கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats)என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின் நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் தக்காண பீடபூமி அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று அவ்வளவு உயரமானதாக காணப்படவில்லை. =புவியியலமைப்பு= கிழக்கு தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும் பழமை வாய்ந்தவையாகும். இம்மலைத்தொடரின் நிலவியல் வரலாறு பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் சிக்கல் நிறைந்த வரலாறு ஆகும். சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் கலந்து உருவான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் காணப்படுகிறது. இம்மலைத்தொடர் நெடுகிலும் பாறை அமுக்கமும் பாறை வெடிப்புகளும் விரவி உள்ளது. மேலும் இம்மலைத்தொடர் முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்சைட் மற்றும் இரும்பு தாது போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. புவியின் மேலோட்டு பரிணாம வளர்ச்சியில் பண்டைய கால பாறைக் குழுக்களுக்கிடையே உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் முக்கியத்துவம் கொண்டதாக திருப்பதி மலைக் குன்றுகள் விளங்குகின்றன. இவ்வுண்மையை பாறை அடுக்கு படிவாய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலா சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் இத்தகைய பாறைக்குழு இடைவெளி காணப்படுகிறது. =மலைக் குன்றுகள்= மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது போலவே தொடர்புகளற்ற கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன.இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும். இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆந்திராவின் நல்ல மலை, ஆனந்தகிரி ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது. சிறுமலை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது. கொல்லிமலை காவிரி ஆற்றின் வடக்கில் உயரமான கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் மேட்டூர் மலைக்குன்றுகள் போன்றவை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. உயர்ந்த இம்மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இங்கு வறண்ட காட்டுப் ப்குதிகளும் காப்பித் தோட்டங்களும் காணப்படுகின்றன சேர்வராயன் மலை சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இம் மலையில் ஏற்காடு என்ற மலைவாழிடம் உள்ளது. இம்மலையில் உள்ள பீடபூமிகள் கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. மதேஸ்வரன் மலை தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை மைசூரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது. சவ்வாது மலை வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது. இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரம் கொண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை நிலவும் பகுதியாக உள்ளது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ.ஆகும். இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது. செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும் மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கல்வராயன் மலை. சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும் மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது. தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது. வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன. கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது. கோமுக்கி ஆறு இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வெளிகொண்டா மலை ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள வெளிகொண்டா மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது. .நல்லமல்லா மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமல்லா மலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல், மகபூப்நகர், குண்டூர்,பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னாறு ஆறுகளுக்கிடையே கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான பல்நாடு வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் பைரானி கொண்டாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் குண்டலா பிரம்மேஸ்வராவில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது. திருமலை திருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம் – வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம் மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் இடம்பெற்றுள்ளது. கொண்டாபள்ளி மலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக காணப்படுகிறது. பாப்பி மலை ஆந்திர பிரதேசத்தில் உள்ள கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்ம்லைத்தொடர் பரவிக் காணப்படுகிறது. இம்மலை பாப்பி கொண்டாலு என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்வையாளர்களைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையமாகவும் பாப்பி மலை விளங்குகிறது. மதுரவாடா முகடு கிழக்குத்தொடர்ச்சி மலையில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு வடக்கில் மதுரவாடா முகடு உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவி ஓடு பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இப்புவி ஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளாள் ஆனது. மாலியா மலைத்தொடர் இந்த மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக 900 – 1200 மீட்டர் உயர அளவாக இம்மலைத்தொடர் விரவியுள்ளது, இருப்பினும் இம்மலைத் தொடரின் உச்சி சில இடங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. இம்மலைத்தொடரில் உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது மதுகுலகொண்டா மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் இம்மலைத்தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் உயரமாக உள்ளது. பொதுவாக 1100 முதல் 1400 மீட்டர் உயர எல்லையில் இம்மலைத்தொடர் விரவியுள்ளது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா(1643மீ), சிங்கராம்குட்டா(1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான மலைச் சிகரங்களாகும் சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்ந்த மலைச்சிகரமான தியோமாலி(1672மீ) சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இம்மலைத் தொகுதி ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்று பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தீபகற்பத்தின் பகுதியாக உள்ள இம்மலைத் தொகுதி பண்டைய நில மக்களின் நிலப்பகுதியான கோண்ட்வானா நிலப்பகுதியில் அங்கம் வகித்ததாக் புவியியல் ரீதியாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளைஆறுகளும் நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன. கார்சட் மலைகள் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மலைகள் மற்றும் குன்றுகளால் ஆக்கப்பட்டது கார்சட் மலைப்பகுதியாகும். கிழக்கில் இம்மலைப்பகுதி திடுக்கிடும் செங்குத்தாய் உயர்ந்தும் மேற்கில் மெல்ல மெல்ல வடமேற்கு மயூர்பன்சிலிருந்து தென்மேற்கு மல்கான்கிரி வரை சரிந்து காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்திலுள்ள உயர் மேட்டு நிலப் பகுதிகள் கார்சட் மலைகள் என்றழைக்கப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச் சம்வெளிகளை இணைக்கும் பல உயர் மேட்டுநிலப் பகுதிக்ள் காணப்படுகின்றன். கிழக்கு தொடர்ச்சி மலையானது, பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ள சமவெளிகளல் பல இடங்களில் தடுக்கப்படுறது. கார்சட் மலைப் பகுதியின் சராசரி உயரம் சராசரி 56கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரமாக உள்ளது. கோதாவரிக்கு வடக்கில் கிழக்கு தொடர்ச்சி மலையின் உயரம் அதிகமாகி ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடகிழக்குப் பகுதியில் வெகுதொலைவுக்கு நீட்சி பெற்றிருக்கும் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத் தொகுதி எனக் கருதப்படுகிறது. ஆலங்குளம் (இலங்கை) ஆலங்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் இல் இருந்து ஏறத்தாழ 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமம் ஆகும். புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனந்தபுரம், இரணைப்பளை, கோம்பாவில், மாளிகைத்தீவு, மாணிக்கபுரம், மண்ணக்கண்டல், மந்துவில், புதுக்குடியிருப்பு, சிவநகர், சுதந்திரபுரம், தேராவில், தேவிபுரம், உடையார்கட்டு, வல்லிபுரம், வள்ளுவர்புரம், விசுவமடு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கிலும், தெற்கிலும் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடல், கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு, என்பனவும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 1009 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 27 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பாகமம், இந்துபுரம், கற்சிலைமடு, கனகரத்தினபுரம், கணேசபுரம், கருவேலங்கண்டல், கதலியார்சமலங்குளம், கூழமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம், முத்தையன்கட்டுக்குளம், முத்துவிநாயகபுரம், ஒட்டுசுட்டான், ஒலுமடு, ஒதியமலை, பாலம்பாசி, பண்டாரவன்னி, பணிக்கன்குளம், பேராறு, பெரியஇத்திமடு, பெரியகுளம், புளியங்குளம், தச்சடம்பன், தட்டயாமலை, தண்டுவான், திருமுறிகண்டி, வித்தியாபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; மேற்கில் துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவு, மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டமும், கிழக்கில் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால், அலம்பில், அம்பலவன்பொக்கணை, செம்மலை, கள்ளப்பாடு, கணுக்கேணி, கருநாட்டுக்கேணி,களிக்காடு, கேப்பப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கோவில்குடியிருப்பு, குமாரபுரம், குமுழமுனை, மாமூலை, மணல்குடியிருப்பு, மாதவாலசிங்கன்குளம், முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி, புதாரிக்குடா, செல்வபுரம், சிலாவத்தை, தண்ணிமுறிப்பு, தண்ணீரூற்று, உப்புமாவெளி, வண்ணான்குளம், வற்றாப்பளை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு, புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பவற்றோடு வவுனியா மாவட்டமும்; தெற்கில் திருகோணமலை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 789 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. செங்கடல் செங்கடல் ("Red Sea") ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன. செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீட்டர்கள் ஆகும். செங்கடலை கிரேக்க மொழியில் Erythra thalassa (எரித்ர தலசா) என்றும், இலத்தின் மொழியில் Mare Erythraeum (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர். 1894 1894 (MDCCCXCIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். மடு பிரதேசச் செயலாளர் பிரிவு மடு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மடு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. காக்கையன்குளம், விளாத்திக்குளம், மாளுவராயக்கட்டையடம்பன், பண்ணவெட்டுவான், தெக்கம், மடு, கல்மடு, பரசங்குளம், பெரியமுறிப்பு, மாதாகிராமம், பெரியபண்டிவிரிச்சான், இரணையிலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது. மேற்கில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு, முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டம், அநுராதபுரம் மாவட்டம் என்பனவும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 553 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் பெரும்பகுதி தலைமன்னார்த்தீவு ஆகும். இதன் தலைநிலப்பகுதியின் வடக்கில் கடலும், மேற்கிலும், தெற்கிலும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 212 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 36 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தேவாம்பிட்டி, வெள்ளாங்குளம், பாலியாறு, அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை, கள்ளியடி, ஆத்திமோட்டை, பெரியமடு, காயாநகர், பள்ளமடு, கோவில்குளம், விடலைத்தீவு, பாப்பாமோட்டை, பரப்புக்கடந்தான், கண்ணடி, மினுக்கன், மாளிகைத்திடல், வெட்டையார்முறிப்பு, அடம்பன், நெடுங்கண்டல், கருங்கண்டல், வண்ணாகுளம், ஆள்காட்டிவெளி, ஆண்டாகுளம், சோமபுரி, பளிக்குழி, காத்தான்குளம், வட்டக்கண்டல், பாளையடிப்புதுக்குளம், பழைப்பெருமாள்கட்டு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் இந்தியப் பெருங்கடல், மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவும்; தெற்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும்; கிழக்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும், முல்லைத்தீவு மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 608 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகக்கிமுறிப்பு, அரிப்பு, சிலாவத்துறை, கரடிக்குழி, கொக்குப்படையான், கொல்லன்குளம், கொண்டச்சி, மறிச்சுக்கட்டி, மருதமடு, மேதன்வெளி, முள்ளிக்குளம், பாலைக்குழி, பண்டாரவெளி, பெரியபுள்ளச்சி பொற்கேணி, பூநொச்சிக்குளம், புதுவெளி, செவரியார்புரம், சின்னப்புள்ளச்சி பொற்கேணி, வேப்பங்குளம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும்; மேற்கில் மன்னார்க் குடாக்கடலும்; தெற்கில் புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களும்; கிழக்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 475 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. செம்மாந்தீவு, முருங்கன், செட்டியார்மகன்கட்டை, இலகடிப்பிட்டி, வஞ்சியன்குளம், வங்காலை, ராசமடு, இலந்தைமோட்டை, நானாட்டான், அத்திக்குழி, புத்திரர்கண்டான், வாழ்க்கைப்பட்டான்கண்டல், கலிமோட்டை புளியங்குளம், பொன்தீவுக்கண்டல், பரியாரிகண்டல், சிறுகண்டல், பள்ளன்கோட்டை, பெரியகட்டைக்காடு, மோட்டைக்கடை, இரட்டைக்குளம், சுண்டிக்குழி, கற்கடந்தகுளம், ரசூல்புதுவெளி, கஞ்சித்தாழ்வு, நறுவிலிக்குளம், தோமஸ்புரி, உமனகிரி, அச்சன்குளம், இசைமலைத்தாழ்வு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் மேற்கில் கடலும், வடக்கில் மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. மே 2008 மே 2008, 2008 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 14 இல் தொடங்கி ஜூன் 14 இல் முடிவடைந்தது. தமிழர் நெசவுக்கலை வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ”ஆடையுடையான் அவைக் கஞ்சான்” ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை ஆகியவற்றைக் கொண்டே அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல், இந்திய வரலாற்றுத் துறை அறிஞர் இராசு அடிகள் போன்றவர்கள், "சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடப் பெருங்குடி மக்கள் கிரேக்கர், உரோமர் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் கட்டடங்களையும் முத்திரைகளையும் ஆயுதங்களையும் அணிகலன்களையும் பாத்திரங்களையும், ஆடைகளையும் செய்து நனி சிறந்த நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப்பிடித்த மக்களாய் வாழ்ந்தனர்" என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில் வணிக அமைச்சரால் நிறுவப்பெற்ற 'அகில இந்திய கைப்பணிக் கழகம்' வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் ”ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது” என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துகின்றன. வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலும் 'காருகவினை' எனப்பட்ட நெசவுத் தொழில், வேளாளர் தொழில்களுள் ஒன்றாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகிறது. முதலியார் வருணத்தைச் சேர்ந்தவர் இப்பணியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற, ஆளில் பெண்டிர் தாளில் தந்த நுணங்கு நூண் பனுவல் – “ஆதரவற்ற பெண்டிர் தமது சுயமுயற்சியால் நூற்ற நூல்”, ( "பருத்திப் பெண்டின் பனுவல்") போன்ற குறிப்புகளாலும், தமிழகத்தில் நெசவுக்கலை சிறப்புற்றிருந்தமை புலப்படும். கி .பி . 985-ல் தமிழகத்தில் இராஜராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில், நடராஜரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும். உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும். “மயிரினும்” என்பதற்கு “எலிமயிரினாலும்” என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டிலிருந்ததென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும், என்று சிந்தாமணி கூறுவதாலும் அறியலாம். ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் மிகத்தொன்மையான காலத்திலிருந்து இடம் பெற்று வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு வண்ண ஆடைகள் இருந்து வந்தன. மகளிர் பட்டிலும், பஞ்சிலும் நெய்த பூந்துகில்கள் பல அணிந்து வந்துள்ளனர். தமிழக மக்கள் நாற்பதிற்கு மேற்பட்ட வண்ணங்களை அறிந்திருந்தனர். சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியவற்றில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது, புத்தம் புதிய வண்ணம்போல ஒளிர் விட்டுக் கொண்டிருப்பதே தக்க எடுத்துக்காட்டாகும். முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அதன் உடலும், விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் அளவிலாதிருந்தன. துகில், வெண்மை நிறம் உடையதாயும் சிவப்பு நிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில், தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் பொலிவதாய் இருக்கும். அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் தரப்பட்டுள்ளன. அவை : காம்பின் கழைபடு சொலியின் இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்” –புறநானூறு அரவுரி யன்ன அறுவை” – பெரும்பாணாற்றுப்படை பூப்பால் வெண்துகில் சூழப்பக குழல் முறுக்குநர்” – பரிபாடல் மேற்கூறிய சங்க இலக்கியப் பாடல்களினின்று முற்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு விளிம்புகளும் முன்றானைகளும் உடலும் உள்ள அழகிய ஆடைகள் இருந்தன என்பது நன்கு விளங்கும். விளிம்பிலோ, முன்றானையிலோ, உடலிலோ, ஆடைகள் அழகுற்று விளங்க, தாமரை, அல்லி, மல்லிகை, பிச்சிப்பூ, மல்லிகை அரும்பு]], மாம்பிஞ்சு போன்ற உருவங்கள் எழில் பெற்று விளங்குமாறு நெய்யப் பெற்றன. இம்மலர்களும் அரும்பும், பிஞ்சும், சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் மட்டுமன்றி வெள்ளிச் சரிகை பொற்சரிகை போன்றவைகளை இணைத்து ஒளிர்விட்டு மின்னப் பட்டு நூலிலும், பஞ்சு நூலிலும் ஆடைகள் நெய்யப் பெற்றன. பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால் நுரை போலவும் தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். மசூலிப்பட்டினத்திலும், கலிங்கத்திலும் நெய்யப் பெற்ற ஆடைகளை விட மெல்லிய ஆடைகள் மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் நெய்யப்பெற்று வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பெற்றன. எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்தப் உடல்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற தாமரை மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோம், கிரேக்கம், எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போசகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து, 19 நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியறையில் இந்திய நாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது. செருமனி நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் ”இந்தியப் பட்டின் சாயல்” என்னும் பொருள்பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983-ல் ஒரு சொற்பொழிவாற்றினார். அதில், ”பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல். பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார். பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் 'வயவர் சாண் மார்சல்' கூறுகிறார். பண்டைக்காலச் வரலாற்றாய்வாளர்கள், மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணியும் ஒன்றெனத் தவறாது குறிப்பிடுகின்றனர். 18- ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவிலிருந்தே மேனாடுகளுக்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினாலறியலாம். என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறுகின்றார். பரிபாடல், புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை போன்ற பைந்தமிழ் நூல்களில் ஆடைகுறித்த வழக்காறுகள் காணப்படுகின்றன. 'ஆவியன்ன அவிநூற்கலிங்கம்', 'நீலக்கச்சைப் பூராடை வெண்துகில்', 'இழை மணிவாரா ஒண்பூக்கலிங்கம்' என்பன அவற்றுள் சில. பாண்டி நாட்டில் நெய்யப்பெற்ற பட்டாடைகள் உரோம், கிரேக்கம், எகிப்து, அரேபியா, கடாரம், சாவகம் முதலிய நாடுகளின் மன்னர்தம் அரண்மனைகளை அலங்கரித்தன. இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் படுக்கை அறையினை பங்கயப் பட்டு எனப்படும் பட்டு அலங்கரித்தது. பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை, துகில் (ஆடை): அக்காலத்தில் பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் "ஆடை" என்னும் பொதுப்பெயர் வழங்கி வந்துள்ளது. இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் சிறந்த ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதை அறியலாம். நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் சில மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. (நீளமாக நெய்து வெட்டுவது வேட்டி. துணிப்பது துணி. “தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுவதால் அறியலாம்.) (தை + சு = தைச்சு - தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், தற்போது மரவேலைக்கு வழங்கிவருகின்றது,) பருத்தியும் பட்டும் ஆடைக்கான அடிப்படை மூலப்பொருட்களாகும். தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது பட்டுச்சேலைகள். திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்ச்சிகளின் போது, பட்டுச் சேலைகள் உடுத்துவதை பெண்கள் பெருமையாகக் கருதுகின்றனர். உலக அளவில் பட்டின் தாயகமாகச் சீனா கருதப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, ஏறக்குறைய 3000 மூன்றாயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள் பட்டு ஆடைகளை நெய்து, உடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இணையாக, தொல் பழங்காலத்திலேயே தமிழர்கள் பட்டுத்துணிகளை நெய்வதுடன், உரோமாபுரி உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்குப் பட்டு ஏற்றுமதியும் செய்து வந்தனர் என்பதற்குச் சான்று ஆவணங்கள் உள்ளன. அந்நாள்களில் பட்டு கிடைத்தற்கரிய, பொருளாக, மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. எனவே, தெய்வ வழிபாட்டுக்கும், மன்னர்களின் குடும்பத்தினருமே பட்டை பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கும், வளமான வாழ்க்கைக்கு அடையாளமாகப் பட்டு ஆடைகள் திகழ்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பட்டு முதன்மை பெறுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், பட்டு நெசவில் முன்னிலை பெற்று உள்ளன. அண்மைக்காலமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டை மேலை நாட்டின் விரும்பி வாங்குகின்றனர். அந்த அளவுக்கு இந்தியத் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. இந்தியாவில் மட்டும்தான் மல்பரி, முகா, டாசர், ஏரி ஆகிய நான்கு வகையான பட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதில் மல்பரி பட்டு 87 விழுக்காடு தயாரிக்கப்படுகிறது. பட்டுச் சேலை தயாரிப்பிற்கு முக்கியமானது, 'கோறா' என அழைக்கப்படும், பட்டு நூல் மற்றும் தூய சரிகை. தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி சரிகை தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், கோவை, திருநெல்வேலி, கடலூர் மாவட்டங்களில், பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 88 பட்டுக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 43 ஆயிரத்து 741 பேர், உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கங்களில், 2009 -10ம் ஆண்டு, 176 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதுதவிர, இலட்சக்கணக்கான தனியார் நெசவாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர், தங்கள் வீடுகளில் சொந்தமாக தறி வைத்து, நெசவு செய்கின்றனர். சிலர், பட்டுச் சேலை உற்பத்தியாளர்களிடம் பணிபுரிகின்றனர். காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் சிறப்புப் பெயர் பெற்றவை. பாரம்பரியமாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் பட்டு நெசவு தாராசுரம், திருப்புவனம், அம்மாப்பேட்டை, முதலிய இடங்களில் பெருமளவு செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் குடந்தைதான் முன் நிற்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்புடைய 7.5 இலட்சம் பட்டுப்புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இதன் மூலம் 25,000 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 7.5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்க விளிம்பு என்பதே குடந்தை பட்டின் தனித்தன்மை. திருப்புவனத்தில் நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்தும் வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நெய்யப்படும் சின்னாளபட்டி சேலைகள் புகழ் மிக்கவை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்தச் சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆறு கெஜம், எட்டு கெஜம் என்று பல அளவுகளில், கண்ணைக் கவரும் வேலைப்பாடுகளில் தயாரிக்கப்பட்ட செயற்கைப் பட்டுச் சேலைகளை பெண்கள் மிகவும் விரும்பி அணிந்து வந்தனர். இங்கு நெய்யப்படும் சுங்குடிச் சேலைகளும் புகழ்பெற்றவை. பல தலை முறைகளாகத் தொடரும் இந்தக் கைவினைக் கலைத் தொழில் முன்னாட்களில் பத்ம சாலியர்களால் மேற்கொள்ளப்பட்டு கால ஓட்டத்தால் இன்று பல இனத்தவர்களும் பங்கு கொள்ளும் நிலையினை எட்டியுள்ளது. தமிழகக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடைபெறும் இக்கலையில் ஆண்களோடு பெண்களும் ஈடுபடுகின்றனர். புடவை ஒன்றினை நெய்து முடிக்க மூவரின் உழைப்பு தேவைப்படுகிறது. நெசவுத் தொழில் செய்வோர் இல்லங்களில், நெசவுத் தொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வார்கள், பண்டைய காலம் தொட்டு உள்ள இதனை, என்று செங்குந்தர் துகில்விடு தூது நூலில் பரமானந்த நாவலர் எடுத்துக் கூறுகிறார். நெசவுத் தொழில் ஏறக்குறைய ஒரு குடிசைத் தொழில்போல நடைபெறுகிறது. நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது ஒட்டு மொத்தமாகக் கூட்டுறவு நிறுவனத்திலோ தறிகளை நிறுவி நெசவு செய்தல் நடைமுறையில் உள்ளது. தறிகள் கைத்தறிகளாகவோ விசைத்தறிகளாகவோ அமைக்கப்படுகின்றன. எளிமையான கட்டுத்தறி முதல் நிலைத்த தரைக் கட்டுத்தறிவரை பல வகைகள் உள்ளன. நெசவுத் தறி பல்வேறு கூறுகளைக் கொண்டிருக்கும். அவை: இவைபோன்ற இன்னும் பல உட்கூறுகள் இருக்கும். தரையில் பள்ளம் தோண்டி அமர்ந்தபடி அதனுள் கால்களை விட்டுக்கொள்ளும் இடத்திற்கு 'தோணை' என்று பெயர். ஒன்றன்பின் ஒன்றாக நெசவுக்கான பணிகள் அமைகின்றன. என இம்முறைகள் அமையும். வேட்டிகள் வண்ண விளிம்புகள் அல்லது சரிகை விளிம்புகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. புடவைகளில் உருவங்கள், கிளிகள், மாம்பழம், பூக்கள், மயில், அன்னப்பறவை, கோபுரம், ஓவியங்கள், பெயர்கள் முதலியன சேர்த்து நெய்தல் வழக்கம். காலச் சூழலுக்கு ஏற்ப கணினி வடிவமைப்பு நுட்பங்களையும், கற்கள் பதித்தல், சிகினா வேலைப்பாடுகள் போன்றவற்றையும் கடைப்பிடிக்கின்றனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டு மற்றும் கைத்தறி ஆடைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பிரான்சு, கனடா, மலேசியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இத்தகைய பெருமைக்குரிய பட்டு நெசவுத் தொழில் கச்சாப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும், மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், இணையதள வணிகச் சூதாட்டங்களாலும், கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி, மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. பங்குச்சந்தை வணிகர்கள், பட்டு மூலப்பொருட்களைப் பதுக்கி, கொள்ளை இலாபத்துக்கு விற்கிற நிலைமை ஏற்பட்டு உள்ளது. பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் சரிகை விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலை உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களிலும், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. அடையாறு அடையாறு என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. பட்டம் விண்ணில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் துணையின்றி காற்றின் விசையை மட்டும் கொண்டு பறக்கும் பொருட்களையே பட்டம் என்பர். காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழுகின்றது. சிறுவர்கள் தமக்கு வேண்டிய பட்டங்களைத் தாமே செய்துகொள்வர். கடுதாசி (காகிதத்தாள்) விரிந்திருக்கும்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிப் பட்டம் செய்யப்படும். அதற்கு வால் என்று மெலிதாகக் கிழித்த துணி ஒன்றை ஒரு முனையில் கட்டுவர். வால் இல்லாத பட்டமும் உண்டு. அதன் எதிர்முனையில் பறக்கவிடும் நூல் கட்டப்படும். பட்டத்தைத் தூக்கிக் காற்றடிக்கும் காலத்தில் காற்றில் பறக்க விடுவர். காற்று விசையால் உந்தப்பட்டுப் பட்டம் மேலே பறக்கும். பட்டம் கட்டிய நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். இக்காலத்தில் வண்ணவண்ணப் பட்டங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இக்காலத்தில் பட்டம் விடும் உலகத் திருநாளே நடைபெறுகிறது. இந்தியாவில் குசராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று (சனவரி 14 அல்லது 15) இந்த உலகத் திருவிழா நடைபெருகிறது. பெரியவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஒண்டுராசு ஒண்டுராசு ("Honduras", (; ), அதிகாரபூர்வமாக ஒண்டுராசு குடியரசு ("Republic of Honduras"), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒண்டுராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒண்டுராசு எனவும் அழைக்கப்பட்டது இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன. ஒண்டுராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. ஒண்டுராசு 112,492 கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. 1747 1747 (MDCCLVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. பரந்தன் பரந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் நகரம் ஆகும். இப்பகுதியில் உப்பளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 1990(?) இற்கு முன்னதாக ஓர் இரசாயணத் தொழிற்சாலை ஒன்று இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இயங்கா நிலையில் இருக்கும் இவ்விரசாயணத் தொழிற்சாலை உள்நாட்டு யுத்தத்தினால் பெரிதும் சேதமடைந்துள்ளது. புளியம்பொக்கணை புளியம்பொக்கணை கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இல் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும். இப்பகுதியில் உள்ள புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றதாகும். மாங்குளம் மாங்குளம் (Mankulam) என்பது இலங்கை, யாழ்ப்பாண நெடுஞ்சாலையில் (A-9 நெடுஞ்சாலை) வவுனியாவிற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்த ஊர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி "மாங்குளம் நகரம்" என அழைக்கப்படுகின்றது. "மாங்குளம்" எனும் பெயர், குளத்தின் பெயராகும். . தமிழரின் பெயரிடல் முறைகளின் படி குளத்தின் பெயரே குளத்தின் அண்டிய ஊரின் பெயராகவும் வழங்கிவருவதன் அடிப்படையில், இந்த ஊரின் பெயர் "மாங்குளம்" என வழங்கப்படுகிறது. இந்த ஊர் வரலாற்று ரீதியாக தமிழர் வாழ்ந்த இடமாகும். 2009ம் ஆண்டின் பின்னர் இந்நிலை மாறிவருகிறது. சிங்கள குடியிருப்புகளும் தற்போது அங்கே தோன்றத்தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவிலும், கொழும்பில் இருந்து 180 மைல்கள் தொலைவிலும் உள்ள இது வன்னிப் பகுதியின் புவியியல் மையத்திற்கு அண்மையில் உள்ளதாலும், போதிய அளவு நிலம் உள்ளதாலும், வன்னியிலுள்ள பல நகரங்களுடனும், யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும், தென்னிலங்கையின் முக்கியமான நகரங்களுடனும் இலகுவான போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதாலும், வடமாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் இவ்விடத்துக்கு உண்டு எனச் சிலர் கருதுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகளுக்குப் பின்னர் தீவிரமடைந்த இன முரண்பாடுகளின் காரணமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர்களினால் மிகவும் பாதிப்படைந்த இடங்களுள் இதுவும் ஒன்று. இப்பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விடுதி அமைந்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக மாங்குளம் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. உள்நாட்டுப் போரினால் பெரிதும் சேதமான மாங்குளம் மகாவித்தியாலயம் நிக்கோட் திட்டத்தின் மூலம் மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளது. 1740கள் 1740கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1740ஆம் ஆண்டு துவங்கி 1749-இல் முடிவடைந்தது. நாவற்குழி ஈழமணி திருநாட்டில் தன் பண்பாட்டில் வழிநகரா நன்னகராம் யாழ்ப்பாணத்தில் தனித்தேதிரியும் கிராமம் நாவற்குழி. நெல் விளையும் பூமியையும், அதனிடையே நீர் நிரம்பி வழியும் குளங்களும், தென்னை, பனை போன்ற வானுயர்ந்த மரங்களும் கனிதரு மரமாம் மா, பலா, வாழை, தோடை என்றிற்ற மரங்களும், ஊரின் கல்வியறிவை ஊட்டிவளர்க்கும் பாடசாலைகளையும்,  மேன்மைகொள் சைவ நீதியை பரப்ப வல்ல சைவக்கோவில்களையும், பரிசுத்த மாதா கோவில்களையும் தன்னகத்தே கொண்டதே நாவற்குழி என்றால் அதுமிகையாகாது. இவ்விதமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாழ்ந்து வருவது உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களிலும் பார்க்க கற்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவது தமிழ்பேசும் இனத்தின் தனிச்சிறப்பு என்றே கூறவேண்டும். கிராமத்தின் நன்மை தீமையான கருமங்கள் நேரிடின் கிராமமே ஒன்றுகூடி விருந்துண்டு சுகதுக்கங்களிலே யாவரும் பங்கேற்று பிறருக்கு வரும் சுகதுக்கங்களை தங்களுக்கு வந்தவையாக கருதி பங்கேற்று செல்வது தமிழ் மக்களுக்குள்ள தனிப் பெரும் சிறப்பு எனக் கூறலாம். கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் போதும் ஒவ்வொரு வீடும் திருவிழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கும். தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் கோவில் சென்று ஆண்டவனை தொழுகின்ற காட்சியை பார்ப்பதென்றால் கல்நெஞ்சமும் கனிந்து உருகும் என்றே கூற வேண்டும். புலம் பெயர்ந்து உலகின் பலபகுதிகளிலும் வாழுகின்ற எமது உறவுகளே உங்களை அன்புடன் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன். எமது பிறந்த பகுதியின் சிறப்புக்களை ஓரளவு காண்பதற்கு. ஈழத்திருநாட்டின் எழில்சேர் வடக்கின் யாழ்ப்பாண நகரில் இருந்து கண்டிவீதி வழியாக சென்றால் நாவற்குழியூர் அதிக தூரமில்லை, ஆகக்கூடின் ஆறு கிலோமீற்றர் தூரம் ஆகும். நடந்தே போனால் இடிந்தும் சரிந்தும் விழுந்து கிடைக்கும் வீடுகளையும் விருட்ச்சங்களையும் கண்டு கலங்கலாம். அன்று யானையை வடம் மாட்டி இழுத்து வந்து வீட்டு முற்றத்தில் கட்டிவைத்து விலை பேசிய ஈழத்தமிழன்; வேலெறிந்து புலியின் விலாவுடைத்து அதன் வலிய பல்லைப் பிடிங்கி மார்பணிந்து,  தோலை உரித்து விரித்து படுத்த விரத்தமிழன்; ஆழ் கடலில் குதித்து அதனடியில் முத்தெடுத்து மாலையாக்கி அன்பு மனையாள் மார்பணிந்து மனமகிழ்ந்த மறத்தமிழன்; கப்பல் கட்டி கடல் கடந்து அற்புதங்கள் செய்த அருந்தமிழன்; இன்று பிறந்தபதி துறந்து பாரில் பல பாகங்களிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டான். யாழ்நகரையும் எமது கிராமமாகிய நாவற்குழியூரையும் பிரிக்கும் எல்லை வரவேற்பு வளைவு மூலம் காட்டப்பட்டுள்ளது. "யாழ்ப்பாணம் வரவேற்கிறது"  என்று ஆரம்ப காலத்தில்  வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது "வருக யாழ்நகர் வரவு நல்வரவாகுக" என்று மாற்றம் பெற்று காணப்படுகின்றது. உப்பளங்களும் வயல்வெளியும் குளுகுளுவென வீசும் காற்றும் கீழே துள்ளிப்பாயும் மீன்களும் காணப்படும். இது நன்நீர் ஆறல்ல; பறவைக்கடல்; உப்பளங்கழி எனவும் அழைப்பர். கோடை காலத்தில் நீரின் அகலம் இப்படித்தான் குறைந்திருக்கும்.  ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் 750 மீற்றர் வரை அகன்று நீர் நிறைந்து பாயும். பலத்துடன் சேர்ந்தாற்போல அரைவட்ட வடிவில் கொங்கிறீற்கட்டும், பலகை அடைப்புக்களும் இரும்புக்கதவுகளுமாக அமைந்திருப்பது நீர்ப்பாசன இலாக்காவின் மிக நன்மை பயக்கும் நீண்ட காலத்திட்டம் இது. உவர்தன்மை செறிந்துள்ள இப்பகுதியினை நன்னிலமாக்கும் திட்டம். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறிக்கொண்டு வரவேற்பு வளைவிலிருந்து வடகிழக்காக வளைந்து வரும் கண்டிவீதியின் சிறிய வளைவோடு கிழக்குநோக்கி திரும்பினால் ஓர் முக்கியமான இடம் மோட்டார் வாகனங்கள் எமது நாட்டிடை எட்டிபார்ப்பதற்கு முன்னர் குதிரை பயணம் செய்த காலம் அது. பாலம் கட்டப்படாதிருந்த அந்த காலத்தில் உப்பளங்கழியை கடப்பதற்கு தென்னை, பனைமரக்குற்றிகளால் பாலம் போன்ற ஒன்றை பயணிகளிடம் இருந்து தலைக்கு இரண்டு சதம் வாரியாக அறவிடப்பட்டதாம். வரி வசூலிப்பதற்காகவும், பயணிகள் தரிப்பதற்காகவும், குதிரை கட்டுவதற்காகவும் கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை  "ஆயம் " என்று கூறுவர் . ஆயம் இருந்த இடம் இன்றும்  "ஆயத்தடி" என கூறப்படுகின்றது .வடக்கு பக்கம் ஆலத்திவெளி என அழைக்கப்படுகிறது. ஆயம் இருந்த இடத்தையும் ஆலாத்தி வெளியையும் தாண்டி கிழக்குநோக்கி திரும்பினால் வீதியின் இரு மருங்கிலும் விண்தொட்டு விளையாடும் தென்னைகளும் , தோப்புக்களாகப் பனைகளும் தோன்றுகின்றன.  தென்னை, பனை உபயோகம் எல்லாம் உலகிற்கு தெரிந்தவையே .ஆயினும் பனை பற்றி கூறினால் நுங்கு,  பழம் ,பதநீர் , கள் , கிழங்கு,  இவை அனைத்தும் மூளை விருத்திக்கு சிறந்தவை . நீர் இறைக்கும்  "சிக்மா" இயந்திர உதிரிப்பாக தொழிற்சாலை, இறால் கணவாய் பதனிட்டு  வெளிநாடுகளுக்கு அனுப்பிய தொழிற்சாலை, சவர்கார தொழிற்சாலை,  கண்ணாடிதொழிற்சாலை, மின்விசை கம்பித்தொழிற்சாலை (Wire Factory), தேங்காய் எண்ணெய்தொழிற்சாலை , பழக்கூழ்தொழிற்சாலை (Jam Factory), அரச உணவுக்களஞ்சியம் ,அரிசி ஆலைகள் இரண்டு இப்படி எத்தனையோ உள்நாட்டு போரினால் உருக்குலைந்து உபயோகம் அற்றுபோனதை காணமுடியும். சிறிய ஊர் ஆயினும் பெருந்தொகையானோருக்கு வேலைவாய்ப்புக்களை கொடுத்த இடம் முடியிழந்த மன்னன் போல் , பதியிழந்த பாவையை போல் வடிவிழந்து போயிற்று. அதனை தாண்டி நாவற்குழி சந்தி. கண்டி வீதியின் சிறு வளைவொன்று வடக்குபக்கம் திரும்புகிறது. இவ்விடம் நாவற்குழி சந்தி என்று இன்றும் கூறப்படுகிறது . சாவங்கோட்டை என்று சொன்னால் பலருக்கு தெரியாது . எங்கள் கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் இருக்கின்ற முதியவர்களுக்கு தெரியும் . அவர்கள் இவ்விடத்தை இன்றும் சாவங்கோட்டை என்றே கூறுகின்றனர். யாழ்ப்பாண சரித்திரத்தில் சாவங்கோட்டையும் முக்கியஇடம் பெறுகின்றது. 13  ஆம்  நூற்றாண்டில் சந்திரபானு என்னும் சாவுகமன்னன் யாழ்ப்பாண குடாநாடு, வன்னிப்பிரதேசம், திருகோணமலை ஆகிய இடங்களை ஆட்சிசெய்தான் என வரலாறு கூறுகின்றது .(யாழ்ப்பாண இராட்ச்சியம்  பக்கம்  31  பதிப்பாசிரியர் – கலாநிதி .சி .க .சிற்றம்பலம் )  சாவக்காடு, சாவங்கோட்டை , சாவகச்சேரி என்பன இதற்கு சான்று பகர்க்கின்றன. பாண்டியனின் படையெடுப்பில் சந்திரபானு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான் என சரித்திரம் கூறும் வேளை, சாவுகரின் ஆட்சி காலத்திலும் அதன் பின்னரும் சாவங்கோட்டை என பெயர் வாங்கப்பட்ட இந்த இடத்தில் சவுகர் கல்லாலும் களி மண்ணாலும் சிறிய கோட்டை ஒன்று கட்டியிருந்தார் என்றும் அக்கோட்டை பாண்டியனால் அழிக்கப்பட்டதென்றும் இங்குள்ள முதியோர் இன்றும் கூறுகின்றனர். இதற்கு தகுந்த ஆதாரம் அகப்படவில்லை.  ஆயினும் கோட்டையினை இடித்தெறிந்த பாண்டியர் நிர்சிங்கமல்லன் என்பவனை காவலனாக நியமித்து இருக்க இடமும் ஏனைய வசதிகளும் கொடுத்தார்கள் எனவும் பிற்காலத்தில் அவனுக்கு நினைவாலயம் ஒன்று சாவகன்கோட்டைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "முச்சந்தி" என்றும் சாவங்கோட்டை என்றும் பெயர் பெற்றுள்ள இடம் உண்மையிலேயே நாற்சந்தியே.  நான்கு வீதிகள் சந்திக்கின்றன. யாழ்ப்பாணம் செல்லும் வீதி , கண்டிவீதி, கேரதீவுவீதி, புகையிரதவீதி. புகையிரத நிலையம் வரை செல்லும் வீதி மிகச்சிறியது. சந்தியில் இருந்து தெற்குபக்கமாக சென்றால் சம்பத்வங்கியினால் அமைக்கப்பட்ட மிகவும் அழகான புதியகட்டடம். அதுவே நாவற்குழி  "ரெயில் வேஸ்ரேசன் " போர் தொடங்குவதற்கு முன்னர் கைதடி என்னும் பெரிய கிராமத்தவர்களுக்கும்,  நாவற்குழி, தச்சன்தோப்பு போன்ற சிறிய கிராமத்தவர்களுக்கும் பிரயாணத்துக்கு அத்தியாவசியமாக விளங்கிய புகையிரதநிலையம் இது. இக்கிராமங்களில் உற்பத்தியான பிரதான பணவரவு தந்த புகையிலை சிற்பம் சிற்பமாக இந்த புகையிரத நிலையத்தில் ரயில் பெட்டிகளில் மலைநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இக்கட்டடத்துக்கு தென்பகுதியில் பெருந்தொகையான வீடுகள் காணமுடியும் . அவை UNP ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட  300  வீடுகள் ஆகும். இவ்வீட்டுத்திட்டத்தின் மேற்கு, தெற்கு எல்லைகளாக உப்பகங்கழியும் கிழக்கெல்லையாக செம்பாட்டு தோட்டவெளியும்  (புகையிலை,  வெங்காயம் , மிளகாய் , காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம்) வடக்கு புகையிரத பாதையும் அமைந்துள்ளது. மேற்கெல்லையாக உப்பளங்கழிக்கு மேலாக புகையிரத பகுதியினரால் இரும்புபாலம் ஒன்று புகையிரதபாதை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து காணப்படுகின்றது.  இந்த இடத்தை "ஆனைவிழுந்தான் பாழி " என இங்குள்ளோர் கூறுவர். யாழ்ப்பாண நல்லூரை இராசதானியாக கொண்ட தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்த காலத்தில்  அவனுடைய ஆட்கள் ஆனையிறவுக்கு அப்பால் இருந்த அடர்ந்த காடுகளில் ஆனை பிடித்து வருவார்களாம். வரும் வழியில் இவ்வழியில் வழுக்கிவிழுந்த ஆனை ஒன்று எழுந்திருக்கமுடியாது மடிந்தமையால் 'ஆனைவிழுந்தான் ஆழி' யாகி  (ஆழி = கடல் ) காலப்போக்கில் ஆனைவிழுந்தான் பாழியே நிலைத்துள்ளது. சந்தியில் இருந்து கிழக்கு திசை நோக்கி போவது கேரதீவுவீதி. முன்னாளில் இது பிரதான வீதியாகவும் பூநகரிக்கு தரை வழிபாதையாகவும் இருந்ததாக கூறுவர். கேரதீவு வீதிக்கு வடபுறம் இருந்து பார்க்கும் போது கற்குவியல் ஒன்று இருந்தது. இப்போது அது தெரியவில்லை.  பற்றைகள் வளர்ந்து மூடிவிட்டன. அக்கற்குவியல் இருக்கும் இடத்திலே நிற்சிங்கமல்லனுக்கு நினைவாலயம் எழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆலயமாக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன . வெள்ளி, செவ்வாய் தோறும் விளக்கேற்றுதல் பூசை முதலியன நடந்தன . மாட்டுவண்டியில் புதுப்பானை பொங்கல்சாமானுடன் வந்து எம்மூரவர்கள் பொங்கி படையல் செய்தது நாற்பதுகளில் முதியோர் கண்டதாக கூறப்படுகிறது. நிற்சிங்கமல்லன் ஆலயத்துக்கு அருகில் காணப்படுவது  "ஆயிலிப்பிட்டி " கேரதீவு வீதியில் மிக உயரமான இடம் இது தான். ஏன் நாவற்குழியிலும் சரி இதுவே பெரும்பிட்டி. இரண்டு பெரிய ஆலமரங்கள் வீதியோரம் நின்று நிழல் கொடுத்தவை தறிக்கப்பட்டுவிட்டன.   அதனை அடுத்து மேற்கு நோக்கி சென்றால் மக்கள் செறிந்து வாழும் இடம். வீதியின் இரு மருங்கிலும் வீடுகளையும் வீட்டு முகப்பினில் பூத்துக்குலுங்கும் மரம் செடிகளையும்  காணமுடியும். கேரதீவு வீதிக்கு தெற்கு பக்கம் சென்றால் சித்தி விநாயகர் ஆலயம் நாற்புறமும் வீடுகளும் தென்னந்தோப்புகளும் போற்றும் சுவையுடைய பொன்னிறம் சேர்கனிமாவும் , நாவல் , வேப்பமரங்களும்,  செந்நெல் விளைவயலும், செந்தாமரை குளமும், கந்தனுடைய அண்ணனாம் கணபதியின் ஆலயமும், வாசிகசாலையும், வளரும் சிறார்களுக்கு கல்வி வழங்கிட பாலர் பள்ளியும் கொண்ட இந்த குறிச்சியினை  "பந்தெறிந்தான் வெளி " என்றும் தீப்பாய்ந்த பள்ளமென்றும் கூறுவர் .முன்னையோர் கூற்றுப்படி "பந்தெறிந்தான் வெளி", "தீப்பாய்ந்த பள்ளம்"என்பன காரணப் பெயர்களே. பந்தெறிந்தான் வெளியில் பத்தாய வளவில் சப்த மாத்திரிகர்கள்  (ஏழுபெண்கள்) வழிவந்த நாச்சியாருக்கு இன்னும் செழிப்புடன் நிற்கும் திருக்கொன்றை மரத்தின் கீழ் சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தனரென்றும் , பின்னரே விநாயகப் பெருமான் பிரதிட்டை செய்யப்பட்டு, அவர் மூலமூர்த்தியாகவும், நாச்சிமார் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் விளங்க இவ்வாலயம் சித்தி விநாயகர் தேவஸ்தானம் என பெயர் வழங்கப்படுவதாகவும் வரலாறு. சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் மகோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒன்பதாம் நாள் தேரும் பத்தாம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நாச்சிமார் திருக்கொன்றை மரத்தின் கீழ் கோயில் கொண்ட ஆரம்ப நாட்களில் மாத்திரிகர்கள் இவ்வெளியில் பந்தெறிந்து விளையாடினார்கள் .எனவும் அதனாலேயே இவ்வெளிக்குப்  "பந்தெறிந்தான் வெளி "எனப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. சாவுகர் இவ்விடங்களை கைப்பற்றிய காலத்தில் அழகும் இளமையும் கொண்டிருந்த பெண்கள்மேல் ஆசை கொண்டதாகவும் பயங்கொண்ட பாவையர் தீ மூட்டி அதில் பாய்ந்து தம்முடலை மாய்த்ததாகவும் இச்சம்பவம் காரணமாகவே இவ்விடம்  "தீப்பாய்ந்த பள்ளம் "  ஆகியதாகவும் ஐதீகம் உண்டு. நாவற்குழியூரின் தெற்கு எல்லையில் காணப்படும் மணல் குன்றுகளிற்கு அருகே சில நாவல்மரங்களின் அடிப்பாகம் மணலில் புதையுண்டு கிளைகள் மணளோடு கொஞ்சி விளையாடும் ஆவணி, புரட்டாதி மாதங்களில் நாவல் கொத்து கொத்தாக பழுத்திருக்கும். அம்மாதங்களில் இவ்விடம் வந்தால் சுட்டபழம் புசிக்கும் அவசியம் இருக்காது. நின்றபடியே பறித்து சுவைக்கலாம். பருத்து கறுத்துக்கனிந்த பழங்களின் சுவையே அலாதி. மணல் குன்றுகளிடையே பள்ளத்தில் நிற்கும் பனைகள் தாமீன்ற நுங்கு குலைகளின் பாரத்தை தாங்கி கொண்டே சாமரை வீசி எம்மை வரவேற்பது போல் காட்சி அளிக்கும். பருவமடைந்த வடலியொன்று தான் இன்னும் கன்னியல்ல என்பதை காட்டுவதற்கு நுங்குக்குலை தள்ளி நிற்கிறது. அவ்விடத்தை இருந்து பார்த்தால் வயல் வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் தென்படும். யாட்டாவளை என அழைக்கப்படும் இவ்வயல்வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் காணப்படுகிறது . ஏறக்குறைய  250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக இது காணப்படுகிறது. கிளைகள் ஒன்றோடொன்று பின்னி, சூரிய ஒளி விழா வண்ணம் குடை பிடித்து நின்ற பெருவிருட்சங்கள் நிறைந்து இவ்விடத்தில் கொட்டில் அமைத்து வேல் வைத்து பூசை வழிபாடு செய்து வந்தனர். 1818  இல் சுப்பிரமணியமுதலி என்பவர் கற்கொண்டு கட்டடம் அமைத்து அந்தணர் நித்திய நைமித்திய பூசை செய்ய ஒழுங்குகள் செய்தார். கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் சூரசங்காரமும் ஏழாவது நாள் திருக்கல்யாணம் நடந்தேறி அலங்கரிக்கப்பட்ட இணைந்த வள்ளங்களில் சித்திர வேலாயுதர் தெய்வானை வள்ளி சமேதராய் எழுந்தருளி ஆலய திருக்குளத்தில் உலாவரும் பொழுது தாமரை இலைகளில் எரியும் கற்பூரம், தீ வட்டிகள் நிறைந்துள்ள தடாகத்து நீரில் மேலும் கீழுமாக தோன்றும் காட்சியின் அழகே அழகு. ஆறுமுகநாவலர் காலத்தில் ஆரம்பமான கந்தபுராணகலாச்சாரம் நாவற்குழியில் வாழ்ந்த சைவபெரியோரால் பேணி வளர்க்கப்பட்டது எனக்கூறின் மிகையாகாது.      கந்தசஷ்டி நாட்களில் சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த புராண படனம் நடைபெறும் . காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தம்பு, விசுவலிங்கம் சுப்பிரமணியம்,  சொக்கநாதர்கார்த்திகேயன், தாமோதரம் வேலுப்பிள்ளை ஆகியோர் இசையோடு பாடிபொருள் கூறியதை என்றும் மறக்க முடியாது என்று இங்கே கூறுகின்றனர். சித்திர வேலாயுதர் கோயில் வடக்கு வீதியில் இருந்து பார்க்கும் போது வடதிசையில் குலைக்கட்டிகாய்த்து நிற்கும் தென்னைகள் தோன்றும் அந்த இடம்  ஈழத்து புகழ் பூத்த கவிஞர் ஒருவரது பிறந்தகமாய் அமைந்ததென்று கூறினால் எமது  கிராமத்துக்கே பெருமை . அவர்தாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "அம்பி". கவிஞர் அம்பியை யாவரும் அறிந்ததே அவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப் பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஆங்கிலத்தில் கல்வி பயின்ற அவர் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உடையவராக விளங்கியவர் . Inter  Science சித்தியெய்தி தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த இவர் குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதிக்குவித்து "குழந்தை கவிஞர்"  ஆனார். உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாடு ஒவ்வொன்றிலும் கவிஞர் அம்பி எழுதி வாசித்தளித்த கட்டுரைகள் தமிழ் உள்ளங்களில் நீங்காது நிலைத்திருப்பதை உலகறிந்ததே. பூம்புகாரில்  நடைபெற்ற உலகத்தமிழ்  ஆராய்ச்சி மகாநாட்டில் கவிஞர் அம்பி தான் கவிதை எழுதி வாசித்த போது கரகோசம் வானை பிளந்தது. புகழ் கடல் கடந்தது. தங்கப்பதக்கம் மார்பில் அணிவிக்கப்பட்டது. கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் வெளியீட்டு குழுவில் ஒருவராக இருந்த கவிஞர் அம்பியின் கவிதைகள் சில ஆரம்ப வகுப்பு தமிழ் பாட நூல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்குகளில் கவிஞர் அம்பியின் குரல் கணீர் என ஒலித்ததை கற்றோரும் கவியுள்ளம் படைத்தோரும் மறந்திருக்க மாட்டார்கள்.  அம்பியின் 'அம்பிப்பாடல்கள்' 'கொஞ்சும் தமிழ்' ஆகிய கவிதை தொகுதிகளும் , 'வேதாளம் சொன்னகதை' கவிதை நாடகமும் வெளிவந்ததை தொடர்ந்து மேலைத்தேய மருத்துவத்தை தமிழில் கற்பிக்க அடிகோலியவரான அமெரிக்க பாதிரியார்  "கிறீன்" என்பவரை பற்றி 'கிறீனின் அடிச்சுவடு ', 'மருத்துவ தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன்' ,'Lingering Memories ' என்பனவும் வெளியாகியிருக்கின்றன. கவிஞர் அம்பியின் வீட்டிற்கு மேற்கே தென்னை,  மா,  கொய்யா,  மாதுளை, வாழை, நிறைந்த சோலையின் நடுவே அமைந்துள்ள வீடு முதுபெரும் எழுத்தாளர் சு.வே யினதாகும். சித்திர வேலாயுதர் ஆலயத்தில் புராண படனம் செய்து வந்த சைவபெரியார்களின் பெயர் மேலே சுட்டிக்காட்டிடப்படுள்ளது. அவர்களில் ஒருவரான விசுவலிங்கம் சுப்பிரமணியத்துக்கும் தையல் நாயகி அம்மையாருக்கும் சிரேஷ்ட புத்திரனாக பிறந்தவரே சு. வே. பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர் மட்டுமல்ல பண்டிதரும் கூட  'கிடைக்காத பலன்' என்னும் சிறுகதையினை கன்னிப்படையாக கொண்டு எழுத்துலகில் பிரவேசம் செய்தவர் தொடர்ந்து எழுதினார் . சிறுகதைகளும்,  உருவாக்ககதைகளும், கட்டுரைகளும், 'ஈழகேசரி', 'வீரகேசரி', 'தினகரன்' பத்திரிகைகளில் வெளிவந்த அதேவேளை தமிழக பத்திரிகைகளான 'கிராமஊழியன்', கலாயோகினி' போன்ற பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புக்கள் வெளியாகின. 'ஈழத்தமிழ் உருவாக்கக் கதை எழுதுவதில் முன்னோடி'  என போன மன்னர்களாலும் இராசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களாலும் பாராட்டுக்கள் கிடைக்கும் அளவுக்கு எழுத்தாளர் சு.வே  .யின் உருவாக்ககதைகள் அடங்கிய தொகுதியொன்று நூலுருவம் பெற்று விரைவில் வெளிவர இருப்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதை இட்டு பெருமை அடைகிறேன். அறுபது தொடக்கம் எழுபதுகளிலும்  "கிராமராஜ்யம்", "பொன்னொச்சிக்குளம்", "நவயுகம்" போன்ற தொடர் நாடகங்களும் பல உரைச்சித்திரங்களும் இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்பட்டத்தோடு , " இலக்கியரசனை", "திருக்குறட் சரித்திரங்கள்", என்னும் தலைப்புக்களில் தொடர் பேச்சுக்களும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் எழுதி பரிசு பெற்ற நாடகங்கள் சிலவற்றை குறிப்பிட்டாக வேண்டும். 1965  இலும்  1966  இலும் இலங்கை கலைக்கழகம் நாடத்திய நாடக்கப் போட்டிகளில்  'வஞ்சி' யும் ,'எழிலரசி' யும் அதே  1966 இல் இலங்கை வானொலி நடாத்திய போட்டியில் 'மண்வாசனை'யும் முதலாம் இடத்தை பெற்றன. 1968 இல் "ஒருமை "நெறித்தெய்வம்" மூன்றாம் இடத்தை பெற்றது. நூலுரு பெற்று வெளிவந்த "மண்வாசனை"சிறுகதைத் தொகுதிக்கு சாகித்தியமண்டலம்  1972 இல் பரிசு வழங்கியது. 1967 ஆம்  ஆண்டு  கல்வி வெளியீட்டு திணைக்களம் பாடநூல்  ஆக்கக்  குழுக்களை நியமித்த போது எழுத்தாளர் சு.வே.யும்  அக்குழுவில் இணைக்கப்பட்டு  1981  வரை தனது பங்களிப்பை செய்து ஓய்வு பெற்றார். "வாசகர் மனதில் பதியும் வண்ணம் சுவையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுத்தாளர் தமது படைப்புக்களை அமைக்க வேண்டும்" என அடிக்கடி கூறும் இவர் தனது பெயரும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் போலும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை என்பதனை 'சு.வே' ஆக்கிக் கொண்டார். கவிஞர் 'அம்பி' எழுத்தாளர் 'சு.வே' அவர்களின் ஆக்கங்களை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கின்றோம். இம்மண்ணில் பிறந்து வளர்ந்து இலக்கிய சேவை செய்தவர்கள் இன்னும் இவர்கள். சித்திரவேலாயுதர் கோவிலை  தொடர்ந்து வடக்கு நோக்கி சென்றால் நெணியன் வயல் வெளியை காண முடியும். நடுவே வயல்வெளியும் நாலு பக்கங்களிலும் வீடுகளும், பயன் தருகின்ற மரங்களும் அழகாக தோன்றும். எனது கிராமத்தில் கூடுதலான நெற்பரப்பை கொண்டது மட்டுமல்ல கூடுதலான விளைவை தருவதும் இந்த நெணியன் வயல் வெளியே. வயல் நடுவே விரிந்து பரந்து நிற்கும் மருத மரத்தினையும் மருத மரத்தின் கீழே தெரிவது ஓர் ஆலயம். அதுவே மருதடி வைரவர் கோவில். அதற்கு அருகே ஓர் சிறிய குளமும் உண்டு. ஆண்டு தோறும் பத்து நாட்கள் அலங்கார திருவிழாவும் கடைசி நாள் அன்னதானமும் நடைபெறுகின்றது. இவ்வயல் வெளியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் வைரவ பெருமானுக்கு அருவி வெட்டு காலங்களிலும் பொங்கல் படையல் என வயல் உரிமையாளர்களால் செய்யப்படுகின்றது. நாவற்குழியின் கிழக்கெல்லையில் கலைப் புதைக்கும் வெண்மணல் மேட்டில் கபட்டப்பட்டுள்ள இவ்வாலயம் மிகவும் பழமையானது; புகழ்பூத்தது. ஆலய முன்பக்கத்தில் பிரமாண்டமான ஆலவிருட்சம் ஒன்று விழுதுகள் வேரூன்ற விட்டு, வருகின்ற வருகின்ற பக்தர்கள் பொங்கிப் படைத்து உண்டு உறங்கிப் போவதற்கென்றே நிக்குமாய் போல தோன்றுகின்றது. நாகங்களும் இம்மரத்தில் குடிகொண்டிருப்பதாக சிலர் பார்த்ததாகவும் கூறப்படுகின்றது. பங்குனி மாதத்து திங்கட் கிழமைகள் தோறும் திருக்குளிர்ச்சி நடைபெறும். அயல் கிராமங்களில் இருந்தும் தூரவுள்ள இடங்கங்களில் இருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் மோட்டார், கார், வான், துவிச்சக்கர வண்டி, கால் நடையாகவும் வந்து அம்பாளின் அருள் வேண்டி பொங்கலிட்டு சுவைத்து, திருகுளிர்ச்சியிலும் பங்குகொண்டு போவார்கள். இரவு நேரங்களில் நிலாவெளியில் ஆலயத்தின் அழகே அழகு. பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட கப்பல் மிதப்பது போலல்லவா தோன்றும். இக்கோவிலில் ஆண்டு தோறும் கொடியேற்றம், தேர், தீர்த்தம், என மகோட்சவம் நடைபெறுகின்றது. வைத்த காலை எடுக்க முடியாத அளவுக்கு காலை புதைக்கும் வீதியில் தேரோட்டத்தை காண வரும் பக்தர்கள் ஏராளம். மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து நேராக நாகதீவு வந்து நாக தீவிலிருந்து கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழிசென்று நாகர் கோவிலடைந்து, பின்னர் கரைச்சியிலுள்ள புளியம் பொக்கணை தங்கி ஈற்றில் வற்றாப்பளை அடைந்ததாக கூறப்படுகின்றது. மதுரை எரியுண்டதும் ஐந்தலை நாகமாக மாறிய கண்ணகி தெற்கு நோக்கி நகர்ந்து முதலில் நயினாதீவிலே தரித்து ஈற்றில் வற்றாப்பளை சென்றதாக கொள்வோரும் உண்டு.  இக்கூற்றின் மூலம்  வேலம்பிராய்   கண்ணகை அம்மன் ஆலயத்தின் தொன்மையை புரிந்து கொள்ள முடியும். அந்நியர் ஆட்சிக்கலத்தில் நிறுவப்படட இப் பாடசாலை ஆங்கிலேயர் தமது சமயத்தை பரப்புவதற்காகவும் தமது நிர்வாகத்தை இலகுபடுத்துவற்காகவும் கட்டப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று.1868 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அக்காலம் கல்வி கற்ற மாணவர் தொகை இருபத்திரண்டே கிளப்பிரிவு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையே நடைபெற்றது. சீ.எம்.எஸ் பாடசாலை என்னும் பெயருடன் (Christian Mission School ) யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி (St. John 's  College) இன் கிளையாக காணப்பட்டது. தத்தை வேகத்தில் முன்னேறி வந்த இப்பாடசாலை 1946.5.1 இல் இருந்து அரசினால் கையேற்கப்பட்டு "நாவற்குழி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" யாக பெயர் மாற்றப்பட்டது. கட்டடங்கள் கட்டப்பட்டு மாணவர் தொகையும் அதிகரித்து 1959 ஆம் ஆண்டு "நாவற்குழி சிரேஷ்ட தமிழ் கலவன் பாடசாலை" யாக தரமுயர்ந்து க.பொ.த சாதாரணம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன.  தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்த இப் பாடசாலை 1961 இல் இருந்து க.பொ.த உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் விஞ்ஞான கூடமும் அமைக்கப்பட்டது. இப்பாடசாலைக்கு முன்னே தோன்றும் திறந்த வெளி அரங்கினை காட்டியவர், உலகறிந்த தமிழ் கவிஞர் வரிசையில் உயர்ந்து நிற்போரில் ஒருவர். அவர் தான் நாவற்குழியூர் நடராசன். அவர் பற்றி கூறினால் தன்னுடைய நாமத்துடன் 'நாவற்குழியூர்' என தான் பிறந்த ஊரின் பெயரை சேர்த்திருப்பது இந்த ஊருக்கு உயர்ச்சி என்றே கூறவேண்டும். பிறந்து வளர்ந்து துணைதேடி பொருள்தேடி பிள்ளைகளை பெற்று பின்னர் அவர்களுக்காயும் அல்லும் பகலும் அலைந்துலைக்கும் இவ் உலகில் பணம், பொருள், பட்டம், பதவி வரும்போது வந்த பாதையை மறந்து மண்ணினை மறந்து வாழும் உலகில் அனைத்தும் இருந்தும் பிறந்த மண்ணையும் பேசி வளர்ந்த தாய்மொழியையும் இறுதிவரை நேசித்து வாழ்ந்து காட்டியவர் நாவற்குழியூர் நடராசன். இலங்கைத்தலை நகரில் இல்லங்கொண்டிருந்து பணி செய்த காலத்தில் இந்த திறந்த வெளி அரங்கினை நிறுவிக் கொடுத்தமை இதனை நின்று பறைசாற்றுகின்றது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர்தம் உயர்சிக்கும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி நிற முதுபெரும் எழுத்தாளர். "வரதர்" போன்றோருடன் தானும் சேர்ந்து 'மறுமலர்ச்சி சங்கம்' நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழ் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் அயராது பனி புரிந்தவர். "மறுமலர்ச்சி காலம்"  என அழைக்கப்படும் காலம் ஈழத்து எழுத்துலகை பொறுத்தவரை ஈழத்தமிழரின் பொற்காலம் என்றே குறை வேண்டும். மறுமலர்ச்சிக்கு முன்னரே ஊற்றெடுக்க துவங்கிய நாவற்குழியூர் நடராசனின் கவிதை படைப்புக்கள் மறுமலர்ச்சி காலத்தில் இருந்து பொங்கிப் பிரவாகமானது. இலங்கை வானொலியின் ஆரம்ப காலத்திலிருந்து "தமிழ் நிகழ்ச்சி அதிகாரி " யாக பணிபுரிந்தவர். கொழும்புத் தமிழ் சங்கத் தலைவராகவும் சேவை செய்திருக்கின்றார்.  ஓய்வு பெற்ற பின்னரே 'ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 18ஆம் நூற்றாண்டு வரை' என்னும் நூலினை எழுதி வெளியிட்டமை. கலாநிதி பட்டம் பெற்றமை விடாமுயற்சியின் வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும். யாழ்ப்பாண சரித்திரத்தை கூறும் செய்யுள் நூலான "வையாபாடல்" என்னும் நூலை ஆராய்ந்து வெளியிட்டு "முது கலைமானி " பட்டமும் பெற்ற அவரை கனடா நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அவர் தம்முடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் அன்புக் கட்டளையை மறுக்க முடியாது அங்கு சென்ற அவர் அங்கும் தனது தாய் மொழிமேலும் தமிழ் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று காரணமாக அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். அது நூலுருப் பெறுவதற்கு முன்னர் அவர் மறந்து விட்டார். காலன் அவரை எம்மிடம் இருந்து பிரித்தபோதும் "உள்ளதான ஓவியம்" அச்சுவாகனமேறி வெளிவந்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த பெரும் பேறாகும். நாவற்குழி மகாவித்தியாலயத்திற்கு எதிரே சுமார் 100 அடி மேற்கே அமைத்துள்ளது "நாவற்குழி புனித அந்தோனியார் தேவாலயம் " என்னும் பெயர் கொண்ட இத்தேவாலயம் இவ்விடத்தில் 1909ஆம் ஆண்டு கட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டு 1931.06.13 இல் பூரணமாக முடிவுற்றது.  ஆரம்ப காலம் எங்கே எப்படி இருத்ததென்று பார்த்தால் நாவடகிற்குழியூருக்கு தெற்க்கெல்லையாக உள்ள உப்பளங்களி  அருகே ஒரு மேட்டில் புனித அந்தோனியாருக்கு முன்னர் கோட்டில் அமைக்கப்பட்டதெனவும் அந்தோனிப்பிள்ளை அவருக்கு பின்னர் சந்தியாப்பிள்ளை, சந்தியாப்பிள்ளையின் பின்னர் யோவாம்பிள்ளையும் "மூப்பர்" களாக இருந்து நடாத்தினார்கள் எனவும்  உப்பங்கழிக்கரை   ஊருக்கு புறம்பாக இருந்தமையால் நெணியன் வெளிக்கு கொட்டில் மாற்றப்பட்டதெனவும் இப்போதிருக்கும் தேவாலயத்தில் தனக்கு தெரியக்கூடிய காலத்திலேயே தான் பூசை நடைபெறத் துவங்கியதாகவும் செபமாலை பிரகாசியம்மா எனும் மூதாட்டி கூறியுள்ளார். ஐந்து விதத்துக்கும் குறைவானோரே இவ்வூரில் கத்தோலிக்க மதத்தினராக வாழ்ந்து வருகின்றனர். மற்றையோர் எல்லோரும்  இந்துக்களே.   கொழும்புத்துறை கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இக்கிராமத்தில் உள்ளவர்கள் மீன்பிடி, வேளாண்மை மற்றும் தேங்காய்ப் பொச்சுமட்டையை கடற்கரையில் ஊறவிட்டுக் கயிறு மற்றும் தும்புத்தடிகளையும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முன்னர் வீதிகள் விருத்தியாக முன்னர் யாழ்ப்பாணத்துக்கான பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பில் இருந்து இறங்குவதால் கொழும்புத்துறை என்ற காரணப் பெயரைப் பெற்றது. அரியாலை இதன் அயற்கிராமம் ஆகும். இப்பகுதியில் ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் போன்ற புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. குருமண்காடு குருமண்காடு வவுனியா நகரத்தில் இருந்து வவுனியா மன்னார் ஏ30 வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் ஆகும். ஆரம்பத்தில் ஓர் சிறிய கிராமமாக இருந்த இப்பகுதியானது உள்ளூர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்ளால் இப்பகுதியானது ஓர் நகரமாக மாறியது. இப்பகுதியில் பிரபலமான குருமண்காடு காளிகோயில் அமைந்துள்ளது வவுனியாவில் உள்ள பெரும்பாலான ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள் இப்பகுதியிலே அமைந்துள்ளது. இப்பகுதியிலேயே யாழ் பல்கலைக் கழகத்தில் வவுனியா வளாகத்தில் விஞ்ஞான பீடம் அமைந்துள்ளது. பட்டாணிச்சூர் வவுனியா நகரத்தில் வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டாணிச்சூர் கிராமம். இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் ஆவர். இப்பகுதியில் பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. யால்ட்டா மாநாடு யால்ட்டா மாநாடு ("Yalta Conference"), என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இது கிறைமியா மாநாடு ("Crimea Conference") அல்லது ஆர்கோனோ மாநாடு ("Argonaut Conference") எனவும் அழைக்கப்பட்டது. மாநாடு பெப்ரவரி 4, 1945 இல் சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனில் கிறைமியா குடியரசில் யால்ட்டா என்ற நகரில் நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் ஆரம்பமானது. இது இரந்தாம் உலகப் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது உச்சி மாநாடாகும். முதலாவது டெஹ்ரான் மாநாடு 1943 இல் இடம்பெற்றது. மூன்றாவது பொட்ஸ்டாம் மாநாடு ஜெர்மனியில் இடம்பெற்றது. மூன்றாம் மாநாட்டில் காலஞ்சென்ற பிராங்கிளின் ரூஸ்வெல்ட்க்குப் பதிலாக ஹரி ட்ரூமன் கலந்து கொண்டார். தீபங்கர புத்தர் தீபங்கரர்(சமஸ்கிருதம் மற்றும் பாளி "", "தீபத்தை ஏந்தியவர்"; சீனம் (பின்யின் Rándēng Fo); திபெ. "mi slob"; மங் "Jula-yin Jokiyaγči", "Dibangkara", நேபால் பாசா: दिपंखा "Dipankha") பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் கௌதம புத்தருக்கு முற்பட்ட புத்தர் ஆவார். பாளி சூத்திரங்களின் படி, எண்ணற்ற புத்தர்கள் அவதரித்துள்ளனர், அவர்களை அனைவரையும் ஆயிரம் புத்தர்கள் என கூட்டுபெயர் கொண்டு அழைப்பதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டதுக்கும் ஒரு புத்தர் அவதரிக்கின்றனர். சில பௌத்த சம்பிரதாயங்களின் படி, தீபங்கர புத்தர், சாக்கியமுனி புத்தரான கௌதமர் அவதரிப்பதுக்கு முன்பு இப்பூமியில் தோன்றியவர். தீபங்கரர் பொதுவாக அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்படுகிறார். எனினும் நின்ற கோலத்தில் இவருடைய சித்தரிப்பு சீனா மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. இவரது கரத்தில் அபய முத்திரை காணப்படுகிறது. மிக அரிதாக இவர் தனியாக காணப்படுகிறார். ஆஃப்கானிஸ்தானின் தாலிபன் அரசு தக்ர்த்த பாமியான் புத்தர் சிலைகளும் ஒன்று இவரை குறித்தாக கருதப்படுகிறது. இவரது சிலைகள் சீனாவில் காணப்படுகின்றன. பொதுவாக ஜாவாவில் இவர், மஞ்சுஸ்ரீ மற்றும் வஜ்ரபாணி ஆகிய இரண்டு போதுசத்துவர்களுடன் காணப்படுகிறார். ஸ்ரீ லங்காவில் இவர் அவலோகிதேஷ்வரர் மற்றும் வஜ்ரபாணி உடன் இருக்கிறார். இவரை கௌதம புத்தர் மற்றும் மைத்திரேயருடனும் எப்போதாவது சித்தரிப்பர் இவரை குறித்த கீழ்க்கண்ட கதை வழங்கப்பெற்கிற்து. கௌதம புத்தர், தன்னுடைய முற்பிறவிகளில் ஒன்றில் தீபங்கரரை சந்திக்கிறார். அப்போது அவரிடம் தீபங்கரர், கௌதமர் ஒரு காலத்தில் புத்தர் ஆவார் என தெரிவிக்கிறார். மேலும் கௌதமர் மிகச்சிறந்த ஆசானாக திகழ்வாரென்று, அரசன் சுத்தோதனுக்கும் அரசி மாயா தேவிக்கும் பிறப்பார் என்றும் குறி கூறுகிறார். இந்த கதை ஜாதக கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கௌதம புத்தர், தன்னுடைய முற்பிறவிகள் குறித்த சொன்னதன் தொகுப்பே இந்த ஜாதக கதைகள். தீபங்கரரின் காலத்தில் கௌதமர் ஒரு மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். பிறகு துறவியாகும் பொருட்டு, அனைத்து செல்வங்களையும் தானம் செய்து விடுகிறார். துறவியான பின்னர் தீபங்கர புத்தரை சந்திக்கும் போது இந்த முன்னறிவிப்பை பெறுகிறார். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில், தீபங்கரரின் வழிபாடு, நேபாள புத்த சமூகத்தினரேடே பரவலாக காணப்படத்துவங்கியது. இவர்கள் தீபங்கரரை வணிகர்களின் பாதுகாவலராகவும், தானத்துடன் தொடர்புடையவராகவும் கருதுகின்றனர். மேலும் இவர் மாலுமிகளின் பாதுகாவலராகவும் கருதப்பட்டு, இவரது சிலைகளை கரைகளின் ஓரமாக கப்பல்களை காத்து வழி நடத்தும் பொருட்டு சில நேரங்களில் நிறுவப்படுகிறது. யமன் (இந்து மதம்) யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார். யமனுக்கு சித்திரகுப்தர் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை சரி பார்த்து அவற்றை குறித்துக் கொண்டு, அந்த தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனை தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை "யம தர்ம ராஜா" எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார் யமன் ஒரு திக்பாலர் மற்றும் ஓர் ஆதித்யர் ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை வாகனமாகாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கிறார். இவர் சூரிய தேவனின் மகன் ஆவார். இவரது சகோதரி யமி அல்லது யமுனா ஆவார். இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன. யமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறார். இவர் யுதிஷ்டிரரின் தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி சியாமளா தேவி என்றும் உள்ளது. யமன் சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிந்தவராக புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனை சிவன் அழிக்க முற்பட்டுள்ளார். அதே போல், பாவங்கள் பல செய்திருப்பினும், இறக்கும் தருவாயில் தன்னையும் அறியாமல் நாராயணா என அழைத்த அஜமிலனுக்கு திருமால் யமதூதர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி மோட்சத்தை அருள்கிறார். மகாபாரதத்தில், விதுரர் மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் தருமர் இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அடுத்ததாக ஏழாயிரம்பண்ணை என்கிற கிராமத்திலும், கோவை அருகே வெள்ளக்கோவில் என்கிற கிராமத்திலும், தஞ்சை அருகே திருபைஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்பு பெற்றவை ஆகும். இந்த கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான எருமையின் மீது வீற்றிருக்கிறார். சிதம்பரபுரம் வவுனியா மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் இலங்கையில் மிகவும் நீண்டகாலமான நலன்புரிநிலையம் (அகதி முகாம்) உள்ள ஓர் இடம் ஆகும்.சிதம்பர புரத்தில் உள்ள நலன்புரி நிலையத்தை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானியம் பராமரித்து வருகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் இந்நலன்புரி நிலையத்தை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் நலன்புரிநிலையத்தில் உள்ளோர்களின் இருப்பிடப் பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிப்பிரச்சினை, அதியுயர் பாதுகாப்பு நிலையம் போன்ற பல பிரச்சினையால் கைகூடவில்லை. தவிர சிதம்பரபுர நலன்புரி நிலையத்தில் இருந்த ஒருவர் இலங்கை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கம் செய்ததினால் அப்போது இலங்கை இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவ அனுமதிப்பத்திரம் (பாஸ்) நடைமுறை அடிப்படை மனித உரிமை மீறல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அந்நடைமுறை இரத்துச் செய்யப்பட்டது. இருபால்சேர்க்கை ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு அல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது இருபால்சேர்க்கை அல்லது இருபாலீர்ப்பு ("Bisexuality") எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர். இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு. வல்வெட்டித்துறை வல்வெட்டித்துறை ("Valvettithurai") இலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து தெற்கே கடல் மார்க்கமாக 30மைல் தூரத்திலுமுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல். இலங்கையின் வடபாகத்தின் கடற்கரையோரத்தில் கிழக்கே ஊறணியில் இருந்து மேற்கே ஊரிக்காடு வரையும் தெற்கே வல்வெட்டி, கம்பர்மலை கிராமங்களும் அடங்கப்பட்ட 250 ஏக்கர் விஸ்தீரணமுள்ளதாக இருந்த சிறிய பட்டினம் வல்வெட்டித்துறை. இன்று பழமை வாய்ந்த கந்தவனக்கடவை தொடக்கம் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஈறாகவும் மூன்றரை மைல் நீளமும் அரை மைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறை நகரசபையாக மிளிர்கின்றது. ஒவ்வொரு கிராமமும் தமக்கென்று பாரம்பரிய கலாச்சாரம், அரசியல், பண்பாடுகளை கொண்ட கதைகளை தாங்கியுள்ளது. இங்கு வசிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவர். பெரும்பாலும் இந்து, மற்றும் கத்தோலிக்க மதத்தையும் சேர்ந்தவர்கள். கமம், மீன்பிடித்தல், மற்றும் வணிகம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இங்குள்ளவர்கள் தமிழநாட்டின் கோடிக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுடன் கப்பற் தொடர்புகளை வைத்திருந்தபோதும் இப்போது நிலவும் சூழ்நிலைகளால் இத்தொடர்புகள் மிகவும் குறைந்துள்ளன. இங்கிருந்தே உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அன்னபூரணி என்ற பாய்க்கப்பல் 1933 ஆம் ஆண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவின் மசச்சூசெட்சை வந்தடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஈழ இயக்கங்கள் இங்கேயே உருவாகின. பிரபலமான போராளித் தலைவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள். பிரபல கோயில்களான வல்வை வைத்தீஸ்வரன் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் என்பன இங்கு காணப்படுகின்றன. சாரண இயக்கத்தில் அகில இலங்கைவரை முதலாவது இடம் சென்ற யா/சிதம்பரக்கல்லூரி இங்கு உள்ளது. 1819 1819 (MDCCCXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. 1827 1827 (MDCCCXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). தும்பிக்கை தும்பிக்கை என்பது யானையின் நீண்டு வளர்ந்து விட்ட மேல் உதடும் மூக்கும் ஆகும். இது மீள்விசைத் தன்மை கொண்டது. இவ்வுறுப்பு யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகிறது. மொத்தம் 1,50,000 தசைநார்களால் ஆனது. சின்னஞ்சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை யானையால் தும்பிக்கை கொண்டு தூக்க முடியும். உண்கையில் மரக்கிளைகளை எட்டிப் பறிக்கவும் மரப்பட்டைகளை உரிக்கவும் உணவு உட்கொள்ளவும் நீர் அருந்தவும் யானைகள் தும்பிக்கையை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்க யானைக்கு தும்பிக்கையில் இரு விரல்களும் ஆசிய யானைக்கு தும்பிக்கையின் மேற்புறம் ஒரு விரலும் இருக்கும். தும்பிக்கை காயம்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ யானையால் உயிர்வாழ இயலாது. வேதிகா குமார் வேதிகா தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் "சிவகாசி" என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. கின்னரப்பெட்டி கின்னரப்பெட்டி (பியானோ) ("piano") என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வசிப்பதற்கும், அறையிசையில் (Chamber music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக (Accompaniment) வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படும் கின்னரப்பெட்டி, இசை அமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட மிக உதவியுள்ளதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்ததாகவும் கையடக்கமாக இல்லாத போதும், கின்னரப்பெட்டியின் அவதானமும் (versatility) வியாபகமும் (ubiquity) அதை இசைக்கருவிகளுள் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உருவாக்கியுள்ளன. கின்னரப்பெட்டியின் வதிப்பலகையிலுள்ள ஒரு வதியை (Key) அழுத்துவது, பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்கு (Steel) கம்பிகளின் மீது அடிக்கச்செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுறச்செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாக ஒலிப்பலகையின்(Soundboard) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்த ஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது. அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. கின்னரப்பெட்டி, சில வேளைகளில் எருக்கு வாத்தியக்கருவியாகவும்(Percussion instrument) நரம்பு வாத்தியக்கருவியாகவும்(String instrument/Chordophone) வகைப்படுத்தப்படுகின்றது. ஹார்ன்பாச்டல் சாக்சின் இசை வகைப்படுத்துதலின்படி இது நரம்பு வாத்தியக்கருவிகளுடன்(Chordophones) சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நவீன கின்னரப்பெட்டியில் 88 வதிகள் உள்ளன. கின்னரப்பெட்டியில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது. கின்னரப்பெட்டியில் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த வதி "நடு C வதி" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது வதிகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது வதிகளில் வாசிக்கப்படுகிறது. கின்னரப்பெட்டி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. "Piano" என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே(Pianoforte) என்பதன் சுருக்கமே. இன்றைய தினத்தில் இச்சொல் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, clavicembalo [அல்லது gravicembalo] col piano e forte என்னும் இதன் உண்மையான இத்தாலிய பெயரிலிருந்தே எடுக்கப்பட்டது (எழுத்தின்படி: ஹார்ப்சிகார்ட் - அமைதியுடனும் பெலனுடனும்). இது, இந்த இசைக்கருவியின் வதிப்பலகையை தொடுதலின் மூலம் உண்டாகும் இதன் பிரதிபலிப்பை குறிக்கிறது. இதனால், ஒரு கின்னரப்பெட்டி இசை கலைஞர், சுத்தியல் கம்பிகளை அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு வேகங்களில் வாதிகளை உண்டாக்கலாம். கின்னரப்பெட்டி முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் கின்னரப்பெட்டியின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது. 1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. கின்னரப்பெட்டியில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு கின்னரப்பெட்டியில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன. தற்காலக் கின்னரப்பெட்டிகள் உருவ அமைப்பின் அடிப்படையில் இரண்டு வகைப் படுகின்றன அவையாவன: பெருங் கின்னரப்பெட்டிகளில் சட்டகமும் தந்திகளும் கிடையாக அமைந்து காணப்படும். அத்துடன் தந்திகள் விசைப்பலகையில் இருந்து விலகி நீட்டியபடி காணப்படும். இதன் ஒலியெழுப்பும் செயற்பாடானது தந்திகளிலெயே தங்கியுள்ளது. அத்தோடு தந்திகள் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தியே ஓய்வு நிலைக்குத் திரும்புகின்றன. பெருங் கின்னரப்பெட்டிகள் பல அளவுகளிலும் காணப்படுகின்றன. நிமிர்ந்த கின்னரப்பெட்டிகள் நிலைக்குத்துக் கின்னரப்பெட்டிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அத்தோடு இவற்றின் சட்டகமும் தந்திகளும் நிலைக்குதாகக் காணப்படுவதால் இவை சிறிய இடப்பரப்பையே எடுத்துக்கொள்கின்றன. இவற்றில் சுத்தியல்கள் கிடையாக அசைவதுடன் தந்திகளின் ஊடாக ஓய்வு நிலையை அடைகின்றன. வழக்கத்திற்கு மாறாக உயரமான சட்டகத்தையும் நீளமான தந்திகளையும் உடைய நிமிர்ந்த கின்னரப்பெட்டிகள் சிலவேளைகளில் நிமிர்ந்த பெருங் கின்னரப்பெட்டிகள் என அழைக்கப்படுகின்றன. ஜாஸ்,புளூஸ், ராக் இசை, நாட்டுப்புற இசை மற்றும் பல மேற்கத்திய இசை வடிவம் போன்ற மேற்கத்திய பாரம்பரிய இசையில் கின்னரப்பெட்டி மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. மிகப்பெரும் எண்ணிக்கையிலாக இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் கின்னாரப்பெட்டி கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். ஏனெனில் கின்னாரப்பெட்டியில் உள்ள விசைப்பலகைகள் சிக்கலான மெல்லிசைகளையும் அனுசுர இடைவினைகளையும், பல்வேறு சுதந்திரமான மெல்லிசை வரிகளை ஒரே நேரத்தில் உருவாக்க முடிகிறது. கின்னரப்பெட்டிகள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பின்னணி இசைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இசையமைப்பாளர்கள் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும்,மேலும் மற்ற இசைக்கருவிகளோடு இவை சேர்த்து பயன்படுத்தப்பட்டாலும் மெல்லிசை மற்றும் அடிநாதங்களை உருவாக்கவும் இந்த இசைக்கருவியே பயன்படுத்தப்படுகிறது. இசைக்குழு நடத்துனர்கள் பெரும்பாலும் கின்னாரப்பெட்டியை கற்றுக் கொள்கின்றனர் ஏனெனில் மேடைக்கச்சேரிகளில் பார்வையாளர்களையும் இசைப்பிரியர்களையும் கவரும் வகையிலான பாடல்களை இசைக்க இது ஒரு சிறந்த கருவியாகும். கின்னரப்பெட்டியானது ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இசைக் கல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும் இசைக் கருவியாகும். பெரும்பாலான இசை வகுப்பறைகள் மற்றும் பயிற்சி அறைகள் கின்னாரப்பெட்டியைக் கொண்டுள்ளன. இசைக் கோட்பாடுகள், இசை வரலாறுகள் மற்றும் இசை மதிப்பீட்டு வகுப்புகள் ஆகியவற்றை கற்பிப்பதற்கு கின்னாரப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றன. தொழிநுட்பத்தின் மூலம் கின்னாரப்பெட்டி இசை கருவியை செல்பேசி அல்லது கணிணியில் நிறுவி தொடுதிரை மூலமாக இசைக்கும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை எவர் வேண்டுமானாலும் அரவரவர் செல்பேசியில் நிறுவி கின்னார இசையினை செல்பேசி அல்லது தொடுதிரைக் கணிணித் திரையில் தோன்றும் விசைப்பலகையை தொட்டு இசைக்க முடியும். மின்சாரத்தைக் கொண்டு செயல்படும் கின்னாரப்பெட்டிகள் மின் கின்னாரப்பெட்டிகள் (electric piano) ஆகும். 1920 களின் பிற்பகுதியில் புழக்கத்தில் இருந்த கின்னாரப்பெட்டியானது ஒரு காந்தம், ஒரு பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியுடன் உலோக கம்பி வடம் கொண்டு மின்சாரத்தால் இயங்கக்கூடியதாகவும் இருந்தன.. 1960 மற்றும் 1970 களில் பாப் மற்றும் ராக் இசைக்கச்சேரிகளில் மின் கின்னாரப்பெட்டி மிகவும் பிரபலமாக இருந்தன. பெண்டர் ரோட்ஸ் மின்சார கின்னாரப்பெட்டியில் மின்சார கித்தாரில் உள்ளதைப் போலவே கம்பிகளுக்குப் பதிலாக உலோகத் தகரம் பயன்படுத்தப்பட்டது. மின்னியல் கின்னாரப்பெட்டியானது ("Electronic Piano") கேட்பொலியிலா கருவியாகும். இவற்றில் தந்திக் கம்பியிழையோ, சுத்தி போன்ற அமைப்புகளோ காணப்படுவதில்லை. ஆனால் இதில் ஒரு வகையான கூட்டிணைப்பி தூண்டுதல் அல்லது பின்பற்றுதல் செயல்கள் மூலம் கின்னாரப்பெட்டி ஒலிகளை ஒருங்கிணைத்து வடிகட்டிகளைப் பயன்படுத்தி ஒலிகள் உருவாக்கப்படுகிறது. இதற்கு விசைப்பலகையுடன் இணைக்கப்பட்ட பெருக்கி உதவி தேவைப்படாது. (இருப்பினும் சில கின்னாரப்பெட்டிகளில் மின்னியல் விசைப்பலகையுடன் பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியும் சேர்த்தே கட்டமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.) இதற்கு மாற்றாக இவ்வகை கின்னாரப்பெட்டிகளைக் கொண்டு ஒருவர் பிறரை தொல்லை செய்யாமல் தலையணி உதவியுடன் பயிற்சி செய்யலாம். எண்ம கின்னாரப்பெட்டியும் ("Digital Piano") கேட்பொலியிலா கருவியாகும். இவற்றிலும் தந்திக் கம்பியிழையோ, சுத்தி போன்ற அமைப்புகளோ காணப்படுவதில்லை. இதில் உருவாக்கப்படும் இசையொலிகள் மிகவும் துல்லியமாக உள்ளன. கின்னாரப்பெட்டியில் 12,000 தனித்தனி பாகங்களைக் கொண்டுள்ளன. டெஃப்லான் டெஃப்லான் (Teflon) என்பது டுபாண்ட் (DuPont) நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் பொருளொன்றின் வணிகப் பெயர் ஆகும். இது பாலிடெட்ராபுளோரோஎதிலீன் (polytetrafluoroethylene) என்னும் வேதியியற் பெயர் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். இதன் மூலக்கூற்றில் சங்கிலித் தொடராக அமைந்த காபன் அணுக்களும் அவற்றோடு இணைந்துள்ள புளோரீன் அணுக்களும் உள்ளன. வேறு சில கரிமச் சேர்வைகளைப் போலன்றி இச் சேர்வையின் மூலக்கூற்றில் உள்ள காபன் சங்கிலி முற்றிலுமாகப் புளோரீன் அணுக்களால் சூழப்பட்டுள்ளது. இம் மூலக்கூற்றில் உள்ள காபன் மற்றும் புளோரீன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது. டெஃப்லானின் இந்த மூலக்கூறு அமைப்பு அதன் தனித்துவமான இயல்புகளுக்குக் காரணமாகும். இதன் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் அதிகூடிய வழுக்கும் தன்மை ஆகும். அறியப்பட்டுள்ள சேர்வைகளில் அதிக வழுக்குத் தன்மை கொண்ட சேர்வை இதுவே எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலான வேதியியற் பொருட்களால் தாக்கப்படாதிருக்கும் தன்மையும் இதன் அதிகம் வேண்டப்படுகின்ற தன்மைகளுள் ஒன்று. 1938 இல் முதன்முதலாக டுபொண்ட்டின் ஆய்வுகூடம் ஒன்றில் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்ககாலத்தில் இது பெரும்பாலும் தொழில் துறைத் தேவைகளுக்கே பயன்பட்டு வந்தது. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இப்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பலவகையான அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமையல் பாத்திரங்களில் ஒட்டாத பூச்சுக்களாகப் பயன்படுவதுடன், கறை படியாத துணிகள் தயாரிப்பு, மூக்குக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு, உராய்வு நீக்கிகளின் தயாரிப்பு, கட்டிடத் தொழில் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது. சிரேயா ரெட்டி சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் திரைப்பட நடிகையுமாவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் "சதன் மியுசிக் சுபைஸ்" தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார். மாளவிகா ஸ்வேதா கோனுர் (பிறப்பு: சூலை 19, 1979) என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் "சீ யூ எட் 9" திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 1902 1902 (MCMII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. ஏலூரு இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமான ஏலூரு மேற்குக் கோதாவரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து ஏலூர் மண்டலம் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 189,772 ஆகும். இது விஜயவாடாவையும், விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முன்னர் ஹேலாப்புரி என அழைக்கப்பட்ட இது, வளமான பண்பாடு மற்றும் அரசியல் வரலாறுகளைக் கொண்டது. ஒரு காலத்தில் விஷ்ணுகுந்தினப் பேரரசின் தலைநகரமாக இது விளங்கியதாகவும் நம்பப்படுகிறது. பெரிய நன்னீர் ஏரியான கொள்ளேறு ஏரி இந்த நகரத்துக்கு அண்மையிலேயே உள்ளது. கெலபுரி என்று முற்காலத்தில் இந்நகரம் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏலூரு மச்சிலிப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1859 ஆம் ஆண்டில் இது கோதாவரி மாவட்டத்தின் பகுதியானது. பின்னர் சிலகாலம் கிருஷ்ணா மாவட்டத்துள் இடம்பெற்றிருந்த இது 1925 இல் மேற்கு கோதாவரி மாவட்டம் உருவானபோது அதன் தலைநகராக்கப்பட்டது. ஆந்திர சட்டமன்றத்திற்கு ஏலூர் மண்டலத்தில் உள்ள சில ஊர்கள் தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், மற்ற ஊர்கள் ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டன. இந்த மண்டலம் இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. சதுர கிலோமீட்டர் சதுர கிலோமீட்டர் என்பது அனைத்துலக அலகு முறைமையில் (International System of Units) பரப்பளவைக் குறிப்பதற்கான ஒரு அலகு ஆகும். இது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது. இவ்வலகு பொதுவாகப் பெரிய பரப்பளவுகளைக் குறிப்பதற்கே பயன்படுகின்றது. நாடுகள், நாடுகளின் துணைப்பிரிவுகள், நகரங்கள் போன்றவற்றின் பரப்பளவு கிலோமீட்டரில் அளக்கப்படலாம். ஒரு சதுர கிலோமீட்டர் 1,000,000 (பத்து இலட்சம்) சதுர மீட்டர்களுக்குச் சமமானதாகும். இம்பீரியல் அலகு முறைமையில் இதற்கு இணையான அலகு சதுர மைல் ஆகும். எனினும் சதுர மைல், சதுர கிலோமீட்டரிலும் பெரிய அலகு ஆகும். சதுர கிலோமீட்டருக்கும் பிற பரப்பளவின் அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கீழே காண்க. ரேணுகா மேனன் ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். "நம்மள்" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தலைமுறை ஒய் தலைமுறை ஒய் ("Generation Y") என்பது பொதுவாக 1980 ஆம் ஆண்டுக்கும் 1995 ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களை குறிக்கும். எனினும் இது 1976 இற்குப் பிறப்ட்ட காலத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களை குறிக்கக்கூட சில நேரங்களில் பயன்படுத்தப்படுவது உண்டு. ஒரு குறிப்பிட்ட நபர்களை ஒய் தலைமுறையினர் என அழைப்பது சர்ச்சைக்குரியதாக கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் ஒய் தலைமுறை என்னும் சொல், எக்ஸ் தலைமுறை என்ற சொல்லில் இருந்து உருவானதாகும். எக்ஸ் தலைமுறை என்ற சொல்லை ஆரம்ப காலத்தில் இழிவுப்படுத்தும் விதமாகவே உருவாக்கப்பட்டது இதற்கு காரணம் எனலாம். இரட்டைப்பட்டம் இரட்டைப் பட்டப்படிப்பு என்பது ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்திலேயோ அல்லது இரு வேறு பல்கலைக்கழகத்திலேயோ ஒரே சமயத்தில் இரண்டு பட்டங்கள் பெறுவதை குறிக்கும். இரண்டு பட்டங்களை தனித்தனியாக பெறுவதற்கு ஆகும் நேரத்தை விட மிகவும் குறைந்த காலத்தில் இரட்டைப்பட்டப்படிப்பு மூலம் இரண்டு பட்டங்களை பெறலாம்.இந்த இரு பட்டங்களும் ஒரே துறை தொடர்புடையவன ஆகவோ அல்லது இரு வேறு துறைகளாகவோ இருக்கலாம். ஆங்கிலேயே முறையை பின்பற்றும் நாடுகளில் குறிப்பிட்ட அளவில் இளநிலை பட்டங்கள் இரட்டைப்பட்டப்படிப்பாக பல்கலைக்கழங்களில் தரப்படுகிறது. எனினும் எல்லா நாடுகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை ஒன்றாக படிப்பதே இரட்டைப்பட்டப்படிப்பாக கருதப்படுகிறது. உதாரணமாக, இரண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை தனித்தனியாக பெற 4 + 4 என 8 ஆண்டுகள் கல்விகற்க வேண்டி இருக்கும். எனினும் இதையே இரட்டைப்பட்டப்படிப்பாக கொண்டால் 5 ஆண்டுகளில் இரண்டு பட்டங்களை பெறலாம். இந்த முறை இந்திய பல்கலைக்கழங்களான, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் முதலியவற்றில் காணப்படுகிறது. அதேபோல் இளநிலை மற்றும் இளநிலை பொறியியல் படிப்பை 5 ஆண்டுகளில் இரட்டைப்படிப்பாக தருவது இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் பிற பல்கலைக்கழங்களிலும் காணப்படுகின்றது. பெண் நண்பர் பெண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள திருமணமில்லா காதல் சார்ந்த நெருக்கமான ("Non-Marital Romantic Intimate") உறவையோ சாதாரண நெருக்கமில்லா உறவையோ குறிப்பிடுகிறது பெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு ஏதாவது பெண்ணுடன் உள்ள காதல் சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது. சில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்று கூடியிருக்கும் உறவு ("Living Together") உடையோரையும் சுட்டுவதாகக் கொள்ளலாம். தமிழரசன் தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார். தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மசூம்தார் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார். சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்துவந்தார். மிசா காலக்கட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார் தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர். தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர். வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 43 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், வடக்கில் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவும்,எல்லைகளாக உள்ளன. இது அநுராதபுரம் மாவட்டத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. இப்பிரிவு 614 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வெங்கலச்செட்டிக்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு வெங்கலச்செட்டிக்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு ("Vengalacheddikulam Divisional Secretariat") இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கின் ஒரு பகுதியிலும் அநுராதபுரம் மாவட்டமும், மேற்கில் எஞ்சிய பகுதியிலும், வடக்கிலும் மன்னார் மாவட்டமும், மேற்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு, வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு என்பனவும், எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், அநுராதபுரம் மாவட்டமும்; வடக்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும்; மேற்கில் வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேசச் செயலாளர் பிரிவு ஆகும்.. கங்கனா ரனாத் கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், அநுராதபுரம் மாவட்டமும், வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. மேற்கு, வடக்கு, கிழக்குத் திசைகளில் இப் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தினால், சூழப்பட்டுள்ளது. கிழக்கில் இதற்குத் திருகோணமலை மாவட்டத்துடனும் ஒரு சிறிதளவு எல்லைப்பகுதி உண்டு. இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கிழக்கு மாகாணம், இலங்கை இலங்கையின் கீழ் மாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 42 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பிரிவுகளும், திருகோணமலையில் 12 பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் 17 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம். கோறளைப் பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு கோறளைப்பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("வாகரை") இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், கோறளைப்பற்று மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் பொலநறுவை மாவட்டமும், வடக்கில் திருகோணமலை மாவட்டமும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும்,எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு கோறளைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு ("வாழைச்சேனை") இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் ---பிரதேசச் செயலாளர் பிரிவும்; வடக்கில் கோறளைப்பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், பொலநறுவை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும், எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. தமிழக ஆறுகளின் பட்டியல் இப்பக்கம் தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் மாவட்டம் வாரியாக பட்டியலிடுகிறது. அடைப்புக்குறிக்குள் ஆறுகளின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்ட் லைக் ஹெவன் (திரைப்படம்) ஜஸ்ட் லைக் ஹெவன் செப்டம்பர் 16, 2005 அன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட ஒரு நகைச்சுவைக்காதல் திரைப்படம் ஆகும். சான் ஃபிரான்ஸிஸ்கோவில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், மார்க் ரஃபலோ மற்றும் ஜோன் ஹெடர் ஆகியோர் நடித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் வசூலில் முதல் இடத்தை பிடித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை இது இஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். திரைப்படத்தின் துணைத்த்லைப்பு: "இட்ஸ் அ வண்டர்ஃபுல் ஆஃப்டர் லைஃப்" எலிசபெத் மாஸ்டர்சன்(ரீஸ் விதர்ஸ்பூன்) பணிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு இளம் மருத்துவர். இவர் கார் விபத்துக்கு உள்ளாகிறார். தன் மனைவியை இழந்த சோகத்தில் இருக்கும் டேவிட் அபாட்(மார்க் ரஃபலோ) மூன்று மாதங்கள் கழித்து எலிசபெத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அந்த குடியிருப்பில், எலிசபெத் டேவிட் முன்பு தோன்றுகிறார். எலிசபெத்துக்கு ஆவியை போன்ற குணாதிசயங்கள் காணப்படுகின்றன. இருவரும் சந்திக்கும் போது இருவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். எனினும் தன் நிலையை குறித்து அறியவில்லை. தன் வீட்டுக்குள் டேவிட் அத்துமீறி நுழைந்ததாக கருதுகிறார். பிறகே தன்னிலையை எலிசபத் உணருகிறார். எலிசபத் டேவிட்டை தவிர யார் கண்களிலும் படுவதில்லை, டேவிட் மட்டும் தான் எலிசபத்துடன் பேசவோ பார்க்கவோ முடிகிறது. எலிசபத்துக்கு தொடக்கத்தில் தன்னை குறித்த விவரங்களை முற்றிலும் மறந்திருந்தது. டேவிட்டும், இவளும் சேர்ந்து அவளை குறித்த விவரங்களைத்தேட சிறிது சிறிதாக நினைவு திரும்புகிறது. அப்போதுதான், தான் மருத்துவர் என்றும் விபத்தின் காரணமாக தான் கோமாவில் மூன்று மாத காலமாக இருப்பதையும் எலிசபெத் அறிகிறாள். எனினும் நீண்ட நாட்கள் கோமாவில் இருப்பதினால், எலிசபத்தின் உடலுக்கு உயிர் கொடுக்கும் கருவிகளின் செயல்பாட்டை நிறுத்த மருத்துவமனை முடிவு செய்கிறது. இதற்குள் எலிசபெத்தும் டேவிட்டும் காதல் வயப்படுகின்றனர். தன் மனைவி மறைந்த துக்கத்தில் இருந்து டேவிட் மீள்கிறான். கருவிகளின் செயல்பட்டை நிறுத்துவதை தடுக்கும் பொருட்டு, டேவிட்டும் அவனது நண்பனும் எலிசபெத்தின் உடலை மருத்துவமனையில் இருந்து கடத்த முனைகின்றனர். எனினும் அது நிறைவேறாமால் பாதியில் நிற்கும் வேளையில், எலிசபெத்தின் உடலுக்கு நினைவு திரும்புகிறது. ஆனால் எலிசபெத்துக்கு தான் ஆவி உருவில் இருந்த நினைவுகள் அனைத்தும் மறந்து விடுவதால், டேவிட்டை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இதனால் டேவிட் ஆழந்த மன வருத்தத்துக்கு உள்ளாகிறான். ஒரு நாள் எலிசபெத், டேவிட்டை அவள் விட்டு மொட்டைமாடியில் சந்திக்கிறாள். டேவிட் தன் வீட்டுச்சாவியை எலிசபெத் கேட்கிறாள். சாவியை எலிசபெத்துக்கு கொடுக்கும் போது, இருவரின் கைகள் ஒன்றை ஒன்று தொடும் போது, எலிசபெத்துக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. பிறகு இருவரும் முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர். குணால் குணால் (; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஹீத் லெட்ஜர் ஹீத் அன்ட்ரூ வில்லியம்ஸ் ("Heath Andrew williams", ஏப்ரல் 4, 1979 – ஜனவரி 22, 2008) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாலிவூட் நடிகர் ஆவார். ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில், 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கிய ஹீத், 1990களில் தனது 16வது வயது முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த ஹீத் லெட்ஜர், தனது 19வது வயதில் "டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ" என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். புரோக்பேக் மவுண்டன் ("Brokeback Mountain") என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஜனவரி 22, 2008 இல் நியூ யோர்க்கில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் உயிரிழந்தார். கடைசியாக த டார்க் நைட் என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு மிச்செல் வில்லியம்ஸ் என்ற நடிகையை ஹீத் லெட்ஜர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மட்டில்டா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 2007 இல் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். காரி காஸ்பரொவ் காரி காஸ்பரொவ் ("Гарри Кимович Каспаров", (பி: ஏப்ரல் 13, 1963, அசர்பைஜான்), ரஷ்யாவின் முதற்தர சதுரங்க ஆட்டவீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி "Professional Chess Association" என்ற அமைப்பை ஆரம்பித்தார். 200ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் (""Classical" World Chess Championship") பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் "டீப் புளூ" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும். 1815 ஆண்டு 1815 (MDCCCXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. 1837 1837 (MDCCCXXXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. 1810கள் 1810கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1810ஆம் ஆண்டு துவங்கி 1819-இல் முடிவடைந்தது. பெரியார் திராவிடர் கழகம் பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தமிழநாட்டு சமூக அரசியல் அமைப்பு ஆகும். இதன் தலைவர் கொளத்தூர் மணி ஆவார். இந்திய அரசை இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கோரி இந்த அமைப்பு புதுதில்லியில் நடாத்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த அமைப்பின் சமீக காலா செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாகும். 1925 முதல் 1938 வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாக தொகுத்து நூல் வடிவில் சூன் 11, 2010 அன்று பெரியார் திராவிட கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. டாடா நானோ டாடா நானோ என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட நான்கு பேர் பயணிக்கக் கூடிய நகரக் கார் (நான்கு சக்கர வாகனம்) ஆகும். இந்தக் கார் சிறந்த எரிபொருள் பயனுறுதி உடையது, நெடுஞ்சாலைகளிலும் , நகரப்பகுதிகளிலும் எய்தப்பெறுகிறது. இது முதன்முறையாக ஜனவரி 10, 2008 ல் இந்தியத் தலைநகர் புது டில்லி ப்ராகதி மைதானில் நடைபெற்ற ஒன்பதாம் வருடாந்திர வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. நானோ வணிக ரீதியிலான விற்பனை துவக்கமாக 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று துவங்கப்பட்டது, மேலும், ஏப்ரல் 9 லிருந்து 25 வரை முன்பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டதில் 200,000 மேற்பட்ட கார் முன்பதிவுகளை உண்டாக்கியது. கார் விற்பனை ஜூலை 2009 ல் துவங்கவுள்ளது. துவக்க விலையாக ரூபாய் 115,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஏறக்குறைய UK ஸ்டெர்லிங் 1,515அல்லது US$2,407 ற்கு சமமானது. இது மாருதி 800 றை விட விலைக் குறைவானது. மாருதி இதற்கு அடுத்தபடியான முக்கிய போட்டியாளராகவும், விலைக் குறைந்த இந்தியக் காராகவும் ரூபாய் 184,641 ($3,865 U.S.) ஆகவுள்ளது. டாடா உலகிலேயே மிகக் குறைந்த விலையுள்ள காரை உற்பத்திசெய்ய - துவக்க விலையாக ரூபாய் 100,000 (ஏறக்குறைய US$2,000 ஆக ) குறிவைத்தது. 2008 முற்பகுதியில் ந்யூஸ்வீக் செய்திப் பத்திரிகை நானோவை "21 நூற்றாண்டின் கார் இனங்களில் புதியவையாக"வும் " (கார்களில்) ஓர் முரண் தத்துவமாக சிறிய,லேசான,விலை குறைந்த" உள்ளடக்கமாகவும், அதிக செலவில்லாத தனிப்பட்ட போக்குவரத்து வாகனமாகவும்- உள்ளார்ந்த, "உலகளவிலான போக்குவரத்து இடையூறிணை" ஏற்படுத்தக் கூடிய அளவில் ஓர் பாகமாகவும் அடையாளம் கண்டது. வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழ் சிறிய கார்களை நோக்கிய, நானோவை உள்ளடக்கிய உலகளவிலான போக்கினை உறுதி செய்தது. "நானோ" என்பதன் பொருள் குஜராத்தி மொழியில் "சிறிய" என்பதாகும். டாடா குழுமத்தின் நிறுவனர்களின் மொழியாகும் குஜராத்தி. "நானோ" ஒரு பில்லியனைக் குறிக்கும் SI முன்னைடையிலிருந்து வந்தது ஆங்கில வழக்கு மொழியில் அடிக்கடி "சிறிய" என்பதைக் குறிக்க SI பயன்படுகிறது. நானோவின் அறிமுகம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததற்கு அதன் குறைந்த விலை இலக்கே காரணம். தி ஃபினான்ஷியல் டைம்ஸ் எழுதியது: "இந்தியா ஓர் நவீன தேசமாக மாற விரும்பச் செய்ய ஒரு குறியீடு உண்டென்றால், அது சிறிய கார் அதுவும் சிறிய விலைப் பட்டியுடன் கூடிய, நானோவாகவே நிச்சயம் இருக்கும்.உள்நாட்டு பொறியியல் வளர்ப்பிற்கு ஓர் வெற்றியாக, $2,200 (யூரோ 1,490, ஸ்டெர்லிங் 1,186) நானோ இலட்சக்கணக்கான இந்தியர்களின் கனவான நிச்சயமற்ற நகர்புற சுபிட்சத்தை சுருக்குகிறது. இந்தக் கார் இந்திய பொருளாதாரத்தை மேலுயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது, தொழில் முனைவோருக்கான வாய்ப்புக்களை இந்தியா முழுதும் உருவாக்குவதோடு, இந்திய கார் சந்தையை 65% மாக விரிவாக்குகிறது. இக்கார் டாடா குழுமத்தலைவரும், டாடா மோட்டார்ஸ் தலைவருமான ரத்தன் டாடாவினால் தொலை நோக்கு பார்வையுடன் உண்டாக்கப்பட்டு, அவரால் சுற்றுச்சூழல் நட்புடனான "மக்கள் கார்" என விவரிக்கப்பட்டது. நானோ அதன் குறைந்த விலைக்காகவும் , சூழல் நட்பு முயற்சியான காற்றடைப்பு எரிபொருள் வகை மற்றும் மின்சார கார் வகைக்காகவும் (மின் நானோ), பெரிதும் பல தரப்பிலிருந்தும், ஊடகங்களிலும் பாராட்டப்பட்டது. டாடா குழுமம் பேரளவில் நானோவை உற்பத்தி செய்து, குறிப்பாக மின் வகையை, மேலும்,இந்தியாவில் விற்பது மட்டுமின்றி, உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரை விமர்சித்தவர்கள் இந்தியாவில் இதன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தினர் (ஆண்டுத்தோறும் 90,000 பேர் சாலை விபத்துக்களில் இறப்பதால்)மேலும் இது ஏற்படுத்தப் போகும் சூழல் சீர்கேட்டையும் விமர்சித்தனர் (நோபல் அமைதிப் பரிசு வென்ற ராஜேந்திர பச்சௌரியின் விமர்சனம் உட்பட). இருப்பினும், டாடா மோட்டார்ஸ் கரிம எரிபொருள் வகைகளுடன் சூழல் நட்பு வகைகளுடன் கட்டாயமாக வெளியிட உறுதியளித்தனர். நானோவானது முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் அமைந்த புதிய தொழிற்சாலையில் உற்பத்திச் செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் அதிகரித்து வந்த வன்முறை டாடாக்களை அக்டோபர் 2008ல் அங்கிருந்து வெளியேறச் செய்தது. (கீழேயுள்ள சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம் பகுதியைப் பார்க்கவும்.)தற்போது, டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இயங்கி வரும் பந்த்நகர் (உத்தரகண்ட்) தொழிற்சாலையில் நானோவை உற்பத்தி செய்து வருகிறது மேலும் தாய்த் தொழிற்சாலை சனந்த் குஜராத்தில் அமையவுள்ளது. நிறுவனம் துவக்கத்தில் தற்போதைய வணிகர் வலைத்தொடர்பையே சார்ந்திருக்கும். புதிய நானோ தொழிற்சாலை சிங்கூரின் 300,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்தி செய்யும் வசதியுடன் ஒப்பிடுகையில் 500,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்திச் செய்யும். குஜராத் மாநிலமானது மேற்கு வங்க அரசு அளித்த அனைத்து ஊக்கச் சலுகைகளையும் ஒத்தவகையில் அளிக்க ஒப்புக்கொண்டது. டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா 2003ல் உலகின் மிகக் குறைந்த கார் உற்பத்தியை மேம்படுத்த துவங்கியதற்கு எழுச்சியூட்டும்படியாக அமைந்தது இந்திய குடும்பங்கள் வைத்திருந்த நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை விட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமிருந்ததே. நானோவின் வளர்ச்சியானது குறைந்த செலவிலான Ace நான்கு சக்கர டிரக் வாகனத்தின் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தின் வெற்றியின் மூலம் உறுதி நிலைப்பட்டது. இக்கார் வெறும் நான்கு சக்கர ஆட்டோ ரிக்ஷா என ஊகிக்கப்பட்டதற்கு எதிராக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இவ்வாகனமானது "ஒரு முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட கார்" எனக் கட்டுரை வெளியிட்டது. தலைவர் கூறியதாகச் சொல்லப்பட்டது,"இக்கார் நெகிழித் திரைகளுடனோ அல்லது கூரையுடனோ இருப்பதல்ல- இது ஒரு உண்மையான கார்." அதன் வடிவமைப்பு இலக்குகளைச் சாதிக்க, டாடா உற்பத்தி முறைகளை செப்பனிட்டார், கண்டுபிடிப்புக்களை வலியுறுத்தினார், மேலும் புதிய வடிவமைப்பு அணுகுமுறைகளை வழங்குநர்களிடமிருந்து எதிர்பார்த்தார். இக்கார் இத்தாலியின் Institute of Development in Automotive Engineering னால் வடிவமைக்கப்பட்டது- ரத்தன் டாடா சில மாறுதல்களுடன் வேண்டியது,உதாரணமாக கண்ணாடி துடைப்பான்களில் இரண்டில் ஒன்றை நீக்கக் கோரியது உட்பட. நானோவின் பல பாகங்கள் ஜெர்மனியில் பாஷ்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை, இவை ஃபூயல் இஞ்ஜெக்சன்,ப்ரேக் சிஸ்டம்,வால்யூ மோட்டாரானிக் ECU, ABS மற்றும் இதர தொழில்நுட்பங்கள் போல. நானோ 21% கூடுதல் உட்பகுதியைக் கொண்டது (தலைக்கு மேலிருக்கும் அறையென்ற போதிலும் அதன் உயர்ந்த நிற்றல் நிலையில்) மேலும் 8% சிறிய வெளிப்புறப் பகுதியை அதன் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ஐக் காட்டிலும் பெற்றுள்ளது. காரை டாடா மூன்று பதிப்புகளில் கொடுத்துள்ளது: அடிப்படை Tata Nano; Cx; மற்றும் Lx. Cx மற்றும் Lx பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் குளிர் பதன வசதி,தானே இயங்கும் சாளரங்கள் மற்றும் மையப் பூட்டு வசதி உள்ளன. டாடா துவக்கத்தில் 250,000 எண்ணிக்கையிலான கார்களை வருடந்தோறும் உற்பத்தி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாடா துவக்கத்தில் வாகனத்தை "உலகிலேயே குறைந்த விலையிலான உற்பத்திக் கார்" என குறிக்கோள் கொண்டார்- துவக்க விலையாக ரூபாய் 100,000 அல்லது US $ 2000 (அன்றைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தை பயன்படுத்தி)மாக ) 6 ஆண்டுகளுக்கு முன்பு, பண்ட விலைகள் அப்போது உயர்ந்து வந்தாலும் கூட நோக்கமாகக் கொண்டார். , கார் மேம்படுத்தப்பட்டு வந்த போது பண்ட விலைகள் 13% லிருந்து 23% மாக உயர்ந்தது, டாடா தன் முன்னிருந்த மாற்றுக்களை சந்தித்தார்: அதன் துவக்கத்தில் நானோ மூன்று சீர்நிலை மட்டங்களில் கிடைத்தது. அடிப்படை மாதிரி ஓட்டுனர் இருக்கையைத் தவிர குறிப்பிட்ட அளவிலான இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும், இது சரிப்படுத்திக்கொள்ளும்படியானது , டீலக்ஸ் மற்றும் சொகுசு மாதிரிகள் குளிர்பதன வசதியுடனும் உடல் நிறத்திலான முட்டுத்தாங்கியுடனும் இருக்கும். டாடா மோட்டார்ஸ்சின் கூற்றுப்படி, நானோ கார் 624 cc பின்புற இயந்திரமும், பின்புற சக்கர இழுப்பானுடனும், எரிபொருள் சிக்கனம் 4.55 லி/100 கிமி (22கிமி/லி,51.7 mpg (US),62 mpg (UK) நகரத்திலும், மேலும், 3.85லி/100 கிமி (26கிமி/லி,61.1 mpg (US), 73.3 mpg (UK) நெடுஞ்சாலைகளிலும் தரவல்லது. முதல் முறையாக இரு சிலிண்டர் தடையற்ற பெட்ரோல் இயந்திரம் காரில் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டுடன் பயன்படுத்தப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நானோ வடிவமைப்பின் போது ஏற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு 34 காப்புரிமை பதிவுகளுக்கு விண்ணப்பித்ததாக கூறியுள்ளவற்றில், பாதிக்கு மேற்பட்டவை பவர்டிரெய்ன் பாகத்திற்காக மேற்கொண்டதாகும். இத்திட்டத்தின் இயக்குநர் கிரீஷ் வாக் நானோவின் வடிவமைப்புக்கு பின்னணியில் செயல்பட்ட மூளைகளில் முக்கியமானவராக நன்மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளார். டாடாவின் நானோ காப்புரிமை விண்ணப்பங்களின் மீதான நிலுவையிலிருந்தவற்றைப் பற்றி அதிகமான அளவில் பேசப்பட்டது. இருப்பினும் புது டில்லி வாகன கண்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்தப்போது ரத்தன் டாடா இந்த காப்புரிமைகள் புரட்சிகரமானவையோ அல்லது புவியை அதிரவைக்கும் தொழில்நுட்பமோ கிடையாது எனச் சுட்டினார். அவர் கூறினார், இவற்றில் பெரும்பாலானவை கார் தொடர்புடைய இம்மைச் சார்ந்த பாகங்களான இரு-சிலிண்டரின் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டு மற்றும் எவ்வாறு கியர்கள் வண்டி செலுத்தப்படும்போது குறைக்கப்படுகின்றன என்பது பற்றியது. இருந்தாலும் இந்தக் கார் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது, இது ராய்டர்ஸ் உட்பட. அதற்கான காரணமாக "இதுவரை அணுகப்படாத சந்தையின் பகுதியை குறிவைத்து தற்போதுள்ள தொழில்நுட்பங்களைக் சுண்டி இழுத்துக்கொண்டு செல்லும் முறையினால்," இன்னும் இதே ராய்டர்ஸ்ஸால் நானோ அந்தளவிற்கு "அதன் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமானதல்ல", விலைக் குறைவானது மட்டுமே எனக் கூறப்பட்டது. மேலும், இன்னும் வெளியிடப்படாத காரின் எதிபார்க்கப்படும் தொழில்நுட்பங்களில் புரட்சிகரமான அழுத்தப்பட்ட காற்று எரிபொருள் அமைப்பும்,சூழல் நட்புடனான மின்சார பதிப்பும்,உள்ளடக்கப்படடுள்ளன,இவை டாடாக்கள் ஏற்கனவே செய்துவரும் தொழில்நுட்பப் பணிகள் கூறப்பட்டிருந்தாலும், இதுவரை அதிகாரபூர்வமாக இந்தத் தொழில்நுட்பங்களை புதிய காரில் உள்ளடக்கும் தேதி விபரம் வெளியிடப்படவில்லை. டாடாக்கள், நானோ பாரத் ஸ்டேஜ்-III (ஈரோ-III போன்ற)சூழல் தரக் கட்டுப்பாடுகளையும் கூடவே ஈரோ-IV மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கும் உட்பட்டது என்கின்றனர். ரத்தன் டாடாவும் கூறினார்," இந்தக் கார் முன்புறமான மோதல்களையும், பக்கவாட்டு மோதல்களின் பாதிப்பினையும் தாங்கும் தேர்வில் தேறியுள்ளது." டாடா நானோ தேவைப்படும் 'உறுதியளிப்பு' சோதனைகளை புனேயிலுள்ள Automotive Research Association of India (ARAI)மூலம் தேர்ந்துள்ளது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அரசால் ஏற்படுத்தப்பட்ட சாலையில் கார் செல்லத் தேவையான அனைத்து குறிப்பிடப்பட்ட, மாசு அல்லது சத்தம் மற்றும் அதிர்வு உட்பட எல்லா தனிப்பட குறித்துக் காட்டப்படும் அம்சங்களையும் சந்தித்து, கார் சாலையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ளது. டாடா நானோ ARAI யினால் செய்யப்பட்ட 'உறுதியளிப்பு' சோதனையில்3.6 கிமி/லி சென்று சமாளித்தது. இது டாடா நேனோவை எரிபொருள் சிக்கனம் மிகுந்த காராக ஆக்குகின்றது. நானோ கார் தான் இந்தியாவிலேயே ARAI யில் செய்யப்பட்ட சோதனைகளின் உண்மையான எரிபொருள் மைல்கல் தகவல்களை தனது கண்ணாடிகளில் பொருத்தியுள்ள முதல் காராகும். ARAI யை பொருத்தவரை நானோ 2010 போது இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஈரோ IV மாசு தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது, இதுவரை ஈரோ III தர நிலையிலேயே உறுதியளிக்கப்பட்டுள்ளது. பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் உட்பகுதியை அதிகரிக்க உதவுகிறது, இது மூல வடிவமமும் , மற்றொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பான பியட் 500 "மக்கள் கார்" போன்றது. நானோவைப் போன்ற பாணியிலான கருத்துக் கொண்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட வடிவமைப்புடன் கூடிய UK ரோவர் குழுமத்தால் ௧௯௯௦ 1990 களில் முன்பரிந்துரைக்கப்பட்ட மூல வடிவமான மினியை பின் தொடர்ந்த வாகனமானது தயாரிப்பிற்கு கொண்டு செல்லப்படவில்லை. BMW வினால் இத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு புதியமினி கார் தொழில்நுட்ப ரீதியாக மரபு சார்ந்த பெரிய காராகவே இருந்தது. தனித்திருந்த தற்போது செயல்படாத MG ரோவர் குழுமம் பின்னர் தங்களது ரோவர் சிட்டி ரோவர் காருக்கு டாடா இண்டிகாவை அடிப்படையாக வைத்துக் கொண்டது. காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை ஓர் மாற்றாகத் தர டாடா கருதியதாக கூறப்பட்டது. வழக்கமான பெட்ரொல் மற்றும் மரபு சார்ந்த தவிர கீழ்க்காணும் வேறுபட்ட வகைகளும் வெளிவருமென எதிர்பார்க்கபடுகிறது. ஒரு இணையதளம் டாடா நானோ 690 cc டீசல் இயந்திரத்துடன் 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளிவருமெனத் தெரிவித்தது. டாடா மோட்டார்ஸ் இதுவரை இதனை உறுதி செய்யவில்லையென்பது டீசல் பதிப்பு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சைகைப்படுத்தியது. "இதுவரை டீசல் மாறுபட்ட மாதிரி கொடுக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் பதிப்பாகவே அளிக்கப்படவுள்ளது." டாடா மோட்டார்ஸ் பிரெஞ்சு நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை எரிபொருளாக பயன்படுத்த வேலை செய்கிறது. இந்த காரணத்திற்காக நிறுவனம் "Moteur Development International (MDI)" யோடு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தியுள்ளது. டாடாக்கள் மின்சார பதிப்பொன்றையும் தயாரித்து வருவதாகவும், அதற்கு மின்-நானோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் (சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டதாகவோ அலலது பக்கவாட்டிலோ) இது "உலகின் விலை குறைவான மின்சார கார்" ஆக மாறுமென கருதவும் சூழல் நட்பு மிகுந்திருப்பதால் பல ஆர்வலர்கள் மற்றும் ஊடக ஆதரவும் பெற்றிருக்கிறது. மரபுச் சார்ந்த எரிபொருள் பதிப்புக்கள் போன்று இதுவும் விலை குறைவானதாக இருக்குமென கூறப்படுகிறது. டாடா நானோவை ஏற்றுமதிச் சந்தை கட்டுப்பாடுகளுடன் கூடிய வகையில் இருக்கவும், அது போன்றதொரு காரை உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யவும், குறிப்பாக UK மற்றும் மீதமுள்ள ஐரோப்பா கண்டம், US மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செய்ய திட்டமிட்டுள்ளது. ஈகனாமிக் டைம்ஸ் கூறியது "மின்சார நானோ" இன்னும் கூட நல்லவிதமான பொருளாதார, சுத்தமான மற்றும் சூழல் எண்ணங்களுடன் தனிப்பட்ட வாகனமாக உலகம் முழுதும் இருக்கும்."ஆட்டோ பில்ட்,என்னும் ஹாம்பர்க் நகர பத்திரிகையின்படி, மின்-நானோ நார்வே நாட்டு மின் கார் நிபுணர்களான Miljøbil Grenland AS ன் ஒத்துழைப்புடன் கட்டப்படுகின்றது. லெஃப்ட்லானென்நியூஸ் கூறியது " கலப்பு எரிபொருள் பதிப்பும் (டாடா நானோவின்)வரலாம், எனினும் மின்சார மோட்டாருக்கு இணையாக எந்த வகையான எரிபொருளைக் கொண்ட பெட்ரோல் அல்லது டீசல் பதிப்பை வெளியிடுவது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. டாடா மோட்டார்ஸ் 2009 ஜெனிவா வாகன கண்காட்சியின்போது நானோ ஈரோப்பா என்ற நானோ சிறு காரினை வெளியிட்டது. ஐரோப்பா மற்றும் UK செல்லும் கார் சாதாரண நானோவைவிட பல மேம்பாடுகளைக் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா அதிகரிக்கப்பட்ட சக்கர அடித்தளமும்,புதிய 3சிலிண்டர் இயந்திரம் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற மேம்பாட்டினையும் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா விலை கூடுதலாகவும், கனமாகவும், குறைந்த எரிபொருள் சிக்கனத்துடனும் சாதாரண நானோவைவிட US $6000 விலை அளவுடனிருக்கும். ஒரு அறிக்கையின்படி இந்தியா, மற்ற நாடுகளைப் போல குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் போல நானோவைப் பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் உண்டு. மேலும் குறிப்பாக நானோ மின்சார பதிப்பிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், அதிகாரபூர்வமாக ஆவணங்களில் இருப்பது போன்று "உலகின் விலைக்குறைவான மின்சாரக் கார்" நிகழக்கூடியதாக ஆக்கியுள்ளது. கார் தானாகவே இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு இந்திய கார் சந்தையையும் 65% விரிவுபடுத்தும் என தரப்படுத்துதல் நிறுவனமான CRISIL கூறியுள்ளது. எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது: சில செய்தி தோற்றுவாய்கள் நானோவை ஹென்றி ஃபோர்ட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன் செய்தமாதிரி டி காருடன் ஒப்பிட்டனர்: லைவ்மிண்ட் கூறியது: டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் நானோவை மாதிரி டி யுடன் ஒப்பிட்டது: நானோ இன்னும் தயாரிப்பிற்கு வரவில்லையென்றாலும், கின்னஸ் உலக் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டது. பலத்த ஊகங்களுக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸ் 2006 ஆம் ஆண்டு மே 19 அன்று மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூரில் டாடா நானோவை உற்பத்திச் செய்யப்போவதாக அறிவித்தது. இருப்பினும், ஒரு வாரத்திற்குள் ஒரு சில விவசாயிகள் டாடா நிறுவனம் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களைத் துவங்கினர். இந்த வழக்கு மமதா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் அவர்களால் கைக்கொள்ளப்பட்டது. சூழ்நிலை டாடாக்கள் வெளியேறுவதாக மிரட்டும் அளவிற்கு சென்றது,மேலும் தானாகவே நிலம் தர முன்வந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை பட்டுவாடாவும் எதிர்ப்பாளர்களால் தடைப்பட்டது. இது பின்னர் திரிணமுல் காங்கிரஸ்சால் அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்ட மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் தொடர்ந்தது. மாநில அரசு அரசியல் கட்சிகள் சிங்கூரில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த தடை விதித்தது, மேலும் பெரிய காவற்படையை அங்கே நிலைநிறுத்தியது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் காவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பரவலான வன்முறை ஏற்பட்டது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மமதா பானர்ஜி உண்ணாநிலைப் போராட்டதில் இறங்கினார். அதன் பின்னர், ஓர் 48 மணி நேர வேலை நிறுத்தம் அவரால் அறிவிக்கப்பட்டது. இது தபசி என்னும் விவசாய நில பாதுகாப்புக் குழு பிரச்சாரகரின் எரிந்த உடற்பகுதி நானோ சிங்கூர்ஆலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டது. இரு இடது கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பின்னர் கொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கி தண்டிக்கப்பட்டனர். அவரது 24 நாள் போராட்டத்தின்போது, பானர்ஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இறுதியாக அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது வேண்டுகோள்களுக்குப் பிறகு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். நிலத்தின் மீதான எதிர்ப்புகள் 2007 ளிலும் தொடர்ந்த போது, ரத்தன் டாடா இச்சர்ச்சையில் வர்த்தகப் போட்டியாளர்களின் பங்கிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். பிப்ரவரி 2007 ல் நில கையக்கப்படுத்துதல் துவக்கத்தில் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் 2008 ல் கொல்கொத்தா உயர் நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அரசியல் அமைதியின்மையும் மழையும் ஆலை நிறுவுதலை தடைச் செய்ததால் டாடா மோட்டார்ஸ் நானோ துவக்கத்தை செப்டெம்பர் 2008 வரை தாமதித்தது. வன்முறை 2008 முழுதும் தொடர்ந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் சிங்கூரில் தங்கள் பணியை இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அக்டோபர் 2 2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். அக்டோபர் 7 2008 ல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டாடா மோட்டார்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மூலம் நானோ ஆலைத் தொடங்க குஜராத்தில்அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் எனும் பகுதியில் நிலம் அளிக்க கையொப்பமிட்டார். "தி டைம்ஸ் " இதழ் கூறுகிறது: டாடா மோட்டார்ஸ் நானோவை இந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் மின்சார பதிப்பில் ஒரு காற்றுப்பை அமைப்பு உட்பட நானோ பதிப்புகளை அளிக்கும்.ஜப்பான் மற்றும் கொரியா தயாரிப்புகளான முழு உலோக உடற் பகுதியை நானோ பாதுகாப்பு அம்சங்களான கிரம்புள் சோன்ஸ், உட்புகா எதிர்ப்பு கதவுகள், இருக்கை பட்டிகள், வலுவான இருக்கைகள் மற்றும் கைதாங்கிகள், உடலுடன் இணைக்கப்பட்ட பின்புறக் கண்ணாடி போன்றவற்றுடன் கூடியது. சக்கரங்களுக்கு குழாய்கள் கிடையாது. நானோ தற்போது சூழல் நட்புக் கொண்ட மிதி வண்டிகளையும் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தும் மக்கள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டும் வடிவமைக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்படும்போது சூழலியலாளர்கள் அதன் மிகக் குறைந்த விலை பேரளவு வாகனமயமாக்கல் இந்தியா போன்ற நாடுகளில் மாசினை அதிகரிப்பதோடு எரிபொருள் தேவையையும் அதிகரிக்கும் என கவலைத் தெரிவிக்கிறார்கள். சூழல் மீது கவனம் கொண்ட ஜெர்மன் செய்தித்தாளான "டெய் டாகெஸ்சீதுங் " டாடா நானோ குறைந்த அளவில் வோல்ஸ்வேகன் போன்ற வாகனங்களோடு ஒப்பிடும்போது மாசினை வெளியிடுவதால் இது போன்றகவலைகள் "பொருத்தமற்றவை" என உணர்த்துகிறது. மேலும் தொழில்மயமான நாடுகள் தங்களது மாசு அளவினை குறைக்கவும் கார் பயன்பாட்டினை குறைக்கவும் காண விழைய வேண்டிய போது வளரும் நாடுகள் அவர்களது வாகன போக்குவரத்து உரிமைகளை மறுக்கப்படக் கூடாது என்கிறது. "டெய் வெல்ட்த் " காரானது சூழல் பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்வதோடு இந்தியாவில் குறைந்த மாசுபாட்டையே ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. மும்பை போன்ற நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் ரத்தன் டாடா எத்தகைய வாகனத்தையும் வைத்திருக்காத தனிநபர்களுக்கு மட்டுமே நானோவை வழங்கும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். நானோ மேற்கொண்டு அதிகச்சுமைக்கொண்ட மற்றும் தேய்ந்த்துப்போன இரு- விசை மாசு ஏற்படுத்தும் இரு மற்றும் மூன்றுச் சக்கர வாகனங்களின் இடத்தை இட்டு நிரப்பும். புது டில்லியிலுள்ள Centre for Science and Environment யின் இணை இயக்குநர் அனுமிதா ராய்சொளத்திரியின் கூற்றுப்படி தற்போதைய கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு வரைச்சட்டங்களின்படி "விலைக்குறைந்த கார்கள் அழிவுண்டாக்குபவை." நானோ பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை கடுமையாகப் பாதிக்கும், ஏனெனில் பல இந்தியர்கள் நானோவின் வெளியீட்டிற்காக காத்திருந்து, நானோவின் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ( மீண்டும் அடையாளம் கண்ட சுசூகி ஆல்டோ) ன் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கத் தயங்குகின்றனர். நானோவின் வெளியீட்டிற்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட கார்களினுடையதும்,மாருதி 800 கார்களினுடையதும் முறையே 30% மற்றும் 20% விற்பனை குறைந்துவிட்டது. ஒரு வாகன இதழியலாளர் தொகுத்துக் கூறுகிறார்: " மக்கள் தங்களைத் தானேயும்-எங்களையும் கேட்கிறார்கள்-ஏன் அவர்கள் 250,000 ரூபாய்களை மாருதி ஆல்டோவிற்கு கொடுக்க வேண்டும், எப்போது அவர்கள் காத்திருந்து புதிய நானோவை குறைந்த விலைக்கு அதுவும் உண்மையில் அளவில் பெரியதானதை ஒரு சில மாதங்களில் பெற முடியும்போது." போட்டிக் கார் தயாரிப்பாளர்களான பஜாஜ் ஆட்டோ.பியட்,ஜெனரல் மோட்டார்,ஃபோர்ட் மோட்டார்,ஹுயூண்டாய் மற்றும் டயோட்டா ஆகிய அனைவரும் வளரும் சந்தைகளில் நடுத்தரு நுகர்வோருக்கு வாங்கக கூடிய விலையில் சிறிய காரினைத் தயாரிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். மககள் அடிக்கடி மாறுபடுகிற எரிபொருள் விலைப் பற்றி கவனம் கொண்டிருப்பதால் சிறிய கார்களின் தேவை பெரிய அளவிலுள்ளது. ஹோண்டா மற்றும் டயோட்டா ஆகிய நிறுவனங்கள் தூய்மையான பெட்ரோல்-மின்சார கலப்பு கார்களின் தயாரிப்பில் முன்னணியிலுள்ளனர், மேலும் சில சூழலியலாளர்கள் இது போன்ற தொழில்நுட்பங்களின் விலையைக் குறைப்பதில் முயற்சிகள் கவனம் கொள்ள வேண்டுமென வாதிடுகின்றனர். அதிக செலவில்லாத மற்றும் சூழல் நட்புக் கொண்ட மின்சார கார்களான தாரா டைனி, ஒரேவா சூப்பர் ( இரண்டும் டாடா நானோவைவிட விலை குறைவானவை எனக் கூறப்படுகிறது)மற்றும் REVA குறிப்பிடத்தக்க ஆபத்தை நானோவிற்கு தரக் கூடியவை. டாடா நானோவை எதிர்க்கொள்ள மாருதி சுசூகி குறைந்த விலைக் கொண்ட ஆல்டோவை அறிமுகப்படுத்தப் போவதாக வதந்திகளும் உள்ளன. புட்டித் தண்ணீர் புட்டியில் நிறைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரே புட்டித் தண்ணீர் "(bottled water)" ஆகும். தண்ணீர் அடிப்படை மனித தேவை, உரிமை எனினும் சமீப காலமாக தண்ணீர் வணிக மயமாக்கப்பட்டு புட்டியில் அடைத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புட்டித் தண்ணீர் பொதுவாக கிடைக்கும் தண்ணீரை விட சுத்தமானது என பொது மக்கள் நம்புவதால் இதன் விற்பனை சமீப காலமாக விரிவடைந்து வருகின்றது. பல இடங்களில் பொதுவாக கிடைக்கும் தண்ணீரே புட்டியில் இட்டு விற்கப்படுகின்றது. தண்ணீர் இடப்படும் புட்டிகள் குப்பைகளாக சேருகின்றன. நகர்ப்புற வடிவமைப்பு நகர்ப்புற வடிவமைப்பு (Urban design) என்பது, நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு, தோற்றம், செயற்பாடு என்பவற்றைத் தழுவிய ஒரு வடிவமைப்புத் துறையாகும். குறிப்பாக இது, நகப்புறப் பொது இடங்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்துகின்றது. முன்னர், இத்துறை, நகர்ப்புறத் திட்டமிடல், நிலத்தோற்றக்கலை, கட்டிடக்கலை ஆகிய துறைகளின் துணைத்துறையாகக் கருதப்பட்டது. ஆனால், நகர்ப்புற வடிவமைப்பானது, முற்கூறிய மூன்று துறைகளின் செயற்பாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றுவருவதால், இத் துறை, மேற்சொன்ன மூன்று துறைகளும் சந்திக்கும் இடத்தில் செயற்படுகின்றது என்று கூறலாம். அத்துடன் இவ்வடிவமைப்புத் துறையில், நகர்ப்புறப் பொருளியல், அரசியற் பொருளியல், சமூகக் கோட்பாடு ஆகியவை பற்றிய விளக்கமும் தேவைப்படுகின்றது. விண்வெளிக் குடியிருப்பு விண்வெளிக் குடியிருப்பு என்பது, புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்நிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இது அறிவியற் புனைகதைகளில் அதிகமாக இடம் பெறுவதுடன், பல நாடுகளின் விண்வெளித் திட்டங்களின் நீண்டகால இலக்காகவும் இருந்து வருகின்றது. தொழில் நுட்ப முன்னேற்றத்தால் விண்வெளி செல்வதும், வெளிக் கிரகங்களில் அல்லது பறக்கும் கலங்களில் வாழ்வதும் சாத்தியம் ஆகி வருகின்றது. விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும், வேற்றுக் கிரகங்களில் கிடைக்க கூடிய கனிம வளங்களைப் பெறுவதற்காகவும் நீண்ட காலங்கள் மனிதர் விண்வெளியில் வாழ வேண்டி வரும். மேலும், எதிர்காலத்தில் உலகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதற்றதாக மாறினால் விண்வெளியை அல்லது வேற்றுக் கிரங்களை மனிதர் நாட வேண்டி வரும். வேற்றுக் கிரகங்களில் அல்லது விண்வெளிக் கலங்களில் மனித வாழ்வுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்படும் சூழமைப்பை விண்வெளிக் குடியிருப்புக்கள் எனலாம். நற்போக்கு இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கிய போக்குகளில் நற்போக்கு இலக்கியமும் ஒன்று. 1960 களில் ச. பொன்னுத்துரை முதன் நின்று முன்னிறுத்திய போக்கு நற்போக்கு ஆகும். இதை முற்போக்கு இலக்கியம், மரபுவழி இலக்கியம், மார்க்சிய இலக்கியம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். அட்லாண்டிசு விண்ணோடம் அட்லாண்டிசு விண்ணோடம் ("Space Shuttle Atlantis", அட்லாண்டிஸ் விண்ணோடம்), என்பது நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று மீள்விண்கலங்களில் (Space Shuttle) ஒன்றாகும். (மற்றைய இரண்டும் "டிஸ்கவரி", "எண்டெவர்" ஆகியவை ஆகும்.) "அட்லாண்டிஸ்" இதுவரையில் மேற்கொண்ட 28 பயணங்களில்306 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 4,848 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் தூரம் பயணித்தது (செப்டம்பர் 2006 தரவுகள் படி). தில்லைநகர் கிராம அலுவலர் பிரிவு 244 N இலக்கம் உடைய தில்லைநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 684 குடும்பத்தைச் சேர்ந்த 3064 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு 244 I இலக்கம் உடைய சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 573 குடும்பத்தைச் சேர்ந்த 2594 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். அரசடி கிராம அலுவலர் பிரிவு 244 J இலக்கம் உடைய அரசடி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 756 குடும்பத்தைச் சேர்ந்த 3332 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பட்டணத்தெரு கிராம அலுவலர் பிரிவு 244 K இலக்கம் உடைய பட்டனத்தெரு கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 670 குடும்பத்தைச் சேர்ந்த 2300 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பெருந்தெரு கிராம அலுவலர் பிரிவு 244 L இலக்கம் உடைய பெருந்தெரு கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 546 குடும்பத்தைச் சேர்ந்த 2983 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். அபயபுர கிராம அலுவலர் பிரிவு 244 N இலக்கம் உடைய அபயபுர கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 923 குடும்பத்தைச் சேர்ந்த 3993 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். மட்டிக்களி கிராம அலுவலர் பிரிவு 244 M இலக்கம் உடைய மட்டிக்களி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 469 குடும்பத்தைச் சேர்ந்த 2121 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஜின்னாநகர் கிராம அலுவலர் பிரிவு 244 O இலக்கம் உடைய ஜின்னாநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 537 குடும்பத்தைச் சேர்ந்த 2639 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். உவர்மலை கிராம அலுவலர் பிரிவு 244 P இலக்கம் உடைய உவர்மலை கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1578 குடும்பத்தைச் சேர்ந்த 6786 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சிவபுரி கிராம அலுவலர் பிரிவு 244 Q இலக்கம் உடைய சிவபுரி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1090 குடும்பத்தைச் சேர்ந்த 5230 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். லிங்கநகர் கிராம அலுவலர் பிரிவு 244 R இலக்கம் உடைய லிங்கநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 805 குடும்பத்தைச் சேர்ந்த 3282 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். உப்புவெளி கிராம அலுவலர் பிரிவு 243 இலக்கம் உடைய உப்புவெளி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 336 குடும்பத்தைச் சேர்ந்த 1332 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். முருகாபுரி கிராம அலுவலர் பிரிவு 243 G இலக்கம் உடைய முருகாபுரி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 677 குடும்பத்தைச் சேர்ந்த 2763 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டான்குளம் கிராம அலுவலர் பிரிவு 243 A இலக்கம் உடைய ஆண்டான்குளம் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 608 குடும்பத்தைச் சேர்ந்த 2547 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சிங்கபுர கிராம அலுவலர் பிரிவு 243 H இலக்கம் உடைய சிங்கபுர கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 429 குடும்பத்தைச் சேர்ந்த 2095 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கன்னியா கிராம அலுவலர் பிரிவு 243 B இலக்கம் உடைய கன்னியா கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0 குடும்பத்தைச் சேர்ந்த 0 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கன்னியாவிலேயே புகழ் பெற்ற ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பீலியடி கிராம அலுவலர் பிரிவு 243 J இலக்கம் உடைய பீலியடி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0 குடும்பத்தைச் சேர்ந்த 0 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். மாங்காயூத்து கிராம அலுவலர் பிரிவு 243 K இலக்கம் உடைய மாங்காயூத்து கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0 குடும்பத்தைச் சேர்ந்த 0 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். அன்புவெளிபுரம் கிராம அலுவலர் பிரிவு 243 C இலக்கம் உடைய அன்புவெளிபுரம் கிராம அலுவலர் பிரிவு (en:Anpuvelipuram) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1073 குடும்பத்தைச் சேர்ந்த 4431 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். புளியங்குளம், திருகோணமலை 243 L இலக்கம் உடைய புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1385 குடும்பத்தைச் சேர்ந்த 5943 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். செல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு 243 M இலக்கம் உடைய செல்வநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 472 குடும்பத்தைச் சேர்ந்த 2369 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு 243 N இலக்கம் உடைய வரோதயநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 420 குடும்பத்தைச் சேர்ந்த 2200 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பாலயூத்து கிராம அலுவலர் பிரிவு 243 D இலக்கம் உடைய பாலயூத்து கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 528 குடும்பத்தைச் சேர்ந்த 2649 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கோவிலடி கிராம அலுவலர் பிரிவு 243P இலக்கம் உடைய கோவிலடி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 410 குடும்பத்தைச் சேர்ந்த 1709 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பூம்புகார் கிராம அலுவலர் பிரிவு "தமிழ்நாட்டிலுள்ள பூம்புகாரைப் பற்றி அறிய பூம்புகார் (தமிழ்நாடு) காணவும்." 243O இலக்கம் உடைய பூம்புகார் கிராம அலுவலர் பிரிவு ("Poompugar") இலங்கையில் திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 742 குடும்பத்தைச் சேர்ந்த 3221 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பூம்புகார் பூம்புகார் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: வெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு 229 Q இலக்கம் உடைய வெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 672 குடும்பத்தைச் சேர்ந்த 2479 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு 229 C இலக்கம் உடைய நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 333 குடும்பத்தைச் சேர்ந்த 1291 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு 229A இலக்கம் உடைய சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 525 குடும்பத்தைச் சேர்ந்த 2102 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். முன்னர் சீனநாட்டவர் கடல் வாணிபத்தின் பொருட்டு திருகோணமலையில் இப்பகுதியில் குடியேறியதாலேயே இப்பகுதியானது சீனக்குடா என்றழைக்கப்படுகின்றது. இன்றும் சீனர்களின் வழித்தொன்றல்கள் இங்கு உள்ளபோதும் பெரும்பாலானவர்கள் இலங்கையர்களுடன் திருமணம் செய்து இலங்கையர்கள் ஆகிவிட்டார்கள். இலங்கையின் மிக முக்கியமான ஒரு கைத்தொழில் வலையம் இங்கே அமைந்துள்ளது. முழு நாட்டிற்கும் கோதுமைமாவை அரைத்து வழங்கும் பிரீமா நிறுவனத்தின் மாவாலை இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் டோக்கியோ சீமெந்து எனும் சீமெந்து நிறுவனமும் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆலையை சீனக் குடாவிலே வைத்துள்ளது. கைத் தொழில் வேலைகளுக்கு ஆதரவளிக்குமுகமாக திருமலை மாவட்டத்தின் ஒரே விமான நிலையமும் இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் பிரதேசம் துறைமுக வசதியையும் கொண்டுள்ளுது. இதன் மூலம் தொழில் பேட்டைக்கு ஆகாயம் மற்றும் கடல் மூலம் பண்டங்களைத் தருவிக்க கூடியதாகவுள்ளது. காவத்திக்குடா கிராம அலுவலர் பிரிவு 229 D இலக்கம் உடைய காவத்திக்குடா கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 604 குடும்பத்தைச் சேர்ந்த 2236 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். முத்துநகர் கிராம அலுவலர் பிரிவு 229 F இலக்கம் உடைய முத்துநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 282 குடும்பத்தைச் சேர்ந்த 1346 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கப்பல்துறை கிராம அலுவலர் பிரிவு 229 E இலக்கம் உடைய கப்பல்துறை கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 197 குடும்பத்தைச் சேர்ந்த 1249 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சுமேதங்காராபுர கிராம அலுவலர் பிரிவு 229 B இலக்கம் உடைய சுமேதாரங்காபுர கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 721 குடும்பத்தைச் சேர்ந்த 1437 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சாம்பல்தீவு கிராம அலுவலர் பிரிவு 242 இலக்கம் உடைய சாம்பல்தீவு கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 225 குடும்பத்தைச் சேர்ந்த 1125 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சல்லி கிராம அலுவலர் பிரிவு 242A இலக்கம் உடைய சல்லி கிராம அலுவலர் பிரிவு திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 800 குடும்பத்தைச் சேர்ந்த 2167 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிறப்புமிக்க சல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இலுப்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு 243 B இலக்கம் உடைய இலுப்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 42 குடும்பத்தைச் சேர்ந்த 178 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வில்கம கிராம அலுவலர் பிரிவு 243 E இலக்கம் உடைய வில்கம கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 62 குடும்பத்தைச் சேர்ந்த 215 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வெல்வெறி கிராம அலுவலர் பிரிவு 243 Q இலக்கம் உடைய வெல்வெறி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0 குடும்பத்தைச் சேர்ந்த 0 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். அடையாறு, சென்னை அடையாறு அல்லது அடையார் சென்னை மாநகரத்தின் பகுதியாகும். இது தென் சென்னை பகுதியில் அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் பக்கிங்காம் கால்வாயும், தென் பகுதியில் திருவான்மியூரும், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும் அமைந்துள்ளது. அடையாறு புற்றுநோய் மையம் இங்கு அமைந்துள்ளது. போக்குவரத்து [தொகு] அடையார் வழியாக மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம் (சென்னை) இயங்கி வருகிறது. கஸ்தூர்பாய் நகர், இந்திரா நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய இடங்களில் மூன்று நிலையங்களும் உள்ளன. அதர் நகரில் உள்ள இடைப்பட்ட நகரங்களுக்கும், நகர பஸ்கள் இயக்கப்படும் ஒரு பேருந்து நிலையமும் உள்ளது.  திருக்கடலூர் கிராம அலுவலர் பிரிவு 243 F இலக்கம் உடைய திருக்கடலூர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 908 குடும்பத்தைச் சேர்ந்த 3534 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். மிகுந்துபுர கிராம அலுவலர் பிரிவு 243 I இலக்கம் உடைய மிகுந்துபுர கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 266 குடும்பத்தைச் சேர்ந்த 1014 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். தன்நிறைவு தன்நிறைவு என்பது, வெளியிலிருந்து உதவியோ, சில தீவிரமான நிலைப்பாடுகளின்படி தொடர்புகளோகூட இல்லாமல் வாழக்கூடிய ஒரு நிலையைக் குறிக்கும். தன்நிறைவு என்னும் சொல் பொதுவாகப் பலவகையான தாங்குவளர்ச்சி வாழ்க்கை தொடர்பில் பயன்படுகின்றது. இவற்றில், தன்நிறைவான தனிப்பட்டவர்கள் உற்பத்தி செய்வனவற்றுக்கு அப்பால் வெளியிலிருந்து எதுவுமே கொள்ளப்படுவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டுகளாக வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட, தன்னார்வ எளிமை இயக்கம்(voluntary simplicity), மண்ணுக்குத் திரும்புதல் இயக்கம் (back-to-the-land movement) போன்ற பல முயற்சிகளைக் காட்டலாம். கோறளைப் பற்று மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு கோறளைப்பற்று மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("ஓட்டமாவடி") இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 14 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இரண்டு துண்டுகளாக அமைந்துள்ள இப்பிரிவின் தெற்கிலும், கிழக்கிலும் கோறளைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் பொலநறுவை மாவட்டமும்; வடக்கின் எஞ்சிய பகுதியில் கோறளைப்பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும்; எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஏறாவூர்ப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு ("செங்கலடி") இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டமும், கிழக்கில் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும்; வடக்கில் கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன. இப்பிரிவு 695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஏறாவூர் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு ஏறாவூர் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஏறாவூர் நகரப் பகுதிகளை மட்டுமே இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில் நீரேரி அமைந்திருக்க ஏனைய மூன்று பக்கங்களிலும் இதனை ஏறாவூர்ப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு சூழ்ந்து உள்ளது. இப்பிரிவு 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய பிரதேசச் செயலாளர் பிரிவு ஆகும். பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் மத்திய மாகாணம் 36 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டி மாவட்டம் 20 பிரிவுகளையும், மாத்தளை மாவட்டம் 11 பிரிவுகளையும் நுவரெலியா மாவட்டம் 5 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 489 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்கமுவா பிரதேசச் செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் 31 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசச் செயலாளர் பிரிவு மிகச் சிறியப் பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 20 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் உடதும்பறை பிரிவு மிகப்பெரியதாகும், அக்குரணை மிகச்சிறியதாகும். கண்டி மாவட்டத்தின் 20 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் 11 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் தம்புள்ளை பிரதேசச் செயலாளர் பிரிவு பிரிவு மிகப்பெரியதாகும், அம்பன்கங்கை கோரளை பிரதேசச் செயலாளர் பிரிவு மிகச்சிறியதாகும். மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் 5 பிரிவுகளில் பரப்பளவு அடிப்படையில் அம்பகமுவை பிரிவு மிகப்பெரியதாகும், கொத்மலை மிகச்சிறியதாகும். மாத்தளை மாவட்டத்தின் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. தொழில்மயமாதல் தொழில்மயமாதல் என்பது, ஒரு சமூகம் முன்-தொழில்சார் நிலையில் இருந்து தொழில்சார் சமூகமாவதற்கு உரிய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு செயல்முறை ஆகும். முன்-தொழில்சார் நிலை என்பது ஆள்வீத மூலதனக் குவிவு ("per capita capital accumulation") மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலை ஆகும். தொழில்சார் சமூகம், முழு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகம் ஆகும். தொழில்மயமாதல், பரந்த நவீனமயமாதலின் ஒரு பகுதியாகும். இது சிறப்பாக பாரிய சக்தி மற்றும் உலோகவியல் உற்பத்தியின் வளர்ச்சியைச் சார்ந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்துடன் தொடர்புடையது ஆகும். தொழில்மயமாக்கம், இயற்கை குறித்த புதிய கண்ணோட்டத்தையோ அல்லது ஒரு வகையான தத்துவம் சார்ந்த மாற்றத்தையோ கூட ஏற்படுத்துகிறது எனலாம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பாரிய(="மாபெரும்") தொழிற் துறைகள் இல்லாமை ஒரு பெரிய தடையாகக் கருதப்படுகின்றது. இதனால், பல நாடுகளின் அரசுகள் செயற்கையாகத் தொழில்மயமாதலைத் தூண்ட முயல்கின்றன. உலகில் தொழில்மயமாதல், 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சியுடன் தொடங்கியது எனலாம். நவீனமயமாதல் சமூக அறிவியலில், நவீனமயமாதல் என்பது, தனி மனிதர்களின் வாழ்க்கையை முற்றாகவே மாற்றியமைக்கும், தொழில்மயமாதல், நகராக்கம் மற்றும் பிற சமூக மாற்றங்கள் சார்ந்த ஒரு நடைமுறையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். நவீனமயமாதல் என்னும் கருத்துரு, சமூகப் படிமுறை வளர்ச்சிக் கோட்பாடுகள் விளக்குகின்றபடி சமூகங்கள் ஒரு பொதுவான வளர்ச்சிப்போக்குக் கொண்டவை என்ற நோக்கிலிருந்து உருவானதாகும். இதன்படி, ஒவ்வொரு சமூகமும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து உயர் மட்டங்களிலான மேம்பாட்டையும், நாகரிகத்தையும் நோக்கி படிமுறை வளர்ச்சி அடைகின்றன கூடிய நவீனமயமான நாடுகள் அதிக செல்வம் உடையனவாகவும், பலம் கொண்டவையாகவும் இருப்பதுடன், அவற்றின் குடிமக்கள் அதிக சுதந்திரம் உடையவர்களாகவும், உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இதுவே சமூக அறிவியல் துறையில் பல பத்தாண்டுகளாக நிலவிவரும் பொதுவான கருத்தாகும். 1869 1869 (MDCCCLXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். முதலாளித்துவம் முதலாளித்துவம் (ஆங்கிலம்:Capitalism) என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம் முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன. முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது. கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல நாடுகளைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர். "முதலாளித்துவம்" என்பது, மூலதனத்தின் உரிமையாளர் என்ற பொருள்படும் , இந்த சொல் "முதலாளித்துவ" காலத்திற்கு முன்னதாகவே தோன்றிருக்கிறது. இது 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வருகிறது. "முதலாளித்துவம்" என்பது "மூலதனம்" என்பதிலிருந்து பெறப்பட்டது, இது "தலைசிறந்த", சொல்லை அடிப்படையாகக் கொண்ட பிற்பகுதியில் லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது "தலை" என்பது " chattel " மற்றும் " கால்நடை " ஆகியவற்றின் மூலமும் அசையும் சொத்தினைக் குறிக்கும் (மட்டுமே பின்னர் கால்நடைகளை மட்டுமே குறிக்க). " Capitale " 12 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் நிதியங்கள், பங்கு விற்பனை, பணம் தொகை, அல்லது பணத்தை செலுத்தும் வட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெளிப்பட்டது. 1283 ஆம் ஆண்டில் அது ஒரு வர்த்தக நிறுவனத்தின் மூலதனச் சொத்துக்களின் பொருளில் பயன்படுத்தப்பட்டது. இது அடிக்கடி பல சொற்கள் செல்வம், பணம், நிதி, பொருட்கள், சொத்துகள், சொத்து மற்றும் பலவற்றில் பரிமாற்றம் செய்யப்பட்டது. 1633 மற்றும் 1654 இல் மூலதன உரிமையாளர்களைக் குறிக்க "ஹாலண்டிஸ் மெர்குரியஸ்" "முதலாளிகள்" பயன்படுத்துகிறார். பிரெஞ்சு மொழியில், Étienne Clavier என்பது 1788 இல் "முதலாளித்துவவாதிகள்" என்று குறிப்பிடப்படுகிறது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல் பதிவை ஆர்தர் யங் (ஆங்கிலேயர் எழுத்தாளர்) எழுதிய "Travels in France" (1792) என்னும் தனது நூலில் பயன்படுத்துகிறார். டேவிட் ரிக்கார்டோ, அவரது " அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதிப்பு "(1817)," முதலாளித்துவம் " பலமுறை உபயோகபடுத்திருக்கிறார். ஆங்கில கவிஞரான சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், அவரது நூலில் " Table Talk " (1823) இல் " முதலாளித்துவம் " சொல்லை பயன்படுத்திருக்கிறார். மூலதனம் (பொருளாதாரம்) பல நூற்றாண்டுகளாக முன் தொடக்கநிலை சிறிய அளவில்தான் இருந்தது, வியாபார வடிவில், வாடகைக்கு மற்றும் கடன் வழங்கும் நடவடிக்கைகள், மற்றும் சில ஊதிய உழைப்புடன் அவ்வப்போது சிறு அளவிலான தொழில்துறைகளில் இருந்தது. எளிமையான பொருட்கள் பரிமாற்றம் மற்றும் அதன் விளைவாக, வர்த்தகத்திலிருந்து மூலதனத்தின் வளர்ச்சிக்கான ஆரம்ப அடிப்படையிலான எளிய பொருட்கள் உற்பத்தி, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. கார்ல் மார்க்சின் கருத்துப்படி, "முதலாளித்துவ சகாப்தம்" 16 ஆம் நூற்றாண்டு வணிகர்கள் மற்றும் சிறிய நகர்ப்புற பட்டறைகளில் இருந்து வருகிறது. முதலாளித்துவ தொழிற்துறைக்கு பல நூற்றாண்டுகளாக சம்பள வேலைகள் இருந்தன என்று மார்க்ஸ் அறிந்திருந்தார். ஆரம்பகால இஸ்லாமியம் வெனிஸ் போன்ற நகரங்களிலிருந்து வர்த்தக பங்காளர்களால் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்த முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை பிரகடனப்படுத்தியது. அதன் நவீன வடிவத்தில் முதலாளித்துவம் விவசாய முதலாளித்துவம் தோற்றம் மற்றும் வணிகவாதத்தின் மறுசீரமைப்பில் [மறுமலர்ச்சி] காரணியாகும். நிலப்பிரபு விவசாய முறையின் பொருளாதார அஸ்திவாரங்கள் 16 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் கணிசமான மாற்றம் தொடங்கியது; புனரமைப்பு முறை உடைந்து விட்டது, பெருமளவிலான நிலப்பகுதிகளைக் கொண்ட நிலப்பகுதிகளில் நிலமானது செறிவூட்டப்பட்டது. ஒரு அடிமை-அடிப்படையிலான உழைப்பு முறைக்கு பதிலாக, பரந்த மற்றும் விரிவடைந்த பண அடிப்படையிலான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் பெருகிய முறையில் பணியாற்றினர். லாபம் சம்பாதிப்பதற்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இந்த முறை நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே அழுத்தம் கொடுக்கப்பட்டது; விவசாய உபகாரங்களைப் பிரித்தெடுக்க பிரபுத்துவத்தின் பலவீனமான வலிமையின் சக்தி அவர்களுக்கு சிறந்த வழிமுறைகளைத் தேடுவதற்கு உற்சாகப்படுத்தியது, மேலும் போட்டித் தொழிலாளர் சந்தையில் வளரும் பொருட்டு குடியிருப்பாளர்கள் தங்கள் முறைகளை மேம்படுத்துவதற்கு ஊக்கமளித்தனர். நிலத்திற்கான வாடகை நிபந்தனைகள், முந்தைய சந்தை தேவைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ கடமைகளை விட பொருளாதார சந்தை சக்திகளுக்கு உட்பட்டன. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்தியகிழக்கு ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவ ஒழுங்கின் பெரும்பகுதி வெட்டப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்தது. இந்த மையமயமாக்கல் நல்ல சாலைகள் மற்றும் ஒரு பெரிய அளவிலான மூலதன நகரமான லண்டன் மூலம் பலப்படுத்தப்பட்டது. மூலதனம் முழு நாட்டிற்கும் மைய சந்தை மையமாக செயல்பட்டு, பொருட்களுக்கு ஒரு மிகப்பெரிய உள் சந்தையை உருவாக்கி, கண்டத்தின் பெரும்பகுதிகளில் நிலவிய பிளவுபட்ட நிலப்பிரபுத்துவ சொத்துக்களுடன் முரண்பட்டது. 16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவும் பொருளாதார கோட்பாடு பொதுவாக வணிகவாதம் என அழைக்கப்படுகிறது. இந்த காலம், கண்டுபிடிப்பின் யுகம், வர்த்தக வணிகர்கள், குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து மற்றும் குறைந்த நாடுகளில் இருந்து வெளிநாட்டு நிலங்களின் புவியியல் ஆய்வு தொடர்புடையதாக இருந்தது. (Mercantilism)வியாபாரத்துவம் என்பது இலாபத்திற்கான வர்த்தக முறையாகும், இருப்பினும் பொருட்களும் இன்றியமையாத முதலாளித்துவ முறைகளால் உற்பத்தி செய்யப்பட்டன. பெரும்பாலான அறிஞர்கள் வணிக முதலாளித்துவ மற்றும் வணிகவாதத்தின் சகாப்தத்தை நவீன முதலாளித்துவத்தின் தோற்றமாகக் கருதுகின்றனர், என்றாலும், முதலாளித்துவத்தின் முத்திரை என்பது "கற்பனையான பண்டங்கள்" என்று அழைக்கப்படும் " உழைப்பு, பணம். அதன்படி, "1834 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் நிறுவப்பட்ட ஒரு போட்டி தொழிலாளர் சந்தையாக இல்லை, எனவே ஒரு சமூக அமைப்பாக தொழில்துறை முதலாளித்துவம் அந்த தேதிக்கு முன்பே இருந்ததாக கூற முடியாது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், டேவிட் ஹியூம் மற்றும் ஆடம் ஸ்மித் தலைமையிலான பொருளாதார கோட்பாட்டாளர்களின் ஒரு புதிய குழுவானது கோட்பாடுகளை சவால் செய்தது, உலகின் செல்வம் நிலையானதாக இருப்பதற்கும், ஒரு அரசு அதன் செல்வத்தை அதிகரிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையைப் போன்ற மேலும் ஒரு மாநிலமானது மற்றொரு நாட்டின் செலவில் அதன் செல்வத்தை அதிகரிக்க முடியும். தொழில்துறை புரட்சி போது, தொழிலதிபர்கள் வர்த்தகர்களை முதலாளித்துவ முறையின் ஒரு மேலாதிக்கக் காரணியாக மாற்றினர் மற்றும் கலைஞர்களின், செய்பவர்கள், மற்றும் பயணிப்போர் பாரம்பரிய கைவினைத் திறன்களின் வீழ்ச்சியை பாதித்தனர். இந்த காலகட்டத்தில், வர்த்தக விவசாயத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட உபரி விவசாயத்தை இயந்திரமயமாக்க அதிகப்படுத்தியது. தொழிற்துறை முதலாளித்துவம், உற்பத்தி செயல்முறைக்குள்ளாகவும் மற்றும் பணிகளுக்கு இடையேயான சிக்கலான தொழிலாளர் பிரிவினை வகைப்படுத்தப்படும் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பின் வளர்ச்சியைக் குறிக்கிறது; இறுதியில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் பூகோள மேலாதிக்கத்தை நிறுவியது. உலகமயமாதலின் பரந்த செயல்முறைகளால் உலகெங்கிலும் முதலாளித்துவம் வழிநடத்தப்பட்டது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பொருளாதார மற்றும் பிற பூகோளமயமாக்கலின் தீவிரமடைந்துவரும் செயல்முறைகளை ஆழ்ந்த முறையில் பொருளாதாரம் மற்றும் பிற உலகமயமாக்கல் இருக்கிறது. பின்னர், 20 ஆம் நூற்றாண்டில், மத்திய-திட்டமிட்ட பொருளாதாரங்கள் ஒரு முரண்பாட்டை முதலாளித்துவம் முறியடித்து இப்போது உலகளாவிய சூழ்நிலையை கொண்டுள்ளது, கலப்பு பொருளாதாரம் தொழில்மயமான மேற்கத்திய உலகில் அதன் மேலாதிக்க வடிவமாக இருப்பது. தொழில்மயமாக்கல் வீட்டுப் பொருட்களின் மலிவான உற்பத்தியை பொருளாதாரம் அளவைப் பயன்படுத்தி அனுமதித்தது, அதே சமயம் விரைவான மக்கள்தொகை வளர்ச்சி பொருட்களின் தேவையை அதிகரித்தது. இந்த காலத்தில் உலகமயமாக்கல் 18 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக வடிவமைக்கப்பட்டது. ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்திற்கு இடையிலான உறவு கோட்பாடு மற்றும் மக்கள் அரசியல் இயக்கங்களில் சர்ச்சைக்குரிய பகுதியாகும். 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டனில் பிரிட்டனின் உலகளாவிய ஆண் வாக்களிப்பு விரிவாக்கமானது தொழில்துறை முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடனும், முதலாளித்துவம், அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கம் போன்றவற்றுக்கு இடையே ஒரு பொதுவான அல்லது பரஸ்பர உறவை முன்வைக்கும் வகையில் ஜனநாயகம் பரவலாக மாறியது. எவ்வாறாயினும், 20 ஆம் நூற்றாண்டில், சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி, முதலாளித்துவமானது, பாசிச ஆட்சிகள், முழுமையான முடியாட்சிகள் மற்றும் ஒற்றைக் கட்சி மாநிலங்கள் உட்பட, தாராளவாத ஜனநாயக நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டது. ஜனநாயக சமாதானக் கோட்பாடு ஜனநாயகம் மற்றவர்களுடைய ஜனநாயக விரோதத்தை எப்போதாவது எதிர்த்து நிற்கிறது என்பதை வலியுறுத்துகிறது, ஆனால் அந்த கோட்பாட்டின் விமர்சகர்கள் இது ஜனநாயக அல்லது முதலாளித்துவவாதியாக இருப்பதால் அல்லாமல் அரசியல் ஒற்றுமை அல்லது ஸ்திரத்தன்மை காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். தாராளவாத சந்தைப் பொருளாதாரங்கள் ( எ.கா., ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து, அயர்லாந்து) மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப் பொருளாதாரங்கள் (சி.எம்.இ.) (எ.கா. ஜேர்மனி), நவீன பொருளாதாரங்கள் முதலாளித்துவத்தின் இரண்டு வெவ்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளன என்று பீட்டர் ஏ. ஹால் மற்றும் டேவிட் சொஸ்கிஸ் வாதிட்டனர். ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரியா). அந்த இரண்டு வகைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்ற பிற செயல்களுடன் ஒருங்கிணைக்கும் முதன்மை வழிமுறையால் வேறுபடுத்தப்பட முடியும். LMEs நிறுவனங்களில் முதன்மையாக வரிசைக்கு மற்றும் சந்தை வழிமுறைகள் மூலம் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்கின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரங்கள் மற்ற செயல்களுடன் தங்கள் உறவுகளை ஒருங்கிணைப்பதில் சந்தையற்ற சந்தையற்ற வடிவங்களில் தங்கியிருக்கின்றன (விரிவான விளக்கம் பார்க்க முதலாளித்துவத்தின் வகைகள்). இந்த இரண்டு வகையான மூலதனங்களும் வெவ்வேறு தொழிற்துறை உறவுகள், தொழில்சார் பயிற்சி மற்றும் கல்வி, பெருநிறுவன ஆளுமை, இடை-உறவு உறவுகள் மற்றும் ஊழியர்களுடன் உறவுகளை அபிவிருத்தி செய்தன. இந்த வெவ்வேறு வடிவிலான முதலாளித்துவத்தின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த சமூக விளைவுகள், குறிப்பாக நெருக்கடி மற்றும் உறுதியற்ற காலங்களில். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொழிலாளர் சந்தை வெளிநாட்டினர் ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்துள்ளனர், குறிப்பாக இளைஞர்களிடையே, சமூக மற்றும் அரசியல் பங்கேற்பை முக்கியமாக பாதிக்கும். முதலாளித்துவ கோட்பாட்டின் வகைகளைப் பயன்படுத்தி, சமூக மற்றும் அரசியல் பங்கேற்பின்போது மாறுபட்ட விளைவுகளை அகற்றும் சாத்தியம் உள்ளது, தொழிலாளர் சந்தை வெளியாட்களின் தாராளவாத மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப் பொருளாதாரங்களில் (ஃபெரேகினா மற்றும் பலர் 2016 )) அதிகரித்துள்ளது. சமூக மற்றும் அரசியல் அதிருப்தி, குறிப்பாக இளைஞர்களிடையே, ஒருங்கிணைந்த சந்தை பொருளாதாரங்களைவிட தாராளவாதத்தில் இன்னும் உச்சரிக்கப்படுகிறது. நெருக்கடி காலத்தில் தாராளவாத சந்தைப் பொருளாதாரங்களுக்கு இது ஒரு முக்கிய பிரச்சனையை அடையாளம் காட்டுகிறது. சந்தையானது தொடர்ச்சியான வேலை வாய்ப்புகளை (முந்தைய தசாப்தங்களில் உள்ளது) வழங்கவில்லை என்றால், தாராளவாத சமூக பாதுகாப்பு அமைப்புகள் குறைபாடுகள் மற்ற முதலாளித்துவ பொருளாதாரங்களில் சமூக மற்றும் அரசியல் பங்கேற்பை இன்னும் குறைக்கக்கூடும். முதலாளித்துவமானது "பரிமாற்றத்திற்கான உற்பத்தி" என்பது, இத்தகைய பரிவர்த்தனைகளில் தனிநபர் ரசீதுகள் திரட்டப்படுவதற்கான ஆசை மூலம் இயக்கப்படுகிறது, இது இலவச சந்தைகளால் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது. சந்தைகள் தங்களை நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் தேவைகளாலும், தேவைகளாலும் இயக்கப்படுகின்றன. சமகாலத்திய பிரதான பொருளாதாரம், குறிப்பாக வலதுபுறம் தொடர்புடையது, சந்தையின் சுதந்திரத்தை விட சற்று கூடுதலாக ஒரு "கண்ணுக்கு தெரியாத கையில்" மூலம், இந்த தேவைகளையும் விருப்பங்களையும் சமூக உற்பத்திக்கு ஒப்பிட முடியும். பொதுவாக, ஒரு பொருளாதார அமைப்புமுறையாகவும், உற்பத்தி முறையாகவும் முதலாளித்துவம் பின்வருமாறு சுருக்கமாகச் சொல்ல முடியும்: சுதந்திர சந்தை மற்றும் " லாஸ்ஸெஸ்-ஃபைர் "முதலாளித்துவ வடிவங்கள் ஆகியவற்றில், சந்தைகள் மிக அதிக அளவில் விரிவான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. கலப்பு பொருளாதாரங்கள், இன்று உலகளாவியதாக இருக்கும், சந்தைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, ஆனால் சந்தை தோல்வி திருத்தங்கள், சமூக நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, இயற்கை வளங்களை, நிதி பாதுகாப்பு] மற்றும் பொது பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களுக்காக. அரச முதலாளித்துவ அமைப்புகளில், சந்தைகளில் முதலீடு குறைந்தது, மாநிலமானது அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் அல்லது மூலதனத்தை குவிக்கும் மறைமுகமான பொருளாதார திட்டமிடல் மீது அதிக அளவில் நம்பியுள்ளது. வழங்கல் என்பது ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு நல்ல சேவை அல்லது சேவை, இது விற்பனைக்கு கிடைக்கும். மக்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்க தயாராக இருக்கும் தொகை. தேவை அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும் போது விலை அதிகரிக்கிறது, மற்றும் தேவை அதிகரிக்கும் போது விழும். கோட்பாட்டில், சந்தையில் ஒரு புதிய சமநிலை விலை மற்றும் அளவு அடைந்தவுடன் தன்னைத்தானே ஒருங்கிணைக்க முடியும். [[இலாப நோக்கம்] முதலாளித்துவத்தின் ஒரு கோட்பாடாகும், இது ஒரு வணிகத்தின் இறுதி இலக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கூறுகிறது. வித்தியாசமாகக் கூறப்பட்ட ஒரு வணிகத்தின் இருப்புக்கான காரணம், லாபத்தை மாற்றியமைப்பதாகும். [[பகுத்தறிவுத் தேர்வுக் கோட்பாடு]] அல்லது தனிநபர்கள் தங்களின் சொந்த நலன்களைப் பெற முற்படுகின்ற தத்துவத்தின் மீது இலாப நோக்கம் செயல்படுகிறது. அதன்படி, வணிகங்கள் லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களை மற்றும் / அல்லது அவர்களது பங்குதாரர்களுக்கு நன்மை பயக்கின்றன. முதலாளித்துவ தத்துவார்த்தங்களில், இலாப நோக்கம் வளங்கள் திறமையாக ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, [[ஆஸ்திரிய பொருளாதார நிபுணர்கள்]] [[ஹென்றி ஹாஸ்லிட்]] விளக்குகிறார்: "ஒரு கட்டுரையை தயாரிப்பதில் லாபம் இல்லை என்றால், அதன் உற்பத்திக்கு அர்ப்பணித்துள்ள உழைப்பும் மூலதனமும் தவறாக வழிநடத்துகின்றன: கட்டுரையின் மதிப்பைவிட கட்டுரை அதிகமானதாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலாபங்கள் ஒரு உருப்படியை உற்பத்திசெய்வது மதிப்புள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தாராளமாக இலவச மற்றும் போட்டிச் சந்தைகளில், லாபத்தை அதிகப்படுத்துதல் ஆதாரங்கள் வீணாகாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பின்னர், சமூக, அரசியல் தத்துவத்தின் பல துறைகளில் அரசு, அதன் முறையான வழிமுறைகள், மற்றும் முதலாளித்துவ சமூகங்களுக்கிடையிலான உறவு விவாதத்திற்கு உட்பட்டது. [[ஹெர்னாண்டோ டி சோட்டோ]] ஒரு சமகால பொருளாதாரவாதியாக இருக்கிறார், இவர் முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய அம்சம் சொத்துரிமைக்கான செயல்பாட்டு அரசியலமைப்பு என்பது ஒரு முறையான சொத்து முறையின் செயல்பாட்டு அரசியலமைப்பு மற்றும் உரிமை நடவடிக்கைகளில் உள்ளது என்று வாதிட்டார். முதலாளித்துவ பொருளாதாரம், சந்தை போட்டி என்பது விற்பனையாளர்களிடையே இலாப நோக்கங்கள், சந்தை பங்கு மற்றும் விற்பனையின் அளவு ஆகியவற்றின் மாறுபாடுகளால் விற்பனை, தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் இத்தகைய இலக்குகளை அடைய முயற்சிக்கின்றது. Merriam-Webster வணிகத்தில் போட்டியை இவ்வாறு வரையறுக்கிறார், "மூன்றாம் தரப்பின் வணிகத்தை மிகவும் சாதகமான வகையில் வழங்குவதன் மூலம் சுதந்திரமாக செயல்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் முயற்சியாக" இருக்கிறது என்றார். இதையே [[ஆடம் ஸ்மித்]], தன்து The Wealth of Nations (1776)லும் சொன்னார். பின் வந்த பொருளாதார வல்லுநர்கள் தங்கள் மிக உயர்ந்த மதிப்பீட்டு பயன்பாடுகளுக்கு உற்பத்தி திறனையும், செயல்திறன் ஊக்குவிப்பையும் அளித்தனர். ஸ்ரைன் மற்றும் பிற கிளாசிக்கல் பொருளாதாரவாதிகள் செர்னாட்டிற்கு முன் தயாரிப்பாளர்களிடையே விலையுயர்வு மற்றும் விலையுயர்ந்த போட்டி ஆகியவற்றை வாங்குவோர் வாங்குவதன் மூலம் சிறந்த பொருள்களை விற்பனை செய்வது, விற்பனையாளர்களின் ஏராளமான விற்பனையாளர்களுக்கு அல்லது இறுதி சமநிலையில் ஒரு சந்தைக்கு அவசியம் இல்லை. சந்தை செயல்முறை முழுவதும் போட்டி பரவலாக உள்ளது. "வாங்குவோர் மற்ற வாங்குவோருடன் போட்டியிடுகின்றனர், மேலும் விற்பனையாளர்கள் மற்ற விற்பனையாளர்களுடனும் போட்டியிடுகின்றனர்" என்பது ஒரு நிபந்தனை. பரிமாற்றத்திற்கான பொருட்களை வழங்குவதில், வாங்குவோர் குறிப்பிட்ட பொருட்களின் குறிப்பிட்ட அளவுகளை வாங்குவதற்கு போட்டியிடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர், அல்லது விற்பனையாளர்கள் அத்தகைய பொருட்களை வழங்க தேர்வு செய்தால் கிடைக்கும். இதேபோல், விற்பனையாளர்கள் சந்தையில் பொருட்களை வழங்குவதில் மற்ற விற்பனையாளர்களுக்கு எதிராகவும், வாங்குவோர் கவனத்தை மற்றும் பரிமாற்ற ஆதாரங்களுக்கு போட்டியிடுகின்றனர். பற்றாக்குறையிலிருந்து போட்டியிடும் முடிவுகள் - அனைத்து மிக்க மனித தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை - "எதை எவர் பெறுகிறாரோ அதை தீர்மானிக்கப் பயன்படும் அளவுகோல்களை சந்திக்க முயலும் போது" ஏற்படுகிறது. ஒரு வெளிப்பாடு இருக்கும்போது சந்தை தோல்வி ஏற்படுகிறது மற்றும் ஒரு சந்தையானது ஒரு நேர்மறை வெளிப்பாடு கொண்ட ஒரு தயாரிப்புக்கு கீழ் உற்பத்தி செய்யும் அல்லது எதிர்மறை வெளிப்புறம் உருவாக்கும் ஒரு தயாரிப்பை அதிக உற்பத்தி செய்யும். உதாரணமாக, [[காற்று மாசுபாடு]] என்பது எதிர்மறை வெளிப்புறமையாக்கலாகும், இது சந்தைகளில் எளிதில் இணைக்கப்பட முடியாது, ஏனெனில் உலகின் காற்று சொந்தமானது அல்ல, பின்னர் மாசுபடுத்திகளின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால், மிக அதிக மாசுபாடு உமிழப்படும் மற்றும் ஆரம்பத்தில் காற்று மாசுபாடு வெளியேற்றப்பட்ட நிறுவனத்திற்கு பதிலாக மாசுபாட்டிற்கான செலவினத்தை உற்பத்தி செய்வதில் ஈடுபடுவதில்லை. சந்தை தோல்வி கோட்பாட்டின் விமர்சகர்கள், [[ரொனால்ட் கோஸ்ஸ்]], [[ஹரால்ட் டிம்மெட்ஜ்]] மற்றும் [[ஜேம்ஸ் எம். புகானன்]] போன்ற அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் முழுமையான முழுமையின் குறைபாடு என்று வாதிடுகின்றன. சந்தை தோல்விகள் பெரும்பாலும் சிறியவை, மற்றும் அரசாங்க தோல்விகள் சில நேரங்களில் பெரியவை. எனவே அபூரண சந்தைகள் பெரும்பாலும் அபூரண அரசாங்க மாற்றீட்டை விட சிறந்தவை. அனைத்து நாடுகளும் தற்போது சிலவிதமான சந்தை ஒழுங்குமுறைகளைக் கொண்டிருந்தாலும், விரும்பத்தக்க அளவு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. முதலாளித்துவ பொருளாதாரம் செயல்படுவதற்கு இலவச போட்டிக் கோட்பாடு அத்தியாவசியமானது, மேலும் சந்தையில் போட்டியிடும் போட்டி நடத்தை முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பலவீனம் என்பதை காட்டுகிறது. பெருநிறுவனங்கள் பகுதியிலுள்ள ஏகபோக நடத்தை போன்ற சிக்கல்கள், மற்றும் [[அறிவுசார் சொத்து |அறிவுசார் சொத்துச்]] சட்டங்களின் அம்சங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. முதலீடுகளின் நாணய மதிப்பாக, மறுவரையறை செய்யப்படும் வருமான அளவு அல்லது சொந்தமான சொத்துக்களின் மதிப்பில் (மூலதன பங்கு மதிப்பில் அதிகரிப்பு) மாற்றம் போன்றது குவிக்கப்படுகிறது. நிறுவனம் [[கணக்கு]] மற்றும் நேரடி [[புள்ளியியல் கணக்கெடுப்பு | ஆய்வுகள்]] அடிப்படையைப் பயன்படுத்தி, அரசாங்க புள்ளிவிவரங்கள் [[தேசிய கணக்குகள்]], தேசிய [[செலுத்துதலின் சமநிலை]] மற்றும் [[நிதி ஓட்டம்]]தின் புள்ளியியல். வழக்கமாக [[பெடரல் ரிசர்வ் | ரிசர்வ் பாங்க்ஸ்]] மற்றும் [[கருவூல]] இந்த தரவின் விளக்கங்கள் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குகின்றன. நிலையான குறியீடுகள், [[மூலதன உருவாக்கம்]], [[மொத்த நிலையான மூலதன உருவாக்கம்]], [[நிலையான மூலதனம்]], வீட்டு சொத்து செல்வம் மற்றும் [[வெளிநாட்டு நேரடி முதலீடு]] ஆகியவை அடங்கும். மார்க்சின் கூற்றுப்படி, செல்வந்தர்களின் கைகளில் செறிவு மற்றும் மையப்படுத்தலுக்கான மூலதனம் உள்ளது. மார்க்ஸ் பின்வருமாறு விளக்குகிறார்: இது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மூலதனங்களின் செறிவு, தனிப்பட்ட சுதந்திரத்தை அழித்தல், முதலாளித்துவத்தின் முதலாளித்துவத்தை பறிமுதல் செய்தல், பல சிறிய மாற்றங்கள் சில மூலதனங்களை பெருக்குவது ... ஒரு பெரும் மூலதனம் ஒரு இடத்தில் ஒருவரிடத்தில் வளர்கிறது, ஏனென்றால் இன்னொரு இடத்தில் பலரால் இழக்கப்படுகிறது ... [[மார்க்சிய]] பொருளாதாரம், குவிப்பு விகிதம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது (1) ஒரு கணக்கியல் காலத்தில் மூலதன பங்கு உண்மையான நிகர அதிகரிப்பு மதிப்பு, (2) உணர்ந்து கொள்ளப்பட்ட உபரி மதிப்பு அல்லது லாபம்-வருவாய் விகிதம், மாறாக இது reinvested நுகரப்படும் விட. இந்த விகிதமானது அசல் மூலதன செலவினங்களுக்கிடையில், உண்மையான வருமானம், உபரி-மதிப்பு அல்லது லாபம் மற்றும் மறு முதலீடு ஆகியவற்றுக்கு இடையேயான பல்வேறு விகிதங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது (உதாரணமாக, பொருளியல்வாதி [[மைக்கேல் காலேக்கி]] எழுதியது). [[பகுப்பு:முதலாளித்துவம்]] எரிமலை வளையம் எரிமலை வளையம் அல்லது பசிபிக் எரிமலை வளையம் ("Pacific Ring of Fire") என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். குதிரை லாட வடிவ அமைப்பிலுள்ள இதன் நீளம் 40,000 கிமீ ஆகும். இந்த எரிமலை வளையத்தில் 472 எரிமலைகள் உள்ளன. உலகிலுள்ள உயிர்த்துடிப்புள்ள எரிமலைகளில் 50 விழுக்காடு இங்கு உள்ளன. உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. 5-6% நிலநடுக்கங்களும் 17% பெரிய நிலநடுக்கங்களும் அல்பைட் பெல்ட் பகுதியில் ஏற்படுகின்றன. பசிபிக் கடல் தட்டானது அதைச்சுற்றியுள்ள மற்ற நில மற்றும் கடல் தட்டுகளுடன் உராய்வதாலும் மோதுவதாலும் பசிபிக் எரிமலை வளையம் ஏற்படுகிறது. புகலிட ஈழத்தமிழர் எதிர்ப்புப் போராட்டங்கள் இலங்கை அரசு தமிழ்ப் பொதுமக்களின் மனித உரிமைகளைப் புறக்கணிப்பதையும், தொடர்ந்து தமிழர்களை போர் வன்முறைக்கு உட்படுத்துவதையும் எதிர்த்து புகலிட தமிழ் மக்கள் எதிப்புப் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்தப் எதிர்ப்புப் போராட்டங்கள் அகில உலகின் கவனத்தை ஈர்ந்து அவர்களின் துணையுடன் இலங்கை அரசுக்கு அழுத்தத்தையும், அரசின் நடைமுறையில் மாற்றத்தையும் கொண்டுவருவதை நோக்காக கொண்டவை. இந்தப் போராட்டங்கள் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் இலங்கை அரசின் கொடூர போக்குக்கு எதிராக நடைபெறுவதால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காககு ஆதரவாக நடைபெறுவதாக பொருள் படாது. கிமு 399 ஆண்டு கிமு 399 ("399 BC") என்பது யூலியன் நாட்காட்டிக்கு முன்னரான உரோமை நாள்காட்டியில் ஓர் ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு ஓகிரினசு, லோங்கசு, பிரிசுகசு, சிக்கூரினசு, ரூபசு, பிலோ ஆகியோரின் ஆட்சி ஆண்டு ("Year of the Tribunate of Augurinus, Longus, Priscus, Cicurinus, Rufus and Philo") எனவும் சில வேளைகளில் "ஆண்டு 355" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 399 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. ஆனையிறவு ஆனையிறவு ("Elephant Pass") இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈழப் போருக்கு முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கே அமைந்திருந்தது. 1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி எழுப்பியதன் பின்னர் ஆனையிறவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளமாக இருந்து வந்துள்ளது. இக்கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக் காரரினாலும், பின்னர் பிரித்தானியராலும் மீளக் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் இலங்கைப் படைத்துறை இங்கு நவீன முறையில் இராணுவத் தளம் ஒன்றை இங்கு உருவாக்கியது. ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஆனையிறவு இராணுவத் தளத்தைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் பல முறை முயன்ற போதும், 2000 ஆண்டு வரை இத்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1991ல் விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்ற பெரும் சண்டையிட்டுத் தோற்றனர். 2000, ஏப்ரல் 22 அன்று இரண்டாம் ஆனையிறவுச் சண்டையின் போது விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்றினர்.. விடுதலைப் புலிகளிடம் இருந்து இத்தளத்தை இலங்கை இராணுவம் 2009, சனவரி 10 ஆம் நாள் மீண்டும் கைப்பற்றியது. புகழ் பெற்ற கப்பல்கள் உலக வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் கட்டப்பட்டுக் கடல்களில் வலம் வந்திருக்கின்றன. இவற்றுட் சில அவை செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்திலோ அல்லது அதையும் கடந்தோ மக்கள் மனத்தில் நிலைத்திருக்கின்றன. இவ்வாறான கப்பல்கள், புகழ் பெற்ற கப்பல்கள் என்னும் தலைப்பில் இங்கே பட்டியல் இடப்படுகின்றன. ஆச்சிலே லோரோ தொடக்கத்தில் "வில்லெம் ரூயிஸ் (Willem Ruys)" என அழைக்கப்பட்ட ஆச்சிலே லோரோ (Achille Lauro) என்பது, ஒரு பயணிகள் கப்பல் ஆகும். இது 1985 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டதன் மூலம் இது பரவலாக அறியப்பட்டது. 1938 ஆம் ஆண்டில் கட்டுமாறு பணிக்கப்பட்டு 1939 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள விலிசிங்கனில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டதனாலும், அதனால் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களினாலும் காலம் தாழ்ந்து, 1946 ஆம ஆண்டு ஜூலை மாதத்தில் வில்லெம் ரூயிஸ் என்னும் பெயருடன் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1947 இன் இறுதியில் இதற்கான வேலைகள் யாவும் நிறைவு செய்யப்பட்டு 1947 டிசம்பர் 2 ஆம் நாள் இதன் முதற் பயணம் தொடங்கியது. இது 192 மீட்டர் (630 அடி) நீளமும், 25 மீட்டர் (82 அடி) beam நீளமும் கொண்டது. 21,110 இம்பீரியல் தொன் (21,450 மெட்ரிக் தொன்) நிறை கொண்ட இக்கப்பலில் 900 பயணிகள் பயணம் செய்யமுடியும். சிஎஸ்எஸ் வெர்ஜீனியா சிஎஸ்எஸ் வெர்ஜீனியா இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு போர்க்கப்பல் ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் மாநிலங்கள் கூட்டமைப்பின் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட இக் கப்பல், மூழ்கடிக்கப்பட்ட யூஎஸ்எஸ் மெர்ரிமக் என்னும் கப்பலின் எஞ்சிய பாகங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இது 1862 மார்ச்சில் இடம்பெற்ற பெயர்பெற்ற ஹம்ப்டன் வழிப் போரில் யுஎஸ்எஸ் மொனிட்டர் என்னும் கப்பலுக்கு எதிராகப் போரிட்டது. இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கு இடையே நடைபெற்ற முதற் போர் என்பதனால் இப் போர் உலகக் கடற்படை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரும்புக் கப்பல்கள் மிகவும் பிற்காலத்திய கண்டுபிடிப்பாகும். 1859 இல் இவ்வாறான முதற் கப்பலான பிரான்சின் லா குளோய்ரே (La Gloire) என்னும் கப்பல் கட்டப்படதன் பின்னர் கடற்போர்கள் பெருமளவு மாற்றம் அடைந்தன. லா குளோய்ரே பிரான்ஸ் கடற்படையின் லா குளோய்ரே உலகின் முதலாவது இரும்புத்தகடு போர்த்திய போர்க்கப்பல் ஆகும். இது கிரீமியன் போரைத் தொடர்ந்து, சுடுகலன்கள் தொடர்பிலான புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விழுந்து வெடிக்கும் எறிகணைகளைப் பயன்படுத்திய பைக்ஸ்ஹான்ஸ் மற்றும் சுழல் துப்பாக்கிகள் (Rifles) மரக் கப்பல்களுக்குப் பலத்த சேதத்தை உண்டாக்கின. இக் கப்பல் பிரான்சின் கப்பல் வடிவமைப்புக்கலை வல்லுனரான டூப்பூய் டி லோமே (Dupuy de Lôme) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இக் கப்பலில் பாரிய இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. இத் தகடுகள் மரத்தாலான சட்டகங்களின் மீது பொருத்தப்பட்டன. 12 மிமீ தடிப்புக் கொண்ட இதன் காப்புத் தகடுகள் அக்காலத்தில் இருந்த, பிரான்ஸின் 50 இறாத்தல் மற்றும் பிரித்தானியாவின் 68 இறாத்தல் குண்டுகளை ஏவக்கூடிய மிகவும் வலுவான சுடுகலன்களைக் கொண்டு 20 மீட்டர் தொலைவில் இருந்து முழு வலுவுடன் நடத்தப்பட்ட சோதனைத் தாக்கத்தைத் தாக்குப் பிடித்தன. இத்தகைய சிறப்பான இயல்புகள் இருந்தபோதும், பணியாளர்களுக்கு இது பெரிதும் வசதிக்குறைவாகவே இருந்தது. பாதுகாப்புக் கருதி காப்புத் தகடுகளில் துளைகள் எதுவும் இடமுடியாததால், காற்றோட்டம், வெளிச்சம் என்பன உள்ளே மிகக் குறைவாகவே இருந்தன. வெளிச்சத்துக்காக எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது. லா குளோய்ரேயின் அறிமுகம் பழைய மரப் போர்க்கப்பல்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவாகியது. முக்கியமான கடற்படைகள் அனைத்தும் வேறு வழியின்றி இரும்பு போர்த்திய கப்பல்களைக் கட்டின. அக்காலத்தில் பழைய மரக்கப்பல்களுடன் லா குளோரே நடத்திய போர்கள், செம்மறியாடுகளுக்கு நடுவே ஓநாய் நடத்திய தாக்குதலுக்கு ஒப்பிடப்பட்டது. தெ. நித்தியகீர்த்தி தெ. நித்தியகீர்த்தி (மார்ச் 4, 1947 - ஒக்டோபர் 15, 2009, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி, இலங்கை). அவுஸ்திரேலிய, ஈழத்து எழுத்தாளர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான "கடவுள் கதைப்பாரா" என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். இவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர். இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில: நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில: அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில: இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன. "தொப்புள் கொடி" என்னும் தன்னுடைய நாவலை மெல்பேர்ணில் வெளியீடு செய்ய 3 நாட்களே இருந்த நிலையில் நித்தியகீர்த்தி 2009 அக்டோபர் 15 வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பில் காலமானார். அமெரிக்க உள்நாட்டுப் போர் அமெரிக்க உள்நாட்டுப் போர் ("American Civil War", 1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். இந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார். கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. மற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. 1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். 110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் 199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்) 24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர் 9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர் 15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள் 359,528 மொத்த இறப்புகள் கூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர் கூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. ஜெபர்சன் டேவிஸ் ஜெபர்சன் ஃபினிஸ் டேவிஸ் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜெபர்சன் டேவிஸ் (ஜூன் 3, 1808 - டிசம்பர் 6, 1889) அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவராகச் செயலாற்றிய ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். உள்நாட்டுப் போர் நடைபெற்ற 1861 தொடக்கம் 1865 வரையான காலப்பகுதி முழுவதும் இவரே கூட்டமைப்பின் அரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவரது காலத்தில், பெரியதும், தொழில் வளர்ச்சியில் மேம்பட்டதுமாக இருந்த ஐக்கிய அமெரிக்க நாடுகளைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகளை இவரால் கண்டறிய முடியவில்லை. பெரும் தோல்விகளைச் சந்தித்த போதிலும், விடுதலை பெறுவதில் இவர் விடாப்பிடியாக இருந்ததால் உள்நாட்டுப்போர் நீண்டுகொண்டே சென்றது. போரின் பின் இவர் மதிப்பு இழந்துவிட்டதாகச் சொல்ல முடியாதாயினும், தென் மாநிலங்களில் இவரது செல்வாக்கை இவரது தளபதியான ராபர்ட் ஈ. லீயின் புகழ் மறைத்து விட்டது எனலாம். 1865 ஆம் ஆண்டில் டேவிஸ் பிடிபட்டபின்னர் இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது ஆயினும், சதிக் குற்றச்சாட்டுக்காக இவர் தண்டிக்கப்படாமல் பொதுப் பதவிகளுக்காகப் போட்டியிடும் இவரது உரிமை பறிக்கப்பட்டது. இவர் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பின், 1978 ஆம் ஆண்டு, இந்தப் பறிப்பு நீக்கப்பட்டது. வெஸ்ட் பொயிண்டில் கல்வி கற்ற இவர் மெக்சிக்க-அமெரிக்கப் போரில், தொண்டர் போர்ப்படையில் கர்னலாக இருந்து அனுபவம் பெற்றவர். பிராங்ளின் பியர்சின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் போர்ச் செயலராகவும் பதவி வகித்தார். அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ("Confederate States of America") அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை. ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன. பிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா, மிசிசிப்பி, ஜார்ஜியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது. எனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார். அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ கொடியானது "விண்மீன்கள் மற்றும் பட்டைகள்" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன. எனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் "ஒன்றிய கொடி"யிலிருந்து இருந்து "நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள்" கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. மிசிசிப்பி ஆற்றின் கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும். இப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநிலை 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இருந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார். முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும். உள்நாட்டுப் போர் உள்நாட்டுப் போர் என்பது ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரே பண்பாடு, ஒரே சமூகம் அல்லது வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு பகுதியினரிடையே, அரசியல் கட்டுப்பாட்டுக்காக நிகழும் போர் ஆகும். பெரிய அளவில் சமுதாய மீளமைப்பை ஏற்படுத்தக்கூடிய சில உள்நாட்டுப் போர்கள் புரட்சிகள் எனப்படுகின்றன. வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளைக் கொண்டு மரபுவழியாகப் போர்கள் இடம்பெறுமானால் கிளர்ச்சிகளும் உள்நாட்டுப் போர்களாகக் கொள்ளப்படுவது உண்டு. எனினும் சில வரலாற்றாளர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவினரிடையே அல்லது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதிகளிடையே நீடித்து நிகழும் வன்முறையை, அது மரபுவழியாக அல்லது வேறுவிதமாக அமையினும்கூட உள்நாட்டுப் போராகக் கருதலாம் என்கின்றனர். "உள்நாட்டுப் போர்", "புரட்சி" அல்லது வேறு ஏதாவது பெயர்களுக்கு இடையிலான வேறுபாடு எழுந்தமானமானவை ஆகும். உண்மையில் இவ்வேறுபாடுகள் பயன்பாட்டின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. எனினும், "உள்நாட்டுப் போர்", "புரட்சி" ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு அடையாளம் காணத் தக்கவையாகவே உள்ளன. 1640 இல் இங்கிலாந்தில் முதலாவது சார்லசின் முடியாட்சியைத் தற்காலிகமாகத் தூக்கியெறிந்த கிளர்ச்சி ஆங்கிலேய உள்நாட்டுப் போர் எனவே குறிப்பிடப்படுகின்றது. இருந்தாலும், சில மாக்சிய வரலாற்றாளர்கள் இதனை ஆங்கிலேயப் புரட்சி என்கின்றனர். அமெரிக்காவில், பிரித்தானியரின் குடியேற்றப் பகுதிகளில் 1770 களில், ஒழுங்கமைக்கப்பட்ட படைகளின் சண்டைகளுடன் இடம்பெற்ற வெற்றிகரமான கிளர்ச்சி அமெரிக்கப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. அதே சமயம், 1860 ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு எதிராக நடத்திய தோல்வியடைந்த மரபுவழிப் போர் "அமெரிக்க உள்நாட்டுப் போர்" எனப்படுகின்றது. எனினும் அப்போர் நடந்த காலத்தில் கூட்டமைப்பினர் அப் போரை "இரண்டாவது அமெரிக்கப் புரட்சி" அல்லது அதனை ஒத்த பெயர்களால் அழைத்தனர். இப்போர் வெற்றி பெற்றிருப்பின் அது "புரட்சி" என்றோ, "விடுதலைப் போர்" என்றோ அழைக்கப்பட்டிருக்கக் கூடும். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு யுத்தங்களின் ஒரு அறிஞர் ஜேம்ஸ் ஃபெரோன் உள்நாட்டுப் போரை "ஒரு பிராந்தியத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள அல்லது அரசாங்கக் கொள்கைகளை மாற்றுவதற்காக அல்லது அரசாங்க கொள்கைகளை மாற்றுவதற்காக நடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் நாட்டிற்குள் போராடும் ஒரு ஒரு வன்முறை மோதல்".ஆன் ஹிரொனக மேலும் ஒரு உள்நாட்டு யுத்தத்தின் ஒரு பகுதியாக மாநில என்று குறிப்பிடுகிறது. ஒரு உள்நாட்டு கலவரத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றியிருக்கும் தீவிரம் கல்வியாளர்களால் போட்டியிடப்படுகிறது. சில அரசியல் விஞ்ஞானிகள் உள்நாட்டு யுத்தத்தை 1000 க்கும் அதிகமான உயிர்களைக் மாண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர், மற்றவர்கள் மேலும் குறிப்பிடுகையில் குறைந்தபட்சம் 100 பேர் ஒவ்வொரு பக்கத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். கொர்ரேலிட் ஆப் போர் அறிஞர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற மோதல்களின், ஒரு உள்நாட்டு யுத்தத்தை 1000 மோதல்களில் மோதல்களுக்கு ஆண்டுதோறும் விவாதப்பொருள் ஆகி வருகின்றது.இந்த விகிதம் இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போரில் மற்றும் கம்போடிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான சிறு பகுதிதான், உதாரணமாக, வட அயர்லாந்தின் திரபுல்ஸ் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டம் போன்ற பல உயர்ந்த மோதல்களான மோதல்கள் தவிர, - காலம் தென்னாப்பிரிக்கா. ஆண்டுத் 1000 இறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, 1816 முதல் 1997 வரை 213 உள்நாட்டுப் போர்கள் இருந்தன, அவற்றில் 104 போர் 1944 முதல் 1997 வரை நிகழ்ந்தன.1000-க்கும் குறைவான துருப்புக்கள் மொத்த அளவைப் பயன்படுத்துகிறார்களானால், 1945 மற்றும் 2007 க்கு இடையில் 90 க்கும் மேற்பட்ட உள்நாட்டுப் போர்கள் இருந்தன, 2007 இல் 20 உள்நாட்டுப் போர்கள் நடந்தன. ஜெனீவா உடன்படிக்கைகள் குறிப்பாக "உள்நாட்டுப் போர்" என்ற வார்த்தையை வரையறுக்கவில்லை, ஆயினும் "கட்சிகளின் பொறுப்புகளை ஒரு சர்வதேச குணாம்சத்தில் ஆயுதமேந்திய மோதலில்" வெளிப்படுத்துகின்றன. இதில் உள்நாட்டுப் போர்கள் அடங்கியிருக்கின்றன, இருப்பினும் உள்நாட்டுப் போரின் குறிப்பிட்ட வரையறையை மாநாடுகளின் உரையில் வழங்கவில்லை. ஆயினும்கூட, ஜெனீவா உடன்படிக்கைகளில் அதன் விளக்கங்கள் மூலம் சில விளக்கங்களை வழங்குவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு முயன்றது, பொதுவாக மாநாடுகள் "மிகவும் பொதுவானவை , எனவே தெளிவற்றவை, அது ஆயுதங்களின் சக்தியால் செய்யப்பட்ட எந்த நடவடிக்கையையும் மூடிமறைக்க எடுக்கப்படலாம் ". அதன்படி, ஜெனீவா உடன்படிக்கையின் பயன்பாடு சார்ந்திருக்கும் 'நிலைமைகள்' குறித்து கருத்துக்கள் வழங்கப்படுகின்றன, ஆனால் வர்ணனையானது, இவை கடுமையான சூழல்களாக கருதப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டுகின்றன.ICRC பட்டியலிடப்பட்ட நிபந்தனைகள் பின்வருமாறு: (ஆ) கிளர்ச்சியுள்ள சிவில் அதிகாரி உண்மையிலேயே அதிகாரத்தை தேசிய அளவில் ஒரு உறுதியான பிரதேசம் உள்ள மக்கள் மீது பயன்படுத்துகிறார். (இ) ஒரு ஒழுங்கமைப்பின் திசையில் ஆயுதப் படைகள் செயல்படுகின்றன அதிகாரம் மற்றும் போரின் சாதாரண சட்டங்களைக் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளனர். (ஈ) கிளர்ச்சியுள்ள குடிமக்கள் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள் மாநாட்டின் விதிகள். உள்நாட்டுப் போரின் காரணத்தை ஆராயும் அறிஞர்கள் இரண்டு எதிர்ப்புக் கோட்பாடுகள், பேராசை மற்றும் எதிர்ப்பின் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் கூறியது: இனப்படுகொலை, மதம் அல்லது வேறு [சமூக உறவுகளின்] அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளதா, அல்லது முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதா, யார் தனிநபர்களினதும் குழுக்களினதும் பொருளாதார நலன்களைத் தொடங்குவதாலும், யார் தொடங்க வேண்டும் என்பதனைப் பொறுத்து, உள்நாட்டுப் போரின் நிகழ்வுகளை முன்னறிவிப்பதில் அடையாளம் காணும் விதம் பொருளாதார மற்றும் கட்டமைப்பு காரணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற முடிவை ஆதார பகுப்பாய்வு ஆதரிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலக வங்கி குழுவினால் உள்நாட்டுப் போர் பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டு முதல் 1999 வரை உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்தபோது, கோலியர்-ஹௌஃப்லெர் மாதிரி என்று அழைக்கப்படும் ஆய்வுக் கட்டமைப்பானது 78 ஐந்தாண்டு அதிகரிப்பை பரிசோதித்தது, மேலும் ஒப்பிடுகையில் "உள்நாட்டுப் போரில்" 1,167 ஐந்தாண்டு ஊதியங்கள் இருந்தன. தரவு பல்வேறு காரணிகளின் விளைவைப் பார்க்க பின்னடைவு பகுப்பாய்வு அமைக்கிறது.எந்தவொரு ஐந்து வருட காலப்பகுதியிலும் ஒரு உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைப் பற்றிய புள்ளியியல் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் காட்டிய காரணிகள்: தேசிய ஏற்றுமதியில் அதிகப்படியான முதன்மை பொருட்களின் தொகு கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் போது மோதல் ஆபத்தை அதிகரிக்கிறது. "உச்ச அபாயத்தில்" உள்ள ஒரு நாடு, 32% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொண்டிருக்கும் பொருட்களுடன், ஒரு ஐந்து வருட காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்திற்கு 22% ஆபத்து உள்ளது, அதே நேரத்தில் ஒரு முதன்மை சரக்கு ஏற்றுமதி இல்லாத நாடு 1% ஆபத்து உள்ளது. பிரித்தெடுக்கப்பட்டபோது, பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய அல்லாத குழுக்கள் வேறுபட்ட முடிவுகளைக் காட்டின: பெட்ரோல் ஏற்றுமதியின் மீதான ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான நம்பகத்தன்மை கொண்ட நாடானது சற்றே குறைவான அபாயத்தில் உள்ளது, அதே சமயம் மற்றொரு முதன்மை பொருட்களின் மீதான தேசிய சார்பை விட அதிக அளவு எண்ணெய் ஏற்றுமதி உள்ள நாடு உள்நாட்டு யுத்தத்தின் ஆபத்து உள்ளது.ஆய்வின் ஆசிரியர்கள், இது மற்ற பொருட்களின் செல்வத்தை ஒப்பிடும்போது முதன்மை பொருட்களின் விலையுயர்வு அல்லது கைப்பற்றப்பட்ட எளிமையான விளைவாக இருப்பதாகக் கருதுகின்றனர்; உதாரணமாக, ஆடை தயாரித்தல் அல்லது விருந்தோம்பல் சேவைகள் துறைக்கு ஒப்பிடும்போது, ஒரு தங்க சுரங்க அல்லது எண்ணெய் துறையின் வெளியீட்டைக் கைப்பற்றவும் கட்டுப்படுத்தவும் எளிதானது. அதிக ஆண் உயர்நிலை பள்ளி சேர்க்கை, தனிநபர் வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவை உள்நாட்டுப் போரின் வாய்ப்புகளை குறைப்பதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.குறிப்பாக, ஒரு மேல்நிலை பள்ளி சேர்க்கை 10% சராசரியைவிட 3% அதிகரித்தது, ஆய்வின் சராசரியைவிட 1% அதிகரித்தது 1% உள்நாட்டுப் போரின் வாய்ப்பு குறைந்துவிட்டது.இந்த மூன்று காரணிகளும் கிளர்ச்சியால் மன்னிக்கப்பட்ட வருவாய்க்குப் பிரதிநிதிகளாக இந்த மூன்று காரணிகளை விளக்கின. இதனால் குறைந்த மன்னிப்பு வருமானம் கிளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேறொரு வழிமுறையைத் தெரிந்துகொள்வது: இளைஞர்கள் (உள்நாட்டுப் போர்களில் உள்ள பெரும்பான்மையான போராளிகளை உருவாக்குவது) ஒரு கல்வியைப் பெறுகிறார்களா அல்லது வசதியாக சம்பளம் பெறுகிறார்களா என்று ஒரு கலகத்தில் சேர வாய்ப்பு குறைவு. ஆதீத "கவலை" அல்லது குறை என்பது புள்ளிவிவர ரீதியாக - பொருளாதார சமத்துவம், அரசியல் உரிமைகள், இன துருவப்படுத்தல் மற்றும் மத பாகுபாடு ஆகியவை உட்பட, உள்நாட்டுப் போர்கள், பொருளாதாரம் விடயங்களுக்கான அடையாளங்கள் காரணமாக தொடங்குகின்றன என்கிறது கோட்பாடு. இனக்குழு ஆதிக்கம், மிகப்பெரிய இனக்குழு மக்கள் பெரும்பான்மை மக்களை உள்ளடக்கியது, உள்நாட்டுப் போர் ஆபத்தை அதிகரித்தது. இன ஆதிக்கம் கொண்ட ஒரு நாட்டில் ஒரு உள்நாட்டு யுத்தத்தின் இரு மடங்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இன, மத பாகுபாடுகளின் ஒருங்கிணைந்த விளைவுகள், அதாவது இரண்டு தனித்துவமான இன, மத குழுக்களிடமிருந்தும், ஒரு உள்நாட்டுப் போரின் குறைந்த வாய்ப்பு என்பதற்கும், அதிகமான வாய்ப்பு, நாட்டையும் தவிர்த்து, கணிசமான மற்றும் நேர்மறையானதாக இருந்தது. இன ஆதிக்கம். சிறுபான்மை குழுக்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்ந்தால், கிளர்ச்சியுற்றுள்ளனர் என்று கூறி, இந்த கலகங்கள் அதிகமாக மக்களை ஒரே மாதிரியான மக்கள்தொகையாக ஏற்படுத்துகின்றன, இதனால் எழுச்சியாளர்களுக்கு மேலும் ஒற்றுமை ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு விளக்குகிறது. இந்த இரண்டு காரணிகளும் பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் குறைக்கலாம். உள்நாட்டு யுத்த வீழ்ச்சியின் அபாயத்திற்கு பங்களிப்பு செய்யும் பல்வேறு காரணிகள் மக்கள்தொகை அளவில் அதிகரிக்கின்றன. ஒரு உள்நாட்டுப் போரின் ஆபத்து, ஒரு நாட்டின் மக்கள்தொகையின் அளவுடன் ஒப்பிடத்தக்கது. கடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கழிந்திருக்கும் அதிக நேரம், மோதல்கள் மீண்டும் நிகழும் என்பதற்கு இது மிகவும் குறைவு. இந்த ஆய்வுக்கு இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன: ஒரு வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பிற குறைகளை அடிப்படையாகக் கொண்டது. மீதமுள்ள நேரம் மூலதனத்தின் தேய்மானம் பிரதிநிதித்துவப்படுத்தலாம், இந்த கிளர்ச்சி சண்டையிடப்பட்டு, மோதலை மறுதொடக்கம் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மாற்றாக, பழைய முறைகளை குணப்படுத்துவதற்கான படிப்படியான செயல்பாட்டை இது வரையறுக்கலாம். புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிதியுதவி கிளர்ச்சி-குறிப்பிட்ட மூலதனத்தின் தேய்மானத்தை கைவிடுகையில், புலம்பெயர்ந்தோரின் நிதி நேரம் கணிசமாக குறையும். தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டித்தும், தமிழர்களின் உரிமை - சுயநிர்ணய போராடாத்தை ஆதரித்து பல்வேறு தமிழ்நாட்டு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலனவர்கள் இலங்கை அரசின் பேரினவாத வன்முறைக் கொடுமைகளுக்கு எதிரானவர்கள் எனினும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக இராணுவ பொருளாதர உதவிகளை வளங்குவது இங்கு குறிக்கத்தக்கது. ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு எதிராகவும் பல தமிழகத் தலைவர்கள் போராட்டம் தொடங்கியக் காலங்களின் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். அன்மையில் இலங்கையின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழ் இனவழிப்பு அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. தமிழீழத் தனியரசுக்கான ஆதரவு நிலையும் தோன்றியுள்ளது. வே. பிரபாகரனின் நிழல்படங்களையும் புலிக்கொடிகளையும் போராட்டங்களின் போது பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. லுஷான் தேசிய நிலவியல் பூங்கா லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது, போயாங் ஏரியின் நீரேந்து பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு கோடைக்காலச் சுற்றுலா மையம் ஆகும். இந்தப் பகுதியில் ஏராளமான தாவோயிய, புத்த கன்பூசியச் சுவடுகள் உள்ளன. ஹுவாங்லோங் ஹுவாங்லோங் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்பான் என்னும் இடத்திலுள்ள மனதுக்கினிய காட்சிகளைக் கொண்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஒரு பகுதியாகும். இது, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து வடக்கு-வடமேற்காக 150 கிமீ தொலைவில் மின்ஷான் மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப் பகுதி, சிறப்பாக ஹுவாங்லோங்கு, கல்சைட்டுப் படிவுகளால் உருவான பல நிறக் குளங்களாலும்; பல்வகைப்பட்ட காட்டுச் சூழல்முறைமை, பனிமூடிய மலை உச்சிகள், அருவிகள், வெப்ப ஊற்றுக்கள் என்பவற்றால் பெயர் பெற்றது. ஹுவாங்லோங், பெரிய பாண்டாக்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. ஹுவாங்லோங் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. திருடப்பட்ட தலைமுறைகள் திருடப்பட்ட தலைமுறைகள் ("Stolen Generations") எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெசு நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். பெப்ரவரி 13, 2008இல் கெவின் ரட் தலைமையிலான ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்தது. கெவின் ரட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சார்பாக அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பழங்குடிகள் தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்டனர். 1788இல் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளாக ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி, இப்பழங்குடிகளைக் கட்டாயமாக துப்பாக்கி முனையில் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றினார்கள். இந்நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் வேட்டையாடப்பட்டனர். 1910 முதல் 1969 வரையில் கிட்டத்தட்ட 100,000 வரையிலான சிறுவர்கள் காவற்துறையினராலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய தம் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். மனித உரிமைவாதிகள், மற்றும் பழங்குடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல்களின் பலனாக, "வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்" ("Bringing them Home") என்ற விசாரணை, "ஆஸ்திரேலிய மனித உரிமை மற்றும் சம உரிமை ஆணை"யின் தலைவர் "சேர் ரொனால்ட் வில்சன்", மற்றும் பழங்குடியினரின் பொதுநல உரிமை ஆணையாளர் "மிக் டொட்சன்" ஆகியோரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்கள் தமது விசாரணைகளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மொத்தம் 535 பழங்குடியனரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600ற்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விசாரணையின் அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் வழங்கப்பட்ட 54 பரிந்துரைகளில் முக்கிய மூன்று பரிந்துரைகளாவன: இந்த ஆவணம் வழங்கப்பட்ட காலத்தில் ஜோன் ஹவார்ட் தலைமையிலான பழமைவாத ஆஸ்திரேலிய லிபரல் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. ஜோன் ஹவார்ட் இவ்வாறு பொது மன்னிப்புக் கேட்பதினால் இத்தலைமுறையினருக்கு பெரும் நட்டஈடு வழங்கப்பட வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பொது மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். ஆனாலும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வட மாநிலம் ஆகியவை அவற்றிற்குரிய மாநில நாடாளுமன்றங்களில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டன. டிசம்பர் 11, 2007 இல் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி அரசு திருடப்பட்ட தலைமுறையினரிடம் தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம்பெறக்கூடிய செய்திகளை பழங்குடித் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இம்மன்னிப்பு வாசகங்களின் மூலம் நட்டஈடு வழங்கல் தவிர்க்கப்பட்டுள்ளது என கெவின் ரட் உறுதியளித்தார். பெப்ரவரி 13, 2008 இல் பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றிற்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார். காம்பியா காம்பியா அல்லது காம்பியா குடியரசு ("The Gambia"), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும். காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது. காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும். இங்குள்ள 90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள். வுலிங்யுவான் வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் மற்றும் ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும். இது பல மட்டங்களில் அமைந்த அருவிகளுக்கும், பல நிறங்களிலான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது. 1992 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. காக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN வகைப்பாட்டு முறைமையின்படி, இது வகை V (காக்கப்பட்ட நிலத்தோற்றம்) என்பதற்குள் அடங்கும். ஜியுசாய்கோ மின்ஷான் மலைத் தொடரின் தென் முனையில் மாகாணத் தலைநகரான செங்டுவுக்கு வடக்கே 330 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் நான்பிங் கவுண்டி என அழைக்கப்பட்ட ஜியுசாய்கோ கவுண்டியின் ஒரு பகுதியாகும். இவ்விடம் சிச்சுவான் மாகாணத்தில், அதன் கான்சு மாகாணத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள ஆபா திபேத்திய கியாங் தன்னாட்சி அதிகாரஎல்லைப் பகுதிக்கு உட்பட்டது. இப்பள்ளத்தாக்கு குறைந்தது 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. சில காப்பு நிறுவனங்கள், 400 - 600 சதுர கிமீ பரப்பளவுகொண்ட இடைநிலைப் பகுதிகளையும் உள்ளடக்கி, இதனை 600 - 700 சதுர கிமீ என்கின்றன. இப்பகுதியின் உயரம் ஷுசெங் நீர்வெளியேற்றப் பகுதிக்கு அண்மையில் 1,998 - 2,140 மீட்டர்கள் தொடக்கம் கான்சிகொங்காய் மலையில் உள்ள செச்சாவா நீர்வெளியேற்றப் பகுதியில் 4,558 - 4,764 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது. சீன மாகாணங்கள் சீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் "ஷெங்" எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன. கொசோவோ கொசோவோ ("Kosovo", அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது. டிரினிடாட் டிரினிடாட் (ஆங்: "Trinidad") என்பது திரினிடாட் டொபாகோ என்னும் நாட்டைச் சேர்ந்த 23 தீவுகளில் மிகப்பெரியதும் மக்கள்தொகை மிகுந்ததுமான தீவு. டிரினிடாட், கரிபியன் பகுதியின் தென்கோடியில் உள்ளது. வெனிசுவேலாவின் வடகிழக்குக் கரையில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 4,769 ச.கி.மீ. ஆகும். மீர் மீர் அல்லது மிர் ("Mir", ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யா) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. "மீர்" என்பது ரஷ்ய மொழியில் "சமாதானம்" அல்லது "அமைதி" எனப் பொருள்படும். விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாகக் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடம் மீருடன் இணைந்தது. மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது. அன்ஹுயி மாகாணம் அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். "அன்ஹுயி" என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், "வான்" மலையும், "வான்" என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை "வான்" என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு. புஜியான் மாகாணம் புஜியான் மக்கள் சீனக் குடியரசின் தென்கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் ஷெஜியாங்யும், மேற்கில் ஷியாங்சியும், தெற்கில் குவாங்டோங்கும், எல்லைகளாக உள்ளன. தாய்வான், தாய்வான் நீரிணைக்கு அப்பால் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. புஜியான் என்னும் பெயர் "புஷூ", "ஜியானூ" என்னும் இரு நகரங்களின் பெயர்களின் சேர்க்கையால் உருவானது. டாங் மரபுக் காலத்தில் இப் பெயர் முதலில் பயன்படுத்தப்பட்டது. புஜியானின் பெரும் பகுதி மக்கள் சீனக்குடியரசின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும், கின்மென் தீவுக் கூட்டமும், மாற்சூவும் தாய்வானில் உள்ள சீனக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியா பிரதேசச் செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேசச் செயலாளர் பிரிவு மிகச் சிறியப் பிரதேசச் செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கேகாலை மாவட்டம் 11 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது 1627 1627 (MDCXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். தாமரன்கோட்டை தாமரன்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட ஒரு வேளாண் ஊர் . பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் தாமரன்கோட்டை அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊர்களைப்போல் தாமரன்கோட்டையும் வகுப்பு அடிப்படையிலான மக்கள் அமைப்பை கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்விலும், பொருளாதாரத்திலும், மக்கள் உயர்வு தாழ்விலும் வகுப்பு முதன்மை பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையானவர்கள் உழவுத்தொழில் புரியம் மக்கள். மற்றையோர் உழவுசார் தொழில் புரிபவர்கள். இந்திய அரசாங்கத்தின் கடந்த கணக்கெடுப்பின்படி தாமரன்கோட்டை வடக்கில் 1,460 வீடுகளில் 6,031 பேரும்(2,872 ஆண்கள், 3,159 பெண்கள்), தாமரன்கோட்டை தெற்கில் 1110 வீடுகளில் 4,499 பேரும்( 2,156 ஆண்கள் 2,343 பெண்கள்) வசிக்கிறார்கள்.. வேளாண்மையே தாமரன்கோட்டையின் முக்கிய பொருளாதாரமாக விளங்குகிறது. காவிரி பாசனத்திட்டத்தின் கீழ் வந்தாலும், கடைமடைப் பகுதியாக இருப்பதால், ஆற்று நீர் பெரும்பாலும் இந்த பகுதி நிலங்களுக்கு வருவதில்லை. ஆழ்குழாய் கிணறுகளில் இருந்தே பெரும்பாலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அது தவிர பருவ மழைகளின் உதவியுடன் பெரும்பான்மையான நிலங்களில் முப்போகம் பயிரிடப்படுகின்றன. இரண்டு போகம் நெல்லும்(சம்பா மற்றும் குறுவை) ஒரு போகம் மாற்றுப் பயிரும்(நிலக்கடலை, உளுந்து மற்றும் எள்) சாகுபடி செய்யப்படுகின்றன. நெல்லைத்தவிர, தென்னை ஒரு முக்கியமான பயிராகும். சமீப காலங்களில், வெகுவான நஞ்சை நிலங்கள், தென்னை பயிரிடப்பட்டு புஞ்சை நிலத்தோப்புகளாக மாற்றப்படுகின்றன. தென்னந்தோப்பின் மூலம் வருடம் முழுவதும் வருமானம் வருவதும், நெல் பயிரிடுவதில் உள்ள அதிக வேலையும், வேளாண் கூலித்தொழிலாளர் பற்றாக்குறையும் அதற்கு முக்கிய காரணிகளாகும். விரிவடைந்துவரும் மக்கள் தொகையையும், மக்களின் பொருளாதார வேலைவாய்ப்புத் தேவைகளையும் உழவுத்தொழிலால் மட்டுமே இப்பொழுது பூர்த்தி செய்யமுடியவில்லை. மாற்றுத் தொழில்களும் பரவலாகி வருகின்றன. பெரும்பாலான இளைஞர்கள் வேலைதேடி சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம், மலேசியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். சமீப காலமாக ஜப்பான், பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு வேலைதேடி புலம் பெயர்வதும் பரவலாகிவருகிறது. எழுத்தறிவு பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. ஆனாலும் தமிழக சராசரியை விட அதிகம் என்று கருதப்படுகிறது. வேளான்மை செழித்து வந்ததால் காலகாலமாக மக்கள் கல்வியின்பால் அதிக கவனம் செலுத்தவில்லை. சமீப காலங்கள், கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு பெரும்பான்மையானோர் குறைந்தபட்சம் கல்லூரி வரை கல்வி பயில முயற்சிக்கின்றனர். இவ்வூரில் ஒரு மேல்நிலைப்பள்ளியும், இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகளும் உள்ளன. ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் உள்ளது. பெரும்பாலான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். இரண்டு அல்லது மூன்று இசுலாமிய மற்றும் கிரித்துவ குடும்பங்கள் தொழில் சார்ந்து வசித்து வருகின்றனர். இது ஒரு சிற்றூராயினும் நிறைய கோயில்கள் உள்ளன. கண்டேசுவரர் கோயில் (சிவன் கோயில்) இவ்வூரின் மிகப்பெரியதும் மிகப் பழைமையானதுமானது இக்கோயில். இது ஒரு பாடல் பெறாத தலம். இதன் வரலாறை இதுவரை யாரும் சரியாக ஆராய்ந்து ஆவணப்படுத்தவில்லை. இவ்வூரின் மிகப்பெரிய நிலக்கிழாரும் இந்த கோயிலே. சுமார் 40 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் இந்த கோயிலுக்கு சொந்தம். வைகாசி மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு சிறப்பாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தவிர, ஒவ்வொரு பிரதோசமும் சிவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய கடவுளாக கண்டேசுவரர் இருக்கிறார். கூடுதலாக, வினாயகர், முருகன், பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. தீக்குதித்த அம்மன் கோயில் தனது கனவனின் சிதையில் இறங்கி உயிர்துறந்த ஒரு மூதாதையரை கடவுளாகக் கொண்டது இக்கோயில். உடன்கட்டை ஏறுவது இவ்வூரில் முன்போ இப்போதோ அதிகமாக புழக்கத்தில் இல்லை. இருப்பினும் இத்தலம் இவ்வூரில் அதிக பக்தியுடனும் மரியாதையுடனும் வணங்கப்படுகிறது. சித்திரை முதல் ஞாயிறன்று, நாற்பது நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த பக்கதர்கள்(ஆண்கள் மட்டுமே) அம்மனின் ஆசி கோரி தீக்குழியில் நடந்து சென்று அம்மனை வழிபடுவர். இதர கோயில்கள் வீரனார், அய்யனார், முனியடியார் போன்ற காவல் தெய்வங்களுக்கான கோயில்களும் உள்ளன. வினாயகர் கோயிலும் அய்யப்பன் கோயிலும் உள்ளன. இவ்வூரில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு முருகன் கோயில் தற்போது சிதைவுண்ட நிலையில் உள்ளது. தாமரன்கோட்டை ஒரு ஊராட்சியாகும். ஊராட்சியின் தலைவர் பதவியை தற்போது திருமதி சுபத்ரா அவர்கள் வகித்துவருகிறார்கள். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தாமரன்கோட்டை பிரதிநிதி பதவியை திருமதி இரஞ்சனா தேவி(திமுக) அவர்கள் வகித்துவருகிறார்கள். இவர் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தலைவரும் ஆவார். வடக்கில் வாட்டாகுடி, அத்திவெட்டி, கிழக்கில் பரக்கலக்கோட்டை, தென்கிழக்கில் செங்கப்படுத்தான்காடு, மஞ்சவயல், மறவக்காடு, மேற்கில் துவரங்குறிச்சி, மன்னங்காடு ஆகிய ஊர்கள் தாமரங்கோட்டையை சுற்றி அமைந்துள்ளன. தமிழன் சடுகுடு மன்றம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரன்கோட்டை கிராமத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளாக இந்த மன்றம் இயங்கி வருகிறது. இதன் முக்கிய பணி தமிழர் திருநாள் பொங்கல்(தை மாதம் முதல் நாள்) அன்று விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகளை நடத்துவதாகும். இடைவிடாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிகழ்சிகளை நடத்திவருவது இதன் முக்கிய சிறப்பாகும். இம்மன்றத்திற்கு நிரந்தரமான அமைப்போ, பதிவு செய்யப்பட்ட சட்ட முறைகளோ இல்லை. ஆர்வமுள்ள உள்ளூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு ஆண்டும் நிகழ்சிகளை நடத்துவார்கள். முற்றிலும் ஆர்வலர்களால் நடத்தப்படும் இம்மன்றம் உள்ளூர் மக்களிடம் மற்றும் கடைகளிலிடம் இருந்தும் நிதி ஆதாரம் பெறுகிறது. இது தவிர போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணமும் ஒரு முக்கிய நிதி ஆதாரமாகும் பண்ணார்கட்டா சாலை "பண்ணார்கட்டா சாலை" கர்நாடகத்தில் உள்ள ஒரு மாநிலச்சாலை. இது பெங்களூரு நகரத்தில் ஆரம்பித்து பண்ணார்கட்டா கிராமம், ஜிகனி வழியாக ஆனெக்கல் தாலுகாவில் முடிவடைகிறது. முன்பு பண்ணார்கட்டா சாலை, ஆனெக்கல் சாலை என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான பண்ணார்கட்டா தேசியப்பூங்கா இந்த சாலையில் இருப்பதால் பண்ணார்கட்டா சாலை ஆனது. வோக் ஹார்ட் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, சாகர் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஜெயதேவா மருத்துவமனை 560 029, 560 076 and 560 079 தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு MN/48 இலக்கம் உள்ள தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இல் உள்ள ஓர் கீழ் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இப்பகுதியானது 1.79 சதுர கிலோமீட்டர் விஸ்தீரணம் உள்ளது. இக்கிராம அலுவலர் பிரிவானது தலைமன்னார் 3ஆம் வட்டாரம், தலைமன்னார் 4ஆம் வட்டாரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தலைமன்னார் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு MN/49 இலக்கம் உள்ள தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இல் உள்ள ஓர் கீழ் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இப்பகுதியானது 4.68 சதுர கிலோமீட்டரில் பரம்பியுள்ளது. இப்பகுதியானது தலைமன்னார் 5ஆம் வட்டாரம் பகுதியை உள்ளடக்கியுள்ளது. சீனப் பொதுவுடமைக் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி (சீபொக) அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனக் குடியரசின் ஆளும் அரசியல் கட்சியாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குவோமிந்தாங் கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, சீனப் புரட்சி எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 மில்லியன்களுக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும். சீனப் பொதுவுடமைக் கட்சி மக்கள் சீனாவிலுள்ள மூன்று அதிகார மையங்களுள் ஒன்றாகும். அரச இயந்திரமும், மக்கள் விடுதலைப் படையும் ஏனைய இரண்டு அதிகார மையங்கள். மக்கள் சீனாவில் இக் கட்சி மிகவும் பலம் வாய்ந்ததாகும். சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங், மாக்காவோ ஆகியவற்றுக்கு வெளியே பொதுவுடமைக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இது ஒரு கட்சி அரசாகச் செயல்படுகின்றது. ஸ்டாலினுக்குப் பிற்பட்ட சோவியத் ஒன்றியத்தில் கட்சியே அரசைக் கட்டுப்படுத்தியது போல அல்லாமல், சீனாவில் கட்சிக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. சீனாவில், ஆட்சி அதிகாரம் அரசு நிலையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆனால் முக்கிய அரச பதவிகள் அனைத்தையும் கட்சி உறுப்பினர்களே வகிக்கின்றனர். கட்சி தனது ஒழுங்கமைப்புப் பிரிவினூடாகப் பதவி நியமனங்களுக்கு உரியவர்களைத் தீர்மானிக்கின்றது. சட்டத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்ட சோவியத் ஒன்றிய நிலைமைக்கு மாறாக, 1990க்குப் பின்னர் சீனாவில் பொதுவுடமைக் கட்சி சட்டத்துக்குக் கட்டுப்பட்டது ஆகும். இதனால் அது அரசின் அதிகாரத்துக்கும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டது ஆகும். தலைமன்னார் மேற்கு இறங்குதுறை கிராம அலுவலர் பிரிவு MN/51 இலக்கம் உள்ள தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இல் உள்ள ஓர் கீழ் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இப்பகுதியானது 2.43 சதுர கிலோமீட்டர் விஸ்தீரணம் உள்ளது. கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவு MN/53 இலக்கம் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவு இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இல் உள்ள ஓர் கீழ் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இப்பகுதியானது 22.34 சதுர கிலோமீட்டர் விஸ்தீரணம் உள்ளது. இது கீழ்வரும் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. குவோமிந்தாங் குவோமிந்தாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சி தாய்வானில் அமைந்துள்ள சீனக் குடியரசின் ஒரு அரசியல் கட்சியாகும். இடங்களின் அடிப்படையில் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய கட்சியும் நாட்டின் மிகப் பழைய கட்சியும் இதுவே. குவோமிந்தாங் அனைத்துலக சனநாயக ஒன்றியத்தின் ஒரு உறுப்புக் கட்சியாகும். மக்கள் முதற்கட்சி (People First Party), சீன புதுக் கட்சி (Chinese New Party) ஆகியவற்றுடன் குவோமிந்தாங்கும் சேர்ந்து பான்-புளூ கூட்டணி எனப்படுகின்றது. இவை சீனாவின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன. இக்பால் நகர் கிராம அலுவலர் பிரிவு 241 D இலக்கம் உடைய இக்பால் நகர் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 337 குடும்பத்தைச் சேர்ந்த 1060 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு 241 E இலக்கம் உடைய பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில்] உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 130 குடும்பத்தைச் சேர்ந்த 460 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வேலூர் கிராம அலுவலர் பிரிவு 241 C இலக்கம் உடைய வேலூர் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 434 குடும்பத்தைச் சேர்ந்த 1772 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு 241 இலக்கம் உடைய நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 183 குடும்பத்தைச் சேர்ந்த 643 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கோபாலபுரம் கிராம அலுவலர் பிரிவு 241 B இலக்கம் உடைய கோபாலபுரம் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 460 குடும்பத்தைச் சேர்ந்த 1620 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வாழையூத்து கிராம அலுவலர் பிரிவு 241 G இலக்கம் உடைய வாழையூத்து கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 237 குடும்பத்தைச் சேர்ந்த 965 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இறக்கண்டி கிராம அலுவலர் பிரிவு 241 A இலக்கம் உடைய இறக்கண்டி கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 427 குடும்பத்தைச் சேர்ந்த 1758 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கும்புறுப்பிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவு 240 A இலக்கம் உடைய கும்புறுப்பிட்டிவடக்கு கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 109 குடும்பத்தைச் சேர்ந்த 351 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவு 240 B இலக்கம் உடைய கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 139 குடும்பத்தைச் சேர்ந்த 541 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கும்புறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவு 240 இலக்கம் உடைய கும்புறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 141 குடும்பத்தைச் சேர்ந்த 548 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். வீரஞ்சோலை கிராம அலுவலர் பிரிவு 239 B இலக்கம் உடைய வீரஞ்சோலை கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 131 குடும்பத்தைச் சேர்ந்த 494 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். குச்சவெளி கிராம அலுவலர் பிரிவு 239 இலக்கம் உடைய குச்சவெளி கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். குச்சவெளி பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே கடற்கரையும் தெற்க்கே திருகோணமலை நகரமும் மேற்கே பதவிசிறிபுர, கோம்பரங்கடவேல மற்றும் மொரவவ பகுதியும் அமையப்பெற்ற ஒரு இயற்கை வளங்களால் சூழப்பட்ட கிராமமாகும். சுமார் 313.33 km² நிலப்பரப்பலவைக் கொண்ட இக்கிராமம் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவை தன்னகத்தே கொண்டுள்ளது. திருகோணமலை நகரத்தில் இருந்து 32 km தொலைவிலும் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 288 KM தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது. கடந்த 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சுமார் 9904 குடும்பங்களையும் 36304 மக்கள் தொகையையும் தன்னகத்தே கொண்ட மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு கிராமமாகும்.  ஜெயாநகர் கிராம அலுவலர் பிரிவு 239 C இலக்கம் உடைய ஜெயாநகர் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 431 குடும்பத்தைச் சேர்ந்த 1671 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். காசிம்நகர் கிராம அலுவலர் பிரிவு 239 D இலக்கம் உடைய காசிம்நகர் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 269 குடும்பத்தைச் சேர்ந்த 928 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். செந்தூர் கிராம அலுவலர் பிரிவு 237 B இலக்கம் உடைய செந்தூர் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 88 குடும்பத்தைச் சேர்ந்த 352 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். புல்மோட்டை - 1 கிராம அலுவலர் பிரிவு 31 I இலக்கம் உடைய புல்மோட்டை - 1 கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 520 குடும்பத்தைச் சேர்ந்த 2066 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். புல்மோட்டை - 2 கிராம அலுவலர் பிரிவு 31 H இலக்கம் உடைய புல்மோட்டை - 2 கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 438 குடும்பத்தைச் சேர்ந்த 1663 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். புல்மோட்டை - 3 கிராம அலுவலர் பிரிவு 31 G இலக்கம் உடைய புல்மோட்டை - 3 கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 357 குடும்பத்தைச் சேர்ந்த 1375 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். புல்மோட்டை - 4 கிராம அலுவலர் பிரிவு 31 J இலக்கம் உடைய புல்மோட்டை - 4 கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 533 குடும்பத்தைச் சேர்ந்த 2221 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். தென்னமரவடி கிராம அலுவலர் பிரிவு 31 E இலக்கம் உடைய தென்னமரவடி கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். பாண்டிய மன்னனுடைய மரக்கலங்கள் வந்து கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தென்னவன் மரவடி என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் தென்னமரவடி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. குமுழமுனை பிரதேசத்தில் கட்டப்படும் யானைகள் செம்மலை குடாவின் ஊடாகவும், தென்னமரவடி ஊடாகவும் தென்னிந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. தென்னமரவடியில் ஒரு புராதன இராஜதானி இருந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான வைத்தியர்கள், பிராமணர்கள் மற்றும் பல குலத்தவர்கள் இங்கு குடியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுடைய பரம்பரையினர் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் முள்ளியவளை, கணுக்கேணி, குமுழமுனை ஆகிய இடங்களில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குமுழமுனைக்கு அடுத்திருக்கும் கரடிப்பூவல் என்ற கிராமத்தில் இருந்த வைத்திய பரம்பரையினர் தஞ்சாவுர், மற்றும் வேதாரணியம் ஆகிய இடங்களில் இருந்து வந்து குடியேறியதாக பரம்பரைக் குறிப்புக்கள் கூறுகின்றன. திரியாய் கிராம அலுவலர் பிரிவு 237 இலக்கம் உடைய திரியாய் கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 150 குடும்பத்தைச் சேர்ந்த 570 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கட்டுக்குளம் கிராம அலுவலர் பிரிவு 237 C இலக்கம் உடைய கட்டுக்குளம் கிராம அலுவலர் பிரிவு ("Kaddukulam") குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 152 குடும்பத்தைச் சேர்ந்த 590 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். கள்ளம்பத்தை கிராம அலுவலர் பிரிவு 237 D இலக்கம் உடைய கள்ளம்பத்தை கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 47 குடும்பத்தைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இரணைக்கேணி கிராம அலுவலர் பிரிவு 239 A இலக்கம் உடைய இரணைக்கேணி கிராம அலுவலர் பிரிவு () குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். 1848 1848 (MDCCCXLVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது. 1840கள் 1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது. முறம் முறம் (அல்லது சொலவு, இலங்கை வழக்கு: சுளகு) என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க ஈழ, தமிழக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். முறத்தை பயன்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். முறத்தில் இருக்கும் கல்/உமி கலந்த தானியத்தை மெதுவாக தட்டி/வீசி எழுப்பி அதை மீண்டும் பிடிக்க வேண்டும். தானியத்திற்கும், கலப்பு பொருளுக்கும் உள்ள எடை வேறுபாட்டால் அவை வேவ்வேறு இடங்களில் விழும். இதை தொடர்ந்து செய்யும்பொழுது தானியம் ஒரு புறமாகவும் கலப்பு பொருள் ஒரு புறமாகவும் பிரியும். தெள்ளுதல் நாவுதல் புடைத்தல் கொழித்தல் முதலியன அரிசி ஆக்கும் மகளிர் முறச்செயல்கள் ஆகும். குறுநொய்யையும்,மணியையும் பிரிக்கத் தெள்ளுவர். தெள்ளுங்கால் முறத்தின் முகப்பு மேலே தூக்கியிருக்கும். அஃது ஏணம் (உயர்வு) ஆகும். பாடிச் செய்யும் செயலே ஆடலாக எண்ணப்பட்டது. இருந்து முகம் திருத்தி ஈரொடு பேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான் பரப்பளவு அடிப்படையில் ஏரிகள் ஏரிகளின் அளவு அது கொள்ளும் இடப்பரப்பு, நீர்க் கொள்ளளவு ஆகியவற்றின் அளவைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. கீழே உள்ள பட்டியல் பரப்பளவு அடிப்படையில் உலகின் பெரிய ஏரிகளின் விபரங்களைத் தருகின்றது. சில ஏரிகளின் பரப்பு காலத்துக்குக் காலம் பெருமளவுக்கு வேறுபடுவது உண்டு. பருவகாலங்களைப் பொறுத்தும், சில சமயங்களில் ஆண்டுக்கு ஆண்டும் இவ் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. வரண்ட பகுதிகளில் உள்ள உப்பு ஏரிகளைப் பொறுத்து இது பெருமளவு உண்மையாகும். மிகச் சிறிய கடலான கஸ்பியன் ஒப்பீட்டுக்காகக் காட்டப்பட்டுள்ளது: * denotes saline lake "குறிப்பு: ஏரிகளின் பரப்பளவில் உசாத்துணை மூலங்களைப் பொறுத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும்." பாரசீகத் தமிழியல் பாரசீகத் தமிழியல் அல்லது பெர்சியன் தமிழியல் என்பது பாரசீக மொழிக்கும், பாரசீக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். பாரசீகம் அல்லது இன்றைய இரானுக்கும் தமிழர்களும் நேரடித் தொடர்பு இறுக்கமாக இருக்கவில்லை. வட இந்தியா அல்லது இந்தி-உருது மூலமே பாரசீக தொடர்பு தமிழுக்கு இருந்தது. சென்னை சீன இயல் மையம் சென்னை சீன இயல் மையம் (Chennai Centre for China Studies) சீனாவைப் பற்றியும் சீன இந்திய அரசியல் அம்சங்களையும் ஆயும் ஒரு மதியுரையகம் ஆகும். இந்த அமைப்பு பெரும்பாலும் இளைப்பாறிய இந்திய அரச நிர்வாக அலுவர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்கள் ஆவர்.  கலியுககாலம் (திரைப்படம்) கலியுககாலம் 1975 இல் ரி. அர்ஜுனா என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட "கலியுக காலே" என்ற சிங்களத் திரைப்படத்தின் சமகாலத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இலங்கைத் திரைப்படமாகும். சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, நீட்டா பெர்னாண்டோ, ஆங்கில வானொலி அறிவிப்பாளர் விஜெய் கொரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை கே. எம். வாசகர் எழுதினார். ஜோக்கிம் பெர்னாண்டோ, விஜயாள் பீற்றர், சுப்புலட்சுமி காசிநாதன், ரி. ராஜகோபால், கே. எஸ். பாலச்சந்திரன், எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன் முதலிய பிரபல இலங்கை வானொலிக் கலைஞர்கள் குரல் கொடுத்தார்கள். தமிழ்த்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர், தற்போது டென்மார்க்கில் வாழும் சண் என்ற இசையமைப்பாளராவார். ரிட்டிகலை மலை ரிட்டிகலை மலை இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் 40 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் (2513 அடி) உயரமான மலையாகும். வடமத்திய மாகாணத்தின் உயரத்தில் கூடிய மலைமுகட்டைக் கொண்ட இம்மலைத்தொடர் 3 மைல் நீளமும் அதன் அகலம் கூடிய இடத்தில் 2 மைல் அகலத்தையும் கொண்டது. இம்மலை செறிவான காட்டினால் மூடப்பட்டுள்ளதோடு இக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உட்பட பல விலங்குகள் காணப்படுகின்றன. மலையில் மேற்பகுதிகளில் பல அறிய தாவரங்கள் காணப்படுகின்றன. மல்வத்து ஆற்றின் நீரேந்துப் பகுதியாக இம்மலை காணப்படுகிறது. உலக்கை அருவி உலக்கை அருவி தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது என்பர். உலக்கை அருவி - காணொளி மிச்சிகன்-ஹுரோன் ஏரி மிச்சிகன்-ஹுரோன் ஏரி என்பது சில சமயங்களில், மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என இரண்டு ஏரிகளாகக் கருதப்படும் நீர்ப் பரப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஏரியாகும். இது வட அமெரிக்கப் பேரேரிகளின் ஒரு பகுதியாகும். நீரியலின் படி இவை இரண்டும் ஒரே ஏரிகளாகும். இரண்டும் ஒரே 577 அடி (176மீட்டர்) உயரத்தில் உள்ளதுடன், இவற்றுக்கிடையில், மாக்கினாக் நீரிணை ஊடாக நீரோட்டமும் உண்டு. இந் நீரிணை 5 மைல்கள் (8.0 கிமீ) அகலமும், 120 அடி (37 மீ) ஆழமும் கொண்டது. மிச்சிகன்-ஹூரோன் ஒரே ஏரியாகக் கொள்ளப்படும்போது வட அமெரிக்கப் பேரேரிகளுள் மிகப் பெரியதாக இருப்பது மட்டுமன்றி, பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகவும் ஆகின்றது. நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், 3,000 கனமைல்கள் (12,500 கிமீ) சுப்பீரியர் ஏரி, 2,000 கனமைல்கள் (8,300 ) நீர்க் கொள்ளளவு கொண்ட மிச்சிகன்-ஹுரோன் ஏரியை விடப் பெரியதாகும். நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், மிச்சிகன்-ஹுரோன் ஏரி உலகின் நான்காவது பெரிய நன்னீர் ஏரியாகும். சுப்பீரியர் ஏரி சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும் மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும். குவாண்டானமோ விரிகுடா குவாண்டானமோ விரிகுடா ("Guantánamo Bay", ஸ்பானிய மொழி: Bahía de Guantánamo) என்ன்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டானமோ மாகாணத்தில்அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். (). இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம் ஆகும். 1903 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி குவாண்டானமோ வீரிகுடாவை ஐக்கிய அமெரிக்கா முடிவற்ற குத்தகைக்கு பெற்றிருந்தது. இவ்விரிகுடாவில் அமெரிக்காவின் இருப்பை தற்போதைய கியூபா அரசு எதிர்த்து வருகிறது. 1969 ஐநாவின் வியென்னா உடன்பாட்டின்படி அமெரிக்க ஆக்கிரமிப்பு சட்டபூர்வமல்லாதது என கியூபா வாதிட்டு வருகிறது. இவ்விரிகுடாவின் தெற்குப் பகுதியில் 1898 இல் கட்டப்பட்ட அமெரிக்காவின் கடற்படைத்தளம் அமைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தளம் போர்க்கைதிகளின் தடுப்புக்கூடமாக இருந்து வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கரடிப் பேரேரி கரடிப் பேரேரி (Great Bear Lake) முழுமையாகக் கனடாவில் இருக்கும் மிகப் பெரிய ஏரியாகும். கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லையில் அமைந்து கனடாவுக்குள் ஒரு பகுதி மட்டுமே இருக்கும் சுப்பீரியர் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை இதை விடப் பெரியவை. இது வட அமெரிக்காவின் மூன்றாவது பெரியதும், உலகின் ஏழாவது பெரியதுமான ஏரியாகும். ஆர்க்டிக் வட்டத்தில் 65 - 67 பாகை வடக்கு அகலக்கோடுகளுக்கும், 118 - 123 பாகை மேற்கு நெடுங்கோடுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இவ்வேரி கடல் மட்டத்திலிருந்து 186 மீ (610 அடி) உயரத்தில் உள்ளது. இந்த ஏரி 31,153 km² (12,028 mi²) மேற்பரப்பளவும் 2,236 கிமீ³ (536 மை³) மொத்த நீர்க் கொள்ளளவும் உடையது. இதன் அதிக பட்ச ஆழம் 446 மீ (1,463 அடி). சராசரி ஆழம் 71.7 மீ (235 அடி). 2,719 கிமீ (1,690 மை) மொத்தக் கரையோர நீளத்தைக் கொண்ட இவ்வேரியின் நீரேந்து பகுதி 114,717 கிமீ² (44,293 மை²) ஆகும். இவ்வேரி நீர் கிரேட் பெயர் ஆற்றினூடாக மக்கன்சி ஆற்றினுள் வெளியேறுகிறது. தென்மேற்கு முனையில் உள்ள, டிலைன், தென்மேற்கு ஆட்சிப்பகுதி மட்டுமே இந்த ஏரிக்கரையில் உள்ள ஒரே குடியிருப்புப் பகுதியாகும். வீராணம் ஏரி வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு 2கி.மீ. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 1011 முதல் 1037 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும். காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் இலிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் நிறைவடைந்தது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 47.5 அடி ஆகும். மலாவி ஏரி மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது நியாசா ஏரி, லாகோ நியாசா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். வெப்பவலய நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை "லிவிங்ஸ்டன் ஏரி" எனவும் அழைத்தனர். மாலாவி ஏரி, 560 - 579 கிமீ நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கிமீ² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது. தென்னாபிரிக்கத் தமிழர் தென்னாபிரிக்கத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட தென் ஆபிரிக்கர்கள் ஆவார். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1860களில் காலனித்துவ பிரித்தானிய அரசால் வரவழைக்கப்பட்ட கூலித் தொழிலார்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களுக்கு தமிழ் பண்பாட்டையும் தமது சமயத்தையும் பேணுவது பல காலமாக நிறவெறி (Apartheid) அரசால் சிரமமாக இருந்தது. நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சியின் பின் இவர்கள் தமது தமிழ்ப் பின்புலத்தை மீட்டெடுத்து, தொடர்புகளை புதுப்பித்து வருகின்றார்கள். தென் ஆபிரிக்கத் தமிழர்களின் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவு குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளை அரசுப் பள்ளிகளில் கற்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 1994 ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் இவை கற்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அரசப் பாடத்திட்டத்தை பின்பற்றாத பள்ளிகளிலும் இந்த மொழிகள் கற்பிக்கப்பட்டன. தற்போது மீண்டும் அரசுப் பள்ளிகளில் அரசப் பாடத்திட்டத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படுகின்றன. குவாசூலு- நடல் பகுதியில் மட்டும் இந்த மொழிகளை பள்ளிகளில் கற்க முடியும். மூன்றாவது மொழிப் பாடமாக கற்க வழி ஏற்பட்டுள்ளது. சில தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. சன் டி.வி, கே டி.வி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ் பேசுவது அரிதாக காணப்பட்டாலும், சில தமிழ்ச் சொற்கள் பண்பாட்டின் மூலம் நிலைத்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, தண்ணீர் என்ற சொல் பேச்சுவழக்கில் மருவி, தண்ணி என்றாகும். தண்ணி என்ற பெயரில் சீட்டாட்டம் ஆடுவர் இங்குள்ள மக்கள். இந்து சமயத்தினர் திருவாசகம் போன்றவற்றைப் படித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அத்திவெட்டி தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட ஒரு விவசாய கிராமம் அத்திவெட்டி. மதுக்கூரிலிருந்து தாமரன்கோட்டை செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. துவரங்குறிச்சி துவரங்குறிச்சி (Thuvarankurichi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஆகும்.பட்டுக்கோட்டையிலிருந்து கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,601 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். விவசாயம் இவ்வூரின் முக்கிய தொழிலாகும். நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடலை,சோளம்,கரும்பு போன்றவைகளும் விளையும் மண்வளத்தைக் கொண்டுள்ளது. காவிரித்தாயின் கிளை நதியாக ஓடும் “நசுவினி ஆறு” கிராமத்தின் மிக்கிய நீர் ஆதாரமாகும். குளங்களும் குட்டிகளும் போதிய அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஊரின் மையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும், பராசக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளது. சித்திரை திருவிழா துவரங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமாக நடைபெறும். அய்யனார் கோவில், காமாட்சி அம்மன் கோவில்,பிடாரி அம்மன் கோவில்களுக்கும் இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். மேல்நிலைப் படிப்பிற்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை,பட்டுக்கோட்டை,காசாங்காடு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சி, தஞசாவூர், சென்னை என ஊர்களுக்கு சென்று பட்டபடிப்பும் பயில்கின்றனர்.மக்களுக்கு வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் துவரங்குறிச்சியின் கடை சந்தைகளிலையே கிடைக்கின்றன. இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ATM, இந்தியா ATM,கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மின்சார வாரியம், பொது நூலகம், அஞ்சல் நிலையங்களும் உள்ளன. மன்னங்காடு மன்னங்காடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.. மன்னங்காடு அமைந்துள்ள பட்டுக்கோட்டை வட்டத்தின் தலைநகரான பட்டுக்கோட்டை நகரம் இவ்வூருக்கு மிக அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாகும். தஞ்சாவூர் மாவட்டம் உள்ளடக்கிய எட்டு வருவாய்க் கோட்டங்களில் பட்டுக்கோட்டை வட்டம் ஒன்றாகும். மன்னங்காடு பட்டுக்கோட்டை நகரில் இருந்து நேராக கிழக்குத் திசையில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து வாழும் இவ்வூரில் பள்ளி, தபால், சாலை, குடிநீர், தகவல் தொடர்பு மற்றும் அனைத்து வசதிகளையும் பெற்றிருக்கிறது. மாநில நெடுஞ்சாலை இல. 66 இக்கிராமத்தின் நடுவில் வடக்கு தெற்கில் செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 25 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மன்னங்காடு கிராமம் தஞ்சை மாவட்டத்தின் தென் கோடியில் புவி வரைபடத்தில் 10º25’ வடக்கு & 79º23’ கிழக்கு எனும் அட்ச, தீர்க்கக் கோடுகள் இணையுமிடத்தில் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி பல வளமான கிராமங்கள் அமைந்துள்ளன. அவை, வடக்கிலிருந்து வலப்புற வரிசையில், காசாங்காடு, தெற்கு வாட்டாகுடி, அத்திவெட்டி, பிச்சினிக்காடு, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, கள்ளிக்காடு ஆகும். காட்டாறும் மற்றும் நீர்நிலைகளும் மன்னங்காடு கிராமத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளதால் அப்பக்கங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரடி சாலை வழிகள் இல்லை. ஆயினும், வடக்கில் காசாங்காடு, தெற்கில் துவரங்குறிச்சி ஆகியவற்றுடன் சாலைத் தொடர்புகள் உள்ளன. மன்னங்காடு கிராமத்தின் மொத்தப் பரப்பளவு, அரசு மதிப்பீட்டின்படி 620.4 எக்டேர் (1533 ஏக்கர், அல்லது உள்ளூர் வழக்கப்படி, 227.5 வேலி பரப்பளவு) ஆகும். 2001 அரசு கணக்கெடுப்பின்படி மன்னங்காடு 2619 மக்களைக் கொண்டிருந்தது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட இக்கிராமம் வளமான வண்டலும், நிலத்தடி நீரும், இயற்கை வடிகாலும் அமையப் பெற்றது. கிணறு, நீர்நிலைகளுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட வாய்க்கால் வழிகளும் பாசனம் மற்றும் உயிரினங்களுக்குத் தேவையான நீரையும் வழங்குகின்றன. இக்கிராமத்தின் மேட்டுப்பகுதிகளில் மக்கள் குடியிருப்பும், தாழ்வுப் பகுதிகளில் நீர்நிலைகளும், விளைநிலங்களும் உள்ளன. மக்கள் வசிக்கும் மேட்டுப்பகுதிகளில் தென்னை, மா, பலா, புளி, வாழை, எலுமிச்சை போன்ற புஞ்சை பயிர்களும், சுற்றியுள்ள நிலங்களில் நெல், வேர்க்கடலை, உளுந்து, சோளம் போன்ற நஞ்சை பயிர்களும் பருவதிர்க் கேற்றாற்போல் விளைவிக்கப்படுகின்றன. இச்சிற்றூரைப் பற்றிய மேல்விவரங்களுக்கு அனுகவும் www.mannankadu.org வாட்டாகுடி தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட ஒரு கிராமம் வாட்டாகுடி. மதுக்கூரிலிருந்து தாமரன்கோட்டை செல்லும் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. சாதியமைப்பை எதிர்த்த போராளி வாட்டாகுடி இரணியன் இவ்வூரைச் சேர்ந்தவர். பரக்கலக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட ஒரு கிராமம் பரக்கலக்கோட்டை. பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது. தென் சிதம்பரம் எனப்படும் புகழ்பெற்ற சிவன்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. செங்கப்படுத்தான்காடு செங்கப்படுத்தான்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதில் உள்ளது. துவரங்குறிச்சியிலிருந்து 2 கிமீதொலைவிலும் தாமரன்கோட்டையிலிருந்து 2 கிமீ தொலைவிலூம் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் கீழும் வருகின்றது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த ஊராகும். கலாசேத்திரா கலாக்ஷேத்திரா ("Kalakshetra") என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1962 இலிருந்து கலாக்ஷேத்திரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது. 1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாக்ஷேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. கலாக்ஷேத்திரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர். தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கற்கை நெறியை முடிப்பவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறப்புப் பாடங்களாக போதிக்கப்படுகின்றன. இக்கலைக் கல்லூரியில் பயின்று புகழ் பெற்றவர்கள் சிலர்: ராதா பேர்னியர், சாரதா ஹொஃப்மன், அடையாறு லட்சுமணன், வி. பி. தனஞ்சயன், இன்னும் பலர். சிலாவியப் பேரேரி சிலாவியப் பேரேரி (Great Slave Lake) கனடாவின் வடமேற்கு ஆட்சிப் பகுதியிலுள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். 614 மீ (2,015 அடி) ஆழம் கொண்ட இது வட அமெரிக்காவின் அதிக ஆழம் கொண்ட ஏரியுமாகும். உலக ஏரிகளின் அளவுகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்பதாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 480 கிமீ (298 மை) நீளமும், 19 தொடக்கம், 109 கிமீ வரையான அகலமும் கொண்டது. மேற்குறித்த ஆட்சிப்பகுதியின் தென் பகுதியில் 28,400 கிமீ² (11,000 ச.மைல்) பரப்பளவைக் கொண்டு இது அமைந்துள்ளது. 2,090 கிமீ³ (501.7 கன மைல்,1.694 பில்லியன் ஏக்கர் அடி). சிலாவே வட அமெரிக்க இந்தியர்களின் (Slavey North American Indians) பெயரைத் தழுவியே இந்த ஏரி அதன் பெயரைப் பெற்றது இதற்கு நீர் வழங்கும் ஆறுகளில் முக்கியமானவை ஹே ஆறு (Hay), சிலாவே ஆறு (Slave) என்பனவாகும். இவ்வேரியின் மேற்குக் கரை காடாகக் காணப்படினும், கிழக்குக் கரையும், வடக்கில் நீண்டுள்ள பகுதியும் மரங்கள் வளர முடியாத பகுதியாக உள்ளன. கிரேட் பெயர் ஏரி, அதாபஸ்கா ஏரி என்பவற்றுடன் சிலாவியப் பேரேரியும் சேர்ந்து, பனியாறு உருகியதால் ஏற்பட்ட மிகப்பெரிய ஏரியாக இருந்தன. மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை (புபொகொ, "New Economic Policy - NEP" / மலாய் மொழி: "Dasar Ekonomi Baru") என்பது மலேசியாவில் மண்ணின் மைந்தர்களின் பொருளாதாரநிலையை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான, சர்ச்சைக்குரிய பங்களிப்புத் திட்டமாகும். 1971 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி துன் அப்துல் ரசாக் இதை அறிமுகப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு இது முடிவுக்கு வந்தபொழுது தேசிய மேம்பாட்டுக் கொள்கை எனும் புதிய திட்டம் இதனைத்தொடர்ந்தது. சீன சிறுபான்மையினருக்கும் மலேய் பெரும்பான்மையினருக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தைக் குறைப்பதற்கான இத்திட்டம் மலேய் அல்லாத மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிட்டதாக் பலர் குற்றம் சாட்டுகின்றனர். புபொகொ முடிவிற்கு வந்துவிட்டாலும் அதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட மலேயருக்கான பல சிறப்பு பங்களிப்புகள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. 1969 ஆம் ஆண்டு மே 13-ம் நாள் தொடங்கிய சீனர்-மலேயர் இனக்கலவரத்தின் பின்னணியில், சீனர்களுக்கும் மலேயர்களுக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தை மட்டுப்படுத்த இக்கொள்கை கொணரப்பட்டது. "எல்லா இனத்தினரிடமும் வருமையை ஒழிப்பதே" இதன் அதிகாரப்பூர்வ நோக்கம். பொருளாதாரத்தின் பங்கில் 30% மண்ணின் மைந்தர்களுக்கு (பூமிபுத்திரர்) கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்காக பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மலேய் மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டன. சுமார் 30 வருடங்களுக்குப்பின்னும் "பொருளாதாரத்தில் மலேயருக்கு 30%" எனும் நோக்கம் நிறைவேறவில்லை என பலர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுபான்மையினர் முக்கியமாக இந்திய சிறுபான்மையினர் தாங்கள் இத்திட்டத்தினால் புறக்கனிக்கப்படுவதாக கருதுகின்றார்கள். மலேயருக்கு சிறப்பிடம் தரும் அரசியல் சாசன பிரிவு 153 ஐ குறைகூறுவதோ, அதை நீக்கவேண்டுமென்று கோருவதோ சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மலேசிய இந்தியர்களின் (இவர்களில் அதிகமானோர் தமிழர்கள்) நிலை மிகவும் பின்தங்கிவிட்டதாகக் கருதி பல இந்திய அமைப்புகள் ஒன்றுகூடி இந்து உரிமை நடவடிக்கை அமைப்பை (HINDRAF) உருவாக்கி போராடி வருகின்றனர். நவம்பர் 2007இலும், பிப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியதை அரசு சட்டவிரோதமாக அறிவித்தது. ஹிந்த்ரஃப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் காலவரையின்றி சிறைபடுத்தப்பட்டுள்ளனர் பனியாற்று ஏரி பனியாற்று ஏரி (glacial lake) என்பது பனியாறு (glacier) உருகியதால் ஏற்பட்ட ஏரியைக் குறிக்கும். இதன் தளத்தில் காணப்படும் உடைந்த கனிமங்கள் அதிக அளவிலான அல்காக்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவதால், சில சமயங்களில், பனியாற்று ஏரிகள் பச்சை நிறம் கொண்டனவாகக் காணப்படுகின்றன. பின் நோக்கிச் செல்லும் பனியாறுகள் பெரும்பாலும் குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ள பள்ளமான பகுதிகளில் பெருமளவு பனிக்கட்டிப் படிவுகளை விட்டுச் செல்கின்றன. உறைபனிக்கால முடிவில் இவை உருகி ஏரிகளாயின. இவ்வேரிகள் பொதுவாக அரைமுட்டை வடிவக் குன்றுகளால் (drumlins) சூழப்பட்டு இருப்பதுடன், பனியாறு இருந்தமைக்கான சான்றுகளான பனியாற்றுப் படிவுகள் (moraines), பள்ளத்தாக்கு வரப்புகள் (eskers), கீறல்கள் (striations) போன்ற அரிப்புக்குறிகள் (erosional features) என்பனவும் காணப்படுகின்றன. பனியாறு பனியாறு ("Glacier") என்பது மிக மிக மெதுவாக ஓடும் (நகரும்) பனியினாலான ஆறு ஆகும். இதனைப் "பனிப் பையாறு" என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய்க் கோளில் பனியாறுகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. பனியாறுகள் நிலப்பரப்பில் மட்டுமே உருவாகும். இது கடலிலும் ஏரிகளிலும் உருவாகும் மெல்லிய பனியிலிருந்து நன்கு வேறுபடும். 99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள்தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான பனியாறுகள் குளிர் காலங்களில் நீரை சேமித்து கொண்டு கோடை காலங்களில் உருகி நீரை கொடுக்கும். பனியாறுகள் நீண்டகால காலநிலை மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாவதனால், இந்தப் பனியாறுகளில் ஏற்படும் மாற்றமானது காலநிலை மாற்றங்களையும், கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தையும் மிக இலகுவாக காட்டும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி பொழிவின் வேகம் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருப்பின் அங்கு பனியாறு உருவாகிறது. இன்னும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவே முக்கியமானதாகும். புவிஈர்ப்பின் காரணமாக ஒரிடத்தில் விழும் பனி அழுத்தம் அடைந்து பனியாறு உருவாகிறது. இந்த அழுத்தம் மற்றும் மேலும் விழும் பனியின் எடையால் பனி தகடுகளுக்கு இடையே உள்ள காற்று வெளியேற்றப்பட்டு பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது. இந்த செய்கை தொடர்ந்து நடைபெறும். மிதவெப்ப நிலங்களில் உருவாகும் பனியாறுகள், விறைத்தலும் உருகுதலுமாக மாற்றங்களுக்கு உள்ளாவதால் குருணை போன்ற நிலையை அடையும். பின்பு இவை அழுத்தத்திற்கு உள்ளாகி பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது. புறத்தோற்றம், வெப்ப இயல்பு, ஆகியவற்றை கொண்டு பனியாறுகளை தரம் பிரிக்கலாம். இவை மலைகளின் உச்சிகளிலும் சரிவுகளிலும் உருவாகும். ஒரு பள்ளத்தாக்கை நிரப்பும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படும். ஒரு மலைதொடரையோ எரிமலையையோ மூடியிருக்கும் பனியாறு பனிக்கவிகை அல்லது பனிதுறை எனப்படும். இவற்றின் பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும். 50,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்டவற்றை பனி படலம் என அழைக்கிரோம். அடியில் உள்ள இட விவரத்தை மறைத்து கொள்ளும் அளவுக்கு இவற்றின் ஆழம் பல கிலோமீட்டருக்கு இருக்கும். தற்காலத்தில் இரண்டு பனி படலங்கள் மட்டுமே உள்ளன. இவை அண்ட்டார்ட்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதியின் மீது உள்ளன. மிக தாராளமான நன்னீர் மூலமாக இவை விலங்குகின்றன. இந்த பனி படலத்தை உருக்கினால் உலக அளவில் கடல் மட்டம் 70 மீட்டர் உயரும். கடற்பகுதிக்குள் நீண்டுருக்கும் படலத்தை பனி புகலிடம் என்போம். இவை மெலிதாகவும் குறைந்த வேகத்துடனும் இருக்கும். குறுகிய, வேகமாக நகரும் பனி படலத்தை பனி நீரோடை என்போம். அண்ட்டார்ட்டிக்காவில் பல பனி நீரோடைகள் பனி புகலிடத்தில் முடிவடைந்திருக்கின்றன. ஒரு சில பனி நீரோடைகள் கடலில் முடிவடைவதும் உண்டு. இப்படி கடலில் முடிவடையும் பனியாறுகளில் உள்ள பனிகட்டியானது கடலை நெருங்கியதும் உடைந்து பனிப்பாறைகள் உருவாகிறது. இவை மிதா வெப்ப நிலங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் இருக்கும். இவை ஆண்டு முழுவதும் உருகி கொண்டே இருக்கும். பனியாறுகள் பனியாற்று முகப்பில் தோன்றி பனியாற்று கழிமுகத்தில் முடியும். பனியாறுகள் பனி அமைப்பு மற்றும் உருகும் நிலையை பொறுத்து மண்டலங்களாக பகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு பனியாற்றில் குவிப்பு மண்டலம் மிகுதியான பரப்பை கொண்டிருக்கும். இது 60 முதல் 70 % பரப்பை கொண்டிருக்கும். பனி குவிப்பு மண்டலம் உருகும் நிலையை பொறுத்து மேலும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. பனிப்பாறைகள் இரண்டு முக்கிய செயல்முறைகள் மூலம் நிலப்பரப்பை அரிக்கிறது: சிராய்ப்பு மற்றும் பறித்தல். பாறைப்படுக்கையின் மீது பனிப்பாறைகள் ஓடும் பொழுது, அது மென்மயாகி பெயர்தெடுக்கப்படுகிறது. இப்படி பெயர்க்கப்பட்ட பாறைகள் பனியாற்றில் உறிஞ்சப்பட்டு அரிப்புக்குள்ளாகிறது. இந்த பனிப்பாறை மேலும் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் போல் பணியாற்றி நிலப்பரப்பை அரிக்கிறது. புவியீர்ப்பு விசை மற்றும் பனிக்கட்டியின் உட்புற சிதைவினால் பனியாறுகள் கீழ் நோக்கி நகர்கின்றன. பனிக்கட்டியானது அதன் அடர்த்தி 50 மீட்டரை தாண்டும் வரை சுலபமாய் முறியத்தக்க திண்மமாய் செயல்படும். இதனால் 50 மீட்டருக்கு கீழே உள்ள பனிக்கட்டி அழுத்தம் காரணமாக நகரும். அடிபாக நழுவு விளைவின் காரணமாகவும் பனியாறுகள் நகரும். பனியாற்றின் அடிபகுதி உராய்வினால் உருகி விட மேல் பகுதி பனிகட்டி எளிதில் சறுக்கி சென்று விடுகிறது. பனியாற்றின் நகர்தல் வேகமானது உராய்வினால் நிர்ணயிக்கப்படுகிறது. உராய்வின் காரணமாக பனியாற்றின் அடிப்பகுதி மெதுவாகவும் மேல் பகுதி விரைவாகவும் நகரும். பள்ளத்தாக்கு பனியாற்றில் உராய்வின் காரணமாக பனியாற்றின் ஓரப்பகுதி மெதுவாகவும் நடுப்பகுதி விரைவாகவும் நகரும். சராசரி வேகமானது பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஒரே நாளில் 20 முதல் 30 மீட்டர் வரை நகரும் பனியாறுகளும் உண்டு. அப்பகுதியின் சரிவு, பனிக்கட்டியின் தடிமன், பனிப்பொழிவின் வேகம், வெப்பநிலை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது செவ்வாyin துருவ பகுதிகளில் பனிக்கவிகை காணப்படுவது பனியாறுகளுக்கான் சான்றாகும். கணினி மாதிரிகள் இது போன்ற ஏராளமான பனியாறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. 35° மற்றும் 65° வடக்கே அல்லது தெற்கே செவ்வாய்க் கோள் பனியாறுகள் வளிமண்டலத்தினால் பாதிக்கபட்டுள்ளது. புவியை போலவே பல பனியாறுகள் பாறைகளால் மூடப்பட்டுள்ளன. ஏக்கர் அடி ஏக்கர் அடி (Acre foot) என்பது கன அளவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு அலகு ஆகும். பொதுவாக, ஏரிகள், நீர்காவிகள், கால்வாய்கள், சாக்கடை நீரோட்ட அளவு, ஆற்று நீரோட்டம் போன்ற பெரிய அளவிலான நீர்வளங்கள் தொடர்பில் இந்த அலகு பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஒரு அடி ஆழமுள்ள நீரின் கன அளவே ஒரு "ஏக்கர் அடி" என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. ஒரு ஏக்கர் 66 அடி x 660 அடி (1 சங்கிலி x 1 பர்லாங்) என்பதால் அது சரியாக 43,560 சதுர அடி ஆகின்றது. எனவே ஒரு ஏக்கர் அடி 43,560 x 1 கன அடியாகும். அமெரிக்க கலன், கன மீட்டர், லீட்டர் ஆகிய கன அளவுகளோடு இது பின்வருமாறு தொடர்புகளைக் கொண்டுள்ளது: புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்தத் தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படுத்தியிருப்பதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. புவியீர்ப்பு திணிவு (mass) கொண்ட ஒவ்வொரு பொருளும் இன்னொரு பொருளை ஈர்க்கிறது என்பது இயற்கையில் உள்ள அடிப்படையான ஒரு தோற்றப்பாடாகும். எனினும் சிறிய பொருட்களுக்கு இடையில் உள்ள இந்த ஈர்ப்புச் சக்தி புலப்படக்கூடிய அளவில் இருப்பதில்லை. கோள்கள், விண்மீன்கள் போன்ற மிகப்பெரிய பொருட்களில் இந்த ஈர்ப்புச் சக்தி புலனாகக் கூடியதாக உள்ளது. புவியைச் சுற்றியும் இந்த ஈர்ப்புப் புலம் (gravitational field) உண்டு. இதனால் புவி பிற பொருட்களைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. இதுவே புவியீர்ப்பு எனப்படுகின்றது. இவ்வீர்ப்பின்போது புவி அது ஈர்க்கும் பொருள்மீது செயற்படுத்தும் விசை புவியீர்ப்பு விசை ஆகும். இவ்விசையின் அளவு புவியின் திணிவிலும், புவியிலிருந்து விசை தொழிற்படும் இடத்தின் தூரத்தின் அளவிலும் தங்கியுள்ளது. ஞாயிறு பக்க வழிப்படுத்தல்: நீலகண்ட தாரணி நீலகண்ட தாரணி அல்லது மஹா கருணா தாரணி எனபது அவலோகிதேஷ்வரருக்கு உரிய ஒரு மகாயான பௌத்த தாரணி ஆகும். இதை மாண்டரீன் சீன மொழியின் டாபேய் ஸோ(Dàbēi Zhòu) என அழைப்பர். "மஹாகருணாசித்த சூத்திரத்தின்" படி இந்த தாரணியை அவலோகிதேஷ்வரர் புத்தர்கள், போதிசத்துவர்கள், தேவர்கள் ஆகியோர் அடங்கிய சபையின் முன் கூறப்பட்டதாகும். இது ஓம் மணி பத்மே ஹூம் என்ற ஆறெழுத்து மந்திரத்தைப் போல கிழக்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற தாரணி ஆகும். இந்த தாரணி பாதுகாப்புக்க்காகவும், தூய்மைபடுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீலகண்ட தாரணி கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையின் மூவரால் சீனத்துக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டது. முதலில் சீ-டுங்'ம்(627-649) அடுத்து பாகவததர்மரும் (650-660) , இதற்கடுத்து போதிருசியும் ( 709 ) இதனை சீனத்துக்கு மொழிப்பெயர்த்தனர். பின்னர் வஜ்ரபோதியும்(719-741), இருமுறை அவரது சீடர் அமோவஜ்ரரும்(723-774) மொழிப்பெயர்த்தனர். 15ஆம் நூற்றாண்டில் தியானபத்திரரும் ஒரு முறை இதை மொழிப்பெயர்த்துள்ளார். இத்தனை பதிப்புகள் இருந்தாலும், அமோகவஜ்ரரின் பதிப்பே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. சீ-டுங்'இன் பதிப்பு ஆதி மூல வடிவாக இருந்தாலும் அது மிகவும் நீளமாகவும் உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த காரணத்தினால் அமோகவஜ்ரரரின் பதிப்பு பெருவாரியான பயன்பாட்டில் உள்ளது. பேர்டினண்ட் மார்க்கோஸ் பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் ("Ferdinand Emmanuel Edralín Marcos"; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். நிக்கிட்டா குருசேவ் நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ் ("Nikita Sergeyevich Khrushchev", ; ஏப்ரல் 17, 1894 - செப்டம்பர் 11, 1971) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினின் மறைவை அடுத்து 1953 முதல் 1964 வரை பதவி வகித்தவர். 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை 1964 இல் பதவியில் இருந்து அகற்றி லியோனிட் பிரெஷ்னேவை கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான கேஜிபியின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார். அசுரர் (பௌத்தம்) அசுரர் (ஜப். "அஷுரா") எனபவர்கள் பௌத்த அண்டவியலின் படி, காமதாதுவின் கீழ் நிலை வாசிகள் ஆவர். இவர்கள் தேவர்களின் எதிரிகள் ஆவர். பௌத்த அசுரர்களும், இந்து மத அசுரர்களும் குணவியலபுகளில் ஒற்றுமையிருப்பினும், பௌத்தத்தில் அசுரர்களுக்கு பௌத்த தொடர்புடைய சில பிரத்யேக குணங்களும் கதைகளும் காணப்படுகின்றது. காமதாதுவின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் ஆசைகளுக்கு உட்பட்டிருந்தாலும், அசுரகள் தான் ஆசைகளுக்கு முற்றிலும் அடிமையாகி கர்வமும் ஆணவமும் உடையவர்களாக உள்ளனர். அவர்களுடைய இந்நிலையினால் அசுரர்களாக பிறப்பெடுப்பது துர்பிறவியாக கருதப்படுகிறது. ஆற்றலும் வன்முறை குணாதிசியமும், போர்க்குணமும், கோபமும் கொண்ட மனநிலையை அசுரர்கள் குறிக்கின்றனர். அசுரகளின் ஆற்றல் மனிதர்களின் ஆற்றலை விட அதிகமாக இருப்பினும், மற்ற தேவர்களை விட குறைவானதாகும். இவர்கள் சுமேருவின் அடித்தளத்தில் வசிக்கின்றனர்.பவசக்கரத்தில் அசுரகள் ஆறாம் நிலையை குறிக்கின்றனர். அசுரகர்களின் தலைவர் அசுரேந்திரன் என அழைக்கப்படுகிறான். அசுரர்களின் பல பிரிவுகள் உள்ளன. வில்லை ஏந்திய தானவேகாசுரர்கள், கொடூர முகமுடைய காலகஞ்சகர்கள் இவற்றும் அடங்குவர். அசுர்களின் தலைவர்களாக வேமசித்திரின், ராகு(வேரோசனன்) மற்றும் பஹராதன் விளங்குகின்றனர். அசுரர்கள் ஆதிகாலத்தில் திராயஸ்திரிம்ச உலகத்தில், சுமேருவின் உச்சியில் மற்ற தேவர்களுடன் வசித்து வந்தனர். சக்ரன் இந்திர பதவியை ஏற்றவுடன், அசுரர்கள் அதை கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்தின் போது, அசுரர் மிகவும் திடமான கந்தபான மதுவகையை அருந்தினர், எனினும் மற்ற தேவர்களை இம்மதுவகையை அருந்துவதற்கு இந்திரன் தடை செய்தி இருந்தார். இதனால், கோபமுற்ற இந்திரன், அசுரர்களை அவர்கள் போதையில் இருக்கும் போதே, அனைவரையும் திராயஸ்திரிம்ச்த்தில் இருந்து விரட்டி, சுமேருவின் அடித்தளத்துக்கு அனுப்பினார். ஆனால் இதை சில காலத்துக்கு அசுரர்கள் இதை அறிந்திருக்கவில்லை. எனினும், தாங்கள் தற்போது வசிக்கும் இடத்தில் திராயஸ்திரிம்சத்தின் பாரிஜாத மரம் மலர்வதற்கு மாறாக சித்தபாலி மரம் மலர்ந்ததை கண்ட பிறகே தங்கள் சுய நினைவுக்கு திரும்பி, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதை உணர்ந்தனர். தங்களுடைய உலகை மீட்டெடுக்க, தேவர்களை நோக்கி போர் புரிய, சுமேருவில் ஏறத்துவங்கினர். அவர்களுடைய பெருவாரியான எண்ணிக்கையால் இந்திரன் அவர்களை நேரடியாக எதிர்கொள்ள இயலவில்லை. திரும்பும் வேளையில், இந்திரன் கருடர்கள் வசிக்கும் காடுகளின் வழியாக செல்ல நேரிட்டது. இந்திரனின் தேர் சென்ற வழியில் கருடர்களின் கூடுகள் அழிக்கப்படுவதை அவர் கண்டார். இதனால், தன்னுடைய தேரோட்டின் மாதாலியிடம், மறுபடியும் திரும்பும் படி ஆணையிட்டார். இந்திரன் மறுபடியும் தங்களை நோக்கி வருவதை கண்ட அசுரர்கள், இந்திரன், இன்னும் மிகப்பெரிய படையுடன் திரும்பி வருவதாக தவறாக கருதி, புறமுதுகிட்டு தாங்கள் இதுவரை கைப்பற்றிய அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினர். தேவர்களுக்கு அசுரர்களுக்கும் பல போர்கள் நடைபெற்றிருப்பினும், இரு சாராருக்கு ஒரு இணக்கமான உடன்பாடு இருந்து வருகிறது. இது இந்திரன், அசுரர் தலைவனான வேமசித்திரினின் மகளை காதலித்து திருமணம் செய்த வேளையில் ஏற்பட்டது. வேமசித்திரின் தன் மகள் சுஜாவின் திருமணத்திற்காக அசுரர்கள் நிறைந்த சபையில் சுயம்வரம் நடத்தினான். அச்சபையில், இந்திரன் ஒரு அசுரனாக மாறுவேடமிட்டு கலந்திருந்தான். சுஜா, மாறுவேடமிட்ட இந்திரனை தேர்ந்தெடுக்க அவரை அவள் மணந்து கொண்டாள் படைத்துறை வானூர்தி படைத்துறை வானூர்தி வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) ஆகும். தற்கால படைத்துறையின் வலுவை உறுதிசெய்யும் முக்கிய காரணிகளாக போர் வானூர்திகளும் வானியப் போர் வலுவும் இருக்கின்றன. படைத்துறை வானூர்திகள் சண்டை வானூர்திகள், சண்டையிடா வானூர்திகள் என இருவகையாக உள்ளன. சண்டை வானூர்திகள் எதிரிகளின் படைத்துறைச் சாதனங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. படைத்துறை வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். வின்னிப்பெக் ஏரி கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள வின்னிப்பெக் ஏரி, மத்திய வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரியாகும். வின்னிப்பெக் நகருக்கு வடக்கே 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ள இந்த ஏரி 24,514 சதுர கிலோமீட்டர் (9,465 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. தென் கனடாவில் உள்ள மிகப் பெரிய ஏரி இது என்பதுடன், கனடாவில் உள்ள ஐந்தாவது பெரியதும், உலகின் பதினோராவது பெரியதுமான நன்னீரேரி இதுவேயாகும். எனினும், ஒப்பீட்டளவில் இது மிகவும் ஆழம் குறைந்தது. வடக்கு மற்றும் கிழக்கு வடிநிலங்களை இணைக்கும் ஒடுங்கிய கால்வாய் 36 மீ (118 அடி) தவிர்ந்த ஏனைய பகுதிகளின் சராசரி ஆழம் 12 மீ (39 அடி) ஆகும். ஒண்டாரியோ ஏரி ஒண்டாரியோ ஏரி, வட அமெரிக்காவின் பேரேரிகளுள் ஒன்றாகும். இதன் வடக்கில் கனடாவின் மாகாணமான ஒண்டாரியோவும்; தெற்கில், ஒண்டாரியோவின் நியாகரா குடாநாடும், ஐக்கிய அமெரிக்காவின், நியூ யார்க் மாநிலமும் எல்லைகளாக உள்ளன. இவ்வேரியின் பெயர், "பெரிய ஏரி" என்னும் பொருளுடைய ஹூரோன் மொழிச் சொல்லொன்றின் அடியாகப் பிறந்தது. கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தின் பெயர் இந்த ஏரியின் பெயரைத் தழுவியே ஏற்படதாகும். பிசியூ பிசியூ (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகளும் கொண்டிருக்கும். சீனாவின் அரண்மனைகளுக்கு முன்னால் காவல் விலங்குகளாக பிசியுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். எல்பா எல்பா ("Elba", இத்தாலிய மொழி: Ilva) என்பது இத்தாலியின் டஸ்கானி பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் கரையோர நகரமான பியோம்பினோவுக்கு 20 கிமீ தூரத்தில் உள்ளது (). டஸ்கான் தீவுகளில் இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் சிசிலி மற்றும் சார்டீனியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரியதும் ஆகும். எல்பாவுக்கு மேற்கே 50 கிமீ தூரத்தில் பிரெஞ்சு தீவான கோர்சிக்கா அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 224 கிமீ² பரப்பளவும் கரையோர நீளம் 147 கிமீ உம் ஆகும். இதன் மிக உயரமான மலை மொண்டே கப்பானே 1,018 மீட்டர்கள் உயரமானது. இத்தீவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000 ஆகும். 1814 இல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். மே 3, 1814 இல் இவன் இத்தீவின் நகரமான் போர்ட்டோஃபெராய்யோவை அடைந்தான். நெப்போலியன் தனது பாதுகாப்புக்காக 600 பேரைக்கொண்ட படைகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டான். பொதுவாக எல்பா தீவை இவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் பிரித்தானியக் கடற்படையினர் இத்தீவைக் கண்காணித்து வந்தனர். மொத்தம் 300 நாட்கள் இத்தீவில் வாழ்ந்த நெப்போலியன் பெப்ரவரி 26, 1815 இல் ஒருவாறாகத் தப்பித்து பிரான்சை அடைந்தான். 1860 இல் இத்தீவு இத்தாலியின் கூட்டமைப்புக்குள் வந்தது. பிரெஞ்சுப் படைகள் ஜூன் 17, 1944 இல் இங்கு புகுந்து தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர். தாலிபான் தலிபான் ("Taliban", பாஷ்டோ மொழி: "طالبان", "டாலிபான்") எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் "தலிபான்" பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது. தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும்் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர் . பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி,மற்றும் பள்ளிகளில் அமைந்துல்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்க்கிறார்கள். த அப்பீல் தி அப்பீல் ஜான் கிரிஷாம் ("John Grisham") என்ற அமெரிக்க எழுத்தாளர், எழுதி 2007ஆம் ஆண்டில் வெளி வந்த புதினம் ஆகும். விறுவிறுப்பான சட்டத்துறைப் புதினங்களுக்குப் பெயர் பெற்ற ஜான் கிரிஷாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டத்துறை புதினத்தை படைத்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெறும் ஒரு பூச்சிக் கொல்லி தயாரிக்கும் வேதிப் பொருள் நிறுவனத்திற்கும், அப்பொருளால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்குமிடையேயான வழக்கின் மேல் முறையீட்டின் பொழுது நீதிபதி தேர்தலில் தண்ணீராக ஓடும் பணத்தின் மூலம் தீர்ப்பு எப்படி மிகக் குறைந்த விலைக்கு சந்தைக்கு வருகிறது என்பதே கதையின் கரு. "எச்சரிக்கை : கதையின் கரு, முடிவு பற்றிய மேலோட்டம் தரப்பட்டுள்ளது" "க்ரேன் கெமிக்கல்ஸ்" நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக பல தொன் எடையுள்ள வேதிக்கழிவுகள் அடங்கியுள்ள பீப்பாய்களை போமோர் எனும் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் புதைக்கிறது. வேதிப்பொருள் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால் அதனை பயன்படுத்தும் அவ்வூர் மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். பிரச்சனை பெரிதாவது தெரிந்ததும் க்ரேன் அதனது உற்பத்தி பிரிவை மூடிவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் க்ரேன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முயல்கிறார்கள். க்ரேன் எனும் பெரிய நிறுவனத்தை எதிர்த்து போராடி நீதிமன்றம் செல்ல பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறுக்கிறார்கள். போமோரில் பிறந்து வழக்கறிஞரான மேரி க்ரேசும் அவரது வழக்கறிஞர் கணவரும், ஜேனட் பேக்கர் என்பவரின் வழக்கை நீதிமன்ற ஜூரி விசாரணைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வழக்கின் செலவிற்காக தங்களது சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையிலும் தளராமல் போராடி வருகிறார்கள். வழக்கின் தீர்ப்பில் சான்றாயம்(Jury) க்ரேன் கெமிக்கல்ஸ் ஜேனட் பேக்கருக்கு 41 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறது. க்ரேன் கெமிக்கல்சின் பங்கு நான்கில் ஒருபங்கிற்கு வீழ்ச்சியடைகிறது. நிறுவனம் திவாலாகும் நிலையில், அதன் அதிபதி கார்ல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு வரும்பொழுது எப்படியும் சாதகமான தீர்ப்பைப் பெற முயல்கிறார். இடையில் வரும் உச்ச நீதிமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கக்கூடிய ஒரு நீதிபதியை வேட்பாளராக்கி அவர் வெற்றி பெற பணத்தை செலவழித்து முயற்சி செய்கிறார். "எச்சரிக்கை முடிவு" நீதிபதிகள், நியமன முறையில் அல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்விளைவுகள் பற்றி அலசுகிறது. அதேபோல பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் எப்படி தேர்தல்களை மறைமுகமாக திரித்து தங்களது சுய நலன்களை முன்னிறுத்திக் கொள்கின்றன என்பதையும் காண்பிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு மதம் எப்படி ஒரு நிகரற்ற தேர்தல் வெற்றி கருவியாக இருக்கின்றது என்பதையும் படம்பிடிக்கிறார். மும்மணிகள் (பௌத்தம்) மும்மணிகள் அல்லது திரிசரணம் ("three jewels", மூன்று இரத்தினங்கள்) என்பது பௌத்தர்கள் சரணம்(பௌத்தம்) அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் திரிசரணம் எனவும் குறிப்பிடுவதுண்டு. மூன்று மணிகள்: இந்த திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல், பௌத்த சடங்குகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஜ்ஜிம நிகாயத்தில் குழந்தை பருவத்தில் உள்ளவர்களின் சார்பாகவும், பிறக்காத குழந்தைகளின் சார்பாகவும் கூட பிறர் சரணமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் ஒருவதை அதிகாரப்பூர்வமாக பௌத்தராக ஆக்குவதாக பொதுவாக நம்பப்படுகிறது. எனவே, தேரவாத நாடுகிளில், புத்த பிக்ஷுகளும் இதை அவ்வப்போது உச்சாடனம் செய்வர். இந்த திரிசரணத்தின் சீன/ஜப்பானிய மகாயன பதிப்பு, தேரவாத பதிப்பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது. திபெத்திய பௌத்த சரணம் பௌத்தத்தில் திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கம் மனதில் புத்தம், தர்மம் மற்றம் சங்கத்தின் பிரதிபிம்பமாக கருதப்படுகிறது. இந்த குணங்கள் மஹாபரிநிப்பான சூத்திரத்தில் தர்மத்தின் பளிங்கு என அழைக்கப்படுகிறது. இது "பளிங்கு போன்ற மனத்தினை" அடைய உதவுவதாக கூறப்படுகிறது. கீழிருந்து மேலாம், திரிரத்தின சின்னம், கீழ்க்கண்ட கூறுகளை கொண்டுள்ளது. புத்த பாதத்தில் திரிரத்தினத்தை சித்தரிக்கும் போது, திரிசக்கரத்தினை சுற்றி தர்ம சக்கரம் இடப்படுகிறது. திரிரத்தின சின்னம் சாஞ்சியில் உள்ள கொடிக்கம்பத்தில் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு) உள்ள சிற்பங்களில் காண முடியும். மேலும் புத்த பாதத்திலும் இது காணப்படுகிறது கி.மு முதலாம் நூற்றாண்டில், பஞ்சாப் பகுதியை ஆண்ட குனிந்தர்கள் வெளீயிட்ட நாணயங்களில், இந்த திரிரத்தின சின்னம், ஸ்தூபியின் மீதுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. குஷன் அரசர்கள் வெளியிட்டுள்ள சில நாணயங்களிலும் இது காணப்படுகிறது. இந்த திரிரத்தினம் சுற்றி மூன்று தர்மசக்கரங்களும் அவ்வப்போது இடப்படுவதுண்டு. இந்துக்களால் திரிரத்தின சின்னம் நந்திபாதம் என அழைக்கப்படுகிறது. தர்மசக்கரம் தர்மசக்கரம்(பாளி:தர்மசக்க, திபெ "chos kyi 'khor lo", சீனம் "fălún" 法輪) என்பது தர்மத்தினை குறிக்கும் ஒரு சின்னம் ஆகும். இதை போன்ற ஒரு சின்னம் சமண மதத்திலும் பயன்பாட்டில் உள்ளது. தர்மசக்கரம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாகும். பௌத்த சமயத்தில், தர்மச்சக்கரமானது பிறவிச் சுழற்சியைப் பற்றிய கருத்துக்களை சித்தரிக்கிறது. முதன் முதலில் அசோகர் நிறுவிய தூபிகளில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டதால், இதனை அசோகச் சக்கரம் என்றும் அழைப்பர். தர்மசக்கர சின்னம், எட்டு கம்பிகளோ அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகளையோ கொண்டுள்ளது. இந்திய கலைகள், மிகப்பண்டைய பௌத்த சின்னமாக இது கருதப்படுகிறாது. தர்மசக்கரம், அனைத்து பௌத்த பௌத்த நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் எளிய நிலையில், தர்மசக்கரம் பௌத்த மதத்தின் பரிபூரண சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தர்ம சக்கரத்தின் எட்டு ஆரங்கள், பௌத்தத்தின் எட்டு உயரிய வழிகளை குறிக்கிறது. அறியாமை அழிக்கும் விதமாக கூரிய முனைகளுடன் உள்ளதாக கொள்ளப்படுகிறது. தர்ம சக்கரத்தின் பிற விளக்கங்கள்: தர்மசக்கரத்திற்குரிய முத்திரை தர்மசக்கர முத்திரை என அழைக்கப்படுகிறது. தர்மசக்கரம் திபெத்திய பௌத்தத்தில் எட்டு மங்கள சின்னங்களுள் (அஷ்டமங்கலம்) ஒன்றாக கருதப்படுகின்றது. புத்தர் ஒரு முக்கிய போதனையை நிகழ்த்துவது தர்மசக்ர சுழற்சி என கொள்ளப்படுகிறது. இதை வடமொழியில் தர்மசக்ர பிரவர்த்தனம் என அழைக்கின்றனர். அனைத்து பௌத்த பிரிவுகளும், புத்தர் முதன்முதலில் சார்நாத்தில் மான் பூங்காவில், ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்து நிகழ்ச்சி, முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதை குறிக்கும் வகையிலே, சில சமயம், தர்மசக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுவதுண்டு. தேரவாத பௌத்தத்தில் இது மட்டும் அங்கீகரிப்பட்ட "தர்மசக்ர சுழற்சி" ஆகும். பாளி சூத்திரங்களில் இடம்பெறாத வேறெந்த சுழற்சியும் தேரவாத பௌத்தத்தினரால ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனினும் மகாயானம் மற்றும் வஜ்ரயானம் பல்வேறு சுழற்சிகளை குறிப்பிடுகிறது. இச்சுழற்சிகளுள் புத்தர் பிரக்ஞா பாரமித சூத்திரங்களை உபதேசித்தது, மகாவைரோசன சூத்திரத்தை உபதேசித்தது, அபிதர்மத்தை உபதேசித்தது ஆகியவை கூடுதலாக கொள்ளப்படுகிறது. யூனிகோடில், தர்மசக்கரம் "Wheel of Dharma" என அதன் எட்டுக்கோல் வடிவத்தில் காணப்படுகிறது. இதன் யூனிகோடு குறியீடு U+2638 (☸). சாரநாத்த்தில் உள்ள, தூபியில் உள்ள அசோகரின் தர்மசக்கரம் இந்திய தேசியக் கொடியின் நடுவில் உள்ளது. இந்த தர்ம சக்கரம் தர்மத்தை குறிக்கிறது. இதே சின்னம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ முத்திரையிலும் காணப்படுகிறது. சமண மதத்திலும், தர்மசக்கரம் அகிம்சையின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இந்து மதத்திலும் திருமாலின் சின்னமாக சுதர்சன சக்கரம் காணப்படுகிறது. எனினும் இது தர்மத்தின் குறியீடாக இல்லாமல், திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றாக, சக்ராயுதமாக விளங்குகிறது. அஷ்டமங்களம் அஷ்டமங்களம் என்பது தார்மீக மதங்களில் குறிப்பிடப்படும் எட்டு மங்களகரமான சின்னங்களை குறிக்கும். திபெத்திய பௌத்தத்தின் படி, இவ்வஷ்டமங்கள் யிதங்களின் குணங்களை குறிக்கும். இவையனைத்து தெளிவுபெற்ற மனத்தின் குணங்களாக கருதப்படுகின்றன. பலவேறு பாரம்பரியங்கள் வெவ்வேறு சின்னங்கள் அஷ்டமங்களமாக கருதப்படுகின்றன. அஷ்டமங்களம் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் சுப காரியங்களின் போது பயன்படுத்தப்பட்டன. பௌத்தத்தில், இவை புத்தர் போதிநிலை அடைந்தவுடன் தேவர்கள் புத்தர்களுக்கு அளித்த எட்டு நிவேதனங்களை குறிக்கின்றன. அஷ்டமங்களம் என்றால் எட்டுவிதமான மங்களங்கள் என்று பொருள். திபெத்திய பௌத்தம் கீழ்க்கண்ட குறிப்பிட்ட அஷ்டமங்கள சின்னங்களை பயன்படுத்துகிறது. இந்த சின்னங்களுக்கான பொதுவான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. பல்வேறு பாரம்பாரியங்களை இவ்வஷ்டமங்களை வெவ்வேறுவிதமாக அடுக்குகின்றன நேபாள பௌத்தம்: சீன பௌத்தம்: அஷ்டமங்களங்கள் பௌத்தத்தில் மட்டுமல்லாது, பிற தார்மீக மதங்களான இந்து மதம் மற்றும் சமணம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. இவை அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சமண மதத்திலும் அஷ்டமங்கள சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன திகம்பர பிரிவு: சுவேதாம்பரப் பிரிவு: பால்காஷ் ஏரி பால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும். ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தின் ஒரு பகுதியாகும். இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது. பீரங்கி பாரிய வெடிகுண்டுகளை உந்தும் அல்லது செலுத்தும் ஆயுதம் பீரங்கி ஆகும். பீரங்கியால் செலுத்தப்படும் உந்துகணை பீரங்கியால் வழங்கப்படும் தொடக்க உந்து விசையை வைத்து இயற்பியல் விதிகளுக்கு இணங்கி சென்று விழுந்து வெடிக்கும். பீரங்கி ஒரு இராணுவத்துக்கு சூட்டு வலுவைத் தந்து, பாரிய இலக்குகளை அழிக்க பயன்படுகின்றது. பீரங்கிகள் கி. பி. 1000 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஆகும். ஏவுகணை ஏவுகணை ("missile") என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை. ஏவுகணைகள் பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, தாரை இயந்திரம் மூலமாகவோ தமது உந்து விசையை பெறுகின்றன. பொதுவாக ஏவுகணைகள் வெடிபொருள்களை தனது வெடிமுனையாக கொண்டாலும், பல நவின ஏவுகணைகள் வேதியியல் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும், உயிரியல் ஆயுதங்களையும் வெடிமுனையாக கொண்டு செல்ல வல்லவை. வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் நான்கு முக்கிய அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவையாவன: ஏவுகணைகள் தமது இலக்கினை பல வழிகளில் கண்டறிய இயலும். இலக்குகள் நகரக்கூடிய வாகனங்களாகவோ, நிலையானவையாகவோ இருக்கலாம். பொதுவாக ஏவுகணைகள் தமது நகரும் இலக்கினை, இலக்கில் இருந்து வரும் கதிரியக்கத்தின் மூலமே அறிந்து கொள்ளுகின்றன. உதாரணமாக இலக்கு ஒர் வானூர்தியாக இருப்பின் அவ்வூர்தியில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களோ, ரேடியோ கதிர்களோ, வெப்ப கதிர்களோ இலக்கினை கண்டறியும் வழியாக அமைகிறது. இலக்கினை தொடர்ந்து கண்காணித்து தாக்க ஏவுகணைகள் தம்முள் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்புகளை (எ.கா கதிரலைக்கும்பா) சார்ந்துள்ளன. சில ஏவுகணைகள் தாம் ஏவப்பட்ட ஏவுமேடையில் உள்ள வழிகாட்டி அமைப்புகளின் துணையுடன் இலக்கை அடைகின்றன. மற்றொரு வகையான வழிகாட்டி அமைப்பு ஏவுகணையின் மேல் பொருத்தப்பட்டுள்ள படக் கருவி மூலம் பிடிக்கப்படும் காட்சிகளை கொண்டு ஏவுகணையை இலக்கு நோக்கி கணிப்பொறி மூலமோ, மனித துணை கொண்டோ செலுத்துகிறது. பல ஏவுகணைகள் மேல் கூறப்பட்ட பல முறைகளை ஒருங்கே கொண்டு துள்ளியமாக தாக்கவல்லவை. அலைநீளம் இயற்பியலில், அலைநீளம் என்பது ஓர் அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலைநீளமாக கொள்ளப்படும். அலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான "லெம்டாவினால்" (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும். அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும். மாறாத வேகம் "v" ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் "λ" ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும். இங்கு "v" எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, "f" ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும். அதிர்வெண் பவசக்கரம் பவசக்கரம்(பாளி:பவசக்க, சமஸ்கிருதம்:भवचक्र) என்பது சம்சாரத்தின் சிக்கலான வட்டவடிவான சித்தரிப்பாகும். இது பெரும்பாலும் திபெத்திய பௌத்தத்தில் பயன்பாட்டில் உள்ளது. சம்சாரம் என்பது பிறப்பு இறப்பின் சுழற்சியாகும். இந்த சுழற்சியைப் போதி நிலையை அடைவதன் மூலமே நிறுத்த இயலும். "பவ"("भव") என்ற வடமொழிச்சொல்லுக்கு இருத்தல், பிறப்பு,தோற்றம் என பல்வேறு பொருள்கள் உண்டு பௌத்தத்தின் படி, உயிர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்படுவது கர்மத்தின் பலனாகத்தான். ஒருவரின் கர்மம் தான், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒருவரை பிறக்கச்செய்கிறது. இந்த மண்டலங்களில் இருந்து விடுபடுவதான பௌத்தத்தின் நோக்கமாகும். பவசக்கரம் சிலசமயம் ஐந்து பகுதிகளுடன் காணப்படும். எனினும் சமீபத்திய மற்றும் பொதுவாக ஆறு பகுதிகளே காணபப்டுகின்றன பவசக்கரத்தின் ஆறு குறுக்குகம்பிகளுக்கு நடுவில் இருக்கும் பகுதிகள் போதியை உணராத நிலையினை குறிக்கிறது பவசக்கரத்தின் பெயர்கள் பவசக்கரத்தை பொதுவாக மிகவும் உக்கிரமான உருவம் கொண்டவரின் கைகளிலோ அல்லது தாடைகளின் நடுவிலோ, கால்களிலோ காணப்படும். இந்த உருவமே சக்கரத்தை சுழற்றுவதாக நம்பப்படுகிறது. பொதுவாக, யமன் இவ்வாறு பயங்கரமாக பவசக்க்ரத்தை சுற்றுவதாக சித்தரிப்பதுண்டு. பவசக்கரத்தின் மேல் இடது மூலையிலும் மற்றும் மேல் வலது மூலையிலும் ஒரு உருவம் எப்போதும் காணப்படும். இந்த உருவம் அல்லது சின்னம் ஒவ்வொரு சித்தரிப்புக்கும் வேறுபடாலம். பொதுவாக சந்திரன், புத்தர் அல்லது போதிசத்துவர் இவ்வாறாக சித்தரிக்கப்படுவர். சில பௌத்த சின்னங்களும் பவசக்கரத்தின் வெளி விளிம்பு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு பகுதிகளுக்கு பன்னிரண்டு நிதானங்களின் பெயர்கள் இடப்படுகின்றன இந்த சக்கரம் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பகுதிகளும் கீழ்க்கண்ட ஆறு லோகங்களை குறிக்கும் எப்போதுமே தேவர்களின் உலகம் சக்கரத்தின் உச்சியில் இருக்கும். அசுரர்களின் உலகமும், மானுட உலகமும் சக்கரத்தின் மேல் பாதியில் தேவலோகத்தினை ஒட்டி, எதிரெதிர் திசையில் இருக்கும். ஆனால் எது வலது புறம், மற்றும் எது இடது புறம் என்பது மாறுபடும். மிருகங்களின் உலகமும் பிரேதங்களின் உலகமும் சக்கரத்தின் கீழ் பாதியில், அசுரலோகத்தினை ஒட்டி காணப்படும். மிருகலோகம் மற்றும் பிரேத லோகத்தின் இடையில், சக்கரத்தின் அடிப்புறத்தின் நரகம் காணப்படும் சில சமயம், தேவலோகமும், அசுரலோகமும் ஒன்றினைக்கப்பட்டு, சக்கரம் வெறும் ஐந்து பகுதிகளுடன் மட்டும் கூட காணப்படும் இந்த ஆறு மண்டலங்களிலும் , ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவர் அம்மண்டலங்களில் உள்ள உயிர்கள் நிர்வாணம் அடைவதற்காக உபதேசித்துக்கொண்டிருப்பதாக சித்தரிக்கப்படும் சக்கரத்தின் மையப்பகுதியின்(hub) வெளிப்பகுதி(rim) கறுப்பு மற்றும் வெள்ளை நிறமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையான(Exoteric) ஆய்வுரைகளில் வெள்ளை நிறம், போதியையும் ஆனந்தத்தையும் நோக்கிய பாதை என்றும், இருண்ட பகுதி உயிர்கள் நரகத்தை நோக்கி செல்வதை குறிப்பிடவன என சொல்லப்பட்டுள்ளது. சக்கரத்தின் மையப்பகுதியில், பௌத்தத்தின் மூல கிளேஷம்(மூன்று விஷங்கள்) முறையே பன்றி, நாகம், சேவல் ஆகவோ அல்லது ஆனந்த சக்கரமாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும். நாகம் ஆலஞ்சி கடற்கரை ஆலஞ்சி கடற்கரை இயற்கை எழில் கொண்ட அழகிய சுற்றுலா தலமாகும். இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும், குளச்சலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிறிய இக்கடற்கரை அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. கன்னியாகுமரியைப் போலவே சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவை இங்கும் காணலாம். ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயமும் பார்க்க வேண்டிய இடமாகும். It contains wrong info about alanji beech.. அடிமை தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை () எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார். ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது. ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளிலும், மறைவாக அடிமைகளை வைத்து வேலை வாங்குவோர் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் சுமார் 2.7 கோடி அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில் அடிமைமுறையின் வடிவம் சாதியாகும். அடிமைத்தனம் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை வரலாற்றில் நீடிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர். ஆன் அரசமரபு ஆன் அரசமரபு ("The Han Dynasty") கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது. இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ (Liu) என்னும் இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஆண்ட காலம் சீன வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் பெரும்பான்மைச் சமூகத்தினர் இன்றும் தம்மை ஆன் மக்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர். ஆன் அரசமரபினர் காலத்தில், சீனா அதிகாரபூர்வமாகக் கன்பூசிய மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டது. இக்காலத்தில் சீனா, வேளாண்மை, கைப்பணி, வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்ததுடன், மக்கள்தொகையும் ஐந்தரைக் கோடியைத் தாண்டியிருந்தது. அதே வேளை ஆன் பேரரசு, தனது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கைக் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இது பின்னர் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகக் குலைந்து போயிற்று. ஆன் அரசமரபை இரண்டு பிரிவுகளாக அடையாளம் காண்பது உண்டு. முதலாவது, முந்திய ஆன் அரசமரபு அல்லது மேற்கத்திய ஆன் அரசமரபு என்றும், மற்றது பிந்திய ஆன் அரசமரபு அல்லது கிழக்கத்திய ஆன் அரசமரபு என்றும் அழைக்கப்படுகிறது. முந்திய ஆன் அரசமரபு, கி.மு 206 தொடக்கம் கிபி 24 வரையும் சாங்கானில் இருந்து ஆண்டு வந்தது. அடுத்தது, கி.பி 25 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 220 வரை லுவோயாங்கிலும் இருந்தது. ஆன் பேரரசில் நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு எளியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஏற்கனவே சிறந்திருந்த சீனப் பட்டுத்தொழில் மேலும் சிறப்புற்றது. கி.மு. 190ல் ஊயி (Hui) பேரரசனால் தொலைநோக்குப் பார்வையில் பட்டுப்பாதை உருவாக்கப்பட்டது. இதனால் சீனா, இந்தியா, இன்னும் சில ஆசிய நாடுகள், ஐரோப்பா போன்றவை மிகப்பயனடைந்தன. அரசப்பதவிகளுக்கு நாடளாவிய தேர்வுகளும் கல்வி நாட்டுடைமையும் ஆக்கப்பட்டது. இன்னும் பல வளர்ச்சித் திட்டங்கள் அடிப்படை தேவைகளையும் ஆடம்பர ஆசைகளையும் நிறைவு செய்ததால் ஆன் பேரரசு காலம் சீனாவின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. பல்குழல் ஏவுகணை ஒரேதரத்தில் பல உந்துகணைகளை ஏவக் கூடிய ஆயுதமே பல்குழல் உந்துகணை ஆகும். இவை தொகையாக உந்துகணைகளை ஏவி, எதிரியை நிலைகுலைய வைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்த கூடியவை. பொதுவாக இவை ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வேண்டிய களத்துக்கு விரைவாக எடுத்துசெல்ல கூடியவை. பட்டியல் தகவல்களை ஒழுங்கமைப்பதற்கு பட்டியல் ஒரு வழிமுறையாகும். பல தரப்பட்ட தகவல்களை வகுத்து தொகுக்க பட்டியல் பயன்படுகின்றது. கணினியிலும் தகவல்கள் சேகரிக்க, சேமிக்க பட்டியல் அமைப்பு பயன்படுகின்றது. http://people.howstuffworks.com/extraordinary-lists.htm ஸ்ரீவத்சம் ஸ்ரீவத்ஸம் என்பது தார்மீக மதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மங்களகரமான சின்னம் ஆகும். இந்த சின்னம் திருமாலின் மார்பு மீது காணப்படும் மரு, இலக்குமியாக இந்துக்களால் கருதப்படுகிறது. மேலும் இந்த சின்னம், சமண மதத்தில் தீர்த்தங்காரின் மார்பிலும் இந்த மருச்சின்னம் காணப்படுகிறது. பௌத்த மதத்திலும், இச்சின்னம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பர்மிய மாநிலமான, ரகைன் மாநிலத்தின் கொடியிலும் ஸ்ரீவத்ஸம் காணப்படுகிறது. சேவல் சேவல் என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. கோழி என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும். சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய கொண்டையாகும். அதேவேளை சேவல் கூவும் ஆற்றல் கொண்டது. இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, ஆறாம் சுற்று இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான ஆறாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்னர் ஜப்பானில் இருக்கும் Hakone நகரில் மார்ச் 31, 2003 - மார்ச் 21, 2003 நாட்களில் இடம்பெற்ற ஆறாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். 1704 1704 (MDCCIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது. ஆட்மிரால்ட்டி தீவுகள் ஆட்மிரால்ட்டி தீவுகள் ("Admiralty Islands") என்பன பப்புவா நியூ கினியில் மானுஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிஸ்மார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள 18 தீவுகளைக் குறிக்கும். இது மானுஸ் தீவுகள் ("Manus Islands") எனவும் அழைக்கப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு 2100 சதுர கிலோமீட்டர்கள் (810 சதுர மைல் ஆகும்). இக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகள் மானுசுத் தீவு (Manus Island), லாஸ் நேகிரோஸ் தீவு (Los Negros Island), டொங் தீவு ஆகியனவாகும். இத்தீவுகளில் முதன் முதலாக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்காசியாவில் இருந்து மனிதர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1616 இல் டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஷவுட்டன் என்பவர் இத்தீவைக் கண்டறிந்தார். 1884 முதல் 1914 வரை ஜெர்மனியர்களின் கட்டுப்ப்பாட்டில் இருந்தது. நவம்பர் 1914 இல் ஆஸ்திரேலியக் கடற்படையினர் இங்கு வந்திறங்கினர். ஜெர்மனியர்களுடன் இடம்பெற்ற சிறு போரின் பின்னர் இது ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஏப்ரல் 7, 1942 இல் ஜப்பானியர்கள் வந்திறங்கித் தீவுகளைக் கைப்பற்றினர். 1944 இல் இரண்டாம் உலகப் போரின் கூட்டுப் படைகளினால் தாக்கப்பட்டது. திபெத்திய மொழி திபெத்திய மொழி முதன்மையாக திபெத்திய மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். திபெத்திய மொழியின் பல வடிவங்கள் வட பாகிஸ்தானிலும், இந்திய பகுதிகளான பால்ஸ்திஸ்தான் மற்றும் லடாக் ஆகியவற்றிலும் பேசப்படுகிறாது. இந்தப்பகுதிகள் அனைத்தும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்திய மொழி பௌத்த இலக்கியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வஜ்ரயான தந்திர பௌத்த நூல்கள் திபெத்திய மொழியிலேயே உள்ளன. ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை (U.S. Green Building Council - USGBC) என்பது ஒரு இலாப நோக்கமற்ற வணிக நிறுவனம் ஆகும். இது, கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றில் பேண்தகு தன்மையை உயர்த்துவதில் ஈடுபட்டுள்ளது. ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (லீட்) என்னும் தர அளவீட்டு முறைமை; சூழலுக்குத் தீங்கற்ற கட்டிடப் பொருட்கள், பேண்தகு கட்டிடக்கலைத் தொழில் நுட்பம், இது தொடர்பான பொதுக் கொள்கை ஆகியவை உள்ளிட்ட பசுமைக் கட்டிடத் தொழில் துறையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கிறீன்பில்ட் (Greenbuild) என்னும் மாநாடு ஆகியவற்றை உருவாக்கியதன் மூலம் இந் நிறுவனம் பரவலாக அறியப்பட்டது. ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை, கட்டிடத் தொழிலின் பல துறைகளையும் சேர்ந்த 13,000 க்கும் அதிகமான உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், சூழலுக்குப் பொறுப்பான, இலாபம் தரக்கூடிய, வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உகந்த கட்டிடங்களை உருவாக்குவதையும் ஊக்குவித்து வருகிறது. இந் நோக்கங்களை அடைவதற்காக இது பல்வேறுபட்ட திட்டங்களை உருவாக்கிச் சேவைகளையும் வழங்கி வருவதுடன், முக்கிய தொழிற்துறை மற்றும் ஆய்வு நிறுவனங்களுடனும், மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரச நிறுவனங்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. ஆக்டினியம் ஆக்டினியம் அல்லது அக்டினியம் ("Actinium") என்பது Ac என்னும் குறியீட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணுவெண் 89 உம் அணுநிறை 227 உம் ஆகும். இதன் அணுவில் கருவைச் சுற்றியமைந்துள்ள 7 இலத்திரன் ஓடுகளில் முறையே 2, 8, 18, 32, 18, 9, 2 இலத்திரன்கள் அமைந்துள்ளன. இது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 கெல்வினும், கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும். அக்டினியம், யுரேனியத் தாதுகளுடன் Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. α மற்றும் β கதிர்களை வெளிவிடும் இதன் அரைவாழ்வுக் காலம் 21.773 ஆண்டுகளாகும். இது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த நியூத்திரன் மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். இதற்கு 3 ஓரிடத்தான்கள் உண்டு. இவை Ac, Ac, Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது. மறை வெப்பம் வெப்பவேதியியலில், மறை வெப்பம் (latent heat) அல்லது உள்ளுறை வெப்பம் என்பது, ஒரு வேதிப்பொருள் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு (அதே வெப்பநிலையில்) மாறும்போது உறிஞ்சப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும். காட்டாக, பனிக்கட்டி உருகி நீராகும் போதும், நீர் கொதித்து ஆவியாகும் போதும் வெப்பநிலையில் மாற்றம் இன்றியே வெப்ப ஆற்றல் உள்ளிழுக்கப்படும். தற்காலத்தில் இது உள்ளீட்டு வெப்பம் (enthalphy) என்றும் அழைக்கப்படுகிறது. மறைவெப்பத்தில் பொதுவாக வழங்கப்படுவது இரண்டு வகைகள். ஒன்று "உருகல் மறை வெப்பம்" ஆகும்; இங்கே திண்மப் பொருள் நீர்ம நிலைக்கு மாறும். மற்றது, "ஆவியாதல் மறை வெப்பம்"; இங்கே நிலை மாற்றம் நீர்மத்தில் இருந்து வளிமம் என்றாகும். இந் நிலை மாற்றங்கள் அகவெப்ப மாற்றங்கள் எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உள்ளிழுக்கப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் என்று அமையும்போது வெப்பம் வெளியிடப் படுவதனால், அது புறவெப்ப மாற்றம் எனப்படும். உள்ளுறை வெப்பம் [latent (heat) = Potentially existing but not presently evident or realized - wordweb dictionary] ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு. இளவழகி இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். சி. இலக்குவனார் பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909 - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்) தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று. தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். இங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது. பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். அங்கு பொன்னண்ணா களத்தில்வென்றார் என்பவரிடம் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்னாளைய சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்றவர் இடைநிலை வகுப்பிலும் கலை இளவர் வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், அவருக்கு கீழைமொழிகளில் இளவர் (BOL) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார். பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (MOL) பட்டமும் பெற்றார். இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார். 1936 சூன் மாதம் முதல் 1942ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியப் பணிபுரிந்தார். கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் 1942 முதல் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தம் பெற்றார். பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கு. காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட கோ. து. நாயுடு (G. D. நாயுடு)வை ஆதரித்துப் பரப்புரை செய்தார். இதனால் விருதுநகர் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்டார். பின்னர் 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். 1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரை நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஐத்திராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், 31.12. 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது. 1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி "உளேன் ஐயா" எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார். இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு. விருதுநகரில் இருந்தபோது "இலக்கியம்" (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது "திராவிடக்கூட்டரசு" மதுரையிலிருந்த போது "குறள்நெறி" எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது. வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு குறள்நெறி என்னும் இதழை 15.1.1964ஆம் நாள் சி. இலக்குவனார் தொடங்கினார். Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். 25 – சனவரி – 1965ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 ஆம் நாள் சி. இலக்குவனார் கைது செய்யப்பட்டார். அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார். உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். எனவே 1.5.1965ஆம் நாள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். 2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். மதுரையை அடுத்த திருநகரில் 6. 8. 1962 ஆம் நாள் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது. இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தம்மை விரும்பியவரும் தம் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கையுமான நீலகண்டேசுவரியை மணந்துகொண்டார். திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதினொரு மக்களை இலக்குவனார் பெற்றனர். 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே. அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் "குறள்நெறி" இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார். பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள், [சேடபட்டி முத்தையா]] • பேராசிரியர் இலக்குவனார் ஒரு மாபெரும் தமிழ் இயக்கம் – முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், முன்னாள் துணைவேந்தர், புதுவை பல்கலைக்கழகம் முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009 அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின் நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்: Maraimalai, "சி.இலக்குவனார்", சாகித்திய அக்காதெமி. http://www.ilakkuvanar.com வெப்ப வேதியியல் வெப்ப இயக்கவியல், இயற்பியல் வேதியியல் ஆகிய துறைகளில், வெப்ப வேதியியல் அல்லது வெப்பவிரசாயனவியல் ("Thermochemistry") என்பது, வேதியியல் வினைகளின்போது உருவாகும் அல்லது உறிஞ்சப்படும் வெப்பம் பற்றிய ஆய்வுத் துறை ஆகும். வெப்பவேதியியல், கலத்தல், நிலை மாற்றம், வேதியியல் வினை போன்ற மாற்றங்களில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றங்கள் பற்றிக் கவனத்தில் கொள்கிறது. இது, இவற்றுடன் தொடர்புடைய வெப்பக் கொள்ளளவு, எரிதல் வெப்பம், உருவாதல் வெப்பம் போன்றவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதையும் உள்ளடக்குகிறது. வெப்பவேதியியலில் இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன. இவ்விரு விதிகளும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதிக்கு (1850) முற்பட்டவை. எனினும், முதலிரண்டும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின் நேரடி விளைவே எனக் காட்ட முடியும். முதலாவது வெப்ப இயக்கவியல் விதி வெப்ப இயக்கவியலில், முதலாவது வெப்ப இயக்கவியல் விதி என்பது, இதனிலும் முழுமையான இயற்பியல் விதியான ஆற்றல் காப்பு விதியின் ஒரு வெளிப்பாடு ஆகும். இவ்விதி பின்வருமாறு கூறுகின்றது: அடிப்படையில், ஒரு வெப்ப இயக்கவியல் முறைமை ஆற்றலைச் சேமிக்க அல்லது கொண்டிருக்க முடியும் என்றும், இந்த ஆற்றல் காக்கப்படுகிறது (conserved) என்றும் கூறுகிறது முதலாவது வெப்ப இயக்கவியல் விதி. இங்கே வெப்பம், பொதுவாக ஒரு உயர் வெப்பநிலையிலுள்ள மூலத்திலிருந்து முறைமைக்குக் கொடுக்கப்படுகின்ற அல்லது குறைந்த வெப்பநிலையிலுள்ள இன்னொன்றுக்கு இழக்கப்படுகின்ற ஆற்றலாகும். அத்துடன், ஒரு முறைமை தனது சூழலில் பொறிமுறை வேலையைச் செய்யும் போதும் ஆற்றலை இழக்கிறது அல்லது மறுதலையாக, சூழலால் இம் முறைமை மீது வேலை செய்யப்படும்போது அது ஆற்றலைப் பெறுகிறது. முதலாவது விதி, இந்த ஆற்றல் காக்கப்படுவதாகக் கூறுகிறது. இவ் விதியைக் கணித அடிப்படையில் பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம். இங்கே formula_2 என்பது முறைமையிம் உள்ளாற்றலில் ஏற்படும் சிறு மாற்றம். formula_3 என்பது முறைமைக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு வெப்பம். formula_4 என்பது முறைமையினால் செய்யப்பட்ட சிறிய அளவு வேலை. கருங்குழி வெப்ப இயக்கவியல் இயற்பியலில், கருங்குழி வெப்ப இயக்கவியல் என்பது, வெப்ப இயக்கவியலுக்கும், கருங்குழி (black hole) தொடர்பிலான நிகழ்வெல்லைக்கும் (event horizons) இடையில் உள்ள முரண்பாடுகளைத் தவிர்ப்பது தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் ஒரு துறையாகும். கரும்பொருள் தொடர்பிலான புள்ளியியல் விசைப்பொறியியல் (statistical mechanics) ஆய்வுகள் சிப்பவிசையியலின் (quantum mechanics) உருவாக்கத்துக்கு வித்திட்டது போலவே, கருங்குழி சார்ந்த புள்ளியியல் விசைப்பொறியியல் ஆய்வுகள், சிப்ப ஈர்ப்புப் (quantum gravity) பற்றிய நமது அறிவில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியுள்ளதுடன் முழுவரைவியக் கொள்கை (holographic principle) ஒன்றின் தோற்றத்துக்கும் வித்திட்டுள்ளது. நிகழ்வெல்லை பொதுச் சார்புக் கோட்பாட்டில், ஒரு நிகழ்வெல்லை (event horizon) என்பது, வெளிநேரத்தின் (spacetime) எல்லையான, கருங்குழி ஒன்றைச் சூழவுள்ள ஒரு பகுதியாகும். இதற்கு அப்பால் நிகழ்வுகள் எதுவும் வெளியிலிருந்து பார்க்கும் எவரையும் பாதிப்பது இல்லை. இவ்வெல்லைக்கு உள்ளிருந்து உருவாகக் கூடிய ஒளி வெளியிலிருக்கும் பார்வையாளரை அடைய முடியாது என்பதுடன், பார்வையாளரின் பக்கமிருந்து எல்லைக்குள் செல்லும் எதுவும் திரும்பி வரவும் முடியாது. மிகவும் சிறப்புத் தன்மையான ஆனால் தொடர்புடைய இவ்வாறான எல்லைகள் கருங்குழிகளைச் சூழவுள்ள, தனி எல்லைகளும் (Absolute horizon), தோற்ற எல்லைகளும் (apparent horizon) ஆகும். வெளிநேரம் இயற்பியலில், வெளிநேரம் ("spacetime") என்பது, வெளி மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு கணித மாதிரி ஆகும். இது வெளி-நேரத் தொடரியம் எனப்படுகின்றது. வெளிநேரம் என்பதில் வெளி (space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் இவற்றுடன் நான்காவது பரிமாணம் ஆகின்றது. இயூக்கிளிட்டின் வெளி பற்றிய நோக்கின்படி, அண்டம் மூன்று பரிமாணங்கள் உடைய வெளியையும், ஒரு பரிமாண நேரத்தையும் கொண்டது. இவ்விரண்டையும் ஒன்றாக்கிய போது, இயற்பியலாளர்கள் பெருமளவு இயற்பியல் கோட்பாடுகளை எளிமைப் படுத்தியதுடன், அண்டத்தின் செயற்பாடு பற்றியும் சீரான முறையில் விளக்க முடிந்தது. மரபார்ந்த விசையியலை பொறுத்தவரையில் வெளிநேர கணித மாதிரியை விட இயூக்கிளிட்டின் வெளியின் பாவனை பொருத்தமானது, ஏனெனில், இயூக்கிளிட்டின் வெளியானது நேரத்தை, அதன் நோக்குனரின் இயக்க நிலையிற்கு சார்பில்லாமல், எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாகவும்(universal), ஒரு மாறிலியாகவும் கருதுகின்றது. கணித மாதிரி கணித மாதிரி என்பது ஒரு முறைமையை விளக்குவதற்காகக் கணித மொழியைப் பயன்படுத்தும் ஒரு பண்பியல் மாதிரி (abstract model) ஆகும். கணித மாதிரிகள் சிறப்பாக, இயற்பியல், உயிரியல், மின்பொறியியல் போன்ற இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப் படுவதுடன், சமூக அறிவியல் துறைகளான, பொருளியல், சமூகவியல், அரசறிவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. 1974 இல் எய்க்கோஃப் (Eykhoff) என்பார் கணித மாதிரி என்பது, இருக்கின்ற ஒரு முறைமையின் இன்றியமையாத அம்சங்களைக் குறிப்பதுடன், அம் முறைமை பற்றிய அறிவைப் பயன்படுத்தக்கூடிய வடிவில் தருகின்றதுமான ஒரு வடிவமாகும் என்று வரையறுத்தார். கணித மாதிரிகள், பல வடிவங்களில் அமையக் கூடும். இவ் வடிவங்கள், இயக்க முறைமைகள், புள்ளியியல் மாதிரிகள், வகையீட்டுச் சமன்பாடுகள் போன்ற வகையில் அமையக்கூடும். பல்வேறு பண்பியல் மாதிரிகளில், மேற்சொன்ன மாதிரிகளும், பிற மாதிரிகளும், கலந்து இருப்பதும் சாத்தியமே. பண்பியல் மாதிரி பண்பியல் மாதிரி (abstract model) என்பது, கோட்பாட்டு அடிப்படையிலான ஒரு அமைப்புரு (construct) ஆகும். இது ஒரு குறிப்பிட்ட தொகுதி மாறிகளையும், அவற்றுக்கு இடையிலான ஒரு தொகுதி தருக்க அடிப்படையிலான தொடர்புகளையும் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் மாதிரிகள், இலட்சிய நிலையில், தருக்கமுறை அமைப்பினுள், விளக்கங்களைக் கொடுக்க வகை செய்வதுடன், அறிவியல் கோட்பாடுகளின் முக்கிய உறுப்புக்களாகவும் அமைகின்றன. இங்கே, இலட்சிய நிலை என்று குறிப்பிட்டதன் மூலம், மாதிரியானது, பிழை அல்லது சில விபரங்களில் முழுமையற்றது என அறியப்பட்டவற்றை எடுகோள்களாகக் கொண்டிருக்கக் கூடும் என்பது குறிப்பிடப்படுகிறது. மாதிரியை எளிமையாக்குகின்ற வேளையில், ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வுகளையும் கொடுக்கும் என்ற வகையில் இத்தகைய எடுகோள்கள், போதுமானவையாகக் கொள்ளப்படுகின்றன. என்றி பெக்கெரல் அந்துவான் என்றி பெக்கெரல் ("Antoine Henri Becquerel", டிசம்பர் 15, 1852 - ஆகஸ்ட் 25, 1908) ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது. பெக்கெரல் பாரிசு நகரத்தில் பிறந்தவர். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது. 1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும் பின்னர் 1894இல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார். பெக்கெரல் 1896 இல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence ஐ) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் ("photographic plates") வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார். யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார். 1903, மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908 இல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அதே ஆண்டில் தனது 55வது அகவையில் காலமானார். தமிழ்க் கணிமைக் காலக்கோடு கணியம் -கணியம் (இணைய இதழ்) கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மாத மின் இதழ் வெளியிடு கணியம் 1988 முனைவர் மா. கணேசன், (இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) முதன் முதலாக தமிழ் மற்றும் 5 இந்திய மொழிகளைக் கணினியில் TEXT MODE -இல் பயன்படும் அளவில் BHASHA - INDIAN SCRIPTS UTILITY and WORDPROCESSOR என்னும் மென்பொருளை உருவாக்கினார். அழகி (மென்பொருள்) அழகி () என்பது கணினியில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை தட்டெழுதவென, பா. விசுவநாதன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருளாகும். இது ஆரம்ப காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் பயன்பட்டது, தற்போது, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட 13 மொழிகளிலும் இக்கருவியை பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். "த இந்து" நாளிதழ் 2002-ம் ஆண்டு, இம்மென்பொருளை, "ஒப்பற்றது" (stand out) என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய ஒலிவடிவைத் தரக்கூடிய ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகள் தெரிவு செய்யப்பட்டு அத்தொகுப்புக்களைத் தட்டெழுத, முறையான எழுத்துக்கள் கணினியில் திரையில் தோன்றும் வகையில் இம்மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு, அழகியை உருவாக்கியதற்காக டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுன்டேசன் வழங்கிய மாந்தன் விருது (Manthan Award), பா. விசுவநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில், அழகி ஒரு சிறந்த "வெற்றிக் கதை" என்று மைக்ரோசாப்டின், இந்திய மொழிகளுக்கான பாஷாஇந்தியா தளத்தில் தெரிவித்திருந்தது. அழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது. அழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட 'ஸ்ரீ' என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம். எங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம். ந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும். ஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம். இது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. ச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு - sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் - sachchithaanandham, chachchithanandham, சச்சின் - sachchin, chachchin சஸ்பென்ஸ் - saspenS, சிஸ்டம் - sistam, சிஸ்டர் - sistar, சில ஆங்கில வழிப் பெயர்ச்சொற்களைப் பலுக்கல் மாறாமல் தமிழில் எழுதுவது மிகவும் எளிது. எடுத்துக்காட்டாக Patrik எனும் பெயரை பேட்ரிக் என்று பெற paeTrik எனத்தட்டினால் போதும். Patrik எனத்தட்ட "பேற்றிக்" என்றாகி விடுவதால் இத்தகைய முன்னேற்பாடு அழகி மென்பொருளில் காணப்படுகிறது. முத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண muththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa முக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் mukthikkoru viththuk kurubara enavoathum முக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு mukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru முப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண muppaththu muvarkkath thamararu madipaeNa திக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர thikkuLettukkainthukkamutruththidukkittalara மைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர maikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura இக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக் ikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik கொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே kokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae எட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும் ettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum சிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ் sittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav வட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ vattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo குட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே kuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae 2016-ம் ஆண்டு, அழகி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான குறுஞ்செயலியை வெளியிட்டது. இது புதுவகையான எழுத்துப்பெயர்ப்பை அறிமுகம் செய்தது. இது இண்டிக் கீபோர்டு என்னும் குறுஞ்செயலியை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு உள்ளிட்ட சேவைகளையும் கொண்டுள்ளது. பா. விசுவநாதன், என்னும் ஒரு மென்பொருள் வல்லுநரால் உருவாக்கப்பட கருவியாகும். 1999-களில் சரியானதொரு தட்டெழுத்து கருவி தமிழில் இல்லை. ஒரு சில தட்டெழுத்து கருவிகளிலிருந்தும் சரியான இடைமுகப்பு இல்லாமலிருந்தது. 2000-ம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் "அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும்" வகையில் தன் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டிருக்கிறார். பல்வேறு தமிழ் இணையத்தளங்களும், மென்பொருட்களும், ஆவணங்களும், தமிழில் தட்டச்சு செய்ய அழகி மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர், அழகி மென்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுடைய வலைத்தளம், வலைப்பதிவு உள்ளிட்டவகைகளில் அழகி மென்பொருள் குறித்தும், அதற்கு நன்றி தெரிவித்தும் தகவலிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அழகி ஏராளமான ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வழங்கி வருகிறது. , TSCII, TAB மற்றும் TAM தரவுகளும் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் இம்மென்பொருளை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதை தொடர்ந்து, இதனுடைய புகழும் வளர்ந்து வருகிறது. இரண்டாம் திருமுறை இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும். இரண்டாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 97 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க. மயிலை (எழுத்துரு) மயிலை எழுத்துரு தமிழ் எழுத்துக்களை இணையத்திலும் மின் ஆவணங்களிலும் தோன்றச்செய்வதற்கென உருவாக்கப்பட்ட ஆரம்பகால எழுத்துருக்களுள் ஒன்றாகும். இது முனைவர் கே. கல்யாணசுந்தரம் அவர்களால் 1993ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்துரு 7 பிட் அடிப்படையில் அமைந்த ஒற்றைமொழி எழுத்துருவாகும். 127 இடங்களில் அத்தனை தமிழ் எழுத்துக்களையும் பயன்படுத்தக்கூடியவாறு இவ்வெழுத்துரு வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வெழுத்துரு மைக்ரோசொஃப்ட் இன்டோஸ் 3.x, 95, NT ஆகியவற்றுக்கெனவும் மாக்கின்டோஷ் இயங்குதளத்திற்கெனவும் தனித்தனியான பதிப்புக்களாக தரவிறக்கத்துக்கு வெளியிடப்பட்டது. பிற்பட்ட காலங்களில் பிட்மப் (Bitmap) எழுத்துக்களாக யுனிக்ஸ் இயங்குதளங்களுக்கெனவும் வெளியிடப்பட்டது. தனிப்பட்ட, இலாப நோக்கற்ற பயன்பாடுகளுக்கு இலவசமாக இவ்வெழுத்துருவினைத் தரவிறக்கிப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மயிலை எழுத்துருவின் வடிவத்தைக்காட்டும் உரைப்பகுதியின் படம் இதுவாகும். மயிலை எழுத்துரு ஆங்கில ஒலியியல் முறையில் தமிழைத் தட்டெழுதத்தக்க வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மயிலை ஒலியியல் வடிவத்தைக் கீழ்வரும் படம் விளக்குகிறது. பழவேற்காடு ஏரி பழவேற்காடு ஏரி (ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி, Pulicat Lake) இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது. பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும். வரலாற்றில் பழவேற்காடு ஏரியினைப் பற்றிய முதல் குறிப்பு கி.பி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'எரிதேரியன் கடல்பயண குறிப்புகள்' என்கிற நூலில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் (Periplus of the Erthraean Sea) ஆசிரியர் பெயர் தெரிய வரவில்லை. இந்நூல் பழவேற்காட்டினை இந்தியாவின் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று வரிசைப்படுத்துகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் டோலெமி (ஆங்கிலத்தில்  Ptolomey) தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் இருக்கிறது. அதில் பழவேற்காடு Podouke emporion என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள துறைமுகங்கள் தூர கிழக்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனைப் பொருட்களை மேற்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என டோலெமி குறிப்பிடுகிறார். மசாலா பொருட்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு ஆகியவை இங்கு வணிகம் செய்யப்பட்டன. பதிமூன்றாம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் பிறகு இந்தப் பகுதிக்கு நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்தனர். இந்த அரேபியர்கள் அப்போது வசித்த வீடுகளின் மிச்சங்களை இப்போதும் இந்தப் பகுதியில் காண முடியும். தற்போது அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் சிலர் இந்த குடியேற்றத்தின் வரலாற்றை நிரூபிக்க தங்களிடம் அரேபிய மொழியில் ஆவணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். கி.பி 1515-ம் ஆண்டு இங்குக் குடி வந்த போர்த்துகீசியர்கள் ஒரு கிருஸ்துவ வழிப்பாட்டு தலத்தினை உருவாக்கினார்கள். இன்று அந்த கட்டிடம் பாழடைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சு மக்கள் பயணித்த கப்பல்கள் சில பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தின் கரையோரம் கரைத் தட்டின. இதன் காரணமாக அக்கப்பல்களில் இருந்த டச்சு மக்கள் இங்கே தங்க நேரிட்டது. இதன் நீட்சியாக டச்சு வணிகர்களும் அவர்களது கப்பல்களும் இப்பகுதிக்கு அடிக்கடி வர தொடங்கின. அவர்கள் 1606-ம் ஆண்டு முதல் 1690-ம் ஆண்டு வரை பழவேற்காட்டினைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு இப்பகுதியினை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். டச்சு காலத்தில் பழவேற்காடு பழைகட்டா என்றும் அழைக்கப்பட்டது. இக்காலத்திலே ஜெல்டீரியா கோட்டை இங்குக் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டச்சு வணிகர்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் புரிவதற்கான தளமாக மாறியது. தற்போது டச்சு கால சான்றுகளாக பாழடைந்த டச்சு கோட்டையும் டச்சு தேவாலயமும், 1631-ம் ஆண்டு தொடங்கி 1655-ம் ஆண்டு வரை உருவான இருபத்தி இரண்டு கல்லறைகளும் வேறு சில இடிபாடுகளும் உள்ளன. இவை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் பராமரிப்பில் தற்போது உள்ளன. பழவேற்காடு ஏரி கடலுக்கும் ஏனைய நீர் ஆதாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக விளங்குகிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் இங்கே கலக்கிறது. ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது. இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும். இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிர்னங்களின் தன்மையையும் உருவாக்குகிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இது 1995ஆம் ஆண்டில் ஆகத்து 1ம் தியதி பேரா. ஜவாஹிருல்லா, பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை வருடந்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருவதோடல்லாமல் இடிப்பு தினமான திசம்பர் 6 அன்று போராட்டங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை வழங்க போராடிய முஸ்லிம் இயக்கங்களுள் முதன்மையானதாக உள்ளது. தமிழகம் முழுவதும் 154 அவசர ஊர்திகளுடன் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பாகும். முனனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் த.மு.மு.கவின் சமூகப்பணிகளை பாராட்டி, த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி பணியை வெகுவாக பாராட்டிய முதல்வர் தனது சொந்த செலவில் 2 அவசர ஊர்திகளை த.மு.மு.கவிற்கு அன்பளிப்புச் செய்துள்ளார். அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்கள் அங்குதமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமலான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இரத்த தானம், ஏழைகளுக்கான இலவச திருமணம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உதவிகள் செய்கின்றனர். இதன் அரசியல் பிரிவாக கடந்த 2009 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. சித்தம் எழுத்துமுறை "சித்தம்"(சமஸ்கிருதம்:सिद्धं.) என்பது சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தப்படும் ஒரு வரிவடிவம் ஆகும். இவ்வெழுத்துமுறை பிராமியில் இருந்து தோன்றிய குப்த எழுத்துமுறையின் வழித்தோன்றலாகும். சித்தம் எழுத்துமுறையில் இருந்தே தேவநாகரி , திபெத்திய எழுத்துமுறை முதலிய பல ஆசிய எழுத்துமுறைகள் தோன்றின. சித்தம் அபுகுடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். இந்த சித்தம் எழுத்துமுறை மற்ற பிராமி குடும்ப எழுத்துமுறைகளுக்கு உண்டான அனைத்து குணாதியங்களையும் கொண்டது. இது தற்கால தேவநாகரி எழுத்துமுறையினை ஒத்த வடிவத்தை கொண்டது. தற்காலத்தில், சித்தம் எழுத்துமுறை ஜப்பானில் மட்டுமே வழக்கில் உள்ளது. ஜப்பானில் ஷிங்கோன் பௌத்த மந்திரங்களை எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதை ஜப்பானிய மொழியில் போன்ஜி என அழைக்கின்றனர். இந்த எழுத்துமுறையினை கூக்காய் தான் முதன்முதலில் ஜப்பானில் அறிமுகப்படுகித்தினார். இந்தியாவில் இருந்து சீனாவில் மொழிப்பெயர்க்கப்பட்ட சூத்திரங்கள் சித்தம் எழுத்துமுறையினை பயன்படுத்தியே செய்யப்பட்டன. அங்கிருந்து, இந்த சூத்திரங்கள் ஜப்பானுக்கு சென்றன. சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஆட்சியாளர்களால், "அந்நிய மதங்கள்" நசுக்கப்பட்டன. மேலும் இந்தியாவில் சித்தம் எழுத்துமுறையில் இருந்து தோன்றிய தேவநாகரி வழக்கத்தில் வரத்துவங்கியது. எனவே காலப்போக்கில், "சித்தம் எழுத்துமுறை"' யினை பயன்படுத்தும் ஒரே நாடாக ஜப்பான் ஆனது. இன்று கூட ஜப்பானில் மந்திரங்களை எழுதவும் சூத்திரங்களை பிரதியெடுக்கவும் சித்தம் எழுத்துமுறை பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு நெசவுத் தொழிற்துறை பருத்தி, பட்டு போன்றவற்றில் இருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம். அல்வா அல்வா () ("Halwa") என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு இனிப்பு என்று அா்த்தம். இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம். கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன. தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை தமிழ்நாட்டில் இலத்திரனியல் கருவிகளை, பொருள்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்றுறை தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை எனப்படும். இலத்திரனியல் தொழிற்றுறை ஓர் உயர்தொழினுட்பத் தொழிற்றுறை ஆகும். தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்புத் துறையில் விரைவாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினிகள், மேசைத்தள கணினிகளைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து ஆண்டில் தோராயமாக 10,20,000 குளிர்சாதனப் பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது. ஹவாய் 25 கோடி உரூபாய் செலவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், மின்னணு, தொலைத்தொடர்புத் தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது. கீழே தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு, நுகர்வோர் சாதனங்கள். சுரதா யாழ்வாணன் சுரதா யாழ்வாணன் தமிழ் கணித்துறைக்கு பங்களித்துவரும் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழில் தட்டச்ச விரும்புவோர் வசதிக்காக பல்வேறு வகையான நிரல்களை எழுதி உள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம், தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு ( UNICODE ) மாற்றும் பொங்குதமிழ் செயலி ஒருங்குறியில் வலைப்பதிபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் ( Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் இவரது செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். சுரதா ஈழத்து எழுத்தாளரான காலஞ்சென்ற யாழ்வாணனின் மகனும் ஒலிபரப்பாளர் யாழ் சுதாகரின் சகோதரரும் ஆவார். இசுக்கொட் விபரப்பட்டியல் இசுக்கொட் விபரப்பட்டியல் என்பது, ஸ்கொட் பப்ளிஷிங் கம்பனியினால் வெளியிடப்படும் ஒரு தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். இது உலகம் முழுவதிலும், அஞ்சல் தேவைகளுக்காக வெளியிடப்பட்டவை என இவ் விபரப்பட்டியல் ஆசிரியர்களால் கருதப்படும் தபால்தலைகளைப் பட்டியலிடுகிறது. இது ஓவ்வொரு ஆண்டும் நிகழ்நிலைப்படுத்தி வெளியிடப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டபடி, இது ஆறு பெரிய தொகுதிகளைக் கொண்டிருந்தது. அத்துடன் இது குறுவட்டு வடிவிலும் வெளியிடப்படுகின்றது. தபால்தலைகளை அடையாளம் காண்பதற்காக இந்த விபரப்பட்டியலில் பயன்படுத்தப்படும் எண்முறை ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலை சேகரிப்பாளரிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. ஸ்கொட் விபரப்பட்டியலின் முதலாவது பதிப்பு 21 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது. இது 1868 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், நியூ யார்க்கின் தபால்தலை விற்பனையாளரான ஜே. டபிள்யூ. ஸ்கொட் என்பவரால் வெளியிடப்பட்டது. இதன் அட்டையில் குறிப்பிட்டபடி 1840 ஆம் ஆண்டு முதல் விபரப்பட்டியல் வெளியிடப்பட்டது வரையிலான எல்லாத் தபால்தலைகளும் அவற்றின் விலைகளுடன் பட்டியல் இடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் வந்த ஆண்டுகளில், ஸ்கொட் கம்பனி தபால்தலைகள் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டாலும், விபரப்பட்டியலைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது. தபால்தலை சேகரிப்பு வளர்ச்சியடைந்து வந்ததனாலும், சேகரிப்பாளருக்குப் பல புதிய தகவல்கள் தேவைப்பட்டதாலும், இவ்வாறான தகவல்கள் தொடர்ந்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தது. முன்னைய ஆண்டின் விற்பனை மற்றும் சந்தைப் பகுப்பாய்வின் மூலம் கிடைத்த தகவல்களில் அடிப்படையில் தபால்தலைகளின் விலைகளும் இடம் பெற்றன. 2002 ஆம் ஆண்டில், இவ் விபரப்பட்டியல் 5000 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னணித் தபால்தலை விபரப்பட்டியலான இது, எவற்ரைத் தபால்தலை எனக் கொள்வது, எவற்றை அவ்வாறு கொள்ளமுடியாது எனத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னாள் நாடுகள் சில 1960 களில் வெளியிட்ட தபால்தலைகள் பல உண்மையிலேயே அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யப்படவில்லை என்பதனால் அவற்றைப் பட்டியலில் சேர்ப்பது இல்லை. இதனால் அமெரிக்க விற்பனையாளர்கள் அத்தபால்தலைகளை விற்பனை செய்வது இல்லை. எனினும் மைக்கேல் விபரப்பட்டியல் இவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இசுரான்லி கிப்பன்சு விபரப்பட்டியல் இசுரான்லி கிப்பன்சு விபரப்பட்டியல் என்பது, ஸ்டான்லி கிப்பன்ஸ் லிலிட்டெட் என்னும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். இது உலகில் வெளியிடப்படும் எல்லாத் தபால்தலைகளையும் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து பட்டியல் இடுகிறது. முதலாவது ஸ்டான்லி கிப்பன்ஸ் விபரப்பட்டியல் நவம்பர் 1865 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு மாதம் ஒருமுறை வெளிவந்தது. இப்பொழுது இந் நிறுவனம், நாடுகள், பிரதேசங்கள், சிறப்பு வகைகள் போன்ற அடிப்படைகளில் பல விபரப்பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இவற்றுட் பல ஒவ்வொரு ஆண்டும் திருத்தி வெளியிடப்படுவதுடன், தபால்தலை சேகரிப்பாளருக்கு வேண்டிய பல தகவல்களையும் உள்ளடக்கி இருக்கின்றன. ஸ்டான்லி கிப்பனின் முழு உலகத்துக்கான விபரப்பட்டியல் உலகின் எல்லாநாடுகளிலும் வெளியிடப்பட்ட தபால்தலைகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்குரிய பதிப்பில் ஏறத்தாழ 474,000 தபால்தலைகள் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் குறிப்பிடப்படும் விலைகள், குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை விற்கும் விலைகளுக்கான மதிப்பீடுகள் மட்டுமே. அவ்விலைகளைக் குறிப்பிட்ட தபால்தலைகளின் உண்மையான பெறுமதியாகக் கொள்ள முடியாது. ழ கணினி ழ கணினி ("Zha Kanini") 2003-06 ஆண்டுக்காலங்களில் முழுமையான தமிழ் இடைமுகப்புடனான கணினி ஒன்றினைத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஆக்கியளிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஓர் செயற்றிட்டமாகும். ழ கணினியின் இலக்காக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்துவதாக இருந்தது. ழ கணினிக் குழுமம் இச்செயற்றிட்டத்தினை முன்னெடுத்துச்சென்றது. இதன் முதற்கட்ட அறிமுக நிகழ்ச்சி பெப்ரவரி 1, 2004இல் நிகழ்ந்தது. போதிய வணிக வாய்ப்புகள் இன்றி இதனை பரவலாக்க இயலவில்லை. தமிழுக்கென்று தனிச்சிறப்பு மிக்க எழுத்தாக உள்ள "ழ" என்ற எழுத்தையும் "கணினி" என்ற சொல்லையும் இணைத்து இத்திட்டத்திற்கு "ழ-கணினி" என்று பெயரிடப்பட்டது. இதற்கான குழுமத்தின் உறுப்பினர்களாக மா. சிவக்குமார், என். செயராதா, சி.கே. சாந்தகுமார் மற்றும் கே. எம் லீனா ஆகியோருடன் எழுத்தாளர் சுஜாதா இணைந்து செயல்பட்டார். கேடிஈ சூழலில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்க மற்ற உறுப்பினர்களுக்கு துணை நின்றதுடன், அதற்காக தன்னார்வலர்களை ஓரிடத்தில் சேர்த்து அவர்களை வழி நடத்துவது, இம்முயற்சியில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது என்று சுஜாதா திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தனது எழுத்துலக செல்வாக்கைக் கொண்டு தான் எழுதும் கட்டுரைகளில் ழ-கணினித் திட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி வந்தார். சுஜாதா ஆனந்த விகடனில் ஞாயிறுதோறும் மொழிபெயர்க்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 45 தன்னார்வலர்கள் ஒருசேர பங்களிக்க முன்வந்தனர். சயராதா தாம் பணியாற்றிய டிஷ்நெட் டிஎஸ்எல் நிறுவனத்தின் உலாவுமையமொன்றில் 20 கணினிகளை இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி, இலயோலாக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்காற்றினர்.ஆறு மாதங்களில் 100,000 சொற்றொடர்கள் தமிழாக்கப்பட்டன.பெப்ரவரி 1,2004இல் ஓப்பன் ஆபிஸ், கேடிஈ, மற்றும் தமிழ் விசைப் பலகை அடங்கிய முதல் குறுந்தட்டு வெளியானது. உலகில் உள்ள அத்தனை இலவச மென்பொருள்களையும் தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் 1997களில் தமிழ் திறந்த நிரல் இயக்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால் துவங்கியது. இவர்களில் தமிழ் லினக்சு யாகூ மடற்குழுமத்தில் உறுப்பினர்களாக இருந்து கேடியி வசீகரன் குழுவினர், ஜீனோம் தினேஷ் நடராஜன் குழுவினர், சிவராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். இவர்களது முயற்சியால் தமிழ் லினக்ஸ் துவங்கியது. இதன் தொடர்ச்சியே ழ கணினித் திட்டமாக அமைந்தது. இந்த மடற்குழு உரையாடல்களில் தன்னார்வலர்களின் பலமணி நேர உழைப்பை சுஜாதாவை முன்னிறுத்துவதால் ழ கணினிக் குழு பின்னுக்குத் தள்ளுவதாக வெங்கட் குற்றம் சாட்டினார். தொடர்ந்து நடந்த விவாதங்கள் மற்றும் முக்கியமானவர்களின் பணி இடமாற்றம் காரணமாக இத்திட்டப்பணி சுணங்கியது. இருப்பினும் செயராதா போன்றோரின் தொடர்ந்த முயற்சியில் இந்திய மொழிகளிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கேடீஈ இடைமுகமாக தமிழ் விளங்குகிறது. விளாதிமிர் பூட்டின் விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் ("Vladimir Vladimirovich Putin", , , பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பித்தது. உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். "சையூச்னய ரஷ்யா" என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான "தூமா" அரசியல்சாசனப்படி வாய்ப்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியைப் பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1990 ல், புட்டின் சர்வதேச விவகாரங்கள் பற்றிய மேயர் சொப்சாக்கின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 28 ஜூன் 1991 இல், அவர் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்புக்கான, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அலுவலக வெளியுறவு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 முதல் 1997 வரை, புடின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மார்ச் 1994 இல், அவர் நகரம் நிர்வாகத்தின் முதல் துணை தலைவர் ஆனார்.1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் 1997 வரை அவர் JSC செய்தித்தாள் ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்தார். 1996 இல், அனடோலி சொப்சாக்கின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் தேர்தலில் விளாடிமிர் யகொநோவிடம் தோற்றார். புட்டின் மாஸ்கோவில் ஜூன் 1996 இல் பவெல்போர்டின் தலைமையில் ஜனாதிபதி சொத்து மேலாண்மை துறை துணை முதல்வர் ஆனார். அவர் மார்ச் 1997 வரை இந்த நிலை இருந்தார். 25 ஜூலை 1998 அன்று, யெல்ட்சின் FSB தலைவராக விளாடிமிர் புட்டின்-ஐ (கேஜிபி வாரிசு முகவர் ஒன்று),நியமித்தார். அவர் 1 அக்டோபர் 1998 29 மார்ச் 1999 இல் அதன் ரஷியன் கூட்டமைப்பு பாதுகாப்பு சபையில் அதன் செயலாளராக நிரந்தர உறுப்பினர் ஆனார். 1999 ஆகஸ்ட் 9, செர்ஜி ஸ்டேபசின் தலைமையிலான முந்தைய அரசு நீக்கப்பட்ட பின் என ரஷியன் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மூன்று பிரதம பிரதமர்களின் ஒருவராக ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் மூலம் நியமிக்கப்பட்டார். விளாடிமிர் புட்டின் 2000 மே 7ம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரின் பிரதம மந்திரியாக நிதி அமைச்சர் மிகைல் கசிநோவ் நியமிக்கப்பட்டார். மே 2000 ல் அவர் கூட்டாட்சி நிர்வாகத்தினை எளிதாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளின் மேற்பார்வையில் 7 கூட்டாட்சி மாவட்டங்களில் 89 கூட்டாட்சி பகுதியாகப் பிரித்து ஒரு ஆணையை வெளியிட்டார். 14 மார்ச் 2004 அன்று, புட்டின் தேர்தலில் 71% வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் புட்டினால் ரஷ்யாவின் பொது சபை உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு, தேசிய முன்னுரிமை திட்டங்கள் மூலம் ரஷ்யாவின் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, விவசாயம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மூன்றாம் அதிபராக பணியாற்ற தடை செய்யப்பட்டார்.முதன்மை துணை பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 மே 8 ல்,மெட்வெடேவிடம் ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்தார் பின்னர், புட்டின் தனது அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள ரஷ்ய பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 மார்ச் 4, புட்டின் முதல் சுற்றில் 63.6% வாக்குகள் உடன் 2012 ரஷியன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். 1833 1833 (MDCCCXXXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. 1878 1878 (MDCCCLXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. தமிழ்நாடு மென்பொருள் தொழிற்துறை மென்பொருள்களை ஆக்குவது, தொடர்பான சேவைகளை வழங்குவது, விற்பனை ஆகியவை தமிழ்நாட்டு மென்பொருள் தொழிற்துறையின் முக்கிய செயற்பாடுகள் ஆகும். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. பெரும்பான்மையான மென்பொருள் நிறுவனங்கள் சென்னையிலேயே இருக்கின்றன. ஆதாரம்: தமிழ்நாட்டு தொழிற்துறைகள் தொழிலே ஒரு நாட்டின் உயிர்த்துடிப்பு. தொழிலில் சிறந்து விளங்கும் நாடு, பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கும். தாம் வாழ்ந்த திணைகளுக்கு பொருந்தியது போல் தமிழர்கள் பேண்தகு தொழில் செய்து சிறப்புற்றிருக்கிறார்கள். தற்காலம் உந்திய அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகர மாற்றங்களுடன் இயைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்கள் தொடர்பான கட்டமைப்புளையும் செயற்பாடுகளையும் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் என்ற தலைப்பு குறிக்கின்றது. தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், வணிக நிறுவனங்கள், அரச அலகுகள், இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், சட்ட-வணிக சூழல் ஆகியவை தமிழ்நாட்டு தொழிற்துறையின் கூறுகள் ஆகும். தமிழ்நாட்டின் பல்வேறு தரவுகள் தொழிற்துறையின் வளர்ச்சியை சுட்டி நிற்கின்றன. தமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காக சென்னையில் அதிக அளவில் வாகண உற்பத்தி தொழில்சாலைகள் உள்ளன. ஹுன்டாய்[கொரிய நிறுவனம்] வருடத்தில் 3,30,000 கார்களை(தானுந்து) சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களை சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.. மென்பொருள் அதிக அளவில் எற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று. 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் எற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவில் மென்பொருள் எற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் எற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது. தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் நோக்கியா, மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது. ஒவ்வொரு தொழிலும் சமம்மென்று கூற முடியாது. வெவ்வேறு காலகட்டங்களில் சூழ்நிலைகளில் வெவ்வேறு தொழில்கள் சிறப்புப்பெற்று இருக்கின்றன. சில தொழில்கள் கூடிய வரவாய் ஈட்டக்கூடியவை. திடைப்பத்துறை போன்ற சில தொழிற்துறைகள் பொருளாதரத்தில் சிறு பங்கே வகித்தாலும், சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. வேளாண்மை, மீன்பிடித்துறை போன்றவை வாழ்வியலோடு ஒன்றிய மரபுத் தொழிதுறைகள் ஆகும். பண்டை சாதிய இந்திய அமைப்பு போன்றல்லாமல், இன்றைய சூழல் தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு தொழிற்துறையிலும் சிறப்பு பெற கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. புதிய தொழிற்துறைகளில் சிறக்க கல்வியும் ஈடுபாடும் ஆதாரமாகின்றன. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் ஹூட்டு இனக்குழு ஹூட்டு இனக்குழு, பெரும்பாலும் ருவாண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் வாழும் மத்திய ஆபிரிக்க இனக்குழுக்களுள் ஒன்றாகும். ஹூட்டுக்கள் புரூண்டியிலும் ருவாண்டாவிலும் உள்ள மூன்று இனக்குழுக்களுள் பெரும்பான்மையினர் ஆவர். ஐக்கிய அமெரிக்கப் புலனாய்வு நிறுவனம் வெளியிடும் தகவலின்படி, ருவாண்டாவில் 84% மக்களும், புரூண்டியில் 85% மக்களும் ஹூட்டுக்கள் ஆவர். எனினும், வேறு மூலங்களில் இது குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டும் காணப்படுகிறது. இந் நாடுகளில் வாழும் இன்னொரு இனக்குழுவான துட்சிகளுக்கும், இவர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் முக்கியமாகச் சமூக வகுப்பு அடிப்படையிலானதே அன்றி, மொழி, தோற்றம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆனதல்ல எனப்படுகின்றது. இவர்கள், சுமார் 11 ஆம் நூற்றாண்டளவில், இன்றைய சாட் நாட்டைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து, ஆபிரிக்கப் பேரேரிப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே அங்கு வாழ்ந்துவந்த துவா பிக்மிகளை விரட்டிவிட்டு அப்பகுதியில் குடியேறிய அவர்கள், பல சிறிய அரசுகளை அமைத்துக்கொண்டு அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலை, துத்சிக்கள் அப்பகுதிக்கு வரும்வரை நீடித்தது. துத்சி, ஹூட்டுக்களின் முரன்பாடுகளை விளக்கும் கோட்பாடுகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, துத்சிக்கள் ஹாமிட்டிய மக்கள், 15 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இன்றைய எதியோப்பியப் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த அவர்கள், ஹூட்டுக்கள், துவா பிக்மிகள் ஆகியோர் மீது மேலாதிக்கம் செலுத்தினர். இன்னொரு கோட்பாடு ஹூட்டுக்களும், துத்சிகளும் ஓரின மக்கள் என்றும், செர்மானிய, பெல்ஜியக் குடியேற்றவாதிகளினால் பிரித்து ஆளப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. ருவாண்டா தேசிய ஒற்றுமையை ஆதரிப்பவர்கள் மத்தியில் இக் கோட்பாட்டுக்குச் செல்வாக்கு உள்ளது. எனினும் இது ஒரு வரலாற்றுத் திரிபாக இருக்கலாம் என்னும் கருத்தும் உண்டு. திமித்ரி மெட்வெடெவ் திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ் ("Dmitry Anatolyevich Medvedev", ரஷ்ய மொழி: Дми́трий Анато́льевич Медве́дев, பிறப்பு: செப்டம்பர் 14, 1965, லெனின்கிராட்) ரஷ்யாவின் மூன்றாவது அதிபராவார். மார்ச் 2, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். மே 7, 2008ல் பதவி ஏற்றார். இதற்கு முன்னர், நவம்பர் 14, 2005ல் ரஷ்யாவின் முதல் துணை பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் விளாடிமிர் பூட்டினுடைய முக்கிய அலுவலராகவும், ரஷ்ய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் (Gazprom) இயக்குநர் அவைத் தலைவராகவும் (2000 லிருந்து) பணியாற்றியிருக்கிறார். விளாடிமிர் பூட்டினும் அவருக்கு ஆதரவான கட்சிகளும் இவருடைய போட்டியை ஆதரித்தனர். மெட்வெடவ் 2008ற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ பதவிகள் எதையும் வகித்ததில்லை. யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி மொன்சைனர் ஒராசியோ பெட்டாச்சினி (Monsignor Orazio Bettacchini) என்பவர் இதனை நிறுவினார். அடுத்த ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் ஆண்கள் செமினரி (Jaffna Boys’ Seminary) ஆனது. 1881 ஆம ஆண்டில் இது முழு அளவிலான உயர்தரப் பாடசாலையாகப் பதிவு செய்யப்படதுடன், இதன் பெயர் சம்பத்தரிசியார் கல்லூரி என மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப் பாடசாலையை கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையாகவே பேணுவதென முடிவு செய்யப்பட்டது. ஆண்களுக்கான இப் பாடசாலையைக் கத்தோலிக்க திருச்சபையே நடத்தி வந்தாலும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே கல்வி கற்கின்றனர். 1887 ஆம் ஆண்டு முதலே இது விடுதியுடன் கூடிய பாடசாலையாக இயங்கி வருவதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு தங்கிப் படித்தனர். துவா இனக்குழு துவா இனக்குழு ("Twa") அல்லது பாத்வா இனக்குழு மத்திய ஆபிரிக்காவில் ருவாண்டா, புருண்டி, உகண்டா ஆகிய நாடுகளிலும், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலும் வாழும் இனக்குழுக்களில் ஒன்றாகும். பிக்மி மக்களான இவர்களே மத்திய ஆபிரிக்காவின் பேரேரிப் பகுதியில் மிகப் பழைய காலம் தொட்டு வாழ்ந்து வருபவர்களாவர். 2000 ஆண்டில் இவர்களின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 80,000 ஆக இருந்தது. அங்கோலா, நமீபியா, சாம்பியா, பொட்ஸ்வானா ஆகிய நாடுகளிலும் தெற்கத்திய துவா மக்கள் வாந்துவருகின்றனர். இவர்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து தொலைவில் பாலைவனப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிக் குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டுள்ளன. சுமார் 11 ஆம் நூற்றாண்டளவில் துவா இனக்குழுவினரின் மரபுவழிப் பகுதிகளுக்குள் வந்த ஹூட்டு இனக்குழுவினர் அவர்களைத் தமது ஆதிக்கத்துள் கொண்டுவந்தனர். 15 ஆம் நூற்றாண்டை அண்டி துட்சி இனக்குழுவினர் இப் பகுதிக்குள் புகுந்து முன்னிருந்த இரு இனத்தவரையும் அடிப்படுத்தினர். துவாக்கள், ஹூட்டுக்களும், துத்சிக்களும் பேசும் கின்யார்வாண்டா மொழியையே பேசுகின்றனர். பல நூறு ஆண்டுகளாகவே துவாக்கள், மிகச் சிறிய மக்கள் குழுவினராகவே இப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, ருவாண்டாவிலும், புரூண்டியிலும், மொத்த மக்கள் தொகையில் சுமார் 1% என்ற அளவிலேயே இவர்கள் உள்ளார்கள். இதனால், இந்நாடுகளின் அரசியலில் இவர்களது பங்களிப்பு மிகக் குறைவே. எர்பியம் எர்பியம் அணுவெண் 68 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 99 நொதுமிகள் (நியூட்ரான்கள்) உள்ளன. எர்பியத்தின் வேதியியல் குறியீடு Er ஆகும். இத் தனிமம் லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த வெள்ளிபோன்ற வெண்மையான தோற்றம் அளிக்கும் அரிதில் கிடைக்கும் மாழை (உலோகம்). அறை வெப்ப, அழுத்த நிலையில் திண்மமாக இருப்பது. எர்பியம், சுவீடனில் உள்ள இயிட்டெர்பி (Ytterby) என்னும் ஊரில் கிடைக்கும் அரிதில் கிடைக்கும் பிற கனிமங்களாகிய கடோலினைட்டு (gadolinite) போன்றவற்றோடு பொதுவாக கிடைக்கும் பொருள் தனி எர்பியம் மாழையானது வளைந்து, ஒடுங்கக்கூடிய மெதுமையான மாழை. இது மற்ற அரிதில் கிடைக்கும் மாழைகள் போல் காற்றில் சிதைவுறாமல் இருப்பதுடன் எளிதில் ஆக்ஸைடாவதும் இல்லை. எர்பியம் மூன்று இயைனி (இணைதிறன்) தன்மை கொண்ட ஒரு தனிமம். இதன் உப்பு இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. எர்பியம் மாழையானது காணும் நிற ஒளி அலைப்பட்டையில் துல்லியமாக பற்றுரும் அலைநீளங்கள் கொண்டது. மேலும் புற ஊதாக்கதிர்களிலும், அகச்சிவப்பு அலைப்பட்டைகளிலும் பற்றுரும் பகுதிகள் கொண்டது. மூன்று ஆக்ஸிஜன் கொண்ட எர்பியம் ஆக்ஸைடு எர்பியா என்று அழைக்கப்படுகின்றது. திண்ம எர்பியத்தின் உருகுநிலை 1,529° C, மற்றும் நீர்ம எபியத்தின் கொதிநிலை 2,868° C. எர்பியம் அண்மைக்காலம் வரை அதிகம் பயன்படாத ஒரு பொருளாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் சிறிதளவு எர்பியம் சேர்க்கப்பட்ட கண்ணாடிகளும், படிகங்களும் சில வகையான ஒளிமிகைப்பிக் கருவிகளில் (லேசர்) பயன்படுத்தப்படுகின்றது. ஒளியலை வழி இயங்கும் தொலை தொடர்புக் கருவிகளுக்காகப் பயன் படும் கண்ணாடி இழைகளால் ஆன ஒளிநார்களில், 1550 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் தம் அடர்த்தி அதிகம் மட்டுப்படாமல் (குறையாமல்) செல்லவல்லன என்பதால் அந்த அலைநீளத்தில் ஒளிமிகைப்பி இயங்குமாறு செய்ய எர்பியம் அணுக்கள் ஏற்றப்பட்ட பொருள்கள் மிகவும் பயன்படுகின்றது. இது தவிர பல்மருத்துவம், தோல்மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படும் 2940 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகளை உருவாக்கும் YAG லேசர் (இயிற்றியம்-அலுமினம்-கார்னட் லேசர்) கருவியிலும் எர்பியம் ஒரு புற ஊட்டுப்பொருளாக (சிறிதளவு சேர்க்கப்படும் வேற்றுப் பொருளாக) பயன்படுகின்றது. இந்த 2940 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் நீரில் அதிக அளவு உள்வாங்கிப் பற்றப்படுகின்றது. 1843 ஆம் ஆண்டில் கார்ல் குச்ட்டாவ் மோசாண்டர் (Carl Gustaf Mosander) என்பவர் கடோலினைட்டு என்னும் கனிமத்தில் இருந்து இயிற்றியா ("yttria") என்னும் எர்பிய ஆக்ஸைடுப் பொருளை பிரித்தெடுத்தார். அதனை அவர் அப்பொழுது “டெர்பியா” என்று அழைத்தார். மோசாண்டர் கடோலினைட்டில் இருந்து மூன்று பிரிவுப்பொருட்கலை எடுத்தார்: அவை இயிற்றியா, எர்பியா, டெர்பியா என்பன ஆகும். சுவீடன் நாட்டில் இயிட்டெர்பி (Ytterby)என்னும் ஊரில் அதிகம் கிடைத்ததால், எர்பியம் என்று பெயரிட்டார் (இயிட்டெர்பி என்பதின் மருவிய பெயராக அது கருதப்பட்டது). தொடக்க காலத்தில் (1843-1877 காலப்பகுதியில்) அவர் பிரித்தெடுத்த மூன்று பொருட்களுக்கும் இடையே நிறைய பெயர்க்குழப்பங்கள் இருந்தன. 1905 ஆம் ஆண்டு ஜியார்ஜெஸ் அர்பெய்ன் என்பவரும் சார்லஸ் ஜேம்ஸ் என்பவரும் புறத்தொடர்பின்றி பெரும்பாலும் தூய எர்பிய ஆக்ஸைடை (ErO) பிரித்தெடுத்தனர். 1934 ஆம் ஆண்டுப் பகுதியில் தான் பொட்டாசிய ஆவியைக் கொண்டு நீரற்ற எர்பியக் குளோரைடில் (anhydrous chloride) இருந்து தூய எர்பியத்தைப் பிரித்தெடுத்தனர். எர்பியம் இயர்கையில் அரிதாகவே கிடைக்கின்றது. ஆனால் மோனாசைட்டு (monazite) கனிமமணலில் இருந்து இது பெறப்படுகின்றது. எர்பியம் செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) என்னும் கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. அணுப்பிளவின் சிதை பொருட்களில் இருந்தும் கிடைக்கின்றது. பொதுவாக எர்பியத்தைக் கனிமப்பொருட்கலில் இருந்து பிரித்தெடுப்பது மிகவும் கடினம் (அதிக செலவாகும் பிரிப்பு முறைகள்). 20 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு மின்மவணு-மாற்றிகள் ([ion-exchange) துணைகொண்டு பிரித்தெடுப்பது வழக்கம். செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) போன்ற கனிமங்களில் இயிற்றியம் (yttrium) என்னும் தனிமம் மூன்றில் இரண்டு பங்கும், எர்பியம் இருக்கும் எர்பியா என்னும் பொருள் 4-5% விழுக்காடே இருக்கும். நில உருண்டையின் புற ஓட்டில் மில்லியன் பகுதியில் 3.5 பங்கு உள்ளது . கடல் நீரில் மில்லியன் பகுதியில் 2x10 பகுதி கொண்டது.. இயற்கையில் இருந்து பெறப்படும் எர்பியம் நிலைத்து நிற்கும் 6 ஓரிடத்தான்கல் கொண்டிருக்கின்றன. அவை: Er-162, Er-164, Er-166, Er-167, Er-168, Er-170, Er-166 இவற்றுள் அணுவெடை 166 கொண்ட Er-166 அதிக அளவில் (33.503% ) கிடக்கின்றது. இவை தவிர 29 கதிரியக்க ஓரிடத்தான்கள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 9.4 நாட்கள் அரைவாழ்வு கொண்ட Er-169 என்பது நிலைப்பு அதிகமானது. இது தவிர 49.3 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-172, 28.58 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-160, 10.36 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-165, மற்றும் 7.516 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-171 முதலியன குறிப்பிடத்தக்கன. மீதமுள்ள கதிரியக்க ஓர்டிஅத்தான்கள் யாவும் 3.5 மணிநேரத்தைவிட குறைவான அரைவாழ்வு கொண்டவை. அவற்றுள் பெரும்பான்மையானவை 4 மணித்துளிகளுக்கும் குறைவான அரைவாழ்வு கொண்டவை. எர்பிய ஓர்டிஅத்தான்களின் அணு எடை (அல்) அணுநிறை 142.9663 u (Er-143) முதல் 176.9541 u (Er-177) வரை உள்ளன.. மற்ற லாந்த்தண்டுகள் போலவே எர்பியமும் குறைந்த அல்லது நடுத்தர நச்சுத்தன்மை கொண்டது. ஆனால் இதன் நச்சுத்தன்மையைப் பற்றித் துல்லியமாகவோ விரிவாகவோ ஆய்வு அலசல்கள் நடைபெறவில்லை. பொடியாகவுள்ள எர்பிய மாழை (உலோகம்) தீப்பற்றும் தீவாய்ப்பு கொண்டது. Chemical Elements: Erbium http://www.chemicalelements.com/elements/er.html இனப்படுகொலை இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.. இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட நீதிமன்ற ஆணையத்தால் சர்வதேச உறுப்பினர்களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 1933 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். இதற்காக அவர் "காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity)" உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார். லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின. இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் இது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் பட்டியல் ஆகும். 1976ஆம் ஆண்டின் சட்டத்தின் படி [[பகுப்பு:இந்தியப் பழங்குடிகள்]] [[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]] [[பகுப்பு:இந்தியப் பட்டியல்கள்]] ஓக்லோ ஓக்லோ என்னும் இடமானது, நடு ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டில், ஓ-ஓகூயே (Haut-Ogooué ) என்னும் மாநிலத்தில் உள்ள பிரான்சிவில் (Franceville) என்னும் ஊரில் உள்ளது. இவ்விடத்தின் தனிச் சிறப்பு எனவென்றால், மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் (தொடரியக்கமாக அணுக்கரு பிளப்பு நிகழ்ந்து) தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று செப்டம்பர் 1972ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர் . பெரு வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்த காலத்தில் நில உலகில் உள்ள தரைநிலப் பகுதிகள் யாவும் பல்வேறு கண்டங்களாகப் "பிரியாமல்" ஒன்றாக இருந்தது (பார்க்க: ஒருநிலக் கொள்கை). ஏறத்தாழ 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த அணு உலை இயங்குவதற்கு ஆக்சிசன் தேவைப்பட்டிருக்கும் என்றும், அக்காலத்திற்கு சற்று முன்தான் (ஏறத்தாழ 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகில் முதன் முதலாக ஆக்சிசன் வளிமம் வெளியிடும் உயிரிகள் தோன்றியிருந்தன என்றும் அறிகிறார்கள். இவ்வுயிரிகள் ஒளிச்சேர்க்கை வழி ஆக்சிசனை வெளிவிட்டன. பியர்லாத்தே (Pierrelatte) என்னும் இடத்தில் அமைந்துள்ள பிரான்சிய அணு ஆற்றல் நிறுவனம் ஜூன் 7 1972இல், யுரேனிய ஓரிடத்தான்களின் விகிதத்தில் (U235/U238) சிறு வழக்கமாறுமாடு ஒன்றைக் கண்டனர் . U238 ஓரிடத்தானை ஒப்பிடு பொழுது U235 என்னும் யுரேனிய ஓரிடத்தானின் அளவு விகிதம் 0.7202+/- 0.0010 % இருப்பதற்கு மாறாக 0.7171 % ஆகக் குறைந்து இருந்தது. இதற்கான சோதனைப் பொருள் ஓக்லோ என்னும் இடத்தில் இருந்து வந்ததாகக் கண்டறிந்தனர். U235 ஓரிடத்தானின் அளவு இதைவிட மிகக் குறைந்த அளவான 0.440 % ஆக சில இடங்களில் இருப்பதையும் பின்னர் கண்டனர். இப்படி U235 குறைவது தொடர்-விளைவாக அணுபிளப்பு நிகழும் அணு உலை இருந்தால் நிகழும் ஒன்றாகும். U235 என்பது எளிதாக அணுக்கரு பிளப்புக்குட்பட்டு தொடர்-விளைவாக அணுபிளப்புக்கு வழிதரும் ஓர் ஓரிடத்தான். எனவே அதன் அளவு இப்படி வேறு எங்கும் இல்லாத அளவு குறைந்து இருப்பது அணு உலை இயங்கியதற்கு வலுவான சான்றாக உள்ளது. அணுக்கரு தொடர்வினை அணுக்கரு தொடர்வினை ("Nuclear chain reaction") என்பது அணுக்கருவில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது அணு நிறை மிகுந்த ஓரிடத்தான் அணுக்கரு பிளப்பாகவோ (எ.கா: U ) அல்லது அணு நிறை குறைந்த ஓரிடத்தான் அணுக்கரு புணர்ப்பாகவோ (சேர்வதாகவோ) (H and H ) இருக்கலாம். இந்த அணுக்கரு வினை நிகழும் பொழுது வெளியிடப்படும் ஆற்றலின் அளவு சராசரியாக நிகழும் வேதியியல் வினையில் வெளிப்படுவதைவிட பல மில்லியன மடங்கு அதிகமானதாகும். தொடர் நிகழ்வாக அணுக்கரு வினைகள் நிகழ்வதைப் பற்றி கருத்தளவில் 1933இல் முதன் முதல் லியோ சிலார்டு (Leó Szilárd) முன்வைத்தார். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் புதிய படைப்புக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தார் 1936 இல் பெரிலியம் மற்றும் இண்டியம் ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு அணுக்கரு தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. 1939 இல் சிலார்டும் என்ரிக்கோ பெர்மியும் (Enrico Fermi) யுரேனியம் அணுவினைகளில் நொதுமிகள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர். முதன் முதலாக என்ரிக்கோ பெர்மி டிசம்பர் 2 1942இல் சிக்காகோ பல்கலைகழகத்தில் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் ஆர்தர் காம்ப்டன் அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது மான்ஹாட்டன் திட்டம் என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1956 இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் குரோடா (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன . பிளவு படக்கூடிய ஓரிடத்தான்களும் (யுரேனியம்-235 U போன்றவை) நொதுமிகளும் (நியூட்ரான்களும்) நெருங்கி வினைப்படும்பொழுது தொடர்வினையாக அணுக்கரு வினைகள் நிகழ்கின்றன. இவ்வினைகள் நிகழவேண்டுமாயின், நொதுமிகள் வெளியிடப்படுவதும், சில நொதுமிகள் பிளவுறும் அணுப்பகுதிகளோடு சேர்வதும் நிகழ்வது தேவையாகும். (வளரும்) தமிழ் தொலைக்காட்சி சேவைகள் தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் தொலைக்காட்சி சேவைகள் உலகின் பல நாடுகளில் இருக்கின்றன. ஒளிபரப்பு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையே உள்ளடக்கினாலும், இணையம் செய்மதியூடாக பிற நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளை பெற முடியும். மாசாய் இனக்குழு மாசாய் இனக்குழு, கெனியாவிலும், வடக்கு தான்சானியாவிலும் வாழுகின்ற அரை-நாடோடித் தொல்குடி ஆகும். இவர்களுடைய தனித்துவமான வழக்கங்களும், உடைகளும், பெரும்பாலான வேட்டைக் காடுகளுக்கு அருகில் வாழ்வதும், இவர்களை உலகில் அதிகமாக அறியப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. இவ்வினக்குழுவினர், நிலோ-சகார மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மா என்னும் மொழியைப் பேசுகின்றனர். இவர்களிற் பலர் கெனியா, தான்சானியா ஆகிய நாடுகளின் அலுவலக மொழிகளான சுவாஹிலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்கிறார்கள். 1994 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கெனியாவில் 453,000 மசாய்களும், 1993 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தான்சானியாவில் 430,000 மசாய்களுமாக ஏறத்தாழ 900,000 மசாய்கள் வாழுகின்றனர். அவர்கள் அணுகுவதற்குக் கடினமான பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களுடைய அரை-நாடோடித் தன்மையாலும் இவர்களைக் கணக்கெடுப்பது சிக்கலாக உள்ளது. கெனியா, தான்சானியா அரசுகள், மசாய்கள் தமது அரை-நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிடுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்ற போதிலும், இவர்கள் தமது பழைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவே விரும்புகிறார்கள். சூலு இனக்குழு சூலு இனக்குழு தென்னாப்பிரிக்காவில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் வாழும் இவர்களின் மக்கள்தொகை 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தவிர, சிம்பாப்வே, சாம்பியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் இசிசூலு மொழி ஒரு பான்டு மொழியாகும். குறிப்பாக, இது ங்குனி துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தென்னாபிரிக்க வரலாற்றில் முன்னணிப் பங்காற்றியது. இன ஒதுக்கல் கொள்கை நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். கலீல் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் ("Khalil Gibran", xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான், அரபு , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார். லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார். 1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. 1923 இல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளால் 1931 ஏப்ரல் 10 இல் தனது 48 ஆவது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார். சூ சுங்ச்சி சூ சுங்ச்சி ("Zhu Rongji", பிறப்பு: அக்டோபர் 1, 1928) சீனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மார்ச் 1998 இலிருந்து மார்ச் 2003 வரையிலான காலகட்டத்தில் முதலில் சீனாவின் துணைப் பிரதமராகவும் பிறகு பிரதமராகவும் இருந்தவர். கடும் நிர்வாகியாகவும் சீன பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கிய பங்குவகித்தவராகவும் மதிப்பிடப்படுகிறவர். 1987 இலிருந்து 1991 வரையிலான காலகட்டத்தில் ஷாங்காய் நகரத்தின் மேயராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவரது பதவிக்காலங்களில் ஊழல்களால் புரையோடிப் போயிருந்த கட்சியையும் ஆட்சியையும் சுத்தப்படுத்தும் சோதனை நிறைந்த வேலைகளில் இவர் இறங்கினார். இவரது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சீன மக்களிடம் இவருக்கு பெரிய அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் சீனாவின் அரசுடைமை நிறுவனங்களில் மேற்கொண்ட சீர்த்திருத்த முயற்சிகள் காரணமாகவும் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாகவும் இவர் மீது கடும் விமர்சனங்களும் உண்டு. 1949 அக்டோபரில் இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1951 இல் புகழ்பெற்ற ஷிங்குவா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு வடகிழக்கு சீன தொழிற்துறை துறையில் உற்பத்தித் திட்ட அலுவலகத்தில் இணைத் தலைவராக பணிபுரிந்தார். 1952-1958 கட்டத்தில், அரசு திட்டக்குழுவில் குழு தலைவராகவும் இணை பிரிவுத்தலைவராகவும் பணியாற்றினார். மாபெரும் முன்னோக்குப் பாய்ச்சல் காலகட்டத்தில் பின்பற்ற மா சே துங்கின் கொள்கைகளை "பகுத்தறிவுக்கு ஒவ்வாத உயர் வளர்ச்சிக்" கோட்பாடுகள் என இவர் விமர்சித்தார். இதனால் வலதுசாரி என்று முத்திரைக் குத்தப்பட்டு, 1958 இல் ஊழியர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியுமாறு அனுப்பப்பட்டார். 1962 இல் மன்னிப்பு பெற்றவர், பின்பு அரசு திட்டக்குழுவின் தேசிய பொருளாதார மன்றத்தில் பொறியாளராக 1969 வரை பணியாற்றினார். கலாச்சார புரட்சி காலத்தில், ஜூ மீண்டும் பதவிநீக்கம் செய்யப்பட்டார். 1970 இலிருந்து 1975 வரை, "அறிவு பெறுவதற்காக" மே செவன்த் கேடர் ஸ்கூலுக்கு அனுப்பப்பட்டார். 1975 முதல் 1979 வரை, பெட்ரோலிய அமைச்சகத்தின் பைப்லைன் பீரோவால் நடத்தப்பட்ட நிறுவனம் ஒன்றில், இணை தலைமை பொறியாளராக இருந்தார். சைனீஸ் அகாடெமி ஆஃப் சோஷல் சையன்ஸஸ் அமைப்பின் கீழ் வரும் தொழில்துறை பொருளாதார பயிலகத்தில் இயக்குநராகவும் ஆனார். 1978 இல் டெங் ஷியாவ்ப்பிங் பொருளாதார சீர்த்திருத்தங்களைத் தொடங்கிய போது, தனது கோட்பாட்டுக்கு இசைந்தவர்களை தேடினார்.அப்படித்தான் டெங் ஜூவைக் கண்டறிந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜூவின் உறுப்பாண்மை புதுப்பிக்கப்பட்டது. "ஜூவுக்கு சொந்த கருத்துகள் உண்டு. தைரியமாக முடிவுகளை எடுக்கக்கூடியவர். பொருளாதாரம் தெரி்ந்தவர்" என்றார் டெங். எரிபொருள் மற்றும் சக்தி துறை அலுவலகத்தில், அரசு பொருளாதார ஆணையத்தின் கீ்ழ் ஜூ புதிய பதவி பெற்றார். 1979 முதல் 1982 வரையிலான காலத்தில், ஒன்றுபட்ட அலுவலத்தில் இணை இயக்குநராக இருந்தார். பின்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆனார். 1983 இல் ஆணையத்துக்கு பொறுப்பான பதவியாக இணை அமைச்சராகவும் ஆனார். பின்பு 1987 இல் ஷாங்காய் மாநகரத்தின் மேயராக நியமிக்கப்பட்டார். 1989 -1991 காலத்தில் ஷாங்காய் மேயராக இருந்த ஜூ, புதோங் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, வளர்த்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மாநகரத்தின் தொலைத்தொடர்பு, நகர கட்டுமானம், போக்குவரத்து போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு இவர் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்தன. 1991 இல் அரசு கவுன்சிலின் துணைப் பிரதமராக ஆனார். ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்குக்குச் சென்றார். தொழில்துறை, வேளாண்மை, நிதி போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். அரசுடைமை நிறுவனங்களின் கடன் வலையை வெட்ட முயன்றார். 1993 -1995 காலத்தில் கட்சியின் நிலைக்குழு உறுப்பினாராகவும் 1995 - 1998 காலத்தில் மக்கள் சீன வங்கியின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை வகித்தார். இந்த காலகட்டத்தில் நிதி சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டார். பேரியல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், அதிவேக வளர்ச்சியினால் ஏற்படும் நிலைகுலைவுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சவால்களை சந்தித்தார்.ஜூவின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் அவர் வலுவான தீவிரமான செயல்திறம் மிக்க தலைவர் என்ற பெயரைப் பெற்றார். ஊழலுக்கும் உறவுச்சார்புக்கும் எதிரான செயல்பாடுகள் அவற்றில் முக்கியமானது. அவரது செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானதாக இருந்தன. தலைவர் ஜியாங் ஜெமினும் பிரதமர் லி பெங்கும் அளித்த ஆதரவின் பக்க பலத்தில் ஜூ தீவிரமான பேரியல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஆரோக்கியமான நிலைபெறு வளர்ச்சிக்கு ஏற்றதான செயல்பாடுகள் அவருடையது என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். தாழ்நுட்ப நிறுவனங்களை மூடினார். பணம் தின்னும், ஆனால் பலன் அளிக்காது இருந்த அரசுடைமை நிறுவனங்கள் மீது அவரது கடும் பார்வை திரும்பியது. மார்ச் 17, 1998 இல் அதிபர் ஜியாங் ஜெமின் ஜூவை பிரதமராக்கினார். பொருளாதாரத் துறையில் 90 கள் மிகவும் கஷ்டமான காலம். நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரி்த்திருந்தது. அரசு நிர்வாகம் ஊழலால் மூழ்கிக்கிடந்தது. அந்த பதிற்றாண்டில் சீனாவின் சராசரி வளர்ச்சி விகிதம் 9.7% ஆக நிலைபெற்றிருந்ததற்கு ஜூ ஒரு முக்கிய காரண கர்த்தா. அப்போது தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளால் ஆசிய பொருளாதாரம் நிலைகுலைந்திருந்த போதும், சீனா அந்த நெருக்கடியில் சிக்காது தப்பித்ததற்கு ஜூ எடுத்த நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாகும். பொதுத்துறையில் சம்பளத்தைக் கூட்டி, நுகர்வு டிமாண்டை அதிகரித்தது உள்பட அவர் எடு்த்த பல நடவடிக்கைகள் சீனாவுக்கு ஸ்திரத்தைத் தந்தது. அரசுடைமை நிறுவனங்களை சீர்திருத்தும் பணியில்தான் ஜூவின் மிகமுக்கிய தலைமைத்துவம் வெளிப்பட்டது. பெரிய அளவில் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி, வேலையின்மையையும் சமூகக் குலைவையும் எதிர்கொள்வதைத் தவிர்த்து அரசுடைமை நிறுவனங்களை எப்படி சீர்திருத்தம் செய்வது என்பது ஒவ்வொரு சீன தலைவருக்குமே பெரிய தலைவலியாகத்தான் இருந்தது. ஜூ அரசுடைமை நிறுவனங்கள் பலவற்றை மூடினார். ஆனால், வேலையிழப்பவர்களின் பொருளாதார ஸ்திரத்துக்கு உதவியளிக்கக்கூடிய நிதி பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்தக் கோரினார். வேலையிழப்போருக்கு வேறு வேலை கிடைப்பதற்காக சுமார் 10 கோடி நகர்ப்புற வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்கவும் வேண்டியிருந்தது. இந்த வேலையை முடிந்தவரை சிறப்பாக செய்தார் ஜூ. அவரது செயல்பாடுகளின் தொடர்ச்சியான விளைவாக 2001 இல் உலக வர்த்தகக் கழகத்தில் சீனா இணைந்தது. மார்ச் 2003 இல் அவரது பதவிக்காலம் முடிந்தது. ஜூவின் கீழ் துணைப் பிரதமராக பணியாற்றிய அவருடைய நெருங்கிய சகாவான வன் ஜியாபாவ் புதிய பிரதமரானார். மிகச்சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய சீனத் தலைவர்களில் ஒருவர் ஜூ. மிங் வம்சத்தை நிறுவிய பேரரசர் ஹோங்வுவின் சந்ததியைச் சார்ந்தவர் அவர் என்று் சொல்லப்படுகிறது. கரந்தன் கரந்தன் என்கின்ற பெயர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணப் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு வழங்கி வரும் பெயர் ஆகும். இக்கிராமம் உரும்பிராய் நகரசபையினுள் தனது ஒரு பகுதியையும் நீர்வேலி கிராமசபையினுள் மறுபகுதியையும் கொண்டிருக்கின்றது. ஊரெழுவிலிருந்து கிழக்குப்பக்கமாக ஒரு மைல் தொலைவிலும் உரும்பிராயின் கிழக்குப் பகுதியிலும் போயிட்டி அச்செழுவின் தெற்குப்பகுதியிலும் நீர்வேலியின் மேற்குப்பகுதியிலும் இது அமைந்துள்ளது. ஊரெழுவில் இருந்து நீர்வேலி நோக்கிச் செல்லும் பிரதான பாதை இக்கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது. உரும்பிராயின் கிழக்குப்பகுதியிலிருந்து வரும் இரண்டு பாதைகள் இந்தப் பிரதான பாதையைச் சந்திக்கின்றன. காட்டு வைரவர் கோவில் என்றழைக்கப்படும் ஆலயத்தின் முன்னால் வரும் ஒரு பாதை இப்பிரதான பாதையின் மேற்குக் கரையிலும் மற்றைய பாதை இக்கிரமத்தின் நடுவிலும் சந்திக்கின்றது. நடுவில் சந்திக்கும் இப்பாதை தொடர்ந்து வடக்குப்புறமாகச் சென்று புன்னாலைக்கட்டுவன் - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது.இதற்குச் சற்றுக் கிழக்கே இருந்து ஆரம்பிக்கும் பாதையும் அச்செழு அம்மன் ஆலயத்தின் முன்புறமாகச் சென்று புன்னாலைக்கட்டுவன் - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது. நல்லூரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் “இராச வீதி” எனப்படும் பாதையும் இக்கிராமத்தின் கிழக்கே அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே சுமார் 500 குடும்பங்கள்வரை வாழ்கின்றனர். சுமார் 70 வீதமானோர் விவசாயம் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள் ஆனாலும் 95 வீதமானோர் கல்வியறிவு உடையவர்களாகவே விளங்குகின்றார்கள். இந்தக் கிராமத்திலிருந்து பல கல்விமான்களும் தியாகிகளும் உருவாகியுள்ளனர். ஆலயம் இதன் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது சிவபூதநாதர் தேவஸ்தானம். (பூதவராயர் கோவில் என்று முன்னர் இதனை அழைப்பர்.) இதனைச் சுற்றியுள்ளவர்களைக் காக்கும் தெய்வமாகவே அவர் விளங்குகிறார். ஆண்டுதோறும் ஆலயத்தில் திருவிழாக்களும் ஏனைய விழாக்களும் நடைபெறுகின்றன. தினமும் மூன்றுகாலப் பூஜையோடு அன்னதானங்களும் சிறுவர்களுக்கான நாவன்மை அறிவுப்போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. புனருத்தாரணம் செய்யப்பட்ட திருத்தலமும் அலங்காரத்தேரும் அருகேயுள்ள வீதியும் இவ்வாலயத்தின் எழிலுக்கு மெருகூட்டுவன. கணீர் என்று அதிகாலையில் ஒலிக்க ஆரம்பிக்கும் மணியோசை தவறாது மூன்று வேளையும் பூஜைக்கு முன்னர் சங்கீதமாக அனைவரது காதுகளிலும் ஒலிக்கும். 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “கரந்தன் கலைவாணி வாசகசாலை” இக்கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. திருவாளர் க.இராசையா அவர்களின் அன்பளிப்பான நிலத்தில் இவ்வாசகசாலை அமைந்து அனைவரதும் வாசிக்கும் பசியைத் தீர்க்கின்றது. இதற்கு மிக அருகிலே ஒரு இராணுவ முகாம் அமைந்துள்ள போதிலும் அனைவரும் இங்குவந்து பயனடையத் தவறுவதில்லை. இது இப்போது “கரந்தன் கலைவாணி சனசமூக நிலையம்” என அழைக்கப்படுகின்றது. கரந்தன் இணையம் ந. செல்வராஜா நடராஜா செல்வராஜா (பி. அக்டோபர் 20, 1954) ஈழத்து நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் ஆறு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கப்பூர், மலேசிய நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. "யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு" செல்வராஜா எழுதிய பல நூல்களிலொன்றாகும். அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் 1985 முதல் 1991 வரை வெளியிட்ட "நூலகவியல்" காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். வடகாடு வடகாடு தானம நாடு ("Vadakadu"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமும், ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும். அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல்நிலையம், அரசுடைமையுடைய யுகோ வங்கி, காவல் நிலையம், உயர் மின்னழுத்த மின்பகிர்வு நிலையம், மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளன. இப்ப‌குதி தோராய‌மாக‌ 19ம் நூற்றாண்டு கால‌த்தில் உருவான‌து. "அவைகளின் தொகுப்பு" இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அதுவே அவர்களில் வாழ்வாதாரம். இங்கு வாழை, பல வகையான மலர்கள்(மகை, அரும்பூ, ரோஜா, முல்லை) போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 160 அடி வரைச் சென்றுள்ளது. வானம் பார்த்த பூமியாக இருந்து வந்த இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மழைக் காலங்களில் 9.08 மீட்டர் ஆகவும், கோடை காலங்களில் 17.49 மீட்டர் ஆகவும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மிக அதிகம் இப்பகுதிக்குத்தான் என்றாலும் கூட விவசாயத்தில் அதிகப்படியான கவனங்களுடன் ஈடுபடுகிறார்கள். காய்கறிகள் உற்பத்தி 1995-96ம் ஆண்டுகளில் 2900 டன் அளவில் 60 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்துது மகசூல் காணப்பட்டது. ஆழ்குழாய் கிணறு வழியாக நீர் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. 25000 ஏக்கர் நிலப்பரப்பு ஆழ்குழாய் கிணறு வழியாக பாசன வசதிபெறுகிறது. புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கான மாநில நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சரியாக 29 கி. மீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து 30 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. முற்றிலும் சமதளமுடன் கூடிய பகுதி மற்றும் மரகாய்கறி, பழவகைகள் உற்பத்தி செய்ய சரியான மண் தன்மைகொண்ட பகுதியாகும். 2006 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகை 7,948. இதில் பெண்கள் 3993 ஆண்கள் 3,955. மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,725. மேலும் ஆண்கள் பெண்களை விட சராசரி 1% குறைவாக உள்ளனர். இவர்களிடையே சிலவகையான பிரிவுகள் (கரைகள்) கொண்டுள்ளார்கள். அப்பிரிவுகளை வைத்தே திருமண முறைகள் நடைபெறுகிறது. பொதுவாக இவர்களுடைய 98 சதவிகிதம் இந்த முறையினையே பின்பற்றுகிறார்கள். இவர்களுடைய திருமண வைபோக சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்து திருமண முறையினை ஒத்தது சற்று மாறுபட்டது. அவைகளாவன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழுமத்திற்குள் தன்னுள்ளே திருமணம் செய்துகொள்வதில்லை. அதாவது ஒவ்வொரு குழுமத்திற்குள்ளும் சில தெருக்கள் அடங்கும். அந்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருக்களுக்குள் உள்ளவர்களுக்குள் திருமணம் செய்துக்கொள்வதில்லை. மாறாக அடுத்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருவில் உள்ளவர்களுடன் மட்டுமே திருமணம் செய்கிறார்கள். இக்கட்டமைப்பிற்கு சேர்வைகாரவகையறாக்கள் என்ற குழுமத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காரணம் அக்குழுமம் முற்றிலும் ஆலய விழாவில் முக்கியமானவர்கள். மேலும் இக்குழுமத்தில் மட்டும் ஒரே ஒரு தெரு கொண்ட மிகச் சிறிய (100 குடும்பம்,500 நபர்கள்) குழுமம் ஆகும். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர். இருந்தும் இந்துசமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும் புரோகிதர், கோமம், பற்பல பூஜைகள் போன்றவைகள் பின்பற்றுவது இல்லை. மாதந்தோறும் பௌர்ணமி் அன்று அம்மனுக்கு அபிசேக ஆராதனை சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அருள்மி்கு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 7ம் நாள் பால்குடம் எடுத்தல் மற்றும் சேர்வைகாரன்பட்டி சேர்வைகார வகையறாக்களால் நடத்தபடும் அன்னதான விழாவும், 8ம் நாள் பொங்கல் விழாவும், 9ம் நாள் அருள்மிகு முத்துமாரி அம்மன் தேர்பவனி திருவிழாவும், 10ம் நாள் அம்மன் மஞ்சள் தீர்த்த உற்ச்சவத்திருவிழாவும், வெகுவிமர்சியாக நடைபெறும். திருமணஞ்சேரி என்ற புனித தளம் இவ்வூரிலிருந்து சுமார் 10 கி. மீ வடக்கில் உள்ளது. இப்பகுதியினை பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிடப்படத் தக்க வேண்டியவர்கள் வருடாந்திரம் ஆடி மாதம் முழுவதும் தினமும் இப்பகுதியில் மொய்விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதன் உயரிய நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவரை சற்று உயர்த்தும் நோக்கம் மட்டுமே. எவ்வித வட்டியும் இன்றி அவர் இந்த மொய்விருந்து விழாவில் கிடைத்த தொகையினை கொண்டு தன்னை பொருளாதாரத்தில் சற்று உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெறும் நேரம் பகல் 12 மணி ஆகும். வடகாடு கிராமத்தினை தொடர்ந்து சில கிராமங்கள் உள்ளன. அவைகள் இக்கிராமத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளன. கொத்தமங்கலம்,கீரமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இக்கிராமத்தினை ஒட்டிய பகுதிகளாகும்.