சங்கற்ப நிராகரணம் சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட ஒரு நூலாகும். இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச் சமயத் தத்துவங்களை மறுத்து எழுதப்பட்டது. என்னும் ஒன்பது சமயவாதங்கள் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது. என்னும் இரண்டு சமயவாதங்களும் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது. இந்த நூல் 474 குறள் வெண்பாக்களால் ஆனது. முதலான அறங்கள் இந் நூலில் போற்றப்பட்டுள்ளன. கொண்டல்போ லுங்கரத்தான் என்றால் கொடைஎணுவர் கொண்டலுரு கையிற் கொளார். நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை என்றும் சிவன்தாள் இணை. மெய்ப்பொருள் நாயனார் மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார். இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார். “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத் தொகை. விறன்மிண்ட நாயனார் “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனைய பற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர். திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார். இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார். அமர்நீதி நாயனார் அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே "பழையாறை" என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர். வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார். அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். "அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள்" என வேண்டினார். இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். "அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக" என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன. அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள். "அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்" – திருத்தொண்டத்தொகை இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை. அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம். போற்றிப் பஃறொடை போற்றிப் பஃறொடை சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது, 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. 196 அடிகளைக் கொண்டு அமைந்த இந் நூல் மூலமாகத் தன்னுடைய குருவான மறைஞான சம்பந்தரை உமாபதியார் போற்றிப் பாடியுள்ளார். டைக்குவாண்டோ டைக்குவாண்டோ ("Tae Kwon Do") என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். இக்கலை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் பயிற்சி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது. கொரிய மொழியில் "Tae" (跆) என்பது "உதை" எனவும் "Kwon" (拳) என்பது கைகாளால் தாக்குதல் எனவும் "Do" என்பது (道) கலை எனவும் பொருள்படும். அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம். ஏனைய தற்காப்புக் கலைகள் போல் இதுவும் எதிரியை அடக்க, தற்பாதுகாப்புக்காக, விளையாட்டாக, உடற்பயிற்சிக்காக மற்றும் களியாட்டம் என்று பல வகைகளிலும் இது பயன்பாட்டில் உள்ளது. டைக்குவாண்டோ கலையில் கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் குறிப்பிட்ட வல்லுநர் எதிரி தன்னை நெருங்கும் போது கால்களைப் பயன்படுத்தி எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்வார். நவீன டைக்குவாண்டோ கலையை அறிமுகப்படுத்தியவர் "சோய் ஹொங் ஹி (Choi Hong Hi") என்னும் இராணுவ மேஜர் ஆவார். இவர் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியரின் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டார். கொரியாவில் அக்காலப்பகுதியில் பிரபலமாக விளங்கிய "டைக்கியான்" (taekyon) என்ற தற்காப்புக்கலையின் அடிப்படையில் புதிய முறைகளையும் புகுத்தி நவீன டைக்குவாண்டோவை ஏப்ரல் 11, 1955இல் அறிமுகப்படுத்தினார். கொரிய டைக்குவாண்டோ அமைப்பு (KTA) 1959 இல் அமைக்கப்பட்டது. அதே காலப்பகுதியில் இக்கலை அமெரிக்காவில் அறிமுகமானது. ஹொங் இந்த அமைப்பில் இருந்து விலகி தனியான சர்வதேச டைக்குவாண்டோ அமைப்பை 1966இல் ஆரம்பித்தார். 1973இல் உலக டைக்குவாண்டோ அமைப்பு உருவானது. 1988இல் சியோலிலும் பின்னர் 1992இல் பார்சிலோனாவிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இது காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டில் சிட்னியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் முழுமையான போட்டியாக அறிமுகமானது. சூன் 23 இன்பத்தமிழ் ஒலி இன்பத்தமிழ் ஒலி என்பது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிச் சேவை ஆகும். இது 1995 மே மாதத்தில் பாலசிங்கம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ள இவ்வானொலி நிலையமே ஆஸ்திரேலியாவில் 24 மணித்தியாலங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை முதன் முதலில் ஒலிபரப்பியது. உலகில் இரண்டாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஆகும். நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் ஆகிய மாநிலங்களுக்கு இன்பத் தமிழ் ஒலி தனது தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அத்துடன் செய்மதி ஊடாக அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நியூசிலாந்துக்கும் இன்பத்தமிழ் ஒலி செல்கிறது. இன்பத்தமிழ் ஒலியின் அறிவிப்பாளர்களாக பாலசிங்கம் பிரபாகரன், திலகா பிரபாகரன், களுவாஞ்சிக்குடி யோகன், செந்தூரன் சிதம்பரநாதன், செல்வி ரஞ்சன், யூசவ், சுவேதன் தனபாலசிங்கம், குலேந்திரன் பரமானந்தசிங்கம் ஆகியோர் சேவையாற்றுகின்றனர். அரசியல் தத்துவம் அரசியல் தத்துவம் ("political philosophy)" என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் ("issues") குறித்த கருத்தியல் சுருக்கங்களில் ("conceptual abstractions") ஈடுபடும் தத்துவப் பிரிவு ஆகும். தமிழில் அரசியல் தொடர்பாக திருக்குறளில் பல தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம் என அறியப்படும் முப்பாலிலே பொருட்பாலில் அரசியல் பற்றி இறை மாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரையிலான இருபத்தைந்து தலைப்புகளில் இரு நூற்றைம்பது குறள் கவிதைகள் பல நுட்பமான செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. அவை மட்டுமன்றி பொருட்பாலிலே அமைந்துள்ள அமைச்சியல்,அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் நானூற்று ஐம்பது குறள் கவிதைகள் கூறுவதும் அரசியல் தத்துவம்தான். தொல்காப்பியக்காலம் தொடங்கி திருக்குறள் காலம் தாண்டி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் அரசியல் தத்துவம் எதுவும் படைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2010 சூன் மாதம் தமிழ்மண் இதழில் தொல்.திருமாவளவன் அமைப்பாய்த் திரள்வோம் என்கிற அரசியல் தத்துவத் தொடரை எழுதத்தொடங்கி இந்த சனவரி 2014 வரை நாற்பது தலைப்புகளில் முதல் பாகத்தை முடித்திருக்கின்றார். பல அரசியல் தத்துவ நூல்கள் தமிழில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்த போதும், தமிழில் நவீன காலத்தில் எழுதத்தொடங்கப் பட்டிருக்கின்ற முதல் தமிழ் மூல நூலாகும். இது கிரேக்க தத்துவஞானி சாக்ரடிசுடைய காலத்திற்கு முற்பட்ட காலக்கட்ட தத்துவஞானிகளின் தத்துவத்தொகுப்பு. (இங்கு சாக்ரடிசுடைய தத்துவத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படாத அவர் கால தத்துவஞானிகளும் அடக்கம்.) காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) புதுச்சேரி (2) காரைக்கால் (3)மாஹே (4) ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்கால், திருமலைராஜன்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர்,நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இது காவிரி கழிமுகத்தில் அமைந்துள்ளது.அரசலாறு, உப்பனாறு, முல்லையாறு, திருமலைராயன் ஆறு ஆகிய ஆறுகள் காரைக்கால் மாவட்டத்தில் ஓடுகின்றன. மேற்கு எல்லையாக திருவாரூர் மாவட்டமும், வட தென் எல்லையாக நாகப்பட்டினம் மாவட்டமும் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் உள்ளது. இதை நாகப்பட்டிண மாவட்டத்துக்கு இடையில் உள்ள பகுதி என்று சொல்வதும் பொருந்தும். திருநள்ளாறு என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. 2001 ஆம் கணக்கெடுப்புப்படி 1,70,640 மக்கள்தொகை உடையதாகவும் உள்ளது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகையில் 49.01 % நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 200314 . தமிழ் பெரும்பாலோரின் மொழி. பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள். காரைக்காலில் 63 நாயன்மார்கள் உள்ள ஒருவரான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் வாழ்ந்தார். சிவ பெருமானால் "அம்மையே" என்று அழைக்கபட்ட அம்மையார் வாழ்ந்த இடம் காரைக்கால் மாநகர்.இங்கு உள்ள அம்மையார் கோவிலில் வருடா வருடம் மாங்கனி திருவிழா நடைபெறும். லிண்டெமன் கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் (12 ஏப்ரல் 1852 - 6 மார்ச் 1939) ("Karl Louis Ferdinand Lindemann") ஒரு ஜெர்மானிய கணிதவியலர். ஹனோவரில் பிறந்து, மியூனிக், கெட்டிங்கென், ஆகிய இடங்களில் படித்து, எர்லாங்கெனில் ஃபெலிக்ஸ் க்ளைனின் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1882 இல் formula_1உம் ஒரு விஞ்சிய எண் என்று நிறுவல் கொடுத்து புகழடைந்தார். லியொவில்தான் முதன் முதலில் (1844) விஞ்சிய எண்கள் என்ற எண்களை உண்டாக்கிக் காட்டினார். ஆனால் அவர் காட்டிய எண்கள் அதற்காகவே சிரமப்பட்டு உண்டாக்கிய எண்கள். ஏற்கனவே நமக்குத் தெரிந்த எந்த எண்களையும் விஞ்சிய எண் என்று அவர் காட்டவில்லை. இதனில் ஒரு கணிதத் தத்துவமே அடங்கியிருக்கிறது. நாம் எண்களை உண்டு பண்ணும்போது படைத்தல் தொழிலைச் செய்தல் போன்று யாவும் நம் ஆதிக்கத்தில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சர்ச்சையில் உள்ள கணிதமாறிலிகளான e, formula_1 போன்ற முக்கியமான எண்களை நாம் விஞ்சிய எண்களா இல்லையா என்று பார்க்கும்போது, அவைகளின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம். இதனால் தான் ஹெர்மைட் 1873 இல் "e" ஒரு விஞ்சிய எண்தான் என்று நிறுவியபோது கணித உலகம் அதை ஒரு பெரிய சாதனையாக வரவேற்றது. அவரே formula_1 ஐயும் அதேமாதிரி தீர்மானித்துவிடுவார் என்று உலகம் எதிர்பார்த்தது. ஒன்பது ஆண்டுகள் சென்றபின் லிண்டெமன் இச்சாதனையைப்புரிந்தார். formula_1 ஒரு இயற்கணித எண் அல்ல என்ற உண்மை இரண்டாயிரம் ஆண்டுகளாக கணித இயலர்கள் மட்டுமன்றி மற்ற யாவரையுமே பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு ஆட்டிவைத்த பழைய பிரச்சினை ஒன்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதுதான் வடிவவியலில் அளவுகோல், கவராயம் ( ruler & compass) இவைகளை மட்டும் கொண்டு ஒரு வட்டத்தின் பரப்பிற்குச் சமமான சதுரத்தை வரைவது என்ற சவால். இப்பிரச்சினைக்கு "Squaring the circle" என்று பெயர். இது எக்காலும் முடியாது என்பது லிண்டெமன் formula_1 ஒரு விஞ்சிய எண் என்று நிறுவியதன் விளைவு. ஏனென்றால் formula_1 ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால் தான் இது முடியும் என்று அவர் காலத்திற்கு முன்னமேயே தெரிந்த கணித உண்மை. இது ஒரு எண்கோட்பாட்டுத் தேற்றம். லிண்டெமன் தேற்றத்தைவிட பலமானது. சில அடுக்குப் பல்லுறுப்புக்கோவைகளுக்கு (Exponential Polynomials) சூனியப்புள்ளிகள் (Zeros) இருக்கமுடியாது என்பதைச் சொல்கிற தேற்றம். இதனுடைய கிளைத் தேற்றங்களாக, "e", formula_1 இவையிரண்டுமே விஞ்சிய எண்கள் என்று நிறுவிவிடமுடியும் . இத்தேற்றம் லிண்டெமன், வியர்ஸ்ட்ராஸ் இருவருடைய பெயர்களையும் கொண்டிருக்கிறது. இதனுடைய துல்லியமான வாசகம் பின்வருமாறு: α...,α தனித்தனி இயற்கணித எண்களின் தொடர்பாகவும், மற்றும் β...,β எல்லா β யும் சூனியமாக இல்லாமல் ஏதாவது இயற்கணித எண்களின் தொடர்பாகவும் இருக்குமானால் , formula_8 முதல் விளைவு: e ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால், β...,β, என்ற எண்கள் பின்வரும் சமன்பாடு ஒன்றைச் சரியாக்கும்: formula_9 ஆனால் இது லிண்டெமன் - வியர்ஸ்ட்ராஸ் தேற்றத்தைப் பொய்யாக்குகிறது. ஃ e ஒரு இயற்கணித எண்ணல்ல. இரண்டாவது விளைவு: லிண்டெமன் தேற்றத்தின் விளைவேதான். formula_1 ஒரு இயற்கணித எண்ணாக இருக்கமுடியாது. பிற்காலத்தில் ஹில்பர்ட் "e", formula_11 இவை விஞ்சிய எண் என்பதற்கு மாற்று நிறுவல்கள் கொடுத்தார். டேவிட் ஹில்பர்ட், ஹெர்மன் மின்கொவ்ஸ்கி முதலிய சிறந்த அறிவியலர்கள் அவர் கீழ் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்.ஆசிரிய-மாணவ பரம்பரையில் ஃபெலிக்ஸ் க்ளைன் - லிண்டெமன் - ஹில்பர்ட் பரம்பரை குறிப்பிடத்தக்கது. உமாபதி சிவாசாரியர் உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே. 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. இவர் வடமொழியிலும் திறமை பெற்றிருந்ததால், அம் மொழியிலிருந்த பௌஷ்கராகமத்துக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார். சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. இசுடர்லிங் உட்கண எண் கணிதத்தில் இசுடர்லிங் எண் என்பது இரண்டு வகையாகப் புழங்குகிறது. அவைகளில் ஒரு" n"-கணத்தை "k" உட்கணங்களாகப் பிரிக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கை இர ண்டாவது வகை இசுடர்லிங் எண் அல்லது இசுடர்லிங் உட்கண எண் (Stirling Subset Number) எனப் பெயர் பெறும். இதற்குக் குறியீடு "S(n,k)" என்றோ அல்லது formula_1 என்றோ பயன்படுத்தப்படுகிறது. இதை "n"-subset-"k" என்றோ "n"-உட்கணம்-"k" என்றோ உச்சரிக்கலாம். எடுத்துக்காட்டாக, formula_2 = 7 ஏனென்றால், {a,b,c,d} போன்ற ஒரு 4-கணத்தின் இரண்டு உட்கணங்கள் கொண்ட பிரிவுகள்: இவ்வெண்களின் முதல் சில மதிப்புகளின் அட்டவணையை ஸ்டர்லிங் எண்கள் என்ற கட்டுரையில் பார்க்கவும். n > 0 என்றால், "n" பொருட்களை உட்கணங்களாகப்பிரிக்கும்போது, ஏதாவதொரு குறிப்பிட்ட பொருளை (formula_4 என்று சொல்லலாமே) கவனித்தால் அது ஒற்றையாகவே ஓர் உட்கணமாக இருந்தாலும் இருக்கலாம்; அல்லது ஏதாவது மற்றோர் உட்கணத்தோடு அதில் ஒன்றாக இருந்தாலும் இருக்கலாம். முதல் பட்சத்தில், மற்ற "n-1" பொருள்கள் formula_5 வழிகளில் உட்கணங்களாகப் பிரிகின்றன. இரண்டாவது பட்சத்தில் மற்ற "n-1" பொருள்கள் formula_6 வழிகளில் உட்கணங்களாகப்பிரிவதால், அவை ஒவ்வொன்றின் "k" உட்கணங்களில் ஏதாவதொன்றில் formula_4 சேர்ந்துகொள்ளலாம். இதனுடைய உருவாக்கம்தான் மீள்வரு தொடர்பு (Recurrence Relation). இதற்கு இரண்டுவிதமாக நிறுவல் அளிக்கலாம். உய்த்தறிதல் (Induction) முறை ஒரு முறை. இன்னொன்று சேர்வியல் முறை. சேர்வியல் முறையில் நிறுவல்: "x" ஒரு நேர்ம முழுஎண் என்று கொள். "|X| = x, |N| = n" இருக்கும்படி இரண்டு கணங்கள் "X, N" இருப்பதாகக் கொள். "N" இலிருந்து "X" க்குப்போகும் எல்லாக் கோப்புகளின் எண்ணிக்கை formula_9. இதே எண்ணிக்கையை இப்பொழுது வேறுவிதமாகக் கணிப்போம். ஒரு குறிப்பிட்ட கோப்பைக் கவனி. இதனுடைய வீச்சில் (Range)அடங்கிய உறுப்புக்களின் எண்ணிக்கை "k" என்று கொள். இந்த குறிப்பிட்ட மதிப்புள்ள 'k'க்கு, formula_1 வழிகளில் " N" இன் உறுப்புக்களை "X" இலுள்ள ஓர் உறுப்புக்குக் கோப்பிடலாம் (may be mapped).இவ்வழிகளில் ஒவ்வொன்றும் "N" ஐ உட்கணங்களால் பிரிக்கும் ஒரு பிரிவினை. ஒவ்வொரு பிரிவினையிலும் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் (அ-து. உட்கணத்திற்கும்)" X" இல் ஒரு பிம்பம் (Image) -- வெவ்வேறு பிரிவுக்கு வெவ்வேறு பிம்பம்--குறிப்பிடப்பட வேண்டும். இதற்குள்ள வழிகள்: formula_12 ஒரு நேர்ம முழு எண்ணாக இருக்கும்போது (*)இன் உண்மைக்கு இது நிறுவலாகிறது. ஆனால் இதனாலேயே, formula_12 ஐ மாறியாகக் கொண்டால், (*) இன் இருபக்கங்களிலும் உள்ள பல்லுருப்புகள் formula_12 இன் முடிவிலா எண்ணிக்கையுள்ள மதிப்புகளுக்கு உண்மையான சமன்பாடாகின்றன. இதன்பொருள் (*) ஒரு முற்றொருமைச் சமன்பாடு. இறங்குமுகக்காரணியத்துடன் உறவு (*) இல் காட்டப்பட்டது. அதனில் formula_12 ஐ formula_17 ஆக மாற்றினால் (**) கிடைத்துவிடும். சன் குழுமம் சன் நெட்வொர்க் ("Sun Network") அல்லது சன் குழுமம் கலாநிதி மாறனின் தலைமையில் இயங்கும் ஒரு ஊடக குழுமம். இக்குழுமத்தில் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தான் வழங்கும் சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது. சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன நாளிதழ்கள் வார இதழ்கள் மாதம் இரு முறை டிடிஹ் சேவை கேபிள் டி.வி திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றான திருவுந்தியார் என்னும் நூலை இயற்றியவர். வட பகுதியிலிருந்து தென்னாட்டுக்கு வந்திருந்த போது, திருக்கடவூரைச் சேர்ந்த ஆளுடையதேவ நாயனார் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந் நூலை இவர் இயற்றினார் என அ. சதாசிவம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இவர் திருவுந்தியாரை இயற்றிய காலம் கி.பி 1148 என மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். இது சரியாயின் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கூறலாம். எனினும் இதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்படுகின்றது . சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் மகா மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் "சைனா டவுன்" என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-ல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள். இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர் ஆவார். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது. 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது. 1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து "சின்ன அம்மன்" என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது. 16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான "பெரிய அம்மன்" எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. ஜூன் 1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றன. பிரித்தானிய ஆட்சிக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் அமைப்பாக இக்கோயில் இருந்துள்ளது. ஒரு நிலையான தொழில்,வேலை கிடைக்கும் வரை கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள். இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி திருமணச் சடங்கும் முறைப்படி நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது. இக்கோயில் கோவில் சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதிப்பு விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள். கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள். போலந்து போலந்து என்றழைக்கப்படும் போலந்து குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு, சிலோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் பால்டிக் கடலும், உருசியாவின் கலினின்கிராட் ஒப்லாசுத்தும் உள்ளன. போலந்தின் மொத்தப் பரப்பளவு 312,679 சதுர கிலோமீட்டர் (120,726 சதுர மைல்). இதன் அடிப்படையில் போலந்து உலகின் 69 ஆவது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9 ஆவது பெரியதாகவும் இருக்கிறது. 38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போலந்து உலகின் 34 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது பெரிய நாடாகவும் உள்ளது. போலந்து, "வோய்வோட்சிப்" எனப்படும் 16 மாகாணங்களைக் கொண்ட ஒற்றையாட்சி நாடு. இது, ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ, ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி, பன்னாட்டு ஆற்றல் முகமை, ஐரோப்பிய அவை, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, பன்னாட்டு அணு ஆற்றல் முகமை, ஜி6, பால்டிக் கடல் நாடுகள் அமைப்பு, விசேகிராட் குழு, வெய்மார் முக்கோணம், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் உறுப்பு நாடாகவும் உள்ளது. போலந்தின் உருவாக்கம், இன்றைய போலந்து நாட்டுக்குள் அடங்கும் பகுதிகளை ஆண்ட முதலாம் மியெசுக்கோ (Mieszko I) 966 ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவியதுடன் தொடர்பானதாகக் கடுதப்படுகின்றது. 1025 ஆம் ஆண்டில் போலந்து இராச்சியம் உருவானது. 1569ல் லுப்லின் ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. 1795 ஆம் ஆண்டில், போலந்தை, பிரசிய இராச்சியம், உருசியப் பேரரசு, ஆசுத்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், இந்த உறவு முடிவுக்கு வந்தது. 1918 ஆம் ஆண்டில், போலந்து, இரண்டாவது போலந்துக் குடியரசு ஆக விடுதலை பெற்றுக்கொண்டது. 1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், செருமனிக்கும் உருசியாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்-ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாழ ஆறு மில்லியன் போலந்து மக்கள் இப்போரில் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்துள் அடங்கியதான போலந்து மக்கள் குடியரசாக உருவாகி 1989 வரை நிலைத்திருந்தது. 1989 ஆம் ஆண்டுப் புரட்சியின் போது 45 ஆண்டுக்கால பொதுவுடைமை ஆட்சி தூக்கி எறியப்பட்டு சனநாயக ஆட்சி நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது பெரும் அழிவுகளுக்கு உட்பட்டிருந்தும், போலந்தின் பெரும்பாலான பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 14 யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்கள் போலந்தில் உள்ளன. பொதுவுடைமை ஆட்சி நீக்கப்பட்ட பின்னர், மனித வளர்ச்சி தொடர்பில் போலந்து அதியுயர் தரத்தை எட்டியுள்ளது. இன்று போலந்து என அறியப்படும் பகுதியில் முற்காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் இனம், மொழி என்பவை தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இப் பகுதிக்குள் சிலாவிய மக்கள் நுழைந்த காலம், வழி என்பவை தொடர்பிலான விடயங்கள், சர்ச்சைக்கு உரிய முக்கியமான கருப்பொருட்களாக உள்ளன. தொல்பழங்கால அல்லது முன்வரலாற்றுப் போலந்து தொடர்பிலான முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு, பிசுக்குப்பின் (Biskupin) அரண் குடியிருப்பு ஆகும். இது, கிமு 700 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைச் சார்ந்த முந்திய இருப்புக் காலத்தின் லுசாத்தியப் பண்பாட்டுக்கு உரியது. கிபி 960ல் கிறித்தவ மதத்துக்கு மாறும்வரை, போர், வளமை, செழிப்பு என்பவற்றுக்கான "சுவேத்தோவிட்" என்னும் சிலாவியக் கடவுள் மீது போலந்து மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். 10 ஆம் நூற்றாண்டில், பியாத்து வம்சத்தின் கீழ், போலந்து அடையாளம் காணப்படத்தக்கதான ஒருங்கிணைந்த வடிவத்தைப் பெற்றது. வரலாற்றில் அறயவருகின்ற முதல் அரசரான முதலாம் மியெசுக்கோ 966 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். அது நாட்டின் மதமும் ஆனது. தொடர்ந்து வந்த சில நூற்றாண்டுகளில் நாட்டு மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர் ஆயினர். 1000 ஆவது ஆண்டில் மியெசுக்கோவின் மகனான வீர போல்சுலாவ் தந்தையின் கொள்கைகளையே பின்பற்றி "கினியெசுனோ" மாநாட்டை நடத்தியதுடன், புதிய மறை மாவட்டம் ஒன்றையும் உருவாக்கினார். போல்சுலாவ் நாட்டைத் தனது மகன்களிடையே பிரித்துக் கொடுத்ததனால், 12 ஆம் நூற்றாண்டில் போலந்து பல சிறு டச்சிகளாகப் பிரிந்து காணப்பட்டது. போலந்து, அகலக்கோடுகள் 49°, 55° வ ஆகியவற்றுக்கும், நெடுங்கோடுகள் 14° and 25° கி ஆகியவற்றுக்கும் இடையில் பலவகையான புவியியல் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. வடமேற்கில் அமைந்துள்ள பால்டிக் கடற்கரை பொமரேனிய விரிகுடாவில் இருந்து, கிடான்சுக் வளைகுடா வரை நீண்டுள்ளது. இக்கரையோரத்தில் பல மணற் பள்ளங்களும், கரையோர ஏரிகளும், மணற் குன்றுகளும் காணப்படுகின்றன. பெரும்பாலும் நேர்கோடாக அமைந்துள்ள இக் கரையோரத்தில் இசுட்டெச்சின் குடா (zczecin Lagoon), புச்கு விரிகுடா (Bay of Puck), விசுட்டுலா குடா என்பன குழிவுகளாக அமைந்து காணப்படுகின்றன. நடுப் பகுதியும், வடக்கின் ஒரு பகுதியும் வட ஐரோப்பியச் சமவெளியில் அமைந்துள்ளன. இத் தாழ்நிலங்களில் இருந்து சற்று உயரத்தில், பிளீசுட்டோசீன் பனிக்கட்டிக் காலத்தில் உருவான பனியாற்றுப் படிவுகளையும் பனியாற்று ஏரிகளையும் கொண்ட நான்கு குன்றுப் பகுதிகள் உள்ளன. இவ்வேரிப் பகுதிகள் பொமரேனியன் ஏரி மாவட்டம், பெரும் போலிய ஏரி மாவட்டம், கசுபிய ஏரி மாவட்டம், மசுரிய ஏரி மாவட்டம் என்பனவாகும். இவற்றுள் பெரிய மசுரிய ஏரி மாவட்டம், வடகிழக்குப் போலந்தின் பெரும் பகுதியில் பரந்துள்ளது. வட ஐரோப்பிய தாழ்நிலங்களுக்குத் தெற்கில் சிலேசியா, மசோவியா ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் அகலமான பனிக்கட்டிக்கால ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. மேலும் தெற்கே போலந்தில் மலைப் பகுதிகள் அமைந்துள்ளன. போலந்தின் தெற்கு எல்லையை ஒட்டி, கார்ப்பதியன் பலைகளில் மிகவும் உயரமான தாத்திரா மலை உள்ளது. போலந்தின் நிலவியல் அமைப்பு, கடந்த 60 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகியவற்றின் கண்ட மோதுகையினாலும், வட ஐரோப்பாவின் நான்காம் நிலை உறைபனிப் பரவலினாலும் ஏற்பட்டது. இவ்விரு செயற்பாடுகளும், சுடேட்சு, கார்ப்பதியன் ஆகிய மலைகளை உருவாக்கின. போலந்து, 2,000 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட 70 மலைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்துமே தாத்திராசு பகுதியிலேயே அமைந்துள்ளன. உயர் தாத்திராசு, மேற்குத் தாத்திராசு என இரண்டு பிரிவாக உள்ள போலந்தின் தாத்திராசுவே நாட்டின் மிகவும் உயரமான மலைத் தொகுதி ஆகும். போலந்தின் மிக உயரமான இடம், மட மேற்குச் சிகரமான "ரிசி" ஆகும். இது 2,499 மீட்டர் (8,199 அடி) உயரமானது. இதன் அடிவாரத்தில், சார்னி இசுட்டஃப் பாட் ரிசாமி (ரிசி மலையின் கீழமைந்த கரும் ஏரி), மோர்சுகியே ஓக்கோ (கடற்கண்) ஆகிய ஏரிகள் உள்ளன. போலந்திலுள்ள ஒரேயொரு பாலைவனம் சகுளம்பியே டபிரோஃப்சுக்கி பகுதியில் பரந்துள்ளது. இது பிளெடோஃப் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. தெற்குப் போலந்தில் உள்ள இப் பாலைவனம், 32 சதுர கிலோமீட்டர் (12 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இது ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐந்து இயற்கைப் பாலைவனங்களுள் ஒன்று. இந்த அகலக்கோட்டுப் பகுதியில் உள்ள வெப்பம் கூடிய பாலைவனமும் இதுவே. "பிளெடோஃப்" பாலைவனம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருகிய பனியாறு ஒன்றினால் ஏற்பட்டது. சிறப்புத் தன்மை கொண்ட நிலவியல் அமைப்பு இதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது. மணல் படையின் தடிப்பு சராசரியாக 40 மீட்டரும் (131 அடி), மிகக் கூடிய தடிப்பு 70 மீட்டர் (230 அடி) ஆகவும் உள்ளது. இது, விரைவாகவும், ஆழமாகவும் நீர் வடிந்தோடுவதற்கு இலகுவாக இருக்கிறது. போலந்தில் உள்ள மிக நீளமான ஆறு, விசுட்டுலா. இது 1,047 கிலோமீட்டர் (651 மைல்) நீளமானது. போலந்தின் மேற்கு எல்லையின் ஒரு பகுதியாக அமையும் ஓடெர் ஆறு 854 கிலோமீட்டர் (531 மைல்) நீளமும், அதன் கிளையாறான வர்த்தா 808 கிலோமீட்டர் (502 மைல்) நீளமும் கொண்டது. விசுட்டுலாவின் கிளையாறான பக் ஆறு 772 கிலோமீட்டர் (480 மைல்) நீளமானது.விசுட்டுலா, ஓடெர் ஆகிய ஆறுகளும், பொமரேனியாவில் உள்ள பல சிறிய ஆறுகளும் பால்டிக் கடலில் கலக்கின்றன. லினா, அங்கிரப்பா ஆகிய ஆறுகள் பிரெகோல்யா ஊடாக பால்டிக்கில் விழுகின்றன. "செர்னா அன்சா", "நெமன்" ஊடாக பால்டிக் கடலில் கலக்கின்றது. போலந்தின் பெரும்பாலான ஆறுகள் பால்டிக் கடலிலேயே கலக்கின்ற போதும், கருங்கடலில் கலக்கும் ஒராவா, தன்யூப் ஆகியவற்றின் சில கிளையாறுகள் போலந்தின் "பெசுக்கிட்சு" பகுதியிலேயே உற்பத்தியாகின்றன. கிழக்கு "பெசுக்கிட்சு" பகுதியில் உற்பத்தியாகும் சில ஊற்றுக்களும் "டினியெசுட்டர் ஆறு" வழியாகக் கருங்கடலில் கலக்கின்றன. போலந்தின் ஆறுகள் மிகப் பழைய காலத்தில் இருந்தே போக்குவரத்துக்குப் பயன்பட்டுவந்தன. எடுத்துக்காட்டாக, வைக்கிங்குகள் விசுட்டுலா, ஓடெர் ஆகிய ஆறுகளூடாகத் தமது நீள்கப்பல்களில் பயணம் செய்தனர். மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும், போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம் ஐரோப்பாவின் "தானியக் கூடை" ஆக இருந்தபோது, வேளாண்மை உற்பத்திகளை விசுட்டுலா ஆற்றினூடாக "கிடான்சுக்" வரை எடுத்துச் சென்று, அங்கிருந்து ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு அனுப்பினர். ஒவ்வொன்றும் 1 எக்டேர் (2.47 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஏறத்தாழப் பத்தாயிரம் வரையிலான ஏரிகளைக் கொண்ட போலந்து, உலகில் அதிக அளவு ஏரிகளைக் கொண்ட நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. ஐரோப்பாவில் பின்லாந்து மட்டுமே போலந்திலும் கூடிய ஏரி அடர்த்தி கொண்ட நாடாக உள்ளது. 100 சதுர கிலோமீட்டருக்கு (39 சதுர மைல்) மேல் பரப்பளவு கொண்ட மசூரியாவில் உள்ள சினியார்டுவி ஏரி, மாம்ரி ஏரி என்பனவும், பொமரேனியாவில் உள்ள லெப்சுக்கோ ஏரி, டிராவ்சுக்கோ ஏரி என்பன போலந்தின் மிகப் பெரிய ஏரிகளுள் அடங்குகின்றன. போலந்தின் நிலப்பகுதியில் 28.8% காடுகளாக உள்ளன. அரைப் பங்குக்கும் மேற்பட்ட நிலப்பகுதி வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு உரிய நிலப் பரப்பளவு குறைந்து வருகின்ற போதும், எஞ்சிய பயிர் நிலங்களில் செறிவான வேளாண்மைச் செய்கை இடம்பெற்று வருகின்றது. 3,145 சதுர கிலோமீட்டர் (1,214 மைல்) பரப்பளவு கொண்ட, போலந்தின் நிலப்பரப்பில் 1% ஆன பகுதி பாதுகாக்கப்பட்ட 23 போலந்து தேசியப் பூங்காக்களுள் அடங்குகிறது. மசூரியா, கிராக்கோ-செசுட்டோச்சோவா மேட்டுநிலம், கிழக்கு பெசுக்கிட்சு ஆகிய பகுதிகளில் இன்னும் மூன்று தேசியப் பூங்காக்கள் அமைப்பதற்குத் திட்டம் உள்ளது. இவை தவிர, நடுப் போலந்தில், ஆறுகளையும் ஏரிகளையும் அண்டிய ஈரநிலங்களும், வடக்கின் கடற்கரைப் பகுதிகளும் சட்டப்படி காக்கப்பட்டுள்ளன. பல இயற்கை ஒதுக்ககங்களையும் பிற காக்கப்பட்ட பகுதிகளையும் அண்டி, ஏறத்தாழ 120 பகுதிகளை நிலத்தோற்றப் பூங்காக்கள் என அறிவித்துள்ளனர். தற்காலப் போலந்து வேளாண்மைக்கான சிறப்பான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. இங்கே 2 மில்லியன்களுக்கு மேற்பட்ட தனியார் பண்ணைகள் உள்ளன. உருளைக் கிழங்கு, ராய் தானியம் ஆகியவற்றின் உற்பத்தியில், ஐரோப்பாவில் முதன்மை வகிப்பது போலந்தே. இனிப்பு பீட் கிழங்கு, கோதுமையினதும் ராயினதும் கலப்பினமான டிரிட்டிக்கேல் என்பவற்றின் உற்பத்தியிலும் போலந்து உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்று. இதனால் சில வேளைகளில் போலந்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத் "தானியக் கூடை" எனக் குறிப்பிடுவது உண்டு. எனினும், வேளாண்மைத் துறையில் 16% தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள போதும், நாட்டின் வேளாண்மை உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. சிறிய பண்ணைகள் பெருமளவில் இருப்பதன் காரணமாகவே, இத் தொழிற்துறையில் செயல்திறன் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசாங்க மட்டத்தில் வேளாண்மைச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசப்பட்டு வருவதால் எதிர் காலத்தில் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புண்டு. சூன் 24 மெய்கண்ட தேவர் சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாய சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே. மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், சைவ வெள்ளாளர் அதாவது ஒளியர் குலத்தில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார். தொண்டை மண்டலம் உள்ள திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் சைவ வேளாளர் குலத்தாரான அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர். சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது. சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை, பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசிக்கலானார்கள். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி...அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார். கனவிலிருந்து விழித்துக் கொண்டவராய் எழுந்த களப்பாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்தக் கனவினை, தம் மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்தத் திவ்யத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார். இப் பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும். தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களைத் தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது. இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று..."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு...ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார். மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்...மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார். மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர். 1314 1314 (MCCCIV) ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். "1875இல் ஆதியூர் அவதானி" - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது). சூன் 25 சூன் 26 மனவாசகம் கடந்தார் மனவாசகம் கடந்தார் என்பவர் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் 14 நூல்களுள், உண்மை விளக்கம் என்னும் நூலை எழுதியவர். திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த இவர், சந்தான குரவர்களுள் முதன்மையானவரான மெய்கண்ட தேவரின் மாணவர். இசுடர்லிங் சுழல் எண் கணிதத்தில் ஸ்டர்லிங் எண் என்பது இரண்டு வகையாகப் புழங்குகிறது. அவைகளில் ஒரு" n"-கணத்தை "k" சுழல்களாகப் பிரிக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கை முதல் வகை ஸ்டர்லிங் எண் அல்லது இசுடர்லிங் சுழல் எண் எனப் பெயர் பெறும்.அதாவது எத்தனை "n"-வரிசைமாற்றங்கள் "k" சுழல்களாலானவை என்ற எண்தான் இது. இதற்குக் குறியீடு s(n,k) என்றோ அல்லது formula_1 என்றோ பயன்படுத்தப்படுகிறது. இதை n-cycle-k என்றோ n-சுழல்-k என்றோ உச்சரிக்கலாம். எடுத்துக்காட்டாக, formula_2 = 6 ஏனென்றால், {a,b,c,d} போன்ற ஒரு 4-கணத்தின் மூன்றுசுழற்பிரிவுகள்: இவ்வெண்களின் முதல் சில மதிப்புகளின் அட்டவணையை ஸ்டர்லிங் எண்கள் என்ற கட்டுரையில் பார்க்கவும். n > 0 என்றால், n பொருள்களை k சுழல்கள் உள்ள திரிபுகளாகச்செய்யும் செயலில், முதல் பட்சமாக formula_4 என்ற ஒரு குறிப்பிட்ட பொருளை ஒற்றை உறுப்புச்சுழலாக வைத்திருக்கலாம். இப்பட்சம் formula_5 வழிகளில் ஏற்படக்கூடியது. இரண்டாவது பட்சமாக formula_4 மற்ற ஏதாவதொரு சுழலில் ஓருறுப்பாக இருக்கவேண்டும். மற்ற சுழல்களின் எண்ணிக்கை formula_7. இவைகளில் formula_4 ஓருறுப்பாக இருக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கையைக் கணிப்பதற்கு முதலில் நாம் குறிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டியது, ஒரு r-சுழலில் ஒரு புது உறுப்பை r வழிகளில் சேர்க்கலாம் என்பதுதான். k சுழல்களில் எதுவும் இந்த formula_4 ஐ ஏற்றுக்கொள்ளலாம்.இச்சுழல்களின் நீளங்கள் formula_10 ஆக வெவ்வேறாக இருந்தாலும் formula_11 என்பது நிச்சயம். அதனால் formula_4 ஐ formula_7 சுழல்களில் ஏதாவதொரு சுழலில் சேர்ப்பதற்கு (n-1) வழிகள் உள்ளன. இவ்விரண்டு பட்சங்களின் உருவகம் தான் மீள்வரு தொடர்பு (Recurrence Relation) இதனுடைய நிறுவல் உய்த்தறிதல் (Induction) முறையில் செய்யப்படுகிறது. முதலில் ஒரு குறியீடு. இவை உய்த்தறிதல் முறையின் முதல் படிகள். k-ஆம் படியிலிருந்து k+1- ஆம் படிக்குச்செல்வதற்கு, நாம் யை பயன்படுத்தவேண்டியிருக்கும். (*) இல் x ஐ (-x) ஆக மாற்றினால், கிடைப்பது: ஸ்டர்லிங் உட்கண எண் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் ("International Day in Support of Torture Victims"), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் சூன் 26ம் நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும். சூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு மருத்துவத்தீர்வு அளிக்கின்றன. ஆனந்தபைரவி ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது. தக்கயாகப் பரணி தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந் நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது. ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் 814 தாழிசைகள் உள்ளன. அவற்றுள் 516 தாழிசைகளுக்கு மட்டும் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை உள்ளது. ஏனையவற்றைக் ‘கவிச்சக்கரவர்த்தியின் வாக்கு அல்ல’ என அந்த உரை குறிப்பிடுகிறது. இவை பிற்காலத்தவரின் இடைச்செருகல்கள் தக்கயாகப்பரணி உரை இந்த நூலின் சிறப்பைக் காட்டுகிறது. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005 திசையன் வெளியின் பரிமாணம் கணிதத்தில், திசையன் வெளியின் பரிமாணம் ("Dimension of Vector Space") என்பது திசையன் வெளியினுடைய ஒரு அடுக்களத்திலிருக்கும் திசையன்களின் எண் அளவை. இதை 'ஹாமெல் பரிமாணம்' அல்லது 'இயற்கணித பரிமாணம்' என்றும் சொல்வர். ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன. அதனால் திசையன் வெளியின் பரிமாணம் துல்லியமாக வரையறுக்கப்பட்டதாக ஆகிறது. திசையன் வெளியின் அளவெண்களம் F என்றால் அதன் பரிமாணத்தை dim("V") என்றோ அல்லது [V : F] என்றோ எழுதுவது வழக்கம். அளவெண்களம் என்னதென்று சந்தர்ப்பத்திலிருந்து தெரிகிற பட்சத்தில், dim("V") என்று எழுதினாலே போதும். dim(V) முடிவுறு எண் அளவையாக இருந்தால், அத்திசையன்வெளி முடிவுறு பரிமாணமுள்ளது என்று சொல்வோம். dim(R) = 3. ஏனென்றால் R க்கு {(1,0,0), (0,1,0), (0,0,1)} என்ற மூன்று திசையன்கள் அடுக்களமாகின்றன. dim(R) = "n". dim("F") = "n" இங்கு F என்பது ஏதாவதொரு களம். சிக்கலெண்களின் களமான C ஐ மெய்த்திசையன் வெளியாகவும் கருதலாம், சிக்கற்திசையன் வெளியாகவும் கருதலாம். அதனால், ஒரு சூனியத்தை மாத்திரம் தனது திசையனாகவுடைய, சூனியத்திசையன் வெளியின் பரிமாணம் சூனியம். இந்த ஒரு திசையன் வெளிக்கு மட்டும்தான் பரிமாணம் சூனியமாக இருக்கும். V ஒரு திசையன் வெளி. இதற்கு வீச்சளவை சுழிவளவை தேற்றம் (Rank-Nullity Theorem) எனப்பெயர். சூன் 27 திசையன் வெளியின் அடுக்களம் கணிதத்தில் ஒரு திசையன் வெளி V இல், ஒரு உட்கணம் B நேரியல் சார்பற்றதாகவும் இருந்து, அதனுடைய அளாவல் முழுவெளியாகவும் இருக்குமானால், அவ்வுட்கணம் V இன் அடுக்களம் (Basis) எனப்படும். இவ்வடுக்களம் B இன் எண் அளவை என்னவோ அதே எண் அளவை தான் மற்ற எல்லா அடுக்களத்திலும் இருக்கும். இந்த பொது எண்ணளவைக்கு திசையன் வெளி V இன் பரிமாணம் (Dimension) என்று பெயர். இதை dimV என்ற குறியீட்டால் குறிப்பது கணித மரபு. இவ்வுட்கணம் B முடிவுள்ளதானால் V முடிவுள்ள பரிமாணமுள்ளது என்றும், B முடிவற்றதாக இருந்தால், V முடிவிலிப்பரிமாணமுள்ளது என்றும் சொல்லப்படும். நாம் இக்கட்டுரையில் முடிவுள்ள பரிமாணமுள்ள திசையன் வெளிகளைப்பற்றியே பேசுவோம். 1. formula_1. "B" = {i, j, k} என்று கொள்வோம். இங்கு i = (1,0,0), j = (0,1,0) மற்றும் k = (0,0,1) அடுக்களத்திற்குள்ள இரண்டு இலக்கணங்களையும் "B" நிறைவேற்றுவதால், "B" ஒரு அடுக்களமாகும். formula_2 க்கு இந்த அடுக்களத்தை இயற்கை அடுக்களம் என்று சொல்வர். 2. V = formula_3: மெய்யெண் மதிப்புள்ள, படித்தரம் n க்குமேல்போகாத, எல்லா பல்லுறுப்புக்கோவைகளும் அடங்கிய திசையன் வெளி.இதனில் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவையும் formula_4 இலுள்ள உறுப்புகளின் முடிவுள்ள நேரியல் சேர்வு. மற்றும் "B" ஒரு நேரியல் சார்பற்ற கணம். ஃ "B" ஒரு அடுக்களமாகிறது. dim formula_5. V ஒரு திசையன் வெளி எனக்கொள்வோம். இதனால் B ஒரு அடுக்களம் என்ற கருத்துக்கு ஒரு மாற்று வரையறை இப்படிக்கொடுக்கலாம்: formula_15 மற்றும், formula_16 இலுள்ள ஒவ்வொரு formula_13 க்கும் formula_11 இனுடைய உறுப்புகளின் மூலம் கோவைப்படுத்தும் formula_14 என்ற கோவை தனிப்பட்டது . ஒரு அடுக்களம் formula_11 இலுள்ள உறுப்புகளை வரிசைப்படுத்தினால், அ-து, formula_21, என்று உறுதிப்படுத்திய பிறகு, formula_16 இலுள்ள ஒவ்வொரு formula_13 க்கும், formula_11 இன் உறுப்புகளின் மூலம் formula_14 என்ற கோவையும் உறுதிப்படுத்தப்படுவதால், ஆயவரிசை formula_26 ம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆயவரிசைக்கு formula_13 இன் ஆயத்திசையன் (co-ordinate vector) எனப்பெயர். வேறு ஒரு அடுக்களத்தைக்கொண்டும் v க்கு இன்னொரு ஆயத்திசையன் உண்டுபண்ணலாம். அதனால் அவசியமுள்ளபோது, 'B யைப்பொருத்த ஆயத்திசையன்' என்று விவரமாகச்சொல்லவேண்டி வரும். ஆய்த்திசையன்களை நிரல்திசையனாகச்சொல்வதில் ஒரு வசதி இருக்கிறது. formula_48 ஒரே அளவெண்களங்களையுடைய இரு திசையன்வெளிகள் எனக்கொள்வோம். formula_49 வின் ஒரு அடுக்களமாக formula_50 ஐக்கொள்க. இப்பொழுது formula_51 ஐ (formula_52 இல் எந்தத் திசையன்களாகவும் கொண்டு formula_53 யை ஒரு நேரியல் கோப்பாக்க முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒரேஒரு வரையறைதான். அ-து, பதிகணினியியல் பதிகணினியியல் என்பது குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கென இயங்கும் இயந்திரம் மற்றும் சாதனங்களை சார்ந்த ஒரு தனிவகைக் கணினியியல் ஆகும். சாதாரண கணினியியல் பலவகையான பணிகளை நிறைவேற்ற உபயோகிக்கக் கட்டமைக்கப்படுபவை. குறிப்பிட்ட பணிகளை நிறைவற்ற வரையறைக்குள் செயல்பட செலவு, அளவு, வேகம் மற்றும் உருவ கட்டுப்பாடுகள் கொண்ட சாதனங்களை உருவாக்க இக்கணினியியல் உதவுகிறது. ஜி. எல். பீரிஸ் ஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். வெளியுறவு அமைச்சர். இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்தார். 37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், சூன் 28 சூன் 29 உக்ரைன் உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில் ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும். வரலாற்று பாரம்பரியப்படி, உக்ரைன் என்பது, எல்லை பகுதி எனும் பொருள் கொண்ட ஸ்லாவிக் மொழியான உக்ரைனாவிலிருந்து வந்தது. இச்சொல்லானது கிழக்கு ஸ்லாவிக் மொழியில், 1187ம் ஆண்டிலிருந்து வழக்கில் உள்ளது. உக்ரைனின் பன்மை மொழியான உக்ரைனி மொழியை, மாஸ்கோவிலும், லுதியானாவிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அபாதிஸ் நகர மக்கள் தெற்கு நோக்கி பயணித்ததால் இச்சொல்லானது, சுலோபடா உக்ரைனுக்கும் பி்ன்னர் மத்திய உக்ரைனுக்கும் பயணித்தது. இறுதியில் பாரம்பரியமிக்க இப்பெயரானது, இரசியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதிக்குச் சூட்டப்பட்டது. பல உக்ரேனிய வரலாற்று ஆய்வாளர்கள், "உக்ரேனியா" எனும் சொல்லை, தாய்நாடு, நம்நாடு என மொழி பெயர்த்தனர். அத்துடன், உக்ரேன் என்பதற்கு தனி அர்த்தம் வேண்டும் என்பதற்காக எல்லைநாடு எனவும் பரிசீலித்தனர். இறுதியாக, உக்ரேனிய மூலத்தின்படியும், வரலாற்றுச் சான்றுகளின்படியும், உக்ரைனின் பெயர்க் காரணம், எல்லைநாடு என ஒருமனதாக தீர்மானித்தனர். உக்ரேனிய சட்டத்தின்படி, மாநிலங்கள் அனைத்தும் மாவட்டங்களாகப் பிரித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. உக்ரைன் நாடானது, இருபத்துநான்கு மாகாணங்களாகவும் ஒரு தன்னாட்சிக் குடியரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர், நாட்டின் தலைநகரான கியிவ் மற்றும் சேவஸ்டோபோல் ஆகிய இரண்டிற்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் இருபத்துநான்கு மாகாணங்களும் 490 மாவட்டங்களாகவும், இரண்டாம் நிலை நிர்வாக அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவு வாகவும், ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 52,000மாகவும் உள்ளது. மாவட்டங்களின் கீழ் இயங்கும் நகர்ப்புறங்கள் அனைத்தும், மக்கட்தொகை மற்றும் பொருளாதாரப்படி உருவாக்கப்பட்டு்ள்ளன. வருவாயில் குறைவான பகுதிகள் அனைத்தும் கிராமப்புறங்களாக பிரிக்கப்பட்டன. நகர்ப்புறங்களிலிருந்து, அடிப்படைத் தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் கலாச்சாரமான உட்கட்டமைப்பு, இயல் மற்றும் இசை ஆகியவை தனது கிழக்கு மற்றும் மேற்கு அண்டைநாடுகளைப் பின்பற்றுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், கிருத்தவ மதத்தைச் சார்ந்தராக உள்ளனர். பாலின வேறுபாட்டை பாரம்பரியமாக வைத்திருக்கும் இந்நாட்டின் குழந்தைகளை அவர்களது தாத்தா பாட்டிகளே பராமரித்து வருகின்றனர் உக்ரைனின் பாரம்பரிய உணவாக கோழி, பன்றி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவை உள்ளது. சைவ விரும்பிகளுக்காக உருளைக்கிழங்கு, தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கனிகளை உண்கின்றனர். பிரசித்திபெற்ற உணவுகளாக வாரென்கி ( அவித்த காளான், உருளைக்கிழங்கு மற்றும் பாலாடை அல்லது செர்ரி ஆகியவைகளைக் கலந்த அவியல் ), போர்ஸ்சித் ( முட்டைக்கோசு மற்றும் காளான் அல்லது இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம் ), ஓலுப்ட்சி ( மசித்த முட்டைக்கோசுடன் அரிசி, கேரட் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு உணவுவகை ). மேலும் உக்ரைனின் சிறப்பு உணவுகளாக சிக்கன் கியிவ் மற்றும் கியிவ் கேக் ஆகியவையுள்ளன. பானங்களாக பழச்சாறு, பால், மோர், சுத்தமான குடிநீர், தேயலைச்சாறு, குழம்பி மற்றும் இதர உ.பா.க்களும் உள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே 2014ஆம் நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டது . அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருந்தது.உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட ரஷ்யா, உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்து, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. இதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெரும்பாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன. மாகாணம் மாகாணம் ("Province") என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைக் குறிக்கும். இது பொதுவாக ஓர் நாட்டின் அல்லது மாநிலத்தினுள் நிர்வாகப் பிரிவாகக் காணப்படும். மாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான "province" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான ""provincia"" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும். அருவச் சொத்து அருவச் சொத்து அல்லது கட்புலனாகச் சொத்து ("Intangible asset") என்பது கணக்கியலில் வகைக்குறிக்கப்படும் சொத்து ("assets") ஆகும். கண்ணால் காணமுடியாத தொட்டறிய முடியாத பிற வகைகளில் உற்று உணரமுடியாத நுண்மமாக்கல் தன்மையினை இவ்வகை சொத்துக்கள் கொண்டிருக்கும். அருவச்சொத்துக்களுக்குள் காப்புரிமை (copyrights) தனிகாப்புரிமை (patent) வர்த்தகச் சின்னம் (Trade marks), நன்மதிப்பு (goodwill), ஊழியர்களின் செயற்திறன், புலமைச்சொத்துகள் என்பன அடங்கும். அருவச்சொத்துக்களை நிதிக்கூற்றுகளில் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என கணக்கியல் நியமங்கள் கூறுகின்றன. எவரிஸ்ட் கால்வா எவரிஸ்ட் கால்வா ("Evariste Galois", அக்டோபர் 25, 1811 - மே 31, 1832) பிரான்ஸ் நாட்டு கணிதவியலர், தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்தவர். பல்லுறுப்புச் சமன்பாட்டை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்து இருபதாவது நூற்றாண்டின் சில பெரும் கணிதத் துறைகளுக்கு 19 வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே அடிகோலியவர். ஆனால் பரிதாபமாக அரசியல் சூறாவளியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 21 வயது முடியும் முன்னமே உயிர் துறந்தார். அவர் விட்டுவிட்டுப்போன 60-பக்க கணித சொத்து விலைமதிப்பற்றது. கால்வா 12 வயது வரையில் தன்னுடைய அன்னையிடமே இலக்கியங்களில் பழமைச் சிறப்பு பெற்ற நூல்களைப் படித்து வந்தார். 1823 இல் 12வது வயதில் பாரிஸ் நகரத்தில் லூயி லே கிராண்ட் என்ற பள்ளியில் சேர்ந்தார். பிரான்ஸ் நாட்டு மக்கள் அப்பொழுதும் புரட்சி நாட்களை மறக்கவில்லை. கால்வா தான் காதால் கேள்விப்பட்ட அடாவடிச் செயல்களை யெல்லாம் நேரில் பார்க்க ஆரம்பித்தார். படிப்பிலோ ஓரிரண்டு ஆண்டுகளில் கால்வா வினுடைய ருசியெல்லாம் கணிதத்தில் திரும்பியது. ஆனால் பள்ளியிலோ கணிதத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் லெஜாண்டரின் வடிவியல் இச்சிறுவன் வழியில் வந்தபோது அதை அனாயாசமாகப் படித்து முடித்தான். அவனுக்கு பள்ளியில் கிடைத்த இயற்கணித புத்தகத்தில்லோ அவனுடைய கூர்மையான மூளைக்கு சவாலாக ஒன்றுமே இல்லை. லெஜாண்டரைக் கரைத்துக் குடித்தவன், லக்ராஞ்ஜையும் ஏபெல்லையும் படிக்க ஆரம்பித்தான். 14, 15 வயதே ஆன இச்சிறு பையன் கணிதவல்லுனர்களுக்காக இன்னும் பெரிய வல்லுனர்கள் எழுதியதை விழுங்கி சீரணித்துக்கொண்டிருந்தான். சமன்பாடுகளின் விடுவிப்புக் கணிப்புகள், Theory of analytic functions, Calculus of functions இவையெல்லாம் அவனை வெகுவாக ஈர்த்தன. மனதிலேயே அவன் பெரிய பெரிய கணிப்புகளைப் போடக்கூடியவன். ஆசிரியர்கள் தேர்வுகளில் கணிப்புக்காகக் கேட்கும் வழிகளெல்லாம் அவனுக்கு அனாவசியமாகப் பட்டது.கோபப்பட்டான். ஆனாலும் கணிதத்தில் என்னென்ன பரிசுகள் உண்டோ அத்தனையும் அவனுக்குத்தான். கணிதத்தில் அவனுக்கிருந்த அபார சக்தியை நம்பினவர்களும் இருந்தனர்; அதை நம்பாமல் அதெல்லாம் ஒரு நடிப்பு என்றவர்களும் இருந்தனர். 17 வது வயதில் ரிச்சர்ட என்ற கணித ஆசிரியர் அவனுடைய கணிதத்திறமையை நன்கு உணர்ந்து ஊக்கப்படுத்தி அவனை வகுப்பிலும் பள்ளியிலும் உயர்த்திப்பேசினார். அவருடைய ஊக்குவிப்பினால் மற்றவர்கள் அவனை வெறும் கெட்டிக்காரனாக மட்டும் பார்க்காமல், பெரிய கணித மேதையாகவும் பார்க்கத்தொடங்கினர். 1829, மார்ச் 1 ம் தேதி அவனுடைய முதல் ஆய்வுக்கட்டுரை (தொடரும் பின்னங்களைப் பற்றியது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் பள்ளியில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் தான் ஒரு கணிதவியலர் ஆகிவிடவேண்டும் என்ற அவனுடைய கொள்ளை ஆசையை அணைக்கமுடியவில்லை. உண்மையில் அவன் ஏற்கனவே ஒரு கணிதவியலர் ஆகிவிட்டிருந்தான்; மற்றவர்களுக்குத்தான் அது புரியவில்லை. 16வது வயதில் எகோல் பாலிடெக்னிக் என்ற சிறந்த ஆய்வுக்கூடக்கல்லூரியில் சேர்வதற்காக தேர்வுகளில் உட்கார்ந்தான். இக்கல்லூரிதான் பிரெஞ்சுப் புரட்சிகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிற்காலத்தில் அத்தனை பிரென்சு நாட்டு கணித அறிவியலர்களையெல்லாம் உற்பத்தி செய்து உலகத்துக்கு அளித்தது. ஆனால் கால்வா அத்தேர்வில் தோல்வியடைந்தான். 18வது வயதில் அதே தேர்வுக்கு மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய கால் தூசிக்குச் சமமில்லாத கணித ஆசிரியர்களெல்லாம் அவனுடைய தேர்வுத் தாள்களை மதிப்பிட்டு அவனை மறுபடியும் தோல்வியடையச் செய்தனர். அந்தத் தேர்வில்தான் அவனுடைய விதி நிர்மாணிக்கப்பட்டது. எல்லாவற்றையும் மனதிலேயே கணிக்கக்கூடிய அவனுக்கு, தன்னை நேர்முகத்தேர்வு நடத்திய ஆசிரியர்களின் கணித இயலாமையையும் அவர்களுடைய பிடிவாதத்தையும் நேருக்குநேர் பார்த்தபோது, கையில் தனக்குப் பயன்படாதிருந்த சாக்கட்டியையே அவர்மேல் தூக்கியெறிந்து கொஞ்சநஞ்சம் இருந்த வாய்ப்பையும் இழந்தான். இச்சமயம் தான் அவனுடைய தந்தையார் இறந்தார். 1827 இல் அவர் ஒரு மேயராக இருந்தார். அரசியல் காரணமாக அவரை ஒரு அவதூறில் சிக்கவைத்து கடைசியில் அவர் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டனர். இதெல்லாம் சேர்ந்து கால்வாவை உலகத்தின்மேலேயே வெறுப்பேற்படும்படிச் செய்துவிட்டது. கோஷி என்பவர்தான் அக்காலத்தின் மிகப்பெரிய கணித வல்லுனர். பிரெஞ்சு அகாடெமிக்காக அவர் கால்வாவினுடைய ஆய்வுகளை தரம் பார்த்து மதிப்பிடவேண்டியவர். இதற்காக கால்வா தான் அதுவரை கண்டுபிடித்ததையெல்லாம் திரட்டி அகாடெமிக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொலைத்துவிட்டாரா அல்லது அவர் அவைகளைப் படித்துத் தரம் பார்த்து பிரசுரிக்காமல் விட்டாரா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.. 1829 ஆண்டு டிசம்பர் 29, அவனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவன் தனிமையிலேயே உழைக்கவேண்டியிருந்தது. மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதி பிரென்சு அகடெமிக்கு அனுப்பினான். இயற்கணிதச்சமன்பாடுகளைப்பற்றிய மிக உயர்ந்த ஆய்வுகள் அவை. இதை அவன் அனுப்பியிருந்தது 'கணிதத்தில் சிறந்த பரிசு' ஒன்றுக்காக.அகடெமியின் காரியதரிசி ஃபொரியர் அக்கட்டுரைகளை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார். ஆனால் கட்டுரைகளைப்பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். உரிய காலத்தில் அவருடைய காகிதங்களைத் தேடித் துழாவினார்கள். கால்வாவினுடைய கட்டுரைகள் கிடைக்கவில்லை! கால்வா வழ்க்கையையே வெறுத்து, அரசியலில் முழுமூச்சுடன் இறங்கினான்.பல்கலை வாழ்க்கை அத்துடன் முடிந்தது. உயர்தர இயற்கணிதத்தில் சொந்தத்தில் ஒரு வகுப்பு நடத்தினான். 19 வயது இளைஞன், அக்காலத்துக் கணிதக் கண்டுபிடிப்புகளில் முதல்வன், கற்பனை எண்களைப்பற்றிய ஒரு புதுக்கோட்பாட்டையும், சமன்பாட்டுகளை விடுவிக்க புதுப்புது வழிகள்,எண்கள் கோட்பாடு, elliptic functions , இவைகளைப் பற்றி தான் சொந்தமாகக் கண்டுபிடித்ததையெல்லாம் சொல்லிக்கொடுக்க வகுப்பு நடத்துகிறான், அழைப்பு விடுகிறான் ஆனால் வருவார் யாருமில்லை. ஒரு கடைசி முயற்சியாக அகெடெமிக்கு ஒரு பெரிய ஆய்வுநூலை -- சமன்பாடுகளை விடுவிப்பதைப் பற்றியது, தற்காலத்தில் கால்வா கோட்பாடு என்று பிரசித்திபெற்றது -- அனுப்பிவைத்தான். அதைப்படித்து தரம் பார்க்கும் பொறுப்பு புவாசான் (Poisson) என்ற கணிதவியலரிடம் சென்றது. அவர் அதை எவ்வளவு ஆழ்ந்து படித்தாரோ தெரியாது. அவருடைய விமரிசனத்தில் 'இது ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை' என்று எழுதிவிட்டார். மே 9, 1831 ஒரு முறையும், ஜூலை 14, 1831 இல் மற்றொரு முறையும் கைது செய்யப்பட்டான். 1789, 1793 புரட்சிகளின் ஞாபகார்த்தமாக நடந்த ஒரு விழாவில் அவன் கையில் கத்தியுடன் அரசரைக் கொல்வதாக சப்தம் எடுத்துக்கொண்டதாக முதன் முறை கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டான். இரண்டாவது முறை காரணமே இல்லமல் அவனைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையில் வைத்திருந்து விட்டனர். ஆனால் மே 29, 1832 அன்று இரவு எல்லா குடியரசுவாதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தான் யாரோ இரண்டு நபருடன் கத்திப்போர் புரியவேண்டியிருக்கிறதென்றும் எல்லோரிடமும் விடைபெறுவதுபோல் எழுதியிருக்கிறான். == அன்றிரவுதான், மணிக்கணக்கில் உட்கார்ந்து தான் கண்டுபிடித்த அத்தனை கணிதக்கண்டுபிடிப்புகளையும் ஒரு 60-பக்கக்கட்டுரையாக எழுதி கணித உலகத்துக்கு தன் உயிலையே எழுதி வைத்தான். 14 ஆண்டுகளுக்குப்பிறகு, லியொவில் journal de mathematique pure et appliques என்ற ஆய்வுப்பத்திரிகையில்,இதை பிரசுரிக்கும்போது எழுதுகிறார்:"இதை ஏற்கனவே அகெடெமியில் பிரசுரிக்காமல் விட்டதற்குக்காரணம் ஒருவேளை கால்வாவினுடைய சுறுக்க நடையினால் ஏற்பட்ட குழப்பமாகத்தன் இருக்கவேண்டும்". கால்வாவினுடைய முக்கிய தேற்றங்களில் ஒன்று: ""இயற்கணிதப்பல்லுறுப்புச்சமன்பாடு ஒன்றினுடைய கால்வா குலம்(Galois Group) என்று சொல்லக்கூடியது தீர்வுடைகுலமாக (Solvable Group)இருந்தால், இருந்தால்தான்,அதற்கு தனிமன்களால் (radicals) தீர்வு கிடைக்கும்"." •E.T. Bell. Men of Mathematics. 1937, 1965. Simon & Schuster, New York. ISBN 0-671-46401-9 1914 1914 (MCMXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். சூன் 30 மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் என்பது 1995 ஜூன் 28 அன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்தான் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவத்தினர் நிலைகுலைந்தனர். கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர். இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப். கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் மரணமடைந்தனர். ஓயாத அலைகள் நடவடிக்கை 1996 ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும். 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும். தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும். 1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு "திரிவிட பகர" என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது. தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு 'ஓயாத அலைகள் - ஒன்று' நடவடிக்கை முடிவுக்கு வந்தது. தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் 'ரணவிறு' என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில் : ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டனர். இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார். புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது. பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன. ஓயாத அலைகள் இரண்டு ஓயாத அலைகள் - இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் - ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் 'சத்ஜெய' என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒருதடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது. செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. நேரியல் கோப்பு கணிதத்திலும், கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும், நேரியல் கோப்பு, நேரியல் உருமாற்றம், நேரியற்செயலி, நேரியற்செயல்முறை("linear map, transformation, operator") என்ற கருத்து அடிப்படையானது. பல அறிவியல் பயன்பாடுகளிலும், ஏறத்தாழ எல்லா சமுதாயவியல், மருத்துவவியல், உயிரிய-தொழில்நுட்பவியல் பயன்பாடுகளிலும், நேரியல் கோப்புக்குரிய சூழ்நிலை தானாக இல்லாவிட்டாலும், எவ்வளவு தூரம் நேரியல் பண்புகளுடையதாக அச்சூழ்நிலையை மாற்றமுடியும் என்றே ஆராய்ச்சியாளர்கள் முயல்வார்கள். நேரியல் அல்லாத (non-linear) பயன்பாடுகளிலும் நேரியல் சூழ்நிலைக்குத் தோராயப் படுத்துவதே முதல் முயற்சி. ஆக, நேரியல் அல்லாத பயன்பாடுகளிலும் நேரியல் இயற்கணிதச் செயல்பாடுகளே அடிப்படையில் தேவைப்படுவதால், நேரியல் கோப்பு என்பது முழு கணித உலகத்திலும் இன்றியமையாததாகிறது. U, V இரு திசையன் வெளிகள், இரண்டுக்கும் அளவெண் களங்கள் ஒன்றே என்று கொள்வோம். கீழ்க்கண்ட இரண்டு நிபந்தனைக்குட்பட்டால், formula_1 ஒரு நேரியல் கோப்பு (உருமாற்றம், செயல்முறை) எனப்படும்: இங்கு, T ஐப்பற்றின அரையில், U அரசு வெளி (Domain Space) என்றும், V பிம்ப வெளி (Image space) என்றும் சொல்லப்படும். அளவெண் களம் formula_9 ஐக்குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருந்தால், formula_10நேரியல் (கோப்பு) என்று சொல்வோம். கீழேயுள்ளவை நேரியல் கோப்புகள்: கீழேயுள்ளவை நேரியல் கோப்புகள் அல்ல: கணிதத்தில், முக்கியமாக நுண்புல இயற்கணிதத்தில், அமைவியம் (Morphism) என்பது கணித அமைப்பு களுக்கிடையேயுள்ள போக்குவரத்து. இரண்டு கணித அமைப்புகளுக்கிடையே அவைகளுக்குள்ள ஏதோ ஒரு அமைப்பை சிதறாமல் காக்கும் ஒரு அமைவியத்திற்குப் பொதுப்பெயர் காப்பமைவியம் (Homomorphism). அது எந்த அமைப்பைக்காக்கிறதோ அதைப்பொருத்து அதனுடைய பெயரும் மாறுபடும். எம். கே. முருகானந்தன் எம்.கே. முருகானந்தன் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை, வியாபாரிமூலை. ஈழத்து எழுத்தாளர். மருத்துவர். 27 மார்ச் 1948 இல் பிறந்தவர். இவர் நலவியல் கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். கொழும்பு மருத்துவ பீடத்தில் 1975 ம் ஆண்டு (M.B.B.S) பட்டமும், 2003 ம் ஆண்டில் குடும்ப வைத்திய துறையில் டிப்ளோமா (DFM) பட்டமும் பெற்றவர். 1975 முதல் அரச வைத்தியசாலைகளில் குறுகிய காலம் பணியாற்றிய பின்னர் 1980ம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகப் பணியாற்றி வருகிறார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த வியாபாரிமூலையில் (இணுவில் மருத்துவமனையில்) பிறந்தவர். முத்தையா கதிரவேற்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகள் பெற்றெடுத்த ஐவரில் மூத்தவர். இவருக்கு இரு குழந்தைகள். அரசசேவை தனியார் துறை 1980முதல் சிறு வயது முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். முக்கிய ஈடுபாடு நலவியல் துறையாகும். இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம், போன்ற பல சஞ்சிகைகளில் சில சிறுகதைகளையும், பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணையத் தளத்தில் "உங்கள் நலம்" என்ற தொடரை எழுதியுள்ளார். தற்பொழுது தினக்குரல் தினசரியில் "ஹாய் நலமா" என்ற பத்தியை எழுதி வருகிறார். ஏ. ரகுநாதன் ஏ. ரகுநாதன் (மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வருபவர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் மாணவர். தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அங்கெல்லாம் வாழும் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்டமான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கணினி நிரலாக்க மொழி கணினி நிரலாக்க மொழி , கணினியின் செயற்பாட்டினை ஒரு நிரல் குறிமுறை (code) மூலம் அதனை என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகளை கொடுக்கலாம். கணினியின் நிரல் ஏற்பு மொழி என்பது பலவகைபடும். அதன் மொழி கணினியின் தன்மையை பொருத்தும் மற்றும் அது செய்ய வேண்டிய வேலையை பொருத்து மாறுபடும். இதனை கணினி மொழி என்றும் குறிப்பிடுவர்கள். கணினி மொழி , நிரல் மொழியின் ஒரு பகுதியாகும். = வரலாறு = கணினியின் மொழி மற்ற எந்திரங்களின் மொழியை போல என்ன மற்றும் குறிமுறையை பொறுத்தே இருந்தது. ஆனால் கணினியின் பயன்பாடு பெருக பெருக அதனை பயன் ஆட்கொண்டு பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் மற்றும் உபயோகத்திற்கும் தகுந்தமாறு பல ஏற்பு மொழிகள் தேவைப்பட்டது. மனிதர்கள் பேசும் மொழி ( ஆங்கிலம் ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. பொறி மொழி ஏனாதி நாத நாயனார் ஏனாதி நாத நாயனார் சோழநாட்டிலே எயினனூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர். தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார். ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது. அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று 'வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது' என அவரைப் போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். 'நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்'. என்று அங்கு அதிசூரன் கூறினான். ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான். தோற்றோடிய அதிசூரன் மானமழிந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையால் கொல்ல எண்ணினான். "நாம் இருவருக்குந் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்கலாத்தே வேறோர் இடத்திற் போர் செய்வோம், வாரும்" என்று ஒருவனைக் கொண்டு ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். அதுகேட்ட ஏனாதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்களத்திற் சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். தீங்கு குறித்து அழைத்த தீயோனாகிய அதிசூரன், 'திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்' என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு வாளும் கேடகமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதர் சமயந் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே 'கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்' என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார். ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையிற்பற்றியபடியே போர் செய்வார் போல் வாளுடன் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார். கண்ணப்ப நாயனார் கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேட்டுவர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் "நில்லு கண்ணப்ப" என மும்முறை கூறி தடுத்தருளினார். "கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், "நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்" என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர்(முற்க்காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகும்). இவ்வூரில் வேட்டுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார். குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது. அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார். பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார். இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார். இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர். சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது. திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ. சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு: இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார். "கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை குங்கிலியக்கலய நாயனார் குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர். காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர். அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்லநிலம முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர். வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கில்யப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தனன். இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் உணர்ந்து எழுந்து செல்வங்களைப் பார்த்தனர்; அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதனர்; தனது கணவனாரிற்குக் திருவமுது சமைக்கலாயினார். திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு "நீ பசித்தனை! உன் மனையிற் சென்று பாலின் இன் அடிசில் உண்டு துன்பம் நீங்குக" என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர். செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளை வெல்லாம் எப்படி விளைந்தன?" என்று கேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்" என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தனர். மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவன் அடியார்களோடு இருத்தித் தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்த கலயனார் இன்பமுற்றிருந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தனர். இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற கலநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார். இவ்விளைப்பிலே நானும் பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார். இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துத்திதான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர். திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார். "கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை மானக்கஞ்சாற நாயனார் மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். "கஞ்சாறு" என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார். மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர். கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார். கஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார். திருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன் கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் 'இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?' என்று கேட்டார். 'அடியேன் பெற்ற மகளது திருமணம்' எனக் கஞ்சாறர் கூறினார். உடனே 'மங்கலம் உண்டாகுக' என மாவிரதையார் வாழ்த்தினார். கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதையார் 'இது நமது பஞ்சவடிக்கு ஆகும்' எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அதுகண்டு மெய்மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு "உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்" என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாறநாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார். மெய்யுணர்வுடையார் தமதென்றிருப்பனவெல்லாம் சிவனடியாரது உடமைகளே என்ற தெளிந்த காட்சியுடையவர். ஆதலால் அவர் வேண்டுமவற்றை விருப்புடன் கொடுப்பவர். தேவையைப் பொறுத்தே பொருளின் தலைமை துணியப்படும். தலையாய பொருளை அளிப்பது தலையன்பு. மணமகளுக்கு மலர்க்கூந்தல் தலையாய தேவை. அதுவே சிவனடியார்க்கு பஞ்சவடிக்குத் தேவையாமெனின் அதனை அரிந்து கொடுப்பது பிறப்பரியும் பெருஞ்செயலேயாம். சிவக்கொழுந்து தேசிகர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர் ஆவார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள கொட்டையூர் என்னும் இடத்தவர். இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக இருந்தவர். மருத்துவ நூல்கள் பலவற்றை செய்யுள் வடிவில் எழுதி வைத்துள்ளார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்கப் பல ஏட்டுச் சுவடிகளைச் சேர்த்துத் தொகுத்துள்ளார். தமிழ் இலக்கியக் கல்விக்கழகப் பாடப்பகுதி சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இது சிங்கப்பூரில் உள்ள பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும். 1855 ஜூலை 20 "நரசிங்கம்" என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் சிராங்கூன் சாலையில் விற்கப்பட்ட நிலத்தில் "நரசிம்ம பெருமாள் கோயில்" என்று பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர் இவர்களுடன் கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையையும் வைத்து வழிபட்டு வந்தார்கள். இக்கோயில் 1907 முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டுப் பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்று இராச கோபுரம், பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோயில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நரசிங்கப் பெருமாள் கோவில், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1966 இல் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிசேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராச கோபுரமும் கட்டப்பட்டது. நவம்பர் 1978 இக்கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது. கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன் காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூசைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராசகோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது. திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். இவர் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சைவசித்தாந்த நூல்களை எழுதியுள்ளார். எறிபத்த நாயனார் எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர், ஒரு முறை அடியார் எடுத்துவந்த சிவ பூசைக்குறிய பூக்களை புகழ் சோழரின் பட்டத்து யானை தட்டிவிட, அந்த யானையும், அதன் பாதுகாவலறையும் எறிபக்த நாயனார் மழுவால் வெட்டி தண்டித்தார். அதன் பின்பு செய்தியறிந்த புகழ் சோழர், தன்னையும் தண்டித்துக் கொள்ள முனைய, சோழரின் வாளைப் பெற்று தன்னையை வெட்டிக் கொள்ள முற்பட்டார். அடியாரின் பெருமையை அறிந்து சிவபெருமான் உமையம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி, இறந்தோர்களை உயிர்பித்து அருள் வழங்கினார். கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். இவர் சிவனடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும். அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்குப் பள்ளித்தாமப் பணி செய்துவந்த சிவகாமியாண்டர் என்னும் ஒரு முதிய அடியவர் ஒருவரும் இருந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய் வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாநவமியின் முதல் நாள். அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது. அது சிவகாமியாண்டரைப் பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டவராகிய அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார். சடாமுடியில் ஏறும் மலரை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவதா, சிவதா’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர் யானையின் செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” என்று கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறதெனக் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார். தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்ச்சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி, நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இருகை யானைபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார். எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டுத் குதிரையின்று இறங்கி, ‘மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன், அம்பலவானரடியார் இவ்வளவு வெகுளியை (கோபத்தை) அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி எறிபத்தரை வணங்கினார். எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும் எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இத்தண்டனை போதாது; இக் குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும் ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று. வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார். அதுகண்ட எறிபத்தர் ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர் பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி, மன்னார் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய்த் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக் கொண்டார். உடைவாள் கொடுத்த புகழ்ச்சோழர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உவந்து நின்றார். அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார். அப்பொழுது சிவபெருமான் திருவருளால் ‘யாவராலும் தொழத்தகும் பேரன்புடையவர்களே! உங்கள் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு இன்று வெகுளிமிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி இறைவனருளால் நிகழ்ந்தது” என்று ஒரு அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களோடு யானையும் உயிர்பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்துபோற்றினர். இறைவர் திருவருளால் சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள் யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார். எறிபத்த நாயனார் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரிடும்போதெல்லாம் முற்பட்டுச் சென்று தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார்க்கு தலைவராக அமர்ந்தார். அரிவாட்டாய நாயனார் “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார். இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன. அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு “இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்” என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர். ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார். மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார். “அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார். அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது. அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். ஆனாய நாயனார் “அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு , விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர். இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று. மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின. ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார். கார்த்திகை அத்தம் குருபூசை அன்றைய நாளில் இறைவனுக்குக் கொன்றைப் பூச் சூட்டுதலும் ஐந்தெழுத்துத் திருப்பதிகங்களை ஓதுவதும் அவற்றை வேய்ங்குழலில் இசைத்துப் பாடுவதும் அழகிதாம். மாத்தளை கணேஸ்வரா வித்தியாலயம் மாத்தளை கணேஸ்வரா வித்தியாலயம் இலங்கையில் மாத்தளை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்பலகல என்னுமிடத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலையாகும். பாடசாலை உருவாகிய காலத்தை அறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் இது ஏறத்தாழ 1920 ஆண்டளவில் உருவாகப்பட்டதாக நம்பப்படுகின்றபோதிலும் சிலர் அக்காலத்திற்கு முன்னேரே இந்தப்பாடசாலை உருவாகிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் தேயிலைக் கொழுந்து சேகரிக்கும் இடமாக இருந்த கட்டிடம் பின்னர் ஆங்கிலேயரினால் பிட்டகந்த இலக்கம் 01 தமிழ் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் சின்னத்தம்பி ஆசிரியரின் கீழ் 30 மாணவர்கள் கல்வி கற்றனர். 1950 ஆம் ஆண்டளவில் பிட்டகந்தையில் பிட்டகந்த இலக்கம் 02 தமிழ் மகாவித்தியாலயம் என்ற ஓர் பாடசாலையும் உதயமாகியது. இக்காலப்பகுதியில் ஓரே ஆசிரியர்களே இரண்டு பாடசாலையிலும் கல்விகற்பித்தனர். பிட்டகந்த இலக்கம் 01 தமிழ் மகாவித்தியாலயத்தில் காலை 8:00 மதியம் 12:00 மணிவரையும் பின்னர் பிட்டகந்த இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில் பிற்பகல் 1 மணிமுதல் 4 மணிவரை கற்பித்தல்கள் நடைபெற்றன. 1987, 1988 காலப்பகுதியில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டளவில் சீடா திட்டம் மூலம் மாடிக்கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டுப்படி இப்பாடசாலை 14 ஆசிரியர்களையும் 200 மாணவர்களையும் கொண்டுள்ளது. மாந்தர் படியாக்கம் ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளையும் உபயோகித்து இன்னுமொரு உயிரினம் உருவாக்கப்படலே படியெடுப்பு ஆகும். உருவாக்கப்பட்ட உயிரினம் தோற்றத்திலும், மரபணு அடிப்படையிலும் மரபணுவை வழங்கிய உயிரினத்தை ஒத்து இருக்கும். இயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் கலப்பின் மூலம் சேர்து, கருவுற்றபின் சைகோட் என்று அழைக்கப்படும் ஒரு திசுள் உருவாகும். இயற்கையாக இத் திசுளின் மரபணு ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் பெறப்பட்ட மரபணுக்களின் கலப்பாக இருக்கும். இந்த சைகோட் என்ற திசுள்தான் பின்னர் குழந்தையாக வளர்ச்சியடைகின்றது. ஒரு பெண்ணின் முட்டையின் திசுள் கருவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு உடல் திசுளின் மரபணுவை இட்டுவதன் மூலம் மரபணு வழங்கிய உயிரினம் படியெடுக்கப்படுகின்றது. அதாவது சில நுட்பங்கள் மூலம் உடல் திசுள் மரபணு உள்ள முட்டையை சைகோட் ஆக உருவாக்கி, குழந்தையாக உருவாக்கலாம். இங்கு ஆணின் பங்கு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக சர்ச்சைகள் படியெடு உயிரித் தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது. இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு பெண் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்லாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன? ஒரு ஆணின் உடல் திசுள் மரபணுவை, ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்? குழந்தை யாருக்கு சொந்தம்? மூர்த்தி நாயனார் மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்" - திருத்தொண்டத் தொகை மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார். அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான். அவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவாராயினார். தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்றொழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்கவல்லர்? அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ? என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே! அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக!” என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. அதனை வண்ணமும் நிரம்பின சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார். அன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசரனது காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர் கவலையுற்றனர். யானையைக் கண்கட்டிவிட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர். அன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட மூர்த்தியார் “எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத்தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன்வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேற் தரித்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டுவதற்குரிய சடங்குகள் செய்யலாயினார். “சமண் போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை ஏற்றுப் புவி ஆள்வேன்; முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என மூர்த்தியார் அருளினார். அதுகேட்ட அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் மறை முழக்கம் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடி சூடினார். முடிசூட்டு மண்டபத்தினின்றும் மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர். பின் அங்கு நின்றும் யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அரச கொலு வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார். பொன்னாசை சிறிதும் படாது முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்த பின்னர் திருவடி நீழலில் உறையும் பெருவாழ்வு பெற்றார். குலசேகர சிங்கையாரியன் குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான். முருக நாயனார் முருக நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் கூறுகிறது. சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார். உருத்திர பசுபதி நாயனார் “முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார். திருநாளைப் போவார் நாயனார் திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார். ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். விருப்பம் போன்று சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த்தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதிவலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு குளம் அமைத்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம்மூர் சேர்ந்தார். இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு கண்துயிலாது கழித்தார். விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து போவாது தவித்தார். மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே “நாளைப்போவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு நாள் கழிதல் பொறாதவராய் ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும்வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதி வலம்வந்தவர் ‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடங்கும்பிடுவது எவ்வண்ணம்? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் கொண்டார். ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று வருந்தித் துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்ததைத் நீக்கியருளத் திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்’ என்னும் புன்முறுவற் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க ஏரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார். அந்நிலையில் தில்லைவாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப்போவரா அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினார். தெய்வமறை முனிவர்களும் தெந்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து அத்தீக்குழியினை அடைந்தார். எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். அதுகண்டு தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார்கள். திருத்தொண்டர்கள் வணங்கி மனங்களித்தார்கள். வேள்வித்தீயில் மூழ்கி வெளிப்பட்ட திருநாளைப் போவாராம், மறைமுனிவர் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க, தில்லைவாழந்தணர் உடன்செல்லத் திருக்கோயிலின் கோபுரத்தைத் தொழுது உள்ளே சென்றார். உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும் அவரைக் காணாதவராயினர். நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதிதுப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார். “செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை குலோத்துங்க சிங்கையாரியன் குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1256 ஆம் ஆண்டு முதல் 1279 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகாலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் என்று செ. இராசநாயகம் கணித்துள்ளார். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும், கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் பேரனும் ஆவான். இவனும் தன் முன்னோரைப் போலவே வேளாண்மை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. தரிசு நிலங்களைத் திருத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக இவன் மாற்றியதாக இந் நூல் கூறுகிறது. இவனுடைய 23 ஆண்டு ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக விளங்கியதாகவும் கூறப்படுகின்றது. இவனைத் தொடர்ந்து இவனது மகனான விக்கிரம சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். விக்கிரம சிங்கையாரியன் விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1279 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரையான 23 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டதாக செ. இராசநாயகம் கணிப்பிட்டுள்ளார். இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன. விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடி சூட்டிக் கொண்டான். வரோதய சிங்கையாரியன் வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். புத்திக் கூர்மை உடையவனாயிருந்த இவன் கி.பி 1302 ஆம் ஆண்டுக்கும் 1325 ஆம் ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவன் விக்கிரம சிங்கையாரியனின் மகனாவான். தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டில் அமைதியை இவன் நிலை நிறுத்தியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனைத் தொடர்ந்து இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் அரசனானான். மார்த்தாண்ட சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ்ப்பாண அரசின் பெருநிலப் பகுதியின் பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த வன்னியர் கலகம் செய்யலாயினர். இக் கலகங்களை மார்த்தாண்டன் இலகுவாக அடக்கினான். நாட்டில் கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவன் இரக்க குணம் கொண்டவனாக விளங்கினான். இவன் சுகவீனமுற்றுக் காலமானபோது நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் இவனது இழப்புக்காக வர்ந்தினர். இவனை அடுத்து இவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் அரசனானான். குணபூஷண சிங்கையாரியன் குணபூஷண சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச அரசர்களுள் ஒருவன். இவன், நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று விளங்கிய மார்த்தாண்ட சிங்கையாரியனின் மகனாவான். நாட்டைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையச் செய்ததன் மூலம், தனது தந்தையிலும் அதிகமாக, இவன் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தான். உறுதியுடனும் நடுநிலைமையாகவும் ஆட்சி செலுத்திய இவன் முதிர்ந்த வயது வரை ஆட்சியில் இருந்தான். முதுமையின் இயலாமை காரணமாக இறக்கும் முன்னரே ஆட்சிப் பொறுப்பைத் தனது மகனான வீரோதய சிங்கையாரியனிடம் ஒப்படைத்தான். வீரோதய சிங்கையாரியன் வீரோதய சிங்கையாரியன் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசனாவான். இவன் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி 1371 முதல் 1394 வரையாகும் என செ. இராசநாயகமும், 1344 முதல் 1380 வரையாகும் என சுவாமி ஞானப்பிரகாசரும் கருதுகின்றனர். இவன் காலத்தில் வன்னியர்கள் சிங்களவர்களைக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டனர். சிங்களவரை அடக்கிய வீரோதயன், வன்னியர்மீது படையெடுத்து அவர்களைத் தண்டித்தான். அக் காலத்தில் தமிழகத்தில், பாண்டிநாட்டை சந்திரசேகர பாண்டியன் என்பவன் ஆண்டுவந்ததாகவும், அப்போது அந்நாட்டை எதிரிகள் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொள்ள, பாண்டியன் தப்பி யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. வீரோதய சிங்கையாரியன் நாட்டை இழந்த பாண்டியனுக்கு ஆதரவாகப் படைதிரட்டிச் சென்று அவனுக்குப் பாண்டிநாட்டை மீட்டுக் கொடுத்ததாகவும் அந்நூல் கூறுகிறது. மேற்கூறிய நிகழ்வு தொடர்பாகத் தமிழகத்திலிருந்து சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், 13 ஆம் நூற்றாண்டுக் கடைசியிலும், 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், பாண்டிநாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மக்களான வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் இடையேயான பூசல்கள், இது தொடர்பில் மாலிக் கபூரின் பாண்டிநாட்டுப் படையெடுப்பு என்பவற்றுடன், வைபவமாலைக் கூற்றைத் தொடர்புபடுத்திய முதலியார் இராசநாயகம், சுந்தர பாண்டியனையே வைபவமாலை சந்திரசேகர பாண்டியன் எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும் எனக் கருதுகிறார். வீரோதய சிங்கையாரியன் இளம் வயதிலேயே மரணமானான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற இவன் இரவில் படுக்கையிலேயே மரணமானான். இதனைத் தொடர்ந்து இவன் மகனான செயவீர சிங்கையாரியன் மிக இளம் வயதிலேயே அரசனாக முடி சூட்டிக் கொண்டான். கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்) ஒரு வேண்டுகோள்: இக் கணிதக் கலைச்சொற்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் த.வி. பயனர்கள் தயவு செய்து அதற்கு ஒத்த திருத்தங்களை கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) பட்டியலிலும் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Banach Space பானக் வெளி Base of Logarithm மடக்கையின் அடி Basis (of Space) அடுக்களம் Bicentric quadrilateral இரு மைய நாற்கரம் Bijection இருவழிக்கோப்பு Binary Operation ஈருறுப்புச் செயல், ஈருறுப்புச் செயலி Binomial Theorem ஈருறுப்புத்தேற்றம் Biquadratic Equation நாற்படியச்சமன்பாடு; நாற்படிச்சமன்பாடு Black hole கருங்குழி; கருந்துளை Boolean Algebra பூலியன் இயற்கணிதம் Calculus நுண்கணிதம் Cardinal Number எண்ணிக்கை அளவை; எண்ணளவை Case வகை, பட்சம் Category theory வகுதிக்கோட்பாடு Celestial equator வான நடுவரை Characteristic பண்பு Cluster கூட்டம் Coarser Topology சிறிய இடவியற்கூறு Codomain இணையாட்களம் Coefficient கெழு Cofactor இணைக்காரணி, துணைக்காரணி Column (of matrix) (அணியின்) நிரல் Combination சேர்வு Commutative பரிமாற்று Compass கவராயம் Compatibility ஒத்துப்போதல் Complete Graph முழுக்கோலம் Complex number சிக்கலெண், பலக்கெண், (செறிவெண்), கலப்பெண் Composite number பகு எண் Composition சேர்வை Concave குழிவான Condition நிபந்தனை Conduction கடத்தல் Congruence modulo n முற்றிசைவு மாடுலோ n, சமானம் மாடுலோ n Conjecture யூகம் Conjugate of complex number துணைச்சிக்கலெண், இணைச்சிக்கலெண் Conjugate (element of Group) இணை இயம் Consistency அவிரோதம் Constant நிலைப்பி, மாறிலி, மாறா எண் Continued Fraction தொடரும் பின்னம் Continuous தொடர் Continuum Hypothesis தொடரகக் கருதுகோள் Contradiction முரண்பாடு Convergence ஒருங்கல் Converse மாற்றுத்தேற்றம், மறுதலை Convex குவிந்த Coordinate ஆயம் Coprime பரஸ்பரப்பகாதனி; ஒன்றுக்கொன்று பகாதனி Corollary கிளைத்தேற்றம் Correlation நேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation (Time Series correlation) காலதொடர் இணைவினை Corr; Regression Coefficient நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Cosmology அண்டவியல் Countability எண்ணுறுமை Counter-example மாற்றுக்காட்டு; மாற்று எடுத்துக்காட்டு Cubic முப்படியம் Curve வளைவரை, வரைவு Cycle சுழல் Cyclic Group சுழற்குலம் Datum, Data தரவு, தரவுகள் Declination நடுவரை விலக்கம் Definition வரையறை Degree சுழியளவு, பாகை Density அடர்த்தி Depressed Cubic குறைக்கப்பட்ட முப்படியம் Derivative வகைக்கெழு Design திட்டம் Determinant அணிக்கோவை Differential Equation வகையீட்டுச்சமன்பாடு Dimension பரிமாணம் Discrete Mathematics தனிச்செயலிக்கணிதம் Discrete Topology தன்னிலை இடவியற்கூறு Discriminant பண்புகாட்டி Disjoint cycle வெட்டாத சுழல் Distribution Theory பரவல் கோட்பாடு Distributivity பங்கீட்டுப் பண்பு Diurnal motion நாளியக்கம் Division Ring பரிமாறாக்களம் Divisor வகுக்குமெண், காரணி Domain ஆட்களம் Dot Product புள்ளிப்பெருக்கல், புள்ளிப்பெருக்கீடு Dynamics இயக்கவியல் Eigenvalue ஐகென் மதிப்பு Electromagnetic field மின்காந்தக்களம் Electron எதிர்மின்னி, இலத்திரன் Element (of a set) (கணத்தின்) உறுப்பு Ellipse நீள்வட்டம் Empty Set வெற்றுக்கணம் Endomorphism உள் அமைவியம் Energy ஆற்றல் Epimorphism வெளி அமைவியம் Equation சமன்பாடு Equator நடுவரை Equivalence சமானம் Essential அடிக்கூறு Euclidean Geometry யூகிளிட் வடிவியல் Evaluation கணித்தல் Even number இரட்டைப்படை எண் Event horizon இலக்கு ரேகை Existence இருப்பு Exotic 4-dimensional Manifolds அற்புத 4-பரிமாணப் பன்மடிகள் Expansion விரிவாக்கம் Exponential (number) அடுக்குமாறிலி Expression கோவை Extreme, Extremal புறக்கோடி Factorial காரணியம் Fermat Prime ஃபெர்மா பகாதனி Fibre (or) Fiber நார் Finite Field முடிவுறு களம் Field களம் Finer Topology பெரிய இடவியற்கூறு Fission பிளவு Force விசை Formula வாய்பாடு Foundations of Mathematics கணிதத்தின் அடித்தளங்கள் Fourier Series ஃபொரியர் தொடர் Four-square Theorem நான்கு வர்க்கத் தேற்றம் Function சார்பு Fundamental Theorem of Algebra இயற்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம் Fusion இணைவு G.C.F. (Greatest Common Factor) உ.பொ.கா. (உத்தமப்பொதுக் காரணி) Gaussian Integer காஸ் முழு எண் General Linear Group பொது நேரியற்குலம் General Relativity பொதுச்சார்பியல் Generalisation நுண்பியலாக்கம்; பொதுமையாக்கம் Generator பிறப்பி Geodesy புவிப்பரப்பு Geometric Progression பெருக்குத்தொடர் Graph Theory கோலக்கோட்பாடு Gravity (புவி) ஈர்ப்பு, நிறை ஈர்ப்பு Great circle பெருவட்டம் Group குலம் Growth வளர்வு Harmonic Analysis இசைப்பகுவியல் Harmonic Integral இசைத்தொகையீடு Heat வெப்பம் Hermitian Form ஹெர்மைட் அமைப்பு Hilbert Space ஹில்பர்ட் வெளி Homeomorphism முழுமைத் தொடரமைவியம், முழுமைத்தொடரமைவு Homogeneous Homology அமைப்பு ஒப்பு Homomorphic காப்பமைவியம் உள்ள Homotopy அமைப்பு ஒத்து Horizon தொடுவானம் Horizontal line கிடைக்கோடு Hyperbola மிகைபரவளையம், மிகைவளையம் Hypergeometric Function மிகைபெருக்கச்சார்பு Hypothesis கருதுகோள் Ideal சீர்மம் Identity (Relation, equation) முற்றொருமைச்சமன்பாடு Image எதிருரு, பிம்பம் Imaginary number கற்பனை எண், அமைகண எண் Indeterminate Equations தேரவியலா சமன்பாடுகள் Indicator function சுட்டுச் சார்பு, சுட்டும் சார்பு Induction உய்த்தறிதல் Infinite Field முடிவுறாக்களம் Infinitesimal நுண்ணளவு Injection உள்ளிடு கோப்பு Inner Product உட்பெருக்கு Integer முழு எண் Integral (n) தொகையீடு International Mathematical Congress பன்னாட்டுக்கணித காங்கிரஸ் Interpolation இடைச்செறுகல் Intersection வெட்டு Into map உட்கோப்பு Invariance மாற்றமுறாமை; மாறாமி Inverse நேர்மாறு, மாற்றுறுப்பு Irrational Number விகிதமுறா எண் Isometric சம அளவையுடைய Isomorphism சம அமைவியம்; (ஓருரு அமைவு) Kernel உட்கரு, சுழிவு L.C.M (Least common Multiple) அ.பொ.ம. (அதமப் பொது மடங்கு) Large Deviation பெரிய விலக்கம் Latitude அகலாங்கு Lattice Theory கூடமைப்புக்கோட்பாடு Lemma கொற்கோள் Lie Algebra லீ இயற்கணிதம் Limit எல்லை Linear Algebra நேரியல் இயற்கணிதம் Logarithm மடக்கை Logic தர்க்க நியாயம் Longitude நீளாங்கு Loss of generality பொதுத்தன்மைக்குக் குந்தகம் Low-dimensional Manifolds சிறு பரிமாண பன்மடிகள் Magic Square விந்தைச்சதுரம்/மாயச் சதுரம் Magnitude (of star) ஒளிப்பொலிவு Manifold பன்மடிவெளி Map, Mapping கோப்பு Mass திணிவு Mathematician கணித இயலர், கணிதவியலர், கணிதவியலாளர் Matrix அணி Maximal Ideal உச்சநிலைச்சீர்மம் Maximum Value பெரும மதிப்பு Measure and Integration அளவையும் தொகையீடும் Mechanics நிலையியக்கவியல் Memoir ஆய்வுநூல் Meridian உச்சிவட்டம் Method of Exhaustionவெளிப்படுத்துகை முறை Metric Space தொலைவு வெளி Minimum Value சிறும மதிப்பு Modern Algebra தற்கால இயற்கணிதம் Modular Arithmetic மாடுலோ எண்கணிதம், மட்டு எண்கணிதம் Module கலம் Modulus மட்டு Monochromatic ஒரேநிறமுடைய Monomorphism ஒன்றமைவியம் Morphism அமைவியம், அமைவு Multilinear பல்லுறுப்பு நேரியல் Multinomial Coefficient பல்லுறுப்புக்கெழு Multiplicative Inverse பெருக்கல் நேர்மாறு Multivariate Calculus பன்மாறி நுண்கணிதம் Natural Logarithm இயல் மடக்கை Negative எதிர்மம், எதிர்மாறு Neighbourhood அண்மை Non-associative ring சேர்ப்பற்ற வளையம், ஒட்டுறவற்ற வளையம் Non-commutative பரிமாற்றலற்ற Non-euclidean geometry யூக்ளிடற்ற வடிவியல் Non-singular matrix வழுவிலா அணி Non-trivial வெற்றல்லாத Norm நெறிமம் Notation குறியீட்டுமுறை Nucleus அணுக்கரு Null-space சுழிவு, உட்கரு Nullity சுழிவளவை Number எண் Numeral எண்ணுரு Object பொருள் Observable நோக்கத்தகு கணியம் Odd number ஒற்றைப்படை எண் One-one correspondence ஒன்றுக்கொன்றான இயைபு Onto map முழுக்கோப்பு Open interval திறந்த இடைவெளி Operator செயலி Orbit சுற்றுப்பாதை Order வரிசை, கிரமம் Orientation திசைப்போக்கு Orthogonality செங்குத்துத்தன்மை Orthonormal Basis செங்குத்தலகு அடுக்களம் Pair இரட்டை Parabola பரவளையம், பரவளைவு Parallelopiped இணைகரத்திண்மம் Parallel Postulate இணை அடிகோள், இணை முற்கோள் Parameter கணியம் Parent article தாய்க்கட்டுரை Particular case தனிக்குறிப்பு Partial Order பகுதி வரிசை Partition பிரிவினை Perfect number செவ்விய எண் Periodic ஆவர்த்தனமுள்ள Permute திரி, வரிசைமாற்று Photon ஒளியன் Pigeon-hole Principle புறாக்கூண்டு தத்துவம் Piecewise Function துண்டுவாரிச் சார்பு Place Value Notation இடமதிப்புக்குறியீடு Place-Value system இடமதிப்புத்திட்டம் Platonic Solids பிளேட்டோனிக் திண்மங்கள் Pointwise addition புள்ளிவழிக்கூட்டல் Polya Enumeration Theorem போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் Polynomial பல்லுறுப்பு Positive நேர்மம் Power Set அடுக்கு கணம் Precision துல்லியம் Pre-image முன்னுரு Pressure அழுத்தம் Prime factor பகாக்காரணி Primitive root ஏது மூலம் Probability நிகழ்தகவு Process செயல்முறை Proof நிறுவல் Proper subset தக்க உட்கணம் Property பண்பு Proportional விகிதசமம் Proof நிறுவல் Proper subset Pure Mathematics தன்னியற் கணிதம் Quadratic இருபடிய, இருபடியம் Quadrilateral நாற்கரம் Quantum Mechanics குவாண்டம் நிலையியக்கவியல் Quintic Equation ஐந்துபடிச்சமன்பாடு Range வீச்சு Rank (of matrix) (அணியின்) அளவை Rational Number விகிதமுறு எண் (வகுனி எண்) Real Line மெய்யெண் கோடு, உள்ளகக்கோடு Recurrence relation மீள்வரு தொடர்பு Recurring Decimal மீள்வரு தசம பின்னம் Reflection எதிரொளிப்பு, எதிர்வம், பிரதிபலித்தல் Reflexicity எதிர்வு Reflexive relation எதிர்வு உறவு Regression Coefficient நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Regular Polygon ஒழுங்குப் பலகோணம் Relativity சார்பியல் Represent குறிகாட்டு Requirement நிபந்தனை Research Paper ஆய்வுக்கட்டுரை Rhombohedron சாய்சதுரத்திண்மம் Rhomboid சாய்செவ்வகம் Rhombus சாய்சதுரம் Riemann Hypothesis ரீமான் கருதுகோள் Rigour கண்டிப்பு Ring வளையம் Root sign மூலக்குறி Rotation சுழற்சி Row (of matrix) (அணியின்) நிரை, (அணியின்) வரிசை Ruler மட்டக்கோல் Satisfy (an equation) சரி செய்(தல்) Scalar அளவெண், திசையிலி Self-adjoint matrix உடனிணைப்பு அணி Sequence தொடர்முறை, தொடர்வு, தொடர்வரிசை Series சரம், தொடர் Set கணம், (தொகுதி) Several Complex Variables சிக்கல் பன்மாறிகள் Simultaneous Linear Equations நேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகள் Singleton ஓருறுப்புக்கணம் Skew Field பரிமாறாக்களம் Slope சரிவு, சாய்வு Solution தீர்வு Space வெளி Span அளாவல் Special Case தனிக்குறிப்பு Square (of a number) வர்க்கம் Square matrix சதுர அணி Stabilizer நிலையாக்கி Statics நிலை இயல் Step (of row-reduced echelon form) (குறுவரிசைப்படியின்) படி Step Function படிநிலைச் சார்பு Structure அமைப்பு Sub-group உட்குலம் Substitution பதிலீடு Sum of Series தொடர் கூட்டுத்தொகை, சரக்கூட்டுத்தொகை Summability தொடர்கூட்டு வாய்ப்பு Summation of Series தொடர் கூட்டல், சரக்கூட்டல் Surjection முழுக்கோப்பு Symbolism குறியீட்டமர்வு Symmetric Group சமச்சீர் குலம் Tau-function டௌ சார்பு Tetrahedron நான்முகி Tensor இழுவம் Theorem தேற்றம் Theory of Convergence ஒருங்குக்கோட்பாடு Thesis ஆய்வுக்கோட்பாடு Topological Equivalence இடவியற்சமானம் Topology (Division of Mathematics) இடவியல் Transcendental Number விஞ்சிய எண் Transfinite number வரைமீறு எண் Transitive relation கடப்பு உறவு Translation பெயர்ச்சி Transposition இடமாற்றல், (அணித்)திருப்பம் Trigonometry முக்கோணவியல் Trivial topology வெற்று இடவியற்கூறு Uncertainty principle ஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncountability எண்ணுறாமை Union ஒன்றிப்பு Unit அலகு Unitary அலகு நிலை Universal Alagebra அனைத்தியற்கணிதம் Universe பேரண்டம் Vanish சுழி(த்தல்) Variable மாறி Vector திசையன் Walk (in a graph) (கோலத்தில்) நடை Zenith உச்சி Zero (number) சூனியம் Zeta function ஜீட்டா சார்பு கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) செயவீர சிங்கையாரியன் செயவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த ஒரு அரசனாவான். இவனது தந்தையான வீரோதய சிங்கையாரியன் எதிர்பாராமல் மரணமானதைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முடி சூட்டிக் கொண்டவன் இவன். செயவீரன், தன் காலத்தில் கண்டியை ஆண்ட புவனேகபாகு என்பவனுடன் போரிட்டு அவனை வென்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். பின்னர் பராக்கிரமபாகு என்பவன் பாண்டியன் முன்னிலையில் திறை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்து வந்தான். இவனும் இவனுக்குப் பின் வந்தவர்களும் செயவீரன் காலம் வரையில் திறை செலுத்தி வந்தனர் என்பது வைபவமாலையின் கூற்று. நீண்டகாலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்த செயவீரன், காலமானபின் இவன் மகனான குணவீர சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். குணவீர சிங்கையாரியன் குணவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன். இவன் தந்தையான செயவீர சிங்கையாரியனைத் தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 1414 அல்லது 1417 ஆகும். குணவீரனது மகனே கனகசூரிய சிங்கையாரியன் ஆவான். 1945 1945 (MCMXL) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். இவ்வாண்டில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு த புரோசிடிங்ஸ் ஆஃவ் த நேஷனல் அக்காடமி ஆஃவ் சயன்சஸ் ஆஃவ் த யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃவ் அமெரிக்கா (The Proceedings of the National Academy of Sciences of the United States of America) என்னும் ஆய்விதழானது ஐக்கிய அமெரிக்காவின் நாடளாவிய அறிவியல் கலைகளுக்கான கல்விமன்றம் (United States National Academy of Sciences) என்னும் நிறுவனத்தின் ஏற்புமுத்திரை பெற்ற ஆய்விதழ் ஆகும். இதனை முதலெழுத்துச் சுருக்கமாக பிநாஸ் (PNAS) என்று அழைப்பர். இவ் ஆய்விதழ் 1915 ஆண்டுமுதல் வெளியாகி வந்துள்ளது. இதில் அறிவியலில் முன்னணியான புத்தாய்வுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும். பெரும்பாலும் இதில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகள் உயிரியல், மருத்துவ இயல் துறைகளைச் சார்ந்ததாக இருப்பினும் பிற துறைகளாகிய இயற்பியல் வேதியியல், கணிதம், குமுக அறிவியல் (social sciences, குமுகவியல்) துறை கட்டுரைகளும் வெளியாகும். இது கிழமை தோறும் (வாரந்தோறும்) அச்சிடப்பட்டு வெளியாகும் ஆய்விதழ். இணையவழி மின்னுலகில் நாள்தோறும் முன்பதிப்பாகவும் வெளியிடப்படுகின்றது. பிநாஸ் (PNAS) என்னும் இவ் ஆய்விதழை ஆய்வாளர்கள் உலகெங்கும் பரவலாக படிக்கின்றார்கள். இவ் ஆய்விதழின் குறிக்கோளின் படி, இதில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளை ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இலவசமாக யாரும் இணையவழி படித்துப் பயன்பெற உரிமை வழங்குகின்றது. அல்லது கட்டுரைஆசிரியர்கள் விரும்பி ஒப்பியிருந்தால் உடனேயும் இலவசமாக படிக்க இயலும். இந்த ஆறுமாத இடைவெளி என்னும் கட்டு இல்லாமல் உடனேயே அணுகவும் சில வகையான வெளியீடுகளுக்கும் (எ.கா : "கல்லோக்கியா" colloquia.), 144 நாடுகளுக்கு இந்த ஆய்விதழ் நிறுவனம் வாய்ப்பளிக்கின்றது. இவ்வாய்விதழின் உள்ளடக்கத்தை யாரும் மின்னஞ்சல் வழி பெறலாம். பிநாஸ் ஆய்விதழ் ஐக்கிய அமெரிக்க அரசிடம் இருந்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவின் நாடளாவிய அறிவியல் கலைகளின் மன்றத்தில் இருந்தோ நேரடியாக எந்த உதவிப்பணத் தொகையும் பெறுவதில்லை ஆகையால், தன்வருமானத்தில் இருந்தே ஆய்விதழின் வெளியீட்டுச் செலவுகள் செய்யவேண்டியிருப்பதால் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவோரோ அவர்களுடைய நிறுவனங்களோ வெளியிட கட்டணம் செலுத்த வேண்டும். ஆய்விதழின் தாக்கத்தை அளவிட பயன்படும் தாம்சன் சுட்டி (Thomson ISI) எண்ணானது இவ்விதழுக்கு 2004 ஆம் ஆண்டில் 10.452 ஆகவும், 2005 ஆம் ஆண்டு 10.231 ஆகவும், 2006 ஆம் ஆண்டு 9.643 ஆகவும் உள்ளது. இந்த தாம்சன் தாக்கச் சுட்டி எண் அதிகமாக இருந்தால் அதிக அளவு இந்த ஆய்விதழின் கட்டுரைகள் எடுத்துக்காட்டாக சுட்டப்பட்டுள்ளது என்று பொருள். பிநாஸ் ஆய்விதழானது 1994-2004 ஆகிய ஆண்டுப்பகுதியில் 1,338,191 முறை மேற்கோள்களாக சுட்டப்பட்டு உலகிலேயே இரண்டாவதாக அதிகமுறை சுட்டப்பட்ட ஆய்விதழாக உள்ளது (த ஜொர்ணல் ஆஃவ் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி (Journal of Biological Chemistry) என்னும் உயிரிய வேதியல் ஆய்விதழ்தான் 1,740,902 முறை சுட்டப்பட்டு ஆய்விதழ்கள் யாவற்றினும் அதிகம் சுட்டு பெற்ற இதழாக நின்று முதலிடம் வகிக்கின்றது) காசி நயினார் காசி நயினார் என்பவன் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலி அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த புவிராஜ பண்டாரம் என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப்பாணத்து அரச பதவிக்கு வாரிசு உரிமையற்றவன் என்பதனால், இவனை அகற்றுவதற்காக இவன் எதிராளிகள் சிலர், அக்காலத்தில் மன்னார்த் தீவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த போத்துக்கீசரின் தளபதியான தொம் ஜெரமியோ டீ அசவீடோ என்பவனிடம் முறையிட்டனர். யாழ்ப்பாண அரசியலில் தலையிடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய தளபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து காசி நயினாரை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்கித் திரும்பினான். காசி நயினார் சிறையில் அடைக்கப்பட்டான். போத்துக்கீசத் தளபதி மன்னாருக்குத் திரும்பியதும், காசி நயினாரின் ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று, காசி நயினாரைச் சிறைமீட்டதுடன் அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினர். இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான். பெரியபிள்ளை பெரிய பிள்ளை பண்டாரம், செகராசசேகரன் என அரியணைப் பெயர் கொண்டவர்களில் எட்டாவது ஆரியச் சக்கரவர்த்தியுமாகிய, யாழ்ப்பாண அரசன் ஆவான். இவனைக் குறித்து மிகக் குறைவான தகவல்களே ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. காசி நயினாரைக் சூழ்ச்சியால் கொன்றபின், மன்னாரில் இருந்த போர்த்துக்கீசத் தளபதியால் இவன் மன்னன் ஆக்கப்பட்டவன். ஜார்ஜ் தெமேலோ என்னும் அத் தளபதி 1570 ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் இருந்தவன் என்பதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1570 ஆம் ஆண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பது உறுதி. 1582 ஆம் ஆண்டில் அரசுக்கு உரிமையற்றவனான புவிராஜ பண்டாரம் என்பான் யாழ்ப்பாணத்தை ஆண்டது பற்றிய குறிப்புக்கள் வேறு மூலங்களில் காணப்படுவதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1572 ஆம் ஆண்டுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் தெரிகிறது. இவை தவிர தற்காலத்தில் கிடைக்கும் போத்துக்கீசர் காலத் தகவல்களின்படி புவிராஜ பண்டாரத்தைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த எதிர்மன்ன சிங்கன் பெரிய பிள்ளையின் மகன் ஆவான் என்பதும் தெரியவந்துள்ளது. புவிராஜ பண்டாரம் புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1640 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவார். பெரிய பிள்ளை என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவர் அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசியர்களுக்கு ராஜ எதிரியாக திகழ்ந்தவர். கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறார். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன், கண்டி மீது படையெடுக்கவே, கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்க, அவர்களுடைய சிறுவயது மகளும், மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும். போத்துக்கீசர் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமான மன்னார்த் தீவில் இருந்து அவர்களைத் துரத்தி அவ்விடத்தை விடுவிப்பதில் புவிராஜ பண்டாரம் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டுவாக்கில் பெரும் படையுடனும், ஆயுத தளவாடங்களுடனும் மன்னாரைத் தாக்கினார். இருந்தும், அக்காலத்து நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் யாழ்ப்பாணத்துப் படைகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததாலோ என்னவோ இம் முயற்சியில் புவிராஜ பண்டாரத்துக்கு வெற்றி கிட்டவில்லை. 1591 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னிந்தியக் கப்பல் தலைவனான கொட்டி மூசா மரிக்கார் என்பவனோடு சேர்ந்து கொண்டு மன்னாரைத் தாக்க முயற்சித்தும் மீண்டும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. புவிராஜ பண்டாரத்தைத் தண்டிக்க எண்ணிய போத்துக்கீசர் 1591 ஆம் ஆண்டில் அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தனர். நிகழ்ந்த போரில் நல்லூருட் புகுந்த போத்துக்கீசர் படை அரசனைப் பிடித்தனர். அரசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட அவன் தலை கொய்யப்பட்டு இறந்தான். எதிர்மன்னசிங்கம் எதிர்மன்னசிங்க பண்டாரம் அல்லது எதிர்மன்னசிங்கன் (இ. 1617) என்பவன் 1591 க்கும் 1616 க்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டவனாவான். இவன் பரராசசேகரன் என்னும் அரியணைப் பெயருடன் எட்டாம் பரராசசேகரன் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டவன். இவன், 1570 களில் யாழ்ப்பாணத்து அரசனாக இருந்த பெரியபிள்ளை என்பவனின் மகனாவான். எதிர்மன்னசிங்கத்தின் தந்தையான அரசன் பெரியபிள்ளை இறந்தபோது எதிர்மன்னசிங்கத்துக்குரிய வாரிசு உரிமையையும் தாண்டிப் புவிராஜ பண்டாரம் என்பவன் மன்னனானான். இதற்கான காரணம் தெரியவில்லை. போத்துக்கீசரைப் பகைத்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போத்துக்கீசர் புவிராஜ பண்டாரத்தைப் பிடித்துக் கொன்றனர். எதிர்மன்னசிங்கம், புவிராஜ பண்டாரத்துக்குச் சார்பாகப் போரிற் கலந்து கொண்ட போதும், கொல்லப்படும் தறுவாயில் போத்துக்கீசன் ஒருவனாற் காப்பாற்றப்பட்டான். இவன் பெரியபிள்ளையின் மகன் என்றும், பட்டத்துக்குரிய இளவரசன் என்பதையும் அறிந்த போத்துக்கீசத் தளபதியான அந்தரே பூர்த்தாடு, எதிர்மன்னசிங்கத்தை யாழ்ப்பாண அரசன் ஆக்கினான். கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ் நாட்டை ஆண்ட இவன் போத்துக்கீசரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுத்தான். தன்னுடன் பழகி வருகின்ற போத்துக்கீசர்களுக்குக் கொடைகளும் அளித்து அவர்களைப் பகையாது இருந்தான். எனினும், போத்துக்கீசக் கீழ் நிலை அதிகாரிகளினால் இவனுக்குப் பல தொல்லைகள் விளைந்ததுண்டு. கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிரிமார்கள் இவனுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்கள் நல்லூரில் தேவாலயம் கட்டுவதற்கு இவனே நிலமும் பணமும் அளித்துள்ளான். அத்துடன், இப்பாதிரிமார்களிற் சிலரும் பிற அதிகாரிகளும் செய்த முறை கேடான செயல்களையும் அவன் கண்டும் காணாதிருந்தான். இதனால், நாட்டில் அவனுக்கு எதிர்ப்பு வலுத்தது. இதனால், எதிர்மன்னசிங்கத்தை நீக்கிவிட்டுத் தஞ்சாவூரிலுள்ள இளவரசன் ஒருவனை அரசனாக்கும் திட்டமொன்றும் உருவானது. இதை அறிந்த எதிர்மன்னசிங்கம், போத்துக்கீசரை அணுகி அவர்கள் துணையுடன் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டான். போத்துக்கீசரைப் பகைக்காது இருப்பதற்காகப் பல நடவடிக்கைகளை எதிர்மன்னசிங்கம் மேற்கொண்டபோதும், போத்துக்கீசருக்கு எதிராகக் கண்டியரசன் தென்னிந்தியாவில் இருந்து போர்வீரர்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இவன் உதவுகிறான் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இந்துத் துறவிகளைப் போல வேடமிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கூடாகச் செல்கிறார்கள் எனப் போத்துக்கீசர் குற்றஞ்சாட்டினர். அவர்கள் உண்மையான துறவிகள் என்றும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை போகிறவர்கள் என்று விளக்கியும் போத்துக்கீசர் அதனை நம்பவில்லை. இதனால் எதிர்மன்னசிங்கம் 300 துறவிகளைப் பிடித்து அவர்களைக் கட்டாயமாகத் தோணிகளில் ஏற்றிக் கடலில் விட்டான். கத்தோலிக்கக் குருமார்கள் அரசனைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்குப் பெரு முயற்சி செய்தனர். அவ்வப்போது இணங்குவது போல் காட்டிக்கொண்டபோதும், இதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தான். இதற்காகச் சங்கிலி குமாரனைக் குருமார்கள் குற்றம் சாட்டினர். இறுதியாக அரசன் மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனை மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சியையும் சங்கிலி குமாரன் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மாமனான அரசகேசரியிடம் அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான். மனித எலும்புகளின் பட்டியல் ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள்(8): முக எலும்புகள்(14): நடுக்காதுகளில் செவிப்புலச்சிற்றெலும்புகள் (Ossicles) (6): தொண்டையில் (1): தோள் பட்டையில் (4): மார்புக்கூட்டில் (thorax)(25): முள்ளந்தண்டு நிரல் (vertebral column) (33): மேற்கைகளில் (arm) (2): முழங்கைகளில் (forearm) (4): கைகளில் (hand) (54): இடுப்பு வளையம் (pelvis) (2): கால்கள் (leg) (8): காலடிகளில் (52): குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மனித மண்டையோடு மனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை. மூளையையும், மூளைத் தண்டையும் சுற்றி அமைந்த பாதுகாப்புக் கவசமான மண்டை அறை எட்டு எலும்புகளைக் கொண்டது. முகத்தைத் தாங்கும் எலும்புகள் பதினான்கு ஆகும். நடுக்காதுச் சிற்றெலும்புகள் ஆறு, பொட்டு எலும்புகளினால் மூடப்பட்டுள்ளன. பிற மண்டையோட்டு எலும்புகளுடன் பொருத்தப்படாது இருப்பதனால், குரல்வளையைத் தாங்கும் எலும்பு பொதுவாக மண்டையோட்டின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுவதில்லை. மண்டையோட்டில், மூச்சுத் தோலிழைமங்களால் மூடப்பட்டனவும், வளி நிரம்பியனவுமான குழிப்பைகள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் நிறையைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற ஒத்ததிர்வுக்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன. மனித எலும்புகள் பட்டியல் உடல் உறுப்புக்கள் க. து. மு. இக்பால் க. து. மு. இக்பால் (பி. 1940) சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது, மோண்ட் பிளாங் இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இக்பால் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர். இக்பால் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1956 ஆம் ஆண்டில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 7 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் வானொலியில் ‘பாடிப் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சிக்கு 1970களிலும் 80களிலும் கிட்டத்தட்ட 200 பாடல்கள் வரை எழுதியுள்ளார். கவிஞர் இக்பால் உலக அளவிலே பல பெருமைகளும் விருதுகளும் பெற்றுள்ளார். வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் (நூல்) கவிஞர் இக்பாலின் கவிதைத் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளியான இத் தொகுப்பில் 45 கவிதைகள் உள்ளன. முதல் கவிதையான "வானவர்கள் மண்ணில் இருக்கின்றார்கள்" என்னும் கவிதைத் தலைப்பையே தொகுப்புக்கும் பெயராக இட்டுள்ளார்கள். இரண்டாவது கவிதை அன்பு மிளிரும் "தாத்தா குழந்தை". இத்தொகுப்பில் எடிசன் மடல் என்று புகழ்பெற்ற எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தது பற்றி சுவையான ஒரு கவிதை உள்ளது. இதில் இறைவனைப் பார்த்து என்று முடிக்கும் வரிகள் அருமையானது. கனவுகள் வேண்டும் (நூல்) கவிஞர் இக்பாலின் கவிதைத் தொகுப்பு. 2000 ஆம் ஆண்டு வெளியான இத் தொகுப்பில் 52 கவிதைகள் உள்ளன. இந் நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் "மணமும் இருக்கிறது! தேனும் இருக்கிறது!" என்று ஓர் அணிந்துரை நல்கி இருக்கிறார். ஜெர்மனியில் உள்ள ஹானோவர் நகரில் நடைபெற்ற Expo 2000 என்னும் கண்காட்சியில் இடம் பெற்ற "தண்ணீர்" என்னும் கவிதை இத்தொகுப்பில் உள்ளது. என்று தொடங்கும் "புனைபெயர்" என்னும் கவிதையும் இந்தத் தொகுப்பில் உள்ளது. பல அருமையான கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தமிழ் குறும்படம் ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதை குறும்படம் எனலாம். தமிழ் மொழியில் வெளியிடப்படும் குறும்படம் தமிழ் குறும்படம் ஆகும். ஒரு குறும்படம் சில நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு மேலாகவும் அமையலாம். படங்களை பதிவுசெய்வதும், பகிர்வதும் இலகுவாகப்படும் இக்காலப் பகுதியில் குறும்படங்கள் முக்கிய ஒரு வெளிப்படுத்தல் ஊடகமாக பரினாமித்து வருகின்றன. குறிப்பாக புலம்புகு தமிழர்கள் மத்தியில் இவை ஒரு முக்கிய கலை வெளிப்பாட்டு, பரிமாற்று ஊடகமாக இருக்கின்றன. மிகக் குறைந்த பணச்செலவு,வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலும் ஆர்வலர்களால் உருவாக்கப்படும் இவ்வகை திரைப்படங்கள் குறித்து பரவலான விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே எழுப்பிட தமிழ் ஸ்டூடியோ போன்ற அமைப்புகள் குறும்பட வட்டங்களை நடத்துகின்றன. அனைத்துலக அளவிலும் கனடா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் குறும்பட திரைவிழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 2007 ஆகஸ்ட் 2007, ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17 இல் தொடங்கி செப்டம்பர் 16 இல் முடிவடைந்தது. செப்டம்பர் 2007 செப்டம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் தொடங்கி அக்டோபர் 17 முடிவடைகிறது. குலச்சிறை நாயனார் “பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை. இத்தகைய அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக அரசகருமம் செய்தார். பாண்டியமன்னன் சமண சமயத்தவனாகவும் குடிகளெல்லாம் அவன் வழியினராகவும் நின்ற போதும் பெருமானம் உடையவராக அவர் சைவத்தின் வழி நின்றார். இவ்வாறு சிவநெறியினராய் அரசகருமம் பார்க்கும் நாளில் சிவநெறி விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டிற்கு அருகே திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியைக் கேள்வியுற்றார். இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அளவிலேயே அவரை நேரிற் கண்டு அடிபணிந்தது போல் ஆனந்தமடைந்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தொடிருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி சொல்வதற்கென அனுப்பி வைத்தார். சம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும் செய்தி எட்டும் முன்னமே நன்னிமித்தங்கள் பல தோன்ற ‘இவை சண்பை அரசு வரும் நற்குறி’ எனத் தெளிந்தார். எழுந்தருளும் செய்தி கேட்டதும் பாண்டிமாதேவியார் சென்று அவர் பணிப்பினைப் பெற்று வரவெதிர்கொள்ளச் சென்றார். செல்லும் அவர் தம் எதிரே புண்ணியத்தின் படையெழுச்சி போன்றும் அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக் கண்டார். பரமசமய கோளரி வந்தான் எனும் முத்துச்சின்ன ஓசை செவிநின்ற அமுதமென அவரை விம்மிதமுறச் செய்து கண்வழியூடாகவும், செவிவழியூடாகவும் உளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே கைகள் சிரமிசை ஏறிக்குவிய அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார். பின் எழுந்து நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார். ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து வந்த தொண்டர் குழாம், பாண்டிய முதல் மந்திரிப் பாங்குடன் வந்த அவரைப் பணிந்தபோதும் அவர் எழாதவகையைக் கண்டு சிவபுரச் செல்வரிடம் சென்று கூறினார். சிவஞானச் செல்வரும் முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் கைதொழுது நின்றார். அப்பொழுது ஆளுடைய பிள்ளையார். இம்மதுரவாக்கின் போற்றினால் மீண்டும் வீழ்ந்து வணங்கி நின்று. எனப் போற்றினார். ஆளுடைய பிள்ளையாரோடு கூடிச்சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப்பெருமானைத் திருமடத்தில் உறையச் செய்து, அவருக்கும் பரிசனத்தார்க்கும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. இவற்றையெல்லாம் செவ்வனே செய்தாரெனினும், தீயவை புரியும் சமணரால் தீங்கேதும் நேருமோ என அஞ்சினார். அவ்வாறு தீதேதும் நிகழின் உயிர் துறப்பதே தக்கதென்ற துணிவும் கொண்டார். அவர் அஞ்சிய வண்ணமே சமணர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த மடத்திற்குத் தீவைத்த செய்தி அவரை மனம் பதைபதைக்கச் செய்தது. ஆயினும் பிள்ளையார்க்குத் தீங்கேதும் நிகழாதது குறித்து ஆறுதல் அடைந்தார். அமணர் மடத்திற்கு வைத்த தீ மறைச்சிறுவன் ஆணையால் மன்னனை வெப்பு நோயாய் வருத்திய வேளையில் அதற்குரிய தீர்வு திருஞானசம்பந்தரேயென மதியுரை கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிமாதேவியாரையும் அவரையும் பணித்தான். பணிப்பின்படி பாண்டிமாதேவியார் சிவிகையில் வர குதிரையேறிச் சென்ற குலச்சிறையார் சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற ஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே அமண்கொடியோனின் கொடுந்தொழில் நினைத்து கண்ணருவி பாய கைகுவித்திறைஞ்சி திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றிய கைவிடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தர் 'ஒன்றுக்கும் அஞ்சாதீர்' என்று அபயமளித்தார். அபயமளித்த அவர் சிவிகையில் ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார். அவர் அமணர்களுடன் புரிந்த சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் யாவினும் அமைச்சராம் பாங்குடன் ஒழுகினார். புனல்வாதத்தின்போது எதிரேறிச்சென்ற திருப்பாசுர ஏட்டை குதிரையேறிச் சென்று ஏடகத்தில் எடுத்துத் தலைமிசை ஏறிவந்தார். வாதில் தோற்ற அமணரையெல்லாம் அவர் உடன்பட்டவாறே கழுவிலேற்றி முறை செய்யுமாறு அரசன் பணிக்க அப்பணிப்பின்படியே எண்ணாயிரம் அமணரைக் கழுவில் ஏற்றினார். திருநீறணிந்த பாண்டிய மன்னனுடன் பாண்டிமாதேவியாருடனும் பரசமய கோளரியாரை அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றுதல் செய்தார். சிவம் வளர்க்கும் செம்மலர் ஆலவாயில் அமர்ந்திருந்த நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார். காழியர்பெருமானைப் பாண்டிநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று ஈற்றில் தம் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார் அங்கு அருள் புரியும் ஜெகதீஸ்வரர் பெருமான் ஆசிப்பெற்றார். சீகாழி மன்னர் சோழநாட்டிக்குப் புறப்படத் திருவுளம் பற்றியபோது அவரோடு கூடிச்செல்வதே குலச்சிறையாரின் ஆசையாக இருந்தது. சிவபுரச் செல்வரோ "இங்கு சிவநெறி போற்றியிருங்கள்" என்று பணித்தார். அவர் பணிவழியொழுகும் கருத்தால் பாண்டி நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசகருமம் செய்து ஆலவாய் இறைவனின் அருட்தாள் சேர்ந்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் “திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் மரபில் தோன்றியவர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவர். இவரைப்பற்றிய தகவல் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் 25-வது புராணமாக 'மும்மையால் உலகாண்ட சருக்கம்' என்ற பகுதியில் உள்ளது. சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை யுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். இவர் செவ்விய அன்புடையவர்; நல் ஒழுக்க நெறி நிற்பவர்; சிவனடித்தொண்டு புரிபவர்; மன, மொழி, மெய்யடியாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பழுக்கும் போக்குவார் ஆயினர். இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள் திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இழைத்திருக்கின்றதே, ஏன்?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையைத் துவைத்துதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் ‘நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக’ என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர் அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக’ என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராதொழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி ‘இனி நான் யாது செய்வேன்’ என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப்போயிற்றே’ என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்’ என்று எழுந்து ‘துணி துவைக்கும் கற்பாறையாலே எனது தலை சிந்தும்படி மோதுவேன்’ என்று தமது தலையை மோதினார். அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராகய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது தனிநின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, ‘உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம்”, இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக’ என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார். அங்கேரி அங்கேரி ("Hungary", ஹங்கேரி, ( , "மகியறோர்சாக்"), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோவாசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆசுதிரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. புடாபெஸ்ட் இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். அங்கேரி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, விசெகிராது குழு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழி அங்கேரியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், ரோமர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை கிறித்தவ இராச்சியமாக மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது. முதலாம் உலகப் போரை அடுத்து, அங்கேரி தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள்தொகையையும், 32% அங்கேரிய இனக்குடிகளையும் இழந்ததை அடுத்து 1920 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திரயானன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்க்கேரியின் தற்போதைய எல்லைகள் வகுக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது அங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இதனால் அது மேலும் தனது பலத்தையும், மக்களையும் இழந்தது. போரின் முடிவில், அங்கேரி சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்குள் வந்தது. இதனால் அங்கு 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது. 1956 அங்கேரியப் புரட்சியின் போது இந்நாடு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 1989 இல் ஆசுதிரியாவுடனான எல்லைப் பகுதியை அது திறந்து விட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது. அங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன. இங்கு உலகின் மிகப் பெரிய வெப்ப நீர்க் குகை, உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புன்னிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன. "ஹங்கேரி" என்ற பெயர் 7ம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கேரியப் பழங்குடிகள் பல்கார் கூட்டமைப்பில் ஒரு பகுதியினராக இருந்த போது ஓன்-ஓகுர்" ("On-Ogur") என அழைக்கப்பட்டனர். இது ஓகுர் மொழிகளில் "பத்து அம்புகள்" என்று பொருள். கிமு 35 இற்கும் 9 இற்கும் இடையில் உரோமைப் பேரரசு தன்யூப் ஆற்றின் மேற்குப் பிரதேசத்தைக் கைப்பற்றினர். கிபி 4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பிற்காலத்தைய அங்கேரியின் பகுதியான பனோனியா ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிபி 41–54 இல், 600 ஆண்களைக் கொண்ட ரோமப் படையினர் பனோனியாவில் குடியேறினர். இக்குடியிருப்புப் பகுதி அக்கின்கம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேறத் தொடங்கினர், கிபி 106 இற்குள் அக்கின்கம் இப்பிராந்தியத்தின் ஒரு முக்கிய வணிக மையமாக உருவெடுத்தது. இது இப்போது புடாபெஸ்டின் ஓபுடா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்த உரோமை சிதைவுகள் நவீன அக்கின்கம் அருங்காட்சியகமாக உள்ளது. பின்னர் இப்பிராந்தியம் குன்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்கள் இங்கு ஒரு பெரும் இராச்சியத்தை அமைத்தார்கள். குன்களுக்குப் பின்னர் செருமானிய ஓசுத்துரோகோத்சுகள், லொம்பார்துகள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோர் இப்பிராந்தியத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 9ம் நூற்றாண்டின் இறுதியில் இந்நிலத்தில் சிலாவிக், ஆவார்கள் ஆகியோர் பெரும்பான்மையாகக் குடியேறினர். லிபியா லிபியா ("Libya", ) வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும். ஏறத்தாழ பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும். லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன. உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும். 1951 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்சு இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது. 1969 ஆம் ஆண்டு முவாம்மர் அல்-கடாபி ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 2011 லிபிய உள்நாட்டுப் போரை அடுத்து 34 ஆண்டு கால முஆம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியா தேசிய இடைக்காலப் பேரவையின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. லிபியாவின் வரலாறு, உள்நாட்டுப் பழங்குடியினக் குழுக்களான பெர்பரின் வளமான வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முழு வரலாற்றிலும், பெர்பர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் பெரும்பாலான வரலாற்றில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. சுதந்திர லிபியா நவீன வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு தொடங்கியது. லிபியாவின் வரலாற்றில் புராதன லிபியா, ரோமானியக் காலத்தில், இஸ்லாமிய சகாப்தம், ஓட்டோமான் ஆட்சி, இத்தாலிய ஆட்சி, மற்றும் நவீன சகாப்தம் போன்ற ஆறு வேறுபட்ட காலங்களைக் கொண்டுள்ளது. மிகப்பெரும் பரப்பைக் கொண்டுள்ள லிபியா, ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தையும், உலக நாடுகளின் வரிசையில் பதினேழவதாகவும் உள்ளது. இது எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் இடையே அமைந்துள்ளது உள்ளது. 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வளங்களைக் கொண்டுள்ள போதிலும், மிக மோசமான பாலைவனமாக இருக்கின்றது. மத்தியதரை கடற்கரை மற்றும் சஹாரா பாலைவனத்தில் நாட்டின் மிக முக்கியமான இயற்கை அம்சங்களாக உள்ளன. இங்கு குறைந்தபட்ச மனித வாழ்வாதாரமே விவசாயம்தான். அதுவும் ஒரு சில பாலைவனச் சோலைகளில் மட்டுமே முடியும். 2007ம் ஆண்டிற்குப் பின்னரிலிருந்து, லிபியாவானது 22 மாவட்டங்களாகப் (பாலதியாத்) பிரிக்கப்பட்டன.
  1. புத்னான் மாவட்டம்
  2. நல்லுத் மாவட்டம்
  3. ஜபை அல் கார்பி மாவட்டம்
  4. வாதி அல் சாதி மாவட்டம்
  5. சுப்ரா மாவட்டம்
  6. அல் வகாத் மாவட்டம்
  7. காத் மாவட்டம்
  8. வாதி அல் ஹாயா மாவட்டம்
  9. சபா மாவட்டம்
  10. முர்சுக் மாவட்டம்
  11. குஃப்ரா மாவட்டம் லிபியா அதிகாரப்பூர்வ மொழி நவீன தரநிலை அரபு மொழியாக உள்ளது. சுமார் 95 விழுக்காடு மக்களின் முதல் மொழியாக லிபிய அரபு உள்ளது. ஆனால் எகிப்திய அரபு, துனிசிய அரபு மற்றும் இதர அரபு வகைகளும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியானது, வணிகம் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக மிகவும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு மொழி ஆகும். மேலும் தற்போதைய இளம் தலைமுறையினரால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. செர்பியா செர்பியா என்றழைக்கப்படும் "செர்பியக் குடியரசு" மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. நவாலி தேவாலயத் தாக்குதல் நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர். வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் "முன்னேறிப் பாய்தல்" ("லீட் ஃபோர்வேட்") இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர். அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த "புக்காரா" விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 150-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெருமிழலைக் குறும்ப நாயனார் "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார். இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். "திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்" என்று எண்ணி 'இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்' என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏயர்கோன் கலிக்காம நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். "ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகை கூறுகிறது. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபக்தியிலும் சிவ அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருப்பணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித் தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்ஙனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்வியுற்று, "ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றானே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆதிய தேவரெல்லாம் தொழும் தேவாதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? " என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தம்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை சிவபெருமான் ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் "வழிவழி அடியனான என் வருத்தத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் என்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலைநோயை நீசென்று தீர்ப்பாய்' எனப் பணித்தருளினார். நம்பியாரூராரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது. கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக்கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காமருடைய சூலைநோயை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்' என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்' என்றனர். அதுகேட்ட வன்றொண்டர், 'தீங்கேதுமில்லை என்றீர்கள், ஆயினும் என்மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்' என்றார். அதுகேட்டு அவர்கள் கலிக்காமரைக் காட்டினர். கலிக்காமர் குடர் சரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் 'நிகழ்ந்தது நன்று; யானும் இவர் போல் இறந்தழிவேன்' என்று குற்றுடைவாளைப் பற்றினார். அப்பொழுது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து "கேளிரேயாக்கிக் கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர். நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார். வங்காலை வங்காலை மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையில் உள்ள ஓர் மீனவக் கிராமம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இங்கு மன்னார் மாவட்டத்தில் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயமும் அமைந்துள்ளது. எலும்பு எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன. இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும். நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர். உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது. எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர். அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும். எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும். என்பை ஆக்குவதில் இரு வகையான என்பிழையங்கள் பங்கெடுக்கின்றன. நெருக்கமான என்பிழையம் என்பின் வெளிப்புறமாகவும், கடற்பஞ்சு என்பிழையம் மேலென்பு முளையின் உட்புறமும் அமைந்து காணப்படும். என்பின் நடுத்துண்டம் வெறுமையானதாக அல்லது என்பு மச்சையைக் கொண்டதாக இருக்கலாம். செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. என்பு ஒரு உயிருள்ள தொடுப்பிழைய வகையைச் சார்ந்த ஒரு அங்கமாகும். இவ்விழையங்களைத் தவிர கசியிழையம், குருதிக் கலன்களும் என்பின் கட்டமைப்பை ஆக்குவதில் பங்கெடுக்கின்றன. எலும்பின் வடிவம் அதன் உறுதித்தன்மைக்கும் மீள்தன்மைக்கும் காரணமாக அமைகின்றது. எலும்பு மையப்பகுதியின் என்பு மச்சை போன்ற மென்மையான பாகம் இல்லாமல் முழுமையாக செங்கல் போல நெருக்கமான என்பிழையத்தால் ஆக்கப்பட்டிருந்தால் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் எலும்பு இலகுவில் உடைந்து விடும். நடுவில் மென்மையாக இருப்பதால் அதிக அழுத்தத்துக்கு சிறிது வளைந்து கொடுக்கக்கூடியதாக உள்ளது. எனினும் எலும்பு கசியிழையம் போன்று அதிகளவு மீள்தன்மையானதல்ல. மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால் எலும்பு உடைந்து விடும். நெருக்கமான என்பிழையத்தில் கல்சியம் பொஸ்பேற்றுத் தாயம் அடர்த்தியாக இருக்கும். இது எலும்பின் திண்வின் 80%ஐ உள்ளடக்கிய பகுதியாகும். என்பின் தாங்கும் தொழிலைப் புரியும் பிரதான பாகம் இதுவாகும். என்புக்கு இப்பாகம் வன்மையையும் உறுதியையும் வழங்குகின்றது. இதில் கல்சியம் பொசுபேற்றுக்கிடையே என்பரும்பர்க் கலங்களும் குருதிக் கலன்களும், கொலாஜின் நார்களும் உள்ளன. தொடர்ச்சியாக அதிக அழுத்தத்துக்கு உட்படும் போது (உதாரணமாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது) இவ்விழையம் தடிப்படைந்து என்பின் பலத்தை அதிகரிக்கும். இதனாலேயே விண்வெளிக்குச் செல்லுவோர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவென்பதால் என்புகளிலுள்ள அழுத்தம் குறைவடையும். இதனால் என்பிலுள்ள என்புடைக்கும் கலங்கள் தொழிற்பட்டு என்பை நலிவடையச் செய்யும் (என்பின் தேவை விண்வெளியில் இல்லாமையால்). எனவே உடற்பயிற்சி செய்யாமல் விண்வெளியில் தங்கிய பின் பூமிக்குத் திரும்புவோரின் என்புகள் உடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து நெருக்கமான என்பிழையத்தின் தடிப்பைப் பேண இவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். நெருக்கமான என்பிழையத்தினுள் குருதிக்கலன், நீணநீர்க்கலன், நரம்பு ஆகியவற்றின் போக்குவரத்திற்காக அதனுள் ஆவேசின் கால்வாய், வோக்மனின் கால்வாய் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இக்கால்வாய்களூடாகவே எலும்புக்கும் உடலின் மற்றைய பாகங்களுக்குமான தொடர்பு பேணப்படுகின்றது. ஆவேசின் கால்வாயைச் சூழ வட்ட வடிவங்களின் என்பு மென்றட்டுக்களில் என்புக் குழியங்கள் அடுக்கப்பட்டிருக்கும். என்புக்குழியங்கள் உள்ள கலனிடைக் குழிகள், சிறுகுழாய்கள் மூலம் ஒன்றிடனொன்றாகவும் ஆவேசின் கால்வாயுடனும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆவேசின் கால்வாயைச் சூழவுள்ள வட்ட வடிவமான மென்றட்டுத் தொகுதிகளைக் கூட்டாகச் சேர்த்து "ஆவேசின் தொகுதி" என அழைப்பர். இதனை ஒளி நுணுக்குக் காட்டியின் உதவியுடன் அவதானிக்கலாம். பல ஆவேசின் தொகுதிகள் இணைந்தே ஒரு நெருக்கமான என்பிழையத்தை ஆக்குகின்றன. கடற்பஞ்சு என்பிழையம் நெருக்கமற்ற ஆக்கக்கூறில் நெருக்கமான என்பிழையத்தை ஒத்த என்பிழையமாகும். இவ்விழையத்தில் அதிக துளைகள் உள்ளன. இவ்விழையம் மேலென்பு முளையின் உட்பகுதியில் உள்ளது. இதன் அதிகமான துளைகளை குருதிக் கலன்களும் செவ்வென்பு மச்சையும் நிரப்பி உள்ளன. என்பின் நடுத்துண்டத்தின் மையத்தில் இவ்விழையத்துக்குப் பதிலாக என்பு மச்சையே காணப்படும். கடற்பஞ்சு என்பைச் சூழ அதிகளவில் குருதிக் கலன்கள் காணப்பட்டாலும், கடற்பஞ்சென்பை ஆக்கும் சிறிய "புன்சலாகை"களினுள் குருதிக்கலன்கள் ஊடுருவுவதில்லை. என்பிழையங்களை ஆக்கும் பிரதான கல வகைகள்: என்பரும்பற்கலங்கள் என்பிழையத் தாயத்தைச் சுரக்கும் கலங்களாகும். இவை எலும்பை ஆக்கும் கூறுகளான கொலாஜினையும், கல்சியம் பொசுபேற்றையும் சுரந்து என்பாக்கத்தைத் தொடக்கி வைக்கும் கலங்களாகும். என்பு வளர்ச்சியடைய இவை என்புத் தாயத்துக்குள் அம்பிட்டு விருத்தியடைந்து என்புக்குழியத்தை ஆக்கும். என்புக்குழியங்கள் அதிக முதலுரு வெளிநீட்டங்களைக் கொண்ட கலங்களாக உள்ளன. இவ்வெளிநீட்டங்கள் ஏனைய என்புக்குழியத்தோடும், என்பரும்பற்கலங்களோடும் இவற்றைத் தொடர்புபடுத்துகின்றன. என்புக்குழியங்கள் என்பின் தடிப்பை தக்க வைக்க, குருதியில் கல்சியம் செறிவைப் பேண உதவுவதுடன் எலும்பில் அழுத்தம் அதிகரிக்கும் போது நரம்புக் கணத்தாக்கங்களை உருவாக்கி நரம்புத் தொகுதிக்கு அறிவிக்கின்றது. முன்னோடிக் கலங்கள் என்பின் புற என்புச்சுற்றியில் உள்ளன. இவையே என்பரும்பற்கலங்களாகத் திரிபடையும் மூலக்கலங்களாகும். என்புடைக்கும் கலங்கள் மேற்கூறிய கலங்களைப் போலல்லாது வேறுபட்ட உற்பத்தியுடையவை. இவை குருதியிலிருந்து என்புக்குள் இடம்மாறிய ஒற்றைக்குழியக் கலங்களாகும். இவை என்பிழையத் தாயத்தைக் கரைத்து என்புடைக்கும் தொழிலைப் புரிகின்றன. இவை என்பின் வளர்ச்சியிலும் மீளொழுங்காக்கலிலும் உதவுகின்றன. உள்ளிருந்து இவை எலும்பைக் கரைத்து மச்சைக் குழியை ஆக்க வெளியிலிருந்து என்பருபற்கலங்கள் அதிக வேகத்தில் என்புத் தாயத்தைச் சுரப்பதால் என்பின் வளர்ச்சியும் ஒழுங்கமைப்பும் நடைபெறுகின்றது. இக்கலங்கள் இல்லாவிடில் நடுவில் மென்மையான மச்சை இல்லாமல் உடையக்கூடிய கட்டமைப்பாக என்பு மாறி விடும். எனவே என்பின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், பேணலுக்கும் இந்த நால்வகைக் கலங்களும் அவசியமாகும். எலும்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன: எலும்புகள் பலவகைப் பணிகளைச் செய்கின்றன. எலும்புகள் ஒன்றாக இணைந்து எலும்புக்கூட்டை உருவாக்குகின்றன. இவை உடலைத் தாங்கும் சட்டகமாக உதவுகின்றன. இவை தசைகள், தசைநாண்கள், தசைநார்கள், மூட்டுகளின் பொருத்துப்புள்ளிகளாக அமைகின்றன. இவை ஒருங்கிணைந்து விசைகளை உருவாக்கிக் கடத்த உதவுகின்றன. இதனால் உடலும் உடலின் உறுப்புகளும் முப்பருமான வெளியில் இயங்க முடிகிறது. எலும்பு, தசையிடையிலான ஊடாட்டம் உயிரியக்கவியலில் பயிலப்படுகின்றன. எலும்புகள் உள்ளுறுப்புகளைக் பாதுகாக்கின்றன. மண்டையோடு மூளையைப் பாதுகாக்கிறது. விலாக்கூடு இதயத்தையும் நுரையீரலையும் பாதுகாக்கிறது. எலும்புகள் உருவாகிய முறையால் அவை ஏறத்தாழ 170 MPa]] (1800 கிகி/செமீ²) அளவு உயர் அமுக்க வலிமையையும் 104–121 MPa அளவு குறைவான இழுவலிமையும் 51.6 MPa அளவு மிகக் குறைவான துணிப்பு வலிமையும் கொண்டுள்ளது. எனவே, எலும்புகள் அமுக்கத் தகைவை நன்றாகவும் இழுப்புத் தகைவைக் குறைவாகவும் துணிப்புத் தகைவை (திருக்கத்தகைவு போன்றன) அதைவிடக் குறைவாகவும் ஏற்கிறது. எலும்புகள் இயல்பாகவே நொறுங்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை கணிசமான அளவு மீண்மையையும் கொண்டுள்ளன. இந்த மீண்மை மென்படல இழையத்தால் ஏற்படுகிறது. புரை எலும்புகளின் நுண்ணிலை இறுவலிமை உயர்பிரிதிறனுடன் கணினிப் படிமங்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேள்விப் புலனில் இயக்கவியலாக எலும்புகள் முதன்மையான பாத்திரம் வகிக்கின்றன. நடுச்செவியில் மூன்று சிற்றெலும்புகள் உள்ளன. இவை ஒலியைக் கடத்தும் பணியைச் செய்கின்றன. புரையெலும்பின் பகுதி எலும்புநல்லியைக் கொண்டுள்ளது. எலும்புநல்லி குருத்தியாக்க நிகழ்வுவழி குருதிக்கலங்களை தோற்றுவிக்கிறது. எலும்புநல்லி உருவாக்கும் குருதிக்கலங்களில் சிவப்புக் குருதிக்கலங்கள், வெள்ளைக் குருதிக்கலங்கள், குருதிச் சிறுதட்டுக்கலங்கள் ஆகியவை அடங்கும். குருதியாக்க முகிழ்கலங்களைப் போன்ற முன்னாக்கக் கலங்கள் முன்னோடிக்கலங்களை உருவாக்க முழுப்பகுப்பு முறையில் பிளவுறுகின்ற. இந்த முன்னோடிக்கலங்கள் பின்னர் வெள்லைக் குருதிக்கலங்களையும் சிவப்புமுகைகளையும் (இவை பிறகு சிவப்புக் குருதிக்கலங்களை உருவாக்குகின்றன) உருவாக்குகின்றன. சிவப்பு, வெள்ளைக் கலங்கள் முழுப்பகுப்பால் உருவாதல் போன்றல்லாமல் குருதித் தட்டுக்கலங்கள் பெருங்கருவன் கலங்களிலில் இருந்து உதிர்ந்து உருவாகின்றன. இவ்வாறு பல்வேறு மற்ரங்களால் எலும்புநல்லி குருதியின் பல்வேறு உயிர்க்கலங்களை உருவாக்குகிறது. உருவாகிய கலங்கள் முதிர்வுற்ரதும், அவை குருதிச் சுற்றோட்ட்த்தில் நுழைகின்ற. ஒவ்வொரு நாளும் 2.5 பில்லியனுக்கும் கூடுதலான சிவப்புக் குருதிக்கலங்களும் குருத்தித் தட்டுக்கலங்களும் d 50–100 பில்லியன் குறுணைக்கலங்களும் இவ்வாறு உருவாகின்றன. குருதிக்கலங்களை உருவாக்குவதோடு, எலும்புநல்லி பழுத்துற்ற, அகவையான குருதிக்கலங்கலை அழிக்கவும் செய்கிறது. உயிரினத்தையும் அதன் அகவையையும் எலும்பின் வகையையும் பொறுத்து, என்புக்கலங்கள் எலும்பில் 15% அளவுக்கு அமைகிறது. எலும்பு மச்சை எலும்புநல்லி "(Bone marrow)" அல்லது எலும்பு மச்சை அல்லது எலும்பு மஞ்சை அல்லது எலும்புச் சோற்றிழையம் என்பது பகுதித் திண்மநிலை உயிரியல் இணைப்பிழையம் ஆகும். இது எலும்பின் பஞ்சுப்பகுதிகளிலும் புரையெலும்புப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பெரிதும் பல எலும்புகளின் நடுப்பகுதியில் காணப்படுகிறது; குறிப்பாக முதன்மையாக விலாக்களிலும் முதுகெலும்புகளிலும், நடுவிலாக்களிலும் இடுப்பு எலும்புகளிலும் அமைகிறது.பறவைகளிலும் பாலூட்டிகளிலும் எலும்புநல்லி தன் முதன்மையான குருதியாக்க மையமாகச் செயல்படுகிறது. இதில் குருதிக்கலங்கள், எஅல்லிக் கொழுப்பு இணைப்பிழையங்கள், ஏந்தலுக்கான கருநிலைக்கலங்கள் ஆகியவை உட்கூறுகளாக அமைகின்றன. நிரலாக (சராசரியாக), மாந்த உடலின் பொருண்மையில் 4% அளவுக்கு எலும்புநல்லி அமைகிறது; 65 கிகி எடையுள்ள வளர்மாந்தரில் எலும்புநல்லி 2.6 கிகி எடையளவுக்குத் தோராயமாக அமைகிறது. மாந்த எலும்புநல்லி ஒருநாளைக்கு 500 பில்லியன் குருதிக் கலங்களை உருவாக்குகிறது; இவை குருதி மண்டலச் சுற்றோட்டத்தில் அகணிக்குழியில் உள்ள குருதிக் குழல்புரைகள் வழியாக கலக்கின்றன]. நிணநீர்க்கலங்களும் தண்டுவடக் கலங்கள் உட்பட அனைத்துவகைக் குருதிக்கலங்களும், எலும்புநல்லியில் ஆக்கப்படுகின்றன; என்றாலும் நிணநீர்க்கலங்கள் முதிர, பிற நிணநீர் மண்டலத்துக்குள் நகரல் வேண்டும். வெள்ளைக் குருதிக்கலப் புற்று உட்பட்ட கடுமையான எலும்புநல்லி நோய்களை ஆற்ற வேண்டும் எலும்புநல்லிக் கலமாற்றங்களுக்கு, தாவது குருதியாக்க முகிழ்கருக் கலமாற்றங்கள் தேவையாகின்றன். கூடுதலாக எலுபுநல்லி முகிழ்கருக் கலங்கள் வெற்றிகரமாக செயல்முனைவான நரம்புக்கலங்களாக் மாற்றப்பட்டுள்ளன; கிண்ண அழற்சி நோய்களை ஆற்றவும் எலும்புநல்லி முகிழ்கருக் கலமாற்ரங்களைப் பயன்படுத்தலாம். எலும்புநல்லியின் உட்கூறுகள் இயங்கியல் தன்மையுள்ளது. இது உயிர்க்கலம்சார், உயிர்க்கலம்சாரா உறுப்புகளைக் கொண்டுள்ளது. இது அகவையைச் சார்ந்து மாறுகிறது. அமைப்புக் காரணிகளைச் சார்ந்தும் மாறுகிறது. இது பேச்சு வழக்கில் இதில் உள்ள குருதியாக்கக் கலங்கள், கொழுப்புக் கலங்களைப் பொறுத்து மஞ்சள் சோறு சிவப்புச் சோறு எனப்படுவதுண்டு(, ). இதுவரை சரியான எலும்புநல்லி இயங்கமைப்பும் ஒழுங்குமுறையும் அறியப்படவில்லை;உட்கூறுகளின் மாற்றம் வழக்கமான பொதுப்பாணிகளில் நிகழ்கிறது. எடுத்துகாட்டாக, புதிதாக பிறந்த குழந்தையின் எலும்பில் சிவப்புநல்லி அமைகிறது; இது அகவை முதிர முதிர மஞ்சள் நல்லியாக மாறுகிறது. வளர்ந்தவரில், சிவப்புநல்லி முதன்மையாக கூபகம், விலா நடுவெலும்பு, மண்டையோடு, விலாவெலும்புகள் முதுகுத்தண்டு, தோள்பட்டையெலும்பு போன்ற அச்சருகு எலும்புகளில் மட்டும் அமைகிறது. மேலும், தொடையெலும்பு, தோள்கட்டெலும்பு போன்ற நீளெலும்புகளின் நுனிகள், எலும்புகளின் வளர்முனைகள் ஆகியவற்றிலும் ஓரளவு மாறிமாறி அமைகின்றன. நாட்பட்ட உயிரகக்குறை (ஆக்சிஜன்குறை) நிலவும் சூழல்களில் மஞ்சள் நல்லி சிவப்பு நல்லியாக மாறி, சிவப்புக் குருதியாக்கக் கல உருவாக்க வீதத்த்தைக் கூட்டுகின்றன. உயிர்க்கல மட்டத்தில், எலும்புநல்லியின் முதன்மை பணியுறுப்பாக முன்னாக்க உயிர்க்கலங்கள் அமைகின்றன; இவை பின்னர் முதிர்வுற்று குருதிக்கலங்களாகவும் நிணநீர்க் கலங்களாகவும் மாறுகின்றன. எலும்பு நல்லி குருதியாக்க முகிழ்கலங்களையும் கொண்டுள்ளன; இவை பின்னர் குருதிச் சுற்றோட்ட்த்தில் காணும் மூவகைக் குருதிக் கலங்களாகின்றன; இவை, வெள்ளைக் குருதிக்கலங்கள், சிவப்புக் குருதிக்கலங்கள், சிறுதட்டுக் கலங்கள் என்பனவாகும். எலும்புநல்லியின் கருநிலை கலங்களில், அதன் முதன்மையான பணியாகிய குருதியாக்கத்தில் நேரடியாக பங்கேற்காத அனைத்து இணைப்பிழையங்களும் உள்ளன. இக்கருநிலைக்கலங்கள் மறைமுகமாக குருதியாக்கக் கலங்களை வேறுபடுத்தலில் நுண்சூழல் பின்னணியாக பங்கேற்கலாம் . எடுத்துகாட்டாக, இவை குழுவாக்கத் தூண்டல் காரணிகளை உருவாக்கி, அதன்வழியாக குருதியாக்கத்தில் கணிசமான பங்கேற்கலாம். எலும்புநல்லி கருக்கலங்களில் அமையும் கலவகைகள் கீழுள்ளவற்ரை உள்ளடக்கும்: எலும்புநல்லியின் கருக்கலங்கள் இடைமுகிழ் உயிர்க்கலங்களைக் கொண்டுள்ளன; இவைஎலும்புநல்லி கருக்கலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பன்முகத் திறம் வாய்ந்த உயிர்க்கலங்கள் ஆகும். இவை வேறுபட்ட பலவகை உயிர்க்கலங்களாக மாறவல்லவை. இவற்றை உடலிலோ ஆய்வகத்திலோ வேற்பாடுறவைக்கலாம். இவை எலும்புமுகைகளகவோ குருத்தெலும்புகளாகவோ தசை உயிக்கலங்களாகவோ நல்லிக் கொழுப்பு இணைப்பிழையங்களாகவோ பீட்டா வகை கணைய த் திட்டு உயிர்க்கலங்களாகவோ வேறுபடுறலாம். எலும்புநல்லியின் குருதிக்குழல்கள் ஓர் அரணாக உருவாகி, நல்லியில் இருந்து முதிரா குருதிக்கலங்கள் வெளியேறுவதை தடுக்கின்றன. முதிர்வுற்ர குருதிக்கலங்கள் மட்டுமே அக்குவாப்போரின் கிளைக்கோப்போரின் போன்ற மென்படலப் புரதங்களைக் கொண்டுள்ளன. இவை குருதிக்கலங்கள் குருதிக்குழலில் அகணியோடு இணைந்து கடந்து செல்ல தேவைப்படுகின்றன. குருதியாக்க முகிழ்கருக் கலங்கள் எலும்புநல்லி அரணைக் கடக்கவல்லவை; எனவே, இவற்ரைக் குருதியில் இர்ந்துப் பிரித்து அறுவடை செய்யலாம். நிணநீர் மண்டலத்தில் சிவப்பு எலும்புநல்லி முதன்மையான உறுப்பாகும்.இது நிணநீரக உறுப்பாக அமைந்து நிணநீர்க்கலங்களை முதிரா குருதியாக்க முற்கலங்களில் இருந்து உருவாக்குகிறது. எலும்புநல்லியும் கணையக் கலங்களும் ம்தன்மை நிணநீர் இணைப்பிழையங்களை உருவாக்குகின்றன. இவை தாம் நிணநீர்க்கலங்களை உருவாக்குன்றன. மேலும், எலும்புநல்லி நிணநீர் மீண்டும் நிணநீர் மண்டல்த்துக்குள் பாயாதவாறு தடுக்கும் கவாடங்களாகவும் பயன்படுகின்றன. எலும்புநல்லிக்குள் பலவகைக் கலங்களுக்கான தனியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, சிலவகைக் கலங்கள் குறிப்பிட்ட இடங்களிலேயே பிரிந்து திரள்கின்றன. எடுத்துகாட்டாக, சிவப்புக் குருதிக்கலங்களும், பேருண்கலங்களும் இவற்றையொத்த முன்னாக்கக் கலங்கள் குருதிக் குழல்களில் திரள்கின்றன; அதேவேளையில், குறுணைக்கலங்கள் எலும்புநல்லியின் விளிம்புகளில் திரள்கின்றன. மேலும் காண்க, எலும்புநல்லி (உணவு) விலங்குகளின் எலும்புநல்லி உலகெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக உணவில் கலந்து பயன்பட்டு வருகிறது. [[பகுப்பு:எலும்புநல்லி]] [[பகுப்பு:எலும்புக் கூட்டமைப்பு]] [[பகுப்பு:குருதியாக்கம்]] [[பகுப்பு:அகச்சுரப்பு மண்டலம்]] [[பகுப்பு:நிணநீர் மண்டலம்]] [[பகுப்பு:முகிழ்கரு உயிர்க்கலங்கள்]] [[பகுப்பு:நிணநீரக உறுப்பு]] [[பகுப்பு:உடற்கூற்றியல்]] [[பகுப்பு:குருதி]] [[பகுப்பு:எலும்புகள்]] குருத்தெலும்பு குருத்தெலும்பு அல்லது கசியிழையம் (cartilage) என்பது மனிதர், வேறு விலங்குகளின் உடலின் பல பகுதிகளிலும் காணப்படும், நெகிழ்வுத்தன்மை கொண்ட, வளையக்கூடிய ஒரு இணைப்பிழையம் ஆகும். இது மென்மையான எலும்பு போன்று இருக்கும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன விசேட இணைப்பிழையம் ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் அல்லது தாயம் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும். சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் "தைராய்டு குருத்தெலும்பு" (Thyroid cartilage) என்னும் தொண்டைச்சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும். ஏனைய தொடுப்பிழையங்கள் போலவே கழியிழையத்திலும் தாயம் உள்ளது. இதன் விசேட இயல்புகள்: கழியிழையத்தினைச் சூழ வெண்ணார்த் தொடுப்பிழையத்தினால் ஆன கசியிழையச் சுற்றி காணப்படும். கசியிழையச் சுற்றிக்கு அண்மித்ததாக அதிக குருதிக் கலன்களும் கசியிழைய அரும்பர் கலங்களும், நாரரும்பர் கலங்களும் உள்ளன. கசியிழைய அரும்பர் கசியிழைய வளர்ச்சியில் தாயத்தைச் சுரக்கும். பின்னர் அது கலனிடைக் குழியினுள தள்ளப்பட்டு கசியிழையக் குழியமாக மாற்றமடையும். கலனிடைக் குழியினுள் கசியிழையக் குழியங்கள் சோடியாகக் காணப்படுகின்றமை நுணுக்குக்காட்டியினூடு அவதானிக்கும் போது தென்படும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கசியிழையத்தினுள் வெண்ணாரும் மஞ்சள் நாரும் காணப்படலாம். கசியிழையம் ஏனைய தொடுப்பிழையங்கள் போலவே இடைத்தோற்படை முளைய உற்பத்திக்குரிய இழையமாகும். கசியிழையமானது அதில் உள்ள நார்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தண்டியடிகள் நாயனார் “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார். வேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளை போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து, அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்துகொண்டான். பின்னர் அமணர்களை அழைத்து தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடியாரை நோக்கி, ‘பெருகும் தவத்தீர்! நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக’ என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், ‘தான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று அமணர்கள் தங்கள் கண்களை இழப்பர். அதனால் ஆராய்ந்த மெய்பொருளும் சிவபதமே ஆகும்’ என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளிபெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்றனர், ‘பழுதுசெய்து அமண் கெட்டது’ என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப்பணித்தான். கண் கெட்ட சமணர்கள் குழியில் விழுந்தவரும், புதரில் முட்டுப்பட்டவரும், உடுத்த பாய்களை இழப்பவரும், பிடித்த பீலியை இழப்பவருமாய் ஓட்டமெடுத்தனர். பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளை வணங்கிச் சென்றான். அகக்கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார். புதிய ஏழு உலக அதிசயங்கள் உலகின் புதிய ஏழு அதிசயங்கள் ("New 7 Wonders of the World, 2000-2007") என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். "நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை" என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன 100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது. வாசிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான "ஜோக்பி இன்டர்னேஷனல்" நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான "ஜான் ஜோக்பி"யின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது. இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்கு கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டன, ஏனையவை இந்தப் போட்டியை அலட்சியம் செய்தன அல்லது விமர்சித்தன. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) 2007 இல் இந்த தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது கூடுதலான நினைவுச்சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் அல்லது தேசிய இணையத்தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்பட்டன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர். பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சுவார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது. 2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டே இயங்கியது, எந்தப் பொதுப் பணத்தையோ அல்லது வரி செலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்குத் தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது. உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர். 2007 இல் இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் 2011 நவம்பர் 11 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நியூ7ஒன்டர்ஸ் நகரங்கள் (New7Wonders Cities) என்பது தற்போது நடைமுறையில் உள்ள திட்டம் ஆகும். இதற்கான வாக்கெடுப்பு சூலை 2014 வரை இடம்பெறும். உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு , பாபிலோனின் தொங்கும் தோட்டம் ஒலிம்பியா சியுசு சிலை , எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை ("Colossus of Rhodes") மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனைய ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ7ஒன்டர்சின் மைல்கற்கள் பக்கத்தின் படி, சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணையத் தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார். இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். 2005 நவம்பர் 24 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. 2006 சனவரி 1 இல் இந்தப் பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும், ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறுபேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது. இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது. யுனெஸ்கோவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார். நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல. பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது, இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விடயங்கள் என்பதாகும். உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை, உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது. உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்சின் ஒரு இலக்காக இருந்து வந்திருக்கிறது. "இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஒரு அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC. பண்டைய உலக அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் எகிப்தின் கிசா நெக்ரோபோலிசு சிறப்பு விருதைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் மிலேனிய மேம்பாட்டு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஐநாவுடன் ஒரு கூட்டுசெயல்பாட்டு ஏற்பாட்டை நியூ7ஒன்டர்ஸ் செய்துகொண்டது. ஐநா கூறியது: ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), 2007 சூன் 20 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், இந்த "தனியார் முன்முயற்சி"யில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுபடியும் உறுதிப்படுத்தியது, இந்த கருத்துக்கணிப்பு ""இணையத்திற்கு அணுகல் உள்ளவர்களின் கருத்தை மட்டுமே"" பிரதிபலிப்பதாக இருப்பதாக அது தெரிவித்தது. எகிப்து வர்ணனையாளர்கள் இதனை உண்மையான பழைய அதிசயங்களில் () உயிர் பிழைத்திருக்கும் ஒன்றே ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடின் அந்தஸ்துக்கான போட்டியாக பார்த்தனர். "இதனை எகிப்துக்கு, அதன் நாகரீகம் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான ஒரு சதியாகக் காணலாம்" என்று முன்னணி அரசாங்க நாளிதழ் ஒன்றில் தலையங்க ஆசிரியர் அல் சயீத் அல்-நகார் எழுதினார். இந்த திட்டம் "அபத்தமானது" என்று கூறிய எகிப்தின் கலாச்சார அமைச்சரான பரூக் ஹோஸ்னி அதனை உருவாக்கிய வெபர், "தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அக்கறை மட்டுமே கொண்ட" ஒரு மனிதர் என்றார். உலகப் பாரம்பரியக் களங்களின் எகிப்திய நிபுணரான நகிப் அமின், "வர்த்தக அம்சம் தவிர, வாக்கெடுப்பில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார். எகிப்திடம் இருந்தான புகார்களுக்குப் பிறகு, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை உலகின் 7 பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதி ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் போட்டிச்சின்னம் என்னும் கவுரவத்தை அளித்து, அதனை வாக்கெடுப்பில் இருந்து நீக்கியது. ஆனாலும், கிசாவின் பெரும் பிரமிடு அவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. பிரேசில் நாட்டில் "வோட் நோ கிறிஸ்டோ" (கிறிஸ்துவுக்கு வாக்களியுங்கள்) என்னும் பரப்புரை நடந்தது, இதற்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தன, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்களிக்க செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. இது தவிர, பான்கோ பிராடஸ்கோ மற்றும் ரெடெ க்ளோபோ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஆதரவாளர்கள் இந்த சிலை முதல் ஏழு இடத்திற்குள் வாக்களிப்பில் இடம் பிடிப்பதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை செலவளித்தன. நியூஸ்வீக்கில் வெளியான ஒரு கட்டுரையின் படி, சுமார் 10 மில்லியன் பிரேசில் நாட்டினர் இந்த போட்டியில் ஜூலையின் ஆரம்பம் வரை வாக்களித்திருந்தனர். இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரம் அங்கிருக்கும் ஊடகங்களிலும் அதன் மூலம் பெரு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பெரு மக்கள்தொகையினர் அநேகம் பேருக்கும் வீட்டில் இணைய இணைப்பு இல்லாதிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தேசிய அதிசயத்திற்கு பெருமளவில் வாக்களித்தனர்.புதிய உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு மாச்சு பிச்சு தேர்வு செய்யப்பட்டது தேசிய அளவில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக கஸ்கோ பிரதான சதுக்கத்திலும் லிமாவிலும், அங்கு ஜனாதிபதி ஆலன் கார்சியா ஒரு விழா ஏற்பாடு செய்தார். ஈஸ்டர் தீவு, மோய்க்கான சிலியின் பிரதிநிதி ஆல்பர்டோ ஹோடஸ் கூறும்போது, மோயிஸ் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இதே புதிய ஏழு அதிசயங்களில் மனோரீதியாக இடம் பிடித்தது போலத்தான் என்று அமைப்பாளரான பெர்னார்டு வெபர் அவரிடம் அளித்த ஒரு கடிதம் கூறுவதாகத் தெரிவித்தார். பங்கு பெற்றவர்களில் இத்தகையதொரு ஆறுதல் கடிதம் பெற்றது தாம் மட்டுமே என்று ஹோடஸ் தெரிவித்தார். ஜோர்டானின் ராணி ரனியா அல்-அப்துல்லாவும் ஜோர்டானின் தேசிய கருவூலமான பெட்ராவை ஆதரிக்கும் பரப்புரையில் இணைந்து கொண்டார். 7 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டிருக்கும் நாடாக இருந்தபோதிலும், அந்த நாட்டில் இருந்து 14 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாக பதிவானதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்தியாவில் பரப்புரை வேகம் பிடித்து ஜூலை 2007 ம் ஆண்டு உச்சத்தை எட்டியது, செய்திச் சானல்கள், வானொலி நிலையங்கள், மற்றும் பல பிரபலங்கள் என அனைவரும் மக்களை வாக்களிக்க கேட்டுக் கொண்டனர். பட்டியலில் மூர்க்க நாயனார் “மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார். இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர். பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார். இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார். சோமாசிமாற நாயனார் “அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார். ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குலத்தவராயினும் அவர்கள் தன்னை ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் தெளிந்திருந்தார்கள். சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடைய இந்நாயனார் சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்றொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்; திருவாரூரில் ஐம்புலச் சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய இவர் அத்திருவாரூரில் தங்கி ஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றிய சிறப்பினால் என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார். சாக்கிய நாயனார் சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். “செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவசமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட்பாகுபாடு சிவநெறியல்லாத பிறசமயத்தில் இல்லை” எனத்தெளிந்து கொண்டார். உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர். அருவமாகியும், உருவமாகியும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என விரும்பினார். தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து அதன்மேல் எறிந்தார். இளம்புதல்வர் இகழ்வனவே செய்தாலும் அச்செயல் தந்தையார்க்கு உவப்பனாற்போன்று, சாக்கியர் செய்த இதுவும் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. இறைவன் அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். சாக்கியர் அன்றுபோய் மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம்செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார். ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார். சிறப்புலி நாயனார் பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். திருநீலநக்க நாயனார் திருநீலநக்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார். இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார். நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து "அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்?" என்று சினந்தார். "சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன்" என்றார் மனைவியார். "நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு" என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார். நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி "உன் மனைவி ஊதித்துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம்" என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்தபின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார். அந்நாளில் சீர்காழிப் பிள்ளையாரின் சீரை உலகெலாம் போற்றுவதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைப் தம் தலைமிசைச் சூடிக்கொள்ள வேண்டுமெனும் விருப்புடையவரானார். இவ்வாறு விரும்பியிருந்த வேளையில் சண்பையார் மன்னர் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் வழியில் சாத்தமங்கையை அடைந்தார். சம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தியறிந்த திருநீலநக்கர் அப்பொழுதே மகிழ்ந்தெழுந்து கொடிகள் தூக்கி, தோரணம் நாட்டி, நடைபந்தலிட்டு வீதியெல்லாம் அலங்கரித்தார். தாமும் சுற்றமுமாய்ச் சென்று சம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அழைத்து வருவோமென ஆசை கொண்டார். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவில் சம்பந்தர் தம்மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். சம்பந்தரும், திருநீலகண்டத் திருப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ்வந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார். சம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார். சம்பந்தப்பெருமான் சாத்தமங்கையின்றும் புறப்பட்டபோது அவரோடு தொடர்ந்து செல்லவே நீலநக்கர் விரும்பினார். ஆனால் பிள்ளையார் அவரை அங்கேயே இருந்து அயவந்திப் பெருமானைப் பூசிக்குமாறு அருளிய வாக்கினை மீறவியலாது தம் உள்ளத்தைப் பிள்ளையாருடன் செல்லவிட்டுத் தான் அயவந்தியில் தங்கினார். சம்பந்தர் திருப்பாதம் நினைந்த சிந்தையராய் பூசனையை முன்னரிலும் சிறக்கச் செய்தார். முருகனார் ஆளுடைய அரசு, சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாருடனெல்லாம் அளவளாவி உடனுறையும் இன்பம் பெற்றார். இவ்வண்ணம் ஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். அந்த நல்லூரிப் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார். நமிநந்தியடிகள் நாயனார் “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருகுச் சென்று எண்ணை கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அதுகேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிதற்கு நீரால் நிறைத்தார். இவ்வாறு ஆரூர் அரனெறியப்பார்ர்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப் பேறூருக்குச் சென்று சிவபூசை முடித்து திருவமுது செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது நமிநந்தியடிகள் நாயனார் சமணர்கள் கலக்கம் விளைவித்து அவ்வூரைவிட்டு அகன்றார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூப்பெருமானிக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனியுத்தரப் பெருவிழாவை சிறபுறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார். திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் ‘துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்’ என்றார். அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையைன் முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலியே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டுருந்தார். இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்தது திருநாவுக்கரசரால் ‘தொண்டர்களுக்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப் பெறு பேற்றுத் திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார். வாயிலார் நாயனார் வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில், "மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்"
    "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல"
    "நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;"
    "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்"
    கூறுகின்றார். இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும். தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது. வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு. மார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வந்தது.
    சிறுநீரகம் சிறுநீரகங்கள் "(kidneys)" என்பவை முதுகெலும்பிகளின் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. முதிருயிரிகளில் இது 11 செமீ நீளம் கொண்டுள்ளது. இவை குருதியை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள்வழியாகப் பெறுகின்றன; இவற்றில் இருந்து குருதி ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது. சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது. சிறுநீர்க்கலம் என்பது சிறுநீரக்க் கட்டமைப்பு, செயல்பாட்டு அலகாகும். முதிர்ந்த ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியன் சிறுநீர்க்கலங்கள் உள்ளன. சிறுநீர்க்கலம் தன்னுள் பாயும் குருதிக் கணிகத்தை நான்கு செயல்முறைகளால் மாற்றுகிறது: அவையாவன, வடித்தல், மீளுறிஞ்சல், சுரத்தல், கழிவகற்றல் என்பனவாகும். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்முறைகளால், சிறுநீரகம் பல்வேறு உடல் பாய்மப் பிரிவுகளின் பருமனைக் கட்டுபடுத்துகிறது. குறிப்பாக, பாய்மப் படலவூடுபரவல் திறம் (osmolality), அமில-காரச் சமனிலை, பல்வேறு மின்பகுளிகளின் செறிவுகள், நச்சகற்றல் போன்றவற்றைக் கட்டுபடுத்துகிறது. வடித்தல் சிறுநீரக்க்குஞ்ச முடிச்சுகளில் (glomerulus) நடைபெறுகிறது சிறுநீரகத்தில் நுழையும் ஐந்தில் ஒருபங்கு குருதிப் பருமன் வடிக்கப்படுகிறது. மீளுறிஞ்சப்படும் பொருள்களாக கரைபொருள் இல்லாத நீர், உவர்மம் (சோடியம்), இருகரிமவேற்றுகள், சர்க்கரை (குளூக்கோசு)அமினோ அமிலங்கள் ஆகியவை அமைகின்றன. சுரப்புப் பொருள்களாக நீரகம், [[அம்மோனியம், பொட்டாசியம் யூரிக அமிலம் ஆகியவை அமைகின்றன. சிறுநீரகங்கள் சிறுநீர்க்கலங்களைச் சாராத பணிகளையும் செய்கின்றன. எடுத்துகாட்டக அவை உயிர்ச்சத்து டி இன் முன்மைப் பொருளைக் கால்சிட்ராலாக மாற்றுகிறது. இயக்குநீர்களையும் (இசைமங்களையும்) சிவப்புக் குருதிக்கலவாக்கிகளையும் சிறுநீரக நொதியையும் தொகுக்கிறது.சிறுநீரகம் [[குருதி அழுத்தம்|குருதி அழுத்தத்தைக்]] கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. சிறுநீரகப் பணியைச் சிறுநீரக உடலியக்கவியல் பயில்கிறது. சிறுநீரகவியல் என்பது சிறுநீரகப் பணிசார்ந்த நோய்களைப் பயில்கிறது: இந்நோய்களில் நாட்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரகவகை நோய்த்தொகைகள், கடும் சிறுநீரகக் காயம், சிறுநீரக வடிகுஞ்ச அழற்சி ஆகியவை அடங்கும். சிறுநீர்த்தடவியல்என்பது சிறுநீர், சிறுநீர்த்தட நோய்களைப் பயில்கிறது: இவற்றில் சிறுநீரகப்[[புற்றுநோய்]], [[சிறுநீரகக் கட்டி]]கள், [[சிறுநீரகக் கல்]], சிறுநீர்க்குழல் கற்கள், சிறுநீர்த்தட அடைப்பு ஆகியவை அடங்கும். சிறுநீரக நோய்களை மேளாளும் வழிமுறைகளில் வேதியியல், நுண்ணோக்கிவழி சிறுநீர்ப் பகுப்பாய்வும், சிறுநீரப் பணி அளவீடும் (இதில் குஞ்சமுடிச்சு வடிப்பு வீதம் ஊனீர்க் கிரியோட்டினைனைப் பயன்படுத்தி அளக்கப்படுகிறது); சிறுநீரக உயிர்ப்பத ஆய்வும்(kidney biopsy) கணினிவழி முப்பருமான அலகீடும் சிறுநீரக உடற்கூற்றியலை மதிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுநீரக் கூழ்மப் பகுப்பாய்வு, சிறுநீரக மாற்றீடு ஆகியவை சிறுநீரகம் பணியிழப்பின்போது மேற்கொள்ளப்படுகின்றன; சிறுநீரப் பணியிழப்பு 15% அளவுக்கும் கீழே குறையும்போது, மேற்கூறிய முறைகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ பயனாகிறது. சிறுநீர்க்கல புற்றை நீக்க சிறுநீரகத் திறப்பு பயனாகிறது. [[மனிதர்|மனிதரில்]] இரு சிறுநீரகங்கள் வயிற்றுக்குழியில் [[உடல்|உடலின்]] பின்பக்கத்தில், [[முண்ணாண்|முண்ணாணின்]] இரு புறமும் ஒவ்வொன்றாக அமைந்திருக்கும். உடலின் உள்ளுறுப்புக்களில் வயிற்றுக்குழில் இருக்கும் பெரிய அமைப்பைக்கொண்ட [[கல்லீரல்|கல்லீரலின்]] இருப்பிடம் காரணமாக உடலில் தோன்றும் சமச்சீரற்ற தன்மையினால், வலதுபுறமாக அமைந்திருக்கும் சிறுநீரகம் இடதுபுறம் அமைந்திருக்கும் சிறுநீரகத்தைவிட, சிறிது கீழேயும், இடதுபுறமுள்ள சிறுநீரகம், வலது சிறுநீரகத்தைவிடச் சிறிது நடுப்புறமாகவும் அமைந்திருக்கும். இடது சிறுநீரகமானது முள்ளந்தண்டு நிரலில் உள்ள T12 இலிருந்து L3 வரையிலான எலும்புகள் அமைந்திருக்கும் மட்டத்திலும், வலது சிறுநீரகம் அதைவிடச் சற்று கீழேயும் அமைந்திருக்கும், வலது சிறுநீரகமானது [[பிரிமென்றகடு|பிரிமென்றகட்டிற்கு நேரடியாகக்]] கீழாகவும், [[கல்லீரல்|கல்லீரலுக்குப்]] பின்புறமாகவும் அமைந்திருக்கும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழாகவும், [[மண்ணீரல்|மண்ணீரலுக்குப்]] பின்புறமாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலேயும் ஒட்டியபடி [[அண்ணீரகச் சுரப்பி]] காணப்படும். சிறுநீரகத்தின் மேற்புறமானது பகுதியாக 11ஆம், 12 ஆம் [[விலா எலும்பு]]களால் பாதுகாக்கப்பட்டிருக்கும். முழு சிறுநீரகங்களும், அண்ணீரகச் சுரப்பிகளும் இரு கொழுப்புப் படைகளால் சூழப்பட்டிருக்கும். வளர்ந்த மனிதனில் இருக்கும் ஒவ்வொரு சிறுநீரகமும், ஆணில் 125 - 170 கிராமாகவும், பெண்ணில் 115 - 155 கிராமாகவும் இருக்கும். இடது சிறுநீரகமானது வலது சிறுநீரகத்தைவிட சிறிது பெரியதாக இருக்கும். [[படிமம்:KidneyStructures PioM-ta.svg|400px|right|thumb|சிறுநீரகம் ஒன்றின் உள்ளமைப்புக்களைக் காட்டும் வரைபடத்தோற்றம்]] சிறுநீரகம் கிட்டத்தட்ட 11-14cm நீளமானதும், 6cm அகலமானதும், 4cm தடிப்பானதுமாகும். சிறுநீரகம் இரு பகுதிகளாலானதாகும். சிறுநீரகத்தின் மேற்புறத்தில் சிறுநீரக மேற்பட்டையும்(renal cortex) , உள்ளே சிறுநீரக மையவிழையமும் (renal medulla) உள்ளது. சிறுநீரகத்தின் தொழிற்பாட்டு அலகுகளான [[சிறுநீரகத்தி]]யின் சில பாகங்கள் மேற்பட்டையிலும், ஹென்லியின் தடம், சேர்க்கும் கான் போன்ற பகுதிகள் சிறுநீரக மையவிழையத்திலும் காணப்படும். [[File:Kidney-medulla.JPG|thumb|நுணுக்குக்காட்டியினூடாக சிறுநீரக மையவிழையத்தின் தோற்றம்]] [[File:Kidney-Cortex.JPG|thumb|நுணுக்குக்காட்டியினூடாக சிறுநீரக மேற்பட்டையின் தோற்றம்]] சிறுநீரகத்துக்கு சிறுநீரக தமனிகள்/ சிறுநீரக நாடிகள் மூலம் இரத்தம் வழங்கப்படும். வலது சிறுநீரகத்துக்கு வலது சிறுநீரக நாடியும், இடது சிறுநீரகத்துக்கு இடது சிறுநீரக நாடியும் அதிக ஒட்சிசன் செறிவுள்ள [[குருதி]]யை வழங்கும். சிறுநீரகங்கள் அளவில் சிறியனவென்றாலும் அதிக தொழிற்பாடும் வேலைப்பழுவும் உடையவை. எனவே இதயத்தால் விநியோகிக்கப்படும் குருதியில் 20% சிறுநீரகத்துக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாடியும் சிறு சிறு கிளைகளாகப் பிரிந்து சிறிநீரகத்துக்கூடாக அதிக குருதியை விநியோகம் செய்யும். இச்சிறு நாடிகள் ஒவ்வொரு சிறுநீரகத்தியிலும் ஒவ்வொரு கலன்கோளத்தை உருவாக்கும். இக்கலன்கோளத்துக்கூடாகவே கலன்கோள வடிதிரவம் போமனின் உறையூடாக சிறுநீரகத்தியை அடைகின்றது. சிறுநீரகத்தியில் இருந்து நீரையும், கனியுப்புக்களையும், ஊட்டச்சத்துக்களை மீளுறிஞ்சுவதற்காகவும், காபனீரொக்சைட்டைக் கடத்தவும், நாடி மீண்டும் பிரிந்து மயிர்த்துளைக் குழாய்களை உருவாக்கின்றன. இம்மயிர்த்துளைக் குழாய்களால் அகத்துறிஞ்சப்பட்டவற்றோடு குருதி சிறுநீரக நாளங்களில் / சிரைகளில் கலந்து மீண்டும் இதயத்தை அடைகின்றது. குருதியின் அமில-கார நிலையைப் பேணுவதன் மூலம், அயன்களின் செறிவைப் பேணுவதன் மூலம், நீர்ச்சமநிலையைப் பேணுவதன் மூலம், குருதியமுக்கத்தைப் பேணுவதன் மூலம், கழிவகற்றலின் மூலம் முழு உடலின் [[ஒருசீர்த்திடநிலை]]யைப் பேணுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கை வகிக்கின்றது. சிறுநீரகத்தின் சில தொழிற்பாடுகளை [[ஓமோன்]]கள் கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக ADH (Anti Diuretic Hormone) சிறுநீரகத்தால் மீளுறிஞ்சப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது. சிறுநீரகத்தின் முக்கியமான தொழில் நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருட்களை குருதியிலிருந்து வடித்தெடுத்தலாகும். வடித்தெடுக்கப்படும் கரைசலில் இருந்து, மீண்டும் நீர், மற்றும் உடலுக்குத் தேவையான பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதன் மூலம், கழிவுகள் நிரம்பிய [[சிறுநீர்|சிறுநீரை]] செறிவாக்கி, பின்னர் அதனை சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கடத்தி அங்கிருந்து உடலின் வெளியே அனுப்ப உதவும். இந்த வடித்தல், மீள உறிஞ்சல் தொழிலை சிறுநீரகத்திலுள்ள சிறுநீரகத்தி எனப்படும் அமைப்பு செய்கின்றது. இந்த சிறுநீரகத்திகளே சிறுநீரகத்தின் தொழிலைச் செய்யும் அடிப்படை அலகாகும். உடலில் அனுசெபத்தின் போது வெளியேற்றப்படும் தேவையற்ற அல்லது தீங்கை விளைவிக்கும் பதார்த்தங்களே கழிவுகளாகும். அந்த வகையில் புரத அவசேபத்தின் போது வெளியேறும் [[யூரியா]]வும், நியூக்லிக் அமில அனுசேபத்தின் போது வெளியேறும் கழிவான யூரிக் அமிலமும் மனித உடலில் பிரதான கழிவுகளாகும். இவற்றை சிறுநீரகம் கரைசல் வடிவில் கழிவகற்றுகின்றது. கழிவுகளோடு அவசியமான ஊட்டச்சத்துக்களான [[குளுக்கோசு]], [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], [[நீர்]], [[கனிமம்|கனியுப்பு]] [[அயனி|அயன்கள்]] போன்றவையும் கலன்கோளத்திலிருந்து வடிகட்டப்படும். இது கலன்கோள வடிதிரவம் எனப்படும். இவ்வூட்டச்சத்துக்கள் வீணாவதைத் தவிர்க்க இவை மீண்டும் குருதியினுள் அகத்துறிஞ்சப்படும். மீதமாகும் யூரியா, யூரிக்கமிலம், மேலதிக நீர் அடங்கிய [[சிறுநீர்]] சிறுநீரகத்திலிருந்து வெளியேற்றப்படும். மனித உடலில் [[நுரையீரல்|நுரையீரலும்]], சிறுநீரகமும் குருதியின் pHஐ 7.4 என்ற நிலையில் பேண உதவுகின்றன. நுரையீரல் காபனீரொக்சைட்டை வெளியேற்றுவதாலும், சிறுநீரகம் H அயன்களை வெளியேற்றி இருகாபனேற்று அயனை மீளுறிஞ்சுவதாலும் பங்களிக்கின்றன. சிறுநீரகம் சிலவகை ஓமோன்களை உற்பத்தி செய்யும் ஆற்றலுடையது. சிறுநீரகம் [[ரெனின்]] எனும் நொதியத்தையும் [[சிவப்பணுவாக்கி]] ("Erythropoietin") எனும் ஓமோனையும் உற்பத்தி செய்கின்றது. குருதியில் ஒக்சிசனின் செறிவு குறைவடைந்தால், சிறுநீரகம் இவ்வோமோனை உற்பத்தி செய்து குருதியில் வெளியேற்றும். இவ்வோமோன் எலும்பு மச்சைக் கலங்களை அதிக செங்குருதிக் கலங்களை ஆக்கத் தூண்டும். சிறுநீரகத்தில் [[கால்சிடிரையால்]] ("Calcitriol") எனும் ஓமோனும் உற்பத்தியாகின்றது. இதனை சிறுநீரகத்தியிலுள்ள அண்மை மடிந்த சிறுகுழாய்க் கலங்கள் தொகுக்கின்றன. இவ்வோமோன் குடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிப்பதுடன், கலன்கோள வடிதிரவத்திலிருந்து உறிஞ்சப்படும் பொஸ்பேட்டு அயன்களின் அளவையும் அதிகரிக்கின்றது. சிறுநீரகத்தின் செயற்பாட்டுத் திறனைக் கண்டறிவதில் சில கணக்கீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குருதியின் முதலுருவிலிருந்து வடிக்கப்படும் கலன்கோள வடிதிரவத்தின் அளைவை இப்பின்னம் காட்டுகின்றது. சாதாரண மனிதனில் FF 20% ஆகக் காணப்படும். ஒரு குறித்த பதார்த்தம் குறித்த நேர இடைவெளியில் சிறுநீரகமூடாக குருதியின் முதலுருவிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் வீதத்தை இவ்வளவீடு குறிக்கும். சிறுநீரகக் கட்டமைப்போ பணியோ செயல்முறையோ இயல்பு பிரழ்ந்தநிலையடைந்தால் சிறுநீரக நோய் ஏற்பட்டதாகக் கொள்ளப்படும். சிறுநீரக வீக்கம் என்பது அழற்சியற்ற சிறுநீரக நோயாகும். சிறுநீரக அழற்சி என்பது அழர்இமிக்க சிறுநீரக நோயாகும். [[சிறுநீரகவியல் என்பது சிறுநீரகப் பணியையும் நோய்களையும் பற்றிய சிறப்பு மருத்துவப் புலமாகும். அறுவைவழியாக சிறுநீரகத்தை நீக்குதல் சிறுநீர நீக்கம் எனப்ப்டும். சிறுநீரகப் பணிக்குறைவு சிறுநீரகப் பணியிழப்பு எனப்படும். பொதுவாக, மாந்தருக்கு ஒரு சிறுநீரகமே போதும். இந்த ஒரு சிறுநீரகமே சிறுநீரகப் பணிக்குத் தேவையான உயிரிழையங்களைப் பெற்றுள்ளது. செயலாற்றும் சிறுநீரக உயிரிழையங்கள் பேரளவில் சிதைவுற்றால் நாட்பட்ட சிறுநீரக நோய் வருகிறது. சிருநீரக வடிகுஞ்ச வடிப்பு வீதம் மிகவும் தாழ்வான அளவுக்குக் குறைந்தாலோ அல்லது சிறுநீரகப் பணியிழப்பு ஏற்பட்டாலோ கூழ்மப் பகுப்பு எனும் சிறுநீர் தூய்மிப்புப் பணி அல்லது சிறுநீரகங்களின் மாற்றீடு தேவைப்படுகிறது. ஒரு நலமுள்ள உயிரியின் சிறுநீரகம் இயல்பாகச் செய்யும் பணியை கூழ்மப் பகுப்புச் செயல்முறை செயற்கையாகச் செய்கிறது. சிறுநீரகப் பணியில் ஏறத்தாழ 85%-90% அளவுக்கு இழப்பு ஏற்படும்போதும் சிறுநீரக வடிகுஞ்ச வடிப்பு வீதம் 15 % அளவுக்குக் குறையும்போதும் கூழ்மப் பகுப்பு தேவையாகிறது. கூழ்மப் பகுப்பு கூடுத நீரையும் உப்புகளையும் நீக்கி ஒருசீர்மையைக் காத்து குருதி அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது உடலக வேதியியல் மட்டங்களைப் பேணுகிறது இது சிறுநீரக நோயை ஆற்ரும் செயல்முறையல்ல; சிறுநீரக மாற்றீடு மட்டுமே நோயைத் தீர்க்கும். 30 ஆண்டுகள் அகவையுள்ளவருக்கு இச்செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அவர்களது ஆயுளை மேலும் 10-15 ஆண்டுகள் வரை கூட்டுகிறது. மேலும் இவர்கள் இயல்பான வழ்க்கையையும் வாழ முடியும். [[File:Peritoneal dialysis.jpg|thumb|258x258px|சிறுநீரகப் பணியிழப்பின்போது பின்வயிற்றறைக் குழியில் செய்யப்படும் கூழ்மப் பகுப்புக் காட்சி.]] [[பகுப்பு:உடல் உள்ளுறுப்புகள்]] [[பகுப்பு:சிறுநீர்த்தொகுதி]] [[பகுப்பு:அகச்சுரப்பித் தொகுதி]] ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல் ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல் (Henry Gray's Anatomy of the Human Body) என்பது முதன் முதலாக 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியான ஒரு புகழ்பெற்ற ஆங்கிலப் பாடநூல். 1858ல் வெளியான பொழுது அதன் தலைப்பு Gray's Anatomy: Descriptive and Surgical (கிரேயின் அனாட்டமி: டிஸ்க்ரிப்டிவ் அண்ட் சர்ஜிக்கல்) (கிரேயின் உடற்கூறு இயல்: அமைப்பு விளக்கமும் அறுவையும்). அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டு 1860ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார். அவர் தொடங்கிய புத்தகத்தை மற்றவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி நவம்பர் 24, 2004ல் இங்கிலாந்தில் 39 ஆவது பதிப்பு வெளியிட்டுள்ளார்கள். "முதன்மைக் கட்டுரை: ஹென்றி கிரே" ஆங்கிலேய உடற்கூறு இயலாளர் ஹென்றி கிரே 1827ல் பிறந்தார். இவர் நாளமில்லாச் சுரபிகள் பற்றியும் கனையத்தைப் பற்றியும் படித்தார். பின்னர் 1853ல் செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனை உள்ள கல்லூரியில் உடற்கூறு இயல் துறையில் விரிவுரையாளராக பணியேற்றார். 1855ல் டாக்டர் ஹென்றி 'வான்டைக் கார்ட்டர் (Dr Henry Vandyke Carter) என்னும் உடன் பணிபுரியும் ஆசிரியரை அணுகி உடற்கூறு பற்றி மாணவர்களுக்கு ஏற்ற நூல் எழுதும் தம் கருத்தை வெளியிட்டார். உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் ("World Population Day") என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. "பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு" என்பது 2009 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA) அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகுமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது." என்று குறிப்பிட்டார். உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது. மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான டி. ஆர். மால்தஸ், தனது ‘மால்தஸ்சின் மக்கள் தொகைக் கோட்பாட்டில்’ அதிகரிக்கின்ற மக்கள் பெருக்கத்தினால் மக்கள் உணவின்றி அவதிப்படுவர் என்றார். அன்று அவரால் வெளியிடப்பட்ட கருத்து, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழ்நிலையில் உலக நாடுகள் பலவற்றால் நினைவுகூரப்படுகின்றது. மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம். எளிய மக்கள் மத்தியில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பள்ளிகளில் மக்கள்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது. 1944 1944 (MCMXLIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். தொண்டை எலும்பு தொண்டை எலும்பு அல்லது நாவடி எலும்பு என்பது மனிதரின் கழுத்தில் காணப்படும் எலும்பு ஆகும். எலும்புக்கூட்டில் வேறெந்த எலும்புடனும் இணைக்கப்பட்டிராத ஒரே எலும்பு இதுவாகும். இது கழுத்திலுள்ள தசைகளால் தாங்கப்பட்டு, நாக்கின் அடிப்பகுதியை இது தாங்குகின்றது. தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது. விலா எலும்பு முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் (Rib bones) என்பன மார்புக் கூட்டை அல்லது விலா எலும்புக்கூட்டை (rib cage) உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன. மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன. நோய்ப்பரவலியல் நோய்ப் பரவல் இயல் (Epidemiology) என்பது எந்த ஒரு மக்கள் தொகுதியிலும் எக்காரணங்களால் எங்கெங்கு, எப்படி எப்படி ஒரு நோய் பரவுகின்றது என்று முறைப்படி அறியும் ஓர் இயல் ஆகும். இதன் அடிப்படையில் அறிவான முறைப்படி நோய் பரவாமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், வரும்முன் காப்பதற்கும் வழிகள் அமைக்க இயலுகின்றது. உண்மையான காட்டுகளின் (நிகழ் சாட்சிகளின்) அடிப்படையில் நிறுவும் மருத்துவ முறைகளுக்கு இது இன்றியமையாத அறிவுத்துறையாகும். நோய்ப் பரவல் இயலாளர்கள் தொற்றுநோய் பரவலுக்கும், கொள்ளைநோய் (திடீர் என்று மிக விரைந்து பரவும் காலரா போன்ற கொடிய நோய்) தோன்றி பரவுவதற்கும், தொற்று இல்லா நோய்களின் வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படையான செய்திகளை, முறைப்படி தேர்ந்து தொகுத்து, ஆய்வார்கள். இந்த ஆய்வாளர்கள் அணியில், உயிரியல், புள்ளியியல், உயிர்வேதியல் துறை அறிஞர்கள் இருக்ககூடும். நோய் பரவல் இயல் என்பது ஆங்கிலத்தில் எப்பிடீமியாலஜி (Epidemiology) என்று கூறப்படுகின்றது. இச்சொல் மூன்று கிரேக்க சொற்களில் இருந்து ஆக்கப்பட்டது. எப்பி + ‘டெமோஸ்+ லோகோஸ் = எப்பிடீமியாலஜி. இதில் எப்பி = மேல் (epi = upon, among), ‘டெமோஸ் = மக்கள், தொகுதி (demos = people, district); லோகோஸ் = இயல், கற்கும் துறை, கல்வித்துறை (logos = study, word, discourse) பழங்காலத்து கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ராட்டஸ் (Hippocrates) என்பவர்தான் நோய்ப் பரவையலுக்குக் தந்தை என்று கூறுகிறார்கள். இவரே சுற்றுச் சூழல் நிலைக்கும் ஒரு நோய் தோன்றுவதற்கும் உள்ள தொடர்பை முதன்முதல் கண்டு கூறியவர். 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்தாலியில் உள்ள விரேன்சே (விளாரன்ஸ், Florence) நகரத்தைச் சேர்ந்த கிரோலாமோ விராக்காஸ்ட்டொரோ (Girolamo Fracastoro) என்பவர்தான் நோய் தோன்றுவதற்குக் கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிரிகள்தான் காரணம் என்னும் கருத்தை முதன்முதலாக முன்வைத்தார். இந்த மிக மிக நுண்ணிய உயிரிகள் காற்றால் பரவவும், தானே இனப்பெருக்கம் செய்யவும் கூடும் என்றும், இவற்றை நெருப்பால் அழிக்கமுடியும் என்றும் கருதினார்கள். இப்படிக் கூறிப் பழங்காலத்தில் வாழ்ந்த ‘கேலன் (Galen) என்னும் கிரேக்கரின் கொள்கையான நோயுற்றவர்கள் உடலில் நச்சு வளிமம் உள்ளது (Galen's theory of miasms ) என்னும் கருத்தை முறியடித்தார். 1543ல் கிரோலாமா விரக்காஸ்ட்டொரொ தொற்றுநோய்பற்றி “’டி கொண்டாகியோன் எ கொண்டாகியோசிஸ் மார்பிஸ்” ("De contagione et contagiosis morbis") என்னும் நூலை எழுதினார். அதுவே சுற்றுப்புற மற்றும் தன் தூய்மை பற்றி அக்காலத்தில் வலியுறுத்தி எழுதிய முதல் நூலாகும். இவர் கூறிய மிக மிக நுண்ணிய உயிர் பற்றிய கொள்கையானது 1675ல் அன்ட்டொன் வான் லேவனஃக் (அன் ட்டோன் வான் லேவன்ஹக், Anton van Leeuwenhoek ) நுண்நோக்கியைக் கண்டுபிடிக்கும் வரை நிறுவப்படவில்லை. துணிமணி தொடர்பான பொருள்களின் சிறுவிற்பனையாளரராக இருந்த ஜான் கிரௌண்ட் (John Graunt) என்பவர் தன்னார்வ அறிவியலலளராக. தான் சேர்த்து வந்த நோய்கள் மற்றும் இறப்புகள் பற்றிய குறிப்பகளையும் அதன் தொடர்பான அந்நாளைய புள்ளியியல் குறிப்புகளையும் 1662ல் Natural and Political Observations ... upon the Bills of Mortality என்னும் தலைப்பில் வெளியிட்டார். அதன்வழி அக்காலத்தில் வழங்கிய பல கருத்துக்களை மறுத்தார். 1854ல் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் நகரில் திடீர் என்று தோன்றி பரவிய காலரா என்னும் கொள்ளைநோயை மேலும் பரவாமல் தடுத்ததில் டாக்டர். ஜான் ஸ்னோ என்பவர் புகழ் பெற்றவர். அப்பொழுது காலரா பரவுவதற்கு "பிராட்வே" என்னும் தெருவில் இருந்த பொது கையடி நீரேற்றி (pump) முக்கிய காரணம் என்று கண்டுபிடித்து அந்த நீரேற்றியின் கைப்பிடியை நீக்கச்செய்தார். இதன் பயனாக காலரா நோய் பரவுவது தடுக்கப்பட்டது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகின்றது. பொது உடல்நலத் துறை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகின்றது. நோய் பரவல் இயல் அறிவியல் துறையின் துவக்க நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆர்தர் கெய்லி ஆர்தர் கெய்லி, (Arthur Cayley, ஆகஸ்ட் 16, 1821 - ஜனவரி 26, 1895) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். ஸில்வெஸ்டருடன் கூட்டாகப் பல கணித ஆய்வுகள் நடத்தியவர். ஸில்வெஸ்டரைப்போல் கணிதத்தின் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். ஆர்தர் கெய்லியின் தந்தை ரஷ்யாவுடன் வியாபாரம் செய்து பிழைத்து வந்த ஒரு ஆங்கில வர்த்தகர். இங்கிலாந்தில் சிறிதுகாலத்திற்காக அவர் வசித்து வந்தபோது பிறந்தவர் ஆர்தர். அவருடைய முன்னோர்களை 1066 இல் நார்மன்கள் இங்கிலாந்தை வென்ற காலம் வரையில் கண்டுகொள்ளலாம். பரம்பரையாகவே அவர்கள் மிகுந்த சாமர்த்தியசாலிகளாம். தாயார் "மேரியா அன்டோனியா டௌட்டி " ரஷ்யப் பெண்மணி என்பது சிலருடைய கருத்து. ஆர்தருக்கு எட்டு வயதாகும்போது, தந்தை தொழிலிலிருந்து ஓய்வு பெற்று இங்கிலாந்திலேயே வசிக்கத்தொடங்கினார்.முதலில் தனியார் பள்ளியிலும், 14 வயதிலிருந்து லண்டனிலுள்ள கிங்க்ஸ் கல்லூரியிலும் பயின்றார் ஆர்தர். சிறுவன் ஆர்தரின் அபார கணிதத் திறமை ஆரம்பித்திலிருந்தே வெளிப்பட்டுவிட்டது. அவனுடைய ஆசிரியர்கள் அவன் பெரிய கணித வல்லுநராக ஆகத்தான் பிறந்திருக்கிறான் என்று சொன்ன போதிலும் முதலில் அவன் தந்தைக்கு அவனை கணித மேற்படிப்பில் புகுத்த மனதில்லை. ஆனால் காலப்போக்கில் அதற்கு அவர் ஒப்புதல் கொடுத்தார். அதன்படி ஆர்தர் 17 வது வயதிலிருந்து புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் ட்ரினிடி கல்லூரியில் கணிதம் பயின்றார். அவருடன் கூடப்பயின்ற மாணவர்கள் அவரை ஒரு கணித வல்லுனராகவே மதித்தனர். மூன்றாவது ஆண்டு படிப்பு முடிந்தபோது அவரது ஆசிரியர்கள் அவருக்கு வகுப்பிலேயே முதலிடம் தந்ததோடு மட்டுமல்லாமல் முதலிடத்திற்கும் மேல் ஒரு தனி இடத்தை அவருக்குச் சூட்டினர். 21வது வயதில் "ட்ரைபாஸ்" என்ற தேர்வில் "ஸீனியர் ராங்க்ளர்" என்ற தகுதி பெற்று அதற்கும் உயர்வான ஸ்மித் பரிசையும் பெற்றார். இதனால் அவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு உபகாரச்சம்பளமும், ஃபெல்லோ ஆஃப் ட்ரினிடி என்ற தகுதியும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கடமைகள் என்பது மிகக்குறைவாக இருந்ததால் அவர் விருப்பப்படி எது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய சுதந்திரமும் நேரமும் கிடைத்தது. ஏபெல், கால்வா முதலிய சிறந்த கணித இயலர்கள் செய்ததுபோல், கணிதமே முன்னேறக் காரணமாக இருந்த மேதைகளின் ஆய்வுகளையே படிக்கத் தொடங்கினார். 1841 இல் இருபதாவது வயதில் அவர் பிரசுரித்த முதல் ஆய்வுக்கட்டுரை லாக்ராஞ்சி, லாப்லாஸ் இருவருடைய ஆய்வுகளிலிருந்து பிறந்ததே. ஆர்தரின் பேனாவிலிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் இருந்தன. முதலாண்டில் எட்டு, இரண்டாவதில் நான்கு, மூன்றாவது ஆண்டில் 13, ஆக இந்த 25 கட்டுரைகளும் அவருடைய 25வது வயதிற்குள் பிரசுரிக்கப்பட்டன. இவைகளே பிற்காலத்தில் ஒரு அரை நூற்றாண்டிற்கு அவருக்கும் மற்றவர்களுக்கும் பற்பல ஆய்வுகளுக்கு ஆதாரநூல்களாயின. n-பரிமாண வடிவியல் (n-dimensional Geometry) இவ்விதம் கெய்லி ஆரம்பித்து வைத்ததுதான். இன்னும் மாற்றமுறாமைக் கோட்பாடு (Theory of Invariants), தள வரைவுகளின் கணிப்பு வடிவியல் (Enumerative Geometry of Plane Curves) முதலியவை இக்காலத்திய கெய்லியின் ஆய்வுகளில் முளைத்தவையே. நீள்வட்டச்சார்புகளின் கோட்பாட்டில் (Theory of Elliptic Functions) கெய்லியின் தனித்துவம் வாய்ந்த பங்கும் இக்காலத்தில் தொடங்கியதே. இதற்குப்பிறகு பதினான்கு ஆண்டுகள் சட்டத்துறையில் கெய்லி வேலை பார்த்தபோதும் 200க்கும் மேலாக கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 25வது வயதில் கெய்லி கேம்பிரிட்ஜைவிட்டுப்போக நேர்ந்தது. மதச்சபதங்கள் எடுத்துக்கொண்டு மதவேலைகளிலும் ஈடுபட்டால்தான் அவர் கேம்பிரிட்ஜில் தொடர்ந்து பணியாற்றமுடியும் என்ற நிலை வந்தபோது, லண்டனில் சட்டப்படிப்பு படித்து சட்டத்துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால் அப்பொழுதும் சட்டத்துறை வேலைகள் தன் கணிதத்தை முழுங்கிவிடாமல், தன்னுடைய வாழ்க்கைச்சக்கரம் சுழல்வதற்கு என்ன வேண்டுமோ அந்தமட்டுமே சட்டப்பணிகளுக்கு நேரம் ஒதுக்கினார். சட்டத்துறையிலும் அவர் ஒரு வழக்கில் எடுத்துவைத்த வாதுகள் சட்டபுத்தகத்தில் இடம் பெற்றனவாம்.ஆனாலும் உப்புப்பெறாத அன்றாட வாழ்க்கைச்சிக்கல்களுக்காக பென்னான நேரத்தைச்செலவழிக்க அவர் விரும்பவில்லை. கோபமென்பதே இல்லாதவர் ஒரே ஒரு முறை கோபப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஸில்வெஸ்டர் என்ற கணிதவல்லுனருடன் மாற்றமுறாமைக் கோட்பாடுகளில் ஒரு சிக்கலான பிரச்சினையை அலசிக்கொண்டிருந்தபோது அவருடைய வேலைக்காரப்பையன் ஒரு கட்டு சட்டக் காகிதங்களை அவர்முன் கொண்டு வைத்ததில் அருவறுப்படைந்து அக்காகிதங்களைத் தூக்கி விட்டெறிந்தாராம்! ஸில்வெஸ்டரும் கெய்லியும் 'மாற்றமுறாமை இரட்டையர்கள்' என்பது E.T.பெல் தன்னுடைய 'கணிதப்பெரியார்கள்' என்ற நூலில் அவர்களைக்குறித்து எழுதிய அத்தியாயத்தின் தலைப்பு. இருவரும் பழகிப்பேசி அலசிய கணித ஆய்வுகள்தாம் இன்று மாற்றமுறாமைக் கோட்பாடு (Theory of Invariants) எனப் புழங்குகிறது. அணிக்கோவை கள், அணிகள், இருபடிய அமைப்புகள் இவைகளிலுள்ள ஆழமான கருத்துகளில் பல இவ்விருவரின் கூட்டினால் உதித்தவையே. ஜேம்ஸ் சில்வெஸ்டர் ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் ("James Joseph Sylvester", செப்டம்பர் 3, 1814 - மார்ச் 15, 1897) 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். லண்டனில் யூதர் குடும்பத்தில் பல அண்ணன் அக்காக்களுடன் இளையோனாகப் பிறந்தவர். அவர் குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை. மூத்த சகோதரன் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சில்வெஸ்டர் என்ற பெயரை வைத்துக் கொண்டார். அதனால் வெறும் ஜேம்ஸ் ஜோஸஃப் என்ற யூதப்பெயரும் ஜேம்ஸ் ஜோஸஃப் சில்வெஸ்டர் என்றே புழங்க ஆரம்பித்து அதுவே நிலைத்தும் விட்டது. ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையில் தனியார் பள்ளிகளில் கற்றார். பதினான்காவது வயதில் ஓர் அரையாண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் "டிமார்கனி"டம் தான் பயின்றதை பெருமிதத்துடன் சொல்வார். 1829 இல் பதினைந்தாவது வயதில் லிவர்பூலில் உள்ள 'ராயல் இன்ஸ்டிடுயூஷனில்' இரண்டாண்டுகள் படித்தார். ஓராண்டிலேயே அங்கு கணிதத்தில் பரிசு பெற்றார். ஆசிரியர்கள் அவரை எல்லா மாணவர்களுக்கும் முதன்மையாகவும் அதற்கு மேலேயே தனித்துவம் வாய்ந்தவராகவும் கணித்தனர். அவருடைய அமெரிக்கன் சகோதரர் தொழில்முறையில் ஒரு Actuary. அமெரிக்காவில் பரிசுச் சீட்டு நடத்தும் இயக்குனர்களிடம் தன் தம்பியின் கணிதத் திறமையைப்பற்றிச் சொல்லி அவருடைய திறமை வெளிப்படும்படியாக ஒரு Project அவரை வந்தடையச் செய்தார். அதை வெகு நேர்த்தியாகத் தீர்த்து வைத்ததில் சில்வெஸ்டருக்கு 500 டாலர் பரிசு கிடைத்தது. ஆனால் லிவர்பூலில் அவருடைய வாழ்க்கைச் சக்கரம் சரியாகச் சுழலவில்லை. கிறிஸ்தவர்கள் யூதர்களை சரியாக நடத்தவில்லை. சில்வெஸ்டரும் தன் யூத நம்பிக்கைகளை தன் மட்டில் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் ஒரு நேரத்தில் அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரத்திற்கு ஓர் அகதியாக அவர் ஓட வேண்டியிருந்தது. ஒரு தூரத்து உறவினர் உதவியதின்பேரில் திரும்பவும் லிவர்பூல் வந்து சேர்ந்தார். பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு இதே டப்ளின் தான் அவருக்கு மறுபடியும் உதவியது. 1831 இலிருந்து கேம்பிரிட்ஜில் சென் ஜான்ஸ் கல்லூரியில் படித்த ஸில்வெஸ்டருக்கு அவர் ஆங்கிலத் திருச்சபையின் ("Church of England") சபதங்களை ஏற்க மறுத்ததால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பல்கலைக்கழகப் பட்டங்கள் கொடுக்கப்படவில்லை. இப்பட்டங்களை (B.A., M.A.) டப்ளினிலுள்ள ட்ரினிடி கல்லூரியிடமிருந்துதான் பெற்றார். எனினும் வரலாற்று நேர்மைக்காக நாம் இங்கு குறிப்பிடவேண்டியது இன்னொன்றுள்ளது. பிற்காலத்தில் 1871 இல், ஆங்கிலக் கல்வி நிலையங்கள் மதக்கோயில்களின் பிடியிலிருந்து விலகினதும், அவருக்குச் சேரவேண்டிய பட்டங்கள் அவருக்கு கௌரவப் பட்டங்களாக அளிக்கப்பட்டன. நோய்வாய்ப்பட்டிருந்ததனால் 1837 வரையில் ட்ரைபாஸ் தேர்வை அவர் எழுத முடியவில்லை. அப்பொழுதும் அவர் இரண்டாவது நபராகத்தான் தேறினார். அவரைத் தோற்கடித்த முதலாவது மாணவனைப்பற்றி கணித உலகில் அதற்குப் பிறகு கேள்விப்படவேயில்லை. கிறிஸ்தவரல்லாத காரணத்தால் ஸில்வெஸ்டருக்கு ஸ்மித் பரிசுகள் கிட்டாமல் போயின. கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும் அகலமாகவும் ஆழமாகவும் தேர்ச்சிபெற்றிருந்த ஸில்வெஸ்டர் தன்னுடைய கணித ஆய்வுக்கட்டுரைகளிலும் கணிதத்தைப் பற்றிய பேச்சுகளிலும் பழம்பெருமை வாய்ந்த லத்தீன் - கிரேக்க மேற்கோள்களைப் பெருமளவில் கையாள்வார். அவைகள் சூழ்நிலைக்குப் பொருந்தியதாகவும் மேன்மை தருவதாகவும் இருக்கும். இதைத்தவிர பிரெஞ்சு, ஜெர்மானிய, இத்தாலிய இலக்கியங்களுடன் அவருக்கிருந்த அறிவுத் தொடர்பினால், கணிதத்தில் மாற்றமுறாமைக் கோட்பாட்டில் இன்று புழங்கும் பல அருமையான கலைச்சொற்கள் அவருடைய படைப்புகளே. எடுத்துக்காட்டாக, 'Discriminant' (தன்மைகாட்டி), 'matrix' (அணி) என்ற சொற்கள். ஸில்வெஸ்டர் மணம் புரியவே இல்லை. 24வது வயதில், லண்டனிலுள்ள 'யூனிவர்சிடி காலேஜ்' இல் ஸில்வெஸ்டர் அறிவியல் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். அடுத்த ஆண்டு அவர் Fellow of the Royal Society யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1841 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றார். ஆனால் மூன்றே மாதம்தான் அப்பணியில் இருந்தார். ஒரு சிறு கௌரவப் பிரச்சினை காரணமாக அப்பணியை ராஜினாமா செய்தார். ஹார்வர்ட், கொலம்பியா பல்கலைக்கழகங்களில் முயற்சி செய்து பயனில்லாமல் இங்கிலாந்து திரும்பினார். Actuary யாக ஒர் ஆயுள் காப்பு நிர்வாகத்தில் சேர்ந்தார். கணித இயலருக்கு அந்த வேலையில் பிடிப்பே இல்லை. தனியாக சில மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். அப்படி வந்து சேர்ந்த மாணவ மாணவிகளில் உலக வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெற்ற ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலும் ஒருவர். 1854 இல் நைட்டிங்கேல் கிரிமியா போருக்குச்சென்றார். அதே ஆண்டு ஸில்வெஸ்டரும் தன்னுடைய இந்த இரண்டுங் கெட்டான் பிழைப்பிலிருந்து மீண்டார். இதற்கு நடுவில் 1846 இல் 32வது வயதில் சட்டக்கல்வி கற்கச்சென்று அதில் தேறி 1850 இல் வழக்கறிஞர் ஆனார். அத்தொழிலில்தான் கெய்லியைச் சந்தித்தார். அன்றிலிருந்து இருவரும் பழகிப்பேசி அலசிய கணித ஆய்வுகள்தாம் இன்று மாற்றமுறாமைக் கோட்பாடு (Theory of Invariants) எனப் புழங்குகிறது. அணிக்கோவைகள், அணிகள், இருபடிய அமைப்புகள் இவைகளிலுள்ள ஆழமான கருத்துகளில் பல இவ்விருவரின் கூட்டினால் உதித்தவையே. வுல்விச்சில் 'ராயல் மிலிடரி அகடெமி'யில் பதினாறு ஆண்டுகள் (1854 இலிருந்து 1870 வரை) பேராசிரியராகப் பணியாற்றினார்.அவருக்குக் கிடைத்த பல கௌரவங்களில் பிரென்சு விஞ்ஞான அகெடெமிக்கு 1863 இல் ஸ்டைனர் காலமானபிறகு வடிவியல் பிரிவிற்கு வெளிநாட்டு நிருபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒன்று. 1870 இல் ஓய்வு பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 1875 இல் திறக்கப்பட்டது. ஸில்வெஸ்டர் அங்கு பேராசிரியரானார். வுல்விச்சில் அவருடைய ஓய்வூதியத்தில் சில சர்ச்சைகள் எழுப்பினர். அதை மனதில் கொண்டோ என்னமோ ஜான்ஸ் ஹாப்கின்ஸில் தன் ஊதியத்தை தங்கமாகத் தரவேண்டுமென்று நிபந்தனை செய்து அதைப்பெறவும் செய்தார். 1878 இல் 'American Journal of Mathematics' என்ற ஆய்வுப்பஞ்சிகை ஸில்வெஸ்டரால் தொடங்கப்பட்டு ஜான்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வைக்கப்பட்டது. அமெரிக்கா கண்டத்தின் கணித ஆய்வுகளுக்கு அக்காலத்தில் அடிகோலிட்ட காரணிகளில் அதற்கு முக்கிய பங்கு உண்டு. கணித உலகில் இன்றும் அச்சஞ்சிகை ஓங்கி நிற்கிறது. 1881-82 இல் அரையாண்டுக்கு கெய்லியை அழைத்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச்செய்தார் ஸில்வெஸ்டர். இது மறுபடியும் இருவரும் கணிதத்தில் கூட்டு ஆய்வு செய்ய பெரிதும் உதவியது. 1883 இல் ஆக்ஸ்ஃபோர்டில், எண் கோட்பாட்டில் வல்லுனராகவும் பேராசிரியராகவும் இருந்த ஸ்டீஃபன் ஸ்மித் என்பவர் காலமானார். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு ஸில்வெஸ்டர் அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்டார். 70 வயதான ஸில்வெஸ்டர் அதையும் ஏற்றுக்கொண்டு இன்னமும் கணிதத்துக்காகவே உழைத்தார். நா. செல்லப்பா நா. செல்லப்பா (இ. ஜூலை 2007) ஈழத்தின் சைவ அறிஞரும் எழுத்தாளருமாவார். நா. செல்லப்பா இலங்கையின் அரச சேவையில் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சுகாதாரப் போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மிக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் "சைவநன்மணி" என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை "கௌரவ கலாநிதி" பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சித்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார். அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். தமது கடைசிக் காலங்களில் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். 1943 1943 (MCMXLIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். வழுப்புள்ளி வழுப்புள்ளி அல்லது வழுவிடம், ஆங்கிலத்தில் Singularity என்று சொல்லப்படும். இக்கருத்து பல துறைகளில் கையாளப்படுகிறது. ஒரு பொருளையோ அல்லது ஒரு பண்பையோ வரையறுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையெல்லாம் வழுப்புள்ளியாகும். குறிப்பாக, கணிதத்தில் ஒரு கணிதப்பண்பு எங்கெல்லாம் வரையறுக்கமுடியாமலோ அல்லது சரியானபடி இல்லாமல் குழப்புகிறதோ அந்த இடத்தை வழுப்புள்ளி என்பர். எடுத்துக்காட்டாக, என்ற மெய்யெண் மதிப்புள்ள சார்புக்கு, "x" = "0" ஒரு வழுப்புள்ளி. அங்கு அதன் மதிப்பு முடிவுறா மதிப்பைநோக்கி நெருங்குவதால் அங்கு வரையறுக்கப்படுவதில்லை. இதைத்தவிர என்ற சார்புக்கும் x = 0 ஒரு வழுப்புள்ளிதான். ஆனால் இங்கு அதற்கு வேறு காரணம். "x" = "0" வில் இச்சார்பு வகையீட்டுக்கெழு குறிப்பிடமுடியாமல் இருக்கிறது. அதாவது, இந்த வரைவுக்கு x = 0 வில் தொடுகோடு கிடையாது. இன்னும், என்ற வரைவுக்கும், "(0,0)" ஒரு வழுப்புள்ளி ஆகும். ஏனென்றால், அவ்விடத்தில் தொடுகோடு செங்குத்தாக இருப்பதால், வகையீட்டுக்கெழு வரையறுக்கப்படவில்லை. அதாவது அவ்விடத்தில் வரைவு மிருதுவாக இல்லை. அண்டவியலில் இது காலவெளியில் (Space-time) காலவெளிவளைவு (Space-time Curvature) முடிவுறா மதிப்புள்ள ஒரு புள்ளி. அங்கு முடிவுறா அடர்த்தி இருக்கும். ஒவ்வொரு கருங்குழியின் மையத்திலோ அல்லது அண்டத்தொடக்கத்திலோ அல்லது அண்டத்தின் முடிவிலோ ஒரு வழுப்புள்ளி இருக்கும் என்பது சில கோட்பாடுகளின் தீர்வு. வழுவிலா அணி வழுவிலா அணி (Non-singular matrix) கணிதத்திலும், கணிதத்தின் எல்லாப் பயன்பாடுகளிலும் உருவாகிற ஒரு கருத்து. அணிக்கோட்பாட்டில், சதுர அணி ஒன்றுக்கு நேர்மாற்று அணி இருக்குமானால் அச்சதுர அணி வழுவிலா அணி எனப்படும். நேரியல் இயற்கணிதத்தில் ஒரு formula_1 சதுர அணி formula_2 க்கு இச்சூழ்நிலையில் formula_7 தனித்தொன்றாகத் தீர்மானிக்கப்பட்டு, formula_2 யின் நேர்மாறு அணி, அல்லது, நேர்மாறு என்று அழைக்கப்படுகிறது.அதற்குக் குறியீடு இதன் விளைவாக, அணிக்கோட்பாட்டின் தேற்றங்களிலிருந்து, formula_12 இரண்டும் ஒரே பரிமாணமுள்ள சதுர அணிகளானால், நேர்மாறு இல்லாத ஒரு சதுர அணியை வழுவுள்ள அணி (Singular matrix) என்றோ சிதைந்த அணி (Degenerate matrix) என்றோ அழைப்போம். பொதுவாக இக்கருத்துக்களெல்லாம் மெய்யெண்கள், அல்லது சிக்கலெண்கள் இவைகளை உறுப்புகளாகக்கொண்ட அணிகளுக்கே சொல்லப்பட்டாலும், ஏதாவதொரு வளையத்தில் உறுப்புகளைக்கொண்ட அணிகளுக்கும் இவை பொருந்தும். ஒரு வழுவிலா அணியின் நேர்மாறு அணியைக் கணிக்கும் பிரச்சினை அணிக்கோட்பாட்டில் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். மெய்யெண்களை உறுப்புகளாகக்கொண்ட எல்லா formula_1 சதுர அணிகளின் கணத்தை formula_15 என்று குறிப்போம். formula_15 இல், வழுவிலா அணிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டால், அவை பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலம் உயர் கணிதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு பொது நேரியற்குலம் என்று பெயர். குறியீடு GL(n,formula_17) அல்லது GL (formula_17) (General Linear Group over R). formula_17 க்கு பதில் formula_20 ஐப்பயன்படுத்தினால், GL(n,formula_20) அல்லது GL (formula_20) (General Linear Group over C) என்பதும் ஒரு முக்கிய குலமாகும். அணிகளில் இயற்கணித அமைப்புகள்‎ கிரிபட்டி கிரிபாஸ் (கில்பேர்ட்டீஸ் மொழி: "kiribas" (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக "கிரிபாஸ் குடியரசு" என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபட்டியின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது. மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபட்டிய மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர். தலைநகரான தெற்கு டவாராவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது.. காறை எலும்பு மனித உடற்கூற்றியலில், காறை எலும்பு (Clavicle) என்பது ஒரு நீண்ட எலும்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது தோள் பட்டையின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம். காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் கிடையாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது மேற் கையை, முதல் விலா எலும்புக்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, தோள் எலும்பின் (scapula) உச்சியுடன், உச்சிக்காறை மூட்டில் இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும் உள்ளது. தோள் எலும்பு உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும். காப்பி காப்பி அல்லது குளம்பி (இலங்கைத் தமிழ்: கோப்பி) (en:Coffee(காஃபி)) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும் இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது. காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன் படும் காப்பியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் "காப்பியா அராபிக்கா" (Coffea arabica), "காப்பியா கன்னெஃவோரா" (Coffea canephora) ("காப்பியா ரொபஸ்ட்டா" (Coffea robusta) என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு). காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே (Rubiaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன. காப்பி என்னும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய Coffee (காஃவி அல்லது கா’வி ) என்பதன் தமிழ் வடிவம். தென் எத்தியோப்பியா நாட்டில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்று ஓர் இடம் உள்ளது. அங்கு விளைந்த ‘பூன் அல்லது ‘பூன்னா ("būnn" , "būnnā") என்று அவர்கள் பேசும் அம்ஃகாரா (Amhara) மொழியில் அழைக்கப்படும் செடியைக் குறிக்க காஃவா என்று ஆங்கிலம் போன்ற மொழிகளில் பயன்படுகின்றது. காபியின் அரபு மொழிப் பெயர் "கஹ்வா" ("qahwa" (قهوة)) என்பதாகும். இப்பெயர் அரபு மொழியில் "கஹ்வத்" அல் ‘பூன் (‘பூன் கொட்டையின் வடிநீர்) என்பதின் சுருக்கம். அரபு மொழிச் சொல் "கஹ்வா" என்பது ஆட்டோமன் துருக்கி மொழியின் "கஹ்வே" ("kahve") என்பதில் இருந்து பெற்றதாகும். இது இத்தாலிய மொழியில் "caffè" (க’வ்’வே) என்றும் பிரெஞ்ச்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ் (எசுப்பானிய) மொழிகளில் "café" (க’வே) என்றும் வழங்கியது. முதன் முதலில் 16 ஆவது நூற்றாண்டு இறுதியில் இப்பெயர் ஐரோப்பாவில் வழங்கத் தொடங்கினும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் வழக்கில் வந்தது . பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். எத்தியோப்பியாவில் இருந்து இக்கண்டுபிடிப்பு எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது . அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் பிறநாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக நெதர்லாந்துக்காரர்கள் (டச்சு) பெருவாரியாக காப்பியை இறக்குமதி செய்தார்கள். 1690ல் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காப்பிச்செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சிசெய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள். 1583ல் லியோனார்டு ராவுல்’வு என்னும் ஜெர்மன் நாட்டவர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்த திரும்பியபின்பு கரிய நிறத்தில் உள்ள காப்பியைக் காலையில் பருகுவது பற்றியும், அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருக்கும் என்றும் எழுதினார் காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகுகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். 1998-2000 ஆண்டுகளில் உலகில் ஆண்டொன்றுக்கு 6.7 மில்லியன் டன் காப்பி விளைவிக்கிறார்கள். இது 2010ல் 7 மில்லியனாக உயரும் என்று கருதுகிறார்கள் ஒருவர் அருந்தும் குடிநீரில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு அளவு காப்பி அருந்துவதாக கணக்கிட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 6 பில்லியன் கேலன் காப்பி அருந்துகிறார்கள் . 2002ல் அமெரிக்காவில் சராசரியாக தலா 22.1 கேலன் காப்பி அருந்தினார்கள் . இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கொடைக்கானலில் மட்டும் 50 ஏக்கரில் காப்பிப்பயிர் பயிரிடப்படுகிறது. காஃபியா பேரினத்தின் பல சிற்றினங்கள் புதர்ச்செடிகளாகும்.அவை பெர்ரி எனும் ஒரு வகை சதைக்கனியை உற்பத்தி செய்கின்றன. காப்பியா கேனெபொரா (Coffea canephora)(பெரும்பாலும் 'ரோபஸ்டா' என்று அறியப்படும் ஒரு வகை காப்பிச்செடி) மற்றும் காப்பியா அராபிகா (C. arabica) ஆகிய இரு சிற்றினங்கள் வணிக ரீதியாக பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. காப்பியா அராபிகா மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த காப்பி இனமாகும், இவை எத்தியோப்பியாவின் தென்மேற்கு உயர் நிலப்பகுதிகளிலும் மற்றும் தென்கிழக்கு சூடானிலுள்ள போமா பீடபூமியிலும் ,வடக்கு கென்யாவின் மார்சபைட் சிகரத்தையும் பூர்விகமாக கொண்டது .காப்பியா கேனெபொரா மேற்கு மற்றும் மத்திய சகாரா ஆப்ரிக்கபகுதிகளான கினியா முதல் உகாண்டா மற்றும் சூடான் வரையிலான பகுதியை பூர்வீகமாகக் கொண்டதாகும். காப்பியா லிபெரிக்கா (C. liberica), காப்பியா ஸ்டெனோபிலா ( C. stenophylla), காப்பியா மாரிடியனா (C. mauritiana), மற்றும் காப்பியா ரோசெமோசா (C. racemosa) ஆகியன குறையளவு முக்கியத்துவம் வாய்ந்த காப்பி இனங்களாகும். அனைத்து காபி சிற்றினங்களும் ரூபியேசி (Rubiaceae) குடும்பத்தில் (வேறு பெயர்: காப்பி குடும்பம்) வகைப்படுத்தப் படுகின்றன. அவை பசுமை மாறா புதர்கள் அல்லது மரங்களாக 5 மீ (15 அடி) உயரம் வரை வளரக்கூடும். இலைகள் இளஞ்சிவப்பு மற்றும் பளபளப்பானவை, வழக்கமாக 10-15 செ.மீ. (4-6 அங்குலம்) நீண்ட மற்றும் 6 செ.மீ. (2.4 அங்குலம்) அகலமானவை. எளிய, முழு மற்றும் எதிரிலையமைவை உருவாக்ககின்றன. இது ருபியேசி குடும்பத்தின் சிறப்பியல்பு ஆகும் ஆரம்ப காலக்கட்டத்தில் காப்பியானது மரங்களின் நிழலில் பயிரிடப்பட்டது. காப்பிச்செடி பல விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் வாழ்விடங்களாக இருக்கிறது. இந்த முறையானது வழக்கமாக பாரம்பரிய நிழல் முறை அல்லது "நிழல்-வளர்ப்பு" என குறிப்பிடப்படுகிறது. 1970 களில் தொடங்கி, பல விவசாயிகள் தங்கள் உற்பத்தி முறையை சூரிய சாகுபடிக்கு மாற்றியுள்ளனர்.இம்முறையில் விரைவாக வளர்ச்சியின் மூலம் அதிக மகசூல் கிடைத்தாலும் பூச்சித்தாக்குதலால் காப்பி பயிர்கள் சேதமடைகின்றன.ஆதலால் இதற்கான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. காப்பியானது நாம் நன்கு அறிந்த வறுத்த காஃபியாக மாறுவதற்கு காப்பியின் கனி மற்றும் அவற்றின் விதைகளை பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. காப்பியின் சதைப்பற்றுள்ள நன்கு முற்றிய கனியானது பாரம்பரியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கையால் பறிக்கப்படுகிறது.. பின்னர் முதிர்ச்சியடை சதைப்பற்றுள்ள காப்பியின் கனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் சதைப்பகுதிகள் பொதுவாக இயந்திரம் கொண்டு அகற்றப்படுகின்றன,அவ்வாறு அகற்றப்பட்ட பின்னரும் விதைகளில் இருக்கும் மெல்லிய பசைப் பொருள் படலத்தை (Mucilage layer) அகற்றுவதற்காக ஊரவைத்து புளிக்கவைக்கப்படுகின்றன.அவ்வாறு புளிக்கவைக்கப்பட்ட காப்பி விதைகளில் ஒட்டியுள்ள பசைப்படல கழிவுகள் அகற்றப்படுவதற்காக பெருமளவு தூய நீரில் கழுவப்படுகின்றன.இம்முறையில் அதிக அளவு காப்பி விதையிலுள்ள கழிவுகள் கலந்த நீர் வெளியேற்றப்படுகிறது. இறுதியாக காய்ந்த தூய காப்பி விதைகள் கிடைக்கின்றன. செயல்முறையின் அடுத்த படிநிலையாக பச்சை காபியை வறுத்தெடுத்தலாகும்.காப்பியானது வழக்கமாக வறுத்த நிலையில் காப்பிக்கொட்டைகளாக விற்கப்படுகிறது, அரிதான விதிவிலக்குகளாக அது காபி சாப்பிடுவதற்கு சற்று முன்பு வறுத்தும் பயன்படுத்தகின்றனர்.பெருந்தொழில் முறை மூலமாகவோ பாரம்பரிய முறையில் வீட்டிலோ காப்பி வறுத்தெடுக்கப்படுகிறது . காப்பிக்கொட்டையை வறுத்தெடுக்கும் செயல்முறை அவற்றின் பௌதீக மற்றும் வேதியப் பண்புகளில் மாற்றுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வறுபட்ட காப்பிக்கொட்டையானது ஈரப்பதம் இழக்கப்படுவதால், எடை குறைகிறது மற்றும் அளவு அதிகரித்து குறைவான அடர்த்தி கொண்டவையாக மாறுகிறது. இந்த அடர்த்தியான காப்பியின் வலிமை மற்றும் தரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. காஃவீன் காஃவீன் ("Caffeine", காஃபீன்) என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு பொருள் (போதைப் பொருள்). இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை "தேயீன்" (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை "குவாரைன்" (guaranine) என்றும், யெர்பா மேட் என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை "மேட்டீன்"(mateine) என்றும் கூறுவது வழக்கம். காஃவீன் என்னும் வேதிப்பொருள் ஏறத்தாழ 60 செடிகொடிகளில் காணப்படுகின்றது. இது சில சூழல்களில் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றது. இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது. இப்பொருளின் மூலக்கூற்றில் நான்கு நைட்ரஜன் அணுக்களும் இரண்டு ஆக்சிசன் அணுக்களும், மூன்று மெத்தில் (CH) குழுக்களும் உள்ளன. சுவாமி நடராஜானந்தர் சுவாமி நடராஜானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத் துறவியாகிய பெரியாராவார். சேவையின் சின்னம் எனப் போற்றப்பட்ட இத்துறவி மட்டக்களப்பு பிரதேச இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாகப் பலகாலம் பணியாற்றியவர். சிவாச் சித்தர் சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்த சித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார். இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது. இணையாட்களம் (கணிதம்) கணிதத்தில், சார்பு "formula_1" : "formula_2" → "formula_3" இன் இணையாட்களம் ("Codomain") என்பது "formula_3"என்ற கணம். "formula_1"இன் ஆட்களம் என்பது "formula_2". இதனிலிருந்து formula_1 இன் வீச்சு எப்பொழுதும் அதன் இணையாட்களத்தின் உட்கணமாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். இணையாட்களத்திற்கும் வீச்சுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியைக் கருத்தில் கொள்வது உதவும். வழக்கப்படி, ஒரு formula_13 அணியுடன் உறவுப்படுத்தப்பட்ட ஒரு நேரியல் கோப்பின் அரசு R, மற்றும் இணையாட்களம் R. ஆனால் அவ்வணியை எல்லா n-பரிமாண நிரல்திசையன்களால் வலது பக்கம் பெருக்கினால் கிடைக்கும் கணம் மிகச்சிறியதாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, அணியின் எல்லா உறுப்புக்களும் 0 வாக இருந்தால், வீச்சு, அதன் பரிமாணம் formula_14 ஆக இருந்தாலும் ஒரு சூனிய அணியே. அணியின் ஏதாவதொரு உறுப்பை மாற்றினால் கூட வீச்சு பெரிதாகிவிடும். f இன் இணையாட்களம் R. ஆனால் "f(x)" எதிர்ம மதிப்புகளை வெளியீடு செய்வதில்லை.அதனால் வீச்சு Rformula_18: , அதாவது எதிர்மமில்லாத மெய்யெண்கள், அதாவது [0, formula_19) : இப்பொழுது formula_21 என்ற இன்னொரு சார்பை கவனிப்போம்: "formula_1" ம் "formula_21" ம் ஒரு குறிப்பிட்ட எண்ணை ஒரே மாதிரியாக செயலாக்கினாலும் , தற்காலக்கணிதத்தில் அவையிரண்டும் ஒரே சார்பல்ல. ஏனென்றால் அவைகளினுடைய இணையாட்களங்கள் வெவ்வேறானவை. இதை நன்கறிந்துகொள்ள இன்னொரு சார்பைப்பார்ப்போம்: இங்கு Rformula_29 தான் அரசாக வரையறுக்கப்படமுடியும். இப்பொழுது இவ்விரண்டு சேர்வைகளை நோக்குக: இவையிரண்டில் எது சரியான பொருளுள்ளது? முதலிலுள்ளது பிரச்சினையை எழுப்புகிறது. ஏன்? வர்க்கமூலம் எதிர்ம எண்களுக்கு வரையறுக்கப்படவில்லை! ஆக, சார்புகளின் சேர்வை formula_32 பேசப்படும்பொழுது, வலது பக்கச்சார்பின் இணையாட்களமும் இடது பக்கத்து சார்பின் ஆட்களமும் ஒரே கணமாக இருக்கவேண்டும். இணையாட்களத்தைப்பொருத்துதான் சார்பு ஒரு முழுக்கோப்பா அல்லவா என்பது தீர்மானிக்கப்படும். சார்பு ஒரு உள்ளிடுகோப்பா என்பது இணையாட்களத்தைப்பொருத்ததில்லை. டன் டன் (அல்லது தொன்) என்பது பல சொற்பொருள்களில் வழங்கும் ஓர் அலகு. இது எடையைக் குறிக்கவும், கொள்ளளவைக் குறிக்கவும், ஆற்றலைக் குறிக்கவும், விசையைக் குறிக்கவும் பயன்படுத்தும் அலகுகளில் பயன்படும் சொல். எடையைக் குறிக்கும் டன் என்னும் சொல் பொதுவாக மூன்று பொருளில் ஆளப்படுகின்றது. விசையைக் குறிக்க SI அலகுகள் அல்லாதவற்றுள் கிலோ கிராம் விசை என்று கூறுவதுபோல "டன் விசை" என்று கூறுவதுண்டு. கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படும் கொள்ளளவைக் குறிக்க டன் என்னும் சொல் பயன் படுகின்றது. இதனைச் சரக்கு டன்னேஜ் என்றும் சொல்வர். ஒரு டன் என்பது: டன் என்னும் சொல் ஆற்றலின் அலகுகளில் ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக வெடிகுண்டுகள், அணுகுண்டு போன்ற வெடி பொருட்களின் அளவைக் குறிப்பிட TNT (டி.என்.டி) எனப்படும் டிரை-நைட்ரோ-தொலியீன் (TNT Trinitrotoluene) என்னும் வேதிப்பொருளின் வெடிப்பின் வழி வெளியாகும் ஆற்றலைக் குறிப்பர். ஒரு டி.என்.டி டன் என்பது கிறீன்லாந்து கிறீன்லாந்து (தமிழக வழக்கு: கிரீன்லாந்து) டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர் (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு. டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டில் பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர். தொலுயீன் தொலுயீன் ("Toluene") என்னும் வேதிப்பொருள் மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane) என்றும் அழைக்கப்படும். இது பென்சீனைப் போலவே அறுகோண கரிம வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு ஹைட்ரஜன் இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் அரிதிற் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் நீர்மப் பொருள். இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் அரோமாட்டிக் ஹைடிரோகார்பன் (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது. அமெரிக்க மரமாகிய மைராக்சிலன் பால்சாமம் (Myroxylon balsamum) என்னும் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மணம் தரும் தொலூல் (toluol) என்னும் தொலூல் பால்சம் (toluol balsam) என்பதில் இருந்து தொலுயீனை முதன்முதல் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இப்பெயரை முதலில் யோன்ஸ் யாக்கொப் பெர்செலியஸ் (Jöns Jakob Berzelius) பயன்படுத்தினார். தொலுயீன் பொதுவாக மற்ற மின்மயீர்ப்பு மணப்பொருள் மாற்றாக (electrophilic aromatic substitution) இயைபுறுகின்றது. இதில் உள்ள மெத்தில் (CH) குழுவால், தொலுயீன் பென்சீனை விட 25 மடங்கு அதிக வேதியியல் இயைபுத்தன்மை உடையதாக உள்ளது. இது நைட்ரஜன் கூட்டத்தால் ஆர்த்தோ (ortho) மற்றும் பேரா (para) நைட்ரோதொலுயீன் ஓருரு வடிவங்கள் அடைகின்றன. இவற்றுக்கு சூடேற்றினால் வெடிக்கவல்ல டிரை-நைட்ரோ-தொலுயீன் (டி.என்.டி) (trinitrotoluene (TNT).) என்னும் வேதியியல் பொருளாக மாறுகின்றது. அரோமாட்டிக் ஐதரோகார்பன் அரோமாட்டிக் ஐதரோகார்பன் "(aromatic hydrocarbon)" என்பது சிக்மா பிணைப்புகள் மற்றும் கார்பன் அணுக்களுக்கு இடையில் உள்ள உள்ளடங்கா பை எலக்ட்ரான்கள் ஆகியனவற்றை சேர்த்து ஒரு வளையத்தை உருவாக்குகின்ற ஐதரோகார்பனைக் குறிக்கும். இதை அரீன் என்றும் சில சமயங்களில் அரைல் ஐதரோகார்பன் என்றும் அழைக்கிறார்கள். மாறாக அலிபாட்டிக் ஐதரோகார்பன்களில் கார்பன் அணுக்களுக்கு இடையில் உள்ளடங்கா பை எலக்ட்ரான்கள் இருப்பதில்லை. ஒருவகையான இனியமணம் கொண்டிருப்பதால் இவைகளுக்கு அரோமாட்டிக் (அரோமா = மணம்) ஐதரோகார்பன் என்று பெயர் சூட்டப்பட்டது. அரோமாட்டிக் சேர்மங்களில் ஆறு கார்பன் அணுக்கள் எலக்ட்ரான் ஒழுங்கு அமைப்பு கொண்டவற்றை பென்சீன் வளையம் என்கிறார்கள். இத்தகைய எலக்ட்ரான் அமைப்புடன் கூடிய எளிய ஐதரோகார்பன் பென்சீன் ஆகும். அரோமாட்டிக் ஐதரோகார்பன்களை ஒற்றை வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் அல்லது பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஐதரோகார்பன்கள் என வகைப்படுத்தலாம். சில பென்சீன் அடிப்படை அமைப்பில் இல்லாத ஐதரோகார்பன்களும் அரோமாட்டிக் சேர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பல்லின அரீன்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஒற்றை வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் போல இவை அக்கிள் விதியைப் பின்பற்றுகின்றன. இவற்றில் உள்ள π எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 4n + 2 என்ற எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளன. இங்குள்ள n இன் மதிப்பு 0, 1, 2, 3, … ஆகும். இந்த வகை சேர்மங்களில் குறைந்தபட்சம் ஒரு கார்பன் அணுவாவது பல்லிண அணுக்களில் ஒன்றான ஆக்சிசன், நைட்ரசன் அல்லது கந்தகம் போன்ற அணுக்களில் ஒன்றால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். பென்சீன் அமைப்பில் அமையாமல் அரோமாட்டிக் பண்புகளைக் கொண்டிருக்கும் சேர்மத்திற்கு பியூரானை உதாரணமாகக் கூறலாம். ஓர் ஆக்சிசன் அணு உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சங்கிலியைக் கொண்ட பல்லினவளைய சேர்மம் பியூரான் ஆகும். இதே போல நைட்ரசன் அணு உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கொண்ட சங்கிலியைக் கொண்ட பல்லினவளைய சேர்மம் பிரிடின் ஆகும். பென்சீன் C6H6 ஓர் எளிய அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். அரோமாட்டிக் என்ற முதலாவது பெயரும் பென்சீனுக்கே வைக்கப்பட்டது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆகத்து கெக்குலே என்பவர் பென்சீன் சேர்மத்தின் பிணைப்பு அமைப்பை முதன் மூலமாக அங்கீகரித்தார். அறுகோண வளையத்தில் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் பகிர்ந்து கொள்வதற்காக நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன. ஒரு எலக்ட்ரான் ஐதரசன் அணுவிடம் செல்கிறது. அடுத்துள்ள இரண்டு கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எலக்ட்ரான்கள் செல்கின்றன. ஒரு எலக்ட்ரான் அடுத்துள்ள அதே கார்பன் அணுக்களில் ஏதேனும் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டு ஒரு கார்பனுடன் இரட்டைப் பிணைப்பாகவும் மற்றொரு கார்பனை ஒற்றைப் பிணைபாகவும் விட்டுச் செல்கிறது. இதனால்தான் பென்சீன் வளையத்தை அறுகோணமாக வரையும்போது அதனுள் இரட்டை மற்றும் ஒற்றைப் பிணைப்புகள் ஒன்றுவிட்டு ஒன்றாக வரையப்படுகிறது. பென்சீன் கட்டமைப்பை அறுகோண வளையத்திற்குள் ஒரு வட்டம் வரைந்தும் காட்டுவார்கள். ஆறு எலக்ட்ரான்கள் உள்ளடங்கா மூலக்கூற்று ஆர்பிட்டலைச் சுற்றிலும் மிதந்த நிலையில் இருப்பதாக இது காட்டுகிறது. மேலும் அனைத்து ஆறு கார்பன்-கார்பன் பிணைப்புகளும் 1.5 பிணைப்பு எண்ணிக்கையில் சமநிலையில் உள்ளன என்பதையும் இது கூறுகிறது. இச்சமனிலை ஒத்திசைவு வடிவங்க்களால் விளக்கப்படுகிறது. எலக்ட்ரான்கள் பென்சீன் வளையத்திற்கு மேலும் கீழுமாக மிதப்பதாக காட்சிப்படுத்தப்படுகிறது. அவை உற்பத்தி செய்யும் மின் காந்த புலங்கள் வளையத்தை தட்டையாக வைத்திருக்கின்றன. அரோமாட்டிக் ஐதரோகார்பன்களின் பொதுப் பண்புகள் : அறுகோண பென்சீன் வளையத்திற்குள் வட்டம் வரைகின்ற அமைப்பை சர் இராபர்ட் இராபின்சன் என்பவரும் அவருடைய மாணவர் யேம்சு அர்மிட் என்பவரும் 1925 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினர் . 1959 களின் தொடக்கத்தில் மாரிசன் & பாய்டு கரிமவேதியியல் புத்தகம் இதை பிரபலப்படுத்தியது. இந்தக் குறியீட்டை முறையாகப் பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. வளைய π பிணைப்புத் திட்டம் எதையும் விவரிக்க சில வெளியீடுகள் இக்குறியீட்டைப்ம்பயன்படுத்தின. அல்லது π பிணைப்புத் திட்டங்களில் எவை அக்கிள் விதியைப் பின்பற்றுகின்றனவோ அவற்றை மட்டும் குறிக்க சில வெளியீடுகள் பயன்படுத்தின. இந்தக் குறியீட்டு முறையை ஒற்றைவளைய மற்றும் 6π எலக்ட்ரான் திட்டங்க்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமென யென்சன் விவாதித்தார் . இவ்வழிமுறையில் ஆறு மைய ஆறு-எலக்ட்ரான் பிணைப்பிற்கான பென்சீன் வளையத்திற்குள் வரையப்படும் வட்டம் மும்மைய்ய இரண்டு -எலக்ட்ரான் பிணைப்பிற்கான Y குறியீட்டுடன் ஒப்பிடப்பட்டது. அரோமாட்டிக் சேர்மங்கள் பொதுவாக ஆறிலிருந்து பத்து வரையான கரிம அணுக்களைக் கொண்டிருக்கும். இவற்றுள் முதன்மையானவை: ஆகியவை ஆகும். கணநாத நாயனார் “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார். அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார். இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார். கூற்றுவ நாயனார் களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார். மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணி முடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர். அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர். வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு கணிதத்தில் ஒரு சார்பின் வீச்சு (Range) என்பது அச்சார்பின் எல்லா வெளியீடுகளின் கணமாகும். இதையே சார்பின் எதிருரு (Image) என்றும் சொல்வதுண்டு. எதிருருவின் ஒருவித மறுதலை முன்னுரு. சரியான வரையறைகளைக் கீழே பார்க்கலாம். formula_1 என்ற சார்பை நோக்குக. formula_2 இன் இணையாட்களம் formula_4 என்ற கணம். formula_1 என்று கொள்க. ஒவ்வொரு formula_36 க்கும் அதனுடைய முன்னுரு (Pre-image or Inverse image) என்பது என்று வரையறுக்கப்பட்ட (A இன்) உட்கணம். மேலும், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், formula_2["Y"] ஐ formula_2 ("Y") என்று எழுதி, "f" ஐ formula_4 இன் அடுக்குக்கணத்திலிருந்து formula_18 இன் அடுக்குக்கணத்திற்குப்போகும் ஒரு சார்பாகக் கொள்ளலாம். formula_41 ஐ நேர்மாறுச் சார்புடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. formula_2 ஒரு இருவழிக் கோப்பாக இருந்தால் தான் இரண்டும் ஒன்றாகும். இச்சார்புக்கு "f": "A" → "B" ஒரு சார்பு என்றும் "X" , "Y" இரண்டும் "A" இன் உட்கணங்கள் என்றும் " M" , "N" இரண்டும் "B" இன் உட்கணங்கள் என்றும் கொண்டால், இரண்டு உட்கணங்களின் ஒன்றிப்பு, வெட்டு இவற்றைப்பற்றிய மேற்படி பண்புகளை, உட்கணங்களின் எந்தக் கூட்டத்திற்கும் உண்மை என்று கொள்ளலாம். கலிய நாயனார் தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போற் குறைய வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்க்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடன்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலித்திருக்க அருள் புரிந்தார். கலிக்கம்ப நாயனார் “கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. நடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி திருப்பெண்ணாகடம் என்பது. அவ்வூரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்ப நாயனார். அவர் சிவனடிப்பற்றாகிய அன்புடனே வளர்ந்து அப்பதியில் தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத்தொண்டிலேயே பற்றாகப் பற்றிப் பணிசெய்து வந்தனர். அவர் வேறு ஒரு பற்றுமில்லாதவர். சிவன் அடியார்களிற்கு விதிப்படி இனிய திருவமுதினை ஊட்டி வேண்டுவனவற்றை இன்பம் பொருந்த அளித்து வந்தார். ஒருநாள் முன்போலத் திருவமுது உண்ணவந்த அடியார்களின் திருவடிகளை மனைவியார் நீர் வார்க்கத் தாம் விளக்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது முன்னர் தம் ஏவலாளராய் இருந்து ஏவலை வெறுத்து சென்ற ஒருவர், சிவனடியாரது திருவேடத்துடன் வந்தார். அவரது திருவடியினை விளக்குவதற்கு, நாயனார் அவரது அடியினைப் பிடித்தார். அப்போது மனைவியார், “இவர் முன்பு ஏவல் செய்யாது அகன்றவர் போலும்” என்று தயங்கியதால் நீர்வார்க்கத் முட்டுப்பாடு நிகழ்ந்தது. நாயனார் மனைவியாரைப் பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை (தண்ணிச் செம்பு) வாங்கிக்கொண்டு அம்மனைவியாரது கையை வாளினால் வெட்டினார்; அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார். இவ்வாறு பல நாள் சிவதொண்டாற்றித் திருவடிநீழலை அடைந்தார். நரசிங்கமுனையரைய நாயனார் “மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை. தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார். திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர். நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார். நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைப் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர். பாஸ்டில் நாள் பாஸ்டில் நாள் ("Bastille Day") என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் ""Fête Nationale"" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது ""quatorze juillet"" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது. சத்தி நாயனார் “கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர். புகழ்ச்சோழ நாயனார் புகழ்ச்சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தில் போற்றப்பெறுகின்றன 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர். சிவநெறியின் மீதிருந்த பற்றின் காரணமாக, போரில் வென்றோர்களின் தலைகளில் ஒன்றாக அடியார் தலை இருப்பதைக் கண்டு கருவூரில் பெருந்தீ ஏற்படுத்தி, அதில் அடியாரின் தலையை தட்டில் வைத்து சென்று உயிர்துறந்தார். சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்த அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கரும், குடபுலமன்னவர்களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறைபெறற் பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட்டு அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள் கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் அருளினர். அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார். இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையினையும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்தரிடம் யானையால் நேர்ந்த சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளினை நீட்டித்த் திருத்தொண்டில் தலை நின்றவர். இந்நாளில் அளந்து திறை கொணராது முரண்பட்ட அதிகன் என்பவன் அணித்தாகிய மலை அரணில் உள்ளான் என்று அமைச்சர் அரசர்க்கு அறிவித்தனர். படை எழுந்து அவ்வரணியை அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளை இட்டார். அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ்வலிய அரணை முற்றுகை இட்டு அழித்து அதிகனது சேனையினை வென்றனர். அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்றும் யானை, குதிரை முதலியவற்றையும் போர்ச்சின்னமாகத் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல்களுள் அரசர், ஒரு தலையிற் புன்சடையைக் கண்டார். கண்டு நடுங்கி தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது என்று தம்மை இகழ்ந்து கொண்டார். ஒன்று செய்யத் துணிந்து தம் குமரனுக்கு முடிசூட்டும் படி அமைச்சருக்குக் கட்டளை இட்டார். தமக்குச் சேர்ந்த சிவ அபராதகமாகிய பழிக்குத் தீர்வு தாமே வகுப்பராகிச் செந்தீமுன் வளர்ப்பித்தார். பொய்ம்மாற்றும் திருநீற்றுக் கோலம் புனைந்தனர். அச்சடையினைப் பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்த்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட் புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழற்கீழ் நீங்காது அமைந்திருந்தனர். "பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்" - திருத்தொண்டத் தொகை அதிபத்த நாயனார் அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமையை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள். இவரை "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார். அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது. சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார். ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார். அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார். ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது. அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. நாட்சி கட்சி நாசிக் கட்சி அல்லது தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி ("The National Socialist German Workers Party", ஜெர்மன்: "Nationalsozialistische Deutsche Arbeiterpartei", NSDAP), 1920 முதல் 1945 வரையில் ஜெர்மனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும். நாசிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. ஜூலை 28 1921 முதல் இக்கட்சியின் தலைவராக சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். ஜெர்மனிய அதிபர் "'போல் வொன் ஹின்டென்பேர்க்" என்பவர் 1933இல் ஹிட்லரை நாட்டின் சான்சிலராகத் தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி ஹிட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது. கணம்புல்ல நாயனார் “கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று. ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். ஆனால் அது தாம் நியமாகவே மேற்கொண்ட யாம அளவு வரை எரிக்கப் போதாதாயிற்று. நாயனார் அன்பினால் எலும்பும் உருக கணம்புல்லைப்போன்ற தமது திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்தனர். தலையாய அத்திருவிளக்குப் பணியால் இருவினைத் தொடக்கையும் எரித்தொழித்தார். இறைவர் அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளினார். அவர் சிவலோகத்தில் இறைஞ்சி இன்பமுடன் அமர்ந்தனர். காரி நாயனார் “கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார். அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார். நின்றசீர் நெடுமாற நாயனார் நின்றசீர் நெடுமாற நாயனார் பாண்டிய மன்னரும் சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவர். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. நெடுமாறனார் பாண்டுநாட்டு மன்னாராய்ப் பாராண்டு வந்தார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான மங்கையற்கரசியாரைத் திருமணம் செய்தார். மாறனார் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். திருஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரத்தைச் செவிப்புலத்துற்றபோதே மாறனாரது தீப்பிணி சிறிது குறைவுற்றது. சம்பந்தப் பிள்ளையார் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்மாகியவாது என உரைத்தார். சம்பந்தப்பிளையார் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றூம் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதத்தில் பச்சென்றிருந்த ஏட்டைப் பரசமய கோளரியார் காட்ட சமணர்கள் சாம்பரைக் கையினாற் பிசைந்துகொண்டு தூற்றிக்கொண்டு நின்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர் ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார். அவ்வங்கதம் விளங்காத அமணர் அதனைப் பயன் மொழியாகக் கொண்டு புனல் வாதத்திற்கு எழுந்தனர். புனல் வாதத்தின்போது வாழ்கஅந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் சம்பந்தப்பிள்ளையார் பாடினார். அத்திருப்பாசுரத்தில் அமைந்த வேந்தனும் ஓங்குக எனும் மந்திரமொழியால் கூன்நீங்கி நின்றசீர் நெடுமாறன் ஆனார். வாதில்தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு குலச்சிறையாரைப் பணித்தார். அமணர் கழுவேறத் தாம் திருநீறு பூசிச் சைவரானார். சமந்தப் பிள்ளையாருடன் ஆலவாய்ப்பெருமான் முன் நின்று. “திருவாலவாய் மன்னரே! அமணரின் மாயையில் மயங்கிக் கிடந்த என்னை ஆளுடையபிள்ளையாரைத் தந்து ஆட்கொண்டருளினீர் எனப் போற்றி செய்தார். சம்பந்தப் பிள்ளையாருடன் கூடிப் பாண்டிநாட்டுத் திருத்தலம் பலவும் பணியும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் சோழ நாடு செல்ல நினைத்ததும் அவருடன் போகவே மனம் விரும்பினார். பிள்ளையார் “நீர் இங்கிருந்து சிவநெறி போற்றுவீர்” எனக் கூறிய மொழிக்கிணங்கி மதுரையில் இருந்து சிவநெறி தழைக்க அரசாண்டிருந்தார். இவ்வண்ணம் பகை தடிந்து, சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு சிவலோகமுற்றார். முனையடுவார் நாயனார் முனையடுவார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். "அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்; போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார். போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம். முனையடுவார் நாயனார் குருபூசை நாள்; பங்குனிப் பூசம் சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் ("Tank Road") அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது. தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முயற்சியில் 1859 இல் கட்டப்பட்டது. ஒக்ஸ்லி எனும் மருத்துவரிடம் நிலத்தை வாங்கி கோயில் கட்டப்பட்டது. முருகப் பெருமானாகிய தண்டாயுதபாணியே மூலவராக இருக்கிறார். முதல் திருக்குட நன்னீராடு விழா ஏப்ரல் 4 1859 இல் நடந்தது. பின்னர் பெப்ரவரி 2, 1936 இலும், பின்னர் ஜூலை 7, 1955 இலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றன. கருவறையின் நுழைவாயிலில் ஜம்பு விநாயகர் இடது புறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும் அமர்ந்திருக்கின்றனர். சிவன்,அம்பிகை இருவருக்கும் தனிதனிக் கருவறைக் கோயில்கள் இப்போதுள்ளன. தண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் வேல் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிஷேகம் வேலுக்கே செய்யப்படுகிறது. சிவன்,அம்பிகையுடன் தண்டாயுதபாணி, நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேசுவர், வைரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, நவக்கிரங்கள் ஆகிய திருவுருவங்களும் உள்ளன. நடராசர் சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியே உள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர். தண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர். தைப்பூசம், நவராத்திரி, கந்த சஷ்டி, லெட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. திருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. நுண்மமாக்கல் நுண்மமாக்கல் ("abstraction") என்பது ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அதன்/அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் (meta -leval) வைத்து விபரிப்பதை, விளக்குவதைக் குறிக்கும். "abstract", "abstraction" ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் சொற் தோடல்கள் பல களங்களில் இடம்பெற்றன, தொடர்ந்து இடம்பெறுகின்றது. பின்வருவன அவற்றுள் சில: அல்லாமலும் என்ற கருத்தோட்டத்தில்) மேலே தரப்பட்டுள்ள மு.வரதராசனாரின் கூற்றை நோக்குகையில் நுண்பொருள் என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதைக் காணலாம். மேலும் "நுண்" என்னும் வேர்ச்சொல் அனைத்துத் திராவிட மொழிகளிலும் கிளைத்து "அடிப்பொருள்" என்பதை மையமாகக் கொண்ட பல சிறப்புப் பொருள்களைக் கொண்டு திகழ்கிறது. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் என்பது பொதுவாக இந்துக் கடவுள் பிள்ளையாரைக் குறிக்கும் பெயர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசச் செயலாளர் பிரிவு திருகோணமலை பட்டினமும் சூழலும் என்பது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் நகரப்பகுதியையும் அதனைச் சூழவுள்ள அயற்பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேச சபைப் பிரதேசத்தினைக் குறிக்கும்.. திருகோணமலைப் பட்டினம் 42 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும். தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களைக் கொண்டுள்ளபோதிலும் தமிழர்களே இப்பிரதேசத்தில் செறிந்து வாழ்கின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பிரதேசத்தில் 23, 831 குடும்பங்களைச் சேர்ந்த 102, 487 பொதுமக்கள் வாழ்கின்றனர். வில்லூன்றி கிராம அலுவலர் பிரிவு வில்லூன்றி () என்ற 244 E இலக்கம் உடைய கிராமசேவையாளர் பிரிவானது திருகோணமலை பிரதேச சபைப் பிரிவில் உள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பிரதேசமானது திருகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி கோயிலைச் சூழவுள்ள பகுதியாதலினால் இப்பகுதியாது வில்லூன்றி என்றழைக்கப்படுகின்றது. இப்பிரிவு நீதிமன்ற வீதி (பகுதி), டொக்யாட் வீதி (பகுதி) புனித மேரியின் வீதி, கதீட்ரல் வீதி, பேக்கரி வீதி, ஜாஜ் வீதி, பாரதிவீதி, பாத்திமா வீதி, கந்தசாமி கோவில் வீதி, உள்துறைமுக வீதி (பகுதி), லாவேந்தர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்ததாகும்.










    «br>








    கழற்சிங்க நாயனார் கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார். பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்க நாயனார் என்பது ராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தகவல். இராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்துஅரசி என்பதும் ராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவு. இடங்கழி நாயனார் "மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை. இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது, 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது." தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு: தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்) தமிழ் மொழியில், தமிழர் கண்ணோட்டத்தில், தமிழர் சிந்தனைகளை உள்வாங்கிய கலைக்களஞ்சியத்தை தமிழ்க் கலைக்களஞ்சியம் எனலாம். இது தமிழின் தமிழ் வளர்ச்சிக் கழகம் முதல் கலைக்களஞ்சியத்தை சிறப்பாக குறிக்கிறது. இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளாக வெளிவந்தது.இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன். திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியர். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார். இவர் திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாகக் அறியவருகின்றது. இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்கள் 75 ஆகும். மயிலாடுதுறையில் பலகாலம் தங்கி இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்த பிள்ளைகள் போலக் கருதி உணவும், இடமும் அளித்து குருகுல முறையில் பாரபட்சமின்றி கல்வி புகட்டினார். கவிதைகள் பாடி சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக்கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்களுக்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர் ஆவர். 'தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் 42ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. விரிவாக இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்துகொள்ள உறுதுணையாக உள்ளது. தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை1876இல் தமது 61வது வயதில் மறைந்தார். இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன. சோமசுந்தர பாரதியார் ச. சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879 - 1959, திசம்பர் 14; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் "நாவலர் சோமசுந்தர பாரதியார்" சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர். சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் ("எட்டப்ப பிள்ளை") - முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் "பாரதி" என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார். நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார். சோமசுந்தர பாரதியார் 1894 (ஏறத்தாழ) ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். இவர் வழியாகச் சோமசுந்தர பாரதியாருக்கு இராசராம் பாரதி (1898 மார்ச் 30 -?), இலக்குமிரதன் பாரதி (1903 பிப்ரவரி 16 -?) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ?) என்னும் மகளும் பிறந்தனர். திருவெட்டாற்றில் 1927 திசம்பர் 1 ஆம் நாள் வசுமதி அம்மையாரை சோமசுந்தர பாரதியார் தனது 48ஆம் வயதில் மணந்தார். இவ்வம்மையாரின் வழியாக மீனாட்சி (1929 பிப்ரவரி 28 - லலிதா (1930 சூலை 27 - ) ஆகிய இரு மகள்களும் பிறந்தனர். சோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழிலாற்றினார். 1920 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார். 1933 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சோமசுந்தர பாரதியார் 1905 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்றுகொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார். மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார். 1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார். 1937 செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25 ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்கு திறந்த மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். 1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார். இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார். 1932 -33 ஆம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16 ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார். இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 சனவரி 26 ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும் 1929 மார்ச் 11 ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன. திராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீபரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது. திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்: சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன. சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை. பின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார். சொற்பொழிவுகள், நூல்கள் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றியதைப் போலவே தமிழ் மாநாடுகள் சிலவற்றில் சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சோமசுந்தர பாரதியார் செயற்பட்டார். அம்மாநாடுகளுள் சில பின்வருமாறு: சோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாகளை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13 ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்றி நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார். சோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது. பகுவியல் (கணிதம்) கணிதத்தை பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் இயற்கணிதம், நேரியல் இயற்கணிதம், எண் கோட்பாடு, சேர்வியல், முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் பகுவியல் ("Mathematical Analysis"), சார்புப்பகுவியல், இடவியல், முதலியவை அடங்கும். வடிவவியல் இவையிரண்டிலும் சேரும். இவைகளில் பகுவியல் என்ற உப இயல் நியூட்டன் தொடங்கிவைத்த நுண்கணிதக்கருத்துகளில் விதையிடப்பட்டு, 17, 18, 19 வது நூற்றாண்டுகளில் ஆய்லர், லாக்ரான்ஜி, கோஷி, வியர்ஸ்ட்ராஸ், காஸ், ரீமான், ஃபொரியர் இன்னும் பலருடைய ஆய்வுகளினால் பெரிய ஆலமரமாக வளர்ந்துவிட்ட ஒரு மிகச்சிறந்த பிரிவு. இத்துறையினுடைய எண்ணப் பாதைகள் இயற்பியல், பொறியியல், இரண்டிலும் ஆழப்புகுந்து, 19 வது நூற்றாண்டின் பிற்பாதியில், அறிவியலில் எந்தப் பிரச்சினையானாலும் அதை சரியானபடி உருவகப்படுத்திவிட்டால் கணிதம் அதைத் தீர்வு செய்துவிடும் என்ற ஒரு நம்பிக்கையை அறிவியலுலகில் அனைவருக்கும் உண்டுபண்ணியது. கணிதம் (Mathematics) எனப்படுவது பொருளாதார செயற்பாடுகளில் , எண்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிவதில், நில அளவையில், வானவியல் நிகழ்வுகளை வரையறுப்பதில் மனிதனுக்குள் எழுந்த துல்லியக் கணக்கீட்டுத் தேவைகள் காரணமாக உருவான ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு விதமான இன்றியமையாத தேவைகள் காரணமாக கணிதத்தில் பின்வரும் நான்கு பெரிய பிரிவுகள் உருவாக்கப்படுகின்றன. அவையாவன: 'எல்லை' அல்லது 'எல்லைப்புள்ளி' என்ற கருத்துதான் பகுவியலின் தொடர்செயல்முறைகளின் வேர்க்கருத்து. ஒரு பறவை வானில் சீராகப் பறக்கும்போது, அல்லது எண்ணை ஊற்றப்படும்போது, அல்லது துப்பாக்கி முனையிலிருந்து வெளிப்பட்ட குண்டு காற்றை ஊடுருவிப் பாயும்போது, ஏற்படும் இயக்கம் தொடரியக்கத்திற்கு நல்ல சான்றுகள். சீராகவும், ஒருவித இடைவெளியில்லாமலும் இருக்கக்கூடியது. எங்கெல்லாம் தொடரியக்கம் உள்ளதோ, அல்லது இன்னும் தத்துவப்படுத்திச் சொல்லப்போனால், எங்கெல்லாம் தொடர் செயல்பாடு காணப்படுகிறதோ அங்கெல்லாம் தனிப்பட்ட எண்கள் 1, 2, 3 .. முதலியவை தகுந்த கணித உருவகமாகாது. எடுத்துக்காட்டாக, ஒரு நேர்கோட்டில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும், அவைகளுக்கு 1,2,3, ..., ஐப்போல தனித்துவம் காணப்படுவதில்லை. 1,2,3, ... என்ற எண்களில் அடுத்தடுத்த எண்களுக்கிடையிலும் நாம் வேறு எண்களை உண்டாக்கி அவைகளைத் தனித்துவப்படுத்தலாம். ஆனால் நேர்கோட்டில் உள்ள புள்ளிகளில் அடுத்தடுத்த புள்ளிகள் என்ற கருத்துக்கே இடம் கிடையாது. இவ்விதம் அடுத்த புள்ளி, அடுத்த நிகழ்வு என்ற கருத்துக்கே இடமில்லாமல் இருப்பதுதான் தொடர் செயல்பாட்டின் இலக்கணம். இதை ஆதாரமாகக் கொண்டுதான் நியூட்டன், லெப்னீட்ஸ் முதலியோர் எல்லை என்ற கருத்தையும் நுண்கணிதம் என்ற கோட்பாட்டையும் படைத்து விரிவாக்கம் செய்தனர். 19வது நூற்றாண்டில் இவையெல்லாவற்றிற்கும் கணிதமரபுக் கேற்றவாறு அஸ்திவாரம் சீர் செய்யப்பட்டு பகுவியல் என்ற பெரிய பிரிவாகப்பரந்து நிற்கின்றது. லாக்ராஞ்சி நுண்கணிதத்தைப் பயன்படுத்தி நிகழ்தகவுப் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்தார். அவருடைய பகுவியக்கவியல் நூல்தான் முதன்முதலில் வடிவங்களில்லாமல் இயக்கியவியல் பிரச்சினைகளை அணுகமுடியும் என்று உலகத்திற்கு காட்டியது. இயக்கவியல் என்பதே மூன்று கார்த்தீசீயன் ஆயங்களும் ஒரு நேர ஆயமும் சேர்ந்த ஒரு நான்கு பரிமாண வெளியில் ஒரு துகளின் இயக்கத்தை பகுத்துக்காட்டும் இயல் தான் என்பது அவருடைய கருத்து. பிற்காலத்தில் கணிதத்தின் வளர்ச்சிக்கு பகுவியல் முக்கிய பங்கு வகித்ததற்கு இவையெல்லாம் அடிகோலிற்று. ஒரு சதுரத்தின் மூலைவிட்டத்தை வடிவமாகத் தீட்டமுடியும். ஆனால் அதை ஒரு முடிவுறு எண்ணிக்கையுள்ள செயல்பாடுகளால் அளக்கமுடியாது. பித்தாகொரஸ் என்ற கிரேக்க அறிஞர் காலத்திலிருந்தே இது தெரியும். இதனுடைய முழு தத்துவமும் 19வது நூற்றாண்டின் பகுவியலுக்கு வித்தாகி நின்றது. கி.மு. 500 ஆம் ஆண்டுகளில் பிதாகரஸ் வழியினைப் பின்பற்றி வந்தவர்கள் முதன் முதலாக பின்ன வடிவில் எழுதவியலாத எண்களைக் கண்டுபிடித்தனர். அத்தகைய எண்கள் விகிதமுறா எண்கள் என்று எடுத்துரைக்கப்பட்டன. விகிதமுறா எண்கள் (Irrational Numbers) எனப்படுவது முடிவுறா மற்றும் சுழல் தன்மையற்ற (Non terminating and recurring) தசம விரிவுடைய எண்களாகும். எனவே, ஒரு விகிதமுறா எண்ணை, விகிதமுறு எண்ணைப் போல p/q (இங்கு p, q ஆகியன முழுக்கள் மற்றும் q ≠ 0) என்று விவரிக்க முடியாது. முழு வர்க்கமற்ற எந்தவொரு மிகைமுழு எண்ணின் வர்க்க மூலமும் விகிதமுறா எண் ஆகும். விகிதமுறா எண்களின் முழு இலக்கணமும் பகுவியலுக்கு அடிப்படை. ஜோசப் ஃவூரியே 1807இல் வெப்பங்கடத்தலைப்பற்றி ஒரு அருமையான ஆராய்ச்சிக்கோட்பாட்டை பிரென்ச் அகாடெமி முன் வைத்தார். இதை மூன்று வல்லுனர்கள் (லாப்லாஸ், லாக்ரான்சி, லெஜாண்டர்) தரம் சோதித்ததின் பேரில் , 1812 இல் 'கிராண்ட் ப்ரைஸ்' என்ற ஒரு உயர்ந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நூல் இயற்பியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வலுவைப்பெற்றது. ஆனால் அதனில் ஒரு புது கணிதக்கருத்தே முக்கிய நீரோட்டமாக இருந்தது. அவருக்கு பரிசை சிபாரிசு செய்த மூன்று வல்லுனர்களும் அந்நூலில் கணிதமரபுப்படி வேண்டிய துல்லியத்தில் முக்கிய ஓட்டைகள் இருப்பதையும் குறிப்பிட்டு, அப்படியிருப்பினும் அக்கோட்பாடு இயற்பியலில் ஆவர்த்தனத்தைச் (Periodicity) சார்ந்த எல்லாப் பிரச்சினைகளிலும் சாதிக்கக் கூடியவைகளை மனதில் கொண்டு அக்கோட்பாட்டினைப் பாராட்டி யிருந்தனர். இதற்குப் பின்னால் வந்த கணிதவியலர்கள் இவைகளை சரிப் படுத்துவதற்காகச் செய்த ஆராய்ச்சிகளனைத்தும் பகுவியலின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தியது. தற்காலத்தில் ஃபொரியர் பகுவியல் என்பதே பகுவியலுக்குள் ஒரு தனிப்பிரிவாகப் பரிமளிக்கும்படி அது விரிந்துள்ளது. பகுவியலின் இருதயத்துடிப்பு கணிதமுறையில் கண்டிப்பு (Rigour)தான். இதை முதன்முதலில் நூற்றுக்கு நூறு கடைப் பிடித்துப் பகுவியலில் மாத்திரமல்லாமல் கணிதம் முழுவதுமே ஒரு மரபாக ஏற்படக் காரணமாக இருந்தவர் காஸ் என்ற மிகப்பெரிய கணிதவியலர். இருபது வயது ஆகுமுன்னரே காஸ் நியூடனின ஈருறுப்புத் தேற்றத்தை முழு எண்ணல்லாத அடுக்குகளுக்கும் நிறுவ முயன்று, மற்றவர்கள் கொடுத்திருந்த நிறுவல்களில் திருத்தமான கண்டிப்பு இல்லாமலிருந்ததைக் கண்டு தானே ஒரு சரியான நிறுவலைக் கொடுத்தார். இந்நிறுவல் பகுவியலின் ஆழ்ந்த கருத்துக்களைச் சார்ந்திருந்தது. இதிலிருந்து ஆரம்பித்தது அவருடைய பகுவியல் ஈர்ப்பு. நியூடன், லெப்னீட்ஸ், ஆய்லர், லாப்லாஸ், லாக்ரான்சி முதலியோரின் ஆய்வுகளில் முடிவுறாச் செயல்பாடுகளின் கண்டிப்புகளில் திருத்தங்கள் செய்து, பகுவியலின் ஒருங்குதல் கோட்பாடுகளின் இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்தார். இவருடைய நூல்களினால் உந்தப்பட்டு பகுவியலின் எண்ணப் பாதைகளிலெல்லாம் புதிய சகாப்தங்கள் படைத்தவர்கள் 19வது நூற்றாண்டின் இயலர்கள் ஏபெல், கோஷி, மற்றும் பிற்காலத்தில் வியர்ஸ்ட்ராஸ், டெடிகிண்ட், ரீமான் முதலியோர். காஸ் படைத்த பற்பல புது கணிதப்பாதைகளில் சிக்கலெண் சார்புகளின் பகுவியலைத் தொடங்கி அதை ஒரு தனிப்பிரிவாகும் அளவுக்கு முக்கியமானது. எண் கோட்பாடு தனிப்பட்ட எண்களைப் பற்றியதுதானாலும், அவைகளைப் பற்றிய ஆழமான தேற்றங்களின் நிறுவல்களில் சிக்கலெண் பகுவியலைப் பயன்படுத்தவேண்டிய தேவை கணிதத்தின் அதிசயங்களில் ஒன்று. இவ்வித அதிசயங்களில் ஆரம்ப காலத்திய ஒன்று டிரிச்லெயின் எண்கோட்பாட்டுத் தேற்றம்: “பொதுக் காரணிகளற்ற இரண்டு முழு எண்கள் a , b யைக்கொண்டு உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு எண்கணிதத் தொடர்ச்சி a, a+b, a+2b, a+3b, … யும் முடிவுறாத அளவில் பெரும எண்களை உள்ளடக்கும்”. formula_1 இது உயர்பெருக்குத்தொடர் எனப்பெயர்பெறும்.இதைப்பற்றிய காஸின் ஆய்வுநூல் பற்பல சார்புகளையும் தொடர்களையும் உயர்பெருக்குத்தொடர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது. ஒருங்குதல் கோட்பாடு என்பதே பகுவியலின் ஒரு முக்கியமான அம்சமானது காசின் இந்த நூலுக்குப் பிறகுதான்.இத்தொடரில் a, b, c, x களுக்கு வெவ்வேறு மதிப்பு கொடுப்பதால் கணிதத்தில் தோன்றும் வெவ்வேறுவகையான சார்புகளும் இதனுடைய தனிக்குறிப்பாகின்றன. மடக்கைத்தொடர், ஸைன், கோசைன் முதலிய முக்கோணவியல்தொடர்கள், வானவியலிலும் இயற்பியலிலும் வரும் பல சார்புகள், எல்லாம் உயர்பெருக்குத்தொடரின் தனிக்குறிப்புகள்தாம். காஸின் ஆய்வுகள் a, b, c, x இன் மதிப்புகளில் என்னென்ன நிபந்தனைகள் விதித்தால் எந்தெந்த சார்புகள் இத்தொடரால் ஒருங்குதலுக்குக் குந்தகமில்லாமல் வரையறுக்கப்படும் என்பதை அலசின. நுண்கணிதத்திலிருந்து தொடங்கிய கருத்துக்களில் வகையீடு, தொகையீடு இரண்டும் விரிவடைந்து பகுவியலில் பெரிய கோட்பாடுகளாகவே வளர்ந்துவிட்டன. இவையிரண்டில் வகையீட்டுச்சமன்பாடுகளின் கோட்பாடுகள் இயற்பியல், வானவியல் பயன்பாடுகளின் தேவைகளால் வளர்ந்துகொண்டேவந்தது. ஆனால் தொகையீடு தத்துவத்தின் முழுவிளக்கங்கள் பகுவியலின் உள்ளுக்குள்ளேயே கணிதத்தின் கண்டிப்புகளுக்காகத் தேவைப்பட்டது. ரீமான், லெபெக் இருவரும் இரு பெரிய கோட்பாடுகளைப்படைத்து பகுவியலின் தொடுவானத்தை பெரிதும் விரிவாக்கினர். தொகையீட்டுச்சமன்பாடுகள் இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்வுசெய்யப்பட்டு அதிலிருந்து முளைத்ததே ஹில்பர்ட்டின் உருவாக்கமான சார்புப் பகுவியல். பகுவியல் (கணிதம்) இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல், சிற்பம், கட்டிடக்கலை முதலான உலகின் பல துறைகளில் இன்றியமையாதக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. கணிதத்தைப் பிற துறைகளில் பயன்படுத்துவதைக் குறிக்கும் பயன்பாட்டுக் கணிதம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்கவும் அவற்றை உபயோகப்படுத்தவும் உதவுகின்றது. புள்ளியியல், ஆட்டக் கோட்பாடு போன்ற கணிதத்துறைகள் பயன்பாட்டுக் கணிதத்தின் மூலம் உருவானவையாகும். சேர்வியல் (கணிதம்) கணிதத்தை பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் இயற்கணிதம், நேரியல் இயற்கணிதம், எண் கோட்பாடு, சேர்வியல், முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் பகுவியல், சார்புப்பகுவியல், இடவியல், முதலியவை அடங்கும். வடிவவியல் இரண்டிலும் அடங்கும். இவைகளில் சேர்வியல் (Combinatorics), என்ற பிரிவின் அடிப்படைக் கருத்துகள் மனிதனின் மூளையில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்ததாகக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதி மனிதன் தன் மூக்கைத் தன் ஒரு கையால் தொடுவதற்கு இரண்டு வழிகள் உண்டு என்று கணக்கிட்ட நாட்களிலிருந்து சேர்வியல் உண்டாகிவிட்டது! கணித வல்லுனர்கள் அத்தனைபேருக்குமே சேர்வியலில் ஒரு பங்கு உண்டு. இருந்தாலும் காலப்போக்கில் வருங்காலத்திற்கே சேர்வியலுக்கு வழிகாட்டிகளாக இருந்ததாகச் சிலரைச் சொல்லமுடியும். பதினேழாவது நூற்றாண்டிலேயே லெப்னிட்ஸ் (Gottfried Leibniz) சேர்வியலுக்கு வித்திட்டார். பதினெட்டாவது நூற்றாண்டில் ஆய்லர் அதைப் பேணி வளர்த்தார். ஆனாலும் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையில் இயற்கணிதத்தின் ஓர் அத்தியாயமாகத்தான் சேர்வியல் இருந்தது. நியூட்டன் ஈருறுப்புத் தேற்றத்தை நிறுவிய நாட்களிலிருந்து பள்ளிக் கணக்குகளில், வரிசைமாற்றம் (Permutation), சேர்வு (Combination) என்ற இரண்டு செயல்முறைகள் அடிப்படை எண்கணித முறைகளாகப் கற்பிக்கப் படுகின்றன. இவையிரண்டினுடைய பற்பல உயர்ந்த மேம்பாடுகள் தான் சேர்வியல் என்ற இன்றைய துணைப்பிரிவு இயல். இருபதாவது நூற்றாண்டில் ஸ்ரீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் போல்யா, ஆர். பி. ஸ்டான்லி, ஜி. சி. ரோடா, பால் ஏர்டோசு, ஆல்ப்ஃரெட் யங் இன்னும் பலரின் ஆய்வுகளினால், கணிதத்தின் ஒரு துணை இயலாகவே மிளிர்ந்தது. ஒரு செயலை எத்தனை வழிகளில் செய்யலாம் என்ற கேள்வி எழும்போதெல்லாம் சேர்வியலின் எண்ணப் பாதைகளில் செல்கிறோம். எடுத்துக்காட்டாக சில மாதிரிப் பிரச்சினைகள்: இன்று சேர்வியலுக்குள்ளேயே பலவித உப இயல்கள் ஏற்பட்டுவிட்டன. எடுத்துக்காட்டாக சில: வீனஸ் வில்லியம்ஸ் வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams, பிறப்பு- ஜூன் 17, 1980, கலிபோர்னியா) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. இவரே நடப்பு விம்பிள்டன் சம்பியனாவார். ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார். ரொஜர் பெடரர் ரோஜர் ஃபெடரர் (பிறப்பு - ஆகத்து 8, 1981) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிசு வீரர். டென்னிசு வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராவார். 19 கிராண்ட் சிலாம் எனப்பெறும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிக அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர் என்ற புகழுக்குரியவராவார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும். பிப்ரவரி 19 அன்று மீண்டும் முதல் இடம் பிடிக்கும் போது அதிக வயதில் முதல் இடம் பிடித்த வீர்ர் என அறியப்படுவார். (ஏடிபி அப்போது தான் தர வரிசையை வெளியிடும்) இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற பீட் சாம்ப்ரசின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும். அதாவது 2004 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட்சிலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2005 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சிலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடியுள்ளார். இவ்வரியசெயல்களால் அவரை டென்னிசு உலகின் முடிசூடா மன்னனாக விளங்கச் செய்கின்றன. பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ' என்றும் அவர் புகழப்படுகிறார். பெடரர் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரின் அருகில் உள்ள பென்னிஞ்சேன் ஊரில் சுவிட்சர்லாந்து குடிமக்களாகிய ராபர்ட் பெடரெர் - லிநெட் டு ராண்ட் (தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்)தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெடரெர் சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் பிரான்சிய-இடாய்ச்சுலாந்திய எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள முன்சென்சுட்டைன், பேசலுக்கு அருகிலுள்ளது, புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். பெடரெர் சுவிசு-இடாய்ச்சு, இடாய்ச்சு, பிரரன்சியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். அனைத்து சுவிட்சர்லாந்து ஆண் குடிமக்களைப் போலவே ரோச்யர் பெடரெரும் சுவிட்சர்லாந்து படைத்துறையில் (இராணுவத்தில்) பணியாற்றினார். ஆயினும் 2003-ஆம் வருடம் அவரது முதுகு வலியின் காரணமாகப் படைப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. பெடரெர், முன்னாள் பெண்கள் டென்னிசுக் கூட்டமைப்பின் ஆட்டக்காரியான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் புரிந்துள்ளார். இருவரும் 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாட சென்ற பொது சந்தித்துக் கொண்டனர். வாவ்ரிநேக் 2002-ஆம் ஆண்டு கால் காயம் காரணமாக ஒய்வு பெற்றார். அப்போதிலிருந்து பெடரெரின் பொதுத் தொடர்பு மேலாளராக இருந்து வருகிறார். இருவரும் ஏப்பிரல்-11,2009, அன்று நண்பர்களும் குடும்பத்தாரும் சூழ பேசலில் மணம் புரிந்தனர். மிர்கா சூலை-23,2009, அன்று, மைலா ரோசு, சார்லின் ரிவா எனும் இரட்டை பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார். பெடரெர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் அறநிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட எய்ட்சு விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன்பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆண்டி ராடிக், லெயுட்டன் ஹெவிட், கிம் கிளைஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. பெடரெர் விம்பிள்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை ஒரே வருடத்தில்(1998) வென்றார். ஒற்றையர் பட்டத்தை இரக்லி லபத்ஃசு எனும் வீரரை 6-4,6-4 எனும் தொகுப்பு கணக்கில் வென்றார். இரட்டையரில் ஆலிவர் ரோகசுடன் இணண சேர்ந்து ஆண்டி ராம்- மைக்கேல் லொட்ற இணையை 6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்றனர். மேலும் அவ்வாண்டு அமெரிக்க ஒப்பனிலும் இளநிலை போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்றார். இறுதி ஆட்டத்தில் டேவிட் நல்பாந்தியனிடம் 3-6,5-7 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார்.மேலும் 4 ITF இளநிலை ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அதில் மிகவும் புகழ் பெற்ற ஆரஞ்சு கிண்ணமும்(Orange Bowl) அடங்கும். அதன் இறுதிப் போட்டியில் அவர் கில்லர்மோ கொரியா-வை 7-5,6-3 என்ற தொகுப்பு கணக்கில் வென்றார். 1998-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் உலக அளவில் இளநிலை பிரிவில் முதன்மை ஆட்டக்காரராக முடித்தார். தொழில் முறை ஆட்டக்காரராக ரோஜெர் பெடரெர் பங்கேற்றது 1998-இல். அவ்வாண்டு Gstaad-இல் நடைபெற்ற போட்டியில் லூகாசு அர்னால்ட் கேர்-ஐ சந்தித்தார். முதல் போட்டியான அதில் 4-6,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோல்வி அடைந்தார். ரோஜெர் பெடரெர் எட்டிய முதல் இறுதிப் போட்டி மார்செஇல் ஓப்பன் (2000-ஆம் வருடம்) போட்டியாகும். இறுதி ஆட்டத்தில் சக சுவிட்சர்லாந்து வீரரான மார்க் ரோசட்டிடம் 6-2,3-6,6-7(5) என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். 2001-ஆம் ஆண்டு மார்டினா ஃகிங்கிச்சுடன் இணை சேர்ந்து ஃகாப்மேன் கோப்பையை சுவிட்சர்லாந்து சார்பில் வென்றார். அவரின் முதல் தொழில்முறை தனிநபர் கோப்பை 2001-ஆம் ஆண்டு மிலன் உள்விளையாட்டரங்க போட்டியில் பெற்றார். அவர் இறுதி ஆட்டத்தில் சூலியன் போட்டேரை 6-4,6-7(7),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். 2002-ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். விம்பிள்டனில் பீட் சாம்ப்ராசை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இக்காலகட்டத்தில் அவர் தகுதி பெற்ற மிக முக்கியமான இறுதி சுற்று ஆட்டம் 2002-ஆம் வருட மியாமி மாசுட்டர்சு (கடின ஆடுகளம்) போட்டியாகும். அதில் அவர் அமெரிக்க நாட்டவரான ஆந்த்ரே அகாசியிடம் 3-6,3-6,6-3,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். மேலும் அவ்வாண்டு ஃகேம்பர்க் மாசுட்டர்சு (களிமண் ஆடுகளம்) போட்டியில் மாரட் சபினை 6-1,6-3,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். அப்போட்டியில் வென்றதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் முதல் 10-க்குள் புகுந்தார். பெடரெர் இக்கால கட்டத்தில் ஒற்றையர் 10 இறுதி ஆட்டங்களில் பங்கேற்று 4-இல் வெற்றியும் 6-இல் தோல்வியும் கண்டார். 2003-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் தனது முதல் கிராண்டு சிலாம் பட்டத்தை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மார்க் பிலிப்போசிசை 7-6(5),6-2,7-6(3) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். பெடரெர் தனது முதல் மற்றும் ஒரே இரட்டையர் மாசிட்டர்சு பட்டத்தை அவ்வாண்டு நடைபெற்ற மியாமி மாசிட்டர்சு-1000 போட்டியில் வென்றார். அதில் அவர் மாக்ஃசு மிர்நியுடன் இணை சேர்ந்து ஆடினார். மேலும் அவ்வாண்டு ரோம் மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டியையும் எட்டினார். 2003-ஆம் வருடம் ரோச்யர் பெடரெர் ஒன்பது ஏ.டி.பி இறுதிப் போட்டிகளை எட்டி அதில் ஏழு போட்டிகளை வென்றார். அவற்றுள் துபாய்-500, வியன்னா-500 போட்டிகளும் அடங்கும். மேலும் வருடக் கடைசி ஏ.டி.பி போட்டியை ஆந்த்ரே அகாசியைத் தோற்கடித்து வென்றார். 2004-ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரே ஆண்டில் மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். இதற்கு முன் இச்சாதனையை மாட்ஃசு விலாண்டர் 1988-ஆம் ஆண்டு எட்டினார். 2004-ஆம் ஆண்டு ஆத்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் மாரட் சபினை 7-6(3),6-2,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். அவ்வாண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 4-6,7-5,7-6(3),6-4 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் லெயுட்டன் ஃகெவிட்டை 6-0,7-6(3),6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து பட்டங்களைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு மூன்று ஏடிபி 1000 பட்டங்களையும் துபாய் ஏடிபி-500 பட்டத்தையும் ஆண்டிறுதி ஏடிபி பட்டதையும் கைப்பற்றினார். 2005-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் முதல் இரண்டு கிராண்டு சிலாம் பட்டங்களின் இறுதி போட்டிகளை எட்டத் தவறினார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதிப் போட்டியில் மாரட் சபினிடமும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடமும் வீழ்ந்தார். ஆயினும் புல்தரை ஆடுகளத்தில் தன்னுடைய முன்னாண்மையை விம்பிள்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றதன் மூலம் நிறுவினார். அதில் ஆண்டி ராடிக்கை 6-2,7-6(2),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆந்த்ரே அகாசியை 6-3,2-6,7-6(1),6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு 4 ஏடிபி மாசிட்டர்ஸ்-1000 பட்டங்களையும், 2 ஏடிபி-500 பட்டங்களையும் வென்றார். ஆனால் ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியில் டேவிட் நல்பந்தியனிடம் தோல்வியுற்றார். 2006-ஆம் ஆண்டு மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். மேலும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். அதில் ரபேல் நடாலிடம் 1-6,6-1,6-4,7-6(4) என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். இருவரும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்தனர். அதில் ரோஜெர் பெடரெர் 6-0,7-6(5),6-7(2),6-3 என்ற தொகுப்புக் கணக்கில் வெற்றி கண்டார். இவ்வருடம் தான் பெடரேருக்கும் நடாலுக்கும் இடையேயான போட்டாபோட்டி வலுப்பெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மார்க்ஸ் பாக்தாதிசை 5-7,7-5,6-0,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 6-2,4-6,7-5,6-1 என்ற தொகுப்புக் கணக்கிலும் வென்று பட்டங்களைக் கைப்பற்றினார். அவ்வாண்டு 6 ஏடிபி மாஸ்டர்ஸ்-1000 இறுதிப் போட்டிகளை எட்டினார். அவற்றில் 4 கடின ஆடுகளப் போட்டிகளை வென்றார். 2 களிமண் ஆடுகள இறுதிப் போட்டிகளை ரபேல் நடாலிடம் தோற்றார். மேலும் ஒரு ஏடிபி-500 போட்டியையும் (டோக்யோ) ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியையும்(மூன்றாம் முறையாக) வென்றார். 2007-ஆம் ஆண்டு 4 கிராண்டு சிலாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டி அவற்றுள் மூன்றை வென்றார். ஆத்திரேலிய ஓப்பனில் பெர்னாண்டோ கோன்சாலேசை 7-6(2),6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கிலும் விம்பிள்டனில் ரபேல் நடாலை 7-6(7),4-6,7-6(3),2-6,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூ.எசு. ஓப்பனில் நோவாக் சோகோவிச்சை 7-6(4) ,7-6(2),6-4என்ற தொகுப்பு கணக்கிலும் வெற்றி கண்டார். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6-3,4-6,6-3,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் இவ்வாண்டு 5 ஏடிபி மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டிகளை எட்டி அவற்றில் இரண்டை(ஃகாம்பர்கு, மாட்ரிட்) வென்றார். துபாய் ஓப்பன் போட்டி மற்றும் ஆண்டிறுதி ஏடிபி போட்டிகளையும் வென்றார். 2008-ஆம் வருடம் ரோஜர் பெடரர் ஒரே ஒரு கிராண்ட் ஸ்லாம் கோப்பையை மட்டுமே கைப்பற்றினார். அது யூ.எசு. ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை 6-2,7-5,6-2 என்ற தொகுப்பு கணக்கில் தோற்கடித்து வென்றார். இவ்வாண்டு பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் ரபேல் நடாலிடம் முறையே 6-1,6-3,6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் 6-4,6-4,6-7(5),6-7(8),9-7 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் நோவாக் சோகொவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் இரண்டு ஏடிபி-1000 இறுதி ஆட்டங்களில் நடாலிடம் தோல்வியுற்றார். ஆயினும் இரண்டு ஏடிபி-250 கோப்பைகளை (எசுட்டோரில், ஃகேல்) கைப்பற்றினார். ஒரு ஏடிபி-500 கோப்பையை பேசல் போட்டியில் கைப்பற்றினார். இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சக நாட்டவரான தனிசுலாசு வாவ்ரின்காவுடன் இணண சேர்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 2009-ஆம் வருடம் ரோஜெர் பெடரர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றினார். பிரெஞ்சு ஒப்பன் இறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கை 6–1, 7–6(1), 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 5–7, 7–6(6), 7–6(5), 3–6, 16–14 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து கோப்பைகளைக் கைப்பற்றினார். மேலும் ஆஸ்திரேலிய ஒப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 7–5, 3–6, 7–6(3), 3–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூ.எஸ். ஒப்பன் இறுதிப் போட்டியில் டெல் போட்றோவிடம் 3–6, 7–6(5), 4–6, 7–6(4), 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். மற்றும் இரண்டு கோப்பைகளையும் இவ்வருடம் பெடரர் கைப்பற்றினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ்(களிமண் ஆடுகளம்) இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை 6–4, 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்(கடின ஆடுகளம்) இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6–1, 7–5 என்ற தொகுப்புக் கணக்கிலும் வெற்றிகொண்டு கோப்பைகளைக் கைப்பற்றினார். இருப்பினும் பேசல் கோப்பையில் ஜோகொவிச்சிடம் 6–4, 4–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். 2010-ஆம் வருடம் பெடரர் மேலும் பல சாதனைகளையும் டென்னிசு மைல்கல்களையும் எட்டினார். இவ்வாண்டு ஆஸ்திரேலிய ஒப்பன் கோப்பையை ஆண்டி முர்ரேவை 6–3, 6–4, 7–6(11) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். ஆனால், பிரெஞ்சு ஒப்பன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறினார். 2004-பிரெஞ்சு ஒப்பனுக்கடுத்து இம்முறையே கிராண்ட் சலாம் போட்டியில் அரையிறுதியை எட்டாமல் வெளியேறினார். இதற்குள் 23 கிராண்ட் சலாம் போட்டிகளில் தொடர்ச்சியாக அரையிறுதிகளை எட்டியுள்ளார். இருப்பினும் தனது 700-வது டென்னிஸ் போட்டியையும் 150-வது களிமண் ஆடுகள போட்டியையும் வென்றார். பிரெஞ்சு ஒப்பன் காலிறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கிடம் 3–6, 6–3, 7–5, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விம்பிள்டனிலும் காலிறுதியோடு தோற்று வெளியேறினார். தாமஸ் பெர்டிச்சிடம் 6–4, 3–6, 6–1, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். தனது 200-வது கிராண்ட் சலாம் தனிநபர் போட்டியை வென்றாலும் காலிறுதியில் தோற்றதால் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒருவாறாக அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறிய அவர் முன்னணி வீரரான செர்பியாவின் நொவாக் சோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.மேலும் மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6–4, 7–6 என்ற தொகுப்புக் கணக்கிலும் டொராண்டோ மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடமும் தோல்வியுற்றார். ஆனால் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கோப்பையை வென்றார். அதன் பின் பெடரர் ஒரு ஏடிபி-250,ஒரு ஏடிபி-500 கோப்பைகளை வென்றுள்ளார். இதன் மூலம் 64 பட்டங்கள் வென்றிருந்த பீட் சாம்ப்ராசின் சாதனையை விஞ்சினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியுற்றார். பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அரை இறுதிப் போட்டியில் கைல் மான்பில்சிடமும் தோற்றார். ஆண்டிறுதி ஏடிபி கோப்பை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை 6-3,3-6,6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவரது 66-வது வெற்றிக் கோப்பையாகும். 2012 ஆண்டின் விம்பிள்டன் ஆட்டத்தில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற தொகுப்புக் கணக்கில் எடுத்துth தன்னை எதிராக ஆடிய ஆண்டி முர்ரேயைத் தோற்கடித்தார். 2012 இல் இவர் பெற்ற இந்த வெற்றி அவரது ஏழாவது விம்பிள்டன் பட்டமாகும். இப்பட்டத்தினால் டென்னிசு ஆட்டக்காரர்களின் உலகத்தரப் பட்டியலில் முதலாம் இடத்தை தொடர்ந்து 286 ஆவது வாரமாகத் (ஜூலை 8 ஆம் தேதியில் தொடங்கும் வாரம்) தக்கவைத்துக் கொண்டுள்ள பெருமைக்குரியவராகிறார். 2017 ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். பெடரர் எனும் டென்னிஸ் நாயகனைத்தாண்டி அவர் ஒரு இணையிலா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார்,உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு,நெற்றியில் ஒரு முத்தம். பின்னர் அவர் ஆடும் போட்டியை காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்கு கூட போகாமல் அவளுக்கு,அவளின் தோழிகளுக்கு கையெழுத்து போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள்,எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்து விட்டு தான் களத்துக்கு போகிறார். விம்பிள்டன் கோப்பை விம்பிள்டன் பெருவெற்றி வரிப்பந்தாட்டப் போட்டிகள் டென்னிசு வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். 1877-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடர், ஆண்டுதோறும் சூன் மாதக்கடைசியில் தொடங்கி சூலையில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிராண்ட் சிலாம்/பெருவெற்றிப் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடினதரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் சிலாம் போட்டித் தொடராக உள்ளது. ஆண்டி முர்ரே (ஐக்கிய இராச்சியம்) மற்றும் செரீனா வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர் 2016-க்கான விம்பிள்டன் வாகையர்களாவர். விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது. ஐந்து முதன்மை நிகழ்வுகள், ஐந்து இளையோர் நிகழ்வுகள் மற்றும் ஐந்து அழைப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக விம்பிள்டன் உள்ளது. ஐந்து முதன்மை நிகழ்வுகளும், பங்குபெறும் வீரர்/வீராங்கணைகளின் (இரட்டையர் போட்டிகள் எனில் அணிகளின்) எண்ணிக்கை பின்வருமாறு: உ்உம்பமுஇஉமதநுஇமுஉம்பம்பம்பம ஐந்து இளையோர் போட்டிகளும், அவற்றில் பங்கேற்கும் நபர்களின் / அணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு: இந்நிலையில் கலப்பு இரட்டையர் போட்டி நடத்தப்பெறுவதில்லை. ஐந்து அழைப்பு நிகழ்வுகளும், அவற்றில் பங்குபெறும் இணைகளும் பின்வருமாறு: ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் "5 கணங்களில் சிறந்தது" முறையிலும், ஏனைய அனைத்தும் "3 கணங்களில் சிறந்தது" முறையிலும் நடத்தப்பெறுகிறது. ஆடவருக்கான விம்பிள்டன் கோப்பை 18.5 அங்குல உயரமும் (தோராயமாக 47 செமீ) 7.5 அங்குல விட்டமும் (தோராயமாக 19 செமீ) கொண்டது. இக்கோப்பை அனைத்து இங்கிலாந்து கழகத்தின் சொத்தாகும்; அது அவர்களது அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டு வாகையருக்கும் நான்கில் மூங்கு பங்கு அளவான கோப்பை வழங்கப்படும் (உயரம் 13.5 அங்குலம்). மகளிருக்கு 18.75 அங்குல (தோராயமாக 48 செமீ) விட்ட அளவுடைய ஸ்டெர்லிங் வெள்ளித் தட்டு பரிசாக வழங்கப்படுகிறது. இது "வீனஸ் ரோஸ்வாட்டர் தட்டு" என்ற பெயரில் வழங்கப்பெறுகிறது. வாகையர் நான்கில் மூன்று பங்கு அளவுடைய தட்டினைப் பெறுவர். ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வாகையர்களுக்கு வெள்ளிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்படுகின்றன. மற்ற பெருவெற்றித் தொடர்களைப் போலன்றி, விம்பிள்டனில் இரட்டையர் பிரிவில் இருவருக்கும் தனித்தனியே கோப்பைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் இறுதிப் போட்டியில் தோற்றோருக்கு வெள்ளித் தட்டுகள் வழங்கப்படும். கோப்பைகள் அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகத் தலைவரால் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு விம்பிள்டன் பெருவெற்றித் தொடரில் ஆடவர் மற்றும் மகளிருக்கான பரிசுத்தொகை முதன்முறையாக ₤2,000,000-ஐ எட்டியது. ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் இணை ₤350,000-ஐப் பெறுவர்; இது 2015-ஐக் காட்டிலும் ₤10,000 அதிகமாகும். கலப்பு இரட்டையர் பரிசுத் தொகை ₤100,000 ஆகும். மொத்த பரிசுத் தொகையான ₤28,100,000 ஆனது 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 5% அதிகமாகும். விம்பிள்டனில் ஏடிபி (ATP) மற்றும் டபிள்யூடிஏ (WTA) ஆகியவற்றுக்கான தரவரிசைப் புள்ளிகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. தற்போது கீழ்க்காணும் வகையில் தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. கிளாஸ்கோ கிளாசுக்கோ, கிளாஸ்கோ ("Glasgow") இசுக்கொட்லாந்திலுள்ள மிகப் பெரிய நகரமும் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகக்கூடிய மக்கள்தொகையுள்ள நகரமுமாகும். விக்டோரியா காலத்தில் பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது. இப்பொழுது ஐரோப்பாவின் முதன்மையான இருபது வணிக நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 3,395 நபர்களாக இருந்தது. இசுக்காத்திய மேற்கு மத்திய தாழ்நிலங்களில் கிளைடு ஆற்றங்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நகர மக்கள் கிளாசுவேனியர்கள் எனப்படுகின்றனர். கிளைடு ஆற்றங்கரையில் சிறிய குடியிருப்பாகத் துவங்கி இன்று பிரித்தானியாவின் மிகப்பெரும் கடற் துறைமுகங்களில் ஒன்றாக கிளாசுக்கோ விளங்குகின்றது. பேராயரிடமாகவும் பின்னர் அரச சிற்றூராகவும் இருந்த கிளாசுக்கோவில் கிளாசுக்கோ பல்கலைக்கழகம் 15ஆவது நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து நகர வளர்ச்சி விரைவாக நடைபெற்றது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் வழியாக பிரித்தானியாவின் வணிகம் பிரித்தானிய அமெரிக்காவிற்கும் (வட அமெரிக்கா) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடைபெற இத்துறைமுக நகரம் முக்கியப் பங்காற்றியது. தொழிற்புரட்சியை அடுத்து இந்த நகரத்தின் மக்கள்தொகையும் பொருளியல் நிலையும் வளர்ச்சியுற்று வேதிப்பொருட்கள், துணிகள் மற்றும் பொறியியல் நுட்பங்களுக்கு உலகின் சிறந்த மையமாக உருவானது. குறிப்பாக, கப்பல் கட்டுதல், கடல்வழிப் பொறியியல் சிறப்பாக நிலைபெற்று புகழ்பெற்ற கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. ஐரோப்பாவின் முதல் பத்து நிதி மையங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இசுக்கொட்லாந்தின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமையகம் கிளாசுக்கோவில் தான் அமைந்துள்ளது. உலகில் மிகவும் வாழத்தகுந்த இடங்களின் வரிசையில் 57வது இடத்தில் உள்ளது. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்போட்டிகளை கிளாசுக்கோ ஏற்று நடத்துகின்றது. காற்பந்தாட்டம் கிளாசுக்கோவில் பரவலாக விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. கிளாசுக்கோ தற்போதுள்ள இடத்தில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருப்பு இருந்து வந்துள்ளது. கிளைடு ஆற்றின் மேற்பகுதியில் மொலென்தினார் பர்ன் சிற்றோடையுடன் கலக்குமிடத்தில் ஆறாம் நூற்றாண்டில் புனிதர் முங்கோ தேவாலயமொன்றை அமைத்திருந்தார். கிளாசுக்கோவிலிருந்து 15 மைல்கள் தொலைவில் அமைந்த டம்பர்டனைத் தலைநகராகக் கொண்டிருந்த இசுட்ராத்கிளைடு இராச்சியம் 9வது நூற்றாண்டில் மற்ற பகுதிகளுடன் இணைந்து இசுக்காட்லாந்து இராச்சியம் உருவானது. இசுகாட்லாந்தின் இரண்டாவது பெரிய பேராய பீடமாக கிளாசுக்கோ நகரம் வளர்ந்தது. 10வது, 11வது நூற்றாண்டுகளில் இந்த பேராயப் பீடத்தை இசுகாட்லாந்தின் முதலாம் டேவிடும் பேராயர் ஜானும் சீரமைத்த பிறகு கிளாசுக்கோ மேலும் முதன்மை பெற்றது. 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களுக்குப் பின்னர், இசுக்காட்லாந்திற்கு புதிய பிரித்தானியப் பேரரசின் விரிந்த சந்தைக்கு அணுக்கம் கிட்டியது; இந்த உலகளாவிய வணிக வாய்ப்பிற்கான முதன்மை வாயிலாக கிளாசுக்கோ அமைந்தது. அமெரிக்காக்களுக்குடனான சர்க்கரை, புகையிலை, பருத்தி மற்றும் ஆக்கப்பட்ட பொருட்களுக்கான வணிகம் வளர்ந்தது. அமெரிக்காவிலிருந்து புகையிலை இறக்குமதி செய்து செல்வந்தர்களான வணிகர்கள் ("வர்ஜினியா டான்சு") கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் ஆழ்நீர் துறைமுகமாக கிளாசுக்கோத் துறைமுகம் கட்டினர். 18வது நூற்றாண்டில் பிரித்தானியப் புகையிலை வர்த்தகத்தில் பாதிக்கும் மேற்பட்டு இங்குதான் நிகழ்ந்தது. உச்சநிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் புகையிலை இறக்குமதி செய்யப்பட்டது. 1821இல் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தலைநகர் எடின்பர்கை விடக் கூடுதலாக இருந்தது. 1800இல் உலகின் முதல் நகராட்சி நிர்வாகத்தில் அமைந்த காவல்துறையாக கிளாசுக்கோ நகரக் காவல் உருவானது. 1878இல் "கிளாசுக்கோ நகர வங்கி" வீழ்ந்தபோதும் 19வது நூற்றாண்டு வரை பொருளியல் வளர்ச்சி குறையவில்லை. பேரரசின் இரண்டாவது நகரமாக பிரித்தானிய கடற்வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கை வகித்தது. உலகின் அனைத்து இடம்பெயர் பொறிகளில் காற்பகுதி இங்கு தயாரானது. தவிரவும் கப்பல் கட்டுதல், பொறியியல், தொழிற்சாலை பொறிகள், பாலம் கட்டமைப்பு, வேதிப் பொருட்கள், வெடிமருந்துகள், நிலக்கரி வணிகத்தில் முதன்மை பெற்றது. ஆடை தயாரிப்பு, கம்பளத் தயாரிப்பு, தோல் பதனிடுதல், அறைகலன் ஆக்கம், உணவு, பானம் மற்றும் புகைக்குழல் தயாரிப்புகளில் முக்கிய வணிக மையமாக விளங்கியது. அச்சுத்துறையிலும் நூல் வெளியீட்டுத் துறையிலும் முன்னேற்றம் கண்டது. கப்பல், வங்கிகள், காப்பீடு மற்றும் பிற தொழில்சார் சேவைகள் விரிவடைந்தன. கிளைடு ஆற்றங்கரையில் இசுகாட்லாந்தின் மேற்கு மையப் பகுதியில் (இசுட்ராத்கிளைடு) கிளாசுக்கோ அமைந்துள்ளது. இந்நகரின் ஊடாகப் பாயும் மற்றொரு ஆறு "கெல்வின் ஆறு" ஆகும். இந்த ஆற்றினை ஒட்டியே வில்லியம் தாம்சனுக்கு "கெல்வின் பிரபு" என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் வெப்பநிலையை அளவிடும் அறிவியல் அலகு ஆயிற்று. கிளாசுக்கோ இசுக்காட்லாந்தின் 32 உட்கோட்டங்களில் ஒன்றாக உள்ளது. 1950களில் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தனது உச்சமாக 1,089,000 எட்டியது. இக்காலத்தில் உலகின் மிகுந்த மக்கள் நெருக்கமுள்ள நகரங்களில் ஒன்றாக விளங்கியது. 1960களில் புதிய ஊர்களின் வரவால் மக்கள்தொகை குறையத் தொடங்கியது. தவிரவும் 20ஆம் நூற்றாண்டில் நகரத்தின் எல்லைகள் இருமுறை சீரமைக்கப்பட்டன. நகராட்சி எல்லைகளையும் மீறி புறநகர்பகுதிகளில் நகரம் வளர்ந்து வருகிறது. கிளாசுக்கோவின் மக்கள்தொகை இருவகையில் வரையறுக்கப்படுகின்றன: கிளாசுக்கோ நகரமன்ற பகுதி மற்றும் அனைத்துப் புறநகர்களையும் உள்ளடக்கிய பெரும் கிளாசுக்கோ நகரியப் பகுதி. கிளாசுக்கோவின் ஆயுள் எதிர்பார்ப்பு 72.9 ஆண்டுகள் ஆகும்; இது ஐக்கிய இராச்சியத்திலேயே மிகவும் குறைந்ததாகும். 2008இல், உலக சுகாதார அமைப்பின் அறிக்கை யொன்று ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு கிளாசுக்கோவின் கால்டன் பகுதியில் மிகவும் குறைந்த 54ஆகவும் அடுத்திருந்த லென்சீ பகுதியில் 82 ஆகவும் சமநிலையற்று இருந்ததை சுட்டிக்காட்டியது. கிளாசுக்கோவில் பெரும் நகரியப் போக்குவரத்து அமைப்பு உள்ளது; இதனை "போக்குவரத்திற்கான இசுட்ராத்கிளைடு கூட்டாளிகள்" (SPT) மேலாண்மை செய்கிறது. நகரத்தில் பல பேருந்து சேவைகள் உள்ளன; தனியார்மயமாக்கலுக்குப் பிறகு இவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. முதன்மை பேருந்து முனையமாக "புச்சானன் பேருந்து நிலையம்" செயலாற்றுகிறது. ஐக்கிய இராச்சியத்திலேயே இலண்டனுக்கு அடுத்தநிலையில் மிகவும் விரிவான நகரியத் தொடர்வண்டி அமைப்பையும் கிளாசுக்கோ கொண்டுள்ளது. பெரும்பாலான தொடர்வண்டித் தடங்கள் பிரித்தானிய ரெயில் நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இசுக்காட்லாந்தினுள் ஓடும் அனைத்து தொடர்வண்டிகளும் இசுக்காட்டிய அரசின் உரிமம் பெற்ற "பர்ஸ்ட் இசுகாட்ரெயிலால்" இயக்கப்படுகின்றன. "கிளாசுக்கோ சென்ட்ரல் நிலையமும்" "கிளாசுக்கோ குயீன் இசுட்ரீட்டு தொடர்வண்டி நிலையமும்" முதன்மையான முனையங்களாகும். இலண்டன் ஈசுட்டன் நிலையத்திலிருந்து தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மேற்கு கடலோர முதன்மைத் தடம் கிளாசுக்கோ சென்ட்ரலில் முடிகிறது; இங்கிலாந்திற்கான அனைத்து சேவைகளும் இந்த நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன. இசுகாட்லாந்திற்கான பெரும்பாலான சேவைகள் மற்ற நிலையமான குயீன் இசுட்ரீட்டு நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. நகரத்தின் நகர்புறத் தொடரமைப்பு கிளைடு ஆற்றின் இருபுறமுமாக பிரிவுபட்டுளது; இவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள கிராசுரெயில் கிளாசுக்கோ திட்டம் இசுகாட்டிய அரசின் நிதி வழங்கலுக்காகக் காத்திருக்கிறது. நகர்புற தொடர்வண்டிகளைத் தவிர எஸ்பிடி கிளாசுக்கோ சப்வேவையும் இயக்குகிறது. ஐக்கிய இராச்சியத்தில் முழுமையும் புவிக்கடியில் இயங்கும் விரைவுப் போக்குவரத்து அமைப்பாக கிளாசுக்கோ சப்வே விளங்குகிறது. கிளாசுக்கோவின் இருபுறங்களுக்குமிடையே இயக்கப்பட்டு வந்த படகுப் போக்குவரத்து பாலங்களும் நீரடி துளைவழிகளும் அமைக்கப்பட்ட பிறகு தமது முதன்மையை இழந்துள்ளன. உலகின் கடைசி துடுப்பு நீராவிக் கப்பல் சேவையான "பிஎஸ் வேவர்லி" கிளாசுக்கோ நகர மையத்திலிருந்து பொழுதுபோக்குக்கான கடற்பயணங்களை மேற்கொள்கிறது. நகரத்தில் இன்றும் செயல்படும் துறைமுகத் துறையாக கிங் ஜார்ஜ் V டாக் பீல் குழுமத்தால் இயக்கப்படுகிறது. கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள முனையங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொள்கலங்கள் மூலம் 7.5 மில்லியன் டன் சரக்குகள் மேலாளப்படுகின்றன. இங்கிருந்து பல ஐரோப்பிய நகரங்களுக்கும் நடுக்கடல் மற்றும் பால்டிக் துறைமுகங்களுக்கும் வணிக கப்பல் போக்குவரத்து எப்ரைட்சு கடல் வழியே நடைபெறுகிறது. முதன்மையான எம்8 விரைவுச்சாலை நகர மையத்தின் வழியேச் செல்கிறது; எம்77 , எம் 73, எம் 80 விரைவுச்சாலைகளுடன் இணைக்கிறது. ஏ 82 விரைவுச்சாலை அர்கிலுடனும் உயர்நிலங்களுடனும் இணைக்கிறது. எம் 74 நெடுஞ்சாலை தெற்கில் கார்லிசலுடன் இணைக்கிறது. கிளாசுக்கோவில் இரண்டு வானூர்தி நிலையங்கள் இயங்குகின்றன: கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (GLA) (நகர மையத்திலிருந்து மேற்கே தொலைவில்) மற்றும் கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் (PIK) ( தென் மேற்கில் தொலைவில்). தவிர நீர்மீதான வானூர்தி முனையமொன்றை கிளாசுக்கோ அறிவியல் மையம் கிளைடு ஆற்றின் மீது இயக்குகிறது. இஸ்லாமாபாத் சேக் அசீனா சேக் அசீனா வாசிட் ("Sheikh Hasina Wazed", வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) வங்காளதேசத்தின் அரசியல்வாதி. 2009லில் இருந்து இவர் வங்காள தேசத்தின் பிரதமராக இருக்கிறார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். அத்துடன் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார். முன்னதாக 30 திசம்பர் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் தலைமையிலான பெருங்கூட்டணி வெற்றி பெற்றது. கால வெளி வளைவு ஐன்ஸ்டைனின் சார்பியற்படி முப்பரிமாண வெளியும் ஒரு பரிமாண காலமும் சேர்ந்து காலவெளியாக இயற்படும்பொழுது ஒரு வளைவு இயற்கையாகவே உள்ளதாகவும் அதுதான் நிறையீர்ப்பாக வெளிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுதான் அண்டத்தின் கால வெளி வளைவு (Space-Time Curvature). ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் இதை விளக்குகிறது. நிறையீர்ப்பு விசை என்பதே திணிவு அல்லது ஆற்றல் காலவெளியில் பரவியிருக்கும் வகையினால், பற்பல கனங்கள், அளவுகள் உள்ள குளிகைகள் நிறைந்த ஒரு மீள் பரப்பில் ஏற்படக்கூடிய கோணல்களும், சிறுகுழிகளும் பள்ளங்களும் போல், காலவெளியில் இயற்கை உரு கோணலாக்கப் (warping)படுகிறது. கன்னத்தில் விழும் சிறுகுழி (dimple)போலும் மற்றும் காயத்தினால் ஏற்படும் வடு அல்லது பள்ளம் (denting)போலும் ஏதோ ஒன்று ஏற்படுவதாகவும், இதுதான் காலவெளியின் வளைவு என்றும் சொல்லப்படுகிறது. இது நிறையீர்ப்பு விசையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இயக்குகிறது. இங்கு வளைவு என்பதற்கு வரையறை 19வது நூற்றாண்டிலேயே ரீமான் என்ற கணிதவியலரால் சொல்லப்பட்டது. வளைவு என்றால் கணிதத்தில் ஒரு இழுவம் ( tensor).இது நோக்குனரின் எந்தத்திசைப் போக்கானாலும் புவிப்பரப்பிலுள்ள முக்கோணங்களின் கோணக் கூட்டுத்தொகை formula_1 இலிருந்து எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்பதைச்சொல்லும் கணிதக் குறிகாட்டி. ஐன்ஸ்டைனின் சமன்பாடுகள் இவ்வளைவு இழுவம் அண்டப்பொருளின் இருப்பினால் எப்படி மாறுபடுகிறது என்பதைச்சொல்கிறது. 1919 இல் ஒரு சூரிய கிரகணத்தின்போது செய்த சோதனையில் இது உறுதியாகியது. ஐன்ஸ்டைனின் சமன்பாடுகள் சொல்லியபடியே சூரியனைத் தாண்டி வரும் ஒளி வளைவதுபோல் காணப்பட்டது. உண்மையில் ஒளி வளையவில்லை. அது காலவெளியில் புவிப்பரப்புக் கோட்டில்தான் சென்றது. ஆனால் ஒளி வளைவது போல் நமக்குத் தெரிந்ததென்னவோ உண்மை. இப்படித் தோன்றும் என்பதுதான் ஐன்ஸ்டைனின் கணிதத் தீர்ப்பு; அதற்குக்காரணம் அவ்வளவு திணிவுள்ள சூரியன் தனக்கருகில் உள்ள காலவெளியில் 'வளைவை' உண்டாக்கியது தான். போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இலண்டன் நகரத்தினுள் அமைந்துள்ள அனைத்து வானூர்தி நிலையங்களையும் கொண்டு உலகின் நகரமைப்பு வானூர்தி நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து மிக்க நகரமாக அது விளங்குகிறது. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டு முன்னோட்ட தரவுகள் பின்வருமாறு. குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி கிழக்கிலங்கை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்புறத்தில் உள்ள குடுப்பிமலையில் (சிங்களம்: தொப்பிகல) இருந்தாகக் கூறப்படும் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றை இலங்கை இராணுவம் ஜூலை 11, 2007 தாக்கி கைப்பற்றிக்கொண்டதாக இலங்கை அரசு அறிவித்தபோதும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எவரும் அப்பகுதியில் இருக்கவில்லை என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த விடுதலைப்புலிகள் வன்னிப்பகுதிக்குச் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது. இந்த இராணுவ வெற்றியைத் தொடர்ந்து 14 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. . இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் குடும்பி மலையை ஏற்கனவே இரண்டுதடவை இந்தப்பகுதியை இந்திய அமைதிகாக்கும் படைகளிடமும் இலங்கை இராணுவத்தினரிடம் இழந்துள்ளதாகவும் இது மூன்றாவது தடவை என்றும் விடுதலைப் புலிகள் முற்றாகக் கிழக்கை விட்டு நீங்கவில்லை என்றும் அவர்கள் கெரில்லா (பேச்சுத் தமிழ்: கொரிலா) யுத்தத்தை இங்கு நடத்துவர் என்று தெரிவித்தார்கள். யாழ்ப்பாண குடாநாடும் கிழக்கு மாகாணமும் முழு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் புலிகள் வன்னி பிரதேசத்தில் முடக்கப்பட்டனர். குடும்பிமலை முகாம் வீழ்ச்சியை இலங்கை அரசு ஒரு வெற்றி விழாவாக ஜூலை 19, 2007 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியது. அங்கு அப்போதைய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா கிழக்கின் வெற்றியை பொறித்த பட்டயம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அளித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி புலிகளின் ஈழக்கனவை சிதைத்துவிட்டதாகவும், 2007 வருட முடிவிற்குள் கிழக்கில் மாகாண மாவட்ட தேர்தல்கள் நடைபெறும் என்றும், முழுவீச்சுடன் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். இவ்விழாவை பிரதான எதிர்கட்சி,ஜேவிபி மற்றும் தமிழ்கூட்டமைப்பு என்பன புறக்கணித்திருந்தன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேஷனல், Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தில் 573 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் 1643 க்கும் அதிகமான வானூர்தி நிலையங்களை 178 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இயக்கி வருகின்றனர். நிக்கராகுவா நிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன. ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்) ஃபிளைட் இண்டர்நேஷனல் ("Flight International";) (சுருக்கமாக ஃபிளைட், "Flight")) என்பது ஒரு வானூர்தி புறவெளியியல் துறை பற்றிய கருவிகள், கலங்கள் உற்பத்தி பற்றியும், ஆய்வு வளர்ச்சிகள் பற்றியும், வான்படைத் துறை முதலியவற்றியின் தொழில்கள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்கலையும் தாங்கி வெளிவரும் ஓர் ஆங்கில இதழ். இது ரீட் பிசினஸ் இன்ஃவோர்மேஷன் என்னும் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இவ்விதழுக்கு இணையான போட்டியான இதழ்கள்: ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (Jane's Defence Weekly), மற்றும் ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology). ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (ஆங்கில இதழ்) ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் கிழமைதோறும் வெளியாகும் பன்னாடுகளின் படைத் துறைகளின் செய்திகளையும் கருவிகள், அது பற்றிய தொழில்கள் பற்றிய கருத்துக்களையும் வெளியிடும் ஓர் ஆங்கில இதழ் ஆகும். "ஜான் எஃவ். டி. ஜேன்" என்னும் ஆங்கிலேயரின் பெயரால் தொடங்கப்பட்டது இவ்விதழ். இவர் 1898ல் போர்க்கப்பல்கள் பற்றிய ஜேன்ஸ் ஆல் த வோர்ல்ட்ஸ் ஃபைட்டிங் ஷிப்ஸ் (e's All the World's Fighting Ships) என்னும் இதழைத் தொடங்கினார். ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் இதழ் ஜேன்ஸ் இன்ஃபர்மேஷன் குரூப் (ஜேனின் தகவல் குழு) என்னும் குழுவின் ஓர் உறுப்பு. இது தற்பொழுது வுட்பிரிட்ஜ் கம்பனி (Woodbridge Company.) என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்: இந்த இதழ் ஒரு முறை (1985ல்) ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த "சாமுவேல் லோரிங் மோரிசன்" (Samuel Loring Morison) என்னும் உளவாய்வாளரால் கட்டுமான நிலையில் இருந்த உருசியாவின் வானூர்தித் தாங்கிக் கப்பலைப் பற்றிய ஒளிப்படங்களை செயற்கைமதி வழி பெற்ற ஒளிப்படங்களை (KH-11) அம்பலப்படுத்தியதால் கெட்ட வகையான பரவலம் அடைந்தது. அன்று லியோனிட் பிரெஷ்னேவ் (Leonid Brezhnev) என்று அழைக்கப்ப்ட்ட வானூர்தித் தாங்கு கப்பல் இன்று அட்மிரல் குஸ்நெட்சோவ் (Admiral Kuznetsov) என்று அழைக்கப்படுகின்றது. ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்) ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்றும் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. சக் யீகர் (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செயற்கை மதியை அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது. இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்: ஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும் (aviationweek.com), கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும் (AWIN and MRO Prospector), செய்திமடல்களும் (newsletters), உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் (Aviation Sourcebook) என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது. ஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்: சிறிமாவோ பண்டாரநாயக்கா சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா ("Sirimavo Ratwatte Dias Bandaranaike") (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர். தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார். உள்ளிடுகோப்பு கணிதத்தில் formula_1 என்ற சார்பில்/கோப்பில் ஒவ்வொரு formula_2 க்கும் formula_3 இல் formula_4 ஆகும்படி அதிக பட்சம் ஒரு formula_5 தான் இருக்குமானால் formula_6 உள்ளிடுகோப்பு ("Injection") எனப்படும்; அதாவது, முன்னுரு உள்ள எந்த formula_2 க்கும் முன்னுரு ஓருறுப்புக் கணமாகத்தான் இருக்கும். இதையே வேறுவிதமாகச்சொன்னால், formula_3 இன் உறுப்புகள் formula_9 க்கு formula_10ஆக இருக்குமானால் formula_11 ம் formula_12 ம் சமமாக இருந்தாகவேண்டும். அதாவது, ஆட்களத்திலுள்ள தனித்தனி formula_5 க்கு இணை ஆட்களத்தில் தனித்தனி formula_14 இருந்தாகவேண்டும். formula_15 ஒரு உள்ளிடுகோப்பு எனப்படுவதற்கு இலக்கணம்: சுற்றுலாப்பயணிகளின் கூட்டமொன்று இராத்தங்க, எல்லா அறைகளும் காலியாக இருக்கும் ஒரு விடுதியில் வந்து சேருகின்றனர். பயணிகளுக்கு அறைகள் வழங்கும் முறையை ஒருகோப்பாக விவரிக்கலாம். (பயணிகள் கணம்: X ; அறைகள் கணம்: Y.) ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கவேண்டுமென்றால், அறைகளின் எண்ணிக்கை பயணிகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கக்கூடாது.அப்பொழுது ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கும். இது உள்ளிடுகோப்பு ("injective map; injection; one-one map"). ஒவ்வொரு அறையும் நிரப்பப்படவேண்டுமென்றால், பயணிகளின் எண்ணிக்கை அறைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கக்கூடாது. அப்பொழுது ஒவ்வொரு அறையிலும் குறைந்த பட்சம் ஒரு பயணியாவது இருப்பர். இது முழுக்கோப்பு ("surjective map; surjection; onto map"). சில அறைகள் நிரப்பப்படாமலும், சில அறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளும் இருக்கும்படி செய்யப்பட்ட கோப்பு, உள்ளிடுகோப்புமல்ல, முழுக்கோப்புமல்ல. இதை வெறும் உட்கோப்பு ("into map") என்று மட்டும் சொல்லலாம். பயணிகளின் எண்ணிக்கையும் அறைகளின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கும். ஒரு அறையும் காலியாக இருக்காது. இது இருவழிக்கோப்பு ("bijective map; bijection; one-one onto map"). அதாவது, இது உள்ளிடுகோப்பு, முழுக்கோப்பு ஆகிய இரு பண்புகளையும் கொண்டது. உள்ளிடுகோப்புகளுடைய் இலக்கணத்தை இன்னொருவிதமாக எழுதலாம். அதாவது முழுக்கோப்பு formula_1 என்ற ஒரு கோப்பில் / சார்பில் ஒவ்வொரு formula_2 க்கும் formula_3 ஆக இருக்கும்படி குறைந்த பட்சம் ஒரு formula_4 ஆவது இருக்குமானால் அக்கோப்பு/சார்பு முழுக்கோப்பு ("Surjection") அல்லது முழுக்கோப்புடைய சார்பு ("Surjective function") எனப்படும். வேறு விதமாகச்சொன்னால் ஒவ்வொரு formula_5 க்கும் formula_6 இல் ஒரு முன்னுரு உள்ளது. ஒரு முழுக்கோப்பு உள்ளிடுகோப்பாகவும் இருந்துவிட்டால், அது இருவழிக்கோப்பு எனப்படும். formula_7 என்பது formula_6 இலிருந்து formula_9 க்குப்போகும் ஒரு கோப்பு/சார்பு எனக்கொள்வோம். formula_7 ஒரு முழுக்கோப்பு எனப்படுவதற்கு இலக்கணம்: formula_11 சுற்றுலாப்பயணிகளின் கூட்டமொன்று இராத்தங்க, எல்லா அறைகளும் காலியாக இருக்கும் ஒரு விடுதியில் வந்து சேருகின்றனர். பயணிகளுக்கு அறைகள் வழங்கும் முறையை ஒருகோப்பாக விவரிக்கலாம்.(பயணிகள் கணம்: X ; அறைகள் கணம்: Y.) ஒவ்வொரு அறையும் நிரப்பப்படவேண்டுமென்றால், பயணிகளின் எண்ணிக்கை அறைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கக்கூடாது. அப்பொழுது ஒவ்வோரு அறையிலும் குறைந்த பட்சம் ஒரு பயணியாவது இருப்பர். இது "முழுக்கோப்பு" (surjective map; surjection; onto map). ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கவேண்டுமென்றால், அறைகளின் எண்ணிக்கை பயணிகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கக்கூடாது.அப்பொழுது ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கும். இது "உள்ளிடுகோப்பு" (injective map; injection; one-one map). பயணிகளின் எண்ணிக்கையும் அறைகளின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், ஒவ்வொரு பயணிக்கும் ஒரு தனி அறை கிடைக்கும். ஒரு அறையும் காலியாக இருக்காது. இது "இருவழிக்கோப்பு" (bijective map; bijection; one-one onto map). அதாவது, இது உள்ளிடுகோப்பு, முழுக்கோப்பு ஆகிய இரு பண்புகளையும் கொண்டது. மெய்யெண் சார்புகள்: விக்கிமீடியா நிறுவனம் விக்கிமீடியா நிறுவனம் ஒரு அமெரிக்க இலாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்படப் பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது. விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும். பல மொழிகளில் உள்ள பொதுவான கலைக்களஞ்சியமான "விக்கிப்பீடியா" உடன் இந்த அறக்கட்டளை கூடுதலாக ஒரு அகராதி மற்றும் சொற்களஞ்சியத்தை "விக்சனரி" என்னும் பெயரில் பல மொழிகளில் நிர்வகிக்கிறது. ஹலோ ரஸ்ட் ஹலோ ரஸ்ட் ("HALO Trust") பிரித்தானியத் தொண்டு அமைப்பாகும். இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத போரினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலோ ("HALO") என்னும் சொல் ஆங்கிலத்தில் "Hazardous Area Life-Support Organisation" என்பதில் இருந்து வந்ததாகும். ஹலோ ரஸ்ட் அமைப்பானது 9 நாடுகளில் 7, 000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். ஹலோ ரஸ்ட் அமைப்பின் மிகப்பெரும் பணியானது ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்றது. இந்த அமைப்பானது மறைந்த கொலின் காம்பெல் மிச்சினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவர் முன்னைநாள் பிரித்தானியப் படை கேணல் தர அதிகாரியும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவ்வமைப்பு பெற்ற விருதுகளில் 2012 ஆம் ஆண்டுக்கான அறநிலைய விருதான "ஒட்டுமொத்த வாகையாளர்" விருது குறிப்பிடத்தக்கது. சம்பல் சம்பல் இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டமாகும். இதில் பல வகைகள் உண்டு. வகைகள் சிறுத்தொண்ட நாயனார் சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், "“உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்”" என இறைஞ்சினார். மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி "‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’" என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார். மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார். பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே. சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார். அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார், ‘உத்தராபதியாகிய பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, திருநீறு, உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது;’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட ஒண்ணாதனவும் எளிதில் உளவாகும்; அருமையில்லை’ என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கைதொழுதார். பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு; உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்;’ எனக் கூறினார். பின்னர். கேட்ட சிறுத்தொண்டரும் ‘யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்’ என்றார். ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று’ என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார். வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார். அதுகேட்ட கற்பிற்சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்.’ எனத் தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தி பின்னர் ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார். சிறுத்தொண்டர் மனமகிழ்ந்து தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார். பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார் ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளாவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார். சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர் அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும் என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார். வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள். சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார். சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி “செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை. மூடநம்பிக்கை மூடநம்பிக்கை என்றால் ஒரு விடயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும் பிறரையோ, சமூகத்தையோ, நம்புவரையோ மூடநம்பிக்கை கெடுதல் தரும் முறையில் பாதிக்குமானால் அந்த மூடநம்பிக்கையை விழிப்புணர்வு கொண்டு தவிர்த்தல் அல்லது தடைசெய்தல் அவசியம். மூடநம்பிக்கைகள் நம்புவர் உட்பட யாரையும் கெடுதல் தரும் முறையில் பாதிக்காவிட்டால் அதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லை. சில மூடநம்பிக்கைகள் அடிப்படையில் உண்மையற்று இருப்பினும், நம்பிக்கைகள் தருவதன் மூலம் நன்மைகளைத் தரக்கூடியன. சில மூடநம்பிக்கைகள் பொழுதுபோக்காக அமைகின்றன. எதிர்காலத்தை கூறுவதாக கூறும் சோதிடங்கள் பல மூடநம்பிக்கைகளே.