அரசியல் ஊழல் அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது. எல்லா வகையான அரசாங்கங்களும் அரசியல் ஊழல்களால் பாதிக்கப்படக் கூடியவையே. கையூட்டு, கப்பம், நிதி கையாடல், மோசடி போன்ற பல செயல்பாடுகள் அரசியல் ஊழல்களில் அடங்கும். போதைப்பொருள் கடத்தல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கல், பணக் கடத்தல் போன்றவற்றுக்கு ஊழல் துணை புரிந்தாலும், இது ஒழுங்கமைந்த குற்றச்செயல்களுடன் மட்டும் தொடர்பு உடையது அல்ல. பல நாடுகளில் இது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்கும் அளவுக்குப் பொதுவாக உள்ளது. சட்டத்துக்குப் புறம்பான ஊழல் என்பதன் சரியான பொருள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும், சில அரசியலுக்கு நிதியளிக்கும் செயல்பாடுகளை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வேறு சில நாடுகள் இவற்றை சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதுகின்றன. சில நாடுகளின் அலுவலர்களுக்கு மிக விரிவான அல்லது சரியான முறையில் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் உள்ளன. இச் சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு அமைந்தவை, சட்டத்துக்குப் புறம்பானவை என்பவற்றை வேறுபடுத்தி அறிதல் கடினமானது. உலகம் முழுவதிலும் இடம்பெறும் கையூட்டு அல்லது இலஞ்சம் வாங்கல், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை மிகவும் வறுமை நாடுகளில் வாழும் அடிமட்ட பில்லியன் மக்களையே கூடுதலாகப் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது. ரைன் கூட்டமைப்பு ரைன் கூட்டமைப்பு ("The Confederation of the Rhine") 1806 முதல் 1813 வரை நடைமுறையில் இருந்தது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரான்சிஸ் மற்றும் ரஷ்யா]]வின் முதலாம் அலெக்சாண்டர் ஆகியோரைத் தோற்கடித்த பின்னர் நெப்போலியனால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் ஜெர்மனியின் 16 மாநிலங்கள் ஒன்றிணைந்தன. ஜூலை 12 1806, தற்போதைய ஜெர்மனியின் 16 மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி தமக்கிடையே ரைன் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நெப்போலியன் பொனபார்ட் இவ்வமைப்பின் காப்பாளனாக இருந்தான். நெப்போலியன் விடுத்த காலக்கெடுவை அடுத்து ஆகஸ்ட் 6 இல் புனித ரோமப் பேரரசு கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 23 ஜெர்மனிய மாநிலங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இரண்டாம் பிரான்சிசின் "ஹாப்ஸ்பூர்க்" வம்சம் மீதமுள்ள பகுதிகளான ஆஸ்திரியாவை ஆண்டனர். ஆஸ்திரியா, புரூசியா, கொல்ஸ்டெயின் (டென்மார்க்), பொமெரானியா (சுவீடன்) ஆகியன இக்கூட்டமைப்பில் இருந்து விலகி இருந்தன. ரஷ்யா மீதான படையெடுப்பில் நெப்போலியன் தோற்றதை அடுத்து 1813 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. குசேலன் (திரைப்படம்) குசேலன், ஆகஸ்ட் 1, 2008 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்். ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேல் முதலியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் பி. வாசு இயக்கினார். இத்திரைப்படம், மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கத பறயும் போல் படத்தின் மீளுருவாக்கமாகும். மலையாளத்தில் மம்முட்டி நடித்த வேடத்தில் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் 60 நிமிடங்கள் திரையில் தோன்றுகிறார் சிறப்புத் தோற்றங்கள் முடி திருத்தும் ஏழைத் தொழிலாளிக்கும் ("பசுபதி") முன்னணி திரைப்பட நடிகருக்கும் இடையேயான சிறுவயது நட்பு குறித்து இத்திரைப்படம் அமைந்துள்ளது. மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்துகிறார் பசுபதி. அவரது மனைவி மீனா மற்றும் 3 குழந்தைகளுடன் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார் நடிகர் அசோக்குமார் ("'ரஜினிகாந்த்"). சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க ஊரே திரளுகிறது. அசோக்குமாரின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள் என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர் ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம் வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஏ. ஜெ. டி. ஜான்சிங் முனைவர் ஏ. ஜெ. டி. ஜான்சிங் ("A.J.T. John Singh") இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் இந்திய வனவிலங்கு வாரியத்தின் முன்னாள் தலைவருமாவார். 2004 ஆம் ஆண்டுக்கான கார்ல் சீர்ஸ் வனவிலங்கு பாதுகாப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது. வர்க்க படிநிலை அடுக்கமைவு பொருளாதாரம் வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தும், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும் சமய சமூக அந்தஸ்தைப் பொறுத்தும் தனி நபரையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையில் இருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். இப்படிப் பிரிக்கப்ப்படும் பொழுது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது வர்க்கம் எனப்படும். வர்க்கப் பிரிவினையின் ஒட்டுமொத்த கட்டமைப்பை வர்க்க படிநிலை அடுக்கமைவு குறிக்கின்றது. "முதன்மைக் கட்டுரை: சமூக அசைவியக்கம்" தனி நபரோ, குடும்பமோ, சமூக் குழுக்களோ, நாடுகளோ தமது வர்க்க நிலையில் இருந்து மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ அசைவது தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாடே. இளமையில் அடித்தட்ட வர்க்கத்தில் உள்ள ஒருவர் நல்ல கல்வி வேலை வாய்ப்புக்கள் பெற்று உயர் வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே. அதே போல், போர் அரசியல் சூழ்நிலைகளால் சீரளிந்து உயர் வர்க்கத்தில் இருந்த ஒரு நாடு சிதைந்து அடித்தட்ட வர்க்கத்துக்கு வருவது சாத்தியமே. புண்ணாக்கு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் மீதம் உள்ள சக்கைப் பொருளே புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு தேங்காயிலிருந்து செய்யப்படும் ஓர் உணவுப் பொருளாகும். பொதுவாக இது மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. சில உணவகங்களில் தேங்காய்க்கு பதிலாக தேங்காய் புண்ணாக்கை பயன்படுத்தி தேங்காய் சட்டினியும் செய்கிறார்கள். நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துத் தாவரங்களிலிருந்து எண்ணெய் எடுத்தபின் நமக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கிறது. எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் எடுப்பார்கள். அப்போது அதில் மிஞ்சியிருக்கும் பொருளே எள் புண்ணாக்கு ஆகும். பொதுவாக புண்ணாக்கு மாட்டுத்தீவனமாக உபயோகப் படுத்தப்படுகிறது. பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும். சமத்துவம் சமத்துவம் என்ற சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள் தரும் ஒரு பொதுச் சொல். அடிப்படையில் சமத்துவம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது உறுப்பினர்களுக்கு இடையே சில குறிப்பிட்ட வழிகளில் காணப்படும் ஒத்த நிலையைக் குறிக்கின்றது. சமத்துவம் எந்த கருத்துச் சூழலில் வழங்குகிறது என்பதைப் பொறுத்து பின்வருமாறு வகைப்படுத்தலாம். சிலேசிய மொழி சிலேசிய மொழி (Silesian: "ślůnsko godka", "ślůnski", sometimes also "pů našymu") போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000 மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது. சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர். சிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. பகுவல் பகுவல் (ஆங்கிலம்:Fractal) எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம் ஆகும். பகுவல்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றைத் பிரித்துப் பார்த்தாலோ பெரிதாக்கிப் பார்த்தாலோ சிறிதாக்கிப் பார்த்தாலோ அவற்றின் கணிதப் பண்புகளும் தோற்றமும் ஒன்றுபோலவே அமையும். அதாவது அவை தன் ஒப்புமை பண்பு கொண்டவை. கையூட்டு கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது. கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள் கனடாவில் இயங்கும் தமிழ் தொலைக்காட்சிச் சேவைகள்: கனேடியத் தமிழ் ஒலிபரப்புத்துறையுடன் ஒப்புடுகையில் தமிழக தாக்கம் தொலைக்காட்சிச் சேவைகளில் அதிகம். ஆகையால் தமிழம் போன்றே அறிவுப்பாளர்கள் தமிழில் உரையாடுவதில் உச்சரிப்பதில் போதிய கவனம் தருதில்லை என்ற ஒரு குறை உண்டு (ஆதாரம் தேவை). என் கண் முன்னாலே என் கண் முன்னாலே கனடாவில் தயாராகி ஒக்டோபர் 10, 2009 வெளியான தமிழ்த்திரைப்படம். மதி திரைப்படத்தை இயக்கிய எம். ஸ்ரீரங்கன் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுள்ளார். ஏ 3எஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக இந்தத் திரைப்படத்தை தயாரிப்பவர் ஈ. ரேணுகா. கே.எஸ்.பாலச்சந்திரன், சத்தியா, ரமணன், நிதா, சித்திரா பீலிக்ஸ், சுதன், கார்த்திகா, போல், குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் இசையை எம்.வாகீசனும், படத்தொகுப்பை எம்.பிரசன்னாவும் ஏற்றுள்ளார்கள். 1789 1789 (MDCCLXXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். [[பகுப்பு:1789]] பிரெஞ்சுப் புரட்சி பிரெஞ்சுப் புரட்சி ("French Revolution", பிரெஞ்சு: "Révolution française"; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் ("inalienable rights") போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர். 1789 இல் ஸ்டேட் ஜெனரல் (பிரெஞ்சு பாராளுமன்றம்) கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்களெனப் பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம்மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றிச் சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். நவீன வரலாற்று யுகத்தின் வளர்ச்சியில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு பெரியது. குடியரசு ஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள், தாராண்மிய மக்களாட்சி முறை, மதச்சார்பின்மை, ஒட்டுமொத்தப் போர்முறை ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விசயங்களுள் அடங்கும். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்கள் காணக் கிடைக்கின்றன. புரட்சிக்கு முந்தைய பிரான்சின் “பழைய ஆட்சி”யின் ("Ancien Régime") கூறுகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த பிரிவுகள் பசி, ஊட்டச்சத்துகுறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் அறுவடை தொய்வடைந்திருந்ததால் ரொட்டியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. அறுவடைகளில் தொய்வு, உணவுப் பொருள் விலையேற்றம், ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லப் போதிய போக்குவரத்து கட்டமைப்பின்மை போன்ற பொருளாதார காரணிகள் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் பிரெஞ்சு குடிமைச் சமூகத்தை நிலை குலையச் செய்திருந்தன. முந்தைய ஆண்டுகளில் பிரான்சு ஈடுபட்டிருந்த போர்களின் விளைவாக அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் ஈடுபாட்டால் பெரும் பொருள் செலவாகியிருந்தது. வட அமெரிக்காவிலிருந்த தனது காலனிகளின் கட்டுப்பாட்டைப் பிரான்சு இழந்ததும், பெருகி வந்த பிரித்தானிய வர்த்தக ஆதிக்கமும் போர்களினால் விளைந்த சமூகத் தாக்கத்தை அதிகமாக்கின. பிரான்சின் திறனற்ற பொருளாதார முறைமை அரசின் கடன்சுமையை சமாளிக்க இயலாமல் திணறியது. நாட்டின் வரிவசூல் முறையின் போதாமையால் இக்கடன்சுமை கூடிக் கொண்டே சென்றது. அரசு கடன்சுமையால் திவாலாவதைத் தவிர்க்க அரசர் புதிய நிதி திரட்ட முனைந்தார். இதற்கு ஒப்புதல் பெற 1787 இல் குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தைக் ("Assembly of Notables") கூட்டினார். வெர்சாயில் அமைந்திருந்த அரசவை கீழ்தட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாது ஒதுங்கியிருக்கிறதென்ற பிம்பம் உருவாகி வலுப்பட்டது. மன்னர் பதினாறாம் லூயி சர்வாதிகாரம் பெற்றவராயினும் மன உறுதியற்றவராக இருந்தார். கடுமையான எதிர்ப்பு எழுந்தால் தனது முடிவுகளை மாற்றிக் கொள்பவராக இருந்தார். லூயி அரசின் செலவுகளைக் குறைத்தாலும், நாடாளுமன்றத்தில் அவரது எதிரிகள் அவரது சீர்திருத்த முயற்சிகளைத் தோற்கடித்து விட்டனர். லூயியின் கொள்கைகளை எதிர்த்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளைத் தாக்கித் துண்டறிக்கைகளை அச்சடித்து விநியோகம் செய்தனர். இச்செயல்கள் அரசின் அதிகார மையத்தை உலுக்கியதுடன், அதற்கு எதிராக மக்களைத் தூண்டின. அறிவொளிக்காலக் கொள்கைகள் பிரெஞ்சு சமூகத்தில் பரவியதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மன்னராட்சியின் முழுச்சர்வாதிகாரம், பிரபுக்கள் அனுபவித்து வந்த உரிமைகள், நாட்டின் நிருவாகத்தில் திருச்சபையின் தலையீடு போன்றவற்றுக்கு எதிராக உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக உணர்வு எழுந்தது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சமதர்மத்தை அவர்கள் விரும்பலாயினர். அரசி மரீ அன்டோனைட்டுக்கு எதிராக மக்களின் உணர்வு திரும்பியது. அவரை ஆஸ்திரியப் பேரரசின் கையாளாகவும் உளவாளியாகவும் மக்கள் கருதினர். மக்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட நிதி அமைச்சர் ஜாக் நெக்கரை லூயி பதவியிறக்கியது மக்களின் கோபத்தை அதிகமாக்கியது. புரட்சி வெடிக்க இவை கூடுதல் காரணங்களாக அமைந்தன. பதினாறாம் லூயி அரசணை ஏறியபோது பிரான்சில் நிதி நெருக்கடி நிலவியது. அரசின் செலவுகள் அதன் வருமானத்தைவிட மிக அதிகமாக இருந்ததால், அரசு திவாலாகும் நிலையில் இருந்தது. ஏழாண்டுப் போர், அமெரிக்க விடுதலைப் போர் போன்றவற்றில் பிரான்சு பங்கேற்றமையே இந்நிலைக்கு காரணமாக இருந்தது. மே 1776 இல் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தவறிய நிதி அமைச்சர் டர்கோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வெளிநாட்டவரான ஜாக் நெக்கர் நிதிக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். அவர் புரோட்டஸ்தாந்த திருச்சபையைச் சேர்ந்தர்வராதலால் அவருக்கு அதிகாரப்பூர்வமாக அமைச்சர் பதவி தரப்படவில்லை. பிரான்சின் கடுமையான பிற்போக்கு வரி முறைகீழ் தட்டு மக்களுக்குப் பெரும் பாரமாக இருப்பதை நெக்கர் உணர்ந்தார். அதே சமயம் பிரபுக்களுக்கும் திருச்சபை பாதிரியார்களுக்கும் பல்வேறு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதற்கு மேலும் மக்களின் வரிச்சுமையைக் கூட்ட முடியாதென வாதிட்ட நெக்கர், பிரபுக்களுக்கும் பாதிரியார்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்குகளை குறைத்து, மேலும் வெளிநாடுகளில் கடன் வாங்கி நாட்டின் நிதிப் பற்றாகுறையைச் சமாளிக்கலாமெனப் பரிந்துரைத்தார். இதனை அரசரின் அமைச்சர்கள் விரும்பவில்லை. தனது நிலையைப் பலப்படுத்தத் தன்னை அதிகாரப்பூர்வமாக அமைச்சராக்கும் படி நெக்கர் வேண்டினார். ஆனால் அவ்வாறு செய்ய மறுத்த லூயி, நெக்கரைப் பதவிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாகச் சார்லஸ் தே கலோன் நிதிக் கட்டுப்பாட்டாளரானார். ஆரம்பத்தில் தாராளமாகச் செலவு செய்த கலோன், விரைவில் நிதி நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்தார். அதைச் சமாளிக்க ஒரு புதிய வரி முறையைப் பரிந்துரைத்தார். அப்பரிந்துரையில் பிரபுக்களையும் பாதிரியார்களையும் பாதிக்கும் நில வரி ஒன்றும் அடங்கியிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் குறிப்பிடத்தக்கவர்களின் அவையைக் கூட்டி ஆதரவு தேடினார் கலோன். ஆனால் அந்த அவையில் அவருக்கு ஆதரவு கிட்டாமல் அவரது நிலை பலவீனமானது. இதனைச் சமாளிக்க மன்னர் லூயி 1789 இல் எஸ்டேட்ஸ் ஜெனரல் எனப்படும் பொது மன்றத்தைக் கூட்டினார். 1614 க்குப்பின்னர் பொது மன்றம் கூட்டப்படுவது அதுவே முதல் முறை. இச்செயல் போர்பன் வம்ச முடியாட்சியின் பலவீனத்தைப் பறைசாற்றியது. பிரான்சின் பொதுமன்றம் பாதிரியார்கள், பிரபுக்கள் மற்றும் ஏனைய மக்கள் என்ற மூன்று பெரும் பிரிவுகள் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் 1614 இல் இறுதியாகக் கூடிய பொதுமன்றத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வாக்கு தரப்பட்டிருந்தது. ஏதேனும் இரு பிரிவுகள் கூட்டணி சேர்ந்தால் மூன்றாவது பிரிவினைத் தோற்கடித்து விடலாம். ஆனால் 1789 இல் அவ்வாறு இருக்கக் கூடாதெனக் குரல்கள் எழுந்தன. "முப்பது பேர் குழு" என்ற பாரிசிய தாராண்மிய அமைப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு தர வேண்டுமெனப் போராடத் தொடங்கியது. ஆனால் இக்கோரிக்கை குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தால் ஏற்கப்படவில்லை. ஆனால் மன்னர் லூயி அதனை ஏற்றார். அதே வேளை ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமென்பதை பொதுமன்றமே தீர்மானிக்கலாம் என்று விட்டுவிட்டார். 1789 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பொதுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் மூன்றாம் பிரிவுக்கு வாக்களிக்க ஒருவர் பிரான்சில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டியிருந்தது. மேலும் குறைந்த பட்சம் 25 வயது நிரம்பியுள்ளவராகவும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் வசிக்கும் வரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டியிருந்தது. மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்தத் தேர்தலில் பங்கேற்றனர். மொத்தம் 1201 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 201 பேர் பிரபுக்கள், 300 பேர் பாதிரியார்கள், எஞ்சிய 610 பேர் மூன்றாம் பிரிவினராகிய பொதுமக்கள். உறுப்பினர்களுக்குத் துணைபுரிவதற்காகப் பொதுமக்களின் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு "முறையீட்டு நூல்கள்" உருவாக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் மிகவும் புரட்சிகரமானவையெனக் கருதப்பட்ட கருத்துகளை இந்நூல்கள் சாதாரணமாக முன்வைத்தன. எனினும் அவை முடியாட்சி முறைக்கே ஆதரவு தெரிவித்தன. ஊடகத் தணிக்கை நீக்கப்பட்ட பின்னர் தாராண்மியக் கருத்துடைய பிரபுக்களும், பாதிரியார்களும் எழுதி வெளியிட்ட துண்டறிக்கைகள் பரவலாகப் படிக்கப்பட்டன. ஜனவரி 1789 இல் கத்தோலிக்கப் பாதிரியாரும், கோட்பாட்டாளருமான ஆபி சியேஸ், மூன்றாவது பிரிவின் முக்கியத்துவத்தைப் பற்றி "மூன்றாவது பிரிவு என்பது யாது?" என்ற தலைப்பில் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "மூன்றாவது பிரிவு என்பது அனைத்துமாகும். இதுவரை அரசியல் அடுக்கமைப்பில் அதற்கு இடமில்லை. இனிமேல் தனக்கென ஒரு இடத்தை வேண்டுகிறது." என்று வாதிட்டார். மே 5, 1789 இல் வெர்சாயில் நெக்கர் ஆற்றிய மூன்று மணி நேர உரையுடன் பொதுமன்றக் கூட்டம் தொடங்கியது. பொதுமன்ற உறுப்பினர்களின் தகுதிகளைச் சரிபார்ப்பதில் மூன்றாவது பிரிவுக்கும் ஏனைய இரு பிரிவினருக்குமிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஜூன் 12, 1789 அன்று அபீ சியேசின் தூண்டுதலின் பெயரில் மூன்றாவது பிரிவினர் தங்கள் உறுப்பினர்களின் தகுதிகளைத் தாங்களே சரி பார்க்கத் தொடங்கினர். தங்களைத் தாமே பிரான்சின் "தேசிய மன்றம்" ("National Assembly") என்று அறிவித்துக் கொண்டனர். இப்புது மன்றம் "பிரிவுகளின் மன்ற"மாக இல்லாது "மக்களின் மன்ற"மாக அமையும் என்று அறிவித்தனர். பிற பிரிவுகள் இதில் இணைந்து கொள்ளலாம் ஆனால் அவர்கள் இணைந்தாலும் இணையாவிட்டாலும் நாட்டின் நிருவாகம் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டனர். இந்தப் புதிய மன்றம் கூடுவதைத் தடுக்க நினைத்த லூயி, மன்றம் கூடவிருந்த சாலே தே எடாட்ஸ் அரங்கை மரத்தச்சு வேலை நடக்கவுள்ளதென்று கூறி மூடிவிட்டார். வெளியே மன்றம் கூடத் தட்பவெட்பநிலை இடம் தரவில்லை. எனவே தேசிய மன்றம் அருகிலிருந்த ஒரு உட்புற டென்னிஸ் அரங்கில் கூடியது. அங்கு மன்ற உறுப்பினர்கள் ஜூன் 20, 1789 இல் புகழ்பெற்ற "டென்னில் அரங்கு சூளுரை" யினை ஏற்றனர். அதில பிரான்சுக்கென ஒரு தனி அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் வரை மன்றம் கூடுமென்று உறுதி பூண்டனர். பாதிரியார் உறுப்பினர்களில் பெரும்பாலானோரும் 47 பிரபு உறுப்பினர்களும் விரைவில் அவர்களுடன் இணைந்து கொண்டனர். ஜூன் 27ம் தேதி மன்னரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக இப்புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதே வேளை பாரிசு மற்றும் வெர்சாயைச் சுற்றி பிரான்சின் இராணுவம் குவியத் தொடங்கியது. இப்புதிய மன்றத்துக்குப் பிரான்சின் நகரங்களிலிருந்து ஆதரவு செய்திகள் வந்து குவிந்தன. நெக்கர் வெளிப்படையாக மக்களைத் தூண்டி விட்டது, பிரெஞ்சு அரசவையில் அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கியிருந்தது. அரசி மரீ அன்டோய்னெட், அரசரின் தம்பி காம்டி தே ஆர்டாய்ஸ் மற்றும் பிற பழமைவாதிகள் நெக்கரை பதவி நீக்கம் செய்யும்படி அரசரை வலியுறுத்தினர். நெக்கர், அரசின் கடன்சுமை பற்றிப் பிழையான ஒரு அறிக்கையை உருவாக்கிப் பொது மக்கள் பார்வைக்கு அளித்தார். இதன் பின்னர் ஜூலை 11, 1789 அன்று அரசர் லூயி அவரைப் பதவி நீக்கம் செய்து நிதி அமைச்சகத்தை முழுமையாகப் புனரமைத்தார். லூயியின் முடிவுகள் தேசிய மன்றத்தைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன எனப் பல பாரிசுக்காரர்கள் கருதினர். நெக்கரின் பதவி நீக்கம் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்ட முதல் நாளே வெளிப்படையாக அரசருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். தேசிய மன்றத்தை மூட வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்படலாமென்றும் அவர்கள் அஞ்சினர். வெர்சாயில் கூடிய தேசிய மன்றம், அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க இடைவிடாத கூட்டமொன்றைத் தொடங்கியது. பாரிஸ் முழுவதும் கலவரமும் வன்முறையும் பரவின. கலவரக்காரர்கள் விரைவில் நகரக் காவல்படையினர் சிலரது ஆதரவையும் பெற்றனர். ஜூலை 14ம் நாள் கலவரக்காரர்களின் கவனம் பாஸ்டில் கோட்டைச் சிறையின் உள்ளே அமைந்திருந்த பெரும் ஆயுதக் கிடங்கு பக்கம் திரும்பியது. பாஸ்டில் முடியாட்சியின் அதிகாரச் சின்னமாகக் கருதப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் கலகக்காரர்கள் பாஸ்டிலைக் கைப்பறினர். பாஸ்டிலின் ஆளுனர் பெர்னார்ட் தே லானே கொல்லப்பட்டார். பின் அங்கிருந்து நகர மன்றத்துக்குச் சென்ற கலவரக்காரர்கள் நகரத் தந்தை ஜாக் தே ஃபிளசெல்சை மக்கள் துரோகியெனக் குற்றம் சாட்டி கொலை செய்தனர். வன்முறையைக் கண்டு அஞ்சிய அரசர் தனது இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தினார். மார்க்கி தே லா ஃபயாட் பாரிசு நகரக் காவல்படையின் தளபதியாகவும், தேசிய மன்றத் தலைவர் பெய்லி நகரத் தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். ஜூலை 17ம் தேதி பாரிசுக்குச் சென்ற லூயிக்கு அங்கு பிரெஞ்சு மூவர்ணக் கொடி நிறம் கொண்ட சின்னம் (cockade) அளிக்கப்பட்டது (சிவப்பு-வெள்ளை-நீலம் மூவர்ணக் கொடி பிரெஞ்சு புரட்சிக்காரர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது). நெக்கர் மீண்டும் நிதி ஆலோசகர் ஆக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரியது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது. நகரங்களில் அதிகாரிகளின் கட்டுப்பாடு வேகமாகச் சீர்குலைந்து வன்முறையும் திருட்டும் அதிகரித்தன. இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்தென அஞ்சிய பிரபுக்கள் பலர் தங்கள் குடும்பங்களோடு அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அங்கிருந்தபடி எதிர் புரட்சியாளர்களுக்கு நிதியுதவி செய்து வந்தனர். மேலும் அண்டை நாட்டு மன்னர்களைப் பிரெஞ்சு நிலவரத்தில் தலையிட்டு எதிர் புரட்சிக்குப் படையுதவி செய்யும்படி கோரினர். ஜூலை இறுதி கட்டத்தில் "மக்களின் இறையாண்மை" என்ற கருத்து பிரான்சு முழுவதும் பரவி விட்டது. அயல்நாட்டு படையெடுப்புகளை எதிர்கொள்ள ஊர்ப்புறங்களில் பொதுமக்கள் ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்கினர். அவர்களில் சிலர் பிரபுக்களின் மாளிகைகளையும் தாக்கினர். வேகமாகப் பரவிய வதந்திகளும் பொதுமக்களின் அச்சமும் மேலும் மேலும் கலவரங்களுக்கு வித்திட்டன. சட்டஒழுங்கின் சீர்குலைவு தொடர்ந்தது. ஆகஸ்ட் 4, 1789 அன்று தேசிய அரசியல் நிர்ணய மன்றம் நிலமானிய முறைமையை ஒழித்தது. பிரபுக்களின் வரிவசூலிக்கும் உரிமையையும், பாதிரியார்களின் நில உரிமைகளையும் ரத்து செய்தது. பிரபுக்கள், பாதிரியார்கள், நகரங்கள், மாகாணங்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. இத்தீர்மானங்கள் "ஆகஸ்ட் தீர்மானங்கள்" என்றழைக்கப்பட்டன. ஆகஸ்ட் 26, 1789 இல் தேசிய மன்றம் "மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகளின் சாற்றல்" ("Declaration of the Rights of Man and of the Citizen") அறிக்கையை வெளியிட்டது. தேசிய அரசியல் மன்றம், அரசியல் சட்டமியற்றும் மன்றமாக மட்டுமல்லாது, நாடாளுமன்றமாகவும் செயல்பட்டது. புதிய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக இருக்க வேண்டுமென்ற ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. பிரான்சின் புதிய நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு அவை மட்டும் இருந்தது. அரசருக்கு "தாமதப்படுத்தும் தடையுரிமை" ("suspensive veto") மட்டும் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் முடிவுகளை அரசரால் தாமதப்படுத்தப்படுத்த மட்டுமே இயலும். அதனை ரத்துச் செய்ய இயலாது. அடுத்து தேசியமன்றம், அதுவரை அமலில் இருந்த மாகாண முறையை ஒழித்து அதற்குப் பதிலாக ஒரே சீரான பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்ட 83 டிபார்ட்மென்டுகளாக நாட்டைப் பிரித்தது. மன்றத்தின் கவனம் பெரும்பாலும் அரசியல் விசயங்களில் இருந்ததால், நாட்டின் கடன் சுமை மேலும் கூடி, நிதி நெருக்கடி தீவிரமானது. ஹானோர் மிரபியூவின் முயற்சியால் மன்றத்தின் கவனம் இச்சிக்கலின் பக்கம் திரும்பியது. நிலைமையைச் சீர் செய்ய நெக்கருக்கு முழு நிதிச் சர்வாதிகார உரிமைகள் அளிக்கப்பட்டன. அக்டோபர் 1, 1789 அன்று அரசரின் மெய்க்காப்பாளர்களுக்கு நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் தேசிய மூவர்ணச் சின்னம் மிதிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதென ஒரு வதந்தி பரவியது. இதனால் கோபம் கொண்ட பாரிஸ் நகரப் பெண்கள் அக்டோபர் 5ம் நாள் பாரிசின் சந்தைகளில் கூடத் தொடங்கினர். நகர மன்றத்துக்கு அணிவகுத்துச் சென்று தங்களது பிரச்சனைகளை முறையிட்டனர். ரொட்டி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை நகர அதிகாரிகள் தீர்க்க வேண்டுமென்று கோரினர். தேசிய மன்றத்தை முடக்க அரசவை மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்திக் கொண்டு, அரசரும் அரசவையும் பாரிசு நகருக்கு இடம் பெயர வேண்டுமென்று வேண்டினர். நகர அதிகாரிகளின் பதில்களால் திருப்தி அடையாத 7000 பெண்கள் வெர்சாய் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். தங்களுடன் பீரங்கிகளையும் மற்ற பல சிறிய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றனர். நிலைமையைச் சமாளிக்க லஃபயாட் தலைமையில் 20,000 நகரக் காவல் படையினர் அனுப்பப்பட்டனர். எனினும் அணிவகுப்பு கட்டுக்கடங்காமல் போனது. வெர்சாய் அரண்மனையுள் புகுந்த கும்பல் அங்கு பல காவலாளிகளைக் கொன்றது. மன்னர் லூயியிடம் பேசிய லஃபயாட், மன்னரின் ஆட்சிப்பீடம் பாரிசுக்கு இடம்பெயர வேண்டுமென்ற கலவரக்காரர்களின் கோரிக்கையை எடுத்துக்கூறி அதற்கு லூயியை ஒப்புக்கொள்ளச் செய்தார். அக்டோபர் 6, 1789 அன்று அரசரும் அரச குடும்பத்தினரும் வெர்சாயிலிருந்து பாரிசுக்கு இடம் பெயர்ந்தனர். இச்செயல் மூலம் தேசிய மன்றத்தை அரசவை முழுமையாக ஏற்றுக் கொண்டது. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பெருமளவு குறைந்து அரசின் நிலை பலப்பட்டது. பழைய ஆட்சியில் திருச்சபையே நாட்டின் மிகப்பெரும் நில உரிமையாளராக இருந்தது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% திருச்சபைக்கே சொந்தமாக இருந்தது. திருசபைக்கு அரசின் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த அதேவேளை, அதற்கு மக்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை வரியாகப் பெறும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. திருச்சபையின் செல்வமும் அதிகாரமும் பல குழுக்களைக் பெருங்கோபம் கொள்ளச் செய்தன. பிரான்சில் சிறுபான்மையினராக இருந்த புரோட்டஸ்தாந்தர்கள் பலர் கத்தோலிக்கத்தை எதிர்க்கும் ஒரு அரசை விரும்பினர். வோல்ட்டயர் போன்ற அறிவொளி இயக்கச் சிந்தனையாளர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினர். 18ம் நூற்றாண்டு பிரான்சில் அரசவையும் திருச்சபையும் மிக நெருக்கமான கூட்டணி கொண்டிருந்தன. மே 1789 இல் பெரும் மன்றம் கூடிய போது திருச்சபைமீது பொதுமக்கள் கொண்டிருந்த கோபம் அதன் செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது. பெரும் மன்றம் ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாகத் தேசிய மன்றம் கூடத் தொடங்கியது திருச்சபையின் அதிகாரத்தை மேலும் குறைத்தது. ஆகஸ்ட் 4, 1789 இல் தேசிய மன்றம் திருச்சபையின் பத்தில்-ஒரு-பங்கு வரி விதிக்கும் அதிகாரத்தை ரத்து செய்தது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க திருச்சபைச் சொத்துக்களை நவம்பர் 2 அன்று நாட்டுடைமையாக்கியது. இந்தச் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு அசைக்னாட்ஸ் ("assignats") என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியது. திருச்சபையின் அதிகாரங்களும் பொறுப்புகளும் முழுமையாக அரசில் கையில் வந்தன. தேசிய மன்றம் டிசம்பர் மாதம் முதல் திருச்சபையின் சொத்துகளை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியது. அடுத்த சில மாதங்களில் துறவற மற்றும் சமய அமைப்புகள் அனைத்தும் புதிய சட்டங்கள்மூலம் ஒழிக்கப்பட்டன. துறவிகள் மீண்டும் இல்வாழ்க்கைக்குத் திரும்ப ஊக்குவிக்கப்பட்டனர். அவர்களில் சில விழுக்காட்டினர் அவ்வாறே செய்தனர். ஜூலை 12, 1790 அன்று இயற்றப்பட்ட பாதிரியார்களுக்கான குடிமைச் சட்ட அமைப்பு, எஞ்சியிருந்த பாதிரியார்களை அரசு ஊழியர்களாக மாற்றியது. ஆயர்களுக்கும், பங்குத் தந்தையர்களுக்கும் தேர்தல் முறையை அறிமுகம் செய்ததோடு அவர்களது ஊதியத்தையும் நிர்ணயம் செய்தது. இத்தேர்தல் முறையினை திருத்தந்தையின் அதிகாரத்தில் தலையீடாகக் கருதிய கத்தோலிக்கர்கள் பலர் அவற்றை எதிர்த்தனர். இதனால் நவம்பர் 1790 முதல் பாதிரியார்கள் அனைவரும் குடிமைச் சட்ட அமைப்பின் மீது விசுவாச உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய மன்றம் அறிவித்தது. இம்முடிவு பாதிரியார்களை இரு பிளவுகளாக்கியது - பாதிரியார்களில் 24 விழுக்காட்டினர் இம்முடிவினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்; மற்றொரு பிரிவினர் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்தனர். பெரும்பாலானோர் உறுதிமொழி எடுக்க மறுத்ததால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர் அல்லது துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர். திருத்தந்தை ஆறாம் பயஸ் புதிய குடிமைச் சட்ட அமைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பிரான்சில் மேலும் கத்தோலிக்கத் திருச்சபை தனிமைப்படுத்தப்பட்டது. பின்வந்த பயங்கர ஆட்சியின் போது கிறித்தவத்தை ஒழிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய மன்றத்தில் கோஷ்டிகள் உருவாகி அணிசேரத் தொடங்கின. தே கசாலஸ் என்ற பிரபுவும் ஆபே மாரி என்ற பாதிரியும் புரட்சிக்கு எதிரான அணிக்குத் தலைமை தாங்கினர். மன்றத்தில் வலக்கைப் பக்கம் அவர்கள் அமர்ந்திருந்ததால் அவ்வணி "வலதுசாரிகள்" என்றழைக்கப்பட்டது. "மன்னராட்சி ஜனநாயகவாதி"கள் குழுவுக்கு நெக்கர் தலைமை தாங்கினார். பிரான்சில் பிரித்தானியாவைப் போன்று அரசியல்சட்ட முடியாட்சி ஒன்றை நிறுவ அவர்கள் விரும்பினர். மிரபியூ, லாஃபயாட், பெய்லி ஆகியோரது தலைமையில் இடதுசாரிகள் அணி செயல்பட்டது. ஏட்ரியேன் டூபோர்ட், பர்னாவே, மாக்சிமிலியன் ரோபெஸ்பியர் ஆகியோர் தீவிர இடதுசாரிகளாக விளங்கினர். சில காலம் ஆபே செயேஸ் இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு பல சட்டங்கள் இயற்றப்பட காரணமானார். தேசிய மன்றம் பழைய ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பிரபுக்களின் சின்னங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. இதனால் கோபம் கொண்ட பிரபுக்கள் பலர் பிரான்சை விட்டு வெளியேறி நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுடன் இணைந்து கொண்டனர். பொது மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தாலும் டென்னிஸ் கள சூளுரையில் அரசியலமைப்புச் சட்டமொன்று உருவாகும் வரை இடைவிடாது கூடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அவர்களது பதவிக்காலம் முடிவிலாது தொடரும் நிலை உருவானது. இதனை எதிர்த்த வலதுசாரிகள் புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரினர். ஆனால் மிரபியூ தலைமையிலான இடதுசாரிகள் அக்கோரிக்கையை ஏற்கவில்லை. 1790 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் படை பெருமளவு சீர்குலைந்திருந்தது. பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் பிரபுக்களாக இருந்தனர். அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பது அரிதானது. கீழ்த்தட்டு வர்க்கத்தினரான படைவீரர்கள் பல இடங்களில் தங்களது அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இதனால் படையில் ஒழுங்கு குலைந்து, அதிகாரிகள் வேறு நாடுகளுக்கு இடம் பெயரத் தொடங்கினர். இதனால் பிரெஞ்சுப் படையில் அனுபவமிக்க தளபதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசியலில் பல அரசியல் மன்றங்களின் செல்வாக்கு கூடத் தொடங்கியது. ஜேக்கபின் மன்றம், இத்தகு மன்றங்களில் முதன்மையானதாக விளங்கியது. ஆகஸ்ட் 10, 1790 அன்று 152 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இம்மன்றம் ஆரம்பத்தில் ஒரு பொது அரசியல் விவாத மன்றமாகத் தொடங்கப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து கருத்து வேறுபாடுகள் கூடக்கூடப் பல குழுக்கள் பிரிந்து தனி மன்றங்கள் அமைத்துக் கொண்டன. 89ம் ஆண்டின் மன்றம் இவ்வாறு பிரிந்து சென்றவற்றுள் ஒன்று. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் தேசிய மன்றம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. மன்னரின் கட்டுப்பாட்டிலிருந்து நீதித்துறை விடுவிக்கப்பட்டு, நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினர். அவர்களது பதவிக் காலங்கள் தற்காலிகமாக்கப்பட்டன. மன்னரைத் தவிர அனைத்து மரபுவழிப் பதவிகளும் ஒழிக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நடுவர் குழாம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மன்னரால் பிற நாடுகள்மீது போர் தொடுக்கலாம் என்று முன்மொழிய மட்டுமே இயலும். அவரது முன்மொழிவை ஏற்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருந்தது. உள்ளூர் வர்த்தகத் தடை வரிகள், வர்த்தகக் குழுக்கள், தொழில் குழுக்கள் ஆகியவை ஒடுக்கப்பட்டன. தொழில் செய்ய முனையும் எந்தவொரு தனி நபரும் தகுந்த உரிமத்தைப் பெறுவதன் மூலம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டார். வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதச் செயல்களாக்கப்பட்டன. 1791 குளிர்காலத்தில் முதல்முறையாக நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுக்கு எதிராகச் சட்டமியற்றுவதைப் பற்றித் தேசிய மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. புரட்சியினைத் தக்கவைப்பதா அல்லது தனி மனித உரிமைகளை மதிப்பதா என்ற போக்கில் இவ்விவாதம் சென்றது. நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுக்கு எதிராகச் சட்டமியற்றுவதை எதிர்த்த மிராபியூ, அவ்வாறான சட்டம் கொடுங்கோல் டிராக்கோ சட்டமாக இருக்கும் என்று வாதிட்டார். அவர் உயிருடன் இருந்த வரை அவ்வாறான சட்டமியற்றலைத் தடுத்து விட்டார். ஆனால் ஏப்ரல் 2, 1791 இல் அவர் இறந்த பின்னர் அதற்கு வலுவான எதிர்ப்பின்றி போனது. அவ்வருட இறுதிக்குள் அத்தகு சட்டமொன்று இயற்றப்பட்டது. அரசி மரீ அண்டோனெய்ட் மற்றும் பிற அரச குடும்பத்தினரின் தூண்டுதலால் மன்னர் லூயி பிரெஞ்சுப் புரட்சியினை எதிர்த்தார். ஆயினும், பிற நாட்டரசர்களின் உதவியை நாடாது அமைதி காத்தார். அதற்குப் பதிலாகப் புரட்சியாளர்களையும் நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களையும் ஒரு சேர வெறுத்த படைத் தளபதி பூயிலின் உதவியை நாடினார். பூயில் மோண்ட்மெடியில் இருந்த தனது பாசறையில் மன்னருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் புகலிடம் தருவதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஜூன் 20, 1791 இல் அரச குடும்பத்தார் வேலையாட்களைப் போல வேடமிட்டு தங்கள் அரண்மனையிலிருந்து தப்பினர். ஆனால் அதற்கு மறுநாள் வரேன் என்ற இடத்தில் அரசர் அடையாளம் காணப்பட்டதால், அரச குடும்பத்தின் தப்பித்தல் முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் பாரிசுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தேசிய மன்றம் அரசரைத் தற்காலிகப் பதவிநீக்கம் செய்தது. அரசரும் அரசியும் சிறை வைக்கப்பட்டனர். தேசிய மன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரான்சு குடியரசாவதற்கு பதில் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியாக மாற வேண்டும் என்று விரும்பினர். இதனால் மன்றத்தின் பல்வேறு குழுக்களும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இணக்க முடிவை எடுத்தன. இதன்படி மன்னர் லூயி பெயரளவில் மட்டும் நாட்டின் தலைவராக இருந்தார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி அளிக்க வேண்டியதாகியது. அந்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கினாலோ, நாட்டின் மீது போர் தொடுக்க ஒரு படைக்குத் தலைமை தாங்கினாலோ அல்லது தனது பெயரில் இச்செயல்களைப் பிறர் செய்ய அனுமதித்தாலோ உடனடியாக அவரது பதவி பறிக்கப்படும். ஆனால் பெயரளவில் கூட லூயி நாட்டின் தலைவராக நீடிப்பதை விரும்பாதவர்களை ஒன்று திரட்ட ஜாக் பியர் பிரிசாட் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட திரண்ட மக்கள் கூட்டத்துடன் நகரக் காவலர்கள் மோதியதால் ஏறத்தாழ 50 பேர் இறந்தனர். இந்நிகழ்வுக்குப் பின் பல தீவிர நாட்டுப்பற்று மன்றங்களும் இதழ்களும் மூடப்பட்டன. இதே காலகட்டத்தில் புரட்சிக்குப் புதிய ஆபத்தொன்று வெளிநாட்டில் தோன்றியது. புனித ரோமப் பேரரசர் இரண்டாம் லியபோல்டு, பிரஷ்யாவின் இரண்டாம் பிரடரிக் வில்லியம், லூயியின் சகோதரர் சார்லஸ் பிலிப் ஆகியோர் இணைந்து பில்னிட்ஸ் சாற்றலை ("Declaration of Pillnitz") வெளியிட்டனர். இதன் மூலம் அந்நிய நாட்டு அரசர்கள் பதினாறாம் லூயியை தங்களுள் ஒருவராகக் காட்டிக் கொண்டதுடன், அவரை விடுவிக்கும்படி புரட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கைகளை ஏற்கத் தவறினால் பிரான்சு மீது படையெடுப்போம் என்று மிரட்டல் விடுத்தனர். பிரெஞ்சு குடிமக்களுக்கு அந்நிய அரசர்களின் எச்சரிக்கையினால் பயமேற்படவில்லை. மாறாக இந்த அச்சுறுத்தல் பிரான்சு மக்களின் போர்க்குணத்தைத் தூண்டியதுடன், பிரெஞ்சு சமூகத்தின் இராணுவமயமாக்கலை விரைவு படுத்தியது. தேசிய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்கள் அரசியல் சட்டமியற்றப்பட்டவுடன் உருவாகப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் தாங்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்தனர். பின் தாங்கள் இயற்றிய அனைத்து சட்டங்களையும் தொகுத்து ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிப் பதினாறாம் லூயியின் ஒப்புதலுக்கு அனுப்பினர். அவர் அதை ஏற்றுக் கொண்டார். செப்டம்பர் 30, 1791 இல் தேசிய அரசியல் நிர்ணய மன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1791 அரசியலமைப்புச் சட்டத்தின் படி பிரான்சு ஒரு அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியாக வரையறுக்கப்பட்டிருந்தது. மன்னர் தனது அதிகாரங்களைத் தேசிய நாடாளுமன்றத்துடன் பகிர்ந்து கொண்டாலும், தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தடையாணை பிறப்பிக்கும் உரிமையும் பெற்றிருந்தார். அக்டோபர் 1, 1791 அன்று கூடிய தேசிய நாடாளுமன்றம் ஓராண்டுக்குள் குழப்பங்கள் மிகுந்து செயலிழந்தது. நாட்டை முறையாக நிர்வாகம் செய்யத் தவறியதால் அரசின் கருவூலம் காலியானதுடன், படைத்துறையில் ஒழுங்கின்மை கூடியது. நாடாளுமன்றத்தில் 165 ஃபியூலியாண்டுகள் (அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியின் ஆதரவாளர்கள்), 330 கிரோண்டிஸ்டுகள் (தாராண்மிய குடியரசுவாதிகள்) மற்றும் ஜகோபின்கள் (தீவிர புரட்சியாளர்கள்) இருந்தனர். இவர்களைத் தவிர இரு கட்சிகளிலும் சேராத 250 உறுப்பினர்களும் இருந்தனர். மன்றத்தின் பல சட்டங்களைத் தொடக்கத்திலேயே மன்னர் தனது தடையாணை உரிமையைக் கொண்டு தடுத்ததால், வெகு விரைவில் ஒரு அரசியலமைப்புச் சிக்கல் நிலை உருவானது. ஆகஸ்ட் 10, 1792 அன்று இரவு போராளிகளும் ஆயுதமேந்திய மக்கள் கும்பல்களும் புரட்சிகர பாரிஸ் கம்யூன் நிருவாக அமைப்பின் துணையுடன் அரசரின் அரண்மனையைத் தாக்கி அரசரின் மெய்க்காப்பாளர்களான சுவிஸ் காவல் படையினரைப் படுகொலை செய்தன. அரச குடும்பத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். தேசிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூடி முடியாட்சியை ஒழித்தது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்றனர்; அவர்களிலும் பெரும்பான்மையானோர் ஜாகோபின்கள். எஞ்சியிருந்த தேசிய அரசுக்குப் பாரிஸ் கம்யூனின் ஆதரவு தேவையாக இருந்தது. சிறைகளுக்கு ஆயுதமேந்திய கும்பல்களை அனுப்பிய கம்யூன் அங்கு அடைக்கப்பட்டிருந்த 1400 பேரை விசாரணையின்றிப் படுகொலை செய்ததுடன், இதனைப் பிற நகரங்களிலும் செய்யலாமெனச் சுற்றறிக்கைக் கடிதமொன்றை பிற நகரங்களுக்கு அனுப்பியது. தேசிய நாடாளுமன்றத்தால் இதனைத் தடுக்க இயலவில்லை. செப்டம்பர் 20, 1792 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மன்றம் பதவியேற்கும் வரை இந்நிலை நீடித்தது. செப்டம்பர் 21 அன்று முடியாட்சி ஒழிக்கப்பட்டு பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பின்னாளில் இத்தேதியே பிரெஞ்சு குடியரசு நாட்காட்டியின் முதல் நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தின் ஐரோப்பிய அரசியல் நிலவரம் பிரான்சு-ஆஸ்திரியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடையே போர்மூளக் காரணமானது. அரசர் லூயியும் ஃபியூலியாண்டுகளில் பெரும்பாலானோரும், கிரோண்டின்களும் போரை விரும்பினர். அரசரும் அவரது வலதுசாரி ஆதரவாளர்களும் போர் மூண்டால் மக்களிடையே அரசரின் செல்வாக்கு உயருமெனக் கருதினர். மேலும் புரட்சி அரசு போரில் தோல்வியடைந்தால் தன நிலை உயருமெனக் கருதினார் லூயி. இடதுசாரிகள் தங்களது புரட்சிகரக் கொள்கைகளைப் பிற ஐரோப்பிய நாடுகளில் பரப்பப் போர் உதவுமெனக் கருதினர். இவ்வாறு இரு தரப்பிலும் போரை விரும்பியோர் இருந்தனர். போரை எதிர்த்தவர்கள் கட்சி பலவீனமாக இருந்தது. பிரான்சு தோல்வியடைந்தால் புரட்சி தீவிரமடையும் என்று கருதிய கிரோண்டின்களும், போரில் தோல்வி புரட்சியைப் பலவீனப்படுத்தும், பிற நாட்டு சாதாரண மக்களுக்குப் புரட்சிமீது வெறுப்பேற்படும் என்று கருதிய ரோபஸ்பியர் போன்ற தீவிரவாதிகளும் போரை எதிர்த்தனர். ஏப்ரல் 20, 1792 அன்று பிரான்சு ஆஸ்திரியா மீது போர் சாற்றியது. சில வாரங்களுக்குப் பின்னர் பிரஷ்யா ஆஸ்திரிய அணியில் இணைந்தது. பிரான்சு மீது படையெடுத்த பிரஷியப் படைகள் ஆரம்பத்தில் தடையின்றி முன்னேறின. செப்டம்பர் 20, 1792 அன்று வால்மி சண்டையில் அவற்றுக்கு ஏற்பட்ட தோல்வி பிரஷிய முன்னேற்றத்தைத் தடை செய்தது. இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து புதிய பிரெஞ்சுக் குடியரசுக்குப் பெல்ஜியத்திலும் ரைன்லாந்துப் பகுதியிலும் 1792 இலையுதிர்க்காலத்தில் பல தொடர் வெற்றிகள் கிட்டின. நவம்பர் 6ம் தேதி ஜெமாப்பே சண்டையில் ஆஸ்திரியர்களை வென்ற பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரிய நெதர்லாந்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன. இதனால் பிரான்சுக்கு எதிரணியில் பிரிட்டனும், டச்சுக் குடியரசும் இணைந்தன. தெற்கு நெதர்லாந்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மிகுவதை அவை விரும்பவில்லை. ஜனவரி 1793 இல் லூயியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்னர் இந்நாடுகள், பிரான்சுக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் நடத்தி வந்த போரில் இணைந்தன. இதனையடுத்து பல்வேறு முனைகளில் பிரான்சு தோல்விகளைச் சந்தித்தது. 1793 வசந்த காலத்தில் தான் கைப்பற்றிய பல பகுதிகளை இழந்துவிட்டது. அதே சமயம் புரட்சிகர அரசு தன் அதிகாரத்துக்கு எதிராகத் தெற்கு மற்றும் மேற்கத்திய பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரான்சுக்கு எதிரான கூட்டணி இந்த உள்நாட்டுக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. 1793ம் ஆண்டு இலையுதிர்க் காலம் முடிவதற்குள் புரட்சிகர அரசு உள்நாட்டுக் கலகங்களை அடக்கி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி விட்டது; எதிரிக் கூட்டணியின் முன்னேற்றத்தையும் தடுத்தி நிறுத்தி விட்டது. போர்முனையில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய இழுபறி நிலை 1794 இல் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு புரட்சி அரசுக்குப் பெரும் வெற்றிகள் கிட்டன. புளூரஸ் சண்டையில் புரட்சிகரப் பிரெஞ்சுப் படைகள் எதிர்க் கூட்டணிப் படைகளை முறியடித்ததன் விளைவாக ஆஸ்திரிய நெதர்லாந்த்திலிருந்து கூட்டணிப் படைகள் முழுமையாகப் பின்வாங்கின. பின் எதிர்க் கூட்டணிப் படைகளை ரைன் ஆற்றின் கிழக்குக் கரை வரை விரட்டிச் சென்ற பிரெஞ்சுப் படைகள், 1795 இல் நெதர்லாந்தைக் கைப்பற்றின. அங்கு ஆரஞ்சு மரபு ஆட்சி ஒழிக்கப்பட்டு புரட்சிகர பிரான்சின் தோழமை அரசாகப் படாவியக் குடியரசு நிறுவப்பட்டது. இவ்வெற்றிகளின் காரணமாகப் பிரான்சுக்கு எதிரான கூட்டணி சிதறியது. 1794 இல் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிரஷியா அதற்கு அடுத்த ஆண்டு பிரான்சுடன் முறைப்படி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது (பேசல் அமைதி ஒப்பந்தம்). இதற்கடுத்தபடியாக ஸ்பெயினும் கூட்டணியிலிருந்து விலகியது. பிரிட்டனும், ஆஸ்திரியாவும் மட்டும் தொடர்ந்து பிரான்சுடன் போரிட்டன. இக்காலகட்டத்தில் தான் பிரெஞ்சு நாட்டுப்பண் "லா மார்சே" முதன் முதலில் பாடப்பட்டது. பின் 1795 ஆம் ஆண்டு புரட்சிகர பிரான்சின் அதிகாரப்பூர்வ நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புரட்சிகர பிரான்சுக்கு எதிரான முடியாட்சிக் கூட்டணி நாடுகள் வெளியிட்ட பிரன்ஸ்விக் அறிக்கையில், தங்கள் முன்னேற்றத்தை எதிர்த்தாலோ அல்லது பிரான்சில் மன்னராட்சியை மீளமைப்பதை எதிர்த்தாலோ பிரெஞ்சு குடிமக்களைப் பழிவாங்குவோமென மிரட்டியிருந்தன. இது பதினாறாம் லூயி பிரான்சின் எதிரிகளோடு சேர்ந்து சதியில் ஈடுபட்டுள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டது. ஜனவரி 17, 1793 இல் “மக்கள் விடுதலைக்கும் நாட்டின் பாதுகாவலுக்கும் எதிராகச் சதி செய்த” குற்றத்துக்காகத் தேசிய மாநாடு மன்றம் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை விதித்தது. மாநாட்டு உறுப்பினர்களில் 361 பேர் மரண தண்டனைக்கு ஆதரவாகவும் 288 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 72 பேர் பற்பல நிபந்தனைகளுடன் மரண தண்டனையை நிறைவேற்றலாமென வாக்களித்தனர். மன்னர் பதவியிழந்த லூயி ஜனவரி 21, 1793 அன்று கில்லோட்டின் எந்திரம் கொண்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்செயலால் ஐரோப்பாவெங்கும் மன்னர் மரபுகள் திகிலடைந்தன. அதுவரை நடுநிலை வகித்து வந்த பல முடியாட்சிகள் புரட்சிகர பிரான்சுக்கு எதிரான கூட்டணியில் இணைந்தன. போர் நிலவரம் புரட்சிகர அரசுக்கு எதிராகத் திரும்பிய போது விலைவாசி உயர்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஏழைத் தொழிலாளர்களும் தீவிரவாத ஜாகோபின்களும் கலவரம் செய்யத் தொடங்கினர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜாகோபின் கட்சி, ஒரு நாடாளுமன்றப் புரட்சிமூலம் கிரோண்டிஸ்ட் கட்சியை முறியடித்து முழு அதிகாரத்தையும் கைப்பற்றியது. புரட்சிகர அரசின் கொள்கைகள் மேலும் தீவிரமடைந்தன. அரசில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. உணவுப் பொருட்களின் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மீறிய வணிகர்களுக்கு மரண தண்டனை தரப்பட்டது. விலைவாசி உயர்வைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த ஜாகோபின்களின் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் ”பயங்கர ஆட்சி” காலத்தின் போது அனைத்து உணவுப் பொருட்களுக்கும் மேலும் பல பண்டங்களுக்கும் விலை உச்சவரம்பு விதிக்கப்பட்டது. உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஊர்ப்புறங்களிலிருந்து தானியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகரங்களுக்கு அனுப்பப்பட்டன. இது பாரிசு நகரத்தில் நிலையைத் தற்காலிகமாகச் சீராக்கினாலும், நாட்டின் பிற பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின. 1794 ஆண்டு வசந்த காலத்தில் பாரிசு நகரத்தில் கூட உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலவில்லை. இதனால் பொதுமக்கள் பாதுகாவல் குழுவின் ஆட்சி கவிழ்ந்து அதன் தலைவர் ரோபெஸ்பியர் கில்லோட்டின் மூலம் கொல்லப்பட்டார். ஜூன் 2, 1793 இல் ஜேக்கோபின் கட்சியின் தீவிரவாதிகள், மாநகரக் காவல் படையின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர். 31 கிரோண்டிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கைது செய்தனர். எதிர்க் கட்சிகள் அழிக்கப்பட்டபின், ஜூன் 10ம் தேதி பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் “புரட்சிகர சர்வாதிகார” ஆட்சி தொடங்கியது. ஜூலை 13ம் தேதி ஜேக்கோபின்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அதிதீவிர கட்டுரைகளை எழுதி வந்த இதழாளருமான ழான்-பால் மராட், ஷார்லோட் கோர்டே என்ற கிரோண்டின் கட்சிக்காரியால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜேக்கோபின்களின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. அடுத்து செல்வாக்கு மிகுந்த ஜேக்கோப்பின் தலைவரான ஜார்ஜஸ் டாண்டன் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவிலிருந்து நீக்கப்பட்டார். கடும் தீவிரவாதியென அறியப்பட்ட மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் குழுவின் அதி முக்கியமான உறுப்பினரானார். ”புரட்சியின் எதிரிகள்” என்று அறியப்பட்டவர்கள் ரோபெஸ்பியர் அரசின் இலக்காகினர். ரோபெஸ்பியரின் கட்டுப்பாட்டில் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு வந்த பின், ஜேக்கோபின்களின் “பயங்கர ஆட்சி” தொடங்கியது. ஜேக்கோபின்கள் கையில் முழு அரசு அதிகாரம் இருந்த 1793-94 காலகட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய கொடுங்கோல் செயல்கள் அவர்களது ஆட்சிக்கு இப்பெயரைப் பெற்றுத் தந்தது. அக்கால ஆவணங்களின் படி, பயங்கர ஆட்சி காலத்தில் குறைந்த பட்சம் 16,594 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 40,000 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையின்றி கொல்லப்பட்டிருக்கலாமெனப் பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அரசியல் எதிரிகளை அரசு வன்முறையால் அழித்து வந்த அதே காலகட்டத்தில், பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு அரசியல் சீர்திருத்தங்களை விரைவு படுத்தியது. ஜூன் 24, 1794 இல் பிரான்சின் முதல் குடியரசு அரசியல் சட்டம் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்புதிய அரசியலமைப்பு பல புரட்சிகர மற்றும் முற்போக்கு கூறுகளைக் கொண்டிருந்தது - வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளித்தது. இப்புதிய அரசியலமைப்பை மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது நடைமுறைக்கு வரும்முன் பயங்கர ஆட்சியில் மக்களின் சட்ட உரிமைகள் விலக்கப்பட்டன. பிரான்சின் வெண்டீ பகுதியில் 1793 ஆம் ஆண்டு புரட்சிகர அரசுக்கு எதிராகக் கலகம் மூண்டது. அப்பகுதி மக்கள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் அரசு கொண்டு வந்த மாற்றங்களை விரும்பவில்லை. புரட்சிகர அரசு இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பை அறிமுகப்படுத்தியவுடன் அதற்கு எதிராக வெண்டீயில் வெளிப்படையாகக் கலகம் வெடித்தது. வெண்டி பகுதி மக்கள் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டனர். புரட்சிகர அரசு வெண்டி கலகத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இரு தரப்பிலும் பல படுகொலைகளும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன. இதில் 1,17,00 முதல் 2,50,000 பேர் வரை பலியாகினரெனக் கணக்கிடப்பட்டுள்ளது. லோயர் ஆற்றுக்கு வடக்கில் முடியாட்சிக்கு ஆதரவான எதிர்புரட்சியாளர்களும் கலகத்தில் ஈடுபட்டனர். நாட்டின் கிழக்க்லும் மேற்கிலும் இது போலவே பற்பல கலகங்கள் மூண்டன. பயங்கர ஆட்சியின் அடக்குமுறைகள் அத்துமீறியதால் ரோபெஸ்பியரின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்தது. ஜூலை 27, 1794 இல் ரோபெஸ்பியரின் எதிர்ப்பாளர்கள் அவரையும், பிற முக்கிய ஜேக்கோபின்களையும் கைது செய்து கொலை செய்தனர். இந்நிகழ்வு தெர்மிடோரிய எதிர்வினை என்றழைக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு கலைக்கப்பட்டு புதிய அரசு பதவியேற்றது. இதில் பெரும்பாலும் கிரோண்டிஸ்ட் கட்சிக்காரர்களே இடம்பெற்றிருந்ந்தனர். புதிய அரசு பயங்கர ஆட்சியின் போது ஜேக்கோபின்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பழிவாங்கும் வண்ணம், ஜேக்கோப்பின்கள் பலரைக் கொன்றது, ஜேக்கோபின் சங்கத்தையும் தடை செய்தது. இந்தப் பழிவாங்கல் நிகழ்வுகள் “வெள்ளை பயங்கரம்” என்றழைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22, 1795 அன்று புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டுவந்தது. ”மூன்றாவது ஆண்டின் அரசியலமைப்பு” (புரட்சி தொடங்கி மூன்றாம் ஆண்டு கொண்டுவரப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது) என்றழைக்கப்பட்ட இப்புதிய சட்டத்தை மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொண்டனர். செப்டம்பர் 27 முதல் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இப்புதிய அரசியலமைப்புச் சட்டம் "டைரக்டரி" என்ற புதிய ஆட்சி அமைப்பை உருவாக்கியது. பிரான்சின் வரலாற்றில் முதல் முறையாக ஈரங்க நாடாளுமன்றத்தை தோற்றுவித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாவன - ஐநூறு உறுப்பினர்கள் கொண்ட ஐநூறுவர் குழு மற்றும் 250 உறுப்பினர்கள் கொண்ட மூத்தோர் குழு. நிர்வாக அதிகாரம் ஐந்து "இயக்குநர்"களின் கையில் இருந்தது. அவர்கள் ஐநூறுவர் குழு அளிக்கும் பட்டியலிலிருந்து மூத்தோர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1793 முதல் நடைமுறையிலிருந்த அனைவருக்கும் வாக்குரிமை முறைக்குப் பதிலாக, சொத்துக் கணக்கு அடிப்படையில் வாக்குரிமை வழங்கப்பட்டது. டைரக்டரியின் உருவாக்கத்துடன் பிரெஞ்சுப் புரட்சி முடிவடையவில்லை. இடைவிடாப் போரினால் தளர்ந்திருந்த நாட்டு மக்கள் அமைதியையும், நிலையான ஆட்சி அமையவும் விரும்பினர். ஆனால் புரட்சிக்கு முந்தைய “பழைய ஆட்சி”யின் ஆதரவாளர்களும் தீவிர புரட்சியாளர்களும் எண்ணிக்கையில் குறைந்து போனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கவோ நம்பவோ தயாராக இல்லை. நாட்டை நிருவகிக்கும் டைரக்டரியின் செயல்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருந்தது. பல பிரெஞ்சுக் குடிமக்கள் டைரக்டரி மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இயக்குநர்கள் பல நேரங்களில் தங்கள் முடிவுகளைச் செயல்படுத்த அரசியலமைப்பை மீறினர். தேர்தல்களை முறைகேடுகள்மூலம் வென்றனர். அவ்வாறு வெல்ல இயலவில்லையெனில் காவல் துறையின் அடக்குமுறைமூலம் எதிர்ப்பாளர்களை ஒடுக்கினர். மேலும் தங்கள் நிலையை வலுப்படுத்தப் பிரெஞ்சு இராணுவத்தின் உதவியை நாடினர். இராணுவம் போரினை விரும்பியதால், இயக்குநர்களின் கவனம் குடிமைச் சிக்கல்களிலிருந்து விலகி வெளிநாட்டுப் போர்களின் பக்கம் அதிகமாகத் திரும்பியது. புரட்சியின் முந்தைய கட்டங்களில் ஏற்பட்ட சேதங்களால் பிரான்சின் பொருளாதாரம் வெகுவாகச் சீர்குலைந்திருந்தது. நிதிநிலையைச் சீர்செய்து செலவுகளைச் சமாளிக்க டைரக்டரி அரசு பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் கப்பத்தையும் கொள்ளையினையும் நம்பியிருந்தது. எனவே அயல்நாடுகளுடன் போர் தொடர்வதை விரும்பியது. அமைதி ஏற்பட்டு இராணுவத்தினர் நாடு திரும்பினால் அதிருப்தியடையும் போர்வீரர்களாலும், அதிகார ஆசை கொண்ட தளபதிகளாலும் டைரக்டரியின் ஆட்சிக்கு ஆபத்து நிகழ்வது உறுதியென்பதால், போர் தொடர்வதே அரசுக்கு ஏற்புடையதாக இருந்தது. இயக்குநர்களின் ஊழல்கள் டைரக்டரியின் ஆட்சியின் மீதான மக்கள் அதிருப்தியை அதிகப்படுத்தின. தீவிர புரட்சியாளர்களும் முடியாட்சியின் ஆதரவாளர்களும் டைரக்டரியினை எதிர்க்கலாயினர். தங்கள் ஆட்சிக்கு எதிரான சதிகளையும் கலகங்களையும் முறியடிக்க இயக்குநர்கள் அளவுக்கு அதிகமாக இராணுவத்தைப் பயன்படுத்தினர். இதனால் இராணுவத்தின் நிலையும் அதிக அளவில் வெற்றிகள் பெற்று புகழ்பெற்றிருந்த இராணுவ தளபதியான நெப்போலியன் பொனபார்ட்டின் நிலையும் வலுப்பெற்றன. நவம்பர் 9, 1799 இல் நெப்போலியன் டைரக்டரிக்கு எதிராகப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். தனது முழுக்கட்டுப்பாட்டில் செயல்பட்ட “கன்சலேட்” என்ற ஆட்சிமுறையை நிறுவினார். நடைமுறையில் நெப்போலியன் பிரான்சின் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். 1804 இல் வெளிப்படையாகப் பிரான்சின் பேரரசராக முடிசூடிக்கொண்டார். நெப்போலியனின் முடி சூடலுடன் பிரெஞ்சுப் புரட்சியின் குடியரசு காலம் முடிவுக்கு வந்தது. உலக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பிரெஞ்சுப் புரட்சியை வரலாற்றாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கையின் வழியாகவே நோக்குகினறனர். புரட்சியின் காரணிகள், போக்கு, வரலாற்றுத் தாக்கம் ஆகியவற்றை பற்றி வரலாற்றாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. வசதி கூடிய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சமூக நிலையின் முக்கியத்தை உணர்ந்ததால் புரட்சி நடைபெற்றதென அலெக்சிஸ் தே டோக்வில் கருதுகிறார். எட்மண்ட் பர்க் போன்ற பழமைவாத அறிஞர்கள், குறிப்பிட்ட சில சதிகாரர்கள் மக்கள் திரளை மூளைச் சலவை செய்து, பழைய ஆட்சிக்கு எதிராகத் தூண்டி விட்டதால் தான் புரட்சி ஏற்பட்டதெனக் கருதினர். புரட்சி ஏற்பட நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்பது அவர்கள் வாதம். மார்க்சிய தாக்கம் உடைய வரலாற்றாளர்கள் பிரெஞ்சுப் புரட்சியை விவசாயிகளும், நகரத் தொழிலாளர்களும் நடத்திய ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டமாகப் பார்க்கின்றனர். எனினும் பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அனைத்து தரப்பு வரலாற்றாளர்களாலும் கருதப்படுகிறது. வரலாற்றின் தொடக்க நவீன காலத்தின் (சுமார் கி.பி 1500 இல் தொடங்கியது) முடிவாகவும் நவீன காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. பிரான்சில் பிரபுக்களின் ஆதிக்கத்தை முடக்கியதுடன், திருச்சபையின் செல்வ வளத்தை அழித்தது. இவ்விரு குழுக்களும் பிரெஞ்சுப் புரட்சியினால் கடும் பாதிப்புக்குள்ளாகினாலும் அறவே அழியாமல் தப்பின. 1815 இல் முதல் பிரெஞ்சுப் பேரரசு வீழ்ந்த பின், பிரெஞ்சுப் புரட்சி முதல் குடிமக்களுக்குக் கிட்டியிருந்த உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஆனால் புரட்சியின் அனுபவங்களைக் குடிமைச் சமூகம் மறக்கவில்லை. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும், குடியரசுவாதத்தைப் பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டனர். புரட்சியின் விளைவாகப் பிரெஞ்சு குடிமக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன எனச் சில வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர். சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறிச் சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின. பிரெஞ்சுப் புரட்சி அதுவரை வரலாற்றில் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்றருந்த முயற்சிகளில் மிக முக்கியமான அமைந்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும், ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் மக்களாட்சிக் கருத்துகள் பரவ வித்திட்டது. 1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியிலும் சீனாவில் நடைபெற்ற மா சே துங்கின் புரட்சியிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் உண்டு. ஒக்மொக் மலை ஒக்மொக் மலை ("Mount Okmok") என்பது அலாஸ்காவின் அலூசியன் தீவுகளின் வடகிழக்கில் அமைந்துள்ள ஒக்மொக் கால்டெரா ஓரத்தில் அமைந்துள்ள மலை ஆகும். சனிக்கிழமை, ஜூலை 12, 2008 இல், ஒக்மொக் மலை எச்சரிக்கை எதுமின்றி வெடித்தது. 33,000 அடி (10,058.4 மீ) உயரத்துக்கு இதன் புகை மண்டலம் வெளிக் கிளம்பியது. ஆனாலும், எரிமலைக் குழம்புகளின் தரவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒக்மொக் மலை அலாஸ்காவின் டச்சு துறைமுக விமான நிலையத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் அமைந்திருப்பதால் இந்த எரிமலைக் குமுறல் கடுமையாகப் பரிசீலிக்கப்படுகிறது. இந்த எரிமலை கடைசியாக 1997 இல் வெடித்து லாவாக்கள் வெளிப்பட்டன. இம்முறை ஆரம்ப எச்சரிக்கை எதுவும் தரவில்லை. இம்மலைக்கு அருகே கிளென் கோட்டைப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அனைவரும் எரிகற்கள், தூசி போன்றவற்றுக்கு அஞ்சி வெளியேறினர். அலூசியன் தீவுகள் அலூசியன் தீவுகள் ("Aleutian Islands") என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கிமீ²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன. இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை "உனாங்கன்" என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "அலூட்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல. 2000 இல் இத்தீவுகளின் மொத்த மகக்ள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாஸ்காவில் வாழ்கின்றனர். அலூட் மக்கள் அலூட் ("Aleuts") எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை "உனாங்கா" என்றும் "உனாங்கன்" என்றும் அழைக்கின்றனர். அலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர். உலக இளையோர் நாள் உலக இளையோர் நாள் ("World Youth Day") என்பது இளைஞர்களுக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் நிகழ்வாகும். இது பெரும்பாலும் கத்தோலிக்க சமய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அனைத்துலக இளைஞர்களும் இன, மத பேதமின்றி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். "உலக இளையோர் நாள்" பன்னாட்டு இளையோர் நாளிலிருந்து வேறுபட்டதாகும். "உலக இளையோர் நாள்" 1984-ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முன்னெடுக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் இடம்பெறும். அதை விட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ரீதியில் ஒரு-வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெறுகிறது. பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர். 2011ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் எசுப்பானியாவின் மத்ரித் மாநகரத்தில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20 வரை நடந்தேறின. இந்நிகழ்வின் பாதுகாவலர் அரு. அன்னை தெரேசா ஆவார். ஐ.நா சபை அனைத்துலக இளையோர் வருடத்தைக் கொண்டாட முடிவுசெய்த போது, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் உலக இளையோர் நாளை கொண்டாட அழைப்பு விடப்பட்டது. இவர் தம் ஆட்சி காலத்தில் செய்தவைகளில் இந்நிகழ்வு மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா முதலிய இடங்களில் உள்ள இளையோர்களை திருயாத்திரை வர இவர் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வுக்கான நோக்கமாக இவர், "இளையோர்கள் தங்கள் வாழ்வின் அழைத்தலை உணர" என்ற மையக்கருத்தினை வலியுறுத்தினார். 1985-ஆம் ஆண்டு, முதல் உலக இளையோர் நாளை சிறபிக்க, இவர், "உலக இளையோருக்கு" (To the Youth of the World) என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார். ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் எசுப்பானியாவின் மாட்ரிட் நகரில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வு 2011 ஆகத்து 16 முதல் 21 வரை நடைபெற்றது. இறுதி நாளன்று ஏறத்தாழ 2,000,000 பேர் வரையில் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோறு ஆண்டும் குருத்து ஞாயிறு அன்று மறைமாவட்ட அளவில் இளையோர் நாள் கொண்டாடப்படுகின்றது. மறைமாவட்ட ஆயர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். குருத்து ஞாயிறு அன்று நடைபெறுவதால் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும், பாடல்கள், செபம், ஒப்புரவு அருட்சாதனத்தோடு நற்கருணை ஆராதனையும் நடைபெறலாம். சாள்சு அன்ரனி சிறப்புப் படையணி லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையணி, பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது. 1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர். 5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணி 2005 ஆம் ஆண்டு வரை இழந்துள்ளது. படையணி படையணி அல்லது பட்டாலியன் ("Battalion") என்பது ஒரு படை அலகு. இது இரண்டில் இருந்து ஆறு கம்பெனிகளைக் கொண்டிருக்கும். இதில் 500 முதல் 1500 படை வீரர்கள் வரை இருப்பர். இதன் தலைவர் லெப்டிணன்ட் கலோனல் எனப்படுவார். பல பட்டாலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு ரெசிமெண்ட் அல்லது பிரிகேடு உருவாக்கப்படும். படைப்பிரிவு படைப்பிரிவு (டிவிஷன், டிவிசன், "Division") என்பது ஒரு பெரும் படையணியாகும். இதில் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வீரர்கள் வரை இருப்பர். பெரும்பாலான படைகளில் படைப்பிரிவு என்பது பல ரெசிமெண்டு அல்லது பிரிகேடுகளைக் கொண்டிருக்கும். படையலகு படையலகு என்பது ஒரு சிறிய படை அலகு. இதில் 30 முதல் 50 வீரர்கள் வரை இருப்பர். இது இரண்டு முதல் நான்கு பிரிவுகள் ("sections") அல்லது இசுக்குவாடுகளைக் ("Squad") கொண்டு உருவாக்கப்படும். இரண்டு முதல் ஐந்து படையலகுகள் சேர்க்கப்பட்டு ஒரு கம்பெனி உருவாக்கப்படுகிறது. ஏங்கரெஜ் ஏங்கரேஜ் (Anchorage) அலாஸ்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். அலாஸ்காவின் தென்பகுதியில் அமைந்த இந்நகரில் 282,813 மக்கள் வசிக்கின்றனர். அலாஸ்கா மக்களில் 40% ஏங்கரேஜில் வசிக்கின்றனர். விட்னி மலை விட்னி மலை ("Mount Whitney") ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது. இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது. லோகன் மலை லோகன் மலை (Mount Logan) கனடாவின் யூக்கான் நிலப்பகுதியில் அமைந்த மலையாகும். இம்மலை கனடாவிலேயே மிக உயரமானது; மெக்கின்லி மலையுக்கு அடுத்தபடியாக வட அமெரிக்காவில் மிக உயரமானது. குலுவேன் தேசியப் பூங்காவில் அமைந்த இம்மலையின் உயரம் 5,959 மீட்டர்கள் ஆகும். அண்டார்டிக்கா தவிர உலகில் மிக குளிரான இடங்களில் ஒன்றாகும். பெரிய உப்பு ஏரி பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். பூமியின் மேற்கு அரைக்கோளில் மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி 4ஆம் மிகப்பெரியது ஆகும். லிலொங்வே லிலொங்வே ("Lilongwe") மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா யெலோஸ்டோன் தேசியப் பூங்கா (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") அமெரிக்காவில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும். மார்ச் 1, 1872 இன்றிய பூங்கா இருக்கும் இடத்தை அமெரிக்க அரசு தேசிய பூங்காவாக படைத்தது. இப்பூங்காவின் மிக புகழான இடம் ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி ஆகும். இது தவிர பல காடு, விலங்கு வகைகளும் யெலோஸ்டோன் ஏரியும் பார்க்க சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். 11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை வயோமிங் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் ஐடஹோ மற்றும் மொன்டானா மாநிலங்களிலும் அமைந்துள்ளன. உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. கிரிசிலி கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் காட்டுத்தீ நடைபெறும்; 1988இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் பனிவண்டியை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவை, ஐக்கிய அமெரிக்க நாட்டின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. ஓக்லஹோமா நகர் தண்டர் ஓக்லஹோமா நகர் தண்டர் (Oklahoma City Thunder) 2008-2009 என்.பி.ஏ. பருவத்தில் முதலாக என்.பி.ஏ.-இல் விளையாடும். இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை சியாட்டில் நகரத்திலிருந்து 2007-2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார். இந்த புதிய அணியின் சிறப்புப்பெயர், சின்னம், வரலாறு புதிதக உருவாக்கப்பட்டன. ஆனால் 2007-2008 பருவத்தில் சியாட்டில் சூப்பர்சானிக்ஸில் இருந்த வீரர்கள் இப்பொழுது இந்த புதிய அணியில் விளையாடுகின்றனர். இந்த அணியின் போட்டிகள் ஓக்லஹோமா நகரத்தில் அமைந்த ஃபோர்ட் சென்டரில் நடைபெறும். மான்ட்டே எலிஸ் மான்ட்டே எலிஸ் (Monta Ellis, பிறப்பு அக்டோபர் 26, 1985) ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் என்.பி.ஏ.இல் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியில் விளையாடுகிறார். இவரால் இரண்டு பின்காவல் நிலைகளில் விளையாடமுடியும். மிசிசிப்பி மாநிலத்தில் பிறந்து வளந்து மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் சேர ஒப்பந்தம் செய்தார், ஆனால் கல்லூரியுக்கு போகாமல் நேரடியாக 2005 என்.பி.ஏ. தேர்தலில் சேர்ந்து இரண்டாம் சுற்றில் வாரியர்ஸ் அணியால் தெரிந்தெடுக்கப்பட்டார். பல்சான் பரிசு பல்சான் பரிசு ("Balzan Prize") என்பது "பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம்" ("International Balzan Prize Foundation") ஆண்டுதோறும் மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நான்கு புகழ் பெற்றவர்களுக்கு வழங்கும் ஒரு பணப்பரிசாகும். ஆண்டு தோறும் இந்நிறுவனம் கூடி அடுத்த ஆண்டுக்கான விருதாளர்களையும் அவர்களுக்கான பணப்பரிசின் அளவையும் தெரிவு செய்கிறது. இப்பரிசுகளுக்கான நியமனங்கள் மே மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிசாளர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டில் இருந்து பரிசுத் தொகை 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இப்பரிசுத் தொகையின் அரைப்பங்கு இளம் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை ஆகும். பல்சான் பரிசு குழுவில் ஐரோப்பாவின் பெரும் அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இப்பரிசு நோபல் பரிசுக்கு இணையாக, அறிவியல், பண்பாடு, மானுடவியல் துறைகளில் புகழ் பெற்ற ஒரு பரிசு ஆகும். 2004 இல் இதன் பரிசுத் தொகை 3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (நோபல் பரிசுத் தொகை 1.3 மில்லியன்கள் மட்டுமே) இருந்தாலும் நோபல் பரிசு பல்சான் பரிசை விட அதிகம் புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் சொத்துக்கள் இத்தாலியரான "யூஜீனியோ பல்சான்" ("Eugenio Balzan"; 1874-1953), என்பவரால் வழங்கப்பட்டது. இவர் தனது சொத்துக்களை சுவிட்சர்லாந்தில் முதலிட்டார். 1933இல் பாசிசத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து இத்தாலியை விட்டுப் புறப்பட்டார். இவர் தனது சொத்துக்களைத் தனது மகள் "அஞ்சலா லீனா பல்சான்" (1892–1956), என்பவருக்கு விட்டுச் சென்றார். அஞ்சலா நோய் வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் "பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம்" என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்நிறுவனத்துக்கு வழங்கினார். இந்நிறுவனத்தின் பரிசுகள் அனைத்தும் மிலானில் உள்ள அலுவலகத்திலும், பரிசுப் பணம் சூரிக்கிலும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிறுவனத்தின் முதலாவது பரிசு 1961 இல் 1 மில்லிய சுவிஸ் பிராங்க் நோபல் பரிசு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 1962ம் ஆண்டுக்குப் பின்னர் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 1978 இல் அன்னை தெரேசாவுக்கு வழங்கப்பட்டது. 1978 முதல் ஆண்டு தோறும் நால்வருக்கு பின்வரும் துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது: ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசுகள் ("Fukuoka Asian Culture Prizes") ஆசியப் பண்பாடுகளின் தனியான மற்றும் பல்வேறு தன்மைகளையும் பேணுவதற்கு ஆற்றிய பணிகளுக்காக உலகளாவிய ரீதியில் தனிநபருக்கோ அல்லது ஓர் அமைப்பிற்கோ வழங்கப்படும் பணப்பரிசாகும். இப்பரிசை ஜப்பானின் ஃபுக்குவோக்கா நகரமும், யோக்கடோப்பீயா நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இப்பரிசுத் திட்டத்தில் பெரும் பரிசு ("the Grand Prize"), கல்விப் பரிசு ("the Academic Prize"), கலை மற்றும் பண்பாட்டுக்கான பரிசு ("Arts and Culture Prize") ஆகிய மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 3 மில்லியன் யென் பணப்பரிசு வழங்கப்படுகிறது. கிழக்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்காசியா (பாகிஸ்தானுக்குக் கிழக்கேயுள்ள நாடுகள்) ஆகிய பகுதிகளில் இருந்து விருதாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். சில்வியோ பெர்லுஸ்கோனி சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, பிறப்பு செப்டம்பர் 29, 1936) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். ஃபோர்சா இத்தாலியா அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி இன்று அக்கட்சியின் தலைவர் ஆவார். அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் ("University of Ceylon") 1942 முதல் 1978 வரை இலங்கையில் இயங்கிய ஒரேயொரு பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் இலங்கையின் பல இடங்களிலும் இருந்தன. 1978 ம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டு பேராதனை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், வித்தியோதயா பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு சுயாதீனமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஹமித் கர்சாய் ஹமித் கர்சாய் (பாஷ்தூ மொழி: حامد کرزي) ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார். கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இமாசலப் பிரதேசத்தில் அரசியல் அறிவியல் படித்தார். ஆப்கான் சோவியத் போரில் முஜாஹிதீன் வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் அமெரிக்காவின் சிஐஏ இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது. டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார். இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர். காந்தாரம் காந்தாரம் (ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் தொடங்கி "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது. முகம்மது உமர் முல்லா முகமது ஒமர் முஜாஹித் (அல்லது முகமது உமர்) (பாஷ்தூ மொழி: ملا محمد عمر مجاهد, பிறப்பு 1959, கந்தஹார் அருகில் இறப்பு ஏப்ரல் 2013) ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர். 1996 முதல் 2001 வரை தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் 11வது தலைவராக இருந்தார். 2001இல் நடந்த அமெரிக்காவின் ஆப்கான் தாக்குதலுக்கு பிறகு இவர் தலைமறைவானார். ஒசாமா பின் லாடனுக்கும் அல் காயிதாவிற்கும் உதவியதால் அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபர், ஒபாமாவிற்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் கடித்தத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் 2013 ஏப்ரலில் இறந்தார் என 2015ம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டது. 622 கிபி 622 (DCXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு சாதாரண ஆண்டாகும். விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவினைத் தழுவிய அனைத்து மாவீரர் உறுப்பினர்களின் விபரங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தியாகராசா பரதராசன் கப்டன் மொறிஸ் (செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற புனைபெயரைக் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் ஆனார். மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மரணம் அடைந்தார்., இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் மரணமடைந்தார். மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார். 1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால், மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார். 1989, மே முதலாம் நாள், இந்திய அமைதிப் படையுடனான மோதலில் உயிரிழந்தார். இவருடன் லெப்.றம்போ மற்றும் வீரவேங்கை சிறீ ஆகியோரும் உயிரிழந்தனர். கடலடிச் சமவெளி கடலடிச் சமவெளி (Abyssal plain) கிடை மட்டமாக அல்லது மிகக் குறைந்த சரிவுடன் காணப்படும் கடலுக்கு அடியில் உள்ள தரை ஆகும். இவை புவியில் உள்ள கூடிய சமதளமாகவும், வழுவழுப்பாகவும் அமைந்த பகுதிகளுள் அடங்கும். இப் பகுதிகள் மிகக் குறைவாகவே ஆராயப் பட்டுள்ளன. ஏறத்தாள 40% கடல் தரையை உள்ளடக்கியுள்ள இக் கடலடிச் சமவெளிகள் 2,200 தொடக்கம் 5,500 மீட்டர்கள் வரையான ஆழத்தை எட்டுகின்றன. இவை கண்ட எழுச்சியின் அடிப்பகுதிக்கும் நடுக்கடல் முகடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளன. கீழ்ப் புவியோடு உருகி மேல் தள்ளப்பட்டு நடுக் கடல் முகட்டுப் பகுதியில் கடல் மட்டத்துக்கு வந்து புதிய கடல் புறவோட்டை உருவாக்குகின்றன. இப் புதிய கடல் புறவோடு பெரும்பாலும் எரிமலைப் பாறைகளாக இருப்பதுடன் கரடுமுரடான நிலவமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இக் கரடுமுரடான தன்மையின் அளவு நடுக் கடல் முகடுகள் பரவும் வீதத்தில் தங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடும் இப் பரவல் வீதங்கள் கூடிய வேகம், நடுத்தர வேகம், குறைவான வேகம் என மூன்றாகப் பகுக்கப்படுகின்றன. கூடிய வேகம் என்பது ஆண்டுக்கு 100 மில்லிமீட்டரிலும் அதிகமானது, நடுத்தரம் ~ 60 மிமி / ஆண்டும், குறைந்த வேகம் ஆண்டுக்கு 20 மில்லிமீட்டரிலும் குறைவானதும் ஆகும். உமர் அல்-பஷீர் உமர் ஹசன் அஹ்மத் அல்-பஷீர் (அரபு மொழி:عمر حسن احمد البشير) சூடான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். எகிப்து இராணுவ அகாடமியில் படித்து 1973இல் எகிப்து இராணுவத்தை சேர்ந்தார். 1980களில் திரும்பி சூடானுக்கு வந்து சூடான் இராணுவத்தில் தளபதியாக இருந்தார். 1989இல் இராணுவ புரட்சி மூலத்தில் முன்னாள் பிரதமர் சித்தீக் அல்-மஹ்தியை வெளியேற்றி பதவியில் ஏறினார். இந்த புதிய இராணுவ அரசு ஷரியாவை பொறுத்து சட்டங்களை மாற்றினார். தேசிய விமோசனத்துக்கு புரட்சி ஆணை சபையின் தலைவர் என்ற புதிய பதவியை படைத்து இதன் மூலம் பிரதமர், இராணுவத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், நாட்டுத் தலைவர் ஆகிய பதவிகளில் ஏறினார். 19 ஆண்டுகளாக நடந்த இரண்டாம் சூடானியப் போர் காலத்தில் இவர் பிரதமராக இருந்தார். இந்தப் போர் முடிந்து 2003இல் தார்ஃபூர் பிரச்சினை தொடங்கியுள்ளது. இப்பிரச்சனையில் ஜஞ்சவீட் படை மேற்கு சூடானில் இருக்கும் மக்களை வன்கலவி மற்றும் கொலை செய்யப்பட்டுள்ளது. இந்தப் படையுக்கு சூடானிய அரசு நிதியுதவி செய்கிறது என்று பல நாடுகள் ஓமார் அல்-பஷீரை குற்றம் சாட்டியுள்ளன. ஜூலை 14, 2008 பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் அல்-பஷீர் மேல் கைது ஆணைப்பத்திரத்தை வெளியிட்டுள்ளது. தார்ஃபூர் போர் தார்ஃபூர் பிரச்சினை அல்லது தார்ஃபூர் போர் ("War in Darfur"), அமெரிக்காவால் குறிப்பிட்ட "தார்ஃபூர் இனப்படுகொலை", சூடானின் மேற்கில் தார்ஃபூர் பகுதியில் நடக்கும் இராணுவ பிரச்சினையாகும். இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போருக்கு வேறுபடியான இந்தப் போர் இனங்களுக்கு இடையில் உள்ளது; வேறு சமய மக்களின் இடையில் இல்லை. சூடானிய இராணுவமும் ஜஞ்சவீட் படை அணி பல போராளி அணிகளுக்கு எதிராக இப்போர் நடைபெறுகிறது. இந்த போராளிகளின் முக்கியமான அணிகள் சூடானிய விடுதலை இயக்கமும் நீதி மற்றும் சமத்துவம் இயக்கமும் ஆகும். சூடானிய அரசு ஜஞ்சவீடை ஆதரவு செய்யவில்லை என்று கூறியுள்ளது, ஆனால் ஜஞ்சவீடுக்கு நிதியுதவி செய்து சூடானிய இராணுவம் சில இடங்களில் ஜஞ்சவீடுடன் சேர்ந்து தாக்குதல் செய்துள்ளது. வறட்சி, பாலைவனமாக்கம், மிகுதியான மக்கள்தொகை ஆகிய காரணங்களால் இப்போர் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மதிப்பின் படி இப்போரில் 400,000 மக்கள் சண்டையினால் அல்லாமல் நோயால் உயிரிழந்தனர். ஐக்கிய அமெரிக்கா இப்பிரச்சனையை இனப்படுகொலை என்று கூறியுள்ளது, ஆனால் ஐக்கிய நாடுகள் அவை இப்படி குறிப்பிடவில்லை. சூடானிய அரசு இப்பிரச்சனையின் உயிரிழந்த மக்களை கீழ்மதிப்பு செய்து சாட்சிகளை கொலை செய்து செய்தியாளர்களை கைது செய்து இப்பிரச்சனையுடைய விளைவை மறைக்கப்பட்டது. ஜூலை 14, 2008 பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் இப்பிரச்சினையில் சூடானிய அரசு செய்த குற்றங்கள் காரணமாக சூடானியத் தலைவர் ஓமார் அல்-பஷீருக்கு கைது ஆணைப்பத்திரத்தை வெளியிட்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ("International Criminal Court", பிரெஞ்சு: "Cour Pénale Internationale") உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை. இன்று வரை பன்னாட்டு நீதிமன்றம் தார்ஃபூர் பிரச்சனை, வடக்கு உகாண்டாவின் பிரச்சனை, கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கில் நடந்த பிரச்சனை, மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பிரச்சனை ஆகிய நாலு நடவடிக்கைகளில் சோதனை செய்துள்ளது. பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது. அண்டனானரீவோ அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) மடகாஸ்கர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி 1,403,449 மக்கள் வசிக்கின்றனர். நடுக்கடல் முகடு நடுக்கடல் முகடு (mid-ocean ridge) அல்லது நடுக்கடல் மலைமுகடு அல்லது கடல் மைய முகடு எனப்படுவது கடலுக்கு அடியில் உள்ள மலைத் தொடர் ஆகும். இது தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் உருவாகிய பிளவு எனப்படும் அமைப்பு அதன் அச்சுக்கு இணையாகக் காணப்படுகிறது. கடல் புறவோட்டில் உள்ள வலுக்குறைந்த இப்பகுதியில் மேற்காவுகை நீரோட்டம் காரணமாக கடல் தளம் பாறைக் குழம்பாக மேலெழும்புகிறது. இக் குழம்பு குளிரும்போது புதிய ஓட்டை ஒருவாக்குகின்றது. ஒரு நடுக்கடல் முகடு, இரண்டு புவிப்பொறைத் தட்டுக்களுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கின்றது. இது விலகல் எல்லை (divergent boundary) என்று அழைக்கப்படுகின்றது. உலகின் நடுக்கடல் முகடுகள் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டு, ஒவ்வொரு கடலினதும் பகுதியாக அமையும் ஒரு பெரிய நடுக்கடல் முகட்டுத் தொகுதியை உருவாக்குகின்றன. இது உலகின் மிக நீளமான மலைத்தொடர் ஆகும். இத்தொகுதியில் இடையீடு இன்றி அமைந்திருக்கும் மிக நீளமான மலைத்தொடரின் அளவு 65,000 கிலோமீட்டர் ஆகும். இத் தொகுதியின் மொத்த நீளம் 80,000 கிலோமீட்டர் ஆகும். மேடை ஒளியமைப்புக் கருவி மேடை ஒளியமைப்புக் கருவிகள் என்பன நாடகம், நடனம் போன்ற நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சிகளுக்கு ஒளி அமைப்பதற்காகப் பயன்படும் கருவிகளைக் குறிக்கும். இவை, தொலைக்காட்சிக் கலையகங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு ஒளியமைப்பதற்கும் பயன்படுகின்றன. பல்வேறு ஒளியமைப்புக் கருவிகள் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காட்சியளித்தாலும், அவைகள் அனைத்தும் பின்வரும் பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன: இவை, கருவியின் பிற கூறுகளை உள்ளே வைத்திருப்பதற்கும், ஒளி வேண்டாத திசைகளில் வெளிச் செல்வதைத் தடுப்பதற்குமான ஒரு உலோக அல்லது பிளாஸ்டிக்குக் கொள்கலன்களாகும். இது, வில்லை அல்லது ஒளிவெளிச் செல்லவதற்கான திறந்த பகுதி தவிர்ந்த, கருவியின் வெளிப்புறம் முழுவதையும் உள்ளடக்குகிறது. இவ் வெளிக்கூடு, வெப்பத்தைக் குறைப்பதற்கும், விளக்கின் செயல் திறனைக் கூட்டுவதற்குமான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்படலாம். பழைய கருவிகள், உருட்டிய அல்லது பொறியிலிட்ட உருக்கினால் அல்லது அலுமீனியத்தினால் ஆனவை. தற்காலத்தில் இக் கூடுகள் அச்சு வார்ப்பட உலோகங்களினால் செய்யப்படுகின்றன. அச்சு வார்ப்பட முறை, கூடுகளை ஒரே கூறாக, மலிவாகவும், நிறை குறைந்தனவாகவும் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. சில கருவிகளின் கூடுகள் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்படுவதுண்டு. இது ஒளி வெளியேறுவதற்காக விடப்பட்டுள்ள வழியாகும். பல விளக்குகளில் வெளியேறும் ஒளிக் கதிரைக் கட்டுப்படுத்துவதற்கு வில்லைகளைப் பயன்படுத்துகின்றன. பரவளைவுத் தெறிப்பி விளக்குகள், ஓர விளக்குகள் என்பன வில்லைகளைக் கொண்டிருப்பதில்லை. தெறிப்பிகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. வில்லை, தெறிப்பி, மற்றும் பிற ஒளிக்கதிரைக் கட்டுப்படுத்தும் கூறுகள் ஒளியியற் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது வெளியேறும் ஒளியின் தரத்தையும் அதன் திசைசார் பண்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு நீள்வளையத் தெறிப்பியில் ஒளி மூலத்தை ஒரு குவியத்தில் அமைக்கும்போது, தெறிக்கும் ஒளி இரண்டாவது குவியப் புள்ளியில் குவியும். இது பொட்டொளியை உருவாக்குகிறது. பரவளைவுத் தெறிப்பியில் ஒளிமூலம் குவியத்தில் இருக்கும்போது, தெறிக்கும் ஒளிக் கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக வெளியேறுகின்றன. ஒளிக்கற்றைகளை வில்லைகளினூடாகச் செலுத்துவதற்காகத் தெறிப்பிகள் ஒளிமூலத்துக்குப் பின்னால் அல்லது அதனைச் சூழ அமைக்கப்படுகின்றன. பல கருவிகளில், விளக்கைத் தொங்கவிடுவதற்கு அல்லது அதனைத் தாங்குவதற்காக "ப" வடிவில் அமைந்த ஒரு தாங்கு சட்டம் பயன்படுகிறது, இது, ஒரு அச்சுப்பற்றிச் சுழலக்கூடியதாக விளக்கின் வெளிக்கூட்டின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். இத் தாங்கிகள், உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் அல்லது சட்டங்களில் பொருத்தப்படுவது வழக்கம். தரையிலும் இவை பொருத்தப்படுவது உண்டு. கருஞ்சிறுத்தைக் கட்சி கருஞ்சிறுத்தைக் கட்சி (ஆங்கிலம்: Black Panther Party), தொடக்கத்தில் முழுப் பெயர் கருஞ்சிறுத்தை தற்காப்புக் கட்சி (Black Panther Party for Self-Defense) 1960கள், 1970களில் இருந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பு தேசிய (black nationalist) அரசியல் கட்சியாகும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தற்காப்பு செய்வது, சமூக உரிமைகளை முன்னேற்றம் செய்வது இக்கட்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. காவல்துறை கொடுஞ்செயலிலிர்நுது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை காப்பாற்றலும் இக்கட்சியின் ஒரு நோக்கமும் இருந்தது. 1966இல் கலிபோர்னியாவின் ஓக்லன்ட் நகரில் ஹியூயி பி. நியூட்டன் மற்றும் பாபி சீலால் தொடங்கப்பட்ட இக்கட்சி தொடக்கத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளது. இக்கட்சியின் தலைவர்கள் சமவுடமையில் நம்பிக்கை கொண்டுள்ளனர், ஆனால் இக்கட்சியின் "கருப்பு தேசியம்" மெய்யியலை சேர்ந்த உறுப்பினர்களில் சிலர் இடது சாரி, சிலர் வலது சாரியை சேர்ந்துள்ளனர். 1967இல் "கருஞ்சிறுத்தை" என்ற இக்கட்சியின் இதழ் முதலாக வெளிவந்தது. 1968இல் இக்கட்சி கலிபோர்னியாவிலிருந்து சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், டென்வர், நியூயார்க் நகரம், பால்ட்டிமோர் போன்ற பல்வேறு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் நகரங்களுக்கு விரிந்தது. இக்கட்சி வளர்ந்ததுக் காரணமாக கருப்பு தேசிய மெய்யியலை விட்டு இன வேறுபாடுகளை கவனிக்காமல் சமவுடமையை மற்றும் பங்களித்துள்ளது. அமெரிக்காவின் வேறு சிறுபான்மை மக்கள் கட்சிகளுடன் சேர்ந்து இக்கட்சியின் உறுப்பினர்கள் வறுமையை குறைக்க, உடல்நலத்தை முன்னேற்ற சேவை செய்துள்ளனர். ஆனால் இக்கட்சியால் செய்த காவல்துறைக்கு எதிராக வன்முறை காரணமாக இக்கட்சியின் வீழ்ச்சி வந்தது. 1967 முதல் 1969 வரை இக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறையில் 9 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்து 56 காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைகள் காரணமாக இக்கட்சி 1977இல் பிரிந்தது. தமிழில் ஆஸ்திரேலியா அரச சேவை அமைப்புகளின் தகவல்கள் பல ஆஸ்திரேலிய அரச அமைப்புகள் மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு இலகுவில் புரியும் மொழியில் தந்து அந்த தகவல்கள் மக்களை சென்றடைவதை தமது கடமையாக கருதுகின்றன. இந்த அடிப்படையில் பல தகவல்கள் தமிழ் மொழியில் இணையத்தில் கிடைக்கின்றன. பொதுவாக இவை மொழிப் பெயர்ப்பாக இருந்தாலும், தமிழ் புலத்தில், இணையத்தில் இவை ஒரு குறிப்பிடத்தக்க தகவல் ஊற்றுக்களாக அமைகின்றன. நாவஹோ மொழி நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது. கெட் மொழி கெட் மொழி (Ket) ரஷ்யாவின் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தில் கெட் மக்களால் பேசிய மொழியாகும். மொத்தத்தில் 550 மக்கள் பேசிய இம்மொழி டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் யெனிசேய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். . தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. புசும்புரா புசும்புரா அல்லது புஜும்புரா (Bujumbura) புருண்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டாங்கனிக்கா ஏரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரத்தில் 1994 கணக்கெடுப்பின் படி 300,000 மக்கள் வசிக்கின்றனர். விளையாட்டு கலைச்சொற்கள் கார்கில் போர் கார்கில் போர் (ஆங்கிலம்: "Kargil War") அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது. மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன. இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது. 1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 - 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் போரில் (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. கார்கில் நகரம், ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில், இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில் உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும். ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் வழியாக செல்கிறது. ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும். இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது கோட்டையை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும் என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிறிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் "பத்ர் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது. இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம். பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் "மேக்தூத் நடவடிக்கைக்குப்" பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார். ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார். கார்கில் போரை மூன்று முக்கிய கட்டங்களாகப் பகுக்கலாம். முதல் கட்டம், பாகிஸ்தான் தனது படை வீரர்களை இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி முக்கிய நிலைகளை ஆக்கிரமித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை NH1, பாகிஸ்தான் இராணுவத்தால் தாக்கக்கூடிய எல்லைக்குள் வந்தது. இரண்டாம் கட்டம், பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் ஊடுருவியிருப்பதை இந்திய இராணுவம் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக எல்லையில் படைகளைக் குவித்தது. இறுதிக் கட்டம், இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் படைகளுடன் போரிட்டு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முக்கிய நிலைகளைத் தங்கள் வசமாக்கினர். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தனது படைகளைக் கார்கிலில் இருந்துத் திரும்பப்பெற்றது. குளிர் காலங்களில் பனி படர்ந்த மலைகளில் உரைய வைக்கும் குளிர் நிலவும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கோட்டுக்கருகில் இருக்கும் தத்தம் இராணுவ நிலைகளைத் தற்காலிகமாக காலி செய்து பின் வாங்கிச் செல்வது வழக்கம். குளிர்காலம் முடிந்த பின் காலியாக விடப்பட்ட தத்தம் இராணுவ நிலைகளை மீண்டும் உபயோகப்படுத்துவர். ரோந்துப் பணிகள் வழக்கம் போல் தொடரும். பிப்ரவரி 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் தனது இராணுவ நிலைகளோடு சேர்த்து, கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்த இந்தியாவின் இராணுவ நிலைகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது. பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த வடக்குக் காலாட்படைப் பிரிவு மற்றும் சிறப்பு சேவைகள் குழுவைச் சேர்ந்த வீரர்கள் இந்திய நிலைகளை ஆக்கிரமித்து அவற்றுக்கருகில் இராணுவ தளங்களை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் படையினருக்கு காஷ்மீரி கொரில்லாக்களும் ஆப்கான் கூலிப்படையினரும் உதவியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் படையினர், முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸிலுள்ள மார்ப்போ லா முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதிக்குக் கிழக்கில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி மற்றும் சியாச்சென் பனி மலைக்குத் தெற்கேயுள்ள துர்தோக் ஆகிய பகுதிகளில் ஊடுருவினர். இந்திய ரோந்துப் படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமித்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. பாகிஸ்தானின் குண்டு வீச்சுகள் இந்தியப் படையினரின் கவனத்தை ஈர்த்து, ஊடுருவும் பாகிஸ்தான் படையினருக்குத் திரைமறைவாக செயல்பட்டது. இந்த இரண்டு காரணங்களால் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியப் படையினர் கவனிக்கத் தவறினர். ஆனால் மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில், ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து கிடைத்த ஊடுருவல் குறித்தத் தகவலால் படாலிக் எல்லைப்பகுதியில், கேப்டன் சௌரப் காலியா தலைமையில் இந்தியப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இவர்களை ஊடுருவியிருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கினர். இதன்மூலம் எல்லையில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஊடுருவியவர்கள் ஜிகாதிகளாகத்தான் இருக்கக்கூடுமெனவும் ஓரிரு நாட்களில் அவர்களை அப்புறப்படுத்திவிட முடியும் எனவும் இந்திய இராணுவத்தினர் நினைத்தனர். பின்னர், எல்லைக்கோடு நெடுகவும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதும், தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டதைவிட பல மடங்கு பெரிதாகத் திட்டமிடப்பட்டிருப்பது இந்தியப் படையினருக்குப் புலனானது. ஆக்கிரமிப்பாளர்கள், 130 சதுர கி.மீ முதல் 200 சதுர கி.மீ வரை இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியதாக அறியப்படுகிறது. இந்திய அரசு, ஆக்கிரமிப்புக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க விஜய் நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லையில் 2,00,000 இந்திய போர் வீரர்களைக் குவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்கில் நகரம் கரடு முரடான மலைப் பகுதியில் அமைந்திருந்ததால் பெரிய படைகளை அங்கு கொன்டு செல்ல முடியாமல் போனது. எனவே இந்திய படையினர் சிறு குழுக்களாக முன்னேறினர். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 20,000 வீரர்களோடு இணைந்து சில ஆயிரம் இந்திய துணை இராணுவ வீரர்களும் இந்திய வான்படையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த இராணுவ நடவடிக்கையில் கார்கில்-திரஸ் பகுதிகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். போரின் உச்ச நிலையில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். இந்தியத் தரைப்படையினருக்கு உதவும் வகையில் இந்திய வான்படை, "சஃபேத் சாகர்" நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அப்போது நிலவிய வானிலை மற்றும் போர் நடைபெற்ற மலைகளின் உயரம் ஆகியவை காரணமாக இந்நடவடிக்கையின் பயன் இந்தியத் தரைப்படையினருக்கு முழுமையாகக் கிட்டவில்லை. "தல்வார் நடவடிக்கையின்" கீழ் இந்தியக் கடற்படை, பாகிஸ்தான் துறைமுகங்களை (முக்கியமாக, கராச்சி துறைமுகத்தை) முற்றுகையிட தயாரானது. இந்தியக் கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப்பிரிவுகள் இனைந்து, வடக்கு அரபிக்கடலில் தீவிரமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் கடல் வர்த்தகம் நசியும் அபாயம் ஏற்பட்டது. போரின் போது பாகிஸ்தான் பிரதமாரக இருந்த நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானிடம் அப்போது ஆறு நாட்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மட்டுமே இருந்தன என்று பின்னாளில் கூறினார். காஷ்மீர் நகரம், இமய மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர். NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 மிதிவெடிகளை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கதிரலைக் கும்பாக்கள் மூலமாகவும் கண்காணித்தது. இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது. நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த மலை முகடுகளைக் கைப்பற்றுவது இந்திய இரானுவத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. எனவே இந்தியப் படைகள், டைகர் ஹில், திரஸிலிருந்த தோலோலிங் பகுதி ஆகியவற்றை முதலில் தாக்கின. அடுத்ததாக சியாசென் பனிமலைக்கு அருகில் இருந்த படாலிக்-துர்தோக் பகுதிகளை இந்தியப் படைகள் தாக்கின. NH 1D தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்த புள்ளி 4590 மற்றும் திரஸ் பகுதியின் மிக உயரமான புள்ளி 5353 ஆகியவை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளாகும். இப்பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் படையினரால் NH 1D தேசிய நெடுஞ்சாலையை எளிதாகத் தாக்க முடிந்தது. இந்தியப் படையினர், சூன் 14 அன்று புள்ளி 4590 பகுதியைப் பாகிஸ்தான் படையினரிடமிருந்துக் கைப்பற்றினர். இம்முயற்சியில்தான் இந்தியப் படையினர் கார்கில் போரிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. சூன் மாத மத்தியில் அநேகமாக அனைத்து நிலைகளையும் இந்தியப் படையினர் கைப்பற்றிவிட்டபோதிலும் போரின் இறுதி வரை திரஸ் பகுதிக்கு அருகில் இருந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது. NH 1D தேசிய நெடுஞ்சாலை இந்தியப் படையினர் வசம் வந்த பிறகு, பாகிஸ்தான் படையினரை எல்லைக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்க வைப்பதில் இந்திய இராணுவத்தின் கவனம் திரும்பியது. தோலோலிங் யுத்தத்தின் முடிவில் இந்தியாவின் கை ஓங்கத்தொடங்கியது. தோலோலிங் யுத்தத்தில் பாகிஸ்தான் படையினருக்குக் காஷ்மீர் போராளிகள் உதவினர். பாகிஸ்தானியரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சில இராணுவ நிலைகள் பலமாக எதிர்த்து நின்றன. டைகர் ஹில் பகுதி (புள்ளி 5140), போரின் இறுதிக் கட்டத்தில்தான் வீழ்ந்தது. டைகர் ஹில்லில் பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கியிருந்துத் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இந்தியத் தரப்பில் ஐந்து வீரர்களும், பாகிஸ்தான் தரப்பில் பத்து வீரர்களும் டைகர் ஹில்லில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். பல யுத்தங்கள் முன்னர் அறியப்படாத மலைகளின் உச்சியில் நடந்தன. பெயரற்ற அந்த மலைகளை அடையாளப் படுத்த புள்ளி எண்களே பயன்படுத்தப்பட்டன. போரின் உச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பீரங்கிகளை இந்திய இராணுவம் போர்களத்தினுள் கொண்டு வந்தது. அவ்வகையில் போஃபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றின. இந்தியப் படையினர் போஃபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதலை விரிவாக்கினர். ஆனால் பல இடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவற்றை உபயோகப்படுத்த முடியாமல் போனது. இடப்பற்றாக்குரை நிலவிய இடங்களில் இந்திய வான்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிராஜ் 2000எச் ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் படையினரின் பதுங்குக்குழிகள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டன. இந்திய வான்படை, மிக்-27 ரக போர் விமானமொன்றை இயந்திரக் கோளாரால் இழந்தது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிக்-21 ரக போர் விமானமொன்று பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய வான்படையைச் சேர்ந்த எம்.ஐ-8 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பாகிஸ்தான் படையினரின் நில வான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. மே 27, 1999 அன்று வான்படை லெப்டினன்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாரால் வெடித்ததால் அவ்விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலம் வெளியேறினார். அவரைத் தேடிச் சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலமாகத் தப்பினாலும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்து, சித்தரவதை செய்து கொன்றனர். பல முக்கிய இரானுவ நிலைகளில் இந்தியா, பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றைக் கையாண்டாலும், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் எல்லைக்கு அப்பால் இருந்ததால் அவர்களை பின்வாங்கச் செய்வது கடினமான காரியமாக அமைந்தது. எனவே, இந்திய இராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக நேரடித் தாக்குதல்களை நடத்தியது. போர்களம் உயரமான மலைகளின் (18,000 அடி) உச்சியில் அமைந்திருந்தமையால் அவ்வகைத் தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேர வெளிச்சத்தில் தாக்குவது அபாயகரமானதால், இந்தியப் படையினர் இரவின் இருளில் ஆனால் கடும் குளிரில் தாக்குதல் நடத்தினர். நேரடியாகத் தாக்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் படையினரின் போக்குவரத்து வழிகளை அடைத்துக் கொண்டு முற்றுகை இடும் போர் உத்தியும் ஆராயப்பட்டது. ஆனால் இதைச் செய்வதானால் இந்தியப் படையினர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல வேண்டி இருந்தது. போர் மேலும் பெரிதாகும் என்பதாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதாலும் இந்தியா அந்த முறையைக் கையாளவில்லை. போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்டனர். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தன. கார்கிலில் மோதல்கள் ஆரம்பமானவுடன், பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை நாடியது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்து, அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனுக்கு அவரது உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் தனது படைகளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை இப்பிரச்சனையில் தலையிட மறுத்துவிட்டார். வாஷிங்டன் ஒப்பந்தப்படி, சூலை 4 ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின் போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்ப்ட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தனர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன. இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் "கார்கில் வெற்றி நாள்" என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தானியப் படைகள் தாண்டி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததால் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன. பாகிஸ்தான் அரசு, பழியை காஷ்மீர் போராளிகள் மீது சுமத்த முயன்றாலும் அது பலனளிக்கவில்லை. போர் ஆய்வாளர்கள், மிகவும் உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது தேர்ந்த பயிற்சியுடைய இராணுவத்தினரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று; அதை, மிகக் குறைவான பயிற்சியுடைய போராளிகளால் செய்ய இயலாதது என்று கூறினர். மேலும் பாகிஸ்தான் அரசு கார்கில் பிரச்சனையில் தனது ஈடுபாட்டை மறுத்து வந்தாலும், இரு பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு, கார்கில் போரில் தீரத்துடன் போரிட்டதற்காக, பாகிஸ்தானின் மிக உயரிய வீர விருதான "நிஷான்-இ-ஹைதர்" விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 90 பாகிஸ்தான் படை வீரர்களுக்கு (பெரும்பான்மையானவர்கள், இறந்தவர்கள்) பல்வேறு வீர விருதுகள், கார்கில் போரில் அவர்களது சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது பாகிஸ்தான் கார்கில் போரில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக அமைந்தது. பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதிக்கும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை இந்தியா இடைமறித்து பதிவு செய்தது. அதில் அவர்கள் பேசியதிலிருந்து கார்கிலை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் படையினரே என்பது உறுதியானது. ஆனால் அதையும் பாகிஸ்தான் மறுத்தது. கார்கில் பிரச்சனை குறித்து விமர்சிக்கப்பட்ட போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே சர்ச்சைக்குரியது என்று கூறியபோதும், கார்கில் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையோடு இணைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியபோதும் பாகிஸ்தான் படைகள்தான் கார்கிலில் ஊடுருவியது என்பது வெட்டவெளிச்சமானது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை சந்தித்தார். ஆனால் கிளின்டன், நவாஸ் ஷெரீஃபை கண்டித்ததோடு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெருமாறு வலியுறுத்தினார். பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. கொலோன் மாநாட்டில் ஜி8 நாடுகள், பாகிஸ்தானின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்ததைக் கண்டித்தது. பாகிஸ்தானின் நீண்டகால நட்பு நாடான சீனாவும், படைகளைத் திரும்பப் பெறுமாரு பாகிஸ்தானை வலியுறுத்தியது. ஆசியான் போன்ற பல கூட்டமைப்புகள் கார்கில் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். பில் கிளின்டனும் நவாஸ் ஷெரீஃபும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்று நவாஸ் ஷெரீஃப் கூறினார். கார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது. இரு நாட்டு மக்களின் கருத்துகளிலும் ஊடகங்கள் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவில் மின்னணு ஊடகவியல் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக போர் நடந்த இடங்களிலிருந்து பல காட்சிகள் இந்தியாவில் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. பல இணையதளங்கள் போர் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை வழங்கின. தெற்காசியாவில் நேரடியாகத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் போரேயாகும். ஊடகங்களின் ஆழமான தாக்கத்தால் போரின்போது மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு வளர்ந்தது. ஊடகங்களின் அதீத ஈடுபாட்டால் முரண்பாடான செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை கட்டுப்படுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் ஊடகங்களைத் தற்காலிகமாக தடை செய்தது. பாகிஸ்தான் அரசால் இயக்கப்படும் ஊடகமான "பிடிவி" என்ற தொலைகாட்சி நிலையமும், "டான்" என்ற பாகிஸ்தான் நாளிதழின் இணையவழிப் பதிப்பும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் இச்செயலை, ஊடகங்களின் சுதந்திரத்தை இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று சாடின. ஆனால் இந்திய ஊடகங்கள், அவை தேசத்தின் பாதிகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவிகள் என்றன. இந்திய அரசாங்கம், "தி டைம்ஸ்", "தி வாஷிங்டன் போஸ்ட்" போன்ற அயல்நாட்டு ஊடகங்களில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் போராளிகளுக்கு உதவி வருவது குறித்து விளம்பரம் வெளியிட்டு இந்தியாவிற்கு ஆதரவு திரட்டியது. போர் தீவிரமடைந்த சமயத்தில் ஊடகங்களும் தீவிரமாக போர் குறித்த செய்திகளை வெளியிட்டன. பல இந்திய தொலைகாட்சி நிலையங்கள், வளைகுடா போரில் சி.என்.என் தொலைகாட்சியில் வெளியானது போன்ற படங்களை ஒளிபரப்பின. பாகிஸ்தான் படைகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று, போர்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தூர்தர்ஷன் தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிலையத்தையும் தாக்கியது. இந்தியாவின் ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களைவிட வெளிப்படையான தன்மையுடையதாக இருந்ததற்கு இந்தியாவில் தனியார் ஊடகங்கள் பெருமளவில் இருந்ததே காரணமாகக் கருதப்படுகிறது. கராச்சியில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடையே நடந்த கூட்டத்தில், இந்திய அரசு தனது நாட்டு மக்களையும் ஊடகங்களையும் நம்பியது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை செய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்கள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவாக இருந்தன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள், போருக்கு பாகிஸ்தானே காரணம் என்ற கருத்தைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் ஊடகங்களைவிட அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்திய ஊடகங்கள், இந்திய மக்களிடையே தேசப்பற்று உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகமாக்கியது எனவும் அது இந்திய இராணுவ நடவடிக்கைகளின் உறுதியை அதிகரித்தன எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போர் தீவிரமடைந்தபோது பாகிஸ்தானின் வாதங்கள் சர்வதேச நாடுகளிடையே வலுவிழந்தன. இது இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க உதவியது. போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகளுமே பேரழிவு ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) கொண்ட நாடுகளாகையால், போர் முற்றி அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என பல நாடுகள் கவலையடைந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1999 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியிருந்தன (இந்தியா 1974 ஆம் ஆண்டே தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தி இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையே முதலாவதாகும்). தெற்காசியப் பகுதியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு கார்கில் போர் ஒரு அறிகுறி பல அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதச் சோதனை செய்த சில மாதங்களிலேயே கார்கில் போர் துவங்கியதால், அதை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் விரும்பின. பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஷம்ஷாத் அஹ்மெத், மே 31 அன்று, "போர் பெரிதானால் அதை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்காது" என்று கூறியது சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. இதை உலக நாடுகள் பாகிஸ்தான் விடுத்த அணு ஆயுத மிரட்டல் என்றே எண்ணின. பாகிஸ்தான் நாடுளுமன்றத் தலைவர், "ஆயுதங்களைத் தேவைப்படும்போது பயன்படுத்தாவிடில் அவற்றை உருவாக்கியதே அர்த்தமற்றதாகி விடும்" என்று கூறியது உலக நாடுகளின் எண்ணத்தை உறுதிபடுத்தியது. இவ்வாறு இரு நாடுகளிலிருந்தும் பலரால் விடுக்கப்பட்ட மறைமுக அறிக்கைகளை ஆணு ஆயுதப் போருக்கான எச்சரிக்கை என்றே பல நாடுகள் எண்ணின. சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிகழ்ந்த அணு ஆயுதப் போட்டி போல இதுவும் வளரக்கூடும் என உலக நாடுகள் அஞ்சின. பாகிஸ்தான் 1999 ஆம் ஆண்டு நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்னர் அது பெற்ற அணு ஆயுதத் தற்காப்பின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடத் துவங்கியதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள். பாகிஸ்தான் தனது அணு ஆயுத ஏவுகணைகளை எல்லைப் பகுதிகளுக்கு அருகில் கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தபின் பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபராக விளங்கிய பில் கிளின்டன் பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்கச் செய்யும்படி கூறினார்; மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், தனக்கு அணு ஆயுத ஏவுகணைகள் எல்லைக்கருகில் நகர்த்தப்பட்டது குறித்து எதுவும் தெரியாது என்றும் இந்தியாவும் அதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். டாக்டர். சஞ்சய் பத்ரி மகாராஜ், இந்தியா போரின்போது குறைந்தபட்சம் ஐந்து அணு ஆயுத ஏவுகணைகளத் தயார் நிலையில் வைத்திருந்ததாக 2000 ஆம் ஆண்டு மே மாதம் கூறினார். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் அவரது கூற்றை உறுதிபடுத்த அவரால் இயலவில்லை. போரில் ஏற்பட்ட இழப்புகள், சர்வதேச அரங்கில் குறைந்து வரும் ஆதரவு மற்றும் போர் முற்றி அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற்றார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃப் தனது அனுமதி பெறாமலே அணு ஆயுத ஏவுகணைகளை எல்லையில் நிலை நிறுத்தியதாக தனது சுய சரிதையில் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அப்போது செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவே இல்லை என்று பர்வேஸ் முஷாரஃப் பின்னர் தெரிவித்தார். கார்கில் போர் அணு ஆயுதப் போராக மாறியிருந்தால் பாகிஸ்தானுக்கு அது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும். பேரழிவு ஆயுதங்களின் அபாயம் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களையும் உள்ளடக்கியதே ஆகும். இந்தியா தடை செய்யப்பட்ட இரசாயனங்களை காஷ்மீர் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதங்களில் உபயோகித்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாயுத் தடுப்பு முகமூடிகளை ஆதாரமாகக் கொண்டு, பாகிஸ்தான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டதாக இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பும், இந்தியா மீது பாகிஸ்தான் சுமத்திய இரசாயன ஆயுதம் குறித்த குற்றங்கள் ஆதாரமற்றவை என்று தீர்மானித்தனர். கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய நிதியறிக்கையில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. போரின்போது நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு அதிகரித்தது; பல பிரபலங்கள் கார்கில் போரில் இந்திய இராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய வான்படையைச் சேர்ந்த விமானி அஜய் அஹுஜா, பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானபோது பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தரப்பில் இழப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது; உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புதிதாக இராணுவத்தில் இணைந்திருந்த இளம் வீரர்களாவர். போர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் "அட்லான்டிக் சம்பவத்தில்" பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது. போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது. ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை ஊடகங்கள் கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "அணு ஆயுதம் பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது. இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார். போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் வேலி அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது. போருக்கு அடுத்து நடந்த பதிமூன்றாவது இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. போருக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்தன; போரைப் பெரிதாக வளரவிடாத இந்தியாவின் நிலையை அமெரிக்கா பாராட்டியது. போரின்போது, பீரங்கிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஆளில்லா விமானங்கள், குண்டுகள் போன்றவற்றை அளித்து உதவிய இஸ்ரேலுடனான உறவையும் இந்தியா பலப்படுத்திக் கொண்டது. போரின் முடிவில் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது. உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. "சுப்பிரமண்யம் அறிக்கை" என்று அறியப்படும் அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கார்கில் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியத் தவறியதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ஊடகங்கள், சுரிந்தர் சிங் தனது உயர் அதிகாரிகளிடம் கார்கில் ஊடுருவல் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் அளித்த தகவல்கள் இராணுவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது என்றும் கூறின. அரசாங்க வழக்கத்திற்கு மாறாக, "சுப்பிரமண்யம் அறிக்கை" பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் சில பாகங்கள் மட்டும் அரசாங்க இரகசியங்களைப் பற்றியது என்ற காரணத்திற்காக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. குழுவின் தலைவர் சுப்பிரமண்யம், "அந்த பாகங்கள் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அத்திட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர்களின் பங்குகள் பற்றிய தகவல்கள் அடங்கியவை" என்று பின்னாளில் கூறினார். சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் காரணமாக பலவீனமான பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது. பாகிஸ்தான் படையைச் சேர்ந்த வடக்கு காலாட்படைப்பிரிவு அதீத இழப்புகளைச் சந்தித்ததால் பாகிஸ்தான் படைகளின் மனஉறுதி குலைந்தது. உயிரிழந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் சடலங்களை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானின் வடபகுதிகளில், மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பெரும்பான்மையான இழப்புகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், குறைந்தபட்சம் 4000 பாகிஸ்தான் வீரர்கள் அப்போரில் உயிரிழந்ததாகக் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பர்வேஸ் முஷாரஃப், "ஒரு முன்னாள் பிரதமரே தனது படைகளை குறைத்து மதிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார். இந்தியத் தரப்பு இழப்புகள் பாகிஸ்தானுடையதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரஃபால் நியாயப்படுத்தப்பட்ட கார்கில் போர் குறித்து இன்றளவும் விவாதம் செய்கின்றன. பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக, பாகிஸ்தான் படைகள் கார்கிலில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர், படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர். பாகிஸ்தான் படைத் தலைவர்களும் பிரதமரின் முடிவால் ஏமாற்றமடைந்தனர். ஆனால் செண்ட்காமின் முன்னாள் படைத் தளபதியும் முஷாரஃபின் நண்பருமான அந்தோனி சின்னியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்க உத்தரவிடுமாறு முஷாரஃப்தான் கோரியதாகக் கூறியுள்ளனர். முஷாரஃபின் மூத்த அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான அப்துல் மஜீத் மாலிக், கார்கில் போர் குறித்து, "பிசககான காரியம்" என்று கூறியதோடு, முஷாரஃபையும் கடுமையாக சாடினார். இந்தியாவுடன் அப்பகுதியில் போரிடும் நிலைமையில் பாகிஸ்தான் படைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நவாஸ் ஷெரீஃபின் அரசுதான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது என்றும் கூறியுள்ளார். மேலும், கார்கிலில் ஊடுருவியவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் படையைச் சேர்ந்தவர்களே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் கூட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில், பர்வேஸ் முஷாரஃப், அவர் மீது இராணுவ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பாகிஸ்தான் வான்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஃபஸி பொகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வான்படையின் தலைமை தளபதி பி. க்யூ. மேதி, "கடற்படையும் வான்படையும் கார்கில் விவகாரத்தில் தலையிட்டிருந்தால் அது போரை பெரிதாக்கியிருக்கும்" என்று கூறியுள்ளார். இதை முஷாரஃப் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, அவர் விமானப்படை விமானங்களை ஸ்கார்டு பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தினார். கார்கில் போரின்போது பாகிஸ்தான் கடற்படை பெரும்பாலும் விலகியே இருந்தது; நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. போருக்கான முழு பழியையும் பாகிஸ்தான் பிரதமர், பர்வேஸ் முஷாரஃப் மீது சுமத்தியதால் அவர்கள் இருவருக்குமிடையே இணக்கமற்ற சூழ்நிலையே நிலவியது. அக்டோபர் 12, 1999 அன்று பர்வேஸ் முஷாரஃப், இராணுவப் புரட்சி செய்து நவாஸ் ஷெரீஃபிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். பாகிஸ்தானின் நாடுளுமன்றத் தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசீர் பூட்டோ, கார்கில் போர் பாகிஸ்தானின் மிகப்பெரிய பிசகு என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணும் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், "நேர விரயம்", "கார்கில் போரால் எவ்வித நன்மையும் விளைந்திருக்க முடியாது", "கிழக்கு பாகிஸ்தான் சோகத்தைவிட கார்கில் போர் மிகப்பெரிய துக்கம்", "சரிவரத் திட்டமிடப்படாத கார்கில் தாக்குதல் பல பாகிஸ்தான் படை வீரர்களின் உயிரை பலி வாங்கியது" என்று பலவாறாக கார்கில் போர் குறித்து விமர்சித்துள்ளனர். கார்கில் ஆக்கிரப்பு பாகிஸ்தானுக்கு இழப்புகளை மட்டுமே ஏற்படுத்தியதால், பாகிஸ்தான் ஊடகம் அதை கடுமையாக விமர்சித்தது. கார்கில் போருக்குக் காரணமானவர்களை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று பலர் கோரினாலும் அது நிறைவேற்றப்படவில்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் கூற்றுப்படி, நவாஸ் ஷெரீஃப் கார்கில் போர் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்; ஆனால், முஷாரஃபின் மீது இராணுவ விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்த அக்குழுவின் அறிக்கை முஷாரஃபால் மறைக்கப்பட்டுவிட்டது. கார்கில் ஆக்கிரமிக்கப்படப்போகும் செய்தி ஆக்கிரமிப்புத் தொடங்குவதற்கு 11 மாதங்கள் முன்னரே இந்தியாவிற்குத் தெரியும் என்றும் அதனால் இந்தியா எளிதாக பாகிஸ்தான் படைகளைக் கார்கிலில் தோற்கடித்து விட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜம்ஷெத் குல்சர் கியானி, "பாகிஸ்தான் பிரதமருக்கு கார்கில் மீது தாக்குதல் நடத்தப்படப் போகும் செய்தி தெரிவிக்கப்படவில்லை" என்று கூறியதால் போரின் மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன. காஷ்மீர் விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பம் கார்கில் போர் மூலம் நிறைவேறினாலும், இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போர் நடைபெற்றதால், அது பாகிஸ்தானை எதிர்மறையாக பாதித்ததோடு பாகிஸ்தானின் நம்பகத்தன்மையையும் உலக நாடுகளிடையே குறைத்து விட்டது. சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்தன. அமெரிக்க அதிபர், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியது, பாகிஸ்தானுடனான உறவுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது. போருக்குப் பின் பாகிஸ்தான் படைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போரில் வெகு சிறப்பாக போரிட்ட வடக்குக் காலாட்படைப்பிரிவு இராணுவத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்ளப்பட்டது. போர் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அது அலட்சியம் செய்தது. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த பல நடவடிக்கைகளில் காணப்பட்டது போலவே இப்போரிலும் பாகிஸ்தான் படைப்பிரிவுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் மோசமாக இருந்தது. முன்னர் நடந்த போர்களில் செய்த அதே தவறுகளை கார்கிலிலும் பாகிஸ்தான் செய்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. கார்கில் போர் இந்திய உளவுத்துறையின் கவனக்குறைவாலும் பாகிஸ்தானின் தவறானத் திட்டமிடலாலும் விளைந்தது என்றும் கார்கில் ஆக்கிரமிப்பு குறித்து முஷாரஃபுக்கும் அவரது நான்கு நெருக்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தெரியும் என்றும் முஷாரஃபின் நம்பிக்கைக்குரிய ஓய்வுபெற்ற பாகிஸ்தான் தளபதியான ஷாகித் அசீஸ் கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தின் மொத்த இழப்புகள் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் 453 வீரைகள் பலியானதாக பாகிஸ்தான் அரசு கூறியது. அமெரிக்க உளவுத்துறை, குறைந்தபட்சம் 700 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃப், 4000 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். அவரது கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 3000 முஜாஹிதீன் போரளிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகக் கூறியுள்ளது. இந்தியா, 1,042 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கணித்துள்ளது. முஷாரஃப் தனது குறிப்புகளில், 357 வீரர்கள் மரணமடைந்ததாகவும் 665 வீரர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவ இணையதளத்தில், 400 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி ஒருவர் பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் எட்டு பேரை இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர். அந்த எட்டு வீரர்களையும் இந்தியா, 13 ஆகஸ்டு, 1999 அன்று பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. இந்தியா, தனது தரப்பில் 527 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 1,363 வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. திரஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் இந்திய இராணுவம், போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. டைகர் ஹில் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம், போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் பச்சன் எழுதிய கவிதை இந்நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்க்கு அருகில், விஜய் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, போர் வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள், பாகிஸ்தான் படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கார்கில் போர் வெற்றியின் பதிமூன்றாவது ஆண்டுவிழாவின் நினைவாக, 15 கிலோ எடையுடைய இந்திய தேசியக் கொடி கார்கில் நினைவுச் சின்னத்தில் நிறுவப்பட்டது. கார்கில் போர் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறந்த கரு கிடைத்தது. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்பட்டன. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் பட்டியல் பின்வருமாறு: "டேங்கோ சார்லி" போன்ற பல திரைப்படங்கள் கார்கில் சம்பவம் குறித்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. இன்றும் கார்கில் தொடர்பான கதைகளுடைய "கீர்த்தி சக்ரா" போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கார்கில் போர் நடந்த முடிந்த சமயத்தில் துடுப்பாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கின. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போது போரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. அப்போட்டிகள் அந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டிகளாக அமைந்தன. சுசுமு ஓனோ சுசுமு ஓனோ ("Susumu Ōno", ஜப்பானியம்: 大野 晋, Ōno Susumu; ஆகஸ்ட் 23, 1919-ஜூலை 14, 2008) என்பவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. 1957 இல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரிய மொழி, மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகளுடனும் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மொழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார். திராவிட மொழிகளின் தாக்கம் ஜப்பான் மொழியில் நிறைந்து கிடப்பதை அறிந்தார். குறிப்பாக கிமு 500 - கிபி 300 களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றினால் இப்படியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவரது வாதம். சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தமிழ் படிக்கத் தமிழ்நாட்டுக்கு வந்த சுசுமு ஓனோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1970களின் பிற்பகுதியில் இவர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். இக்கருத்துகள் ஆரம்பத்தில் 1970 இல் "சுசுமு ஷீபா" என்பவராலும் பின்னர் "அகீரா ஃபூஜிவாரா" (1981) என்பவராலும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஓனோவின் ஆய்வுகள் ஒலி, சொற்கள், இலக்கணம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் போன்றவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். இவர்களது ஆய்வுகள் பல ஜப்பானிய மொழியியல் ஆய்வாளர்களிடையே வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின. ஓனோவின் பணியைப்பற்றி கமில் சுவலபில் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்". சுசுமு ஓனோ தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்கள் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார். இலங்கையைச் சேர்ந்த தமிழாய்வாளர்கள் பேராசிரியர்கள் ஆ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் போன்றவர்கள் ஓனோவுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். 64 ஆண்டு கிபி 64 (LXIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். 1-ஆம் நூற்றாண்டு கிபி 1ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கிபி 1 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோமப் பேரரசின் அதிகரித்த கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ரோமப் பேரரசின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. இதில் முக்கியமாக 43ம் ஆண்டில் குளோடியஸ் மன்னனின் கீழ் பிரித்தானியா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகுஸ்டஸ் அவனது நீண்ட கால அரசாட்சியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினான். இந்நூற்றாண்டின் கடைசியில் 68 இல் நீரோ மன்னனின் இறப்பிற்குப் பின்னர் "ஜூலியோ-குளோடிய வம்சம்" முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சிறிது கால உள்நாட்டுப் போரின் பின்னர் வெஸ்பாசியான் மன்னன் மீண்டும் நாட்டில் திர்ரத் தன்மையை ஏற்படுத்தினான். சீனா ஹான் வம்சத்தினால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் (8-23) சின் வம்சம் நாட்டை ஆண்டது. 23 இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர். புதிய ஏற்பாட்டின் படி, டிபேரியசின் ஆட்சியில் இயேசு கிறிஸ்து புதிய கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தார். அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இவரின் சீடர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் இயேசுவின் செய்திகளை எடுத்துச் சென்று ரோம் நகரிலும் அறிமுகப்படுத்தினர். இவர்கள் ரோம மன்னரால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்டனர் (64). இது பல நூற்றண்டுகளுக்கு இறுதியில் முதலாம் கொன்ஸ்டண்டீன் மன்னனால் அதிகாரபூர்வ சமயமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தது. மெய்வல்லுநர் மெய்வல்லுனர் அல்லது விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் நபரைக் குறிக்கின்றது. மெய் உடலையும், வல்லுனர் என்றால் ஒரு துறையில் தேர்ச்சியும் திறன்களும் பெற்றோரைக் குறிக்கும். அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை சிறப்பாக சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகையால் மெய்வல்லுனர்கள் என்போர் தமது விளையாட்டில் தமது உடலை சிறப்பாக ஈடுபடுத்த வல்லோரைக் குறிக்கும் எனலாம். உடலைச் சிறப்பாக சுட்டி நின்றாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது. தெறிப்புவகைத் தொலைநோக்கி தெறிப்புவகைத் தொலைநோக்கி அல்லது தெறிப்புத் தொலைநோக்கி என்பது, ஒரு ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இது ஒரு தனியான அல்லது கூட்டு வளைவாடிகளைப் பயன்படுத்தி ஒளியைத் தெறிக்கச் செய்து தொலைவில் உள்ள பொருட்களின் விம்பங்களை உருவாக்குகிறது. தெறிப்புவகைத் தொலைநோக்கி 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில், வில்லைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட முறிவுவகைத் தொலைநோக்கிகள் பயன்பாட்டில் இருந்தன. நிறப்பிறழ்ச்சி எனும் தோற்றப்பாடு காரணமாக இவற்றின் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. தெறிப்புத் தொலைநோக்கிகள் இதற்கு ஒரு தீர்வாக அமைந்தன. தெறிப்புத் தொலைநோக்கிகளிலும் வேறுவிதமான பிறழ்ச்சிகள் இருந்தாலும், இவ்வகையில் அதிக விட்டம் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. இவ்வகைத் தொலைநோக்கிகள் பெரும்பாலும் பெரிய ஆய்வுத் தொலைநோக்கிகளாக மட்டுமே காணப்படுகின்றன. தெறிப்புத் தொலைநோக்கிகள் பலவிதமான வடிவமைப்புக்களில் உள்ளன. விம்பங்களின் தரத்தை உயர்த்துவதற்காக அல்லது விம்பத்தை வசதியான இடத்தில் உருவாக்குவதற்காக வேறு ஒளியியற் கூறுகளும் இவ்வகைத் தொலைநோக்கிகளில் பயன்படுவது உண்டு. இத்தாலியப் பேராசிரியரான நிக்கோலோ சுக்சி (Niccolò Zucchi) என்பவரே 1616 ஆம் ஆண்டில், முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியைச் செய்தவர் ஆவார். இதைப் பயன்படுத்தி 1630 ஆம் ஆண்டில், வியாழக்கோளின் இரண்டு வளையங்களையும், செவ்வாய்க் கோளில் புள்ளிகள் இருப்பதையும் இவர் அவதானித்தார். எனினும் குழிவு ஆடியைத் துல்லியமாகச் செய்ய முடியாமையும், ஆடியை மறைக்காமல் விம்பத்தைப் பார்ப்பதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்ததாலும், பிறர் இவரது வடிவமைப்பைப் பின்பற்றவில்லை. 1663 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் கிரரரி என்பவர் வெளியிட்ட "ஒப்ட்டிக்கா புரொமோட்டா" "(Optica Promota)" என்னும் நூலில் இரண்டு குழிவில்லைகளைப் பயன்படுத்தித் தொலைநோக்கிகளைச் செய்வது பற்றி விளக்கியிருந்தார். இதுவே முதலாவது நடைமுறைச் சாத்தியமான தெறிப்புத் தொலைநோக்கிக்கான வடிவமைப்பு எனலாம். எனினும், செயல்படும் தொலைநோக்கி இன்னும் பத்து ஆண்டுகள் கழிந்த பின்பே உருவாக்கப்பட்டது. இதனைச் செய்தவர் ராபர்ட் ஹூக் என்பவர். முதலாவது நடைமுறையில் செயல்படக்கூடிய தொலைநோக்கியை வடிவமைத்து உருவாக்கியவர் ஐசாக் நியூட்டன் ஆவார். இது 1668 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவ் வடிவமைப்பில், தெறித்து வரும் ஒளியை 90 பாகையினால் திருப்பி விடுவதற்காகச் சாய்வாக அமைக்கப்பட்ட சிறிய ஆடி ஒன்று முதன்மை ஆடியின் குவியத்துக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளே வரும் ஒளியை மறைக்காமல் விம்பத்தைப் பார்க்கக் கூடிய வழி ஏற்பட்டது. இவரது தொலைநோக்கி நிறப்பிறழ்ச்சிப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக அமைந்தது. வளைவான முதன்மை ஆடியே தெறிப்புத் தொலைநோக்கியின் அடிப்படை ஒளியியல் கூறு. இது அதன் குவியப் புள்ளியில் விம்பத்தை உருவாக்கும். இவ்விடத்தில் ஒளிப்படத் தகட்டையோ அல்லது ஒரு எண்முறை உணரியையோ அமைத்து விம்பத்தைப் பதிவு செய்யமுடியும். இதில் கண்வில்லை ஒன்றை வைத்து நேரடியாகவோ, ஒளியை ஆடிமூலம் வேறிடத்தில் உள்ள கண்வில்லைக்குத் தெறிக்கச்செய்தோ அவதானிக்கவும் முடியும். ஆடிகள் நிறப் பிறழ்ச்சிக்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்கினாலும், வேறு வகைப் பிறழ்ச்சிகளை உண்டாக்கவே செய்கின்றன. பொதுவாக இவை கோளப் பிறழ்ச்சியை உருவாக்கக்கூடும். இதில், ஆடியின் நடுப் பகுதியும், விளிம்புப் பகுதியும் ஒரே குவியத்தைக் கொண்டிருப்பதில்லை. தொடக்கத்தில் ஹபிள் தொலைநோக்கியில் இருந்த அமைப்புக் குறைபாடும் இதுவே. கோள வடிவம் அல்லாத வேறு வடிவங்களில் ஆடிகளை உருவாக்குவதன் மூலம் இக் குறைபாட்டை நீக்க முடியும். நியூட்டன் வகைத் தொலைநோக்கி பொதுவாக ஒரு பரவளைவுரு முதன்மை ஆடியைக் கொண்டிருக்கும். ஆனால், 12 சமீ அல்லது அதிலும் குறைவான, சிறிய துளை அளவு கொண்டவையும், f/8 அல்லது அதைவிடக் குறைவான குவிய விகிதத்தைக் கொண்டவையுமான தொலைநோக்கிகளுக்குக் கோளவுரு ஆடிகளே போதுமானவை. ஒரு துணை ஆடியான ஒரு தளவாடி ஒளியைத் தெறித்து, தொலைநோக்கிக் குழாயின் பக்கவாட்டுக்கு அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட முதன்மை ஆடியைக் கொண்ட தொலைநோக்கிகளோடு ஒப்பிடும்போது எளிமையானதும், மலிவானதுமான தொலைநோக்கி இதுவே. ஆர்வலத் தொலைநோக்கி செய்யுனர் மத்தியில் இது புகழ் பெற்றதாக விளங்குகிறது. பிரியங்கா காந்தி பிரியங்கா காந்தி ("Priyanka Gandhi", பிறப்பு: 1972 சனவரி 12) இந்திய அரசியல்வாதி. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியும், பெரோசு காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 2019 சனவரி 23 இல் இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார். இவரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர். இவர் (புது டில்லியில்) ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். வியு2பிஜிஒய் (VU2PGY) என்ற பெயர்கொண்ட பொழுதுபோக்கு வானொலியை இயக்குபவராக இருந்தார். அரசியலில் பிரியங்கா காந்தி, காந்தி குடும்பத்தின் வாரிசாகவே சில காலம் பேசப்பட்டார். தனது தாயார் மற்றும் சகோதரருக்கு உதவியாகவே இருந்தபோதிலும், தனது குடும்பத்திற்கே(தனது குழந்தைகளுக்கே) முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆரம்பத்தில் இவர் காங்கிரஸ் கட்சிக்காக உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அரசியலில் தனக்கு சிறிதளவே ஆர்வம் உள்ளதாகக் கூறினார். 1999 இல் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் "நான் மனதளவில் மிகத்தெளிவாக இருக்கின்றேன். மக்களை நான் விரும்புகின்ற அளவுக்கு, அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் இல்லாமலேயே அவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய இயலும்[. "ஆயிரம் முறை சொல்லிவிட்டேன், நான் அரசியலில் சேருவதற்கு ஆர்வம் காட்டவில்லை ..." என்ற அவரின் பதிலின் மூலம் அவர் அரசியலில் சேருவது குறித்த கேள்விகளுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. இருப்பினும் இவர் தனது தாயார் மற்றும் சகோதரரின் தொகுதிகளான ரே பரேய்லி மற்றும் அமேதி ஆகியவற்றிற்கு தொடர்ந்து விஜயம் செய்ததன் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வந்தார். இத்தொகுதியில் இவர் மிகப் பிரபலமானவராவார். இவர் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடும். ஒவ்வொரு தேர்தலின் போதும் "அமேதியில், "பிரியங்கா தேர்தலில் போட்டியிடவேண்டும்"" என்ற முழக்கம் பிரபலமாக எழுப்பப்படும். (இந்த முழக்கம் அமேதியிலிருந்து பிரியங்காவுக்காக [தேர்தலில் நிற்பதற்காக] எழுப்பப்படுவதாகும்). இவர் தொடர்ந்து சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், சமசிந்தனை உடையவராகவும் மற்றும் இவரின் தாயாருக்கு "அரசியல் விஷயங்களில் நல்ல ஆலோசகராகவும்" செயல்படுவதாக நம்பப்படுகின்றது. 2004 இன் இந்திய பொதுத்தேர்தலில் இவரது தாயாரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலாளராகவும் மற்றும் இவரது சகோதரர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்பார்வை செய்தும் இவர் உதவினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் சமயத்தில் அவர் கூறியதாவது, "அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதாகும். நானும் ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். இன்னும் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு அதை செய்வேன் என்று கூறினார்.". இக்கருத்து இவர் உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்காக சில பொறுப்புகளை ஏற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிபிசியின் ஹிந்தி சேவைக்கு இவர் அளித்த பேட்டியில், இலங்கையில் நடக்கும் சண்டையைப்பற்றி குறிப்பிடுகையில், "எது உங்களை தீவிரவாதியாக மாற்றியதோ அதற்கு நீங்கள் காரணம் இல்லை, ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை உங்களை தீவிரவாதியாக உருவாக்கும்” எனக்கூறினார். 2007 இல் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது இவர் அமேதி, ரேய்பரேலி பகுதியில் உள்ள பத்து தொகுதிகளில் கவனம் செலுத்தி, இரண்டு வாரங்களை செலவிட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சித் தொண்டர்களிடையே நிலவிய மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார். முழுவதுமாக இம்மாநிலத்தில் உள்ள 402 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை மட்டுமே வெல்ல வழி வகுத்தது. இது கடந்த பத்தாண்டுகளில் இக்கட்சி வென்ற மிக குறைந்த அளவாகும். எப்படி இருப்பினும், இவருடைய மற்றும் பிரியங்காவின் ஒருங்கிணைக்கும் தன்மையும், ஓட்டுக்களைப் பெறும் திறமையும் வெளிப்பட்டது. 2002 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் பத்து தொகுதிகளில்(அமேதி ரேபரேலி) இரண்டு தொகுதிகளை மட்டும் வென்ற இக்கட்சி இப்போது பத்து இடங்களை வென்றதன் மூலம் பரவலான முன்னேற்றம் வெளிப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றப்போதும் தற்போது மீதம் உள்ள எட்டு இடங்களை மட்டுமே இக்கட்சி வென்றுள்ளது. இது கட்சிக்குள் ஆரம்பத்தில் அதிருப்தியை உண்டாக்கியது, எனினும் கட்சி வளர்ச்சி அடைந்தது. ரேய்பரேலியின் ஐந்து தொகுதிகள் மற்றும் அமேதியின் தொகுதிகளின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. ரேபரேலி தொகுதியை கவனிக்கவும், 1993 முதல் வெற்றிபெற்று வரும் முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர், இதே காங்கிரசிலிருந்து விலகி சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றியைப் பெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. போபோர்ஸ் ஊழலுக்குப்பின் ஆயுத வியாபாரியான ஒட்டோவியோ குவோற்றோச்சி, 6 பிப்ரவரி 2007 அன்று அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்திய அரசாங்கம் அவரை இந்தியா கொண்டுவர தவறிவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் இருபது வருடங்களாக வளர்ந்த ஒட்டோவியோவின் மகன் மஸ்ஸிமோ குவோற்றோச்சியை இதில் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியது. இந்தியாவுக்கு புதியவர்களான இருவரின் தாயார்களும் பிப்ரவரி 17 அன்று ஒரு விருந்தில் சந்தித்துக் கொண்டனர். இருப்பினும் இதை காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் திட்டவட்டமாக மறுத்தார். ஒரு பேட்டியில் அவர் கூறுகையில்: "குவோற்ரோட்ச்சியின் விசாரனையில் அரசாங்கம் எப்போதும் தலையிடவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். இதைப்போலவே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இது தொடர்பாக எதையும் செய்யவில்லை,". முடிவில்லாத யுகங்கள் இவ்விஷயத்தில் தொடர்கின்றன, மாசினோ இந்தியாவில் இருந்தபொழுது, குவோற்ரோச்சி கைதானது பற்றி சி பி ஐ ஒப்புக்கொள்ளத் தாமதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குவிய விகிதம் ஒளியியலில், குவிய விகிதம் (Focal ratio, f-ratio, f-stop, அல்லது relative aperture) என்பது, ஒளியியல் தொகுதி ஒன்றின் நுழைவுத் துளைக்கும், வில்லையின் குவியத் தூரத்துக்கும் இடையிலான விகிதம் ஆகும். எளிமையாகச் சொல்வதானால், குவிய விகிதம் என்பது, குவியத் தூரத்தை, ஒளித் துளையின் விட்டத்தால் வகுக்க வரும் எண்ணாகும். ஒளிப்படவியலில் முக்கியமான ஒரு கருத்துருவான வில்லை வேகம் என்பதன் கணிய அளவான இது அலகில் எண் ஆகும். குவிய விகிதம் "f/#" பெரும்பாலும், "N" ஆல் குறிக்கப்படுகிறது. இத் தொடர்பு பின்வருமாறு அமையும். இங்கே formula_2 குவியத் தூரமும், formula_3 ஒளித்துளையின் விட்டமும் ஆகும். "#" என்பதை ஒரே குறியீடாக எழுதுவது வழக்கு. "#" க்கான குறிப்பிட்ட பெறுமதி எண் குறியை ஒரு பெறுமானத்தால் பதிலிடுவதன் மூலம் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, குவியத்தூரம், ஒளித்துளை விட்டத்திலும் 16 மடங்கு ஆயின், குவிய விகிதம் 16 அல்லது formula_4. ஒளிப்படவியல் ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும். ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός ("phōtos"), φῶς இன் ஆறாம் வேற்றுமை ("phōs"), "ஒளி" மற்றும் γραφή ("graphé") "கோடுகளால் சுட்டிக்காட்டல்" அல்லது "வரைதல்", ஆகியவற்றின் கருத்தைக் கொண்ட "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது. பிரேசில் (Brazil) நாட்டின், கேம்பினாஸ் (Campinas) பகுதியில் வசித்த ஹெர்குலஸ் புளோரன்ஸ் (Hercules Florence) ஒரு பிரஞ்சு ஓவியரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் பிரஞ்சு மொழி வடிவச் சொல், போட்டோகிராபி (photographie) என்பதைத் தன் தனிக்குறிப்பேட்டில் பயன்படுத்திருந்தார். இது 1834ல் எழுதப்பட்டதாக பிரேசிலிய வரலாற்றாசிரியர் உறுதிப்படுத்துகிறார். ஜோஹன் வோன் மேட்லர் (Johann von Maedler), பெர்லின் (Berlin) நாட்டின் வானியலாளர். இவர் 1839ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் வோஸ்ஸிசே ஸீய்டங் ("Vossische Zeitung") எனும் ஜெர்மன் செய்தித்தாளில் ஒளிப்படவியல் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்காக இவர் 1932ல் நடைபெற்ற ஜெர்மன் புகைப்பட வரலாற்றரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டார். புகைப்படக்கலை என்பது பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு விளைவாகும். சுமார் 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார். நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், நிழல் படங்கள் குறிப்பிட்ட காலம் கழித்து இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தது அறியப்பட்டது. நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சியானது அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது. டால்போட், ஒளிகசியும் எதிர்மறையை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் எதிர்மறைகளில், இது மிகப்பழமையான ஒளிப்படக் கருவியின் எதிர்மறையாக இருக்கலாம். ஒளிப்படத்திற்கான காட்சிகளைப் பதிவு செய்வதில் பல்வேறு வகையான ஒளிப்பட நுட்பங்களும், ஊடகங்களும், படப்பதிவு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்படக் காட்சிகளைப் பதிவு செய்வதில் பங்கேற்கும் பல்வேறு கூறுகள்: ஒரே வண்ணம் அல்லது பல வண்ண புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்டு, பிரதியிட்ட படங்களைப் பக்கம், பக்கமாக வைத்துப் பார்க்கும்போது, பிரதியிடப்பட்ட ஒரே மாதிரியான இரண்டு படங்களின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஈடாகப் போட்டியிட்டு மனிதப் பார்வைக்கு முப்பரிமாண வடிவம் போலத் தோற்றமளிக்கும். இம்முப்பரிமாணப் படிம ஒளிப்படப் பதிவானது, பிற்காலத்தில் இயக்கத்துடன் கூடிய சலனப் படங்கள் பதிவு செய்வதற்கு முன்னோடியாக அமைந்தது. இது பேச்சுவழக்கில் "3-டி" ஒளிப்படம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகவும் துல்லியமான பெயர் முப்பரிமாண ஒளிப்படம் அல்லது ஸ்டீரியோஸ்கோபி (stereoscopy) என்பதாகும். இத்தகைய ஒளிப்படக் கருவிகள் நீண்ட காலங்களாக நழுவச் சுருள்களையே பயன்படுத்தி வந்தன. மிகச் சமீபகாலமாக முப்பரிமாணப் படிம படப் பதிவில் எணினி மின்னணுவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துடித்திறப் பேசி ஒளிப்படமிகள் மூலமும் இதைச் செய்ய முடியும். ஒரே நேரத்தில், நேர் எதிர்த் திசைகளில், இரண்டு ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு இருபுறத்தில் இருந்தும் ஒரே காட்சியை படப்பதிவு செய்வது இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு எனப்படும். இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு முறையில், ஒரே நேரத்தில் காட்சிப் பொருள் மற்றும் ஒளிப்பதிவாளர் என இரு திசைகளிலும் அல்லது ஒரே நேரத்தில் ஒரு புவியியல் அமைப்பில் இருபுறமும் இரட்டை ஒளிப்பதிவு செய்ய இயலும். இதனால் ஒரு தனிப் படத்தில் மற்றொரு துணை கதை அடுக்கு சேர்த்து காட்சியை முழுமைப்படுத்த முடியும். ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம் ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் கோயில் இலங்கையில் திருகோணமலையில் பாலையூற்று என்ற ஊரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இதன் கருவறையிலே ஏழு அடி உயர புற்று காணப்படுகிறது. இங்கு பூசை செய்பவர் ஒரு பெண். எல்லோரும் அவரை "கோவில் அம்மா" என்றே அழைக்கின்றனர். சிலவேளைகளில் பூசை செய்யும் போது பாம்பு வந்து பூவை இழுத்துச் செல்வதை நாம் காணலாம். அம்மா, புற்றில் வளரும் லிங்கத்துக்கே பூவை எடுத்துச் சென்று படைப்பதாகக் கூறுகின்றார். லுசாக்கா லுசாக்கா (Lusaka) சாம்பியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாம்பியாவின் தெற்கு பகுதியில் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரத்தில் 1,084,703 மக்கள் வசிக்கின்றனர். சாம்பியாவின் நாலு முக்கிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்திலிருந்து சாம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. கிம் ஜொங்-இல் கிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல்-சுங்கின் பிள்ளை ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல்-சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார். வட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை. விஜயநகரக் கட்டிடக்கலை விஜயநகரக் கட்டிடக்கலை என்பது, கிபி 1336–1565 காலப்பகுதியில், தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த விஜயநகரம் இப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. இதனால் இக் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள், மாளிகைகள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன. இவற்றுள் விஜயநகரத்தினுள் அடங்கும் ஹம்பி பகுதியில் இருக்கும் கட்டிடச் சின்னங்களின் தொகுதி யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்தவேலைகளும் செய்யப்பட்டன. பழைய தலைநகரப் பகுதியில் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கட்டிடச் சின்னங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவற்றுள் 56 சின்னங்கள் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படுகின்றன. அறுநூற்று ஐம்பது சின்னங்கள் கர்நாடக அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. இன்னும் 350 வரையிலான சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டி உள்ளன. விஜயநகரக் கட்டிடக்கலையைச் சமயம் சார்ந்தவை, அரசு சார்ந்தவை, குடிசார்ந்தவை என மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி இதற்கு முன், இப்பகுதிகளில் நிலவிய சாளுக்கிய, ஹோய்சல, பாண்டிய, சோழர் கட்டிடக்கலைகளின் இயல்புகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது. விஜயநகரப் பேரரசும், ஹோய்சாலப் பேரரசும் ஆட்சி புரிந்த சுமார் 400 ஆண்டுகளாக இளகல் தீப்பாறை (chloritic schist) அல்லது மாவுக் கற்களே (soapstone) கோயில் கட்டிட வேலைகளில் விரும்பப்பட்டன. மாவுக்கல் செதுக்குவதற்கு இலகுவானது என்பதால் சிற்பவேலைகளுக்கும் இது பெரிதும் பயன்பட்டது. விஜயநகரக் காலத்தில், பாதமி சாளுக்கியப் பாணிக் கட்டிடங்களுக்கு உள்ளூர்க் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில சிற்பங்களிலும், புடைப்புச் சிற்பங்களிலும் மாவுக்கற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காணலாம். கருங்கற் பயன்பாடு சிற்பவேலையின் செறிவைக் குறைத்துவிட்டாலும், கருங்கல் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது என்பதால் கோயில் கட்டிடங்களுக்கு விரும்பப்பட்டது. இங்கே பயன்பட்ட கருங்கற்கள் செதில்களாக உடையக்கூடியனவாக இருந்ததால், முன்னைய காலத்தைப் போல் உயர் தரம் வாய்ந்த சிற்பங்கள் மிகச் சிலவற்றையே உருவாக்க முடிந்தது. சிற்பங்களில் பயன்பட்ட கற்களில் காணப்பட்ட சீரற்ற மேற்பரப்பை மறைப்பதற்காக, சிற்பிகள் சாந்துப் பூச்சுக்களைப் பூசி மேற்பரப்பை வழுவழுப்பு ஆக்கியதுடன், நிறங்களும் பூசி அழகுபடுத்தினர். விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் ராய கோபுரங்கள் என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டன. தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில் கோபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள கோயில் கோபுரங்கள் ஆகியவை ராய கோபுரங்களுக்கு நல்ல எடுத்துக் காட்டுகள் ஆகும். இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட அழகூட்டல்கள் காணப்படும். புல்வாய் புல்வாய் ("Blackbuck") என்பது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 கிமீ (40-60 மைல்) வேகத்தில் பாய்ந்து செல்லும். இவ்விலங்கு ஆந்திரப்பிரதேச மாநில விலங்காகும். இம் மானினத்தில் மிகுந்த பாலியல் ஈருவத்தோற்றம் உண்டு, உருவத்தில் பெண்னைவிட ஆண் பெரியது. ஆண் சராசரியாக 34 முதல் 45 கிலோ வரையிலும்; பெண் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடை கொண்டிருக்கும்; பருவமடைந்த ஆண் புல்வாய் கறுத்த உடல்மயிர்ப் போர்வையும், திருகுக்கொம்புகளையும் (சுரிக்கொம்பு) கொண்டிருக்கும். சில ஆண் புல்வாய்களின் உடல்மயிர்ப் போர்வை பருவத்திற்கேற்ப பழுப்பு முதல் கறுப்பு நிறமாக மாறும். இளங்கலைகளும், பெண் புல்வாய்களும் பழுப்பு நிற உடல்மயிர் போர்வையுடன் காணப்படும். பெண் புல்வாய்களுக்கு கொம்புகள் இல்லை. புல்வாய்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை. இவை அகன்ற சம தரை வெளிகளை வாழிடமாகக் கொண்டவை. இவ்விடங்களில் விளையும் புற்களையே உணவாக உட்கொள்ளும். இதை தவிர்த்து சில வேளைகளில் காடுகளுக்கு அருகிலுள்ள வயல்களில் உள்ள பயிர்களையும் மேயும். புல்வாய்கள் உணவிற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பெரும்பாலும் அகன்ற சம தரை வெளிகளையே தேர்வு செய்கின்றன; ஏனெனில், இவ்விடங்களில் கொன்றுண்ணிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்களைத் தேர்வு செய்கின்றன. இவை தொலைவில் இருந்தே எதிரிகளின் வரவைக் கவனித்துவிடும். ஒரு கிழ புல்வாயே மந்தையின் காவலாக இருக்கும். இப்புல்வாய் எதிரிகளின் வரவை எழும்பித் துள்ளி எல்லா மான்களையும் எச்சரிக்கும்; உடனே மந்தையிலுள்ள மான்கள் அனைத்தும் உயர்ந்து எழுந்து துள்ளி ஒடும். இவை ஏறக்குறைய 3 மீ (10 அடி) உயரம் வரை செங்குத்தாக துள்ளும். இவ்வின மான்கள் வெப்பம் மிகுந்த கோடை காலங்களில் பல்வேறு உடற்செயலியல், நடத்தை மாற்றங்கள் மூலம் நீர் பற்றாக்குறை தங்கள் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகவும் குறைந்த அளவில் சிறுநீர், மலம் கழித்தல், பகற்பொழுதில் நடவடிக்கைகள் ஏதுமின்றி இருத்தல். இருபாலும் தன்னுடைய 1.5 முதல் 2 ஆண்டுகளில் பருவமடைகின்றன. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும் மார்ச்சு முதல் மே வரையிலும் ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலும் மிக கூடுதலான இனப்பெருக்கங்கள் நடக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும். சராசரியாக ஒரு ஆணின் எல்லை 1 முதல் 17 ஹெக்டர் வரையிலும் இருக்கும். ஆண் தன்னுடைய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான புல்வாய்களை அதிக காலம் வைத்திருக்கும். ஆண் தன்னுடைய எல்லையை 2 வாரம் முதல் 8 மாதம் வரை பாதுகாக்கும். இவை தங்களுடைய எல்லைகளை சிறுநீர், மலம், ஒரு வகையான தூண்டுசுரப்பை மூலம் குறித்து வைத்துக்கொண்டு, அந்த எல்லையைச் சுற்றிச் சுற்றி வரும். அப்பொழுது வேறொரு ஆண் தன் எல்லையில் நுழைந்தாலோ வேறு வகையான எல்லைச் சிக்கல்கள் வரும்பொழுதோ, தன்னுடைய தோற்றத்தை வைத்தும் எச்சரிக்கை சைகைகள் எழுப்பியும் எல்லையைப் பாதுகாக்கும். மிகவும் அரிதாகக் கொம்புகளைக் கொண்டு முட்டி மோதி சண்டைகள் நடக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 10-12 ஆண்டுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. புல்வாய்கள் ஒரு ஆணின் எல்லையில் நுழையும் முன்பு அங்கிருக்கும் சிறுநீர், மலத்தை தூண்டுசுரப்பை நுகர்ந்து அந்த எல்லைக்குள் செல்வது குறித்து முடிவு செய்யும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 5 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கும். குட்டி ஈன்ற இரண்டு வாரங்களில் தாய் அடுத்த சினைக்குத் தயாராகும். ஈன்ற குட்டியை தாய் புற்களால் ஆன படுக்கையில் படுக்கவைத்திருக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு மிக தொலைவான இடங்களுக்கு குட்டியை அழைத்துச் செல்லாது. ஆண் புல்வாய்கள் குட்டிகளின் பராமரிப்பில் ஈடுபடா. இவ்விலங்கின் வாழ்விடம், புல்வெளிகள் திருத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற செயல்களால் மிகவும் பிளவு பட்டுள்ளது. தவிர, காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் புல்வாய்களின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் ஆகியிருக்கின்றன. மேலும், இவ்விலங்கின் வாழ்விடம் சீர் கெட்டமையால் இவை அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களாலும் கொல்லப்படுகின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் புல்வாய்களின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தல் ஆகும். முற்காலத்தில் புல்வாய்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. இன்று அங்கு 20,000 க்கும் அதிகமான புல்வாய்கள் காணப்படுகின்றன. ஆங் சான் ஜெனரல் ஆங் சான் ("Aung San"; பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர். ஆங் சான் பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார். சட்டம் தலைப்புகள் பட்டியல் நீதிநூல் காலம் தமிழ் இலக்கியத்தில் கி.பி. 100 இருந்து கி.பி. 500 வரையிலான காலப்பகுதி நீதிநூல் காலம் எனப்படுகிறது. இந்தக் காலப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்றும் வகைப்படுத்துவர். இந்த காலப்பகுதில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு என்ற 18 நூல்களின் தொகுப்பில் 12 நீதிநூல்கள் (மு. வரதராசன்). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இயற்றப்பட்டது இக்காலத்திலேயே. கர்ணம் மல்லேஸ்வரி கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறீக்காகுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் என்பவர் இந்திய துப்பாக்கி சுடு வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஏதன்சில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004 ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான். இவர் இந்தியத் தரைப்படையில் பணியாற்றி 2013இல் ஓய்வு பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நரேந்திர மோதியின் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு கீழுள்ள செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் எட்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரு வெண்கலப் பதக்கங்களும் வளைதடிப் பந்தாட்டதுக்காகப் பெற்றுள்ளது. 2008 வரை, தனியாட்கள் 4 பதக்கங்களை வென்றுள்ளார்கள். 2008 இல் தனியாட்கள் ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்களைப் பெற்றார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு. இது தவிர குடியேற்றக்கால ஆங்கிலேயர் இந்தியா சார்பாக 1900 போட்டியில் பங்குபற்றி இரு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார். இருப்பினும் அவரின் பதக்கத்தை மொத்த எண்ணிக்கையில் கணிக்கிடுவது பற்றி கருத்து வேறுடுபாடுகள் உள்ளன. இவை மொத்தம் 11 பதக்கங்கள். "முதன்மைக் கட்டுரை: 2008 ஒலிம்பிக்கில் இந்தியா" நினைவுச் சின்னம் நினைவுச் சின்னம் ("Monument") என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம். ஓர் இடத்தின் அழகை மேம்படுத்துவதற்காகவும் இவை பயன்படுகின்றன. வாஷிங்டன் டி. சி., புது தில்லி, பிரேசிலியா போன்றவை உள்ளிட்ட உலகின் பல நகரங்கள் நினைவுச் சின்னங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு முன்னரே, நகரின் பொது இடங்களை ஒழுங்கமைக்கும் நோக்கில் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் அமைவிடம் பற்றிய எண்ணம் உருவானது. பழமையான நகரங்களில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஏற்கனவே முக்கியமான இடங்களிலேயே அமைந்திருக்கும். சில வேளைகளில் குறிப்பிட்ட நினைவுச் சின்னங்களைக் குவியமாக வைத்துப் பழைய நகரங்கள் மீள்வடிவமைப்புச் செய்யப்படுவதும் உண்டு. பொதுவாக, நினைவுச் சின்னங்கள் அவற்றின் சூழலில் இருந்து வெளிப்பட்டு நிற்பதற்காக அளவில் பெரியவையாக அமைக்கப்படுவது உண்டு. எனினும் நினைவுச் சின்னங்கள் அளவில் பெரியவையாக அமையவேண்டும் என்பதில்லை. செயற்பாட்டுக்குரிய அமைப்புகள் அவற்றின் பழமை, பருமன், வரலாற்று முக்கியத்துவம் என்பன காரணமாக நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுவது உண்டு. சீனப் பெருஞ் சுவர் அதன் பழமை, அளவு என்பவற்றினால் ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. பிரான்சில் உள்ள ஓராதூர்-சர்-கிளான்ஸ் என்னும் ஊர் அங்கு இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுக்காக நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. அரசியல், வரலாற்றுத் தகவல்களை உணர்த்துவதற்காகவும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. இவை சமகால அரசியல் பலத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவது உண்டு. பல்வேறு வெற்றித் தூண்கள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலைகள் போலப் பல நாடுகளில் அமைக்கப்படும் அரசியல் தலைவர்களது சிலைகள் என்பன இவ்வகையைச் சார்ந்தவை. நினைவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து, பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ நிலையானதாகவோ தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வெவ்வேறு நோக்கில் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு வெற்றிச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் விடுதலையின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது அடிமைத்தனத்தின் சின்னமாக உணரக்கூடும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேர்லின் நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட பேர்லின் சுவர், கிழக்கு ஜேர்மனியின் ஆதரவாளர்களால், மேற்குலக அரசியல் கோட்பாடுகளில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும்; அதேவேளை, மேற்கு நாடுகளின் ஆதரவாளர்கள் அதனை ஒரு பாசிச, அடக்குமுறைச் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க கட்டிடக்கலைச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகள், தஞ்சைப் பெரிய கோயில் போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர். நோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை, வேறிடங்களுக்கு அகற்றப்பட்டமை, ஈராக்கில் சதாம் உசைனின் தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருந்த லித்துவேனியாவில் இவ்வாறு அகற்றப்பட்ட சோவியத் காலச் சிலைகளின் காட்சிக்காகவே குருத்தாஸ் பூங்கா (Grūtas Park) எனப்படும் தனியார் காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே இவ்வாறான 86 சிலைகள் உள்ளதாக அறியப்படுகின்றது. சில குடியரசு நாடுகளில் கூட வழமையான ஆட்சி மாற்றங்களின் போது நினைவுச் சின்னங்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது உண்டு. உள்நாட்டுப் போர்களின்போது அமைக்கப்படுகின்ற நினைவுச் சின்னங்கள் பல சூழ்நிலைகளில் குறைந்த வாழ்நாள் கொண்டவையாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்களான பாரிய புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றிய சில ஐரோப்பிய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர். நினைவுச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருவதுடன், அவையே நீண்டகாலம் உழைக்கக் கூடியனவாகவும், பண்டைக்காலப் பண்பாடுகளின் புகழ்பெற்ற குறியீடுகளாகவும் விளங்குகின்றன. எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கப் பார்த்தினன், தமிழ்நாட்டுக் கோபுரங்கள் என்பன அந்நந்தப் பண்பாடுகளுக்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. நினைவுச் சின்னங்களைக் கொண்டே சில நாடுகளைப் பிற நாட்டவர் அடையாளம் காண்பதும் உண்டு. இந்த வகையில் இந்தியா என்னும்போது பலருக்கும் நினைவில் வருவது தாஜ்மகால் ஆகும். அண்மைக் காலங்களில், மிகப் பெரிய அளவு கொண்ட அமைப்புகளான, அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, பிரான்சின் ஈபெல் கோபுரம் என்பவை நாடுகளின் குறியீடுகளாக மாறிவிட்டன. பவானி சங்கமேசுவரர் கோயில் சங்கமேஸ்வரர் கோவில் தமிழ்நாடு, திருநணா (பவானி) என்னும் ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பவானி சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். (சங்கமம்-கூடுதல்). பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். 1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோவில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன. அவர்களது பாடல்களில் இவ்விடம் ’திருநாணா’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும். ஆங் சான் சூச்சி ஆங் சான் சூச்சி ("Aung San Suu Kyi", பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் தலைமை அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். சூச்சீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூச்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், அக்காலகட்டத்தில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அதை பெற இயலவில்லை. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார். 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைய குடிமகளாக அறிவித்தது ; இப்படி அறிவிக்கப்பெற்றுப் பெருமை பெற்றவர்கள் ஐவரே.. 1990 இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆங் சான் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சி நாட்டின் 59% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் இடங்களில் 81% இடங்களை (485 மொத்த இடங்களில் 392 இடங்களை) வென்றது. ஆனாலும் இவர் தேர்ந்தலுக்கு முன்னரே வீட்டுக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. சூலை 20, 1989 முதல் நவம்பர் 10, 2010 வரையிலான 21 ஆண்டுக்காலத்தில் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1945 சூன் 19 இல் பிறந்த ஆங்சான் சூச்சிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆம் ஆண்டு சூலை 19 இல் அவரது தந்தை செனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 சனவரி 04 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையானது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூச்சி, 1972 சனவரி 01 இல் திபேத்திய, பூட்டான் பண்பாட்டு ஆய்வாளரும் அறிஞருமானான பிரித்தானியர் மைக்கேல் ஏரிசு (Michael Aris) என்பவரை மணந்தார். 1988 இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 செப்டம்பர் 27 இல் உருவாக்கப்பட்ட "மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு" (NDL, National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 சனவரி 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூச்சி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 சூலை 20 இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 81% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சிப் பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார். ஜோர்தானின் முதலாம் அப்துல்லா சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் ("Sir Abdullah I bin al-Hussein"; (1882 - ஜூலை 20, 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25, 1946 முதல் 1949 வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார். ஜூலை 20, 1951 இல் அப்துல்லா, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது 21 அகவையுடைய "முஸ்தபா ஊஷோ" என்ற பாலஸ்தீன இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வுக்கு முன்னர் ஜூலை 16 இல் லெபனானின் முன்னாள் பிரதமார் "ரியாட் அஸ்-சோல் அம்மான் நகரில் படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படவிருக்கிறது என்ற வதந்தி பரவியிருந்தது. அப்துல்லா கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் தலால் மன்னராக முடி சூடினார். தலால் சுகவீனமாக இருந்ததன் காரணமாக அவரது மகன் இளவரசர் உசேன் (மன்னர் உசேன்) தனது 17வது வயதில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். குருத்தாஸ் பூங்கா குருத்தாஸ் பூங்கா {"Grūtas Park") என்பது, முன்னாள் சோவியத் குடியரசான லித்துவேனியாவில் உள்ள ஒரு சிலைகள் பூங்கா ஆகும். இங்கே சோவியத் காலச் சிலைகளும், அக்காலக் கொள்கை சார்ந்த எச்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப் பூங்கா லித்துவேனியத் தொழில் அதிபரான வில்லியுமாஸ் மலினவுஸ்காஸ் (Viliumas Malinauskas) என்பவரால், துருஸ்கினின்காய் (Druskininkai) என்னும் லித்துவேனிய நகருக்கு அண்மையில், அவரது சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. இது அதிகாரபூர்வமற்ற முறையில் "ஸ்டாலின் உலகம்" என அழைக்கப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1990 இல் லித்துவேனியா விடுதலை பெற்றபோது, சோவியத் காலச் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தன. இச் சிலைகளை வைத்து ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்காக அவற்றைத் தன்னிடம் கையளிக்கும்படி "மலினவுஸ்காஸ்" லித்துவேனிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். இப்பூங்கா சுக்கிஜா தேசியப் பூங்காவின் (Dzūkija National Park) ஈரநிலப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இப் பூங்காவின் பல அம்சங்கள் குலாக் சிறை முகாமின் மரப் பாதைகள், காவல் கோபுரங்கள், பாதுகாப்பு வேலிகள் போன்ற அம்சங்களின் மீளுருவாக்கம் ஆகும். இப் பூங்காவில் வஞ்சப் புகழ்ச்சித் தந்திரங்கள் நிறையவே உண்டு. இது மக்களுக்கு வேடிக்கையாக அமைவது மட்டுமன்றித் தகவல்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. துன்பந் தருகின்ற பல விடயங்களையும் நினைவுக்குக் கொண்டுவரும் இந் நிறுவனம் பல கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவது மட்டுமன்றி, இன்றும் இதன் இருப்பு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. முன்னர் திட்டமிடப்பட்ட பல அம்சங்கள் அனுமதி கிடைக்காததால் கைவிடப்பட்டன. பார்வையாளர்களை குலாக் பாணித் தொடர் வண்டியில் ஏற்றிச் செல்வது, உணவுச் சாலைகளில் குலாக் பாணி உணவுகளைப் பரிமாறுவது என்பன இவ்வாறு கைவிடப்பட்டவற்றுள் சிலவாகும். இப் பூங்காவில், விளையாட்டுத் திடல்கள், சிறிய விலங்கினக் காட்சிச்சாலை, உணவுச் சாலைகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோவியத் காலத்தின் நினைவு எச்சங்களைக் கொண்டவையாக உள்ளன. இங்குள்ள காட்சிப்பொருட்கள் வெவ்வேறு செல்வாக்கு எல்லைகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் ஒரு தகவல் பலகை உண்டு. இதில் அவை பற்றிய சிறு வரலாற்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகளில், கார்ல் மார்க்சினது தவிர்ந்த ஏனைய எல்லாச் சிலைகளும் லித்துவேனியாவைச் சோவியத் ஆக்கிரமித்ததில் செல்வாக்குச் செலுத்தியோருடையவை ஆகும். இங்கே, 46 வெவ்வேறு சிற்பிகளால் செய்யப்பட்ட 86 சிலைகள் உள்ளன. காட்சிப்பொருட்கள் பின்வரும் செல்வாக்கு எல்லைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன: பாலசேகரன் பாலசேகரன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பேரரசு (திரைப்பட இயக்குநர்) பேரரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பிறந்த ஊர் - நாட்டரசன்கோட்டை. ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படங்கள் தருவதற்காக இவர் அறியப்படுகிறார். இவரது படப் பெயர்கள் அனைத்தும் ஊர்ப் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தான் இயக்கும் படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடிக்கவும் பாடல்கள் எழுதவும் செய்கிறார். கேலிச் சித்திரம் கேலிச் சித்திரங்கள் ("cartoons") அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும் கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன.தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ் பெற்றவை. இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது. கேலிச்சித்திரங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார். மிஷ்கின் மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். ஜெய் ஜெய், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் உறவினர் ஆவார். ஜேம்ஸ் வசந்தன் ஜேம்ஸ் வசந்தன் (பிறப்பு: அக்டோபர் 1) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார். நரேன் நரேன் (Narain, பிறப்பு: அக்டோபர் 7, 1979; இயற்பெயர் - சுனில் குமார்) மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சேகர் கம்முலா சேகர் கம்முலா, (Shekar Kammula ; தெலுங்கு - శేఖర్ కమ్ముల) தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். எளிய, இனிய கதைகளுக்காக இவர் அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார். வீடு பரிசோதனை வீடு பரிசோதனை என்பது ஒரு வீட்டின் நிலைமையை அல்லது தகுதியை புறவய நோக்கில் பரிசோதித்து மதிப்பீடு செய்வதாகும். இது பொதுவாக ஒரு விற்கப்படும் பொழுது வாங்குபர் சார்பாக்க துறைசார் வல்லுனர் மேற்கொள்ளும் பரிசோனையும் மதிப்பீடும் ஆகும். எரியும் நினைவுகள் எரியும் நினைவுகள் யாழ்ப்பாணப் பொது நூலகம் அழிப்பைப் பற்றிய ஆவணப்படம் ஆகும். ஊடகவியலாளர் சி. சோமிதரன் சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆக்கியுள்ளார். அல்ட்றாவிஎன்சி அல்ட்றாவிஎன்சி (சிலசமயங்களில் Ultr@VNC என்றவாறும் எழுதப்படும்) விண்டோஸ் இயங்குதளத்திற்கான மெய்நிகர் வலையமைப்புக் கணினி ஆகும். இது விஎன்சி அணுக்கம் ஊடாக வேறொரு கணினியின் திரையை பிறிதொரு கணினியில் இருந்த வண்ணம் அணுக முடிகின்றது. தானியங்கிக் கட்டுப்பாடு தவிர இது அணுக்கத்தின் போது பாதுக்காப்பாக கிளையண்ட்/சேவர்களை என்கிரிப்ஷன் ஊடாக அணுக முடிகின்றது. இது கோப்புப் பரிமாற்றம், அரட்டை உடன் வேறுபல நுட்பங்களை ஆதரிக்கின்றது. இந்த இலவச மென்பொருளானது குனூ பொது அனுமதி மூலம் விநியோகிக்கப்படுகின்றது. அல்ட்றாவின்சி மென்பொருளானது சி, சி++, ஜாவா நிரலாக்கல் மொழிகளூடாக விருத்தி செய்யப்பட்ட மென்பொருளாகும். இதன் அடுத்துவரவிருக்கும் பதிப்பானது விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் ஓர் மென்பொருட் சேவையா வரவிருக்கின்றது. றியல்விஎன்சி றியல்விஎன்சி (தமிழக வழக்கு:"ரியல் விஎன்சி") மெய்நிகர் வலையமைப்பூடான கணினி ஓர் கணினியில் இருந்து பிறிதோர் கணினியைத் தானியக்க முறையூடாகக் கையாளும் மென்பொருள் ஆகும். ஆரம்பத்தில் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தூடாக உருவாக்கப்பட்ட அதே நிரலாக்கர்களூடான றியல்விஎன்சி நிறுவனத்தில் ஊடாக உருவாக்கப்பட்டதாகும். றியல்விஎன்சி விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக் ஓஸ் எக்ஸ் (எண்டபிறைஸ் பதிப்பு மாத்திரம்) மற்றும் யுனிக்ஸ் மாதிரியான இயங்குதளத்தில் (இலவச மற்றும் எண்டபிறைஸ்) றியல்விஎன்சி கிளையண்ட் ஜாவா இல் இயங்கக்கூடியது. றியல்விஎன்சி மூன்று பதிப்புக்களாகக் கிடைக்கின்றது. இதன் பிந்தைய பதிப்பான 4.4 ஆனது அரட்டை மற்றும் புறொக்சி சேவர்களை ஆதரிக்கின்றது. பயனர்கள் F8 ஐ அழுத்துவதன் மூலம் விருப்பத் தேர்வுகளைப் பெறலாம். இதில் முழுத்திரைக்கான தேர்வுகளும் உண்டு, றியல்விஎன்சி போட் 5900 ஐ பொதுவாக உபயோகிக்கின்றது. யங் லிவே யங் லிவே (பிறப்பு ஜூன் 21, 1965) சீன விண்வெளி வீரர். ஒக்டோபர் 2003 இல் சீன விண்வெளித் திட்டம் நிகழ்த்திய முதல் மனித விண்வெளிப்பறப்பில் விண்வெளிக்கு சென்ற முதல் சீன விண்வெளி வீரர் இவர் ஆவார். பாமியன் புத்தர் சிலைகள் பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின், பாமியான் மாகாணத்தின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய (மிகப்பெரிய) புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஒன்றைப் பெரிய புத்தர் மற்றொன்றைச் சிறிய புத்தர் எனவும் அழைப்பர். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச் சிலைகள், காபுலில் இருந்து வடமேற்கே 230 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருந்தன. இச் சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் (காந்தாரக்கலை) சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன. சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும். இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாணையை ஏற்று அந் நாளைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச் சிலைகளை மீள அமைப்பதற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன. பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது. இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழிடங்கள் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் ஆகும். பல துறவிகள் தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை. இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் ஆகும். இப் பகுதியின் மிகப் பிரபலமான பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கிய இச் சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. சிறிய சிலை கி.பி 507 ஆம் ஆண்டிலும், பெரியது 554 ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டவை ஆகும். இவை குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் அவர்கள் பேரரசுகள் உச்சநிலையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட இனத்தவரே தற்கால ஆப்கனிஸ்தானில் அதிகமாகத் துயரங்களுக்கு உள்ளாகிய ஹசாரா இனத்தவரின் முன்னோர்களாவர். ஹசாரா இனத்தினரின் உடலமைப்பும், முக அமைப்பும், அங்குள்ள குகைகளிலும் பிற சின்னங்களிலும் காணப்படும் சுவரோவியங்களில் காண்பவற்றை ஒத்தவையாக உள்ளன. கி.பி 630 ஆம் ஆண்டில் இப் பகுதியூடாகச் சென்ற சுவான்சாங் (Xuanzang) என்னும் சீனப் பயணி, பாமியனை ஒரு பௌத்த மையமாக விவரித்துள்ளார். இவரது கூற்றுப்படி இங்கே பத்துக்கு மேற்பட்ட துறவி மடங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு புத்தர் சிலைகளும், பொன்னாலும், மணிகளாலும் அழகுபடுத்தப் பட்டிருந்ததாகவும் அவரது குறிப்புக்கள் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விடத்தில் படுத்த நிலையில் இவ்விரண்டையும் விடப் பெரிய புத்தர் சிலையொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு காலத்தில் முற்றாகவே அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்றது. 11 ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானையும் கஜினி முகமது கைப்பற்றியபோது, துறவி மடங்களும், பிறவும் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்ட போதும், இவ்விரு புத்தர் சிலைகளையும், சுவரோவியங்களையும் எதுவும் செய்யவில்லை. நாதிர் ஷா இச்சிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினான். எனினும் பின்னர் பல நூற்றாண்டுகளாக இச் சிலைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முல்லா முகம்மது ஓமார், பாமியன் புத்தர் சிலைகளை பாதுகாப்பதற்கு ஆதரவாக ஆணையொன்றை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தற்போது புத்த சமயத்தவர் எவரும் இல்லாததால் இச் சிலைகளை வணங்குவதற்குரிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இச்சிலைகள் வெளிநாட்டினரின் வருகை மூலமாக நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பனவாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதாகவும், அதனால், தலிபான்கள் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பார்கள் எனவும் அறிவித்தார். ஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந் நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினர். மிக விரைவிலேயே தாலிபான் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக்காட்சியையும் கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர். கலாச்சார அமைச்சரான கதிரத்துல்லா கமால், அசோசியேட்டட் பத்திரிகை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 400 மதத் தலைவர்கள் கூடி, புத்தர் சிலைகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்தார். யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இது தொடர்பாகக் கூட்டப்பட்ட 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் கூட்டத்தின்போது, தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட எல்லா நாடுகளும் தலிபானின் நடவடிக்கைக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இணைந்துகொண்டனர். மார்ச் தொடக்கம் முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர். விண்ணோடி விண்ணோடி அல்லது விண்வெளி வீரர் மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர். இவர் விண்கலம் ஒன்றை ஓட்ட, வழிநடத்த, அல்லது அதில் சேவை செய்ய திறன் பெற்றவராக இருப்பார். விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யூரி ககாரின் என்ற உருசியர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் உருசிய நாட்டைச் சேர்ந்த வாலந்தீனா தெரசுகோவா என்பவர் ஆவார். இவர்கள் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரோனாட் (Astronaut) எனவும், உருசியத்தில் காஸ்மோனாட் (cosmonaut) எனவும் அழைக்கப்படுகின்றனர்...இரு சொற்களுமே பரவலாக புழக்கத்தில் உள்ளவை. வானோடி வலவன்,வானோடி ஒரு வானூர்தி ஓட்டுனரைக் குறிக்கின்றது. தமிழில் விமானி, விமான ஓட்டுனர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இதற்கு சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அவசியம். இவர்கள் பல மணி நேரம் ஓட்டிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான தகுதிகளை ஒவ்வொரு நாட்டு அரசும் வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. இவர்களின் திறனைப் பொருத்து சான்றிதழ் வழங்கப்படும். தனி உரிமம் வழங்கப்பட்டவர், தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார். வணிக உரிமம் பெற்றவரே பலர் பயணிக்கக் கூடிய விமானங்களை ஓட்டக் கூடியவர். சிலர் தங்களின் பொழுதுபோக்குக்காகவோ, பணம் திரட்டுவதற்காகவோ, தங்களின் தொழிலுக்காகவோ விமான ஓட்டிகளாக பயற்சி பெறுவதுண்டு. பல நாடுகளில் ராணுவத்திலும் விமான ஓட்டிகளை சேர்த்துக் கொள்வர். அரசின் வான்படைக்குச் சொந்தமான போர் விமானங்களை ஓட்டுவது இவர்களது பணி. ராணுவத்தில் சேரும் விமான ஓட்டிகளுக்கு தனித்துவமான பயிற்சியும் பாடத்திட்டமும் இருக்கும். வினய் வினய் (பிறப்பு: 18 செப்டம்பர், 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும். ராம் (திரைப்பட இயக்குநர்) ராம், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிடம் மட்டுமின்றி ராஜ்குமார் சந்தோஷி போன்ற இந்தி இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். பிரசன்னா பிரசன்னா (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1982) வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராதா மோகன் ராதா மோகன் ("Radha Mohan"), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார். சுசி கணேசன் சுசி கணேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார். கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார். சிந்தித்தல் சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. கயானியேலோ (Caianiello) கோட்பாடு: "சிந்தனை-செயல்முறைகளும் சிந்தனை இயந்திரங்களும் சிந்தனைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகளாகும்" ஹோஃப்ஸ்டாடர் மற்றும் சாண்டர் (Hofstadter and Sander) கோட்பாட்டின் புறப்பரப்புகளும், சாரங்களும்: சிந்தனை என்பது நெருப்புக்கான எரிபொருளுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது. ஃபெல்ட்மேன் மற்றும் லாக்ஃப் (Feldman and Lakoff) நரம்பியல் கோட்பாடு : ஒருவரின் நரம்பியல் நலன் சார்ந்து அவரது மொழி மற்றும் சிந்தனை மாறுபடுகிறது. பாம் (Baum) கோட்பாடு: இது, கட்டமைப்பு, சக்தி, சிந்தனைகளின் வரம்புகள் ஆகிய சிந்தனையின் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு சிந்தனைப்பார்வை ஆகும். உணர்விழந்த நிலை சிந்தனைக் கோட்பாடு: இது உணர்வுப்பூர்வமாக இல்லை என்று நினைத்ததாகக் கருதுதல். ஸ்டீவன் பிங்கர், நோம் சோம்சுக்கி (Steven Pinker, Noam Chomsky) மொழியியல் கோட்பாடு: மொழியியல் மற்றும் புலனுணர்வு சார்ந்த சிந்தனையானது, குறியீட்டியல் மற்றும் மறுசுழற்சி செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது சிந்தனைத் திணிவு எனப்படுகிறது. மேற்கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சுப் பற்றி அறிய முடிகிறது. இருப்பினும் தீர்வு காண முடியாத, மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர் (Heidegger), பியாஜே (Piaget), வைகோட்ஸ்கி (Vygotsky), மெரியூ-பான்ட்டி (Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ (John Dewey) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். மனதைத் தனியாகப் பிரித்து, அதனைத் தனியாகப் பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம் உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையைத் தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும். சிந்தித்தல் நிகழ்வின் போது தோன்றும் புதிய கருத்துக்களின் தொகுப்புகள், கருத்துகளின் பொருத்தமான ஒருங்கிணைவு போன்றவை சிந்தனை வெளிப்பாடுகள் எனப்படுகின்றன. மனிதன் என்ற தொகுப்பில் சிந்தித்தல் என்பது ஒரு முக்கியமான செயலாகக் கருதப்படுகிறது. இருப்பினும் 'சிந்தனை வெளிப்பாடு' என்பதைப் புரிந்து கொள்வதற்கான நிறைவான வரையறை இதுவரை எட்டப்படவில்லை. மனிதச் செயல்கள் மற்றும் இடைவினைகளின் பின்புலத்தில் சிந்தனை வெளிப்பாட்டுத்திறனின் தாக்கம் மிகுந்துள்ளது. சிந்தனை வெளிப்பாட்டுத் திறனின் இயல் நிலை, (cognitive science) தோற்ற இடைஇயல் நிலை செயலாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அறிந்து வெளிப்படுத்தவும் முறைப்படுத்தவும் பின்வரும் கல்விப் புலங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சிந்தனை வெளிப்பாடு என்பது பண்டைய ஆங்கிலத்தில் போத் (þoht) அல்லது ஜிபோத் (geþoht) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைகளின் மூல வார்த்தை பென்கன் ("þencan") அதன் பொருள் ' மூளையில் உற்பத்தியாதல், மற்றும் ஏற்றுக் கொள்ளல்' 'சிந்தனை வெளிப்பாடு' என்பதன் பொருள். "சிந்தனை" என்ற வார்த்தையின் பொருள்: சான்பாட்டயரியார்க், தஸூ ஹூயிக் என்பரர் 10 ஆம் நூற்றாண்டின் ஓவியர் ஹுக நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். இவையே மூளை, முதுகெலும்பிகளின் முள்ளந்தண்டு வடம், முதுகெலும்பிலிகளின் கீழ்நரம்புவடம், புற நரம்பு மண்டலம் ஆகியவற்றின் மையக் கூறாகச் செயல்படுகின்றன. பல சிறப்பு நரம்பணுக்கள் வெவ்வேறு தொழிலைச் செய்கின்றன. அவற்றில் தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளை முள்ளந்தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் உணர்வு நரம்பணுக்கள் ஒரு வகையாகும். இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துவதுடன் சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தில் உள்ள நரம்பணுக்களை, இடைநரம்பணுக்கள் இணைக்கின்றன. நரம்பணுக்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தித் தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நரம்பணுக்களால் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நரம்பணுக்கள் இழையுருப்பிரிவு நிகழ்வுக்கு உட்படுவதில்லை. மேலும் அழிந்த பின் எப்பொழுதும் மீளுருவாக்கத்திற்கு உட்படுவதில்லை. ஒரு தொடர்வண்டி பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் "'to think for myself' became less favorable".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும். அறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து, கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்றல் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர்(Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர்(Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka) போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே)Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன. தனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுச் சிந்தனைகளின் கூறுகள்: படிமுறைத் தீர்வு மனிதனின் நடத்தை முறைகளைத் தூண்டி கணினிகளிலின் வாயிலாக மனிதனால் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தக்கூடிய புலனுணர்வு சார்ந்த மனவியலிலிருந்து அறிவாற்றல் சார்ந்த அறிவியல் வேறுபடுகிறது. மற்ற நேர்வுகளில் தீர்வுகள், உட்காட்சி மூலமோ அல்லது தொடர்புடைய சிந்தனைகளால் ஏற்படும் திடீர் விழிப்புணர்வு மூலமோ மூலமோ தீர்வுகள் ஏற்படலாம். ஜீன் பியாஜே என்பார் மேற்கொன்ட "பிறந்ததிலிருந்து முதிர்வு வரையிலான சிந்தனை வளர்ச்சி" என்ற ஆய்வு வளர்ச்சி உளவியலில் ஒரு முன்னோடி ஆய்வு ஆகும். அவரது கோட்பாடு, சிந்தனை சூழல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொன்றும் புலனுணர்வு வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்ட செயல்களின் வாயிலாகக் கிடைக்கும் கருப்பொருட்களின் அடிப்படையிலான கிரகிப்புகளின் மூலம் சுற்றுச்சூழல் புரிந்துகொள்ளப்படுவதாகவும், அதனை முன்னிறுத்தி அமைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அதிக அளவு வீழ்ச்சியடைவதாகவும் பியாஜெட் அறிவுறுத்துகிறார். சமச்சீரற்ற தன்மை மற்றும் இடவசதி மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவிளக்கத்தின் விளைவாக, தோன்றும், அனுமானம், புரிந்துணர்வு, ஒவ்வொருவரின் குணாம்சம், மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்ற நிலைகளின் மூலம் சிந்தனை உருவாகிறது. குழந்தை பருவத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரம்பகால வாழ்க்கையின் உணர்திறன் நிலைகளில் உணர்வுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில்தான் சிந்தனை உருவாகிறது. இதன் விளைவாக, தர்க்கரீதியாக அமைக்கப்படும் உறுதியான செயல்பாட்டின் நிலைமையில் திட்டமிடப்படும் கட்டமைப்புகள் மீதும், பண்புகள் மீதும் ஒழுங்கமைக்கப்படும் முறையான செயல்பாடுகள் உறுதிப்படுகின்றன. சமீப ஆண்டுகளில், சிந்தனை பற்றிய பியாஜேயின் கருத்துருவானது தகவல் செயலாக்க கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிந்தனையானது தகவல் பிரதிநிதித்துவம் மற்றும் செயலாக்க பொறுப்பு என்னும் செயல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இந்த கருத்தின்படி, செயலாக்க வேகம், புலனுணர்வு கட்டுப்பாடு மற்றும் பணி நினைவகம் ஆகியவை சிந்தனைச் செயலின் முக்கிய கூறுகளாகும். பியாஜேயின் நவீன கோட்பாடுகளின்படி, சிந்தனைகளின் வளர்ச்சி வேகத்திலிருந்தும், அறிவாற்றல் கட்டுப்பாட்டிலிருந்தும், உழைப்பு நினைவகத்தை அதிகரிப்பதற்கு புலனுணர்வு வளர்ச்சி அவசியமாகிறது. ஒரு "சிந்தனை குமிழி" எனும் சித்திரத்தில் சிந்தனையை சித்தரிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. "சமூக உளவியல்" என்பது மக்கள் மற்றும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு ஆகும். பொதுவாக உளவியலாளர்கள் அல்லது சமூகவியல் வல்லுநர்கள், மற்றும் சமூக உளவியலாளர்கள் "சமூக உளவியல்" அடிப்படையில் தனிப்பட்ட முறையிலும் மற்றும் குழுக்களாகவும் ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் செய்கின்றனர். எண்ணக்கரு எண்ணக்கரு அல்லது சிந்தனை சிந்தித்தலின் ஊடாக பெறப்படும் ஒரு கரு (idea or proposition) அல்லது கருத்து ஆகும். தரப்பட்ட சூழமைவுக்கும் நிலைமைகளுக்கும் பொறுத்து சிந்தித்தல் ஒரு கருத்தை விளைவிக்கின்றது. கருத்து வெளி உலகைப் பற்றியதாகவோ (கருப்பொருள்) அல்லது நுண்புல அல்லது கருத்துருவ (நுண்பொருள்) பெறுமானமாகவோ இருக்கலாம். தரப்பட்ட வரையறையை ஒரு தொடக்கமாக மட்டும் கருதவும். இது பல வழிகளில் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். சில வேளை முற்றிலும் பிழையானதாகவும் இருக்கலாம். சுவான்சாங் சுவான்சாங் (யுவான் சுவாங்) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார். தனது பயணம் பற்றிய விபரங்களை அவர் தனது தன்வரலாற்றில் குறித்துள்ளார். சுவான்சாங் ஹெனானில் உள்ள, லுவோயாங்குக்கு அண்மையிலுள்ள ஓர் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு 602 எனக் கருதப்படுகிறது. 664 ஆம் ஆண்டில் யூ ஹுவா கோங் என்னும் இடத்தில் இவர் காலமானார். சென் ஹுயி என்னும் இயற்பெயர்க் கொண்ட சுவான்சாங்கின் குடும்பம் பல தலைமுறைகளாகவே கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். இவர் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர். இவரது பாட்டன், தலைநகரில் இருந்த இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இவரது தந்தையார் ஒரு பழமைவாத கன்பூசியன். இவர் அக்காலத்தில் சீனாவைப் பீடித்திருந்த அரசியல் குழப்பங்களில் இருந்து தப்புவதற்காகத் தன் பதவியை உதறிவிட்டுத் தனிமையை நாடிச் சென்றுவிட்டார். மரபுவழிக் கதைகளின்படி, சுவான்சாங், இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும், ஊக்கம் உள்ளவராகவும் இருந்தார். இவரும், இவரது உடன் பிறந்தோரும், தமது தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடமே கற்றனர். மரபுசார் கன்பூசியனியத்தின் பல்வேறு நூல்களை அவர்கள் அவரிடமிருந்து கற்றனர். இவரது உறவினர்கள், பெரும்பாலும் கன்பூசிய மதம் சார்ந்தவர்களாகவே இருந்தாலும், இவரது ஒரு தமையனைப் பின்பற்றி புத்த துறவியாக வரும் ஆசை அவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. 611 ஆம் ஆண்டில் தந்தையார் இறந்ததும், இவர் தனது மூத்த தமையனுடன், லுவோயாங்கில் இருந்த ஜிங்டு துறவிகள் மடத்தில் தங்கியிருந்தார். இம்மடத்தை சுயி அரச மரபினர் ஆதரித்து வந்தனர். இக்காலத்தில் சுவான்சாங் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் ஆகிய இரண்டையுமே கற்றறிந்தார். எனினும், மகாயான பௌத்தத்தையே அவர் விரும்பினார். 618 ஆம் ஆண்டில் சுயி மரபின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், சகோதரர்கள் இருவரும் தாங் அரசின் தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்த சாங்கான் என்னும் இடத்துக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தெற்குப் புறமாக சிச்சுவானில் உள்ள, செங்டுவை அடைந்தனர். அங்கே கொங் ஹுயி என்னும் துறவிமடத்தில் தங்கியிருந்து "அபிதர்மகோசம்" முதலிய நூல்களைப் படித்தனர். இவருக்குப் 13 மூன்று வயதாக இருந்தபோது புத்த துறவியாகும்படி கேட்கப்பட்டார். எனினும் இவரது அறிவுத் திறன் காரணமாக மடத்தலைவர் இவருக்கு விதிவிலக்கு அளித்தார். தனது 20 ஆவது வயதில் இவர் ஒரு முழுமையான புத்த துறவி ஆனார். அக்காலத்தில் சீனாவில் இருந்த பௌத்த நூல்களில் இருந்த பெரும் தொகையான முரண்பாடுகள், அவரை இந்தியாவுக்குச் சென்று, புத்த சமயத்தின் பிறப்பிடத்திலேயே கல்வி கற்கத் தூண்டின. இவர் தனது தமையனைப் பிரிந்து, பிறமொழிகளைப் பயிலவும், புத்த சமயம் பற்றி மேலும் அறிந்து கொள்ளவுமாக, செங்கானுக்குத் திரும்பினார். 626 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். இக்காலத்தில் பௌத்ததின் யோகாசாரப் பிரிவிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 629 ஆம் ஆண்டில், இவர் கண்ட கனவு ஒன்றினால் இவர் இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்தார். அந்நேரம் தாங் பேரரசுக்கும், கிழக்குத் துருக்கியரான, கோக்துருக்கியருக்கும் போர் மூண்டது. பேரரசன் தாங் தைசோங் வெளிநாட்டும் பயணங்களைத் தடை செய்தான். சுவான்சாங் சில பௌத்த காவலர்களின் உதவியோடு கான்சு, கிங்காய் மாகாணம் ஆகிய இடங்களூடாகப் பேரரசை விட்டு வெளியேறினார். பின்னர் கோபி பாலைவனத்தின் ஊடாகப் பயணம் செய்து குமுல் என்னும் இடத்தை அடைந்த அவர் அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று துர்பான் என்னும் இடத்தை 630 ஆம் ஆண்டில் அடைந்தார். இங்கே ஒரு புத்த சமயத்தவனான துர்பானின் அரசனைச் சந்தித்த சுவான்சாங், அவனிடமிருந்து அறிமுகக் கடிதங்களையும், பயணத்துக்கான பொருளும் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்த அவர் எதிர்ப்பட்ட கொள்ளையரிடம் இருந்து தப்பி யாங்கியை அடைந்தார். இங்கிருந்து, குச்சாப் பகுதியில் உள்ள பல தேரவாதத் துறவி மடங்களுக்குச் சென்றார். தொடர்ந்தும் மேற்குப் புறமாகச் சென்று அக்சு என்னும் இடத்தைக் கடந்தபின் வடமேற்கில் திரும்பி தியன் சானின் பெடல் கணவாய் வழியாக இன்றைய கிர்கிஸ்தானுக்குள் நுழைந்தார். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக் கழகத்திலும் தங்கிப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார். பிரபல தமிழ்ப் புதினமான பார்த்திபன் கனவில் சீனப்பயணியாக சுவான் சாங் காட்டப்பட்டுள்ளார். பல்லவ மன்னனான காலத்தில் காஞ்சிபுரத்தை இந்த சீனப் பயணி தரிசித்ததாக பார்த்திபன் கனவு புதினம் கூறுகின்றது. போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு ("Polish Committee of National Liberation"; போலிய மொழி: "Polski Komitet Wyzwolenia Narodowego", "PKWN"), என்பது ஜூலை 21, 1944 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஓர் இடைக்கால அரசாகும். இது லூப்லின் குழு எனவும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் நாடு கடந்த நிலையில் இருந்த போலந்து அரசுக்கெதிராக சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் நாட்டின் தேசியக் கவுன்சிலில் உத்தரவின் பேரில் இந்த இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நாசி ஜெர்மனிகளிடம் இருந்து மீள்விக்கப்பட்ட பகுதிகளை இது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஜூலை 22, 1944 இக்குழுவின் அறிக்கை ("Manifesto of the Polish Committee of National Liberation") வெளியிடப்பட்டது. அரசியல், சமூக, மற்றும் பொருளாதார மாற்றங்களையும் நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும் இவ்வறிக்கை முன்வைத்தது. அத்துடன் நாட்டின் தொழிற்சாலைகளை அரசுடமை ஆக்கும் திட்டத்தையும் அறிவித்தது. நாடுகடந்த நிலையில் இருந்த போலந்து அரசை அது நிராகரித்து "போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு"வே நாட்டின் அதிகாரபூர்வ அரசாகவும் அறிவித்தது. இதனை அடுத்து சோவியத்தின் அதிகாரத்தின் கீழிருந்த போலந்தின் பல பிரதேசங்களின் ஆட்சி இக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பிரதேசங்களை பாதுகாப்பு "மக்கள் கமிசார்" என்றழைக்கப்பட்ட சோவியத் காவல்துறையினரிடமும், செம்படை ("Red Army") இடமுமே இருந்தன. ஆகஸ்ட் 1, 1944இலிருந்து இக்குழு லூப்லின் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. நிக்கலாய் புல்கானின் என்பவர் சோவியத் நிர்வாகியாக இருந்தார். போலந்தின் பல்வேறு கம்யூனிச, மற்றும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் தலைவராக போலந்து சோசலிசக் கட்சித் தலைவர் எட்வேர்ட் ஒசோப்கா-மொராவ்ஸ்கி இருந்தார். நாடுகடந்த நிலையில் இருந்த போலந்து அரசின் சில முக்கிய உறுப்பினர்கள் டிசம்பர் 31 1944இல் இடைக்கால அரசில் இணைந்தனர். ஜனவரி, 2945 இல் தலைநகர் வார்சாவை சோவியத் ஒன்றியம் நாசிகளிடம் இருந்து கைப்பற்றியதை அடுத்து அது போலந்துக் குடியரசின் இடைக்கால அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல்கள் இடம்பெறும் வரையில் இவ்வரசே இப்பகுதிகளை ஆண்டது. ஜோசப் ஸ்டாலினின் சோவியத் ஆதரவுடன் "போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு" அமைக்கப்பட்டதை அடுத்து சோவியத் ஒன்றியத்துக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பித்தது. இது பின்னர் பனிப்போர் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. போலந்தில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்வுகள் கிழக்கு ஐரோப்பாவில் செம்படையின் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளில் இடம்பெற ஆரம்பித்தன. ருமேனியாவில் மார்ச் 1945 இல் ருமேனியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த மாற்றங்கள் மேற்குலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி முறையிலான தேர்தல்கள் நடத்துவதற்கு யால்ட்டா மாநாட்டில் ஸ்டாலின் உடன்பட்டிருந்தார். மா. பாலகிருஷ்ணன் இளங்கண்ணன் என்ற புனைபெயரில் எழுதும் மா. பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர். இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக நாவல்கள், சிறுகதைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இளங்கண்ணன் தென்கிழக்காசிய எழுத்து விருது (1982), சிங்கப்பூர் இலக்கிய விருது (2004), கலாசாரப் பதக்க விருது (2005) போன்ற மதிப்புமிக்க விருதுகள் பெற்றுள்ள எழுத்தாளர். அனைத்துலக அளவில் பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்றவர். இளங்கண்ணனின் படைப்புகள் குறித்து டில்லி பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ரவீந்திரன் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ராம் பரன் யாதவ் டாக்டர் ராம் பரன் யாதவ் ("Dr. Ram Baran Yadav"; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார். 2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார். கோபுரம் (கோயில்) கோபுரம் என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலேயே அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு பட்டைக்கூம்பு (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு கோயிலில் இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன. கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் விமானங்கள், அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. இவை கருவறைக்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும். கோபுரம் என்ற சொல் முற்காலத்தில் கோயில் நுழைவாயில் அமைப்புக்களை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புக்களையும் குறித்தது. இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும் குறித்தாலும், உயரமான பிற கட்டிட அமைப்புக்களையும் கோபுரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதுண்டு. "மணிக் கோபுரம்", "மணிக்கூட்டுக் கோபுரம்", "ஈபெல் கோபுரம்", "பெட்ரோனாஸ் கோபுரங்கள்" போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இக் கட்டுரை கோயில் கோபுரங்களைப் பற்றியது ஆகும். தமிழில், கோபுரம் என்னும் சொல்லின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. தேவநேயப் பாவாணர் போன்ற சில அறிஞர்கள் இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இது சமஸ்கிருதம் அல்லது வேறு பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்கின்றனர். கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட மகாபாரதம் போன்ற சமஸ்கிருத நூல்களில் கோபுரம் என்ற சொல் ஆளப்பட்டிருக்க, சங்க காலத் தமிழ் நூல்களிலோ அல்லது பிற்பட்ட சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலோ கோபுரம் என்ற சொல் காணப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வேதகாலத்தில் பசுக்களை அடைத்து வைக்கும் பட்டிகளுக்கு மூங்கிலால் வேலியிடப்பட்டு அதன் வாயிலில் மூங்கிலாலேயே ஒரு வாயில் அமைப்பும் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். "கோ" என்றால் பசு, "புரம்" என்பது காத்தல் என்னும் பொருளுடையது இதனால் பசுக்களைக் காக்கும் இடத்தின் வாயில் கோபுரம் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அரண்மனை, நகரங்கள் முதலியவற்றின் வாயில் அமைப்புக்களையும் இப் பெயராலேயே அழைத்தனர். காலப்போக்கில் கோயில்களின் வாயில் கட்டிட அமைப்புக்களையே கோபுரம் என்னும் சொல் குறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம். எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. வேத கால ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு வீடுகளிலும், ஊர்களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் கட்டிடப் பொருட்களினால் அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன. இவை தோரண வாயில்கள் எனப்பட்டன. இந்தியாவின் சாஞ்சியில் உள்ளது போன்ற பௌத்த கோயில்களில் இவ்வாறான தோரண வாயில்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் சில இந்துக் கோயில்களில் முற்காலத்தில் இவ்வாறான தோரண வாயில்கள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. "கோபுரம்" என்ற சொல்லின் தோற்றமும், வாயில் கட்டிட அமைப்புக்களுக்கான பழைய எடுத்துக் காட்டுகளும் தமிழ் நாட்டுக்கு வெளியிலேயே காணப்பட்டாலும், இன்றைய வடிவத்தில் கோபுரக் கட்டிடக் கலையின் வளர்ச்சிக்குக் களமாக அமைந்தது தமிழ் நாடே. தமிழ் நாட்டில் காணப்படும் காலத்தால் முந்திய கோபுரம், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், கைலாசநாதர் கோயிலில் உள்ள கோபுரம் ஆகும். அக்காலக் கோயில்களில் கோபுரம் ஒரு முதன்மையான கூறு அல்ல. முக்கியத்துவத்திலும் அளவிலும் முதன்மையாக இருந்தது கருவறைக்கு மேல் அமைந்த விமானமே. எனவே கைலாசநாதர் கோயிலிலும் கோபுரம் மிகவும் சிறிதாகவே காணப்படுகிறது. கோயில் கட்டிடக்கலை வளர்ச்சியடைந்து சோழர் காலத்தில் மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டபோதும், விமானமே நெடிதுயர்ந்து காணப்பட்டது. கோபுரங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவே இருந்தன. ஒரு கோயிலில் இறைவன் உருவம் வைக்கப்பட்டுள்ள கருவறையே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால் அதனை அமைப்பு அடிப்படையிலும் முதன்மை பெறச் செய்தது புரிந்துகொள்ளத் தக்கதே. இதன் காரணமாகவே சிற்பிகளும் தமது திறமைகளை விமானத்தை உருவாக்குவதிலேயே பெரும்பாலும் காட்டினர். ஏறத்தாழ கி.பி 1100 அளவில் தொடங்கிய பிற்காலப் பாண்டியர் காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கருவறையைச் சுற்றியிருந்த பிற கட்டிட அமைப்புக்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. சிறப்பாக வாயில் கோபுரங்கள் முதன்மை பெறத்தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு இந்தியக் கட்டிடக்கலை பற்றிய நூலொன்றை எழுதிய பேர்சி பிரவுண் என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கத் தலைப்பட்டனர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது. மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது. = LOOL MEEM SAAS = கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.   null மறை  மனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலக போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப் போர்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின. உலக மகா யுத்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரும் மிகப் பிரபலமான சர்வதேச சட்டவல்லுநர்களில் ஒருவருமான ஹெர்ஷ் லாடெவ்பாச் (Hersh Lautevpacht) என்பவர் சர்வதேச தேசிய சட்டங்கள் யாவும் அதாவது இவற்றின் இறுதி நோக்கமாக அமைவது மனித ஆளுமையையும் அதனுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே எனக் கருத்துரைத்துள்ளார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த ரீதியில் இரு வேறுபட்ட முகங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ அதிகார வீழ்ச்சி அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள் பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கிய நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பவற்றை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை ஒன்று உறுதிப் படுத்துவதுடன் அது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில் அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின. முதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும். அதன் பின்னர் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் (Eleanor Roosvelt) ஆவார். இந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் உறுப்பு நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் படுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளுக்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று. சோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளை முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்தியைக் கொடுத்தன. இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 ஆம் ஆண்டில். இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறு பல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன. அவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப்பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் எவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற பகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும். ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும். அதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். (இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல) லால் கிருஷ்ண அத்வானி லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. அத்வானி தீவிரமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர். தனக்கு விருப்பமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவரில்லை. இன்றைய கராச்சி நகர், அன்றைக்கு சிந்து மாகாணம்., இந்த நிலப்பரப்பு தான் அத்வானி பிறந்த இடம். ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்குப் போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் இந்து.! ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா கட்சி என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. உபாத்யாயாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் என்று இவர் மீதும் பா.ஜ.க மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம். வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான். நெருக்கடி நிலை, மிசா காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர். பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு. 1992-ல் அத்வானி கூறியது இது தான். ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது. டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து, 831 பயணிகளை மீட்டார். நாடாளுமன்றத்தின் மீது 2001இல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படவில்லை. ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 1. அத்வானி, ஒரு காவிய நாயகன் - தமிழில் வலைப்பூ 2. அத்வானி - கிழக்கின் புத்தகம் 3. ‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்! -விகடன் கைபர் பக்துன்வா மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம் (Khyber Pakhtunkhwa) இதன் பழைய பெயர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின் தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும். 1901 முதல் 1955 முடிய வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்றும், பின்னர் வடமேற்கு மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது. இம்மாகாணத்தின் எல்லைகள், மேற்கிலும், வடக்கிலும் ஆப்கானித்தான், தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் பழங்குடிகள் பகுதிகள், தென்கிழக்கில் பஞ்சாப், தேசியத் தலைநகரம் இசுலாமாபாத், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள், தென்மேற்கில் பலுசிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 11.9%ம், பொருளாதாரத்தில் 10.5%ம், கைபர் பக்துன்வா பங்களிக்கிறது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் பஷ்தூ மொழி பேசும் பழங்குடி பஷ்தூன் மக்கள் ஆவர். முன்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலை தெற்காசியாவின் நுழைவாயிலாக இருந்தது. கிழக்கில் கைபர் கணவாய் பகுதியில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்த ஆப்டாபாத் நகரத்திலிருந்து, அல் காயிதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்ப்பட்டதால், உலக அளவில் இந்நகரம் பேசப்பட்டது. புவியியல் படி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கில் பனிபடர்ந்த இந்துகுஷ் மற்றும் தெற்கில் வெப்பமும் மற்றும் குளிரும் நிறைந்த பெசாவர் என இரண்டு புவியியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் சுவத், குனார், காபூல், சித்ரால் போன்ற ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணாத்தின் வடக்கில் பசுமை நிறைந்த புல் சமவெளிகளும், பனிபடர்ந்த கொடுமுடிகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.காபூல் ஆறு மற்றும் சுவத் ஆறுகள் கைபர் பக்துன்வா மாகாணத்தை வளப்படுத்துகிறது. மகாபாரதம் கூறும் காந்தார நாடு இம்மாகாணத்தில் இருந்தது. தற்போது காந்தாரம் ஆப்கானிஸ்தான் பகுதியாக உள்ளது. இம்மாகாணத்தின் சுவாத் சமவெளியில் வேதகால நாகரீகம் தொடங்கியது. பின்னர் கிரேக்க செலூக்கியப் பேரரசு காலத்தில் இம்மாகாணத்தில் பௌத்த சமயம் செழிப்புடன் விளங்கியது. இம்மாகாணத்தின் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக வந்த சிதியர்கள், சகர்கள், பார்த்தியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், வட இந்தியாவை முற்றுகையிட்டு கைப்பற்றினர். இம்மாகாணம் மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மற்றும் குசானப் பேரரசின் ஒரு மாகாணமாக விளங்கியது. பௌத்தம் இங்கு பிரபலமாக விளங்கிய காலத்தில் கனிஷ்கரின் தூபி, புத்கார தூபி போன்ற எண்ணற்ற தூபிகளும், விகாரை]]களையும் கொண்டிருந்தது. மேலும் இப்பகுதி தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் பகுதியாக விளங்கியது. இறுதியில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாகாணம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தானின் ஒரு மாகாணம் ஆயிற்று. கைபர் பக்துன்வா மாகாணம் எட்டு கோட்டங்களும், 35 மாவட்டங்களும் கொண்டது. கைபர் பக்துன்வா மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. பாகிஸ்தானின் 28 தேசியப் பூங்காக்களில் 18 தேசியப் பூங்காக்கள் இம்மாகாணத்தில் உள்ளது. அவைகளில் சிறப்பானவைகள்: 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 35,525,047 ஆகும். பெரிய இனக்குழு பஷ்தூன் பழங்குடி மக்கள் ஆவார்.1.5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் இம்மாகாணத்தில் உள்ளனர். பஷ்தூன் இனத்தவருக்கு அடுத்து தாஜிக் மக்கள், ஹசாரா மக்கள் உள்ளனர். இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 52% ஆண்களும் மற்றும் 48% பெண்களும் உள்ளனர். உருது மொழி தேசிய மொழியாக இருப்பினும், பஷ்தூன் மொழி, சராய்கி மொழி, கோவர் மொழி மற்றும் கோகிஸ்தானி மொழிகள் இப்பகுதியில் பேசப்படுகிறது. சன்னி இசுலாம் இம்மாகாணத்தில் அதிகம் பயிலப்படுகிறது. சித்ரால் மாவட்டத்தில் மட்டும் சியா இசுலாம் சிறிதளவு பயிலப்படுகிறது. சித்ரால் மாவடடத்தின் தெற்கில் வாழும் கலாஷ் மக்கள் பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றுகின்றனர். மிகச்சிறு அளவினர் இந்து மற்றும் சீக்கிய சமய மக்கள் உள்ளனர். இம்மாகாணத்தில் 124 உறுப்பினர்கள் கொண்ட ஓரவை சட்டமன்றம் இயங்குகிறது. மேலும் பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. இம்மாகாணத்தின் வருவாய் காடுகள் பயிர்த்தொழில் மற்றும் சுற்றுலா மூலம் ஈட்டப்படுகிறது. பஷ்தூன் மொழியில் பக்துன்வா எனபதற்கு பஷ்தூன்களின் நிலம் எனப்பொருள்படும். இம்மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா எனப் பெயர் சூட்ட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி போராடியதன் விளைவாக, 15 ஏப்ரல் 2010 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது. எந்திரன் (திரைப்படம்) எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. துபாய், சிட்னி உட்பட சில உலக நகரங்களில் செப்டம்பர் 30 இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு, "2.0" என்ற பெயரில் ஒரு தொடர்ச்சி திரைப்படம், தயாரிப்பில் உள்ளது. ஒரு சுயசிந்தனை எந்திரனை உருவாக்குவதே விஞ்ஞானி வசீகரனின் குறிக்கோள். பல வருட உழைப்புக்கு பிறகு சிட்டியை உருவாக்குகிறார் வசி(வசீகரன்). சகமனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் முடக்கப்படும் நிலையில் உள்ள சிட்டிக்கு உணர்வுகளையும் உருவாக்குகிறார் வசி. விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு மனிதனை ஒத்த ரோபோ (AndroidHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு டேனி டென்சோங்கோவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில்,வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்து விடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ வசீகரன்(ரஜினி) காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி சிட்டியினிடம் காணப்பட்ட ஆக்கதிறனைக் கொண்ட நீல சிப்பை வெளியேற்றி விட்டு தவறான மென்பொருளை உள்ளடக்கிய அழிக்கும் திறனைக் கொண்டுள்ள சிவப்பு சிப்பை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் தன்னை ஒத்த சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே. தமிழ்நாடு அரசு தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டால் வரிவிலக்கு வழங்குகிறது. ரோபோ என்பது Robot என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வதாகும். தமிழில் ரோபோ என்பதற்கு தானியங்கி என்ற பெயர் வழங்குகிறது. முன்னர் ரோபோ என்று பெயரிடப்பட்டு, பின்னர் "எந்திரன்" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.(இப்படம் முதன் முதலில் தயாரிக்க திட்டமிட்டது அய்ங்கரன் இண்டர்நேசனல். தயாரிப்பு காரணங்களினால் பின்பு சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது "எந்திரன்" திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் ஆங்கில உப தலைப்புகளுடன் வெளியிட எச்.பி.ஓ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது . 31 சூலை, 2010 அன்று மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் "எந்திரன்" இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட இசையை ஏழு கோடி இந்திய ரூபாய்க்கு திங் என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது. இசை வெளியிட்டு முதலாவது வாரத்தில் ஐடியூன்சில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இந்தத் திரைப்படப்பாடல்கள் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட பாடலாக இருந்தது. ஒரு தமிழ் திரைப்படப்பாடல் உலக அளவில் இவ்வாறு முதல் இடம் பிடித்தமை இதுவே முதற் தடவையாகும். சுப்ரமணியபுரம் (திரைப்படம்) சுப்ரமணியபுரம், 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது. படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை நகர்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வெளிவரும் காசி (கஞ்சா கறுப்பு), கத்திக்குத்துக்கு உள்ளாகிறான். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிச் செல்கின்றன. 1980களில் மதுரை நகரில் அழகர் (ஜெய்), பரமன் (சசிகுமார்), காசி (கஞ்சா கருப்பு), சித்தன், டும்கான் ஆகியோர் நண்பர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். சித்தன் மட்டும் ஒலிபெருக்கிக் கடை வைத்திருக்கிறார். இவர்கள் சிறு குற்றங்கள் செய்து காவலர்களிடம் சிக்கும் போது, உள்ளூர் அரசியல்வாதி சோமுவின் தம்பி கனகு (சமுத்திரக்கனி) ஆதரவாக இருந்து உதவுகிறார். இந்த நன்றியில் அழகரும் பரமனும் சேர்ந்து சோமுவின் அரசியல் எதிரி பழனிச்சாமியைக் கொல்கின்றனர். இதற்கிடையில் கனகின் அண்ணன் மகள் துளசியும் (சுவாதி) அழகரும் நெடுநாளாகவே காதல் மயக்கத்தில் இருக்கிறார்கள். சோமு, இக்கொலைக்குப் பிறகு கட்சியில் மாவட்டத்தலைவர் பொறுப்பு பெறுகிறார். ஆனால், சிறைக்குச் சென்ற அழகரையும் பரமனையும் வெளியே எடுக்காமல் ஏமாற்றி விடுகின்றனர். சிறையில் உள்ள இன்னொரு கைதியின் உதவியோடு வெளியே வரும் நண்பர்கள் அக்கைதிக்கு உதவியாக அவருடைய எதிரியைக் கொல்ல, பதிலுக்கு அந்த எதிரியின் நண்பர்கள் இவர்களைத் துரத்த, அவர்களையும் கொல்கிறார்கள். தங்களை ஏமாற்றிய கனகுவைக் கொல்ல நேரம் பார்த்து அழகரும் பரமனும் ஒளிந்து வாழ்கிறார்கள். ஒரு முறை கனகுக்கு வைத்த குறி தவறி கனகுவின் அண்ணனைக் காயப்படுத்துகிறது. இதைச் சுட்டிக் காட்டி, அழகர் உயிரோடு இருந்தால் தங்கள் குடும்பத்தில் அனைத்து ஆண்களையும் கொன்று விடுவான் என்று சொல்லி கனகு துளசியை மூளைச் சலவை செய்கிறான். துளசி-அழகர் காதலை அறியும் கனகு, துளசி மூலம் அழகரை வஞ்சகமாகத் தனியிடத்துக்கு வரச் செய்கிறான். தன் காதலியே தனக்குச் சாவு அழைப்பு விடுத்து ஏமாற்றியதை அறிந்த அழகர், எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் செத்து மடிகிறான். நண்பன் அழகரின் கொலைக்குப் பழியாக பரமன் கனகுவைக் கொடூரமாகத் தலையை அறுத்துக் கொல்கிறான். இத்தனை நாள் உடனிருந்த நண்பன் காசி, பரமனைக் காட்டிக் கொடுத்துக் கொன்று விடுகிறான். இறுதிக் காட்சியில், நல்ல நண்பர்களுக்குத் துரோகம் செய்த காசி வாழத் தகுதியற்றவன் என்று சொல்லி டும்கான் காசியைக் கொல்கிறான். இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்பும் வணிக வெற்றியும் பெற்றது. 1980களில் உள்ள மதுரை, வாழ்க்கை முறைகளைச் சரியாகப் படம் பிடித்தமைக்காக கலை இயக்கம் பெரிதும் பாராட்டப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் "கண்கள் இரண்டால்" பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. படத்தின் பிற்பகுதியில் கூடிய-வன்முறை இருப்பது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. கஞ்சா கறுப்பு கஞ்சா கறுப்பு (, பிறப்பு: 5 சனவரி, 1976) ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம் "பிதாமகனில்" கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார். சமாஜ்வாதி கட்சி சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த கட்சி உத்திரப்பிரதேசம், உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்காக ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது. சனவரி 16 , 2017 அ்ன்று இந்திய தேர்தல் ஆணையம் அகிலேசு தலைமையிலான குழுவே உண்மையான சமாச்வாதி கட்சி எனவும் அதற்கே சைக்கிள் எனவும் அறிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமும் சைக்கிள் ஆகும். சமாஜ்வாதி கட்சி இணையதளம் சோனா மொழி சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். மச்சு பிச்சு மச்சு பிச்சு ("Machu Picchu") என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. 1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. மச்சு பிச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர். மச்சி பிச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை. இன்கா பேரரசு இன்கா பேரரசு ("Inca Empire") என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும். கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது. இப்பேரரசின் தலைநகரம் கஸ்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர், பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி,சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "சூரியனின் மகன்" என அழைத்தனர். உள்ளூர் மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வட்டார வழக்குகள் பேசப்பட்டன என்றாலும் இந்த பேரரசின் அதிகாரப்பூர்வ மொழி குவெச்சுவா ஆகும். இன்காக்கள் தங்கள் பேரரசை டவாண்டின்சுயு என குறிப்பிட்டனர். இதற்கு "நான்கு ஐக்கிய மாகாணங்கள்" அல்லது "நான்கு மண்டலங்கள்" என்று பொருள். 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இன்காக்களின் வாய்மொழி வரலாறு மூன்று இடங்களில் மூன்று குகைகள் குறிப்பிடுகிறது. மைய குகை, டம்போ டோக்கோ, கெபாக் டோக்கோவை பின்பற்றி பெயரிடப்பட்டது. மற்ற குகைகள் மரஸ் டோக்கோ மற்றும் சுடிக் டோக்கோ. நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் மத்தியி குகையிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள்: அயர் மன்கோ, அயர் சாசி, அயர் ஏர்ஜியா, மற்றும் அயர் உச்சு மற்றும் மாமா ஒக்லோ, மாமா ரவுவா, மாமா ஹுவாகா, மற்றும் மாமா கோரா. பக்க குகைகளிருந்து அனைத்து இன்கா மக்களின் முன்னோர்களாக இருக்கும் நபர்கள் வெளியே வந்தனர். அயர் மன்கோ சிறந்த பொன்னால் செய்யப்பட்ட ஒரு மாய தடியை வைத்திருந்தார். இந்த தடி இறங்கிய இடத்தில், மக்கள் வாழ வேண்டும். அவர்கள் ஒரு மிக நீண்ட நேர பயணம் மேற்கொண்டனர். வழியில், அயர் சாசி அவரது பெரும் பலம் மற்றும் அதிகாரத்தை பற்றி பெருமையாக பேசினார். அதனால் அவரது சகோதரர்கள் அவரை ஏமாற்றி ஒரு புனிதமான பொதி ஒட்டகத்தை பெற குகைக்கு திரும்பி அனுப்புகின்றனர். குகைக்கு சென்ற போது, அவரை அவர்கள் உள்ளே மாட்டி கொள்ள செய்து விடுகின்றனர். அயர் உச்சு இன்கா மக்களை பார்த்து கொள்வதற்காக குகை மேல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதை பிரகடன படுத்திய நிமிடம், அவர் கல்லாக மாறினார். அந்த கல்லை சுற்றி ஒரு கோவில் கட்டப்பட்டது. பின்னர் அது ஒரு புனிதமான தளமாக மாறியது. அயர் ஏர்ஜியா இதையெல்லாம் கண்டு வெறுப்படைந்து தனியாக பயணம் செய்ய முடிவு செய்தார். அயர் மன்கோ மற்றும் அவரது நான்கு சகோதரிகள் மட்டுமே இருந்தனர். சுமார் 4 மில்லியன் பேரிலிருந்து 37 மில்லியன் வரை இன்கா மக்கள் தொகை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளாது. இன்காக்கள் சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளை வைத்துருந்தாலும், அதை எவ்வாறு புரிந்து கொள்வதென தற்காலத்தில் தெரியவில்லை. இன்கா பேரரசில் ஒரு எழுதப்பட்ட மொழி இல்லை என்பதால், குவெச்சுவா என்ற பேச்சு மொழியை தான் பயன்படுத்தினர். இது தவிர பல்வேறு பகுதிகளிலும் வட்டார மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பேச்சுகளில் குவெச்சுவா போன்றே மொழியியல் அமைப்பு இருந்தாலும், அது பேசப்படும் பகுதிக்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இன்காக்கள் மறு ஜென்மத்தில் (மறுபிறப்பு) நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். பெரும்பாலான மதங்கள் பச்சாமாமா மற்றும் விரகோச்சா ஆகிய கடவுள்களை சார்ந்து இருந்தது. போரில் வெற்றி கொண்டவர்களுக்கு தங்கள் பலதெய்வ வரிசையில் இடம் கொடுக்க அவர்கள் மதம் கட்டுப்பாடு விதித்தது. இறப்பு என்பது பல சிக்கல்கள் நிறைந்த அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்று நம்பினர். இன்கா மக்கள் மண்டையோட்டு புனரமைப்பதில் ஈடுபட்டனர். அவர்கள் தலையை கூம்பு வடிவத்திற்கு மாற்ற தங்கள் குழந்தைகளின் மென்மையான மண்டையில் சுற்றி இறுக்கமான துணி பட்டைகளை கட்டினர். இவ்வாறு பிரபுக்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டது. இன்கா மக்கள் நர பலி இடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஏறத்தாழ 4,000 சேவகர்கள், நீதிமன்ற அதிகாரிகள், மற்றும் மறுமனையாட்டிகள் இன்கா பெரியவர் கபாகின் மரணத்தின் போது கொல்லப்பட்டனர். இன்கா பேரரசின் பொருளாதாரம் மிகவும் திட்டமிட்ட பொருளாதாரமாக கருதப்பட்டது. இன்கா பேரரசு மற்றும் வெளி பிரதேசங்களுக்கு இடையிலான வணிக தொடர்புகளுக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், இன்கா பகுதி ஒரு கணிசமான உள்நாட்டு சந்தைப் பொருளாதாரம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. போல் போட் போல் போட் ("Pol Pot", போல் பாட், பிறப்பு சலோத் சார், மே 19, 1928 - ஏப்ரல் 15, 1998) முன்னாள் கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். 1970களில் தொடங்கப்பட்ட சிவப்பு கெமர் இயக்கத்தின் தலைவராக இருந்து 1976 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருக்கும் பொழுது அதிகாரபூர்வமாக பல கம்போடிய மக்களால் கூட்டு வேளாண்மையிலும் வதை முகாம்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த நிகழ்வில் கம்போடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 26% உயிரிழந்தனர். 1979 இல் வியட்நாம் படையெடுத்து சிவப்பு கெமர் அரசு முடிந்துவிட்டது. போல் போட் அகற்றி தென்மேற்கு கம்போடியக் காட்டுக்கு தப்பிவிட்டார். 1989இல் வியட்நாம் கம்போடியாவிலிருந்து பின்வாங்கி போல் போட் திரும்பவும் கம்போடியா சென்று புதிய கம்போடிய அரசுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளார். 1997 இல் இவர் கைது செய்யப்பட்டு இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். சிவெத்லானா சவீத்சுக்கயா சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா ("Svetlana Yevgenyevna Savitskaya", ; பிறப்பு: ஆகத்து 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்). சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார். இரண்டு தடவைகள் "சோவியத் வீரர்" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார். சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். ரைட்விஎன்சி ரைட்விஎன்சி ஓர் பல் இயங்குதள திறந்தமூல மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது குனூ கட்டற்ற மென்பொருள் அனுமதி மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த மென்பொருளானது இறுக்காமான ஓர் முறையைக்கையாள்வதால் இணைய இணைப்பு வேகம் குறைந்த கணினிகள் வலையமைப்பு ஊடாகவும் இது இயங்கக்கூடியது. ரைட்விஎன்சி ஏனைய மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருட்களுடன் இயங்கக்கூடியது என்றாலும்.இதன் மென்பொருள் நடைமுறைப்படுத்தலானது ஏனைய மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருளுடன் ஒத்திசைவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இதன் இறுக்கமான நடைமுறையில் அவ்வளவாக சாத்தியம் இல்லை என்றாலும் வாங்கி மற்றும் வழங்கி (கிளையண்ட் சேர்வர்) இதை நடைமுறைப்படுத்தினால் இது சாத்தியமே. வீரமுனை வீரமுனை என்ற கிராமம் கிழக்கிலங்கையின் தென்பாலுள்ள காரைதீவில் இருந்து மேற்கு நோக்கிய அம்பாறை வீதியில் சம்மாந்துறையை அடுத்து அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மை சாகுபடி செய்யும் விவசாயிகளாவர். கண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்க மன்னன் சோழ நாடு சென்று சோழநாட்டு நாட்டு இளவரசி சீர்பாததேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிமைக்குட்பட்ட பிரதேசத்தை தனது மனைவிக்கு காட்டும்பொருட்டு கடல் வழியாக கப்பலில் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். இளவரசியின் தந்தையார் தனது மகளுக்கு துணையாக தனது உறவினர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார், கப்பலானது கடல்வழியாக இலங்கை நோக்கிவருகையில் திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரத்தின் முன்பாக கப்பல் எத்திக்கும் நகராமல் நிற்கவே, இதற்கான காரணத்தை கண்டறிய கப்பலில் வந்தோரில் சிலர் கடலில் தேடியபோது ஒரு விநாயகர் சிலை தடுத்து நிறுத்தியமை கண்டு சீர்பாததேவியும் ஏனையோரும் அதிசயித்தனர். விநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவி, கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான். கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார், (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்,செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன். சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் "சீர்பாதகுலம்" என்று அழைக்கப்படுகின்றனர். இக்கிராமம் அடிக்கடி இனவாதிகளின் துன்புறுத்தலுக்கு இலக்காவதுண்டு. 1990 ஆகத்து 12 இல் இக்கிராமத்தவர்களில் 400 இற்கும் அதிகமானோர் இலங்கைப் படையினராலும், ஊர்காவல்படையினராலும் கொல்லப்பட எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடினர். அக்காலத்தில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டோர் இன்று வரை வீடு திரும்பவில்லை. ஓடிய மக்களில் பலர் திருக்கோவில், தம்பிலுவில் பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து விட்டு அரசாங்கத்தின் மீள் குடியேற்றத்துக்கு ஏற்ப கிராமம் திரும்பி வாழ்க்கையை மீளவும் ஆரம்பித்துள்ளனர். இங்கு சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயமென மூன்று கோவில்களும், கல்வி வளர்ச்சிக்கென இராமகிருஷ்ண சங்க வித்தியாலயமும் அத்துடன் ஈழப்போரில் தாய் தந்தையரை இழந்த சிறார்களை வைத்துப் பராமரிப்பதற்கென சீர்பாததேவி சிறுவர் இல்லமும் மற்றும் கலை இலக்கிய வளர்ச்சிக்கென இளையநிலா கலை இலக்கிய மன்றமும் அமைந்துள்ளன. பட்டைக்கூம்பு வடிவவியலில் பட்டைக்கூம்பு ("pyramid") என்பது, அதன் அடி தவிர்ந்த எல்லா முகங்களும் முக்கோண வடிவில் அமைந்ததும், அவற்றின் உச்சிகள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்வதுமான ஏதாவதொரு முப்பரிமாணப் பன்முகி (polyhedron) ஆகும். ஒரு பட்டைக்கூம்பின் அடி ஏதவதொரு பல்கோணமாக இருக்கலாம், ஆனாலும், பொதுவாக நாற்கோண வடிவான அடியுடன் அமைந்த பன்முகிகளே பட்டைக்கூம்புகள் எனப்படுகின்றன. இதன் அடி ஒரு ஒழுங்கான பல்கோணியாகவும், ஏனைய முகங்கள் சர்வசமனான சமபக்க முக்கோணிகளாகவும் இருப்பின் அது ஒழுங்கான பட்டைக்கூம்பு எனப்படும். பட்டைக்கூம்பின் அடிக்கு இணையான ஒரு தளத்தினால் அதன் மேற்பகுதியை வெட்டி எடுத்தால் மிஞ்சும் பகுதி அடிக்கண்டம் என அழைக்கப்படுகின்றது. விமானம் (கோயில்) இந்துக் கோயில்கள் தொடர்பில் விமானம் எனப்படுவது, இறைவனின் உருவம் வைக்கப்படுகின்ற கருவறைக்கு மேல் அமைக்கப்படுகின்ற பட்டைக்கூம்பு வடிவக் கட்டிடக்கூறு ஆகும். இதனைச் "சிகரம்" என்னும் சொல்லாலும் குறிப்பிடுவது உண்டு. பல சமயங்களில் கருவறை அமைப்பையும், மேலுள்ள கூரைப் பகுதியையும் சேர்த்தே விமானம் அல்லது சிகரம் என்று குறிப்பிடுவது உண்டு. இது முறையாக அமைக்கப்படும் கோயில் கட்டிடமொன்றின் முக்கிய அமைப்பாக விளங்குகிறது. கோயில் ஒன்றின் மிக அடிப்படையான பகுதி என்பதால், இந்த விமான அமைப்பும் அதன் வடிவமும் மிகப் பழைய காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டது. வட இந்தியக் கோயில்களிலும், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்னிந்தியக் கோயில்களிலும் காணப்படும் மிக உயரமான அமைப்பும் இதுவே. ஒரிசாவின் லிங்கராஜர் கோயில் விமானம், தமிழ் நாட்டின் தஞ்சைப் பெரிய கோயில் விமானம் என்பன முறையே வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானங்களுக்கான எடுத்துக் காட்டுகளாக இன்றும் விளங்குகின்றன. எனினும் தென்னிந்தியாவில் 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாயில் கோபுரங்கள் கட்டிடக்கலை அடிப்படையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியபோது, விமான அமைப்பு பெருமளவு முக்கியத்துவத்தை இழந்தது. விமானம் என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டது. சமஸ்கிருதத்தில் விமானம் என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "மானம்" என்பது "அளவீடு". "விமானம்" என்ற சொல்லுக்கு "அளத்தல்", "அளக்கப்பட்டது" என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. நுண் அளவுகள் கொண்டு இயற்றியது ஆதலால் இந்த அமைப்பை "விமானம்" என்கின்றனர். விமானங்களின் கருத்துருவும், பயன்பாடும், அடிப்படைத் தள அமைப்பும் ஒன்றாகவே இருந்தாலும் இதன் அமைப்பு முறையிலும், அழகூட்டலிலும் வேறுபாடுகளைக் காணமுடியும். சிறப்பாக மூன்று வகைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவை, நாகரப் பாணியில் அமைந்தவை, திராவிடப் பாணியில் அமைந்தவை, வேசரப் பாணியில் அமைந்தவை என்பனவாகும். நாகரப் பாணி விமானங்கள் அல்லது சிகரங்கள் வட இந்தியப் பகுதிகளில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவை. திராவிடப் பாணி விமானங்கள் தென்னிந்தியாவுக்கு உரியது. வேசரம், முதலில் குறிப்பிட்ட இரண்டு பாணிகளினதும் இயல்புகள் கலந்து காணப்படும் ஒரு பாணியாகும். இப் பாணியில் அமைந்த விமானங்கள் பெரும்பாலும் கர்நாடகப் பகுதிகளில் உள்ளன. பொதுவாக ஹொய்சாலக் கோயில்களிலும், சாளுக்கியக் கோயில்களிலும் இவற்றைக் காணலாம். நாகர விமானங்கள் பொதுவாக எளிமையானவையாக அமைந்துள்ளன. திராவிட விமானங்கள் கூடிய அழகூட்டல்களுடன் அமைக்கப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட மூன்று பாணிகளை விடவும், இந்தியாவின் சில பகுதிகளில், கருவறைக் கூரைகள் வேறுவிதமாக அமைக்கப்படுவது உண்டு. கேரளக் கோயில்களில் இவ்வாறான வேறுபாட்டைக் காணலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது ஷடங்க விமானம் என அழைக்கப்படும். விமானத்தின் ஆறு அங்கங்கள் இந்த ஆறு அங்கங்களும் மனிதனுடைய பாதம், கால், தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையாகக் கொள்ளப்படுகின்றன. விமானத்தைத் தாங்கிய கருவறை பெரும்பாலும் சதுர வடிவான தள அமைப்பைக் கொண்டது. இதனால் பெரும்பாலான விமானங்களின் வெட்டுமுக வடிவமும் சதுரமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். ஆனாலும், செவ்வகம், வட்டம், பல்கோணம், நட்சத்திர வடிவம் ஆகிய வெட்டு முகங்களைக் கொண்ட விமானங்களும் உள்ளன. எல்லாப் பாணிகளைச் சேர்ந்த விமானங்களிலும் நிலைக் குத்தான சுவர்களைக் கொண்ட கருவறைப் பகுதி, அதன்மேல் அமைந்த நாற்புறமும் ஒடுங்கிச் செல்லும் பகுதி, சற்று ஒடுங்கிய கழுத்துப் பகுதி, குமிழ் வடிவத் தலைப் பகுதி, கலசம் என்பன அடங்கி உள்ளன. இமய மலைப் பகுதிகளில் இருந்து தெற்கே கிருஷ்ணா ஆறு, மல்ராபா ஆறு என்பன வரையான பரந்த வட இந்தியப் பகுதிகளில் வளர்ச்சியடைந்த விமானங்களின் தோற்றத்தில் நிலைக்குத்துக் கோடுகளே கிடைக் கோடுகளிலும் கூடுதலாக முதன்மை பெற்று அமைந்துள்ளன. இவற்றின் தலைப் பகுதி நெல்லிக்கனி வடிவில் அமைந்திருக்கும். தென்னிந்திய விமானங்களின் ஒடுங்கிச் செல்லும் பகுதி, ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த நுண்ணளவு மண்டபங்களைக் கொண்ட தளங்கள் போல் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தளமும் அதற்குக் கீழுள்ள தளத்திலும் குறுகியதாக அமைவதால் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் வடிவம் பெறப்படுகின்றது. இதனால், தென்னிந்திய விமானங்களில் கிடைக் கோடுகள், நிலைக் குத்துக் கோடுகளிலும் முதன்மை பெற்று அமைந்துள்ளதைக் காணலாம். சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம் சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் உள்ள சோமநாதபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது போசளர் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகும். இக் கோயில், போசள மன்னன் மூன்றாம் நரசிம்மனின் கீழ் தண்டநாயகனாக இருந்த "சோமா" என்பவனால் 1268 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அக்காலம் ஹோய்சாலப் பேரரசு தென்னிந்தியாவில் வலுவான நிலையில் இருந்த காலம் ஆகும். பெரிய மதிலால் சூழப்பட்ட இக் கோயிலின் நுழைவாயிலில், உயரமான தூண்களைக் கொண்ட ஒரு நுழைவு மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடம் மாவுக் கற்களால் அமைக்கப்பட்டது. இதன் சமச்சீரான கட்டிட அமைப்பு, ஒரே அளவு முதன்மை கொண்ட கருவறைகளில் அமைந்துள்ள சிற்பங்கள் போன்ற இயல்புகளால் இக்கோயில் பிற ஹோய்சாலக் கோயில்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குகிறது. இதை விடச் சிறப்பான சிற்பங்களையும், சிறப்பான கட்டிடக்கலையையும் கொண்ட பல ஹோய்சாலக் கோயில்கள் இருந்தாலும், இக் கோயில் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது. ஒரு மேடை மீது அமைந்துள்ள இக் கோயில் ஒன்றுபோலவே அமைந்த மூன்று சிறு கோயில்களையும் அவற்றில் மீதமைந்த மூன்று விமானங்களையும் கொண்டது. உள்ளே மேற்படி சிறு கோயில்கள் ஒவ்வொன்றும், சுகநாசி எனப்படும் சிறிய மண்டபங்களினூடாகப் பெரிய மண்டபம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறு மண்டபங்களும் அவற்றுக்கெனத் தனியான விமானம் போன்ற மேற்கட்டிட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இச்சிறு கோயில்களின் புறச்சுவர்கள், விமானங்கள், சுகநாசிகள் அனைத்துமே மிகச் சிறப்பாக அழகூட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக ஒரு சமநிலையான வடிவமைப்பை வழங்குகின்றன. இக்கோயிலின் மையப்பகுதியாக உள்ளது முன் குறித்த பெரிய மண்டபம் ஆகும். சிறு கோயில்கள் மூன்றும் இம் மண்டபத்தின் பிற்பகுதியில் ஒன்றும் இரண்டு பக்கங்களில் ஒவ்வொன்றுமாக அமைந்துள்ளன. மேடை கோயில் கட்டிடத்தின் தள அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் தூண் வரிசைகளோடு கூடிய சுற்று மண்டபங்களும் உள்ளன. கோயில் கட்டிடங்களின் புறச் சுவர்களுக்கு வெளியேயும் நீண்டிருக்கும் மேடை, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையுமுன் அதனைச் சுற்றி வருவதற்கான இடவசதியை வழங்குகிறது. மூன்று சிறு கோயில்களின் கீழ்ப் பகுதிகளும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது. லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும். லிங்கராஜர் என்பது "லிங்கங்களின் அரசர்" என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான "அருவுருவம்" எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள். இக்கோயில், 11 ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவனால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11 ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து "ஏகம்ரா சேத்திரம்" என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான் கோவிலில் காணப்படும் குறிப்புகள் கி.பி.1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுதான் இந்த ஊரில் மிகப் பெரிய கோவில் இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன. லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாக பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் ஜமராஜாவுக்கு (எமதர்மன்தான்) சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார். ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர். http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2532&id1=50&id2=18&issue=20150316 ருவாரி மலிதம்மா ருவாரி மலிதம்மா 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞரும் ஆவார். இந்தியாவின், இன்றைய [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலப்] பகுதிகளில் அக்காலத்தில் நிலவிய [[போசளப் பேரரசு|போசளப் பேரரசால்]] கட்டப்பட்ட பல கோயில்களில் இவர் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார். இவருடைய பங்களிப்புக்கள் [[போசளர் கட்டிடக்கலை]] எனப்படும் பாணியின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவியது. [[கல்வெட்டு]]க்கள் மூலமும், இவரது [[கையொப்பம்|கையெழுத்து]] மூலமும், இவர் சோமநாதபுரத்தில் உள்ள [[சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்|சென்னகேசவர் கோயிலையும்]], அமிர்தபுரத்தில் உள்ள [[அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்|அமிர்தேஸ்வரர் கோயில்]] உட்பட்ட நாற்பதுக்கு மேற்பட்ட கட்டிடங்களிலும் இவர் பணி புரிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவர், அழகூட்டலில் திறமை பெற்றவராக இருந்த இவர் 60 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். இவரது சிற்பங்களில் சுருக்கமாக "மல்லி" அல்லது "ம" என இவர் கையெழுத்து இட்டுள்ளார். [[பகுப்பு:போசளர் கட்டிடக்கலை]] [[பகுப்பு:கர்நாடக வரலாறு]] 1847 1847 (MDCCCXLVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது. அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம் அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது. சிக்மகளூரிலிருந்து 67 கி. மீ. தொலைவிலும், ஹசனிலிந்த்து 110 கி. மீ, தொலைவிலும், சிமோகாவிலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன. புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. [[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்]] நவநீதம் பிள்ளை நவநீதம் பிள்ளை ("Navanethem Pillay", பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் பணியாற்றுவார். 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழரான நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். ஜனவரி 1965 இல் இவர் காபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார்1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார். 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர். புவியிடம் அடிப்பிடையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார். 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் ”சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப் பெண்மணி இவரே. ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார். ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார். 2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது. மற்போர் மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்குகின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது." மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது. மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை, தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.", காஞ்சித் தலைவன்,பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன. தக்சிணேசுவர் காளி கோயில் காளி கோயில், தக்சிணேஸ்வர் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி. தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது. 1847 ஆம் ஆண்டில், ஜமீந்தாரிணியான ராணி ராஷ்மோணி (ராணி ராசமணி) என்பவர் இந்துக்களின் புனிதத் தலமான காசிக்கு ஒரு நீண்ட யாத்திரை செல்வதற்கு விரும்பினார். இவரும், இவரது உறவினர்களும், வேலையாட்களும், தேவையான பொருட்களுடன் 24 படகுகளில் செல்வதாக இருந்தது. கிளம்புவதற்கு முதல் நாள் இரவில் ராணியின் கனவில் தோன்றிய காளி, காசிக்குப் போக வேண்டிய தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் அழகிய கோயிலொன்றைக் கட்டி அங்கே தனது சிலையை வைத்து வணங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் உடனடியாகவே ராணி ஒரு நிலத்தை வாங்கி கோயிலைக் கட்டுவதற்குத் தொடங்கினார். 1847 ஆம் ஆண்டுக்கும் 1855 ஆம் ஆண்டுக்கும் இடையில் இப் பெரிய கோயில் தொகுதியின் கட்டிட வேலைகள் நிறைவேறின. இதன் தலைமைக் குருக்கள் அடுத்த ஆண்டில் காலமாகவே அப்பதவி அவரது தம்பியான இராமகிருஷ்ணருக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து 30 ஆண்டுகளுக்குப் பின் 1886 ஆம் ஆண்டில் அவர் இறக்கும்வரை அக் கோயிலின் புகழுக்கும், பெருமளவில் பக்தர்கள் வருவதற்கும் அவர் காரணமாக இருந்தார். கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம். ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும் தான்தோன்றிக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற் காணப்படுகிறது. இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு. இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன . இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும். இன்பம் இன்பம் () ("happiness") என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்" என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா "உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது" என்று சுட்டி காட்டுகிறார். தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது. ‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: "உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்கத்தன்மை(ம்)" யாகும். இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும். மகாபோதி கோயில், புத்தகயா மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும். புத்த காயா, இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது. பௌத்த நூல்களின் படி புத்த காயாவிலுள்ள போதி மரமே எல்லாப் புத்தர்களும் ஞானம் பெற்ற இடமாகும். புத்த ஜாதகக் கதைகளின்படி, புவியின் தொப்புள் இது, அத்துடன் இவ்விடத்தைத் தவிர வேறு எந்த இடமும் புத்தரின் ஞானம் பெறும் பழுவைத் தாங்க முடியாது. போதி மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் புல், பூண்டுகள் கூட முளைப்பதில்லை. கல்ப முடிவில் பூமி அழியும்போது போதிமண்டாவே இறுதியாக அழியும் அதேபோல் மீண்டும் உலகம் உருவாகும்போதும் இவ்விடமே முதலில் தோன்றும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. மரபுவழிக் கதைகளின்படி, கி.மு 530 ஆம் ஆண்டளவில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த கௌதம புத்தர், இந்தியாவிலுள்ள காயா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள பல்கு ஆற்றங்கரைக்கு வந்தார். அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் தியானம் செய்வதற்காக அமர்ந்தார். புத்த சமய நூல்களின்படி மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர் சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்று பல பிரச்சினைகள் தொடர்பில் அவர் தேடிய விடைகளை உணர்ந்து கொண்டார். இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காகவே மகாபோதி கோயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த ஏழு வாரங்களில், கௌதம புத்தர் ஏழு வெவ்வேறு இடங்களில் தியானம் செய்தும், தனது அநுபவங்களைப் பற்றி எண்ணியும் கழித்தார். இந்த ஏழு வாரங்கள் தொடர்பாகக் குறிக்கப்பட்டுள்ள ஏழு இடங்கள் தற்போதைய மகாபோதி கோயிலில் உள்ளன: புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டளவில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவிமடத்தையும், கோயில் ஒன்றையும் நிறுவ எண்ணினார். கோயில் கட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்க "வைரஇருக்கை" "(Vajrasana)" ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அசோகரே மகாபோதி கோயிலைக் கட்டியவராகக் கருதப்படுகிறார். தற்போதைய கோயில் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டது. குப்தர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த இக் கோயில், முழுமையாகச்செங்கல்லால் கட்டப்பட்டு, இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஹூணர்கள், முகம்மது பின் துக்ளக் நடத்தியது போன்ற முந்திய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து புத்த சமயத்தை ஆதரித்து வந்த அரச மரபுகளின் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சமயமும் இறங்குமுக நிலையை எய்தியது. எனினும் பாலப் பேரரசின் கீழ் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் புத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப் பேரரசின் கீழ், கி.பி 8 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மஹாயான பௌத்தம் சிறப்புற்று விளங்கியது. எனினும், பௌத்த சமய பாலப் பேரரசு இந்துக்களின் சேன மரபினரால் தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து, புத்த சமயத்தின் நிலை மீண்டும் இறங்கு முகமாகி, இந்தியாவில் ஏறத்தாள அழிந்து விட்டது. 12 ஆம் நூற்றாண்டில், புத்த கயா முஸ்லிம் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இக் காலத்தில் மகாபோதி கோயில் பழுதடைந்து, கைவிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இப் பகுதிகளின் முதன்மையான நில உரிமையாளராக ஆன இம் மடத்தின் தலைவர் மகாபோதி கோயில் நிலத்துக்கும் உரிமை கோரினார். 1880 களில், அன்றைய இந்தியாவின் பிரித்தானிய அரசு, சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரின் வழிகாட்டலின் கீழ், மகாபோதி கோயிலில் திருத்த வேலைகளைத் தொடங்கியது. 1891 ஆம் ஆண்டில் இலங்கையின் புத்த மதத் தலைவர்களுள் ஒருவரான அனகாரிக தர்மபால இக் கோயிலின் கட்டுப்பாட்டை புத்த சமயத்தவரிடமே கையளிக்க வேண்டும் என பிரசார இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இதை சங்கர மடத் தலைவர் எதிர்த்தார். இதனால் இப் பிரசாரத்துக்கு உடனடியான பலன் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், 1949 ஆம் ஆண்டில் இக் கோயிலின் கட்டுப்பாடு மடத் தலைவரிடமிருந்து பீகார் மாநில அரசின் கைக்கு மாறியதுடன், இக் கோயிலுக்கான ஒரு மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டது. இது புத்த சமயத்தவரின் கோரிக்கைக்குக் கிடைத்த அரைகுறை வெற்றி எனலாம். இக் குழுவில் 9 உறுப்பினர்கள் இருந்தனர். தலைவர் உட்பட இவர்களுட் பெரும்பான்மையோர் சட்டப்படி இந்துக்களாகவே இருந்தனர். மகாபோதி கோயிலின் முதல் தலைமைப் பிக்கு, வங்காளத்தைச் சேர்ந்தவரும், மகாபோதி சங்கத்தின் முனைப்பான உறுப்பினருமான அனகாரிக முனீந்திரா என்பவராவார். இக் கோயில் இந்தியச் செங்கல் கட்டிடங்களுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுவதுடன், பிற்காலக் கட்டிடக்கலை மரபுகளில் செல்வாக்குச் செலுத்திய ஒரு கட்டிடமாகவும் கருதப்படுகிறது. யுனெஸ்கோ வெளியீட்டின் படி, குப்தர் காலத்தைச் சேர்ந்த இக் கோயில் முழுதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டதும், கம்பீரமானதுமான மிகவும் பழைய கட்டிடங்களில் ஒன்றாகும். மகாபோதி கோயிலின் உயர்ந்த கோபுர அமைப்பு 55 மீட்டர்கள் உயரம் கொண்டது. இது, இதே பாணியில் அமைந்த நான்கு சிறிய கோபுர அமைப்புக்களால் சூழப்பட்டுள்ளது. மகாபோதி கோயில் அதன் நாற்புறமும் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புக்கள் உள்ளன. இத் தடுப்புக்கள் இரண்டு கட்டிடப் பொருள் பயன்பாடு, பாணி என்பவை தொடர்பில் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. மணற்கல்லாலான பழைய அமைப்பு கி.மு 150 ஆம் ஆண்டளவைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. மினுக்கப்படாத கருங்கற்களால் கட்டப்பட்ட அடுத்த வகை, கி.பி 300 – 600 வரையான குப்தர் காலத்தைச் சேர்ந்தது. இத் தடுப்பு அமைப்புக்களில், இந்துக் கடவுளரான இரு புறமும் யானைகள் பூசை செய்யும் கஜலக்குமி, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிந்திய அமைப்பு வகையில், தூபிகளின் உருவங்கள், கருடன், தாமரை மலர்கள் என்பவை செதுக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர் அர்ச்சகர் என்பவர் இந்து சமயக் கோயில்களில் அர்ச்சனை செய்யும் நபராவார். அர்ச்சகாஸ்ச்ச ஹரி ஸக்ஷ¡த்" என்கிறது வேதம். உலக தர்மத்தை காப்பதில் மிக முக்கிய பங்காற்றிவருபவர்கள் தான் அர்ச்சகர்கள். தன் உடல், பொருள், ஆவி, இன்பம் எல்லாவற்றையுமே இறைவனுக்காக தியாகம் செய்து உலகம் தழைக்க இறைவனிடம் இடைவிடாது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இறைச்சேவை செய்பவர்கள்தான் அர்ச்சகர்கள். இவர்கள் இறைவன் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும்போதே பகவான் ஸ்ரீவிஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இறைவனின் ஹ்ருதயத்திலிருந்து இவர்கள் தோன்றியதால் இவர்களுக்கு ஸ்ரீவைகாநஸர்கள் என்று பெயர். அதாவது முதன் முதலில் பெருமாள் சர்வ லோகங்களையும் படைக்க எண்ணியபோது, உலக ஜீவராசிகளை தான் காக்கவும், தன்னை தினம் ஆராதித்து காப்பாற்ற தனக்காக ஒருவரை நியமிக்க வேண்டும்,என்று எண்ணிய போது, தனக்கு இணையான ஒருவரால்தான் என்னை பூஜிக்க முடியும் என்று கருதிய ஸ்ரீமஹாவிஷ்ணு, தன் ஹ்ருதயகமலத்திலிருந்து,தன் ஆத்மாவின் ஒரு பாகத்தை தன் வலது கை நகத்தினால், கிள்ளியெடுத்தார். பகவானின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஆத்மாவும், ஸ்ரீவிஷ்ணுவைப்போலவே இருந்ததால், இருவரையும் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடாது என்பதால், தன் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்ட தன்னைப் போலவே, சங்கு-சக்ரம் தரித்து நான்கு கைகளுடன் விளங்கும் இன்னொரு விஷ்ணுவுக்கு "ஸ்ரீவிகநஸர்" என்று பெயர் சூட்டி அவரிடம் ஒன்றரைக்கோடி க்ரந்தங்களை கொடுத்து அதில் உள்ளபடி நீவிர் எனக்கு தினம் ஆராதித்து வரவேண்டும். என்று கட்டளையிட்டார். அதன்படி அன்றிலிருந்து இன்று வரை இடையறாது பகவானுக்கு தொடர்ந்து பூஜித்து வருபவர்கள்தான் இந்த அர்ச்சகர்கள். இவர்களின் பூலோக பிறப்பு - இந்தியாவின் வடக்கேயுள்ள "நமிசாரண்யம்" என்கிற அற்புத புனித வனமாகும். ஆம்! இங்குதான் அர்ச்சகர்கள் முதல் முதலில் இறைவனால், இந்த புண்ய பூமியில் தோற்றுவிக்கப்பட்டார்; பிறகுதான் மற்ற ஜீவராசிகளை இறைவன் படைக்கலானார். என்பது வேதவழி வரலாறு. அர்ச்சகர்களின் இந்த தோற்றத்தைக் குறிக்கும் ஸ்லோகம் இப்படிப்பட்ட மிகப்புனிதமான இறைவனின் ப்ரதி அவதாரமாக திகழும் ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள (திருமலா திருப்பதி தேவஸ்தானத்தையும் சேர்த்து) பல ஸ்ரீ சிவா மற்றும் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக சேவையாற்றிவருகிறார்கள். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஆகம விதிகளின்படி நடத்தப்படுகின்ற இந்துக் கோயில்களில் பெண்கள் மற்றும் பிராமணர் அல்லாத சாதியினர் பூசை செய்ய அனுமதி இல்லை. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை சமூக நீதியை வலியுறுத்துபவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அம்பேத்கர் தலைமையில் 1927இல் நடந்த மகத் போராட்ட மாநாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தினர் அனைத்து சாதியினரும் அர்சகராக வேண்டும் என்று கோரி வந்தனர். இதையடுத்து மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1970 திசம்பர் இரண்டாம் நாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதாகவும், உரிய பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்றும் கூறப்பட்டிருந்த‍து. இதை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் முடிவில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதை ஏற்பதாகவும், அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டப்பிரிவு செல்லாது என்று கூறியது. கேரளத்தில் ஈழவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் 1993 இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு அர்ச்சகராக நியமிக்கப்பட சாதியை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதன்மையான கூறாக இருக்க வேண்டியதில்லை என்று கூறியது. மேற்கண்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மீண்டும் மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2006 மே 23 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் அனைத்து சாதியைகளைய்ம் சேர்ந்த 206 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடு்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2015 திசம்பரில் வழங்கிய தீர்ப்பில் ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்று கூறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஆகம விதிப்படி எந்தப் பிரிவினர், கோத்திரத்தினர் காலங்காலமாக இருந்து வருகின்றார்களோ அவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் தீர்ப்பு வழங்கியது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்புக்குப் பிறகு அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கேரள அறநிலையத்துறை 2017 அக்டோபர் 6 அன்று 26 பிராமணர், 30 பிற்படுத்தப்பட்டோர், 6 பட்டியல் சாதியினர் என மொத்தம் 62 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கியது. இதன் பிறகு தமிழக அறநிலையத் துறையால் முதன் முதலாக பிற்படுத்தப்பட்ட சாதியினரான அகமுடையார் சாதியைச் சேர்ந்தவரும், தமிழக அறநிலையத் துறையால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவரான மாரிச்சாமி என்பவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயில் பூசாரியாக 2017 பெப்ரவரி மாதம் பணியில் அமர்த்தப்பட்டார். கர்நாடகாவின் மங்களூருவில் கேரளாவின் ஆன்மீக சீர்திருத்தவாதியான நாராயண குருவால் அமைக்கப்பட்ட குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் லட்சுமி மற்றும் இந்திரா ஆகிய இரு விதவைப் பெண்கள் நவராத்திரியின் துவக்க தினத்தன்று அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் என்பது ஜூலை 25, 2008 மாலை 1:30 மணிக்கு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் ஒன்பது குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்து மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம், லஷ்கர் இ தொய்பா ஆகிய இரண்டு தீவிரவாதி குழுமங்களும் இந்த குண்டுவெடுப்பை செய்திருக்கலாம் என்று பெங்களூர் காவல்துறையும் இந்திய அறிவு முகமையும் கூறியுள்ளன. இதனால் பெங்களூரின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மூடப்பட்டன. இதற்கு ஒரு நாள் பிறகு அகமதாபாதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்து 100 பேர் படுகாயம் அடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:20, மடிவாலா பேருந்து நிறுத்தம்
இரண்டாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:25, மைசூர் சாலை
மூன்றாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:40, அடுகுடி
நான்காம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:10, கோரமங்கள
ஐந்தாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:25, விட்டல் மால்யா சாலை
ஆறாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:35, லாங்ஃபர்ட் டவுன்
ஏழாம் குண்டுவெடிப்பு: ரிச்மண்ட் டவுன்
பெருக்கல் வாய்ப்பாடு கணிதத்தில் பெருக்கல் வாய்பாடு, ("multiplication table") என்பது ஒரு இயற்கணித முறைமைக்காக பெருக்கல்) செயலியை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கணித அட்டவணை ஆகும். அடிப்படை எண்கணிதத்தின் ஒரு முக்கியப் பகுதியாகத் தசமப்பெருக்கல் வாய்பாடு பலகாலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. பல கல்வியாளர்கள் 9 × 9 பெருக்கல் வாய்பாடு வரைக் கற்றல் போதுமானது எனக் கருதுகின்றனர். வேகமாக பெருக்கல் செய்யயும் திறன் கணக்குகளை கணிப்பதற்கு உதவும். 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர்கள் பயன்படுத்திய பெருக்கல் வாய்பாடுகளே மிகவும் பழமையான பெருக்கல் வாய்பாடாகும். அவர்கள் அடிமானமாக 60 ஐப் பயன்படுத்தினர். சீன டிசுங்குவா மூங்கில் பட்டைகளே (Tsinghua Bamboo Slips), பத்தடிமான பெருக்கல் வாய்ப்பாடுகளில் மிகவும் பழமையானவையாகும்; இவை கிமு 305 களில் சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தவை. பெருக்கல் அட்டவணை சிலசமயங்களில் பண்டைய கிரேக்கக் கணிதவியலாளர் பித்தாகரசுக்கு (570–495 BC) உரியதாகக் கருதப்படுகிறது. பெருக்கல் வாய்ப்பாடானது, பிரென்பல மொழிகளில் "பித்தாகரசின் அட்டவணை" என அழைக்கப்படுகிறது. கிரேக்க-ரோமானியக் கணிதவியலாளரான நிக்கோமாக்கசு, "எண்கணிதத்திற்கு ஒரு அறிமுகம்" (Introduction to Arithmetic) என்ற நூலில் பெருக்கல் வாய்பாட்டை சேர்த்திருந்தார். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிரேக்க மெழுகுப் பலகை பெருக்கல் வாய்ப்பாடுதான் இன்றளவும் கிடைத்துள்ள பழைய பெருக்கல் வாய்பாடு ஆகும். இது கிபி 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிபி 493  இல் "விக்டோரியாவின் அக்விட்டைன்" என்ற கணிதவியலாளர் ரோம எண்ணுருக்கள் கொண்ட 98 நிரலுள்ள பெருக்கல் வாய்ப்பாட்டை எழுதினார். அவ்வாய்பாடு 2 முதல் 50 வரையான எண்களால் ஒவ்வொரு எண்ணையும் பெருக்கக் கிடைக்கும் பெருக்குத்தொகையைக் கொண்டிருந்தது. அவ்வாய்பாட்டில் நிரைகள் ஒரு ஆயிரத்தில் துவங்கி, நூறுகளாகக் குறைந்து இறுதியில் ஒரு நூறு வரையும், பின்னர் பத்துக்களாகக் குறைந்து இறுதியில் ஒரு பத்து வரையும், அடுத்து ஒன்றுகளாகக் குறைந்து இறுதியில் ஒரு ஒன்று வரையும், பின்னர் 1/144 வரையான கீழிறங்கு பின்னங்களையும் கொண்டிருந்தது." 1820 இல் இயற்பியலாளர் ஜான் லெஸ்லி 99 × 99 வரையிலான பெருக்கல் வாய்ப்பாட்டைத் தனது "எண்கணிதத்தின் தத்துவம் (The Philosophy of Arithmetic)" என்ற நூலில் வெளியிட்டார். இவ்வாய்ப்பாட்டின் மூலம் எண்களை ஒரே சமயத்தில் இரண்டு இலக்கங்கள் கொண்டு பெருக்குவது சாத்தியமானது. வழக்கமாக பள்ளிகளில் கற்பிக்கப்படும் 12 × 12 பெருக்கல் அட்டவணை: பாரம்பரியமாக மனனம் செய்யப்படும் பெருக்கல் அட்டவணையின் வடிவம்-பத்தாம் வாய்பாடு: குலங்கள், களங்கள், வளையங்கள் மற்றும் வேறு இயற்கணித முறைமைகளில் ஈருறுப்புச் செயலிகளை வரையறுப்பதற்கு அட்டவணைகள் பயன்படுகின்றன. அத்தகைய அட்டவணைகள் கெய்லி குல அட்டவணைகள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: களம் Z இன் மீதான கூட்டல் மற்றும் பெருக்கல் அட்டவணைகள்: சீன பெருக்கல் வாய்பாடு எண்பத்தியொரு வாக்கியங்கள் கொண்டது; ஒவ்வொரு வாக்கியமும் நான்கு அல்லது ஐந்து சீன உருக்கள் (characters) கொண்டவையாய் மனப்பாடம் செய்ய எளியதாக உள்ளது. இவ்வாய்ப்பாட்டின் சுருங்கிய வடிவில் நாற்பத்தைந்து வாக்கியங்கள் மட்டுமே உள்ளன (8 x 9 =72; 9 x 8 = 72 இரண்டும் ஒத்தவை என்பதால் இருமுறை கற்க வேண்டிய அவசியமில்லை). அலெக்சாண்டர் கன்னிங்காம் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் ("Alexander Cunningham", 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள "கிறிஸ்துவின் மருத்துவநிலையம்" எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர். அனகாரிக தர்மபால அனகாரிக தர்மபால ("Anagarika Dharmapala", , 17 செப்டெம்பர் 1864 - 29 ஏப்ரல் 1933), 20 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தொடக்கி வைத்ததில் முன்னணியில் இருந்தவர் ஆவார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ முற்றாகவே அழிந்த நிலையில் இருந்த புத்த சமயத்துக்கு அங்கே புத்துயிர் அளிப்பதில் முன்னோடியாக இருந்தார். தற்காலத்தில் ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் புத்த தர்மத்தைப் போதித்த முதல் பௌத்தரும் இவரே. தற்காலத்தில், மணம் முடிக்காமல், புத்த சமயத்துக்காக முழுநேரம் உழைக்கும் ஒருவரே "அனகாரிக" என அழைக்கப்படுகிறார். தர்மபாலவே முதலாவது "அனகாரிக" ஆவார். இவர் தனது எட்டாம் வயதிலேயே மணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வுறுதி மொழியை அவர் வாழ்நாள் முழுதும் காப்பாற்றினார். இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு பிக்கு அல்ல. இவர் தனது தலையை மழித்துக் கொண்டதில்லை. மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார். இவரது இயற்பெயர் "டொன் டேவிட் ஹேவாவிதாரண". தந்தையார் டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண, தாயாரின் கன்னிப் பெயர் "மல்லிகா தர்மகுணவர்த்தன". அப்போது இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாகவே இருந்தன. டொன் டேவிட்டும் ஒரு கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி பயின்றார். முதலில் கோட்டேயிலிருந்த கிறிஸ்தவக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு அக்கடமியிலும் பயின்றார். அப்போது, இலங்கையில், தேசிய உணர்வு தலை தூக்கத் தொடங்கியது. இலங்கையின் வடக்கு, கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் புத்த மதத்துக்குச் சார்பான நிலைமைகள் தோன்றின. 1875 ஆம் ஆண்டு நியூ யார்க்கில், கர்னல் ஒல்கொட் எனபவரும், பிலவத்ஸ்கி அம்மையாரும், பிரம்மஞான சபையை (Theosophical Society) நிறுவினர். அவர்கள் இருவரும், புத்த மதத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்தனர். 1880 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த அவர்கள் தங்களைப் பௌத்தர்களாக அறிவித்துக் கொண்டனர். ஒல்கொட் அடிக்கடி இலங்கைக்கு வந்து பௌத்த கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றினார். இவர் 300 பௌத்த பாடசாலைகள் வரை நிறுவினார். இவற்றுட் சில இன்றும் உள்ளன. இளைஞனாக இருந்த தர்மபால, ஒல்கொட்டின் பணிகளில் உதவி வந்தார். ஒல்கொட்டுக்கு உதவி வந்த தர்மபால, பெரும்பாலும் அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். பிளவத்ஸ்கி அம்மையாரோடும் நெருங்கியவராக இருந்த தர்மபாலவுக்கு, பாளி மொழியைக் கற்கும்படி அம்மையார் ஆலோசனை வழங்கினார். இக் காலத்திலேயே இவர் தனது பெயரை, "தர்மத்தின் காவலன்" எனப் பொருள்படும், தர்மபால என்று மாற்றிக்கொண்டார். தர்மபால, 1891 ஆம் ஆண்டில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்த காயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு யாத்திரை சென்றார். அப் பௌத்த கோயில், சைவக் குருவானவருடைய பொறுப்பில் இருந்ததையும், அங்கிருந்த புத்தர் சிலை இந்துக் கடவுளாக மாற்றி வணங்கப்பட்டு வந்ததையும், பௌத்தர்கள் வணங்குவதற்கு அனுமதிக்கப்படாததையும் தர்மபால கண்டார். இதனை எதிர்த்துப் பிரச்சார இயக்கமொன்றை அவர் தொடங்கினார். 1891 இலேயே மகாபோதி சங்கம் கொழும்பில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டன. புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பல நூற்றாண்டுகளாக அக் கோயிலின் கட்டுப்பாட்டைத் தம் வசம் வைத்திருந்த சங்கராச்சாரியார் மடத்தின் மீதும், அதன் தலைவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது. 1893 ஆம் ஆண்டில் சிக்காகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்துக்கு, தேரவாத புத்த சமயத்தில் சார்பாளராக அழைக்கப்பட்டார். இவர் தனது முப்பதுகளின் தொடக்கத்திலேயே உலகம் அளவில் இயங்கும் ஒருவரானார். உலகம் முழுதும் பயணம் செய்து விரிவுரைகள் ஆற்றியதுடன், விகாரைகளையும் நிறுவினார். இத் தொண்டு அடுத்த 40 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளை, இலங்கையில் பாடசாலைகளையும், மருத்துவ நிலையங்களையும் நிறுவியதுடன் இந்தியாவிலும் பௌத்த கோயில்களையும், விகாரைகளையும் நிறுவினார். இவற்றுள் முக்கியமானது, புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்ததாகக் கருதப்படும் சாரநாத் என்னும் இடத்தில் அவர் அமைத்த கோயில் ஆகும். சாரநாத்தில் 1933 ஆம் ஆண்டில் பிக்குவாக ஆன தர்மபால அங்கேயே, அதே ஆண்டில், தனது அறுபத்து ஒன்பதாவது வயதில் காலமானார். பாலப் பேரரசு பாலப் பேரரசு ("Pala Empire"), தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், நேபாளம் & வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில், கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். "பால" (வங்காள மொழி: পাল) என்னும் சொல் "காப்பவர்" என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு பின்னொட்டாகக் காணப்படும். இப் பேரரசை நிறுவியவன் கோபால என்பவன். இவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த தர்மபால (770-810), தேவபால (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். சேன அரச மரபினரின் தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது. பாலர்கள், புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். இவர்கள் கன்னௌசி பகுதியைச் சேர்ந்த ககத்வாலாக்களுடன் மணத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் பல கோயில்களைக் கட்டியதுடன், நாலந்தா, விக்கிரமசீலா முதலிய பல்கலைக் கழகங்களையும் ஆதரித்தனர். இவர்களுடைய மதமாற்றமே திபேத்தில் பௌத்த மதம் பரவுவதற்கு மூல காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. பெருமளவில் காணப்படும் பாலர் தொடர்பான பதிவுகள் எதிலும் அவர்கள் மூலம் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்தங்கள், ஆணைகள், கல்வெட்டுக்கள் ஒன்றுமே பாலருடைய தோற்றம் பற்றி எவ்விதத் தகவலையும் தரவில்லை. "மஞ்சுசிறீ மூலகல்பம்" என்னும் நூல், கோபால ஒரு சூத்திரன் என்கிறது. "பால சரிதம்", பாலர்கள் தாழ்ந்தகுலச் சத்திரியர்கள் என்கிறது. திபேத்திய வரலாற்றாளரான தாரநாத லாமா தன்னுடைய, இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு குறித்து எழுதிய நூலிலும், கணராமா என்பவர் தன்னுடைய நூலான "தர்ம மங்கள"விலும் இதே கரித்தையே கூறியுள்ளனர். அராபிய நூல்களிலும் பாலர்கள் உயர்ந்த மரபில் வந்தவர்கள் அல்லவென்றே குறிப்பிடுகின்றன. முதலாம் கோபாலவின் மகனான தர்மபாலவின் காலிம்பூர்ச் சாசனம், கோபால "வப்யாத்தா" எனும் போர்வீரனின் மகன் என்றும், கல்வியில் சிறந்த தாயிதவிஷ்ணு என்பவனின் பேரன் என்றும் குறிப்பிடுகின்றது. "சந்தியாகரநந்தி" என்பவருடைய "ராமசரிதம்" ராமபால என்னும் பாலப் பேரரசனை சத்திரியன் எனக்கூறும் அதே வேளை இன்னோரிடத்தில் அவன் சமுத்திர குலத்தைச் சேர்ந்தவன் என்கிறது. பாலர்களைச் சமுத்திரத்துடன் இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை. வங்காளம் வங்காளம் ("Bengal", வங்காள மொழி: বঙ্গ "Bôngo", বাংলা "Bangla", বঙ্গদেশ "Bôngodesh" அல்லது বাংলাদেশ "Bangladesh"), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பிரதேசம். பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில், 16 அக்டோபர் 1905-இல் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, இந்துக்கள் அதிகம் வாழ்ந்த வங்காளத்தின் மேற்கு பகுதியை மேற்கு வங்காளம் என்றும், இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளத்தை கிழக்கு வங்காளம் என்றும் பெயரிட்டு வங்காளத்தை பிரிவினை செய்து ஆண்டார். பின்னர் இந்தியப் பிரிவினையின் போது, இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளதை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கப்பட்டு, கிழக்கு பாகிஸ்தான் என பெயரிடப்பட்டது. வங்காள தேச விடுதலைப் போருக்குப் பின்னர் டிசம்பர் 1971-இல் கிழக்கு பாகிஸ்தான், வங்காளதேசம் எனும் புதுப் பெயருடன் புதிய நாடு உருவானது. வங்காளத்தின் பெரும்பாலானோர் வங்காள மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வங்காள மொழியை முதல்மொழியாகப் பேசுகின்றனர். வங்காள மக்களின் முக்கிய உணவு அரிசி மற்றும் மீன் ஆகும். சுந்தரவனக்காடுகள் மற்றும் வங்காளப் புலிகளுக்கு வங்காளம் பெயர் பெற்றது. அங்கதம் தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை. "அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது." சில அங்கதம் படைப்புகள் கவிழ்ப்பாக்கம் (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளன. 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் என்பது ஜூலை 26, 2008 மாலை 6:45 மணிக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாதில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். 70 நிமிடங்களில் மொத்தத்தில் 17 தொடர் குண்டுகள் வெடித்து 38 பேர் உயிரிழந்து மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய முஜாஹிதீன் என்ற தீவிர குழுமம் இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தமக்கு மின்னஞ்சல்கள் கிடைத்ததாக பல இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தினதும் இந்தியாவின் மேற்குப் பகுதியின் ஒரு முக்கிய கலாசார, வர்த்தக மையமாகத் திகழ்கிறது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ரதொவான் கராட்சிச் ரதொவான் கராட்சிச் ("Radovan Karadžić", Радован Караџић, râdovaːn kâraʤiʨ; பிறப்பு: ஜூன் 19, 1945) ஒரு முன்னாள் பொஸ்னிய சேர்பிய அரசியல்வாதியும் போர்க்காலத் தலைவரும் ஆவார். இவர் போர்க்காலக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மனநோய் மருத்துவராக பட்டம் பெற்ற இவர் பொசுனியா எட்சகோவினாவில் சேர்பிய மக்களாட்சிக் கட்சியை அமைத்தார். 1992 முதல் 1996 வரையில் சுரூப்ஸ்கா குடியரசின் அதிபராக இருந்தார். ஐநாவின் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் போர்க் குற்றங்களுக்காகக் குற்ற்ம் சாட்டப்பட்டு 1996 ஆண்டு முதல் 2008 வரையில் தலைமறைவாக இருந்தார். 1992-1995 காலப்பகுதியில் இடம்பெற்ற பொஸ்னியப் போரின் போது பல்லாயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம், மற்றும் குரொவேசியர்களின் படுகொலைகளுக்காக இவர் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாயிருந்த காலத்தில் இவர் பெல்கிறேட் நகரில் "டாக்டர் டிராகன் டாபிச்" என்ற பெயரில் மாறு வேடத்தில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். 2007 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் "பீட்டர் குளூமாச்" என்ற பெயரில் மருத்துவ விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். கராட்ஜிச் ஜூலை 21, 2008 இல் பெல்கிறேட் நகரில் கைது செய்யப்பட்டார். சிறுப்ஸ்கா குடியரசு சிறுப்ஸ்கா குடியரசு ("Republika Srpska" செர்பிய மொழி: Република Српска, ), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது. ஐரியக் குடியரசுப் படை தற்காலிக ஐரியக் குடியரசு இராணுவம் ("Provisional Irish Republican Army", அல்லது ஐ.ஆர்.ஏ., "IRA") என்பது ஓர் இடதுசாரி இராணுவ இயக்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வட அயர்லாந்தை இராணுவ வழிமுறைகளில் பிரித்து தனிநாடாக்கப் போராடிய ஓர் ஐரிய இராணுவக் குழுவாகும். இவ்வியக்கம் வட அயர்லாந்தையும் அயர்லாந்து குடியரசையும் விடுவித்து முழு அயர்லாந்து தீவையும் ஒரு நாடாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்து குடியரசிலும் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டன. ஜூலை 28, 2005 இல் ஐஆர்ஏ இராணுவக் கவுன்சில் தனது இராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவதாகவும் தனது தனிநாட்டுக் கோரிக்கைகளை அரசியல், சனநாயக வழிமுறைகளில் போராடிப் பெறப்போவதாகவும் அறிவித்தது. 2007 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் உள்ளக இராணுவ அறிக்கை ஒன்றின்படி பிரித்தானிய இராணுவத்தினரால் ஐ.ஆர்.ஏ இயக்கத்தை இராணுவ வழிமுறைகளில் அடக்கி வெல்ல முடியாமல் போனதென்றும், அதே நேரத்தில் வன்முறைகள் மூலம் ஐ.ஆர்.ஏ தனது நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் போனதென்றும் குறிப்பிட்டுள்ளது மந்தை புத்தி மந்தைப் புத்தி (swarm intelligence) என்பது இயற்கை மற்றும் செயற்கையில் காணப்படும் ஒருங்கிணைந்த, மையம் விலக்கப்பட்ட ஒரு கூட்டு நடத்தை முறை ஆகும். இந்த நடத்தை முறையில் ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்படுத்தும் மையம் இல்லாவிடிலும் இது வெற்றிகரமாய்ச் செயல்படுகிறது. எறும்புச் சாரை, பறவைக் கூட்டம், விலங்கு மந்தைகள், மீன் கூட்டம் ஆகியவை இயற்கையில் காணப்படும் மந்தைப் புத்திக்கான உதாரணங்கள் ஆகும். பொறியியல் அறிவோ, படை நடத்தும் தளபதி அறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாக இல்லை.. ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு! "தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தால் தெரியும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார். "எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி 12,000 வகை எறும்பு சிற்றினங்கள் வளர்த்துக் கொண்ட அறிவு தான் "மந்தை புத்தி". மந்த புத்தியல்ல. தனி ஒரு எறும்பினால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு மாபெரும் சாதனையை ஒரு எறும்புக் கூட்டம் எளிதில் சாதித்துவிடும். தீனி இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதிலும், கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத் திறமையிலும் பக்கத்து புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் ராஜ தந்திரத்திலும், தனி ஒரு எறும்பு 'மண்டு' ஆனால் கூட்டமாக செயல்படும்போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம். இதை கோர்டான் அவர்கள் 'ஸ்வார்ம் இன்டேல்லிஜென்ஸ்' ("Swarm Intelligence") மந்தை புத்தி என்றழைக்கிறார். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 பதிப்பே மைக்ரோசாப்டின் ஆகப்பிந்தைய அதிகாரப்பூர்வமாக வெளிவிடப்பட்ட ஆபிஸ் பதிப்பாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) ஆபிஸ் 2007 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அல்லது 3, விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி 1 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளம் தேவைப்படும். உலகச் சமயங்களின் பாராளுமன்றம் உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற கூட்டம் ஆகும். உலக மத நம்பிக்கைகளிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இந்த நிகழ்வு, அதன் நூற்றாண்டு நிறைவான 1993 ஆம் ஆண்டில் இன்னொரு உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயர் தாங்கிய கூட்டம் ஒன்றால் நினைவு கூரப்பட்டது. இது, "உலக சமயங்களின் பாராளுமன்றம்" என்னும் பெயரில் தொடர் கூட்டங்கள் நடப்பதற்கு வித்திட்டது. 1893 ஆம் ஆண்டில், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுமுகமாக சிக்காகோவில், உலக கொலம்பியக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் சிக்காகோவுக்கு வந்தனர். முன்னெப்போது இல்லாத அளவுக்கு இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலைப் பயன்படுத்திக் கொண்டு, மகாநாடுகள், பாராளுமன்றங்கள் என்னும் பெயர்களில் பல கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இவற்றுள் ஒன்றுதான் உலக சமயங்களின் பாராளுமன்றம். செப்டெம்பர் 11 தொடக்கம் செப்டெம்பர் 27 வரை இடம்பெற்ற 1893 ஆம் ஆண்டுப் பாராளுமன்றமே கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த ஆன்மீக மரபுகளின் பேராளர்கள் ஒன்றுகூடிய முறைப்படியான முதல் நிகழ்வு ஆகும். உலகம் தழுவிய மதங்களிடையேயான முறையான கருத்தாடல்களின் தொடக்கம் என இந் நிகழ்வு இன்று போற்றப்படுகிறது. தாயக அமெரிக்கச் சமயங்கள், சீக்கியம், வேறு சில உள்ளூர்ச் சமயங்களும், புவி மையச் சமயவாதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டுக் கூட்டத்திலேயே இவை முதன் முதலாகக் கலந்து கொண்டன. அக்காலத்தில் புதிய இயக்கங்களாக இருந்த ஆன்மீகவாதம் (Spiritualism), கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) ஆகிய சமயங்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கிறிஸ்தவ அறிவியலின் நிறுவனரான மேரி பேக்கர் எடி என்பவரும் பேராளராக வந்திருந்தார். ஐரோப்பாவில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், இக் கூட்டத்தில் பேசப்பட்டதில் இருந்தே பஹாய் சமயம் அமெரிக்காவில் அறிமுகமானது. இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபால தேரவாத பௌத்தத்தின் பேராளராகவும், சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தின் பேராளராகவும் கலந்து கொண்டனர். ParliamentofReligions.org உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோ உலக விழா என்றும் அழைக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி (World's Columbian Exposition) ஒரு உலக விழா ஆகும். இது 1893 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வாஷிங்டன் டி. சி. யையும், மிசூரியின் சென். லூயிசையும் வென்று சிக்காகோ, இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது. இவ்விழா, கட்டிடக்கலை, கலை, சிக்காகோவின் பெருமை, அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. சிக்காகோ கொலம்பியக் கண்காட்சியின் பெரும்பகுதி, டானியல் பேர்ண்ஹாம், பிரடெரிக் லா ஆம்ஸ்டெட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்ற பேர்ண்காமினதும் அவரது உடன்பணியாளர்களதும் எண்ணத்தின் மாதிரியாகும். இது, சமச்சீர், சமநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய செந்நெறிக் கட்டிடக்கலைக் கொள்கையான பியூக்ஸ் ஆர்ட்ஸ் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இக் கண்காட்சி, 600 ஏக்கர்களுக்கும் (2.4 கிமீ) மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருந்தது. இக் கண்காட்சிக்கு செந்நெறிக் கட்டிடக்கலை சார்ந்த 200 க்கு மேற்பட்ட புதிய கட்டிடங்கள், கால்வாய்கள், குடாக்கள் முதலியவற்றுடன், உலகின் பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களும் அழகூட்டினர். இது நடைபெற்ற ஆறு மாதங்களில், ஐக்கிய அமெரிக்காவின் அன்றைய மக்கள்தொகையில் அரைப்பகுதிக்குச் சமமான சுமார் 27 மில்லியன் மக்கள் இக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கடமான் கடமான் () (Sambar - "Rusa unicolor") (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். எல்லாத் திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்குப் பரவலாக எல்லா மக்களிடையேயும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக்கப்படுகின்றன. மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது கடமான் ஆகும். ஆங்கிலத்தில் கடமான் வகைகளை ‘எல்க்’ (Elk) என அழைப்பர். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முட்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களிலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்திப் பெயரான "சாம்பர்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள். இம்மான் ஒடிசாவின் மாநில விலங்காகும். பருவமடைந்த கடமானின் எடை 225 முதல் 320 கிலோ வரையும், உயரம் 100 முதல் 160 செ. மீ வரையிலும் இருக்கும். வயது வந்த ஆண் (கிடா, ஏறு, விடை) கடமாவுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் கடமானிற்குக் கொம்புகள் கிடையா. ஆணின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். உதிர்ந்த பின் முளைக்கும் கொம்புகளின் மேலே மிக மெதுமெதுப்பான ஒரு தடினமான தோலை போன்ற அமைப்பைப் பெற்று இருக்கும். இத்தோலில் குருதியோட்டம் இருப்பதால் சிறு காயம் பட்டாலும் இரத்தம் வந்துவிடும். ஆகையால் கொம்புகள் நன்கு வளரும் வரை கடமான் மிகவும் கவனமாகவே இருக்கும். கொம்புகள் முழு வளர்ச்சி அடைந்ததும் மேல் தோல் உலர்ந்து உதிர்ந்துவிடும். கடமான் மிக அழுத்தமான கரும்பழுப்பு நிறமாக (கபிலநிறம்) இருக்கும், அதற்கு மேலே தடித்த மயிர் போர்த்தியிருக்கும். பிடரியிலும் கீழ்க்கழுத்திலும் இம்மயிர் நீண்டிருக்கும். கடமான்கள் மிகுந்த செவிக்கூர்மையும், நுகர் திறனும் கொண்டவை. கடமான்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை அல்ல. பெரும்பாலும் தனியாகவோ சிறுகுழுவில் ஆறுக்கும் குறைவாகவோ காணப்படுகின்றது. சிறிய குழுக்கள் முதிர்ந்த பெண் கடமானின் தலைமையில் இயங்கும். இந்தியாவில் கடமான், 139 வகையான வெவ்வேறு தாவரங்களை உண்டு வாழ்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடமான் மிகவும் குறிப்பிட்ட உணவு வகைகள் என்று இல்லாமல் கிடைக்கும் பெரும்பாலான தாவரங்களை உண்கிறது. இந்தியாவில் இவை காட்டு மரங்களின் இலைகள், பட்டை, புல் பூண்டு மற்றும் சில காய்களையும் உண்கிறது. கடமான்கள் பெரும்பாலும் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் பகுதிகளையே வாழிடமாக கொண்டவை. திறந்த புல்வெளிகளுக்கு மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுகாக செல்லும். காடுகளில் இவற்றின் வாழிடம் நீர்நிலையின் அடிப்படையைக் கொண்டே முடிவாகிறது. ஆண்டுக்கு ஒரு முதிர்ந்த ஆண் கடமான் சுமார் 46 சதுர கி.மீ பரப்பளவுக்கும், பெண் கடமான் 20 சதுர கி.மீ பரப்பளவுக்கும் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காகவும் சுற்றித்திரியும். கடமானின் இனப்பெருக்கம், காலம் அதன் கொம்புகள் விழுந்து முளைப்பதைப் பொருத்தே அமையும். இக்காலம் இந்தியாவின் பல்வேறு காட்டுவிலங்கு காப்பகங்களில் பல்வேறு சமயங்களில் நடக்கின்றது. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இனப்பெருக்கம் நடக்கின்றது. இனப்பெருக்கக் காலங்களில் ஆண் கடமான் சராசரியாக 4 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இடத்தைத் தன் எல்லையாக பாதுகாக்கும். இப்பகுதிக்குள் கூடுதல் எண்ணிக்கையிலான பெண் கடமான்களை வைத்திருக்க முயலும். இக்காலகட்டதில் ஆண் கடமான் தனித்துத் திரியும்; வேறொரு ஆணைக் கண்டால் அதனுடன் சண்டையிட முயலும். தனியாகத் திரியும் (Solitaire) கடமான் ஏறு தமிழ் இலக்கியங்களில் ஒருத்தல் எனப்படுகிறது. இனப்பெருக்கக் காலங்களில் ஓங்கி நிற்கும் கடமான் ஏறு, பிணைக் கடமானை (பெண் கடமான்) புணர்வதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கும். பருவமடைந்த ஆண் கடமான்கள் தன் இணையை ஒருவித சத்தத்தை எழுப்பியோ நுகர்வின் மூலமோ கவரும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (சினைகாலம்) 9 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்துக்குப் பிறகு ஒரு குட்டியை ஈனும். குட்டிகள் தம் தாயுடன் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்த பின்னர் தனித்துச் சென்றுவிடும். இந்தியாவில் மொத்தம் 208 பாதுகாக்கப்பட்ட இடங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் கடமானின் சூழியல் குறித்து பல்வேறு இடங்களில் (கானா, பந்திபூர், நாகரகொளை, சரிஸ்கா, கீர், பென்ச், ரந்தம்போர் ) பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. நேபாளத்திலும் கடமானைப் பற்றி ஆய்கிறார்கள். கடமான் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொன்றுண்ணிகளின் மிகவும் பிடித்த இரையாகும். காடுகளின் வளத்தைத் தீர்மானிக்கிறது. கடமான் போன்ற விலங்குகளின் உயிர்தொகையே புலி போன்ற அரிய விலங்குகளின் இருப்பை உறுதி செய்கின்றது. காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் கடமான்களின் வாழ்க்கையைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன. மேலும் கடமான்களின் வாழ்விடம் சீர் கெட்டமையால் அவை தங்கள் அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களும் கடமான்களைக் கொல்கின்றனர்.. இயற்கை உயிர்தொகை அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்தொகை அக்கரைப்பற்று அக்கரைப்பற்று என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற பிரதேசமாகும். அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபையாக அக்கரைப்பற்றின் மத்திய பகுதி தரமுயர்த்தப்பட்டதோடு அதன் மேற்குப்பகுதியான குடியிருப்பு அக்கரைப்பற்று பிரதேசசபையாக மாற்றப்பட்டது. இது அக்கரைப்பற்று மேற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது. 1946ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஆசிரியர்கள்,ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா) இந்தியா தேசிய நெடுஞ்சாலை 4 அல்லது என்.எச்4 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1235 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா 371 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 658 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 83 கிமீ ஐயும், தமிழ் நாடு 123 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன. இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நான்கு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும், ஊர்களையும் இச்சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச்சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இச்சாலையின் பெரும்பகுதி இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சென்னை முதல் ராணிப்பேட்டை வரை பின் பெங்களூர் முதல் தானே வரை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. புனே முதல் தானே வரை ஆறு வழி விரைவு சாலையாக உள்ளது தேசிய நெடுஞ்சாலை 13 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 13 அல்லது என்.எச்13 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் என்னும் இடத்தையும், கர்நாடகத்தில் உள்ள மங்களூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 691 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா43 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 648 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன. தற்போது இந்த நெடுஞ்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை 169 என்று மறுப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 13, தேசிய நெடுஞ்சாலை 63 ஐ ஹோஸ்பேட் என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 4 ஐ லக்ஷ்மிசாகர என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 206 ஐ ஷிமோகாவிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது. கம்பி வடத் தொலைக்காட்சி கம்பி வடத் தொலைக்காட்சி ("Cable Television") அல்லது கம்பி வடத் தொழில்நுட்பம் ("Cable Technology") என்பது ஓரச்சு வடத் தொழில்நுட்பத்தாலோ ஒளியிழைத் தொழில்நுட்பத்தாலோ தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்காந்த அலைகளை கம்பி வடம் ஊடாக அனுப்பும் தொழில்நுட்பம் ஆகும். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது. பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் எண்ம முறையில் பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் பண்பலை வானொலி அலைகள், அகலப்பட்டை இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஓரச்சு வடம் ஓரச்சு வடம் (Coaxial cable) என்பது ஒரு வகையான மின் கடத்தி ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக நெகிழி ("plastic") உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு கம்பியும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இது ஓரச்சு வடம் என்றழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பில் மின்காந்த அலைவரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது. 1756 1756 ((MDCCLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. வனவிலங்குகள் காப்பகம் வனவிலங்குகள் காப்பகம் என்பது, தாவரங்கள், வன விலங்குகளின் பாதுகாப்புக்காகக் குறித்து ஒதுக்கிய ஒரு புவிப் பரப்பைக் குறிக்கும். இவற்றை விலங்குகள் சரணாலயம் என்றும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக அரசின் சட்டங்களால் உருவாக்கப்படுவன ஆகும். இங்கு வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்கவோ, கொல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வாழும் விலங்குகள் வேட்டை யாடல் முதலிய மனித நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. அழிந்துவரும் விலங்குகளைக் காப்பதற்காகவும் சிறப்புக் காப்பகங்கள் அமைக்கப்படுவது உண்டு. மனிதன் தனது சொந்த தேவைகளுக்காக விலங்குகளை அழிப்பதில் முனைந்து பல அபூர்வ விலங்குகளையும் உயிரினங்களையும் அவற்றின் சுவடுகள் தெரியாதபடி அழித்து விடுகிறான். பெருமைக்காகவும் விலங்குப் பொருள்களான தந்தம், தோல், இறைச்சி, பற்கள், தேன் , அரக்கு, பட்டு போன்றவற்றை விற்பனை செய்யவும் வேட்டையாடினர். மென்மயிர் தோலுக்காக எலிகளும் நீர் நாய்களும் வேட்டையாடப் படுகின்றன. தோலுக்காக பலவகை மான்கள் பாம்புகள், புலிகள் போன்றவை வேட்டையாடப்படுகின்றன. கஸ்தூரிக்காக கஸ்தூரி மான்களும்,தந்தத்திற்காக ஆண் யானைகளும் , மருந்திற்காக முதலைகள், கருமந்திகள் போன்றவையும் வேட்டையாடபபடுகின்றன. சிங்கம், காட்டுக் கழுதை, பாக்டீரிய ஒட்டகம், காட்டெருமை, கடமா(யாக்), சிறுத்தைப் புலி போன்றவையும் வேட்டையாடப்படுகின்றன. கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங்களும் 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின் படி மேலும் சுமார் 300 இனங்கள் அழிவின் வாயிலில் உள்ளன. பெங்குவின், புள்ளிமான், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், யானை சிங்கம், கரடி, புலி, காட்டெருமை, முதலை, பாம்பு, மயில், சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில சிற்றினங்கள்(Species) அடியோடு அற்றுப் போகும் நிலையில் உள்ளன. புலம்பெயர்ந்து வரும் பறவைகள் பெருமளவில் தங்கும் இடங்களில் சிறப்பாகப் பறவைகள் காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன. இறைச்சிக்காக பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. அருகிவரும் சில அபூர்வ இனங்கள் அழிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுகின்றன. உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன் முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியா தான். 1887-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாயிற்று. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்தக் காட்டுப் பகுதியில் 8% ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரினப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கம் () (Light house, வெளிச்ச வீடு), கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் தீயும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன தெறிப்பிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது. பல வகையான மின்னணுவியல் வழிசெலுத்தல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் "விளக்கு" எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவாலைகள் பயன்பட்டன. பின்னர் இதற்குப் பதிலாக மெழுகுதிரிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1781 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவில், ஆர்கண்ட் பொட்திரி விளக்கும், பரவளைவுத் தெறிப்பியும் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவில், 1810 ஆம் ஆண்டில் வின்ஸ்லோ லூயிஸ் என்பவர் ஆர்கண்ட் விளக்கு, பரவளைவுத் தெறிப்பி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வரை, திமிங்கில எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. 1850 இல் திமிங்கில எண்ணெய்க்குப் பதிலாக ஒருவகைத் தாவர எண்ணெயான, கோல்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்க உழவர்கள் இதனை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த ஆண்டே "லார்ட் எண்ணெய்" பயன்பாட்டுக்கு வந்தது. 1870 இல் அறிமுகமான மண்ணெய் 1880 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ எல்லா கலங்கரை விளக்கங்களிலும் பயன்படத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரமும், கார்பைட் (அசட்டலீன்) வாயுவும், மண்ணெய்க்குப் பதிலீடுகள் ஆயின. பண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தை நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காணலாம். "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம். பலூகா பலூகா அல்லது பெலூகா என்பது வெள்ளைத் திமிங்கிலம் வெள்ளைத் திமிங்கிலம் (ஆங்கிலம்: "Beluga", அறிவியல் பெயர்: "Delphinapterus leucas") என்பது வட துருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை திமிங்கிலம் ஆகும். கடற்பாலூட்டி குடும்பத்தில் இந்த இனம் மட்டுமே வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட இனமாகும். இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரிதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோகிராம் வரையும் பெண் 900 கிலோகிராம் வரையும் எடை கொண்டவை. பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். நா. ரா. நாராயணமூர்த்தி நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி (கன்னடம்: "ಎನ್. ಆರ್. ನಾರಾಯಣಮೂರ್ತಿ") இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். நாராயண மூர்த்தி 2002ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தனது நேரத்தை சமூகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார். இந்திய அரசு, அவரது தொண்டினைப் பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. நாராயண மூர்த்தி, 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 20ம் நாள் கன்னட மத்வபிராமண குடும்பத்தில் பிறந்தார். மின் பொறியியல் பட்டத்தை மைசூர் பல்கலைகழகம் சார்ந்த தேசிய பொறியியல் கழகத்தில் 1967ம் ஆண்டு பெற்றார். பொறியியலில் முதுநிலைப் பட்டத்தை 1969ஆம் ஆண்டு இந்திய தொழிற்நுட்பக் கழகம், கான்பூரில் பெற்றார். = பணிபுரிந்த அனுபவங்கள் == கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1969 ஆம் ஆண்டு அஹமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தின் கணினித்துறையில் (Chief System Programmer) பணிக்குச் சேர்ந்தார். சுமார் மூண்றாண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் SESA நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். இசுக்கார்பரோ இசுக்கார்பரோ என்பது கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரின் கிழக்கில் உள்ள பகுதி. இவ்வூர் எலிசபெத் சிம்கோ என்பவரால் 1796-இல் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட பாறைகள் ("Cliff") அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்கார்பரோ என்னும் பகுதியை நினைவூட்டியதால் இப்பெயரைச் சூட்டினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் ("Office of the United Nations High Commissioner for Human Rights", "OHCHR") என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும். ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தூனிஸ் தூனிஸ் (அரபு மொழி: تونس) துனீசியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கடலின் கரையில் அமைந்த இந்நகரில் 728,453 மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students' Islamic Movement of India) அல்லது சிமி (SIMI) 1977இல் அலிகர், உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்தியாவை மேற்கின் செல்வாக்கத்திலிருந்து விடுதலை செய்து இஸ்லாமிய சமூகத்தை படைப்பு இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்திய அரசு இவ்வியக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிட்டு 2002இல் தடை செய்துள்ளது. இவ்வியக்கம் அல் கைதாவை சேர்ந்து இருக்கிறது என்று இந்திய அரசு நம்புகிறது. 2008இல் சிமி இந்தியன் முஜாகிதீன் என்று பெயர் மாற்றியுள்ளது என்று இந்திய அறிவு மையம் (National Inteligence Agency (NIA) கூறியுள்ளது. இந்திய முஜாஹிதீன் இயக்கம் 2008இல் ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் செய்தது என்று கூறியுள்ளது. சுதந்திரவாதக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) சுந்தரவாதக் கட்சி (ஆங்கிலம்: Libertarian Party) அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் 600 அரசியல் பதவிகளில் உள்ளனர். இக்கட்சி தாராண்மியவாதக் கொள்கையை பயன்படுகிறது. அதாவது, தனிமனித சுதந்திரத்தை விரிவாகவும், வரியை குறையவும், திறந்த சந்தையை பயன்படுத்தவும், அரசின் வலிமையை குறைக்கவும் இக்கட்சியின் சில கொள்கைகள் ஆகும். மக்களாட்சிக் கட்சி, குடியரசுக் கட்சி தவிர அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி வேட்பாளராக பாப் பார் போட்டியிடுத்தார். யுவா யுவா (இந்தி: युवा) திரைப்படம் தமிழில் வெளி வந்த ஆயுத எழுத்து திரைப்படத்தின் நேரடி இந்திப் பதிப்பாக 2004 ஆம் ஆண்டு வெளி வந்தது. அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஈஷா தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரே நிகழ்வை மூன்று கதாபாத்திரங்களின் மூலம் மாற்றி மாற்றிச் சொல்லும் உத்தியை இதில் மணி ரத்தினம் கையாண்டிருந்தார். ஒரு சாதாரண மாணவன், நாட்டுக்காக சக மாணவர்களைகளையும், நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து, நாட்டை ஆட்சி செய்யும் வன்முறை அரசியலுக்கு எதிராக தேர்தலில் நின்று எப்படி சாதிக்கிறான் என்பதை மிகவும் இயல்பான அதே சமயம் சினிமாவுக்கு உரித்தான பாணியில் இயக்குனர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். ஒரு சாலையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒருவன் கல்கத்தாவின் சாலையில் தன் பைக்கை ஒட்டிக்கொண்டு வருகிறான். அதே நேரம் அவன் பின்னால் சற்று தள்ளி ஒரு காரில் இரண்டு பேர் தன் மனைவியிடம் சண்டையிட்டதைப் பற்றி பேசிக் கொண்டு வருகிறார்கள். அதே சாலையின் மறு புறம் ஒருவன், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். திடீரென்று காரில் வந்த இருவரில் ஒருவன் துப்பாக்கியால் பைக் ஒட்டிக்கொண்டிருதவனை சுடுகிறான். குண்டடி பட்டவுடன் பைக் ஓட்டிக் கொண்டிருந்தவன் சாலையோரத்தில் பெண்ணிடம் காதலைச் சொல்லிக்கொண்டிருந்தவனைத் தாண்டிப் போய் விழுகிறான். இந்த இடத்திலிருந்து கதை சுட்டவனிடம் திரும்புகிறது. எதற்காக அவன் சுடுகிறான் என்பது திருப்புக் காட்சியாக விரிகிறது. பிறகு கதை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் இடம் வரை வந்து மீண்டும் சுடப்பட்டவனிடமிருந்து, அவன் எதற்காக சுடப்பட்டான் என்கிற காட்சிகள் திருப்புக் காட்சியாக விரிகிறது. அதே போல் கதை மீண்டும் சம்பவம் நிகழும் இடம் வரை திரும்பி, சாலையோரத்தில் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவன் இந்தக் கதையில் இதற்கு முன் எப்படி இருந்தான், சம்பவத்துக்குப் பிறகு என்னவாகிறான்? அவன் காதலை அவன் தோழி ஏற்றுக்கொண்டாளா? சுட்டவனும், சுடப்பட்டவனும் என்னவாகிறார்கள்? இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை மீதிக் கதை விளக்குகிறது. 1805 1805 (MDCCCV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. மூலைவிட்டம் ஒரு பல்கோணம் அல்லது பன்முகியின் அடுத்தடுத்து இல்லாத இரு மூலைகளை இணைக்கும் கோடு மூலைவிட்டம் எனப்படும். சில இடங்களில் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ உள்ள சாய் கோடுகளையும் மூலை விட்டம் குறிக்கும். வடிவவியல் தவிர்த்து, ஓர் அணியின் குறுக்குக் கோட்டில் உள்ள உருப்படிகளையும் மூலை விட்டம் குறிக்கும். மாற்று ஆற்றல் மாற்று ஆற்றல் படிம எரிபொருட்கள் அல்லாத ஆற்றல் மூலங்களாகும். மாற்று என்னும் சொல் விரும்பத்தகாத ஆற்றல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இது மாற்று ஆற்றல் என்பதிற்கு முரணாணது. மாற்று தொழில்நுட்பங்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து ஆற்றல் தொழில்நுட்பங்கள் பட்டியலிடபட்டுள்ளன. ஆற்றல் மூலங்கள் மற்றும் மாற்று ஆற்றல்களின் மூலங்கள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. மாற்று எரிசக்தி ஆதாரங்களாக கருதப்பட்டவற்றின் தன்மை காலப்போக்கில் மிகவும் மாறியுள்ளது. இன்று பல மாற்று ஆற்றல்கள் இருப்பதாலும் அதன் ஆதரவாளர்களின் மாறுபட்ட குறிக்கோள்களினாலும் மாற்று ஆற்றல் வகைகள் என்று விவரிப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றம் குறித்த குழுவினால், உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது கார்பன் டையாக்ஸைடு. இது படிமஎரிபொருள்கள் எரியும் போது வெளியாகும். தற்கால சமுதாயத்தில் பொதுவாக இந்த விரும்பத்தகாத விளைவுகள் இல்லாமல் ஆற்றல் தரும் சக்தியை மாற்று ஆற்றல் என்று கூறிகிறோம். சில நேரங்களில், "மாற்று ஆற்றல்" என்பதன் விரிவான பொருள் அணு சக்தியை தவிர்த்த ஆற்றலாகும் (எ.கா. 2002 மிச்சிகன் அடுத்து எரிசக்தி அதிகார சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது). பொருளாதார வரலாற்றாளர்கள் ஆற்றல் மூலங்கள் மாற்று ஆற்றல் மூலங்களாக மாறுவதை ஆய்வு செய்து இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர். ஒரு மாற்று சக்திக்கு மாறுவதற்கு முன், பழக்கத்தில் உள்ள சக்தியின் மூலப்பொருள்கள் சரிவர கிடைக்காததுடன் விலைகள் விரைவாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. வரலாற்றாசிரியர் நார்மன் எப் கேன்ட்டர் இடை காலத்தில், மேலாதிக்க எரிபொருளாகிய மரம் அதிகம் பயன்படுத்தாமல் சமுதாயத்தை காப்பாற்ற, புதிய மாற்று எரிப்பொருளாக நிலக்கரி இருந்தது என்று விவரிக்கிறார். " ஐரோப்பியர்கள் முந்தைய இடைக்கால நூற்றாண்டுகள் முழுவதும் பரந்த காடுகள் மத்தியில் வாழ்ந்தனர். 1250 பின்னர் அவர்கள் காடுகளை அழிப்பதில் மிக திறமை பெற்றதால் 1500 கி.பியில் வெப்பத்திற்கும் மற்றும் சமையலுக்கும் மர எரிப்பொருள் கிடைப்பது மிகவும் கடினமானது ... 1500 கி.பியில் ஐரோப்பா எரிபொருள் மற்றும் ஊட்டச்சத்து பேரழிவின் விளிம்பில் இருந்தது. இந்த பேரழிவு, பதினாறாம் நூற்றாண்டில் மென்மையான நிலக்கரி எரிப் பொருளாலூம் மற்றும் உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் சாகுபடி செய்ததாலும் தவிர்க்கப்பட்டது திமிங்கில எண்ணெய் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பசைப் பொருளாகவும் விளக்குகளுக்கு எரிபொருளாகவும் இருந்தது. ஆனால் நூற்றாண்டின் மத்தியில் திமிங்கிலத்தின் எண்ணிக்கை குறைந்ததால் திமிங்கில எண்ணெய் விலை அதிவேகத்தில்கூடியது. இதுவே பெட்ரோலியம் எரிபொருளாக தோன்றுவதற்கு காரணமாய் இருந்தது. 1859 இல் முதன் முதலாக பென்சில்வேனியாவில் வணிகமயமாக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் புதுப்பிக்கத்தக்க (இயற்கையால் நிரப்பப்படுவன ) இயற்கை வளங்காளகிய சூரிய ஒளி, காற்று, மழை, அலைகள் மற்றும் புவிவெப்பம் முதலியவற்றில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆற்றல் உற்பத்தி செயல்முறைகள் ஒப்பிடுகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் படிம எரிபொருட்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கும் இடையே பல அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. எண்ணெய், நிலக்கரி, அல்லது இயற்கை எரிவாயு எரிபொருள் உற்பத்தி செயல்முறை சிக்கலானது மற்றும் கடினமானது .பல உபகரணங்கள், இயற்பியல் மற்றும் ரசாயன செயல்முறைகள் அதன் செயல்பாடுகளுக்கு தேவை. மறுபுறம், மாற்று எரிசக்தி பரவலாக அடிப்படை உபகரணங்களை கொண்டு, இயற்கையான அடிப்படை வழிமுறைகளில் உருவாக்கப்படும். புதுப்பிக்கத்தக்க உயிரிதிரள் போன்ற எரிசக்தி மூலங்கள் சில நேரங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்கும் படிம எரிபொருட்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. புதுப்பிக்கத்தக்கவை என்பதால் மட்டுமே, இவை இயல்பாகவே மாற்று ஆற்றல் இல்லை. எடுத்துக்காட்டாக, நெதர்லாந்து பனை எண்ணெய்யை ஒரு உயிரி எரிபொருளாக பயன்படுத்தியது. அவற்றின் பயன்பாடு "சில நேரங்களில் படிம எரிபொருட்களை விட சுற்றுச்சூழலுக்கு தீங்கு உருவாக்க கூடும்" என்ற அறிவியல் ஆதாரங்கள் காரணமாக பாமாயிலுக்கு அனைத்து மானியங்களை நிறுத்தி உள்ளது நெதர்லாந்து. நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பனை எண்ணெய்யின் மூலங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றது. இது பொறுப்பான முறையில் எண்ணெய் உற்பத்தி செய்தவர்களுக்கு சான்றளிக்க உதவும். உணவுப்பொருள்களில் இருந்து எரிபொருள்கள் தொடர்பாக, அமெரிக்க முழு தானிய அறுவடையை எரிபொருள்களாக மாற்றினாலும் 16% எரிபொருள் தேவைகளை மட்டுமே அது பூர்த்தி செய்யும், மற்றும் பிரேசிலில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளை உயிரி எரிபொருள் உற்பத்திக்காக அழிப்பதும் உணவு சந்தைகள் மற்றும் ஆற்றல் சந்தைகளுக்கும் போட்டி ஏற்படுத்துவது உணவு பொருள்களின் விலையை அதிகரிப்பதுடன் உலக வெப்பமயமாதல் முதலிய எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தி ஆற்றலுக்காக வெளிநாட்டை சார்ந்து இருக்க செய்யும். The Netherlands government and environmental groups are trying to trace the origins of imported palm oil, to certify which operations produce the oil in a responsible manner. Regarding biofuels from foodstuffs, the realization that converting the entire grain harvest of the US would only produce 16% of its auto fuel needs, and the decimation of Brazil's absorbing tropical rain forests to make way for biofuel production has made it clear that placing energy markets in competition with food markets results in higher food prices and insignificant or negative impact on energy issues such as global warming or dependence on foreign energy. பாசி எரிபொருள் பாசிகளிள் இருந்து பெறப்பட்ட ஒரு உயிரி எரிபொருள் ஆகும். ஒளிச்சேர்க்கையின் போது, பாசி மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் கார்பன்டைஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு அதை ஆக்சிஜன் மற்றும் உயிரிதிரளாக மாற்றுகிறது. கடற்பாசிஏரிபொருளின் நன்மைகள், விளைநில மற்றும் உணவு பயிர்கள் (அதாவது சோயா, பனை, மற்றும் கனோலா போன்ற) பயன்படுத்தி உருவாகப்படும் தாவர எரிபொருகளை காட்டிலும் அதிகம். எரிபொருளுக்காக தாவரங்களை பயன்படுத்துவது தவிர்கப் படுவதுடன் கடற்பாசி எரி பொருளின் தொழில்துறை உற்பத்திமூலம் மிக அதிக எண்ணெய் விளைச்சலை கிடைக்கிறது. வளரும் நாடுகளில் கரிக்கு மாற்று எரிபொருளாக உயிரிதிரள் கட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தாவரங்களை புதிய தொழில் நுட்பத்தின் மூலம் கரியை போன்று 70% எரிசக்தி உடைய அழுத்தப்பட்டகட்டிகளாக மாற்ற முடியும். பெரிய அளவில் தாவர கட்டிகளை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு சில உதாரணங்கள் உள்ளன. இதற்கு ஒரு விதிவிலக்கு கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள வடக்கு கிவு. இங்கு கரி உற்பத்திக்காக காடுகள் அனுமதியின்றி அழிகப்படுவது மலை கொரில்லா வசிப்பிடத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. விருங்கா தேசிய பூங்காவின் ஊழியர்கள் வெற்றிகரமாக உயிரி கட்டிகளை சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கரி கட்டிகளுக்கு பதிலாக உற்பத்தி செய்ய 3500க்கும் மேற்பட்டமக்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர வறுமையில் வாடும் மக்களுக்கு குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு உருவாக்கும். உயிர்வாயு உட்கொள்ளுதல் என்பது கழிவிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை உபயோகிப்பதாகும். இந்த எரிவாயு குப்பை அல்லது கழிவுநீர் அமைப்புகளில் இருந்து பெறப்படுகிறது. உயிர்வாயு புழிக்கிகளில் நுண்ணுயிரிகளின் உதவியுடன் காற்றில்லா சூழலில் உயிர்திரள்களில் இருந்து மீத்தேன் வாயு பெறப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட மீத்தேன் வாயு எரிசக்தி ஆதாரமாக பயன்படுத்தப் படுகிறது . ஹைட்ரஜன் வாயு முற்றிலும் சுத்தமாக எரியும் எரிபொருள். அது எரியும் போது உடன் விளைப்பொருள் தண்ணீர் மட்டுமே. இதன் இரசாயன கட்டமைப்பு காரணமாக பிற எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில் உயர் ஆற்றல் அளவு கொண்டது . 2H + O → 2HO + High Energy High Energy + 2HO → 2H + O வணிக ரீதியாக ஹைட்ரஜன் தயாரிப்பதற்கு ஒரு உயர் ஆற்றல் உள்ளீடு தேவைப்படுவதால் இது மிகவும் பயனற்றதாகும். சூரிய கதிர்வீச்சை உயர் ஆற்றல் உள்ளீடாக கொண்டு தண்ணீரை பிரித்து, ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்ய உயிரியல் நுண்மங்கடத்திகள் பயன்படுத்தலாம். உயிரியல் நுண்மங்கடத்திகள் என்பன நுண்ணுயிரிகள் மற்றும் பாசிகள் ஆகும். இந்த செயல்முறை உயிரியல் ஹைட்ரஜன் உற்பத்தி என அறியப்படுகிறது. இது நொதித்தல் மூலம் ஹைட்ரஜன் வாயு உருவாக்க ஒற்றை அணு உயிரினங்களின் பயன்பாடு தேவைப்படுகிறது. பிராணவாயு, இல்லாத ஒரு காற்றில்லா சூழலில், வழக்கமான உயிரணு சுவாசம் நடக்காது மற்றும் நொதித்தல் என்றழைக்கப்படும் ஒரு செயல்முறை நடைபெறும் . இந்த செயல்முறையில் ஒரு உடன் விளைபொருள் ஹைட்ரஜன் வாயு ஆகும். நம்மால் இதை பெரிய அளவில் செயல்படுத்த முடியும் என்றால், நாம் சூரிய ஒளி, ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை சிறந்த ஆற்றல் மூலமாக பயன்படுத்தி ஹைட்ரஜன் வாயு உருவாக்க முடியும். பெரிய அளவிலான உற்பத்தி மிகவும் கடினம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 1999 வரை கந்தக இழப்பு மூலம் காற்று புகா நிலைகள் உருவாக்க முடியவில்லை. நொதித்தல் முறை என்பது அவசர தேவைக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல்முறை என்பதால் அணுக்கள் ஒரு சில நாட்களில் இறந்து விடும். 2000ஆம் ஆண்டில்,ஒரு இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் காற்றில்லா நிலைமைகுள் சென்று மீண்டும் வெளியே வருவதால் அணுக்கள் உயிருடன் இருக்கமுடிகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரு பெரிய அளவில் இதை செய்ய ஒரு வழி கண்டுபிடிப்பதே ஆராய்ச்சியாளர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. பெரிய அளவிலான உற்பத்தி செய்வதற்கு முன் ஒரு திறமையான செயல்பாடு கவனமாக உறுதி செய்யப்படவேண்டும் .அப்படி ஒரு செயல்முறை உருவாக்கப்பட்டால் அது நமது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். மிதக்கும் காற்று பண்ணைகள் ஒரு வழக்கமான காற்று பண்ணையை போன்றதே ஆனால் அவை கடலின் நடுவில் மிதந்து கொண்டிருக்கும். ஒரு மிதக்கும் காற்றாலை பண்ணை கொண்டு திறந்த கடலிலுள்ள காற்றை அதிக பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். மலை, மரம் மற்றும் கட்டிடங்கள் போன்ற எந்த தடைகள் இல்லாததால் திறந்த கடலில் காற்றின் வேகம் கடலோர பகுதிகளை காட்டிலும் இருமடங்கு வேகமாக இருக்கும். மூட்டைப் பூச்சி மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன. பொதுவான மூட்டைப்பூச்சி வகையான ("Cimex lectularius") மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்பமண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை ("Cimex hemipterus") வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை. மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை("Leptocimex boueti") வௌவால்களையும் மனிதனையும் தாக்குபவை. "Cimex pilosellus" மற்றும் "Cimex pipistrella" என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் ("Haematosiphon inodora") வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை. வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப்பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு. பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில்தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு, உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன. இப்பூச்சிகள் இரத்தத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன. இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. தொன்மாக்கள் பட்டியல் ஆபெலிசோரஸ் ஆபெலிசோரஸ் (; "ஆபெல்லின் பல்லி") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆப்ரிக்ட்டோசோரஸ் ஆப்ரிக்ட்டோசோரஸ் (; "விழிப்பான பல்லி") என்பது, ஹெட்ரோடொண்டோசோரிட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னாபிரிக்காவின் ஜுராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது தாவரம் உண்ணும் விலங்கு. இது 1.2 மீட்டர் (4 அடி) வரை நீளம் கொண்டதாகவும் 45 கிலோகிராம் (100 இறாத்தல்) எடையும் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆப்ரோசோரஸ் "ஆப்ரோசோரஸ்"' (; 'delicate பல்லி') மாக்குரோனேரியா சோரோபொட் தொன்மா இனம். இது இன்றைய ஆசியாவின் நடு ஜூராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாஷன்பு கல் அகழிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல டயனோசோர் புதைபடிவங்களுள் ஒன்று. பல சோரோபோட்டுகளைப் போலவே ஆப்ரோசோரசும் நாலுகாலியும், தாவர உண்ணியும் ஆகும். ஒரு பொதுவான சோரோபோட்டு அளவுக்கு இது பெரியது அல்ல. இதன் நீளம் 9 மீட்டருக்கு (30 அடி) மேல் அதிகம் இருப்பதில்லை. இதன் தலை பெட்டிபோல் இருப்பதுடன், அதன் மேல் மூக்குத் துளைகளைக் கொண்ட எலும்புப் புடைப்புக் காணப்படும். ஆகாந்தோஃபோலிஸ் ஆகாந்தோஃபோலிஸ் () ("முள்ளந்தண்டுச் செதில்கள்" என்னும் பொருள் கொண்டது) என்பது ஒரு ஆங்கிலோசோரிட் தொன்மாப் பேரினத்தைச் சேர்ந்த விலங்கு. நோடோசோரிடீ குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க கிரேத்தீசியக் காலப்பகுதியில் வாழ்ந்தது. இதன் பெயர் இதன் உடலில் பாதுகாப்புக்காக அமைந்துள்ள செதில் போன்ற அமைப்புக்களைக் குறித்து ஏற்பட்டது. இது நாலுகாலியும், தாவர உண்ணியும் ஆகும். இது 3 தொடக்கம் 5.5 மீட்டர் (10 - 18 அடி) நீளமும் 380 கிலோகிராம் (840 இறாத்தல்) எடையும் கொண்டதாக இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆக்கிலூசோரஸ் ஆக்கிலூசோரஸ் (typically ,எனினும், என்ற கருத்தும் உள்ளது.) என்பது செண்ட்ரோசோரினீ செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரேத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. நாகுகாலியும், தாவர உண்ணியுமான இதற்கு கிளிக்கு உள்ளது போன்ற அலகு அமைந்துள்ளது. ஆறு மீட்டர்கள் வரை மொத்த நீளம் கொண்ட இது ஒரு நடுத்தர அளவுள்ள செராடொப்சிய விலங்கு ஆகும். ஆக்கிலூபேட்டர் ஆக்கிலூபேட்டர் (; "ஆக்கைல்ஸ்' போராளி/வீரன்") என்பது, டிரோமியோசோரிட் தேரோபோட் தொன்மா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது தற்போதைய மங்கோலியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது ஒரு இருகாலி, இரைகொல்லியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பின் காலில் உள்ள இரண்டாம் விரலின் அரிவாள் வடிவிலான நகங்களைப் பயன்படுத்தி இது இரைகளை வேட்டையாடும். இது ஒரு பெரிய டிரோமியோசோரிட் ஆகும். இதன் நீண்ட மூக்கிலிருந்து வால் வரையான நீளம் 15 தொடக்கம் 20 அடிகள் வரை இருக்கும். இதன் பொதுப் பெயர் டிரோஜான் போரின் கிரேக்க வீரனான "ஆக்கைல்ஸ்" என்பவனுடைய பெயரும், "போராளி" அல்லது "வீரன்" எனப் பொருள்படும் மங்கோலியச் சொல்லான "பேட்டர்" என்பதும் சேர்ந்து உருவானது. ஆக்ரோகாந்தோசோரஸ் ஆக்ரோகாந்தோசோரஸ் (Acrocanthosaurus) ( or ak-ro-KAN-tho-"SAWR"-us; பொருள்: 'உயர்ந்த-முதுகெலும்புப் பல்லி') என்பது அலோசோரிட் தேரோபோட் தொன்மாப் பேரினத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இவை தற்போதைய வட அமெரிக்காவில் ஏறத்தாழ 125 தொடக்கம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரை நடுக் கிரேத்தேசியக் காலத்தில் வாழ்ந்தன. பல தொன்மாப் பேரினங்களைப் போலவே "ஆக்ரோகாந்தோசோரஸ்", "ஆ. ஆதோகென்சிஸ்" என்னும் ஓரே ஒரு இனத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இதன் பற்களாகக் கருதப்படுவன கிழக்குப் பகுதியில் மேரிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பினும், புதைபடிவ எச்சங்கள், பெரும்பான்மையாக ஐக்கிய அமெரிக்காவில், ஒக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலேயே காணப்பட்டுள்ளது. "ஆக்ரோகாந்தோசோரஸ்", ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதன் பெயர் குறிப்பதைப் போலவே இதற்கு உயர்ந்த முள்ளந்தண்டுகள் காணப்படுகின்றன. இது மிகப்பெரிய தேரோப்பொட்டுகளில் ஒன்றாகும். இதன் நீள 12 மீட்டர் (40 அடி) வரை இருக்கும். இவை சுமார் 2.40 மெட்ரிக் தொன்கள் வரை எடையும் கொண்டவை. ஆலமோசோரஸ் ஆலமோசோரஸ் (; பொருள்: "ஆலமோ பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோபோட் டயனோசோர் பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசஸ் காலத்தில் வாழ்ந்தன. இது ஒரு பெரிய நாலுகாலி, தாவர உண்ணி ஆகும். இவை 16 மீட்டர் (53 அடி) வரை நீளமும், 33 தொன்கள் (30 மெட்ரிக் தொன்) வரை எடையும் கொண்டவை. "ஆலமோசோரஸ்" ஏனைய சோரோப்பொட்டுகளைப் போலவே நீண்ட கழுத்தும், நீண்ட வாலும் கொண்டவை. ஆல்பேர்ட்டோசோரஸ் ஆல்பேர்ட்டோசோரஸ் (; meaning "ஆல்பேர்ட்டா பல்லி") என்பது தைரனோசோரிட் தேரோபோட் தொன்மா பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய மேற்கு வட அமெரிக்காவில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரேத்தாசியக் காலத்தில் வாழ்ந்தன. இதன் இனவகையான "ஆ. சார்க்கோ ஃபேகஸ்" இன்றைய கனடாவின் மாகாணமான ஆல்பேர்ட்டாவுக்குள் அடங்கியுள்ளது. இதனாலேயே இம் மாகாணத்தின் பெயர் இப் பேரினத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரினத்துக்குள் அடங்கும் இனங்கள் குறித்து அறிவியலாளரிடையே கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. ஒரு "தைரனோசோரிட்" என்றவகையில் "ஆல்பேர்ட்டோசோரஸ்" ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதற்கு மிகச் சிறிய இரு விரல்கள் கொண்ட முன்னங்கைகளும், பெரிய தலையும், பல கூரிய பற்களும் அமைந்துள்ளன. இது இதன் சூழலின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. யாதவர் யாதவர் என்போர் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள்.ஆவர். யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் கோனார், கரையாளர், சேர்வைக்காரர், இடையர், ஆயர், பிள்ளை, மணியக்காரர், அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர். மேலும் கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது. கோனார் என்னும் பட்டதை தென்மாவட்ட யாதவர்கள் மட்டுமே பயன்படுத்தினர் வட தமிழக யாதவர்கள் ஆதியில் இருந்தே யாதவ சாதி என்றும் கிருஷ்ணர் பரம்பரையினர் என்றும் கூறி வந்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் (பொருள்: "ஆல்பேர்ட்டா கொம்புள்ள முகம்") என்பது செண்ட்ரோசோரின் கொம்புள்ள தொன்மாப் பேரினம் ஆகும். இது, அல்பேர்ட்டா கனடாவில் உள்ள நடுக் கம்பானியக் காலத்தைச் சேர்ந்த மேல் கிரீத்தேசிய ஓல்ட்மான் உருவாக்கத்திலும், அமெரிக்காவின் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று உருவாக்கத்திலும் காணப்பட்டது. இது ஆகஸ்ட் 2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முழுமையான மண்டையோட்டில் (TMP.2001.26.1) இருந்தே அறியப்படுகிறது. கிரீத்தேசியக் காலம் கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் ( மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் ( Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது. கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான "Cretaceous" என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் "creta" என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது. அகுஜாசெராடாப்ஸ் அகுஜாசெராடாப்ஸ் (Agujaceratops) (பொருள்: "அகுஜாவில் இருந்து கொம்புள்ள முகம்") என்பது, புதிதாக வகைப்படுத்தப்பட்ட, செராடாப்சியா தொன்மாப் பேரினம் ஆகும். முன்னர் 1989 இல் லெஹ்மன் என்பவரால் விபரிக்கப்பட்டு "சாஸ்மோசோரஸ் மாரிஸ்கலென்சிஸ்" என அறியப்பட்டது. 2006 இல், லூக்காசும், சலிவனும் ஹண்ட்டும் இதனைப் புதிய பேரினத்துக்கு மாற்றியுள்ளனர். இதன் புதை படிவங்கள் கிடைத்த இடங்களை ஆராய்ந்த லெஹ்மன், அங்குள்ள படிவுகளை வைத்து "அகுஜாசெரடாப்சுகள்" சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கூறுகிறார். இவை சுமார் 70-83 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரீத்தேசஸ் காலத்தின் கம்பானியக் காலப் பகுதியில் வாழ்ந்தன. விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சி கடற்புலிகளின் முக்கிய ஒரு தளம் அமைந்திருந்த விடத்தல் தீவு பகுதி ஜூலை 16 அன்று இலங்கை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சியை தந்திரோபாயமான பின்வாங்கல் எனக் குறிப்பிட்டிருந்தாலும், இது ஒரு முக்கிய மீளமுடியா பின்வாங்கலே என சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். ஆடமந்திசோரஸ் ஆடமந்திசோரஸ் ( A-da-MAN-ti-SAWR-us; "ஆடமந்தினா பல்லி") என்பது, டைட்டனோசோரியா சோரோப்பொட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது தற்போதைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது,அதன் ஆறு வால் எலும்புகளைக் கொண்டே அறியப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சோரோப்பொட் என்பதால் இது நீண்ட கழுத்தையும், நீண்ட வாலையும் கொண்ட ஒரு பெரிய விலங்கு என ஊகிக்கலாம். வேறு பகுதிகளையும் கண்டெடுத்தால் மட்டுமே இதன் உருவம் பற்றி நிச்சயமாகக் கூறமுடியும். ஆடாசோரஸ் "'ஆடாசோரஸ்" ( (AH-dah-SAWR-us); "ஆடாவின் பல்லி") என்பது, டிரோமியோசோரிட் தேரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது, இன்றைய மத்திய ஆசியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது இதன் பின்னங்கால்களில் அரிவாள் வடிவிலான வளைந்த நகங்களுடன் கூடிய ஒரு சிறிய இருகாலி, ஊனுண்ணி ஆகும். ஒரு வளர்ந்த விலங்கு 2.5 மீட்டர் (8 அடி) நீளம் இருக்கக்கூடும். மங்கோலியாவின் தேசியப் பழங்கதைகளில் "ஆடா" என்பது ஒரு தீய ஆவியாகும். இச் சொல்லுடன் பல்லி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான "சோரஸ்" என்பதையும் சேர்த்து இதற்குப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பேரினத்திலுள்ள ஒரே இனமான "ஆ. மங்கோலியென்சிஸ்" என்பதற்கு அது கண்டுபிடிக்கப்பட்ட இடமான மங்கோலியாவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஈஜிப்டோசோரஸ் ஈஜிப்டோசோரஸ் ( பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம் ஆகும். இந்த நாலுகாலி சோரோப்போட் ஒரு தாவர உண்ணி ஆகும். இதன் புதைபடிவங்கள் எகிப்து, நைகர் மற்றும் பல சகாரா பாலைவனப் பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதைபடிவங்கள் ஒன்றான மியூனிச் நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன. ஈயோலோசோரஸ் ஈயோலோசோரஸ் (; "ஈயலூவின் பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான கழுத்தையும், வாலையும் கொண்ட நாலுகாலி தாவர உண்ணி ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி (அரபு: حركة الجهاد الإسلامي) அல்லது ஹூஜி, தமிழ் மொழிப்பெயர்ப்பு "இஸ்லாமிய புனித போர் இயக்கம்" தெற்காசியாவில் ஒரு சுணி இஸ்லாமிய போராட்டக் குழுமம் ஆகும். 1984இல் தொடங்கிய இக்குழுமம் 2005இல் வங்காளதேசத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. 1990களில் அமெரிக்கா இக்குழுமத்தை தீவிரவாதக் குழுமம் என்று குறிப்பிட்டது. டாலிபான் போல் அடிப்படைவாதி இஸ்லாமிய சமூகத்தை தொடக்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் ஒரு நோக்கம். காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானை இணைக்கவேண்டும் என்று இந்த அமைப்பின் நோக்கம். இந்தியாவில் 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள் நிகழ்வை இந்த அமைப்பு செய்துள்ளது. மேலும் 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் வேறு சில வன்முறை நிகழ்வுகளில் உட்படுத்து இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. லஷ்கர்-ஏ-தொய்பா லஷ்கர்-ஏ-தொய்பா (உருது: لشكرِ طيبه, அல்லது "சுத்தமான இராணுவம்") தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். லாகூர், பாகிஸ்தான் அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இக்குழுமத்தின் சில கொள்கைகள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஷரஃப்பின் அரசுக்கு எதிரானது. இதனால் அவரின் அரசுக்கு எதிராகவும் இவ்வமைப்பு சில தாக்குதல் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள், 2005 இலண்டன் குண்டுவெடிப்புகள், 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள் மற்றும் பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் லஷ்கர் ஏ தொய்பாவின் உட்படுத்துவது சந்தேகப்படுகிறது. த டார்க் நைட் (திரைப்படம்) த டார்க் நைட் (The Dark Knight) 2008இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலனால் எழுதி தயாரித்து இயக்கப்பட்டது. பிரபல வரைபட நாயகன் பாட்மானின் திரைப்படத் தழுவலாகும். 2005இல் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ்சின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக த டார்க் நைட் ரைசஸ் திரைப்படம் 2012 சூலை மாதம் வெளிவந்தது. சூலை 16 2008 இல் இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. சூலை 18, 2008 இத்திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது; சூலை 24 ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது. முதலாம் நாளில் $ 67.85 மில்லியன் வசூல் பெற்று ஸ்பைடர் மேன் திரைப்படமால் பெற்ற ஒரு நாளில் அதிக வசூல் சாதனையை தாண்டியுள்ளது. வரலாற்றில் மிக விரைவாக $300 மில்லியன் வசூல் பெற்ற திரைப்படம் இதுவே ஆகும். திரைப்பட நிபுணர்களும் இத்திரைப்படத்தை பாராட்டுகின்றனர்; 246 விமர்சனங்களில் 94% இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளனர் என்று ராட்டன் டோமேட்டோஸ் இணையத்தளம் கூறியுள்ளது. இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர்களால் வாக்கு செய்து வரலாற்றில் முதலாம் மிகச்சிறந்த திரைப்படம் என்று சில நாளாக இருந்தது. கிரிஸ்டியன் பேல் கிரிஸ்டியன் சார்ல்ஸ் ஃபிலிப் பேல் (பிறப்பு ஜனவரி 30, 1974) வேல்சில் பிறந்த பிரித்தானிய திரைப்பட நடிகர் ஆவார். முதலாக நடிகராக இருக்கும் பொழுது அமெரிக்கன் சைக்கோ, த பிரெஸ்டீஜ், மற்றும் பல்வேறு சுதந்திரத் திரைப்படங்களில் (independent film) நடித்துள்ளார். 2005இல் பாட்மான் திரைப்படத்தொடரில் முதலாம் திரைப்படம் பேட்மேன் பிகின்ஸ் பாட்மானாக நடித்துள்ளார். இத்தொடரில் அடுத்த திரைபடங்களான த டார்க் நைட் மற்றும் த டார்க் நைட் ரைசஸ் ஸிலும் பாட்மானாக நடித்துள்ளார். சோ ராமசாமி சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். 1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் "PickWick" என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய "ஹால்டி காட்டி" விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு "கொயங்கா" விருதும், 1998 இல் "நச்சிக்கேதஸ்" விருதும் பெற்றார். இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார். சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார். இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் சில செய்திகள் தெரிவித்தன. சோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். சமிக்ஞை முறைமை 7 சமிக்ஞை முறைமை #7("SS7") ஒரு தொலைபேசி சமிக்ஞை நெறிமுறையாகும். உலகத்தின் பொதுவான பழைய வகையான தொலைபேசி கட்டமைப்பின் பெரும்பங்கு வகிக்கும் நெறிமுறையாகும். இதன் மிக முக்கிய பணி என்பது தொலைத்தொடர்பு கட்டமைப்பினை பயன்படுத்தி ஒரு தொலைபேசி தொடர்பை உருவாக்குதாகும். மற்ற முக்கிய பணிகள், எண் மாற்றம், குறுஞ்செய்தி, முன்கட்டண, கட்டண சேவைகளுக்கான பேச்சு நேரக்கணிக்கீடுகளுக்கான சேவைகள் முதலியனவாம். இதை பொதுவாக குறுக்கி "SS7" என்றே அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் இதை 'பொதுத்தட சமிக்ஞை முறைமை 7 (common channel signaling system 7) "CCSS7" என்று மாற்றி அழைப்பர். ஐரோப்பாவில் இதனை பொதுவாக "C7" என்று அழைப்பது வழக்கம். இராமபுரம் (ஆந்திரப் பிரதேசம்) இராமாபுரம் (ஆங்கிலம்:Ramapuram), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 279 மீட்டர் (915 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5718 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். இராமாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 42% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 53%, பெண்களின் கல்வியறிவு 30% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. இராமாபுரம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கரீம்நகர் கரீம்நகர் (ஆங்கிலம்:Karimnagar), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 265 மீட்டர் (869 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 203,819 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கரீம்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கரீம்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இருகால் நகர்வு இருகால் நகர்வு என்பது ஒருவகை நிலம்சார் இடப்பெயர்வு முறை ஆகும். இங்கே ஓர் உயிரினம் தனது பின்னுறுப்புக்களைப் பயன்படுத்தி நகர்கின்றது. ஓர் உயிரினம் அல்லது இயந்திரம் இரு கால்களால் நகரும் வழக்கத்தைக் கொண்டிருப்பின் அது "இருகாலி" எனப்படும். இருகால் நகர்வு நடத்தல், ஓடுதல், தாவுதல் என்பவற்றை உள்ளடக்குகிறது. ஒப்பீட்டளவில், தற்கால இனங்களில் மிகச்சிலவே வழக்கமாக இருகால் நகர்வைக் கைக்கொள்ளுகின்றன. பாலூட்டிகளில், இருகால் நகர்வுப் பழக்கம் நான்கு படிகளில் வளர்ச்சியடைந்துள்ளது. திரியாசிக் காலத்தில் ஆக்கோசோரசின் சில குழுக்கள், இருகால் நகர்வு முறைக்கு வளர்ச்சியடைந்தன. அவற்றிலிருந்து, வந்தவற்றுள் தொன்மாக்களின் எல்லாத் தொடக்க வடிவங்களும், பல பிந்திய வடிவங்களும் இருகால் பழக்கம் கொண்டவையாக அல்லது இருகாலில் மட்டுமே நடக்கக்கூடியவையாகக் காணப்பட்டன. பறவைகள் இருகாலில் மட்டுமே நடக்கக்கூடிய இத்தகைய குழு ஒன்றிலிருந்து வழிவந்தன ஆகும். தற்கால இனங்களில் பல, வழமைக்கு மாறான தேவைகள் ஏற்படும்போது குறுகிய நேரத்துக்காவது, இரு கால்களில் நகரக்கூடியவையாக உள்ளன. பல முதலை இனங்களும், ஆக்கோசோரிய வகை சாராத பல்லி வகைகளும், உயிர் தப்புவதற்காக ஓடுவது போன்ற அவசரமான நேரங்களில் இருகால்களில் நகர்கின்றன. பசிலிஸ்கு எனப்படும் பல்லிவகை நீரிலும்கூட இருகால்களில் நகரக்கூடியது. சில விலங்குகள் பிற விலங்குகளுடன் சண்டையிடும்போது இரு கால்களில் எழுந்து நிற்கின்றன. வேறு சில உணவை எட்டுவதற்காக அல்லது சூழலைக் கவனிப்பதற்காக இரு கால்களில் நிற்கவல்லன. ஆனால் இரு கால்களில் நகர்வதில்லை. நாற்கால் நகர்வு நாற்கால் நகர்வு என்பது நிலம்வாழ் விலங்குகள் நான்கு கால்களைப் பயன்படுத்தி நடக்கும் முறையைக் குறிக்கும். பெரும்பாலான நடக்கும் விலங்குகள் நாற்கால் விலங்குகள் ஆகும். ஆடு, மாடு போன்ற பல பாலூட்டிகளும், பல்லி போன்ற ஊர்வனவும் நாலுகாலிகள் ஆகும். பறவைகள், மனிதர், பூச்சிகள், பாம்புகள் என்பன நாலுகாலிகள் அல்ல. சில பூச்சிகளும், பறவைகளும் இதற்கு விதிவிலக்காக நான்கு கால்களைப் பயன்படுத்துவதும் உண்டு. நான்கு முன்னுறுப்புக்கள் (limb) கொண்ட எல்லா விலங்குகளும் நாலுகாலிகள் அல்ல. கைகள், இறக்கைகள் என்பன உண்மையில் படிமலர்ச்சி (கூர்ப்பு) அடைந்த கால்களே. இதனால் கால்கள், கைகள், இறக்ககைகள் என்பன உள்ளிட்ட நான்கு உறுப்புக்களைக் கொண்ட விலங்குகள் "டெட்ராபோடா" என்னும் அறிவியல் வகைப்பாட்டு அலகுக்குள் அடங்குகின்றன. இவை நாலுகாலி மூதாதைகளைக் கொண்ட, பாலூட்டிகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், பறவைகள் போன்ற எல்லா முதுகெலும்பிகளையும் உள்ளடக்குகிறது. படிமலர்ச்சி உயிரியலில், நாலுகாலிகளுக்கும், "டெட்ராபாட்டு"களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது அவசியம். முக்கியமாக, இருகாலிகள், இறக்கையுள்ளவை, மற்றும் கால்கள் வேறு தேவைகளுக்காக மாறுதலடைந்த விலங்குகள் என்பன தொடர்பில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை நாலுகாலிகள் அல்ல, ஆனால் "டெட்ராபாட்டுகள்". கால்கள் இருந்து பின்னால் முழுமையாகப் பயனற்றுப் போன பாம்பினங்களும் "டெட்ராபாட்டுக்கள்" வகைக்குள்ளேயே அடங்குகின்றன. 1909 1909 (MCMIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. வேல்ஸ் வேல்ஸ் ("Wales", வெல்சிய மொழி: Cymru ) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே இங்கிலாந்தும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளன. வேல்சின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3 மில்லியன்கள் ஆகும். இங்கு ஆங்கிலமும் வெல்சிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகளாகும். நாட்டின் 20 விழுக்காட்டினர் வெல்சிய மொழி பேசுகின்றனர். ஆறு செல்ட்டிக் நாடுகளில் ஒன்றாக வேல்ஸ் விளங்குகிறது. வெல்சிய மக்களின் தனித்துவம் 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் இருந்து ரோமர்கள் விலகியதில் இருந்து ஆரம்பிக்கிறது. 13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட்டுடனான போரில் லெவெலினின் படைகளின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயர்கள் வேல்சை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1635-1542ம் ஆண்டுகளில் இது ஆங்கிலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது. சைபீரியா சைபீரியா ("Siberia", ரஷ்ய மொழி: Сиби́рь, "சிபீர்") என்பது வடக்கு ஆசியாவின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய ரஷ்யக் கூட்டமைப்பின் நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தும், 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தான ரஷ்யப் பேரரசின் பகுதியிலும் சைபீரியா இருந்தது. புவியியல் ரீதியாக, இது யூரல் மலைகளின் கிழக்கு வரையும், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் கடல்களின் வடிகால்கள் வரையும், ஆர்க்டிக் கடலின் தெற்கே வட-மேற்கு கசக்ஸ்தான் வரையும், மங்கோலியா, சீனா வரையும் பரந்திருக்கிறது. ரஷ்யாவின் 77 விழுக்காட்டு நிலப்பகுதியை (13.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) சைபீரியா கொண்டுள்ளது. ஆனாலும் இங்கு ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினரே (42.2 மில்லியன் மக்கள்) இங்கு வாழ்கின்றனர். ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் ("Harkishan Singh Surjeet", மார்ச் 23, 1916 - ஆகஸ்ட் 1, 2008) இந்தியாவின் கம்யூனிசத் தலைவர்களில் ஒருவர். மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியின் பொதுச் செயலாளராக 1992 முதல் 2005 வரை பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார் ஜல‌ந்த‌ரி‌ல் உ‌ள்ள ப‌ந்தலா ‌கிராம‌த்‌தி‌ல் ‌பிற‌ந்தார் . சு‌‌ர்‌ஜீத்‌தி‌ன் மனை‌வி ‌பி‌ரீ‌த்த‌ம் கெள‌ர். இவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மக‌ன்களு‌ம் ஒரு மகளு‌ம் உ‌ள்ளன‌ர். சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு . அவர் இளமை‌ப் பருவ‌த்‌தி‌ல் விடுதலைப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் த‌ன்னை இணை‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியி‌ல் 1936 இ‌ல் இணை‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி இர‌ண்டாகப் பிளவடைந்த போது, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியில் சேர்ந்தார்.13 ஆ‌ண்டுக‌‌ள் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக‌ப் ப‌ணியா‌ற்‌றிய சு‌ர்‌ஜீ‌த், ‌தீ‌விர அர‌‌சிய‌லி‌ல் இரு‌ந்து ஓ‌ய்வு பெ‌ற்றா‌ர்.1978 முத‌ல் 1984 வரை மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி வ‌கி‌த்த சு‌ர்ஜீ‌த், இர‌ண்டு முறை பஞ்சாப் ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பினராகவு‌ம் இரு‌ந்து‌ள்ளா‌ர் (1953- 57 ம‌ற்று‌ம் 1967- 69).கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை உ‌ள்‌ளி‌ட்ட‌ப் ப‌‌ல்வேறு ‌விவகார‌ங்க‌ள் தொட‌ர்பாக நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பு‌த்தகக‌ங்களையு‌ம் அவ‌ர் எழு‌தியு‌ள்ளா‌ர். சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோஷ் சுப்பிரமணியம் 2008 ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா, கீதா முதலியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆக்கம். சந்தோஷ் சுப்பிரமணியம் (ஜெயம் ரவி) ஹரினியும் (ஜெனிலியா) காதலிக்கின்றனர் சந்தோஷின் தந்தை சுப்பிரமணியம் (பிரகாஷ்ராஜ்) மிகவும் கண்டிப்பானவர் மற்றும் அன்பானவர். தன் மகனை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார். தந்தையின் கெடுபிடிகள் மனம் வருத்தினாலும், அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். சந்தோஷ் தன் திருமணத்தை தனது விருப்படி செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை சந்தோசுக்கு மணமுடிக்கப் பார்க்கிறார் சுப்பிரமணியம். தன் தந்தையிடம் தன் காதலைச் சொல்லும் சந்தோஷ் தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் சிலநாட்கள் வீட்டில் தங்கவைத்தால் அவளை அனைவருக்கும் பிடிக்கும் என்கிறார். இதையடுத்து ஹரினி, சந்தோஷ் வீட்டில் தங்கி அவர்களுடன் பழக வருகிறார். அவரது வெகுளித்தனத்தால் சந்தோசுக்கு பல சிக்கல்கள் நேர்கின்றன. மேலும் ஹரினியால் சந்தோஷ் வீட்டில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல், தன் வீட்டிற்கே திரும்பி விடுகிறார். இதன்பிறகு ஹரினியும் சந்தோசும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை. வல்லமை தாராயோ வல்லமை தாராயோ 2008ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஒரு பெண் காதல் நிறைவேறாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தள்ளப்பட்ட பின்னர் அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் கரு. ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. இந்தப் படத்தில் சாயா சிங், பார்த்திபன் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரலாற்றுக்கு முந்திய காலக் கலை வரலாற்றுக்கு முந்திய காலக் கலை என்பது எழுத்தறிவுக்கு முற்பட்ட பண்பாடுகளால் ஆக்கப்பட்ட எல்லாக் கலைகளையும் குறிக்கும். இது, நிலவியல் வரலாற்றில் மிகப் பிந்திய காலகட்டம் ஆகும். நிச்சயமான கலை வெளிப்பாடு என்ற அளவில் அறியப்பட்ட சான்றுகள் மேல் பழங்கற்காலத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை ஹோமோ சப்பியன்களால் உருவாக்கப்பட்டவை. எனினும் இதற்கு முன்னரே ஹோமோ இரக்டஸ்களும், இலக்கற்ற வரிவடிவங்களை பயன்பாட்டுப் பொருட்களில் ஆக்கியிருப்பது தெரியவந்துள்ளது. துரிங்கியாவில் உள்ள பொல்சிங்ஸ்லெபான் என்னுமிடத்தில் இவ்வாறான பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றைக் கலைக்கு ஒரு முன்னோடி என்பதுடன், பயன்பாட்டுத் தேவைக்கும் மேல் பொருட்களை அழகு படுத்தும் எண்ணத்தின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது எனலாம். சமச்சீர்த்தன்மை, கருவிகளின் வடிவத்தில் செலுத்தப்பட்ட கவனம் என்பன, நடுப் பழைய கற்காலக் கைக் கோடரிகளைக் கலை வெளிப்பாடுகளாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள், நியண்டர்தால் மனிதர் சிக்கலான கலை மரபு ஒன்றைக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்னும் கருத்தை உருவாக்கியுள்ளன. இன்றுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கலை வேலைப்பாடு எனக் கருதத் தக்கது, தான்-தானின் வீனஸ் எனப்படும் கி.மு 500,000 முதல் 300,000 வரையான, நடு ஆக்கியூலியக் காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய உருவச் சிலை ஆகும். மொரோக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இது, 6 சமீ நீளம் கொண்ட மனித உருவத்தை ஒத்திருக்கும் ஒரு சிலை ஆகும். இது இயற்கையான நிலவியல் செயற்பாடுகளால் உருவாகியிருக்கக் கூடும் எனினும், மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சுவடுகளும், நிறம் தீட்டப்பட்டதற்கான சில சான்றுகளும் இதிலே உள்ளன. இச் சிலையின் மேற்பரப்பில் காணப்பட்ட எண்ணெய்த் தன்மை கொண்ட பொருள் இரும்பு, மங்கனீசு ஆகியவை கொண்ட சேர்வைகளின் கலவை எனக் கண்டறியப்பட்டது. இது, இவ்வுருவம் எவ்வாறு தோன்றியது எனினும், யாரோ இதற்கு நிறம் தீட்டிப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொருளை மனிதர்களின் கலை உணர்வு வெளிப்பாட்டின் சான்றாகக் கொள்வதையிட்டுக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏறத்தாழ இதே போன்ற, கிமு 250,000 காலப்பகுதியைச் சேர்ந்த, பெரக்காத் ராமின் வீனஸ் என்னும் இன்னொரு உருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் முன்போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. ஓவியத்தின் வரலாறு ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது. கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய ஓவியங்கள் எனக் கருதப்படுவன பிரான்சின் குரோட்டே சோவெட்டில் ("Grotte Chauvet") உள்ள ஓவியங்கள் ஆகும். சில ஆய்வாளர்கள் இவற்றை 32,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்கின்றனர். சிவப்பு நிறக் களிகள் கொண்டு வரையப்பட்டுள்ள அல்லது செதுக்கப்பட்டுள்ள இவ்வோவியங்களில், குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்கள் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே உள்ளன. குகை ஓவிய எடுத்துக் காட்டுகள், பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றை உருவாக்கிய மனிதர் இவற்றை என்ன நோக்கத்துக்காக ஆக்கினர், இவை தொடர்பில் எவ்வாறான பொருள் விளக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்பவற்றை விளக்குவதற்காகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்பழங்கால மனிதர், விலங்குகளை இலகுவாக வேட்டையாடுவதற்காக அவற்றின் ஆவிகளைப் "பிடிப்பதற்காக" இவ்வோவியங்களை வரைந்து இருக்கலாம் என்றும், இயற்கையை விலங்குகள் வடிவில் கண்டு அவற்றுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என்றும், மனிதர்களுக்கு இயல்பாக உள்ள உணர்வு வெளிப்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கானவை இவை என்றும், தகவல்களைப் பரிமாறுவதற்கான ஒரு முறையே இது என்றும் விளக்கங்கள் பலவாறாக அமைந்துள்ளன. பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 – 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு "பைசன்" என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 – 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை. மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள "நடைபோடும் போர்வீரர்" (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 – 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல. இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. "இந்திய ஓவியம்" என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை. சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளும் பலம்வாய்ந்த ஓவிய மரபுகளைக் கொண்டவை. இவை வனப்பெழுத்து (calligraphy), அச்சடிப்பு (printmaking) என்பவற்றோடும் நெருங்கிய தொடர்புகொண்டவை. தூரகிழக்கு நீர் சார்ந்த நுட்பங்கள், குறைவான உண்மையியம், நளினமானவையும் மரபுப்பாணியில் அமைந்தவையுமான உருவங்கள், வெண்ணிற வெளிகளின் (எதிர் வெளி) முக்கியத்துவம், நிலத்தோற்றங்களுக்குக் கொடுக்கும் முதன்மை என்பன தூரகிழக்கு நாடுகளின் ஓவியங்களுக்குத் தனித்துவமான இயல்புகளை வழங்குகின்றன. மையாலும், நிறங்களாலும்; கடதாசி, பட்டுத் துணி என்பவற்றின் மீது வரைவதற்கும் அப்பால், அரக்குப் பூச்சின் (lacquer) மீது பொன் இழைத்து வரைவதும் கிழக்காசிய ஓவியங்களில் பொதுவாகக் காணும் ஒரு அம்சமாகும். கிபி முதலாம் நூற்றாண்டில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டபோது, இது ஓவியம் வரைவதற்கான மலிவான ஊடகமாக ஆனது. கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "சலவைசெய்யும் பிக்குகள்" என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய "எதிர் வெளியை" (negative space) உருவாக்குகின்றது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அடிப்படையான சட்டத்தை குறிக்கும். அமெரிக்க அரசின் சட்டமன்றம், நீதிப் பிரிவு, மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட செயற்குழு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்குகிறது. செப்டம்பர் 17, 1787இல் ஆட்சி சட்டமானது. இவ்வரசியலமைப்பு சட்டமானதுக்கு பிறகு 27 தடவை மாற்றப்பட்டது. இதில் முதல் 10 மாற்றங்கள் உரிமைகளின் சட்டம் (Bill of Rights) என்று அழைக்கப்படுகின்றன. திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் ("Open Systems Interconnection") என்பது பல்வேறு கணினிகள், வலையமைப்புக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு இடையேயான பலமட்டத் தொடர்பியலை ("multilayered communication") வரையறுக்கும் விதமாக உண்டாக்கப்பட்ட படிமம். இதனை சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் ("International Organization for Standardization", ISO) திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிம உருவாக்கல் அமைப்பு ஏற்படுத்தியது. இந்த படிமத்தின் அடிப்படையில் வலையமைக்கும் கட்டமைப்பு பின்வரும் ஏழு மட்டங்களாக அல்லது அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இந்த மட்டங்கள் அல்லது அடுக்குகள் பல்வேறு கணினி மற்றும் வலையமைப்புச் சாதனங்கள் தங்களுக்கிடையே தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் செயற்பாடுகளை வகைப்படுத்திப் பெறப்பட்டவையாகும். ஆகவே ஒவ்வொரு மட்டமும் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யும் செயற்பாடுகள் எனக் கொள்ளலாம். ஒரு மட்டத்திலுள்ள செயற்பாடுகள் அதன் கீழ் மட்டத்திலிருந்து சேவைகளைப் பெறவும் அதன் மேல் மட்டத்திற்கு சேவைகளைச் செய்து கொடுக்கவும் செய்கின்றன. பருநிலை மட்டம் (Physical Layer) என்பது சாதனங்களை இணைக்கும் எல்லா வன்பொருள்களையும் அவற்றின் மின்னியல் மற்றும் இயற்பியல் பற்றிய குறிப்பீடுகளை வரையறுக்கிறது. தரவு இணைப்பு மட்டம் (Data Link Layer) வலையமைப்பு சாதனங்களுக்கு இடையே தரவினை இடம் மாற்றத் தேவையான செயல்பாடுகளையும் செய்முறைகளையும் அளிக்கிறது. மேலும் இது பருநிலை மட்டத்தில் ஏற்படும் பிழைகளை கண்டுபிடித்துச் சரியாக்குகிறது. வலையமைப்பு மட்டம் (Network Layer) மாறும் நீளமுள்ள தரவுத் தொடர்களை தொடங்கும் இடத்திலிருந்து அடையும் இடத்திற்கு மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் நேரத்தில் மேலேயுள்ள போக்குவரத்து மட்டத்தின் கோரிக்கையான செயல்பாட்டுத் தரத்தையும் வழங்குகிறது. போக்குவரத்து மட்டம் (Transport Layer) பயனர்களுக்கு இடையில் தரவினை பின்னணியில் இடம் மாற்றுகிறது; மேல் மட்டங்களுக்கு நம்பகமான தரவு மாற்றுச் சேவையை வழங்குகிறது. இணைப்பின் நம்பகத்தன்மையை சீர்படுத்த பாய்மை கட்டுப்படுத்தல், துண்டாக்குதல், துண்டுகளை ஒன்றுபடுத்தல், பிழை கட்டுப்படுத்தல் ஆகியவற்றைச் செய்கிறது. அமர்வு மட்டம் (Session Layer) கணினிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் மற்றும் இணைப்புக்கள் அல்லது அமர்வுகளை கட்டுப்படுத்துகிறது. தரவுக் குறிப்பீட்டு மட்டம் (Presentation Layer), பயன்முறை மட்டத்திலுள்ளவற்றுக்கு விருப்பமான சிண்டக்ஸ் மற்றும் சிமேன்டிக்ஸ் உபயோகிக்கும் சூழலை உருவாக்கித் தருகிறது. பயன்முறை மட்டம் (Application Layer) பயன்பாட்டு நிரலிகளுக்கு தேவையான பயன்பாட்டுச் செயல்களைச் செய்கிறது; தரவுக் குறிப்பீட்டு மட்டம் கோரிக்கைகளையும் விடுக்கிறது. இந்த மட்டம் பயன்பாட்டு நிரலிகளுக்குதான் சேவைகளை வழங்குகிறது; பயனர்களுக்கு அல்ல. ஜலந்தர் ஜலந்தர் ("Jalandhar", பஞ்சாபி மொழி: ਜਲੰਧਰ, இந்தி: जलंधर), என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊர். இது முன்னர் ஜுலுந்தர் என அழைக்கப்பட்டது. நகரப் பகுதியுல் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களும் நகரைச் சுற்றியுள்ள இடங்களில் மேலும் ஒரு மில்லியன் மக்களும் வாழ்கின்றனர். ஜலந்தர் நகரம் தில்லியில் இருந்து 375 கிமீ தூரத்திலும், சண்டிகரில் இருந்து 142 கிமீ தூரத்திலும் அம்ரித்சரில் இருந்து 90 கிமீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. "ஜலந்தர்" என்ற பெயர் ஜாலந்தரா என்ற மன்னனின் பெயரில் இருந்து உருவானது. இவன் நீரில் வாழ்ந்ததாக ஐதீகம். "ஜல்" என்பது நீரையும், அந்தர் என்பது "உள்ளே" என்பதும் பொருள். ஜலந்தர் பஞ்சாபின் தலைநகராக 1953ம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் சண்டிகர் தலைநகராக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது இதன் பெயர் ஜுலுந்தர் ஆகும். 2001 ஆம் ஆண்டு தரவுகளின் படி ஜலந்தரின் மக்கள் தொகை 701,223. இவர்களில் 54 விழுக்காட்டினர் ஆண்கள். 74 விழுக்காட்டினர் படிப்பறிவுள்ளோர். 10 விழுக்காட்டினர் 6 வயதிற்கும் குறைவானோர். ஜோர்ஜ் ஹபாஷ் ஜோர்ஜ் ஹபாஷ் ("George Habash", அரபு மொழி: جورج حبش, ஆகஸ்ட் 2, 1926 – ஜனவரி 26, 2008), என்பவர் பாலஸ்தீன அரசியல்வாதி ஆவார். பழமைவாத கிறிஸ்தவரான இவர் பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி ("Popular Front for the Liberation of Palestine", PFLP) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து 2000-ம் ஆண்டு வரையில் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹபாஷ், அதே நேரம் பாலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு, பாலஸ்தீன மாநிலத்தில் அமைக்கப்பட்ட பின்னர், ஹபாசின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. கிரேக்க கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த, ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஜோர்ஜ் ஹபாஷ், பின்னர் லெபனானில் அகதியாக இருந்த போது, பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றாலும், பாலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் எகிப்தியத் தலைவர் நாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கிய ஹப்பாசும் தோழர்களும், பின்னர் மார்க்சிய-லெனினியத் தத்துவங்களால் கவரப்பட்டு, PLFP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பாசின் தனித்துவ அரசியல் உலகம் முழுக்க பிரபலமானது. ஹபாஷ் ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஓர் அங்கமாக தனது இயக்கத்தை நிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர்களில் கணிசமான அளவு தொகையில் உள்ள (கிரேக்க பிரிவு) கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப்பட்ட போது, யூதர்கள் வன்முறையைப் பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PLFP யாக இருந்தாலும் மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க முயன்றது. அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்த போது வரவேற்ற ஜோர்ஜ் ஹபாஷ், பின்னர் அந்த "அரபு ஒன்றியம்" சுயநல அரசியலால் சீர்குலைந்த போது விரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்த PLFP முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்து தகர்த்தத்தின் மூலம், பலஸ்தீன பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றனர். அப்படியான நடவடிக்கை ஒன்றில் பங்கு பற்றிய உலகப்புகழ் பெற்ற இளம் பெண் போராளி லைலா காலித், இன்று PLFP யின் தலைவர்களில் ஒருவராக ஜோர்தானில் வசிக்கிறார். PLFP யின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பன்னாட்டு ஆர்வலர்களின் உதவி கிடைத்தது. இலத்தீன் அமெரிக்கத் தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின் போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேல், டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீன போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர். எழுபதுகளில் இடம்பெற்ற இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்கு செயல் வடிவம் கொடுத்தன. அன்று எதிரணியில் இருந்த சோவியத் ஒன்றியம், பாலஸ்தீன போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராக கணித்திருந்தது. அன்றைய சோவியத் ஒன்றியத்திலும், சோசலிச கிழக்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்ற பாலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீன பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவை சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற "சர்வதேச பயங்கரவாதியாகி", தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PLFP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக ஜோர்தான் அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களுக்கான உத்தரவு வரும் வரை தங்கவைக்கப்பட்டனர். 1967 ம் ஆண்டு, PLFP ஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு, ஐரோப்பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியை கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Birigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் PLFP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. சோவியத் ஒன்றியம் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்து போவோருகெல்லாம், இராணுவப்பயிற்சி தாராளமாக கிடைத்தது. ஈழ விடுதலை போராளிகளும் இந்த சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டுப் போர், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது போல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பெகா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அந்தப்பகுதியில், PLFP உட்பட அனைத்து பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லப்பகுதகளில் இருந்தும் வந்த தீவிரவாத இளைஞர்கள் அங்கே புகலிடம் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர் தான், அந்த புகலிடம் பறிபோனது. அந்த சமயம் தான் யாசர் அரபாத்தின் தேசியவாத பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஜ், இந்த சமரசத்திற்கு கடைசி வரை உடன்படாமல், தனது தோழர்களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது விட்டுக்கொடா தன்மை, அனைத்து பாலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. ஹப்பாசின் இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டு விட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மதவாத அமைப்புகளுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது. மதச்சார்பற்ற PLFP யும், மதவாத ஹமாசும் ஒன்றாக வேலைசெய்வது, பலருக்கு நம்பமுடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது. அண்மையில் கூட PLFP யும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணைக்குதங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முற்றுகையின் கீழ் உள்ள காசா பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் ஹபாஷ் தனது 81வது அகவையில் ஜோர்தான் தலைநகர் அம்மானில் இறந்தார். ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஹபாசிற்கு ஹில்டா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். சின்மயானந்தா சுவாமி சின்மாயானந்தா ("Swami Chinmayananda", மலையாளம்: സ്വാമി ചിന്‍മയാനന്ദന്‍, மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர். சின்மயானந்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார். சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 சிவராத்திரி நாளன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு "சுவாமி சின்மயானந்தா" என்ற பெயரையும் பெற்றார். இமயமலையில் சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் 8 ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்றார். சுவாமிகளின் ஆசியுடன் வேதாந்தத்தை உலகெங்கும் பரப்ப இமாலயத்தை விட்டு சின்மயானந்தர் புறப்பட்டார். உலகெங்கும் பல ஆசிரமங்களையும் மையங்களையும் ஆரம்பித்தார். பல பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் ஆரம்பித்தார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென கிராம நலத் திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கினார். சுவாமி சின்மயானந்தா ஆகஸ்ட் 3, 1993 இல் சான் டியேகோ, கலிபோர்னியாவில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர். இவர் ஆரம்பித்த சின்மயா மிஷன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அமைப்பாகும். 350 மையங்களில் இது இயங்குகிறது. இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது. சுவாமிஜியின் முதன்மையான சீடர்களில் சுவாமி தயானந்தர், தமது குருவின் அத்வைத தத்துவத்தை பரப்புவதில் இன்றளவும் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். மேலும் அத்வைத தத்துவத்தை பரப்ப இதுவரை 250க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். சேவைகளிடை உளவுத்துறை இடைசேவை அறிவு ("Inter-Services Intelligence)" பாகிஸ்தானின் மூன்று உளவு அமைப்புகளின் மிகப்பெரியது. 1948இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமைப் பணியகம் இஸ்லாமாபாதில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை செய்வது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த நிலையில் டாலிபான் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கும் காலிஸ்தான் இயக்கம் போன்ற இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கும் இவ்வமைப்பு உதவி செய்துள்ளது. 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதலில் இடைசேவை அறிவு டாலிபானுக்கு உதவி செய்தது என்று ஆகஸ்ட் 2008இல் அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை தெரிவித்துள்ளது. அம்மான் அமான் ("Amman" அரபு: "عمان"), ஜோர்தான் இராச்சியத்தில் தலைநகரமும் அதன் முக்கிய வர்த்தக மையமும் ஆகும். இதன் மக்கள்தொகை (2005 ஆம் ஆண்டில்) ,125,400. ஜோர்தானின் மிகப்பெரிய நகரமும் இதுவாகும். ஹமாஸ் ஹமாஸ் ("Ḥamas", அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலஸ்தீன சுணி இஸ்லாமிய போராளி இயக்கமும் பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும். ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின், மற்றும் முகமது தாஹா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும். [[பாலஸ்தீன விடுதலை இயக்கம்|பாலஸ்தீன விடுதலை இயக்க]]த் தலைவர் [[யாசர் அரபாத்]] இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. [[ஜனவரி]] [[2006]] இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது. [[பகுப்பு:பாலஸ்தீன அரசியல் கட்சிகள்]] [[பகுப்பு:புரட்சி இயக்கங்கள்]] [[பகுப்பு:தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை]] [[பகுப்பு:1987இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] ஜப்பானிய செம்படை ஜப்பானிய செம்படை ("Japanese Red Army", 日本赤軍, நிஹோன் செக்கிகன், "JRA") என்பது புசாக்கோ சிகெனோபு என்னும் ஜப்பானியப் பெண் தீவிரவாதியினால் பெப்ரவரி 1971 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். ஜப்பானிய கம்யூனிச முன்னணியில் இருந்து விலகி இவ்வமைப்பை இவர் ஆரம்பித்தார். இவ்வமைப்பு உச்ச நிலையில் இருந்தபோது இதில் மொத்தம் 40 பேர் உறுப்பினர்களாக இருந்ததாக அறியப்படுகிறது. இவ்வமைப்பு ஒருகாலத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இடதுசாரி அமைப்பாக இருந்தது. ஜேஆர்ஏ அமைப்பு பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி (PFLP) உடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது. 1980களின் ஆரம்பத்தில் ஜப்பானில் இதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால் இது நிதி, பயிற்சி, ஆயுதங்கள் போன்றவற்றிற்கு PFLP ஐயிலேயே பெரிதும் தங்கியிருந்தது. இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள் ஜப்பானிய அரசையும் அதன் மன்னராட்சியையும் இல்லாதொழித்து உலகப் புரட்சியை ஏற்படுத்துவதே.