பூசை (இந்து) பூசை என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். பொதுவாக தெய்வத் திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபடுதலே பூசை அல்லது பூசனை என்று கூறப்படுகிறது. அதோடு, குருமார்கள், மகான்கள், போற்றுதலுக்குரிய பெரியோர்கள், முன்னோர்கள், பெற்றோர் ஆகியோரை வழிபாட்டுணர்வுடன் தொழுவதும் பூசை என்பதில் அடங்கும் பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர்ச்சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். பொதுவாக, பூஜையில் பதினாறு வகை செயல்கள்(உபசாரங்கள்) செய்யப் படவேண்டும் என்று ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன. விரிவான பூசைகளில் இத்துடன் இசைபாடுதல், இசைக் கருவிகளை முழக்குதல், நடனமாடுதல் ஆகிய செயல்களும் இடம்பெறுகிறது. இது கருதியே பல பெரிய இந்துக் கோயில்களில் பாடகர்கள், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் போன்ற கருவிகளில் வல்ல இசைக்கலைஞர்கள், நடன மாதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் பக்தி இலக்கிய காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது. வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே என்று திருஞான சம்பந்தர் தேவாரமும், சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்று திருநாவுக்கரசர் தேவாரமும் பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன. கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. இந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகளான சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ ஆகம நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. இவை தவிர அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப்படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறுகின்றன. திருக்கோயில்களில் பூசை செய்வோர்களுக்கு அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மரபு வழக்கப்படி தமிழகத்தின் ஆகம முறையிலான பெருங்கோயில்களில் குறிப்பிட்ட அர்ச்சக சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பூசை செய்ய முடியும் என்னும் நிலை இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் பூசை முறைகளைக் கற்றுக் கொண்டு இக்கோயில்களில் அர்ச்சகர்களாக ஆக முடியும் என்று சட்டம் இயற்றியுள்ளது. கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் வழிபாட்டுக்கென அமைக்கப்படும் அறை பூசையறை எனப்படுகிறது. இங்கு தெய்வங்களின் படங்களும், சிறு சிலைகளும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூசையறையில் தினந்தோறும் குடும்பத்தலைவி விளக்கேற்றி வழிபடுகிறார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வதுண்டு. மேலும் யக்ஞம் எனும் பூசையும் இந்து மதத்தில் இருந்து வருகிறது. திருமணம், பெயர் சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு இந்து சமயச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறுகிறது. தத்துவ நிலையில், தெய்வத்தை உள்ளத்தின் உள்ளேயே கண்டு அகவயமாகவே வழிபடுதலும் இந்து மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பூசை முறையாகும். இவ்வகைப் பூசை முழுக்க மனதளவிலேயே நிகழ்வது, இதற்கு விக்கிரகங்களோ, மலர்கள் போன்ற பூசைப் பொருட்களோ தேவையில்லை. தியான வகையிலான இந்தப் பூசை மானச பூசை என்று வழங்கப் பெறுகிறது. நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே என்று தாயுமானவர் இவ்வகைப் பூசையினைக் குறிப்பிட்டுள்ளார். கோயில்களில் நான்கு வேளைகளுக்குப் பூசை நடக்கிறது. இந்த பூசை முறையானது மனிதர்களின் உணவு வேளையைக் மையமாக கொண்டு அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள் மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரம் நடராசர் போன்ற சைவத் திருத்தலங்களில் ஆறு காலப் பூசை நடக்கின்றது. வேள்வி யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாக கருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படுகிறது. வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு, 2009 ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடாத்தும் இன அழிவுக்கு எதிராகவும் அதற்கு இந்திய அரசு வழங்கிய படைத்துறை தொழில்நுட்ப உதவிக்கு எதிராகவும் திமுக சேர்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 18, 2008 அன்று பதவி விலகல் கடிதத்தை கருணாநிதியிடம் வழங்கினார்கள்.. இதற்கு முன்னதாக திமுகவின் இந்திய மேலவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி பதவி விலகல் கடிதத்தை கருணாநிதியிடம் வழங்கினார். இந்த பதவி துறப்பு கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே உறுதி பெறும் என்பது குறிக்கத்தக்கது. பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்படாததால் அவர்கள் பதவி விலகல் நடைபெறவில்லை. திமுக-வின் மக்களவை உறுப்பினர் பதவி விலகல் முடிவை அடுத்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து கருணாநிதி மக்களவை உறுப்பினர் பதவி விலகல் முடிவை மாற்றிக்கொண்டார். தன்னால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் வராது என்று கருணாநிதி உறுதி கூறியதாக பிரணாப் முகர்ஜி கூறினார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் எனப்படுவது இலங்கை சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழர்களின் மரபுவழித் தாயகப் நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம் திட்டமிட்டு மேற்கொண்ட சிங்கள குடியேற்றங்களைக் குறிக்கின்றது. இந்த திட்டங்கள் நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களாக அரசால் பரப்புரை செய்யப்பட்டாலும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை பொருட்படுத்தாமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இது இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சிங்களமயமாக்கம் சிங்களமயமாக்கம் என்பது இலங்கையில் வாழ்ந்த சிறுபான்மையினரை இலங்கை பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் பண்பாட்டுக்குள் உள்வாங்கும் வகையில் திட்டமிட்டும் இயல்பாகவும் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வு ஆகும். இலங்கைத் தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் இந்த செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். தனிச் சிங்கள சட்டம், பெளத்தம் அரச சமயம், சிங்கள குடியேற்றம் போன்றவை இந்த செயற்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள். ஜேவிபி, போன்ற கட்சிகள் சிங்களமயமாக்கத்தை ஒரு முதன்மைக் கொள்கையாகவும் கொண்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் இரண்டாம் எலிசபெத் ("Elizabeth II", எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார். பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் ("Commonwealth realm") என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார். எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: சார்லசு, ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது. எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார். அரசியின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும் அயர்லாந்து குடியரசுக்கான அரசுப் பயணமும reciprocal visits to and from the திருத்தந்தையுடனான சந்திப்புக்களும் முதன்மையானவை. தனது ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் பல அரசியல்சட்ட மாற்றங்களை கண்டுள்ளார்; ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் கனடிய அரசியல் சட்டத்தின் "திரும்பப் பெறல்" போன்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்சிகளாகும். அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார். ராவி ஆறு ராவி ஆறு (சமஸ்கிருதம்: रवि, பஞ்சாபி: ਰਾਵੀ, உருது: راوی) இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ஆறாகும். இதன் நீளம் 720 கிமீ. இமயமலையில் இமாச்சலபிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உற்பத்தியாகி வடமேற்காக பாய்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தென்மேற்காக பாய்ந்து மதோபுர் அருகில் பஞ்சாப் மாநிலத்தை அடைகிறது. 80 கிமீ தொலைவு இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாய்ந்து இந்த ஆறு பாகிஸ்தானில் நுழைகிறது, அகமதுபூர் சியல் என்னுமிடத்தில்செனாப் ஆற்றுடன் இணைகிறது. லாகூரின் ஆறு எனவும் இதற்கு பெயருண்டு. லாகூர் நகரம் இந்த ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது. மேற்கு கரையில் சதரா (Shahdara) நகரம் அமைந்துள்ளது, இங்கு முகலாய மன்னன் ஜஹாங்கீர் மற்றும் அவன் மனைவி நூர்ஜகான் ஆகியோரின் நினைவிடம் உள்ளது. லாகூர் நகரின் புறநகர் பகுதியாக சதராவை கருதலாம். ராவி ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நேர வலயம் ஆஸ்திரேலிய நேர வலயம் எனப்படுவது ஆஸ்திரேலியா கண்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நேர வலயத்தைக் குறிக்கும். ஆஸ்திரேலியாவில் தற்போது கிரீன்விச் நேர வலயத்தில் இருந்து வேறுபட்ட மூன்று நேர வலயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையாவன: கீழைத்தேய (UTC+10, AEST), மத்திய (UTC+9:30, ACST) மற்றும் மேற்கத்தைய (UTC+8, AWST). இவற்றைவிட சில பகுதிகள் அதிகாரபூர்வமற்ற "மத்திய மேற்கத்திய" (UTC+8:45) நேர அலகைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவின் வெளியே உள்ள பல பிரதேசங்கள் தமக்கென வேறுபட்ட நேர வலயங்களைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவின் அனைத்துக் குடியேற்ற நாடுகளும் தரப்படுத்தப்பட்ட நேரத்தை 1890களில் அறிமுகப்படுத்தின. ஆஸ்திரேலிய மாநிலங்களில் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், விக்டோரியா, தாஸ்மானியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆண்டு தோறும் கோடை காலங்களில் பகலொளி சேமிப்பு நேரத்தை அறிமுகப்படுத்துகின்றன. மேற்கு ஆஸ்திரேலியா பகலொளி சேமிப்பு நேரத்தை சோதனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்து, வட மண்டலம் ஆகியவற்றில் பகலொளி சேமிப்பு நடைமுறையில் இல்லை. மேற்கத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (AWST) - UTC+8 மணி மத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (ACST)- UTC+9:30 மணி கீழைத்தேய தரப்படுத்தப்பட்ட நேரம் (AEST) - UTC+10 மணி துடுப்பு வாயன் துடுப்பு வாயன் "(spoonbill)" என்பது நீண்ட கால்களையும் துடுப்பு போன்ற தட்டையான அலகையும் கொண்ட பெரிய பறவை. இவை நீரில் உள்ள பூச்சிகள், சிறு மீன்கள் போன்றவற்றை இரையாகக் கொள்கின்றன. இப்பறவைகள் நன்னீர், உவர்நீர் இரண்டிலுமே வாழ்வினும் நன்னீர் நிலைகளை விரும்புகின்றன. இப்பறவைகளில் மரங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் பறவைகள் மூன்று முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இரண்டுமே அடை காக்கும். குஞ்சுகள் பிறந்தவுடன் சில நாட்கள் பார்க்கும் திறனற்று இருக்கும். தாய், தந்தை இரண்டுமே குஞ்சுகளுக்கு இரை ஊட்டும். குஞ்சுகளின் அலகு இளமையில் கூர்மையாகவே இருக்கும். அவை வளர்ந்து பருவமடையும் போது அலகு துடுப்பு வடிவம் பெறுகிறது. நோர்வேத் தமிழர் தமிழ் பின்புலத்துடன் நோர்வேயில் வசிப்பவர்களை நோர்வேத் தமிழர் எனலாம். நோர்வேயில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் 1983 இன் பின்னர் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நோர்வேயில் வசிக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்கள் ஒசுலோ பேர்கன் ஆகிய பெரும் நகரங்களில் வசிக்கிறார்கள். நோர்வே நாட்டிற்குத் தமிழர்கள் வந்ததனை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பிரிவானது 1956 - 1975ஆம் ஆண்டுக் காலப்பகுதியாகும். நோர்வேயில் குடியேறிய முதல் தமிழரான திரு.அன்ரனி ராஜேந்திரம் அவர்களைத் தொடர்ந்து, அவரின் முயற்சியாலும், நேரடியாக வேலைவாய்ப்புப் பெற்றும் தமிழர்கள் நோர்வே வரத் தொடங்கினர். இந்நிலைமையானது உள்வருவோருக்கான தடை அமுலுக்கு வந்த 1975ஆம் ஆண்டுவரை நீடித்தது. இரண்டாவது பகுதியாக 1975 - 1988ஆம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1975ஆம் ஆண்டுமுதல் வேலைவாய்ப்புப் பெற்று நோர்வே நாட்டிற்குள் உள்வருதல் தடைசெய்யப்பட்டது. இந்நிலையைத் தொடர்ந்து பாடசாலை அனுமதி பெற்றுத் தமிழர்கள் நோர்வேக்கு வர ஆரம்பித்தனர். இந்நிலைமையானது 1988ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதன் பின்பு பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சிறிய அளவிலான தமிழர்களே வருடாவருடம் நோர்வே வருகின்றனர். இரண்டாவது பகுதியின் இறுதிப்பகுதிகளில் பெருமளவான தமிழர்கள் அகதிகளாக நோர்வே வந்திருந்தனர். மூன்றாவது பகுதியானது 1980களின் இறுதிக்காலகட்டத்தில் இருந்து இன்றுவரையானது. 1980களில் இருந்து அகதிகளாகவும், அவர்களது குடும்ப உறவுகளாக அவர்களைத் தொடர்ந்தும் பெருமளவிலான தமிழர்கள் நோர்வே வந்தனர். இவர்களின் வருகையானது 1990களின் பிற்பகுதிகளில் இருந்து பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களை இழந்த அல்லது பெற்றோர்களுடனான தொடர்பினை இழந்த சிறுவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் நோர்வேயில் வதிவிட அனுமதி கொடுக்கப்படுகின்றது. அத்துடன் மேற்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் இந்தியாவில் இருந்து நோர்வேக்கு தமிழர்கள் அண்மைக் காலங்களில் வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. நோர்வேயில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகள் அனைத்தும் இலங்கையர் என்ற வரையறையிலேயே அமைந்திருந்தன. எனினும் நோர்வேயில் வாழும் சிங்களவர்கள் மிகவும் சொற்ப அளவில், சில நூற்றுக்கணக்கானவர்களே இங்கு வாழ்வதனால் இலங்கையர்களுக்கான கணிப்பீடானது தமிழர்களையே பொதுவாகச் சுட்டிநிற்கிறது எனலாம். 1987-1988 ஆண்டுக்காலப்பகுதியில் நோர்வே நாட்டிற்குள் வந்த வெளிநாட்டினருள் இலங்கையர் மூன்றாவது இடத்தினைப் பெற்றிருந்தனர். 2008 கணிப்பின்படி நோர்வேயில் வாழும் வெளிநாட்டினரின் சனத்தொகையை கருத்தில் கொண்டால், இலங்கையர் 12 ஆவது இடத்தில் இருப்பதுடன் நோர்வேவாழ் வெளிநாட்டினரின் தொகையில் 3 % ஆகவுள்ளனர். நோர்வேயில் வாழும் இலங்கையர்களின் தொகையானது 2008 இல் 13063 ஆக அமைந்திருந்தது. இக்கணிப்பில் 8264 வரையிலானோர் நேரடியாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தோராகவும், மிகுதியானோர் இலங்கை பெற்றோர்களுக்கு நோர்வேயில் பிறந்த பிள்ளைகளாகவும் இருக்கின்றனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தோரில், பெண்களின் தொகையானது ஆண்களின் தொகையை விடச்சற்று அதிகமாகும். இலங்கையர்களில் கிட்டத்தட்ட 80 % மானோர் நோர்வே குடியுரிமை பெற்றவர்களாகவும், 20 % மானோர் வெளிநாட்டுக் குடியுரிமையுடன் இருப்பவர்களாகவும் உள்ளனர். 1990 - 2007 ஆண்டிற்கிடையில், இடம்பெயர்ந்து வந்தவர்களில் அகதிகளாக வந்தவர்கள் அதிகளவிலும் (கிட்டத்தட்ட 71% ), குடும்ப இணைவிற்காக வந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் (கிட்டத்தட்ட 20 %), படிப்பிற்காக வந்தவர்கள் மூன்றாம் இடத்திலும் (கிட்டத்தட்ட 7%), வேலைக்காக வந்தவர்கள் குறைந்த அளவிலும் (கிட்டத்தட்ட 1%) உள்ளனர். 1990 - 2007 ஆண்டிற்கிடையில் அகதிகளாக வந்தவர்களில் கிட்டத்தட்ட 1600 பேரளவில் நோர்வேயில் தங்கியிருப்பதற்கான அனுமதியைப் பெற்றனர். இந்த எண்ணிக்கை வேறு வெளிநாட்டவர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 10 ஆவது இடத்தில் உள்ளது. 1990 - 2005ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளில் சம அளவில் ஆண்களும், பெண்களுமாக 355 பேர் இலங்கையில் இருந்து மாணவர்களாக நோர்வே வந்துள்ளனர் 2008 கணிப்பின்படி, இலங்கையரில் கிட்டத்தட்ட 12 வீதமானவர்கள் 20 வருடங்களுக்கு மேலாகவும், 49 வீதமானவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாகவும், 66 வீதமானவர்கள் 10 வருடத்துக்கும் கூடுதலாகவும், 84 வீதமானோர் 5 வருடங்களுக்கு அதிகமாகவும் நோர்வேயில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். நோர்வேயின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்து வருகின்ற போதிலும் வேலைவாய்ப்புக்கள், உயர்கல்வி வாய்ப்புக்கள், தமிழ்ப்பாடசாலைகள், கலைக்கல்லூரிகள் முதலான பல காரணங்களுக்காகத் தமிழர்களில் பெரும்பான்மையினர் பெரிய நகரங்களில் வாழ்கின்றனர். 2007 இல் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, 16-18 வயதில் உள்ளவர்களில், இடம்பெயர்ந்த இலங்கையரில் கிட்டத்தட்ட 75% மானோரும், இலங்கைப் பெற்றோருக்கு நோர்வேயில் பிறந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 95% மானோரும் மேல் உயர்நிலைக்கல்வியைக் கற்கின்றனர். 19-24 வயதுக்கு உட்பட்டோரில், இலங்கைப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 62% மான பெண்களும், 42% மான ஆண்களும் உயர்கல்வி கற்கின்றனர். 1113 மாணவர்கள் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாகவோ அல்லது இருமொழிக் கல்வியில் தமிழை ஒரு மொழியாகவோ பெறுகின்றனர். ஓஸ்லோவிலுள்ள பன்மொழி நூலகம் தமிழ் மொழியில் வெளியான நூல்களையும் கொண்டுள்ளது. . இங்குள்ள தமிழ் நூல்களை இந்த தளத்தில் தேடி அறியலாம். 2007 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, 15 - 74 வயதுக்கிடைப்பட்ட இலங்கையரில், கிட்டத்தட்ட 75% மான ஆண்களும், 61% மான பெண்களும் முழுநேர அல்லது பகுதிநேர தொழில் செய்கின்றனர். 2007 ஆம் ஆண்டிற்கான நகராட்சி தேர்தலில், இலங்கையரான 36 ஆண்களும், 14 பெண்களும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 5 ஆண்களும், 3 பெண்களுமாக 8 பேர் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேட்பாளர் பட்டியலில் இருந்தோரில், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோரின் வீதம் 16 ஆகும் . 2008 இன் ஆரம்பநிலை கணிப்பின்படி, இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் கிட்டத்தட்ட 73.6 % ஆனோர் திருமணம் செய்தவர்களாகவும், மிகுதியானோர் திருமணம் செய்யாமலும் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருமணங்களில் 55 திருமணங்கள் இரு இலங்கையருக்கிடையில் நிகழ்ந்ததாகவும், 6 திருமணங்களில் ஆண்கள் நோர்வேஜியர்களாகவும் பெண்கள் இலங்கையராகவும், 7 திருமணங்களில் பெண்கள் நோர்வேஜியர்களாகவும் ஆண்கள் இலங்கையராகவும் இருந்தனர். இலங்கையில் இருந்து நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பெற்றோர்களாகக் கொண்டு 4460 குழந்தைகள் நோர்வேயில் பிறந்துள்ளனர். இது நோர்வேயின் 4ஆவது பெரிய குழுவாகும். 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்களில் 71 வீதமானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 98 வீதமானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தனர். இலங்கை, நோர்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த பெற்றோர்களைக் கொண்டு 690 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் நோர்வேயில் உள்வந்தோராக கணிக்கப்படமாட்டார்கள். இவர்களுக்கெனத் தனியான நடைமுறையுண்டு. அகதிகளாக நோர்வே வந்தவர்கள் அவர்களது விருப்புக்கேற்பவும், நகர சபைகளின் பராமரிக்கும் வசதிகளுக்கு ஏற்பவும் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டனர். நகரங்களுக்குள் வந்த அகதிகள் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் கவனிக்கவென அகதிகள் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அகதிகளின் தனிப்பட்ட விடயங்கள், பொருளாதார நிலைமைகள், தங்குமிடவசதி, நோர்வேஜிய மொழிப் பயிற்சி, அவர்களது தனிப்பட்ட நிலைமைகளுக்கேற்ற பராமரிப்பு, பொதுவான பராமரிப்பு, தொடர்பாடல் உதவிகள், நிர்வாகம், பொருளாதாரம், திட்டமிடல் எனப்பல பொறுப்புக்களையும் கொண்டு அகதிகள் ஆலோசகர்கள் செயற்பட்டார்கள். அகதிகளாக உள்வந்தோர் காத்திருத்தல் (வதிவிட உரிமை பெறுவதற்காக), நகரசபைகளில் குடியமர்த்தப்படல், சமூகத்துடன் இணைதல் என மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியவர்களாக இருந்தனர். தமிழர்களிடையே சிறந்த தொடர்பாடல் இருந்தமையினால் சமூகக் கட்டமைப்பை விளங்கியவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு, நோர்வேஜிய சட்டங்கள், நடைமுறைகள், வேலைவாய்ப்பைக் கொண்ட கற்கை நெறிகள், கற்பதற்கான கடனுதவிகள் முதலான பல்துறை விளக்கங்களையும் தம்முன்னோரிடமிருந்து, தமிழரின் கண்ணோட்டத்தில் பெற்று வாழ முடிந்தது. நோர்வேயில் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயற்படும் ஊடகங்களாக நோர்வேத் தமிழர் அமைப்புகள் காணப்படுகின்றன. நோர்வேயில் வசிக்கும் தமிழர்களில் குறிப்பிடத் தகுந்தோரான பல கல்விமான்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் காணப்படுகின்றனர். பாலினம் பாலினம் என்பது ஒருவரின் பால் தொடர்பாக ஒரு சமூகம் தொடர்புபடுத்தும் பண்புகள், மனப்பாங்குகள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பாலின அடையாளம் என்பது சமூகத்தால் மட்டும் அல்லாமல் ஒருவர் தானாக, தனது அக அனுபவங்களால் எந்தப் பாலினமாக உணர்கிறார் என்பதைப் பொறுத்தும் அமைகிறது. பொதுவாக பாலினம் ஆண் பெண் என்ற இரு துரவ தொடர்மத்தில் வரையறை செய்யப்படுகிறது. ஆண், பெண், திருனர், இருனர், Transsexuals என்று பல்வேறு பாலினங்கள் உண்டு. ஊட்டும் கரங்கள் ஊட்டும் கரங்கள் என்னும் நிகழ்வு ஈழத்தில் உணவின்றி தவிக்கும் தமிழ் உறவுகளுக்கு உதவும் நோக்குடன் ரொறன்ரோவில் வெள்ளி சனி நாட்களில் நடைபெறவிருக்கிறது. வெள்ளி அக்டோபர் 24, 2008 பிப 4 மணி முதல் சனி அக்டோபர் 25, 2008 பிப 4 மணி வரை தொடர்ச்சியாக இது நிகழ்த்தப்படுகிறது. இது கனடா சிறீ ஐயப்பன் கோயிலில் இடம்பெறுகிறது. அனேக கனடிய ஊடகங்களும் இணைந்து இந்த நிகழ்சியை ஒழுங்குபடுத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில் "அனைத்து" கனடிய தமிழ் இசைக்குழுக்களும் பங்குபெறுகின்றன. சில நடன நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் பெருந்தொகை கனடிய தமிழர்கள் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழக்கம் முழக்கம் கனடாவில் வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது. தாய் வீடு தாய் வீடு கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ் ஆகும். வீடு தொடர்பான பல தகவல்களை இது தாங்கி வருகிறது. வீடு விற்பனைத் தொழிலில் உள்ள பலர் இதில் பந்தி எழுத்துகிறார்கள். அதே போல சம அளவான பக்கங்களில், சமகால அரசியல், வாழ்வியல், இலக்கியம், கலை சம்பந்தமான கட்டுரைகளும், சிறுகதைகளும் வெளி வருகின்றன. கனடாவின் முன்னணி எழுத்தாளர்களான அ. முத்துலிங்கம், தேவகாந்தன், குரு அரவிந்தன், பொ.கனகசபாபதி, கவிஞர் கந்தவனம், என்.கே.மகாலிங்கம், கவிஞர் சேரன், கே.எஸ்.பாலச்சந்திரன், மாமூலன், குலேந்திரன், துருவசங்கரி போன்றோரும் இந்த இதழில் தொடராக எழுதி வருகின்றனர். "ஆழ்த்து முத்துக்கள்" என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் பழ்ம்பெரும் கலைஞர்கள் பற்றிய அறிமுகம் இடம் பெறுகின்றது. தமிழர் செந்தாமரை தமிழர் செந்தாமரை கனடாவில் வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. இது அரசியல், நிகழ்வுகள், சினிமா போன்ற துறைப் படைப்புகள் வெளிவருகின்றன. கனடிய அரசியல் பற்றியும் இப்பத்திரிகை பல கட்டுகளை தருகிறது. உதயன் (கனடா) உதயன் கனடாவில் இருந்து இலவசமாக வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. கனடாவில் இருந்து நீண்டகாலமாக வெளிவரும் இதழ்களிலும் இதுவும் ஒன்றாகும். இது 10000 மேற்பட்ட பிரதிகளை இது வெளியிடுகிறது. இதில் பெரும்பகுதி விளம்பரங்களே. இந்த உதயன் பத்திரிக்கைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மஞ்சரி மஞ்சரி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: மஞ்சரி (கனடா இதழ்) மஞ்சரி கனடாவில் இருந்து 90 களில் வெளிவந்த தமிழ் வாரப் பத்திரிகை ஆகும். இதன் ஆசிரியராக ஜெயராஜ் இருந்தார். இது அரசியல் செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. இந்தப் பத்திரிகை தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்ததால் தடுக்கப்பட்டதாக அதன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது கனடாவில் முதலில் தொடங்கப்பட்ட 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு சேவை ஆகும். இது 1996 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் இயக்குனர் இளையபாரதி ஆவார். ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போராட்டம் கவனயீர்ப்பு போராட்டம் என்பது ஒரு எதிரிப்புப் போராட்ட வடிவம் ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வு தொடர்பாக பிறரின் கவனத்தை ஈர்த்து, தமது தரப்பு நியாகத்தை விளக்கி, ஆதரவு தேடுவதே கவனயீர்ப்பு போராட்டங்களின் நோக்கம். கவனத்தை ஈர்க்கும் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஊடக வெளியீடுகள், மறியல் போராட்டம் போன்ற பல்வேறு வழிகளில் இந்த போராட்டம் நடக்கும். அடையாள உண்ணாநிலை அடையாள உண்ணாநிலை என்பது ஒரு எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இது ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வு தொடர்பாக தமது கருத்துக்களை, நியாயங்களை தன்னை வருத்தி, அகிம்சை முறையில் வெளிப்படுத்துகிறது. முழுமையான உண்ணாநிலைப் போராட்டத்தின் வீச்சை இது பெறாவிட்டாலும், பெருந்தொகை மக்கள் கூட்டாக தமது நிலைப்பாடுகளை எடுத்துரைக்க ஒரு சிறந்த முறை. குடியியற் சட்டமறுப்பு குடிசார் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஓர் அறப்போராட்ட வடிவமாகவே கருதப்படுகிறது. குடிசார் சட்டமறுப்பு என்பது கென்றி டேவிட் தூரோ அவர்கள் 1849 ஆம் ஆண்டு எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரை ஆகும். இதன் ஆங்கிலத் தலைப்பு Resistance to Civil Government (Civil Disobedience) என்பது ஆகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் துணை போவதைத் தவிர்ப்பது ஒருவரின் கடமை எனவும் தூரோ வாதிடுகிறார். காந்தி பிரித்தானியாவின் காலனித்துவ சட்டங்கள் சிலவற்றை மறுத்தது, ரோசா பாக்ஸ் அமெரிக்க இன்வாத சட்டங்களை மறுத்தது ஆகியவை சட்ட மறுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். ஸ்ரீதர் (இயக்குநர்) ஸ்ரீதர் (சூலை 22, 1933 - அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர். ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார். ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின. 1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை". தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன. புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள். பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர், வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின. 1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார். ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன. சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 80 ஆவது அகவையில் காலமானார். மீளுருவாக்கம் ஒரு பொருளின் பயன்பாடு முடிவுற்றவுடன் அதன் மூலப்பொருட்களை புதிய பொருட்களாகச் செய்யும் செயற்பாடு மீளுருவாக்கம் (அல்லது மீள் சுழற்சி, மறுசுழற்சி ("Recycling") எனப்படுகிறது. மீளுருவாக்கம் புதிய மூலப்பொருள் தேவையையும் அவற்றைப் பதனிடத் தேவையான ஆற்றலையும் குறைப்பதோடு கழிவுப்பொருள் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் பசுங்குடில் விளைவை ஏற்படுத்தும் வளிமங்களின் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் கழிவு மேலாண்மையில் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மறுபயனீடு (Reuse), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும். கண்ணாடி, காகிதம், மாழைகள், நெகிழிகள், நெய்பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் போன்றவை மீளுருவாக்கம் செய்யப்படக்கூடியனவாகும். பழைய உணவு அல்லது மரக்கிளைகளைக் கொண்டு உரம் தயாரித்தல் மீளுருவாக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. மீளுருவாக்கம் செய்யப்படவேண்டிய பொருட்கள் பாதையோரக் கழிவுப் பெட்டிகளில் இருந்தோ அல்லது சேகரிப்பு நிலையத்திற்கு நேரடியாகவோ கொண்டுவரப்படுகின்றன. பின்னர் வகைப் பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு மூலப்பொருட்களாக செய்யப்படுகின்றன. விண்டோஸ் பணி மேலாளர் விண்டோஸ் பணி மேலாளர் அல்லது விண்டோஸ் பணி நிர்வாகி (Windows Task Manager) விண்டோஸ் எண்டி குடும்ப இயன்குதளங்களின் பிரயோகங்கள், செயலிகளின் வினைத்திறன், நினைவகப் பாவனை, வலையமைப்புச் செயற்பாடு, உள்நுளைந்த பயனர்கள் போன்ற விபரங்களைத் தருவதாகும். பணிமேலாளர் ஊடாக விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயலை வலுக்கட்டாயமாக இடைநிறுத்தவோ அல்லது மீள்துவக்கம் செய்யவோ இயலும். அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் இருந்தால் எந்தச் செயலியுடன் இணைந்து பணியை மேற்கொள்ளவது என்பதையும் தீர்மானித்துக் கொள்ளலாம். விண்டோஸ் பணிமேலாளர் விண்டோஸ் எண்டி 4.0 இல் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு முன்னர் பணி நிரல்கள் பயன்படுத்தப் பட்டது. குறிப்பு: கழிவுக் கட்டுப்படுத்தல் தனி நபர் ஒருவரோ அல்லது ஒரு மக்கட் சமுகமோ வெளியிடும் கழிவுப் பொருட்களின் அளவைக் குறைக்கும் செயற்பாடோ அல்லது கொள்கையோ கழிவுக் கட்டுப்படுத்தல் எனப்படுகிறது. கழிவுக் கட்டுப்படுத்தல் கழிவு நிலைமுறையில் இரண்டாம் நிலைப் படியிலுள்ள செயற்பாடாகும். தற்காலக் கழிவு மேலாண்மையின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மீளுருவாக்கம் ("Recycling"), மறுபயனீடு ("Reuse") என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும். கடைகளில் விற்பனைப் பொருட்களின் பொதிசெய்யும் அளவைக் குறைத்தல், மீளப் பயன்படுத்தக்கூடிய சாடிகளில் ("refill") உள்ள பொருட்களை பயன்படுத்தல் போன்றன கழிவுக் கட்டுப்படுத்தலிற்கான எடுத்துக்காட்டுகளாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமிடில் உள்ள படிநிலைகளாவன: இயல்புச் சொல்வழக்கு சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும். இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை. இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள். எ.கா.: தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும். எ.கா.: கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும். எ.கா.: நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. கஃப் விட்லம் எட்வேர்ட் கஃப் விட்லம் ("Edward Gough Whitlam", சூலை 11, 1916 - அக்டோபர் 21, 2014) ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், 1967 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது. 1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் 1972 தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் ஜோன் கேர் இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆஸ்திரேலிய லிபரல் கட்சி தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆத்திரேலிய நாடாளுமன்றம் ("Parliament of Australia") அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் ("Commonwealth parliament") என்பது ஆத்திரேலிய அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆத்திரேலிய அரசியமைப்பின் படி, ஆத்திரேலிய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: அரசி, மேலவை, மற்றும் பிரதிநிதிகள் அவை. அரசி பொதுவாக தனது பிரதிநிதியாக பொது-ஆளுநரை ("Governor-General") நியமித்துள்ளார். கீழவை, (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஆத்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாற்றமடையும். 1984 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. இது 1993 இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1996 இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது. மேலவை, (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது: ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் கான்பராவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் இரு வெவ்வேறு அறைகளில் கூடுகின்றன. டைரனொசோரசு டைரனசோரசு தெரொபோடா தொன்மாக்களின் பேரினமாகும். இப்பேரினத்தின் பிரபலமான இனமான டி.ரெக்சு (T. rex) பொதுக்கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. டைரனசோரசு இன்றைய மேற்கு அமெரிக்கா முழுவதும் வாழ்ந்ததிற்கான புதைப்படிவ ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. டைரனசோரசின் புதைபடிவங்கள் 68 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல்வேறுபட்ட பாறைப்படிவுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரேடேசியசு-டேர்சரி அழிவுக்கு முன்னதாக வசித்த பறக்க முடியாத பறவை தொன்மாக்களில் ஒன்றாகும். டைரனசோரிட்டுக்களைப் போலவே டைரனசோரசும் இருகாலி ஊனுண்ணியாகும். அதன் பெரிய தலையின் எடை அதன் நீளமான வாலினால் சமன் செய்யப்பட்டது. பெரிய ஆற்றல் மிக்க பின்னங்கால்களோடு ஒப்பிடுகையில் அதன் முன்னங்கால்கள் சிறியவையாகும். இருப்பினும் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்கவையாக காணப்பட்டன. மேலும் முன்னங்கால்களில் இரண்டு விரல்களும் மூன்றாவது பண்டெச்ச விரலும் காணப்பட்டன. ஏனைய தெரொபோடா தொன்மாக்கள் டைரனசோரசை விட பெரியவையாக காணப்பட்டாலும் டைரனசோரிட்டுக்களில் பெரிய இனமாக டைரனசோரசு காணப்பட்டது. 13 மீட்டர் (43 அடி) நீளமும் 4 மீ (13 அடி) உயரமும் அண்ணளவாக 6.8 மெட்ரிக் டன் எடையையும் கொண்ட டைரனசோரசு அதந் சூழலில் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்காக காணப்பட்டது. எட்ரசோர், செரடொப்சியா போன்றவை அதன் இரை விலங்குகளாக காணப்பட்டிருக்கலாம். சில ஆய்வாளர்கள் டைரனசோரசு இறந்த விலங்குகளின் உடலங்களை தேடி உண்டதாக கருதுகின்றனர். முப்பதுக்குமதிகமான டைரனசோரசு புதைப்படிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவற்றுள் சில முழுமையான மண்டையோட்டைக் கொண்டுள்ளன. ஆகக் குறைந்தது ஒரு மாதிரியிலாவது இழையங்களும் புரதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைப்படிவ எச்சங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளமை அதிகளவிலான ஆய்வுகளுக்கு வழிசெய்துள்ளது. இருப்பினும், இதன் உணவுப் பழக்கம், பயனித்த வேகம் போன்றவைத் தொடர்பில் வாதபிரதிவாதம் தொடர்கிறது. ஆசியாவில் கண்டெடுக்கப்பட்ட டர்போசோரசை டைரனசோசின் இரண்டாம் இனமாக ஒரு சாராரும் ஏனையவர்கள் டர்போசோரசை தனிப் பேரினமாகவும் கருதுவதால் டைரனசோரசின் வகைப்பாடும் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் யானை தமிழர்களின் பண்பாட்டில் யானைகள் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிக்கின்றன. பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் தமிழகத்தின் பெரிய கோவில்களில் கோவில் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரில் சிலர் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள். தமிழகத்தின் முதுமலை போன்ற பகுதிகளில் காட்டுமரங்களைக் எடுத்துக் கொண்டு செல்ல யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பாகன்கள் யானைகளை அழைத்து வந்து யானையை ஆசி வழங்க வைத்து பணம் பெறுவதும் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் யானைகளைப் பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன. யானைகள் தமிழில் கரி (நிறத்தால் ஏற்பட்ட பெயர்), களிறு (ஆண் யானை), பிடி (பெண் யானை), போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன. தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் யானைக்குரியச் சொற்களை, தமிழ் விக்சனரியின் யானை என்ற சொல்லாக்கத்தில் காணலாம். இந்திய ரூபாய் இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவற்றுள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் 500, 2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது. உலோக நாணயங்கள் 1, 2, 5, 10, 20,25, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி (பணம்) என்பது பொருள், இங்கிலாந்தின் நாணயமான பவுண்டு ஸ்டெர்லிங்கிலும் ஸ்டெர்லிங் என்பது வெள்ளியையே குறிக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது. பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம் அசாம் பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா ஆகிய இடங்களில், இந்திய ரூபாய் டங்கா टङ्क (ṭaṇkā) என்கிற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்ட வழிச்சொற்களால் வழங்கப்படுகிறது. டங்கா என்பதற்கு பணம் என்பது பொருள் . இந்திய வங்கியின் பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது . 1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன. 1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும். மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன. 1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளியிட்டது. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய நிதி அமைச்சர் சச்சின் சவுத்ரி, அந்நிய முதலீடுகளுக்காக இந்தியத் தாய் தனது கருவறையைத் திறந்து வைத்துள்ளதாக வெட்கக் கேடான முறையில் குறிப்பிட்டதானது நாடு தழுவிய கண்டனத்தை ஏற்படுத்தியது.1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர் ஜப்பானிய யென் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32, 42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது.2013 ஆகஸ்டில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது. எட்ரசோர் எட்ரசோர் அல்லது வாத்தலகு தொன்மாக்கள் பின் கிரிடேசியசுக் காலத்தில் வாழ்ந்த எட்ரசோரிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவர உண்ணியாகும். தற்போது ஆசியா, ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என அறியப்படும் பகுதிகள் எட்ரசோர்களின் வாழிடமாக காணப்பட்டன. பின் ஜுராசிக், முன் கிரிடேசியசுக் காலத்தைச் சேர்ந்த எட்ரசோரை ஒத்த உடலமைப்பைக் கொண்டிருநத இக்குவனோடோன்ட் தொன்மாக்களின் வழித்தோன்றல்களாகும். எட்ரசோர் தொன்மாக்கள் ஒர்னிதிசிச்சியா வகுப்பைச் சேர்தனவாகும். எட்ரசோர் தொன்மாக்கள், மெல்லிய உடலையும் தலையில் முகடு அல்லது குழல் அமைப்பையும் கொண்ட லெம்பியோசோரினே, பருத்த உடலமைப்பையும் தலயில் முகடோ குழல் அமைப்போ அற்ற எட்ரசோரினே, என இரண்டு துணைக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன். இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ("Indian Space Research Organization", ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு ஏ.எஸ்.கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இசுரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஃச்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. கடந்த ஆண்டுகளில் இசுரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாகச் செயல்படுகிறது. இசுரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) குறிக்கோளானது விண்வெளி தொழில் நூட்பங்களையும் அதன் பயன்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றுதலாகும். இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள்மூலம் அயனி வெளியை ஆய்வு செய்யச் சோதனைகளை நிகழ்த்தினார். பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன் , மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்குப் பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர். இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: விக்கிரம் சாராபாய்— அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவியவர்—மற்றும் ஹோமி ஜெஹாங்கீர் பாபா, 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவன இயக்குனராகத் துவக்கியவர். விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் உயர் வளிமண்டலம் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 1950இல் இந்திய அரசில் புதியதாக உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே இத்துறையில் ஆய்வுக்கு அரசு ஆதரவு கிட்டியது. அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது. 1823இல் கொலாபாவில் துவங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப் புலம்குறித்து ஆயப்பட்டு வந்தது. வானிலையியலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்புமிக்க தகவல்கள் திரட்டப்பட்டன. 1954ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில வானாய்வு மையம் நிறுவப்பட்டது. 1957ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ரங்க்பூர் வானாய்வு மையம் நிறுவப்பட்டது. இந்த இரு மையங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின. விண்வெளித்துறை வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் பங்கும் இருந்தது 1957இல் சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக இசுப்புட்னிக் 1ஐ விண்ணில் செலுத்தியதும் மற்ற நாட்டவரும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக அமைந்தது. 1962ஆம் ஆண்டில் விக்கிரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டில் இக்குழுவிற்கு மாற்றாக இஃச்ரோ நிறுவப்பட்டது. புவிசார் அரசியல் மற்றும் பொருளியல் காரணங்களுக்காக 1960களிலும் 1970களிலும் தனது சொந்தமான ஏவுகலங்களைத் தயாரிக்க இந்தியா உந்தப்பட்டது. 1960-70 காலகட்டங்களில் முதல்நிலையாக ஆய்வு விறிசுகளை வெற்றிகரமாக இயக்கியபிறகு 1980களில் துணைக்கோள் ஏவுகலங்களை வடிவமைத்துக் கட்டமைக்கும் திட்டங்கள் உருவாகின. இவற்றிற்கான முழுமையான இயக்கத்திற்கான ஆதரவு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. எஸ்.எல்.வி-3,மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலங்களை அடுத்து முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV) தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஆங்கிலச் சுருக்கமான எஸ்.எல்.வி அல்லது எஸ்.எல்.வி-3 என அறியப்படும் செயற்கைக்கோள் ஏவுகலம் ஓர் நான்கு கட்ட திட எரிபொருள் இலகு ஏவுகலம். 500கிமீ தொலைவு ஏறவும் 40 கிலோ ஏற்புச்சுமை கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டது. முதல் ஏவல் 1979இலும் அடுத்த ஆண்டு இருமுறையும் இறுதி ஏவல் 1983இலும் நிகழ்ந்தன. இந்த நான்கில் இரண்டே வெற்றிகரமாக அமைந்தன. இந்த ஏவுகலம் ஐந்து நிலை திட எரிபொருள் விறிசு ஆகும்; இதனால் 150 கிலோ செயற்கைக்கோளைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் ஏவ இயலும். இதன் வடிவமைப்பு எஸ்.எல்.வியை அடியொற்றி இருந்தது. முதல் ஏவல் 1987இலும், 1988,1992,1994 களில் மூன்று ஏவல்களும் நிகழ்ந்தன; இரண்டு ஏவல்களே வெற்றி பெற்றன. பி. எஸ்.எல்.வி என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் பரவலாக அறியப்படும் முனையத் துணைக்கோள் ஏவுகலம் இந்திய தொலையுணர்வு துணைக்கோள்களை சூரிய இணைவு சுற்றுப்பாதைகளில் ஏவிட வடிவமைக்கப்பட்ட மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். இதற்கு முன்னர் இந்தச் செயற்கைக்கோள்கள் உருசியாவிலிருந்து விண்ணேற்றப்பட்டு வந்தன. இந்த ஏவுகலங்களால் சிறு துணைக்கோள்களை புவிநிலை மாற்று சுற்றுப்பாதைக்கு ஏவ முடியும். இந்த ஏவுகலத்தால் 30 விண்கலங்கள் (14 இந்திய விண்கலங்களும் 16 வெளிநாட்டு விண்கலங்களும்) விண்ணேற்றப் பட்டுள்ளன. ஏப்ரல் 2008இல் இது ஒரே ஏவலில் 10 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றி அதுவரை இருந்த உருசிய சாதனையை முறியடித்தது. சூலை 15, 2011 அன்று ப.எஸ்.எல்.வி தனது 18வது தொடர்ந்த ஏவல்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதன் 19 ஏவல்களில் செப்டம்பர் 1993 முதல் பயணம் மட்டுமே தோல்வியில் முடிந்தது. ஜி.எஸ்.எல்.வி ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு கலம். இது ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு). இந்தத் திட்டம் இன்சாட் வகை செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திடவும் வெளிநாட்டு விறிசுகளை நாடவேண்டிய தேவையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டது.இதனால் 5 டன் எடையுள்ள ஏற்புச்சுமையை தாழ் புவி சுற்றுப்பாதையில் இட முடியும். இத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாகத் திசம்பர் 25, 2010இல் ஜிசாட்-5பி சுமந்தவண்ணம் சென்ற ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டு அமைப்பு தவறியதால் முன்னரே திட்டமிட்டபடி பாதுகாப்பாகத் தானே வெடித்துச் சிதறியது. புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III முன்நு நிலைகள் கொண்ட விண்வெளிக்கலன் ஆகும். இதன் மூலம் மிகு எடையுள்ள செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜி. எஸ். எல். விக்கு அடுத்தத் தலைமுறையாக இருப்பினும் இதன் வடிவமைப்பை அதனை ஒட்டி இருக்கவில்லை. இதன் முதல் ஏவுதல் 2012ஆம் ஆண்டில் வெற்றி பேற்று, மேலும் இரு முறை இயக்கப்பட்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டு நிலையை அடைந்துள்ளது. இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்திற்கு இந்த விண்கலனையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். விண்வெளிச் செலுத்துவாகனச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு மறுபயன்பாட்டிற்கு உதவும் செலுத்துகலன்களை (Reusable Launch Vehicl) வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்சோதனை 2015 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19 , 1975 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோகினி வகை செயற்கைக்கோள்களை இந்தியாவிலேயே தயாரித்து ஏவுதலும் நிகழ்ந்தது. தற்போது இஃச்ரோ பல்வகையான புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களை இயக்கி வருகிறது. இன்சாட் என்று பரவலாக அறியப்படும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி திட்டம் பல்நோக்கு புவிநிலை செயற்கைக்கோள்களின் தொடராகும். இது தொலைத்தொடர்பு, ஒலி/ஒளி பரப்பு, வானிலையியல் மற்றும் தேடிக் காப்பாற்று (search-and-rescue) தேவைகளுக்காகத் திட்டமிடப்பட்டது. 1983ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆசியா-பசிபிக் வலயத்திலேயே மிகப்பெரும் உள்நாட்டு செய்மதி தொலைதொடர்பு அமைப்பாக விளங்குகிறது. இதனை ஓர் கூட்டு முயற்சியாக இந்திய அரசின் விண்வெளித் துறை, தொலைத்தொடர்புத் துறை, இந்திய வானிலையியல் துறைகளும் அனைத்திந்திய வானொலி, தூர்தர்சன் நிறுவனங்களும் இயக்குகின்றன; இவற்றை ஒருங்கிணைக்க நடுவண் அரசுச் செயலர்கள் நிலையில் "இன்சாட் ஒருங்கிணைப்பு குழு" அமைக்கபட்டுள்ளது. இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (IRS) இசுரோவினால் வடிவமைக்கட்டு, கட்டப்பட்டு, ஏவப்பட்டு, இயக்கப்படும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள் தொடராகும். இவற்றால் நாட்டிற்கு தொலை உணர்வுச் சேவைகள் கிட்டுகின்றன. உலகிலேயே குடிசார் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் மிகப்பெரிய தொலையுணர்வு துணைக்கோள்த் தொகுதியாக விளங்குகிறது. துவக்கத்தில் இவை 1 (A,B,C,D) எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அண்மைக் காலத்தில் இவற்றின் பயன்பாடுகளை ஒட்டி (ஓசியன்சாட், கார்ட்டோசாட், ரிசோர்சுசாட்) பெயரிடப்படுகின்றன. இசுரோ தற்போது இரண்டு "ஒற்றுக் கோள்கள்" என விளையாட்டாக அழைக்கப்படும் கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்களை இயக்குகிறது. ஏப்ரல் 26, 2012 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலமாக ரிசாட்-1 (RISAT-1) விண்ணேற்றப்பட்டது. இது சி-அலைக்கற்றையில் இயங்கும் சின்தெடிக் அபெர்சர் ரேடார் ஏற்புச்சுமையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான மிகு இடப் பிரிதிறன் கொண்ட படிமங்களைப் பெற இயலும்..இதற்கு முன்னரே 2009இல் இசுரேலிடமிருந்து $110 மில்லியன் செலவில் பெறப்பட்டு ஏவப்பட்ட ரிசாட்-2 வையும் இயக்குகிறது. இவற்றைத் தவிர இசுரோ சில புவிநிலை செயற்கைக்கோள்களைச் சோதனையோட்டமாக ஏவியுள்ளது. இவை "ஜிசாட்" தொடர் என்று அழைக்கப்படுகின்றன. வானிலைக்காக மட்டுமே பயன்படுமாறு முதல் வானிலை செயற்கைக்கோளை (கல்பனா-1) முனையத் துணைக்கோள் ஏவுகலம் மூலமாகச் செப்டம்பர் 12, 2002இல் விண்ணேற்றியது. புவியின் சுற்றுப்பாதையைத் தாண்டி இந்தியாவின் முதல் தேடலாக சந்திரயான்-1 அமைந்தது. நிலா|நிலவுக்கான விண்கலமான இது நவம்பர் 8, 2008 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஏவவும் செவ்வாய் கோளிற்கு ஆளில்லா கலங்களை இயக்கவும் புவி அண்மித்த விண்கற்கள் மற்றும் வால் வெள்ளிகளை துழாவும் ஆய்வுக்கலங்களை செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ள "அந்தரிக்ஷ் பவனில்" (இந்தி: அந்தரிக்ஷ் = விண்வெளி, பவன் = மாளிகை) இயங்குகிறது. இசுரோ தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து பல்வேறு நாடுகள் இசுரோவிற்கு பலவகைகளில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றன. இசுரோ மற்றும் விண்வெளித் துறையும் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன. அவைகளாவன:- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது, விண்வெளிக்கு செல்லும் கருவிகள், விண்வெளிப் பறப்பு, போன்றவை மட்டுமில்லாமல் மேலும் சில திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது, புவன் திட்டமாகும் கூகிள் எர்த் திட்டத்திற்கு போட்டியாகவும், அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக முப்பரிமாண படங்களையும் மிகத்துல்லியமாகப் காணலாம். இத்திட்டத்தின் வாயிலாக, இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாகப் பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் சாலையில் உள்ள ஒரு வாகனத்தைக் கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும். ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாகப் பார்க்க முடியாது. இதில் உள்ள காட்சிகள் 2008-ம் ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் CARTOSAT-1, CARTOSAT - 2 ஆகியவை மூலம் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கப்பட்டவையாகும். 2012 க்கு பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 ஏவுதலை திட்டமிட்டுள்ளதால், இசுரோ தற்போது மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கப்போவதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 12 சனவரி 2018 இல் இசுரோ தனது 100 ஆவது செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்துள்ளது. தகுதிச் சொல்வழக்கு சொற்களையும் சொற்றொடர்களையும் அவற்றின் இயல்பான பொருளிலல்லாமல் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தி வழங்குதல் தகுதிச் சொல்வழக்கு எனப்படும். இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை. இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல். எ.கா.: வருத்தமும் அச்சமும் தரும் சொற்களைத் தவிர்த்து அவற்றினிடத்தில் நயம் தரும் சொற்களைத் தகுதியாக்கிச் சொல்லுதல். எ.கா.: ஒரு துறையினரோ, வேறு குழுவினரோ தங்களுக்குள் சில சொற்களைத் தகுதியாக்கி வேறு பொருள் தருமாறு பயன்படுத்துதல். எ.கா.: நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. உப்பு உப்பு ("Salt") என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு 'NaCl' என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும். மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும். சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன.உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர்.சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. மத்தியதரைக் கடல் முழுவதும் படகு மூலம் சிறப்பாக கட்டப்பட்ட உப்பு சாலைகளிலும், மற்றும் ஒட்டக வணிகர்கள் மூலம் சகாரா முழுவதற்கும் உப்பு கொண்டு செல்லப்பட்டது. உப்புக்கான பற்றாக்குறை மற்றும் உலகளாவிய தேவையை முன்னிட்டு நாடுகளுக்கு எதிராக போர்கள் நடைபெற்றன. உப்பின் மீதான வரி வருவாய் உயர்த்தப்பட்டது. மத விழாக்களிலும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் உப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது. உப்பு சுரங்கங்களிலிருந்து உப்பு தோண்டி எடுக்கப்படுகிறது. அல்லது கடல்நீரை ஆவியாக்கி உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. எரி சோடாவும் குளோரினும் இதன் முக்கிய தொழில்துறை தயாரிப்புகள் ஆகும்.மேலும் பாலிவினால் குளோரைடு, நெகிழிகள், காகித கூழ் மற்றும் பல பிற பொருட்கள் தயாரிக்க இது உதவுகிறது. ஆண்டுக்கு சுமார் இருநூறு மில்லியன் டன் உப்பின் உலகளாவிய உற்பத்தியில், சுமார் 6% உப்பே மனித நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. நீர் சீரமைப்பு நடவடிக்கைகள், விவசாய பயன்பாடு போன்ற பிற செயல்பாடுகளுக்கு எஞ்சிய உப்பு பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கக இது கடல் உப்பு மற்றும் மேசை உப்பு என்ற வடிவங்களில் விற்கப்படுகிறது, உடலில் அயோடின் குறைபாட்டை நீக்க அயோடின்சேர்த்த உப்பு சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது. மின்பகுளி மற்றும் சவ்வூடுபரவலுக்குரிய கரைபொருள் போன்ற தன்மைகளால் சோடியம் மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகிறதுஅதிகப்படியான உப்பு நுகர்வு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கச் செய்கிறது.உப்பின் சுகாதார விளைவுகளை நீண்ட ஆய்வுகள் செய்த பல உலக சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் உப்பு உணவுகளின் நுகர்வை குழந்தைகளும் பெரியவர்களும் குறைக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர் பெரியவர்கள் 2,000 மி.கி. அதாவது 5 கிராம் சோடியத்துக்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது . இற்றைக்கு நூறுவருடங்களுக்கு மக்கள் உணவைப் பதப்படுத்த, நீண்ட காலம் பாதுகாக்க, போத்தலில் அடைத்தல், செயற்கையாக குளிரூட்டுதல் போன்ற செயற்பாடுகளைக் கையாண்டாலும் உப்பு ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மக்களுக்கு உணவைப் பாதுகாக்க குறிப்பாக இறைச்சியைப் பாதுகாக்க உதவியிருக்கிறது. சீனாவின் யான்செங்கிற்கு அருகில் அமைந்துள்ள சியெச்சி குளத்தில் உப்பு கிறித்துவுக்கு முன்னர் சுமார் 6000 வருடங்களுக்கு முன்னரே அகழப்பட்டதாக கருதப்படுகிறது. இது உலகின் பழமையான உப்பகழும் இடமாகக் கருதப்படுகிறது. தாவரங்களில் இருப்பதைவிட அதிகமான உப்பு விலங்குப் பகுதிகளான இறைச்சி அவற்றின் இரத்தம் மற்றும் பாலில் காணப்படுகிறது. முற்கால உரோம சாம்ராச்சியத்தில் சலரியா போன்ற வீதிகள் ஒசுடியா உப்பளங்களிலிருந்து உப்பை தலைநகரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டது. டோவாரேக் மக்கள் பாரம்பரியமாக சகாராப் பாலைவனம் ஊடான பாதைகளை அசாலை இலிருந்து உப்பை கொண்டுசெல்ல பயன்படுத்தினர். தற்போது இங்கு கனரக வாகனங்கள் மூலமே அதிகமான வர்த்தகங்கள் இடம்பெறுகின்றன. உப்புக்காக போர்களும் இடம்பெற்றுள்ளன. வெனிஸ் ஜெனோவாவுடன் மோதி வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இது அமெரிக்க புரட்சியிலும் கூட முக்கிய இடம் வகித்தது. பிரித்தானியர் காலத்தில் இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த உப்புவரியை நீக்கக் கோரி 1930ம் ஆண்டில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார். பெரும்பாலும் உப்பு என்று சொல்லப்படுவது சோடியம் குளோரைடு என்ற வேதிச்சேர்மத்தையே ஆகும். இந்த அயனிச் சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NaCl. சோடியமும் குளோரினும் சம அளவில் கலந்து சோடியம் குளோரைடு உருவாகியிருப்பதை இச்சமன்பாடு காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கடல் உப்புகளிலும், புதியதாக உருவாக்கப்படும் உப்புகளிலும் அரிய தனிமங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. இத்தகைய உப்புகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கின்றன. தோண்டியெடுக்கப்படும் உப்பு மேசை உப்பு தயாரிப்பதற்காக சுத்திகரிக்கப்படுகிறது. தண்ணீரில் கரைக்கப்படும் இவ்வுப்பு கரைசலாக்கப்பட்டு இதிலிருந்து பிற கனிமங்கள் வடிகட்டல் முறையில் நீக்கப்படுகின்றன. பின்னர் மீள ஆவியாக்கப்படுகின்றன. இச்செயல்முறையின் போது உப்புடன் அயோடினேற்றம் செய்யப்படுகிறது. உப்புப் படிகங்கள் ஒளி ஊடுறுவும் தன்மையும் கனசதுர வடிவம் கொண்டும் காணப்படுகின்றன, தூய்மையான உப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் மாசுக்கள் சேர்ந்தால் இவ்வுப்பு நீலம் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது. உப்பின் மோலார் நிறை 58.443 கி/மோல், உருகுநிலை 801 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் கொதிநிலை 1,465 °செல்சியசு வெப்பநிலை ஆகும். (2,669 °F). உப்பின் அடர்த்தி கனசென்டிமீட்டருக்கு 2.17 கிராம்கள் ஆகும். இது நீரில் நன்றாகக் கரைகிறது. அவ்வாறு கரையும் போது Na+ மற்றும் Cl− அயனிகளாக உப்பு பிரிகிறது. மேலும் உப்பின் கரைதிறன் லிட்டருக்கு 359 கிராம்கள் என அளவிடப்பட்டுள்ளது. குளிர் கரைசல்களில் உப்பு இருநீரேற்றாக (NaCl•2H2O.)படிகமாகிறது. சோடியம் குளோரைடின் கரைசல்கள் தூய்மையான நீரிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 23.31 எடை சதவீத உப்பின் உறைநிலை −21.12 °செல்சியசு, வெப்பநிலை என்றும் நிறைவுற்ற உப்பு கரைசலின் கொதிநிலை சுமாராக 108.7° செல்சியசு வெப்பநிலையாகவும் உள்ளது. உப்பு உற்பத்தியானது உலகின் மிகப்பழமையான இரசாயன உற்பத்திகளில் ஒன்றாகும். உப்பு உற்பத்தியின் முக்கிய வளமாக, அண்ணளவாக 3.5% உப்புத்தன்மையுடைய கடல்நீர் காணப்படுகிறது. உலகின் சமுத்திரங்கள் உப்பு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. சமுத்திரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உப்பு உற்பத்தி வளங்கள் இன்றுவரை அளக்கப்படவில்லை. கடல் நீரை ஆவியாக்குதல் மூலம் உப்பைப் பெறுதல் அதிகமாக உப்பைப் பெற்றுக் கொள்ளப் பயன்படும் முறையாகும். உப்புநீரை ஆவியாக்கும் உப்பளங்களில் நீர் ஆவியாவதற்காக சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட உப்பு நீர் இடப்படும். இது ஆவியாகி உப்புப் படிகங்களைத் தோற்றுவிக்கும். பாக்கித்தானில் உள்ள கெவ்ரா உப்புச் சுரங்கம் உலகின் மிகப்பெரிய உப்பு சுரங்கங்களில் ஒன்றாகும். இச்சுரங்கத்தில் பத்தொன்பது அடுக்குகள் உள்ளன, இதில் 11 அடுக்குகள் நிலத்தடியிலும் 400 கிமீ (250 மைல்) நீளப் பாதைகளையும் கொண்டுள்ளன. உப்பு அறை மற்றும் தூண் முறையால் தோண்டியெடுக்கப்படுகிறது, ஆண்டுக்கு சுமார் 385,000 டன் எடையுள்ள மதிப்பீட்டில் உப்பு எடுக்கப்பட்டால் இங்குள்ள உப்பு மேலும் 350 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . உப்பு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தங்களது சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்ய அவசியமானது ஆகும். உப்பு உலகளாவிய ரீதியில் சுவையூட்டியாக பயன்படுகிறது. இது சமையலில் பயன்படுகிறது. இது உணவு வேலளையின் போது உணவு மேசையில் காணப்படும். அவரவர் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள இது சிறந்த வழி ஆகும். உப்பு ஐந்து வகைச் சுவைகளில் ஒன்றாகும். மேசை உப்பு 97 இல் இருந்து 99 சதவீதமான சோடியம் குளோரைட் ஐ கொண்டுள்ளது. உப்பு அதிகமான உணவுவகைகளில் காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் இறைச்சி, மரக்கறிகள் மற்றும் பழங்களில் உப்பு மிகவும் சிறிய அளவிலேயே காணப்படுகிறது. இது உணவுகளில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. மேலும் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் காணப்படும். அதிகமான கிழக்காசிய நாடுகளில் உப்பு பாரம்பரியமாக உணவின் சுவையை அதிகரிக்கும் ஒரு பொருளாக பயன்படுவதில்லை. இதன் இடத்தை நிறைக்க சோய் சோஸ், மீன் சோஸ், ஒய்ச்ட்டர் சோஸ் போன்றவை பயன்படுகின்றன. உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற்கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ் நாட்டில் தூத்துக்குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களுள் தரமான உப்பு மிகுதியாகப் பல இடங்களிலும் தயாரிக்கப்படுகிறது. வட இந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுத்துச் சேகரிக்கிறார்கள். சில இடங்களில் உப்புநீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் இத்தகைய உப்பு நீர்க் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப் படுகிறது. சில உப்பு நீர் ஏரிகளில் இருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரியும் பாலஸ்தீனத்தில் உள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்புநீரைக் காய்ச்சி உப்பு தயாரிக்கிறார்கள். கடல் நீரைக்கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி "மேசை உப்பு" ("Table Salt") ஆகப் பொடித்துப் பயன்படுத்துகிறார்கள். உப்புகள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத்தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன. பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் ("Boston Tea Party") என்பது, 1773 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. அமெரிக்காவில் தேயிலை விற்றுவந்த வணிகர்களுக்கும் விற்கும் விலை வரிகளால் உயர்ந்து அவர்களது இலாபம் குறைந்தது. தவிரவும் வரி செலுத்தாது கடத்தப்பட்ட தேயிலையை, விலை மலிவாக இருந்தமையால், மக்கள் வாங்கத் துவங்கினர். இதனால் தங்களது அரசராக இருந்த மூன்றாம் ஜார்ஜின் ஆட்சிக்கு எதிராக டிசம்பர் 16 அன்று இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அன்றைய நாளில் சில அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் கடலில் எறிந்தனர். தங்களது கோபத்தைக் காட்டுமுகமாக சாமுவேல் ஆடம்சும் "விடுதலையின் மகன்கள்" என அறியப்படும் அமெரிக்கக் குடியேறிகளும் தொல்குடி அமெரிக்கர்களான மகாகாக் இனத்தவரைப் போன்று உடையணிந்து இருள்நிறைந்த குளிர்கால விடியற்காலை நேரத்தில் பாஸ்டன் துறைமுகத்தில், இறக்குமதிக்காக வந்து சுங்கச்சோதனைக்காக காத்திருந்த தேயிலைப் பெட்டிகள் நிரம்பிய, கப்பல்களில் ஏறினர். தேயிலைப் பெட்டிகளை தூக்கி நீரில் வீசி எறிந்தனர். இது பிரித்தானிய அரசுக்கு மிகவும் கோபமூட்டியது. நடப்புச் சட்டங்களை மாசச்சூசெட்ஸ் மாகாணத்திற்கு மட்டும் மேலும் கடுமையாக்கியது. "பொறுக்கவியலாச் சட்டங்கள்" என அறியப்படும் இந்த சட்டங்களில் ஒன்றின்படி கடலில் வீசப்பட்ட அனைத்துத் தேயிலைக்கும் மாசச்சூசெட்ஸ் மாநில குடியேறிகள் வரி செலுத்தும் வரை பாஸ்ட்டன் துறைமுகம் மூடப்பட்டது. அமெரிக்கப் புரட்சிப் போரின் முதன்மையான துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் கருதப்படுகிறது. சுராசிக் காலம் சுராசிக் அல்லது ஜுராசிக் ("Jurassic") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும். அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலமாகும். சுராசிக் மெசொசொயிக் ஊழியின் நடுக்காலமாகும். இக்காலப்பகுதியின் தொடக்கம் டிராசிக்-சுராசிக் அழிவினால் குறிக்கப்படுகிறது எனினும் சுராசிக் காலத்தின் முடிவில் எந்தவொரு அழிவு நிகழ்வும் நடைபெறவில்லை. சேர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சுரா மலை (Jura Mountains) யில் காணப்படும் சுண்ணக்கல் படிவுகளுக்காக இக்காலப்பகுதிக்கு இப்பெயர் அலெக்சாண்டர் புரொங்னியார்ட் என்ற பிரெஞ்சு வேதியியலாளரால் சூட்டப்பட்டது. ஈஎஸ்பிஎன் ஈஎஸ்பிஎன் (ESPN) நாள் முழுவதிலும் விளையாட்டுக்களை ஒளிபரப்பும் ஓர் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமாகும். 1979இல் செப்டம்பர் 7ஆம் தேதி முதலாக ஒளிபரப்பு செய்தது. கனெடிகட் மாநிலத்தின் பிரிஸ்டல் நகரில் ஈஎஸ்பிஎன் தலைமை பணியிடங்கள் உள்ளன. "ஸ்போர்ட்ஸ்சென்டர்" (SportsCenter) என்னும் ஒரு மணி நேர விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி ஈஎஸ்பிஎன்னின் மிகப் பரவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தவிர பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாட்டு பற்றிய நிகழ்ச்சிகளும் ஈஎஸ்பிஎன் ஒளிபரப்புகிறது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவே ஈஎஸ்பிஎன். ஈஎஸ்பிஎன்னின் அனைத்துலகப் பிரிவு ஈஎஸ்பிஎன் இண்டர்நேஷனல் சார்பாக ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் அலைவரிசை தெற்காசியாவில் ஒளிபரப்புகிறது. டிராசிக் காலம் டிராசிக் அல்லது திராசிக் ("Triassic") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். மெசொசொயிக் ஊழியின் முதல் காலமான டிராசிக் காலம் பேர்மியன் காலத்தின் முடிவிலிருந்து சுராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. டிராசிக் காலத்தின் தொடக்கமுய்ம் முடிவும் பெரும் அழிவு நிகழ்வுகளால் குறிக்கப்படுகிறது. டிராசிக் காலத்தின் முடிவில் ஏற்பட்ட அழிவு நிகழ்வு தற்போது துல்லியமாக கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பண்டைய நிலவியல் காலங்களைப் போன்றே டிராசிக் காலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் பாறப்படிவுகள சரியாக அடையாளம் காணப்பட்டிருநதாலும் அவற்றிந் வயது தொடர்பாக சரியான அளவீடுகள் இல்லை. உயிரினக் கோளம் பேர்மியன்-டிராசிக் அழிவு நிகழ்வின் காரணமாக மிகவும் குறைநிலைக்குத் தள்ளப்பட்டிருநதது இந்நிலையிலிருந்து டிராசிக் காலத்தில் கடல் மற்றும் தரை உயிரினங்கள் இசைவுவிரிகையைக் காட்டுகின்றன. எக்சாகொரலியா வகையைச் சேர்ந்த பவளப் பாறைகள் முதன் முதலி இக்காலத்தின் தோன்றின. முதலாவது பூக்க்கும் தாவரங்கள் இக்காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் மேலும் முதன் முதலாக பறக்கும் இயலுமையக் பெற்ற முதுகெலும்பிகளான டெரசோர் தோன்றியது இக்கலத்திலாகும். அந்தோனி மரிய கிளாரட் புனித அந்தோனி மரிய கிளாரட் (ஸ்பானியம்: "San Antonio Maria Claret y Clarà", டிசம்பர் 23, 1807 - அக்டோபர் 24, 1870) என்பவர் ஸ்பெயினின் கட்டலோனிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகரும், நற்செய்தி பணியாளரும், பேராயரும் ஆவார். இறையன்பை முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். 1849, ஜூலை 16 ஆம் நாள் இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் "அமல மரியின் மறைப்போத மைந்தர்கள்" என்ற சபையை நிறுவினார். அந்தோனி கிளாரட் ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு நெசவுத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தனது 12வது அகவையில் நெசவூத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து பார்சிலோனா நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் இலத்தீன், மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்கலானார். சமய வாழ்க்கையில் இவர் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டு 1829 ஆம் ஆண்டில் விக் என்ற இடத்தில் கிறிஸ்தவ சமயக் கல்விக்கூடம் ஒன்றில் சேர்ந்தார். 1835 ஆம் ஆண்டு ஜூன் 13 இல் குருப்பட்டம் பெற்றார். தொடர்ந்து 1839 வரை வேதவியல் படித்துத் தேறினார். கட்டலோனியாவிலும் கனேரி தீவுகளிலும் மறைப்போதகப் பணிப்பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார். ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் 1847 ஆம் ஆண்டு ஒரு சில குருக்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணில்லாத புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். அக்கால கட்டத்தில் ஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க கிளாரட்டின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் 14 மாதங்கள் கனேரிய தீவுகளில் அவர் பணிசெய்து வந்தார். கனேரிய தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது. இருந்தும் அவர் ஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார். மீண்டும் விக் திரும்பி 1949 ஜூலை 16 ஆம் நாள் ஐந்து குருக்களோடு சேர்ந்து இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் "அமல மரியின் மறைப்போத மைந்தர்கள்" (Congregation of the Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார். பார்சிலோனாவில் மிகப் பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார். குளிர்கால அரண்மனை குளிர்கால அரண்மனை ("Winter Palace", ரஷ்ய மொழி: Зимний дворец, சீம்னிய் துவரியெத்ஸ்), ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 1755 - 1762 காலப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது இத்தாலியக் கட்டிடக்கலை நிபுணரான பிரான்செஸ்கோ பார்த்தலோமியோ ரஸ்ட்ரெலி என்பவரால் ரஷ்ய சார் மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது. 1837 ஆம் ஆண்டு டிசம்பர் 1 இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இது பின்னர் முதலாம் நிக்கலாஸ் மன்னனால் மீள அமைக்கப்பட்டது. 1917 இல் இடம்பெற்ற பெப்ரவரிப் புரட்சியை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அதே ஆண்டு அக்டோபர் 25 இல் (அக்டோபர் புரட்சி) இது பொல்ஷெவிக்குகளால் கைப்பற்றப்பட்டு, எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது. கொட்டாவி கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை "சோம்பல் முறித்தல்" அல்லது "நெட்டி முறித்தல்" என்பர். கொட்டாவி விடுதல் பெரும்பாலும் தூக்கத்துக்கு முன்னும் பின்னுமோ கடுமையான வேளைக்குப் பின்னோ, பிறரிடம் இருந்து தொற்றியோ ஏற்படுகிறது. இது வழக்கமாக அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகியவற்ரோடு இணைந்த நிகழ்வாகும். மாந்தரில் அடிக்கடி மற்றவரிடம் இருந்தும் கொட்டாவி தொற்றிக்கொண்டு வருகிறது. எனவே, கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும் போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்படக்கூடும். இது ஒருவகை நேரிய பின்னூட்டத்துக்கான எடுத்துகாட்டாகும். இந்த தொற்றிக்கொள்ளும் வகைக் கொட்டாவி சிம்பஞ்சி, நாய்கள், பூனைகள், பறவைகள, ஊர்வன ஆகிய உயிரினங்களிலும் அவற்ருக்கிடையிலும் கூட அமைதல் நோக்கப்பட்டுள்ளது. தோராயமாக 20 உளவியல் காரணங்களை அறிஞர்கள் கோட்டாவி விடுதலுக்குக் கூறினாலும் இதற்கான முதன்மையன பணி பற்றிய பொதுக் கருத்தேற்பு இதுவரை எட்டப்படவில்லை. கொட்டாவியின்போது நடுச்செவியில் உள்ள செவிப்பறை இழுப்புத் தசை சுருங்குகிறது; இது தலைக்குள் கொட்டலோசையை எழுப்புகிறது. மாந்தரிலும் விலங்குக்களிலும் கொட்டாவிக்குப் பிறகு தன்னியல்பாக கைகள் கழுத்து தோள்கள், முதுகு போன்ற உடற்பகுதிகளின் நெட்டிமுறித்தலும் தொடர்கிறது. கொட்டாவியின் சரியான கரணியங்கள் அறுதியாக அறியப்படவில்லை. உயிர்வளிக் குறைவினால் இது ஏற்படுகிறது என்ற கூற்றும் அறிவியலில் முற்றாக நிறுவப்படவில்லை. பொதுவாக மூச்சு விடுவதைக் காட்டிலும் கொட்டாவி விடுகையில் உயிர்வளி குறைவாகவே உட்கொள்ளப் படுவதாகவும் சிலர் கருதுகின்றனர். இது பதற்றத்தினால் கூட விளையும் என்றும் ஒருவரின் விழிப்புணர்ச்சியைக் கூட்ட வல்லது என்றும் அதனாலேயே வானிலிருந்து மிதவைக்குடையுடன் குதிக்கும் முன்னர் கொட்டாவி ஏற்படுகிறது என்றும் சிலர் கருதுகின்றனர். பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. ஆனால் அறுதியாக நிறுவப்படவில்லை. கொட்டாவி எனும் தன்னேர்ச்சி வினை தொற்றிக்கொள்ளக்கூடியது என்று கருதுகின்றனர். அதாவது, ஒருவரது கொட்டாவி "பரிவு விளைவால்" மற்றொரு நபரில் கொட்டாவியை ஏற்படுத்தக்கூடும். “குமர் தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாது” என்ற பழமொழி இவ்விளைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு நபர் கொட்டாவி விடுகையில் அவரது முகத்தை (அதிலும் குறிப்பாகக் கண்களைக்) காணுதல், கொட்டாவியைப் பற்றிப் படித்தல் அல்லது எண்ணிப்பார்த்தல் ஆகியவை கூட ஒருவருக்குக் கொட்டாவி வரச்செய்துவிடுமாம்! இத்தொற்றுவினையின் முழுமையான வழி அறியப்படாவிட்டாலும், இது இறுதியில் ஆடி நரம்புக் கலங்களால் ("mirror neurons") ஏற்படுவதாக நம்புகின்றனர். இக்கலங்கள் சில முதுகெலும்பிகளின் மூளையின் முற்புறணியில் ("frontal cortex") அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் அதே இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளிடமிருந்து பெறும் குறிப்புகளின் விளைவாக தமது மூளையிலும் ஒத்த பகுதிகளைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டவை. இத்தகு ஆடி நரம்புக்கலங்களே மனிதக் கற்கையின் அடிப்படையான பின்பற்றிப் பழகுதலின் பின்னால் இயங்குகின்றன. கொட்டாவியும் இதே வினையின் மற்றொரு வெளிப்பாடாக இருக்கலாம். 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளில் இவ்வகையான தொற்றுதல் ஏற்படுவது குறைவு என அறியப்பட்டுள்ளது. இதனால் கொட்டாவி பரிவு விளைவால் தொற்றிக் கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது. படிவளர்ச்சி நோக்கில் கொட்டாவி ஒரு மந்தை உணர்வாக இருக்கலாம். ஓநாய்கள் ஒன்றாக ஊளையிடுவதைப்போல, கொட்டாவியும் கூடி வாழும் விலங்குகள் ஒரே மனநிலைக்கு வருவதற்காக இயங்குவதாக ஒரு கருத்து உண்டு. அலுப்பைப் பிற விலங்குகளுக்கு அறிவிப்பதன் வாயிலாக தூங்கும் நேரங்கள் ஒன்றாக அமைய ஏதுவாகிறது. இது பல முதனிகளில் காணப்படுவது. தீங்கு நேரும் வாய்ப்பை அறிவித்தல் குழுக் கட்டுப்பாட்டை காக்க உதவுகிறது. இது தொடர்பில் சிம்பன்சிகளிலும் தட்டைவால் குரங்குகள் மீதும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு தன்னினத்தைச் சேர்ந்த பிற விலங்குகள் கொட்டாவி விடும் காட்சியை நிகழ்படத்தில் காண்பித்ததில் தாமும் கொட்டாவி விடத் துவங்கின. கோர்டான் காலுப்பு என்பவர் கொட்டாவி மூளையைக் குளிர்விப்பதாகக் கருதுகிறார். அதே வேளையில் கொன்றுண்ணிகள் மற்றும் போட்டிக் குழுக்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும் வகையில் எழுந்த உய்வு உத்தி இது எனவும் கருதுகிறார். அண்மையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கொட்டாவி மனிதர்களிடமிருந்து நாய்களுக்கும் தொற்றவல்லது என அறியப்பட்டுள்ளது! அந்த ஆய்வின்போது 29 நாய்களில் 21 நாய்கள் அவை முன்னர் அறிந்திராத நபர்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்துத் தாமும் கொட்டாவி விடத்துவங்கின. வெறுமனே வாயைத் திறப்பதைப் பார்த்தால் இவ்விளைவு ஏற்படவில்லை! விலங்குகளில் கொட்டாவி எச்சரிக்கைக் குறிகையாகப் பயன்படுகிறது. எடுத்துகாட்டக, சார்லெசு டார்வின், "The Expression of the Emotions in Man and Animals" எனும் தனது நூலில் பாபூன்கள் தம் எதிரிகளை அச்சுறுத்த தம் கோரைப் பற்களைக் காட்டிக் கொட்டாவி விடுவதாகக் கூறுகிறார்.இதேபோல, சயாமியப் போராளி மீன்கள் அதே இனத்தைச் சேர்ந்த எதிர்பாலினத்தையோ அல்லது தன்னைப் போன்ற கண்ணாடி உருவத்தையோ காணும்போது கொட்டாவி விடுகிறது. கொட்டவிக்குப் பின்ன்னர் கடுந்தாக்குதலில் ஈடுபடுகிறது.கினியா பன்றிகள் தம் வெட்டுபற்கலைக் காட்டி த்ன் ஓங்கலான அதிகாரத்தைக் காட்டவோ சினத்தைக் காட்டவோ கொட்டாவி விடுகின்றன. இத்துட்ன் மேலும் அவை பற்களை நறநறவெனக் கடிக்கின்றன.உறுமல் விடுகின்றன. நறுமனக் குறியையும் இடுகின்றன. அதேலி பெங்குவின்கள் இணைவிழைச்சு சடங்காகக் கொட்டாவி விடுவதைப் பயன்படுத்துகின்றன. பெங்குவின் இணைகள் முகத்தை எட்ட வைத்துகொண்டு, அப்போது ஆண் பெங்குவின் வாயைப் பிளந்து வான்நோக்கி காட்டியபடி பரவச நடிப்பை/பாவனையைக் காட்டுகிறது. அரசப் பெங்குவின்களிலும் இந்த பண்பு காணப்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த இருவகைப் பெங்குவின்களும் வாழிடத்தைப் பகிராவிட்டாலும், ஏன் இந்த நட்த்தையைப் பின்பற்றுகின்றனவென அறிய முயன்றுவருகின்றனர். பாம்புகளும் தம் தடைகளைச் சரிசெய்யவும் உணவுக்குப் பின்னும் மூச்சுயிர்ப்புக் காரணங்களால் கொட்டவி விடுகின்றன. கொட்டவியின்போது முதுகெலும்பிகளின் மூச்சுக்குழல் விரிவடைதல் நோக்கப்பட்டுள்ளது. நாய்கள் ஓரளவு பூனைகள் கூட அடிக்கடி மக்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்து கொட்டாவி விடுகின்றன. உறுதியின்மையை உணரும்போதும் கூட அவை கொட்டாவிவிடுகின்றன. மாந்தன் கொட்டாவி விடுவதைப் பார்த்து நாய்கள் தொற்றுவகை கொட்டாவி விடுகின்றன. நாய்கள் மாந்த்த் தொடர்பாடலை நன்கு தமக்கு தகவமைத்துக் கொள்கின்றன. இந்தப் பழக்கம் அவை கால்நடையாக்கக் காலகட்டத்தில் மாந்தரோடு வேட்டையில் நெருங்கிப் பழகியமையால் படிமலர்ச்சி வழியாக ஏற்பட்டிருக்கலாம். உயிரகத் தட்டுபாட்டின்போது மீன்களும் கொட்டாவி விடுகின்றன. சில பண்பாடுகள் கொட்டாவி விடுதலுக்கு ஆன்மீகச் சிறப்புப் பொருளை நல்குகின்றன. திறந்த வாய் நல்ல பொருள்சாராதவற்றை வெளியேற்றுவதாக (ஆன்மா (உயிர்) வெளியேறுவதாகவோ) கெட்டவை உள்நுழைவதாகவோ (கெட்ட ஆவிகள் உள்நுழைவதாகவோ பேய்கள் உள்நுழைவவதாகவோ) கொள்கின்றன. எனவே, கொட்டாவி விடுதல் இந்த இடர்களை விளைவிப்பதாக்க் கருதப்படுகிறது. Covering the mouth when yawning may have been a way to prevent such transmission. பேயோட்டிகள் கொட்டாவி வழியாக மாந்த விருந்தோம்பியிடம் இருந்து பேயோட்டும்போது பேய் அல்லது கெட்ட ஆவி வெளியேறுவதாக நம்புகின்றனர். பொது உடக்நல அக்கறையால் கொட்டாவி பற்றிய மூடநம்பிக்கைகள் உருவாகியிருக்கலாம். பாலிதோர் வர்ஜில் (அண்c. 1470–1555), தனது "De Rerum Inventoribus" எனும் நூலில், கொட்டாவியின்போது அச்சமூட்டும் ஆவி இருப்பதால் வாயிடம் சிலுவக்குறி கையால் வரைவது வழக்கமாகிவிட்டது; இதனால் தான் மாந்தர் சிலுவைக்குறியால் வேலியிட்டுக் காத்துக்கொள்வது இன்றுவரை வழக்கில் உள்ளது என எழுதுகிறார். கோட்டாவி அலுப்பின் குறியாகக் கருதப்படுகிறது. மற்றவர் முன்னே விடும் கொட்டாவி அவருக்கும் தொற்றிக்கொள்கிறது. பிரான்சிசு ஆக்கின்சு 1663 இல், "கொட்டாவியின்போது ஊளை விடாதே, உன்னால் முடிந்தவரை கொட்டாவியே விடாதே, குறிப்பாக, அதுவும் நீ பேசும்போது" எனக் கூறியுள்ளார். ஜர்ஜ் வாழ்சிங்டன், "நீ இருமும்போதும் தும்மும்போதும்வெட்கப்படும்போதும் கொட்டாவி விடும்போது தனியாக உரத்த ஓசைவராமல் செய்; கொட்டாவியின்போது பேசாதே, முகவாயைக் கையாலோ கைக்குட்டையாலோ மூடித் திரும்பிக்கொள்" எனக் கூறியுள்ளார். இந்த வழக்கமான நம்பிக்கைகள் இன்றும் நிலவுகின்றன. மேசன் கூலி என்பாரின் முழக்கம் "முரணெதிர்ப்பை விடக் கொட்டாவி கூடுதலாக நிலைகுலையச் செய்கிறது" என்பதாகும். வழக்குமன்றத்தில் உரத்துக் கொட்டாவி விட்டால் மன்ற அவமதிப்பாக்க் கருதி தண்டனைகள் தரப்படும். கொட்டாவி விடுவதைத் தமிழில் ஆவலித்தல், அங்கா, ஆவிதல் என்றும் வழங்கியுள்ளனர். சீவக சிந்தாமணி, திருவாசகம், ஆசாரக்கோவை முதலிய பல நூற்களில் கொட்டாவியைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பிங்கல நிகண்டு இதை ஒரு மெய்க்குற்றம் என்கிறது. ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு ("Federation of Australia") என்பது பிரித்தானியாவின் ஆறு தனியான குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஆகும். 1901 சனவரி 1 இல் நடுவண் அரசமைப்பு அமுலானபோது இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பொதுநலவாய ஆஸ்திரேலியாவின் மாநிலங்களாயின. 1850கள், 1860களிலேயே கூட்டமைப்பு உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், பொதுவான ஆதரவின்மை காரணமாக முயற்சி கைகூடவில்லை. 1890களில் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் பல கூட்டங்களும், மக்கள் வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. நியூ சவுத் வேல்சின் முதல்வர் சேர் ஹென்றி பார்க்ஸ் இம்முயற்சிகளில் முன்னின்று உழைத்தார். இம்முயற்சியில் பிஜி, நியூசிலாந்து ஆகியனவும் ஆரம்பத்தில் இணைந்திருந்தனவாயினும், அவை பின்னர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள மறுத்து விட்டன. 1901 இல் சேர் எட்மண்ட் பார்ட்டன் ஆஸ்திரேலியாவின் தற்காலிக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அதே ஆண்டில் இடம்பெற்ற முதலாவது நடுவண் அரசுத் தேர்தலில் இவர் நிரந்தரமாக்கப்பட்டார். "பொதுநலவாய ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் (ஐக்கிய இராச்சியம்)" ஜூலை 5 1900 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு ஜூலை 9, 1900 ஆம் ஆண்டில் அன்றைய விக்டோரியா மகாராணியினால் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1901 சனவரி 1 இல் சிட்னியில் நூற்றாண்டுப் பூங்காவில் பொதுநலவாய ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சேர் எட்மண்ட் பார்ட்டன் கூட்டமைப்பின் இடைக்காலப் பிரதமராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 9 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் இரு அவைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. அரசியின் பிரதிநிதியாக பொது ஆளுநர் நியமிக்கப்பட்டார். அத்துடன் உயர் நீதிமன்றம் ஒன்றும் புதிய அரசியலமைப்பின் படி நிறுவப்பட்டு, மாநிலங்களுக்கும், புதிய நடுவண் பொதுநலவாய அரசுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் தலைநகரைத் தேர்ந்தெடுப்பதில் சிட்னிக்கும், மெல்பேர்ணிற்கும் இடையில் கடும் போட்டி இருந்து வந்தது. இதனால் இரண்டையும் தவிர்த்து தனியானதொரு பிரதேசம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்குள் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் கான்பரா என்ற புதிய தலைநகர் அமைக்கப்படும் வரையில் மெல்பேர்ண் இடைக்காலத் தலைநகராக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் கூட்டமைப்பு இன்றும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு பாடசாலைகளில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் பொதுநலவாய ஆஸ்திரேலியா மொத்தம் எட்டு சுயாட்சி அமைப்புக் கொண்ட மாநிலங்களையும் பிரதேசங்களையும் உருவாக்கப்பட்டு நடுவண் அரசின் கீழ் கூட்டாட்சியாக நிருவகிக்கப்படுகிறது. பேர்மியன் காலம் பேர்மியன் ("Permian") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் கடைசிக் காலமான பேர்மியன் காலம் கார்பனிபெரசுக் காலத்தின் முடிவிலிருந்து டிராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. 1841 ஆம் ஆண்டு சுகொட்லாந்திய நிலவியலாளர் றொட்ரிக் முர்சிசொன் (Roderick Murchison) என்பவரால் இரசியாவில் முன்னர் நிலவிய பேர்மியா என்ற அரசின் நினைவாக இக்காலம் பெயரிடப்பட்டது. கோகிலா மகேந்திரன் கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். தாயார் செல்லமுத்து. பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் விஞ்ஞானக்கல்வியைக் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, 1994 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று, 1999 இல் அதே கல்விப்புலத்தில் பிரதிப்பணிப்பாளராக உயர்ந்து தனது தொழிலில் உச்ச நிலையை அடைந்தவர். கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்வர். இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1972 இல் "குயில்' சஞ்சிகையில் வெளியான "அன்பிற்கு முன்னால்' என்பது இவரது முதலாவது சிறுகதையாகும். மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் "பிரசவங்கள்', "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்' ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது. ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும், "துயிலும் ஒருநாள் கலையும்', "தூவானம் கவனம்' ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. "விஞ்ஞானக் கதைகள்' என்ற அறிவியல் புனைகதை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். பெண்ணியம் பற்றிய கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பெண்ணியக் கருத்துக்களை தனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டவர். இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியுள்ளார். "சைவநற்சிந்தனை” என்ற தொடரில் ஒலித்த இவரது குரல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. "கேள்விகளின் முழக்கம்' எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் "நாடக கலாவித்தகர்' என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளார். கலிப்பொலி போர்த்தொடர் கலிப்பொலி போர்த்தொடர் ("Gallipoli Campaign") என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் உருசியாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது. துருக்கியில் இந்நடவடிக்கை "Çanakkale Savaşları" (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் "டார்டனெல்லாஸ் நடவடிக்கை" அல்லது "'கலிப்பொலி" என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது "Les Dardanelles" என்றும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூபன்லாந்தில், இந்நடவடிக்கை "கலிப்பொலி நடவடிக்கை" அல்லது "கலிப்பொலி போர்" என அழைக்கப்படுகிறது. டொரெஸ் நீரிணை டொரெஸ் நீரிணை ("Torres Strait") என்பது ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினி தீவிற்கும் இடையில் அமைந்துள்ள நீரிணை ஆகும். இது கிட்டத்தட்ட 150 கிமீ அகலமானது. இதன் தெற்கே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள கேப் யோர்க் தீபகற்பமும், வடக்கே பப்புவா நியூ கினியின் மேற்கு மாகாணமும் அமைந்துள்ளன. டொரெஸ் நீரிணை பவளக் கடலை கிழக்கே அரபூரா கடலுடன் இணைக்கிறது. இது ஒரு பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கடற் பாதை ஆயினும், இங்குள்ள கற்பாறைகளும், சிறு தீவுகளும் கடற்பயணம் மேற்கொள்வோரைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கும். இதன் தெற்கே உள்ள எண்டெவர் நீரிணை, வேல்ஸ் இளவரசர் தீவிற்கும் ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதிக்கும் இடையில் உள்ளது. இந்நீரிணையில் டொரெஸ் நீரிணைத் தீவுகள் எனப்படும் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. குறைந்தது 274 தீவுகள் இக்கூட்டத்தில் உள்ளன. இவற்றில் 17 தீவுகளில் தற்போது மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன. 6,800 இற்கும் அதிகமான டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் (ஆஸ்திரேலியப் பழங்குடிகள்) இந்தத் தீவுகளில் வாழ்கின்றனர். மேலும் 42,000 பேர் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதியில் வாழ்கின்றனர். கார்பனிபெரசுக் காலம் கார்பனிபெரசு ("Carboniferous") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான கார்பனிபெரசுக் காலம் டெவோனியக் காலத்தின் முடிவிலிருந்து பேர்மியன் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. கார்பனிபெரசுக் காலத்தில் உறைபனிப்பரவல், தாழ்வான கடல்மட்டங்கள், மலைகள் ஆக்கல் போன்றவை நடைப்பெற்றன. இக்காலத்தின் நடுவில் சிறிய அளவிலான கடலுயிர் அழிவு நிகழ்வென்று இடம்பெற்றது. இக்காலத்துக்கான பெயர் நிலக்கரியைக் குறிக்கும் "carbo" எனப்படும் இலத்தீன் மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். கார்பனிபெரசு (Carboniferous) என்பது "நிலக்கரியப் போதிகை" எனப்பொருள்படும், கார்பனிபெரசுக் காலத்தில் உலகம் முழுவதும் நிலக்கரிப் படிவுகள் ஏற்பட்டதன் காரணமாக இக்காலத்துக்கு இப்பெயர் வழங்குகிறது. உபயகதிர்காமம் இலங்கையில் பிரசித்தி பெற்ற சுயம்பு இந்துக் கோயில்களுள் உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் முக்கியமானது. இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படும் இவ்வாலயம் இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், புலோலி என்னுமிடத்திலுள்ளது. பருத்தித்துறை - யாழ் வீதியிலுள்ள மந்திகைச்சந்தியில் இருந்து, வல்லிபுர வீதியூடாக நடந்தால் இவ்வாலயத்தை அடையலாம். அருகில் 200 வருட வரலாறு கொண்ட பெரியதேவனத்தாய் விநாயகர் ஆலயம் உள்ளது. மூவேளை நித்திய பூசை நடைபெறும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் இரவு திருக்கார்த்திகைக் கற்பூரத் திருவிழா, மற்றும் கதிர்காமத் தீர்த்தத்தை அடுத்ததாக திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தம் என்பன சிறப்புற நடைபெறும். முத்துலிங்க சுவாமிகளால் வரையப்பட்ட சுப்பிரமணியர் யந்திரமே கதிர்காமத்தின் அருட்பெருக்கிற்கு காரணம் என்பர். அவ்வாறே உபயகதிர்காம சக்கர யந்திரமும் போற்றப்படுகின்றது. வெண்கல் மலையில் சுயம்புவாகத் தோன்றிய சக்கர யந்திரமே மூலவராக அமைந்ததால் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் என்ற பெயரைப் பெற்றது. விநாயகர், சிவன் மற்றும் சக்தியரைக் குறிக்கும் எழுத்துகளும் சக்கர வலப்பாகத்து முனைகளை அடுத்து அமைந்துள்ளன. தலவிருட்சமாம் விளாமரத்தே விளாத்தீஸ்வரன் எனும் தெய்வம் 200 ஆண்டுகளாக சுயம்புவாக எழுந்தருளியுள்ளான். அதன் முன்னரும் இவ்விளாமரத்தின் தாய் மரத்தில் அவன் எழுந்தருளியிருந்ததாக கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன. 1909 ஆம் ஆண்டு, தமிழ்நாடு திருநெல்வேலி குகனருட்செல்வி ரீ.எஸ்.லோகாம்பாளின் கனவில் முருகன் இவ்வாலய யந்திர மகிமை உரைத்து இது பச்சிமப்புலவர்கானநகரில் விளாமரத்தடியிலுள்ள வெண்கல் மலையில் சுயம்புவாக உள்ளதாக உரைத்து அந்த யந்திர உருவை வரைந்து வந்து இல்லத்தே பூசிக்குமாறு அருளினார். பச்சிமப்புலவர்கானநகரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளதென 1911 இல் கனவில் முருகன் மீண்டும் கூறி அருளினார். பச்சிமப்புலவர்கானநகரம் என்பது புலோலி என யாழ் பண்டிதர்கள் கூறி உதவ யந்திரம் உள்ள இடத்தை 11 நாளாக புலோலி மக்கள் உதவியுடன் தேடினார். வைகாசி விசாகத்தன்று இடத்தை அடைந்த அம்மையார் அந்த யந்திர உருவை வரைந்து சென்று இல்லத்தே பூசித்து வந்தார். அம்மையார் கனவில் முருகன் மீண்டும் 1924 இல் உரைத்தபடி ஜூலை 25, 1924 அன்று யந்திர மகிமையை புலோலி மக்கள் அறியுமாறு பிரசுரத்து ஆலயம் எழுப்பச் செய்தார். லோகாம்பாள் அம்மையார் செப்டம்பர் 20, 1970 இல் இறந்தார். முருகப்பெருமான் ஸ்ரீ சக்கர சண்முகராக உபயகதிர்காமத்தே தான்தோன்றியாக வீற்றிருந்து பக்தருக்கு அருளாட்சி புரிகின்றான். டெவோனியக் காலம் டெவோனியக் காலம் ("Devonian") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன. இக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது. தொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. ஒளியின் வேகம் வெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகம் ("speed of light") என்பது இயற்பியலில் ஒரு அடிப்படை மாறிலி. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. கட்டற்ற வெளியில் (free space), கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு உட்பட எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகளினதும் வேகம் இதுவே. ஓய்வுத்திணிவு பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும். வெற்றிடத்தில் "ஒளி வேகம்" விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*10ms அல்லது 3*10ms (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும். ஒளி, ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் விலகல் குறியீட்டெண் (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும். பொதுச் சார்புக் கோட்பாட்டில், "c", வெளிநேரத்தின் ஒரு முக்கியமான மாறிலியாகும். ஈர்ப்பின் காரணமாக வெளிநேரம் வளைந்து இருப்பதனால், தூரம், நேரம் என்பவற்றையும்; அதனால், வேகத்தையும், தெளிவாக வரையறுக்க முடியாதுள்ளது. ஒளியின் வேகத்தை முதன் முதலில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தவர் கலீலியோ ஆவார். கி. பி. 1630 இல் இதற்கான சோதனைகளில் அவர் ஈடுபட்டார். தன் உதவியாளருடன், கையில் ஒரு லாந்தர் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு மலைக் குன்றை அடைந்தார். கூட வந்த தன்னுடைய உதவியாளரிடம் ஒரு விளக்கைத் தந்து, குன்றின் எதிர் உச்சியில் போய் நிற்குமாறு பணித்தார். இப்போது, அந்த உதவியாளர் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளியைத் தூண்டிவிட வேண்டும். அவ்வாறு தூண்டிவிடப்பட்ட அந்த ஒளியைக் கண்டவுடன் கலீலியோ தன்னிடமிருக்கும் விளக்கின் ஒளியைத் தூண்டிவிடுவார். இதன்பின், கலீலியோ இந்த இரு செயல்களுக்கான இடைவெளியைக் குறிப்பெடுத்துக் கொண்டார். இதேபோல் பலதடவை இச்சோதனையினைச் சோதித்துப் பார்த்தார். அதன்பின்பு, இவர் சற்றுத் தொலைவில் காணப்படும் மலையுச்சிக்கு சென்றார். அங்கும் இதே சோதனையை நிகழ்த்திப் பார்த்தார். எனினும், இத்தகைய சோதனைகளின் கால இடைவெளியில் பெரிதான மாற்றம் இல்லாததைக் கண்டுபிடித்தார். மேலும், அந்தக்காலத்தில் ஒளியின் வேகத்தை அளவிடும் துல்லியமான கடிகாரங்களும் இல்லை. எனினும் மனம்தளராமல் கலீலியோ ஒளி, ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் என்கிற முடிவை உலகிற்கு அறிவித்தார். அதன்பின்பு, நீண்ட காலமாக ஒளியின் வேகத்தை அறிவியல் அறிஞர்களால் கண்டறிய முடியவில்லை. அதேவேளையில், அறிவியலும் ஆராய்ச்சியும் வானியல் சார்ந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். பால்வெளி மண்டலம், அண்டவெளியின் புதிர்கள் போன்றவை குறித்து ஆராய, கலீலியோ கண்டுபிடித்து இருந்த தொலைநோக்கி பேருதவியாக அமைந்தது. ஹைஜன் என்பார், கலீலியோவின் ஊசல் (Pendulum) கொண்டிருக்கும் இயற் பண்புகளின் அடிப்படையில், ஓரளவு துல்லியமான கடிகாரத்தை வடிவமைத்திருந்தார். இதுவரை, மலையுச்சியில் நின்றுகொண்டு விளக்கை வைத்து சோதனைகள் மேற்கொண்டிருந்ததில் ஒரு பெரிய இடர்ப்பாடு புலப்பட்டது. எவ்வளவு தொலைவான மலைகளில் நின்றுகொண்டு ஒளியின் வேகத்தை அளவிட்டாலும் இரண்டிற்குமிடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான தொலைவைக் காட்டிலும், இரு வெவ்வேறு கோள்களுக்கு இடையில் காணப்படும் தூரம் மிகுதி. எனவே, கோள்களுக்கிடையில் நடக்கும் ஒளிப்பயணத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உருவானது. வியாழனின் (Jupiter) கோளுக்குரிய நான்கு துணைக்கோள்கள் தோற்றுவிக்கும் கிரகணத்தைக் கண்டுபிடித்து இருந்த காலக்கட்டமாகும். கோள்களின் இயக்கம் வட்டப்பாதையில் அல்லாமல், நீள்வட்டப்பாதையில் நடக்கிறது என்பது உலகறிந்த உண்மையாகும். அப்படியிருக்கும்போது, வியாழனில் நிகழும் கிரகணம் வழக்கம்போல் நிகழ்ந்தாலும், பூமியின் அருகில் நிகழும்போது, அதை உடன் அறிய முடிகிறது. அது மிக அதிக தொலைவில் இருக்கும்போது, அங்கிருந்து வரும் ஒளியின் கால அளவு அதிகம். இதைக் கொண்டு ரோமர் என்னும் அறிவியலாளர், ஒளியின் வேகத்தை கண்டறிந்தார். அதன்வேகம் நொடிக்கு 50,000 மைல்கள் ஆகும். அதுபோல பூமியின் வட்டப்பாதையின் அளவு அப்போது துல்லியமாகக் கணக்கீடு செய்ய இயலாததால், ஒளியின் வேகத்தைச் சரியாகக் கணித்துக் கூறுவதில் சிக்கல்கள் இரூந்தன.எனினும், ஒளியியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதனால், அப்போதைய ஆராய்ச்சியாளர்கள் ஒளியின் வேகத்தைக் கணக்கிடுவதில் உள்ள முக்கியத்துவத்தை உணராதிருந்தனர். ஒளியின் இயல்புகள் குறித்துக் கண்டறிவதன் அவசியத்தை ஒத்திவைத்து, அண்டவெளியிலுள்ள விண்மீன் கூட்டத்திற்கிடையான தொலைவைக் கண்டறிவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். பிராட்லி என்பவர் வானியல் கணக்கீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகத்தை முடிந்த அளவு துல்லியமாக நொடிக்கு 1,76,000 மைல்கள் என்று அறிவித்தார். அதன்பிறகு, ஃபியாசோ என்பார் சக்கரம் சுழலும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகமானது நொடிக்கு 1,96,000 மைல்கள் பயணிக்கிறது என்றார். உண்மையில் ஒளியின் வேகம் ஃபியாசோவின் ஆய்வு முடிவைவிட 10,000 மைல்கள்/நொடி குறைவாகும். 1973 இல் ஈவன்சன் சாதாரண விளக்கொளிக்குப் பதிலாக, ஒளியின் வேகத்தை அளவிட லேசர் ஒளியைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பானது மிகத் துல்லியமாக அமைந்திருந்தது. இறுதியாக, 1983 இல் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 மீட்டர் என்பது பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில் நிரூபணமானது. வெற்றிடத்தின் ஒளியின் வேகமானது பரிமாணத்தின் இயற்பியல் காரணி என்பதால் அதன் மதிப்பு அலகு அமைப்பில் உள்ளது. பன்னாட்டு அலகு முறையில் மீட்டர் எனபது வெற்றிடத்தில் ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தொலைவு 1⁄299,792,458 /s ஆகும். இதன் அடிப்படையில் ஒளியின் வேகம் சரியாக 299,792,458 மீட்டர்/விநாடி. பொதுவாக வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c என்று குறிப்பிடப்படுகிறது , c எனில் லத்தீனில் celeritas (பொருள்: வேகம்) ஆகும் செவ்வியல் இயற்பியலில் ஒளி ஒரு மின்காந்த அலையாக புரிந்துகொள்ளப்பட்டது. செவ்விய நடத்தையானது மாக்சுவெல் சமன்பாட்டின் ("Maxwell equation") படி, c = 1/√εμ, இங்கு C என்பது வெற்றிடத்தில் பாயும் ஒளியின் வேகம், ε மின் மாறிலி மற்றம் μ காந்தமாறிலி ஆகும். தற்கால, குவாண்டம் இயற்பியலில் மின்காந்த புலமானது குவாண்டம் மின்னியக்கவியலாக வரையறுக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் படி ஒளி என்பது அடிப்படையில் கிளர்வுற்ற (குவாண்டா) மின்காந்தபுலமான போட்டான்கள் அல்லது ஒளியன்கள் (photons) ஆகும். மின்னியக்கவியலில் ஒளியன்கள் நிறையற்ற துகளாகயால், சிறப்புச்சார்ச்சின் படி ஒளியன்கள் வெற்றடத்தில் ஒளியின் வேகத்தில் பரவுகின்றன. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும்.ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும்.இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார். ஒளியின் திசைவேகத்தை விட அதிக திசைவேகத்திற்கு எந்த ஒரு பொருளையும் முடுக்குவிக்க இயலாது. ஒளியின் வேகத்தை ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாட்டின் மூலமே விளக்கினார். இதில் c என்பதே வெற்றிடத்தில் செல்லும் ஒளியின் வேகம் என ஐன்ஸ்டின் கூறினார். சுடப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டு மரக்கட்டையைத் துளைத்து வெளியேறும் போது தனது ஆற்றலை இழப்பதால் ஆரம்ப திசைவேகத்தை விட சற்று குறைவான வேகத்தில் செல்லும். அதே போல வெற்றிடத்தில் தனக்குரிய திசைவேகத்தில் செல்லும் ஒளி வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது திசைவேகத்தை இழக்கும். ஆனால் மறுபடியும் அந்த ஊடகத்திலிருந்து வெற்றிடத்திற்குச் செல்லும் போது தனது பழைய திசைவேகத்தை அடைகிறது. எந்த வித முடுக்கு விசையும் இல்லாமல் தனது பழைய திசைவேகத்தை திரும்பவும் அடைவது அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஒரு விந்தையான முரணாகும். அதே போல மற்றொரு முரண் என்னவெனில் ஓடும் தொடருந்து ஒன்றில் இருந்து சுடப்பட்ட குண்டின் வேகம் தொடருந்தின் வேகம் மற்றும் குண்டின் வேகத்தின் கூடுதலுக்குச் சமமாகும், ஆனால் ஓடும் தொடருந்திலிருந்து உமிழப்பட்ட ஒளியானது எப்போதுமே மாறிலிதான். அதாவது உமிழப்பட்ட மூலத்தின் இயக்கத்தைச் சார்ந்து அமையாது.ஒளியின் வேகம் பற்றிய ஐன்ஸ்டினின் கூற்று தவறு என அறிவியலாளர்கள் ஒரு சிலர் கூறுகின்ரனர்.அவர்கள் ஒளியின் வேகத்தை விட நியூட்ரினோ எனும் அணுத்துகள் வேகமாக செல்வதாக கூறுகின்றனர்.இதனை நிரூபிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. ஒளியின் திசைவேகத்தை அறிவதால் நமக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. அவற்றுள் சில: சிலுரியக் காலம் சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் ("Silurian") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது. கடலுயிர்கள் 60% வரை அழிவுற்ற ஓர்டோவிசிய-சிலுரிய அழிவு நிகழ்வுடன் சிலுரிய காலம் தொடங்குவதாக கொள்ளப்படுகிறது. மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் மாகரல் திருமாகரலீஸ்வரர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் வடகரையில் திருமாகரல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 16 கிமீ இல் இங்கு வரலாம். இக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இதன் உட்பிரகாரம் யானையின் பின் புற அமைப்பில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பதிகம் இயற்றப்பட்டுள்ள ஏழாவது தலம் ஆகும். கோவில் நகரம் காஞ்சியில் அமைந்துள்ள அழகிய கோவில். சிவ தலங்களிலேயே மிகவும் சிறப்பாக இங்கு உடும்பின் வால் வடிவில் சுவாமி அமைந்துள்ளார். இங்கு அர்த்தநாரியாக பைரவ சுவாமி உள்ளார். வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் முருகன். இராஜகோபுரத்தில் கோவில் வரலாறு அற்புத சிற்பங்களாய் பொறிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் உள்ளன. குறைகேள் அதிகாரி குறைகேள் அதிகாரி ("Ombudsman") என்பவர் ஒர் அரசு அல்லது அமைப்பு தொர்பாக மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி ஆவார். பொதுவாக மற்ற குறை நிவர்த்தி வழிகள் எவையும் பயனளிக்காவிட்டாலே இவர் கவனம் செலுத்துவார். அரசு அல்லது அமைப்பு இவரை நியமித்தாலும், இவர் அவற்றுன் பொது செயற்பாட்டுக்கு அப்பாலே இயங்குபவராகவே பார்க்கப்படுகிறார். தமிழர் தொழில்நுட்பம் தமிழர் தொழில்நுட்பம் என்பது தமிழர் பங்களித்து பயன்படுத்தும் பல் துறை சார் தொழில்நுட்பங்களைக் குறிக்கும். 16 ம் நூற்றாண்டு அறிவியல் புரட்சி வரைக்கும் தமிழர் தொழில்நுட்பம் ஏனைய நாகரிகங்களுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. வேளாண்மை, கட்டிடக்கலை, இசைக்கருவிகள், மருத்துவம், கப்பற்கலை, போர்க்கலை என பல துறைகளில் தமிழர் தொழில்நுட்பம் சிறந்து இருந்தது. தமிழர்களின் தொழில்நுட்ப வரலாற்றினை, தமிழ் இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் , தொல்லியல் ஆய்வுகள், நடப்பில் உள்ள கலைகள் உட்பட்ட பல்வேறு சான்றுகள் ஊடாக தொகுக்க முடியும். தமிழர்களின் பண்டைய உயர்ந்த தொழில்நுட்பத் திறனை கீழடி தொல்லியல் களம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் உட்பட்ட தொல்லிய ஆய்வுகளும், இலக்கியக் குறிப்புகளும் வலுவாக நிறுவியுள்ளன. கீழடி தொல்லியல் கள ஆய்வுகள் சங்க கால கட்டிடத்தொகுதிகள், சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், உறை கிணறுகள், நான்கு வகையான செங்கற்கள், பல்வேறு வகை மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், பல்வகைத் அரிய தொல்பொருட்கள் தமிழர்களின் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த ஒரு நகர வாழ்கைக்கு உதவியை நிறுவியுள்ளன. இடைக் காலத்தில் நிலவிய சோழப் பேரரசு, கட்டிடக்கலை, சிற்பக்கலை, கப்பற்கலை, புவியியல் என்று பல்வேறு துறைகளில் ஒரு உயரிய இடத்தை எட்டியது. நிப்ட்டி நிப்ட்டி (அ) எஸ் & பி சி.என்.எக்ஸ் நிப்ட்டி என்பது தேசிய பங்கு சந்தையின் முதன்மை பங்கு சந்தை குறியீடு ஆகும்.நிப்ட்டி தேசிய பங்கு சந்தையின் 50 பெரும் நிறுவனங்களின் பங்கு விலையை வைத்து கணிகப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். சரியாக செயல்படாத நிறுவனங்கள் நீக்கப்பட்டு உறுதியான பங்குகளை உடைய நிறுவனங்கள் சேர்க்கப்படும், ஆனால் மாற்றங்கள் அடிக்கடி நிகழாது. IISL பங்கு குறியீடுகள் இந்திய தேசிய பங்கு சந்தை தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India) இந்தியாவின் இரு பெரும் பங்குச்சந்தைகளுள் ஒன்றாகும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சந்தை 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மொத்தச் சந்தை மதிப்பீடு (market capitalization) அடிப்படையில், இதுவே ஆசியாவின் இரண்டாவது பங்குச் சந்தை. மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது. தேசியப் பங்குச் சந்தை 1993 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவில், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு மூலம் பங்கு வர்த்தகம் செய்வதைப் பரவலாக்கியது, இந்த பங்குச் சந்தையே. இந்தியாவில் பொருளாதாரப் பரிமாற்றங்களை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் சட்டக் கட்டுப்பாட்டில் இது இருக்கின்றது. இந்தச் சந்தையின் பங்குதாரர்கள் ஐடிபிஐ, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் ஆகும் (தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்). இவர்களைத் தவிரக் 'கோல்ட்மான் சாக்ஸ்' நிறுவனம், நியூயார்க் பங்குச் சந்தை போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தேசியப் பங்குச்சந்தையில் பங்குபெற்று உள்ளன. சந்தையின் செம்மையான செயல்பாட்டிற்காகச் சந்தையின் நிர்வாகத்திற்குச் சுதந்திரமாகச் செயல்படும்உரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேசியப் பங்குச்சந்தையில் 1500 க்கும் மேற்பட்ட பங்குகளின் வர்த்தகம் நடைபெறுகிறது. சந்தையின் தலைமைச் செயலகம், மும்பை நகரில் உள்ளது. செயற்கைக் கோள் தொலைத் தொடர்பைப் பயன்படுத்திக் கணினி வழியாக வர்த்தகம் நடைபெறுகிறது. நேரடிப் பங்கு வர்த்தகத்தைத் தவிர உருவாக்கப்பட்ட நிதி ஒப்பந்தங்கள் (financial derivatives – futures and options), பரஸ்பர நிதிகள் (சமநலநிதிகள்), கடன் ஒப்பந்தங்கள் (bonds), வட்டிவிகித ஒப்பந்தங்கள் (interest rate derivatives) ,அந்நியச் செலாவணி ஒப்பந்தங்கள் (foreign currency derivatives) ஆகியவையும் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. தேசியப் பங்குச் சந்தையில் பல சந்தைக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிஃப்டி 50 என்ற குறியீடே மிக முக்கியமானது, பிரபலமானது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களின் பங்கு விலையைக் கொண்டு நிறையிடப்பட்ட சராசரி (weighted average) முறை மூலம் இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்த குறியீட்டின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு மொத்தப் பங்குச்சந்தை செல்லும் போக்கை அறியலாம். 1994 ஆம் ஆண்டு 1000 புள்ளிகள் என்ற தொடக்க அடிப்படையில் ஆரம்பித்த நிஃப்டி குறியீடு தற்போது (2013 ஆம் ஆண்டில்) 6000 புள்ளிகளாக உள்ளது. இதனைத் தவிர 'நிஃப்டி ஜூனியர்', 'நிஃப்டி 500', 'மிட்கேப் குறியீடு' எனப் பிற குறியீடுகளும் உள்ளன. தேசியப் பங்குச் சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயற்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படாது. இப்பங்குச் சந்தையில் பொதுமக்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய இயலாது. சந்தையில் உறுப்பினர்களாக உள்ள தரகர்களிடம் கணக்குத் தொடங்கி அவர்கள் மூலமாகவே வர்த்தகம் செய்யலாம். அவ்வாறு வர்த்தகம் செய்ய விரும்பும் ஒருவர் – அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், நிரந்தர வரிக்கணக்கு எண் (PAN- Permanent Account Number) உடையவராகவும் இருக்க வேண்டும். வேகம் வேகம் அல்லது கதி ("speed") என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் (t) சென்ற தூரம் (d) என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் அலகில் அளக்கப்படும் ஒரு திசையிலிக் கணியம் (scalar quantity) ஆகும். கதிக்கு இணையான திசையன் (vector) கணியம் திசைவேகம் ("velocity") ஆகும். வேகமும், திசைவேகமும் ஒரே அலகில் அளக்கப்பட்டாலும், திசைவேகத்துக்கு உள்ள திசை என்னும் கூறு வேகத்துக்கு இல்லை. எனவே கதி அல்லது வேகம் என்பது திசைவேகத்தின் எண்மதிப்பு எனலாம். கணிதக் குறியீட்டில் இது பின்வருமாறு எழுதப்படும். இங்கே "v" என்பது வேகத்தைக் குறிக்கும். ஆற்றல் அல்லது தகவல் பயணிக்கக்கூடிய மிக உயர்ந்த வேகம் சிறப்புச்சார்புக்கோட்பாட்டின் படி வெற்றிடத்தில் ஒளியின் வேகமாகிய c = 299,792,458 மீற்றர்/செக்கன், இது அண்ணளவில் ஒரு மணித்தியாலத்திற்கு 1079 மில்லியன் கிலோமீற்றர்கள் (671,000,000 mph) ஆகும். ஆனால் சடப்பொருட்கள் அவ்வேகத்தை அடைய முடியாது ஏனெனில் அவ்வேகத்தை அடைய முடிவிலி அளவிலான ஆற்றல் தேவைப்படும். தமிழில் வேகம் என்பது பாம்புகடித்தபின், பாம்பின் விடம் இரத்தத்தில் கலந்து உடம்பிற் பரவும் ஒரு ஓட்டத்தைக் குறிக்கவும் பயன்பட்டது. இத்தாலிய இயற்பியலாளரான கலிலியோ கலிலி முதன்முதலில் வேகத்தை கணித்தமைக்காக கூறப்படுகிறார், அவர் அடைத்த தூரத்தை அதற்கு எடுத்த நேரத்தை கருத்தில் கொண்டதன் மூலம் வேகத்தை அளந்தார், கலிலியோ வேகத்தை ஓரலகு நேரத்தில் அடைத்த தூரம் என்பதாக வரையறுத்தார். சமன்பாட்டு வடிவில் இங்கு "v" வேகம், "d" தூரம், "t" நேரம். கணிதக்குறியீடுகளில் வேகம் "v" திசைவேகம் v இன் பருமனாக வரையறுக்கப்படுகிறது, அதாவது r எனும் அமைவினது நேரம் குறித்தான வகைக்கொழு ஆகும்: "s" என்பது நேரம் "t" வரை பயணம் செய்த பாதையின் நீளமாக இருப்பின் வேகம் என்பது "s" இன் நேரங்குறித்த வகைக்கொழுவிற்கு சமனாக இருக்கும்: ஓர் குறித்த கணத்திலான பொருளின் வேகம் கணநேர வேகம் எனப்படும், அதாவது ஓர் காரின் வேகத்தை விரைவுமானியை கொண்டு அளவிடுவதன் மூலம் யாதேனும் கணநேரத்திலான வண்டியின் வேகத்தை அளவிடலாம், இது அவ்வண்டியின் கணநேர வேகம் ஆகும். ஓர் குறித்த நேர இடைவெளியில் பயணம் செய்த தூரத்தை அந்நேர இடைவெளியால் வகுக்கும் போது பெறப்படுவது சராசரி வேகம் ஆகும். உதாரணமாக, ஒரு வண்டி 1 மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது எனில் அதன் சராசரி வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.அதே வண்டி 4 மணி நேரம் பயணம் செய்து 320 கிலோமீட்டர் தூரம் கடந்தால் அதன் சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் ஆகும். இச்சமன்பாட்டை பயன்படுத்தி சராசரி வேகத்தை கணக்கிடலாம்.அதேபோல் சராசரி வேகம் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்கலாம். வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் நேர்கோட்டு வேகம் தொடலி வேகம் எனப்படும், ஏனெனில் பொருளின் இயக்கத்திசை எப்போதும் வட்டத்தின் தொடலிவழியே இருக்கும். கோணவேகம் எனப்படுவது ஓரலகு நேரத்தில் அச்சுப்பற்றி சுழன்ற கோணம் ஆகும், தொடலி வேகமும் கோணவேகமும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை அச்சிலிருந்து ஓர் குறித்த தூரத்தில் தொடலி வேகம் கோணவேகத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், அதேவேளை தொடலி வேகத்தில் ஏற்படும் அதிகரிப்பானது அச்சிலிருந்தான தூரத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், எனவே சமன்பாட்டு வடிவில் இங்கு "v" தொடலி வேகம், ω (ஒமெகா) கோணவேகம். முறையான அலகுகளைக் கொண்டு மேலுள்ள சமன்பாட்டை எழுதினால் பின்வரும் வடிவத்திற்கு ஒருங்கும்: சக்கரம், வட்டு போன்ற வட்டவடிவ பொருட்களின் பகுதிகளிலும் ω ஒன்றாக இருக்கும் போது தொடுவரை வேகம் R ஐ பொருத்து மாறும்.(இதுவே கிரகங்களின் சுழற்சி வேக மாறுபாட்டிற்கு காரணம் ஆகும்). வேகத்தின் அலகுகள்: திசையின் அலகு வெக்டர் அலகு ஆகும். ஏனெனில் வேகத்திற்கு திசை உண்டு. Vehicles often have a speedometer to measure the speed they are moving. திணிவு பொருண்மை அல்லது திணிவு (தமிழக வழக்கு: நிறை, "Mass") என்பது, இயற்பியலில் உள்ள அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது ஒரு பண்டத்தில் எவ்வளவு பொருள் அளவு இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, மரபார்ந்த விசையியலுக்கும் அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஓர் அடிப்படைக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலில் பொருண்மைக்குப் பல வரையறைகள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், பொருண்மை பற்றிய செவ்வியற்கால எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாப்பொருண்மை என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை. அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, எடை (weight) ஆகிய இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால், இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருள் ஆட்படும் புவியீர்ப்பு விசையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இதனால், இந்நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு விசையில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பாகவும், விண்வெளி, வேறு கோள்கள் போன்ற வான்பொருளின் மேற்பரப்புசார் இடங்களிலும், திணிவுக்கும் எடைக்கும் உள்ள வேறுபாடு முதன்மை பெறுகின்றது. நியூட்டனியல் இயற்பியலில், பொருண்மை ஒருளில் உள்ள பொருண்மத்தின் அளவாகப் பொதுமைப்படுத்தப்படுகிறது. என்றாலும், பொருளின் மிக உயர்ந்த வேகங்களில், சிறப்புச் சார்புக் கோட்பாடு பொருளின் இயக்க ஆற்றல் பொருண்மையின் கணிசமான கூடுதல் வாயிலாக அமைவதாக்க் கூறுகிறது. எனவே, நிலையாகவுள்ள பொருளின் பொருண்மை அதற்குச் சமனான ஆற்றல் அளவைப் பெற்றுள்ளது. மேலும் ஆற்றலின் அனைத்து வடிவங்களும் முடுக்கத்தை எதிர்க்கின்றன; எனவே ஈர்ப்பு விசையைப் பெற்றுள்ளன. நிகழ்கால இயற்பியலில், வரையறுக்கவியலாமையால், பொருண்மம் ஓர் அடிப்படை கருத்துப்படிமமாக்க் கொள்ளப்படுவதில்லை. பொருண்மையை அளக்க பல தெளிவான நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம். சில கோட்பாட்டாளர்கள் இவை ஒன்றையொன்று சாரதனவாகவும் கருதுகின்றனர். நடப்பு செய்முறைகள், பின்வரும் எந்தமுறையில் பொருண்மையை அளந்தாலும் முடிவுகள் மாறுவதில்லையென நிறுவியுள்ளன: ஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான "m" பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் "F" எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் "a" "F"/"m" ஆல் தரப்படும்.ஒரு பொருளின் பொருண்மை ஈர்ப்புப் புலத்தை உருவாக்கும் அல்லது அதனால் விளைவுக்குள்ளாகும் அளவையும் கூடத் தீர்மானிக்கிறது. "m" பொருண்மையுள்ள முதல் பொருளில் இருந்து, "m" பொருண்மையுள்ள இரண்டாம் பொருள் "r" (பொருண்மை மையத்தில் இருந்து பொருண்மை மையத்துக்கு இடையிலான) தொலைவில் வைக்கப்பட்டால் இவற்றில் ஒவ்வொரு பொருளும் ஈர்ப்பு விசைக்கு ஆட்படும். இங்கு, "G" = }} ஆகும். இது "பொது ஈர்ப்பு மாறிலி" எனப்படுகிறது. இது சில வேளைகளில் ஈர்ப்புப் பொருண்மை எனப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட செய்முறைகள் உறழ்வுப் பொருண்மையும் ஈர்ப்புப் பொருண்மையும் முற்றொருமித்தன என்பதை நிறுவியுள்ளன; 1915 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோக்கீடு பொதுச் சார்புக் கோட்பாட்டின் சமன்மை நெறிமுறையில் அடிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது. அனைத்துலக முறை அலகுகள் (SI) இல் பொருண்மை அலகு கிலோகிராம் (கிகி - kg) ஆகும். ஒரு கிலோகிராம் என்பது 1000 கிராம் (g) ஆகும், கிலோகிராம் 1795 இல் முதன்முதலாக நீரின் ஒரு பருடெசிமீட்டர் (மீ) பருமன் வாய்ந்த பனிக்கட்டி ஒன்றின் உருகுநிலையில் அமையும் பொருண்மையாக வரையறுக்கப்பட்டது. பிறகு, 1889 இல் கிலோகிராம் பன்னாட்டு முன்வகைமைக் கிலோகிராமின் பொருண்மையாக மீள்வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறை மீட்டரையோ, நீரின் இயல்புகளையோ சாராத ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில், பிளாங்கு மாறிலியால் (:en:Planck constant) வரையறுக்கும் முன்மொழிவு உட்பட கிலோகிராமை மீள வரையறுப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளன. இது தவிர, பொருண்மைக்கு பன்னாட்டுச் செந்தர முறை ஏற்கும் வேறு அலகுகளும் உண்டு. பன்னாட்டுச் செந்தர (SI) அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொறுத்துப் பின்வரும் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன. சார்புக் கோட்பாட்டு அடிப்படையில் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக ஆற்றலுக்கான அலகு எதையும் பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, eV ஆற்றல் அலகை பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்துவது உண்டு. இது ஏறத்தாழ 1.783 × 10 கிலோகிராமிற்குச் சமமாகும். இயற்பியலில், கருத்தியலாக, ஏழு வேறுபட்ட பொருண்மையின் கூறுபாடுகளால் தெளிவாகப் பிரித்து அதை இயற்பியல் குறிமானங்களால் சுட்டலாம்: இந்த வகை ஏழு மதிப்புகளும் விகித சமத்திலோ அல்லது சமமாகவோ அமைவதாக ஒவ்வொரு செய்முறையும் நிறுவியுள்ளது. இந்த விகித சமம் பொருண்மை குறித்த நுண்ணிலைக் கருத்துப்படிமத்துக்கு இட்டுச் செல்கிறது. எனவே பொருண்மையை அளக்க அல்லது நடைமுறையில் வரையறுக்க பின்வரும் பல வழிமுறைகள் உள்ளன: ஒரு பொருளில் உள்ள பொருண்ம அளவே அப்பொருளின் பொருண்மை எனப்படும். ஒரு பொருளில் உள்ள பொருண்மத்தின் மீது செயற்படும் புவியீர்ப்புவிசை எடை எனப்படும். சினாய் தீபகற்பம் சினாய் தீபகற்பம் ("Sinai Peninsula" அல்லது சினாய்) என்பது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பம் ஆகும். இது வடக்கே மத்தியதரைக் கடலுக்கும், தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் ஒரு நிலப் பாலமாக உள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 60,000 கிமீ². ஓர்டோவிசியக் காலம் ஓர்டோவிசியம் அல்லது ஓர்டோவிசியக் காலம் ("Ordovician") என்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 2வது காலமான ஓர்டோவிசியக் காலம் கேம்பிரியக் காலத்தின் முடிவிலிருந்து சிலுரியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது.ஓர்டோவிசியக் காலம் வேல்சிய பழங்குடியினரான ஓர்டோவின்சியர்கள் நினைவாக இடப்பட்டது. அடம் செட்ச்விக், றொட்ரிக் முரிச்சன் என்ற இரு நிலவியலாளர்களது மாணாக்கர்கள் வடக்கு வேல்சில் உள்ள ஒரு பாறைப் படிவுகளை ஒரு சாரார் கேம்பிரியக் காலத்திற்கும் ஒரு சாரார் சிலுரியக் காலத்திற்கும் உரியதாக கருதி தர்கத்தில் ஈடுபட்டிருநதனர். இத்தர்க்கத்தை நிவர்த்தி செய்யும்வகையில் இப்பெயர் 1879 ஆம் ஆண்டு சார்ல்ஸ் லெப்வேர்த் என்ற இங்கிலாந்து நிலவியலாளரால் இடப்பட்டது. சர்ச்சைக்குரிய பாறைப்படிவுகளில் காணப்ப்ட்ட விலங்குகளின் தொல்லுயிர் எச்சங்களை அவதானித்த லெப்வேர்த் அவை கேம்பிரியக் காலத்துக்கோ அல்லது சிலுரியக் காலத்துக்கோ உரியவை அல்ல என்பதை கணிப்பிட்டு அவற்றைத் தனியான ஒரு காலத்தில் இட்டார். தமிழர் அறிவியல் தமிழர் அறிவியல் என்பது பாரம்பரியமாக தமிழர் விருத்தி செய்த, பயன்படுத்திய, அறிவியல் நோக்கில் விளக்கப்படக்கூடிய அறிவையும், தற்காலத்தில் தமிழர் அறிவியலுக்கு வழங்கும் பங்களிப்பையும் குறிக்கும். மொழியியல், மருத்துவம், கட்டிடக்கலை, வேளாண்மை, உயிரியல், கணிதம், வானியல் என பல துறைகளில் தமிழர் அறிவியல் உண்டு. பல்வேறு தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த தமிழர் அதற்கான அடிப்படை அறிவியலையும் கொண்டிருந்தனர். தமிழர் மரபில் ஒன்றுக்கு இலக்கணம் வகுத்து விபரித்து பயன்படுத்தும் வழக்கம் உண்டு. இது அறிவியல் முறைக்கு ஓரளவு ஒப்பிடத்தக்கது. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் தமிழர் அறிவியல் ஆக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. "முதன்மைக் கட்டுரை: தமிழர் இயற்பியல்" "முதன்மைக் கட்டுரை: தமிழர் தாவரவியல், தமிழர் விலங்கியல்" "முதன்மைக் கட்டுரை: சித்த மருத்துவம்" "முதன்மைக் கட்டுரை: தமிழர் வேதியியல் "முதன்மைக் கட்டுரை: தமிழர் வானியல்" "முதன்மைக் கட்டுரை: தமிழ்க் கணிதம்" "முதன்மைக் கட்டுரை: தமிழர் அளவியல்", இதனையும் பார்க்க: பண்டைத் தமிழர் அளவை முறைகள் 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பெப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. NOC = National Olympic Committee துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. பனி உந்தி பனி உந்தி என்பது பனித்தூவி அல்லது பனி மீது உந்தி செல்லும் வாகனம் ஆகும். இவற்றுக்கு சிற்களுடன் பனியில் சறுக்கி செல்லும் வண்ணம் தட்டையான கட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். இது உருசியா, கனடா போன்ற நாடுகளில் பெரிதும் பயன்படுகிறது. பனித்தூவி காலணி பனித்தூவி காலணி என்பது பனித்தூவிகள் மீது நடப்பதற்காக அணியப்படும் காலணி ஆகும். வலை போன்ற பின்னல் கொண்ட, பெரிய பரப்பளவு உடைய இக்காலணிகள் கால்கள் பனித்தூவிக்குள் புதையாமல் இருக்கப் பயன்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க பழங்குடிகள் இவற்றை முதலில் பரவலாகப் பயன்படுத்தினர். பனி மீன்பிடிப்பு பனி மீன்பிடிப்பு என்பது மேலே உறைந்த பனியும் கீழே நீரும் உள்ள இடத்தில் மீன்பிடித்தல் ஆகும். உறைபனியில் துளை போட்டு அந்த ஓட்டையில் தூண்டில் போடுவர் அல்லது ஈட்டி எறிவர். உறைபனி மெல்லியதாக இருந்தால், மீன்பிடிப்பவர்கள் குளிர் தண்ணீருக்குள் விழும் ஆபத்து உள்ளது, முகம்மது நசீது முகம்மது நசீது ("Mohamed Nasheed", திவெயி: : މުހައްމަދު ނަޝީދު, பிறப்பு: 1967 மே 17), மாலைத்தீவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவரை அன்னி என அழைக்கும் மக்கள், அக்டோபர் 2008இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்து மாலைதீவுகளின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். முகம்மது நசீதுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களையும் காவற்றுறையினர் சிலரின் கிளர்ச்சிகளையும் அடுத்து 2012 பெப்பிரவரி 7 அன்று பதவி விலகினார். மாலத்தீவின் முன்னாள் அதிபரும் இந்தியாவிற்கு நெருக்கமானவருமான இவர் 2012ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோது தீவிரவாதச்செயல்களுக்கு சாதகமாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு 2015 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். கேம்பிரியக் காலம் தொல்லுயிருழியின் தொன்மையான காலம். 640 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி 70 மில்லியன் ஆண்டு வரை. விலங்கின் புதைபடிவங்கள் அதிகமாக கிடைத்தது. புவி பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களை, நிலவடிவியல்,புவி பரவல் தகவல்களை அறிவதற்கு இக்காலப் புதை படிவங்கள் பேருதவியானது. ஆடம் சேட்ஜிவிக் 1835 இக்காலக் கட்டத்திற்கு கேம்பிரியக் காலம் எனப் பெயரிட்டார். இங்கிலாந்தின் வடக்கு வேலஸ் பாறை அமைப்புகளை கொண்டு இடப்பட்டது. சிப்பிகள், நத்தைகள் வாழ்ந்தன. நத்தைகளின் புதை படிவங்கள் கேம்பிரியக் காலத்து பாறைகளில் மிகுதியாக உள்ளன. இரண்டு வகை முள்தோலிகள், கடல் அல்லிகள், கைக்காலிகள், பஞ்சுயிரிகள், பவளயுயிரிகள், பாலவகைப் புழுக்கள் வாழ்ந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளது. மூன்று வகைகளாக பிரிக்கலாம். நிலவழிப், கரையோரச் சுண்ணாம்புச், ஆழ்கடல். நிலவழிப் படிவுகள், மணல், வண்டல், களியால் உண்டானவை. 300 கி.மி. அகலம், பலநூறு கி.மி. நீளம் கொண்ட சுண்ணாம்புப் பாறை, டோலமைட் பாறைகளாகவும், ஆழ்கடல் படிவுகள் கலிப்பாறைகளாகவும் உள்ளது. இரண்டு கண்டங்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோசீனா, நெருங்கிய நிலப்பரப்பு. அருகில் தென் அமெரிக்காவும் இருந்தது. அனைத்தும் பேஞ்சியா பெருங்கண்டம் என்று பெயர். ஆப்பிரிக்கா, இந்தியாவின் தென் பகுதி, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய நெருக்கமான பகுதிக்கு கொண்டுவானாப் பெருங்கண்டம் என்று பெயர். ஆழமற்ற பெருங்கடல் இருந்தது. கராத்தே கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ச்சின் என்னும் வகுப்பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது "டி" ("ti") அல்லது "டெ" ("te") என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட்டோவினால், மிங் வம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, சீனாவிலிருந்து வந்தவர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் தீவுகளுக்கு அறிமுகமானது. சிறப்பாக இவை சீனாவின் ஃபுஜியன் மாகாணத்திலிருந்தே வந்தன. 1392 ஆம் ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண்டைக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக்கினாவாவுக்கு வந்தனர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற்பட்ட அரசியல் மையப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஆயுதங்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாயின. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்காக அடிபந்தாட்டம், மென்பந்தாட்டம், சறுக்குப் பலகை, நீர்ச்சறுக்கு மற்றும் விளையாட்டு மலையேற்றம் ஏற்றம் ஆகியவற்றோடு சேர்த்து பட்டியலிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிஷனின் நிறைவேற்றுக் குழு 2020 ஒலிம்பிக் போட்டியில் மேற்கண்ட ஐந்து விளையாட்டுக்களையும் (அடிபந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் இரண்டையும் ஒரே ஒரு விளையாட்டாகக் கணக்கில் சேர்த்து) சேர்த்துக்கொள்வதை ஆதரிப்பதாக அறிவித்தது. சப்பானிய வெளியுறவு அமைச்சகத்திக் ஆதரவில் செயல்பட்டு வரும் "வெப் சப்பான்" என்ற இணையதளம் உலகெங்கிலும் 50 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக கூறுகிறது. 100 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக உலக கராத்தே சம்மேளனம் அறிவித்துள்ளது. ர்யூக்யூயன் சமுதாயத்தின் பெச்சின் வகுப்பியரிடையே "“டெ”" (ஒக்கினவன்:"டி") என்ற பெயரில் கராத்தே முதன் முதலாகத் தோன்றியது. 1372 ஆம் ஆண்டில் சீனாவின் மிங் வம்சத்தில், சூசான் மன்னர் சத்துடன் வர்த்தக உறவுகள் நிறுவப்பட்ட பிறகு, சில சீன தற்காப்புக் கலை வடிவங்கள் ர்யூக்யூயன் தீவில் சீனாவிலிருந்து வந்த பார்வையாளர்களால் குறிப்பாக புஜியான் மாகாணத்திலிருந்து வந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன குடும்பங்களின் ஒரு பெரிய குழு 1392 ஆம் ஆண்டில் ஒகினவாவிற்கு கலாச்சார பரிமாற்றத்திற்காக சென்றது. அவர்கள் குமுமுரா சமூகத்தை ஸ்தாபித்து, பல்வேறு சீன கலை மற்றும் அறிவியல் அறிவை பகிர்ந்து கொண்டனர் அதில் சீன தற்காப்பு கலைகளும் அடங்கியிருந்தது. 1429 ஆம் ஆண்டில் ஷோ ஹாஷி மன்னரால் ஒக்கினாவா அரசியல் மையமாக மாறிய பின்னர் 1477 ல் ஷோ ஷின் மன்னரால் ஆயதங்கள் தடைசெய்யப்பட்டன. பிறகு 1609 ஆம் ஆண்டில் ஷிமாசு வம்சத்தின் படையெடுப்புக்குப் பின்னர் ஒகினாவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இவை ஒகினாவாவில் நிராயுதபாணி தற்காப்பு கலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான காரணிகளும் ஆகும். "“டெ”" யில் சில சாதாரண பாணிகள் இருந்தாலும் பல பயிற்சியாளர்கள் அவர்களது சொந்த முறைகள் மூலம் கற்பித்தனர். மோட்டோபு குடும்பத்தின் செய்கிச்சி யெஹாராவால் நடத்தப்பட்ட மோட்டோபு-ரியூ பள்ளி இன்றைய நடைமுறையில் உள்ள உதாரணம் ஆகும். கராத்தேயின் ஆரம்பகால வடிவங்கள் பெரும்பாலும் ஷூரி-டெ, நாஹா-டெ, மற்றும் டோமாரி-டெ என்று அழைக்கப்பட்டன. அவை உருவான நகரங்களின் பெயரால் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியும் அதன் ஆசிரியர்களும் குறிப்பிட்ட காடா, நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர், இது அவர்களின் உள்ளூர் வடிவங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. ஒகினாவன் உயர் வகுப்புகளின் உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் மற்றும் நடைமுறைக் கற்கைகளை படிப்பதற்காக சீனாவுக்கு அடிக்கடி அனுப்பப்பட்டனர். ஒக்கினாவன் தற்காப்பு கலையுடன் ஆயுதமில்லா வெறுங்கை சீன தற்காப்பு கலையான குங்-பூவை இணைப்பதன் காரணமாக ஏறத்தாழ ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு அதிகரித்தன. ஃபுஜியன் வெள்ளைக் கொக்கு, தாய் சூ குவான், ஐந்து முன்னோர்கள் மற்றும் கங்கோரூ-கவான் (ஹார்ட் மென்ட் ஃபிஸ்ட்; ஜப்பானிய மொழியில் "கோஜூகன்" உச்சரிக்கப்படுகிறது) போன்ற புஜியன் தற்காப்புக் கலைகளில் காணப்படும் பாரம்பரிய கராத்தே வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. சாய், டன்ஃபா மற்றும் நஞ்சகு போன்ற பல ஒகினான் ஆயுதங்கள் தென்கிழக்கு ஆசியாவிலும் அதனைச் சுற்றிலும் தோன்றின. “கராத்தேயில் போட்டிகள் ஏதுமில்லை” என்பது நவீன கராத்தேயின் தந்தை என அழைக்கப்படும் கிச்சின் ஃபனாகோஷி (船 越 義 珍) என்பவரது கூற்றாகும். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இரும்புக் கொளாவி என்ற பொருள்படும் “"குமிட்டெ"” கராத்தே பயிற்சியின் பகுதியாக இல்லை. கராத்தே பாணி அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் சிலநேரங்களில் பாணியற்ற குறிப்பிட்ட விளையாட்டு கராத்தே அமைப்புகள் அல்லது கூட்டமைப்புகளில் ஒத்துழைக்கின்றன. AAKF / ITKF, AOK, TKL, AKA, WKF, NWUKO, WUKF மற்றும் WKC உலக கராத்தே சம்மேளனம் (WKF) என்பது மிகப் பெரிய கராத்தே விளையாட்டு அமைப்பு ஆகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே போட்டிக்கு பொறுப்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பல்வேறு பாணி கராத்தே விளையாட்டுகளுக்கும் பொதுவான விதிகளை மேம்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான கராத்தே போட்டிகளை அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் தேசிய கராத்தே கமிட்டிகள் ஒருங்கிணைக்கின்றன. உலக கராத்தே சம்மேளனத்திக் கராத்தே போட்டிகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன: அவை "ஸ்பேரியிங்" (kumite) மற்றும் வடிவங்கள் (kata) கட்டா ஆகும். போட்டியாளர்கள் தனிநபர்களாகவோ அல்லது ஒரு குழுவின் பகுதியாகவோ பங்கேற்கலாம். கட்டா மற்றும் கொபுடுக்கான மதிப்பீடு ஒரு நீதிபதிகள் குழுவால் செய்யப்படுகிறது, அதேசமயத்தில் "ஸ்பேரியிங்" பிரிவின் மதிப்பீடு பக்கவாட்டில் உதவி நடுவர்கள் உதவியால் தலைமை நடுவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. "ஸ்பேரியிங்" போட்டியானது எடை, வயது, பாலியம் மற்றும் அனுபவம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உலக கராத்தே கம்மேளனமான WKF மட்டுமே ஒரு நாட்டிலிருந்து ஒரு தேசிய அமைப்பு / கூட்டமைப்பு மட்டும் உறுப்பினர்களை தனது அமைப்பில் சேர அனுமதிக்கிறது. உலக கராத்தே கூட்டமைப்பு ஐக்கிமானது (WUKF) பல்வேறு பாணிகள் மற்றும் கூட்டமைப்புகள் அவற்றின் பாணியோ அல்லது அளவையோ சமரசம் செய்யாமல் தனது அமைப்பில் இணைத்துக்கொள்கின்றன. WUKF ஒரு நாட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டமைப்பு அல்லது சங்கத்தை ஏற்றுக்கொள்கிறது. விளையாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு போட்டி விதிமுறைகளை பயன்படுத்துகின்றன. WKF, WUKO, IASK மற்றும் WKC ஆகியவற்றால் பகுதி தொடல் (light contact) விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. முழு தொடர்பு கராத்தே விதிகள். கயோகுஷிங்கை, சீடோக்கிகன் மற்றும் பிற அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன. போகு குமிட்டே (Bogu kumite) (இலக்குகளை முழுத் தொடர்பு மூலம் பாதுகாத்தல்) போன்ற விதிகளை உலக கோசிக்கெ கராத்தே-டோ கூட்டமைப்பால் பயன்படுத்தப்படுகின்றன. ஷிங்கரேடேட்டோ கூட்டமைப்பால் குத்துச்சண்டை கையுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில (அமெரிக்கா) குத்துச்சண்டை ஆணையம் போன்ற மாநில விளையாட்டு அமைப்பின் அதிகார வரம்புக்குள் விதிகள் மாறுபட்டு இருக்கலாம். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கராத்தே சர்வதேச விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு 2020 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பட இருக்கின்றன. பனி வளைதடியாட்டம் பனி வளைதடியாட்டம் என்பது உறைபனி அரங்கில் ஆடப்படும் வளைதடிப் பந்தாட்டத்தை ஒத்த ஒரு குழு விளையாட்டு ஆகும். ஒவ்வொரு குழுவில் ஒரு நேரத்தில் 5 வீரர்கள் விளையாடுவர். இவர்களில் ஒருவர் பந்துக் காப்பாளர் (Goal Keeper) ஆவர். வளைதடிப் பந்தாட்டத்தில் பந்து போன்று, இதில் ஒரு தட்டையான சில்லு பயன்படுத்தப்படுகிறது. வேகமாக பனிச்சறுக்கிய வண்ணம் சில்லை வலைப் பெட்டியில் போட முனைய வேணும். இந்த விளையாட்டு கனடா மொன்றியாலில் 1875 அளவில் முதலில் விளையாடப்பட்டது. கனடாவின் பண்பாட்டில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கனடா வாத்து கனடா வாத்து (Canada Goose, "Branta canadensis") என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும். மேப்பிள் ஏசர் அல்லது மேப்பிள் என்பது மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.128 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளன. இவ்வினங்களுக்குப் பிறப்பிடமாக ஆசியாவைக் கருதுகின்றனர். மேப்பிள் மரங்கள் ஆசியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. புவியின் தென்பாதி கோளத்தில் 40 மீ உயரம் வளரும் ஏசர் இலாரினம் (Acer laurinum) என்னும் ஒரேயொரு இனம் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக மேப்பிள் மரங்கள் 10-40 மீ உயரம் வளரக்கூடியவை மேப்பிள் மரத்தில் ஒருவகையான இனிப்புநீர் சுரக்கின்றது. இது பெரும்பாலும் பிப்பிரவரி, மார்ச்சு மாதங்களில் நிகழும். இதனை அடிமரத்தில் துளையிட்டு வடியச்செய்து காய்ச்சி ஓர் இனிப்பு குடிநீர்மமாகப் பயன்படுத்துகின்றனர். மேபிள் மரம் பல வகை தளபாடங்கள் செய்ய பயன்படுகிறது. மேபிள் இலை கனடா நாட்டின் கொடிச் சின்னமாகும். ரிம் கொற்ரன்ஸ் ரிம் கொற்ரன்ஸ் என்பது ஒரு கோப்பி - டொனட் வேக உணவக நிறுவனம். இந்த நிறுவனம் 3000 மேற்பட்ட கடைகளைக் கொண்டது. இந்த நிறுவனம் ஹமில்ரன் ஒன்ராறியோவில் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 2007 கனடாவில் 2733 கடைகளைக் கொண்டு கனடாவின் வேக உணவு சந்தையில் பெரிய இடத்தை வைத்திருக்கிறது. இங்கு விக்கப்படம் கோப்பி, டொனட்ஸ், ரிம்பிற்ஸ் ஆகியவை பலரால் விரும்பப்படுகிறது. கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் சிபிசி என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொருள்படும். இது ஆங்கில சுருக்கமான CBC (Canadian Broadcasting Corporation) என்பதன் தமிழாக்கம் ஆகும். இதற்கு கனடிய அரசு நிதி ஆதரவு தருகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல ஊடக தளங்களில் இது இயங்குகிறது. டூனி ரூனி என்பது கனடாவின் இரண்டு டொலர் நாணயத்தை குறிக்கும். இது 1996 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத காசு இரு வேறு உலோகங்களான் ஆனது. ஒரு பக்கத்தில் போல கரடியும் மறுபக்கத்தில் அரசி எலிசபத் II/D.G. REGINA உள்ளார்கள். திமோர் கடல் திமோர் கடல் ("Timor Sea") வடக்கே திமோர் தீவினாலும், கிழக்கே அரபூரா கடலையும், தெற்கே ஆஸ்திரேலியாவையும் மேற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட கடல் ஆகும். இக்கடலின் கிழக்கே உள்ள நீர்ப்பகுதி அரபூரா கடல் ஆகும். ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரக் குடாக்களான ஜோசப் பொனபார்ட் குடா, வான் டீமன் குடா திமோர் கடலுக்குக் கிட்டவாக உள்ள பகுதிகளாகும். ஆஸ்திரேலிய நகரான டார்வின் நகரமே இக்கடலை அண்டிய மிகப்பெரிய நகரமாகும். திமோர் கடல் கிட்டத்தட்ட 480 கிமீ அகலமானதும், 610,000 கிமீ² பரப்பளவையும் கொண்டது. இதன் ஆழமான பகுதி (3,300 மீ ஆழம்) கடலின் வடக்கே ஜாவா அகழியில் அமைந்துள்ளது. இதனை விட கடலின் ஏனைய பகுதிகள் 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது. பல வெப்பவலயப் புயல்கள் மற்றும் சூறாவளிகள் திமோர் கடலில் ஆரம்பமாகின்றன அல்லது இதனூடே செல்லுகின்றன. பெப்ரவரி 2005 இல் ஏற்பட்ட விவியன் சூறாவளி இக்கடலின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளைப் பாதித்தது. இதற்கு அடுத்த மாதம் ஏற்பட்ட வில்லி புயல் பெரிதும் பாதிப்புகளை உண்டு பண்ணியது. பல குறிப்பிடத்தக்க தீவுகள் திமோர் கடலில் அமைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது டிவி தீவுகாளில் ஒன்றான மெல்வில் தீவு ஆகும். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் திமோர் கடலின் தீவுகளைத் தாண்டியே பெரு நிலப்பரப்புக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. 1940களில் திமோர் கடலில் நிலைகொண்டிருந்த ஜப்பானிய கடற்படையினர் ஆஸ்திரேலியா மீது 1942-43 ஆம் ஆண்டுகளில் கப்பல்களில் இருந்து வான்தாக்குதல்களை நிகழ்த்தினர். 1942, பெப்ரவரி 19 இல் டார்வின் நகர் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது கப்பல்களை மூழ்கடித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இடம்பெற்ற பசிபிக் போர்களில் திமோர் தாக்குதல் ஆரம்பமானது இந்நாளிலேயே ஆகும். அரஃபூரா கடல் அரபூரா கடல் ("Arafura Sea") பசிபிக் பெருங்கடலின் மேற்கே ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினிக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக கிழக்கே டொரெஸ் நீரிணை மற்றும் பவளக் கடலும், தெற்கே கார்ப்பெண்டாரியா குடாவும், மேற்கே திமோர் கடலும், வடமேற்கே பண்டா கடல், சேரம் கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. இது 1290 கிலோமீட்டர்கள் நீளமும், 560 கிலோமீட்டர்கள் அகலமும் கொண்டது. இதன் ஆழம் பொதுவாக 50-80 மீட்டர்கள் ஆகும். மேற்கே இதன் ஆழம் மேலும் அதிகரிக்கிறது. ஆழங்குரைந்த வெப்பவலயக் கடல் ஆனதால் இங்கு வெப்பவலய சூறாவளிகள் இடம்பெறுவதுண்டு. மின்கலம் மின்கலம் "(Battery)" என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்வேதிக் கலங்களை ஒன்றாகச் சேர்த்த அமைப்பு ஆகும். மின் கலங்கள் மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி சேமித்து, தேவையான போது அவ்வேதி ஆற்றலை மீண்டும் மின் ஆற்றலாக மாற்றித்தருகின்ற கருவிகளாகும். கை மின் விளக்கு (flashlights), திறன்பேசி, மின் தானுந்து போன்ற மின்னியற் கருவிகள், மின்கலன்களிலிருந்து மின்னாற்றலைப் பெறுகின்றன. ஒரு மின்கலத்தின் நேர்மின் முனை நேர் மின்வாய் எனவும், அதன் எதிர்மின் முனை எதிர்மின்வாய் எனவும் அழைக்கப்படுகின்றன.. எதிர்மின் முனையிலிருந்து உருவாகும் இலத்திரன்கள், வெளிப்புற மின்சுற்றுடன் இணைக்கப்படும் போது, அவை இயங்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஒரு மின்கலம் வெளிப்புற மின்சுற்றுடன் இணைக்கப்பட்டால் , வேதிவினைகளை அனுமதித்து நிறைவு செய்வதன் மூலம் மின்பகுளிகளால் அவற்றுக்குள் அயனிகளை நகர்த்த முடியும். அயனிகள் நகர்வுதான் மின்னாற்றலை வெளிப்புற மின்சுற்றுக்கு வழங்குகிறது. வழங்கப்பட்ட மின்னாற்றல் தேவையான வேலையை நிகழ்த்துகிறது . வரலாற்றில் மின்கலம் என்பது பலமடங்கு தனிசெல்களால் ஆக்கப்பட்ட ஒரு கருவி என வரையறுக்கப்படுகிறது. இருப்பினும் அதன் பயன்பாடு நோக்கில் தனிசெல்லால் ஆக்கப்பட்ட கருவி என்கின்றனர் . பிரைமரி பேட்டரி எனப்படும் பிரதம மின்கலன்களை ஒரு முறைதான் பயன்படுத்தமுடியும். இரண்டு வெவ்வேறு உலோகங்கள் வேதிப் பொருட்களுக்கு இடையில் வைக்கப்பட்டு இவ்வகை மின்கலன்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் குறைவானது ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இக்கருவி செயல்படும். பின்னர் மின் சக்தியை இழந்து விடுகிறது. தொடர்ந்து இக்கருவி இயங்க வேண்டுமானால் மின்கலனுள் இருக்கும் அனைத்து பொருள்களையும் மாற்ற வேண்டும். மின்கல விளக்குகளுக்குப் பயன்படும் கார மின்கலன்கள், கையடக்க மின் கருவிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் முதலானவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். செகண்டரி பேட்டரி எனப்படும் இரண்டாம்நிலை மின்கலன்கள் பிரதம் மின்கலன்களுக்கு எதிரானவையாகும். இவற்றை மறுமின்னூட்டம் செய்து பலமுறை பயன்படுத்த முடியும். இதில் உற்பத்தியாகும் மின் ஆற்றலின் அளவும் அதிகமாகும். வாகனங்களில் பயன்படும் ஈய-அமில மின்கலன்கள், திறன்பேசி, மடிகணினி போன்றவற்றில் பயன்படும் இலித்தியம்,-அயனி மின்கலன்கள் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிறிய, மெல்லிய மின்கலன்கள் முதல் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தும் பெரிய ஈய- அமில மின்கலன்கள் வரை பல்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் மின்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. தொலைபேசி நிலையங்கள், கணிப்பொறி தரவு நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்காக மிகப்பெரிய அளவு மின்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி உலகாய அளவில் மின்கலன் தொழிற்சாலைகள் மூலமாக ஒவ்வோர் ஆண்டும் 48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு 6% ஆண்டு வளர்ச்சியுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன . பெட்ரோல் போன்ற பொதுவான எரிபொருள்களை விட மின்கலன்கள் மிக குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டிருக்கின்றன. எரிப்பு இயந்திரங்கள் ஒப்பிடுகையில் வாகனங்களில் உயர்திறன் இயந்திரச் செயல்பாடுகள் மூலம் இது ஓரளவு ஈடுகட்டப்படுகிறது, மின் சாதனங்களின் குழுவை விவரிப்பதற்காக மின்கலன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது 1748 ஆம் ஆண்டில் பெஞ்சமின் பிராங்களின் காலத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஆயுதங்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் ). என்ற பொருள் கொண்ட பேட்டரி என்ற சொல் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது . இச்செயல்பாட்டை ஒத்த செயல்பாடு கொண்ட பல லேடன் சாடிகள் இணைந்த கருவியாகத் தெரிவதால் பிராங்களின் பேட்டரி என்ற சொல்லை அங்கிருந்து பெற்று பயன்படுத்தியுள்ளார். இத்தாலிய இயற்பியலாளரான அலெசான்ட்ரோ வோல்டா 1800 ஆம் ஆண்டில் தான் தயாரித்த முதல் மின் வேதியியல் மின்கலமான வோட்டாயிக் மின்கல அடுக்கு குறித்து விவரித்தார் . இம்மின்கலத்தில் நேர்மின் தகடாக செப்பும், எதிர்மின் தகடாக துத்தநாகமும் ஒரு மின்பகு கரைசலுக்குள் (SALT) வைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யக்உடிய ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு நீண்ட நேரத்திற்கு மின் உற்பத்தி செய்து கொடுக்கும். வேதி வினைகளால் மின் உற்பத்தி நிகழ்கிறது என்பதை வோல்ட்டா புரிந்து கொள்ளவில்லை. அவருடைய செல்கள் ஆற்றலுக்கான மூலங்கள் என்று அவர் கருதினார் . இம்மின்கலனில் உணரப்பட்ட குறைகளை 1934 ஆம் ஆண்டில் மைக்கேல் பாரடே சுட்டிக்காட்டினார். மின்கலத்தின் மின்வாய்களில் நடைபெறும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் மூலமே மின்சாரம் உற்பத்தியாக்கப்படுகின்றது. ஒரு மின்வாயில் தாழ்த்தல் தாக்கமும் மற்றைய மின்வாயில் ஒக்சியேற்றல் தாக்கமும் நடைபெறும். மின்கலத்தின் இரு மின்வாய்களையும் மின்கடத்தி ஒன்றால் (உ-ம்:செப்புக் கம்பி) மின்கலத்தின் மறை மின்வாயில் பொதுவாக ஒக்சியேற்றல் தாக்கங்கள் நடைபெற்று இலத்திரன்கள் உருவாக்கப்படும். இவ்விலத்திரன்கள் நேர்மின்வாயை அடைந்து அங்குள்ள இரசாயனப் பொருட்களை தாழ்த்தும். இவ்விரு தாக்கங்களும் கூட்டாக நடைபெறும் போதே மின்கலத்தால் நேர் மின்னோட்டம் உற்பத்தியாக்கப்படுகின்றது. மீள் மின்னேற்றக்கூடிய மின்கலங்களில் மீண்டும் மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய வகையில் இரசாயனப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இவை ஒக்சியேற்றல் மற்றும் தாழ்த்தல் ஆகிய இரு தாக்கங்களுக்கும் உள்ளாகக்கூடிய பொருட்களாக இருக்கும். மறை மின்வாயிலுள்ளவை மின்னிறக்கப்படும் போது ஒக்சியேற்றப்படுகின்றன. மின்னேற்றப்படும் போது தாழ்த்தப்படுகின்றன. நேர் மின்வாயிலுள்ள இரசாயனப் பொருட்கள் மின்னிறக்கப்படும் போது தாழ்த்தப்படுகின்றன. மின்னேற்றப்படும் போது ஒக்சியேற்றமடைகின்றன. மின்கலங்கள் மின்னிறக்கப்படும் போது மின்கடத்தியினூடாகச் செல்லும் இலத்திரன்களிலுள்ள சக்தியைக் கொண்டே மின்கலங்களின் சக்தியில் வேலை செய்யும் கடிகாரங்கள், சிறிய வானொலிகள் என்பன தொழிற்படுகின்றன. மின்கலங்களைப் பிரதானமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் இவற்றில் கொள்வனவு செய்யும் போது சேமிக்கப்பட்டிருந்த சக்தி முடிவடைந்த பின்னர் இவற்றை மீண்டும் மின்னேற்றிப் பயன்படுத்த இயலாது. அவ்வாறு மின்னேற்றினால் வெடித்தல், கசிதல் போன்றன நிகழலாம். வழமையாக கடிகாரம், சிறிய மின்பகுப்பு ஆய்வுகள், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற மின்சாரத்தில் இயங்கும் பொருட்கள் முதன்மை மின்கலங்களிலேயே இயங்குகின்றன. துத்தநாக-கரிம மின்கலம் மற்றும் கார மின்கலம் என்பன பொதுவாகப் பயன்படுத்தப்படும் முதன்மை மின்கலங்களாகும். துணைக்கலங்களில் மீண்டும் மின்னேற்றும் போது பழைய நிலைக்கு மீளக்கூடிய பதார்த்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பயன்படும் மின்கலமாக ஈய-அமில மின்கலம் உள்ளது. வாகனங்களில் துணைக்கலங்களே பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல்-நாகம், நிக்கல்-கட்மியம் ஆகிய உலோகங்களைக் கொண்டுள்ள சிறிய துணைக்கலங்களும் பயன்படுத்தப்படுகின்றன. துணைக்கலங்களைப் பயன்படுத்தும் போதும் அவதானமாகச் செயற்பட வேண்டும். இவற்றை அளவுக்கதிகமாக மின்னேற்றினால் கசிவு/ வெடித்தல் ஏற்படலாம். காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம் இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு இந்தோ-ஆசுதிரேலியப் புவித்தட்டு என்பது ஆஸ்திரேலியா கண்டத்தையும் சூழவுள்ள பெருங்கடல்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். இது வடமேற்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் தன் அதன் நீர்ப் பகுதிகள் வரை உள்ளடக்கியுள்ளது. இத்தட்டின் முனை, யூரேசியத் தட்டை நெருக்கி, இமயமலையுடன் மோதுகையில் ஈடுபடுவதன் காரணமாக இந்தோ-ஆசுதிரேலியப் புவித்தட்டு இரு வெவ்வேறு தட்டுக்களாகப் பிரிந்து வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்விறு தட்டுகளும் முறையே "இந்தியப் புவித்தட்டு" எனவும் "ஆசுதிரேலியப் புவித்தட்டு" எனவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா, மெகனேசியா (ஆஸ்திரேலியா, நியூ கினி, தாஸ்மானியா), நியூசிலாந்து, நியூ கலிடோனியா ஆகியன அனைத்தும் பண்டையகாலத்தில் (200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பெருங்கண்டமாக இருந்த கோண்டுவானாவின் பகுதிகள் ஆகும். கடல்பகுதி விரிவடைவினால் இப்பகுதிகள் பிளவடைந்தன. ஆனாலும், விரிவடைந்த மையங்கள் ஒரு தனிப் புவித்தட்டாக ஆயிற்று. இப்புவித்தட்டு வடக்கில் இருந்து 35 பாகை கிழக்காக ஆண்டுக்கு 67 மிமீ வேகத்தில் நகருவதாக ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளாடிமிர் கிராம்னிக் விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக் ("Vladimir Borisovich Kramnik", ரஷ்ய மொழி: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: ஜூன் 25, 1975) உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) . 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக வாகையாளரானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே உலக வாகையாளரான வெசெலின் டோபலோவை வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார் தமிழவன் தமிழவன் தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர். இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார். "இலக்கு" என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். "எண்பதுகளில் கலைஇலக்கியம்", எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம். தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மட்டு ஆரையம்பதி மகாவித்தியாலயம் மட்டு ஆரையம்பதி மகாவித்தியாலயம் மட்டக்களப்பு மாவடத்தில் ஆரையம்பதி முகத்துவாரத் தெருவில் 23 அக்டோபர் 1957 இல் ஓர் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகக் காணிகளை அமரர் ப. க. சுப்பிரமணியம் அவர்கள் நன்கொடையாக வளங்கியிருந்தார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 12 ஆசிரியர்களும் 150 மாணவர்களும் இருந்தனர். 2008 ஆண்டளவில் 40 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் 5 கல்விசாரா ஊழியர்கள் உட்பட 900 மாணவர்களையும் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இப்பாடசாலையின் அதிபாராகத் தங்கவடிவேல் கடமையாற்றுகின்றார். வீரகேசரி 30 அக்டோபர் 2008 மார்லீன் டீட்ரிக் மர்லீன் டீட்ரிக், (Marlene Dietrich - டிசம்பர் 27 1901–மே 6 1992) ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார். 1910 ஆம் ஆண்டு முதல் 1980 வரை இவருடைய திரைத் தொழில் வரலாற்றில் புகழ் மங்காத வகையில் புதுமையைக் கையாண்டு வந்தார். ஹாலிவூட்டில் பிரபலமான முதல் ஜேர்மன் நடிகை இவர் எனக் கருதப்படுகிறது. இவரது நீண்டகால நடிப்புத் தொழிலில் இவர் தொடர்ச்சியாகப் புகழ் பெற்றவராகவே இருந்தார். 1920 ஆம் ஆண்டளவில் இவர் பெர்லின் நகரில் ஒரு காபரேப் பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தார். 1930 இல் இவர் ஒரு ஹாலிவூட் நடிகை ஆனதுடன், இரண்டாம் உலகப் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். போரின் போது மக்களுக்கு ஆற்றிய சேவைகள் காரணமாக இவருக்கு அமெரிக்கா, பிரான்சு, பெல்சியம், இசுரேல் ஆகிய நாடுகள் கௌரவிப்புக்களை வழங்கின. பின்னர் 1950 - 1970 காலப்பகுதியில் அனைத்துலக அளவில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தனது தொழில் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இவர் பொழுது போக்குத் துறையின் குறியீடாக விளங்கினார். 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்பட நிறுவனம் டீட்ரிக் இனை தலைசிறந்த ஒன்பதாம் ஹொலிவூட் நடிகையாக பிரகடனம் செய்தது. டீட்ரிக் 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரின் ஒரு பகுதியான ஷோபேர்க் (Schöneberg) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மாரீ மகதலீன் டீட்ரிக். இவரது தந்தை லூயிஸ் எரிக் ஒட்டோ டீட்ரிக், தாயார் வில்ஹெமீனா எலிசபெத் ஜோசபீன் டீட்ரிக். மர்லீனுக்கு ஒரே தமக்கை. பெயர் எலிசபெத். இவர்களது தாயார் பெர்லினில் இருந்த வசதியான குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவர். இவர்கள் பெர்லினில் மணிக்கூடு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தனர். காவல்துறை லெப்டினண்ட்டாக இருந்த மர்லீனின் தந்தையார் பிராங்கோ-பிரஷ்யப் போரின் போது படையில் பணியாற்றியவர். இவர் 1907 ஆம் ஆண்டில் இறந்தார். அவரது நெருங்கிய நண்பரும், முதலாவது லெப்டினன்டுமான எடுவார்ட் வொன் லோச் என்பவர் வில்ஹெமினாவுடன் நெருங்கிப் பழகினார். 1916 ஆம் ஆண்டில் இருவரும் மணம் செய்து கொண்டனர். ஆனாலும், முதலாம் உலகப் போரின்போது காயப்பட்ட எடுவார்டும் விரைவில் இறந்துவிட்டார். வொன் லோச், வில்ஹிமீனாவின் பிள்ளைகளைச் சட்ட முறையான பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டிராததால், மர்லீனும் தமக்கையும் வொன் லோச் என்னும் குடும்பப் பெயரைக் கொண்டிருக்கவில்லை. குடும்பத்தில் இவரை "லேனே" என அழைத்தனர். மர்லீனுக்குப் 11 வயதாக இருக்கும்போது, இவரது இரண்டு முதல் பெயர்களையும் சுருக்கி அக்காலத்தில் பொதுவான வழக்கில் இராத மர்லீன் என்னும் பெயரை வைத்துக்கொண்டார். மர்லீன் டீட்ரிக், 1906 - 1918 காலப் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கான அகஸ்ட்டே விக்டோரியா பள்ளியில் பயின்றார். இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் வயலின் கற்றுக் கொண்டதோடு நாடகத்திலும் கவிதையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். வயிலினில் புகழ் பெறவிரும்பிய அவரது கனவு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக நிறைவேறாது போயிற்று. 1921 ஆம் ஆண்டில், நாடக இயக்குனரான மக்ஸ் ரெயின்ஹாட்டின் நாடக அக்கடமியில் சேர எடுத்த முயற்சியில் டீட்ரிக் தோல்வி அடைந்தாலும், பின்னர் அவரது நாடகங்களில் மர்லீன் பணியாற்றினார். அங்கே இவர் பாடல் குழுவினரில் ஒருவராகவும், சிறு வேடங்களில் நடிப்பவராகவும் இருந்தார். அக்காலத்தில் இவர் சிறப்புக் கவனம் எதையும் பெற்றதாகத் தெரியவில்லை. மர்லீனின் 1922ல் தனது முதலாவது படத்தில் நடித்தார். அக்காலத்திலேயே அதே படப்பிடிப்புத் தளத்தில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த அவரது எதிர்காலக் கணவரான ருடோல்ப் சீபரை மர்லீன் சந்தித்தார். டீட்ரிக்கும் சீபரும் 1924 மே 17 ஆம் திகதி மணம் செய்து கொண்டனர். அவர்களது ஒரே மகளான மரியா எலிசபெத் சீபர் 1924 டிசம்பர் 13 ஆம் திகதி பிறந்தார். இவர் பின்னர் மரியா ரீவா என அழைக்கப்பட்டார். 1920களில் டீட்ரிக், பெர்லினிலும், வியன்னாவிலும் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்ததுடன் படங்களிலும் நடித்தார். மேடையில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பர்னாட்ஷா ஆகியோர் எழுதிய நாடகங்களில் நடித்த இவருக்கு வேறுபட்ட முக்கியத்துவங்கள் கொண்ட பாத்திரங்கள் கிடைத்தன. எனினும் இசை நாடகங்களிலேயே இவருக்கு அதிக கவனம் கிடைத்தது. 1920களில் படங்களிலும் இவருக்குக் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் கிடைத்தன. 1929ல் வெளிவந்த "நீலத் தேவதை" "(The Blue Angel)" என்னும் படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப் படத்தை இயக்கியவர் ஜோசெப் வொன் ஸ்டேர்ன்பர்க் என்பவர். இவர் பின்னர் டீட்ரிக்கைக் கண்டுபிடித்தவர் என்னும் பெருமையைப் பெற்றார். "மீண்டும் காதலில் விழுந்தேன்" (Falling in Love Again) என்னும் டீட்ரிக்கின் பாடலை அறிமுகப்படுத்தியதன் மூலமும் இப்படம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது. 1929 ல் மர்லீன் டீட்ரிக் UFA-பாராமவுண்ட் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்ட நீலத் தேவதை (The Blue Angel (1930) என்ற படத்தில் லோலா லோலா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரே பாடகியாக நடித்தது அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மர்லீன் டீட்ரிக்கின் நடிப்புத்திறனை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இப்படத்தை இயக்கிய ஜோசப் வான் ஸ்டென்பெர்க்கையே (Josef von Sternberg) சாரும். இப்படத்தில் இவர் பாடிய மீண்டும் காதலில் வீழ்ந்தேன் என்ற தனிமுத்திரைப் பாடல் குறிப்பிடத்தக்க புகழைப் பெற்றுத்தந்தது இப்பாடல் செருமனியைச் சேர்ந்த எலக்டோரோலா (Electrola) இசை நிறுவனத்தாலும் பின்னர் 1930 ல் பாலிடோர் மற்றும் டெக்கா நிறுவனத்திலும் பதிவு செய்யப்பட்டன .. "நீலத் தேவதை" படத்தின் பன்னாட்டு மட்டத்திலான வெற்றியின் பலத்தினாலும், ஹாலிவூட்டில் ஏற்கெனவே ஓரளவுக்கு நிலைபெற்றுவிட்ட வொன் ஸ்டேர்ன்பர்க் கொடுத்த ஊக்கம் காரணமாகவும் பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு டீட்ரிக் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். இந் நிறுவனம், எம்ஜிஎம் நிறுவனத்தின் புகழ்பெற்ற சுவீடிய நடிகையான கிரேட்டா கார்போவுக்கு மாற்றாக ஜெர்மானியரான டீட்ரிக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்டேர்ன்பர்க் இயக்கிய டீட்ரிக்கின் முதல் அமெரிக்கப் படமான "மொரோக்கோ"வே ஆஸ்கார் விருதுக்காக நியமனம் பெற்ற டீட்ரிக்கின் ஒரே படமாகும். திரைப்பட வரலாற்றுக்கு டீட்ரிக்கின் மிக முக்கியமான பங்களிப்பு வொன் ஸ்டேர்ன்பர்க் இயக்கி டீட்ரிக் நடித்து 1930க்கும் 1935க்கும் இடையில் வெளிவந்த ஆறு திரைப்படங்களான "மொரோக்கோ", "டிஸ்ஒனேர்ட்", "ஷாங்காய் எக்ஸ்பிரஸ்", "புளொண்ட் வீனஸ்", "த ஸ்கார்லட் எம்பிரெஸ்", "த டெவில் இஸ் எ வுமன்" என்பனவாகும். ஹாலிவூட்டில், வொன் ஸ்டேர்ன்பர்க், மர்லீன் டீட்ரிக்குடன் பயனுள்ள வகையில் பணிபுரிந்து டீட்ரிக் ஒரு கவர்ச்சியான பெண் என்னும் கருத்து ஏற்பட உதவினார். டீட்ரிக் உடற் பருமனைக் குறைக்க ஊக்கப் படுத்தியதுடன், நல்ல பயிற்சி கொடுத்து அவரை நடிகை ஆக்கினார். இதற்குப் பதிலாக டீட்ரிக்கும் வொன் ஸ்டேர்ன்பர்க் மீது நம்பிக்கை வைத்து நடித்தார். தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு டீட்ரிக் புதுப்பாணி அலங்கார அடையாளமாகவும் திரை நட்சத்திரமாகவும் திகழ்ந்ததால் இவருக்குப் பின்னர் நடிக்க வந்த நட்சத்திரங்கள் கூட அவரது பாணியை பின்பற்றத்தொடங்கினர்.புதுப்பாணி அலங்காரம் பற்றி டீட்ரிக்கிற்கு தெரிந்தது போல் வேறெந்த நடிகைகளுக்கும் தெரியாது என எட்டு ஆசுகர்கள் விருதுகளைப் பெற்ற அமெரிக்கப் பெண் ஆடை வடிவமைப்பாளர் எடித் எட் கூறியுள்ளார். 1960 ல் தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து வாரப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார் “நான் படத்திலுள்ள கதாபாத்திரத்திற்காக உடையணிகிறேன். எனக்காக அல்ல, பொது மக்களுக்காக அல்ல, புதுப்பாங்கிற்காக அல்ல, ஆண்களுக்காகவும் அல்ல நான் எனக்காக உடையணிந்திருந்தால் இவ்வளவு சிரமப்பட மாட்டேன். ஆடைகள் எனக்கு சலிப்பை உண்டாக்குகின்றன. நான் வன் துணியாடை (ஜீன்ஸ்) அணிய விரும்புகிறேன். நான் அதனை நேசிக்கிறேன். நான் அவற்றை ஆண்களுக்கான ஒரு பொது கடையில் வாங்கி அணிகிறேன் , நிச்சயமாக; நான் பெண்களின் கால்சட்டை அணிய முடியாது. எனது தொழிலுக்காக வேண்டுமானால் பெண்கள் ஆடைகளை அணிவேன்” . அவர் நடித்த சில படங்களில் வெளிப்படையாக பாலியல் நெறிமுறைகளை மீறியது, இருபால் கூறுடைய (androgynous) பட பாத்திரங்கள் மற்றும் இருபாலீர்ப்பு போன்றவை டீட்ரிக்கின் சில வேறுபட்ட கதாபாதிதிரங்களாக பார்க்கப்படுகிறது . 1975 செப்டம்பர் 29 அன்று ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியின் போது தவறி விழுந்து தொடையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஜூன் 24 அன்று அவரது கணவர் ருடால்ப் புற்றுநோயால் இறந்தார். டயட்ரிச் இறுதியாக டேவிட் போவி நடித்த "ஜெஸ்ட் எ ஜிகோலோ"(1979) என்ற படத்தில் தலைப்புப் பாடலைப் பாடினார்.அத்துடன் அவரது திரைவாழ்வு முடிவடைந்தது. ஒரு மது மற்றும் வலி நிவாரணிகளைச் சார்ந்து அவருடைய வாழ்க்கையின் இறுதி 11 ஆண்டுகளைப் பெரும்பாலும் படுக்கையிலேயே கழித்தார்.இந்த நேரத்தில் அவர் தனது சுயசரிதையை என் உயிரை எடுத்துக்கொள் என்று பொருள்படும் நேகட் நுர் மைன் லெபென்(Nehmt nur mein Leben) என்ற நூலை எழுதினார்.இது 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது . தனது 90 ஆவது வயதில் 1992 மே 7 அன்று பாரிசில் அவருடைய குடியிருப்பில் சிறுநீரகச் செயலிழப்பால் டயட்ரிச் மரணமடைந்தார். அவர் ஒரு நாத்திகராக இருந்தும் 1992 ஆம் ஆண்டு மே 14 ல் பாரிஸின் லா மாடெலெய்ன் கத்தோலிக்க தேவாலயத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.பேர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னர் டயட்ரிசின் உடல் அவர் விருப்பப்படி அவரது சொந்த ஊரில் அவரது தாயின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டது. 1992 இல் பெர்லினின் செனோபெர்க்கில் டீட்ரிக் பிறந்த இடமான ("Schöneberg") லெபெர்ஸ்ட்ரே 65 (Leberstraße 65) ல் அவரது நினைவு தகடு ஒன்று திறக்கப்பட்டது. 1997 ஆகத்து 14 ம் நாள் செருமனி அரசு டீட்ரிக்கின் உருவப்படம் பதித்த அஞசல் தலையை வெளியிட்டது. ஆடம்பர பேனா தயாரிப்பு நிறுவனமான மான்ட்பிளாங்க் (MontBlanc) (மார்லின் டீட்ரிக்) "Marlene Dietrich" என்ற பெயர் பதித்த வரையறுக்கப்பட்ட பதிப்புகளை டீட்ரிக்கின் நினைவை போற்றும் விதமாக வெளியிட்டு சிறப்பித்தது. அப்பேனா பிளாட்டின முலாம் பூசப்பட்ட ஆழ் நீலநிற நீலக்கல் (sapphire) பதிக்கப்பட்டிருந்தது. ராபியேல் சான்சியோ பெரும்பாலும் ராபியேல் என அழைக்கப்படும் ராபியேல் சான்சியோ ( 28 மார்ச் அல்லது 6, ஏப்ரல் 1483ஏப்ரல் 6, 1520), என்பவர் ஒரு இத்தாலிய ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். மேல் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த இவர், கச்சிதமானதும், அழகு நிறைந்ததுமான ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி ஆகியோருடன், இவரும் சேர்ந்து ஓவியத்துறையின் மும்மூர்த்திகள் எனப்பட்டார். ராபியேல் பெருமளவான உற்பத்தித் திறன் கொண்டவர். வழமைக்கு மாறான பெரிய வேலைத்தலம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் மிக இளம் வயதான 37 வயதிலேயே இறந்துவிட்டாலும், இவரது ஓவியங்கள் பெருமளவில் உள்ளன. வாட்டிகனின் உள்ள ராபியேல் கூடங்களிலுள்ள சுவரோவியங்களே இவரது மிகப்பெரிய ஓவியங்களாகும். எனினும் இவ்வோவியங்கள் நிறைவடையும் முன்பே ராபேல் இறந்துவிட்டார். ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன. இவரது தொழில் வாழ்வை மூன்று கட்டங்களாகவும் மூன்று பாணிகளாகவும் பிரிப்பது உண்டு. முதற் கட்டம் இவர் உம்பிரியாவில் இருந்த காலம். அடுத்தது 1504 முதல் 1508 வரையான காலம். ராபியேல் புளோரன்சின் கலை மரபை உள்வாங்கிக் கொண்ட காலம். இறுதியாக இவர் பாப்பரசர்களுக்கும், அவர்களுடன் நெருங்கியோருக்குமான வேலைகளைச் செய்துகொண்டு, ரோமில் மிகவும் வெற்றிகரமாக விளங்கிய 12 ஆண்டுக் காலம். ராபியேல், இத்தாலியின் மார்ச்சேப் பகுதியில் இருந்த உர்பினோ என்னும் சிறிய, ஆனால் கலை அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஊரில் பிறந்தார். ராபியேலின் தந்தையார், ஜியோவன்னி சான்டி அங்கிருந்த டியூக்கின் அவையில் ஓவியராக இருந்தார். உர்பினோ ஆட்சி அவையின் நற்பெயர் பெடரிகோ டா மொன்டெபெல்ட்ரோ (Federigo da Montefeltro) என்பவரால் ஏற்பட்டது. ஒப்பந்தக் கூலிப் படைத் தலைவரான பெடரிகோ பாப்பரசரினால் உர்பினோவின் டியூக் ஆக்கப்பட்டவர். உர்பினோ பாப்பக நாடுகளில் (Papal States) ஒன்றாக விளங்கிய பெடரிகோவின் அவையில் கலைத்துறையிலும் இலக்கியத்துக்கே கூடுதல் கவனம் இருந்தது. ஜியோவன்னி சான்டி ஒவியர் மட்டும் அல்லாது ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் பெடரிகோவின் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதியுள்ளார். இவர் டியூக்கின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராபியேல் பிறப்பதற்கு முதல் ஆண்டில் பெடரிகோ, காலமானபோது ஆட்சியாளராக அவரது மகனான "கிடோபால்டோ டா மொன்டெபெல்ட்டோ" பதவியேற்றார். அவர் மந்துவாவின் (Mantua) ஆட்சியாளரின் மகளை மணம் முடித்தார். மந்துவாவின் அவை இசை, காட்சிக் கலைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த ராபியேலுக்கு சிறப்பான பழக்க வழக்கங்களும், சமுதாயத் திறமைகளும் வாய்க்கப் பெற்றன. இக் காலத்துக்குச் சற்றுப் பின்னர் உர்பினோவின் ஆட்சிச் சபை பால்டாசாரே காஸ்டிக்லியன் எழுதிய நூலில் கூறப்பட்ட இத்தாலிய மனித நோக்கு சார்ந்த ஒழுக்கங்களுக்கான ஒரு மாதிரி அவையாகத் திகழ்ந்தது. காஸ்டிக்லியன் 1504 ஆம் ஆண்டில் உர்பினோவில் குடியேறினார். அவ்வேளையில் ராபியேல் உர்பினோவை விட்டுச் சென்றுவிட்டார் எனினும் அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார். இதனால் காஸ்டிக்லியனும், ராபியேலும் நண்பர்களாயினர். ஆட்சிச் சபைக்கு அடிக்கடி வருபவர்களும், பிற்காலத்தில் கர்தினால்களாக ஆனவர்களுமான பியெட்ரோ பிபியேனா, பியெட்ரோ பெம்போ ஆகியோரும் ராபியேலுக்கு நண்பர்கள் ஆயினர். ராபியேல் ரோமில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தாளர்களாகப் பிரபலமாகிக் கொண்டு இருந்த இவர்களும் ரோமிலேயே இருந்தனர். மேல் தட்டு மக்களுடன் கலந்து பழகுவதில் ராபியேலுக்கு எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. இதனாலேயே இவருக்கு இவரது தொழிலில் எதையும் இலகுவாக அடையக்கூடியதாக இருந்தது. எனினும் ராபியேல் மனித நோக்கு சார்ந்த கல்வியைப் பெற்றிருக்கவில்லை. ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார். 1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார். பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார். பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்பு தாயிற்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார். சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது. ரபேல் வடக்கு இத்தாலியில் உள்ள பல்வேறு மையங்களில் வேலை செய்தார். ஆனால் அவர் அங்கு ஒரு "நாடோடி" வாழ்க்கை தான் மேற்கொண்டார். 1504-8 வரை அவர் இத்தாலி,ஃப்ளாரென்சில் வசித்தார். ஆனால் ப்ளோரன்ஸில் அவர் வாழ்ந்த காலம் பற்றி பாரம்பரிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அவர் அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் என குறிப்புகள் கூறுகின்றது. 1508 இல் ராபேல் தனது வாழ்நாள் முழுவதும் வசித்த ரோமிற்குச் சென்றார். புதிய போப் இரண்டாம் ஜுலியஸ் இன் அழைப்பில், போப்பின் வாட்டிகன் அரண்மனையில் உள்ள நூலகத்தில் சுவரோவியம் வரைந்தார். இதற்கு முன் அவர் இது போன்ற பெரிய குழுக்களில் பணியாற்றியது இல்லை. அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை மிகப் பெரிய வாய்ப்பாக அவர் கருதினார். ஆனால் அவர் அங்கு ஒரு ஓவியம் மட்டுமே வரைந்தார். பின் சிஸ்டன் சேப்பலில் கோபுர ஓவியங்களையும் வரைந்தார். ராபியேலின் பல ஓவியங்கள் மரப்பலகைகளின் மீதே வரையப்பட்டுள்ளது (ஓவியம்; மடோனா ஆப் த பிங்). ஆனால் அவர் ஓவியம் தீட்டத் துணிகளையும் பயன்படுத்தியுள்ளார் (ஓவியம்:சிஸ்டைன் மடோனா). மேலும் காயக்கூடிய எண்ணெய் வகைகளான ஆளிக்கொட்டை எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய்களைக் கொண்டும் வரைந்துள்ளார். அவருடைய வண்ணத்தட்டு மதிப்பு வாய்ந்த தனித்துவமான வண்ணக் கலவைகளை உருவாக்கி வரைந்துள்ளார். அவரது பல ஓவியங்களில் (ஓவியம்: அன்சிடேய் மடோனா) சிறப்பு வகை மரங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் தனது ஓவியங்களில் தங்க உலோகப் பொடி கொண்டும் பிசுமத்தைக் கொண்டும் வண்ணம் தீட்டியுள்ளார். ராபியேல் சொந்தமாக ஒரு பணிமனையைக் கொண்டிருந்ததாக வசாரி கூறுகிறார். அதில் ஐம்பது மாணவர்கள் மற்றும் உதவியாளர்கள் இருந்ததாகவும் பின்னர் அனைவரும் புகழ்பெற்ற தனிப்பெரும் ஓவியர்களாக மாறியதாகவும் வசாரி கூறுகிறார். இது மிகப்பெரிய பணிமனையாக ஒற்றை நபரால் கட்டமைக்கப்பட்டது. இத்தாலியின் பிற பகுதிகளிலிருந்தும் திறமையான ஓவியர்களைத் தங்கள் பணிமனைக் குழுவில் இணைத்துக்கொண்டு உப ஒப்பந்தங்களை அவர்கள் மூலமாகவும் தனது மாணவர்களைக் கொண்டும் ராபியேல் செயல்படுத்தினார். அவர்களுடைய பணிமனையில் உள் வேலை ஏற்பாடுகளுக்கான ஆதாரங்கள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளன. ராபியேலிடம் பணிமனையில் மாணவர்களாக இருந்தவர்களில் ரோம் நகரிலிருந்து வந்த இளம் வயது "கியுலியோ ரொமானோ" (ராபியேல் இறக்கும் போது வயது இருபத்தி ஒன்று) மற்றும் "ஜியான்பிரான்சிஸ்கோ பென்னி" என்ற ஓவியர் இருவரும் ராபியேலின் இறப்பிற்குப் பிறகு அவரது பணிமனையை விரிவாக்கியதுடன் அவரிக் ஓவியங்களைப் படைத்து வெளியிடத் துவங்கினர். கியலியோ அளவிற்கு பென்னி சிறப்படைய வில்லை. இருப்பினும் ராபியேலின் ஓவியங்களை கிட்டத்தட்ட ஒத்த ஓவியங்களை "கியுலியோ ரொமானோ" படைத்து புகழ் பெற்றார். "பெரியோ டி வேகா" என்ற ஓவியர் மற்றும் கட்டிடப் பொருட்களை சுமக்கும் வேலை செய்தவர் பின்னாளில் ஓவியராக உயர்ந்த பொலிடோரோ டா கிராவாகியோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ஓவியர்களாவர்.1527 ல் ரோம் விலக்க யுத்தத்தின் போது ராபியேலின் மாணவர்கள் ஓவியர்கள் சிதறுண்டனர் பலர் கொல்லப்பட்டனர். ராபியேல் மிகச்சிறந்த படைப்பாக்கம் நிறைந்த நளினமான பணிமனையை நடத்தி வந்ததாக வசாரி அழுத்திக்கூறுகிறார். அசாதாரணமான திறமைகளுடன் ராபியேல் தனது காப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் மைக்கலாஞ்சலோ மற்றும் தன்னுடைய படைப்புகளிடையே உள்ள உறவுமுறைகள் குறித்து விரிவாக விவாதம் செய்வார் என வசாரி வலியுறுத்திக் கூறுகிறார். பென்னி மற்றும் கியுலியோ ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் திறமைகளுடன் ராபியேலின் ஓவியங்களைப் போல படைத்துக்காட்டினர் .ராபியேலின் பல சுவர் ஓவியங்கள் சந்தேகத்துக்கிடமின்றி அவருடைய வெளிப்படுத்தும் திறனை பறைசாற்றுகின்றன. அவரது பல உருவப்படங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. அதில் அவருடைய நுணுக்கமான கை வேலைப்பாடகள் வரைதல் நுட்பம் போன்றவை வாழ்கையின் முடிவு வரையிலும் நல்ல ஓவியங்களை படைத்துக்கொண்டே இருந்தார் என்பதை விளக்குகின்றன. நெசவு தலைப்புகள் பட்டியல் தங்கதீபம் தங்கதீபம் கனடாவில் வெளிவரும் வார தமிழ் பத்திரிகை. செய்திகள், சமூக தகவல்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை இது தாங்கி வெளிவருகிறது. இது ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிடுகிறது. ஈழமுரசு கனடா ஈழமுரசு கனடாவில் வெளிவரும் வார தமிழ் பத்திரிகை ஆகும். இவர்களின் சுலோகம் "உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பது இல்லை" என்பதாகும். இந்த பத்திரிகை தமிழ்த் தேசிய விடுதலைப் புலிகள் சார்புடையது. பொதிகை (பத்திரிகை) பொதிகை கனடாவில் இருந்து 90களில் வெளிவந்த தமிழ் பத்திரிகை ஆகும். பல்வேறு தரப்பட்ட சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தும், பல விடயங்களை விமர்சித்தும் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிகையின் விமர்சனப் போக்கை விரும்பாத சிலர் பொதிகை பத்திரிகையின் வினியோகத்தை தடுத்தால் பத்திரிகை வெளியிடுவது நின்றுவிட்டது. பரபரப்பு பரபரப்பு கனடாவில் இருந்து வெளிவரும் வார தமிழ் பத்திரிகை ஆகும். ஈழப் போர், இதர போர்கள், வரலாறு, நிகழ்வுகள் போன்றவற்றை திகிலாக விபரித்து இந்த பத்திரிகை எழுதுகிறது. இதன் ஆசிரியர் ரிஷி ஆவார். கொஸ்கியஸ்கோ மலை கொஸ்கியஸ்கோ மலை அல்லது கஸ்கியஸ்கோ மலை ("Mount Kosciuszko" அல்லது "Mount Kosciusko") என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பனி மலைகளில் அமைந்துள்ள மலை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2,228 மீட்டர்கள் (7,310 அடி) உயரமுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள மலைகளில் மிக உயரமான மலையாகும். போலந்தின் தேசியவீரரான தாடஸ் கொஸ்கியஸ்கோ நினைவாக போலந்து நாடுகாண் பயணியும் மலையேறியுமான "போல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி" என்பவரால் 1840 ஆண்டு கொஸ்கியஸ்கோ மலை என இம்மலைக்குப் பெயரிடப்பட்டது. இம்மலையின் உச்சியும் அதன் சூழவுள்ள பகுதிகளும் குளிர்காலங்களில் (பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை) பனியால் மூடப்பட்டிருக்கும். பீட்டர் பவுல் ரூபென்ஸ் பீட்டர் பவுல் ரூபென்ஸ் (Peter Paul Rubens - ஜூன் 28, 1577 – மே 30, 1640) மிகவும் திறமை வாய்ந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளெமிய பரோக் ஓவியரும், பகட்டுத் தன்மை கொண்ட பரோக் பாணியின் முன்னணி ஆதரவாளரும் ஆவார். பரோக் பாணி இயக்கம், நிறம், புலன் நுகர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது. இவர் சீர்திருத்தத்துக்கு எதிரான பலிபீட ஓவியங்கள், உருவப்படங்கள், நிலத்தோற்றங்கள், தொன்மங்கள் சார்ந்த வரலாற்று ஓவியங்கள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர். ஐரோப்பா முழுவதிலும் இருந்த பிரபுக்களாலும், ஓவியச் சேகரிப்பாளராலும் விரும்பப்பட்ட ஓவியங்களை உருவாக்கும் பெரிய கலைக் கூடமொன்றை நடத்தி வந்ததோடு, ரூபென்ஸ் ஒரு மனித நோக்கு அறிஞரும், ஓவியச் சேகரிப்பாளரும், இரு இராஜதந்திரியும் ஆவார். இவர் ஸ்பெயினின் அரசன் ஆறாவது பிலிப்பிடம் இருந்தும், இங்கிலாந்து அரசன் முதலாம் சார்லஸ் இடமிருந்தும் பிரபுப் பட்டம் பெற்றார். ரூபென்ஸ் வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ரூபென்ஸ் (Jan Rubens), தாயார் மரியா பைப்பெலிங்க்ஸ் (Maria Pypelincks). ஸ்பானிய நெதர்லாந்தை ஆல்பாவின் (Alba) டியூக் ஆண்ட காலத்தில் இடம் பெற்ற புரட்டஸ்தாந்தர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பயந்து, ஒரு கால்வினியரான பீட்டர் ரூபென்சின் தந்தையும், தாயும் 1568 ஆம் ஆண்டில், கொலோனுக்குத் தப்பி ஓடினர். ஜான் ரூபென்ஸ், சக்சனியின் அன்னாவுக்குச் சட்ட ஆலோசகராகவும், காதலியாகவும் ஆனார். ஒரேஞ்சின் முதலாம் வில்லியத்தின் இரண்டாம் மனைவியான அன்னாவின் சீகென்னில் இருந்த அரண்மனையிலேயே ஜான் ரூபென்ஸ் 1570ல் தங்கினார். அன்னாவுடனான தொடர்புக்காக ஜானுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. 1577ல் பீட்டர் பவுல் ரூபென்ஸ் பிறந்தார். அடுத்த ஆண்டில், குடும்பம் கொலோனுக்குத் திரும்பியது. ஜான் ரூபென்ஸ் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1589 ஆம் ஆண்டில், பீட்டர் ரூபென்ஸ் அவரது தாயாருடன் ஆன்ட்வேர்புக்குச் சென்றார். அங்கே பீட்டர் ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். பீட்டர் ரூபென்சின் ஆக்கங்களில் மதம் முக்கிய இடத்தை வகித்ததுடன், பின்னாளில், இவர் கத்தோலிக்க சீர்திருத்த எதிர்ப்பு ஓவியப் பாணியின் முன்னணி ஓவியர்களில் ஒருவராகவும் விளங்கினார். ஆன்டோனியோ விவால்டி "சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். "நான்கு பருவங்கள்" என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும். இங்மார் பேர்ஜ்மன் ஏண்ஸ்ட் இங்மார் பேர்ஜ்மன் (Ernst Ingmar Bergman - 14 ஜூலை 1918 – 30 ஜூலை 2007) ஒன்பது தடவைகள் அக்கடமி விருதுக்கு நியமிக்கப்பட்ட சுவீடிய, திரைப்பட, மேடை நாடக, ஒப்பேரா இயக்குனர் ஆவார். மனித நிலைமைகள் பற்றிய தேடுதல்களில், ஊக்கமின்மை, மனக்கசப்பு, நகைச்சுவை, நம்பிக்கை போன்ற பல விடயங்களை இவர் தனது படங்களில் வெளிப்படுத்தினார். இவர் தற்காலத் திரைப்படத் துறையில் மிகப் பெரியவரும் மிகுந்த செல்வாக்கு உள்ளவருமான இயக்குனராகக் கருதப்படுகிறார். 62 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், இவற்றுட் பலவற்றைத் தானே எழுதியும் இருக்கிறார். அத்துடன் 170க்கு மேற்பட்ட நாடகங்களையும் இயக்கினார். லிவ் உல்மன், பிபி அண்டர்சன், மக்ஸ் வொன் சிடோ போன்றவர்கள் இவரது அனைத்துலகப் புகழ் பெற்ற நடிகர்களுள் சிலராகும். இவரது படங்களில் பல இவரது சொந்த நாடான சுவீடனின் நிலத்தோற்றப் பின்னணியில் எடுக்கப்பட்டவை. இவருடைய படங்களின் கருக்கள் பெரும்பாலும், ஊக்கக்குறைவு, இறப்பு, நோய், துரோகம், பைத்தியம் போன்றவற்றுடன் தொடர்பானவை. பேர்க்மன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தாலும், 1976 ஆம் ஆண்டில் வருமானவரி ஏய்ப்பு தொடர்பிலான குற்றவியல் விசாரணைகளினால் இவரது தொழில் பாதிப்புக்குள்ளானது. அக்காலத்தில், நிலுவையில் இருந்த படத்தயாரிப்பு வேலைகளைக் கைவிட்டதுடன், தனது கலைக் கூடத்தையும் மூடிவிட்டு எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் மறைந்து வாழ்ந்தார். இங்மார் போர்ஜ்மன், சுவீடனில் உள்ள உப்சலாவில் பிறந்தார். தாயார் கரீன், தந்தையார் எரிக் பெர்க்மன். எரிக், லூதரன் மத குரு பின்னாளில் சுவீடன் அரசரின் மதகுருவாக இருந்தார். இங்மார், சமயத் தொடர்பான வடிவங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் நடுவில் வளர்ந்தார். தந்தையார் எரிக், ஒரு பழமைவாதியாகவும், தீவிரமான வலதுசாரி அரசியல் கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்ததுடன், ஒரு கடும்போக்குக் கொண்ட தந்தையாகவும் இருந்தார். படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுதல் போன்றவற்றுக்காகத் தான் இருட்டறைகளில் பூட்டி வைக்கப்பட்டதாக இங்மார் கூறியுள்ளார். இங்மார் பேர்ஜ்மன் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார் முதல் நான்கு திருமணங்கள் விவாகரத்து முடிவடைந்தன. கடைசியாக அவரது மனைவி இங்க்ரிட் 1995 ஆம் ஆண்டில் வயிற்று புற்றுநோய் காரணமாக 65 வயதில் இறந்தார். அவருடைய திருமணங்களை தவிர, நடிகைகள் ஹாரியட் ஆண்டெர்சன் (1952-55), பிபி ஆண்டெர்சன் (1955-59), மற்றும் லிவ் உல்மான் (1965-70) ஆகியோருடன் பெர்க்மேன் காதல் உறவுகளைக் கொண்டிருந்தார். லிவ் உல்மான்னுடன் எழுத்தாளர் லின் உல்மேனின் தந்தை ஆவார். எல்லாவற்றிலும், பேர்ஜ்மன்னுக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தனர், இவர்களில் ஒருவர் அவரை முன்னிலைப்படுத்தினார். இறுதியில் பேர்ஜ்மன், லிவ் உல்மான்னைத் தவிர எல்லா தாய்மார்களையும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது கடைசி மனைவியான இங்க்ரிட் வான் ரோஸனுடனான திருமணத்திற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்களது மகள் பிறந்தார். பேர்ஜ்மேனின் திரைப்பட வாழ்க்கை 1941 ஆம் ஆண்டில் திரைக்கதை மறுபதிவு செய்தல் மூலம் தொடங்கியது. ஆனால் அவரது முதல் பெரிய சாதனை 1944 ஆம் ஆண்டில் அல்ஃப் ஸ்ஜ்பெர்க் இயக்கிய டார்மெண்ட் (Torment (a.k.a. Frenzy) என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதாகும். திரைக்கதை எழுதுவதுடன், அவர் படத்தின் உதவி இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். அவரது இரண்டாவது சுயசரிதை புத்தகமான "“திரைப்படத்தில் என் வாழ்க்கையில்”" பேர்ஜ்மேன் படப்பிடிப்பில் தனது இயக்குனர் அறிமுகம் குறித்தும் விவரிக்கிறார் நியூ யார்க் டைம்ஸின் டெர்ரென்ஸ் ராஃபர்டி 1960 கள் முழுவதும் பேர்ஜ்மன் பற்றி எழுதினார். "திரைப்படங்களின் ஆழமான கடைசி வார்த்தைகள் அழகானதாக கருதப்பட்டது, அவரது ஒவ்வொரு படைப்புகளும் நுணுக்கமான விவகாரம் பற்றிக் கூறி பகுப்பாய்வு செய்யப்பட்டது, அதன் அடையாளத்தைப் பற்றிய தனித்துவமான விவாதங்களில் விரிவுபடுத்தப்பட்டது. நவீன உலகில் கலைஞரின் தலைவிதி மற்றும் பல படத்தின் தன்மையால் நிர்ணயம் செய்யப்பட்டது. பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பேர்ஜ்மனை பாராட்டியுள்ளனர், மேலும் சிலர் அவரது படைப்புகளின் செல்வாக்கினை மேற்கோளிட்டுள்ளனர்: டர்கோவ்ஸ்கி எனக்கு சிறந்த இயக்குனர்” என்று குறிப்பிடுகிறார் எரித மின்னஞ்சல் எரித மின்னஞ்சல் (Email Spam) என்பது ஒரே மின்னஞ்சலை பெருந்தொகையானோருக்கு, அவர்கள் கேட்காமலேயே பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் அனுமதியின்றி அனுப்பப்படும் மின்னஞ்சல் ஆகும். எரித மின்னஞ்சல்கள் தேவையற்ற சுமையை இணையத்தில் விடுவதால், இணையப் போக்குவரத்து கூடி பண விரயம் ஏற்படுகிறது. தனிநபர்களுக்கும் எரித மின்னஞ்சல்கள் ஒரு சிலவற்றையாவது படிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகள் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். ஜேம்ஸ் ஜோய்ஸ் ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ் ("James Joyce") என்னும் முழுப்பெயர் கொண்ட ஜேம்ஸ் ஜோய்ஸ் அல்லது ஜேம்ஸ் ஜாய்ஸ் (2 பெப்ரவரி 1882 – 13 ஜனவரி 1941), ஒரு புலம்பெயர்ந்த ஐரிய எழுத்தாளர் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டில் மிகச் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவர் எழுதிய "உலிசெஸ்" (1922), அதைத் தொடர்ந்து வந்ததும் சர்ச்சைக்கு உள்ளானதுமான "பினகன்ஸ் வேக்" (1939), "டப்ளினர்ஸ்" என்னும் சிறுகதைத் தொகுப்பு (1914), ஒரு அரை குறைத் தன்கதையான "இளைஞனாக ஒரு கலைஞனின் வடிவம்" "(A Portrait of the Artist as a Young Man - 1916)" போன்றவற்றின் மூலம் இவருக்குப் பரவலான புகழ் கிடைத்தது. வளர்ந்த நிலையில் தனது வாழ்வின் பெரும் பகுதியை அயர்லாந்துக்கு வெளியிலேயே கழித்த போதும், ஜோய்சின் உளவியல் மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்தும் அவரது சொந்த நகரான டப்ளினிலேயே வேர்விட்டிருந்தன. இவரது கதைகளின் களங்களையும், கருப்பொருள்களையும் டப்ளினே அவருக்கு வழங்கியது. சொந்த இடத்துக்கு அவர் கொடுத்த நுணுக்கமான கவனம், தானாகவே நாடு கடந்து வாழ்ந்தமை, ஐரோப்பா முழுவதிலும், சிறப்பாகப் பாரிசில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்பன அவரை, ஒரு உலகம் தழுவியவராகவும், அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தியவராகவும் ஒரு முரண்பட்ட தோற்றத்தில் காட்டுகின்றன. 1882 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 இல் அயர்லாந்தின் டப்ளினில் ரத்காரில் ஜோய்ஸ் பிறந்தார். ஜாய்ஸின் தந்தை ஜான் ஸ்டானிஸ்லாஸ் ஜோய்ஸ் மற்றும் அவரது தாயார் மேரி ஜேன் "மே" முர்ரே ஆவார். அவர் பத்து உயிர் பிழைத்திருக்கும் உடன்பிறப்புகளில் இவரே மூத்தவர். இரண்டு பேர் டைபாய்டு காய்ச்சலால் இறந்தனர். 1882, பிப்ரவரி 5 ஆம் தேதி ரென்னன் ஜான் ஓ'முல்லாயால் தெரென்னூரில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள கத்தோலிக்க சர்ச்சின் சடங்குகளின்படி ஜேம்ஸ் ஜாய்ஸ் ஞானஸ்நானம் பெற்றார். ஜோய்ஸின் ஞானப்பெற்றோர் பிலிப் மற்றும் எல்லென் மெக்கன் ஆவர். அவரது தந்தையின் குடும்பம் கவுண்டி கார்க்கில் உள்ள ஃபெர்மோயில் இருந்து வந்தவராவர். மேலும் அவர்கள் சிறிய அளவில் உப்பு மற்றும் சுண்ணாம்பு பணிகளை கொண்டிருந்தனர். அவரது தந்தை மற்றும் தந்தை வழி தாத்தா இருவரும் செல்வந்த குடும்பங்களில் திருமணம் செய்தனர். குடும்பத்தின் மூதாதையர் கன்னமெராவில் இருந்து வந்த சேன் மோர் சீயாகே (1680) ஆவர். 1887 ஆம் ஆண்டில், அவரது தந்தை டப்ளின் கார்ப்பரேஷனால் மதிப்பிடப்பட்டது. குடும்பம் பின்னர் டப்ளினில் இருந்து 12 மைல் (19 கிமீ) பிரெயில் நகரின் நாகரீகமான சிறு நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோய்ஸ் ஒரு நாயால் தாக்கப்பட்டார். அதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதும் நாய் பயத்திற்கு (cynophobia) வழிவகுத்தது. அவர் இடி மின்னல் கண்டு பீதியடையும் அஸ்ட்ராபொபியாவில் (astraphobia) பாதிக்கப்பட்டார். ஒரு மூடநம்பிக்கை உடைய அத்தையால் இடி என்பது கடவுளுடைய கோபத்திற்கான ஓர் அறிகுறி என கூறப்பட்டதால் இப்பயம் ஏற்ப்பட்டது . 1891 இல் சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னலின் மரணத்தின் மீது ஜோய்ஸ் ஒரு கவிதையை எழுதினார். அவரது தந்தை கத்தோலிக்க தேவாலயத்தில் பர்னால் நடத்தப்பட்ட விதம், ஐரிஷ் ஹோம் ரூல் கட்சி மற்றும் பிரிட்டிஷ் லிபரல் கட்சி ஆகியவற்றின் அயர்லாந்திற்கான குடியாட்சியை பாதுகாப்பதில் தோல்வி ஆகியவற்றால் கோபமடைந்தார் . ஐரிஷ் கட்சி தலைமைப் பதவியிலிருந்து பார்னெல் நீக்கப்பட்டார். ஆனால் வத்திக்கான் பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் குடியாட்சியைத் தடுக்க கூட்டு வைத்த விவகாரம் இளம் ஜோய்ஸிற்கு ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மூத்த ஜாய்ஸ் கவிதையை அச்சிட்டு வத்திக்கான் நூலகத்திற்கு ஒரு பகுதியை அனுப்பினார். அதே ஆண்டு நவம்பரில் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஸ்டூப்ஸ் 'கெஜட் (திவால்நிலை வெளியீட்டாளர்) இல் பணிபுரிந்தார் பின்னர் வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டார். 1893 ஆம் ஆண்டில், ஜான் ஜாய்ஸ் ஒரு ஓய்வூதியத்துடன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவரது குடும்பத்தின் சரிவுக்கும் வறுமையில் தள்ளப்பட்டதற்கும் முக்கியமாக அவரது குடிப்பழக்கம் மற்றும் நிதி மோசடி காரணமாக ஏற்பட்டது. ஜோய்ஸ் 1888 ஆம் ஆண்டில் கவுண்டி கில்டரே அருகிலுள்ள கவுனில் இயேசு சபை தங்குமிடப் பள்ளியான க்ளொங்கோவ்ஸ் உட் கல்லூரியில் தனது தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். ஆனால் தனது தந்தையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் 1892 ஆம் ஆண்டில் பள்ளியிலிருந்து விலகினார். ஜாய்ஸ் பின்னர் டூல்பின், வடக்கு ரிச்மண்ட் தெருவில் கிரிஸ்டன் பிரதர்ஸ் ஓ'கனெல் பள்ளியில் வீட்டிலிருந்தே படித்தார். அவர் 1893 ஆம் ஆண்டில் ஜெஸ்யூட்ஸின் டப்ளின் பள்ளியில் பெல்டெரெர் கல்லூரியில் இடம் பெற்றார். அவரது அப்பா மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு இயேசு சபை பாதிரியாருடன் பழக்கம் காரணமாக ஜாய்ஸ் பெலவெரெர் கலந்து கொள்ள கட்டணம் குறைப்பு வழங்கப்பட்டது. 1895 ஆம் ஆண்டில், 13 வயதில் ஜாய்ஸ், பெல்டெரெரில் உள்ள அவரது தோழர்களால் அவர் லேடி என்ற கிறித்தவச் சமயச் சார்புடைய தோழமைக் கூட்டுறவுக் குழுமத்தில் இணைவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாமஸ் அக்குவைனஸின் தத்துவங்கள் அவரது வாழ்நாள் முழுவதும் வலுவான செல்வாக்கை கொண்டிருந்தன. ஜோய்ஸ் 1898 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டப்ளின் பல்கலைக்கழக கல்லூரியில் (UCD) சேர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழி ஆகியவற்றைப் படித்தார். அவர் நகரின் நாடக மற்றும் இலக்கிய வட்டாரச் செயல்பாடுகளில் இறங்கினார். 1900 ஆம் ஆண்டில் ஹென்ரிக் இப்சனின் "“வென் வி டெட் அவேக்கன்”" When We Dead Awaken என்ற நூலின் அவரது பாராட்டுப் பகுப்பாய்வு இதழ் ஒன்றில் விமர்சனம் வெளியிடப்பட்டது. இது அவரது முதல் வெளியீடாக இருந்தது, நார்வே நாட்டைச் சேர்ந்த ரசிகரிடமிருந்து இப்சென்னுக்கு வந்ததது பின்னர் அவர் நாடகவாதிகளிடமிருந்து நன்றி கடிதம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் ஜாய்ஸ் பல கட்டுரைகளையும், குறைந்தபட்சம் இரண்டு நாடகங்களையும் எழுதினார். டப்ளின் பல்கலைக்கழக கல்லூரியில் அவருடைய நண்பர்கள் ஜாய்ஸின் படைப்புகளில் கதாபாத்திரங்களாகத் தோன்றினர். அவருடைய நெருங்கிய சக ஊழியர்களில் தலைமுறை தலைவர்கள், குறிப்பாக டாம் கெட்டி, பிரான்சிஸ் ஷீஹி-ஸ்கிஃபிங்டன் மற்றும் ஆலிவர் செயின்ட் ஜான் கோகார்தி ஆகியோர் அடங்குவர்.ஜாய்ஸ், நவம்பர் 1901 இல், தனது பத்திரிகையான ஐக்கிய ஐரிட்மன் பத்திரிகையில் ஆர்தர் க்ரிஃபித் என்பவரால் ஐரிஷ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஜோய்ஸ் ஐரிஷ் இலக்கிய தியேட்டரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார், அவருடைய கல்லூரி இதழ் அதை அச்சிட மறுத்துவிட்டது. ஜோய்ஸ் அதை அச்சிட்டு விநியோகித்தார். க்ரிஃபித் தன்னை மாணவர் ஜேம்ஸ் ஜாய்ஸின் தணிக்கைக்கு ஒரு பகுதியை எழுதினார். 1901 ஆம் ஆண்டில், அயர்லாந்தின் தேசிய கணக்கெடுப்பு ஜேம்ஸ் ஜாய்ஸை ஆங்கில மற்றும் ஐரிஷ் மொழி பேசும் அறிஞராக அவரது தாய் மற்றும் தந்தை, ஆறு சகோதரிகள் மற்றும் ராயல் டெர்ரேஸில் உள்ள மூன்று சகோதரர்களுடன் (இப்போது இன்வெர்ன்ஸ் ரோட்), க்ளோன்டார்ஃப், டப்ளினில் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 11, 1941 அன்று, சூரிச்சில் உள்ள மருத்துவமனையில் வயிற்றுப்புண் துளை அறுவைசிகிச்சைக்காக ஜோய்ஸ் அனுமதிக்கப்பட்டார்.அவர் அடுத்த நாள் கோமாவில் விழுந்தார். ஜனவரி 13, 1941 அன்று 2 மணியளவில் விழித்திருந்தார், மறுபடியும் நனவு இழக்கும் முன்பு செவிலியரிடம் தனது மனைவி மற்றும் மகனை அழைத்து வருமாறு கோரினார். அவர் 15 நிமிடங்கள் கழித்து இறந்துவிட்டார், அவரது 59 வது பிறந்தநாளுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். அவரது உடல் ஜூரிச்சில் உள்ள ஃப்ளந்தர்ன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.ஒரு சாதாரண கல்லறையில் முதலில் புதைக்கப்பட்ட அவர் 1966 ஆம் ஆண்டில் அமெரிக்கன் கலைஞரான மில்டன் ஹேபால்ட் அருகே இவரது சித்திரப்படுத்தப்பட்ட படம் மற்றும் அலங்காரத்துடன், மிக முக்கியமான "கௌரவமான கல்லறைக்கு" மாற்றப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இரண்டு மூத்த ஐரிஷ் தூதர்கள் இருந்தபோதிலும், ஜாய்ஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை . அயர்லாந்தின் அரசாங்கம் பின்னர் ஜாய்ஸின் எஞ்சியுள்ள இடங்களைத் திரும்பப் பெற அனுமதிப்பதற்கான அவரது மனைவி நோராவின் கோரிக்கையை நிராகரித்தது. 1931 ல் அவர் திருமணம் செய்து கொண்ட நோரா, 10 வருடங்கள் பின்னர் உயிரோடு இருந்தார். அவர், 1976 இல் இறந்த அவர்களின் மகன் ஜியோர்ஜியோவைப் போலவே அவரும் ஜோய்ஸ் கல்லறையின் பக்கத்தில் புதைக்கப்பட்டார் ஹோமர், அரிஸ்ட்டாட்டில், டான்டே அலிகியேரி, குஸ்தாவ் ஃபிளவ்பர்ட், பெர்சி பைஷ் ஷெல்லி, பென் ஜான்சன், தாமஸ் அக்குவைனஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான் மில்ட்டன், பிரீட்ரிக் நீட்சே, எட்வார்டு டுஜாவின், ஹெண்ட்ரிக் இப்சன், ஜியோர்டானோ புரூனோ, ஜியாம்பட்ஸ்டா விகோ, அன்டன் செக்கோவ், லியோ டால்ஸ்டாய், ஆஸ்கார் வைல்ட், டபிள்யு. பி. யீட்ஸ் சாமுவேல் பக்கட், ஹோர்ஹே லூயிஸ் போர்கேஸ், பிளான் ஓ பிரெயின், பவுல் அஸ்தர், சல்மான் ருஷ்டி, உம்பெர்த்தோ எக்கோ, வெர்ஜீனியா வூல்ஃப், டான் டெலிலோ, அந்தோனி பர்கஸ்,ஜோசப் கேம்பெல், வில்லியம் பால்க்னர், தாமஸ் பைச்சன், எட்கா ஓ பிரெயின், மார்டின் அமிஸ், ஜெமி ஓ நெயில், ஜார்ஜ் ஆர்வெல், பிரெட் ஸ்டன் எலிஸ், பிரண்டான் பேகன், ராபர்ட் ஆண்டன் வில்சன், மார்டின் ஓ கேதைன், ஜான் உப்டைக், சில்வியா பிளாத், ஜாக்குவஸ் டெரிடா, ஜாக்குவஸ் லகான். ஜோசே சரமாகூ ஜோசே டி சூசா சரமாகூ ("José Saramago" பி. நவம்பர் 16, 1922 - இ. ஜூன் 18, 2010), நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளரும், நாடகாசிரியரும், பத்திரிகையாளரும் ஆவார். உருவகத்தன்மை கொண்ட இவரது சில ஆக்கங்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கு மறைமுகமான நோக்கைக் கொடுப்பதுடன், அதிகாரபூர்வமாக வழங்கப்படும் செய்திகளுக்கு மாறாக மனிதநேயம் சார்ந்த நோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சரமாகூவுக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, லிஸ்பனில், பிரீட்டாஸ் மாகல்ஹேயஸ் போன்ற வேறும் சிலருடன் சேர்ந்து "பண்பாட்டுப் பதுகாப்புக்கான தேசிய முன்னணி" என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். ஸ்பெயினின் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேயில் வாழ்ந்து வந்த இவர் ஜூன் 2010ல் மரணமடைந்தார். சரமாகூ, போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து வடகிழக்கில் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரீபாட்டேஜோ மாகாணத்தில் உள்ள சிறிய ஊரான அசின்ஹாகாவில் பிறந்தார். இவரது குடும்பம் நிலமற்ற குடியானவக் குடும்பம். இவர் தந்தையார் ஜோசே டி சோசா (José de Sousa), தாயார் மரியா டி பியடாடே (Maria de Piedade). "சரமாகூ" என்பது ஒரு காட்டு மூலிகைச் செடியைக் குறிக்கும் ஒரு சொல். இது இவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். ஆனால் தவறுதலாக பிறப்புப் பதிவின்போது இவர் பெயருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1924ல் சரமாகூவின் குடும்பம் லிஸ்பனுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே இவரது தந்தை காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர்கள் தலைநகருக்குப் போன சில மாதங்களில் சரமாகூவின் அண்ணன் பிரான்சிஸ்கூ இறந்தார். சரமாகூ ஒரு சிறந்த மாணவனாக இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 வயதில் தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், தானுந்து பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி நாளேடு ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே பிள்ளை 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். சரமாகூ தனது ஐம்பது வயதின் நடுப்பகுதியில் இருந்தபோதே அவருக்கு உலக அளவிலான கவனம் கிடைத்தது. இவரது வெளியீடான "பால்தாசர் அண்ட் பிளிமுண்டா" என்னும் நூலே இவருக்கு உலக அளவில் வாசகர்களை உருவாக்கியது. இந்தப் புதினத்துக்கு போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது. சரமாகூ 1969 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயப் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இவர் ஒரு இறைமறுப்பாளரும் ஆவார். இவரது கருத்துக்கள், சிறப்பாக, "யேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி நற்செய்தி" என்னும் அவரது நூல் வெளிவந்த பின்னர், போர்த்துக்கலில் பெருமளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. நாட்டின் கத்தோலிக்க சமூகத்தினர் சரமாகூ யேசுவைத் தவறு செய்யக்கூடிய மனிதனாகக் காட்டியதையிட்டுப் பெரும் கோபமடைந்தனர். போர்த்துக்கலின் பழமைவாத அரசு, இவரது நூல் கத்தோலிக்கரைப் புண்படுத்துகிறது என்று கூறி அதனை ஐரோப்பிய இலக்கியப் பரிசுக்குப் போட்டியிடுவதைத் தடை செய்யும் என்பதனால், அவரும் மனைவியும் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேக்கு இடம் பெயர்ந்தனர். லெபனானிலும், பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமும் இவர் சர்ச்சையை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டில், எல் பாரிஸ் என்னும் அனைத்துலக ஸ்பானிய மொழிப் பத்திரிகையில், யூதாயிசத்தின் காரணமாகவே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொடுமைப் படுத்துகிறது என்று எழுதினார். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லெபனான் போரின் போது, இவர், தாரிக் அலி, ஜான் பர்கர், நோம் சொம்ஸ்கி, எடுவர்டோ கலியானோ, நவோமி கிளயேன், ஹரோல்ட் பின்ட்டர், அருந்ததி ராய், ஹோவார்ட் சின் ஆகியோடுடன் சேர்ந்து அறிக்கையொன்றில் கையெழுத்து இட்டார். இதில் அவர்கள், இஸ்ரேலின் நீண்டகால இராணுவ, பொருளாதார, புவியியல் நடவடிக்கைகளின் அரசியல் நோக்கம் பாலஸ்தீனத் தேசத்தை அழிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழ் சோர்ஸ் தமிழ் சோர்ஸ் என்பது கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். சோர்ஸ் என்பது Source என்ற ஆங்கில சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகும். தமிழில் ஊற்று அல்லது மூலம் என்று பொருள் தருகிறது. தரமான தாளில் அச்சிடப்படும் இந்த இதழ் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இதில் அரசியல், போர் நிலவரங்கள், தகவல் கட்டுரைகள், சினிமா, ராசி பலன், "தமிழன் பதில்கள்" என பல தரப்பட்ட ஆக்கங்கள் வெளிவருகின்றன. ஒரு பேப்பர் ஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும். இது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வெளியிடப்படுகிறது. இந்த இதழ் அதன் நகைச்சுவை கலந்த ஆக்கங்களுக்காக அறியப்பட்டது. இதன் பல கட்டுரைகளில் ஈழத்து பேச்சு நடை பயன்படுத்தப்படுவதும் ஒரு சிறப்பு ஆகும். ஒரு பேப்பர் விளாடிமிர் நபோக்கோவ் விளாடிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ் ("Vladimir Vladimirovich Nabokov", ரஷ்ய மொழி: Влади́мир Влади́мирович Набо́ков, – ஜூலை 2, 1977), ஒரு பன்மொழித் திறமை கொண்ட ரஷ்ய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் ரஷ்ய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் பூச்சியியலிலும் பங்களிப்புச் செய்துள்ளதுடன், சதுரங்கப் புதிர்களிலும் ஆர்வம் காட்டினார். "லொலித்தா" (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. நபோக்கோவ் 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தனது பெற்றோரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை விளாடிமிர் டிமிட்ரியேவிச் நபோக்கோவ் ஒரு தாராண்மைவாதச் சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். தாயார் பெயர் எலெனா இவானோவ்னா ரூக்காவிஷ்விகோவா. இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த செல்வச் செழிப்புமிக்க, பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. இவர் தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் நகருக்குத் தெற்கே சிவர்ஸ்காயா என்னும் இடத்திற்கு அருகில் இருந்த "வியாரா" என்னும் நாட்டுப்புற பண்ணையில் கழித்தார். "முழுமையானது" என அவராலேயே விவரிக்கப்பட்ட நபோவோவின் பிள்ளைப் பருவம், பல வழிகளில் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகியவற்றைப் பேசி வந்தனர். இதனால், நபோக்கோவ் சிறுவயது முதலே மும்மொழியாளராக இருந்தார். நபோக்கோவ் ரஷ்ய மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்கும் முன்னரே ஆங்கிலத்தை எழுத வாசிக்கக் கூடியவராக இருந்தார். தன்வரலாற்று நினைவுகளை நூலாக எழுதிய நபோக்கோவ் தனது சலுகைகள் கொண்ட இளமைக்கால விவரங்கள் பலவற்றை விரிவாக விளக்கியுள்ளார். தனது இளமைக் காலத்தை மிகத் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய அவரது திறமை, அவர் நிரந்தரமாக நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் உதவியது. அத்துடன் அவரது முதல் நூலான "மேரி" இலிருந்து பிற்கால நூல்கள் வரையிலான ஆக்கங்களுக்கான கருப்பொருளை வழங்குவதிலும் அவருக்கு இது உதவியாக அமைந்தது. இவரது குடும்பம் பெயரளவில் மரபுவாதக் குடும்பமானாலும், அவர்களுக்குச் மதத்தில் பெருமளவு ஆர்வம் இருந்ததில்லை. 1916 ஆம் ஆண்டில் இவருடைய உறவினர் மூலமாக இவருக்கு, வியாராவுக்கு அண்மையில் இருந்த ரொஸ்டெஸ்ட்வீனோ எஸ்டேட் என்னும் சொத்து கிடைத்தது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது அதை அவர் இழந்தார். இதுவே அவர் தனது வாழ்நாளில் சொந்தமாக வைத்திருந்த ஒரேயொரு வீடு ஆகும். 1917 பெப்ரவரிப் புரட்சியின் பின்னர், விளாடிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் ரஷ்யாவின் இடைக்கால அரசில் ஒரு செயலாளராக இருந்தார். இதனால், 1917 அக்டோபரில் ஏற்பட்ட புரட்சியின் போது நகரை விட்டுக் கிரீமியாவுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. அங்கே அவர்கள் சிலகாலம் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு 1918ல் லிவாடியாவுக்குச் சென்றனர். கிரீமியாவில், அங்கிருந்த இடைக்கால அரசில், விளாடிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் நீதித்துறைக்கான அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். 1918ல் ஜேர்மன் நாட்டுப் படைகள் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வெண்படைகள் தோல்வியைத் தழுவியதும், நபோக்கோவ் குடும்பத்தினர் நாடுகடந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றனர். 1919 ஏப்ரல் 2 ஆம் தேதி புறப்பட்ட கடைசிக் கப்பலில், நபோக்கோவ் குடும்பத்தினர் செவாஸ்ட்டோப்போலை விட்டுக் கிளம்பினர். அவர்கள் சிலகாலம் இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது, இளைய நபோக்கோவ் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் சேர்ந்து, சிலாவிய மொழிகளையும், ரோமானிய மொழிகளையும் பயின்றார். கேம்பிரிட்ஜில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவர் பிற்காலத்தில் "குளோரி" என்னும் புதினத்தை எழுதத் துணை புரிந்தன. 1920ல் நபோக்கோவ் குடும்பத்தினர் இங்கிலாந்தை விட்டு பெர்லினுக்குச் சென்றனர். அங்கே நபோக்கோவின் தந்தை "ருல்" எனப்படும் செய்தி இதழைத் தொடங்கினார். நபோக்கோவ் இரண்டு ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்தில் படிப்பை முடித்துக் கொண்டபின் பெர்லினில் தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார். 1922 மார்ச்சில் நபோக்கோவின் தந்தை பெர்லினில் ரஷ்ய முடியாட்சிவாதிகளால் கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து இயங்கிய அரசியல் சட்ட சனநாயகக் கட்சியின் தலைவரான பாவெல் மில்யூக்கோவ் என்பவர் கொல்லப்படுவதைத் தடுக்க அவர் போராடியபோது இது நிகழ்ந்தது. இந்தத் தவறுதலான, வன்முறை நிகழ்வு நபோக்கோவின் கதைகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இவர் கதைகளில் கதைமாந்தர் தவறுதலாகக் கொல்லப்படும் நிகழ்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக "வெளிறிய தீ" "(Pale Fire)" என்னும் அவரது புதினத்தில் வரும் கதைமாந்தரான "கவிஞர் ஷேட்" "(poet Shade)" இன்னொருவருக்கு இலக்கு வைத்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போகிறார். தந்தையார் இறந்த சில காலங்களுக்குப் பின் நபோக்கோவின் தாயும், தங்கையும் பிராக்கிற்கு இடம் மாறினர். ஆனால், நபோக்கோவ் பெர்லினிலேயே தங்கிவிட்டார். அங்கே, புலம்பெயர்ந்த சமூகத்தினரிடையே ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் பெயர்பெற்ற இவர், வி. சிரின் என்னும் புனைபெயரில் எழுதிவந்தார். இவர் மொழிகளைக் கற்பித்து வந்ததுடன், டென்னிஸ், மற்போர் ஆகியவற்றிலும் பயிற்சி கொடுத்து வந்தார். 1922ல் நபோக்கோவுக்கு, சுவெட்லானா சீவேர்ட் ("Svetlana Siewert") என்பவரை மணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. எனினும் 1923 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், நபோக்கோவுக்கு நிலையான தொழில் எதுவும் இல்லாததைக் காரணம் காட்டி பெண்ணின் குடும்பத்தினர் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டனர். 1923 ஆம் ஆண்டு மே மாதத்தில் வேரா ஈவ்ஸ்யேவ்னா சுலோனிம் ("Véra Evseyevna Slonim") என்பவரை ஒரு நிகழ்வில் சந்தித்த நபோக்கோவ் அவரை 1925 ஏப்ரலில் திருமணம் செய்தார். இவர்களது ஒரே மகன் திமீத்ரி 1934 ஆண்டு பிறந்தார். 1936 ஆம் ஆண்டில், செமிட்டிய எதிப்புச் சூழல் காரணமாக வேரா தொழிலை இழந்தார். அத்துடன், நபோக்கோவின் தந்தையைக் கொலை செய்தவர் புலம்பெயர்ந்த சமூகத்தின் இரண்டாம் தலைமைப் பதவியில் அமர்ந்ததனால், நபோக்கோவ் ஆங்கிலம் பேசும் உலகில் வேலை தேடினார். 1937ல் நபோக்கோவ் ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்குச் சென்றார். அவரது குடும்பத்தினரும் அவரைத் தொடர்ந்து சென்று பாரிசில் வாழ்ந்தனர். 1940 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் நாட்டுப் படைகள் பிரான்சுக்குள் முன்னேறியபோது அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். நபோக்கோ குடும்பத்தினர் அமெரிக்காவில், மான்ஹட்டனில் தங்கினர். நபோக்கோவ் இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகத்தில் பணிக்குச் சேர்ந்தார். எட்மண்ட் வில்சன் என்பவரைச் சந்தித்து அவரது நண்பரானார். இவரே நபோக்கோவின் ஆக்கங்களை அமெரிக்கப் பத்திரிகையாசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நபோக்கோவ் 1941 ஆம் ஆண்டு, வெலெஸ்லிக் கல்லூரியில் ஒப்பீட்டு இலக்கிய விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவருக்காகவே உருவாக்கப்பட்ட இப்பதவி, தேவையான வருமானத்தை வழங்கியதுடன், எழுதுவதற்குத் தேவையான நேரத்தையும் கொடுத்தது. வெலெஸ்லிக் கல்லூரியில் ரஷ்ய மொழிப் பிரிவை உருவாக்கியவர் இவரே. அங்கே 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய ரஷ்ய எழுத்தாளர்கள் பற்றி இவர் ஆற்றிய விரிவுரைகள் பெரிதும் போற்றப்பட்டவை. 1941-42 காலப்பகுதியில் நபோக்கோவ் குடும்பத்தினர் மசசூசெட்சிலுள்ள வெலெஸ்லியில் வாழ்ந்தனர். பின்னர் 1942 செப்டெம்பரில் மசசூசெட்சின் கேம்பிரிட்ஜுக்கு இடம் மாறிய இவர்கள் 1948 ஜூன் வரை அங்கேயே இருந்தனர். ஐக்கிய அமெரிக்கா முழுவதிலும் ஒரு விரிவுரைப் பயணம் சென்ற நபோக்கோவ், 1944-45 கல்வியாண்டில் ரஷ்ய மொழி விரிவுரையாளராக மீண்டும் வெலெஸ்லிக்கு வந்தார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்துகொண்ட அவர், 1947-48 கல்வியாண்டு வரை அக்கல்லூரியின் ரஷ்ய மொழிப் பிரிவின் ஒரே உறுப்பினராக ரஷ்ய மொழி, ரஷ்ய இலக்கியம் ஆகியவற்றில் பாடநெறிகளை நடத்தி வந்தார். இவரது பாடம் நடத்தும் முறைக்காகவும், போர்க் காலத்தில் ரஷ்யா தொடர்பான எல்லா விடயங்களிலும் பொதுவாக இருந்த ஆர்வம் காரணமாகவும் இவரது விரிவுரைகள் பெரிதும் விரும்பப்பட்டன. அதே வேளை ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின் ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியகத்தில் பூச்சியகத்தின் ("lepidoptery") பொறுப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். மொரிஸ் பிஷப் என்பவர் கொடுத்த ஊக்கம் காரணமாக, நபோக்கோவ் 1948ல் வெலெஸ்லியை விட்டு விலகி ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக கோர்னல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஒவ்வொரு கோடையிலும் பட்டாம்பூச்சி சேகரிப்பை மேற்கொள்ளும் நபோக்கோவ். அவ்வாறான ஒரு பயணத்தில் மேற்கு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோதே தனது "லொலித்தா" என்னும் புதினத்தை எழுதினார். நபோக்கொவ் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொள்ளவில்லை. அவரது மனைவியான வேராவே அவரது வண்டியை ஓட்டுவது வழக்கம். முற்றுப் பெறாத "லொலித்தா"வின் பிரதிகளை நபோக்கோவ் எரித்துவிட முற்பட்டபோது அதனைத் தடுத்தவர் வேராவே எனப்படுகின்றது. தனது வாழ்க்கையில் சந்தித்த பெண்களுள் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர் வேரா என நபோக்கோவ் குறிப்பிட்டார். 1953 ஜூனில், நபோக்கோவ் குடும்பத்துடன் ஒரிகனில் உள்ள ஆஷ்லாந்துக்கு வந்தார். அங்கே, தெற்கு ஒரிகன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் டெய்லர் என்பவரின் வீட்டை வாடகைக்குப் பெற்று வாழ்ந்தனர். அங்கிருந்தபடியே நபோக்கோவ் "லொலித்தா" புதினத்தை எழுதி முடித்து, "பெனின்" (Pnin) என்னும் அடுத்த புதினத்தையும் எழுதத் தொடங்கினார். பட்டாம்பூச்சிகள் பிடிப்பதற்காக அருகில் இருந்த மலைப்பகுதிகளில் அலைந்து திரிந்த அவர் "ஒரிகனில் எழுதிய வரிகள்" "(Lines Written in Oregon)" என்ற கவிதை ஒன்றையும் எழுதினார். 1953 அக்டோபர் முதலாம் தேதி நபோக்கோவும் அவரது குடும்பமும் நியூ யார்க்கிலுள்ள இத்தாக்காவுக்குச் சென்றனர். இவரது "லொலித்தா" புதினம் பொருளாதார வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்குச் சென்று அங்கே எழுதுவதற்காகவே நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு நபோக்கோவுக்குக் கிடைத்தது. 1961 அக்டோபரில், நபோக்கோவும், வேராவும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியுசில் உள்ள மாண்ட்ரியூ பலஸ் விடுதியில் தங்கினர். நபோக்கோவின் இறுதிக்காலம் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அங்கே இவர்களது ஆறாம் மாடி அறையிலிருந்து, தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன், பட்டாம்பூச்சி பிடிப்பதற்காக ஆல்ப்ஸ், கோர்சிக்கா, சிசிலி ஆகிய பகுதிகளுக்கும் பயணித்தார். 1976 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்படாத காய்ச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வெளியேறியவர், பின்னர் மீண்டும் 1977ல் அங்கே சேர்க்கப்பட்டார். அவ்வாண்டு ஜூலை 2ஆம் திகதி நபோக்கோவ் காலமானார். அவருடைய உடல் எரிக்கப்பட்டு, மாண்ட்ரியுவில் உள்ள கிளாரன்ஸ் இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இவர் இறந்தபோது "உண்மையான லோரா" "(The Original of Laura)" என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தார். மனைவி வேராவுக்கும், மகன் திமீத்ரிக்கும் நபோக்கோவின் இலக்கியச் சொத்துரிமை வழங்கப்பட்டிருந்தது. எழுதி முடிக்கப்படாத தனது கடைசிப் புதினத்தின் கையெழுத்துப் பிரதிகளை எரித்து விடுமாறு நபோக்கோவ் கூறியிருந்தும், அவரது கடைசி ஆக்கத்தை எரித்துவிட மனமில்லாமல் சுவிஸ் வங்கியின் காப்பறையில் அதனை வைத்துள்ளனர். இதன் சில பகுதிகள் நபோக்கோவ் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்குக் காட்டப்பட்டுள்ளன. நபோக்கோவின் இந்த இறுதிப் புதினம் வெளியிடப்படும் என திமீத்ரி 2008 ஏப்ரலில் அறிவித்தார். விளம்பரம் (இதழ்) விளம்பரம் கனடாவில் மாதம் இருமுறை வெளிவரும் தமிழ் இதழ் ஆகும். விளம்பரம் என்று பெயர் தாங்கி வந்தாலும் மற்ற பல இலவச பத்திரிகைகளை விட பல தரமான கட்டுரைகளை இது வெளியிடுகிறது. இவ்விதழ் 1991-ம் ஆண்டு மார்ச் முதல் திகதியில் இருந்து தொடர்ந்து வெளிவருகிறது. கனடா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களின் ஆக்கங்கள், அரசியல், அறிவியல், விளையாட்டு, மாணவர் பகுதி, திரைத்துறை போன்ற பல்வேறு துறைகளும் கனடிய வரி, வீடு மற்றும் அடமானம் குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. 2008 அசாம் குண்டுவெடிப்புகள் 2008 அசாம் குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். குவஹாத்தியிலும் புறநகரங்களிலும் வெடித்த குண்டுகளால் குறைந்தது 81 மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 470 மக்கள் படுகாயம் அடைந்தனர். மொத்தத்தில் 18 குண்டுகள் வெடித்தன. அசாம் வரலாற்றிலேயே நிகழ்ந்த தாக்குதல்களில் இதுவே மிகக் கடுமையானது. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, ஹூஜி, இந்திய முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளும் சந்தேகப்படுகின்றன. அக்டோபர் 2008இல் ஏழு மாநிலங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் இது மூன்றாவது; இதற்கு முன்னர் அகர்தலா மற்றும் இம்பால் நகரங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் ஏற்பட்டன. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும். 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது. சனவரி 2009 ஜனவரி 2009, 2009 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் ஜனவரி 14 இல் தொடங்கி பெப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. வடக்கு வாசல் வடக்கு வாசல் என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் இருந்து செப்டம்பர் 11, 2005 முதல் வெளிவரும் தமிழ் மாத இதழ். இதன் ஆசிரியராக யதார்த்தா கே. பென்னேஸ்வரன் இருந்து வருகிறார். வாழ்வியல், இசை, கதை, கவிதை, அஞ்சலி, அறிவுரை, மதிப்பீடு என பல்வேறு ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. ஆ. ப. செ. அப்துல் கலாம், ய. சு. ராஜன் போன்ற அறிவியலாளர்களின் கவனத்தையும் இந்த இதழ் பெற்றுள்ளது. ஆகுஸ்டஸ் மலை ஆகுஸ்டஸ் மலை தேசிய பூங்கா ("Mount Augustus National Park") மேற்கு ஆஸ்திரேலியா தலைநகர் பேர்த் நகரில் இருந்து 852 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இப்பூங்காவில் அமைந்துள்ள ஆகுஸ்டஸ் மலை உள்ளூர் பழங்குடி மக்களான வஜாரிகளினால் "பரிங்குரா" என அழைக்கப்படுகிறது. ஆகுஸ்டஸ் மலை கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்திலும், அல்லது அதனைச் சூழவுள்ள தரைப்பகுதியில் இருந்து 860 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 47.95 கிமீ². இம்மலை உலகின் மிகப்பெரிய ஒரே பாறையினாலான கற்பாறை எனக் கருதப்படுகிறது. ஆனாலும், ஆஸ்திரேலியாவின் உலூரு என்ற மலையும் இதற்கென உரிமை கோரி வருகிறது. 1858 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் இதன் உச்சியை "பிரான்சிஸ் தொமஸ் கிரெகரி" என்பவர் அடைந்தார். இவரே இம்மலையில் ஏறிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். இவரது சகோதரர் "சேர் ஆகுஸ்டஸ் சார்ல்ஸ் கிரெகரி" (1819-1905) என்பவரின் நினைவாக இம்மலைக்கு ஆகுஸ்டஸ் மலை என இவர் பெயரிட்டார். மோசன் மலை மோசன் மலை ("Mawson Peak") என்பது தெற்கு பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வெளிவாரிப் பிரதேசமான ஹேர்ட் தீவில் அமைந்துள்ளது. இதுவே ஆஸ்திரேலிய நாட்டின் அதிஉயர் மலையாகும். பிக் பென் மலைத்தொடரின் ஒரு பகுதியான இது ஒரு உயிர்ப்புள்ள எரிமலை ஆகும். 1929 ஆம் ஆண்டில் இத்தீவுக்குப் பயணம் மேற்கொண்ட சேர் டக்லஸ் மோசன் என்பவரின் நினைவாக இம்மலைக்கு மோசன் மலை எனப் பெயரிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் திருப்பூர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர் , அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வருவாய் வட்டங்களையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய வருவாய் வட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும், 13 ஊராட்சி ஒன்றியங்களும், 265 கிராம ஊராட்சிகளும், திருப்பூர் மாநகராட்சியும், 4 நகராட்சிகளும், 17 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், தாராபுரம், காங்கேயம், அவினாசி, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் என எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. 5,187 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருப்பூர் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 24,79,052 ஆகும். இதில் ஆண்கள் 12,46,159; பெண்கள் 12,32,893 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 29.11% கூடியுள்ளது. மக்கள்தொகை அடரத்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 478 பேர் வாழ்கின்றனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.68% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,41,351 ஆக உள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் 15,21,111 (61.36%) மக்கள் நகரப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் திருப்பூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனியன், ஜட்டி போன்ற பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியால் வெளிநாட்டு செலாவணி ஈட்டுகிறது. இம்மாவட்டத்தில் பாயும் அமராவதி ஆறு மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டங்களால் திருப்பூர் மாவட்டத்தின் சில வட்டங்கள் செழிப்புடன் விளங்குகிறது. உடுமலைப்பேட்டை வட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளது. இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 265 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. அவிநாசி அவிநாசியப்பர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. தாஸ்மான் கடல் தாஸ்மான் கடல் ("Tasman Sea") ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் (1250 மைல்கள்) குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் தாஸ்மானியாவையும் முதன் முறையாக அடைந்த முதலாவது ஐரோப்பியரான டச்சு நாடுகாண் பயணியான ஏபல் டாஸ்மான் நினைவாக இக்கடலுக்கு தாஸ்மான் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவருக்குப் பின்னர் பிரித்தானியக் கடற்படைக் கப்டன் ஜேம்ஸ் குக் 1770களில் தனது முதல் பசிபிக் பயணத்தின் போது இக்கடலில் பல தடவைகள் பயணித்தான். தாஸ்மான் கடலில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கார்பெண்டாரியா வளைகுடா கார்பெண்டாரியா வளைகுடா ("Gulf of Carpentaria") என்பது ஆஸ்திரேலியாவின் வடபகுதியின் மூன்று பக்கங்களை உள்ளடக்கிய பெரும் கடல் பகுதியாகும். இதன் வடக்கு எல்லையில் அரபூரா கடல் (ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினிக்கும் இடையில் உள்ள நீர்ப்பகுதி) உள்ளது. இவ்வளைகுடாவை அண்டியுள்ள நிலம் பொதுவாக சமதரையாகவும், தாழ்நிலையில் உள்ளதும் ஆகும். இதன் மேற்கே ஆர்ண்ஹெம் நிலம் மற்றும் வட மண்டலத்தின் உயர் முனையும் உள்ளது. கிழக்கே கேப் யோர்க் தீபகற்பம் அமைந்துள்ளது. இதன் காலநிலை பெரும்பாலும் சூடானதாகவும் அதிக ஈரப்பதன் உள்ளதாகவும் காணப்படும். ஆண்டுக்கு இரண்டு காலநிலைகளை மட்டுமே கொண்டுள்ளது. உலர் காலநிலை ஏப்ரல் முதல் நவம்பர் வரையும், ஈரக் காலநிலை டிசம்பர் முதல் மார்ச் வரை காணப்படும். பொதுவாக மழைக் காலம் இந்த மூன்று மாத காலத்திலேயே இடம்பெறுகிறது. இதனால் தாழ்நிலைப் பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் சூறாவளிகளும் இங்கு உருவெடுக்கின்றன. டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன் என்பவர் 1606 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கு கடற் பயணம் மேற்கொண்டார். ஏபல் டாஸ்மான் 1644 இல் இங்கு வந்தார். பின்னர் 1802 இலும், 1803 இலும் மத்தியூ பிலிண்டேர்ஸ் இங்கு வந்து போனார். பிரான்ஸ் காஃப்கா பிரான்ஸ் காஃப்கா ("Franz Kafka", 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும். "உருமாற்றம்" "(The Metamorphosis - 1915)" போன்ற இவரது கதைகளும், "வழக்கு" "(The Trial - 1925)", "கோட்டை" "(The Castle - 1926)" போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும். பிராண்ஸ் காஃப்காவின் தந்தையான ஹேர்மன் காஃப்கா (1852–1931), மிகப்பெரிய, தன்னலம் கொண்ட, அடக்கியாளும் தன்மை உள்ள ஒரு வணிகர் எனக் கூறப்படுகின்றது. காஃப்காவும் இவரை "வலிமை, உடல்நலம், உணவில் விருப்பம், உரத்த குரல், பேச்சு வன்மை, திருப்தி, முயற்சி, மனித இயல்பு பற்றிய அறிவு என்பன கொண்டவர்" என விவரித்துள்ளார். ஹேர்மனின் தந்தை ஜேக்கப் காஃப்கா, சடங்குகளுக்காகப் பிராணிகளை வெட்டுபவர். இவர்கள், தெற்கு பொஹேமியாவில் பிசெக்குக்கு அருகின் அமைந்துள்ள செக் மொழி பேசும் யூதர் ஊரான "ஓசெக்"கில் இருந்து பிராக்கில் குடியேறினர். சிலகாலம் இடத்துக்கிடம் செல்லும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணி புரிந்த ஹேர்மன் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நிறுவி நடத்திவந்தார். இவரிடம் 15 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். காஃப்காவின் தாய் ஜூலி (1856—1934), போடெபிராடியில் வடிப்புத் தொழில் நடத்திவந்த செல்வந்தரான ஜேக்கப் லேவி என்பவரின் மகள். ஜூலி தனது கணவரை விடக் கூடுதலாகப் படித்தும் இருந்தார். காஃப்கா அவரது பெற்றோரின் ஆறு பிள்ளைகளுள் மூத்தவர். இரண்டு தம்பிகளான ஜார்ஜும், ஹென்ரிக்கும் அவர்கள் முறையே 15 மாதம், ஆறு மாதம் வயதுகளை அடைந்தபோது இறந்துவிட்டனர். ஏனைய மூவரும் தங்கைகளான கப்ரியேல் (எல்லி) (1889–1941), வலரி (வல்லி) (1890–1942), ஆட்டிலி (ஆட்லா) (1891–1943) என்போர். வேலை நாட்களில் இவர்களது தந்தையும், தாயும் வீட்டில் இருப்பதில்லை. தாயார் தந்தைக்கு ஒரு நாளில் 12 மணிநேரம் வரை வணிகத்தில் உதவி செய்து வந்தார். இதனால் பிள்ளைகள் பெரும்பாலும் வேலையாட்களிடமே வளர்ந்தனர். தந்தையுடனான காஃப்காவின் உறவு நன்றாக இருக்கவில்லை என்பதை அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் இருந்து அறிய முடிகிறது. அக்கடிதங்களில், காஃப்கா, தனது தந்தை தன்னைச் சிறுவயது முதலே, பெரிய அளவில் உணர்வு அடிப்படையிலான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காஃப்காவின் தங்கைகள், நாஸிகளின் காலத்தில், அவர்களது குடும்பத்தினருடன் "சிறுபான்மைக் குடியிருப்பு"களுக்கு (Ghetto) அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே அல்லது வதை முகாம்களில் இறந்தனர். 1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி "அஸிகியூரேசியோனி ஜெனராலி" காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். அந்த நிறுவனத்தில் 08:00 முதல் 18:00 மணி வரை பணியாற்றும் சூழலால் அந்த காலகட்டத்தில் அவர் மகிழ்ச்சியற்றதாக இருந்ததை அவரது கடிதங்கள் சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக அவரது எழுத்துப்பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் 1908 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தனது வேலையை ராஜினாமா செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் எழுதுவதற்கு தகுந்த வேலையாக போஹேமியா இராச்சியத்திற்கான தொழிலாளர் விபத்து காப்பீட்டு நிறுவனத்தில் சேர்ந்துகொண்டார். அப்பணியானது தொழிற்துறைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட காயத்தையும் அதற்கான இழப்பீட்டை பரிசீலிப்பதையும், மதிப்பீடு செய்வதையும் உள்ளடக்கியது. விபத்துக்களானது மோசமான பாதுகாப்பு குறைபாடுகளால் விரல்கள, மூட்டுகள் ஆகியவை இழக்கப்படுகின்றன. 1912 ல் தனது முதல் நாவலை தொடங்கினார். தேர் ஹெய்சர் என்ற அந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினார்.காஃப்கா இந்த நாவலை சரிவர முடிக்கவில்லை, முடிவடையாத நிலையில் இருந்த இந்த நாவலை காஃப்காவின் மரணத்திற்குப் பின்னர் புரோட் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு வெளியிட்டார். முந்தைய ஆண்டுகளில் இட்டிஸ் அரங்கில் பார்வையாளர்களுடன் நேரத்தை செலவிட்ட பொழுதுகள்தான் இந்த நாவலுக்கான மன ஊக்கமாக இருந்தது. W. H. ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் டான்டே அலிகியேரி என அழைக்கிறார். டான்டே அலிகியேரி என்பவர் புகழ் பெற்ற இத்தாலிய இலக்கியவாதியாவார். நாவலாசிரியர் விளாதிமிர் நபோகோவ் காஃப்காவை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக வரிசைப்படுத்துகிறார். காஃப்காவின் "தி மெட்டாமார்போசிஸ்" வேறுவிதமாக எழுதும் வழிகளை காட்டுவதாக காபிரியேல் கார்சியா என்பவர் குறிப்பிடுகிறார். காஃப்காவின் படைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சம் அவர் முதன் முதலாக எழுதிய தந்தை-மகனுக்கிடையிலான பிணக்கு பற்றிய குறுங்கதையான "தாஸ் உர்தெய்ல்" ஆகும். இக்கதையில் மகனால் தூண்டப்பட்ட குற்றமானது துன்பம் மற்றும் பிராயச்சித்தம் மூலம் தீர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. நனவிலி நிலை , அந்நியமாதல், உடல் மற்றும் உளரீதியான கொடூரம், ஒரு திகிலூட்டும் தேடலில் பாத்திரங்கள், மற்றும் மாய மாற்றங்கள் ஆகியவை காஃப்காவின் கதைகளில் வரும் பிற முக்கிய கருப்பொருள்கள் ஆகும். காஃப்கா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். புரோட் என்பவரின் கூற்றுபபடி இவர் பாலியல் இச்சைகளுக்காக துன்புறுத்தப்பட்டார். மேலும் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரெய்னர் ஸ்டாச்சின் கூற்றுப்படி பாலியல் சார்பாக பயம் கொண்டிருந்ததாக கூறுகிறார். தனது வாலிப காலங்களில் பரத்தையர் மனைகளுக்குச் சென்றிருக்கிறார். மேலும் இவர் புணர்மக் கலையில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார். கூடுதலாக தனது வாழ்நாளில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. 1912 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் நாள் பேச்சுப்பன்னி நிறுவனத்தில் பிரதிநிதியாகப் பணிபுரியும் பிராட்டின் உறவுப் பெண்ணான பெலிஸ் பேயெரை காப்ஃகா சந்தித்தார். காஃகாவின் இல்லத்தில் நடைடிபற்ற இச்சந்திப்பிக்குப் பின் ஒரு வாரம் கழித்து அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். மால்கம் பால்சே என்பவர், பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தையும் 1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நூலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஏலத்தின் மூலமாக, ஜெர்மனியைச் சேர்ந்த மார்பச்-அம்-நெக்கர் என்பவர் வாங்கினார். பால்சேவின் குழுவான கெரார்டு நியுமென், ஜாஸ்ட் ஸ்சில்மெயிட், ஜர்கர் பாரன் ஆகியோர் பிரான்சேவின் தொகுதிகளை மீட்டெடுத்தனர். பின் அவற்றை பிஸ்சர் வெர்லாக் என்பவர் வெளியிட்டார். தாஸ் ஸகலாஸ் என்ற புதினம் 1982ம் ஆண்டும், தெர் பிராசஸ் என்ற புதினம் 1990ம் ஆண்டிலும், தாஸ் வெர்ஸ்சோலினி 1983ம் ஆண்டில் வெளிவந்தன. எட்வின் மற்றும் வில்லா முயிர் ஆகியோர், பிரான்சேவின் தாஸ் ஸ்கலாஸ் எனும் புதினத்தை 1930ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தனர். இப்புதினத்தை காஸ்டில் என்று செக்கர் மற்றும் வார்பர்க் ஆகியோர் இங்கிலாந்திலும், ஆல்பிரத் என்பவர் அமெரிக்காவிலும் வெளியிட்டனர். பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தும் 1940ல் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், அமெரிக்காவில் வெளியிட்டனர். பின்னர் 1998ம் ஆண்டில் பால்சேவின் ஜெர்மானிய தொகுதிகள் அனைத்தும் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றப்பட்டது. பிரான் காஃபேவைப் பற்றி பல்வேறு திரைப்படங்களும், பாடல்களும், நாடகங்களும் இயற்றப்பட்டன. மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல், காஃப்கா அரிதாகவே மற்றவரால் மேற்கோள் காட்டப்படுகிறார். அதற்கு பதிலாக, அவர் தனது பார்வை மற்றும் கண்ணோட்டங்களால் சில எழுத்தாளர்கள் கவரப்படுகிறார். பேராசிரியரும், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளருமான சைமன் சாண்டபாங்க் என்பவர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜெஸ், ஆல்பர்ட் கியூமஸ், யூஜென் இயனெஸ்கோ, ஜெ. எம். கோயட்ஸீ, மற்றும் ஜீன் பால் சார்டர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளில் காஃப்கா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடுகிறார். ஜோஸ் சாராமாகோ காஃப்காவின் படைப்புகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக "பைனான்சியல் டைம்ஸ்" என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல ஜெ.டி. சாலிங்கர் என்பவர் காஃப்காவின் படைப்புகளை மிகவும் விரும்பியதாக எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான அல் சில்வெர்மென் குறிப்பிடுகிறார். 1999 ல் 99 எழுத்தாளர்கள், மேதைகள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவானது காஃப்காவின் டேர் புரோசஸ் மற்றும் டாஸ் ச்லோஸின் இரண்டு மற்றும் ஒன்பதாவது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் மிக குறிப்பிடத்தக்க செருமானிய நாவலாக குறிப்பிடுகின்றது. கணிப்பான் கணிப்பான் (() என்பது கணக்குகளை செய்யகூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்யவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம். மயிர் உலர்த்தி மயிர் உலர்த்தி என்பது தலைமயிருக்குச் சூடான அல்லது குளிர்ந்த காற்றை ஊத வல்ல ஒரு இலத்திரயந்திர கருவி ஆகும். காற்று மயிர்களிடையே பட்டுச் செல்லும் போது அது மயிரை உலர்த்துகிறது. இந்தக் கருவி 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது. மார்செல் புரூஸ்ட் மார்செல் புரூஸ்ட் ("Marcel Proust") எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட வலன்டீன் லீயிஸ் ஜார்ஜஸ் இயுஜீன் மார்செல் புரூஸ்ட் (10 ஜூலை 1871 – 18 நவம்பர் 1922) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும் ஆவார். "இழந்த நேரத்தைத் தேடல்" (பிரெஞ்சு மொழி: À la recherche du temps perdu) என்னும் தன்கதை கலந்த புதினத்தை எழுதியவராக இவர் பெரிதும் அறியப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த புனைகதைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இது 1913 தொடக்கம் 1927 வரையான காலப் பகுதியில் ஏழு பகுதிகளாக வெளிவந்தது. செயிண்ட்-சைமன், பிராண்டோம், ஹொனோரே டி பால்சக், சார்லஸ் போட்லர், அனதோலே பிரான்ஸ், ஹென்றி பேர்க்சன், பியோடோர் டொஸ்டோவ்ஸ்கி, ஜான் ரஸ்க்கின், லியோ டால்ஸ்டாய், ஆர்தர் ஷோப்பன்ஹவர், ஸ்டெண்டால், வில்லியம் ஷேக்ஸ்பியர் அஹ்மெட் அல்தான், ஜான் பான்வில்லி, சாமுவேல் பெக்கெட், ஜான் காக்டோ, கிரகாம் கிரீன், ஜாக் கெருவாக், நகுயிப் மஹ்பூஸ், மனுவேல் முஜிக்கா லைனெஸ், ஐரிஸ் முர்டோக், விளாமிடிர் நபோக்கோவ், ஆர்ஹான் பாமுக், ட்ரூமன் கப்போட், எட்மண்ட் வைட், வெர்ஜீனியா வூல்ப். இசுத்திரிப் பெட்டி இசுத்திரிப் பெட்டி என்பது உடையில் இருக்கும் சுருக்கங்களை சீர் செய்ய பயன்படும் ஒரு கருவியாகும். வெப்பத்தை அழுத்தி பிரயோகிக்கும் பொழுது அது உடையின் இழைகளை சீர் செய்யும். இதுபோன்ற கருவிகள் முதலாம் நூற்றாண்டிலேயே சீனாவில் பயன்படுத்தப்பட்டன. மூலக்கூற்று இடைவிசையினால் பருத்தி ஆடைகளின்மேல் நீர் தெளித்து இதனைப்பயன்படுத்துவர். ஹென்ரி சீலி என்பவர் 1882இல் மின்சார இசுத்திரிப் பெட்டியினை உருவாக்கி அதற்கு ஜூன் 6, 1882இல் காப்புறிமை பெற்றார். ஜிமி ஹென்றிக்ஸ் ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) எனப்படும் ஜேம்ஸ் மார்ஷல் ஹென்றிக்ஸ் (James Marshall Hendrix, நவம்பர் 27, 1942 – செப்டெம்பர் 18, 1970) ஒரு அமெரிக்க கிட்டார் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவரது கிட்டார் வாசிப்பு ராக் இசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துயது. ஐரோப்பாவில் இவ்ருக்குக் கிடைத்த தொடக்க வெற்றிகளுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டில் மான்டரி பாப் விழாவில் இடம்பெற்ற இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிலும் பெரும் புகழ் பெற்றார். 1969 இன் வூட்ஸ்டாக் விழாவிலும் (Woodstock Festival) இவருக்கு முக்கிய இடம் கிடைத்தது. ஹென்றிக்ஸ், உருத்திரிபுப் பெருக்கியுடனான (overdriven amplifiers) கிட்டார் பின்னூட்ட (guitar feedback) நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவினார். இவர் புளூஸ் இசைக் கலைஞர்களான பி. பி. கிங், மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வூல்ஃப், ஆல்பர்ட் கிங், எல்மோர் ஜேம்ஸ் ஆகியோரிதும், ரிதம் அண்ட் புளூஸ் இசையினதும், சோல் கிட்டார் கலைஞர்களான கர்ட்டிஸ் மேஃபீல்ட், ஸ்டீவ் குரொப்பர் ஆகியோரினதும், ஓரளவு நவீன ஜாஸ் இசையினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். கார்லோஸ் சன்டானா, ஹென்றிக்சின் இசையில் தாயக அமெரிக்கப் பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கருதினார். நினைவுகூரும் நாள் நினைவுகூரும் நாள் ("Remembrance Day") என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பொப்பியை நினைவுக் குறியீடாக அணிவர். நினைவுகூரும் நாள் பல ஈழத் தமிழர்கள் அவதானிக்கும் மாவீரர் நாளுக்கு ஒத்தது. முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூருவர். சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் "பிளாண்டர் புலத்தில்" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது. கனடாவில் "லெஸ்ட் வீ போர்கெட்" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது. பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா ("Great Australian Bight") என்பது ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரும் விரிகுடா ("bay") ஆகும். இவ்விரிகுடா இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியின் ஒரு பகுதியாகும். இது கிழக்கே மேற்கு ஆஸ்திரேலியாவின் மேற்கு கேப் ஹவ் வரை நீண்டுள்ளது. இதன் வரையறுக்கப்பட்ட எல்லை மேற்கு ஆஸ்திரேலியாவின் கேப் பாஸ்லி முதல் தெற்கு ஆஸ்திரேலியாவின் கேப் கார்னோ வரை 1,160 கிமீ (720 மைல்) தூரம் நீண்டுள்ளது. இவ்வவிரிகுடாவை அண்டியுள்ள நீர்ப்பகுதி ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படாமல், தெற்குப் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. பெரும் ஆஸ்திரேலிய விரிகுடாவை முதன்முதலாக 1627 ஆம் ஆண்டில் சென்றடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமி கப்டன் தைசன் என்பவர். பின்னர் ஆங்கில மாலுமி மத்தியூ பிலிண்டேர்ஸ் 1802 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியக் கண்டத்தை சுற்றிவரும் போது இவ்விரிகுடாவையும் சுற்றிவந்தார். இவ்வளைகுடா பல ஆண்டுகாலமாக மாலுமிகளால் மீன்பிடித்தலை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். Bluefin tuna இங்கு பெருமளவில் காணப்படுகிறது. விரிகுடாவின் கரையோரங்களில் குடியெற்றத்திட்டங்கள் காணப்படுகின்றன. செடூனா, யூக்லா போஒன்ற குடியேற்றப் பகுதிகளில் இருந்து இவ்விரிகுடாவை நோக்கி வருவதற்கு வசதிகள் உண்டு. இரா. முருகன் இரா. முருகன் (பிறப்பு: 1953) என்பவர் தமிழக எழுத்தாளர் ஒருவர் ஆவார். இவர் கணினித்துறையில் பணி புரிகின்றார். தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்த இரா. முருகனின் தந்தையார் நா.சீ.இராமசாமி, தாயார் மீனாட்சி. 1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வருகிறார். சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன. தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் புதினம் ஆங்கிலத்தில் "கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும். மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தார். கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009) திரைப்படத்துக்கான வசனம் எழுதியுள்ளார் . அஜீத் குமார் நடிக்கும் பில்லா 2 (2011) திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் . இவர் எழுதிய ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ரெட்டைத் தெரு’ (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார் . இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு (சிறந்த சிறுகதை), கதா விருது (சிறுகதை), பாரதியார் பல்கலைக் கழக விருது (நாவல்) போன்ற பல பரிசுகள் இவருடைய படைப்புகளுக்காகப் பெற்றிருக்கிறார் . இதுவரை இரா.முருகனின் 22 நூல்கள் வெளியாகி உள்ளன. அன்டி வார்ஹால் அன்டி வார்ஹால் (Andy Warhol) எனப் பரவலாக அறியப்படும் அன்ட்ரூ வார்ஹாலா (ஆகஸ்ட் 6, 1928 – பெப்ரவரி 22, 1987) ஒரு அமெரிக்க ஓவியரும், "பாப்" ஓவியக் கலை இயக்கத்தின் முன்னணிக் கலைஞரும் ஆவார். வணிகப் படவரைவாளராக வெற்றிகரமாகத் தொழில் செய்த வார்ஹால், ஒரு ஓவியராகவும், புது முயற்சிகளில் ஈடுபடும் படத் தயாரிப்பாளராகவும், இசைத்தட்டுத் தயாரிப்பாளராகவும் உலகப் புகழ் பெற்றார். இவர் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். பொஹீமியத் தெருவாழ் மக்களிலிருந்து, அறிஞர்கள், ஹாலிவூட் பிரபலங்கள், செல்வந்தரான உயர்குடியினர் போன்றவர்கள் வரை பல சமூக மட்டங்களிலும் அவர் ஊடாடினார். 1987 ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் இவர் குறித்த கண்காட்சிகளும், நூல்களும், ஆவணப் படங்களும் பெரும் எண்ணிக்கையில் உருவாயின. அன்டி வார்ஹால், பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். இவரது தந்தையான அன்ட்ரிஜ் வார்ஹாலாவுக்கும், தாயாரான உல்ஜா (ஜூலியா)வுக்கும் மூன்றாவது பிள்ளையாக இவர் பிறந்தார். அக்காலத்தி ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசைச் சேர்ந்ததும் தற்போது வடகிழக்குச் செக் குடியரசில் இருப்பதுமான "மிக்கோவா" என்னும் ஊரிலிருந்து இடம் பெயர்ந்தவர்களான இவர்கள் ருசின் இனத்தைச் சேர்ந்த உழைப்பாளர் வகுப்பினர். வார்ஹாலின் தந்தை 1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். வார்ஹாலின் பாட்டன், பாட்டி இருவரும் இறந்தபின்னர், வார்ஹாலின் தாய் 1921ல் அமெரிக்கா வந்து தனது கணவருடன் சேர்ந்து கொண்டார். வார்ஹாலின் தந்தை ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்தார். பின்னர், 55, பீலன்தெரு, பிட்ஸ்பர்க், ஓக்லேண்ட் என்ற முகவரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ‛பைசண்டைன் கத்தோலிக்க பிரிவில், இவர் குடும்பத்தினருடன் புனித புனித யோவான் பைசண்டைன் கத்தோலிக்க திருச்சபையில் பங்கேற்றனர். ஆவிட் ஆவிட் ("Ovid") என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ ("Publius Ovidius Naso", மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு உரோமக் கவிஞர் ஆவார். இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன. வேர்ஜில் தாந்தே அலிகியேரி, ஜெஃப்ரி சோசர், ஜான் மில்ட்டன், வில்லியம் ஷேக்ஸ்பியர் வேர்ஜில் வேர்ஜில் ("Virgil") எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ ("Publius Vergilius Maro", அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் வடக்கு இத்தாலியில், மன்ட்வா அருகில்,  அன்டிஸ்  என்னும் இடத்தில் பிறந்தார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், "புகோலிக்ஸ் (Bucolics)", "ஜோர்ஜிக்ஸ் (Georgics)", "ஏனீட் (Aeneid)" என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயியின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது "ஏனீட்" என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது. ஆர். கே. செல்வமணி ரா. கா. செல்வமணி அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும். இவரது அக்டோபர் 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது. பிரடெரிக் சொப்பின் பிரடெரிக் சொப்பின் (Frédéric Chopin - 1 மார்ச் 1810[1] – 17 அக்டோபர் 1849) ஒரி போலிய (Polish) இசையமைப்பாளரும், பியானோ இசைக் கலைஞரும் ஆவார். இவர் மிகச் சிறந்த போலிய இசையமைப்பாளராக மதிக்கப்படுகிறார். இவர் வார்சோ டியூச்சியில் இருந்த செலாசோவா வோலா என்னும் ஊரில் ஒரு போலியத் தாய்க்கும், போலந்தில் வாழ்ந்த பிரெஞ்சுத் தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே பியானோ மேதையாகக் கணிக்கப்பட்டவர். 1830-31ல் நடைபெற்ற போலந்துக் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர், 1830 நவம்பரில் அவருக்கு 20 வயதாக இருந்தபோது, போலந்தை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார். பாரிசில் சொப்பின் ஒரு இசையமைப்பாளர் ஆகவும், பியானோ ஆசிரியராகவும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டும் வசதியாக வாழ்ந்து வந்தார். இவர் போலந்தின் ஒரு நாட்டுப்பற்றாளராக இருந்தும், பிரான்சில் இருந்தபோது தனது பெயரைப் பிரெஞ்சு வழக்கப்படியே பயன்படுத்தி வந்தார். பின்னர் ரஷ்யப் பேரரசின் ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக பிரெஞ்சுக் குடிமகனானார். பொருள் புறக்கணிப்பு பொருள் புறக்கணிப்பு (Boycott) என்பது, ஒரு தரப்பு விற்பனை செய்யும் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதைக் குறிக்கும். விற்பனைத் தரப்புக்கு பொருளாதார நெருக்கடியைத் தருவது இதன் ஒரு முக்கிய நோக்காகும். இது ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இந்தியர்கள் காலனித்துவ பிரித்தானியாவின் பொருட்களைப் புறக்கணித்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மறியல் போராட்டம் மறியல் போராட்டம் என்பது ஒரு செயற்பாட்டை மறித்து அல்லது தடுத்து நிகழ்த்தப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஒரு வணிக நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவேறாத தொழிலாளர்கள் அந்த வணிக நிறுவனத்தின் முன் மறியல் செய்து நுகர்வோர்களை அல்லது மேலாளர்களை உள்ளே விடாமல் செய்வது மறியல் போராட்டங்களில் ஒன்று. பேருந்து, தொடருந்து போன்றவற்றின் வழைமையான தொழில்பாட்டை தடுத்து தமது கருத்துக்களை எடுத்துக்கூறுவது மறியல் போராட்டத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும். உண்ணாநிலைப் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் ("Hunger strike") என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர். மகாத்மா காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலன்களுடன் பயன்படுத்தினார். 1987 இல் திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படுத்தினாலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார். செப்டம்பர் 2007 இல் பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தார், எனினும் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார். இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky - – 6 ஏப்ரல் 1971) ரஷ்யாவில் பிறந்த ஒரு இசையமைப்பாளர் ஆவார். சிலர் இவரை 20 ஆம் நூற்றாண்டின் மிகச் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். அடிப்படையில், உலகக் குடிமகனான இவரை "டைம்" இதழ் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க மனிதர் 100 பேர்களுள் ஒருவராகத் தெரிவு செய்தது. ஒரு இசையமைப்பாளராக மட்டுமன்றி, ஒரு பியானோக் கலைஞராகவும், நிகழ்ச்சி இயக்குனராகவும் இவர் புகழ் பெற்றவர். ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையமைப்புகள் பல்வகைமைத் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910ல் சேர்கி டயகிலேவ் என்பவருடைய பலே நடன நிகழ்ச்சியொன்றுக்கு இசையமைத்ததன் மூலம் இவர் முதன் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்கு அவர் செய்த இசையமைப்பு இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்தது. இது பின்வந்த பல இசையமைப்பாளர்களின் இசையமைக்கும் தன்மையை மாற்றி அமைத்ததுடன், இசைப் புரட்சியாளர் எனும் ஸ்ட்ராவின்ஸ்கியின் நிலைத்த புகழுக்கும் காரணமாகியது. தீக்குளிப்பு தீக்குளிப்பு என்பது ஒரு நிகழ்வை அல்லது சூழ்நிலையை முற்றாக வெறுத்து தீயால் தற்கொலை செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு ஆகும். இது ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவமாகவும் கொள்ளப்படுகின்றது. பொதுவாக உண்ணாநிலை போன்று தன்னை வருத்தி ஈடுபடும் போராட்டங்கள் அறவழிப் போராட்டங்கள் என்று கருதப்பட்டாலும் தீக்குளிப்பில் இருக்கும் வன்முறையால் இது அறவழிப்போராட்டமாக கருதுவதில் கருத்து வேறுபாடு உண்டு. இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்த தமிழ் ஆர்வலர் சின்னசாமி, இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து தீக்குளித்த முத்துக்குமார், வியட்நாம் போரின் போது தீக்குளித்த புத்த பிக்குக்கள் போன்று வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் தீக்குளிப்போரும் உள்ளனர். மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது மனிதர்கள் கைகளைக் கோர்த்தபடி வரிசையாகவோ வட்டமாகவோ நின்று தமது எதிர்ப்பை அல்லது கருத்து நிலையை வெளிப்படுத்தும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். எவ்வளவு தொகையான மக்கள் கைகோர்த்து எவ்வளவு தூரம் நிற்கிறார்களோ அவ்வளவுக்கு அது மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமையும். போராட்டத்துக்கு எடுத்துக்கொண்ட விடயத்தின் முக்கியத்துவம், அவ்விடயம் எவ்வளவு மக்களைப் பாதிக்கிறது அல்லது அதை ஒழுங்கு செய்பவர்களுக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு உள்ளது போன்ற விடயங்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றன. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கலந்துகொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களும், மில்லியன் கணக்கில் மக்கள் கலந்துகொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்றன. அடிப்படையில் இது அமைதி வழியிலான போராட்ட வடிவம். எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் கவனத்தைக் கவர்வது, பொதுமக்களிடம் குறித்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பவற்றை இப்போராட்ட வடிவத்தின் மூலம் ஒரே நேரத்தில் அடையமுடிகிறது. அதேவேளை வேறு சில அமைதிவழிப் போராட்ட வடிவங்களைப்போல் பொதுமக்களுக்கு இதனால் அதிகம் தொந்தரவு ஏற்படுவதில்லை. கின்னஸ் பதிவுகளின் படி உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலிப் போராட்டம் 2004 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வங்காள தேசத்தில் இடம்பெற்றது. வங்காளதேச தேசியக் கட்சியின் ஆட்சி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி புதிய தேர்தலை நடத்தக்கோரும் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும், தெக்னாவிலிருந்து தென்தூலியாவரை 1,050 கிலோமீட்டர் நீளத்துக்கு மனிதச் சங்கிலியாக மக்கள் நின்றிருந்ததாகவும், பதிவு காட்டுகிறது. இதன் பின்னர் 2017 சனவரியில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மூன்று கோடி மக்கள் 11,400 கிலோமீட்டர் நீளத்துக்கு நின்று போராடியதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஒக்டோபர் 24, 2008 அன்று இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழர் படுகொலைகளை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் இவ்வகைப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது. கடையடைப்பு கடையடைப்பு என்பது கடைகள், வணிக நிறுவனங்கள் ஒரு நிலைப்பாடை வெளிப்படுத்தி தமது வழமையான தொழிலில் ஈடுபடாமையைக் குறிக்கும். ஒரு நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவோ எதிர்பாகவோ ஒரு கோரிக்கையை முன்வைத்தோ கடையடைப்பு நடைபெறும். வணிக சமூகத்தினர் தமது நிலைப்பாட்டை வலியுறுத்த இது ஒரு வழிமுறை ஆகும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரச தமிழர் படுகொலைகளை எதிர்த்து 5500 வணிக அமைப்புகளைச் சார்த 25 இலட்சம் வணிகர்கள் அக்டோபர் 31, 2008 கடையடைப்பு செய்தது கடையடைப்புப் போராட்டத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். கையெழுத்து போராட்டம் கையெழுத்து போராட்டம் என்பது ஒரு நிலைப்பாடை அல்லது கோரிக்கையை முன்மொழிந்து, அதற்கு ஆதரவாக பலரிடம் கையெழுத்துப் பெற்று அந்த பிரச்சினைக்கு பொறுப்பான அல்லது உதவக்கூடிய ஒருவருக்கு கொடுக்கும் செயற்பாடு ஆகும். ஒரு விடயத்துக்கு ஆதரவை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும். இணையம் மூலமும் கையெழுத்து போராட்டம் நிகழ்த்த முடியும். பேரணி பேரணி என்பது ஒரு நிலைப்பாட்டை அல்லது கோரிக்கையை முன்வைத்து ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தொகையான மக்கள் ஊர்வலம் செல்வதாகும். தமது கருத்துக்களை கூவிய வண்ணம், பதாகைகளைத் தாங்கி, துண்டுப் பிரசுரங்களை பிறருக்கு வழங்கியவண்ணம், தமது சூழ்நிலைய சித்தரிக்கும் காட்சிப்படுத்தல்களுடன் இந்த ஊர்வலம் செல்லும். பேரணி அதிகம் பயன்படுத்தப்படும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். சித்தரிப்பு சித்தரிப்பு அல்லது காட்சிப்படுத்தல் என்பது ஒரு துன்ப நிகழ்வை அல்லது ஒரு சூழ்நிலையை அல்லது ஒரு முடிவின் விளைவுகளை விளக்கும் வண்ணம் ஏற்படுத்தப்படும் காட்சியமைப்பு ஆகும். போரில் இறந்த காயமுற்ற மக்கள், பசியுடன் மர நிழலில் வாழும் மக்கள், அகதிகள், சிறுவர் தொழிலாளர்கள், அடிமைத்தனம் என பல தரப்பட்ட விடயங்கள் சித்தரிக்கப்படுவதுண்டு. இவற்றோடு ஒளிப்படம், நிகழ்பட விளக்கங்களும் சேர்க்கப்படுவதுண்டு. சித்தரிப்பு தமது கருத்துக்களை துல்லியமாக உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்த ஒரு நல்ல வழிமுறை. சி.எப்.ஆர்.பி சி.எப்.ஆர்.பி அல்லது செய்தி உரையாடல் 1010 ரொரன்ரோ, கனடாவில் ஒலிபரப்பப்படும் ஆங்கில வானொலி ஆகும். இது 1010 kHz குறு அலைவரிசையில் வருகிறது. இந்த நிலையமானது கலந்துரையாடல்கள், செய்தி, போக்குவரத்து நிலவரம், காலநிலை ஆகியவற்றை நாள் முழுதும் பகிர்கின்றது. ரூப்பையா பண்டா ரூப்பையா புவெசானி பண்டா ("Rupiah Bwezani Banda", பிறப்பு: பெப்ரவரி 13, 1937) சாம்பியாவின் சனாதிபதி. இவர் அக்டோபர் 2006 இல் நாட்டின் உப-சனாதிபதியாக முன்னாள் சனாதிபதி லெவி முவனவாசாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முவனவாசா ஜூன் 2008 இல் சுகவீனமுற்றபோது அவரது சனாதிபதி அதிகாரங்களைத் தனதாக்கி பின்னர் முவனாசி இறந்த பின்னர் பதில் அதிபரானார். அக்டோபர் 2008 இல் நிகழ்ந்த சனாதிபதி தேர்தலில் ஆளும் "பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்" என்ற கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சனாதிபதி ஆனார். 2011, செப்டபரில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அங்கேரியப் புரட்சி, 1956 ஹங்கேரியப் புரட்சி, 1956 ("Hungarian Revolution of 1956") என்பது அன்றைய ஹங்கேரியின் ஸ்டாலின் சார்பு கம்யூனிச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியைக் குறிக்கும். இது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் ஆரம்பித்து நவம்பர் 10 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. ஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் புடாபெஸ்ட்டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது. புரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் சோவியத் படைகளுடனும் போரிட்டனர். சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள் மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு வார்சா உடன்படிக்கையில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது. சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, நவம்பர் 4 ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு நவம்பர் 10 ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 2,500 இற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 700 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். 1957 ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது. இப்புரட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. பனிப்போரின் முடிவில் 1989 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. ரத்னாங்கி ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2வது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உன்டு. வனஸ்பதி வனஸ்பதி கருநாடக இசையின் 4வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உன்டு. எர்னான் கோட்டெஸ் எர்னான் கோர்டெசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எர்னான் கோர்டெசு டெ மொன்ரோய் இ பிசாரோ "(Hernán Cortés de Monroy y Pizarro)" என்பவர் 1485–டிசம்பர் 2 முதல் 1547 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஓர் எசுப்பானிய படை வீராராவார். தேடல் வெற்றி வீரரான இவரது படையெடுப்பே அசுடெக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரவியிருந்த கசுதிலிய பேரரசின் கீழ் மெக்சிகோவின் பெரும்பகுதியைக் கொண்டு வருவதற்கும் இவர் காரணமாக இருந்தார். அமெரிக்காவின் எசுப்பானிய குடியேற்றத்தின் முதல் கட்டத்தை ஆரம்பித்து வைத்த எசுப்பானிய குடியேற்றக்காரர்களின் தலைமுறையில் கார்டெசும் முக்கியப் பங்கு வகித்தார். எசுப்பானியாவிலுள்ள மெடெல்லின் நகரில் ஓர் எளிய குடும்பத்தில் கார்ட்டெசு பிறந்தார், புதிய உலகில் வாழ்வதற்கான ஒரு வாழ்வாதாரத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கோர்டெசு ஈடுபட்டார். கரிபியன் கடலிலுள்ள எசுப்பானியாலோவிற்கும் பின்னர் அங்கிருந்து கியூபாவிற்கும் சென்றார், இத்தீவில் உருவாக்கப்பட்ட இரண்டாவது எசுப்பானிய நகரத்தில் சிறிதுகாலம் மேயராக இருந்து எசுப்பானிய அரசின் உதவித் தொகையைப் பெற்றார். 1519 ஆம் ஆண்டில் பிரதான நிலப்பகுதிக்காக உருவாக்கப்பட்ட மூன்றாவது பயணக்குழுவின் தலைவராக கார்டெசு தேர்ந்தெடுக்கப்பட்டு, பகுதியாக நிதியுதவியும் கிடைக்கப் பெற்றார். கியூபாவின் ஆளுநர் டீகோ வெலாசுகியூவசு டி கியுல்லாருடன் இருந்த பகைமை காரணமாக, கார்டெசு அவருடைய ஆணைக்கு செவிசாய்க்காத காரணத்தால் கடைசிநேரத்தில் பயணத்திட்டம் இரத்து செய்யப்பட்டது. கண்டத்திற்குள் வந்த கார்டெசு, மற்றவர்களுக்கு எதிராகப் போராடுகின்ற உள்நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் வெற்றிகரமான ஒரு போர்த்திட்டத்தைச் செயற்படுத்தினார். இத்திட்டத்தில் ஓர் உள்ளூர் பெண்ணையும் பயன்படுத்திக் கொண்டார். டோனா மெரினா என்ற பெயர் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளரான இப்பெண் பிற்காலத்தில் கார்டெசுவின் முதல் மகனைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கார்டெசை கைது செய்ய கியூபாவின் ஆளுநர் தூதுவர்களை அனுப்பினார், தன் துருப்புக்களை வலுவூட்டி அவர்களை வெற்றி கொண்ட கார்டெசு, கலகம் என்று சொல்லி தண்டிப்பதற்குப் பதிலாக அவருடைய வெற்றியை ஒப்புக் கொள்ளும்படி ஆளுநருக்கு நேரடியாகக் கடிதங்களை எழுதினார். அசுடெக் பேரரசை வீழ்த்திய பிறகு கார்டெசுக்கு மார்குவசு டெல் வால்லெ டி ஓக்சாகா என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் வைசிராய் என்ற பெருமை வாய்ந்த பட்டம். தலைவரான அன்டோனியோ டி மெண்டோசாவிற்கு வழங்கப்பட்டது. 1541 ஆம் ஆண்டில் கார்டெசு எசுப்பானியாவிற்குத் திரும்பினார். அங்கு ஆறு ஆண்டுகளை அமைதியாகக் கழித்த பின்னர் அவர் இறந்து போனார். கார்டெசு மேற்கொண்ட சர்ச்சைக்குரிய செயல்கள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மை மிக்க ஆதாரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவரது ஆளுமை மற்றும் நோக்கங்களைப் பற்றி உறுதியாக எதையும் கூறுவது கடினமாக உள்ளது. தொடக்கக்கால தொடர்ச்சியான வெற்றிகளால் கார்டெசு குறித்த ஆழ்ந்த பரிசோதனை எவராலும் ஊக்கப்படுத்தவில்லை. நவீன காலனித்துவ எதிர்ப்பு உணர்வின் பின்னணியில் வெற்றியாளர்களின் நடத்தைகளை மறுபரிசீலனை செய்யும் போது கார்டெசை ஒரு தனிமனிதனாகப் புரிந்துகொள்ளும் திறன் சற்று விரிவடைகிறது. இந்த வரலாற்று போக்குகளின் விளைவாக கார்டெசு குறித்த விவரங்கள் பெரும் இலக்குகளை முன்வைத்தவையாகவோ, கண்டனத்திற்கு உட்பட்டதாகவோ இல்லாமல் எளிமையானவையாக உள்ளன. தற்பொழுது எர்னான் என்று பொதுவாக அழைக்கப்படும் பெயரை கார்டெசு தானாகவே தன்னை எர்னாண்டோ அல்லது பெர்னாண்டோ என்ற வடிவத்தில் பயன்படுத்தினார். கார்டெசு 1485 ஆம் ஆண்டில் நவீன எசுப்பானிய தன்னாட்சிச் சமூகங்களில் ஒன்றான மெட்லின் நகரில் பிறந்தார். அவரது தந்தை மார்ட்டின் கார்டெசு டி மான்ரோய், 1449 ஆம் ஆண்டில் ரோட்ரிகோ அல்லது ரூய் பெர்னாண்டசு டி மான்ரோய் மற்றும் அவரது மனைவி மரியா கார்டெசு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், சிறப்புமிக்க மூதாதையர்களின் காலாட்படைப் பிரிவின் தலைவராக இவர் பணிபுரிந்தார். கேடலினா பிசாரோ அல்தமிரானோ. எர்னானின் தாயாராவார் . கார்டெசின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியரான சாப்லைன் மற்றும் கார்டெசின் நண்பன் பிரான்சிசுகோ லோப்சே டி கோமாரா ஆகியோரின் கூற்றுப்படி, கோர்ட்டேசு ஒரு வெளிர்ந்த நிறமும் நோயுற்றவராகவும் இருந்தார். 14 வயதாக இருந்தபோது இலத்தீன் மொழியைப் படிப்பதற்காக மாமா சலமன்காவின் பொருப்பில் கார்டெசு அனுப்பப்பட்டார். சலாமன்கா பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் பதிவுசெய்து அடிப்படை கல்வியைப் பெற்றார் என்று நவீன வரலாற்றாசிரியர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிக்கூடம் செல்வதற்கு இயலாமல் கார்டெசு மெடல்லினுக்குத் திரும்பி வீட்டிற்கு வந்தார், சட்டம் படிப்பதற்குரிய வாழ்க்கைக்கு ஆயத்தமாக கார்டெசு இருப்பதாக நம்பிய அவருடைய பெற்றோர் இதனால் பெரிதும் எரிச்சலடைந்தனர். எனினும், சலாமன்காவில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளும், ஆவண எழுத்துப் பதிவாளராக அவருக்கிருந்த நீண்டகாலப் பயிற்சியும் சட்டம் தொடர்பான பணிகளில் இவருக்குப் பெரிதும் உதவின. முதலில் வால்டோடோலிலும் பின்னர் எசுப்பானியோலாவிலும் கார்டெசு ஆவண எழுத்துப் பதிவாளர் அனுபவத்தைப் பெற்றிருந்தார். இவ்வனுபவம் பின்னாளில் இவருக்கு மெக்சிகோவின் அங்கீகரிக்கப்படாத வெற்றியை நியாயப்படுத்த உதவியது . கார்டெசு தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இரக்கமற்றவராக, அகந்தையானவராக மற்றும் குறும்புத்தனம் மிக்கவராக இருந்தாரென கோமாரா கார்டெசைப் பற்றி விவரிக்கின்றார் . தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காக மட்டுமே வீட்டிற்குத் திரும்பி வந்து அவரது சிறிய மாகாண நகரத்து வாழ்க்கையில் சலிப்படைந்த ஒரு 16 வயது சிறுவனைப் பற்றிய நியாயமான விளக்கமாக இது இருக்கலாம். இந்த நேரத்தில்தான் கிறிசுடோபர் கொலம்பசின் புதிய உலக்ம் கண்டுபிடிப்புகள் தொடர்பான உற்சாகமான செய்திகள் எசுப்பானியாவிற்கு வந்தவண்ணம் இருந்தன. கார்டெசு 1504 ஆம் ஆண்டில் அலோன்சோ கினெட்டோரோ கட்டளையிட்டு ஓட்டிச் சென்ற கப்பலில் இசுப்பானியாலோவிற்குச் சென்று அங்கு ஒரு குடியேற்றக்காரராக மாறினார். அலோன்சா தனது மேலதிகாரிகளை ஏமாற்றுவதற்காகவும், தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்காகவும் அவர்களுக்கு முன்பே புதிய உலகத்தை அடைய முயற்சிப்பதைக் கண்டார். அலோன்சோவின் முறையற்ற நடத்தைகள் கார்டெசுவின் அடுத்தடுத்த வாழ்க்கைக்கு ஒரு மாதிரியாகக் கூட அமைந்திருக்கலாம். எசுப்பானிய வெற்றி வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் போட்டி, பொறாமை, காட்டிக் கொடுத்தல், கலகம், சண்டை ஆகியவற்றால் ஆனது . 1504-இல் இசுப்பானியோலானாவின் தலைநகரமான சாண்டோ டொமினோவிற்கு வருகைதந்த 18 வயது கார்டெசு அங்கோர் குடிமகனாக பதிவு செய்தார், அது அவருக்கு ஒரு நிலம் வாங்கி வீடு கட்டும் உரிமையையும், பண்ணைக்கு நிலம் வாங்கும் உரிமையையும் கொடுத்தது. அங்கு ஆளுநராக இருந்த நிக்கோலசு டி ஒவாண்டோ கார்டெசுக்கு உதவித்தொகை அளித்து, அசுவா டி கம்போசுடெலா நகருக்கு ஆவண எழுத்து பதிவாளராக்கினார். அவரது அடுத்த ஐந்து ஆண்டுகள் காலனியில் அவரை நிலை நிறுத்திக் கொள்ள உதவின. 1506 இல், கார்டெசு இசுப்பானினியோலா மற்றும் கியூபாவின் வெற்றியில் பங்குபெற்றார், வெகுமதியாக அவருக்கு ஏராளமான நிலம். மற்றும் இந்திய அடிமைகள் கிடைத்தனர். கார்டெசு அடுத்தடுத்து மேற்கொண்ட பயணக்குழு முயற்சிகளுக்கு இவை பெரிதும் உதவின. இசுப்பானியோலாவின் ஆளுநரிடம் கிடைத்த உதவியாளரான டீகோ வேலாசுகெசு டி குல்லருடன் சேர்ந்து 1511 ஆம் ஆண்டில், கார்டெசு கியூபாவை கைப்பற்றுவதற்கான தனது பயணத்தைத் தொடங்கினார். வேலாசுகெசு புதிய எசுப்பானியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 26 ஆவது வயதில் கார்டெசு கருவூகப் பணியாளருக்கு எழுத்தராகப் பணியாற்றினார், பயணக்குழுவினர் ஈட்டும் இலாபத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை கருவூலத்திற்கு செலுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. கியூபாவின் ஆளுநரான டீகோ வேலாசுகெசுக்கு கார்டெசின் நடவடிக்கைகள் மிகவும் பிடித்தன. கார்டெசால் அவர் மிகவும் உயர்ந்த அரசியல் நிலைப்பாட்டைக் காலனியில் பெற்றார். கார்டெசு ஆளுநரின் செயலாளரானார். இரண்டு முறை சண்டியாகோ நகராட்சி மேயராக கார்டெசு நியமணம் செய்யப்பட்டார். உதவித் தொகை பெற்றுக் கொண்டு சுரங்கங்கள் மற்றும் கால்நடைகளுக்கு இந்திய தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு மனிதராகக் கார்டெசு மாறினார். அதிகாரம் கொடுத்த இந்தப் புதியநிலை தலைமைப் பண்பிற்கு புதிய ஆதாரமாக அமைந்து அவரை உருவாக்கியது, அதே நேரத்தில் காலனிக்கு எதிரான எதிர்ப்பாளர்களை உருவாக்கவும் இது உதவியது. 1514 இல் கார்டெசு ஒரு குழுவை வழிநடத்தினார். குடியேறியவர்களுக்கு அதிக இந்தியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று இக்குழு கோரியது. காலப்போக்கில் கார்டெசு மற்றும் கவர்னர் வேலாசுகுவெசுக்கு இடையிலான உறவுகள் நலிவடைந்தன . ஆளுநரின் உறவினரான யுவான் டி கிரியால்வா ஒரு புதிய காலணியை நிறுவ முற்பட்டபோது அப்புதிய பயணக்குழுவினருக்கு தளபதியாக அக்டோபர் 1518 இல் கார்டெசு நியமிக்கப்பட்டார். ஆளுநரின் மனம் மாறுவதற்கு முன் பொறுப்பேற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டார் . ஒரு நிர்வாகியாக கோர்டெசின் அனுபவங்களும் பல பயணக்குழுக்களில் அடைந்த தோல்விகளின் மூலம் பெற்ற அறிவும் ஒரு மாதத்திற்குள் ஆறு கப்பல்களையும் 300 ஆண்களையும் அவரால் சேகரிக்க முடிந்தது. ஆளுநருக்கு பொறாமை வெடித்தது. இதனால் பயணக்குழுவின் தலைமைப் பொறுப்பை பிறர் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்தார். எனினும் கார்டெசு விரைவில் மற்ற கியூப துறைமுகங்களில் இருந்து மேலும் அதிகமாக ஆண்கள் மற்றும் கப்பல்களை திரட்டிக் கொண்டார். ஆளுநரின் உறவினரான கேட்டலினா சுவாரெக்சுடன் கார்டெசு காதல் கொண்டர். ஆளுநருடன் ஏற்பட்ட அவநம்பிக்கைகள் இதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கேட்டலினாவின் சகோதரி ஒருவரால் கார்டெசு தற்காலிகமாக திசைதிருப்பப்பட்டார் என்றாலும் இறுதியாக அவர் கேடலினாவை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் கேட்டலினாவின் குடும்பத்தினர் மற்றும் ஆளுநரிடம் நல்ல ஒரு திருப்பம் ஏற்படும் என கார்டெசு நம்பினார் . கியூபாவின் தலைநகருக்கு மேயராகவும், வளர்ந்து வரும் காலனிகளில் ஒரு புகழ் பெற்ற மனிதராகவும் கார்டெசு தனது கணிசமான நிலைக்கு அப்பால் வளர்ச்சியடையத் தொடங்கினார். 1518 இல் ஆளுநரால் மெக்சிகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரான்சிசு எர்னாண்டசு டி கோர்டோபா மற்றும் யுவான் டி கிரியால்வா ஆகியோரின் உத்தரவின் பேரில் கார்டெசு முதல் இரண்டு பயணங்களை தவறவிட்டார். செங் கே செங் கே ("Zheng He", செங் ஹே, (1371–1433/35) ஊய் இனத்தைச் சேர்ந்த சீனத்து கடற்படைத் தலைவரும் நாடுகாண் பயணியும், பண்ணுறவாளரும் ஆவார். "மா கே" என்ற இயற்பெயர் கொண்ட (இது சீனமொழியில் முகம்மது நபி அவர்களைக் குறிக்கும்) செங்கே, தன் முப்பத்து நான்காம் வயது முதல் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பகுதிகளுக்கு செல்வங்கவர்கின்ற கடற்பயணங்களை மேற்கொண்டார். செங்கேயின் பெருங்கப்பல்கள் சுமார் 120 மீ நீளமானவை என்று சொல்லப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மீகாமர்களும் நான்கு கப்பல் மாடத் தளங்களும் அவற்றில் காணப்பட்டன. யொங்கல் ஆட்சியாளரின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட செங்கே, மிக விரைவிலேயே மிங் அரசமரபின் முக்கிய ஆளுமையாக வளர்ந்ததுடன், சீனத்தின் தெற்குத் தலைநகரான நாஞ்சிங்கின் கட்டளைத் தளபதியாகவும் கடமையேற்றார். (இத்தலைநகரானது யொங்கல் சக்கரவர்த்தியால் பிற்காலத்தில் பெய்ஜிங்கிற்கு மாற்றப்பட்டது.). ஆதாரபூர்வமான சீன வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவராகவே விளங்கிய செங்கே, 1904இல் வெளியான அவரது வரலாற்றுநூலொன்றை அடுத்தே பரவலான கவனத்தைப் பெற்றார். அதற்கு கொஞ்சநாட்களின் பின்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட காலி மும்மொழி கல்வெட்டு அவரது முக்கியமான வரலாற்று வகிபாகத்துக்கான ஆதாரமாக சான்றுகூறி நிற்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்கின்ற சீன மரபுவழி மக்கள் மத்தியில் செங்கே இன்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார். சீனாவின் யுன்னான் பிராந்தியத்திலிருந்த குன்யாங் பகுதியைச் சேர்ந்த ஊய் இனத்துக் குடும்பமொன்றில் செங்கே இரண்டாவது மகனாகப் பிறந்தார். மாகே என்ற இயற்பெயருடன் பிறந்த செங்கேயிற்கு ஒரு மூத்த சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர்கள். எனினும் இளம்வயதில் சமயத்தில் சமரசமான மனப்பாங்கு செங்கேயிற்கு இருந்ததாகத் தெரிகின்றது. செங்கேயின் சில கல்வெட்டுக்களிலிருந்து, அவர் சீனத்துக் கடல் தேவதையான "மசு" மீது பெரும்பக்தி கொண்டிருந்தார் என்பதை அறியமுடிகின்றது. செங்கே, மங்கோலியப் பேரரசுக்குக் கீழே பணியாற்றிய பாரசிக ஆளுநர் ஒருவரின் வழித்தோன்றல் ஆவார். செங்கேயின் முப்பாட்டரான இப்பாரசிகர், யுவான் மரபின் ஆரம்பகாலத்தில் யுன்னான் பகுதியின் ஆளுநராகப் பதவியேற்றார். செங்கேயின் பாட்டனாருக்கு ஹாஜி எனும் பட்டமும் தந்தைக்கு மா எனும் குடும்பப்பெயரும் இருந்தது. எனவே செங்கேயின் தந்தையும் பாட்டனும் வெற்றிகரமாக ஹஜ் யாத்திரையை முடித்தவர்கள் என்பதை ஊகிக்கலாம். 1381இல் மிங் அரசின் படை யுன்னான் மீது படையெடுத்ததுடன், அப்போது யுன்னானை ஆண்ட பசலவர்மி எனும் மொங்கோலிய இளவரசனையும் வென்றது. இப்போரில் மொங்கோலியருக்கு ஆதரவாகப் போரிட்ட செங்கேயின் தந்தை இறந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தேழு என்றும் செங்கேக்கு வயது பத்து என்றும் சொல்லப்படுகின்றது. யுன்னான் மீதான படையெடுப்பில், மிங் படைகளால் சிறுவன் செங்கேயும் சிறைப்பிடிக்கப்பட்டான். மிங் இளவரசன் சூ டியின் (Zhu Di) அந்தப்புர ஊழியத்துக்காக அனுப்பப்பட்ட செங்கேக்கு அக்கால வழக்கப்படி காழ்கடிதல் (விதைநீக்கம்) செய்யப்பட்டது. சூடி இளவரசனுக்கு அந்தப்புர ஊழியம் செய்த காலத்தில், செங்கே பெற்ற கல்வியே அவன் திறமைகளுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது. இக்காலத்தில் செங்கேக்கு சூட்டப்பட்டிருந்த "சென் போ" என்ற பெயர், சீனமொழியில், பௌத்தத்தின் மும்மணிகளைக் குறிக்கும். யுன்னான் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட செங்கே, அப்போதைய தலைநகர் நான்ஜிங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால், காழ்கடிஞர்களை கல்வியறிவற்றவர்களாகவே வைத்திருக்கவேண்டும் என்ற சீனச் சக்கரவர்த்தியின் கொள்கையால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பான். இளவரசன் சூடி, அப்போது பீபிங்கை (எதிர்கால பெய்ஜிங்) ஆண்டுவந்தான். மொங்கோலியப்படைகளுக்கு எதிராக பீபிங்கின் வடக்கு எல்லையில் நின்ற மிங் படைகளுடன் இணைந்துகொண்ட செங்கே, இளவரசன் சூடியுடன் இணைந்து பெரும்பாலான போர்களிலும் ஈடுபட்டான். 1390இல் இடம்பெற்ற மொங்கோலியருக்கெதிரான போரொன்றில் முதன்முதலாகத் தளபதியாகப் பங்கேற்ற செங்கே, அப்போரில் சீனப்படைகளுக்கு வெற்றியை ஈட்டித்தந்ததுடன், மொங்கோலியத் தளபதி நகாச்சுவை சரணடையச் செய்து இளவரசனின் பெரும் நம்பிக்கையையும் சம்பாதித்துக்கொண்டான். செங்கேயின் வாலிபத்தோற்றம், சீனக்குறிப்புகளில் பதிவாகி இருக்கின்றது. அகன்ற இடுப்பும், உயர்ந்த தோளும், மேடான நெற்றியும் சிறிய மூக்கும் மணி போன்ற கார்வையான குரலும் என்று இளைஞன் செங்கே வருணிக்கப்படுகின்றான். அப்போது மிக இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருந்த சூடிக்கு அரசுசூழ்தலில் உதவியதால் செங்கேயால், சூடியின் நம்பிக்கைக்குரிய அரச ஆலோசகனாக உயர வாய்ப்புக்கிட்டியது. அப்போது சீனத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் சுவையான வரலாற்றுச் சம்பவமாக சொல்லப்படுகின்றது. மிங் அரசமரபின் முடிக்குரிய இளவரசனான சூடியின் மூத்த தமையன் 1393இல் இறக்க, அவனது மகன் அடுத்த அரசனாக அறிவிக்கப்பட்டான். 1398இல் சூடியின் தந்தை கொங்வூ சக்கரவர்த்தி மாண்டுபோக, முன்பு அரசனாக அறிவிக்கப்பட்ட சூடியின் பெறாமகன் நாஞ்சிங் அரசின் அரியணையில் அமர்ந்தான். ஆனால், அவனால் அதேயாண்டில் வெளியிடப்பட்ட "க்சியோபேன்" அல்லது "சிற்றரசுகளின் அதிகாரத்தைக் குறைத்தல்" எனும் அறிக்கை, சூடிக்கு பெருங்கோபத்தை உண்டாக்கியது. பீபிங்கிலிருந்து சிற்றரசுக்குரிய அதிகாரங்களுடன் ஆண்டுவந்த சூடி, 1399இல் தன் பெறாமகனுக்கெதிராக பெரும் கிளர்ச்சி செய்தான். பீபிங்கில் இருந்த செங்லுன்பா ஏரிக்கருகே கிளர்ச்சியை அடக்க வந்த படைகளை முன்னேறாமல் தடுப்பதில், செங்கே, சூடிக்கு பக்கபலமாக இருந்தான். சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1402இல் மிங் அரசமரபின் மாபெரும் தலைநகராக விளங்கிய நாஞ்ஜிங் மீது படையெடுத்துச் சென்ற சூடி, செங்கேயின் உதவியுடன் அதைக் கைப்பற்றி, யொங்கல் பேரரசனாக முடிசூடிக்கொண்டான். முடிசூடிக்கொண்டதுமே, செங்கேயை, மாளிகைப் பணியாளர்களின் தலைமையதிகாரியாக (சீனத்தில் தைஜியன் - "Taijian") பதவியுயர்த்திய சூடியின் செயல், செங்கே மீது அவன் கொண்டுள்ள பெருமதிப்புக்கு சான்றாகின்றது. அதுவரை தந்தையின் பெயருடன் "மா கே" என்றே அறியப்பட்ட செங்கே, 1404ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சீனப் புத்தாண்டு அன்று, செங்லுன்பா ஏரிக்கரையில் செங்கே தனக்குச் செய்த பேருதவியை நினைவுகூர்ந்து, பேரரசன் சூடியால் "செங்" எனும் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டான். தொடர்ச்சியாகப் பதவியுயர்வுகளைப் பெற்ற செங்கே, பின் அரசவைத் தூதனாகப் பதவியுயர்வு பெற்றதுடன், மிங்கலின் கடற்படையிலும் இணைந்துகொண்டான். அடுத்த மூன்று பத்தாண்டுகளில், பெரும் கடற்பயணங்களை அவன் மேற்கொண்டதுடன், கிழக்கு பசுபிக் மற்றும் இந்தியக் கடல்களில் சீனப்பேரரசின் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக்கொண்டான். 1424இல் இந்தோனேசியாவின் பலெம்பாங் நகரிற்குச் சென்ற செங்கே, மீண்டும் சீனம் திரும்பியபோது, யொங்கல் சக்கரவர்த்தி சூடி இறந்துவிட்டதை அறிந்தார். யொங்கல் சக்கரவர்த்தியின் மறைவுக்குப் பின்னர், சூடியின் மகன் ‘’கொங்சி சக்கரவர்த்தி’’ என்ற பெயரில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தான். சீனக்கடல் பயணங்கள் அவன் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டதோடு, செங்கே, பேரரசின் தெற்குத் தலைநகரான நான்ஜிங்கின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். நான்ஜிங்கின் புகழ்பெற்ற பீங்கான் கோபுரம் அப்போது தான் அவரால் கட்டப்பட்டது. 1430இல் புதிதாக ஆட்சிக்கு வந்த சுவாண்டே சக்கரவர்த்தி, செங்கேயின் ஏழாவதும் இறுதியுமான கடற்பயணத்தை மேற்கொள்வதற்குப் பணித்தார். இப்பயணத்தில் செங்கேக்கு ‘’சென்போ தைஜான்’’ என்ற பெயர் அரசால் வழங்கப்பட்டிருந்தது. இப்பயணத்திலிருந்து திரும்பி சிலநாட்களின் பின் 1433இல் செங்கே இறந்ததாகவும், நான்ஜிங்கில் பாதுகாவலராகத் தொடர்ந்து பணியாற்றியபோது 1435இல் மரித்ததாகவும், அவரது மறைவு பற்றி இருவேறுகருத்துக்கள் நிலவுகின்றன. . செங்கே இறுதிக்கடற்பயணத்தின் போதே இறந்துவிட்டதாகவும், அவரது பிணம் மலபார் கடலில் இடப்பட்டதாகவும் கூட சொல்லப்படுகின்றது. நான்ஜிங்கில் செங்கேக்காக, குதிரைலாட வடிவில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டது. வரலாற்றாய்வாளர்கள் இது செங்கேயின் ஆடைகளையும் தலைக்கவசத்தையும் வைத்துக் கட்டப்பட்ட ஒரு வெறுங்கல்லறை என்றே கருதுகின்றனர். . இக்கல்லறையானது இஸ்லாமியபண்பாட்டிற்கு அமைவாக 1985இல் மீளக்கட்டப்பட்டது. . பொ.பி 14ஆம் நூற்றாண்டில் சீன – அராபிய வர்த்தக உறவைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்த யுவான் அரசமரபு, 1405இற்கும் 1433இற்கும் இடையில் ஏழு கடற்பயணங்களை நடாத்தியிருந்தது. யொங்கல் சக்கரவர்த்தி, இந்தியப் பெருங்கடலில் சீனத்தின் ஆதிக்கம் நிலைநிற்கவேண்டும் என்பதில் பெருத்த ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு முன் ஆட்சியிலிருந்த அவர் பெறாமகன் யியான்வென் சக்கரவர்த்தி, மாறுவேடத்தில் தப்பியோடிவிட்டதாக பரவியிருந்த வதந்தியும், செங்கே தலைமையில் இக்கடற்பயணங்களை நடாத்துவிக்க அவரைத் தூண்டியதாக மிங் அரசமரபின் வரலாற்றுப்பதிவுகள் சொல்கின்றன. செங்கேயின் முதலாவது கடற்பயணம் ‘’சீனவரலாற்றிலேயே நீர்ப்பாதையில் நிகழ்ந்த மிகப்பெரிய தேடுதல்வேட்டை’’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. இக்கடற்பயணங்களுக்காக மிகத்தீவிரமான ஏற்பாடுகள் நாஞ்சிங்கில் இடம்பெற்றன. பல்மொழி வல்லவர்கள் நாஞ்சிங்கிற்கு அழைத்துவரப்பட்டு, பயிற்சிவகுப்புகள் நிகழ்த்தப்பட்டன. இவ்வேற்பாடுகளின் பின் 1405 யூலை 11ஆம் திகதி, செங்கேயின் முதலாவது கடற்பயணம், இருபத்தெட்டாயிரம் படைவீரர்களுடன் சுசோவில் ஆரம்பமானது. புரூணை, சாவகம், தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங்கேயின் கப்பற்படைகள் பெருமளவு திறைச்செல்வங்களையும் பெற்றுக்கொண்டன. கைமாறாக, தங்கள், வெள்ளி, பீங்கான், பட்டு, போன்றவற்றை செங்கே அந்நாடுகளுக்குப் பரிசளித்தார். கிழக்காபிரிக்கக் கரையில் சீனாவுக்குக் கிடைத்த திறைச்செல்வங்களில், தீக்கோழிகள், வரிக்குதிரைகள், ஒட்டகம், யானைத் தந்தம் என்பன குறிப்பிடத்தக்கன. கென்யாவிலிருந்து அவர் பரிசாகக் கொணர்ந்த ஒட்டகச்சிவிங்கியை அதுவரை காணாத சீனமக்கள், அதைச் சீனத்தொன்மங்கள் குறிப்பிடுகின்ற ‘’குயிலின்’’ எனும் விலங்காக இனங்கண்டுகொண்டதுடன், அது சீனாவை வந்தடைந்தது, மிங் அரசருக்கு இறைவன் அளித்த அங்கீகாரம் என்றும் நம்பிக்கைகொண்டனர். செங்கே தனது இலக்குகளை பண்ணுறவாண்மை மூலமே பெரும்பாலும் அடைந்துகொள்ளமுயன்றார். எதிர்ப்பவர்கள் அவரது பெரும்படையைக் கண்டு, அச்சங்கொண்டனர். எனினும் சீனாவின் இராணுவபலத்தை நிரூபிக்க விழைந்த செங்கே தேவையான சந்தர்ப்பங்களில் வன்முறையில் இறங்கத் தயங்கவில்லை என்றே தெரிகின்றது. சீன மற்றும் தென்கிழக்குக் கடலில் பெரும் சிக்கலாக இருந்த கடற்கொள்ளையரின் கொட்டத்தை மிகக்கொடூரமாக அவர் ஒடுக்கினார். சென் சுயி என்ற மிகப்பலம்வாய்ந்த கடற்கொள்ளையர் தலைவனைச் சிறைப்பிடித்து மரணதண்டனைக்காக அவர் சீனாவுக்கு அனுப்பியது அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையின் கோட்டை இராச்சியம் மீது அவர் மேற்கொண்ட தரைவழிப்போரும், அவரது கடற்படையை மூர்க்கமாக எதிர்த்த அரேபிய மற்றும் கிழக்காபிரிக்கப் படைகளுக்கு அவர் விளைவித்த அச்சுறுத்தலும் இன்னொருவிதத்தில் முக்கியமானவை. யொங்கல் சக்கரவர்த்தியின் பேரன் சுவாண்டே சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்துடன் (1426 – 1435) சீனத்தின் பெருங்கடற்பயணங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. செங்கேயின் 1405ஆமாண்டு கடற்பயணத்தில் இருபத்தெட்டாயிரம் படைவீரரும், அறுபத்திரண்டு திறைசேர் கப்பல்களும், 190 நாவாய்களும் பங்கெடுத்திருந்தன. அவற்றில் புரவிக்கப்பல்கள், சரக்குக்கப்பல்கள், போர்க்கப்பல்கள், ரோந்துப்படகுகள், தண்ணீர்த்தாங்கிகள் என்பனவும் அடங்கியிருந்தன. பயணிகளில் வைத்தியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், குறிப்பெழுதிகள், கப்பல் பணியாளர்கள், வழிகாட்டிகள் என்போரும் இருந்தனர். செங்கேயின் கப்பல்கள் வடிவமைப்பிலும் கொள்ளளவிலும் மிகப்பிரமாண்டமாக அமைந்திருந்ததாக அதை நேரில் கண்டு குறிப்பிட்டுள்ள வரலாற்றாளர்கள் பதிவுசெய்துள்ளனர். இப்பயணத்துக்காக, செங்கேயின் கப்பல்கள் பயன்படுத்திய உலக வரைபடங்கள், "மோகுன் வரைபடங்கள்" ("Mao kun maps") என்று அழைக்கப்பட்டன. இவை ஒரு 1621 புத்தகமொன்றில் வெளியிடப்பட்டன. நாஞ்சிங்கிலிருந்து ஆபிரிக்கக்கரை வரையான பெரும்பகுதியை நாற்பது பக்கங்களில் இவ்வரைபடங்கள் குறிப்பிட்டிருந்தன. இலங்கை, தென்னிந்தியா, மாலைத்தீவுகள் உள்ளிட்ட இவற்றிலுள்ள வரைபடங்கள், கடல் நீரோட்டங்கள், காற்றுவளம் என்பவற்றைக் கருத்தில் கொண்டவையாக வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டு விளங்குகின்றன. இலங்கையில் காணப்படுபவை உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்டமுக்கியமான வளைகுடாக்கள், களப்புகள், கடல்முனைகள், கரையோரக்கோயில்கள் என்பன இவ்வரைபடங்களில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கையின் தேனவரை நாயனார் கோயிலில் செங்கேயால் அளிக்கப்பட்ட தானங்களைச் சொல்லும் காலி மும்மொழி கல்வெட்டு, 1911இல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் பேணப்படுகின்றது. சீனம், பாரசீகம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது இக்கல்வெட்டு. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே கோட்டை இராச்சியத்தை ஆண்ட மன்னன் அழகக்கோனுடன் செங்கேக்கு முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டும். கொழும்புக்கரையில் சீனப்படைகளுக்கும் சிங்களப்படைகளுக்கும் இடையே நடந்த போரில் அழகக்கோன் சிறைப்பிடிக்கப்பட்டு சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அவனை மிங் சக்கரவர்த்தி மன்னித்து அடுத்த ஆண்டே மீளவும் இலங்கைக்கு அனுப்பியதாக சீன வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. மு. க. சு. சிவகுமாரன் கலாநிதி மு. க. சிவகுமாரன் (குரும்பசிட்டி, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். ஓவியர். நுண்கலைப்பட்டதாரி. வெற்றிமணி இதழின் ஆசிரியர். இவர் கண்ணா என்ற புனைபெயரில் ஓவியங்களையும், நிலாமகள் என்ற புனைபெயரில் கவிதைகளையும் வடித்துள்ளார். இவர் தனது பதினோராவது வயதிலேயே குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர். சன்மார்க்க தீபம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எழுதி வெளியிட்டவர். இவர் தற்போது ஜேர்மனயில் வாழும் வேளையிலும் வெற்றிமணி வெளியீடாக பல நூல்களை வெளியிட்டுள்ளார். தனது சொந்தப்படைப்புகள், வெற்றிமணியில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்புகள், மற்றையவர்களின் படைப்புகள் என 15க்கும் மேற்பட்ட பல்வேறு தொகுதிகள் வெற்றிமணி வெளியீடாக வெளிவந்துள்ளன. ஜான் ஆன்வெல்ட் ஜான் ஆன்வெல்ட் ("Jaan Anvelt", ஏப்ரல் 18, 1884 – டிசம்பர் 11, 1937) என்பவர் எஸ்தோனியாவின் ஒரு புரட்சித் தலைவர் ஆவார். இவர் எஸ்தோனியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், சோவியத் எஸ்தோனியாவின் முதலாவது பிரதமராகவும் இருந்தவர். 1937 ஆம் ஆண்டில் ஸ்டாலின் ஆட்சியின் போது இவர் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளில் (பழைய ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 23), போல்ஷெவிக் தலைவராக இருந்த ஜான் ஆன்வெல்ட் தனது இடதுசாரி புரட்சிவாதிகளுக்குத் தலைமை வகித்து எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரை அடைந்து ஆட்சியைக் கைப்பற்றினார். குயவர் குயவர் என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார். குயவர், குலாலர், குலால கோலப்பர், வேலர், வேளாளர், சேரமா, செட்டி, பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, தெலுங்கு மானுடை, உடையார், பாட்டுக்காரர், ஓசிரையர், சாலியர், சோலியர், மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திருவிட மொழிகளாலும், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குயவர்கள் அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன. தென்னாற்காட்டின் திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவி அளித்த தானங்களை, ‘கலங்களும் மற்றுஞ் சால்களும் குடங்களும் பெருந் திருவமுதுக்கு பானைகளும் சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும் இடும் குசவன்’ என்று கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். குயவர்கள் மட்பாண்டத் தயாரிப்போடு அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டார்கள். மண்ணே மூலப்பொருள் எனும்போது சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் நன்னீர் ஆதாரத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே குடில் அமைத்துத் தங்கினார்கள். சிற்றூர் பேரூர் என அவர்கள் வியாபாரம் செய்த ஊர்களின் விளைச்சல் பொருட்களை மாற்றாகப் பெற்றுக் கொண்டார்கள். ‘பண்டமாற்று’ என்ற வழக்குச்சொல் அவர்களின் தொழில் முறையிலிருந்து உருவானது. சங்க, புராண இலக்கியங்களில், கலம்செய்கேரி, மண்ணுடையார், மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, வேட்கோவர் என்றெல்லாம் தொழில்முறையாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் கோயில் பணியாளர்களாக, பாதுகாவலர்களாக பூசகர் மரபினராக இருந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலியின் மேலகரம், திருச்சியின் காட்டகரம், தென் ஆற்காட்டின் புத்தகரம், வட ஆற்காட்டின் கோட்டகரம், மாயவரத்தின் அகரங்கிரங்குடி சென்னை திருவத்தியூரின் அகரம் கண்ட கோபாலபுரம் ஆகிய ஊர்கள் குயவர்குடிகளாக அடையாளப்படுத்தமுடியும். மண்கலைஞர்கள் வாழ்த்துகள் (திரைப்படம்) வாழ்த்துகள் 2008 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தை சீமான் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக மாதவன், பாவனா நடித்துள்ளார்கள். இத்திரைபடம் சனவரி 14, 2008 இல் திரையிடப்பட்டது. வாழ்த்துகள் படத்தில் பாவனாவைக் காதலிக்கும் மாதவன் தன் காதலியின் கூட்டுக் குடும்பத்தின் எதிர்ப்பைத் தன் அன்பான அணுகுமுறையாலும் உறுதியாலும் மாற்றி இறுதியில் அவரை மணந்து கொள்வது தான் கதை தோட்டியின் மகன் (புதினம்) 'தோட்டியின் மகன்' எனும் நாவல் மலையாளத்தில் 1946 களில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் மொழிபெயர்ப்பாகும்.இதனை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.1957 களில் சரஸ்வதி இதழில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டபொழுதும், 2000ம் ஆண்டில்களில்தான் இக் கதை நாவலுரு பெற்றது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழியாக்க நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது. ஆழப்புழை நகரசபையில் மலமள்ளும் தொழிலினை செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கையினை பற்றியும் அவர்களின் உணர்வுகள்,வெளிப்பாடுகள் போன்றவற்றினை மையமாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் தோட்டியின் மகன் வெளிவந்த காலத்திலிருந்து தொடந்து பேசப்பட்டுவரும் நாவல். மேடையிலும் எழுத்திலும். திருநெல்வேலிச் சீமையிலிருந்து மாடுகள் போல் பிடித்துக் கொண்டு போகப்பட்ட இந்தத் தோட்டிகள் தலித் வாழ்க்கையின் அவலத்தை நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கின்றனர். தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை (1947) மொழிபெயர்த்தபோது (1951, 52)சுந்தர ராமசாமி அவர்களுக்கு வயது இருபது , இருபத்தியொன்று மட்டுமே. இவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பை முதலில் படித்துப் பார்த்து ஊக்குவித்தவர் அவரது நண்பர் தொ.மு.சி.ரகுநாதன்.இந்நூலை தொடர்கதையாக சரஸ்வதியில் வெளியிட்டவர் அவரது நண்பர் வ.விஜய பாஸ்கரன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நூலாக்கம் செய்ய முயன்ற போது சரஸ்வதி தொகுப்பைத் தந்து உதவியவர் அவரது நண்பர் கர்ணன். சரஸ்வதி இதழில் சுந்தர ராமசாமி அவர்கள் பெயரில் ஏற்கனவே சிறுகதைகள் வந்து கொண்டிருந்ததால், என்.எஸ்.ஆர் என்ற பெயரில் தோட்டியின் மகன் தொடர்கதையாக வெளியாயிற்று மார்ச் 57 இலிருந்து ஜூன் 58 வரையிலும். தமிழில் வெளியிடத் தகழி ஐம்பதுகளிலேயே உரிமையும் தந்திருந்தார் என்ற போதும் மொழிபெயர்த்து ஐம்பது வருடங்கள் கழித்துதான் நூலாக வெளிவந்தது. http://naarchanthi.wordpress.com/2014/02/17/தோட்டியின்-மகன்/ கீரி கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. 34 சிற்றினங்களை உள்ளட்டக்கிய கீரிகளின் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் தவிர்த்து) இருக்கிறது. 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில இனங்களைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில இனங்கள் குழுவாக வாழந்து இரையைப் பகிர்ந்துண்டு வாழ்கின்றன. பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன. இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு. மானவதி மானவதி கருநாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும். அகஸ்ட்டஸ் அகஸ்ட்டஸ் (செப்டெம்பர் 23, கிமு 63 – ஆகஸ்ட் 19, கிபி 14) ரோமப் பேரரசை ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ், மார்க் ஆன்டனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.. இது வரலாற்றாளர்களால் இரண்டாவது முக்கூட்டணி (Second Triumvirate) என அழைக்கப்படுகின்றது. இம் முக்கூட்டணியின் ஒரு உறுப்பினராக அகஸ்ட்டஸ், ரோமையும் அதன் மாகாணங்கள் பலவற்றையும் ஆண்டு வந்தார். காலப்போக்கில், அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். முக்கூட்டணியி சிதைவுக்குப் பின்னர், ரோமக் குடியரசைப் பெயரளவில் மீளமைத்த அகஸ்டஸ், அரசாங்க அதிகாரத்தை செனட் அவைக்குக் கொடுத்திருந்தாலும், நடைமுறையில் தானே அதிகாரம் முழுவதையும் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக இடம்பெற்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது. ரோமக் குடியரசில், ரோமச் சர்வாதிகாரி என்ற பதவி இருந்ததுபோல, ரோமப் பேரரசன் என்னும் பதவி சட்ட அடிப்படையில் இருக்கவில்லை. ரோமச் சர்வாதிகாரி என்னும் பதவியை முன்னர் ஜூலியஸ் சீசரும், சுல்லாவும் வகித்திருந்தனர். மக்கள் இப்பதவியை ஏற்கும்படி கூறியபோதும் அகஸ்ட்டஸ் அதனை ஏற்கவில்லை. வாழ்க்கைக் காலம் முழுவதற்குமாக சில அதிகாரங்கள் செனெட்டினால் சட்டமுறையில் அகஸ்ட்டசுக்கு வழங்கப்பட்டிருந்தன. கிமு 23 வரை அகஸ்டஸ் "கொன்சல்" பதவியை வகித்து வந்தார். அகஸ்ட்டசின் அதிகார வளர்ச்சிக்குப் பின்னணியில், நிதிநிலை வளர்ச்சி, பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம் கிடைத்த வளங்கள், படைவீரர்களின் விசுவாசம், மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன. அகஸ்டஸ் (/ ɔːɡʌstəs /; தொன்மையான இலத்தீன்: [awɡʊstʊs]) இவருடைய வாழ்நாளில் இவர் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். இவருடைய தந்தை வழிக் குடும்பம் வேலட்டரி நகரில் இருந்தனர். அஃது உரோம் நகரிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அகஸ்டஸ் கி.மு செப்டம்பர் 23 -ல் உரோம் நகருக்கு அருகில் உள்ள ஆக்ஸ் ஹெட் என்ற இடத்தில் பிறந்தார். கயஸ் ஆக்டேவியஸ் துரினஸ் என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. கி.மு 59 ல், இவருக்கு நாண்கு வயதாக இருந்தபோது, இவரது தந்தை காலமானார். அவரது தாயார் சிரியாவின் முன்னாள் ஆளுநரான லூசியஸ் மாரியஸ் பிலிப்பன்ஸ் என்பவரை மணந்தார்.பிலிப்பீன்சு பேரரசர் அலெக்சாந்தரிடம் பதவிவிலகுமாறு கேட்டுக்கொண்டார் பின்பு கி.மு 56 ல் தூதராக தேர்வு செய்யப்பட்டார். இவரின் வளர்ப்புத் தந்தையான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 41 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார். ஜூலியஸ் சீசர் இறந்த பின் ரோமக் குடியரசின் ஆட்சியைப் பிடிப்பதில் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே பல காலம் கடும் போராட்டம் நடந்தது. ஜீலியசு சீசரின் தளபதிகள் பலர் அகசுடசு சீசரின் வயதோடு அதிக அரசியல் அனுபவத்தை கொண்டிருந்தனர். தன் வளர்ப்புத் தந்தையின் காலத்தில் அதிகாரமிக்க தளபதிகளை எல்லாம் நண்பராக்கிக் கொண்டார். எதிர்த்தவர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெற்றார். அந்தோனி என்ற தளப்தி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். அந்தோனியுடன் சீசர் ஒப்பந்தம் செய்து கொண்டு ரோமக் குடியரசின் கிழக்குப் பகுதியை அந்தோனிக்கு கொடுத்து விட்டு மேற்குப் பகுதியை சீசர் எடுத்துக் கொண்டார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. அதுவரைக்கும் குடியரசாக இருந்த ரோம் மீண்டும் முடியராசுகளாய் பிரிந்தன. அந்தோனிக்கும் சீசருக்கும் போர் நிறுத்தம் நிலவிய காலத்தில் அந்தோனி எகிப்திய அரசியான கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி ஆட்சியில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்நேரங்களில் சீசர் தனக்கான படை பலங்களையும் அரசியல் பலங்களையும் அதிகரித்துக் கொண்டார். கி. மு. 32ஆம் ஆண்டில் இருவருக்கும் போர் மூண்டது. கி.மு. 31ஆம் ஆண்டில் அப்போரின் தொடர்ச்சியான ஆக்டியம் கடற்சமர் ஏற்பட்டது. அதில் அந்தோனி ஐநூறு கப்பல்களை வைத்திருந்தார். அவற்றில் 230 கப்பல்கள் நல்ல கட்டமைப்புடனும் உயர் கண்கானிப்பு கோபுரங்களோடும் அமைந்திருந்தன. சீசரிடம் 250 கப்பல்களே இருந்தன. ஆனாலும் சீசரின் கடற்படையே வெற்றி பெற்றது. கிளியோபாட்ராவும் அந்தோனியும் தற்கொலை செய்து கொண்டனர். மேற்குப்பகுதிகளும் கிழக்குப் பகுதிகளும் இணைந்து ரோமப் பேரரசு உருவெடுத்தது. இவர் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் யவனர் என்ற சொல் இவர்களையும் குறிப்பதாக உள்ளது. நிகோலசு தமாசுகசு என்பவர் இந்த அகஸ்ட்டஸ் கால ரோமப் பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர்.இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்ப்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் பாண்டியர் சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் இந்த அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை நிகோலசு தமாசுகசு அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார். ஆகத்து மாதம் என்பது அகஸ்டஸ் என்ற இவருடைய காலத்திற்குப் பிறகே இந்தப் பெயர் பெற்றது. அதுவரையில் இது செக்ஸ்டைல்ஸ் (ரோமன் நாள்காட்டியில் இலத்தீன் எழுத்துகள் சிக்ஸ் என்பது செக்ஸ் என்று ஆனது) என்று அழைக்கப்பட்டது. யூலியசு சீசரின் பெயர்க்காரண்மாக இருக்கும் சூலை மாதத்திற்குச் சமமாக வேண்டுமென்று ஆகஸ்டு மாதத்திற்கும் 31 நாட்கள் வேண்டுமென்றே வைக்கப்ப்பட்டதாக ஒரு கதை ஒன்றும் இருந்து வந்தது. ஆனால் இது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் ஜோகன்னஸ் டி சாக்ரொபோஸ்கோ என்பவரின் கண்டுபிடிப்பு ஆகும். மேக்ஸ் பிளாங்க் மக்ஸ் பிளாங்க் ("Max Planck") எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார். 1894 இல் பிளாங்க் கருப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள். 1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா அல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வியன் அவர்கள் வியன் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தையை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்ப்பட்டது பின்னர் "புறஊதா பேரழிவு" என்று இந்த விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை. 1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், "அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார். டிசம்பர் 14, 1900 இல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும், மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும்: இதில் என்பது பிளாங்க் மாறிலி எனப்படும். இது பிளான்கின் குவாண்டம் என்றும் அறியப்படுகிறது மற்றும் என்பது கதிர்வீச்சின் அதிர்வெண்னை குறிக்கும். இங்கு விவாதிக்கப்படும் சக்தி எப்பொழுதும் என்று தான் குறிக்கப்படுகிறது மற்றும் மட்டும் தனியாக குறிக்கப்படுவதில்லை. இயற்பியளாரர்கள் இப்போது இதனை குவாண்டா போட்டான்கள் என்று அழைக்கின்றனர், மேலும் அதிர்வெண் என்பது ஒரு போட்டோனின் சொந்தக் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஆற்றல் கொண்டதாக இருக்கும். அந்த அதிர்வெண்ணில் மொத்த ஆற்றல் வுக்கு சமமாகவும் மற்றும் அதன் ஆற்றல் அந்த அதிர்வெண்ணில் உள்ள போட்டான்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும். 1920 ஆம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர், ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது, மற்றும் ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது. பிளாங்க் அலை இயக்கவியல் விரைவில் குவாண்டம் கோட்பாட்டின் காரணமாக இருக்கும் என்ற தேவையற்ற எண்ணத்தில் இருந்தார். எனினும், இது உண்மையாக வில்லை. மேலும் அவரது பணி மற்றும் ஐன்ஸ்டீனின் தத்துவார்த்த விவாதங்களுக்கு எதிராக தனியாக ஒரு புதிய குவாண்டம் கோட்பாட்டை மட்டுமே உறுதிப்படுத்தியது. பிளாங்க் தனது இளைமைப் பருவங்களில் எண்ணிய பழைய கருத்துக்களை தனது அனுபவமிக்க பல ஆண்டுகளின் போராட்டத்தில் மூலம் தனது முந்தைய பழைய எண்ணங்கள் பற்றிய உண்மையை உண்ர்ந்தும், தவறுகளை திருத்தியும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் னொண்டவராக மாறியும் இருக்கிறார்: "ஒரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பது தனது எதிரிகளை வெற்றிகொள்வது மட்டுமல்லாமல் சமரசம் உண்டாக்கவும் மற்றும் எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கை ஒளியையும் உண்டாக்குகிறது, இதனால் எதிர் கருத்துக்கள் மறைந்தும் விடுகிறது மேலும் புதிய தலைமுறையினர் இதை உண்ர்ந்து நன்கு வளர்ந்தும் இருக்கிறார்கள்". 1905 ஆம் ஆண்டில், இதுவரை அறியப்படாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார். சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உடனடியாக அங்கீகரித்த சிலர் மத்தியில் பிளாங்க்கும் ஒருவராக இருந்தார். இந்த கோட்பாடு விரைவில் பரவலாக ஜெர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விரிவாக்க பிளான்க் கணிசமாக பங்களித்துள்ளார். எடுத்துக்காட்டாக, அவர் பாரம்பரிய இயற்பியலின் அடிப்படையில் கோட்பாட்டை மீண்டும் எழுதினார். பிளாங்க் ஜெர்மனியில் லூதரன் சர்ச்சில் உறுப்பினராக இருந்தார். இருப்பினும், பிளாங்க் மாற்று கருத்துக்களுக்கும் மற்றும் மதங்களுக்கும் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்தார். 1937 ஆம் ஆண்டில் "மதம் மற்றும் இயற்கை அறிவியல்" எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவில், அவர் இந்த குறியீட்டின் முக்கியத்துவத்தையும், கடவுளை வணங்குவதற்கான சடங்குகள் நேரடியாக ஒரு விசுவாசியின் திறனோடு தொடர்புடையதாக வலியுறுத்தினார், ஆனால் அந்தக் குறியீடுகள் தெய்வீகத்தின் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அத்தகைய அடையாளங்கள், குறியீடுகள் பற்றிக் கற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதற்காக அவர் நாத்திகத்தை விமர்சித்தார், அதே சமயத்தில் விசுவாசிகள் இத்தகைய சின்னங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதை எச்சரித்தார். மக்ஸ் பிளாங்க் 1944 இல் இவ்வாறு கூறினார்: "ஒரு மனிதனாக எனது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவான தலைசிறந்த விஞ்ஞானத்திற்காகவும் , அணுக்களைப் பற்றிய ஆய்வுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். இந்த அணுக்கள் பற்றிய என் ஆராய்ச்சியின் விளைவாக இவ்வாறு என்னால் ஒன்றைச் சொல்ல முடியும்: அனைத்து அணுக்களின் ஆரம்பமும் மற்றும் முடிவும் ஏதோ ஒரு விசையின் அல்லது சக்தியின் விளைவாக ஒரு அணுவின் துகள்கள் அனைத்தும் அதிர்வதும் மற்றும் இதனால் இந்த நிமிடத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஒன்றாக இணைக்கிறது. நாம் இந்தச் சக்தியை ஒரு நனவு மற்றும் அறிவார்ந்த மனப்பான்மையின் இருப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மனம் தான் எல்லா விஷயங்களுக்கும் மேலாக இருக்கிறது". பிளாங்க் இப்படி கூறுகிறார், ஒரு விஞ்ஞானி என்பவர் கற்பனை மற்றும் நம்பிக்கை இரண்டும் கொண்டவராக கருதப்படுகிறார். ஏனெனில் "மதம் மற்றும் அறிவியல் இரண்டிற்கும் கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கு, எப்போதும் கடவுள் தொடக்கத்தில் உள்ளார், மற்றும் இயற்பியல் அறிஞர்களுக்குக் கடவுள் அனைத்துக் கோட்பாடுகளின் முடிவில் உள்ளார்... முன்னவருக்குக் கடவுள் அடித்தளம், பின்னவருக்குக் கடவுள் பொதுவான உலக பார்வைகளின் கீரிடம் போன்றவராவார்". டேவிட் பென்-குரியன் டேவிட் பென்-குரியன் ("David Ben-Gurion", அக்டோபர் 16, 1886 - டிசம்பர் 1, 1973) இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் சிடே போக்கர் (Sde Boker) என்னும் பாலைவனப் பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் அந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது. கில்கமெஷ் காப்பியம் கில்கமெஷ் காப்பியம் ("Epic of Gilgamesh") என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். ஒளி உமிழ் இருமுனையம் ஒளி-உமிழ் இருமுனையம் அல்லது ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி (இலங்கை வழக்கு: ஒளிகாலும் இருவாயி, "light-emitting diode") என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இது இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர். இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர்மின்னிகள் புரைமின்னிகளுடன் மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின்ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது. 1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ளஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன. இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் கட்புலனாகும் ஒளி, புற ஊதாக் கதிர், மற்றும் அகச்சிவப்புக் கதிர் அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன. ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீக்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன. இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது. வடக்கு வியட்நாம் வடக்கு வியட்நாம் (North Vietnam) நாட்டின் அலுவல் பெயர் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு ஆகும்; இது வியட்நாம் மொழியில் வியட்நாம் தான் சூ சோங் கோவா எனப்படுகிறது. வடக்கு வியட்நாம் தென்கிழக்காசியாவில் 1945 முதல் 1976 வரை அமைந்திருந்த நாடாகும். முழுவதும் இடம்பெற்ற ஆகத்துப் புரட்சியை அடுத்து, பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் கனோய் நகரில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு எனும் பெயரில் அதை ஒரு பொதுவுடைமை அரசாக வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஓ சி மின் அறிவித்தார்.. பிரான்சு தன் குடியேற்றத்தை உறுதிப்படுத்தவே, பிரான்சுக்கும் ஓ சி மின் தலைமையில் இருந்த வியட்மின் அமைப்புக்கும் (. "வியட்நாம் விடுதலைக் குழுவுக்கும்") இடையே போர் மூண்டது. வியட்நாம் விடுதலைக் குழு என்பது வியட்நாமின் தேசியக் குழுக்களின் கூட்டமைப்பாகும். பெரும்பாலும் இவை பொதுவுடைமை அணிகளால் ஆனவை. வியட்நாம்1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச்சு 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ தாய் நாட்டின் அதிஉயர் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1951 பிப்ரவரி 1 இல் பொதுவுடைமையாளர்கள் இலாவோ தோங் (தொழிலாளர்) கட்சியை உருவாக்கி அறிவித்தனர்.இதனால் வியட்மின் அமைப்பில் இருந்த பொதுவுடைமை சாராதார் எண்ணிக்கை படிப்படியாக மட்டுபட்டது. 1946 முதல் 1954 வரையிலான காலகட்டத்தில் வியட்மின் வியட்நாமின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் கட்டுபாட்டில் கொணர்ந்தது. 1954 இல் பிரான்சை வெற்றிகண்டதும், ஜெனீவா உடன்படிக்கையினால் (1954) பிரான்சுக்கும் வியட்மின் படைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து, வியட்நாம் விடுதலை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கை வியட்நாமை வடக்கு, தெற்குப் பகுதிகளாக இரண்டாகப் பிரித்தது. எனவே 1956 ஜூலையில் "வியட்நாமை ஒருங்கிணைக்க வியட்நாம் முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது." வடக்குப் பகுதி வடக்கு வியட்நாம் எனவும் தெற்குப் பகுதி தென்வியட்நாம் அல்லது வியட்நாம்குடியரசு எனவும் வழங்கப்பட்டது. ஜெனீவா உடன்பாட்டை நடைமுறைபடுத்தல், இந்தியா, கனடா, போலந்து ஆகிய நாடுகளின் பன்னாட்டுக் குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. மாறாக "ஐக்கிய நாட்டவையின் மேற்பார்வையில் நேர்மையாக நடத்தும் பொதுத் தேர்தல் வழியாகவே தொடர்ந்து வியட்நாம் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும்" என அறிவித்தது." வியட்நாம் குடியரசின் முதன்மை அமைச்சர் 1955 ஜூலையில் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பொதுத் தேர்தலில் தெற்கு வியட்நாம் அதாவது அன்றைய வியட்நாம் குடியரசு கலந்து கொள்ளாது என அறிவித்தார் . மேலும் அவர் தெற்கு வியட்நாம் ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதால் அதற்கு தெற்கு வியட்நாம் கட்டுபடாது எனவும் கூறினார். தேர்தல்வழி ஒற்றுமை தோல்வியுறவே, வியட்நாமின் மக்களாட்சிக் குடியரசு நாட்டை ஒருங்கிணைக்க வியட்நாம் போரைத் தொடங்கி 1955முதல் 1975 வரை நட்த்தியது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாம் வியட் காங் கிளர்ச்சிப் படை அணிகளும் சோவியத் ஒன்றியம், சீனா ஆதரவில் தெற்கு வியட்நாம் படையுடன் போரிட்டது. ஐக்கிய ஆமெரிக்காவும் பொதுவுடைமை எதிர்ப்பு படைகளும் தென்கொரிய இரண்டாம் குடியரசும் ஆத்திரேலியாவும் தாய்லாந்தும் சில சிறுகுழுக்களும் இணைந்து போரிட்டன. வடக்கு வியட்நாம் கம்போடியாவிலும் இலாவோசிலும் செயல்பட்ட பொதுவுடைமையாளரோடு அமெரிக்கச் சார்பு அரசுகளுக்கு எதிராகப் போரிட(1953–70) ஒத்துழைத்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியர்சுப் படைகளும் வியட் காங்கும் வியட்நாம் குடியரசை 1976 இல் வீழ்த்தியதும் போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக ஒருங்கிணைந்தன. ஆன்மிகம் ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் ("spirituality") என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் பயனுள்ள ஒரு செயற்பாடு ஆகும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத்தன்மையையும் உணர்த்துகிறது. இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும். உயிர் உயிர் () ("Life") என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உருப்படிகளின் சிறப்பாகப் பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உருப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை தாவரங்கள், விலங்குகள், காளான்கள், முகிழுயிரிகள், தொல்லுயிரிகள், குச்சுயிரிகள் என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர் வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். உயிரியல் உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன. உயிர் பற்றிய வரையறை முரண்பாடானதாகும். நடப்பு வரையறை உயிரிகள் தன்நிலைப்புள்ளவை; உயிர்க்கலன்களால் ஆனவை; வளர்சிதைமாற்றமுள்ளவை; தொடர்ந்து வளர்பவை; சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்பவை:தூண்டலுக்கு ஏற்ப துலங்குபவை; இனப்பெருக்கம் செய்பவை என வரன்படுத்துகிறது. என்றாலும் வேறுபல வரையறைகளும் முன்மொழியப்படுகின்றன. நச்சுயிரிகள் போன்றவை விளிம்பு நிலையில் உள்ளனவாகும். வரலாறு முழுவதும் உயிர் பற்றி வரையறுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. உயிரின் இயல்புகள் பற்றியும் உயிரின் தோற்றம் பற்றியும் பொருள்முதலியம் போன்ற பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. பொருள்முதலியம் உயிர் பொருண்மத்தில் இருந்தே தோன்றியது எனவும் உயிர் பொருண்மத்தின் சிக்கலான வடிவமே எனவும் கூறுகிறது; பொருள்வடிவியம் ("hylomorphism") அனைத்து உருப்படிகளும் பொருண்மமும் வடிவமும் கொண்டவை எனக் கூறுகிறது. உயிர்வகையின் வடிவம் உயிர் அல்லது ஆன்மா என்கிறது; தன்னியல்புத் தோற்றம் உயிரற்றதில் இருந்தே உயிரும் உயிரியல்பும் தொடர்ந்து எழுகிறது எனக் கூறுகிறது. என்றாலும், உயிரிகள் உயிர்விசை அல்லது உயிர்ப்பொறியைக் கொண்டுள்ளன என்ற கருதுகோள் இப்போது வழக்கிறந்துவிட்டது. பல அறிவியல் புலங்களின் வளர்ச்சிகளை உள்ளீடாகக் கொண்ட நிகழ்கால வரையறை மிகவும் சிக்கலானதாகும். உயிரியற்பியலாளர்கள் வேதி அமைப்புகளைச் சார்ந்து பல வரையறைகளை முன்மொழிந்துள்ளனர்; கையா கருதுகோள் போன்ற உயிர்வாழ் அமைப்புகள் சார்ந்த சில வரையறைகளும் நிலவுகின்றன. கையா கருதுகோள் புவியை உயிருள்ளதாகக் கருதுகிறது. மற்றொரு கோட்பாடு உயிர் என்பது சூழல் அமைப்புகளினியல்பாக்க் கருதுகிறது. மேலும் ஒன்று, கோட்பாடு, கணிதவியல் உயிரியலின் கிளையான அருஞ்சிக்கல் அமைப்பு உயிரியலில் விரிவாக விளக்கப்படுகிறது. உயிரிலித் தோற்றம் எளிய கரிமச் சேர்மத்தில் இருந்து அதாவது உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல்நிகழ்வாகத் தோன்றியதென விவரிக்கிறது.அனைத்து உயிரிகளின் பொதுவான இயல்புகள் உயிர்வேதியியல் நிகழ்வுகள் நிலைகொள்ள, சில அடிப்படை வேதித் தனிமங்களின் தேவையைச் சுட்டுகின்றன. இயற்பியலாளர்களான, ஜான் பர்னல், எர்வின் சுரோடிங்கர், இயூஜீன் விக்னர், ஜான் அவெரி ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது. புவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆனுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது. புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாகக் குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில் (LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர். முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன. உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். செயற்கை உயிர் என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. இறப்புஎன்பது உய்ரி நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். மறைதல் அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன. உலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும். உயிர்க்கலன் இல்லாத உயிரினம், உயிர்க்கலன் உள்ள உயிரினம் என உயிர்த்திணை உலகம் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. உயிரைப் பற்றி வரையறுத்தல் அறிவியலாளருக்கும் மெய்யியியலாளருக்கும் ஓர் அறைகூவலாகும். உயிர் என்பது பொருளாக அமையாது நிகழ்வாக இருத்தலால் இச்சிக்கல் அரியதாகிறது. எந்தவொரு வரையறையும் புவியில் வாழும் அனைத்து உயிர்வகைகளையும் இவற்றினும் வேறுபட்ட அறியப்படாத உயிர்வகைகளையும் பொதுவாக உள்ளடக்கிப் பொதுவாக வரையறுக்க போதுமானதாக இருக்கவேண்டும். உயிர் பற்றிய மறுக்கவியலாத வரையறை ஏதும் இல்லையென்பதால், உயிரியலில் நிலவும் நடப்பு வரையறைகள் அனைத்துமே விவரிப்புகளாக மட்டுமே அமைகின்றன. எனவே, உயிர் பின்வரும் அனைத்து அல்லது பெரும்பாலான பண்புகளை வெளிப்படுத்தும் பான்மையதாகக் கருதப்படுகிறது. இந்தச் சிக்கலான நிகழ்வுகள் உடலியங்கியல் செயல்பாடுகள் எனப்படுகின்றன. இவை உயிர்பேணலுக்குச் சாரமாகத் தேவையான இயற்பியல், வேதியியல் அடித்தளக் கட்டமைப்புகளையும் குறிகைசெலுத்தல், கட்டுபடுத்தல் ஆகிய இயங்கமைப்புகளையும் பெற்றுள்ளன. கோட்டி கோட்டி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஊனுண்ணும் ஒரு விலங்கு. இவை பல மணி நேரங்களை இரை தேடிச் செல்வதிலேயே செலவிடும். பல வகையான உணவு வகைகளை உண்ணும். புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், ஏன் பறவைகளின் முட்டைகள் என எல்லாவற்றையும் கபளீகரம் செய்கின்றன. இந்த கோட்டிகள், இரவில் நடமாடும் ஊனுண்ணியான ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இதன் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால் அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது. இது ஒரு வெப்பமண்டல பாலூட்டி. பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட ஆர்ஜெண்டீனா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாக செல்லும். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும். ஆண் கோட்டிகளோ தனிமை விரும்பிகள். இனப் பெருக்க காலத்தின்போது ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்து கொள்ளும். சினைக் கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மரங்களில் கூடு கட்ட கிளம்பிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு குட்டிகள் பிறக்கும். பிரவசம் முடிந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக் கொண்டு பழைய கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டி கோட்டிகள் பார்ப்பதற்கு பந்து உருண்டு வருவது போல் காட்சியளிக்கும். காடுகளில் உணவு தேடித் திரியும்போது இந்த கோட்டிகள் எப்போதும் மோப்பம் பிடித்துகொண்டு மண்ணை தோண்டிக்கொண்டும் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு இவற்றால் மிகவும் இடையூறு இருக்கும். சோளக் காடுகளும் கோழி பண்ணைகளும் இவற்றினால் இலகுவில் அழிக்கப்படும். வேட்டைக்காரர்களையும் இவை இலகுவில் ஏமாற்றிவிடும். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்துவிடும். அப்படி முடியாவிட்டால் துப்பாக்கி சத்தம் அல்லது கைதட்டும் சத்தம் கேட்டவுடன் கீழே விழுந்து செத்துவிட்டது போல் நடிக்கும். அதை எடுத்து செல்ல வேட்டைக்காரன் கிட்டே வருவதற்குள் ஓடிவிடும்! ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் ("Jigme Khesar Namgyel Wangchuck", பிறப்பு: பெப்ரவரி 21, 1980) என்பவர் வாங்சுக் குடும்பத்தைச் சேர்ந்த பூட்டானின் "டிரக் கியால்ப்போ" என்று அழைக்கப்படும் ஐந்தாம் மன்னரும் அரசுத்தலைவரும் ஆவார். உலகிலேயே மிகவும் குறைந்த அகவையுடைய நாட்டுத் தலைவர் இவர் ஆவார். இவரின் தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக் 9 டிசம்பர் 2006இல் தனது பதவியினை இவருக்காகத் துறந்தார். வாங்சுக் குடும்பம் பூட்டானை ஆளத்தொடங்கியதன் நூறாம் ஆண்டும், நற்குறியுள்ள ஆடாகவும் கருதப்பட்ட 2008இல் இவருக்கு முடிசூட்டப்பட்டது. கேசார், பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கிற்கும்ம் அவரது மூன்றாவது மனைவிக்கும் பிறந்த மூத்த மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரியும், தகப்பனின் மற்றைய இரு மனைவிகளுக்கும் பிறந்த மேலும் நான்கு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். கேசார் தனது 31 ஆம் வயதில் 2011 ஒக்டோபர் 13 ஆம் நாள் ஜெட்சுன் பெமா என்பவரைத் திருமணம் புரிந்தார். ஆரம்பக் கல்வியை பூட்டானில் கற்ற கேசர் உயர் கல்வியை ஐக்கிய அமெரிக்காவிலும், பட்டப்படிப்பை ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார். அரசியலில் பட்டப்பின்படிப்பும் பெற்றார் டிசம்பர் 2005 இல் மன்னர் சிங்கே தான் பதவி விலகிக் கொண்டு தனது மூத்த மகனான கேசரை 2008 இல் மன்னராக்க முடிவு செய்து அறிவித்தார். அதன் படி தனது அதிகாரங்கள் பலவற்றை மகனுக்கு மாற்றி நாட்டில் ஜனநாயக ஆட்சியை அறிமுகப்படுத்தினார். 2006 டிசம்பர் 14 இல் தனது பதவியைத் துறந்து ஜிக்மே கேசரை மன்னராக்கினார். மார்ச் 2008 இல் அங்கு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6 2008 இல் அதிகாரபூர்வமாக முடிசூடும் நிகழ்வு திம்புவில் உள்ள தங்க அரண்மனையில் நிகழ்ந்தது. இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு நவம்பர் 6 ஆம் திகதியே மிகச் சிறந்ததென சோதிடர்கள் கணித்துக் கொடுத்ததற்கமைய முடிசூட்டு விழா நடைபெற்றது. முடிசூட்டு விழாவில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய மன்னர் முடிசூடியதைக் கொண்டாட நவம்பர் 6 முதல் ஒரு வாரத்துக்கு பூட்டானில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழ் இலக்கணம் தலைப்புகள் பட்டியல் குறிப்பு: இந்த பட்டியல் தொடக்க நிலையில் உள்ளது.

எழுத்து எழுத்து அல்லது எழுதுதல் ("writing") என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல்). ஒப்பந்தங்கள், சட்டங்கள், கட்டளைகள் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வதற்கான வல்லமையை எழுத்து வழங்குகிறது என்பது எச். ஜி. வெல்சு அவர்களின் வாதம். இது, நாடுகள் பழைய நகர நாடுகளிலும் பெரிதாக வளர்வதற்கு உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைப் பெறுவது இதன் மூலம் சாத்தியமாகியது. அரசனுடைய அல்லது மதகுருவுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந் தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ்நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாக இருந்தது. எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, பட எழுத்து முறை, அசையெழுத்து முறை, அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான கருத்தெழுத்து முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான ஓவியஎழுத்து முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இது உள்ளது. எதிர்காலம் எழுவாய் தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக "கண்ணன் பந்து விளையாடினான்" என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும். வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: "பணத்தை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும். செயப்படுபொருள் தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. செயப்படுபொருள் என்பது ஒரு வசனத்தில் "யாரை அல்லது எதை, எவற்றை" என்பதின் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக "கண்ணன் பந்து விளையாடினான்" என்ற வசனத்தில் 'பந்து' செயப்படுபொருள் ஆகும். வன்கூடு வன்கூடு "(skeleton)" (கிரேக்கம்: σκελετός, "skeletós" "உலர்ந்த்து") என்பது (அல்லது பொதுவழக்கில் எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), உயிரிகளின் உடலைத் தாங்குவதற்கான வலுவான, கடினத்தன்மை கொண்ட ஒரு சட்டகம் ஆகும். இது விலங்கின் உடலை நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு புறவன்கூடாகவோ, அல்லது அகவன்கூடாகவோ நீர்ம வன்கூடாகவோ உயிர்க்கலக்கூடாகவோ அமையலாம். ஆமை போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும். நிலைத்திணை (தாவர) வன்கூடுகள் இயங்குபவையாகவும் தகைவை ஏற்பவையாகவும் உள்ளன. வன்கூடுகள் திண்ம வன்கூடு, பாய்ம வன்கூடு என இருபெரும் வகைகளாக அமைகின்றன. திண்ம வன்கூடு உடலின் உள்ளே அமையும் போது அகவன்கூடு எனவும் புறத்தே அமையும் போது புறவன்கூடு எனவும் அழைக்கப்படுகிறது. இவை மேலும் மீள்தகவின (இயங்குவன) எனவும் விறைதகவின (இயங்காதன) எனவும் பகுக்கப்படுகின்றன. பாய்ம வன்கூடுகள் எப்போதும் உடலுக்கு உள்ளே அமைகின்றன. புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்குப் பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல முதுகெலும்பிலிகளில் காணப்படும். ஓட்டுடலிகள், பூச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடு அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடர்பு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும். மெல்லுடலிகளிலும் புற வன்கூடு இவ்வகைச் செயற்பாடுகளை நிகழ்த்தினாலும் சூழலுடன் உறவுகொள்ளும் புலன் உறுப்பாகச் (பொறியாகச்) செயற்படுவதில்லை. புறவன்கூடு வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு கைட்டினால் ஆனதாகவும், பவளம், மெல்லுடலிகளில் இருக்கும் வன்கூடு கால்சியத்தினால் ஆனதாகவும், ஆரக்கதிரிகள் வகுப்பைச் சார்ந்த முன்னுயிரிகளின் வன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். புறவன்கூடு விலங்கின் ஒட்டுமொத்த பொருண்மையை ஒப்பிடும்போது மிகவும் பளுவாக அமையலாம். ஆனால், நிலத்தில் வாழும் விலங்கின் புறவன்கூடு ஒப்பீட்டளவில் நீர்வாழிகளை விட சிறியதாகவே இருக்கும். நீரில் எடை குறைவதால், நீரில் வாழும் விலங்குகள் பெரிய புறவன்கூடுகளைப் பெற்றுள்ளன. தென்பெரு மட்டி எனும் பசிபிக் கடலில் வாழும் மிகப் பெரிய உவர்நீர் மட்டியின் புறக்கூடு உருவிலும் எடையிலும் பாரியதாகும். "சிரிங்சு அருவானசு (Syrinx aruanus)" எனும் கடல்நத்தை மிகப் பெரிய புறக்கூட்டைப் பெற்றுள்ளது. அகவன்கூடு முதுகெலும்புள்ள விலங்குகளின் அகநிலைத் தாங்கு கட்டமைப்பாகும். இது கனிம மயமாகியத் திசுக்களால் (இழையங்களால்) ஆனதாகும். புரையுடலியான கடற்பஞ்சுகளில் உள்ளது போல இது வெறும் தாங்கல் அமைப்பாக நிலவுவதில் இருந்து, தசைகள் பொருந்துவதற்கான இடமாகவோ தசைதரும் விசைகளைக் கடத்தும் இயங்கமைப்பாகவோ செயல்படுதல் வரையிலான சிக்கலான தொழிற்பாடுகளை நிகழ்த்தும். உண்மையான அகவன்கூடு இடைத்தோல் திசுவடுக்கில் இருந்து உருவாகிறது. இத்தகைய அகவன்கூடு முள்தோலிகளிலும் முதுகுநாணிகளிலும் அமைகின்றன. நெகிழ்தகவு அல்லது மீள்தகவு வன்கூடுகள் இயங்கக் கூடியன; எனவே, அவற்ருக்குத் தகைவைத் தரும்போது உருமாற்றம் அடைந்து தகைவு விலகியதும் முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. இவை முதுகெலும்பில்லாத விலங்குகளில் அமைந்துள்ளன; எடுத்துகாட்டாக, இருகூட்டுக் கிளிஞ்சல்களின் கணுக்களிலும் கூழ்ம மீன்களிலும் இவை அமைகின்றன. இவ்வகை எலும்பை வளைக்க தசையின் சுருங்கலே போதுமானது என்பதால் மீள்தகவு வன்கூடுகள் மிகவும் பயனுள்ளவையாகும்; தசை தளர்ந்த்தும் இவை முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. சில மீள்தகவு வன்கூடுகள் குருத்தெலும்புகளால் ஆனவையாக அமைந்தாலும், பொதுவாக இவை புரதத்தாலும் பல்சாக்கிரைடுகளாலும் நீராலும் ஆனவையாகவே அமைகின்றன. கூடுதல் தாங்கலும் பாதுகாப்பும் வேண்டும்போது இவை விறைத்த வன்கூடுகளால் தாங்கப்படுகின்றன. விறைத்த வன்கூடில்லாமலே உடல் கட்டமைப்பை தாங்கலாம் என்பதால் நீர்வாழ் விலங்குகளில் மீள்தகவு வன்கூடுகள் அமைகின்றன. விறைதகவு வன்கூடுகள் தகைவைத் தரும்போது நெகிழ்ந்து விடாமல் உறுதியான தாங்கல் அமைப்பாக செயல்படுகின்றன. இவை தரைவாழ் உயிரிகளில் பொதுவாக அமையும். நத்தைக் கிளிஞ்சல் போன்ற நீர்வாழ் உயிரிகளில் அமையும் இத்தகைய வன்கூடுகள் பாதுகாப்புக்காக உதவுகின்றன அல்லது நீரில் வேகமாக நீந்தும்போது, அவற்றின் தசைகளுக்குத் தேவைப்படும் துணைத் தாங்கல் அமைப்பாக உதவுகின்றன. விறைதகவு வன்கூடுகள் கணுக்காலிகளில் கைட்டினாலும், பவளப் பாறைகளிலும் மெல்லுடலிகளிலும் சுண்ணக் கரிமவேற்று போன்ற சுண்ணகச் சேர்மங்களாலும் நுண்பாசிகளிலும் ஆரக்கதிரிகளிலும் சிலிக்கேட்டாலும் உருவாகின்றன. உயிர்க்கல வன்கூடு (கிரேக்கம்: "kytos" = உயிர்க்கலம் (cell)) உயிர்க்கலங்களின் வடிவத்தை நிலைநிறுத்தவும் பேணவும் பயன்படுகிறது. இது தான் உயிர்க்கல வடிவத்தைப் பேணிப் பாதுகாக்கும் இயங்கியல் கட்டமைப்பாகும். இது கசையிழையையும், சிலியா தசைகளையும் அடுக்குவரிசைக் கால்களையும் பயன்படுத்தி உயிர்க்கலம் இயங்குவதற்கும் உதவுகிறது; இது உயிர்க்கல உள்போக்குவரத்துக்கும் (அதாவது, நுண்ணுறுப்புகளும் நாளங்களும் இயங்குவதற்கும்) உயிர்க்கலப் பிளவுக்கும் உதவுகிறது. நீர்ம வன்கூடு என்பது ஓரளவு விறைப்பான, அழுத்தத்தில் நீர்மம் நிரம்பிய தசை சூழ்ந்த மென்திசுக் கட்டமைப்பாகும். உடற்பகுதியைச் சுற்றியமைந்த நெடுக்கு, வட்டத் தசைகள் ஒன்றுவிட்டு ஒன்றாக மாறிமாறி விரிந்து சுருங்கும் இயக்கத்தை நீளவாட்டில் ஏற்கின்றன. இதற்கான பொது எடுத்துகாட்டு மண்புழுவாகும். முள்தோலிகளும் அதைப்போன்ற மெல்லுடல் கொண்ட மண்புழு, கூழ்மைமீன்கள் ஆகிய முதுகெலும்பிலிகளின் அகவன்கூடுகள் நீர்மநிலையியல் வன்கூடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன; புரையான உடற்குழி கொண்ட குழியுடலிகளில் குழிநீர்மம் அமைந்துள்ளது. இந்தக் குழிநீர்ம அழுத்தம் அதைச் சூழ்ந்துள்ள தசையுடன் இணைந்து உயிரியின் வடிவத்தை மாற்றி, அதன் உடலில் இயக்கத்தை உருவாக்குகிறது. கடற்பஞ்சின் வன்கூடு நுண்ணளவு சுண்ணக அல்லது மணலகத்தாலான பஞ்சு நுண்கண்ணறைகளைக் கொண்டுள்ளன. கடற்பஞ்சுகளில் 90% உயிரினங்கள் தெமோக்கடற்பஞ்சுகலாக அமைகின்றன. இவற்றின் வன்கூடுகள் புரத நாரிழை அல்லது மணலகம் அல்லது இரண்டாலும் ஆகிய Tநுண்கண்ணறைகளைக் கொண்டுள்ளன. மணலக நுண்கண்ணறைகள் உள்ளவை, மற்ற கண்ணாடிவகைக் கடற்பஞ்சில் இருந்து வேறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளன. உடுமீன் (நட்சத்திர மீன்) உட்பட்ட, முட்தோலிகளின் வன்கூடு, சால்சைட் எனும் சுண்ணகச் சேர்மத்தாலும் ஓரளவு மகனீசிய உயிரகி (மகனீசியம் ஆக்சைடு) எனும் மகனீசியச் சேர்மத்தாலும் அமைகிறது. இது மேல்தோலுக்கு அடியில் உள்ள இடைத்தோலில் சட்டகவாக்க உயிர்க்கலங்களின் கொத்தில் அமைகிறது. இது புரையோடு உறுதியான இலேசாக இருக்கும். இது சிறு சிறு முட்கள் போன்ற சுண்ணகத் தட்டுகளோடு ஒன்றினைந்து அமையும்; இது அனைத்து திசைகளிலும் வளரவல்லது. எனவே, எளிதாக அழியும் உடற்பகுதியைப் பதிலீடு செய்யும். மூட்டுகளால் இணைந்துள்ள தனித்தனி எலும்புப் பகுதிகள் தசைகளுடன் இணைந்து உடலியக்கத்தை உருவாக்குகின்றன. பெரும்பாலான முதுகெலும்பிகளில் அமையும் முதன்மையான வன்கூட்டுறுப்பு எலும்பு அல்லது எலும்புக்கூடு என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மூட்டுகளில் காணப்படும் மற்றொரு முதன்மையான வன்கூட்டுறுப்பு குருத்தெலும்பு ஆகும். சுறாவை உட்பட்ட, குருத்தெலும்பு மீன்கலின் முழு எலும்புக்கூடுமே குருத்தெலும்புகளால் ஆயதாக அமைகிறது. வன்கூட்டின் அடிப்படை அலகுகளாக எலும்புத்துண்டங்கள் அமையும் பாணி, பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, இரு ஊடக வாழ்விகள் ஆகிய அனைத்து முதுகெலும்பிகளிலுமே பொதுவாக உள்ளது. இப்பாணி, குறிப்பாக முதுகெலும்புத் தூணிலும் விலாக்கூட்டிலும் தெளிவாக்க் காணப்படுகிறது. உடலளவில் தாங்கும் அமைப்புகளாக அமையும் எலும்புகள், உயிர்க்கல மட்டத்தில் சுண்ணகம், பாசுபேற்றுத் தேக்கிகளாகவும் அமைகின்றன. மீன்களின் உள்ளே தாங்கல் கட்டமைப்பக அமையும் வன்கூடு, குருத்தெலும்புகளாலோ எலும்புகளாலோ ஆனதாக அமையலாம். முதன்மை வன்கூட்டுறுபாக முதுகெலும்புத் தண்டு அமைகிறது. இது இலேசான வலிய முதுகெலும்புத் துண்டங்களால் ஆனதாகும். விலா எலும்புகள் முள்ளந்தண்டில் இணைந்துள்ளன. இவற்றில் மூட்டுகளோ மூட்டு வளையங்களோ அமைவதில்லை. இவை தசையாலேயே தாங்கப்படுகின்றன. மீனின் முதன்மையன புற உறுப்பு துடுப்பாகும். இது எலும்பாலோ நுண்கதிர் போன்ற மென்முட்களாலோ ஆனதாகும். இதற்கு விதிவிலக்கு மீனின் வால்சிறகு ஆகும். இது முள்ளந்தண்டோடு இணைவதில்லை. இவை முதன்மை நடுவுடற்பகுதியால் தாங்கப்படுகின்றன. பறவையின் வன்கூடு பறப்பதற்கேற்ப தகவமைந்ததாகும். இது மிக்வும் இலேசானதாகவும் அதேநேரத்தில் பறக்க எழும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் தகைவை தாங்குமளவுக்கு வலியதாகவும் அமைந்துள்ளது. முதன்மையான வன்கூட்டின் தகவமைப்பு பல எலும்புகள் பின்னிப்பிணைந்து ஒற்றையென்பாதலாகும். எனவே, தரைவாழ் முதுகெலும்பிகளைவிட பறவைகளின் எலும்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அமையும். பறவைகளில்தாடைகளோ பற்களோ கிடையாது. மாறாக நன்கு படிமலர்ந்த அலகுகள் அமைந்துள்ளன. இதுவும் மிகமிக இலேசானதாகும். பறவைகளின் இளம்பார்ப்புகளின் அலகுகளில் முட்டைப்பல் எனும் நீட்சி காணப்படுகிறது. இது அவை அடைமுட்டையில் இருந்து வெளிப்பட உதவுகிறது. கடற்பாலூட்டிகள் நீரில் நீந்துவதற்கேற்ப, பின்னங்கால்கள் திமிங்கிலம் போல அருகித் தேய்ந்துவிடுகின்றன; அல்லது சீல்களினைப் போல ஒற்றை மீந்துடுப்பாக ஒருங்கிவிடுகின்றன. திமின்கிலத்தில், கழுத்து முள்ளெலும்புகள் பிணைந்துவிடுகின்றன. இத்தகவமைப்பு, நீந்துவதற்கான நிலைப்பையும் நெகிழ்வையும் அளிக்கிறது. பயனிலை தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது". எடுத்துக்காட்டாக "கண்ணன் பந்து விளையாடினான்" என்ற வசனத்தில் "விளையாடினான்" பயனிலை ஆகும். சந்தி தொன்மவியல் தொன்மவியல் (Mythology) என்பது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் உண்மை என்று நம்புகின்ற நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; மனிதன், அண்டம் ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் தொன்மவரைவியல் (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆகும். வில்பர் ஸ்காட் என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார். தொன்மத்தை ஆங்கில மொழியில் மித்(Myth) என்று குறிப்பிடுவர்.இது Mithos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும்.இதற்கு, உண்மையான அல்லது கற்பனையான கதை அல்லது உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார். தொன்மமானது ஒவ்வொரு பண்பாட்டின் ஒரு அம்சமாகும். இயற்கையின் தன்மை அல்லது தன்னிச்சையான தன்மை, வரலாற்று மெய்மைகள் அல்லது மிகைப்படுத்தப்படும் சம்பவங்கள், அண்மைக்கால சடங்குகளின் விளக்கங்கள் எனத் தொன்மம் பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொன்ம மற்றும் துப்பறியும் புதினங்களால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற புனைவுகள் மற்றும் விரிவான கற்பனையான தொல்கதைகள் போன்றவை சமகாலத்திலும் தொடர்கின்றன.ஒரு கலாச்சாரத்தின் கூட்டு தொன்மவியலானது , வளம் சார்ந்த பகிர்வு மற்றும் மத அனுபவங்கள், நடத்தை மாதிரிகள் மற்றும் ஒழுக்க மற்றும் நடைமுறை படிப்பினைகளை வெளிப்படுத்த உதவுகிறது. தொன்மவியல் ஆய்வுகள் பண்டைய வரலாற்றிலேயே தொடங்கிவிட்டன. புதுமை தத்துவவாதிகளான ஹியூமெரஸ், பிளேட்டோ மற்றும் சல்லுஸ்டியஸ் ஆகியோர் கிரேக்க தொன்மங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பினர். பின்னர் மறுமலர்ச்சி தொன்மவியலாளர்களால் புத்துயிர் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆய்வின் மாறுபட்ட சிந்தனைகளால் , பழைமையைத் தகர்த்தெறியும் அறிவியல் கருத்துகளுக்கு முரணானது (டைலர்), "மொழியின் நோய்" (முல்லர்) அல்லது மந்திர சடங்கின் தவறான விளக்கம்(ஃப்ரேஸர்)எனத் தொன்மம் விளக்கப்பட்டது. மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து The Golden Bough என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் கார்ல் குஷ்தவ் யங்(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco), காசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin), நார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். தொன்மவியல் திறனாய்வின் முன்னோடியான குமாரி பாட்கின் ஆவார். இவர் எழுதிய நூலின் பெயர் Archetypal Patterns in Poetry என்பதாகும். ஆங்கில கவிஞர்கள் பலரும் மறுபிறப்புத் தொன்மத்தைக் கையாள்வதாக இந்நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளது தொன்மத்தின் கால எல்லையானது கி.மு.100000 முதல் 40000 வரை என வரையறை செய்யப்படுகிறது.மனிதன்,இறந்தவனைப் புதைக்க முற்பட்டதிலிருந்து தொன்மவியல் காலம் தொடங்குகின்றது. நார்த்ரோப் ஃபிரே என்பவர் தொன்மங்களில் காணப்படும் நான்கு வகையான நிலைகளைக் குறிப்பிடுகின்றார். 1)பிறப்புக் கட்டம் 2)திருமணம் அல்லது வெற்றிக்கட்டம் 3)இறப்புக் கட்டம் 4)சிதைவுக் கட்டம் இவற்றுள் பிறப்புக் கட்டத்தில் அதிகாலைப் பொழுது,வசந்தம், தலைவன் பிறப்பு, புத்தெழுச்சி,புத்துயிர்ப்பு,படைப்புநிலை,நல்ல சக்திகளின் வெற்றி மற்றும் பனிக்காலம்,சாவு,இருள் ஆகிய சக்திகளின் மீதான வெற்றிக்களிப்புகள் முதலான தொன்மங்கள் சுட்டப்படுகின்றன.இவற்றின் துணைநிலை மாந்தர்களாகத் தாயும் தந்தையும் உள்ளனர்.இது புனைவியலின் தொல்படிமமாகும். அடுத்துவரும் திருமணம் அல்லது வெற்றிக் கட்டத்தில் நடுப்பகல்,கோடைக்காலம்,நாயகன் வானுறையும் தெய்வநிலையாதல்,புனிதமிக்க திருமணம், தேவலோகம் இவை பற்றிய தொன்மங்கள் காணப்படும். தலைவி,தோழி,பாங்கன் ஆகியோர் இதன் துணைநிலை மாந்தர்களாக இருக்கின்றனர்.இன்பியலின் முல்லைநிலக் கவிதைகள் இதன் தொல்படிவமாகும். இறப்புக் கட்டத்தில் மாலை நேரம், இலையுதிர் காலம்,வீழ்ச்சி, இறக்கும் தெய்வங்கள், கோர மரணம்,தியாகம், தலைவனின் தனிமை ஆகியவை உட்பண்புகளாக உள்ளன.மேலும், துன்பியல் இலக்கியம், கையறுநிலை ஆகியவற்றின் தொல்படிமங்களும் இதனுள் அடங்கும். துரோகி,துயரம் பாடும் பாடகர் ஆகியோர் இதன் துணைநிலைமாந்தர்களாக உள்ளனர். சிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர். தொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும். திருவள்ளுவர், புத்தர்,இயேசு கிறிஸ்து, முகமது நபி முதலானோர் இந்த உலகின்மீது தாக்கத்தைத் தோற்றுவித்தவராவர்.இவர்கள் மனித குல வரலாற்றில் புதுமைப் படைத்தவர்கள்.ஆதலால், இத்தகையோரை மையப்படுத்தி பல்வேறு தொன்மவியல் உருவாகியது. சமணம், பௌத்தம்,சைவம், வைணவம், கிருத்துவம்,இஸ்லாம் ,சீக்கியம் முதலான சமயங்களின் எழுச்சி மனித வாழ்க்கையை மாற்றியமைத்தது.இச்சமயங்களைத் தோற்றுவித்தோரின் வாழ்வையும் அடியார்களின் வாழ்க்கையையும் ஒட்டிப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டன. விஸ்வகர்மா, மயன் ஆகியோர் முறையே நிறுவிய புதிய நகரங்களான திரிகூடாசலம்,இந்திரப் பிரஸ்தம் ஆகியவை தொன்மங்களாக ஆக்கப்பட்டுள்ளன. புதிய வாழ்க்கை முறையும் அதனைத் தோற்றுவித்தோரும் பிற்காலத்தில் தொன்மங்களாக உருவாகின்றனர்.எடுத்துக்காட்டாக சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், வழிபடு தெய்வமாகப் பின்பற்றப்படுகிறார். புத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும். 1.கடவுளர்கள் மற்றும் சமயங்கள் அடிப்படையிலான தொன்மங்கள். 2.எளிய மாந்தர்களின் வாழ்க்கையில் தெய்வநிலை அடைந்தோர் அடிப்படையிலான நாட்டார் வழக்காற்றுத் தொன்மங்கள். 3.இலக்கியச் சிந்தனையில் பெருமை பெற்ற தொன்ம மாந்தர்கள். தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. மனித ஆசையின் படிமங்களும் தொன்மங்களாகின்றன.இதற்கு ஓடிபஸ் தொன்மத்தை(Oedipus Myth) உதாரணமாகக் கொள்ளவியலும்.உளவியல் பகுப்பாய்வு முறையில்(Psycho-Analytical Theory) ஓடிபஸ் மனப்பிறழ்வு(Oedipus Complex) கொள்கையானது முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தொன்மத்தின் வழிநின்று சிக்மண்ட் ஃபிராய்டு,மன அழுத்தம் காரணமாக மனிதனின் இயல்பூக்க உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.மேலும்,நரம்பு மண்டலத்தின் வரம்பு மீறிய அடையாள இயக்கமானது கனவுகளின்போது எதிரொலிக்கப் பெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.இக்கொள்கையானது இருவேறு கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.அதாவது ஆதரிப்போரும் உண்டு.மறுப்போரும் உண்டு.ஆயினும்,உளவியல் பகுப்பாய்வில் இதன் கருதுகோள்கள் இன்றியமையாதவையாகும்.இவ் ஒடிபஸ் மனப்பிறழ்வுக் கொள்கையையொட்டி,எலக்ட்ரா(Electra),மேடா(Meta),ஃபெயட்ரா(Phaedra)முதலான தொன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மேடா என்னும் கிரேக்கத் தொன்மம்,பெண்களின் உள்ளார்ந்த விடாப்பிடிப் போக்கை(Exclusive Possession in Women)வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.ஃபெயட்ரா எனும் தொன்மத்தில் தாய் தன் மகனிடம் கொள்ளும் தகாத உறவுமுறையின் விளைவை எடுத்துரைக்கின்றது.ஆதாம்,ஏவாள் தொன்மங்கள் இத்தகைய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.ஈட்ன் தோட்டத்தில் ஆப்பிளை சுவைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு மீறப்படும் நிகழ்வானது,மனிதனின் இயல்பூக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியத் தொன்மத்தில் விழுமியக் கொள்கைக்கும் புலனுணர்ச்சி தன்முனைப்பிற்கும் இடையே எழும் முரணை அடிப்படையாகக் கொண்டது இராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.இராம,இராவண கொல்களமும்,அர்ச்சுன,துரியோதன செருகளமும் இங்கு உதாரணங்களாகும்.காமன் எரிப்பு,அகலிகை சாபம்,இந்திரனின் கொடுந்தோற்றம் முதலானவை இந்திய தொன்ம வளத்திற்கு சான்றுகளாவன. மனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும். தொன்மவியலில் நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.நடுகல் வழிபாட்டு முறையில் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகள் தொன்றுதொட்டு கீழ்க்காணும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 1. அரசர்களுக்காகவும்,நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் உயிர்நீத்தல். 2. சிற்றரசர்கள் பற்றிய செய்திக் குறிப்புகள். 3. சமூக நிலைப் போக்குகள்(சதி, உடன் கட்டை, களப்பலி) 4. மொழி வளர்ச்சி நிலைகள்(வட்டெழுத்து மாற்றம் மற்றும் வட்டார வழக்கு சொற்கள்) 5. உலகில் காணப்படும் ஓயாத பூசல்கள். 6. கால்நடைகள் மீதான பற்று. 7. காடுகளை அழித்து நாடு செய்தலில் ஏற்படும் இடையூறுகள்.(காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்) 8. நன்றி மறவாமை நிகழ்வுகள்.(நாய், கோழி, குதிரை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு நடுகல் அமைத்து வழிபாடு) 9. பண்டைய தமிழ் மக்களின் இரும்பின் பயன்பாடுகள்(ஆயுதங்களுடைய நடுகற்கள்) 10.மக்களின் நம்பிக்கைகள் (படையல் வழிபாட்டு முறை) உருவக அணி உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது உவமை அணியின் மறுதலை. விதி: எடுத்துக்காட்டு இதுதான் அது. அவளின் முகம்தான் சந்திரன். இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி. எடுத்துக் காட்டுகள் என 15 வகைப்படும். நரம்புத் தொகுதி நரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், விலங்கிற்கு உள்ளேயும், வெளியிலான சூழலுடன் தொடர்புற்றும் தகவல்களையும், சைகைகளையும் விலங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் கடத்துவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் உயிரணுக்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் நரம்புகளாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை கடத்துவதாகவும் இருக்கின்றது. இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புத் தொகுதியானது இரு வகையான உயிரணுக்களைக் கொண்டன. அவையாவன நியூரோன்கள் (Neurons) என அழைக்கப்படும் நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும். நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும். நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், என்பனவாகும். நரம்புக் கலங்கள் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையேயும், அவற்றின் உள்ளேயும் கணத் தாக்கங்களை உருவாக்கிச் செயற்படுத்துகின்றன. மூளை, முண்ணாண் (spinal cord), என்பன முதுகெலும்பிகளின் மைய நரம்பு மண்டலத்தின் பகுதிகள். முதுகெலும்பிலிகள், முதுகுநாணிகளில் காணப்படும் நரம்பு நாண் (nerve cord) என்பது, முதுகெலும்பிகளின் மையநரம்புத் தொகுதிக்கு ஒப்பான பகுதியாகும். புற நரம்பு மண்டலமானது உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை மையநரம்புத் தொகுதியுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. தூண்டல்களுக்கு மறுவினையாக உணர் நரம்புக் கலங்கள், சமிக்ஞைகளை உருவாக்கி, மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது. மைய நரம்பு மண்டலமானது இச் சமிக்ஞகளின் மீது தொழிற்பட்டு உரிய சமிக்ஞைகளைத் தசைநார்களுக்கும், சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றது. விலங்குகளில் காணப்படும் நரம்புத் தொகுதியின் நரம்புக் கலங்கள், சிக்கலான ஒழுங்கமைப்பில் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. இவை மின்வேதிச் சமிக்ஞைகளையும், உணர்வுக் கடத்திக் கலங்களையும் பயன்படுத்திக் கணத்தாக்குகளை ஒரு நரம்புக்கலத்திலிருந்து அடுத்த நரம்புக் கலத்துக்குக் கடத்துகின்றன. வேறுவேறான நரம்புக் கலங்களுக்கு இடையிலான இடைவினைகள், நரம்புச் சுற்றுக்களை உருவாக்கி, உயிரினத்தின் உலகம் பற்றிய நோக்கையும், அதன் உடலுக்குள்ளேயே நடை பெறுவனவற்றையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவ்வுயிரினத்தின் நடத்தைகளையும் முறைப்படுத்துகின்றது. பல பல்கல உயிரினங்களில் நரம்புத் தொகுதிகள் காணப்பட்டாலும், அவை சிக்கல்தன்மையில் பெரும் வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளன. உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுதியான நரம்புத் தொகுதியின் இரு பிரிவுகளும் இணைந்தே நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. அவ் இரு பிரிவுகளும் கீழேதரப் பட்டுள்ளன அவையாவன. மைய நரம்புத் தொகுதி மூளையையும் முண்ணானையும் கொண்டுள்ளது. இதுவே மைய நரம்புத் தொகுதியின் மிகவும் முக்கியமானதும் பெரியதுமான உறுப்புக்களைக் கொண்டுள்ளது. மைய நரம்புத்தொகுதியுடன் புலனங்கங்கள், விளைவுகாட்டி என்பவற்றை இணைத்து வைத்திருப்பது சுற்றயல் நரம்பு தொகுதி ஆகும். கண், காது போன்ற உணர் உறுப்புக்களையும், தசைகள், குருதிக் கலன்கள், சுரப்பிகள் போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கின்றது. நரம்புத் தொகுதியின் கட்டமைப்பு அலகு நரம்புக் கலமாகும் (nerve cell). நரம்புக் கலங்கள் பிரதானமாக மூன்று வகைப்படும், அவையாவன. புலனங்களில் இருந்து மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே புலன் நரம்புக் கலம் (sensory neurons) ஆகும். மைய நரம்புத் தொகுதியில் இருந்து விளைவு காட்டிகளை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இயக்க நரம்புக் கலம் (Motor neurons) ஆகும். புலன் நரம்புக் கலங்களில் இருந்து இயக்க நரம்புக் கலங்களுக்குக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இடைத்தூது நரம்புக் கலம் (inter neurons) ஆகும். மூளை நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றாகும். மனிதனில் அனைத்து நரம்புகளும் மூளையிலேயே சந்திக்கின்றன. விலங்கு இராசியத்தில் உடல் நிறை விகிதத்தில் மனிதனுக்கே மூளை அதிக எடையில் காணப்படுகிறது. மனிதனின் மூளையின் எடை 1350 கிராம் ஆகும். மூளையை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் அவையாவன, மூளையின் மிகப் பெரிய பகுதி மூளையம் எனப்படும். இதன் தொழில்களாவன, இச்சை வளி இயங்கும் செயல்களை கட்டுப் படுத்துதல், புத்தி, நினைவு, கற்றல், கேள்வி, சிந்தனை போன்ற உயர் செயற்பாடுகளை அறிதல் மற்றும் மணம், சுவை, பார்வை, தொடுகை, வலி ஆகிய புலன் உணர்வுகள் ஆளப்படல் என்பவையாகும். மூளி மூளையின் பின் பகுதியில் அமைந்துள்ளது, இது கோழி முட்டையின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது சமநிலைக் குழப்பம் ஏற்படக் காரணம் மூளியே ஆகும். இதன் தொழில்களாவன, தசைத் தொழிற்பாட்டையும் உடற் சமநிலையையும் பேணுதல் மற்றும் தசைத் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்தல் போன்றவையாகும். நீள்வளைய மையவிழையம் மூளையின் மிகப் பின் புறமாக அமைந்துள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது இறப்பு ஏற்படக் காரணம் நீள்வளைய மையவிழையம் பாதிக்கப்படல் ஆகும். இதுவே குருதிக் கலங்களின் இயக்கத்தை ஆளுகிறது. முகுளம், பான்சு, இடைமூளை ஆகிய மூன்று பகுதிகளும் மூளைத்தண்டு எனப்படுகின்றன. இப்பகுதி தண்டுவடத்தை மூளையுடன் இணைக்கிறது. தண்டுவடமானது மண்டையோட்டின் பெருந்துளையிலிருந்து இரண்டாவது இடுப்பெலும்பு பகுதிவரை அமைந்துள்ளது. இப்பகுதி முதுகெலும்புத் தொடரினை விட நீளத்தில் குறைவானது. இரு இடங்களில் தண்டுவடம் அகன்றுள்ளது. அவை முறையே கழுத்துப் புடைப்பு(Cervical Enlargement), இடுப்புப் புடைப்பு(lumbur Enlargement) எனப்படும். இடுப்புப் புடைப்பின் கீழ், தண்டுவடம் குறுகலடைந்து கூம்பு வடிவில் உள்ளது. இப்பகுதி கோனசு மெடுல்லாரிசு எனப்படும். நரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பவை உருளை வடிவிலமைந்த, ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நரம்பிழைகள் ஆகும். அதாவது நரம்பணுக்களின் (நியூரான்களின்) வெளிநீட்டமாக அமைந்திருக்கும் நரம்பிழைகள் (ஆக்சான்கள்) பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும்போது அவை நரம்பு எனப்படுகிறது. இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது.
1900களிலேயே நியூரான்கள் அல்லது நரம்பணுக்களே மூளையின் அடிப்படை அலகுகள் என்பது கண்டறியப்பட்டது (சாண்டிகோ உரோமன் ஓய் கஜால்). அதேபோல் மூளையின் வேதியல் கடத்துதல்களும் 1930 வரை அறியப்படவில்லை (என்றி ஹாலட் டேல் மற்றும் ஓட்டே லெவி). 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் (Warren McCulloch) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உடையதாக அமைந்திருந்தது. நியூரான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அடிப்படை மின் நிகழ்வுகள், செயல்பாட்டு திறன் போன்றவை 1950களில் கண்டறியப்பட்டன (ஆலன் இலாயிட் ஹாட்கின், ஆண்டிரூ ஹக்சிலி மற்றும் ஜான் எக்கல்சு). 1960களில் டேவிட் இயூபல் மற்றும் டார்டசன் வீசல் நரம்புப் பிணைப்புகளின் குறியீடு தூண்டல்களை விளக்கினர், இதனால் அடிப்படை கருத்தாக்கங்கள் சாத்தியமானது. மூலக்கூறு புரட்சி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1980களில் தொடங்கியது. 1990களில் நடத்தை நிகழ்வுகளின் மூலக்கூறு செயல்முறை பரவலானது (எரிக் ரிச்சர்டு காண்டல்). நரம்புகளை நுண்ணோக்கி கொண்டு பகுப்பாய்வு செய்யும் போது, நரம்புகள் முதன்மையாக நரம்பிழைகளைக் கொண்டுள்ளன என்று தெரிகின்றன. நரம்பிழைகளைச் சூழ்ந்து அமைந்துள்ள பல சவ்வுகள் அவற்றை இழைகளாகப் பிரிக்கின்றன. நரம்புகளுக்குத் தூண்டல் அளிக்கும் நியூரான்கள் நரம்பில் மட்டும் முழுமையாக அமைந்திருக்கவில்லை. அதன் உடலங்கள் மூளை மற்றும் தண்டுவடம் போன்றவற்றில் உள்ளன. பூஞ்சைகளை விட மேம்பாடு அடைந்த அனைத்து விலங்குகளும் நரம்புத்தொகுதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும், பூஞ்சைகள், ஒரு கல விலங்குகள் போன்றவற்றில் காணப்படும் உயிரணுக்களுக்கு இடையேயான சமிக்ஞை முறையானது நியூரான்களின் முன்னோடி ஆகும். ஆரச்சமச்சீர் கொண்ட உயிரினங்களான ஜெல்லி மீன்கள், ஐட்ரா போன்றவற்றில் நரம்புத்தொகுதியானது தனித்த செல்களை பரவலாகக் கொண்ட ஒரு நரம்பு வலையாக அமைந்துள்ளது. இப்போது பெருமளவுள்ள இருபக்கச் சமச்சீர் கொண்ட விலங்குகளில் எடுக்கோரியன் காலகட்டம் தொடங்கி (550 மில்லியன் ஆண்டுகள் முன்பு) நரம்புத்தொகுதியானது பொதுவான அமைப்பாக அமைந்துள்ளது. நரம்புத் தொகுதி இரண்டு முதன்மை வகைச் உயிரணுக்களைக் கொண்டுள்ளது. அவை நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும். நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும். நரம்புத் தொகுதியிலுள்ள நரம்பணுக்களை ஏனைய உயிரணுக்களிலிருந்து பலவழிகளில் வேறுபடுத்தி அறியலாம். அவற்றில் முதன்மையானது நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்தத் தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின்வேதியியல் மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது. அடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. நியூரான்கள் ஒன்றிணைந்த அமைப்பு நரம்புத்தொகுப்பாகும். இந்த நியூரான்கள் உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதிய மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்த உதவுகின்றன. இந்த மின்வேதிய மாற்றங்கள் நியூரான்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. இந்த தொடர்நிகழ்வையே உணர்வு தூண்டல்கள் என்கிறோம்.
ஒரு கடவுட் கொள்கை இறையியலில், ஒரு கடவுட் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை "(Monotheism)" என்பது,  இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும்.  அவனே உலகைப் படைத்தவன். அவன்  அனைத்து வகையான சக்திகளும் உடையவன். உலகின் அனைத்து செயல்களிலும் தன் சக்தியைச் செலுத்துபவன். இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கையே ஓரிறைக் கொள்கையின் அடிப்படை வரையறையாகும். பல கடவுட் கொள்கையின் படி கடவுள் சார்ந்த பல்வேறு கடவுளரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் ஓரிறைக் கொள்கைப்படி இறைவன் ஒருவன் ஓரிறைக் கொள்கை ஓர் இறைவனைத் தவிர வேறு எந்த தேவதையையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் குழுஇறைக் கொள்கையின்படி ஒருவர் தான் ஓரிறைக் கொள்கைப்படி வாழ்ந்தாலும்,  உள்ளூர் தேவர்களையும், தேவதைகளையும் வணங்குபவர்களையும் ஏற்றுக்கொள்கிறது. இவர்கள் பல கடவுளரையும் அங்கீகரித்தாலும் அவர்கள் ஓரு உள்ளூர் தேவர் அல்லது தேவதையை மட்டுமே வணங்குவர். பாபிஸம்[Bábism],  பகாய் சமயம், கோதாயிஸம் [Cao Dai (Caodaiism)],  செயோன்டாயிஸம் [Cheondoism (Cheondogyo)], கிறிஸ்தவம், டேயிஸம் [Deism], எகன்கர் [Eckankar], இசுலாம், யூதாயிஸம், மண்டேயிஸம் [Mandaeism], ராஸ்தஃபாரை [Rastafari], ரவிடாஸ்ஸியா மதம் [Ravidassia], ஸீகோ னோ லே[Seicho no Ie], சைவம், சாக்தம், சீக்கியம், தங்கரிஸம் [Tangrism], டென்ரிக்யோ [Tenriism], வைணவ சமயம், யசீதி மக்கள் இனம், and சொராட்டிரிய நெறியினர் போன்ற பல்வேறு பாரம்பரிய மதங்கள் ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர்.  இருப்பினும் ஓரிறைக் கொள்கை காலத்திற்கு முன் அடெனியிஸம், பண்டைய சீன சமயம், யாஹ்விஸம் போன்றவை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தன ஒரு கடவுட் கொள்கை என்பது கிரேக்க மொழியில் μόνος (monos=ஒரு) என்ற வார்த்தையிலிருந்து உருவானது அதாவது 'ஒன்று' மேலும்  ("theos=பரம்பொருள்") அதாவது "கடவுள்".  ஆங்கில வார்த்தையானது ஹென்றி மோர் (1614–1687) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. யில், யூதம்,  கிறிஸ்தவம்,   இசுலாம்  எனப்படும் ஆபிரகாமிய மதங்களில்  கடவுள் பற்றிய கருத்துருவுக்கு "ஒரு கடவுட் கொள்கை" எனும் கருத்துக்கு முதன்மை கொடுக்கும் போக்கு உள்ளது.  19ஆம் நூற்றாண்டில் உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் ஆன்ம வாதக் கொள்கையை அடுத்து பல கடவுட் கொள்கை அதனை அடுத்து ஒரு கடவுட் கொள்கை என்று வளர்ச்சியடையும் கூர்ப்புவழி வளர்ச்சியை சமய நெறியாளர்கள் உதறித்தள்ளினர். ஆனால் 1974ல் இக்கொள்கை குறைந்த அளவிலேயே காணப்பட்டது.  1910ஆம்ஆண்டு ஆஸ்திரிய நாட்டு மானுடவியல் வல்லுந‌ர் வில்ஹெல்ம் ஸ்கிமிட் [Wilhelm Schmidt] என்பார் வழங்கிய கொள்கை உர்மோனோதீஸ்மஸ் ["Urmonotheismus] என்பதே முதலேற்பு அதிகார வரம்புடையதாகவும் தொடக்கநிலை  ஒரு கடவுட் கொள்கை என்பதாகவும் அறியப்படுகிறது". கிரேக்க ஒரு கடவுட் கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட, யூதம்,  கிறிஸ்தவம், மற்றும் இசுலாம் போன்ற சமயங்கள் பல கடவுட் கொள்கைக்கு எதிராக வளர்ந்து வந்தன என்பது மறுக்கப்படுகிறது.  சில ஆசிரியர்கள்  [கரன் ஆர்ம்ஸ்ட்ராங் Karen Armstrong போன்றவர்கள்] கருத்தமைவுகளின் அட்ப்படையில் ஹீனோதீயிஸத்திலிருந்து, மோனோலாட்ரிஸம்  வழியாக ஒரு கடவுட் கொள்கையானது படிப்படியாக தொடர்ந்து வளர்ந்து வந்ததது என்று நம்புகின்றனர். வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில்  ஒரு கடவுட் கொள்கையானது உலகம் முழுவதும் பகுதியளவு பரவியிருந்ததாகவும் ஒரே தேவதையை அனைவரும் வணங்கியதாகவும் அகேநாதன் [Akhenaten] என்பவர் தன்னுடைய 'அடெனின் சிறந்த இறைவாழ்த்து' ["Great Hymn to the Aten] ". எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.தெற்கு ஆசியாவில் வேதகாலத்திலிருந்து ஒரு கடவுட் கொள்கையானது இரும்புக் காலத்தை நோக்கி மேற்கொண்ட நகர்வு அறியப்பட்டுள்ளது இருக்கு வேதத்தில் குறிப்பாக பிரம்மத்தில்  ஒரு பொருண்மை வாதம்  இரும்புக் காலத்தை நோக்கி மேற்கொண்ட நகர்வு நசாடியா சுத்கா என்ற பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.   சொராட்டிரிய நெறி (இருமையியம் கொள்கையிலிருந்து மாறுபட்டுள்ளது) மற்றும் யூதம் ஆகியவை ஒரு கடவுட் கொள்கைக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.  இஸ்ரேலிய மோனோலாட்ரிசத்திலிருந்து ஜூதாயிக் மோனோதீயிசம் உருவானது நன்கு வெளிப்படுகிறது ஓரிறைக் கொள்கையின் நன்னடத்தை நெறியானது உண்மையான நல்லதும் கெட்டதும் எவை என விளக்கும் யூதம் மற்றும் சொராட்டிரிய நெறி ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது. கிறிஸ்தவத்தில் 7ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தியல் அதன்உ பின் இசுலாம் மார்க்கத்தில் தவ்ஹீது போன்றவை ஓரிறைக் கொள்கையினை உச்சத்திற்குக் கொண்டு சென்றன ஆபிரஹாமின் சமயங்களைப் பின்பற்றுவோர்கள் ஓரிறைக் கொள்கையுடயவராய் இருந்தனர். யூத மதமானது. கிறிஸ்தவ மதத்தை  ஓரிறைக் கொள்கையுடையோராய் ஏற்கவில்லை. ஆனால் இசுலாமியரை ஓரிறைக் கொள்கை உடையோராய் எர்கின்றனர்.  அதே போன்று தற்கால கிறிஸ்தவத்தில் இடம் பெற்றுள்ள திரித்துவம் என்பது இயேசு அறிவித்த மற்றும் விரித்துரைத்த கிறிஸ்தவத்திற்கு மாறுபட்டு இருப்பதாக முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். யூதம் என்பது உலகில்ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றாகும்.  யூதமதப்படி இறைவன் ஒருவனே, அவன் தனித்தவன், தற்சார்பானவன், பகுக்க முடியாதவன், உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மற்றும், பொருள்களின் பிறப்பு, இருப்பு, பயன்பாடு, இறப்பு ஆகியவற்றுக்குக் காரணமானவன்.  பிற மதக் கடவுளர்கள் எவரும் நடப்பில் இல்லை; நடைமுறையில் இல்லாத தனி உருக்கள்.  அவர்களை நம்பி மக்கள் அவர்களிடம் உண்மையும், சக்தியையும் எதிர்நோக்கி வேண்டுகின்றனர் என்று பாபிலோனிய தல்மூத் கூறுகிறது. யூதக் குருசார் யூதம் கூறும் ஓரிறைக் கொள்கை வாக்கியம் இர்ண்டாம் மைமோனைட்ஸின் உண்மையின் 13 குறிக்கோள்களில் குறிக்கப்பட்டுள்ளது. கிறித்துவத்தின் ஓரிறைக் கொள்கையை யூதமும் இசுலாமும் விலக்கி வைக்கின்றன. யூதத்தில் குறிப்பிடப்படாத ஓரிறைக் கொள்கைக்கு உட்படாத வழிபாட்டை ஷிடஃப் என்று குறிக்கிறது யாவீஹ், எலோஹிம் மற்றும் பால் ஆகிய பக்கங்களைப் பார்க்கவும் 8ஆம் நூற்றாண்டில் ஒய்.ஹெச்.டபிள்யூ.ஹெச். எனும் வழிபாட்டுமுறை .பழக்கத்தில் இருந்தது. அச்சமயம் இசுரவேலில் சமயக் கோட்பாட்டு முறைகளுக்கு இடையே போட்டிகள் நிலவி வந்தன. யாவீஹின் வழியினர் பால்கள் என்று அழைக்கப்பட்டனர். பழைய ஹீப்ரு வேதாகமம், ஹொசியா, நஹூம், புத்தகங்களும் இந்த போட்டிகளுக்கு சாட்சியாக இருக்கின்றன. இவற்றின் ஆசிரியர்கள் இசுரவேலில் மக்கள் மத்தியில் சமயஎதிர்ப்பு கொள்கைகளைப் பரப்பி வந்தனர். பல கடவுட் கொள்கையைக் கைவிடவில்லை எனில் கடவுள் உளக்கொதிப்பு அடைவார் என்று அச்சமூட்டி வந்தனர். சில ஆசிரியர்கள் ஹீனோதீயிசம் அல்லது மோனோலாட்ரிசம் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு யூதாயிசம் உருவாகி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கற்பிதப்படி, இசுரவேல் அரசும், யூத அரசும், ஒய்.ஹெச்.டபிள்யூ.ஹெச். எனும் வழிபாட்டுமுறையைப் பழக்கத்தில் வைத்திருந்தனர். ஒய்.ஹெச்.டபிள்யூ.ஹெச். கடவுளை தம் அரசாங்கக் கடவுளாகக் கொன்டிருந்தனர். மற்ற கடவுளர்கள் இருப்பதையும் அங்கீகரித்தனர். இக்கருதுகோள்படி பாபிலோனிடம் யூதர்கள் தோல்வி அடைய ஆரம்பித்தபோது சில மதபோதகர்களும், எழுத்தாளர்களும் நாடு கடத்தப்பட்டவர்களுக்கான நீதிமன்றத்தின் முன் குழுவாக திரண்டு ஒய்.ஹெச்.டபிள்யூ.ஹெச். மட்டுமே உலகின் ஒரே கடவுள் என்ற கருத்தை உருவாக்கினர். ஷேமா இசுரவேல் ("ஓ இசுரவேல் மக்களே கேளுங்கள்") தோரா வேதத்தின் ஒரு பகுதியின் முதலிரண்டு வார்த்தைகளை யூதர்கள்ள் தங்களுடய காலை மற்றும் மாலை வழிபாட்டு வார்தைகளாகக் கொன்டிருந்தனர். இவை யூதர்களின் ஒரு கடவுட் கொள்கைக்கான தொடக்கமாகும். "ஓ இசுரவேலர்களே கேளுங்கள். தேவனே நம் கடவுள். தேவன் ஒருவனே" என்று கூறினர் (ஹீப்ரு மொழியில்: שְׁמַע יִשְׂרָאֵל ה' אֱלֹהֵינוּ ה' אֶחָד‎). இது டியூடிரோனோமி 6.4ல் குறிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் ஷேமா இசுரவேலை தங்கள் யூதாயிச வழிபாட்டில் முக்கிய அங்கமாகக் கருதினர். இதை ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள் உச்சரிப்பதை தங்களின் சமயக் கட்டளையாகக் கொண்டனர். பாரம்பரியமாக இவ்வார்த்தைகளை யூதர்கள் தங்கள் இறுதி வார்த்தைகளாகக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இரவு படுக்கைக்குப் போகும்முன் இவ்வார்த்தைகளைக் கூற வேண்டும் எனக் கற்பிக்கின்றனர். இசுலாமில் இறைவன், தவ்ஹீத் மற்றும் ஹனிஃப் இறைவன் ஒருவனே. அவனே கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் கடவுள் ஆவான்(29:46). கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகியவற்றின் பின்னணியில், பொ.ச. 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியம் வெளிப்பட்டது, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் கருப்பொருள்கள் ஜினோஸ்டிஸத்தை ஒத்துள்ளதால், முஹம்மது கடவுளிடமிருந்து ஒரு புதிய மதத்தை பெறவில்லை என்றும் இது ஆபிரஹாம், மோஸஸ், தாவீது, இயேசு மற்றும் பிற இறைத்தூதர்கள் பிபற்றிய சமயமேதான் என்றும் கூறப்படுகிறது. கடவுளின் முந்தைய வசனங்கள் மற்றும் செய்திகள் காலத்தால் அழிக்கப்பட்டதாலும், சிதைந்து போனதாலும், டோரா, புதிய ஏற்பாடு போன்றவற்றில் உள்ள செய்திகளைச் சரிசெய்வதற்காகவும் குர்ஆன் முஹமதுவிற்கு அனுப்பப்பட்டதாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. உலகத்தை நடத்தும் தனியன், தனித்தன்மையுடையவன், முழுமையானவன், உண்மையானவன், படைப்புகளுக்கு அப்பாற்பட்டவன், சுயாதீனமானவன் இறைவன் என்பதை குர்ஆன் வலியுறுத்துகிறது. கடவுளின் படைப்புச் செயலில் நன்மை மற்றும் தீமை இரண்டும் உள்ளதால் இறைவன் இருநிலைத் தன்மை உடையவன் என்ற வாதங்களை குர்ஆன் நிராகரிக்கிறது. உலகம் முழுவதிலும் கடவுள் ஒருவரே. அனைத்து உறுதியான நற்குணங்கள் மற்றும் தீய பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பவன் இறைவனே. முஸ்லீம்களின் இறைநம்பிக்கை குறித்து தவ்ஹீது பின்வருமாறு கூறுகிறது: கடவுள் இருக்கிறான். முகமது அவானுடைய தூதர். மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் பிற இயற்கை அமைப்புகளை வணங்குவது மன்னிக்க முடியாத பாவம் ஆகும் என்று குர்ஆன் கூறுகிறது. இஸ்லாமிய போதனைகள் அனைத்தும் தஹ்ஹீத் கொள்கையின் அடிப்படையில் உள்ளன. யூதம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவை ஓரிறைக் கருத்தை பாரம்பரியமாக ஒப்புக்கொள்கின்றன. கிறிஸ்துவர்களின் ஓரிறைக் கருத்தை நிராகரிக்கின்றன. ஒரே கடவுளை வணங்காத பிற மதத்தினரை யூதர்கள் ஷிடுஃப் மதத்தினர் என்று குறிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசு(அரேபிய மொழியில் ஈசா)பற்றி நம்பிக்கை வைத்தாலும், அவர் கடவுளின் பிறக்காத குமாரனென்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. குர்ஆனில் முஹம்மதை விட அதிகமாக இயேசு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் கிறிஸ்தவ கோட்பாட்டின் திரித்துவத்தை குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை(4:171) இது ஆபிரஹாம் சமயக் (2:135)கோட்பாட்டிலிருந்து மாறுபடுவதால் இதனை குர்ஆன் ஷிர்க் என்கிறது. இது கிறித்துவர்கள் மதிப்புக்கேடாகப் பேசுகிற இறைபழிப்பான செயலாகக் கருதப்படுகிறது(5:77). நாட்காட்டி நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும். காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைப்பேசியிலும் உள்ளது. நாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை. 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும். தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது. முழுமையான நட்காட்டியானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேதிகளை கொண்டுள்ளது. இதனால் வார சுழற்சி என்பது மட்டும் முழுமையான நாட்காட்டி என்றாகிவிடுவதில்லை. ஒரு வருடத்திற்குளான நாட்களை கணக்கில் கொள்வதற்காக வருடத்திற்கு பெயரிடுதல் என்ற முறை அவசியமாகிறது. குறிப்பிட்ட தேதிகளை கணக்கிட்டு எளிமையான நாட்காட்டி அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது. ஒரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி : இரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி : கால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் - மிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றிக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான உறுப்புகளையும், செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடையது வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இதனை மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டுள்ளதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் ஹீப்ரு நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க. மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன. சூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம். சூரிய நாள்காட்டி ஒவ்வொரு சூரிய நாளி்ற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பெறுகிறது. ஒரு சூரிய நாள் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கிடப்படும். இரவு நேரம் என்பது சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை கணக்கிடப்பெறும். சந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியின் அலகுகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதனால் பூமத்திய ரேகை அருகேயிருக்கும் பகுதிகளுக்கும் பெருத்த மாறுபாடில்லாத நாள்காட்டியாக இருக்கிறது. சூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன. நாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது "திகதி" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை. பண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது.. நாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன. நாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. கிரெகொரியின் நாட்காட்டி ("Gregorian calendar") என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் ("Julian calendar") ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும். கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும். இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (; "அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ"; பாரசீகம்: تقویم هجری قمری ‎ "தக்வீமே ஹெஜிரே கமரீ") இது ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜிரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும். ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும். இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த "பஞ்சாங்கம்" என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது. எதியோப்பியாவில் தற்போதும் தேசியப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நாட்காட்டியே எதியோப்பியன் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி நாளாந்தப் பயன்பாட்டிலும், அலுவலகங்களில் அதிகாரபூர்வமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்கள் இருக்கும். ஒரு ஆண்டின் 13ஆவது மாதம் 5 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு 13 ஆவது மாதத்தில் 6 நாட்களைக் கொண்டிருக்கும்.. கிரிகோரியன் நாட்காட்டியின் ஆண்டு எண்ணிக்கையிலிருந்து, 8 ஆண்டுகள் பின்னால் எதியோப்பியன் நாட்காட்டியின் ஆண்டு இருக்கிறது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் 2017 ஆம் ஆண்டில், எதியோப்பியாவில் 2009 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருக்கும். அத்துடன், அந்த நாட்காட்டியின்படி, பொதுவாக புத்தாண்டானது, கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மாதத்தின் 11 அல்லது 12 ஆம் நாள் வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து நாட்காட்டி முறையும் தொடர்ச்சியான நாட்களை மாதங்களாகவும் அதே போல வருடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.சூரிய நாட்காட்டியில் ஒரு வருடம் பூமியின் தோராயமான வெப்பமண்டல ஆண்டாகவும் (அதாவது பருவங்களின் ஒரு முழு சுழற்சிக்கான நேரம் எடுக்கும் நேரம்), பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது.சந்திர நாட்காட்டியில், மாதம் கிட்டத்தட்ட சந்திரப்பிறை சுழற்சியைச் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான நாட்கள் மற்ற காலங்களின் குழுவாக அதாவது வாரம் போன்ற பிரிவுகளாக இருக்கலாம். வெப்பமண்டல நாட்காட்டி ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக இல்லை, ஏனெனில் சூரிய நாட்காட்டி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும்.உதாரணமாக, நெட்டாண்டுகளில் (leap year) கூடுதலாக ஒரு நாளைச் சேர்ப்பதன் மூலம் இது கையாளப்படுகிறது.அதே போன்றதொரு முறையே சந்திர நாட்காட்டியிலும் பின்பற்றப்படுகிறது.இது பொதுவாக இடைச்செருகல் என அறியப்படுகிறது. சூரிய நாட்காட்டியாக இருந்தாலும், சந்திர நாட்காட்டியாக இருந்தாலும்,முழு ஆண்டையும் சம நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்க முடியாது. கணித நாட்காட்டியானது குறிப்பிட்ட கண்டிப்பான விதிகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.உதாரணம் தற்போதைய யூத நாட்காட்டி. இத்தகைய நாட்காட்டிகள் விதிகள் அடிப்படையிலான நாட்காட்டிகள் என்றழைக்கப்படுகின்றன.இவை எளிதாக கையாளக்கூடியதாக இருப்பது இதன் அனுகூலமாகும். துல்லியத்தன்மையில் தொய்வு இதன் குறைபாடாகும். மேலும், நாட்காட்டி தொடக்கத்தில் மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் துல்லியம் காலப்போக்கில் மெதுவாக குறைந்து, புவியின் சுழற்சியால் மாற்றங்கள் ஏற்படுகிறது.இத்தகைள மாற்றங்கள் துல்லியமான கணிதக் நாட்காட்டிகளின் வாழ்நாளை ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் என்றளவில் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது. வானியல் நாட்காட்டி "நிகழ்ந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கல்" முறையை அடிப்படையாக கொண்டது.இசுலாமிய நாட்காட்டி மற்றும் பழைய யூத நாட்டிகளை உதாரணங்களாகக் கூறலாம்.அத்தகைய நாட்காட்டிகள் ஒரு கவனிப்பு அடிப்படையிலான நாட்காட்டியாகவும் குறிப்பிடப்படுகிறது.இவ்வகை நாட்காட்டிகள் நிலைத்த துள்ளியத்தோடு இருப்பது அனுகூலமாகும். நாட்காட்டிகள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கக்கூடும்.முழுமையான நாள்காட்டி ஒவ்வொரு தொடர்ச்சியான நாளினை பெயரிடும் வழிமுறையை வழங்குகிறது, அதே நேரத்தில் முழுமையற்ற நாள்காட்டியில் அத்தகைய வழிமுறைகள் இல்லை.ஆரம்ப ரோமானிய நாட்காட்டி முழுமையற்ற நாட்காட்டிக்கும்,கிரெகொரியின் நாட்காட்டி முழுமையான நாட்காட்டிக்கும் உதாரணங்களாகும். திஃசொங்கா மொழி ஜொங்கா ("Dzongkha") பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும். "ஜொங்கா" என்றால் "ஜொங்" என்ற இடங்களில் பேசப்படும் மொழி (கா) என்பது கருத்து. 17ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பூட்டானில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் ஜொங் என அழைக்கப்படுகிறது. ஜொங்கா மொழி தற்போதைய திபெத்திய மொழியின் உறவு மொழியாகும். 1960கள் வரையில் பௌத்த சமயத் துறவிகளால் திபெத்திய மொழியே கல்வி மொழியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஜொங்கா மொழி பாடசாலைகளில் முதல் மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பூட்டான் பாடசாலைகளில் ஜொங்கா மொழி கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் "காலிம்பொங்" நகர மக்கள் ஜொங்கா மொழியைப் பேசி வருகின்றனர். இந்நகரம் முன்னர் பூட்டானுடன் இணைக்கப்பட்டிருந்தது. தானரூபி தானரூபி கருநாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு "தனுகீர்த்தி" என்ற பெயர். முரண்பாடு தீர்த்தல் முரண்பாடு தீர்த்தல் என்பது முரண்பாட்டை தீர்க்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளைக் குறிக்கிறது. ஒரு நாட்டில் இயங்கு சட்ட முறைமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். குடும்பம், தொழில் நிறுவனம், அமைப்புகள், இனங்கள் என பல தரப்பிகளுக்கிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகளைக் தீர்க்க தகுந்த முரண்பாடு தீர்த்தல் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். முடிவு செய்தல் முடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு செலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் ஆகியவற்றை அலசி ஒரு முடிவைத் தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்துக் களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும். முடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. பல கடவுட் கொள்கை பல கடவுட் கொள்கை (Polytheism கிரேக்க மொழியில்: πολυθεϊσμός, "polytheismos)" என்பது, பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது பல கடவுள்களை வணங்கும் கடவுட் கொள்கையாகும். பழங்காலத்திலும், தற்காலத்திலும் பல சமயங்களை முன்னிறுத்தி பல கடவுட் கொள்கைகள் பரவலாக உள்ளன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டின் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் போன்றவை இத்தகையவையாகும். பல மதங்களில் பல கடவுட் கொள்கையை ஏற்றுக்கொள்வது, வெவ்வேறு தேவர்கள் மற்றும் தேவதைகள் எனப்படும் பெண் கடவுளர்கள், ஆகியவற்றை இயற்கையின் பிரதிநிதிகளாகவோ அல்லது மூதாதையர்களின் கொள்கைப் பிரதிநிதிகளாகவோ கற்பிதப்படுத்திக்கொள்கின்றனர் மேலும் அவை ஒரு தனித்தியங்கு கருப்பொருளாகவோ, ஒளிக்கதிர் வெளிப்பாடாகவோ, படைப்பாளராகவோ அல்லது ஒற்றைக் கடவுளின் முழுமையான கோட்பாட்டு (ஒற்றைவாத இறையாண்மை) அம்சங்களின் அல்லது வெளிப்பாடுகளாகவோ முன்னிறுத்தப்படலாம். இது இயற்கையில் நிலைத்திருக்கும் இயல்பான ஆதாரமாகவும் இருக்கலாம். கிரேக்க மொழியில் πολύ poly ("பல") மற்றும் θεός theos ("கடவுள்") என்பதிலிருந்து இந்த வார்த்தை கிரேக்கர்களுக்கு எதிராக விவாதிப்பதற்கு யூத எழுத்தாளர், அலெக்ஸாண்டிரியாவின் ஃபிலோ(Philo) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவிலும், மத்தியதரைக் கடல் நாடுகளிலும் பரவியிருந்தபோது, கிறிஸ்தவர்கள் அல்லாதோர், புறச் சமயம் சார்ந்த குடியினம் 'ஜென்டைல்கள்' என்று அழைக்கப்பட்டனர் (யூதர்கள், யூதரல்லாதவரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்) அல்லது புறமதத்தினர் (pagan), (உள்ளூர்வாதிகள்) அல்லது தெளிவான வார்த்தைக்குரிய விக்கிர காரியக்காரர்கள் (பொய்க்கடவுள் வழிபடுவோன் ) என்று குறிப்பிடப்பட்டனர். 1580 ஆம் ஆண்டில் ஜீன் போடின் (Jean Bodin) என்பவர் மூலம் பிரெஞ்சு மொழியில் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1614 இல் ஆங்கிலத்தில் சாமுவேல் பர்ச்சாஸ் (Samuel Purchas) என்பவரால் பயன்பாட்டுக்கு வந்தது. பக்தி வாதத்தில் காணப்படும் பெரும்பாலான தெய்வங்களின் வகைகள்: மரபார்ந்த மற்றும் பண்டைய காலத்தில், சாலஸ்டியஸ் (4 ஆம் நூற்றாண்டு கி.மு.) புராணங்கள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டன: புராணங்களில் கூறப்படும் இறையியல் என்பது உடல் வடிவத்தைப் பொறுத்து அமைவதில்லை. கடவுளர்களின் ஆற்றல் குறித்தும் சரீரத்தைக் குறித்தும் சிந்திக்கின்றன. உதாரணம்: பண்டைய கிரேக்கத்தில் உள்ள பாரம்பரிய கடவுள் கொள்கைகள் ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரை (கலை மற்றும் கவிதைகளின் பன்னிரண்டு நியமன கடவுளர்) அடிப்படையாகக் கொண்டுள்ளது. பன்னிரண்டு நியமன கடவுளரின் பட்டியல் பின்வருமாறு: ஒலிம்பது மலைக்கு டயோனிசசு அழைக்கப்பட்டபோது, எசுடியா மலையிலிருந்து கீழே இறங்கி வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. தொன்றுதொட்டு வழங்கிவரும் இரண்டு கிரேக்க கதைகளில் எசுடியா தனது இருக்கையை சரண் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதற்கு ஆதாரங்களில்லை என்று ராபர்ட் கிரேவ்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஹேட்ஸ் பாதாள உலகத்தில் வசித்ததால், அவர் பெரும்பாலும் விலக்கப்பட்டார். கடவுளர்கள் அனைவருக்கும் ஒரு சக்தி இருந்தது. பழங்காலத்திலிருந்தே அவர்களிடையே இலகுத்தன்மையற்ற ஒரு போட்டி நிலவி வந்தது. வெவ்வேறு நகரங்கள் பெரும்பாலும் அதே தெய்வங்களை வணங்கின. சில நேரங்களில் அவை உள்ளூர் இயற்கைக்கு ஏற்பவும், அவற்றின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அடைமொழிகளாலும், பட்டப் பெயர்களாலும் குறிக்கப் பெற்றனர். ஹெலெனிக் பல கடவுட் கொள்கை கிரேக்கத்தின் பெரும்பகுதிக்கு அப்பால், ஆசியா மைனரில் ஐயோனியாவின் (Ionia) தீவுகளுக்கும், மாக்னா கிரேசியாவுக்கும் (Magna Graecia) அதாவது சிசிலி (Sicily) மற்றும் தெற்கு இத்தாலிக்கு (Italy) பரவுயது. மேற்கு மத்தியதரைக் கடல் நாடுகளில், மாஸ்ஸாலியா (Massalia) பகுதிகளில் கிரேக்க காலனிகளால் பரவியது, திரித்துவத்தைப் பற்றிய போதனையின் காரணமாக கிறித்துவம் உண்மையிலேயே ஒரு கடவுட் கொள்கை உடையதாக இல்லை என்று சில சமயங்களில் கூறப்படுகிறது. கிறித்துவத்தின் மைய கோட்பாடு "ஒரு கடவுள் மூன்று நபர்கள் மற்றும் ஒரு பொருள் உள்ளது" என்பதாகும். கடவுளோடு மூன்று தனி நபர்கள் இருக்கிறார்கள், ஒருவரையொருவர் பிரிந்து தனித்தன்மையுடன் இருக்கிறார்கள், ஆனால் தெய்வீக சரீரத்திற்குள் ஒன்றி தனித்தன்மையுடன் ஜீன் பண்பிலும், எண்ணியல் ரீதியாகவும் ஒன்றாக இருக்கிறார்கள். நிச்சயமாக 381 ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிள் முதல் கவுன்சிலுக்கு முன் திரித்துவத்தின் கோட்பாடு அமைக்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும், யூத மதத்திலிருந்து பெறப்பட்ட மரபுவழி திருச்சபை விசுவாசத்தின்படி, ஒரு கடவுள் கோட்பாடு, முதற்கோளாகவும் நிச்சயமான விளக்கமாகவும் இருக்கிறது. ஜோர்டான் பேப்பர் என்பவர் ஒரு மேற்கத்திய அறிஞர் மற்றும் பல கடவுட் கொள்கையாளர். இவர், பல கடவுட் கொள்கை என்பது மனித கலாச்சாரத்தில் சாதாரண நிகழ்வு எனக் கூறுகிறார். இவர் "கத்தோலிக்க திருச்சபைகள்கூட பரிசுத்தவான்களின் 'வழிபாடு' கொண்ட பல கடவுட் கொள்கை அம்சங்களை காட்டுகிறது." என்று வாதிடுகிறார். சீன ஜோடியான ஆகாயம் மற்றும் புவி சேர்ந்தது சுவனம் என்று மேட்டோ ரிச்சி கூறியதைப் போலவே, இயேசு தேவலோகத்தின் அரசர் என்று அழைக்கப்படுகிறார். ஜோசப் ஸ்மித், பிந்தைய கால புனிதர் இயக்கத்தின் நிறுவனர். இவரது கோட்பாடுகள் பின்வருமாறு: மோர்மோனிசத்தின் சில விமர்சகர்கள், மோர்மோன் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் கடவுளைப் பற்றிய ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ கருத்தையே விவரிக்கின்றன என வாதிடுகின்றனர். உதாரணம்: 2 நெஃபி(Nephi) 31:21; அல்மா(Alma) 11:44, ஆனால் பின்னால் வெளிவந்த தகவல்கள் அவற்றைப் பின் தள்ளிவிட்டன. தந்தை, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் ஒற்றுமை பற்றிய எழுத்துப்பூர்வ அறிக்கைகள் நோக்கத்தின் ஒருமைப்பாட்டைக் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒரு பொருளைப் பற்றியது அல்ல என்று மோர்மான்ஸ் கற்பிக்கிறார். பிந்தைய திருத்தூதர்கள் மற்றும் இறையியலாளர்கள், கிரேக்க இயக்கமறுப்புசார் ஆதார தத்துவங்களை (பிளேட்டோவின் புதிய சமயத்திரிபு கருத்துகள்) கிறிஸ்தவ தெய்வீகத்தன்மையுடன் ஒப்பிடத் தொடங்கும் வரையில், ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்கள், தெய்வீகத்தன்மையின் இன்றியமையாமையையும், உருவமற்ற பங்கீட்டு தன்மைபற்றியும் விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை. கடவுளின் இயல்பைப் பற்றிய உண்மைகள் நவீனகால வெளிப்பாட்டின் மூலம் மீட்டெடுக்கப்படுவதை மோர்மான்ஸ் நம்புகிறார். இது, இயற்கை, சரீரம் சார்ந்து புலப்படுமௌணர்வுகள், மனிதர்களுக்கும், ஆவிக்குரிய தந்தையின் தந்தையாக இருக்கும் அழியாத கடவுளின் அசல், எனும் கருத்துகள் ஜூடியோ-கிறிஸ்டியன் கருத்தை மறுபிரசுரம் செய்துள்ளன. கிறிஸ்துவின் போதனை (யோவான் 10: 33-36) கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்பவர்கள் "கடவுளர்கள்" என்ற தலைப்பை பெறலாம். இப்போதனையை மோர்மான்ஸ் கடைபிடிக்கிறது. ஏனென்றால் கடவுளுடைய உண்மையான பிள்ளைகள் தேவனின் தெய்வீக பண்புகளை தங்களுக்குள் எடுத்துக்கொள்ள முடியும். இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் இருவரும் பரிபூரண புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெய்வீகத்தன்மை பெற்றவர்கள். உபதேசம் மற்றும் உடன்படிக்கை 93:36 ன்படி இருவரும், "கடவுளின் மகிமை மற்றும் அறிவுக்கூர்மை" பெற்றவர்கள். பல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் இருப்பது வழக்கம். சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்து சமயத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் பிரிவு சைவம் எனவும், விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது போலவே, சக்தியாகிய தாய்க் கடவுள், பிள்ளையார் (கணபதி), முருகன் (குமரன்) போன்ற கடவுளர்களை முதன்மைப் படுத்தும் பிரிவுகள் முறையே சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய பெயர்களில் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு. பல கடவுட் கொள்கை சார்ந்த சமயங்களில் காணப்படும் கடவுளருக்கு அவ்வப் பண்பாடுகளின் தொன்மங்களில் இடம் உண்டு. இவர்கள் மனித இயல்புகளுடனும், பல்வேறுபட்ட தகுதிகளுடனும், மேலதிகமாகத் தனிப்பட்ட, சக்திகள், இயலுமைகள், அறிவு, நோக்கு என்பவற்றுடன் கூடியவர்களாக இத் தொன்மங்களில் காட்டப்படுகின்றனர். பல கடவுட் கொள்கையைப் பல இனக்குழுச் சமயங்களில் காணப்படும் ஆன்மவாத நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகப் பிரித்து அறிய முடியாது. "பல கடவுட்" சமயங்களில் காணப்படும் கடவுள்கள் பல வேளைகளில் மூதாதையர், பூதங்கள் போன்ற இயல்புகடந்த தன்மையைக் கொண்டவர்களினதோ அல்லது ஆவிகளினதோ தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக் கடவுள்கள் வானம் சார்ந்தவர்களாகவும், பூமி சார்ந்தவர்களாகவும் பிரிக்கப்படுவதும் உண்டு. கோத் கோத் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இந்தப் பண்பாட்டைச் சார்த குழுக்கள் பல நாடுகளில் உள்ளன. இது ஐக்கிய இராச்சியத்தில் 1980 களில் தோன்றியது. கறுப்பில் உடையணிவது இவர்களின் அழகியல். பங்க் பங்க் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இது ரொக் இசைச் சூழலில் இருந்து 1970 களில் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளி இந்த பண்பாடு சார்த குழுக்கள் உண்டு. இவர்கள் பலர் மொகாக் தலைவெட்டு கொண்டிருப்பர். இடை ஆட்டம் இடை ஆட்டம் (‎"Belly dance") என்பது மேற்கு ஆசியா, குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.அரபு மொழியில் "ராக்ஸ் ஷர்கி" (Raqs Sharqi) (அரபு:رقص شرقي) என்றும் அழைக்கபடுகிறது.அரபு மொழியில் இதற்கு "கிழக்கின் நடனம்" (Dance Of The East) என்று பொருள். இடை ஆட்டத்தை பேச்சு வழக்கில் பெல்லி நடனம்‎ என்று அழைக்கின்றனர்.இடை ஆட்டத்தின் போது தொப்புளும் வெளிகாட்டப்பட்டு அதுவும் உருவம் மாறுவதாக தோன்றுவதால் தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் இடை ஆட்டத்தை தொப்புள் நடனம் என்றும் அழைக்கின்றனர். இடை ஆட்டத்தின் வரலாறு குறித்து இன்றும் விவாதங்கள் உள்ளன. இதன் காரணமாக இடை ஆட்டத்தின் பூர்வீகம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எகிப்து நாடே இவ்வாட்டத்தின் பூர்வீகம் என்றும், அரேபிய நாட்டின் கடவுள் வழிபடும்போது ஆடும் நடனம் என்றும், புராண கால பிரசவ நடைமுறையின் ஒரு அங்கம் என்றும்,இந்தியாவில் தோன்றி பின்னர் ரோமா மக்களால் உலகிற்கு பரவியது என்றும் பல கோட்பாடுகள் உள்ளன. இருந்தாலும் இடை ஆட்டம் சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு நடனமாகும்.புதிய கற்காலத்தில் தோன்றி ஐரோப்பா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளின் கலாச்சாரத்தின் பதிப்புகள் இவ்வாட்டத்தில் காணப்படுகிறது. ஆனாலும் இடை ஆட்டம் மத்திய கிழக்கு நாடுகளின் பாரம்பரிய நடனமென பொதுவாக கருதப்படுகிறது. இடை ஆட்டம் ஒரு சிறந்த உடற் பயிற்சியாக கருதப்படுகிறது.இடை ஆட்டம் பெண்களின் உடல்நலத்திற்கு உதவுகிறது.முறையான பயிற்சி பெற்ற இடை ஆட்டம் மற்றும் உணவு கட்டுப்பாடு முலம் ஒரு மணிநேரத்தில் 300 கலோரிகள் வரை உடல் எடையை குறைக்கலாம்.ஆட்டத்தின் தீவிரத்தை பொருத்து இது மாறலாம்.இடையை வளைத்து நெளித்து ஆடுவதால்,மூட்டுக்குரிய திரவியத்தின் பாய்ச்சல் சீராகிறது,தசை முறுக்கு ஏற உதவுகிறது.இது முதுகு வலி, எலும்புப்புரை போன்றவற்றை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.உணவு ஜீரணத்திற்கும் இது உதவும்.முன்பேறுகால கவன முறையாக இடை ஆட்டப்பயிற்சியை பெண்கள் செய்தால்,இயற்கை பிரசவத்திற்கான வாய்ப்பு அதிகமாகிறது.பிரசவத்திற்கு பின்னும் இடை ஆட்டப்பயிற்சியை கடைபிடித்தால் அடிவயிற்றுக் கொழுப்பை கரைத்து,வயிற்றுத் தசைகள் முறுக்கு ஏற்றி இடை அழகை பராமரிக்க உதவும். "1950களில் குழந்தை ஈன்றெடுக்கும் தருவாயில் இருக்கும் கர்ப்பமான பெண்ணை சுற்றி இதர பெண்கள் இடை ஆட்டம் ஆடி,உடல் அசைவுகளில் அவளை வசியம் செய்வர். இதன் மூலம் அப்பெண் குழந்தை ஈன்றெடுக்கும்போது ஏற்படும் வழிதெரியாமல் இருக்க இது செய்யப்படுகின்றது." என்று பாராப் பிர்டோஸ் என்னும் அரேபியா ஆட்டக்களைஞர் கூறியுள்ளார். பாப் இசை உலகில் ஷக்கீரா மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் இருவரும் இடை ஆட்டத்தை பிரபலப்படுத்தியுள்ளனர். பாப் இசைக் கலைஞரான ஷக்கீராவின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களை பிரபலமாக்கியது.அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார். ஒரு எம்.டிவி பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, அவரது வயிறுப்பகுதியில் நாணயத்தை எப்படி சுழலவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார். இவரது இடை ஆட்ட நடனங்களை அவரது நிகழ்படங்களில் காணலாம்.குறிப்பாக, "ஓஜோஸ் அஸி", "லா டோர்டுரா", "ஹிப்ஸ் டோன் லை", 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வமான பாடலான "வாக்கா வாக்கா(திஸ் டைம் போர் ஆப்ரிக்கா )" போன்ற பாடல்களின் நிகழ்படங்களில் இவரது பெல்லி நடனம் அடக்கம். "ப்யூட்டிஃபுல் லயர்" என்ற பாடலின் நிகழ்படத்தில் ஷக்கீரா பியான்சே நோல்ஸ் உடன் இணைந்து இடை ஆட்டம் ஆடியுள்ளார். மேலும் பெல்லி நடன இயக்குனர்கள் பலரையும் கைவசம் வைத்திருக்கிறார். அவர்களில் விருதுபெற்ற பெல்லி நடன இயக்குனர் பொயன்காவும் () அடங்குவார். அமெரிக்கப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் உடையில் இசைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றுவது வழக்கம். தனது இசை தொகுப்பான பிரிட்னி (2001) இல் "ஐ எம் எ ச்லவே 4 உ" என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.இதற்காக புவேர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த மய்டே கார்சியா() என்ற நடன கலைஞரிடம் இடை ஆட்ட பயிற்சியும் பெற்றார். இந்திய சினிமாவில் இடை ஆட்டம் குத்தாட்டப் பாடல்களில் கவர்ச்சி ஆட்டமாக இடம்பெறுகிறது. 2007ல் குரு இந்தி படத்தில் "மைய்யா மைய்யா" பாடலுக்கும்,ஆப் கா சுரூர் ஹிந்தி படத்தில் ஷோலே(1975)வின் "மெகுபூபா மெகுபூபா" பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் மல்லிகா செராவத்தின் இடை ஆட்டம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. 2010ல் வெளிவந்த டீஸ் மார் கான் இந்தி படத்தில் "ஷீலா கி ஜவானி" குத்தாட்டப் பாடலுக்கு நடிகை கேட்ரீனா கய்ஃப் ஆடிய இடை ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது. இவரது இடை ஆட்டம் ஷக்கீராவின் இடை ஆட்டத்துடன் ஒப்பீட்டு பேசப்பட்டது. 1995ல் வெளிவந்த முத்து தமிழ் திரைப்படத்தில் "தில்லானா தில்லானா" பாடலுக்கு நடிகை மீனாவின் இடை ஆட்டமும் அண்மை நிலை தொப்புள் காட்சியும் மிகப் பிரபலமானது. 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் "மனம் விரும்புதே " பாடலுக்கு நடிகை சிம்ரனின் இடை ஆட்டம் அவரை பிரபலமாக்கியது.அதன் பிறகு பல பாடல்களில் இடை ஆட்டம் இடம் பெற்றாலும் ரகசியா ,முமைத் கான் போன்ற குத்தாட்ட நடிகைகளால் தமிழ் சினிமாவில் இடை ஆட்டம் புத்துயிர் பெற்றது.அதற்கு காரணம் இவர்கள் பயிற்சி பெற்ற இடை ஆட்டக்கலைஞர்கள் ஆவர். ரகசியா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) படத்தில் "சிரிச்சி சிரிச்சி வந்தா" பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.அதன் பிறகு பரமசிவன் (2006), யாரடி நீ மோகினி (2008) மற்றும் பல படங்களின் குத்தாட்டப்பாடல்களில் இவரின் இடை ஆட்டம் மிகப்பிரபலம். அண்மையில்,நண்பன்(2012) திரைப்படத்தில் இடை ஆட்டத்தை பிரதானமாக கொண்ட "இருக்கானா இடுப்பிருக்கானா" என்னும் பாடலுக்கு இலியானா பல பெண் இடை ஆட்டக்கலைஞர்களுடன் இடை ஆட்டம் ஆடினார்.இது பெரும் வரவேற்பு பெற்றது.இப்பாடலுக்கு இந்தி படவுலகின் முன்னணி நடன அமைப்பாளர் ஃபரா கான் நடனம் அமைத்தார். ”உலகளவில் சிலரிடம் இடை ஆட்டம் ஒரு கீழ்த்தரமான ஆபாச நடனம் என்ற கருத்து உள்ளது” என்று ஹாலிவுட்டில் புகழ் பெற்ற இடை ஆட்டக்கலைஞர் மற்றும் ஆசிரியரான பிரின்சஸ் பார்ஹானா கூறியுள்ளார். இதற்கு ஒரு காரணம் பழங்கால ஓவியர்கள் கற்பனையாக தீட்டிய ஓவியங்களில் இடை ஆட்டம் ஆடும் பெண்கள் நிர்வாணமாகவோ அல்லது அரை நிர்வாணமாகவோ காணப்படுகின்றனர். இதன்முலம் சிலரால் உரூவாக்கபட்ட வெற்றுப் புனைவு கதைகளால் இடை ஆட்டம் பெண்களால் சிற்றின்பம் அடையவே ஆடப்படுகிறது என்ற தவறான கருத்து உரூவாகியுள்ளது. ஹாலிவுட் சினிமாவில் இடை ஆட்டத்தை கவர்ச்சியாக காமநோக்கில் காட்டிவருவது மற்றொரு காரணமாகும்.இடை ஆட்டத்தின் பிறப்பிடமாக கருதப்படும் எகிப்து நாட்டின் அரசாங்கமே இடை ஆட்டம் ஆபாசமானதாக கூறி இடை ஆட்டகலைஞர்களுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்தியாவில் இந்நடனம் சினிமாவில் ஏற்கப்பட்டாலும் பொதுவாக இது ஒரு ஆபாச நடனமாகவும் கலாச்சார சீரழிவாகவும் கருதப்படுகிறது. உதாரணமாக 2003ல் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தோர் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடை ஆட்டம் போன்ற மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளை ஐந்து நட்சத்திர உணவகங்களில் நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2008ல் மும்பையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில், தொப்புளை காட்டி நடனம் ஆடும் இடை ஆட்டப் பெண்கள் நடனம் ஆடினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விழாவில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்ததற்கு பாஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பொதுச்செயலர் வினோத் தவாடே கூறுகையில், "பவார் பாதையை அப்படியே அவர் கட்சியினர் பின்பற்றுகின்றனர் என்பது இதில் இருந்து தெரிகிறது. அவர் தான் சியர் லீடர்ஸ் அழகிகளை, மைதானத்தில் நடனம் ஆட அனுமதித்தார்; அவரின் சீடர்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பெல்லி டான்சர்களை ஆட வைத்துள்ளனர்" என்று கூறினார். இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை இங்கு பட்டியலிடப்படுகிறது. ஜீலம் ஆறு ஜீலம் ஆறு (காஷ்மீரி: Vyeth, இந்தி: झेलम, பஞ்சாபி: ਜੇਹਲਮ, உருது: دریاۓ جہلم) சிந்து ஆற்றின் துணை ஆறாகும். இதன் நீளம் 480 மைல் (774 கிமீ). இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது. முசாஃபராபாத் நகரில் இதன் பெரிய துணை ஆறாகிய நீலம் இணைகிறது. அதற்கடுத்த பெரிய ஆறான குனார் ஆறு ஜீலம் ஆற்றுடன் இணைகிறது. டிரிமு என்னுமிடத்தில் செனாப் ஆற்றுடன் ஜீலம் ஆறு இணைகிறது. செனாப் ஆறு சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. மூச்சுத் தொகுதி பல்கல உயிரினங்களில், மூச்சுத் தொகுதி அல்லது மூச்சியக்கத் தொகுதி அல்லது சுவாசத் தொகுதி (respiratory system) என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான வளிமங்களை உள்ளிழுத்து, வளிமப் பரிமாற்றத்திற்கு உதவி, தேவையற்ற வளிமத்தை (காபனீரொக்சைட்டை) வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு உடற்கூற்றியல் தொகுதியாகும். தனிக்கல உயிரினங்களில் மூச்சுத் தொகுதி காணப்படுவதில்லை. அவற்றில் நேரடி பரவல் மூலம் வாயுக்கள் பரிமாற்றப்படுகின்றன (கலச் சுவாசம்). சிறிய பல்கல உயிரினங்களிலும் மேற்பரப்பு:கனவளவு வீதம் அதிகமாக இருப்பதால் வாயுக்கள் உடற்கலங்களுடன் நேரடியாகப் பரிமாற்றப்படுகின்றன. அவ்வாறான சிறிய பல்கல விலங்குகள் அதற்கேற்ப தட்டையான அல்லது உருளை வடிவிலான உடலமைப்பைக் கொண்டிருக்கும். எனினும் பெரிய பல்கல உயிரினங்களில் உடலின் உட்பகுதியிலிருக்கும் கலங்களில் நேரடி வாயுப்பரிமாற்றம் நடைபெற முடியாது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மூச்சுத்தொகுதி பல்கல உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. மூச்சுத்தொகுதியால் உள்மூச்சு மூலம் ஒக்சிசன் வீதம் அதிகமுள்ள வளிமம் உள்ளெடுக்கப்பட்டு, வெளிமூச்சு மூலம் காபனீரொக்சைட்டு வீதம் அதிகமுள்ள வளிமம் வெளியிடப்படுகின்றது. பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் பயன்பாடு என்பன உயிரினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. பூச்சிகள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. ஈரூடகவாழிகளில், அவற்றின் தோலும் கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. . மனிதர்களிலும், பிற பாலூட்டிகளிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக மூக்கு அல்லது வாய், தொண்டை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல், மூச்சியக்கத் தசைநார்கள் என்பன காணப்படுகின்றன. ஆக்சிசன் மூலக்கூறுகளும், காபனீரொட்சைட்டு மூலக்கூறுகளும் பரவல் மூலம், வெளிச் சூழலுக்கும், குருதிக்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது. தாவரங்களிலும் மூச்சியக்கத் தொகுதி உள்ளது. இவற்றில் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு வளிமம் மிக அரிதாகவே எடுத்துச் செல்லப்படு. வளிமப் பரிமாற்றம் தாவரத்தின் வேர், தண்டு, இலைகள் என வெவ்வேறு பகுதிகளிலும் தனியாகவே நடைபெறும். தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக இலைகளின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன. வேர்கள் தமது ஆற்றலுக்குத் தேவையான வளிமப் பரிமாற்றத்திற்கு மண் இடைவெளிகளிலுள்ள வளிமத்தை வளிமப்பரிமாற்றம் மூலம் பெற்றுக் கொள்ளும். தாவரங்களின் இலைகளில் பிரதான வாயுப்பரிமாற்ற உறுப்பாக இலைவாய் தொழிற்படுகின்றது. இது சுவாசத்துக்கும், ஒளித்தொகுப்புக்கும் பொதுவான உறுப்பாகும். தாவரங்களில் பகற்பொழுதில் சுவாச வீதத்தை விட ஒளித்தொகுப்பு வீதம் அதிகமென்பதால், பகலில் பொதுவாக ஆக்சிசன் வாயுவே வெளியிடப்படுகின்றது. இராக்காலத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறாததால் காபனீரொக்சைட்டு வாயுவே இலைவாயூடாக வெளியேறுகின்றது. உடற்பருமன் கூடிய தாவரங்களின் உட்பகுதியிலுள்ள இழையங்களுக்கு ஆக்சிசன் செல்ல முடியாது. தண்டிலுள்ள தடித்த பட்டை வாயுக்களையோ நீரையோ அனுமதிப்பதில்லை. எனவே இவ்விழையங்கள் இறப்பதைத் தடுப்பதற்காக பருமன் கூடிய தண்டிலும் வேர்களிலும் பட்டைவாய்கள் உள்ளன. இதனூடாக வாயுப்பரிமாற்றம் நிகழும். சதுப்பு நிலங்களின் மண்ணில் ஆக்சிசன் செறிவு மிகவும் குறைவாகும். எனவே கண்டல் தாவரங்களில் வேரிழையங்களுக்கு ஆக்சிசன் வழங்குவதற்காக மூச்சு வேர்கள் கூர்ப்படைந்துள்ளன. மண்புழு போன்ற வளையப் புழுக்களில் (அனெலிடா) வாயுப்பரிமாற்றம் ஈரலிப்பான தோலினூடாக நடைபெறுகின்றது. எனவே இவற்றில் தோலைத் தவிர வேறு மூச்சுத் தொகுதி உறுப்புகள் இருப்பதில்லை. பூச்சிகளில் வாதனாளித் தொகுதி மூலம் உடற்கலங்களுக்கும் வளிக்குமிடையே நேரடித்தொடர்பு ஏற்படுத்துவதனால் மூச்சுத்தொகுதி கலச்சுவாசத்துக்கு உதவுகின்றது. எனவே பூச்சிகளில் குருதி மூலம் சுவாச வாயுக்கள் காவப்படுவதில்லை. நீர்வாழ் முள்ளந்தண்டிலிகளில் பூக்கள் மூலம் வாயுப்பரிமாற்றம் நிகழும். சில முள்ளந்தண்டிலிக் கூட்டங்களும் அவற்றின் சுவாசக் கட்டமைப்புக்களும்: முள்ளந்தண்டுளி விலங்குகளில் மூச்சுத்தொகுதியும் குருதிச்சுற்றோட்டத்தொகுதியும் உடற்கூற்றியல் ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அனைத்து முள்ளந்தண்டிலிகளிலும் குருதியே மூச்சுத்தொகுதியிலிருந்து உடற்கலங்களுக்கு ஆக்சிசனையும் உடற்கலங்களிலிருந்து மூச்சுத்தொகுதிக்கு காபனீரொக்சைட்டையும் காவுகின்றது. இதற்காக முள்ளந்தண்டுளிகளின் குருதியில் ஆக்சிசனைக் காவுவதற்கென விசேடமாக இயைபாக்கமடைந்த செங்குருதிக் கலங்களையும், அக்கலங்களில் ஈமோகுளோபிளின் புரதத்தையும் கொண்டுள்ளன. எனினும் இவற்றின் மூச்சுத்தொகுதி இனத்துக்கினம் வேறுபடுகின்றது. மீன்களில் பொதுவாக பூக்கள் (நுரையீரல் மீன்களைத் தவிர) காணப்படுவதுடன் ஏனையவற்றில் நுரையீரல் காணப்படுகின்றது. சில உபயவாழிகளில் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் இரு உறுப்புக்களும் உள்ளன. ஊர்வனவற்றிலும், முலையூட்டிகளிலும், பறவைகளிலும் நுரையீரல் மாத்திரமே மூச்சுத்தொகுதியின் பிரதான உறுப்பாகக் காணப்படுகின்றது. மீன்கள் பூக்கள் அல்லது செவுள் (இந்திய வழக்கு) மூலம் சுவாசிக்கின்றன. பூக்களைப் பயன்படுத்தி நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் வாயு வடித்தெடுக்கப்பட்டு குருதியிலுள்ள செங்குருதிக் கலங்களுக்கு மாற்றப்படும். மீன்களின் பூக்களில் நீர்ச் சுற்றோட்டமும் குருதிச் சுற்றோட்டமும் எதிர்ச் சமாந்திரமாகக் காணப்படுவதால் வாயுப் பரிமாற்றத்தின் வினைத்திறன் அதிகமாக உள்ளது. பூக்களுக்குள் உள்ளெடுக்கப்படும் நீரில் கரைந்துள்ள ஒக்சிசனில் கிட்டத்தட்ட 85% ஆனது குருதிக்குள் மாற்றப்படுவது மீன்களின் பூக்களின் அதிக வினைத்திறனை எடுத்துக்காட்டுகின்றது. முலையூட்டிகளில் நுரையீரல் மூலம் வாயுப் பரிமாற்றம் நிகழ்த்தப்படும். முலையூட்டிகளின் நுரையீரல் ஊர்வனவற்றின் நுரையீரலை விட வினைத்திறன் கூடியதாகும். முலையூட்டிகளின் (மனிதன் உட்பட) மூச்சுத்தொகுதியில் பிரதானமாக இரு நுரையீரல்கள் காணப்படுவதுடன் அவற்றுக்கு வளியை உட்செலுத்தும் பல மூச்சுக் குழாய்களும் காணப்படுகின்றன. மனிதனும் முலையூட்டிகளில் உள்ளடங்குவதால் முலையூட்டிகளின் மூச்சுத்தொகுதியினை இங்கு அதிகமாக விளக்கலாம். மனித மூச்சுத்தொகுதியின் பிரதான பாகங்கள்: சுவாசச் செயன்முறை நீள்வளைய மையவிழையத்தாலும், வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இது தன்னாட்சி நரம்புத்தொகுதியின் ஒரு பகுதியாகும். சிறிது நேரத்துக்கு இச்சையுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்த இயலுமாயினும் அனேகமான நேரங்களில் நீள்வளைய மையவிழையத்தால் சுவாசம் எம் இச்சையில்லாமலேயே சுவாசம் கட்டுப்படுத்தப்படும். நரம்புத் தொகுதியின் நீள்வளைய மையவிழையத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் சுவாசம் நிறுத்தப்பட்டு இறப்பு நேரிடும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவுத் தளம்பலுக்கு ஏற்றபடி சுவாசச் செயன்முறை கட்டுப்படுத்தப்படும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகமானால் (உதாரணமாக அதிக உடற்பயிற்சியின் போது) அது தொகுதிப் பெருநாடி (குருதியின் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) மற்றும் நீள்வளைய மையவிழையத்திலுள்ள (மூளைய முன்னாண் பாய்பொருளில் ஏற்படும் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) இரசாயன உணரிகளால் உணரப்பட்டு நீள்வளைய மையவிழையத்துக்குத் தகவல் அனுப்பப்படும். நீள்வளைய மையவிழையம் நுரையீரலைத் தூண்டி அதிக தடவை சுவாசிக்கச் செய்யும். எனவே தான் வேகமாக ஓடுதல் போன்ற உடற்பயிற்சியின் போது அதிகம் சுவாசிக்கின்றோம். நீள்வளைய மையவிழையத்தில் pneumotaxic center, மற்றும் apneutic centre எனும் இரு நரம்புப் பிரதேசங்கள் முறையே உட்சுவாசத்தை நிரோதிப்பதிலும், உட்சுவாசத்தத்தைத் தூண்டுவதிலும் ஈடுபடுகின்றன. இவற்றில் நியூமோடாக்சிக் பிரதேசம் நேரடியாக வரோலியின் பாலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நுரையீரலின் சுவாசப்பைச் சிறுகுழாய்களிலும் ஈர்த்த வாங்கிகள் (stretch receptors) உள்ளன. அதிகளவில் வளி நுரையீரலுக்குள் உள்ளெடுக்கப்படும் போது இவை உட்சுவாசத்தை வரோலியின் பாலத்தினூடாக நியூமோடாக்சிக் பிரதேசத்தைத் தூண்டுவதால் நிரோதிக்கின்றன. பொதுவாக ஓய்விலுள்ள போது மனிதர்கள் நிமிடத்துக்கு 12 தொடக்கம் 16 தடவை மூச்சு விடுகின்றனர். (சராசரி-15) இது உயிர்ப்பான செயற்பாடாகும். வெளிப்பழுவிடைத் தசைகள் சுருங்க உட்பழுவிடைத் தசைகள் தளரும். விலாவென்புகளும் மார்புப்பட்டையும் வெளிநோக்கி அசையும். பிரிமென்றகடு சுருங்கித் தட்டையாகும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரித்து நுரையீரலினுள் வளியமுக்கம் வேகமாகக் குறைவடையும். இத்தாழமுக்கத்தை ஈடு செய்ய வெளியிலிருந்து காற்று உள்வருகின்றது. உள்வரும் காற்றிலுள்ள ஆக்சிசன் வாயு சுவாசப்பைச் சிற்றறைகளிலுள்ள குருதி மயிர்க்கலன்களிலுள்ள குருதியில் கலக்கும் அதே வேளை குருதியிலுள்ள காபனீரொக்சைட்டு நுரையீரலிலுள்ள வளியில் கலக்கின்றது. இவ்வாறு முலையூட்டிகளில் உட்சுவாசம் நடைபெறும். பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும். சாதாரணமான இச்சையின்றிய, சந்தமான உட்சுவாசத்தில் வெளிப் பழுவிடைத் தசைகளும் (external intercostal muscles), பிரிமென்றகடும் மாத்திரமே பங்கெடுக்கின்றன. எனினும் வலிந்த உட்சுவாசத்தின் போது மேற்கூறிய தசைகள் அதிகமாக சுருங்குவதுடன் இவற்றுக்கு உதவியாக மார்பு மற்றும் கழுத்திலுள்ள தசைகளும் சுருங்கும். இதனால் அதிக வளி உள்ளெடுக்கப்படும். இது உயிர்ப்பற்ற செயற்பாடாகும். (சக்தி தேவைப்படுவதில்லை). வெளிப்பழுவிடைத் தசையும், பிரிமென்றகடும் தளருவதால் விலாவென்புகளும் மார்புப் பட்டையும் உள்நோக்கி அசையும். பிரிமென்றகடு மேல்நோக்கி அசையும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு குறைந்து அமுக்கம் அதிகரிக்கும். இதனால் காபனீரொக்சைட்டு நிறைந்த வளி வெளிநோக்கித் தள்ளப்படும். வலிந்த வெளிச்சுவாசம் உயிர்ப்பான செயற்பாடாகும். இதன் போது உட் பழுவிடைத் தசைகளும், வயிற்றுப்புறத் தசைகளும் சுருக்கமடைவதால் அதிகளவு வளி வெளியேற்றப்படும். சுவாசத் தொகுதியில் ஏற்படும் வெவ்வேறு நோய்களும் வெவ்வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன மனிதர்களில், கருத்தரிப்புக் காலத்தில் முதிர்கருக்களில் மூச்சுத் தொகுதியானது செயற்பாடற்ற நிலையில் இருக்கும். குழந்தைக்குத் தேவையான ஆக்சிசன் உட்பட்ட அனைத்துத் தேவைகளும் தாயிலிருந்து கிடைத்துக்கொண்டிருக்கும். பிறப்பு நிகழ்ந்து, குழந்தையானது வளிமத்திற்கு, வெளிப்படுத்தப்பட்டதும், மூச்சுத்தொகுதி முழுமையாகச் செயற்பட ஆரம்பித்துவிடும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையின் மூச்சுத் தொகுதி முழுமையற்ற விருத்தியைக் கொண்டிருப்பதனால், தொழிற்பட முடியாத நிலை ஏற்பட்டு அது ஆபத்தில் முடியக்கூடும். இதனால், மூச்சுத் தொகுதி முழு விருத்தியடையும்வரை, பிறப்பை பின்போடவே முயற்சிகள் நடைபெறும். பிற்போடப்படும் காலத்தில் தாய்க்கு இயக்க ஊக்கிகள் (Steroid) வழங்குவதன்மூலம் நுரையீரலின் விருத்தி துரிதப்படுத்தப்படும். பால் வழி பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக "பால்" என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். "பால் வழி" எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான "" என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். இது கிரேக்க மொழிச் சொல்லான என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். பால் வழியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது. கலீலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர். 1920ஆம் ஆண்டு ஆர்லோவ் சேப்ளே மற்றும் ஏபெர் கர்டிசு ஆகிய இரு வானியலாளர்கள் இடையே நடந்த பெருவிவாதத்தைத் தொடர்ந்து எட்வின் ஹபிள் என்பவரின் நோக்கீடுகள் பால் வழி என்பது அண்டத்தில் உள்ள பல விண்மீன் திரள்களில் ஒன்றே என்று காண்பித்தது.. பால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும். இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. கதிரவ மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்துள்ள விண்மீன்கள் ஒரு வீக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீக்கத்தில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டைகள் கதிர்வீச்சடைகின்றன. பால்வெளி மையத்தில் தனுசு எ* என்று அழைக்கப்படும் செறிந்த கதிர்வீச்சுள்ள மூலம் அமைந்துள்ளது; அது 4.100 (± 0.034) மில்லியனுக்கும் அதிகமான கதிரவ பொருண்மையைக் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விண்மீன்களும் வளிமங்களும் பால்வெளி மைய சுற்றுப்பாதையில் இருந்து பரந்த தொலைவில் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்லரின் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழிப் பொருண்மையின் பெரும்பகுதி மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லை என்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருள் என்று குறிப்பிடப்படுகிறது. கதிரவனின் இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும். புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் அண்டத்தின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவானதாகும் என்று புலப்படுகிறது. பல்வேறு துணைப் பேரடைகளைக் கொண்டுள்ள நம் பால்வழி, பேரடை உட் குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உட்குழு கன்னி விண்மீன் மீகொத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த மீகொத்தும் இலணியாக்கியா விண்மீன் மீக்கொத்தின் ஓர் உறுப்பு ஆகும். பால் வழி, இரவு வானில் 30 பாகைகள் அகலக் கோண வட்டவில்லாக மங்கலான வெண் ஒளிர்பட்டையாகத் தெரிகிறது. முழு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும் தனித்தனி விண்மீன்களும் பால் வழியின் பகுதியே எனினும், இந்த ஒளிர் பட்டை, பிரித்தறிய முடியாத விண்மீன்களின் திரள்வாலும் பால்வெளித் தள திசையில் இருக்கும் பிற பொருள்களாலும் உருவாவதாகும். ஒளிர்பட்டையில் உள்ள பெரும்பிளவு, கோல்சேக் ஒண்முகில் போன்ற இருளடர்ந்த பகுதிகள், தொலைவில் அமைந்த விண்மீன்களின் ஒளியை பால்வெளித் தூசு மறைக்கும் பகுதிகள் ஆகும். வான்பரப்பில் பால்வழியால் மறைக்கப்படும் மண்டலம் தவிர்ப்பு மண்டலம் எனப்படுகிறது. பால்வழி, ஒப்பீட்டளவில் குறைந்த மேற்பரப்பு ஒளிர்வைக் கொண்டுள்ளது. ஒளி மாசு அல்லது நிலவொளி போன்ற பின்னணி ஒளி மூலம் அதன் தோற்றத்தை பெரிதும் குறைக்க முடியும். பால்வழி தெரிய வேண்டும் என்றால் ஒரு சதுர ஆர்க்நொடிக்கு சுமார் 20.2 அளவில் வானம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட அளவு +5.1 அல்லது அதற்கு மேல் இருந்தால் பால்வழி தென்படும். மேலும் அது +6.1 இல் இருந்தால் விரிவான விவரங்களைக் காண்பிக்கும். எனவே வேகமான நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளிலிருந்து பால்வழியைப் பார்ப்பது கடினமாகிறது, ஆனால் நிலவு அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது கிராமப்புற பகுதிகளில் இருந்து பார்க்கும் போது நன்றாக புலப்படுகிறது. "செயற்கை இரவு வானில் பிரகாசத்தின் புதிய உலக அட்லாஸ்" என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்று, புவியில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், ஒளி மாசுபாடு காரணமாக பால் வழியை தங்கள் வீடுகளில் இருந்து பார்க்க இயலாது என்று காட்டுகிறது. புவியில் இருந்து பார்க்கும் போது, புலப்படும் பால் வழியின் பால்வெளி சமபரப்பு பகுதியானது 30 விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கிய வானத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தனுசின் திசையில் அமைந்துள்ள பால்வெளி மையத்தில், பால்வழி அதிக ஒளிர்வுடன் இருக்கும். தனுசிலிருந்து ஒரு மங்கலான வெண் ஒளிர் பட்டை ஆரிகாவில் உள்ள பால்வெளி எதிர்மையத்தைச் சுற்றி செல்வது போல் தோற்றமளிக்கும். அந்த ஒளிர்பட்டை, பின்னர் வானத்தைச் சுற்றியுள்ள மற்ற வழிகளில் தொடர்ந்து மீண்டும் தனுசுக்கு வந்தடைகிறது. இவ்வாறு அது வானத்தை தோராயமாக இரு சமமான அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது. பால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. பால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே கதிரவ மண்டலம் இருக்கிறது. ஓரியன் கை என்பது பால் வழிப் பேரடையில் காணப்படும் பல்வேறு கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் கதிரவனின் சுற்றுப்பாதை ஆகும். கதிரவன், பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது. பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது. பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (10) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x10) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, கதிரவனுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10 கதிரவ விட்ட (4x10 கிமீ அல்லது 4.2 ஒஆ) தொலைவில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x10 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது. பால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அணுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு. உணர்வுத் தொகுதி புலன் உணர்வுத் தொகுதி அல்லது புலன் உணர்வு மண்டலம் (Sensory system) என்பது, புலன் உணர்வு தொடர்பான தகவல்களைச் செயற்படுத்தும் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும். புலன் உணர்வுத் தொகுதி, புலன் உணர்வு ஏற்பிகளை (sensory recptors) உள்ளடக்கிய புலன் உணர்வு நரம்பணுக்களையும் (), நரம்பு வழிகளையும் (), புலன்களின் செயல்முறையில் பங்கெடுக்கும் மூளையின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். பொதுவான புலன் உணர்வுத் தொகுதிகளாவன, காட்சி, கேள்வி, தொடுவுணர்வு, சுவை, மோப்பம். சமநிலை ஆகியனவாகும். கண், செவி, தோல். நாக்கு, மூக்கு ஆகியவை ஏற்புப் புலன் உறுப்புக்களாகத் தொழிற்படுகின்றன. இந்த ஏற்புப் புலன் உறுப்புகளால் உணரப்படும் உலகிலுள்ள பொருள் சார்ந்த பகுதிகள், மூளையினால் புரிந்துகொள்ளப்படும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும். பார்வைத் தொகுதி, கேட்டல் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புலன்கள் தொடர்பாக ஒரு பொருளைக் கொண்டிருக்கும் வேறுபட்ட வரையறையின் காரணமாக, எண்ணற்ற குறிப்பிட்ட உணர்வுகளுக்கு நரம்பியல் அறிஞர்களிடையே விவாதம் இருப்பினும், கௌதம புத்தர் மற்றும் அரிஸ்டாட்டில் ஐந்து 'மரபான' மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர் இவை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: தொடு உணர்வு, சுவையுணர்வு, முகர்ச்சியுணர்வு, பார்வையுணர்வு மற்றும் கேட்டலுணர்வு ஆகியவையே அவையாகும். கடுமையுணர்வு (nociception), சமநிலையுணர்வு (equilibrioception), மயக்கவுணர்வு (kinaesthesia), மற்றும் வெப்பவுணர்வு (thermoception) போன்ற பிற உணர்வுகள் மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக உள்ளன. மனிதர்களைத் தவிர பிற உயிரிகளில் காந்தஏற்புணர்வு (magnetoception) மின்னேற்புணர்வு (electroreception) போன்ற சில வகை சிறப்பு வகை உணர்வுகள் காணப்படுகின்றன. புலனுணர்வு ஏற்பி "( Sensory receptor)" என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே கலத்தில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு கலத்தில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறனை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது. சுவை, மணத்துடன் தொடர்புடைய புலன் ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகள் உடலின் மோப்பப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இடைவினை நிகழ்த்தி மணப் புலனை உருவாக்குகின்றன. இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்தி சுவைப் புலனை உருவாக்குகின்றன. தொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன. புலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது உறுப்பாகும். தனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன. புலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான வாயில் நிலை பற்றி அறிய உயிர் இயற்பியல் விளக்கப் படம் பார்க்கவும்). வேதி ஏற்பிகள் அல்லது வேதி உணரிகள் குறிப்பிட்ட வேதியற் பொருட்களை அடையாளம் கண்டு அதனை மின் உணரியாக மாற்றுகிறது. இரண்டு அடிப்படை வேதி உணரிகள் கானப்படுகின்றன. நுகர்வு உறுப்புகள் மூலம் வேதியப் பொருட்களின் காரம், நெடி, வாசனை போன்றவற்றின் மூலம் மோப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அவை நரம்பணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகின்றன. நாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மூலம் நேரிடையாக தொடர்பு ஏற்படுவதால் அவ்விடத்திலுள்ள நரம்பணுக்கள் பிரான வாயுவில் ஏற்படும் அடர்வு மாறுதல்கள் மூலம் நேரடி வேதி ஏற்பு அமைப்பு செயல்படுகின்றன. ஒளி ஏற்பிகளானது ஒளியினை ஏற்று அதனை மாற்றக்கூடிய தகவமைப்பை பெற்றுள்ளன. இச்செயல்முறையில் ஒளியானது (மின்காந்த எதிரொலித்தல்) மற்ற வகை ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. மூன்று வகையான ஒளி ஏற்பிகள் கானப்படுகின்றன. அவை கூம்பு , குச்சி அல்லது தடி மற்றும் ஒளியுணர்வு மிக்க காங்கிலியன் செல்கள் ஆகும். கூம்பு செல்களானது நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. கூம்பு செல்கள் அவற்றின் பணிகளுக்கேற்ப மனிதர்களில் மூன்று வேறுபட்ட வகைகளாக கானப்படகின்றன. குறைந்த அலைநீளமுடைய (நீலம்) மத்திய அலைநீலமுடைய (பச்சை) மற்றும் அதிக அலைநீளமுடைய (மஞ்சள் அல்லது சிவப்பு) நிறங்களுக்கான அடிப்படை ஒளிஏற்பிகளாக இவை செயல்படுகின்றன. குச்சி வடிவ செல்களானது ஒளியின் செறிவுகளை உணரவும் குறைந்த ஒளியில் பார்க்கும் திறனை அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. குச்சி செல்களின் அடர்வு மற்றும் விகிதமானது அவை பகலாடி அல்லது இரவாடி விலங்குகளா என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன. மனிதர்களில் குச்சி செல்கள் தோராயமாக 20: 1 என்ற விகிதத்திலும் , அதே சமயத்தில் இரவாடி விலங்குகளான ஆந்தை உள்ளிட்ட விலங்குகளில் இந்த விகிதமானது 1000: 1 என்ற அளவில் கானப்படுகின்றன. . காங்கிலிய உயிரணுக்களானது அண்ணீரகச் சுரப்பியின் உள்ளகங்களிலும் விழித்திரையிலும் கானப்படுகின்றன. அவை பரிவதிர்வு பதிலில் (sympathetic response) ஈடுபடுகின்றன. விழித்திரை உள்ள ~ 1.3 மில்லியன் காங்லியன் செல்களில், 1-2% சதவீதம் ஒளியுணர்வு செல்கள் என்று நம்பப்படுகிறது. . இந்த ஒளியுணர்வு செல்கள் சில விலங்குகளில் நனவு நிலை பார்வையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதே போல செயல்முறை மனிதர்களிடத்திலும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இயக்க ஏற்பிகள் (Mechanoreceptor) என்பது ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். அழுத்தம் மற்றும் உருக்குலைவு போன்ற இயந்திர விசைகளுக்கு உரிய பதில்களை அளிப்பதற்காக அவற்றின் உள்ளீட்டு தூண்டல்களை ஏற்கும் அமைப்பாகும். நுழைவறை புலன் உறுப்பு மற்றும் செவியமைப்பில் அமைந்திருக்கும் உரோமங்களில் இத்தகைய இயந்திர ஏற்பிகள் கானப்படுகின்றன. இயந்திர ஏற்பிகள் தோல் அல்லது சருமத்தோடு தொடர்புடையன மேலும் இவை நான்கு குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன. வெப்ப ஏற்பிகள் (Thermoreceptor) என்பது மாறுபடும் வெப்பநிலைக்கு பதில்வினையாற்றும் ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். இந்த வாங்கிகள் இயங்குவதற்கான வழிமுறைகள் தெளிவற்றதாக இருந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் பாலூட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு வேறுபட்ட வெப்ப ஏற்பிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. வலிஏற்பிகள் என்பது தண்டு வடம் மற்றும் மூளைக்கு சமிஞ்ஞைகளை அனுப்புவதன் மூலம் சேதமடையக்கூடிய அல்லது சேதம் விவைிக்கக்கூடிய தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த செயல்முறை, வலிஏற்பு எனப்படும், இது பொதுவாக வலி உணர்திறனை ஏற்படுத்துகிறது. இவை உடல் உள்ளுறுப்புகளிலும் உடலின் மேற்பரப்புகளிலும் கானப்படும். இவை பல்வேறு வகையான சேதம் விளைவிக்கும் தூண்டுதல் அல்லது உண்மையான சேதத்தை கண்டறிகின்றன. திசுக்கள் சேதமடைந்தால் மட்டுமே பதிலளிக்கும் நிலைகள் "தூக்கம்" அல்லது "அமைதியான" வலி ஏற்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேலே விவரித்த ஏற்பிகள் பெறும் அனைத்துத் தூண்டல்களும் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் உள்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பிழைகளின் நுனி ஏந்தும் செயல்நிலைக்கு கடத்தப்படுகின்றன. புலன்சார் புறணி என்பது வழக்கமாக உடலப் புலன்சார் புறணியைக் குறித்தாலும், இது மிகவும் துல்லியமாக மூளையின் பல்வேறு புலன்சார் குறிகைகளைப் பெறும் பகுதிகளையும் உள்ளடக்கும். மாந்தருக்கான மரபான ஐம்புலன்களுக்குமான வெவ்வேறு புலன்சார்ந்த முதன்மை, துணைப் புறணிகளையும் இது உள்ளடக்கும். அவையாவன, உடலப் புலன் புறணி, காட்சிப் புலன், கேள்விப் புலன், முதன்மை மோப்ப்ப் புலன், சுவைப் புலன் என்பனவாகும். அங்கண உணர்வு, சமனிலை உணர்வு சார்ந்த பிற புறணிகளும் மூளையில் அடங்கியுள்ளன. மண்டைப் பக்க மூளை மடலில் உள்ள முதன்மை உடலப் புலன் புறணி தான் உடலப் புலன் மண்டலத்தின் தொடுஉணர்வும் இட, இருப்பு உணர்வும் சார்ந்த முதன்மை ஏற்புப் பகுதியாகும். இது மேலும் மூன்றாகப் பரிக்கப்படுகிறது. அவையாவன பிராட்மன் பகுதிகள் 1, 2, 3 என்பனவாகும். இவற்ரில், பிராட்மன் பகுதி 3 தான் உடலப் புலன் கையாளும் முதன்மைப் புறணியாகும்.ஏனெனில், இதுதான் கருவகத்தில் (Thalamus) இருந்து கணிசமான உள்ளீட்டைப் பெறுவதோடு, இதுவே உடலப் புலன் தூண்டலுக்கு உயர்துலங்கல் புரியும் புறணியுமாகும். இது மின்தூண்டலால் உடலுணர்வுகளை எழுப்புகிறது. பகுதிகள் 1, 2 ஆகியவை அவற்ருக்கான பெரும்பகுதி உள்ளீட்டை பகுதி 3 வழியாகவே பெறுகின்றன. மேலும் சிறுமூளை வழியாக இட, இருப்பு உணர்வு வழித்தடங்களும் இயக்கக் கட்டுபாட்டுக்கான வழித்தடங்களும் பிராட்மன் பகுதி 4 இல் அமைந்துள்ளன. காட்சிப் புலன் புறணியில் முதன்மைக் காட்சிப் புலன் புறணியாகிய V1 அல்லது பிராட்மன் 17, V2-V5 எனும் கூடுதல் காட்சிப் புலன் புறணிப் பகுதிகள் ஆகியன உள்ளடங்கும். பிடரி மடலில் அமைந்த, V1 காட்சி உள்ளீட்டுக்கான முதன்மை அஞ்சலகமாக அமைந்து, தகவலை முதுகுபக்க, வயிற்றுப்பக்க முதன்மைத் தடவழிகளுக்குக் கடத்துகிறது. முதுகுப் பக்கத்தில் எங்கு, எப்படி என அறியும் V2, V5 ஆகிய பகுதிகள் அமைகின்றன. வற்ருப் பக்கத்தில் என்ன என அறியும் V2, V4 ஆகிய பகுதிகள் அமைகின்றன. உடனடிப் புலன் உணர்வுத் தூண்டல்களின் மாற்றங்களுக்குப் பின்னரும் முயற்சி முடிவுற்ற பின்னரும் வயிற்றுப் பக்க நரம்பு வலையமைப்பில் இலக்குப்பணி எதிர்ப்புச் செயல்பாடுகள் கூடுதலாகின்றன at the onset and offset of task blocks, நெற்றிப் பொட்டு மடலில் அமைந்த கேள்விப் புலன் புறணி ஒலித் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். இப்புறணியில் பிராட்மன் 41, 42 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இவற்ரில் பிராட்மன் 41 முன் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி என்றும் பிராட்மன் 42 பகுதி பின் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இருபகுதிகளும் ஒருங்கிணைந்து ம்யிர்க்கலங்கள்/கேள்வி ஏற்பிகளில் இருந்துவரும் குறிகைகளைப் பெற்று ஒத்தமுறையில் கையாள்வதோகு கடத்தவும் செய்கின்றன. நெற்றிப் பொட்டு மடலில் அமைந்த முதன்மை மோப்பப் புலன் புறணி வாசனை அல்லது மோப்பப் புலன் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். காட்சி, கேள்விப் புலன்களைப் போலல்லாமல், மோப்பப் புலன் குமிழ்கள் மூளை அரைக்கோளங்களைக் குறுக்காக கடப்பதில்லை; மாறாக வலதுபுறக் குமிழ்கள் மூளை வலது அரைக்கோளத்துக்கும் இடதுபுறக் குமிழ்கள் மூளை இடது அரைக்கோளத்துக்கும் குறிகைகளை செலுத்துகின்றன. சுவைப் புலன் புறணி தான் சுவைக்கான குறிகைகளை முதன்மையாகப் பெறும் பகுதியாகும். சுவை எனும் சொல் நுட்பமாக நாக்கின் சுவைமொட்டுகளில் இருந்துவரும் உணர்வுகளையே குறிக்கிறது. சுவை சார்ந்த நான்கு இயல்புகளாவன நாக்கு கண்டறியும் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, உவர்ப்பு, புரதச் சுவையான umami. மாறாக, "நறுமணம்" என்பது சுவை, மணம், ஊற்றுணர்வு ஆகிய மூன்றன் ஒருங்கிணைந்த கலவையைக் குறிக்கிறது. சுவைப் புலன் புறணி இரண்டு முதன்மைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன; அவையாவன, முன்மடலில் உள்ள செவுள் மூடியும் இன்சுலார் மடலில் உள்ள முன் இன்சுலாவும் ஆகும். இதேபோல, மோப்பப் புலன் புறணிக்கும், சுவைப் புலன் தடவழியானது புறநிலை, மைய இயங்கமைப்பு வழியாக செயல்படுகிறது. நாக்கிலும் மெல்லண்ணத்திலும் குரல்வளையிலும்உணவுக்குழலிலும் அமைந்த புறநிலைச் சுவைப் புலன் ஏற்பிகள், பெற்ற குறிகைகளை முதன்மைப் புலன் உணர்வு நரம்பு வேரிழைகளுக்குக் கடத்துகிறது; இங்கு இந்தக் குறிகை முகுளத்தில் உள்ள தனித்த வழித்தடக் கருவுக்கோ அல்லது அதன் சுவைப் புலன் கருவுக்கோ நீட்டுவிக்கிறது. பின்னர், இந்தக் குறிகை தாலமசு எனும் கருவுக்குக் கட்த்தப்படுகிறது. அது மீண்டும் இந்தக் குறிகையைப் புதுப்புறணியின் பல பகுதிகளுக்கும் சுவைப் புலன் புறணிக்கும் கடத்துகிறது. சுவையின் நரம்புவழிக் கையாளுகை நிகழ்வை, நாக்கில் இருந்துவரும் உடலப் புலன் தகவல் அதாவது, வாய் உணர்வு அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றுகிறது. நறுமணம், மாறாக, நறுஞ்சுவையாக உருவாக சுவையால் மட்டும் முடிவதில்லை. இத்தகவல் உயர்புறணிப் பகுதிகளான இன்சுலா, விழியக முன்புறணி ஆகியவற்றால் கையாளப்பட்ட பிறகே நறுஞ்சுவையாகிறது. மாந்த புலன் உணர்வுத் தொகுதியில் கீழ்வரும் உட் தொகுதிகள் அமைந்துள்ளன: பார்வைக் குறைபாடு பார்வைக் குறைபாடு "(Visual impairment)" என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் . மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள். பெரும்பாலும் 20/40 அல்லது 20/60 அளவை விட மோசமான சிறந்த திருத்தப்பட்ட பார்வைத் திறன் கொண்ட கண்களின் நிலையை பார்வைக் குறைபாடு நிலையென வரையறுக்கப்படுகிறது . முழுமையாகப் பார்க்கும் திறனை இழந்த அல்லது கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழக்க இருக்கின்ற பார்வை இழப்பு நிலையை குருட்டுத்தன்மை என அழைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டுதல், படித்தல், நடத்தல், சமூகத்துடன் ஊடாடுதல் முதலான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பார்வையற்றோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த பார்வைக்குறைபாடு உடற்கூற்றியல் மற்றும் நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஒளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும். பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் "சட்டக் குருட்டுத்தன்மைக்கான" விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார். பொருள்களிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படாமல் தோன்றும் திருத்தப்படாத ஒளிச்சிதறல் பிழைகளால் உலகளவில் 43% பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. கண்புரை நோயால் 33% பார்வை இழப்பும், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் 2% பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.. பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன. 80% பார்வை குறைபாடு நோய்கள் முறையான சிகிச்சையால் தடுக்கக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. 2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர் வயது: பார்வைக் குறைபாடு வயதுக் குழுக்களுக்கிடையில் சமமற்ற முறையில் பரவியிருக்கிறது. குருடாக இருக்கும் அனைத்து மக்களிலும் 82 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்கள் உலகின் மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர். மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு: பார்வைக் குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வடிவங்களில் வரலாம். அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் பல்வேறு அளவுகளில் மாறுபடலாம். ஒரு மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பார்வைத் திறன் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. 20/40 என்ற நல்ல பார்வைத்திறன் கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் சிரமப்படலாம். 20/200 என்ற மோசமான பார்வைத்திறன் அளவு கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஒரு கண்ணின் பார்வை இழப்பு என்பது காட்சி அமைப்பின் 25% குறைபாடு என்றும் அந்த நபருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த குறைபாடு 24% என்றும் அமெரிக்க மருத்துவ கழகம் மதிப்பிட்டுள்ளது. இரு கண்களிலும் ஏற்படும் பார்வை இழப்பு மொத்தமாக காட்சி அமைப்பின் 100% பார்வை குறைபாடு என்றும் அந்நபரின் ஒட்டுமொத்த குறைபாடு 85% என்றும் இக்கழகம் கூறுகிறது. . இத்தகைய பார்வை இழப்பு நிலைக்கு வரும் சிலர் மாற்று வழிமுறைகள் ஏதும் தேடாமல் தங்களிடம் கணிசமான மீதமுள்ள பார்வையைப் பயன்படுத்தி தினசரி செயல்பாடுகளில் ஈடுபடலாம். கண் மருத்துவரை அணுகி பார்வைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஒளியியல் கருவிகள், மின்னணு கருவிகள் மூலம் ஒளியை சரியான முறையில் விழித்திரையில் குவித்து கண்மருத்துவர் பார்வைக் குறையை சரிசெய்ய உதவுவார். தொழில்நுட்ப உதவிகள் பெறுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட தனிநபர்களால் நடத்தப்படும் பயிற்சிகளில் பார்வை இழப்புக்கு உள்ளானவர்கள் சேர்ந்து பயிற்சிபெற்று பயனடையலாம். பார்வை புனர்வாழ்வளிப்பு நிபுணர்கள் சில நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர், இவர்களால் மீதமுள்ள பார்வை அதிகரிப்பதற்கும், தன்னந்தனியாக தினசரி செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருளீட்டவும், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும் அறிவுரை வழங்க முடியும்.