அனுரா பண்டாரநாயக்கா அனுரா பண்டாரநாயக்கா (பெப்ரவரி 15, 1949 – மார்ச் 16, 2008) இலங்கையின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வாதியுமாவார். முன்னாள் இலங்கை பிரதமர்களான சாலமன் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக 1949 பெப்ரவரி 15 ஆம் நாள் கொழும்பில் பிறந்தார். இவருக்கு சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு. கொழும்பு றோயல் கல்லூரி பள்ளிக் கல்வியைப் பயின்றார். வரலாற்றியலில் உயர் கல்விக்காக இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். எனினும் கல்வி நடவடிகைகளை முடியுமுன்னரே இலங்கைத் திரும்பினார். 1970 முதல் 1977 வரை அப்போதைய பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிவிவகார மற்றும் திட்டமிடல் துறை ஆலோசகராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டு முதற் தடவையாக மூன்று பராளுமன்ற பதிவிகளைக் கொண்ட நுவரெலியா-மசுகெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அதன் இரண்டாவது அங்கத்தவராக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆகியோர் ஏனைய இரண்டு பதவிகளை கைப்பற்றியிருந்தனர். 1983 நவம்பர் 8 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தொம்பே தேர்தல் தொகுதியில் அனுர போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து 1993 அக்டோபர் 11 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி அதே மாதம் 29 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவருக்கு உயர்கல்வி அமைச்சு வழங்கப்பட்டது. 1994 முதல் 2000 ஆண்டு வரை எதிர்கட்சி உறுப்பினராக செய்றபட்டார். 2000 அக்டோபர் 18 ஆம் நாள் இலங்கையின் 11வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2001 அக்டோபர் 10 ஆம் நாள் வரை வரை அப்பதவியிலிருந்தார். பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 2001 டிசம்பர் மாதம் நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியைச் சந்தித்த போதும் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 ஆண்டு பொதுத்தேர்தலுக்காக இலங்கை சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் ஒன்று சேர்த்து கூட்டு முன்னணியொன்றினை நிறுவுவதில் அனுர பண்டாரநாயக்கா பாரிய பங்காற்றினார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற அனுர உல்லாசப்பிரயாண, கைத்தொழில், முதலீட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு லக்சுமன் கதிர்காமர் கொலையைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதன் போது உல்லசப்பிரயாண அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டு கைத்தொழில், முதலீட்டு அமைச்சுகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. 2005 ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக இவருக்கு பதிலாக மகிந்த ராஜபக்ச கட்சியால் தெரிவுச் செய்யப்பட்டர். மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கப்பட்டாலும் உல்லசப்பிரயாண அமைச்சு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. 2007 ஜனவரி அமைச்சரவை மாற்றத்தின்போது உல்லசப்பிரயாண அமைச்சு பறிக்கப்பட்டு தேசிய மரபுரிமை அமைச்சு வழங்கப்பட்டது. 2007 பெப்ரவரி 9 ஆம் நாள் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராச்சி ஆகியோருடன் சேர்த்து பதவி விலக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் மகிநத ராஜபக்சவுடன் இணக்கப்பட்ட்டுக்கு வந்து தேசிய மரபுரிமை அமைச்சராக பதவியேற்றார். 2007 டிசம்பர் 14 ஆம் நாள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டதையடுத்து அமைச்சுப் பதவியை இழந்தார். தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் மட்டுமே அரசில் அங்கம் வகித்தார். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையான நிலநடுக்கம் ஆகும்.இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது . 00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது. முக்குடிவேலம்பாளையம் முக்குடிவேலம்பாளையம் ("MUKKUDI VELAM PALAYAM") மூன்று குடி கொண்ட வேளாண்மை இனத்தவர்கள் வாழ்ந்து வரும் ஓர் சிற்றூர் ஆகும். இவ்வூர் பாசூர் பேரூராட்சியில் உள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் இவ்வூரில் உள்ள அனைவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர், பாசூரில் உள்ள மகா மாரியம்மன், குலவிளக்கு அம்மன், சங்கலி கருப்பண்ண சாமி மற்றும் ஈஸ்வரன் கோவில்களுக்கு செல்ல முக்குடிவேலம்பாளையத்தில் இருந்தே செல்ல வேண்டும். பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கிமீ தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முக்குடிவேலம்பாளையத்துக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A ஆகியவைகளும், கரூரிலிருந்து K2உம் உண்டு. வெள்ளைப் பெட்டிச் சோதனை வெள்ளைப் பெட்டிச் சோதனையானது (தெளிவான பெட்டி சோதனை, கண்ணாடி பெட்டி சோதனை, வெளிப்படையான பெட்டி சோதனை, மற்றும் அமைப்பிற்குரிய சோதனை என்று அறியப்படுகிறது) இது ஒரு வகையான மென்பொருள் சோதனை முறையாகும். மென்பொருளில் இச்சோதனை முறையில் ஒவ்வொரு படிமுறையூடாகவும் செல்வதால் நிராக்கல் மொழியறிவு அவசியம் ஆகும். சோதனையாளார் சோதனை உள்ளீடு ஒன்றை கணினிக்கு வழங்கி அது நிரலில் அது செல்லும் பாதையைப் பின் தொடர்ந்து சரியான வெளீட்டைத் தருகின்றாதா என்பதைச் சரிபார்ப்பார். இந்தச் சோதனையானது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அதைப் பின்பற்றியே நடத்தப்படுவதால், நடைமுறைப்படுத்தும் முறையில் மாற்றங்கள் செய்தால் சோதனையிலும் மாற்றங்கள் செய்யவேண்டும். எடுத்துக்காட்டகா இலத்திரனியல் சோதனை ஒன்றில் புதிதாக சேர்கிட் (Circuit) ஒன்றுதேவைப்பட்டாலும் அதை வணிகரீதியாகத் தரமுடியாமல் இருக்கலாம். எனவே பிழையான பொருள் ஒன்று தொடர்ந்தும் பிழையாகவே இருக்கலாம். வெள்ளைப் பெட்டிச் சோதனையானது ஓரலகுச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை மற்றும் அமைப்பு சோதனை (system) போன்றவற்றில் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பொதுவாகத் ஓரலகுச் சோதனைகளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இது ஒரு தொகுதியில் உள்ளே பாதையைச் சரிபார்த்தாலும் ஒருங்கிணைப்பு சோதனையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையில் எவ்வாறு செல்கின்றது என்பது சரிபார்க்கப்படும். இச்சோதனைமுறையில் வழுக்களைக் கண்டுபிடிகக்கூடியதாக இருந்தாலும் மென்பொருட் தேவைகள் ஆவணத்தில் தரப்பட்டுள்ள எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் வகையில் மென்பொருளானது உள்ளதா எனச் சரிபார்க்க இயலாது. ஆயினும் ஒருவர் எல்லாப் பாதைகளும் சரிவரச் சோதிக்கப்படுள்ளது என்பதனை உறுதிப்படுத்த இயலும். பொதுவாக வெள்ளைப் பெட்டிச் சோதனையில் கீழ்வரும் முறைகளை உள்ளடக்கியிருக்கும். வெள்ளை பெட்டி சோதனை அடிப்படையில் மூல குறியீடு புரிந்து கொண்டிருக்கும்போது நீங்களே சோதிக்க முடியும்.நிரலாளர் ஒவ்வொரு புலப்படும் பாதையையும் சோதனை செய்யவேண்டுமென்றால் ஒரு ஆழமான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இந்த வெள்ளை பெட்டி சோதனை சோதனை நிகழ்வுகளில் உருவாக்கும் பொருட்டு எடுக்கும் என்று மூன்று அடிப்படை படிகள் உள்ளன அவை பின்வருமாறு: காமினி திசாநாயக்கா லயனல் காமினி திசாநாயக்கா ("Lionel Gamini Dissanayake", ; மார்ச் 20, 1942 - அக்டோபர் 24, 1994) இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பாளருமாவார். இலங்கையின் மலையகத்தின் கொத்மலையில் பிறந்தார். அவரது தந்தையார் இலங்கை சுதந்திரக் கட்சியில் சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். 1988 ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். 1992 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார். 1970 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நுவரெலியா - மசுகெலியா பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார். டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளாரக தெரிவுச் செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சட்டப்பட்டது. இவரது மகன் நவீன் திசாநாயக்க இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தவர். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது சில சொற்களின் இலக்கண குறிப்பு. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல். எடுத்துக்காட்டுகள்: இப்படி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும் என்னும் இலக்கண விதியின் படி செல்லாக் காசு, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்று வல்லின ஒற்று மிகுந்து (= கூடுதலாக) வரும். வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில் அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு பிரதேசத்தில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் உள்ள கோவிலாகும். அமைதியான சூழலில் உள்ள இக்கோயில் கண்ணன் கோவில், கிருசுணர் கோவில், விசுணு கோவில் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. வவுனியா நகரில் இருந்து திருகோணமலை செல்லும் வீதியாகிய ஹொரவபொத்தானை வீதியில் இறம்பைக்குளம் சந்தியில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் வீதியாகிய ஆசிகுளம் வீதியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிட்னி மொழி சிட்னி மொழி ("Sydney Language") ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் ஓர் அழிந்த மொழியாகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் பேசப்பட்டு வந்தது. இம்மொழி தாருக் மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இம்மொழியைக் கடைசியாகப் பேசியவர் 19ம் நூற்றாண்டின் கடைசி அல்லது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மொழி பேசிய தாருக் மக்களின் இனம் ஆங்கிலேயர்களின் குடியேற்றத்தை அடுத்து குறைந்து முற்றாக அழிந்து போயிற்று. இன்று ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள சில தாருக் மொழி சொற்கள் வருமாறு: 13 மே 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள் 2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான, ஜெய்ப்பூர் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆகும். இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் இறந்திருக்க கூடும் என்றும் 216 பேர் காயம் அடைந்திருப்பார்கள் என்றும் அஞ்சப்படுகிறது. தீவிரவாதிகள் ஜெய்பூரை இதுவே முதல் தடவையாக தாக்கியதகும். இந்த ஒன்பது குண்டுகளில் ஒன்று, ஜெய்பூரின் ஹவாமகாலில் வெடித்துள்ளது. இந்த மஹால், ஒரு முக்கிய இடமாகும். இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, இந்திய "மீடியா" அலுவலகத்திற்கு, "இந்தியா முஜாஹிதின்" என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் உள்ள இந்து மதப்பற்றை அழிப்பதற்காக, குண்டு வைக்கப்பட்டது என்று "e-mail" அனுப்பியுள்ளர்கள். எனினும், இந்திய home ministry, வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்பு தன் காரணமாக இருக்ககூடும் என்று கூறுகிறது. இதை அடுத்து, ராஜஸ்தானில் தங்கிருக்கும், வங்களதேசத்தை சேர்ந்த, 50,000 அகதிகளை, இந்தியா வெளியேற்றும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. லலித் அத்துலத்முதலி லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (நவம்பர் 26, 1936 - ஏப்ரல் 23, 1993) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் முன்னாள் பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி அமைச்சரும் பாதுகாப்பு பிரதியமைச்சரும் ஆவார். அத்துலத்முதலி தனது பள்ளிப் படிப்பை கொழும்பு றோயல் கல்லூரியில் முடித்தார். பின்னர் சட்டவியலில் மேற்படிப்புக்காக 1955 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயேசுக் கல்லூரியில் இணைந்து படித்தார். 1958 ஆம் ஆண்டு ஆக்சுபோட் பல்கலையின் மாணவர் ஒன்றியத்தினது தலைவராக தெரிவுச் செய்யப்பட்ட முதல் இலங்கையர் ஆவார் மேலதிகமாக 1956 ஆம் ஆண்டில் செயலாளராகவும், 1957 ஆம் ஆண்டில் பொருளாலராகவும் அதே ஒண்ரியத்தில் பதவி வகித்தார். சட்டப்படிப்பை முடித்த லலித் கிரே இண் மூலமாக சட்டத்த்ரணியாக பதிவியேற்றார். அதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகம், எபிரேய பல்கலைக்கழகம், எடின்புரோ பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் என்பவற்றில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் நாடு திரும்பி இலங்கை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்தார். 1972 ஆம் ஆண்டு முன்னாள் இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் அழைப்பை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அத்துலத்முதலி அகலவத்தை தேர்தல் தொகுத்திக்கான கட்சியின் முதன்மை அமைப்பாளராக ஆக்கப்பட்டார். அத்துலத்முதலி 1977 ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரத்மலானை தேர்தல் தொகுதல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றார். இவருக்கு வர்தக அமைச்சு கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. 1988 ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனாவின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் ரணசிங்க பிரேமதாசா வேட்பாளராக தெரிவுச் செய்யப்பட்டார். பின்னர் பிரேமதாசா அதிபரான போது இவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டப் போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது. பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற அத்துலத்முதலி அவர் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றை கொண்டுவந்து தோல்வியுற்றார். இதனால் இவரும் இவருக்கு ஆதாரவளித்தவர்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர் தனது தலைமையில் மக்களாட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்றக் கட்சியை தொடங்கினார். 1993 ஏப்ரல் 23 ஆம் நாள் கொழும்பு கிருலப்பனையில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட மொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அரசு விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி அடுத்த நாள் சம்பவ இடத்திற்கு அண்மையில் சயனைட் உண்டு இறந்து காணப்பட்ட தமிழ் இளைஞரே கொலையாளி என்றது. இருப்பினும் அப்போதைய அதிபர் பிரேமதாசா மீதும் சந்தேகம் நிலவிவந்தது. மெங்கிஸ்து ஹைலி மரியாம் மெங்கிஸ்து ஹைலி மரியாம் ("Mengistu Haile Mariam", பிறப்பு: 1937) எத்தியோப்பியா வின் தலைவராக 1977 முதல் 1991 வரையில் ஆட்சியில் இருந்தவர். 1977 முதல் 1987 வரையில் அப்போதைய இராணுவ ஆட்சியில் மிகவும் பலம் வாய்ந்த இராணுவத் தலைவராகவும் இருந்தார். 1977-1978 காலப்பகுதியில் நாட்டில் எழுந்த மக்கள் எழுச்சியை இராணுவத்தின் உதவியுடன் முறியடித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். பனிப்போர் முடிவில் 1991 இல் அரசுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து மெங்கிஸ்து சிம்பாப்வேக்குத் தப்பி ஓடினார். எத்தியோப்பிய நீதிமன்றம் அவரில்லாமலேயே நீதி விசாரணை நடத்தி மெங்கிஸ்துவுக்கு ஆயுள் சிறைத்தண்டனையை விதித்தது. பால்ராஜ் பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முதுநிலை போர் முனைத் தளபதியாக விளங்கியவர். ஈழப் போர்களின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார். அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008]] ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். [[மே 20, 2008 இல் [[செவ்வாய்க்கிழமை]] பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார். [[பகுப்பு:1965 பிறப்புகள்]] [[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]] [[பகுப்பு:விடுதலைப் புலிகளின் தலைவர்கள்]] [[பகுப்பு:முல்லைத்தீவு நபர்கள்]] [[பகுப்பு:2008 இறப்புகள்]] நினைவுகொள் மின்தடை மெம்ரிஸ்டர் ("Memristor") அல்லது நினைவுகொள் மின்தடை ("memory resistor") என்பது ஒரு புது வகையான இரு மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள "ஹியூலிட் பாக்கார்டு" ("Hewlett-Packard") நிறுவனத்தைச் சேர்ந்த "ஆர். ஸ்டான்லி வில்லியம்சு" ("R. Stanley Williams") என்பாரும் அவருடைய உடன் ஆய்வாளர்களும் அறிவித்தார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் முன்பு, மின்னியல் வரலாற்றில், மின்தடையம், மின்தூண்டி, மின்தேக்கி (மின் கொண்மி) ஆகிய மூன்றே மூன்று அடிப்படை மின் உறுப்புகள்தாம் இருந்தன. இந்த "நினைவுகொள் மின்தடை" என்னும் புதிய உறுப்பானது ஓர் அடிப்படையான நான்காவது உறுப்பாகும். இந்த புதிய மின் உறுப்பின் மின்தடைமமானது காலத்தால் மாறுபடும் மின்னோட்டத்தில் பாயும் மின்மத்தின் அளவால் மாறுபடும் தன்மை உடையது. எனவே பரவலாக அறியப்பட்ட மின்தடையில் உள்ளது போல, மின்னோட்டத்திற்கும் மின் அழுத்தத்திற்கும் இடையே, ஓமின் விதிப்படியான நேர் விகிதம் (சார்பு) இருக்காது. இதனை மின்னோட்ட-மின்னழுத்தத்திற்கு இடையே "நேர்சார்பு அற்ற" (nonlinear) மின் தடைமம் எனலாம். மின் தடைமத்தின் அளவானது அதனுள் முன்பு பாய்ந்த மின்மத்தின் அளவைப் பொறுத்தது (நினைவுகொண்மை). இக் கருவி திரிதடையம், மாஆமிவிதி (MOSFET) போன்று, மின்குறிபலைகளை மிகைப்படுத்தும் இயல்பு இல்லாத கருவி உறுப்பாகும் (மிகுக்கா மின் உறுப்பு வகை). நினைவுகொள் மின்தடையின் கொள்கையை 1971இலேயே பெர்க்கிலி கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் "லியான் சுவா" ஓர் ஆய்வுக்கட்டுரையில் முன்வைத்தார். மின்தடை, மின்தூண்டி, மின்தேக்கி ஆகிய மூன்றோடு கருத்தளவில் மடி ஒப்புமை ("symmetry") நோக்கில் நான்காவதாக ஓர் அடிப்படை மின் உறுப்பு இருக்கவேண்டும் என்று எழுதினார். அக்கட்டுரையில், இவ்வகையான கருத்து அவருக்கும் முன்னரே இருந்தது பற்றியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் லியான் சுவாவின் கருத்திய அறிவிப்புக்கு 37 ஆண்டுகளுக்குப் பின்னர், 2008 இல் ஸ்டான்லி வில்லியம்சும் அவரின் உடனாய்வாளர்களும் அத்தகைய ஒரு கருவியை செய்து காட்டினார்கள். இக்கருவியில் இரு பிளாட்டினம் படலங்களும், அவற்றிற்கு இடையே மிக மெல்லிய டைட்டேனியம் டை-ஆக்ஸைடு படலமும் உண்டு. அதன் வழியாக மின்னோட்டம் பாய்ந்து இயங்கும் நேர்சார்பற்ற நிலைமாறிக் (switch) கருவியை இவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால் இதுகாறும் ஹியூலிட் பாக்கார்டு நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் இத்தகு கருவியைச் செய்து உறுதி செய்யவில்லை. நினைவுகொள்ளும் திறம் இருப்பதால் கணினி நினைவ்கங்களில் பயன்படும் என்றும், அது இயங்க அதிக மின்னாற்றல் தேவை இருக்காது என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த இருமின்முனைக் கருவிகளை மட்டுமே கொண்டு எண்ணிம ஏரண (டிஜிட்டல் லாஜிக், digial logic) வலைகள் செய்தல் இயலாது என்று எண்ணுகிறார்கள். சுவா அவர்கள் தானே கற்றுக்கொள்ளும் செயற்கை நரம்பிய வலைகள் செய்தல் கூடும் என்று நினைக்கிறார். formula_1= மின்னழுத்தம்; formula_2 = மின்னோட்டம், formula_3 = காந்தப் பாய்மம். மற்றும் நினைவுகொள் மின்தடை அல்லது மெம்ரிஸ்டர் என்பதின் வரைவிலக்கணம், பாரடேயின் தூண்டல் விதியின் படி, காந்தப் பாய்மம் மின்னழுத்த வேறுபாட்டின் தொகைமம் (integral) (வேறு விதமாகக் கூறின், தூண்டப்படும் மின்னழுத்தம் காலத்தால் காந்தப் பாய்மம் மாறும் விரைவுக்கு நேர் சார்புடையது), மேலும் மின்மம் மின்னோட்டத்தின் தொகைமம் (வேறு விதமாக கூறின், மின்னோட்டம் காலத்தால் மின்மம் மாறும் விரைவு). இவ்விரண்டு கருத்துக்களையும் இணைத்து, கீழ்க்கண்டவாறு எழுதலாம்: இச் சமன்பாட்டில் இருந்து நினைவுகொள் மின்தடைமம் (மெம்ரிஸ்டன்சு, “memristance”) என்பது எளிதாக மின்மத்தைப் பொறுத்த மின்தடைமம் என்று புரிந்து கொள்ளலாம். "M"("q") என்னும் மின் பண்பு மாறிலியாக இருந்தால் வழக்கமான ஓமின் விதியைப் பெறுவோம். "R" = "V"/"I". ஆனால் பொதுவாக "M"("q") அத்தனை எளிமையானதாக இல்லாமல் இருந்தால் மேலுள்ள சமன்பாடு ஓமின் விதிக்கு ஈடானதல்ல, ஏனெனில், மின்மமாகிய "q" , நினைவுகொள் மின்தடைமமாகிய "M"("q") வும் காலத்தால் மாறுபடக்கூடிய பண்புகள். மேலுள்ள சமன்பாட்டிலிருந்து மின்னழுத்த்மாகிய V வுக்காக தீர்வு செய்தால், என்று பெறுவோம். எனவே மின்மம் காலத்தால் மாறவில்லை என்றால் நினைவுகொள் மின்தடைமம், மின்னோட்டத்துக்கும் மின்னழுத்தத்திற்கும் இடையே நேர் சார்புடையது. ஆனால் மின்னோட்டம் பாயும் பொழுது காலத்தால் மாறுபடும் மின்மம் இருக்கும். மின்னோட்டம் பாயவில்லை என்றால் நினைவுகொள் மின்தடை நிலையாக இருக்கும். "I"("t") = 0 என்றால் "V"("t") = 0 என்றும் "M"("t") மாறியியாகும் என்றும் உணரலாம். இது நினைவுகொள்ளும் தன்மையைக் காட்டுகின்றது. செல்வாகும் மின் ஆற்றல் திறன், வழக்கமான மின்தடையப் போன்றதே. "I""R". மாறு மின்னோட்டத்தின் பொழுது இருப்பது போல "M"("q"("t")) அதிகம் மாறாதிருந்தால், நினைவுகொள் மின்தடை ஒரு வழக்கமான மின்தடை போலவே இயங்கும். ஆனால் "M"("q"("t")) விரைந்து உயருமானால் மின்னோட்டமும், ஆற்றல் திறனும் விரைந்து நின்றுவிடும். மகேஷ் யோகி மகரிஷி மகேஷ் யோகி ("Maharishi Mahesh Yogi", ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை ("transcendental meditation") இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார். 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார். 1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார். எரிநெய் எரிநெய் (Fuel oil) என்பது பெட்ரோலியம் துளித்தெடுப்பு வழியாக ஒரு துளிப்பாகவோ (distillate) அடிவண்டலாகவோ (residue) பிரித்து எடுக்கப்படும் ஒரு பின்னக்கூறு ஆகும். பொதுவாக வெப்பத்தை உண்டாக்குவதற்குக் கொதிகலனிலோ, ஆற்றலை உண்டாக்க ஒரு எந்திரத்திலோ, உலையிலோ செலுத்தி எரிக்கப்படும் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் எரிநெய் என்று சொல்லலாம். இந்த வரைமுறைப்படி டீசல் என்பதும் ஒரு எரிநெய்யே. எரிநெய்யானது நீண்ட நீரியக்கரிமச் சங்கிலிகளால் ஆனது. குறிப்பாக, ஆல்க்கேன்கள், வட்ட ஆல்க்கேன்கள், அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்கள் இவற்றால் ஆனது. பொதுவாக எரிநெய் என்னும் பெயர் பலவிதப் பெட்ரோலியக் கூறுகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், உண்மையில் கன்னெய், நேப்தா முதலானவற்றைத் தாண்டிய "கனமான எரிபொருட்களையே" எரிநெய் என்பது குறிக்கும். ரியோ கிராண்டே ரியோ கிராண்டே ("Rio Grande", எசுப்பானிய மொழியில் "பெரிய ஆறு" என்று பொருள்) என்று ஐக்கிய அமெரிக்காவில் அழைக்கப்படும் ஒரு ஆறாகும். இதே ஆறு மெக்சிகோவில் ரியோ ப்ராவோ டெல் நோர்ட்டே (எசுப்பானிய மொழி: "வட வலிமையான ஆறு") என்று அழைக்கப்படும். ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்துக்கும் மெக்சிகோவின் சிவாவா, கொவாவீலா, மற்றும் தமாவுலிப்பாஸ் ஆகிய மாநிலங்களுக்கும் எல்லை ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய ஆற்றுத் தொகுதியும் ஆகும். மின்சாரம் மின்சாரம் ("electricity") என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே மின்னலுக்கு காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் மின்காந்தப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது. நேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. சுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது. மின்பொறியியலில், மின்சாரம் பின்வரும் பயன்களைக் கொண்டுள்ளது: மின் நிகழ்வு சார்ந்த ஆய்வு பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்தாலும் முன்னேற்றம் 17, 18 ஆம் நூற்றாண்டுகள் வரை மிக மெதுவாகவே அமைந்த்து. அப்போது மின்சாரத்தின் பயன்கள் அருகியே இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் தான் மின்பொறியாலர்கல் மின்சாரத்தை வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் பயன்படுத்தினர். மின்தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சமூகத்தையும் தொழிலகங்களையும் பெரிது உருமாற்றிவிட்டது. இது மிகவும் பொதுவானதாக அமைந்த்தால், போக்குவரத்து முதல் வெப்பமூட்டல், ஒளியூட்டல், தொலைத்தொடர்பு. கணிப்பு என பலவகைப் பயன்பாடுகளுக்கு ஈடுகொடுக்கலானது. மின் திறன் இன்றைய சமூக்கத்தின் உயிரோடாமாகத் திகழ்கிறது. மின்சாரம் பற்றிய அறிவேதும் இல்லாத நிலையிலேயே மனிதன் மின்சார மீன்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கி.மு 28 ஆம் நூற்றாண்டில் பண்டைய எகுபதியர் மின்சார மீன்களைப் பற்றி நைல்நதியின் இடிமின்னல்கள் எனவும் மற்றவகை அனைத்து மீன்களின் காப்பாளராகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்களும் உரோமானியர்களும் அராபிய இயற்கையியலாளர்களும் இசுலாமிய மருத்துவர்களும் மின்சார மீன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.பிளினி முதுவல், சுக்கிரிபோனியசு இலார்கசு போன்ற பல பண்டைய எழுத்தாளர்கள, மின்னதிர்ச்சி தரும் சில்லிப்பையும் மின்கற்றைகள், மின் மீன்களின் மின்னதிர்ச்சியையும் பற்றியும் அவை கடத்தப்படும் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ளனர். தலைவலி நோயாளிகளை மின்சார மீன்களைத் தொடும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்படும் திறன்மிகு அதிர்ச்சி நோயைத் தீர்க்கும் எனக் கருதியுள்ளனர்.மற்ற வாயில்களை விட, மின் கற்றை எனும் பொருள்கொண்ட ("raad") எனும் சொல்லை அராபியர் மின்னலுக்குப் கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பயன்படுத்தியதால், மின்னல், மின்சாரம் இரண்டையும் முதலில் அடையாளம் கண்ட மிகப்பழைய கண்டுபிடிப்பு அராபியரதே எனலாம். நடுவண்கடல் நாடுகளைச் சுற்றியமைந்த பண்டைய பண்பாடுகளில் ஆம்பர் தண்டுகலைப் போன்ற சில பொருள்கள் பூனையின் மயிரில் தேய்த்தபோது அம்மயிர் சில மெல்லிய இரகுகள் போன்றவற்றை ஈர்த்தலை அறிந்திருந்தனர். மிலேத்தசுவின் தேலேசு நிலைமின்சாரம் பற்றிய பல நோக்கீடுகளைக் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே செய்துள்ளார். இவற்றில் இருந்து தேய்க்காமலே காந்த இயல்பு கொண்ட மேக்னடைட்டு போன்ற கனிமங்களுக்கு மாறாக, ஆம்பரைத் தேய்த்தால் காந்தமாகிறது என நம்பினார் . காந்த விளைவால் ஈர்ப்பு ஏற்பட்ட்து என்ற தேலேசுவின் கருத்து தவறானதாகும். ஆனால் பின்னர் அறிவியல் காந்த இயல்புக்கும் மின்சாரத்துக்கும் உள்ள பிணைப்பைக் கண்டுபிடித்தது. மற்றொரு கருத்துமாறுபாடுள்ள கோட்பாட்டின்படி,பார்த்தியன்களுக்கு மின்முலாம் பற்றிய அறிவு வாய்த்திருந்ததாக, 1936 இல் பாக்தாதில் கால்வானிய மின்கலம் போன்றதொரு மின்கலம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து கூறப்படுகிறது. என்றாலும் கண்டுபிடிப்புப் பொருளின் மின்னியல்பு பற்றிய உறுதியேதும் இல்லை. ஆங்கிலேய அறிவியலாளராகிய வில்லியம் கில்பர்ட்மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை 1600 இல் கவனமுடன் ஆய்வு செய்ததும் மின்சாரம் பற்ரிய அறிவு அறிதிற ஆர்வத்தையும் தாண்டி வளரலானது. இவர் காந்தக்கல்லின் விளைவுக்கும் ஆம்பரைத் தேய்க்கும்போது ஏற்படும் நிலைமின் விளவுக்கும் இடயில் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தினார். (இவர் புதிய எலெச்ட்ரிகசு ("electricus") எனும் (ஆம்பர்சார்அல்லது ஆம்பர்போன்ற) என்ற பொருள்கொண்ட இலத்தீனச் சொல்லை ( "ஆம்பர்") எனும்பொருள்கொண்ட கிரேக்க எலெக்ட்ரான் (ἤλεκτρον) எனும் சொல்லில் இருந்து, தேய்ப்பால் ஈர்ப்புப் பண்பை அடையும் பொருள்கலைக் குறிக்க, உருவாக்கினார். இதனால் ஆங்கிலத்தில் மின் ("electric") மின்சாரம் ("electricity") எனும் சொற்கள் உருவாகி முதலில் தாமசு பிரவுன்' அவர்களின் "Pseudodoxia Epidemica" (1646 ) எனும் அச்சிட்ட நூலில் பயின்று வந்தன. அடுத்த கட்ட மின்சார ஆய்வுப் பணிகள் ஆட்டோ வான் குவெரிக், இராபர்ட் பாயில், சுட்டீவன் கிரே, சி.எஃப். து பே ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில், பெஞ்சமின் பிராங்ளின் மின்சாரம் பற்றிய விரிவான ஆராய்ச்சியைத் தன் உடைமைகள் அனைத்தையும் விற்று மேற்கொண்டார். இவர் 1752 ஜூனில் ஈரப் பட்டம் ஒன்றின் அடிப்பகுதியில் பொன்மத் திறவைப் பொருத்திப் பட்ட்த்தைப் புயல் அச்சுறுத்திய வானில் பறக்கவிட்டுள்ளார். அந்த்த் திறவில் இருந்துஅவரது கைக்குத் தொடர்ச்சியாகப் பாய்ந்த மின்னல் மின்தன்மையோடு இருந்தது. இவர் மேலும் முரண்புதிரான நட்த்தை வாய்ந்த மின்சாரத்தைத் தேக்கும் இலெய்டன் சாடி எனும் கருவியைப் பற்றி விளக்குவதோடு அது நேர், எதிர் மின்னூட்டங்கள் இரண்டையும் தேக்கவல்லதாக்க் கூறுகிறார். உலூகி கால்வானி என்பார் 1791 இல் உயிர்மின்காந்தவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவர் நரம்பன்களில் இருந்து தசைக்கு தகவலை மின்சாரமே கட்த்துகிறது எனக் கூறினார்.அலெசாந்திரோ வோல்ட்டாவின் மின்கல அடுக்கு அல்லது வோல்ட்டாயிக் அடுக்கு 1800 இல் துத்தநாகத்தையும் செம்பையும் மாற்றி மாற்றி அடுக்கிவைத்துச் செய்யப்பட்டது. இது நிலைமின்னாக்கிகளைவிட அறிவியல் ஆய்வுக்கு மின் ஆற்றலை வழங்கும் மிகவும் ஏந்தான மின்வாயிலானது. மின்சாரமும் காந்தவியலும் இணைந்த மின்காந்தவிய்ல் நிகழ்வை ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடும் ஆந்திரே மரீ ஆம்பியரும் 1819-1820 ஆண்டில்கண்டறிந்தனர்; மைக்கேல் பாரடே மின்னோடியைக் (மின் இயக்கியைக்) 1821 புதிதாக முதன்முதலில் புனைந்தார். ஜார்ஜ் ஓம் என்பார் 1827 இல் கணிதவியலாக மின் சுற்றதர்களை பகுத்தாய்ந்தார். <(references/)> ஜாக்கி ராபின்சன் ஜாக் ரோஸ்வெல்ட் "ஜாக்கி" ராபின்சன் (ஆங்கிலம்: Jack Roosevelt "Jackie" Robinson, பிறப்பு ஜனவரி 31, 1919, கெய்ரோ, ஜோர்ஜியா; இறப்பு அக்டோபர் 24, 1972, ஸ்டாம்ஃபொர்ட், கனெடிகட்) முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆவார். 1947ல் அமெரிக்காவின் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுச் சங்கத்தை சேர்ந்து இச்சங்க வரலாற்றில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்க வீரர் ஆனார். இதுக்கு முன் மேஜர் லீக் பேஸ்பால் சங்கம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை விளையாடவிடவில்லை. அமெரிக்க சமூக உரிமை இயக்கத்தில் ஒரு முக்கிய நபர் ஆவார். கெய்ரோ, ஜோர்ஜியாவில் பிறந்த ஜாக்கி ராபின்சன் குழந்தையாக இருக்கும்பொழுது ரிவர்சைட், கலிபோர்னியாவுக்கு போய் இங்கே வளந்தார். யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தை சேர்ந்து நாலு விளையாட்டுக்கள் -- பேஸ்பால், காற்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மற்றும் ஓட்டம்—விளையாடினார். 1947ல் லாஸ் ஏஞ்சலஸ் டாட்ஜர்ஸ் பேஸ்பால் அணியை சேர்ந்து மேஜர் லீக் பேஸ்பால் சங்கத்தின் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்க ஆட்டக்காரர் ஆனார். மேஜர் லீக் பேஸ்பாலில் 9 வருடங்கள் விளையாடினார். 1962ல் பேஸ்பால் புகழவை இவரை உருப்பினராக படைத்தது. பேஸ்பாலுக்கு பிரகு இவர் 1967 வரை என்.ஏ.ஏ.சி.பி.யின் சபையில் இருந்தார். முதுமையில் நீரிழிவு நோய் வந்து 1972ல் இறந்தார். யாருக்கு யாரோ யாருக்கு யாரோ ஜோ ஸ்டேன்லி இயக்கத்தில் 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சாம் ஆன்டர்சன், ஜோதி, வர்ணிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்துக்கு சென்னையின் சேத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, மணிமங்கலம் மற்றும் வேறு சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. டி. ராஜேந்தர் டி. ராஜேந்தர் (பிறப்பு: மே 9, 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார். இவர் இயக்கி நடித்த சில படங்கள். 15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார். அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 2004ல் நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இக்கட்சி கொடியின் நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். இக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துச் சென்றக் கட்சியாகும். சாம் ஆண்டர்சன் சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார். இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக் கொண்ட ஒரு கூரியர் நிறுவனம் நடத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள் ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார். ஒவ்வாமை உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத எதுவாக இருப்பினும் ஒவ்வாமை எனப்படும். ஒவ்வாமை என்பது மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையாகும். சூழலில் இருக்கின்ற சில ஒவ்வாப்பொருட்களால் (allergens) ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். ஒவ்வாமையால் அரிப்பு, தடிப்பு, மூக்கொழுகல், தும்மல், கண்களில் நீர்வழிதல் போன்ற விளைவுகள் சாதாரணமாக ஏற்படும். ஆஸ்துமா போன்ற உடல்நலக் கேட்டு நிலைகளுக்கு ஒவ்வாமையும் ஒரு பெருங்காரணமாக அமையும். ஒவ்வாமை என்னும் நிலையை 1906ல் வியன்னாவைச் சேர்ந்த கிளெமென்சு வான் பிர்குவே (பிர்குவெட்?) என்னும் குழந்தைகள் நல மருத்துவர் கண்டுபிடித்தார். அவரிடம் மருத்துவம் பெற்றுக் கொண்ட சிலர் தூசு, மகரந்தம், சில வகை உணவு வகைகள், இவற்றிற்கு அதீத எதிர்விளைவுகள் கொண்டவர்களாய் இருப்பதைக் கண்டபோது, பிர்குவே இந்நிலைக்கு ஒவ்வாமை (allergy) என்று பெயரிட்டார். இச்சொல் கிரேக்க மூலம் கொண்டது. allos + ergon என்னும் வேர்ச்சொற்களில் இருந்து allergy என்று பெயர் வந்தது. இம்யூனோகுளோபுளின் (immunoglobulin E - IgE) என்னும் உடலெதிர்பொருள் (?antibody) கண்டுபிடிப்பு ஒவ்வாமையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவியது. 1960களில் கிமிசிகே இசிசாகா என்பவரும் உடன் பணிபுரிவோரும் இதனைக் கண்டுபிடித்தனர். தூசு, மகரந்தம் போன்ற பல ஒவ்வாப்பொருட்கள் காற்று வழி பரவக்கூடியவை. அதனால், காற்றினோடு தொடர்பு ஏற்படக்கூடிய இடங்களான கண்கள், மூக்கு, நுரையீரல் போன்ற இடங்களில் ஒவ்வாமை விளைவுகள் பெரிதும் காணப்படும். ஒவ்வாமை rhinitis (பொதுவாக வைக்கோல் அரிப்பு (hay fever ?) எனப்படுவது) மூக்குறுத்தல், தும்மல், அரிப்பு, கண்சிவப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்த வல்லது. உள்ளிழுத்த ஒவ்வாப்பொருட்கள் ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும். மூச்சுக் குழாய்கள் சிறுத்துப் போவதும் நெஞ்சுச் சளி அதிகமாவதும், மூச்சுத்திணறல், இருமல், மூச்சிழுப்பு போன்றவை உருவாவதும் இதனால் ஏற்படும். இதுபோன்ற புறக்காரணிகளால் அன்றி, சில வகையான உணவுப்பொருட்கள், பூச்சிக்கடி, ஆசுப்பிரின், பெனிசிலின் போன்ற மருந்துகளை உட்கொண்டதன் எதிர்விளைவுகள், என்று பிற காரணங்களுக்காகவும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். உணவு ஒவ்வாமையின் காரணமாக அடிவயிற்று வலி, வயிறு உப்புதல், வாந்தி, பேதி, சரும அரிப்பு, தோல் தடிப்பு போன்ற பல விளைவுகள் ஏற்படலாம். உணவு ஒவ்வாமையால் மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு. சில தீவிர நிலைகளில் குறையழுத்தம், ஆழ்மயக்கம், மட்டுமின்றி சிலசமயம் இறப்புக்கும் காரணமாக அமையும். சருமத்தோடு தொடர்பு கொள்ளும் லேட்டெக்சு போன்ற பொருட்களாலும் சிலருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். இது பெரும்பாலும் அரிப்பு, தடிப்பு என்று வெளிப்படும். பிரிட்டோனோ வேறெந்த மருந்து வகையையுமோ கொடுக்கவேண்டாம். ஒவ்வாமை ஏற்பட்ட ஒருவரை விரைவாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவரைப் பொதுவாக ‘ட’ வடிவில் இருத்தி எடுத்துச் செல்லவேண்டும். ஒவ்வாமையூக்கி பாட்ஷா பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார். இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஹிந்தி மொழியில் வெளிவர உள்ளது. இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அய்சால் அய்சோல் (Aizawl) இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரம் ஆகும். இதுவே மிசோரத்தின் பெரிய நகரமும் ஆகும். அய்சால் நகரத்தை நகராட்சி மன்றம் ஆட்சி செய்கிறது. நகராட்சி மன்றத்துக்கு வார்டுக்கு ஒருவர் என 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். இங்கிருந்து டெல்லி,கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானங்களை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இயக்குகின்றன. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய இடங்களை சென்றடையலாம். மிசோ தாஜ்மஹால், ரெய்க் மாதிரி கிராமம் . திஸ்பூர் திஸ்பூர் (அசாமிய மொழி:দিছপুৰ) இந்தியாவில் அசாம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது குவஹாத்தி நகரின் புறநகரில் அமைந்துள்ளது. 1973 ம் ஆண்டு இது அசாமின் தலைநகராக நியமிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அசாமின் தலைநகரான சில்லாங் அசாமில் பிரிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் தலைநகரானதும் இப்புதிய தலைநகர் அசாமிற்கு உருவாக்கப்பட்டது. இம்பால் இம்பால் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரின் மையத்தில் மணிப்பூர் நாட்டின் அரசர்கள் வாழ்ந்த காங்லா அரண்மனை உள்ளது. இந்த அரண்மைனையைச் சுற்றி அகழியும் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, இம்பால் சண்டை 1944 மார்ச் மற்றும் ஜூலை வரை நடந்தது. இம்பால் இல் வடகிழக்கு இந்தியாவில் உள்ளது. இது சராசரியாக 786 மீட்டர் (2,579 அடி) உயரத்தில் உள்ளது. இப்பகுதியானது மிதமான, உலர் குளிர்காலம் மற்றும் வெப்பமான பருவப் பெயர்ச்சிக் காற்றுடன் ஈரப்பதமான துணை வெப்ப மண்டல காலநிலையைக் (கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது. சூலை வெப்பநிலை சராசரி ; சனவரி மிகக் குளிர்மிக்க மாதமாகும், அப்போதைய குறைந்த சராசரி வெப்பநிலை ஆகும் ஜூன் மாதம் மழைக்காலமாக 1,320 மிமீ (52 அங்குலம்) மழை பெய்யும். நகரில் சூன் மாதம் மழைக்காலமாகும் சராசரி மழையளவு 1,320 மிமீ (52 அங்குலம்) ஆகும். நகரின் அதிகபட்ச வெப்ப அளவாக 2009 மே 22 அன்று , எனவும், குறைந்தபட்ச வெப்பமாக 1970 சனவரி 10 அன்று எனவும் பதிவாகியுள்ளது. காங்லா கோட்டையானது இம்பால் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, மேலும் இது காங்க்லா அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. "காங்லா" என்பதற்கு மணிப்புரிய மொழியில் "உலர்ந்த நிலம்" என்று பொருள். இந்த கோட்டை பஞ்சக்பாவின் அரண்மனையாக இருந்தது, மேலும் சமய முக்கியத்துவமும் கொண்டது. கோட்டையில் பல கோயில்கள் உள்ளன, அது ஒரு ஏரியால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஆண்டு தோறும் துர்கா பூஜை விழாவானது சிறப்பாக நடக்கிறது. இந்த கல்லறைத் தோட்டமானது இரண்டாம் உலகப் போரில் (1944) போராடி இறந்த பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களை நினைவூட்டுகிறது. இச்சந்தை மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்ற பெரிய சந்தையாகும். இது முழுக்கமுழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டு செல்கின்றனர். இச்சந்தையில் பூக்கள், காய் கனிகளில் இருந்து கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும். சில்வாசா சில்வாசா (மராத்தி: सिल्वासा, குஜராத்தி: સેલ્વાસ) இந்தியாவில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். இந்த நகரம் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. கவரத்தி கவரத்தி (மலையாளம்: കവരത്തി) இந்தியாவின் லட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். இந்நகரின் பரப்பு 3.93 ச.கி.மீ. ஆகும். கவரத்தி இந்திய சிறுநகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்களில் ஒன்றாகும். தமன் தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் ஊடாக தமன்கங்கா ஆறு பாய்கிறது. இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.. போர்ட் பிளேர் போர்ட் பிளேர் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. போர்ட் பிளேர் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்திய அரசின் முகவரான ஒரு ஆணையாளர் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அரசு நிர்வாகத்தை கண்காணிக்கிறார். போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள போர்ட் பிளேர் நகரம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பமும் மற்றும் சனவரி, பிப்பிரவரி மற்றும் மார்சு மாதம் குறைவான மழையும் பிற மாதங்களில் பரவலான மழை இருக்கும். முதலுதவி முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். முதலுதவி சாதாரண, சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைய வேண்டும். முதலுதவி அனைத்து விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றபோதிலும், பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும் கவனிப்பையே குறிக்கிறது. முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் இடைக்காலங்களில் (middle ages) வெகுவாக கைவிடப்பட்டது . அதன் பிறகு 1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது. இது எப்படி நிகழ்ந்ததென்றால் பல தொடர்வண்டி மையங்களிலும் சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை("first" treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை(national "aid") என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878இல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார் ஒரு டாக்டர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார் . ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன. முதலுதவியில் நிறைய வளர்ச்சிகள் போர்களால் இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் போர் க்லரா பார்டன் என்பவரை அமெரிக்க செஞ்சிலுவையை உருவாக்க ஊக்குவித்தது . செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகின்றது. இத்தினம் இரண்டாயிரத்தில் சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு,மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. இது நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். காயம்பட்டவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்யாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும்.முதலுதவிப்பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள், முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதலுதவியின் முக்கிய நோக்கங்களை மூன்று புள்ளிகளில் சுருக்கிவிடலாம்: சில திறன்கள் முதலுதவி வழங்குதலுக்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. ஆதலால் இவை உலகெங்கும் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மற்ற சிறு காயங்களை கவனிக்குமுன் முதலுதவியின் "ஏபிசி" கள் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் இவை மிகவும் தேவையான உயிர்க்காப்பாற்றல் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன. ஏபிசி ,Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.அதாவது காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் என்று விரிகிறது. முதலில் சுவாசவழி தெளிவாக உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். மூச்சுக்குழலில் அடைப்பு இருப்பது உயிர் அச்சுறுத்தும் அவசர நிலையாகும். இதன் பிறகு மூச்சு விடுவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து தேவையானால் செயற்கையாக பாதிக்கப்பட்டவரை மூச்சு விடவைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்று சரிபார்ப்பது இல்லை . அதற்கு பதிலாக செயற்கை இரத்த அழுத்தம் கொடுக்கும் மார்பு அழுத்தம் (chest compressions) தரப்படும். நாடி சரிபார்த்தல் தீவிர நிலையில் இல்லாத ஆட்களிடம் நடத்தப்படலாம். சிலர் abcயுடன் ஒரு dயையும்( deadly bleeding or defibrillation ) சேர்த்துக்கொள்வர். அனால் இது இரத்த ஓட்டத்திலேயே அடங்கும் என்று சிலர் கூறுவர் . இந்த ABC களை பாதுகாத்தப்பின் , முதலுதவி அளிப்பவர் கூடுதல் சிகிச்சையை தொடங்கலாம். சில நிறுவனங்கள் abcக்கு பதிலாக மூன்று bக்கள் ( breathimg, bleeding and bones ) என்பதை பின்பற்றுவன. ABC களையும் 3Bக்களையும் பொதுவாக தொடர்நிலையாக செய்ய வேண்டும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படிநிலைகளை ஒரே நேரத்தில் அளிக்கவேண்டிவரும். உதாரணத்திற்கு மூச்சு மற்றும் நாடி இரண்டும் இல்லாதவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் மார்பழுத்தம் இரண்டையுமே ஒன்றாக தர வேண்டும். உயிருடன் இருக்கவேண்டுமெனில், ஒருவருக்கு அவருடைய சுவாசவழி தெளிவாக இருக்க வேண்டும். காற்று வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உள்ளிழுக்கப்பட்டு உணவு குழாயையும், வாயையும் இணைக்கும் பகுதி (pharynx) மூலமாக நுரையீரலுக்கு எந்த இடர்ப்பாடுமின்றி செல்லவேண்டும். நினைவு நிலையில் உள்ளவர்கள் தடையற்ற சுவாசவழியை தானாகவே கொண்டிருப்பார்கள். அனால் நினைவற்றவர்களுக்கு (GCS எண்ணிக்கை எட்டுக்கும் கீழ் உள்ளவர்கள்) சுவாசவழியை தெளிவாக வைத்துக்கொள்வது முடியாமல் போகலாம் . ஏனெனில் சாதாரண நிலையில் சுவாசத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி இவர்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். பாதிக்கப்பட்டவர் மூச்சு விடுகிறார் என்றால் முதலுதவி அளிப்பவர் அவரை ஒரு விதமாக படுக்கவைத்து அவரது நாக்கு சுவாசவழியை தடை செய்யாதவாறு செய்வார். மேலும் இச்செயல் நினைவிழந்த ஆட்குளுடைய இறப்பின் முக்கிய காரணமான வயிற்றிலுள்ள தேவையில்லாத பொருட்களால் (regurgitated stomach contents) மூச்சடைத்து இறப்பதையும் தவிர்க்கும். ஒரு பொருள் சுவாசவழியை அடைத்து மூச்சுத்தினரலை உண்டாக்கும்போது முதலுதவி அளிப்பவர் அந்நபருக்கு பின்னால் அடித்தும் வயிற்று பகுதியை அழுத்தியும் நிவாரணம் தருவார். சுவாசவழி திறக்கப்பட்டவுடன், முதல் உதவி அளிப்பவர் பாதிக்கப்பட்டவர் ஒழுங்காக மூச்சு இழுக்கிறாரா என்று பார்ப்பார் . பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இல்லை என்றால் ,முதலுதவி அளிப்பவர் இதய இயக்க மீட்பை (cardiopulmonary resuscitation) உடனடியாக அளிப்பார். இதில் முதலுதவி கொடுப்பவர் பாதிக்கப்பட்டவருக்காக மூச்சிழுப்பார் என்று சொல்லலாம். அப்படி செய்யும்போதே பாதிக்கப்பட்டவரின் இதயத்தை அழுத்தி விடுவார் (massage). முதலுதவி அளிப்பவர் வெட்டுகள், எலும்பு முறிவுகள் போன்ற காயங்களை கையாளவும் கற்பிக்கப்படுவார் . இதுபோன்ற சந்தர்ப்பங்களை இவர்கள் முழுமையாகவோ ( ஒரு சிறு பான்டேஜை வெட்டுபட்ட இடத்தில் ஓட்டுவது, இதில் சிகிச்சை இங்கேயே முடிவுக்கு வந்துவிடுகிறது ) அல்லது எலும்பு முறிவுகள் போன்ற சந்தர்ப்பங்களில் அவசர ஊர்தி வரும் வரை அந்த முறிவை கட்டுக்குள் வைத்திருக்கவோ கற்பிக்கப்ப்டுவர். பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் பெரிதாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. உதாரணத்திற்கு இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு மேற்சொன்ன வாக்கியம் வெகுவாக பொருந்தும்.இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது,நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பல நாடுகளில், அவசர ஊர்தி வந்துகொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்யவேண்டுமென்று அடிபட்டவரை பார்த்துகொண்டிருப்பவரிடம் சொல்வார்கள். முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். இது ஒரு சான்றிதழைக் கொடுக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் இவ்வகுப்புகளுக்கு போவதும் சான்றிதழை புதுப்பித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று. ஏனெனில் புதிய ,இன்னும் அதிக செயல்திறன் மிக்க பயிற்சிகள் கண்டுபிடிக்கப்படலாம். முதல் உதவி பயிற்சி செஞ்சிலுவை மற்றும் புனித ஜான் அவசர ஊர்தி போன்ற சமூக அமைப்புகள் மூலம் அடிக்கடி கிடைக்கும். மேலும் கட்டணம் செலுத்தி கூட சில அமைப்புகளிலிருந்து இதை பெற்றுக்கொள்ளலாம். பல சமூக அமைப்புகள் தங்களது சமூக திட்டங்கள் முழுமையடைய ஒரு வர்த்தக சேவை, வழங்குகின்றன.பல சமூக அமைப்புகளும் கூட வணிகரீதியான பயிற்சிகள் தருவன. இது ஏனெனில் இப்பணம் தங்கள் இலவச பயிற்சிகளுக்கும் சமூக வேலைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். சில குறிப்பிட்ட துறைகளில் முதலுதவி அளிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படும். முதல் உதவியுடன் பொதுவாக தொடர்புடைய சின்னமாக செஞ்சிலுவை சின்னம் அமையும்போதிலும் அது செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரப்பூர்வமான சின்னமாகும். ஜெனீவா உடன்படிக்கை மற்றும் ஏனைய சர்வதேச சட்டங்களின் படி, இது போன்ற சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை(red crescent) ஆகியனவற்றிக்கு மட்டுமே உரிமை உள்ளது. மேலும் வேண்டுமென்றால் மருத்துவ உதவி தேவைப்படும் ஒரு நபருக்கு இதை ஒரு பாதுகாப்பு சின்னமாக பயன்படுத்தலாம். வேறு எந்த நபரோ அல்லது நிறுவனமோ இவற்றை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அகில உலக அளவில் முதலுதவியின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது எதுவென்றால் கீழே காண்பிக்கப்பட்டிருக்கும் பச்சை பின்னணியில் உள்ள வெள்ளை குறுக்கு சின்னமாகும். சில நிறுவனங்கள் வாழ்வின் நட்சத்திரம்(star of life) சின்னத்தை பயன்படுத்தலாம்.எனினும் வழக்கமாக இது அவசர ஊர்திகளின் பயன்பாட்டுகேன்று ஒதுக்கப்பட்டவையாகும்.சில நிறுவனங்கள் மால்டிஸ் கிராஸ் சின்னத்தை பயன்படுத்தலாம்-மால்ட அவசர ஊர்தி அல்லது புனித ஜான் அவசர ஊர்திகள் பயன்படுத்துவது போல. மற்ற சின்னங்களும் பயன்படுத்தப்படலாம். நோய் தொற்று தாடை எலும்பிற்கு பரவி ஆஸ்டியோமைலிடீஸ் என்னும் நோயை தொடங்கிவிடும்போதுதான். மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது. மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும். மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது. வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும். முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அம்ருதானந்தமயி மாதா அம்ருதானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஒரு இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா மற்றும் "அம்மாச்சி" என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை ("Hugging saint") என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அம்ருதானந்தமயி இன்று மாதா அம்ருதானந்தமயிமடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார். இவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவருடைய சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், இவருடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது. மாதா அமிர்தானந்த மயி தன் பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவணைக்கும் போது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர் 1987ம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டுகள் செய்துவருகின்றார். உலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன. இன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும் என்றும் அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் 2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் கூடி வாக்குறுதி எடுத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள். அம்ருதானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார். சமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுனி மற்றும் ஷியா, இந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார். சிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அம்ருதானந்தமயி கேட்டுக்கொண்டார். திருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், இசுலாம், இந்து சமயம், புத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு: 1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார். இவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது. பெல்பாஸ்ட் உடன்பாடு பெல்பாஸ்ட் உடன்பாடு ("Belfast Agreement") என்பது வட அயர்லாந்தின் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் உடன்பாட்டைக் குறிக்கும். இது புனித வெள்ளி உடன்பாடு எனவும் பரவலாக அழைக்கப்படுகிறது. இவ்வுடன்பாடு பெல்பாஸ்ட் நகரில் ஏப்ரல் 10, 1998, புனித வேள்ளி தினத்தன்று ஐக்கிய இராச்சிய அரசுக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையில் வட அயர்லாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கை சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. 1998 மே 23 இல் இடம் பெற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வட அயர்லாந்து வாக்காளர்களும் அத்தோடு அயர்லாந்துக் குடியரசு மக்களும் அவ் உடன்படிக்கைக்கு பெருமளவில் அங்கீகாரம் வழங்கினர். டியுபி எனப்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சி ("Democratic Unionist Party") மட்டும் ஐரிய தேசியவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடன்பாட்டுக்கு எதிராக வாக்களித்தனர். கருத்துக் கணிப்பு முடிவுகள் வாருமாறு: ஒன்றாரியோ ஒன்ராறியோ அல்லது ஒண்டாரியோ ("Ontario") கிழக்கு-மத்திய கனடாவில் அமைந்துள்ள பத்து மாகாணங்களில் ஒன்றாகும். கனடாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் இதுவாகும். மற்ற மாகாணங்களை விட மக்கள்தொகை வேறுபாட்டில், கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிக அளவு கனடிய மக்கள் தொகையை இம்மாகாணம் கனடாவிற்குப் பங்களிக்கிறது. பரப்பளவில் இரண்டாவது பெரிய மாகாணமாக விளங்கும் ஒண்டாரியோ வடமேற்கு நிலப்பகுதிகள் மற்றும் நூனவுட் ஆட்சிப்பகுதிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டால் மொத்த பரப்பளவின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. நாட்டின் தலைநகரமான ஒட்டாவா மற்றும் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொரண்டோ ஆகியன ஒண்டாரியோ மாகாணத்திலேயே உள்ளன. ஒண்டாரியோவின் எல்லைகளாக மேற்கில் மானிட்டோபா மாகாணமும், வடக்கில் அட்சன் விரிகுடா மற்றும் யேம்சு விரிகுடாவும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் கியூபெக் மாகாணமும், வடக்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான மினசோட்டா, மிச்சிகன், ஒகையோ, பென்சில்வேனியா மற்றும் நியூ யோர்க் மாநிலம் முதலியனவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவுடனான ஒண்டாரியோவின் 2,700 கிமீ (1,678 மை) தொலைவுள்ள எல்லை பெரும்பாலும் உள்நில நீர்நிலைகளாலானது: மேற்கில் "காடுகளின் ஏரி" எனப்படும் லேக் ஆப் உட்சும், கிழக்கில் முதன்மையான ஆறுகளும் அமெரிக்கப் பேரேரிகள்/செயின்ட் லாரன்சு ஆற்று வடிநீர் அமைப்பும் அமைந்துள்ளன. இந்த முதன்மை ஆறுகள் இரைய்னி ஆறு, பிஜியன் ஆறு, சுப்பீரியர் ஏரி, செயின்ட் மேரீசு ஆறு, ஊரான் ஏரி, செயின்ட் கிளையர் ஆறு, செயின்ட் கிளையர் ஏரி, டெட்ரோயிட் ஆறு, ஈரீ ஏரி, நயாகரா ஆறு, ஒண்டாரியோ ஏரி ஆகியனவாகும்; ஒண்டாரியோவின் கிங்சுட்டன் முதல் கார்ன்வாலுக்கு சிறிதே கிழக்கில் கியூபெக் எல்லை வரை செயின் லாரன்சு ஆற்றோடு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையின் நிலப்பகுதி மட்டுமே ஆகும்; இவை மின்னசோட்டா எல்லையில் உள்ள "ஐய்ட்டு ஆப் போர்ட்டேச்" உள்ளிட்ட நாவாய் செல் நிலப்பகுதிகளை அடக்கியவை. ஒண்டாரியோ சிலநேரங்களில் கருத்துருக்களின்படி வடக்கு ஒண்டாரியோ எனவும் தெற்கு ஒண்டாரியோ எனவும் இரு வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மக்கள்தொகையும் விளைவிற்குரிய நிலமும் தெற்கில் உள்ளது. மாறாக, வடக்கு ஒண்டாரியோவில் மக்களடர்த்தி குறைவாக உள்ளது; அடர்ந காடுகளையும் கடுமையான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. இந்த மாகாணத்திற்கு ஒண்டாரியோ ஏரியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க/கனடிய தொல்மொழியான வயான்டோட் மொழியில் ஒண்டாரியோ என்பது "பெரும் ஏரி" என்று பொருள்படும். மற்றுமொரு உள்ளக மொழியில் "அழகிய நீர்நிலை" எனப் பொருள்படும் "இசுக்காண்டரியோ"விலிருந்தும் வந்திருக்கலாம். ஒண்டாரியோ மாகாணத்தில் ஏறத்தாழ 250,000 நன்னீர் ஏரிகள் உள்ளன. ஒண்டாரியோ மாகாணத்தை மூன்று முதன்மையான புவியியல் வட்டாரங்களாகப் பிரிக்கலாம்: மலைப்பாங்கான நிலப்பகுதிகள் இல்லாதபோதும் மேட்டுநிலங்கள் பெரும் பரப்பில் உள்ளன; குறிப்பாக வடமேற்கிலிருந்து தென்கிழக்காகச் செல்லும் கேனடியக் கேடயப் பகுதியில் காணலாம். மிகவும் உயரமான இடமாக இழ்சுபட்டினா முகடு உள்ளது; வடக்கு ஒண்டாரியோவிலுள்ள இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஆகும். தெற்கில் டன்டால்க் மேட்டுநிலத்தில் நீலமலைகளில் உயரம் தாண்டப்படுகின்றது. மாகாணத்தின் பெரும்பாலான தென்மேற்கு பகுதியில் கரோலினியக் காடுகள் மண்டலம் அமைந்துள்ளது. பேரேரி-செயின்ட் லாரன்சு பள்ளத்தாக்கில் கிழக்கு பேரேரி தாழ்நிலக் காடுகள் இருந்தன; இவை அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாகவும் தொழிலகங்கள், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஒண்டாரியோவின் சிறப்புமிகு புவியியல் அடையாளமாக நயாகரா அருவி உள்ளது. அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து வடமேற்கிலுள்ள தண்டர் விரிகுடா வரை நீர்ப்போக்குவரத்துச் செல்ல செயின்ட் லாரன்சு கடல்வழி உதவுகின்றது. வடக்கு ஒண்டாரியோ மாகாணத்தின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 87 விழுக்காடு நிலப்பகுதியை அடக்கியுள்ளது; மாறாக தெற்கு ஒண்டாரியோவில 94 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர். கனடாவின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 908,607.67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்றாரியோவின் மக்கள் தொகை 12,851,821 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஆகவுள்ளது. ஒன்றாரியோ மக்கள் தொகையில் ஆங்கிலேய கனடியர்கள் பெரும்பான்மையினராகவும், ஐரோப்பியக் கனடியர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்கள் 5% உள்ளனர். ஒன்றாரியோ மக்களில் கரிபியன் தீவினர், லத்தீன் அமெரிக்கர்கள், ஆசிய மக்கள் மற்றும் ஆப்பிரிக்க மக்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் குடியேறியுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 25.9% மக்கள் சிறுபான்னமையினராகவும், மண்னின் மைந்தர்களான பழங்குடி மக்கள் 2.4% அளவில் உள்ளனர். பிற மக்களை விட பழங்குடி மக்களின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. கத்தோலிக்க திருச்சபையினர் 31.4% ஆகவும்; கனடா ஒன்றிய திருச்சபையினர் 7.5% ஆகவும்; ஆங்கிலிக்கன் திருச்சபையினர் 6.1% ஆகவும்; எச்சமயத்தையும் சாராதவர்கள் 23.1% ஆக உள்ளனர். பெரும்பான்மையினர் பின்பற்றும் சமயங்கள், ஆண்டு 2011: ஒன்றாரியோவின் முதன்மை மொழி ஆங்கிலம் ஆகும். இதுவே ஒன்றாரியோ மாகாணத்தின் அலுவல் மொழியாகும். ஆங்கில மொழி 70% மக்களால் பேசப்படுகிறது. ஒன்றாரியோவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் மற்றும் தெற்குப் பகுதியில் அடர்த்தியாக வாழும் மக்கள் பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். ஒன்றாரியோவின் மொத்த மக்கள் தொகையில் 4% விழுக்காட்டினர் பிரஞ்சு மொழியை தாய் மொழியாகவும், மற்றும் 11% விழுக்காட்டினர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி என இரு மொழிகள் பேசுகின்றனர். மேலும் ஒன்றாரியோவில் குடியேறியவர்களால் அரபு, ஜெர்மானியம், ஒல்லாந்தியம், இத்தாலியம், எசுபானியம், போத்துகீயம், சீனம் இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது. 400 எண் வரிசைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், ஒன்றாரியோ ‎ மாகாணத்தின் தென் பகுதியின் பிரபலமான சாலைகள் ஆகும். இவைகள் அருகில் உள்ள கனடாவின் மாகாணங்களையும், ஐக்கிய அமெரிக்காவின் பல எல்லைப்புற நகரங்களை இணைக்கிறது. ஒன்றாரியோவின் பிற மாகாண நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் ஒன்றாரியோ மாகாணப் பகுதிகளை இணைக்கிறது. மாகாணத்தின் தென் பகுதியையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் செயிண்ட் லாரன்சு கடல் நீர் போக்குவரத்து சரக்குக் கப்பல்கள், குறிப்பாக இரும்புக் கனிமங்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. பயணிகளைச் ஏற்றிச் செல்லும் தொடருந்துகள், தெற்கு ஒன்றாரியோவிலிருந்து, மேற்கின் பசிபிக் கடற்கரையில் உள்ள வான்கூவர் நகரம் வரை இணைக்கிறது. மேலும் கியூபெக், ஆமில்டன், ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியால் போன்ற நகரங்களை தொடருந்துகள் இணைக்கின்றன. ஒன்றாரியோ மாகாணத் தலைநகரான ரொறன்ரோவில் உள்ள "ரொறன்ரோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை" 2015ஆம் ஆண்டில் 41 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர். handling over 41 million passengers in 2015. ஒன்றாரியோ மாகாணத்தின் உள்ளூர் பயணத்திற்கு சிறு விமானச் சேவைகள் உள்ளது. [[பகுப்பு:ஒன்ராறியோ| ]] [[பகுப்பு:கனடிய மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்]] ரே சார்ல்ஸ் ரே சார்ல்ஸ் ராபின்சன், இசைப்பெயர் ரே சார்ல்ஸ், (பிறப்பு செப்டம்பர் 23, 1930, இறப்பு ஜூன் 10, 2004) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். ஆர்&பி என்ற ஆப்பிரிக்க அமெரிக்க இசை வகையில் முன் முதல்வரிசைப் பாடகர்களில் ஒருவராவார். மேற்குலக நாட்டுப்புற இசை (Country music), பாப் இசை ஆகிய இசை வகைகள் இவருடைய இசையாக்கங்களால் தாக்கம் பெற்றன.. ஆல்பெனி, ஜோர்ஜியாவில் பிறந்த ரே சார்ல்ஸ் சிறுவராக இருக்கும்பொழுது தன் கண் பார்வையை இழந்தார். 1951ல் முதல் பாடலை எழுதிப் பாடினார். 1953ல் அட்லான்டிக் ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து அடுத்த 15 ஆண்டுகளாக இவர் இயற்றிப் பாடிய பாடல்களை, அமெரிக்க மக்கள் வெகுவாகக் கேட்டு இன்புற்றதால், இவர் பெரும் புகழுக்கு உரியவரானார். பாடகராக இருக்கும் பொழுது இவர் 20 ஆண்டுகளாக ஹெரொயின் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், 1965ல் இவரை காவல்துறை கைது செய்தது. "ஜோர்ஜியா ஆன் மை மைண்ட்" (Georgia On My Mind), "ஐவ் காட் அ வுமன்" (I've Got A Woman) ஆகியவை இவரின் மிக புகழ்பெற்ற பாடல்களின் சில. ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி ("One Laptop Per Child - OLPC") (ஓஎல்பிசி) என்பது எம் ஐ டி மீடியா லேப் என்னும் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் குழுவால் நிக்கொலசு நெக்ரொபாண்டே என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு மடிக்கணினியை உருவாக்குவதாகும். எக்ஸ்-ஓ (XO) என்னும் லினக்சு இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி அமைப்பு அமெரிக்காவில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஏஎம்டி, ஈபே, கூகுள், நோர்ட்டெல், ரெட் ஹேட், போன்ற பல வணிக நிறுவனங்கள் நிதி ஆதரவை அளிக்கின்றன. இந்தத் திட்டத்தின் குறிக்கோள் உலகம் முழுதும் இருக்கும் குழந்தைகளுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளில் இருப்போருக்கு, புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதும், அவர்களின் கல்வி மற்றும் சோதனை முயற்சிகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் வழி ஏற்படுத்தித் தருவதுமாகும். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வண்ணம் ஒரு மடிக்கணி, கல்வி மென்பொருட்கள், போன்றவற்றை வடிவமைப்பதிலும் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது. ஓஎல்பிசி ஐந்து முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவை நிக்கொலசு நெக்ரொபாண்டே இத்திட்டத்தை மடிக்கணித்திட்டம் அல்ல, ஒரு கல்வித்திட்டம் என்கிறார். கூடியாட்டம் கூடியாட்டம் என்பது இன்றைய கேரளாவில் வழக்கில் இருக்கும் மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமசுகிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. கேரளாவின் இக்கலை வடிவத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகின் தலைசிறந்த கலைவடிவங்களுள் ஒன்றாக, பேச்சுவழக்கிலும் வகைப்படுத்தவியலா வரலாற்று தொல்வழக்கானவற்றுள் ஒன்றாகவும் உள்ள செல்வம் "(Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity)" என்றும் அறிவித்துள்ளது. கூடியாட்டத்தில் 24 முத்திரைகள் உண்டு.அவை, வேதகாலம் வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது. இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகத நாடு போன்ற மகாஜனபதங்கள் என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது. வேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. 1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2. மந்திர மொழிக் காலம்: 3. சங்கிதைக் காலம்: 4. பிராமணக் காலம்: 5. சூத்திரங்களின் காலம்: 6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்: சாயனர் சாயனர் ("सायण"; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியான வித்தியாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார். சாயனர் நான்கு வேதங்களுக்கும் எழுதியள்ளார். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. ரிக் வேதத்திற்கு சாயனர் எழுதிய உரையைப் பின்பற்றி மாக்ஸ் முல்லர் ரிக் வேதத்தின் உரையை ஜெர்மன் மொழியில் 1849-1875 இல் வெளியிடப்பட்டார். செபாக் டக்ரோ செபாக் டக்ரா (மலாய்/இந்தோனேசியம்: "Sepak takraw") தென்கிழக்கு ஆசியாவில் விளையாடும் விளையாட்டு ஆகும். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பிலிப்பீன்ஸில் "சிபா", தாய்லாந்தில் "டக்ரா", லாவோஸில் "க-டாவ்" அல்லது "துக் தய்" என்று இந்த விளையாட்டு அழைக்கப்படுகிறது. இதன் போட்டி விதிகள் வாலிபால் போன்றவை; ஆனால் கையால் பந்தை தொடமுடியாது. சீனாவின் ட்சூஜு (蹴鞠, cùjú) விளையாட்டிலிருந்து செபாக் டக்ரா 15ம் நூற்றாண்டில் பிறந்தது. பேங்காக் நகரத்தில் வாட் ஃப்ரா கேவ் கோயிலின் சில சுவர்களில் ஹனுமான் வேறு குரங்குகளுடன் செபாக் டக்ரா விளையாடும் ஓவியங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வட்ட மைதானத்தில் விளையாடப்பட்ட செபாக் டக்ராவுக்கு 1866 இல் தாய்லாந்தில் சயாம் விளையாட்டுச் சங்கத்தினர் முதற் தடவைவையாக விதிகளை எழுதினார்கள். ஒரு செபாக் டக்ரா ஆடுதளம் 13.4 மீட்டர் நீளம், 6.1 மீட்டர் அகலம் அளவு ஆகும். நடுவில் 1.52 மீட்டர் உயரமான வலை இருக்கும். செபாக் டக்ரா பந்து ரப்பர் அல்லது பிரம்பால் கோள் வடிவத்தில் செய்யப்படும். இரண்டு அணிகள் ஒரே நேரத்தில் விளையாடும். ஓர் அணியில் மூன்று ஆட்டக்காரர்கள் இருப்பர்; ஒருவர் பின் பக்கம் இருப்பார், அவர் "டெகொங்" ("Tekong") என்றழைக்கப்படுவார். மீதி இருவர் வலைக்கு அருகில் இருப்பார்கள்; இவர்கள் "வலது உள்பக்கம்" ("Right inside"), "இடது உள்பக்கம்" ("Left inside") என்றழைக்கப்படுவார்கள். டெகொங் "சர்விஸ்" செய்வார். ஒரு பந்து உதைத்து வலை மேல் போய் வேறு அணி பக்கம் போகவில்லைனால் அந்த அணி ஒரு "தப்பு" ("Fault") பெறும்; தப்பு செய்தால் எதிர் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். எந்த அணி முதலாக 21 புள்ளிகள் பெறுமோ அந்த அணி ஒரு கணம் ("Set") வெற்றிபெறும். ஒரு போட்டியில் இரண்டு கணங்கள் உள்ளன; இரண்டு கணங்களும் ஒரே அணி வெற்றிபெற்றால் அந்த அணி போட்டியை வெற்றிபெறும். இரண்டு அணிகளும் ஒரே கணம் வெற்றிபெற்றால் "Tiebreak" கணம் நடைபெறும். இந்த கணத்தில் எந்த அணி முதலாக 15 புள்ளிகள் பெறுமோ அந்த அணி போட்டியை வெற்றிபெறும். இன்றைய பன்னாட்டு செபாக் டக்ரா போட்டிகளை பன்னாட்டு செபாக் டக்ரா கூட்டமைப்பு ஒழுங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தாய்லாந்தில் அரசர் கோப்பை உலகப் போரேறிப்பு நடைபெறுகிறது. இது தவிர ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 1990 முதல் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பன்னாட்டு செபக் டெக்ரா கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. ஐரோப்பா ஆசியா அமெரிக்காக்கள் ஓசியானியா ஆப்பிரிக்கா ஸதகத்துல் ஃபித்ர் ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை. பகுத்தறிவு பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே. பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்க்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும். ஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம். இதன்பொருள்: விளக்கம்: சார்ல்ஸ் பிராட்லா சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) (செப்டம்பர் 26, 1833 - ஜனவரி 30, 1891) புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளரும், பகுத்தறிவுவாதியும், இறைமறுப்பாளரும், குமுகாய சீர்திருத்தவாதியும் ஆவார். 1886 இல் நாடளாவிய மதம்சாரா குமுகம் (National Secular Society) என்னும் அமைப்பைத் துவங்கினார். எரிவளி எரிவளி (அல்லது எரிவாயு) ("Fuel Gas") என்பது வெப்ப ஆற்றலைப் பெறுவதற்காக எரிக்கப்படும் பல வளிமங்களுள் எந்த ஒரு எரிமத்தையும் குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர். பெரும்பாலான எரிவளிமங்கள் ( மெத்தேன் அல்லது புரொப்பேன்), நீரியம், கார்பனோரொக்சைட்டு, அல்லது இவற்றின் கலவைகள் போன்ற நீரகக்கரிமங்களாகும். இத்தகைய வளிமங்கள் உருவான இடத்திலிருந்து நுகரிடத்திற்கு எளிதாக குழாய்கள் மூலமாக பரப்பவும் வழங்கவும் வாய்ப்புள்ள வெப்பம் அல்லது ஆற்றல் மூலங்களாகும். எரிவளி நீர்ம எரிமங்களிலிருந்தும் திண்ம எரிமங்களிலிருந்தும் வேறுபட்டவை. சில எரிவளிமங்கள் சேமிப்பிற்காகவும் போக்குவரத்திற்காகவும் உயரழுத்தத்தில் நீர்மநிலையில் அடைக்கப்பட்டிருக்கலாம். திண்மநிலை எரிமங்களை எடுத்தாள்வதிலும் நீர்மநிலை எரிமங்கள் சிந்துவதிலும் உள்ள ஆபத்துக்கள் வளிமநிலையில் இல்லை என்ற பயன்களைத் இருந்தபோதும் இதன் பயன்பாட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. எரிவளிமம் அறியப்படாதவாறு ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு வளிம வெடித்தல் நிகழும் தீவாய்ப்பு உள்ளது. இதனால் வளிமக் கசிவை எளிதாக கண்டறியுமாறு பெரும்பாலான எரிவளிகளுக்கு வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தற்காலத்தில் மிகப் பெரும்பாலாகப் பயன்படுத்தப்படும் எரிவளிமம் இயற்கை எரிவளி ஆகும். மிகப் பொதுவாக எரிவளிமங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை கிடைக்கும் மூலவளங்களையும் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்து வகை படுத்தப்படுகின்றன; இயற்கையாக கிடைப்பவை, மற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவை. இந்த வகையில் செயற்கையான செய்முறைளைப் பயன்படுத்தி, பொதுவாக வளிமநிலைக்கு மாற்றி, எரிவளிகள் உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு எரிவளி உண்டாக்கப்படும் இடம் "வாயுத் தொழிற்சாலை" எனப்படுகிறது. தயாரிக்கப்படும் வளிமங்களில் சில: எதிர்காலத்தில் ஐதரசன் வளி ஓர் எரிவளியாகப் பயன்படும் சாத்தியங்களும் உண்டு. இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் மெத்தேன் அடங்கிய இயற்கை எரிவளி மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் எரிவளியாக உள்ளது. இது சிக்கலான தயாரிப்பு முறைகளில் பெறப்படாது புவியின் சேமிப்புகளிலிருந்து எளிதாக பெறப்படுகிறது. இதுவம் ஐதரசனும் சேர்த்து கலவையாக (HCNG) பயன்படுத்தப்படுவதும் உண்டு. இயற்கை வளி அல்லது பாறை எண்ணெயை பிரிப்பதன் மூலம் கீழ்காணும் எரிவளிகள் கிடைக்கின்றன: எரி வளிமங்கள் பல்வேறு பயன்பாடுகளில் பாவிக்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் வளிம விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டன. தெருவிளக்குகளும் கட்டிட அலங்கார விளக்குகளும் நகராட்சியின் வாயுத் தொழிற்சாலையிலிருந்து குழாய் மூலமாக அனுப்பப்பட்ட வளிமங்கள் மூலமாக எரிய வைக்கப்பட்டன. கல்லூரிகளிலும் ஆய்வகங்களிலும் உள்ள பன்சன் சுடரடுப்பு போன்ற வளிம சுடரடுப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்காலங்களில் கதகதப்பிற்காக வளிம சூடாக்கிகளிலும் முகாம் அடுப்புகளிலும் வண்டிகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெண்சுருட்டு பற்றவைப்புக் கருவிகளிலும் பெட்ரோல் வளிமநிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுதப்படுகின்றன. திரவ பெட்ரோலிய வாயு எனப்படும் எல்பிஜி வளி இந்திய சமையலறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அரசுடைமையான வழங்கல் நிறுவனங்களால் விற்கப்படும் இவை 14.2கி எடையுள்ள சேமிப்பு உருளைகளில் வழங்கப்படுகின்றன. இந்திய அரசு வழங்கும் மானியங்களால் இவற்றின் சந்தைவிலையிலிருந்து மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்த மானியம் இலாபநோக்குள்ள வணிக அமைப்புகளுக்கு மறுக்கப்படும் வண்ணம் இவற்றிற்கு வழங்கப்படும் உருளைகள் நீல வண்ணத்தில் உள்ளன. தற்கால திருமண ஊர்வலங்களில் விளக்கொளி எரிகலன்களிலும் பயனாகின்றன. இயற்கைவளி கிடைக்கும் மாநிலங்களில் சமையலுக்கான எரிபொருளாக இவை குழாய்களில் வழங்கப்படுகின்றன. வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டுக் கருவிகள் மூலம் நுகரப்பட்ட வளிமத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் சற்றே வேறு வடிவமான தானுந்து வளி (autogas) அல்லது அழுத்தப்பட்ட இயற்கை வளி (CNG) தானுந்துகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெட்ரோல் மற்றும் டீசலை விட முழுமையாக எரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் வளிக்கலவையில் நச்சுவளிகள் இல்லாதிருப்பதால் சுற்றுச்சூழலை மாசடைய வைக்காத எரிபொருட்களாகக் கருதப்படுகின்றன. தில்லி போன்ற சில முற்போக்கான நகராட்சிகள் பொதுப்பயன்பாட்டு வண்டிகள் அழுத்தப்பட்ட இயற்கைவளியால்தான் இயக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன. இருப்பினும் இயற்கை எரிவளி தானுந்துகளில் எரிபொருளுக்கான சேமிப்புக்கிடங்கு மற்றவற்றை விட கூடுதலான இடத்தை எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இயற்கை வளித் தானுந்தாகவே தயாரிக்கப்பட்டவற்றில் வண்டியின் அடிப்பாகத்தில் இவை அமைக்கபடுகின்றன. இயற்கைவளித் தானுந்துகள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ம. ப. பெரியசாமித்தூரன் பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பழனிவேலப்பக் கவுண்டர்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக 1908 ஆம் ஆண்டு தமிழ் நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பிறந்தார். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் - சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைத்தனர். இவர், கொங்கு வேளாளரில் "தூரன்" குலத்தைச் சார்ந்தவர் என்பதால் தன் பெயரோடு "தூரன்" என்று சேர்த்துக் கொண்டார். "மஞ்சக்காட்டு வலசு பழனிவேலப்ப கவுண்டர் மகன் பெரியசாமித்தூரன்" என்பதன் சுருக்கமே ம. ப. பெரியசாமித்தூரன் ஆகும். இவர் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து 1929இல் ஆசிரியப்பணி ஆற்றினார். மே 1, 1939இல் காளியம்மாளைத் திருமணம் செய்து கொண்ட தூரனுக்கு, சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி என்ற மகள்களும், சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர். மருமகள் செண்பகத்திலகம் ஆவார். இளம் வயதிலேயே தாயை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாகாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். அங்கு பணியாற்றிய தமிழாசிரியர் திருமலைசாமி ஐயங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன். தான் படித்த பள்ளியில் விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர் எழுதிய புதினங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். 1926 - 27இல் சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை இடைநிலை (இன்டர்மீடியட்) வகுப்பில் பயின்றார். 1929 இல் இல் இளங்கலை (பி. ஏ) கணித பட்ட வகுப்பில் சேர்ந்தார். 1931 இல் பட்ட வகுப்புத் தேர்வு எழுதாத போதும் கோபி செட்டி பாளையம் வைரவிழாப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். பெரியசாமித்தூரனை தமது கல்லூரி மாணவப் பருவம் முதலான நண்பராகவும், பாரதி பாடல்களில் ஈடுபடுத்தியவராகவும், தமிழ்ப்பற்றை மேலும் தூண்டி வளர்த்தவராகவும் பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். தூரனின் பாட்டி அவரது மாணவப் பருவத்திலேயே இராட்டை ஒன்றை அளித்து அதில் நூல் நூற்கவும் கற்றுத் தந்தார். அந்த இராட்டையில் நூல் நூற்று, பெரியார் தம் வீட்டிலேயே நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே உடன் பயின்ற மாணவர்களுடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரவலாக்கி, தேசியப் போராட்டத்துக்கு வலு சேர்த்தார். "பித்தன்" என்ற மாத இதழை நடத்தவும் தூரன் காரணமாக இருந்தார். 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பிறகு போத்தனூரிலும், அதன் பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார். அப்போது சிலரிடம் நேரடியாக இசைப்பயிற்சி பெற்றார். அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கத்தின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காக "தமிழ் வளர்ச்சிக் கழகம்" தொடங்கப்பட்டது. தன்னாட்சி உரிமை உடைய இக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "கலைக்களஞ்சியத்தின்" ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய பத்து தொகுதிகளை வெளியிட்டார். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார். இளம்வயதில் சிற்றப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், மற்றொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதையிலும் இசையிலும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் பலரும் தூரனின் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் இவரது பாடல்கள் சிலவற்றைப் பாடமாக வைத்துள்ளனர். 1968 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார். குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார். சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார். 1980ஆம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987 ம் ஆண்டு சனவரி 20ஆம் நாள் மறைந்தார். பெரியசாமித்தூரனின் பணிகள் தொடர்பாக கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் சில ஆய்வேடுகளும் வெளியாகியுள்ளன. சாகித்திய அக்கதமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற நூல் வரைசையில் ஒன்றாக "ம. ப. பெரியசாமித் தூரன்" எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியத்தால் எழுதப்பட்டு 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் நான்காவது பதிப்பு (2010) பத்து அத்தியாயங்களையும் மூன்று பின்னிணைப்புக்களையும் 123 பக்கங்களில் கொண்டிருக்கிறது. "தொண்டில் கனிந்த தூரன்" எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம் என்பவரால் தொகுக்கப்பட்டு பாரதீய வித்யா பவன் கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது. வெப்ப ஆற்றல் வெப்ப இயக்கவியலில், வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு ஏற்ப இருக்கும் அக ஆற்றலைக் குறிக்கும். இயற்பியலிலோ அல்லது வெப்ப இயக்கவியலிலோ இதனைத் திட்டவட்டமாக வரைவிலக்கணப்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படாமலேயே அக ஆற்றலில் மாறுதல் நிகழலாம் என்பதுடன், அக ஆற்றலின் எந்தப் பகுதி வெப்பத்தால் நிகழ்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் இருப்பதுமாகும். ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடுபடுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப வெப்ப ஆற்றலும் மாறுபடும். ஒரு பொருளின் வெப்பம் (இயக்கவியல்) மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று சொல்லப் படுகிறது. வெப்பம் என்பது வேறுபட்ட வெப்பநிலைகளைக் கொண்டிருக்கும், ஒரு அமைப்புக்கும், அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையில், அவற்றுக்கிடையே இருக்கும் எல்லையின் இரு பக்கங்களுக்குமிடையில் காணப்படும் வெப்பநிலை வேறுபாட்டால் ஏற்படக்கூடிய ஆற்றல் நிலைமாற்றம் ஆகும். அடிப்படை அளவில், ஒரு பொருளின் அணு, மூலக்கூறு நகர்ச்சியால் உண்டாகும் இயக்க ஆற்றலின் ஒரு வகையே வெப்ப ஆற்றல் என்பது. வெப்பத்தின் பருமச்சுருக்கம்தான் துகள் அணு மூலக்கூறு மற்றும் திட திரவ வாயுத்தொகுப்புகளால் ஆன பொருள் நிலைகள் ஆகும். எனவே பொருளாய் ஆனது வெப்பம். பொருளுக்குள் விரவி பரவி இருப்பது வெப்ப ஆற்றல் ஆகும். யங்கோன் ரங்கூன் அல்லது யங்கோன் (பர்மிய மொழி: ရန္‌ကုန္) மியான்மார் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது. தலைநகரம் மாற்றப்பட்டாலும், நான்கு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு இந்நாட்டின் முதலாவது பெரிய நகரமாகும். மேலும், முக்கிய வணிகநகரமாகவும் விளங்குகிறது. மற்ற தென்னாசிய நகரங்களொடு ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகக் குறைவுதான். இரண்டாம் உலகப்போருக்குமுன் வரை, இந்நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தனர். தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கும் அமைப்பு ஆகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு டொரன்டோவில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாய்த் தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்றவை இதனுள் அடங்கும். 2010-ம் ஆண்டு இவ்வமைப்பு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. புதுருவகல புதுருவகல இலங்கையின் வெல்லவாயவிலிருந்து இருந்து தென்கிழக்காக நான்கு மைல் தொலைவில் உள்ள ஒரு மகாயான பௌத்த தலம் ஆகும். புதுருவகல என்றால் "புத்தரின் கற்சிற்பம்" என்று பொருள். இங்கு தான் 51 அடி உள்ள இலங்கையின் மிகப்பெரிய புத்தர் சிலை காணப்படுகிறது. இது தீபங்கர புத்தரின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த இடத்தை குறித்த சரித்திர தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இதன் உண்மையான பெயர் கூட அறியப்பெறவில்லை, புதுருவகல என்பது காரணப்பெயர் ஆகும். இது 9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்குள்ள பல சிலைகள் மகாயான பௌத்தத்தை சார்ந்த சிலைகளாக உள்ளன. அவலோகிதேஷ்வரர், தாரா தேவி முதலிய போதிசத்துவர்களின் சிலைகள் இங்கே காணக்கிடைக்கிறது. இலங்கையில் முற்காலத்தில் மகாயானம் பின்பற்றப்பட்டது, அந்த காலக்கட்டத்தில் இச்சிற்பங்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள போதிசத்துவர்களின் சிலைகளின் அமைப்பும் இருப்பிடமும் மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்னும் பௌத்த தாந்திரீக நூலில் கூறப்பட்டுள்ளவாறு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு வஜ்ரயான பௌத்தமும் பின் பற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது தேரவாத - மகாயான பிரிவினை காரணமாக தற்போது இருப்பது இவ்விடம் கவனிப்பாரற்று உள்ளதாக ஒரு சாரார் கருதுகின்றனர் உயிர்ப்புவியியல் உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது. சிற்றினத்தோற்றம், இனஅழிவு, கண்டப்பெயர்ச்சி, உறைபனியாதல் மற்றும் அது சார்ந்த கடல்மட்ட மாற்றம், நீரீனால் நிலப்பகுதிகள் தனிமைபடல் போன்ற நிகழ்வுகள் ஓர் உயிரினத்தின் உயிர்ப்புவியியலை அமைக்கின்றன. உயிர்ப்புவியியலின் அறிவியற்கொள்கை முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் ஆல்பிரட் ராசுல் வாலாசு மற்றும் பல படிமலர்ச்சியல் அறிஞர்களால் விளக்கப்பட்டது. ஆல்பிரட் ராசுல் வாலாசுக்கு மலாய தீவுக்கூட்டங்களின் செடியினங்கள் (தாவரங்கள்) மற்றும் விலங்குகளை பற்றி ஆராயும் பொழுது உயிர்ப்புவியியலை பற்றிய எண்ணக்கரு தோன்றியது. தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (The Union of South American Nations (, , ) என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக் குழுமம் ஆகிய இரண்டு பகுதிகளின் தங்களுக்குள்ளான "கட்டற்ற" வணிக உறவுகளையும் இணைக்கும் முகமாக உருவாக்க பட்டது. இது தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவல்ல ஒரு முயற்சி என்று கருதப்படுகின்றது. மே 23, 2008 அன்று பிரேசிலின் தலைநகராகிய பிரேசிலியாவில் இந்த ஒன்றியத்தின் அரசியல்சட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டு உருப்பெற்றது. இலத்தீன் அமெரிக்கா இலத்தீன் அமெரிக்கா ("Latin America", எசுப்பானியம்: "América Latina or Latinoamérica", போர்த்துக்கேயம்: "América Latina", பிரெஞ்சு: "Amérique latine", இடாய்ச்சு: "Latijns-Amerika") எனப்படுவது அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும். எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் பிரெஞ்ச் ஆகியவை இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன. இதன் மொத்த பரப்பு ஏறேக்குறைய 21,069,500 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இது மொத்த புவியின் பரப்பில் 3.9 சதமும், நிலப்பரப்பின் அளவில் 14.1 சதமும் ஆகும். 2013 வரையிலான இதன் மக்கள் தொகை 59 கோடி ஆகும். மற்றும் இதன் கூட்டு உள்நாட்டு உற்பத்தி 7368 பில்லியன். அர்செண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோசுடா ரிகா, கூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடோர், குவாத்தமாலா, எயித்தி, ஓண்டுரசு, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகியவை இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகலாக உள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் மனிதர்கள் வாழ்ததற்கான அடையாளங்களின் மிகவும் பழமையானவை, தெற்கு சிலி பகுதிகளில் கானக்கிடைக்கின்றன. இவை சுமார் 14000 வருடங்களுக்கு முந்தயவை. இதன் பிறகான முதல் குடியேற்றம் "லாசு வேகாசு கலாச்சாரம்" ஆகும். இது 8000 முதல் 4600 ஆண்டுகளுக்கு இடையில் ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்டது. தொடர்ந்து கொலம்பியா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளிலும் பழங்குடிகளின் குடியேற்றங்கள் அமைந்தன. பிற்பாடு இலத்தின் அமெரிக்க பகுதிகள் பல நாகரீக குழுக்கள் உருவாகின. ஆசுடெக்குகள், டால்டெக்குகள், கரீபியர், டூபி, மாயா மற்றும் இன்கா ஆகிய குழுக்கள் இவர்களின் முக்கியமானவர்கள். குறிப்பாக ஆசுடெக் மக்கள் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சி, அமெரிக்காவின் எசுப்பானியர்களின் வருகையோடு முடிவு பெற்றது. 1492ல் கொலம்பசு அமெரிக்காவை அடைந்ததில் இருந்து, இலத்தீன் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய படை ஒன்று வட அமெரிக்க பகுதிகளில் இருந்த ஆசுடெக் நகரங்களை முற்றுகையிட்டு அழித்தனர். போலவே பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான படை ஒன்று தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த இன்கா பேரரசை கைப்பற்றி அழித்தது. இதன் மூலம் வடக்கு மற்றும் தென் மேற்கு அமெரிக்க பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மேலும் குடியேற்றங்களை உருவாக்குவதில், எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்ப்பட்ட பினக்குகளின் முடிவில், 1494ல் இரு காலனிகளுக்கு இடையிலான எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம், இலத்தீன் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு கரை பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கீழும், கிழக்குக் கரைப் பகுதி போர்த்துக்கலின் கீழும் கொண்டுவரப்பட்டன. இவர்களை தொடர்ந்து பிரித்தானியா, பிரான்சு மாற்றும் ஆலந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவை ஆக்கிரமித்து தமது குடியேற்றங்களை அங்கு உருவாக்கின. இதன் மூலம் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அலாசுகா முதல் சிலி வரை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் ஐரோப்பிய குடியேற்றங்களாக மாற்றப்பட்டன. தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பிய காலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிருத்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் இன்றைக்கு சரிவர கிடைப்பதில்லை. இருப்பினும் மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்காலாம் என நம்பப்படுகின்றது. மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் "மெசுடொசோ" எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்க கலப்பு இனம் தோன்றத்தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர். 1804ல் எயித்தியில் டூசான் லூவர்சூர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியை தொடர்ந்து, அந்த நாடு பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது. தொடர்ந்து அந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் சுதந்திர கூட்டாச்சி அமைக்கப்பட்டது. இது மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் தோன்ற தூண்டுதலாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானிய மேலாதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கின. தாய் நாட்டில் பிறந்த எசுப்பானியார்கள் உயர் சாதியினர் எனவும், இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த எசுப்பானியர்கள் "கிரியோலோ" அல்லது கீழ் சாதியினர் எனவும் பாகுபடுத்தப்பட்டனர். இது அங்கு விடுதலைப் போர் ஏற்பட தூண்டுகோலாக அமைந்தது. மிகுவேல் கோசுடிலா, சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் ஆகியோர் முறையே மெக்சிகோ, வெனிசுலா மற்றும் அர்சென்டினா ஆகிய பகுதிகளில் மக்களை திரட்டி விடுதலைப் போரில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அரச படையினரால் மக்கள் எழுச்சி அடக்கப்பட்டாலும் சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் போன்ற இளந்தலைமுறை தளபதிகளால் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்த எழுச்சிகளின் பலனாக 1825க்கும் உள்ளாகவே போர்டோ ரிகோ மற்றும் கூபா தவிர்த்த அனைத்து எசுப்பானிய காலனிய பகுதிகலும் விடுதலையடைந்தன. 1822ல் சுதந்தர பிரேசிலில் சட்டத்திற்குட்ட முடியாட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டு மெக்சிகோவின் இராணுவ தளபதி அகசுடின் தி டுபைட் தலைமையில் முடியாட்சி அமைக்கப்பட்டது. இறுப்பினும் சிறிது காலத்திலேயே இது கலைக்கப்பட்டு 1823ல் மெக்சிகோ குடியரசு மலர்ந்தது. இலத்தீன் அமெரிக்கா பல்லின மக்கள் பரம்பலை கொண்ட ஒரு பிரதேசம். இந்த இனங்களின் பரவல் நாட்டுக்கு நாடு வேறுபடும். தாயக அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெசுடொசோக்கள் (ஐரோப்பிய-தாயக அமெரிக்கர்களின் கலப்பு இனம்), முலாட்டோக்கள் (ஐரோப்பிய-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்), ஐரோப்பியர்கள் (குறிப்பாக எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய நாட்டவர்) மற்றும் சாம்போக்கள் (தாயக அமெரிக்கர்கள்-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்) ஆகிய இனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கேயம் ஆகிய இரண்டும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 60% பேர் எசுப்பானிய மொழியையும், 34% பேர் போர்த்துக்கேய மொழியையும், 6% பேர் மற்ற மொழிகளான கெச்வா, மாயன், குவாரனி, ஐமரா, நாகவற் மொழி, ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகளை பேசுகின்றனர். போர்த்துக்கேய மொழி பிரேசில் நாட்டில் மட்டும் பேசப்படுகின்றது. அதைத் தவிர்த்த மற்ற அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியம் ஆட்சி மொழியாக உள்ளது. பிரெஞ்ச், எயித்தி மற்றும் கயானா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. அமெரிக்க பழங்குடி மொழிகள் பெரு, குவாத்தமாலா, பொலிவியா, பராகுவே மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பேசப்படுகின்றன. பனாமா, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, அர்செண்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்படும் இவை பிற நாடுகளில் மிகக் குறைந்த அளவே பேசப்படுகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மெக்சிகோ, அதிக அளவில் பழங்குடி மொழி பேசுவோரைக் கொண்டுள்ளதாக உள்ளது. உருகுவே பழங்குடி மொழி வழக்கில் இல்லாத ஒரே இலத்தீன் அமெரிக்க நாடாகும். கிறித்தவம், இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரும்பான்மையான மதம் ஆகும். இவர்களில் 70% பேர் உரோமன் கத்தோலிக்கர்கள். பிரேசில், பனாமா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சீர்திருத்தத் திருச்சபை சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதைத் தவிர்த்த பழங்குடியினர் நம்பிக்கை, யூதம், இசுலாம் போன்றவை சிறிய அளவு மக்களால் கடைபிடிக்கபடுகின்றது. இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் என்பது அமெரிக்க பூர்வீக குடிகள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் காலாச்சார கலவை ஆகும். பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் பூர்வீக குடிகளின் முறைகளும், சமயம், கலை, ஓவியம் போன்றவற்றில் ஐரோப்பிய தாக்கமும் அதிகம். இசை, நடனம் ஆகியவவை ஆப்பிரிக்க கலாச்சாரத்தை ஒத்ததாக உள்ளன. டாக்கா டாக்கா () வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும். கை ரிக்சாக்களின் தலைநகரம்' என்னும் சிறப்பையும் டாக்கா பெற்றுள்ளது. டாக்காவின் தெருக்களில் ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் கை ரிக்சாக்கள் செல்கின்றன. டாக்கா என்ற சொல்லானது, முன்பு ஒரு காலத்தில் இங்கு அதியம் காணப்பட்ட "தாக்கா" எனும் மரத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். இல்லையேல், 1610ம் ஆண்டு முதலாம் இசுலாம் கான் தனது நாட்டின் தலைநகரை அறிவிக்கும் பொழுது தெற்காசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட "தாக்" எனும் இசைக்கருவி இசைக்கப்பட்டது, இதிலிருந்தும் டாக்கா எனும் பெயர் வந்திருக்கலாம். மேலும் நகரின் தென்மேற்கு பகுதியில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் வீற்றிருக்கும் தாக்கேசுவரி அம்மனின் பெயரிலிருந்தும் வந்திருக்கலாம் என அவ்வூர் மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் குறிப்பேடுகள் சிலவற்றில் "டாக்கா" எனும் சொல்லானது, பிராகிருத மொழியின் கிளை மொழியான தாக்காவிலிருந்து வந்ததாகவும், அது இராஜதரங்கினி கண்காணிப்புக் கோபுரத்தில் உபயோகப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றன. தற்போதைய டாக்காவிற்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குடிபெயர ஆரம்பித்தனர். இக்குறுநில பகுதியினை முதலில் காமரூப மன்னர்களும், பாலப் பேரரசர்களும் ஆட்சி செலுத்திவந்தனர். பின்னர் 9ம் நூற்றாண்டில் சென் குல மன்னர்கள் ஆட்சி அமைத்தனர். இங்கு பிரசித்தி பெற்றது தாகேஸ்வரி தேசிய கோயில் ஆகும். இக்கோயிலை சென் பேரரசரால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சேனை அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வங்காள சுல்தானியர்கள் ஆட்சி புரிந்தனர். 1576ல் வங்காளம், முகலாயரின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அப்போதைய இராணுவதளமாக டாக்காவை தெரிவு செய்தனர். நகரின் அபரிவிதமான வளர்ச்சியைக்கண்டு 1608ம் ஆண்டு முகலாய பேரரசுகளின் தலைமையிடமாக மாற்றினர். தலைநகராக அறிவித்தகனத்தில், எண்ணற்ற மசூதிகள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை நிறுவினர். மேலும் இசுலாமியர்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வேற்று மத மக்கள் இசுலாமியத்திற்கு மாறினர். அதற்குப் பின்னர் நிறைய முகலாயர்கள் ஆட்சி செய்த போதும், அவர்களின் முதலில் ஆட்சி செய்த சுபதார் முதலாம் இசுலாம் கானே முக்கியத்துவம் வாய்ந்தவன். முதலில் இவ்வூருக்கு, அரசர் ஜகாங்கீரின் நினைவாக ஜகாங்கீர் நகர் (شهر از جهانگیر) என பெயரிட்ட இசுலாம் கான், அவரின் மறைவிற்குப் பின்னர் அப்பெயரினை மாற்றினார். அதற்குப் பின்னர் 17ம் நூற்றாண்டில் அரச பொருப்பேற்ற சைஸ்தா கான், அரசர் அவுரங்கசீப்பின் கட்டளையின் பேரில், டாக்கா நகரம் வளர்ச்சி கண்டது. நன்கு வளர்ச்சியடைந்த டாக்கா நகரத்தின் மொத்த பரப்பளவு 19க்கு 13கிமீ.ஆக இருந்தது. மேலும் மெத்த மக்கட்தொகையும் ஒரு மில்லியனைத் தொட்டது 1765ல் முகலாய பேரரசரின் சார்பாக வருவாய் சேகரிக்கும் உரிமையை பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. வரி வசூலிப்பதில் செல்வாக்கு வளர்ந்து சர்வாதிகாரத்தைக் காட்டியது, கிழக்கு இந்திய நிறுவனம். பின்னர் நாடாளும் அதிகாரத்தை வங்காள நவாப்புகளிடமிருந்து பறித்து, பீகார் மற்றும் ஒடிஷாவை கிழக்கு இந்திய கம்பெனி 1763ல் தன்வசம் இழுத்தது. ஆட்சி மாறியதும் கல்கத்தாவிற்கு முக்கியத்துவம் உயர்ந்தது. இதனால் டாக்கா நகரின் பெரும்பான்மையான மக்கள் கல்கத்தா நோக்கி புலம் பெயர்ந்தனர். நகரின் மக்கள் தொகையும் வியத்தகு அளவில் சுருங்கியது. ஆனால் நிலையான வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் போன்றவை இறுதி வரை தொடர்ந்தது. ஓர் அதிநவீன குடிநீர் விநியோக முறை 1874ம் ஆண்டிலும் மின்சார வாரியம் 1878ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது. மேலும் டாக்காவில் ஒரு இராணுவ தளம் அமைக்கப்பட்டு, பிரித்தானிய மற்றும் வங்காள இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்தியாவின் டாக்கா மஸ்லின் என்ற மிக மெல்லிய கைநெசவுத் துணி உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு மோதிரத்திற்குள் ஒரு மீட்டர் டாக்கா மஸ்லின் துணியை நுழைத்துவிடலாம். ஆங்கிலேயர் அவர்களது மான்செஸ்டர் ஆலைத்துணி விற்பனையாக வேண்டும் என்பதற்காக டாக்கா நெசவாளிகளின் கட்டை விரல்களை வெட்டினர். டாக்கா நகரானது, புரிகங்கை ஆற்றின் கிழக்கு கரையில், வங்காள தேசத்தின் மத்தியில் () அமைந்துள்ளது. நகரானது, கங்கை கழிமுகத்தெதிரின் கீழ் பகுதியில் 360 சது.கிமீ (140 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. டாக்கா, ஈரப்பதம் மற்றும் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி காலநிலையாக ம், குறைந்தபட்சமாக மார்கழி, தை மாதங்களில் மற்றும் அதிகபட்சமாக சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் ம் இருக்கும். நகரின் மழைக்காலமான வைகாசி முதல் ஐப்பசி வரையிலான மாதங்களில் சராசரி மழையின் அளவு 2,123  மிமீ. (83.5 in) பதிவாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் கழிவுகளினால் காற்று மற்றும் நீர் மாசுபடுகின்றது. மேலும் நகரைச்சுற்றி அடுக்குமாடி குடியிறுப்புகள் மற்றும் கடைகளை கட்டுவதற்காக, பல்வேறு குளங்களையும் ஏரிகளையும் மூடி வருகின்றனர். காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுவதினால், மணல் அரிப்பு மற்றும் இயற்கை வாழ்விடங்கள் அழிப்பு என பல்வேறு அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றது டாக்கா நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன அவற்றுள், ஆகியவை நாட்டின் பூங்காக்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மேலும் பல்வேறு குளங்களும் அமைந்துள்ளது. அவற்றுள் ஆகியவை நாட்டின் பல்வேறு குளங்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது. டாக்காவில் மட்டைப் பந்தும் கால்பந்து விளையாட்டும் பொது மக்கள் மத்தியில் மிகப் பிரசித்தம். நகரத்திலுள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கிடையே அதிக எண்ணிக்கையில் பல்வேறு போட்டிகள் தேசிய அளவில் நடைபெறுகின்றது. வங்காளதேச ப்ரீமியர் லீக் (கால்பந்து) போட்டியில் முகமதன் விளையாட்டுக் குழுவும், அபாகனி குழுவும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1954ம் ஆண்டு, இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் மட்டைப்பந்து அணி விளையாடிய டெஸ்ட் போட்டியே வங்கதேசம் முதன் முதலாக நடத்திய மட்டைப்பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பங்கபந்து விளையாட்டு மைதானம், முதலில் சர்வதேச மட்டைப்பந்து விளையாட்டுக்களமாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் கால்பந்து மைதானமாக மாறியுள்ளது. 2011 உலக கோப்பை மட்டைப்பந்து தொடக்க விழா இந்த மைதானத்தில் நடந்தது பின்னர் நடந்த 2 கால் இறுதி போட்டிகள் உட்பட போட்டியின் 6 ஆட்டங்கள், சேர்-இ-பாங்களா மட்டைப்பந்து மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தெற்காசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மூன்று முறை ( 1985, 1993, 2010 ) டாக்காவில் சிறப்பாக நடந்தது. உலகிலயே இங்கு மட்டும் தான் தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் மூன்று முறை நடந்துள்ளது. அதுவும் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் தான். வாங்காள தேசத்தின் மற்ற நகரங்களை விட டாக்காவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் டாக்காவில் நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நிலையங்கள் ஐந்து நிலைகளாக பிரித்தனர். ஆரம்பப் பள்ளி (1 முதல் 5ம் வகுப்பு வரை), தொடக்கப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு வரை), உயர்நிலைப் பள்ளி (9 மற்றும் 10ம் வகுப்பு), மேல்நிலைப் பள்ளி (11 மற்றும் 12ம் வகுப்பு). இங்கு பள்ளிகளைப்போல கல்லூரிகளும் அதிகம். இங்குள் டாக்கா கல்லூரி பிரித்தானிய அரசால், 1841 ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே டாக்காவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டது. நாட்டின் பெரிய மற்றும் பழைமை வாய்ந்த டாக்கா பல்கலைக்கழகமும் இங்கு அமைந்திருப்பதும் சிறப்பு. இந்த பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 30,000 மாணவர்கள் மற்றும் 1,300 ஆசிரியர்கள் உள்ளனர். 1921ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் 23 ஆராய்ச்சி மையங்களும், 70 துறைகளும் ஒருங்கே அமைந்துள்ளது. மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களான ஆகியவை அமைந்துள்ளன. இவ்வாறான கல்வி வசதிகள் அதிகமிருந்தும் மறியல் மற்றும் மாணவர் போராட்டங்கள் தனியார் பல்கலைக்கழக வளாகங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. டாக்காவிலுள்ள சைக்கிள் ரிக்சாவானது, உலக புகழ் பெற்றது. கிட்டத்தட்ட 400,000 சைக்கிள் ரிக்சாக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சைக்கிள் ரிக்சாவும், ஆட்டோ ரிக்சாவும் தான் இங்கு முக்கிய போக்குவரத்து சாதனங்கள். ஆனால் அந்த 400,000 ரிக்சாக்களில், 85,000 மட்டுமே அரசாங்கத்தின் முறையான உரிமத்துடன் செயல்படுகின்றது. இது தவிர, வங்காளதேச அரசு நகரப் பேருந்துகள் இயக்குகின்றன. பூரிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சர்தார்காட் துறைமுகமே, டாக்காவின் பிரதானமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தின் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வங்கதேசத்தின் மற்ற துறைமுகங்களோடு இணைக்கின்றது வங்கதேசத்தின் மிகப்பெரியதும் பரபரப்பும் மிகுந்த ஹஜ்ரத் சாஜ்லால் வானூர்தி நிலையம் டாக்கா நகரிலிருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாட்டின் 52 விழுக்காடு வான் போக்குவரத்து இந்த வானூர்தி நிலையத்தில்தான் நடைபெறுகிறது. சிட்டாக்ங், சில்எட், ராஜ்சாஹி, காக்ஸ் பஜார், ஜெசோர், சையதுபூர் போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து உள்ளது. மேலும் ஆசியாவின் முக்கிய நகரங்களுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், வட ஆப்பிரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பா போன்ற நகரங்களுக்கு, சர்வதேச வானூர்தி சேவையும் உள்ளது தபால் சேவை அச்சு ஊடகம் ஒலி மற்றும் ஒளி ஊடகம் அரசு ஏற்று நடத்தும் வானொலிபரப்பு நிலையமான வங்கதேச பீடர், டாக்காவிலுள்ள சேர்-இ-வங்காள நாகரில் அமைந்துள்ளது. இதர வானொலி சேவைகளாக முகம்மது அலி ஜின்னா முகம்மது அலி சின்னா ("Muhammad Ali Jinnah", முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் ("Governor-General") ஆவார். மகுமூத் அகமதிநெச்சாத் மகுமூத் அகமதிநெச்சாத் ("Mahmoud Ahmadinejad", மஃமூத் அஃமதிநெச்சாத் பாரசீக மொழி: محمود احمدی‌نژاد) ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார். இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்தார். ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1976ல் சேர்ந்து குடிசார் பொறியியல் படித்தார். இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987ல் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார். 2005ல் மஃமூத் அஃமதிநெச்சாத் இசுரேல் நாடு இருக்கக்கூடாது என்று கூறியதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் கண்டனம் செய்தார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், மற்றும் வேறு சில நாடுகள் மஃமூத் அஃமதிநெச்சாத்தும் அவரின் ஈரானிய அரசும் யூதர்களுக்கு எதிரிகள் என்று குற்றம் சாட்டி, ஈரான் நாடுஅணுஆயுதத்தை படைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி, ஈரான் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்த முயன்று வருகிறார்கள். சாவகம் (தீவு) சாவகம் ("Java") என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும். சாரியை சாரியை என்பது தமிழில் பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ சார்ந்து வரும் இடைச்சொற்களில் ஒன்று. இது தனி எழுத்தினைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும். ஒரு சொல்லைப் பிரிக்கும்போது பொருளை உணர்த்தாமல் சார்ந்துவரும் இடைச்சொல்லையும் நன்னூல் சாரியை எனக் குறிப்பிடுகிறது. சார்பெழுத்து, சாரியை என்னும் சொற்கள் ‘சார்’ என்னும் வினைச்சொல்லிலிருந்து தோன்றியவை. 1588 1588 (MDLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. 1580கள் 1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது. ஆப்பலேச்சிய மலைத்தொடர் ஆப்பலேச்சியன்ஸ் அல்லது ஆப்பலேச்சிய மலைத்தொடர் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களிலிருந்து தென்கிழக்கு கனடாவிலிருக்கும் நியூஃபென்லேன்ட் தீவு வரை தொடரும் ஆப்பலேச்சியங்களில் மிகவும் உயரமான மலை, 2,037 மீட்டர் அளவில் உயரமான வட கரொலைனாவின் மௌண்ட் மிச்சல் ஆகும். 1528ல் ஒரு எசுப்பானிய நாடுகாண் பயணி "அப்பலாச்சென்" என்று பெயருடன் ஒரு பழங்குடி நகரத்தைப் பார்த்து இந்த மலைத்தொடருக்கு பெயர்வைத்தார். இந்த மலைத்தொடரில் சில சிறு மலைத்தொடர்கள் ஜோர்ஜியாவின் புளூ ரிஜ், நியூ யோர்க்கின் அடிராண்டாக், டென்னசியின் பிரதான ஸ்மோக்கிகள் ஆகும். மெக்சிகோ வளைகுடா மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக ஒரு வளைகுடா ஆகும். கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மேற்கு டெக்சஸ் மாநிலம் மற்றும் மெக்சிகோ, தென்கிழக்கு கூபா, வடக்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் மிசிசிப்பி, ரியோ கிராண்டே, சாட்டஹூச்சி, மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன. இத்தாலிய மொழி இத்தாலிய மொழி (, அல்லது "lingua italiana") கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும். இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது. ஆட்சி மொழியாக இடவாரியாக வரலாற்று ஆட்சி மொழியாக ciao "முதன்மைக் கட்டுரை" : இத்தாலிய எண்கள் பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் பறவைகளின் தமிழ்ப்பெயர்கள் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும் இங்கு அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன. அக்கா குயில் = Common Hawk-Cuckoo / Brainfever Bird அகன்ற அலகு உள்ளான்= Broad-billed Sandpiper அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = வீட்டுச் சிட்டுக்குருவி = House Sparrow அண்டங்காக்கை =Large-billed crow அரசவால் ஈப்பிடிப்பான் = Asian Paradise Flycatcher அரிவாள் மூக்கன் = Glossy Ibis ஆட்காட்டி = Lapwing ஆந்தை = Owl ஆண்டி வாத்து = Northern Shoveler ஆலா = Common Tern ஆளிக் கழுகு, ஆளிப்பருந்து = Tawny Eagle ஆற்று ஆலா= River Tern ஆற்று உள்ளான் = Green Sandpiper ஆறுமணிக்குருவி = தோட்டக்கள்ளன் =சருகு திருப்பி=பொன்குருவி= Indian Pitta இராக் கொக்கு = Black-crowned Night Heron இராசாளிப் பருந்து = Bonelli's Eagle இந்திய காட்டுக்காகம் = Jungle Crow உண்ணிக் கொக்கு = Cattle Egret உள்ளான்= Common Sandpiper ஊசிவால் வாத்து = Pintail ஊதாப்பிட்டு தேன்சிட்டு (ஊதாப்பிட்ட தேன்சிட்டு) = Purple-rumped Sunbird ஊதாத் தேன்சிட்டு = Purple Sunbird ஊமத்தங்கூகை = பூமன் ஆந்தை = Brownfish owl ஊர்க்குருவி = அடைக்கலக்குருவி = சிட்டுக்குருவி = House Sparrow ஒற்றை இருவாயன் = மலபார் சாம்பல் இருவாச்சி= Malabar Grey Hornbill ஓணான் கொத்திக் கழுகு = Short-toed Snake Eagle கடல் பருந்து= White-bellied Sea Eagle கடற்புறா = Sea gull கதிர்க்குருவி = Plain Prinia கம்பிவால் தகைவிலான் = Wire-tailed Swallow கம்புள் கோழி= White-breasted Waterhen கரண்டி அலகு உள்ளான்= Spoon-billed Sandpiper கரண்டிவாயன் = Eurasian Spoonbill கரிச்சான் = Ashy Drongo கரிச்சான் குயில் = Drongo Cuckoo கருங்கரிச்சான் = Black Drongo கருங்காடை = Rain Quail கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி = Streaked Weaver கருங்குருகு = Black Bittern கருங்கொண்டை நாகணவாய் = Brahminy Starling கருங்கொண்டை வல்லூறு = Black Baza கருங்கோட்டுக் கதிர்க்குருவி = Zitting Cisticola கருஞ்சிட்டு = Indian Robin கருஞ்சிவப்பு மரம்கொத்தி = Rufous Woodpecker கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் = Bay-backed Shrike கருஞ்சிவப்புச் சிலம்பன் = Rufous Babbler கருந்தலை மாங்குயில் = Black-headed Oriole கருந்தலை மீன்கொத்தி = Black-capped Kingfisher கருந்தலைக் கடற்புறா = Black-headed Gull கருந்தலைக் குயில் கீச்சான் = Black-headed Cuckoo-shrike கருந்தலைச் சில்லை= Black-headed Munia கருந்தலைச் சிலம்பன் = Dark-fronted Babbler கருந்தொண்டைச் சில்லை = Black-throated Munia கருநாரை = Black Stork கருப்பு வயிற்று ஆலா = Black-bellied Tern கருப்பு வெள்ளை இருவாயன் = Malabar Pied Hornbill கருப்பு வெள்ளை வாலாட்டி = Large Pied Wagtail கருப்பு வெள்ளைக் கீச்சான் = Bar-winged Flycatcher-shrike கருப்பு வெள்ளைக் குருவி = Oriental Magpie Robin கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு = Pied Bushchat கருப்புச்சின்னான் = Black Bulbul கருஞ்சாம்பல் வாலாட்டி = Grey Wagtail கரும்பச்சைக் கரிச்சான் = Bronzed Drongo கரும்பருந்து = Black Eagle கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் = Black-naped Monarch கரும்புள்ளி மரம்கொத்தி = Heart-spotted Woodpecker கருவளைய தோல்குருவி = Collared Pratincole கருவால் மூக்கன் = Black-tailed Godwit கருவால் வாத்து = Gadwall கருவெள்ளை மீன்கொத்தி = Pied Kingfisher கரைக் கொக்கு = Reef Heron கல் கவுதாரி = Chestnut-bellied Sandgrouse கல்குருவி = Common Stonechat = Indian Courser கல்திருப்பி உள்ளான் = Ruddy Turnstone கல்லுப்பொறுக்கி = Stint கலகலப்பன் சிலம்பன் = Brown-cheeked Fulvetta கவுதாரி = Grey Francolin கள்ளப் பருந்து = Black Kite கள்ளிப்புறா = Eurasian Collared Dove கற்பொறுக்கி உப்புக்கொத்தி = Pacific Golden Plover காக்கை = House Crow காகம்Indian jungle crow காட்டு ஆந்தை = Forest Eagle Owl காட்டு நாகணவாய் = Jungle Myna காட்டுக் கதிர்க்குருவி = Jungle Prinia காட்டுக் கீச்சான் = Common Woodshrike காட்டுக்கோழி = Grey Junglefowl காட்டுச் சிலம்பன் = Jungle Babbler காட்டுச் செந்தலையன் = Red-headed Bunting காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (பச்சைக் குக்குறுவான்]],குக்குறுவான்) = Brown-headed Barbet காட்டுப் பஞ்சுருட்டான் = Blue-bearded Bee-eater காட்டுப்பக்கி = Indian Jungle Nightjar காட்டுப்புலுனி = Southern rufous-backed shrike காடை = Common Quail கானாங்கோழி = Slaty-legged Crake கிளி = Parakeet = Parrot கிளுவை = Common Teal கீச்சான் = Shrike கீச்சுக்கிளுவை = Lesser Whistling Teal குங்குமப் பூச்சிட்டு = Scarlet minivet குட்டை இறக்கையன் = White-bellied Shortwing குட்டைக்காது ஆந்தை = Short-eared owl குட்டைக்கிளி = Vernal Hanging Parrot குடுமிப் பருந்து = Changeable Hawk Eagle குயில் = Indian Cuckoo குயில் கீச்சான் = Large Cuckoo-shrike குருட்டுக் கொக்கு = Indian Pond Heron குள்ளத்தாரா = Cotton Teal குறுங்காடை = Common Buttonquail கூகை = Barn Owl கூம்பலகன் = Common Rosefinch கூழைக்கடா = Spot-billed Pelican கொசு உள்ளான் = Little Stint கொடிக்கால் வாலாட்டி = Forest Wagtail கொண்டலாத்தி = Hoopoe கொண்டை ஆலா = Crested Tern கொண்டை உழவாரன் = Crested Treeswift கொண்டை நீர்க்காகம் = Indian Cormorant கொண்டை வானம்பாடி = Malabar Crested Lark கொண்டைக் கரிச்சான் = Spangled Drongo கொம்பன் ஆந்தை = Eurasian Eagle Owl கோகிலம் = Asian Koel கோட்டான் = Large Hooting Owl கோணமூக்கு உள்ளான் = Pied Avocet கோரை உள்ளான் = Jack Snipe சக்களத்திக் குயில் = Indian Plaintive Cuckoo சாம்பல் இருவாயன் = Indian Grey Hornbill சாம்பல் கதிர்க்குருவி = Ashy Prinia சாம்பல் நாரை = Grey Heron சாம்பல் தகைவிலான் Ashy Woodswallow சாம்பல்தலை ஈப்பிடிப்பான் = Grey-headed Canary-flycatcher சாம்பல்தலை நாகணவாய் = Chestnut-tailed Starling சாம்பல்தலை வானம்பாடி = Ashy-crowned Sparrow Lark சாம்பல்தலைச் சின்னான் = Grey-headed Bulbul சாம்பல்நெற்றிப் புறா = Pompadour Green Pigeon சிட்டுக்குருவி = அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = House Sparrow சிவப்பு இறக்கை வானம்பாடி = Indian Bushlark சிவப்பு மூக்கு ஆள்காட்டி = Red-wattled Lapwing சிவப்பு வல்லூறு = Common Kestrel சிவப்புக்கானாங் கோழி = Ruddy-breasted Crake சிவப்புச் சில்லை = Red Munia செம்மீசைச் சின்னான் = Red-whiskered Bulbul சிவப்புவால் வானம்பாடி = Rufous-tailed Lark சிறால் மீன்கொத்தி = Small Blue Kingfisher சிறு கரும்பருந்து = Black-shouldered Kite சின்ன உழவாரன் = Indian Edible-nest Swiftlet சின்ன தவிட்டுப்புறா = Little Brown Dove சின்ன நீர்க்காகம் = Little Cormorant சின்ன மரம்கொத்தி = Brown-capped Pygmy Woodpecker சின்ன மாம்பழக் குருவி = Ceylon lora சின்ன மீன்கொத்தி = Oriental Dwarf Kingfisher சின்ன வல்லூறு = Besra சின்ன வானம்பாடி = Oriental Skylark சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = White-cheeked Barbet சின்னக் கொக்கு = Little Egret சின்னக்காட்டு ஆந்தை = Jungle Owlet சின்னக்கானாங் கோழி = Little Crake சின்னச் சிட்டு = Small Minivet சின்னச் சிலந்திபிடிப்பான் = Little Spiderhunter சின்னத் தகைவிலான் = Streak-throated Swallow சின்னத் தேன்சிட்டு = Small Sunbird சின்னத் தோல்குருவி = Little Pratincole சின்னப் பச்சைக்காலி = Marsh Sandpiper சின்னப்பக்கி = Indian Nightjar சின்னான் = Red-vented Bulbul சீகார்ப் பூங்குருவி = Malabar Whistling Thrush சீழ்க்கைச் சிறகி = Lesser Whistling Duck சுடலைக்குயில் = Jacobin Cuckoo சுந்தன் கோழி = Red Spurfowl செங்கழுத்து உள்ளான் = Red-necked Phalarope செங்கால் நாரை = White Stork செங்குயில் = Banded Bay Cuckoo செங்குருகு = Chestnut Bittern செண்டு வாத்து = Comb Duck செண்பகம் = Greater Coucal செதில் வயிற்று மரம்கொத்தி = Streak-throated Woodpecker செந்தலைக் கழுகு = Red-headed Vulture செந்தலைக் கிளி = Plum-headed Parakeet செந்தலைப் பஞ்சுருட்டான் = Chestnut-headed Bee-eater செந்தலைப் பூங்குருவி = Orange-headed Thrush செந்தார்ப் பைங்கிளி = Rose-ringed Parakeet செந்தொண்டை ஈப்பிடிப்பான் = Red-throated Flycatcher செந்தொண்டைச் சின்னான் = Black-crested Bulbul செந்நாரை = Purple Heron செம்பருந்து = Brahminy Kite செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் = Chestnut-bellied Nuthatch செம்பிட்டத் தகைவிலான் = Red-rumped Swallow செம்மார்புக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = Coppersmith Barbet செம்முதுகுக் கீச்சான் = Rufous-backed Shrike செவ்வாயன் = Sirkeer Malkoha செவ்விறகு கொண்டைக் குயில் = Red-winged Crested Cuckoo சேற்றுப்பூனைப் பருந்து = Western Marsh Harrier தகைவிலான் = Barn Swallow தண்ணீர்க் கோழி = Water Cock தத்துக்கிளிக் கதிர்க்குருவி = Grasshopper Warbler தவிட்டுச் சிலம்பன் = Common Babbler தவிட்டுப்புறா = Red Turtle Dove தாமரை இலைக் கோழி = Bronze-winged Jacana தாழைக்கோழி = Common Moorhen தீக்காக்கை = Malabar Trogon துடுப்புவால் கரிச்சான் = Greater Racket-tailed Drongo தூக்கணாங்குருவி = Baya Weaver தேன் பருந்து = Oriental Honey Buzzard தையல் சிட்டு = Common Tailorbird தோசிக் கொக்கு = Striated Heron தோட்டக்கள்ளன் = Indian Pitta தோணிக்கொக்கு = Grey Pelican நண்டு தின்னி = Crab Plover நத்து = Ceylon Scops Owl நத்தை குத்தி நாரை = Asian Open-billed Stork நாகணவாய் (மைனா) = Common Myna நாட்டு உழவாரன் = House Swift நாட்டுத் தகைவிலான் = Pacific Swallow நாணல் கதிர்க்குருவி = Clamorous Reed-warbler நாமக்கோழி = Common Coot நீண்டவால் பக்கி = Jerdon's Nightjar நீல மயில் = Indian Peafowl நீலகண்டன் = Bluethroat நீலகிரி ஈப்பிடிப்பான் = Nilgiri Flycatcher நீலகிரி காட்டுப்புறா = Nilgiri Wood Pigeon நீலகிரி நெட்டைக்காலி = Nilgiri Pipit நீலகிரிச் சிரிப்பான் = Nilgiri Laughingthrush நீலகிரிப் பூங்குருவி = Scaly Thrush நீலச்சிட்டு = Asian Fairy Bluebird நீலச்சிறகி = Garganey நீலத்தலைப் பூங்குருவி = Blue-capped Rock-thrush நீலத்தாழைக் கோழி = Purple Moorhen நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் = Blue-throated Flycatcher நீலப்பூங்குருவி = Blue Rock Thrush நீலமார்புச் சம்பங்கோழி = Slaty-breasted Rail நீலவால் பஞ்சுருட்டான் = Blue-tailed Bee-eater நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி = Pheasant-tailed Jacana நீளக்கால்விரல் உள்ளான் = Long-toed Stint நெடுங்கால் உள்ளான் = Black-winged Stilt நெடுங்கழுத்தன் = நெடுங்கிளாத்தி = பாம்புத் தாரா = Darter பச்சைக் கதிர்க்குருவி = Greenish Warbler பச்சைக்கால் கொசு உள்ளான் = Temminck's Stint பச்சைக்காலி = Common Greenshank பச்சைச்சிட்டு = Golden-fronted Leafbird பச்சைப் பஞ்சுருட்டான் = Green Bee-eater பச்சைப்புறா = Yellow-footed Green Pigeon பச்சைவாயன் = Blue-faced Malkoha பஞ்சவண்ணக் கிளி = macaw பஞ்சவண்ணப் புறா = Emerald Dove பட்டாணி உப்புக்கொத்தி = Little Ringed Plover பட்டாணிக் குருவி Great = Tit பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை = Collared Scops Owl பருத்த அலகு ஆலா = Gull-billed Tern பருத்த அலகு மலர்கொத்தி = Thick-billed Flowerpecker பருத்த அலகுப் பனங்காடை = Broad-billed Roller பவழக்காலி = Common Redshank பழுப்புக் கீச்சான் = Brown Shrike பழுப்புத்தலைக் கடற்புறா = Brown-headed Gull பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் = Brown-breasted Flycatcher பனங்காடை = Indian Roller பனை உழவாரன் = Asian Palm Swift பாம்புத் தாரா = Darter பாம்புப் பருந்து = Crested Serpent Eagle பாறைத் தகைவிலான் = Dusky Crag Martin புதர் வானம்பாடி = Jerdon's Bushlark புதர்க்காடை = Jungle Bush Quail புள்ளி ஆந்தை = Spotted Owlet புள்ளி மரம்கொத்தி = Speckled Piculet புள்ளி மூக்கு வாத்து (அல்லது) புள்ளி மூக்கன் வாத்து = Spot-billed Duck புள்ளிச் சில்லை = Spotted Munia புள்ளிப்புறா = Spotted Dove பூஞ்சைப் பருந்து = Booted Eagle பூநாரை = Greater Flamingo பூரிப்புள்ளி ஆந்தை = Mottled Wood Owl பூனைப் பருந்து = Pallid Harrier பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் = Great Pied Hornbill பெரிய கொக்கு = Great Egret பெரிய சாம்பல் சிலம்பன் = Large Grey Babbler பெரிய நீர்க்காகம் = Great Cormorant பெரிய பச்சைக்கிளி = Alexandrine Parakeet பெரிய பச்சைப்புறா = Green Imperial Pigeon பெரிய பொன்முதுகு மரம்கொத்தி = Greater Flameback பெரிய மீன்கொத்தி = Stork-billed Kingfisher பெரும் பருந்து = Rufous-bellied Eagle பேடை உள்ளான் = Ruff பொரி உள்ளான் = Wood Sandpiper பொரி வல்லூறு = Peregrine Falcon பொன்முதுகு மரம்கொத்தி = Lesser Golden-backed Woodpecker மஞ்சள் குருகு = Yellow Bittern மஞ்சள் சிட்டு = Common Iora மஞ்சள் திருடிக் கழுகு = Egyptian Vulture மஞ்சள் தொண்டைச் சிட்டு = Yellow-throated Sparrow மஞ்சள் நெற்றி மரம்கொத்தி = Yellow-crowned Woodpecker மஞ்சள் பிடரி மரம்கொத்தி = Lesser Yellownape மஞ்சள் மூக்கு ஆள்காட்டி = Yellow-Wattled Lapwing மஞ்சள் மூக்கு நாரை = Painted Stork மஞ்சள்கண் சிலம்பன் = Yellow-eyed Babbler மஞ்சள்கண் பட்டாணிக் குருவி = Black-lored Yellow Tit மஞ்சள்கால் காடை = Yellow-legged Buttonquail மஞ்சள்தொண்டைச் சின்னான் = Yellow-throated Bulbul மஞ்சள்புருவச் சின்னான் = Yellow-browed Bulbul மணல்நிற உப்புக்கொத்தி = Lesser Sand Plover மந்திப்புறா = Mountain Imperial Pigeon மயில் = Peacock மயில் உள்ளான் = Greater Painted Snipe மரக் கதிர்க்குருவி = Booted Warbler மரங்கொத்தி = Woodpecker மலை உழவாரன் = Alpine Swift மலை நாகணவாய் = Southern Hill Myna மலைச் சிட்டான் = Eurasian Blackbird மாங்குயில் = Golden Oriole மாடப்புறா = Blue Rock Pigeon மீசை ஆலா = Whiskered Tern முக்குளிப்பான் = Little Grebe முள்வால் உழவாரன் = Needletail Swift மென்னலகுக் கடற்புறா = Slender-billed Gull மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி = Golden-backed Woodpecker வண்ணக் கவுதாரி = Painted Sandgrouse வண்ணக்காடை = Painted Bush Quail வண்ணசுந்தன் கோழி = Painted Spurfowl வயநாட்டுச் சிரிப்பான் = Wynaad Laughingthrush வயல் கதிர்க்குருவி = Paddyfield Warbler வயல்நெட்டைக்காலி = Paddyfield Pipit வரகுக்கோழி = Lesser Florican வல்லூறு = Shikra வலந்தை அலகுச் சிலம்பன் = Indian Scimitar Babbler வாத்து = Goose வால் காக்கை = Indian Treepie வான்கோழி = Turkey விசிறிவால் உள்ளான் = Common Snipe விரால் அடிப்பான் = Osprey வீட்டுச் சிட்டுக்குருவி = House sparrow வெண்தலைச் சிலம்பன் = White-headed Babbler வெண்கழுத்து நாரை = Woolly-necked Stork வெண்தொண்டை மீன்கொத்தி = White-throated Kingfisher வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-throated Fantail வெண்தொண்டைச் சில்லை = White-throated Munia வெண்தொண்டைச் சிலம்பன் = Tawny-bellied Babbler வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-browed Fantail Flycatcher வெண்புருவச் சின்னான் = White-browed Bulbul வெண்முதுகுக் கழுகு = Indian White-backed Vulture வெண்முதுகுச் சில்லை = White-rumped Munia வெள்ளை அரிவாள் மூக்கன் = Black-headed Ibis வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் = White-bellied Blue வெள்ளை வயிற்று வால் காக்கை = White-bellied Treepie வெள்ளை வயிற்றுக் கரிச்சான் = White-bellied Drongo வெள்ளை வாலாட்டி = White Wagtail வெள்ளைக் கண்ணி = Oriental White-eye வெள்ளைக் கொக்கு = Intermediate Egret வெள்ளைக்கண் வைரி = White-eyed Buzzard வெள்ளைப்பூனைப் பருந்து = Pied Harrier வெளிர் சாம்பல் கதிர்க்குருவி = Grey-breasted Prinia வேட்டைக்கார ஆந்தை = Brown Hawk Owl ALEXANDRINE PARAKEET - பெரிய பச்சைக்கிளி ALPINE SWIFT - மலை உழவாரன் ASHY DRONGO - கரிச்சான் ASHY PRINIA - சாம்பல் கதிர்க்குருவி ASHY WOODSWALLOW - சாம்பல் தகைவிலான் ASHY-CROWNED SPARROW LARK - சாம்பல்தலை வானம்பாடி ASIAN BROWN FLYCATCHER - பழுப்பு ஈ பிடிப்பான் ASIAN FAIRY BLUEBIRD - ஆசிய நீலச்சிட்டு ASIAN KOEL - கோகிலம் ASIAN OPEN-BILLED STORK - நத்தை குத்தி நாரை ASIAN PALM SWIFT - பனை உழவாரன் ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான் ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி BANDED BAY CUCKOO - செங்குயில் BARN OWL - கூகை ஆந்தை BARN SWALLOW - தகைவிலான் BAR-WINGED FLYCATCHER-SHRIKE - கருப்பு வெள்ளைக் கீச்சான் BAYA WEAVER - தூக்கணாங்குருவி BAY-BACKED SHRIKE - கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் BESRA - சின்ன வல்லூறு BLACK BAZA - கருங்கொண்டை வல்லூறு BLACK BITTERN - கருங்குருகு BLACK BULBUL - கருப்புச் சின்னான் BLACK DRONGO - கருங் கரிச்சான் BLACK EAGLE - கரும்பருந்து BLACK KITE - கள்ளப் பருந்து BLACK STORK - கருநாரை BLACK VULTURE - மலைப்போர்வை BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா BLACK-CAPPED KINGFISHER - கருந்தலை மீன்கொத்தி BLACK-CRESTED BULBUL - செந்தொண்டைச் சின்னான் BLACK-CROWNED NIGHT HERON - இராக் கொக்கு BLACK-HEADED CUCKOO-SHRIKE - கருந்தலைக் குயில் கீச்சான் BLACK-HEADED GULL - கருந்தலைக் கடற்புறா BLACK-HEADED IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன் BLACK-HEADED MUNIA - கருந்தலைச் சில்லை BLACK-HEADED ORIOLE - கருந்தலை மாங்குயில் BLACK-LORED YELLOW TIT - மஞ்சள்கண் பட்டாணிக் குருவி BLACK-NAPED MONARCH - கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் BLACK-SHOULDERED KITE - சிறு கரும்பருந்து BLACK-TAILED GODWIT - கருவால் மூக்கன் BLACK-THROATED MUNIA - கருந்தொண்டைச் சில்லை BLACK-WINGED STILT - நெடுங்கால் உள்ளான் BLUE ROCK PIGEON - மாடப்புறா BLUE ROCK THRUSH - நீலப்பூங்குருவி BLUE-BEARDED BEE-EATER - காட்டுப் பஞ்சுருட்டான் BLUE-CAPPED ROCK-THRUSH - நீலத்தலைப் பூங்குருவி BLUE-FACED MALKOHA - பச்சைவாயன் BLUE-ROCK PIGEON - மாடப் புறா BLUE-TAILED BEE-EATER - நீலவால் பஞ்சுருட்டான் BLUETHROAT - நீலகண்டன் BLUE-THROATED FLYCATCHER - நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி BONELLI'S EAGLE - இராசாளிப் பருந்து BOOTED EAGLE - பூஞ்சைப் பருந்து BOOTED WARBLER - மரக் கதிர்க்குருவி BRAHMINY KITE - செம்பருந்து BRAHMINY STARLING - கருங்கொண்டை நாகணவாய் BRAINFEVER BIRD - அக்கா குயில் BROAD-BILLED ROLLER - பருத்த அலகுப் பனங்காடை BROAD-BILLED SANDPIPER - அகல் அலகு உள்ளான் BRONZED DRONGO - கரும்பச்சைக் கரிச்சான் BRONZE-WINGED JACANA - தாமரை இலைக் கோழி BROWN HAWK OWL - வேட்டைக்கார ஆந்தை BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான் BROWN-BREASTED FLYCATCHER - பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் BROWN-CAPPED PYGMY WOODPECKER - சின்ன மரம்கொத்தி BROWN-CHEEKED FULVETTA - கலகலப்பன் சிலம்பன் BROWN-HEADED BARBET - காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (குக்குறுவான்) BROWN-HEADED GULL - பழுப்புத்தலைக் கடற்புறா BUTTON QUAIL - கருங்காடை CATTLE EGRET - உண்ணிக்கொக்கு CHANGEABLE HAWK EAGLE - குடுமிப் பருந்து CHESTNUT BITTERN - செங்குருகு CHESTNUT-BELLIED NUTHATCH - செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் CHESTNUT-BELLIED SANDGROUSE - கல் கவுதாரி CHESTNUT-HEADED BEE-EATER - செந்தலைப் பஞ்சுருட்டான் CHESTNUT-TAILED STARLING - சாம்பல்தலை நாகணவாய் CLAMOROUS REED-WARBLER - நாணல் கதிர்க்குருவி COLLARED PRATINCOLE - கருவளைய தோல்குருவி COLLARED SCOPS OWL - பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை COMB DUCK - செண்டு வாத்து COMMON BABBLER - தவிட்டிச் சிலம்பன் COMMON BUTTONQUAIL - குறுங்காடை COMMON COOT - நாமக்கோழி COMMON GREENSHANK - பச்சைக்காலி COMMON IORA - மஞ்சள் சிட்டு COMMON KESTREL - சிவப்பு வல்லூறு COMMON MOORHEN - தாழைக்கோழி COMMON MYNA - நாகணவாய் COMMON QUAIL - காடை COMMON REDSHANK - பவழக்காலி COMMON ROSEFINCH - கூம்பலகன் COMMON SANDPIPER - உள்ளான் COMMON SNIPE - விசிறிவால் உள்ளான் COMMON STONECHAT - கல்குருவி COMMON TAILORBIRD - தையல் சிட்டு COMMON TEAL - கிளுவை COMMON TERN - ஆலா COMMON WOODSHRIKE - காட்டுக் கீச்சான் COTTON TEAL - குள்ளத் தாரா CRAB PLOVER - நண்டு தின்னி CRESTED SERPENT EAGLE - பாம்புப் பருந்து CRESTED TERN - கொண்டை ஆலா CRESTED TREESWIFT - கொண்டை உழவாரன் CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி COOT (COMMON) - நாமக் கோழி COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான் DARK-FRONTED BABBLER - கருந்தலைச் சிலம்பன் DARTER - பாம்புத் தாரா DRONGO CUCKOO - கரிச்சான் குயில் DUSKY CRAG MARTIN - பாறைத் தகைவிலான் DRONGO - கரிச்சான் EASTERN SKYLARK - சின்ன வானம்பாடி EMERALD DOVE - பஞ்சவண்ணப் புறா EURASIAN BLACKBIRD - மலைச் சிட்டான் EURASIAN COLLARED DOVE - கள்ளிப்புறா EURASIAN EAGLE OWL - கொம்பன் ஆந்தை EURASIAN GOLDEN ORIOLE - மாங்குயில் EURASIAN SPOONBILL - கரண்டிவாயன் EGYPTIAN VULTURE - மஞ்சள் திருடிக் கழுகு/பாப்பாத்திக் கழுகு FOREST EAGLE OWL - காட்டு ஆந்தை FOREST WAGTAIL - கொடிக்கால் வாலாட்டி GADWALL - கருவால் வாத்து GLOSSY IBIS - அரிவாள் மூக்கன் GREAT CORMORANT - பெரிய நெட்டைக்காலி/பெரிய நீர்க்காகம் GREENISH LEAF WARBLER - பச்சைக் கதிர்குருவி GARGANEY - நீலச்சிறகி GOLDEN ORIOLE - மாங்குயில் GOLDEN-BACKED WOODPECKER - மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி GOLDEN-FRONTED LEAFBIRD - பச்சைச்சிட்டு GRASSHOPPER WARBLER - தத்துக்கிளிக் கதிர்க்குருவி GREAT EGRET - பெரிய கொக்கு GREAT PIED HORNBILL - பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் GREAT TIT - பட்டாணிக் குருவி GREATER COUCAL - செண்பகம் GREATER FLAMEBACK - பெரிய பொன்முதுகு மரம்கொத்தி GREATER FLAMINGO - பூநாரை GREATER PAINTED SNIPE - மயில் உள்ளான் GREATER RACKET-TAILED DRONGO - துடுப்புவால் கரிச்சான் GREEN BEE-EATER - பச்சைப் பஞ்சுருட்டான் GREEN IMPERIAL PIGEON - பெரிய பச்சைப்புறா GREEN SANDPIPER - ஆற்று உள்ளான் GREY FRANCOLIN - கவுதாரி GREY HERON - சாம்பல் நாரை GREY PELICAN - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா GREY WAGTAIL - சாம்பல் வாலாட்டி GREY JUNGLEFOWL - காட்டுக்கோழி GREY-BREASTED PRINIA - வெளிர் சாம்பல் கதிர்க்குருவி GREY-HEADED BULBUL - சாம்பல்தலைச் சின்னான் GREY-HEADED CANARY-FLYCATCHER - சாம்பல் தலை ஈப்பிடிப்பான் GULL-BILLED TERN - பருத்த அலகு ஆலா HEART-SPOTTED WOODPECKER - கரும்புள்ளி மரம்கொத்தி HOOPOE - கொண்டலாத்தி HOUSE CROW - காக்கை/காகம் HOUSE SPARROW - வீட்டுச் சிட்டுக்குருவி HOUSE SWIFT - நாட்டு உழவாரன் INDIAN BUSHLARK - சிவப்பு இறக்கை வானம்பாடி INDIAN CORMORANT - கொண்டை நீர்க்காகம் INDIAN COURSER - கல்குருவி INDIAN CUCKOO - குயில் INDIAN EDIBLE-NEST SWIFTLET - சின்ன உழவாரன் INDIAN GREY HORNBILL - சாம்பல் இருவாயன் INDIAN JUNGLE NIGHTJAR - காட்டுப்பக்கி INDIAN NIGHTJAR - சின்னப்பக்கி INDIAN PEAFOWL - நீல மயில் INDIAN PITTA - தோட்டக்கள்ளன் INDIAN PLAINTIVE CUCKOO - சக்களத்திக் குயில் INDIAN POND HERON - குருட்டுக் கொக்கு INDIAN ROBIN - கருஞ்சிட்டு INDIAN ROLLER - பனங்காடை INDIAN SCIMITAR BABBLER - வலந்தை அலகுச் சிலம்பன் INDIAN WHITE-BACKED VULTURE - வெண்முதுகுக் கழுகு INTERMEDIATE EGRET - வெள்ளைக் கொக்கு INDIAN SHAG - கொண்டை நீர்க்காகம் INDIAN TREEPIE - வால் காக்கை; வால் காகம். JACK SNIPE - கோரை உள்ளான் JACOBIN CUCKOO - சுடலைக்குயில் JERDON'S BUSHLARK - புதர் வானம்பாடி JERDON'S NIGHTJAR - நீண்டவால் பக்கி JUNGLE BABBLER - காட்டுச் சிலம்பன் JUNGLE BUSH QUAIL - புதர்க்காடை JUNGLE CROW - அண்டம் காக்கை JUNGLE MYNA - காட்டு நாகணவாய் JUNGLE OWLET - சின்னக்காட்டு ஆந்தை JUNGLE PRINIA - காட்டுக் கதிர்க்குருவி LESSER GOLDEN-BACKED WOODPECKER - பொன்முதுகு மரங்கொத்தி LITTLE CORPORANT - சின்ன நீர்க்காகம் LITTLE CRAKE - சின்னக் கானாங்கோழி LITTLE EGRET - சின்ன வெள்ளைக்கொக்கு LITTLE-RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி LARGE CUCKOO-SHRIKE - குயில் கீச்சான் LARGE GREY BABBLER - பெரிய சாம்பல் சிலம்பன் LARGE PIED WAGTAIL - கருப்பு வெள்ளை வாலாட்டி LESSER FLORICAN - வரகுக்கோழி LESSER SAND PLOVER - மணல்நிற உப்புக்கொத்தி LESSER WHISTLING DUCK - சீழ்க்கைச் சிறகி LESSER WHISTLING TEAL - கீச்சுக்கிளுவை LESSER YELLOWNAPE - மஞ்சள் பிடரி மரம்கொத்தி LITTLE BROWN DOVE - சின்ன தவிட்டுப்புறா LITTLE GREBE - முக்குளிப்பான் LITTLE PRATINCOLE - சின்னத் தோல்குருவி LITTLE RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி LITTLE SPIDERHUNTER - சின்னச் சிலந்திபிடிப்பான் LITTLE STINT - கொசு உள்ளான் LONG-TOED STINT - நீளக்கால்விரல் உள்ளான் MALABAR CRESTED LARK - கொண்டை வானம்பாடி MALABAR GREY HORNBILL - ஒற்றை இருவாயன் MALABAR PIED HORNBILL - கருப்பு வெள்ளை இருவாயன் MALABAR TROGON - தீக்காக்கை MALABAR WHISTLING THRUSH - சீகார்ப் பூங்குருவி MARSH SANDPIPER - சின்னப் பச்சைக்காலி MOORHEN (COMMON) - தாழைக் கோழி MOTTLED WOOD OWL - பூரிப்புள்ளி ஆந்தை MOUNTAIN IMPERIAL PIGEON - மந்திப்புறா NEEDLETAIL SWIFT - முள்வால் உழவாரன் NILGIRI FLYCATCHER - நீலகிரி ஈப்பிடிப்பான் NILGIRI LAUGHINGTHRUSH - நீலகிரிச் சிரிப்பான் NILGIRI PIPIT - நீலகிரி நெட்டைக்காலி NILGIRI WOOD PIGEON - நீலகிரி காட்டுப்புறா NORTHERN SHOVELER - ஆண்டி வாத்து ORANGE-HEADED THRUSH - செந்தலைப் பூங்குருவி ORIENTAL DWARF KINGFISHER - சின்ன மீன்கொத்தி ORIENTAL HONEY BUZZARD - தேன் பருந்து ORIENTAL MAGPIE ROBIN - கருப்பு வெள்ளைக் குருவி ORIENTAL SKYLARK - சின்ன வானம்பாடி ORIENTAL WHITE-EYE - வெள்ளைக் கண்ணி OLIVE-BACKED PIPIT - காட்டு நெட்டைக்காலி ORIENTAL WHITE IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன் OSPREY - வராலடிப்பான்/விரால் அடிப்பான் OSTRICH - நெருப்புக்கோழி PACIFIC GOLDEN PLOVER - கற்பொறுக்கி உப்புக்கொத்தி PACIFIC SWALLOW - நாட்டுத் தகைவிலான் PADDYFIELD PIPIT - வயல்நெட்டைக்காலி PADDYFIELD WARBLER - வயல் கதிர்க்குருவி PAINTED BUSH QUAIL - வண்ணக்காடை PAINTED SANDGROUSE - வண்ணக் கவுதாரி PAINTED SPURFOWL - வண்ணசுந்தன் கோழி PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை PALLID HARRIER - பூனைப் பருந்து PASSER DOMESTICUS - வீட்டுச் சிட்டுக்குருவி PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா PEREGRINE FALCON – பைரி/பொரி வல்லூறு PHEASANT-TAILED JACANA - நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி PIED AVOCET - கோணமூக்கு உள்ளான் PIED BUSHCHAT - கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு PIED HARRIER - வெள்ளைப் பூனைப்பருந்து PIED KINGFISHER - கருவெள்ளை மீன்கொத்தி PINTAIL - ஊசிவால் வாத்து PLAIN PRINIA - கதிர்க்குருவி PLUM-HEADED PARAKEET - செந்தலைக் கிளி POMPADOUR GREEN PIGEON - சாம்பல்நெற்றிப் புறா PURPLE HERON - செந்நாரை PURPLE MOORHEN - நீலத்தாழைக் கோழி PURPLE-RUMPED SUNBIRD - ஊதாப்பிட்டு தேன்சிட்டு PURPLE SUNBIRD - ஊதாத் தேன்சிட்டு QUAIL - காடை RAIN QUAIL - கருங்காடை RED MUNIA - சிவப்புச் சில்லை RED SPURFOWL - சுந்தன் கோழி RED TURTLE DOVE - தவிட்டுப்புறா RED-HEADED BUNTING - காட்டுச் செந்தலையன் RED-HEADED VULTURE - செந்தலைக் கழுகு RED-NECKED PHALAROPE - செங்கழுத்து உள்ளான் RED-RUMPED SWALLOW - செம்பிட்டத் தகைவிலான் RED-THROATED FLYCATCHER - செந்தொண்டை ஈப்பிடிப்பான் RED-VENTED BULBUL - சின்னான்/கொண்டைக்குருவி RED-WATTLED LAPWING - சிவப்பு மூக்கு ஆள்காட்டி RED-WHISKERED BULBUL - சிவப்பு மீசைச்சின்னான் RED-WINGED CRESTED CUCKOO - செவ்விறகு கொண்டைக் குயில் REEF HERON - கரைக் கொக்கு RIVER TERN - ஆற்று ஆலா ROSE-RINGED PARAKEET - செந்தார்ப் பைங்கிளி RUDDY TURNSTONE - கல்திருப்பி உள்ளான் RUFF - பேடை உள்ளான் RUFOUS BABBLER - கருஞ்சிவப்புச் சிலம்பன் RUFOUS WOODPECKER - கருஞ்சிவப்பு மரம்கொத்தி RUFOUS-BACKED SHRIKE - செம்முதுகுக் கீச்சான் RUFOUS-BELLIED EAGLE - பெரும் பருந்து RUFOUS-TAILED LARK - சிவப்புவால் வானம்பாடி RED-WINGED BUSH-LARK - சிகப்பு இறக்கை வானம்பாடி ROSY STARLING - சோளப்பட்சி; சோளக்குருவி; சூறைக்குருவி. RUDDY-BREASTED CRAKE - சிவப்புக் காணான்கோழி/சிவப்புக்கானாங் கோழி SANDPIPER (COMMON) - உள்ளான் SCALY THRUSH - நீலகிரிப் பூங்குருவி SEA GULL - கடற்புறா SHIKRA - வல்லூறு SHORT-EARED OWL - குட்டைக்காது ஆந்தை SHORT-TOED SNAKE EAGLE - ஓணான்கொத்திக் கழுகு SIRKEER MALKOHA - செவ்வாயன் SLATY-BREASTED RAIL - நீலமார்புச் சம்பங்கோழி SLATY-LEGGED CRAKE - கானாங்கோழி SLENDER-BILLED GULL - மென்னலகுக் கடற்புறா SMALL BLUE KINGFISHER - சிறால் மீன்கொத்தி SMALL MINIVET - சிறிய மின்சிட்டு SMALL SUNBIRD - சின்னத் தேன்சிட்டு SOUTHERN HILL MYNA - மலை நாகணவாய் SPANGLED DRONGO - கொண்டைக் கரிச்சான் SPECKLED PICULET - புள்ளி மரம்கொத்தி SPOON-BILLED SANDPIPER - கரண்டி அலகு உள்ளான் SPOT-BILLED DUCK - புள்ளி மூக்கன் வாத்து SPOT-BILLED PELICAN - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா SPOTTED DOVE - புள்ளிப்புறா SPOTTED MUNIA - புள்ளிச் சில்லை SPOTTED OWLET - புள்ளி ஆந்தை STORK-BILLED KINGFISHER - பேரலகு மீன்கொத்தி STREAKED WEAVER - கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி STREAK-THROATED SWALLOW - சின்னத் தகைவிலான் STREAK-THROATED WOODPECKER - செதில் வயிற்று மரம்கொத்தி STRIATED HERON - தோசிக் கொக்கு SWALLOW - தகைவிலான் குருவி TAILORBIRD - தையல்சிட்டு TAWNY EAGLE - ஆளிப்பருந்து TAWNY-BELLIED BABBLER - வெண்தொண்டைச் சிலம்பன் TEMMINCK'S STINT - பச்சைக்கால் கொசு உள்ளான் THICK-BILLED FLOWERPECKER - பருத்த அலகு மலர்கொத்தி VERNAL HANGING PARROT - குட்டைக்கிளி WATER COCK - தண்ணீர்க் கோழி WESTERN MARSH HARRIER - சேற்றுப்பூனைப் பருந்து WHISKERED TERN - மீசை ஆலா WHITE STORK - செங்கால் நாரை WHITE WAGTAIL - வெள்ளை வாலாட்டி WHITE-BELLIED BLUE - வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் WHITE-BELLIED DRONGO - வெள்ளை வயிற்றுக் கரிச்சான் WHITE-BELLIED SEA EAGLE - கடல் ஆளி WHITE-BELLIED SEA EAGLE - கடல் பருந்து WHITE-BELLIED SHORTWING - குட்டை இறக்கையன் WHITE-BELLIED TREEPIE - வெள்ளை வயிற்று வால் காக்கை WHITE-BREASTED WATERHEN - கம்புள் கோழி WHITE-BROWED BULBUL - வெண்புருவச் சின்னான் WHITE-BROWED FANTAIL FLYCATCHER - வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் WHITE-CHEEKED BARBET - சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) WHITE-EYED BUZZARD - வெள்ளைக்கண் வைரி WHITE-HEADED BABBLER - வெண்தலைச் சிலம்பன் WHITE-HEADED KITE - உவணம் WHITE-NECKED STORK / WOOLLY-NECKED STORK - வெண்கழுத்து நாரை WHITE-RUMPED MUNIA - வெண்முதுகுச் சில்லை WHITE-THROATED FANTAIL - வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் WHITE-THROATED KINGFISHER - வெண்தொண்டை மீன்கொத்தி WHITE-THROATED MUNIA - வெண்தொண்டைச் சில்லை WIRE-TAILED SWALLOW - கம்பிவால் தகைவிலான் WOOD SANDPIPER - பொரி உள்ளான் WYNAAD LAUGHINGTHRUSH - வயநாட்டுச் சிரிப்பான் YELLOW BITTERN - மஞ்சள் குருகு YELLOW-BROWED BULBUL - மஞ்சள்புருவச் சின்னான்/வெண்புருவக் கொண்டலாத்தி YELLOW-CROWNED WOODPECKER - மஞ்சள் நெற்றி மரம்கொத்தி YELLOW-EYED BABBLER - மஞ்சள்கண் சிலம்பன் YELLOW-FOOTED GREEN PIGEON - பச்சைப்புறா YELLOW-LEGGED BUTTONQUAIL - மஞ்சள்கால் காடை YELLOW-THROATED BULBUL - மஞ்சள்தொண்டைச் சின்னான் YELLOW-THROATED SPARROW - மஞ்சள் தொண்டைச் சிட்டு YELLOW-WATTLED LAPWING - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி ZITTING CISTICOLA - கருங்கோட்டுக் கதிர்க்குருவி இருப்புப்பாதை அருஞ்சொல் விளக்கத்தொகுதி A - வரிசை ADEQUATE DISTANCE - போதும் தொலைவு - ஒரு இருப்பூர்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது அதை தடையிட்டு நிறுத்தவைப்பதற்காக தேவைப்படும் பாதுகாப்பான தொலைவு AIRCONDITIONED CHAIR CAR - குளிர்சாதன இருக்கை இருப்புப்பெட்டி AIRCONDITIONED SLEEPER CAR/COACH - குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி ALIGNMENT - இருப்புவழி - ஒரு தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி ALL-CLEAR SIGNAL - முழுத்தெளிவுச் சைகை APRON - ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க; இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம் B - வரிசை BALANCING SPEED - நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable cruising speed) BANKER - துணையுந்துப்பொறி - மலை அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துப்பொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும் நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள் பிரிவதையும் தடுக்கும் BERTH - அணைகரை BOGIE - இருப்புப்பெட்டி C - வரிசை CATENARY - சங்கிலியம் - மின்சார கம்பி அமைப்பு CHAIR CAR - இருக்கை இருப்புப்பெட்டி D - வரிசை DEAD-END SIDING - முட்டுப் பக்கப்பாதை - வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding) DOUBLE LINE - இரட்டை இருப்புப்பாதை DRIVING CAB - இயக்கிருப்புப்பெட்டி - இழு-தள்ளு அமைப்பில் உந்துப்பொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத் தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி E - வரிசை ENGINE (LOCOMOTIVE) - உந்துப்பொறி F - வரிசை FACING POINTS - விலகும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம் G - வரிசை GAUNTLETED TRACK - பின்னல் இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு தடமாகவும் அமையும் H - வரிசை HEADWAY - இடைநேரம் - இரண்டு தொடந்துவரும் தொடரூர்திகளுக்கிடையே உள்ள நேரம் HOTEL POWER - இருப்பு மின்சாரம் - இருப்பூர்தி விசிறி, விளக்கு ஆகியவற்றிற்கு செலவாகும் மின்சாரம்; இது மின்னாக்கி, மின்கல அடுக்கு அல்லது இருப்பூர்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது I - வரிசை J - வரிசை K - வரிசை KING LEVER - தலைப்பு நெம்புகோல் - தொலைவமைந்தச் சைகைகளின் ஆளியக்கத்தை செயலிழக்கச் செய்யும் நெம்புகோல்; இது சைகைகளை தன்னியக்கச் செய்யும் L - வரிசை LEVEL CROSSING - இருப்புப்பாதைக் கடவை LOCOMOTIVE - உந்துப்பொறி M - வரிசை N - வரிசை O - வரிசை P - வரிசை PANTOGRAPH - வரைச்சட்டம் - மின்சார இருப்பூர்தியின் கூரை மீது அமையும் மின்சார கம்பிவடத்தை வருடும் மாழைச் சட்டம் PHASE GAP - கட்ட இடைவெளி - ஒரு மின்நிலையம் பல்வேறு முனைகளில் சங்கிலியத்திற்கு (catenary) மின்சாரம் அளிக்கும் எல்லையைக் கடத்தும் போது ஏறபடும் சிறுநேர மின் துண்டிப்பு POINTS - பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் அல்லது சேரும் இடம் Q - வரிசை R - வரிசை RACK - இருப்படுக்கு - உந்துப்பொறி (engine) சேர்க்கப்படாத இருப்புப்பெட்டித் தொடர் S - வரிசை SIDING - பக்கப்பாதை - வழித்தடமாகத பயனாகாத இருப்புப்பாதை SINGLE LINE - ஒற்றை இருப்புப்பாதை SLEEPER (TRACK) - படுக்கட்டை SLEEPER CAR/COACH - படுக்கை இருப்புப்பெட்டி T - வரிசை TRAILING POINTS - சேரும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை சேரும் இடம் U - வரிசை V - வரிசை W - வரிசை X - வரிசை Y - வரிசை Z - வரிசை தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி Adventitous Root - இடமாறு வேர், வேற்றிட வேர் Aerial Root - விழுது Aestivation - இதழ் அமைப்பு Aggregate Fruit - திரள் கனி, ஒருபூத்திரள் கனி Amphibious Plant - நிலநீர்த் தாவரம் Androecium - ஆண் பகுதி Angiosperm - விதையுறையுள்ள, மூடுவிதையுள்ள Annual - ஒரு பருவச் செடி Anther - மகரந்தப் பை, தாதுப்பை Asexual Reproduction - கலவா இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம், பாலிலி இனப்பெருக்கம் Autogamy - தன்னினக் கலப்பு Axil - கக்கம், இலைக்காணம் Barb - சுணை Berry - சதைக்கனி Biennial - இருபருவச் செடி Bipinnate - ஈரிறகு வடிவ Bisexual - இருபால் Blade - இலைப்பரப்பு Bract - பூக்காம்பிலை Bracteole - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு Breathing Root - மூச்சு வேர் Budding - அரும்புதல் Bulb - பூண்டு Bulbil - கறளைப் பூண்டு Buttress Root - அண்டை வேர் Calyx - புல்லிவட்டம் Capsule - வில்லை Caryopsis - உமி ஒட்டிய Caterpillar - கம்பளிப் புழு Cell Sap - உயிரணு நீர் Chlorophyll - பச்சையம் Chloroplast - பசுங்கனிகம் Climber - ஏறுகொடி Compound Leaf - கூட்டிலை Core - வயிரம் Corm - தண்டையக் கிழங்கு Corolla - அல்லிவட்டம் Cortex - புறணி Cotyledon - விதையிலை Creeper - படர்கொடி Cross-section - குறுக்குவெட்டு முகம் Cross Pollination - அயல்மகரந்தச் சேர்க்கை Cryptogram - பூவாதன Cuticle - புறத்தோல் Cyme - வளரா நுனி Cytology - உயிரணிவியல் Deciduos - உதிருகிற Degeneration - சிதைவு Dichogamy - பரவமாறி Dicotyldonous - இருவிதையிலையுள்ள Dispersal - பரவுதல் Down Feather - பொடி இறகு Drupe - உள்ளொட்டுத் தசைக் கனி Embryo - முளைக்கரு Embryo Sac - கருப்பை Endocarp - உள்ளோடு Endodermis - அகத்தோல் Endosperm - முளைசூழ் தசை Epigeal - தரைமேல் Epiphyte - தொற்றிப் படரும் பயிர் Epiphytic - தொற்றிப் படருகிற Fascicle - கொத்து Fertilization - கருவுறுதல் Fibrous Root - நார் வேர் Filament - தாள் Foliage Lead - இலைக் கொத்து Follicle - ஒருபுற வெடிகனி Fruit - கனி Fungicide - பூஞ்சைக்கொல்லி Fungus - பூஞ்சை Fusiform - நீள் வடிவம் Germination - விதை முளைத்தல் Gymnosperm - உறையில்லா விதை Gynoecium - பெண் பகுதி Haustoria - உறிஞ்சுறுப்புக்கள் Heliotropism - ஒளிநாட்டம் Herb - சிறுசெடி, மூலிகை Hilum - விதைத் தழும்பு Histology - திசுவியல் Humus - இலை மக்கு Hybrid - கலப்பினம் Hydrophyte - நிலநீர்த் தாவரம் Hydrotropism - நீர்நாட்டம் Hypogeal - தரைக்கீழ் Imbillition - உறிஞ்சுதள் Inflorescence - பூங்கொத்து, மஞ்சரி, துணர் Insectivorous - பூச்சி தின்னும் Interate - கணுவிடை Irritability - உறுத்துணர்ச்சி Lamina - இலைப்பரப்பு Lateral Root - பக்க வேர் Layering - பதியம் போடுதல் Legume - இருபுற வெடிகனி Lenticle - பட்டைத் துளை Longitudinal Section - நெடுக்குவெட்டு முகம் Membrane - சவ்வு Meristem - ஆக்குத் திசு Mesocarp - இடைக்கனியம் Mesophyte - வளநிலத் தாவரம் Mesophyll - விதைத் துளை Monocotyldonous - ஒருவிதையிலையுள்ள Moss - பாசி Moth - அந்துப் பூச்சி Mould - பூஞ்சைக்காளான் Moulting - தோல் உறிதல், இறகு உறிதல் Multiple Fruit - கூட்டுக் கனி Mushroom - நாய்க்குடை, காளான் Nectar - மது Node - கணு Nucleus - உட்கரு Nymph - இளம்பூச்சி Osmosis - சவ்வூடுபரவல் Ovary - சூற்பை Ovule - சூல்வித்து Ovum - சூல் Oroxylum Indicum - அச்சி Palisade - வேலிக்கால் அணு Parasite - ஒட்டுண்ணி Pedicel - பூக்காம்பு Peduncle - மஞ்சரித் தண்டு Perenchyma Cell - சோற்றணு Perennial - பல்லாண்டு பருவ Perianth - அல்லி புல்லி இதழ்கள் Petal - அல்லி Petiole - இலைக் காம்பு Phanoregam - பூப்பன Phloem - பட்டையம் Photosynthesis - ஒளிச்சேர்க்கை Phylloclade - இலைத் தொழில் தண்டு Phyllode - இலைத் தட்டைக்காம்பு Phyllotaxi - இலையொழுங்கு Pistle - சூலகம் Pith - உட்சோறு Pitted Vessel - குழிக்குழாய் Plant Pathology - பயிர் நோய்க்கூற்றியல் Plumule - முளைக்குருத்து Pneumatophore - மூச்சு வேர் Pollen - மகரந்தம் Proboscis - உறிஞ்சி Propagation - வம்ச விருத்தி, இனப்பெருக்கம் Protective Colouration - காப்பு நிறம் Putrefaction - அழுகுதல் Radial - ஆரவாட்டு Samara - வெடியா சிறகுக் கனி Saprophyte - சாறுண்ணி Sap (wood) - மரச்சாறு Scale Leaf - செதில் இலை Seed Coat - விதையுறை Seedling - நாற்று Self Pollination - தன் மகரந்தச் சேர்க்கை Sepal - புல்லிதழ் Sessile - காம்பிலி Shoot - தண்டுக் கிளை Shrub - குறுஞ்செடி Sieve Tube - சல்லடைக் குழாய் Spadix - மடல் மஞ்சரி Spathe - பாளை Sperm - விந்தணு Saprophyte - சாறுண்ணி Sap (wood) - மரச்சாறு Scale Leaf - செதில் இலை Spike - கதிர், காம்பில்லா மஞ்சரி Spine - வளைமுள் Stamens - மகரந்தக் கேசரங்கள் Stigma - சூல்முடி Stilt Root - ஊன்று வேர் Stipule - இலையடிக் கதிர், இலையடிச் செதில் Stolon - ஓடு தண்டு Stoma - இலைத் துளை Style - சூல் தண்டு Succulent - சாறுள்ள Sucker - உறிஞ்சி Symplocos Racemosa - வெள்ளிலாதி Taxonomy - பகுப்பியல் Tendril - பற்றி, பற்றுக்கம்பி, கொடிச்சுருள் Testa - (விதை) வெளியுறை Thalamus - பூவடிக் கிண்ணம் Transpiration - நீராவிப் போக்கு Transplant, Transplantation - மாற்றி நடு, மாற்றி நடுதல் Tropism - நோக்கித் திரும்பல் Tuber - கிழங்கு Turgid - வீங்கிய, பருத்த Twiner - பின்னுகொடி, சுற்றுக்கொடி Umbel - குடை மஞ்சரி Unisexual - ஒருபால் Vaccuole - சிறு வெற்றிடம் Venation - நரம்பமைப்பு Vernation - இதழமைப்பு Vessel - குழாய் நாளம் Web - விரலிடைத் தோல் Weed - களை Xerophyte - பாலைத் தாவரம் Xylem - மரவியம் Yolk - மஞ்சள் கரு டென்சிங் நோர்கே டென்சிங் நோர்கே ("Tenzing Norgay", (மே 1914 – மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார். டென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார். 1892 1892 (MDCCCXCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்). பகாவுல்லா பகாவுல்லா ("Bahá'u'lláh", "ba-haa-ol-laa" அரபு மொழி: بهاء الله) "கடவுளின் புகழ்", நவம்பர் 12, 1817 – மே 29, 1892), பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் மிர்சா உசேய்ன் அலி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார். இவர் பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார். மிர்சா உசேய்ன் அலி 1817 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பாரசீகத்தின் ஷா மன்னரின் அரசவையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றியவர். பஹாவுல்லா குழந்தைப் பருவம் முதற்கொண்டே அறிவிலும் விவேகத்திலுமம் பெரிதும் வேறுபட்டவராகவும், நீதிக்கு பாடுபடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார். இவர் ‘பா’ப் அவர்களை ஒரு கடவுளின் அவதாரம் என ஏற்றுக்கொண்டு அச்சமயத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பெரிதும் பாடுபட்டார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்து’ல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர். ‘பா’ப் அவர்களின் இறப்புக்கு அரசாங்கமே காரணம் என நம்பிய ‘பா’ப் அவர்களின் புத்தி பேதலித்த மூன்று சீடர்கள் மன்னரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் இத்திட்டம் நிறைவேறாததோடு, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ‘பா’ப் அவர்களின் சீடர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் பிரதானமாகவும் விளங்கிய பஹாவுல்லா அவர்களே இக்கூட்டத்தினருக்குத் தலைவர் என அரசாங்கம் தீர்மானித்து அவரைக் கைதும் செய்தது. கைது செய்யப்பட்ட பஹாவுல்லா தெகரான் நகரின் பாதாளச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழியைக் கொண்டது இச்சிறை. அது சன்னல்களோ காற்றுப் புக வேறு வழிகளோ இல்லாத ஒரு பயங்கரமான சிறையாகும். இதற்குள் அடைக்கப்படும் பலர் இதற்குள்ளேயே இறந்துபோவது வழக்காம். பயங்கர துர்நாற்றம் நிறைந்த இச்சிறையில் பஹாவுல்லா 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுடைய சங்கிலிகளால் பிணைக்ப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார். “சியாச் சால்” என அழைக்கப்பட்ட இச்சிறையில்தான் தாம் கடவுளின் அவதாரம் எனும் அறிவிப்பு கனவில் ஒரு தேவகன்னியின் உருவில் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய தூதரின் தலையீட்டினால் பஹாவுல்லா குற்றமற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒரு நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த நிபந்தனையானது, பஹாவுல்லா பாரசீக நாட்டை விட்டு நாடுகடத்தப்பட வேண்டும் என்பதாகும். பெரும் பனியிலும் கடும் குளிரிலும், கர்ப்பினியாகவிருந்த தமது மனைவியோடும் தமது பிள்ளைகளோடும் பிற மக்களோடும் காடு மலைகளைக் கடந்து இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டார். இராக் நாடு அப்போது ஒட்டமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு பாக்தாத் நகரை வந்தடைந்த பஹாவுல்லா, அந்த நகரில் 1863 வரை வசித்தார். இங்கும் பொறாமைக்காரர்களாலும், எதிரிகளாலும் பல இன்னல்களுக்கு ஆளாகி, பஹாவுல்லா இரண்டு வருடம் வனவாசம் சென்றார். வனவாசத்திற்குப் பிறகு திரும்பி வந்த பஹாவுல்லா அவர்கள் அங்கு வாழ்ந்த ‘பா’ப் அவர்களைப் பின்பற்றிய சமூகத்தினரை மேம்பாடு காணச் செய்வதில் ஈடுபட்டார். இவரின் புகழ் வெகுவேகமாக எங்கெங்கும் பரவியது. இதன் காரணமாக அங்கு பாரசீகத்தின் தூதராக பணியாற்றியவரின் பொறாமைக்கும் ஆளானார். அத்தூதரின் தூண்டுகோலின் காரணமாக துருக்கிய மன்னரின் ஆணைப்படி இஸ்தான்புல் நகருக்கு வரும்படி பஹாவுல்லா ஆணையிடப்பட்டார். இந்த ஆணையின் முதல் படியாக, ஏப்ரல் 21ம் நாள் அவர் டைகிரிஸ் நதிக் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் எனும் பூங்காவிற்கு முதலில் சென்று 12 நாட்கள் தங்கினார். அவரின் குடும்பத்தினர் அவர் சென்ற ஒன்பதாம் நாள் அவரோடு சென்று சேர்ந்தனர். பிறகு 12வது நாள் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சில நண்பர்களும் ரித்வான் தோட்டத்தை விட்டு கொன்ஸ்டான்டினோப்பல் (இஸ்தான்புல்) நகரை நோக்கிப் பிரயாணத்தைத் துவங்கினர். ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா சென்றடைந்த முதல் நாளன்று ‘பா’ப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட கடவுளின் தூதர் தாமே என அங்கிருந்தோருக்கு பஹாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். முகமது முன்னறிவித்த மஹ்தி மற்றும் தூதரும் தாமே என அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு தினம் (ஏப்ரல் 21) உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என ஒரு மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரித்வான் தோட்டத்தை விட்டு பஹாவுல்லா தமது குடும்பத்தினருடனும் வேறு பல நம்பிக்கையாளர்களுடனும் இஸ்தான்புல் நகரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார். சில மாதங்களே இஸ்தான்புல் நகரில் இருந்தார். ஆனால் அவரை அங்கும் இருக்கவிடாமல் துருக்கி அரசாங்கம் அவரை அந்நாளில் ஏட்ரியாநோப்பல் என வழங்கப்பட்ட எடிர்னே நகருக்குப் போகும்படி ஆணையிட்டது. அங்கும் அவரது எதிரிகளால் பஹாவுல்லா மறுபடியும் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னணியில் செயல்பட்ட அவருடைய எதிரிகளின் செயல்களினால் அரசாங்கம் மீண்டும் பஹாவுல்லாவை நாடுகடத்த முடிவு செய்தனர். இம்முறை அவரை பாலஸ்தீனத்தின் ஆக்கா நகருக்கு நாடுகடத்த முடிவு செய்யப்பட்டது. ஏட்ரியாநோப்பல் நகரில் வசித்த காலத்தில் பஹாவுல்லா செய்த மகத்தான காரியம், தமது தூதுப்பணியை, தாம்தான் இறைவனின் அவதாரம் என்பதை நிருபங்கள் மூலம் உலக அரசர்களுக்கும், அதிபர்களுக்கும், சமயத்தலைவர்களுக்கும் தெரிவித்ததே ஆகும். ஆக்கா நகரம் ஒட்டமான் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஓர் ஊராகும். இந்த இடம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். பஹாவுல்லா அவர்களும் அவருடன் இருந்தவர்களும் குற்றவாளிகளாகவே இங்கு அனுப்பப்பட்டனர். ஆக்கா நகர சிறைவாசத்தைப் பற்றி கூறுகையில் தமது வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இந்த ஆக்கா நகரத்தின் சிறையில் அனுபவித்த துன்பத்திற்கு ஈடாகாது என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக்கா நகரத்தின் மீது பறக்கும் எந்தப் பறவையும் அந்த நகரின் கொடிய துர்நாற்றக் காற்று பட்டவுடன் அப்படியே செத்து விழும் என்பது அக்காலத்து வழக்கு. இங்கு பஹாவுல்லா படிப்படியாக ஆக்கா நகரத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்றார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியேறி சிறிது சிறிதாக ஆங்காங்கு ஆக்கா நகரில் குடியேறினர். பஹாவுல்லா அவர்கள் சிறைக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிற்கு முதலில் குடிபெயர்ந்து இறுதியாக பாஹ்ஜி எனப்படும் இடத்தில் ஒரு மாளிகைக்குக் குடிபெயர்ந்து மீதமிருந்த தமது இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இந்த மாளிகையும் அதனை ஒட்டியுள்ள பஹாவுல்லா அவர்களின் கல்லறையும் இன்று பஹாய்களின் புனிதத் ஸ்தலங்களாக விளங்குகின்றன. கானமயில் கானமயில், ("Ardeotis nigriceps") இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும். இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன. இப்பறவை இராசத்தான் மாநிலப்பறவையாகும். பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா பேங்க் ஆஃப் அமெரிக்க பிளாசா (Bank of America Plaza) அட்லான்டாவிலிருக்கும் வானளாவி ஆகும். இதன் முன்னாள் பெயர் "நேஷன்ஸ் பேங்க் கட்டிடம்" (NationsBank Building). 311.8 மீ (1,023 அடி) உயரமுடைய இக்கட்டிடம் உலகில் இருபத்தி நான்காம் மிக உயரமான கோபுரம் ஆகும். சிக்காகோவிலும், நியூயார்க் நகரத்திலும் இருக்கும் கோபுரங்கள் தவிர அமெரிக்காவில் மிகவும் உயரமான கோபுரம் ஆகும். 1991இல் கட்டுமானை தொடங்கப்பட்டு பதிநான்கு மாதங்களில் கட்டுமானம் முடிந்தது. அட்லான்டாவில் இரண்டு தொலைகாட்சி நிறுவனங்கள் இந்த கோபுரத்திலிருக்கும் அலைக்கம்பத்தைப் பயன்படுத்துகின்றன. உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள் ரஷ்யாவின் கூட்டுக்குடியரசு 83 ஆட்சிப்பிரிவுகளைக் கொண்டவை. இந்த 83 ஆட்சிப்பிரிவுகளில் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவிற்கும் சமமான உரிமைகள் உண்டு. ஒவ்வொரு ஆட்சிப்பிரிவில் இருந்தும் இரண்டு இரண்டு சார்பாளர்கள் வீதம் ரஷ்யக் கூட்டரசு மன்றத்தில் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையில்) பங்கு கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சிப்பிரிவின் தன்னாட்சித் தன்மைகளில் வேறுபாடுகள் உண்டு. கூட்டரசின் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவும் கீழ்க்கண்ட பிரிவு வகைகளின் ஏதேனும் ஒரு வகைப் பிரிவில் அடங்கும்: மாவியம் மாவியம் அல்லது செல்லுலோசு ("cellulose") என்பது ஒரு என்னும் வேதி வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும். ஒவ்வொரு குழுவான ஆறு கரிம அணுக்களுக்கும், 10 ஐதரச அணுக்களும் 5 ஆக்சிச அணுக்களும் இணைப்பு கொண்ட நெடுந்தொடர் கரிமச்சேர்பம். அது பல நூற்றில் இருந்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எளிய இனியமாகிய -குளுக்கோசு அலகுகளை நீண்ட சங்கிலியாக இணைத்த பல்லினியம் அல்லது பாலிசாக்கரைடு என்னும் வகையைச் சேர்ந்த ஒரு சேர்மம். மாவியம், பசும் தாவரங்களின் செல்களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை கோலுரு நுண்ணுயிர் (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது. தொழிலகப் பயன்பாட்டுக்கு, மாவியம் பெரும்பாலும் மரக்கூழில் (pulp) இருந்தும் பஞ்சில் இருந்துமே எடுக்கப்படுகிறது. முதன்மையாக அட்டைகளும், காகிதங்களும் செய்ய மாவியம் உதவுகிறது. சிறிதளவு பிற பொருட்கள் செய்யவும் இது பயன்படும் (cellophane, rayon,etc). சில மிருகங்களும், கரையான் போன்ற பூச்சிகளும் மாவியத்தைச் செரிக்க வல்லன. அவற்றின் குடல்களில் வாழும் பிற நுண்ணுயிரிகள் இவற்றைச் செரிக்க உதவும். மனிதர்களுக்கு மாவியத்தை உண்டால் செரிக்காது. அதன் காரணமாகவே உணவுமுறை நார்ச்சத்து என்று இது வழங்கப் படும். நீர்விரும்பு தன்மையாலும் செரிக்காமல் இருப்பதாலும் மலச்சிக்கலை எதிர்க்க இது பெரிதும் உதவும். மாவியத்தில் இருந்து மாவிய எத்தனால் என்னும் எரிபொருளும் செய்யப்படும். 1431 1431 (MCDXXXI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1430கள் 1430கள் ("1430s") என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் கிபி 1430ஆம் ஆண்டு துவங்கி 1439-இல் முடிவடைந்தது. சத்திய சாயி பாபா சிறீ சத்ய சாயி பாபா ("Sathya Sai Baba", தெலுங்கு: "సత్య సాయిబాబా",: நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் "இறை அவதாரம்" எனப் போற்றப்படுகிறார். இவர் ஒரு சித்தரும் ஆவார். விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர். சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார். சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1350 சத்ய சாய் அமைப்புகள் 155 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 100 கோடி பேர் (2007இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 200 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராயூ ரட்னாகரம். சத்திய சாயி இவர்களுக்கு 8-ஆவது குழந்தையாகப் பிறந்தார். ”சத்திய நாராயண விரதம்” இருந்து பிறந்ததால், இவருக்குச் சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமியச் சமூகம் (Sociocare), விழுமியக் கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.. விழுக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.. விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக அருள்மிகு சத்தியசாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது..புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் உயர்சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்., சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை. அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேன்மைமிக்க சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன . தனது ஆன்மீகச் சேவைகளினிடையேயும் சமயசார்பற்ற முறையில் செயலாற்றி வந்தார். அயோத்தி சிக்கல், 1990-களில் தீவிரமாக இருந்தபோது, இந்துத்துவ அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டுகோள்களை நிராகரித்து நடுநிலை காத்தார். பல கிறித்தவர்களையும், இசுலாமியரையும் தனது பற்றாளர்களாகக் கொண்டிருந்தவேளையிலும், தங்கள் சமயத்தையும் நம்பிக்கைகளையும் மாற்றிகொள்ள வேண்டியதில்லை என்றார். தன்னைப் பின்பற்றிய பல நாட்டுத் தலைவர்களிடத்தும் நடுநிலை காத்தார். இவர் தன் கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வருகின்றார். அவருடைய பேச்சுக்கள் 'சத்ய சாய் ஸ்பீக்சு' என்று ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும், ஆன்மீகக் கருத்துக்களின் விளக்கமாகப் பலநூல்களை அவர் தொடர்ந்து மாத இதழான சனாதன சாரதி என்ற மாதப் பத்திரிகையில் எழுதிவருகின்றார். அவரின் சொற்பொழிவுகளும் தொடர்ந்து அவ்விதழில் வெளிவரும். இந்தச் சனாதன சாரதி மாத இதழானது, இந்திய மொழிகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி முதலிய பல மொழிகளில் வெளிவருகின்றது. உலகின் பெரும்பாலான மொழிகளிலும், சப்பானியம், உருசியம், செருமானியம், கிரேக்கம், போன்ற பல மேலைநாட்டு மொழிகளிலும் வெளிவந்துகொண்டுள்ளது. மெலும் அவர் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள், எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இந்தப் படைப்புக்கள், அருள்மிகு சத்தியசாயி நூல்கள் நல்ல தரமான தாளில், அழகிய அச்சில் மிகக் குறைந்தவிலையில் விற்கப்படுகின்றன. 84 வயதான சாயி பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக அருள்மிகு சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் 2011 மார்ச் 28ம் திகதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரது உயிர் பிழைப்பிற்காகப் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்து வந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இவர் இறந்த அன்று (ஏப்ரல் 24, 2011) பூட்டப்பட்ட இவரது தனியறையான யசுர் வேத மந்திரத்தில் என்ன உள்ளது என்பதையறியப் பலதரப்பினரும் ஆர்வம் காட்டிவந்தனர். இந்நிலையில் யசுர் வேத மந்திரம் சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்துச் சூன் 16, 2011 அன்று திறக்கப்பட்டது. அவ்வறையில் பெரும்பாலும் பணமும் நகையும் கணினிகளுமே இருந்தன. இவையனைத்தும் அவரது கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களைக் கொண்டு தனியே கணக்கெடுத்துப் பிரிக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமை நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (Immune system) என்பது, நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த பொறிமுறைகளின் தொகுதி ஆகும். இத் தொகுதி, வைரசுகள் முதல் ஒட்டுண்ணிப் புழுக்கள் வரையிலான நோய் உண்டாக்கிகளை கண்டுபிடிக்கின்றது. இத் தொகுதி முறையாகச் செயற்படுவதற்கு உயிரினங்களின் சொந்த ஆரோக்கியமான உயிரணுக்கள் அல்லது கலங்கள், திசுக்கள் (tissue) என்பவற்றிலிருந்து முன் சொன்ன நோயுண்டாக்கிகளைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் உயிரினங்களில் தொற்றிக்கொள்வதற்குப் புதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்வதனால் இவ்வாறு கண்டறிதல் மிகவும் சிக்கலானது ஆகும். இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான பக்டீரியா போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நொதியத் (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால மெய்க்கருவுயிரிகளில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், டிபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன. மனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளில் இந்த நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் முன்னேற்றமடைந்த எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு பொறிமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த பொறிமுறையானது பல்வேறு வகையான புரத மூலக் கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு இடையிலான இயக்க நிலையிலுள்ள வலைப் பின்னலை உள்ளடக்கியதாகும். இதனால் மனிதனிலுள்ள சிக்கலான எதிர்ப்பு விளைவானது, நீண்டகால தொடர் பயன்பாட்டால், குறிப்பிட்ட நோய்க்காரணிகளை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்ப்பு திறனை நினைவில் கொள்ளக் கூடிய ‘இசைவாக்கப்பட்ட எதிர்ப்பாற்றல்' ("adaptive immunity" or "acquired immunity") என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராக உருவாகும் முதலாம்தர எதிர் விளைவானது நினைவில் கொள்ளப்பட்டிருக்கையில், அதே நோய்க்காரணி மீண்டும் தாக்கும்போது, முன்னையதை விடவும் வீரியமான எதிர் விளைவானது உடலில் உருவாவதனால், அந்நோய்க்காரணிக்கு எதிராக உடல் தொழிற்பட்டு நோயை முற்றாக எதிர்க்கும் தன்மையை பெறுகின்றது. இதனடிப்படையிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறான நோயெதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் குறைபாடும் ஒரு நோயாக இருக்கிறது. இது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய் (immunodeficiency) என அழைக்கப்படுகிறது. மனிதரில் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியின் திறன் சாதாரண நிலையைவிட குறையும்போது, பல தொற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவும், தொற்று நோய்களால் இறப்பு ஏற்படவும் ஏதுவாகின்றது. இவ்வகை குறைபாட்டு நோயானது, ஒருவரில் பாரம்பரிய முறையில் கடத்தப்படும் ஒரு நோயாகவோ, அல்லது எச்.ஐ.வீ (HIV) போன்ற வைரசு தொற்றினால் ஏற்படும் எய்ட்சு (AIDS) நோயாகவோ இருக்கலாம். அதேவேளை, சிலசமயம், இந்த எதிர்ப்பாற்றல் முறைமையின் அளவுக்கதிகமான தொழிற்பாட்டினால், சாதாரண இழையங்கள்கூட ஒரு வெளி உயிர்க் காரணியாக இனம் காணப்பட்டு தாக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இது தன்னுடல் தாக்குநோய் என அழைக்கப்படும். நோய் எதிர்ப்பாற்றல் இரு வகைப்படும். முதலாம் வகையான தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றல் அனைத்து வகையான நோயாக்கிகளையும் தனித்துவமில்லாமல் தடுக்க பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமை தாவரங்கள், விலங்குகள் உட்பட மேலும் பய உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. எனினும் பல நோயாக்கிகள் இம்முறைமையை முறியடித்து நோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. உதாரணமாக அம்மை நோய்க்கான நோய்க்காரணி உடலினுள் வந்த பின்னர் அதனை தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றலினால் அழிக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் மூலம் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றலில் நோயாக்கிகளின் செயற்பாட்டைத் தடுக்கும் பிரதான கூறாக பிறபொருளெதிரிகள் உள்ளன. ஒவ்வொரு பிறபொருளெதிரியும் குறிப்பிட்ட நோயாக்கியை மாத்திரமே இனங்கண்டு தாக்கக்கூடியன. ஏனையவற்றில் இவை ஆற்றலற்றவையாக உள்ளன. உதாரணமாக போலியோ வைரசுக்கான பிறபொருளெதிரி போலியோ வைரசுக்கு எதிராக மாத்திரமே வேலை செய்யும்; அம்மை நோய்க்கெதிராக இப்பிறபொருளெதிரி வேலை செய்யாது. அம்மை நோய்க்கென வேறு வகையான பிறபொருளெதிரி உருவாக்கப்பட வேண்டும். எனவே இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நோயாக்கிகளை மட்டும் எதிர்த்துச் செயற்படுவதால் இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் எனப்படும். அனைத்து வகையான நோயாக்கிகளுக்கு எதிராகவும் ஒரே முறையில் எதிர்ப்பாற்ரலை வெளிப்படுத்தும் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை எனப்படும். இம்முறைமை மூலம் பொதுவாக பக்டீரியாக்களும், பூஞ்சைகளும் அழிக்கப்படுகின்றன/ தடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வகை நோயெதிர்பாற்றலால் நோயாக்கிகளிடமிருந்து நீடித்து நிலைக்கும் நோயெதிர்ப்பாற்றலை வழங்க முடியாது. அதாவது இவ்வகை நோயெதிர்ப்பாற்றலால் தடுக்கப்படும் நோயாக்கி பின்னர் மீண்டும் நோயைத் தோற்றுவிக்கலாம். எமது உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணங்கிகளின் உட்பிரவேசத்தைத் தடுப்பதற்காக விசேடமாகத் திரிபடைந்த மேற்பரப்புக்கள் கூர்ப்படைந்துள்ளன. உடலைப் பாதுகாக்கும் முக்கிய தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் கூறாக தோல் உள்ளது. தோலின் வெளிமேற்பரப்பு இறந்த கலங்களாலானது; கெரெட்டினேற்றப்பட்டுள்ளது; தீங்கிழைக்காத பல நுண்ணங்கிகளைக் கொண்டுள்ளது; நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களுள்ள வியர்வைச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. தோலிலுள்ள தீங்கிழைக்காத நுண்ணங்கிகள் (Natural flora) தீங்கிழைக்கும் நுண்ணங்கிகளுக்குப் போட்டியாக அமைவதோடு அவற்றை அழிப்பதிலும் பங்கெடுக்கின்றன. இவ்வகைத் தடுப்புக்கள் எம் உடலை பல்வேறு நோயாக்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. மூக்குக் குழி, தொண்டைக் குழியிலுள்ள சீதமும், இரைப்பையிலுள்ள உதரச் சாறும் மேற்பரப்புத் தடுப்புக்களான மேலதிக உதாரணங்களாகும். அத்தோலில் சிறிய இடத்தில் (lysosme) என்ற ஒன்று தோலை பாதுகாக்கிறது. மேற்பரப்புத் தடுப்புக்களை மீறி நோயாக்கி உடலினுள் உள்நுளையும் போது அழற்சி ஏற்படும். அழற்சியேற்பட்ட பகுதியில் குருதி மையிர்த்துளைக் குழாய்களின் விட்டம் அதிகரிப்பதால் குருதிப் பாய்மமும் வெண்குருதிக் கலங்களும் அப்பகுதியில் செறிவடைந்து வீக்கம் ஏற்படும். இதனால் அதிக வலியும் ஏற்படலாம். அதிக அனுசேப வீதத்தால் அப்பகுதியின் வெப்பநிலையும் உயரும். இதன் போது நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களாலும், வெண்குருதிக் கலங்களாலும் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. அழற்சியைத் தூண்டுவதில் வெண் குருதிக்கலமான மூலநாடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றலில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம், மூலநாடி, இயோசிநாடி ஆகிய வெண்குருதிக் கலங்கள் பங்களிக்கின்றன. இவற்றில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம் என்பன நோயாக்கிகளை விழுங்கி அழிக்கும் தின்குழியச் செயற்பாடு மூலம் நோயெதிர்ப்பாற்றலை வழங்குகின்றன. தனித்துவமற்ற நோயெதிர்ப்பாற்றலில் முக்கியமான வெண்குருதிக் கலம் நடுநிலைநாடி/ நடுவமைநாடி ஆகும். குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் இதுவே அதிகளவானதாக உள்ளது. குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் கிட்டத்தட்ட 50-60% ஆனவை நடுநிலை நாடிகளாகும். இவை அழற்சிச் செயற்பாட்டின் போது பாதிப்புக்குள்ளான கலங்களால் சுரக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு குருதியிலிருந்து பாதிக்கப்பட்ட இழையத்துக்குள் ஊடுருவிச் செல்லும். அங்கே தீங்கிழைக்கும் நோயாக்கிகளை தின்குழியச் செயற்பாடு மூலம் உள்ளெடுத்து எம்முடலை நடுநிலைநாடிகள் பாதுகாக்கின்றன. இது ஒவ்வொரு வகை நோயாக்கிக்கும் எதிராகத் தனித்துவமான முறையில் செயற்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமையில் பிறபொருளெதிரிகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வெண்குருதிக்கலமான நீணநீர்க் குழியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கூறியவாறு ஒரு வகைப் பிறபொருளெதிரி ஒரு வகை நுண்ணங்கியின் பிறபொருளை (அடையாளப்படுத்தியை) மாத்திரம் தாக்குகின்றமை இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நோயெதிர்ப்பாற்றல் குறிப்பாக வைரசுக்களை எதிர்க்கப் பரவலாக நடைமுறைப்படுத்தப்படும் முறைமையாகும். இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (Natural Killer Cells) அல்லது NK உயிரணுக்கள் என்றழைக்கப்படும் இவை நிணநீர்க்கலங்கள் ஆகும். உள்ளக நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றன, அவை நேரடியாக உட்புகும் நுண்ணுயிர்களை ஆக்கிரமித்து தாக்குவதில்லை.மாறாக, இயற்கையாகக் கொள்ளும் உயிரணுக்கள் குறையெதிர்ப்பு கொண்ட விருந்தோமபி செல்களான புற்றுநோய்க்கட்டி உயிரணுக்கள் அல்லது வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் போன்ற செல்களை "சுயாதீனமற்ற" அல்லது "தன்னிலை மறந்த நிலை" என அழைக்கப்படும் ஒரு நிலையில் நாடி அழிக்கின்றன. இந்த காலப்பகுதி MHC I (பெரும் தசையொவ்வுமை சிக்கல்) என்று அழைக்கப்படுவதாகும்.இது விருந்தோம்பி செல்கள் வைரஸ் நோய்த்தொற்றுகளில் ஏற்படக்கூடிய சூழ்நிலையாகும்.பல வருடங்களாக இந்த என் கே செல்கள் என்றழைக்கப்படும் இயற்கையாக கொல்லும் உயிரணுக்கள் புற்று செல்களையும் பாதிக்கப்பட்ட உயிரணுக்களையும் எவ்வாறு அடையாளம் காண்கிறது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது.MHC I ஆனது பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் பரப்புகளில் செயல்படுவதால் "தன்னிலை மறந்த நிலை" மூலம் கொல்லும் உயிரணுக்கள் தூண்டப்படுகின்றன.கொல்லும் செல்களால் இயல்பான உடல அங்கீகரிக்கப்பட்டு, தாக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவை சுயமாக MHC பிறபொருளெதிரியாக்கியை (antigens) வெளிப்படுத்துகின்றன.அந்த MHC பிறபொருளெதிரியாக்கிகள் கொல்லும் உயிரணு நோயெதிர்ப்புப்புரத அறிமானிகள் (killing cell Immunoglobulin Receptors) (KIR) மூலமாக அங்கீகரிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் கொல்லும் செல்களில் தடைகளை உண்டாக்குகின்றன. தகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு பெறக்கட்ட நோய்த்தடுப்பாற்றல் என்று பரவலாகவும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு அமைப்பு என்று சில வேளைகளிலும் அறியப்படும் இந்நோய்த் தடுப்பாற்றலானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாகும். நிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும். அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும். "தன்னுடல் தாக்குமை" ("Autoimmunity") என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும். மிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிற்றினத்தோற்றம் சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது. அற்றுவிட்ட இனம் இனஅழிவு ("Extinction") என்பது ஓர் உயிரினம் முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். உயிரியலிலும், சூழலியலிலும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது அற்றுவிட்ட இனம் என்று அழைக்கப்படும். ஒரு உயிரினம் அல்லது உயிரினக் கூட்டம், அதாவது இனம் (உயிரியல்) முற்றாக உலகில் இருந்து அழிந்து போனதும், அது அற்றுவிட்ட இனம் (EX - Extinct) எனக் குறிப்பிடப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும். இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், தொல்லுயிர் எச்சங்கள் மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது. முதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது அருகிய இனம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அற்றுவிட்ட இனம் என்பது காப்பு நிலையில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது. கண்டப்பெயர்ச்சி பூமியியுள்ள கண்டங்களிள் ஒன்றுக்கொண்டு தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி (continental drift) ஆகும். இக்கருதுகோள் முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம் ஒர்டிலீயசு என்பவரால் முன்மொழியப்பட்டு, பின் 1912ஆம் வருடம் ஆல்பிரடு வேகனர் என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் உலகிலுள்ள எல்லாக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மாபெரும் நிலப்பரப்பாக அமைந்திருந்தன என்ற கருத்தை வெளியிட்டார். அதற்கு பான்கையா (pangaea) என்ற பெயரை சூட்டினார். அதற்கு முழு உலகம் என்று பொருள். பான்கையாவைச் சுற்றி ஒரே ஒரு கடல்தான் இருந்தது. அதற்கு பாந்தாலசா (Panthalassa) என்று பெயர். அதற்கு முழுக்கடல் என்று பொருள். ஆக ஆரம்பத்தில் ஒரே ஒரு மாபெரும் கண்டமும், ஒரே ஒரு மாபெரும் கடலும் மட்டுமே உலகத்திலிருந்தன. பான்கையா விரிசல் கண்டு பல துண்டுகளாயிற்று. அந்தத் துண்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்து பிரிந்தன. பூமியின் நடுப்பகுதியிலுள்ள சூடான பாறைக் குழம்பில் மிதக்கிற கருங்கல் திட்டுகளை போல அவை பிரிந்து சென்றன என்று கூறினார். இது கண்டப்பெயர்ச்சி கொள்கை எனப்படுகிறது. 1950 களில் கடலடித் தரைகள் தீவிரமாக ஆராயப்பட்டு அட்லாண்டிக் கடலின் நடுவில் ஒரு பெரிய மலைத் தொடரும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அடலாண்டிக் கடலின் நடுவில் ஒரு மாகெரும் விரிசல் ஏற்பட்டு அது மெல்ல அகலமாகிக் கொண்டிருப்பது உணரப்பட்டது. பின்னர் 1960ஆம் வருடங்களில் தக்க நிலவியல் சான்றுகளுடன் "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு" என்ற கோட்பாட்டுடன், நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது. 1968ஆம் ஆண்டில் அன்டார்டக்காவில் ஒரு புதை படிவ எலும்பு கண்டெடுக்கப்ட்டது. அது நீரிலும் நிலத்திலும் வாழ்கிற ஒரு விலங்கினுடையது. அது வெப்ப நாடுகளில் மட்டுமே வசிக்கக்கூடியது. அது எப்படித் தென் துருவக் குளிர்ப்பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. முன்னொரு காலத்தில் அன்டார்டிக்கா சூடாக இருந்திருகலாமெட்று வைத்துகு கொண்டால் கூட மற்ற கண்டங்களிலிருந்து கடலைத் தாண்டி அது அன்டார்டிக்காவுக்கு வந்திருக்க முடியாது என்று எண்ணப்பட்டது. 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அன்டார்டிக்காக் கண்டம் பூமியின் வெப்பப் பகுதியில் இருந்த போது அந்த விலங்கு அதில் வசித்திருக்கலாம். மாண்டு பூமியில் புதைந்திருக்கலாம். அண்டார்டிக்கா பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்த போது அதன் எலும்பும் கூடவே வந்து விட்டது. மாவிய எத்தனால் மாவிய எத்தனால் "(cellulosic ethanol/ceetol)" என்பது மரம், புல், உணவுக்காகா செடிகள் முதலானவற்றில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது லிக்னோசெல்லுலோசு என்னும் மாவிய வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. லிக்னோசெல்லுலோசு என்பது பெரும்பாலும் மாவியம் (செல்லுலோசு), அரை மாவியம் (ஹெமி செல்லுலோசு), மற்றும் லிக்னின் இவற்றால் ஆனது. தாவரங்களின் நிறையில் (திணிவில்) அதிக அளவில் அமைந்திருக்கும் கட்டமைப்புப் பொருள் லிக்னோசெல்லுலோசு தான். சோளத் தட்டு, கோரைப் புல்(?) (switch grass), மரத்துண்டுகள் முதலானவை மாவிய எத்தனால் எரிபொருளைத் தயாரிக்கச் சிறந்தவை ஆகும். மாவிய எத்தனாலும் சோளப்பயிர், சர்க்கரை முதலானவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சாதாரண எத்தனாலும் வேதியியல் முறைப்படி அச்சாக ஒன்றே என்றாலும், லிக்னோசெல்லுலோசு என்னும் மாவிய எத்தனாலின் ஆரம்பப் பொருள் இயற்கையில் அளவற்றுக் கிடைப்பது சிறப்பானதும் வசதியானதும் ஆகும். ஆனால், மாவியத்தில் இருந்து சர்க்கரை மூலக்கூறைப் பிரித்து, அவற்றை நொதித்து எத்தனால் தயாரிக்கும் நுண்ணுயிரிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் செய்யச் சற்று அதிகச் செலுத்தங்கள் தேவையாய் இருக்கும். அதிக அளவிலான மாவியத்தைக் கொண்டிருப்பதால், எத்தனால் தயாரிக்கக் கோரைப் புல்லின் மீது இற்றைக் காலத்தில் அதிகக் கவனம் திரும்பியுள்ளது. மாவிய எத்தனாலின் முக்கிய பலன் என்னவென்றால், வழக்கமான கன்னெய் போன்ற எரிபொருட்களை விட பசுங்குடில் வளிம வெளியேற்றத்தைச் சுமார் 85% குறைக்கிறது. இதனை அமெரிக்க அரசாங்கத்தின் ஆற்றலியல் துறையின் ஆய்வில் ஆர்கான் தேசிய சோதனையகம் வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஆனால் இயற்கை எரிவளி போன்றவற்றை அதிகம் பயன்படுத்தித் தயாரிக்கும் சாதாரண எத்தனால் பசுங்குடில் வளிம வெளியேற்றத்தைக் குறைப்பதாகவே தெரியவில்லை. நோபல் பரிசு பெற்ற பால் கருட்சன் என்பவர் சோளம், ஆமணக்கு, கரும்பு முதலானவற்றில் இருந்து பெறப்படும் எத்தனால் மொத்தத்தில் புவி வெப்ப ஏற்றத்தைக் குறைக்காமல் அதிகப் படுத்துவதற்குச் சிறிய விளைவை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளார். ஒட்டுண்ணிப் புழு ஒட்டுண்ணிப் புழு என்பது மெய்க்கருவுயிரி (eukaroytic) ஒட்டுண்ணிகளின் ஒரு பிரிவாகும். இது பேன்கள் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகளைப் போலன்றித் தாங்கள் தொற்றிக்கொள்ளும் ஓம்புயிர்களுக்கு உள்ளே வாழ்கின்றன. புழுக்கள் போன்ற இவ்வுயிரினங்கள் உயிருள்ள ஓம்புயிர்களிலிருந்து தமக்கு வேண்டிய உணவையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கின்றன. அதேவேளை ஓம்புயிர்கள் உணவிலிருந்து தமக்குவேண்டிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் அவை பலவீனம் ஆவதற்கும், நோயுறுவதற்கும் காரணமாக அமைகின்றன. சமிபாட்டுத் தொகுதிகளுள் வாழும் ஒட்டுண்ணிகள் குடல்வாழ் ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவை மனிதர்கள் அல்லது பிற விலங்குகளின் உடல்களுள் வாழக் கூடியன. ஒட்டுண்ணிப் புழுக்கள் மற்றும் அவை ஓம்புயிர்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை பற்றிய ஆய்வு புழுஒட்டுண்ணியியல் (Helminthology) எனப்படுகின்றது. ஒட்டுண்ணிப் புழுக்கள் நாடாப் புழுக்கள், உருளைப் புழுக்கள், தட்டைப் புழுக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒட்டுண்ணி வாழ்வு ஒட்டுண்ணி வாழ்வு (Parasitism) என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒருவகைக் கூட்டு வாழ்வு எனலாம். இதில், ஒரு உயிரினம், மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை. ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. நாடாப்புழுக்கள், பிளாஸ்மோடியம் இனங்கள், பேன்கள் முதலிய பலவகை உயிரினங்கள், முதுகெலும்பிகளான ஓம்புயிர்களுடன் கொண்டுள்ள தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும். ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான நோய்க்குறியியல் பாதிப்புக்கள், துணைநிலைப் பாலியல் இயல்புக் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். ஒட்டுண்ணிகளோ ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம் தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஓம்புயிர் உயிரியலில் ஓம்புயிர் ("host") அல்லது விருந்து வழங்கி என்பது, ஒட்டுண்ணிகளாக வாழும் வைரசுக்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றுக்கு உணவும், வாழிடமும் அளிக்கும் உயிரினங்களாகவும், அத்துடன் ஒன்றிய வாழ்வு (Symbiosis) வாழும் உயிரினங்களில் இணை வாழ்வை நடத்தும் அடுத்த உயிரினத்துக்கு உணவையும், வாழிடத்தையும் வழங்கும் உயிரினங்களாகவும் இருப்பவையேயாகும். விலங்குகளின் உடற்கலங்களில் வைரசுக்கள் ஒட்டுண்ணியாக வாழும்போது விலங்குகள் ஓம்புயிராகவும், நைதரசன் உருவாக்கும் பக்டீரியாக்கள் அவரைவகைத் தாவர வேர்களில் ஒன்றியவாழ்வு வாழும்போது அவரைவகைத் தாவரங்கள் ஓம்புயிராகவும், ஒட்டுண்ணிப் புழுக்கள் விலங்குகளில் வாழும்போது, விலங்குகள் ஓம்புயிர்களாகவும் இருக்கின்றன. தென்னாபிரிக்கக் குடியரசு தென்னாப்பிரிக்கக் குடியரசு ("South African Republic", , ZAR), பெரும்பாலும் டிரான்சுவால் என்றும் சிலநேரங்களில் டிரான்சுவால் குடியரசு ( Republic of Transvaal) என்றும் அறியப்படும் தன்னாட்சியான பன்னாட்டு ஏற்பு பெற்ற நாடு தென்னாப்பிரிக்காவில் 1852 முதல் 1902 வரை இருந்தது. இந்த நாடு முதல் பூவர் போர் எனக் குறிப்பிடப்படும் போரில் பிரித்தானியரை வீழ்த்தியது. மே 31, 1902இல் நடந்த இரண்டாம் பூவர் போரின் இறுதிவரை தன்னாட்சியுடன் திகழ்ந்தது. இரண்டாம் போரில் பிரித்தானியரிடம் தோற்று சரணடைந்தது. இப்போருக்குப் பின்னர் இக்குடியரசு இருந்த பகுதி டிரான்சுவால் குடியேற்றம் என அழைக்கப்பட்டது. முதல் உலகப் போர் மூண்டபோது சிறிய எண்ணிக்கையிலான பூர்கள் மாரிட்சு புரட்சியை முன்நடத்தி மைய சக்திகளுடன் கூட்டு சேர்ந்தனர்; விடுதலை பெறுவதற்கான இவர்களது இம்முயற்சி தோல்வியடைந்தது. அரசியலமைப்பின்படி நாட்டின் பெயர் "" (தென்னாப்பிரிக்கக் குடியரசு அல்லது சுருக்கமாக "சார்" "ZAR") ஆகும். வால் ஆற்றின் புறத்தேயுள்ளே பகுதியாதலால் (டிரான்சு) பெரும்பாலானோர் "சார் டிரான்சுவால்", என்றும் அழைத்தனர். குறிப்பாக "டிரான்சுவால்" என்ற பெயர் பின்னர் தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரை ஏற்க மறுத்த பிரித்தானியராலும் பலமுறை பயன்படுத்தப்பட்டது. ஆகத்து 3, 1881ஆம் ஆண்டு பிரிடோரியா வழக்காற்றின்படி 'டிரான்சுவால் ஆட்பகுதி' எனக் குறிப்பிடப்படும் டிரான்சுவாலின் எல்லைகளும் தென்னாப்பிரிக்கக் குடியரசின் எல்லைகளும் வெவ்வேறானவை என பிரித்தானியர் வலியுறுத்தினர். இருப்பினும், பிரித்தானியருக்கும் சார் நாட்டிற்கும் இடையேயான உடன்படிக்கை பெப்ரவரி 27, 1884 இலண்டன் வழக்காற்றில் பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டு "தென்னாப்பிரிக்கக் குடியரசு" என்ற பெயரை பயன்படுத்தியது. தென்னாப்பிரிக்கக் குடியரசு என்ற பெயருக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தமையால் பிரித்தானியர் செப்டம்பர் 1, 1900இல் தென்னாப்பிரிக்கக் குடியரசின் பெயர் "டிரான்சுவால்" என மாற்றப்படவேண்டும் என்று சிறப்பு சாற்றறிக்கை வெளியிட்டது. இந்த சாற்றறிக்கை இரண்டாம் பூவர் போரின் போது தென்னாப்பிரிக்கக் குடியரசு தன்னாட்சியுடன் விளங்கிய நேரத்திலேயே வெளியிடப்பட்டது. மே 31, 1902இல் பிரித்தானிய அரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலை இராச்சியத்திற்கும் இடையே "வெரீனிகிங் உடன்பாடு" கையொப்பமிடப்பட்டது; இதன்படி சார் பகுதி டிரான்சுவால் குடியேற்றம் என மாற்றப்பட்டது. பிரித்தானிய அரசின் குடியேற்றங்களை மேலாண்மை செய்ய மே 20, 1903இல் குடியேற்றங்களுக்கிடையான அவை நிறுவப்பட்டது. ஆ.தே.கா டிரான்சுவால் பகுதியை பிரித்து மையப்பகுதியை "கடெங்" என்று மறுபெயரிட்டபோது 1994இல் "டிரான்சுவால்" என்ற பெயர் இறுதியாக மாற்றப்பட்டது. தென்னாபிரிக்க ஒன்றியம் தென்னாபிரிக்க ஒன்றியம் ("Union of South Africa") என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தின் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது. இது முதலில் ஒரு தன்னாட்சி உரிமையுள்ள நாடாக ("dominion") அமைக்கப்பட்டு பின்னர் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. இவ்வொன்றியம் மே 31, 1961 இல் கலைக்கப்பட்டு தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரில் குடியரசானது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டமைப்புகள் போலல்லாமல் தென்னாபிரிக்க ஒன்றியம் ஒரு தனிநாடாக விளங்கியது. நான்கு குடியேற்ற நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட்டு அவை மாகாண அமைப்பாக மாற்றப்பட்டன. அசெம்பிளி, செனட் என இரு அவைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் உறுப்பினர்களை பொதுவாக நாட்டின் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினத்தவர்களே தெரிவு செய்தனர். ஆபிரிக்கான மொழி ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் ("Afrikaans") என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப்படுகிறது. அதை விட பொட்சுவானா, அங்கோலா, சுவாசிலாந்து, சிம்பாப்வே, லெசத்தோ, சாம்பியா மற்றும் ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் சிறுபான்மையோர் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 100,000 ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.. புவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது. ஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து "கேப் டச்சு" என்ற பெயரில் உருவானது. இம்மொழி "ஆபிரிக்க டச்சு" அல்லது "சமையலறை டச்சு" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது. கிழக்கு கடல்முனை ஆபிரிக்கானசு(Oosgrensafrikaans) கடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans) ஆரஞ்சு ஆறு ஆபிரிக்கானசு(Oranjerivierafrikaans) அனுமன் அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர். சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர். சுந்தர காண்டம் எனப்படும் இராமாயணப் பகுதியில் அனுமனின் பின்வரும் வீரதீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்து, இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும், இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார். பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன் இராவணனை அவனது அரசவையில் சந்தித்து, சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க, அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார். இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்து, "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும், இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. போரில், சஞ்சீவினி மலையையே தனது கரத்தால் தூக்கி வந்து போரிலே மயக்கமுற்றவர்கள் நினைவு திரும்பிட வழி வகுத்ததாகவும் இராமாயணம் சொல்கிறது. இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில், அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ள, சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்க, இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் - அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது. அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார். இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார். பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார். இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது. போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.
அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார். இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர, இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க, அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார். இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க, அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
குருக்ஷேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட, உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன், "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார். அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன. தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது. காசியிலும் அனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது .இது 135 அடி ஆகும்.
தமிழ் பேசு தங்கக் காசு தமிழ் பேச தங்கக் காசு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். தனித்தமிழில் உரையாடுவதே இந்த நிகழ்ச்சி. வெற்றியாளர்கள் தங்கக் காசினைப் பரிசாகப் பெறுவர். இந்த நிகழ்ச்சி மூன்று சுற்றுக்களைக் கொண்டது. முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும், இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள். இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இதே விதிமுறைகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலியில் பல ஆண்டுகளாக போட்டி நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற இந்நிகழ்ச்சியை கே. எஸ். ராஜா, பி. எச். அப்துல் ஹமீட் போன்றோர் தயாரித்து வழங்கியிருந்தார்கள். தமிழ்க்கடை தமிழர் பெரும்பாலும் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் கடை தமிழ்க்கடை எனப்படும். இந்த சொல்லாடல் தமிழர் குடிபுகுந்து வாழும் மேற்கு நாடுகளிலேயே பெரும்பாலும் வழங்குகிறது. மரக்கறிகள், கடலுணவுகள், பலசரக்குகள், குடிபானங்கள், சமைத்த உணவுகள், சடங்குப் பொருட்கள், இதழ்கள், நூல்கள், திரைப்படங்கள் என பலதரப்பட்ட அன்றாட வாழ்வியலுக்கு அவசியமான பொருடகள் தமிழ்க்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. உடைகள், நகைகள், தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள், இதர சேவைகளையும் தமிழ்க்கடைகள் தருகின்றன. பணமாற்று செய்வது, தொலைபேசி அட்டை விற்பனை, நிகழ்ச்சி அனுமதிச்சீட்டு விற்பனை ஆகியவையும் தமிழ் கடைகளில் நடைபெறும். தமிழர் புதிதாக ஒரு இடத்துக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்த பின்பு அவர்களின் தேவைகளை முன்வைத்து தமிழ்கடைகள் தொடங்கப்படுகின்றன. தமக்கு பரிச்சியமான, விருப்பமான பொருட்களை பெற தமிழ்க்கடைகள் உதவுகின்றன. சிறிய தமிழ்ச் சமூகங்கள் இருக்கும் இடங்களில் தமிழ்க்கடைகள் ஒரு சந்திப்பு இடமாகவும் இருக்கின்றன. பொருள் விற்பனைத் துறை பெரும் கம்பனிகளால் ஆதிக்கப்படிருக்கும் மேற்குநாடுகளில் தமிழ்க்கடை சிறு வியாபாரிகள் அந்த சந்தையின் ஒரு சிறு பிரிவைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. எனினும் மக்கள் தொகை உயரும் பொழுது பல தமிழிக் கடைகள் போட்டி போட்டு தொடங்கப்படுகின்றன. சில பெரும் கம்பனிகளாகவும் வளர முடிகிறது. இப்படி நிகழும் பொழுது விற்பனையாளர் வாடிக்கையாளர் தொடர்பு பிற எந்த வணிகத் தொடர்பாடல் போலவே நிகழுகிறது. சுற்றுலா ஈர்ப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் நிகழ்வுகளும் இயல்புகளும் சுற்றுலா ஈர்ப்புகள் எனப்படுகின்றன. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல்வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன. நாயாறு கடலடித் தாக்குதல், மார்ச் 2008 முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிக்கிழமை 22 ஆம் திகதியன்று அதிகாலை 2 மணியளவில் இலங்கைக் கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலியினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடலடித் தாக்குதல் கையாளப்பட்டது. அதிகாலை 2:10 மணியளவில் இலங்கைக் கடற்படையினரின் பி 438 என்ற தொடர் இலக்கத்தினைக் கொண்ட அதிவேக டோறா பீரங்கிப்படகு 3 கடற்கரும்புலிகளான லெப்டினன்ட் கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா ஆகியோரின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இப்பீரங்கிப் படகில் சென்ற 14 இலங்கைக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த இச்சமர் அதிகாலை 2:45 மணிவரை நடைபெற்றது. மூழ்கடிக்கப்பட்ட படகில் இருந்த அதிகாரி மற்றும் 6 கடற்படையினர் தப்பியுள்ளனர் எனவும் 10 கடற்படையினர் காணாமல் போயுள்ளனர் எனவும் படகின் கீழ்ப்பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு அப்பகுதி பிரிந்து மூழ்கியதாகவும் தப்பிய இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கடலடித் தாக்குதல் வெடிகருவியினால் அத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், மார்ச் 2008 மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், மார்ச் 2008 என்பது இலங்கை இராணுவத்தினரால் 2008 ஆம் ஆண்டு மார்ச் 22 சனிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னாரில் மேற்கொண்ட பாரிய படை முன்னகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு அதனை முறியடித்த நிகழ்வைக் குறிக்கும். மன்னாரில் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இரு முனைகள் மீதான இப்படை முன்னகர்வில் பல்குழல் வெடிகணைகள், ஆட்லறித் தாக்குதல், மோட்டார்த் தாக்குதல் மிகச் செறிவான சூட்டாதரவு போன்றன உபயோகிக்கப்பட்டன. அதிகளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறிய இலங்கைப் படையினரின் முன்னகர்வுகளை முறியடிக்கும் விதமாக எறிகணைத் தாக்குதலுடன் கூடிய முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். அன்று மாலை 5:00 மணி வரை நீடித்த இம்முறியடிப்புச் சமரில் 55க்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 120க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர். காயமடைந்த படையினர் ஊர்திகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதனால் மன்னார் - வவுனியா சாலைப் போக்குவரத்து இலங்கை இராணுவத்தினரால் தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், அக்டோபர் 2007 இலங்கை இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை 2007 அக்டோபர் 3 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணியளவில் நிகழ்த்தப்பட்டது. மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இவ்வலிந்த தாக்குதல் புதன்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இரு முனைகளில் முன்னகர்வை ஏற்படுத்திய இலங்கை இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடிப்புச் செய்த விடுதலைப் புலிகளால் 10ற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினரின் சடலங்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டும் மேலும் 25 படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்தினரின் 57வது பிரிவைச் சேர்ந்த தரைப்படையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த இப்படையெடுப்பின்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளைத் திசை திருப்பும் வகையில் தம்பனை, முள்ளிக்குளம், கட்டுக்கரைக்குளம் ஆகிய பகுதிகளினூடக முன்னகர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர். நாகர்கோவில் முன்னகர்வு முறியடிப்புச் சமர், செப்டம்பர் 2007 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செப்டம்பர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2007 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தினர் படை முன்னகர்வை இரவு 11:30 மணியளவில் மேற்கொண்டனர். எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்ட இம்முன்னர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று போராளிகளின் உயிரழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களாவன ஆர். பி. ஜி - ஒன்று, ஏ. கே. எல். எம். ஜி - இரண்டு, ரி56 ரைபிள் - இரண்டு, ரி56 2 ரக ரைபிள் - இரண்டு, ஆர். பி. ஜி. எறிகணைகள் - ஆறு, 40 மில்லி மீட்டர் மோட்டார் எறிகணைகள் - மூன்று, ஏ. கே. மேகசீன்கள் - நாட்பத்து இரண்டு, ஏ. கே. டிரம் மேகசீன்கள் - நான்கு, கைக்குண்டுகள் - பதினான்கு போன்றனவையாகும். இலங்கை இராணுவத்தரப்பினர் தம்முள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், பெப்ரவரி 2008 மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியினை ஆக்கிரமிக்க பாலைக்குழி வழியே செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 12 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு காலை இலங்கை இராணுவத்தினரால் முன்னகர்வொன்று நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் 12:30 வரை முன்னேற முயன்ற இலங்கை இராணுவத்தினரில் 20 படையினர் கொல்லப்பட்டனர். மீண்டும் பாலைக்குழி ஊடாக 1:30 மணியளவில் முன்னேற முயன்ற படையினரை மரங்களற்ற வெளியினூடாக உள்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் சுட்டதில் 22 இலங்கை இராணுவத்தினர் உயிரழந்தனர் 53 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் இம்முன்னகர்வுச் சமரில் காயமடைந்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சமரை முறியடிக்கும் விதமாக தள்ளாடிப் படை முகாம் மீது ஆட்லறித் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தள்ளாடி படைத்தளம் மீதான எறிகணை வீச்சு, பெப்ரவரி 2008 தள்ளாடி படைத்தளம் மீதான எறிகணை வீச்சு என்பது மன்னார், தள்ளாடியில் உள்ள இலங்கைப் படையினரின் பீரங்கிப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2008 பெப்ரவரி 12, செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் நடத்திய 130 மிமீ பீரங்கி எறிகணை வீச்சுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 15 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 50ற்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலினால் மன்னார் பாலத்தின் ஊடாகச் செல்லும் அனைத்து விதமான வாகனப் போக்குவரத்துக்களும் பிற்பகல் 2 மணிவரை துண்டிக்கப்பட்டது என மக்கள் போக்குவரத்துச் சபையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தன்னர். தள்ளாடித் தளத்தின் காவல் நிலைகள் இத்தாக்குதலின் போது எரிந்துள்ளன. இத்தாக்குதலைக் குறித்து படைத்தரப்பினர் தகவல் தரும் போது விடுதலைப்புலிகள் தள்ளாடி தேவாலயம் மீது எறிகனை வீச்சை நடத்தியதாகவும் இதில் 6 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 18 படையினர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். யோர்க் பல்கலைக் கழக பல்கலாச்சார வாரம் 2008 கனடா யோர்க் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் கனடாவில் உள்ள பல்லின மக்கள் அவர்கள்தம் கலாச்சாரங்களைக் கௌரவிக்கும் வகையில் எடுக்கப்படும் விழாவே பல்கலாச்சார வாரம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 60 இனங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் யோர்க் லேன் வளாகத்தில் அனைத்து நாடுகளின் கொடிகளுடன் தமிழீழத் தேசியக் கொடியான புலிக் கொடியும் பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் கலாச்சாரத்தினை எடுத்துக் காட்டும் விதமாக தமிழ்த் திருமணம் மேள தாளங்களுடன் நடித்துக் காட்டப்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய உடையலங்காரக் காட்சிகளும் இடம்பெற்று இரண்டாவது நாளில் தமிழர்களின் உணவுகள் பார்வைக்கு வைக்கப்பெற்று பின்னர் பரிமாறவும் பட்டது. இவ்வுணவுப் பதார்த்தங்களை ரொறன்ரோ நகரைச் சேர்ந்த தமிழ் உணவகமான பாபு கேற்றரிங் நிறுவனத்தினர் பரிமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களும் சகல இனத்தவரும் பங்குபற்றிய கலாச்சாரக் கருத்தரங்கம் மற்றும் பட்டறை ஆகியன இடம்பெற்றன. பட்டறையின் போது பரத நாட்டியம் மேடையேற்றப்பட்டதும் பார்வையாளர்களுக்கு கற்றும் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் யோர்க் பலகலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பினரும் பின்வரும் விருதுகளைப் பெற்றனர்: நயினாதீவு வீரபத்திரப் பெருமான் ஆலயம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அமைந்துள்ளது. நயினா தீவில் அமைந்துள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஷ்வரி பீடம் அமைந்துள்ளது. இப்பீடமே அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் ஆகும். இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியின் மேற்கே தம்பகைப்பதி என்னும் இடத்தில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. முந்நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் இவ்வாலயம் ஆலமரம் ஒன்றின் கீழ் சிறு ஆலயமாகவிருந்து வீரவாகு கோவில் என அழைக்கப்பட்டு வந்து பின்னர் மூத்தபண்டாரம், இளைய பண்டாரம் ஆகிய இரு சகோதரர்களால் மடாலயமாக்கப்பட்டு பூஜை, வேள்விகள், ஆராதனைகள் நடைபெற்று வந்ததெனச் சான்றுகள் விளக்குகின்றன. ஆணவம் மேலிட்டு செருக்குடன் விளங்கிய தக்கனைத் தண்டிக்க எழுந்தருளியதே வீரபத்திர மூர்த்தம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. ஆணவ மலம் நீங்கி நல்லருள் பெற அருள் அளிப்பவராக ஸ்ரீ வீரபத்திரப் பெருமானை வணங்குவர் மக்கள். இவரை வழிபடும் அனைவரும் சகல நன்மைகளும் பெற்றுக்கொள்ள இயலும் என்பது தொன்நம்பிக்கை. முற்காலங்களில் கன்னிப்பெண்கள், கர்ப்பிணிகள், ஆசௌசிகள் போன்றோர் இவ்வாலயத்திற்கருகாமையிலும், நடுநிசியிலும், சந்தியிலும் செல்வதில்லை என்பதும் அவ்வாறு செல்பவர்கள் துன்பப்பட நேரிட்டதாக கர்ணபரம்பரைக் கதைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஊர் மக்கள் தம்மால் களவு கொடுக்கப்பட்ட பொருள்கள் கிடைக்கவேண்டும் என இக்கோவிலில் பறைசாற்றி இழை கட்டுவர். பின்னர் அப்பொருட்கள் கிடைக்கப்பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கன. வருடந்தோறும் ஆனி மாதத்தில் கந்த புராணம் படித்துப் பயன்சொல்லி வேல் பூசைவிழா சிறப்பாக நடைபெறும். பிரமோற்சவம் பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெறும். 9ம் நாளன்று தேர்த்திருவிழாவும் அதற்கடுத்த நாளான மாசி மகத்தன்று தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000 ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயம் வேலூர் மாவட்டம், வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோ முச்சக்க வாகனத்திலோ சென்றால் இத்திருத்தலத்தினை அடையலாம். விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம். பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பெற்ற முனிவர்|முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம் கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என அழைக்க விளையாட்டாகக் கேட்டார் எனவும் இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஜந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார் என்பது வரலாறாக கூறப்படுகின்றது. அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு. சிவபெருமானின் திருமுடையைக் காண பிரம்மனும் பாதத்தினைக் கண்டு வருவதாக திருமாலும் சென்ற வேளை நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார் அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனைப் பூசை செய்து வந்த சிவநாதன் - நயனா, நந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார், பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார் சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார் எனக் கருதப் படுகின்றது. கனவு கண்ட மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன் சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தினை அடைந்து பூசைகள் செய்ய அதை ஏற்க சிவன் தலை சாய்த்ததாகக் கூற்றுக்கள் உளன குறிப்பிடத்தக்கது. கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்கு பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது. கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி 'பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகா தானம் ஆக செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.' என விஜய நடரப் பேரரசு|விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மக்குளம் சிங்க வடிவத்தினைக் கொண்டு அமைந்த புனிதக் கிணறும், தீர்த்தம் ஆகியன தமிழகத்தின் பல பாகங்களிலும் உள்ள திருக்கோயில்களில் அமைந்திருக்கின்றன. இவ்வகைக் கிணறுகளை சிம்மக்குளம் என்றழைப்பர். திருவிடைமருதூர், கங்கைகொண்ட சோழபுரம், மகாபலிபுரம், பேரூர், விரிஞ்சிபுரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள திருத்தலங்களில் இத்தகு சிம்மக்குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத் திருத்தலத்தினைத் தவிர ஏனைய திருத்தலங்களின் அமையப்பெற்றிருக்கும் சிம்மக்குளங்களின் புனித நீரானது இறைவனின் திருமஞ்சனத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவு வான் தாக்குதல், ஏப்ரல் 2008 முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு, புன்னை நீராவியடியில் அமைந்த குடியிருப்புக்கள் மீது இலங்கை இராணுவத்தினரின் வான் படையினர் நடத்திய தாக்குதல் முல்லைத்தீவு வான் தாக்குதல் ஆகும். வியாழக்கிழமை, ஏப்ரல் 17 அன்று காலை 6:30 மணியளவில் நான்கு வானூர்திகள் நடத்திய இத்தாக்குதலில் 15 வயதுடைய பிரமந்தனாறு மகாவித்தியாலத்தினைச் சேர்ந்த மாணவியான அன்சிலாஸ்தியன் டிலக்சனா என்பவர் கொல்லப்பட்டும் ஜெராட் என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் பல சேதமடைந்தும் பயன்தரும் மரங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு என்பது தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு ஆகும். 2008 மே 3 ஆம் நாள் இத்தேர்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 17,500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 2007 ஆம் ஆண்டைவிட இவ்வாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனதுருக்கம் இலங்கை மனதுருக்கம் இலங்கை 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களிற்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் வகையில் நடத்தப்படும் தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் - அறிவியல் காட்சியகம் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முதன்மைப்படுத்தி அமைக்கப்படும் காட்சியகமே அறிவியல் காட்சியகம் ஆகும். பழைய அறிவியல் காட்சியகங்கள் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம்பிடித்த அமசங்களைக் காட்சிப்படுத்துகின்றன. புதிய வகை அறிவியல் காட்சியகங்கள் பயனருடன் ஊடாலடை ஏற்படுத்தி அறிவியல் புரிதலை மேம்படுத்த முனைகின்றன. கனடாவில் இருக்கும் ஒன்ராறியோ அறிவியல் காட்சியகம் இந்த புதிய வகை அறிவியல் காட்சியககங்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு. நந்தனார் (1942 திரைப்படம்) நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட பாபநாசம் சிவனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இபடத்தில் கொத்தமங்கலம் சுப்பு துணை இயக்குநராக பணியாற்றியதுடன் சில பாடல்களை எழுதியும் நடித்தார். பக்த நந்தனார் (1935 திரைப்படம்) பக்த நந்தனார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில் பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஓப்பெக் ஓப்பெக் (OPEC - Organization of the Petroleum Exporting Countries) என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு அல்லது பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கப் பெயராகும். இந்தக் கூட்டமைப்பில் பன்னிரண்டு நாடுகள் இருக்கின்றன. அவை: ஆகும். இந்தோனீசிய நாடும் இக்கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தாலும், 2008 ஆம் ஆண்டு முடிவில் அது இக்கூட்டமைப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட முடிவெடுத்துள்ளது. பொலிவியா, சூடான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் இக்கூட்டமைப்பில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பகுதியில் கணிசமான அளவு எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், பிரேசில் நாடும் இவ்வமைப்பில் சேருவது பற்றி யோசித்து வருகிறது. 1965 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு வியன்னா நகரில் தனது தலைமை அலுவத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு தனது உறுப்பின நாட்டு எண்ணெய் வள அமைச்சர்களுடன் வழக்கமான கூட்டங்களைக் கூட்டி வருகிறது. தனித்தனியாகவும், ஒரு குழுமமாகவும் இந்நாடுகள் தங்களது நலத்தைப் பேணுவதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதும், உலக அரங்கில் பாறைநெய் விலை நிலையாக இருப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதும் இக்கூட்டமைப்பின் முதன்மையான குறிக்கோள் என்று இதன் சட்டதிட்டம் கூறுகிறது. அதோடு எல்லாச் சமயங்களிலும் உற்பத்தி நாடுகளின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அவர்களின் வருமானம் நிலையாக இருப்பதை உறுதி செய்வதும், நுகரும் நாடுகளுக்கு இடையூறில்லாமல் பாறைநெய்யை அனுப்புவதும், பாறைநெய்த் தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான இலாபம் கிடைக்கச் செய்வதும் இவர்களின் குறிக்கோள்களில் அடங்கும். ஓப்பெக் போன்ற அமைப்பை உருவாக்க முதல் அடியை எடுத்து வைத்தது வெனிசுவேலா நாடு தான். 1949-ஆம் ஆண்டு வெனிசுவேலா, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை அணுகி, அவர்களுக்குள் நெருங்கிய உறவும் தொடர்பும் பேண வழிமுறைகளைக் கண்டறியலாம் என்று ஆலோசனைகளை எடுத்து வைத்தது. 1960-ல் வெனிசுவேலாவின் ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் உவான் பப்லோ பெரேசு அல்பான்சோவும் சவுதி அரேபிய ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அப்துல்லா அல்-தரிக்கியும் முடுக்கியதன் விளைவாக, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் அரசுகள் பாக்தாத் நகரில் சந்தித்து, அவரவர் நாட்டில் உற்பத்தியாகும் பாறைநெய்யின் விலையைக் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். 1960 களில் அமெரிக்க அதிபராயிருந்த டுவைட் டி. ஐசனாவர் இயற்றிய சட்டத்தின் காரணமாக வெனிசுவேலாவின் எண்ணெய்க்கு வரம்பு விதித்தும், மெக்சிக்கோ, கனடா நாடுகளின் எண்ணெய்க்குச் சார்பாகவும் இருந்த காரணத்தால் உந்தப்பட்டு, ஈராக்கின் பாக்தாத் நகரில் ஓப்பெக் அமைப்பு உருவாக்கப் பட்டது. ஐசனோவர் தங்களது தேசியப் பாதுகாப்பு, மற்றும் போர்க்காலத்தில் ஆற்றலின் அணுக்கம் போன்ற காரணங்களைக் கூறினார். இதற்கு எதிர்வினையாக வெனிசுவேலாவின் அதிபர் ராமுலோ பெத்தன்கோர்ட், தங்களது எண்ணெய் வள வருமானமும் இலாபமும் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுடன் உறவு நாடினார். இந்தப் பின்னணியிலேயே ஓப்பெக் அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் பாறைநெய்க் கொள்கைகளை ஒன்றுபடுத்துவதும் இதன் காரணங்களுள் ஒன்று. ஆரம்பத்தில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, மற்றும் வெனிசுவேலா என்னும் இவ்வைந்து நாடுகள் மட்டுமே இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன. பிறகு 1960இல் இருந்து 1975ற்குள்ளாக கத்தார், இந்தோனீசியா,லிபியா, ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, மற்றும் நைஜீரியா நாடுகள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டன. எக்குவடோர், கபான் நாடுகளும் பிறகு இதனுடன் இணைந்தன என்றாலும், எக்குவடோர் 1992ல் விலகிக் கொண்டது. ஆண்டொன்றுக்கு உறுப்பினர் சந்தாவான இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்ட முடியாமலோ கட்ட விரும்பாமலோ இந்நாடு விலகிக் கொண்டது. அதோடு, ஓப்பெக் நிர்ணயித்த உச்சவரம்பு தாண்டியும் தாங்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று விரும்பியது. இதே போன்ற காரணங்களால் கபான் நாடும் 1995ல் விலகிக் கொண்டது. 2007ல் அங்கோலா இணைந்து கொண்டது. இந்தோனீசிய உற்பத்திப் பற்றாக்குறையால் ஏற்றுமதிக்குப் பதிலாய் இறக்குமதி செய்யும் நாடாக மாறியதால், இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. ஈராக் போரை அடுத்து அந்நாட்டு நிர்வாகத்தைக் கையில் வைத்திருந்த காலத்தில் அமெரிக்காவும் இவ்வமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தது. அரபு-இசுரேல் சச்சரவுகளின் தீராத நிலை உண்டாக்கிய எதிர்வினையால் ஓப்பெக் அமைப்பு ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருமாறியது. 1967-இன் ஆறு நாள்ப் போரின் பின் ஓப்பெக்கின் அரபு நாடுகள் தங்களுக்கு என்று தனியே ஒரு அமைப்பை உருவாக்கினர். அது "Organization of Arab Petroleum Exporting Countries" (OAPEC - அரபு ஓப்பெக்) என்று வழங்கப்பட்டது. இதன் மையக் கொள்கையானது, மேற்கு நாடுகளின் இசுரேல் ஆதரவு நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தலும் அழுத்தம் தருவதுமாக இருந்தது. எகிப்து, சிரியா போன்ற நாடுகளும், பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் அடங்காவிட்டாலும், இசுரேல் எதிர்ப்புக் கொள்கையைப் பலப்படுத்தவென்று பின்னர் இவ்வமைப்பில் சேர்ந்து கொண்டன. 1973-இன் யோம் கிப்பூர் போர் அரபு நாடுகளின் எண்ணங்களை மேலும் வலுப்படுத்தியது. அப்போரில் எகிப்து, சிரியாவிற்கு எதிராகப் போரிட்ட இசுரேலுக்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததும், அவசர உதவிகள் செய்ததும் அரபு நாடுகளுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அதனால், இம்மேலை நாடுகளுக்குப் பாறைநெய் ஏற்றுமதி செய்வதில்லை என்று "அரபு ஓப்பெக்" முடிவு செய்தது. அரபு-இசுரேல் சண்டை இப்பிரச்சினைகளுக்கு ஒரு காரணம் தான். அதற்கும் முன்னரே சில பிரச்சினைகள் மெல்ல மூண்டுகொண்டிருந்தன. மேற்கு நாடுகள் வருடம் ஐந்து விழுக்காடு எனத் தங்கள் ஆற்றல் நுகர்வை அதிகரித்துக் கொண்டு, பாறைநெய்க்குக் குறைந்த விலையையே இந்நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டு, அதே சமயம் தங்களது உற்பத்தியை உயர்ந்த விலையில் இவ்வுற்பத்தி நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஈரானின் ஷா முதலானோர் அழுந்தக் கூறினர். உலகில் இரண்டாவது பெரிய பாறைநெய் ஏற்றுமதியாளராகவும் அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடாகவும் ஈரான் அச்சமயத்தில் இருந்தது. 1973-இல் நியூயார்க் டைம்சு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஈரானின் ஷா இவ்வாறு கூறுகிறார்: "நிச்சயமாய் உலக எண்ணெய் விலை அதிகரிக்கத் தான் போகிறது. நீங்கள் எங்களுக்கு விற்கும் கோதுமையின் விலையை மூன்று மடங்கு அதிகரித்து விட்டீர்கள். சர்க்கரைக்கும் சிமெண்டுக்கும் இப்படியே. எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதனைத் தூய்வித்துப் பாறைவேதிகளாக நூறு மடங்கு விலையுயர்த்தி எங்களிடமே விற்கிறீர்கள். அதனால், நீங்கள் எங்களிடம் வாங்கும் எண்ணெய்க்கும் அதிக விலை தருவது தான் நியாயம். ஒரு பேச்சுக்குச் சொன்னால், பத்து மடங்குக்கும் மேல் நீங்கள் கட்ட வேண்டும்." இந்தப் பயமுறுத்தல்களும், பாறைநெய்யை ஒரு ஆயுதமாகவும் ஓப்பெக் பயன்படுத்த முனைந்ததும் அவர்களின் சக்தியைக் குறைக்கும் வகையிலேயே விளைவை ஏற்படுத்தியது. மேற்கு நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் தங்கள் உறவைப் பலப்படுத்துக் கொண்டனர். வடக்குக் கடல், மெக்சிக்கோ வளைகுடா போன்ற இடங்களில் கடலடியில் எண்ணெய் கண்டுபிடிப்பதை மும்முரமாகத் தொடர்ந்தனர். இதனால் உலக அரங்கில் பாறைநெய் விலையைக் கட்டுப்படுத்த ஓப்பெக் நாடுகளின் சக்தி குறைந்தது. 1980-க்குப் பிறகு பாறைநெய் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து ஆறு வருடங்கள் சரிந்த விலை 1986இல் மொத்தம் 46 விழுக்காடு குறைந்திருந்தது. அதிகரித்த உற்பத்தியும் குறைந்த தேவையுமே இச்சரிவிற்குக் காரணங்களாய் இருந்தன. இதன் காரணமாய் ஓப்பெக் நாடுகளின் பாறைநெய் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. அவை, தங்களது ஒற்றுமையையும் இழந்தன. 1990-1991-இன் வளைகுடாப் போருக்கு முன்னர் ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஓப்பெக் நாடுகள் எண்ணெய் விலையை அதிகரிக்க முயல வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால், ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பும், ஈரான் ஈராக் போர் முதலியவையும் ஓப்பெக்கின் ஒற்றுமையைப் பெரிதளவும் குறைத்திருந்ததால், ஒன்றுபட்ட செயல்பாட்டில் குறையே ஏற்பட்டது. அதனால், எண்ணெய் உற்பத்தி குறித்த அச்சம் ஏதுமின்றி விலை மேலும் சரிந்துகொண்டே இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழப் பத்து டாலர் என்னும் அளவிலேயே இருந்தது. வெனிசுவேலாவின் அதிபர் ஊகோ சாவேசு-இன் முயற்சியால் ஓப்பெக் நாடுகள் மீண்டும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை 1998 முதல் குறைக்க ஆரம்பித்தனர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் 2000-இல் சாவேசு ஓப்பெக் நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மீதான செப்டம்பர் 11 தீவிரவாதிகளின் தாக்குதல், அமெரிக்காவின் ஆப்கானிசுதான், ஈராக் படையெடுப்புகள், ஈராக் ஆக்கிரமிப்பு போன்றவற்றால், ஓப்பெக் நினைத்த அளவையும் விடப் பாறைநெய் விலை உயர்ந்துவிட்டது. ஓப்பெக் நாடுகள் தங்கள் பண இருப்பை டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று 2007இல் எழுந்த பேச்சு உலகப் பாறைநெய்ச் சந்தையில் பெரும் விளைவை ஏற்படுத்தியது. பாறைநெய்யின் விலை டாலரிலேயே வழங்கப் படுவதால், டாலரின் மதிப்பு சரியச் சரிய, எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்குக் கிடைத்த வருவாயின் மதிப்பும் குறைந்தது. இதனால், சந்தைப் பரிமாற்றத்தை யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈராக் முடிவு செய்திருந்தது. அதனை அடுத்துப் பிற ஓப்பெக் நாடுகளும் யூரோவிற்கு மாறுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தனர். இடையில் ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு அந்நாட்டை ஆக்கிரமித்த இடைக்கால அமெரிக்க அரசு ஈராக்கின் முடிவை மாற்றி, மீண்டும் டாலரிலேயே பரிமாற்றத்தைத் தொடர வைத்தனர். ஆனால், ஈரான், வெனிசுவேலா இரண்டும் இதே போன்று டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். புதைபடிவ எரிபொருளின் நுகர்வு பசுங்குடில் வளிம உற்பத்தி அதிகரிக்கவும் காரணமாக இருப்பதால், ஓப்பெக் நிறுவனம் சரியான உற்பத்தி உச்சவரம்பை நிர்ணயித்துக் கட்டுப்படுத்தினால் புவி வெப்பேற்ற விளைவுகளைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.. விலா கருணா கனடாவாழ் இலங்கைச் சமூகத்தினருக்காக முதன்முதலாக கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு நிலையம் விலா கருணா ஆகும். இந்நிலையத்தின் மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இவ்வாறான பலதரப்பட்ட சேவைகளை அளிக்கும் இந்நிலையம் கனடாவில் தொடர்ந்தும் இயங்குகின்றது. தமிழ் ஜ. பி. தொலைக்காட்சிச் சேவை தமிழ் ஜ. பி. தொலைக்காட்சி சேவை (Tamil IPTV) இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகளினை இணையத்தின் மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்க முடியுமானதான புதிய தொழில்நுட்பச் சேவையாகும். தேவைக்கேற்ற் நிகழ்படத் தொழில்நுட்பத்துடன் (Video On Demand) கூடிய இத்தமிழ் ஜ. பி. தொலைக்காட்சி சேவையின் மூலம் வழங்கப்படவிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளாவன பின்வருமாறு: பிளாட்டினம் பிளாட்டினம் (இலங்கை வழக்கு, பிளாத்தினம்) (ஆங்கிலம்: Platinum) என்பது Pt என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். அணுவெண் 78 கொண்ட இத் தனிமம் தனிம அட்டவணையில் 10 ஆவது நெடுங்குழுவில் உள்ளது. இதன் அணுக்கருவில் 117 நொதுமிகள் உள்ளன. இது தட்டி கொட்டி நெளியக் கூடிய, வளையக்க்கூடிய, பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய மாழை (உலோகம்) ஆனால் எடை மிகுந்த ஒரு மாழை. இது பிறழ்வரிசை மாழை இனத்தைச் சேர்ந்த தனிமம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது.பிளாட்டினம் தங்கத்தை விட நூறுமடங்கு மதிப்பு மிக்க மாழை ஆகும். மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும், தானுந்துகளில் இருந்து வெளியேறும் கழிவு வளிமங்களில் உள்ள, சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு (CO), நைதரசன் ஆக்சைடு போன்ற வளிமங்களை நச்சுத்தனமை குறைந்த வளிமங்களாக மாற்றவும் பிளாட்டினம் பயன்படுகின்றது. அனைத்துலக பங்குச்சந்தையில் வாங்கி-விற்கும் பொருளாகப் பயன்படுகையில் பிளாட்டினத்தின் ISO குறியீடு XPT என்பதாகும். பிளாட்டினம் ஓர் உறுதியான மாழை ஆகும்.காற்றிலும், வெப்பமான சூழலிலும் இது மாசடையாமல் ஜொலிக்கும் தன்மை உடையது.தங்கத்தை கரைக்கும் பாதரசம்(Mercury), நைட்ரிக் அமிலம், அமிலங்களின் அரசனான கந்தக அமிலம் ஆகியவற்றால் கூட பிளாட்டினத்தை அரிக்க முடியாது.எனவே பிளாட்டினம் வேதி-வினைகளை ஊக்குவிக்கும் பொருளாக பயன்படுகிறது. தூய பொருளாக இருக்கும் பொழுது இம் மாழை வெண் சாம்பல் நிறமுடையது. இம்மாழை எளிதில் அரிக்கப் படாத ஒரு பொருள். பிளாட்டினக்குழு என்று கூறப்படும் பிளாட்டினம், ரூத்தேனியம், ரோடியம், பலேடியம், ஆசுமியன், இரிடியம் ஆகிய ஆறு மாழைகளும் (இவை ஆறு பிளாட்டினக் குடும்ப மாழைகள் என்று கூறப்படுகின்றது), மிகச்சிறந்த வேதி வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. பிளாட்டினம் தானுந்துகளில் கழிவுக் குழாய் வழியாக வெளியேறும் நச்சு வளிமங்களை மாற்றும் வினையூக்கியாகப் பயன்படுகின்றது. உள் எரி பொறிகளின் உந்தறையில் அழுத்தமுறும் எரிவளியை எரியூட்டுவதற்குப் பயன்படும் மின் தீப்பொறி உண்டாக்கும் மின்குச்சிகளிலும் (spark plug) பயன்படுகின்றது. பிளாட்டினத்தின் பொதுவான ஆக்ஸிஜன் நிலைகள் +2 , +4 ஆகும். ஆனால் +1 மற்றும் +3 நிலைகள் அதிகம் காணப்படாத நிலைகள. எக்சாகுளோரோபிளாட்டினிக் அமிலம் அல்லது அறுகுளோரோபிளாட்டினிக் அமிலம் பிளாட்டினத்தின் மிக முக்கியமான சேர்மமாகும். பல பிளாட்டினம் சேர்மங்கள் தயாரிப்பதற்கு இது ஒரு முன்னோடி சேர்மமாக உள்ளது. நிழற் படக்கலையில், துத்தநாக அரிப்பைத் தடுப்பதில், அழியா மை தயாரிப்பு, கண்ணாடிகளுக்கு முலாம் பூச, பீங்கான்களுக்கு நிறமிட, ஒரு வினையூக்கியாக என்று பிளாட்டினம் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. எக்சாகுளோரோபிளாட்டினேட்டை அமோனியம் குளோரைடு போன்ற ஓர் அமோனியம் உப்புடன் சேர்த்து சூடாக்கும் போது அமோனியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு உருவாகிறது. இது ஒப்பீட்டளவில் எந்த அமோனியம் கரைசல்களிலும் கரையாது. ஐதரசன் முன்னிலையில் இந்த அமோனியம் உப்பை சூடுபடுத்தினால் இந்த உப்பு ஒடுக்கமடைந்து தனிமநிலை பிளாட்டினம் உருவாகிறது. பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு இதே போல கரையாது. எடையளவியலில் பொட்டாசியம் அயனிகளை உறுதிப்படுத்த எக்சாகுளோரோபிளாட்டிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. எக்சாகுளோரோபிளாட்டினிக் அமிலத்தை வெப்பப்படுத்தினால் அது பிளாட்டினம்(IV) குளோரைடு மற்றும் பிளாட்டினம்(II) குளோரைடுகள் வழியாக தனிமநிலை பிளாட்டினமாக சிதைவடைகிறது. இருப்பினும் இவ்வினை படிநிலைகளாக நிகழ்வதில்லை. இம்மூன்று வினைகளும் மீள் வினைகளாகும். ம். பிளாட்டினம் (II) மற்றும் பிளாட்டினம் (IV) புரோமைடுகள் நன்கு அறியப்படுகின்றன. பிளாட்டினம் எக்சாபுளோரைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். இது ஆக்சிசனையும் ஆக்சிசனேற்றம் செய்யக் கூடிய வலிமை மிக்கது ஆகும். ஆடம்சு வினையூக்கி என்று அழைக்கப்படும் பிளாட்டினம்(IV) ஆக்சைடு ( PtO2) கருப்பு நிறத்தில் தூளாக உள்ளது. இது பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலிலும் அடர்த்தியான அமிலங்களிலும் கரைகிறது. பிளாட்டினம் டை ஆக்சைடு, பிளாட்டினம் ஆக்சைடு இரண்டும் வெப்பப்படுத்தும் போது சிதைவடைகின்றன. பிளாட்டினம்(II, IV) ஆக்சைடு உருவாகிறது. பல்லேடியம் அசிட்டேட்டு சேர்மம் போலில்லாமல் பிளாட்டினம்(II) அசிட்டேட்டு வணிக ரீதியாக கிடைப்பதில்லை. ஒரு காரம் தேவைப்பட்டால், சோடியம் அசிடேட்டுடன் இதனுடைய ஆலைடுகள் இணைத்து பயன்படுத்தப்படுகின்றன. பிளாட்டினம்(II) அசிட்டைலசிட்டோனேட்டும் இதே முறையில் பயன்படுத்தப்படுகிறது . பல பேரியம் பிளாட்டினைடுகள் தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டன, இதில் பிளாட்டினம் -1 முதல் -2 வரையிலான எதிர்மறை ஆக்சிசனேற்ற நிலைகளில் உள்ளது. BaPt, Ba3Pt2, மற்றும் Ba2Pt உள்ளிட்டவை இதில் அடங்கும். Cs2Pt, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியம் பிளாடினைடு அடர் சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறுவும் படிகமாகக் காணப்படுகிறது. இச்சேர்மத்தில் Pt2− எதிர்மின் அயனிகள் காணப்படுகின்றன. மின்வேதியியல் முறைபடி ஒடுக்கப்பட்ட மேற்பரப்புகளிலும் பிளாட்டினம் எதிர்மறை ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. உலோக வகை தனிமங்கள் எதிர்மறை ஆக்சிசனேற்ற நிலையில் இருப்பது வழக்கத்திற்கு மாறானதாகும். எத்திலின் ஈந்தனைவியைக் கொண்டுள்ள செய்செசு உப்பு முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட கரிம உலோகச் சேர்மங்களில் ஒன்றாகும். டைகுளோரோ(சைக்ளோ ஆக்டா1,5-டையீன்)பிளாட்டினம்(II) வர்த்தக முறையில் கிடைக்கின்ற ஒலிபீன் அணைவுச் சேர்மமாகும். எளிதில் இடம்பெயரச்செய்கின்ற ஈந்தனைவிகளை இது (1,5-சைக்ளோ ஆக்டா டையீன்) பெற்றுள்ளது. இந்த அணைவுச் சேர்மமும் ஆலைடுகளும் பிளாட்டின வேதியியலின் கொடக்கப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. சிசுபிளாட்டின் அல்லது சிசு-டையமீன்டைகுளோரோபிளாட்டினம் என்ற சேர்மம் சதுர தள பிளாட்டினம்(II) வைக் கொண்ட தொடர்வரிசையின் முதலாவது புற்றுநோய் மருந்து ஆகும். கார்போபிளாட்டின், ஆக்சாலிபிளாட்டின் என்பவை பிற புற்றுநோய் மருந்துகளாகும். இந்த சேர்மங்கள் டி.என்.ஏவை குறுக்குவழியில் இணைப்புக்கு உட்படுத்தும் திறன் கொண்டவை ஆகும். ஒத்த பாதைகளால் புற்றுநோய் உணர் முகவர்களை ஆல்கைலேற்றம் செய்யும் செல்களைக் கொல்கின்றன. குமட்டல் மற்றும் வாந்தியெடுப்பு, முடி இழப்பு, காது கேளாமை போன்றவை சிசுபிளாட்டின் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகும். இயற்கையில் கிடைக்கும் பிளாட்டினம்மும் பிளாட்டினம்-மிகுந்துள்ள கலவைப்பொருள்கள் பற்றியும் நெடுங்காலமாக மக்கள் அறிந்திருந்தார்கள். கொலம்பசின் காலத்திற்கு முன்னமே ஐக்கிய அமெரிக்க பழங்குடியினர், பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் ஐரோப்பிய எழுத்துக்களில் 1557 இல்தான் பிளாட்டினத்தைப் பற்றிய செய்தியை இத்தாலியராகிய "ஜூலியஸ் சீசர் ஸ்காலிகர்" (Julius Caesar Scaliger) (1484–1558) என்பவர்தான் முதன்முதலாக பனாமா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கிடைப்பதைப் பற்றியும் அது எசுப்பானியருடைய தொழிற்கலை அறிவால் உருக்கமுடியாமல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ("up until now impossible to melt by any of the Spanish arts"). ஜூலை 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாட்டினம் இருப்பதாக கண்டரியபட்டது. பிளாட்டினமானது நிக்கல் மற்றும் தாமிர சுரங்கங்களின் மீதமுள்ள பிளாட்டின சேர்மங்களில் இருந்து வணிக ரீதியாக பெறப்படுகிறது.செம்பை மின்னாற் சுத்திகரிப்பு செய்யும் போது இது நேர்முனை முனைகளில் படிகின்றது. நூய பிளாட்டினமானது மற்ற தாதுகளுடன் கிடைத்தால் அது அசுத்தங்களை நீக்குவதன் மூலம் பிறித்தெடுக்கப்படுகிறது.பிளாட்டினமானது அதன் அசுத்தங்களை விட அடர்த்தியானது எனவே நீரோட்டமுறைகள் மூலம் எளிதாக பிரித்தெடுக்கலாம்.மேலும் இது காந்தத்தால் ஈர்க்கப்படுவதில்லை எனவே நிக்கல் மற்றும் இரும்பு தாது கலவையில் இருந்து இயங்கும் மின்காந்தம் மூலம் நீக்கப்படும். பிளாட்டினம் மற்ற பொருட்களை விட மிகவும் அதிக உருகுநிலையை கொண்டுள்ளதால் அதன் அசுத்தங்களை உருக்கியும் பிரித்தெடுக்கலாம். மேலும் வேதியல் முறைகளில் பிளாட்டின,தங்க கலவையை இராஜ திரவகத்தில் கரைத்து பின் தனித்தனியே மற்ற பொருட்களை படியசெஇவதன் மூலம் பிரித்தெடுக்கலாம் . பிளாட்டினம் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் 0.003 ppb (பில்லியன் பகுதியின் பங்குகள்) மட்டுமே உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் 30 மடங்கு அரிதானது. 2005 இல், தென் ஆப்பிரிக்காதான் உலகின் மிகக் கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்த நாடு. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 80% தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அடுத்ததாக ரஷ்யாவும் கனடாவும் நிற்கின்றன. ஆகஸ்ட் 2008 ஆகஸ்ட் 2008, 2008 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் 16 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது. கனடா தமிழூர் திட்டம் கனடா தமிழூர் திட்டம் என்பது மன்னார் மாவட்டம், பூநகரிப் பகுதியில் முழங்காவில் என்ற ஊரில் உள்ள 1,500ற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் திட்டமாகும். செந்தில் குமரன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இத்திட்டத்திற்கு கனடாவாழ் தமிழர்கள் பலரும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 8, 2007 வரை 225,058.10 வரையிலான கனேடிய டொலர் நிதி சேகரிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் நிறைவேற்றப்படும் சேவைகள் பின்வருமாறு: தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39214721 உள்ளூர் பயணிகள் 1335661 வெளியூர் பயணிகள். பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். தமிழ்நாட்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு. மூன்று சோழர் கோயில்களையும் ஒரு தொகுதியாக வகைப்படுத்தப்படுவதுண்டு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுதி, உணவகங்கள், சுற்றுப்பயணங்கள், படகு வீடுகள், தொலைநோக்கி வீடுகள் ஆகியவற்றை நடத்துகிறது. உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமது பண்பாட்டு மூலங்களை அறிய தமிழ்நாட்டுக்கு வருகின்றார்கள். 2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. 2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. 2012 ஆண்டின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. 2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. 2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. 2012 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. உதகை 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நகரம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது, தொட்டபெட்டா. தொட்டபெட்டாவின் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன உதகையின் முக்கிய சுற்றுலா தாவரவியல் பூங்கா. உதகை தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது. உதகை ஏரி படகு இல்லம் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823-1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் மேற்கு தொடர்சி மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம்.கொடைக்கானல் ஏரி கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர். மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். வெள்ளியருவி கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவியாகும். தூண் பாறைகள் ஏரியிலிருந்து 7.4 கி.மீ தொலைவில் உள்ளது. 122 மீட்டர் உயரத்தில் மூன்று செங்குத்தான தூண் பாறைகள் நிற்கின்றன. பசுமைப் பள்ளத்தாக்கு மிக மிக ஆழமும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு. இதற்கு முந்தைய பெயர் தற்கொலை முனை. வைகை அணையை இங்கிருந்து ஓர் அழகான கோணத்தில் காணமுடியும். கோடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 167அடியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட அருவிகள் உள்ளது. ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது. இது நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் அமைந்திருக்கிறது. சுருளி அருவி தேனி மாவட்டத்தில் மேகமலைத் தொடரில் அமைந்திருக்கிறது. திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது கிழக்கு மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலையில் ஏற்காட்டில் அமைந்திருக்கிறது. விலங்குக் காட்சிச்சாலை விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே விலங்குக் காட்சிச்சாலை ஆகும். விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை, உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை அனைவரும் காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரும் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்கு காட்சியகத்தின் வரலாறு என்பது நீண்ட வரலாறைக் கொண்டது. உலகின் மிகப் பழமையான உயிரியல் சேகரிப்பு தோராயமாக, கி.மு 3500 காலகட்டத்தில் எகிப்தில் இருந்ததாக 2009 ஆண்டு ஹிராகோன்போலிஸ் என்ற பகுதியில் நடந்த அகழாய்வின் மூலமாக தெரியவந்தது. இங்கு கவனத்தைக் கவரும் விலங்குகளான நீர்யானைகள், ஹர்டிபீட்ஸ் மான்கள், யானைகள், பபூன் குரங்குகள், காட்டுப் பூனைகள் போன்றவை சேகரிப்பில் இருந்துள்ளன. கி.மு. 11 நூற்றாண்டில் மத்திய அசீரிய பேரரசின் மன்னராக அசூர் பெல் கலா என்பவர் இருந்தபோது விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின், சீன பேரரசியான டான்கி என்பவர் மான் இல்லத்தை கட்டிவைத்திருந்தார். மேலும் சீன அரசர் வென் ஆப் ஜூ என்பவர் லிங்க்-யூ என்னும் விலங்கு காட்சியகத்தை வைத்திருந்தார் இது 1,500 ஏக்கர் (6.1 ச.கி.மீ) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்து நன்கு அறியப்பட்ட விலங்கு சேகரிப்பு மையம் என்பது இசுரேல் நாட்டின் அரசியான செமிராமிஸ் மற்றும் அசிரியா மன்னர் அசூர்பானிபால், பாபிலோனியா மன்னரான நேபுகாத்நேச்சார் போன்றோர் ஆகியோர் அமைத்திருந்தது ஆகும். கி.மு நான்காம் நூற்றாண்டில் உயிரியல் பூங்காகள் பல கிரேக்க நகர நாடுகளில் இருந்தன ; பேரரசர் அலெக்சாந்தர் அவர் போரில் வென்ற நாடுகளில் இருந்து விலங்குகளை கிரேக்கத்திற்கு அனுப்பி வைத்ததாக அறியப்படுகிறது. ரோமப் பேரரசர்கள், ஆய்வுக்கும், அரங்கில் பயன்படுத்தவும் விலங்குகளை தனியார் சேகரித்து வைத்திருந்தனர் இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஹென்றி விலங்குகளை வுட்ஸ்டாக்கில் சேகரித்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது இதில் சிங்கங்கள், சிறுத்தைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குளின் தொகுப்பை தன் அரண்மனையில் வைத்திருந்தார். இடைக்கால இங்கிலாந்தில் மிக முக்கியமான விலங்கு தொகுப்பு இலண்டன் கோபுரத்தில் இருந்தது, இது அரசர் ஜான் மூலம் 1204 இல் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஹென்றி தன் திருமணப் பரிசாக 1235 இல் மூன்று சிவிங்கிகளை புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் பிரடெரிக்கிடம் இருந்த பெற்றார். 1264 இல், சேகரிப்பில் இருந்த விலங்குகள் கோபுரத்தின் முக்கிய மேற்கு வாயிலின் அருகில், உள்ள புல் டவர் என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டு இந்த இடத்திற்கு லயன் டவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த விலங்கு தொகுப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் எலிசபெத் ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் போது, காட்சியகத்திற்கான நூழைவுக் கட்டணம் மூன்று அரை வெள்ளிப்பணம், அல்லது சிங்கங்களுக்கு உணவாக கொடுப்பதற்கு ஒரு பூனை அல்லது நாய் என்று இருந்தது. இந்த விலங்கு காட்சியகத்தை திறந்தபோது விலங்குகள் விலங்குகள் லண்டன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன. நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பார்க்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகிறது. இவை விலங்குக் காட்சிச்சாலை போன்றதே. ஆனால் இவை நீர்வாழ் உயிரினங்களில் மட்டும் சிறப்பு கவனம் எடுத்து காட்சிப்படுத்துகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி, நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. சுற்றுலா சுற்றுலா ("tourism") என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது". உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை. 2010-இல், 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2009-ஐக் காட்டிலும் 6.6% வளர்ச்சியினை காட்டுகிறது. 2010-இல் உலக சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர் வரவை எட்டியுள்ளது. 2009-இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக உலக சுற்றுலாத்துறை 2008-இன் இரண்டாம் பாதியிலிருந்து 2009-ஆம் ஆண்டின் இறுதிவரை சரிவைக் கண்டது. 2009-இல் உலகை உலுக்கிய பறவைக் காய்ச்சல் சர்வதேச சுற்றுபயணிகளின் வருகையை 2009-ஐக் காட்டிலும் 4.2% குறைத்தது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகிறது. சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஒய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது. போக்குவரத்து, தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் பழங்காலத்தில் விரிபு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்வை வாழ்ந்தனர். இருப்பினும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் பிற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு பெற்றனர். சோழ மன்னர்கள் இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் படையெடுத்த போது பலர் அங்கு சென்றனர். குறிப்பிடத்தக்கோர் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ் வணிகர்கள் பல இடங்களுக்கு பழங்காலம் முதலே சென்று வந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. சமய தலங்களை வணங்குவதற்கும், தமது சமயத்தைப் பரப்புவதற்கும் தமிழர் பல இடங்களுக்கு சென்று வந்தனர். வணிக விருந்தோம்பல் விரிபு பெற முன்னர் உணவுக்காவும், உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணர்கள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பல வற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் ஒரு சாரார்ரால் பார்க்கப்படுகிறது. வெளித் தொடர்பும் ஊடாடலும் உள்ளூர்காரர்களுக்கு வரவுகளாக பாக்கப்படுகின்றன. அதே வேளை சுற்றுலா பல கேடுகளையும் செல்வவுகளையும் கொண்டுள்ளது. மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இது அத்யாவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர். இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் சுற்றுலாவே அந்த வன்முறையை அரசுகளை நிலைத்து நிக்க உதவுகின்றன. எவ்வளவு இனப்பிரச்சினை வெடித்தாலும், இலங்கையின் கொழும்பு, கண்டி, காலி போன்ற இடங்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தொடர்கிறது. பர்மாவின் சர்வதிகார அரசுக்கும் சுற்றுலா வருவாய் முக்கியமாக அமைக்கிறது. இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கைகேற்ப முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது. உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் சர்வதேச சுற்றுலாத்துறைக்காக அதிக செலவீனத்தை மேற்கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது. ஓவியக் காட்சியகம் ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்புக்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன. தாவரவியல் பூங்கா பல்வகைத் தாவரங்களை வளர்க்கும் இடம் தாவரவியல் பூங்கா ஆகும். தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து, வகைப்படுத்தி அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே தாவரவியல் பூங்காக்களின் முக்கிய நோக்கம். தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்வதும் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்களின் நோக்காக அமைகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செம்மொழிப்பூங்கா என்ற பெயரில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. முல்தான் முல்டான் (உருது: ملتان)பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். 3.8 மில்லியன மக்கள் தொகை‌ய்யொடு, முல்டான் பாகிஸ்தானின் ஆராவ‌து பெரிய‌ ந‌க‌ரமாக‌ க‌ருதப்‌ப‌டுகிறது. பிரேந்திரா பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ் ("Birendra Bir Bikram Shah Dev", वीरेन्द्र वीर विक्रम शाहदेव) (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001 இல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கும் முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2001 இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் திபெந்திரா சுட்டுக் கொன்றார். இளவரசர் (1955 இல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் நாட்டின் ஈடன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார். பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை மகேந்திரா 1960 இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார். பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990 இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8 இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9 இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது. ஜூன் 1, 2001 இல் நாராயணன்ஹிட்டி அரண்மனையில் நடைபெற்ற அரச விருந்து ஒன்றின் போது, மன்னர் பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இப்படுகொலைகளுக்கு பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திராவே காரணம் என நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர். இக்கொலைக்கான முழுக்காரணமும் இதுவரையில் அறியப்படவில்லை என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது. அத்துடன் தீபேந்திரா மதுவுக்கு அடிமையாகியிருதார் எனவும் அதனால் மன அழுத்தம் அதிகம் கொண்டவராகவும் இருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேந்திராவின் இறப்புக்குப் பின்னர் திபெந்திரா நேபாள மன்னராக அறிவிக்கப்பட்டாலும் இவரும் 4 நாட்களின் பின்னர் ஜூன் 4, 2001 இல் தன்னைத்தானே சுட்டதினால் ஏற்பட்ட காயங்களின் பின்னர் இறந்தார். பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திரா நேபாள மன்னரானார். மெட்டாலிகா மெட்டாலிகா (ஆங்கிலம்: Metallica), ஒரு அமெரிக்க "திராஷ் மெட்டல்" ("Thrash metal") இசை கூட்ட‌மாகும். 1981 ஆன்டில் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா ந‌க‌ர‌த்தில் James Hetfield, Dave Mustaine, Ron McGovney, Lars Ulrich ஆகிய‌ உருப்பின‌ரொடு நிருவாக்க‌ப்ப‌ட்ட‌து. மாயாவதி மாயாவதி என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் இரண்டு கட்டுரைகள் உள்ளன. ஆறாம் சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா 2007 ஆறாம் சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா ரொறன்ரோ, கனடாவில் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அன்று சுயாதீன கலைத் திரைப்பட இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 22 தமிழ்க் குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டு விமர்சகர் தேர்வில் பி. எஸ். சுதாகரனின் கதவுகள், பாஸ்கரின் நதி, நிரோஜன் சிவஹரியின் வினை போன்ற திரைப்படங்கள் தேர்வு செய்யப்பெற்று இவற்றுள் வினை திரைப்படம் கேடயம் வென்றது. நதி திரைப்படம் போட்டி நடுவர்களின் பரிசு பெற்றது. வி. ரவியின் கண்ணால் காண்பதெல்லாம், எஸ். எம். தனபாலனின் மௌன சுமைகள் , அருண் சிவகுமாரனின் அஃகம், ஆகிய குறுந்திரைப்படங்களும் திரையிடப்பட்டன. சி. இராசரத்தினம் சின்னத்தம்பி இராசரத்தினம் ("Sinnathamby Rajaratnam", பெப்ரவரி 25, 1915 - பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டுத்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது. ராஜ்குமார் ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929 — ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள். கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் ராஜ்குமார் "சந்தனக் கடத்தல்" வீரப்ப‌னால் க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். 2006 ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் நாள் இத‌ய‌ நோயால் பெங்க்ளூரில் இறந்தார். இவர் இறந்த பின் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் 8 நபர்கள், காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. கால்வின் கூலிஜ் ஜோன் கால்வின் கூலிட்ஜ் ("John Calvin Coolidge, Jr.", ஜூலை 4 1872 – ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30 குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார். சேர்வெயர் திட்டம் சேர்வெயர் திட்டம் ("Surveyor Program") என்பது நாசாவின் சந்திரனை ஆராயும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் 1966 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மொத்தம் ஏழு தானியங்கி விண்கலங்கள் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. சந்திரனின் தரையில் மெதுவாக இறங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். நாசாவின் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் அப்பல்லோ திட்டத்துக்கு முன்னோடியாக இது கருதப்படுகிறது. இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்தும் சந்திரனிலேயே தங்கியிருக்கின்றன. எவையுமே திரும்பி வரவில்லை. சேர்வெயர் 3 இன் சில பகுதிகளை அப்பல்லோ 12 விண்கலத்தில் சென்றவர்கள் திரும்ப பூமிக்கு எடுத்து வந்தனர். முக்கிய குறிக்கோளான மெதுவான தரையிறக்கம் தவிர, வேறு பல முக்கிய தகவல்களை இத்திட்டத்தின் மூலம் நாசா அறிவியலாளர்கள் பெற்றனர். பயணத்தூரத்தின் இடையீல் சில தவறுகள் திருத்தப்பட்டமை சோதிக்கப்பட்டது. அத்துடன் அப்பல்லோ திட்டத்துக்காக மனிதர்கள் இறங்குவதற்கான தகுந்த இடங்களைத் தீர்மானிக்கவும் இத்திட்டம் உதவியது. பல சேர்வெயர் விண்கலங்கள் சந்திரனின் மண் மாதிரிகளை சோதிக்கும் தானியங்கி கருவிகளை கோண்டு சென்றன. அத்துடன் சந்திரனின் மண் தூசிகளின் ஆழத்தின் அளவு இதுவரையில் அளக்கப்படவில்லை. அக்குறையை இத்திட்டம் போக்கியது. மனிதன் சந்திரனில் இறங்குவதற்கு ஏதுவான ஆழம் இருந்ததை இக்கலங்கள் ஊர்ஜிதப்படுத்தின. சந்திரனின் மண்ணின் வேதியியல் பகுப்புகளை ஆராயும் ஆய்வுக் கருவிகளையும் இத்திட்டத்தின் சில விண்கலங்கள் கொண்டு சென்றன. மொத்தம் 7 விண்கலங்கள் இத்திட்டத்தில் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. இவற்றில் ஐந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. 2ம், 3ம் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. சேர்வெயர் 6 மட்டுமே சந்திரனின் தட்ரையீல் இருந்து மேல் கிளம்பியது. சேர்வெயர் 3 தரையிறங்கிய இடத்திலேயே அப்பல்லோ 12 தரையிறங்கியது. சேர்வெயர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளிப் பயணத்திட்டத்தில் மிகத்தீவிரமாக தனித்தனியே இறங்கியிருந்தன. சேர்வெயர் 1 1966 ஜூன் மாதத்தில் தரையிறங்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே சோவியத்தின் லூனா 9 பெப்ரவரியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. அசோகர் அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார். இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன. மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் ராஜகிரகம் மகத நாட்டின் தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பிகார் மாநிலத் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் "மயுரா" எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் "முரா" என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார். சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது. சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஸ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்). பிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்ததாக சங்க கால புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர். பிந்துசாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள். அசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செலுக்கஸ் நிக்கோடர் என்ற கிரேக்க மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் ( மகிந்த தேரர்), சங்கமித்தையும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர். அசோகருக்கு அசோகவர்த்தனர், தேவனாம் பிரியர், பிரியதர்ஷன் என்று பல பெயர்கள் உண்டு. அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் அனைவரையும் விரும்புபவன் என்பது பொருள். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார், அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது, மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார். அசோகர் ஆட்சிப் பொறுப்பை கி.மு 273 இல் ஏற்றார். ஆனால் அவர் கி.மு 269 ஆண்டு (நான்கு ஆண்டுகள் கழித்து) பதவி ஏற்றார். இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அரியணை ஏற போட்டிகள் இருந்ததாகக் கூறுகின்றன. இதன் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவேளை இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார். அசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உப குப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசங்கர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு புத்தகயாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார். அசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். மெக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும் அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்நார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர். அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிரகத்திர மௌரியன் என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அசோகர் முப்பத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மொரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் புதல்வர் குளானன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரதன் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேயே மொரியப் பேரரசு வீழ்ந்தது. விருந்தோம்பல் துறை பயணிகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்யும் துறை விருந்தோம்பல் துறை ஆகும். இது விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாச் சேவைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. பல பில்லியன்கள் மதிப்புக்கொண்ட இத்துறை, ஓய்வுக்கான நேரமும், பகிரக்கூடிய வருமானமும் கிடைக்கக்கூடியதாக இருப்பதில் தங்கியுள்ளது. இந்தத் துறை பொருளாதாரச் சுழற்சிகளின் தாக்கங்களால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியது. பயன்பாட்டு வீதம் அல்லது அதன் நேர்மாறான வெற்றிட வீதம் என்பது விருந்தோம்பல் துறையில் முக்கியமானதொரு மாறி ஆகும். ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தனது உற்பத்திச் சாதனங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூடுதலாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று விரும்புவதுபோல, உணவகங்கள், விடுதிகள், கருப்பொருட் பூங்காக்கள் போன்றவையும், தமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்ந்த அளவில் வைத்திருக்கும் நோக்கம் கொண்டிருப்பவை. விடுதி தங்குமிடத்தையும் அதனோடு இணைந்த சேவைகளையும் வழங்கும் வணிகமே விடுதி ஆகும். பொதுவாக தற்காலகமாகவே விடுதிகளில் வாடிக்கையாளார்கள் தங்குவர். பயணிகள் சுற்றுலா அல்லது வேலை காரணமாக ஒரு இடத்துக்கு செல்லும் போது விடுதிகளை நாடுவர். தமிழில் விடுதிகள் என்ற சொல் , ஆகிய இரண்டு ஆங்கில சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் தற்காலிக இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹோட்டல்’ என்றும், நீண்ட நாட்கள் இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹாஸ்டல்’ என்றும் பொருட்படுத்துவர். ஹோட்டல் சற்று வசதியும் விலையும் கூடியதாகவும், ஹாஸ்டல் வசதியும் விலையும் குறைவாகவும் இருக்கும். வெளி இடங்களில் சென்று படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஆண்டில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பர். மாநிலங்களவை மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என்பது இந்திய நாடாளுமன்றத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார். மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவையை விட அதிகாரம் குறைந்ததாவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது. மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்: முதன்மைக் கட்டுரை மக்களவை (இந்தியா) மக்களவை ("Lok Sabha") என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதன்படி வரையறுக்கப்பட்டதாகும். இந்த அவையில் அதிகபட்சமாக இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் நாட்டின் பதினாறாவது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது இதன் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம். இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய உச்ச நீதிமன்றம் (ஆங்கிலம்-"Supreme Court of India') இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது . சனவரி 26, 1950, ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் துவங்கி, துவக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது. 1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958 வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது. துவக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958 ல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்பொழுதய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக். இதன் தற்பொழுதைய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது. 1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது. பாராளுமன்றத்தின்ஏற்படுத்தப்பெற்ற தீர்மானத்தின்படி ஆண்டுகளின் வரிசையில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை. சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது. இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையை மத்திய அரசு பழைய முறையை விட்டு புதிதாக கொலீஜியம் என்ற ஒரு முறையை 13 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2014 ஆம் ஆண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் கொண்டு வந்தது. ஆனால் அந்த முறையை இந்திய உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தகுதியாவன: இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். முதல் பெண் நீதிபதியாக எம். பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர். மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்தான் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் தலித் சமூகத்தவர். 2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர். முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76 இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர். தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி . இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார். உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபரிபாலனங்களைக் கையாள்கின்றது. மூல நீதிபரிபாலனம், மேல்முறையீட்டு நீதிபரிபாலனம் மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலனம். இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது. அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) , தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலனத்தைக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துரைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலனத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலனத்தைப் பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும். அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை. பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது. இத்திருத்தச் சட்டத்தினை 1967 இல் உச்ச நீதிமன்றம் "கோக்குல்நாத்" எதிர் "பஞ்சாப்" மாநிலம் என்ற வழக்கின் மூலம் எதிர் கொண்டு, என்ற வரலாற்றுத் தீர்ப்பீனை வழங்கியது. அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக் முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார். இந்தியாவின் உயரிய நீதிமுறைமை , 2008,ஆம் ஆண்டு சந்திதித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவி குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன நீதிமுறைமை கடமைத் தவறியனவாக தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார் உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலன மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா. உணவகம் உணவைச் சமைத்து உண்ண வசதி செய்யும் வணிகம் உணவகம் ஆகும். விரும்பிய உணவை கேட்டு இருந்து சாப்பிட்டு செல்லுமிடங்களையே உணவகம் என்று குறிப்பிட்டாலும், பல உணவகங்களில் சமைத்து உணவை கட்டி எடுத்து செல்லவும் முடியும். சமைத்த உணவு விநியோயகத்தையும் பல உணவகங்கள் செய்கின்றன. பல வேறு வேலைகள் செய்த ஈழத்தமிழர் 1983 பின்னர் பெருந்தொகையாக மேற்குநாடுகளுக்குப் புகலிடம் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பலருக்கு தமது முன்னைய தொழிற்துறைகளில் வேலை பெற வாய்ப்புக்கள் அவ்வளவு கிட்டவில்லை. கல்வித்தகமை, வேற்று நாட்டு அனுபவங்கள் சென்ற இடங்களில் தகுந்தவாறு பொருட்படுத்தப்படவில்லை. மேலும், பலர் சொத்துக்களை இழந்து புகலிடம் செற்றதால் பண வளமும் அற்று இருந்தார்கள். குறைந்த சம்பளமும் கடின உடலுழைப்பும் தேவைப்பட்ட வேலைகளை வசதி படைத்த மேற்குநாட்டினர் அவ்வளவு நாடுவதில்லை. இதனால் ஒப்பீட்டளவில் உணவகங்களில் வேலை செய்ய தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பல உணவகங்களில் தமது வேலையைத் தொடங்கினார்கள். சூதாட்டரங்கம் சூதாட்ட செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படும் அல்லது ஏதுவாக்கப்படும் இடத்தை சூதாட்டரங்கம் எனலாம். சூதாட்ட ஒரு வகை அபாய விளையாட்டுத்தான். மகாபாரத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடி இழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விடுதலை நாள் இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர். இந்திய இலக்கியம் இந்திய இலக்கியமானது மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்று. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 22 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. எனவே பல்வகைப்பட்ட இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன. சமீப காலங்களாக இந்திய-ஆங்கில இலக்கியம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஒய்யாரம் ஒய்யாரம் "(Fashion)" என்பது மக்களால் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் பிரபலமான ஆடை வடிவமைப்பு அல்லது பிரபலமான ஆடையணியும் பாணியாகும். புதுப்பாங்கு என்று ஒய்யாரத்திற்கு இணையாக அழைக்கப்படும் இந்நடைமுறை குறிப்பாக ஆடை, காலணி, ஆபரனங்கள், ஒப்பனை அல்லது உடலை அலங்கரித்துக் கொள்ளும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும், ஒய்யாரம் என்பது தனித்துவமானதும் ஆடை உடுத்திக் கொள்வதில் பெரும்பாலும் அடிக்கடி மாறாத போக்கும் கொண்டதாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சூழலிலும் பிரபலமாக இருக்கும் உடை வகைகள், கட்டிட அமைப்புகள், ஓவியப் பாணிகள், அலங்காரப் போக்குகள், இசை வடிவங்கள், விருந்தோம்பல் முறைகள் ஆகியன ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்பட்டன. பின்னர் ஒய்யாரம் கால சூழல்களுக்கேற்ப மாறி அமைகின்றது. புதிய ஒய்யார வடிவங்களும் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. நடைமுறையில் உள்ள பாங்குகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் புதிய படைப்புகளும் ஒய்யாரம் என்ற சொல்லில் உள்ளடங்கும் . மேலும் ஒய்யாரம் என்ற சொல்லுடன் ஆடையலங்காரம் என்ற தொழில்நுட்ப ரீதியான சொல் இணைக்கப்பட்டுள்ளதால் ஒய்யாரம் என்ற சொல்லின் பயன்பாடு ஆடம்பரமான ஆடை அலங்காரம் அல்லது முகமுடி அணிந்த உடை என்பது போன்ற சிறப்பு பொருளைப் பெறுகிறது. எனவே ஒய்யாரம் என்பது பொதுவாக ஆடை அலங்காரத்தையும் அதைப்பற்றிய ஆய்வினையும் குறிப்பதாக அமைகிறது. பெண் அல்லது ஆண்களுக்கான ஆடையலங்காரப் போக்குகள் ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. சில சமயங்களில் பால்வேறுபாடற்ற ஆண்பெண் ஆடையலங்காரமும் இதில் இடம்பெறுகிறது . பெர்சியா, துருக்கி, இந்தியா அல்லது சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஆரம்பகால மேற்கத்திய பயணிகள், அந்த இடங்களில் ஆடை அணியும் பாணியில் மாற்றங்கள் ஏதுமில்லை என்று அடிக்கடி குறிப்பிட்ட்டுள்ளார்கள். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சப்பானிய ஆடைகள் மாறவில்லை என்று 1609 ஆம் ஆண்டில் சப்பானிய இராணுவ தளபதி சோகனின் செயலாளர் (முற்றிலும் துல்லியமாக அல்ல) எசுப்பானிய பார்வையாளர் ஒருவருக்கு என்று கூறியுள்ளார் . இருப்பினும், சீன ஆடைகளில் வேகமாக மாறும் பாணி இருந்துள்ளதாக மிங் சீனாவில் கணிசமான ஆதாரங்கள் உள்ளன . பண்டைய ரோம் மற்றும் இடைக்கால கலிபாக்கள் காலத்தில் பொருளாதார அல்லது சமூக மாற்றங்களின் அடிப்படையில் பெரும்பாலும் அணியும் உடைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 11 ஆம் நூற்றாண்டில் துருக்கியர்களின் வருகைக்குப் பின்னர் மத்திய ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் இத்தகைய ஆடையணியும் பாணிகளில் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்த தொடர்ச்சியான மற்றும் வேகமான ஆடையலங்கார மாற்றங்களை மிகவும் நம்பத்தகுந்த வகையில் தேதியிட்டு கூற முடியும். மேற்கத்திய பாணியின் தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டின் நாகரிகத்திலிருந்து தொடங்குவதாக யேம்சு லாவர் மற்றும் பெர்னாண்ட் பிரவுடல் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அவர்கள் சமகால சித்திரங்களை பெரிதும் நம்பினர். பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்னரான கையெழுத்துப் பிரதிகள் எதுவும் பொதுவில் இல்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வியத்தகு முறையில் ஏற்பட்ட ஆரம்பகால ஆடையில் ஏற்பட்ட மாற்றமானது திடீரென்று குறுகியது. ஆண்களின் மேலங்கி கெண்டைக்கால் சதை நீளத்திலிருந்து பின்புறத்தை மூடும் அளவுக்கு இறுக்கமடையச் செய்தது . சில நேரங்களில் அது பெரியதாக இருக்கும்படி செய்ய மார்பில் ஒரு திணிப்பையும் சேர்த்துக் கொண்டது. இதன் விளைவாக கால்சட்டையின் மீது அணியப்படும் சட்டை என்ற ஒரு தனித்துவமான மேற்கத்திய அடையாளம் உருவானது. இம்மாற்றத்தின் வேகம் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கணிசமாக அதிகரித்தது, குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடை அலங்காரப் பாங்கில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதிலும் குறிப்பாக முடி மற்றும் ஆடை அலங்காரம் சிக்கலானது. எனவே, குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த படங்களை பெரும்பாலும் ஐந்து வருடங்களுக்குள் நம்பிக்கையையுடனும் துல்லியமாகவும் கலை வரலாற்றாசிரியர்களால் கணக்கிட முடிந்தது. தொடக்கத்தில், ஐரோப்பாவின் மேல் வகுப்பு மக்ககளிடையில் துண்டு துண்டாக இருந்த ஒய்யார பாணி மாற்றங்கள் தொடர்ந்து நாளடைவில் மாற்றமடைந்து தனித்துவமான தேசிய பாணிகளாக வளர்ச்சிபெற வழிவகுத்தது.17 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இத்தேசிய பாங்குகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இவை பெரும்பாலும் பண்டைய பிரான்சு பலுதியிலிருந்து உருவானவையாகும் . செல்வந்தர்கள் வழக்கமாக ஒய்யார பாணியை வழிநடத்தியிருந்தாலும் நவீன ஐரோப்பாவின் ஆரம்பத்தில் அதிகரித்துவந்த செல்வந்தர்களும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஏன் விவசாயிகளும் கூட இத்தகைய ஒய்யார பாணிகளிடம் நெருங்காமல் சற்று விலகியே இருந்தனர். ஆனால் உயரடுக்கில் இருப்பவர்கள் இன்னும் கூட இப்பாணியை அசௌகரியமாகவே கருதுகின்றனர். ஒய்யார பாணியில் நிகழும் மாற்றங்களை இயக்குவதில் இதுவும் ஒரு காரணியாகும் என்று பெர்னான்ட் பிரேடால் கூறுகிறார் 16 ஆம் நூற்றாண்டில் ஆடை அலங்காரத்தில் தேசிய வேறுபாடுகள் மிகவும் அதிகமாக இருந்தன.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 செருமானிய அல்லது இத்தாலிய மனிதர்களின் ஓவியங்களில் பத்து முற்றிலும் வேறுபட்ட தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஆல்பிரெஃக்ட் டியூரெ தன்னுடைய ஓவியங்களில் இந்த வேறுபாடுகளை நியூரம்பெர்க் மற்றும் வெனிசு நகரங்களின் 15 ஆம் நூற்றாண்டு படங்களில் இம்மாறுபாடுகள் தெரியும் வண்ணம் சித்தரித்திருக்கின்றார். ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களிடம் எசுப்பானிய பாணி ஒய்யாரம் 16 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ப்ரெஞ்சு பாணியிலான ஒய்யாரம் வளர்ச்சியடைந்து 18 ஆம் நூற்றாண்டில் ஒரு நிறைவை அடைந்தது. உடைகளின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருந்தாலும் ஆண்களின் மேல் அங்கியும், அரைச்சட்டையின் நீளமும் அல்லது ஒரு பெண்ணின் உடை வடிவமைப்பும் மிக மெதுவாகவே மாற்றமடைந்தன. ஆண்களுக்கான நாகரீக ஒய்யாரங்கள் பெரும்பாலும் இராணுவ மாதிரிகளிலிருந்து பெறப்பட்டன, ஐரோப்பிய ஆண் நிழற்படங்களிலுள்ள மாற்றங்கள் ஐரோப்பிய போர் காட்சிகளிலிருந்து உருவானவையாகும். அங்கிருந்து இராணுவ அலுவலர்கள் கழுத்துப்பட்டை போன்ற வெளிநாட்டுப் பாணிகளைக் கவனிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தனர். 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே பிரான்சிலிருந்து ஆடை அணிந்த பொம்மைகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், 1620 களில் ஆபிரகாம் பாசே புதுமைப்பாங்குடன் பொம்மைகளை உற்பத்தி செய்தார்.1780 களில் இம்மாற்றத்தின் வேகம் சமீபத்திய பாரிசு பாணியிலான ஒய்யாரத்துடன் அதிகரித்தது. 1800 வாக்கில், அனைத்து மேற்கத்திய ஐரோப்பியர்களும் ஒரே வகையான எண்ணத்துடன் ஆடை அணிந்தனர். உள்ளூர் வேறுபாடு முதன்முதலாக மாகாண கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது. பின்னர் அது பழமைவாத விவசாயிகளின் உடைமை ஆனது . தையல்காரர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும் பல கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடைத் தொழிற்சாலையினர் நிச்சயமாக பல புதுமைப் போக்குகளுக்கு வழிவகுத்தனர். ஒய்யார ஆடை வடிவமைப்பு வரலாறு பொதுவாக 1858 முதல் புரிந்து கொள்ளப்பட்டது. ஆங்கிலேய நாட்டில் பிறந்த சார்லசு பிரடெரிக் வொர்த் பாரிசு நகரில் உண்மையான ஒய்யார ஆடை வடிவமைப்பு இல்லத்தைத் திறந்துவைத்தார். ஒய்யார வடிவமைப்பு இல்லங்களுக்கான தொழிற்துறை தரநிலையாக இந்த இல்லத்தின் பெயரே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஆடைகளை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் இருபது பணியாளர்களை வைத்திருப்பது, ஆடையலங்கார அணிவகுப்பு காட்சிகளில் ஆண்டிற்கு இரண்டு தொகுப்புகளைக் காட்டுவது, சில குறிப்பிட்ட வகை மாதிரி ஆடை வடிவமைப்பு வகைகளை வடிவமைப்பாளர்களுக்கு வழங்குதல் போன்ற தரநிலைகளை ஒய்யார வடிவமைப்பு இல்லங்கள் கடைபிடிக்க வேண்டும் .அப்போதிலிருந்து பிரபலமான வடிவமைப்பாளரின் ஆலோசனைகள் பெருகி ஒய்யார வடிவமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது . இருபாலரும் அணிந்து கொள்ளக்கூடிய ஆடைகளை உருவாக்கும் உத்தி 1960 களில் தோற்றுவிக்கப்பட்டது. பியர் கார்டின் மற்றும் ரூடி கெர்ன்ரிச் போன்ற வடிவமைப்பாளர்கள் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளக்கூடிய நீண்ட கால்சட்டைகள் போன்ற ஆடைகளை உருவாக்கினர். இருபாலர் அணியும் உடையின் தாக்கம் இருபால் மனிதர், பேரளவு சந்தைப்படுத்தல், கருத்துமுறை உடுத்துதல் என ஒய்யார உலகில் மிகப்பரவலாக விரிவடைந்தது . செம்மறியாட்டுத் தோலாடைகள், பறக்கும் மேலாடைகள், கம்பளி மேலாடைகள் போன்றவை 1970 களின் ஒய்யாரப் போக்குகளாக இருந்தன. இத்தகைய வடிவமைக்கப்படாத உடைகளை ஆண்கள் சமுதாயக் கூடல் விழாக்களில் உடுத்தினர். பழமைவாத போக்குக்கு மாறாக சில ஆண்களின் உடை அணியும் பாணி உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் உடல் கட்டமைப்பை வெளிக்காட்டும் தன்மையும் ஆகியவை கலந்தன. வளர்ந்துவரும் ஓரினச்சேர்க்கையாளர் இயக்கமும், இளைனர்களும் புதிய பானியிலான உடை அலங்காரத்திற்கு வலுவூட்டினர். மெல்லிய துணிகளாலான உடைகளை அணிய முற்பட்டனர். முன்னதாக இத்தகைய துணிகள் பெண்களுக்கான உடைகளாக வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் . பாரிசு, மிலன், நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் ஒய்யார வடிவமைப்புகளின் நடப்பு தலைநகரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மிகப் பெரிய ஒய்யார உடை நிறுவனங்களுக்கான தலைமையகங்களாகும். மேலும் இவை நான்கும் உலகளாவிய பாணியிலான உடை வடிவமைப்பில் மிகுந்த செல்வாக்கும் புகழும் பெற்றவையாகும். இந்நகரங்களில் ஒய்யார வாரங்கள் என்னும் வாராந்திர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆடை வடிவமைப்பாளர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய பாணியிலான உடைகளை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகின்றனர். முன்னனி ஆடை வடிவமைப்பாளர்கள் பாரிசு நகரை மையமாகக் கொண்டு உலகின் பார்வையை பாரிசு நகரின் பக்கம் திருப்புகின்றனர். நவீன மேற்கத்தியர்கள் தங்கள் ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான தேர்வுவாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன. ஒரு நபர் தான் அணியத் தேர்வு செய்யும் உடையில் அவரின் ஆளுமை அல்லது ஆர்வங்களைப் பிரதிபலிக்கிறது. உயர்ந்த கலாச்சார நிலையை உடைய மக்கள் புதிய அல்லது வேறுபட்ட ஆடைகளை அணிய ஆரம்பிக்கும்போது ஒரு புதிய ஒய்யாரப் போக்கு தொடங்குகிறது. இந்த நபர்களை விரும்புகிறவர்கள் அல்லது மதிக்கிறவர்கள் தங்கள் சொந்த பாணியிலான அலங்காரத்தில் பாதிக்கப்பட்டு அவர்கள் அணியும் அதேபோன்ற பாணியிலான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். வயது, சமூக வர்க்கம், தலைமுறை, ஆக்கிரமிப்பு மற்றும் புவியியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் ஒய்யார உடைகள் வேறுபடுகின்றன மற்றும் காலப்போக்கில் மாறுபடுகின்றன. இளம் வயதினரைப் போல் உடுத்திக் கொள்ளும் முதியவர்கள் சமூகத்தின் பார்வையில் ஒரு மோசமானவராகக் கூடத் தோன்றலாம். சமீபத்திய ஆண்டுகளில் ஆசியாவிலும் ஒய்யார உடைகள் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் பெருகி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனா, சப்பான், இந்தியா மற்றும் பாக்கிகித்தான் போன்ற நாடுகளில் இருந்த பாரம்பரிய உடை வடிவமைப்பாளர்களிடத்தில் மேற்கத்திய உடை வடிவமைப்பாளர்களின் தாக்கமும் தலையீடும் அதிகரித்துள்ளன. ஆனாலும் ஆசிய ஆடை வடிவங்கள் தங்கள் சுய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு செல்வாக்கு செலுத்துகின்றன . சுன் இ சியன் சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் () சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை: லியு சியாங் லியு சியாங் ( எளிய சீனம்: 刘翔; மரபு சீனம்: 劉翔; பின்யின்: Liú Xiáng; ஆங்கிலம்: Liu Xiang; பிறப்பு யூலை 13, 1983 சாங்காய், சீன மக்கள் குடியரசு) ஒலிம்பிக் 100 மீ தடைதாண்டு ஓட்ட தங்க பதக்க வீரர். முதன்முறையாக ஆண்களுக்கான தட கள விளையாட்டில் சீனாவுக்கான தங்க பதக்கத்தை இவர் வென்று குடுத்தார். இவர் சீனாவில் மிகவும் போற்றப்படும் விளையாட்டு வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் இவர் வெற்றி பெற வேண்டும் என்ற பெரும் சுமைக்கும் ஆளாகியுள்ளார். டெனாலி டெனாலி ("Denali") அல்லது மெக்கின்லி மலை ("Mount McKinley") வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி அமெரிக்காவின் டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1917 முதல் 2015 வரை இந்த மலை அலுவல்முறையாக முன்னாள் குடியரசுத் தலைவரான வில்லியம் மக்கென்லி நினைவாக "மெக்கின்லி மலை" என்று அழைக்கப்பட்டு வந்தது; 2015இல் அலாசுக்கா மாநிலத்தின் வழிகாட்டுதலில் ஐக்கிய அமெரிக்க அரசு இதன் பெயரை உள்ளூர் கோயுகொன் மொழி பெயரான டெனாலிக்கு மாற்றியுள்ளது. இந்த மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஆக உள்ளது. எவரெசுட்டு சிகரத்திற்கும் அக்கோன்காகுவாவிற்கும் அடுத்து மூன்றாவது மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டுள்ளது. முதுகுநாண் முதுகுநாண் என்பது கரு நிலையில் எல்லா முதுகுநாணி விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது உருளையான குச்சி போன்ற உடல் அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போன்று, தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முதுகுநாண், கரு உருவாகும் முதல்நிலைகளில் தோன்றும் மேசோடெர்ம் (mesoderm) எனப்படும் கருநிலைப் படலமாகிய அமைப்பில் இருந்து பெறும் செல்களால் (கண்ணறைகளால்) உருவாகின்றது. உடலமைப்பு எளிமையான முதுகெலும்பி விலங்குகளில் இந்த முதுகுநாண் வாழ்நாள் முழுவதும் அவற்றின் உடல் அச்சாக நிலைத்து இருக்கும். உயர்நிலை முதுகெலும்பிகளில், இந்த முதுகுநாண் மறைந்து, முதுகெலும்பாக மாற்றப்படும். முதுகுநாண், நரம்புக் குழாய்க்கு (neural tube) கீழே (அடிப்புறம்) அமைந்திருக்கும். இந்த முதுகுநாண், முதுகெலும்பு போன்ற உடல் அச்சாகத் தோன்றிய முதல் வடிவம் எனக் கொள்ளலாம். முதுகெலும்பு இல்லாத முதுகுநாணி விலங்குகளில், உடலுக்கு உறுதி தரும் அமைப்பாக இது உள்ளது. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், கரு வளர்ச்சியுறும் முதல்நிலைகளில் இந்த முதுகுநாண் உள்ளது. எட்வேர்ட் வைட் எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் ("Edward Higgins White, II"; நவம்பர் 14, 1930 – ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார். எட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார். பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம் பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம் என்பது இந்தியக் குடியரசில் தற்போது கிடப்பில் உள்ள ஒரு வரைவுச் சட்டம். இந்திய அரசியலமைப்பின் 108வது சட்ட திருத்தமாக இது கொண்டுவரப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இது மார்ச் 2010ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீழவையான மக்களவையால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இச்சட்டம் இந்திய மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் படி பெண்களுக்கென ஒதுக்கப்படும் தொகுதிகள் மூன்று பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகு 33 % ஒதுக்கீடு முன்னரே நடைமுறையில் உள்ளது. சட்டமியற்றும் மன்றங்களின் குறைவாக இருக்கும் பெண்களின் சதவிகிதத்தை இச்சட்டம் உயர்த்துமென இதன் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதன் எதிர்ப்பாளர்கள் இதனால் மேட்டுக்குடி மற்றும் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே பயன்பெறுவர் என எதிர்க்கிறார்கள். இதனால் இவ்வொதுக்கீட்டீல் சாதிவாரியாக உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும் கருதுகிறார்கள். எர்ணஸ்ட் மாயர் எர்ணஸ்ட் வால்டெர் மாயர் 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல், பறவையியல், அறிவியல் வரலாறு, இயற்கையியல் என பரந்து விரிந்தது. இவரது படிமலர்ச்சியியல் ஆராய்ச்சிகள் "தற்கால படிமலர்ச்சியியல்" கோட்பாடுகளுக்கு வழிவகுத்து, பின் "உயிரியல் சிற்றின கோட்பாட்டு" வளர்ச்சிக்கு வழி வகுத்தது. "சிற்றினத் தோற்றம்" குறித்து புதிய பார்வையை உருவாக்கியவர். நோபல் பரிசுக்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் கிராஃபோர்டு பரிசு இவருக்கும், ஜான் மேநார்டு சுமித், ஜார்ஜ் சி. வில்லியம்சு ஆகியோருடன் இணைந்து (படிமலர்ச்சி உயிரியல் கருத்தை உருவாக்கல் பணிக்காக) வழங்கப்பட்டது. பொற்கோயில் ஹர்மந்திர் சாஹிப் ("Harmandir Sahib", பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது "தர்பார் சாஹிப்" (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக பொற்கோயில் ("Golden Temple"), என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும். ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது. இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா ரஞ்சித் சிங், வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது. ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப், எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர். ஹர்மந்திர் சாஹிப் என்றால் கடவுள் கோயில் என்று பொருள். கிபி 1577 யில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். பின்னர் அது அமிர்தசரஸ் ("அழியா தேன் குளம்" என்று பொருள்) என அழைக்கப்படுகிறது. அதை சுற்றி வளர்ந்த நகரத்திற்கும் அதே பெயர் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில், ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் ("கடவுளின் இல்லம்" என்று பொருள்), இந்த தொட்டியின் நடுவில் கட்டப்பட்டது. மேலும் இது சீக்கியர்களின் உச்ச மையமாக ஆனது. அதன் கருவறையில் சீக்கிய குருக்கள் மற்றும் சீக்கிய தத்துவங்களை பின்பற்றிய மற்ற ஞானிகள், எ.கா., பாபா ஃபரித், மற்றும் கபீர் ஆகியோரின் பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பான ஆதி கிரந்த்தம் உள்ளது. ஆதி கிரந்த்தின் தொகுப்பு சீக்கியர்களின் ஐந்தாவது குருவான, குரு அர்ஜன் மூலம் தொடங்கப்பட்டது. 1574 ல் முதலில் கட்டப்பட்ட குருத்வாரா தளம் ஒரு மெல்லிய காட்டில் ஒரு சிறிய ஏரியால் சூழப்பட்டிருந்தது. அருகாமையில் உள்ள கோயிந்தவால் என்ற பகுதிக்கு வந்த மொகலாய பேரரசர் அக்பர், மூன்றாவது சீக்கிய குரு, குரு அமர் தாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு சாகிர்(நிலம் மற்றும் பல கிராமங்களின் வருவாய்) கொடுத்தார். குரு ராம் தாஸ் அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி ஒரு சிறிய குடியிருப்பு கட்டினார். சில ஹர்மந்திர் சாஹிப் கட்டடக்கலை அம்சங்கள் சீக்கியர்களின் உலக கண்ணோட்டத்தை அடையாள படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. பொதுவாக குருத்வாரா உயர் நிலப்பகுதியில் கட்டப்படும். ஆனால் இந்த தங்கக்கோயிலோ அதை சுற்றியுள்ள நிலப்பகுதியை விட குறைந்த உயரத்தில் கட்டப்பட்டது. பக்தர்கள் அதனுள் நுழைய கீழே படிகள் இறங்கி போக வேண்டும். மேலும் ஒரு நுழைவிற்கு பதிலாக ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் நான்கு நுழைவாயில்கள் கொண்டுள்ளது. மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் (வழக்கமாக 13ஆம் தேதி) கொண்டாடப்படும் வைசாகி ஆகும். குரு தேக் பகதூர் தியாக நாள் குரு நானக் பிறந்த போன்ற பிற முக்கிய சீக்கிய மத நாட்களும் கொண்டாடப்படுகிறது. இதேபோல் பந்தி சோர் திவாஸ் என்ற விழாவில் அழகாக விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 3 ஜூன் 1984 இல் மேற்கொள்ளப்பட்டு, 1984 ஜூன் 6 ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான இந்திய இராணுவம், அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை செயல்படுத்த ஆதரவு தெரிவித்த அமைதியான போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஹர்மந்திர் சாஹிப்பினுள் காலாட்படை, பீரங்கிப்படை, மற்றும் டாங்கிகளை கொண்டுவந்தது. இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தி புளூஸ்டார் நடவடிக்கை (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆறு மாதங்களுக்குள் (31 அக்டோபர் 1984), இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலர்களல் இந்த நடவடிக்கைக்காக கொல்லப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தியதி "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்" நடவடிக்கை நடந்து 30 வருடம் ஆனதைக் குறித்து "பொற்கோயிலினுள்" சிரோண்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் விவாதித்தனர். இதில் "இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன்" தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் பின் நடந்த சிறுவன்முறைச் சம்பவத்தில் இரு பிரிவினரும் கத்தி, ஈட்டி மற்றும் வாள் ஆகிய ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இத்தாக்குதலில் 12 பேர் காயமுற்றனர். தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள் தமிழ்நாடு பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது சமூக, பொருளாதார, அரசியல் நோக்கில் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு ஆட்சிப்பகுதியாக இருந்தது. சாதி அமைப்பின் படி அனேக தமிழர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டார்கள். பெண்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்த முடியாமல் கல்வி, வேலை வாய்ப்புக்கள் இன்றி அடக்கப்பட்டு இருந்தார்கள். சமூகத்தின் மீது மூடநம்பிக்கைகளும் சமயமும் இறுகிய பிடியைக் கொண்டிருந்தது. கல்வியை சிறுபான்மையினர் மட்டுமே பெற்றிருந்தனர். பெரும்பானமையானோர் கிராமத்தில் வேளாண்மையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். இந்தியாவின் அரசியல் மையம் வட நாட்டிலிலேயே இருந்தது. பாரதியின் பாட்டுக்களில் இத்தகைய நிலைகளில் பலவற்றை அவன் விபரித்து பாடியிருக்கிறான். இத்தகைய சூழலில்தான் தமிழில்நாட்டில் சீர்திருத்தங்கள் பல தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அத்தகைய அரசியல்ல் தலைவர்களில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் முக்கியமானவர்கள். இதக் கட்டுரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை விபரித்து மதிப்பிடும். தமிழ்நாட்டில் 80% மேற்பட்டோர் உயர்சாதி அல்லாதோர். சமூகத்தின் அதிகார சட்ட பொருளாதார சமய அலகுகளை கட்டுப்படுத்திய உயர்சாதியினர் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்தையும் கட்டுப்படுத்தினர். கல்வி, அரசு, வணிகச் சூழல் ஆகிய கட்டமைப்புகள் இத்தகைய நிலையையே பேணின. இதை உடைக்க அரசிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு அவசியம் என உணரப்பட்டது. இந்த அடிப்படையில் 50% மேற்பட்ட இடங்கள் தமிழ்நாட்டில் ஒதிக்கீடு செய்யப்பட்டன. "முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்" தமிழ்நாட்டில் அதிகாரம் வர்க்கத்தில் ஒரு பிரிவிர் நிலக்கிழார்களே. இவர்கள் பெரும்பான்மை நிலத்தை உரிமையாக்கி, பெரும்பான்மை தொழிலாளர்களை, சில வேளைகளில் கொத்தடிமையாகவும் வைத்து தமது செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தனர். நிலத்தில் உழைக்கு விவசாயி பெரும் நிலம் அற்றே இருந்தார். இதை நிவர்த்தி செய்ய நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. கல்வியே சமூக பொருளாதார மேம்பாட்டை உந்தும் கருவி. சமூக ஏற்றதாழ்வை கட்டுபடுத்தக்க வல்ல கருவி. சாதித் தொழில்களை விடுத்து புதுத் தொழில்களை மேற்கொள்ளவும் கல்வி அவசியம். கல்வியின் அவசியம் தமிழ்நாட்டினாரால் நன்கு உணரப்பட்டது. எனினும் நடைமுறைப்படுத்தல் தாமதமாகவே இருந்தது. ஏழ்மை ஒரு பெரும் தடையாக இருந்தது. பசியே மாணவர்கள் பாடசாலைக்கு வாராததற்கு ஒரு முக்கிய காரணம் என காமராஜர் கண்டறிந்தார். பள்ளியில் மதிய உணவை வழங்கி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தார். தமிழ்நாடு செயலகத் துறைகள் சிரஞ்சீவி (நடிகர்) "" சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிப்பெற்றார். ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார். உணர்வொலிக் கிளவி உணர்வொலிக் கிளவி ("Ideophone") என்பது ஓர் உணர்வை வெளிப்படுத்த மாந்தர்கள் கூறும் சொற்கள். நாற்றம், வண்ணம், ஓசை, நகர்வு, தொடுவுணர்வு, சுவை போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றிய அழுத்தமானதாகவும், அதன் இயல்புக்கு நெருக்கமாகனதாகவும் ஏற்படும் உணர்வை விளிக்கப் பயன்படும் சொல்லைக் குறிக்கும். இது ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அறியப்பட்டதானாலும் அதன் இயல்பும் பயன்படும் அளவும் மொழிக்கு மொழி மாறுபடுவன. இதனால் இவற்றை எழுவாய் பயனிலை போன்று மொழிகளூடே ஒரு பொதுவான இலக்கணக் கூறாகக் கொள்ளக்கூடாது என சில மொழியியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ் உட்பட பல மொழிகளில் இவை இரட்டைக் கிளவிகளாகவும் இருக்கின்றன. தமிழில் குறிப்படத்தக்க அளவு மிகுதியான எண்ணிக்கையில் இவை மலிந்துள்ளன. ஒரு பொருள் அல்லது நிகழ்வு எப்படி "ஒலிக்கிறது" அல்லது எப்படி உணரப்படுகின்றது அல்லது என்ன "சொல்கிறது" என்பதைக் குறிக்கும் விதமாக, "என்று" என்ற சொல் பின்னே இட்டுப் பயன்படுகிறது. இதன் வழியாக ஒரு வினையின் பண்பை விளக்கும் உரிச்சொல்லாகிறது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு என்பது, அணு ஆற்றல் தொடர்பான விபத்துக்கள் நிகழும்போது, பாதுகாப்புக் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்டதாகும். இதை அனைத்துலக அணு ஆற்றல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டெல்டா ஏர்லைன்ஸ் டெல்டா எயர்லைன்ஸ் (Delta Air Lines) உலகில் மொத்தப் பயணிகள் கணக்கெடுப்பின் படி இரண்டாம் மிகுந்த விமானசேவை நிறுவனம் ஆகும். அட்லான்டாவை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகில் பல விமானசேவை நிறுவனங்களுடன் மிக நகரங்களை இணைக்கிறது. 2008இல் ஏப்ரல் 14 இந்நிறுவனம் வடமேற்கு எயர்லைன்ஸ் உடன் சேரும் என்று கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்தால் உலகில் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமாக இருக்கும். டெல்டா ஏர்லைன்ஸ் அமெரிக்க விமான சேவைகளில் முதன்மையான விமான சேவையாகும். இதன் தலைமையகம் ஜார்ஜியாவிலுள்ள, அட்லாண்டாவில் உள்ளது. ஆறு கண்டங்களில் இது தனது விமான சேவையினை வழங்குகிறது. டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் இதன் துணை ஆட்சி நிறுவனங்கள் இணைந்து தினமும் 5,000 விமானங்களை இயக்குகிறார்கள். இந்த நிறுவனங்களில் மட்டும் சுமார் 80,000 பேர் வேலை செய்கின்றனர். இந்த விமானசேவையின் தலைமையகம் ஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது. பயணிகள் செல்வது (ஆண்டிற்கு 91 மில்லியன் பயணிகள் செல்கின்றனர்) மற்றும் விமான தரையிறக்கம் மற்றும் விமான மேலேற்றம் அடிப்படையில் இந்த விமான நிலையம் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம் ஆகும். மேலும் டெல்டா விமான சேவையின் தொழில்நுட்ப செயல்பாடுகளின் தலைமையகமும் இதுவே. ஆரம்பிக்கப்பட்ட தேதி மற்றும் நிறுவப்பட்ட விமான சேவையின் அடிப்படையில் இது பழமையான விமானசேவைகள் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிகப்படியான விமான குழுக்களைக் கொண்டுள்ள விமான சேவையாகும். 2012 ஆம் ஆண்டு அதிகப்படியான பயணிகளின் எண்ணிக்கை கொண்ட விமான சேவையும் இதுவாகும். இந்த விமான நிறுவனம் ஹஃப் டாலண்ட் டஸ்டர்ஸ் என்ற பெயருடன் மே 30, 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இடம் ஜார்ஜியாவிலுள்ள மாகோன் என்றாலும் 1925 ஆம் ஆண்டு லூயிசியானாவிலுள்ள மான்ட்ரோவிற்கு மாற்றப்பட்டது. இதன் உண்மையான இயக்குநர்களில் ஒருவரான கால்லெட் ஈ. ஊல்மேன் செப்டம்பர் 13, 1928 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தினை வாங்கினார். அதன் பின்பு அதன் பெயரினை டெல்டா ஏர் செர்வீஸஸ் என்று மாற்றம் செய்தார். இந்நிறுவனம், 1929 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்கியது. 1960 ஆம் ஆண்டுகளில் புரொப்பல்லர் ரக விமானங்களுக்குப் பதிலாக ஜெட் ரக விமானங்களை அறிமுகப்படுத்தினர். அதன்பின்னர் 1970 ஆண்டுகளில் ஐரோப்பிய சர்வதேச விமானங்களுடனும், 1980 களில் பசுபிக் பகுதிகளிலும் தனது சேவைகளைத் தொடங்கியது. இதன் சின்னம்/குறியீடு 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதுள்ள சின்னம்/குறியீடு இரு முப்பரிமாண முக்கோணங்களைக் கொண்டதாகும். டெல்டா ஏர்லைன்ஸ் ஒன்பது உள்நாட்டு மையங்களையும் மூன்று சர்வதேச மையங்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன. இடைமாநில நெடுஞ்சாலை முறை ஐக்கிய அமெரிக்காவின் டுவைட் டி. ஐசனாவர் இடைமாநில நெடுஞ்சாலை முறை (Interstate Highway System) அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை முறையிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75,376 கிமீ அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் மிகப்பெரிய பொதுப்பணித் திட்டமும் ஆகும். அமெரிக்காவின் பல முக்கியமான நகரங்களிலும் ஒரு இடைமாநில நெடுஞ்சாலையாக இருக்கும். இச்சாலைகளின் சந்திகளில் போக்குவரத்து ஒலிகள் கிடையாது; பல சந்திகளில் வாகனங்கள் மேம்பாலங்களை பயன்படுத்தி இடைமாற்றுச்சந்திகளால் வேறெந்த நெடுஞ்சாலைக்கு செல்லவும். பொதுவாக இச்சாலைகளின் விரைவு எல்லைகள் பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 100 கிமீ/மணித்தியாலம் ஆகும்; கிராமப் பகுதிகளில் சில இடத்தில் 130 கிமீ/மணித்தியாலத்துக்கு மேலும் இருக்கும். டுவைட் டி. ஐசனாவர் டுவைட் டேவிட் ஐசனாவர் ("Dwight David Eisenhower"; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன. 1707 1707 (MDCCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது. யோகாசனம் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்." ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே. யோகாசனம் - கீதா சாம்பசிவம் - http://freetamilebooks.com/ebooks/yogasanam/ திருக்கண்டீஸ்வரம் திருக்கண்டீஸ்வரம் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த ஒரு ஊராகும். இது நல்ல நிலவளமும் நீர்வளமும் பொருந்தியது. இவ்வூர் மக்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். நெல்லும், கரும்பும் இங்கே விளைவிக்கப்படும் முக்கிய பயிர்களாகும். இவ்வூர் நெல்லிக்குப்பம் நகர நிர்வாகத்தின்கீழ் உள்ளது. இதனால், பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதிகள், சாலை விளக்குகள், கல்வி வசதிகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பன தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈதர்நெட் குறஸோவ கேபிள் ஈதர்நெட் குறஸோவ கேபிள் இரண்டு கணினிகளை நெட்வேர்க் சுவிச், ஹப். ரவுட்டர் போன்ற உபகரணங்களின் துணையின்றி நேரடியாக இணைக்கப்பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இரண்டு கணினிகளை நெட்வேர்க் காட் எனப் பொதுவாக அழைக்கப்படும் வலையமைப்பு அட்டைகளூடாக நேரடியாக இணைப்பை ஏற்படுத்த இயலும். இவை இரண்டு கணினிகள் இருக்கும் இடத்தில் இலாபகரமானது என்பதாலும் இடத்தைப் பிடித்துக் கொள்ளாது என்பதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றது. 10BASE-T மற்றும் 100BASE-TX ஆகிய இரண்டு ஈதர்நெட் நியமங்களும் ஒரு சோடி வயரை மாத்திரம் ஒருபக்கத்தில் இருந்தான தகவல் பரிமாற்றத்திற்குப் பாவிக்கின்றன (ஆகவே மொத்தமாக இருக்கும் 4 சோடிவயர்களில் அல்லது 8 வயர்களில் இரண்டு சோடிவயர்கள் அல்லது 4 வயர்கள் மாத்திரமே பாவனையில் இருக்கும்). ஓரே சப்நெட் மாஸ்க் இல் உள்ள வலையமைப்பில் இதனூடக இணைப்பை ஏற்படுத்தலாம். செம்ப்ரோன் செம்ப்ரோன் (தமிழக வழக்கு: செம்ப்ரான்) என்பது ஏஎம்டி (AMD) என்னும் கணினி நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்யும்" கணி மையச் செயலி" (அல்லது "பணிக்கரு", CPU) ஒன்றின் வணிகப் பெயர். இப்பணிக்கரு (அல்லது கணி மையச்செயலி), பொதுவாக பலவகையான மேசைக்கணினிகளில் பயன்படுமாறு பொது அமைப்பு கொண்ட ஒன்று. இம் மையச்செயலி பல்வேறு புறக்கம்பி அமைப்புகளுடன் பல்வேறு தாய்ச்சுற்றட்டைகளில் உள்ள குழிகளில் பொருந்துமாறும் செய்து வெளியிடப்படுகின்றது. (தக்க புறக்கம்பி அமைப்புகளுடன் ஒரு மையச்செயலி குழிவான இடத்தில் பொருந்தி இருக்கும்படியான அமைப்புக்கு, சி.பி.யு "பெறுகடி" (சீபியூ சாக்கட்) அல்லது பணிக்கரு பெறுகடி என்று பெயர்). செம்ப்ரோன் ஏஎம்டி டியூரோன் மாற்றீடு செய்ததுடன் இண்டெல் செலிரோன் டீ (Celeron D) பணிக்கருவுடன் (புரோசரருடன்) போட்டியிடுகின்றது. செம்ப்ரான் என்னும் பெயர், இலத்தீன் மொழியில் எப்பொழுது, எந்நாளும் என்று பொருள் படும் செம்ப்பெர் "semper" என்னும் சொல்லில் இருந்து ஏஎம்டி (AMD) நிறுவனம் இச்சொல்லை உருவாக்கினார்கள் முதலில் வெளிவந்த செம்ப்ரோன் புரோசசர்கள் ஏஎம்டி அத்லோன் எக்ஸ்பி தறோபிறெட் கோர் ஐ அடிப்படையாகக் கொண்டு சாக்கட் A இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டது. இவை 166 மெகா ஹேட்ஸ் FSB, மற்றும் 256 கிலோபைட் Level 2 காஷ் நினைவகத்தையும் கொண்டுருந்தது. பின்னர் ஏஎம்டி 3000+ புரோசசரை பார்ர்டோன் கோர் ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியது. இதில் 512 கிலோபைட் நினைவகம் இருந்தது. இரண்டாம் தலைமுறை செம்ப்ரோன் சாக்கட் 754 அத்லோன் 64பிட் ஐப் பின்பற்றி உருவாக்கபப்ட்டதாகும். இதில் அதிவேக காஷ் நினைவகம் அத்லோன் 64பிட் ஐவிட க்குறைவானதாகும். முன்னைய மாதிரிகளில் 64பிட் ஆதரவு இருக்கவில்லை. எவ்வாறென்றாலும் அத்லோன் 64 போலவே இதிலும் பல வசதிகள் உண்டு. 2005 ஆம் ஆண்டின் அரைப்பாகத்தில் 64பிட் செம்ரோன் புரோசர்களை ஏஎம்டி அறிமுகம் செய்தது. சில ஊடகவியலாளர்கள் (ஏஎம்டி அல்லாத) புரோசர்களை செம்ப்ரோன் 64 என்றவாறும் அழைத்தனர். 2006ஆம் ஆம் ஆண்டில் சாக்கெட் ஏஎம்2 மற்றும் சாக்கட் எஸ்1 இற்கான புரோசர்கள் அறிமுகம் ஆனது. னான் இதை மேம்படுத்தி விரைவில் ஒரு கட்டுரை எழுதுவேன் silicon_solution@rediffmail.com சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: "Singapore Changi Airport", மலாய்: "Lapangan Terbang Changi Singapura", சீனம்: 新加坡樟宜机场, பின்யின்: Xīnjiāpō Zhāngyí Jīchǎng) சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில வானூர்தி தொண்டு நிறுவனங்கள் இவ்வானூர்தி நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும். இது 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓப்பன் 1997 முதல் சென்னை ஓப்பன் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி ஆகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டு ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் இது ஒன்றாகும். 1996இல் கோல்டு ஃப்ளேக் ஓபன் என்றப் பெயரில் தொடங்கப்பட்ட இப்போட்டி 2002இல் டாட்டா ஓபன் எனவும் 2011இல் ஏர்செல் சென்னை ஓப்பன் எனவும் பெயர்மாற்றியுள்ளது. இப்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் இப்போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரிடியம் இரிடியம் "(Iridium)" என்பது Ir என்ற மூலக்கூற்றுவாய்ப்பாடு கொண்டஒரு தனிமம் ஆகும். இத்தனிமத்தின்அணுஎண் 77 ஆகும். பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமமான இது கடினமானதாகவும், நொறுங்கக்கூடியதாகவும் வெள்ளி தனிமத்தைப் போலவெண்மை நிறங்கொண்டதாகவும் உள்ளது. ஒசுமியம் தனிமத்தை அடுத்து இரண்டாவது அடர்த்தி மிகுந்த தனிமமாக இரிடியம் கருதப்படுகிறது. 2000 °செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது. சில உருகிய உப்புக்களும் ஆலசன்களும் மட்டும் திடநிலை இரிடியத்தை அரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன என்றாலும், கடைசியாகப் பிரித்தெடுக்கப்படும் இரிடியம் தூள் மிகவும் வினைத்திறன் கொண்டதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது. இரிடியம் 1803 ஆம் ஆண்டு இயற்கையாகத் தோன்றும் பிளாட்டினத்துடன் காணப்படும் கரையாதமாசுக்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதன்மை கண்டுபிடிப்பாளரான சிமித்சன் டென்னண்ட் கிரேக்க தெய்வம் இரிசு என்பதைக் குறிக்கும் பெயரை மையமாகக் கொண்டு உருவகமாக இத்தனிமத்திற்கு இரிடியம் எனப் பெயரிட்டார். இரிசு தெய்வத்திற்கு அடையாளமாக வானவில்லைக் குறிப்பிடுவர். இரிடியத்தின் உப்புகளும் பலவண்ணங்களில் காணப்படுகின்றன. இரிடியம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அரிதான தனிமங்களில் ஒன்றாகும், இதன் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வு மூன்று டன்கள் மட்டுமேயாகும். 191Ir மற்றும் 193Ir என்ற இரண்டு ஐசோடோப்புகள் மட்டுமே இரிடியத்திற்கான ஐசோடோப்புகள் ஆகும். நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புக்களும் இவை மட்டுமேயாகும். பிந்தைய இரண்டாவதாகக் கூறப்பட்ட ஐசோடோப்பு புவியில் மிக அதிகமாகஉள்ளது. இரிடியம் தொழில் துறை வினைவேகமாற்றிகள் மற்றும் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஏராளமான கரிமசேர்மங்களை உருவாக்குகிறது என்றாலும் இது குளோரினுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களும் அமிலங்களும் மிகமுக்கியமானபயன்பாட்டில்உள்ளன. உயர்செயல்திறன் மின் அடைப்புகள், அதிகவெப்பநிலை குறைக்கடத்திகளின் மீளுருவாக்கச் செயல்முறைக்குப் பயன்படும் மட்பாண்டங்கள், குளோரால்கலி செயல்முறைக்குத் தேவையான மின்வாய்கள் ஆகியவற்றில் இரிடியம் உலோகம் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் மேற்புறத்தில் கிடைப்பதைக் காட்டிலும் மிக அதிகமானஅளவில் விண்கற்களில் இரிடியம் காணப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே கிரீத்தேசிய – பலியோசீன் காலப்பகுதியின் நிலவியல் எல்லையில் காணப்பட்ட களிமண் அடுக்கில் அசாதாரணமான அதிக அளவு இரிடியம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. புவிக்கப்பாலிருந்து மிகப்பெரிய ஒரு பொருள் பூமியின் மீது மோதியதால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டையனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்திருக்கலாம் என்ற ஆல்வாரெசு கோட்பாடுதோற்றம் பெற இதுவே அடிப்படையாகஅமைந்தது. இதே போல பசிபிக் பெருங்கடலின் உள்ளகத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படும் இரிடியம் அளவுகளில் உள்ள முறன்பாடுகள் எல்டானின் என்ற விண்கல்லின் தாக்கம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் எனகருதப்படுகிறது. கிரசுடல் பாறைகளில் காணப்பட்டதைவிட புவியில் காணப்படும் இரிடியத்தின் அளவு அதிகமாகும், ஆனால் மற்ற பிளாட்டினக்-குழு உலோகங்களோடு ஒப்பிடுகையில் இதன் அளவுகுறைவாகும். புவிமேலோட்டிலிருந்து கீழே செல்லச் செல்ல இரும்புடன் பிணைக்கப்பட்டுள்ள இரிடியத்தின் உயர் அடர்த்தி மற்றும் பண்புகள் இதைவெளிப்படுத்துகின்றன. பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த உலோகங்களில் இரிடியமும் ஓர் உறுப்பினர் ஆகும். பிளாட்டினத்தைப் போல இரிடியம் வெள்ளை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் சிறிதளவு மஞ்சள் கலந்த வெண்மை நிறமாக இது உள்ளது. இதன் கடினத்தன்மை, நொறுங்கும் தன்மை மற்றும் மிக உயர்ந்த உருகு நிலை போன்ற காரணங்களால் திட இரிடியத்தை இயந்திரங்களில், வடிவமைப்புகளில் பயன்படுத்தி வேலை செய்வது கடினமாக உள்ளது. இதனால் இரிடியத்தின் தூள் உலோகம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,600 ° செல்சியசுக்கு (2,910 ° பாரன்கீட்டு) க்கும் அதிகமான வெப்பநிலையில் காற்றில் நல்ல இயந்திரப் பண்புகளை பராமரிப்பதற்கான ஒரே உலோகமாக இரிடியம் அறியப்படுகிறது. எல்லா தனிமங்களுடனும் ஒப்பிடுகையில் இது 10 ஆவது மிக அதிகமான கொதி நிலை கொண்ட தனிமமாக அறியப்படுகிறது. மற்றும் 0.14 கெல்வினுக்கும் கீழே உள்ள வெப்பநிலையில் இரிடியம் ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது. மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் இரிடியத்தின் நெகிழ்ச்சி குணகம் ஓசுமியத்திற்கு அடுத்து இரண்டாவது உயர் மதிப்பைக் கொண்டுள்ளது. அடர்த்தியிலும் ஒசுமியத்தைக் காட்டிலும் சிறிதளவு மட்டுமே குறைந்த மதிப்பை இரிடியம் பெற்றுள்ளது அடர்த்தியில் உள்ள இச்சிறிய வேறுபாடும் துல்லியமாக அளவிடுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்பட்டது என்ற கருத்தும் தோன்றியது. இவ்விரு தனிமங்களில் எது அடர்த்தி குறைவானது என்பதை நிர்ணயிப்பதில் சில தெளிவற்ற நிலைகள் ஏற்பட்டன . ஆனால், எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் கணக்கிடப்பட்ட அடர்த்தியானது இரிடியத்திற்கு 22.56 கிராம் / செ.மீ3 என்றும் ஒசுமியத்திற்கு 22.59 கிராம் / செ.மீcm3 என்றும் உறுதி செய்யப்பட்டது . சின்சினாட்டி சின்சினாட்டி (Cincinnati) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஒரு பிரதான நகரமாகும். ரஃபேல் நடால் ரஃபேல் "ரஃபா" நடால் பெரேரா(Rafael "Rafa" Nadal Parera) பிறப்பு ஜூன் 3, 1986) என்பவர் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது இவர் தரநிலைகளில் முதல் இடத்தில் உள்ளார். களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதினால் இவர் கிங் ஆஃப் கிளே என அழைக்கப்படுகிறார். அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக டென்னிசு வரலாற்றில் சிறப்பான வீரராக அறியப்படுகிறார். நடால் 16 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) கோப்பை, ஒன்பது முறை பிரெஞ்சு ஓப்பன் வாகையாளர் (2005,2006,2007,2008, 2010,2011,2012,2013,2014).போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2014-இல் ஒன்பதாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நடால் 10 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 3 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, ஒருமுறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார். நடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - ஒன்பது முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார். ரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில்சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார். சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பாணிய அணிக்காகவும் விளையாடி உள்ளார். நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார். தனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்த சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார். இதன் பின்பு தோனி நடால் , இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார். இந்த பட்டியல் 2014 ஆசுத்திரேலிய திறந்த வெளி சுற்று வரை இற்றைபடுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பெயர் தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை () பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள் சாதியைச் சுட்டுகின்றன. சமயத்தைக் குறித்தும் பெயர்கள் அமைவதுண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய பொழுது, தமது தாழ்வுநிலையை சுட்டி நிற்கும் சாதிப் பெயர்களை விடுத்து மேற்குநாட்டு பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் சாதியைச் சுட்டாத தமிழ் பெயர்களுடன் மேற்கு நாட்டு பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். தமிழ் இஸ்லாமியர்களும் தமது சமயத்தை சுட்டும் வண்ணமே பெரும்பாலும் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள். பிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு பெயர் வட்டம் வேற்று பெயர் வட்டத்தோடு கலப்பதும் மருபுவதும் வரலாற்று இயல்பு. சில வேளைகளில் இது ஆக்கிரமிப்பாலும் நிகழ்வதுண்டு. சில தனித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மக்களிடையே காணப்படும் சமஸ்கிரத அல்லது வட மொழிப் தோற்றப் பெயர்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பால் சேர்ந்த பெயர்களே என்று சுட்டி, தனித் தமிழ் பெயர்களை வைக்க ஊக்கப்படுத்துகின்றனர். ஒரு பெயர் தமிழ் பெயரா இல்லையா என்று அறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் வரலாற்று, மரபு, மொழிக் குறிப்புகளை வைத்து இவை தமிழ்ப் பெயர் இவை அன்று எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக யோன், யோர்டன், டேவிட் போன்றவை தமிழ் பெயர்களாக கருதப்பட வாய்ப்புக்கள் குறைவு. புகலிடத் தமிழர்களிடம் தமிழ்ப் பெயர்கள் நீண்டதாக இருப்பதாக கருத்து நிலவுகின்றது. விண்ணப்ப படிவங்களில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக தமிழ்ப் பெயர்கள் நீண்டு செல்வதுண்டு. இதனால் சுருக்கமான பெயர்களை இவர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான தமிழ்ப் பெயர்கள் அரிது என்ற தவறான கருத்தும் புகலிட மக்களிடம் இருக்கின்றது. 2007ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அதிமுக அரசு தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்தலுக்கான அடிப்படைத் தகுதிகளை தமிழக அரசு மாற்றியமைத்தது. திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் அதிகம் இருந்தாலும் வரிவிலக்கு கிடைக்காது என்பன உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. "முதன்மைக் கட்டுரைகள்: வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்" பேரங்காடி பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஒரு பெரிய இடத்தில் விற்பனை செய்யும் இடம் பேரங்காடி ஆகும். உடை, உணவு, மருந்து, தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள் என பல தரப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் இங்கு பெறலாம். பொதுவாக, தமிழில் பெரும் கடைகள் உடபட பல்வேறு கடைகளை கொண்டிருக்கும் இடத்தையே பேரங்காடி என்பர். சில இடங்களில் பெரும் கடைகளை அல்லது மாளிகைக்கடைகளை குறிக்கவும் பேரங்காடி பயன்படுத்தப்படுவதுண்டு. பேரங்காடி 1920 பின்னர் அமெரிக்காவில் தோன்றியது. பொன். சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல் என்று கருதப்படுகிறது. அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார். 1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்றன. யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது. உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே. சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது. ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது. சோலைமந்தி சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது "Lion Tailed Macaque" என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது. இவ்விலங்கின் வெளிமயிர் கருப்பு நிறத்திலானது. இதன் வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திலான பிடரிப் பகுதியின் மயிர்கள் இவ்விலங்கிற்கே உரிய சிறப்பாகும். இதன் முகம் மயிர்கள் ஏதுமின்றி கருப்பு நிறத்தில் காணப்படும். தலை முதல் வால் வரையிலான நீளம் 45 முதல் 60 செ. மீ ஆகும் மற்றும் இதன் உடல் எடை 3 முதல் 10 கிலோகிராம் வரை இருக்கும். இதன் வால்ப்பகுதி மட்டும் சுமார் 25 செ. மீ நீளமாகும் மற்றும் வாலின் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு மயிர் கொத்து இருக்கும். இம்மயிர் கொத்து ஆண் மந்திகளுக்கு மிகுதியாகவும், பெண் மந்திகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும். வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒருவருட காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும் விலங்குக்காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சோலைமந்திகள் மழைக்காடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. இது மிகவும் விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் மரங்களில் கிடைக்கக்கூடியவை. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN) அண்மைய கணக்கெடுப்பின்படி சோலைமந்தியின் மொத்த உயிர்த்தொகை 3000 முதல் 3500 இருக்கக்கூடும். உலகிலுள்ள முதனிகளில் மிகவும் அரிதானதும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளானதுமான முதனிகள் சோலைமந்திகளாகும். இவை தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பசுமைமாறாக் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் வேளாண்மை மேற்கொள்ளப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் சோலைமந்திகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன. சோலை எனும் வாழிடம் தியோடர் பாஸ்கரன் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் தமிழீழத்தில் ஏற்பட்ட அழிவுகள் இந்தியப் பெருங்கடலில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையினால் தமிழீழப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகள் இப்பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது: சாக்கட் 370 சாக்கட் 370 (இலங்கை வழக்கு: சொக்கட் 370) இண்டல் பெண்டியம் !!! புரோசர், செலிரோன் சிலொட் 1 ரக புரோசர்களை மாற்றீடு செய்யும் வண்னம் உருவாக்கப்பட்டதாகும். இதில் 370 என்பது புரோசரை சாக்கட்டுடன் இணைப்பதில் உள்ள துவாரங்களின் எண்ணிக்கை ஆகும். சாக்கட் 370 ஆரம்பத்தில் செலிரான் ரக புரோசர்களுக்கே உருவாக்கப்பட்டதாகும். எனினும் பின்னர் பெண்டியம் !!! ரகப் புரோசர்களைக் கொண்ட கணினிக்கும் பாவிக்கப்படது. அத்துடன் வயா சைரிக்ஸ் !!! பின்னர் வயா சீ3 எனப் பின்னர் பெயர் மாற்றப்பட்ட புரோசரும் இந்த சாக்கட்டையே பாவித்தன. இந்த சாக்கட் ஆனது இதற்குப் பின்னர் வந்த 423/478/775 மாற்றீடு செய்யப்பட்டது (பெண்டியம் 4 மற்றும் கோர் 2 புரோசர்களால்). சூப்பர் சாக்கட் 7 சூப்பர் சாக்கட் 7 அல்லது சூப்பர் 7 என்றழைக்கப்படும் சாக்கட் ஆனது சாக்கட் 7 இன் ஓர் விரிவாக்கம் ஆகும். இது ஆகக்கூடுதலாக நொடிக்கு 100 மெகாஹேட்ஸ் வேகத்திலான FSB ஐ உடையது. சூப்பர் சாக்கட் 7 ஆனது ஏஎம்டி கே6-2 மற்றும் கே6-iii புரோசர்கள் மற்றும் சைரிக்ஸ் எம்-ii புரோசர்களை ஆதரிக்கின்றது. இது சாக்கட் 7 உடன் பின்னோக்கிய ஒத்திசைவு உடையது. அதாவது சாக்கட் 7 இல் பாவிக்கக்கூடிய புரோசரை சூப்பர் சாக்கட் 7 உம் ஆதரிக்கும் எனினும் சூப்பர் சாக்கட் 7 ஐ ஆதரிக்கும் புரோசர்கள் சாக்கட் 7 ஐ ஆதரிக்கும் என்றாகாது. ஏஎம்டி இண்டெல்லின் சாக்டினையே இதற்கு முன்னர் பாவித்தாலும் சட்டரீதியாக இதுவே ஏஎம்டி பாவித்த இறுதி இண்டெலுடன் ஒத்திசைவான சாக்கட் ஆகும். FSB இன் வேகத்தை நொடிக்கு 66 மெகாஹேட்ஸ் இல் இருந்து நொடிக்கு 100 மெகாஹேட்ஸ் வேகமாக அதிகரித்ததால் ஏஎம்டிக்கு அனுகூலங்கள் ஏற்பட்டது. இந்த சாக்கட்டானது வியாபார ரீதியில் மலிவானது என்றாலும் இதை நடைமுறைப்படுத்த முயன்ற வயா சிஸ் போன்றவற்றின் தரம் மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் வயா பின்னர் கே6-iii பெண்டியம் !!! புரோசர்களுக்கான மதர்போட்டில் தரத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. ஏஎம்டி புரோசர்கள் ஒத்திசைவற்ற புரோசர்களை வியாபார ரீதியாக விற்பாதக் குற்றசாட்டுக்கள் பரவியதால் அத்லோன் புரோசர்களுக்கு தரநிர்ணய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். உள்ளியம் (மெய்யியல்) உள்ளதனியல் அல்லது நிலவலியல் அல்லது இருப்பியல் என்பது ஒரு பொருள் அது நிலவும் தன்மையை, அதாவது அது இருக்கும் இயல்பு நிலைமையை ஆயும் மெய்யியல் பிரிவு ஆகும். நிலவலை (இருப்பதை) உள்ளபடி அறியும் மெய்யியல் புலம் என்று பொதுவாகக் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் ஆன்ட்டாலஜி (ontology) என்று 17 ஆவது 18 ஆவது நூற்றாண்டுகளில் இருந்து அழைக்கின்றார்கள். 18 ஆவது நூற்றாண்டில் டாய்ட்சு மொழி பகுத்தறிவியலாளர் கிறிஸ்டியன் வுல்ஃவ் (Christian Wolff) என்பார் இந்த உள்ளதனியல் (நிலவலியல் அல்லது இருப்பியல்) என்னும் கருத்தை முதன்மைப்படுத்தி எழுதி வந்தார். என்றாலும் இம்மானுவேல் காண்ட் என்னும் டாய்ட்சு மொழி மெய்யியலாளர் இந்த இருப்பியல் என்னும் கருத்தின் அடிப்படையில் கடவுள் இருப்புக் கொள்கையை நிறுவ முயல்வதை வன்மையாக எதிர்த்தார் ஆன்ட்டாலஜி என்னும் சொல்லில் உள்ள ஆன்ட்டோஸ் (ontos) என்னும் வேர்ச்சொல் கிரேக்க மொழியில் "உள்ளது எதுவோ அது", "உள்ளது", "இருப்பது" அல்லது "இயல்பொருள்" என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இதனை "on being", "essence of existence", " what actually is" என்று விளக்கிக் கூறலாம். இக்கருத்தை கி.மு 4 ஆவது நூற்றாண்டிலேயே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பவர் முதலடிப்படை மெய்யியலாக முன்வைத்தார். ஆல்பிரெஃக்ட் டியுரே ஆல்பிரெஃக்ட் டியூரெ (; ; (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528) என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), "புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல்" (1514) , "வருத்தம்" (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். டியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகதி தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அத்துடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு பிள்ளைகள் வரை இருந்துள்ளனர். டியுரேயின் தந்தையின் பெயர் "அஜ்டொசி" (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜெர்மானியப் பெயரான "டியுரே" ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் "டியுரே" எனும் பெயர் "ரியுரே" என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது. 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டியூரே பாஸ்லே நகரத்திற்குச் சென்றாரர் . மேலும் அங்குள்ள தனது சகோதரனுடைய வீட்டில் தங்கினார். சிறிது காலத்திலேயே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். சூலை 7,1494 ஆம் ஆண்டில் தன்னுடைய 23 ஆம் வயதில் ஆக்னஸ் ஃப்ரே என்பவரை மணந்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை திருமணம் ஆகி மூன்றுமாதத்திற்குள் இத்தாலிக்குத் தனியாகச் சென்றார். ஏனெனில் அங்கு உலகம்பரவுநோய் பரவி வந்தது. மேலும் அங்கு சென்று கலை உலகின் மாற்றங்களை கற்றுத் தேர்ந்தார். வல்லபாய் பட்டேல் சர்தார் வல்லப்பாய் படேல் (ஆகத்து 10, 1875 - டிசம்பர் 15, 1950) ("Sardar Vallabhbhai Jhaverbhai Patel", குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்பட்டார். சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர். • குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது! • பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது. • வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. • சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். • அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். • 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா நதிக்கரையில், பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி). மு. இளங்கோவன் முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள். மு. இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள். சான்றிதழ்கள் பெற்றுள்ளார். தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/ བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 6, 1935) திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார். இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆங்கில நூலில் (The Universe in a Single Atom) குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார். இவர் 1989 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். சுன் த்சு சன் ருசு (Chinese: 孫子; pinyin: Sūn Zǐ; ஆங்கிலம்:Sun Tzu - "Master Sun") என அறியப்படும் Sūn Wǔ (孫武; c. 544—496 BC) இன்றும் துல்லியமாக படிக்கப்படும் பயன்படுத்தப்படும் "போர்க்கலை" என்ற நூலை இயற்றியவர். "போர்க்கலை" சன் ருசுவினால் கள முனையில் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளையும், அவருக்குபின் அதற்கு போர்க்கலை நிபுனர்களால் தரப்பட்ட உரைகளையும் கொண்டிருக்கிறது. போர்க்கலையில் பயன்படும் மூல உபாயங்களையும் உத்திகளையும் சிறப்பாக விபரிக்கிறது. சீன வானொலி நிலையம் (தமிழ்) சீன வானொலி நிலையம் (தமிழ்) சீன வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை ஆகும். சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய ஒலிபரப்புச் சேவை ஆகும். இது 43 மொழிகளில் தற்போது ஒலிபரப்பு செய்கிறது. அவற்றுள் தமிழும் ஒன்று. சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் தொடங்கியது. . தமிழ்ப் பிரிவிற்கு 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். சீனாவுக்கும் உலக நாடுகளின் மக்களுக்கும் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக இந்த வானொலிச் சேவை ஏற்படுத்தப்பட்டது. இது சீனக் கண்ணோட்டத்தில் செய்திகளையும் கருத்துரைகளையும் தருகிறது. செய்தி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் என பல துறை சார் தகவல்களைப் பகிர்கிறது. சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவராக தற்போது கலைமகள் என்கிற சாவோ ஜியாங் இருக்கிறார். இந்தச் செய்திச் சேவையை இங்கிலாந்தின் பிபிசி தமிழோசையுடன் ஒப்பிட முடியும். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, 2013 ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. தமிழ் நேயர் மன்றக் கருத்தரங்குகள் பல முறை நிகழ்ந்துள்ளன. இது "சீனத் தமிழொலி" என்ற இதழை வெளியிடுகிறது. பாண்டா கரடி பாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்லது "பெரிய கரடி பூனை"; ஆங்கிலம்: "Giant Panda") சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும்.] இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய்(மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி), கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும். பாண்டாக்கள் பாதுகாக்கப்படேவண்டிய உயிரினங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டின் ஒரு அறிக்கையின்படி சீனாவின் உள்நாட்டுப்பகுதிகளில்239 பாண்டாக்களும் எல்லையோரங்களில் 27ம் மனிதப்பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றன. 20147ம் ஆண்டின் ஒரு அறிக்கை சீனாவின் எல்லையோரங்களில் 49 பாண்டாக்களும் உயிரியல் புங்காக்களில்13ம் வளர்க்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது. சீனாவின் தேசியச்சின்னமாக டிராகன் விளங்குவதைப்போலவே பாண்டாவின் உருவமும் சீனாவின் சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஐந்து ஃபுவா சின்னங்களில் ஒன்றாக பாண்டா உருவம் இடம் பெற்றிருந்ததைக் கூறலாம். பாண்டாக்கள் தங்கள் பண்புகளில் கரடிகளையும் ரக்கூன்களையும் ஒத்திருப்பதால் இவற்றின் வகைப்பாடானது பல ஆண்டுகளாகவே விவாதத்திற்குரியதாக இருந்து வந்தது. பின்னர் மூலக்கூறு ஆய்வு முடிவுகளின்படி பாண்டா கரடி வகையையே சார்ந்தது என நிர்மாணிக்கப்பட்டது. கரடிகளின்'உர்சைன் ' குடும்பத்திலிருந்து பிரிந்த 'உர்சிடே' குடும்பத்தின் பகுதியாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. தெற்கு அமெரிக்காவில் வசிக்கும் ஸ்பெக்டக்கில்ட் கரடிகள் பாண்டாக்களின் நெருங்கிய வகையாக அறியப்படுகின்றன. செங்கரடிகளும் பாண்டாக்களும் பெயர், வாழிடம்,உணவு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த"சியுடோ தம்ப்" என்னும் மூங்கிலைப் பற்றிக் கொள்ள உதவும் பெரிய எலும்பினை கொண்டிருத்தல் போன்ற பல பண்புகளில் ஒத்திருப்பினும் இவை இரண்டும் நெருங்கிய குடும்ப வகை அன்று. ' பாண்டா' என்ற சொல் பிரென்சு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு பெறப்பட்டதாகும். பிரென்சு மொழியின் மூலச்சொல்லின் சரியான விளக்கம் பெறப்படவில்லை. இச்சொல்லுடன் ஓரளவு பொருந்தும் வார்த்தையானது நேபாள மொழியின் 'பொன்யா' என்ற சொல்லாகும். இச்சொல், பாண்டாவின் தனிச்சிறப்பு வாய்ந்த மணிக்கட்டு எலும்பைக் குறிக்கும். மேற்கத்திய உலகினர் இப்பெயரை முதலில் செங்கரடிக்கே இட்டனர். 1901ஆம் ஆண்டு வரை பாண்டா என்ற சொல்லானது செங்கரடியையே குறிப்பிட பயன்பட்டது. பாண்டாக்கள், 'கருப்பு வெள்ளை நிற பூனைப்பாதமுடைய விலங்கு என்றே அழைக்கப்பட்டுவந்தது. பெரும்பாலான கலைக்களஞ்சியங்களிலும்' பாண்டா 'அல்லது'சாதாரண பாண்டா' என்ற பெயர் செங்கரடியையே குறிக்கப்பயன்பட்டது. 2013ம் ஆண்டு வரையிலும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, இப்பெயரை 'சாதாரண கரடியைக் குறிக்கவே பயன்பட்டது. சீன மொழியிலி கரடிகளைக் குறிக்கும் 20 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பினும், 'Dàxióngmāo' அல்லது 'xióngmāo' என்ற வார்த்தைகளே பாண்டாக்களைக் குறிக்கப்பயன்பட்டன. பாண்டாக்களின் அளவு,நிறம்,மரபணு வகையின் அடிப்படையில் அவை இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1.'Ailuropoda melanoleuca"- இவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.இவை சிச்சுஆன்' பகுதிகளில் வாழும் கருப்பு வைள்ளை நிறப்பாண்டாக்கள் ஈகும். 2.[[Ailuropoda melanoleuca qinlingensis- இவை க்வின்லிங்க் மலைப்பகுதிகளில் சுமார் 1300 முதல் 3000மீ உயரத்தில் வாழும் லேசான மற்றும் அடர்ந்த பிரவுன் நிறமுடையவை ஆகும். பாண்டாக்கள், அழகான கருப்பு வெள்ளைத் தோல் உடையன. வளர்ந்த பாண்டாக்கள் 1.2 முதல.1.9மீ{4 முதல்9 அடி} நீளமும் {10-15 செ.மீ நீள வாலுடன்},60 முதல் 90 செ.மீ வரை{2.0 முதல் 3.0அடி) தோள் வரையிலான உயரமும் உடையவை. ஆண் இனம் 160 கி.கி வரையிலும் , பெண்இனம் பொதுவாக ஆண் இனத்தின் எடையினின்றும் 20 சதவீதம் வரை குறைவாகவும் காணப்படும். பொதுவாக பெண் பாண்டாக்கள்,70கி.கி முதல் 120 கி்கி வரை எடை இருக்கும். இவற்றின் சராசரி எடை 100 முதல் 115 கி.கி ஆகும். இவை சாதாரண கரடிகள் போன்ற உருவம் கொண்டவை.இவற்றின் காதுகள்,கண் ,முகவாய், கைகள்,கால்கள் மற்றும் தோள' பகுதிகளில்கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.உடலின் ஏனைய பகுதிகள் வெண்மையாக இருக்கும். இந்த நிற அமைப்பானது,பனி சூழ்ந்த,நிழலான,மற்றும் பாறை இடுக்குகளில் மறைந்துகொள்ள உதவுகிறது. இவற்றின் முப்பரிமாண கோரைப்பற்களான கெனைன் பற்கள்1298.5 நியுட்டன்களும் கார்னாசியல் பற்கள் 1815.9 நியுட்டன்களும் கடிக்கும் வல்லமை ஈவு உடையனவாகும். பாண்டாக்களின் பாதங்களில் ஒரு கட்டை விரலும் 5 விரல்களும் உள்ளன.இந்தக் கட்டை விரலானது,' சீசமாய்ட்' எலும்பின் உருமாற்றமாகும்.இது உண்ணும்போது மூங்கிலைப்பிடித்துப்கொள்ள உதவுகின்றது'. ' [[ஸ்டீபன் ஜே கெளல்ட்]]' அவர்கள், பரிமாண வளர்ச்சி மற்றும் உயிரியல் தொடர்பான தனது கட்டுரைத்தொகுப்புப் புத்தகமான '[[த பாண்டா'ஸ் தம்ப்']] ல் இதைப்பற்றி விவாதித்துள்ளார். பாண்டாக்களின் வால்,10முதல் 15 செ.மீ{4முதல் 6இன்ச்} நீளமுடையது.இவை கரடி இனத்தின் இரண்டாவது நீளமான வாலைப் பெற்றுள்ளது. கூண்டில் அடைத்து வளர்க்கப்படுகையில் இவை 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.ஜியாஜியா என்ற பெண் பாண்டா 38 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தது. இதன் ஜீன் அமைப்பு,'இல்லுமினா டை சீக்வென்சிங்' ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது்.{2009}.இதில் 20 ஜோடி ஆட்டோசோம்களும் ஒரு ஜோட் பால் குரோமோசோம்களம் உள்ளன. இவை பொதுவாக தனிமையில் வாழும் காட்டு விலங்குகள் ஆகும்.ஒவ்வொரு முதிர்ந்த பாண்டாவும் தனிப்பட்ட எல்லை வரம்பினைக்கொண்டிருக்கும். ஒரு பெண் பாண்டா , தனது எல்லைககுள் பிறிதொரு பெண் பாண்டாவை நுழைய அனுமதிப்பதில்லை. சமூகக் குறியாக்கம்: இனப்பெருக்க காலங்களில் அருகருகே வாழும் பாண்டாக்கள் இணை சேரும்.பின்னர் ஆண் பாண்டா, பெண் பாண்டாவை விட்டு விலகி ச் சென்று விடும்.பெண் பாண்டாக்கள் குட்டிகளைத் தனியே வளர்க்கும். இவை, காலை, மாலை துடிப்புடன் செயல்படும் 'க்ரெபஸ்குலார்' வகையைச்சார்ந்தவை. எனினும், ஜின்டாங் ஜங் அவர்களின் கூற்றுப்படி,இவை காலை, மதியம்,மாலை மற்றும் நடுநிசியிலும் செயல்பட வல்லவை.இவற்றின் பெரிய உருவ அமைப்பின் காரணமாக இவை ஏனைய வேட்டையாடும் விலங்குகளைக்கண்டு பயப்படத்தேவையில்லை யாதலால் இவைபகலின் எந்த நேரத்திலும் சுதந்திரமாக செயல்படும். பாண்டாக்கள், குரல்ஒலி,மரத்தில் கீறி குறியிடுதல் மற்றும் சிறுநீரைத் தெளித்தல் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இவை தம் தேவைக்கு ஏற்ப இடம் பெயர்வதால் நீண்ட காலத் துயிலில் ஈடுபடுவதில்லை. ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம் [[பகுப்பு:சீன உயிரினங்கள்]] [[பகுப்பு:கரடிகள்]] [[பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்]] சாலிவாகன ஆண்டு சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். இந்து நாட்காட்டி, இந்தியத் தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது. இம்முறை ஜாவாவின் அரசவையில், பழைய ஜாவானியக் காலம் தொட்டு 1633 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது. பண்டைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட ஆண்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும். சாதவாகனர் சாதவாகனர் ("Sātavāhanas") என்போர் தக்காணப் பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய இந்திய அரச மரபினராவர். புராணங்களில் இவர்கள் "ஆந்திரர்" எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். வேறு சிலர் கிமு 3-ஆம் நூற்றாண்டு காலம் முதலே இவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றனர். சாதவாகன இராச்சியம் இன்றைய தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் இன்றைய குசராத்து, மத்தியப் பிரதேசம், கருநாடகம் ஆகிய பகுதிகளையும் ஆண்டனர். இவ்வம்சத்தின் தலைநகராக பிரதித்தானா மற்றும் அமராவதி ஆகிய நகரங்கள் இருந்துள்ளன. இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், புராணங்களின் படி, இவர்களது முதலாவது மன்னர் கண்ணுவ குலத்தை தோற்கடித்துள்ளார். மௌரியர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக சகர்கள் மேற்கு சத்ரபதிகள் ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். கிபி 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர். சாதவாகனர் ஆட்சியில் தமது உலோக நாணயங்களில் ஆட்சியாளர்களின் உருவங்களைப் பொறித்தவர்களில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்கள் சிந்து-கங்கைச் சமவெளி முதல் இந்தியாவின் தென்முனை வரை கலாச்சாரப் பாலங்களை அமைத்தனர், அவர்களுடனான வணிகத்தில் முக்கிய பங்காற்றினர். பிராமணம் மட்டுமல்லாது, பௌத்தத்தையும் பிராகிருந்த இலக்கியத்தையும் ஆதரித்து வந்தனர். சாதவாகனர்களின் மூலம், மற்றும் ஆண்டு பற்றிய தகவல்கள், பெயர்க்காரணம் ஆகியவை குறித்து இன்றைய வரலாற்றாளர்கள் தமக்கிடையே முரண்படுகின்றனர். பிராந்திய அரசியல் காரணமாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம், கருநாடகம், தெலுங்கானா ஆகியன சாதவாகனர்களின் தாய்நாடுகள் என கூறுகின்றமையும் விவாதத்துக்குரியன. சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற ஐதரேய பிராமணத்தில் காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் பிராமணம் கூறுகின்றது. புராணங்களும், இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான மெகஸ்தெனசின் ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 காலாட்படையும், 1,000 யானைகளும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட நகரங்களும் இருந்ததாகத் தெரிகிறது. சாதவாகனர்கள் குறித்த தொல்லியல் குறிப்புகள் மற்றும் வெளியிட்டா நாணயங்களின் அடிப்படையில் ஹிமன்சு பிரபா ராய் என்பவர் சாதவாக ஆட்சியாளர்களை கீழ்கண்டவாறு குறித்துள்ளார். மெகஸ்தெனஸ் மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) ("Megasthenes") (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் இண்டிகா என்னும் நூலை எழுதினார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக இருந்தார். இவர் அங்கு தூதுவராக இருந்த காலம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது சந்திரகுப்தன் இறந்த ஆண்டான கிமு 288 க்கு முன்னர் என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.மெகஸ்தெனஸ் இந்தியாவில் பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்பான தகவல்கள் உள்ளன. "பெண்டாபொட்டாமியா" என்னும் மாவட்டத்தினூடாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இவர் அதன் ஆறுகள் பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். இது சிந்து நதியின் ஐந்து கிளை நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கிருந்து அரச பாட்டையூடாக அவர் பாடலிபுத்திரத்தை அடைந்துள்ளார். இவர் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கும் சென்றதாகத் தெரிகிறது. எனினும், இந்தியாவின் வேறெந்த பகுதிகளுக்கும் அவர் சென்றதாகத் தகவல்கள் எதுவும் இல்லை. இவர் இந்தியாவில் கண்டவற்றை "இந்திக்கா" என்னும் அவரது படைப்பில் பதிவு செய்துள்ளார். இது பின்னர் வந்த பல எழுத்தாளருக்கு முக்கியமான மூல நூலாக விளங்கியது. இவர் இமயமலை, இலங்கைத் தீவு, இந்தியாவின் சாதி முறை என்பவை பற்றியும் விளக்கியுள்ளார். சீனம் தமிழ் மொழிபெயர்ப்புக் கையேடு (தொடக்க வரைபு) சீனா உலகின் மிகத் தொன்மையான தொடர்ச்சியான நாகரீகத்தையும் மொழியையும் உடைய தேசம் ஆகும். உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர் சீனாவில் வசிக்கின்றனர் (~1.3 பில்லியன்), சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். காகிதம், compass, வெடிமருந்து, நூல் பதிப்பு நுட்பம் உட்பட பல்வேறு நுட்ப கண்டுபிடுப்புகளை சீனா உலகத்துக்கு தந்துள்ளது. இன்று சீனா உலகில் ஒரு வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. சீனாவை, சீன மக்களை, சீன மொழியை, பண்பாட்டை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது இன்றைய உலகமயமாதல் சூழலில் அவசியமாகிறது. மேற்குலகு, இஸ்லாமிய நாகரிகம், தொற்காசியா ஆகியவற்றுடன் தமிழர்கள் நீண்ட காலமாக விரிவான தொடர்புகளையும் புரிதல்களையும் கொண்டவர்கள். ஆபிரிக்கா, உருசியா ஆகியவற்றுடனான தொடர்பும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழருக்கும் சீனருக்குமான தொடர்பு அவ்வளவு விரிபானது இல்லை. மலேசியா, சிங்கப்பூர் போன்ற சீனர்கள் பெருந் தொகையில் வாழும் நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும், தமிழருக்கும் சீன நாகரித்துக்குமான தொடர்பு விரிவாக தமிழில் ஆவணப்படுத்தப்பட வில்லை. உருசிய மொழியிலுருந்து தமிழுக்கு வந்த படைப்புகளுடன் ஒப்புடுகையில் சீனத்தில் இருந்து தமிழுக்கு வந்த படைப்புகள் மிகக் குறைவு. உலகமயமாதல் சூழல் இந்த நிலையைச் சற்று மாற்றி வருகின்றது எனலாம். எடுத்துக்காட்டாக சீன வானொலி நிலையம் (தமிழ்) மூலமாக சீன மக்களே தமிழ் மக்களுடன் புரிந்துணர்வை மேம்படுத்த முனைகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா பல்வேறு துறைகள் சார் தகவல்களை தொகுத்து தர விழைகிறது. அதன் நீட்சியாக சீனா தொடர்பானா பல்வேறு தகவல்களையும் இது தொகுக்கிறது. இந்த செயற்பாட்டில் இப்போதைக்கு எமது தகவல்களை ஆங்கிலம் மூலமாகவே பெறுகிறோம். இருப்பினும் பெயர்களை, சில கருத்துக்களை சீன மூலத்தில் இருந்து இயன்றவரை அப்படியே பெறுவதுவே தகும். குறிப்பாக சீனப் பெயர்களை தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது ஆங்கில ஒலிப்பியல் முறையில் அல்லது வழக்கத்தில் இருந்து எடுத்தாளாமல் சீன மூலத்தில் இருந்து எடுத்தாளுவதே சிறப்பு. அதை சீரிய முறையில் ஒழுங்கமைக்க நாம் எமக்கு சில வழிகாட்டல்களை உருவாக்குவது அவசியமாகிறது. அதன் முதற்கட்டத்தைத் தொகுக்க இந்த பக்கம் பயன்படும். சீன மேற்குலக உறவுகள் சீனாவுக்கும் மேற்குலக்குமான உறவு எப்பொழுதும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. மேற்குலகின் சீனா மீதான காலனித்துவ ஆதிக்கம் சீனாவின் வரலாற்றில் உறைந்த ஒரு வடுவாகவே இருக்கிறது. மேற்குலகு வளர்ச்சி பெற்று இருக்க சீனா மூன்றாம் உலக நாடாக பின் தங்கி, தற்போதுதான் சற்று பலம் பெற தொடங் இருக்கும் நிலையில் சீன மேற்குல உறவு அதன் சமனற்ற உறவு நிலையில் இருந்து கூடிய சமனுள்ள நிலைக்கு நகரத் தொடங்கி உள்ளது. ஒரு வழியில் சீனாவின் வளர்ச்சியை வரவேற்கும் மேற்குலகு, அதன் வளர்ச்சி பயங்கரமானதாகவும் உணர்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பு இருபதாம் நூற்றாண்டின் முக்கிய பிரச்சினையாகப் பாக்கப்பட்டது. அதைக் கட்டுபடுத்தவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று பலராலும் முன்வைக்கப்பட்டது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா அதன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு பிள்ளை சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தியது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட மேற்குலகு, பின்னர் அந்த சட்டத்தை மனித உரிமை மீறலாக பார்த்தது. மேற்குலகு தொழில்மயமாகிய போது, தொடர்ந்து சூழல் பாதிப்பு ஒரு பக்க விளைவாக இருந்தே வருகிறது. அதே மாதிரி சூழல் பாதிப்பு சீனாவிலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் பெருகிறது. தற்போது நல்ல வளங்களைக் குவித்து வைத்திருக்கும் மேற்குநாடுகள் சூழல் பாதிப்பை திருத்ம் செயற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதுவும் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாக அமைகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக இன்றுவரை மேற்குலகே ஆபிரிகாவில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது. எனினும் ஆபிரிக்கா மிகவும் தாழ்ந்த பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலையில் இருக்கிறது. சீனா இப்பொழுது ஆபிரிக்காவில் குறிப்பிடத்தக்க முதலீட்டை செய்க்கிறது. கைமாறாக எண்ணை மற்றும் கனிம வளங்களைப் பெறுகிறது. சீனா ஆபிரிக்காவைச் சுரண்டுவதாக சில மேற்குலக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. சீனாவி துரித பொருளாதார வளர்ச்சி அதன் உற்பதித் துறையால் ஏதுவாக்கப்பட்டது. குறைந்த விலைக்கு பொருட்களை உறபத்தி செய்வதால் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அதன் பொருட்கள் பெருந்தொகையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை விட கூடுதலாக இறக்குமதி செய்து export defict மேற்குலகு திணறுகிறது. இது தற்காலிகமாக மேற்குலகின் உயர் நுகர்வுப் போக்கையும் வாழ்வு தரத்தையும் நிலை நிறுத்தினாலும், நீண்ட நோக்கில் இது ஆரோக்கியமானது அல்ல. இத்தகைய போக்கால் சீனாவின் Reserves உயர்ந்து சீனாவின் பொருளாதார அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. குறைந்த விலையை நாடி மேற்குலக தொழிற்சாலைகள் சீனாவுக்கு இடம் பெயர்கின்றன. இது வேலை மேற்குலகில் வேலை இழப்புக்கு இட்டு செல்கிறது. சீனா திறந்த சந்தையை ஓரளவு ஏற்க்கொண்டதை மேற்குநாடுகள் வரவேற்றாலும், அது வேகமாக தமது சந்தையை துறக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் அதிகரிக்கும் ஏற்ற தாழ்வையும் இவை சாடுகின்றன. தமிழ்நாடு துடுப்பாட்ட அணி தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணி. அணியின் மைய‌ம் சென்னை சிதம்பரம் கிரிக்கெட் அரங்கமாகும். கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை சாதனைகள். கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி விஜய் ஹசாரே கோப்பை சாதனைகள். கீழே இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள். கீழே இந்திய அணியின் தலைவராக விளையாடிய தமிழக வீரர்கள். நந்தர் நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர். சிசுநாக மரபைச் சேர்ந்த "மகாநந்தி" என்பவனுக்கு பிறந்த மகாபத்ம நந்தன் நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. மகாபத்ம நந்தன் என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது. நந்த அரசமரபின் முதல் மன்னனான மகாபத்ம நந்தன் சத்திரியர்களை அழித்தவன் என வர்ணிக்கப்படுகின்றான். இவன், இச்வாகு மரபினர், பாஞ்சாலம், காசி நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், குரு நாடு, மைதிலியர், சூரசேனம், விதிகோத்திரர் போன்றோரை வெற்றி கொண்டான். இவன் தனது நாட்டை தக்காணத்துக்குத் தெற்குப் பகுதி வரை விரிவாக்கினான். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் "க்சந்ராமேஸ்" (Xandrames) அல்லது "அக்ராமேஸ்" (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். இவனது கொடுமைகள் காரணமாக மக்கள் இவனை வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக "புளூட்ராக்" என்னும் நூல் கூறுகிறது. சிசுநாகர் மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர். இதற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை, 2000 தேர்கள், 3000 போர் யானைகள் என்பவை கொண்ட படையைக் கட்டியெழுப்பினர். "புளூட்ராக்" நூலின்படி இவர்கள் படை இதைவிடவும் பெரியதாகும். சாணக்கியர் உதவியுடன் இறுதி நந்தப் பேரரசர் தன நந்தனை வென்றார் சந்திரகுப்த மௌரியர். தன நந்தன் காலத்தில் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து ஆற்றைக் கடந்து இந்தியா மீது படையெடுத்தார். மகத நாடு மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 மகாஜனபத நாடுளில் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜகிரகம் என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகாரின் பெரும்பகுதி, வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது. பாகவத புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களில், மகத நாட்டின் மன்னர்களில் புகழ் பெற்றவரும், சக்தி வாய்ந்தவருமான ஜராசந்தனைக் குறிக்கிறது. மதுராவின் மன்னரும், தனது மருமகனுமாகிய கம்சனைக் கொன்ற கிருட்டிணன் மீது தீராத பகை கொண்டவன். தருமரின் இராசசூய வேள்விக்கு முன்னர், கிருஷ்ணர், பீமன் மற்றும் அருச்சுனன் உதவியுடன் ஜராசந்தனை மற்போரில் கொன்று, அவனது சிறையில் அடைப்பட்டு இருந்த எண்பத்தாறு மன்னர்களையும்; இளவரசர்களையும் மீட்டனர். இந்தியாவின் பெரிய சமயங்களான பௌத்தம் மற்றும் சமணம் மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது. மௌரியப் பேரரசு மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இது இன்றைய பட்னாவுக்கு அருகில் இருந்தது. இப்பேரரசு கிமு 322 ஆம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியனால் உருவாக்கப்பட்டது. நந்ந வம்சத்தின் இறுதி மன்னனான தன நந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. கௌடில்யர், சந்திரகுப்தனை துணையாகக் கொண்டு பாடலிபுரத்தில் ஏற்படுத்திய புரட்சியே மௌரியரது அரசாட்சிக்கு வித்திட்டது. சந்திரகுப்த மௌரியருக்குப் பின் தொடர்ந்து பல மௌரிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர் உதவியுடன், நந்த வம்சத்தின் மகதப் பேரரசர் தன நந்தனை வென்று, கிமு 322ல் மௌரியப் பேரரசை நிறுவினார். இவர் தற்கால தமிழ்நாடு மற்றும் கேரளம் தவிர்த்த இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.சந்திர குப்த மௌரியர் கி.மு 317ல் செலூக்கஸ் நிக்கோத்தரின் கிரேக்க செலூக்கியப் பேரரசு மீது படையெடுத்தார். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளிலான ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மௌரியப் பேரரசில் இணைக்கப்பட்டது. மேலும் செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை சந்திரகுப்தர் மணம் முடித்தார். இவரது அரசவையில் கிரேக்க செலுக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார். சந்திரகுப்தரின் ஆட்சி முறைமை குறித்து சாணக்கியரின் அர்த்தசாத்திரம் மற்றும் மெகஸ்தனிஸ் எழுதிய "இண்டிகா" மூலம் அறியப்படுகிறது. கி.மு 301 வரை அரசாண்ட சந்திரகுப்தர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் [சைனம்|சமண மதத்தைத்]] தழுவி துறவியாக வாழ்ந்து, கி.மு 298ல் தற்கால கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில், பத்திரபாகு முனிவருடன் வாழ்ந்து முக்தியடைந்தார். பிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும், பேரரசர் அசோகரின் தந்தையுமாவார் .பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட பௌத்த சமய நூல்கள் "பிந்துசாரோ" என குறிப்பிடுகிறது. பரிசிசுத்த பர்வன் போன்ற சமண சமய நூல்களும், இந்து சமய புராணங்களும் "விந்துசாரர்" என அழைக்கிறது. இவரது தாய் கிரேக்க செலூக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்கோத்தரின் மகளான ஹெலெனா ஆவார். அசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர். அசோகர் தம் இளம் வயதில், மௌரியப் பேரரசிற்குட்பட்ட அவந்தி நாட்டின் ஆளுநராக இருந்தார். இவரது குழந்தைகள் மகேந்திரனும், சங்கமித்தையும் ஆவர். கிமு 273ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அசோகர், கலிங்கப் போரின் முடிவில் புத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பினார்.இவர் முதன்முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாடெங்கும் தூபிகளில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார். அசோகர் கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் பௌத்த சமயத்திற்கு மாறினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகாமாத்திரர்கள் எனும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார். பாடலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மெக்காலி புத்ததிஸ்ஸா தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டினார். மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும் அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகர், கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மௌரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் மகன் குணாளன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரத மௌரியர் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேய மௌரியப் பேரரசு வீழ்ந்தது. அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார். இவர் அசோகரின் பேரன் ஆவார். அசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர். பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், குணாளன், உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர். இவரது ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். பௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், "முக்தம்பூர்" மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார். மௌரியப் பேரரசின் வாரிசுரிமைச் சன்டைகளாலும்; உள்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளாலும், பேரரசர் அசோகர் மறைந்த 50 ஆண்டுகளில், இறுதி மௌரியப் பேரரசர் பிரகத்திர மௌரியன் (ஆட்சிக் காலம்:கி மு 185 - 180) காலத்தில் மௌரியப் பேராரசு வீழ்ச்சியுற்றது. கிமு 185ல் பிரகத்திர மௌரியன் காலத்தில் மௌரியப் பேரரசு, மகத நாட்டு அளவில் சுருங்கியது. சுங்க வம்சத்து புஷ்யமித்திர சுங்கன் எனும் படைத்தலைவரால், கிமு 180ல் பிரகத்திர மௌரியன் கொல்லப்பட்டார். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவின் வடமேற்கில் உள்ள கைபர் கணவாய் பாதுகாப்பின்றி இருந்ததால், நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா நாட்டவர்கள், கிமு 180ல் கைபர் கணவாய் வழியாக மௌரியப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றி, சகலா போன்ற புதிய நகரங்களை நிறுவினர். மன்னர் மெனாண்டர் பௌத்த சமயத்தை ஆதரித்து பின்பற்றினார். இந்தோ கிரேக்க நாட்டினர், மௌரியப் பேரரசின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், பஞ்சாப், இராஜஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றினர். வட இந்திய வரலாற்றில் மௌரியரது ஆட்சியானது முதன்முதலில் ஒரு பெரிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய பேராட்சியாக விளங்கிமை குறிப்பிடத்தக்கது. அசோகரோடு மௌரிய மன்னர்கள் பௌத்த சமயம் சார்ந்தவர்களாகி விட்டதால் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் போதனைகளில் முக்கியமான கருணை மற்றும் அகிம்சை பின்பற்றுவோராக விளங்கினர். இதனால் அவர்களது ஆட்சியும் அதிகம் அறநெறி சார்ந்ததாகவே அமைந்தது. அரசன் சமுதாயத்தில் தடையில்லா அதிகாரங்களைக் கொண்டிருந்தான் அவனைத் தட்டிக் கேட்பதற்கு மக்களுக்கு உரிமையில்லை. நாட்டில் அவன் பிரத்தியேகமான உரிமைகளைப் பெற்றிருந்தான். வாரிசுகள் இல்லாத சொத்துக்களும், புதையலில் ஆறு பங்கும், நாட்டின் நிலமும் மன்னனுக்குரியவையாகும். மன்னனுக்கு எதிராக அமைகின்ற பல்வேறு செயற்பாடுகள் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக அமைந்தன. போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மரணமே தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது. மௌரியரின் ஆட்சிமுறையில் மைய ஆட்சி, மாகாண ஆட்சி என்ற இருவேறு ஆட்சி முறைகள் காணப்பட்டிருந்தன. பேரரசானது மைய மாநிலம், குஜராத் மாகாணம், வடமேற்கு மாகாணம், மேற்கு மாகாணம் எனும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அசோகர் கலிங்கத்தைப் போரில் கைப்பற்றியதன் பின்னர் கலிங்கம் ஐந்தாவது மாகாணமாக இணைந்தது. மாகாணங்களை ஆளுநர்கள் கண்காணித்தனர். அரசனின் செயற்பாட்டிற்கு உதவுகின்ற வகையில் அமைச்சர், புரோகிதர், சேனாதிபதி, இளவரசன் முதலானோரை உள்ளடக்கிய அமைச்சரவை செயல்பட்டது. பௌத்த சமய நிறுவனங்களைக் மேற்பார்வையிட மகாமாத்திரர் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டார். இலக்கியத் துறையின் வளர்ச்சியிலும் மௌரியர் காலத்திற்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்து மத இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலும் பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியிலும், சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் தோன்றியிருந்தன. இந்துமத இலக்கியங்களின் வரிசையில் மகாபாரதம் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். பதினெண் புராணங்கள் சிலவும் இக்காலத்திலேயே தோன்றின என்பர். இந்திய வரலாற்றில் மிகப்பெரும் பொருளியல், அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது. இவற்றோடு அரசனுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்குரிய வழியைக் கூறுவதுடன், பிராமணர்களுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்தினை வழங்கும் நூலாகவும் விளங்குகின்றது. மனுநெறி பற்றிக் கூறும் மனுதரும சாத்திரம் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது என்பர். இது ஆசார காண்டம், பிராயச்சித்த காண்டம், வியவகார காண்டம் எனும் 3 காண்டங்களையும் 7777 சுலோகங்களையும் கொண்டது. வர்ணாச்சிரம தர்மக் கோட்பாடு, அது சார்ந்த வாழ்க்கை முறை என்பவற்றையும் அவை சார்ந்த வாழ்க்கை முறைகளையும் வைதீக மரபின் அடிப்படையில் சட்ட ரீதியாக விளக்கும் நூலாகவே அமைகின்றது. இவை தவிர ஜைமினியின் மீமாம்சக சூத்திரம், பாதபாதராயணரின் பிரம்ம சூத்திரம் என்பனவும், கௌதம, வசிஷ்ட், ஆபஸ்தம்ப, போதாயண தர்ம சாஸ்திரங்களும் இக் காலத்திலேயே தோற்றம் பெற்றன என்பர். பண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதுவனால் எழுதப்பட்ட இண்டிகா எனும் நூலும் இக்காலத்து இலக்கியங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகும். மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியனது அரசவையில் தங்கியிருந்து பாடலிபுத்திர நகரம், அரண்மனை, மௌரியரது ஆட்சித்திறம், இந்தியாவின் வனப்பு முதலியவற்றைத் தம் நூலில் தொகுத்திருந்தார். எனினும் இந்நூல் இன்று கிடைக்கப்பெறாமை துரதிஷ்டவசமானதாகும். முதல் தடவையாக தெற்காசியாவில், அரசியல் ஒற்றுமை மற்றும் இராணுவப் பாதுகாப்பு, வர்த்தகம், விவசாய உற்பத்தி அதிகரித்தது. நூற்றுக்கணக்கான நாடுகள், பல சிறிய படைகள், சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்கள், மற்றும் உள்முரண்பாடுகளோடு கூடிய முந்தைய சூழ்நிலை மாறி, மௌரியப் பேரரசு ஒரு ஒழுக்கமான மைய அதிகாரத்திற்கு வழிவகுத்தது. பிராந்திய அரசர்களின் வரி மற்றும் பயிர் சேகரிப்பு சுமைகளை விவசாயிகள் விடுவித்தனர், மாறாக தேசிய அளவிலான நிர்வகிக்கப்பட்ட மற்றும் கடுமையான-ஆனால்-நியாயமான வரி விதிப்பு முறையின்படி "அர்த்தசாஸ்திரம்" கொள்கைகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்திரகுப்த மௌரியர் இந்தியா முழுவதிற்குமான ஒரு நாணயங் களை வெளியிட்டார். மாகாண ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒரு சமூக பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வளையத்தில் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நியாயம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தாலும் கூட, மவுரியர்கள் பல பொதுப் பணிகள் மற்றும் நீர்வழிகளை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்வணிகம் புதியதாகக் காணப்படும் அரசியல் ஒற்றுமை மற்றும் உள்அமைதி ஆகியவற்றால் பெரிதும் விரிவடைந்து. மௌரிய - கிரேக்க செலூக்கியப் பேரரசு நட்பு ஒப்பந்தத்தின் கீழ், மற்றும் அசோகருடைய ஆட்சியின் போது, ஒரு சர்வதேச வர்த்தக வளையம் விரிவடைந்தது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நவீன எல்லையில் கைபர் கணவாய், ஒரு பேரரசின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. மௌரியப் பேரரசு, துறைமுக வணிகத்தால் வெளி உலகத்துடன் உட்புகுந்தன. மேற்கு ஆசியாவில் கிரேக்க அரசுகள் மற்றும் ஹெலெனிய கால கிரேக்க இராச்சியங்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக மாறியது. தென்கிழக்கு ஆசியாவில் மலாய் தீபகற்பம் வழியாக வர்த்தகவும் நீட்டிக்கப்பட்டது. மௌரியப் பேரரசீன் ஏற்றுமதியில் பட்டு பொருட்கள், ஜவுளி, மசாலா மற்றும் கவர்ச்சியான உணவுகள் ஆகியவை அடங்கும். வெளிநாட்டு உலகம் புதிய விஞ்ஞான அறிவு மற்றும் தொழில்நுட்பம் முழுவதும் மௌரியப் பேரரசிடம் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சாலைகள், பாசான்க் கால்வாய்கள், நீர்வழிகள், மருத்துவமனைகள், ஓய்வு இல்லங்கள் மற்றும் பிற பொதுப் பணிகள் கட்டுமானத்திற்காக அசோகர் நிதியுதவி அளித்தார். வரிவிதிப்பு மற்றும் விளைபொருள் சேகரிப்பு தொடர்பாக பல கடுமையான நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது, பேரரசு முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க உதவியது. முதுமையில் மௌரியப் பேரரசின் மணிமுடி துறந்த சந்திரகுப்த மௌரியர், சமண சமயத்தை தழுவி, பத்திரபாகு எனும் சமணத் துறவியுடன், தென்னிந்தியாவின் சரவணபெலகுளா எனுமிடத்தில் உள்ள குகையில் தங்கி, வடக்கிருத்தல் எனும் கடும் தவம் மற்றும் நோன்பு மூலம் முக்தி அடைந்தார். மௌரியப் பேரரசர் பிந்துசாரர் சமணத்தின் ஒரு பிரிவான ஆசீவகம் எனும் துறவற நெறியைப் பின்பற்றினார் அசோகர் மற்றும் அவரது பேரன் சம்பிரதி பௌத்த சமயத்தை பின்பற்றினாலும், சமணத்தையும் ஆதரித்தனர். மௌரியர்களின் மகதம் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. முதலில் இந்து சமயத்தைப் பின்பற்றிய் அசோகர், கலிங்கப் போருக்குப் பின்னர் பௌத்ததைத் தழுவினார். மௌரியப் பேரரசு முழுவதும் பௌத்த தூபிகள் நிறுவி, பௌத்ததைப் பரப்பினார். தனது மகனையும், மகளையும் இலங்கைக்கு அனுப்பி பௌத்தம் பரவச் செய்தார். சாஞ்சி தூபி, தர்மராஜிக தூபி, மகாபோதி கோயில்களை நிறுவினார். நடு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் பரப்பினார். அசோகர் ஆட்சியில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டிப்பட்டது. 1494 1494 (MCDXCIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். 1692 1692 (MDCXCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. 1893 1893 (MDCCCXCIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1490கள் 1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் இந்தியா சுதந்திரமடைந்த போதும் அதற்கு முன்பும் தமிழ்நாட்டில் அதிகாரம் வர்க்கத்தில் ஒரு பிரிவிரான நிலக்கிழார்களே பெரும்பான்மை நிலத்தை உரிமையாக்கி, தொழிலாளர்களை கொண்டு, சில வேளைகளில் கொத்தடிமைகளாகவும் கொண்டு நிலத்தில் பயிர் செய்து இலாபம் ஈட்டி வந்தனர். நிலத்தில் உழைக்கும் பெரும்பான்மையான விவசாயிகள் நிலம் அற்றே இர்ருந்தனர். தொடக்கத்தில் சுதந்திர இந்தியா இந்த நிலைமையை சீர்செய்ய முயன்றது. சமத்துவமுள்ள உற்பத்தி திறன் பெருகிய சமுதாயத்தை உருவாக்க உழைக்கும் விவசாயிக்கு அவரின் உழைப்பின் பலன் முழுவதும் கிட்ட அவர் பயிர் விதைக்கும் நிலம் அவருக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பது சீர்திருத்தவாதிகளால் நன்கு உணரப்பட்டது. முதலில் காந்திய முறையில் முயன்ற சிலர் நிலக்கிழார் தாமாக முன்வந்து தரும் நிலத்தை பகிர்ந்தளித்தனர். பின்னர் அரசு நிலங்களை விலைக்கு வாங்கி பகிர்வதை நடைமுறைப்படுத்த முயன்றது. இரண்டும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை மட்டுமே ஈட்டின. கிழக்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இது ஓரளவு வெற்றியை ஈட்டினாலும், மற்றய மாநிலங்களில் இது பெரிதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் குறை தமிழ்நாட்டுக்கும் உண்டு. குறிப்பாக ஏழை மக்களின் ஏழ்மையை போக்குவோம் என்று கோசமிட்டு அதிகாரத்துக்கு வந்த திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்) - மே 2008 - தீராநதி நேர்காணல் சிந்து-கங்கைச் சமவெளி சிந்து-கங்கைச் சமவெளியின் வடக்கில் இமயமலை உள்ளது. இது இப்பகுதியில் ஓடும் பல ஆறுகளுக்கு நீர் வழங்குவதுடன், ஆற்றுத் தொகுதிகளூடாக இப் பகுதியில் படிந்துள்ள வளமான வண்டல் படிவுகளின் மூலமாகவும் விளங்குகிறது. இச் சமவெளியின் தெற்கு எல்லையில் விந்தியம், சத்புரா ஆகிய மலைத் தொடர்களும், சோட்டா நாக்பூர் மேட்டு நிலமும் அமைந்துள்ளன. இப் பகுதி உலகின் மக்கள்தொகை கூடிய பகுதிகளுள் ஒன்றாகும். இங்கே உலக மக்கள்தொகையில் 1/7 பங்குக்குச் சமமான 900 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இச்சமவெளியில் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அரியானா, உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் அமைந்துள்ளது. விந்திய மலைத்தொடர் விந்திய மலைத்தொடர் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு-மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். தன்மை, அளவு ஆகியவற்றில் இது அப்பலாச்சிய மலைகளை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் மேற்குப்பக்க முடிவு, குஜராத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம்மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், அராவலி மலைத்தொடரினாலும் மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வறண்ட பகுதிகளாக உள்ளன. ஆரவல்லி மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர் மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறுக்கே வடகிழக்கிலிருந்து தென்மேற்காகச் சுமார் 300 மைல்கள் நீளமாக அமைந்துள்ளது. இதன் வடக்கு முனை தனித்தனியான குன்றுகளாகவும், பாறை முகடுகளாகவும் ஹரியானா மாநிலத்துக்குள் தொடர்ந்து டெல்லிக்கு அண்மையில் முடிவுறுகிறது. இதிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அபு மலையில் அமைந்துள்ள குரு சிகரம் ஆகும். 5653 அடி (1723 மீட்டர்) உயரமான இச் சிகரம் தொடரின் தென்மேற்குப் பகுதியில் குசராத்து மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டடத்தில் உள்ளது. உதய்ப்பூர் நகரமும் அதன் ஏரியும் இம் மலைத்தொடரின் தென்புறச் சரிவில் அமைந்துள்ளது. சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் என்பது கிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மேட்டுநிலம் ஆகும். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் ஒரிஸ்ஸா, பீகார், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்குகின்றது. சிந்து-கங்கைச் சமவெளி இம் மேட்டுநிலத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளது. மகாநதி ஆற்றின் நீரேந்து பகுதி தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. லோட் அருவி போன்ற பல அழகிய அருவிகள் இப் பகுதியில் உள்ளன. இங்கே காணப்படும் நிலக்கரிப் படிவுகள் தாமோதர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு உதவியாக உள்ளது. சோட்டா நாக்பூர் மூன்று சிறிய மேட்டுநிலங்களால் ஆனது. இவை ராஞ்சி, ஹாசரிபாக், கோடர்மா என்பனவாகும். 700 மீட்டர் உயரத்தில் உள்ள ராஞ்சி மேட்டுநிலமே இவற்றுள் பெரியது. சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 65,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம் மேட்டுநிலத்தின் பெரும்பகுதி காடாக உள்ளது. இது சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் பகுதிக்குள் அடங்குகிறது. இது இந்தியப் புலிகள், ஆசிய யானைகள் என்பவற்றுக்கான மிகக் குறைவாக எஞ்சியிருக்கும் புகலிடங்களுள் ஒன்றாகும். சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காடு கிழக்கு இந்தியாவில் உள்ள வெப்பவலய வரண்ட அகன்ற இலைக் காட்டுச் சூழலியல் பகுதி ஆகும். இது, ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காடு வரண்டது முதல் ஈரலிப்பானது வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூங்கில், மற்றும் புதர்களைக் கொண்ட புல்வெளிகளும் காணப்படுகின்றன. புலிகள், ஆசிய யானைகள், கரடிகள் போன்ற விலங்குகள் இங்கே காணப்படுகின்றன. லா சப்பல் நகர துணைப்பிரிவு லா சப்பல் நகர துணைப்பிரிவு ("Quartier de La Chapelle") பாரிஸ்சில் தமிழர்களின் வணிக நிறுவங்கள் குவிந்து காணப்படும் இடமாகும். மேற்குலக நாடுகள் வேறு எங்கும் காணக் கிடைக்காதவாறு தொகையான தமிழர் சிறு வணிகங்கள் இங்கு அடுக்கடுக்காக இருக்கின்றன. 10 தொகுதிகளுக்கு மேலாக இவ்வாறு கடைகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. இதனால் இதை குட்டித் தமிழீழம் என்றும் சிலர் அழைப்பதுண்டு. இந்த வணிகங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் இங்கு புகலிடம் வந்த ஈழத்தமிழர்களாலும், பிரேஞ்சு கொலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இருந்து வந்த தமிழர்களாலும் நடாத்தப்படுகின்றன. லா சப்பல் வீதிகளில் தமிழர்கள், குறிப்பாக தமிழ் இளையோர் அங்காங்கே கூடிக் கதைப்பதை பாக்கலாம். அனேக வணிகக் கடைகளில் புலிகள் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. இராவல்பிண்டி இராவல்பிண்டி ("Rawalpindi") என்பது பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான இசுலாமாபாத்துக்கு அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை ந்கரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். இசுலாமாபாத் இராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது. மின்மயம் ஒரு பகுதிக்கு மின்சத்தியை வழங்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதும், மின்சக்கதியை வழகுவதும் மின்மயம் ஆகும். இதை மின்மயமாக்கம், மின்மயமாக்கல் என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு பகுதியின் electric grid கட்டமைத்து, அதை மின் உற்பத்தி நிலையங்களின் grid இணைப்பதை இது சுட்டுகின்றது. கிராமப் புறங்களில் solar panels, wind turbines கொண்டு மின் உற்பத்தி செய்து விநோகிக்க வேண்டியும் இருக்கும். ஒரு நாட்டின் தொழில்மயமாக்கத்தை அல்லது வளர்ச்சியை அது எவ்வளவு மின்மயமாக்கப்படிருக்கின்றது என்பது ஒரு அளவுக் காரணியாக இருக்கின்றது. தனி மனித வருமானம் ஒரு நாட்டின் அல்லது ஒரு ஆட்சிப் பகுதியின் மொத்த தேசிய உற்பத்தி அங்கு வாழும் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டால் ஒருவர் எவ்வளவு பெறுவார் என்பதை சுட்டும் ஒரு பொருளாதார அளவுகோலே தனி மனித வருமானம் ஆகும். இது மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை கணக்கில் எடுக்காததால் மிகவும் மட்டுப்படுத்தப்பட ஒரு அளவுகோலே. எனினும் மொத்த அளவுடன் ஒப்புடுகையில் இது கூடிய துல்லியம் தரக் கூடியது. எடுத்துக்காட்டாக மொத்த தேசிய உற்பத்தி (nominal) இந்தியா $1,098,945 மில்லியன் தொகையுடன் 12 இடமாக வருகிறது. தனி மனித வருமானத்தை கருத்தில் கொள்ளும் பொழுது 965 டொலர்களுடன் 135 இடத்துக்கு வருகிறது. பெசாவர் பெஷாவர், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணத்தின் தலைநகரமும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக மையமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். இந்நகரின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன். கனிஷ்கர், புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதைத் தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது வில்வித்தை வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே அம்பெய்தல் என்னும் வில்வித்தை ("archery") ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்லம்பு முக்கிய கருவியாக விளங்கியது. வில்லைத் தனுசு என்னும் வடசொல்லால் வழங்குவர். தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது. உலக வில்வித்தை இணையம் சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு-நாடுகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டில் 1900 ஆம் ஆண்டு முதல் வில்வித்தை விளையாட்டு இடம் பெற்று வருகிறது. கொரிய ஆண், பெண் போட்டியாளர்கள் இதில் முன்னணியில் திகழ்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த முன்னிலை தொடர்ந்தது. சங்ககாலத்தில் வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது. வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர். இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் கருப்பை என்னும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர். வல்வில் வேட்டம் என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் வல்வில் தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். 2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் சென்னைக் குடிநீர் வாரியம் சென்னை பெருநகருக்கான குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை கவனிக்கும் அமைப்பாகும். =உசாத்துணை==  முல்லைப் பெரியாறு அணை முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மதராசு மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் (சென்னை மாகாணம்) பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது. அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம் போதுமானதாக இல்லை. அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. முதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றையும் அடைகிறது. முல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும். பொதுவாக எடையீர்ப்பு அணைகளின் எடையும் ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியான முதன்மை அணையின் அதிகபட்ச உயரம் ; நீளம் . இதன் உச்சிப்பகுதி அகலமும் அடிப்பகுதி அகலமும் கொண்டது. இதன் நீர்த்தேக்கம் கொள்ளளவு உடையது. இதில் பயன்பாட்டில் உள்ளது முல்லை பெரியார் அணையின் வரைபடம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி கேரள வனத்துறையினர் வாகன நிறுத்தமாக பயன்படுத்த இதுக்கிய இடமான "புல்தகிடி" என்ற இடம் அணையின் நீர்பிடிப்பு இடமாகும். 1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உருவானது. ஏப்ரல் 5ல் முதல் மாவட்ட ஆட்சியாளராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை ஆட்சியாளர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது. இறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேஜர் ஜான் பென்னிகுயிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றது. அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான பிரித்தானிய செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது. 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு 40,000 க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம் பிரித்தானிய அரசுக்கு அளித்துள்ளது. 1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. 1947 இல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது. நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாகதென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி, நிலவரி ஒரு ஏக்கருக்கு 30 ஆகவும், முல்லைப் பெரியார் அணை நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்திக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது. முல்லை பெரியாறு அணை நிலத்தையும் நீரையும் தமிழ்நாடு பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆண்டுக்கு நில வரிப்பணமாக 2.5 இலட்சமும், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்திக்கான உபரிவரிப்பணமாக 7.5 இலட்சமும் கேரள அரசுக்கு செலுத்திவருகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது. இச்சர்ச்சையினால் ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு, வேறொரு அண்டை மாநிலத்தால் பயன்படுத்தப்படும் அணைகள் மற்றும் நீர்ப்பயன்பாடு குறித்த நடுவண் அரசின் அதிகாரமும் கேள்விக்குரிய நிலைமையாகி உள்ளது. இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. அணை சுண்ணக்கல், சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இவ்வணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது. 1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970 ஆம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டிவாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்புடன் பலமாக இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன. கேரள அரசியல் கட்சியினர் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் குமுளியிலும் பதற்றம் நிலவுவதால் இரு பகுதிகளிலும் இரு மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்நிலையில் அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரியுள்ளார். 1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் நீர்தேக்கும் அளவை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ் வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது. தீர்ப்பின் விவரம்: 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால், 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலக்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது. துவக்கத்தில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடி ஆகவும் 144 அடிக்கு மேல் வந்தவுடன் உபரி நீர் வெளியேறும் வகையில் அணையின் வடபுறம் (அணையின் மேல் மட்டத்தைவிட 40 அடி அதிக உயரமாக இருந்த குன்றினை 420 அடி நீளத்திற்கு வெட்டி) தாம்போக்கி கலிங்கு அமைக்கப்பட்டது. 1904 இல் பெரியாற்றில் அதிக வெள்ளம் வந்தபோது இக்கலிங்கு வழியாகப் போதிய நீர் வெளியேற முடியாமல் அணையின் நீர் மட்டம் 162 அடி உயர்ந்து அணைக்கு மேல் நீர் வழிந்தது. மக்கள் பீதி அடைந்ததால், 1906 இல் குன்றினை மேலும் வெட்டி அணையின் நீர் மட்டம் 136 அடி உயர்ந்ததும் நீர் வெளியேறும் வகையில் தாம்போக்கி கலிங்கு மற்றும் 16 அடி உயரம் கொண்ட இரும்பு பலகைகள் (சட்டர்) மூடிய நிலையில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடியாக அமைக்கப்பட்டது. குரு சிகரம் குரு சிகரம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். 5,676 அடி (1722 மீட்டர்) உயரத்தைக் கொண்டுள்ள இது ராஜஸ்தானில் மிகக் கூடிய உயரமான இடமாகும். இது அபு மலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இச் சிகரத்தில் இருந்து அபு மலையினதும், அதன் சுற்றாடலினதும் அழகிய காட்சியைக் காணமுடியும். இதன் உச்சியில் தத்தாத்ரேயர் என்னும் பெயரில் விஷ்ணுவுக்குக் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. அபு மலை மவுண்ட் அபு இந்தியாவின் மேற்கில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரமாகும். இது சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மவுண்ட் அபு பலன்பூருக்கு (குஜராத்) 58 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும் கொண்ட தனிச்சிறப்புமிக்க பீடபூமியை உருவாக்குகிறது. இம்மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம், குரு ஷிங்கார் ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமே ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் பசுமைமாறாக் காடுகளுக்கும் மூலமாக அமைந்துள்ளதால், இது பாலைவனச்சோலை என அழைக்கப்படுகிறது. மவுண்ட் அபுவின் பழைய பெயர் "அற்புதாஞ்சல் " ஆகும் புராணங்களில், இப்பகுதி "அற்புதாரன்யா" (""அர்புவின்" காடு") என்று அழைக்கப்பட்டது, 'அபு' என்பது இந்தப் பழைய பெயரின் திரிபாகும். வசிஷ்ட முனிவர் விஷ்வமித்ர முனிவருடனான கருத்து வேறூபாட்டுக்குப் பின்னர் மவுண்ட் அபுவின் தெற்கு முனைக்குப் பிரிந்து வந்துவிட்டதாக நம்பப்படுகிறது, எனினும் இதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை. மவுண்ட் அபு நகர் ராஜஸ்தானில் உள்ள ஒரே ஒரு மலை வாழிடமாகும், இது 1220 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் அருகிலுள்ள குஜராத் ஆகிய இடங்களின் வெப்பத்திற்கு மிகுந்த ஆறுதலாகப் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. மவுண்ட் அபு வனவிலங்குகள் காப்பகம் 1960 இல் நிறுவப்பட்டது, மேலும் இது மலையின் 290 ச.கிமீ பரப்பிற்குப் பரந்து அமைந்துள்ளது. மவுண்ட் அபுவில் எண்ணற்ற ஜைன மதக் கோவில்கள் அமைந்துள்ளன. டில்வாரா கோவில்கள் என்பது பல கோவில்களின் தொகுப்பாகும், இது வெள்ளைப் பளிங்குக்கல்லால் கட்டப்பட்டது, கி.பி. 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இது கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் விமல் வாசஹி கோவில் மிகப் பழமையானதாகும், அது கி.பி. 1031 இல் விமல் ஷா என்பவரால் கட்டப்பட்டது, மேலும் அது முதல் ஜைன தீர்த்தரங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லுன் வாசஹி கோவில் கி.பி. 1231 இல் வஸ்துப்பால் மற்றும் தேஜ்பால் சகோதரர்களால் கட்டப்பட்டது, அவர்கள் போர்வல் ஜைன சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் குஜராத்தை ஆண்ட மன்னரான ராஜா வீர் டவாலின் மந்திரிகளாக இருந்தவர்களாவர். அதனருகிலுள்ள அச்சல்கார் கோட்டை, 14 ஆம் நூற்றாண்டில் மேவாரின் ரானா கும்பாவால் கட்டப்பட்டது. இதில் அச்சலேஸ்வர் மஹாதேவ் கோவில் (1412), கண்டிநாத் கோவில் (1513) போன்ற பல அழகிய ஜைனக் கோவில்கள் உள்ளன. நாக்கி ஏரியும் மவுண்ட் அபுவில் காணவேண்டிய மற்றொரு முக்கிய அழகான இடமாகும். இந்த ஏரியின் அருகில் மலையில் ஒரு தேரைப் பாறை அமைந்துள்ளது. ரகுநாத் கோவில் மற்றும் மஹாராஜ ஜெய்ப்பூர் அரண்மனை ஆகியவையும் மலையில் இந்த நாக்கி ஏரியின் அருகிலேயே அமைந்துள்ளது. உறுதியான பாறையில் கட்டப்பட்டதான ஆதார் தேவி கோவில், ஸ்ரீ ரகுநாத்ஜி கோவில், குரு ஷிங்கார் சிகரத்தில் கட்டப்பட்டுள்ள தத்தாத்ரேயருக்கான ஒரு மடமும் கோவிலும் உள்ளிட்ட பல இந்துக் கோவில்களும் இந்த மலையில் உள்ளன. பிரம்ம குமாரி எனும் பெண்கள் துறவி சங்கத்தின் தலைமையகமும் இங்கு உள்ளது, மேலும் அதன் மற்றொரு அமைப்பின் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது. மவுண்ட் அபுவின் உச்சியில் கடவுள் விஷ்ணுவின் பாதத் தடம் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மவுண்ட் அபுவின் வெளியே அருகாமையில் உள்ள ஜாகத் என்னுமிடத்தில் உள்ள பாறைப் பிளவுகளில் துர்கை கோவில், அம்பிகா மாதா கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன. அருகாமையிலுள்ள இரயில் நிலையம் அபு ரோட் என்ற நிலையமாகும், இது தாழ்நிலத்தில் மவுண்ட் அபு டவுனின் தென்கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ளது. இந்த இரயில் நிலையம் இந்திய ரயில்வேயின் டெல்லி, பலன்பூர் மற்றும் அஹமதாபாத் ஆகியவற்றுக்கிடையேயான பிரதான இரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மவுண்ட் அபுவில் மக்கள் தொகை 22,045 என இருந்தது. இவ்விடத்தின் மக்கள்தொகையில் ஆண்கள் 58% மற்றும் பெண்கள் 42% என உள்ளனர். மவுண்ட் அபுவில் கல்வி கற்றவர்கள் சதவீதம் 67%, என தேசிய சராசரியான 59.5% என்ற சதவீதத்தை விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வி கற்றோர் சதவீதம் 77%, மற்றும் பெண்களுக்கு 55% ஆகும். மவுண்ட் அபுவின் மக்கள்தொகையில் 14% பேர் 6 வயதிற்குட்பட்டவர்களாவர். சத்புரா மலைத்தொடர் சத்புரா மலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களூடாகச் சென்று சட்டிஸ்கரில் முடிவடைகிறது. இம் மலைத்தொடர் விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே அதற்கு இணையாகச் செல்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள இவ்விரு மலைத்தொடர்களும், சிந்து-கங்கைச் சமவெளி அமைந்த வட இந்தியாவையும் பாகிஸ்தானையும், தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையிலான தாழ்ந்த பகுதியில் ஓடும் நர்மதை ஆறு சத்புரா மலைத்தொடரின் வடக்குச் சரிவிலிருந்து வடிந்தோடும் நீரை அரபிக் கடலை நோக்கி எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் மேற்கு முனைப் பகுதியின் தெற்குச் சரிவிலிருந்து வடியும் நீரை தப்தி ஆறு எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் நடுப்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்து நீர் கோதாவரி ஆற்றினூடாக வடிகிறது. இத்தொடரின் கிழக்கு முனைப்பகுதி நீர் மகாநதி ஊடாக வடிகிறது. இவ்விரு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையருகில், இது சோட்டா நாக்பூர் மேட்டுநிலக் குன்றுகளைச் சந்திக்கின்றது. முன்னர் சத்புரா மலைத்தொடர் காடடர்ந்த பகுதியாக இருந்தது. இப்பொழுது சில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகள் தவிரப் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இக் காடுகள் இந்தியாவின் எஞ்சியுள்ள பெரிய பாலூட்டிகளின் உறைவிடமாக உள்ளன. இம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்குப் பகுதியிலும் கூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இக் கிழக்குப் பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலத்தை உருவாக்குகின்றது. பருவகாலத்தையொட்டி வரண்டு காணப்படும் இம் மலைத்தொடரின் மேற்குப் பகுதி, நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, விந்திய மலைத்தொடரின் மேற்குப் பகுதி என்பன சேர்ந்து நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலமாக அமைகின்றன.