கொண்டலாம்பட்டி கொண்டலாம்பட்டி (ஆங்கிலம்:Kondalampatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,300 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொண்டல்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கொண்டல்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கொங்கணபுரம் கொங்கணாபுரம் (ஆங்கிலம்:Konganapuram), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 305 மீட்டர் (1000 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8086 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். கொங்கணபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொங்கணபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கூரைக்குண்டு கூரைக்குண்டு (ஆங்கிலம்:Kooraikundu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். கூத்தப்பர் கூத்தப்பர் (ஆங்கிலம்:Koothappar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இங்கு ஜல்லிகட்டு மிக ப்றபலமக நடைபெறும் ,இந்த ஊரில் சோழ மானார்களல் கட்டப்பட்ட மிக பழமையான சிவாலயம் உள்ளது,சிவண் மறுதீஸ்வறர் என்றும் பார்வதி ஆனந்தவல்லி என்றும் வழிபாட்டு தெய்வங்களக இருக்கிறர்கல்.ஊர் தெய்வமாக ஆனி கால் சித்தர் முனியாண்டவர் அறுல்கிற்றார். ஊரில் விவசாயம் மூல தொழிலாக உள்ளது,விவசாயத்தை சீர் பட செய்ய உதவியாக ஊரை சார்ந்த சிவந்தான் குலம்,பெரிய குலம்,சம்பங் குலம்,சம்புதி குலம் போன்ற ஏறீ கள் உள்ளன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,061 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கூத்தப்பர் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 84% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கூத்தப்பர் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கொரடாச்சேரி கொரடாச்சேரி (ஆங்கிலம்:Koradacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5970 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொரடாச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொரடாச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கோத்தகிரி கோத்தகிரி (ஆங்கிலம்:Kotagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1793 மீட்டர் (5882 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோத்தகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோத்தகிரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கோத்திநல்லூர் கோத்திநல்லூர் (ஆங்கிலம்:Kothinallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,877 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோத்திநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோத்திநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கோட்டக்குப்பம் கோட்டக்குப்பம் (ஆங்கிலம்:Kottakuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,076 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொட்டக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொட்டக்குப்பம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கிருஷ்ணசமுத்திரம் கிருஷ்ணசமுத்திரம் (ஆங்கிலம்:Krishnasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கிருஷ்ணசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கிருஷ்ணசமுத்திரம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். குன்றத்தூர் குன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வரலாறு தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவராவார். இவர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் ஒரு கட்டப்பட்டுள்ளது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தார். பின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பெரியபுராணம் நூலை எழுதினார். இவருடைய பலராவையார் தன் வீட்டுக்கு அருகில் ஒரு குளத்தை வெட்டினார். அக்குளம் தற்போதும் பலராவையார் குளம் என அழைக்கப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,028 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குன்றத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்றத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். குனியமுத்தூர் குனியமுத்தூர் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நொய்யல் ஆறு (பண்டைய கால பெயர் காஞ்சி மாநதி) இந்த கிராமத்தை ஒட்டி செல்கிறது. பல்வேறு மொழி, மதங்களை சார்ந்தோர் வாழும் இந்த ஊர் ஓரு சிற்றூராட்சியாக இருந்து படிப்படியாக வளர்ந்து பின்பு கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் வரும் இந்த பகுதிக்கென்று பி14-காவல்நிலையம் அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு 1,000 ஆண்களுக்கு 1,001 பெண்கள் என்கின்ற பாலியல் விகிததில் உள்ளனர். குனியமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% விழுக்காடு ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%விழுக்காடு , பெண்களின் கல்வியறிவு 70% விழுக்காடு ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விழுக்காடை விட அதிகமானது. குனியமுத்தூர் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள் தொகையில் 10.08% விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களும், 00.06% விழுக்காடு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்களுக்கு அடுத்த படியாக பார்த்தால் இஸ்லாமியர் அதிகம். மூன்றாவதாக கிருத்துவர்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். தமிழுக்கு அடுத்து மலையாள மொழி அதிகம் பேசுவோர் உள்ளனர். சிறு அளவில் தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் பேசும் மக்கள் உள்ளனர். இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கே குறிச்சி குளமும், மேற்கே பேரூர் குளமும், வடக்கே ஆற்றுப்பாலமும், தெற்கே சுகுனாபுரமும் எல்லைகளாக கொண்டுள்ளது. குனியமுத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் கேரளா மாநில எல்லையான பாலக்காட்டுக் கணவாயை அடையலாம். குனியமுத்தூரின் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற மதுக்கரை ஏ.சி.சி. (அசோசியட் சிமெண்ட் கம்பெனி) சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. சேலம்-கொச்சி NH47 தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதி வழியாக செல்கிறது. 1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த கே. பி. ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த எஸ். பி. வேலுமணி பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குன்னத்தூர் (திருப்பூர்) குன்னத்தூர் (ஆங்கிலம்:Kunnathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கருப்பட்டிக்கு பெயர்பெற்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7031 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குன்னத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்னத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். குன்னத்தூரின் லட்சுமிநாராயணர் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேரர்களால் கட்டப்பட்டது. மேலும் புகழ்மிகு வழிபாட்டுத்தலங்களான அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை மாரியம்மன் கோயில், சிவன் கோயில், பொங்காளியம்மன் கோயில் ஆகியன உள்ளன. பொங்காளியம்மன் கோயில் 32 கிராம மக்களும் வந்து சேர்ந்து வழிபடும் இடம். இக்கோயிலின் தேர் திருவிழா மிக பிரசித்தம் உடையது. மாகாளி அம்மன் கோயில், சங்குமாரியம்மன் கோயில் ஆகியனவும் உள்ளன.அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் 5 வது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் குன்னத்தூரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் ஆதியூர் எனும் ஊரில் உள்ளது. இங்குக்குள்ள அணைத்து சிற்பங்களும் ஒரே கல்லினால் ஆனவை. இது குன்னத்தூருக்கு மேலும் பெருமை யாகும். எந்த நேரத்திலும் மருத்துவம் பார்க்க இயலும். அரசு தொடக்கப் பள்ளி 8-ஆம் வகுப்பு வரையும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி 6 முதல் 12 வரை பெண்களுக்காக மட்டும், கருப்பண்ண நாடார் பள்ளி 6 முதல் 10 வரை இருபாலருக்கும், சரஸ்வதி கல்வி நிலையம் (தமிழ்,ஆங்கில வழி கல்வியகம்), கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி போன்ற கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன. அரை மணி நேர பயணத்தில் பல பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் உள்ளன. குன்னத்தூரில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டெய்ல் வங்கி ஆகியன அமைந்துள்ளன. கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை வழி பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியாக செல்கின்றன. மேலும் திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியே செல்கின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசது உண்டு. மேலும் பத்துநிமிட பயணத்தில் பெருமாநல்லூர், செங்கப்பள்ளி ,ஊத்துக்குளி செல்லலாம். அங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் கிடைக்கின்றன. அவசர தேவைகளுக்கு மகிழுந்து, ஆட்டோ வசதிகளும் உண்டு. குறிச்சி குறிச்சி (ஆங்கிலம்:Kurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,25,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 63,033 ஆண்கள், 62,767 பெண்கள் ஆவார்கள். குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறிச்சி மக்கள் தொகையில் 12,092 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி (ஆங்கிலம்:Kurinjipadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் பட்டணம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,159 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குறிஞ்சிப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறிஞ்சிப்பாடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். குத்தாலம் குத்தாலம் (ஆங்கிலம்:Kuthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமணஞ்சேரி கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.79% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். குழித்துறை குழித்துறை (ஆங்கிலம்:Kuzhithurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,326 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். குழித்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குழித்துறை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இலப்பைகுடிக்காடு லப்பைக்குடிக்காடு ("Labbaikudikadu"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும். லப்பைக்குடிக்காடு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45 இலிருந்து 3 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது. பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பெண்ணக்கோணமும்,பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது. இவ்வூர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவ்வூரில் முதலில் குடியேறிவர்கள் தஞ்சை மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த இராவுத்தர்மார்களே. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லப்பைக்குடிக்காடு எனப் பெயர் சூட்டினர் என்று கூறப்படுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள கிராம மக்களின் தினசரி மற்றும் விழாக்கால தேவைகள் (ஜவுளி, நகைகள், பல்பொருட்கள்) என அனைத்து துறைகளின் மையமாக அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். . இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. லப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 11891 மக்கள் வசிக்கின்றார்கள். 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. . லெப்பைக்குடிக்காட்டு மக்களில் 50.20 % ஆண்கள், 49.80 % பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 93.28 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 96.01 %, பெண்களின் கல்வியறிவு 90.51 % ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.9 % விட அதிகமாகும். லெப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 12.58 % பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1970 ஆம் ஆண்டுகளில் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். பலர் ஆசிரியராகவும், கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள். 1990 ஆம் ஆண்டுகளில் அதிகமானோர் மருத்துவம், நர்ஸிங், பார்மாசூட்டிகல்ஸ், பொறியியல், கணக்கியல், கணினியில் சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், ஐ.டி எனப் பலதுறைகளில், பல நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி பயின்று பணிக்குச் செல்கின்றார்கள். லப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம் பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. உறவுமுறைகள் மற்றவை ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. இலப்பைக்குடிக்காடு குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது. இலால்குடி இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இலால்குடி பேருந்து நிலையம் அருகே சப்தரிசிசுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர். இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது. எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன. இலால்பேட்டை இலால்பேட்டை ("Lalpet") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,797 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இலால்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்பேட்டை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆற்காடு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த அன்வருத்தீன் என்பவரின் அமைச்சரவையில் இருந்த "லால்கான்" என்பவரே இந்த லால்பேட்டை என்ற ஊரை வளர்த்தெடுத்தவர். அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு "கான் இருப்பு" எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்றும் "காங்கிருப்பு" என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டு வந்துள்ள வாய்க்காலுக்கு "கான் வாய்கால்" என அழைக்கப்படுகிறது. இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு, கீழத்தெரு, மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார். இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது. அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று,சத்திரம், சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார். இப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லிம்களும் வீராணப்பகுதியில் இந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டனர். மத நல்லிணக்கத்தின் உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ஆம் ஆண்டுக்கு முன்பு லால்கானால் உருவாக்கப்பட்டது. ஊரைப்பற்றி இளையான்குடி இளையாங்குடி (ஆங்கிலம்:Ilayangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு "முதல்நிலை" பேரூராட்சி ஆகும். மாவட்ட தலைநகரமான சிவகங்கையிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், மானாமதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,947 வீடுகளும், 24,774 மக்கள்தொகையும் கொண்டது. இது 21.64 சகிமீ பரப்பும், 18 18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சி 63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது. இளையான்குடி, 63நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை 1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள் 2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள் 3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள் 4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர் இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது. மாதம்பாக்கம் மாதம்பாக்கம் (ஆங்கிலம்:Madambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29 மீட்டர் (95 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மாதம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதம்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மதுக்கரை மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். . இங்கு நாட்டின் பழமையான சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அது தற்போது ஏ.சி.சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311 மீட்டர் (1020 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மதுக்கூர் மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மல்லமூப்பம்பட்டி மல்லமூப்பம்பட்டி (ஆங்கிலம்:Mallamooppampatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6783 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மல்லமூப்பம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மல்லமூப்பம்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மல்லாங்கிணறு மல்லாங்கிணறு (ஆங்கிலம்:Mallankinaru), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாபபட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு பழமையான "செங்கமலத்தாயார் உடனுறை சென்னகேசவப் பெருமாள்" திருக்கோவில் உள்ளது. இது விருதுநகரிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மல்லாங்கிணர் பேரூராட்சி 3,308 வீடுகளும், 12,986 மக்கள்தொகையும் கொண்டது. இது 8.7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட மல்லாங்கிணறு பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மல்லூர் மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9796 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மம்சாபுரம் மம்சாபுரம் (ஆங்கிலம்:Mamsapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 5,388 வீடுகளும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது.இது 52 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 150 தெருக்களும் கொண்ட மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது. மண்ணச்சநல்லூர் மண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 16 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கல்லை மன்று என்று வழங்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூரின் தலைவனாக விளங்கிய திருவிருந்தான் என்னும் வள்ளல் அனதாரியப்பன் என்னும் புலவரைப் போற்றிப் பேணிவந்தான். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,503 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மண்ணச்சநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மண்ணச்சநல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மாங்காடு (காஞ்சிபுரம்) மாங்காடு (ஆங்கிலம்:Mangadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை மாநகரத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும். இங்கு புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் அர்த்த மகாமேரு எந்திரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. பூந்தமல்லி மிக நெருங்கிய நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,108 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மாங்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாங்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மங்களம் மங்களம் (ஆங்கிலம்:Mangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 32 மீட்டர் (104 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7892 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மங்களம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மங்களம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மங்கலம்பேட்டை மங்கலம்பேட்டை (ஆங்கிலம்:Mangalampet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் 'மாடுவெட்டி மங்கலம்' என்று முற்காலங்களில் அறியப்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மங்களம்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மங்கலம்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த ஊர் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் என்கின்ற கருத்துக்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது. பல மதத்தினர் இங்கு வாழ்ந்து வந்தாலும், ஒருவருக்கொருவர் தோழமையுடனும் கூட்டுறவாகவும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இரண்டு மசூதிகள் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கின்றன. மேலும் கோவிலானூர் மற்றும் கோணாங்குப்பம் ஆகிய அருகில் உள்ள கிராமங்களில் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்களும் இருக்கின்றன. ஊரின் எல்லையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மங்கல நாயகி அம்மன் கோவிலும், ஊரினுள் சிவன், விநாயகர் ம்ற்றும் சுப்பிரமணியர் திருக்கோவில்களும் உள்ளன. அருகில் உள்ள விவசாயம் சார்ந்த கிராமங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக இருப்பதினால் அதைச் சார்ந்த தொழில்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. முன் காலங்களில் துணிகள் நெசவும் சிறப்பாகச் செய்யபட்டு வந்தன. தற்பொழுது மிகச் சிறிய அளவில் மட்டும் நெசவுத் தொழில் செய்யப்பட்டு வருகின்றது. மணிமுத்தாறு (ஊர்) மணிமுத்தாறு (ஆங்கிலம்:Manimutharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், மணிமுத்தாறு ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாவட்டத் தலைமயிடமான திருநெல்வேலியிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்த மணித்தாறு பேரூராட்சிக்கு கிழக்கில் 7 கிமீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி; மேற்கில் 15 கிமீ தொலைவில் விக்கிரமசிங்கபுரம், வடக்கில் 10 கிமீ தொலைவில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் கல்லிடைக்குறிச்சி ஆகும். இப்பேரூராட்சி தன்னகத்தே மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை மலைப்பகுதிகளை கொண்டது. தமிழக அரசிடமிருந்து பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம், இப்பேரூராட்சியில் தேயிலை பயிடுவதற்கு நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. மலைப்பகுதியி்ல மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. 176.43 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3141 வீடுகளும், 12351 மக்கள்தொகையும் கொண்டது. மாப்பிளையூரணி மாப்பிளையூரணி (ஆங்கிலம்:Mappilaiurani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மாப்பிளையூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாப்பிளையூரணி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மரக்காணம் மரக்காணம் (ஆங்கிலம்:Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,153 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மரக்காணம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மரக்காணம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மரமங்கலத்துப்பட்டி மரமங்கலத்துப்பட்டி (ஆங்கிலம்:Maramangalathupatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,378 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மரமங்கலத்துப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மரமங்கலத்துப்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மாரண்டஅள்ளி மாரண்ட அள்ளி (ஆங்கிலம்:Marandahalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த நகரத்தின் பிரதான சாலை வழியாக இணைக்கும் ஊர்கள் 1,கிழக்கே கிருஷ்ணகிரி (வழி:வெள்ளிசந்தை, காவேரிப்பட்டிணம்) 2,மேற்கே தேன்கனிக்கோட்டை (வழி:பஞ்சபள்ளி டேம், ரத்னகிரி) 3,வடக்கே ஒசூர் (வழி: காடுசெட்டிப்பட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி,ஆளேசீபம்) 4,தெற்கே சேலம் (வழி: அ.மல்லாபுரம், பாலக்கோடு, தர்மபுரி, தொப்புர்,ஓமலூர்) இந்த நகரத்தின் தொடர்வண்டி நிலையம் மாரண்டஹள்ளி(MARANDAHALLI), இந்த தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் காரைக்கால் வரை செல்லலாம். அ)பெங்களூரு செல்லும் வண்டிகள் 1) 76554 Dharmapuri - KSR Bengaluru DEMU MZU - Marandahalli PF# 2 Dep @ 05:33am 2) 56241 Salem - Yesvantpur Passenger (UnReserved) MZU - Marandahalli PF# 2 Dep @ 07:18am 3) 56513 Karaikal - KSR Bengaluru Fast Passenger (UnReserved) MZU - Marandahalli PF# 2 Dep @ 15:30pm ஆ)தர்மபுரி, சேலம் மற்றும் காரைக்கால் வரை செல்லும் வண்டிகள் 1)56514 KSR Bengaluru - Karaikal Fast Passenger (UnReserved) MZU - Marandahalli PF# 2 Dep @ 09:38am ETD: 10:26am 48m late 2)56242 Yesvantpur - Salem Passenger (UnReserved) MZU - Marandahalli PF# 2 Dep @ 18:30pm ETD: 20:04 1h 30m late 3)76553 KSR Bengaluru - Dharmapuri DEMU MZU - Marandahalli PF# 2 Dep @ 20:30 ETD: 21:03 33m late இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 581 மீட்டர் (1906 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மாரண்டஹள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாரண்டஹள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மார்க்கையன்கோட்டை மார்க்கையன்கோட்டை (ஆங்கிலம்:Markayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 7,024 மக்கள்தொகையும், 5.8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லைப் பொியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி பசுமையாக இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் நெல், தென்னை மற்றும் வாழை போன்றவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது; இங்குள்ள தொட்டிய நாயக்கர்கள் இறந்த பிறகு நடும் நடுக்கல்லின் மூலம் பலநூறு ஆண்டு காலம் முந்தைய வரலாறுகளை ஆராய ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது . மத்திகிரி மத்திகிரி (ஆங்கிலம்:Mathigiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8049 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மத்திகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மத்திகிரி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மத்திகிரி கடந்த 2011 இல் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, ஒசூர் நகராட்சியின் ஒருபகுதியாகி, மூன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேச்சேரி மேச்சேரி (ஆங்கிலம்:Mecheri), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மேச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மேச்சேரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேச்சேரியின் அருகே 'தி காவேரி பொறியியல் கல்லூரி' அமைந்துள்ளது . மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி விரைவில் அமைய உள்ளது. இவ்வூரில் இருந்து 5.9 கி.மீ தொலைவில் உள்ள சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளன. இங்கிருந்து மேட்டூர் 21கி.மீ தொலைவிலும், சேலம் 30கி.மீ தொலைவிலும், தருமபுரி 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர், பென்னாகரம், ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. மேச்சேரியின் அருகே jsw என்ற மிகபெரிய இரும்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர். இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலச்சேவல் மேலச்சேவல் (ஆங்கிலம்:Melacheval), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம்]], அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலச்செவல் பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ.தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரம் 15 கிமீ தொலைவில் உள்ளது. 8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2181 வீடுகளும், 8435 மக்கள்தொகையும் கொண்டது. மேலகரம் மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. 6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது. மேலமடை மேலமடை (ஆங்கிலம்:Melamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். 2012 ஆம் ஆண்டில் மேலமடை மதுரை மாநகராட்சியிடன் 30வது வார்டு ஆக சேர்க்கப்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,885 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேலமடை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலமடை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேலமையூர் மேலமையூர் (ஆங்கிலம்:Melamaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5155 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேலமையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலமையூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேலத்திருப்பந்துருத்தி மேலத்திருப்பந்துருத்தி (ஆங்கிலம்:Melathiruppanthuruthi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8409 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். மேலத்திருப்பந்துருத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலத்திருப்பந்துருத்தி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேல்பட்டாம்பாக்கம் மேல்பட்டாம்பாக்கம் ("Melpattampakkam" அல்லது "Melpattambakkam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6593 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். மேல்பட்டாம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேல்பட்டாம்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கே கற்சிற்பங்கள், மரசிற்பங்கள், வெண்கலசிற்பங்கள் செய்யும் தொழில் நடைபெறுகிறது. மேலூர், மதுரை மாவட்டம் மேலூர் (ஆங்கிலம்:Melur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். [இங்கு பிரதான தொழிலாக கலப்பை தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கின்றது] இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 149 மீட்டர் (488 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,017 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 20,405 ஆண்கள், 19,612 பெண்கள் ஆவார்கள். மேலூரில் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட குறைவானது. மேலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 89.51% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.27%, பெண்களின் கல்வியறிவு 84.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. மேலூர் மக்கள் தொகையில் 4,488 (11.22%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 78.72% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 18.80% கிருஸ்துவர்கள் 2.19%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். மேலூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 12.33%, பழங்குடியினர் 0.39% ஆக உள்ளனர். மேலூரில் 9,872 வீடுகள் உள்ளன. மேல்விஷாரம் மேல்விஷாரம் (ஆங்கிலம்:Melvisharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 22,655 ஆண்கள், 22,131 பெண்கள் ஆவார்கள். மேல்விஷாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 83.50% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.53%, பெண்களின் கல்வியறிவு 77.39% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. மேல்விஷாரம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இவர்களில் இந்துக்கள் 22.97%, முஸ்லிம்கள் 76.12%, கிறித்தவர்கள் 0.77% ஆவார்கள். மீஞ்சூர் மீஞ்சூர் (ஆங்கிலம்:Minjur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,947 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மீஞ்சூர் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மீஞ்சூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொடக்குறிச்சி மொடக்குறிச்சி (ஆங்கிலம்:Modakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் தற்போதய சட்டமன்ற உறுப்பினர் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றகழகத்தை சார்ந்த ஆர் என் கிட்டுசாமி ஆவார். 1996-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 1033 பேர் போட்டியிட்டனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,036 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மொடக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மொடக்குறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மோகனூர் மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, . சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாகச் செல்கிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மற்றும் பஞ்ஜாயத்து துவக்கப்பள்ளிகளும் சில உள்ளன மூலக்கரைப்பட்டி மூலக்கரைப்பட்டி (ஆங்கிலம்:Moolakaraipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியிலிருந்து 28 கிமீ தொலைவிலும், நாங்குநேரியில்ருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது மூலக்கரைப்பட்டி பேரூராட்சி. 34 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,899 வீடுகளும், 11,112 மக்கள்தொகையும் கொண்டது. மூப்பேரிபாளையம் மூப்பேரிபாளையம் (ஆங்கிலம்:Mopperipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8303 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மூப்பேரிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மூப்பேரிபாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முகசிப்பிடாரியூர் முகசிப்பிடாரியூர் (ஆங்கிலம்:Mukasipidariyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முகசிப்பிடாரியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முகசிப்பிடாரியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முக்கூடல் முக்கூடல் (ஆங்கிலம்:Mukkudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று. முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரன்மாதேவி (11 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது. 15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது. முளகுமூடு முளகுமூடு (Mulagumudu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,061 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். முளகுமூடு மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முளகுமூடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மூலனூர் மூலனூர் (ஆங்கிலம்:Mulanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238 மீட்டர் (780 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,903 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மூலனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மூலனூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முசிறி (திருச்சி மாவட்டம்) முசிறி ("Musiri"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஒப்புமை நினைவால் கருவூர்ச் சேரர் சூட்டிய பெயர் இந்த ஊர் முசிறி. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்). இதன் பெயர்தான் காவிரிக்கரை முசிறிக்குச் சூட்டப்பட்டுள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,886 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முசிறி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முசிறி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முசிறியில் மொத்தம் 4 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. முசிறி அருகே 4 கி.மீ வடுகபட்டி என்னும் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது 1968 முதல் செயல்பட்டு வருகின்றது. மேலும் முசிறி - துறையூர் நெடுஞ்சாலையில் முசிறியிலிருந்து சரியாக 5 கி.மீ தொலைவில் புதுப்பட்டி என்னும் சிற்றூரில் MIT என்னும் தனியார் பல்-தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது மேலும் முசிறி வளர்ச்சி பெற்று வரும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இங்கே 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும்.. மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது. முத்துப்பேட்டை முத்துப்பேட்டை (ஆங்கிலம்:Muthupet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்காகப் புகழ்பெற்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,313 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். முத்துப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முத்துப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு மொத்தம் 11 கல்விக்கூடங்கள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில் நிலையம், வார சந்தை, அரசு பொது நூலகம், இணையதள மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் உள்ளன. முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது. சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த இடம், இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்திய ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமாகும். 70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து தமிழகம் முழவதும் இணைப்பு பேருந்துகள், இரயில்வே வசதியும் அமைந்துள்ளது. சிறந்த கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் பயனமையும் வகையில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள நிலையில் கல்வியின் வளர்ச்சி சற்று வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது. ""ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி""தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. முத்துப்பேட்டையில் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் இன்னும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும. முத்தூர் முத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,063 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. முத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முத்தையாபுரம் முத்தையாபுரம் (ஆங்கிலம்:Muttayyapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,314 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். முத்தையாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முத்தையாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மைலாடி மைலாடி (ஆங்கிலம்:Myladi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8961 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மைலாடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மைலாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூர் கற்சிற்பங்களுக்கு பேர்போனது. இவ்வூரில் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை. அண்மையில் ஐயன் திருவள்ளுவரின் 6அடி உயரச் சிலை ஒன்று ஆஸ்ரேலியாவில் நிறுவதற்காக கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டள்ளது. நிறைந்த அளவில் கடவுளரின் சிற்பங்கள் கல்லில் உருவாக்கப்படுகின்றன. நாகவக்குளம் நாகவக்குளம் (ஆங்கிலம்:Nagavakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நாகவக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாகவக்குளம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாகர்கோவில் நாகர்கோவில் ("Nagercoil"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. இம்மாநகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும். நாகர்கோவில் நகராட்சி ஆனது பிப்ரவரி 14 , 2019 அன்று தமிழக அரசால் நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது. மீன்வலை தயாரிப்பு வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று. வணிக மீன் பிடிப்புக்காக உள்நாட்டுச் சந்தைகளிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் இவ்வலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தென்னை நார் தயாரிப்பு, பூ வணிகம், கைத்தறி நெசவு, ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஏற்றுமதிச் சந்தைக்காக பின்னற்பட்டி தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. இந்நகரில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினர் வாழ்கின்றனர். வடிவீஸ்வரம் இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,24,329 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 110,132 ஆண்கள், 114,197 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 95.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.03%, பெண்களின் கல்வியறிவு 93.74% ஆகும். மக்கள் தொகையில் 19,034 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாகர்கோவில் மாநகரம் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது. இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில். நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா எனும் கோவிலின் பெயராலே இவ்வூருக்கு நாகர்கோவில் எனும் பெயர் வந்தது. இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது. முதுபெரும் தேச பக்தர், கம்யூனிஸ்ட் தலைவர், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ப..ஜீவானந்தம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்கு தம்பி பாவலர், எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை, வித்துவான் லட்சுமணபிள்ளை போன்ற தமிழறிஞர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஜெ.ஆர்.வி.எட்வர்ட், அ.கா.பெருமாள், குமரிமைந்தன், எம்.வேதசகாயகுமார், தெ.வே.ஜெகதீசன், மா.சுப்ரமணியம், ஜேம்ஸ் ஆர் டேனியல், இரணியல் கலைத்தோழன் மற்றும் லட்சுமி மணிவண்ணன் போன்றவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். குறுகிய தொலைவுப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் மாநகரம் இரண்டு தொடர்வண்டி நிலையங்களைக் கொண்டது, இதில் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் முக்கியத் தொடர்வண்டி நிலையமாகும். நாகர்கோவில் மாநகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். = இவற்றையும் காண்க = = ஆதாரங்கள் = நாகோஜனஹள்ளி நாகோஜனஹள்ளி (ஆங்கிலம்:Nagojanahalli), என்பது இந்த ஊரின் பெயர் என்றாலும் மக்கள் நாகரசம்பட்டி என்றே அழைக்கின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8402 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நகோஜனஹள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நகோஜனஹள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,098 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நந்திவரம்-கூடுவாஞ்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நந்திவரம்-கூடுவாஞ்சேரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நங்கவள்ளி நங்கவள்ளி (ஆங்கிலம்:Nangavalli), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385 மீட்டர் (1263 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நங்கவள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.நங்கவள்ளி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாக கொண்டது.இங்கு ஞாயிறு தோறும் வாரச் சந்தை கூடுகிறது.நங்கவள்ளிக்கு மிக அருகில் வனவாசி என்ற பேரூராட்சி உள்ளது.வனவாசியில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளது. இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில்,நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும்.இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும்.ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது. நங்கவரம் நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் சோழர் காலத்தில் "நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,428 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். நங்கவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நங்கவரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாஞ்சிக்கோட்டை நாஞ்சிக்கோட்டை (ஆங்கிலம்:Nanjikottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,898 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நாஞ்சிக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாஞ்சிக்கோட்டை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாரணாபுரம் நாரணாபுரம் (ஆங்கிலம்:Naranapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். நரவரிக்குப்பம் நரவரிக்குப்பம் (ஆங்கிலம்:Naravarikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நரவரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நரவரிக்குப்பம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நசியனூர் நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நசியனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நசியனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நத்தம் நத்தம் (ஆங்கிலம்:Natham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 23,660 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. இது நத்தம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,532 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நத்தம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும் நத்தம்பண்ணை நத்தம்பண்ணை (ஆங்கிலம்:Nathampannai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6398 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நத்தம்பண்ணை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நத்தம்பண்ணை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெட்டப்பேட்டை நெட்டப்பேட்டை (ஆங்கிலம்:Nattapettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,190 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெட்டப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெட்டப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாசரெத் நாசரெத் (ஆங்கிலம்:Nazerath), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நாசரேத் எனப்பெயரிடப்பட்டது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தூய யோவான் பேராலயம் உள்ளது. நாசரேத் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தினர் அதிகளவில் உள்ளனர். நாசரேத்திற்கு கிழக்கே திருச்செந்தூர் 30 கிமீ, வடக்கே தூத்துக்குடி 38 கிமீ, மேற்கே திருநெல்வேலி 40 கிமீ, தெற்கே சாத்தான்குளம் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. 11.3 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 16,584 ஆகும். 1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். நீலாங்கரை நீலாங்கரை (ஆங்கிலம்:Neelankarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நீலாங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலாங்கரை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதியை ஒட்டியுள்ள பகுதிதான் இந்த நீலாங்கரை.நீலாங்கரை கிழக்கு கடற்கரை இங்கு தான் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் இங்கு அதிகமாக அமைந்துள்ளது. மக்கள் அதிகமாகவும், மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறும் பகுதியாக அமைந்துள்ளது. மிகவும் எழில் மிகுந்த கடற்கரையாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வரும் பகுதி இந்த நீலாங்கரை. மிகவும் நீளமான கடற்கரை அமைந்துள்ள காரணத்தினாலேயே இப்பகுதி நீலாங்கரை என அழைக்கப்பட்டது. நெய்க்காரப்பட்டி நெய்க்காரப்பட்டி (ஆங்கிலம்:Neikkarapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது பழனி - உடுமலைப்பேட்டை சாலையில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,716 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,891 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நெய்க்காரப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்க்காரப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெல்லியாளம் நெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42,400 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நெல்லியாளம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெல்லியாளம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெமிலி நெமிலி (ஆங்கிலம்:Nemili), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9382 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெமிலி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெமிலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெரிப்பேரீச்சல் நெரிப்பேரீச்சல் (ஆங்கிலம்:Neripperichal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,632 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நெரிப்பேரீச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெரிப்பேரீச்சல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெற்குன்றம் நெற்குன்றம் (ஆங்கிலம்:Nerkunram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் (Thiruvallur) மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.இது சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 18 மீட்டர் (59 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,544 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நெற்குன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெற்குன்றம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெற்குப்பை நெற்குப்பை (ஆங்கிலம்:Nerkuppai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,83 வீடுகளும், 7,165 மக்கள்தொகையும் கொண்டது. இது 17.9 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நிலக்கோட்டை நிலக்கோட்டை (ஆங்கிலம்:Nilakkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,198 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 9.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும் (தனி), திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 மீட்டர் (1049 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நிலக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நிலக்கோட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது . மெக்கன்சி சுவடியின் படி நிலக்கோட்டையின் நிறுவனர் விசுவநாத நாயக்கர் பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன்(விஜயநகர பேரரசு) உருவாக்கினார். பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர். பீஜப்பூர் சுல்தான் மற்றும் கிருஷ்ண தேவராயர்க்கும் நடந்த போரில் உதவிய தளபதி மக்காள நாயக் . அவரை திண்டுக்கல் மதுரபுரிக்கு நேற்மேற்கே 30கி.மி தொலைவில் என்றும் நிலைக்கும் படி ஒரு கோட்டை போட்டு ஆட்சி செய்ய சொன்னார் ராயர்.அதன் படியே மாக்காள நாயக்கரும் அவருடைய. குமாரர் கூளப்ப நாயக்கரும் என்றும் நிலைக்கும் படி கோட்டை கட்டி (1512)அந்த கோட்டைக்கு நிலக்கோட்டை என்று பெயரும் வைத்தனர். வீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம. விஸ்வநாத நாயக்கருக்குப் பின்பு முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான். பல வருடங்களுக்கு பின்னர(1639) சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும் எனவே அங்கு செல்ல அணை கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர். வெள்ளைகார்க்ளுடன் போர்: திண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது கடும் வறட்சி ;மழை இல்லாததாலும் கிஸ்தி கட்ட முடியவில்லை. மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ஆங்கில அதிகாரிகள் ;இது கூளப்ப நாயக்கர் காதுக்கும் எட்டியது.அந்த அதிகாரியை கொல்ல திட்டம் வகுக்கபட்து.மதுரையில் இருந்து குதிரையில் வரி வசூல் செய்ய வந்த அதிகாரி முசுவனூத்து அருகே வெட்டி கொல்லபட்டான்..அந்ந இடத்திற்கு சட்டைக் காரன் மேடு என்று இன்று அழைக்க படுகிறது. (சட்டைக் காரன்= வெள்ளைக்காரன்) நம் ஆண்களுக்கு அன்று மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லை) இந்த சம்பவம் ஆங்கிலேயரை கோபம் அடைய செய்தது. மேலும் ஆங்கில அரசு தடை செய்த போர் கருவிகளை கூளப்ப நாயக்கர் வைத்து இருந்ததால் ஆங்கில அரசு நிலக்கோட்டையை பிடிக்க் வந்தது.கூளப்ப நாயக் ஆங்கில அரசுக்கு எதிராக போரை அறிவித்தார்(1797) .அதற்காக 10000 கள்ளன்களை ஆனையூரிலிருந்து(ஆனைமலை கள்ளன்கள்) கூப்பிட்டு வந்தார்.இந்த போரில் கூளப்ப நாயக் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்.பல முனையிலிருந்தும் ஆங்கில வீரரர்கள் தாக்கப்பட்டார்கள்.நிலைகுலைந்த ஆங்கில அரசு அடுத்த நாள் பல வீரர்களை மதுரையிலிருந்து வரவழைத்தது.மீண்டும் ஒரு வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் ஒரு படை வந்தது.கலெக்டருக்கு யரோ ஒருவன் கோட்டையின் வரைபடம் கொடுத்ததன் காரணமாக ஆங்கியேரின் பலம் ஓங்கியது.இறுதியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.கூளப்ப நாயக் தப்பி ஓடிவிட்டார்.ஆங்கில அரசு கூளப்ப நாயக் பிடித்து தருவோர்க்கு 1000 வராகன் பொன்னும்;பிள்ளைகள் மனைவியை பிடித்து தருவோர்க்கு 500 வராகன் பொன்னும் அறிவித்தது.மூன்று வருடங்களாக அவரை பிடிக்க் முடியவில்லை.அதனால் ஆங்கில அரசு கூளப்ப நாயக்கர் மனைவி ;மக்கள் பிடிபட்டானர் என்ற பொய்யான தகவலை பறை சாற்றினர்.நாயக்கர் காதுக்கும் இது எட்டியது.பதறிப் போனார் நாயக்கர். வேறு வழியின்றி சரணடைய எஎண்ணி கலை கூத்தாடி வேஷம் போட்டு சென்றார்.ஆங்கில அதிகாரிகளில் பிடிக்க பட்டு சிறையில் அடைக்கபட்டு குதிரைக்கு கொள் வைக்கும் வேலை நாயக்கருக்கு கொடுக்கபட்டது.தூக்கில் போட்டால் கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயமும் மற்றும் வீரத்திற்காக அவரை விடுதலை செய்தது.ஆனால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் ஏலம் விட்டது.அவருடைய சொத்துகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத ஆங்கில அரசு அவருடைய சொத்துகளை ஏலம் விட்டது கொடுமையிலும் கொடுமை . குறிப்பு;:- நமது மறக்கபட்ட மன்னர்கள்...=>நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர்;மணப்பாறை லக்க நாயக்கர் , நெற்கட்டும்செவல் பூலித்தேவர், நத்தம் விருமாண்டி தேவர் , பெத்த நாயக்கனூர் எட்டயபுரம் தளபதி வீரன் அழகுமுத்துக் கொண்சேர்வை போன்றோர் ஆங்கிலேய உதவிபெற்ற யூசுப்கானை தாக்கி இந்திய விடுதலை வரலாற்றில் முதல் முதலில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து தங்களுக்கான இடத்தை வரலாற்றில் பதிவு செய்தனர் . பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் , கமுதி தேவர் , விருபாட்சி கோபால நாயக்கர் , தீரன் சின்னமலை , ஊமைத்துரை , தேவதானப்பட்டி லட்சுமி நாயக்கர் , என்று ஆங்காங்கே புரட்சி வெடித்து இந்திய விடுதலை கிடைத்தது .வீரபாண்டிய கட்டபொம்மன் மறைவிற்கு பிறகே பல பாளையங்கள்ஆங்கிலேயனை எதிர்க்க ஒன்று சேர்ந்தது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பாளையக்காரகளின் பங்கு அதிகம் ஆனால் அவர்களை பற்றி வெளி வந்த செய்திகள் மிக குறைவே ... நிலக்கோட்டை பாளையக்காரர் கூளப்ப நாயக்கருக்கு ஆங்கில அரசை மூன்று வருடமாக எதிர்த்த பெருமை உண்டு. நாகமகூளப்ப நாயக்கர் (நிலக்கோட்டை பாளையக்காரர்)மீது சுப்ரதீபக்கவிராயர் என்ற புலவர், ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலுக்குகூளப்பநாயக்கன் விறலி விடுதூதுஎனப்பெயர். இது மதுரையை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (ராணி மங்கம்மாள் பேரன்)ஆண்ட காலத்தில் எழுதப்பெற்றது. கி. பி. ஆயிரத்து எழுநூற்றி இருபத்தைந்தைச் சார்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்க்கால் மண்டபத்தில் ஒரு நாட்டியப்பெண் ஆடியதாக இந்நூல் கூறுகிறது. அவள் தொடக்கம்முதல் இறுதிவரை என்னென்ன உருக்கள் ஆடினாள் எனத் தெளிவாகக் கூறுகிறது. முதலில் அப்பெண் தெய்வ சுருதி பாடினாள். பின்னர் கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் ஆகிய இசைக் கருவிகள் இசைத்தன. பின்னர் அப்பெண்புஷ்பாஞ்சலிசெய்தாள். அதன் பின் பிள்ளையார் கவுத்துவம், சுப்ரமண்யர் கவுத்துவம் ஆடினாள். பின்னர் நந்திகேசுவரரின் அபிநயதர்ப்பணத்தில் கூறியுள்ளபடிஅலாரிப்புசெய்தாள். பின்னர்கைச்சலாம்செய்தாள். இதன்பின்னர் வரிசையாகதருஜதி, கீதம்முதலியன ஆடினாள் என மேலும் தொடர்கிறது.தெய்வசுருதி காணும் இசை, ராகம், கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் கோணாமல் கூடும் சுருதியுடன் கொம்பனையாள் சங்கீதம் பாடும் சுருதி இன்பம் பாலிக்க என அப்பாடல் தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலேயே ஆடல் தொடங்கும் முன் தெய்வப் பாடல் இரண்டு பாடப்பெற்றது எனக் கண்டோம். சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் பிறகு இந்நூலில்தெய்வச்சுருதிபாடப்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நமது மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காப்பாற்றப்படும் மரபுஎன்பு இதிலிருந்து தெளிவாகிறது. கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடுதூதுததொடர்ச்சி விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் நாயக்கர் என்ற படைத்தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் (1509 - 1564) மதுரை மண்டலத்‌தில் படை மானிய முறையில் 72 பாளையப்பட்டு. கூளப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்றான நிலக்கோட்டை என்னும் பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர். கூளப்பாநாயக்கருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் இருந்த விபரம் சந்தா சாகிப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நிலக்கோட்டை அப்போது (தற்போதைய அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம்) என்பது ஒரு படைநிலையாகவே அமைக்கப்பட்டது. அச்சமயம் கூளப்ப நாயக்கரின் தந்தை சிந்தமநாயக்கர் நிலக்கோட்டை பாளையக்கரராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரையை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர். வடக்கில் திண்டுக்கல்லிருந்து மேற்கே சித்தையன் கோட்டைவரை பரவியிருந்த 108 கிராமங்களை உள்ளடக்கிய நிலக்கோட்டை பாளையத்தை திறம்பட நிர்வாகித்து வந்தார். சிந்தமநாயக்கரின் மகன்தான் கூளப்ப நாயக்கர். நாளடைவில் நாயக்கர் ஆட்சி முடிந்து ஆற்காடு நவப்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது. ஒரு சமயம் கூளப்ப நாயக்கர் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணைக் கண்டார்; கண்டதும் காதல் பற்றிக்கொண்டது. நாயக்கர் மலை சாதிப் பெண்ணுடன் காதல் முற்றி காமம் ததும்ப வாழ்ந்திருக்கிறார். இதற்கிடையே சிந்தமநாயக்கரிடமிருந்து ஏதோ அவசர செய்தி வரவே கூளப்ப நாயக்கர் நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்பியிருக்கிறார். நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிந்து போனார் நாயக்கர். பிறகு என்ன நடந்தாலும் சரி என்று துணிந்து பண்றிமலைக்குப் போய் நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி அப்பெண்ணை நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டது இக்கதையின் உச்ச கட்டம். நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் தல வரலாறு: .பீஜப்பூர் சுல்தானுக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நடந்த போரில் சுல்தான் தோற்கடிக்கபட்டான்.இந்த போரில்(1509) உதவிய வீரத் தளபதிக்கு(கூளப்ப நாயக்கர் ) தமிழ்நாட்டில் கோட்டை கட்டி ஆள உரிமை வழங்க பட்டது.ஆந்திராவிலிருந்து இவர்கள் கிளம்பும் போது அவர்கள் வழிபட்ட அகோபிலம் என்ற இடத்தில் இருந்த நரசிம்ம பெருமாளையும் பிடி மண் கொண்டு பல பூஜைகள் செய்து நிலக்கோட்டைக்குகொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து வழிபட்டனர்.அவ்விடத்தை நோக்கி கோட்டை வாசல் இருக்கும் படி கோட்டை கட்டபட்டது.பின்கோட்டை வாசலின் நேரே பிடி மண் வைத்து வழிபட்ட இடத்தில் அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் சேவப்ப கூளப்ப நாயக்கர் அவர்களால் கட்டபட்டது.ஒரு தெப்பக்குளமும் கூளப்ப நாயக்கர்அவர்களால் வெட்டபட்டு மைய மண்டபமுமம் அமைக்கப்பட்டது.அப்போதுஇருந்த கோபுரம் உயரமானது;அழகானது;கம்பீரம் ஆனது.ஆண்டு தோறும் மிக சிறப்பாக தெப்பத் திருவிழா நடை பெற்று வந்தது.இவ் விழாவை சிறப்பித்து பெருமாளின் அருளை பெற. 108 கிராமத்தில் இருந்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவர்.வீரபாண்டி கெள மாரியம்மன் திருவிழாவை விட வெகு சிறப்பாக நடை பெற்று வந்து இருக்கிறது.விழாவின் அனைத்து செலவுகளும் நிலக்கோட்டை முதல் சேர்மனும் நிலக்கோட்டை ஜமீன்தார் காமய கூளப்ப நாயக்கரார் (வடக்கு அரண்மனை) தன் சொந்த செலவில் செய்வார். அவர் மறைவுக்கு பின் அவரதுகுமாரர் சின்ன சாமி கூளப்ப நாயக்கர் பார்த்து வந்தார்.ஜமீனின்நிலை குறையவே அரசாங்கம் கோயிலை எடுத்து கொண்டது.இக் கோவிலின் உள்ளே நாச்சியார் அம்மன்;நவக்கிரககோவில்;சிவ பீட கோவில்;விநாயகர்கோவில்;வைரவர் கோவில்;ஆழ்வார்கள் கோவில்;கருடாழ்வார் கோவில்;திம்ராய பெருமாள்;மல்லீஸ்வரர் கோவில்:ஓபலீஸ்வரர் கோவில் போன்ற உப கோவில்கள் உள்ளன. நிலக்கோட்டையில் கூளப்ப நாயக்கர் கட்டுவித்த தானியக் களஞ்சியம் இங்கு நெல் ;கம்பு;சோளம்;கேழ்வரகு ;குதிரைவல்லி;மக்காச்சோளம் போன்ற தானியங்களை கொட்ட தனி தனி அறைகள் இருந்தன;நிலக்கோட்டை அரண்மனை யில் வேலை செய்த மக்களுக்கு கூலியாக பணத்திற்கு பதில் தானியங்கள் கொடுக்கபட்து; இதைப்போல வத்தலக்குண்டு கிராமத்திற்கு சேவுகம்பட்டி முத்திலாபுரத்திலும்;ஆத்தூர் கிராமத்திலும்;பிள்ளையார் பட்டி ;பித்தைளைபட்டி கிராத்திலும் மொத்தம் ஒன்பது பெரிய தானியக் களஞ்சியங்கள் இருந்திருக்கிறது. இன்னும் அந்த பழமையான கோட்டைக்கு உள்ளே மன்னர் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.ஜெகதீஷ் குமார கூளப்ப நாயக்கர் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கொடை அளித்து வருகிறார்.குமார துரை சிந்தம கூளப்ப நாயக்கர் மற்றும் பிரபாகர கூளப்ப நாயக்கர்,சதீஷ் குமார கூளப்ப நாயக்கர் அந்த அரண்மனைக்கு உள்ளே வாழ்ந்து வருகிறார்கள். வடக்கில் திண்டுக்கல்லில் ­ இருந்து மேற்கில் சித்தையன்கோட்டை ­ வரை 108 கிராமங்கள் இவர் வசம் இருந்தன.நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தமநாயக்கரின் மகன் கூலப்பாநாயக்கர் இவருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் பிரசித்துபெற்றவையாம் இது சந்தா சாகிப்பின் கெஜட்டில் உள்ளது இவர் திண்டுக்கல்லின் ஆளுநராக இறுந்துள்ளார். . ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) (ஆங்கிலம்:O' Valley), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஓடைப்பட்டி கிராமம் ஓடைப்பட்டி(Odaipatty) ,இந்தியா-தமிழ்நாடு,திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ள  ஒரு கிராமமாகும்.இக்கிராமத்தின் முக்கிய வேலையாக பெரும்பாலும் காய்கறிகளான : தக்காளி, முருங்கை, கத்தரி, பெண்கள் விரல், சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய்  சாகுபடி/வேளாண்மை செய்யப்படுகிறது. காய்கறிகள் விற்பனை செய்யப்படும்  இடமான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ,தமிழ்நாட்டின் பிரபலமான  சந்தையாகும் மற்றும் கேரள மாநிலத்திற்கு  காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது.. உடையகுளம் உடையகுளம் (ஆங்கிலம்:Odaiyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,668 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உடையகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடையகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் (ஆங்கிலம்:ODDANCHATRAM), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் உப்பிலியபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் உப்பிலியபுரம் என்ற பெயரை காணமுடிகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,காய்கறிகள் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானலுக்கு இங்கிருந்து வடகாடு, பாச்சலூர் ,தாண்டிக்குடி ,பண்ணைக்காடு வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்)ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக நல்காசி (நங்காஞ்சி ஆறு)பெயரில் விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து அருவி|அருவியாக விழுந்து, வடகிழக்காக ஓடி இடையகோட்டை என்ற ஊருக்கு அருகில் நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நங்காஞ்சியாறு நல்காசி ஆறு அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. விருப்பாட்சி ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் கோபால் நாயக்கர் பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் ஜமீன்தார் ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சி ஜமீனுடன்வேலூர்,இடையகோட்டை,சத்திரப்பட்டி போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது. வடகாடு, பாச்சலூர், தாண்டிக்குடி, பண்ணைக்காடுஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது. ஒடுகத்தூர் ஒடுகத்தூர் (ஆங்கிலம்:Odugathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8038 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஒடுகத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒடுகத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒக்கியந்துரைப்பாக்கம் ஒக்கியந்துரைப்பாக்கம் (ஆங்கிலம்:Oggiyamduraipakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,961 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஒக்கியந்துரைப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒக்கியந்துரைப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒலகடம் ஒலகடம் (ஆங்கிலம்:Olagadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9381 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஒலகடம் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 41% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஒலகடம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஓமலூர் சேலம் மேற்கு தொகுதியில் delimitations பிறகு புதிதாக அமைக்கப்பட்ட மாநில சட்டசபை தமிழ்நாடு இந்திய மாநிலமான தொகுதியின் சட்டப் பேரவையின் 2008 [1] அது ஓமலூர் மற்றும் சேலம் தாலுக்காக்கள் பகுதிகளை கொண்டுள்ளது. அது சேலம் (லோக் சபா தொகுதியில்) கீழ் விழுகிறது. [2] எல்லைகள் [தொகு] சேலம் மேற்கு அதன் வரம்புகளை பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: [2] ஓமலூர் தாலுக்கா (பகுதி) யா. ஒத்தக்கடை யா.ஒத்தக்கடை ("Y-Othakkadai") அல்லது யானைமலை ஒத்தக்கடை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கு நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் மற்றும் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,185 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஒத்தக்கடை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். ஒத்தக்கடை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மதுரையின் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் யானைமலை என்ற மலை உள்ளது. இந்த மலையின் மேலும் அடிவாரத்திலும் பழங்கால சமணர் குகைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இங்குள்ள மக்களால் அது பஞ்ச பாண்டவர் படுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஒத்தக்கடையில் இருந்து ரோசா நிற கருங்கல் என்று அழைக்கப்படும் கல் வகை இந்த மலையில் இருந்து அதிகம் பெறப்படுகிறது. இந்த ரோசா நிற கருங்கல்லானது மதுரை மாவட்டத்திற்கே உரிய சிறப்பாகும். ஒத்தக்கடையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. ஒத்தக்கடைக்கு அருகில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான "அச்சணந்தி" என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. மேப்பியாவில் யா.ஒத்தக்கடை அமைவிடம் ஒத்தக்கல்மண்டபம் ஒத்தக்கல்மண்டபம் (ஆங்கிலம்:Othakalmandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9681 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஒத்தக்கல்மண்டபம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒத்தக்கல்மண்டபம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒட்டப்பாறை ஒட்டப்பாறை (ஆங்கிலம்:Ottapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9216 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒட்டப்பாறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6543 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பி. மேட்டுப்பாளையம் பி. மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்:P.Mettupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9139 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். P.மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. P.மேட்டுப்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பி.என்.பட்டி பி.என்.பட்டி (ஆங்கிலம்:P.N.Patti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,268 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். P.N.பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. P.N.பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அடிமை முறை அடிமைமுறை என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை கட்டாயமாக வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இப்படி வலுக்கட்டாயம் செய்யப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருட்களைப் போல வாங்கி, விற்கப்பட்டனர். இது ஒரு மிகவும் இழிவான முறை என 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் உணரப்பட்டு இம்முறையை நீக்கினர். தனிமனிதர்களின் உரிமை நிலைநாட்ட வரலாற்றில் இது அறியவேண்டிய ஒன்று. அடிமைமுறை தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரரகள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டனர். அடிமைமுறை மெசபடோமியாவின் 'ஹம்முராபியின் நீதி'களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக தெரிகிறது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலிச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு வழியாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய ராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மனை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டனர், பல புராதன சுமூகங்களில் "சுதந்திர" மனிதர்களை விட அடிமைகளையே அதிகம். எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். அடிமைகள் முதலில் அரசர் பாரோவிற்க்குத்தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவ்ர்க்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3 ஆம் துத்மாஸ் (கிமு 1479-1425), 2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப்பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் செய்தனர் என்று தெரிவிக்கின்றன. 18 ஆம் அரச வம்சத்திலிருந்த ஒரு படைதளபதி, தன் கல்லரையில் இவ்வாறு எழுதியுள்ளார். "பிறகு அவாரிசை சூரையாடினோம்; என் பங்காக நான் ஒரு ஆணையும், 3 பெண்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்; பாரோ அவற்றை எனக்கு அடிமைகளாக பரிசாக கொடுத்தார்". எல்லா பாரோ காலங்களிலும் எகிப்துக்கு தெற்க்கேயுள்ள நியுபியா பிரதேசத்தில் இருந்த கருப்பர்களை அடிமைகளக்கினர். ஆசியாவின் மீது படையெடுத்தபிறகு யூத மக்களை அடிமையாக்கி, ஆண், பெண், குழந்தைகள் எல்லோரையும் எகிப்த்திற்கு கொண்டு வந்து, சுமையான வேலைகளை அவர்களிடமிருந்து பிழிந்தனர். இவை பழைய விவிலிய நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. பல அடிமைகள் சைனாய் செப்புச் சுரங்கங்களில் உயிர்போகும் வரை கட்டாய வேலை பிழியப்பட்டனர். யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர். சில அடிமைகள் தங்கள் முயற்ச்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர். புராதன உலகெங்கிலும் ஒப்பிடும்போது, எகிப்திய அடிமைகள் சற்று நன்றாகவே நடத்தப்பட்டர்கள் எனத் தோன்றுகிறது. அடிமைமுறை கிரேக்க நாகரீகத்தில் பெரும்பங்கு வகித்தது. அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும், கப்பல் மாலுமிகளாகவும், கடைக்காரர்களாகவும் ஊழியம் செய்தனர். அவர்கள் பிறப்பினால் - அதாவது பெற்றோர் அடிமை - ஆகவோ, பெற்றொர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளாகவோ, சந்தையில் வாங்கப் பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ ஆகலாம். உதாரணமாக, பெலொபெநீசியன் போர் என அழைக்கப் படும் கிரேக்க உள் நாகாரீக யுத்தங்களில் தோல்வியுற்ற வீரர்கள், வெற்றி பெற்றவர்களால் அடிமையாகாப்பட்டனர். ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற அதீனிய வீரர்கள் சைராகூஸ் நிக்கல் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர். ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, 'அடிமைத் தனம்', இவற்றைப் பொருத்தது. இளமையான, அழகான, திடகாத்திறமான, ஒடுங்கும் சுபாவம் கொண்ட அடிமையின் விலை 10 மினா - அதாவது $180 - ஆக இருக்கலாம். வயதான, தளர்ந்த, அடங்காப் பிடாரிகள் விலை 1/2 மினா - $9 - தான். அடிமைகள் சந்தையில் பெருமளவில் கிடைத்தால் -உதாரணமாக ஒரு வெற்றிகரமான போருக்குப் பின் - அடிமையின் விலையும் சரியும். பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளைக் கூட வைத்திருக்கலாம் கிரேக்க அடிமைகள் தாங்களே தங்கள் பெயர்களை வைத்துக்கொள்ள கூடாது; அவர் எசமானர் தான் பெயரைக் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி சாலைகளையோ, பொது கட்டிடங்களையோ அணுகக் கூடாது. . ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில் அடிமைகள் தான் பெரும்பாலோர். ஏதென்ஸில் 21000 சுதந்திர மனிதர்களும், 4,00,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்படுகிறது. ரோமானிய உலகத்தில் அடிமை முறை பெருமுக்கியத்துவத்தை வகித்தது. ரோம் குடியரசாக இருக்கும் வரை (100 கிமு வரை) ஒரளவு கட்டுக்குள் இருந்தது; ரோம் சாம்ராச்சியமானவுடன், பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல தேசத்தினர் அடிமைகளானார்கள். ரோமர்கள், தங்களைத் தவிற மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாக்கினர். விவசாய முறைகளும் வேண்டிய பண்டங்கள் உற்பத்தியை விடுத்து, சர்வதேச ஏற்றுமதிக்கு வணிகமய விவசாயமாகி ஆயிரக்கணக்கான பண்ணையாட்களை தேடிற்று. இதனால் பெரும் பண்ணைகள் அடிமை வேலையை ஊக்குவித்தன. கி.பி.400 வரை, அடிமைமுறை இன்னும் தீவிரமாயிற்று. அதற்க்குபின், ரோம சாம்ராஜ்ஜியம் குலைய ஆரம்பித்து, கிருத்துவ தாக்கம் பெருகியது. கடைக்கால ரோமில் அடிமைகளின் கதி சுதாரித்தது. சில ஆய்வுகள், கி.மு. 2 ஆம் நூற்றண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை, அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். . அடிமைகளுக்கு பெயரில்லை; அவர்கள் மணம் செய்யமுடியாது; சொத்து வைக்கமுடியாது. ரோம் அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமை கலகங்கள் நிகழ்ந்தன. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்கள்; வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருப்பவர்கள். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71 ஆம் ஆண்டில் நடந்த ஸ்பார்டகஸ் எழுச்சி. ரோம் எசமானர்கள் அடிமை எழுச்சிகளின் பயத்திலேயே காலம் கழித்தனர். ஒருமுறை ரோம் செனேட்டில், அடிமைகளுக்கு தனி உடை போட வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால், அப்படி செய்தால், அடிமைகள் இனம் கண்டுகொண்டு, தங்கள் எண்ணிக்கை பலத்தை உணர்ந்து கலகம் செய்யலாம் என தோன்றியவுடன், அந்த உடை தீர்மானம் கைவிடப்பட்டது. சில அடிமைகள் தப்பியோடி ரகசிய வாழ்க்கை வாந்தனர். அப்படிபட்ட அடிமைகளை கைப்பற்றுவதற்க்கே தனித் தொழில் ஆரம்பித்தது. பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) என்னும் கிரேக்கர், சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் கிரேக்க தூதுவராக இருந்து இந்தியாவைப் பற்றி யாத்திரை ஏடு எழுதியுள்ளார். அதன்படி "(இந்தியாவிலுள்ள) ஆச்சரியமான வழக்குகளில் ஒன்று, அந்நாட்டு சான்றோர்களால் செய்யப்பட்டது - நீதியின்படி யாரும் எந்த சூழ்நிலையிலும் அடிமையாகக் கூடாது ... எல்லா சொத்துக்களும் சமமாக பாகுபடுத்த வேண்டும்," அர்ரியன் என்ற வேறொரு கிரேக்க எழுத்தாளரும் இந்தியாவில் அடிமை என யாரும் இல்லை என்கிறார். ஸ்ட்ராபோ என்ற எழுத்தாளரும் அதையே சொல்கிறார். ஒரு தமிழ் ஆய்வாளரின்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாம். "அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கியப் பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன" 2013இல் வெளியான உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. 1. மேற்கு ஆப்பிரிக்காவில் 1788 ஆம் ஆண்டு, கினியா நாட்டு படைத்தளபதியும் இளவரசருமான அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரியை ஃபவுட்டா ஜல்லான் என்ற இடத்தில் பிடித்து அமெரிக்காவிருக்கு அடிமையாக அனுப்பபட்டார். அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி 40 வருடம் அமெரிக்காவில் அடிமையாக இருந்தார். இவற்றை தவிர, 20 ஆம் நூற்றாண்டில், கொடூர அரசாங்கங்களால் கோடிக்கணக்கான மக்கள் அடிமை நிலையில் வைத்து சாகும்வரை கடும்வேலை பிழியப்பட்டனர். இவை அரசாங்கங்களால் நடத்தப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 1. மத்திய ஆப்பிரிக்காவில், இப்போது காங்கோ என அழைக்கப்படும் நாட்டில், பெல்ஜிய காலனிக்க அரசாங்கம், ஆப்பிரிக்கர்களை ஊதியம் கொடுக்காமல் கடும் வேலைக்கூள்ளாக்கியது. 2. 2 ஆம் உலக மகாயுத்தத்தின்போது, ஜெர்மனி பல ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றி பல மில்லியன் மக்களை பலாத்காரமாக அழைத்துச் சென்று, பரிதாபமான நிலையில் வைத்து வேலை பிழிந்தது. இதில் ஒரு பகுதி யூதர்களின் பேரழிப்பு என்ற நாசி திட்டத்தை சார்ந்த்தாகும். யுத்தத்தின் முடிவில் 20 லட்சம் போர்க்கைதிகளும், 75 லட்சம் சாதாரண மக்களும் இவ்வாறு அடிமை வேலை செய்தனர் இன்றும், பல ஜெர்மானிய தொழில் நிர்வாகங்களும், அரசாங்கமும், பல யூத அடிமைகளுக்கும், அவர்கள் சந்ததியினருக்கும் ஈடு கொடுக்கின்றனர். 3. சோவியத் ஒன்றியத்தில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில், லட்சோபலட்சம் மக்கள், அடிமை முறையில் தொழிற்சாலைகளிலும், காடுகளையும், சுரங்கங்களையும், கால்வாய்களை வெட்டவும் பயன்படுத்தப்பட்டனர். அந்த முறை குலக் என்றழைக்கப்படுகிறது. சோவியத் கட்டாய வேலை தளங்களில் 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் மக்கள் மரணமடைந்திருக்கலாம் என கணக்கு செய்யப்படுகிறது. இதைத் தவிர இன்னும் பல கோடி மக்கள் உயிர் தப்பினர் . 1918-1956 காலத்தில் 300 லட்சம் மக்கள் வரை குலகுகளுக்கு சென்றிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது . 4. 2 ஆம் உலக மகாயுத்ததின் போது, ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஜப்பான், பல அட்டூழியங்களை செய்து, அடிமை வேலை வாங்கிற்று. தற்காலத்தில் அடிமைத்தனம் இவ்விதங்களிலிருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் கூறுகிறது. அடகு தொழிலாளர் - இன்று லட்சோபலட்சம் மக்கள் அடகு முறையில் கட்டுண்டு உள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும், தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். சில சமயம் அந்த கடன் குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்காகவும் அவ்வளவு சிறிய தொகையாக இருக்கலாம். கடனையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்க வருடத்தில் எல்லா நாட்களிலும், எல்லா வருடமும், ஒரு மருத்துவ வசதியுமில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது.. இளம் வயதில் கட்டாய மணம் - இது மகளிரை பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து கொள்ளப் பட்டு, வன்முறைக்கு ஆளாகிறனர். கட்டாய சேவை - அரசாங்கம், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, கட்டாய வேலைகளை - துன்புறுத்தியோ, வன்முறை பீதியை ஏற்படுத்தியோ - பிழிகிறார்கள். அடிமை சந்ததி - சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ, கட்டாய வேலை செய்ய ஏற்பட்டவர்கள் எனக் கருதுகிறது. ஆள் கடத்துதல் - மனிதர்கள், பெண்டிர், சிறார் இவர்களை அடிமைத்தனமான கதிகளில் வைக்கவும், வாங்கி விற்க்கவும் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல். பாலக தொழிலாளர்.- இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் பாலகர்கள் அவர்கள் உடல்நிலைக்குப் பாதகமான சூழ்நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பின்றி வேலை செய்கிறனர். பழங்கால வாங்கி/விற்க்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப்பட்டாலும், இன்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அந்த அடிமைமுறை நடக்கிறது. முக்கியமாக சூடான், மௌரிடேனியா என்ற இரு நாட்டினிலும் இது நடக்கிறது. அரபுமயமாக்கப்பட்ட வடக்கு சூடான் அரசு பழைய மதங்களையும் கிருத்துவத்தையும் பின்பற்றி வரும் தெற்கு சூடானிய இனங்களை அடிமைகளாக பிடித்து வருவதை தடுக்காமல், அடிமை பிடிப்பவர்களை ஆயுதம் கொடுத்து உதவியுள்ளது. அதனால் சூடானில் கடந்த 50 வருடங்களாக உள்நாட்டு போர் நடக்கிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு அமைப்பின்படி (1997 அறிக்கை) "சூடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் லாபமடைந்துள்ளனர்". தென்சூடானிலுள்ள பார் அல்கசல் பகுதியிலுள்ள டிங்கா குடியினர் பலரை அடிமைகளாக இழந்துள்ளனர். சூடானின் நீதிமுறையில் அடிமை வைப்பது குற்றமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து, அடிமை எண்ணிக்கை அதிகமாகியுள்ளது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசின் 1994 கணக்குப்படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் பெர்பெர் இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கிறனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்க்கு குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவர் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழிவின்' முதல் தலைவர். பிரெஞ்சு புரட்சியின் போது 'முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் தடைகள் நீக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் சிக்கலாகி, அமெரிக்க உள்நாட்டு போருக்கு வித்திட்டது. 20 ஆம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல நீதிகளை இயற்றியுள்ளன. ஓரிரண்டு நாடுகளைத் தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடிமை முறை, ஆசிரியர்: ஆ. சிவசுப்பிரமணியம், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629001. படையநல்லூர் பாடியநல்லூர் (ஆங்கிலம்:Padianallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,863 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாடியநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. படையநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாதிரிக்குப்பம் பாதிரிக்குப்பம் (ஆங்கிலம்:Padirikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,986 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பாதிரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாதிரிக்குப்பம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பழகநாங்குடி பழகநாங்குடி (ஆங்கிலம்:Palaganangudy), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பழகநாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழகநாங்குடி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பழவன்சாது பழவன்சாது (ஆங்கிலம்:Palavansathu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,136 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழவன்சாது மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழவன்சாது மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பல்லடம் பல்லடம் (ஆங்கிலம்:Palladam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை 67ல் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பல்லடம் வட்டத்தில் 92,894 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் பல்லடம் நகராட்சி பகுதியில் 13,213 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பல்லடம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பல்லடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(scad) மற்றும் ப்ரொபஸ்ணல்(professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பள்ளப்பாளையம் பள்ளப்பாளையம் (ஆங்கிலம்:Pallapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடுமாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6499 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 51% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 41% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பள்ளப்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பள்ளத்தூர் பள்ளத்தூர் (ஆங்கிலம்:Pallathur), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். காரைக்குடி - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,400 வீடுகளும், 9,580 மக்கள்தொகையும் கொண்டது. இது 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பள்ளிகொண்டா பள்ளிகொண்டா (ஆங்கிலம்:Pallikonda), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளிகொண்டா மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிகொண்டா மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பள்ளிபாளையம் பள்ளிபாளையம் (ஆங்கிலம்:Pallipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். அக்டோபர் 7, 2004ல் இது பேரூராட்சியிலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது காவிரி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. ஆற்றுக்கு எதிர்புறம் (மேற்கு பகுதியில்) ஈரோடு நகரம் உள்ளது. காவிரியின் கரையோரமாக இருந்தபோதிலும் இது பாறைகள் கூடிய இடமாகும். விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. விசைத்தறி கூடம் சார்ந்த சாய பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது. பள்ளிபாளையம் சிக்கன் என்ற உணவு புகழ் பெற்றதாகும். இந்நகரம் ஈரோட்டிலுருந்து 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெள்ளியங்கிரி பி.எசு வெற்றி பெற்று நகரவை தலைவரானார். பள்ளிபாளையம் அக்கிரஹாரம் பள்ளிபாளையம் அக்கிரஹாரம் (ஆங்கிலம்:Pallipalayam Agraharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,829 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பள்ளிபாளையம் அக்கிரஹாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பள்ளிபாளையம் அக்கிரஹாரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பணகுடி பணகுடி (ஆங்கிலம்:Panagudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் ஓடு மற்றும் செங்கல் தயாரித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வூரில் சிறப்பு மிக்க பணகுடி சாஸ்தா கோயில், இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் மற்றும் புனித சூசையப்பர் திருத்தலமும் உள்ளன. மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு தெற்கே 52 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது இராதாபுரத்திலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ளது. 49 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 166 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7733 வீடுகளும், 29895 மக்கள்தொகையும் கொண்டது. பணகுடி என்ற சொல்லுக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல கருத்துக்களை கூறுகின்றனர். பணகுடியிலும் அதன் சுற்று புறங்களிலும் ‘பாணர்கள்’ என்ற தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது. பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள். இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள். ஆங்கிலேயர்கள் பணகுடிக்கு வருவதற்கு முன்பு பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பணகுடி என்றாயிற்று. பணகுடியை முரத்த நாடு என்றும் அழைப்பார்கள். இச்செய்தி சுசீந்திரம் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. பணகுடியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற மதத்தை சார்ந்த, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பணகுடியில் மார்ச் முதல் மே வரை வெயில் காலம் ஆகும். பணகுடியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன. பணகுடியில் முக்கியத் தொழில் வேளாண்மை. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். புதியவகை இயந்திரங்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்ற முறையும், ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. பணகுடியின் வடதிசையில் கரிசல் மண்ணும், தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கள் சூளைகளுக்கும், ஓடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. சூன் முதல் செப்டம்பர் வரையிலும் அக்டோபர் முதல் திசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்பாசனம் அனுமான் நதியில் இருந்தும் குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது. பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல், சுருட்டு சுற்றுதல், செங்கல் உற்பத்தி செய்தல், ஓடு தொழிற்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான ஓடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சிறுதொழில்களாக தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது. பணகுடியில் சர்வோதய சங்கம் சிறப்பு பெற்றதாகக் காணப்படுகிறது. இங்கு மரச்சாமன்கள் சோப்பு செருப்பு தேன் ஊதுபத்திகள் தலையனை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பணகுடியில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இச்சந்தை மையப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்று வட்டார ஊர்களான வடக்கன்குளம், கும்பிளம்பாடு, கலந்தபனை, பாம்பன்குளம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றார்கள். தினந்தோறும் சந்தை நடைபெறுகிறது. வார சந்தையும் நடைபெறுகிறது, இதைத் தவிர மாட்டுச் சந்தையும் மீன்சந்தையும் உள்ளது. யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பணகுடி சந்தையையும் கவனிக்கின்றார்கள் 19ம் நுற்றாண்டிலிருநதே பணகுடியானது ஒரு மிகப் பெரிய கிராமமாக சிறப்புப் பெற்று விளங்குகிறது. மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் போது இருந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் தான் பணகுடியில் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் அச்சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டது. பணகுடியில் ஆரம்பரத்தில் மங்கம்மாள் சாலை மட்டும் தான் இருந்தது. பணகுடி முதல் வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய சாலை இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் முன்னால் செல்கிறது. இது ஆரம்பத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. மற்ற பேருந்துகள் பைபாஸ் வழியாக செல்கின்றன. பணகுடியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தான் நாகர்கோவில் திருநெல்வேலிக்கு செல்லும் மக்களும் வெளியூக்கு செல்லும் மக்களும் இந்த பேருந்து நிலையம் வந்துதான் பேருந்து ஏறிச் செல்கின்றனர். பணகுடியில் இருந்து போக்குவரத்து தவிர தொடருந்துப் போக்குவரத்தும் உள்ளது. 1903-ம் நூற்றாண்டில் தொடருந்துப் போக்குவரத்து ஆரம்பிக்கபட்டது. பணகுடியில் உள்ள மக்கள் பலவிதமான மதத்தை சார்ந்தவர்கள். இந்து மதத்தை பொருத்தவரை அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இதில் சைவர்களும், வைணவர்களும் உள்ளனர். கிறித்தவ மதத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்ண்டுகள், பெந்தேகோஸ்சுகள் என்ற பிரிவினர்களும் உள்ளனர். சில முஸ்லிம்கள் உருது மொழி பேசுகின்றனர். இவர்கள் பட்டாணி முஸ்லிம் என அழைக்கப்படுகின்றனர். தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் லெப்பை என அழைக்கப்படுகின்றனர். பனப்பாக்கம் பனப்பாக்கம் (ஆங்கிலம்:Panapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 110 மீட்டர் (360 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பனப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பனப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்பொழி பண்பொழி (ஆங்கிலம்:Panboli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில், பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது. மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 75 கிமீ தொலவிலும்; தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. 8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 மக்கள்தொகையும் கொண்டது. பண்பொழி திருமலை முருகன் கோயில் பாண்டமங்கலம் பந்தமங்கலம் (ஆங்கிலம்:Pandamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5949 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பந்தமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்ணைக்காடு பண்ணைக்காடு (ஆங்கிலம்:Pannaikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 32 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. பண்ணைக்காடு பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன. பண்ணைப்புரம் பண்ணைபுரம் (ஆங்கிலம்:Pannaipuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 32 கிமீ தொலைவில், உத்தமபாளையம் அருகே உள்ளது. ஏலக்காய் தோட்ட முதலாளிகள் அதிகம் கொண்ட ஊராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9,323 மக்கள்தொகையும், 15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாப்பங்குறிச்சி பாப்பங்குறிச்சி (ஆங்கிலம்:Pappankurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,439 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பாப்பங்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாப்பங்குறிச்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாப்பாரப்பட்டி பாப்பாரப்பட்டி (ஆங்கிலம்:Papparapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,275 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாப்பாரப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாப்பாரப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் அதிகமாக விவசாயம் மற்றும் நெசவு தொழில் நடைபெறுகிறது. பாப்பாரபட்டியில் புதியதாக 40 இலட்சரூபாய் செலவில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சூலை 18, 2011 அன்று திறந்து வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி (ஆங்கிலம்:Pappireddipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,369 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.4% ஆண்கள், 49.6% பெண்கள் ஆவார்கள். பாப்பிரெட்டிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவிற்கு ஒப்பானது. பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாசூர் பாசூர் ("Pasur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A வசதியும் உண்டு. முக்குடி வேலம் பாளையம் - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் பழனி கவுண்டன் பாளையம் - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர் பத்தமடை பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமான பாய்களில் ஒன்று. திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கிமீ); மேற்கே சேரன்மாதேவி (4 கிமீ); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கிமீ) உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், சேரன்மாதேவி]]யில் உள்ளது. 7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 மக்கள்தொகையும் கொண்டது. பட்டிணம் பட்டிணம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8187 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பட்டிணம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பட்டிணம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பட்டிவீரன்பட்டி பட்டிவீரன்பட்டி (ஆங்கிலம்:Pattiveeranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேருராட்சி பட்டிவீரன்பட்டி, அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8602 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.59 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பட்டிவீரன்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்டிவீரன்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பழுகல் பழுகல் (ஆங்கிலம்:Pazhugal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,302 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பழுகல் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழுகல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பீர்க்கன்கரணை பீர்க்கன்கரணை (ஆங்கிலம்:Peerkankaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,521 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பீர்க்கன்கரணை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பீர்க்கன்கரணை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெண்ணாடம் பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெண்ணாடம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெண்ணாடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பென்னாகரம் பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பென்னாகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பென்னாகரம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெண்ணாத்தூர் பெண்ணாத்தூர் (ஆங்கிலம்:Pennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பெண்ணாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெண்ணாத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பேரளம் பேரளம் (ஆங்கிலம்:Peralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5844 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரளம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெரணமல்லூர் பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135 மீட்டர் (442 அடி) உயரத்தில் இருக்கின்றது. பெரணமல்லூர்  வரலாறு இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5554 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பெரணமல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரணமல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர் பெரிய நெகமம் பெரிய நெகமம் (ஆங்கிலம்:Periya Negamam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இங்கிருந்து காமநாயக்கன் பாளையம் 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7680 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரிய நெகமம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரிய நெகமம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெரியகோடி ஏரி பெரியகோடி ஏரி (ஆங்கிலம்:Periyakodiveri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,444 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரியகோடி ஏரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பெரியகோடி ஏரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெரியசேமூர் பெரியசேமூர் (ஆங்கிலம்:Periyasemur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,044 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பெரியசேமூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியசேமூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெருமாண்டி பெருமாண்டி (ஆங்கிலம்:Pandaravadai Perumandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெருமாண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருமாண்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெருமுச்சி பெருமுச்சி (ஆங்கிலம்:Perumuchi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8140 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். பெருமுச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருமுச்சி மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெருங்களத்தூர் பெருங்களத்தூர் (ஆங்கிலம்:Perungalathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,343 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெருங்களத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருங்களத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பிள்ளாநல்லூர் பிள்ளாநல்லூர் (ஆங்கிலம்:Pillanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9213 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பிள்ளாநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பிள்ளாநல்லூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொழிச்சலூர் பொழிச்சலூர் (ஆங்கிலம்:Polichalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,329 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பொழிச்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொழிச்சலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொன்மணி பொன்மணி ("Ponmani"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,553 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொன்மணி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்மணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொன்னாம்பட்டி பொன்னாம்பட்டி (ஆங்கிலம்:Ponnampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,659 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பொன்னாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னாம்பட்டி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொன்னேரி பொன்னேரி (ஆங்கிலம்:Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 15,481 ஆண்கள், 15,544 பெண்கள் ஆவார்கள். பொன்னேரி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னேரி மக்கள் தொகையில் 10.45 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொன்னேரி தமிழக அரசு சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சிறுனியம் பலராமன் உள்ளார். பொன்னேரி திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். பூலாம்பாடி பூலாம்பாடி (ஆங்கிலம்:Poolambadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,081 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பூலாம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூலாம்பாடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பூளுவப்பட்டி பூலுவபட்டி (ஆங்கிலம்:Pooluvapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,403 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பூலுவபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூலுவபட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். போரூர் போரூர் (ஆங்கிலம்:Porur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. இது பூவிருந்தவல்லி- கிண்டி சாலையில் கிண்டியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,782 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். போரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போரூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொதட்டூர்பேட்டை பொதட்டூர்பேட்டை (ஆங்கிலம்:Pothatturpettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.(தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது.) (ஆந்திரா மாநில எல்லைபகுதி ஆனால் ஆந்திரா மாநில பேருந்துகள் இயக்கபடுவதில்லை.) போக்குவரத்து. பொதட்டூர்பேட்டையில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது ஆனால் 13 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. பணிமனை அடிப்படை வசதியின்றி செயல்படுகிறது.மாவட்ட தலைநகர் திருவள்ளூர்க்கு நேரடி பஸ் வசதியில்லை. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பொதட்டூர்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பொதட்டூர்பேட்டை மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெசவுத்தொழில் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்றது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. அரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை� 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அருவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது. புதுப்பாளையம் அக்கிரஹாரம் புதுப்பாளையம் அக்கிரஹாரம் (ஆங்கிலம்:Pudupalaiyam Aghraharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4994 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். புதுப்பாளையம் அக்கிரஹாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுப்பாளையம் அக்கிரஹாரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுப்பட்டிணம் புதுப்பட்டிணம் (ஆங்கிலம்:Pudupattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். புதுப்பட்டிணம் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுப்பட்டிணம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதூர் (செங்கோட்டை) புதூர் (செ) பேரூராட்சி (ஆங்கிலம்:Pudur (S)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, இரவியதர்மபுரம், கீழபுதூர், மேலபுதூர், கண்னுபுளிமெட்டு, கேசவபுரம் ஆகியவை இனைந்ததே புதூர் (செங்கோட்டை) பேரூராட்சி ஆகும் புதூர் (செ) பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில், கேரளா செல்லும் சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கிமீ தொலைவில் உள்ள செங்கோட்டையில் உள்ளது இதனருகே அமைந்த ஊர்கள் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி ஆரியங்காவு ஆகும். 33.21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3322 வீடுகளும், 12457 மக்கள்தொகையும் கொண்டது. புதுவயல் புதுவயல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு வருவாய் கிராமங்கள் கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்டது. இது 5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது. புலியூர் புலியூர் (ஆங்கிலம்:Puliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,845 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். புலியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புலியூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புள்ளம்பாடி புள்ளம்பாடி (ஆங்கிலம்:Pullampadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9985 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். புள்ளம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புள்ளம்பாடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புஞ்சை தோட்டகுறிச்சி புஞ்சை தோட்டகுறிச்சி (ஆங்கிலம்:Punjai Thottakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். புஞ்சை தோட்டகுறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புஞ்சை தோட்டகுறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புஞ்சை புகலூர் புஞ்சை புகலூர் (ஆங்கிலம்:Punjaipugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,306 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புஞ்சை புகலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புஞ்சை புகலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பூவாளுர் பூவாளுர் ("Poovalur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7745 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பூவாளுர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூவாளுர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புழல் புழல் (ஆங்கிலம்:Puzhal), இந்திய மாநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரில் புழல் ஏரி அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,297 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். புழல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புழல் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புழுதிவாக்கம் புழுதிவாக்கம் (உள்ளகரம்) (ஆங்கிலம்:Puzhithivakkam (Ullagaram)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,086 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். புழுதிவாக்கம் (உள்ளகரம்) மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புழுதிவாக்கம் (உள்ளகரம்) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இரா. புதுப்பட்டி இரா.புதுப்பட்டி (ஆங்கிலம்:R.Pudupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7347 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். R.புதுப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. இரா.புதுப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இராஜசிங்கமங்கலம் இராஜசிங்கமங்கலம் அல்லது ஆர். எஸ். மங்கலம் (ஆங்கிலம்:R.S.Mangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,481 வீடுகளும், 14,565 மக்கள்தொகையும் கொண்டது. இது 13.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கண்மாய், இராஜசிங்கமங்கலம் கண்மாய் ஆகும்.. நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய் எனும் சிறப்பு இதற்கு உண்டு. இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி,போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் முழுவதும் உள்ளது. இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் ("Rajapalayam") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மதுரையின் தென்மேற்கே 85கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்புநாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய இனமாகும். இங்கு 15 நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராசபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. அவர்கள் வருகைக்கு முன்பு இம் மண்ணின் பூர்வீக குடிகளாக இருந்தவர்கள் பள்ளா்.என்ற சொல் பள்ளர் என்பதன் மருவலே மேலும்  பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும். அப்படியானால் பழைய பாளையம் என்ற பெயருக்கு பள்ளா் கோட்டை என்று பொருள் கொள்ளலாம். பின் ராஜீக்களின் வருகையால் ராஜபாளையம் என பெயர் மாற்றப் பட்டது. இப்பொழுதும் பழைய பாளையம் என்ற பெயர் வழக்கில் உள்ளது. விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழராசகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கர் கீழ் பணிபுரிந்து வந்தனர். 1885ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்து வாங்கி இராசபாளையம் நகரத்தை உருவாக்கினர். துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. விரைவில் "பருத்தி நகரம்" என பெயர்பெற்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,30,119 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 64,624 ஆண்கள், 65,495 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 86.25% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.18%, பெண்களின் கல்வியறிவு 80.43% ஆகும்.மக்கள் தொகையில் 10,504 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இணைக்கப்பட்டுள்ள படங்கள் சஞ்சீவி மலையிலிருந்து எடுக்கப்பட்டவை. மேற்குத் தொடர்ச்சி மலை பின்னணியில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது. செல்லும் வழியில் உள்ள அணையிலிருந்து நகரின் குடிநீர்த்தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இராமநாதபுரம் இராமநாதபுரம் ("Ramanathapuram"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டர் (6 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி 13,38,000 £-7! மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள். இராமநாதபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானது‍. இராமநாதபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது. 1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார். 1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள். இராமநாதபுரம் ஒரு சிறப்பு நிலை நகராட்சி. இராமேஸ்வரம்-மதுரை மற்றும் திருச்சி-இராமேஸ்வரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிய பின் இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிக பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985 ல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வைகை நதி பெரிய கண்மாயில் நுழைந்து பின் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.பெரிய கண்மாயில் தண்ணீர் விவசாயத்திற்காக சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு பகுதியின் பரப்பளவின் காரணமாக இந்த நீர் கடலை சென்று சேர்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நகரில் மக்களின் தேவைக்காக நிறைய குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. •வருவாய் கோட்டம் (3) •வருவாய் வட்டம் (10) •வருவாய் குறுவட்டம் (38) •வருவாய் கிராமங்கள் (400) குறிப்பு : அடைப்பு குறிக்குள் இருக்கும் எண்கள் கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கையை குறிக்கும் *இராமநாதபுரம் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இந்த மாவட்டத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். முன்னால் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் சோ.பாலகிருஷ்ணன் இராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளி,தேரிருவேலியில் படித்தார் இராமநாதபுரம் அரண்மனை நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபமும் கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். ஆங்கிலேயர்களால் 1913ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு உண்டு. சுமார் 2.5 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர். பாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்கு பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், 100 டன் எடை கொண்டது. இந்த தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கும் பணிகளுக்கான சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் அழிந்து அதே சுவடுகளோடு காணப்பட்டது.அதன் பிறகு 2017ஆம் ஆண்டு இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு ஒரு தபால் நிலையம் உள்ளது.இது மாவட்டத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்று. ராமநாதபுரத்திற்கு கிழக்கே இராமேஸ்வரம் மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே திருப்புல்லாணி வடக்கே தேவிபட்டினம் ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன. திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை,இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்,தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர். இராமாபுரம் இராமாபுரம் (ஆங்கிலம்:Ramapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,251 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். இராமாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராமாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இராசிபுரம் இராசிபுரம் (ஆங்கிலம்:Rasipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் "ஸ்ரீ ராஜபுரம்" எனப்பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக அங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 246 மீட்டர் (807 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராசிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராசிபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் ம. பாலசுப்ரமணியம் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக தேர்வு பெற்றார். இராயகிரி இராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன. திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் ஆகும். 8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 மக்கள்தொகையும் கொண்டது. ரீத்தாபுரம் ரீத்தாபுரம் (ஆங்கிலம்:Reethapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,625 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ரீத்தாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ரீத்தாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இரோசல்பட்டி இரோசல்பட்டி (ஆங்கிலம்:Rosalpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். ருத்திராவதி இருத்திராவதி (ஆங்கிலம்:Rudravathi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5923 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். இருத்திராவதி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. இருத்திராவதி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தென் கோடிக்குளம் தென் கொடிக்குளம் (ஆங்கிலம்: "South Kodikulam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் எஸ். கொடிக்குளம் என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு பேரூராட்சி உள்ளது. இது வத்திராயிருப்பு - கூமாப்பட்டி செல்லும் பாதையில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, எஸ். கொடிக்குளம் பேரூராட்சி 3,488 வீடுகளும், 12,713 மக்கள்தொகையும் கொண்டது. இது 9 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 34 தெருக்களும் கொண்ட எஸ். கொடிக்குளம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென் நல்லூர் தென் நல்லூர் (ஆங்கிலம்: "South Nallur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,319 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தென் நல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென் நல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சலங்கப்பாளையம் சலங்கப்பாளையம் (ஆங்கிலம்:Salangapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,456 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சலங்கப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சலங்கப்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலம் சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் நான்காவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது.கொங்கு நாட்டின் அமைந்துள்ள இவ்வூர் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற ஊர்.சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிக்கு அடுத்த நான்காவது பெருநகரம் ஆகும்.தென்னிந்தியாவை பொறுத்தவரையும் தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும்.சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 32 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும்.சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும். இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும். இதனாலையே இது சேலம் பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்த பட்டது. சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள ' சாலிய சேரமண்டலம் ' என்றத் தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேரவரையன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே திரிந்து சேலம் ஆனது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. இவ்வூரை சைலம் எனக் குறிப்பிடும் ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுமில்லை. ஆனால் சேலம் எனவே குறிப்பிடும் கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கின்றன. சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. ஆனால் சிலரின் கருத்துப்படி 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து சேலம் பிறந்ததாகக் கூறப்படுவதற்குச் சான்றுகள் இல்லை. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர். இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம் என்றாலும் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்பதே சரியாகத் தோன்றுகிறது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள். அண்ணாமலையார் இந்த பூலோகத்தில் முதலில் பொற்பாதம் வைத்த இடம் சேலம் வாழைப்பாடி ஊர்க்கு அருகே உள்ள கோதுமை மலையில் தான் அவர் ஒரு பொற்பதத்தை வைத்தார். அப்பொழுது மலையில் சரிவு ஏற்பட்ட மற்றொரு பொற்பத்தை திருவண்ணாமலையில் வைத்தார் பிறகு இரண்டு பொற்பாதங்களையும் திருவண்ணாமலையில் வைத்து ஜோதியாக அருள் வழங்கினார். அந்த கோதுமை மலையின் உச்சியில் சிவன் பொற்பாதம் பட்டதால் சமமாக இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள். "இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 693,236 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது. சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து); காவல் நிலையம்: 31; அஞ்சல் நிலையங்கள்: தலைமை அஞ்சலகம் - 394; திரையரங்குகள்: 136; தொலைபேசிகள்: 96,564; மழையளவு: சராசரி 841 மி.மீ.; சில சமயம் 1,056 மி.மீ.; முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி; அணைகள்: மேட்டூர் (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) ஆனை மடுவு, கரிய கோவில்; மாநகராட்சி - 1; நகரசபைகள் - 3; ஊராட்சி ஒன்றியங்கள் - 20; பேரூராட்சிகள் - 34; பஞ்சாயத்துகள் - 376; கிராமங்கள் - 3,100; கோட்டங்கள் - 4; வட்டங்கள் - 9; 11 சட்ட சபை தொகுதிகள் உள்ளன: 1)கெங்கவள்ளி (தனி) 2)ஆத்தூர் (தனி) 3) ஏற்காடு (தனி - பழங்குடியினர்) 4) ஓமலூர் 5) மேட்டூர் 6) எடப்பாடி 7) சங்ககிரி 8) சேலம் (மேற்கு) 9) சேலம் (வடக்கு) 10) சேலம் (தெற்கு) 11)வீரபாண்டி சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில, ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும். இங்கு பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப்பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. பல்கலைக்கழகம் 1, பெரியார் பல்கலைக்கழகம் பள்ளிகள்: விவசாயம் சார்ந்தவை - 125 காடு சார்ந்தவை - 31 கனிமப் பொருள் - 38 துணியாலைகள் - 393 பொறியியல் - 20 வேதிப்பொருள் - 95 ஸ்டார்ச் - 726 ஏனையவை - 410 ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோயவில், சேலம் உருக்காலை,மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா. சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:- S - Steel - எஃகு A - Aluminium - அலுமினியம் L - Limestone - சுண்ணாம்புக் கல் E - Electricity - மின்சாரம் M - Mangoes - மாம்பலம் இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்ட நதியும் , திருமணிமுத்தாறு இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. கல்வராயன், சேர்வராயன்,நகரமலை, கஞ்சமலை, தீர்த்தலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை. கஞ்சமலை, தீர்த்தலை ஆகிய மலையில் இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழமும் இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. வசிட்ட நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன. சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன. சேலம், வெண்ணந்தூர் ஆகிய இடங்களிலும், ஜலகண்டபுரத்தில் இப்போது பவர்லும் தறிகள் மிகுதியாக உள்ளன. சேலம் நகரத்தில் அம்மாப்பேட்டைப் பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டிப் பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில் 7 சதவீதம் கால்நடைகள் சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. ஓமலூர் வட்டத்திலுள்ள மேச்சேரியில் நல்ல தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாடுகளின் மாமிசமும், தோலும் தரத்தில் உயர்ந்ததவை. இவ்வாடுகளின் தரத்தை உயர்த்த கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், அரசாங்க நிதி உதவியோடு செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் காங்கேயம் மாடுகள், நெல்லூர் பசுக்கள், ஓசூர் பசுக்கள், சிந்திப் பசுக்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. மேச்சேரியில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகின்றது. 'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது. சேலம் மாவட்டத்து மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சேலம் (உடையாபட்டி), சேலம், ஆத்தூர், (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நுற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்து சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது. நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் மற்றும் ரோஜா, மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார், கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம். இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில் சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகள். சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து - குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன. 'ஏழைகளின் ஊட்டி' என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையாகவே இருந்து வருகிறது. இது சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இவ்வூரானது 383 சதுர கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நில மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர். ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும்,13 டிகிரி செல்சியசுக்கு குறையாமலும், இருந்து வருகிறது. இது சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 'ஏரி' மற்றும் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. 'லேடிசீட்' பகுதியிலிருந்து தொலைநோக்கியின் மூலம் இயற்கைக் காட்சிகளைக் காணலாம். 'பகோடா' முனை என்ற முகட்டிலிருந்தும் மலையின் இயற்கைக் காட்சிகளை காணலாம். 'கிள்ளியூர் அருவி' 3000 அடியிலிருந்து விழும் காட்சியைக் காணலாம். இங்கு பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக எம்.டி.காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து பயிரிட்டார். சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள 'கைலாசநாதர் கோயில்' கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன. தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள். மாசி மாதம் திருவிழா நடைபெறும்.அப்போது பூக்கரகம் எடுத்தல் ,அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். மகா மண்டபத்தின் மேல் தளத்திலும், தூண்களின் போதிகைகளினின்றும் சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லாலாகிய வளையங்கள் மேல்தளக் கல்லினின்றும் வெட்டப்பட்டுத் தொங்குகின்றன. மண்டப சுவர்களில் மீன், ஆமை, முதலையின் வடிவங்கள் கல்லோவியங்கள் போல வடிக்கப்பட்டுள்ளன. இதுபோலவே சூழலும் கல் தாமரை மலர், ரதி-மன்மதன் போன்ற சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள இரண்டு தூண்களில் வாலி வதத்தை உருவாக்கி இருக்கிறான் சிற்பி. இராமன் ஒரு தூண் பக்கத்திலிருந்து வாலியை நோக்கி அம்பு விடுகிறான். வாலி ஒளிகிறான். ஆனால் வாலி நிற்கும் இடமிருந்து இராமனை நோக்கினால் அவன் தெரிவதில்லை. சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிஷ்ட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதில மடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில். இக் கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு. இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான - தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் ஆறுமுகங்களோடு விளங்ளுவதும் ஒரு வியக்கத்தக்கது. சேலத்திலிருந்து 51 கி.மீ. / 32 மைல் கல்தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிஷ்ட நதிக் கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றூர் - தற்போது ஆத்தூர் என்றாகி உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று - 'ஆத்தூர் கிச்சிடி சம்பா' என புகழ்பெற்றது. இந்நகரத்தில் பற்பல ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் உள்ளன. கி.பி. 1559 -1585 காலத்தில் ஆண்ட கெட்டி முதலி என்ற சிற்றரசரால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக் கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் அக்காலத்தில் கட்டப்பட்டது. முதலியார் சிலை என ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையின் முப்புறமும் அகன்ற அகழியும், தென்புறம் வசிஷ்ட நதியும், நாற்புறமும் உயர்ந்த கோட்டை மதிலும், பீரங்கி அமைக்கத் தக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழையாதவாறு குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், கிழக்கே இடிந்த மதிலும் என காணப்படுகின்றன. இக் கோட்டைக்குள் உள்ள சிவன் கோயில், காயநிர்மலேசுவரர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இக்கோயிலின் அமைப்பு ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது. சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் வசிட்ட நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வம்சத்தவரான 'வாணர்' என்போர், சோழர்களின் கீழிருந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். 'ஆறு அகழிகள்' இருந்த ஊர், ஆறகழூர் என்றும் சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் 'காமநாத கோவை' என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு. சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர். சேலத்திலிருந்து 59 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது. உலக அளவில் தம்மம்பட்டி சிற்பக்கலை பெயர் வாய்ந்தது. பிரிட்டன் பிரதமர் விரும்பிப் புகைத்த சுருட்டும் தம்மம்பட்டியுடையதாகும். சேலம் மாவட்டத்தில் ஆத்தூரை அடுத்த பெரிய நகரம் இதுவே. சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம். சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன. ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும். தமிழகத்தில் மத்தியில் அமைந்துள்ள இந்நகரம் பெரும்பாலும் தமிழகம் மட்டுமின்றி கேரளம்,கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் போக்குவரத்து இணைக்கிறது.சேலம் மாநகரத்தில் இருந்து சென்னை,கோயம்புத்தூர், பொள்ளாச்சி,காமநாயக்கன் பாளையம்,திருப்பூர்,மேட்டுப்பாளையம்,திருச்சி,கரூர்,திருநெல்வேலி, நாகர்கோவில்,கன்னியாகுமரி, தூத்துக்குடி,திருச்செந்தூர், மதுரை,திண்டுக்கல், நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,திருவாரூர், ராமநாதபுரம்,இராமேஸ்வரம்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல்,திருச்செங்கோடு,நீலகிரி, கொடைக்கானல்,உடுமலைப்பேட்டை,தாராபுரம், பழநி,அரியலூர்,பெரம்பலூர், கடலூர்,சிதம்பரம், திருவண்ணாமலை,வேலூர், ஈரோடு,மணப்பாறை, சிவகங்கை,விருதுநகர், தேனி,திருவள்ளூர்,பாலக்காடு,பெருந்துறை,கொடுவாய்,நெகமம் என அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை "சேலம் டவுன்", "சேலம் மார்க்கெட்", "சேலம் சந்திப்பு" ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993 இல் அமைக்கபட்டது. சாமலாபுரம் சமலாபுரம் (ஆங்கிலம்:Samalapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,816 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சமலாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சமலாபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சமத்தூர் சமத்தூர் (ஆங்கிலம்:Samathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5752 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சமத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சமத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சாம்பவர் வடகரை சாம்பவர் வடகரை (ஆங்கிலம்:Sambavar Vadagarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ; சுரண்டையிலிருந்து 5 கிமீ; ஆய்க்குடியிலிருந்து 5 கிமீ; கடையநல்லூரிலிருந்து 11 கிமீ தொலைவில் சாம்பவார் வடகரை பேரூராட்சி உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள தென்காசி ஆகும். 11 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,423 வீடுகளும், 16,709 மக்கள்தொகையும் கொண்டது. சங்கரமநல்லூர் சங்கரமநல்லூர் (ஆங்கிலம்:Sankaramanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9541 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரமநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சங்கரமநல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சங்கரன்கோவில் சங்கரன்கோவில் (ஆங்கிலம்:Sankarankovil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியாகும் . சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண் : த.நா - 79 (TN - 79) ஆகும். சங்கரன்கோவில் நகரை தலைமையிடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் செயல்படும் என்று 2018ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. இதற்கு முன்னர் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் மற்றும் கீழநீலிதநல்லூர் பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும் உள்ளது. மற்றொரு சந்தை உழவர் சந்தை ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் தோவலைக்கு அடுத்தபடியாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இங்கிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு பயணிகள் இரயில் வந்து செல்கின்றனர். அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும். சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : அண்ணா பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம். தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. சங்கராபுரம் சங்கராபுரம் (ஆங்கிலம்:Sankarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,243 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சங்கராபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கராபுரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சங்கர் நகர் சங்கர் நகர் (ஆங்கிலம்:Sankarnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருநெல்வேலி மாநகராட்சி எல்லையிலிருந்து 5 கிமீ தொலைவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் [தாழையூத்து|தாழையூத்தில்]] உள்ளது. 8.49 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2951 வீடுகளும், 7095 மக்கள்தொகையும் கொண்டது. சரவணம்பட்டி சரவணம்பட்டி (ஆங்கிலம்:Saravanampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,643 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சரவணம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சரவணம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதலான கோவையின் குறிப்பிடத்தக்க கல்லூரிகளும் பள்ளிகளும் அமைந்துள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சிலவும் இங்கு கிளைகளை அமைந்துள்ளன. சர்க்கார் சாமகுளம் சர்க்கார் சாமகுளம் (ஆங்கிலம்:Sarcarsamakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7728 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சர்க்கார் சமகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சர்க்கார் சாமகுளம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சாத்தான்குளம் சாத்தான்குளம் (ஆங்கிலம்:Sathankulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாவட்டத் தலைமையிட நகரமான தூத்துக்குடியிலிருந்து 70 கிமீ தொலைவில் சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள்; கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் நாசரெத், மேற்கே 9 கிமீ தொலைவில் ஈத்தாமொழி, தெற்கே 10 கிமீ தொலைவில் தட்டார்மடம். அருகமைந்த தொடருந்து நிலையம் நாசரெத் ஆகும். 5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,193 ஆகும். தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர். சத்தியவிஜயநகரம் சத்தியவிஜயநகரம் (ஆங்கிலம்:Sathiyavijayanagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5671 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சத்தியவிஜயநகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சத்தியவிஜயநகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சத்துவாச்சாரி சத்துவாச்சாரி (ஆங்கிலம்:Sathuvachari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஊர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,439 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சத்துவாச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சத்துவாச்சாரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சாயபுரம் சாயபுரம் (ஆங்கிலம்:Sayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாயபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சீராப்பள்ளி சீராப்பள்ளி (ஆங்கிலம்:Seerapalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,778 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சீராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சீராப்பள்ளி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சீராப்பள்ளியின் முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் விசைத் தறிகளே உள்ளன. இவ்வூரில் கைத்தறி நெசவு அழியும் தருவாயில் உள்ளது. இவ்வூரில் நெய்யப்படும் ஆடைகள் சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் வாயிலாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.இவ்வூரினைச் சுற்றிலும் விவசாயம் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இங்கு அதிக அளவில் கிழங்கு பயிரப்படுவதால் அதனை சார்ந்து சவ்வரிசி தொழிற்சாலைகள் (சேகோ பேக்டரி) இப்பகுதியில் அதிகம் உள்ளது. சீராப்பள்ளியில் சிறப்பு மிக்க செவந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் வல்வில்ஓரி மன்னன் வந்து வணங்கி சென்ற வரலாறு உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் ஆண்டுதோரும், அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள துளக்க சூடாமணி மாரியம்மன் பண்டிகைக்கு சென்று வருவது வழக்கம். ஆண்டுதோறும் இவ்வூரில் பங்குனி மாதம் வரும் இறுதி புதன் கிழமையன்று பூமிதித்து மாரியம்மன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். சீவூர் சீவூர் (ஆங்கிலம்:Seevur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8645 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சீவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சீவூர் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேத்தூர் சேத்தூர் (ஆங்கிலம்:Seithur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது இராஜபாளையம் - தென்காசி சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 மக்கள்தொகையும் கொண்டது. இது 13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. செம்பாக்கம் செம்பாக்கம் (ஆங்கிலம்:Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,671 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். செம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செம்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். செம்மிபாளையம் செம்மிபாளையம் (ஆங்கிலம்:Semmipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6188 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். செம்மிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செம்மிபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (ஆங்கிலம்:Sendamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் வட்டம் ஆகும். தத்தகிரி முருகன் கோயில் , சிவன் கோயில், சேந்தமங்கலம் , கொல்லிமலை,பெருமாள் கோயில்.நைனாமலை வரதராசப் பெருமாள் கோயில் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். சேந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். சேந்தமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி), இராசிபுரம் மக்களவைத் தொகுதிக்கு (தனி) உட்பட்டது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயர்: சாந்தி (தே.மு.தி.க கட்சி) சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி) நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியுமே மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளாகும். மற்ற அனைத்து தனி தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கானது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம் வட்டத்தில் சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய குறுவட்டங்களும், நாமக்கல் வட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, நல்லிபாளையம், கீரம்பூர், மோகனூர், வளையப்பட்டி ஆகிய குறுவட்டங்களும் அடங்கியிருக்கும். ரூ.2.66 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலக புதியக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு, ரூ.38.13 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய குறுவட்ட அளவையர்களுக்கு குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சேந்தமங்கலம் - புதன்சந்தை சாலையில் பச்சுடையாம்பட்டி புதூர் கிராமம், சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் பின்புறமுள்ள சோளமுத்து ஆலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வருவாய்த்துறையின் சேவைகளை பெற சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் செந்தாரப்பட்டி செந்தாரப்பட்டி ("Sentharapatti"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,891 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செந்தாரப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. செந்தாரப்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேனூர் சேனூர் (ஆங்கிலம்:Senur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7558 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சேனூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேத்தியாத்தோப்பு சேத்தியாத்தோப்பு (ஆங்கிலம்:Sethiathoppu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7962 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சேத்தியாத்தோப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேத்தியாத்தோப்பு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். செவிலிமேடு செவிலிமேடு (ஆங்கிலம்:Sevilimedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,918 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செவிலிமேடு மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செவிலிமேடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேவுகம்பட்டி சேவுகம்பட்டி (ஆங்கிலம்:Sevugampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது. வத்தலக்குண்டு – தாண்டிக்குடி வழியாக செல்லும் சாலையில் உள்ள மு.வாடிப்பட்டியில், சேவுகம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 10.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9521 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேவுகம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேவுகம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். செங்கோட்டை டெல்லி கோட்டை , லால் குயிலாஹ் , அல்லது லால் குயிலா எனறும் அழைக்கப்படுகிறது (, , இதன் பொருள் செங்கோட்டையைக் குறிக்கும்), இது இந்தியாவின் மதில்சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது, மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி, 1648 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். செங்கோட்டையானது, முகலாய பேரரசர் ஷாஜகானின் புதிய தலைநகரமான ஷாஜகானாபாத்தின் அரண்மனையாக இருந்தது, மேலும் டெல்லியின் ஏழாவது தலைசிறந்த நகரமாகவும் விளங்கியது. அவரது ஆட்சிகாலத்தின் மதிப்பை உயர்த்தவும், அவரது கட்டிடக்கலை குறித்த திட்டங்கள் மற்றும் ஆர்வத்தினை செயல்படுத்த போதிய வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து இங்கு மாற்றினார். இந்த கோட்டையானது யமுனா நதிக்கரையில், பெரும்பாலும் சுற்றிலும் மதில்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த சுவரின் வடகிழக்கு முனை, 1546 ஆம் ஆண்டு இஸ்லாம் ஷா சுரியால் கட்டப்பட்ட பாதுகாப்பு கோட்டையான சலிம்கர் கோட்டைக்கு அருகாமையிலிருக்கும் படி கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டையின் கட்டிடப் பணி 1638 ஆம் ஆண்டில் தொடங்கி 1648 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. 11 மார்ச் 1783 இல், சீக்கியர்கள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து திவான்-இ-அம்யைக் கைப்பற்றினர். இந்த நகரத்தை ஆண்ட முகலாயரான வசீர், சீக்கியர்களிடம் சரணடைந்து, பின்னர் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தச் செயலானது கரோர் சிங்கிய குலத்தைச்சேர்ந்த சர்தார் பகெல் சிங் தலிவால் ஆணையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக்கோட்டையை வைத்திருந்த கடைசி முகலாய பேரரசர், பகதூர் ஷா II "ஜாபர்" ஆவார். `முகலாயர்களின் ஆட்சியில் அவர்களின் பாதுகாப்பு திறமைகள் இருந்த போதிலும், 1857 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியின் போது அவர்களால் செங்கோட்டையை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை. 1857 கலகத்தில் தோல்வியடைந்த பின்னர், 17 செப்டம்பர் அன்று ஜாபர் கோட்டையை விட்டு வெளியேறினார். ஆங்கிலேயரின் கைதியாக அவர் செங்கோட்டைக்குத் திரும்பிவந்தார். 27 ஜனவரி 1858 இலிருந்து ஜாபர் தீவிர நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அக்டோபர் 7 அன்று நாடு கடத்தப்பட்டார். 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியா சுதந்திர தேசமானது. இது இந்தியப் பிரதமர் ஜவகர் லால் நேரு அவர்கள் 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவின் சுதந்திரக்கொடியை ஏற்றியதன் மூலம் குறிப்பிடப்பட்டது. சுதந்திர நாளில் பிரதமரால தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது. செங்கோட்டையில் மிக உயர்தரமான கலை ஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் காட்சிப் பொருட்களாகக் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும், இது மிகவும் உயர்தர வடிவத்தையும், வெளிப்பாடு மற்றும் நிறங்களையும் கொண்டதனித்துவம் வாய்ந்த ஷாஜகானின் பாணியில் முன்னேற்றத்தின் விளைவாகும். டெல்லியில் உள்ள செங்கோட்டையானது, இந்தியாவின் நீண்டகால வரலாற்றையும் அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் ஒன்றாகும். இதன் தனிச்சிறப்பானது காலத்திற்கும் அதன் பரப்பிற்கும் அப்பாற்பட்டதாகும். இது கட்டடக்கலை நுணுக்கத்திற்கும் வலிமைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. 1913 இல் இது முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும் முன்பே, செங்கோட்டை அடுத்தத் தலைமுறைக்காக பேணிபாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக்கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவை டெல்லி மற்றும் லாகூர் வாயிற்கதவுகள் என்ற இரு முக்கிய வாயிற்கதவுகளில் திறக்கப்படுகின்றன. இதில் லாகூர் வாயிற்கதவே முக்கிய நுழைவாயிலாக இருக்கின்றது; இது சட்டா சவுக் எனப்படும் நீண்ட கடைவீதியில் கொண்டுவிடுகிறது, அதன் சுவர் நீளத்திற்கு இங்கு வரிசையாகக் கடைகளைக் கொண்டுள்ளன. சட்டா சவுக், வடக்கு-தெற்குத் தெருக்கள் சந்திக்கும் ஒரு பெரிய திறந்தவெளிக்கு கொண்டுவிடுகிறது, உண்மையில் இந்தச் சந்திப்பானது மேற்கில் கோட்டையின் இராணுவ விழாக்கள் நடக்கும் இடத்தையும், கிழக்கில் உள்ள அரண்மனைகளையும் பிரிக்கின்றது. இந்தத் தெருவின் தெற்கு மூலையில் டெல்லி கேட் அமைந்துள்ளது. வாயிற்கதவிற்கு அப்பால் மற்றொரு பெரிய திறந்தவெளி உள்ளது, இது உண்மையில் திவான்-இ-ஆமிற்கு முற்றமாக பயன்படுத்தப்பட்டது, பேரரசைச்சார்ந்த பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அரங்கானது, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம்("ஜரோகா" ) பேரரசருக்காக மேல்மாடத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அணிவரிசைகள் தங்க முலாம் பூசப்பட்டிருந்தன, மேலும் பொதுமக்களிடமிருந்து சிம்மாசனத்தைப் பிரிக்க தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. திவான்-இ-காஸ் உள்ள காட்சி அரங்கு முற்றிலும் பளிங்குக்கல்லால் ஆனது, இங்குள்ள தூண்கள் பூக்களைப் போன்று செதுக்கப்பட்டும் மற்றும் மதிப்புமிக்க கற்களால் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. ஷாஜகான் இங்கு நாள் முழுக்க குரைக்கும் நாய்களைப் பிடித்து விளையாட ஒரு குதிரையை வைத்திருந்தார். பேரரசுக்குரிய தனியறை இங்குள்ள சிம்மாசனத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்த தனியறையில் வரிசையாக அமர காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, இங்கு அமர்ந்து பார்த்தால் கோட்டையின் கிழக்கு முனையில் உள்ள யமுனா நதி தெரியும்படி அதன் தளம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த காட்சி அரங்கு, நஹர்-ஏ-பெகிஷ்த் அல்லது "பேரின்பம் தரும் ஓடை" எனப்படும் கால்வாயை இணைக்கும் படி இருந்தது, இந்தக் கால்வாயானது காட்சி அரங்குக்கு நடுவே ஓடும் படி அமைக்கப்பட்டிருந்தது. தண்ணீரானது, கோட்டையின் வடகிழக்கு முனையில் உள்ள "ஷாஹ் பர்ஜ்" கோபுரத்தின் வாயிலாக யமுனா நதியில் இருந்து வரவழைக்கப்பட்டது. குரானில் சொல்லப்பட்டது போன்று இந்த அரண்மனையானது சொர்க்கத்தை ஒத்திருக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது; இந்த அரண்மனையைச்சுற்றி, "பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இங்குதான் உள்ளது! இங்குதான் உள்ளது!" என்ற வாசகம் ஈரடிச்செய்யுளாக எழுதப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வடிவம் இஸ்லாமியர்களின் மரபை ஒத்திருந்தது, இங்குள்ள முகலாய கட்டடத்தில் ஒவ்வொரு காட்சி அரங்கத்தின் கட்டடக்கலையின் கூறுகளில் இந்துக்களின் தாக்கங்கள் தெரிகின்றது. இந்த செங்கோட்டையில் உள்ள அரண்மனை வளாகமானது, முகாலய பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரண்மனையின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள "ஜெனானாக்கள்" அல்லது பெண்களுக்கான காட்சி அரங்குகள்: மும்தாஜ் மஹால் (இப்போது அருங்காட்சியகமாக உள்ளது), மற்றொன்று புகழ்பெற்ற மிகவும் பகட்டான ரங் மஹால் ஆகும், இது இதன் தங்கமுலாமினால் அழங்கரிக்கப்பட்ட உட்கூரை மற்றும் "நஹர்-ஏ-பெகிஷ்த்திலிருந்து" நீர் நிரப்பப்பட்ட பளிங்குக்கற்களாலான குளத்திற்கு மிகவும் பிரபலமானது. மோடி மசூதி எனப்படும் பேர்ல் பள்ளிவாசல் ஹம்மாமின் மேற்குப்பகுதியில் உள்ளது. இந்தத் தனியார் பள்ளிவாசல் ஷாஜகானின் வழித்தோன்றலான ஔரங்கசீப்பினால் 1659 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு சிறிய, வெள்ளை பளிங்குக்கற்களால் செதுக்கப்பட்ட மூன்று-வளைவுக்கூரைகளைக் கொண்ட பள்ளிவாசல் ஆகும், கீழிருக்கும் மூன்று வளைவுகள் இதன் முற்றத்தை அலங்கரிக்கின்றன. ஹயாத் பாக்‌ஷ் பாக் அல்லது "வாழ்க்கையில் மிகச்சிறந்த பரிசுத்தோட்டம்" என அழைக்கப்படும் பெரிய முறைப்படியான தோட்டம் ஒன்று வடக்குப்பக்கத்தில் அமைந்துள்ளது, இந்தத் தோட்டம் கால்வாய் நீரை இரு சமக்கூறுகளாக பிரிக்கிறது. கால்வாயின் வடக்கு-தெற்கு பாதைகளின் முடிவில், காட்சி அரங்கு நிலைகள், மூன்றாவதாக கடைசி, பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரால் 1842 ஆம் ஆண்டு, குளத்தின் நடுவில் இரு கால்வாய்களும் சந்திக்கும் இடத்தில் கட்டப்பட்டன. பழைய டெல்லியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாக செங்கோட்டை உள்ளது, இது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துவருகின்றது. இந்த கோட்டையானது, ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15 ஆகஸ்ட் அன்று முதல், இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திரதினப் உரையாற்றுமிடமாகவும் இருந்து வருகிறது. இது பழைய டெல்லியின் மிகப்பெரிய நினைவுச்சின்னமாகவும் விளங்குகிறது. ஒரேசமயத்தில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் டெல்லிக்கோட்டையின் வளாகத்தினுள் வசிக்க முடியும். 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் நடைபெற்ற பிறகு, கோட்டையானது பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டு மேலும் தங்கும் அரண்மனைகள் அழிக்கப்பட்டன. இந்தக் கோட்டை ஆங்கிலேய இந்திய இராணுவத் தலைமையிடமாக மாற்றப்பட்டது. இந்தக் கலகத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் உடனடியாக பகதூர் ஷா ஜாபர் விசாரணை செய்யப்பட்டார். மேலும் நவம்பர் 1945 இல், பிரபலமான இராணுவ நீதிமன்றத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று அதிகாரிகளும் இங்குதான் விசாரிக்கப்பட்டனர். 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு, கோட்டையின் கட்டுப்பாடு இந்திய இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் 2003 இல், கோட்டையை இந்திய சுற்றுலாத்துறையிடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. இப்போது, சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக முகலாய வரலாற்றை விவரிக்கும் விதமாக மாலை நேரங்களில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. டிசம்பர் 2000 இல் இந்தியா-பாகிஸ்தான் அமைதியை காஷ்மீரில் குலைக்கும் விதமாக, லக்சர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு, கோட்டையில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி ஊடகங்களினால் வெளியிடப்பட்டது. சோழவந்தான் சோழவந்தான் ("Cholavandan"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 மக்கள்தொகையும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் "சோழன் உவந்தான்" என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன. விக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு சோழிங்கநல்லூர் சோளிங்கநல்லூர் அல்லது சோழிங்கநல்லூர் (ஆங்கிலம்:Sholinganallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது சென்னை நகரின் சுற்றுப்பகுதிகளில் ஒன்று ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சோளிங்கநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோளிங்கநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.  சோளூர் சோளூர் (ஆங்கிலம்:Sholur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,297 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சோளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிக்கராயபுரம் சிக்கராயபுரம் (ஆங்கிலம்:Sikkarayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5807 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். சிக்கராயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சிக்கராயபுரம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிங்கபெருமாள்கோவில் சிங்கபெருமாள்கோவில் (ஆங்கிலம்:Singaperumalkoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8057 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சிங்கபெருமாள்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்கபெருமாள்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிறுகமணி சிறுகமணி (ஆங்கிலம்:Sirugamani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,031 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிறுகமணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிறுகமணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிறுமுகை சிறுமுகை (ஆங்கிலம்:Sirumugai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,475 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சிறுமுகை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிறுமுகை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சித்தையன்கோட்டை சித்தையன்கோட்டை (ஆங்கிலம்:Sithayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியானது 4 வருவாய் கிராமங்களைக் கொண்ட பேருராட்சியாகும். சித்தையன்கோட்டை பேருராட்சி திண்டுக்கல்- தாண்டிக்குடி வழித்தடத்தில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13,619 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 17.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சித்தூர் ராசபுரம் சித்துராசபுரம் (ஆங்கிலம்:Sithurajapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சித்துராஜபுரம் ஊராட்சியின் ஒரு கிராமம் ஆகும். சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த ராணி வேலு நாச்சியார் இந்நகரை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது. 17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும். 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார். விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார். உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர். சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. ஆனால் முத்துவடுகத்தேவர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சிவகங்கையை மீட்க படையெடுத்து வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். அப்போது பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும்பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார். ஒரு நாள் விருப்பாட்சியில் இருந்த போது குயிலி அவரது தாயைப் பார்க்க சிவகங்கைக்கு செல்லும் நேரத்தில் அங்கு வந்த வெற்றிவேலு வாத்தியார் "குயிலிடம் படிக்கத் தெரியுமா" என்று கேட்டார் ஆனால் அவரிடம் "தெரியாது" என்று ஏற்கனவே சொல்லி இருந்தார் குயிலி. பின் அவரை அழைத்து இந்த கடிதத்தை சிவகங்கையில் சேர்க்கும் படி கட்டளையிட்டார். வெற்றிவேலு வாத்தியார் மீது சந்தேகம் கொண்டு அந்த கடிதத்தை பிரித்துப்பார்த்த குயிலி அதிர்ச்சி அடைந்தார். அதில் வேலுநாச்சியாரின் போர்த் திட்டங்களை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதனால் வீறு கொண்ட குயிலி வெற்றிவேலு வாத்தியார் இருக்கும் குடிசைக்கு சென்று அவரை குத்தி கொலை செய்தாள். 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் சென்ற படை காளையார் கோயிலை கைப்பற்றியது. பின்னர் சிவகங்கையை கைப்பற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை முன்னேறி கொண்டிருந்தது. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, "நாளை விஜயதசமி திருவிழா, அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது" என்று கேட்டார். "அற்புதமான யோசனை" நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் வினவ அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போது தனது மூதட்டி வேடத்தை களைக்கவே அது குயிலி என்று தெரிந்தது. அப்போது குயிலி "தங்களின் அனுமதியின்றி ஆங்கிலேயரை வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார். குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் பெண்கள் படைப்பிரிவு வேலுநாச்சியார் தலைமையில் உள்ளே நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்து அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது. ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் தியாக வீரத்திருமகள் குயிலி. முத்துவடுகத்தேவரின் மறைவுக்கு பின் சில காலம் பதுங்கி இருந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவோடு திண்டுக்கல் மலைக்கோட்டையில் மறைந்திருந்தார். பின்னர் அதை கேள்வி பட்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரையும் அவர் மகள் வெள்ளச்சிநாச்சியாரையும் தன் பாதுகாப்பில் சில காலம் வைத்திருந்தார். வேலுநாச்சியாரோடு மருது சகோதரர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருந்தனர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு 1780 சிவகங்கை மீட்க ஒரு திட்டம் வகுத்தார். அதற்கு பக்கபலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். பின்னர் போர்ப்படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாள் காளிக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் போரில் தோற்கடித்தார். இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். வேலு நாச்சியாளின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து 24-10-1801 அன்று தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளீசுவரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருக்கிறது. 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார். சிவகிரி (ஈரோடு) சிவகிரி (ஆங்கிலம்:Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இது ஈரோடு வட்டத்தில் ஈரோட்டுக்கு அடுத்த மிகப்பெரிய ஊராகும். சிவகிரியானது கோட்டைப்புதூர் ,அண்ணாமலைக் கோட்டை போன்ற மொத்தம் 18 ஊர்களை உள்டக்கியது.இங்கு பெருமளவு கைக்கோளர் இன மக்களும் அதற்கு அடுத்ததாக கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் உள்ளனர் ., இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 165 மீட்டர் (541 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,285 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சிவகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவகிரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். http://www.tamiltutorial.in/ ஆன்லைன் கூடுதல் வருமானம் செய்ய: +919865778900 சிவந்திபுரம் சிவந்திபுரம் (ஆங்கிலம்:Sivanthipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,650 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சிவந்திபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவந்திபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமுஷ்ணம் (ஆங்கிலம்:Srimushnam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீமுஷ்ணம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீமுஷ்ணம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஸ்ரீராமபுரம் ஸ்ரீராமபுரம் (ஆங்கிலம்:Sriramapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மதுரை - ஒட்டன்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகே 15 கிமீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இதன் கிழக்கே திண்டுக்கல்லும், மேற்கே பழனியும், வடக்கே ஒட்டன்சத்திரமும், தெற்கே செம்பட்டியும் எல்லைகளாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,653 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 16.89 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவைகுண்டம் திருவைகுண்டம் (ஆங்கிலம்:Srivaikuntam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள பராங்குசநல்லூரில், ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,159 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,847 ஆகும் 5.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சியில் உள்ள ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை நவதிருப்பதி தலங்களாகும். திருவேங்கமுடையார் மண்டபத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறும். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறுஆகும் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது. திருவில்லிபுத்தூர் திருவில்லிப்புத்தூர் ("Thiruvilliputhur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 146 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது. தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது. மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள். இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் "ஸ்ரீ" என்னும் பெயர் பெற்றது. "ஸ்ரீ" என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் "திரு" என்று வழங்கப்படுகிறது. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,131 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மக்கட்தொகை இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும். பிற தொழில்கள் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், ராஜபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலைகளிலும் வேலைக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்வதுண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் கல் குவாரி, செங்கல் சூளை முதலியவை உண்டு. பிற வழிபாட்டுத் தலங்கள் ஆண்டாள் கோவிலை சுற்றி தேர் செல்லும் வீதிகள் ரத வீதி என்று வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கடைகள், பள்ளிகள் அமைந்து உள்ளன. பேருந்து நிலையம் ஊருக்கு மத்தியில் உள்ளது. காடுகளைத் திருத்தி உருவாக்கப்பட்ட ஊர் என்பதால், ஊரின் உட்புறம் தாண்டி முறையான கட்டமைப்பு இல்லை, மக்கள் குடியேற்றம் நிகழ்வதைப் பொறுத்து ஊரின் அமைப்பு மாறுதல் ஏற்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக நகராட்சித் தலைவரும் ஊரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர். இவ்வூரின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் தாமரைக்கனி மிகவும் பெயர் பெற்றவர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களே. சிறுபான்மையில் தெலுங்கு பேசும் தமிழ் மக்களும் உள்ளனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது தம் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு. தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. இவை தவிர பிற தமிழக உணவுகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. பதநீர் இங்கு கிடைக்கும் இனிமையான இயற்கை குளிர்பானம். பதநீர் அரசின் கூட்டுறவுக் கழகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கான ரயில் இணைப்பு, தெற்கு இரயில்வே விருதுநகர் -செங்கோட்டை பாதையில் உள்ளது. இது மதுரையில் இருந்து 74 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் சாத்தூர் உடன் சாலை மற்றும் ரயில் இணைப்பு பெற்றுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் ரயில் நிலையத்தில் நிற்கும். அருகமைந்த ஊர்கள் செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன. இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, "Ratufa macrora") புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும். இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது. சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன. மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. இங்கு அகலப் பட்டை இணைய இணைப்புச் சேவை உள்ளது. 3ஜி சேவைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மதுரைப் பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. மதுரை, திருநெல்வேலி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இவ்வூரில் அதிகம் கேட்கப்படுபவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். இது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். இது 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர், உற்சவ தெய்வங்கள், ஸ்ரீ ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம் தேருக்குக் கொண்டு வரப்படுவர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளில் பவனி வரும். பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான பொழுதுபோக்கு திரையரங்குகள். புதிய திரைப்படங்கள் ராஜபாளையம் நகரில் உள்ள திரை அரங்குகளில் வெளியிடப்படும். பரங்கிமலை மற்றும் பல்லாவரம் பரங்கிமலை மற்றும் பல்லாவரம் (ஆங்கிலம்:St.Thomas Mount-cum-Pallavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42,459 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பரங்கிமலை மற்றும் பல்லாவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரங்கிமலை மற்றும் பல்லாவரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சுசீந்திரம் சுசீந்திரம் (ஆங்கிலம்:Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற தாணுமாலயன் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான யாத்ரீக மையமாகவும் உள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,953 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சுசீந்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 86% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89%, பெண்களின் கல்வியறிவு 84% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சுசீந்திரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூரில் புகழ்பெற்ற தாணுமாலயன் கோவில் அமைந்துள்ளது. சூளீஸ்வரன்பட்டி சூளீஸ்வரன்பட்டி (ஆங்கிலம்:Suleeswaranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,638 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சுலீஸ்வரம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சுலீஸ்வரம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சூலூர் சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், சூரலூர் அரியபிராட்டி நல்லூர் சுந்தர பாண்டிய நல்லூர் சூரனூர் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சுந்தரபாண்டியம் பேரூராட்சி சுந்தரபாண்டியம் (ஆங்கிலம்:Sundarapandiam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில் - வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியம் பேரூராட்சி 2,562 வீடுகளும், 8,513 மக்கள்தொகையும் கொண்டது. இது 16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சுந்தரபாண்டிபுரம் சுந்தரபாண்டிபுரம்(ஆங்கிலம்:Sundarapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலி - செங்கோட்டைச் சாலையில் உள்ள சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்; சம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. 13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2532 வீடுகளும், 8987 மக்கள்தொகையும் கொண்டது. இங்கு ஊரின் கீழ் பகுதியில் 19ம் நூற்றாமண்டுக்கு முற்பட்ட மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோவிலும் வடமேற்கில் மிக பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி (பெருமாள்) கோவிலும் வட கிழக்கு பகுதியில் குளத்தின் அருகில் ரம்மியமான சூழலில் திரிபுர சுந்தரி முப்பிடாதி(முப்பிடாரி=மூன்று பிடரி, மூன்று முகம்) அம்மாள் கோவிலும் அமைந்துள்ளது. மேலும் கிருத்துவ சர்ச் ஊரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குலதெய்வங்களுக்கென தனிதனி கோவிலும் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே உள்ளது. மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மண்பாண்டம் செய்தல்,தயிர் கடைதல்,மீன்பிடித்தல்,கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர். அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரம்பட்டி சூரம்பட்டி (ஆங்கிலம்:Surampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,737 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூரம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சூரம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சுரண்டை சுரண்டை (ஆங்கிலம்:Surandai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 50 கிமீ தொலைவிலும்; வீரகேரளம்புதூரிலிருந்து 4 கிமீ தொலைவிலும், பாவூர்சத்திரலிருந்து 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும்; ஆலங்குளத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் தென்காசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும் சுரண்டை உள்ளது. 26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது. சூரியம்பாளையம் சூரியம்பாளையம் (ஆங்கிலம்:Suriyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,893 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சூரியம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சூரியம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தே. கல்லுப்பட்டி தே.கல்லுப்பட்டி (ஆங்கிலம்:T.Kallupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் இருக்கும் 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சி ஆகும். இது திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 4.5 சகிமீ பரப்பளவும், 34 தெருக்கள் கொண்ட தே. கல்லுப்பட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை 10,762 ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,762 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,403 ஆண்கள், 5,359 பெண்கள் ஆவார்கள். தே.கல்லுப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட குறைவானது. தே.கல்லுப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 84.48% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.50%, பெண்களின் கல்வியறிவு 80.40% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. தே.கல்லுப்பட்டி மக்கள் தொகையில் 1,015 (9.43%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.50% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.23%, இஸ்லாமியர்கள் 1.08% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். தே.கல்லுப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 10.04%, பழங்குடியினர் 0.06% ஆக உள்ளனர். தே.கல்லுப்பட்டியில் 2,774 வீடுகள் உள்ளன. தாம்பரம் தாம்பரம் (ஆங்கிலம்: "Tambaram"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு நகராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 32 மீட்டர் (104 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 176,807 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாம்பரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வான்படையின் தளமும் இங்கு உள்ளது. தாயிலுப்பட்டி தாயிலுப்பட்டி (ஆங்கிலம்:Tayilupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி அருகில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8771 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தாயிலுப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாயிலுப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தென்காசி தென்காசி ("Tenkasi"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை "சாரல் மழை" என்றும் அழைப்பதுண்டு. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன. தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம். தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, விருதுநகர், திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், வேளாங்கண்ணி, என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டா போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. தாடிக்கொம்பு தாடிக்கொம்பு (ஆங்கிலம்:Thadikombu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,838 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தெலுங்கு பேசும் நாயக்கர் மக்களின் குடியேற்றத்தால் இப்பகுதிக்கு இப்பெயர் பெற்றது . தெலுங்கு மொழியில் தாடி என்றால் பனைமரம் , கொம்பு (GUMPPU) என்றால் கூட்டம் என்று பெயர் படுவதால் இவ்வூருக்கு இப்பெயர் பெற்றது. தாடி (GUMPPU) கும்ப்பு (பனைமரக்கூட்டம்) என்பது மருவி தாடிக்கொம்பு என்றாகியது. மிகவும் சிறப்பு வாய்ந்த நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் இவ்வூருக்கு சிறப்பு செய்கின்றது . தக்கோலம் தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் திருஊறல் என்பது. திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,919 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். தக்கோலம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தக்கோலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தலைஞாயிறு தலைஞாயிறு (ஆங்கிலம்:Thalainayar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். தலைஞாயிறு பேரூராட்சியிலிருந்து வங்காள விரிகுடா 7 கிமீ தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.15 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர். தாழக்குடி தாழக்குடி (Thalakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8531 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தாழக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாழக்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தாமரைக்குளம் தாமரைக்குளம் (ஆங்கிலம்:Thamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் "குளந்தை நகர்" என்று அழைக்கப்படும் இது பெரியகுளம் அருகில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,143 வீடுகளும், 12,372 மக்கள்தொகையும் கொண்டது. 15 வார்டுகள் இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தம்மம்பட்டி தம்மம்பட்டி (ஆங்கிலம்:Thammampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி.கொல்லிமலை மிக அருகிலும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,883 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தம்மம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தம்மம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தாந்தோணி தாந்தோணி (ஆங்கிலம்:Thanthoni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் கரூர் நகராட்சியில் இருக்கும் 8 மண்டலங்களில் ஒரு மண்டலம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,541 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாந்தோணி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாந்தோணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தாந்தோணி நகராட்சி 2011ல் கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தாரமங்கலம் தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தாரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தாரமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோவில் அங்குள்ள சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது. தரங்கம்பாடி தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் 8 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,841 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். தரங்கம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தரங்கம்பாடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. டேனீஷ் காரர்களின் கோட்டை இன்றும் உள்ளது. தெடாவூர் தெடாவூர் ("Thedavur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தெடாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தெடாவூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முற்காலத்தில் சைவம்,வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது. தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது. கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும் உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை. கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் விளக்குகின்றது. கி.பி.1205 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவில் திருப்பணியை அக்கோவில் மகேஸ்வரரும், கண்காணி ஆண்டாரும், தேவகன்மிகளும், கணக்கரும் செய்து முடித்தனர். (இன்றும் இவை அனைத்தையும் நாட்டார், மூப்பர், கவுண்டர், 24-கரைகாரர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு தெடாவூரில் நடக்கும் அனைத்து வகை விழாக்களையும் முன்னின்று நடத்தும் மக்கள் அமைப்பாக விளங்கி வருகிறது). இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில் ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும், புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேனம்பாக்கம் தேனம்பாக்கம் (ஆங்கிலம்:Thenambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9257 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனம்பாக்கம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தெங்கம்புதூர் தெங்கம்புதூர் (Thengampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,669 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தெங்கம்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தெங்கம்புதூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தென்கரை (கோயம்புத்தூர்) தென்கரை (ஆங்கிலம்:), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நொய்யல் ஆற்றங்கரையின் தென் பகுதியில் அமைந்த இயற்கை எழில் கூடிய கிராமம்.நொய்யலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் என்பதே பெயர் காரணம்.சேர நாடு மற்றும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அறியப்பட்ட இக்கிராமம் வளர்ச்சி பெற்றபின் 'சென்னனூர் , புதூர், தண்ணீர்ப்பந்தல் , கரடிமடை, குப்பனூர், அப்பச்சிமார் கோவில், சள்ளிக்குழி , மத்திபாளையம் மற்றும் சித்திரைச்சாவடி' உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாக வளர்ந்துள்ளது.இப்பகுதி சாலை மூலம் கோவை பெரு-நகருடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னனூர் அரசு மேல் நிலைப்பள்ளி இப்பகுதியில் அமைந்துள்ளது, இப்பகுதி மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சார்-தொழில் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். வேளாண் மக்கள் தாங்கள் விளைவித்த வேளாண்-பொருட்களை பூலுவபட்டி காய்-கனி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கும் நடைமுறை உள்ளது. இது தவிர்த்த குப்பனூர் பகுதி மக்கள் சிலர் கூடை-முடைதல் போன்ற பாரம்பரிய தொழிலில் ஈடுபடுகின்றனர்.இப்பகுதி வேளாண் நிலங்கள் "தென்-மேற்கு பருவ மழை"யை மட்டுமே நம்பியே உள்ளது. கோயம்புத்தூர் மாநகரிலிருந்து 17 கிமீ தொலைவில் சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.இதன் தென் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும் வட பகுதியில் நொய்யலாரும் உள்ளது.சித்திரை சாவடி பகுதியில் பழங்கால கதவணை உள்ளது.சிறுவாணி ஆறு இப்பகுதியில் இருந்து 30 KM தொலைவில் அமைந்துள்ளது.தென்பகுதியில் சிறியதும் பெரியதுமான கரடுகள் ( மலைக்குன்றுகள் ) காணப்படுகின்றன. குறிப்பு: சிறிய மலைக்குன்றுகளை கரடு என்று விளிக்கும் நடைமுறை காணப்படுகிறது. தமிழ் மொழியே பெருவாரியாக பயன்பாட்டில் உள்ளது. விஜயநகர பேரருசுவின் காலத்தில் இந்த பகுதியில் குடியேறிய கன்னட மற்றும் தெலுங்கு மக்கள் , அவரவர் மொழியை வீட்டு மொழியாக பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் , இளையதலைமுறையினரால் பயன்படுத்தப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7168 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தென்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தென்கரை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அரசால் அங்கீகரிக்கபடாத உள்ளூர் மக்கள் புழக்கத்திலுள்ள பெயர்கள் : புதூர் மற்றும் சென்னனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு குடியிருப்பு பகுதி தற்போதுவரை உள்ளூர் மக்களால் புலவையார் பள்ளம் என்றே அறியப்படுகிறது. அது போலவே சென்னனுர் மேற்கு பகுதியில் உள்ள வேளாண் மக்கள் வாழும் பகுதி முறையே செங்காடு மற்றும் நாத்துப்பட்டி என்றே அறியப்படுகிறது. அரசு புதிய கிராம எல்லைகளை வரையருக்கும் போது மக்கள் பயன்பாட்டில் உள்ள இப்பெயர்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே கிராம மக்களின் அவா. புலவையார் பள்ளம் உள்ள பகுதி தப்போது வீடுகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறி வருகிறது , இப்பகுதிக்கு வெறுமனே மூன்றாம்தர பெயர்களை கருதாது பழைய தமிழ் பெயர்களை அரசு இயந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். சென்னனூரில் இருந்து மத்திபாளையம் செல்லும் வழியில் முதியோர் நலன் காப்பகம்  உள்ளது. தென்திருப்பேரை தென்திருப்பேரை ("Thenthiruperai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். தென்திருப்பேரை நவதிருப்பதிகளில் ஒன்றாகும். திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள தென்திருப்பேரை பேரூராட்சி, தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், நவகைலாயிலத்தில் ஒன்றானது. தென்திருப்பேரை திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,276 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,934 ஆகும் 8.6 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தேவூர் தேவூர் (ஆங்கிலம்:Thevur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தேவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 39% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தேவூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தியாகதுர்கம் தியாகதுருகம் (ஆங்கிலம்:Thiyagadurgam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,945 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தியாகதுர்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தியாகதுர்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி 1756 ஆம் நூற்றாண்டு பிரான்சு ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது. இங்கு இந்துக்கள்,முஸ்லிம்,கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்துகளுக்கு மலையம்மன் கோவில் .மாரியம்மன் ,முருகன் . சனீஸ்வரன்,விநாயகர்,என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு வருடம் தோறும் சபரிமலை ஐய்யப்பன்க்கு விளக்கு பூஜை மிக வெகு விமரசரியாக நடைபெறும் ,மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் . தூய பேதுரு என்ற கிருஸ்த்தவர் கோவில்உண்டு இந்த ஆலயம் முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டஆலயம் ஆகும் இந்த ஆலயத்தின் உட்புற்றத்தில் சிலுவையில் நிழல் இருப்பக்கமும் விழும்மாறு அமைக்ப்பட்டுள்ளது.ஆலயத்தின் உள்ளே தரைத்தளம் அமைக்கப்பட்ள்ளது   முஸ்லிம் முன்று தர்க்கவும் உண்டு  இங்கு ஐந்து வேளை தொழகை நடக்கிறது  ரம்ஜான் நோம்பு சமயத்தில் போது மசூதில் வழங்கப்படும் கஞ்சி அனைத்து மதத்தினர்                                                                                                                                                                                                                                                                                                                                                                    திங்கள்நகர் திங்கள்நகர் (ஆங்கிலம்:Thingalnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,567 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49.6% ஆண்கள், 50.4% பெண்கள் ஆவார்கள். திங்கள்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திங்கள்நகர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருக்குறுங்குடி திருக்குறுங்குடி (ஆங்கிலம்:Tirukkurungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; அருகமைந்த வள்ளியூர் தொடருந்து நிலையம் 14 கிமீ தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், நாகர்கோயில் 36 கிமீ தொலைவிலும் உள்ளது. 15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3159 வீடுகளும், 9342 மக்கள்தொகையும் கொண்டது. இது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர். திருக்காட்டுப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி (ஆங்கிலம்:Thirukattupalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,567 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருக்காட்டுப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்காட்டுப்பள்ளி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூரில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் எனும் சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள அக்னீஸ்வரர் கோவிலானது மிகவும் பிரசத்தி பெற்றது . இந்த கோவிலில் இருந்து தஞ்சை பெரியகோவிலுக்கு சுரங்க பாதை உள்ளதாக நம்பப்படுகின்றது. சுவாமி : அக்கினீசுவரர், தீயாடியப்பர். அம்பாள் : சௌந்தரநாயகி, அழகம்மை. மூர்த்தி : காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி. தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. தலவிருட்சம் : வன்னி, வில்வம். தலச்சிறப்பு : மேலைத் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் 5 நிலை கோபுரத்துடனும், 3 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இத்தலம் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அக்னி பகவான் இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "அக்னீஸ்வரம்" என்ற பெயர் ஏற்பட்டது. அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம் இன்றும் கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் வடிவம் உருவில் சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி மற்றும் உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், தனி சந்நிதியிலும் மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமான், காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும். பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும். இத்தலத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். "பள்ளி”என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப 24-வது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது. தல வரலாறு : புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர். உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர். வழிபட்டோர் : திருமால், பிரம்மன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி. பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. திருமலையம்பாளையம் திருமலையம்பாளையம் (ஆங்கிலம்:Thirumalayampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,567 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருமலையம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 60%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. திருமலையம்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருமங்கலம் (மதுரை) திருமங்கலம் (ஆங்கிலம்:Tirumangalam) - மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன. மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து,உத்தாண்டன் தெருவில் இப்போது உள்ள கோவிலில் இருக்கும் நடராஜர் சுவாமியை குல தெய்வமாக வழிபடும் விஸ்வகர்ம இனத்து பொற்கொல்லர் பொன்னை உருக்கி திருமாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது. இன்றும் மதுரை நெல்பேட்டை பகுதியில் திருமாங்கல்யம் செய்வதர்க்கென்றே பிரலியமாக இருக்கின்றனர் இந்த பொற்கொல்லர் வாரிசுகள். ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர். அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது. அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டது. வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது. மேலும், 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில்(டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தனர். காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர். 1875ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர். பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது. வைகாசித் திருவிழாவில் கோயில் மற்றும் பொருட்காட்சி நடைபெறும் இடங்களின் அருகில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பால் ஐஸ் கடைகள் முளைக்கும். சிறு பீப்பாய்களில் பசும்பால், சீனி மற்றும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ், திருவிழா நடைபெறும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மக்கள் மத்தியில் பிரசித்தம். பிற நாட்களில் ஓரிரண்டு கடைகளில் கிடைக்கும் மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. முன்னாள் அமைச்சர் கே ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரி திருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனை நான்கு வழிச்சாலை என்ற பெயரில், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நீராதாரங்களான மறவன்குளம், குதிரைச்சாரிக்குளம், செங்குளம், கரிசல்பட்டி போன்ற கண்மாய்களை மூடி சாலை அமைக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டாண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் 600அடிக்கும் கீழ் சென்றுவிட்டது மேலும் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவருகின்றது. மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது. திருமங்கலம் வலைதளம் திருமழிசை திருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திருநகர் திருநகர் (ஆங்கிலம்:Thirunagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 98-வது வார்டு பகுதியாகும். இது முன்னர் திருநகர் பேரூராட்சி பகுதியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, திருநகர், திருப்பரங்குன்றம், ஹார்விப்ப்பட்டி, போன்ற பேரூராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. . இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,252 ஆண்கள், 8,346 பெண்கள் ஆவார்கள். திருநகரில் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகம். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 95.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.73%, பெண்களின் கல்வியறிவு 93.25% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருநகர் மக்கள் தொகையில் 1,398 (8.42%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.06% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 4.52%, இஸ்லாமியர்கள் 3.10% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருநகர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 2.57%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். திருநகரில் 4,418 வீடுகள் உள்ளன. திருநகர் மதுரையில் இருந்து 8.3 கிமீ தொலைவில் உள்ளது.பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6.5 கிமீ தொலைவில் உள்ளது.திருநகரின் பரப்பு சதுர வடிவைக் கொண்டுள்ளது. அந்த சதுர வடிவ பரப்பை எட்டு நிறுத்தங்கள் சேர்கின்றன. மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இருந்து 14.6 கிமீ தொலைவில் உள்ளது. திருநகரில் இரண்டு திரையரங்குகள் உள்ளது.ஒன்று தேவி கலைவாணி அரங்கு மற்றொன்று மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு.தேவி கலைவாணி திரையரங்கு திருநகர் இரண்டாம் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு திருநகருக்கு அடுத்து உள்ள ஹார்விபட்டி என்னும் இடத்தில உள்ளது.இத்திரையரங்கு தமிழகத்திலயே முதன் முதலில் "க்யுப்" {பார்க்க( http://www.qubecinema.com/ )} என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.தற்போது இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் உள்ள பல திரை அரங்குகளில் உள்ளது.முதலில் இந்த அரங்கு "மணி தியேட்டர்" என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.பின் மே 1,2002 ம் வருடத்தில் "தியேட்டர் மணி இம்பாலா" {பார்க்க(http://www.impalacinemas.com/ or http://www.impalamultiplex.com/ ) என்னும் பெயரால் தொடங்கப்பட்டது.பின்னர் இந்த திரையரங்கை மூன்று அரங்குகளாக உயர்த்தும் பணி நிறைவடைந்து 10.7.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தப் பெருமையை மதுரை மாவட்டத்தில் பெரும் முதல் திரையரங்கு இது தான்.இந்த மூன்று திரையரங்குகளில் இரண்டு முற்றிலும் குளிரூட்டபட்டது. திருநகரில் பல வங்கிகளின் தானியங்கி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.திருநகரில் உள்ள வங்கிகளின் தானியங்கி மையங்களின் பெயர்கள் வருமாறு: 1.கனரா வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 2.யூனியன் பேங்க் ஆப் இந்தியா ,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது. 3.இந்தியன் வங்கி,அண்ணா பூங்கா அருகில் உள்ளது. 4.ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 5.ஹச்.டி.எப்.சி. வங்கி, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது . 6.எஸ்.பி.ஐ வங்கி,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது . திருநகரில் 7 வங்கிகளின் கிளைகளும், பணம் எடுக்கும் இயந்திரங்களும் உள்ளது. திருநகரில் உள்ள வங்கிகளின் பெயர்கள் மற்றும் ஏடிஎம்கள் பின்வருமாறு: திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,814 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநாகேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநாகேஸ்வரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருநீர்மலை திருநீர்மலை (ஆங்கிலம்:Thiruneermalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும். இருக்கும் ஒரு ஆகும். 108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,019 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருநீர்மலை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநீர்மலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருநீர்மலை, ஒரு திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும். திருநின்றவூர் திருநின்றவூர் (ஆங்கிலம்:Thirunindravur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரில் வடமேற்கில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது சென்னையில் இருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது . திருநின்றவூர் சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,395 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருநின்றவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநின்றவூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இதைத் தவிர, இங்கு திரு இரித்யாலீசுவரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் பல்லவர் காலத்தில் கட்டபட்டது. திருநின்றவூர் ஏரி மிகவும் பெரியதாகும். திரு ஏரி காத்த ராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. முற்காலத்தில் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அருகில் திருமழிசை ஜெகனாநாத சுவாமி திருத்தலம் அமைந்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளின் விவரம்: சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் வரை இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார தொடருந்துகளும் திருநின்றவூர் தொடருந்து நிலையத்தில் நிற்கும். திருநின்றவூர் பேரூராட்சியில் இயங்கிவரும் இரண்டு திரைஅரங்குகள் திற்பரப்பு திற்பரப்பு (ஆங்கிலம்:Thiruparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் இருக்கும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திற்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திற்பரப்பு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருப்போரூர் திருப்போரூர் (ஆங்கிலம்:Thiruporur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8302 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்போரூர் மக்களின் சராசரிக் கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்போரூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருப்பனந்தாள் திருப்பனந்தாள் (ஆங்கிலம்:Thiruppanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடம் உள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,169 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,429 பேர் ஆண்கள், 5,740 பேர் பெண்கள் ஆவார்கள். திருப்பனந்தாள் மக்களின் சராசரி கல்வியறிவு 84.10% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.51%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே.திருப்பனந்தாள் மக்கள் தொகையில் 10.18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கும்பககோணத்திலிருந்து அணைக்கரை வழியாக சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அணைக்கரையிலிருந்து 7கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைடந்துள்ளது. திருப்புவனம் திருப்புவனம் (ஆங்கிலம்:Thirupuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,240 வீடுகளும், 24,554 மக்கள்தொகையும் கொண்டது. இது 20 சகிமீ 18 பரப்பும், வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருப்புவனம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம். "எலும்பு பூவாக மாறிய தலம்", "காசிக்கு வீசம் கூட" எனப் புகழ் பெற்ற தலம். மதுரை- இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 20-வது கிலோ மீட்டரில், வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் திருத்தங்கல் திருத்தங்கல் (ஆங்கிலம் : ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 86 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,362 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 27,676 ஆண்கள், 27,686 பெண்கள் ஆவார்கள். திருத்தங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு80.50% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.94%, பெண்களின் கல்வியறிவு 73.10% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. திருத்தங்கல் மக்கள் தொகையில் 5,918 (10.69%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.74% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 6.14%, இஸ்லாமியர்கள்1.03%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருத்தங்கல் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 20.89%, பழங்குடியினர் 0.19% ஆக உள்ளனர். திருத்தங்கல் சிவகாசியுடன் முன்பு இணைந்து இருந்தது. சிவகாசியைப் போலவே திருத்தங்கலிலும் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கல் குவாரிகளும் உண்டு. சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் புகைவண்டி நிலையத்தில் நிற்கும். ஆனைக்குட்டம் , எரிச்சநத்தம், சுக்கிரவார்பட்டி, சில்லையநாயக்கன்பட்டி, செங்கமலபட்டி, வெள்ளியபுரம்,நாரணபுரம், வடமல்லாபுரம், எம் புதுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி என சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக திருத்தங்கல் விளங்குகிறது. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் ஒருங்கே அமைந்துள்ளது. மலை மேல் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள காளியம்மன் கோவிலிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். பங்குனிப் பொங்கல் மற்றும் தை பூசம் இவ்வூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வருடாந்திர பண்டிகைகள். ஆரோக்யா பால் நிறுவனர் ஆர். ஜி. சந்திரமோகன் இவ்வூரைச் சேர்ந்தவர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்:Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,754 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருத்துறைப்பூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்துறைப்பூண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருத்துறைப்பூண்டியில் 32அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஸ்ரீ பவ ஓளஷதீசுவரர் ஆலயம் உள்ளது. இது மேஷ ராசிக்குரிய பரிகார ஆலயமாகும். 29கி.மீ தொலைவில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி கிறிஸ்துவ பேராலயம் உள்ளது. திருவள்ளூர் திருவள்ளூர் ("Thiruvallur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவட்டாறு திருவட்டாறு (ஆங்கிலம்:Thiruvattaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருவட்டாறு மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவட்டாறு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவேங்கடம் திருவேங்கடம் (ஆங்கிலம்:Thiruvenkatam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பெரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசி]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம்]] ஆகும். 15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது. திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. திருவெண்ணெய்நல்லூர் திருவெண்ணெய்நல்லூர் (ஆங்கிலம்:Thiruvennainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெண்ணெய்நல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெண்ணெய்நல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவெறும்பூர் திருவெறும்பூர் (ஆங்கிலம்:Thiruverumbur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவெறும்பூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் உள்ளன. திருவிடைமருதூர் திருவிடைமருதூர் (ஆங்கிலம்:Thiruvidaimarudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு. வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். திருவிதாங்கோடு திருவிதாங்கோடு (ஆங்கிலம்:Thiruvithankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நாகர்கோவிலிலிருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 14 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தக்கலையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் திருவிதாங்கோடு அமைந்துள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக திருவிதாங்கோடு இருந்தது எனவும் திரு-விதான்-கோடு என்பது மருவியே திருவாங்கூர் ஆனது என்றும் திருவாங்கூர் மேனுவலில் கூறப்பட்டுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,689 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருவிதாங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவிதாங்கோடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூரில் இரண்டு முத்தாரம்மன் ஆலயங்களும், ஒரு சிவன் கோவிலும், மூன்று வினாயகர் கோவில்களும் காணப்படுகின்றன. பரலோக ஏசுநாதர் தேவாலயமும், நான்கு மசூதிகளும் உள்ளன. இங்குள்ள படிக்கிணறு பிரசித்தி பெற்றது. ஓர் அரசு நடுநிலைப் பள்ளியும், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. இங்கு ஒரு முன்மாதிரித் தொழிற்சாலை உள்ளது. திசையன்விளை திசையன்விளை (ஆங்கிலம்:Thisayanvilai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திசையன்விளை பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 62 கிமீ தொலைவில் உள்ளது. நாங்குநேரி தொடருந்து நிலையம் இதற்கு 32 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த ஊர்கள் உடன்குடி 25 கிமீ; சாத்தான்குளம் 18 கிமீ மற்றும் கூடங்குளம் ஆகும். 10.84 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5811 வீடுகளும், 23,702 மக்கள்தொகையும் கொண்டது. திட்டச்சேரி திட்டச்சேரி (ஆங்கிலம்:Thittacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8484 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர் (ஆங்கிலம்:Thondamuthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சரியான வரலாற்று ஆவணங்கள் இல்லாத காரணத்தால் , ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே பெயர்க்காரணம் தேடவேண்டி உள்ளது. தொண்டி அல்லது சக்கிரி என்ற பழைய வட்டார வழக்கிற்கு தடித்த தோல் ( thick skin ) என்று ஒரு பொருள். இந்தப்பகுதியில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களும் அதன் தொண்டிகளையும் குறிக்கும் விதமாக இப்பெயர் பெற்றிருக்கலாம். தொண்டி ( புதையல் / பொதியல் ) என்பதை  தோண்டி என்று பொருள்படுத்தி எடுத்தால், முத்துப்புதையல்  ( gems - மணி ) நிரம்ப கிடைக்கும் இடம் என்னும் பொருள் வரும். குறிப்பு: இந்தப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளோ அதன் பிறகு குடியேறிய வேளாண்குடிகளுக்கோ ப்ராமணர்களைப்போல எழுத்துப்பாடம் பழக்கமில்லாத காரணத்தால் இப்பகுதியை குறித்து  இயல்பாகவே வரலாற்று ஆவணக்கள் இல்லை. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8386 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தொண்டாமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொண்டாமுத்தூர் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தொண்டி (பேரூராட்சி) தொண்டி (ஆங்கிலம்:Thondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இது திருவாடானை வட்டத்தில் உள்ளது. இது 12 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இது இராமநாதபுரத்திலிருந்து 44 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 58 கிமீ தொலைவிலும், தேவக்கோட்டை ரஸ்தா தொடருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,859 வீடுகளும், 18,465 மக்கள்தொகையும் கொண்டது. இது 10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 132 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டான். இதை கேள்விபட்ட இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான் . அவன் இறந்த இடம் இன்று சுந்தர பாண்டியன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இறுதியில் பாண்டியன் சோழர்களின் உதவியை நாடுகிறான். சோழன் தன ஒரு படையை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான். பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறான் இலங்கை மீண்டும் தன மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும் என்றான். சோழ மன்னனும் தன படையை காவலுக்கு வைத்து நாடு திரும்பினான் சோழ மன்னன். அந்த படையினர் தான் தொண்டியின் பூர்விக மக்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கபடுகிறார்கள். அம்மூவனார் என்னும் புலவர் இந்த ஊரின் அழகைத் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் அழகோடு ஒப்பிடுகிறார். இந்த ஊரிலுள்ள மீனவர் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில் படகுகளைப் புதுப்பித்துக்கொள்வார்களாம். கடலில் பிடித்துக்கொண்டுவந்த மீன்களை மணல் மேட்டில் கொட்டி ஊருக்குப் பகிர்ந்து கொடுப்பார்களாம். (அகநானூறு 10) துறைப்பாடி,வேலூர் துறைப்பாடி (ஆங்கிலம்:Thorapadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,292 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். துறைப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துறைப்பாடி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது . இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும், மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும். மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும். தொட்டிபாளையம் தொட்டிபாளையம் (ஆங்கிலம்:Thottipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,969 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தொட்டிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டிபாளையம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தொட்டியம் தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி . இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,757 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தொட்டியம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டியம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் . இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன. துடியலூர் துடியலூர் ("Thudiyalur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஓர் பகுதியாகும். தமிழர் ஆட்சிக் காலத்தில், இவ்வூர் ஆறைநாட்டின் பகுதியாக விளங்கியது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துடியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துடியலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். துடியலூரில் தொடருந்து நிலையம் உள்ளது. அதில் மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் தொடருந்து நின்று செல்கிறது. துறையூர் துறையூர் (ஆங்கிலம்:Thuraiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர். துறையூரிலிரிந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் "அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்". இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் "நாடகமாடிட நந்திகேச்சுரம்" என்றும் "நல்ல துறையூர்" என்றும் பாடல் பெற்ற தலம். துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள். துதிப்பட்டு துதிப்பட்டு (ஆங்கிலம்:Thuthipattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7068 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். துதிப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துதிப்பட்டு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். துவாக்குடி துவாக்குடி (ஆங்கிலம்:Thuvakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,460 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துவாக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துவாக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது. திருவெறும்பூர் திண்டிவனம் திண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர்(பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதை தணிக்கும் பொருட்டு திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு இது குறித்து திருவாய்மொழி அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர். திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் செஞ்சி அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல சாலை உள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58 மீட்டர் (190 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,826 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டிவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திண்டிவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருச்செங்கோடு திருச்செங்கோடு (ஆங்கிலம்:Tiruchengode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும். இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது. பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது . இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. இது கொங்கு மண்டல சதகம் பாடல் 28-ல் செங்கோடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய புலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் இந்த ஊரில் பிறந்தவர் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது. இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்: செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது. இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம். திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். இங்கு விசைத்தறிக் கூடங்கள், சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள், லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80,177 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருச்செங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. திருச்செங்கோடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் பொன். சரஸ்வதி வெற்றி பெற்று நகரவை தலைமைப்பதவியை கைப்பற்றினார். திருக்கழுகுன்றம் திருக்கழுகுன்றம் (ஆங்கிலம்:Tirukalukundram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,677 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருக்கழுகுன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்கழுகுன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) (ஆங்கிலம்:Tirupattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திரிசூலம் (ஊர்) திரிசூலம் (ஆங்கிலம்:Tirusulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5997 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். திரிசூலம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திரிசூலம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.  திருத்தணி திருத்தணி (ஆங்கிலம்:"Tiruttani"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் நகராட்சி ஆகும். இங்குள்ள முருகன் கோயில், ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,502 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருத்தணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்தணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவேற்காடு திருவேற்காடு (ஆங்கிலம்:Tiruverkadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது வடமேற்கு சென்னையின் ஒரு முக்கியமான புறநகர் மற்றும் வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,734 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவேற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவேற்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தேவாரப்பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகியவை திருவேற்காட்டில் அமைந்துள்ளன. திருவொற்றியூர் திருவொற்றியூர் (ஆங்கிலம்:Tiruvottiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற பழைமையான திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இங்கமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 211,768 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருவொற்றியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவொற்றியூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவொற்றியூரில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து முனையம் உள்ளது. மா.போ.கா பேருந்துகள் திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. இது தவிர மாநில விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சில, இங்கிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கும்முடிபூண்டி ரயில்தடம் திருவொற்றியூர் வழியாக செல்கிறது. திருவொற்றியூர் தொடருந்து நிலையம் மற்றும் விம்கோ தொடருந்து நிலையம் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவொற்றியூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள இப்பகுதியின் அருகில் மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் அனல்மின் நிலையம், கே.சி.பி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் மற்ற சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகளும் திருவொற்றியூரய் சுற்றி அமைந்துள்ளன. இங்கு மனைகளின் குறைவான விலையில் கிடைத்ததால் மக்கள் இங்கு மக்கள் தொகை பெருக தொடங்கியது. சென்னையின் கூவம் ஆறு திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் பாய்கிறது. திட்டக்குடி திட்டக்குடி (ஆங்கிலம்:Tittakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,734 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திட்டக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திட்டக்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புகலூர் (காகித ஆலை) TNPL புகலூர் (காகித ஆலை) (ஆங்கிலம்:TNPL Pugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் பெயரை இக்காலத்தில் புகழூர் என எழுதிவருகின்றனர். இங்கு தமிழ்நாடு அரசின் காகித ஆலை உள்ளது. இங்குள்ள புன்செய்ப் புகழூரை அடுத்துச் சர்க்கரை ஆலை ஒன்றும் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். TNPL புகலூர் (காகித ஆலை) மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. TNPL புகலூர் (காகித ஆலை) மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உடன்குடி உடன்குடி (ஆங்கிலம்:Udangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பனைத்தொழில் சிறந்து விளங்கும் உடன்குடி, கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது. உடன்குடிக்கு அருகில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்ளது. உடன்குடிக்கு அருகில் அமைந்த ஊர்கள்;கிழக்கே குலசேகரபட்டினம் 5 கிமீ, மேற்கே சாத்தான்குளம் 21 கிமீ, வடக்கே திருச்செந்தூர் 15 கிமீ, தெற்கே உவரி 24 கிமீ., 10.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,673 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 19,738 ஆகும் உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். உடையார்பாளையம் உடையார்பாளையம் (ஆங்கிலம்:Udayarpalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சிறீ பயற்ணீநாத சுவாமி ஆலயம் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள உடையார்பாளையம் அரண்மனை மிகவும் தொன்மை வாய்ந்தது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,325 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவர். உடையார்பாளையம் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. உடையார்பாளையம் நகர மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இதனைச் சிறப்புடன் ஆண்டிருக்கிறார்கள். இது 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடம் மட்டுமல்லாமல் பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு 'உடையார்பாளையம்' என்னும் பெயருண்டானது. உடையார்பாளையம் நகரத்தில் பலகாலம் முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோயில்கள் அமைந்திருப்பதால் வரலாற்று மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இவ்வூருக்குப் திருப்பத்ராரணியம், திருமுற்கபுரி, திருப்பயறணீச்சுரம் முதலிய பல பெயர்கள் உண்டு. முன்பு, இவ்வூர் வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப்பட்டதால் அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்திவிட்டுக் கொண்டு செல்ல, விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகியிருக்கவே, இத்தல சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பதுணர்ந்து இங்கு வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிறெல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான். இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன. இங்கே உள்ள “சிறீ பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப்பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலா இடமாகும். இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் உடையார்பாளையம். பழைமை வாய்ந்த இந்நகரைத் தலைமையகமாகக் கொண்டு பல ஊர்களை பாளையத்துக்காரர்கள் ஆண்டார்கள். இன்றளவிலும் இந்நகரில் அரண்மனை சிதலடைந்த வடிவில் இருக்கிறது. இன்றளவும் அங்கே அரச வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்காலத்திலிருந்து நகரத்தின் உள்கட்டமைப்பு செம்மையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சிவன் கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சிதிலமடைந்த பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. "தமிழ்த் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர். பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா? விளக்கம்: உடையார்பாளையம் என்பது பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு அரசுப் பகுதியில் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி. சோடச(16)விநாயகர் என்று சொல்லகூடிய 16 விநாயகர் உள்ளடக்கிய பெரிய சிவன் கோவில் ஆடி 18 கொண்டாட்டம் - ஆடி மாதம் அருகில் உள்ள ஊர்களில் , கிராமங்களில் இருந்து இங்கு வந்து புதுமண தம்பதிகள் கொண்டாடுவது வழக்கம் இவ்வூருக்கு அருகிலமைந்துள்ள திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அரியலூர் மற்றும் கும்பகோணம், விருத்தாச்சலம் ஆகியவை உடையார்பாளையத்திற்கு அருகில் உள்ள மூன்று முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு, தெற்குப்பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகள் உள்ளன. உடையார்பாளையம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக உடையார்பாளையம் விளங்குகிறது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திரு பயற்ணீசுவரர் ஆலயம் அமைந்துள்ள காரணத்தினால் இது ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய தாலுக்கா'வாக இன்றளவும் இருப்பது உடையார்பாளையம் தாலுக்கா தான். இன்று பல தாலுக்கா'களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய தாலுக்கா'வாகவே கருதப்படுகிறது. பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் மாபெரும் வணிக நகராகவே இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூரை சேர்ந்த இராமசாமி முதலியார் இம்மாவட்டத்திலேயே முதன் முதலில் மீனாட்சி ராமசாமி என்ற பெயரில் கல்லூரிகளை உருவாக்கினார். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களே. சிறுபான்மையினராக தெலுங்கு, சமஸ்கிருதம், உருது பேசும் மக்களும் உள்ளனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது அவரவர் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு. தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இங்கு முந்திரி, கடலை, கரும்பு, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. இங்கு முந்திரி, கடலை முக்கிய பயிர்கள் ஆகும்.பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கால்நடைகள் வளர்ப்பு பெரிதும் உதவுகிறது. இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இந்நகரப் பகுதியில் முந்திரி,கடலை ஆகியன பணப் பயிர்களாக கருதப்படுகிறது உடையார்பாளையம் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். 12.4 சதுரகி.மீ பரப்பளவு கொண்ட இந்நகரம் 18 பெரிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சித்தலைவர் மற்றும் செயல்அலுவலரால் நிர்வகிக்கபடுகிறது. பல்வேறு தெருக்களை உடைய இந்நகரத்தில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது. உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக பேரூராட்சித் தலைவரும் நகரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர். உடையார்பாளையம் நகரில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. திருச்சி பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. திருச்சி, காரைக்கால்,புதுச்சேரி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இந்நகரில் அதிகம் கேட்கப்படுபவை. முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினதந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்),மற்றும் தமிழ் முரசு, மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும். உள்ளூர் உள்ளூர் (ஆங்கிலம்:Ullur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7779 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உள்ளூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உளுந்தூர்ப்பேட்டை உளுந்தூர்பேட்டை (ஆங்கிலம்:Ulundurpettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,251 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உளுந்தூர்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உளுந்தூர்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உளுந்தூர்பேட்டையில், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அன்னை சாரதா தேவியின் பெயரில் அமைந்த சாரதா மடத்தின் கிளையான ஸ்ரீசாரதா ஆசிரமம் அமைந்துள்ளது. கல்விப்பணியோடு, ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்லம், முதியோர் இல்லம், மருத்துவப்பணி, பாரம்பரிய நெல் பாதுகாப்பு போன்ற பல சேவைகளிலும் இவ்வாசிரமத்தின் பங்களிப்புகள் உள்ளன. ஊஞ்சலூர் ஊஞ்சலூர் (ஆங்கிலம்:Unjalaur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.ஈரோட்டிலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஈரோட்டுக்கும் கரூருக்கும் நடுவில் உள்ளது. தொடக்கப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி,உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் "900" குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2628 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஊஞ்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊஞ்சலூர் மக்கள் தொகையில் 6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உண்ணாமலைக் கடை உண்ணாமலைக் கடை (ஆங்கிலம்:Unnamalaikadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,938 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். உண்ணாமுலைக் கடை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உண்ணாமுலைக் கடை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உப்பிடமங்கலம் உப்பிடிமங்கலம் (ஆங்கிலம்:Uppidamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உப்பிடிமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உப்பிடிமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உப்பிலியாபுரம் உப்பிலியாபுரம் (ஆங்கிலம்:Uppiliapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6697 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உப்பிலியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உப்பிலியாபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஊரப்பாக்கம் ஊரப்பாக்கம் (ஆங்கிலம்:Urapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஊரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊரப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். உசிலம்பட்டி உசிலம்பட்டி (ஆங்கிலம்:Usilampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். உசிலம்பட்டி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 201 மீட்டர் (659 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டியில் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் உள்ளனர். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 86.84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.83%, பெண்களின் கல்வியறிவு 81.89% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 3,427 (9.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன. உத்தமபாளையம் உத்தமபாளையம் (ஆங்கிலம்:Uthamapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கிமீ தொலைவில் தேனி - கம்பம் சாலையில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,508 வீடுகளும், 29,050 மக்கள்தொகையும் கொண்டது. இது 9 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்த ஊரில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் காளாத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஊத்தங்கரை ஊத்தங்கரை (ஆங்கிலம்:Uthangarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.ஊத்தங்கரை ஒரு கல்வி நகரம் என அழைக்கப்படுகின்றது.இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்துகின்றனர். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஊத்தங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊத்தங்கரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். = வார்டுஎண் 1 = ஊத்தங்கரை வார்டு எண் 1 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 7 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1277 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையான 1277 -ல் ஆண்கள் 673 (53%) ,பெண்கள் 604 (47%) ஆவார்கள். 92 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 56 சதவீதமும் , பெண்குழந்தைகள் 44 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 321 குடியிருப்புகள் உள்ளன. = வார்டுஎண் 2 = ஊத்தங்கரை வார்டு எண் 2 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 6 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1287 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையான 1287 -ல் ஆண்கள் 608 (47%) ,பெண்கள் 679 (53%) ஆவார்கள். 81% சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள்.19% சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 54 சதவீதமும் , பெண்குழந்தைகள் 46 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 323 குடியிருப்புகள் உள்ளன. = வார்டுஎண் 3 = ஊத்தங்கரை வார்டு எண் 3 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் கடைசியிடமான 15-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 483 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையான 483 -ல் ஆண்கள் 237 (49%) ,பெண்கள் 246 (51%) ஆவார்கள். 99 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 1 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 38 சதவீதமும் , பெண்குழந்தைகள் 62 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 127 குடியிருப்புகள் உள்ளன. = வார்டுஎண் 4 = ஊத்தங்கரை வார்டு எண் 4 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1473 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையான 1473 -ல் ஆண்கள் 749 (51%) ,பெண்கள் 724 (49%) ஆவார்கள். 93 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 7 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 57 சதவீதமும் , பெண்குழந்தைகள் 43 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 381 குடியிருப்புகள் உள்ளன. உதயேந்திரம் உதயேந்திரம் (ஆங்கிலம்:Uthayendram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உதயேந்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உதயேந்திரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒரு காலத்தில் உதயேந்திர மக்கள் பாலாற்றின் வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் னூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் னீரும் னிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருன்து இன்னும் மீளமுடியவில்லை. இன்த தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு னிலமும் னீரும் கெட்டுப்போயுள்ளது. உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். பிறகு ஆதி திராவிடரும், ஒரளவு- குடி புகுன்த தெலுகு பேசும் ஒரு சிலரும், ஒரு சில இசுலாமியரும் வசிக்கின்றனர். தோல் பதனிடும் தொழில் தவிர ஷூ தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சு (கார்பென்ட்ரி) தொழில் செய்வோர் ஏராளம். கிறித்தவர் கொடுக்கும் கல்வியால் பலர் பலனடைன்து வருகின்றனர். 1980 - 2010 வரை எறக்குறைய 100 ஆசிரியர்கள், ஆசிரியைகள் உருவாகியிருக்கின்றனர். (இதில் சிலர் வேலை செய்தாலும் ஒரு சிலர் வேலை கிடைக்குமா என்று காத்துவருகின்றனர்). இதுதவிர இங்கு ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் வாழ்கின்றனர். அதேபோல் மக்கள் இங்குள்ள: பாலாறும், ஏரியும் எப்போது சீர் செய்யப்படும் என்று காத்து வருகின்றனர். உத்திரமேரூர் தமிழ்நாட்டில் உள்ளகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது.இத்தொகுதியில் உத்திரமேரூர் வட்டமும்,காஞ்சிபுரம் வட்டத்தின் ஒரு சில பகுதிகளும் அடங்கியுள்ளன.இதுகாஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது.தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு. ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை (ஆங்கிலம்:Uthukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,639 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஊத்துக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊத்துக்கோட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஊத்துக்குளி ஊத்துக்குளி (ஆங்கிலம்:Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முதல் புதிதாக செயல்படத் துவங்கிய திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் ஊத்துக்குளியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊத்துக்குளி வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7929 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஊத்துக்குளி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊத்துக்குளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெண்ணெய் உற்பத்திக்கு ஊத்துக்குளி மிகவும் புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊத்துக்குளி வெண்ணெயில் தரம், சுவை ஆகியவை அதிகம். அதற்கு இப்பகுதியில் உள்ள தட்ப வெப்ப நிலை முதற்காரணம். பெரும்பாலான மாதங்கள் வறண்ட வானிலை கொண்ட பகுதி என்பதால் பசும் புல்வெளி கொண்ட மேய்ச்சல் நிலங்கள் குறைவு. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கொழுப்பு நிறைந்த தீவனங்களான பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு போன்றவற்றை கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இந்த பசு, எருமைகள் கறக்கும் பாலில் கொழுப்புச் சத்து, மற்ற சத்துகளும் அதிகமாக இருப்பதால், இதில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெயில் சத்து அதிகம் உள்ளது. அதே நேரம் சுவையும் அதிகம் என்பதால் இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. மேலும், ஊத்துக்குளி வெண்ணெயில் இருந்து உருக்கி எடுக்கப்படும் நெய்யின் அளவும் அதிகம். ஒரு கிலோ வெண்ணெயில் 85 பாயிண்ட் நெய் அதாவது 850 கிராம் நெய் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் வெண்ணெயில் 75 பாயிண்ட் வரையே நெய் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். ஊத்துக்குளியில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு வழியாக நாகர்கோவில் செல்லும் பயணியர் தொடர்வண்டி காலையிலும், ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணியர் தொடர்வண்டி மாலையிலும் இவ்வூரில் நிற்கும். விரைவு வண்டிகள் நிற்காது. திருப்பூரில் இருந்தும், ஈரோட்டில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. கைத்தமலை அல்லது கதித்தமலை, இவ்வூரில் இருந்து வடகிழக்காக ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறு குன்று ஆகும். இது முருகன் ஆலயம். தைப் பூச விழாவின் போது இம் மலையில் தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும். ஊத்துக்குளியின் மையப்பகுதியில் கைலாச நாதர் கோவில் (ஈஸ்வரன் கோவில்) ஒன்றும் அமையப்பெற்று உள்ளது.தைப் பூச விழாவின் போது இங்கு தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.மகா தரிசனமும் நடைபெறும் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படும். கொடுமணல் தொல்லியல் களம் புதூர் (விளாத்திகுளம்) வி. புதூர் (ஆங்கிலம்:V. Pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாவட்டத் தலைமையிடமான தூத்துக்குடியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 40 கிமீ தொலைவில் உள்ள கோவில்பட்டி ஆகும். புதூருக்கு கிழக்கே கமுதி 40 கிமீ; மேற்கே சாத்தூர் 30 கிமீ; வடக்கே அருப்புக்கோட்டை 21 கிமீ; தெற்கே விளாத்திகுளம் 20 கிமீ. 23.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2369 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 8891 ஆகும் வடகரை கீழ்படுகை வடகரை (ஆங்கிலம்:Vadakarai ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,317 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடகரை மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடகரை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வடக்கணேந்தல் வடக்கணேந்தல் (ஆங்கிலம்:Vadakkanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,857 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடக்கணேந்தல் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடக்கணேந்தல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வடலூர் வடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். வடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. வடலூர் சென்னை-கும்பகோணம் சாலையும், கடலூர்-சேலம் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது. வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது. ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. வடமதுரை வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டக்கல்லிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வடவள்ளி வடவள்ளி (ஆங்கிலம்:Vadavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். "வடவழி" என்ற சொல்லே வடவள்ளி என்றானது இவ்வூர் மருதமலைக்கு செல்லும் வழியில் வடக்கே கணுவாய் செல்லும் வழி பிரியும் இடத்தில் அமைந்த காரணத்தால் அல்லது கிழக்கே இடையர்பாளையத்தில் இருந்து மருதமலைக்கு வரும் வழி வடக்கிலிருந்து வந்து இணையும் இடத்தில் உள்ளதால் "வடவழி" என பெயர்பெற்றது. வடவள்ளியில் மருதமலையில் இருந்து வரும் "ஊத்தாம் பள்ளம்" என்ற ஆறு ஓடுகின்றது.இவ்வூரே மருதமலைக்கு செல்லும் வழியில் கடைசி பசுமையான ஊராக இருந்தது,வடவள்ளி கரும்பு, வாழை, நெல்,தென்னை என விவசாயம் செழித்த பசுமையான ஊராக ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்தது.வடவள்ளிக்கு மேற்கே மருதமலை வரை வானம் பார்த்த பூமியாகவே இருந்தது இங்கு அரசாணிகாய்,தட்டை பயிறு,சோளம் முதலியன விளைந்தன.இவ்வூரில் முன்னாளில் முதலியாரும் கவுண்டருமே அதிகமாக இருந்தனர்,மேலும் பாப்பநாயக்கன் புதூர் ஒட்டிய பகுதியில் நாயக்கரும்,வடவள்ளி ஊருக்கு கிழக்கில் கோனாரும் அதிகளவில் வசித்து வந்தனர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,700 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடவள்ளி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் மருதமலை முருகன் கோவில் (http://www.murugan.org/temples/marudhamalai.htm) அமைந்துள்ளது. வடவள்ளியிலிருந்து 3 கி.மீ தொலைவில் மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் (http://www.b-u.ac.in) அமைந்துள்ளது. வாடிப்பட்டி வாடிப்பட்டி (ஆங்கிலம்:Vadipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலை எண் 7-இல், மதுரையிலிருந்து 33 கிமீ தொலைவில் உள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.34% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.45%, இஸ்லாமியர்கள் 0.58% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். வாடிப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 21.78%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். வாடிப்பட்டியில் 6,788 வீடுகள் உள்ளன. வடுகப்பட்டி (ஈரோடு) வடுகப்பட்டி (ஆங்கிலம்:Vadugapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,919 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடுகப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. வடுகப்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வைத்தீசுவரன்கோவில் வைத்தீசுவரன்கோவில் (வைதீசுவரன்கோயில், ஆங்கிலம்: "Vaitheeswarankoil"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,972 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 84.88 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர். வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் வலங்கைமான் வலங்கைமான் (ஆங்கிலம்:Valangaiman), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,285 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வலங்கைமான் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வலங்கைமான் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை 'சீதளா' என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். வளசரவாக்கம் வளசரவாக்கம் (ஆங்கிலம்:Valasaravakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் முதன்மையான குடியிருப்பு மற்றும் நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். வளசரவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 89% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 87% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வளசரவாக்கம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வளவனூர் வளவனூர் (ஆங்கிலம்:Valavanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,037 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வளவனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வளவனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வல்லம் வல்லம் (ஆங்கிலம்:Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,495 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வல்லம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வல்லம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன. வால்பாறை வால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 94,962 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வால்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வால்பாறை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வாள்வைத்தான்கோட்டம் வாள்வைத்தான்கோட்டம் (Valvaithankoshtam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாள்வைத்தான்கோட்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாள்வைத்தான்கோட்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பரசுராமரால் உருவானது கேரளம் என புராணங்கள் கூறுகின்றன.பரசுராமர் தனது தந்தை சமதக்கினி முனிவரின் ஆணைக்கிணங்க தமது தாயாரின் தலையைக் கொய்தார்.அந்த பாவம் தீர இமயத்தில் தவமியற்ற அறிவுறுத்தப்பட்டடார்.அந்நிலையில் அவர் தனது வாளை இந்த இடத்தில் வைத்துவிட்டுச் சென்றதால் இவ்விடம் வாள்வைத்தக் கோட்டம் எனப்படுகிறது.இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்துள்ள தேவியின் கையிலுள்ள வாள் பரசுராமருடையது என நம்பப்படுகிறது. இந்திய விவரச்சுவடி- கன்னியாகுமரி மாவட்டம். வண்டலூர் வண்டலூர் (ஆங்கிலம்:Vandalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூர் சென்னை மாநகரத்தின் நுழைவாயில் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,311 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். வண்டலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வண்டலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்ற சிறப்பான விலங்கியல் பூங்கா உள்ளது. வண்டலூர் மலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாடு வனதுறை வண்டலூர் மலை அடிவாரத்தின் கீழ் ஒரு மரக்கன்று மையம் கொண்டிருக்கிறது. வந்தவாசி வந்தவாசி (ஆங்கிலம்:WANDIWASH), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,612 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வந்தவாசி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வந்தவாசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது. வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர் வந்தவாசியில் இருந்து 23 கிமீ தொலைவில் தேசூர் அருகில் சியமங்கலம் மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது. வந்தோரை வாழவைக்கும் வந்தவாசியில் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பும் உண்டு. மழை காலங்களில் இந்த கோவில் முழுதும் தண்ணீரால் நிரம்பி விடும். மூலவர் சுயம்பு நாத ஈஸ்வரர் என்கிற ஜலகண்டீச்வரரை தொடும் அளவிற்கு நீர் ஊற்றெடுத்து தேங்கும். இது எவ்வளவு உயரம் தேங்கும் என்றால் ஒரு மனிதரின் இடுப்பு அளவிற்கு என்றும் கூறலாம். இவ்வாறு ஏன் அந்த கால கட்டத்தில் அமைக்கப்பட்டது என்றால் "ஈஸ்வரர் கோபத்தில் நெற்றிக்கண் திறந்து பார்க்கும் பொது மிகுந்த உஷ்ணமாக இருக்கும். அதனை குளிர்விக்க தண்ணீருக்குள் தவம் புரிவார் ஈஸ்வரர். அதனால் தான் அவருக்கு ஜலகண்டீஸ்வரர் என பெயரும் வந்தது" என்று கூறுவர். ஆகவே தான் ஈஸ்வரர் தண்ணீரில் மூழ்கும்படி இவ்வாறு வடிவமைத்து உள்ளனர். ஆனால் பக்தர்கள் உள்ளே செல்ல அவதிப்படுவதால் தற்போது கட்டமைப்புகளில் மாற்றம் செய்து தண்ணீர் உள்ளே தேங்காத வண்ணம் அமைத்துள்ளனர். இந்த கோவிலின் புதுப்பிக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகம் 2011 ஆனி மாதம் முடிந்தது. தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கர் கோவிலும் பார்க்கத்தகுந்தது. தென்னாங்கூர் கோவில் மற்ற கோவில்களை போல இல்லாமல் பூரி ஜகன்னாதர் கோவிலை போன்ற கோபுர வடிவம் கொண்ட கோவில் ஆகும். மேலும் சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட பைபர் கிளாஸ் பைண்டிங் முறையில் உட்கட்டமைப்பில் உள்ள படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான வெள்ளிக் கதவுகள் மூலவரின் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் பெருமாள் கடவுளுக்கு திருப்பதி தேவஸ்தான முறையில் அலங்காரங்களும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. பழங்காலத்தில் இந்துக்கள் சிவ கோத்திரம் மற்றும் விஷ்ணு கோத்திரம் என்று இரு வேறு மதத்தவர் போல பிரிந்து காணப்பட்டனர். இவர்களுக்குள் போட்டிகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன. இவைகளைப் போக்க ஒரு மாமுனிவரின் ஆணைப்படி "ஹரியும் சிவனும் ஒன்று" என்பதை சுட்டிக்காட்ட நாடெங்கிலும் ஒரே சுற்றுச்சுவரின் உள்ளேயே சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் நிறுவப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களுள் வந்தவாசி பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலின் புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் முடிந்து விட்ட போதிலும், தலை வாசல் கோபுரம் எழுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று மிக அழகாகப் பார்க்க கம்பீரமாய் காட்சி தருகிறது.மற்றுமொரு சிறப்பாக பெருமாள் படுத்த கோலத்தில் சிறிய சிலையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வண்டியூர் வண்டியூர் (ஆங்கிலம்:Vandiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இங்கு அமைந்துள்ள மாரியம்மன் தெப்பக்குளம் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் அருகில் வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,464 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வண்டியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வண்டியூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.Ingu vaalgindra makkalil adhigamaanor Sourashtra Mozhiyai thaai Mozhiyaaga kondullanar. வாணிப்புத்தூர் வாணிப்புத்தூர் (ஆங்கிலம்:Vaniputhur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 11,935 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாணிப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 44% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. வன்னிப்புத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வாணியம்பாடி வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகரம் ஆகும். இது சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த "ஆண்கள் இஸ்லாமிய" கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  "பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி" அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது. 12.68°வடக்கு 78.62°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது . வரதராஜன்பேட்டை வரதராஜன்பேட்டை (ஆங்கிலம்:Varadarajanpettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். வரதராஜன்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வரதராஜன்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இங்கு தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி உள்ளது.ஆண்கள் பயிலும் பள்ளி 🏫.அதில் oradary Club (ஆரட்டரி) உள்ளது. வாசுதேவநல்லூர் வாசுதேவநல்லூர் (ஆங்கிலம்:Vasudevanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இது மதுரை - தென்காசி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிிலும், தென்காசியிருந்து 37 கி.மீ தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது திருநெல்வேலியிருந்து 85 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும்; இராஜபாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. 10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5833 வீடுகளும், 21361 மக்கள்தொகையும் கொண்டது. வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் தரணி சர்க்கரை ஆலை இயங்குகிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது. மதுரை - செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், மதுரை, தென்காசி, இராஜபாளயம், சங்கரன்கோவில், செங்கோட்டைக்கு பேருந்துகள் உள்ளன. அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள இரண்டாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன). அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது. இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும். இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. வாழப்பாடி வாழப்பாடி (ஆங்கிலம்:Vazhapadi), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,121 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாழப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாழப்பாடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேடப்பட்டி வேடப்பட்டி (ஆங்கிலம்:Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 9545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவர். வேடப்பட்டி மக்களின் சராசரிக் கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 62% ஆகவும் உள்ளன. இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேதாரண்யம் வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு இருக்கும் மறைக்காட்டுநாதர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக் காடு என்பதாகும். கோடியக்கரை காப்பகம் இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,728 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேதாரண்யம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேதாரண்யம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேடசந்தூர் வேடசந்தூர் (ஆங்கிலம்:Vedasandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள எரியோடு ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,500 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதல் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வேடசந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடசந்தூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வீரகனூர் வீரகனூர் (Veeraganur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வீரகேரளம் வீரகேரளம் (ஆங்கிலம்:Veerakeralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,993 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வீரகேரளம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரகேரளம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வீரக்கல்புதூர் வீரக்கல்புதூர் (ஆங்கிலம்:Veerakkalpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,358 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். வீரக்கல்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரக்கல்புதூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வீரபாண்டி (திருப்பூர்) வீரபாண்டி (ஆங்கிலம்:Veerapandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,911 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். வீரபாண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரபாண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வீரப்பன்சத்திரம் வீரப்பன்சத்திரம் (ஆங்கிலம்:Veerappanchatram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,607 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வீரப்பன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரப்பன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேலம்பாளையம் 15 வேலம்பாளையம் (ஆங்கிலம்:15 Velampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். முதலில் நகராட்சியாக இருந்தது பின்னர் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,562 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். 15 வேலம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேலம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேளாங்கண்ணி வேளாங்கண்ணி (ஆங்கிலம்:Velankanni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்து வந்தது. ஆகவே, 'விவசாய நிலம்' என்று பொருள்படும் 'வேளாண் காணி' என்ற சொல்லில் இருந்து, வேளாங்கண்ணி என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,144 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேளாங்கண்ணி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேளாங்கண்ணி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள். வெள்ளக்கிணறு வெள்ளக்கிணர் அல்லது வெள்ளக்கிணறு (ஆங்கிலம்:"Vellakinar"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9609 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வெள்ளகினார் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளகினார் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெள்ளக்கோயில் வெள்ளக்கோயில் (ஆங்கிலம்:Vellakoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளக்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளக்கோயில் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெள்ளலூர் வெள்ளலூர் (ஆங்கிலம்: Vellalur அல்லது Vellalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், சிங்காநல்லூர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடைய ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. வெள்ளலூர்ச் சாசனத்தில் அவ்வூரின் பெயர் வள்ளலூர் அல்லது அன்னதானச் சிவபுரி என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவ்வூரின் இரண்டு பழைய ஆலங்களில் கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் ரவிகோதை என்ற இரண்டு சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வூர் சில காலங்களுக்கு சேரமன்னர்களின் கீழ் இருந்தாக கொள்ளலாம். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன. வெள்ளிமலை வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,758 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளிமலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெள்ளோட்டம்பரப்பு வெள்ளோட்டம்பரப்பு (ஆங்கிலம்:Vellottamparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8129 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளோட்டம்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளோட்டம்பரப்பு மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வேங்கம்புதூர் வெங்கம்பூர் (ஆங்கிலம்:Vengambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7634 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெங்கம்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெங்கம்பூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெங்காத்தூர் வெங்கத்தூர் (ஆங்கிலம்:Vengathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,003 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வெங்கத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெங்காத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வெங்கரை வெங்கரை (ஆங்கிலம்:Venkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,447 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெங்கரை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.