரங்களின் வருகையால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இந்த வகை இயந்திரங்களில் இருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மை உடையது. வேளாண்மைக் கருவிகள் இயந்திரங்கள் பட்டியல் வேதித் தொழிற்துறை வேதித் தொழிற்துறை வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறையாகும். நெகிழி, ரப்பர், கண்ணாடி, உரம், மருந்து என பலதரப்பட்ட வேதிப் பொருள்கள் வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறன. உலக வேதித் தொழிற்துறை 3 டிரில்லியன் பெறுமதி வாய்ந்தது. இத்துறையின் முக்கிய நிறுவனங்கள் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, நிப்பான் ஆகிய இடங்களில் உள்ளன. மூலப்பொருள்களை (எண்ணெய், இயற்கை எரிவளி, காற்று, நீர், உலோகம், கனிமங்கள் போன்றவற்றை ) 70,000 தயாரிப்புகளுக்கும் மேலாக வேதித் தொழிற்துறை உருமாற்றுகிறது. உலகம் எங்கும் உள்ள இரசாயனத் தொழிற்சாலை வெளிப்பாட்டில் 80% மாக பல்பகுதியங்களும் , நெகிழிகளும் ( குறிப்பாக பாலியெத்திலீன் , பாலிபுரோப்பிலீன் , பாலிவைனைல் குளோரைடு , பாலியெத்திலீன் டெரிபித்தலேட் , பாலிச்டைரின் மற்றும் பாலிகார்போனேட் ) உள்ளன . இரசாயனங்கள் வாடிக்கையாளர் சரக்குகள் , விவசாய ரசாயனங்கள் , உருவாக்கம் , கட்டுமானம் , தொழிற்சாலை சேவைகள் போன்ற பல பொருட்களுக்கு உதவுகிறது. இரசாயன தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியில் இருந்து 26% விழுக்காடு அதற்கே செலவிடப்படும் . ரப்பர் ,நெகிழிப் பொருள்கள் , துணிகள் , ஆடைகள் , எண்ணெய் சுத்திகரிப்பு , காகிதம் , மூல உலோகங்கள் போன்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதில் அடங்கும் . ஏ. எஸ். எல். வி ஏ. எஸ். எல். வி ("Augmented Satellite Launch Vehicle") என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப் பாவிக்கமுடியாத விண்கலமாகும். இந்த விண்கலம் தற்போது செயல்பாட்டில் இல்லை. ரெய்க் ரெய்க் (Reich) ஜெர்மன் வார்த்தை ரிக் என்ற வார்த்தையை தழுவியச் சொல் ஆகும். இலத்தின் மொழி "இம்பீரியம்" என்ற நேர் வார்த்தையின் தழுவல் சொல்லாகும். இச்சொல் சம்பிரதாயமாக அரசாட்சியை அல்லது பேரரசை குறிக்கும் சொல்லாக ஜெர்மனி உள்பட பல நாடுகளில் வெவ்வேறு மொழி உச்சரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நேரிடையாக முடியாட்சி, வெய்வர் குடியரசு, நாசி ஜெர்மனி என்றப் பொருளை எந்த வகையிலும் தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து "டியுட்ச் ரெய்க்" என்ற வார்த்தை குடியரசுவாதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1871 ல் ஒருங்கிணைந்த ஜெர்மனியாக இருந்த காலத்தில் அரசாட்சி செய்த ஒட்டோ வோன் பிஸ்மார்க் டியுட்ச் ரெய்க் என அழைக்கப்பட்டார். அது முதல் அதிகாரப்பூர்வ ஜெர்மனிப் பெயராக 1945 வரை தொடர்ந்தது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை "முதலாம் ரெய்க்" (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த "இரண்டாம் ரெய்க்" (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது. ஜெர்மன் ரெய்க் ஜெர்மன் ரெய்க் (German Reich) ஜெர்மன் மொழியில் அதிகாரப்பூர்வமாக 1871 முதல் 1945 வரை அழைக்கப்பட்ட" டியுட்ச்சஸ் ரெய்க்" எனும் சொல்லின் ஆங்கில முழு மொழியாக்கத்தின்படி 'ஜெர்மன் எம்பயர்' 1918 வரை ஏற்படுத்தப்பட்ட ஹோகன்ஜோலன் சட்டப்படி அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் வரை அழைக்கப்பட்டு வந்த இப்பெயர் போரின் தோல்வியால் பேரரசர் (எம்பரர்) தன்னுடைய "எம்பயர்" பதவியை துறந்ததால் எம்பயர் என்ற சொல் நீக்கப்பட்டு ரெய்க் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. அதன் பின் "ஜெர்மன் ரெய்க்" என எல்லோராலும் சில காலம் வரை அழைக்கப்பட்டது .காலப்போக்கில் அந்தப் பெயரை பலராலும் சுருக்கமாக ஜெர்மனி என்று அழைத்ததினால் அப்பெயரே நிலைத்துவிட்டது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை "முதலாம் ரெய்க்" (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த "இரண்டாம் ரெய்க்" (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது. இதனையிடையே இது ஆஸ்டிரியாவை தன் ஆளுகைக்குட்படுத்தியபொழுது இப்பெயர் "வல்லாண்மைப் பெற்ற ஜெர்மன் ரெய்க்" (Greater German Reich) என்று "கடைசி இரண்டு வருடங்களுக்கு" (1943–1945) நாசி சட்டத்தின்படி அழைக்கப்பட்டு வந்தது . நான்கு காவலர்கள் நான்கு காவலர்கள் ("Four Policemen") என்ற பெயர் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் இரண்டாம் உலகப்போருக்காக அணி சேர்ந்த நான்கு நாட்டு அணித்தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் அமைப்பை உருவாக்கியவர்களைக் குறிப்பதற்காக அவரால் இப்பெயர் சூட்டப்பட்டது. இவ்வணியினர் நேசநாட்டு அணியினர் எனவும் அழைக்கப்பட்டனர். இதன்படி அமைந்த ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா), சோவியத் ஒன்றியம், மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளின் நான்கு தலைவர்களும் "நான்கு காவலர்கள்" என அழைக்கப்பட்டனர். மான்துவா நகரியம் மான்துவா என்று அழைக்கப்படுகிற மான்துவா நகரியம் (, ) , வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள லோம்பார்டி ஆட்சி மண்டலத்தின் கீழ்வரும் மான்துவா மாகாணத்தில் இருக்கிறது. கேசுதிகிலியோன் கேசுதிகிலியோன் (Castiglione township; இத்தாலியம்: Comune di Castiù (Castiglione delle Stiviere)) என்பது இத்தாலியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரியம் ஆகும். இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள, லோம்பார்டி நிருவாக மண்டலத்தின் கீழ்வரும் மேன்டுவா மாகாணத்தில் இருக்கிறது. காஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியரே என்னும் இடத்தில்தான் தலைசிறந்த தமிழறிஞராகிய வீரமாமுனிவர் பிறந்தார். அவரது இயற்பெயர் கொஸ்தான்சோ ஜுசேப்பே எவுசேபியோ பெஸ்கி (Costanzo Giuseppe Eusebio Beschi). அவர் பிறந்த நாள் 1680, நவம்பர் 8. வீரமாமுனிவர் பிறந்த 300ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் காஸ்திலியோனே நகரில் 1980இல் நிகழ்ந்தது. தம் மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவர் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கே மறைப்பணி ஆற்றியதோடு தலைசிறந்த மொழிப்பணியும் ஆற்றி உலகப்புகழ் பெற்றதை காஸ்திலியோனே மக்கள் சிறப்பித்தார்கள். அவருடைய நினைவாக பதக்கம் வெளியிடப்பட்டது. அவர் நினைவைக் கொண்டாடும் விதத்தில் அவருக்குச் சிலையொன்றும் எழுப்பப்பட்டது. குறிப்பாக, வீரமாமுனிவருக்கு "தமிழ் மொழியின் தாந்தே" (Il Dante della lingua Tamil) என்னும் பட்டமளித்து ஊர்மக்கள் சிறப்பித்தனர். இத்தாலி நாட்டில் Divina Commedia (தெய்வீக இன்பிலக்கியம்) என்னும் தலைசிறந்த நெடும்பாடலை இயற்றி அழியாப் புகழ் பெற்றவர் தாந்தே அலிகியேரி (Dante Alighieri) என்னும் புலவர். அவரைப் போன்று, அவருடைய இலக்கியப் பாணியை அடியொற்றி, வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் தீஞ்சுவைக் காவியத்தை ஆக்கினார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், அகராதி, உரைநடை போன்ற படைப்புகளோடு பரமார்த்த குருவின் கதை போன்ற நகைச்சுவை இலக்கியத்தையும் ஆக்கிய வீரமாமுனிவரைத் தமிழுக்குத் தாம் அளித்தமை பற்றி காஸ்திலியோனே மக்கள் பெருமைப்படுகின்றனர். நேச அணி நேச அணி (Allies) (நேச நாடுகள் அணி-நட்பு அணி) ஒரு பொதுவான சர்ச்சைகளுக்காக குறிப்பிட்ட சில நாடுகள் ஒன்றுசேர்ந்து பொது கருத்தை எட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அணி சேர்ந்த நாடுகள் அமைப்பை நேச நாடுகள் அணி அல்லது நேச அணி என அழைக்கப்பட்டது. இதன்மூலம் அதனதன் இராணுவ அமைப்புடன் ஒன்று சேர்ந்து அனைவரும் ஒரே நோக்கத்திற்காக ஒரே எதிரியை நோக்கிப் போராடுவது அல்லது போரிடுவது என்றக் குறிக்கோளுக்காக அமைக்கப்பட்டது. இவ்வணியில் சேர்ந்த நாடுகள் ஒரே அணியாக முதலாம் உலகப்போரில் மைய சக்தியை (மையசக்தி என்றழைக்கப்பட்ட நாடுகள்- பல்கேரியா, ஒட்டோமான் பேரரசு, ஆஸ்டிரிய-அங்கேரி, ஜெர்மன் பேரரசு) எதிர்த்தும் இரண்டாம் உலகப்போரில் அச்சு நாட்டு (அச்சு சக்திகள்) அணிகளின் சக்தியை எதிர்த்தும் போரிட்டன. மைய சக்திகள் மைய சக்திகள் அல்லது "மையசக்தி நாடுகள்"' ("Central Powers", (இடாய்ச்சு மொழி: "Mittelmächte"; அங்கேரிய மொழி: "Központi hatalmak"; துருக்கிய மொழி: "İttifak Devletleri" or "Bağlaşma Devletleri"; பல்கேரிய மொழி: "Централни сили") என்பது முதலாம் உலகப்போரில் நட்பு நாடுகள் அமைப்புக்கு எதிராகப் போரிட்ட நான்கு நாடுகளின் கூட்டணியாகும். இந்த அமைப்பில் ஜெர்மன் பேரரசு, ஆஸ்திரிய-அங்கேரியப் பேரரசு, உதுமானியப் பேரரசு மற்றும் பல்கேரிய இராச்சியம் ஆகிய பேரரசுகள் அங்கத்துவம் பெற்றன. இந்நாடுகள் நிலை பெற்றிருந்த இடங்களைப் பொருத்து இப்பெயர் பெற்றது. இந்நான்கு நாடுகளும் "கிழக்கில்" அமைந்த உருசியப் பேரரசு, "மேற்கில்" அமைந்த மூன்றாம் பிரஞ்சு குடியரசு, மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையில் மத்தியில் வீற்றிருந்தமையால் இப்பெயர் பெற்றது. நூறு நாட்கள் குற்றம் நூறு நாட்கள் குற்றம் (Hundred Days Offencive) முதல் உலகப்போர் இறுதிநிலையில் நேசநாட்டு அணியினரால் மையசக்தியினருக்கு எதிராக மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலை "100 நாட்கள் குற்றம்" என அழைக்கப்பட்டது. இத்தாக்குதலினால் "முதல் உலகப்போர்" முடிவுக்கு வந்தது. இந்த "100 நாட்கள்" தாக்குதல் எதையும் சிறப்பு நிகழ்வையோ, சிறப்பு செய்தியையோக் கொண்டிருக்கவில்லை மாறாக அமீன்ஸ் போரிலிருந்து துவங்கி "100 நாட்கள்" வரை தொடர்ந்து போர் புரிந்ததினால் நேசநாட்டு அணியினருக்கு ஏற்பட்ட வெற்றியை மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போரை "வெற்றிமுகத் தாக்குதல் " (Advance to Victory) எனவும் குறிப்பிடுகின்றனர். இத்தாக்குதல் ஆகஸ்டு 8, 1918, முதல் தொடங்கி நவம்பர் 11, 1918, வரை நடைபெற்றது. கார்த்திகை நவீன நடனம் நவீன நடனம் எனப்படுவது 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்குலகில் வளர்ந்த நடனப் பாணி ஆகும். மேற்குநாட்டு செவ்வியல் நடனத்துக்கு (Ballet) எதிர் வடிவமாக இந் நடனம் தோன்றியது. செவ்வியல் நடனத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய நுணுக்கங்களை,அணிகலன்கள், காலணிகள் விலக்கி, படைப்பாற்றல் மிக்க தனி மனித வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து இந்நடனம் வளர்ந்தது. அக்ரூட் அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டு என்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது. முந்திரி முந்திரி அல்லது மரமுந்திரி ("Anacardium occidentale") என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது. முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது.. இதனை "முந்திரி ஆப்பிள்" எனவும் அழைப்பர். முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டை யில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும். Anacardium என்ற பெயரானது முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். ana என்பது "மேல்நோக்கிய" என்ற பொருளையும், cardium என்பது "இதயம்" என்ற பொருளையும் குறிக்கின்றது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்பை ஒத்த பழத்தையுடைய மரமாக இருப்பதனால் Anacardium என்ற பெயரைப் பெற்றுள்ளது. முந்திரிக்கொட்டையானது போர்த்துகீச மொழியில் கஜூ (Caju) என்ற பெயரைக் கொண்டிருப்பதனால், கஜூ என்ற பெயரும் பேச்சுத் தமிழில் பயன்பாட்டில் உள்ளது. போர்த்துகீச மொழியில் Caju எனப்படும் சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Cashew என்ற பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. போர்த்துக்கீச மொழியில் கஜூ என்ற பெயரானது, Tupian மொழியிலுள்ள acajú என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. Tupian மொழியில் acajú என்பது "தன்னைத் தானே உருவாக்கும் கொட்டை" என்ற பொருளில் அமைந்துள்ளது. பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும். ஆனால் இந்த முந்திரிக்கொட்டை நாம் முந்திரிப்பழமென அழைக்கும் பகுதிக்கு வெளியாக அமைந்திருப்பதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இம்மரமானது தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், பின்னர் 1560- 1565 ஆண்டளவில்போர்த்துக்கீசரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பரம்பல் அடைந்தது இம்மரம் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இது வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் அதிகப்படியான விளைச்சலும் அதற்கு அடுத்தபடியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. முந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும். இது உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பாக இருப்பதுடன், இனிய வாசனை ஒன்றையும் தரும். இது மிக மெல்லிய தோலுடையதாகவும், இதன் சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லல் கடினமாகும். இதிலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது. இதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர்.வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்.போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தாவரவியலாளர்களின் பார்வையில் உண்மையான கொட்டை இல்லாவிட்டாலும் கூட, சமையல்சார் நிலையில் கொட்டை எனவே அறியப்படுகின்றது. இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள் சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன் புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவதானத்துடன் செய்யப்பட வேண்டும். சிறுவர் இலக்கியம் சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும். சித்திரக் குள்ளன் சித்திரக் குள்ளன் 1950 களில் தமிழ்நாட்டில் வெளிவந்த தமிழ் சிறுவர் இதழ். சிறுகதை, வரைகதை, பொது அறுவுப் போட்டி, நகைச்சுவை என பல படைப்புகளுடன் இது வெளிவந்தது. இதன் சில இதழ்கள் தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்துக்தில் இணையத்தில் கிடைக்கின்றன. முயல் (சிறுவர் இதழ்) முயல் 1970 களில் தமிழ்நாட்டில் வெளிவந்த தமிழ் சிறுவர் இதழ். வரைகதை, சிறுகதை, புதிகள், கணக்கு, தகவல் என பல தரப்பட்ட படைப்புகள் இதில் வெளிவந்தன. இதன் சில இதழ்கள் தமிழர் நால் ஒரு நூல் திட்டத்தில் இணையத்தில் கிடைக்கின்றன. மொழி வரலாறு மொழி வரலாறு என்பது மனிதர் எப்போது மொழியைப் பயன்படுத்த தொடங்கினர் என்பது பற்றியும், குறிப்பிட்ட மொழிகள் எப்போது தோன்றி மருபின என்பது பற்றியதும் வரலாறு ஆகும். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. இந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். விண்வெளித் தொழிற்துறை விண்வெளித் தொழிற்துறை என்பது வானூர்தி, ஏவுகணை, செய்மதி, விண்கலம், விண் ஆய்வுகலம் (probes), விண் தொலைநோக்கி, விண்வெளி நிலையம் போன்றவற்றை வடிவமைத்தல், உற்பத்திசெய்தல், பரிசோதித்தல், ஏவுதல், பராமரித்தல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட தொழிற்துறை ஆகும். இத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது. 1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது. தமிழ் சிறுவர் இலக்கியம் தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள சிறுவர் இலக்கியம். பண்டைத் தமிழ் இலகியத்தில் அங்காங்கே சில படைப்புக்கள் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருந்த தென்றாலும், 19 நூற்றாண்டிலேயே சிறுவர்களை வாசர்களாகக் கொண்ட இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. 20 நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. மகர ஒளி மகர ஜோதி ("Makara Jyothi") வானத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14 ல் மாலை 6.30 மணி அளவில் மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று தோன்றும் நட்சத்திரம். கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு நேர் எதிரே கண்டமாலா மலை முகட்டில் இது தோன்றுவதாக ஆதரமற்ற செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தைக் காண வழிபாட்டாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலை செல்கின்றனர். இது குறித்து பல சர்ச்சைகள், பல்வேறு கருத்துக்கள் உள்ளன. தற்பொழுது இந்த நட்சத்திரம் தெரிவதில்லையென்றும் தற்பொழுது தெரிவது மகரவிளக்கு என்றும் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் இது குறித்து சில மூடநம்பிக்கை கருத்துக்களும் நிலவுகின்றன. சபரிமலைக்கு எதிரே உள்ள கொச்சுபம்பா என்னும் ஊரின் அருகே உள்ள பொன்னம்பலமேடு என்னும் மலைப்பகுதியில் மனிதர்களைக் கொண்டு கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகரஜோதியாக தெரிகிறது என்று கூறுகின்றனர். இவை மூன்று முறை ஈரசாக்குப்பைகளால் அணைக்கப்பட்டு மீண்டும் எரியவைத்துக் காட்டப்படுகிறது. இப்பணியிணை மேற்கொள்பவர்கள் கேரள மின்துறை ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. இம்மலையின் அருகில்தான் கொச்சுபம்பா மின்னேற்று நிலையம் உள்ளது. இங்கு கொச்சுபம்பா அணையிலிருந்து நீர்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வழியாகத்தான் பொன்னம்பலமேட்டிற்கு செல்லவேண்டும். இவ்விடம் கேரள வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினரால் அந்நியர்கள் பிரவேசிக்கா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களால் பொன்னம்பலமேட்டில் கற்பூரத்தை எரியவைத்து சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு தீபமாக காட்டப்படுவதை கேரள அறநிலையத்துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டுள்ளது. இது மகர ஜோதியல்ல மனிதர்களால் எரியவைத்து ஏற்றிக் காட்டப்படும் கற்பூரதீபமே எனக் கூறுகின்றனர். இதையே மக்கள் மகரஜோதியாக நினைத்து வழிபடுகின்றனர். ஆனால் இது கேரள மாநிலத்தில் உள்ள பலருக்குத் தெரியும் எனவும் கூறப்படுகிறது. ஒரு சில வழிபாட்டாளர்களால் மட்டுமே இது தவறுதலாக புரிந்து கொள்ளப்படுகிறது எனக் கேரள தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர். பொன்னம்பலமேட்டில் பண்டைய காலத்தில் கோவில் இருந்ததால் அவ்விடத்தில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது இதுவே மகரஜோதியாக ஒவ்வோரு வருடமும் ஜனவரி 14 அன்று சபரிமலையில் தெரிகிறது. சபரிமலை குறித்த நிறைய சர்ச்சைகள் வழக்குகளாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளின் விசாரனையின் போது கேரள உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், இது மனிதர்களால் ஏற்றப்படுவது என கேரள அறநிலையத்துறையும் கோவில் நிருவாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று கேரளமாநில உயர்நீதிமன்றத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்துள்ளது. மீன் குடும்பங்களின் பட்டியல் இது மீன் குடும்பங்களின் அறிவியல் பெயர்களின் பட்டியலாகும். இது முழுமையானது அல்ல. நியூரம்பெர்க் தீர்ப்பாயம் நியூரம்பெர்க் தீர்ப்பாயம் (Nuremberg Trials) நாசி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் முரண்பாட்டுத் தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர்க் தீர்ப்பாயம். பன்னாட்டு இராணுவ நடுவர் மன்றம் ஜெர்மனி நியூரம்பெர்க் நகரில் 1945 க்கும் 1946 க்குமிடையே "நீதி அரண்மணையில்" (ஜஸ்டிஸ் பேலஸ்-Palace of the Justice) ஏற்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட "சர்வதேச இராணுவ நடுவர் மன்றத்தின்" (International Military Tribunal) முன் ஏராளமான "யுத்த விதி மீறல்" குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர். முதல் விசாரணை இதன் முதல் விசாரணையில், குறிப்பிடத்தக்கவர்களாக , பிடிபட்ட நாசி ஜெர்மனித் தலைவர்கள் "21 பேர்" குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். முதல் விசாரணைக் கூட்டம் நவம்பர் 20, 1945, முதல் அக்டோபர் 1, 1946, வரை நடைபெற்றது. இரண்டாவது விசாரணை இதன் இரண்டாவது விசாரணை குறைந்த குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்ட குற்றவாளிகளை ஐக்கிய நாடுகள் நியூரம்பெர்க் இராணுவ நடுவர் மன்றம்" சட்ட எண் 10" ன் கீழ் நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையம் "மருத்துவர்கள் தீர்ப்பாயம்" மற்றும் "நீதிபதிகள் தீர்ப்பாயங்களை" உள்ளடக்கியது. கருத்து வேறுபாடு சமீபத்தில் ஜனவரி 2, 2006 அன்று பிரித்தானிய யுத்தக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூன்று நாடுகளுக்கும் எழுந்த மூக்கூட்டு ஒப்பந்த சர்ச்சைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணைக் குறித்து மூன்று நாட்டுத் தலைவர்களும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர் என்பதை தெளிவக்கியுள்ளது. சர்ச்சிலின் மனிதநேயம் பல நேரங்களில் வின்சன்ட் சர்ச்சில் யுத்தக்குற்றத் தண்டணையளிப்பில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவருடைய நோக்கம் மனித நேயம் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டும், ஜோசப் ஸ்டாலினும் ஜெர்மானியர் பலரை தண்டிப்பதிலேயே இருந்தது என்று கூறப்படுகிறது. முள்வால் வகையி அக்காந்துரைடீ (Acanthuridae) அல்லது "முள்ளுடம்பிகள்" என்பன ஒரு மீன் குடும்பம் ஆகும். அறிவியற்பெயரில் உள்ள அக்காந்த்தசு (acanthus) என்னும் சொற்பகுதி கிரேக்க மொழியில் "முள், கூரிய முள்" என்னும் பொருள் கொண்டது. இக் குடும்பம், ஆறு பேரினங்களில் ஏறத்தாழ 80 இனங்களை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலும், பவளப் பாறைகளுக்கு அருகே, வெப்பவலயக் கடல் பகுதிகளில் வாழும் கடல் மீன்கள் ஆகும். இவற்றுட்பல ஒளிரும் நிறங்களைக் கொண்டவை. அதனால், தொட்டிகளில் வளர்ப்பதற்கு விரும்பப்படுகின்றன. வால் பகுதியில் பக்கத்துக்கு ஒன்று அல்லது பலவாக அமைந்திருக்கும் முதுகெலும்பு முட்கள் இக் குடும்பத்துக்குரிய தனித்துவமான இயல்பு ஆகும். இம் முட்கள் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்குக் கூர்மையானவை. முதுகுத் துடுப்பு, குதத் துடுப்பு ஆகிய இரண்டுமே பெரியவை. உடலின் நீளத்தின் பெரும்பகுதி வரை நீண்டிருப்பவை. சிறிய வாயில் ஒற்றை வரிசையில் பற்கள் காணப்படுகின்றன. இவை அல்காக்களை உண்பதற்குப் பயன்படுகின்றன. குடும்பம் (உயிரியல்) உயிரியல் வகைப்பாட்டில் குடும்பம் என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும். வரிசை, பேரினம் ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப் பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சு நாட்டுத் தாவரவியலாளரான பியரே மக்னோல் என்பவர் 1689 ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் தான் அட்டவணைப்படுத்திய 76 தாவரக் குழுக்கள் ஒவ்வொன்றையும் "familiae" (குடும்பம்) என்று குறிப்பிட்டார். வகைப்பாட்டுப் படிநிலைகள் பற்றிய கருத்துரு தொடக்க நிலையிலேயே இருந்தது. மக்னோல், தான் வகைப்படுத்திய குடும்பங்களில் சிலவற்றை ஒன்று சேர்த்து "genera" என்னும் படி நிலைகளை உருவாக்கலாம் என கருதினார். இது இக்காலத்துப் "genera" "(பேரினம்)" என்னும் படிநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்காலத்து "குடும்பம்" என்னும் படிநிலையை ஒத்த பயன்பாடு முதன் முதலாக ஏர்ன்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. தமிழில் சமசுகிருதத்தின் பாதிப்பு மொழியில் மாற்றம் இயல்பானது. அருகாமையில் உள்ள மொழிகளும், செல்வாக்கு உள்ள மொழிகளும், மாறும் தேவைகளும் ஒரு மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒலியியல், எழுத்துமுறை, உருபனியல், தொடரியல், பொருளியல், சொற்கள், இலக்கணம், இலக்கியம், பேச்சு என ஒரு மொழியின் எல்லா பிரிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம். தமிழ் மொழி அதன் நீண்ட வரலாற்றில் பல மொழிகளுடன் தொடர்பு கொண்டு வெவ்வேறு முறைகளில் மாற்றம் கண்டிருக்கிறது. இக் கட்டுரை தமிழ் மொழியில் சமசுகிருதத்தின் பாதிப்பு பற்றியதாகும். தமிழ் மீது சமசுகிருதத்தின் பாதிப்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்துள்ளது. சங்க காலத்திலேயே தமிழுக்கும் வட மொழிகளுக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து வந்த சொற்களைக் குறிக்கிறது. 7 ம் நூற்றாண்டு வரை தமிழில் சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மூலம் கொண்டவை. கிமு 250 ஆண்டளவில் தமிழ் மொழி எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.ஆனால் சமசுகிருதம் கிபி 1-3 காலப்பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான ஆதாரங்களே உள்ளன. ஆகையால் தமிழுக்கு சமசுகிருதுக்கு இணையான, அல்லது அதை விட தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது. அன்று வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருத அல்லது பாலி சொற்கள் பண்டைத் தமிழ் மொழியில் சேர்ந்தன எனலாம். "கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமசுகிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்கிறது." இக்காலத்தில் சமசுகிருதம் அரசியல், சமய, கல்வி, தத்துவச் செல்வாக்கைப் பெற்றிருந்தது. "முதன்மைக் கட்டுரைகள்: மணிப்பிரவாளம், கிரந்தம், மலையாளம்" கிபி 11 நூற்றாண்டில் தமிழ் சமசுகிருத மொழிகள் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சமசுகிருதம் இறைவனுடைய மொழியாக பேற்றப்பட்ட, இக்காலத்தில் இந்நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையை உருவாக்கியது. இராமனூசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் என பல தமிழ் சமயப் பெரியோர்கள் இந்நடையிலியே எழுதினர். இந் நடை 15-ம் நூற்றாண்டு வரை அதிக செல்வாக்கோடு வழக்கில் இருந்தது. இதனால் தமிழ் மொழி ஒரு பெரும் இலக்கிய பங்களிப்பை இழந்தது. அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது. கிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரத் தொடங்கினர். இவ்வாறு போர்த்துகீச நாட்டில் இருந்து வந்த என்றீக் என்றீக்கசு தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை 1554 ம் ஆண்டு முதன் முதலாக அச்சடித்து வெளியிட்டார்.. கிறித்தவத்தின் வரவு சமசுகிருதம் பெற்றிருந்த இறை மொழி என்ற நிலையை அச்சுறுத்தியது. "முதன்மைக் கட்டுரை: தனித்தமிழ் இயக்கம்" 18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமசுகிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர். வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்பு சமனாக பெரும்பாலும் இருக்கவில்லை. சமசுகிருதம் தமிழ்மொழி மீது அதிகாரமும் செலுத்தியது. இதை பன்மொழி ஆய்வாளர் மு. வரதராசன் பின்வருமாறு கூறுகிறார். சிற்றறைச் சிறை சிற்றறைச் சிறை (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 1906 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவில் காலணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது 1896 ஆம் ஆண்டு இச்சிறை ஆரம்பிக்கும் முன்னரே 1857 களில் இங்கு இந்தியர்களை நாடு கடத்தும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் கொடுமைப்படுத்தப்பட்டும், பீரங்கிகளின் முன்னால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் பலர் இங்குள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டும் அழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது. சுமார் "200 விடுதலை" போராட்ட வீரர்கள் நாடு கடத்தப்பட்டு மேஜர் ஜேம்ஸ் பாட்டிசான் வாக்கர் என்ற மருத்துவர் மற்றும் ஆக்ரா சிறைக்காவலராக பணிபுரிந்தவர் தலைமையின் கீழ் இங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவருக்கு உதவியாக மேலும் "733 பேர்" கராச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். 1868 களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பர்மா (தற்பொழுது மியான்மர்) கைதிகள் இங்கு அடைக்கப்பட்டனர். மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர் தூண்டுதலினால் 1857 ல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் இத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இதன் கட்டுமானம் 1896 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1906 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. இக்கட்டடம் "ஏழு பக்கப்பகுதிகளாகப்" பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் "அபாய மணியும்" வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது. "ஏழு" பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் "3 அடுக்குகள்" கொண்டதாக "படுக்கைகளற்ற" "698 சிறைகளாகப்" பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் "4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம்" கொண்டதாக இருந்த்து." 3 மீட்டர் உயரம்" கொண்டதாக இருந்தது. "ஒற்றையான மற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில்" அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு "சிற்றறைச் சிறை" (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறைவாசம் அனுபவித்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக டாக்டர். திவான் சிங் காலேபாணி, மவுலானா பஜூல் அக் கைராபதி, யோகேந்திர சுக்லா, மவுலானா அகமத்துல்லா, மோவிலி அப்துல் ரஹிம் சாதிக்புரி, வினாயக் தாமோதர் சாவர்க்கர், பாய் பரமானந்த், சோகன் சிங், வாமன் ராவ் ஜோஷி மற்றும் நந் கோபால். மார்ச், 1868 இல் இங்குள்ள சிறைவாசிகள் 238 பேர் தப்பிக்க முயன்று மீண்டும் ஏப்ரலில் பிடிபட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டார். மீதமுள்ளவர்களில் "87 பேர்" சிறைக் கண்காணிப்பாளர் (Superintendent) வாக்கர் ஆணையின்படி தூக்கிலிடப்பட்டனர். மாகாத்மா காந்தி 1930 களில் இரவீந்தரநாத் தாகூருடன் இங்கு நடக்கும் "மனிதவுரிமை மீறல்களுக்காக" பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1937-38 களில் பிரித்தானிய அரசு இங்குள்ள அரசியல் சிறைவாசிகளை தாயகம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 1942 ம் ஆண்டு ஜப்பானியர்களின் படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் "ஏழு சிறைப் பக்கப் பிரிவுகளுள்" இரண்டு இடிக்கப்பட்டன. 1945 ல் இரண்டாம் உலகப்போரின் முடிவில் மீண்டும் பிரித்தானியர் இத்தீவைக் கைப்பற்றினர். இந்தியா விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் இரண்டு மீண்டும் இடிக்கப்பட்டன. இது பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது. இதனால் 1969 இல் இதன் மீதமுள்ள கோபுரமும் மூன்று சிறைப் பக்கப்பகுதிகளும் தேசிய நினைவுச்சின்னமாக விளங்குகிறது. 1963 இல் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனை இங்குள்ள நகரவாசிகளுக்காக நிர்மானிக்கப்பட்டு தற்பொழுது வரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன் நுற்றாண்டு விழா மார்ச் 10,2006 அன்று இந்திய அரசால் கொண்டாடப்பட்டது. 2004 ல் சுனாமி பேராழித் தாக்குதலில் இந்நகரம் பாதிக்கப்பட்டபோது இச்சிறையும் பாதிப்புக்கள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தமான் சிற்றறைச் சிறையை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது இந்திய அரசு. அச்சிறையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான சிறைக் கைதிகளை ஆங்கிலேயர்கள் நடத்திய முறைகள் குறித்தும், சிறைகள் பற்றிய விவரங்களும் சிறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை மகாத்மா காந்தி' ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே வால் சுட்டுக்கொல்லப்பட்டது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை என்று கூறப்படுகிறது. 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்று , 6 வது முறை அவர் கொலை செய்யப்பட்டார் . ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர். காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 1944, காந்தி "அகா கான் அரண்மணை" சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் "20 இளைஞர்களுடன்" சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர். காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர்.அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர் . அமெரிக்க மாந்தல் மீன்கள் அக்கிரைடீ (Achiridae) என்பது அமெரிக்காக்களின் கடல்களிலும், நன்னீரிலும் வாழும் தட்டைமீன்களைக் கொண்ட குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 6 பேரினங்களைச் சேர்ந்த 35 இனங்கள் உள்ளன. இவை "சொலிடீ"க்களுக்கு நெருங்கிய உறவுடையவை. ஆனாலும் ஆக்கிரைடீக்கள் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை. இவைகளைப் பொதுவாக அமேரிக்கன் சோல்கள் என விளிக்கப்படுகிறது. கண்கள் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. கண்கள் இருக்கும் பக்கத்தில் உள்ள கீழுதட்டுப் பகுதி தசைப் பிடிப்பான வளையத்தைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பும், குதத் துடுப்பும் வழமையாக வால் துடுப்பிலிருந்து வேறாகக் காணப்படும். முன் துடுப்பு (மார்புச் செட்டை) சிறிதாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கக்கூடும். அலெஸ்ட்டீடீ அலெஸ்ட்டீடீ "(Alestidae)" என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கராசிபார்மசு மீன் வகையைச் சேர்ந்தவை. இக் குடும்பத்தில் 110 இனங்களைக் கொண்ட 18 பேரினங்கள் உள்ளன. காங்கோ டெட்ரா (Congo tetra), ஹைட்ரோசைனசு (Hydrocynus) என்பன இக் குடும்பத்தில் மிகவும் அறியப்பட்ட மீன்களாகும். போக்குவரத்து தலைப்புகள் பட்டியல் விண்வெளிப் பயணம் தலைப்புகள் பட்டியல் The best funded space agencies are: உருசியாவில் இனவாதம் உருசியாவில் இனவாதம் என்பது உருசியாவில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் ஆகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்புடுகையில் உருசியாவில் இனவாதம் பலமடங்கு கொடுமையாக உள்ளது. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்களும் படுகொலைகளும் வழமையாக இடம்பெறுகிறது. பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கைகளின் படி 28 நபர்கள் 2005 இல் இனவாதிகளால் கொல்லப்பட்டார்கள். 2006 இல் 252 தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டது, இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 2007 இல் 31 பேர் கொல்லப்பட்டனர். அந்த அறிக்கையில் உருசிய காவல்துறையினர் முறைப்பாடுகளைக் ஏற்று செயல்படவில்லை என்றும், இனவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. Moscow Human Rights Bureau அறிக்கையின் படி 2008 இல் 49 பேர் கொல்லப்பட்டார்கள். உருசியாவில் 50,000 -70000 நியோ நாசிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.. இவர்களின் கருத்தியல் பின்னணி செருமெனிய நாசி, ஐக்கிய அமெரிக்க குகுகு அமைப்பு ஆகியவற்றுடன் ஒத்தது, இணைந்தது. வெள்ளை ஆரிய மேலாண்மை இவர்களின் அடிப்படை வாதம். இதர இனத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது அடங்கி ஒதுஙகி வாழவேண்டு என்பது இவர்களது நிலைப்பாடு. திகம்பர் பேட்ஜ் திகம்பர் பேட்ஜ் ("Digambar Badge") இந்திய இந்து தீவிர அரசியல் கோட்பாடு கொண்டவர். இந்து மகாசபையின் உறுப்பினர். மாகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களில் இவரும் சம்பந்தப்பட்டவர். காந்தி கொலை வழக்கில் கைதான இவர் 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் விசாரணையின் பொழுது "குற்ற ஒப்புதல் வாக்குமூலம்" (அப்ரூவர்-Approver) அளித்து குற்றவாளிகளின் சாட்சியாக மாறியவர். இவரின் முழு மனதுடன் மன்னிப்புக் கோரும் நோக்குடன் கொலைச் சதிச் செயல்களை அம்பலப்படுத்தியதன் விளைவாக காவல்துறையின் முழு வழக்கும் முடிவுக்கு வந்தது. நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயில் சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நேரூரில் அமைந்துள்ளது. நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது. சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார். ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார். புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை. பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.) இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார். நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது. நெருர் சதாசிவ பிரமேந்திரர் கோயில், கைலாச ஆஸ்ரமத்தின் சார்பில் http://www.srikailashaashramam.org என்ற இணையதளம் செயல் பட்டு வருகிறது தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவ்வாரே மாநகர்மன்ற தலைவரும்(மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவர் மாநகராட்சி மன்றத்துணைத் தலைவராகப் பதவியேற்கின்றார். மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார். மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி மன்றதலைவர் மக்கள் மூலமே நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். மன்ற உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார். இவருக்கு உதவியாக ஊராட்சி எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 12618 ஊராட்சிகள் இருக்கின்றன. மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி மன்றங்கள் பல சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன. மாநகராட்சிகளில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் மாநகராட்சிக்கு ரூபாய் 25 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று நகராட்சிகளில் முதலிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 15 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள பேரூராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று பேரூராட்சிகளில் முதலிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 3 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். வூரியே மாற்று வூரியே மாற்று ("Fourier Transform", "ஃபூரியே மாற்று") ) என்பது நேரம் சார்ந்த சமிக்ஞைகளை அலையெண் சார்ந்த சமிக்ஞைகளாக மாற்றும் முறை. கணிதத்தில், மின்னியலில், இதர பல பொறியியல் துறைகளில் வூரியே மாற்று ஒரு முக்கிய நுணுக்கம் ஆகும். பல சிக்கலான சார்புகளை மாற்றி எளிதாக ஈடாக விபரித்து கணிக்க இது உதவுகிறது. வூரியே மாற்று மூலம் எந்த ஒரு சுழற்சி குறிப்பலையும் அல்லது எந்த ஒரு சார்புகளையும் எளிய சைன் மற்றும் கோசைன் அலைகளின் கூட்டாக விபரிக்க முடியும். வூரியே மாற்று ஒரு நேர ஆட்கள சார்பை அதிர்வெண் ஆட்கள் சார்பாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றும் பொழுது நேர ஆட்களத்தில் சிரமாக இருந்த கணித செயற்பாடுகள் அதிர்வெண் ஆட்களத்தில் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது. கணிதத்திலும் பொறியியலும் இக் கணித செயற்பாடுகளை எளிமையாக செய்யவே ஒரு சார்பை அல்லது கணக்கை வூரியே மாற்றுச் செய்வர். விடை கிடைத்தவுடன் பின்னர் நேர்மாறான செயற்பாட்டின் மூலம் நேர ஆட்களத்துக்கு மாற்றுவர். குறிகைச் செயலாக்கம் குறிகைகளைத் தேவைக்கேற்ப பகுத்தும் தொகுத்தும், மிகைப்பித்தும், பிற அலைகளோடு கலந்தும், தேவையில்லாத இடையூறலைகளையும், இரைச்சல் அலைகளையும் களைந்தும், பல்வேறு வகையாகப் பணிக்கு ஏற்றவாறு முறைவழியாக்குதல், குறிப்பலைப் பதப்படுத்தல் (singal processing) எனப்படும். மாதிரியெடுப்பு தோற்றம் மாதிரி எடுப்பு தோற்றம் Sampling Theorm) என்பது தகவல் கோட்பாட்டின் ஒரு அடிப்படை முடிவு ஆகும். இம் முடிவு ஒரு ஒப்புமைக் குறிகையை எப்படி முழுமையாக மீளுருருவாக்குது என்று கூறுகிறது. அதன் வரையறை பின்வருமாறு: "ஒரு குறிகைச் சார்பில் அதி கூடியதாக B அலை/நெடி அதிர்வெண் இருந்தால், அந்த குறிகையை மீள் உருவாக்குவதற்கு 2 B மாதிரி/நொடி மேல் மாதிரி தரவுகள் எடுத்தால் போதுமானது என்பதாகும். " சொட்டாக்கம் சொட்டாக்கம் என்பது ஒரு தொடர்நிலை அல்லது ஒப்புமை குறிகையின் தொடர் மதிப்புகளை குறைவான படி எண்களைக் கொண்டு குறிக்கும் முறை ஆகும். ஒரு ஒப்புமை குறிகையை எணிமியக் குறிகையாக மாற்றுவதற்கு இது ஒரு அடிப்படை செயற்பாடாகும். ஒரு ஒப்புமைச் குறிகையை முழுமையாக எண்மியப்படுத்த சானோன் மாதிரிப்படியெடுப்பு வீதத்தில் அதன் வீச்சை கிட்டிய குறிப்பிட்ட சொட்டாக்க படி எண்களால் குறிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அந்த ஒப்புமை குறிகைக்கு இணையான எண்மிய குறிகை கிடைக்கும். தகவல் கோட்பாடு தகவல் கோட்பாடு கணிதம், மின்னியல், கணினியியல், தொடர்பியல், குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளில் ஒர் அடிப்படைக் கோட்பாடு. தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. இக் கோட்பாட்டை அவர்கள் விருத்தி செய்தார். இவரது 1948 ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை எ மேத்தமடிக்கல் தியரி ஆப் கம்யூணிகேசன் (A Mathematical Theory of Communication) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகப் அமைந்தது. துடிப்பு குறி பண்பேற்றம் துடிப்பு குறி பண்பேற்றம் என்பது ஒப்புமைக் குறிகையை எண்மியப்படுத்தி பண்பேற்றும் முறை ஆகும். முதலில் ஒப்புமைக் குறிகை தேவையான இடைவெளியில் மாதிரியெடுக்கப்பட்டு, அதன் வீச்சுக்கள் ஏற்ற செட்டாக்க படி எண்களுக்கு குறிக்கப்படும். பின்னர் அந்த எண்கள் இரும குறிறேற்றப்படும். எ.கா அருகில் உள்ள சைன் அலையை நோக்குக. சொட்டாக் எண்கள் 7, 9, 11, 12, 13, 14, 14, 15, 15, 15, 14... என வரும். இதை இரும எண்களாக பின்வருமாறு குறியேற்றப்படும் 0111, 1001, 1011, 1100, 1101, 1110, 1110, 1111, 1111, 1111, 1110. கோபால் கோட்சே கோபால் வினாயக் கோட்சே (பிறப்பு-1919- இறப்பு நவம்பர் 26,2005), நாதுராம் கோட்சேவின் உடன்பிறந்த இளைய தமையனார் (தம்பி) ஆவார். ஜனவரி 30, 1948, ல் நிகழ்ந்த மாகாத்மா காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் கடைசியாக 2005 ம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்தவர் இவர் மட்டுமே. இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புனேவை உறைவிடமாகக் கொண்டு உயிர் வாழ்ந்தவர். இவருடைய தமையன் நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதற்காகவும் இவருடன் கொலைச்சதியில் பங்குகொண்டமைக்காக நாராயண் ஆப்தேவுடன் சேர்த்து நவம்பர் 15, 1949 ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவரான இவரும் பெப்ரவரி 5, 1948 ல் கைது செய்யப்பட்டு "18 வருடம் ஆயுள் தண்டணைப்" பெற்றார். இவர்கள் மூவரும் காந்தி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணியதால் இக்கொலைச் செயல் புரிந்தனர். "கோபால் கோட்சே" 1998 ல் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் "காந்தி கொல்லப்பட்டதற்காக நான் என்றும் வருந்தியதில்லை அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதை இன்றும் வெறுக்கின்றேன்" என்று பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்மியம் பெர்மியம் ("Fermium") ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Fm. இதன் அணுவெண் 100. இது கதிரியக்கமுள்ள உலோகத் தன்மையுள்ள இத்தனிமம், புளுட்டோனியத்தை நியூத்திரன்களால் மோத விட்டு உருவாக்கப்படுகிறது. இயற்பியலாளர் என்றிக்கோ பெர்மியின் நினைவாக இத்தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது. மிகவும் குறைந்த அளவே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் பண்புகள் அல்லது அல்லது இயல்புகள் பெருமளவில் அறியப்படவில்லை. அடிப்படை ஆய்வுகளைத் தவிர பெர்மியத்தின் பயன்பாடுகள் எதுவும் இல்ல. வினாயக் தாமோதர் சாவர்க்கர் வீர் சாவர்க்கர் (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது. ஆங்கிலேயர் கொடுத்த இந்தத் தண்டனையில் இருந்தே அவர் எந்த அளவுக்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நாம் அறியலாம். அவர் ஆங்கிலேயரை உண்மையாக எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார்.(சான்றுகள் தேவை).. இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ் பாரத் சங்கமும் , லண்டனில் சுதந்திர இந்திய சங்கமும் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார். இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார்.இந்து மகா சபையையும் உருவாக்கி விட்டு தீண்டாமையையும் ஒழிக்க பாடுபட்ட அதி புத்தி கூர்மை உடையவராவார்..எனவே இவர் அறிவை கண்ட வெள்ளை மனிதர்களான ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர்... வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த் சாவர்க்கர், ராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார். 1898-ல் மகாராஷ்டிராவில் ராண்ட் மற்றும் ஐர்ஸ்ட் ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார். 1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-ல் ஃபெர்குஸன் கல்லூரியில் சேர்ந்தார். புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் ஸ்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை அவர் உலக அளவில் நடத்தினர். இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909-ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு வெவ்வேறு புத்தக அட்டைகளுடன் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்பனை ஆயின. இது ஓர் அலையையே ஏற்படுத்தியது. பிரிட்டிஷாரின் கணக்குப்படி ஒரு புத்தகம் ஆறு பேரால் படிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இதன் தமிழ் பதிப்பு சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழ் வீரர்களால் வேதம் போல் படிக்கப்பட்டது என்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். இது பஞ்சாபி, உருது மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. 1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன் லால் டிங்கரா லண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் கலெக்டர் ஜாக்சன், ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்த வழக்கு Permanent Court of International Arbitration-ல் பிரிட்டிஷ், பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நடந்தது. பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. சாவர்க்கரைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்கா, சீனா, அயர்லாந்து, எகிப்து நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரபஞ்சமே கிடுகிடுத்துப் போனது. உலகம் அழிவை சந்திக்க காத்திருக்க வேண்டிருந்தது.. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் காந்தியின் படுகொலைக்கு பின்னர் படுகொலையாளியான நாதுராம் கோட்சேவும் அவனது கூட்டாளிகளும், கூட்டுசதிகாரர்களும் கைது செய்யப்பட்டனர். கூட்டுசதி செய்ததாக சாவர்க்கரை சிவாஜி பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பிப்ரவரி 5ஆம் நாள் 1948இல் கைது செய்யப்பட்டார். அந்தமான் சிற்றறைச் சிறை மிகவும் கொடூரமானது. ஓர் அறையின் அளவு சுமார் 13 அடிக்கு 7 அடி மட்டுமே. சுமார் 7 அடி உயரத்திற்கு மேல் ஒரு சிறிய ஜன்னல் வழியே வரும் குறைந்த வெளிச்சம் போதுமானதாக இருக்காது. கடுமையான வேலை, மோசமான சாப்பாடு, மனிதாபிமானமற்ற அடி, உதை, கடுமையான குளிர் போன்றவை அந்தமான் சிறையின் அடையாளங்கள் ஆகும் . சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் இருந்தார். அவர் பாபாராவ் என்று அழைக்கப்பட்டார். அவர் சாவர்க்கருக்கு பக்கபலமாக விளங்கினார். சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்க்கரும் திலகரின் சீடராவார். அந்தமான் சிறையில் சாவர்க்கருக்கு எழுதுவதற்குத் தாளும் பேனாவும் கொடுக்கப்படவில்லை. அவர் சுவரில் கல்லால் எழுதினார். மனதில் மனப்பாடம் செய்தார். இந்தியா வந்த பிறகு அவற்றை எழுதினார். சுதந்திரம் குறித்து மராத்தியில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை. இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால் 1921 மே 2-ல் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார். ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார். இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் வணங்க "பதித பவன்" என்ற கோவிலை ரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று ஏற்படுத்தினார். 1937-லேயே காஷ்மீர் பிரச்சினை வரும் என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்றும் சீனப்போர் பற்றியும் கூறியிருந்தார். 1943 ஆம் ஆண்டு அவரது 61- ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1963- ஆம் ஆண்டு சாவர்க்கரது மனைவி யமுனாபாய் இறந்தார். அவர் சாவர்க்கருக்கு எல்லா விதத்திலும் துணை நின்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமியை சாவர்க்கர் அழைத்து வந்தபோது அவர் அந்த சிறுமியைக் கவனித்துக் கொண்டார். சாவர்க்கருக்கு இரு குழந்தைகள். அவர்கள் விஸ்வாஸ், பிரபா ஆகியோர். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். இது ஆத்ம ஹத்யா அல்ல, ஆத்ம சமர்ப்பணம் முதலான பல நூல்களை எழுதினார். அவர் இறந்தவுடன் இலட்சம் மக்களுக்கு மேல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 2000 RSS சேவகர்கள் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்தினர். சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் 2001-ல் வெளியானது. பேர்சோய்டீ பெரிசோய்டீ (Percoidea) உயிரியல் வகைப்பாட்டில் ஒரு பெருங்குடும்பம் ஆகும். இது மீன்களின் பேர்சிஃபார்மசு என்னும் ஒழுங்கின் துணைப் பகுப்பு. பெருங்குடும்பத்தின் துணைப்பகுப்பு குடும்பம். பெரிசோய்டீ பெருங்குடும்பத்தில் அடங்கும் குடும்பங்கள் பின்வருமாறு: சென்ட்ரோபொமைடீ (Centropomidae)
லட்டைடீ (Latidae)
ஆம்பசைடீ (Ambassidae)
மோரோனைடீ (Moronidae)
லட்டியோலாப்ராசைடீ (Lateolabracidae)
பேர்சிக்தியைடீ (Percichthyidae)
அக்ரோபொமட்டைடீ (Acropomatidae)
செரானைடீ (Serranidae)
ஒஸ்ட்ராகொபரிசைடீ (Ostracoberycidae)
சிம்ஃபிசானோடொன்ட்டைடீ (Symphysanodontidae)
சென்ட்ரோஜெனியைடீ (Centrogenyidae)
காலந்தீடீ (Callanthiidae)
சியூடோகுரோமைடீ (Pseudochromidae)
கிரம்மட்டைடீ (Grammatidae)
பிளெசியோபைடீ (Plesiopidae)
ஒபிசுத்தோகினாத்தைடீ (Opistognathidae)
டைனோபேர்சைடீ (Dinopercidae)
பான்ஜோசைடீ (Banjosidae)
சென்ட்ரார்கைடீ (Centrarchidae)
பேர்சைடீ (Percidae)
பிரியாகந்தைடீ (Priacanthidae)
அப்போகொனைடீ (Apogonidae)
எப்பிகொனைடீ (Epigonidae)
சிலாகைனைடீ (Sillaginidae)
மலகாந்தைடீ (Malacanthidae)
லாக்டாரியைடீ (Lactariidae)
இசுகோம்புரோபைடீ (Scombropidae)
டைனோலெசுட்டைடீ (Dinolestidae)
பொமட்டோமைடீ (Pomatomidae)
நெமட்டைசுடியைடீ (Nematistiidae)
எக்கெனீடீ (Echeneidae)
ராக்கிசென்ட்ரிடீ (Rachycentridae)
கொரிபீனைடீ (Coryphaenidae)
கராங்கைடீ (Carangidae)
மெனைடீ (Menidae)
லீயோகினாத்தைடீ (Leiognathidae)
பிராமைடீ (Bramidae)
கரிசுட்டியைடீ (Caristiidae)
எமெலிக்தியைடீ (Emmelichthyidae)
லுத்யானைடீ (Lutjanidae)
சீசியோனைடீ (Caesionidae)
லோபோட்டைடீ (Lobotidae)
கெரீடீ (Gerreidae)
ஈமுலைடீ (Haemulidae)
இனேர்மியைடீ (Inermiidae)
இசுப்பாரைடீ (Sparidae)
சென்ட்ராகந்தைடீ (Centracanthidae)
லெத்திரைனைடீ (Lethrinidae)
நெமிட்டெரைடீ (Nemipteridae)
பாலினெமைடீ (Polynemidae)
சயீனைடீ (Sciaenidae)
முலைடீ (Mullidae)
பெம்ஃபெரைடீ (Pempheridae)
குளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae)
லெட்டோபிரமைடீ (Leptobramidae)
பாத்திகுளுப்பீடீ (Bathyclupeidae)
மானோடக்டிலைடீ (Monodactylidae)
டாக்சோட்டைடீ (Toxotidae)
டைக்கிஸ்ட்டீயைடீ (Dichistiidae)
டிரெப்பனீடீ (Drepaneidae)
கீட்டோடொன்டைடீ (Chaetodontidae)
பாமகாந்தைடீ (Pomacanthidae)
இனோப்புளோசைடீ (Enoplosidae)
பென்டாசெரோட்டைடீ (Pentacerotidae)
நாண்டைடீ (Nandidae)
பாலிசென்ட்ரைடீ (Polycentridae)
கிஃபோசைடீ (Kyphosidae)
பாராஸ்கோர்ப்பிடைடீ (Parascorpididae)
அரைப்பைடீ (Arripidae)
டெராபான்ட்டைடீ (Terapontidae)
குலீயைடீ (Kuhliidae)
ஆப்லெகினாதைடீ (Oplegnathidae)
பாலிபிரையோனைடீ (Polyprionidae)
பேர்சிலியைடீ (Perciliidae)
ஹோவெலைடீ (Howellidae)
சென்ட்ரோபொமைடீ சென்ட்ரோபொமைடீ "(Centropomidae)" மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. லட்டைடீ லட்டைடீ "(Latidae)" மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. ஆம்பசைடீ ஆம்பசைடீ "(Ambassidae)" மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படும் இக் குடும்ப மீன்கள், ஆசியா, ஓசானியாப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. மோரோனைடீ மோரோனைடீ ("Moronidae") என்பது பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது, நன்னீர், கடல் நீர் ஆகியவற்றில் வாழும் 6 இனங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. இவை பெரும்பாலும், கிழக்கு வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. இக் குடும்ப மீன்கள் பொதுவாக 127 சதம மீட்டர் (50 அங்குலம்) வரை வளர்கின்றன. இவற்றுட் சில 178 சமீ (70 அங்) வரை வளர்வது உண்டு. இவை விளையாட்டு மீன்களாகப் பயன்படுவதால் இவை மிகவும் விலை உயர்ந்தவை. பேர்சிக்தியைடீ பேர்சிக்தியைடீ "(Percichthyidae)" என்பது, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். பேர்சிக்தியைடீ என்னும் பெயர் இம் மீன்வகைகளின் பொதுப் பெயரான "பேர்ச்" என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லும், "மீன்" என்னும் பொருள்படும் கிரேக்கச் சொல்லான "இக்தியோஸ்" என்பதும் இணைந்து உருவானது. இக் குடும்பத்தில் இது வரை 22 இனங்களை உயிரியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வினங்கள் 11 பேரினங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை நன்னீர் மீன்கள் எனினும், சில கடல் மீன்கள். இக் குடும்ப மீனினங்கள் பல ஆசுத்திரலேசியா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. எனினும், இக் குடும்பத்தின் மிகப் பெரிய பேரினமான "சினிப்பேரா" வைச் சேர்ந்த மீனினங்கள் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவை. மேல்மூடி வகையி அக்ரோபொமட்டைடீ "(Acropomatidae)" பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பத்தைக் குறிக்கும். இக் குடும்பம் 33 கடல் மீன் இனங்களை உள்ளடக்கியுள்ளது. இக் குடும்பத்தைச் சேர்ந்த "அக்குரோப்போமா" பேரினத்து மீன்கள் தமது கீழ்ப் பகுதியில் ஒளி உமிழும் உறுப்புக்களைக் கொண்டுள்ளன. எல்லா மிதவெப்ப வலயக் கடல் பகுதிகளிலும், வெப்பவலயக் கடல் பகுதிகளிலும் வாழும் இவை பொதுவாகக் கடலில் பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் காணப்படுகின்றன. இக் குடும்ப மீன்களில் பல அளவில் சிறியவை. பெரும்பாலானவை 15 சதம மீட்டர் நீளத்துக்கு மேல் வளர்வதில்லை ஆயினும், சில 40 சமீ வரை வளர்வதுண்டு. இக் குடும்பத்தில் 7 பேரினங்களுள் அடங்கிய 32 இனங்கள் உள்ளன. செரானைடீ செரானைடீ "(Serranidae)" பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த பெரிய மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 64 பேரினங்களில் அடங்கிய 450 இனங்கள் உள்ளன. இவை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. 110 மில்லிமீட்டர் (4.33 அங்குலம்) நீளம் கொண்ட சிறிய மீனான "செரானசு சப்லிகேரியசு" "(Serranus subligarius)" என்னும் இனத்திலிருந்து, 2.4 மீட்டர் (94.5 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடிய "எப்பினெஃபெலசு இட்டாயாரா" "(Epinephelus itajara)" வரையான இனங்கள் இக் குடும்பத்தில் உள்ளன. ஒளி பொருந்திய நிறங்களைக் கொண்டுள்ள இக் குடும்ப மீன்களில் பல உணவுக்காக வணிக அடிப்படையில் பிடிக்கப்படுகின்றன. இவை, வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிக் கரையோரத் திட்டுகளின் மேல் காணப்படுகின்றன. சில் இனங்கள் தவிர்ந்த "செரனைடீ" குடும்ப மீன்கள் அனைத்தும் ஊனுண்ணிகள். இவற்றுட் பல சிறிய மீன்களை உணவாகக் கொள்கின்றன. இவை மறைந்திருந்து உணவைத் தாக்குகின்றன. பவளத்திட்டுக்களில் மறைந்திருக்கும் இவை அவ்வழியே செல்லும் சிறிய மீன்களைப் பிடிக்கின்றன. ஈயம் ஈயம் () (Lead) ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Pb. இதன் அணுவெண் 82. இது ஒரு மென்மையான‌ உலோகம் அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் நிறப்பொருளாகக் காட்டும். எனினும் வெட்டியவுடன் வெள்ளி போல பளபளக்கும். இதுவே மிகவும் அதிக திணிவுடைய கருவுள்ள நிலைப்புத்தன்மையுடைய (கதிர்த்தொழிற்பாற்ற) தனிமமாகும். இதற்கு அணுவெண்ணில் அடுத்ததாக உள்ள பிஸ்மத் முன்னர் மிகப்பாரமான கதிர்த்தொழிற்பாடற்ற தனிமம் எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் பிஸ்மத் சொற்பளவு கதிரியக்கத்தைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. எனவே ஈயமே நிலையான ஆனால் மிகவும் பாரமான கருவுடைய தனிமமாகும். பிஸ்மத்தின் அரை-வாழ்வுக்காலம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் பல மடங்கு அதிகமாகையால், பிஸ்மத்தே மிகவும் பாரமான ஆனால் நிலையான கருவுடைய தனிமம் என்ற வாதமும் பொது வழக்கில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும். மின்சுற்றுப் பலகைகளிலும், கட்டிடக்கலையிலும், ஈய-அமில மின்கலங்களிலும், துப்பாக்கித் தோட்டாவிலும் ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது. உலர் காற்றில் ஈயம் பாதிக்கப்படுவதில்லை. ஈரக்காற்றில் வெளிப்பட நேரும் ஈயம் ஓரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கிக் கொள்கிறது. ஈய கார்பனேட்டு அல்லது ஈய ஐதராக்சைடு போன்றவை இதனுடைய பகுதிக் கூறுகளாக உள்ளன.. சல்பேட்டு அல்லது குளோரைடுகளும் கூட இதில் கலந்து இருக்கலாம். இப்பாதுகாப்பு அடுக்கு ஈயத்தை தொடர்ந்து காற்றுடன் வினைபடுவதை தடுக்கிறது. காற்று அல்லது ஆக்சிசனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் இது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் எரிகிறது. காற்றில்லா சூழலில் ஈயம் தூய நீரினால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் காற்றில் இது கரையும் தன்மை கொண்ட ஈய ஐதராக்சைடை உருவாக்குகிறது. இதுவே பிளம்போ கரைப்பான் தன்மை என அழைக்கப்படுகிறது. நீர்த்த அமிலங்களுடன் ஈயம் வினைபுரிவதில்லை. சூடான் அடர் கந்தக அமிலத்தில் வினைபுரிந்து கந்தக டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. அடர் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகிறது. குளோரோபிளம்பிக் அமிலம் உருவாகிறது. புளோரின் அறை வெப்பநிலையில் ஈயத்துடன் வினைபுரிந்து ஈய(II) புளோரைடு உருவாகிறது. குளோரினுடனும் இதே வகையான வினை நிகழ்கிறது. ஆனால் இங்கு வெப்பப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. ஏனெனில் உருவாகும் குளோரைடு படலம் தனிமத்தின் வினைத்திறனைக் குறைக்கிறது. உருகிய ஈயம் சால்கோசென்களுடன் வினைபட்டு ஈய(II) சால்கோசெனைடுகளைத் தருகிறது. ஈய மோனாக்சைடு இரண்டு பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது. சிவப்பு α-PbO மற்றும் மஞ்சள் β-PbO என்பன அவ்விரண்டு வகைகளாகும். β-PbO வடிவம் 448 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. இதுவே அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஈயமாகும். ஈய சல்பைடு ஒரு குறைக்கடத்தி மற்றும் ஒளிகடத்தியுமாகும். +4 மற்றும் +2. என்ற இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளை ஈயம் வெளிப்படுத்துகிறது. கார்பன் குழுவிற்கு நான்கு இணைதிறன் பொதுவாகப் பயன்படுகிறது. இரண்டு இணைதிறன் நிலைக்கு கார்பன் மற்றும் சிலிக்கன் தனிமங்களுக்கு அரிதாகப் பயன்படுகிறது. ஈய(II) சேர்மங்கள் ஈயத்தின் கனிம வேதியியலில் தனித்தன்மை வாய்ந்த சேர்மங்களாக உள்ளன. வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களான புளோரின் மற்றும் குளோரின் போன்றவை ஈயத்துடன் வினைபுரிந்து PbF2 மற்றும் PbCl2 சேர்மங்களை மட்டும் தருகின்றன. ஈய(II) அயனிகள் பொதுவாக கரைசலில் நிறமற்று காணப்படுகின்றன. ஈயமானது நீலநிறங்கலந்த வெள்ளி போன்ற பளபளப்புடைய உலோகமாகும். வளியுடன் இது தொடுகையடைந்தால் சிறிது நேரத்துக்குள் தன் பளபளப்பை இழக்கின்றது. பல்வேறு சேர்வைகளின் கலவையாக ஒரு சாம்பல் நிறப்படை உலோகம் மேல் தோன்றுகின்றது. இப்படையில் காபனேற்றும், ஐதரசன் காபனேற்றும் பெரும் பங்கை உருவாக்குகின்றன. ஈயம் மென்மையான, அதிக அடர்த்தியுடைய, நீட்டற்பண்பும், தட்டற்பண்பும் உள்ள உலோகமாகும். எனினும் ஈயத்தின் மின்கடத்துதிறன் குறைவாக இருக்கின்றது. ஈயம் இலகுவில் அரிப்படையாது. சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமடையக்கூடியது (இதன் விஷத்தன்மைக்குக் காரணம்). 327.5 °C வெப்பநிலையில் ஈயம் உருகுகின்றது. ஈயம் 1749 °C வெப்பநிலையில் கொதிக்கும். ஈயம் அயனாக்கம் அடையும் போது Pb கற்றயனை உருவாக்கும். இயற்கையில் ஈயத்தின் நான்கு நிலையான சமதானிகள் உள்ளன. ஈயம்-204, ஈயம்-206, ஈயம்-207, ஈயம்-208 என்பனவே அவையாகும். இவற்றில் ஈயம்-204 சொற்பளவு கதிரியக்கம் (அரை வாழ்வுக்காலம்:1.4×10 வருடங்களுக்கு மேல்) கொண்டதாகக் கருதப்பட்டாலும், பொதுவாக ஈயம் கதிரியக்க அபாயமற்ற தனிமமாகும். செயற்கையாக ஈயத்தின் 34 சமதானிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் திணிவெண் 178 தொடக்கம் 215 வரை வியாபித்துள்ளது. இயற்கையான நான்கைத் தவிர மற்றைய அனைத்துச் சமதானிகளும் கதிரியக்கம் உடையனவாகும். கதிரியக்கச் சமதானிகளில் ஈயம்-205 ஓரளவு நிலைத்திருக்கக்கூடியது (அரை வாழ்வுக்காலம் 10 மடங்கில்). ஈயம் கார்பன் குழுவைச் சேர்ந்த ஒரு குறை மாழையாகும். எனவே இது ஏனைய உலோகங்களை விட தாக்குதிறன் குறைவானதாகும். ஈயம் காற்றில் தன்னிச்சையாக எரியாது. காற்றில் பாதுகாப்பான ஒரு ஒக்சைட்டு-காபனேற்றுப் படையையே உருவாக்கும். ஈயத்தைத் துகள்களாக்கி, சக்தியை வழங்கினாலேயே இது எரியும். புளோரின் மற்றும் குளோரின் போன்ற ஹலோஜன்களால் உயர் வெப்பநிலையில் மாத்திரமே ஈயத்தை ஒக்சியேற்ற இயலும். நீரும் வளியும் இணைந்து ஈயத்தை வேகமாக அரிப்படையச் செய்யும் இயல்புடையனவாகும். எனினும் நீரில் கரைந்துள்ள சல்பேற்றுக்கள் மற்றும் காபனேற்றுக்கள் கரையாத உப்புக்களைத் தோற்றுவித்து ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. குறைந்த செறிவுள்ள நீரில் கரைந்துள்ள காபனீரொக்சைட்டு கரையாத காபனேற்றுப் படையை உருவாக்கி அரிப்படைதலிலிருந்து பாதுகாப்பை வழங்கினாலும், அதிக செறிவான CO கரையக்கூடிய ஈயஇருகாபனேற்றை உருவாக்கி ஈயத்தை அரிப்படையச்செய்ய வழிவகுக்கின்றது. ஈயம் சேதன அமிலங்களாலும், செறிந்த சல்பூரிக் அமிலத்தாலும், வன்காரங்களாலும் தாக்கப்பட்டு அரிப்படையக்கூடியது. சேர்வைகளில் ஈயம் பொதுவாக +2 மற்றும் +4 எனும் இரண்டு ஒக்சியேற்றும் நிலைகள் உள்ளன. இவற்றில் +2 நிலையே அதிகமான சேர்மங்களில் உள்ளது. +4 நிலையிலுள்ள சேர்மங்கள் ஒக்சியேற்றும் தன்மை அதிகமானவையாகும். மூன்று வகையான ஈய ஒக்சைட்டுகள் உள்ளன. அவை ஈயம்(II)ஒக்சைட்டு/ ஈயவோரொக்சைட்டு (PbO), ஈய நாலொக்சைட்டு (PbO), ஈயவீரொக்சைட்டு (PbO) என்பனவாகும். ஈயவோரொக்சைட்டில் α-PbO மற்றும் β-PbO ஆகிய இரண்டு பிறதிருப்பங்கள் உள்ளன. α-PbO சிவப்பு நிறச் சேர்மமாகும்; இதன் அணுக்களிடையே 230 pm இடைவெளி காணப்படும். β-PbO மஞ்சள் நிற சேர்மமாகும். ஈயத்தின் உப்புகள் ஐதரசன் சல்பைட்டுடன் (HS) தாக்கமடைந்து ஈயவோர் சல்பைடைக் கொடுக்கும். இச்சேர்மம் சாதாரண உப்பைப் போன்ற அயன் சலாகைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஈயவோர்சல்பைடை வளியில் சூடாக்கினால் முதலில் ஈயசல்பேட்டாகவும் பின்னர் ஈயவோரொக்சைட்டாகவும் ஒக்சியேற்றமடையும். இது நீரிலோ மென்னமிலங்கிலிலோ கரையாது. ஈயவோர் சல்பைடை நைத்திரிக் அமிலத்தில் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்தால் அது அமிலத்துடன் தாக்கமடைந்து கந்தகத்தையும், ஐதரசன் சல்பைட்டையும் கொடுக்கின்றது. ஈயத்தைக் கந்தகத்துடன் அதிக அமுக்கத்தில் சூடாக்கினால் ஈயவிருசல்பைடை உருவாக்கலாம். இச்சேர்மத்தின் சலாகைக் கட்டமைப்பில் ஈய அணுக்கள் கந்தக அணுக்களுடன் எண்கோணி வடிவில் பிணைக்கப்பட்டுள்ளன. ஈயவிருசல்பைடு ஒரு குறைகடத்தியுமாகும். ஈயவோரொக்சைட்டை ஈயவோர்சல்பைட்டுடன் சூடாக்கினால் ஈயத்தை இச்சேர்மங்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். ஈய காபனேற்றை ஐதரசன் புளோரைடுடன் சூடாக்கினால் ஈய ஐதரோபுளோரைடை உருவாக்க முடியும். இது உருகும் போது ஈய இருபுளோரைடு உருவாகும். இது வெள்ளை நிறப்பளிங்குகளாலான சேர்மமாகும். ஈய நால்புளோரைடு எனப்படும் உறுதியற்ற புளோரைடு சேர்மம் மஞ்சள் நிறமானதாகும். ஈயம் ஐதரோகுளோரிக் அமிலத்துடனோ, சல்பூரிக் அமிலத்துடனோ தாக்கமடையாது. எனவே ஈய சல்பேட்டையோ, ஈய இருகுளோரைட்டையோ அமிலங்களுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் உருவாக்க இயலாது. எனினும் ஈயம் நைத்திரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து Pb(NO) மற்றும் நைத்திரிக் ஒக்சைட்டையும் உருவாக்குகின்றது. ஈயம் காணப்படும் பிரதான தாதுப் பொருள் கலீனா ஆகும். இதில் பிரதானமான கூறாக PbS உள்ளது. கெருசைட்டு (PbCO), ஆங்கிலசைட்டு (PbSO) போன்ற தாதுப்பொருட்களிலும் ஈயம் உள்ளது. கலீனா தாது முதலில் நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. அடர்ப்பிக்கப்பட்ட தாது பின்னர் எதிர் அமல் உலையில் இடப்பட்டு மிதமான வெப்பநிலையில் வறுக்கப்படுகிறது. உலையின் வெப்பநிலை ஒரே நிலையில் பராமரிக்கப்படுகிறது. இதற்கு காற்று கட்டுப்படுத்தப்படுகிறது. வறுக்கும்போது ஈயத்தின் ஒரு பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து ஒரு பாதி ஈய மோனோ ஆக்சைடும் மறு பாதி ஈய சல்பேட்டுமாக மாற்றம் அடைகிறது. கலீனா சேர்க்கப்பட்டு வெப்பநிலையை உயர்த்தும் அதே வேளையில் காற்றின் அளவு குறைக்கப்படுகிறது. ஈய சல்பேட்டு இரன்டு ஆக்சிசனேற்ற வினைப்பொருள்களுடன் சேர்க்கப்பட்டு ஈயத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் வெவ்வேறு வெப்பநிலையில் ஒரே உலையில் வறுத்தல் மற்றும் உருக்குதல் இரண்டும் செய்யப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் ஈயம் 90% தூய்மையானதாகும். தூளாக்கப்பட்ட கலகரி மற்றும் சுண்ணாம்பு கசடுடன் சேர்த்து சூடாக்கி ஈயம் பிரித்து எடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ஈயத்தில் வெள்ளி, தாமிரம், வெள்ளீயம், பிசுமத், தங்கம் மற்றும் இரும்பு போன்ற மாசுக்கள் இருக்கும். மாசு கலந்த உலோகம் உலை சரிவு படுகையில் வைத்து வெப்பப்படுத்தப்படுகிறது. ஈயம் உருகி சரிவில் கீழிறங்குகிறது. உருகாத மாசுக்கள் அங்கேயே தங்கி விடுகின்றன. பார்டின்சன் முறை அல்லது பார்க் முறையில் வெள்ளி தனிமம் நீக்கப்படுகிறது. மாசு கலந்த ஈயத்தை நேர்மின் முனையாகவும், தூய ஈயத்தை எதிர்மின் முனையாகவும் கொண்டு ஈயபுளூவோசிலிக்கேட்டு மற்றும் ஐதரோபுளோவோசிலிசிக் அமிலம் கலந்த மின்பகுளியாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்தால் தூய ஈயம் கிடைக்கிறது. கத்தோட்டுத் தாக்கம் (தாழ்த்தல் தாக்கம்) அனோட்டுத் தாக்கம் (ஒக்சியேற்றல் தாக்கம்) Lead பரமார்த்த குருவின் கதை பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார். 1728-இல் புதுவையில் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது. இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது. இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 18 ஆம் நூற்றாண்டில், உரைநடையாக்கம் என்பது அரிதாகவே பின்பற்றப்பட்டது. அனைத்து தமிழ் வெளிப்பாடுகளும், பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருந்தன. பாமரரும் பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்கு இக்கதையே சான்றாகும். அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது. பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து எழுதிய கவிதை : "முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காதம் வழி" காலந்தீடீ காலந்தீடீ "(Callanthiidae)", பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த சிறிய மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 3 பேரினங்களும் அவற்றுள் அடங்கிய 13 இனங்களும் உள்ளன. சியூடோகுரோமைடீ சியூடோகுரோமைடீ "(Pseudochromidae)", "பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். சுமார் 100 இனங்கள் இக் குடும்பத்தில் அடங்கியுள்ளன. இவை வெப்பவலயப் பகுதிகளிலும், இந்திய-பசிபிக் துணை வெப்பவலயப் பகுதிகளிலும் உள்ள பவளத் திட்டுக்களில் காணப்படுகின்றன. ஒளி பொருந்திய நிறங்களைக் கொண்ட இவை பெரும்பாலும் பால்சார் தோற்ற வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இவை சிறிய மீன்கள். பெரும்பாலும் 10 சதம மீட்டர்களுக்கும் குறைந்த நீளம் கொண்டவை. சில 2 சதம மீட்டருக்கும் குறைவானவை. மதன்லால் பக்வா மதன்லால் கிஷன்லால் பக்வா (Madanlal Kishanlal Pahwa) 1947 ஆம் ஆண்டு அகதியாக இந்தியாவிற்கு பிரிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து (பாகிஸ்தான்) வந்தார். அகதியாக ஆக்கப்பட்ட நிலையால் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியின் மேல் கடுங்கோபங்கொண்டார். இவர் காந்தி படுகொலையில் கொலைச்சதியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மதன்லால் பக்வா "மான்ட்கோமரி" மாவட்டத்தில் உள்ள "பாக்பத்தான்" ஊரில் இந்தியாவின் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இராயல் இந்தியன் கப்பற்படைப்பிரிவில் கம்பியில்லாக் கருவிகளை இயக்கும் வல்லுநராகப் (Wireless Operator) பணிபுரிந்து 1946 ல் ஒய்வுப் பெற்றவர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்தபொழுது இந்தியாவிற்கு அகதியாக வந்து மும்பையில் உள்ள செம்பூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். இவர் மும்பைக்கு வந்ததன் முக்கியக் காரணம் வேலைதேடுவதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் அவர் கப்பற் படையில் மும்பையிலிருந்துதான் பணிபுரிந்தார். பெரும்பாலான அகதிகள் காந்தியின் மேல் கோபங்கொண்டிருந்தனர். அங்கிருந்துதான் மகாத்மா காந்தியை கொல்லச் சதிச் செயல்களில் ஈடுபட்டார். இந்த குற்றத்திற்காக மதன்லால் பக்வா ஆயுள் தண்டணை பெற்றார். தண்டணைக் காலம் அனுபவித்தபின் மும்பையிலுள்ள தாதரில் வசித்துவந்தார். கிரம்மட்டைடீ கிரம்மட்டைடீ "(Grammatidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களும் அவற்றுள் அடங்கிய 12 இனங்களும் உள்ளன. மேற்கு அத்திலாந்திக் கடல் பகுதிகளில் வாழும் இவை எல்லாமே சிறிய மீன்களாகும். இம் மீன்கள் 10 சதம மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை. இவற்றுட் பல இனங்கள் வண்ணமயமானவை, கடல் மீன் காட்சியகங்களுக்குப் பெரிதும் விரும்பப்படுகின்றன. இவை தமது பால் தன்மையை மாற்றிக்கொள்ளக் கூடியவை. தோரியம் தோரியம் "(Thorium)" Th என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் தனிமமாகும். படிக உருவம் கொண்ட தோரியம், படிக உருவமற்ற தோரியம் என்ற இரண்டு புற வேற்றுமை வடிவங்களைத் தோரியம் கொண்டுள்ளது. இதனுடைய அணு எண் 80 ஆகும். வெள்ளியைப் போன்ற வெண்மை நிறத்தில் தோரியம் காணப்படுகிறது. காற்றில் வெளிப்பட நேர்ந்தால் கருப்பு நிறத்திற்கு மாறுகிறது. அப்போது தோரியம் டை ஆக்சைடு உருவாகிறது. இதன் உருகுநிலை அதிகமாகும். மிருதுவானதாகவும் எளிதில் கம்பியாக, தகடாக அடிக்கக்கூடிய தனிமமாக தோரியம் உலோகப் பண்புகளைப்[ பெற்றுள்ளது. இது மின்நேர்தன்மை கொண்ட ஓர் ஆக்டினைடு ஆகும். +4 ஆக்சிசனேற்ற நிலை தோரியத்தின் வேதியியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. அமைதியாக வினைபுரியும் தோரியம் காற்றில் தீப்பற்றி எரியக்கூடியதாகவும் உள்ளது. 1828 ஆம் ஆண்டில் மோர்டென் திரென் எசுமார்க் என்பவர் நோர்வே நாட்டிலுள்ள லுவொயா தீவுகளில் ஒருவகையான கருப்பு நிற கனிப்பொருளை கண்டெடுத்தார். நார்வே நாட்டு பாதிரியாரான அவர் ஒரு பொழுதுபோக்கு கனிமவியலாளரும் ஆவார். டெலிமார்க் மாகாணத்தில் இவர் கனிமங்களைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். தனக்கு கிடைக்கும் வித்தியாசமான ஆர்வமூட்டும் பொருட்களை அவர் தனது தந்தைக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி தான் கண்டெடுத்த கருப்பு நிற பொருளையும் தன் தந்தை என்சு எசுமார்க்கிடம் இவர் அனுப்பி வைத்தார்.. இவர் ஒரு புகழ்பெற்ற அனைவரும் அறிந்த கனிம வள ஆய்வாளர் ஆவார். ராயல் பிரடெரிக் பல்கலைக்கழகத்தில் இவர் நிலவியல் மற்றும் கனிமவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவராலும் அக்கனிமப் பொருளை அடையாளங்காண முடியவில்லை. ஆகையால் 1828 ஆம் ஆண்டில் அம்மாதிரியை சுவிசு நாட்டைச்சேர்ந்த இரசாயனவியலாளரான யோன்சு யோக்கோப் பெர்சிலியசு என்பவரிடம் அனுப்பி வைத்தார். பெர்சிலியசு அம்மாதிரியில் ஒரு புதுவகையான தனிமம் இருக்கிறது என்பதை உறுதி செய்தார்ர். அதற்கு 'தோரியம்' எனப் பெயரிட்டார். அவர் தனது கண்டுபிடிப்புக்களை 1829 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அனைத்து அறியப்பட்ட தோரியத்தின் ஐசோடோப்புகளும் நிலையற்றவையாக உள்ளன. மிக உறுதியான 232Th ஐசோடோப்பு 14.05 பில்லியன் ஆண்டுகளை அரை ஆயுள் காலமாகக் கொண்டுள்ளது. அல்லது பிரபஞ்சத்தின் வயதை தனது அரை ஆயுள் காலமாகக் கொண்டுள்ளது. தோரியம் ஆல்பா சிதைவின் மூலம் மிக மெதுவாக சிதைகிறது. தோரியம் தொடர் என்ற பெயரில் சங்கிலியாகத் தொடங்கும் இச்சிதைவு 208Pb. ஐசோடோப்பில் முடிவடைகிறது. பிரபஞ்சத்தில், தோரியம் மற்றும் யுரேனியம் ஆகிய தனிமங்கள் மட்டுமே இயற்கையாக பேரளவில் கிடைக்கும் இரண்டு ஆதிகாலக் கதிரியக்கத் தனிமங்களாக உள்ளன. புவியின் மேற்பரப்பில் யுரேனியத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தோரியம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அரு மண் உலோகங்களை பிரித்தெடுக்கும் போது ஓர் உடன் விளைபொருளாக இது கிடைக்கிறது. மானோசைட்டு, தோரியானைட்டு, தோரைட்டு என்பன தோரியத்தின் முக்கியத் தாதுக்களாகும். தோரியம் 1829 ஆம் ஆண்டில் நார்வே நாட்டைச் சேர்ந்த துறை சார்பற்ற கனிமவியலாளர் டிரானே எசுமார்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சுவீடிய வேதியியலாளரான யோன்சு யேக்கசு பெர்சிலியசு என்பவரால் அடையாளம் காணப்பட்டது, நார்வே நாட்டின் இடியின் கடவுளாக கருதப்படும் தோர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தனிமத்திற்கு அவர் தோரியம் என்று பெயரிட்டார். இதன் முதல் பயன்பாடுகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோரியத்தின் கதிரியக்கம் பரவலாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இதன் கதிரியக்கத்தைப் பற்றிய கவலைகள் காரணமாக பல பயன்பாடுகளில் இருந்து தோரியம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தங்குதன் மந்த வாயு பற்ற வைப்புகளில் தோரியம் இன்னும் மின்முனையாக ஒரு கலப்பு உலோகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மெதுவாக வெவ்வேறு இயைபுகளுடன் இத் துறையில் இருந்து விலக்கிக் கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒளியியல் துறையில் ஒளிவிடும் வாயு வலைப் பைகளில் தோரியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுரேனியம் அணு உலைகளில் அணுக்கரு எரிபொருளாக தோரியத்தைப் பயன்படுத்துகிறார்கள். எக்சு கதிர் குழாய்களில் தோரியம் பயன்படுகிறது. உயர் வெப்பநிலை வினைகளுக்கு தோரியத்தை ஒரு வினைவேக மாற்றியாகப் பயன்படுத்துகிறார்கள். கண்ணாடிகளுக்கு நெருகூட்டவும் பல கலப்புகோகங்கள் தயாரிக்கவும் தோரியம் உதவுகிறது. குறைந்த உபயோகம் காரணமாக தோரியம் அரு மண் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் போது உடன் விளைபொருளாக மட்டுமே பிரித்தெடுக்கப்படுகிறது . தூளாக்கப்பட்ட மானோசைட்டு தாது அடர்ப்பிக்கப்படுகிறது. இதன் விளைவாக மாசுக்கள் அகற்றப்பட்டு கனமான தோரியம் தாது மட்டும் தங்குகிறது. இது நன்றாக உலர்த்தப்பட்டு மின்காந்த முறையில் மீண்டும் அடர்ப்பிக்கப்படுகிறது. காந்தப்பண்பு கொண்ட இம்முறையில் நீக்கப்படுகின்றன. அடர்ப்பிக்கப்பட்ட மானோசைட்டு தாதுவுடன் அடர் கந்தக அமிலம் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. சல்பேட்டுகள் உருவான பின்னர் குளிர்ந்த நீரைச் சேர்க்கிறர்கள். இதனால் சல்பேட்டு உப்புகள் நீக்கப்படுகின்றன. கலவையுடன் காரத்தை சிறிதுசிறிதாக சேர்க்கும் போது தோரியம் அதன் பாசுபேட்டாக வீழ்படிவாகிறது. தொடர்ந்து ஐதரோ குளோரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து அனைத்து மாசுக்களும் அகற்றப்படுகின்றன. இறுதியாக சோடியம் கார்பனேட்டு கரைசல் கொண்டு சாறு இறக்கி வடிகட்டி தோரியாவைத் தயாரிக்கிரார்கள். இத்தோரியாவுடன் பாசுகீன் வாயு செலுத்தப்பட்டு பின்னர் கால்சியம் அல்லது மக்னீசியம் சேர்த்து சுடுபடுத்தினால் தோரியம் கிடைக்கிறது. சங்கர் கிஸ்தையா சங்கர் கிஸ்தையா (Shankar Kistaiya) மகாத்மா காந்தியின் படுக்கொலைக்கு காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர். இதனால் நீதிமன்றத்தால் இவர் ஆயுள் தண்டணை அடைந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிகம் அறியமுடியாத நிலையில் உள்ளது. திகம்பர் பட்கை வினால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவரின் தாய் மொழி தெலுங்கு. பட்கேவின் உதவியாளராகவும் அவர் நடத்திவந்த கடையின் காப்பாளராகவும் செயல்பட்டார். சங்கர் கிஸ்தையாவின் காந்தி கொலைச்சதியின் பங்கு தில்லி மற்றும் புனே வில் தங்கியிருந்து காந்தியைக் கொல்லச் சதி புரிந்த குழுவினருக்கு உதவிபுரிந்தார். குற்றத்தொடர்புடையவர்களின் குற்றச் செயல்களில் துணைபுரிந்தமையால் கீழ் நீதிமன்றத்தால் ஆயுள் தணைடணைப் பெற்றார். ஆனால் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு 1910- இறப்பு ஏப்ரல் 6, 1974) இந்து மகாசபை உறுப்பினரான இவர் மகாத்மா காந்திக் கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் மராத்தி மொழியின் "கார்க்கேட் பிராமணக்" குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்த தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் மும்பை "நார்த்கோட்" அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் தனது ஆர்வத்தாலும்,தனது முயற்சினாலும் மராத்தி மொழி மற்றும் இந்தி மொழியில் எழுதப் படிக்கும் ஆற்றல் பெற்றார். "10 ஆவது வயதில்" தேநீர்க் கடையில் தேநீர்க் குவளைகளை சுத்தம் செய்யும் சிறுவனாக பணிபுரிந்து பின் புனேவுக்கு இடம் பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "கார்க்கரே " பெப்ரவரி 14, 1948 ல் மும்பையில் காந்தியைக் கொல்லமுயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் குற்றப் பின்னணி பிர்லா இல்லத்தில் மகாத்மா காந்தியைக் கொல்ல ஜனவரி 20, 1948, வெடிகுண்டை வெடிக்கச் செய்தது. இதனால் அவர் ஆயுள் தண்டணைப் பெற்றார் தண்டணைக்காலம் முடிந்து அக்டோபர் 13, 1964 ல் விடுதலையானபின் அகமத்நகர் இல் வியாபாரம் துவங்கி அவர் ஏப்ரல் 6, 1974 அன்று மாரடைப்பால் மரணமடையும் வரை தொடர்ந்து நடத்தி வந்தார். பிளெசியோபைடீ பிளெசியோபைடீ "(Plesiopidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் நீளமான உடல் கொண்ட மீன்கள் ஆகும். சில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன: ஒபிசுத்தோகினாத்தைடீ ஒபிசுத்தோகினாத்தைடீ "(Opistognathidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடலிலும், பசிபிக் பெருங்கடலிலும் உள்ள ஆழம் குறைந்த பவளத்திட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை நீண்ட உடலமைப்புடன் கூடிய சிறிய மீன்கள். இவற்றின் தலை, கண்கள், வாய் என்பன அவற்றின் பிற உடற் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பெரியவை. டைனோபேர்சைடீ டைனோபேர்சைடீ "(Dinopercidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இதில் "டைனோபேர்சா பெட்டேர்சி" "(Dinoperca petersi)" என்னும் ஒரேயொரு இனம் மட்டுமே அடங்கியுள்ளது. இது அங்கோலாவின் கரைக்கு அப்பாலுள்ள அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அ. கி. இராமானுசன் அ. கி. இராமானுசன் ("A. K. Ramanujan", ஏ. கே. ராமானுஜன், மார்ச் 16, 1929 – சூலை 13, 1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர். பாஞ்சோசைடீ பாஞ்சோசைடீ (Banjosidae), "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஜப்பான் தொடக்கம் தென் சீனா வரையுள்ள மேற்குக் கரையோரக் கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது 30 செமீ நீளம் வரை வளர்கிறது. அக்டினோட்டெரிகீயை அக்டினோட்டெரிகீயை "(Actinopterygii)", என்பது நடுமுள் துடுப்புள்ள மீன்களைக் குறிக்கும். இம் முதுகுநாணி மீன்களின்(Osteichthyes) ஒரு வகுப்பு ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை "அக்டினோட்டெரிகீ" வகுப்பு முதுகுநாணிகளுள் முக்கியமான ஒரு வகுப்பு ஆகும். 30,000க்கு மேற்பட்ட மீன் இனங்களுள் ஏறத்தாழ 99% இனங்கள் "அக்டினோட்டெரிகீயை" வகுப்புக்குள் அடங்குகின்றன. இவ் வகுப்பைச் சேர்ந்த மீனினங்கள், நன்னீரிலும், கடல் சூழல்களிலும், ஆழமான கடல் பகுதிகளில் இருந்து மலையுச்சிச் சிற்றாறுகள் வரை எங்கும் பரவிக் காணப்படுகின்றன. அளவைப் பொறுத்தவரை, 8 மில்லிமீட்டரே நீளம் கொண்ட "பீடொசிப்பிரிசு" இனத்திலிருந்து, 2300 கிலோ கிராம் நிறை கொண்ட "பெருங்கடல் சூரியமீன்" (Ocean Sunfish), 11 மீட்டர் நீளம் கொண்ட "ஓர்மீன்" (Oarfish) வரையில் பல்வேறு வகையான இவ்வகுப்பில் உள்ளன. மை மை என்பது, பல்வேறு நிறமிகளை அல்லது சாயங்களைக் கொண்ட ஒரு திரவப் பொருள் ஆகும். இது ஒரு மேற்பரப்பில் படம், எழுத்து, வரியுருக்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. மையைப் பயன்படுத்தி பேனா, தூரிகை போன்றவற்றால் வரையவோ அல்லது எழுதவோ முடியும். தடிப்புக் கூடிய மைகள், அச்சுத் தொழிலில் பயன்படுகின்றன. மை, கரைப்பான்கள், நிறமிகள், சாயங்கள், பிசின்கள், உராய்வுநீக்கிகள், பரப்பு பொருள்கள், துணிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்ட ஒரு கலவை ஆகும். மைக் கலவையில் உள்ள கூறுகள் அதன் பாயும் தன்மை, தடிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், அது காய்ந்தபின்னர் அதற்குரிய நிறம், மினுக்கம் போன்ற தோற்ற அம்சங்களையும் கொடுக்கின்றன. சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் மை கண்டறியப்பட்டது. எழுத்துக்கள் தோன்றிய போது ஆரம்பத்தில் மனிதன் கற்கள் மீது எழுதினான் அல்லது செதுக்கினான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டன. நாளடைவில் மனிதன் களிமண்ணிலும் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான். சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் மை கண்டுபிடித்தார். கார்பன் நிறமி புகைக்கரி (பைன் மர துண்டுகளை எரித்து கிடைக்கப்பெற்றது), விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை ஆகியவற்றுடன் விளக்கெண்ணெய்யையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன், இந்தியா இங்க் (India Ink) என்ற பெயர் சூட்டினார். ஏனெனில் அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார். கி.மு. ஆயிரத்தி இருநூறாம் நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றமும் இன்றி டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிறமிகளைக் கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களைக் கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் மை தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவானது. இந்தியர்களை பொருத்தவரை சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. தென் இந்தியாவில் பழங்காலத்தில் இருந்து கூர்மையான ஊசி கொண்டு எழுதும் பழக்கம் பொதுவான நடைமுறையாக இருந்தது. பண்டைய இந்தியாவில் புத்த மற்றும் சமண மத நூல்கள் மை கொண்டு எழுதப்பட்டன. சீனர்கள் கி.பி.105 முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, எண்ணெய், இரும்பு உப்புகள் போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர். இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான மை தயாரிப்பதில் சீனர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்த மை குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரப் பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்தத் தண்ணீருடன் திராட்சைச் சாறு சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று தனியாகத் தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்பட்டது. பின்பு மீண்டும் அதனுடன் திராட்சைச் சாறு மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்கத் தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார். அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது. இரும்பு உப்புகள் பசை, தண்ணீர், வால்நட் ஆயில் மற்றும் புகைக்கரி ஆகியவற்றைக் கொண்டு அச்சகங்களுக்குத் தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன மை தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் புகழடைந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக உலகம் முழுவதும் பரவியது. சிற்றூர் சிற்றூர் ("hamlet") என்பது ஒரு சிறிய ஊரைக் குறிக்கும். இது ஒரு ஊர் ("village") என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பெரிதாக இராத ஒரு நாட்டுப்புறக் குடியிருப்பு ஆகும். இது நகரம் ("town") மற்றும் மாநகரம் ("city") அல்லது பட்டினத்தை விட மிகவும் சிறியது. இவை பொதுவாக வேளாண்மை, சுரங்கத் தொழில், மீன்பிடித் தொழில் போன்ற ஒற்றைப் பொருளாதார நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். சிற்றூர் என்பதற்கு உலகம் தழுவிய பொதுவான வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், தமக்கெனத் தேவாலயம் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடையாத குடியிருப்புக்கள் சிற்றூர்கள் எனப்பட்டன. சிறப்பாக, ஐக்கிய இராச்சியத்தில், தமக்கெனத் தனியான கிறித்தவக் கோயில்பற்றுப் பிரிவைக் கொண்டிராமல் இன்னொரு ஊரின் கோயில்பற்றுப் பிரிவில் அடங்கும் குடியிருப்புக்களைச் சிற்றூர் என்றனர். சிற்றூர்களையும், ஊர்களையும் வேறுபடுத்துவதற்குப் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுவது உண்டு. இவற்றுள்: என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்துதல் முக்கியமானவை. அளவின் அடிப்படையில் வேறுபாடு காண்பதும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபடக்கூடும். செருமனியில் மூன்று தொடக்கம் 20 வரையான வீடுகளைக் கொண்ட குடியிருப்பு வழமையாகச் சிற்றூர் என அழைக்கப்பட்டது. பழைய காலங்களில், ஊர்களுக்கும், சிற்றூர்களுக்கும் இடையே செயற்பாட்டு அடிப்படையில் தெளிவான வேறுபாடுகள் காணப்பட்டன. சிற்றூர்களில் ஊர்களில் காணப்படுவது போன்று தொழிற்பிரிவுகள் இருப்பதில்லை. தச்சர், கொல்லர், பிற கைப்பணியாளர் போன்ற சிறப்புத் திறமை கொண்டோர் இருப்பதில்லை. மருத்துவத்துக்கும் குடியிருப்புக்கு வெளியேயே செல்லவேண்டியிருக்கும். பல சிற்றூர்களில் அக்காலத்தில் அன்றாட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குரிய கடைகள் கூட இருக்கமாட்டா. சிற்றூர்கள் பல அடிப்படையான தேவைகளுக்குக் கூட அயலிலுள்ள குடியிருப்புக்களில் தங்கியிருக்கும் நிலை உள்ளது. திறந்த சுற்றுக் கட்டுப்பாடு திறந்த சுற்றுக் கட்டுப்பாடு அல்லது பின்னூட்டு இல்லா கட்டுப்பாடு என்பது முறைமையின் உள்ளீட்டை மட்டும் வைத்து கட்டுப்படுத்தல் ஆகும். இங்கு பின்னூட்டு இல்லை, அதனால் வெளியீட்டை மதிப்பிட்டு திருத்த முடியாது. இப்படிப்பட்ட முறைமைகளில் உள்ளீட்டை நெறிப்படுத்த ஒருவர் தேவை. கட்டுப்பாட்டு முறைமை கட்டுப்பாடு கட்டகம் (control system) அல்லது கட்டுப்பாட்டு அமைப்பு என்பது ஒரு அமைப்பு அல்லது கருவியை கட்டைளையிட்டு, கட்டுப்படுத்தி, மேலாண்மை செய்து நெறிப்படுத்தும் தொகுதி ஆகும். இதன் நோக்கம் நிலையான (stable), இலக்கில் இருந்து தடம் மாறாத (tracking) இயக்கத்தைத் தருவது ஆகும். அதாவது ஒரு அமைப்பு செய்ய வேண்டிய வேலையை சரியாக, வெளி இடைஞ்சல்களுக்கு சரிசெய்து கொள்ளூம்படியாக இருப்பதே கட்டுப்பாட்டு அமைப்பின் முக்கியப்பணியாகும். உணரி உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக் கருவி ஆகும். பல்வேறுதரப்பட்ட சூழல் காரணிகளை அறிந்து, அவற்றை இலத்திரனியல் முறையில் முறைவழியாக்க உணரிகள் பயன்படுகின்றன. வெப்பம், அமுக்கம், நகர்வு, முடுக்கம், அமிலம், வாயு, ஒளி, கதிர்வீச்சு, ஒலி, நுண்ணுயிர் என பலதரப்பட்ட இயற்பொருட்களை உணரக்கூடிய உணரிகள் உண்டு. உதாரணத்திற்கு, கண்ணாடி வெப்பமானியில் உள்ள பாதரசம் மூலம் அளக்கவேண்டிய வெப்பநிலையை அளவு நிர்ணயிக்கப்பட்ட கண்ணாடிக் குழாயின் மூலம் படிக்க இயலும். இது நீர்மத்தின் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு வெப்ப இணை வெப்பநிலையை ஒரு வோல்ட்மானியால் அளக்கக்கூடிய மின் அழுத்தமாக மாற்றுகிறது. துல்லியத்தன்மைக்காக, எல்லா உணரிகளும் அறியப்பட்ட தரநிலைகளில் அளவீட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தொடு உணர் உயர்த்திப் பொறியின் பொத்தான்கள் (டேக்டைல் உணரி) மற்றும் அடிப்பகுதியைத் தொடும்போது மங்கவோ அல்லது பிரகாசிக்கவோ செய்கின்ற விளக்குகள் போன்ற தினசரிப் பொருட்களில் உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவர்களும் அறிந்துகொள்ளாத எண்ணிடலங்கா பயன்பாடுகள் உணரிகளுக்கு இருந்துகொண்டிருக்கின்றன. கார்கள், இயந்திரங்கள், வான்வெளி, மருத்துவம், உற்பத்தி மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பயன்பாடுகள். ஒரு உணரியின் உணர்திறன் என்பது அளவிடப்பட்ட பண்பு மாறுபடும்போது உணரியின் செயல்பாடு எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, வெப்பநிலைமானியில் உள்ள பாதரசம் 1 டிகிரி செல்சியஸிற்கு மாறும்போது (அதாவது வெப்பநிலையின் பண்பு 1 டிகிரியால் அதிகரிக்கும்போது), பாதரசத்தின் உயரம் 1 சென்டிமீட்டருக்கு உயருகிறது. அப்படியானால் இந்த வெப்பநிலைமானியின் உணர்திறன் 1 செ.மீ/°C ஆகும். மிகச்சிறிய மாற்றங்களை அளவிடும் உணரிகள் உயர் அளவிற்கான உணர்திறன் கொண்டவையாக இருக்கின்றன. உணரிகள் அவை அளவிடுவனவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, வெப்பமான திரவம் உள்ள கோப்பையில் செருகப்பட்டுள்ள ஒரு அறை வெப்பநிலைமானியானது (அந்த திரவம் வெப்பநிலைமானியை வெப்பப்படுத்தும்போது) திரவத்தை குளிரச் செய்கிறது. அளவிடப்படுவனவற்றில் சிறிதளவு விளைவேற்படுத்தும் வகையில் உணரிகளை வடிவமைக்க வேண்டியிருப்பதால் உணரியை சிறிதாக்குவதோடு தொடர்ந்து இதை மேம்படுத்த மற்ற அனுகூலங்களையும் அறிமுகப்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் MEMS தொழில்நுட்பத்தை நுண் உணரிகள் பயன்படுத்துவதால் மிக அதிகமான உணரிகள் மிகச்சிறிய (microscopic) அளவில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில், நுண்ணிய அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது ஒரு நுண் உணரி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர் வேகத்தை எட்டுகிறது என்பதோடு உணர்திறனானது அதிகமாக உள்ளது. ஒரு நல்ல உணரி பின்வரும் விதிகளுக்கு கட்டுப்படுகிறது: சிறந்த உணரிகளின் மாற்றல் செயற்பாடானது (transfer funstion) நேரியல் சார்பு (linear function) உள்ளதாக வடிவமைக்கப்படுகின்றன. இதுபோன்ற உணரியின் வெளிப்பாட்டு சமிக்ஞை (output signal) அளவிடப்பட்ட இயற்பொருளின் பண்புக்கு (measured physical property) நேர்விகிதத்தில் இருக்கும். இந்த உணர்திறன் ஆனது வெளிப்பாட்டு சமிக்ஞை மற்றும் அளவிடப்பட்ட பண்பின் அளவீடு ஆகியவற்றின் இடையிலுள்ள விகிதமாக வரையறுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு உணரி வெப்பநிலையை அளவிட்டு வோல்டேஜாகக் கொடுக்கிறது என்றால் உணர்திறனானது [V/K] என்ற அலகுடன் ஒரு மாறிலியாக இருக்கிறது; இந்த உணரி அளவீட்டின் எல்லா நிலைகளிலும் விகிதமானது மாறாமல் இருப்பதனால் நேரியல் சார்பு உள்ளதாக இருக்கிறது. உணரிகள் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மாற்றல் செயற்பாட்டை அப்படியே மீண்டும் பிரதிபலிக்க முடியாமல் இருப்பதனால், சிறிய விலகல்கள் ஏற்படும். இந்த விலகல்கள் அனைத்தையும் ஒழுங்கு முறையிலான பிழைகள் அல்லது எழுந்தமானமான பிழைகள் என்று வகைப்படுத்தலாம். ஒழுங்கு முறையிலான பிழைகளைச் சிலநேரங்களில் சிலவகையான அளவை நிர்ணய வியூகத்தால் சமன்செய்யலாம். இரைச்சல் என்பது ஒரு எழுந்தமானமான பிழை என்பதுடன் வடிகட்டுதல் போன்ற சமிக்ஞை நிகழ்முறையாக்கத்தால் குறைக்கப்படலாம். ஆனால் இங்கு வழக்கமாக உணரியின் ஆற்றல் மிக்க செயல்பாடு பாதிப்படையலாம். உணரியின் நுணுக்கம் என்பது அளவிடும் தொகையில் உணரி கண்டுபிடிக்கக்கூடிய மிகச்சிறிய மாற்றமாகும். ஒரு எண்மிய முறை வெளியீடு கொண்ட ஒரு உணரியின் நுணுக்கமானது, வழக்கமாக எண்மிய வெளியீட்டின் நுணுக்கமாகும். ஒரு எண்மியத் திரையில், மிகச்சிறிய இலக்கம் ஏற்ற இறக்கம் பெறுவது அந்த பருமனின் மாற்றங்கள் சற்றே தீர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நுணுக்கமானது அந்த அளவீடு மேற்கொள்ளப்பட்ட துல்லியத்தன்மைக்குத் (precision) தொடர்புடையதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு ஸ்கேனிங் டன்னலிங் புரோப் (எலக்ட்ரான் இணைக்கப்பட்ட மின்னோட்டத்தை அளக்கும் தளத்திற்கு அருகாமையிலான மிகச்சிறிய நுனி) அணுக்களையும் மூலக்கூறுகளையும் தீர்மானிக்கலாம். வாழும் உடலுறுப்புக்கள் அனைத்தும் மேலே விவரிக்கப்பட்ட இயந்திரரீதியிலான உணரி சாதனங்களுக்கு இணையான செயல்பாடுகளைக் கொண்ட உயிரியல் உணரிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பின்வருவனவற்றிற்கு உணர்திறனுள்ள தனிச்சிறப்புவாய்ந்த உயிரணுக்களைக் கொண்டிருக்கின்றன: உயிரியல் உணர்திறன் கருவியாக பயன்படுத்தப்படும் உயிரியல் உணரிகளான செயற்கை உணரிகள் உயிர்ம உணரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இலப்பிளாசு மாற்று இலப்பிளாசு மாற்று என்பது வகையீட்டு சமன்பாட்டை இலகுவாக தீர்க்க கூடிய இயற்கணித சமன்பாடாக மாற்றும் கணித செயற்பாடு. கணிதம், இயற்பியல், மின் பொறியியல் கட்டுப்பாட்டியல், குறிகை முறைவழியாக்கம், ஒளியியல் என பல துறைகளில் இது பயன்படுகிறது. இலப்பிளாசு மாற்று நேர ஆட்களத்தில் உள்ள சமன்பாட்டை அதிர்வெண் ஆட்களத்துக்கு மாற்றி, அக்களத்தில் எளிய கணித்தல் செயற்பாடுகளை செய்வதை ஏதுவாக்குகிறது. மூடிய சுற்றுக் கட்டுப்பாடு மூடிய சுற்றுக் கட்டுப்பாடு அல்லது பின்னூட்டு கட்டுப்பாடு என்பது பின்னூட்டை பயன்படுத்தி முறைமையை கட்டுப்படுத்தல் ஆகும். வெளியீடு பற்றி கட்டுப்பாட்டகம் தரவுகள் பெற்று, அதற்கேற்பவும் இலக்குக்குக்கேற்பவும் உள்ளீட்டை சரிபடுத்தி கட்டுப்படுத்தும். கட்டுப்பாட்டியல் தலைப்புகள் பட்டியல் கதிரவன் கிருட்ணமூர்த்தி கதிரவன் கிருட்ணமூர்த்தி கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பின்னர் ஐபிஎம் நிறுவனத்திலும், "மாக்சிம்" (Maxxim) நிறுவனத்திலும் பணியாற்றிய பொறியியலாளர். இவர் கம்பியில்லா மின்தொடர்பு தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகள் செய்துள்ளார், சில காப்புரிமங்களும் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு, குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளைப் பற்றி தமிழில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய சில தொழில்நுட்பக் கட்டுரைகள் துறை தொடர்பான ஆங்கில இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கிறார். இவர் எழுதிய “அடிப்படை ரேடியோ தொடர்பாடல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வெங்கட்ரமணன் வெங்கட்ரமணன் ஒரு இயற்பியலாளார், தமிழ் அறிவியல் எழுத்தாளர், தமிழ் லினிக்ஸ் முன்னோடி. இவர் கனடாவில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். இவரது குவாண்டம் கணினி நூலுக்காவும், வலைப்பதிவு அறிவியல் கட்டுரைகளுக்காவும் தமிழ் எழுத்துலகில் அறியப்படுகிறார். தமிழில் தகுந்த கலைச்சொற்களை பயன்படுத்தி எளிமையாக அறிவியல் கட்டுரைகளை எழுதுவதில் இவர் வல்லவர். சி. ஜெயபாரதன் சி. ஜெயபாரதன் அணுப் பொறியியலாளர், தமிழ் அறிவியல் எழுத்தாளர். அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார். பெ. நா. அப்புசாமி பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பொதுத் தமிழ் மேல்நிலை- முதலாம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் -2018 ராமதுரை (எழுத்தாளர்) ராமதுரை(N.Ramadurai) ஒரு தமிழ் அறிவியல் எழுத்தாளர், பத்திரிகையாளர். தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த தினமணி சுடரின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 2010-ம் ஆண்டின் ”தேசிய விருது: புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கு”. மிக்கைல் கலாசுனிக்கோவ் மிக்கைல் கலாசுனிக்கோவ் ("லெப்டினன்ட் ஜெனரல் மிக்கைல் டிமோபெயெவிச் கலாஷ்னிக்கோவ்", "Mikhail Timofeyevich Kalashnikov", ரசிய மொழி: Михаи́л Тимофе́евич Кала́шников, நவம்பர் 10, 1919 - டிசம்பர் 23, 2013) உருசிய சிறு படைக்கலன்களை வடிவமைத்தவர், இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது ஏ கே 47 வகை எந்திரத் துப்பாக்கியாகும். இவரை "கலாஷ்னிக்கோவ்" என்று சுருக்கமாக அழைப்பர். 1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் கம்மியர் (Mechanic) மற்றும் ஒட்டுநர் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே "டி 34" பீரங்கிப் படைக்கலனின் ஸ்டிரேயில் உள்ள 24 வது பிரிவுக்கு "புரோடித் தாக்குதலில்" ரஷ்யப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான "பிரயன்ஸக் தாக்குதலில்" ரஷ்யப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று. இந்த போருக்குப்பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கலாஷ்நிக்கோவ் 6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது, இவர் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து பாகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லா நிலைக்கு ரஷ்யப் படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து எந்திரதுப்பாக்கி வடிவமைக்கும் எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்த நிலையிலும் இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கி இராணுவத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இவரின் முயற்சியைக் கண்காணித்தது. 1942 முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். 1944 இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய மூலம் பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக 1947 ல் ஏகே-47 வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப்பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக்கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வுபெற்றார். இவருடைய வடிவமைப்பு செருமனியின் "யுகோ ஷிமெய்சர்" மற்றும் "வெர்னர் குருனர்" வடிவமைப்புகள் 1950களில் சேர்க்கப்பட்டது. பின்னாளில் குழுத் தானியங்கி படைக்கருவிகள் ஏகே-47 க்கும் மேலான ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் - இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டது. 1949 கலாஷ் நிக்கோவ் துப்பாக்கித் தயாரிப்புகளுக்காக தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டார். ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் கலாஷ் நிகோவ் துப்பாக்கிகள் மிகப் பிரபலமானத் துப்பாக்கியாகப் பலராலும் அறியப்பட்டதால் அவருடையப் பெயரும் அதே அளவிற்கு உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதன் பலனாக அவர் அதன் 1997- "50 ஆண்டுப் பொன் விழாவின்" போது கூறியவை: கலாஷ்னிக்கோவ் இரு முறை "சோசலிச தொழிலாளர்களின் மாவீரன்" (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் "உயர்தர முனைவர்" பட்டமும் பெற்றுள்ளார். 10 கோடித் துப்பாக்கிகளுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருந்தது மாநில ஒய்வூதியம் மட்டுமே. வணிகச் சின்னமாக ஜெர்மன் நிறுவனம் இவர் துப்பாக்கிகளுக்கு குடையும், கத்திகளும் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74. தனது‍ 94 ஆவது‍ வயதில் டிசம்பர் 23, 2013 இல் இறந்தார். 7.62x39மிமீ 7.62x39 மிமீ- இது சுடுகலன் தோட்டா எஸ் கே எஸ் (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக இரண்டாம் உலக்ப்போரின் போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா 7.75x39மிமீ மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின் நடந்த போர்களில் ஜெர்மனியில் 7.92x33 மிமீ குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட ஏகே-47 வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. 1970 வரை சோவியத் நாடுகளில் இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர். இது பின்னாளில் 5.45x39மிமீ வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் எம் 43 தோட்டாக்கள் "படகு வால் தோட்டாக்களாக" இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே ஏகே-47 சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும். கிம்ப் கிம்ப் ("GIMP.. அல்லது GNU Image Manipulation Program") என்பது அடோப் போட்டோ ஷோப் மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். ஆனால் இது போட்டோ ஷோப்பின் நகல் இல்லை. இது பல்வேறு இயக்கத்தளங்களில் அதாவது லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் போன்றவற்றில் விலையிலியாக(இலவசமாக) நிறுவிப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மென்பொருள் தயாரிப்புக்கும் ஒரு வரலாறு இருக்கும் அதுபோல கிம்ப் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஸ்பென்சர் கிம்பால் மற்றும் பீட்டர் மேட்டிஸ் என்ற இரண்டு நண்பர்களும் ஒரு வரைகலை மென்பொருளுக்கான நிரலை எழுத தீர்மானித்தார்கள். அதில் ஒருவருக்கு வரைகலையில் அனுபவம் இருந்தது. எனவே அவர்களின் இந்த வரைகலை உருவாக்கம் திட்டம் நன்றாக வந்தது. அவர்களை பேராசியர் ஃபார்சித் என்பவர் ஊக்குவித்து, அந்த மென்பொருளில் வரவேண்டிய பிற புதிய வசதிகளை பற்றியும் அவர்களுக்கு விளக்கினார். அது வளர வளர அதற்கு General Image Manipulation Program அல்லது சுருக்கமாக GIMP என அழைத்தனர். இவ்வாறு உருவான கிம்ப் ஜனவரி 1996 இல் முதல் முறையாக பொது வெளியீடாக GIMP பதிப்பு 0.54 வெளியிடப்பட்டது. கிம்பில் பிளக்கின் எனப்படும் கூடுதல் இணைப்பு முறைமை பின்பற்றுவதால் மென்பொருள் உருவாக்குபவர்கள் தனித்தனி நிரல்களாக இணைத்து கொள்ளலாம். இது வரையும் பொருட்கள் மற்றும் சேனல் செயல்பாடுகள் போன்ற அடிப்படை செயல்முறையை கொண்டுள்ளது. இவ்வாறு உருவான கிம்ப்பில் சில சிக்கல் இருந்தது, பல ப்ளக்கின் இருப்பதால் அவை ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தது. எனவே அடிக்கடி க்ராஷ் ஆகியது. எனினும் அதன் பயணம் இனிதாகவே இருந்தது. இதனை உருவாக்கிய அந்த பல்கலை நண்பர்கள் அதன் வெளியிட்டதும் பொது உருவாக்குபவர்களுக்காக ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கினர். அதாவது அந்த மின்னஞ்சல் குழு உருவாக்க முக்கிய காரணம் அதில் பலர் தங்கள் மறுமொழியை தெரிவிப்பார்கள், அது சம்பந்தமான சந்தேகங்களை கேட்பார்கள், அதனை மேம்படுத்துவதற்கான வழியை சொல்லுவார்கள் என்பதே அதன் நோக்கமாகும். ஆனால் அந்த மின்னஞ்சல் குழுவால் பல சிக்கல் ஏற்பட்டது. அதன் பயனர்கள் மற்றும் உருவாக்குபவர்களுக்கிடையே சில சம்பந்தமில்லாத வினாக்கள் எழுந்தன. எனவே 1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கிம்ப் மின்னஞ்சல் குழு கிம்ப் பயனர் குழு என்றும் கிம்ப் டெவலப்பர் குழு எனவும் பிரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கிம்ப் இணைய தளம் உருவாக்கப்பட்டது. கிம்ப் பயனரில் ஒருவர் கிம்பிற்கான கையேட்டை உருவாக்கினார். இவ்வாறு ஒவ்வொரு பதிப்பிலும் மெருகேறி கிம்ப் இன்று 2.4 என்ற பதிப்புக்கு முன்னேறியுள்ளது. கிம்ப் மென்பொருளை எடுத்து கொண்டால் அதில் பல வசதிகள் மற்றும் கருவிகள் உள்ளன. கிம்ப்பில் உள்ள கருவிகள் கருவிப்பட்டைகள், மெனு மற்றும் உரையாடல் பெட்டிகள் மூலம் கையாளப்படுகிறது. அதில் ஃபில்டர்கள், ப்ரஷ்கள், தேர்ந்தெடுத்தல், லேயர், மாஸ்கிங் கருவி, வெட்டும் கருவி என பல கருவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பார்த்தால் கிம்ப்பில் 48 ப்ரஷ்கள் உள்ளன. அதே போல நமக்கு வேண்டிய அளவில் நாமே ப்ரஷை உருவாக்கியும் கொள்ளலாம். அந்த ப்ரஷே கடின ஓரமாகவும், மென்மையான ஓரமாகவும், அழிக்கக்கூடியதாகவும், வெவ்வேறு ஒளி அளவிலும் என பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். RGB, HSV, கலர் வீல், CMYK மற்றும் கலவை முறை என பல நிற முறைமைகளை கொண்டுள்ளது. கிம்பில் CMYK கலவைக்கான RGB குறிப்பீடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்றாம் நபர் கூடுதல் இணைப்புகளையே சார்ந்திருக்க வேண்டியதிருக்கும். மேலும் கிம்ப் க்ரேடியன்டுக்கு துணைபுரிகிறது, இதில் பல வகையான க்ரேடியன்ட் கலவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பயனரும் தனக்கு தேவையான க்ரேடியன்ட்டை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. கிம்ப்பில் நீள்சதுர மற்றும் நீளவட்ட தேர்ந்தெடுத்தல், ஃபீரி ஹாண்ட் தேர்ந்தெடுத்தல் நிறத்தால் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை செய்யலாம். மேஜிக் வாண்ட் எனப்படும் தேர்ந்தெடுத்தல் கருவி தொடர்ச்சியான பகுதிகளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. இண்டலிஜெண்ட் சிஸ்சர் (iScissors) கருவி கடினமான நிற மாற்றங்களை குறிப்பதற்கான பகுதிகளுக்கிடையே தானாக பாதைகளை உருவாக்க பயன்படுகிறது. கிம்ப் பொதுவாக லேயர்களுக்கு துணைபுரிகிறது. இதில் ஒளிஊடுருவும் லேயரும் அடங்கும். அதாவது இதனை திரையில் காட்டலாம், மறைக்கலாம் அல்லது பகுதி ஒளிஊடுருவுவதாக மாற்றலாம். சேனல்கள் படங்களுக்கு பல்வேறு வகையான நிற ஜாலங்களை கொடுக்கிறது. கிம்ப்பில் 150 க்கும் மேற்பட்ட எஃபெக்ட்டுகள் மற்றும் ஃபில்டர்கள் இருக்கின்றன. அவற்றில் Drop Shadow, Blur, Motion blur மற்றும் Noise போன்றவையும் அடங்கும். இவற்றில் ஸ்கிரிப்ட் என்று எடுத்து கொண்டால், அவை தானாக கிம்ப் பணிகளை செய்ய எழுதப்படும் ஒரு கட்டளை மொழியாகும். Script-Fu என்பது கிம்ப் தன்னகத்தே கொண்ட ஸ்கிரிப்ட் ஆகும். மேலும் Perl, Python அல்லது TCLம் வெளியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. கிம்ப் பல்வேறு வகையான கோப்பு வகைகளுக்கும் துணைபுரிகிறது. அதன் சொந்தமான கோப்பு வகை என எடுத்து கொண்டால் XCF என பெயரிடப்பட்டுள்ளது. இது பிரபலமான பட வகை கோப்புகளான BMP, JPEG, PNG, GIF and TIFF போன்றவற்றை வாசிக்கவும் எழுதவும் செய்கிறது. இது தவிர Autodesk flic அனிமேஷன், Corel Paint Shop Pro படங்கள், மற்றும் Adobe Photoshop ஆவணங்கள் உள்ள கோப்பு வகைகளுக்கும் துணைபுரிகிறது. வேறு துணைபுரியும் வகை என எடுத்து கொண்டால் Postscript வகை ஆவணங்கள், X பிட்மேப் படங்கள், Zsoft PCX போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம். இவை தவிர, SVG கோப்புகளின் பாதை விவரங்கள் வாசிக்கவும் எழுதவும் செய்கிறது மற்றும் ICO விண்டோஸ் ஐகான் கோப்புகளையும் ஏற்றுக்கொள்கிறது. கிம்ப்பானது PDF கோப்புகளையும் மற்றும் பல டிஜிட்டல் கேமிராக்களின் கேமிரா ரா கோப்புகளையும் இறக்குகிறது. ஆனால் அவற்றை சேமித்து கொள்வதில்லை. கிம்ப்பின் வழங்கள் GPL உரிமத்தின் கீழ் திறந்தமூல மென்பொருளாக வழங்கபடுகிறது . இதன் இணைய தளம் தொகுத்து கிம்பை கொடுக்கவில்லை, அதன் மூலக்குறியீடு மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் இது பல்வேறு இயக்கத்தளங்கள் (விண்டோஸ், மேக், லினக்ஸ் விநியோகங்கள்) மற்றும் கணினி கட்டமைப்பு போன்றவற்றை சார்ந்தும் தனித்தனியாக தொகுக்கிறது. கிம்ப்பின் பதிப்பு 0.54 என்ற பதிப்புடன் தொடங்கியது. இது 1996 ஜனவரியில் வெளியிடப்பட்டது. Linux 1.2.13, Solaris 2.4, HP-UX 9.05, மற்றும் SGI IRIX இயக்கத்தளங்களில் மட்டுமே இயங்கியது. இதில் 8, 15, 16 மற்றும் 24 பிட் நிறங்களே துணைபுரிந்தது. மேலும் rgb color, grayscale அல்லது indexed நிறங்களாக படங்கள் பார்க்கப்பட்டன. GIF, JPEG, PNG, TIFF மற்றும் XPM ஆகிய கோப்பு முறைமைகள் துணைபுரிந்தன. ஆரம்பத்தில் இது லினக்ஸ் பயனர்களுக்கு ஒரு பயனுள்ள மென்பொருளாக தோன்றியது. இதற்கு உதவி கையேடுகள் எழுதியவர்களே இதனை பயன்படுத்தினர். அதன் பின் 1997 ஜூன் மாதம் கிம்ப் 0.60 பதிப்பு GNU பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதில் ஏர் பிரஷ், சேனல் செயல்பாடுகள், கலர் பேலட் என்று பல கருவிகளில் மேம்பாடு செய்யப்பட்டது. சில புதிய கருவிகளும் சேர்க்கப்பட்டன. கிம்ப் 0.99 வெளியிடப்பட்ட போது கிம்ப் டூல்கிட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதாவது GTK என்பது GTK+ என்று மறுபெயரிடப்பட்டது. கிம்ப் 1.0 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டின் போது கிம்ப் மற்றும் GTK+ ஆகிய இரண்டும் இரு திட்டங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி திட்டங்களாக செயல்பட துவங்கின. இந்தப் பதிப்பில் xcf என்று தனக்கென தனியான கோப்பு முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த xcf கோப்பு முறை லேயர், கைடுகள் மற்றும் தேர்வு செய்தல் போன்றவைக்கு துணைபுரிந்தது. மேலும் கிம்ப் திட்டத்திற்கென ஒரு இணைய தளம் தனியாக துவக்கப்பட்டது. இதனை இன்று classic.gimp.org என்பதில் காணலாம். இதில் ஆரம்ப கையேடுகள் மற்றும் கூடுதல் மூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கிம்ப் 1.2 2000 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் சர்வதேசமயமாக்கல் விருப்பங்கள், மேம்பட்ட நிறுவல் உரையாடல்கள், பல பிழைத்திருத்தங்கள், சில கூடுதல் இணைப்புகள் மற்றும் நினைவக சிக்கல்களுக்கான தீர்வு என பல புதிய முன்னேற்றங்களை கொண்டிருந்தது. கிம்ப் 2.0 2004 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் GTK+ 2 டூல்கிட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இப்போது 2008இல் 2.46 வெளியிடப்பட இருக்கிறது. இன்று அடோப் என்றாலே எல்லோருக்கும் தெரியும். அது ஒரு மிக வலிமையான வரைகலை மென்பொருட்களின் பிராண்ட். இதிலிருக்கும் போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்ற சில சமயங்களில் கிம்ப் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இவற்றுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பார்த்தால், போட்டோஷாப் கிம்ப்பிலுள்ள சில ப்ளக்கின் அல்லது ஸ்கிரிப்ட்களுக்கு ஏற்றதாக இல்லை. அதே போல கிம்ப்பும் பலவற்றுக்கு துணைபுரிவதில்லை அல்லது குறைந்த அளவே துணைபுரிவதாக இருக்கிறது. கிம்ப்பின் சொந்த கோப்பு முறைமையான XCF போட்டோஷாப்பினால் துணைபுரிவதில்லை. ஆனால் போட்டோஷாப்பின் சொந்த கோப்பு முறைமையான PSD மற்றும் பிற கோப்பு முறைமைகளும் கிம்பால் துணைபுரிகிறது. மேலும் கருவிகள் என எடுத்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையே பல கருவிகள் ஒரே மாதிரியான வேலையை செய்கிறது. சிலவற்றுக்கு பெயர் மட்டும் வேறுபடுகிறது. கிம்ப்பும் போட்டோஷாப்பும் அவற்றின் நிற மேலாண்மை வசதிகளில் வேறுபடுகின்றன. போட்டோஷாம் 16, 32 பிட் மற்றும் Pantone நிற முறைமை அல்லது ஸ்பாட் நிறங்கள் மற்றும் CMYK, CIE XYZ போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. ஆனால் கிம்ப் Pantoneக்கு சில சட்டரீதியான பிரச்சனைகளால் துணைபுரிவதில்லை மற்றும் இது அடிப்படை CMYKக்கு துணைபுரிகிறது. மேலும், போட்டோஷாப்பால் துணைபுரியும் பல கருவிகள் மற்றும் வசதிகளுக்கு கிம்ப் துணைபுரிவதில்லை. லேயர்களை ஒழுங்குப்படுத்தல் (இங்கு லேயர்கள் ஃபில்டர்கள் போல செயல்படுகிறது), லேயர் பாணிகள், டெக்ஸ் பிளிண்டிங் (நிழலிடுதல் மற்றும் ஒளிர்தல்), ஹிஸ்டர் ப்ரஷ் கருவி, லேயர் சாளரத்தில் கோப்புறைகள் என பல வசதிகள் கிம்ப்பில் இல்லை. பிளெண்டர் (மென்பொருள்) பிளெண்டர் ("Blender") என்பது ஒரு சுதந்திரமான முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருள். இது Microsoft Windows, Mac OS X, Linux, IRIX, Solaris, NetBSD, FreeBSD, OpenBSD போன்ற இயக்கத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டு ஜிஎன்யு உரிமத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மேலே குறிப்பிட்ட அனிமேஷன் மென்பொருட்கள் கொண்டுள்ள வசதிகள் அனைத்தையும் பெரும்பாலும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மென்பொருள் உருவாக்கத்திற்கு ஒரு வரலாறு இருப்பது போல பிளெண்டர் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. பிளெண்டர் முதலில் ஒரு டச்சு அனிமேஷன் ஸ்டுடியோவான NeoGeo மற்றும் Not a Number Technologies (NaN) ஆகியவற்றுக்கு அதன் உள்வேலைகளை செய்ய பயன்படும் மென்பொருளாக உருபெற்றது. இது ஆரம்பத்தில் டன் ரொசான்டால் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. “ப்ளண்டர்” என்ற பெயர் பேபி என்ற ஆல்பத்திலுள்ள ஒரு பாடலின் மூலம் வைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ரொசான்டால் NaN என்ற நிறுவனம் நிறுவப்பட்டு இந்த மென்பொருள் விநியோகிக்கப்பட்டது. 2002 வரை இந்த மென்பொருள் ஷேர்வேர் மூலம் விநியோகிக்கப்பட்டது. அதன் பின் 2002இல் இது ஜிஎன்யு பொது உரிமத்தின் கீழ் வெளியிட அறிவுறுத்தப்பட்டது. எனவே அதற்காக நிதி திரட்டும் பணி தொடங்கப்பட்டு 2002 செப்டம்பர் 2 ஆம் தேதியில் போதிய நிதி திரட்டப்பட்டு, அதன் மூலக்குறியீடு பொது பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இப்போது ப்ளெண்டர் ஒரு திறந்த நிரல் இலவச மென்பொருளாகும். இது ப்ளிண்டர் அமைப்பு என்பதின் கீழ் கண்காணிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. ஆரம்பித்தில் ப்ளிண்டர் இரட்டை உரிமத்தில் பதிவு செய்யப்பட்டது. அதாவது இதில் மூலக்குறியீடுகளை கொடுக்க வேண்டும் என்று தேவையில்லை, ஆனால் ப்ளிண்டர் அமைப்புக்கு பணம் செலுத்தி அதனை பெற்று கொள்ளும்படி இருந்தது. ஆனால் 2005இல் கைவிடப்பட்டு, இப்போது ஜிஎன்யு ஜிபிஎல் உரிமத்தின் கீழ் மட்டும் கிடைக்கிறது. பிளெண்டரின் 2.44 பதிப்பு மட்டும் 8 லட்சம் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்துவதற்கு இதன் கம்யூனிட்டி கையேடுகள் மூலம் பல பயனர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் தங்களுக்கான சந்தேகங்களை ஃபோரம்களிலும் விவாதித்து அறிந்து கொள்கிறார்கள். மேலும் பல இணைய தளங்களும் இதற்கான உதவிகளை வழங்கி வருகின்றன. ப்ளெண்டர் ஆர்ட் இதழ் தன் இணையதளத்தில் இதற்கான கட்டுரைகளை வழங்குகிறது. இந்த இதழை (www.blenderart.org) இலவசமாகவே நாம் பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்களுக்கு மேலும் இதனை பற்றிய தகவலை மேலே குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் சென்று பார்த்து பயனடையுங்கள். ப்ளிண்டர் மென்பொருளை பற்றி தொழில்நுட்ப வாயிலாக பார்ப்பதை விட முதலில் அது பொது பயனில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் பார்த்தால் இன்னும் சில விஷயங்களை அதில் நாம் கற்றுக் கொள்ளலாம். NeoGeo என்ற நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கருவியே இந்த ப்ளிண்டர் ஆகும். இங்கு அது வேலை செய்ததோ இல்லையோ அந்த மென்பொருள் மூலம் முதலில் பயன்படுத்தப்பட்டது ஸ்பைடர்மேன் 2 படத்தில் தான். இந்த படத்தில் சில சிறிய அனிமேஷன்கள் மற்றும் படத்திற்கு தேவையான ஸ்டோரிபோர்ட்டிலும் இது பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தில் பணியாற்றிய ஆண்டனி என்ற அனிமேஷன் வித்துவான் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஸ்டோரி போர்டை மிகவும் கவர்ச்சிகரமாக உருவாக்கி, சில மோஷன் ஷாட்களை இந்த மென்பொருளை பயன்படுத்தியே பயன்படுத்தியதாக கூறினார். அடுத்து Friday or Another day என்ற படம் இதில் பல சிறப்பு எஃபைக்ட்டுகளை ப்ளிண்டர் மூலம் செய்தனர் மேலும் இந்த படம் முழுவதும் லினக்ஸ் இயக்கத்தளத்திலேயே முழுவதும் தயாரிக்கப்பட்டது. (இதுபோல லினக்ஸ் இயக்கத்தளத்திலேயே முழுவதும் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியான படம் Ku fu panda ஆகும்) இந்த படம் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு பரிசு பெற்றது. இதுபோல ஹிஸ்டரி சேனல் என்ற தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் இந்த ப்ளிண்டர் மூலம் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு சிறப்பு செய்தியாகும். 2005 ஆம் ஆண்டு சில ப்ளிண்டர் கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒரு குறும்பட தயாரிக்க எண்ணி அதில் மூழ்கினர். இந்த திட்டத்தின் பெயர் ஆரஞ்சு மூவி திட்டமாகும். அதன் விளைவாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Elephant dream என்ற குறும்படம் தயாரானது. 10.54 நிமிடங்கள் அளவில் இந்த படம் உருவானது. இந்த படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் என்னவெனில் சுதந்திர மென்பொருட்கள் மூலமும் நல்ல அனிமேஷன் படங்களை நம்மால் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்கே ஆகும். இந்த படம் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதனை ஆரஞ்சு திட்ட இணையத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சில படங்கள் ப்ளிண்டர் மென்பொருள் மூலம் உருவாகி கொண்டிருக்கின்றன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி தாக்குதல் நீள் துப்பாக்கி ("Assault Rifile"), தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது. காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகே-47, எம்-16 போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம். வெண்கழுத்துக் காக்கை வெண்கழுத்துக் காக்கை அல்லது சுவாகிலி மொழியில் குங்குரு என்று அழைக்கப்படும் காக்கை அண்டங்காக்கையைப் போல் கரிய பெரிய காக்கை. இதன் கழுத்திலும், தோள் தொண்டைப் பகுதியிலும் வெண்ணிறப் பட்டை உண்டு. இதன் அலகு தடித்து இருக்கும். அலகின் நுனியிலும் வெண்ணிறம் உண்டு. குங்குரு ஏறத்தாழ 50-54 செமீ நீளம் உடைய பறவை. இது பறக்கும் பொழுது இறக்கை அடிப்பதால் உசு உசு என்று ஒலி எழுப்புகின்றது. இப்பறவையின் அறிவியற் பெயர் "கோர்வசு ஆல்பிக்கோலிசு "Corvus albicollis" என்பதாகும்." இது பெரும்பாலும் கிழக்கு, தென் ஆப்பிரிக்காவில் திறந்த புல் வெளிகளிலும், மலைகளிலும் காணப்படுகின்றது. பெரும்பாலும் கிழக்கு தென் ஆப்பிரிக்க மலைப்பகுதிகளில் காணப்படுவதால் இதனை வெண்கழுத்து மலை காக்கை என்றும் கூறலாம். மலைகளில் 4600 மீ உயரம் வரையிலும் காணப்படுகின்றது. இதன் இறைச்சியில் ஒரு நச்சுத் தன்மை உள்ளதால் இப்பறவை உண்ணப்படுவதில்லை என்று கிழக்கு ஆப்பிரிக்காவின் மக்கள் கூறுகின்றனர். இப்பறவை எல்லாம் உண்ணிகள் வகையைச் சேர்ந்தது. விதை, தானியம், நிலக்கடலை, மற்றும் இறந்த விலங்குகள் பூச்சிகள், சிறு ஊர்வன ஆகிய யாவற்றையும் உண்ணும். ஆமைகளையும் உண்ணும் என்று சிலர் கூறுகின்றார்கள். இதன் கூடுகள் பெரும்பாலும், உயரமான பாறைகளின் இடுக்குகளில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் இதன் கூடுகள் மரத்திலும் இருக்கும். கூட்டில் வழக்கமாக 3-5 முட்டைகள் இடும். இதன் கூவல் அண்டங்காக்கை போல இருந்தாலும் சற்று வேறாக ஒலிக்கும். காற்றொலி அதிகமாக இருக்கும். மூக்குக் கொம்பன் மூக்குக்கொம்பன் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும் (1.5 - 5.0 செமீ), பருத்த உடலும், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது - மணிக்கு 40 கிமீ விரைவில் ஓடவல்லது. இது இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. ஏறத்தாழ 60 ஆண்டுகள் வாழ வல்லது. மூக்குக்கொம்பனுக்கு காண்டாவிருகம், காண்டாமிருகம், உச்சிக்கொம்பன், கொந்தளம் என்னும் பெயர்களும் உண்டு. "காண்டா" என்னும் சொல் மிகப்பெரிய என்னும் பொருள் கொண்டது எனவே இதனை காண்டாமிருகம் என்று பலரும் அழைக்கின்றனர். எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லது, ஆகவே இதற்கு கொந்தளம் என்றும் பெயர். மூக்குக் கொம்பன் இயற்கையில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், சாவா சுமத்ரா தீவுகளில் மட்டுமே இன்று வாழ்கின்றன. ஆப்பிரிக்க மூக்குக்கொம்பன்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய முக்குக்கொம்பன்களில் இந்திய, சாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா மூக்குக்கொம்பன்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை. ஆப்பிரிக்க மூக்குக் கொம்பனை சுவாகிலி மொழியில் "கிஃவாரு" (Kifaru) என்று அழைக்கின்றனர். "கறுப்பு ரைனோ" (black rhino) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க விலங்கைக் குறிக்கும். மூக்குக்கொம்பன்கள் ஒற்றைப்படை கால் விரல்கள் கொண்ட விலங்குகள் வகையை சேர்ந்தவை. இன்றும் உயிர்வாழும் மொத்தம் ஐந்து வகையான மூக்குக்கொம்பன்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதல் பிரிவு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த "வெள்ளை", கறுப்பு மூக்குக்கொம்பன்கள் ஆகிய இரண்டும் அடங்கும். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும் ஊழிக்காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பே ஆகும். "வெள்ளை" மூக்குக்கொம்பனுக்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளன. ஆனால் கறுப்பு மூக்குக்கொம்பனின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். "வெள்ளை" என்னும் முன்னொட்டு ஆப்பிரிக்கான மொழியில் பரந்து/விரிந்த (wide) என்னும் பொருள் கொண்ட wyd என்னும் சொல் மருவி white (வெள்ளை) என்று ஏற்பட்டதாகும். இது சாம்பல்/வெளிர் பழுப்பு நிறமுடையதே (வெள்ளை அல்ல). மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்ட இரண்டு வகைகளும் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவை. மீதி உள்ள மூன்றில், இந்திய மூக்குக்கொம்பனும், சாவாத் தீவு மூக்குக்கொம்பனும் ஒற்றை கொம்புள்ள ஆசிய வகை மூக்குக்கொம்பன்கள். இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய மூக்குக்கொம்பனும், சாவா மூக்குக்கொம்பனும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன. இவ்வெல்லா மூக்குக்கொம்பன்களைக் காட்டிலும் மிகச் சிறியதான சுமத்ரா மூக்குக்கொம்பன் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைகு, ஆப்பிரிக்க மூக்குக்கொம்பனைப் போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளும் வாழ வல்லதாகையால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தருவாயில் இருக்கும் சுமத்ரா மூக்குக்கொம்பன் மொத்தம் 275 தான் உலகில் உள்ளன என்று கணக்கிட்டுள்ளார்கள். எல்லா மூக்குக்கொம்பன்களும் அழிவுறும் தீவாய்ப்புடன் உள்ளன. இந்திய காண்டாமிருகங்கள் ஏறத்தாழ 2700 மட்டுமே இன்றுள்ளன. அதே போல ஆப்பிரிக்க "வெள்ளை" காண்டாவிருகமும் 9000 தான் இன்றுள்ளன. காண்டாமிருகத்தின் உடல் பருமனை ஒப்பிடும் பொழுது இதன் மூளையின் எடை பாலூட்டிகளில் மிகச்சிறியது என்று கருதுகிறார்கள். இதன் மூளையின் எடை ஏறத்தாழ (400–600 கி). இது பெரும்பாலும் இலை தழைகளையே உண்ணுகின்றன. ஆப்பிரிக்க காண்டாமிருகத்துக்கு முன்னம் பற்கள் கிடையாது, ஆகவே முன்கடைவாய்ப் பற்களைக் கொண்டே மெல்லுகின்றன. மூக்குக்கொம்பனின் கொம்பு சிறு புதர்களை வேரோடு பிடுங்கி எறிய உதவுகின்றது. இந்த கொம்புப் பகுதி நகமியம் (கெரட்டின்) என்னும் பொருளால் ஆனது. நகம், மயிர் போன்ற பகுதிகளும் இதே பொருளால் ஆனதே. கறுப்பு மூக்குக்கொம்பனைத் தவிர மற்ற எல்லா மூக்குக்கொம்பன்களுக்கும் 82 நிறப்புரிகள் (நிறமிகள், குரோமோசோம்கள்) உள்ளன, ஆனால் கறுப்புக் காண்டாமிருகத்துக்கு மட்டும் 84 நிறமிகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இதுவே யாவற்றினும் அதிக எண்ணிக்கை உடையதாகும். மூக்குக்கொம்பனை ஆங்கிலத்தில் "ரைனோசெரசு" "rhinoceros" என்று அழைக்கின்றனர். இது கிரேக்கச் சொல்லாகிய ῤινόκερως (ரைனோகெரசு) என்பதில் இருந்து பெற்றது. செவ்வியல் கிரேக்க மொழியில் ῥινός (ரைனோசு, "rhinos") என்றால் மூக்கு என்று பொருள். ', κέρας ("கெராசு", "keras"), என்றால் கொம்பு என்று பொருள் எனவே மூக்குக்கொம்பன் என்று பொருள்படும் ரைனோகெரசு என்பது ரைனோசெரசு என்று வழங்குகின்றது. ஆங்கிலத்தில் பன்மைச்சொல் வடிவம் "ரைனோசெர்ட்டி" என்பதாகும். யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை மூக்குக்கொம்பனும், இந்திய காண்டாமிருகமும், நீர்யானையும் உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள். வெள்ளை மூக்குக்கொம்பனில் இரண்டு உள் இனங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் ("Ceratotherium simum simum") வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. மிக இக்கட்டான அளவு அருகிவிட்ட வட வெள்ளை காண்டாமிருகம் ("Ceratotherium simum cottoni") இன்று (சூன் 2008) மொத்தம் நான்குதான் உலகில் உள்ளன. வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும். கறுப்பு மூக்குக்கொம்பனில் (Diceros bicornis) நான்கு உள்ளினங்கள் உள்ளன: (1) தெற்கு-நடுப்பகுதி உள்ளினம்(Diceros bicornis minor) - இவ்வகை அதிக எண்ணிக்கையில் நடு தான்சானியாவில் இருந்து தெற்கே சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக் முதல் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் காணப்பட்டன, (2) தெற்கு-மேற்கு உள்ளினினம் (Diceros bicornis bicornis) -இவை நமீபியா, தென் அங்கோலா, மேற்கு போட்சுவானா, தென் ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள வறண்ட அல்லது சிறிது வறண்ட சவான்னா பகுதிகளில் காணப்படுகின்றன; (3) கிழக்கு ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros bicornis michaeli) இவை பெரும்பாலும் தான்சானியாவில் காணப்படுகின்றன; (4) மேற்கு ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros bicornis longipes) - இவ்வகை ஏறாத்தாழ அற்றுவிட்டதாக தற்காலிகமாக 2006 இல் அறிவிக்கபட்டுள்ளது. வெறு 8 விலங்குகள் மட்டும் தனி வளர்ப்பில் உள்ளன வளர்ந்த கறுப்பு மூக்குக்கொம்பன் அதன் தோள்பட்டைவரை 147–160 செமீ (57.9–63 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் நீளம் 3.3-3.6 மீ (10.8–11.8 அடி) இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த விலங்கு 800 முதல் 1400 கிலோ கிராம் (1,760 to 3,080 பவுண்டு) எடை இருக்கும், விதிவிலக்காக சில 1820  கிலோ கிராம் (4,000 பவுண்டு) வரையிலும் காணப்படும், பெண் விலங்குகள் ஆணைவிட எடை குறைவாக இருக்கும். இரண்டு மூக்குக்கொம்புகளும் கெரட்டின் அல்லது நகமியம் என்னும் பொருளால் ஆனது. இரண்டு கொம்புகளில் பெரியதாக உள்லது மூக்கின் நுனிப்பகுதியில் இருக்கும். இவை பொதுவாக 50 செமீ நீளம் கொண்டதாக இரூக்கும். கறுப்பு மூக்குக்கொம்பன் "வெள்ளை" மூக்குக்கொம்பனைவிட சிறியதாக இருக்கும். கறுப்பு மூக்குக்கொம்பனின் வாயின் முன் பகுதி சற்று குவிந்து கூர்மையாக இருக்கும். இது இலைகளையும் கொப்புகளையும் பற்றி உண்ணுவதற்கு உதவியாக இருக்கும் படி உள்ளது. இந்திய காண்டாமிருகம் அல்லது இந்திய மூக்குக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது. இது இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இந்திய காண்டாமிருகம் ஆகும். இவ்வகையின் மூதாதைய மூக்குக்கொம்பன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. தற்போது உலகிலுள்ள மூக்குக்கொம்பன்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு வகைகளில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிக அளவாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் உள்ளன. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும் இந்திய மூக்குக்கொம்பன் மணிக்கு 40 கி.மீ விரைவில் ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்பத் திறனும் கேட்கும் திறனைப் கொண்டது, ஆனால் இதன் பார்வைத் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை, மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்முகட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். ஆபிரெஃக்ட் டியூரே மூக்குக்கொம்பனின் படத்துக்கான மர அச்சு ஒன்றை 1515 இல் செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும். இதனால் இதில் காட்டப்பட்டுள்ள படம் துல்லியமானதல்ல. இதேவேளை மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் காண்டாமிருகம் நெருப்பைக் கண்டால் அதை அணைத்துவிட்டுச் செல்தாகக் கூறப்பட்டது. ஆயினும் இது சம்பந்தமாக அண்மைய தகவல்கள் எதுவம் பதிவுசெய்யப்படவில்லை. பிரபல ஆங்கிலத் திரைப்படமான கோட்ஸ் மஸ்ட் பி கேரேசி எனும் திரைப்படத்திலும் இவ்வாறு காண்டாமிருகம் நெருப்பை அணைப்பது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பூலான் தேவி பூலான் தேவி ("Phoolan Devi", ஆகத்து 10, 1963 - சூலை 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. இவர் உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மல்லா இனப்பிரிவைச்சார்ந்தவர். அவ்வூரில் உயர்சாதிப்பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினர்க்கும் நிகழ்ந்த இனவெறியர்களின் இன வேற்றுமை காராணமாகவும், அவர்களின் இழி செயல்களினாலும் கொள்ளைக்காரியாக மாறினார். பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டியகாவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள். பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள். அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இவரை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது. துப்பாக்கிசுடுவதில் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பயிற்சிப் பெற்ற இவர் கொள்ளைக்காரியாக மிகுந்த ஆரவாரத்துடன இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தவர். இதனால் சம்பல் கொள்ளைக்காரி என்று அழைக்கப்பட்டார். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை. இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள். இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை. பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள்.1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும். பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார். சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார். பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார். "பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார். 2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார். பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார்.. இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 2014 ஆகத்து 14 இல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. மீட்புப் பணம் மீட்புப் பணம் (Ransom) சிறைப்பிடிக்கப்பட்ட பிணையக் கைதிகளை, கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்கள், சிறைபிடித்தவர்கள் அல்லது தீவிரவாதிகளால் கேட்கப்படும் மீட்புத்தொகையையே மீட்புப் பணம் அல்லது பிணய மீட்புப்பணம் என்பர். இது ஒரு குற்ற செயலாகும். பல போக்கிலிகள் மற்றும் கொள்ளையர்கள் வசதி மிக்கவர்களை அல்லது அவர்களின் குழந்தைகளை கடத்தி ஒரு இருப்பிடத்தில் பிணையமாக வைத்து விடுவிப்பதற்காக பிணை மீட்புத் தொகையை கேட்பர். எம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல் எம்டன் ஜெர்மனிப் போர்க்கப்பல் (German cruiser Emden) ஜெர்மன் இலகு வகைப் போர்க்கப்பல் பல வியத்தகு போர்ச்செயல்களை புரிந்து சாதனைப்படைத்த ஒன்றாகும். முதலாம் உலகப்போரின் முடிவிற்குப்பின் ஜெர்மானியால் நிர்மானிக்கப்பட்ட எம்டன் கப்பல்களில் மூன்றாவது போர்க்கப்பலே இந்த எம்டன். 1921 ல் வடிவமைக்கத் தீர்மானிக்கப்பட்ட இக்கப்பல் நேச நாடுகள் மற்றும் வெர்சாய் ஒப்பந்த நிர்பந்தத்தினால் இதன் உருவாக்கம் சற்றுக் காலதாமதம் ஆனது. இறுதியாக ஜனவரி 6, 1925 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 15 , 1925 ல் போர்களில் பயன்படுத்தப்பட்டது. சோதனை முயற்சியாக எம்டன் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் 1926 முதல் 1939 வரை பயன்படுத்தப்பட்டது. செப்டம்பர் 4, 1939 ல் இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானியர்களின் வான் தாக்குதல்களால் இக்கப்பல் சேதத்திற்குள்ளானது. இதை சீர்செய்தபின் மீண்டும் வடக்குக் கடல்பகுதியில் பயன்படுத்தப்பட்டது. பின் ஓஸ்லோவில் நடந்த போரில் பங்குப்பெற்று பெரிய கப்பல்களான புலுச்சர், ஆஸ்கார்பர்க் கப்பல்களை மூழ்கச்செய்தது. ஜெர்மன் முன்னாள் அதிபர் பால் வோன் இன்டன்பெர்க்கினுடைய இறப்பிற்குப்பின் அவர் உடலை சுமந்து வந்தப் பெருமை இக்கப்பலுக்குண்டு. ஏப்ரல் 9,1945 முதல் ஏப்ரல் 10, 1945 ஒரே இரவில் ஜெர்மனியின் கீல் பகுதியில் அடைந்த பலத்த வான்தாக்குதலில் மிகுந்த சேதத்திற்குள்ளானது. ஏப்ரல் 25, 1945 ல் படைப்பிரிவில் இருந்து விலக்கப்பட்டு மே 3 ல் துண்டுதுண்டாக சிதைக்கப்பட்டது. எம்டன் எம்டன் ("Emden") என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: ---- சென்ட்ரார்கைடீ சென்ட்ரார்கைடீ "(Centrarchidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தின் பெயர் "சென்ட்ரார்கசு" "(Centrarchus)" என்னும் பேரினத்தின் பெயரைத் தழுவியது. இப் பேரினத்தில் "செ. மாக்குரோடெரசு" "(C. macropterus)" என்னும் ஒரு இனம் மட்டுமேயுள்ளது. "சென்ட்ரார்கைடீ" குடும்பத்தில் உள்ள 27 இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. இக் குடும்பத்து மீனினங்கள் குறைந்தது மூன்று குதமுட்களைக் கொண்டிருப்பது இவற்றின் தனித்துவமான இயல்பாகும். முதுகுமுட்கள் 5 - 13 வரை இருக்கும். எனினும் பெரும்பாலானவை 10 - 12 முதுகுமுட்களைக் கொண்டவையாக இருக்கின்றன. போலிப்பூக்கள் (pseudobranch) சிறியவையாக மறைந்து காணப்படும். இக் குடும்பத்து மீன்களில் பெரும்பாலானவை 20 சதம மீட்டருக்கும் (7.9 அங்குலம்), 30 சதம மீட்டருக்கும் (12 அங்குலம்) இடைப்பட்ட நீளம் கொண்டவை. ஆனாலும், இவற்றுள் மிகச் சிறிய மீனினங்களும் உள்ளன. "கரும்பட்டைச் சூரியமீன்" "(blackbanded sunfish)" எனப்படும் மீன்கள் 8 ச.மீ (3.1 அங்) நீளம் மட்டுமே கொண்டவை. இக் குடும்பத்திலுள்ள மிகவும் நீளமான மீன்கள் ஒரு மீட்டர் (3.3 அடி) நீளம் வரை வளரக்கூடியன. இக் குடும்பத்தில் உள்ள பல இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்கள் தமது வால்களினால் பள்ளம் தோண்டி அதில் இடப்படும் முட்டைகளைக் காவல் காக்கின்றன. பேர்சைடீ பேர்சைடீ "(Percidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வட அரைக்கோளப் பகுதியின் உவர் நீர் நிலைகளில் வாழுகின்றன. இந்தக் குடும்பத்தில் உள்ள 10 பேரினங்களில் 200 இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்: "அமோகிரிப்டா" "(Ammocrypta)" "கிரிசுட்டலேரியா" "(Crystallaria)" "எத்தியோசுத்தோமா" "(Etheostoma)" "சிம்னோசெஃபாலசு" "(Gymnocephalus)" "பேர்சா" "(Perca)" "பேர்சரைனா" "(Percarina)" "பேர்சைனா" "(Percina)" "ரோமனைக்திசு" "(Romanichthys)" "சாண்டர்" "(Sander)" "சிங்கெல்" "(Zingel)" பிலிம்பேர் விருதுகள் பிலிம்பேர் விருதுகள் ("Filmfare Awards") இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. போபால் பேரழிவு போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும். யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குக் காரணமான "யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்" என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார். இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போபால் நகர மக்கள் தம் நகரத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பேரழிவை 2011, டிசம்பர் 3ஆம் நாள் நினைவுகூர்ந்தார்கள். நச்சுவாயுக் கசிவின் காரணமாக நேரடியாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,787 என்று அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக் கணக்கினர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். நச்சுவாயுக் கசிவின் காரணமாகச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்வோருக்கு உதவித் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா கொடுக்கப்படும் என்று உள்நாட்டு அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருந்தார். அதை நம்பி மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்தவர்களுக்கு இன்னும் அந்த உதவி கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு கணிப்புப்படி, 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டு, புற்று நோய்க்கும் சிறுநீரக முழுச்செயலிழப்புக்கும் (total renal failure = TRF) ஆளாகி, இழப்பீடு கோரி மனுக்கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் எல்லாம் நேர்மையான கோரிக்கைகளே. அப்படியிருக்க, 2000 புற்றுநோய் மனுக்கள், 1000 சிறுநீரக முழுச்செயலிழப்பு மனுக்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனமும் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமான இழப்பீடு கொடுக்க மறுத்துவருகின்றன. முதலில் நீதிமன்றம் விதித்த 750 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கொடுக்கமுடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. அதற்கு எதிராக 7,700 கோடி ரூபா இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வாதாடப்படுகிறது. 1989இல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 3,000 சாவுகள், 20,000 பேர் கடினமாகப் பாதிக்கப்பட்டவர்கள், 50,000 பேர் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்று இடப்பட்ட கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய கணக்குப்படி, நச்சுவாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,295. கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் 35,000 பேர். குறைந்த அளவு பாதிக்கப்பட்டோர் 5.27 இலட்சம் பேர். எனவே, இழப்பீட்டுத் தொகையாக 7,700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது. இந்த உதவி என்று கிடைக்குமோ என்று காத்திருக்கின்றனர் போபால் மக்கள். 2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போப்பால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு சுத்த குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது. போப்பால் பேரழிவு நடந்து 30 ஆண்டுகளாக மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது. மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றது. யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோ கெமிக்கல்சு நிறுவனம் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப் பொறுப்பில்லை என்று கூறிவருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள் அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்தது. போப்பால் பேரழிவால் எழுந்த நச்சுக் கழிவுப் பொருள்கள் மூடப்பட்ட யூனியன் கார்பைடு தளத்தில் இன்றளவும் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அளவு 350 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கழிவுப் பொருள்களை இந்தியாவிலேயே புதைக்காமல், செருமனியின் ஹாம்பர்க் நகருக்குக் கொண்டுசெல்ல ஒரு செருமானிய நிறுவனம் முன்வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விபத்து நடந்து ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப்பின் ஜூலை 3, 2012 இல் இந்திய நடுவண் அமைச்சரவை, அங்கு தேங்கிக் கிடக்கும் 350 டன்கள் நச்சுக் கழிவுப் பொருளைப் பாதுகாப்பாக, வான்வழியாக செருமானிய நிறுவனத்தின் (GIZ) மூலம் அகற்றுவதற்கும் அதற்கான செலவு 25 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளித்தது. இது ஓராண்டு காலத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவானது. ஆகஸ்டு 9, 2012 அன்று, இக்கழிவுகளை 6 மாதங்களுக்குள் அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நடுவண் அரசுக்கும் மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. செப்டம்பர் 17, 2012 இல் அந்த செருமானிய நிறுவனம் இக்கழிவுகளை அகற்ற மறுத்து விட்டது. இந்தியாவிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை செருமனிக்குக் கொண்டுசென்று புதைத்தால் செருமானிய மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது உடல்நலம் கருதி நச்சுப் பொருள்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்றும் செருமானிய பத்திரிகைகள் பரப்புரை செய்தன. இந்தியாவுக்குள்ளும் போப்பால் கழிவுகளைத் தம் பகுதியில் புதைக்கக் கூடாது என்று மாநில அரசுகள் கூறிவருகின்றன. தீங்குயிர்கொல்லி தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும். இவை ஒரு உயிர்க்கொல்லி வர்க்கத்தை சார்ந்தவையாகும். பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் ஒருவகைப் பீடைகொல்லிகளே. இவை நச்சுத்தன்மை வாய்ந்த சில வேதிப்பொருட்களால் ஆனவை. இவை உயிர்களைக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவையாகும். இவை வேளாண்மையில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு பீடைகொல்லிகளை பின்வருமாறு வரையறுக்கிறது: "மனித உணவு, விலங்கு உணவு, ஏனைய விவசாயத் தயாரிப்புக்கள் போன்றவற்றின் உற்பத்தி, அவற்றின் பதப்படுத்துதல், சேமிப்பு, இடமாற்றம் அல்லது விற்பனையில் குறுக்கிடும் தேவையற்ற தாவர, விலங்கு இனங்கள் உட்பட்ட அனைத்துப் பீடைகளையும் தடைசெய்யும், அழிக்கும், விலகச் செய்யும் அல்லது கட்டுப்படுத்தும், அத்துடன் விலங்குகளில் வாழும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துப் பொருட்களும், கலவைகளும் பீடைகொல்லிகளாகும்". புட்டி புட்டி அல்லது குடுவை (Bottle) என்பது ஒரு கொள்கலன். இது குளிர் பானம், மதுபானம் போன்ற வற்றை நிறிப்பி பதபடுத்த உதவும் கொள்கலமகும்.பல வடிவங்களிளூம் மற்றும் பல வண்ணங்களிளூம் இது செய்ய படுகின்றது. இது பல ஆயிரம் காலமாக பயண்பாட்டில் உள்ளது. தாய்வழி உறவு முறை ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய் வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறார்கள். குழந்தைகளை பெண்களின் வழியில் கொண்டு வரும் உறவுமுறைக்குத் தாய்வழி உறவு முறை என்று பெயர். இந்தத் தாய்வழி உறவு முறையைக் கொண்டுள்ள சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் தாய்-->மகள்-->மகளின் மகள்--> என்று தொடர்கிறது. இவ்வழியில் குழந்தையுடன் பிறந்தவர்கள் (சகோதர/சகோதரிகள்)மற்றும் தாயுடன் பிறந்தவர்கள் (மாமா, சித்தி/பெரியம்மா)என்று அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கோட்டைப் பிள்ளைமார், செவளைப் பிள்ளைமார், இல்லத்துப்பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், அரும்புக் கட்டி வேளாளர், அம்பொனேரி மறவர், காரண மறவர், கொண்டையங் கோட்டை மறவர், ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர், வாதிரியார்., [கிறித்துவ மறவர்]], செறுமர், அய்யனவர், செக்கலவர், கயலர், மரைக்காயர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இலங்கையில் முக்குவர், சோனகர், கிழக்குத் தமிழர்கள் ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர். தாய்வழி உறவு முறைச் சமூகங்களில் திருமணம் நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தாயும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்த தாய்மாமன் ஒரே பிரிவில் இருப்பதால் இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களை மணம் முடிக்கும் வழக்கம் இல்லை. தாய்மாமன்கள் சகோதர முறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தைவழி உறவு முறை ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய் வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறார்கள். குழந்தைகளை ஆண்களின் வழியில் கொண்டு வரும் உறவுமுறைக்குத் தந்தைவழி உறவு முறை என்று பெயர். இந்தத் தந்தைவழி உறவு முறையைக் கொண்டுள்ள சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் தந்தை-->மகன்-->மகனின் மகன்--> என்று தொடர்கிறது. இவ்வழியில் குழந்தையுடன் பிறந்தவர்கள் (சகோதர/சகோதரிகள்)மற்றும் தந்தையுடன் பிறந்தவர்கள் (அத்தை, சிற்றப்பா/பெரியப்பா)என்று அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான சமூகங்கள் தந்தைவழி உறவு முறைச் சமூகங்களாகவே இருக்கின்றன. கோட்டைப் பிள்ளைமார், செவளைப் பிள்ளைமார், இல்லத்துப்பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், அரும்புக் கட்டி வேளாளர், ஆம்பநேரி மறவர்,கொண்டையங் கோட்டை மறவர் ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் போன்று தாய்வழி உறவு முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு சில சமூகங்களைத் தவிர அனைத்துச் சமூகங்களும் தந்தைவழி உறவு முறைகளையேக் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைவழி உறவு முறைச் சமூகங்களில் திருமணம் நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தந்தையும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்தவர்கள் மாற்றுப் பிரிவில் இருப்பதால் இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களை மணம் முடிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மீத்தைல் ஐசோசயனேட்டு மீத்தைல் ஐசோசயனேட்டு அல்லது மெத்தில் ஐசோசயனேட்டு (Methyl isocyanate) கரிம வேதியியல் பிணைவின் CHNO என்னும் மூலக்கூறு வாய்பாட்டுடன், HC-N=C=O என்ற மூலக்கூறு அமைப்புடன் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். இணையானப் பெயர் ஐசோசையனேட்டோ மீத்தேன், மீத்தைல் கார்பைல்அமைன் இதை எம் ஐ சி (MIC) என்கின்றனர். 1888 ஆம் ஆண்டு ஈஸ்டர் லிருந்து (ஐசோ சயனிக் அமிலம்) கண்டுபிடிக்கப்பட்டது. மீத்தைல் ஐசோ சயனேட் ஒரு கார்பமேட் (carbamate)(கார்பிக் காடி) பூச்சிக்கொல்லி மருந்தாகும். ரப்பர் மற்றும் பசைப் பொருட்கள் தாயாரிக்க துணை வேதிப் பொருளாகப் பயன்படுகிறது. மனிதர்களின் நலத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மிகவும் அதிக நச்சுத்தன்மைக் கொண்ட இவ் வேதிப்பொருள் போப்பால் பேரழிவுக்குக் காரணமாக விளங்கி 4,000 பேர்களை வளிமக் கசிவு நிகழ்ந்தவிடத்திலேயே உயிரிழக்கச் செய்தது. மொத்த உயிரிழப்புகள் 17,000 க்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.. இராமன் ஆய்வுக் கழகம் இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் ("Raman Research Institute") இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948 ஆம் ஆண்டில் துவங்கபட்டது. அறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்த தனி ஒரு ஆய்வுக்கூடம் அல்லது கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ராமனிடத்தில் இருந்துகொண்டிருந்தது அதற்காக ராமன் அபோதைய மைசூர் மகாராஜ்விடம் உதவி கேட்டார். மைசூர் மகாராஜாவும் உதவ முன்வந்தார். மகாராஜா அவர்கள் தற்போதைய பெங்களுருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ராமனுக்கு 1934 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம்ஆரம்பிம்பதற்காக கொடுத்து உதவினார். 1941 ஆம் ஆண்டுதான் ராமன் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வு கழகம் ஆரம்பிக்க முதல் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் 1948 ஆம் ஆண்டு முதல்தான் ராமன் ஆய்வுக்கழகம் செயல்பாட்டிற்கு வந்தது. ராமன் எப்போதும் அரசாங்கத்திடம் உதவி கேட்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான நிதியை தனியாரிடம் இருந்து திரட்டினார். இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வுக்கழகம் இரண்டிருக்கும் இறுதிவரை ராமன் அவர்களே தலைவராக இருந்து வழிநடத்தினார். போபர்ஸ் ஊழல் போபர்ஸ் அவதூறு (Bofors Scandal) இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது. இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும். இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்ரா சுப்பிரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது. இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒத்தோவியோ குவாத்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர். இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இராஜிவ் காந்தி மே 21, 1991 அன்று படுகொலை செய்யப்பட்டார். ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா ("João Bernardo "Nino" Vieira", ஏப்ரல் 27, 1939 - மார்ச் 2, 2009) கினி-பிசாவு நாட்டின் தலைவராக 2005 அக்டோபர் 1 முதல் 2009 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக 1980 முதல் 1999 வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவியை இழந்திருந்தார். 2005 இ மீண்டும் அரசியலில் நுழைந்து அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மார்ச் 2 ஆம் நாள் இவரை எதிர்த்த இராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் இராணுவத் தளபதி "பட்டிசுட்டா வாய்" என்பவர் குண்டுவெடிப்பு ஒன்றின் போது கொல்லப்பட்டார். திருச்சி பிரேமானந்தா பிரேமானந்தர் ("Premananda", பிரேமானந்தா, நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய குருவும், தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை நிறுவியவரும் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார். ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளியில் ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர். இந்த ஆசிரமம் ஏறத்தாழ 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகும். இந்த ஆசிரமத்தி, பல பெண்களும் சிறுவர்களும் அனாதைகளுமாக கிட்டத்தட்ட 200 பேர் வரை தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவ்வாசிரமத்தின் கிளைகள் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் திறக்கப்பட்டன. இவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில், நடத்தப்பட்ட காவல் துறை புலன் விசாரணையில், குற்றங்கள் நிருபணமாகியதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் பாலியல் குற்றம், வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது. இவருடன் சேர்ந்து குற்றச் செயல் புரிந்த இவருடைய மாமா, பக்கிரிசாமி , மயில் வாகனம் ஆகியோரும் தண்டிக்கப்பட்டனர். பக்கிரிசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பக்கிரிசாமி 2001 ல் மரணமடைந்தார். தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் இவருடைய பாலியல் குற்றத்தையும், கொலைக் குற்றத்தையும் உறுதி செய்தது. இவருக்கு ஆதரவாக வாதாடியவர் இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான இராம் ஜெத்மலானி.இவருக்கு எதிராக வாதாடி பிரேமானந்தாவுக்கு இரட்டையாயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் கும்பகோணத்தை சேர்ந்த கீதாலயன் என்கின்ற சுகுமாரன் ஆவார். இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய பெண் நீதிபதி திருமதி பானுமதி. இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 21 பெப்ரவரி 2011ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மரணமடைந்தார். ஆம்பியர் ஆம்பியர் (குறியீடு: A) என்பது மின்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் (SI) அடிப்படை அலகு ஆகும்.மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன. ஒரு விநாடியில் பாயும் ஒரு கூலோம் (6.241 × 10 எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு ஆம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும். (1775–1836) ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த பிரெஞ்சு இயற்பியலாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பெயரால் இவ்வலகு அழைக்கப்படுகிறது. இவர் மின்னியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆம்பியருக்கான ஒரு விளக்கமாகும். ஓம் விதியின்படி , ஒரு மின்சுற்றில் மின்தடையானது, மின் இயக்க விசைக்கு நேர்விகித்திலும் அதில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கிறது.அதாவது R = V/I க்குச் சமம்.அல்லது இதிலிருந்து, ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில் பாயும் மன்னோட்டம் ஒரு ஆம்பியருக்குச் சமம் ஆகும். அனைத்துலக அலகு முறையில் ஆம்பியர் என்பது கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது: ஒரு ஆம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி இணையாகச் செல்லும் நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10நியூட்டன் எனும் விசையை ஒரு மீட்டர் நீளத்தில் தோற்றுவிக்கும், மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இதில் கம்பிகளின் குறுக்களவு விட்டு விடத்தக்கதாகக் கொள்ளப்படுகிறது. ஆம்பியரின் விசை விதியின் படிமின்னோட்டம் பாயும் இரு இணை கம்பிகளுக்கிடையே ஒரு ஈர்க்கும் அல்லது விலக்கும் விசை உள்ளது. இந்த விசையின் அளவே ஆம்பியரை அளக்க பயன்படுகிறது. அனைத்துலக அலகு முறையில் மின்மத்தை அளக்கும் கூலும் என்பது "ஒரு விநாடி நேரத்தில், ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதால் உண்டாவதாகும்" எதிரிடையாக, ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது ஒரு விநாடி நேரத்தில், ஒரு கூலும் மின்மத்தால் உருவாகிறது. பொதுவாக, "I" என்ற மாறாத மின்னோட்டம், "t" என்ற நேரத்தில் பாயும் போது உண்டாகும் "Q" மின்மத்தை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் காணலாம்: ஆம்பியர் என்பது சென்டி மீட்டர்-கிராம்-விநாடி அலகு முறையிலுள்ள மின்னோட்ட அளவில் பத்தில் ஒரு பங்காக முதலில் வரையறுக்கப்பட்டது. அது இப்போது ஆப்ஆம்பியர் (abampere) என அழைக்கப்படுகிறது. இது ஒரு சென்டி மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டுள்ள ஒரு சென்டி மீட்டர் நீளமுள்ள இரு கம்பிகளுக்கிடையே இரண்டு டைன் விசையை உண்டாக்கும் மின்னோட்டத்தின் அளவாகும். "சர்வ தேச ஆம்பியர்" என்பது தற்போதுள்ள ஆம்பியர் அலகின் முன்பு வரையறுக்கப்பட்டது. இது வெள்ளி நைட்ரேட் கரைசலில் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யும் மின்னோட்டத்தின் அளவாகும். பின்னர் செய்யப்பட்ட துல்லியமான செயல் முறைகளின் படி, மின்னோட்டத்தின் அளவு எனக் கண்டறியப்பட்டது. வலு என்பது மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கல் தொகைக்குச் சமம். அதனால் ஒரு ஆம்பியர் என்பதை ஒரு வாட்டு வலு / ஒரு வோல்ட் மின்னழுத்தம் எனவும் கணக்கிடலாம். இரு மின்னோட்டம் பாயும் கம்பிகளுக்கிடையேயுள்ள விசையின் அளவை விட, ஆம்பியரை அடிப்படை மின்மங்கள் பாயும் வீதத்தைக் கொண்டு கணக்கிடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு கூலும்மின் தோராயமான மதிப்பு எண்ணிக்கையிலான அடிப்படை மின்மங்களுக்குச் சமம். (நேர்மின்னிகளாலான நேர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது மற்றும் எதிர்மின்னிகளாலான எதிர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது ஆகியவை சேர்த்து அடிப்படை மின்மங்களாகக் கொள்ளப்படுகின்றன.) முன்மொழியப்பட்ட மாற்றமாக 1 A என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அடிப்படை மின்னூட்டங்கள், ஒரு விநாடியில் பாயும் வீதத்தைக் கொண்டு ஒரு ஆம்பியர் என்பது கணக்கிடப்படுகிறது. எடைகள் மற்றும் அளவுகளுக்கான சர்வதேச செயற்குழு 2005 ஆம் ஆண்டு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது. சூபிக் கதை கதையின் பெயர்: சந்திர காந்தக்கல் ] பல வருடங்களுக்கு முன்னால் தான் சென்றிருந்த ஓர் ஊருக்கு மாறுவேடமிட்டு, சூஃபி ஞானி மீண்டும் போனார். ஏனெனில், முன்பு அவர் சென்ற போது, அவரின் அறிவுரைகளைக் கேட்காமல், சூஃபியின் மீது கோபம் கொண்டு, அவரைக் கற்களால் அடித்து விரட்டியிருந்தனர். தற்பொழுது அவரை அடையாளம் தெரிந்து கொள்ளாத மக்களிடம், "என்னிடம் ஒரு சந்திர காந்தக்கல் இருக்கிறது. அபூர்வ கற்களை வியாபாரம் செய்யும் எனக்கு, இந்தக் கல் என் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்தது. இது சந்திரனிலிருந்து, பூமியில் விழுந்ததாகப் பெரியவர்கள் சொன்னார்கள். அக்கல்லைப் பார்த்தாலே, செய்த பாவங்கள் விலகும். நோய் நீங்கும். எதிரிகள் விலகுவர்" என பலவாறு சோதிடரைப் போல உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். "நான்தான் முதலில் பார்ப்பேன், எனக்குத் தான் முதலில்.. "என்று அங்கே பெரிய அடிதடி ரகளையே நடந்தது. சூஃபி உடனே அவர்களைப் பார்த்து , "இதை சும்மா காட்ட மாட்டேன். இதைப் பார்க்கக் கட்டணம்" என்று கூறி, அதற்கான கட்டணத்தைக் கூறினார். அக்கட்டணத்தை மக்கள் ஏற்று , சந்திர காந்தக்கல்லைப் பார்க்க வரிசையில் நின்றனர். எல்லோரும் உரிய கட்டணத்தைக் கொடுத்து, அந்த சந்திர காந்தக்கல்லைப் பார்த்தனர். பலர் தங்கள் சிரமங்கள், அப்பொழுதே விலகியதாகக் கூறி வியந்தனர். சிறிது நேரத்திலேயே, ஞானிக்கு நிறைய பணம் சேர்ந்து விட்டது. அன்று மாலை கூடியிருந்த மக்கள் முன் ஞானி, மக்களால் சேர்ந்த பணம் அனைத்தினையும் கொட்டினார். பின்பு, பின்வருமாறு உரை நிகழ்த்தினார். "சில நாட்களுக்கு முன் நான் உங்களிடம் நல்லதைச் சொன்ன போது, நீங்கள் என்னைக் கற்களால் அடித்து விரட்டினீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அங்ஙனம் அடித்தக் கற்களுள் ஒன்று தான், இந்த சந்திர காந்தக்கல். இந்த முறை, நான் மிகைப்படுத்திப் பொய்யானத் தகவலைச் சொன்னேன். நீங்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கிறீர்கள். உழைக்காமல் பொருளீட்டப் பார்க்கிறீர்கள்" என்றுரைத்து விட்டு, மாறுவேடத்தினைக் களைந்தார். அதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வெட்கி தலைக்குனிந்தனர். அப்பொழுது ஞானி, அவர்கள் கொடுத்த அனைத்துப் பணத்தினையும் அவர்களிடமே கொடுத்து விட்டு, அங்கிருந்து அகன்றார். பிரியாகந்தைடீ பிரியாகந்தைடீ "(Priacanthidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 18 இனங்கள் அடங்கியுள்ளன. இக் குடும்பத்தைச் சேர்ந்த மீனினங்கள் கடினமான முட்களைக் கொண்ட செதில்களைக் கொண்டுள்ளன. இதனால், இக் குடும்பத்துக்கு "பிரியோ" "(கடிக்கும்)", "அக்காந்தா" "(முள்)" என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவான "பிரியாகந்தைடீ" என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்திலுள்ள இனத்து மீன்கள் பொதுவாகப் பெரிய கண்களைக் கொண்டவை. இதனால் இவற்றை ஆங்கிலத்தில் "பெருங்கண்" "(bigeye)" என அழைப்பர். ஊனுண்ணும், இரவில் இரைதேடும் இவற்றின் வாழ்க்கை முறைக்கு இப் பெரிய கண்கள் உதவியாக உள்ளன. பிரியாகந்தைடீக்கள் பெரும்பாலும் ஒளி பொருந்திய சிவப்பு நிறமானவை. எனினும், வேறு நிறங்களைக் கொண்ட மீனினங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. பெரும்பாலான இக் குடும்ப மீன்கள் அதிக அளவாக 30 சதம மீட்டர் (12 அங்குலம்) வரை வளர்கின்றன. சில இனங்கள் 50 சதம மீட்டர்கள் (20 அங்குலம்) வரை வளரக்கூடியன. "பிரியாகந்தைடீ" குடும்ப மீன்கள் அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக இவைகளைப் பவளப்பாறைகள் அல்லது கடலடியில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகளுக்கு அண்மையில் காணலாம். இவற்றில் சில இனங்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன. "பிரியாகந்தைடீ" குடும்பம் 4 பேரினங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அப்போகொனைடீ அப்போகொனைடீ "(Apogonidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய கடற் பகுதிகளில் காணப்படுகின்றன. முக்கியமாக இவை கடல் மீன்கள், சில இனங்கள் உவர் நீரிலும் வாழுகின்றன. இவற்றுள் சில இனங்கள் மீன் காட்சியகங்களில் விரும்பி வைக்கப்படுகின்றன. இவை சிறியனவாகவும், அமைதியானவையாகவும், அழகிய நிறங்கள் கொண்டவையாகவும் இருப்பதால் அவற்றை மக்கள் பார்க்க விரும்புகின்றனர். பொதுவாக இவை சிறிய மீன்கள். பெரும்பாலான இனங்கள் 10 சதம மீட்டர்களுக்கும் (3.9 அங்குலம்) குறைவான நீளம் கொண்டவை. வாய் பெரிதாக அமைந்திருப்பதும், முதுகுச் செட்டைகள் இரண்டாகப் பிரிந்து இருப்பதுவும் இவற்றின் சிறப்பு இயல்பாகும். வெப்பவலய, துணைவெப்பவலயக் கடல்களில் வாழும் இக் குடும்ப மீன்கள் பொதுவாகப் பவளப்பாறைத் திட்டுகளிலும், குடாப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இரவு நேரங்களிலேயே உணவு தேடுகின்றன. பகலில் பவளப்பாறைகளில் உள்ள இருண்ட இடுக்குகளில் மறைந்து இருக்கின்றன. இவற்றுட் சில மீனினங்கள் ஆண் மீன்களின் வாய்க்குள் முட்டை இடுகின்றன. இக் குடும்பத்தின் 2 துணைக் குடும்பங்களில் 24 பேரினங்களைச் சேர்ந்த 331 இனங்கள் உள்ளன. அப்போகொனைடீ குடும்பம் விக்கியினங்கள் விக்கியினங்கள் விக்கி‎யை அடிப்படையாகக் கொண்ட விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இணையத் திட்டமாகும். இத்திட்டம் உலகிலுள்ள உயிரினங்களின் பெயர் அட்டவணையை தயாரிப்பதற்காக ஆகசுட்டு 2004ம் வருடம் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். கொலோபசுக் குரங்கு கொலோபசுக் குரங்கு என்று அழைக்கப்படும் வெள்ளை-கறுப்பு கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம்.இது ஆப்பிரிக்காவில் கிழக்கு, நடு, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இயற்கையாக காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்கு கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருப்பதால் இதற்கு "கொலோபசு" என்று பெயர். கிரேக்க மொழியில் "ekolobóse" ("எக்கொலோபொசெ") என்றால் "அவன் ஒட்ட வெட்டிக்கொண்டான்" ("he cut short") என்று பொருள். இதனால் தமிழில் இதனை "கூழைக் குரங்கு" அல்லது" கட்டைவிரல் கூழைக்குரங்கு" என்றும் கூறலாம் (கூழை = குட்டையாக அல்லது அறவே இல்லாமல் இருப்பது). இதன் உடல் பட்டுநூல் போன்ற மழமழப்பான, மென்மையான கறுப்பு வெள்ளை முடியால் போர்த்தப்பட்டுள்ளது. தலை, முதுகுப்புறம், மற்றும் கை கால்கள் கறுப்பாகவும், தோளில் இருந்து உடலின் இருபுறமும் அள்ளைப்புறத்தில் இருந்து நீண்ட வெண்முடியும் கொண்டுள்ளது. உடலைவிட வால் சற்று நீளமாக இருக்கும். வாலும் வெள்ளையாக உள்ளது. இக் குரங்கின் குட்டிகள் பிறந்தவுடன், முகம், உள்ளங்கை உள்ளங்கால்கள் தவிர மற்றபடி உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். பின்பு ஏறத்தாழ 3-4 மாதங்களுக்குப் பிறகு வளர்ந்த குரங்குக்கான கருப்பு-வெள்ளை முடி அமைப்பைப் பெறுகின்றது. கூழைக்குரங்குகள் (கொலோபசுக் குரங்குகள்) கூட்டமாக வாழ்கின்றன, பெரும்பாலும் ஒரு குழுவில் 5-10 குரங்குகள் இருக்கும். இவை வாழ்நாள் முழுவதும் மரங்களின் கிளைகளிலேயே வாழ்கின்றன. தரையில் இறங்குவது கிடையாது. கூழைக் குரங்கு (கொலோபசுக் குரங்கு) வகையில் ஐந்து இனங்கள் உள்ளன. கறுப்பு-வெள்ளை கொலோபசுக் குரங்கு, சிவப்புக் கொல்லொபசு என்னும் வேறு ஒரு குரங்கினத்துக்கும் உறவான உயிரினம். கொலோபசுக் குரங்கு இலை தழைகளையும், பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. துளிர் இலைகளை விரும்பி உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரங்களுக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன. குழுக்களில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 8-10 ஆக இருக்கும். அவற்றுள் ஒன்றோ இரண்டோதான் கடுவன்களாக(ஆண் குரங்குகளாக) இருக்கும். கடுவன்கள் தங்கள் வாழிட வலையத்துக்கான உரிமையை நிலைநாட்டவும் பிற கடுவன்களை எச்சரிக்கவும் உரக்க குரலெழுப்பிக்கொண்டு கிளைகளில் மேலும் மிகக் கீழுமாகத் தாவி தன் வல்லமையைக் காட்டும். கூழைக்குரங்கு இனத்தில் இனப்பெருக்கத்திற்கென்று தனியான காலப்பகுதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் சில இடங்களில் (ஈக்குட்டோரியல் கினீயாவில்) நிறைய பழங்கள் கிடைக்கும் காலமாகிய டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் கறுப்புக் கொலோபசு இனத்தில் இனப்பெருக்கம் நிகழ்வதாக "ஓட்டுசு" (Oats) என்பார் குறித்துள்ளார். கொலோபசு கருவுற்று இருக்கும் காலம் 175 நாட்கள். பிறக்கும் பொழுது குட்டிகளின் எடை 820 கிராம். ஆறுமாதம் தாய்ப்பால் உண்கின்றது. இரண்டாண்டு்களில் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியைப் பெறுகின்றது. ஐந்து இனங்களும் எட்டு உள்ளினங்களும் உள்ளன. பண்டங்களின் கதை பண்டங்களின் கதை ("The Story of Stuff", "த இசுடோரி ஒஃப் இசுடஃப்") என்பது நுகர்வுப் பண்பாட்டை விமர்சிக்கும் ஒரு விபரணப் படம். இத்திரைப்படம் 20 நிமிடம் நீளம் ஓடக்கூடியது. இந்தப் படத்தை அன்னி லெனார்டு என்பவர் விபரணம் செய்தார். இந்தப் படத்தை இணையத்தில் இலவசமாகப் பாக்கலாம். இதனை 4 மில்லியன் நபர்கள் இதுவரை பார்த்துள்ளதாக தளம் தெரிவிக்கிறது. இப் படம் தற்போதைய மனித பொருளாதாரச் செயற்பாட்டை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை: இந்த நேரிய செயற்பாடு பேண தாகாதது என்றும். இது திட்டமிட்டு மக்களின் மீது திணிக்கப்பட்டது என்றும் இப்படம் கூறுகிறது. பொருட்களைக் கழிவாக்காமல், ஒரு சுழற்சி முறை பொருளாதரமே பேணத்தகுந்தது என்றும் இப் படம் எடுத்துரைக்கிறது. இயற்கை வழங்கள் சுரண்டப்படல், சூழல் மாசுறல், மனித விரக்தி ஆகியவை 1950 களின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நுகர்வுப் பண்பாட்டால் அதிகரித்து வருகிறது என்கிறது. சில கருத்துரைகள்: செயந்திர சரசுவதி 'செயந்திர சரசுவதி அல்லது ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் (சூலை 18, 1935 - பெப்ரவரி 28, 2018) 69 வது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதி. திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி என்ற கிராமத்தில் 18 சூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்த ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, சந்திரசேகர சரசுவதியின் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கில், 11 நவம்பர் 2004 அன்று ஜெயந்திர சரசுவதி கைதுசெய்யப்பட்டார். 10 சனவரி 2005 அன்று உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து ஜெயந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார். 28 பிப்ரவரி 2018 அன்று ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவையடுத்து இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி காஞ்சி சங்கர மடத்தின் 70வது குருவாக செயல்படுவார். இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா நாட்டில் வாழ்பவர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன. 1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயேந்திரர் தன் தண்டத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக விசயேந்திர சரசுவதி சுவாமிகளை நியமித்தார். இதையடுத்து ஜெயேந்திரர் கர்நாடக மாநிலம் குடகில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி மடத்துக்குத் திரும்பி, மீண்டும் இளைய பீடாதிபதியாக செயல்பட்டார். அவர் காஞ்சி பீடாதிபதியுடன் சண்டையிட்டு மடத்தை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் சிலர் செய்த சமரசத்தால் மீண்டும் மடத்துக்குத் திரும்பியதாகவும் கருத்துகள் பரவின. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது. நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றம் இவரது பிணை விடுவிப்பு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது. ஊடகங்களின் செயல்பாடுகளை ஆந்திர நீதிமன்றமும் கண்டித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்பது செயந்திர சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பெப்ரவரி 28, 2018 அன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே காலமானார். போபர்ஸ் போபர்ஸ் இரும்புத் தொழில் நிறுவனமான, இது சுவீடன் நாட்டில் கார்ல்ஸ்கோகா வில் அமைந்துள்ளது. 1646 ல் உருவாக்கப்பட்ட "ஹேமர் மில் பூபர்ஸ்" எனும் நிறுவனத்திடமிருந்து தோன்றியதாகும். போபர்ஸ் நிறுவனம் நிர்மானிக்கப்பட்ட ஆண்டு 1873. 1999 ஆம் ஆண்டு சாப் என்ற "செல்சியஸ் குழு" நிறுவனம் இதைத் தாய் நிறுவனமான "போபர்ஸிடமிருந்து" வாங்கியது. சாப் எரிகணைத் தயாரிப்பின் பக்கம் திரும்பியதால். செப்டம்பர் 2000 ல் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள , ஐக்கிய இராணுவத் தளவாடத் தொழிற்சாலை (யூ டி ஐ-UDI-United Defense Industries) போபர்ஸ் படைக்கலன் பிரிவை தன் வசமாக்கிக்கொண்டது. தப்பொழுது போபர்ஸ் இரண்டு வகை நிறுவனங்களாகப் பிரிந்து செயல்படுகின்றது. போபர்ஸ் ஐ நிர்வகித்த மிகப்பழமையானத் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆல்பிரட் நோபல், நிர்வகித்த ஆண்டு 1894 முதல் அவர் இறந்த டிசம்பர் 1896 வரை. இவர் காலத்தில் இத் தொழிற்சாலை மிகவும் மேம்பட்டது. "போபர்ஸ்" என்ற வணிக சின்னம் புகழடையக் காரணமானத் தயாரிப்பாக 40 மிமீ எதிர் வான்படை தாக்குதல் சுடுகலன் ஐக் கூறலாம். இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பயன் பட்ட இதை போபர்ஸ் சுடுகலன் என்று அழைக்கப்பட்டது. போபர்ஸ் நிறுவனம் சமீபக் காலங்களில் பல சந்தேக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது. இதனால் போபர்சிற்கு அவதூறு நிலை ஏற்பட்டது. சுவீடனால் 1986 ல் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட படைக்கலன்களில் தனிப்பட்ட ஆதாயம் அடைந்ததாக இன்று வரை நிருபிக்கப்படாத குற்றச் சிக்கலில் சிக்கிக்கொண்டது. நடுநிலை நாடு ஒரு குறிப்பிட்ட போரின் போது சண்டையிடும் இரு தரப்புகளுடன் சேராமல் நடுநிலை வகிப்பதாக அறிவிக்கும் நாடு நடுநிலை நாடு என்று வழங்கப்படும். சண்டையில் பங்குபெறா நாடுகளுக்கும் நடுநிலை நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. சண்டையிடுபவர்களுள் ஒரு தரப்பினை ஆதரித்தாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ போரில் ஈடுபடாத நாடு நடுநிலை நாடு கிடையாது. 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தின் ஐந்தாவது மற்றும் பதின்மூன்றாவது பிரிவுகளில் நடுநிலை வகிக்கும் நாடுகளின் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட போர்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நடுநிலை வகிக்க நிர்பந்திக்கப்படும் (பன்னாட்டு உடன்படிக்கைளின் மூலம்) நாடுகளும் உள்ளன. போர்க்காலத்தில் நடுநிலை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலை கோரும் நாடு, அதனை பிற நாடுகள் ஏற்கவேண்டுமெனில் பல குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். வெளியுறவுக் கொள்கைகளில் நடுநிலை, அணி சேராமை, ஆயுதமேந்திய நடுநிலை ஆகிய கொள்கைகள் வெவேறாகக் கருதப்படுகின்றன. வெறும் நடுநிலை வகிக்கும் நாடு குறிப்பிட்ட சில காலத்துக்கோ, போர்களுக்கோ எத்தரப்பிலும் இணையாது. அணி சேரா நாடென்பது எந்த ராணுவ, அரசியல்க் கூட்டணிகளிலும் சேராமல் செயல்படும் நாடு. ஆயுதமேந்திய நடுநிலையென்பது, போருக்குத் தயாராகவும், தன்னை யாரேனும் தாக்கும் பட்சத்தில் நடுநிலையைக் கைவிடும் கொள்கையைக் கொண்டுள்ள நாட்டின் நிலையைக் குறிக்கும். வெள்ளை மூக்குக்கொம்பன் வெள்ளை மூக்குக்கொம்பன் என்பது மூக்குக் கொம்பன் இனங்களிலேயே மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இதில் மொத்தம் இரண்டு துணையினங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் ("Ceratotherium simum simum") வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. வட வெள்ளை காண்டாமிருகம் ("Ceratotherium simum cottoni") மிக இக்கட்டான அளவு அருகிவிட்டது. அந்த இனத்தில் தற்போது (2018) மொத்தம் இரண்டு பெண்கள் மட்டும் தான் உலகில் உயிருடன் இருக்கின்றன. அவற்றில் ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோய் தொற்றின் காரணமாக இறந்துவிட்டது. வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும். கருப்பு மூக்குக்கொம்பன் கருப்பு மூக்குக்கொம்பன், மூக்குக்கொம்பன் என்னும் பெரும் விலங்குப் பேரினத்தில் உள்ள ஓர் விலங்கு இனம். இது இன்று இயற்கையில் கிழக்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் நாடுகளாகிய கென்யா, தான்சானியா, காமரூன், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாபுவே ஆகியவற்றில் மட்டும் காணப்படும் விலங்கு. இவ்விலங்கின் வாழிடப் பரப்பை வலப்புறம் உள்ள நிலப்படத்தில் காணலாம். காண்டாமிருகம் என்றால் மிகப்பெரிய விலங்கு என்று பொருள் (காண்டா = மிகப்பெரிய; மிருகம் = விலங்கு).கறுப்பு காண்டாமிருகத்தின் எடை 800 கிராம் முதல் 1364 கிராம் வரை இருக்கும். இதன் பருத்த உடலின் உயரம் 140–170 செமீ இருக்கும். இவ்விலங்குக்குக் கறுப்பு என்னும் முன்னொட்டு இருந்தாலும், இதன் நிறம் பெரும்பாலும் கருஞ்சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டது. மூக்கின்ன் மீது இருக்கும் இரண்டு கொம்புகளும் நகம், மயிர் போன்ற பகுதிகளில் உள்ளது போன்ற நகமியம் (அல்லது கெரட்டின்) என்னுமகெட்டியான பொருளால் ஆனது. இவை நிலத்தைத் தோண்டவும், புதர்களை அடியோடு தோண்டி எடுத்தெறியவும் பயன்படுகின்றன. இன்று உலகில் இவ்விலங்கினம் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. உலகில் மொத்தம் ஏறத்தாழ 3,600 விலங்குகள்தான் உள்ளன. உலக உயிரின நிலைப்பேறு ஒன்றியம் (The World Conservation Union, IUCN) சூலை 7 2006 அன்று அறிவித்தபடி "மேற்கு கறுப்பு காண்டாமிருகம்" என்னும் உள்ளினம் முற்றிலும் அற்றுவிட்டதாக அப்போதைக்கான தகவல்படி அறிவித்தது. இந்திய மூக்குக்கொம்பன் 'இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்ப்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விலங்கு அசாமின் மாநிலவிலங்காகும். ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும். இதனை 1758ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும். தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர். மூதாதைய மூக்குக்கொம்ன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது. உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கோலோசின் காலத்தில் இம் மூக்குகொம்பன்கள் தற்போதய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்: மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும் மற்றும் இப்படிவத்தில் காண்டாமிருகத்தின் ஒரு சில பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன; காண்க தோளின் மீதுள்ள கொம்புகள். தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும். நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.. இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள். அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும். இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும். இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும். இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும். தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும். ஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது. இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன போதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்ப்டுகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள். இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றது.மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 1910ஆம் ஆண்டு முதல் இந்திய காண்டாமிருகத்தின் உயிர் தொகையியல் புள்ளி விபரத்தின் போக்கு ஆதாரம் : here. இந்திய காண்டாமிருகம் அசாம் மாநிலத்தின் மாநில விலங்காகும். மேலும் அசாம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சியட் டயர் நிறுவனத்தின் சின்னமும் இந்திய காண்டாமிருகம் ஆகும். உமர் முக்தார் ஒமர் முக்தார் ("Omar Mukhtar", 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். 16ஆம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானி (Hussein El Gariani) யின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா (Abd Akader Bodia) இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார். 1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார். 1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லி (Luigi Faravelli) யின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி பொறி தெறிக்க முழங்கினார். லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு ஓடி மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் (Tripolitanians) என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது. இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினி (Benito Mussolini) படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர். "ஒமர் முக்தார்" தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசான். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஒமர் முக்தார் கைது செய்யபட்டு தண்டனையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களைக் கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய "வாழ்க்கை வரலாறு " மற்றும் போராட்டங்களைச் சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எப்பிகொனைடீ எப்பிகொனைடீ "(Epigonidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை சிறிய மீன்கள். இவற்றுள் பெரிய மீன்களைக் கொண்ட இனமான "எப்பிகோனசு டெலெசுக்கோப்சு" 75 சதம மீட்டர் நீளமாக வளரக்கூடியது. ஆனால், இக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மீனினங்கள் 20 சதம மீட்டருக்கு மேல் நீளமாக வளர்வதில்லை. இவை மிதவெப்பவலய, வெப்பவலயக் கடல் பகுதிகளில் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றன. கடல் தளத்துக்கு அண்மையில் வாழும் இம் மீனினங்கள் கடலில் 3,000 மீட்டர் ஆழம் வரையில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தில் ஏழு பேரினங்களில் 34 இனங்கள் உள்ளன. மலகாந்தைடீ மலகாந்தைடீ "(Malacanthidae)", "பேர்சிஃபார்மசு" ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பொதுவாகக் கடலில் வாழும் சிறிய மீன்கள். இவற்றில் பெரிய வகை மீனினங்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன. இவற்றில் பாதரசம் இருப்பதனால், கருவுற்றிருக்கும் பெண்களும், குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்களும் இதனை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இக் குடும்பத்தில் உள்ள சிறிய பலநிற மீன்கள் காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன. இந்தியப் பொதுத் தேர்தல், 2009 இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதமரானார். ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம் இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம். மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம். நான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம். ஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம். குறிப்பு:- குறிப்பு ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது + மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன . ஆதாரங்கள்: காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும் பாசக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 160 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ள மூன்றாவது அணி 79 இடங்களிலும் 4வது அணி 28 இடங்களிலும் மற்றவர்கள் 14 இடங்களிலும் வென்றார்கள். அதிக இடங்களில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது. மூலம்: இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009 பழைய மாணவர் பழைய மாணவர் அல்லது முன்னாள் மாணவர் (Alumnus, Alumni) என்பவர், முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவர்களையும், முன்னாட்களில் பயின்ற பள்ளி மாணவர்களையும் குறிக்கும் சொல். பல மாணவர்கள் கல்லூரி முடிந்த பின்பும் தொடர்பில் இருப்பர். பலர் அமைப்பு நோக்கிலும் செயற்படுவர். தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இவ்வமைப்புகள் தம்முடைய முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ இவ்வமைப்புகளின் கூட்டம் கூட்டப்பெற்று, அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். மனுஜோதி ஆசிரமம் மனுஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி (ஆங்கிலம் : ) என்பவரால் இது துவங்கப்பட்டது. 1921-ல் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்த லட்சுமி தேயிலைத் தோட்டம் எனும் இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜையா என்பவரின் மகனாகப் பிறந்தவர் பாலாசீர் லாறி. இவர் தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலும், கல்லூரிக் கல்வியை பாளையங்கோட்டை, சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியிலும் படித்து வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 1947-ல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எபநேசர் நட்சத்திரம் என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்ததால் 1953-ல் தனது பணியைத் துறந்து இறைபணியாகப் பிரசங்கங்கள் செய்து வந்தார். அதன் பின்பு கிறித்துவ மதப் பிரச்சாரகராக நாசரேத், நாகர்கோவில் பகுதிகளிலும் அதன் பின்பு கேரள மாநிலத்திலும் கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்து வந்தார். இந்தப் பிரச்சாரங்களின் மூலம் இவர் பல அரிய செயல்களைச் செய்ததால் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது அவர் கடவுள் ஒருவரே, இந்த மதங்கள் என்பது கடவுளுக்கான மார்க்கங்கள் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மனுஜோதி ஆசிரமம் ஒன்றை அமைத்து அந்தப் பகுதிக்கு சத்தியநகரம் என்று பெயரிட்டார். இங்கு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கடவுள் கொள்கை வலியுறுத்தப் பட்டது. இங்கு 1965-ல் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு "கூடாரப் பண்டிகை" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது. 1969-ம் வருடம் ஜீலை மாதம் 21ம் நாள். அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள். அன்று அமெரிக்கா விலிருந்த பாலாசீர் லாறியைச் சந்தித்த அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம் பிரான்மியம் என்பவர் "மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன் உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான் அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தங்களிடம் அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது." என்று தெரிவித்தார். அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்டார். 1974-ல் இருந்து 1985 வரை வைகுண்ட யோகம், ஆதிபலி ரகசியங்கள், தர்ம வழிகாட்டுதல்கள் போன்ற வேதபாட விளக்கங்கள் இந்த ஆசிரமத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. உலகின் பல பகுதிகளிலும் இவரது செயல்கள் அறியப்பட்டன. இதன் மூலம் இங்கு பல மதங்களைச் சேர்ந்த, சாதி, இன, மொழி வேறுபாடுகளில்லாத பலர் இங்கு வரத் துவங்கினர். அவர்கள் பாலாசீர் லாறியைக் கடவுளாகக் கருதினர். தனது பிறந்தநாளையே கொண்டாடாத பாலாசீர் லாறி கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்ட நாள் - 1969 ம் வருடம் ஜூலை மாதம் 21ம் நாள் - அவரது பக்தர்களால் 1970 முதல் கல்கி ஜெயந்தி விழாவாக எட்டு நாட்கள் திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. பாலாசீர் லாறி மறைவிற்குப் பிறகு இந்த ஆசிரமத்தின் தலைவரான தேவாசீர் லாறி மற்றும் அவரது துணைவியார் கீதா தேவாசீர் லாறி இந்த ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன. இந்த ஆசிரமத்திற்கு தனி நபர்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ நன்கொடையும் பெறப்படுவதில்லை. இந்த ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ("Rashtriya Swayamsevak Sangh", தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.. சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் "தெற்காசிய நண்பர்கள்" என்ற பெயரிலும், மியான்மரில் "சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம்" (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் "மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம்" (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் "இந்து சுயம்சேவாக் சங்கம்" (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது. இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது. ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை.அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி ஆதரித்த கட்சிதான் பாரதீய ஜனதாக் கட்சி.ஆர்.எஸ்.எஸ் "சங்கப் பரிவார்" அமைப்புடன் அதிகத் தொடர்புடையது. ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினரான சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர் எஸ் எஸ் கிளைக்குச் (ஷாகா) (அடிப்படை அலகு) சென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது. இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் "சர்சங்கசாலக்" என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது. குரு பூர்ணிமா அன்று மட்டும் உறுப்பினர்கள் தரும் குரு காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்கால தலைவரைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அமைப்பின் பொதுக்குழு புதிய தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் பதவி கருதப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர். இப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி சங்கப் பரிவார் எனப்படும் அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கெடுப்பர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவராக இருப்பவரின் முடிவின்படி, வருங்காலத் தலைவர் ("Sarsanghchalak") தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவர்கள் ("Sarsanghchalak") பட்டியல்; சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகளான ராஷ்டிரிய சேவிகா சமிதி, பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிசத், துர்கா வாகினி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், விவேகானந்த கேந்திரம், இந்து இளைஞர் சேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய மஸ்தூர் சங்கம், ராம ஜென்மபூமி அறக்கட்டளை, பாலகோகுலம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், சேவா பாரதி, பாரதிய கிசான் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம் மற்றும் பாரதிய ஆய்வு மையம். விவேகானந்த கேந்திரம் போன்றவைகள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும் இயங்குகின்றன. "ஆர் எஸ் எஸ்" மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது. 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் அரசு அறிக்கை வெளியானது.இதில், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை. என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது . 1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகு , ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும்.அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது.. இராபின் ஊட் இராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் ("Robin Hood") ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை. உண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. இக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் "16 ம்" நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது "17 அல்லது 18" ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது. தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன். வெலிகமை வெலிகமை அல்லது வெலிகாமம் என்பது ("Weligama", வெலிகம) இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும் இது. மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானதும் ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும். வெலிகமையிலுள்ள அக்கிரபோதி விகாரை, அதன் அரச மரம் என்பவற்றின் வரலாற்றைப் பார்க்கையில், கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான மனிதக் குடியிருப்பைக் கொண்டுள்ள ஓர் ஊராக வெலிகமை திகழ்வதை அவதானிக்கலாம். வெலிகமை நகர சபை, வெலிகமை பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி அமைப்புகளும், வெலிகமைப் பிரதேசச் செயலாளர் பிரிவு, வெலிப்பிட்டிப் பிரதேசச் செயலாளர் பிரிவு ஆகிய இரு அரச நிருவாக அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. வெலிகமையிலுள்ள பெனேட்டியனைப் பகுதியில் குடாகல்கந்தை எனப்படும் இயற்கையான காட்டுப் பகுதி அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது. இங்கு ஓடும் பொல்வத்து ஒயா எனப்படும் நதி பல்வேறு இடங்களிலும் வளைந்து நெளிந்து செல்வதால், இது வெலிகமையின் பற்பல பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது. பண்டைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றான பொல்வத்து கங்கை அல்லது பொல்வத்து ஒயா என்ற ஆற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்த வெலிகாமப் பட்டினம் "மகாவாலுக்காகமை" என்றழைக்கப்பட்டது. இதனாலேயே ஆதி காலந்தொட்டே அரபுக் குடியிருப்புக்கள் இங்கு ஏற்படலாயின. பண்டைய கப்பற்றுறையிலிருந்த பள்ளிவாயலே இன்று கப்பற்றுறைப் பள்ளிவாயல் என்றழைக்கப்படுகிறது. இது தற்காலத்தில் கப்துறைப் பள்ளிவாயல் என்று மருவி வழங்கப்படுகிறது. இதிலிருந்து பார்த்தால் வெலிகமையின் துறைமுகப் பகுதியை மிகத் தெளிவாகக் காணலாம். தற்காலத்தில் வெலிகமையின் ஒரு பகுதியான மிரிசையில் மீனவத் துறைமுகமொன்று காணப்படுகின்றது. இதனை அண்டியே 0.32 கி.மீ. கராண்டுவைக் களப்பு காணப்படுகிறது. தாழ் நில ஈரவலயத்தில் அமைந்துள்ளமையால் இங்கு பொதுவாக இதமான காலநிலை நிலவுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்ந்து ஆற்று நீர்மட்டம் குறையும் காலங்களில் சுறா மீன்கள் பொல்வத்து கங்கையினுள் ஊடுருவுவதுண்டு. ஆற்றின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்படும் புதர் நிறைந்த இடங்களில் முதலைகள் வாழ்கின்றன. ஆற்றில் நீர்நாய்களும் ஆற்று நண்டுகளும் ஆற்று மட்டிகளும் காணப்படுகின்றன. உட்புறக் காடுகளில் செங்குரங்கு, சருகுமான், கொடும்புலி, வரி முயல், முள்ளம் பன்றி, உடும்பு, பொன் மரநாய், கீரிப் பிள்ளை, நீர் நாய் போன்ற விலங்குகளும், குந்துகாலி, பாலகன், நீர்க்காகம், மைனா, மாம்பழத்தி, மயில், குயில், செம்பகம், சிச்சிலி, கொக்கு, மணிப் புறா போன்ற பறவைகளும் வாழ்கின்றன. அவுத்திரேலியா, சைபீரியா போன்ற இடங்களிலிருந்து வலசை போகும் பம்பலி கொக்கு, மானில் போன்ற பறவையினங்கள் சிலவற்றையும் இங்குக் காணலாம். மலைப்பாம்பு, நாகம், புடையன், சாரை, வெள்ளாலை, மாபில்லன் போன்ற பாம்பினங்களும் காணப்படுவதுண்டு. உட்பகுதிகளில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. ஆயினும் கடற்கரையை அண்டிய இடங்களில் நீர் சற்று உவர்ப்பாக உள்ளது. ஆங்காங்கே சிறு மலைகள் காணப்படுகின்றன. கடலை அண்மித்த மலைகளற்ற சமதரையான இடங்களில் நிலத்தடியில் சிப்பிகள், சங்குகள், பவளங்கள் போன்ற கடலுயிரினங்களின் புதைபடிவங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. முதலாம் விஜயபாகு மன்னனின் (பொ.கா. 1055 - பொ.கா. 1110) காலத்தில் இராசரட்டை சோழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிய மன்னன் உறுகுணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதிலும் சில காலம் மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது வெலிகமையிலுள்ள கராண்டுவைக் களப்பினருகிலுள்ள சிறிபத்தனை எனும் சிறு தீவிலேயே முதலாம் விஜயபாகு மன்னன் மறைந்து வாழ்ந்தான் என்பதாக வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. அதனைச் சூழவிருந்த மக்களே மன்னனுக்குத் தேவையான உதவிகளை நல்கிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து பதினேழு ஆண்டுகளின் பின்னரேயே அவன் சோழர்களை வெற்றி கொண்டு மீண்டும் இராசரட்டையைக் கைப்பற்றினான். வெளிநாட்டு மன்னனொருவன் குஷ்ட நோயால் அவதிப்பட்ட போது தனது நோயைக் குணப்படுத்துவதற்காக வெலிகமைக்கு வந்திருந்து இங்கேயே தன் நோய் நீங்கிச் சென்றான். அவனது ஞாபகார்த்தமாக இன்றும் வெலிகமையில் காணப்படுவதுதான் குஷ்டராஜகலை (குட்டராசக் கல்) ஆகும். ஆயினும் அவ்விடத்திலிருக்கும் சிலை மகாயான பௌத்தத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவலோகதீசுவர போதிசத்துவருடையதாகும். பொ.கா. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை 383 சதம மீற்றர் உயரமுடையதாகும். முற்காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்தம் நிலவியமைக்கு ஆதாரமாக இச்சிலை கொள்ளப்படுகிறது. வெலிகமையில் காணப்படும் இராசகுலவடன விகாரை கலிங்க மரபு ஆட்சியாளனான நிசங்க மல்லனின் இறப்பின் பின்னர் இலங்கையை ஆண்ட அவனது மனைவி கல்யாணவதி அரசியால் கட்டப்பட்டதாகும். தற்காலத்தில் போதிமலு விகாரை இருக்குமிடத்தில் முற்காலத்தில் கோயிலொன்று காணப்பட்டது. திருவாலக் கோயில் எனப்பட்ட அது இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் போது அக்கோயில் அழிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்காணி போதிமலு விகாரையை அமைக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இற்றைக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பொ.கா.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெலிகமையில் கட்டப்பட்டதுதான் அக்கிரபோதி விகாரை ஆகும். இந்த விகாரையும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. இங்கிருக்கும் அரச மரம் தேவனம்பியதீச மன்னன் காலத்திலேயே அனுராதபுரத்திலிருக்கும் சிறீ மகாபோதியிலிருந்து முதலாவதாகப் பிரித்தெடுத்து நடப்பட்டதாகும். இவை தவிர கண்டி அரசின் கீழிருந்த காலத்தில் கட்டப்பட்ட சமுத்திரகிரி விகாரை, கோவில கந்த விகாரை (கோவில் மலை விகாரை) என்பனவும் இன்னும் ஏராளமான புராதனக் கோயில்களும் இங்கே காணப்படுகின்றன. வெலிகமையில் ஏழாம் நூற்றாண்டிலேயே அறபுக் குடியேற்றங்கள் காணப்பட்டமையை பண்டைய வரலாற்றாசிரியரான அல்-பலாதுரியின் குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆதி காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக பகுதாதிலிருந்தும் யெமனிலிருந்தும் இலங்கைக்கு வந்து சேர்ந்த பனூ ஹாசிம் மரபினர் பெரும்பாலும் வெலிகமையிலேயே குடியேறினர். மௌலானாக்கள் என்றழைக்கப்படும் இவர்களினூடாக இஸ்லாமியப் பேரரசுக்கும் இலங்கைக்குமிடையே உறவு நிலவ வழியேற்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்த்துக்கேயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளின் காரணமாக இப்பகுதியிலிருந்து முஸ்லிம்கள் பலர் வெளியேறவும் கொல்லப்படவும் நேர்ந்தது. வெலிகமையில் காணப்படும் பாலத்தடிப் பள்ளிவாயல் பொ.கா. 1200 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாகும். இங்கு கிட்டத்தட்ட முப்பது பள்ளிவாயல்கள் காணப்படுகின்ற அதே வேளை நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான பள்ளிவாயல்கள் நான்கு காணப்படுகின்றன. போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்ற முயன்ற போது இலங்கையிலிருந்த முஸ்லிம்கள் அதனை எதிர்த்து நின்றனர். கண்டி மன்னனின் கரையோரப் படை வெலிகமையிலேயே தளமமைத்திருந்தது. அதில் முற்று முழுதாக அறபு முஸ்லிம்களே இருந்தனர். போர்த்துக்கேயர்களால் இப்படையைச் சேர்ந்த 10,000 அறபு வீரர்கள் வெலிகமையில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். பின்னர் போர்த்துக்கேயப் படைத்தளம் வெலிகமையில் நிறுவப்பட்டது. மதுராபுரிப் பகுதியினுள் அமைந்துள்ள இவ்விடமே "ஹட்டன்கெவத்த" (හටන් ගෙවත්ත - படைமுகாம்) என்றழைக்கப்படுகிறது. போர்த்துக்கேயர் வெலிகமையிலும் ஒரு கோட்டையைக் கட்ட முனைந்தனர். அதனைத் தடுப்பதற்காக உடனடியாகச் செயலிலிறங்கிய ஒல்லாந்துக்காரர்களுக்கும் போர்த்துக்கேயருக்குமிடையே இங்கு கடும் சமர் நிலவியது. 2004 ஆம் ஆண்டு திசெம்பர்த் திங்களில் நிகழ்ந்த இந்து சமுத்திரக் கடற்கோளினால் வெலிகமையில் 2200 வீடுகள் அழிவுற்றதுடன், 469 பேர் இறந்தனர். இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் ஆளப்பட்ட காலத்தில் வெலிகமையிலும் குறிப்பிடத் தக்களவு பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. ஒல்லாந்து நாட்டில் சிறந்து விளங்கிய இறேந்தை பின்னும் கலையை இன்றும் வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் காணலாம். வெலிகமைப் பகுதியில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் ஆல மரங்கள் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகரப் பகுதியான தெனிப்பிட்டியிலிருந்த ஆல மரத்தைப் பற்றி கஜமன் நோனா என்ற பெண் கவி பாடிய பாடல்கள் சிங்கள இலக்கியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் இயற்றப்பட்ட கோகில சந்தேசய (குயில் விடு தூது), கிரா சந்தேசய (கிளி விடு தூது) ஆகிய தூது இலக்கியங்கள் மகா வெலிகமை எனும் முஸ்லிம் குடியேற்றத்தைப் பற்றியும் வெலிகமையில் வாழ்ந்த சோனகப் பெண்களைப் பற்றியும் கூறுகின்றன. வெலிகமையிலிருக்கும் தப்ரபேன் தீவைச் சூழவுள்ள இடங்கள் ஒரு சில ஹொலிவூட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக் களங்களாயின. இத்தீவைப் பற்றி எழுதப்பட்ட பாடல்களும் நூல்களும் கூடக் காணப்படுகின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரபுக் குடியேற்றங்களைக் கொண்டுள்ள வெலிகமையில் முஸ்லிம்களின் இடம் மிக முக்கியமானதாகும். இலங்கையின் முதலாவது அறபு இசுலாமியக் கல்லூரியாகிய பாரி மதுரசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 1984 ஆம் ஆண்டு திசெம்பர் 24 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும், வெலிகமையில் முக்கிய தளத்தைக் கொண்டுள்ள அகில இலங்கை றிபாய் தரீக் சங்கத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2002 யூலை 26 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன. வெலிகமை நகரினுள் ஒல்லாந்தர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் ஆங்கிலேயர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகர்ப் பகுதிகளில் மேலும் சில கிறித்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இலங்கைக்கு வந்த மெத்தோடிஸ்த திருச்சபையினர் முதன் முதலாக வெலிகமையிலேயே வந்திறங்கினர். இந்துக் கோயில்கள் என்று குறிப்பிடத் தக்களவு எதுவும் காணப்படுவதில்லையாயினும் முற்கால இந்துக் கோயில்கள் தற்காலத்தில் பௌத்த விகாரைகளாகப் பரிணமித்துள்ள சில இடங்கள் இருக்கின்றன. வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி, சுற்றுலாத்துறை என்பன சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மெறியற் ஹோட்டல் போன்ற சர்வதேச தரத்திலான ஐந்து நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு சுற்றுலா விடுதிகள் இங்கு காணப்படுகின்றன. கபலானை, மிதிகமை, மிரிசை போன்ற இடங்கள் இந்து சமுத்திரத்தில் கடற்சருக்கலுக்குப் புகழ் பெற்ற இடங்களாகும். வெலிகமைக் கடலின் சில பகுதிகளில், குறிப்பாக கொவியாப்பானை, கப்பரத்தொட்டை போன்ற இடங்களில் உயிருள்ள அழகிய பவளப் பாறைகளைக் காணலாம். வெலிகமையின் மிரிசைத் துறை முகத்துக்கு அண்மித்த பகுதிகளில் விந்துத் திமிங்கிலம், நீலத் திமிங்கிலம், உடொல்பின்கள் போன்ற கடல்வாழ் முலையூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இங்கு இலங்கைக் கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கான திமிங்கிலக் காட்சிகளுக்காக அவர்களைத் தமது படகுகளில் கூட்டிச் செல்கின்றனர். பண்டைய துறைமுகம் இருந்த இடத்துக்கு அண்மித்ததாக வெலிகமைக் குடாவின் தென் கோடியில் கப்பற் போக்குவரத்துக்கான ஒரு துறைமுகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இங்கு வாழும் சோனக முஸ்லிம்கள் பெரிதும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நகரின் உட்பகுதிகளிலும் அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களும் தென்னந் தோப்புக்களும் கறுவாத் தோட்டங்களும் நெற்கழனிகளும் மரக்கறித் தோட்டங்களும் காணப்படுகின்றன. சில பகுதிகளில் இறப்பர்த் தோட்டங்களும் பைன் மரத் தோட்டங்களும் காணப்படுகின்றன. இங்கு நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதற்காக 1887 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசினால் வெலிகமையில் 300 ஏக்கர் பரப்பளவான பொறாளைக் குளத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெலிப்பிட்டிப் பகுதியில் பொல்வத்து கங்கைக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட ஒரு அணைக்கட்டு நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவுகிறது. வெலிகிந்தை தொழிற்புரம், உடுக்காவை, மிதிகமை ஆகிய இடங்களில் இறப்பர்த் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான தயர்த் தொழிற்சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள், உலோக வேலைத் தொழிற்சாலைகள், பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றன காணப்படுகின்றன. கும்பல்கமைப் பகுதியில் பாரம்பரிய மட்பாண்ட உற்பத்தி நடைபெறுகிறது. வெலிகமையின் உட்புறத்தில் வெலிப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இரத்தினக் கல் அகழ்வும் இடம்பெறுவதுண்டு. பல நூற்றாண்டுகளாகவே வெலிகமை வாழ் முஸ்லிம்கள் இரத்தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களால் விற்கப்பட்ட இரத்தினங்களுள் 1887 ஆம் ஆண்டு விற்கப்பட்ட 1867 கீறாத்து நிறையுடைய பசுங்கல் குறிப்பிடத் தக்கதாகும். பண்டைக் காலத்தில் பொல்வத்து கங்கையின் கழிமுகம் அமைந்துள்ள இடமான பொல்வத்துமோதரை (Bellipettimodere) என்னுமிடத்தில் துறைமுகம் அமைந்திருந்ததுடன், அங்கு ஒரு நீதிமன்றமும் காணப்பட்டது. இங்கிருந்து நெடுந்தொலைவுக்கு ஆற்றின் இருமருங்கிலும் கிங் மரங்களும், கின்னைத் தாவரங்களும், கண்டல் தாவரங்களும், இலங்கைக்கு அகணியமான ஒரு சில மூங்கில் வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. தற்காலத்தில் இவ்விடத்திலிருந்து பொல்வத்து கங்கையினூடாக உல்லாசப் பயணிகளுக்கான படகுச் சேவைகள் இடம்பெறுகின்றன. பன்னெடுங் காலமாகவே இங்கு தென்னை சார்ந்த தொழில்கள் இடம் பெறுகின்றன. பொல்வத்தை, மதுராபுரி, மிதிகமை போன்ற சிற்சில இடங்களில் தும்புத் தொழிற்சாலைகளும் கொப்பரா காய்ச்சுமிடங்களும் காணப்படுகின்றன. வெலிகமையில் ஐந்து தமிழ் மொழி மூலம் கற்பிக்கும் முஸ்லிம் பாடசாலைகளும் கிட்டத்தட்ட முப்பது சிங்களப் பாடசாலைகளும் அமைந்துள்ளன. ஆங்கில மொழிமூலம் கல்வி வழங்கும் தனியார் பாடசாலைகள் நான்கும் இந்நகரினுள் இருக்கின்றன. இவை தவிர (பாரி (ஆ), முர்ஸிய்யா (ஆ), ஹிழ்ரிய்யா (ஆ), ஸலாஹிய்யா (ஆ), ஸலாஹிய்யா (பெ), றிபாயிய்யா (ஆ), றிபாயிய்யா (பெ), ஹப்ஸா (பெ) ஆகிய) எட்டு அறபு இஸ்லாமியக் கலாசாலைகளும் ஒரு சில பிரிவெனாக்களும் (பௌத்த நெறிப் பாடசாலைகள்) காணப்படுகின்றன. இவற்றுள் மூன்று அறபு இஸ்லாமியக் கலாசாலைகள் முற்றிலும் பெண்களுக்கானவையாகும். கல்விச் சேவைக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் தென்னிலங்கை இஸ்லாமியச் செயலகம் போன்ற நிறுவனங்களும் இங்கு இயங்கிக் கொண்டுள்ளன. இந்நகரில் அரசாங்க மருத்துவமனைகள் ஐந்தும், மகப்பேற்று தாய் சிசு மருத்துவ நிலையங்கள் ஏழும், அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனைகளிரண்டும், தனியார் மருத்துவமனைகளிரண்டும் காணப்படுகின்றன. இவை தவிர வெலிகிந்தையிலுள்ள பௌத்த விகாரையுடனிணைந்த சிறீ சுதர்சன பிரிவெனாவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியொன்று மிக அண்மைக் காலம் வரை இயங்கிய போதிலும் தற்காலத்தில் அங்கு மருத்துவம் கற்பிக்கப்படுவதில்லை. ஹல்லலை, வட்டக்கொடை போன்ற இடங்களில் மூலிகைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகர்ப் பகுதியான உடுக்காவையில் பாம்புக் கடிக்கும் வேறு நச்சுக் கடிகளுக்கும் மருந்து செய்யும் மருத்துவமனையொன்றும் பாம்புப் பண்ணையொன்றும் காணப்படுகின்றன. அங்கு இலங்கைக்கு அகணியமான இருபதுக்கு மேற்பட்ட பாம்பினங்கள் உட்பட பல நூற்றுக் கணக்கான பாம்பினங்களும் நச்சுச் சிலந்திகளும் வளர்க்கப்படுகின்றன. வெலிகமையைச் சேர்ந்தவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் ஏராளம். சிங்களம், தமிழ், ஆங்கிலம், அறபு போன்ற பல்வேறு மொழிகளிலான ஆக்கங்கள் இவ்வூரைச் சேர்ந்தோரால் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாசீன் மௌலானா அவர்கள் எழுதி வெளியிட்ட "அறபு-அறபுத் தமிழ் அகராதி"யைக் குறிப்பிடலாம். பின்னர் இது 1965 இல் அறபு-தமிழ் அகராதியாக வெளியிடப்பட்டது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்களுள் பிரதானமாக வெலிகம சிறீ சுமங்கல தேரர் எழுதிய "சித்தந்த சேகரய" (சித்தாந்த சேகரம்) என்பதைக் குறிப்பிடலாம். மிக அண்மைக் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சில நூல்கள் பின்வருமாறு: வெலிகாமப் பட்டினத்துக்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில பின்வருமாறு: பிராங்புர்த்து (பழைய நகரம்), யேர்மனி அறபா தேசிய பாடசாலை, வெலிகமை அறபா தேசிய பாடசாலை இலங்கையில் வெலிகமை என்ற இடத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலையாகும். செய்யித் முஸ்தஃபா நொத்தாரிஸ் ஹாஜியார் வீட்டில் திண்ணைப் பள்ளிக்கூடமாக நீண்ட காலமாக இயங்கி வந்த வெலிகம அறபா தேசியப் பாடசாலை 1888 ஆம் ஆண்டு அவரது மூத்தமகனான அஹ்மது நெய்னா மரிக்கார் அங்கு பாட போதனைகளை நடாத்தி வந்தார். 1901 ஆம் ஆண்டு அசெய்யித் சாகிர் மௌலானா, முகம்மது இப்ராகிம் ஆலிம், அலியார் மரிக்கார் ஹஜியார், ஒ.எல்.எம்.ஐதுருஸ் ஆலிம், முஸ்தபா நொதாரிஸ் ஹாஜியார், அப்துல் ஹக் மரிக்கார் மத்திச்சம், இஸ்மாயில் ஹாஜியார் ஆகிய பெரியார்களின் தலைமையிலான ஹிதாயதுல் இசுலாம் என்னும் சங்கம் தற்போதைய கல்லூரியின் கனிட்ட பிரிவு அமைந்துள்ள இடத்தில் ஓர் ஓலைக் குடிசையை அமைத்து, அரசாங்கத்திற்கு ஒப்படைத்ததன் மூலம் அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு புதுக்கட்டடம் அமைக்கப்பட்டு பாடசாலை இயங்கி வந்தது. முதலில் இது தமிழ்ப் பாடசாலையாகவும் பின்னர் ஆங்கில, தமிழ் பாடசாலையாகவும் இருந்து மீண்டும் தமிழ் பாடசலையாகவும் அதன் பின்னர் மும்மொழிப் பாடசாலையாகவும் மாற்றம் பெற்றது. இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சவின் (2011)66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுத் 66 பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் சிறந்த பாடசாலைகளாகத் தெரிவுசெய்யப்பட்டன. அப்பாடசாலைகள் 66 இனுள் அறபா தேசிய பாடசாலையும் சிறந்த கல்வியுட்டலுக்கான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்), இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை, கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது. தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது. 1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்பட்டுவந்தது.. 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன. இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892 ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போது செர்மனின் எசு எம் எசு எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்) இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது. அழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும் மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும் தற்போது இது செயல்படாது உள்ளது. இந்த நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் பணி முடிக்கப்பட்டது. 1870கு முன் இதன் நீதிபரிபாலணையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால் இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி.பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். தந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இவ்வுயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அரசுத் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஏ. நவநீதகிருஷ்ணன். இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும். இக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் , மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் , முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது. நீதியரசர் திரு.ஹேமன்த் லட்சுமண கோக்கலே தலைமையின் கீழ் 54 நீதிபதிகள் (6 நடுவர்கள்) பணிபுரிகின்றனர். இவர்கள் உரிமை இயல் (சமூக நலன்- சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றர். இதன் கிளையான மதுரை அமர்வு 2004 முதல் செயல்படுகின்றது என்பது குறிப்படத்தக்கது. அமர்வில் முழு நீதிப்பீடம்(புல் பெஞ்ச்)(full bench,Full Court ) என்னப்படுவது, ஒரு வழக்கை இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிப்பதைக் குறிக்கும். இந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும். '' இந்தியாவின் சட்ட நிகழ்வுகளை, மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்டக்குறிப்பு உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்டக்குறிப்பு ஆகும்.துவங்கிய ஆண்டு 1891. சென்னை சட்டக்குறிப்பு துவங்கியதின் வரலாற்றை உற்று நோக்கும் பொழுது பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன, முறைப்படி இயங்காத சங்கமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 11 மணியளவில் வக்கீல் பார் எனப்படும் சங்கத்தில் மயிலாப்பூரில் மூத்த வழக்குரைஞரான ஸ்ரீ எஸ் சுப்ரமணிய ஐயர் தலைமையில் இதர மூத்த உறுப்பினர்களுடன் கூடும் அளவில் 1888 ல் துவங்கப்பட்டது. அதில் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை சட்டக்குறிப்பு சஞ்சீகை என்ற ஒன்றை சட்ட காலாண்டு மதிப்பாய்வாகத் துவங்க இங்கிலாந்து, சர் பிரட்ரிக் பொல்லாக் கினால் 1885 ல் துவங்கப்பட்டது, 1887 ல் இது ஆர்வர்டு சட்ட பள்ளி அமைப்பால் விரிவடைந்தது. ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை இது பலருக்கும் பயன்தரும் வகையில் பலரும் சட்டக்குறிப்புகளை அறிய, அகத்தூண்டுதலை உருவாக்க, குறிப்பாக மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றது. இந்த நீதிமன்றத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது சரியாக பராமரிக்கப்படாததால் அதன் பெருமையை யாரும் அறியமுடிவதில்லை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கம் நீதி தவறும் நேரங்களில், தன்னுடைய தீர்ப்புகளின் மூலம் சாதாரண மக்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது, அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றத்துக்குத் தடை விதித்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தாமிரபரணி ஆற்றைக் காக்கத் தொடர்ந்த வழக்கில், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது போன்றவை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதி முறைமைக்குச் சான்றுகளாகும். விடுமுறை நாட்களிலும் குடும்ப நல நீதிமன்றங்களை நடத்துவது, மிகவும் சிக்கலான சிவில் வழக்குகளில் இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சமரச மையங்களை அமைத்து இருப்பது போன்றவை இந்தியாவுக்கே சென்னை உயர் நீதிமன்றம் காட்டிய வழிமுறைகள் ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பெப்ரவரி 19,2009 அன்று நீதிமன்றத்திற்குள்ளே வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் ஒருவரையொருவர்த் தாக்கிக் கொண்டனர். உயர் நீநிமன்றத்தில் உள்ள காவல் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவ்வன்முறையால் நீதிபதிகள் தாக்கப்பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. செப்டம்பர் 8, 2012 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் கோலகலமாக நடந்தது. விழாவில் 150வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். "சென்னை உயர் நீதிமன்றத்தின்" பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையே இதுவரை கவனித்துவந்தது. இந்த காவல் போதாது, மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதிகள் உச்ச நீதி மன்றத்திற்க்கு பரிந்துரை செய்தார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "சென்னை உயர் நீதிமன்றத்தின்" பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது.