திருபாய் அம்பானி திருபாய் என்று அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி (28 டிசம்பர், 1932 - ஜூலை 6, 2002) இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். அம்பானி தனது (ரிலையன்ஸ்) நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக்கினார். 2007 வாக்கில் குடும்பத்தின் இணைந்த சொத்துக்கள் (மகன்கள் அனில் மற்றும் முகேஷ் ஆகிய இருவருடையதும்) 60 பில்லியன் டாலர்களாக இருந்தது. அம்பானிகள் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்தனர். திருபாய் அம்பானி குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும் ஜமுனாபென் னுக்கும் மகனாய்ப் பிறந்தார். ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் உயர்த்தப்பட்டார். அவருக்கும் கோகிலா எனும் பென்னுக்கும் திருமணம் நடந்தது. முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோதாரி மற்றும் ரினா சல்கோன்கர் என இரண்டு மகள்களும் பிறந்தனர். திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார்.[8]() 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த மாளிகை வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. "அவரது மனிதவள நிர்வாகத் திறன் அபாரமானது. அவர் எப்போதும் 'திறந்த கதவு' கொள்கையைப் பின்பற்றினார். ஊழியர்கள் அவரது அறைக்குள் சென்று தங்களது பிரச்சினைகளை அவருடன் நேரடியாக விவாதிக்க முடியும். ஊழியர்களோ, பங்குதாரர்களோ, பத்திரிகையாளர்களோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ யாராயிருந்தாலும் சரி, வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு என தனி வகை கையாளும் முறைகளை அம்பானி கொண்டிருந்தார்.” என்று ஆசியா டைம்ஸ் மேற்கோளிடுகிறது: அதிகாரிகளை விலைக்கு வாங்கி சட்டங்களை தனக்கு பொருந்தும் வகையில் மாற்றி எழுதிக் கொண்டார் என அம்பானியின் போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வணிகம் தொடங்கிய நாட்களையும், இந்திய அதிகார மைய கட்டுப்பாடுகள் அப்போது இருந்த குறைபாடுகளுடனான அமைப்பை பயன்படுத்தி பொருளீட்டும் கலையில் அவர் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பதையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர். மிளகாயை அவர் ஏற்றுமதி செய்தார், பல சமயங்களில் இதில் நஷ்டம் தான் இருக்கும், மறுநிரப்பல் உரிமங்களை ரேயான் இறக்குமதி செய்ய அவர் பயன்படுத்திக் கொண்டார். பின் ரேயான் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட துவங்கிய பின், மீண்டும் அவர் ரேயான் ஏற்றுமதி செய்தார், இதுவும் நஷ்டத்தில் செய்து நைலானை இறக்குமதி செய்தார். அம்பானி எப்போதும் தனது போட்டியாளர்களை விட ஒரு அடி முன்னால் நின்றார். அவர் இறக்குமதி செய்த பொருட்களுக்கு பெரும் தேவை இருந்ததால், அவரது லாப விழுக்காடு 300 சதவீதத்துக்கு குறைவது என்பதே அரிதாகத் தான் நிகழ்ந்தது." துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார். துணிகள் பாலியஸ்டர் இழை நூல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன. திருபாய் ""விமல்"" என்னும் வியாபாரப் பெயரை தொடக்கி வைத்தார். இது அவரது மூத்த சகோதரரான ரமனிக்லால் அம்பானியின் மகனான விமல் அம்பானியின் பெயரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டில் செய்த மிகப் பரந்த சந்தைப்படுத்தலின் காரணமாக ""விமல்"" வீட்டுக்கு வீடு அறிந்த பெயரானது. சில்லறை விற்பனை உரிமையகங்கள் துவங்கப்பட்டன. அவை ""ஒன்லி விமல்"" என விமல் டெக்ஸ்டைல் வியாபாரப் பெயரை மட்டும் விற்கப் பயன்படுத்தப்பட்டன. 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது.""வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது"" என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது. இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது. 1977-ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 58,000 க்கும் அதிகமான சிறு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாவது லாபகரமானது என்று குஜராத்தின் கிராமப் பகுதிகளின் ஏராளமான சிறு முதலீட்டாளர்களை திருபாயால் நம்பச் செய்ய முடிந்தது. ஆண்டுப் பொதுக் கூட்டங்களை விளையாட்டு அரங்கங்களில் நடத்திய முதல் தனியார் துறை நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் தான். 1986-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கிராஸ் மெய்டன், மும்பையில் நடந்தது. இதில் 35,000 க்கும் அதிகமான பங்குதாரர்களும், ரிலையன்ஸ் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். முதல்முறையாக முதலீடு செய்யும் பெரும் எண்ணிக்கையிலான சில்லறை முதலீட்டாளர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்யும் வகையில் திருபாய் அம்பானியால் நம்பிக்கையேற்படுத்த முடிந்தது. 1980களின் ஆரம்பத்தில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது. தங்களது பங்கு விலைகள் ஒரு இம்மியளவு கூடக் குறையாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. வாய்ப்பை உணர்ந்த, கரடிச் சந்தையில் லாபமீட்டும் கல்கத்தாவைச் சேர்ந்த பங்குத் தரகர்கள் குழு ஒன்று ரிலையன்ஸ் பங்குகளை அதிக விலையில் விற்று பின் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கையிருப்பிலில்லாமல் விற்கத் துவங்கியது. இதனை எதிர்கொள்ள, மற்றுமொரு பங்குத் தரகர்கள் குழு - இன்று வரை இவர்கள் "ரிலையன்ஸின் நண்பர்கள்" என்று தான் குறிப்பிடப்படுகிறார்கள் - மும்பை பங்குச் சந்தையில் கையிருப்பு இல்லாத நிலையில் விற்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கத் துவங்கினர். காளைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய போதுமான பணம் இல்லாது போய் விடும். அப்போது அவர்கள் மும்பை பங்குச் சந்தையின் "பத்லா"" வர்த்தக ஏற்பாட்டுக்கு தயாராய் இருப்பார்கள். இதன் அடிப்படையில் தான் கரடிச் சந்தையில் லாபமீட்டும் கூட்டம் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருந்தது. காளைகள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். பரிமாற்ற நிறைவுத் தேதி வரையிலும் ஒரு பங்கு ரூ. 152 என்கிற நிலையே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. நிறைவுத் தேதியில், காளைகள் பங்குகளின் பத்திரங்களை சமர்ப்பிக்க கோரியபோது இந்த கரடிச்சந்தை லாபமீட்டும் குழு திகைத்துப் போனது. ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருந்த பங்குத் தரகர்களுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை திருபாய் அம்பானியே வழங்கினார். பங்கு பத்திரங்களை வழங்க முடியாத நிலையில், காளைகள் "அன்பத்லா"" (அபராதத் தொகை) தொகையாக பங்குக்கு ரூ.35 கோரினர். இதனால், பங்குகளின் தேவை அதிகரித்து, ரிலையன்ஸ் பங்குகளின் விலை சில நிமிடங்களிலேயே 180 ரூபாய்க்கும் அதிகமாய் விட்டது. இந்த வர்த்தகமானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருபாய் அம்பானி பங்குச் சந்தைகளின் முடிசூடா மன்னராகியிருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மோதுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் நிரூபித்தார். இந்த சூழ்நிலைக்கு ஒரு தீர்வினைக் காண, பம்பாய் பங்குச் சந்தை மூன்று வணிக நாட்களுக்கு மூடப்பட்டது.மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, கரடிச் சந்தையில் லாபமீட்டும் குழு பங்குகளை அடுத்த சில நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் "அன்பத்லா" தொகையை பங்குக்கு ரூ.2 என குறைத்தனர். இதனால் அதிகமான விலை அளவுகளில் சந்தையில் இருந்து ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் நெருக்கடி கரடிச்சந்தையில் லாபமீட்டும் குழுவுக்கு நேர்ந்தது. அத்துடன் திருபாய் அம்பானியே அந்த குழுவுக்கு பங்குகளை அதிகமான விலையில் வழங்கி கனமான ஆதாயம் ஈட்டினார் என்பதும் பிறகு தெரிய வந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு, அவரது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வரை நூல் வணிகம் செய்து கொண்டிருந்த ஒருவர் எப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் இவ்வளவு பெரும் பணத்தைப் புரட்ட முடிந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான பதிலை அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வழங்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1982-83 காலத்தில் ரிலையன்ஸில் ரூ.22 கோடியை முதலீடு செய்திருந்ததாக அவையில் அவர் தெரிவித்தார். குரோக்கடைல், லோட்டோ மற்றும் ஃபியாஸ்கோ ஆகிய பல நிறுவனங்கள் வழியாக அவர்களது முதலீடுகள் திருப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுவையான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்கள் அல்லது முதலாளிகளின் துணைப்பெயர்களும் ஷா என ஒரேபெயரில் முடிவதாய் இருந்தது. இந்த விடயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட விசாரணை ரிலையன்ஸ் அல்லது அதன் முக்கிய பங்குதாரர்கள் எந்த முறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தீர்மானித்தது. காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது. அவர் மீது முறையற்ற செயல்களில் ஈடுபட்டார், அரசாங்க கொள்கைகளை தனது சொந்த தேவைகளுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கிக் கொண்டார், அரசாங்க தேர்தல்களில் மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடன் செயல்பட்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் உண்டு . அனேக ஊடகங்கள் வணிக-அரசியல் தொடர்பு குறித்து பேச முற்படுகின்றன என்றாலும், நாடெங்கிலும் புயல் கிளப்பும் ஊடகப் புயல்களில் இருந்து எப்போதும் அம்பானியின் வணிகக்குடும்பம் கூடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும் பெற்று வந்திருக்கிறது. பாம்பே டையிங் நிறுவனத்தின் நஸ்லி வாடியா, ஒரு சமயத்தில் திருபாய் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கான மிகப்பெரும் போட்டியாளராகத் திகழ்ந்தார். நஸ்லி வாடியா மற்றும் திருபாய் இருவருமே அரசியல் வட்டங்களில் தங்கள் செல்வாக்கிற்கும், தாராளமயமாக்கலுக்கு முந்தைய பொருளாதார காலகட்டத்தில் மிகக் கடினமான உரிமங்களையும் பெறும் திறனிற்கும் நாடறிந்தவர்களாக இருந்தனர். 1977 - 1979 இடையிலான ஜனதா கட்சி ஆட்சியின் போது, ஆண்டுக்கு 60,000 டன்கள் டை-மெத்தில் டெரப்தலேட் (DMT) தயாரிக்கும் ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை நஸ்லி வாடியா வாங்கினார். எண்ணக் கடிதம் உரிமமாக மாறுவதற்கு முன்பே, பல தடைகள் அவருக்கு முன் தோன்றத் துவங்கின. இறுதியாக, 1981 ஆம் ஆண்டில், நஸ்லி வாடியாவுக்கு ஆலைக்கான உரிமம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் இரு தரப்புக்கும் இடையே ஒரு வினையூக்கியாக செயல்பட்டு போட்டியை இன்னும் மோசமாக்கியது. ஒரு சமயத்தில், ராம்நாத் கோயங்கா திருபாய் அம்பானியின் நண்பராக இருந்தார். ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவுக்கும் நண்பராகக் கருதப்பட்டார். பல சந்தர்ப்பங்களில், இரண்டு போட்டி தரப்புகளுக்கும் இடையில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவர ராம்நாத் கோயங்கா முயற்சி செய்தார். அம்பானியின் முறைகேடான வணிகப் பழக்கங்களும், அவரது சட்டத்திற்கு புறம்பான செயல்களும் கோயங்காவுக்கு நிறுவனத்தில் சரியான உரிய பங்கினை கிடைக்கச் செய்யாமல் செய்தது தான் கோயங்காவும் அம்பானியும் எதிரிகளாவதற்கு முக்கிய காரணம் எனப்பட்டது. பிற்காலத்தில், ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவை ஆதரிக்க முடிவு செய்தார். ஒரு சமயத்தில், ""நஸ்லி ஒரு ஆங்கிலேயர். அவரால் அம்பானியைக் கையாள முடியாது. நான் ஒரு வணிகன். அவரை எப்படி முடிப்பது என்பது எனக்குத் தெரியும்..."" என்று ராம்நாத் கோயங்கா கூறியதாகக் கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அவர் வெளியிட்ட அகலத்தாள் நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அம்பானிக்கு எதிரான தொடர்ச்சியான பல கட்டுரைகளைத் தாங்கி வரத் துவங்கியது. அவற்றில் திருபாய் லாபத்தை அதிகப்படுத்த முறையற்ற வணிக முறைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் புலன்விசாரணைக்கு தனது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர்களை ராம்நாத் கோயங்கா பயன்படுத்தவில்லை. மாறாக தனது நெருங்கிய நண்பர், ஆலோசகர் மற்றும் பட்டய கணக்காளரான எஸ்.குருமூர்த்தியை இந்த பணிக்காக அவர் நியமித்தார். எஸ். குருமூர்த்தி தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர் பட்டியலில் இல்லாத இன்னுமொரு பத்திரிகையாளரான மானெக் தவாரும் செய்திகளை பங்களிக்கத் தொடங்கினார். அம்பானிகளுக்கு எதிரான ஜம்னாதாஸ் மூர்ஜானி என்னும் தொழிலதிபரும் இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக இருந்தார். அம்பானி மற்றும் கோயங்கா இருவருமே சமூகத்தின் பிரிவுகளால் விமர்சிக்கப்படவும் செய்தனர், பாராட்டப்படவும் செய்தனர். தனிநபர் பகைக்காக ஒரு தேசியப் நாளேட்டை பயன்படுத்துவதாக கோயங்காவை மக்கள் விமர்சித்தனர். இதைவிட மோசமான முறையற்ற, சீர்கேடான நடைமுறைகளைப் பின்பற்றிய தொழிலதிபர்கள் நாட்டில் இன்னும் பலர் இருந்தனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு அம்பானியை மட்டுமே கோயங்கா இலக்காகக் கொள்வதாக விமர்சகர்கள் நம்பினர். இந்த கட்டுரைகளை தனது வழக்கமான ஊழியர்களின் உதவியின்றியே வெளியிடும் திறன் குறித்து கோயங்காவை விமர்சகர்கள் பாராட்டவும் செய்தனர். இதனிடையில் திருபாய் அம்பானியும் கூடுதலான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுக் கொண்டிருந்தார். திருபாயின் வணிக நுட்பத்தையும், அமைப்பினை தனது விருப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவரது திறனையும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போற்றத் துவங்கினர். திருபாய் அம்பானி முடக்கு நோயால் பாதிக்கப்பட்ட பின் தான் இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது. திருபாய் அம்பானி சான் டியகோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது பிள்ளைகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் வணிகத்தை கவனித்துக் கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிலையன்ஸுக்கு எதிராக தனது கணைகளைத் திருப்பியிருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தண்டிக்காததற்கு அது அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம் சாட்டியது. வாடியா - கோயங்கா மற்றும் அம்பானிகளுக்கு இடையிலான யுத்தம் ஒரு புதிய திசையை எட்டி தேசிய நெருக்கடியானது. குருமூர்த்தியும் மற்றுமொரு பத்திரிகையாளரான முல்கோகரும் ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் உடன் பேசிவைத்துக் கொண்டு, பிரதமருக்கு அவர் சார்பாக ஒரு கடுமையான கடிதத்தையும் எழுதிக் கொடுத்தனர். ஜனாதிபதியின் கடித வரைவினை ஒரு பரபரப்பு செய்தியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. ஆனால் ராஜீவ் காந்திக்கு அனுப்பும் முன்னர் ஜெயில் சிங் தனது கடிதத்தில் மாற்றங்கள் செய்திருந்ததை பத்திரிகை உணரவில்லை. இந்த புள்ளியில் தான் அம்பானி இந்த சண்டையில் வெற்றி பெற்றார். இப்போது, மோதல் நேரடியாக பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ராம்நாத் கோயங்காவுக்கும் இடையில் என்றானது. அம்பானி சத்தமில்லாமல் வெளியில் சென்று விட்டார். பின் அரசாங்கம் டெல்லியின் சுந்தர் நகரில் இருந்த எக்ஸ்பிரஸ் விருந்தினர் இல்லத்தில் சோதனை செய்து, திருத்தங்களுடனான மூல வரைவினை முல்கோகரின் கையெழுத்தில் கண்டுபிடித்தது. 1988-89 வாக்கில், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு எதிரான ஏராளமான வழக்குகள் மூலம் ராஜீவின் அரசாங்கம் பதிலடி கொடுத்தது. அதன்பின்னும் கூட, கோயங்கா தனது மதிப்புமிகுந்த உருவத்தை தொடர்ந்து கொண்டிருக்க முடிந்ததென்றால், அதன் காரணம் பலருக்கு அவசரநிலை பிரகடனத்தின் போது அவரது துணிச்சலான எதிர்ப்புநிலை கண்முன் தோன்றியதே காரணம். ராஜீவ் காந்திக்கு பிறகு இந்தியாவின் பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங் உடன் திருபாய்க்கு சுமூகமான உறவுகள் இருக்கவில்லை. 1985-ஆம் ஆண்டில், தூய்மைப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்வதை திறந்த பொது உரிம வகையில் இருந்து வி.பி.சிங் திடீரென்று நிறுத்தி விட்டார். பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தியில் இது ஒரு வெகு முக்கிய மூலப்பொருளாகும். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு செயல்பாடுகளைத் தொடர்வதை இது கடினமாக்கியது. அரசாங்க ஆணை விநியோகிக்கப்படும் நாளன்று ஒரு முழு ஆண்டிற்கு தேவையான தூய்மை படுத்தப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்ய தேவையான கடன்தொகை உத்தரவாத கடிதத்தை பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் ரிலையன்ஸ் பெற்று விட்டது. 1990-ஆம் ஆண்டில், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் செய்த முயற்சிகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்கள் முட்டுக்கட்டை போட்டன. தோல்வியை உணர்ந்த அம்பானிகள், நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து இராஜினாமா செய்தனர். 1989 ஏப்ரலில் எல்&டி தலைவர் ஆகியிருந்த திருபாய் தனது பதவியை ராஜினாமா செய்ய, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாயவின் முன்னாள் தலைவரான டி.என். கோஷ் தலைவரானார். திருபாயின் வரி ஏய்ப்பினை கண்டுபிடித்ததன் நேரடியான விளைவு தான் வி.பி.சிங் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டது என்றும் கருதப்படுகிறது. ஜூன் 24, 2002 அன்று ஒரு பெரும் மாரடைப்பு திருபாய் அம்பானியைத் தாக்கியது. மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு. பிப்ரவரி 1986-ஆம் ஆண்டில் வந்திருந்த முதலாவது மாரடைப்பில் அவரது வலது கை செயலிழந்திருந்தது. ஒரு வாரத்திற்கும் அதிகமாக சுயநினைவற்ற நிலையில் இருந்த அவர் ஜூலை 6, 2002 அன்று இரவு சுமார் 11.50 (இந்திய நேரம்) மணியளவில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் வணிகத் துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான சாதாரண மக்களும் கலந்து கொண்டனர். அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஜூலை 7, 2002 அன்று மும்பையின் சந்தன்வாடி சுடுகாட்டில் மாலை சுமார் 4:30 மணியளவில் (இந்திய நேரம்) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு கோகிலாபென் அம்பானி என்னும் மனைவியும், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகிய இரண்டு மகன்களும், நீனா கோத்தாரி மற்றும் தீப்தி சல்கோன்கர் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். பம்பாயில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராகத் தான் திருபாய் அம்பானி தனது நெடும் பயணத்தைத் துவக்கினார். இந்த வணிகப்புலிக்கு மரியாதையளிக்கும் விதமாக, மும்பை துணி வணிகர்கள் ஜூலை 8, 2002 அன்று கடையடைப்பு செய்திருந்தனர். திருபாய் இறந்த சமயத்தில், ரிலையன்ஸ் குழுமம், மொத்த விற்றுமுதலாய் ரூ.75,000 கோடி அல்லது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டிருந்தது. 1976-77 காலத்தில், ரிலையன்ஸ் குழுமம், ஆண்டு விற்றுமுதலாக ரூ.70 கோடியை மட்டுமே கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அத்துடன் திருபாய் வெறும் ரூ.15,000(US$350) கொண்டே தனது வணிகத்தைத் துவக்கினார் என்பதும் நினைவு கூறத்தக்கது. 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், முகேஷ் அம்பானி அளித்த ஒரு நேர்காணலில், சகோதரர் அனில் அம்பானியுடன் தனக்கு "உரிமைத்துவ சிக்கல்கள்" விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இந்த கருத்துவேறுபாடுகள் "தனிப்பட்டு மனதளவில்" மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். தொழில்முறையில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வலிமைமிகுந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில், இந்த கருத்துவேறுபாடு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விடயம் ஊடகங்களில் விரிவான இடத்தைப் பிடித்தது. அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பராகத் திகழ்ந்த ஐசிஐசிஐ வங்கி யின் நிர்வாக இயக்குநரான குண்டபூர் வாமன் காமத், இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவுபவராக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார். பிரச்சினையை தீர்ப்பதில் சகோதரர்கள் தங்கள் தாய் கோகிலாபென் அம்பானி மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். ஜூன் 18, 2005 அன்று, சொத்துபிரிப்பை ஒரு செய்திக் குறிப்பு வழியாக கோகிலாபென் அம்பானி அறிவித்தார். ரிலையன்ஸ் குழுமம் அம்பானி சகோதரர்கள் இடையே பிரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) மற்றும் இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்பரேஷன் நிறுவனம் (IPCL) கிடைத்தது. அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்களுக்குத் தலைவரானார். முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட, அனிலின் குழுமம், அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG) என்று பெயரிடப்பட்டது. திருபாய் அம்பானியின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட திரைப்படம் 12, ஜனவரி 2007 அன்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த குரு (2007-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்) என்னும் இந்தித் திரைப்படம், ஒரு மனிதன் இந்திய வணிக உலகில் தனது முத்திரையை பதிக்க எங்ஙனம் போராடுகிறான் என்பதை கற்பனையாக சக்தி குரூப் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கொண்டு காட்டுகிறது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா ராய், மாதவன், மற்றும் வித்யா பாலன் நடித்திருந்தனர். திரைப்படத்தில், அபிஷேக் பச்சன், குரு காந்த் தேசாய் என்னும் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இது திருபாய் அம்பானியின் குணநலனை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருந்த மானிக்தா வேடம் உண்மை வாழ்க்கையில் ராம்நாத் கோயங்காவை ஒத்திருந்தது. இந்தியா இதுவரை கண்டவற்றில் மிக உக்கிரமான பெருநிறுவன மோதலில் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களைத் தொடுப்பதில் முன்னிலை வகித்து தேசிய அளவில் புகழ்பெற்ற எஸ்.குருமூர்த்தியை மாதவன் ஏற்றிருந்த பாத்திரம் பிரதிபலித்தது. குரு காந்த் தேசாய் என்கிற பாத்திரத்தின் உதவியுடன் திருபாய் அம்பானியின் வலிமையையும் இந்த படம் சித்தரிக்கிறது. "குருபாய்" என்று படத்தில் அபிஷேக் பச்சனுக்கு கொடுக்கப்படும் பெயரும், உண்மை வாழ்க்கையின் "திருபாய்" பெயரை ஒத்ததாக இருந்தது. துவக்கத்தில் இருந்தே திருபாய் மிகுந்த மரியாதைக்குரியவராகவே பார்க்கப்பட்டார். பெட்ரோலிய-வேதித் துறையில் அவரது வெற்றியும் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்த அவரது கதையும் இந்திய மக்களின் மனதில் அவரை ஒரு அடையாள வடிவமாக நிறுத்தியிருக்கிறது. ஒரு வணிக அதிபரின் குணநலத்துடன், அவர் ஒரு சிறந்த ஊக்குவிப்பாளராகவும் இருந்தார். அவர் பொதுக் கூட்ட உரைகள் சிறிய அளவில் தான் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அவர் ஆற்றிய உரைகள் மிகுந்த மதிப்புடன் இன்னமும் கூட நினைவுகூறப்படுகின்றன. "தூரக் கிழக்கு பொருளாதார மறுஆய்வு" க்கான டெல்லி கழகத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த ஹமிஷ் மெக்டொனால்டு, அம்பானியின் அதிகாரப்பூர்வமற்ற வாழ்க்கை வரலாற்றை தி பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற நூலாக 1998 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதில் அவரது சாதனைகள் மற்றும் குறைபாடுகள் இரண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டால் தாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாக அம்பானிகள் எச்சரிக்கை விடுத்தனர். குநோம் கணினிப்பயன்பாட்டுக்கான வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழல்களுள் குனோம் (GNU Object Model Environment - GNOME) புகழ்பெற்ற ஒன்றாகும். இது GNOME என்றவாறு எழுதும்போது பாவித்தாலும் குனோம் என்றவாறே உச்சரிக்கப்படும். குனோம் பணிச்சூழல், க்னூ/லினக்ஸ், பீ எஸ் டீ போன்ற இயக்குதளங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முனைய வடிவில் வழங்கிப் பயன்பாட்டிற்கு மட்டுமே அதிகமாகப் பயன்பட்டு வந்த குனு/ லினக்ஸ் இயங்குதளங்கள் மேசைத்தளங்களிலும் இன்று அதிகமாக பயன்படுத்தப் படுவதற்கு குநோம் பணிச்சூழல் திட்டத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது. உபுண்டு லினக்சு, ஃபெடோரா போன்ற க்னூ/லினக்ஸ் வழங்கல்கள் குனோமினை இயல்பிருப்பாக கொண்டிருக்கின்றன. குனோம் பணிச்சூழலுக்கு மாற்றான பல்வேறு பணிச்சூழல்கள் கட்டற்ற மென்பொருள் உலகில் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் கே டீ ஈ, எக்ஸ் எஃப் சீ ஈ, ஃபயர் ஃபாக்சு, என்லைட்மென்ட் போன்றன குறிப்பிடத்தக்கவையாகும். குனோம் பணிச்சூழலானது விளையாட்டுக்கள் தொடக்கம் உரைத்திருத்திகள் வரை ஏராளமான சிறு செயலிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. சமீபத்திய வெளீயீடு : குநோம் 3.4 விழுது (அமைப்பு) விழுது ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசு அல்லாத (அரசசார்பற்ற) ஓர் அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளன. தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர். மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவிட இலக்கண மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட நூல்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருவோர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்களை ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக இல்லாமலும் போகக் கூடும். இந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல. சங்க காலத்திலும், அதன் பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் மொழியில் ஏற்பட்ட மாறுதல்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனது ஒரு புறம் இருக்கப் பா வடிவில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களை விரிவாக விளக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டதனால் பிற்காலங்களில் இவற்றுக்குப் பல உரை நூல்கள் எழுந்தன இதனால் காலத்துக்குக் காலம் இத்தகைய நூல்களுக்கு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைகள் எழுதப்படுவதும், மேலும் காலம் செல்ல அந்த உரைகளே புரிந்து கொள்ளப்படாது போகப் புதிய உரைகள் எழுதப்படுவது வழக்கமாக நிகழ்வதே.கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் 13- ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் உரைகள் மேலோங்கிய காலம் எனலாம். இவ்வாறு வளர்ந்த இவ்வுரைகள் எழுதிய உரையாசிரியர்களின் காலம் கி.பி. 12 முதல் 18-ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. உரையாசிரியர்கள் வெறும் சொற்பொருள் விளக்கம் தருவதோடு நின்று விடாமல் இலக்கணக் குறிப்புத் தருதல், எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குதல், திறனாய்வு முறையில் விளக்குதல், வினாவிடை முறையில் விளக்குதல், எதனையும் வரிசை முறைப்படியும் ஒழுங்கு முறையிலும் எழுதுதல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு விளக்கம் செய்வர். இவ்வுரையாசிரியர்களின் நடை ' விளக்க நடை' என்று கூறப்படுகின்றது. சிலபோழ்துகளில் மூல நூலை விட உரைநூல் சிறப்பாக அமைவதும் உண்டு. இவ்வாறான உரை நூல்களை எழுதிய உரை ஆசிரியர்களை இலக்கண நூல்களுக்கு உரை எழுதியோர் இலக்கண உரையாசிரியர்கள் ஆவர். இளம்பூரணர் இன்றுவரை தொல்காப்பியத்துக்குக் கிடைத்த உரைகளில் மிகப்பழைய உரையை எழுதியவர் இளம்பூரணர் ஆவார். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதினார். தொல்காப்பிய உரையாசிரியர்களில் இவர் காலத்தால் முந்தியவர். இவரது காலம் 11 ஆம் நூற்றாண்டு. ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லார் இவரைக் குறிப்பிடுவதால் இவரது பெயரை இளமையில் அறிவு நிறையப்பெற்ற துறவி என உணர்ந்துகொள்ள வேண்டும். ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர்’, ‘ஏதமில் மாதவர்’ என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். இளம்பூரணருக்கு முன்பும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதப்பட்டிருந்தது என்பதனை "இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது" என அவர் குறிப்பிடுவதால் உணரலாம். சேனாவரையர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர் சேனாவரையர். சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும். . எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து. கல்வெட்டு ஆற்றூர் சோமநாத சாமிக்குச் சேனாவரையர் நிலம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இதனால் இவரது ஊர் மிழலை ஆற்றூர் எனத் தெரிகிறது. நன்னூலை இவர் மேற்கோள் காட்டுவதால் இவரது காலம் அதற்குப் பிந்தியது. சேனாவரையர் நிலம் அளித்த சேய்தியைக் கூறும் கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது. எனவே சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது. இவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: பிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல நயங்கள் உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது. நச்சினார்க்கினியர் நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார். குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய 20 பாடல்களுக்கு மட்டுமே நச்சினார்க்கினியார் உரை எழுதி நிறைவு செய்தார் என்றும் குறுந்தொகை பதிப்பாசிரியர் குழு கூறுகிறது. அயர்லாந்து துடுப்பாட்ட அணி அயர்லாந்து துடுப்பாட்ட அணி வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு என்பற்றை பிரந்தித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். அரசியல் சிக்கல்கள் காரணமாக 1993 வரை பன்னாட்டு துடுப்பாட்ட சபைக்கு அயர்லாஅந்து தெரிவுசெய்யப்படவில்லை. முதல் தடவையாக 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். 1880 முதலே அயர்லாந்தில் துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வந்துள்ளது அயர்லாந்தின் முக்கிய சாதனையாக 2007 உலகக் கிண்ணப்போடிகளின் போது பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியை குழு நிலை போட்டிகளின் போது வெற்றிக் கொண்டமையையும் சுப்பர் 8 நிலைக்கு தெரிவானமையும் குறிப்பிடலாம். கண்டி செல்வ விநாயகர் ஆலயம் கண்டி செல்வ விநாயகர் ஆலயம் கண்டியில், கொழும்புவில் இருந்து கண்டி செல்லும் பிரதான சாலையில் கண்டி நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இது கட்டுக்கலை பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு பங்குனி உத்தரத்தில் முடிவடையும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். தீர்த்தோற்சவம் தன்னகும்புர மகாவலி கங்கையில் நடைபெறுவதோடு அதே தினத்தன்று மாலை திருக்கல்யாணத் திருவிழாவும் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறும். தேர்த்திருவிழா அன்று பஞ்சரத பவனி கண்டி நகர் வீதிகள் வழியாக வருவது குறிப்பிடத்தக்கதாகும். கண்டியில் வருடாவருடம் ஆடி மாதத்தில் நடைபெறும் "பெரஹர" வின் போது "திய கப்பன மங்கல்யய" என்று சிங்களத்தில் கூறப்படும் (ஆங்கிலம்: Water cutting ceremony) தீர்த்த வைபவம் முடிந்தபின் ஊர்வலம் திரும்பிச் செல்லும்போது கட்டுக்கலை பிள்ளையார் ஆலயத்தில் தரித்து, சில கிரியைகள் நடைபெறும். இந்த ஆலய விழாக்களுக்கு மத்திய மாகாண இந்து சங்கம் (ஆங்கிலம்: Central Province Hindu Association) உதவி வருகிறது. வேல்ட் பைல் வேல்ட் பைல் என்பது எழுத்துக்களால் ஆன புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் ஸ்கான் பண்ணப்பட்ட தேசப்படங்களைக் கணினியில் பாவிப்பதற்கென எஸ்றியினால் (ESRI) இனால் உருவாக்கப்பட்ட ஓர் கோப்பு முறையாகும். பொதுவாக நீங்கள் ஸ்கான் பண்ணிய தேசப்படம்த்தின் கோப்பு நீட்சியானது *.tif என இருக்குமானால் வேல்பைலானது *tifw என்றவாறு இருக்கும். *.jpg என்றவாறு கோப்பின் பெயரானது இருக்குமானால் அதன் வேல்ட்பைல் ஆனது *.jpgw ஆகும் எடுத்துக்காட்டாக new_sheet01_manipay.jpg என்பது கோப்பின் பெயர் என்றால் வேல்ட் பைல் new_sheet01_manipay.jpgw என்றவாறு அமையும். இதன் சிறியதோர்மாறுபாடாக பழைய மென்பொருட்களை ஆதரிக்கும் வகையில் *.tif கோப்புக்களுக்கு *.tfw உம் *.jpg இற்கு *.jpw உம் பாவிக்கப்படுகின்றது. பொதுவாக ஆர்க்வியூ ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருட்கள் இவற்றைப் புத்திசாலித்தனமாகக் கண்டுபிடித்து சரியான முறையில் கணினிகளில் காட்டப்பயன்படும். பொதுவாக E ஓர் மறையெண்ணாகும் (negative) ஏனெனில் தேசப்படங்கள் பொதுவாக இடது கீழ்மூலையில் காட்டீசியன் முறையில் ஆள்கூறுகள் குறிப்பிடப்படுவதோடு வேல்ட் பைலில் இடது மேல் மூலையின் ஆள்கூறுகளையே தந்துள்தாகும். உங்கள் தேசப்படம் தலைகீழாகத் தோற்றமளித்தால் E இன் பெறுமதியை மறையாக்கவேண்டும். எடுத்துக்காட்டாக new_sheet01_manipay.jpgw கோப்பில் மலைப்பொழிவு மலைப்பொழிவு அல்லது மலைப் பிரசங்கம் ("Sermon on the Mount") மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (சுமார் கி.பி. 30 இல்) இன்றைய வடக்கு இசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு சொற்பொழிவாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும், அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தை பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறித்தவத்தின் மையக் கருத்துக்களைக் கொண்டிருந்தது. காந்தி, டால்ஸ்ட்டாய் போன்றோர் அதனைப் பின்பற்றினார்கள். மேமோ நோக்கியா நிறுவனத்தின் புதுவீச்சு மின்னணு சாதனங்களாகிய இணையக் கணினி பெட்டிகளுள் இயல்பாக நிறுவப் பட்டு கிடைக்கும் இயக்கு தளம் மேமோ ("Maemo"). நோக்கியா-வின் N வகை தயாரிப்புகளில் இது கிடைக்கப் பெறுகின்றது. புகழ்பெற்ற க்னூ/லினக்ஸ் இயக்குதளமான டெபியனை அடிப்படையாகக் கொண்டு மேமோ உருவாக்கப் பட்டுள்ளது. அனில் அம்பானி அனில் அம்பானி (பிறப்பு: சூன் 4, 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில் அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன். ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி இவருடைய அண்ணன் ஆவார். அம்பானி அம்பானி என்ற பெயர் பின்வரும் தலைப்புகளைக் குறிக்கலாம். வண்டித் தரிப்பு வசதி வண்டித் தரிப்பு வசதி என்பது, பொதுவாகத் தற்காலத் தன்னியக்க வண்டிகள் (Auto-mobiles) அல்லது மோட்டார் வண்டிகள் (Motor Vehicles) என அழைக்கப்படும் வண்டிகள் தரித்து நிற்பதற்காக அமைக்கப்படுகின்ற இடவசதிகளைக் குறிக்கும். தற்காலத்தில், வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளின் நகரப்பகுதிகளிலும், தன்னியக்க வண்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரம் அதிகரித்து வருகின்ற பகுதிகளில், கூடிய அளவில் தனிப்பட்டவர்கள் வண்டிகளைச் சொந்தமாக வாங்குகிறார்கள். இதனால், தெருக்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஒருபுறம் இருக்க தேவையான இடங்களில் வண்டிகளை நிறுத்துவதற்கான இடத் தேவையும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால், நகர வடிவமைப்பிலும், தனித்தனி நிலங்களை மேம்படுத்தும் போதும் தரிப்பிட வசதிகளை உருவாக்குவதில் மிகுந்த கவனம் எடுக்கப்படுகின்றது. அங்காடித் தொகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பெரிய வணக்கத் தலங்கள், அரச அலுவலகங்கள் போன்றவற்றுக்கு அண்மையில் பெருமளவில் வண்டிகள் நிறுத்தப்படுவதற்கான இடவசதிகள் தேவைப்படுகின்றன. அர்ஜுன் அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15, 1962) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார். பதஞ்சலி பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. நூல் நூல் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகளுக்கு வழி அமைத்துத் தர இப்பக்கம் உள்ளது. காலம் (நூல்) இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி மற்றும் தியாகு என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224 திருமணப் பொருளியல் ஒரு திருமண ஒப்பந்தம் தொடர்பிலான பொருளியல், திருமணப் பொருளியல் ஆகும். உலகிலுள்ள பல்வேறு வகையான சமுதாயங்களில் திருமணம் என்பது பல்வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் திருமணம் பொதுவாக எல்லாச் சமுதாயங்களுக்கும் உரிய ஒரு பொதுமை ஆகும். அடிப்படையில், ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பமாக வாழ்வது என்பது, அடிப்படையில் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த உயிரியல் தேவையாக இருந்தாலும், அவற்றுக்கும் புறம்பாகத் திருமணம் ஒரு சமுதாயத் தேவையாகவும் உள்ளது. அது சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கான ஒரு நிறுவனமும் ஆகும். திருமணத்தின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைவது மட்டுமன்றி, இரு குடும்பங்களுக்கு இடையேயும், இரண்டு குழுக்களுக்கு இடையேயும் பலவகைப் பிணைப்புக்கள் உருவாகின்றன. இத் தொடர்புகள் பல சந்தர்ப்பங்களில் பொருளியல் முக்கியத்துவம் கொண்டவையாகவும் உள்ளன. பெரும்பாலான சமுதாயங்களில் திருமணத்தின்போது ஏதோ ஒரு வகையில் பணம் அல்லது வேறுவகையான சொத்துக்கள் பரிமாறப் படுவதைக் காணமுடியும். சில சமுதாயங்களில், ஆணின் குடும்பம் அல்லது ஆண், பெண்ணின் குடும்பத்துக்குப் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டியுள்ளது. இதை "மணப்பெண் பணம்" எனலாம். வேறு சில சமுதாயங்களில், ஆணின் குடும்பத்துக்குப் பெண்ணின் குடும்பத்தினர் பணம் கொடுக்கின்றனர். இது மணக்கொடை, சீதனம் அல்லது வரதட்சணை எனப் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல் திருமணம் தொடர்புடைய நேரடியான பொருளாதாரப் பரிமாற்றம் ஆகும். திருமணம் என்பது ஒரு "பரிமாற்ற முறை" என்னும் கருத்தை லெவிஸ்ட்ட்ராஸ் என்பார் தனது மண ஒப்பந்தக் கோட்பாடு (alliance theory), மற்றும் பரிமாற்றக் கோட்பாடுகள் (exchange theory) மூலம் முன்வைத்துள்ளார். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு அடிப்படையாகப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாகத் திருமாணமானதும் பெண்கள் கணவனின் குடும்பத்தோடு வாழுகின்ற முறை நடைமுறையில் உள்ள சமுதாயங்களில், அப் பெண் பிள்ளையின் உழைப்பைப் பிறந்தகம் இழக்கின்றது. இதற்கான ஒரு நட்ட ஈடே மணப்பெண் பணம் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சீதன முறை வழக்கில் உள்ள சமுதாயங்களில், மணமகன் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படும் பொருளானது, செல்வநிலை, உழைக்கும் தகுதி, சமுதாயத் தகுதி என்பவற்றைக் கொண்ட குடும்பங்களில் தங்கள் பெண்ணை வாழவைப்பதற்கும், அத்தகையவர்களுடன் குடும்பத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குமான ஒரு விலையாகவே கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்துச் சீதன முறை திருமணத்தின் போது மணப்பெண்ணின் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் பணம், பொருள் மற்றும் வேறுவகையான சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் சீதனம் எனப்படுகின்றது. தற்காலத்தில், யாழ்ப்பாணத்துச் சீதன முறை மிகக் கடுமையானது என்று கருதப்படுகின்றது. சமுதாய நோக்குக் கொண்டவர்களாலும், பெண்ணுரிமைக் குழுக்களாலும் பெரிதும் கண்டிக்கப்படுகின்ற ஒரு வழமையாக இது நீடித்து வருகிறது. வேறு பல சமுதாயங்களில் காணப்படும், மாப்பிள்ளை வீட்டாருக்கு அல்லது மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மணக்கொடை அல்லது வரதட்சணையில் இருந்து இது சற்று வேறுபட்டது. யாழ்ப்பாணச் சீதன முறை, பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான தேசவழமை ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். இது 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. எனினும், யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையா. இது பற்றி ஆராய்ந்த சில அறிஞர்கள் சிலர் தமது கருத்துக்களை முவைத்துள்ளனர். தேசவழமை பற்றி ஆராய்ந்த "கந்தவல" என்பவர் பெயர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்துச் சீதனத்தின் தோற்றத்தை இந்துச் சட்டத்தின் "சிறீதனம்" என்பதோடு தொடர்புபடுத்தி உள்ளார். தேசவழமைச் சட்டத்தின் சீதன முறையில் தாய்வழிச் சொத்துரிமைக் கூறுகளை எடுத்துக்காட்டிய எச். டபிள்யூ. தம்பையா, ஒரு காலத்தில் தமிழர்களிடையே நிலவிய தாய்வழி முறை, கேரளாவின் மருமக்கட்தாயச் சட்டம் ஆகியவற்றை யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றத்துக்கான அடிப்படைகளாகக் காட்டுகிறார். இன்றைய கேரளாப் பகுதியில் இருந்து குடியேறியவர்கள் மூலம் அறிமுகமான மருமக்கட்தாய முறையின் கூறுகள் யாழ்ப்பாண நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாணச் சீதன முறை தோற்றம் பெற்றது என்பது அவரது கருத்து. பிற்காலத்தில் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு தேசவழமையின் சீதனம் குறித்த பல விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. வேறுசில வழக்கொழிந்து போயின. ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் மூலம் இணைந்து குடும்பமாக வாழ்கின்றபோது அவர்களுக்கு வந்து சேரும் சொத்துக்களைத் தேசவழமை மூன்று வகையாக இனம் காணுகின்றது. ஆண் கொண்டுவரும் சொத்து "முதுசொம்" என்றும், பெண் கொண்டுவரும் சொத்து "சீதனம்" என்றும், இருவரும் குடும்பம் நடத்திவரும் போது தேடிக்கொள்ளும் சொத்து "தேடியதேட்டம்" என்றும் அழைக்கப்படுகின்றன. இருவருக்கும் ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்தால், முதுசொம் ஆண்பிள்ளைகளுக்கும், சீதனம் பெண்பிள்ளைகளுக்கும் சேரும். தேடியதேட்டத்தில் இருபாலாருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலேயே இது இறுக்கமாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்திலேயே, பெண்பிள்ளைகளின் திருமணத்தின்போது முதுசொம், சீதனம், தேடியதேட்டம் என்ற வேறுபாடின்றி எல்லாவகைச் சொத்துக்களிலிருந்தும் சீதனம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே தேசவழமையின்படி, சீதனம் என்பது தாய்வழியாகப் பெண்பிள்ளைகளுக்குச் சேருகின்ற சொத்துரிமையின் பாற்பட்டது. இது மருமக்கட்தாய முறையின் எச்சமாகக் கருதப்படுகின்றது. திருமணமான ஒரு பெண் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால் அவள் கொண்டுவந்த சீதனம் அவளுடைய சகோதரிகளுக்கோ, அவர்கள் இல்லாதவிடத்து அவர்களது பெண்பிள்ளைகளுக்கோ சேருமேயன்றி அவளது ஆண் சகோதரர்களுக்கோ அல்லது ஆண்வழி வாரிசுகளுக்கோ செல்வதில்லை. புணர்ச்சி இப்பக்கத்தில் புணர்ச்சி என்னும் தலைப்பில் உள்ள பக்கங்களுக்கு வழிகாட்டப்படுகின்றது. தொன்மா தொன்மா (Dinosaur, இடைனோசர் (கேட்க) என்பது ஊர்வன வகுப்பில் ட்ரியாசிக் யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அருதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன. இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரையாசிக்-ஜுராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து ஜுராசிக்-க்ரட்டேசியஸ் யுகங்கள் வரை தொடர்ந்து க்ரட்டேசியஸ்-பாலியோஜீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. படிம ஆய்வுகளின்படி ஜுராசிக் யுகத்தில் வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை. தொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைப்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன. தொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும் மாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும், 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன. தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன. தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன. அக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில தொன்மா இனங்களும் (எ.கா. தெரோபோடு) இருந்தன. தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல. தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . "டைனோஸ்" (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; "சோரா" அல்லது சௌரா ( σαύρα , "saura" ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம். ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த "சோரியன்" என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு "புதிய" பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய "டயனசோர்" என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர். கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் "டயனசோர்" எனப் பெயரிட்டார் , தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. 2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி, சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும். பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன. (வளரும்) தொன்மாக்கள் எப்பொழுதுமே தங்களது உணவினைத் தேடி அலைந்தன. இத் தொன்மாக்களின் உடல் மிகவும் பொியதாக இருந்ததால் இவற்றிற்கு அதிகமான உணவு தேவையாக இருந்தது. இவற்றின் உணவுத் தேவையைப் புா்த்தி செய்து கொள்ள மிசொசோயிக் காலத்தில் தெரோபொடா இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது. பறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன. அன்டிகுவாவும் பர்பியுடாவும் அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன. சிவகுருநாதன் சின்னையா சிவகுருநாதன் சின்னையா மலேசியாவில் இருந்து 1990 கள் முதல் தமிழ் மென்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆர்வலர் ஆவார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் கன்பராவில் வசித்து வருகின்றார். இவரது நளினம் மென்பொருட்கள், "ஆர்த்தியுடன் கதை நேரம்" என்னும் மாணவர்களுக்கான இறுவட்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அகமணம் அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுவாக உள்ளது. மேல் நாடுகளில், சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். பழங்குடிச் சமுதாயங்களில் ஒவ்வொரு குழுவும் ஒரு அகமணக் குழுவாக உள்ளன. அகமண முறை குழுவுக்குள், நெருக்கத்தையும் பிணைப்பையும் ஊக்குவிக்கின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமண முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து, அக்குழுக்களுக்கு உரிய வளங்களின் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இது வேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்டகாலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது எனலாம். இந்தியாவில் வாழும் பார்சிகள், வட ஈராக்கியப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தினராகிய யாசிடிகள் என்போர் சிறுபான்மை அகமணக் குழுக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். புவியியல் சார்பான அகமணக் குழுக்களும் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை "நிலப்பரப்புச் சார்ந்த அகமணம்" (Territorial Endogamy) எனப்படும். இதைவிடச் சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை இது "ஊர் அகமணம்" (Village Endogamy) எனப்படுகின்றது. தங்களுக்குள் அகமண முறையைக் காலங்காலமாக பின்பற்றும் குழுவிடமும் மரபியல் பரவல் குறைந்துபோகும். மக்கள்தொகை மரபியல் ஆய்வில் இவை முறையே மக்கள்தொகை முட்டுப்பாடு (population bottleneck) மற்றும் ஸ்தாபக நிகழ்வு (founder event) கோட்பாடு என அழைகப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றினால் காலப்போக்கில் மரபியல் பரவல் மேலும் சுருங்கும். அகமண முறையின் காரணமாக மரபியல் பரவல் செழிக்க முடியாமல் தேங்கிய நிலைக்கு உள்ளாகும்போது ஒடுங்கு-மரபணுப் பிறழ்ச்சி வழி ஏற்படும் பரம்பரை நோய்கள் (recessive genetic diseases) கூடும். மரபியல் பரவல் ஒடுங்கினால் அது மரபியல் நோய்களுக்கு இட்டுச்செல்லும். இந்தியாவின் ஐதராபாதில் உள்ள சி.சி.எம்.பி-சி.எஸ்.ஐ.ஆர். (CCMB-CSIR) எனும் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த குமாரசாமி தங்கராஜும் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியை சார்ந்த டேவிட் ரெய்ச்சு ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த குஜ்ஜர் சமுதாயம், உத்தர பிரதேசத்தைச் சார்ந்த பனியா, தெலங்கானா பகுதியின் ரெட்டி சமூகம், தமிழகத்தில் பிராமணர்கள், கள்ளர்கள், அருந்ததியர்கள், புதுச்சேரியை சார்ந்த யாதவர்கள் முதலானோரிடையே ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. முப்பது லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் அகமண முறையின் காரணமாக வலுபெற்ற ஸ்தாபக நிகழ்வு தொடர்ச்சியாக தெலங்கானா வைசிய சமுதாயத்தில் ‘பிசிஎச்ஈ’ (BChE - butyrylcholinesterase) எனும் அரிய மரபணு நோய் மற்ற சமுதாயங்களைவிட கூடுதலாக உள்ளது. புறமணம் புறமணம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழுவுக்குள்ளேயே மணம் செய்து கொள்ளாமல், வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களை மணம் செய்து கொள்ளும் முறை ஆகும். இம்முறையில், இரத்த உறவு கொண்டவர்களையும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களையும் மணம் செய்து கொள்வது தடை செய்யப்படலாம். ஒரே கால்வழி குடிவழி என்பவற்றைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள் என்பதால் பல சமுதாயங்களில் இக் குழுக்களுக்கு உள்ளே திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தமிழ் நாட்டில், குலம், கோத்திரம், வம்சம், கூட்டம் போன்ற பிரிவுகளும் இத்தகைய இரத்த உறவுக் குழுக்களே. பழங்குடிச் சமுதாயங்களிலே காணப்படும் குலங்கள் (clan) பெரும்பாலும் புறமணக் குழுக்களாகவே உள்ளன. ஒரு குறிப்பிட்ட குலம் இரத்தவழி உறவினர்களுடைய குழுவாக அமைவதால், ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலத்துக்கு வெளியே வேறு குலங்களில் மணம் செய்து கொள்கிறார்கள். எனினும் குலங்களையே ஒரு அகமணக் குழுவாகக் கொண்ட சமுதாயங்களும் இருக்கவே செய்கின்றன. புறமண முறையின் தோற்றம் பற்றிப் பல விதமான கோட்பாடுகள் உள்ளன. எட்வார்ட் வெஸ்டர்மார்க் (Edvard Westermarck) என்பவர், இரத்த உறவினருக்கிடையே மணங்களைத் தவிர்ப்பதன் தொடர்ச்சியாகவே புறமண முறை உருவானதாகக் கருதுகின்றார். ஜே. எஃப். மக்லென்னான் (J.F. McLennan) என்பவர், புறமணத்தின் தோற்றத்துக்குத் குறிப்பிட்ட குழுக்களுக்குள் திருமணத்துக்கான பெண்கள் குறைவாக இருந்ததே காரணம் என்கிறார். இதனால் ஆண்கள் வேறு குழுக்களில் மணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அதுவே வழக்கமாக நிலைத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். மண ஒப்பந்தக் கோட்பாட்டை (Alliance Theory) அறிமுகப்படுத்திய குளோட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss), சில குழுக்கள் தங்கள் உறுப்பினர்களைக் குழுவுக்கு வெளியே மண உறவு வைத்துக் கொள்ள ஊக்குவித்திருக்க வேண்டும் என்கிறார். சில குழுக்களின், பொருளாதார, பண்பாட்டுத் தேவைகளுக்கு மிகவும் அவசியமாக இருந்த இத் துறைகளிலான கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்த இது வேண்டியிருந்தது. மண ஒப்பந்தக் கோட்பாடு மண ஒப்பந்தக் கோட்பாடு (Alliance Theory) அல்லது பரிமாற்றப் பொதுக் கோட்பாடு (General Theory of Exchanges) என்பது, உறவுமுறைத் தொடர்புகளை ஆய்வு செய்வதற்கான ஒரு அமைப்பு சார்ந்த வழிமுறையின் பெயராகும். குளோட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) என்பவர் எழுதிய "உறவுமுறையின் தொடக்கநிலை அமைப்புக்கள் (Elementary Structures of Kinship)" என்னும் நூலில் இருந்தே இது உருவானது. இது ராட்கிளிஃப் பிரவுன் (Radcliffe-Brown) என்பவருடைய செயற்பாட்டுக் கோட்பாட்டுக்கு (functionalist theory) எதிரானது. மண ஒப்பந்தக் கோட்பாடு, 1980கள் வரையில், பிரான்ஸ் நாட்டின் மானிடவியல் ஆக்கங்களை வழிப்படுத்தியது எனலாம். அத்துடன் இதன் செல்வாக்கு, உளப்பகுப்பாய்வு, தத்துவவியல், அரசியற் தத்துவம் எனப் பல துறைகளிலும் பரவலாக உணரப்பட்டது. குளோட் லெவி-ஸ்ட்ராஸின் மண ஒப்பந்தக் கோட்பாடு, ஐரோப்பியர் அல்லாத சமுதாயங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது. மேற்படி ஆய்வில், இரத்தஉறவுகளுக்கும், மண உறவுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை குளோட் கவனித்தார். சில சமயங்களில் ஒன்றுக்கொன்று எதிராகவும் வேறு சமயங்களில் ஒன்றுக்கொன்று மிகைநிரப்பிகளாகவும் (complementary) செயல்படும் இவை சமுதாயங்களை மணமுறை அடைப்படையில் வகைப்படுத்துவதற்கு வழி சமைத்தன. "மண ஒப்பந்த" (marriage-alliance) எடுகோள் இந்த அடிப்படையிலேயே உருவானது. இது குடும்பங்கள், கால்வழிகள் முதலானவை ஒன்றிலொன்று தங்கியிருத்தலை எடுத்துக்காட்டியது. மணவிழாக்களும், ஒருவகையான தொடர்பு முறை வடிவமாகவே நோக்கப்பட்டது. லெவி-ஸ்ட்ராஸ், லூயிஸ் டுமொண்ட், ரொட்னி நீடாம் போன்ற மானிடவியலாளர்கள், இது தொடர்பான விளக்கங்களைத் தந்துள்ளனர். ஆகவே, மண ஒப்பந்தக் கோட்பாடு, தனிப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாண அல்லது சமூகம் எதனால் ஆக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயல்கிறது எனலாம். உறைதல் இயற்பியல், வேதியியல் வரையரைகளின் படி ஒரு நீர்மம் திண்மமாக மாறும் செயல் உறைதல் எனப்படுகிறது. இது திண்மமாதல் எனவும் அழைக்கப் படும். எந்த வெப்பநிலையில் ஒரு பொருளானது உறைகிறதோ அதுவே அப்பொருளின் உறைநிலை எனப்படுகிறது, ஆனால் இந்த உறை வெப்பநிலை, பொருள் இருக்கும் சூழ் அழுத்தநிலையைப் பொருத்தும் உள்ளது. திண்மத்தில் இருந்து நீர்மத்திற்கு மாறும் செயலான உருகுதல் இதற்கு நேர்மாறான செயல் ஆகும். பெரும்பாலான பொருட்களுக்கு உறைநிலையும் உருகுநிலையும் ஒரு குறிப்பிட்ட அழுத்தநிலையில் ஒன்றாகவே உள்ளது. (எ.கா) பாதரசத்தின் உறைநிலையும் உருகுநிலையும் ஒன்றே. உணவினை பதப்படுத்த உறைதல் முறையே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் உணவு கெடாமல் காக்கப் படுகிறது. கனிமங்களின் பட்டியல் இங்கு கனிமங்கள் மற்றும் கனிமப் போலிகளின் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. கனிமப் போலிகள் ஒருநிலக் கொள்கை ஒருநிலக் கொள்கை அல்லது "ஒருதரைக் கொள்கை" என்பது ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும், தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது. "மண் நிலம் எல்லாம்" என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் "முழுமண்" என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு "முழுக்கடல்" அல்லது "முழுஆழி" (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக அசையும் படமாகக் கீழே காணலாம். உலக காச நோய் நாள் அனைத்துலக காச நோய் நாள் ("World Tuberculosis Day"), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் ("Robert Koch") என்பவர் காசநோய்க்கான காரணியை ("TB bacillus") பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. சின்மயா மிசன் சின்மயா மிசன் என்ற அமைப்பானது சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக 1953 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாகத் தலைமை அலுவலகம் இந்தியாவின் மும்பாய் (முன்னைய பம்பாய்) இல் அமைந்துள்ளது. இவ்வமைப்பிற்கு உலகேங்கிலும் 300 இற்கு மேற்பட கிளைகள் உண்டு. இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள் சின்மயாமிசன் கீழ்வரும் சேவைகளில் வழங்குகின்றனர். இந்தியாவின் சின்மயா மிஷன் 24 கோவில்களையும் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் 7 இற்கு மேற்பட்ட கோவில்களையும் கொண்டுள்ளது. sdfasdfnsdkfnksajdf;laksjdflsakjfs;alkfjs;lkfjsa;lkfjslakjf சின்மயா மிஷன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் பலநாடுகளில் இதன் ஆதிக்கம் காணப்படுகின்றது. பார்படோசு பார்படோசு அல்லது பார்படோஸ் கரிபியக்கடலுக்கு கிழக்குத்திசையில் அந்திலாந்திக் மாக்கடலில் அமைந்துள்ள ஒரு சுதந்திர தீவு நாடாகும். செயிண்ட். லுசியா, கிரேனாடா, செயிண்ட். விண்சண்ட் கிரெனடின்ஸ், திரின்லாந்து டொபேக்கோ என்பன அருகில் அமைந்துள்ள நாடுகளாகும். பார்படோஸ் 430 சதுர கிலோமீட்டர் அளவான தாள் நிலத்தால ஆன தீவாகும். அதன் மையத்தில் சில உயர் பிரதேசமும் காணப்படுகிறது. இது முருகை கற்களால் ஆன தீவாகும். சீன் பெருந்தோட்டங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. காலநிலை வெப்பவலய நாடுகளை ஒத்ததாகும். மருதன் (எழுத்தாளர்) மருதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய மருதன் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம், சே குவேரா: வேண்டும் விடுதலை, ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்! ஆகியவை அவற்றுள் புகழ் பெற்றவை. கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த மருதன், 2006ம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பக்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார். ம. சிவசுப்பிரமணியன் முகில் என்கிற பெயரில் எழுதும் ம. சிவசுப்பிரமணியன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். மே 28, 1980ல் கோயமுத்தூரில் பிறந்த முகிலின் சொந்த ஊர் தூத்துக்குடி. கணிப்பொறித் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, விகடன் மாணவர் நிருபராகவும், கல்கியில் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றினார். தற்போது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் தமிழ் பிரிவில் முதன்மை துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கல்கி, தினமணி கதிர், குங்குமம், ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதும் முகில், நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர். தினமணி கதிரில் இரண்டு வருடங்களாக வெளிவந்த இவரது 'லொள்ளு தர்பார்' 'லொள் காப்பியம்' பத்திகள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘அகம் புறம் அந்தப்புரம்' என்றொரு வரலாற்றுத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறார். இது இந்திய சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் பற்றிய தொடர் கடந்த ஓராண்டுக்கும் மேல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கபினி ஆறு கபிணி அல்லது கபணி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. பின் காவிரி தமிழ்நாடு வழியாக பாய்ந்து, காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகே வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது. கபிணி அணையானது கபிணி ஆற்றின் குறுக்கே மைசூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. 1974-இல் கட்டப்பட்டட இந்த அணையின் நீளம் 696 மீட்டர்கள். இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி 2,141.9 சதுர கிலோமீட்டர்கள். இந்த அணை பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் வழங்குகிறது. இந்த அணையின் மிகைநீரானது காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த அணையின் பரப்பளவு 55 எக்டேர்களாகும். இந்த அணையின் கொள்ளளவு 15.67 டி.எம்.சி ஆகும். காம்பியர் காம்பியர் என்பது நிறுவன வளநிர்வாகத் திட்டமிடல் மற்றும் நுகர்வோர் உறவு நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப் படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இது குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் கிடைக்கப் பெறுகிறது. மகா சிவராத்திரி மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம். இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. கிரெனடா கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது. பிரெஞ்சு கயானா பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பாகும். இது பிரான்சின் 28 வட்டாரங்களில் (regions) ஒன்று. இது ஒரு சுதந்திரம் உள்ள நாடு அல்ல. அங்கிருக்கும் ஆதிக்குடிமக்கள் தங்களுக்கு கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றார்கள். ஈ (திரைப்படம்) ஈ (திரைப்படம்) 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை S.P. ஜகந்நாதன் இயக்கியுள்ளார். முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா, நயந்தாரா, கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்: பொறி (திரைப்படம்) 'பொறி' 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒர் தமிழ் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தினை சுப்ரமணி சிவா இயக்கியள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக ஜீவா,பூஜா,சீமான்,கருணாஸ்,நாகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். நேர்மையான ஆசிரியராக இருந்து ஓய்வு பெறும் நாகேஷின் மகன் ஹரி(ஜீவா), நடைபாதையில் சிறியளவில் புத்தக விற்பனை செய்யும் தொழிலை நடாத்துகின்றவராவார். மகனுக்காக தன்னுடைய ஓய்வூதியப் பணத்தை எல்லாம் செலவு செய்து ஒரு கடை வைத்துத்தருகிறார் ஹரியின் அப்பா. சந்தோஷமாக ஹரி தொழிலைத் தொடங்க நினைக்கும்போதுதான் அந்தக் கடை மலேசியா வணிகரான (சீமான்)வேறொருவருக்குச் சொந்தமானது என்பதும் தன் அப்பா ஏமாற்றப்பட்டதும் ஹரியிற்குத் தெரியவருகிறது. சின்ன அளவில் நடந்துவரும் மோசடி இது என்று நினைத்து சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க புறப்படும் ஹரியிற்கு காத்திருக்கிறது பெரியஅதிர்சி. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் பெற்றவர்கள் என்பது தெரியவருகின்றது் தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார் . போலி பத்திரங்களைத் தயார் செய்து நடுத்தர குடும்பத்து மக்களை ஏமாற்றும் அந்தக் கும்பலை(விநாயகம் ரியல் எஸ்டேட்) சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்த நினைக்கிறார்.இதனை எவ்வாறு நடாத்திக் காட்டுகின்றார் என்பதே மீதிக்கதையாகும். நவராத்திரி நோன்பு சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும். மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்) ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும். குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும். பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம். நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது. பெர்முடா பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்மீனியா ஆர்மீனியா ("Armenia", , , ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக "ஆர்மீனியக் குடியரசு" என்பது, ஐரோவாசியாவின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு. இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே நகர்னோ-கரபாக் குடியரசு, மற்றும் அசர்பைஜான், தெற்கே ஈரான், அசர்பைஜானின் நாக்சிவன் சுயாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைநகரம் யெரெவான் ஆகும். கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும். ஆலய தீபம் ஆலய தீபம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அம்பிகை நேரில் வந்தாள் அம்பிகை நேரில் வந்தாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்பே ஓடிவா (திரைப்படம்) அன்பே ஓடி வா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ரஞ்சித் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்புள்ள மலரே அன்புள்ள மலரே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அந்த ஜூன் பதினாறாம் நாள் அந்த ஜூன் பதினாறாம் நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ரதிதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அந்த உறவுக்கு சாட்சி அந்த உறவுக்கு சாட்சி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆத்தோர ஆத்தா ஆத்தோர ஆத்தா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாங்காடு ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாங்காடு ராமச்சந்திரன், ஸ்ரீ காமு மற்றும் பலரும் நடித்துள்ளனர். தர்மகர்த்தா (திரைப்படம்) தர்ம கர்த்தா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா, மோகனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எனக்குள் ஒருவன் எனக்குள் ஒருவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஷோபனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏதோ மோகம் ஏதோ மோகம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், பானுப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இங்கேயும் ஒரு கங்கை இங்கேயும் ஒரு கங்கை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, தாரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எழுதாத சட்டங்கள் எழுதாத சட்டங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இருமேதைகள் இரு மேதைகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, மனோரமா, ராதா, பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது எங்க பூமி இது எங்க பூமி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கருணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பிருந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடமை (திரைப்படம்) கடமை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கை கொடுக்கும் கை கை கொடுக்கும் கை1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க நடிகர் விஜயகுமார் முடிவு செய்தார். இப்படத்திற்கு இயக்குனராக மகேந்திரன் பெயரை ரஜினிகாந்த் பரிந்துரைத்தார். இப்படம் 1975 இல் புட்டன கனகல் இயக்கிய தொகுப்பு படமான "கதா சங்கமாவின்" மூன்றாவது பகுதியான "முனிதாயி" என்பதன் நீட்டிக்கப்பட்ட ஆக்கமாகும். கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கதையில் சிறு மாற்றங்களுடன் இப்படத்திற்கு மகேந்திரன் திரைக்கதையை எழுதினார். மகேந்திரனின் ஆஸ்தான குழுவான இளையராஜா, அசோக் குமார் மற்றும் எடிட்டிங் கலைஞர்களான பி. லெனின் - வி. டி. விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மாலைமலர் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்தின் ஜோடி மானபங்கப்படுத்தப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் தனக்கு பிடிக்கவில்லை என்று விஜயகுமார் கூறியிருந்தார். ஆனால் கிளைமாக்ஸை மாற்ற மகேந்திரன் விரும்பவில்லை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினர். கைராசிக்காரன் கை ராசிக்காரன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதுல பூ காதுல பூ 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராகவேந்தர், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காவல் கைதிகள் காவல் கைதிகள்1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதா ரவி, சசிகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கொம்பேறிமூக்கன் கொம்பேறி மூக்கன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குடும்பம் (திரைப்படம்) குடும்பம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். குழந்தை ஏசு (திரைப்படம்) குழந்தை ஏசு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குவா குவா வாத்துக்கள் குவா குவா வாத்துக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குயிலே குயிலே குயிலே குயிலே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீனி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகு, ராணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மெட்ராஸ் வாத்தியார் மெட்ராஸ் வாத்தியார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயபாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மதுரை சூரன் மதுரை சூரன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். விஜயசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மகுடி (திரைப்படம்) மகுடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாமன் மச்சான் மாமன் மச்சான் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மண்சோறு மண் சோரு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கந்தசாமி சிங்காரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மன்மத ராஜாக்கள் மன்மத ராஜாக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாற்றான் தோட்டத்து மல்லிகை மாற்றான் தோட்டத்து மல்லிகை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயசாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமராஜ், வனிதாஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். முடிவல்ல ஆரம்பம் முடிவல்ல ஆரம்பம்1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். மொகைதீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமாகும். இதில் ராஜேஷ், ஜோதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு மலையோரக் கிராமத்தில் சாலையோரம் தேனீர்கடை நடத்தும் பெண்ணின் மகள் ராதா, பத்தாவதுவரை படித்தவள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். கண்ணையா, என்னும் சரக்குந்து ஓட்டுநர். செல்லும் வழியில் அடிக்கடி தேனீர்கடைக்கு வந்து செல்கிறவன். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்னரே இருவரும் உடலால் ஒன்று சேர்ந்துவிடுகின்றனர். இதனால் ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். திரிமண நாளை தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை. திருமணம் ஆகமலேயே ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையை கருணை இல்லம் ஒன்றின் வாசலில், யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள், பின் தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே கருணை இல்லத்தில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே இங்கே வளர்கிறது. ராம் என்னும் மருத்துவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்து விடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் கண்ணையா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே இறுதிக் காட்சி. நான் மகான் அல்ல (1984 திரைப்படம்) நான் மகான் அல்ல 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ரஜினிகாந்த், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் பாடும் பாடல் நான் பாடும் பாடல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாளை உனது நாள் நாளை உனது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நலம் நலமறிய ஆவல் நலம் நலமறிய ஆவல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நல்லவனுக்கு நல்லவன் நல்லவனுக்கு நல்லவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நல்ல நாள் நல்ல நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாணயம் இல்லாத நாணயம் நாணயம் இல்லாத நாணயம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நன்றி (திரைப்படம்) நன்றி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீ தொடும்போது நீ தொடும்போது 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குணநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீதிக்கு ஒரு பெண் நீதிக்கு ஒரு பெண் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். வி. டி. மணி, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெஞ்சத்தை அள்ளித்தா நெஞ்சத்தை அள்ளித்தா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர் ஜோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சாதனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நேரம் நல்ல நேரம் நேரம் நல்ல நேரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெருப்புக்குள் ஈரம் நெருப்புக்குள் ஈரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நிச்சயம் நிச்சயம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நிலவு சுடுவதில்லை நிலவு சுடுவதில்லை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரெங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நினைவுகள் நினைவுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வெள்ளைச்சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அர்ச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும். நிரபராதி (1984 திரைப்படம்) நிரபராதி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நியாயம் (திரைப்படம்) நியாயம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நியாயம் கேட்கிறேன் நியாயம் கேட்கிறேன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். முத்துசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, தேவி பாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நூறாவது நாள் நூறாவது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது. ஓ மானே மானே ஓ மானே மானே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஊமை ஜனங்கள் ஊமை ஜனங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், பிரீத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஓசை (திரைப்படம்) ஓசை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பேய் வீடு பேய் வீடு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிள்ளையார் (திரைப்படம்) பிள்ளையார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிரியமுடன் பிரபு பிரியமுடன் பிரபு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை கொண்டான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, பிருந்நா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொழுது விடிஞ்சாச்சு பொழுது விடிஞ்சாச்சு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொண்ணு பிடிச்சிருக்கு பொண்ணு பிடிச்சிருக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரெங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய "ஊருக்கு மேற்காலே அந்தப்புரம்" மற்றும் "அந்த இந்திர லோகமே" ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பூவிலங்கு பூவிலங்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர் ஜோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, குயிலி மற்றும் பலரும் நடித்துள்ளனர். புதியவன் புதியவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் தயாரித்து, அமீர் ஜோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, அனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். புதுமைப்பெண் (1959 திரைப்படம்) புதுமைப்பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். திருவெங்கடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ராஜதந்திரம் (1984 திரைப்படம்) ராஜ தந்திரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜா வீட்டு கண்ணுக்குட்டி ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ருசி ருசி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மன்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஸ்வப்னா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சபாஷ் சபாஷ் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சங்கநாதம் சங்க நாதம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராம நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சங்கரி (திரைப்படம்) சங்கரி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சரித்திர நாயகன் சரித்திர நாயகன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சட்டத்தை திருத்துங்கள் சட்டத்தை திருத்துங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். 'சட்டத்தை உடைக்கிறேன்' என வெளிவரவிருந்த இத்திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின்படி 'சட்டத்தை திருத்துங்கள்' எனப் பெயர்மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. சத்தியம் நீயே சத்தியம் நீயே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாந்தி முகூர்த்தம் (திரைப்படம்) சாந்தி முகூர்த்தம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிம்ம சொப்பனம் சிம்ம சொப்பனம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி மற்றும் பி. கிருஷ்ணா ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிறை (திரைப்படம்) சிறை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிரஞ்சீவி (திரைப்படம்) சிரஞ்சீவி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுக்ரதிசை சுக்ரதிசை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தலையணை மந்திரம் தலையணை மந்திரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தம்பிக்கு எந்த ஊரு தம்பிக்கு எந்த ஊரு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ராஜ சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தங்கக்கோப்பை தங்கக் கோப்பை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கராத்தே மணி, நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தங்கமடி தங்கம் தங்கமடி தங்கம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக்ஸ், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தராசு (திரைப்படம்) தராசு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா கணபதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தாவணிக் கனவுகள் தாவணிக் கனவுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்கியராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தேன் சிட்டுகள் (திரைப்படம்) தேன் சிட்டுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். தாமோதரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேன் கூடு (திரைப்படம்) தேன் கூடு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்ய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தீர்ப்பு என் கையில் தீர்ப்பு என் கையில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. வி. பி. சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். திருப்பம் திருப்பம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். திருட்டு ராஜாக்கள் திருட்டு ராஜாக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், ஜலஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உள்ளம் உருகுதடி உள்ளம் உருகுதடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈரோடு என். முருகேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். உங்க வீட்டு பிள்ளை உங்க வீட்டு பிள்ளை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். உன்னை நான் சந்தித்தேன் உன்னை நான் சந்தித்தேன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோவைத்தம்பி தயாரித்து கே. ரெங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமாரும் சுஜாதாவும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோகன், ரேவதி, கவுண்டமணி ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்களுக்கு பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி, கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர். உறவை காத்த கிளி உறவை காத்த கிளி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஊருக்கு உபதேசம் ஊருக்கு உபதேசம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வாய்ப்பந்தல் வாய்ப்பந்தல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். வாய்ச்சொல்லில் வீரனடி வாய்ச்சொல்லில் வீரனடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சாதனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வைதேகி காத்திருந்தாள் வைதேகி காத்திருந்தாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். வாழ்க்கை (1984 திரைப்படம்) வாழ்க்கை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வம்ச விளக்கு வம்ச விளக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, மா. நா. நம்பியார், பிரபு, ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் "விதாதா" என்ற பெயரில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும். வாங்க மாப்பிள்ளை வாங்க வாங்க மாப்பிள்ளை வாங்க 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர்,தேவிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். நவராத்திரி நவராத்திரி என்ற பெயரில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: வீட்டுக்கு ஒரு கண்ணகி வீட்டுக்கு ஒரு கண்ணகி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெள்ளை புறா ஒன்று வெள்ளை புறா ஒன்று 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வேங்கையின் மைந்தன் (திரைப்படம்) வேங்கையின் மைந்தன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெற்றி (திரைப்படம்) வெற்றி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். விதி (திரைப்படம்) விதி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆடுகள் நனைகின்றன ஆடுகள் நனைகின்றன 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாத், ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆணிவேர் (1981 திரைப்படம்) ஆணிவேர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆராதனை ஆராதனை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அலைகள் ஓய்வதில்லை அலைகள் ஓய்வதில்லை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அமரகாவியம் அமர காவியம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்புள்ள அத்தான் (திரைப்படம்) அன்புள்ள அத்தான் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்மணி சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கலாவாணன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அஞ்சாத நெஞ்சங்கள் அஞ்சாத நெஞ்சங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடமையின் எல்லை கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் தேவன் அழகக்கோன், எம். உதயகுமார், ஏ. ரகுநாதன், ஜி. நிர்மலா, பொனி ரொபேர்ட்ஸ் முதலானோர் நடித்தார்கள். தயாரிப்பாளர் எம். வேதநாயகம் இத்திரைப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பையும் பொறுப்பேற்றுக்கொண்டார். வித்வான் ஆனந்தராயர், பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்கள். வி. முத்தையா, கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், புவனேஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" நாடகத்தின் நேரடித் தழுவல்தான் இக்கதை. இன்பரசன் ("தேவன் அழகக்கோன்") என்பவன் தன் அண்ணனைக் கொன்று அரசபதவியை அபகரிப்பதோடு, அவனது மனையாளையும் ("ஐராங்கனி") மணந்து கொள்கிறான். இளவரசனான் கமலநாதனிடம் ("பொனி ரொபேர்ட்ஸ்") கொலை செய்யப்பட்ட அவனது தந்தையின் ஆவி அருபமாக வந்து, நடந்ததைச் சொல்லி, சிறிய தகப்பனை பழி வாங்கச் சொல்கிறது. இறுதியில் தாய், கமலநாதன், அன்பரசன் எல்லோருமே இறந்து போகிறார்கள். அரும்புகள் அரும்புகள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் சின்னதுரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவளும் தாயானாள் (திரைப்படம்) அவளும் தாயானாள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மொகமது அலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. வேணுகோபால், ஜெயவாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவசரக்காரி (திரைப்படம்) அவசரக்காரி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன் குமார், ரூபா சக்ரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை அன்று முதல் இன்று வரை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரூபாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அந்த 7 நாட்கள் அந்த 7 நாட்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் "வோ சாத் தின்" என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அந்தி மயக்கம் அந்தி மயக்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ், வனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அர்த்தங்கள் ஆயிரம் அர்த்தங்கள் ஆயிரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. ராஜ்கண்ணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன்,புவனேஸ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாலநாகம்மா பாலநாகம்மா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சின்னமுள் பெரியமுள் சின்ன முள் பெரிய முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேவி தரிசனம் தேவி தரிசனம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்) எல்லாம் இன்ப மயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். எனக்காக காத்திரு எனக்காக காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்க ஊரு கண்ணகி எங்க ஊரு கண்ணகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்கம்மா மகாராணி எங்கம்மா மகாராணி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கடல் மீன்கள் (திரைப்படம்) கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடவுளின் தீர்ப்பு கடவுளின் தீர்ப்பு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காலம் ஒரு நாள் மாறும் காலம் ஒரு நாள் மாறும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஏ. பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கல்தூண் (திரைப்படம்) கல்தூண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கழுகு (திரைப்படம்) கழுகு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணீர் பூக்கள் கண்ணீர் பூக்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணீரில் எழுதாதே கண்ணீரில் எழுதாதே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பா. கங்கை கொண்டான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமநாதன், வனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கன்னி மகமாயி கன்னி மகமாயி1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். துரை தங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் துரைசங்கர், உமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கன்னித்தீவு கன்னித்தீவு () 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கரையெல்லாம் செண்பகப்பூ கரையெல்லாம் செண்பகப் பூ 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கர்ஜனை கர்ஜனை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கீழ்வானம் சிவக்கும் கீழ்வானம் சிவக்கும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கிளிஞ்சல்கள் கிளிஞ்சல்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோட்டீஸ்வரன் மகன் கோட்டீஸ்வரன் மகன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கொத்தாண்டராம ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். குடும்பம் ஒரு கதம்பம் குடும்பம் ஒரு கதம்பம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். குடும்பப்படம் குலக்கொழுந்து குலக்கொழுந்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தவளை தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட தவளைகளை "மழைக்காலத்தின் பாடகர்கள்" என்று அழைக்கிறார்கள். லாரி டிரைவர் ராஜாக்கண்ணு லாரி டிரைவர் ராஜாகண்ணு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மதுமலர் மதுமலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாடி வீட்டு ஏழை மாடி வீட்டு ஏழை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில், மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மகரந்தம் (திரைப்படம்) மகரந்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்ராம், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மங்கல லட்சுமி மங்கல லட்சுமி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மயில் (திரைப்படம்) மயில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ரூபா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, ஸ்ரீகாமு மற்றும் பலரும் நடித்துள்ளனர். மீண்டும் கோகிலா மீண்டும் கோகிலா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மோகனப் புன்னகை மோகனப் புன்னகை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மௌன கீதங்கள் மௌன கீதங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும். மவுனயுத்தம் மவுன யுத்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவீந்தர், ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நல்லது நடந்தே தீரும் நல்லது நடந்தே தீரும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நண்டு (திரைப்படம்) நண்டு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி (நடிகை) மற்றும் பலரும் நடித்திருந்தனர். நதி ஒன்று கரை மூன்று நதி ஒன்று கரை மூன்று 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சுதாகர், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நீதி பிழைத்தது நீதி பிழைத்தது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பரதம் (திரைப்படம்) பரதம் 1991ல் வெளிவந்த இனிய பாடல்கள் நிறைந்த ஒரு மலையாளத் திரைப்படம். மோகன்லால் தயாரிப்பில், சிபிமலயில் இயக்கத்தில் நெடுமுடி வேணு, மோகன்லால், லட்சுமி, ஊர்வசி, திக்குரிசி சுகுமாரன் நாயர் முதலியோர் நடித்திருந்தார்கள். காலஞ்சென்ற ரவீந்திரனின் இசையமைப்பில் கே. ஜே. ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, சித்ரா ஆகியோர் இனிய பாடல்களைப் பாடினார்கள். கல்லியூர் ராமன் (நெடுமுடி வேணு) ஒரு பிரபல சங்கீத மேதை. அவன் தம்பி கல்லியூர் கோபிநாதன் என்ற கோபி(மோகன்லால்) அண்ணனையே தன் குருவாகக் கொண்டு சங்கீதம் பயின்று அவனுடன் கச்சேரிகளுக்கும் சென்று வருகிறான். ராமன் தனக்கு மிருதங்கம் வாசிக்கும் தன் தாய்மாமனின் மகளை (லட்சுமி) திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். கோபி தன் அண்ணியின் தங்கையை (ஊர்வசி) விரும்பி இருக்கிறான். ராமன், கோபி, அண்ணி, தாய், வாய் பேசமுடியாத ஒரு தங்கை, தாத்தா (திக்குரிசி சுகுமாரன் நாயர்) எல்லோரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணனான ராமன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஒரு கச்சேரியில் அவன் மதுபோதையினால் பாடமுடியாமல் தடுமாற சபையோர் கூக்குரலிடுகிறார்கள். நிலைமையை சமாளிப்பதற்காக தம்பி கோபி பாடி முடிக்கிறான். சபையோர் அதை சந்தோசமாக வரவேற்கிறார்கள். தம்பி அப்படிச் செய்தது தனக்கு அவமானம் என்று ராமன் வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்ல அவர்களும் அதைச் சரியென்று சொல்ல, கோபி தான் இனிப்பாடவே போவதில்லை என்று மங்களம் பாடி முடிக்க முற்பட, அவனது நல்லமனம் தெரிந்த அண்ணி அதைத் தடுக்கிறாள். வெளியூர்களிலிருந்து அண்ணனை வழக்கமாக கச்சேரிக்கு அழைப்பவர்கள் கூட இப்போது தம்பியையே அழைக்கிறார்கள். இவற்றால் ஆத்திரம் அடைந்த ராமன் அதிகமாகக் குடிக்கிறான். இறுதியாக தன் தம்பியின் ஒரு சங்கீதக்கச்சேரியை பார்க்கப்போய்விட்டு போதையில் வரும்போது வாகனத்தில் மோதுண்டு அனாதைப்பிணமாக கிடக்கிறான். அண்ணனைத் தேடி கோபி எங்கெங்கெல்லாமோ அலைகிறான். இதற்கிடையில் வாய் பேசமுடியாத இவர்கள் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. அண்ணன் எப்படியாவது திரும்பி வருவான் என்ற் நம்பிக்கையில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இந்த நேரத்தில் அண்ணன் இறந்துவிட்டான் என்ற செய்தி கோபிக்கும், அவனது காதலிக்கும் தெரியவருகிறது. இது தெரிந்தால் தங்கையின் கல்யாணம் நின்றுவிடும் என்ற எண்ணத்தினால் கோபி தன் அண்ணனின் இறுதிச்சடங்குகளை ரகசியமாகவே நடத்தி முடிக்கிறான். ஒரு மாத முடிவில் அண்ணனின் சாந்தி பூசை செய்வதற்காக அவனது மகனான் சிறுவனை ரகசியமாக கடற்கரைக்கு அழைத்துப்போய் கிரியைகள் செய்யும்போது செத்துப்போகாத என் அப்பாவிற்கு ஏன் சாந்தி பூசை செய்கிறீர்கள் என்று கேட்பதோடு வீட்டுக்கு ஓடி வந்து எல்லோருக்கும் சிறுவன் அதை சொல்லி விடுகிறான். எல்லோரும் கோபியை குற்றம் சாட்டுகிறார்கள். அவனே அண்ணனை கொன்றிருப்பான் என்ற அளவிற்கு போகிறார்கள். அண்ணி மாத்திரம் கோபியை நம்புகிறாள். இறுதியில் உண்மை தெரிய வருகிறது. ரகுவம்ச பதே - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க ராம கதா - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க ஸ்ரீவிநாயகம் - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க நெல்லிக்கனி (திரைப்படம்) நெல்லிக்கனி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சொப்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெஞ்சில் ஒரு முள் நெஞ்சில் ஒரு முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "மதிஒளி" சண்முகம் - திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், பூர்ணிமா ஜெயராம், சிவச்சந்திரன், கல்கத்தா விஸ்வநாதன், V.K. ராமசாமி, K. கண்ணன், மற்றும் சுரேஷ் & சத்யகலா (இருவரும் கௌரவ தோற்றம்) மற்றும் பலரும் நடித்துள்ளனர். பூர்ணிமா ஜெயராம் தமிழில் அறிமுகமான படம். இசை - G.K. வெங்கடேஷ்;   பாடல்கள் - புலமைப்பித்தன்;  M.G. வல்லபன்;  பொன்னடியான்; பின்னணி பாடியவர்கள் - வாணி ஜெயராம், தீபன் சக்கரவர்த்தி, மலேசியா வாசுதேவன், B.S. சசிரேகா, S.P.ஷைலஜா. நெஞ்சில் துணிவிருந்தால் நெஞ்சில் துணிவிருந்தால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சொப்னா விஜயசாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெருப்பிலே பூத்த மலர் நெருப்பிலே பூத்த மலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பூர்ணிமா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெற்றிக்கண் (திரைப்படம்) நெற்றிக்கண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு இரவு ஒரு பறவை ஒரு இரவு ஒரு பறவை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒருத்தி மட்டும் கரையினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாக்கு வெத்தலை பாக்கு வெத்தலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். எஸ். வைரவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா, விஜயகீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாலைவனச்சோலை (திரைப்படம்) பாலைவனச்சோலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட் ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். பனிமலர் பனிமலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹேமாச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவீந்தர், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பன்னீர் புஷ்பங்கள் பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிவாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டம் பறக்கட்டும் பட்டம் பறக்கட்டும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திர சேகர், உஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டம் பதவி பட்டம் பதவி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரகுமார், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பெண்மனம் பேசுகிறது பெண் மனம் பேசுகிறது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பெண்ணின் வாழ்க்கை பெண்ணின் வாழ்க்கை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பொன்னழகி பொன்னழகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஓ. முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரா, ஸ்ரீ காமு மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜ பார்வை (திரைப்படம்) ராஜ பார்வை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பார்வையற்ற ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிருத்துவப் பெண் ஒருத்திக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கிறது. இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் அவளுக்குத் திருமண ஒப்பந்தம் நிகழவிருக்கையில், அவளது விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு விருப்ப்பமில்லை எனத் தெளிவாக அறிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் அவளை அழைத்துச் சென்று விடுகிறான். இதற்கு அப்பெண்ணின் தாத்தாவின் ஆசிகளும் உண்டு! மிகச் சாதாரணமான ஒரு காதல் கதையை சிறப்பான முறையில் வடிவமத்திருந்தமைக்கு சிங்கிதம் ஸ்ரீனிவாசன் மட்டும் அல்லாது, கமலின் பங்களிப்பும் மிகப்பெரும் அளவில் உண்டு. தனது நூறாவது படமாக இதைக் கொண்டிருந்த கமல், பார்வையற்ற இளைஞன் வேடத்தில் திறம்பட நடித்திருந்தார். அவருடைய பல பரிமாணங்களையும் அறிவித்த படங்களூள் முதன்மையான சிலவற்றில் ராஜபார்வையும் அடங்குவதானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்னிசை மழையாகவே இருந்தன. குறிப்பாக, வசந்தா என்னும் கருநாடக இசையொற்றிய அந்தி மழை என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. கமல் வயலின் நிகழ்ச்சியாக இசைத்தடம் ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. பந்துவராளி என்னும் கருநாடக இசையைப் பின்பற்றி முதல் பகுதியிலும், மேலை நாட்டுப் பாணியில் இரண்டாவது பகுதியுமாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. கமலஹாசனுடன் மாதவி இணைந்த முதல் படம் இது. ஆயினும், இது பெரும் வெற்றியைப் பெறவில்லை. கமலுடன் மாதவி இணைந்த இதை அடுத்த படங்களும் அவ்வளவாக வெற்றி அடையவில்லை. மிகப் பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்.வி.பிரசாத் இதில் மாதவியின் தாத்தா வேடம் ஏற்றிருந்தார். ஓரளவு கமலிடமிருந்து காட்சியைத் திருடி விட்டார் எனவே கூறும் வண்ணம் அவரது நடிப்பு அமைந்திருந்தது. ராஜாங்கம் (திரைப்படம்) ராஜாங்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், விஜயசாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராம் லட்சுமண் ராம் லட்சுமண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராணி (திரைப்படம்) ராணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், ராஜகவாப் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ராணுவ வீரன் (திரைப்படம்) ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரத்தத்தின் ரத்தம் ரத்தத்தின் ரத்தமே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படமாகும். ஜோ. தேவானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரயில் பயணங்களில் இரயில் பயணங்களில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், ஜோதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சங்கர்லால் (திரைப்படம்) சங்கர்லால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாதிக்கொரு நீதி சாதிக்கொரு நீதி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், கவிபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சத்ய சுந்தரம் சத்ய சுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். சட்டம் ஒரு இருட்டறை சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சவால் சவால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிவப்பு மல்லி சிவப்பு மல்லி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே யாரும் கேட்டால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சூறாவளி (திரைப்படம்) சூறாவளி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், லாவண்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சொர்க்கத்தின் திறப்பு விழா சொர்க்கத்தின் திறப்பு விழா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஜெயமாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாச கல்யாணம் (1981 திரைப்படம்) ஸ்ரீநிவாச கல்யாணம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுமை (திரைப்படம்) சுமை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், உஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தண்ணீர் தண்ணீர் (திரைப்படம்) தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சரிதா, ராதாரவி, சார்லி கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம், இயக்குநர் கே.பாலச்சந்தரால் திரைப்படமாக இயக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையானது ("United Nations Humanitarian Air Service") உலக உணவுத் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுக்காக ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் விமானப் போக்குவரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும். 2005 ஆம் ஆண்டின் படி 93 விமானங்கள் 20 நாடுகளில் ஒப்ந்தத்தில் உள்ளது. 2005 இன்படி 89'850 மணித்தியாலங்கள் பறந்து 368, 216 பயணிகளையும் 153, 817 மெற்றிக் டன் சரக்குப் பொருட்களையும் காவியுள்ளது. 2004 ஆம் ஆண்டில் படி 13 உலக நாடுகளில் 14 திட்டங்களுக்காக இந்த சேவையானது பயன்படுத்தப்படுகின்றது. 102 விமானங்கள் ஒப்பந்ததில் உள்ளன. 64, 000 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பறந்து 176, 189 தடவைகள் பயணிகள் பிரயாணித்தும் 141, 114 மெற்றிக் தொன் (டன்) உணவு மற்றும் சரக்குகள் இதன் மூலமாகப் காவப்பட்டுள்ளது. தரையில் வாழும் மீன்கள் தரையில் வாழும் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு மகாராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தீ (திரைப்படம்) தீ 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தில்லு முல்லு தில்லு முல்லு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் "கோல் மால்" என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இப்படத்தில் இடம்பெற்ற "தில்லு முல்லு" பாடலும் "ராகங்கள் பதினாறு" பாடலும் இப்படத்தின் 2013ஆவது ஆண்டு மறுஆக்கத்தில் மீண்டும் இடம்பெற்றன. திருப்பங்கள் திருப்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் ஆனந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், படாபட் ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். உதயமாகிறது உதயமாகிறது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சிவரஞ்சனி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வா இந்தப் பக்கம் வா இந்தப் பக்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் பொத்தன், உமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வாடகை வீடு வாடகை வீடு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தூயவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சத்யகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வசந்த காலம் (திரைப்படம்) வசந்த காலம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெளிச்சத்திற்கு வாங்க வெளிச்சத்திற்கு வாங்க 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயசாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ஊர்மிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். விடியும் வரை காத்திரு விடியும் வரை காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், சத்யகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்புக்கு நான் அடிமை அன்புக்கு நான் அடிமை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சுஜாதா, ரதி அக்னிகோத்ரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்னப்பறவை (திரைப்படம்) அன்னப்பறவை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சுதாகர், லதா, ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராதிகா, லதாவின் மகளாக நடித்துள்ளார். ஆர். ராமானுஜன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய "பொன்னென்பதோ பூவென்பதோ" என்னும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. இது தவிர "கோபாலா ஏன் சார்", "எத்தனை ராத்திரி", "இதழ் இனிக்க இனிக்க", "பச்சைக் கிளி போல", "சூடான நெஞ்சில்" ஆகிய பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தரங்கம் ஊமையானது அந்தரங்கம் ஊமையானது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை ஸ்ரீ லங்கால் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. அவனைச் சொல்லிக் குற்றமில்லை (திரைப்படம்) அவனைச் சொல்லிக் குற்றமில்லை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஏ. சோமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, பவித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவன் அவள் அது (திரைப்படம்) அவன் அவள் அது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அழைத்தால் வருவேன் (திரைப்படம்) அழைத்தால் வருவேன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாமா ருக்மணி பாமா ருக்மணி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பாஸ்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பம்பாய் மெயில் 109 பம்பாய் மெயில் 109 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சின்ன சின்ன வீடு கட்டி சின்ன சின்ன வீடு கட்டி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யுவராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ஜெயம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சின்னஞ்சிறு கிளியே (திரைப்படம்) சின்னஞ்சிறு கிளியே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதாரவி, அபர்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தர்மராஜா (திரைப்படம்) தர்ம ராஜா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எல்லாம் உன் கைராசி எல்லாம் உன் கைராசி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எங்க ஊர் ராசாத்தி எங்க ஊர் ராசாத்தி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். எங்க வாத்தியார் எங்க வாத்தியார் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்கே தங்கராஜ் எங்கே தங்கராஜ் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். எதிர் வீட்டு ஜன்னல் எதிர் வீட்டு ஜன்னல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கீதா ஒரு செண்பகப்பூ கீதா ஒரு செண்பகப் பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த், சுபாஷினி சுருளி ராஜன் மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களைக் கண்ணதாசனும், தஞ்சைவாணனும், தஞ்சை கல்யாணசுந்தரமும் எழுதியுள்ளனர். யூடியூபில் கீதா ஒரு செண்பகப் பூ குரு (1980 திரைப்படம்) குரு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இளமைக்கோலம் இளமைக்கோலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இணைந்த துருவங்கள் இணைந்த துருவங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதயத்தில் ஓர் இடம் இதயத்தில் ஓர் இடம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் வித்தியாசமானவர்கள் இவர்கள் வித்தியாசமானவர்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஜம்பு (திரைப்படம்) ஜம்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஜானி (1980 திரைப்படம்) ஜானி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று ஜானி என்ற திருடன் வேடம், அடுத்து வித்யாசாகர் என்னும் நாவிதன் வேடம் ஆகும். ஜானி ஒரு நூதனத் திருடன். தடயங்கள் இல்லாமல் திருடுவதில் வல்லவன். பிரபல பாடகி அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) இரசிகனாகவும் இருக்கிறான். எதிர்பாராமல் இருவரும் சந்தித்து பழகுகின்றனர். ஜானியின் அன்பால் ஈர்க்கப்படும் அர்ச்சனா அவனை விரும்புகிறாள். அதை அவனிடம் கூறி திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறாள். இதை எதிர்பார்க்காத ஜானி தன் மறுபக்கத்தைக் கூற முடியாமல், அவள் காதலை ஏற்கும் தகுதி தனக்கு இல்லை எனக் கூறி வெளியேறுகிறான். இதனால் மனம் வெதும்பிய அர்ச்சனா பாடுவதை நிறுத்திவிடுகிறாள். ஜானியைப் போன்ற தோற்றம் கொண்ட வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை விரும்பி அவளை வீட்டுக்காரியாக்க முடிவெடுக்கிறான். இந்நிலையில் பாமா வித்தியாசாகரை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பணக்காரனுடன் ஓட திட்டமிடுகிறாள். இதை கண்டுபிடிக்கும் வித்தியாசாகர் அவளை கொன்றுவிடுகிறான். இந்தக் கொலைப் பழி ஜானிமீது விழுகிறது. இதற்கிடையில் ஜானியால் பாதிக்கப்பட்வர்கள் வித்தியாசாகரை ஜானி என நினைத்து அவனுக்கு தொல்லை தருகின்றனர். காயமுற்ற வித்தியாசாகர் போலீசிடம் இருந்து தப்பி அர்ச்சனா வீட்டுக்கு வந்து ஜானிபோல நடிக்கிறான். அர்ச்சனாவின் உண்மை அன்பை உணர்ந்த வித்தியாசாகர் தான் ஜானி அல்ல என்ற உண்மையைக் கூறுகின்றான். மேலும் ஜானியை மீண்டும் வரவழைக்க அர்ச்சனா பாடும் கடைசி நிகழ்ச்சி என விளம்பரப்படுத்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் ஜானி நிச்சயம் வருவான் என ஆலோசனை கூறுகிறான். அதனை ஏற்ற அர்ச்சனா அவ்வறே செய்ய திட்டமிடுகிறாள். பாடல் நிகழ்ச்சியின்போது மோசமான வானிலையால் கடும் மழை பொழிவதால் அவள் பாடலை கேட்க யாரும் வராத நிலை ஏற்படுகிறது. இருந்தும் ஜானி வருவான் என்ற நம்பிக்கையில் அர்ச்சனா பாடலைப் பாடுகிறாள். வித்யாசாகர் கூறியதைப்போலவே பாடலைக் கேட்க மேடை அருகே ஜானி தோற்றத்தில் வித்தியாசாகர் வருகிறான். அவனை பிடிக்க காவலர்கள் விரட்டி வருகின்றனர். காவலர்களிடம் தான்தான் பாமாவைக் கொன்றதாகவும், பலரை ஏமாற்றியதாகவும், ஆனால் தன்னைப் போன்ற தோற்றமுடைய ஜானியை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்கிறான். பின்னர் அர்ச்சனாவிடம் வந்து ஜானி செய்த தவறுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் இருவரும் நிம்மதியாக வழுங்கள் என கூறுகிறான். ஜானி நிச்சயம் வருவன் எனவும் கூறுகிறான். அவ்வாறே ஜானியும் அங்கு வந்து சேர்கிறான். காடு (திரைப்படம்) காடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாரதி மோகன், வனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காளி (திரைப்படம்) காளி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கல்லுக்குள் ஈரம் கல்லுக்குள் ஈரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாரதிராஜா, அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணில் தெரியும் கதைகள் கண்ணில் தெரியும் கதைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கரடி (திரைப்படம்) கரடி () என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகுமார், விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கரும்புவில் கரும்புவில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர்,சுபாஷினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற 'மீன்கொடித் தேரில்' என்ற பாடல் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு பாடல் ஆகும். காதல் காதல் காதல் காதல் காதல் காதல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. ரமணன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல் கிளிகள் காதல் கிளிகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். கிராமத்து அத்தியாயம் கிராமத்து அத்தியாயம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தகுமார், சுவர்ணலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குமரி பெண்ணின் உள்ளத்திலே குமரி பெண்ணின் உள்ளத்திலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், எம். ஆர். ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குருவிக்கூடு (திரைப்படம்) குருவிக்கூடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர்,ரீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மலர்களே மலருங்கள் மலர்களே மலருங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேபி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மலர்கின்ற பருவத்திலே மலர்கின்ற பருவத்திலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வைத்தியநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ சங்கர், வனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மங்கல நாயகி மங்கல நாயகி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மன்மத ராகங்கள் மன்மத ராகங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ஸ்ரீகீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மரியா மை டார்லிங் மரியா மை டார்லிங் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மற்றவை நேரில் மற்றவை நேரில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஜெயதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதவி வந்தாள் மாதவி வந்தாள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நதிகம் பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, ராஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். மழலைப்பட்டாளம் மழலைப் பட்டாளம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லக்ஸ்மி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷ்ணுவர்த்தன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மீனாட்சி (திரைப்படம்) மீனாட்சி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, ஸ்மிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மேகத்துக்கும் தாகமுண்டு மேகத்துக்கும் தாகமுண்டு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ரஜனி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மூடு பனி (திரைப்படம்) மூடு பனி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுள் ஒன்றான "என் இனிய பொன்நிலாவே.." என்ற பாடல் இளையராஜா பாடல்களில் மிகப்புகழ்பெற்ற ஒரு பாடலாகும். இப்பாடலின் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார். மூடு பனி பாடல் வரிகள் முழு நிலவு (திரைப்படம்) முழு நிலவு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உடுமலை சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முயலுக்கு மூணு கால் முயலுக்கு மூணு கால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளி ராஜன், சச்சு மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் நானே தான் நான் நானே தான் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் போட்ட சவால் நான் போட்ட சவால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சி தாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நன்றிக்கரங்கள் நன்றிக் கரங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திரம் (திரைப்படம்) நட்சத்திரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹரிபிரசாத், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நதியை தேடி வந்த கடல் நதியைத் தேடி வந்த கடல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நீர் நிலம் நெருப்பு நீர் நிலம் நெருப்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் ஆனந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீரோட்டம் நீரோட்டம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெஞ்சத்தை கிள்ளாதே நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சுஹாசினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். அண்ணனின் அரவணைப்பில் வழும் இளம் பெண் விஜி (சுகாசினி). படிப்புக்கு ஏற்ற வேலே கிடைக்காமல் வாகன பழுது பார்க்கும் வேலையில் ஈடுபடும் ராம். இந்த இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். காலை நேரங்களில் மெல்லோட்டம் ஓடும் விஜிக்கு வழித்துணையாக ராம் வருகிறான். விஜியின் உறவினரும் ஒளிப்படக் கலைஞருமான பிரதாப்புடன் விஜி பழகுவதைக் கண்டு அவனை விஜி காதலிக்கிறாள் என சந்தேகம் கொள்கிறான் ராம். இதுகுறித்து விஜியிடம் ராம் பேசும்போது அப்படி ஏதும் இல்லாததால் கோபமுற்று ராமிடம் இருந்து விஜி விலகுகிறாள். திரும்ப அவளை சமாதானப்படுத்தும் ராம் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கிறான். இருவரும் காதலித்துவந்த நிலையில் ராம் அவளை மீட்டும் சந்தேகப்படுபடியாக பேசுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்து நிரந்தரமாக விஜி பிரிகிறாள். அண்ணனின் அறிவுரையால் விருப்பமில்லாமல் அரை மனதுடன் பிரதாப்பை விஜி மணம் முடிக்கிறாள். அவனுடன் ஒட்டமலேயே வாழ்ந்து வருகிறாள். பிரதாப்பும் விஜி மனம்மாறுவாள் என காத்திருக்கிறான். பிறகு பிரதாப்பின் அன்பு வெல்கிறது. நிழல்கள் (திரைப்படம்) நிழல்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒளி பிறந்தது ஒளி பிறந்தது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், மேனகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஊமை கனவு கண்டால் ஊமை கனவு கண்டால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வசந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரே முத்தம் ஒரே முத்தம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. முகிலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு கை ஓசை ஒரு கை ஓசை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ் ஊமை வேடத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். அஸ்வினி இப்படத்தின் கதாநாயகி. இவர்களுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்தனர். 80களில் தானே நடித்து, இயக்கிய பல வெற்றிப் படங்களைத் தந்த பாக்கியராஜின் இரண்டாவது படம் இது. இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இவரது இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களிற் சில: ஒரு மரத்து பறவைகள் ஒரு மரத்து பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு தலை ராகம் ஒரு தலை ராகம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈ. எம். இப்ராகிமின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் பஞ்சதாரா சிலக்கா என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மாயவரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்புபடிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் இராஜா சேர்கிறான். கல்லூரிக்கு இரயில் வழியாக நன்பர்களுடன் இராஜா சென்றுவருகின்றனர். அதே தொடர்வண்டியில் பயணிக்கும் உடன் கல்லூரியில் படிக்கும் அடக்கம்மிக்க சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல்கொள்கிறான். சுபத்திராவும் இராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச்சூழலால் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தன் காதலை சுபத்திராவிடம் இராஜா தெரிவித்தும், அனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகி செல்கிறாள். தன் காதலுக்கு விடை தெரியாத இராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான். கல்லூரியின் கடைசி நாளில் இராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும்விதமாக பேசுகிறான். இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் தொடர் வண்டியில் இராஜாவிடம் தன் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கும் இராஜாவைத் தொடும்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள். இத்திரைப்படத்தின் பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி, இசையமைத்திருந்தார். ஏ. ஏ. ராஜ் பின்னணி இசையை வழங்கியிருந்தார். ஒத்தையடி பாதையிலே ஒத்தயடி பாதையிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கணேஷ், பௌர்ணமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பணம் பெண் பாசம் பணம் பெண் பாசம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பருவத்தின் வாசலிலே பருவத்தின் வாசலிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருபா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பெண்ணுக்கு யார் காவல் பெண்ணுக்கு யார் காவல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொல்லாதவன் (1980 திரைப்படம்) பொல்லாதவன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பொன்னகரம் பொன்னகரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பூட்டாத பூட்டுகள் பூட்டாத பூட்டுகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயன், சாருலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பொற்காலம் (திரைப்படம், 1980) பொற்காலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், எம். ஜி. சி. சுகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பௌர்ணமி நிலவில் பௌர்ணமி நிலவில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், வசந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். புதிய தோரணங்கள் புதிய தோரணங்கள்1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, மாதவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ராமன் பரசுராமன் ராமன் பரசுராமன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராமாயி வயசுக்கு வந்துட்டா ராமாயி வயசுக்கு வந்துட்டா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேந்தன்பட்டி அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உதயசங்கர், மேனகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரிஷிமூலம் ரிஷி மூலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ருசி கண்ட பூனை ருசி கண்ட பூனை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாமந்திப்பூ (திரைப்படம்) சாமந்திப்பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், விஜயகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டத் நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும். 1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர். சரணம் ஐயப்பா சரணம் ஜயப்பா1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.தசரதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பூபதி, ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாவித்திரி (திரைப்படம்) சாவித்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யரகுடிப்பட்டி வரதராவ் (ஒய். வி. ராவ்) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வை. வி. ராவ், சாந்தா ஆப்தே, எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாபநாசம் சிவன் எழுதியிருந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் துறையூர் ராஜகோபால் சர்மா. சூலம் (திரைப்படம்) சூலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்குமார், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சௌந்தர்யமே வருக வருக சௌந்தர்யமே வருக வருக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவச்சந்திரன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஸ்ரீதேவி (திரைப்படம்) ஸ்ரீதேவி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன்,ராஜ்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுஜாதா (திரைப்படம்) சுஜாதா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தைப்பொங்கல் (திரைப்படம்) தைப் பொங்கல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. வல்லவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தனிமரம் தனி மரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ராஜேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தரையில் பூத்த மலர் தரையில் பூத்த மலர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தெய்வீக ராகங்கள் தெய்வீக ராகங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வீரப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தெரு விளக்கு (திரைப்படம்) தெரு விளக்கு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தூரத்து இடி முழக்கம் தூரத்து இடி முழக்கம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். துணிவே தோழன் துணிவே தோழன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சத்யகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உச்சக்கட்டம் உச்சக்கட்டம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ் பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சுனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உல்லாசப்பறவைகள் உல்லாசப்பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வள்ளிமயில் வள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வண்டிச்சக்கரம் வண்டிச்சக்கரம்1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாராய கடையில் சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதா நடித்தார். இப்பட்டப்பெயருடனேயே பின்னால் அறியப்பட்டார். சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியை இவருக்கு தந்தவர் இப்படத்தின் கதாசிரியர் வினு சக்ரவர்த்தி . . இது சிலுக்கு ஸ்மிதாவிற்கு முதல் படமாகும் . இப்படத்தில் நடித்ததற்காக சிவக்குமாருக்கும் சரிதாவிற்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது. வசந்த அழைப்புகள் வசந்த அழைப்புகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தில் பாடல்கள் எழுதி டி. ராஜேந்தர் இசையமைத்துள்ளார். வேடனை தேடிய மான் வேடனை தேடிய மான் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வேலி தாண்டிய வெள்ளாடு வேலி தாண்டிய வெள்ளாடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். விஸ்வரூபம் (1980 திரைப்படம்) விஸ்வரூபம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். யாகசாலை யாகசாலை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர். கோவி மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். எமனுக்கு எமன் எமனுக்கு எமன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆடு பாம்பே ஆடு பாம்பே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆசைக்கு வயசில்லை ஆசைக்கு வயசில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது கோபு எழுதிய வைதேகி காத்திருந்தால் என்ற நாடகத்தின் திரைவடிவமாகும். ஜமேக்கா ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர். அடுக்குமல்லி அடுக்கு மல்லி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அகல் விளக்கு (திரைப்படம்) அகல்விளக்கு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அக்ரகாரத்தில் கழுதை அக்ரகாரத்தில் கழுதை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோன் ஆப்ரஹாம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பி. ஸ்ரீனிவாசன், சுவாதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அக்ரஹாரத்தில் கழுதை 1977-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். தமிழ் சினிமாவின் முன்னோடியான நியோ ரியலிச திரைப்படங்களின் வரிசையில் அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு இடமுண்டு. மலையாள சிறுகதையாசிரியரும் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற திரைக்கதை எழுத்தாளருமான ஜான் ஆபிரஹாம் இயக்கிய ஒரே தமிழ்த் திரைப்படம் இது. தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க கலை விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதினார். சிறந்த படத்துக்கான தேசிய விருதுபெற்றது இப்படம். 70களின் தமிழ் கிராமம் ஒன்றில் கதை நிகழ்கிறது. சென்னை மாநகரில் கல்லூரிப்பேராசியராக பணியாற்றும் கதையின் நாயகன், தாயை இழந்து நிராதரவாக விடப்படும் கழுத்தைக் குட்டி ஒன்றை தனது செல்ல விலங்காக வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால் மாநகரில் தொடர்ந்து கழுதையை வளர்க்கமுடியாதபடி அவரை நெருக்கடிகள் அழுத்துகின்றன. எனவே கிராமத்திலிருக்கும் தனது அக்ரஹாரதுக்கு (பிராமணர் வாழும் தெரு) கழுத்தை அழைத்து வருகிறார். அங்கே வசித்துவரும் தன் பெற்றோரின் கண்காணிப்பில் கழுதையைக் பராமரிக்கும் பொறுப்பை ஒரு வாய்பேசவியலாத பெண்ணிடம் ஒப்படைத்து திரும்புகிறார். ஆச்சார அனுஷ்டானங்களும் பழமைவாதமும் மிக்க அந்த அக்ரஹாரம் கழுதையின் வரவை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் திரைக்கதை. அலங்காரி அலங்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளி ராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்பே சங்கீதா அன்பே சங்கீதா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்பின் அலைகள் அன்பின் அலைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், பேபி இந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்) அன்னை ஓர் ஆலயம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, *நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையத்துள்ளார். அப்போதே சொன்னேனே கேட்டியா (திரைப்படம்) அப்போதே சொன்னனே கேட்டியா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்திய பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அதிசய ராகம் அதிசய ராகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், விஜய் ஆனந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். செல்லக்கிளி செல்லக்கிளி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சித்திரச்செவ்வானம் சித்திரச் செவ்வானம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். என்னடி மீனாட்சி என்னடி மீனாட்சி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஞானக்குழந்தை ஞானக்குழந்தை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இமயம் (திரைப்படம்) இமயம் () 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இனிக்கும் இளமை இனிக்கும் இளமை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஜெயா நீ ஜெயிச்சுட்டே ஜெயா நீ ஜெயுச்சுட்டே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடமை நெஞ்சம் கடமை நெஞ்சம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடவுள் அமைத்த மேடை கடவுள் அமைத்த மேடை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காளி கோயில் கபாலி காளி கோயில் கபாலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கல்யாணராமன் கல்யாணராமன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். காம சாஸ்திரம் (திரைப்படம்) காம சாஸ்திரம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கந்தர் அலங்காரம் (திரைப்படம்) கந்தர் அலங்காரம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணே கனிமொழியே கண்ணே கனி மொழியே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை சாமி நாடார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர், லக்ஸ்மி ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். கன்னிப்பருவத்திலே கன்னிப் பருவத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கரை கடந்த ஒருத்தி கரை கடந்த ஒருத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மந்துராய் பாபுஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வினோத்குமார், வனிதாஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். கவரிமான் (திரைப்படம்) கவரிமான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலட்சுமி, டிம்பிள் கபாடியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குடிசை (திரைப்படம்) குடிசை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டாயுதபாணி, ராஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், கமலா காமேஷ் ஆகியோர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாயினர். இப்படத்தின் கதை இதழில் ஜெயபாரதியின் தந்தையும் எழுதாதாளருமான து. ராமமூர்த்தி எழுதி கணையாழி இதழில் வெளிவந்த குடிசை என்ற புதினத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்தியாவின் எல்லாத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இதுவே. குழந்தையைத்தேடி குழந்தையைத் தேடி1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். குப்பத்து ராஜா குப்பத்து ராஜா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மகாலட்சுமி (திரைப்படம்) மகாலட்சுமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ராமமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், பாலாஜி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மல்லிகை மோகினி மல்லிகை மோகினி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மாம்பழத்து வண்டு மாம்பழத்து வண்டு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்யபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மங்களவாத்தியம் மங்கள வாத்தியம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாந்தோப்புக்கிளியே மாந்தோப்புக் கிளியே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாயாண்டி (1979 திரைப்படம்) மாயாண்டி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முகத்தில் முகம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முதல் இரவு (திரைப்படம்) முதல் இரவு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நாடகமே உலகம் நாடகமே உலகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நல்லதொரு குடும்பம் நல்லதொரு குடும்பம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் வாழவைப்பேன் நான் வாழ வைப்பேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நங்கூரம் (திரைப்படம்) நங்கூரம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வீரா ரத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் ஒரு கை பார்க்கிறேன் நான் ஒரு கை பார்க்கிறேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீச்சல் குளம் (திரைப்படம்) நீச்சல் குளம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், இந்திரானி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீலமலர்கள் நீல மலர்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நீலக்கடலின் ஓரத்திலே நீலக்கடலின் ஓரத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காமினி பொன் சேகா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீதிக்கு முன் நீயா நானா நீதிக்கு முன் நீயா நானா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நீயா நீயா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நெஞ்சுக்கு நீதி (திரைப்படம்) நெஞ்சுக்கு நீதி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நிறம் மாறாத பூக்கள் நிறம் மாறாத பூக்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நூல் வேலி நூல்வேலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஊருக்கு ஒரு ராஜா ஊருக்கு ஒரு ராஜா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. தண்டபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராஜ், அனுபமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரே வானம் ஒரே பூமி ஒரே வானம் ஒரே பூமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு கோயில் இரு தீபங்கள் ஒரு கோயில் இரு தீபங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,சரோஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு விடுகதை ஒரு தொடர்கதை ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பகலில் ஒரு இரவு பகலில் ஒரு இரவு1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பஞ்ச கல்யாணி பஞ்ச கல்யாணி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், வசந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பஞ்ச பூதம் (திரைப்படம்) பஞ்ச பூதம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாப்பாத்தி பாப்பாத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. சண்முகம் செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ரதி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பசி (திரைப்படம்) பசி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை 1978இல் நடப்பதாக சித்தரிக்கப்படுகிறது. சென்னையில் சைக்கிள் ரிக்சா ஓட்டுபவரான முனியன் மற்றும் அவனது நோயாளி மனைவியும் மகள் குப்பம்மா (ஷோபா) ஆகியோர் கூவக் கரையோரம் வாழ்ந்து வருகின்றனர். குடிகார முனியனால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. தாய் தந்தைமீது பாசம் கொண்டவளாக குப்பம்மாள் இருக்கிறாள். குடும்ப வறுமையைப் போக்க குப்பம்மா தன் தோழியுடன் சென்று காகிதம் சேகரித்து அதைவிற்று வரும் பணத்தை தன் தாயிடம் நாளும் கொடுத்துவருகிறாள். தேனிர் கடையில் குப்பம்மாளுக்கு அறிமுகமாகிறான் சரக்குந்து ஓட்டுநரான ரங்கன் (விஜயன்). உடல் நலம் இல்லாத முனியன் தன் மகள் குப்பம்மாளிடம் பிரியாணி வாங்கிவந்து தருமாறு கேட்கிறான். கடைக்கு செல்லும் குப்பம்மாள் அங்கு பிரியாணிவாங்க பணம் போதாமல் திருப்பிக் கொண்டிருகிறான். வழியில் அவளைப் பார்த்த ரங்கன் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு பிரியாணி வாங்கித் தந்து பிரியாணி பொட்டளத்தையும் வாங்கித் தருகிறான். பின்னர் குப்பம்மாளை தன் சரக்குந்தில் ரங்கன் அழைத்துச் செல்கிறான். ரங்கன்மீது உள்ள நம்பிக்கையால் அவனிடம் தன்னை இழக்கிறான் குப்பம்மாள். வீட்டுக்கு வரும் குப்பம்மாளிடம் ஏன் தாமதம் என அவளின் தாய் கேட்கும்போது அவள் உண்மையை கூறிவிடுகிறாள். மானம் போனதாக கருதிய அவளின் தாய் விடிந்தபோது தொடர்வண்டி பாதையில் இறந்து கிடக்கிறாள். பாதை மாறினால் பாதை மாறினால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். லலிதா ஆர்ட்சு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. பட்டாகத்தி பைரவன் பட்டாகத்தி பைரவன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொண்ணு ஊருக்கு புதுசு பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பூந்தளிர் (திரைப்படம்) பூந்தளிர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். போர்ட்டர் பொன்னுசாமி போர்ட்டர் பொன்னுசாமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அடியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். புதிய வார்ப்புகள் புதிய வார்ப்புகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் மோகியான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார். ஊருக்கு புதியதாக குடும்பநல சேவகியைக் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணிமீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகணி ஜோதியை திரும்பவர்ந்து திருமணம் வமுடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார். ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்) ராஜ ராஜேஸ்வரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், தீபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது "பிரசங்காட கென்டித்திம்மா" என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம் ஆகும். சக்களத்தி (திரைப்படம்) சக்களத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுப்ரபாதம் (திரைப்படம்) சுப்ரபாதம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுவர் இல்லாத சித்திரங்கள் சுவர் இல்லாத சித்திரங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், பாக்யராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தைரியலட்சுமி தைரிய லட்சுமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தர்மயுத்தம் தர்மயுத்தம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தாயில்லாமல் நானில்லை தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேவைகள் தேவைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேவதை (1979 திரைப்படம்) தேவதை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். திரிசூலம் (திரைப்படம்) திரிசூலம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1973-ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம். ம. சு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். திசை மாறிய பறவைகள் திசை மாறிய பறவைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உறங்காத கண்கள் உறங்காத கண்கள்1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். வல்லவன் வருகிறான் வல்லவன் வருகிறான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமகிருஷ்ணா, ரீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிகப்புக்கல் மூக்குத்தி சிகப்புக் கல் மூக்குத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீ ஸ்ரீ மாமா ஸ்ரீ ஸ்ரீ மாமா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. கருணாநிதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீராமஜெயம் (திரைப்படம்) ஸ்ரீ ராமஜெயம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வீட்டுக்கு வீடு வாசப்படி வீட்டுக்கு வீடு வாசப்படி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெள்ளி ரதம் வெள்ளி ரதம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெற்றிக்கு ஒருவன் வெற்றிக்கு ஒருவன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். யாருக்கு யார் காவல் யாருக்கு யார் காவல் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்) ஏணிப்படிகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீப்ரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அக்கரைப் பச்சை அக்கரைப் பச்சை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்பைத்தேடி அன்பைத்தேடி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்புத்தங்கை அன்புத் தங்கை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அப்பா அம்மா அப்பா அம்மா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மா. ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஷீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அத்தையா மாமியா அத்தையா மாமியா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும். அவள் ஒரு தொடர்கதை அவள் ஒரு தொடர்கதை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அவளுக்கு நிகர் அவளே (திரைப்படம்) அவளுக்கு நிகர் அவளே 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்னாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். டாக்டரம்மா டாக்டரம்மா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்கள் குலதெய்வம் எங்கள் குல தெய்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்கம்மா சபதம் எங்கம்மா சபதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதயம் பார்க்கிறது இதயம் பார்க்கிறது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கடவுள் மாமா கடவுள் மாமா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கமுத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கைநிறைய காசு கை நிறைய காசு 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கலியுகக் கண்ணன் கலியுகக் கண்ணன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்மணி ராஜா கண்மணி ராஜா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், இலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குமாஸ்தாவின் மகள் குமாஸ்தாவின் மகள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஆர்த்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். மகளுக்காக மகளுக்காக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மலைநாட்டு மங்கை மலை நாட்டு மங்கை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாணிக்கத் தொட்டில் மாணிக்கத் தொட்டில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முருகன் காட்டிய வழி முருகன் காட்டிய வழி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜன், வித்யபாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நான் அவனில்லை (1974 திரைப்படம்) நான் அவனில்லை1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நேற்று இன்று நாளை நேற்று இன்று நாளை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரே சாட்சி ஒரே சாட்சி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பணத்துக்காக பணத்துக்காக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். செந்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பந்தாட்டம் (திரைப்படம்) பந்தாட்டம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லக்ஸ்மனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பருவகாலம் (திரைப்படம்) பருவ காலம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ரோஜாமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாதபூஜை பாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பத்து மாத பந்தம் பத்து மாத பந்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பானுமதி, சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பெண் ஒன்று கண்டேன் பெண் ஒன்று கண்டேன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிள்ளைச் செல்வம் பிள்ளைச் செல்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ராமச்சந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமு, தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிராயசித்தம் (திரைப்படம்) பிராயசித்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். புதிய மனிதன் புதிய மனிதன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜ நாகம் (திரைப்படம்) ராஜ நாகம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், மஞ்சுளா, மேஜர் சுந்தர்ராஜன், சுபா மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோஷக்காரி ரோஷக்காரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சமர்ப்பணம் சமர்ப்பணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தில்லை ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், விசுபாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சமையல்காரன் (திரைப்படம்) சமையல்காரன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிரித்து வாழ வேண்டும் சிரித்து வாழ வேண்டும் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். பாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிசுபாலன் (திரைப்படம்) சிசுபாலன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிவகாமியின் செல்வன் சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடலாசிரியர்: கண்ணதாசன், வாலி புலமைப்பித்தன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசிலா, எல்.ஆா்.ஈஸ்வாி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் திரையில்: சிவாஜி கணேசன், வாணிஶ்ரீ, ஏ. வி. எம். ராஜன். சொர்க்கத்தில் திருமணம் சொர்க்கத்தில் திருமணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுவாதி நட்சத்திரம் (திரைப்படம்) சுவாதி நட்சத்திரம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிகுமார், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தாகம் (திரைப்படம்) தாகம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு நந்தன்கோடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நந்திதா போஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தாய் (திரைப்படம்) தாய் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தாய் பாசம் தாய் பாசம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தாய் பிறந்தாள் (திரைப்படம்) தாய் பிறந்தாள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தங்க வளையல் தங்க வளையல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தங்கப்பதக்கம் (திரைப்படம்) தங்கப்பதக்கம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தீர்க்கசுமங்கலி (திரைப்படம்) தீர்க்க சுமங்கலி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். திக்கற்ற பார்வதி திக்கற்ற பார்வதி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியின் "திக்கற்ற பார்வதி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் திரைக்கதை, வசனம் எழுதினார். இப்படத்தின் வெளிப்புறப் படபிப்பிடிப்பு முழுவதும் இராஜாஜியின் சொந்த ஊரான இப்போதைய கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி மற்றும் ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. துணை நடிகர்களாக ஒசூரில் உள்ளவர்களே நடித்தனர். இசை அமைப்பாளர்: பிரபல வீணைவித்துவான் சிட்டிப்பாபு திருடி திருடி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். திருமாங்கல்யம் (திரைப்படம்) திருமாங்கல்யம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். டைகர் தாத்தாச்சாரி டைகர் தாத்தாச்சாரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தராஜன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். உங்கள் விருப்பம் உங்கள் விருப்பம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உன்னைத்தான் தம்பி உன்னைத்தான் தம்பி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். உரிமைக்குரல் உரிமைக்குரல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். வைரம் (திரைப்படம்) வைரம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வாணி ராணி (திரைப்படம்) வாணி ராணி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்) வெள்ளிக்கிழமை விரதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அலைகள் (திரைப்படம்) அலைகள் () இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்ரீதர் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் விஷ்ணுவர்தன், சந்திரகலா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசை அமைத்திருந்தார். அம்மன் அருள் அம்மன் அருள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அன்புச் சகோதரர்கள் அன்புச் சகோதரர்கள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லக்ஸ்மி தீபக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,ஜமுனா (நடிகை) மற்றும் பலரும் நடித்துள்ளனர். அரங்கேற்றம் (திரைப்படம்) அரங்கேற்றம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாக்தாத் பேரழகி பாக்தாத் பேரழகி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாரத விலாஸ் பாரத விலாஸ் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மொழி இன சமயப் பல்வகைமை கொண்ட இந்தியாவை ஒத்த ஒரு குடியிருப்பை மையமாக வைத்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அந்நியரின் ஆளுகையிலிருந்து விடுபட முடியுமெனக் காட்டியது. எங்கள் தங்க ராஜா எங்கள் தங்க ராஜா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். எங்கள் தாய் எங்கள் தாய் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கங்கா கௌரி கங்கா கௌரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கௌரவம் (திரைப்படம்) 2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்திற்கு, கௌரவம் (2013 திரைப்படம்) பக்கத்தைப் பார்க்கவும் கௌரவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா ரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காசி யாத்திரை காசி யாத்திரை ("Kasi Yathirai") எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ்.எஸ். சேதுராமன் இப்படத்தை தயாரித்தார். வி.சி. குகநாதன் இந்த படத்தின் கதையை எழுதினார். சங்கர் கணேஷ் இசையமைக்க, குமாரி பத்மினி, ஜெயா, மனோரமா (இரட்டை வேடம்), எம். ஆர். ஆர் வாசு, சோ ராமசாமி, வி.கே.ராமசாமி , ஸ்ரீகாந்த், சுருளி ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளார். கமல்ஹாசன் இந்த படத்தில், தங்கப்பனின் கீழ் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பரமசிவம் பிள்ளை (வி.கே.ராமசாமி) ஊருக்குத் திரும்புகிறார். ராமு மற்றும் உமாவின் சித்தப்பா பரமசிவம் பிள்ளை ஆவார். பரமசிவம் பிள்ளை பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால், தன் அண்ணன் மகனையும் மகளையும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறார். மாறாக, ராமு சீதைவைக் காதலிக்க, உமாவும் வேறொரு ஆணைக் காதல் செய்கிறார்கள். சித்தப்பா பரமசிவத்தின் அனுமதியைப் பெற ஷங்கரின் (சுருளி ராஜன்) உதவியை நாடுகிறான் ராமு. ஷங்கரும் சமையல்காரனாக வேடமிட்டு பரமசிவத்தைத் தன் வசப்படுத்த முயற்சித்தும் தோல்வியைச் சந்திக்கிறான். அதனால், மனோரமாவின் உதவியுடன், பரமசிவத்திற்கு ஒரு மொட்டை காதல் கடிதம் எழுதி அனுப்புகிறான் ஷங்கர். பரமசிவத்தின் உதவியாள் அந்தக் காதல் கடிதத்தை அவருக்கு படித்துக் காட்டுகிறான். அதைச் சற்றும் பிடிக்காதவாறு நடந்துகொண்டாலும், அந்த கடிதத்தில் இருக்கும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பரமசிவத்திற்கு எழுகிறது. அதன் பின்னர் ஏற்படும் சம்பவங்களை மிகவும் நகைச்சுவையாகப் படமாகியிருந்தார் இயக்குனர். இப்படத்தின் இசையை சங்கர் கணேஷ் இசையமைத்தார். வாலி மற்றும் பஞ்சு அருணாசலம் இப்படத்தின் பாடல்களை எழுதினார். கட்டிலா தொட்டிலா கட்டிலா தொட்டிலா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோமாதா என் குலமாதா கோமாதா என் குலமாதா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மல்லிகைப் பூ (திரைப்படம்) மல்லிகைப் பூ 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பி.சுசீலாவின் குரலில் "நான் கொண்ட மாங்கல்யம் நாள்தோறும் நிலைத்திருக்க" என்ற பாடலும், டி.எம்.எஸ்., பி.சுசீலாவின் குரல்களில் "நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்" என்ற பாடலும் இடம் பெற்றுள்ளன. மணிப்பயல் மணிப்பயல் ("Manipayal") 1973இல் வெளிவந்த தமிழ் குடும்ப, குழந்தைகளுக்கான திரைப்படம், இயக்கம் ஏ.ஜெகந்நாதன், தயாரிப்பு மற்றும் திரைக்கதை இராம. வீரப்பன். இப்படத்தின் வசனங்கள் ஜெகதீசன், மற்றும் பூவை கிருஷ்ணன். இதன் இசை ம. சு. விசுவநாதன். இதில் மாஸ்டர் சேகர் மற்றும் பேபி இந்திரா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ஏ. வி. எம். ராஜன், ஜெயந்தி, வி. கே. ராமசாமி மற்றும் எஸ். வி. சுப்பையா ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். செய்யாதக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் குற்றவாளியாக முன்னிலைப்படுத்தப்பட்டு சிறை செல்ல நேர்கிறது , அவன் தன்னை குற்றமற்றவன் என நிரூபித்து ஒரு கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கான நல்ல வழியை கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும். ஏ. வி. எம். ராஜன் -அருண் ,சாந்தியின் முன்னால் காதலன்
ஜெயந்தி - சாந்தி செல்வியின் தாயார் மற்றும் ஆசிரியர்
மாஸ்டர் சேகர் - இளங்கோவன் , கந்தனின் மகன்
பேபி இந்திரா -செல்வி
வி. கே. ராமசாமி - பொன்னம்பலம், காவல் துறை அதிகாரி
எஸ். ஏ. அசோகன் - பரசுராம் , கடத்தல்காரன்
தேங்காய் சீனிவாசன் - அமாவாசை, ஆண்டாளின் கணவன், காசியின் தந்தை
மனோரமா - ஆண்டாள், அமாவாசையின் மனைவி, காசியின் தாயார்
எஸ். வி. சுப்பையா - கந்தன் , செருப்பு தைப்பவர்
மாஸ்டர் பிரபாகர் - காசி , ஆண்டாள், அமாவாசையின் மகன்
எம். எஸ். சுந்தரி பாய் - சிவகாமி ,பொன்னம்பலத்தின் மனைவி
ராஜகோகிலா - ரோஸி
சண்முகசுந்தரி - அருணின் தாயார்
ஐசரி வேலன் - சாந்தி வீட்டு சமையல்காரர்
என்னத்த கன்னையா - காவலர் ஆள்வார் நாயுடு
குண்டுமணி - காளிமுத்து
உசிலைமணி - சிறப்புத் தோற்றம் கலை: கிருஷ்ணா ராவ்
புகைப்படம் : ஆர். என் . நாகராஜ ராவ்
Design: பரணி ஈஸ்வர்
விளம்பரம்: எலிகன்ட்
படக்கலவை: சி. கண்ணப்பன் ஏவிஎம் லபாராட்டரிக்காக
ஒலிப்பதிவு ( பாடல்): ஜே. ஜே. மாணிக்கம்
ஒலிப்பதிவு (வசனம்): வி. சி. சேகர் மற்றும் எம். பி. ராமச்சந்திரன்
நடனம்: சோப்ரா மற்றும் டி. ஜெயராமன்
சண்டை: என். சங்கர்
படம் & அச்சு: ஓஸ்பி லித்தோ வொர்க்ஸ்
ஏ. ஜெகந்நாதன் இதற்கு முன்னர் தத்தினேனி பிரகாஷ் ராவ் மற்றும் ப. நீலகண்டன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி இப்படத்தில் அறிமுக இயக்குனரானார். இப்படத்தின் இசையமைப்பு மெல்லிசை மன்னர் ம. சு. விசுவநாதன் , பாடல்களை எழுதியது வாலி, அவிநாசி மணி மற்றும் புலமைப்பித்தன். ஜெயச்சந்திரன் தமிழ் மொழியில் அறிமுகமாகி "தங்கச்சிமிழ் போல்" என்ற பாடலை பாடினார்.'
மனிதரில் மாணிக்கம் மனிதரில் மாணிக்கம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மஞ்சள் குங்குமம் (1973 திரைப்படம்) மஞ்சள் குங்குமம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், ஷீலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மறுபிறவி (திரைப்படம்) மறுபிறவி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நல்ல முடிவு நல்ல முடிவு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நத்தையில் முத்து நத்தையில் முத்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நீ உள்ளவரை நீ உள்ளவரை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், குமாரி பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். நியாயம் கேட்கிறோம் நியாயம் கேட்கிறோம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாசதீபம் பாச தீபம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டிக்காட்டு பொன்னையா பட்டிக்காட்டு பொன்னையா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பெண்ணை நம்புங்கள் பெண்ணை நம்புங்கள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். "நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ, நீ எதை கேட்டாலும் தரவேண்டுமோ... " என்ற பி.சுசிலா, SPB பாடிய பாடல் மிகவும் பிரபலம். இசை மெலடி கிங் V.குமார். பெத்த மனம் பித்து பெத்த மனம் பித்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொன்னூஞ்சல் பொன்னூஞ்சல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பொண்ணுக்கு தங்க மனசு பொண்ணுக்கு தங்க மனசு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொன்வண்டு (திரைப்படம்) பொன்வண்டு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பூக்காரி பூக்காரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரார்த்தனை (திரைப்படம்) பிரார்த்தனை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) ராஜ ராஜ சோழன் 1973ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைபடமாகும்.வண்ணத்தில் வெளியான.இப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். வரலாற்றுப்படம் / நாடகப்படம் ரம்யா கிருஷ்ணன் ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார். தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் என். டி. ராமராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோட் குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா என முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றார். 80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே சினிமாவுக்கு வந்த போதும், தமிழ்த் திரையுலகம் அவரின் திறமையைக் கண்டு கொள்ளவில்லை. மனம் தளராது போரடியவருக்குத் தெலுங்குப் படவுலகம் கைக்கொடுக்க, அங்கே முன்னணி கதாநாயகி அந்தஸ்தைப் பிடித்தார். 80-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ராதா, பானுப்பிரியா, ராதிகா, சுகாசினி, விஜயசாந்தி ஆகியோருடன் ரம்யா கிருஷ்ணனும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நவீன நடனம் பரதநாட்டியம் என இரண்டிலுமே சிறந்து விளங்கியது அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததோடு, அவர் நடித்த படங்களும் வசூல் சாதனைப் படைத்தன. இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் 'நீலாம்பரியாக' அவர் வாழ்ந்து காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு கதாநாயகனுக்கு ஈடாக, ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு. ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தங்க வேட்டை" நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் 'கலசம்', 'வம்சம்' எனத் தொடர்களில் நடித்தார். கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 1964 1964 (MCMLXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். தருமபுரி மாவட்டம் தருமபுரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். தருமபுரி நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.ய்ய வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும். ஆண்டிற்கு சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது. கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தருமபுரி மாவட்டம் கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்தி, அரசுக்குத் தெரியாமல் அங்குள்ள மக்களுக்கு சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தருமபுரி மாவட்டதில் தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய் கிராமங்கள் கொண்டது. இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், 8 ஊராட்சி ஒன்றியகளும், 251 கிராம ஊராட்சிகளும் கொண்டது. தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மக்களவைத் தொகுதியும், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகின்றது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும். தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்கு பரிசல் பயணமும் எண்ணைக்குளியலும் பிரபலம். தீர்த்தமலை மலைக்கோவில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திண்டுக்கல் ஆகும். இம்மாவட்டம் பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டஞ்சத்திரம் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன. 1985 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும். திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்று வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை மாவட்டமும், தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் கோயம்புத்தூர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 19,23,014 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இம்மாவட்டம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 9 வருவாய் வட்டங்களாகவும் மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழனி , ஒட்டன்சத்திரம் & கொடைக்கானல் என 3 நகராட்சிகளும் மற்றும் 23 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது. அவைகள்; இம்மாவட்டம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும். இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பபடுகின்றன. 1963 1963 (MCMLXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு ("Republic of Trinidad and Tobago") என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. 'திரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கின்றதுமான தீவாகும். இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் 'திரினிடாட் டொபாகோ' குடியரசில் அடங்கும். இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க, சீன, போர்த்துகீசிய, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானவர்கள். இந்து இந்து () (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட "இந்து" என்ற சொல் பயன்படுகிறது. செங்கிருதச் சொல்லான "சிந்து"விலிருந்து இந்து மருவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரகாஸ்பதி ஆகமத்தில் மேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க "அல்-ஹிந்" என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது. மற்றும் ஈரான் நாட்டிலும் "ஹந்து" என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் "ஹிந்துஸ்தான்" என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு வங்காள மொழி நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க "ஹிந்து" என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில் ஆபிராமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத(சமணம், சீக்கியம் அலல்து பௌத்தம்) நீங்கலாக சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது. எழுத்தறிவு எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும். வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார். எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று வாசித்தல் ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்: இத்திறன்களைப் பெற்றவர், அச்சிடப்பட்ட கருத்துகளைப் புரிந்து,  நுண்ணாய்வு செய்து பயன் பெறுதல், தொகுத்தல், உய்த்துணர்தல், கோர்வையாகவும், துல்லியமாகவும் எழுதுதல், அச்சிடப்பட்ட கருத்துகளிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி உட்காட்சி அமைத்தல், முடிவெடுத்தல்,  படைப்புத்திற ஆதார சிந்தனைகள் மேற்கொள்ளல் போன்ற பன்முகத் திறன்களையும் பெற்றவராவர். இவர்களே முழு எழுத்தறிவு பெற்றவராவர். இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது: எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கரூவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச்சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும் கிமு 8000ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு, எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது மெசொப்பொத்தேமியா, எகிப்து,  இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி, சீனா போன்ற பகுதிகளில் தனித்தனியாக எழுத்துகள் தோன்றி வளர்ந்தன. கிமு 3500-3000 ஆண்டுகளில்   சுமேரியாவில் தோன்றியது. அந்த நூற்றாண்டில் மிகையளவு உற்பத்தி, அதையொட்டிய புதிய வாணிபம், புதிய மேலாண்மைகள், புதிய அதிகப்படியான ஆரம்பகால எழுத்து வடிவ தகவல் தொடர்பு மெசபடோமியாவின் தென் பகுதியில் உள்ள தகவல்கள் போன்றவை மக்களை செயல்முறை எழுத்தறிவை நோக்கி நகர்த்தின.  மெசபடோமியாவில், வேளாண்மை உற்பத்தி, வாணிபம் ஆகியவற்றை மேலாண்மை செய்ய முத்திரை இடப்பட்ட வில்லைகள் பயன்படுத்தப்பட்டன. பதிவு முறை தொடங்கப்பட்ட இக்காலத்தில் எழுதும் முறை  உருவானது.  ஆப்பெழுத்து தோன்றுவதற்கான முன் அறிகுறியாக களிமண் மீது எழுதப்பட்ட அடையாள வில்லைமுறை அமைந்துள்ளது. படவெழுத்துகள் எண்ணுருக்கள் பொருள்களின் வடிவங்கள் கூட்டல் முறை போன்றவை ஆப்பெழுத்து முறையில் பயன்படுத்தப்பட்டன. கிமு 3300-3100ல் எகிப்து நாட்டின் ஹீரோகிளிப்ஸ் உருவானது. இது படிமவியல் அடிப்படையில் உயர்ந்தோர் குழுவின் அதிகாரம் வளப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இது ஒலியியல் குறிமான முறை அமைக்க அடிப்படையாக அமைந்தது. கிமு. 900-400ல்  இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளில் ஓல்மெக் மற்றும் ஸாபோடெக் நாகரிகத்தின் போது எழுதும் முறை பழகத்திற்கு வந்தது.  இது கிளிப்டிக் முறை எனப்படுகிறது. உயர்மட்ட படிமவியல் முறையில் நாட்காட்டி குறிப்புகள், எழுத்துகள், எண்கள் போன்றவை புள்ளிகளாலும் கோடுகளாலும் குறிக்கப்பட்டன. சீனாவில் கிமு 1200ல் சாங் அரசமரபினர் காலத்தில் எழுத்து வடிவம் தோன்றியது. உயர்ந்தோர் குழுவின் செயல்பாடுகள், வேட்டையாடப்பட்ட விலங்குகள், பெற்ற விழுமங்கள், செய்த தியாகங்கள் போன்றவை முறைப்படுத்தப்பட்ட குறியீடுகளால் எலும்புகளில் பொறிக்கப்பட்டன. பண்டைய சீனர்கள் ஆரகிள்-எலும்பு எழுத்துக்களை உருவாக்கினர். இவை தற்கால எண்களையும் எழுத்துகளையும் குறிக்கும் பட எழுத்துகளாகும். எழுத்தறிவானது மேலாண்மை செயல்களில் ஈடுபடுவோர், அதிகார அமைப்பிலுள்ளோர், மேல்தட்டு மக்கள் என 1% க்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன. சமூக மானிடவியலர் ஜாக் கூடி (Jack Goody) என்பவர் எழுத்துக்களின் தோற்றம் குறித்த இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறார். வரலாற்று ஆசிரியர் இக்னேஸ் கெல்ப் (Ignace Gelb) என்னும் அறிஞரின் கூற்றுப்படி கிமு 750ல் பண்டைய கிரேக்கர்கள் முதல் எழுத்துருவை உண்டாக்கினர்.  இவர்கள் உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க குறியீடுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறார்.  ஆனால் (Goody) கூற்றுப்படி மேற்கு ஆசியாவிலிருந்து பெறப்பட்ட மெய்யெழுத்துக்களுக்கு உரிய வடிவங்கள் கிரேக்க உயிரெழுத்துக்களுடன் சேர்க்கப்பட்டன.  ஆனால் கிரேக்க கலாச்சாரத்தைத் தொடர்ந்து வந்த மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் அடிப்படைவாதிகள் கிரேக்கர்கள்தான் முதலில் எழுத்துருக்களை உண்டாக்கினர் என்ற கருத்தை திணித்தனர். இவ்வாறு பல அறிஞர்கள் மற்றும் முன்னாள் எழுத்துருவாக்கவியலார் கூற்றுப்படி கிமு 1500ல் வடக்கு கானான் (தற்போதைய சிரியா) பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருந்தது.  1905ல் ஆங்கில தொல்லியலார் ஃப்லிண்டர்ஸ் பெட்ரி (Flinders Petrie) என்பார் செராபித் எல் காதெம் (Serabit el-Khadem) எனும் இடத்திலுள்ள பச்சைக் கலந்த நீல நிற சுரங்கங்களில் கானான் எழுத்து முறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இக்கொள்கைகளுக்கு ஆதாரமாக அமைந்தது. பத்து ஆண்டுகளுக்குப்பின் ஆலன் கார்டினர் (Alan Gardiner) எனும் ஆங்கில எகிப்தியியலார் கானானில் கிடைத்த கல்வெட்டு எழுத்துக்கள் அங்குள்ள அஷேரா (Asherah) எனும் தேவதையைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.   1948ல், வில்லியம் எஃப் ஆல்பிரைட் (William F. Albright) என்பவர், கூடியின் கருத்துக்களை ஒட்டிய கல்வெட்டு ஆதாரங்களை அடையாளங் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.  1929ல் உகாண்ட்  பகுதியில் பிரான்சு நாட்டு தொல்லியலார்  கிளாடு  எஃப் ஏ ஸ்சேஃபர் (Claude F. A. Schaeffer) என்பார் கல்வெட்டு எழுத்துக்கள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்தார்.  அவற்றில் சில எழுத்துக்கள் புராண கால கருத்துக்களைக் கூறுவனவாக உள்ளன. இவை முற்கால கானான் நாட்டின் வட்டாரப் பேச்சுமொழியினை வரிவடிவம் செய்திருப்பதைக் காட்டுகிறது. இந்த கல்வெட்டுகளில் 32 மெய்யெழுத்துக்கள் ஆப்பெழுத்துகளக உள்ளன 1953ஆம் ஆண்டு கானான் நாட்டின் ஒரு பகுதியில் முன்று தலை அம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரே மாதிரியான கிமு 12ஆம் நூற்றாண்டின் கானான் முறை கல்வெட்டு எழுத்துக்கள் பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஃப்ராங்க் மூர் கிராஸ் (Frank Moore Cross) என்பாரின் கூற்றுப்படி இந்த கல்வெட்டு எழுத்துகள் தற்போதைய எழுத்துமுறைகளை ஒத்துள்ளன. இந்த் கல்வெட்டு எழுதுக்கள் பட எழுத்துக்களிலிருந்து நேர்க்கோட்டு எழுத்து முறைக்கு மாற்றம் அடையும்போது தோன்றிய எழுத்துக்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. மேலும் இந்த கல்வெட்டுகள் இதற்கு முந்தைய கால எழுத்துக்களுக்கும் தற்போதுள்ள எழுத்துக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை நன்கு விளக்குவதாக உள்ளது என்று கூறுகிறார். கானானைட் மொழியில் மெய்யெழுத்துக்களுக்கான முறைமை பல பிற்கால மொழிகளிலும் இந்த முறைமையைப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. வெண்கல காலத்தின் பிற்பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய பல்வேறு எழுத்துருக்கள் போனீசியன், ஹீப்ரூ, அராமிக் எனும் மூன்று மொழிகளாக பிரித்து விரிவாக்கப்பட்டன. கூடியின் கருத்துப்படி ஆப்பெழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கிரேக்க எழுத்துக்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும். வரலாற்றுப் பூர்வமாக கிரேக்கர்கள் தங்கள் மொழியை போனீஷியன்கள் சீரமைத்ததை உறுதிப்படுத்துகின்றனர். எனினும் பல எழுத்துருவாக்கவியலார் கிமு 1100 ஆண்டுகளுக்குமுன் இருந்த கானானைட் மொழி எழுத்துக்களைக்கொண்டு பண்டைய கிரேக்கர்கள் இசைவான எழுத்தறிவு பெற்றிருந்ததாக நம்புகின்றனர். ஆனால், முற்கால கிரேக்க எழுத்துக்கள் கிமு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கானானைட் மொழி கல்வெட்டுப் பதிவுகள், கிரேக்கர்கள் கிமு 1100லிருந்தே இம்மொழியைக் கையகப்படுத்தி பயன்படுத்துவது உறுதியாகிறது. மேலும் உயிரெழுத்துக்களைக் குறிக்கும் ஐந்து எழுத்துகளைப் பின்னாளில் சேர்த்ததும் உறுதியாகின்றது போனீசியன் எழுத்துமுறை மட்டுமே முதன் முதல் தோன்றிய "நேர்கோட்டு எழுத்துமுறை" என்று கருதப்படுகிறது. வட கானான் பகுதியிலுள்ள துறைமுக நகரங்களில் இது விரைவாகப் பரவுயது. ஹீப்ரு, அராமிக் போன்ற மொழிகள் சம காலகட்டத்தில் தோன்றின. ஒரே மாதிரியான அமைப்புகளைப் பெற்றிருந்தன. எனவே இவை ஒத்த மொழித் தொகுதியாக்ச் கருதப்படுகின்றன. இக்காரணங்களின் அடிப்படையில் சில தொல்லியலாளர்கள் போனீசியன் வரிவடிவத்தின் தாக்கம் ஹீப்ரு மற்றும் அராமிக் வரிவடிவத்தில் உள்ளது என்று நம்புகின்றனர். ஆயுள் எதிர்பார்ப்பு ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் (ஆயுள்) எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.6 இருந்து யப்பானில் 81 வரை இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை இயல்பாக அவதானிக்க முடியும். திருவாதிரை நோன்பு திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை "ஆதிரையின் முதல்வன்" என்றும் "ஆதிரையான்" என்றும் கூறுவர். மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது. சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார். எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார். சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும். விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.: திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார். "சங்சரசங்கிதை" என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்ப சிவாசாரியாரின் மாணாக்கராகிய "கோனேரியப்ப முதலியார்" தமிழில் இதனை மொழிபெயர்த்துள்ளார். திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர். திருவெம்பாவை நோன்பு ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (திரைப்படம்) ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ("மாட்சிமை தங்கிய அப்துல்லா", "His Highness Abdulla") 1990ல் திரையிடப்பட்ட மலையாளத் திரைப்படம். நடிகர் மோகன்லால் தயாரித்த இன்னுமொரு இசைக் காவியமாகும். அவர் தயாரித்த பரதம் திரைப்படத்தைப் போலவே, இத்திரைப்படத்திலும் ரவீந்திரன் இசையமைத்த அற்புதமான கருநாடக இசை வடிவத்தில் அமைந்த பாடல்களை, கே. ஜே. யேசுதாஸ், எம்ஜி. ஸ்ரீகுமார், ரவீந்திரன், சித்ரா, சுஜித் ஆகியோர் பாடியிருந்தார்கள். இத்திரைப்படத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு, கௌதமி, திக்குரிசி சுகுமாரன் நாயர், ஸ்ரீனிவாசன், எம். ஜீ. சோமன் முதலானோர் நடித்தார்கள். இயக்குனர் சிபிமலயில் இத்திரைப்படத்தையும் இயக்கினார். கஜல் பாடகன் என அறியப்பட்ட ஒருவன் (மோகன்லால்) பம்பாயிலிருந்து புறப்பட்டு ஒரு மகாராஜாவை (நெடுமுடி வேணு) கொல்வதற்காக கேரளத்திற்கு வருகிறான். அங்கு மகாராஜாவின் உறவினர்களே அவர் சொத்துக்களை அபகரிக்க முயல்வதையும் காண்கிறான். மகாராஜாவின் அரண்மனையில் நிலவும் சங்கீதச் சூழல் அவனது மனதை மாற்றுகிறது. தென் இந்திய மாநிலங்களின் மனித முன்னேற்ற ஒப்பீடு செயிண்ட் கிட்சும் நெவிசும் செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அதிகாரபட்சமாக செயிண்ட். கிறிஸ்டோபர் நெவிஸ் அமெரிக்க கண்டத்தில் கரிபியக்கடலில் இரு தீவுவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாட்டைக் குறிக்கும். இது பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் அமெரிக்க கண்டத்தின் மிகசிறிய நாடாகும். தலைநகரமும் முக்கிய அரச மையங்களும் செயிண்ட். கிட்ஸ் தீவிலேயே அமைந்துள்ளன. நெவிஸ் செயிண்ட். கிட்சுக்கு தென்மேற்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு சமூகத்தில் அதன் வெவ்வேறு குழுக்களுக்கிடையே அல்லது தனிநபர்களுக்கிடையே இருக்கக் கூடிய பொருளாதார நிலையின் சமனற்ற தன்மையைக் குறிக்கின்றது. பொருளாதார நிலையை வருமானத்தையும் நிலையான சொத்துக்களையும் கொண்டு வரையறை செய்யலாம். ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அதன் அடிப்படை வாழ்க்கைத் தரம் சிறப்பாகவும், ஏற்றத்தாழ்வு குறைவாகவும் இருத்தல் நலம். இந்த ஏற்றத்தாழ்வுகளை அளக்க ஜினி குறியீட்டைப் பயன்படுத்துவர். ஆரியச் சக்கரவர்த்தி ஆரியச் சக்கரவர்த்தி என்பது பின்வருவனவற்றுள் ஒன்றைக் குறிக்கலாம். உ. வே. சாமிநாதையர் உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) "உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்" சுருக்கமாக "உ.வே.சா". இவர் சிறப்பாக தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். சாமிநாதன் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில்  உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் "வேங்கட சுப்பையர்" - "சரசுவதி அம்மாள்" தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை இசையுடன் ஹரிகதா கலாட்சேபம் செய்பவர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார். உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா பெரும் காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது. இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது. சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்கமுயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்று பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887 ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக்கருவூலமாக இருக்கின்றது. சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என கூறுவாராம். இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது. தமிழாசிரியர் எங்கு கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாக குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்கு குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப்பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உவேசா பதிவுசெய்கிறார் உவேசா தாம் பிறந்த உத்தமதானபுரத்தின் பெயர்க்காரணம் பெருமையையும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப்பான்மையும் வாஞ்சையோடு பேசுகிறார்கள். எவ்வாறு அவ்வூர் மக்கள் நிறைமனத்தினராயும், சோம்பலை அறியாதவர்களாகவும், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், உள்ள வளத்தை பங்கிட்டு அமைதியாக வாழ்க்கை நடத்தினர் என்று உணர்வு பூர்வமாக குறிப்பிடுகின்றார்கள். இவர் குடும்பம் இசையும் தமிழும் கலந்த குடும்பம். இவ்வழியில் வந்த உவேசா இவைகளில் தேர்ந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதில் வியப்பில்லை. அக்காலத்தில் வேளாண் நிலத்தை “போக்கியத்திற்கு” விடும் பழக்கம் இருந்தது, உழவர்கள் கடன்படுவது இயற்கை மற்றும் பெண்கள் குறிப்பாக மருமகள், வீட்டில் மாமனாரிடமும், மாமியாரிடமும் சொல்லொணாத் துயரடைந்தனர் என்றும் சமுக வாழ்க்கை பற்றிய பல செய்திகள் இயல்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர்கள் மற்றும் சில புகழ் பெற்றவர்களைப்பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் பல செய்திகளை அறிய முடிகிறது. ஆனந்த வருடம்மாசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்ழமை (19-02-1855) அன்று உவேசா பிறந்தார். இவர் சாதகமும் தன்னுடைய ‘என் சரித்திரத்தில்’ குறிப்பிட்டுள்ளார். இவர் தந்தை குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். பல வேளாண்குடிப் பெருமக்கள் உதவி செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உவேசா நினைவு கூறுகிறார். இவர் தந்தை பல இடங்களுக்குச் சென்று இராமாயண விரியுரை நடத்திவந்தார். இது போன்று விரிவுரை செய்பவர்களுக்கு பலர் உதவி செய்து வந்துள்ளனர் என்னும் செய்தி பல இடத்தில் வருகிறது. உவேசா தமது இளம்வயதில் தமது பாட்டனாரிடமும் ஒரிரண்டு திண்ணைப்பள்ளிகளிளும் கல்வி பயின்றுள்ளார். இளம் வயதை அரியலுரில் கழித்திருந்தாலும் பிழைப்பைத்தேடி உவேசா குடும்பம் ஊர்ஊராகப் பல ஊர்களுக்குச் சென்று வந்துள்ளது. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்சுவடி முதலிய கற்றுக் கொடுத்துள்ளனர். ஏட்டில் எழுதவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரை வரவில்லை, சிலேட்டும் இல்லை. முதலில் மாணவர்கள் மணலில் எழுதிப்பழக வேண்டும் பின் எழுத்தாணியால் ஒலைச்சுவடியில் எழுதக்கற்றுக்கொள்ள வேண்டும் அன்றையப் பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை தெளிவாக அறிய முடிகிறது. உவேசா சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராயிருந்தார் ஆனாலும் அவர் தந்தையவர்கள் உவேசா விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உவேசா இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உவேசாவிற்கு சிறுவயதில் ஆங்கில எழுத்துக்கள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்கு தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன் முதலில் கற்பித்தாா் என்று உவேசா தெரிவிக்கின்றார்கள். அரியலுரில் தம் குடும்பம் மிக்க வருமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெறிய வருகிறது. உவேசாவின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்து சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக்கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உவேசா தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத்தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப்புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது. உவேசா கவிதை எழுதும் கலையையும் பயின்றுவந்ததார் அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர் தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பது தான் உசிதம் என்று கூறியதை பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உவேசா தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. உவேசாவிற்க்கு திருமணம் முடித்துவிடவேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெரும் குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்து தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உவேசா தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உவேசாவிற்க்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்கு பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உவேசாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது. தமது தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ் உவேசா தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரியபயனில்லை, ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உவேசாவிற்க்கு கோபமுண்டாயிற்று, தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார். தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சேர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்தபொழுது, உவேசாவின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்களிடம் அனுப்பும்படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை எற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உவேசா தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்கு கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது, படித்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் துவங்கினார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிவரையிலும் இத்தொடர்பு உவேசாவிற்க்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அறிய தமிழ் தொண்டு ஆற்றவும் இது வழிவகுத்தது. உவேசா தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை. திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை அவரிடம் கற்றார். ஆசிரியரும் மிகவும் வருமையில் இருந்தார் என்று உவேசா கூறுகிறார்.. “புலமையும் வருமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இது உவேசாவின் கூற்று. திருவாடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தை பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களை பாடி விளக்கம் அளித்த உவேசா, தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உவேசா கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார்.. “என்ன கஷ்டம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார். ஆசிரியர் அவர்களுடன் கும்பகோணம் தியாகராச செட்டியாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர். செட்டியார் அவர்களே பிற்காலத்தில் உவேசாவை கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்த்துவிட்டவர். திருவாடுதுறை ஆதினத்தின் குருபூஜையில் பங்கேற்ற போதும், மறுபடியும் ஆசிரியருடன் அங்கு வந்து தங்கியிருந்த போதும் தமிழ் கற்க ஏராளமான வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு மனநிறைவுடன் தமிழ் பயின்றார். தியாகராச செட்டியாரிடம் இருந்த அறிமுகம் அடிக்கடி சந்தித்த பின் நெருங்கிய பழக்கமாயிற்று. பிள்ளையவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பிறரை எதிர்பார்த்திறுக்க வேண்டிய வேளையில், செட்டியாருக்கு கல்லூரியிலிருந்து நிரந்தர வருமானம் கிடைத்ததை எண்ணிப்பார்த்து, தமக்கும் இதுபோன்று வேலை கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று கருதி, அவரிடம் எங்காவது பள்ளியில் ஆசிரியர் பணி பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரிடம் மாலையில் பாடமும் கேட்டுக் கொள்ளலாம். என்றும் தெரிவித்தார். செட்டியாரும் ஒரு வேலை பார்த்து வந்த பொழுது பிள்ளையவர்கள் ‘சாமிநாதன் மேலும் படிக்கட்டும், பின் அவரை வேலை தேடிவரும்’ என்று கூறி அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார். உவேசா பல செய்யுள்களையும் நூல்களையும் இயற்றியுள்ளாா். தந்தையாரின் வறுமையைக் கண்டு, ஒரு பெரியமனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று இயற்றிய செய்யுள் தான் அவரின் முதல் செய்யுள். கலை மகள்துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் முதலியன மற்ற நூல்களாகும். குடும்பத்தின் வறுமையும் கடன் தொல்லையும் உவேசாவை மிகவும் வாட்டியது. சிறிது காலம் தம் தந்தையுடன் புராண விரிவுரை நடத்தி கடனை அடைக்கலாம் என்ற தந்தையின் கருத்துக்கிணங்க இருவரும் விரிவுரை நடத்தி பொருள் ஈட்டத் தொடங்கினர். இவர்களின் விரிவுரைக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்ப்பு இருந்தது. இது நடந்தது 1874 ஆம் வருடம். உவேசா 19 வயது ஆனவர். இக்காலத்தில் தம் ஆசிரியரிடம் தமிழ் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் இவரிடம் நீங்காமலிருந்தது. இதற்கிடையே ஆசிரியர் பிள்ளையவர்கள் இயற்கை எய்தினார். அது சமயம் உவேசா அவர்களும் உடனிருந்துள்ளார். ஆசிரியரை இழந்த உவேசா மீளாத துயரத்தில் ஆழ்ந்தார். உவேசா திருவாடுதுறையில் தங்கி பாடம் கேட்டுவந்தார். உவேசா மீது நல்லெண்ணம் கொண்ட ஆதினம் தேசிகா் அங்கேயே வீடுகட்டிக் கொடுப்பதாகவும் பெற்றோர்களையும் மடத்திற்கே வந்து விடும்படியும் கேட்டுக்கொண்டதற்கிணங்க குடும்பத்துடன் மடத்திற்கே வந்து விட்டார்கள். மடத்தில் இருக்கும் பொழுது பல பெரும் தமிழ்ப்புலவர்களைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியது. வேதநாயகம்பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு பட்டாபிராம் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். தேசிகருடன் மற்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கும் பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது. பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்கு சுப்பிரமணிய தேசிக விலாசம் என்று பெயர். இவ்வழகிய மடாலயத்தைச் சிறப்பித்து பல தமிழ்ப்புலவா்கள் பாடலியற்றிருந்தனர். இப்படி 86 பாடல்கள் இருந்தன. உவேசா 8 பாடல்கள் இயற்றினார். வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் இப்பாடல் திரட்டை முதன் முதலாக ஐயரவர்கள் பதுப்பித்தார். உவேசா திருவாடுதுறையில் தங்கியிருந்த பொழுது தாமும் விரும்பிய நூல்களை கற்றுக்கொண்டு மாணவர்களுக்கும் நூல்களைக் கற்பித்து வந்தார். செய்யுள் இயற்றுவதிலும் பயிற்சி செய்து தமது திறமையை வளர்த்துக் கொண்டார்.திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் தாம் நல்ல முறையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை உவேசாவிற்க்கு இருந்தது. அப்பொழுது 1880 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உவேசா வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையை தாம் விட்டுவிட முடிவுசெய்து விட்டதாகவும். அந்த வேலைக்கு உவேசாவைப் பரிந்துரைத்துள்ளதாகவும் ஆதினம் சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். திகைப்படைந்த தேசிகர், உவேசாவை அனுப்பும் எண்ணமில்லை என்று மறுத்து விட்டார். ஆனாலும் செட்டியாரவா்கள் ஒரு நாள் மடத்திலேயே தங்கி ஐயரவர்களின் எதிர்காலம் கருதி அவரை அனுப்பவேண்டும் என்று உருக்கமாக வேண்டினார். உவேசாவிடம் கல்லூரி வேலையின் மேன்மையையும் இங்கு வருடம் முழுவதும் உழைத்தாலும் கிடைக்காத ஊதியம் அங்கு மாதம்தோரும் நிலையாக வரும்மென்றும் எடுத்துக் கூறினார். ஆனால் உவேசா பணம் பதவியைப் பொருட்படுத்தாமல். மடத்தில் எல்லா வசதிகளையும் சன்னிதானம் பார்த்துக் கொள்கிறது. ”திருவாடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளது என்பதை செட்டியார் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை”. என்று பதிவு செய்கிறார். பணம் பதவிக்கு ஆசைப்படாமல்திருவாடுதுறை மடம் காட்டிய ஆதரவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்ற உணர்வு உவேசாவிடம் இயற்கையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரிப்பணி உவேசாவின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும் மடத்தில் மற்றவர்கள் செலுத்திய அன்பும் தேசிகரின் ஆதரவும் உவேசாவின் உயிரோடு இணைந்து நின்றது. செட்டியார் கூறியதைக் கேட்ட உவேசா சன்னிதானம் இசைவு தெரிவித்தால் செல்வது என்று முடிவு செய்தார். செட்டியாரின் விடாமுயற்சி பலித்தது. உவேசாவால் மடத்திற்கு அநேக நன்மை இருந்தாலும் அவாின் எதிா்காலத்தை மனதில் கொண்டு சுப்பிரமணியதேசிகர் அவரை மடத்திலிருந்து அனுப்ப இசைவு தெரிவித்தார்கள் என்றோ ஒருநாள் மதுரை குடமுழுக்கு விழாவில், தேசிகருக்கு முன்பு வேதநாயகம்பிள்ளையின் பாடல் ஒன்றைக் கூறி விளக்கும் படி தேசிகர் ஐயரவர்களை கேட்டுக்கொண்டார். உவேசா நல்லமுறையில் பாடலை விளக்கிவிட்டு, இறுதி அடியான “இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை” என்ற இவ்வடியை உணர்ச்சிகரமாகக் கூறி முடித்தார். உவேசா தம்மிடம் வசதியில்லை, ஏழ்மை உண்டு என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியதை பலகாலம் கழித்து நினைவு கூர்ந்த தேசிகர் பல பரிசுகளுடன் காலணியும் குடையும் அளித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். உவேசா மீது தேசிகர் மாறாத அன்பு கொண்டிருந்தார் என்பதும் அவரது வளர்ச்சியையும் உணர்ச்சிகளையும் கவனித்தும் வந்து கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.திருவடுதுறை ஆதினமடத்தில் உள்ள ஒவ்வொரு பொருள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்த உவேசா மடத்தை விட்டுச்செல்லும் பொழுது. “அவை ஜடப்பொருள்களல்லவா அவற்றின் மீது அவ்வளவு பற்றிருப்பது பைத்தியக்காரத்தனமல்லவா என்று பிறருக்குத் தோன்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாடுதுறை மடத்தில் இருந்தது அங்குள்ள பொருள்களைப்பிரியும் போது உலகத்தையே பிரிவது போன்ற உண்ர்ச்சி தான் எற்பட்டது”. என்று பதிவு செய்கிறார் உவேசா. கும்பகோணம் கல்லூரியில் முதலில் ஆசிரியர்களுக்கு முன்பு தமது புலமையை விளக்க வேண்டியிருந்தது. பின்பு முதல்வர் முன்பும் வகுப்பும் நடத்திக் காண்பிக்க வேண்டியிருந்தது. பாடம் நாடத்துவதில் நல்ல அனுபவம் இருந்ததால் உவேசாவின் திறமையில் அனைவரும் மனநிறைவடைந்தனர். கல்லூரி முதல்வரும் உவேசாவை கல்லூரியில் பணிக்கு அமர்த்தினார். அக்காலத்தில் இவர் கடை பிடித்த மற்றொரு முக்கியமான பழக்கம் கடிதம் எழுதும் பொழுது நன்றி தெரிவிப்பது உற்சாகப்படுத்துவது போன்று அனைத்தும் செய்யுள் வடிவில்தான் இருக்கும் என்பது. மடத்தில் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும், கல்லூரி வாழ்கையையும் ஒப்பிடும் இவர் இரண்டு இடங்களிலும் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் நிலை இருந்தாலும் மடத்தில் சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் போன்று பல இனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடனிருந்ததாகவும் இதனிடையே தமிழ்க் கல்வியுமிருந்ததாகவும், ஆனால் கல்லூரியில் கல்வியைத் தவிர வேறு இனங்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிடுகிறார். “கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில், வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம், இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது” என்று குறிப்பிடுகிறார் உவேசா குடும்பத்தை அவர் தந்தையாரே நிர்வகித்து வந்துள்ளார். எங்கும் உவேசா குடும்பப்பாரத்தையும் குடும்பத்தை நிர்வகித்ததுமாகக் கூறவில்லை குடும்பாரமில்லாமல், தாம் முழு உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே செலவுசெய்தார். உவேசா ”அரியலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்பு முனை என்று அறிகின்றார். திருவாடுதுறை ஆதினம் தெண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உவேசா, இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உவேசா பெரிய அதிச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மை சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உவேசாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாக, சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை, கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உவேசாவிடம் கொடுத்து கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உவேசாவிற்க்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார் முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உவேசாவின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ்நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்கு புரம் பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உவேசா சிந்தாமணியை தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார். பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடி பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களை தெளிவாக்கிக் கொண்டததாகக் குறிப்பிடுகிறார். உவேசா சமணர்களுடன் கலந்துரையாடிய போதும், கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உவேசா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உவேசா சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப்பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களை தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப்படித்தோரும் இந்தத்தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர். பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நாம்காணும் உரை உவேசாவால் பதிப்பிக்கப்பெற்றது. அதற்குமுன் ஐயரவர்கள் இவ்வுரையினை நன்கு புரிந்து கொண்டு விளக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். “நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விசயங்களை உணர்ந்தேன், இரண்டு விசயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப்பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைந்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விசயத்திற்கோ, சொற்பிரயோகத்திற்கோ ஒருநூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்” என்று உவேசா பதிவு செய்கிறார். சிந்தாமணி சமண காவியம் என்று சைவர்கள் குறை கூறிய போதும் “பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணியானால் நமக்கு என்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே சுவை நிரம்பிக்கிடக்கும் காவியமாக இருக்கும் பொழுது அதைப்படித்து இன்புறுவதில் என்னதடை” என்று தெளிவாக்குகின்றார். தம் தமிழ் தொண்டில் அவர் மதம் குறுக்கிடுவதை அனுமதிக்கவில்லை. அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடி கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழுவடிவத்தையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உவேசா எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத்தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகன போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உவேசா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாக பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “ பழந்தமிழ் இலக்கண இலக்கியச்சுவடிகளைத்தேடி ‘ நள்ளிருளோ, கொள்ளு பகலோ, குறிக்கும் கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ- உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வர்ணிக்கிறார் இப்பணியில் ஏராளமான பொருட்செலவு, மன உளைச்சல், உடல் அசதி அன்றி கடின உழைப்பை நல்கினாலும் இப்பணியை மெத்த உற்சாகத்துடன் செய்து வந்தார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு முன் சேலம் இராமசாமி முதலியாரவர்கள் உவேசாவைச் சந்தித்து “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சிலபிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும் அதைப்போன்ற உபகாரம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்”. பவர்துரை பதுப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சு நகல் ஒன்று ஐயரவர்களுக்குக் கிடைத்தது, தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த நகலை அனுப்பி வைத்தார். திரு சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலி யிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பலநகல்களையும் ஒப்பிட்டு பேதங்களைக் குறித்து வைத்து பின் ஆய்வு செய்து சரியான சொற்களைத் தொிவு செய்வார். உவேசாவிடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர். சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது, திருக்குடந்தைப் புராணம் உவேசா வெளியிட்ட இரண்டாவது நூல். சிந்தாமணியைப் போன்று பல பழையநூல்கள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதை ஐயரவர்கள் அறிந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை போன்றவை அவை. எட்டுத்தொகை மூலநூல் திருவாடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினென்கீழ் கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன. மற்ற சங்க நூல்களையும் நன்குபடித்தால் தான் சிந்தாமணியின் பொருள் விளங்கும் என்று அறிந்து அந்நூல்களை ஆழமாக உவேசா படித்து பொருள் விளங்க முயன்று வந்தார். சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது தஞ்சாவூரில் விருசபதாச முதலியாரிடம் உள்ளதாக அறிந்து அவாிடம் கேட்ட பொழுது அவர் “சமணர்களுக்கு மட்டும் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தர இயாலது” என்று மறுத்து விட்டார். பல நண்பர்களின் உதவியுடன் இந்நூல் நகல் அவரிடமிருந்து கிடைத்தது. இது போன்று மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அறிய பொக்கிஷங்களான இச்சுவடிகளை தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உவேசா மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடி சிந்தாமணியின் 23 நகல்களை உவேசா சேர்த்துவிட்டார். இதற்கிடையில் மடத்தின் அலுவல் காரணமாக சென்னை சென்று வர வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இராமசாமி முதலியாரிடம் தங்கிக் கொண்டு பல புகழ் பெற்றவா்களிடம் அறிமுகமாகி பழகும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் சந்தித்த சி வை தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உவேசாவிடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உவேசா தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம் முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாக கூறிவிட்டார். சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உவேசா முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொறு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகி விடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உவேசாவும் நூலைப்பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார். நூலைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் துவக்கினார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது புரசவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் போன்றவர்கள் நீங்கள் வயதில் இளையவர், சீவக சிந்தாமணிப்பதிப்பு மிகவும் கடினமான செயல் உங்களால் முடியாது என்றும், சேலம் ராமசாமி முதலியார் கூட ஒரு சமயம் உங்களுக்கு இது கடினம், உங்கள் குறிப்புகளை தாமேதரம்பிள்ளையவர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு நிதி திரட்டுவது சிரமம் என்று தளர்வூட்டினர். ஆனால் உவேசா “நான் ஏன்பதிப்பிக்கக் கூடாது அந்த நூலையும், உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்துள்ளேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன் நிறைவேற்றி விடலாம் என்ற துணிவு எனக்கு இருக்கிறது”. என்று தெளிவாக இருந்தார், “யார் வந்து தடுத்தாலும் என்முயற்சியை நிறுத்திக்கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது”. சீவக சிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ் புலமை வேண்டும் அது உவேசாவிடமிருந்ததுதான் சிறப்பு. மேலும் சிறுவயதிலிருந்து உவேசா தீராததமிழ் ஆர்வத்தால் மிகுந்த முயற்சி எடுத்து தமிழைக் கற்றுத் தேர்ந்த புலமை தான் சீவக சிந்தாமணி போன்ற பழைய நூல்களை சிறப்பாகப் பதிப்பிக்க உதவி செய்தது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமகளிலம்பகம் 58 ஆம் செய்யுளுக்கு உரை எழுதும் பொழுது நச்சினார்க்கினியர் “ஏக்கழுத்தம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லிற்கு பொருள் விளங்காத உவேசா சிறுபஞ்சமூலத்திலும், நீதிநெறிவிளக்கத்திலும் இதே சொல் வருவதை நினைவுகூர்ந்து அவைகளை மீண்டும் படித்து இச்சொல்லின் முழுமையான, சரியான பொருளை தமது பதிப்பில் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொடர்புகொண்டு பார்க்கக்கூடிய அளவு புலமை பெற்றிருந்தால் தான் இது இயலும். இதனை உவேசா செய்துகாட்டியுள்ளார். இதுபோன்று ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்லிற்கு நாம் கண்டுபிடித்த பொருளைப் பற்றி தமது பதிப்பிற்கு மிகுந்த துணையாக இருந்த சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது “புதிய தேசத்தைக் கண்டு பிடித்தாற் கூட இவ்வளவு சந்தோசமிராது” என்று கூறுகிறார். நூலை அச்சிடும்பொழுது ஒய்வு ஒழிவில்லாமல் உவேசா உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக்கொடுப்பது, கையெழத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன.. இப்பணியில் சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலாச்சாரியாரும் வேலுச்சாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதிகளை படித்து உதவி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சடித்த நகல்களை தாமே தனியாக இரவில் அமர்ந்து நெடுநேரம் சரிபார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். சென்னையில் தங்கியிருந்து அச்சுவேலையை மேற்பார்வையிட இயலவில்லை, கும்பகோணம் திரும்ப வேண்டி வந்தது எனவும் சென்னையில் சுப்பராய செட்டியாரிடம் ராஜ கோபாலாச்சாரியாரிடம் மேற்பார்வைப்பணியை செய்ய வேண்டிக்கொண்டு, அச்சு நகல்களைப் பெற்று சரிபார்க்க கும்பகோணம் அனுப்பும் படி வேண்டிக்கொண்டு கும்பகோணம் திரும்பிவிடுகின்றார். திருவாடுதுறை சென்று தேசிகரிடம் அச்சு நகல்களைக் காண்பித்த பொழுது அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வித்துக்கள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்”. என்று குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். சீவக சிந்தாமணி அச்சு நகல்களை தாமும் சரிபார்த்துத் தருவதாக சிலபுலவர்கள் கேட்ட போதும் தேசிகர் அவர்கள் “கண்டோரிடம் இதைக் கொடுக்ககூடாது நீங்கள் சிரமப்பட்டு செய்த திருத்தங்களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்ள இடமேற்படும்” என்று கூறிவிட்டார். உவேசாவின் நலனில் தேசிகர் போன்ற பெரியவர்கள் ஆழமான அக்கரையும் வைத்திருந்தனர் என்பதற்கு இது போன்று பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இப்பணியில் கல்லூரி மாணவர்களும், மடத்தில் பயின்று வந்த மாணவர்களும் உதவி செய்ததை உவேசா நன்றியுடன் நினைவு கூறுகிறார். பல அன்பர்கள் நூல் பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக் கூறி முன் பணம் அளித்தது, அச்சிடவாகும் செலவினத்தை மேற்கொள்ள உதவியாக இருந்தது. நூலை அச்சிடுவதற்கு தனிப்பட்ட முறையில் வந்த இடையூறுகள் அல்லாமல், அச்சு நகல்களை அச்சகத்திலிருந்து திருடவும் முயற்சிகள் நடந்துள்ளன. விடுமுறைகளில் சென்னை வந்து பதிப்பு அலுவல்களை கவனித்து வந்தார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே தம்மிடமிருந்த எட்டுத்தொகை நூலை ஆராய்ந்து வந்தார். பதிப்பு நிகழ்ந்து வந்தாலும் சீவக சிந்தாமணி ஏடு தேடும் முயற்சி தொடர்ந்தது. இதற்காகத் திருநெல்வேலி சென்று பல ஊர்களில் சீவக சிந்தாமணி நூலை உவேசா தேடினார். சீவக சிந்தாமணி பதிப்புபற்றி பல பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சிந்தாமணி பதிப்பிற்கு வாங்கியிருந்த முன்பணம் போதவில்லை. அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக இருந்தது. கடன் வாங்கி இதுபோன்ற இடர்பாடுகளை உவேசா சரி செய்து வந்தார். அக்காலத்தில் தமிழ்ப் புத்தகங்களில் முகவுரை இருந்ததில்லை. ஆனால் உவேசா சிந்தாமணி நூலிற்கு விரிவான முகவுரை எழுதிச்சேர்த்தார். இதனைத்தொடர்ந்து முதன்முறையாக நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு முதலியவற்றையும் சேர்த்து நூலுக்கு மிகுந்த மதிப்பைக் கூட்டினார். அதே போல காப்பியத்தின் கதையை எழுதிச்சேர்த்தார். நூலைப்படிப்பவர்கள் நூலைப்பற்றி நன்கு புரிந்து கொள்வதுடன் நூல் பற்றிய மற்ற தகவல்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். உரையாசிரியரைப் பற்றிக் கூறும் பொழுது அவர் உரை எழுதிய பிற நூல்கள் எவையென்றும் குறிப்பிட்டார். நூல்வெளியிட உதவியவர் பெயர்களும் முன்னுரையில் இடம் பெற்றது. இவ்வாறு நூல் பதிப்பிப்பில் வாசகர் நலன் கருதி பல தகவல்களைக் கொடுத்து பெரிய புரட்சியை முதன்முதலாக உவேசா எற்படுத்தினார். முதல் பிரதியை பெற்றுக்கொண்டு, இம்முயற்சிக்கு வித்திட்ட சேலம் இராமசாமி முதலியாரிடம் காண்பித்தார். அவர் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறை வேற்றி விட்டீர்கள்” என்று மனமாரப் பாராட்டினார். நூலைக் கண்ட சுப்ரமணியதேசிகர் முதலியோர் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அடுத்து பத்துப்பாட்டை பதிப்பிக்கும் முயற்சியை ஐயரவர்கள் கையிலெடுத்தார்கள். சீவக சிந்தாமணி போலவே ஏட்டுச் சுவடிகளை தேடி ஊர்ஊராகக் சென்றாா். ஒரு பிரதி அவர் கைவசம் ஏற்கனவே இருந்தது. “பத்துப்பாட்டில் விசயம் தெரியாமல், பொருள் தெரியாமல், முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாம் என்று சலிப்புத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே ஒரு அருமையான விசயம் புதிதாகக் கண்ணில் படும் போது, அத்தகைய விசயங்கள் சிரமமாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாம் என்ற எண்ணம் உண்டாகும்” என்று தமது விடாமுயற்சியை உவேசா பதிவு செய்கிறார். சில கெட்டஎண்ணம் கொண்ட மதியிலோர் உவேசாவின் முயற்சியில் குற்றம் கண்டு தமது சுயவிளம்பரத்திற்காக துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இதற்கு மறுப்பு எழுதவேண்டும் என்று உவேசா விரும்பினார். சாது சேசையர் அவர்கள் இவ்வாறு நீங்கள் மறுப்பு எழுதினால் உங்கள் காலம் இதிலேயே வீணாகும் எனவும், மறுப்புக்கு மறுப்பு என்று இது வளரும் எனவும், இதைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும், அறிவுறுத்தியதுடன் தாம் எழுதி எடுத்துச் சென்ற மறுப்பைக் கிழித்துப் போட்டதாக உவேசா தெரிவிக்கின்றார். பத்துப்பாட்டு பதிப்பு வேலையும் சென்னையில் துவங்கியது. சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையரை சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உவேசாவிற்க்கு உதவி உள்ளார். 1889 ஆம் வருடம் உவேசாவின் 34வது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உவேசா சேர்த்திருந்தார். இதன் தொடர்ச்சியாக திரு கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உவேசா பதிப்பித்து வெளியிட்டார்கள். இதற்கிடையில் சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய பிரதி ஒன்றைக் கொடுத்தார். எற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த பிரதியும் உவேசாவிடத்தில் இருந்தது. அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. மீண்டும் சுவடிகள் தேடும் யாத்திரையை உவேசா மேற்கொண்டார். ஏற்கனவே தேடாத சேலம் போன்ற இடங்களுக்குச் சென்று சுவடடிகளைத் தேடத்துவங்கினார். மேலும் திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். கிடைத்த சுவடிகளை வைத்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டார். அடியார்க்கு நல்லார் உரையில் பல நூல்களின் பெயர்கள் இருப்பதாக கண்ட உவேசா இந்நூல்களைப் பற்றிய குறிப்பை அவசியம் தம் நூலில் குறிப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். நூலிலும், உரையிலும் அறியப்படும் அரசர் பெயர்களையும் வரிசைப்படுத்தி வெளியிட விரும்பினார். இவ்வாறு அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்கு தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி உவேசா சிலப்பதிகார நூலைப் பதிப்பித்தார். சிலப்பதிகார கதைச்சுருக்கம், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புகளும் எழுதப் பெற்றன. 1891 ஆம் வருடம் ஜுன் மாதம் கோடை விடுமுறையில் சென்னை சென்று உவேசா சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார். சென்னையில் தங்கியிருந்த காலத்திலும் பல புலவர்கள் வீடுகளுக்குச் சென்று சுவடிகளை தேடிக்கொண்டிருந்தார். பதிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது பணமுடை எற்பட்டு அச்சுக்கூலிக்கு போதுமான நிதி கைவசமில்லை, இது குறித்து உவேசா “புத்தகத்திற்கு வேண்டிய விசயங்களை விளக்கமாக அமைக்கும் முயற்சியில் மாத்திரம் என் திறமை வளர்ந்ததேதயன்றி, பிரசுரம் செய்வதற்குரிய பொருள்வசதியை அமைத்துக்கொள்ளும் விசயத்தில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை” என்று தம் முயற்சியனைத்தும் நூல் ஆராய்ச்சியிலும் நூல்பதிப்பித்தலிலும் செலவிடப்பட்டதாகவும், பொருள் ஈட்டவேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லாமிலிருந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். கடைசி நேரத்தில் அரும்பதவுரைக்கு முகவுரை வேண்டும் என்ற தமது எண்ணத்தை, இறுதி நாளன்று இரவில் மிகுந்த சிரமத்துடன் எழுதி அச்சுக்கூடத்திற்கு சேர்த்து, மறுநாள் முழுநூலும் அச்சிடப்பட்டதைக் கண்டு ஆனந்தப்பட்டதாக மிகவும் உணர்ச்சி பூர்வமாக உவேசா நினைவு கூறுகிறார். ஒவ்வொரு நூலை அச்சிட்டு வெளியிடும் பொழுதும் அவர் அடைந்த இன்னல்களுக்கும், நூல்வெளிவரும் பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இருந்ததில்லை. உவேசா அவர்கள் இன்னூல்கள் வெளியீடு குறித்து “சீவக சிந்தாமணியும் பத்துப்பாட்டும் தமிழ்நாட்டில் உலாவரத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும் தமிழில் இருந்த கலைப்பரப்பின் சிறப்பும் யாவருக்கும் புலப்படலாயின. “கண்டறியாதன கண்டோம்” என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக்கடலில் மூழ்கினர் என்று தமிழ்நாட்டிலிருந்த வரவேற்ப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அடுத்ததாக புறநாநூறு பதிப்பிக்கும் முயற்சியை உவேசா கையிலெடுத்தார்கள். அப்பொழுது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் காணும் வாய்ப்புக்கிடைத்தது. பைபிளை ஆராய்ந்து ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே காட்டிப் பதிப்பித்திருக்கின்றார்கள். புறநாநூறையும் இது போல் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. “புறநாநூறை ஆராய்ச்சி செய்வதற்கு சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதானல் எனக்கும் பன்மடங்கு இன்பமுண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று” என்று உவேசா குறிப்பிடுகிறார். புறநாநூறு நூல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது கும்பகோணம் கல்லூரியில் முதல்வர் ஜே ஹெச் ஸ்டோன் என்பவர் சேக்ஸ்பியர் நாடகமான ‘நடுவேனிற் கனவு’ (Mid summer nights dream) தமிழில் நடித்துக்காட்ட ஏற்பாடு செயதார். உவேசா மொழி பெயர்ப்பைச் சரிபார்த்து இடையே தமிழ்ப் பாடல்களையும் இயற்றிச் சோ்த்தார். இம்முயற்சியின் தொடர்ச்சியாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உதவியுடன் சேக்ஸ்பியரின் நாடகங்களையும் மகாகவி காளிதாசரின் நாடகங்களையும் தமிழில் வெளியிட வேண்டுமெனவும் விரும்பினார்கள். பல கல்லூரி ஆசிரியர்கள் உவேசாவைப் புதிதாக வசனநூல்களை எழுதும்படியும், அவைகளைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம் அதனால் நல்ல பொருள் ஈட்டலாம் என்றும் யோசனை கூறினாலும் இவர் மனம் இதில் நாட்டம் கொள்ளாமல் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலேயே மனம் ஒன்றிப் போனதாகக் குறிப்பிடுகின்றார். 1894 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் புறநாநூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உவேசா பதிப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானதாகும். முகவுரையில் எட்டுத்தொகையும் அதுபற்றிய வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதிச் சேர்த்துள்ளார்கள்.அடுத்து புறப்பொருள் வெண்பாமாலை நூலை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்கள். அடுத்து மணிமேகலை நூலை ஆராய்ச்சி செய்தார்கள். மணிமேகலை நூலை நன்கு புரிந்து கொள்ள பெளத்த மத ஆராய்ச்சியும் தேவைப்பட்டது. புத்தரைப்பற்றியும் அவர்தம் வரலாறு பற்றியும் படித்தார். ஐயம் வந்த பொழுதெல்லாம் பௌத்தம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இவ்வாறு பலத்த முயற்சிக்குப்பின் 5. சூன் 1896 ஆம் ஆண்டு மணிமேகலையையும் உவேசா அச்சுக்கு கொடுத்தார். அந்நூலிற்கு அங்கமாக மணிமேகலையின் கதையையும் எழுதிச் சோ்த்தார். பெளத்தம் குறித்த செய்திகள் தமிழ்நாட்டிற்குப் புதிதாகையால் அவைகளை நூலில் ஆங்காங்கே எழுதிச் சோ்த்தார்.1898 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மணிமேகலை மூலமும், அரும்பதவுரை முதலியனவும், முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் முதலியவற்றுடன் வெளியிடப்பட்டது. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். முதன் முதலாக உவேசா உரை எழுதிய நூல் மணிமேகலை. உரை எளிய நடையில் அமைந்ததைப் பற்றி பலரும் அவரைப் பாராட்டினர் என்று உவேசா குறிப்பிடுகிறார். மேலும் பல சாதனைகளைத் தொடர்ந்து உவேசா செய்து வந்துள்ளார்கள். “என் சரித்திரம்” என்னும் அவருடைய சுய சரிதையை அவர் இத்துடன் முடித்துக் கொண்டுள்ளார். எவ்வளவு தமிழ் ஆர்வம், எவ்வளவு விடாமுயற்சி, தமிழில் புலமை பெறவேண்டும், பழைய நூல்களை பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்னும் குறிக்கோளைத்தவிர வேறெதனையும் தம் வாழ்நாளில் உவேசா சிந்தித்ததே இல்லை. இவையே இவருக்கு மூச்சு. இளம்வயதில் அவர் கற்ற தமிழ், பெற்ற புலமையின்றி அவரால் இவ்வாறு தமிழ்நூல்களை திறம்பட பதிப்பித்திருக்க முடியாது. அவர் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற இறைவன் திருவுளத்திற்காகவே தம் இளம் வயதில் தேடித்தேடிக் தமிழ் கற்றார் போலும். தமிழ்ப் புலமையுடன் நின்றிருந்தால் தமிழுலகம் அறிய பொக்கிசங்களை இழந்திருக்கும் . உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். இராமசாமி முதலியார் உ.வே.சா வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். "சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்", "புதியதும் பழையதும்", "நல்லுரைக் கோவை" போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது. உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர "மகாமகோபாத்தியாய" மற்றும் "தக்க்ஷிண கலாநிதி" எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றி பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. இச்செய்தி அவ்வத் திருக்கோவில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் அச்சேரவில்லை. டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002 ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. 2003 ஆம் ஆண்டு தேசீய ஆவணக் காப்பகத்தின் (National Archives of India) 80% பொருளுதவியுடன் கற்பகவல்லி நாயகி மாலை என்னும் நூல் வெளிவந்துள்ளது. உ. வே. சா எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை டாக்டர் உ. வே. சா நூல் நிலையம் 1986ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை "என் சரித்திரம்" எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு "தமிழ் தாத்தா" எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது. சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4 உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்கள் மு. வரதராசன் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். 1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது. 1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார். மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே. சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். மாணவர்களுக்குத் தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவர். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்தவர். நோயுற்ற போதும் உதவுவார்.இவர் செய்யும் உதவிகள் இவர் தம் துணைவியாருக்குக் கூடத் தெரியாது. மேலும் உதவி பெறும் மாணவரது நண்பர்களும் அறியாவண்ணம் உதவிபெறும் மாணவருக்குத் தடைவிதித்து விடுவார். சோவியத் நாடு, பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான பல நாடுகளின் கல்வித்துறை ஆய்வு மாநாடுகளில் பங்கு பெற்றவர். மு.வரதராசனார் காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், இராம தீர்த்தர், இராமலிங்க சுவாமிகள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கவிஞர் தாகூர், வி. ச. காண்டேகர், பெர்னாட்ஷா, சாமர்செட் மாம் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவரால் ம. ரா. போ. குருசாமி, முனைவர் ந. சஞ்சீவி, முனைவர் சி. பாலசுப்பிரமணியம்,ஈ. ச. விசுவநாதன் முதலானோர் ஈர்க்கப்பட்டனர். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. மு.வ. தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.அவற்றின் விற்பனை உரிமையை பாரி நிலையத்திற்கு வழங்கினார். மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காளமேகம் காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று. என்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது சொக்கநாதப் புலவர் பாடலாகவும் காணப்படுகிறது. என்கிற மேற்காணும் காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ளது. தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி.. துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது இன்னும் ஒரு பாடல் கழியும் பிழை பொருள் தள்ளி நன்னூலாங் கடலின் உண்டு வழியும் பொதிகை வரையினிஙல் கால்கொண்டு மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னி பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே குழந்தை இறப்பு வீதம் குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது. Congenital disorder மற்றும் தொற்று நோய்களும் குழந்தைகள் இறப்புக்கு முக்கிய இரு காரணங்களாக வளர்ச்சி பெறும் நாடுகளில் இருந்து வந்தது. அனைத்துலக அளவில் பல காலமாக குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணமாக வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பு இருந்தது. எனினும் விழுப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக இது இன்று இரண்டாம் முக்கிய காரணமாகவும், நுரையீரல் அழற்சி முதல் காரணமாகவும் இருக்கின்றது. குழந்தைகள் முதல் ஆண்டு உயிர் வாழ்வதற்கும் ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம் அல்லது சுகாதாரத்துக்கும் இறுகிய இயைபு (correlation) உண்டு. குழந்தை இறப்பு வீத கணிப்பீட்டு வரையறைகளில் வேறுபாடுகள் உண்டு. சில நாடுகள் (மேற்கு நாடுகள் உட்பட) ஒரு உயிருடன் பிறந்த குழந்தையின் இறப்பையே இந்த கணிப்பில் சேர்க்கின்றன. பல சந்தர்ப்பங்களில் 5 வயதுக்குள் வருவதற்கு முன் சிறுவர் இறப்பது அதிகமாக இருக்கின்றது. ஆகையால், இந்த புள்ளி விபரத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம். கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டார். மோகமுள் (திரைப்படம்) மோகமுள் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தி. ஜானகிராமன் எழுதிப் புகழ்பெற்ற புதினம், ஞான ராஜசேகரனால் இயக்கப்பட்டது. ஞான ராஜசேகரன் முதன் முதலாக இயக்கியப் படம் இது. கருநாடக இசைப் பின்னணி உள்ள கதை என்பதால் இனிய பாடல்கள் நிறைந்தது. அபிஷேக், அர்ச்சனா, நெடுமுடி வேணு முதலியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார். சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு: இவை தவிர ""சங்கீத ஞானமோ"" என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான "தன்யாசி" இராகத்திலேயே அமைந்திருந்தது. "புதிய இயக்குனருக்கான இந்திரா காந்தியின் சிறந்த திரைப்பட விருது" என்ற தேசிய விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது. சங்கீத ஞானமு பக்திவினா - கே. ஜே. யேசுதாஸ் பாடியது செயிண்ட் லூசியா செயிண்ட் லூசியா கரிபியக்கடலும் அத்திலாந்திக் மாக்கடலும் சேரும் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்சுக்கு வடக்கிலும், பார்படோசுக்கு வடமேற்காகவும் மார்டீனிக்கிற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. இது வரலாற்றில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் மாறிமாறி காணப்பட்டது. இது 1500 ஆண்டளவில் முதலாவதா ஐரோபியர் இத்தீவிற்கு வருகைத்தந்தோடு கத்தோலிக்க புனிதரான சிராகுசின் புனித. லூசியாவை முன்னிட்டு அப்பெயரை இட்டனர். பிரான்ஸ் நாட்டவர் 1660இல் முதன் முதலாக குடியேற்றமொன்றை அமைத்தனர். 14 தடவை பிரான்சுடன் போரிட்டப்பிறகு ஐக்கிய இராச்சியம் 1663–1667 வரை கைப்பற்றி வத்திருந்தது.கடைசியாக, 1814 ஐக்கிய இராச்சியம் தீவை முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. சில அரசியல் மாற்றங்களுக்குப்பிறகு பிப்ரவரி 22 1979 இல் செயிண்ட். லூசியா பொதுநலவாயத்தின் சுதந்திர நாடானது. அகழ்வாராய்ச்சியில் ஆரவாக் இனத்தவர்கள் இங்கு கி.மு. 1000 – 500 வாக்கில் குடியமர்ந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 800களில் இடம் பெயர்ந்த கரீபியர்கள், ஆரவாக் இனத்தவர்களை வென்று இங்கு குடியேறினார்கள். கொலம்பஸ் புது உலகில் சென்ற நான்கு பயணங்களின் பாதையை விட்டு செயிண்ட் லூஸியா மிகவும் விலகி இருக்கிறது. அநேகமாக ஸ்பானிஷ் நாட்டுக்காரர்களால் கி.பி. 1500 வாக்கில் இத்தீவை முதலில் கண்டறிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1605ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் முதல் குடியேற்றம் கரீபியர்களால் விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் 1638ல் செயிண்ட் கிட்ஸ் தீவிலிருந்து ஆங்கிலேய காலனிக்காரர்கள் இங்கு குடியேற முயற்சித்தார்கள். அந்தக் குடியேற்ற வாசிகள் பெரும்பாலும் கொல்லப்படவே இரண்டு ஆண்டுகளில் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. ஆங்கிலேயர்கள் சென்றபின், ப்ரெஞ்சுக்காரர்கள் குடியேறி கரீபியர்களுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார்கள். அவர்கள் 1746ம் ஆண்டு 'சௌஃப்ரியர்' எனும் தீவின் முதல் நகரத்தை நிர்மாணித்து, பிளான்டேஷன் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1778ல் பிரிட்டிஷ் படைகள் தீவை வென்று குரோஸ் எனும் சிறு தீவில் கடற்படை தளம் அமைத்தது. இது வடக்கே உள்ள ப்ரெஞ்சுத் தீவுகள் மீது போர் தொடுக்க பயன்படுத்தப்பட்டது. ப்ரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் செயிண்ட் லூஸியா பலமுறை கைமாறிய பின் 1814ல் பாரீஸ் ஒப்பந்தம் மூலம் பிரிட்டிஷ் வசம் வந்தது. இடைப்பட்ட 150 வருடங்களில் 14 முறை செயிண்ட் லூஸியா கைமாறியிருந்தது. பிரிட்டிஷ் வசம் வந்தாலும் ப்ரெஞ்சு பழக்கவழக்கங்களே இன்றும் தொடர்கின்றன. 1842ல் தான் ப்ரெஞ்சு மொழிக்குப் பதிலாக ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இங்கு ப்ரெஞ்சு சார்ந்த படோயிஸ் (Patois) என்ற மொழியே பரவலாக பேசப்படுகிறது. 1967ல் தன்னாட்சியும், பின்னர் 1979ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் ஒரு உறுப்பினராக முழு சுதந்திரமும் பெற்றது. சுதந்திரம் பெற்றது முதல் சுற்றுலா முக்கியத்துவம் பெற்று நாட்டின் வருவாய்க்கு முக்கிய தொழிலாக இருக்கிறது. செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ("Saint Vincent and the Grenadines") கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது. வேதாத்திரி மகரிசி வேதாத்திரி மகரிஷி (ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பமுதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார். 18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி. தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார். அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார். வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். 46 ஆம் அகவையில் உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார். இந்த இருமொழிகள் (தமிழ், ஆங்கிலம்) நூலை பாடத்திட்ட வழி பள்ளி, கல்லூரிகளில் பரப்ப வாழ்நாள் இறுதிவரை உழைத்து வெற்றி பெற்றார். இன்று பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப்படிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார். இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35ஆவது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களைத் தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார். 1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. "அன்பொளி" என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார். இன்றும் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளிவருகின்றன. அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமையன்று மறைந்தார். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மகரிஷி அவர்கள் பல பாடல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று ரிச்சர்ட் நியூட்ரா ரிச்சர்ட் ஜோசெஃப் நியூட்ரா என்னும் முழுப்பெயர் கொண்ட ரிச்சர்ட் நியூட்ரா (ஏப்ரில் 8, 1892 – ஏப்ரில் 16, 1970), நவீன கட்டிடக்கலையின் முதன்மையான கட்டிடக்கலைஞர்களுள் ஒருவர். நியூட்ரா ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரில் 1892 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான அடொல்ஃப் லூஸ் (Adolf Loos) என்பவரிடம் படித்தார். இவர் இன்னொரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான ஓட்டோ வாக்னர் (Otto Wagner) ஆக்கங்களினால் ஈர்க்கப்பட்டார். சிலகாலம், ஜெர்மனியில் எரிக் மண்டல்சொன் (Erich Mendelsohn) என்பவரிடம் பணிபுரிந்த இவர் 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 1929 இல் அந்நாட்டின் பதிவுப் பிரஜை ஆனார். இவர் பிராங் லாயிட் ரைட்டிடம் குறைந்தளவு காலம் வேலை செய்தபின்னர், இவரது நெருங்கிய நண்பரான ருடோல்ஃப் ஷிண்ட்லர் என்பவரது அழைப்புக்கிணங்கிக் கலிபோர்னியாவில் அவருடன் சேர்ந்து பணி செய்தார். பின்னர் அவரது மனைவியான டையோனே (Dione) எனவருடன் சேர்ந்து தனது சொந்தத் தொழில் தொடங்கினார். நடராஜன் நடராஜன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: ஓட்டோ வாக்னர் ஓட்டோ வாக்னர் எனப் பரவலாக அறியப்படும் ஓட்டோ கொலொமன் வாக்னர் ("Otto Koloman Wagner") (ஜூலை 13 1841 – ஏப்ரல் 11 1918) ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் வியன்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பென்சிங் (Penzing) என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின், வியன்னா ஆகிய இடங்களில் கல்வி கற்றார். 1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். 1880களின் நடுப்பகுதியிலும் இறுதியிலும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக்கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார். இந்தக் கோட்பாடு தொடர்பான நிலைப்பாட்டினாலேயே அவர் வரலாற்று வடிவங்களில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. 1894 ஆம் ஆண்டில் வியன்னா நுண்கலை அக்கடமியில், கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆனபோது, வரலாற்றியக் கட்டிடக்கலைக்கு எதிரான அவரது நிலைப்பாடு மேலும் வலுப்பெற்றிருந்தது. ஜோக் அருவி ஜோக் அருவி ("Jog Falls", கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் அருவி ஆகும். இது இந்தியாவில் உள்ள உயரமான பத்து அருவிகளில் ஒன்றாகும். இது ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படுகிறது. மேலும் இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இந்த அருவியானது "கெருசொப்பெ அருவி" எனவும் "ஜோகதகுன்டி அருவி" எனவும் அழைக்கப்படுகிறது. பீமா ஆறு பீமா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் பீமசங்கர் மலையில் துவங்குகிறது. இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. பீமா ஆறு தென்கிழக்காக 725 கிலோமீட்டர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் வழியாக பாய்கிறது. இது கிருஷ்ணா ஆற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். பீமா ஆறும் நிரா ஆறும் மகாராஷ்டிரத்தின் பெரிய ஆறுகளில் ஒன்று ஆகும். சிவசமுத்திரம் அருவி சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது. இந்திய அருவிகளின் பட்டியல் இக்கட்டுரை இந்தியாவில் உள்ள குறிப்பிடத் தக்க அருவிகளைப் பட்டியல் இடுகிறது. திற்பரப்பு அருவி,கன்னியாகுமரி கென்சிங்டன் ஓவல் அரங்கம் கென்சிங்டன் ஓவல் மைதானம் தலைநகர் பிரிஜ்டவுனுக்கு மேற்கில் பார்படோசு தீவில் அமைந்துள்ளது. இத்தீவின் விளையாட்டு மையமான இம்மைதானம் துடுப்பாட்டத்துக்கு முக்கிய இடம் அளிக்கிறது. இம்மைதானம் உள்ளூர் துடுப்பாட்டத்துக்கு முக்கிய மையமாதலால் "துடுப்பாட்டத்தின் மெக்கா" என இது உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இதன் 120 ஆண்டு வரலாற்றில் உள்ளூர், பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. பிக்விக் துடுப்பாட்டக் கழகம் 1895 இல் ஓவல் மைதானத்தை தனதாக்கியதோடு ஓவல் மைதானத்தில் துடுப்பாட்டம் ஆரம்பமானது.1895 இல் முதல் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைப்பெற்றது. 1930 இல் இம்மைதானத்தின் முதல் பன்னாட்டு தேர்வு துடுப்பாட்டப் போட்டி மேற்கிந்தியத்தீவுகளுக்கும் இங்கிலாந்துக்குமிடயே நடைப்பெற்றது. தொடக்கம் முதல் இது வரை 43 தேர்வு துடுப்பாட்ட போட்டிகள் கென்சிங்டன் மைதானத்தில் நடைபெற்றுள்ளதோடு அவற்றில் 21 மேற்கிந்தியத்தீவுகள் அணியால் வெற்றிக்கொள்ளப்பட்டுள்ளன. கென்சிங்டன் மைதானத்தின் பாரிய பார்வையாளர் அரங்குகள் 2007 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக மீளக் கட்டப்பட்டவையாகும். மீள் நிர்மானத்துக்குப்பிறகு மைதானம் 28,000 பார்வையாளர்களுக்கான வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் இது 2007 உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதி போட்டி இம்மைதானதிலேயே நடைப்பெற்றது. கென்சிங்டன் மைதானம் துடுப்பாட்டம் தவிர்ந்த கால்பந்து, ஒக்கி, தடகளப் போட்டிகள், பார்படோஸ் அழகுராணிப்போட்டி போன்றவற்றையும் நடத்தியுள்ளது. மைதானத்தில் பாரிய தொலைக்காட்சி யொன்று காணப்படுவதோடு, நீச்சல் குளத்தில் இருந்தவாறு போட்டிகளை கண்டுகளிக்கும் வசதி கொண்ட பார்வையாளர் அரங்கொன்றும் உள்ளது. குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம் போர்ட் ஒவ் ஸ்பெயின் திரினிடாட் டொபாகோவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். கரிபியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானங்களில் அதிகளாவான தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளை நடத்திய மைதானமாக விளங்குகிறது. இங்கு 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளில் இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பர்மியுடா துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய "குழு B"க்கான குழுநிலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. 30,000 பார்வையாளர்கள் போட்டிகளை கண்டுகளிக்ககூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. இம்மைதான குயிண்ஸ் பார்க் துடுப்பாட்ட கழகத்துக்குச் சொந்தமான தனியார் விளையாட்டு மைதானமாகும். லூனா 1 லூனா 1 சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம். இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. கோள வடிவில் அமைந்த இக்கலத்தில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் ("escape velocity") தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி ("comet") போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4இல் எட்டியது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலி மகாபாஷ்யம் எனும் வட மொழி நூலில், காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில் காஞ்சி நகரத்தைப் பற்றிய செய்திகள் உள்ளது. சோழப் பேரரசில் இருந்த தொண்டை மண்டலப் பகுதிகளை பின்னர் பல்லவர்கள் வென்று காஞ்சி நகரத்தை தங்கள் தலைநகராகக் கொண்டு கிபி 300 முதல் கிபி 850 முடிய ஆண்டனர். பல்லவர்கள் தொண்டை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எழுப்பினர். அவைகளில் சிறப்பு மிக்கது மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள் ஆகும். பல்லவர்கள் மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து சீனா, சயாம், பிஜி போன்ற வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்லவர்களை வீழ்த்தி மீண்டும் சோழர்கள் காஞ்சிபுரத்தை கைப்பற்றி 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பிரித்தானியர்கள் காஞ்சிபுரம் பகுதிகளை கைப்பற்றி ஆள்வதற்கு முன்னர் விஜயநகர மன்னர்கள் 14ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். காஞ்சி நகரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் தலைமையகமாக விளங்கியது. தண்டி எனும் வட மொழிப் புலவர், நறுமணமிக்கப் பூக்களில் மல்லிகையும்; அழகிய பெண்களில் அரம்பையரும், மனித வாழ்வின் நால்வகை ஆசிரமங்களில் கிரகஸ்தம் போன்று; நகரங்களில் காஞ்சி சிறப்பு மிக்கது எனப்புகழ்கிறார். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களில் பெரும் புலமை படைத்த முதலாம் மகேந்திரவர்மன் இசை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கிபி ஏழாம் நூற்றாண்டில் காஞ்சி நகரத்திற்கு வருகைபுரிந்த, பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், காஞ்சி நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டிருந்தது என்றும், வட இந்தியாவின் காசி நகரத்திற்கு இணையான கல்வி நிலையங்களை காஞ்சி நகரம் கொண்டிருந்தது என்றும்; காஞ்சி மக்கள் கல்வி அறிவு படைத்தவர்கள் என்றும் தமது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய இந்தியா அரசினர் 1788ல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட ஆட்சியரை நியமித்தனர். 1859 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்த கருங்குழி, பின்னர் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. 1859 முதல் 1968 வரை சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக விளங்கியது. 1 சூலை 1968 முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்கியது. 1 சூலை 1977 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிய காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், வாலாஜாபாத் மற்றும் செய்யூர் என எட்டு வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. இம்மாவட்டத்தின் 47% மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள், நவதானியங்கள் முக்கியப் பயிர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் பாயும் பாலாறு மற்றும் ஏரிகள் நீர் ஆதாரம் ஆகும். காஞ்சிபுரத்தை கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைப்பர். இம்மாவட்டத்தில் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் காணப்படும் 163 பெருங்கற்கால இடங்களில், 70% காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது அவைகளில் குறிப்பிடத்தக்கது எருமையூர், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யன்சேரி, கீழம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகும். இந்தியாவின் பெருந்தொழில் நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் உண்டாய், நிஷான், மிட்சுபிசு, போர்டு, பிஎம்டபிள்யு, யமகா போன்ற கார் நிறுவனங்கள் உள்ளது. ஸ்ரீபெரும்புதூரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெருந்தொழில் முனையமாக உள்ளது. மேலும் சாம்சங், டெயிம்ளர், டெல் போன்ற மின்னனு பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. செயிண்ட் கோபன் கட்டிட கண்ணாடிகள் உற்பத்தி நிறுவனமும் உள்ளது. பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் தங்கள் கிளைகளைக் கொண்டுள்ள்து. 4,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 3,998,252 ஆகும். அதில் ஆண்கள் 2,012,958; பெண்கள் 1,985,294 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 38.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 892 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 84.49% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 89.89% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 79.02% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 431,574 ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் 3,537,399 (88.47%); கிறித்தவர்கள் 256,762 (6.42%); இசுலாமியர்கள் 173,785 (4.35%); மற்றவர்கள் 0.75% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது. காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தை நான்கு வருவாய் கோட்டங்களாகவும்; 12 வருவாய் வட்டங்களாகவும் பிரித்துள்ளனர். இம்மாவட்டம் 9 நகராட்சி மன்றங்களையும், 17 பேரூராட்சிகளையும், 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 633 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. கரூர் மாவட்டம் கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம், மாவட்டத் தலைநகரான் கரூர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 10,76,588 ஆகும். இவற்றில் கல்வியறிவு பெற்றவர்கள் 81.74 சதவிகதமாகும். 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர். சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர். ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது. பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது. வடக்கில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி மாவட்டத்தையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் திருப்பூர் மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும், 203 வருவாய் கிராமங்களும் கொண்டது. கரூர் மாவட்டம் 2 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும் கொண்டது. இம்மாவட்டம் 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 157 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. 2,904 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரூர் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,064,493 ஆகும். அதில் ஆண்கள் 528,184 ஆகவும்; பெண்கள் 536,309 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.77% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 367 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 75.60% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 102,73 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 40.82% மக்களும்; கிராமப்புறங்களில் 59.18% மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 993,666 (93.35%) ஆகவும், கிறித்தவர்கள் 16,483 (1.55 %) ஆகவும், இசுலாமியர்கள் 53,292 (5.01%) ஆகவும், மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது. மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மதுரை, உசிலம்பட்டி, மேலூர் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 11 வருவாய் வட்டங்களாகவும், 51 உள்வட்டங்களாகவும், 665 வருவாய் கிராமங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை; இம்மாவட்டம் 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 30,41,038. இதில் 15,28,308 பேர் ஆண்கள் மற்றும் 15,12,730 பேர் பெண்கள். 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 27,60,502 (90.86%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 1,68,881 (5.56%), கிருஸ்துவர்கள் 97,711 (3.22%), மதம் குறிப்பிடாதோர் 8,602 (0.28%), சமணர்கள் 1,532 (0.05%), சீக்கியர்கள் 520, புத்த மதத்தினர் 199, மற்றவர்கள் 305 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். இம்மாவட்டம் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 420 ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும்; பத்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. மதுரை மற்றும் அதனைச் சுற்றி மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஈர்ப்புகள்: மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து துபாய், கொழும்பு வெளிநாட்டு நகரங்களுக்கும், மற்றும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பய் போன்ற இந்திய நகரங்களுக்கு நேரடி வானூர்திகள் உண்டு. மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தொடருந்துகள் இருப்புப்பாதை வழியாக மதுரையை இணைக்கிறது. தே நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் நாட்டின் அனைத்து நகரங்கள் சாலைகள் வழியாக மதுரையை இணைக்கிறது. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நாமக்கல் ஆகும். 1997 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும் தெற்கில் கரூர் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன. காவிரி ஆறானது ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக உள்ளது. சங்க காலத்தில் வேட்டுவ மாமன்னர் வல்வில்ஓரி கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த பகுதியாகும், இவது ஆட்சி காலத்தில் கட்ட கோவில்கள் இன்னும் வழிபாட்டு நிலையில் உள்ளனர் பல நாடுகளை தலைமை இடம்மாக கொண்டு ஆட்சி செய்த கடையெழு மன்னர் ஆவர் கொங்கு நாட்டின் சிம்ம சொப்பனம் மாக விளங்கிய பகுதி இதுவாகும் பிறகு, தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாளையங்களாக இருந்த போது சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் தற்போது உள்ள நாமக்கல் கோட்டையை இவர் கட்டினார் என கருதுகின்றனர். தூசூர் நாடு, வாழவந்தி நாடு, இராசிபுர நாடு, கீழ் பூந்துறை நாடு, ஏழூர் நாடு, பருத்திப்பள்ளி நாடு, கீழ்க்கரை அரைய நாடு, விமலை நாடு ஆகியன கொங்கு நாட்டின் பகுதிகளாக இருந்தன. இம்மாவட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு என இரண்டு வருவாய் கோட்டகங்ளும், 8 வருவாய் வட்டங்களும், 391 வருவாய் கிராமங்களும் கொண்டது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வட்டம், திருச்செங்கோடு வட்டம், இராசிபுரம் வட்டம், சேந்தமங்கலம் வட்டம், குமாரபாளையம் வட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், கொல்லிமலை வட்டம் மற்றும் மோகனூர் வட்டம் என 8 வட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் 5 நகராட்சிகளும், 19 பேரூராட்சிகளும் உள்ளது. பள்ளிபாளையம் & குமாரபாளையம் நகராட்சிகள் இரண்டும் குமாரபாளையம் வட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும், 391 கிராம ஊராட்சிகளும் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டுள்ளது, அது போலவே திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி) ஆகிய பாராளுமன்ற தொகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. 15 வது (2009 மே) மக்களவையிலிருந்து இதன் படியே தேர்தல் நடைபெறுகிறது. நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி-வேலூர், குமாரபாளையம். சேந்தமங்கலம் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். நாமக்கல் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), சங்ககிரி, பரமத்தி-வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நாமக்கல் மக்களவை தொகுதியில் அடங்குகின்றன. சங்ககிரி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. கன்னியாகுமரியை வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 நாமக்கல் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இது புதுசத்திரம்,வேலூர், பரமத்தி, நாமக்கல், இராசிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 47 குமாரபாளையம் நகரின் ஊடாக செல்கிறது. சேலத்தை ஈரோட்டுடன் இணைக்கும் இரும்புப்பாதை நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சென்றாலும் நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. 3,420 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாமக்கல் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,726,601 ஆகும். அதில் ஆண்கள் 869,280 ஆகவும்; பெண்கள் 857,321 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 15.61% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 505 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 74.63% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 150,699 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 40.32% மக்களும்; கிராமப்புறங்களில் 59.68% மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 1,673,652 (96.93%) ஆகவும், கிறித்தவர்கள் 16,909 (0.98%) ஆகவும், இசுலாமியர்கள் 32,483 (1.88 %) ஆகவும், மற்றவர்கள் 0.20% ஆகவும் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007 இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. 1,756 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். அதில் ஆண்கள் 282,157 மற்றும் பெண்கள் 283,066 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10.54% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.32% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 82.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.90% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 33.27% ஆக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 5,21,658 (92.29%) ஆகவும்; இசுலாமியர்கள் 32,702 (5.79 %) ஆகவும்; கிறித்தவர்கள் 10,301 (1.82 %) ஆகவும்; மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கற்கள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது. இம்மாவட்டப் பகுதிகள் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)(தனி) மற்றும் குன்னம் (சட்டமன்றத் தொகுதி) என இரண்டு சட்டமன்றத் தொகுதிகலும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியும் உள்ளது. இம்மாவட்டம் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் கொண்டது. இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 4 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும், 121 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது. Eachampatti பெரம்பலூர் மாவட்ட காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது பெரம்பலூர் மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றொன்று கிருஷ்ணபுரத்திலும் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5, பொறியியல் கல்லூரிகள் 8, மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரிகள் 1,கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 மற்றும் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உட்பட இருக்கின்றன. ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜாகிர்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(தோஸ்த் அலி கான் உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம் ஆகும். இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ("Ramanathapuram district") இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. 4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர். இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட்கள் உருவாக்கப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 5 வட்டங்களும் உள்ளன. இந்த 10 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் 6 நகராட்சிகளும், 12 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது. இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள். இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது. மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில: குயிண்ஸ் பார்க் அரங்கம், கிரெனடா குயிண்ஸ் பார்க் என்பது கிரெனடாவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இம்மைதானம் 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். 2000 இல் மறுசீரமைக்கப்பட்டாலும் 2004 இல் கரிபியத்தீவுகளைத் தாக்கிய ஐவன் சுராவளியால் சேதமடைந்தது. 20,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கான வசதிகள் இங்கு காணப்படுகின்றன. சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சேலம் ஆகும். இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே, தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது. சேலம் மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. சோழ மன்னர்களின் காலத்தில் இது ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இப்பகுதி தனியொரு ஆட்சிப்பரப்பாகி சேலம் நாடு எனப்புகழ் பெற்றது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் 1792 இல் நடந்த போரின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்ப்படி திப்பு சுல்தான் தன் ஆட்சிப்பகுதிகளில் சிலவற்றை கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்தார். அவர் அவ்வாறு விட்டுக்கொடுத்த பகுதிகளான தற்போதைய தருமபுரி மாவட்டம் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்ட பாராமகால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கிய பகுதிகளைக் கொண்டு "பாராமகால் மற்றும் சேலம் மாவட்டம்" 1792 இல் உருவாக்கப்பட்டது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு கிருட்டிணகிரியைத் தலைமை இடமாகக் கொண்ட "பாராமகால்" மாவட்டம் என்றும் சேலத்தை தலைநகராகக் கொண்ட "தாலாகாட்" மாவட்டம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. 1808 இல் இது சேலம் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரானது அவ்வப்போது தருமபுரி, சேலம் ஒசூர் என மாற்றப்பட்டு, 1860 இல் மீண்டும் சேலமே தலைநகராக ஆக்கப்பட்டது. சேலம் மாவட்டம் சேலம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி என 4 வருவாய் கோட்டங்களையும் 13 வருவாய் வட்டங்களையும், 44 உள்வட்டங்களையும், 640 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 4 நகராட்சிகளையும், 33 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 20 ஊராட்சி ஒன்றியங்களையும், 385 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு 5,237 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சேலம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 3,482,056 ஆகும். அதில் ஆண்கள் 1,781,571 ஆகவும்; பெண்கள் 1,700,485 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 15.44% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 954 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 665 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 72.86 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,44,960 ஆகவுள்ளனர். சேலம் மாவட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,80,512 மற்றும் 1,19,369 ஆக உள்ளனர். சேலம் மாவட்ட 11 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச்சு 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. 4,233 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,339,101 ஆகும். அதில் ஆண்கள் 668,672 ஆகவும்; பெண்கள் 670,429 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.90% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 316 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.85 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,37,235 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 88.57% ஆகவும், கிறித்தவர்கள் 5.64% ஆகவும், இசுலாமியர்கள் 5.55 % ஆகவும், மற்றவர்கள் 0.24% ஆகவும் உள்ளனர். சிவகங்கை மாவட்டம், இரண்டு வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]] 9 வருவாய் வட்டங்களையும், 39 உள்வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது. இம்மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களையும், 445 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. இம்மாவட்டம் சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை என 3 நகராட்சிகளையும், 12 பேரூராட்சிகளையும் கொண்டது. இம்மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என 4 சட்டமன்றத் தொகுதிகளையும்; ஒரு சிவகங்கை மக்களவைத் தொகுதியும் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். மாநிலத்தின் 12 ஆவது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், வடகிழக்கே கடலூர் மாவட்டம், வடக்கே அரியலூர் மாவட்டம், மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டம், தெற்கே வங்காள விரிகுடா கடல் பகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லைகளாக கொண்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தஞ்சாவூராகும். தஞ்சை மராட்டியரிடம் இருந்து இப்பகுதியின் ஆட்சி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1798 இல் இதை ஒரு மாவட்டமாக உருவாக்கினர். இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 12 வருவாய் வட்டங்களையும், 50 உள்வட்டங்களையும் , 906 வருவாய் கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டம் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 589 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. 3,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 2,405,890 ஆகும். அதில் ஆண்கள் 1,182,416 ஆகவும்; பெண்கள் 1,223,474 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.56% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 705 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 82.64% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 238,598 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 2,075,870 (86.28 %), கிறித்தவர்கள் 133,971 (5.57 %) இசுலாமியர் 190,814 (7.93 %) ஆகவும் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான இரு மக்களவைத் தொகுதிகளும், எட்டு மாநில சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. தஞ்சாவூர் வான்படைத் தளம் (ஐஏடிஏ: TJV, ஐசிஏஓ: VOTJ) இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ள ஓர் படைத்துறை வானூர்தி நிலையமாகும். நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள். மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு, உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஸ்ட்ரியகூடர், கங்கை, பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரி ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணுவர்தனா காலத்தில் (கி.பி. 1111-1141) ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர். 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய கம்பனி விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதியில் 1818 வரை பிரிட்டிசாரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன், உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லீவன் கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் காப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன. 1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877இல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன. கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்: 2011 இல் நகரத்தில் 2,99,06 மக்களும், கிராமத்தில் 4,36,010 மக்களும் உள்ளன்ர். நீலகிரி மாவட்டத்தில்தான் ஆண் - பெண் விகிதம் 1000 - 1041 என்ற வீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கிராமப் புறங்களின் மக்கள் தொகையில் 1000 - 1055 என்ற வீதத்தில் முதல் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் நீலகிரி, மாநிலத்திலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர் உள்ளனர். நீலகிரியில் பேசும் மொழிகளில் தமிழ், படுகு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி இனத்தவர்களும் வசிக்கின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பவர்கள். இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். தோடர் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர பணியர்கள், குறும்பர், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரும் உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில் கோத்தர் எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள். இம்மாவட்டம் 3 உதகமண்டலம், குன்னூர், கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும் கொண்டது. இம்மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 11 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும், 35 கிராம ஊராட்சிகளும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடியினர் இருளர், குரும்பர், பனியர், தொதவர் எனப்படும் தோடர், கோத்தர், நாயக்கர் போன்ற பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பழமையான இனத்தவர் தோடர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். தொதவர் வாழும் இடம் மந்து எனப்படும். அதுபோல கோத்தர் வாழிடம் கோக்கால் என அழைக்கப்படுகிறது. குறும்பர் பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு. அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர கசவர் என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளா வாழ்ந்து வருகின்றனர். நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது தேயிலை உற்பத்தி. இதுமட்டுமின்றி சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை தொழிற்சாலைகள் 167; மிதமான கால நிலை நிலவுவதால் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. புகைப்படச் சுருள் (இந்து) தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை. இதில் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனம் (இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை) நலிவடைந்த நிலையில் உள்ளது. யூகலிப்டஸ் எண்ணெய்: இம்மாவட்டத்தில் அதிகமாக வளர்ந்துள்ள இம்மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. யூகாலிட்ஸ் எனப்படும் தைலம் தொழில் நலிவடைந்து வருகிறது. கொயினா உற்பத்தி: நீலகிரியில் அரசு சின்கோனா தோட்டம் 2,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிராகிறது. நடுவட்டம் என்னுமிடத்தில் கொயினா மருந்து உற்பத்தியாகிறது. இது காய்ச்சலுக்கு ஏற்ற மருந்து. வாட்டில் பட்டை உற்பத்தி நிலையம்: 1948-49 இல் சுமார் 8300 வாட்டில் மரப்பதியங்கள் விநியோகிக்கப்பட்டு இன்று சுமார் 6000 ஏக்கர் நிலத்தில் பயிராகிறது. இப்பட்டையிலிருந்து தைலம் இறக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பைரோடை எண்ணெய்: ‘பைரீத்ரம் டேரியின்’ பூவிலிருந்து பைரோடை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது ஈ கொசு போன்றவற்றைத் தடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்து. இது இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை: உதகையிலுள்ள கேத்தியில் தையல் ஊசிகள் கிராமபோன் ஊசிகள், கொக்கிகள் போன்ற 300 விதமான ஊசிகள் செய்யப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெடி மருந்து தொழில்: மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை அருவங்காட்டில் அமைந்துள்ளது. இங்கு அக்கினி திராவகம், கந்தக திராவகம், துப்பாக்கி மருந்து போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சா பிலிம் தொழிற்சாலை: 1967ஆம் ஆண்டில் 14 கோடி முதலீட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் உற்பத்தி நிறுவனம், மத்திய அரால் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 50,000 ச.மீ. பிலிம் சுருள் தயாரானது. 2000 மேற்பட்டோர் பணியாற்றிய இந்நிறுவனம் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. கூட்டுறவு பால் உற்பத்தி: 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 14,679 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் 6890 கால்நடை வளர்ப்போர் பயனடைந்து வருகின்றனர். தீவிர பால் பெருக்குத் திட்டத்தின்படி 59,000 லிட்டராக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு உற்பத்தியில் 6 கோடி ரூபாக்கும் மேலாக விற்பனை நடந்து வருகிறது. சுமார் 75 இலட்சம் ரூபாக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், டர்னிப் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. ஊசி தொழிற்சாலை, புரோட்டின் தயாரிப்பு (பி.பி.ஐ., எனப்படும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம்) போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. ஜெரோனியம், பினாயில் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. 1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, தைலம் (Eucalyptus (disambiguation)) வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும். 1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன்படி நீலகிரியில் குன்னூர், பர்லியார், கல்லார் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் பின்வரும் தோட்டக்கலை பண்ணைகளில் நாற்றுகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை: தரமான மிளகு, சில்வர் ஓக், பாக்கு, காபி, பலா, குரோட்டன்ஸ், மலேயன் ஆப்பிள், ஜாதிக்காய், லிச்சி நாற்றுகள்.பர்லியார் பண்ணை: கிராம்பு, ஜாதிக்காய், ரோஸ் ஆப்பிள், பாக்கு, மணிபிளாண்ட், குரோட்டன்ஸ், சில்வர் ஓக், காபி, துரியன், லவங்கப் பட்டை நாற்றுகள். காட்டேரி பண்ணை: ரோஸ்மேரி, ரோஜா மொட்டு செடிகள், அழகு தாவரங்கள், எலுமிச்சை நாற்றுகள், சில்வர் ஓக், மரக்கன்றுகள். குன்னூர் பழவியல் நிலையம்: பிளம், பேரி, ஆப்பிள், மாதுளம் பழ நாற்றுக்கள்.குன்னூர் சிம்ஸ்பூங்கா: மரக்கன்றுகள், சாம்பிராணி, போடோகார்பஸ் போன்ற மரக்கன்றுகள், அழகு தாவரங்கள், மலர் விதைகள். அரசு தாவரவியல் பூங்கா: ரோஜா செடிகள், அழகு தாவரங்கள், கேக்டஸ் ரகங்கள், மலர் விதைகள்.ரோஜாப் பூங்கா: ரோஜா கன்றுகள், சாம்பிராணி மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள். தொட்டபெட்டா பண்ணை: தேயிலை நாற்றுகள்.தும்மனட்டி பண்ணை: தரமான அர்கா கோமல் பீன்ஸ் விதைகள்.நஞ்சநாடு பண்ணை: உருளைக்கிழங்கு விதைகள்.கோல்கிரேன் பண்ணை: உருளைக்கிழங்கு, தேயிலை நாற்றுகள். தேவாலா பண்ணை: சில்வர் ஓக் நாற்றுகள், காபி, பாக்கு, தேயிலை மற்றும் மிளகு நாற்றுகள்.குன்னூர் பழம் பதனிடும் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, கல்லாறு, பர்லியார், சேரிங்கிராஸ் தோட்டக்கலை வணிக வளாகம் மற்றும் ரோஜா பூங்காக்களில், குன்னூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாம், ஜெல்லி, பழரசம், ஊறுகாய் விற்பனை செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடர்வண்டிப் பாதையும் உள்ளது. பற்சக்கர முறையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக நீலகிரி மலை இரயில் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாட்டத்தில் எட்டு இடங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரசித்தி பெற்ற கோவில்கள்: ஊட்டியில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் ஊட்டி மாரியம்மன் கோவில் , மஞ்சக்கம்பையில் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோ வில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில். இம்மாவட்டம் உதகமண்டலம், குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. தேனி மாவட்டம் தேனி மாவட்டம் (English:Theni district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும். தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் சனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது. 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12,45,899 ஆகும். இவர்களில் 6,25,683 ஆண்கள். 6,20,216 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட மிக அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 1,19,661 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். மாவட்டத்தின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 77.26% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 85.03% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 69.46% ஆகவுமாக உள்ளனர். 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 11,48,990 (92.22%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 56,751 (4.56%), கிருஸ்துவர்கள் 37,574 (3.02%), மதம் குறிப்பிடாதோர் 2,251, சீக்கியர்கள் 152, புத்த மதத்தினர் 79, சமணர்கள் 28 மற்றவர்கள் 74 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்களும், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்களும். இந்த ஐந்து வருவாய் வட்டங்களில் கீழ் 17 உள்வட்டங்களும், 113 வருவாய் கிராமங்களும் உள்ளது. இம்மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர். தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய 5 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றியங்களும், இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராம ஊராட்சிகளும் உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களும் இணைந்த தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 23, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 40 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி அளிக்கும் பல மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. தேனி மாவட்டத்தில், தேனியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் ஒரு அரசு தோட்டக்கலைக் கல்லூரி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய இடங்களில் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், ஆண்டிபட்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் 5 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள், உடற்கல்வியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன.போடியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க பட்டுள்ளது மேலும் கோட்டூர் மற்றும் க விலக்கு பகுதியில் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்க பட்டுள்ளன. தேனியில் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிபட்டியில் ஒரு அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. இவை தவிர சில சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 25 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 162 துணைச் சுகாதார மையங்கள் மற்றும் ஒரு மாவட்டக் காச நோய் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மையப் பொது நூலகம், 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும், பெரியகுளம் மக்களவைத் தொகுதியும் கொண்டது. தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது. இம்மாவட்டத்தில் பிரபலமாக விளங்கும் சில கோயில்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி-கண்டமனூர் , கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் லெனின் பாரதி ,செல்வராகவன் சிராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து சி. சு. செல்லப்பா, வே. தில்லைநாயகம், க. அருணாசலம், கவிஞர் வைரமுத்து, மன்சூர்,இளந்தேவன்,கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, கவிஞர் சக்தி ஜோதி, தேனி மு. சுப்பிரமணி, தேனி.எஸ்.மாரியப்பன்,அம்பை சுதர்சனன்,என்று பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கே திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடக்கே இராமநாதபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது. 4,745 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,750,176 ஆகும். அதில் ஆண்கள் 865,021 ஆகவும்; பெண்கள் 885,155 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 11.32% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 369 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 183,763 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 78.50 % ஆகவும், கிறித்தவர்கள் 16.68 % ஆகவும், இசுலாமியர்கள் 4.61 % ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டம் மூன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 41 உள்வட்டங்களும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், ஊராட்சி அமைப்புகளில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டம் 5 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மக்களவைத் தொகுதியும் கொண்டது. இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன. பொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன. மலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. வைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது. இது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் தாமிரபரணி ஆற்றின் மேலே கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன. இந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. தேரி என்பது செக்கச் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்டங்களில் காணமுடியாது. இம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம். திருச்செந்தூர் வட்டத்தில் முந்திரிப் பயிறு விளைச்சல் குறிப்பிடத் தக்கதாகும். முந்திரி விளைச்சலுக்குப் பூவரசந்தழையை உரமாகப் பயன்படுத்துவது இங்கு வழக்கம். நெடுங்காலமாகவே, இம்மாவட்டத்தின் மணற்பரப்பில் பனை வளர்ந்து செழித்துக் காணப்படுகிறது. திசையன்விளை, குலசேகரப்பட்டினம், உடன்குடி போன்ற ஊர்கள் பனைக்கு புகழ் பெற்றவை. கோவில்பட்டி வட்டத்தில் பருத்திக்கு அடுத்தபடியாக கம்பு, உளுந்து, சோளம், மிளகாய், மல்லி, வெங்காயம் முதலியன நல்ல விளைச்சலைக் கண்டு வருகின்றன. கோவில்பட்டியில் உள்ள இந்த ஆய்வு நிறுவனம் பருத்தி வேளாண்மைப்பற்றி ஆய்வு களை நடத்தி வருகிறது. சோளத்துக்குப் பிறகு பயிரிடப்படும் பருத்திக்குக் கேடு உண்டாகா வண்ணம், சோளத்துக்கு சூப்பர் பாண்டேட் உரமும் பருத்திக்கு அமோனியம் சல்பேட்டு உரமும் பயன்படுத்த படலாம் என்பது இந்த ஆய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இங்குக் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை பருத்திகள்: கே2, கே5, கே6 என்ற கருங்கண்ணிப் பருத்திவகைகள். இவை இந்தியா எங்கும் பரவியுள்ளன. சீ ஐலண்டு காட்டன் என்றும் நீண்ட இழைப் பருத்தி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சீரிய முறையில் இயங்கும் அரசு விதைப் பண்ணைகளில் இதுவும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் 86-ஆம் ஆண்டு புதிதாக பிறந்த மாவட்டம் ஆகையால் இனி தான் இங்கு தொழில்வளர்ச்சி ஏற்படவேண்டும். இருந்தபொழுதிலும் தூத்துக்குடி துறைமுகம் இங்கு உள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுல் பெரிதும் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், ஸ்டெர்லைட் ஆலை முதலிய தொழிற்சாலைகள் புகழ்பெற்றவை. முத்துக் குளித்தல், மீன்பிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு முதலியவை பாரம்பரியமாக நடந்து வருகிறது. கோரை புற்களை 25 நாட்கள் வெயிலில் உலர்த்தி, பொன்னிறம் பெற்றதும், ஓடுகின்ற நீரில் ஒருவாரம் நனைய வைத்து, கழிவு நார்கள் நீக்கப்பட்டு, மேல் தோல் பட்டுப் போன்ற நுண்ணிய இழைகளாக நீளமாகக் கிழிக்கப்பட்டு முடையப்படுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றை குற்றாலமலைத் தடுப்பதும், வடகிழக்குப் பருவக்காற்றின் வலுவிழந்தத் தன்மையும் உப்புக் காய்ச்சுவதற்கு ஏற்ற சூழ்நிலையத் தருவதனால் இத்தொழிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பின் அளவு இந்திய அளவில் பத்தில் ஒரு பங்காகும். இத்தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். மரபாக நடந்துவரும் தொழிலாகும். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில் அல்ல. மற்ற காலங்களில் சங்கு எடுக்கும் தொழில் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின் கடலோரங்கள் எங்கும் மீன் பிடி தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பல குளிர்பதனச் சாலைகள் தோன்றியுள்ளன. மீன்கள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது 1963-இல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இம்மாவட்டத்தில செயல்பட்டு வரும் ஆலைகள்; மதுரை மில்-தூத்துக்குடி; லாயல் டெக்ஸ்டைல்ஸ்-கோவில்பட்டி; லெட்சுமி மில்-கோவில்பட்டி; தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்-தூத்துக்குடி; திருச்செந்தூர் கோவாபரேடிவ் ஸ்பின்னிங்மில்-நாசரேத். இத்தொழிற்சாலை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத் தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வருகிறது. 1966இல் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை ஆண்டுக்குச் சுமார் 5 இலட்சம் டன் அமோனியம் பாஸ்பேட் உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தூத்துக்குடிக்கு 25 கி.மீ. தெற்கே, கடற்கரைக்கு தொலைவில், இந்நிறுவனம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 75,000 டன் காஸ்டிக் சோடா தயாரிக்க முடியும். உற்பத்திக்குச் சாதகமாக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்ஷியம் கார்பைடு 15,000 டன்னுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப் படும் போலிவினில் குளோரைடு முதலிய பல பொருள்களும் இங்குத் தயாராகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய இரசாயனத் தொழிற்சாலை ஆகும். தொடக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இன்று இம்மாவட்டத்தில் வளரும் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால் தொழிலுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய தொழில் வளர்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கீழே கண்டவைகளை செயல்படுத்துவது தொழில் முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது, அவையாவன : 1. கரும்பு சக்கைகளைப் பயன்படுத்தி காகித ஆலைகள். 2. மணப்பாடு-தூத்துக்குடி முதலிய கடலோரங்களில் கிடைக்கும் சுண்ணாம்பு படிவங்களைக் கொண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் 3. மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல் 4. வானம் பார்த்த 'விளாத்திக்குளம்' பகுதிகளில் வேளாண்மை நடைபெற முயற்சி செய்தல். 5. தேரி மணலிலிருந்து இரசாயனங்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 6. உப்பு தொழில்கள். 7. முத்துகுளி-சங்கெடுத்தலை ஏற்றுமதி செய்வது எட்டையாபுரம், பகுதிகளிலும் மிகுந்த அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான பொருள். கோவில்பட்டிக்கருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தில் லிதியம் கலந்த நீர் கிடைக்கிறது. இரத்த விருத்தி மருந்து செய்ய இந்த நீரை வேறு இடங்களுக்கு அனுப்பி மருந்துகள் செய்கின்றனர். உப்புத்தாள் செய்யத் தேவைப்படும் இப்பொருள் இம்மாவட்டத்தின் கடலோரங்களின் சில பகுதிகளில் கிடைக்கிறது. உருக்கு வேலைக்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படக்கூடிய இது பென்சிலில் உள்ள எழுதுபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. உலோக சத்து நிறைந்த இந்தப் பொருளும் கடற்கரை மணலில் காணப்படுகிறது. சில வகை மருந்துகள் தயாரிக்க மிகவும் தேவைப்படக் கூடியது. திருச்செந்தூர் வட்டம், சாத்தான் குளம் பகுதியில் ஒரு வகை உயர்தரச் சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைக்கிறது. இதைப் பளிங்குக் கற்களாக மாற்றினால் கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படக்கூடும். இந்த வகைச் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தியும் சிமெண்ட் தயாரிக்கலாம். கடற்கரையோரமாய் உள்ள தீவுப் பகுதிகளில் இது மிகுதியாய் உள்ளது. ஏராளமான அளவில் சாத்தான் குளத்திலும், கோவில்பட்டி வட்டத்திலும் கிடைக்கிறது. இதில் இரும்பு, டிட்டானியம் ஆக்ஸைடுகள் கலந்து உள்ளன. மலைக்கல் போன்ற இவ்வகை பாஸ்பேட்டுகள், தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கிறது. கட்டடம் கட்டப்பெரிதும் பயன்படும் இவ்வகைமண்தூத்துக் குடியிலும், அதையடுத்த தீவுகளிலும் மிகுதியாக உள்ளது. நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன. விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் , ஈகி சுந்தரலிங்கனார் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடம் . திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகியவை தமிழக செய்தி-மக்கள் தொடர்புதுறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.இங்கு 1974 ல் தமிழக அரசால் கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோட்டை தோண்டி எடுக்கப்பட்டு முள்வேலி போடப்பட்டுள்ளது.