அணுக்கரு விசை அணுக்கரு விசை ("Nuclear force") எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருனிகளுக்கிடையே ஏற்படும் விசை ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோட்டான்களையும் மின்னூட்டம் அற்ற நியூட்ரான்களையும் பிணைக்க வைக்கின்றது. 1932 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் சாட்விக் என்பவரால் நியூட்டாரன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அணுக்கரு விசை அணுக்கருவியலில் முக்கியத்துவம் பெற்றது. 1935 ஆம் ஆண்டில் ஹிடெக்கி யுக்காவா என்பவர் அணுக்கரு விசை பற்றி முதன் முதலாக எடுத்துக் கூறினார். அவரது கூற்றுப்படி, இரு அணுக்கருனிகளுக்கிடையே தொடர்ந்தாற் போல் போசோன்கள் (மீசோன்கள்) என்ற துகள் பரிமாற்றம் நடைபெறுகிறது. எனினும், மீசோன் தத்துவம் தற்போது இவ்விசையின் அடிப்படைக் கொள்கை என ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், இந்த மீசோன் துகள் பரிமாற்றக் கொள்கை "நியூட்ரான்-நியூட்ரான்" அழுத்தத்தின் நேரடியான சோதனைகளுக்கு இக்கொள்கை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெர்மி (அலகு) பெர்மி ("fermi") என்பது நீளத்துக்கான SI அலகுத் தீட்டமல்லாத ஒரு அலகாகும். ஆனாலும், இது SI-அலகான பெம்டோமீட்டருக்கு இணையானதாகும். fm, மற்றும் பெம்டோமீட்டர் ஆகிய இரண்டு பெயர்களும் பிரபல அறிவியல் அறிஞரான என்ரிக்கோ பெர்மியின் நினைவாக சூட்டப்பட்டது. இவ்வலகு பொதுவாக அணுக்கருவியலில் ஒரு முக்கிய அலகாகும். எடுத்துக்காட்டாக, தங்கத்தின் அணுக்கருவின் ஆரம் கிட்டத்தட்ட 8.45 பெர்மிகள் ஆகும். பாசுக்கல் (நிரலாக்க மொழி) ஹேமாவதி ஆறு ஹேமாவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது 245 கிமீ நீளமுடையது. இது கர்நாடகத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி ஹாசன் மற்றும் மைசூர் மாவட்டங்களில் பாய்ந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்தில் காவிரியுடன் கலக்கிறது. ஹாசன் மாவட்டத்திலுள்ள கோரூர் என்னுமிடத்தில் இதன் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. மரீ பிரான்சுவா சாடி கார்னோ "பிரெஞ்சு இயற்பியலாளர் பற்றி அறிய சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும்." மரீ பிரான்சுவா சாடி கார்னோ ("Marie François Sadi Carnot"; ஆகஸ்ட் 11, 1837 – ஜூன் 25, 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார். ஜூன் 24, 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது "சான்டெ கசேரியோ" என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் 1958 ல் நடைமுறைக்கு வந்தது. இதன் படி பெரியாற்றுப் படுகையை சேர்ந்த ஆனமலையாறு, சாலக்குடி ஆற்றுப்படுகையை சேர்ந்த சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் பாரதப்புழா ஆற்றுப்படுகையை சேர்ந்த ஆழியாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் ஒப்பந்தமாகியது. இதன்படி தமிழகத்திற்கு 30 டிஎம்சி நீரும் கேரளத்திற்கு 20 டிஎம்சி நீரும் ஒதுக்கப்பட்டது. இந்த ஆறுகள் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கின்றன. புக்கரெஸ்ட் புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: "Bucureşti" ) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும். உருமானிய மொழி உருமானிய மொழி அல்லது உருமேனிய மொழி (limba română, ) கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் பேசும் ரோமானிய மொழியாகும். ருமேனியா நாட்டிலும் செர்பியாவின் வொய்வொடினா மாகாணத்திலும் ஆட்சி மொழியாகும். மொல்தோவாவின் மொல்தோவா மொழியும் ருமேனிய மொழியும் ஒரே மொழியாகும். ஹவுசா மொழி ஹவுசா மொழி (Hausa, هَوْسَ) மேற்கு ஆப்பிரிக்க மக்கள் பேசும் ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகும். வடக்கு நைஜீரியா மாநிலங்களில் ஆட்சி மொழியாகும். 24 மக்கள் பேசிய இம்மொழி சாடிய மொழிகளில் மிகவும் பேசிய மொழியாகும். நியாமி நியாமி (Niamey) நைஜர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நைஜர் ஆறு இந்நகர் வழியாக பாய்கிறது. 2002 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 674,950 மக்கள் வசிக்கிறார்கள். நேரடி அணுகல் நினைவகம் சார்பிலாத் தெரிவு நினைவகம் (குறுஞ்சொல் RAM) கணினி நினைவக வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று(integrated circuits) ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன் சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெறத்தக்கவகையில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகள் தெரியப்படலாம் என்பதாகும். சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் பௌதிக அசைவு மூலமே தரவுகள் வாசிக்கப்படும். இதனால் இவற்றில் வாசிப்பு நேரத்தைவிட தரவு உள்ள இடத்தை அடைவு நேரமே(seek time) அதிகமாகும். RAM எனும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். எனினும், வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும், அதாவது நிலை நினைவகம்(ROM) போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்றே வகைப்படுத்தப்படும். ஏனெனில் சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே. முதலாவது சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காந்த உள்ளக நினைவகம் (magnetic core memory) ஆகும், இது பின் 1960 ஆம் ஆண்டுகள் மற்றும் முன் 1970 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்படும் வரை அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்த உள்ளக நினைவகம் உருவாக்கத்திற்கு முன்னர் கணினிகளில் நினைவக செயற்பாடுகளுக்கு அஞ்சல் சுற்று (relay) அல்லது வெற்றிட குழாய் (vacuum tube) பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப கணினிகள் சுற்றுக்களில் , அல்லது " முக்கிய " நினைவக செயல்பாடுகளை தாமதம் வரிகளை பயன்படுத்தப்படுகிறது. மீயொலி தாமதம் வரிகளை மட்டுமே எழுதப்பட்ட வரிசையில் தரவு இனப்பெருக்கம் முடியும் . டிரம் நினைவகம் குறைந்த செலவில் ஆனால் வேகம் மேம்படுத்த டிரம் உடல் அமைப்பை அறிவு தேவைப்படுகிறது அல்லாத தொடர்ச்சியான நினைவக பொருட்களை மீட்பு அன்று விரிவடைந்துள்ளது. LATCHES வெற்றிட குழாய் triodes கட்டப்பட்டுள்ளது , பின்னர் , தனித்தியங்கும் transistors வெளியே , போன்ற சீரற்ற அணுகல் பதிவு வங்கிகள் மற்றும் பதிவேடுகளை போன்ற சிறிய மற்றும் வேகமாக நினைவுகள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பதிவேடுகளை ஒப்பீட்டளவில் பெரிய , அதிகார பசி மற்றும் தரவு பெரிய அளவு பயன்படுத்த மிகவும் விலையுயர்ந்த ; போன்ற நினைவகம் ஆயிரம் பொதுவாக ஒரு சில நூறு அல்லது சில பிட்கள் வழங்க முடியும். நினைவகம் முதல் நடைமுறை வடிவம் 1947 இல் வில்லியம்ஸ் குழாய் தொடங்கும். இது ஒரு எதிர் முனை கதிர் குழாய் முகத்தில் மின்னியல் மின்னூட்டம் புள்ளிகள் தரவு சேமிக்கப்படும் . CRT யின் எலக்ட்ரான் கற்றை படித்து எந்த வரிசையில் குழாய் புள்ளிகள் எழுத முடியும் என்பதால், நினைவகம் சீரற்ற அணுகல் இருந்தது. வில்லியம்ஸ் குழாய் திறன் ஆயிரம் சுற்றி பிட்கள் ஒரு சில நூறு இருந்தது, ஆனால் அது வேகமாக , மிக சிறிய , மற்றும் அதிக சக்தி திறன் தனிப்பட்ட வெற்றிட குழாய் கண்டதே பயன்படுத்தி விட . இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது , வில்லியம்ஸ் குழாய் முதல் மின்னணு சேமிக்கப்படும் நினைவகம் திட்டம் முதல் வெற்றிகரமாக 21 ஜூன் 1948 அன்று ஒரு திட்டத்தை ஓடி மான்செஸ்டர் சிறுநிறுவனங்களுக்கான சோதனை இயந்திரம் ( SSEM ) கணினி , நடைமுறைப்படுத்தப்படும் எந்த நடுத்தர வழங்கப்படுகிறது . [ 1 ] உண்மையில், மாறாக SSEM வடிவமைக்கப்பட்டுள்ளது வருகின்றன வில்லியம்ஸ் குழாய் நினைவக விட , SSEM நினைவகம் நம்பகத்தன்மையை நிரூபிக்க ஒரு டெஸ்ட்பெட் இருந்தது. [ 2 ] [3] காந்த மைய நினைவகம் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1970 களின் நடுப்பகுதியில் வரை உருவாக்கப்பட்டது. அன்போடும் மோதிரங்கள் ஒரு வரிசை நம்பியிருக்கிறது, நினைவகம் ஒரு பரவலான வடிவமாக மாறியது . ஒவ்வொரு வளையம் காந்தமாக்கும் உணர்வு மாற்றுவதன் மூலம், தரவு மோதிரத்தை ஒன்றுக்கு சேமிக்கப்படும் ஒரு பிட் சேமிக்க முடியும் . ஒவ்வொரு வளையம் தேர்வு மற்றும் அதை படிக்க அல்லது எழுத முகவரி கம்பிகள் ஆகியவற்றின் இருந்ததால், எந்த வரிசையில் எந்த நினைவக இடம் அணுகல் சாத்தியமாக இருந்தது . 1970 களின் ஆரம்பத்தில் தொடங்கி , ஒருங்கிணைந்த சுற்றுகள் உள்ள திட நிலை நினைவகம் இடம்பெயர்ந்த வரை காந்த மைய நினைவகம் நினைவக அமைப்பு நிலையான வடிவம் இருந்தது. ராபர்ட் எச் Dennard 1968 ல் மாறும் சீரற்ற அணுகல் நினைவக ( விக்கிபீடியாவில் ) கண்டுபிடித்தார்; ஒவ்வொரு நினைவகம் பிட் ஒரு ஒற்றை டிரான்சிஸ்டர் ஒரு 4 அல்லது 6 டிரான்சிஸ்டர் தாழ்ப்பாளை சுற்று இந்த அனுமதி பதிலாக, பெரிதும் மாறும் செலவில் நினைவக அடர்த்தி அதிகரிக்கும். தரவு ஒவ்வொரு டிரான்சிஸ்டர் சிறிய கொள்திறன் சேமிக்கப்படும் , மற்றும் அவ்வப்போது சார்ஜ் முன் ஒரு சில மில்லி விநாடிகளில் புதுப்பிக்கப்படும் நேர்ந்தது விட்டு கசிய முடியும் . முன்னதாக ஒருங்கிணைந்த வாசிப்பு மட்டும் நினைவகம் (ROM) சுற்றுகள், நிரந்தர (அல்லது வாசிக்க மட்டும் ) நினைவகம் அடிக்கடி முகவரி குறிவிலக்கிகளை இயக்கப்படுகிறது டையோடு வகைகளாலும் பயன்படுத்தி கட்டப்பட்டது , அல்லது சிறப்பாக காயம் கோர் கயிறு நினைவக விமானங்கள் வளர்ச்சிக்கு . நேரடி அணுகல் நினைவகம் இரண்டு வகைப்படும் அவை நிலையான நேரடி அணுகல் நினைவகம் மற்றும் மாறும் நேரடி அணுகல் நினைவகம் நிலையான நேரடி அணுகல் நினைவகம்-ல் ஒரு பிட் தகவல்-ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களை பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்தவகை நினைவகங்களை தயாரிக்க அதிக பொருட்செலவானவை ஆனால் இவைகள் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அதிவேகமக செயல்படுகின்றன. மாறும் நேரடி அணுகல் நினைவகம்-ல் ஒரு பிட் தகவல்-ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளை பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்தவகை நினைவகங்கள் மேல் குறிப்பிட்டதை விட குறைந்த பொருட்செலவானவை ஆகவே இவை தற்போதய நவீன கணினிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரு நினைவகைங்களிளும் ஆற்றல் இல்லாதபோது தகவல்களை சேமித்துவைக்க முடியாது. அதாவது ஆற்றல் இல்லாதபோது அவை மீட்டமைக்கப்படும். மாறாக ROM தகவல்களை நிரந்தரமாக பதிவு செய்கிறது. புரோகிரஸ் விண்கலம் புரோகிரஸ் ("Progress") என்பது ரஷ்ய சரக்கு விண்கலம் ஆகும். இது ஆளில்லா விண்கலம் ஆகும். ஆனாலும், விண்வெளி நிலையத்துடன் இது இணைந்து கொள்ளும் போது அதனுள் விண்வெளி வீரர்கள் சென்று தங்கியிருக்கும் வசதி படைத்தது. இது சோயுஸ் விண்கலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இவ்விண்கலம் சோவியத், மற்றும் ரஷ்ய விண்வெளி நிலையங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்ன்றது, பின்னர் தற்போது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்கிறது. ஆண்டு தோறும் மூன்று அல்லது நான்கு தடவைகள் இது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு சென்று வருகிறது. ஒவ்வொரு புரோகிரஸ் விண்கலமும் மற்ற விண்கலம் வரும் வரை விண்வெளி நிலையத்துடன் இணைப்பில் இருக்கும். அடுத்து வரும் விண்கலம் இணைவதற்கு சற்று முன்பதாக நிலையத்தை விட்டு விலகும். விண்வெளி நிலையத்தில் எஞ்சியவற்றை சேர்த்துக் கொண்டு அது நிலையத்தை விட்டு விலகி பின்னர் வளிண்டலத்தில் அழிக்கப்படும். யாரடி நீ மோகினி (திரைப்படம்) யாரடி நீ மோகினி 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும். மணிவண்ணன் மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர். மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். புடாபெஸ்ட் புடாபெஸ்ட் (அங்கேரிய மொழி: Budapest, ) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூப் ஆறு பாய்கிறது. தன்யூப் ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட் பாலம் புடாவையும் பெஸ்டையும் இணைக்கிறது. இந்நகர் ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும். அங்கேரிய மொழி அங்கேரிய மொழி ("magyar nyelv" ) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை. யூரலிய மொழிகள் யூரலிய மொழிகள் 39 மொழிகள் உள்ளிட கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பேசப்படும் மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மிகவும் பேசிய மொழிகள் எஸ்தோனிய மொழி, பின்னிய மொழி, மற்றும் அங்கேரிய மொழி ஆகும். மொழியியலாளர்களின் பெரும்பான்மை இக்குடும்பம் யூரல் மலைத்தொடர் அருகில் தொடங்கப்பட்டது என்று கூறியுள்ளன. இதனால் இக்குடும்பத்தின் பெயர் "யூரலிய மொழிகள்" ஆகும். வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இக்குடும்பத்தின் மொழிகள் பேசப்படும். பின்னிய மொழி பின்னிய மொழி (, அல்ல "சுவோமென் கியெலி") பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியைப் பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை. குடும்ப வன்முறை குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது. துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம். இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர். குடும்ப வன்முறை முன்னுரை குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை - 1) மாமியார் கொடுமைகள் 2) கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் 3) கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் 4) அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை 5) சுதந்திர உரிமை 6) பெண் சிசுக் கொலைகள் 7) வரதட்சணை கொடுமை 8) பெண் கருக்கொலைகள் 9) மனைவியை அடித்துத் துண்புறுத்தல் 10) விதவைகள் கொடுமைகள் 11) குழந்தை மனித உரிமை மீறல் 12) கொலைகள் புரிதல் 13) எரித்தல் ... போன்றவை குடும்ப வண்றை நடைபெறும் விதங்கள் குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள் 1) பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2) பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல் 3) பெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல் 4) வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல் 5) பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும். 6) பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை 7) குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. 8) முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம் 9) தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் - ஆகியன. Reference 1) Indian Constitution 2) ‘மனித உரிமைகள் கல்வி’ பியுலா ரெய்னிஸ்கி ஜெபா தினகரன் - ஸ்ரீ கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், சென்னை 2011 எசுத்தோனிய மொழி எசுத்தோனிய மொழி (""; ) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. பாலியல் வன்முறை பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி,மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே. தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின்படி, 1971 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 873.3 சதமானம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பரிசீலனை செய்து பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தான் பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வந்துள்ளன என்பது ஊர்ஜிதமாகிறது. 1971 மற்றும் 1991ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையே வருடத்திற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் இந்த காலக் கட்டத்தில் பதிவாகியுள்ளன என்று கூறலாம். ஆனால் 1992 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கிடையில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,54,664 ஆகும். அதாவது ஆண்டிற்கு 15,466.4 பலாத்காரங்கள் பதிவாகியுள்ளன எனலாம். அதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமலாகத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. சீர்திருத்தக் காலக்கட்டத்தின் சமீபத்திய பத்தாண்டுகளில் அதாவது 2002 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கிடையில் இந்த எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அள வில் அதிகரித்துள்ளது.இந்தக் காலக்கட்டத் தில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,98,139 ஆகும். அதாவது ஆண்டிற்கு 19,813.9 குற்றங்கள் சராசரியாகப் பதிவாகியுள்ளன. இதற்கு என்ன பொருள் என்றால், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மொத்தம் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 97.5 சதமான குற்றங்கள் 1991 மற்றும் 2011ம் ஆண்டுகளுக் கிடையில் நடைபெற்றுள்ளது என்பது தான். மேலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. 2009-2010ம் ஆண்டிற்கிடையில் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை என்பது 9.6 சதமானம் அதிகரித்துள்ளது. 2010-2011ம் ஆண்டிற்கிடையில் இந்த விகிதம் 9.2 சதமாக அதிகரித்துள்ளது.2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டன. 2013ல் அது 33707 ஆக உயர்ந்தது. மாநகரம் என்று பார்த்தால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாக உள்ளனர் . அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப்பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர். தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹவாய் மொழி ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, "ஃஓலெலொ ஹவாய்ஃஇ") ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும். என்.பி.ஏ. தேர்தல் என்.பி.ஏ. தேர்தல் (NBA Draft) ஆண்டுதோறும் என்.பி.ஏ.-இல் நடக்கும் நிகழ்வு ஆகும். என்.பி.ஏ.-இல் விளையாட எதிர்பார்க்கிற ஆட்டக்காரர்களை 30 என்.பி.ஏ. அணிகளும் தெரிந்து கொள்ளும். இந்த ஆட்டக்காரர்களின் பெரும்பான்மை அமெரிக்காவில் கல்லூரிக் கூடைப்பந்தாட்டம் விளையாடி என்.பி.ஏ.-ஐ சேரப்பார்க்கிறார்கள், ஆனால் வேறு நாடுகளிலிருந்தும் சில ஆட்டக்காரர்கள் இந்த நிகழ்வில் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள். 2005 வரை உயர்பள்ளியிலிருந்து நேரடியாக கல்லூரியுக்கு போகாமல் என்.பி.ஏ.-ஐ ஆட்டக்காரர்களால் சேரமுடிந்தது. லெப்ரான் ஜேம்ஸ், கோபி பிரயன்ட், மற்றும் பல்வேறு தலைசிறந்த என்.பி.ஏ. வீரர்கள் இப்படி என்.பி.ஏ.-ஐ சேர்ந்தனர். ஆனால் 2005இல் என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் என்.பி.ஏ. தேர்தலில் சேரப்பார்க்க 19 வயது இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். என்.பி.ஏ. தேர்தலில் இரண்டு சுற்றுகள் உள்ளன. ஒரு சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டக்காரரை தெரிந்து கொள்ளும். ஒரு சுற்றில் கடைசி 16 நிலைகளில் போன பருவத்தில் 16 பிளேயாஃப்ஸ் (Playoffs) சேர்ந்த அணிகள் தெரிந்து கொள்ளும்; இதில் மிகவும் போட்டிகளை வெற்றிபெற்ற அணிகள் கடைசியாக தெரிந்து கொள்ளும். முதல் 14 நிலைகளில் மிகவும் போட்டிகளில் தோற்றுப்போன அணிகள் தெரிந்து கொள்ளும். இந்த அணிகளின் வரிசை என்.பி.ஏ. தேர்தல் லாட்டரியால் தீர்மானப்பட்டது. ஒரு அணியால் தன் தெரிவிட நிலையை வேறு அணியுக்கு கொடுத்து அந்த அணியிலிருந்த வீரரை கூட்டல் செய்யமுடியும். இது போன்ற வியாபாரங்கள் பல என்.பி.ஏ. தேர்தல்களில் நடக்கும். பொதுவாக ஜூன் மாதத்தில் என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் முடிந்ததுக்கு பிறகு என்.பி.ஏ. தேர்தல் நடைபெறும். போரிஸ் பொடோல்ஸ்கி இயற்பியலாளரான போரிஸ் பொடோல்ஸ்கி 1896 ஆம் ஆண்டில், ரஷ்யாவில் உள்ள, தாகன்ராக் என்னும் இடத்தைச் சேர்ந்த யூதக் குடும்பமொன்றில் பிறந்தார். இவர், அல்பர்ட் ஐன்ஸ்டீன், நேதன் ரோசென் ஆகியோருடன் இணைந்து ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப் பரவலாக அறியப்படும் கருத்தை முன்வைத்தார். இது, குவாண்டம் விசையியலின் விளக்கம் தொடர்பான விவாதத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 1933 ஆம் ஆண்டில் பொடோல்ஸ்கியும், லெவ் லாண்டோ என்பாரும், சிறப்புச் சார்புக் கோட்பாட்டில் தொடங்கி, சோதனைசார்ந்த விதிகளையன்றிக் கோட்பாட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மின்காந்தவியல் தொடர்பான பாடநூல் ஒன்றை எழுத எண்ணினர். பொடோல்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து இடம்பெயர்ந்ததால் இந்த எண்ணம் கைகூடவில்லை. எனினும் அவர்கள் இதற்கெனத் தயாரித்த சுருக்க வரைவை அடிப்படையாகக் கொண்டு லெவ் தாவிதோவிச் ஈ. லிவ்சிட்ஸ் என்பவருடன் சேர்ந்து "புலங்கள் பற்றிய மரபுக் கோட்பாடு" (1951) என்னும் நூலை ஆக்கினர். பொடோல்ஸ்கி கே. குன்ஸ் என்பாருடன் இணைந்து "மின்னியக்கவியலின் அடிப்படைகள்" (1969) என்னும் நூலை வெளியிட்டார். நேதன் ரோசென் நேதன் ரோசென் என்பவர் ஒரு இஸ்ரேலிய இயற்பியலாளர் ஆவார். இவர் 22 மார்ச் 1909 ஆம் ஆண்டில் நியூ யார்க்கில் உள்ள புரூக்லின் என்னும் இடத்தைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் மசச்சூசெட்ஸ் தொழிநுட்பக் கழகத்தில் கல்வி பயின்றார். 1935 ஆம் ஆண்டில் நியூ ஜேர்சியின் பிரின்ஸ்டனில் அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உதவியாளராகச் சேர்ந்தார். 1945 ஆம் ஆண்டுவரை அவர் அப் பணியிலேயே தொடர்ந்தார். அதன் பின்னர் இஸ்ரேலில் இயற்பியல் தொழிலைத் தொடருமாறு ஐன்ஸ்டீன் அவருக்கு ஊக்கமளித்தார். குவாண்டம் விசையியலில், ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப்படுவது பற்றி 1935 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட "இயற்பியல் உண்மை பற்றிய குவாண்டம் விசையியல் விளக்கத்தை முழுமையானதாகக் கருதலாமா?" என்னும் தலைப்பிட்ட ஆய்வுக் கட்டுரையை, ஐன்ஸ்ட்டீன், பொடோல்ஸ்கி ஆகியோருடன் சேர்ந்து எழுதினார். ஆட்சித் தமிழ் அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித் தமிழ் எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக இலக்கியத் தமிழ் உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. அறிவியல் தமிழ் தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது. "மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன." தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956 என்பதுதான் தமிழ் மொழி குறித்த முதல் சட்டமாகும். இதில் நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.1976ல் தமிழ்நாட்டு சார்நிலை மற்றும் கீழமை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீழமை சார்பு நீதிமன்றங்களில் ஒரு மாநில அரசு அதன் விருப்பப்படி மொழியை ஆட்சிமொழியாக்கி கொள்ளலாம் என்பதற்கு சட்டம் இடம் தந்திருந்தது. 1908 உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 137 இதற்கு வகை செய்தது. இதைப்போல 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 272 அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்க சட்டம் வகை தந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 345ன் படியும் கீழமை சார்பு நீதி மன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு முதல் அடி எடுத்து வைத்தது. 1976ம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழிசட்டத்தில் 4அ, 4ஆ ஆகிய இரு பிரிவுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.பிரிவு 4அ, 4ஆ படி சார்நிலை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் எல்லா நடவடிக்கைகளின் சான்றுகளை பதிவு செய்ய தமிழ்மொழி அனுமதிக்கப்பட்டது. பிரிவு 4ஆ படி நீதிமன்றங்களில் தீர்ப்புகளை எழுத தமிழ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக 1976ல் தான் தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக நுழைந்தது. இதன் அடுத்த படியில் 17.11.1976ல் சட்டத்துறை அரசாணை எண் 191 பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சார்நிலை குற்றவியல் நீதிமன்றங்களில் மட்டும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழுக்கு அனுமதி கிடைத்தது. இராமநாதபுரம் மாவட்ட முன்சீப் இந்த வழக்கில் தீர்ப்பை தமிழில் வழங்கினார். இவ்வழக்கில் தோற்ற பிரதிவாதிகள் தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அத்தீர்ப்பு செல்லாது எனக்கூறி இராமநாதபுரம் மாவட்ட சார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அவர் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஒதுக்கி விட்டு அத்தீர்ப்பினை ஆங்கிலத்தில் வழங்கவேண்டும் என்று பணித்தார். இத்தீர்ப்பினை எதிர்த்து வாதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வழக் கில் மாவட்ட முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும் சட்டத்தின் அடிப்படையில் பார்க் கும் போது இராமநாதபுர மாவட்ட முன்சீப் 1969களின் அரசியல் சூழலால் உந்தப்பட்டு இத்தீர்ப்பினை வழங்கி உள்ளார் என்றும் இந்தத் தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்றும் இத் தீர்ப்பு காகித குப்பைக்கு சமமானது என்றும் கூறி மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சார்நிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 18-1-1982ல்தான் அரசாணை வெளிவந்தது. இதன்படி சார்நிலை உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகுதான் கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் கூட தமிழ் தெரிந்த சில நீதிபதிகளே ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களிலும் 1892ல் தமிழ் ஆட்சி மொழியானது. எனினும் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுத விலக்களிப்பு ஆணைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கே.ஏ.சாமி காலத்தில் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அலுவலக மொழிச்சட்டத்திற்கு முரணான இந்த சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது. இவை ஒருபுறம் இருக்க உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாதல் குறித்து சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. எந்த ஒரு மாநிலமும் தன் மாநிலத்தின் தாய்மொழியை நீதிமன்ற மொழியாக பயன் படுத்த இந்திய அரசியல் சட்டம் வகை செய்கிறது. ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழி பொதுவாக ஆங்கிலம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. அரசியல் சட்டம் பிரிவு 348 இதுபற்றி மொழிகிறது. உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து இருவகையான பிரி வுகள் உள்ளன. நாடாளுமன்றம் உரிய சட்ட ஏற்பாடு செய்யும் வரை உயர்நீதிமன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று பிரிவு 348 கூறுகிறது. இதற்கு விலக்கும் தரப்படுகிறது. ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரின் முன் அனுமதி பெற்று அந்த மாநில உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிற மொழி எதையும் பயன்படுத்தலாம். இதன்படி ஒரு மாநிலம் அந்த மாநில மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.இதன்படியே மத்திய பிரதேச அரசுத்தீர்மானம் நிறைவேற்றி மத்திய பிரதேச . மாநில உயர்நீதிமன்றத்தில் இந்தி ஆட்சி மொழியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியான இந்திதான் நீதிமன்ற மொழி என்பதற்கு ஒன்றிய அரசு இசைவு தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 348(2) தமிழ்மொழிக்கும் பொருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் இருக்க முடியும். வழக்குரைஞர்களின் தமிழ் மன்றம் 2001ல் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் பி.சுபாஷன் ரெட்டி, கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. . உயர்நீதிமன்ற மொழி குறித்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட் டும்தான் உண்டு. அவர்தான் ஆணை பிறப் பிக்கவேண்டுமே தவிர நீதிமன்றத்தில் வாதாடி பயன் இல்லை என்று நீதி பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது. 6-12-2006ல் தமிழக சட்டமன்றம் ஒருதீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் தமிழில்அனைத்து நிர்வாகநடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கொள்கை அடிப் படையில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு-348(2) உடன் இணைந்து 1963 ஆட்சி மொழிச்சட்டப்பிரிவு (7)ன்படி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புஅனைத்தையும் தமிழில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது. இதற்கு குடியரசுத்தலைவரின் அனுமதி தேவை. ஒன்றிய அரசு மூலம் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். இந்தத் தீர்மானம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பப்பட்டது. அவரும் இதுகுறித்து உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மத்தியஅரசின் சட்டம் மற்றும்நிதி அமைச்சகம் தமிழக அரசுக்கு27-2-2007ல் ஒரு கடிதம் அனுப்பியது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து கலந்துபரிசீலிக்கப்பட்டது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை மற்றும் இதர நடவடிக்கைகளில் மாநில மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று தலைமை நீதிபதி கருதுவதாக கூறப்பட்டது. 2010 ஜூனில் நடைபெற்ற கோவைச்செம்மொழி மாநாட்டில் நீதிமன்ற மொழி குறித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு தமிழில் வாதாட ஒரு வழக் குரைஞர் அனுமதி கோரினார்.நீதிபதிஅனுமதி மறுத்துவிட்டார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு துறை அரசுப் பணியாளர்களுக்கு அரசுப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கும், தமிழில் கோப்புகளை எழுதுவதற்கும் பயிற்சியளிக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் எனும் தலைப்பில் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இப்பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 9.30 இலட்சம் செலவிடுகிறது.இவை தவிர ஆட்சிமொழிக் கருத்தரங்கத்திற்கும் 6.40 இலட்சம் ரூபாய் செலவு செய்கிறது. வூ-டாங் கிளான் வூ-டாங் கிளான் ("Wu-Tang Clan") நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவந்த புகழ்பெற்ற ராப் இசைக் குழு ஆகும். இக்குழுவின் தோற்றம் முதல் 2004இல் ஓல் டர்ட்டி பாஸ்டர்டுடைய மரணம் வரை 9 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவின் செல்வாக்க பல ராப் இசைக் கலைஞர்களுடைய இசையில் கேட்கமுடியும். 1992-1993இல் சகோதரர்கள் ரிசா, ஜிசா, மற்றும் ஓல் டர்ட்டி பாஸ்டர்ட் வூ-டாங் கிளானை தொடங்கினர். இவர்கள் ஷாவ்லின் & வூ-டாங் என்ற சீனக் குங்ஃபு திரைப்படத்தின் பெயரை இக்குழுவுக்கு பெயர்வைத்தனர். 1992இல் இவர்களின் முதலாம் பாடல் "Protect Your Neck" வெளிவந்தது. அடுத்த ஆண்டில் இவர்களின் முதலாம் ஆல்பம் வெளிவந்து இக்குழு ராப் உலகத்தில் புகழுக்கு வந்தது. இக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் நிறைய தனி ஆல்பம்களை படைத்தனர். ரிசா, ஜிசா மற்றும் கோஸ்ட்ஃபேஸ் கிலா அவர்கள் இக்குழுவிலேயே மிக கைகூடிவந்தனர். இக்குழுவின் உறுப்பினர்கள் திரைப்பட நடிகர், திரைப்பட இசையமைப்பாளர், வணிக நிறுவன அதிபர் போன்ற நிலைகளில் பணி புரிந்தனர். மார்கன் ஃபிரீமன் மார்கன் ஃபிரீமன் (அல்லது மார்கன் பிரீமேன்) (Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன், செவன், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார். "நடித்துள்ள திரைப்படங்களில் சில:" பிராகா பிராகா ("Prague", பிராக், செக் மொழி: Praha, பிராஹா), செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். இந்நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளது. அறிவியல் களஞ்சியம் அறிவியற் கலைக்களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியமாகும். பத்தொன்பது தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இதில் 10 000 விரிவான கட்டுரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. அறிவியல் களஞ்சியம் தொகுக்கும் பணி மார்ச் 1983 ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. முதன்மைப் பதிப்பாசிரியராக பி. எல். சாமி இரண்டரை ஆண்டுகள் 1987 நடுப்பகுதி வரை செயற்பட்டார். இரண்டாவது முதன்மைப் பதிப்பாசிரியராக கி. கண்ணபிரான் அவர்கள் ஓராண்டு செயல்பட்டார். மூன்றாம் பதிப்பாசிரியராக உலோ. செந்தமிழ்க்கோதை அவர்கள் 1988 ஜூன் முதல் செயல்பட்டார். நான்காம் பதிப்பாசிரியராக கு. கூ. அருணாச்சலம் அவர்கள் செயல்பட்டார். ஐந்தாம் முதன்மைப் பதிப்பாசிரியராக ந. கோவிந்தசாமி அவர்கள் செயல்பட்டார். இறுதித் தொகுதிகளில் (17,18,19) இராம. சுந்தரம் அவர்கள் செயல்பட்டார். தொடக்கத்தில் இக்களஞ்சியத் திட்டத்தை உருவாக்கி ஒப்புதல் பெற்றவரும் இவரே என்பது குறிப்பிட தக்கது. அறிவியல் களஞ்சியத்தில் பின்வரும் துறைகளை உள்ளடக்கத் திட்டமிட்டு நடைமுரைப்படுத்தப்பட்டது. வாழ்வியற் களஞ்சியம் வாழ்வியற் களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வாழ்வியல் தொடர்பான துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சிம் ஆகும். இது பதினைந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இதில் 15 000 விரிவான கட்டுரைகள் உள்ளன. வாழ்வியற் களஞ்சியம் வெளியிடும் பணி சென்னையில் 1983 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் அ. வெ. சுப்பிரமணியம் ஆவார்.இரண்டாம் முதன்மைப் பதிப்பாசிரியராக நா. பாலுசாமி அவர்கள் செயல்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் பதிப்புப் பணி முடிவுற்றது. மூன்றாம் முதன்மைப் பதிப்பாசிரியராக அ. மா. பரிமணம் அவர்கள் செயல்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் முழுப்பணியும் முடிவுற்றது. பயன்பாட்டு மானிடவியல் பயன்பாட்டு மானிடவியல் என்பது, மானிடவியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தும் மானிடவியலின் ஒரு துறை ஆகும். மானிடவியலில், உடல்சார் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், மொழியியல் மானிடவியல், தொல்லியல் மானிடவியல் எனும் நான்கு உட்பிரிவுகள் உண்டு. எனவே இவற்றுள் எதனை நடைமுறையில் பன்படுத்தினாலும் அது பயன்பாட்டு மானிடவியலைச் சாரும். சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு மேற் சொன்ன எல்லாத் துறைகளையுமே பயன்படுத்த வேண்டியிருக்கும். "தாயக அமெரிக்கர் சமூக வளர்ச்சித் திட்டம்" இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில், தாயக அமெரிக்கருடைய நீர் உரிமைக் கோரிக்கைகளை உறுதிசெய்வதற்குத் தொல்லியல் ஆய்வு பயன்படுகிறது. அவர்களுடைய தற்கால அல்லது அண்மைக்கால வரலாற்று, பண்பாட்டு இயல்புகளை அறிவதற்கு இனவரைவியல் பயன்படும். மொழியியல் அவர்களின் மரபுவழி மொழிப் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்த உதவும். உடல்சார் மானிடவியல், உணவுக் குறைபாடு, நோய்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதில் பயன்படுத்தப்படலாம். டெரிக் ரோஸ் டெரிக் மார்ட்டெல் ரோஸ் (Derrick Martell Rose, பிறப்பு அக்டோபர் 4, 1988) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு ஆண்டு மெம்ஃபிஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் சிகாகோ புல்ஸ் அணி இவரை முதல் நிலையில் தெரிந்துகொண்டன. ரோஸ் கூடைப்பந்தாட்டத்தில் பந்துகையாளி பின்காவல் நிலையில் விளையாடுகிறார். மைக்கல் பீஸ்லி மைக்கல் பீஸ்லி (Michael Beasley, பிறப்பு ஜனவரி 9, 1989) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். ஒரு ஆண்டு கேன்சஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் மயாமி ஹீட் அணி இவரை இரண்டாம் நிலையில் தெரிந்துகொண்டன. பீஸ்லி கூடைப்பந்தாட்டத்தில் சிறு முன்நிலை யிலும் வலிய முன்நிலையிலும் விளையாடுகிறார். கேன்சஸ் மாநிலப் பல்கலைக்கழகம் கேன்சஸ் மாநிலப் பல்கலைக்கழகம் (Kansas State University) அமெரிக்காவில் கேன்சஸ் மாநிலத்தின் மன்ஹாட்டன் நகரில் அமைந்த அரசு சார்பு பல்கலைகக்ழகம் ஆகும். கம்பாலா கம்பாலா (Kampala) உகாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2002 கணக்கெடுப்பின் படி 1,208,544 வசிக்கிறார்கள். தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து பயணிகளின் தேவைகளை கோரிக்கைகளை நிகழ்நேரத்தில் அறிந்து அதற்கேற்ப போக்குவரத்து வளங்களைப் பங்கீடு செய்யும் போக்குவரத்துச் சேவையைக் குறிக்கின்றது. இது ஆங்கிலத்தில் Demand responsive transport or demand responsive transit (DRT) என வழங்கப்படும் உயர் தொழில்நுட்பப் போக்குவரத்துச் சேவை ஏற்பாட்டைக் குறிக்கிறது. இது எதிர்காலத்தில் நிறைவேற்றப்படக்கூடிய ஒரு தொழில்நுட்ப ஏற்பாடே. இரட்டை மரபுரிமைக் கோட்பாடு இரட்டை மரபுரிமைக் கோட்பாடு என்பது 1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் தொடக்கப் பகுதியிலும் வளர்ச்சிபெற்ற மானிடவியல் சார்ந்த ஒரு கோட்பாடு ஆகும். இது எவ்வாறு மனித நடத்தைகள், தம்முள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள, மரபணுவியல் படிமலர்ச்சி, பண்பாட்டுப் படிமலர்ச்சி ஆகிய படிமலர்ச்சி (கூர்ப்பு) வழிமுறைகளின் விளைவாக இருகிறது என்பதை விளக்க முயல்கிறது. பெரும்பாலான சமூக அறிவியல் துறைகள் பண்பாடே மனித நடத்தைகளின் வேறுபாடுகளுக்கான முதன்மைக் காரணம் என்கின்றன. அதே வேளை, சமூக உயிரியல், படிமலர்ச்சி உளவியல் ஆகிய துறைகள், பண்பாட்டை மரபணுவியல் தேர்வு முறையின் முக்கியமற்ற ஒரு பக்கவிளைவாகக் கருதுகின்றன. இரட்டை மரபுரிமைக் கோட்பாடு, இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலான ஒரு கருத்தைக் கொண்டுள்ளது. இக் கோட்பாட்டின்படி, சமூகவழிக் கல்வி மூலம் மூளையில் பொதியப்பட்டுள்ள தகவல்களே பண்பாடு என வரையறுக்கப்படுகின்றது. டார்வினியத் தேர்வு முறை பண்பாட்டுத் தகவல்களின் மீது ஏற்படுத்தும் தாக்கமே பண்பாட்டுப் படிமலர்ச்சி என்பது இக் கோட்பாட்டாளரின் கருத்து. ஹோமோ சாப்பியன்களின் படிமலர்ச்சியில், மரபணுவியல் படிமலர்ச்சியும், பண்பாட்டுப் படிமலர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று ஊடுதொடர்பு கொண்டுள்ளன என்னும் நிலையை இரட்டை மரபுரிமைக் கோட்பாடு கொண்டுள்ளது. மனித நடத்தையின் படிமலர்ச்சியில் மரபணுவியல் வழித் தேர்வு ஒரு முக்கியமான கூறு என்பதையும், மரபணுவியற் காரணிகள் பண்பாட்டு இயல்புகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் இக் கோட்பாடு ஏற்றுக்கொள்கிறது. அதே வேளை, இம் மரபணுவியல் படிமலர்ச்சி ஒரு இணைப் படிமலர்ச்சி வழிமுறையாகப் பண்பாட்டுப் படிமலர்ச்சியை மனித இனத்துக்கு வழங்கியுள்ளது என்பதையும் அது ஏற்கிறது. இரட்டை மரபுரிமைக் கோட்பாடு மூன்று முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறது: சூழலியல் மானிடவியல் சூழலியல் மானிடவியல் என்பது, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான, காலம் மற்றும் இடம் சார்ந்த தொடர்புகள் பற்றி ஆராயும் ஒரு மானிடவியல் துறையாகும். இது சூழலை மனித இனம் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வு செய்கிறது. சூழலியல் மானிடவியல், பண்பாட்டுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதற்கு அமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. மனிதனும் சூழலும் ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தன்மையிலிருந்தும், இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான ஒன்றிலிருந்து மற்றது பயன்பெறும் தன்மையிலிருந்தும் பெறப்பட்டவைகளே இன்றைய சூழலியல் மானிடவியலின் மையக் கருத்துக்கள் ஆகும். சூழலியல் மானிடவியல் ஜூலியன் ஸ்டெவார்டு என்பவரை முன்னோடியாகக் கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட பண்பாட்டுச் சூழலியல் என்னும் மானிடவியலின் துணைத்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து 1960 களில் தோற்றம்பெற்றது. தொடக்கத்திலிருந்தே இது, நிலையியல் சமநிலை மீது அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துவதாகவும், மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், முறைமைகளை அளவுமீறி எளிமைப்படுத்துவதாகவும் பல அறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்டது. இது பண்பாட்டுச் சார்பியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் தங்கியிருப்பது தற்காலத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உண்மையான பண்பாட்டுச் சார்பு மக்களினத்தைக் காண்பது அரிது. பண்பாடுகள், ஊடகங்கள், அரசுகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள், வணிகம் போன்றவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டு மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், சூழலியல் மானிடவியல் துறையும் பயன்பாட்டுச் சூழலியல் மானிடவியல், அரசியல் சூழலியல், சூழல்சார் மானிடவியல் ஆகியவை பக்கம் சாய்ந்து வருகிறது. பண்பாட்டுச் சூழலியல் பண்பாட்டுச் சூழலியல் (Cultural ecology) என்பது, குறிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கும், அதன் வாழ்வுக்கு அடிப்படையான உயிர்வகைகள், சூழ்நிலைமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது எடுத்துக்கொண்ட சமூகத்தைப் பல்வேறு காலகட்டங்களுக்கு ஊடாகக் கருதியோ அல்லது தற்காலத்து நிலையையும் அதன் கூறுகளையும் எடுத்தோ ஆய்வு செய்யலாம். சிறிய அளவிலான அல்லது கீழ்மட்ட பிழைப்புநிலைச் சமூகங்களில் இயற்கைச் சூழல், அச் சமூகங்களின் சமூக அமைப்பு, மனித நிறுவனங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்களிப்புச் செலுத்துகின்றது. பண்பாட்டுச் சார்பியம் பண்பாட்டுச் சார்பியம் (Cultural relativism) என்பது, தனி மனிதனுடைய நம்பிக்கைகள், நடவடிக்கைகள் என்பவற்றை அவனுடைய சொந்தப் பண்பாட்டின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும் எனக் கூறும் ஒரு கொள்கை ஆகும். இக் கொள்கை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் பிரான்ஸ் போவாஸ் என்பவரின் ஆய்வுகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது மாணவர்களால் பின்னர் பிரபலமாக்கப்பட்டது. பண்பாடுச் சார்பியம் குறிப்பிட்ட அறிவாய்வியல் (epistemological) மற்றும் ஆய்வுமுறை அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இத் தத்துவத்தை நன்னெறிச் சார்பியத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. அறிவாய்வியல் அறிவாய்வியல், அறிவுத்தோற்றவியல் அல்லது அறிதலியல் ("Epistemology", (; என்பது அறிவை ஆய்வு செய்யும் துறை; இது மெய்யியலின் ஒரு கிளைப்பிரிவு ஆகும். அறிவாய்வியலில், அறிவின் தன்மை, அதை நிறுவும் முறைகள், நம்பிக்கையைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியன ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்: அறிவாய்வியலில் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன: "Epistemology" எனும் சொல் முதலில் 1854 இல் இசுகாட்டிய மெய்யியலாளராகிய ஜேம்சு பிரெடெரிக் பெரியர் பயன்படுத்தினார்.. என்றாலும், பிரெட் வாரன், இசுகாட்லாந்தின் ஆறாம் யேம்சு ஆகியோர் இந்த மெய்யியல் கருத்துப்படிமத்தை ( Epistemon) எனும் பாத்திரம் வழியாக கி.பி. 1591-இலேயே கையாண்டுள்ளனர். ஐயுறுவாதத்தினால் வரும் சிக்கல்கள் (The Problem of Skepticism) பல. ஐயுறுவாதம் என்பது எந்த ஒரு கருத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், அனைத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது. அதாவது, அறிவு என்று சொல்வதை எப்படி நம்புவது? ஒன்றை நம்புவதாலேயே அது உண்மை என்றோ பொய் என்றோ ஆகாது. நாம் காண்பவை அனைத்தும் பொய்யாக இருக்கலாம். இந்த உலகத்தின் "உண்மை"யான தோற்றம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம். சரியான, ஆழ்ந்த அறிவு அல்லது மேலோட்டமான அறிவு என்பது ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது. எனவே, நாம் உண்மை என முடிவு செய்வதெல்லாம் நம் புலன்கள் நமக்கு உணர்த்துவதை வைத்துத்தான் செய்கிறோம். ஐயுறுவாதத்திற்கு விடை அளிக்க, ஒரு சிலர் "அடிப்படைக் கருத்துக்கள் வாதம்" (Foundationalism) என்ற  கருத்தை முன் வைக்கின்றனர். இதன்படி, ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை எனக் கருத முடியும். ஐயுறவாதம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனெனில், ஆதாரம் இல்லாமல் உண்மை என்பது ஒரு வகையான அறியாமையே. இது, சருக்கலான சரிவு (slippery slope) போன்றதாகும். எது எப்படி இருப்பினும், நடைமுறையில், ஐயுறுவாதம் ஒரு அளவுக்கு மேல் கொண்டு செல்லப்படுவதில்லை. அண்மையில், இந்த வாதத்தில் கீழ்க் கண்ட ஒரு சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, புனைவியம் (Fictionalism) என்ற வாதத்தில், ஒரு கருத்து முழு உண்மை என்று கூறுவதற்குப் பதிலாக, அந்தக் கருத்தினால் வரும் பயன், கலைநயம் ஆகியனவற்றைக் கருதி, அக் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது போலவே, உள்ளொளிவாதம் (Fideism) என்பதில், நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை; ஆயினும், நம்பிக்கையைப் பயன் படுத்தி, உண்மையைச் சென்று அடைய முடியும் என்ற கருத்து முன் வைக்கப் படுகின்றது. ஐயுறுவாதத்தில், இரண்டு பிரிவுகள் இருக்கின்றன: குறைபடுத்தப் பட்டது (mitigated), குறைபடுத்தப் படாதது (unmitigated). குறைபடுத்தப் பட்ட ஐயுறுவாதத்தில், முழு உண்மை, "வலிமையுள்ள" உண்மை, கண்டிப்பான உண்மை என்பன போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அதற்கு மாறாக, ஒரு கருத்து "வலுவற்ற உண்மை"யாக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறது. "வலுவற்ற உண்மை" என்று சொல்லப்படுவதும் கூட ஆதாரத்தோடு முன் வைக்கப் படும் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் அறிவு, "மெய்நிகர் அறிவு" (virtual knowledge) எனப்படும். குறைபடுத்தப் படாத ஐயுறுவாதத்தில், "மெய்நிகர் அறிவு", "வலிமையுள்ள" அல்லது "வலிமை அற்ற" அறிவு போன்ற கருத்துக்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மாறாக, இது போன்ற பாகுபாடுகள் ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது என்ற கருத்து வலியுறுத்தப் படுகின்றது. "அறிவாய்வியல்" என்ற சொல்லின் தோற்றம் (etymology) நீண்ட வரலாறு கொண்டது. அறிவாய்வியல் எனப் பொருள்படும் "epistemology" எனும் சொல் பண்டைய கிரேக்கச் சொல்லாகிய "epistēmē" எனும் சொல்லில் இருந்து கொணரப்பட்டதாகும். இச்சொல்லின் பொருள் "அறிவு" என்பதாகும். பின்னொட்டான "-logy" என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகிய "logos" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் "உரையாடல்" என்பதாகும். ஜேம்சு பிரெடெரிக் பெரியர் (James Frederick Ferrier) "epistemology" எனும் சொல்லை 'உள்ளியம்' (Ontology) எனும் சொல்லின் வடிவத்தில் உருவாக்கி, அறிவின் பொருண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்குடைய மெய்யியலின் ஆய்வுக்குப் பெயர்சூட்டினார். இவர் இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்தையே மெய்யியலின் உண்மையான தொடக்கமாகவும் அறிவித்தார். இந்தச் சொல், "Wissenschaftslehre" எனும் செருமானியக் கருத்துப்படிமத்துக்கு இணையானதாகும்; இச்சொல்லை செருமானிய மெய்யியலாலர்களாகிய யோகான் பிட்சேவும் பெர்னார்டு போல்சானாவும் வெவ்வேறு திட்டங்களில் எட்மண்டு குசரலுக்கு முன்பே பயன்படுத்தினர். பின்னர் பிரான்சு மெய்யியலாளர்கள் "épistémologie" எனும் சொல்லுக்கு "[théorie de la connaissance]" என, அதாவது, "அறிவுக் கோட்பாடு" எனும் குறுகிய பொருளைத் தந்தனர். எடுத்துகாட்டாக, எமிலி மேயர்சன் (Émile Meyerson) 1908-இல் எழுதிய "Identity and Reality" எனும் நூலில், "இச்சொல் இப்போது அறிவியியல் ஆய்வில், மெய்யியல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுகிறது," என்ற குறிப்புரையுடன் வெளியிட்டார். "அறிவு (knowledge) என்பது என்ன?" என்னும் கேள்வி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கணிதத்தில், "2 + 2 = 4" என்பது அறிவு. "இரண்டு எண்களை எப்படிக் கூட்டுவது," என்பதும் அறிவு. அது போல, ஒருவரை அறிவது , ஓர் "இடத்தை அறிவது", ஒரு "பொருளை அறிவது" அல்லது ஒரு "செயலை அறிவது" அனைத்தும் அறிவே. ஒரு சில மெய்யியலாலர்கள், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு, ஒரு செயலைப் பற்றிய அறிவு, பட்டறிவு (knowledge through experience) ஆகிய மூன்றும் வெவ்வேறானவை என்றும், அறிவாய்வியல் என்பது கருத்தைப் பற்றிய அறிவை மட்டுமே ஆய்வு செய்வது என்றும் கருதுகின்றனர். இந்த பாகுபாடுகள் ஆங்கிலத்தில் வெளிப்படையாக அமையவில்லை எனினும் பிற மொழிகளில் இவை வெளிப்படையாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, போர்த்துகேயம், எசுபானியம், செருமன், டச்சு ஆகிய மொழிகளில் "ஒருவரை அறிவது அல்லது ஒன்றை அறிவது" என்பது முறையே "connaître", "conhecer", "conocer", "kennen" ஆகிய சொற்களாலும், "ஒன்றை எப்படி செய்வது" என்பது "savoir", "saber" and "weten" ஆகிய சொற்களாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. புது கிரேக்க மொழியில் இவற்றுக்கு "γνωρίζω" (gnorízo) , "ξέρω" (kséro) என்பன முறையே பயன்படுகின்றன. இத்தாலிய மொழியில் இவற்றுக்கு முறையே "conoscere", "sapere" ஆகிய வினைகளும் "conoscenza" "sapienza" ஆகிய பெயர்ச்சொற்களும் பயன்படுகின்றன. செருமனி மொழியில் இவற்றுக்கு முறையே "wissen", "kennen" ஆகிய வினைகளும் பயன்படுகின்றன. "Wissen" என்பது ஓர் உண்மையை அறிவதையும் "kennen" என்பது அடைதல் அல்லது செய்ய அறிதல் எனும் பொருளையும் குறிக்கின்றன; "kennen," என்பதில் இருந்து "Erkennen," எனும் பெயர் உருவாகிறது. இது நினைவுபடுத்தல் அல்லது பெற்றதை அறிவித்தல் வடிவத்தில் அமையும் அறிவைக் குறிக்கிறது. இச் சொல்லின் வினை, ஒரு செயலை அல்லது நிகழ்வை, அதாவது, ஒருநிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதலைக் குறிக்கிறது; இது "erkennen" அற்ற நிலையில் இருந்து உண்மையான "erkennen" நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறது. இந்த வினை, இன்றைய ஐரோப்பிய மொழிகளில் அறிதல் அலகான "episteme" எனும் சொல்லைக் குறிக்க மிகப் பொருத்தமான சொல்லாகும். எனவே, அறிவாய்வியல் செருமனி மொழியில் "" எனும் சொல்வழி அழைக்கப்படுகிறது. இந்த மொழியியல் சிக்கல்களின் விளக்கமும் தகவும் இன்னமும் தீர்வு எட்டப்படாத விவாதத்திலேயே உள்ளன. பெர்ட்ரேண்டு இரசல் "சுட்டிக் குறித்தல் (On Denoting)" எனும் தன் ஆய்வுக் கட்டுரையிலும் "மெய்யியலின் சிக்கல்கள் (Problems of Philosophy)" என்ற பிந்தைய நூலிலும் விளக்க அறிவுக்கும் (knowledge by description) பட்டறிவுக்கும் (knowledge by acquaintance) இடையிலான பாகுபாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளார். கில்பெர்ட் இரைல் (Gilbert Ryle) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞரும் (கி.பி 1900 - கி.பி 1976) " மனம் எனும் கருத்துப்படிமம் (The Concept of Mind) " என்ற தனது நூலில், கருத்து அறிவுக்கும் செயல் அறிவுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்கேல் பொலானியும் "சொந்த அறிவு (Personal Knowledge)" எனும் தன் நூலில், ஏட்டறிவுக்கும் நடை முறை அறிவுக்கும் உள்ள தொடர்பை மிதிவண்டியினை சமனிலையில் ஓட்டுதல் எனும் எடுத்துகாட்டுவழி விளக்குகிறார். அதாவது, மிதிவண்டியைச் சமனிலையில் ஒட்டுவதற்கான இயற்பியல் (Physics) அறிவு என்பது அதை நடைமுறையில் ஓட்டிப் பழகிப் பெறும் அறிவுக்கு ஈடாகாது எனவும் இரண்டும் எப்படி தனிவகை அறிவாக நிறுவப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வாதிடுகிறார், இந்த நிலைப்பாடு கில்பெர்ட் இரைலினுடையதே (Gilbert Ryle) எனலாம். இரைல் இந்த இருவகை அறிவையும், அதாவது, தகவல் அறிவையும் செயல் அறிவையும் புரிந்துகொள்ள மறுத்தல், முடிவில்லாத பின்னோக்கு வாதப் பிரச்சினையில் (infinite regress) கொண்டு சேர்க்கும் என எச்சரிக்கிறார். அண்மையில், எர்னெசுட்டு சோசா, மெய்யியலளர் ஜான் கிரேக்கோ, ஜொனாதன் கிவான்விகு, இலிண்டா திரிக்கவுசு சாகுசெவ்சுகி, டங்கன் பிரிச்சார்டு ஆகியோர் அறிவாய்வியல் என்பது மக்களின் இயல்புகளை ( அதாவது, அறிதிறன் விழுமியங்களை) மதிப்பீடு செய்யவேண்டுமே ஒழிய, அவர்களது கூற்றுகளையோ அக்கூற்றுவழி உளப்பான்மைகளையோ அல்ல என வாதிடுகின்றனர். நாம் சில கருத்துக்களை முழு உண்மை (absolute truth) என்று நம்புகிறோம்; மற்றும் ஒரு சிலவற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டுவிடுகிறோம். அறிவாய்வியலில், இவை எல்லாம் நம்பிக்கைகள் (beliefs) என்று அழைக்கப் படுகின்றன. உண்மை (Truth) என்பது மெய்யான கருத்து அல்லது மெய்யான நடை முறையைக் குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது. ஆராய்ச்சியாளர்கள் உண்மையைப் பற்றி பல்வகை கோட்பாடுகளும், பார்வைகளும் முன் வைத்து உள்ளனர். ஒருவர் ஒன்றை நம்ப அது உண்மையா, இல்லையா என்பது முன் தேவையாக (prerequisite) இருப்பதில்லை. மாறாக, ஒன்றைப் பற்றி உண்மையான அறிவு இருந்திருந்தால், அந்த அறிவு பொய்யாக இருக்க முடியாது. எடுத்துகாட்டாக, தன்னைத் தாங்குமளவுக்கு ஒரு பாலம் பாதுகாப்பனதே என நம்பினால், அவர் அதைத் தாண்ட முயன்று அவரது எடையால் பாலம் உடைந்து விழுந்தால், அப்போது அவர் "பாலம் பாதுகாப்பனது என நம்பினார்" எனக் கூறலாம். ஆனால், அவரது நம்பிக்கை தவறாகப் போய்விட்டது. எனவே, பாலம் பாதுகாப்பானது என அறிந்திருந்தார் எனக் கூறுவது சரியாகாது; ஏனெனில் அக்கூற்று இயல்பாகவே சரியன்று. இதற்கு மாறாக, பாலம் அவரது எடையைத் தாங்கினால், மேலும் அவர் அதைத் தாண்டி அதை நிறுவினால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பானதென "அறிந்திருந்தார்" என்பது சரி. "நம்பிக்கை" என்பது உண்மையைத் தாங்கி நிற்கும் ஒரு "உண்மைத் தாங்கி"(truth-bearer) என எடுத்துக் கொள்ளலாமா என வாதிட்டு வருகின்றனர். சிலர் அறிவை நிறுவப்பட்ட உண்மைக் கூற்றுகளின் அமைப்பு என்று கூற, மற்றவர்களோ சொற் றொடர்களின் நிறுவப்பட்ட உண்மை அமைப்பு என்கின்றனர். பிளேட்டோ தனது ஜார்ஜியாசு (Gorgias) உரையாடலில், நம்பிக்கை என்பது மிகப் பொதுவாக ஏற்கும் உண்மைதங்கியாகும் என வாதிடுகிறார். ஒரு கருத்தை அறிவாக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின், அந்தக் கருத்து உண்மையானது என்பதற்கு ஆதாரம் (Justification) வேண்டும். சாக்கிரட்டீசு (Socrates, கி.மு 470/469 – கி.மு 399) தனது தியேடெட்டசு (Theaetetus) என்ற உரையாடலில், அறிவு என்றால் என்ன என்பது பற்றிய பல கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறார். அதில் அவர் கூறுவது, "அறிவு என்பது விளக்கம் அமைந்த உண்மையான நம்பிக்கை" என்பதாகும். இங்கு விளக்கம் என்பதன் பொருள் ஏதோ ஒரு வழியில் அறிவு விளக்கவோ வரையறுக்கவோ பட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும். அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையைப் பற்றிய நம்பிக்கை என்ற கோட்பாட்டின்படி, தரப்பட்ட கூற்று உண்மையென அறிய, ஒருவர் பொருத்தமான உண்மைக் கூற்றை நம்பினால் மட்டும் போதாது, அவர் அதை நம்புவதற்கான தகுந்த அறிவார்ந்த விளக்கத்தையும் தரவேண்டும். இதன் உட்பொருள், ஒருவர் உண்மையாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றை நம்பினால் மட்டும் அது பற்றிய அறிவை ஈட்ட முடியாது என்பதே. எடுத்துகாட்டாக, மருத்துவப் பயிற்சியற்ற ஒரு நோயாளி, பொதுவாக நல்லதே நடக்கும் என்ற மனப்பன்மையுள்ளவர்; தான் தனது நோயில் இருந்து விரைவாக நலமடைவோம் என்று நம்பலாம். ஒருவேளை இவரது இந்த நம்பிக்கை மெய்யாகலாம்; இருந்தாலும் தான் நலமுறுவோம் என அறிதிருந்தார் எனக் கூறமுடியாது; எனெனில் இவரது நம்பிக்கைக்கு முன்பு அவரிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் எனலாம். 1960 வரை அனைவராலும் அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை எனும் வரையறை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்க மெய்யியலாளராகிய எட்மண்டு கெட்டியர் (Edmund Gettier) வெளியிட்ட ஓர் ஆய்வு பரவலாக பல்வேறு விவாதங்களை எழுப்பியது. எட்மண்டு கெட்டியர் 'நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை அறிவா?' எனும் சிறு ஆய்வை 1953 இல் வெளியிட்டு பெரும்புகழ்பெற்றார்; இது நெடுங்காலமாக மெய்யியலாளர்கள் கொண்டிருந்த அறிவுக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. இவர் குறிப்பிட்ட எளிய எதிர்மாறான எடுத்துகாட்டை, ஆயிரம் ஆண்டுகளாக விளங்கிய ஒரு முதன்மையான கோட்பாட்டுக்கு முன் வைக்க முடிந்தால், மெய்யியலின் உண்மையான மதிப்புதான் என்ன எனும் கேள்வியை எழுப்பியது. ஒரு சில பக்கங்களிலேயே கெட்டியர், ஒருவர் நம்பிக்கை நிறுவப்பட்ட நம்பிக்கையாக இருந்த போதும், பல சூழல்களில், அது அறிவு என்று கருதப் படாமல் போகலாம் என வாதிட்டார். அதாவது, ஓர் உண்மையான கூற்றின் நிறுவப்பட்ட நம்பிக்கை என்பது கட்டாயத் தேவை என்றாலும், அது அக்கூற்றை அறிய போதுமானதல்ல எனக் கெட்டியர் கருதினார். விளக்கப்படத்தில் உள்ளபடி, ஒருவர் உண்மைக் கூற்று ஒன்றை நம்பினாலும் (ஊதாப் பகுதி), அது "அறிவு" எனும் கருத்தினத்தில் அடங்காது (மஞ்சள் பகுதி). அறிவு என்பது மூன்று உட்கூறுகளைக் கொண்டது: 1) உண்மையான தன்மை(Truth); 2)உண்மையென நம்புகின்ற மன நிலை(Belief); மற்றும் 3) உண்மையென நம்புவதற்கான ஆதாரங்கள்(Justification). ஒன்றைப் பற்றிய அறிவு ஒருவருக்கு உள்ளது என்று சொல்லுவதற்கு இந்த மூன்றும் தேவை. இந்த JTB - அறிவுக் கோட்பாடு என்பது பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞரால் முதலில் கூறப் பட்டது எனக் கருதப் படுகின்றது. நெடுங்காலமாக சரி எனக் கருதப்பட்ட இக் கோட்பாட்டில் பிழை இருக்கிறது எனக் கெட்டியர் சுட்டிக் காட்டினார். அதாவது, J, T, மற்றும் B எனும் மூன்று கூறுகளும் சரியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில், அறிவு சரியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு. கெட்டியர் இதை இரண்டு சிறு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு நிறுவினார். கெட்டியர் கருத்துக்களை மறுத்து ஒரு சில எதிர் வாதங்கள் முன் வைக்கப் பட்டன. இந்த எதிர் வாதங்கள் "அறிவு" என்றால் என்ன என்பதை வேறு வகையாக வரையறை செய்தன. கெட்டியர் கருத்திற்கு எதிர் கருத்தாக, ரிச்சர்டு கிர்க்கம் (Richard Kirkham) என்னும் அமெரிக்க மெய்யியலாளர் (philosopher) காரணங்கள், பொய்ப்பிக்கவியலாமை தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்று கூறினார். பொய்ப்பிக்கவியலாமை(Infallibilism) என்பது, ஒரு கருத்து உண்மை என நம்புவதற்கான ஆதாரங்கள் (Justification) எக் காரணம் கொண்டும் பொய்யாகும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது, ஆதாரங்கள் சரியாக இருக்குமாயின், அவற்றை ஆதாரமாகக் கொண்ட கருத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும். கெட்டியர் கருத்திற்கு எதிர் வாதமாக பயனிலாமை(indefeasibility) என்ற வாதமும் முன் வைக்கப் பட்டது. இதன் படி, ஒரு கருத்து நம்புவதற்கான ஆதாரங்களுக்காக (J1) மட்டும் உண்மை என்று இருப்பதில்லை; மாறாக, அக் கருத்து வேறு ஒரு சில ஆதாரங்களுக்காகவும்(J2) உண்மையாக ஆகலாம். இவ்வாறு ஆகுமாயின், முதல் ஆதாரம் (அதாவது, J1) பயனற்ற ஆதாரங்களாக ஆகி விடும். அதனால், J2 போன்ற ஆதாரங்கள் இருக்கக் கூடாது. நம்பகத்தன்மை வாதம் (Reliabilism) கீழ்க்கண்டவாறு வைக்கப்படுகின்றது. ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அவர் அதை உண்மைதான் என நம்ப, ஒரு நம்பகத்தன்மை கொண்ட முறையைப் பின்பற்றி இருக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டு இருந்தால், P-என்பவர் Q-என்ற கருத்தை அறிந்தவராகக் கருதப் படுவார். அதாவது, Q-எனும் கருத்து, P-என்பவரின் அறிவாக மாறும். இந்த வாதத்தை ஆல்வின் கோல்டுமேன்(Alvin Goldman), மார்சல் சுவைன்(Marshall Swain), கென்ட் பாக் (Kent Bach), ஆல்வின் பிளான்டின்கா (Alvin Plantinga) ஆகியோர் முன் வைத்தனர். இராபெர்ட்டு நாஸ்விக்(Robert Nozick), டிமதி வில்லியம்சன் (Timothy Williamson) ஆகியோர் இன்னும் சில எதிர் வாதங்களை முன் வைத்தனர். நாஸ்விக் கீழ்க் கண்டவாறு வாதிட்டார்: ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அந்தக் கருத்து பொய்யாக இருக்குமாயின், P அதை உண்மை என நம்ப மாட்டார்; 4) அந்தக் கருத்து உண்மையாக இருப்பின், P அதை உண்மை என நம்புவார். இதில் வரும் மூன்றாவது நிபந்தனை கெட்டியர் சுட்டிக் காட்டும் சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என நாஸ்விக் வாதிட்டார். டிமதி வில்லியம்சன் அவர்களின் வாதத்தின் படி, Q-என்ற ஒரு கருத்தை, P-என்ற நபர் ஒருவர் அறிந்து (அதாவது, தன்னுடைய அறிவாகப் பெற்று) இருக்கிறார் என்று கூற, உண்மை, நம்பிக்கை, நம்புவதற்கான ஆதாரங்கள் ஆகியன தேவையான (necessary) கட்டியங்கள் (conditions) மட்டுமே; அவை போதுமான கட்டியங்கள் (sufficient conditions) எனக் கூற இயலாது. ஒரு கருத்து Q அறிவார்ந்தது என்று P என்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ள J என்ற ஆதாரம் பயன்படுத்தப் படும். இந்தக் காரணம் புற உலகில் (சூழ் நிலையில்) இருந்து வரலாம், அல்லது அக நிலையில் (மன நிலை) இருந்து வரலாம். அதைப் பின் பற்றிய வாதங்கள் முறையே புறநிலை வாதம்(Externalism) என்றும் அகநிலை வாதம்(Internalism) என்றும் அறியப்படும். ஒரு கருத்து (அறிவுக் கூற்று Q) உண்மையானது என்பதை விட, நடை முறையில் அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தான் இன்றியமையாதது. அறிவின் முக்கியத்துவம் முதன் முதலில் பிளேட்டோவின் மெனோ (Meno) என்ற உரையாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஓர் அறிவான கருத்து, வெறும் உண்மையான கருத்தை விட சிறப்பு வாய்ந்தது என்று சாக்ரடீசு கூறுகிறார். அறிவு என்பது நம்பகத்தன்மை (Reliabilism) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதப் படுகின்றது. ஆனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பின், அதன் நம்பகத்தன்மையைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை. ஒரு குவளை தேநீரின் சுவை தானே இன்றியமையாதது தவிர, அதைப் போட பயன் படுத்தப் படும் கருவிகள் எவ்வளவு நம்பகத்தன்மையை வாய்ந்தவை என்பது அன்று. எனவே, சகசெபுசுகி (Linda Trinkaus Zagzebski) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞரின் கூற்றுப் படி, ஒரு அறிவுக் கூற்றின் நம்பகத்தன்மையைவிட அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதே முக்கியம். (ஆனால் இதைக் கோல்டுமேன்(Alvin Goldman), ஆல்சன் (E.J. Olsson) ஆகியோர் மறுக்கிறார்கள்.) இனி, கவான்விக் (Jonathan Kvanvig) போன்றோர், அறிவின் முக்கியத்துவத்தை விடுத்து, அந்த அறிவைப் பெற்றிருக்கும் ஒருவர் எவ்வாறு அதைப் புரிந்து(understand) கொள்கிறார் என்பதே முக்கியம் என்கின்றனர். அறிவைச் சேர்த்தல்(acquiring knowledge) என்பது பல வழிகளில் நடை பெறுகின்றது. இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை விளக்க புரூசு இரசல் (Bruce Russell) ஒரு எடுத்துக் காட்டு கொடுக்கின்றார். "2 + 2 = 4" என்ற கருத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டால், அந்தக் கருத்து அவரது புலன்சாரா அறிவு ஆகும். ஏனெனில், இந்தக் கருத்து அவர் சிந்தனையால் வந்தது; புலன்களின் பட்டறிவால் (experience) வந்ததன்று. ஆனால், 2 குவளை நீரும் 2 குவளை நீரும் சேர்ந்தால் 4 குவளையாகும் என்பது புலன் சார்ந்த அறிவு; பட்டறிவினால் வந்தது. படிமலர்ச்சி உளவியல் (Evolutionary psychology) - இன் படி, மனிதரிடத்தில், புலன்சாரா அறிவு என்பது மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றது; பெரும்பாலான அறிவு புலன்சார் அறிவே. இம்மானுவேல் கான்ட் (Immanuel Kant) என்ற செருமானிய மெய்யியல் அறிஞர் (1724-1804) தாம் எழுதிய பகுத்தறிவு பற்றிய திறனாய்வு (Critique of Pure Reason) என்ற நூலில், பகுப்பாய்வுக்கும் (analytic) தொகுப்பாய்வுக்கும் (synthetic) உள்ள பாகுபாட்டைக் கூறியுள்ளார். ஒரு கூற்று (proposition), அது தன் இயல்பிலேயே, உண்மையை வெளிப்படையாகக் கொண்டிருக்குமேயானால், அந்தக் கூற்று பகுப்பாய்வுக் கூற்று (analytic proposition) எனப்படும். எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பி எனக்குச் சித்தப்பா ஆவார்" எனும் கூற்று ஒரு பகுப்பாய்வுக் கூற்று ஆகும். ஏனெனில், இந்தக் கூற்றின் பொருளை, அதில் வரும் சொற்களையும், அவை வரும் வரிசை முறையையும் (sequence) வைத்து, நாம் கணித்துக் கொள்ளலாம். மாறாக, தொகுப்பாய்வுக் கூற்றின் (synthetic proposition) பொருள் உலக நடைமுறையோடு தொடர்பு கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பியின் தலை முடி கருப்பு" என்ற கூற்று, தலை முடியின் நிறம் என்னவென்று பார்க்காமல், சரியா தவறா என்று கூற இயலாது. குயின் ( Willard Van Orman Quine) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞர் (1908-2000), கான்ட் கூறியது முற்றிலும் உண்மை அல்ல என்று கூறி உள்ளார். அதன் பிறகு, அண்மைக் காலங்களில் வந்த கட்டுரைகள், பகுப்பாய்வுக்கும் தொகுப்பாய்வுக்கும் உள்ள பாகுபாட்டை இன்னும் தெளிவாகக் காட்டியுள்ளன. அறிவியல் என்பது ஒரு செம்மைப் படுத்தப்பட்ட அறிவு பெருக்கும் பணி என்று கூறலாம். உலகில் நடக்கும் நிகழ்வுகளை நன்கு கண்டறிந்து, விதிகளை உருவாக்கி, அந்த விதிகளை வைத்துக் கொண்டு உலகைப் புரிந்து கொள்ள எடுக்கப்படும் முயற்சி அறிவியலில் செய்யப் படுகின்றது. அறிவு ஆய்வியலில், ஒரு கருத்து Q, உண்மெய்யானது எனக் கருத வேண்டுமானால், அதற்கு போதுமான ஆதாரங்கள் (justifications J) இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆதாரங்களுக்கு ஆதாரங்கள் (J) வேண்டும். இது மட்டுமில்லாமல், J-வுக்கு ஆதாரங்கள் (J) வேண்டும். மேலும், J-வுக்கு J வேண்டும். இப்படியே இது முடிவில்லாமல் போக வாய்ப்புண்டு. இந்த பிரச்சினையை பின்னோக்கு வாதப் பிரச்சினை (Regress problem) என அழைப்பர். பல ஆய்வாளர்கள், பின்னோக்கு வாதப் பிரச்சினைக்கு, தீர்வுகள் எனத் தாங்கள் கருதியதை முன் வைத்தனர். அவற்றில் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துக்கள் வாததத்தின் படி (Foundationalism), எல்லா கருத்துக்களுக்கும் ஆதாரம் கொடுக்க தேவை இல்லை. ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை என கருத முடியும். எடுத்துக் காட்டாக, அவை நம் பட்டறிவு (experience) வழியாக வரலாம். இந்த வாதத்தில் உள்ள ஒரு சிக்கல், ஆதாரம் தேவை இல்லை என்றால், யார் ஒருவரும் தமக்கு வேண்டிய எந்த கருத்தையும் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியும். ஒத்திசை வாதத்தின் படி (Coherentism),பின்னோக்கு வாதத்தில் கூறப்படும் முடிவில்லா ஆதாரங்கள் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உண்டு. அதாவது, Q என்ற கருத்துக்கு J என்பது ஆதாரம் என்றால், J-வுக்கு J ஆதாரம் என்றால், J-வுக்கு J ஆதாரம் என்றால்; அதாவது, Q → J, J → J, ... , J → J, என்றாகுமாயின், J, J-க்கு ஆதாரம், அதாவது, J → J என்று திருப்பிச் சுற்றி விடலாம். இப்படிச் செய்தால், ஆதாரங்களின் தேவை முடிவில்லாமல் போய்க் கொண்டு இராது. ஒத்திசை வாதத்திலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. இதில் ஆதாரங்கள் தவறாக இருக்கும் போதும், திரும்பிச் சுற்றி விடலாம். எனவே, ஒத்திசை வாதமும் பின்னோக்கு வாதப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையவில்லை. அறிவு ஆய்வுத் துறையில், கோட்பாடுகளுக்கு ஏற்ப, கீழ்க் கண்ட உட்பிரிவுகள் (கிளைகள்) உள்ளன. வரலாற்று அறிவாய்வியல் (Historic epistemology) பிரிவில், இதுவரை அறிவாய்வியல் வரலாற்றில் அறிவு தொடர்பான கேள்விகளும், அதற்கான விடைகளும் எவ்வாறு இருந்துள்ளன என்பன பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. அறிவாய்வியலில் அன்று கேட்கப் பட்ட கேள்விகளை இன்று கேட்பதில்லை. புலனறிவாதம் (Empiricism) என்ற இந்தப் பிரிவில், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு நம் ஐம்புலன்களின் வழியாக வருகின்றது என்ற நிலைப்பாடு எடுக்கப் படுகின்றது. (கணிதம் போன்ற துறைகள் இதற்கு விதிவிலக்கு.) நேர்க் கருத்து வாதம் (positivism), பொருள் முதல் வாதம் (realism), பொது அறிவு (common sense) வாதம் என்பன புலனறிவாதத்தின் உட்பிரிவுகளாகும். நேர்க் கருத்து வாதத்தின் படி, நம் அறிந்திருக்கும் ஒரு சில நேர்மறையான கருத்துக்கள் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளில் இருந்து வருகின்றன. பொருள் முதல் வாதத்தின் படி, ஒரு பொருள், எதையும் சார்ந்திராமல், தானாகவே தனித்து நிற்கும் தன்மை பெற்றது. பொது அறிவு என்பது நம் புலன்கள் வழியாக வரும் அறிவு; அதே நேரத்தில், நம்மில் பலருக்கும் அது பொதுவாக உள்ளது. ஆக, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை, அறிவு பற்றிய ஆராய்ச்சியில், ஐம்புலன்களில் இருந்து வரும் அறிவு முதன்மையானது என்ற கருத்தே. கருத்து முதல் வாதம் (Idealism) கூறுவது யாதெனின், உண்மையுள்ள கருத்துக்கள் நம்முள் ஏற்கனவே பொதிந்துள்ளன; அவை புலன்கள் வழியாகப் பெறப் படுவன அல்ல; அவை உய்த்து உணரும் முறையால் (intuition) பெறப்படுகின்றன என்பதாகும். இது ( கான்ட் கருதியதைப் போல) மனத்தின் இயல்பாக இருக்கலாம்; அல்லது, ( பிளேட்டோ கருதியதைப் போன்று) அக் கருத்துக்கள், நம்மைச் சார்ந்து இராமாலேயே, தனித்து நிற்கும், வல்லமை பெற்று, (உலகில்) நிலைத்து நிற்கலாம். பகுத்தறிவியம் (Rationalism) என்பது புலனறிவாதம் (Empiricism), கருத்து முதல் வாதம் (Idealism) ஆகியவற்றுடன் சிந்தனை முறை (system of thinking) என்பதை மூன்றாவது கூற்றாக இணைத்து, இந்த மூன்றும் அறிவு ஆராய்ச்சியில் சமமான நிலையில் வைக்க வேண்டும் என்று கூறுகின்றது. கருத்துக் கட்டுமானம வாதம் (Constructivism) என்னும் கோட்பாட்டின் படி, அறிவு என்பது மாந்த இனம் கட்டி அமைக்கும் உண்மை சான்ற கருத்துக்களின் குவியல் என்பதாகும். எனவே, அறிவு என்பது மனிதனுக்கு அப்பால் இருக்கும் ஒரு பொருள் அல்லது எதையும் சார்ந்து இராத ஒன்று என்று சொல்வதற்கில்லை. சார்பற்ற நிலை வாதம் (objectivism), அறிவில் உள்ள கருத்தைப் பற்றி பேசுகிறது; ஆனால், கருத்துக் கட்டுமான வாதம் (Constructivism), அறிவு என்ற கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி பேசுகின்றது. எனவே, கட்டுமான வாதம், கருத்துக்கள் (உண்மைகள்) ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்ற நிலையை முன்னிறுத்தி, அறிவு என்றால் என்ன என்பதைப் பற்றியான ஒரு புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. அதாவது, இந்த வாதமுறை அறிவை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதில் கவனம் செலுத்துகின்றது. பயன்பாட்டு முறை (Pragmatism) என்னும் வாதத்தில், "உண்மை என்பது ஏதோ ஒன்று எந்தச் சார்பும் இல்லாமல் மனிதனுக்கு வெளியே அமைந்து கிடப்பது அல்ல; அது நடைமுறை நிகழ்வுகளில் சம்பத்தப் பட்டிருக்க வேண்டும்; எடுத்துக் காட்டாக, ஏதேனும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்," என்ற பார்வை வைக்கப் படுகின்றது. ஒரு கருத்து எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என முதலில் கணித்துக் கொள்ள வேண்டும். பின், அந்தக் கருத்தை, அப் பயன்களைக் கொண்டு வரையறை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், அறிவு எனக் கருதப் படும் கருத்துக்கள் நமக்கு நடை முறையில் துணை புரியும் கருத்தாக்களாக ஆகிவிடும். நடைமுறை அறிவு ஆய்வியல் (Naturalized epistemology) என்னும் பிரிவு, பயன்பாட்டு முறை வாதத்தைப் (Pragmatism) போன்றே, ஒரு கருத்தின் பயனைப் பற்றி, குறிப்பாக, அக் கருத்து எவ்வாறு நடை முறையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து பயன் தருகின்றது என்பதை பற்றி பேசுகின்றது. அறிவு ஆய்வியலில், ஐயுறவியல் (Skepticism) என்பது உண்மை எனக் கருதப் படும் ஒவ்வொரு கருத்தையும் ஐயத்தோடு (சந்தேகத்தோடு) பார்ப்பது ஆகும். பலரும் அறிந்த கிரேக்க அறிஞர் சாக்கிரட்டீசு(Socrates) ஒரு ஐயுறுவாளர் (சந்தேகப் படுபவர்,skeptic) எனக் கருதப் படுபவர். இவர் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தபோது, எதைப்பற்றியும் இவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதாவது, ""எனக்கு எதைப் பற்றியும் முழுவதுமாகத் தெரியாது" என்பதுதான் எனக்கு முழுவதுமாகத் தெரிந்த ஒன்று," என்று கூறினார். அதன் பிறகு, 16-ஆம் நூற்றாண்டில் வந்த டேக்கார்ட் (René Descartes) இதே பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து, அதன் பயனாக, (நாம் அனைவரும் அறிந்த) "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என்ற கருத்தை முன் மொழிந்தார். அடிப்படைக் கருத்துக்கள் வாதம் (Foundationalism), பயன்பாட்டு முறை வாதம் (Pragmatism) ஆகியன ஐயுறவியல் வாதத்திற்கு எதிராகத் தோன்றியவை. அதன் பிறகு, ஏரண நேர்க் கருத்து வாதம் (Logical Positivism) மற்றும் குகன் (Kuhn), பாப்பர் (Popper) ஆகியோரின் கருத்துக்கள், அறிவியல் உண்மைகளையும் ஐயுறவியல் கண்கொண்டு பார்த்தவை. அணுக்கரு அளவு அணுக்கருவின் அளவு ("Nuclear size") அதன் ஆரத்தினால் தரப்படும். அணுக்கருவின் ஆரம் formula_1 மீ முதல் formula_1 மீ வரை இருக்கும் என ஏர்னெஸ்ட் ரதர்போர்ட்டின் சிதறல் ஆய்வு எடுத்துக் காட்டியது. அணுக்கருவின் ஆரம் (R) அதன் திணிவு எண்ணில் (A) தங்கியுள்ளது. அது பின்வரும் எண்மானச் சமன்பாட்டினால் கொடுக்கப்படுகிறது: formula_3 இங்கு, மாறிலி formula_4 ஆனது அணுக்கரு மாதிரிகளைப் பொறுத்து .2 பெர்மிகளினால் (fm) மாறக்கூடியது. மேலும் கோளம் ஒன்றின் கனவளவு அதன் formula_8 இற்கு நேர் விகிதமாக இருப்பதால், மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் படி, அணுக்கருவின் கனவளவு அதன் நிறை எண் A இற்கு நேர்விகிதமாக உள்ளது. எனவே, அணுக்கரு அடர்த்தி அண்ணளவாக மாறிலியாக இருக்கும். சந்தைப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரம் அல்லது கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளியல் முறை ஆகும். இதில் பொருட்களினதும், சேவைகளினதும் உற்பத்தியும், விநியோகமும் கட்டற்ற விலை முறைமையினால் நெறிப்படுத்தப்படும் கட்டற்ற சந்தைப் பொறிமுறையினால் நடைபெறுகின்றது. ஒரு சந்தைப் பொருளாதார அமைப்பில் வணிகத்துறையும், நுகர்வோரும் எதை வாங்குவது எதை உற்பத்திசெய்வது போன்ற முடிவுகளைத் தாங்களாகவே எடுக்கின்றனர். இம்முறையில் வளங்களின் ஒதுக்கம் அரசின் தலையீடுகள் இன்றி நடைபெறும். கோட்பாட்டு அடிப்படையில் இம் முறையின் கீழ், எதனை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, என்ன விலை விற்பது, தொளிலாளருக்கு எவ்வளவு ஊதியம் வழங்குவது போன்ற முடிவுகளை உற்பத்தியாளரே எடுப்பார், அரசு அல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் இம் முடிவுகள், போட்டி, தேவையும் வழங்கலும், போன்றவற்றால் உண்டாகும் அழுத்தங்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன. இது என்ன பொருளை எவ்வளவு உற்பத்தி செய்வது போன்றவற்றை அரசே தீர்மானிக்கும் திட்டமிட்ட பொருளாதார முறைக்குப் புறம்பானது. திட்டமிட்ட பொருளாதாரம்போல் விரிவாக இல்லாவிட்டாலும், முற்றிலும் கட்டற்ற முறையில் இல்லாமல் ஓரளவு அரசின் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் கலப்புப் பொருளாதார முறையும், சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து வேறுபடுகின்றது. நடைமுறையில் எந்த நாட்டிலும் உண்மையான சந்தைப் பொருளாதாரம் இருப்பதாகக் கூறமுடியாது. திட்டமிட்ட பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு பொருளியல் முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், வருமானப் பகிர்வு போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது பொதுவுடைமை நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர். கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் ஒரு முக்கியமான, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அண்மைக்காலப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன் சீனாவிலும் இப் பொருளாதார முறையே நிலவியது. 1980 களிலும், 1990 களிலும் பல திட்டமிட்ட பொருளாதார நாடுகள் இம் முறையிலிருந்து விலகத் தொடங்கின. கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் இன்றும் இம் முறையையே கடைப்பிடித்து வருகின்றன. பிரான்ஸ் பேர்டினண்ட் பிரான்ஸ் பேர்டினண்ட் ("Franz Ferdinand"; டிசம்பர் 18, 1863 – ஜூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார். ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வே ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க காரணம் ஆகும். இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போருக்கு வழி வகுத்தது தமிழ் கிறிஸ்தவர்கள் இணையதளம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் உலகின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றனர். அவர்களில் தமிழ்கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் வாழ்கிற கிறிஸ்தவர்களின் பக்திவிருத்திக்காகவும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் உதவும்படி உருவாக்கப்பட்டது தமிழ் கிறிஸ்தவர்களுக்கான இணையதளம் இதன் இணைய முகவரி:http://www.tamilchristians.com இத்தளத்தின் மார்ஸ்மேடையில் (http://tamilchristians.com/modules.php?name=Forums ) வேதாகம காரியங்கள் மட்டுமின்றி நடப்பு பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. வேதாகமக் கட்டுரைகளும் புதிய இளம் கிறிஸ்தவர்களால் பதியப்படுகிறது. தமிழ் நாளிதழ் தமிழ் நாளிதழ் தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ் ஆகும். அண்மைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாளிதழ்கள் வெளிவருகின்றன. தமிழில் பத்திரிகை என்றும் செய்தித் தாள் என்றும் கூறப்படுவதுண்டு. நாளிதழ்கள் செய்தியையும் தகவல்களையும் தமது கருத்துரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பத்திரிகையாளர்களின் பண்பாக கொள்ளப்படுகிறது. ஊடகவியல் தலைப்புகள் பட்டியல் கலப்புப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார முறைகளின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார முறை ஆகும். பொதுவாக இது, தனியுடைமை மற்றும் அரசுடைமை நிறுவனங்கள் இரண்டையும் கொண்ட அல்லது முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய இரண்டினதும் கூறுகளைக்கொண்ட அல்லது சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டினதும் கலப்பாக அமைந்த ஒரு பொருளாதாரம் ஆகும். கலப்புப் பொருளாதாரம் என்பதற்கு "ஒரு" வரைவிலக்கணம் கூறமுடியாது. ஆனால் கலப்புப் பொருளாதாரத்தோடு தொடர்புடைய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்: மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலுடன் கூடிய ஓரளவு தனியார் பொருளியல் சுதந்திரம். இப் பொருளாதாரத் திட்டமிடல், சூழலியம், சமுதாய நலம் தொடர்பான தலையீடு ஆகவோ, சில உற்பத்திச் சாதனங்களை அரச உடைமையாக வைத்திருத்தல் என்பவற்றை உள்ளடக்கலாம். கின்யருவாண்டா மொழி கின்யருவாண்டா மொழி (Kinyarwanda) ருவாண்டாவின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 மில்லியனுக்கு மேல் மக்கள் பேசுகின்றனர். உகாண்டாவின் தெற்கு பகுதியிலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். புருண்டியின் ஆட்சி மொழி கிருண்டியை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டாவை ஓர் அளவு புரியும். கிருண்டி மொழி கிருண்டி மொழி (Kirundi) புருண்டியின் இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை கிட்டத்தட்ட 4.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். ருவாண்டாவின் ஆட்சி மொழி கின்யருவாண்டாவை பேசும் மக்களுக்கு கிருண்டியை ஓர் அளவு புரியும். சோமாலி மொழி சோமாலி மொழி (af Soomaali) சொமாலியாவின் ஆட்சி மொழியாகும். ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தில் குஷிட்டிக் குறுங்குடும்பத்தில் சேர்ந்த இம்மொழியை 10-20 மில்லியன் மக்கள் தாய்மொழியாக பேசுகின்றனர். கிழக்கு எதியோப்பியா, சிபூட்டி, யெமென், கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் சோமாலியர்களும் இம்மொழியை பேசுகின்றனர். மோர்கன் சுவாங்கிராய் மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் ("Morgan Richard Tsvangirai"; மார்ச் 10, 1952 - பெப்ரவரி 14, 2018) என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. 2002 இல் இடம்பெற்ற அதிபார் தேர்தலில் ரொபேர்ட் முகாபேயுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற அதிபருக்கான முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் அதிகாரபூர்வ முடிவுகளின்படி அவரால் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நாட்டில் முகாபே ஆதரவாளர்களினால் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையைக் காரணம் காட்டி ஜூன் 27 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது என அவர் குற்றம் சாட்டினார். அமர்நாத் அமர்நாத் குடைவரைகள் ("Amarnath caves"; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன. இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும். இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும். நிக்கொலா சார்கோசி நிக்கொலா சார்கோசி ("Nicolas Sarkozy", ( — (முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார். வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும் வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார் பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார். பாண்டியாபுரம் பாண்டியாபுரம் என்பது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா வெள்ளாளங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். பாண்டிய மன்னர் இவ்வூரை அமைத்தமையால் இப்பெயர் பெற்றது இயல்புரிமை இயல்புரிமை (natural right) என்பது உலகம்தழுவிய உரிமைகள் தொடர்பான ஒரு கருத்துருவாகும். இந்த உரிமை, சட்டங்களிலோ நம்பிக்கைகளிலோ தங்கியிராமல் உயிரினங்களுக்கு இயல்பாகவே அமைந்தது எனப்படுகின்றது. இயல்புரிமைக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட இயற்கை விதிக் கோட்பாட்டின் உள்ளடக்கம் இயற்கையாக முடிவாக்கப்படுவதால் இது உலகம் முழுதும் பொருந்துகிறது. ஐரோப்பாவில் அறிவொளிக் (Enlightenment) காலத்தில், இயற்கை விதி, அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக இருந்ததுடன், இதுவே செந்நெறிக்காலக் குடியரசிய அடிப்படையில், சமூக ஒப்பந்தம், நேர்ச் சட்டம், அரசு என்பவற்றை நிறுவுவதை நியாயப்படுத்தும் ஒரு வாதமாகவும் விளங்கியது. மாறாக, இயல்பு உரிமைக் கருத்துரு, இத்தகைய அமைப்புக்கள் இருப்பதை எதிர்த்து வாதிடுவதற்கும் அராசகவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. இயல்புரிமை என்பது அதனை அரசுகளோ அல்லது சமுதாயமோ நடைமுறைப்படுத்தா விட்டாலும் அது இயல்பாகவே இருப்பதாகக் கருதப்படும். ஆனால், சட்டம்சார்ந்த உரிமை என்பது மக்களின் நன்மைக்காக அரசினாலோ, சமுதாயத்தினாலோ உருவாக்கப்படுகிறது. எது இயல்புரிமை எது சட்ட உரிமை என்பது மெய்யியலிலும், அரசியலிலும் ஒரு முக்கியமான கேள்வியாகும். இக் கருத்துருவை விமர்சிப்பவர்கள், மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுமே சட்ட உரிமைகள்தான் என்கிறார்கள். கருத்துருவை ஆதரிப்பவர்களோ அமெரிக்க விடுதலைப் பிரகடனம், உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பன இயல்புரிமையை ஏற்றுக்கொள்வதனால் ஏற்படும் பயனை விளக்குகின்றன என்கின்றனர். மனித உரிமை என்பதன் எண்ணக்கரு இயல்புரிமையில் இருந்து பெறப்பட்டதாகும். சிலர் இவ்விரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்கின்றனர். வேறு சிலரோ இயல்புரிமையுடன் தொடர்புபடுத்தப்படும் சில அம்சங்களை விலக்கிவைப்பதற்காக இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கவேண்டும் என்கின்றனர். இயல்புரிமை என்பது, அரசு அல்லது வேறு பன்னாட்டு அமைப்புக்களின் அதிகாரத்தினால் இல்லாமலாக்க முடியாத தனியொருவருடைய உரிமை எனக் கருதப்படுகிறது. மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளுக்கும் இயல்புரிமை உண்டு என்னும் எண்ணம், 20 ஆம் நூற்றாண்டில், மெய்யியலாளர்கள், சட்ட அறிஞர்கள் போன்றோரிடையே பிரபலமானது. சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் அல்லது சென் ஜான்ஸ் ஆம்பியூலன்ஸ் பல்வேறு நாடுகளில் முதலுதவி, முதலுதவிப் பயிற்சிகள் மற்றும் ஆம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் ஓர் பன்னாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது 1877 இல் இங்கிலாந்தில் சென் ஜோன்ஸ் ஆம்பியூலன்ஸ் அசோசியேயசன் இடம் இருந்து உருவாகியது ஆகும். மொபுட்டு செசெ செக்கோ மொபுட்டு செசெ செக்கோ ந்குக்கு ங்பந்து வ ச பாங்கா (Mobutu Sese Seko Nkuku Ngbendu wa za Banga, அக்டோபர் 14, 1930-செப்டம்பர் 7, 1997) 1965 முதல் 1997 வரை சயீர் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். சயீர் ஜூன் 1960இல் பெல்ஜியம் இடம் இருந்து விடுதலை வந்ததுக்கு பிறகு பிரதமர் பத்திரிசு லுமும்பா மொபுட்டுவை இராணுவத் தலைவராக அறிவித்தார். ஆனாலும் செப்டம்பர் 1960இல் மொபுட்டு இராணுவ புரட்சி மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்து இவரே பிரதமர் பதவியில் ஏறினார். 1967இல் இவரின் அரசியல் கட்சி, மக்களின் புரட்சி இயக்கம் தொடங்கி 1990 வரை இக்கட்சி மட்டுமே ஆட்சியில் ஒழுங்கான கட்சியாக இருந்தது. முதலாம் காங்கோ போரில் லோரான்-டெசிரே கபீலா இவரை பதவியிலிருந்து கலைத்தார். மொபுட்டு தலைவராக இருக்கும்பொழுது நாட்டு பொருளாதாரத்திலிருந்து $5 பில்லியன் திருடியுள்ளார். மெதடிசம் மெதடிசம் அல்லது மெதடிஸ்தம் ("Methodism") என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் ("protestant") ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஜான் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக வெஸ்லிய மெதடிசம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஜான் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலிக்கத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிசத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் "மெதடிஸ்துகள்" என அழைக்கப்படுகின்றனர். 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர். உரிமை சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை (Rights) என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது. உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என்பவை. உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது. இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது. மாறாக, பெரும்பாலான முற்காலத்து உரிமை தொடர்பான கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன. மனித உரிமை மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன. எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும். மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது. பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது. 18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது. இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று. 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின. உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன. 1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன. மனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும். அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. செனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும். மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக இந்திய காவல்துறைஅதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது டெல்லியிலும் (75), அசாம் மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன. போலி காவல்துறை மோதல்கள் , கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. தாகித்தி தாகித்தி அல்லது தாயித்தி ("Tahiti") என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். பிரெஞ்சுப் பொலினீசியாவின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மையமாக இத்தீவு விளங்குகிறது. எரிமலை வெடிப்பினால் உருவாகிய இத்தீவு பவளப் பாறைகளை சுற்றிவரக் கொண்ட பெரும் மலைகளைக் கொண்டுள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2012 கணக்கெடுப்பின் படி 183,645 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிரெஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கள் தொகையில் 68.5% விழுக்காட்டினர் தாகித்தியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் பப்பியேட்டி ஆகும். தாகித்தியில் பொலினேசியர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டளவில் இருந்து தொங்கா, மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. 1606 இல் முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் சூன் 18, 1767 இல் சாமுவேல் வாலிஸ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து ஏப்ரல் 1768 இல் பிரெஞ்சு நாடுகாண் பயணி லூயி-அண்டன் டி போகன்வில் இங்கு தரையிறங்கினார். ஜூன் 2, 1769 இல் கப்டன் ஜேம்ஸ் குக் இங்கு வந்து ஆகஸ்ட் 9 வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. 1797 இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது. 1842 இல், தாகித்தியின் அரசியாக இருந்த நான்காம் பொமாரே என்பவள் இத்தீவை பிரான்சின் காப்பாட்சியாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் "டுப்பேட்டி தௌவார்ஸ்" தலைமையில் 1843 இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் தாகித்தியில் இறங்கி அந்நேரம் பிரித்தானிய ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான். எனினும் தாகித்தியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் 1847 ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு ஜூன் 29, 1880 வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து பிரான்சிடம் முழுமையாக ஒப்படைத்தான். 1946 முதல் தாகித்தி உட்பட முழு பிரெஞ்சு பொலினீசியாவும் பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக ஆக்கப்பட்டன. தாகித்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது. 2003, பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு கடல்கடந்த சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது. நில மானிய முறைமை வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் ("feudalism"). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது. சமூகவுடைமை சமவுடைமை அல்லது சமூகவுடைமை ("Socialism", சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது. சமூகவுடைமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன. மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இணைந்து எழுதிய பொதுவுடமை அறிக்கையில் (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises): மார்க்சிய சமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது. மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது உருசியாவில் 1917ல் நடைபெற்ற போல்செவிக் புரட்சி. சமவுடைமை என்ற இலக்கை மக்களாட்சி மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சி சார் சமவுடைமை ("Democratic Socialism"). குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. உற்பத்தி காரணிகள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், எனினும் அவை தடையில்லா அங்காடிச் சக்திகளுக்கு (Market Forces) உட்பட்டே இயங்க வேண்டும் என்ற பொருளியல் அமைப்பு தான் சந்தைசார் சமூகவுடமை ("Market Socialism") ஆகும். அரசுடைமை நிறுவனங்கள் ஈட்டும் இலாபம், ஒருசிலரின் கைகளில் குவியாமல், மக்களுக்கு சமமாக பகிரும் வழிகளாக: போன்ற முறைகளை பரிந்துரைக்கின்றது. உற்பத்தி காரணிகளை பொதுவுடமைகளாக வைத்துக்கொண்டு பொருளியல் திட்டமிடுதலின் வழியாக உற்பத்தி மற்றும் பகிர்வை கட்டுப்படுத்தும் அமைப்பு. அனைத்து சமவுடைமை நாடுகளிலும் பயன்படுத்தப்படும் முறை. குறிப்பாக இது சோவியத் ஒன்றியம் உருவாக்கிய அமைப்பு. 1930களில் ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது. முதலாளித்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடுகளால் ஏற்படும் தீங்குகளாக சமவுடைமைவாதிகள் கூறுபவை: சமூகவுடைமை கோட்பாடுகளின் தாக்கத்தால் உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்று கூடல், மக்கள் புரட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ள. சமவுடைமை கோட்பாட்டின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் (International Workingmen Association). இது முதலாவது பன்னாட்டு அமைப்பு ("First International") என்று அழைக்கப்படுகிறது. இருவேறு அணிகளின் கருத்தியல் வேறுபாடுகளின் காரணமாக கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும், குறுகிய காலத்திலேயே, ஐரோப்பாவின் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது. 1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889ல் இரண்டாம் பன்னாட்டு அமைப்பு ("Second International") நடைபெற்றது. மார்க்சிய சிந்தனைகளுக்கு ஆதரவு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இதில் பல்வேறு சமவுடைமை கட்சிகளை ஒருகிணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. 1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக இரண்டாம் நிக்கலாஸ் அரியணையிலிருந்து வேளியேற்றப் பட்டதற்கு மிக முக்கியமாக விளங்கியது சமூகவுடைமை இயக்கங்களே. சார் மன்னரின் வீழ்ச்சிக்குப் பின் கெரன்சிகியின் தலைமையில் தற்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர், கெரன்சிகியின் அரசை வீழ்த்தி விளாதிமிர் லெனின் தலைமையில் போல்சிவிக்குகள் சமவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையில் அரசமைத்தனர். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோருக்குப் பின்னர் மிக முக்கியமான சமவுடைமை கொள்கையாளராக அறியப்பட்டவர் லெனின். உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு தருணங்களில் தங்களை சமவுடைமை நாடுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளன. சோவியத்து உருசியாவின் வெற்றியினால் ஈர்க்கப்பட்டு தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்திக்கொண்டன. இந்நாடுகளை இரு வகைகளாக பார்க்கலாம் இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடைமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடைமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன. இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள். 1917 இல் இரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்பட்டது. ஐரோப்பிய நாடு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. எனினும், இரஷ்ய உளவியல் தன்மைகள், கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்க, சீர்திருத்த கிறித்தவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைமைவாத கிறித்தவத்தைப் பின்பற்றி வந்தது. ஏனெனில், கத்தோலிக்கக் கிறித்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சியாளர்களைத் தழுவிக் காணப்பட்டது. அதுபோல், சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கி செயற்பட்டது. பழமைவாத கிறித்தவம் மட்டுமே ரஷ்ய பூர்வீகத்தின் தூய்மையை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இத்தகைய சூழலில் சமவுடைமைப் புரட்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே பல்வேறு சமவுடைமையாளர்கள் நம்பினர். இரஷ்யாவில் நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்ந்து வந்தன. ஜார் மன்னரின் ஆட்சியானது, தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றார் லெனின். அவர், அக்டோபர் புரட்சியானது அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களை விடுதலை செய்யும் என்றும் புரட்சியின் போது அறிவித்தார். 1917 டிசம்பர் 31 ஆம் நாள் முடிந்து மறுநாள் புத்தாண்டு அன்று பின்லாந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனிநாடானது. லெனின் ஆசிய மக்களின் ஆதரவாளராகக் காணப்பட்டார். அடிமைக்குள்ளாக்கப்பட்ட ஆசிய தேசிய இனங்கள் எழுச்சி அடைவதை அவர் பெரிதும் எதிர்நோக்கினார். அனைத்துலக அரசியலில் ஆசிய தேசிய இனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அடையும் என்று நம்பினார். இவரது இரண்டு கருத்தியல்கள் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு முக்கியப் பங்காற்றின. அவை: ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் ஆகும். இவற்றுள், ஏகாதிபத்தியம், உலக முதலாளியத்தின் உருவாக்கத்திலும் நிலைகொள்ளலிலும் காலனிய நாடுகளின் நிலை பற்றியது. இரண்டாவது, ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியில் தேசிய விடுதலை இயக்கங்களின் பங்களிப்புகள் குறித்ததாகும். இதில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்னும் கருத்து முக்கியமானது. லெனின், உலக முதலாளித்துவத்தை ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் தனியாக நின்று வீழ்த்திவிடமுடியாது உறுதியாக இருந்தார். தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியில் உலக முதலாளித்துவம் கடுமையாகப் பலவீனப்படும் என்று எண்ணினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியினைச் சமவுடைமைச் சமூகம் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை. தேசிய விடுதலை இனங்கள் பற்றிய லெனினது பார்வை புறந்தள்ளப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான பனிப்போரில் சோவியத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமே விடுதலை பெற்ற நாடுகளின் தலையாயப் பணியாக அமைந்தது. மூன்றாம் உலக நாடுகள் சமவுடைமையின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், மூன்றாம் உலக நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை அவற்றிற்குரிய தனித்த பண்புகளுடன் பேச உலக கம்யூனிச இயக்கம் முன்வரவில்லை. மூன்றாம் உலக நாடுகளில் தெற்கு ஆசியத் துணைக்கண்டத்தின் இன்றியமையாத சமூக வடிவமாக சாதி அமைப்பு உள்ளது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், பண்பாடு, சமயம், பொதுவாழ்வு, மறைமுக வாழ்வியல் என அனைத்திலும் சாதியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.சாதிக்கு, வலுவான, வரலாற்றுரீதியான தொடர்பு இருப்பது வெளிப்படை. தெற்கு ஆசியாவின் எல்லா பகுதிகளிலும் சாதி காணப்படுகிறது. மார்க்சிய வர்க்கப் போராட்டத்திற்கு அதிகம் பொருந்தக்கூடிய நாடு இந்தியா என்பார் அம்பேத்கர். சரியான திசையில் பயணித்தால், ரஷ்யாவைவிட எளிதாக இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்திவிட முடியும் என்று எடுத்துரைத்தார். இவர், சாதி என்ற சொல்லுக்குப் பதிலாகப் பல இடங்களில் வர்க்கம் என்பதைத் தம் எழுத்துக்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். இவர், "பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்" என்னும் நூலில் சாதிக்கு எதிராகப் பௌத்தம் நடத்திய போராட்டங்களையும் அவற்றை முறியடித்து சாதி அமைப்பு நிறுவப்பட்ட வரலாற்றையும் பதிவுசெய்துள்ளார். இந்தியாவிற்கு, சமவுடைமை அரசே பொருத்தமாக இருக்கும் என்கிறார். இதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் முதலானவற்றை அரசுடமைப்படுத்துவது இன்றியமையாததென அவர் எடுத்துரைத்துள்ளார். சமவுடைமைக் கொள்கைக்கு மார்க்சுக்கு இணையாக கௌதம புத்தரை முன்மொழிந்து, அவர் தனது உரையாடல்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். அதுபோல், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்தாம் உலகஅளவில் மிக அடர்த்தியான பண்பாட்டுப் பரப்பைக் கொண்டவையாகும். தொல்பழங்குடிப் பண்பாடுகள், நாகரிகங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதங்கள் ஆகியன இந்நாடுகளில் விரிந்து காணப்படும். இவற்றிற்கிடையில் பொதுவுடைமைவாதிகள், பல வேளைகளில் அந்நியப்பட்டுக் காட்சியளிக்கின்றனர். அதாவது, இப்பண்பாடுகளின் மீதான தமக்கிருக்கும் உரிமையையும் அவற்றைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் கடமையையும் உணராதவர்களாகக் காணப்படுகின்றனர். திறந்த சந்தை திறந்த சந்தை எனப்படுவது வாங்குவோரும் -விற்போரும், அவர்களின் பொருட்களையும் -சேவைகளையும் சுமூக இணக்கப்பாட்டிற்கு அமைய, வாங்கி விற்கும் ஏற்பாட்டை குறிக்கிறது. திறந்த சந்தையின் வரையரையின் படி,வாங்குபவர்களையும் - விற்பவர்களையும்  எந்தவிதமான ஏமாற்றுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் ஆட்படுத்த கூடாது. இந்த பொருளாதார சூழலில், பொருட்களின் விலை உற்பத்திக்கும் , தேவைக்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. விலை என்பது ஒரு பொருளின் உற்பத்தி அளவை மறைமுகமாக காட்டுகிறது. பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை மாறவில்லை, எனினும் உற்பத்தி  குறைந்து  விட்டது என்றால், அதன் விலை  உயர்வடையக்கூடும். இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ஏன்னெனில், சில  வாங்குபவர்கள் இதனை அதிகம் என்று எண்ணலாம். யாருக்கு, அது மிக-மிக தேவையோ , அதை  அதிக விலையில் வாங்கலாம். ஆதலால் , தேவையும்- உற்பத்தியும் இணங்க  உள்ளன. காந்தியப் பொருளாதாரம் காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. தன் நிறைவு, சுய சார்பு, கூட்டுச் செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது. சுற்றுசூழல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது. காந்திய பொருளாதார முறை தொழில் நுட்பத்துக்கு எதிரானது என்ற ஒரு விமர்சனம் உண்டு. எல்லா மனிதரையும் ஒருங்கே உயர்த்திச் செல்லும், சூழலியல் விளைவுகளை இயன்றவரை புரிந்து செயற்படும் தொழில் நுட்பங்களுக்கு காந்தியப் பொருளாதாரம் எதிரானது அல்ல என்பதே காந்தியச் சிந்தனையின் சரியான புரிந்தலாக இருக்கும் (ஆதாரம் தேவை). மரபுப் பொருளாதாரம் மரபுப் பொருளாதாரம் பழங்குடிகளின் காடு, வயல், கடல் சார்ந்த எளிமையான பொருளாதார முறையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக அந்தமான் பழங்குடிகள், அமெசான் பழங்குடிகள், சில ஆப்பிரிக்கப் பழங்குடிகள் ஆகியோர் ஓரளவுக்கு இன்றும் இம்முறையிலெயெ வாழ்கின்றனர். இவர்களின் கலாச்சார வளர்ச்சி இன்மை, கடின குறுகிய வாழ்க்கை இவ் வழிமுறையின் வரம்புகள் (limits) எனலாம். போக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை போக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை எனப்படுவது சாலைப் போக்குவரத்து பயண நடமாட்டத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு உதவும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அகில உலக உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கையின் படி அகில உலக சாலை அடையாளங்கள், போக்குவரத்து விளக்குகள், சாலை குறியீடுகள் தரப்படுத்தப்பட்டன. இந்த உடன்படிக்கை United Nations Economic and Social Council ஆல் வியன்னாவில் 7 October 1968 to 8 November 1968 காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட UNESC Conference on Road Traffic ஏற்றுக்கொள்ளப்பட்டு 6 June 1978 அமுலுக்கு வந்தது. In article 2 the convention classes all road signs into a number of categories (A - H): நிற்க அடையாளம் நிற்க அடையாளம் ஒரு போக்குவரத்து அடையாளம் ஆகும். இது பொதுவாக சாலைச் சந்திகளில் இருக்கும். எல்லா வேளைகளிலும் முற்றிலும் நின்று, பாதை வெறுமையான பின் செல்லலாம். [[பகுப்பு:போக்குவரத்து அடையாளங்கள்]] [[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]] எச்சரிக்கை அடையாளம் எச்சரிக்கை அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது அபாயங்களை எச்சரிக்கை செய்து அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும். அனேக நாடுகளில் முக்கோண வடிவில், தடிப்பான சிகப்பு எல்லைக் கோடிட்டு, வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டு இருக்கும். சில நாடுகளில் பின்புலம் மஞ்சள் (Amber) ஆகவும் இருக்கலாம். சீனாவில் எல்லைக் கோடு கறுப்பாகவும் பின்புலம் மஞ்சளாகவும் இருக்கும். ஐக்கிய அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ, ஆஸ்திரேலியா, யப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இவை சாய்சதுர வடிவில், தடிப்பான கறுப்பு எல்லைக் கோடிட்டு, மஞ்சள் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டிருக்கும். ஒழுங்குபடுத்து அடையாளம் ஒழுங்குபடுத்து அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டிருக்கும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய அல்லது கட்டுப்பட வேண்டிய போக்குவரத்து அடையாளம் ஆகும். பொதுவாக இவை மீறப்பட்டால் ஓட்டுனர் தண்டனையை ஏற்கவேண்டி நேரிடும். விட்டுக்கொடுத்தல் அடையாளம் சாலைப் போக்குவரத்தில் விட்டுக்கொடுத்தல் அடையாளம் இருக்கும் இடத்தில் ஓட்டுனர் மெதுவாகச் சென்று, தேவைப்படின் நின்று முறை வழியை விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் yield (Canada, Ireland, and the United States) or give way (many[weasel words] Commonwealth countries) என்று எழுதப்பட்டிருக்கும். வழிகாட்டி அடையாளம் வழிகாட்டி அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது ஓட்டுனருக்கு உதவும் வண்ணம் அமைக்கப்படிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும். ஊர்களின் சாலைகளின் பெயர்கள், வெளியேற்றப் பாதைகள், சாலைகளுக்கிடையேயான தூரம் போன்ற தகவல்களையும் வழிகாட்டி அடையாளங்கள் காட்டும். இவை பொதுவாக நீள் செவ்வகம் வடிவில், பச்சைப் பின்புலத்தில், வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். தகவல் அடையாளம் தகவல் அடையாளம் என்பது, பயனாளர்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கான அறிவிப்புப் பலகைகள் எனலாம். இது, ஒரு உண்மை, அல்லது ஒரு நிலைமை அல்லது ஒரு பண்பின் இருப்பை அறிவுறுத்துகின்றது. தகவல் அடையாளங்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுவதுடன், பல்வேறுபட்ட வகைகளாகவும் அமைகின்றன. சாலைப் போக்குவரத்தின் போது, எரிபொருள், உணவு, தங்குமிடம், தகவல் பெறும் இடம், மருத்துவமனை போன்றவை இருக்குமிடங்களை ஓட்டுனருக்கு அறிவுறுத்தும் வண்ணம் அமைக்கப்படிருக்கும் போக்குவரத்து அடையாளங்களும் தகவல் அடையாளங்களே. இது தவிர, பெரிய அங்காடித் தொகுதிகள், மருத்துவமனைகள், பொது அலுவலகங்கள், போக்குவரத்து நிலையங்கள், பொதுப் பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் தகவல் அடையாளங்கள் பயன்படுகின்றன. தகவல் அடையாளங்கள் பல்வேறு பொருட்களால் ஆனவையாகவும், பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவனவாகவும் உள்ளன. தகவல்களைக் கொடுப்பதற்காக இவற்றில் எழுத்துக்களை அல்லது வரையக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். முன்னர் மரப் பலகைகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் எழுத்துக்களையோ படங்களையோ மையினால் வரைந்து தகவல் அடையாளங்களாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் புதுப் புது நுட்பங்கள் உள்வாங்கப்பட்டு அடையாளங்கள் வடிவமைக்கப்பட்டன. தற்காலத்தில் மின்னணுத் தகவல் அடையாளங்கள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். "பேச்சுச் சுதந்திரம்" என்னும் தொடர் பல சமயங்களில் "கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்" என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. தகவலை, கருத்துக்களை, எண்ணக்கருக்களை சுதந்திரமாக ஆக்க, அறிய, பகிர உரிமை இருந்தாலே அரசில் பங்களிப்பு, மக்களாட்சி, பொறுபாண்மை சாத்தியமாகிறது. எங்கு எல்லா விதமான தகவல்கள், கருத்துக்கள், சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆயப்பட்டு, எல்லோடைய கருத்துக்கும் மதிப்புத் தந்து, எதிர்க்கருத்துக்களோடு பரிசோத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ, அந்த முடிவுகள் சிறந்தனவையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். சீனா, கியூபா, வட கொரியா, பார்மா, சவூதி அரேபியா என எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லையோ, அங்கு மக்களாட்சி இல்லை. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது. ஒவ்வொரு தனி மனிதரும் தனது கருத்தை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானது. அந்தச் சுதந்திரம் மனிதருக்கு தன்மதிப்பைத் தருகிறது. அந்த மனிதரின் கூற்றை, பங்களிப்பை சமூகம் பெற்றுக் கொள்ள இசைவு கொடுக்கிறது. இதனால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மனிதனின் பூரணத்துவத்துக்கு அடிப்படையான உரிமையாக பார்க்கப்படுகிறது. ஓவியம், திரைப்படம், இசை, எழுத்து என பலதரப்பட்ட கலைகளில் வெளிப்பாட்டுக்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளமாக உள்ளது. அறிவியலில், தொழிற்துறையில் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை பகிர்வதற்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளாக உள்ளது. யோன் மில்டன் உண்மைய அறிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் என்ற நோக்கில பல வாதங்களை முன்வைக்கிறார். பல்வேறு பார்வைகளில் ஒன்று அலசப்பட்டே, உண்மையை நோக்கிய தேடல் அமைகிறது. அனைத்து தகவல்கள்ளும் முன்வைக்கப்படும்போது, ஒரு திறந்த போட்டியில் உண்மை பொய்மை வெற்றி கொள்ளும் என்கிறார். ஒரு தேசத்தின் ஒற்றுமை பல வேறுபாடுகள் உடைய தனிமனிதர்களை கலப்பதன் மூலமே சாத்தியம். இது மேலிருந்து ஒற்றைப்படையாக (homogeneity) அமுலாக வல்ல ஒரு அம்சம் அல்ல. கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்யின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும். எனினும் பல நாடுகளில் இது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் பினவரும் அடிப்படைச் சுதந்திரங்களை வரையறை செய்கிறது: கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இலங்கை, சீனா, வட கொரியா, கியூபா, சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, உருசியா, பாகிசுத்தான், சூடான் என பல நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. குறிப்பாக மக்களாட்சி இல்லாதா நாடுகளில், அல்லது நலிவுற்ற நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. இந்தியாவில் மிக கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. எ.கா இந்தியாவில் திரைப்படத் தணிக்கை, அரசியல் பேச்சுத் தணிக்கைய் ஆகியவை உள்ளன. ஊடக சுதந்திரச் சுட்டெண், தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் போன்ற சுட்டெண்கள் எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்கள் மீறப்படுகின்றது என்பதை மேலும் காட்டுகின்றன. அணுக்கருப் பிளவு அணுக்கரு பிளவு ("Nuclear fission") அணுக்கரு வினையாலோ அல்லது கதிரியக்கச் சிதைவாலோ ஏற்படலாம். இதில் அணு ஒன்றின் அணுக்கரு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுவெடை குறைந்த தனிம அணுக்கருக்களாக பிளவுறும். மேலும், இவ்வணுக்கருப் பிளவின்போது, கூடுதலாக விடுதலையாக இயங்கும் நொதுமிகளும் காம்மா வடிவத்தில் ஒளியன்களும் வெளிப்படுகின்றன. அடர் தனிமங்களின் அணுக்கருப் பிளவின் போது, மிகப் பெரிய அளவில் ஆற்றல், மின்காந்த அலைகள் ஆகவும் பிளவுப்பொருள்கள், நொதுமிகளின் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன. இயல்பான கதிரியக்கச் சிதைவினை ஒப்பிட்டாலும் இந்த ஆற்றலின் அளவு மிகப் பாரியதாகும். 1939 ஆம் ஆண்டில் திசம்பர் 17 இல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆட்டோ ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும் பொழுது யுரேனியம் அணுக்கரு நொதுமிகளால் தாக்கப்படும்போது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுவெடை குறைந்த அணுக்கருக்களாகப் பிளவுறுவதையும் 200 மெகா எலெக்ட்ரான் வோல்ட் அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர். இது பின்னர் இலைசு மெய்த்னராலும் ஆட்டோ இராபர்ட் பிரிச்சாலும் 1939 இல் கோட்பாட்டுவழி விளக்கப்பட்டது. பிரிச்சு இந்நிகழ்வை உயிரியல் நிகழ்வாகிய உயிர்க்கலப் பிளவு அல்லது பிரிகையோடு ஒப்பிட்டார். இந்த அணுக்கரு வினை வெப்பம் உமிழ்வினையாகும்அணுக்கருப் பிளவில் ஆற்றல் உருவாக, பிளவுறும் தனிமத்தைவிட பிளவில் வெளிப்படும் பிளவுத்தனிமங்களின் மொத்தப் பிணைவாற்றல் குறைவாக, அதாவது உயர் ஆற்றலோடு, அமையவேண்டும். அணுக்கரு பிளவு ஒரு தனிம மாற்ற நிகழ்வாகும். ஏனெனில், பிளவில் வெளியிடப்படும் தனிமங்கள், பிளவுறும் தனிமத்தை ஒப்பிடும்போது, வேறுபட்ட வேதித் தனிமங்களாக அமைகின்றன. பிக்லவில் உண்டாகும் இருதனிமங்கள் பெரும்பாலும் ஒத்தவையாக இருந்தாலும் அவற்றின் உருவளவு சற்றே வேறுபடுகிறது. அவற்றின் பொருண்மை விகிதம், வழக்கில் உள்ள பிளவியன்ற ஓரகத்தனிமங்களுக்கு, மூன்றில் இருந்து இரண்டு வரை வேறுபடுகிறது.பெரும்பாலான பிளவுகள் இரும வகையின. அதாவ்து இரண்டு மின்னூட்டபகவுகளைத் தருகின்றன. சிலவேளைகளில், 1000 நிகழ்வுகளில் இரண்டில் இருந்து நான்கு வரையிலான நேர்வுகளில் மூன்று நேர்மின்னூட்டப் பகவுகள் ஏற்படுவதுண்டு. அதாவ்து மிம்மைப் பிளவு நேர்வதுண்டு. இதி உருவாகும் பகவுப் பொருள்கள் முன்மியில் இருந்து ஆர்கான் அணுக்கரு வரை அமையலாம். நொதுமித் தூண்டலால் அணுக்கருப் பிளவு வழி ஆற்றல் பெறுவதோடு மட்டுமன்றி, இயற்கையில் உயர்-பொருண்மை- எண் ஓரகத் தனிமங்களில் கதிரியக்கச் சிதைவால் தன்தூண்டல் வழி அணுக்கருப் பிளவு நேர்வதும் உண்டு. இதைப் பிளியோரோவ், பெத்ருசாக், குர்ச்சதோவ் ஆகியோர் 1940 அளவில் கண்டுபிடித்தனர். iமாஸ்கோவில் இவர்கள் நீல்சு போரின் முன்கணிப்பின்படி, நொதுமியால் தகர்க்கப்படாமல் நிகழும் யுரேனியத்தின் பிளவு வீதம் புறக்கணிக்கத்தக்கது என்பதை நிறுவ, இவர்கள் முயன்றபோது அக்கூற்று உண்மையல்ல என்பது விளங்கலானது. அணுக்கருப் பிளவு, தான் வெளியிடும் விளைபொருள்களின் முன்கணிக்க இயலாத தன்மையால், முன்மி உமிழ்வு, ஆல்பாச் சிதைவு, கொத்துச் சிதைவு போன்ற ஒவ்வொரு முறையும் ஒத்த விளைபொருளையே தரும் தூயக் குவையத் துளைப்பு நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும். அணுக்கருப் பிளவு, அணுமின் நிலையம் வழி மின்னாக்கத்துக்கும் அணுகுண்டு வெடிப்புக்கும் தேவைப்படும் ஆற்றலைத் தருகிறது. அணுக்கரு எரிமங்கள் பிளக்கும் நொதுமிகளால் மொத்தப்பட்டுப் பிளந்ததும் மேலும் புதிய நொதுமிகளை உருவாக்குகிறது. இப்புதிய நொதுமிகள் இந்நிகழ்வு தானே நீடிக்கும் அணுக்கருத் தொடர்வினையை உருவாக்குகின்றன. எனவே, அணுக்கரு உலைகளில் கட்டுபடுத்திய அணுக்கருத் தொடர்வினையால் மின்னாக்கமும் அணுகுண்டுகளில் மிகுந்த வேக்க் கட்டுப்படுத்தாத அணுக்கருத் தொடர்வினையால் பெருவெடிப்பும் ஆகிய இரு பயன்பாடுகளுமே இயல்வதாகின்றன. அணுக்கரு எரிமங்களின் கட்டற்ற வெப்ப இயங்காற்றல். பாறைநெய் (காசோலின்) போன்ற வெதிமங்களின் கட்டற்ற வெப்ப இயங்காற்றலைவிட பல மில்லியன் மடங்காக அமைதலால். அணுக்கருப் பிளவு மிக அடர்ந்த ஆற்றல் வாயிலாகும். அணுக்கருப் பிளவு விளைபொருள்கள் பிளவுறும் உயரடர் தனிமங்கலை விட கூடுதலான தொடர்கதிரியக்கம் உள்ளவையாகும். இது கதிரியக்கக் கழிவுபொருள் சிக்கலை உருவாக்குகிறது. இக்கதிரியக்க்க் கழிவுப்பொருள்களின் திரள்வும் அணுகுண்டுகள் உருவாக்கும் அணுக்கருப் கதிர்பொழிவின் சிக்கலும் அணுக்கரு மின்னாக்க நலங்களை ஈடுகட்டி அணுக்க்ரு ஆற்ரல் சார்ந்த அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அணுக்கருப் பிளவு நொதுமிவழி மொத்தல் இன்றியும் கதிரியக்கச் சிதைவால் ஏற்படலாம். இந்த வகைப் பிளவு தன்னியல்புப் பிளவு எனப்படுகிறது. தன்னியல்புப் பிளவு மிக அருகியே சில உயர் அணுவெடை ஓரகத்தனிமங்களில் மட்டுமே நிகழ்கிறது. அணுக்கரு பொறியியல் அமைப்புகளில் நிகழும் அணுக்கருப் பிளவு அணுக்கரு வினை எனப்படுகிறது. பெரும்பாலும் இது இரு அணுவகத் துகள்களின் மொத்தலாலேயே நிகழ்கிறது. அணுக்கரு வினைகளில், ஓர் அணுவகத் துகள் அணுக்கருவை மொத்தி, அதில் மாற்றங்களை உண்டாக்குகிறது. எனவே, அணுக்கரு வினைகள் மொத்தல் இயக்கத்தாலேயே நிகழ்கின்றனவே அன்றி, நிலையான இயல்வளர்ச்சிச் சிதைவாலும் தன்னியல்புக் கதிரியக்க நிகழ்வுகளின் அரைவாணாள் பான்மையாலும் ஏற்படுவதில்லை. நடப்பில் பல அணுக்கரு வினைவகைகள் அறியப்பட்டுள்ளன. அணுக்கருப் பிளவு மற்ர அணூக்கரு வினைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. எனெனில் முன்னதை அணுக்கருத் தொடர்வினையின் கட்டுபாட்டின்வழி மிகைப்படுத்தலாம் அல்லது வேண்டிய வீத்த்துக்குக் கட்டுபடுத்தலாம். இத்தகைய வினையில், ஒவ்வொரு பிளவிலும் விடுபடும் கட்டற்ற நொதுமிகள் மேலும் பல பிளவு நிகழ்வுகளை முடுக்கலாம். அவை மேலும் பல கட்டற்ற நொதுமிகளை விடுவிக்கச் செய்து மேலும் கூடுதல் பிளவுகளை ஏற்படுத்தலாம். அணுக்கருப் பிளவுத் தொடர்வினையை நிலைநிறுத்தவல்ல ஓரகத் தனிமங்கல் அணுக்கரு எரிமங்கள் எனப்படுகின்றன. இவை பிளக்கமுடிந்தன வாகும். பரவலாக வழக்கில் உள்ள அணுக்கரு எரிமங்களாக, யுரேனியம்-235 (இது அணுக்கரு உலைகளில் பயன்படும் அணுப்பொருண்மை 235 ஆகவுள்ள யுரேனியத்தின் ஓரகத் தனிமம்), புளூட்டோனியம்-239 (இது அணுப்பொருண்மை 239 ஆகவுள்ள புளூட்டோனியத்தின் ஓரகத் தனிமம்) ஆகியவை அமைகின்றன. இந்த எரிமங்கள் 95, 135 அணுப்பொருண்மைகளை மையமாக்க் கொண்டமைந்த இரண்டு வேதித் தனிமங்களாக இருமுறைமை நெடுக்கத்தில் பிளவுறும்;யு (பிளவுப் பொருள்கள்). அனைத்து அணுக்கரு எரிமங்களும் மெதுவான வேகத்தில் தன்னியல்புப் பிளவுக்கு ஆட்படுகின்றன. அவை அப்படி ஆல்பாத் துகள்களை/ பீட்ட்த் துகள்களைத் தொடர்ந்து வெளியிட்டபடி சிஹைவுறும். இச்சிதைவு வாணாள் பல மில்லியன் ஆண்டுகளில் இருந்து பல புவியியல் பேரூழிகள் வரை தொடரும். அணுக்கரு உலையில் அல்லது அணுக்கரு ஆயுதங்களில் பெரும்பாலான பிளவு நிகழ்வுகள் நொதுமியைப் போன்ற துகள்களின் மொத்தலால் தூண்டப்படுகின்றன. இந்நொதுமி முந்தைய பிளவுகளின் விளைபொருளாகும். பிளக்கவல்ல அணுக்கரு ஒரு நொதுமியைக் கவர்ந்ததும் உருவாகும் அணுக்கரு கிளர்வு ஆற்றல் விளைவால் அந்த அணுக்கரு பிளவுறுகிறது. நொதுமிக் கவர்வால் ஏற்படும் இந்த ஆற்றல், நொதுமிக்கும் அணுக்கருவுக்கும் இடையில் செயல்படும் அணுக்கரு ஈர்ப்பு விசையால் ஏற்படுகிறது.ஈரிதழ் துளியாக அணுக்கரு உருக்குலைந்ததும், இரு அணுக்கரு மின்னூட்டப் பகவுகள் கட்டுறும் தொலைவை மிஞ்சும்போது, அந்த இரு பகவுகளும் தனியாகப் பிரிந்து, தம் இடையே அமையும் விலக்க மின்னூட்டங்களால் மேலும் தொலைவாகச் செல்லும். எனவே, தொலைவு மிகமிக இப்பிரிதல் நிகழ்வு மீளிணைய முடியாததாக மாறும். பிளவியன்ற யுரேனியம்-238 போன்ற ஓரகத் தனிமங்களில் இத்தகைய நிகழ்வு ஏற்படுகிறது. ஆனால் இதற்கு,இந்த ஓரகத் தனிமங்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. இதை வெப்ப அணுக்கரு ஆயுதங்களில் அணுக்கருப் பிளவை நிகழ்த்தும் மீவேக நொதுமிகள் தேவைப்படுகின்றன. அணுக்கருவின் நீர்மத் துளிப் படிமம் இரு சம உருவளவு பிளவுப்பொருள்களை அணுக்கரு உருக்குலைவின்போது ஏற்பட்ம் என முன்கணிக்கிறது. பிளவுப்பொருள் ஒன்றை விட மற்றொன்று சற்றே சிறியதாக அமையும் கூடுதலான ஆற்றல்வாய்ந்த விளைவை இயக்கவியலாக விளக்க மேலும் நுட்பமான அணுக்கருக் கூடு வடிவப் படிமத்தின் தேவை வேண்டப்படுகிறது. இத்தகைய கூடுவடிவப் படிமப் பிளவுக் கோட்பாடு மரியா கோயப்பர்ட் மேயர் எனும் வானியலாளரால் முன்மொழியப்பட்டது. இயல்பான பிளவு நிகழ்வு பெரும்பான்மையாக இருமப் பிளவாகவே அமைகிறது. இது பிளவுப் பொருள்களை, 95±15, 135±15 யு நெடுக்கத்தில் உருவாக்குகிறது. ஏனெனில், இந்த இருமைப் பிரிவு நிகழ்வே மிகவும் வாய்ப்புள்ளதாக நடப்பில் அமைகிறது. சிலவேளைகளில் 1000 நிகழ்வுகளில் 2 முதல் 4 நிகழ்வுகள் மும்மைப் பிளவாகவும் அமைகிறது. இதில் நொதுமிகளோடு, மூன்று நேர்மின்னூட்டப் பகவுகள் விளைகின்றன. இவற்றில் மிகச் சிறிய பகவு முன்மி (proton) (Z=1)எனும் சிறு மின்னூட்டமுள்ள பகவில் இருந்து ஆர்கான் (argon) (Z=18) எனும் பெஇய பகவு வரை அமையலாம். இந்நிகழ்வில் உருவாகவல்ல சிறிய பகவுகள், பெரும்பாலும் ஆல்பாச் சிதைவில் 90% ஆல்பாத் துகளினும் கூடுதல் ஆற்றல் வாய்ந்த எல்லியம் (helium)-4 அணுக்கருவும் ("long range alphas" at ~ 16 MeV), எல்லியம் (helium)-6 அணுக்கருவும் டிரிட்டான்கள் எனும் டிரைட்ரியம் அணுக்கருவும் ஆகும். என்றாலும் மும்மை நிகழ்வு மிக அருகியே நிகழ்ந்தாலும், இக்கால அணுக்கரு உலைகளின் எரிமத் தண்டுகளில் கணிசமான எல்லியம்-4, டிரைட்ரியம் வளிமம் திரள்கிறது. அடர் அணுக்கருக்களைப் பிளக்க 7 முதல் 8 மெகா எலெக்ட்ரான் வோல்ட் அளவுக்கு மொத்த உள்ளீட்டு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் கோள வடிவில் உள்ள அணுக்கருவைப் பிணத்துகொண்டுள்ள விசையைத் தொடக்கநிலையில் எதிர்கொள்ளவும் பின்னர் அதை இரு இதழ்களாக பிளக்கவும் தேவையாகிறது. இந்தப் பிளவுண்ட பட்டாணி வடிவ அணுக்கருக்கள் தம் நேர்மின்னூட்டங்களின் விசையால் ஒன்றுக்கொன்று தனியாக நிலவுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில் இருமைப் பிளவுகளே ஏற்படுகின்றன. பிளவுண்ட அணுக்கரு இதழ்கள் வல்விசை அவற்றை ஈர்க்க முடியாத தொலைவுக்குப் பிரியும்போது. குறுந்தொலைவில் மட்டுமே செயல்படும் வல்விசை அவற்றை ஈர்த்து ஒன்றுசேர்க்கவியலாது. எனவே பிரிப்பு நிகழ்வு, பிளவுத் துண்டங்களின் நீள்நெடுக்க மின்காந்த விலக்கத்தால் தொடர்ந்து செயல்படும். இதனால். இரு பிளவுத் துண்டங்களும் உயர் ஆற்றலுடன் வேகமாக ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்லும். வல்விசை வழியாக அடர் அணுக்கருக்களுக்கு கூடுதலாக ஒரு நொதுமியை எளிய முறையில் பிணைத்து ஏரத்தாழ 6 MeV பிளவு உள்ளீட்டு ஆற்றலை வழங்கலாம்; என்றாலும், பல பிளக்கவியலும் ஓரகத் தனிமங்களில், இந்த ஆற்றலின் அளவு அணுப்பிளவுக்குப் போதுமானதல்ல.எடுத்துகாட்டாக, யுரேனியம்-238, ஒரு MeV ஆற்றலுக்கும் குறைந்த நொதுமிகளுக்கு சுழி பிளவு குறுக்கு வெட்டுமுகத்தைக் கொண்டுள்ளது. வேறு வாயிலால் கூடுதல் ஆற்ரல் தரப்படாவிட்டால் அணுக்கரு பிளவுற வாய்ப்பில்லை. ஆனால், இது அந்த குறை வேக அல்லது மிகுவேக நொதுமியை உறிஞ்சி, யுரேனியம்-238 ஆக மாறுகிறது. பிளவை நிகழ்த்த வேண்டப்படும் எஞ்சிய ஆற்றலை இருவழிகளில் தரலாம். இவற்றில் ஒருவழி நாம் உள்ளனுப்பும் மீவிரைவு நொதுமி இயக்க ஆற்றலாகும். இது தன் ஒரு MeV ஆற்றலுக்கும் சற்றே கூடுதலான ஆற்றலைப் பெற்றுள்ளதால் பிளக்கவியலும் அடர் அணுக்கருக்களை எளிதாகப் பிளக்கும். இத்தகைய உயர் ஆற்றல் நொதுமிகள் யுரேனியம்-238 அணுக்கருவை நேரடியாகப் பிளக்கவல்லன. வெப்ப அணுக்கரு ஆயுதப் படைப்பில், மீவிரைவு நொதுமிகள் அணுக்கருப் பிணைவால் வழங்கப்படுகின்றன. என்றாலும், அணுக்கரு உலைக்குள் இந்நிகழ்வு உண்டாக வாய்ப்பில்லை.ஏனெனில், எந்தவகை அணுக்கருப் பிளவிலும் யுரேனியம்-238 அணுக்கருவைப் பிளக்கவல்ல மிக்க் குறைவான் நொதுமிகளே உருவாகின்றன. அந்நொதுமிகளின் நடுவண் ஆற்றல் 2 MeV ஆகவும் நிரல் ஆற்றல் 0.75 MeV ஆகவும் அமைவதால், கிட்டதட்ட அரைப்பகுதியளவு நொதுமிகள் மிகக் குறைந்த ஆற்ற்லையே பெற்றுள்ளன. அடர் கதிரியக்கத் தனிமங்களில், U-235 போன்ற (143 நொதுமிகள் கொண்டுள்ளது) ஒற்றைப்படை எண்ணிக்கை நொதுமிகள் கொண்டவற்றில் ஒரு கூடுதல் நொதுமி 1 முதல் 2 MeV கூடுதல் ஆற்றலைப் பெற்றுள்ளது. இது அதே தனிமத்தின் இரட்டைப்படை எண்ணிக்கை கொண்டவற்றை விட (146 எண்ணிக்கை நொதுமிகள் கொண்டுள்ள U-238 ஐப் போன்றன) கூடுதலான ஆற்றலாகும்.இந்த கூடுதல் ஆற்றல் நொதுமி இணையாக்க இயங்கஐவின் விளைவுகள்ளால் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் ஆற்றல் பாலியின் தவிர்ப்பு நெறிமுறையால் உருவாகிறது. பாலி தவிர்ப்பு நெறிமுறை அனுக்கருவின் கடைசி வட்டணைப் பட்டையில் கூடுதலாக ஒரு கூடுதல் நொதுமியை இருக்க விடுகிறது. எனவே, இவை இரண்டும் இணையாக அந்த வட்டணைப் பட்டையில் நிலவ முடிகிறது. இதனால், இவ்வகை ஓரகத் தனிமங்களில், கூடுதல் நொதுமியின் இயக்கவாற்றல் தேவைப்படுவதில்லை. ஏனெனில், தேவைப்படும் ஆற்றல் அனைத்தும் மெதுவேக அல்லது மீவேக நொதுமி உறிஞ்சலால் பெறப்படுகிறது. மெதுவேக நொதுமியின் உறிஞ்சல் அணுக்கரு உலைகளிலும் மீவேக நொதுமியின் உறிஞ்சல் மீவேக அணுக்கரு உலைகளிலும் அணுவாயுதங்களிலும் நிகழ்கின்றன. மேலே கூறியபடி, தனது நொதுமிகளாலேயே திறம்பட பிளக்கவியன்ற தனிமங்களின் துணைக்குழு பிளப்பியன்றன என வழங்கப்படுகிறது. இவை அணுக்கருத் தொடர்வினையைத் தூய தனிமத்தின் சிற்றளவு பொருளைக் கொண்டே உருவாக்குகின்றன. இவ்வகைப் பிளக்கவியன்ற ஓரகத்தனிமங்களுக்கான எடுத்துகாட்டுகள் U-235 , புளூட்டோனியம்-239 போன்றனவாகும். வகைமைப் பிளவு நிகழ்வுகள் ஒவ்வொரு பிளவு நிகழ்வுக்கும் 200 மெகா எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றலை வெளியிடுகின்றன. பிளக்கப்படும் ஓரகத் தனிம வகைக்கோ அது பிளக்கவியன்றதா அல்லது பிளக்கவியலாத தா என்பதற்கோ ஒவ்வொரு பிளவு நிகழ்வில் வெளியிடும் ஆற்றல் அளவு மாறாது. இதைக் கீழுள்ள பிணைவாற்றல் வரைவில் இருந்து அறியலாம். பட்த்தில் யுரேனியத்தில் இருந்து தொடங்கும் கதிரியக்க அணுக்கருக்களின் பிணைவாற்றல் ஒவ்வொரு அணுக்கருவனுக்கும் ஏறத்தாழ 7.6 MeV ஆக அமைதலைக் காணலாம். பிணைவாற்றல் வரைவில் மேலும் இடது பக்கத்தில் பார்க்கும்போது, பிளவு விளைபொருள்கள் கொத்தாகத் திரண்டிருப்பதையும் அங்கே ஒவ்வொரு அணுக்கருவனுக்குமான பிணைவாற்றல் 8.5 MeV ஆற்றலைச் சுற்றியே அமைவதை நோக்கலாம்.கதிரியக்கத் தனிமப் பொருண்மை நெடுக்க ஓரகத் தனிமத்தின் பிளவு நிகழ்வில், வினைதொடங்கும் தனிமத்தின் ஒவ்வோர் அணுக்கருவனுக்கும் ஏறத்தாழ 0.9 MeV ஆற்றல் வெளியிடப்படுகிறது. மெதுவான நொதுமி மொத்தும் U235 பிளவிலும் மீவேக நொதுமி மொத்தும் U238 பிளவிலும் முற்றொருமித்த ஆற்றல் அள்வே வெளியிடப்படுகிறது. இந்த ஆற்றல் வெளியீட்டளவு தோரியத்துக்கும் மற்ற கதிரியக்கத் தனிமங்களுக்கும் கூட பொருந்தும். மாறாக, நிலக்கரி எரிதல், டிரைநைட்ரோடொலுயீன் வெடிப்பு போன்ற வேதிவினைகளில் ஒரு நிகழ்வில் சில எலெக்ட்ராம் வோல்ட் ஆற்றலே வெளியிடப்படுகிறது. எனவே அணுக்கரு எரிபொருள் வேதி எரிபொருளை விட பத்து மில்லியன் மடங்கு ஆற்றல் அடர்த்தியைக் (அலகு பொருண்மைக்கான ஆற்றல்) கொண்டுள்ளது. அணுக்கரு பிளவின் ஆற்றல் பிளவுப் பொருள்கள், பகவுப்பொருள்களின் இயக்க ஆற்றலாகவும் காமாக் கதிர்களின் மின்காந்த ஆற்றலாகவும் வெளியிடப்படுகிறது; அனுக்கரு உலைகளில், பிளவுப் பொருள்கள், காமாக் கதிர் ஆற்றல் உலையின் பொருளோடும் அதன் செயலாக்கப் பாய்மத்தோடும் மோதி வெப்பமாக மாறுகிறது. உலைப் பாய்மமாக நீரோ அல்லது அடர்நீரோ அல்லது உருகிய உப்புகளோ பயன்படும். ஒரு யுரேனியம் அணுக்கரு பிளவுற்று 0.1% அளவுக்கான யுரேனியத்தின் பொருண்மையுள்ள இரண்டு சேய் அணுக்கருக்கள் ஆகும்போது ~200 MeV பிளவு ஆற்றல் தோன்றும். யுரேனியம்-235 தனிமத்தின் மொத்தச் சராசரி பிளவு ஆற்றலில், அதாவது 202.5 MeV அளவில் ~169 MeV அளவு ஆற்றல் சேய் அணுக்கருவின் இயக்க ஆற்றலாகத் தோன்றும். எனவே சேய் அணுக்கரு கூலம்பு விலக்க விசையால் 3% அளவு ஒளியின் விரைவுடன் பறந்து விலகும். மேலும் சராசரியாக, 2.5 நொதுமிகள் உமிழப்படும். இத நொதுமி ஒவ்வொன்றும் சராசரியாக ~2 MeV (மொத்தமாக, 4.8 MeV) இயக்க ஆற்றலைப் பெற்றிருக்கும் . பிளவு வினை மேலும் தோராயமாக, 7 MeV அளவு ஆற்றலை உடனடிக் காமாக் கதிர் ஒளியன்களாக (மின்காந்த அலைகளாக) வெளியிடுகிறது. எனவே, அனுக்கரு பிளவு வெடிப்பு அல்லது உய்யநிலை நேர்ச்சி, 3.5% அளவுக்கான தன் ஆற்றலை காமாக் கதிர்களாகவும் 2.5% அளவுக்கும் குறைவான ஆற்றலை மீவேக நொதுமிகளாகவும் ( இருவகைக் கதிர்வீச்சுகளின் மொத்த ஆற்றல் அளவு ~ 6%) எஞ்சிய ஆற்றலை பிளவுத் துண்டங்களிலும் (இது சூழ்ந்துள்ள பொருளோடு மோதும்போது வெப்பமாக மாறும்) வெளியிடுகிறது. அணுகுண்டுகளில் இந்த வெப்ப ஆற்றல் குண்டு அகட்டின் வெப்பநிலையை 100 மில்லியன் கெல்வின் அளவுக்கு உயர்த்தி, மென் X-கதிர்களைத் துணை உமிழ்வாகத் தருகிறது. இந்த மென் X-கதிர் ஆற்றலின் ஒரு பகுதி மின்னணுவாக்க கதிர்வீச்சை உருவாக்குகிறது. என்றாலும், அணுக்கரு உலைகளில், பிளவுத் துண்ட இயக்க ஆற்றல் குறைந்த வெப்பநிலையிலேயே வெப்ப ஆற்றலாக நிலவுகிறது. எனவே, மின்னணுவாக்கம் ஏதும் நிகழ்த்துவதில்லை. நொதுமி அணுகுண்டுகள் (கதிர்வீச்சு மேம்படுத்திய ஆயுதங்கள்) கட்டிய்மைக்கப்பட்டுள்ளன. இவை தம் ஆற்றலின் பெரும்பகுதியை மின்னணுவாக்க்க் கதிர்வீச்சாக வெளியிடுகின்றன (குறிப்பாக நொதுமிகளாக வெளியிடுகின்றன). இவை கூடுதல் கதிர்வீச்சுக்கு அணுக்கரு பிணைவுக் கட்டத்தை உடைய வெப்ப அணுக்கரு கருவிகளாகும். ஆனால், பிலவுவழி அணுகுண்டுகள் தம் மொத்த ஆற்றலில் 6% அளவுக்கே பிளவு நிகழ்ந்த உடனே கதிர்வீச்சை வெளியிட வல்லன. மொத்த உடனடி பிளவு ஆற்றல் ஏறத்தாழ 181 MeV அல்லது ~ 89% அளவு மொத்த தொகுநேர பிளவு ஆற்றலுக்குச் சமமாகும். எஞ்சிய ~ 11% அளவு ஆற்றல் பல்வேறு அரை வாணால் கொண்ட பீட்டா சிதைவுப் பொருள்களால் வெளியிடப்படுகிறது. என்றாலும் இந்தப் பகுதி ஆற்றல் புஇளவு நிகழ்ந்த உடனே தொடங்கி விடுகிறது; அதோடு தொடர்ந்து நிகழும் பீட்டாச் சிதைவுகளுடன் இணைந்த காலந்தாழ்த்திய காமாக் கதிர்களின் உமிழ்வுகளோடு தொடர்கிறது. எடுத்துகாட்டக, யுரேனியம்-235 எரிமத்தில் இந்த கால்ந்தாழ்த்திய ஆற்றல் ஏறத்தாழ 6.5 MeV அளவு ஆற்றல்i பீட்டச் சிதைவுகளிலும், 8.8 MeV அளவு எதிர்நொதுமிகளிலும் (இவை பீட்டாக்கள் வெளிய்டப்படும்போதே வெளியிடப்படுபவை) கடைசியாக, கூடுதலான 6.3 MeV அளவு ஆற்றல் கிளர்வுற்ற பீட்டாச் சிதைவுப் பொருள்களில் இருந்து உமிழப்படும் காலந்தாழ்த்திய காமாக் கதிர்களின் ஆற்றலில் அமைகிறது (மொத்த்த்தில் ஒரு பிளவுக்கு சராசரியாக பத்து காமாக் கதிர் உமிழ்வுகள் ஏற்படுகின்றன). எனவே, கிட்ட்தட்ட மொத்த ஆற்றலின் 6.5% அளவு பிளவு நிகழ்வுக்குப் பின்னர் சிறிது நேரம் கழித்து கால்ந்தாழ்த்திய மின்னணுவாக்க கதிர்வீச்சாக வெளியிடப்படுகிறது. இந்த கால்ந்தாழ்த்திய மின்னணுவாக்க ஆற்றல் சீராக காமா, பீட்டாக் கதிர்களின் ஆற்றகளுக்கு இடையில் பிரிந்தமைகிறது. செப்டம்பர் 2008 செப்டம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாதி மாதம் செப்டம்பர் 17 புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 16 வியாழக்கிழமையில் முடிவடைகிறது. அக்டோபர் 2008 அக்டோபர் 2008, 2008 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 17 வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பர் 15 சனிக்கிழமையில் முடிவடைகிறது. நவம்பர் 2008 நவம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் பதினோராம் மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 15 திங்கட்கிழமையில் முடிவடைகிறது. விண்டோஸ் 3.0 விண்டோஸ் 3.0 விண்டோஸ் குடும்ப இயங்குதளத்தில் 3ஆவது அங்கத்துவர் ஆவார். இது 22 மே 1990 இல் வெளிவந்தது. இதுவே பெருமளவு பயனர்களை கவர்ந்த முதலாவது விண்டோஸ் இயங்குதளம் ஆகும். வரைகலைப் பணிச்சூழலில் ஆப்பிள் மாக்கிண்டோஷ் மற்றும் அமிகா ஆகியவற்றின் பிரதான போட்டியாளர் ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. விண்டோஸ் 3.1 இதன் வழிவந்த அடுத்த இயங்குதளம் ஆகும். விண்டோஸ் 3.0 இயங்குதளம் ஆனது விண்டோஸ் 2.1x இன் வழிவந்ததாகும். இந்த இயங்குதளத்தில் பயனர் இடைமுகத்தில் பெருமளவு மாற்றங்களும் வினைத்திறனாக தற்காலிக நினைவகத்தை (ராம்) 286 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 80286 மற்றும் 386 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 386 (கையாளுவதற்கான வழிவகைகளும் மேம்படுத்தப்பட்டது. விண்டோஸ் 3.0 இயங்குதளத்தின் ஆகக்குறைந்த அதிகாரப் பூர்வத் தேவைகளானது. டிசம்பர் 2008 டிசம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது (கடைசி) மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜனவரி 13 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது. பீட்டா சிதைவு பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு ("Beta decay") என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு ' எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு ' எனவும் அழைக்கப்படுகிறது. தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை () புரோத்தன் () ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் () எதிர்நியூத்திரீனோவையும் ("antineutrino", ) வெளிவிடுகின்றது.: சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (), ஒரு நியூத்திரினோ () ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது: இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஓரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்பின் முக்கிய நோக்கு: "பாரம்பரிய அறிவியல் முறைகள் இன்றைய வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருத்தமானவை என்பதை ஆராய்வதும் பாரம்பரிய அறிவியல் சார்ந்த நடைமுறைக்கு உகந்த பயன்பாட்டு உத்திகளை உருவாக்குவதும்" ஆகும். இந்த நிறிவனத்தின் இணையத் தளம் தமிழிலும் இருப்பது ஒரு சிறப்பு. மனித விண்வெளிப்பறப்பு மனித விண்வெளிப்பறப்பு என்பது, மனிதப் பணிக்குழுவினரும் சில சமயங்களில் பயணிகளையும் கொண்ட விண்வெளிப்பறப்புக்கள் ஆகும். இந்த இயல்பு, இயந்திரங்களால் இயக்கப்படும் விண்வெளிப்பறப்பிலிருந்தும், தொலைவில் இருந்து இயக்கப்படும் பறப்புக்களில் இருந்தும், மனித விண்வெளிப்பறப்பை வேறுபடுத்துகின்றது. தற்போதைய நிலையில் (2008), அமெரிக்க விண்வெளிப் பயணத் திட்டம், ரஷ்ய சோயூஸ் திட்டம், சீன சென்சூ திட்டம் என்பன மட்டுமே முனைப்பாக மனித விண்வெளிப்பறப்புக்களை நடத்தியுள்ளன. கிறிஸ்து ஆண்டுகளின் தொடக்க காலத்தில் கிரேக்கரான லூசியான் என்பவர் விண்வெளிப்பறப்புப் பற்றிய "உண்மை வரலாறுகள்" (True Histories) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இந்நூல் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றது பற்றிய புழுகுகளும், நம்பமுடியாத கதைகளும் கொண்ட ஒரு பயணக்கதை ஆகும். இன்று இதைக் கடந்த கால மக்களின் ஒரு கற்பனையாகப் புறந்தள்ளி விடலாம். ஆனாலும், அக்கால மக்களிடையே விண்வெளி பற்றியும், விண்வெளிப்பயணம் பற்றியும் ஆர்வத்தைத் தூண்டியது என்ற அளவில் இந் நூல் குறிப்பிடத்தக்கது ஆகும். 1638 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான ஹேர்பர்ட் எஸ், சிம் என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், மிங் மரபுக் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான வான் ஹூ என்பவர் வாணங்களின் உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். புகை மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை. மனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது. வஸ்தோக் 1 வஸ்தோக் 1 ("Vostok 1", என்பது உலகின் முதலாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். வஸ்தோக் என்னும் சொல் ரஷ்ய மொழியில் "கிழக்கு" என்னும் பொருள் கொண்டது. இவ்விண்கலம் வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகலம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலம் யூரி ககாரின் என்ற முதல் விண்வெளிப்பயணியை ஏற்றிச் சென்றது. முதன் முதலாக ஒரு மனிதன் விண்வெளிக்குப் பயணித்ததும், சுற்றுப்பாதையுள் நுழைந்ததும் வஸ்தோக் 1 திட்டத்தின் மூலமே ஆகும். வஸ்தோக் 1, சோவியத் விண்வெளித் திட்டத்தைச் சேர்ந்த ஏவுகணை அறிவியலாளர்களான செர்கே கொரோல்யோவ், கெரிம் கெரிமோவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 12ல் விண்ணில் செலுத்தப்பட்ட வஸ்தோக் 1 விண்கலம் 27400 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. கடல் மட்டத்திலிருந்து 327 கிமீ உயரத்தில் சென்று பூமியைச் சுற்றியது விண்கலத்தில் பயணம் செய்த யூரி சுகாரின் பூமியை ஒரு முறை வலம் வந்தார். பின்பு விண்கலத்தில் இருந்து வெளியேறி பாராசூட்டின் உதவியால் தரை இறங்கினார். இந்த விண்கலப் பயணம் 108 நிமிடத்தில் முடிந்தது. இந்த விண்கலப் பயணம் விண்வெளியில் மனிதன் உயிர்வாழ்தல் இயலும் என்று நிறுபித்தது. வஸ்தோக் 2 வஸ்தோக் 2 ஒரு சோவியத் விண்வெளித் திட்டம் ஆகும். இது, நீண்டநேர நிறையில்லா நிலையில் உடலில் ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிவதற்காக கெர்மன் டிட்டோவ் என்னும் விண்வெளிப்பயணியை ஒரு முழு நாள் புவியின் சுற்றுப்பாதையில் வைத்திருந்தது. யூரி ககாரினைப் போலன்றி, டிட்டோவ் சிறிது நேரம் விண்கலத்தைத் தனது கட்டுப்பாட்டில் இயக்கினார். ஒரு விண்வெளி நோய், சூடாக்கி ஒன்று சரிவர இயங்காமல் வெப்பநிலை 6.1 °ச (43 °ப) வுக்கு இறங்கியமை, சேவைக்கலத்தில் இருந்து, மீள்கலம் உரிய முறையில் பிரிய முடியாதிருந்தமை போன்ற பிரச்சினகளின் மத்தியிலும், இத் திட்டம் பெருமளவு வெற்றியாகவே முடிந்தது. வஸ்ஹோத் திட்டம் உருவாக்கப்பட்டபோது மீள்கலம் அழிக்கப்பட்டது. 2008 ஆண்டு வரை, டிட்டோவோ மிகவும் குறைந்த வயதில் விண்வெளி சென்றவராக இருந்து வருகிறார். கலம் ஏவப்பட்டபோது இவருக்கு 26 வயதிலும் ஒரு மாதம் குறைவாகும். சாம் மானேக்சா சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா ("Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw", ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏப்ரல் 3, 1914-ல் ஒரு பார்சி குடும்பத்தில் சாம் மானெக்ஷா பிறந்தார் .இவருடைய தந்தை ஹோர்முஸ்ஜி மானெக்சா; தாயார் ஹீராபாய். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க விரும்பினார் மானெக்சா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர். 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்சா. 1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த் தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் மாண்டனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது மானெக்சா மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தனது உடல் வயிறு, உள்ளிட்ட 9 இடங்களில் குண்டு காயம் அடைந்தார். ரங்கூனில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுத் தேறினார். இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை மானெக்சா கைப்பற்றினார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்சாவின் உறுதியையும், துணிவையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' என்ற விருதை அளித்தார். 1942, ஏப்ரல் 23 ஆம் நாள் லண்டன் கெசட் இதழ் இச்செய்தியை வெளியிட்டது. உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். 1946-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இராணுவத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார். 1969-ம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவத் திறமையைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவை வெற்றி பெறச்செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார். ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார். 2007 ஆம் ஆண்டு கோகர் அயூப் என்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மீது '1965-ல் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ ரகசியங்களை 20,000 ருபாய்கு விற்று விட்டதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார். வஸ்தோக் 3 வஸ்தோக் 3 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் ஏவப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரை ஏற்றிய விண்கலங்கள் ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய ஒரு நிலைமையைக் கையாள்வது குறித்துக் கற்றுக்கொள்வதற்கு, சோவியத் விண்வெளித் திட்டக் கட்டுப்பாட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வஸ்தோக் 3, அட்ரியன் நிக்கொலாயேவால் இயக்கப்பட்டது. வஸ்தோக் 4 விண்கலம், வஸ்தோக் 3 கலத்துக்கு அண்மையில் சுற்றுப்பாதையில் நுழைந்தபோது அதைக் கண்டு, நிக்கொலாயேவ் பூமிக்கு அறிவித்தார். இரு கலங்களிலும் இருந்த விண்வெளிவீரர்களும் வானொலி மூலம் தொடர்பு கொண்டனர். இதுவே இரு விண்கலங்களிடையே இடம்பெற்ற முதலாவது தொடர்பாகவும் அமைந்தது. நிக்கொலாயேவ் வஸ்தோக் 3 இலிருந்து எடுத்த நிகழ்படமே சுற்றுப்பாதையில் இருந்து பூமியை வண்ண நிகழ்படமாக எடுத்த முதல் நிகழ்வாகவும் அமைந்தது. வஸ்தோக் 4 வஸ்தோக் 4 என்பது சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஏவப்பட்ட ஒரு நாளில் இதுவும் ஏவப்பட்டது. இதன்மூலம், ஒரே நேரத்தில் இரு மனிதரை ஏற்றிய விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்த முதல் நிகழ்வு ஏற்பட்டது. இக் கலத்தில் விண்வெளிவீரர் பவெல் பொப்போவிச் பயணம் செய்தார். இரு விண்கலங்களும் பூமியைச் சுற்றியபோது இரு கலங்களும் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் நெருங்கி வந்ததுடன், இரு கலங்களுக்கும் இடையில் வானொலித் தொடர்பும் நடைபெற்றது. இத் திட்டம் பெரும்பாலும் திட்டமிட்டபடியே நடைபெற்றாலும், வஸ்தோக் 4 இன் உயிர்காப்பு முறைமை சரியாக இயங்காததால் வெப்பநிலை 10 °ச வரை இறங்கியது. பொப்போவிச் கொடுத்த சமிக்ஞை ஒன்றை, அவர் விரைவாகக் கலத்தைப் பூமிக்குக் கொண்டு வருமாறு கேட்டதாகப் பிழையாகப் புரிந்து கொண்ட தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தினர், வஸ்தோக் 4 இன் பறப்பைத் திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தனர். இத் திட்டத்தின் மீள்கலம் மாஸ்கோவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது வஸ்ஹோத் 2 கலத்தைப் போன்ற வடிவில் மாற்றப்பட்டுள்ளது. வினை விளைவுக் கோட்பாடு ஒரு நிகழ்வு நேரடியாக மற்றொரு நிகழ்வுக்கு மூலமாக இருக்கும் என இரு நிகழ்வுகளுக்கிடையிலுள்ள தொடர்பைப்பற்றி விளக்குவது வினை விளைவுக் கோட்பாடு. வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாகத் தென்பட்டாலும், இது ஒரு அறிவியல், மெய்யியல், ஆன்மீகக் கருத்துரு ஆகும். ஆன்மிக கருத்துருவைப்பற்றி இந்து சமயத்தில் மூவினைத் தத்துவத்தில் பார்க்கவும். எடுத்துக்காட்டாக வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது வேதிவினை நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் விவசாயிகள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து அறுவடை செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு. வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் நோய்களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார். கம்பம் ஆட்டம் கம்பம் ஆட்டம் ("Pole dancing") ஒரு கவர்ச்சி ஆட்டம். ஒரு நிலைக்குத்தாக நாட்டப்பட்ட கம்பத்தை பற்றியும், தாவியும் ஏறியும் கவர்ச்சியாடைப் பெண்கள் ஆடுவதே கம்பம் ஆட்டம் எனப்படுகிறது. இந்த ஆட்டம் நல்ல உடற்பயிற்சி என்றும் கூறப்படுகிறது. யயுற்சு யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu ) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ("Anti-Hindi imposition agitations") என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்டப் போராட்டமாகும். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார். பிரித்தானியாவிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது. புதிய இந்திய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்தார். ஆயினும் அச்சட்டத்தின் உள்ளடக்கம் தி.மு.க விற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரது வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தினை வெளியிட்டனர். 26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் "இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது. 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது. இந்தியக் குடியரசில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,635 தாய்மொழிகளும் 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது. இந்திய விடுதலை இயக்கத்தினர் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு இந்தியும் உருதுவும் கலந்த "இந்துஸ்தானி" என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தி "தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா" என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரசு 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது. காந்தி மற்றும் நேரு இருவருமே இந்துஸ்தானியை இந்தி பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர். இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய பெரியார் ஈ.வெ.ராவிற்கு, இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை. 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்..அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார். 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. 1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.. ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாலமுத்து ஆகியோர் சிறைப்பட்ட நிலையிலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது. இந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில் நாட்டுப்புற மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புறத்து உயர்நிலைப் பள்ளிகளில் சேரச்செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையும் இருந்துவந்தது. கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் நாட்டுப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் எழும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும். எனவே இந்தி மொழித் திணிப்பு கிராமத்தினரை முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கருதினர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர். 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது. போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர். தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசிய இசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார். போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுநர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது". 1 மே 1938 அன்று ஸ்டாலின் ஜகதீசன் என்ற இளைஞர் ஒருவர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கலானார். அவர் போராட்டக்காரர்களின் சின்னமாக விளங்கினார். விடுதலை இதழில் வெளியான நேர்முகமொன்றில் "தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து சூன் 1 முதல் பொன்னுசாமி என்பவரும் ராஜாஜியின் வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் துவங்கினார். இத்தகைய போராட்ட வடிவை பெரியார் ஆதரிக்காதபோதும் அவரது மற்ற தலைவர்கள் உண்ணாநோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். கா. ந. அண்ணாதுரை இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் "இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்" என முழக்கமிட்டார். ஜகதீசன் உண்ணாநோன்பைப் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார். ஆகஸ்ட்-செப்டம்பர் 1938 காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரும் முசுலீம் லீக்கும் இணைந்து ஓர் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். திருச்சியிலிருந்து பெரியாரும் காலிபுல்லாவும் இதனைக் கொடியசைத்து துவக்கினர். நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் 'தமிழர் படை' என அழைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து ஆகஸ்டு 1 அன்று குமாரசாமி பிள்ளை மற்றும் மூவலூர் ராமாமிருதம் அம்மாள் தலைமையில் பேரணி புறப்பட்டது. அடுத்த 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்திப் பரவலான ஆதரவைத் திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைப்பயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழாதரவு உணர்வுகள் பரவின. போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தினர், தமிழ் மீது இந்தி மற்றும் சமசுகிருத திணிப்பை மேற்கொள்ள பிராமணர்கள் செய்த முயற்சியாக கட்டாய இந்திக் கல்வி சட்டத்தைக் கருதினர். இராசாசி முன்னர் இயற்பியல் பாடப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்கையில் அதிகமான சமசுகிருத மொழிச்சொற்களைப் பயன்படுத்தியதை அவரது சமசுகிருதச் சாய்வுக்குச் சான்றாகக் காட்டினர். போராட்டக்காரர்கள், பிராமணர் நிரம்பிய தமிழ்நாடு காங்கிரசு கட்சியை வடநாட்டு "இந்தி ஆதிக்கவாதி"களின் கைக்கூலிகள் என்றனர். தமிழிலிருந்து சமசுகிருதச் சொற்களை விலக்க பிராமண தமிழ் அறிஞர்களின் தயக்கம் தமிழ் மொழியைச் சிதைக்கப் பிராமணர்களின் சதி என்பதற்குக் காட்டாக அமைந்தது. இராசாசி தமிழரின் எதிரியாகப் பார்க்கப்பட்டார். திராவிட தமிழ் நாளிதழ்கள் தங்கள் நகைச்சித்திரங்களில் இராசாசி தமிழ்த்தாய் மீது கத்தி வீசுவது போன்றும் அவளது சீலையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துவது போன்றும் காட்டின. தங்களது பேரணிகளிலும் அத்தகைய படங்களைச் சுமந்து சென்றனர். ஆகத்து 1938ஆம் ஆண்டு நடந்த ஓர் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட கூட்டமொன்றில் பாவலர் பாலசுந்தரம் பிராமணர்களைத் தமிழ்த்தாயின் கொலைகாரர்கள் என்று வர்ணித்தார். நடராசனைக் குறித்த சட்டமன்ற உரையாடலில் இராசாசியின் அசட்டையான எதிர்வினை "தமிழர்கள் தங்கள் வீரனுக்காக கண்ணீர் சிந்தும்போது ஆரியர்களின் சிரிப்பு" என்று கண்டிக்கப் பட்டது. இராசாசி பதிலுக்குப் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களைச் சாதிக் குறியீடுகளைக் கொண்டு வசைபாடுவதாகக் குற்றஞ்சாட்டினார். நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியொன்றில் வன்முறை வெடித்துப் பிராமணர்கள் தாக்கப்பட்டனர். இந்திப் பிரச்சினையில் ஆளும் காங்கிரசு கட்சியிலும் பிளவு இருந்தது. இராசாசியும் அவரது ஆதரவாளர்களும் இதில் உறுதியாக இருந்தபோதும் சத்தியமூர்த்தியும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும் இதற்கு எதிராக இருந்தனர். அவர்கள் இந்தியை விருப்பப்பாடமாகவோ அல்லது பெற்றோர்கள் தம் சிறுவர்களை இந்திப் பாடத்திலிருந்து விலக்கிக்கொள்ள அனுமதி கோரும் விதிகளைக் கொண்டதாகவோ திருத்தக் கோரினர். சத்தியமூர்த்தி போராட்டக்காரர்களுக்கு எதிராக குற்றவியல் சட்ட திருத்தம்,1932 படி நடவடிக்கை எடுப்பதையும் எதிர்த்தார். அவர் காந்திக்கு சூலை 7,1938 அன்று எழுதிய கடிதத்தில்: எவரது பெற்றோரோ காப்பாளரோ ஓர் நீதிபதியின் முன்னிலையில் தன்னுடைய மகனோ மகளோ கட்டாயமாக இந்துஸ்தானி கற்பது தனது மனசாட்சிக்குப் புறம்பானது என்று காரணம் கூறி உறுதிமொழி வழங்குவாரேயானால் அச்சிறுவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இத்தகைய விலக்கை வெகு சில பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களே விரும்புவர் என நான் நம்புகிறேன். இது எதிர்ப்பில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தி அதனை முறியடிக்கும். இதனை அறிவுரையாக திரு.சி. இராஜகோபாலாச்சாரிக்கு நீங்கள் எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் மறியல் செய்வோர்மீது மதராஸ் அரசு குற்றச் சட்டம் திருத்த ஆணையைப் பயன்படுத்துவது மகிழ்ச்சி தரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இராசாசி தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்: அவர் போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்க மறுத்தார். அவர்கள் தங்கள் "ஆரிய எதிர்ப்பு சாய்வு"களாலும் "காங்கிரசு வெறுப்பினாலும்" தூண்டப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறினார். 1,198 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்;அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர்.). பெரியாருக்கு ஓராண்டு கடும் உழைப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. போராட்டக்காரர்களின் கூட்டங்களுக்கு எதிராக இராசாசி இந்துஸ்தானி ஆதரவு கூட்டங்களை ஏற்பாடு செய்தார். 29 அக்டோபர் 1939 அன்று இராசாசியின் காங்கிரசு கட்சி ஆட்சி இரண்டாம் உலகப்போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்து பதவி விலகியது. மாநில ஆட்சி, ஆளுனரின் மேற்பார்வையில் அமைந்தது. 21 பிப்ரவரி 1940 அன்று ஆளுனர் 'எர்ஸ்கின்' கட்டாய இந்திக்கல்வியை விலக்கி விருப்பப் பாடமாகக் கற்கும் வகையில் இதழ்க் குறிப்பொன்றை வெளியிட்டார். பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை ஏற்படுத்தியபோது அதனால் ஈர்க்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் ஈரோட்டிற்கு வந்திருந்து பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்திந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரிய அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதன்பின் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழக முற்போக்காளர்களும் வட இந்திய முற்போக்காளர்களும் ஒரே அணியில் இருந்து செயல்பட முடியாதபடி பிளவை ஏற்படுத்தி விட்டது. 1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் திராவிடர் கழகமும் பெரியாரும் உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர். இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. பெரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர். ஜூலை 17, 1948ல் திராவிடர் கழகம் (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்புக் கொடி போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராசாசி ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக அண்ணாதுரை, பெரியார் உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர். 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார். இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:- டாண்டன், கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த், ரவிசங்கர் சுக்லா மற்றும் கே. எம். முன்ஷி ஆகியோர் 2) உருது கலந்த இந்துஸ்தானி ஆதரவாளர்கள்:- ஜவஹர்லால் நேரு மற்றும் அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் இந்தி தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கே, ஜி. துர்காபாய், டி. ஏ. ராமலிங்கம் செட்டியார், என். ஜி. ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார் (அனைவரும் சென்னை மாகாணம்), எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வாதிட்டனர். அவர்களது வாதத்தின் சாரமாக டி.டி.கேவின் பின்வரும் பேச்சினைக் குறிப்பிடலாம்: நாங்கள் ஆங்கிலத்தை முற்காலத்தில் வெறுத்தோம். எனக்கு எந்த பிடித்தமும் இல்லாத சேக்சுபியரையும் மில்டனையும் படிப்பது கட்டாயமானதால் நான் வெறுத்தேன். எங்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தினால், எனது வயதின் காரணமாக இப்போது என்னால் படிக்க முடியாதிருக்கலாம், என்மீது திணிக்கப்படும் கூடுதல் சுமையால் படிக்க விரும்பாமலும் இருப்பேன். இத்தகைய சகியாமை, நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான "இந்தி ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது. மூன்று ஆண்டுகள் தீவிரமான வாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மன்றம் ஓர் இணக்கமான முடிவுக்கு வந்தது. அது முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு (கே. எம். முன்ஷி மற்றும் கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது) என்று அழைக்கப்பட்ட அத்தீர்வில் அனைத்து குழுக்களின் தேவைகளும் சமநிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் இத்தீர்வின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அப்பகுதியில் எங்கும் தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஒன்றியத்தின் "அலுவலக மொழிகள்" மட்டுமே வரையறுக்கப்பட்டன. தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஓர் மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும் (உட்பிரிவு 344). மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகளும் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையேயான தொடர்புகளும் ஒன்றியத்தின் அலுவலக மொழியில் அமையும் (உட்பிரிவு 345). ஆங்கிலம் அனைத்து சட்ட நடிவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் - நீதிமன்றங்கள், சட்டங்கள், மசோதாக்கள், விதிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் (உட்பிரிவு 348). இந்தியின் பரவலையும் பயன்பாட்டையும் வளர்ப்பது ஒன்றியத்தின் கடமையாகும்.(உட்பிரிவு 351). இந்தியா 15 ஆகத்து 1947 ல் விடுதலை பெற்றது. இந்திய அரசியலமைப்பு 26 சனவரி 1950 நாளிலிருந்து நடப்புக்கு வந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவலக மொழியாக விளங்கியதை இந்தி ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் 'சியாமா பிரசாத் முகர்ஜி' இந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார். இந்தியக் குடியரசு 1950, சனவரி 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், இந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறை, விருப்பமாக இந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் நீதிமன்ற பிடியாணைகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் இந்தி பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 திசம்பர் 1955 முதல் அரசு "ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு" இந்தியை (ஆங்கிலத்துடன்) பயன்படுத்தத் துவங்கியது." அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து பி. சுப்பராயன், மேற்கு வங்காளத்திலிருந்து சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புக்கள் அளித்திருந்தனர்.). கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற இந்தி பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் 'தெலுங்கு அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த ராஜாஜி இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, தமிழ், தெலுங்கு, மலையாளம், அசாமி, ஒரியா, மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது ""இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே "என முழங்கினார்." இந்தித் திணிப்பு எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் கீழ்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார்.: ஆங்கிலம் தரும் வசதிகள் போன்றவற்றிற்காக அல்லாது இந்தி பேசா மக்கள் அரசுடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதால் தங்கள் முன்னேறும் வழிகள் அடைபட்டுள்ளதாகக் கருதுவதை நான் விரும்பாததால் காலவரையின்றி - எத்தனை காலம் என்று நானறியேன் - ஆங்கிலம் இணை, கூடுதல் மொழியாக இருக்க வேண்டும்; இருக்கும். அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆகவே மக்கள் விரும்பும்வரை அதனை மாற்று மொழியாக வைத்திருப்பேன்; இதற்கான முடிவு எடுப்பதை இந்தி பேசும் மக்களிடம் அல்லாது இந்தி பேசாத மக்களிடமே நான் விடுவேன். இந்த உறுதிமொழி தென்னிந்தியர்களுக்கு சற்றுகாலம் ஆறுதல் அளித்தது. திராவிடர் கழகத்திலிருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகம் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையையும் வரித்துக் கொண்டது. அதன் நிறுவனர் அண்ணாதுரை 1938-40களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர். திமுகவினர் சூலை 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரைத் தமிழில் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். டால்மியாபுரம் என்னும் பெயர் தென்னாட்டின் மீது வட இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தை நினைவு படுத்துவதாக அவர்கள் கூறினர். 15 சூலை 1953 அன்று மு. கருணாநிதியும் பிற திமுக தொண்டர்களும் டால்மியாபுரம் தொடர்நிலையப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்து இருப்புப் பாதையில் படுத்து வண்டிப் போக்குவரத்தைத் தடுத்தனர். அப்போது காவலர்களுடன் நடந்த கைகலப்பில் இருவர் மரணமடைந்தனர். கருணாநிதி உட்பட ஏனையவர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். 1950களில் திமுக தனது திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையுடன் இந்தித் திணிப்பு எதிர்ப்பும் தொடர்ந்து வந்தது. 28 சனவரி 1958 அன்று இராஜாஜி, பெரியார், அண்ணாதுரை மூவரும் 'தமிழ்ப் பண்பாடு அகாதெமி' நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புமை வழங்கி ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர ஆதரவளித்தனர். 21 செப்டம்பர் 1957 இல் திமுக இந்தித் திணிப்பை எதிர்த்து மாநாடு நடத்தியது. 13 அக்டோபர் 1957ஆம் நாளை "இந்தித் திணிப்பு எதிர்ப்பு நாளாக" அறிவித்தது. 31 சூலை 1960 அன்று மற்றொரு திறந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை சென்னை கோடம்பாக்கத்தில் நடத்தியது. நவம்பர் 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் அரசியலமைப்பின் 16வது திருத்தமாக இயற்றப்பட்ட பிரிவினை தடுப்புச்சட்டத்தின் பின்னணியில் திமுக பிரிவினை கோரிக்கையை விட்டது. ஆயினும் தனது இந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. 1963ஆம் ஆண்டு "அலுவல்மொழிச் சட்டம், 1963" நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது. இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அண்ணாதுரை பதிலுரை: "எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத்தான் இருக்கும்" இந்தியை முதன்மை அலுவல்மொழியாக மாற்றிட அரசியலமைப்பின் பகுதி XVII குறிப்பிட்ட வரையறை நெருங்கும் வேளையில் நடுவண் அரசு இந்தியின் பயன்பாட்டை அரசு செயல்பாடுகளில் கூடுதலாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1960இல் அரசு அலுவலகங்களில் இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, இந்தி கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பு, அரசு நடவடிக்கை மற்றும் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, நடுவண் அரசு அலுவலகங்களில் இந்திக் கல்வி மற்றும் இந்தி மொழியை பரப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் ஆணை ஒன்றை வெளியிட்டார். 1959ஆம் ஆண்டு நேரு கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட ஏற்பு கொடுக்கும் வண்ணம் 1963ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதை மன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது நேரு "கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் இருத்தி, அரசியலமைப்பில் 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்தைத் தொடர்வதில் உள்ள தடங்கல்களை நீக்கும் வண்ணம் இந்த வரைவுச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது அந்த கட்டுப்பாட்டை நீக்கும்" என்று கூறினார். 1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் "ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து "ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர். ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான "may" மற்றும் "shall" இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் கட்சித்தலைவருமான அண்ணாதுரை, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக்கொண்டால் அரசிற்கு "shall" என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று தொடரவேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப்படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார். நவம்பர் 1963இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் XVII பகுதியை எரித்ததற்காக அண்ணாதுரை தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார். ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள். சாஸ்திரி நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று கூறியபோதும் சிறுபான்மை மொழியினருக்கு அச்சம் ஏற்பட்டது. நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாகக் கூடும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உந்தியது. 7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது. இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான சனவரி 26 நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க "தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் 18 பேர் இருந்தனர். அவர்களில் சிலர், பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன் (சென்னை பச்சையப்பன் கல்லூரி சார்பில்), கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன், எல்.கணேசன், உலோ. செந்தமிழ்க்கோதை, சி. ப. வேந்தன் (கிண்டிப் பொறியியல் கல்லூரி சார்பில்) ஆகியோர் ஆவார். மாணவர்களின் அச்சங்களைக் குறித்து விளக்கமளிக்கும் வகையில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழ் தனது 6 பிப்ரவரி 1965 தலையங்கத்தில் இவ்வாறு கூறியது (தமிழாக்கம்): இந்தியின் உயர்வுநிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல்மொழி இந்தியா ஆங்கிலமா என்ற முடிவு மற்றவர்களைவிட அவர்களையே கூடுதலாக பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல்மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள். இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர். 17 சனவரி அன்று, திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் "கிழித்து அரபிக்கடலில் போட வேண்டும்" என்று முழங்கினார். 16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒருவாரம் தள்ளிப்போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது. சென்னை மாநில முதல்வர் எம். பக்தவத்சலம் குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். திமுக துக்கநாளை ஒருநாள் முன்னதாக சனவரி 25 க்கு முன்னேற்றியது. 25 சனவரியன்று கா. ந. அண்ணாதுரையும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். அவர்கள் முடிவில் அரசியலமைப்பின் பதினேழாம் பகுதியை பொதுவெளியில் எரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து "இந்தி ஒழிக", "Hindi Never, English Ever" என்ற கோஷங்கள் இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது ஜீப் ஒன்றில் வந்த காங்கிரசு தொண்டர்கள் ஊர்வலத்தினரை அவமதித்து ஆபாசமொழியில் திட்டினர். பதிலுக்கு மாணவர் தரப்பிலிருந்து செருப்புகள் வீசப்பட்டன். கத்திகளுடன் காங்கிரசார் மாணவர்களைத் தாக்கினர். இதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலக்கத்தின் முன்னர் குடியரசுதின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் செய்தி எங்கும் பரவி மதுரையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. மதுரை நகரெங்கும் காங்கிரசு கொடிக்கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிவு என பெருகியது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் (சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (தண்டாயுதபாணி, முத்து, சண்முகம்) விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் 70 பேர் இறந்தனர் (அதிகாரபூர்வ தகவலில்). ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 28 சனவரி முதல் சென்னை பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் காலவரையன்றி மூடப்பட்டன. காங்கிரசிற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாயின. 31 சனவரி 1965 அன்று மைசூரில் கருநாடக முதல்வர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ், மத்திய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர் ஆகியோர் ஒன்றுகூடி இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மொரார்ஜி தேசாய் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே அலுவல்மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் இதனை நிராகரித்தார். மொரார்ஜி தமிழக காங்கிரசார் மக்களிடையே நிலையை விளக்கி பிராந்திய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா. தமிழக முதல்வர் பக்தவத்சலம் சிறப்பாக நிலமையைக் கையாள்வதாக அவரது "கல் போன்ற உறுதிக்கு" பாராட்டும் தெரிவித்தார். கலவரங்கள் பிப்ரவரி முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 அன்று மாணவர் தலைவர்கள் தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் பேச்சுக்கள் முறிந்து வன்முறை தொடர்ந்தது. ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், பொது வேலைநிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் என்பன வழமையாயிற்று. 11 பிப்ரவரி அன்று மத்திய ஆய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார். தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்: பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார். அவரது வாக்குறுதிகள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது. மேலும் 16 பிப்ரவரியன்று சி.சுப்பிரமணியனும் ஓ. வி. அழகேசனும் தங்கள் பதவிவிலக்கத்தை மீட்டுக் கொண்டனர். இருப்பினும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது.. லால் பகதூர் சாஸ்திரியின் பின்வாங்கல் வட இந்தியாவில் இந்தி ஆதரவாளர்களின் கோபத்தைக் கிளறியது. ஜன சங் தில்லியின் தெருக்களில் ஆர்பாட்டம் நடத்தி ஆங்கில பெயர்பலகைகளைத் தார் கொண்டு அழித்தது. மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி பதினேழை நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர்குழு பிரதமரைச் சந்தித்தது. மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொதுதேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியது. 20 பிப்ரவரி 1966இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் திமுக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. பிப்ரவரி 1965இல் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிகளுக்கிணங்க அலுவல்மொழிகள் சட்டத்தைத் திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தி ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டன. 16 பிப்ரவரியன்றே எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை பொதுமேடையில் எதிர்த்தனர். 19 பிப்ரவரியில் மகாராட்டிரம் மற்றும் குசராத்தைச்சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றையடுத்து 25 பிப்ரவரியன்று 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்காது 12 மார்ச் அன்று பிரதமரைத் தனியாக சந்தித்தனர். ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சிகளுக்குள் உள்ள பிரிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை. 22 பிப்ரவரியில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் காமராஜர் சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவர வற்புறுத்தியபோது உடனேயே மொரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், ராம் சுபாக் போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் செயற்குழு இந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுச்சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன. மும்மொழித் திட்டம் தென்னிந்தியாவிலோ பிற இந்தி பேசும் மாநிலங்களிலோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுச்சேவை தேர்வுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு ஒவ்வாததாக அரசு அலுவலர்கள் கருதினர். தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை அலுவல்மொழி சட்டம் திருத்தப்படும் என்பதே. எனினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஏப்ரல் 1965இல் குல்சாரிலால் நந்தா, ஏ. கே. சென், சத்தியநாராயண் சின்கா, மகாவீர் தியாகி, எம். சி. சாக்ளா மற்றும் எஸ்.கே.பாட்டீல் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு (இந்த துணைக்குழுவில் தென்னிந்திய உறுப்பினர்கள் எவருமில்லை) விவாதித்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும் இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தது. இக்குழு பொதுச்சேவை தேர்வுகளில் இடவொதுக்கீடு அல்லது மண்டல மொழிகள் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கவில்லை. நேருவின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல்மொழி சட்டத்தில் மாற்றங்களுக்கான வரைவை தயாரித்தனர். இந்த வரைவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மாநிலங்களிடையே மற்றும் மாநில மத்திய அரசுகளிடையே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆகத்து 25 அன்று அவைத்தலைவரால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த பஞ்சாப் பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் காசுமீரப் பிரச்சினைகளின் இடையே இத்திருத்தம் கொண்டுவர சரியான நேரம் இல்லையென அறிமுகப்படுத்தப்படவில்லை. லால் பகதூர் சாஸ்திரி சனவரி 1966ல் உருசியாவில் நடந்த அமைதிப் பேச்சுகளின்போது மரணமடைந்தார். அவரை அடுத்து இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 1967இல் புதியதாக சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 27 நவம்பரில் நாடாளுமன்றத்தில் வரைவுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; 16 திசம்பர் அன்று நிறைவேற்றப்பட்டது. (ஆதரவு-205, எதிர்ப்பு - 41) குடியரசுத்தலைவரின் ஒப்புதலை 8 சனவரி 1968ல் பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்திருத்தம் 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் "காலவரையன்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை" (ஆங்கிலம் மற்றும் இந்தி) கடைபிடிக்க உறுதி செய்தது. 1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் திமுக ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போரட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் அண்ணா துரையின் அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; தேசிய மாணவர் படையில் (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட "தட்சிண இந்தி பிரசார சபை" மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர். 19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார். 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தது: இந்த நடவடிக்கைகளால் இந்தி எதிர்பாளர்கள் அமைதியடைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது. 1986 ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி "தேசிய கல்விக் கொள்கை"யை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது. திமுக இப்பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என்று கூறியது. அந்த நேரம் திமுகவிலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். திமுக முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி போராட்டம் துவக்கினார். நவம்பர் 13 அன்று மாநில சட்டப்பேரவை ஒருமனதாக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை நீக்கவும் ஆங்கிலத்தை ஒன்றியத்தின் ஒரே அலுவல்மொழியாக அங்கீகரிக்கவும் தீர்மானம் இயற்றியது. ஆயினும் 17 நவம்பர் 1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக்கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைக் தீயிலிட்டனர். கருணாநிதி உட்பட 20,000 திமுக தொண்டர்கள் கைதாயினர். 21 நபர்கள் தம்மைத் தாமே கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். கருணாநிதிக்குப் பத்து வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. க. அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்களை அவைத்தலைவர் பி. எச். பாண்டியன் அவையிலிருந்து வெளியேற்றினார். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜீவ் காந்தி இந்தி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதி கொடுத்தார். இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமேயாகும். 1937-40ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் சென்னை மாகாண அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்நாள் வரை இந்திய தேசியக் காங்கிரசுக்கு மாகாணத்தில் முக்கிய அரசியல் மாற்றாக இருந்து வந்த நீதிக்கட்சி, போராட்டத்தின் போது ஈ. வே. ராமசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. திசம்பர் 29, 1938ல் அவர் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற பல திராவிட இயக்கத் தலைவர்களை இப்போராட்டங்களே பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தின. இப்போராட்டங்கள் சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாயப் பாடமாவதைத் தடுத்து விட்டன. 1960களில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், 1967 தேர்தலில் காங்கிரசு தோற்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உருவாகுவதற்கு வழிவகுத்தன. 1967க்குப் பின் திராவிடக் கட்சிகளே தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் திமுக, அதிமுக, மதிமுக போன்ற அரசியல் கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் பல தலைவர்கள், இப்போராட்டங்களில் மாணவர் தலைவர்களாகப் பங்கேற்றவர்கள். மேலும் திராவிட இயக்கத்தை பிராமண-ஆரிய எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் வெகுஜன ஆதரவைப் பெருக்கவும் இப்போராட்டங்கள் உதவின. ”தமிழ் மட்டும்” என்ற திராவிட இயக்கத்தின் கொள்கை இறுக்கத்தை சற்றுத் தளர்த்தி, இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தன. தற்சமயம் தமிழகத்தில் நடப்பில் இருக்கும் இருமொழி கல்விக் கொள்கை இப்போராட்டங்களால் உருவானதே. டியூக் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் சுமதி இராமசாமியின் வார்த்தைகளில்: இறுதியாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களால் தான் இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963ம் அதன் 1967ம் ஆண்டு சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டன. இந்தியக் குடியரசின் தற்போதைய "காலவரையற்ற மெய்நிகர் இருமொழிக் கொள்கை" (இந்தி மற்றும் ஆங்கிலம்) இப்போராட்டங்களால் தான் உருவானது. நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியின் போது 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பான அறிக்கையில், இந்த ஆணையை எதிர்த்து வைகோ, "இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலத்திலும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக் கேடாக முடியும்" என அறிக்கை வெளியிட்டார். கருணாநிதி, "அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளதாகவும், ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது" என்றார். ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வினை தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எதிர்த்தன. இதுகுறித்து தமிழக முதல்வரான அ.தி.மு.கவினை சார்ந்த சேர்ந்த ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கண்டனத்தை தெரிவித்தார். அதில் என கேட்டுக்கொண்டார் . மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.இதனை சமஸ்கிருத திணிப்பு என்று தமிழகத்தில் உள்ள திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் கடுமையாக கண்டித்தது. மேலும் தி.மு.கவின் மு.கருணாநிதி ஒரு திருமண விழாவில் கீழ் கண்டவாறு கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் சமஸ்கிருதம் மூலம் இந்தியை திணிப்பதாக தமிழக தலைவர்கள் கருதினர். செப்டெம்பர் 2014 இல் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் மேலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது. இதற்கும் தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு திராவிட,தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அந்த அறிக்கையை நடுவண் அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் வேத பிரகாஷ் கூறியதாவது:– சேம்சு கார்ஃபீல்டு சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு ("James Abram Garfield", ஜேம்ஸ் கார்ஃபீல்ட்; நவம்பர் 19, 1831 – செப்டம்பர் 19, 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அரசுத்தலைவர் பதவியில் இருந்தார். இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அரசுத் தலைவர்களில் இவர் இரண்டாமவர் ஆவார் (முதலாமவர் ஆபிரகாம் லிங்கன்). குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2, 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார். கடிதம் கடிதம் அல்லது திருமுகம் அல்லது மடல் ("letter") எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை கடிதம் மூலமே அஞ்சல் இடம்பெறுகிறது. இது உறவுகளுக்கிடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. கடிதம் எழுதுவதானது மொழியின் இலக்கிய மற்றும் இலக்கண முறைகளைப் பாதுகாக்க உதவுகிறது. அதாவது எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான அறிவு வளர்க்கப்படுகிறது. தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் அனுப்புதல் பிரபலமடைவதால் வழக்கொளிந்துவருகிறது. வஸ்தோக் 5 வஸ்தோக் 5 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஐயும் வஸ்தோக் 4 ஐயும் போல், வஸ்தோக் 5 திட்டமும், வஸ்தோக் 6 உடன் இணைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னைய இணையைப் போலவே இவ்விரண்டும் நெருக்கமாக வந்ததுடன், வானொலித் தொடர்பும் கொண்டன. விண்வெளி வீரரான வலரி பைக்கோவ்ஸ்கி எட்டு நாட்களுக்குச் சுற்றுப்பாதையில் இருப்பதாக முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தும், சூரியக் கதிர்வீச்சு அதிகமாக இருந்ததால் திட்டத்தில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியில் 5 நாட்களிலேயே பூமிக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் தனி ஒருவரை ஏற்றிக்கொண்டு சுற்றுப்பாதையில் அதிக நாட்கள் இருந்த விண்கலம் இன்றுவரை இதுவே ஆகும். இவ் விண்கலத்தின் கழிவு சேகரிப்புத் தொகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கலத்தினுள் நிலைமை நன்றாக இருக்கவில்லை. பைக்கோவ்ஸ்கி புவிக்குத் திரும்பும் நேரத்தில், வஸ்தோக் 1, 2 ஆகிய கலங்களைப் போலவே இதிலும் சேவைக் கலத்திலிருந்து சரியாகப் பிரிய முடியாத பிரச்சினை இருந்தது. இந்த மீள்கலம் இப்போது கலூகாவில் உள்ள த்சியோல்கோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது. வஸ்தோக் 6 வஸ்தோக் 6 என்பது மனித விண்வெளிப் பறப்புத் திட்டம் ஒன்றில் பயணம் செய்த முதல் பெண் விண்வெளிவீரர் என்ற பெருமையை வலன்டீனா தெரஸ்கோவா என்னும் சோவியத் பெண்ணுக்கு வழங்கிய விண்வெளித் திட்டம் ஆகும். விண்வெளிப் பறப்பில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டன. முன்னைய வஸ்தோக் திட்டங்களில் பயணம் செய்த விண்வெளி வீரர்களைப்போலவே வலன்டீனாவும் பறப்புப் பதிவுகளை வைத்திருந்துடன், நிழற்படங்களையும் பிடித்துடன், கலத்தையும் நேரடியாக இயக்கினார். இவர் வெண்வெளியில் இருந்து எடுத்த அடிவானத்தின் நிழற்படங்கள் வளிமண்டலத்தில் ஏரோசோல் படலங்கள் இருப்பதைக் கண்டறியப் பின்னர் பயன்பட்டது. வஸ்தோக் 5 உடன் இணைத்திட்டமாக உருவாக்கப்பட்ட இது உருவாக்கப்பட்டபோது, இரண்டு கலங்களிலுமே பெண்களையே ஏற்றிச் செல்ல முடிவாகியிருந்தது. எனினும் பின்னர் வேறு காரணங்களுக்காக இந்த முடிவு கைவிடப்பட்டது. வஸ்தோக் 6 திட்டமே வஸ்தோக் 3கேஏ விண்கலத்தின் கடைசிப் பறப்பு ஆகும். இசுப்புட்னிக் 2 இசுப்புட்னிக் 2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக் கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் "லைக்கா" வைக்கப்பட்டது. பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன. யுலிசீஸ் கிராண்ட் யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார். பாரன்ஃகைட் பாரன்ஃகைட் அல்லது ஃபேரென்ஃகைட் (ஃபேரென்ஹைட், இலங்கை வழக்கு: பரனைற்று "Fahrenheit", °F) வெப்பநிலை அளக்கும் ஒரு அலகாகும். 1724 ஆம் ஆண்டு செசுமனியைச் சேர்ந்த இயற்பியலாளர் டானியல் ஃபேரென்ஃகைட் இம்முறையை தொடங்கினார். உலகில் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இம்முறை பயன்படுகிறது. 1778 1778 (MDCCLXXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது. பயன்பாட்டுக் கணிதம் கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் (இலங்கை வழக்கு: பிரயோக கணிதம்; "Applied Mathematics") எனப்படுகிறது. இது அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், வணிகம், தொழில் போன்ற துறைகளில் பயன்பாடுள்ள கணித மாதிரிகளைப் பற்றி விளக்கும் கணிதப் பிரிவாகும். தொழிற் கணிதம், புள்ளியியல், இயற்பியற் கணிதம், உயிரியற் கணிதம், பொருளியற் கணிதம், கணித மாதிரியியல், இரகசிய குறியீட்டியல் என பல துறைகளில் கணிதம் நேரடியாக பயன்படுகிறது. இசுப்புட்னிக் 3 சுபுட்னிக் 3 என்பது ஒரு சோவியத் செய்மதி ஆகும். இது 1958 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பைக்கோனர் (Baikonur) ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது வளிமண்டலத்தின் மேற்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு ஆய்வுச் செய்மதி ஆகும். ஒலிப்பதிவுக் கருவியில் பழுது ஏற்பட்டதால், வான் அலென் கதிர்வீச்சுப் பட்டையை (Van Allen radiation belt) இது உணரத் தவறிவிட்டது. 1956 ஜூலை மாதத்தில் புவியைச் சுற்றி ஒரு செயற்கை மதி ஒன்றை வலம்வரச் செய்யும் திட்டம் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட போது, இந்த ஸ்புட்னிக் 3 என்று பின்னர் பெயரிடப்பட்ட செய்மதியே முதலாவதாக ஏவப்படுவதாக இருந்தது. ஸ்புட்னிக் 3 தயாராகும் முன்பே அதனை ஏவுவதற்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 தயார் நிலையில் இருந்தது. ஆனால் செய்மதி வேலை நிறைவு பெறாமல் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் சேர்கே கொரோலேவ் (Sergei Korolev) ஒப்பீட்டளவில் எளிமையான ஸ்புட்னிக் 1 ஐ முதல் செய்மதியாகச் செலுத்த முடிவு செய்தார். சுபுட்னிக் 2 உம் முன்னரே செய்து முடிக்கப்பட்டதால் அது இரண்டாவதாகச் செலுத்தப்பட்டது. சுபுட்னிக் 3 முடியும் வரை காத்திருந்தால், முதல் செய்மதியை ஏவிய நாடு என்ற பெயரை அமெரிக்கா தட்டிக்கொண்டு போய்விடும் என்று கோரோலேவ் பயந்தார். சுபுட்னிக் ஒரு தானியங்கி அறிவியல் சோதனைக் கூட விண்வெளியோடம் ஆகும். கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட இதன் உயரம் 3.57 மீட்டரும், அடி விட்டம் 1.73 மீட்டரும் ஆகும். இது 1,327 கிகி நிறை உடையதாக இருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள், வளிமண்டலத்தின் மேற்புறம் பற்றிய பல தகவல்களை அனுப்பின. மேல் வளிமண்டலத்தின் அமுக்கம் மற்றும் அதன் அமைப்பு, மின்னேற்றம் கொண்ட துகள்களின் செறிவு, அண்டக் கதிர்களில் உள்ள பார அணுக்கருக்கள், காந்த மற்றும் மின்நிலையியல் புலங்கள், விண்கல் துகள்கள் என்பன குறித்த தகவல்கள் இவற்றுள் அடங்கும். புவியின் வெளிக் கதிர்வீச்சுப் பட்டைகள் இப் பறப்பின்போது உணரப்பட்டன. இவ் விண்வெளியோடம் 1960 ஏப்ரல் 6 ஆம் திகதிவரை சுற்றுப்பாதையில் இருந்தது. அ.கே.கே அ.கே.கே என்பது "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்" என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் FAQ Frequently Asked Questions என்பதற்கு இணையாக இது தமிழில் பயன்படுகிறது. ஒரு தலைப்பைப் பற்றி அடிப்படைக் கேள்விகளும், அதற்குரிய பதில்களும் அகேகே என்பதின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இணையதளங்களில் இந்தப் பயன்பாட்டைக் காணலாம். எப்படிச் செய்வது எப்படிச் செய்வது (How-to; howto) என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வது எப்படி என்று விளக்கும் தகவல் கோப்பு ஆகும். தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? ஒரு உணவை சுவையுடன் சமைப்பது எப்படி? கணினியில் கிருமியை அகற்றுவது எப்படி? என பல்வேறு பயன் தரும் விடயங்களுக்கு செய்வது எப்படி எழுதுவது, பயனர்களுக்கு பலன் தரும் படைப்பாக அமைகிறது. கனடியத் தமிழர் பேரவை கனடியத் தமிழர் பேரவை கனேடியத் தமிழர்களின் சமூக அரசியல் நலன்கள் நிலைப்பாடுகள் பற்றி கனடியப் பொது சமூக அரசியல் அரங்கில் ஒருமித்து சொல்லவும் முன்னெடுக்கவும் விழையும் இலாப நோக்கமற்ற, சமய-சாதி-வர்க்க சார்பற்ற சமூக சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு 2000 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் யோசப் சந்திரசேகரன் இருக்கிறார். 2008 இல் கறுப்பு யூலையை நினைவு படுத்தி இவர்கள் முன்னெடுக்கும் இரத்த தானம் கனடாவின் மொத்த தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவை பூர்த்தி செய்வதை நோக்காக கொண்டது. மொண்ட்ரியால் மொண்ட்ரியால் ("Montreal") கெபெக் மாகாணத்தில் மிகப்பெரிய நகரமும் கனடாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகில் ஐந்து மிகப்பெரிய பிரெஞ்சு பேசும் நகரங்களில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொண்ட்ரியால் மாநகரில் 3,635,571 மக்கள் வசிக்கின்றனர். கனடிய இரத்த சேவைகள் கனடிய இரத்த சேவைகள் கனடிய மக்களின் இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு தேசிய இலாப நோக்கமற்ற அமைப்பு. கியூபெக்கை தவிர்த்து இது எல்லா மாகாணங்களிலும் இயங்குகிறது. கியூபெக்கில் Héma-Québec இதே பணியைச் செய்கிறது. இந்த அமைப்பில் 2,600 பணியாளர்களும் 17,000 தொண்டகளும் சேவை செய்கின்றார்கள். இந்த அமைப்பு 40 நிரந்தர permanent collection sites, ஆண்டுக்கு 20,000 donor clinics நிர்வாகிக்கின்றது. குருந்து ஓயா அருவி குருந்து ஓயா அருவி அல்லது மதுரட்டை நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 189 மீட்டர் பாய்ச்சலை உடைய குருந்து ஓயா நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது உயரமான நீர் வீழ்ச்சியாகும். நுவரெலியா - கந்தபலை பெருந்தெருவில் 29 கிலோமீட்டர் சென்ற நிலையில் பாதையிலிருந்து 2 கிலோமீட்டர் உள்ளாக தேயிலை தோட்டமொன்றின் நடுவில் அமைந்துள்ளது. மைலபிட்டி இந்நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் அமைந்துள்ள நகரமாகும். 1770கள் 1770கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1770ஆம் ஆண்டு துவங்கி 1779-இல் முடிவடைந்தது. பிரிகேட் பிரிகேட் (அல்லது பிரிகேடு) (ஆங்கிலம்:"Brigade") என்பது ஒரு படை அலகு. இது படையைக் கொண்டுள்ள நாட்டினைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து ரெசிமெண்ட் அல்லது பட்டாலியன்களைக் கொண்டிருக்கும். இது டிவிசன் என்றழைக்கப்படும் படைப்பிரிவின் ஒரு பகுதி. ஒரு டிவிசன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிகேடுகளைக் கொண்டிருக்கும். நேட்டோ ("NATO") தர பிரிகேடானது ஏறக்குறைய 4000 முதல் 5000 படைவீரர்களைக் கொண்டது. இப்பிரிவின் தலைவர் பிரிகேடியர் என்று அழைக்கப்படுவார். இசுப்புட்னிக் 4 இசுப்புட்னிக் 4 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். ஸ்புட்னிக் திட்டத்தின் ஒரு பகுதியான இது, பின்னர் வஸ்தோக் திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டிருந்த மனித வெண்வெளிப் பறப்புக்கு ஒரு சோதனைப் பறப்பாக அமைந்தது. 1960 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் இச் செய்மதி ஏவப்பட்டது. இதன் வழிகாட்டு முறைமையில் ஏற்பட்ட ஒரு கோளாறு செய்மதியை பிழையான திசையில் வழிகாட்டியது. இதனால், வளிமண்டலத்துள் இறங்குவதற்குப் பதிலாக இது இன்னும் உயரச் சென்று பூமியைச் சுற்றியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் நாள் புவியின் வளிமண்டலத்துக்குள் வந்தது. மனிதரை ஏற்றிய விண்வெளிப் பறப்புக்களை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட தொடர் விண்கலங்களுள் இதுவே முதலாவதாகும். இது பல அறிவியற் கருவிகள், ஒரு தொலைக்காட்சித் தொகுதி, ஒரு பொம்மை மனிதனைக் கொண்ட உயிர் வாழ்வுக்கான வசதிகளைக் கொண்ட ஒரு சிற்றறை என்பவற்றைக் கொண்டிருந்தது. உயிர் வாழ்வதற்கான வசதிகளை வழங்கும் முறைமைகளின் இயக்கம் மற்றும் பறப்பில் ஏற்படக்கூடிய நிலைமைகளையும் ஆராயும் நோக்குடனேயே இக்கலம் வடிவமைக்கப்பட்டது. விண்கலம் ஏராளமான தொலை அளவீட்டுத் தகவல்களையும், முன்னரே பதிவு செய்யப்பட்ட குரலையும் வானலை மூலம் அனுப்பியது. நான்பு நாள் பறப்புக்குப் பின்னர், மீள்கலம், சேவைக் கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புவிக்குத் திரும்புவதற்கான ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. இக்கட்டத்திலேயே வழிகாட்டு முறைமை சரியாக இயங்காமல் திட்டமிட்டபடி கலம் பூமியை நோக்கித் திரும்பவில்லை. இசுப்புட்னிக் 5 ஸ்புட்னிக் 5 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் இதுவாகும். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் ஏவப்பட்ட இக் கலம், அடுத்த 8 மாதங்களிலும் குறைந்த காலப் பகுதிக்குள் மனிதனை ஏற்றிய முதல் புவிச் சுற்றுப்பாதைப் பறப்புக்கு வழி சமைத்தது. இந்த விண்கலம் பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்னும் பெயர் கொண்ட இரண்டு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் ஏற்றிச் சென்றது. விண்கலம் அடுத்த நாளே புவிக்குத் திரும்பியது. எல்லா விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இவ் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக்கருவி நாய்களைப் படம் பிடித்தது. புவியை விண்கலம் அடைந்ததன் பின்னர், ஸ்ட்ரெல்காவின் குட்டிகளுள் ஒன்று அமெரிக்காவின் அப்போதைய முதல் பெண்ணான ஜாக்குலீன் கென்னடிக்கு சோவியத் நாட்டின் பரிசாக அனுப்பப்பட்டது. சத்தியமார்க்கம் இணையத்தளம் சத்தியமார்க்கம்.காம் சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டதொரு இணைய தளம் ஆகும். முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்கள் அனைவருக்குமான பொதுவான தளம் என்றாலும் அனைத்துத் தரப்பினரும் இஸ்லாம் தொடர்பான தகவல்களைப் பெற உதவும் ஒரு கலைக்களஞ்சியமாக இத்தளம் உள்ளது. கல்வி என்ற தேடல் / அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு உரிய அறிவினைத் தருவது, இஸ்லாம் பற்றிய வினாக்களுக்கு விடையளிப்பது, இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்குத் தக்க விளக்கம் அளிப்பது, உதவி கேட்போருக்குத் தக்க ஆதரவு அளிப்பது போன்றவையும் இதில் அடங்கும். இளம் எழுத்தாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் அவர்தம் திறமைகள் வெளிக்கொணர வைக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கம் 2007 ஆம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான கட்டுரைப்போட்டி மூலம் நிறைவேறியது. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு சுவையான அம்சங்கள் நிறைந்துள்ளன. முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினர் அதிகம் வருகை தரும் ஐயமும்-தெளிவும் பகுதி, மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் விவாத அரங்கம், சர்வதேச அளவிலான நிகழ்வுகளை உடனுக்குடன் சூடாக அறிந்து கொள்ள செய்திகள் பகுதி, பிற தளச் செய்திகளை ஒரே இடத்தில் காணும் செய்தித் திரட்டி போன்ற பல்வேறு அம்சங்கள் இத்தளத்தில் நிறைந்துள்ளன. எந்த ஒரு ஆக்கத்திலும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறும் சுவையான பின்னூட்ட வசதி இத்தளத்தின் சிறப்பம்சமாகும். அரசியல், ஆன்மீகம், குடும்ப வாழ்க்கை, மருத்துவம், அறிவியல், கல்வி போன்ற அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது சத்தியமார்க்கம்.காம் தளம். தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம் தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம் என்பது, நாசாவின் சூரிய மண்டல ஆய்வுப்பயணப் பிரிவின் ஒரு பகுதியாகும். நாசாவின் விண்வெளி அறிவியல் திட்டத் தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இது மேரிலாந்தின், கிறீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கொட்டார்ட் விண்வெளிப் பறப்பு மையத்தில் அமைந்துள்ளது. இத் தரவு மையம் நாசாவின் தரவுகளைப் பொது மக்களும், ஆய்வாளர்களும் கட்டற்றமுறையில் அணுகுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இத் தரவுகளுள் ஆய்வு செய்யப்படாத தரவுகளும், படிமங்களும் அடங்கும். தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம், உலகம் முழுவதிலுமிருந்து ஏவப்பட்ட விண்கலங்கள், செய்மதிகள் எல்லாவற்றுக்கும் அனைத்துலக அடையாளக் குறியீடுகளை வழங்கி வருகிறது. இத் தகவலும், செய்மதிகள் குறித்த பின்னணித் தகவல்களும், தேடக்கூடிய பொது முதன்மைப் பட்டியலில் கிடைக்கின்றன. அனைத்துலக அடையாளக் குறியீடு அனைத்துலக அடையாளக் குறியீடு ("International Designator") என்பது தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் செய்மதிகளுக்கான அனைத்துலகப் பெயரிடல் முறை ஆகும். இக் குறியீட்டில், ஏவப்பட்ட ஆண்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏவப்படும் செய்மதிகளுக்கான மூன்று இலக்கங்கள் கொண்ட தொடர்எண், ஒவ்வொரு ஏவுதலின் போதும் தொடர்புள்ள வெவேறு கூறுகளைக் குறிக்கும் மூன்று எண்ணிக்கை வரையான எழுத்துக்களைக் கொண்ட குறியீடு என்பன அடங்கியிருக்கும். வெளிப்படையாகத் தெரிந்த செய்மதிகளுக்கு மட்டுமே குறியீடுகள் வழங்கப்படுகின்றன. படைத்துறைச் செய்மதிகள் பட்டியல் இடப்படுவதில்லை. அத்துடன், ஆண்டுக்கான எவுதல் தொடர் எண்களையும் அவை பாதிப்பது இல்லை. எடுத்துக் காட்டாக, 1957-001A ஸ்புட்னிக் 1 இன் ஏவுகலத்தையும், 1957-001B ஸ்புட்னிக் 1 செய்மதியையும் குறிக்கும். இக் குறியீட்டு எண்ணிலிருந்து, இது 1957 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது என்பதையும், அவ்வாண்டில் முதலாவதாக ஏவப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளலாம். 1990-037B 1990 ஆம் ஆண்டில் 37 ஆவதாக ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைக் குறிக்கும். 1990-037A அதனை ஏவுவதற்கான விண்வெளி ஓடம் டிஸ்கவரியைக் குறிக்கும். தோல்வியில் முடிந்த ஏவுதல்களுக்கு முறையான அடையாளக் குறியீடு வழங்கப்படுவதில்லை. எழுந்தமானக் குறியீடுகளே வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, VAGSL1 என்பது வான்கார்ட் எஸ்எல்வி 1 (Vanguard SLV 1) க்கு வழங்கப்பட்ட குறியீடு ஆகும். ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ஹபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ("Hubble Space Telescope") டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வட்டணையில் ஏவப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஓர் ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும். காம்ப்டன் காமாக் கதிர் வான்காணகம், சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம், சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி ஆகியவற்றோடு இதுவும் நாசாவின் சிறந்த வான்காணகமாகும். 1940களிலேயே விண்வெளித் தொலைநோக்கிகள் பற்றிய கருத்துப்படிமம் முன்மொழியப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டில் இவ்வகைத் தொலைநோக்கியை ஏவும் எண்ணத்துடன் 1970களில் ஹபிள் தொலைநோக்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பத் தாமதங்கள், நிதிச் சிக்கல், சேலஞ்சர் விபத்து போன்றவற்றால் இத் திட்டத்தை நிறைவேற்றுவது தாமதமாகியது. இறுதியாக 1990 இல் விண்ணில் இத்தொலைநோக்கி ஏவப்பட்டாலும், இதன் முதன்மை ஆடியில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப் பிழையினால் தொலைநோக்கியின் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் 1993 இல் இடம்பெற்ற திருத்தவேலைப் பயணத் திட்டத்தின் மூலம் ஹபிளின் தரம் எதிர்பார்க்கப்பட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஹபிள் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியில் இருப்பதால் மிகவும் நுண்ணிய விவரங்களுடன் கூடிய, பின்புல ஒளி இடையீடுகள் இன்றி, ஒளிப்படங்களை எடுக்ககூடியதாக உள்ளது. ஹபிளின் அவதானிப்புகள் பல வானியற்பியலில் பல முக்கியமான தீர்வுகளுக்கு வழி சமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அண்டம் விரிவடையும் வீதத்தைத் முடிவு செய்வதில் இதன் அவதானிப்புகள் பெரும் பங்காற்றியுள்ளன. விண்வெளியில், விண்வெளிவீரர்களால் பழுது பார்க்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரே தொலைநோக்கி ஹபிள் ஆகும். இதுவரை நான்கு தடவைகள் திருத்தவேலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1993 இல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தின் மூலம் படிமக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. 2, 3 மற்றும் 4 ஆம் பயணங்களின் போது பல்வேறு துணைத் தொகுதிகள் பழுதுபார்க்கப்பட்டதுடன், பல அவதானிப்புக் கருவிகளும் நவீன திறன்மிக்க கருவிகளால் பதிலீடும் செய்யப்பட்டன. எனினும், 2003 இல் இடம்பெற்ற கொலம்பியா விண்வெளி ஓட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் குறித்த அச்சங்களினால் ஐந்தாவது திருத்தவேலைப் பயணம் நிறுத்தப்பட்டது. உற்சாகமான பொதுக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு இறுதியான திருத்தவேலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு நாசா முடிவு செய்தது. தற்போது இது அக்டோபர் 2008 க்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹபிளுக்கான திட்டமிடப்பட்ட திருத்தவேலைகள், இது 2013 ஆம் ஆண்டுவரை செயல்பட வழி செய்யும். அதன் பின்னர், புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட உள்ளது. இப் புதிய தொலைநோக்கி பல வானியல் ஆய்வுகள் தொடர்பில் ஹபிளிலும் மிகமிகத் திறன் வாய்ந்தது. எனினும் இது அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே அவதானிக்கும் என்பதால் கட்புலனாகும் மற்றும் புறஊதாக் கதிர்களை அவதானிக்கும் திறன்கொண்ட ஹபிளின் செயல்பாடுகளுக்கு ஒரு குறை நிரப்பியாகவே இருக்கும் எனலாம். 1923 ஆம் ஆண்டில், இராபர்ட் கோடார்ட், கான்சுதாந்தின் சியால்கோவ்சுகி ஆகியோருடன் சேர்த்து நவீன ஏவுகணையியலின் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்பட்ட எர்மன் ஒபேத் என்பார் தான் எழுதிய நூலொன்றில், தொலைநோக்கி ஒன்றை எவ்வாறு ஏவுகணைகள் மூலம் விண்வெளிக்குச் செலுத்த முடியும் என்பது பற்றிக் குறிப்பிட்டார். ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் வரலாறு 1946 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது எனலாம். அவ்வாண்டில், வானியலாளரான இலைமன் சுபிட்சர் என்பார் "புவிக்கு வெளியிலான அவதான நிலையம் ஒன்றின் வானியல் பயன்பாடுகள்" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில், புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளைவிட, விண்வெளித் தொலைநோக்கிகள் கொண்டிருக்கக்கூடிய சாதகத் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். முதலாவதாக, தொலைவிலிருந்து வரும் ஒளி வளிமண்டலத்தினூடு வரும்போது ஏற்படும் குழப்பத்தால் கோணப் பிரிதிறன் (angular resolution) மட்டுப்படுத்தப்படுகிறது. புவியின் வளிமண்டலத்துக்கு வெளியே கோணப் பிரிதிறன் ஒளிமுறிவினால் மட்டுமே பாதிக்கப்படுவதால் தெளிவான விம்பங்களைப் பெறமுடியும். தற்போது புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளின் கோணப் பிரிதிறன் 0.5-1.0 arcseconds ஆகும். 2.5 மீட்டர் விட்டம் கொண்ட விண்வெளித் தொலைநோக்கிகளின் கோட்பாடு அடிப்படையிலான பிரிதிறன் 0.05 arcseconds ஆக இருக்கும். இரண்டாவதாக, வளிமண்டலத்துக்கு வெளியே, அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களையும் அவதானிக்க முடியும். புவியில் இவை வளிமண்டலத்தால் பெருமளவு உறிஞ்சப்பட்டு விடுகின்றன. ஸ்பிட்சர், விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் அவசியத்தை உணரச் செய்வதற்காக பெருமளவு காலத்தைச் செலவளித்துள்ளார். 1962 இல், ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் அக்கடமி, தனது அறிக்கையொன்றில், விண்வெளித்திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளித் தொலைநோக்கி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தது. 1965 ஆம் ஆண்டில், ஒரு பெரிய விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் அறிவியல் நோக்கங்கள் பற்றி வரையறுப்பதற்கான குழுவொன்றின் தலைவராக ஸ்பிட்சர் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போர்க் காலத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை அறிவியலாளர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட வானியல் சிறிய அளவில் தொடங்கியது. சூரியனின் முதலாவது புற ஊதாக் கதிர் நிறமாலை 1946 ஆம் ஆண்டில் பெறப்பட்டது. 1962 இல், ஐக்கிய இராச்சியம், புவியைச் சுற்றும் சூரியத் தொலை நோக்கி ஒன்றை ஏவியது. 1966 இல் நாசா தனது முதலாவது புவியைச் சுற்றிவரும் வான்காணகத்தை (ஓஏஓ) ஏவியது. ஓஏஓ-1 இன் மின்கலங்கள் பழுதானதால் திட்டம் மூன்று நாட்களிலேயே நின்றுபோனது. தொடர்ந்தி 1968 ஆம் ஆண்டில் ஓஏஓ-2 ஏவப்பட்டது. இது, புற ஊதாக் கதிர்கள் மூலம் விண்மீன்களையும், விண்மீன் கூட்டங்களையும் அவதானித்தது. ஓர் ஆண்டுக்கு மட்டுமே இது திட்டமிடப்பட்டதாயினும், அதனையும் தாண்டி 1972 ஆம் ஆண்டு வரை இது செயல்பட்டது. வானியலில், விண்வெளியிலிருந்தான வான்காணகத்தின் முதன்மையான பங்களிப்பு குறித்து ஓஏஓ திட்டங்கள் நன்கு விளக்கின. தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டில், 3 மீட்டர் விட்டம் கொண்ட ஆடியுடன் கூடிய தெறிப்புத் தொலைநோக்கி ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்றை நாசா தொடங்கியது. 1979 ஆம் ஆண்டில் செலுத்தப்படுவதற்காகத் திட்டமிடப்பட்ட இதற்கு பெரிய சுற்றும் தொலைநோக்கி அல்லது பெரிய விண்வெளித் தொலைநோக்கி (எல்எஸ்டி) எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இத்தகைய செலவு கூடிய திட்டங்கள் நீண்டகாலம் பயன்பட வேண்டுமாயின், திருத்தப் பயணத் திட்டங்கள் தேவை என உணரப்பட்டது. அத்துடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களும், இத்தகைய திருத்தப் பயணத் திட்டங்களுக்கான தொழில்நுட்பங்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறித்துக் காட்டின. ஓஏஓ திட்டங்களின் தொடர்ச்சியான வெற்றிகள், எல்எஸ்டி திட்டம் ஒரு முக்கியமான நோக்கமாக இருக்கவேண்டும் என்று வானியலாளரிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்தின. 1970 இல் நாசா இரண்டு குழுக்களை ஏற்படுத்தியது. ஒன்று தொலைநோக்கித் திட்டத்தின் பொறியியல் பக்கத்தைக் கவனிப்பதற்கானது. மற்றது, திட்டத்தின் அறிவியல் இலக்குகளை வரையறுப்பதற்கானது. அடுத்ததாக, நாசாவுக்கிருந்த பெரிய வேலை திட்டத்துக்கான நிதி பெறுவதாகும். இத்தகைய ஒரு திட்டத்துக்கு, புவியில் இருக்கும் தொலை நோக்கிகளைவிட மிகக் கூடிய செலவு பிடிக்கும். அமெரிக்க காங்கிரஸ் இத் திட்டத்துக்கான செலவுத் திட்டத்தை ஆராய்ந்து, தொலநோக்கிக்கான கருவிகள், வன்பொருட்கள் தொடர்பான விரிவான ஆய்வுகளுக்காக ஆரம்பக் கட்டங்களில் செலவு செய்ய உத்தேசிக்கப் பட்டிருந்த நிதியில் பெருமளவு குறைப்புச் செய்தது. ஆனால் 1974 இல் ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்டினால் கொண்டுவரப்பட்ட பொதுச் செலவினக் குறைப்புத் திட்டத்தின்படி, காங்கிரஸ், இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த முழு நிதியையுமே நிறுத்திவிட்டது. இதற்கு எதிராக நாடு தழுவிய ஆதரவு தேடும் முயற்சிகள் வானியலாளர்களிடையே முடுக்கிவிடப்பட்டன. பல வானியலாளர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களையும், செனட்டர்களையும் நேரடியாகச் சந்தித்து உரையாடினர். பெரிய அளவிலான கடிதம் எழுதும் பிரச்சார இயக்கமும் ஒழுங்குசெய்யப்பட்டது. தேசிய அறிவியல் அக்கடமியும் விண்வெளித் தொலை நோக்கியின் தேவை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டது. முடிவில், காங்கிரசால் முன்னர் ஒதுக்கப்பட்ட நிதியின் அரைப்பகுதியை ஒதுக்குவதற்கு செனட் சபை உடன்பட்டது. இத்தகைய நிதிப் பிரச்சினைகளினால் திட்டத்தின் அளவைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தொலைநோக்கியின் ஆடியின் அளவு 3 மீட்டரில் இருந்து 2.4 மீட்டராகக் குறைக்கப்பட்டது. இது ஆடிக்கான செலவைக் குறைத்தது மட்டுமன்றி, தொலைநோக்கியின் மொத்த அளவையும் குறைத்து பிற வன்பொருட் செலவுகளையும் குறைக்க உதவியது. பயன்படுத்தப்பட இருந்த முறைமைகளைச் சோதிப்பதற்காக முதலில் அனுப்பப்பட இருந்த 1.5 மீட்டர் விண்வெளித் தொலைநோக்கித் திட்டமும் கைவிடப்பட்டது. அத்துடன் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் (European Space Agency) கூட்டுச்சேரவும் முடிவு செய்யப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி முகமை சில கருவிகளை வழங்க ஒத்துக்கொண்டதுடன், மின்னுற்பத்திக்கான சூரியக் கலங்களை வழங்கவும், ஐக்கிய அமெரிக்காவில் தொலைநோக்கித் திட்டத்தில் வேலை செய்வதற்கான பணியாட்களை அனுப்பவும் முன்வந்தது. இதற்காக விண்வெளித் தொலை நோக்கியின் 15% க்குக் குறையாத அவதானிப்பு நேரத்தை வழங்க நாசா ஒத்துக்கொண்டது. 1978 ஆம் ஆண்டில் காங்கிரஸ் 36,000,000 அமெரிக்க டாலர்களை இத் திட்டத்துக்கு ஒதுக்கியது. தொடர்ந்து 1983 இல் நிறைவேற்றப் படவேண்டும் என்ற இலக்குடன் வேலைகள் தொடங்கின. 1983 ஆம் ஆண்டில் தொலைநோக்கிக்கு, 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றான, அண்டம் விரிவடைகிறது என்பதைக் கண்டுபிடித்த எட்வின் ஹபிளின் பெயரைத்தழுவிப் பெயரிடப்பட்டது. விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்துக்கான அனுமதி கிடைத்ததும், திட்டப் பணிகள் பல்வேறு நிறுவனங்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டன. தொலை நோக்கியின் வடிவமைப்பு, உருவாக்கம், அமைப்பு ஆகிய பொறுப்புகள் மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையத்துக்கு வழங்கப்பட்டன. கொடார்ட் விண்வெளிப் பறப்பு மையம், அறிவியல் கருவிகள் தொடர்பான பொறுப்புக்களையும், திட்டத்தின் புவிக் கட்டுப்பாட்டு மையத்துக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், ஒளியியல்சார் தொலைநோக்கிக் கூறுகளையும் வேறு சில முக்கிய கருவிகளைச் செய்யவும், பர்க்கின்-எல்மர் என்னும் ஒளியியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. தொலைநோக்கியைத் தாங்கவிருந்த விண்கலத்தை அமைப்பதற்கு லாக்ஹீட் நிறுவனம் அமர்த்தப்பட்டது. ஹபிள் காலவெளியில் நம்மைக் கடந்த காலத்திற்கு இட்டுச் செல்லும் காலப் பொறியாகச் (time machine) செயல்படுகிறது. எவ்வாறெனில் பிரப‌ஞ்சத்தின் தொலைதூரத்தில் உள்ள ஓர் இடத்திலிருந்து ஒளி ஹபிளை அடைய சில பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. அவ்வொளி ஹபிளை வந்தடையும் போது ஹபிள் அதைப் படம் பிடிக்கிறது. ஆகவே அந்தப் பிரபஞ்சப் பகுதியில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கைத்தொழில் எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது. நிறைய கைத்தொழிலின் மூலப்பொருள் இயற்கையாகவும், அதுவும் உள்நாட்டு பொருளையே பயன்படுத்தி செய்வார்கள். செக்வே செக்வே என்பது ஒரு தனிநபர் போக்குவரத்து வண்டி. இது உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவானது. இரு சில்லுகளைக் கொண்ட இந்த ஊர்தி ஒருவரை சமநிலையைப் பேணி நகர்த்தி செல்ல வல்லது. ஒருவர் அந்த வண்டியில் ஏறி முன்னே சற்று சாய்ந்தால் முன்னேயும், பின்னே சாய்ந்தால் பின்னேயும், "Lean Steer" கொண்டு திரும்பவும் முடியும். செக்வே, Gyroscopic உணரிகள், ஐந்துக்கும் மேற்பட்ட microprocessor கொண்டு சமநிலையைப் பேணுகிறது. வண்டிக்காண ஆற்றலை மின்னோடிகள் வழங்குகின்றன. இந்த வண்டி மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்டது. இதை அமெரிக்க கண்டுபிடிப்பாளர் அவர்களின் நிறுவனம் உருவாக்கியது. இந்த வண்டியை தசாவதாரம் படத்தில் கமல் பயன்படுத்திக் காட்சிப்படுத்தினார். ஹாரி எஸ். ட்ரூமன் ஹாரி எஸ். ட்ரூமன் (மே 8, 1884-டிசம்பர் 26, 1972) 33ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945இல் பதவியிலேறினார். 1945இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன. ஒன்சூ ஒன்சூ ("Honshu", "ஹொன்ஷூ", ஜப்பானிய மொழி: 本州, "பிரதான நாடு") சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும். உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரிய தீவும் மக்கள் தொகையின் படி இரண்டாம் மிகப்பெரிய தீவும் ஆகும். 1990 கணக்கெடுப்பின் படி இத்தீவில் 98,352,000 மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 1,300 கிமீ நீள ஒன்சூ தீவின் நடுவில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான மலை ஃபூஜி மலை ஆகும். ஐந்து பகுதிகளில் பிரிந்த இத்தீவில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாக்கா, கியோட்டோ முதலிய பல முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன. அசர்பைஜான் மொழி அசர்பைஜான் மொழி (Azərbaycan dili) அல்லது அசேரி அசர்பைஜான் நாட்டின் ஆட்சி மொழியாகும். துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 25 மில்லியன் மக்கள் ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி மற்றும் வேறு சில நாடுகளில் பேசுகின்றனர். இம்மொழியை பேசும் மக்களுக்கு ஓர் அளவு துருக்கியம், துருக்குமென் மொழி, மற்றும் வேறு ஒகுஸ் மொழிகளை புரியமுடியும். இக்காலுயிட் இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது. அணுக்கரு உலை அணுக்கரு உலை ("Nuclear reactor") அணு உலை என்பது அணுக்கரு தொடர்வினையைத் தொடங்கி முழுமையான கட்டுப்பாட்டோடு நிகழ்த்தும் ஓர் அமைப்பாகும். இதற்கு எதிர்மாறாக அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் அணுக்கருத் தொடர்வினை ஏற்படுவதால் வெடிப்பு ஏற்படுகிறது. அணுக்கரு உலைகள் மின்னாற்றலை உருவாக்க பேரளவில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் இருந்து வெளியேறும் ஆற்றல் வெப்ப வடிவில் வெளிவருகின்றது. அணுக்கரு உலையில் வெளிவரும் வெப்ப ஆற்றல் உண்டாக்கும் நீராவி நீராவிச்சுழலிகளை இயக்குகிறது. இவை கப்பல்களை இயக்கவும் மின் நிலையங்களில் மின்னாக்கியை இயக்கவும் உதவுகின்றன.மேலும் இந்நீராவி தொழிலகச் செயல்முறைகளுக்கு வெப்பம் தரவும் அறைகளைச் சூடுபடுத்தவும் பயன்படுகிறது. அணுக்கரு உலைகள் ஓரகத் தனிமங்களை உருவாக்கவும் அணுக்கரு மருத்துவத்துக்கும் அணுக்கருப் படைக்கலன்களை உருவாக்கவும் அமைக்கப்படுகின்றன.சில ஆராய்ச்சிக்காகவும் உயராற்றல் புளூட்டோனியத்தை உண்டாக்கவும் பயன்படுகின்றன.இப்போது உலகின் பல நாடுகளில் 450 க்கும் மேற்பட்ட அணுக்கரு மின் நிலையங்கள் மின்னாக்கத்துக்கு இயங்கி வருகின்றன. முதலாவது அணுக்கரு உலை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் CP1 என்ற "சிக்காகோ உலை-1" (Chicago Pile-1) என்ற பெயரில் 1942 இல் என்றிகோ பெர்மியின் தலைமையில் உருவாக்கப்பட்டது. வழக்கமாக அனல்மின் நிலையங்களில் நிலக்கரிபோன்ற புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடைபெறுகிறது; அணுக்கரு மின் நிலையங்களில் அணுக்கரு உலைகளின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடக்கிறது. யுரேனியம்-235 அல்லது புளூட்டோனியம்-239 போன்ற பிளவுபடத் தக்க பெரிய அணுக்கரு நொதுமியை உறிஞ்சினால் அவை பிளவு வினைக்கு ஆட்பட்டன. அவ்வினையில் அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எடைகுறைந்த அணுக்கருக்களாக பிளவுண்டது. அப்போது பிளவுபொருள்களும் இயங்காற்றலும் காமாக் கதிர்களும் விடுபட்டு இயங்கும் நொதுமிகளும் வெளியிடப் பட்டன. இந்த நொதுமிகளில் ஒரு பகுதி. பிறகு பிற அணுக்களால் உறிஞ்சபட்டு மேலும் பிளவு நிகழ்ச்சிகளைக் கிளரச் செய்யும். இப்படியே தொடர்ந்து நிகழும் இந்தத் தொடர்வினை அணுக்கருத் தொடர்வினை எனப்படும். இந்த அணுக்கருத் தொடர்வினையைக் கட்டுபடுத்த, [[நொதுமி நச்சுகளும் நொதுமித் தணிப்பான்களும் பயன்படுகின்றன. இவை பிளவு வினையில் ஈடுபடவல்ல நொதுமிகளை மாற்றி வினைவேகத்தைக் குறைக்கின்றன. கண்காணிப்பு வழி பாதுகாப்பற்ற நிலைமைகள் அறிந்தவுடனே பிளவு வினையைத் தானாகவும் கையால் இயக்கியும் கட்டுபடுத்தலாம் அல்லது நிறுத்தி விடலாம். வழக்கமான பயன்பாட்டில் தணிப்பான்களாக எடைகுறைந்த நீர் (உலக அணுக்கரு உலைகளில் 74.8% ),திண்மக் கரியதை ( graphite) (20% உலைகள்) அடர்நீர் (5% உலைகள்). சில செய்முறை உலைகளில் மாற்றுத் தணிப்பான்களாக பெரில்லியமும் நீரகக் கரிமங்களும் பயன்படுத்தியுள்ளனர். அணுக்கரு உலை பலவழிகளில் வெப்பத்தை உருவாக்குகிறது: அணுக்கரு வினைகளால் மாற்றப்படு யுரேனியம்-235 (U-235) இன் ஒருகிலோகிராம் பொருண்மை தோராயமாக, ஒரு கிலோகிராம் அளவு நிலக்கரியை எரிக்குபோது கிடைக்கும் ஆற்றலைப் போல மூன்று மில்லியன் மடங்கு ஆற்றலைத் தருகிறது. (ஒரு கிலோகிராம் யுரேனியம்-235 பொருண்மைக்கு 7.2 × 10 [[ஜூல்கள்]] :ஒரு கிலோகிராம் நிலக்கரி பொருண்மைக்கு 2.4 × 10 ஜூல்கள்). வழக்கமாக, அணுக்கரு உலையின் குளிர்த்தியாக நீரே பயன்படுகிறது. மாற்றாக, சிலவேளைகளில் வளிம்மோ நீர்ம சோடியம் போன்ற நீர்மப் பொன்மமோ (நீர்ம உலோகமோ) உருகிய உப்போ கூடப் பயன்படுவதுண்டு. இந்தக் குளிர்த்தி உலையூடாக செலுத்தும்போது அது அணுக்கரு அகடு வெளியிடும் வெப்பத்தை உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சிய வெப்பம் பின்னர் நீராவியை உருவாக்க பயன்படுகிறது. அழுத்தமூட்டிய நீர் உலைகளைப் போல, பெரும்பாலான உலைகளில் குளிர்த்தும் அமைப்பு புறநிலையாக உலையமைப்பில் இருந்து தனையாகப் பிரித்துவைக்கப் படுகிறது. உலை வெப்பம் இந்த அமைப்பில் உள்ள நீரை அழுத்தமூட்டிய நீராவியாக மாற்றுகிறது. இந்த அழுத்தமூட்டிய நீராவி நீராவிச் சுழலியை இயக்குகிறது. என்றாலும் சில உலைகளில் நீராவிச் சுழலிக்கான நீராவியைப் பெர உலைகளே நேரடியாக நீரைக் கொதிக்கவைக்கின்றன; கொதிநீர் உலைகளில் இம்முறை பயன்படுகிறது. உலையின் திறன் வெளியீடு, நொதுமிகள் கூடுதலாக அணுப்பிளவை உருவாக்கு எண்ணீக்கையைக் கட்டுபடுத்தி, கட்டுபடுத்தப்படுகிறது. கட்டுபாட்டுத் தண்டுகள் நொதுமிகலை உறிஞ்சும் நொதுமிநச்சால் செய்யப்படுகின்றன. கூடுதல் நொதுமிகள் கட்டுபாட்டுத் தண்டால் உறிஞ்சப்பட்டால் பிளவு வினையை நிகழ்த்த குறைந்த அளவு நொதுமிகளே எஞ்சும்.கட்டுபாட்டுத் தண்டை உலைக்குள் ஆழமாக நுழைத்தால் திறன் வெளியீடு குறையும்.அதை வெளியே இழுத்தால் திறன் வெளியீடு கூடும். அணுப்பிளவு வெளியிடும் ஆற்றல் வெப்பத்தை உருவாக்குகிறது. இதன் ஒரு பகுதியை பயனுள்ள ஆற்றலாக மாற்றலாம். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்கொள்ளும் வழக்கமான முறை இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைக் கொதிக்கவைத்து அழுத்தமூட்டிய நீராவியைப் பெறுவதாகும். இந்த அழுத்தமூட்டிய நீராவியால் நிர்ரவிச் சுழலியை இயக்கி அதனுடன் இணைந்துள்ள மின்னாக்கிவழி மின்சாரத்தை உருவாக்கலாம். நொதுமி 1932 இல் கண்டுபிடிக்கப்பட்டது. நொதுமிகளால் தணிக்கப்படும் அணுக்கரு வினைகளால் உருவாகும் அணுக்கருத் தொடர்வினை, அதன் பிறகே 1993 இல் அங்கேரிய அறிவியலார் இலியோ சுசிலார்டு முயற்சியால் நடைமுறையில் இயல்வதானது.இவர் அடுத்த ஆண்டில் இலண்டன் அட்மிரால்ட்டி அலுவலகத்தில் பணிபுரியும்போது அணுக்கரு உலைக்கான உரிமம் கோரி விண்னப்பம் செய்தார். [[File:Otto Hahn und Lise Meitner.jpg|thumb|170px|தங்கள் ஆய்வகத்தில் இலைசு மெயிதனரும் ஆட்டோ ஃஏனும்.]] [[File:Pulstar1.jpg|thumb|right|வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் துடிப்பு அணுக்கரு உலையின் கட்டுபாட்டு அறை.]] அணுக்கரு மின் நிலையங்களின் பொதுவான உறுப்புகள்: [[பகுப்பு:அணு உலைகள்]] [[பகுப்பு:இந்தியாவில் அணுசக்தி]] என்ரிக்கோ பெர்மி என்ரிக்கோ பெர்மி ("Enrico Fermi"; செப்டம்பர் 29, 1901 – நவம்பர் 28, 1954) என்பவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது. என்ரிகோ பெர்மி 1901 செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில், தன் தந்தைக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் (கியோலியோ) ஒரு சகோதரியும் (மரியா) இருந்தனர். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார். இளமைப் பருவத்தில் தனது அண்ணனுடன் சேரந்து கையில் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் உடைத்து பிரித்து பார்ப்பார் என்ரிக்கோ. அவரின் அண்ணன் 1915 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது அதிர்ச்சி தாங்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தன் அண்ணன் இறந்த மருத்துவமனையின் முன்பே சுற்றி திரிந்தார். அப்போது தான் இயற்பியல் புத்தகங்களை அவர் படித்தார். பின் தன் பதினேழாம் அகவையில் என்ரிக்கோ எழுதிய பல்கலைகழக நுழைவுத் தேர்வின் கட்டுரையை படித்த ஆசிரியர் 'அந்தக் கட்டுரைக்கு முனைவர் பட்டமே தரலாம்' என்று வியந்து பாராட்டினாராம். இலத்திரன் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் இலத்திரனில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார். அதுவே அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். இதுவே அவர் நோபல் பரிசு பெறக் காரணமான துறை ஆகும். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூத்திரன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார் ஃபெர்மி. என்ரிக்கோவின் அறிவியல் திறமையைப் பாராட்டி பெனிட்டோ முசோலினி, உலக அளவில் இயங்கும் மிக உயரிய விருதான 'அறிவியல் வித்தகர்' என பொருள்படும் "எக்சலென்சா" என்னும் விருதினை அளித்து பாராட்டினார். ஒருமுறை அறிவியல் கழகங்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் ஃபெர்மி. அந்த கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்தவர் முசோலினி. அனைத்து அறிவியலாளர்களும் மகிழுந்தில் வந்து இறங்க, ஃபெர்மி மட்டும் மிகவும் எளிமையாக நடந்து, மிகவும் சாதாரண உடை அணிந்து வந்தார். சாதாரண மக்கள் போல் காட்சி அளித்த ஃபெர்மியைக் காவலாளி உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். மறுத்த காவலாளியிடம் மல்லுக்கு நிற்கவில்லை ஃபெர்மி. தான் இன்னார் என்றும், முசோலினிக்கு என்னை நன்றாகத் தெரியும் என்றோ ஃபெர்மி கூறவில்லை. ஏனெனில், சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்று ஃபெர்மிக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் 'நான் ஃபெர்மியின் கார் ஓட்டி, காலை வேலைக்குத் தாமதமாக வந்துவிட்டேன், திரும்பும் போதாவது அய்யாவை அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறவே காவலாளி அனுமதித்தான், என்று தன் சுயசரிதையில் ஃபெர்மி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஃபெர்மியின் எளிமையான குணத்தைக் கூறுகிறது. மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942 இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். அனைத்து கணக்கீடுகளையும் சரியாக வடிவமைத்து அன்றைய இயற்பியலின் உச்சியில் ஏறி நின்றார் பெர்மி. தனது தூண்டல் கதிரியக்கத்திற்காக எக்சலென்சா என்ரிக்கோ ஃபெர்மி சுவீடனில் மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார். ஹிட்லர் போல முசோலினியும் இனவெறிக் கொள்கையைப் பின்பற்ற, தனது மனைவியான யூதப் பெண்மணிக்கு ஆபத்து நேருமோ என்று எண்ணி சுவீடனில் நோபல் பரிசு பெற்ற கையோடு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஃபெர்மி. பின் தனது தாய் நாடான இத்தாலிக்கு அவர் செல்லவே இல்லை. மேலும் தனது இறுதிக் காலத்தை ஃபெர்மி தனிமையிலேயே கழித்தார். 1926 ஆம் ஆண்டில் மேட்டியூக்சி பதக்கம், 1938 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1942 இல் இயூசு பதக்கம், 1947 ஆம் ஆண்டில் ஃபிராங்க்லின் பதக்கம் மற்றும் 1953 இல் ரம்ஃபோர்ட் பரிசு ஆகிய பல பரிசுகள் பெர்மியின் சாதனைகளுக்காக வழங்கப்பட்டன. மன்காட்டன் திட்டத்தில் இவரது சீறிய பங்களிப்புக்காக 1946 ஆம் ஆண்டு மதிப்பு மிக்க மெடல் பார் மெரிட் பரிசு கிடைத்தது . 1950 ஆம் ஆண்டு இராயல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலியின் புகழ் பெற்ற கலைஞர்கள், விஞ்ஞானிகள், வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க பிரமுகர்கள் பட்டியலில் பெர்மியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய பேரிடர் ஆலயங்களாக அறியப்படும் சாண்டா குரோசின் பசிலிக்காவில் அமைக்கப்பட்டுள்ள தகடு பெர்மிக்கு ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது . 1999 ஆம் டைம் இதழ் பட்டியலிட்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 மனிதர்களில் பெர்மியும் இடம்பெற்றார் . 20 ஆம் நூற்றாண்டு இயற்பியலாளர்களில் பெர்மி ஓர் அசாதாரணமானவராக கருதப்பட்டார். கோட்பாட்டு ரீதியாகவும் பரிசோதனை ரீதியாகவும் இரண்டிலும் சிறந்து விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெர்மி பிறந்திருந்தால், அவரே ரூதர்போர்டின் அணுக்கருவை கண்டுபிடித்து, ஐதரசன் அணுவின் போரின் கோட்பாட்டையும் வளர்த்திருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளலாம் என்று இயற்பியல் வரலாற்றாசிரியர் சிபி சினோ கூறுகிறார் . பெர்மி ஓர் எழுச்சியூட்டும் ஆசிரியராக அறியப்பட்டார், மேலும் கவனம், எளிமை மற்றும் அவரது விரிவுரைகளுக்கான கவனமான தயாரிப்பு ஆகியவற்றுக்காகவும் நன்கு அறியப்படுகிறார் . இவரது சொற்பொழிவுகள் பின்னர் புத்தகமாக்கப்பட்டன . ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன . என்ரிக்கோ பெர்மியை கௌரவிப்பதற்காக பல பொருட்களுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெர்மி ஆய்வகத் துகள் முடுக்கி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான இலினொய் மாநிலத்தின் பட்டாவியா நகரிலுள்ள இயற்பியல் ஆய்வகம் உள்ளிட்டவை 1974 ஆன் ஆண்டில் மறு பெயரிடப்பட்டன. பெர்மியின் அண்டக்கதிர் வீச்சு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு பெர்மி காமா-கதிர் விண்வெளித் தொலைக்கியும் 2008 ஆம் ஆண்டில் மறு பெயரிடப்பட்டது. மிச்சிகன் நியூபோர்ட்டில் பெர்மி 1 மற்றும் பெர்மி 2 என்ற பெயர்களில் அணு மின் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இத்தாலியில் உள்ள டிரினோ வெர்சல்லீசுவில் என்ரிக்கோ பெர்மி அணு மின்நிலையம் மற்றும் அர்கெந்தினாவில் ஆர்.ஏ-1 என்ரிகோ பெர்மி அணு ஆராய்ச்சி உலை ஆகியவையும் இவ்வாறே பெயரிடப்பட்டன. விஞ்ஞான சமுதாயத்திற்காக பெர்மியின் பங்களிப்பிற்கு மரியாதை அளிக்கும் விதமாக 1952 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு செயற்கை தனிமத்திற்கு பெர்மியம் என்று பெயரிடப்பட்டது. இதன்மூலம் தனிமங்களுக்குப் பெயரிடப்பட்ட 16 விஞ்ஞானிகளின் பட்டியலில் இவரும் ஒருவராக இடம்பெற்றார். 1956 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அணுசக்தி ஆணையகம் பெரிமியை கௌரவிக்கும் நோக்கில் பெர்மி விருது என்ற விருதை உருவாக்கி மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படும் பெர்மி விருதை வழங்கி வருகிறது. ஓட்டோ ஆன், இராபர்ட் ஓப்பனெய்மர், எட்வர்ட்டு டெல்லர் மற்றும் ஆன்சு பெத்தே போன்ற நன்கு அறியப்பட்ட விஞ்ஞானிகள் இவ்விருது பெற்றுள்ளனர் . 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில் பெர்மி எதிர்பாராத விதமாகப் வயிற்று புற்று நோயினால் காலமானார். அவருடன் பணி புரிந்த இரு மாணவர்களும் அவருடனேயே புற்றுநோயின் காரணமாக இறந்தார்கள். அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் (பாகம் 1), விகடன் பிரசுரம், அணுஆட்டம் , விகடன் பிரசுரம். கிகாலி கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ருவாண்டாவின் நடுப் பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள். 1687 1687 (MDCLXXXVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். கொம்ப்டன் காம்மா கதிர் அவதான நிலையம் கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம் ("Compton Gamma Ray Observatory (CGRO)") நாசாவின் "பெரும் அவதான நிலையங்கள்" எனப்படும் விண்வெளி அவதான நிலையங்களில் இரண்டாவது ஆகும். இது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் தொடர்ந்து, விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த அவதான நிலையம், சென். லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆர்தர் ஹோலி கொம்ப்டன் என்னும் அறிவியலாளரின் பெயர் இடப்பட்டது. கொம்ப்டன், காம்மா கதிர் இயற்பியலில் செய்த ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர். இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. 14 ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில், எஸ்டிஎஸ்-37 திட்டத்தில் ஏவப்பட்டது. இது 2000ஆவது ஆண்டு ஜூன் 4 ஆம் நாள், சுற்றுப்பாதையிலிருந்து விலகும் வரை செயல்பட்டது. சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் ("Chandra X-ray Observatory") என்பது, கொலம்பியா விண்ணோடத்தில் "எஸ்டிஎஸ்-93" இல், நாசாவால், 1999, ஜூலை 23 ஆம் நாள் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். வெண் குறு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறுவதற்குரிய திணிவெல்லையைத் தீர்மானித்த இந்திய-அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் இயற்பியலாளரின் பெயரைத்தழுவி இந்த அவதான நிலையத்துக்குப் பெயரிடப்பட்டது. நாசாவின் நான்கு பெரும் அவதான நிலையங்களில் இது மூன்றாவது ஆகும். ஏவுமுன் இது உயர்தர எக்ஸ்-கதிர் வானியற்பியல் வசதி எனப்படது. இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது. முக்கியமாக சந்திராவில் பொருத்தப்பட்ட ஆடிகளின் உயர்ந்த கோணப் பிரிதிறன் (angular resolution) காரணமாகவே இது சாத்தியம் ஆகிறது. டிரைவர்பக்சு டிரைவர்பக்ஸ்.நெட் ஓர் திறந்த மூல நிரற் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் இலக்காக எல்லாக் கணினிகளுக்கும் ஓர் சீரான விண்டோஸ் நிறுவற் சீடி/டீவிடி உருவாக்கி டிவைஸ் டிரைவர் சீடி இன்றி எந்தவொரு வன்பொருளிலும் நிறுவைலை மேற்கொள்ள உதவுவதாகும். அத்துடன் ஒவ்வொரு மதர்போட்டுக்கும் ஒவ்வொரு சீடி என்றவாறு அல்லாமல் ஒவ்வொரு வகுப்புக்கும் எடுத்துக்காட்டாக வலையமைப்பு வன்பொருளுக்கு ஒருதொகுதி டிரைவர்கள் என்றவாறு வகுப்பு ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது டிரைவர்பக்ஸ் கீழ்வரும் தொகுதிகளாகக் கிடைக்கின்றது. இவை தன்னார்வலர்களால் சமர்பிக்கப்படுபவை ஆகும். இவற்றில் சில வழுக்களைக் கொண்டுள்ளன. மூன்றாம் தரப்பு டிவைஸ் டிரைவர்கள் நேரடியாக ஆதரவளிக்கப்படுபவை அல்ல. இவற்றுள் என்பன குறிப்பிடத்தக்கவை. டிரைவர் பக்ஸ் பேஸ் என்னும் மென்பொருளூடாகவே பதிவிறக்கப்பட்ட மென்பொருட்கள் விண்டோஸ் நிறுவற் சீடி/டீவிடி உடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது விண்டோஸ் எண்டி 5.1 கேர்னலுடன் ஒத்திசைவானது ஆதலினால் இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சேவர் 2003 ஆகிய இயங்குதளங்களை ஆதரிக்கின்றது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்திற்கான ஆதரவு திட்டமிடப்பட்டுள்ள பொழுதும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் விம் லேர்சினால் இத்திட்டமானது ஒரு சீரான எக்ஸ்பி சீடி மூலம் எல்லா வன்பொருட்களுக்கும் நிறுவலை நிறுவவேண்டும் என்னும் எண்னக்கருவுடனேயே இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. கனேடியத் தமிழ் இதழ்களின் பட்டியல் 1680கள் 1680கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1680ஆம் ஆண்டு துவங்கி 1689-இல் முடிவடைந்தது. வரைவிலக்கணம் வரைவிலக்கணம் என்பது ஒரு சொல் அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு கூற்று ஆகும். வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும். வழக்கு நிலையுடன் ஒப்பிட்டு ஒரு விளக்க வரைவிலக்கணம் சரி அல்லது பிழை எனக் காட்ட முடியும். ஆனால் எடுபொருள் வரைவிலக்கணம் அதனைக் கொடுப்பவரின் தேவைக்கானது என்பதால் அது பிழை, சரி என்பது கிடையாது. இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது துல்லியமாக்கல் வரைவிலக்கணம் (precising definition) எனப்படுகின்றது. சி. எல். ஸ்டீவன்சன் என்பவர் இணக்க முறை வரவிலக்கணம் (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் "சட்டமுறை" அல்லது "கட்டாயமானவை" என்கிறார். இவை, உரிமைகள், கடமைகள், குற்றங்கள் போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன. செந்நெறிக்காலச் சிந்தனையில் ஒரு வரைவிலக்கணம் என்பது ஒரு பொருளின் பிழிவைக் கொடுக்கும் ஒரு கூற்று என எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பொருளின் அடிப்படையான பண்புக்கூறுகளே அதன் அடிப்படை இயல்புகளை உருவாக்குகின்றன. ஆகவே ஒரு பொருளின் வரைவிலக்கணம் இந்த அடிப்படையான பண்புக்கூறுகளை உட்படுத்தி இருக்கவேண்டும் என்றார் அரிஸ்ட்டாட்டில். வரைவிலக்கணம் ஒரு பொருளின் அடிப்படையான பிழிவைக் குறிக்கும் கூற்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், "பெயரளவுப்" பிழிவு (nominal essence), "உண்மை"ப் பிழிவு (real essence) என்ற வேறுபாட்டுக்கு வித்திட்டது. இதையும் அரிஸ்ட்டாட்டிலே தொடக்கி வைத்தார். உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பொருளை, அச் சொல் குறிக்கும் பொருளின் அடிப்படை இயல்புகளை அறிந்து கொள்ளாமலேயே, நாம் அறிந்து கொள்ளலாம் என்று, "போஸ்ட்டீரியர் அனாலிஸ்ட்டிக்" (Posterior Analytics) என்னும் அவரது உரையிலுள்ள ஒரு பத்தியில் அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார். இது மத்தியகாலத் தருக்க அறிஞர், "பெயரின் என்ன தன்மை" க்கும், அப்பெயர் குறிக்கும் பொருளின் எல்லாப் பொருட்களிலும் காணும் அடிப்படை இயல்பைக் குறிக்கும் "பொருளின் என்ன தன்மை" என்பதற்கும் இடையில் வேறுபாடு கண்டதில் முடிந்தது. இது, "பெயரளவு வரைவிலக்கணம்", "உண்மை வரைவிலக்கணம்" என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பதற்கு வழி சமைத்தது. பெயரளவு வரைவிலக்கணம் என்பது சொல் எப்பொருள் குறிக்கிறது என்பதை விளக்குவதாகும். ஆனால், உண்மை வரைவிலக்கணம் அச் சொல் குறிக்கும் பொருளின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவது ஆகும். இந்தப் "பிழிவு" தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் பகுத்தாய்வு மெய்யியல், ஒரு பொருளின் "பிழிவை" விளக்கும் முயற்சியை விமர்சித்தது. ரஸ்ஸல் என்பார் இதை "சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு" என்று விபரித்தார். மிக அண்மைக் காலத்தில் கிரிப்கேயின் இருக்கக்கூடிய உலகச் (possible world) சூழ்பொருளியல் முறைப்படுத்தல் essentialism தொடர்பான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிகாட்டியது. இதன்படி, ஒரு பொருளுக்குரிய அடிப்படையான இயல்புகள் அதற்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அவ்வியல்புகளையே அப்பொருள் எல்லா "இருக்கக்கூடிய உலக"ங்களிலும் கொண்டிருக்கும். ஓணப்பந்து விளையாட்டு ஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும். எருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது துடுப்பாட்டப் ( Cricket ) பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் துணியாலும் பந்துகள் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றது. ஓணப்பந்து மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது. ஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும். இவ்விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை: ஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும். சில இடங்களில் பட்டத்திற்கு மட்டும் பந்துகள் விளையாடுவர். இவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட 7 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் தொங்கவிடப்பட்டிருக்கும். நாணய சுண்டல் முறையில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியினர் முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். அடித்தாடும் அணியின் முதல் வீரர்(எண் 1) முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும். எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார். இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும். ஆனால் முதல் வீரர் 3 பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும். விளையாடும்மோது 7 வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர். இவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் 3 பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும். முதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும். இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் ஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப‌ நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும். ஓணப்பந்து போட்டி என்பது பல்வேறு அணிகள் பங்குபெறும் விளையாட்டாகும். மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பிரபலமான சுமார் 25 க்கு மேற்பட்ட‌ அணிகள் பங்கு பெறும். கால் இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டி என போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசு, ஆட்ட நாயகன் பரிசு ஆகியவையும் உண்டு. பல்வேறு இளைஞர் அமைப்புகள் ஆண்டுக்கொருமுறை இப்போட்டியை நடத்தி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி ( Alanchi ) யில் இந்திய அரசு நேரு யுவ கேந்திராவின் கீழ் 145 உறுப்பினர்களுடன் செய‌ல்பட்டு வரும் வீனஸ் ஸ்போர்ட்ஸ்&நற்பணி மன்றம் 19 ஆண்டுகளாக (ஜூலை 2008 ல் எழுதியது) மாவட்ட அளவிலான‌ ஓணப்பந்து போட்டியை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான‌ ஓணப்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு,முதல் பரிசாக அமரர்.சூசந்தோணி மேஸ்திரி நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 1111 ம்,இரண்டாம் பரிசாக அமரர்.எப்பீஸ் காண்டிராக்டர் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 999 ம்,மூன்றாம் பரிசாக அமரர்.ஆல்பின் ஜெ பிரகாஷ் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 888 ம்,நான்காம் பரிசாக அமரர் பிரான்சீஸ் காண்டிராக்டர் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 777 ம்,ஆட்ட நாயகனுக்கு அமரர்.மார்சல் நினைவாக பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 201 ம்,ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பட்டின் மேல் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்புப்பரிசாக ரூபாய் 251 ம் வழங்கப்பட்டு வருகின்றது. திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் நடைபெறும் நட்புறவு ஓணப்பந்து விளையாட்டும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும்,மாவட்ட அளவிலான கபடி போட்டி,வட்டார அளவிலான தடகள போட்டிகள்,கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலஞ்சியில் ஆலஞ்சி ஏ, ஆலஞ்சி பி, ஆலஞ்சி சி என மூன்று பிரபலமான‌ ஓணப்பந்து அணிகள் உள்ளன. 2005, 2006 ம் ஆண்டிற்கான குமரி மாவட்ட சிறந்த மன்ற விருதினை இம்மன்றம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் பார்க்க‌வும் http://wikimapia.org/#lat=8.1969635&lon=77.2363758&z=18&l=0&m=a&v=2 1885 1885 (MDCCCLXXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). [[பகுப்பு:1885|*]] சீன விண்வெளித் திட்டம் ஏவுகணை ஏவுதல், செயற்கைக் கோள்களை ஏவுதல், விண்வெளிப் பயணம், விண்வெளிப் போரியல், விண்வெளிக் குடியிருப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை, கட்டமைப்புகளை, திட்டங்களை விருத்தி செய்யும் நிறைவேற்றும் இலக்கோடு செயலாற்றும் சீனா அரசின் முன்னெடுப்பே சீன விண்வெளித் திட்டம் ஆகும். 2000 களில் உருசியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் அடுத்தபடியாக சீன விண்வெளித் திட்டம் மூன்றாம் நிலையில் இருக்கிறது. சீனா அக்டோபர் 15, 2003 சென்ஷோ திட்டம் 5 மூலம் மனித விண்வெளிப்பறப்பு நிகழ்தி உலகில் மூன்றாம் விண்வெளிச் சக்தியாக தன்னை நிலைநிறுத்தியது. சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் செல்லும் திட்டங்களும் நடப்பில் உள்ளன. சீனாவிலேயே முதன்முதலாக வெடிமருந்து, ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு விருத்தி பெற்றன. நவீன விண்வெளித் திட்டங்களின் திருப்பு முனையாக சோவியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சீனாவின் விள்வெளித் திட்டம் அதன் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து தோற்றம் பெற்றது. 1950களில் ஐக்கிய அமெரிக்காவின் அணு ஏவுகணைத் தாக்குதலுக்கு அஞ்சிய சீனா, Qian Xueshen தலைமையின் கீழ் அதன் முதல் ballistic missile program தொடங்கப்பட்டது. விண்வெளிப் போர் விண்வெளியில் நடைபெறும் அல்லது அல்லது விண்வெளியில் இருந்து தொடுக்கப்படும் போர் விண்வெளிப் போர் எனப்படும். இலக்குகளும் ஆயுதங்களும் எங்கு உள்ளன என்பதைக் கொண்டு விண்வெளிப் போரை மூன்று வகைப்படுத்தலாம். மூன்றாவது வகை விண்வெளிப் போர் என கருதத் தக்கது எனினும், ஐக்கிய அமெரிக்கவில் முன்வைக்கப்படும் வரைவிலக்கணம் ஆவ்வாறு வரையறுப்பதை தவிர்த்துள்ளன. உயிரியல் போர் உயிரியல் போர்முறை, உயிரிப்போர் அல்லது கிருமி போர்முறை (Biological warfare) என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப் பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாதவாறு செய்யும்படி தாக்குவது ஆகும். உயிரியல் ஆயுதங்கள் என்பது ஓம்புயிருக்குள் சென்றவுடன் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சியடையும் ஒரு உயிரினம் அல்லது தானே பெருக்கிக் கொள்ளும் திறம் படைத்த உருப்படி (வைரஸுகள் உயிருள்ளவையாக கருதப்படுவதில்லை) ஆகும். பூச்சியியல் போர்முறையும் உயிரிப்போரில் ஒருவகையாக கருதப்படுகிறது.நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் இதுவும் ஒன்று.கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர் ஏனையவையாகும். உயிரி ஆயுதங்கள் ஒரு தனி நபரையோ, ஒரு கூட்டத்தாரையோ அல்லது ஒரு முழு இனத்தையோ அழிக்கும் படி பிரத்யேகமாக உருவாக்கபடலாம். இவை ஒரு நாட்டினாலோ அல்லது நாடு சாராத தனிக் கூட்டத்தாரலோ உருவாக்கப்படவும், வாங்கவும், சேர்ப்பில் வைத்து பின்னர் உபயோகப்படுத்தப்படவும் முடியும். நாடு சாராத தனிக் கூட்டத்தாரால் உபயோகப்படுத்தப்படின், அது "உயிரித்தீவிரவாதம்" என்றழைக்கப்படும். உயிரிப்போர்முறையும் வேதிப்போர்முறையும் ஒன்றையொன்று தழுவியவாறே உள்ளது. உயிரியாயுதங்களால் வெளிப்படுத்தப்படும் நச்சு, உயிரியல் ஆயுதங்கள் பட்டியலிலும் அதே சமயம் வேதியியல் ஆயுதங்கள் பட்டியலிலும் இடம்பெறும். உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவது போர்க் குற்றமாக கருதப்படும்‌. 1972 இல் நடந்த உயிரியாயுதக் கூட்டத்தொடரில் தாக்குதலுக்கான உயிரியல் ஆயுதங்களின் உருவாக்கம், சேமிப்பு மற்றும் பயன்பாடு சட்டவிரோதமாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 170 நாடுகள் கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது, உயிரியாயுத தாக்குதலினால் இராணுவமல்லாத குடிகளின் உயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்ளாட்சி குலையும் நிலையை தவிர்ப்பதே ஆகும். உயிரியாயுதங்களின் பயன்பாடு ஆதிமுதலே இருந்திருப்பதாக தெரிகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே அசீரியர்கள் தங்கள் எதிரிகளுக்கு பித்துப் பிடிக்கும் படி , பூஞ்சைகளினால் நஞ்சு வைத்ததாக அறியப்படுகிறது. பிரித்தானியர்கள் பெரியம்மை நோயை உயிரியாயுதமாக 1763 மற்றும் 1789 களில் அமேரிக்கா ம்ற்றும் நியூ தெற்கு வேல்ஸ் போன்ற இடங்களில் உபயோகித்தாக கூறப்படுகிறது. ஆயினும் போதிய சான்றுகள் இல்லாதபடியால் இவை உறுதிசெய்யப்படவில்லை. 1900 களில் நோய் நுண்மைக்கோட்பாடு மற்றும் பாக்டீரியா பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் உயிரியாயுதக் காரணிகளை, போரில் கையாளும் முறையில் வேறு கட்டத்துக்கு எடுத்து சென்றது. இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலகட்டத்தில், ஐக்கிய இராஜ்யத்தின் போர்டன் டோவுன் என்ற இடத்தில் , பால் பில்டேஸ் என்ற நுண்ணுயிர் வல்லுநர் தலைமையில் ஒரு உயிரியாயுத திட்டத்தை தொடங்கியது, அந்நாட்டின் சேமிப்பு அமைச்சகம். இதுவே பின்னாளில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் துலரெமியா, ஆந்திராக்சு மற்றும் புருசெலுசிஸ் போன்றவற்றை ஆயுதாமாக்கி வெற்றிகண்டது.இதே சமயத்தில் ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகள் தங்களின் தனி தனி உயிரியாயுதத் திட்டத்தை தொடங்கின. ஐக்கிய அமேரிக்க அரசு போரில் நுழைந்ததும், நேச நாடுகளின் வளங்கள் அனைத்தும் பிரித்தானிய வேண்டுகோளின் பேரில் ஒன்றினைக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஐக்கிய அமேரிக்க அரசு, மேரிலாந்தில் ஜார்ஜ் மெர்க் என்பவரின் தலைமையில் ஒரு பெரிய ஆராய்ச்சி கழகத்தை தொடங்கியது. இங்கே உருவாக்கப்பட்ட உயிரியாயுதங்கள் உடா பாலைவனத்தின் டக்வே சோதனை மையத்தில் சோதிக்கப்பட்டன. விரைவிலேயே ஆந்திராக்சு, புருசெலுசிஸ் மற்றும் போட்டுலிசம் போன்ற உயிரியாயுதங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட, ஆங்காங்கே ஆராய்ச்சிக் கழகங்களும் சோதனை மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனாலும் இவை எல்லாம் போரில் பயன்படுத்தப்படும் முன்னரே போர் முற்றிற்று. மிகவும் பேர்போன உயிரியாயுத ஆராய்ச்சி 'ஏகாதிபத்திய ஜப்பானின் இராணுவ பிரிவு 731' ஆல் மிகவும் ரகசியமாக செய்யப்பட்டது. தளபதி ஷிரோ இஷீ வழிநடத்த, மஞ்சூரியாவை மையமாக கொண்டு மனிதர் மீது ஆராய்ச்சி செய்து போரில் பயன்படுத்தக்கூடிய உயிரியாயுதங்களை தயாரித்துக் கொண்டிருந்தது இந்த பிரிவு. அமேரிக்க பிரித்தானிய தொழில்நுட்பங்கள் இல்லாதபோதும், இவர்களின் தீவிர ஆராய்ச்சி முறையால் இவர்களின் உயிரியாயுதங்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சற்றே உயர்ந்துதான் காணப்பட்டது. சீனப்படையின் மீதும் பொதுமக்கள் மீதும் உயிரியாயுத தாக்குதலையே நடத்தியது ஜப்பான். 1940இல் நிங்போவின் மீது கொடூர பிளேக் நோயைக்கொண்ட உண்ணிகள் நிறைந்த செராமிக் குண்டுகளை வீசியது. பெரும்பாலான இவ்வகை தாக்குதல்கள் சரியான விநியோக முறையில்லாததால் பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமற்போயிற்று. இருந்தும்கூட 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். சரிவர கட்டுப்படுத்த முடியாததால் தன் வீரர்கள் பலரையும் இவ்வகை தாக்குதல்களில் பலி கொடுத்தது ஜப்பான். போரின் கடைசி காலத்தில் பிளேக் நோயை உயிரியாயுதமாகக் கொண்டு அமெரிக்காவின் சான் டியாகோ, கலிபோர்னியா போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ஜப்பான். செப்டம்பர் 22, 1945 இல் இந்தத் தாக்குதலை நடத்த முடிவு செய்து, இத்திட்டத்துக்கு " இரவு நேர செர்ரி பூக்கள்" என பேரிட்டது ஷிரோ இஷீ யின் இராணுவப்பிரிவு. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த எதிர்பாராத தாக்குதல்களினால் அம்மாதம் 15 ஆம் தேதி நிபந்தனையற்ற சரணடைந்தது ஜப்பான். இதனால் உயிரியாயுதத் தாக்குதல்கள் நடக்காமலேயே போர் முடிவுக்கு வந்தது. இந்திய குடியரசு பேரழிவு ஆயுதங்களை அணு ஆயுத வடிவில் வைத்திருப்பதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ வெளியீடுகள் ஏதும் இல்லை என்றாலும் இந்திய அரசானது உயிரித் தொழில்நுட்பங்களில் நல்ல திறம் படைத்ததாகவே கருதப்படுகிறது. நுண்ணுயிரி வல்லுநர்கள் மற்றும் தொற்றுநோய் வல்லுநர்கள் பலரிருந்துங்கூட இந்திய அரசு உயிரியாயுதத்தை முதற்கட்ட தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்த எவ்வித முனைப்பாடு காட்டவோ அல்லது அதற்கென்று தனித்திட்டமோ செயல்படுத்தவில்லை. உயிரியாயுதக் கூட்டத்தொடரின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய உயிரியாயுதத்தில் எவ்வித ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறது என்று நிரூபிக்க எந்த விதமான சான்றுகளும் இல்லை. இதை தெளிவு படுத்தும் பொருட்டு, அக்டோபர் 2002இல், அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், " இந்தியா உயிரியாயுதங்களை தயாரிக்காது. உயிரியாயுதம் மனித இனத்திற்கே பெருங்கேடு விளைவிக்கும்." என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதம் பேரழிவு ஆயுதம் எனப்படுவது தொகையாக மனிதர்களை கொல்லக்கூடிய அல்லது மனித இருப்பிடங்களை சூழலை பெரும் அழிவுக்கு உட்படுத்துக்கூடிய ஆயுதத்தை குறிக்கின்றது. இந்த சொல் அணு, வேதி, உயிரி, கதிர்வீச்சு ஆகிய வகைப்பட்ட ஆயுத வகைகளைச் சுட்டுகிறது. பேரழிவு ஆயுதங்களுக்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவினால் 1945 ஆம் ஆண்டு இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது போடப்பட்ட அணுக்குண்டுகள் விளங்குகின்றன. 2003 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியே போர் தொடுத்தது. இருப்பினும் 2008 நடுப்பகுதி வரை எந்த வகை பேரழிவு ஆயுதங்களும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை. சவுல் கிரிப்கே சவுல் ஆரோன் கிரிப்கே ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில் கௌரவப் பேராசிரியராக இருந்துவருகிறார். தருக்கம், மொழிசார் மெய்யியல் ஆகியவை தொடர்பான பல துறைகளில் இவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இவரது ஆக்கங்களில் பல இன்னும் பதிப்பிக்கப்படாதவை ஆகவோ கையெழுத்துப் பிரதி, ஒலிநாடா ஆகிய வடிவங்களிலேயோ உள்ளன. மெய்யியல் மற்றும் தருக்கவியலுக்கான 2001 ஆம் ஆண்டுக்கான ஸ்கொக் பரிசு (Schock Prize) இவருக்கு வழங்கப்பட்டது. பெரும் உற்பத்தி பெரும் உற்பத்தி எனப்படுவது உயர் முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் உள்ளிட்டு தரப்படுத்தபப்பட்ட பொருட்களை பெருந் தொகையில் உற்பத்தி செய்யும் முறை ஆகும். பல பொருட்களை பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யும் பொழுது குறைந்த உள்ளீட்டுடன் கூடிய உற்பத்தியை பெறக்கூடியதாக இருக்கும். இதை ஆகிய இரு பொருளியல் கருத்துருக்கள்/இயல்புகள் கொண்டு மேலும் விளங்கிக் கொள்ளலாம். பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி படிநிலைகளைப் பிரித்து, சீர்படுத்தி, ஏற்ற அளவுக்கு இயந்திர மயப்படுத்தி தரப்படுத்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யத்தகக்வாறு ஏற்பாடு செய்வேண்டும். ஸ்கொக் பரிசு ஸ்கொக் பரிசு அல்லது ரோல்ஃப் ஸ்கொக் பரிசு ("Rolf Schock Prize") , மெய்யியலாளரும், ஓவியருமான ரோல்ஃப் ஸ்கொக் என்பவர் இதற்கென விட்டுச்சென்ற சொத்துக்களின் வருமானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது முதல் தவையாக சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1933 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகை தற்போது 400,000 சுவீடிய குரோனா (59,000 அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. பரிசுகள் நான்கு வகைகளாக வழங்கப்படுவதுடன், மூன்று சுவீடிய ராயல் அக்கடமிகளைச் சேர்ந்த குழுக்கள் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்கின்றன. ரோல்ஃப் ஸ்கொக் ரோல்ஃப் ஸ்கொக் (1933-1986), ஒரு மெய்யியலாளரும் ஓவியரும் ஆவார். பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவரது பெற்றோர் ஜேர்மானியர் ஆவர். 1931 இல் ஜெர்மனியை விட்டு வெளியேறிய இவர்கள் இறுதியாக ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர். ரோல்ஃப், நியூ மெக்சிக்கோப் பல்கலைக் கழகத்தில் நிலவியல், உளவியல் என்னும் பாடங்களையும், கணிதத்தையும் பயின்றார். 1955 ஆம் ஆண்டில் இளம்கலைப் பட்டம் பெற்ற இவர், பின்னர் லாஸ் ஏஞ்சலிஸ் இலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் 1956 இலிருந்து 1960 வரை மெய்யியலையும், ஏரணத்தையும் கற்றார். 1960 ஆம் ஆண்டில், ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டு மெய்யியலில் சிறப்புக் கல்வி பெறுவதற்காக சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1964 இல் ஒரு இடைநிலை முதுநிலைப் பட்டத்தையும், 1968 இல் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் அடுத்த ஆண்டில், உப்சலா பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். 1964 - 1969 ஆண்டுக் காலப் பகுதியில் இவர், ஸ்டாக்ஹோமில் உள்ள கலை, கைப்பணி மற்றும் வடிவமைப்புக்கான பல்கலைக் கழகக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் பெருமளவு நேரத்தை ஓவியம் வரைவதிலும்,ஒளிப்படம் பிடிப்பதிலும் செலவு செய்தார். இவர் மெய்யியலில் ஏரணத்துறையில் ஆய்வுகள் செய்வதில் ஈடுபாடு காட்டினார். ஆனாலும், இவர் நிரந்தரமான எந்தப் பணியிலும் அமராமல், பல்கலைக் கழகங்களிலும், இரவுப் பாடசாலைகளிலும் தற்காலிகமாகக் கல்வி கற்பித்து வந்தார். சில காலம் ஸ்டாக்ஹோமிலுள்ள ராயல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்திருந்தார். அங்கே பல பாடங்களைக் கற்பித்து வந்தார். 1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இவர் கொல்லப்பட்டார். ஆச்சரியப்படத்தக்க வகையில், பெருந்தொகையான சொத்துக்களையும், ஸ்கொக் பரிசுகளை நிறுவுவதற்கான ஒரு உயிலையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். இச் சொத்துக்களின் வருமானத்திலிருந்து 1993 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்கொக் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மானிட்டோபா மானிட்டோபா (Manitoba) கனடாவின் நடுப்பகுதியில் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 2008 கணக்கெடுப்பின் படி 1,196,291 மக்கள் வசிக்கின்றனர். வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து கனடா அரசு பிரிவு செய்து 1870இல் இந்த மாகாணம் தொடங்கப்பட்டது. மானிட்டோபாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் வினிப்பெக் ஆகும். இம்மாகாணத்தில் உலகில் 10ஆம் மிகப்பெரிய ஏரி, வினிப்பெக் ஏரி அமைந்துள்ளது. வினிப்பெக் வினிப்பெக் (Winnipeg) கனடாவின் மானிட்டோபா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மானிட்டோபாவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2006 கணக்கெடுப்பின் படி 633,451 மக்கள் வசிக்கின்றனர். சஸ்காச்சுவான் சஸ்காச்சுவான் (Saskatchewan) கனடாவில் ஒரு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் வசிக்கும் 1,010,146 மக்களில் 202,340 சாஸ்கடூன் நகரில் உள்ளனர், 179,246 தலைநகரம் ரெஜைனாவில் உள்ளனர். ரெஜைனா ரெஜைனா சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 179,246 மக்கள் வசிக்கின்றனர். சாஸ்கடூன் சாஸ்கடூன் (Saskatoon) கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி சாஸ்கடூன் மாநகரத்தில் 233,923 மக்கள் வசிக்கின்றனர். ஆல்பர்ட்டா ஆல்பர்ட்டா (Alberta) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 3,512,368 மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகானத்தின் தலைநகரம் எட்மன்டன், மிகப்பெரிய நகரம் கால்கரி. கால்கரி கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர். எட்மன்டன் எட்மன்டன் (Edmonton) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரில் 1,076,103 மக்கள் வசிக்கின்றனர். வடக்கு சஸ்காச்சுவான் ஆறு எட்மன்டன் வழியாக பாய்கிறது. வடமேற்கு நிலப்பகுதிகள் வடமேற்கு நிலப்பகுதிகள் (ஆங்கிலம்: Northwest Territories, பிரெஞ்சு: les Territoires du Nord-Ouest) கனடாவின் வடக்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். மேற்கில் யூக்கான், கிழக்கில் நுனாவுட், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் அமைந்துள்ளன. வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரம் யெலோனைஃப் ஆகும். இந்த நிலப்பகுதியில் 41,464 மக்கள் வசிக்கின்றனர். பெரிய கரடி ஏரியும் பெரிய அடிமை ஏரியும் இந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளன. யெலோனைஃப் யெலோனைஃப் (Yellowknife) கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 18,700 மக்கள் இந்த நகரத்தில் வசிக்கின்றனர். இளவரசர் எட்வர்ட் தீவு இளவரசர் எட்வர்ட் தீவு (Prince Edward Island) கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். கனடாவின் அரசியல் பிரிவுகளில் மிக சிறிய பிரிவு ஆகும். பல மாகாணங்களில் மிக சிறிய மக்கள் தொகை மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகரம் ஷார்லட்டவுன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி இளவரசர் எட்வர்ட் தீவில் 139,407 மக்கள் வசிக்கின்றனர். சார்லட்டவுன் சார்லட்டவுன் (Charlottetown) கனடாவின் இளவரசர் எட்வர்ட் தீவு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 58,625 மக்கள் இந்த நகரில் வசிக்கின்றனர். பிரிட்டிசு கொலம்பியா பிரிட்டிசு கொலம்பியா (British Columbia) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இதன் தலைநகரம் விக்டோரியா, மிகப்பெரிய நகரம் வான்கூவர். 2008 மதிப்பீட்டின் படி 4,428,356 மக்கள் வசிக்கின்றனர். வான்கூவர் வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது. விக்டோரியா, பிரிட்டிசு கொலம்பியா விக்டோரியா (Victoria) கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வான்கூவர் தீவின் தெற்கில் அமைந்த விக்டோரியா மாநகரத்தில் 330,000 மக்கள் வசிக்கின்றனர். விக்டோரியா விக்டோரியா என்ற பெயரில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: நியூ பிரன்சுவிக் புது பிரன்சுவிக் அல்ல நியூ பிரன்சுவிக் (ஆங்கிலம்: New Brunswick, பிரெஞ்சு: Nouveau-Brunswick) கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் ஃபிரெடெரிக்டன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி புது பிரன்சுவிக்கில் 751,527 மக்கள் வசிக்கின்றனர். ஃபிரெடெரிக்டன் ஃபிரெடெரிக்டன் கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஃபிரெடெரிக்டன் மாநகரத்தில் 85,688 மக்கள் வசிக்கின்றனர். யூக்கான் யூக்கான் (Yukon) கனடாவில் வடமேற்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். குயிச்சின் என்ற பழங்குடி மொழியில் யூக்கான் என்பது "பெரிய ஆறு". யூக்கானின் தலைநகரம் வைட்ஹார்ஸ் ஆகும். கனடாவின் மிக உயரமான லோகன் மலை யூக்கானில் அமைந்துள்ளது. வைட்ஹார்ஸ், யூக்கான் வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும். நோவா ஸ்கோசியா நோவா ஸ்கோசியா (Nova Scotia -- இலத்தீனில் "புது ஸ்காட்லாந்து") கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணம் கனடாவிலேயே இரண்டாம் மிக சிறிய மாகாணம் ஆகும். நோவா ஸ்கோசியாவின் தலைநகரம் ஹாலிஃபாக்ஸ் ஆகும். இந்த மாகாணத்தில் 935,962 மக்கள் வசிக்கின்றனர். ஹாலிஃபாக்ஸ் ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர். நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் (ஆங்கிலம்: Newfoundland and Labrador, பிரெஞ்சு: Terre-Neuve-et-Labrador) கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 508,270 மக்கள் வசிக்கின்றனர். செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் செயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 181,113 மக்கள் வசிக்கின்றனர். கியூபெக் நகரம் கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (ஆங்கிலம்: Quebec City, பிரெஞ்சு: Ville de Québec, IPA: /kwɨˈbɛk/ அல்ல /keˈbɛk/) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர். அஷர் (பாடகர்) அஷர் ரேமண்ட் IV (Usher Raymond IV, பிறப்பு அக்டோபர் 14, 1978) நடு 1990களில் புகழுக்கு வந்த அமெரிக்க பாடகரும் நடிகரும் ஆவார். பொதுவாக "அஷர்" என்று அழைக்கப்படுவார். இன்று வரை கிட்டத்தட்ட 30 மில்லியன் ஆல்பம்களை விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவர் யூஎஸ் ரெக்கர்ட்ஸ் என்ற பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலதிபரும் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்ட அணியின் ஒரு அதிபர் ஆவார். டாலஸ், டெக்சஸ் நகரத்தில் பிறந்த அஷர் சாட்டனூகா, டென்னசியில் வளந்தார். சிறுவராக இருக்கும்பொழுது கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடினார். அட்லான்டாவுக்கு வந்து உயர்பள்ளியை சேர்ந்தார். இதே காலத்தில் 1994இல் இவரின் முதலாம் ஆல்பம், அஷர், வெளிவந்தது. 1997இல் இவரின் இரண்டாம் வெளிவந்த ஆல்பம், மை வே, வெளிவந்து இதிலிருந்து ஒரு பாடலுக்காக அஷர் முதலாம் கிராமி விருதை வென்றுள்ளார். மொயீஷா என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் அஷர் நடிகத் தொடங்கப்பட்டார். 1998இல் இவர் முதலாக த ஃபாகல்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது அட்லான்டாவில் ஒரு புறநகரத்தில் அஷர் வசிக்கிறார். ஐஸ் கியூப் ஐஸ் கியூப் (Ice Cube, அல்லது "பனிகட்டி"), பிறப்பு ஓஷே ஜாக்சன் (O'Shea Jackson, ஜூன் 15, 1969) ஒரு அமெரிக்க ராப் இசைப் பாடகரும் நடிகரும் ஆவார். வரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் என்.டபிள்யூ.ஏ. என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக இருந்து முதலாக ராப் உலகத்தில் சேர்ந்தார். என்.டபிள்யூ.ஏ. உடன் புகழுக்கு வந்து 1990இல் அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் என்ற முதலாம் தனி ஆல்பத்தை படைத்தார். இதுவும் இவரின் அடுத்த ஆல்பம், டெத் செர்ட்டிஃபிகேட்டும் இவரின் மிக புகழான ஆல்பம்கள் ஆகும். இவர் கேங்க்ஸ்ட ராப் என்ற ராப் இசை வகையை தொடங்கினர்களில் ஒன்றாவார். இவரின் ராப் பாடல்களில் இன மோதல், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூகமும் பிரச்சனைகளும், ஐக்கிய அமெரிக்க அரசியல் போன்ற நோக்கங்களைப் பற்றி பாடல்களை எழுதுவார். 1992இல் இவர் இஸ்லாம் சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். நடு 1990கள் முதல் நடிக்க தொடங்கினார். கிரிஸ் டக்கர் உடன் 1995இல் வெளிவந்த ஃபிரைடே என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகில் புகழுக்கு வந்தார். இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் பார்பர்ஷாப், ஆர் வீ தேர் யெட், பாய்ஸ் இன் த ஹுட் ஆகும். வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் வீரரவி உதய மார்தண்டவன் சேர மன்னர்களில் முக்கியமானவனாக கருதப்படுகின்றான்.இன்றைய மலையாள நாடகக் காணப்படும் பகுதியே அன்றைய சேர நாடு. வீரரவி அன்றைய பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். அவனுடைய காலகட்டத்தில் சேரமன்னனே மும்மன்னர்களில் பலம் வாய்ந்தவனாகவும் அழகானவனாகவும் காணப்பட்டான். எனினும் பாண்டியர் செல்வமான கொற்கைப்பகுதி முத்துக்களை இவன் களவாடியதால் பாண்டிய கோபம் இவன் மேல் வீழ்ந்தது. அத்துடன் கொட்டந்தளம் என்னும் பகுதியில் வைத்து போசாள நாட்டு(கர்நாடகம்) படைத்தளபதி சிங்கணன் உதவியுடன் பாண்டிய இளவரசி சுந்தர பாண்டியத்தேவர் மகள் முத்துக்குமரியை கவாடினான் . அதனால் சுந்தரபாண்டியனுடைய படையெடுப்புக்கும் அவ்ன் தம்பி வீர பாண்டியன் கோபத்துக்கும் ஆளானான் இதனால் சிறிய நாடாக இருந்த பாண்டிய நாடு சேர நாடு மேல் போர் தொடுத்தது. இரண்டாகப் பிரிந்த பாண்டியப்படைகளுள் வீரபாண்டியன் தலைமையிலான ஒரு படை வடக்கே இருந்த கோட்டாற்றுக்கரை என்னும் கோட்டையை தாக்கியது. அதில் வெற்றியும் கண்டன.தம்மைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்த சேர படையுடன் மோதி பாண்டியப்படை வெண்டது.தமிழனின் முதை பெண் போராளியும் படத்தளபதியும் பன்டைய நாட்டிலேயெ உருவானாள் .அவள தான் வீரபாண்டியன் மனைவி இளநங்கை.இறுதியாக பரலியில் நடந்த போரில் வீரரவி கொல்லப்படான் நீலகிரி வரையாடு நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது. 'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது. மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது. "புரி மட மரையான் கருநரை நல் ஏறு தீம் புளி நெல்லி மாந்தி, அயலது தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக வட புல வாடைக்கு அழி மழை தென் புலம் படரும் தண் பனி நாளே?" வருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது. பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119) கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் போருடை வருடையும் பாயா, சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? (359. குறிஞ்சி) நெடு வரை மிசையது குறுங் கால் வருடை தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட! வல்லை மன்ற பொய்த்தல்; வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287) மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன் வரை ஆடு வருடைத் தோற்றம் போலக் கூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை ஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141) ஆவிக் கோமான் றேவி யீன்றமகன் தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து - பதிகம் ) உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர, வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் (மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்-11) காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான இமாலய காட்டாட்டை விட சற்று பெரியது. ஆண் வரையாடு, பெண் வரையாட்டைக் காட்டிலும் உடல் எடையில் இரண்டு மடங்குடையது. வளர்ந்து பருவமடைந்த வரையாட்டில் பாலியல் ஈருவத்தோற்றம் உண்டு, அதாவது ஆண் மற்றும் பெண் வரையாட்டினிடையே உடலமைப்பில் வேறுபாடு உண்டு. பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல் பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் வரையாட்டின் வயது முதிர்ந்து வருகையில் அதன் உடல்மயிரும் கருப்பாகிக்கொண்டே இருக்கும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் பிட்டத்திற்கும் முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும் (கோப்பை பார்க்கவும்). இருபாலுக்கும் தாடி இல்லை. பெண் வரையாட்டிற்கு இரண்டு காம்புகள் உண்டு, அதுவே மற்ற காட்டாடு இனங்களுக்கு நான்கு காம்புகள் உண்டு. இருபாலுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண் வரையாட்டின் கொம்பின் நீளத்தைவிட அதிகமாகும். உயர்ந்த அளவு ஆணில்44.5 செ.மீ நீளம் உள்ள கொம்புகளும் பெண்ணில் 35.6 செ. மீ நீளம் உள்ள கொம்புகளும் காணப்பட்டுள்ளது. பல்வேறு அறிவியல் தரவுகளிலிருந்து பெறப்பட்ட ஆண் மற்றும் பெண் வரையாட்டின் உடல் அளவுகள் கீழே சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண் பாலுணர்ச்சி எழுச்சி காலத்தில் பெண் கூட்டங்களில் சேரும். ஆளுமையுடைய ஆண் புணர்வதற்கான வாய்பைப்பெறும். ஓங்கிநிற்கும் ஆண்கள் ஒன்றிற்கும் அதிகமாக இருக்கும் வேளையில், அவ்விரு ஆண்களுக்கும் இடையே சண்டை நடக்கும். இரண்டு ஆண்களும் ஒன்றிற்கொன்று துரத்தி, தன் தலை மற்றும் கொம்புகள் கொண்டு முட்டிக்கொள்ளும். சில நேரம் ஒரு ஆண் மற்றொரு ஆணை தன் கொம்புகளால் குத்திக்கொன்றுவிடும். பெரும்பாலும் தோற்கும் ஆண்கள் கூட்டத்தில் இருந்து விரட்டிவிடப்படும், சில சமயம் வென்ற ஆண் ஒப்புக்கொண்டால் கூட்டத்திலேயே வைத்துக்கொள்ளப்படும்.ஒரு ஆண் பல பெண்களோடு புணரும். வரையாட்டின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகசுட்டு வரையிலான தென்மேற்கு பருவமழை காலமாகும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 178 முதல் 190 நாட்களாகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒன்று அல்லது அரிதாகவே இரண்டு குட்டி ஈன்றெடுக்கும். பெரும்பாலும் குட்டிகள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இக்காலம் குளிர் காலமென்பதால் குட்டிகளை அதிக வெப்பத்தின் தாக்கமின்றியிருக்கும். தாய், தன் குட்டியை தன் அரவணைப்பில் வைத்து மிகவும் பாதுகாக்கும். குட்டி பிறந்த பிறகு தாய்ப்பாலை பெரிதும் நம்பியிருந்தாலும், 2 முதல் 4 வாரங்களில் (கிழமைகளில்) திட உணவுகளைத் தின்னத் துவங்கும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,200 - 2,600மீ உயர்ந்த மலைமுகடுகளில் உள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும். இவை 6 முதல் 150 வரை உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும். பெரும்பாலும் 11-71 உறுப்பினர்களை கொண்ட குழுக்களே அறியப்பட்டுள்ளன. பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும் அல்லது சிறு ஆண் குழுக்களாக வாழும், இனப்பெருக்க காலத்தில் பெண் குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள் வாழும், ஆண்கள் பல பெண் குழுக்களோடு கலந்து வாழும். இவை ஒன்றுக்கொன்று தகவல் தொடர்புகளை பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகியவற்றின் மூலம் பரிமாறிக்கொள்கிறது. இவை புல்வெளிகளில் காணப்படும் புற்களையே உணவாக உண்ணும். வரையாடுகள் கூட்டமாக விடியற்காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ மேயும். அதிக வெப்பமான பகல் வேளைகளில் செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். இத்தகைய இடங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. கூட்டமாக ஓய்வு எடுக்கும்பொழுது அக்குழுவின் ஒரு உறுப்பினர் (பெரும்பாலும் பெண்), உயர்ந்த இடத்திலிருந்து காவல் காக்கும். இவ்விலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை மேலும் எதிரிகளை மிகவும் எட்டத்திலிருந்து (தொலைவிலிருந்து) கண்டுபிடிக்கக் கூடியவை. தீவாய்ப்பைக் (அபாயத்தைக்) குறிக்க சீ்ழ்க்கை ஒலி எழுப்பியோ அல்லது உரக்கக் கத்தியோ உணர்த்தும். வரையாடுகள் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளால் கொன்றுண்ணப்படுகின்றன. வரையாட்டின் தற்பொழுது மொத்த உயிர்த்தொகை 2000 முதல் 2500 வரையில், மொத்தம் 17 இடங்களில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்டக் உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதன் மொத்த உயிர்த்தொகையில் சுமார் 1000 எண்ணிக்கையிலானவை கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார் 300 எண்ணிக்கையிலானவை ஆனைமலைப் பகுதிகளிலும் மற்றும் ஏனையவை இன்னபிற இடங்களிலும் காணப்படுகிறது. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர காடுகளில் கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் வரையடுகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் வரையாடிகளின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாகும். தாபோ உம்பெக்கி தாபோ முவுயெல்வா உம்பெக்கி ("Thabo Mvuyelva Mbeki", பிறப்பு: ஜூன் 18, 1942) தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆவார். 14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு முடிவுக்கு வந்து நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி துணைத் தலைவராக பதவியில் ஏறினார். 1999இல் உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார். 2008இல் செப்டம்பர் 20ஆம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இவருக்கு ஆதரவு பின்வாங்கியுள்ளது. இதனால் உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார். ஓசுனி முபாரக் முகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார். யூடியூப் யூடியூப் (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது. இப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது. ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கம் செய்யும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது. தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ரஞ்சித் சிங் ரஞ்சித் சிங் "(Ranjit Singh"; பஞ்சாபி: ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ) என்பவர் 1780 முதல் 1839 வரையிலான காலத்தில் சீக்கிய பேரரசின் மன்னாராக ஆட்சிசெய்து புகழ் பெற்றவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் வட மேற்குப் பகுதியை இவர் ஆட்சி செய்தார். அவர் சிசுப்பருவத்தில் இருந்தபோதே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு தப்பிப்பிழைத்தார், ஆனால் அவரது இடது கண்ணின் பார்வையை இழந்தார். தனது 10 வயதில் இவர் தனது தந்தையாருடன் சேர்ந்து முதலாவது போரில் சண்டையிட்டார். இவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 21 வயதிலேயே பஞ்சாப் சிங்கம் எனவும் பஞ்சாபின் மகாராசா என்றும் இவர் அழைக்கப்பட்டார் . அவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக அவர் தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார்.1839 ஆம் ஆண்டில் இவருடைய தலைமையின் கீழ் பஞ்சாப் பகுதியில் இவருடைய பேரரசு வளர்ச்சியடைந்தது . ரஞ்சித் சிங்கின் எழுச்சிக்கு முன்னர் பஞ்சாபில் ஏராளமான போர்க்குணமிக்க குழுக்கள் இருந்தன, அவற்றில் பன்னிரெண்டு குழுக்கள் சீக்கிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் ஓர் இசுலாமியக் குழுவும் இருந்தன . சீக்கியப் பேரரசை உருவாக்குவதற்காக ரஞ்சித் சிங் இச்சீக்கியக் குழுக்களையும் மற்ற உள்ளூர் அரசுகளையும் கைப்பற்றி வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார். இசுலாமியப் படைகளின் படையெடுப்புகளை குறிப்பாக ஆப்கானிலிருந்து வந்த இசுலாமியப் படைகளை பலமுறை தோற்கடித்தார். பிரிட்டனுடன் நட்பான உறவுகளை மேம்படுத்திக் கொண்டார் . ரஞ்சித் சிங்கின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் பேரரசின் செழிப்புக்குத் தேவையான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . ரஞ்சித் சிங்கின் கல்சா இராணுவமும் அரசாங்கமும் சீக்கியர்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உள்ளிட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது . சீக்கிய கலாச்சாரம் மற்றும் கலை மறுமலர்ச்சிக்கான காலப்பகுதி முதலானவை இவரது பரம்பரைச் சொத்தாக கருதப்படுகின்றன. சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமான அமிர்தசரசிலுள்ள அரிமந்திர் சாகிப் எனப்படும் பொற்கோயில், இவரது ஆதரவில் உருவான பட்னா நகரிலுள்ள தாகிட் சிறீ பட்னா குருத்துவாரா, பீகார் மற்றும் மகாராட்டிர மாநில நாந்தேடு நகர அசூர் குருத்துவாரா உள்ளிட்ட முக்கிய குருத்துவாராக்களும் இவரது காலத்தில் உருவானவையாகும் . ரஞ்சித் சிங்கிற்குப் பின்னர் அவரது மகன் மகாராசா கராக் சிங் 1839 ஆம் ஆண்டு அரியணையைப் பிடித்து ஆட்சி செய்தார் . மகாசிங் சுக்கெர்சாக்கியாவுக்கும், தற்போது பாக்கித்தானிலுள்ள குச்ரன்வாலாவின் சிந்து நகர மன்னர் கசபத் சிங்கின் மகளான ராச் கவுருக்கும் 1780 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ரஞ்சித் சிங் பிறந்தார் . போர்க்குணமிக்க சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் சீடராக இருந்த மூதாதையர் ஒருவரின் நினைவாக ரஞ்சித் சிங் பிறந்த போது அவருக்கு புத்த சிங் என்று பெயரிடப்பட்டது. இவரது வம்சாவளியினர் ரஞ்சித் சிங்கின் பிறப்புக்கு முன்னர் சுக்கர்சாகியா என்ற சீக்கிய சிற்றரசை உருவாக்கினர். முகலாயப் பேரரசு அழிந்து கொண்டிருந்த அந்நேரத்தில் வடமேற்கு தெற்காசியாவில் நிலைபெற்றிருந்த பல சிறிய சீக்கிய அரசுகளில் மிகவும் சக்திவாய்ந்த அரசாக இச்சிற்றரசு இருந்தது . இசுலாமியத் தலைவர் பீர் முகம்மது என்பவரின் மீதான போரில் வெற்றிபெற்றதை நினைவு கூறும் வகையில் குழந்தையின் பெயர் ரஞ்சித் (போர் வெற்றியாளர் என்ற பொருள்) என ரஞ்சித்தின் தந்தையாரால் மாற்றப்பட்டது . ரஞ்சித் சிங் குழந்தையாக இருந்தபோது பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இடது கண்ணில் பார்வையை இழந்தார் . கம்பீரமான உருவத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். பஞ்சாபி மொழியை எழுதுவதற்கு சீக்கியர்களும் இந்துக்களும் பெரிதும் பயன்படுத்தும் குர்முகி எழுத்துமுறையைத் தவிர்த்து பள்ளிக்கூடம் சென்று எழுதவோ படிக்கவொ இவர் கற்கவில்லை . இருப்பினும் வீட்டிலிருந்தபடியே குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் பிற போர்க்கலைகளைக் கற்றார் . ரஞ்சித் சிங் 12 வயதில் இருந்தபோது அவரது தந்தை இறந்தார் . பின்னர் அவர் தனது தந்தையின் சுக்கர்ச்சக்கியா சிற்றரசின் தோட்டங்களை மரபுவழியாகப் பெற்றார். மற்றும் அவரது தாயார் ராச் கவுரால் வளர்க்கப்பட்டார், இலக்பத் ராய் என்பவர் இவர்களுடன் சேர்ந்து தோட்டங்களை நிர்வகிப்பதில் உதவினார் . ரஞ்சித் சிங் 13 வது வயதாக இருந்தபோது அசுமத் கான் என்பவர் மூலமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் ரஞ்சித் சிங் அவ்வாலிபரைக் கொன்று வெற்றி பெற்றார் . 18 வயதில் ரஞ்சித் சிங் இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார் மற்றும் லக்பத் ராய் படுகொலை செய்யப்பட்டார், அதன்பிறகு அவரது முதல் திருமணத்திலிருந்து ரஞ்சித்தின் மாமியார் அவருக்கு உதவினார். பதின்வயதினராக இருந்தபோது ரஞ்சித் சிங் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டார். அவரது தத்துவார்த்த வரலாற்றாளர்கள் மற்றும் அவரைப் பார்வையிட்ட ஐரோப்பியர்கள் ஆகியோரின் கூற்றுப்படி ரஞ்சித்தின் பிற்கால வாழ்க்கையில் இப்பழக்கம் மிகத் தீவிரமடைந்திருந்தது . இருப்பினும் அவர் மாட்டிறைச்சியை சாப்பிட்டதில்லை. புகைப்பிடிக்கும் பழக்கும் இவருக்கு இருந்ததில்லை. மற்றும் அவரின் அரசவையில் இருந்த அனைத்து அதிகாரிகளும், அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் வேலைக்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் . பல்வேறு திருமண விழாக்களில் ரஞ்சித் சிங் பல முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இருபது மனைவிகள் இருந்தனர் . ரஞ்சித் சிங்கின் திருமணம் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் அவருக்கு பல மனைவிகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 1889 ம் ஆண்டு பிரெஞ்சு பத்திரிகையான லு வோலெய்யருக்கு அளித்த பேட்டியில், ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங், "நான் என் தந்தையின் நாற்பத்தி ஆறு மனைவிகளில் ஒருவரின் மகனாக இருக்கிறேன்" என்று கூறியதாக குச்வந்த்சிங் சிங் குறிப்பிடுகிறார் . 15 வயதில் ரஞ்சித் சிங் அவரது முதல் மனைவியான மெகதப் கவுர் என்பவரை மணந்தார் . இவர் குர்பக்சு சிங் கன்யாயா மற்றும் அவரது மனைவி சதா கவுர் தம்பதியரின் ஒரே மகளும், கன்யாயா சிற்றரசை நிறுவியவருமான செய்சிங் கன்யாயாவின் பேத்தியுமாவார் . போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீக்கிய சிற்றரசுகளை சரிசெய்யும் பணியில் ரஞ்சித் சிங் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மெகதப் கவுர் உடன் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும் திருமணம் தோல்வியில் முடிந்தது. தன்னுடைய தந்தையை ரஞ்சித்தின் தந்தை கொலை செய்தார் என்பதை மெகதப் கவுர் கடைசிவரை மன்னிக்கவே இல்லை. திருமணத்திற்குப் பின்னரும் அவர் தன்னுடைய தாயாருடனேதான் வாழ்ந்தார். இதானால் 1798 இல் நாகை சிற்றரசைச் சேர்ந்த ராச் கவுர் என்பவரை ரஞ்சித் சிங் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் . மெகதப் கவுர் 1813 ஆம் ஆண்டில் இறந்தார் . நாகாய் சிற்றரசின் மூன்றாவது மன்னர் சர்தார் ரான்சிங் நாகாயின் மகளான ராச் கவுர், தாதர் கவுர் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். இவரே ரஞ்சித் சிங்கின் இரண்டாவது மனைவியும் அவரது மகனுமான கராக் சிங்கின் தாயுமாவார். ரஞ்சித் சிங்கின் தாயாரின் பெயரும் ராச் கவுர் என்பதால் குழப்பத்தைத் தவிர்க்க ராச் கவுர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தன்வாழ்வின் இறுதிவரை இவர் ரஞ்சித் சிங்கின் அன்பிற்குரியவராகவே இருந்தார் . ரஞ்சித் சிங்கின் முதல் திருமணத்தைப் போலவே, இரண்டாவது திருமணமும் அவருக்கு ஓர் இராணுவக் கூட்டணியை கொண்டு வந்தது. அவரது இரண்டாவது மனைவி 1818 ஆம் ஆண்டில் இறந்தார் ரத்தன் கவுர் மற்றும் தயா கவுர் ஆகியோர் குசராத்தின் சாகிப் சிங் பாங்கி என்பவரின் மனைவிகளாவர். (குசராத் மாநிலத்தை எண்ணி குழப்பக்கூடாது, லாகூருக்கு வடக்கே ஒரு சிற்றரசாக இவர்கள் இருந்தனர்) . சாகிப் சிங் மரணமடைந்த பிறகு ரஞ்சித் சிங் அவர்கள் இருவரையும் சடார் அன்சாவின் சடங்கின் வழியாக 1811 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். 1819 ஆம் ஆண்டில் ரத்தன் கவுருக்கு முல்தானா சிங்கும், தயா கவுருக்கு காசுமீரா சிங்கும் பிறந்தனர். 1821 இல் தயா கவுருக்கு பாசுகாயுரா சிங் பிறந்தார். 1802 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட மோரன் சர்க்கார், 1815 இல் மணந்த சந்த் கவுர், 1820 இல் மணந்த லட்சுமி, 1822 இல் மணந்த மெகதாப் கவுர், 1832 இல் மணந்து கொண்ட சமன் கவுர் மற்றும் அதே போல் குடான், பன்சோ, குல்பாகர், குலாப், ராம் தேவி, ராணி, பன்னட், ஆர் மற்றும் தனோ உள்ளிட்டவர்கள் ரஞ்சித்துக்கு மனைவிகளாக இருந்தனர் . இந்து கவுர் ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவி ஆவார். அவரது தந்தை மன்னா சிங் ஆலுக் தன்னுடைய மகளின் நல்லொழுக்கங்களை ரஞ்சித் சிங்கிடம் புகழ்ந்து கூறினார். இரஞ்சித் சிங்கோ அவருடைய ஒரே வாரிசு கராக் சிங்கின் பலவீனத்தை பற்றி கவலை கொண்டிருந்தார். பின்னர் மகாராசா 1835 ஆம் ஆண்டில் தனது அம்பு மற்றும் வாளை கிராமத்திற்கு அனுப்பி இந்து கவுரை திருமணம் செய்து கொண்டார். 6 செப்டம்பர் 1838 இல் சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசாவான துலீப் சிங்கை இவர் பெற்றெடுத்தார். 1802 ஆம் ஆண்டில் ரஞ்சித் சிங் மோரன் சர்கார் என்ற இசுலாமிய நாட்டியப் பெண்ணை மணந்தார். மகாராசாவின் இந்த நடவடிக்கையும் மற்ற சீக்கிய மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் ஆச்சாரமான சீக்கியர்களையும் நிகாங் குழுவினரையும் எரிச்சலைடையச் செய்தது. நிகாங்கு சீக்கியர்களின் தலைவராக இருந்த அகலி புலா சிங் சீக்கிய சமய அகால் தக்தின் புனிதப்பதவியில் இருந்தவர் ஆவார் . ரஞ்சித் சிங் அம்ரித்சருக்கு வருகை தந்தபோது புனிதத்தலைவரைய வெளியில் அழைத்து தான் செய்த தவறுகளுக்காக அவரிடம் மன்னிப்பு கோரினார். அகலி புலா சிங், ரஞ்சித் சிங்கை அகால் தக்திற்கு முன்னால் இருந்த ஒரு புளிய மரத்தடிக்கு அழைத்துச் சென்று சாட்டையடி கொடுத்து அவரைத் தண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் . ரஞ்சித் சிங்கின் மன்னிப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை அக்லி புலா சிங் அருகிலுள்ள சீக்கிய பக்தர்களிடம் கேட்டார். பக்தர்கள் சத் சிறீ அகால் அருள் செய்து ரஞ்சித் சிங்கை விடுவித்து மன்னித்தனர். ரஞ்சித் சிங்கிற்கு எட்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மனைவி மூலம் பெற்ற கராக் சிங் அனைவருக்கும் மூத்தவராவார். முதல் மனைவிக்குப் பிறந்த இசார் சிங் இரண்டு வயதிலேயே இறந்து போனார். இரட்டையர்களாகப் பிறந்த சேர் சிங், தாரா சிங் இருவரும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது மகன்களாவர். சிங் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பளித்த விதவைகள் மூலம் முல்த்தானா சிங், காசுமிரா சிங், பசாவுரா சிங் என்ற மூன்று மகன்கள் அவருக்குப் பிறந்தனர். கடைசி மனைவி மூலமாக இவருக்கு துலீப் சிங் என்ற மகன் பிறந்தார். கராக் சிங்கையும் துலீப் சிங்கையும் மட்டுமே ரஞ்சித் சிங் தன்னுடைய மரபுவழி மகன்களாக ஏற்றுக்கொண்டார். 1830 களில் சிங்கிற்கு பல உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. மதுபானம் மற்றும் கல்லீரல் கோளாறு ஆகியவை இதற்குக் காரணமென சில வரலாற்று பதிவுகள் கூறுகின்றன . 1839 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 இல் ரஞ்சித் சிங் தூக்கத்தில் இறந்தார் . அவரது நான்கு மனைவிகள் மற்றும் ஏழு காமக்கிழத்தியர்கள் ரஞ்சித் சிங்கின் இறுதி சடங்கு நடந்தபோது உடன்கட்டை ஏறினர் . 1707 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதிக்கான வரி செலுத்துவதற்கு அல்லது நிர்வகிக்கும் திறனை முற்றிலுமாக இழந்தது. வடமேற்கு பகுதியில், குறிப்பாக பஞ்சாப்பில் குரு கோபிந்த் சிங்கின் சீக்கிய வீரர்களால் உருவான கல்சா சமுதாயத்தினரின் எழுச்சியினால் முகலாயர்களின் அதிகாரம் துண்டு துண்டாக சிதறுவது அதிகரித்தது . சிந்து நதி பள்ளத்தாக்குளின் மீது ஆப்கானியர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் கல்சா சீக்கியர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளாலும் கிராமங்களைச் சார்ந்த முறையற்ற கல்சா சீக்கியப் போராளிகளாலும் ஆப்கானியர்கள் எதிர்ப்பை சந்தித்தனர். முன்னதாக வருவாய் திரட்டும் சமீந்தார்களாக இருந்த இசுலாமியர்களை நீக்கிவிட்டு சீக்கியர்கள் தங்களைச் சார்ந்த சமீந்தார்களையே நியமித்துக் கொண்டனர். இதனால் சீக்கியர்களுக்கு ஆதரவாக இருந்த வீரர்களுக்கு உணவு வழங்கவும் அவர்களின் படையை வலிமையூட்டவும் கிடைத்தது. இதற்கிடையில் காலனித்துவ வர்த்தகர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களும் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கினர் 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில், இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகள் (இப்பொழுது பாக்கித்தான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகள்) பதினான்கு சிறிய சிற்றரசுகளின் தொகுப்பாக இருந்தன . மேற்கண்ட பதினான்கு சிற்றரசுகளில் 12 சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. லாகூருக்கு அருகில் இருந்த கசூர் அரசு இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிலும், தென்கிழக்கில் இருந்த மற்றொரு குழு ஆங்கிலேயர் சியார்ச்சு தாமசு என்பவரின் கட்டுப்பாடிலும் இருந்தன .இந்த பகுதி சீலம், செனாப், ராவி, பியாசு மற்றும் சட்லச ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் வளமான பள்ளத்தாக்குப் பகுதிகளாகும் . சீக்கிய வீரர்கள் அனைவரும் சீக்கிய வீரர்களின் கல்சா சீக்கியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர், ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கவில்லை, வருவாய் சேகரிப்பு, கருத்து வேறுபாடுகள் மற்றும் உள்ளூர் முன்னுரிமைகள் ஆகியவற்றுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு ஒற்றுமையிழந்து காணப்பட்டனர். ஆப்கானித்தானில் இருந்து அகமதா சா அப்தாலி போன்ற இசுலாமியப் படைகளின் வெளிப்புற படையெடுப்பு ஏற்பட்டால் மட்டும் அவர்கள் பொதுவாக நாட்டுக்காக ஒன்றுபட்டனர் . 18 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுக்கர்சாகியா, கன்யாசு, நக்காயிசு, அகுல்வாலியாசு மற்றும் பாங்கி சீக்கியர்கள் என்ற ஐந்து மிக சக்திவாய்ந்த சிற்றரசுகள் பேரரசில் இருந்தன . ரஞ்சித் சிங் முதலாவது குழுவான சுக்கர்சாகியாவில் இருந்தார். திருமண உறவின் வழியாக அவருக்கு கன்யாசு, நக்காயிசு அரசுகளின் ஒத்துழைப்பு கிட்டியது . சிறிய சிற்றரசர்களான புல்கியசு மில்சு போன்ற சிலர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆப்கான் இராணுவ படையெடுப்பை முன்னிட்டு தங்கள் கல்சா சகோதரர்களுக்கு ஆதரவளித்தனர் . ராசபுத்திர-இசுலாமியரால் ஆளப்பட்ட கசூர் பகுதி, ஆப்கானிய படையெடுப்பு படைகளுக்கு எப்போதும் ஆதரவளித்ததுடன், போரின்போது சீக்கியப் படைகளை கொள்ளையடிப்பதில் அவர்களுக்கு உதவியது . 1797 ஆம் ஆண்டில் அகமது சச அப்தாலி வம்சத்தைச் சேர்ந்த ஆப்கான் இசுலாமிய ஆட்சியாளரான சா சமான், தன்னுடைய படைத் தளபதி சாகான்சிகான் மற்றும் 12000 படை வீர்ர்களுடன் பஞ்சாப் பகுதியின் மீது போர் தொடுத்தபோதே ரஞ்சித் சிங்கின் புகழ் பரவத் தொடங்கியது . அப்போது அவருக்கு வயது 17 ஆகும். ரஞ்சித் சிங் கட்டுப்பாட்டில் இருந்த போர் தளங்களில் யுத்தம் நடந்தது, அப்பிராந்தியத்தைப் பற்றிய போதுமான அறிவும் வீரர்களின் போர் நிபுணத்துவம் படையெடுத்த இராணுவத்தை எதிர்க்க ரஞ்சித் சிங்கிற்கு உதவியது. போரில் அடைந்த வெற்றி ரஞ்சித் சிங்கை அடையாளப்படுத்தியது. ரஞ்சிங்கை எதிர்க்க 1798 ஆம் ஆண்டில் ஆப்கானிய ஆட்சியாளர் மற்றொரு இராணுவப் படையை அனுப்பினார், இப்படையை ரஞ்சித் சிங் எதிர்க்கவில்லை. அவர்களை லாகூரில் நுழைய அனுமதித்தார். பின்னர் அவர்கள் படையை சுற்றி வளைத்துக் கொண்டார். அனைத்து உணவு மற்றும் பொருட்களை அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்தார். ஆப்கானியர்களுக்கு ஆதரவாக இருந்த பகுதிகளில் காணப்பட்ட அனைத்து பயிர்களையும், உணவு ஆதாரங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். தாக்குப் பிடிக்க இயலாத ஆப்கானியப் படையினர் மீண்டும் ஆப்கானுக்குத் திரும்பினர் . 1799 ஆம் ஆண்டில், 25,000 ராசா ரஞ்சித் சிங்கின் இராணுவம் 25000 கல்சா சீக்கியர்களால் ஆக்கப்பட்டிருந்தது. மற்றொரு 25,000 கல்சா சீக்கியர்களால் ஆன மற்றொரு படை அவருடைய மாமியார் ராணி சதா கவுரால் தலைமை தாங்கப்பட்டு ரஞ்சித் சிங்கிற்கு ஆதரவாகச் செயல்பட்டது. இவ்விரு படைகளும் அணிசேர்ந்து கூட்டு நடவடிக்கையாக லாகூர் நகரத்தை மையமாகக் கொண்ட பாங்கி சீக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை தாக்கினர். லாகூரைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தப்பியோடினர். முதலாவது பெரிய வெற்றியாக லாகூர் வெற்றி என்னும் புகழ் ரஞ்சித் சிங்கிற்கு வந்து சேர்ந்தது . சூப்பி இசுலாமியர்களும் லாகூரின் இந்துக்களும் ரஞ்சித் சிங்கின் ஆட்சியை வரவேற்றனர் . 1800 ஆம் ஆண்டில், சம்மு பகுதியின் ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கிற்கு தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பகுதியை விட்டுக்கொடுத்தார் . 1801 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் இந்து நாள்காட்டியின் படி அமைந்த புதிய ஆண்டில் நடைபெற்ற ஒரு விழாவில், குரு நானக்கின் நேரடியான சீடர் சஞ்சிப் சிங் பேடி அவர்கள் ரஞ்சித் சிங்கின் நெற்றியில் திலகமிட்டு அவரை பஞ்சாபின் மகாராசா என்று பெயரிட்டு அழைத்தார். ரஞ்சித் சிங்கின் ஆட்சியை "சர்கார் கல்சா" என்றும் அவருடைய அவையை தர்பார் கல்சா" என்றும் பெயரிட்டு அழைத்தார். 1802 ஆம் ஆண்டில் 22 வயதுடைய ரஞ்சித் சிங் பாங்கி சீக்கியர்களிடமிருந்து அமிர்தசரசை கைப்பற்றினார். அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முன்னர் ஆப்கானிய படையெடுப்பால் தாக்கப்பட்டு பழுதடைந்திருந்த அர்மந்திர் சாகிப் கோவிலை பளிங்கு மற்றும் தங்கத்தால் மறுசீரமைப்பு செய்வதாகவும் புனரமைப்பதாகவும் அறிவித்தார் . 1806 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரித்தானிய அதிகாரிகளுடன் ரஞ்சித் சிங் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதில் சீக்கிய சக்திகள் சட்லச் ஆற்றின் தெற்கில் விரிவாக்க முயற்சிக்கவில்லை என்று உறுதி கூறினார். பிரித்தானிய இராணுவம் சட்லச் ஆற்றை கடந்து சீக்கியப் பிரதேசத்தில் நுழைவதில்லை என்று உறுதியளித்தது 1807 ஆம் ஆண்டில், ரஞ்சித் சிங்கின் படைகள் இசுலாமியரின் ஆட்சியில் இருந்த கசூரின் மீது படையெடுத்து கடுமையான சண்டைக்குப் பிறகு, ஆப்கானியத் தலைவரான குதுப்-உத்-தினை தோற்கடித்தன. ஆப்கானித்தானத்தை நோக்கிய வடமேற்குப் பகுதியை பேரரசுடன் சேர்த்து விரிவுபடுத்தினார். 1818 ல் முல்தானுடன் போரிட்டு வெற்றி பெற்றதன் மூலம் பாரி டோப்பை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 1819 ஆம் ஆண்டில் அவர் வெற்றிகரமாக ஆப்கானிய சன்னி இசுலாமிய ஆட்சியாளர்களைத் தோற்கடித்து, சிறீநகரையும் காசுமீரையும் தன்னுடைய பேரரசுடன் இணைத்துக் கொண்டார். மேலும் தனது ஆட்சியை வடக்கிலும் சீலம் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இமயமலையின் அடிவாரம் வரைக்கும் நீட்டினார். 1813, 1823, 1834 மற்றும் 1837 ஆம் ஆண்டுகளில் மகாராசா ரஞ்சித் சிங்கின் சீக்கியப் படைகளுக்கும் ஆப்கானியப் படையினருக்கும் இடையே மிகவும் குறிப்பிடத்தக்க போர்கள் ஏற்பட்டன. 1813 ஆம் ஆண்டில் ரஞ்சித் சிங்கின் படைத் தளபதி தேவன் மோகம் சந்த் சீக்கியப் படைகளை வழிநடத்தி சா முகம்துவின் ஆப்கானியப் படைகளை வழிநடத்திய தோசுத்து முகம்மது கானை எதிர்த்துப் போரிட்டது. அட்டோக் போர் எனப்படும் அப்போரில் ஆப்கானியர்கள் தோல்வியை சந்தித்தனர். 1813-14 இல் காசுமீருக்குள் தனது ஆட்சியை விரிவுபடுத்த ரஞ்சித் சிங் மேற்கொண்ட முதல் முயற்சி, தளபதி அசிம் கான் தலைமையிலான ஆப்கான் படைகளால் முறியடிக்கப்பட்டது. தோல்வியடைந்தது, காலராவின் பரவல், மற்றும் அவரது துருப்புகளுக்கு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை முதலியன இத்தோல்விக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. 1818 ஆம் ஆண்டில் தளப்தி தேவன் சாந்து தலைமையிலான தர்பார் படைகள் முல்தானை ஆக்கிரமித்து முசாஃபர் கானைக் கொன்று அவரது படைகளைத் தோற்கடித்தன. பஞ்சாபில் ஆப்கானிய செல்வாக்கு முடிவுக்கு வர இவ்வெற்றி வழிவகுத்தது . 1818 ஆம் ஆண்டு சூலையில் பஞ்சாபிலிருந்து வந்த சிங்கின் சீக்கியப் படை ஒன்று காசுமீரின் அசிம் கானின் இளைய சகோதரர் சப்பார் கானை முறியடித்து ரூபாய் 70 இலட்சத்துடன் காசுமீரைக் கைப்பற்றியது. தேவான் மோடி ராம் காசுமீரின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். 1819 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெசாவரில் மகாராசாவின் ஆட்சியை தோசுத்து முகம்மது ஏற்றுக் கொண்டார். ஆண்டுக்கு வரியாக ஒரு லட்ச ரூபாய் செலுத்தவும் சம்மதித்தார். மகாராஜா குறிப்பாக தனது படையினரை எந்தவொரு குடிமகனையும் தொந்தரவு செய்யவோ அல்லது பாலியல் பலாத்காரம் செய்யவோ உத்தரவிடவில்லை. 1820 மற்றும் 1821 ஆம் ஆண்டுகளில், சீலம் மற்றும் சிந்து, சிங் சாகர் டாவ் ஆகிய இடங்களுகிடையில் இருந்த டெரா காசி கான், அசாரா மற்றும் மங்கேரா போன்ற பெரும் பகுதிகள் சீக்கியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. காசுமீர், பெசாவர் மற்றும் முல்தான் பகுதிகளின் வெற்றிகளை கொண்டாடும் விதமாக ரஞ்சித் சிங்கின் மனைவிகளான தயா கவுர் மற்றும் ரத்தன் கவுர் ஆகியோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு இளவரசர் காசுமிரா சிங், பெசாவுரா சிங் மற்றும் இளவரசர் முல்தானா சிங் எனப் பெயரிடப்பட்டு வெற்றிகள் கொண்டாடப்பட்டன. 1823 ஆம் ஆண்டில், காபூல் நதியின் வடக்கே யூசுப்சாயின் பெரிய இராணுவத்தை ரஞ்சித் சிங் தோற்கடித்தார் 1834 ஆம் ஆண்டில் முகம்மது அசிம் கான் பெசாவர் நோக்கி கிகாத் என்ற பெயரில் 25,000 காத்தக் மற்றும் யசூப்சாய் பழங்குடியினர் படையுடன் மீண்டும் ஒருமுறை போருக்கு வந்தார். மகாராசாவின் படை அவர்களின் படைகளைத் தோற்கடித்தது. யார் முகம்மதுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு மீண்டும் பெசாவர் கவர்னராக நியமனம் செய்யப்பட்டார், லாகூர் தர்பாருக்கு ஒரு லட்ச ரூபாய் வருடாந்திர வருவாயாகக் கிடைத்தது . 1837 ஆம் ஆண்டில் யம்ருட் போர் நிகழ்ந்தது. 1838 இல் காபூல் வழியான இவரது அணிவகுப்பு, சிந்து நகரில் இருந்த காலனித்துவ பிரித்தானிய இராணுவத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. சீக்கியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கு இடையே நடைபெற்ற கடைசி மோதலாக இப்போர் மாறியது, சீக்கிய பேரரசு மேற்கு பகுதிகளில் தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள இப்போர் உதவியது 1838 ஆம் ஆண்டில் காபூலில் ஆப்கானியப் பேரரசின் அரியனையில் சா சோசாவை அமரச்செய்த பின்னர் பிரிட்டனுடன் சேர்ந்து வெற்றிகரமான அணிவகுப்பில் பங்கேற்க ரஞ்சித் சிங் தனது துருப்புகளுடன் காபூலுக்குச் சென்றார். பஞ்சாப் பகுதியிலிருந்த சீக்கியப் பேரரசு சீக்கிய ராச்சியம் என்றும் சர்கார்-இ-கல்சா என்றும் அழைக்கப்பட்டது . இதன் பொருள் ஐந்து ஆறுகளின் நிலம் என்பதாகும். பியாசு, ராவி, சட்லச், செனாப் மற்றும் சீலம் என்பவை ஐந்து ஆறுகளாகும். இவை அனைத்தும் சிந்து நதியின் கிளை நதிகள் ஆகும் . சட்லச் நதிக்கு வடக்கிலிருந்த நிலப்பகுதிகள், இமயமலையின் வடமேற்கு நிலப்பகுதிகளுக்கு தெற்கிலிருந்த உயர் பள்ளத்தாக்குகள் அனைத்தும் சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. சிறீநகர், அட்டோக், பெசாவர், பன்னு, ராவல்பிண்டி, சம்மு, குசராத், சியால்கோட், காங்க்ரா, அம்ரித்சர், லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை இப்பேரரசின் முக்கிய நகரங்களாக இருந்தன . வெவ்வேறு மதங்கள், இனங்களிலிருந்து பணியாளர்கள் ரஞ்சித் சிங்கின் இராணுவத்திலும், அரசாங்கத்திலும் பல்வேறு பதவிகளை வகிப்பதற்கு ரஞ்சித் சிங் அனுமதித்தார் . ஈன் பிரகோயிசு அல்லார்டு போன்ற சில ஐரோப்பியர்களையும் சிங் தனது படையில் அனுமதித்தார். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் காலணியை நிறுவ முற்பட்ட பிரித்தானியர்களை அவர் அனுமதிக்கவில்லை . அவர்களை வேலைக்கு அமர்த்தாவிட்டாலும், பிரித்தானியர்களுடனான உறவை அவர் தக்க வைத்துக் கொண்டார்; 1828 இல் நான்காம் சியார்ச்சுக்கு பரிசுகளை அனுப்பி வைத்தார். 1831 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆளுனர் செனரல் வில்லியம் பெண்டிங்குடன் ஆலோசனைக்காக ஒரு தூதுக்குழுவை சிம்லாவிற்கு அனுப்பினார் 1838 இல் ஆப்கானியர்களை எதிர்க்க அவர்களுடன் ஒத்துழைத்தார் ref name=roylorge100/>. பஞ்சாபி மக்கள் பஞ்சாபி மக்கள் ("Punjabi people"; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர். பாங்கரா (இசை) பங்கரா (பஞ்சாபி: ਭੰਗੜਾ بھنگڑا; "Bhangra"; pə̀ŋgɽäː) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இசை வடிவத்தையும் குறிக்கின்றது. பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது. சீருடற்பயிற்சிகள் சீருடற்பயிற்சிகள் என்பவை வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக தேவைப்படும் உடற்பயிற்சி செயல்திறன்களைக் குறிக்கிறது. இவை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். சுவீடிய குரோனா சுவீடிய குரோனா (நாணயக் குறியீடு "SEK") என்பது, 1873 ஆம் ஆண்டிலிருந்து, சுவீடன் நாட்டின் நாணயமாக இருந்து வருகிறது. உள்ளூரில் இது "kr" எனச் சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது. குரோனா என்பதன் பன்மை "குரோனர்" ஆகும். ஒரு குரோனா 100 "ஓரே" (öre) க்குச் சமமானது. சுவீடிய குரோனா, பின்லாந்தின் அலண்ட் தீவுகளின் சில பகுதிகளில் அதிகார முறையிலல்லாமல் புழக்கத்தில் உள்ளது. 1873 ஆம் ஆண்டில் ஸ்கண்டினேவியப் பணமுறை ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது அன்று சுவீடனில் புழக்கத்தில் இருந்த சுவீடிய ரிக்ஸ்டேலர், ரிக்ஸ்மிண்ட் என்பவற்றுக்குப் பதிலாக குரோனா அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வொன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளான டென்மார்க், நோர்வே ஆகியவற்றிலும் இதே நாணயம் குரோனே (krone) என்னும் பெயரில் புழக்கத்துக்கு வந்தது. தங்கத்தைத் தர அளவீடாகக் கொண்ட இம்மூன்று நாணயங்களும், தூய தங்கத்தின் என வரையறுக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின் பணமுறை ஒன்றியம் கலைக்கப்பட்ட போதிலும், மூன்று நாடுகளும் அதே பெயர்களையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தன. ஆனால் நாணயங்கள் வேறு வேறானவையாகும். 1873 க்கும், 1876 க்கும் இடையில் 1, 2, 5, 10, 50 ஆகிய ஓர்கள் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும், 1, 2, 10, 20 குரோனர் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. இவற்றில், 1, 2, 5 ஓர்களுக்கான நாணயக் குற்றிகள் வெண்கலத்தாலும், 10, 25, 50 ஓர்களும், 1, 2 குரோனர் நாணயங்கள் வெள்ளியாலும், 10, 20 குரோனர் நாணயங்கள் தங்கத்தாலும் செய்யப்பட்டிருந்தன. தங்கத்தாலான 5 குரோனர் நாணயம் 1881 ஆம் ஆண்டில் புதிதாகச் சேர்க்கப்பட்டது. தங்க நாணயங்களின் உற்பத்தி 1902 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 1920 க்கும், 1925 க்கும் இடையில் சிறிது காலம் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன் பின்னர் முற்றாகவே நிறுத்தப்பட்டது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஏற்பட்ட உலோகத் தட்டுப்பாட்டினால், 1917, 1919 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெண்கலத்துக்குப் பதிலாக இரும்பும், 1920 இல் வெள்ளிக்குப் பதிலாக நிக்கல்-வெண்கலமும் நாணயங்களுக்குப் பயன்பட்டன. 1927 இல் வெள்ளி நாணயங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன. சீனப் பெயர் சீன மரபு முறைகளுக்கும், இலக்கண, ஒலிப்பியல் முறைகளுக்கும் ஒழுங்கி அமைந்த பெயர் சீனப் பெயர் ஆகும். தமிழ்ப் பெயர், மேற்குநாட்டு பெயர் மரபுகளில் இருந்து சீனப் பெயர் மரபுகள் வேறுபடுகின்றன. சீனப் பெயர் மரபில் குடும்பப் பெயர் முதலாதகவும், நபரின் பெயர் இரண்டாவதாகவும் அமைகின்றது. ஒருவரின் குடும்பப் பெயர் தலைமுறை தலைமுறையாக வரும் பெயர். பொதுவாக அவரின் தந்தை பெயர் இல்லை. 1977 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வின் படி 45 குடும்பப் பெயர்களை 70% சீனர்கள் கொண்டிருக்கின்றார்கள். அவை பின்வருமாறு: Top 10 surnames, which together account for about 40% of Chinese people in the world. Many surnames have various ways of romanization, the following listed spellings include பின்யின், which is the standard in the PRC and சிங்கப்பூர், and other commonly used spellings. Li/Lee 李, Wang/Wong 王, Zhang/Chang 張/张, Zhao/Chao 趙/赵, Chen/Chan 陳/陈, Yang/Young 楊/杨, Wu 吳/吴, Liu 劉/刘, Huang/Wong 黃/黄, Zhou/Chow 周 The 11th to 20th common surnames, which together account for more than 10% of Chinese people in the world: Xu/Hsu 徐, Zhu/Chu 朱, Lin/Lam 林, Sun 孫/孙, Ma 馬/马, Gao/Kao 高, Hu 胡, Zheng 鄭/郑, Guo 郭, Xiao/Siu/Hsiao/Siew 蕭/萧/肖 The 21st to 30th common surnames, which together account for about 10% of Chinese people in the world: Xie/Hsieh/Cheu 謝/谢, He/Ho 何, Xu/Hsu 許/许, Song/Soong 宋, Shen 沈, Luo 羅/罗, Han 韓/韩, Deng 鄧/邓, Liang 梁, Ye 葉/叶 The next 15 common surnames, which together account for about 10% of Chinese people in the world: Fang/Fong 方, Cui 崔, Cheng 程、Pan 潘, Cao 曹, Feng 馮/冯, Wang 汪, Cai 蔡, Yuan 袁, Lu 盧/卢, Tang 唐, Qian 錢/钱, Du 杜, Peng 彭, Lu 陸/陆 ஸ்டாக்ஹோம் ஸ்டாக்ஹோம் ("Stockholm") நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் சுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்திய பகுதியில் மட்டும் பதினான்கு தீவுகள் காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி நீர் வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் மூடப்பட்டுள்ளது. கம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை வாய்ந்த பகுதியாகும், அதாவது "பழமையான நகரம்" ஆகும். இதன் சராசரியான வருடாந்த வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும். விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது 1811 ஆம் ஆண்டில் கரோலின்ஸ்கா மையமாக இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் மட்டில் கல்வி கற்கின்றனர். சுவீடனின் மொத்த சனத்தொகையில் ஸ்டாக்ஹோமின் சனத்தொகை 22% வீதமாகக் காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஸ்டாக்ஹோம் நகரத்தினால் சுவீடனுக்கு 29% வீத வருமானம் கிடைக்கின்றது. ஸ்டாக்ஹோம் நகரம் உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் பற்பல உள்ள அருங்காட்சியக-நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் 100 மட்டில் உள்ள்ன, இங்கு பல மில்லியன் கணக்கான மக்களும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போவார்கள். நடுத்தர வர்க்கம் நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வகுப்பு என்பது, சமூகப் படிநிலை அமைப்பில் நடுவில் உள்ள வகுப்பினரைக் குறிக்கும். வெபரிய சமூக-பொருளாதாரச் சொற் பயன்பாட்டின்படி, தற்காலச் சமூகத்தின் சமூக-பொருளாதார அடிப்படையில், தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையில் இருக்கும் பரந்த அளவு மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. நடுத்தர வர்க்கம் என்பதைத் தீர்மானிக்கும் அளவு கோல் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமாகக் காணப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரக்கூடிய பொருளாதார வசதியைப் பெற்ற அல்லது பெற வல்ல மக்கள் குழுவினர் ஆவர். இவர்கள் மேட்டுக் குடியினர் அளவுக்கு அதிகாரத்தை அல்லது செல்வாக்கை குவியப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக தொழிற்துறை வல்லுனர்கள், புலமையாளர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த வர்க்கத்தில் அடங்குவர். பொருளாதார, வாழ்கைத்தர நிலைமைகளைப் பொறுத்து விவசாயிகளும் தொழிலாளர்களும் கூட இந்த வரையறைக்குள் வரக்கூடும். நடுத்தர வர்க்கம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் "middle class" என்பது 1745 ஆம் ஆண்டில் சேம்சு பிராட்சா என்பவரால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. எனினும், இச்சொல் பல பொருள்களில், சில வேளைகளில், முரண்பட்ட பொருள் தரும்படி பயன்பட்டது. ஒரு காலத்தில் ஐரோப்பாவில், இச்சொல், பிரபுக்களுக்கும், குடியானவர்களுக்கும் இடையில் உள்ள மக்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிரபுத்துவ வகுப்பினர் நாட்டுப்புற நிலங்களுக்கு உடமையாளர்களாக இருந்தனர். குடியானவர்கள் அவர்களுடைய நிலங்களில் வேலை செய்தனர். இவ்வகுப்புக்களுக்குப் புறம்பாகப் புதிதாக உருவான, வணிகச் செயற்பாடுகளோடு தொடர்புள்ள நகர வாசிகள், நடுத்தர வகுப்பினராகக் கருதப்பட்டனர். இன்னொரு வரைவிலக்கணப்படி, பிரபுத்துவ வகுப்பினரோடு போட்டியிடக்கூடிய அளவுக்கு மூலதனம் வைத்திருந்த முதலாளிகள் நடுத்தர வகுப்பினர் எனப்பட்டனர். தொழிற் புரட்சிக் காலத்தில், பெருமளவு மூலதனத்தைக் கொண்ட இலட்சாதிபதிகளாக இருப்பதே நடுத்தர வகுப்பினருக்குரிய தகுதியாக இருந்தது. பிரெஞ்சுப் புரட்சியை நிகழ்த்தியவர்கள் நடுத்தர வகுப்பினரே. நடுத்தர வகுப்பு என்பதற்கான தற்காலப் பொருளுடன் கூடிய பயன்பாடு முதலில் 1913 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சியப் பதிவாளர் நாயகத்தின் அறிக்கையில் காணப்பட்டது. இதில் புள்ளியியலாளர், டி. எச். சி. இசுட்டீவன்சன், நடுத்தர வகுப்பினரை உயர் வகுப்பினருக்கும் தொழிலாளர் வகுப்பினருக்கும் இடைப்பட்டவர்களாகக் குறிப்பிட்டார். உயர்தொழில் வல்லுனர்கள், மேலாளர்கள், மூத்த அரச அதிகாரிகள் போன்றோர் நடுத்தர வகுப்பினராகக் கொள்ளப்பட்டனர். முதலாளித்துவத்தில், நடுத்தர வகுப்பு என்பது, பூர்சுவாக்களையும், சிறு பூர்சுவாக்களையுமே குறித்தது. ஆனால், பெரும்பாலான சிறு பூர்சுவாக்கள் ஏழைகளாகவும், பாட்டாளிகளாகவும் ஆனதாலும், நிதி முதலாளித்துவத்தின் வளர்ச்சியாலும், உயர்மட்டத் தொழிலாளர், உயர்தொழில் வல்லுனர், அலுவலகப் பணியாளர் போன்றோர் நடுத்தர வகுப்பினராகக் கருதப்படுகின்றனர். அடித்தட்டு வர்க்கம் அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும். ஆங்கிலத்தில் working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள், விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு. தடகள விளையாட்டு தட கள விளையாட்டுக்கள் ("Athletics") எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே அறியப்படுகிறது. தற்காலத்து பல நிகழ்வுகளை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தினரின் பல்வேறு உறுப்பினர் சங்கங்கள் நடத்தி வருகின்றன.இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. தடகள விளையாட்டுக்களில் ஓடுதல், நடத்தல், தாண்டுதல் மற்றும் விட்டெறிதல் ஆகியன தொல் பழங்கால துவக்கங்களைக் கொண்டு மிகப் பழமையான விளையாட்டுக்களாக விளங்குகின்றன. தடகள விளையாட்டுக்கள் சகாராவிலுள்ள பண்டைய எகிப்திய கல்லறைகளில் காணலாம்; இங்கு எப் சூட் திருவிழாவில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதை வரைந்துள்ளனர். இதேபோன்று கிமு 2250களின் கல்லறைகளில் உயரம் தாண்டும் போட்டிகள் வரையப்பட்டுள்ளன. கிமு 1800இல் அயர்லாந்தில் நடந்த தொன்மையான கெல்ட்டியத் திருவிழாக்களில் நடந்த "இடயில்டெயன் விளையாட்டுக்கள்" துவக்ககால விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். இது 30 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டம், கற்கள் விட்டெறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன. கிமு 776இல் நடந்த முதல் மூல ஒலிம்பிக் நிகழ்வில் இடம் பெற்றிருந்த ஒரே போட்டி அரங்க நீளத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயம் ஆகும். இது "இசுடேடியான்" எனப்பட்டது. பின்னர் விட்டெறிதல், தாண்டுதல் போன்ற போட்டிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கிமு 500களில் "பான் எல்லெனிக் விளையாட்டுக்கள்" நிறுவப்பட்டன. இங்கிலாந்தில் 17வது நூற்றாண்டில் காட்சுவொல்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன. புரட்சிகர பிரான்சில் 1796 முதல் 1798 வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற "இலெ ஒலிம்பியாட் டெ லா ரிபப்ளிக்கு" தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்தப் போட்டியின் முதன்மை விளையாட்டாக ஓட்டப் பந்தயம் இருந்தது. பல கிரேக்க விளையாட்டும் துறைகளும் காட்சிக்கு இருந்தன. 1796இல் நடந்த ஒலிம்பியாட்டில் முதன்முறையாக மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1812இலும் 1825இலும் சாண்டுஅர்சுட்டில் உள்ள அரச இராணுவக் கல்லூரியே இதனை முதலில் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது; இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. பதிவுசெய்யப்பட்ட முதல் தடகள விளையாட்டுப் போட்டிகள் 1840இல் இசுரோப்சையரின் இசுரூசுபரியில் அரச இசுரூபரி பள்ளியால் ஒழுங்கமைக்கப் பட்டது. இதற்குச் சான்றாக 1838 முதல் 1841 வரை அங்கு மாணாக்கராக இருந்த சி.டி.இராபின்சனின் மடல்கள் அமைந்துள்ளன. இங்கிலாந்தில் 1880இல் அமெச்சூர் தடகள விளையாட்டுச் சங்கம் உருவானது. முதல் தேசிய அளவிலான இச்சங்கம் ஆண்டுதோறும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் துவங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் யுஎஸ்ஏ வெளியரங்க தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கின. 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் சங்கம் மற்றும் பிற பொது விளையாட்டு அமைப்புகளினால் தடகளப் போட்டிகளுக்கான சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் முறைப்படுத்தப்பட்டன. 1886இல் துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் இடம் பெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் விரைவிலேயே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்புமிக்க பல்துறை விளையாட்டுப் போட்டியாக உருவெடுத்தது. தொடக்கதில் ஆண்களுக்கு மட்டுமாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1928 கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து பெண்களுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.1960இல் உருவான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் தடகள விளையாட்டுக்கள் முன்னிடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போன்ற சிறப்புப் போட்டிகளின்போது தடகளப் போட்டிகளுக்கு இருக்கும் முதன்மைத்துவம் பின்னர் மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை. 1912இல் பன்னாட்டளவிலான கட்டுப்பாட்டு அமைப்பு, "பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு" உருவானது. இது 2001 முதல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என அறியப்படுகிறது. ஐ.ஏ.ஏ.எஃப் தனியாக உலக தடகளப் போட்டிகளை 1983 முதல் நடத்தி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தடம் மற்றும் களப் போட்டிகள் உருவானதுடன் கல்வி நிறுவனங்கள், இராணுவ அமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வீரர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெறத்தொடங்கியது. பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறப்புகளின் படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளில் போட்டியிடலாம்.ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். தடம் மற்றும் களப் போட்டிகள் உள்ளறங்கம் மற்றும் வெளிப்புறங்களில் ஆடும் போட்டிகளாகவும் உள்ளது.குளிர்காலத்தில் நிகழும் போட்டிகல் பெரும்பாலும் உள்ளறங்கத்தில் நிகழும், வெளிப்புற நிகழ்வுகள் பெரும்பாலும் கோடையில் நடைபெறுகின்றன. போட்டிகள் நடைபெறும் இடத்தை வைத்து - தடம் மற்றும் களம் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு ஓட்டம் நிகழ்வுகளின் பாதைகள் மூன்று பரந்த தொலைவு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: "குறுகிய தூர ஓட்டம், நடுத்தர தொலைவு மற்றும் நீண்ட தூர ஓட்டம்" என்று பிரிக்கப்படுகிறது. கள விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை தாண்டுதல் மற்றும் எறிதல். சாலை ஓட்டம் போட்டிகள் முக்கியமாக நடைபாதை அல்லது தார் சாலைகள் நடத்தப்படும் நிகழ்வுகள் (முக்கியமாக நீண்ட தூரம்) இயங்குகின்றன.இது பெரும்பாலும் ஒரு முக்கிய மைதானத்தின் முடிவடையும். ஒரு பொதுவான பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், விளையாட்டின் உயர் மட்ட - குறிப்பாக மராத்தான் பந்தயங்கள் - தடகளத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். சாலை பந்தய நிகழ்வுகள் ஏறக்குறைய எந்தவொரு தூரமும் இருக்கக்கூடும், ஆனால் மிகவும் பொதுவானது மற்றும் நன்கு அறியப்பட்ட மராத்தான், அரை மராத்தான், 10 கிமீ மற்றும் 5 கி.மீ. வருடாந்திர IAAF உலக அரை மராத்தான் சாம்பியன்ஷிப் கூட இருப்பினும், தடகள மற்றும் கோடைகால ஒலிம்பிக்கில் IAAF உலக சாம்பியன்ஷிப் இடம்பெறும் ஒரே சாலை போட்டி மாரத்தான். மராத்தான் IPC தடகள உலக சாம்பியன்ஷிப் மற்றும் கோடைகால பாரலிம்பிக்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்ற ஒரே சாலையில் இயங்கும் நிகழ்வாகும். உலக மராத்தான் மாஜர்ஸ் தொடரில் பெர்லின், பாஸ்டன், சிகாகோ, லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் நடைபெறும் மராத்தான்கள் ஐந்து மதிப்புமிக்க மராத்தான் போட்டிகளும் ஆகும். புல்வெளி, வனப்பகுதி, மற்றும் பூமி தரைப்பகுதி போன்ற பரப்புகளில் திறந்த வெளிப்பகுதிகளில் போட்டிகள் நடத்தப்படுவதால், குறுக்கு தடகள விளையாட்டுகள் மிகவும் இயற்கையானது. இது ஒரு தனி மற்றும் குழு விளையாட்டு ஆகும், மேலும் புள்ளிகள் மதிப்பெண்கள் அடிப்படையில் அணிகளின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, இலையுதிர்கால மற்றும் குளிர்காலங்களில் பொதுவாக 4 கிமீ (2.5 மைல்) அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகள் நீண்ட தூரமும் உள்ளன. குறுக்கு ஓட்டத்தில் வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் மற்றும் சாலை நிகழ்வுகளில் போட்டியிடுகின்றனர். பந்தைய நடை ஓட்டம் (நடைபயிற்சி) என்பது பொதுவாக திறந்த-வெளிச் சாலையில் நடைபெறுகிறது, இருப்பினும் தடங்களிலும் அவ்வப்போது நடைபெறுகிறது. நடை ஓட்டப்போட்டிகளில் மட்டும்தான் நீதிபதிகள் தடகள வீரர்களின் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரே தடகள பந்தயம்மாகும். தடகள வீரர்கள் அவர்கம்ளின் கால் முட்டு மடக்காமல் கால்களை மட்டுமே பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபடுகிறார்கள். பந்தயவீரர்கள் எப்போதுமே தரையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் முன்னேற்றக் கால் முழங்காலில் வளைக்கப்படக்கூடாது - இந்த விதிகள் பின்பற்றுவதில் தோல்வியுற்ற வீரர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள். 1952 முதல், மாற்றுத்திறனாளிகள்க்கான விளையாட்டுப் போட்டிகள், தனியாக நிக்ழ்ந்து வருகின்றன. International Paralympic Committee யினால் இத்தகைய போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுவதுடன், 1960 இலிருந்து, இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே வகையான குறைபாடுள்ளவர்கள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான தனித்தனி போட்டிகள் நடைபெறும். சக்கர நாற்காலி ஓட்டமும் இதில் ஒன்றாகும். விரைவோட்டம் விரைவோட்டம் ("Sprint") அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள். யாரொருவர் முதலில் எல்லோரையும் முந்திக்கொண்டு தடகள எல்லையைக் கடக்கின்றார்கள் என்பதே போட்டி. இது தட கள விளையாட்டுக்களில் ஒன்று. பொதுவாக தடகளத்தின் நீளம் 60, 100, 200, 400 மீட்டர்களாக இருக்கும். மாரத்தான் போட்டிகள் போல் அல்லாமல் முழுத் தொலைவும் உயர்வேகத்தில் வீரர்கள் ஓட முற்படுவார்கள். பொதுவாக 60 மீ விரைவோட்டம் திறந்த வெளியில் நடைபெறுவதில்லை. அது உட்கூடத்திலேயே நடப்பது. ஏர் கனடா சென்டர் ஏர் கனடா சென்டர் (Air Canada Centre) (ஈழத்துவழக்கு: எயர் கனடா சென்ரர்) கனடாவின் டொராண்டோ நகரத்தில் அமைந்த விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த கட்டிடத்தில் என்.பி.ஏ.-இன் டொராண்டோ ராப்டர்ஸ், என்.எச்.எல்.-இன் டொராண்டோ மேபிள் லீஃப்ஸ், என்.எல்.எல்.-இன் டொராண்டோ ராக் ஆகிய விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அரங்கம் டொராண்டோவில் நடு பகுதியில் அமைந்துள்ளது. மென்பந்தாட்டம் மென்பந்தாட்டம் அடிபந்தாட்டைத்தை பெரிதும் ஒத்த ஐக்கிய அமெரிக்காவில் தோன்றிய ஒரு குழு விளையாட்டு ஆகும். அடிபந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து சிறிதாகவும் (23 cm சுற்றளவு) கடினமானதாகவும் இருக்கும். மென்பந்தாட்டத்தில் பயன்படும் பந்து அதைவிட பெரிதாகவும் (30 cm சுற்றளவு) சற்று மெதுவானதாகவும் இருக்கும். அடிபந்தாட்டத்தில் எறிபவர் இடுப்புக்கு மேலே தனது கைகளை உயர்த்தி எறிவர். மென்பந்தாட்டதில் எறிபவர் இடுப்புக்குகீழே தனது கைகளை கொண்டுவந்து எறிவர். இவையே அடிப்படை வேறுபாடு. இலங்கை வழக்கில் மென்பந்து என்பதை டென்னிஸ் பந்தைத் குறிப்பிடுவும் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆசியக் கிண்ணம் ஆசியக் கிண்ணம் ("Asia Cup"), என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். ஆசிய நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் ஆசியத் துடுப்பாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இச்சுற்றுப் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 இல் அமீரகத்தில் சார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்திய, மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் (2008) நான்கு தடவைகள் ஆசியக் கிண்ணத்தைப் பெற்றன. இந்திய அணி இரண்டு தடவைகள் இச்சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றவில்லை. 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டியும், 1993, மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசுடன் அரசியல் பிரச்சினையைக் காரணம் காட்டியும் இந்திய அணி பங்கு பற்றவில்லை. இலங்கை அணி அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பற்றியது. 2008 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் என ஆசியத் துடுப்ப்பாட்டக் குழு அறிவித்தது முதலாவது ஆசியக்கிண்ணத்துக்கான போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை அணிகள் பங்கு பற்றின. ஒவ்வொரு அணியும் ஒரு முறை எதிர் அணியுடன் மோதியது. முதலாவது ஆட்டம் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது. இரண்டாவது ஆசியக்கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. வங்காளதேசத் துடுப்பாட்ட அணி முதற் தடவையாக பங்குபற்றியது. இந்திய அணி பங்குபற்றவில்லை. இறுதிப் போட்டியில் இலங்கை அணி,பாகிஸ்தான் அணியை வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. மூன்றாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் வங்காள தேசத்தில் இடம்பெற்றன. நான்கு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டிகளில் இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வென்று ஆசியக்கிண்ணத்தைத் தனதாக்கியது. நான்காவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான் அணி பகிஷ்கரித்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வென்று ஆசியக்கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஐந்தாவது ஆசியப் போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி,இலங்கையை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது. ஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்றது. ஏழாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரண்டாவது தடவையாக வங்காள தேசத்தில் நிகழ்ந்தன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வென்ற்று முதற் தட்டவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது. எட்டாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி, ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஆகியன முதன் முறையாக பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 25 ஓட்டங்களால் வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது. ஒன்பதாவது போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றன. போட்டிகள் ஜூன் 24, 2008 இல் ஆரம்பித்து ஜூலை 6 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது. பத்தாவது போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. போட்டிகள் சூன் 15, 2010 இல் ஆரம்பித்து சூன் 24 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஐந்தாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது. ஆசியக் கிண்ணம் 1984 1984 ஆசியக் கிண்ணம் ("1984 Asia Cup") ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகரில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 13 வரை இடம்பெற்றது. இதுவே முதலாவது ஆசியக் கிண்ணத்தின் முதலாவது போட்டித் தொடராகும். இத்தொடர் ரொத்மன்ஸ் ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றின. இப்போட்டித் தொடர் ரொபின் வட்டச் சுற்று முறைப்படி இடம்பெற்றது. ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மட்டும் ஆடும். இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதலாவது ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாவது இடத்தில் வந்தது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்றது. தண்ட நாயகன் சிங்கணன் தண்டநாயக்கன் சிங்கணண் இவன் போசள நாட்டைச் சேர்ந்தவன்.போசளப்படையின் தளபதியும் இவன் தான்.மதுரையில் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்த பொழுது சேர அரசன் பாண்டியன் மகளை களவாடினான் இக்களவு கொட்டுந்தளம் என்னும் கோட்டையில் நடந்தது.அவ் இளவரசியை களவாடிக்கொடுத்தது சிங்கணன் தான்.பின் பாண்டிய இளவரசன் வீரபாண்டியன் இவனை கைது செய்து இவனை உயிரோடு விட்டான்.பின் பாண்டியர் படை கோட்டாற்றுக்கரை கோட்டையை கைப்பற்றிய போது மீள கோட்டையை கைப்பற்ற சேரமன்னன் இவன் தலமையில் பதினையாயிரம் படையை அனுப்பினான்.ஆனால் மூவாயிரம் பேரைக்கொண்ட வீரபாண்டியன் தலமையிலான படை இவர்களை தோற்கடித்தது.இறுதியில் வீரபாண்டியனையும் பாண்டியப்படையையும் ஆயுதம் இல்லாம் இருக்கும் போது கொல்ல சூழ்ச்சி செய்து வீரபாண்டியனால் கைது செய்யப்பட்டு மீண்டும் உயிர்பிச்சை அளிக்கப்பட்டான்.இதனால் மனம் உடைந்து தன் சொந்த நாடான போசளத்துக்கே திரும்பினான். பின் கண்ணூரில் நடந்த போரிலே சுந்தர பாண்டியனால் கொல்லப்பட்டான். ஆசியக் கிண்ணம் 1986 1986 ஆசியக் கிண்ணம் ("1986 Asia Cup") இரண்டாவது ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இத்தொடர் ஜோன் பிளேயர் கோல்ட் லீஃப் கேடயம் எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை இடம்பெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கு பற்றின. இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய அணி இத்தொடரில் பங்குபற்றவில்லை. இத்தொடரின் போட்டிகள் ரொபின் வட்டச் சுற்று முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் மோதின. அதிக புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் வந்த இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இலங்கை அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது. ஆசியக் கிண்ணம் 2008 2008 ஆசியக் கிண்ணம் ("2008 Asia Cup") துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ("Hong Kong cricket team") பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சீனாவின் ஹொங்கொங் பகுதிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். ஹொங்கொங் துடுப்பாட்ட அணி 1866 இல் முதலாவது போட்டியில் பங்கு பற்றியது.. பன்னாட்டுத் துடுப்பாட்டுக் கவுன்சிலில் 1969 முதல் உறுப்பினராக உள்ளது. 2004 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதன் முறையாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஹொங்கொங் அணி பங்கு பற்றியது. ஐசிசி தரவுகளின் படி இவ்வணியின் தற்போதைய உலக நிலை 25வது ஆகும். தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடாத நாடுகளில் ஆசிய நாடுகளில் இது மூன்றாவது நிலையில் தற்போது உள்ளது. 1497 1497 (MCDXCVII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி ("United Arab Emirates cricket team") பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். இவ்வணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் ஒரு உறுப்பினராக 1989 இல் இணைந்தது. ஆசியக் கிண்ணம் 1988 1988 ஆசியக் கிண்ணம் ("1988 Asia Cup", அல்லது வில்ஸ் ஆசியக் கிண்ணம்), மூன்றாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளாகும். இச்சுற்றுப் போட்டி வங்காள தேசத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 வரை இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இச்சுற்றுப் போட்டியின் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் தனித்தனியே ஒரு முறை மோதின. இவற்றிம் முதல் இரண்டு அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடின. இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. பரவளைவுத் தெறிப்பி பரவளைவுத் தெறிப்பி என்பது, பரவளைவு வடிவில் அமைந்த ஒரு தெறி கருவி ஆகும். இது ஒளி, ஒலி, வானொலி அலைகள் போன்ற ஆற்றல் அலைகளைத் தெறிப்பதற்கோ அல்லது பரவுவதற்கோ பயன்படுகிறது. பரவளைவுத் தெறிப்பியின் செயற்பாட்டுக்கு அதன் வடிவவியல் இயல்பே காரணமாகும். இவ்வடிவத்தின் அச்சுக்கு இணையாகச் சென்று தெறிப்பியில் படும் கதிர் எதுவும் தெறித்து ஒரு குறிப்பிட்ட புள்ளியூடாகச் செல்லும். இது குவியப் புள்ளி அல்லது குவியம் எனப்படும். ஒன்றுக்கொன்று இணையாக வந்து தெறிப்பியில் படும் ஆற்றல் அலைகள் அனைத்தும் ஒரே புள்ளியில் குவிக்கப்படும். மறுதலையாக, குவியத்திலிருந்து புறப்படும் அலைகள் தெறிப்பியின் அச்சுக்கு இணையான கற்றைகளாகத் தெறித்து வெளியேறும். பரவளைவு ஆடிகளை முதலில் விபரித்தவர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அராபிய இயற்பியலாளரான இபின் சாஹுல் என்பவராவார். இது பின்னர் 1021 ஆம் ஆண்டில் இபின் அல்-ஹேதம் என்பவராலும் அவர் எழுதிய "ஒளியியல் நூல்" என்னும் நூலில் விபரிக்கப்பட்டது. 1721 ஆம் ஆண்டில், ஜான் ஹாட்லி என்பவர் பரவளைவு ஆடிகளை, தெறிப்புவகைத் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கப் பயன்படுத்தியது மூலம் நடைமுறை வானியலில் பயன்படுத்தினார். இதற்கு முன்னர் கோள ஆடிகளே தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் கூடிய செயற்திறன் கொண்ட "ஃபிரெஸ்னெல் வில்லை" கள் அறிமுகப்படுத்தப்பட முன்னர், பரவளைவு ஆடிகளே கலங்கரை விளக்கங்களில், ஒரு விளக்கிலிருந்து ஒளிக்கற்றைகளை உருவாக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் பரவளைவுத் தெறிப்பிகள் சிறிதும் பெரிதுமான பல வகையான கருவிகளில் பயன்படுகின்றன. இவற்றுள், செய்மதி அலைவாங்கிகள், தெறிப்புவகைத் தொலைநோக்கிகள், வானொலித் தொலைநோக்கிகள், பரவளைவு ஒலிவாங்கிகள் போன்றவையும், பலவகை மின்விளக்குகளின் தெறிப்பிகளும் அடங்கும். பிரெனெல் வில்லை ஃபிரெனெல் வில்லை (Fresnel lens) என்பது, பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளரான அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடக்கத்தில் கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு பெரிய ஒளித்துளைகளுடனும், (aperture), குறைந்த குவியத் தூரத்துடனும் கூடிய வில்லைகளை, வழமையான முறையில் செய்யப்படும் வில்லைகளிலும் குறைந்த அளவு நிறையுடனும், குறைந்த கனவளவு கொண்டதாகவும் செய்வதற்கு இடமளித்தது. முன்னைய வில்லைகளைவிட ஃபிரெனெல் வில்லைகள் மெல்லியவை. இதனால் கூடிய ஒளி அவற்றினூடு செல்லக்கூடியதாக இருந்தது. பல்வேறு வில்லைத் துண்டுகளைச் சட்டகம் ஒன்றில் பொருத்தி மெல்லிய வில்லைகளை உருவாக்கும் எண்ணம், ஜார்ஜஸ் லூயிஸ் லெக்கிளார்க், கொம்டே டி பவ்வன் என்பவர்களால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இதனை உருவாக்கிய பெருமை அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்லுக்கே கொடுக்கப்படுகிறது. சிமித்சோனியன் இதழின்படி முதலாவது ஃபிரெனெல் வில்லை 1823 ஆம் ஆண்டில் கோர்டுவான் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இதன் ஒளி 20 மைல்கள் வரை தெரியக்கூடியதாம். அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் ("Augustin-Jean Fresnel") மே 10, 1788 – ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார். புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது. வில் சிமித் வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் -- Willard Christopher Smith Jr., செப்டம்பர் 25, 1968) புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார். 1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப்புகளை படைக்கத் தொடங்கினார். திரைப்படங்களிலும் 1995 முதல் நடிக்க தொடங்கினார். 1995ல் வெளிவந்த பாட் பாய்ஸ், 1996ல் வெளிவந்த இன்டிபென்டென்ஸ் டே ஆகிய திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் உலகில் புகழுக்கு வந்தார். இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், மற்றும் ஹான்காக் ஆகும். வில் சிமித் 1992 இல் சிறி சம்பினோ (Sheree Zampino) என்பவரை மணமுடித்தார் . 1992 , கார்த்திகை 11 இல் ரெய் சிமித் என்னும் மகன் பிறந்தார். 1995 இல் சிமித், சிறி சம்பினோவை விவாகரத்து பண்ணினார். ரேயும் தந்தையின் வீடியோ ஆல்பம்களில் நடிக்கத்தொடங்கினார். [[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]] [[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]] [[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்]] [[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]] [[பகுப்பு:1968 பிறப்புகள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] ஒசுலோ ஒஸ்லோ ("Oslo", ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும். கோபனாவன் கோபன்ஹேகன் ("Copenhagen", டேனிய மொழி: København) டென்மார்க் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பாவின் சுகாண்டினேவியா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். முக்தீசூ மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو‎, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது. 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்பது ஜூலை 7, 2008 காலை 8:30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலின் நடு பகுதியில் அமைந்த இந்தியத் தூதரகத்தின் அருகில் ஒருவர் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலைக் குறிக்கும். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் 2001இல் டாலிபான் அரசின் அகற்றலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில் மிகவும் உக்கிரமானது எனக் கூறப்படுகிறது. குத்துச்சண்டை குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். கிரீஸ் நாட்டில் கி. மு. 688 - ல் தோன்றிய ஒலிம்பிக் விளையாட்டில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது என்பது வரலாறு. கிறித்துவுக்கு முற்பட்ட சங்ககாலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் குத்திக்கொண்டு யாரும் பின்னிடாமல் விளையாடியதையும் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது. குத்துவரிசை குத்துவரிசை ஒரு தமிழர் தற்காப்புக் கலை. இது தமிழ்நாட்டிலும், தமீழீழத்திலும் பயிலப்படுகிறது. உடல் உறுப்புகள் அனைத்தையும் இந்த கலை ஈடுபடுத்துகிறது. ஆசியத் துடுப்பாட்ட அவை ஆசியத் துடுப்பாட்ட அவை அல்லது ஏசீசீ ("Asian Cricket Council", ACC) ஆசிய நாடுகளில் துடுப்பாட்டத்தை முன்னேற்றுவதற்காக 1983 ஆம் ஆண்டு "ஆசியத் துடுப்பாட்ட மாநாடு" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரியம் பிராந்திய அமைப்பாக இருந்தாலும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஓர் உறுப்பு அமைப்பாகும். இம்மாநாடு 1995 முதல் ஆசியத் துடுப்பாட்ட அவை என்ற பெயரில் இயங்குகிறது. இதன் தலைமையகம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது. 22 ஆசிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. ஏசிசியில் மொத்தம் 4 தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளும், ஏழு அசோசியேட் உறுப்பு நாடுகளும், 11 அஃபிலியேட் உறுப்பு நாடுகளும் உள்ளன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியன முழு உரிமை பெற்ற நாடுகளாகும். ஹொங்கொங், குவெய்த், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன அசோசியேட் உறுப்பு நாடுகளாகும். ஆப்கானிஸ்தான், பஹ்ரேய்ன், பூட்டான், புருணை, சீனா, ஈரான், மாலை தீவுகள், மியான்மார், ஓமான், கட்டார், சவுதி அரேபியா ஆகியன அஃபிலியேட் உறுப்பு நாடுகளாகும். நான்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ், தென் கொரியா ஆகியன கிழக்காசிய-பசிபிக் துடுப்பாட்ட அவையில் உறுப்பு நடுகளாக உள்ளன. எனினும் இந்தோனீசிய அணி ஏசிசியில் உறுப்பு நாடாகுவதற்கு விண்ணப்பித்துள்ளது. ஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள், ஏசிசி வெற்றிக் கேடயம், மற்றும் ஆசிய இளையோர் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவற்றை இவ்வாரியம் நடத்துகிறது. ஆசியக் கிண்ணம் 2004 2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது. 1வது:
2வது:
3வது: 1வது:
2வது:
3வது:
வொயேஜ் சென்சரி ஒன்லைன் வொயேஜ் சென்சரி ஒன்லைன் எனப்படுவது இணையத்தில் பல பயனர்கள் இணைந்து விளையாடும் ஒரு கணனி விளையாட்டாகும். இதை IGG எனும் நிறுவனம் வெளியிட்டு வைத்தது. இந்த விளையாட்டு 17ம் நூற்றாண்டில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அக்காலப் பகுதியில் பிரபலமாக இருந்த கரையோர நகரங்களையும் கொண்டமைந்துள்ளது. மற்றய விளையாட்டுகளைப்போல அல்லாமல் இந்த கணனி விளையாட்டு பயனர்களை பல்வேறு தொழில் முறைகளில் கணனி விளையாட்டில் தேர்ச்சியடைய வழிவிடுகின்றது. இதன் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்படுவதன் முன்பு சீனா, தென்கொரியா, செர்மனி ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு வெளியிடப்பட்டிருந்தது. டிசம்பர் 8, 2006ல் 1000 பேருக்கு ஆங்கிலப் பதிப்பின் அல்பா வெளியீடு நிகழ்ந்தது. இதன் பின்னர் டிசம்பர் 22, 2006 ல் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டது. ஏப்ரல் 8, 2007ல் முழுமையான பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டில் மூன்று வகையான கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுத்த கப்பல்கள், கொள்ளையர் கப்பல்கள், வியாபாரம் செய்யும் கப்பல்கள். சண்டைக் கப்பல்களில் அதிகளவு பீரங்கிகளைப் பொருத்த முடிவதுடன் பெரும் தாக்குதல்களையும் தாங்கி நீண்ட நேரம் கடலில் நிலைத்திருக்கும் சக்தி வாய்ந்தது. கொள்ளைக்கார கப்பல்கள் அதிகளவு மாலுமிகளை ஏற்றுவதுடன் விரைவான வேகத்தில் பயனிக்க கூடியதும் ஆகும். வியாபாரக் கப்பல்கள் மற்றய கப்பல்கள் எல்லாவற்றையும் விட வேகம் குறைவானதுடன் யுத்த நேரத்தில் தாக்குதலை தாங்க கூடிய வலிமை அற்றது ஆனால் அதிகளவான பாண்டங்களை ஏற்றும் வலிமை பெற்றது. விளையாட்டை விளையாடும் நபர் ஒருவர் எத்தனை கப்பலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கப்பல்களுக்கு 11 படிகள் இருக்கின்றன. புதிய இணைப்பில் 12 படிமுறைகள் இருப்பதுடன் ட்ராகன் தலைவைத்த ஆரம்ப படிநிலை விளையாட்டு வீரர்களுக்கான கப்பலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 1816 1816 (MDCCCXVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது. ஆசியக் கிண்ணம் 1990-91 1990-91 ஆசியக் கிண்ணம் ("1990-91 Asia Cup"), நான்காவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி. இது 1990 டிசம்பர் 25 முதல் 1991 ஜனவரி 4 வரை இந்தியாவில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூஉன்று அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. பாகிஸ்தான் அணி அரசியல் காரணங்களுக்காக இத்தொடரில் பங்குபற்ற்றவில்லை. ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர்ர் அணியும் மற்றைய அணியுட ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. ஆசியக் கிண்ணம் 1995 1995 ஆசியக் கிண்ணம் ("1995 Asia Cup") ஐந்தாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப் போட்டி 1995 ஆம் ஆண்டில் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 13 வரை சார்ஜாவில் நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் தலாஅ நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆனாலும் இந்தியா, இலங்கை அணிகள் கூடிய ஓட்ட வீதம் பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அனி, இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது தடவையாக (அடுத்தடுத்து மூன்று தடவைகள்) ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. பிரெனெல் விளக்கு ஃபிரெனெல் விளக்கு (பிரெனெல் விளக்கு, "Fresnel lantern") அல்லது சுருக்கமாக "ஃபிரெனெல்" என அழைக்கப்படுவது, கலை அரங்குகளில் ஒளியமைப்புக்குப் பயன்படும் ஒரு பொட்டொளி விளக்கு ஆகும். மேடையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் ஒளி கொடுப்பதற்காகப் பயன்படும் இவ்விளக்கில் ஃபிரெனெல் வில்லைகள் பொருத்தப்படுகின்றன. இவ்வில்லை, பின்னொளி, மேலொளித் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய, சற்று விரிந்த மென்விளிம்பு கொண்ட ஒளிக்கற்றையை வழங்குகிறது. இவ்வில்லையைக் கண்டுபிடித்த அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. வழமையான வில்லைகளைப் போல் அன்றி இதன் மேற்பரப்பு ஒரு மைய வட்டவடிவிலான படியமைப்புத் தோற்றம் கொண்டது. இவ்வடிவுரு வில்லையூடு செல்லும் ஒளியை முறித்து, ஃபிரெனெல் வில்லைகளுக்கே உரிய இயல்பான மென்னொளிக் கற்றைகளை வெளிவிடுகிறது. இதனால், ஒளிக்கற்றையின் விளிம்புப் பகுதிகளில் நடுப்பகுதியைக் காட்டிலும் குறைவான ஒளிச்செறிவு இல்லாமல், ஒளிக்கற்றை விழும் இடத்தின் எல்லாப் பகுதிகளும் சீரான ஒளிச்செறிவைக் கொண்டு அமைகின்றன. தளக்குவிவு வில்லைகளைப் பயன்படுத்திய முன்னைய விளக்குகளைக் காட்டிலும், ஃபிரெனல் விளக்குகளில் வெப்ப அதிகரிப்பும் குறைவாகவே காணப்படுகின்றது. அரங்க ஃபிரெனெல் விளக்குகள் பொதுவாக 8, 6 அல்லது 3 அங்குல விட்டம் கொண்ட ஃபிரெனெல் வில்லைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் வலு 150 வாட் முதல் 2000 வாட் வரை வேறுபடும். ஃபிரெனெல் வில்லைகளை ஒளிமூலத்துக்கு மிக அருகிலேயே அமைக்க முடியும் என்பதாலும், அவற்றைச் செய்வதற்குக் குறைந்த செலவே ஆகும் என்பதாலும், ஃபிரெனெல் விளக்குகள் அளவில் சிறியனவாகவும், விலை குறைந்தவையாகவும் உள்ளன. திரைப்படத் தயாரிப்பில் பயன்படும் ஒளியமைப்புக்களில், கூடிய எண்ணிக்கையான அளவுகளைக் கொண்ட வில்லைகள் பயன்படுவதுடன், பயன்படும் மின்விளக்குகளின் வலுக்களும் கூடிய எண்ணிக்கையில் உள்ளன. வில்லைகள் 2 முதல் 24 அங்குலங்கள் வரை அளவுகள் கொண்டனவாகவும், விளக்கின் வலுக்கள் 200 வாட் முதல் 20,000 வாட் வரை வேறுபடுவனவாகவும் உள்ளன. ஃபிரெனெல்கள் கோளத் தெறிப்பிகளைப் பயன்படுத்துகின்றன. இத்தெறிப்பியின் குவியப் புள்ளியில் மின்குமிழின் இழை இருக்குமாறு அமைக்கப்படுகின்றது. தெறிப்பி, ஒளி வெளியீட்டை ஏறத்தாள இருமடங்கு ஆக்குகின்றது. மின்குமிழில் இருந்து முன்புறமாகச் செல்லும் ஒளி வில்லையினூடு நேரடியாகச் செல்ல, பின்புறம் செல்லும் ஒளியும் தெறிப்பியினால் தெறிக்கப்பட்டு முன்புறமாகச் செலுத்தப்படுகிறது. இதில், குமிழும், தெறிப்பியும் தனித்தனியாக அசைவது இல்லை. இவையிரண்டும் ஒரே கூறாக விளக்கின் கூட்டினுள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கூறே விளக்கினுள் முன்னும் பின்னும் அசைந்து ஒளியை வேண்டியவாறு குவியச் செய்கின்றது. இவ்விளக்கு மின்குமிழ் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படியே பொருத்தப்படுகின்றது. தலைகீழாகப் பொருத்துவது விளக்கின் பயன்படு காலத்தை வெகுவாகக் குறைத்துவிடும். ஃபிரெனெல் விளக்குகள் கூடிய செயற்றிறன் கொண்டவை அல்ல. தெறிப்பியின் அளவு. வில்லையின் அளவைவிடப் பெரிதாக இருப்பதில் பயனில்லை. எனவே, வில்லையூடு நேரடியாகவும், தெறிப்பில் தெறித்து வெளிச் செல்லும் ஒளியையும் விடப் பெருமளவு ஒளி விளக்குக் கூட்டினுள்ளேயே உறிஞ்சப்பட்டு வெப்பமாக வீணாகின்றது. குறிப்பாக, ஒளிக்கதிரின் விரிவைக் குறைப்பதற்காக தெறிப்பியையும், குமிழையும் பின்னே நகர்த்தும்போது கூடிய ஆற்றல் வீணாகும். நாடக, நடன அரங்குகளில் ஃபிரெனெல்கள், நடுத்தர வீச்சுத் தூரங்களில் மேலொளி அல்லது பின்னொளி அமைப்புக்களுக்குப் பயன்படுகின்றது. சிறிய அரங்குகளில் முன்னொளியாகவும் பயன்படுத்தப்படுவது உண்டு. எனினும், நீள்வட்டத் தெறிப்பி விளக்குகளில் இருப்பது போல, ஒளி வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் வசதி இதிலே இல்லாதது ஒரு பாதகமான அம்சமாகும். பின்னொளிர்ப்பு ஒளியமைப்பில், பின்னொளிர்ப்பு (Backlighting) என்பது, எடுத்துக்கொண்ட பொருளைப் பின்புறமிருந்து ஒளியூட்டல் ஆகும். அதாவது, ஒளி விளக்கும், பார்ப்பவரும் எதிரெதிராக இருக்க, பொருள் அல்லது நடிகர்கள் இடையில் இருப்பர். இது பொருளின் விளிம்புகளை ஒளிரச்செய்யும் வேளை, ஏனைய பகுதிகள் இருட்டாக இருக்கும். 4-புள்ளி ஒளியமைப்பு முறையில் பின்னொளி பொருளுக்கு நேரே பின்புறம் இருக்கும். பின்னொளி நடிகன் அல்லது நடிகையில் தலைமுடி விளிம்பை பிரகாசமாக ஒளிரச் செய்யும். இது தலையைச் சுற்றிச் சிறிய ஒளிவட்டம் போல் இருக்கும். கதை மாந்தரின் நல்ல அல்லது தூய்மையான தனமையை வெளிப்படுத்த இந்த நுட்பம் பயன்படுத்தப்படுவது உண்டு. பின்னொளிர்ப்பு, பொருளையும் அதன் பின்புலத்தையும் பிரித்துக்காட்ட உதவும். முன்னொளிர்ப்பு சில சமயங்களில் இருபரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இதனால், நாடகங்களில், நடிகர்களினதும், மேடையமைப்பினதும் முப்பரிமாணத் தோற்றத்தை கூட்டிக் காட்டுவதற்காக பின்னொளிர்ப்பு முறையைப் பயன்படுத்துவர். டெர்பியின் ஜோசெப் ரைட் வரைந்த மெழுகுவர்த்தி ஒளியூட்டல் ஓவியங்களில் பின்னொளிர்ப்பைப் பயன்படுத்தி முன்புலப் பொருட்களைப் பின்புலத்திலிருந்து வேறுபடுத்தி, காட்சிக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்திருப்பதைக் காணலாம். (இடப்புற மேல் படம்) மூன்று நிலைய ஒளியமைப்பு மூன்று நிலைய ஒளியமைப்பு ("Three-point lighting") என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்ற காண்பிய ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஒளியமைப்பு முறை ஆகும். ஒளி மூலங்களுக்கான மூன்று நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம், படம் எடுக்கப்படும் பொருளை எப்படி வேண்டுமானாலும் ஒளிர்விக்க முடியும். அத்துடன், நேரடி ஒளியினால் உருவாகக்கூடிய நிழல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக இல்லாமலாக்கவோ முடியும். முதன்மை விளக்கு, பொருளின் மீது நேரடியாகப் பட்டு அதற்கு ஒளியூட்டும் முதன்மையாக விளக்காகும். சிறப்பாக, முதன்மை விளக்கொளியின் வலு, நிறம், கோணம் என்பவையே படப்பிடிப்பின் முழு ஒளியமைப்பு வடிவமைப்பையும் தீர்மானிக்கிறது. உள்ளகப் படப்பிடிப்பில் முதன்மை விளக்கு ஒரு சிறப்பு விளக்காகவோ அல்லது, படம்பிடி கருவியின் ஒளியாகவோ இருக்கலாம். பகல் நேரத்தின் வெளிப்புறத்தில் படம்பிடிக்கும்போது, சூரிய ஒளியே பெரும்பாலும் முதன்மை ஒளியாக இருக்கும். இவ்வேளைகளில், படப்பிடிப்பாளர், ஒளிமூலத்தை நகர்த்தமுடியாது. எனவே, சூரிய ஒளி தேவையான அளவு பொருளில் படும்படியாகப் பொருளின் நிலையைத் தெரிவு செய்யவேண்டி இருக்கும் அல்லது சூரியன் சரியான நிலைக்கு வரும்வரையில் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். நிரப்பு விளக்கும் பொருளின் மீது நேரடியாக ஒளியூட்டுவதே. எனினும், இது ஒரு பக்கத்தில் இருந்தே பொருளை ஒளியூட்டும். அத்துடன் முதன்மை விளக்கு உயரமான நிலையில் இருக்க, நிரப்பு விளக்கு அதிலும் குறைவான உயரத்தில் அமைந்திருக்கும். இது, முதன்மை விளக்கினால் ஒளியூட்டப்படாத பகுதிகளுக்கு ஒளி கொடுக்கும். அத்துடன் சியாரோஸ்கியூரோ விளைவு எனப்படும் ஒளி-நிழல் வேறுபாட்டளவைக் குறைக்க அல்லது இல்லாமலாக்க உதவுகிறது. நிரப்பு விளக்கு பொரும்பாலும், மெல்லொளியைக் கொடுப்பதாகவும், ஒளிர்வு குறைந்ததாகவும் இருக்கும். முஅம்மர் அல் கதாஃபி முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி ("Muammar Muhammad Abu Minyar al-Gaddafi" ( ' ; சூன் 1942 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக முஅம்மர் கதாஃபி ("Muammar Gaddafi") அல்லது கேர்னல் கடாஃபி அல்லது முஅம்மர் அல்-கத்தாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார். இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார். ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது. 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. பெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார். இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார். முஅம்மர் அல் கதாஃபி பள்ளிவாசல் திரிப்பொலி திரிப்பொலி ("Tripoli", அரபு மொழி: طرابلس "டராபுலஸ்") லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கான்யே வெஸ்ட் கான்யே ஒமாரி வெஸ்ட் (Kanye Omari West, பிறப்பு ஜூன் 8, 1977) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார். இவரே தனியாகப் படைத்த மூன்று ஆல்பம்கள் மொத்தத்தில் ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றன . அட்லான்டாவில் பிறந்த கான்யே மூன்று வயதில் சிக்காகோவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வளர்ந்தார். சிக்காகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு இருந்து அங்கேயிருந்து பட்டதாரியாக ஆகாமல் ராப் இசை உலகில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஜெய்-சியின் 2001இல் வெளிவந்த ஆல்பம் த புளூப்பிரின்ட்டில் இவர் இசைத் தயாரிப்பாளராக இருந்து புகழ் பெற்றார். 2004இல் இவரின் முதலாம் ஆல்பம் த காலேஜ் ட்ராப்பவுட் வெளிவந்தது. 2050 2050 (MML) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமாகும் ஒரு சாதாரண ஆண்டாகும். திருவள்ளுவர் ஆண்டு: 2081. மேடைச் சிரிப்புரை மேடைச் சிரிப்புரை (English: "Stand-up comedy") எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது. தமிழில் மேடைச் சிரிப்புரை கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரியா விகார் கோயில் பிரியா விகார் கோயில் அல்லது பிரசாத் பிரியா விகார் ("Temple of Preah Vihear") என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் தாய்லாந்தின் வடகிழக்கில் சிசாக்கெட் மாகாண எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி 11ம், 12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. ஜூலை 7, 2008 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது. கெமர் பேரரசு கெமர் பேரரசு ("Khmer empire") என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தமிழர் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. கெமர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஜாவாவுடன் கலாசார, அரசியல், மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் கெமரின் தெற்கு எல்லையில் பரவியிருந்த ஸ்ரீவிஜயப் பேரரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது. அங்கூர் ("Anghor") கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக இந்து சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. 15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது. == கெமர் பேரரசர்களின் காலக்கோடு டாங்கிரெக் மலைகள் டாங்கிரெக் மலைகள் ("Dângrêk Mountains", "Chuor Phnom Dângrêk"; தாய்: ทิวเขาพนมดงรัก, "Thiu Khao Phanom Dongrak"), என்பது கெமரில் உள்ள தாழ்பிரதேச மலைத்தொடர் ஆகும். இதன் சராசரி உயரம் 500 மீட்டர்கள். இம்மலைத் தொடர் கம்போடியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. டாங்கிரெக்கின் பெரும் பகுதி வடக்கு கம்போடியாவில் உள்ளது. இதன் அதிகூடிய உயரம் கடல் மட்டத்தில் இருந்து 753 மீட்டர்கள் (2,470 அடி) ஆகும். டாங்கிரெக் மலைகள் வடக்கு தாய்லாந்தில் மேக்கொங் ஆற்றிலிருந்து மேற்குத் திசையாக 200 மைல்கள் (320 கிமீ) தூரம் பரந்திருக்கிறது. புகழ்பெற்ற கெமர் இந்து சிவன் கோயிலான பிரசாத் பிரா விகார் இம்மலைகளில் கம்போடிய எல்லையில் அமைந்துள்ளது. 9-ஆம் நூற்றாண்டு 9ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 801 தொடக்கம் கி.பி. 999 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. ஆசியக் கிண்ணம் 1997 1997 ஆசியக் கிண்ணம்("1997 Asia Cup") ஆறாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் 1997 எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. கெமர் கெமர் ("Khmer") என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: 1806 1806 (MDCCCVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. அஜந்த மென்டிஸ் பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் ("Balapuwaduge Ajantha Winslo Mendis"; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார். இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனான போட்டியில் ஏப்ரல் 2008இல் இலங்கை அணியில் முதன் முதலாக விளையாடியிருந்தார். பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 2008 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை 13 ஓட்டங்களுக்கு இவர் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் விளையாடிய ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடுகிறார். இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 81 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 81 தமிழீழ விளையாட்டுத்துறை தமிழீழ விளையாட்டுத்துறை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். விளையாட்டுத்துறை சார் முனைப்புகளை இத்துறை நிரிவாகின்றது. விளையாட்டு ஊக்குவிப்பு, அபிவிருத்தி, அணிகள் உருவாக்கம், நிகழ்வுகள் போட்டிகள் ஒருங்கிணைப்பு, மாவட்ட தேசிய மட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இத்துறை நிறைவேற்றுகின்றது. சண்டை விளையாட்டு சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர். சியாரோஸ்கியூரோ சியாரோஸ்கியூரோ (Chiaroscuro) என்பது, ஓவியத்துறையில், ஒளி, நிழல்களுக்கு இடையேயான வேறுபாட்டளவைக் (contrast) குறிப்பிடப் பயன்படும் ஒரு இத்தாலியச் சொல்லாகும். இது பொதுவாக ஓவியத்தின் முழுக்கூட்டமைவைப் பாதிக்கும் வகையில் அமையும் கடுமையான வேறுபாட்டளவையே பொதுவாகக் குறிக்கும். எனினும், மனித உடல் போன்றவற்றின் முப்பரிமாண அமைப்பை வெளிக்கொண்டு வருவதற்காக, கடுமையாக இல்லாவிட்டாலும், வேறுபாட்டைப் பயன்படுத்துவதை, ஓவியர்களும், ஓவிய வரலாற்றாளரும் இச்சொல்லால் குறிப்பர். இச்சொல், ஓவியம் தொடர்பில் மட்டுமன்றி, மரச் செதுக்குவேலை, திரைப்படம், ஒளிப்படங்கள் ஆகியவை தொடர்பிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இச்சொல் முதலில், ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தில் வழங்கிவந்த, நிறத் தாளில் வரையப்படும் ஒருவகை ஓவியத்தைக் குறிக்கவே பயன்பட்டது. இதுவும் ரோமர் காலத்திய ஊதா நிறமூட்டப்பட்ட தாளில் எழுதும் மரபின் தொடர்ச்சியே எனவும் கூறப்படுகிறது. இதே நுட்பத்தைப் பின்பற்றி போலச்செய்தலாக உருவாக்கப்பட்ட மரச் செதுக்கு வேலைகளும் இதே பெயரினால் அழைக்கப்பட்டன. இச் சொல்லின் பொருள் மேலும் விரிவடைந்து, ஓவியங்களின் ஒளி, நிழல் பகுதிகளுக்கு இடையிலான ஒளிர்வு வேறுபாடுகளைக் குறிக்கவும் பயன்படத்தொடங்கியது. தற்காலத்தில் இச்சொல்லுக்கான முதன்மைப் பொருள் இதுவே ஆகும். சியாரோஸ்கியூரோ என்னும் சொல்லின் கூடிய தொழில்நுட்பப் பயன்பாடு, ஓவியம், வரைதல், அச்சடித்தல் போன்றவற்றோடு தொடர்புள்ள ஒளியுருவாக்க விளைவுகள் தொடர்பிலேயே இடம்பெற்றது. இவற்றில், நிழல், மிகையொளி என்பவற்றைப் பயன்படுத்தி முப்பரிமாணத் தோற்றம் பெறப்பட்டது. இது நிழற்றல் (shading) எனப்பட்டது. உருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: ஓவியம் உருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: அச்சுப்பதிவும், வரைதலும். கூட்டமைவில் முக்கிய கூறாக சியாரோஸ்கியூரோ. Chiaroscuro faces சியாரோஸ்கியூரோ மரச்செதுக்கும், வரைதலும். விண்வெளிச் சுற்றுலா விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை விண்வெளிச் சுற்றுலா எனலாம். மனித விண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளன. இந்தப் பயணங்களின் நோக்கம் ஆய்வு; சுற்றுலா அல்ல. ஆனால் விண்வெளிக்கு சுற்றுலா செல்வது பலரின் கனவாக பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு தேவைப்படும் பெரும் பொருட் செலவு, தொழில்நுட்பம், தகுதி அண்மை வரை இதை எட்டா கனியாகவே நிறுத்தி இருந்தது. எனினும், இத்தகைய அனுமானங்களைப் பெற்றோர் விண்வெளிச்கு சுற்றுலா செல்வது இன்று சாத்தியமே. என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. 1967 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மரினர்-5 எனும் ஆளில்லாத விண் ஓடம் வெள்ளிக் கிரகத்தை ஆராய்ந்தது. 1969 இல் அமெரிக்கா அனுப்பிய அப்பலோ-11 எனும் ஓடம் நீல் ஆம்ஸ்றோங், எட்வின் ஓல்ரின் ஆகியோருடன் சந்திரனில் தரை இறங்கியது. மரினர்-9 அமெரிக்காவினால் 1977 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மனிதர்களற்ற விண் ஓடம்.அரிய பல தகவல்களை பூமிக்குஅனுப்பியது.1980 களில் ரோகினி-1 எனும் ஆளில்லாத விண்வெளி ஓடத்தை அனுப்பியதன் மூலம் செய்மதியை விண்ணுக்கு அனுப்பிய எட்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக் கொண்டது.1983 இல் அமெரிக்கா அனுப்பிய பயனியர்-10 ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து விலகிச் சென்ற முதலாவது ஆளில்லாத விண்வெளி ஓடம் எனப் பதிவு செய்யப்பட்டது. ஈராக் போர் ஈராக் போர், இரண்டாவது வளைகுடாப் போர் அல்லது ஈராக்கிய விடுதலை நடவடிக்கை ("Iraq War") என்பது ஈராக்கில் 20 மார்ச்சு 2003 முதல் 15 டிசம்பர் 2011 வரை நடைபெற்ற முதற்கட்ட போர் மற்றும் நிலையற்ற தன்மையினையும் குறிக்கின்றது. ஆப்கானித்தானின் வரலாறு ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர். ஆப்கானிஸ்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான பிரதேசமாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரீகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்பு புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (இந்தோ-ஈரானியர்கள், இந்தோ-ஆரியர்கள், மேதாக்கள், பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குஷான்கள், ஹெப்தலைட்கள், அரேபியர், மொங்கோலியர், துருக்கி, பிருத்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. கிமு 2000 ஆம் ஆண்டளவில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானினுள் குடிபெயர்ந்துள்ளனர். இவ்வாறு வந்து குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரியர்களாவர். இவர்கள் இந்து – ஐரோப்பிய மொழியைப் பேசியமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் ஆரியர்கள் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள்ளும் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பிரதேசங்கள் ஆரியானா அல்லது ஆரியர்களின் பூமி என அழைக்கப்பட்டது. கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அச்செமினிட் (Achaemenid) சாம்ராஜம் எனும் சாம்ராஜம் பலமாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 ஆம் ஆண்டில் இவரின் மரணத்திற்குப் பின்னர் செலூசிட்ஸ், பாக்ட்ரியா, அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இப்பிராந்தியத்தினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டில டோச்சானியன் குஷானாஸ் (Tocharian Kushans) போன்றோர் இப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பார்த்தியன்கள், சைத்தியர்கள் மற்றும் ஹன்ஸ் போன்ற ஐரோஆசிய பழங்குடியினரும் சஸானியன் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து ஷாயியர் போன்றோர் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர். ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்ராஜ்ஜியங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ஆம் ஆண்டில் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இப்பிரதேசத்தில் பல சாம்ராஜ்ஜியங்கள் உருப்பெற்றன. எ-கா: காஸ்னாவிட் சாம்ராஜ்ஜியம் (Ghaznavid Empire) (962-1151) என்ற பேரரசு துருக்கியைச் சேர்ந்த யாமின் உல்-தௌலா மஹ்முத் (Yamin ul-Dawlah Mahmud) என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேற்கூறிய பேரரசு (கோரித் சாம்ராஜ்ஜியம் (Ghorid Empire) (1151-1219), என்ற அரசினால் வெற்றி கொள்ளப்பட்டது. 1299 ஆம் ஆண்டில் இப்பிராந்தியம் செங்கிஸ் கான் என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குட்பட்டது. இவன் மொங்கோலிய இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். 1504 ஆம் ஆண்டில் பார்பர் என்ற ஆட்சியாளனினால் காபூலை மையமாகக் கொண்டு முகலாயப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு அளவில் பாரசீகத்தின் சஃபாவிட்ஸ் (Safavids) ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் காஸ்னாவிட் கான் நாஷர் (Ghaznavid Khan Nasher) என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி ஆப்கானிஸ்தானில் வெடித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப்பட்டதுடன், கிழக்கு ஈரான் பிரதேசத்தையும் 1719-1729 வரையான காலம் ஆப்கானியர்கள் ஆண்டனர். 1729 ஆம் ஆண்டில் பாரசீகத்தின் நதீர் ஷா என்பவன் ஆப்கானியரை தோற்கடித்தான். 1738 ஆம் ஆண்டில் நாதிர் ஷா கந்தகாரை வெற்றி கொள்வதுடன் அதே ஆண்டில் காபூல், லாகூர், காஸ்னி போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்கின்றான். பின் சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக வந்த நாதிர் ஷா படைகளுக்கும், தில்லி மொகலாய மன்னர் முகமது ஷாவின் படைக்கும், 1739 இல் அரியானாவின் கர்ணல் பகுதியில் நடந்த போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய படைவீரர்களை, நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். . 1747 ஆம் ஆண்டில் நதீர் ஷா மரணம் அடைகின்றான். 1747 ஆம் ஆண்டில் ஆப்கான்/பஸ்தூன் ஆகியோர் கந்தகாரில் கூடி அஹமது ஷா என்பவனை மன்னனாக முடி சூட்டிவிக்கின்றனர். இவர் தனது கடைசிப் பெயரை டுரியோ (என்பது முத்துக்களின் முத்து என்று பொருள்படும்) என மாற்றிக்கொண்டான். துராணிப் பேரரசு காலத்துடனே இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் பிரதேசம் உருவாகின்றது. 19 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தப்பிரதேசம் பல்வேறு உட்குழப்பங்களுக்கு உள்ளானது. பாரசீகர் மற்றும் சீக்கியருடனான பிரைச்சனைகள் காரணமாக சுமார் ஒரு நூற்றாண்டு மட்டுமே இந்த பேரரசு நிலைத்து இருந்தது. ஆயினும் பிருத்தானியரின் காலப்பகுதிவரை ஆப்கானின் எல்லைகள் இன்று போன்று வரையறுக்கப்பட முடியாமல் இருந்தது. 1751 ஆம் ஆண்டில் அகமது ஷா துராணி இன்றைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ஈரானின் கோரசன் பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளை ஆண்டு கொண்டு இருந்தான். 1772 ஆம் ஆண்டு அக்டோபரில் அகமட் ஷா, மருஃப் இல் ஓய்வு எடுத்ததுடன் அமைதியாக மரணம் அடைகின்றார். இவருக்குப் பின்னர் இவரது மகன் டைமூர் ஷா டுரானி ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றான். 1776 ஆம் ஆண்டு இவன் தனது ஆட்சிக்காலத்தில் கந்தகாரில் இருந்த தலைநகரத்தை காபூலுக்கு மாற்றினான். தைமூர் 1793 ஆம் ஆண்டில் மரணம் அடைகின்றான். இவருக்குப் பின்னர் இவரது மகனான சமன் ஷா டுறானி ஆட்சியை ஏற்கின்றான். 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் அங்லோ – ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்பிராஜ்யத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வசம் போயிருந்தது. 1919 ஆம் ஆண்டில் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குத் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. இதன் போது பிருத்தானிய இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது. ஆப்கானிஸ்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாகிர் ஷாவின் ஆட்சிக்காலமாகும். எனினும் 1973 ஆம் ஆண்டில் சாகிர் ஷாவின் மைத்துணன் சர்தார் தாவ்த் கான் புரட்சிமூலம் பதவியைக் கைப்பற்றிக்கொள்கின்றான். ஆயினும் தாவ்த் (Daoud) கானும் அவரது மொத்த குடும்பமும் 1978 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இக்குழுவினர் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். இது ("Great Saur Revolution") மாபெரும் சார் புரட்சி என்று அறியப்படுகின்றது. இந்த இடது சாரி அரசும் உட்பிரைச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு பிரைச்சனைகளை எதிர்கொண்டது. ரஸ்யா – அமெரிக்காவிற்கிடையிலான பனிப் போரில் ஆப்கானிஸ்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 ஆம் ஆண்டில் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski உம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முகாஜுதீன்களுக்கு உதவிஅளித்தது. ஆயினும் உள்ளூரில் சமவுடமையைக் காப்பாற்ற சோவியத் ரசியா ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுக்கொண்டது. இதன் படி சுமார் 110,000 முதல் 150,000 வரையான சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுள் நுழைந்தன. இவர்களுக்கு சுமார் 100,000 வரையான இடதுசாரி ஆப்கானிய படைகள் ஆதரவு வழங்கின. சோவியத் படைகளின் வருகையை அடுத்து சுமார் 5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். 3 மில்லியனுக்கு அதிகமானோர் பாக்கிஸ்தானிலும், ஒரு மில்லியன் அளவில் ஈரானிலும் பல்வேறு நாடுகளிலும் நிரந்தரமாகத் தங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்வதேச அழுத்தங்களினாலும் சுமார் 15,000 துருப்புக்களை முகாஜுதீன்களுடனான யுத்தத்தில் இழந்ததனாலும் சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது இது அமெரிக்கர்களால் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப் பட்டதும் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதலமான ஆப்கானிஸ்தானை சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்து அதிபர் நஜிபுல்லாவிற்கு தமது ஆதரவை வழங்கியது, ஆயினும் 1992 ஆம் ஆண்டில் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகளின் பிரசன்னம் இன்மை இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது. பல சிறுபாண்மையினரும், புத்திஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும் முகாஜுதீன்களின் பல உட்பிரிவுகளிற்கிடையில் யுத்தங்கள் முளலாயின. இதன் உச்சக்கட்டமாக 1994 ஆம் ஆண்டில் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தலீபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் ஹெல்மான்ட், கந்தகார் பிரதேசத்தைச் சோந்த பஷ்துனர்கள் ஆவார். தலீபான் அரசியல் – மதம் சார் சக்தியை உருவாக்கியது. இது 1996 ஆம் ஆண்டில் காபூலை கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தலீபான் நாட்டின் 95% மான நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை வடக்கு முண்ணனி எனும் அமைப்பு வடகிழக்கு மாகானமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தலீபான் ஷரியா எனும் முஸ்லிம் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தியதுடன் பின்னர் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தலீபான் அல்-கைடா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன்னை பாதுசாட்தனர். தலீபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுநத்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது தலீபான் அதிகளவான மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது, பெண்கள் பாடசாலையோ, பல்கலைக்கழகமோ செல்வது தடைசெய்யப்பட்டது போன்றவையைக் குறிப்பிடலாம். இதை எதி்ர்த்தவர்கள் அடிக்கடி கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுததவர்களின் கைகள் வெட்டி அகற்றப் பட்டவை போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தலீபான் ஆட்சியின் நல்ல நிகழ்வு எனும் போது 2001 ஆம் ஆண்டு அளவில் ஆப்கானின் ஓபியம் எனும் போதைப் பொருள் தயாரிப்பு முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-கைடா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கான் மீது நடத்தியது. தலீபானை தோற்கடிக்க வடக்கு முண்ணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் பொன் நகரின் கூடி ஆராய்ந்து ஒரு இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பாஸ்துன் இனத்தவருமான ஹமீட் ஹர்சாய் ஆப்கானிய இடைக்கால அரசின் இக்குனராகத் தெரிவு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய ரீதியான தேர்தலின் மூலம் ஹமீட் கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. 1973 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட சட்டவாக்கசபை இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடங்களாகும். நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும் கணிசமான பல பிரைச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம் குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, ஓபியம் வியாபாரம் போன்றன. இதைவிட மிஞ்சியிருக்கும் அல்-கைடா உறுப்பினர்கள் மற்றும் தலீபான் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மேலும் வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரைச்சனை கொடுத்து வருகின்றனர். ஆப்கானித்தானின் பொருளாதாரம் ஆப்கானிஸ்தான் உலகில் மிகவறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடையாகளின் ஒன்று. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசில் ஸ்திரமின்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பெருளாதார ரீதியாக செயல்லூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. ஆயினும் வேலையில்லா வீதம் பற்றிய உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் இது மிக உயர்வு என்பதே உண்மை. தொலிழ் சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயம் கிட்டத்தட்ட 3 மில்லியன் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானியப் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி ஓபியம், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப் பொருள் மூலமே கிடைக்கின்றது. மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 ல் உருவாகியபின் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக் டொலர்கள் லண்டன் மாநாட்டின் மூலம் 2006 ல் ஆப்கானுக்கு கிடைத்தது. அபிவிருத்தியில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயர்ச்செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 2004 ம் ஆண்டுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின் படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு பிரதான கிளைகளைக் கொண்டது. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும் இரண்டாவதாக நவீன பொது கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவது. 2006 ல் இரண்டு அமெரிக்க கம்பனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காக தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன. தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீண்டு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும் பொருளாதாரத்திற்கு சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார் துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். டுபாயில் வசித்துவரும் அப்கானிய குடும்பம் ஒன்று அப்கானில் ஒரு கொக்க – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும். நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியெ உள்ளது. சிறிய பகுதியான 15% வரையே உள்ளுர் அரசினால் வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றது. மீதி ஐக்கிய நாடுகள் சபையின் மூலமும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 ல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 ல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது. 2002 தொடக்கம் பணவீக்கம் பெரும் பிரைச்சனையாக உள்ளது. இருந்தாலும், பழைய 1000 ஆப்கானிக்குப் பதிலாக ஒரு புதிய ஆப்கானி என்ற பண முறைமையை அமுல் படுத்தியதன் மூலம் ஓரளவு நிலையான தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் குறிகாட்டிகள் நிலையான தன்மையைக் காட்டியதுடன், 2003 ல் சிறிதளவான வளர்ச்சியையும் காட்டியது. ஆப்கானிய அரசும், சர்வதேச உதவி வழங்குவோரும் அடிப்படைத் தேவைகள், உட்கட்டுமான அபிவிருத்தி, கல்வி, வீடு, மற்றும் பொருளாதார மீளமைப்பு என்பவற்றில் அதிகளவு அக்கறை காட்டிவருகின்றனர். நிதியியல் துறையைக் கட்டி யெழுப்புவதற்கான முயற்சிகள் இது வரை சிறப்பாகவே நடைபெற்றுவருகின்றன. பணமானது நாட்டினுள்ளேயும் வெளியேயும் உத்தியோக பூர்வ வங்கிகள் மூலம் பரிமாற்றக் கூடியதாக உள்ளது. 2003 க்குப்பின்னர் சுமார் பதின்நான்கு புதிய வங்கிகள் இங்கே திறக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஏஐபி வங்கி, காபூல் வங்கி, அசீசீ வங்கி என்பன அடங்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். கெமர் மக்கள் கெமர் மக்கள் ("Khmer people") எனப்படுவோர் கம்போடியாவில் பெரும்பான்மையாக வாழும் ஓர் இனக்குழுவாகும். நாட்டின் 13.9 மில்லியன் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கெமர் மக்கள் ஆவர். தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் மொன்-கெமர்களில் ஒரு பிரிவினரான இவர்கள் கெமர் மொழியைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான கெமர் மக்கள் கெமர் வழிவந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இது தேரவாத பௌத்தம், இந்து சமயம், ஆவியுலகக் கோட்பாடு போன்றவற்றின் ஒரு கலப்பாகும். கணிசமான கெமர் மக்கள் தாய்லாந்து (வடக்கு கெமர்), வியட்நாமின் மெக்கொங் டெல்ட்டா (கெமர் குரோம்) பகுதிகளிலும் வாழ்கின்றனர். கெமர் மக்கள் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து இங்கு வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. வடக்கில் சீன - திபெத்தியர்களால் இவர்கள் வடக்கில் இருந்து விரட்டப்பட்டவர்களாக அல்லது விவசாயத்துக்காக இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென்கிழக்காசியாவ்வில் இவர்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் இவர்களின் வரலாறு கம்போடியாவின் வரலாற்றுக் காலக்கோட்டுடன் இணைந்து போகிறது. தென்கிழ்க்காசீயாவின் மற்றையா இன மக்களான பியூ, மற்றும் மொன் மக்கள் போன்று கெமர் மக்களும் இந்திய வர்த்தகர்களினாலும் அறிவாளிகளினாலும் கவரப்பட்டு, அவர்களின் வாழ்க்கை முறை, மற்றும் சைவ சமயம் போன்றவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். கெமர் மொழி கெமர் மொழி ("Khmer)" அல்லது கம்போடிய மொழி, கெமர் மக்கள் பேசும் மொழியாகும். இது கம்போடியாவின் அதிகாரபூர்வ மொழியாகும். இது ஆஸ்திரே-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். சமஸ்கிருதம், மற்றும் பாளி மொழிகளின், குறிப்பாக இந்து, பௌத்த சமயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளன. மொன்-கெமர் மொழிக் குடும்பத்தில் மொன் மொழி, வியட்நாமிய மொழிகளை விட எழுத்து வடிவம் பெற்ற முதலாவது மொழி கெமர் மொழியாகும். கம்போடியாவின் புவியியல் அமைவு காரணமாக அயல் மொழிகளான தாய், லாவோ, சாம், மற்றும் வியட்நாமிய மொழிகளின் தாக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரந்து காணப்படுகிறது. கெமர் மொழி தனக்கென தனியே அபுகிடா என்றழைக்கப்படும் கெமர் எழுத்துமுறையைக் கொண்டுள்ளது. கெமெர் மொழியானது தனது அயல் மொழிகளான லாவோ, தாய், வியட்நாமிய மொழிகளைப் போல தொனி மற்றும் சுதி சார்ந்த (tonal) மொழியல்ல. கெமர் மொழியின் வட்டார வழக்குகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை: ஆசியக் கிண்ணம் 2000 2000 ஆசியக் கிண்ண ("2000 Asia Cup") துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது. முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. எலி எலி ("rat") பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும். உலகம் பூராகவும் உள்ள எலிகளை எடுத்து நோக்கினால் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று கறுப்பு எலி, மற்றையது மண்ணிற எலியாகும். இவை ஆசியாக் கண்டத்திலேயே தோன்றின. சீன இராசிவட்டத்தில் உள்ள பன்னிரண்டு மிருகங்களில் எலியும் ஒன்றாகும். மண்ணிற எலிகள் விஞ்ஞான ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக எலி மரபணு பற்றிய ஆய்வுகளுக்கு இவ்வகை எலிகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின், தமிழ் நாட்டில் காணப்படும் எலிகள் கீழே தரப்பட்டுள்ளன. எலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி. இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்) வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை. புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை. பெயருக்கு ஏற்ப இவ்வகை எலிகளின் அடிப்பாகம் வெண்மை நிறமாகவும் உடலின் மேல்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். இந்த எலி மனிதர்களால் உண்ணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் வரப்புகள், புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை. பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன. இவ்வித எலிகள், வேறு வேறு இடங்களில் இரண்டு, மூன்று வளைகள் தோண்டி அவை அனைத்திற்கும் பூமிக்குள் ஒன்றுக்குகொன்று தொடர்பை ஏற்படுத்தி விட்டிருக்கும். இவை இரவில் இரை தேடும் இயல்புடையவையாகும். புன்செய் தானியங்களை சேகரித்து வளைக்குள் சேமித்து வைத்து இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுதும். பல எலிகள் கூட்டாக வாழும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை மண்ணால் அடைத்து வைத்திருக்கும். அப்படியும் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக வளைதோணடி மேல் மண்ணைத் திறக்காமல் வைத்திருக்கும். அதை மக்கள் "மூட்டு" என்று அழைப்பார்கள். வளை வழியாக ஆபத்து வரும்போது மூட்டை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளும். கருவுற்ற எலி கூட்டமாக வாழும் எலிகளின் மத்தியில் குட்டிகளை ஈன்றால் பிற எலிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் கருவுற்ற எலியும் ஆணெலியும் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வளை தோண்டி அதில் தங்கி குட்டிகளை ஈன்று வளர்க்கும். ஒரே ஒரு வளை மட்டுமே காணப்பட்டால் அது குஞ்சுகள் வளரும் வளை என கணித்து விடலாம். கூட்டமாக எலிகள் வாழும் எலி வளைகளை வளையின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு அடி உள்ளே தள்ளி வளையை மண்ணால் மூடியிருக்கும். ஆனால் குட்டிகள் வளரும் வளையை நுழை வாயிலிலேயே மூடியிருக்கும். இந்த எலி வளை தோண்டுதல், இரை தேடுதல், பகைவர்களிடமிருந்து காத்துகொள்ள ஓடுதல், எதிர்காலத்திற்கு உணவை சேமித்தல், இரை தேடியபின் தினசரி வளையை மண்ணால் மூடுதல் ஆகிய வேலையை செய்வதால் இவை வலிமையோடு இருக்கும். இந்த எலி வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இது வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை "கீச், கீச்" என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலி மக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலியை யாரும் கொல்வது இல்லை. பெட்டி, பீரோ, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும். இது சுண்டெலியை விட சற்று பெரியதாக காணப்படும். கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும். இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும். கொல்லையில் இவை காணப்பட்டாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை. இந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும், நார்களாலும் கூடுகட்டி வாழும். இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும். பகலில் மரத்திலிலேயே இருக்கும். இந்த எலி உருவத்தில் பெரியது. அதனால், இதனை கிராமத்து மக்கள் பெருச்சாளி என்று அழைக்கின்றனர். இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே வசிக்கும். வேலியோரங்கள், கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும். இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர். தோட்டத்தில் உள்ள கிழங்குகள், தானியங்கள், மனிதர்களால் வெளியில் வீசப்படும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும். இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேதத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம். 19 ஆம் ஆம் நூற்றாண்டின் பின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய எலிகளை சிலர் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். அநேகமானோர் மண்ணிற எலிகளையே செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர், சிலர் ம்ட்டுமே கறுப்பு நிற எலிகளையும் இராட்சத பை உடைய எலிகளையும் வளர்க்கின்றனர். பூனைகளுக்கும் நாய்களுக்கும் அடிக்கடி நோய் ஏற்படுவது போல எலிகளுக்கு ஏற்படுவதில்லை. பழக்கப்பட்ட எலிகள் சிநேகித பூர்வமாகவே இருக்கும். அவற்றிற்கு நாம் முயலுமான செயற்பாடுகளை பழக்கலாம். வீட்டு எலிகள் காட்டு எலிகளிலும் பார்க்க சாந்தத் தன்மையைக் கொண்டவையாகவும் குறைவாக அல்லது அரிதாகக் கடிப்பவையாகவும் காணப்படுகின்றன. இவ்வெலிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவையாகவும் அத்க குட்டிகளை ஈனக்கூடியவையாகவும் காணப்படுகின்றன. வேட்டையாடும் விலைமதிப்பு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு பொருளின் சந்தை மதிப்பில் இருந்து குறைந்த விலைக்கு விற்று சந்தை ஆக்கிரமிப்பை செய்து, போட்டியாளர்களை வெளியேற்றும் நோக்குடன் செய்யப்படும் விலைமதிப்பீட்டை என்று ஆங்கிலத்தில் குறிப்பர். தமிழில் வேட்டையாடும் விலைமதிப்பு எனலாம். போட்டியாளர்களை வெளியேற்றி, சந்தை ஆக்கிரமிப்பைச் செய்த பின்னர் தாம் விரும்பியபடி விலையைக் கூட்டி விற்கக்கூடியவாறு ஒரு monopoly ஏதுவாக்க இந்த ஏற்பாடு உதவுகின்றது. பொதுவாக பெரும் முதலீடு வசதி அல்லது சந்தையைக் கட்டுப்படுத்த வல்ல நிறுவனங்களே இந்த செயற்பாட்டில் ஈடுபடக் கூடியதாக இருக்கிறது. இது ஐக்கிய அமெரிக்கா உட்பட அனேக நாடுகளில் ஒரு குற்றச் செயலாகும். அமேடியோ அவகாதரோ அமேடியோ அவகாதரோ ("Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto"; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 10), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது. கலப்புலோகங்களின் பட்டியல் இக் கலப்புலோகங்களின் பட்டியல் ஒரு முற்றுப்பெறாத பட்டியல் ஆகும். கலப்புலோகங்களின் அடிப்படை உலோகத்தின் பெயரின் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. அத் தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிட்ட ஒழுங்கு எதுவும் இல்லை. சில முக்கியமான கலக்கும் உலோகங்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன. அலுமினியம்-இலித்தியம் கலப்புலோகம் அலுமீனியம்-லித்தியம் என்பது, பல அலுமீனிய, லித்தியக் கலப்புலோகங்களைக் குறிக்க்கும் பெயராகும். பெரும்பாலும் இவற்றுடன் செப்பு, சிர்கோனியம் ஆகிய உலோகங்களும் கலப்பது உண்டு. லித்தியம் தனிம உலோகங்களிலேயே மிகவும் குறைந்த அடர்த்தியைக் கொண்டது ஆதலால், இக் கலப்புலோகங்கள் அலுமீனியத்தைவிட அடர்த்தி குறைந்தவையாக உள்ளன. வணிக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் 2.45% வரையான லித்தியத்தைக் கொண்டிருக்கும். கலப்புலோகத்தில் இருக்கும் லித்தியம் இரு வகைகளில் கட்டமைப்பு நிறையைக் குறைக்கப் பயன்படுகிறது. நிறை குறைவானவையாக இருப்பதனால், அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் முக்கியமாக விண்வெளித் தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை தற்போது சில ஜெட் வானூர்திகளின் சட்டகங்களில் பயன்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு நிலைப்படி, அமெரிக்க விண்வெளி ஓடங்களின் வெளித் தாங்கி முக்கியமாக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகத்தினாலேயே உருவாக்கப்படுகின்றது. பட்டாம்பூச்சி விளைவு பட்டாம்பூச்சி விளைவு ("Butterfly effect") எனப்படுவது ஒரு கணித கருத்துரு. ஓர் இயங்கியல் அமைப்பில் ("dynamical system") நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே ("small variationss of the initial condition") அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சாரம். பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை. இதை வில்லியம் ஜேம்சின் பின்வரும் கூற்றைக் கொண்டு மேலும் விளங்கிக் கொள்ளலாம். இந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வல்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது கேள்விக்குரியதே. "முதன்மைக் கட்டுரை: வினை விளைவுக் கோட்பாடு" கரைதிறன் கரைதிறன் ("Solubility") என்பது, ஒரு பொருள், அதாவது கரையம், ஒரு கரைப்பானில் கரையும் திறனைக் குறிக்கும் ஒரு இயற்பியல் இயல்பு ஆகும். இது, ஓய்வுநிலையில் ஒரு கரைப்பானில் கரையக்கூடிய மிகக்கூடிய கரையத்தின் அளவு மூலம் அளக்கப்படுகின்றது. விளையும் கரைசல் நிரம்பிய கரைசல் எனப்படும். சில பொருட்கள் எந்த அளவிலும் ஒரு குறிக்கப்பட்ட கரைப்பானில் கரையக்கூடியவை. நீரில், எதனோல் கரைவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கலக்கும் தன்மை எனப்படும். சில சந்தர்ப்பங்களில் சமநிலைக் கரைதிறனையும் தாண்டி மிகைநிரம்பல் கரைசல் ஏற்படுவது உண்டு. இது சிற்றுறுதி நிலை அல்லது தோற்றச் சமநிலையில் இருக்கும். ஒரு கரைசலில், கரைப்பான் பொதுவாக நீர்மமாகவே இருக்கும். கரையம், வளிமமாகவோ, நீர்மமாகவோ அல்லது திண்மமாகவோ இருக்கலாம். கரைதிறனில் பெருமளவில் வேறுபாடு காணப்படுகின்றது. இது முடிவிலியில் இருந்து மிகக் குறைவானது வரை உள்ளது. நாட் டர்னர் நாட் டர்னர் (Nat Turner, அக்டோபர் 2, 1800-நவம்பர் 11, 1831) ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர். வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கைக் கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி 12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார். நாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செய்யப்படாமல் ஒளித்து கொண்டிருந்தார். நவம்பர் 5 நீதிமன்றத்தில் இவரை தீர்ப்பு குற்றவாளி என்று கூறி நவம்பர் 11 இவர் தொங்கிவிட்டு கொல்லப்பட்டார். இக்கிளர்ச்சியை சேர்ந்த 55 அடிமைகளை வர்ஜீனியா மாநிலம் கொலை செய்துள்ளது. மேலும் 200 அடிமைகளை வெள்ளைக்காரர் படைகள் கொலை செய்துள்ளன. இதுக்கு விளைவாக அடிமைகளுக்கு எதிராக இருந்த சட்டங்கள் மேலும் கண்டிப்பான மாற்றப்பட்டன. ஆனால் இன்று வரை பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவரை கதாநாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அபுஜா அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும். 1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர். வில்லியம் டாஃப்ட் வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார். சின்சினாட்டி பல்கலைக்கழகம் சின்சினாட்டி பல்கலைக்கழகம் (University of Cincinnati) ஐக்கிய அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும். ஜாஷ் ஸ்மித் ஜாஷ் ஸ்மித் (Josh Smith, பிறப்பு டிசம்பர் 5, 1985) ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். அட்லான்டா, ஜோர்ஜியாவில் பிறந்த ஜாஷ் ஸ்மித் என்.பி.ஏ.இல் அட்லான்டா ஹாக்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004 என்.பி.ஏ. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு என்.பி.ஏ.இல் முதலாம் ஆண்டில் ஸ்லாம் டங்க் போட்டியை வென்றுள்ளார். டானியல் ஒர்ட்டேகா ஹொசே டானியல் ஒர்ட்டேகா சவேத்ரா (Jose Daniel Ortega Saavedra, பிறப்பு நவம்பர் 11, 1945) நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர் ஆவார். சாண்டினிஸ்ட்ரா தேசிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த ஒர்ட்டேகா 1979இல் இராணுவ புரட்சிக்குப் பின்னர் இராணுவ அரசில் ஒரு உறுப்பினராக இருந்து 1985இல் குடியரசுத் தலைவரானார். 1985 முதல் 1990 வரை பதவியில் இருக்கும் பொழுது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கொன்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டார். 1990 தேர்தலில் இவர் வலதுசாரிகளிடம் தோற்றார். 2006 தேர்தலிலும், பின்னர் மூன்றாம் தடவையாக 2011 நவம்பர் தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றார். மனாகுவா மனாகுவா (எசுப்பானிய மொழி: Managua) மனாகுவா ஏரியின் தென்மேற்கு கரையில் அமைந்த நகரம் ஆகும். நிக்கராகுவாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரில் 1,680,100 மக்கள் வசிக்கின்றனர். தவறிய நாடு ஒரு நாடு நல்ல முறையில் தனது ஆட்சிப்பகுதிகளில் கட்டுபாட்டை நெறிப்படுத்த முடியாமல், மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்க மூடியாமல், மனித உரிமைகளைப் பேண முடியாமல், வெளி நாடுகளுடன் ஊடாட முடியாமல் போனால் அதை தவறிய நாடு என்பர். ஊழல், குற்றச் செயல்கள் இந்த நாடுகளில் பெருகி காணப்படும். சட்டம், காவல், நிர்வாகம் போன்ற துறைகளூம் திறம்பட செயல்படா. மேலும், ஒரு நாடு தவறிவிட்டது என அறிவிப்பது, பொதுவாகச் சர்ச்சைக்கு உரியதாகும். இது குறிப்பிடத்தக்க பிரதேச அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். மக்ஸ் வெபர் என்பவரின் கருத்துப்படி, தனது எல்லைகளுக்குள் முறைவழியான (legitimacy) நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான தனியுரிமையைத் தக்கவைத்திருக்கும் நாடு "வெற்றிபெற்றது" எனலாம். பகுதித் தலைவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதம் போன்றவற்றால் இவ்வாறான ஒரு நிலை இல்லாது இருக்குமாயின் அந் நாடு ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுத் தவறிய நாடு ஆகிறது. ஒரு அரசு, "பலத்தைப் பயன்படுத்துவதற்கான முறைவழித் தனியுரிமையை" தக்கவைத்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருப்பதால், ஒரு நாடு தவறிவிட்டது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கான நிலை தெளிவானதாக இல்லை. இப் பிரச்சினை "முறைவழி" என்றால் என்ன என்பது குறித்ததும் ஆகும். முறைவழி என்று குறிப்பிடும்போது வெபர் எதனைக் கருதினார் என்பதைப் புரிந்துகொண்டால் இது குறித்த பிரச்சினையைத் தீர்க்கலாம். நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான வளங்களை அரசு மட்டுமே கொண்டிருக்கும் என்பது அவரது தெளிவான விளக்கம். இதன்படி, தனியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாட்டுக்கு முறைவழியுரிமை தேவயில்லை, ஆனால் அத் தனியுரிமையைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு முறைவழியுரிமை தேவைப்படும். உயர்ந்த குற்ற வீதம், அளவு கடந்த அரசியல் ஊழல்கள், விரிவான முறைசாராச் சந்தை, வலுவற்ற நீதித்துறை, அரசியலில் படைத்துறைத் தலையீடு, மரபுவழித் தலைமைகள் தம் பகுதிகளில் அரசிலும் கூடிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பண்பாட்டு நிலை போன்ற பல பிற காரணிகளினால், அரசு சட்டத்தைப் பாதுகாப்பதில் தனது பலத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாமல் வலுவிழந்திருக்கும் நிலையில் இருக்கும் நாட்டையும் தவறிய நாடு எனலாம். அமெரிக்காவின் சிந்தனையாளர் குழுவொன்றான அமைதிக்கான நிதியம் என்பதும், "ஃபாரின் பாலிசி" (Foreign Policy) என்னும் சஞ்சிகை வெளியீட்டாளரும் இணைந்து, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், தவறிய நாடுகள் சுட்டெண் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதன் கீழ், ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்புரிமை கொண்ட இறைமையுள்ள நாடுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. பல ஆட்சிப்பகுதிகள், அவற்றின் அரசியல் நிலையும், ஐநா உறுப்புரிமையும் அனைத்துலகச் சட்டங்களின் மூலம் உறுதி செய்யப்படும் வரை, இப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளன. தாய்வான், பாலஸ்தீனப் பகுதிகள், வடக்கு சைப்பிரஸ், கொசோவோ, மேற்கு சகாரா என்பன இத்தகையவை ஆகும். தரநிலைகள் 12 சுட்டிகள் தொடர்பில் நாடுகள் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சுட்டிக்கும் 0 தொடக்கம் 10 வரை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதில் 0 மிகக் கூடிய உறுதிப்பாட்டையும், 10 மிகக் குறைந்த உறுதிப்பாட்டையும் குறிக்கின்றன. பாக்க: தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (குறிப்பு இது 2007 க்கான தரவுகள்) தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இத் தவறிய நாடுகளின் சுட்டெண் அடிப்படையிலான நாடுகளின் பட்டியல் ("List of countries by Failed States Index") அமைதிக்கான நிதியம் என்னும் அமெரிக்கச் சிந்தனையாளர் குழுவொன்றும், "ஃபாரின் பாலிசி" என்னும் சஞ்சிகையும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. தரநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ("São Tomé and Príncipe", saʊ̯ tʰəˈmeɪ̯ ənd ˈpʰɹɪnsɪpɪ) என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கினி குடாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுக் கூட்டம் சாவோ தொமே, மற்றும் பிரின்சிப்பி ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு தீவுகளும் 140 கிமீ தூர இடைவெளியில் காபொன் இன் வடெமேற்குக் கரையில் இருந்து முறையே 250, 225 கிமீ தூரத்தில் வழக்கொழிந்த எரிமலைகளின் கூட்டத்தில் அமைந்துள்ளன.