எனிட் பிளைட்டன் எனின் பிளைட்டன் (Enid Blyton) (ஆகஸ்ட் 11, 1897 - நவம்பர் 28 1968; ஐக்கிய இராச்சியம்) சிறுவர்களுக்காக கதைகள், கவிதைகள், நாடகம் போன்ற பல ஆக்கங்களை படைத்த ஓர் பிரபலமான எழுத்தாளர். பிளைட்டனின் புத்தகங்கள் இன்னமும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவரது புத்தங்கள் 90 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது முதல் படைப்பான "குழந்தை விஸ்பர்ஸ்", 24 பக்க கவிதைத் தொகுப்பு நூலாகும். இது 1922 ல் வெளியிடப்பட்டது. கல்வி, இயற்கை வரலாறு, கற்பனை, மர்மம் உட்பட பல பரந்த தலைப்புகளில் அவர் எழுதினார், அவரது புகழ்பெற்ற புத்தகங்களுள் முக்கியமானவை: தி பேமசு பைவ், தி சீகரெட் செவன், நோடி. அவரது துவக்கப் புத்தகங்களின் (அட்வென்ச்சர்சு ஆப் விஷ்ஷிங் சேர் (1937), தெ என்ச்சேன்ட்டடு வுட் (1939) வணிகரீதியான வெற்றியைத் தொடர்ந்து ஒரு இலக்கியப் பேரரசை உருவாக்க முனைந்தார். இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் அவரது பங்களிப்புகளுடன் அவர் ஓராண்டில் 50 புத்தங்களையும் வெளியிட்டார். அவரது படைப்புகள் முன்திட்டமிடப்படாதவையாகவும், அவரது ஆழ்மனதுக் கருத்துக்களாக வெளிவந்தது. அவரது கருத்தில் தோன்றிய நிகழ்வுகளை அப்படியே அவர் கதைகளாக உருவாக்கினார். எனிட் பிளைட்டன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாக ஆகஸ்ட் 11, 1897 ஆம் ஆண்டு தென் லண்டனில் உள்ள கிழக்கு டூல்விச்சில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் கரேலி பிளைடன் (1870-1920), ஒரு வெட்டு விற்பனையாளர் விற்பனையாளர் மற்றும் அவரது தாய் தெரேஸா மேரி. இவர்களது மூன்று குழந்தைகளில் எனிட் மூத்தவர். இவர்களது குடும்பம் கென்டில் உள்ள ஒரு கிராமமான பெக்கென்ஹாமிற்குக் குடிபெயர்ந்த பிறகு, எனிட்டின் இளைய சகோதரர்கள், ஹான்லி (1899-1983) மற்றும் கேரி (1902-1976) பிறந்தனர். லண்டனில் பிறந்த இவர் பாக்கிங்காம் எனும் லண்டன் புறநகர் பகுதியில் வளர்ந்தார். அவரது தந்தை அவருக்கு இயற்கையை ரசிப்பதில் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார். தனது சுயசரிதையில் அவர் "மலர்கள், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை நேசித்தேன், மேலும் நான் சந்தித்த வேறு எந்த நபர்களை விடவும் நான் அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருந்தேன்" என்று எழுதினார்.தோட்டக்கலை, கலை, இசை, இலக்கியம் மற்றும் நாடகக்கலையில் கொண்டிருந்த ஆர்வத்தைத் தன் மகளிடமும் ஊக்குவித்தார். இருவரும் பெரும்பாலும் இயற்கையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். ஆனால் எனிட்டின் தாயாருக்கு இப்போக்கு பிடிக்கவில்லை. மற்றொரு பெண்மணியுடன் வாழ தனது பதின்மூன்றாம் அகவையில் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை இவர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வாழ வீட்டைவிட்டு வெளியேறியதால் எனிட் பெரிதும் பாதிக்கப்பட்டார். எனிட்டுக்கு அவரது தாயுடன் நல்லுறவு இல்லை. தனது பெற்றோரின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. பாடசாலை விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குழந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார். 1924 ல் ஹக் பொலக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். முறையே 1931, 1935 ல் இரண்டு குழந்தைகளிற்குத் தாயானார். 1942 ல் பொலக்கை விவாகரத்து செய்த எனிட் பிளைட்டன் 1943 ல் கெனத் டரல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். எனிட் பிளைட்டனுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு சிறுவர் சஞ்சிகையில் இவரின் முதல் படைப்பு பிரசுரமானது. பின்னா 1917 ல் என்னொரு கவிதை சஞ்சிகை (Nash's Magazine) ஒன்றில் பிரசுரமானது. 1921 அளவில் இவரின் கவிதைகளும் கதைகளும் அதிகமாக பிரசுரமாகத் தொடங்கியது. இவரின் முதலாவது கவிதைப் புத்தகமான சயில்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) 1922 ல் பிரசுரமானது. 1922 அளவில் தன்னை முழுமையாக கதைகள் புனைவதில் ஈடுபடுத்திக் கொண்டார். அன்றிலிருந்து 1964 வரை சுமார் 600 சிறுவர் புத்தகங்களை எழுதியதுடன் பல்வேறுபட்ட சஞ்சிகைகளில் பல ஆக்கங்களைப் படைத்தார். Famous Five, Secret Seven, Little Noddy series போன்ற புத்தகங்கள் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. இவரின் எழுத்துக்கள் பெருமளவில் இளம் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இவரின் புத்தகங்கள் 20 ம் நூற்றாண்டில் பல தடவை மறுபிரசுரமானது. எனிட் பிளைட்டனின் கதைகள் பொதுவாக மர்மக் கதைகளாகவோ அல்லது வீரதீரக் கதைகளாகவோ காணப்பட்டது. இவர் பயன்படுத்திய சொற் களஞ்சியத்தின் காரணமாக ஆரம்ப படிநிலை ஆங்கில மாணவர்கள்கூட இக்கதைகளை வாசிக்கக் கூடியதாக இருந்தது. கதைகளில் நல்ல மற்றும் கூடாத பாத்திரங்கள் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவதுடன் நன்னெறிகளைக் கற்பிப்பனவாகவும் உள்ளது. கணவர் இறந்த சில மாதங்களில் எனிடும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு, அவரது இறப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நலப்பேணகத்தில் தங்கினார். வடக்கு இலண்டன், ஹம்சட்டிலுள்ள கிரீன்வேசு நலப்பேணகத்தில் நவம்பர் 28, 1968 ஆம் நாளில் மரணமடைந்தார். பிக்காடிலி புனித ஜேம்சு தேவாலயத்தில் அவருக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கோல்டர்சு கிரீன் கிரிமேட்டோரியத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டு, அங்கு அவரது சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. பிளைட்டனின் வீடு "கிரீன் ஹெட்ஜசு" 1971 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று ஏலத்திற்கு விடப்பட்டு, 1973 இல் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது "பிளைட்டன் குளோசு" என்ற தெருவும் சில வீடுகளும் உள்ளன. 1920 முதல் 1924 வரை அவர் வாழ்ந்த செசிங்டனின் ஹூக் தெருவில் அவரது நினைவாக நீலப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 1938 முதல் 1968 வரை பெக்கன்சுபீல்டில் வாழ்ந்தவர் என்ற செய்தி பதிக்கப்பட்டத் தகவற்பலகை 2014 இல் நகர்மண்டப தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நோடி மற்றும் பிக் ஏர்சின் உருவச்சிலைகளுக்கு அருகில் அப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மாஃப்பியா மாஃப்பியா (Mafia) ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட விரோத குற்றக் குழு. குறிப்பாக இத்தாலிய பின்புலத்தில் அமைந்த குடும்ப தொடர்புகளுடைய சட்ட விரோத குற்றக் குழுக்களைய மாஃப்பியா என்று அழைப்பர். இத்தாலிய மொழியில் "மாஃப்பியா" என்றால் "எங்களின் சொத்து" அல்லது "எங்களின் செயல்" என பொருள்படும். களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைக் கடத்தல், கொலை போன்ற பல குற்றச்செயல்களை தெரிந்து திட்டமிட்டு மாஃப்பியா ஈடுபடும். அவர்கள் ஈடுபடும் விரிவான குற்றச்செயல்கள் கீழ்வருமாறு. wat een rare taal he stem : helee rare taal nee jaa zet reactie ! றையட் றையாட் (Triad, 三合會, 三合会, Sānhéhuì) பல சீன பின்புலத்தை கொண்ட பாதாளவாழ் குழுக்களை குறிக்கும் சொல். இவர்கள் 1760களில் குன்ங் அரசபரம்பரை ஆட்சிக்கு எதிரான புரட்சி குழுவாக ஆரம்பித்துப் பின்னர் பல்வேறு காரணங்களால் குற்றக் குழுக்களாக மாறினார்கள். இன்று இவர்கள் களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கொலை போன்ற பல பாதகச் செயல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள். யக்கூசா யக்கூசா (en:Yakuza, ja:(やくざ or ヤクザ), ஜப்பானிய பின்புலத்தைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு ஆகும். யப்பானிய மொழியில் யக்கூசா என்ற சொல் "எதற்கும் உதாவாதது (good for nothing)" என்று பொருள் படும். இவர்கள் இறுக்கமான நெறிமுறைகளையும், ஒழுங்கமைக்கப்பட்ட இயல்பும் கொண்டவர்கள். யப்பானிய ஊடகங்களில் இவர்கள் பெரிய அளவில் ஊடுருவி உள்ளதுடன், பன்னாட்டு அளவில் இயங்கிவருகின்றனர். இவர்கள் 103,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிகப்பு மாஃப்பியா ரஷ்யப் பின்புலத்தை கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் சிகப்பு மாஃப்பியா (Red Mafia) அல்லது ரஷ்ய மாஃப்பியா (Russian Mafia) எனப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே இப்பெயருடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் உருவாகின எனப்படுகிறது. எனினும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரேயே இக் குழுக்கள் பல விதங்களில் இருந்தே வந்துள்ளார்கள். பல முந்திய சோவியத் ஒன்றிய இராணுவ உறுப்பினர்கள் சிகப்பு மாஃப்பியாவில் இணைந்துள்ளார்கள். மாத்தளை சோமு மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியவர். இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடிய தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. தலதா மாளிகை தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள முக்கியமான பௌத்த பீடங்களான மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் ஆகியவற்றைச் சேந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராகச் சுழற்சி முறையில் இதன் உள் மண்டபத்தில் நாளாந்த கிரியைகளை நடத்தி வருகிறார்கள். காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் புனிதப்பல் "நனுமுரா மாங்கல்யா" என்றழைக்கப்படும் நறுமணப்பூக்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது. குணமாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்தப் புனிதநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உருப்படிம மொழி ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பான வடிவமைப்புச் செயற்பாடுகளை விளக்கும் கட்டமைப்பான ஒரு வழிமுறையே உருப்படிம மொழி ("pattern language") எனப்படுகின்றது. இது பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டது. அனுபவத்தினால் மட்டுமே விளையக் கூடியதும், ஆவணப்படுத்தி இளையவர்களுக்குக் கற்பிக்க முடியாததுமான தீர்மானம் எடுக்கும் திறனை முறைப்படுத்துவதற்கு, உருப்படிம மொழி பயன்படுகிறது. அறிவுப் பொதிவைக் கட்டமைப்பு உள்ளதாக ஆக்குவதற்கும், அடிப்படையில் சிக்கலான முறைமைகளை, அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தாமல் புரிந்து கொள்வதற்கும் உருப்படிம மொழி வகை செய்கிறது. கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் என்னும் கட்டடக்கலைஞர் முதன் முதலாக "உருப்படிம மொழி" என்பதற்கு இணையான "pattern language" எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இக் கருத்துருவைக் குடிசார் பொறியியல் ("Civil Engineering") மற்றும் கட்டிடக்கலை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளில் அவர் பயன்படுத்தினார். எவ்வாறு நகரங்களை அமைப்பது என்பதிலிருந்து, ஒரு அறையில் சாளரத்தை எவ்விடத்தில் அமைக்கவேண்டும் என்பது வரையான பலவகைப்பட்ட பிரச்சினைகளில் இக்கருத்துருவைப் பயன்படுத்த முடியுமென அவர் வாதிட்டார். அவர் எழுதிய "A Pattern Language" என்னும் புத்தகம் மூலம் மேற்படி கருத்துவை அவர் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்தினார். இவர் எழுதிய இன்னொரு புத்தகமான "The Timeless Way of Building" (காலஞ்சாராக் கட்டட வழிமுறைகள்) என்பதிலும் "உருப்படிம மொழி" பற்றி விளக்கியுள்ளதுடன், கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றில் இது எவ்வாறு பயன்படக்கூடும் என்பதையும் விளக்கியுள்ளார். எனினும் இது கட்டிடத் துறைகளில் மட்டுமன்றி கணினித் துறை முதலிய வேறு பல துறைகளிலும் கூடப் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் கூகுள் (Google) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004இல் நடைபெற்றது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகுள் பொறியாளரின் கூற்றாகும். 2006இல் இந்நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது. உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது. கூகுள் குரோம் என்னும் உலவியை கூகுள் வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைப்பேசி இயக்கு மென்பொருள் அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது. கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் கலிபோர்னியா பல்கலைக் கழகம், பேர்க்லேயில் பேராசிரியராகவும் (professor-emeritus), ஒரு அனுமதி பெற்ற கட்டட ஒப்பந்தகாரராகவும், கட்டடக்கலைஞராகவும் விளங்குபவர் கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் (பிறப்பு: அக்டோபர் 4, 1936, வியன்னா, ஆஸ்திரியா). இவர் கலிபோர்னியா, ஜப்பான், மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கட்டிய கட்டிடங்களுக்காக அறியப்பட்டவர் எனினும், கட்டிடக்கலையில் இவரது கோட்பாட்டுப் பங்களிப்புகளுக்காகவே புகழ் பெற்றவர். சாரா இஷிகாவா (Sarah Ishikawa), முரே சில்வர்ஸ்டீன் (Murray Silverstein) ஆகியோருடன் இணைந்து, "உருப்படிம மொழி" (a pattern language) எனப்படும் கட்டிடக்கலை வடிவமைப்பு முறையொன்றை உருவாக்கினார். இது, எவரும் எந்த மட்டத்திலும் தங்களுக்கு வேண்டிய கட்டடங்களை வடிவமைக்க உதவுவதை இலக்காகக் கொண்டது. கட்டிடமொன்றின் பயனர்கள் தங்களுடைய தேவைகள் பற்றி மற்றெவரிலும் பார்க்கக் கூடுதலாக அறிவார்கள் என நம்பியதாலேயே இத்தகைய முயற்சியை அவர் மேற்கொண்டார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் அவர், கட்டிடக்கலைத் தொழிலை மேற்கொள்வதுடன், நகரத் திட்டமிடலிலும் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் பிறந்த இவர், இங்கிலாந்திலேயே வளர்ந்தார். அறிவியல் துறையிலேயே இவரது கல்வி ஆரம்பமானது. கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டிக் கல்லூரியில் பயில்வதற்கான scholarship பெற்று வேதியியல், இயற்பியல் துறைகளிலும், பின்னர் கணிதத் துறையிலும் கல்வி பயின்றார். கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டமும், கணிதத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில், கட்டிடக்கலைத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஒரே காலகட்டத்தில் MIT இல் போக்குவரத்துக் கோட்பாடு, மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளிலும், ஹார்வார்டில் அறிதிறன் (cognition) மற்றும் அறிதிற இயல்கள் (cognitive studies) தொடர்பாகவும் பணிபுரிந்தார். 1963 இல் பேர்கலேயில் பேராசிரியரானார். இவர் அங்கே 38 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார். இவர் கட்டிடக்கலைத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக 1996 இல், கலைகள் மற்றும் அறிவியல்களுக்கான அமெரிக்க அக்கடமி இவரை Fellow ஆகத் தேர்ந்தெடுத்து மரியாதை செய்தது. கணினி அறிவியல் துறையிலும், உருப்படிம மொழி இயக்கத்தின் தந்தை என இவர் கருதப்படுகின்றார். பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது "பிள்ளைத்தமிழாகும்". குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லையாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும். ஆகவே, இதனை உளம் கொள்ளுதல் வேண்டும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை, பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன. என்ற வெண்பாப் பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 7) , என்ற பன்னிரு பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 105) என்றஇலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பாவாலும் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்ப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முதல் பருவம் காப்புப்பருவம் ஆகும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் சிறக்கவும் பாட்டுடைத்தலைவன் மேன்மையடையவும் காப்பாற்றியருளும்படி இறைவனை வேண்டும் பருவம். பின் வரும் பருவங்களுக்கெல்லாம் இப்பருவமே முதல் நாடியாக அமைவதால் காப்பு இன்றியமையாத்தாகிறது. காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள திருமாலே காக்கும் பருவத்தில் முதற்கடவுளாகப் போற்றப்படுகிறார் இதனை என பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது. ஆயினும் இதனை விடுத்து வேறு கடவுளர்களையோ, அடியவர்களையோ காப்பாகக் கூறும் முறையும் உள்ளது. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும். "கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும், "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியுமொருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும், "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கூறுவர். (காண்க கலைக்களஞ்சியம், தொகுதி 7 பக்கம்: 370) குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுகிறது. பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும். இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும். தால் என்பது நாக்கு. நாக்கை அசைத்து தாலாட்டி குழந்தைகளைத் தூங்க வைப்பது இப்பருவமாகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம். சப்பாணிப்பருவம் குழந்தையின் ஒன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் இயல்பாகத் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டி குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கை படி வேண்டுவர். குழந்தை அதற்கேற்ப " சப்" என்ற ஒலி உண்டாகும் படி "பாணி" யைக் (கையைன) கொட்டி முழக்கும். இதுவே சப்பாணிப் பருவம் ஆகும். குழந்தை நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அமைப்பை 'சப்பாணி' என்று கூறும் வழக்கம் உண்டு. அதனால் இப்பருவம் சப்பாணி என்றும், 'சக + பாணி= சப்பாணி' (சக=உடன், பாணி=கை ) இரண்டு கைகளையும் உடன் சேர்த்துக் கொட்டுதலால் சப்பாணியாயிற்று என்றும், ' ச' என்றால் சேர்த்தல் எனப் பொருள் கொண்டு, கைகளைச் சேர்த்து ஒலி எழுப்புதல் என்றும் பொருள் கொள்வர். பிள்ளைத்தமிழின் ஐந்தாவது பருவம் முத்தப் பருவம் ஆகும். குழந்தையின் பதினோராம் திங்களில் நிகழ்வது இப்பருவம் ஆகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் முத்தப்பருவம் சிறந்த பருவமாகக் கருதப்படுகிறது. குழந்தையைப் பாராடி மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, அதன் மலரினும் மெல்லிய இதழ்களால் முத்தம் பெற்று மகிழ்தலே முத்தப் பருவம் ஆகும்.பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாக்கி அதன் முத்தத்திற்கு ஏங்கும் கவிஞர்களின் நிலையினை எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்ல்களிலும் காணலாம்.அப்போது பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் படவாறு புகழப்படும். ஆறாவது பருவமாகிய வருகைப் பருவம் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வதாகும். இதனை வாரானைப் பருவம் என்றும் போற்றுவர். வரவ்வேற்றல் என்பது தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த ஒன்றாகும். இப்பான்மையில் தோன்றியதே வருகைப் பருவமாகௌம். தத்தித் ததி தளர்நடை இட்டு வரும் குழந்தையை அருகில் வருக! வருக! என வாய் குளிர மெய்மகிழ அழைக்கும் பருவமே வாரானைப் பருவம் ஆகும். குழந்தையை அவ்வாறு வரவேற்கும் பொழுது அதன் சிறப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்வர். அம்புலி என்பது சந்திரனைக் குறிக்கும். விண்ணில் விளங்கும் சந்திரனை விளையாட வருமாறு அழைக்கும் பருவமே அம்புலிப் பருவமாகும்.பிள்ளையின் பதினைந்தாம் திங்களில் இது நிகழும். நடக்கக் கற்றுக் கொண்ட குழந்தை அங்குமிங்கும் சென்று காட்சிகளைக் காண மிகுதியாக விரும்பும். 'பிள்ளைக்கலிக்குஅம்புலியாம்' என்பதன் மூலம் இப்பருவத்தின் சிறப்பை உணரலாம். வெண்ணிலவை குழந்தையுடன் விளையாட வருமாறு அழைக்கும் பொழுது என சாம பேத தான தண்ட முறையில் அமைவது இப்பருவமாகும்.அவ்வாறு அழைக்கும் பொழுது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமைவதாகும். ஓடியாடி சுற்றித்திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாம் திங்களில் இப்பருவம் பாடப்படுவதாகும். இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள், எல்லா! எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டா! என வேண்டுமுகமாகப் பாடப் படுவதே இப்பருவமாகும். மற்றா பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றொரும் பாடுவதாக அமைய இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும். ஆண்பாற் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம் சிறு பறை முழக்கல் ஆகும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். இப்பருவத்தில் ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும். ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பதே இப்பருவமாகும். ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாவது பருவம் சிறுதேர்ப் பருவமாகும். இது 21-ம் திங்களில் நிகழ்வதாகும். மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுவது இப்பருவமாகும். மட நடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர். குழந்தை வளர வளர நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலிய வற்றின்மீது ஊர்ந்து செல்லுதலையும் விரும்பும் இவ்விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தேர் முதலியவற்றினை உருட்டி குழந்தையை அமரச் செய்து மகிழ்வூட்டுவர். இது குழந்தையின் இருபத்தோராம் திங்களில் நிகழும் என்பது பொது இலக்கணம் ஆகும். ஆனால் 'இலக்கண விளக்கப்பட்டியல்' இப்பருவம் குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் எனக் கூறுகிறது. காப்பு முதலாக அம்புலி ஈறாக சொல்லப்பட்ட பருவங்கள் ஏழும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற்பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானதாகும். நீராடல், அம்மானை, ஊசல் ஆகியன பெண்பால் பிள்ளைத்தமிழுக்கே உரியனவாகும். இது பெண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாகும்.குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வது இப்பருவமாகும்.குழந்தையை நீர் நிலைகளில் நீராட வேண்டிப் பாடும் பருவமாகும் அம்மானை பெண்பாற்பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவமாகும். கழங்கு என்றும் இதனைக் கூறுவர்.கழங்கு என்பது மரம் அல்லது ஈயம் போன்ற பொருள்களால் பந்து போன்று உருண்டையாகச் செய்து அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எரிந்து கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு ஆகும். கழங்குக் காய்கள் கொண்டு ஆடுவர் என்றும் கூறப்படுகிறது. பேதை அல்லது பெதும்பைப் பருவ மகளிர் அம்மானை ஆடுவர் என்று உலா நூல்களில் குறிப்பிடப்படுகிறது. அம்மானை கலம்பகம் என்ற சிற்றிலக்கிய உறுப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. மகளிர் மூவர் கூடி தம் தலைவனைக் குறித்து மூவரில் ஒருத்தி வின எழுப்ப, மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி இவ்விருவருக்கும் விடை கூறி அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர். இவ்வாறு அமையும் பாடலின் இறுதிச் சீரில் அம்மானை என்ற சொல் அமையும். அம்மானை என்பது ஒரு வகை மகளிர் விளையாட்டு என்ற நிலை மாறி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியம் என்ற நிலை தோன்றியது. இவ் அம்மானைப் பாடல்கள் தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களாகவே இருந்திருத்தல் வேண்டும் என்றும் கூறுவர். பெண்பால் பிள்ளைதமிழின் பத்தவது பருவம் ஊசலாகும். ஊசல் என்பது ஊஞ்சல் ஆடலாகும். குழந்தையை ஊஞ்சலாடி மகிழும்படி வேண்டும் பருவமே ஊசல் பருவமாகும். குழந்தையை ஊஞ்சலில் அமர்த்தி தாதியர் முதலானோர் அக்குழந்தையின் சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து ஊஞ்சலை ஆட்டி குழந்தையை மகிழ்விப்பர். ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையின் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்து ஆகியவை இப்பருவத்தில் இடம் பெறும். பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பருவங்களையும் பாடும்போது பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் எனவும், இரட்டிதுப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆனாலும் இவ்வரையறை மீறி பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கைக் குறைத்தும் கூட்டியும் பாடியுள்ள நிலை அறியப்படுகிறது. பொதுவாக பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால்பிள்ளைத்தமிழ் என இருவகையிலேயே அடங்கும். ஆயினும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் வகையில் இவை மேலும் என வகைப்படுத்துவர். கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984 பள்ளு பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது மருதநில இலக்கியமாகும். பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. தமிழில் பெருந்தொகையான பள்ளு இலக்கியங்கள் உள்ளன. தமிழ் சிற்றிலக்கிய வகைகளிலே பள்ளு இலக்கியங்களே அதிகமாக உள்ளன எனக் கூறப்படுகின்றது. பள்ளு இலக்கியங்களிலிருந்து பள்ளர்களின் வாழ்க்கை நிலையை மட்டுமன்றி, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகளையும் பண்பாட்டுத் தகவல்களையும் கூடப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. பல பள்ளு நூல்கள் இலக்கியச் சுவை மிக்கவை. ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள். மற்றவள் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவனதும், திருமாலினதும் தலைகள் உருளுவதை முக்கூடற் பள்ளு ஆசிரியர் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார். என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள். சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள். இளையவளிடமிருந்து பதில் வருகிறது இவ்வாறு: அவுட்லுக்.கொம் ஹொட்மெயில் (Hotmail) என்பது வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்ட மின்னஞ்சல் சேவையாகும். இவ்வாறாக வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்டு, வலை உலாவி மூலம் பயன்படுத்தக்கூடியதாக உருவான உலகின் முதல் மின்னஞ்சல் சேவையும் இதுவேயாகும். இதன் பிரதான போட்டியாளர்களாக ஜிமெயில், யாகூ மின்னஞ்சல், ஆகியவை விளங்குகின்றன. வரவிருக்கும் வின்டோஸ் லைவ் மெயில் விண்டோஸ் லைவ் மெயில் வெளிவந்தும் இதை மாற்றீடுசெய்யும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஹொட்மெயில் ஆனது 1995 ஆம் ஆண்டு இந்தியா சண்டிகாரைச் சேர்ந்த சமீர் பாத்தியா மற்றும் அமெரிக்கரான ஜக் ஸ்மித் ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இது வர்த்தக ரீதியாக அமெரிக்கா வின் சுதந்திரதினமான 4 ஜீலை 1996 ஆம் ஆண்டு இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து சுதந்திரம் என்னும் தொனியில் வெளியிட்டார்கள். நிறுவனங்களின் பாதுகாப்புச் சுவர்கள் பொதுவான மின்னஞ்சலைத் தடுத்துவருவதால் ஜக் ஸ்மித் முதலில் இணையமூடான மின்னஞ்சலைப் பெறவேண்டும் என்கின்ற திட்டத்தைக் கொண்டிருந்தார். சபீர் பாத்தியா வர்த்தகத் திட்டத்தை முன்வைத்த போது "-mail" இல் முடிவடையும் எல்லாச் சொற்களையும் தேடியபோது ஹொட்மெயில் (Hotmail) என்பது தேர்ந்தெடுக்கப் பட்டது. ஏனெனில் Hotmail இல் HTML எனும் சொல்லானது HoTMaiL இல் உள்ளதாகும். ஏனெனில் இந்த HTML இணையப் பக்களின் அடிப்படையாகும். 1997 ஆம் ஆண்டில் 8.7 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த இம்மின்னஞ்சலானது மைக்ரோசாப்ட் இற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு கைமாற்றப் பட்டது. அதன் பின்னர் "'மைக்றோஸாப்ட் வலையமைப்பின்" கீழ் கொண்டுவரப்பட்டது. பெப்ரவரி 1999 இல் ஹொட்மெயிலானது 30 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. ஹொட்மெயில் பல நாடுகளிலும் 17 மொழிகளிலும் அதன் சேவையை வழங்கி வருகின்றது. இன்றும் ஓர் மிகப் பெரிய மின்னஞ்சல் சேவை வழங்குனாரகவேயுள்ளனர். ஜூலை 2005 இல் நடத்தப் பட்ட ஆய்வுகள் மூலம் 35.5% வீதமானவர்கள் ஹொட்மெயிலைப் பயன் படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இது இன்று மைக்ரோசாப்ட் இன் ஓர் கிளையாக உள்ளபோதும் இதன் அபிவிருத்தி நிலையமானது சிலிக்கன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ஹொட்மெயிலானது அமெரிக்கா, பிரேசில், கனடா, ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்களிற்கு 250 MB அளவான இடவசதியை அளிக்கின்றனர் (எனினும் இணைக்கப் பட்ட கோப்பின் அளவானது 10 MB ஐ விடக் குறைவாகவே இருக்கவேண்டும்). இந்த அளவு அதிகரிப்பானது கூகிளின் ஜிமெயிலைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் 2 MB என்ற மிகக் குறைவான சேமிப்பு அளவையே தருவதால் இம் மின்னஞ்சல் சேவையானது இந்நாடுகளில் பிரபலத்தை இழந்து வருகின்றது. மைக்ரோசாப்ட் இற்கே உரிய வெப்டாவ் அணுகு முறைமூலம் மைக்றோஸாப்ட் அவுட்லுக் "'மைக்றோஸாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்" இல் ஹொட்மெயிலைப் பெற்றுக்கொள்ளலாம் எனினும் இம்முறையில் வழங்கி அல்லது சேவரிலும் மின்னஞ்சல் இருக்கும். இம்முறையில் நீங்கள் இங்கு செய்யும் மாற்றங்கள் அங்கும் அங்கே ஏற்ப்டும் மாற்றங்கள் இங்கும் ஏற்படுத்த்ப் படும். POP3 முறையில் மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ள அல்லது ஹொட்மெயில் பொப்பர் போன்ற மென்பொருட்கள் மூலம் உங்களிற்கு விரும்பிய எந்தவொரு மின்னஞ்சல் மென்பொருளிலும் உங்கள் மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ளலாம். இலவச ஹொட்மெயில் மின்னஞ்சல் சேவையானது 30 நாட்கள் பயன்படுத்தாவிட்டல் அப்பயனர் கணக்கில் உள்ள முகவரிகள் தவர்ந்த ஏனைய செய்திகள் யாவும் அழிக்கப் பட்டு பயனர் கணக்கானது தற்காலிகமாகத் துண்டிக்கப் படும். எனினும் மைக்ரோசாப்ட் பாஸ்போட் கணக்கானது 90 நாட்கள் வரை பேணப் படும். தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள் பின்வரும் சொற்கள் "லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கிலம் அகராதி" யில் இருந்து பதியப்படுகின்றது. முழு அகராதியிலும் இது ஒரு சிறு பிற்சேர்க்கையே, என்பதால் பதிப்பகத்தார் ஆட்சோபனை தெரிவிக்கமாட்டார் என்ற ஒரு நம்பிக்கையில் சேர்க்கப்படுகின்றது. (1998). "லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கிலம் அகராதி". சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி. மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கொரிய மொழி கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். சீனாவின் "யான்பியன்" பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். கொரிய மொழி எழுத்துக்கள் "ஃஆன்குவல்" என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துக்கள் 14ம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா யப்பானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஃஆங்குவல் எழுத்துக்களின் நெடுங்கணக்கில் 51 எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27 கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா என்று அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் " குழந்தை ஒலி எழுத்து " (=சேய் எழுத்து) என்றும் மா என்பது " தாய் ஒலி " (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துக்கள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள். மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் நிறுவனம்("Microsoft Corporation") அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும். அல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என்ற நிலையை எட்டியது. 1986இல் வெளியிட்ட ஆரம்ப பொது விடுப்புகள் மற்றும் பிந்தைய பங்கு விலை ஏற்றங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களில் மூவரை பில்லியனர்களாகவும் 12000 பேரை மில்லியனர்களாகவும் ஆக்கியது. 1990களிலிருந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைத்தும் தன்னை இயக்குதள சந்தையிலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. 2011இல் இசுகைப் தொழில்நுட்ப நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு வாங்கியுள்ளது; இதுவரை இதுவே மிகப்பெரும் வாங்குதலாகும். 2013இல் மைக்ரோசாப்ட் தனிமேசைக் கணினி மற்றும் மடிக்கணினி இயக்குதளங்களிலும் அலுவலக திறன்பெருக்கு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளிலும் (குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் உடன்) முதன்மைநிலையில் உள்ளது. தவிர தனிமேசைக் கணினிகளுக்கும் கணிவழங்கிகளுக்கும் பல்வேறு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் இணைய தேடுபொறிகள், நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை ( எக்ஸ் பாக்ஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் 360 வழங்கல்களுடன்), எண்ணிமச் சேவைகள் சந்தை (எம்எஸ்என் மூலமாக), மற்றும் நகர்பேசிகள் (விண்டோஸ் போன் இயக்குதளம் மூலமாக) போன்றவற்றிலும் முதன்மைநிலை எய்த முயன்று வருகிறது. சூன் 2012இல் முதன்முறையாக மைக்ரோசாப்ட் தனிக்கணினி வழங்குனர் சந்தையில் தனது மைக்ரோசாப்ட் சர்பேஸ் கைக் கணினி யுடன் நுழைந்துள்ளது. 1990களில் மைக்ரோசாப்ட் முற்றுரிமை வணிகச் செயல்பாடுகளையும் போட்டிக்கெதிரான செய்முறைகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளைப் பயன்படுத்த நியாயமற்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாகவும் தவறான தகவல்களை தனது சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் பயன்படுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. அமெரிக்காவின் நீதித்துறையும் ஐரோப்பியக் குழுமமும் மைக்ரோசாப்ட் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டதாக கண்டறிந்தனர். "மைக்ரோசாப்ட்" என்ற பெயர் "மைக்ரோ கம்ப்யூட்டர் சாப்ட்வேர்" என்ற ஆங்கிலச் சொற்களின் இணைப்பாகும். சூலை, 1975இல் பில் கேட்சு பவுல் ஆல்லெனுக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலில் "மைக்ரோ-சாப்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.. தற்போதைய வடிவம் நவம்பர் 26, 1976 அன்று நியூ மெக்சிகோ மாநிலத்தில் பதியப்பட்டது.. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்டில் அமைந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் சில நேரங்களில் " ரெட்மாண்ட் நிறுவனம்" என்றழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்கு தளம் விண்டோசு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு கணினி உலகில் ஓர் சீர்தரமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 88,000 ஊழியர்கள் உலகெங்கும் பல நாடுகளில் பணி புரிகின்றனர். சனவரி 14, 2000 முதல் இசுட்டீவ் பால்மர் இதன் தலைவராக பொறுப்பில் உள்ளார். 2014 பிப்ரவரி 4ஆம் தேதி அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு இந்தியர். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திறந்த மூலநிரல் திறந்த மூல நிரல் என்பது அபிவிருத்தி, மேம்படுத்தல்கள் மூலமாக இறுதித் தயாரிப்பின் தரத்தை உயர்த்துவதாகும். இணையத்தின் வளர்ச்சியால் பரந்துபட்ட தயாரிப்பு முறைகளையும், தொடர்பாடல் முறைகளையும், சமுதாயத் தோடான உறவுகளையும் பலப் படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திறந்த மூலநிரல் மென்பொருட்களே பெரும்பாலும் வெளிவந்தன. வர்த்தக ரீதியிலான மென்பொருட் தயாரிப்புப் போன்றல்லாது திறந்த மூல நிரல் மாதிரிகள் வேறு வேறான அணுகுமுறைகளைக் கையாளகின்றன நெட்ஸ்கேப் நிறுவனத்தினர் ஜனவரி 1998 இல் அவர்களின் உலாவியான நவிகேட்டரின் மூலநிரல்களை வெளியிட்டனர். எனினும் வெளிவிடும் போது இலவசம் என்னும் சொல்லின் ஆங்கிலப் பதத்தில் உள்ள குழப்பத்தால் அவர்கள் திறந்த என்னும் பொருள் படும் Open என்னும் சொல்லைத் தெர்ந்தெடுத்து அவர்களின் மொசிலா என்னும் பெயருடன் திறந்த மூல நிரலை வெளிவிட்டனர். இதுவே திறந்த மூல நிரலின் பிறப்பு எனப் பெரும்பாலும் கருதப் படுகின்றது. எவ்வாறாயினும் இதற்கு முன்னரே இன்றைய வையக வலையின் முன்னோடியான மேம்படுத்தப்பட்ட ஆய்வுத் திட்ட அமைப்புகளின் வலையமைப்பில் கருத்துக்களைக் கேட்டறிதல் என்னும் முறை பயன்படுத்தப் பட்டது. திறந்த மூலநிரல்கள் மூலம் மென்பொருட்கள் மாத்திரம் அன்றிப் பல்வேறு சமுதாய, அரசியல் மற்றும் பல்வேறு கல்வி முறைகள் மாற்றமடைந்தன. லினக்ஸ் இயங்கு தளத்தின் ஸ்தாபகரான லினஸ் ரோர்வால்ட்ஸ் எதிர் காலத்தில் எல்லாமே திறந்த மூல நிரல்களாய் இருக்கும் என்றார். திறந்த மூல நிரல்களால் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவை அதிகரித்தன. இதனால் கட்டற்ற கலைக்கழஞ்சியமான விக்கிப்பீடியா உயிரியற்தொழில்நுட்பம் ஊடான ஆய்வுகளும் வெளிவந்தன. திறந்த மூல நிரற் தத்துவங்கள் பொதுவான உருவாக்கங்கள் என ஆங்கிலத்தில் பொருள்படும் இலும் பயன்படுத்தப் படுகின்றது. இது பொதுவாக எல்லோருமே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழ மொழிக்கமைய கூட்டு முயற்சிகளிலேயே பயன்படுகின்றது. மருந்து வகைகள்: மருந்து வகைகளைத் தயாரிப்பதில் திறந்த மூல நிரல்களைத் தயாரிப்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. மென்பொருட்களின் மூல நிரல்கள் பொதுவாக இணையத்தில் பிரசுரிக்கப் பட்டு யாராலும் பிரதியெடுக்க அனுமதிக்கப் பட்டு, மாற்றம் செய்யவோ, மீள்விநியோகம் செய்யவோ எதுவித கட்டணமோ கட்டுப்பாடோ இன்றி அனுமதி வழங்குவதாகும். திறந்த மூல நிரல்கள் சமுதாயத்தின் கூட்டு முயற்சியாலேயே விருத்தி செய்யப் பட்டு வருகின்றது. இந்தச் சமுதாயமானது தன்னியான ஓர் நிரலாக்கரையோ அல்லது மிகவும் பெரிய நிறுவனத்திலோ இருக்கும். வன்பொருளின் அமைப்புக்கள் யாவும் ஓர் மென்பொருள் வடிவத்தில் இருக்கும் இவை அநேகமாக இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு எவராலும் இதைப் பெறக்கூடியதாக இருக்கும். விக்கி விக்கி ("wiki", ) என்பது ஓர் இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களே ஏனையோருடன் இணைந்து அத்தளத்தின் உள்ளடக்கத்தைத் திருத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் ஒரு வலைச் செயலியைக் குறிக்கும். இந்த மாற்றங்கள் ஓர் இணைய உலாவியில் ஓர் எளிய குறியீட்டு மொழி அல்லது "வாட் யூ சீ இஸ் வாட் யூ கெட்" (WYSIWYG) தொகுப்பானின் உதவியுடனோ செய்யப்படுகிறது. இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களைச் செய்ய இயலும். செயல்பாட்டுக்கும் தொடர்பாடல்களுக்கும் எளிதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்குச் சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி மென்பொருளையும் குறிக்கும். விக்கிவிக்கிவெப் என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவிக்கிவெப் என்ற பெயரை வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் முதன்முதலில் இட்டார். விக்கி என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் விக்கிவிக்கி என்ற சொல்லின் சுருக்கம் ஆகும். இந்தச் சொல், செயல்களைத் துரிதப்படுத்த பயன்படுத்தப்படும் "விரைவு விரைவு" என்று பொருள் தரும் சொல் ஆகும். இந்த ஹவாய் மொழிச்சொல்லின் உண்மையான பலுக்கல் வீக்கிவீக்கி என்பதாகும். எனினும், தமிழுலகில் இவ்விணையத்தளங்கள் அறியப்பட்டபோது விக்கி என்ற ஒலிப்பே பயன்படுத்தப்பட்டதால் அதுவே நிலைத்தது. விக்கி மென்பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா தளத்தை இயக்கும் மீடியாவிக்கியைக் குறிப்பிடலாம். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டு விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களைக் குறிப்பிடலாம். இது போன்ற தளங்களைத் தவிர்த்து, விக்கி இணையத்தளங்கள் ஒரு நிறுவனத்தின் உட்பயன்பாட்டுக்கும் நிர்வாகத்துக்கும் தொடர்பாடலுக்கும் கூட உதவுகின்றன. விக்கி விக்கி வெப் என்னும் தளமே விக்கி என்றழைக்கப்பட்ட முதல் தளமாகும். வார்டு கன்னிங்காம் விக்கி விக்கி வெப்ஐ 1994இல் உருவாக்கத் தொடங்கினார், அதனை மார்ச் 25,1995இல் c2.com என்ற இணையத்தள டொமைனில் நிறுவினார். ஹானலூலூ சர்வதேச வானூர்திநிலையப் பணியாளர் ஒருவர், வானூர்திநிலைய முனையங்களுக்கு இடையே ஓடும் "விக்கி விக்கி" ஷட்டில் பேருந்தைப் பிடிக்குமாறு தன்னிடம் சொன்னதை நினைவுகூறும் கன்னிங்காமால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. கன்னிங்காமின் கூற்றுப்படி,"விரைவு-வலைத்தளம் என்று இதற்குப் பெயரிடுவதைத் தவிர்ப்பதற்காக 'விரைவு' என்பதற்கு எதுகை மோனை மாற்றாக உள்ள விக்கி விக்கியை நான் தேர்ந்தெடுத்தேன்." கன்னிங்காம் ஒருவகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஹைபர்கார்டால் கவரப்பட்டார். பல்வேறு அட்டைகளுக்கு இடையே இணைக்க உதவும் வர்ச்சுவல் "அட்டை குவியல்களை(card stacks)" உருவாக்க பயனர்களுக்கு உதவும் வகையிலான ஒரு அமைப்பை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியிருந்தது.பயனர்கள் "ஒருவருடைய உரை குறித்து கருத்து தெரிவிக்கவும் அதை மாற்றவும்" உதவக்கூடிய வானெவர் புஷ்ஷின் கருத்தாக்கத்தையே கன்னிங்காம் மேம்படுத்தினார். 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், உடனுழைப்பாளர் மென்பொருளாக விக்கிகளை நிறுவனங்களில் பயன்படுத்துவது அதிகரித்தது.திட்டத் தகவல்தொடர்பு, இண்ட்ராநெட்டுகள் மற்றும் ஆவணமாக்கல், முதலாவதாக தொழில்நுட்ப பயனர்களுக்கென்றும் ஆகியவை இதன் பொதுவான பயன்பாடுகளாகும். இன்று சில நிறுவனங்கள் தங்கள் ஒரே உடனுழைப்பாளர் மென்பொருளாகவும், நிலையான இண்ட்ராநெட்டுகளுக்கு மாற்றாகவும் விக்கிகளையே பயன்படுத்துகின்றன, மற்றும் சில பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் குழு பயில்தலை விரிவுபடுத்த விக்கிகளையே பயன்படுத்துகின்றன. பொது இணையத்தளத்தைவிட ஃபயர்வால்களுக்கு அடுத்தபடியாக விக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மார்ச் 15,2007இல் "ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரமுதலி" யில் "விக்கி " இடம்பெற்றது. வாடு கன்னிங்காமும் இணையாசிரியர் போ லியுஃப்பும் தங்களது புத்தகமான "The Wiki Way: Quick Collaboration on the web" இல் விக்கி கருத்தாக்கத்தின் சாராம்சமாக பின்வருவனவற்றை விவரிக்கின்றனர்: வலை உலாவியைப் பயன்படுத்தி, எளிய குறியீட்டு மொழியில் ஆவணங்கள் உடனுழைப்புரீதியாக எழுதப்படுவதை விக்கி சாத்தியமாக்குகிறது. விக்கி வலைத்தளத்தில் உள்ள ஒரு ஒற்றைப் பக்கம் "விக்கி பக்கம்", என்று குறிப்பிடப்படுகிறது, அதே சமயம் ஹைபர்லின்க் மூலம் வழக்கமாக நல்ல முறையில் உள்ளிணைப்பு செய்யப்படும் மொத்த பக்கங்களின் தொகுப்பும் "தி விக்கி" எனப்படும். விக்கி என்பது தகவலை உருவாக்க, உலாவ மற்றும் அதன் வழியாக தேடுவதற்கான ஒரு தரவுத்தளம் ஆகும். பக்கங்களை சுலபமாக உருவாக்கி புதுப்பிக்க முடியும் என்பதே விக்கி தொழில்நுட்பத்தின் வரையறு சிறப்பியல்பாகும். பொதுவாக, மறுபார்வை செய்யப்படுவதற்கு முந்தையை மேம்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பயனர் கணக்குகள் தேவையில்லாமலேயே பொதுமக்களால் மாற்றப்படக்கூடிய அளவிற்கு பல விக்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. சிலநேரங்களில், தானியங்கிரீதியாக எடிட் செய்வதற்கான ஒப்புதலுக்காக "விக்கி சிக்னேச்சரை" உருவாக்க ஒரு அமர்விற்கென்று லாகிங் இன் செய்வது வரவேற்கப்படுகிறது.இருப்பினும், எடிட் செய்யப்படுபவை பலவும் நிஜ நேரத்தில் செய்யப்பட்டு கிட்டத்தட்ட உடனடியாக ஆன்லைனில் தோன்றுகின்றன. இது இந்த அமைப்பு தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.தனியார் விக்கி சர்வர்கள் பயனர், பக்கங்களை எடிட் செய்யவும், சில சமயங்களில் அவற்றைப் படிப்பதற்கும்கூட பயனர் நம்பகத்தன்மையைக் கோருகிறது. பவுலஸ் எட் அல், அதாவது, "விக்கியின் திறந்ததன்மை 'டார்விக்கினிசம்' என்ற கருத்தை தருகிறது', இக் கருத்து விக்கி பக்கங்களுக்கு நிகழும் 'சமூக ரீதியான டார்வினியன்' நிகழ்வை விவரிக்கிறது. அடிப்படையில் விக்கி பக்கங்களின் திறந்த தன்மை மற்றும் அவை தொகுக்கப்படும் வேகம் இவற்றால் விக்கி பக்கங்கள் இயற்கையால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் பரினாம வளர்ச்சி போன்ற ஒரு பரிணாம தேர்வு நிகழ்வை எதிர்கொள்கின்றன. பொருத்தமற்ற வாக்கியங்கள் இரக்கமற்று நீக்கப்படுகின்றன. தொகுக்கப்பட்டு, பொருத்தமில்லையெனில் மாற்றப்படுகின்றன. இதனால் ஒரு உயர்தரமான பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து, தொடர்புடைய தரமான பக்கங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த திறந்த தன்மையால் முறையற்ற பயன்பாடு மற்றும் உண்மையற்ற தகவல்கள் அளிக்கப்படுவது நடந்தாலும், அதே காரணத்தால் தவறுகள் உடனுக்குடம் திருத்தப்பட்டு மீண்டும் தரமான விக்கி பக்கம் கிடைக்கிறது. பயனர்கள் உள்ளடக்கத்தை தொகுப்பதற்கு விக்கிகளிடம் பல்வேறு முறைகள் உள்ளன. சாதாரணமாக, விக்கி பக்கங்களின் கட்டமைப்பும் வடிவமும் ஒரு எளிதாக்கப்பட்ட மார்க்அப் மொழியால் குறிப்பிடப்படுகிறது. இது சிலபோது ""விக்கி உரை"" என்றும் அறியப்படுகிறது.உதாரணத்திற்கு, ஒரு நட்சத்திரக் குறியைக்("*") கொண்டு உரையின் வரியைத் துவக்குவது அதை ஒரு புல்லட் இடப்பட்ட பட்டியலில் பதியப்பட பயன்படுத்தப்படுகிறது. விக்கி உரைகளின் பாணியும் வாக்கிய அமைப்பும் விக்கி நடைமுறைப்படுத்தல்களுக்கிடையே பெருமளவில் மாறுபடுகின்றன. இவற்றில் சில ஹெச்டிஎம்எல் டேக்குகளைப் பயன்படுத்துகின்றன. ஹெச்டிஎம்எல்இன் பல கிரிப்டிக் டேக்குகளைக் கொண்டு இந்த அணுகுமுறையைக் கையாளுவதற்கான காரணம், தொகுப்பதற்கு இவை மிகவும் விளங்கிக்கொள்ளக்கூடியவையாக இருக்கின்றன என்பதுதான். பாணியையும் கட்டமைப்பையும் குறிப்பிடுவதற்கு ஹெச்டிஎம்எல்ஐ விட சில எளிதான முறைமைகளைப் பெற்றிருக்கும் சாதாரண உரைத் தொகுப்புக்கும் விக்கிகள் உதவிகரமாக இருக்கின்றன. ஹெச்டிஎம்எல்இன் வரம்பிற்குட்பட்ட அணுகல் மற்றும் விக்கிகளின் விழுத்தொடர் பாணித் தாள்கள் (CSS) ஆகியவை விக்கி உள்ளடக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வடிவமாக்கலை மாற்றுவதற்கான பயனரின் திறனை வரம்பிற்குட்படுத்துகிறது என்றாலும் சில பலன்களும் உள்ளன. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட்டிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகலானது தோற்றத்தையும் உணர்தலையும் சீராக இருக்கச் செய்கிறது, ஜாவாஸ்கிரிப்ட் செயல்படாமல் வைக்கப்பட்டிருப்பது பிற பயனர்கள் அணுகுவதை வரம்பிற்குட்படுத்தக்கூடிய வகையில் குறிமுறை அமல்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. பயனர்களுக்கு கிடைக்கும் வகையிலான "WYSIWYG" ("நீங்கள் பார்ப்பதையே பெறுகிறீர்கள்(What You See Is What You Get)") என்ற எடிட்டிங்கை விக்கிகள் உருவாக்கி வருகின்றன. வழக்கமாக ஜாவாஸ்கிரிப்ட் மூலமாகவோ அல்லது ஹெச்டிஎம்எல் டேக்குகள் அல்லது விக்கிஉரை போன்றவற்றோடு தொடர்புகொண்டுள்ள "போல்டு" மற்றும் "இடாலிக்ஸ்" போன்ற வடிவமாக்கல் குறிப்புகளை காட்சிரீதியாக மொழிபெயர்க்கக்கூடிய ஒரு ஆக்டிவ்எக்ஸ்கட்டுப்பாடு மூலமாகவோ, இந்த நடைமுறைப்படுத்தல்களில், புதிய தொகுக்கப்பட்ட, மார்க்அப் செய்யப்பட்ட பக்கத்தின் வடிவத்தினுடைய மார்க்அப் சர்வரிடம் வெளிப்படையாகவே உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பயனர்கள் இந்த தொழில்நுட்ப விவரத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இருப்பினும், WYSIWYG கட்டுப்பாடுகள் விக்கி உரையில் கிடைக்கின்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் எப்போதுமே வழங்குவதில்லை. எனவே சில பயனர்கள் WYSIWYG தொகுப்பானைப் பயன்படுத்த விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான இந்த இணையதளங்கள் விக்கி உரையை நேரடியாகத் தொகுக்க வழிகளை வழங்குகின்றன. பெரும்பாலான விக்கிகள் விக்கி பக்கங்களில் செய்யப்பட்ட மாற்றங்களின் பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்தப் பக்கத்தின் ஒவ்வொரு வடிவமும் சேமிக்கப்படுகிறது. உருவாக்கிய ஆசிரியர்கள் பழைய வடிவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. தவறு ஏற்பட்டிருக்கவோ அல்லது பக்கமானது வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இது அத்தியாவசியமாகிறது. பல நடைமுறைப்படுத்தல்களும் (உதாரணத்திற்கு மீடியாவிக்கிபயனர்கள் பக்கத்தை தொகுக்கும்போது "எடிட் தொகுப்பை" வழங்க அவர்களுக்கு உதவுகிறது. இது இந்த மாற்றத்தைத் தொகுக்கின்ற ஒரு சிறிய அளவிலான (சாதாரணமாக ஒரு வரி) உரைதான். இது கட்டுரையில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் திருத்தப்பட்ட பக்கத்தோடு சேமித்துக்கொண்டு, பயனர்களால் என்ன செய்யப்பட்டது, ஏன் என்று அவர்களை விளக்க அனுமதிக்கிறது. திருத்தக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு மாற்றங்களை செய்யும்போது வரும் லாக் மெஸேஜ் போன்றதுதான் இது. பெரும்பாலான பக்கங்களுக்குள்ளாக உள்ள உரையில் மற்ற பக்கங்களோடு பெரும் அளவிலான ஹைபர்டெக்ஸ்ட் இணைப்புகள் இருக்கின்றன. இந்த வடிவிலான நேர்க்கோடற்ற நகர்த்திச்செல்லல் கட்டமைக்கப்பட்ட/வடிவமாக்கப்பட்ட நகர்த்திச்செல்லல் திட்டங்களைவிட விக்கிக்கு மிகவும் "நெருக்கமானவை".பயனர்கள் படிநிலை வகைப்படுத்தல்கள்படியோ அல்லது அவர்கள் விரும்புகின்ற அமைப்பு வடிவத்தைக் கொண்டோ எந்தவித குறிப்பீடு எண் அல்லது உள்ளடக்கப் பட்டியலை உருவாக்கலாம் என்று அது கூறுகிறது. பல்வேறு உருவாக்க ஆசிரியர்கள் பக்கங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்கவும் அழிக்கவும் செய்வதால் இதை கையால் கையாளுவது சவால்மிகுந்ததாக இருக்கலாம்.இது போன்ற குறிப்பீட்டுப் பக்கங்களின் பராமரிப்பிற்கு உதவ பக்கங்களை வகைப்படுத்தவோ அல்லது டேக் செய்யவோ விக்கிகள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளை வழங்குகின்றன. பெரும்பாலான விக்கிகள் கொடுக்கப்பட்ட பக்கத்தோடு இணைக்கும் பக்கங்கள் அனைத்தையும் காட்டுகின்ற பேக்லைன் என்னும் சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கின்றன இதுவரை இல்லாத பக்கங்களோடு விக்கியில் இணைப்புகளை உருவாக்குவது தனித்துவமானது, இதன் வழியாக விக்கிக்கு புதிதாக உள்ள விஷயம் குறித்து மற்றவர்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள். "இணைப்பு முறை" எனப்படும் குறிப்பி்ட்ட வாக்கிய அமைப்பைப் பயன்படுத்தி இணைப்புகள் உருவாக்கப்படுகின்றன (மேலும் பார்க்க CURIE). உண்மையில் பெரும்பாலான விக்கிகள் பக்கங்களுக்கு பெயரிடவும் இணைப்புகளை உருவாக்கவும் கேமல்கேலைப் பயன்படுத்துகின்றன.இவை ஒரு சொற்றடரிலுள்ள வார்த்தைகளை கொட்டை எழுத்துக்களில் எழுதுவதன் மூலமும், அவற்றிற்கிடையே உள்ள வெற்றிடங்களை நீக்குவதன் மூலமும் உருவாக்கப்படுகின்றன ("கேமல்கேஸ்" என்ற வார்த்தையே இதற்கான உதாரணம்).கேமல்கேஸ் இணைப்புகளை மிக சுலபமாக உருவாக்குகின்ற அதேசமயத்தில், நிலையான எழுத்துக்களிலிருந்து மாறுபடும் வடிவத்தில் எழுதப்பட்ட இணைப்புகளுக்கும் இது வழியமைக்கிறது. கேமல்கேஸ் அடிப்படையிலான விக்கிகள் "TableOfContents" மற்றும் "BeginnerQuestions" போன்ற பெயர்களோடு பல இணைப்புகளைப் பெற்றிருப்பதால் சுலபமாக அடையாளம் காணக்கூடியவையாக இருக்கின்றன. வெற்றிடங்களை மீண்டும் சேர்ப்பதன் மூலமாக "நேர்த்தி" போன்ற இணைப்புகளுக்கான காட்சிப்படுத்தக்கூடிய ஆதாரத்தை திருப்பியளிக்க விக்கிக்கு வாய்ப்பிருக்கிறது என்பதுடன், லோயர் கேஸுக்கு திரும்பிவரும் வாய்ப்பும் இருக்கிறது. இருப்பினும், ஆதாரத்தின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கான இணைப்பை இவ்வாறு மறுநிகழ்வு செய்வது கேமல்கேஸ் தலைகீழ் மாற்றம் மூலம் ஏற்பட்ட கொட்டை எழுத்தில் எழுதுதல் தகவல் இழப்பின் மூலம் வரம்பிற்குட்படுத்தப்படுகிறது.உதாரணத்திற்கு, "RichardWagner" என்பது "Richard Wagner," என்று திருப்பியளிக்கப்பட வேண்டும், அதேசமயம் "PopularMusic" என்பது "popular music" என்று திருப்பியளிக்கப்பட வேண்டும்.எந்த கொட்டை எழுத்து கொட்டை எழுத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு சுலபமான முறை எதுவுமில்லை.இதன் விளைவாக, விக்கிகள் பலவும் அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தி இப்போது "இலவச இணைப்பைப்" பெறுகின்றன, மற்றும் சில வழக்கமாக கேமல்கேஸ் செயல்நிறுத்தம் செய்துவைத்துள்ளன. தவறிழைப்பது சிரமம் என்பதைக் காட்டிலும், தவறுகளை சுலபமாக சரிசெய்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே விக்கிகள் பொதுவாக வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறு, விக்கிகள் மிகவும் வெளிப்படையானவையாக இருக்கையில் பக்கங்களின் உள்ளடக்கத்திற்கான கூடுதல் தகவல்களை சேர்ப்பதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கான வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. கிட்டத்தட்ட எல்லா விக்கியிலும் மிகவும் முக்கியமானது, "சமீபத்திய மாற்றங்கள்" பக்கமாகும் - ஒரு திட்டவட்டமான பட்டியல் சமீபத்திய எடிட்களின் எண்ணிக்கையை அளிக்கிறது, அல்லது கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் செய்யப்பட்ட எடிட்களின் பட்டியலை அளிக்கிறது.சிறிய எடிட்களையும், தானியங்கி இறக்குமதி ஸ்கிரிப்டுகளாலும் ("போட்ஸ்(bots)") செய்யப்பட்ட எடிட்டிங்குகளையும் நீக்குவதற்கு சில விக்கிகளால் பட்டியலை வடிகட்ட முடியும். சேஞ்ச் லாக்கிலிருந்து மற்ற செயல்பாடுகள் பெரும்பாலான விக்கிகளில் அணுகப்படக்கூடியவையாக இருக்கின்றன: திருத்தல் விவரம் முந்தைய பக்கப் பதிப்புகளைக் காட்டுகின்றன என்பதோடு டிஃப்(diff) அம்சம் இரண்டு திருத்தல்களுக்கு இடையிலான மாற்றங்களையும் ஹைலைட் செய்கிறது.திருத்தல் விவரத்தைப் பயன்படுத்துவது கட்டுரையின் முந்தைய பதிப்பை எடிட்டர் பார்க்கவும் மறுசேமிப்பு செய்யவும் உதவுகிறது.இந்த டிஃப்(diff) அம்சம் இது அவசியமா இல்லையா என்பதை தீர்மானி்க்க பயன்படுத்தப்படுகிறது. "சமீபத்திய பக்கங்கள்" பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எடிட்டின் டிஃப்(diff)ஐ ஒரு வழக்கமான விக்கி பயனரால் பார்க்க முடியும் என்பதோடு, அது ஏற்றுக்கொள்ள முடியாத எடிட் என்றால் விவரத்தை ஆலோசித்து, முந்தைய பதிப்பை மறுசேமிப்பு செய்கிறது; இந்த நிகழ்முறை பயன்படுத்தப்படும் விக்கி மென்பொருளைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ எளிதாக்கப்படுகிறது. "சமீபத்திய மாற்றங்கள்" பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத எடிட்கள் தவறவிடப்பட்டிருந்தால், சில விக்கி என்ஜின்கள் கூடுதல் உள்ளடக்கக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன. அந்தப் பக்கம் அல்லது பக்கங்களின் தொகுப்பு தனது தரத்தை தக்கவைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த கண்கானிக்கப்படுகிறது.பக்கங்களை தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர் அந்தப் பக்கங்களை மேம்படுத்துவது குறித்து எச்சரிக்கப்படுவார், அத்துடன் புதிய பதிப்புகளை விரைவாக மதிப்பிட்டு சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுவார். ஒரு கவனிப்பு பட்டியல் இதன் பொதுவான அமலாக்கம் ஆகும். சில விக்கிகள், "கவனிப்புக்குட்பட்ட சரிபார்த்தல்களை" செயல்படுத்துகின்றன. இதில், தேவையான அதிகாரமுள்ள சில எடிட்டர்கள், சில தொகுப்புகளை முறையற்றவை அல்ல என குறிக்க இயலும். ஒரு "குறிக்கப்படும் சரிபார்த்தல்" அமைப்பு, மாறுதல்களை அவை உறுதிசெய்யப்படும் முன் ஆன்லைனில் வருவதை தவிர்க்கிறது. பெரும்பாலான விக்கிகள் குறைந்தது தலைப்புத் தேடுதலையாவது வழங்குகின்றன, சிலநேரங்களில் முழு உரை தேடலையும் வழங்குகின்றன.இந்தத் தேடுதலின் அளவீட்டுத்திறன் விக்கி என்ஜின் தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. பெரிய விக்கிகளில் மிக வேகமான தேடுதல்களுக்கு குறிப்பீடு செய்யப்பட்ட தரவுத்தள அணுகல் அவசியமாகும். மாற்றாக, கூகுள் போன்ற வெளிப்புற தேடு என்ஜின்கள், மிகவும் துல்லியமான முடிவுகளைப் பெறும் வகையில் வரம்பிற்குட்பட்ட தேடுதல் செயல்பாடுகளோடு சிலசமயங்களில் விக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், தேடு என்ஜினின் குறிப்பீடுகள் பல வலைத்தளங்களிலும் மிகவும் பழையதாகிவிட்டதாக இருக்கலாம்(நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள்). விக்கி மென்பொருள் என்பது விக்கி அமைப்பில் செயல்படுகிற, பொதுவான வலைத்தள பிரவுஸர்களைப் பயன்படுத்தி வலைப்பக்கங்களை உருவாக்கவும் எடிட் செய்வதற்கும் உதவுகின்ற ஒருவகையான உடனுழைப்பாளர் மென்பொருளாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெப் சர்வர்களில் செயல்படுகின்ற பயன்பாட்டு சர்வர்களாக இது வழக்கமாக செயல்படுத்தப்படுகிறது. உள்ளடக்கமானது ஆவண அமைப்பில் சேமிக்கப்படுகிறது, அந்த உள்ளடக்கத்திற்கான மாற்றங்கள் சார்புநிலை தரவுத்தள நிர்வாக அமைப்பில் சேமிக்கப்படுகிறது. மாற்றாக, பர்சனல் விக்கிகள் ஒற்றை கம்ப்யூட்டரில் தனித்திருக்கும் பயன்பாடாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு: விக்கிபேட். பொதுவானவர்களால் எடிட் செய்யப்படும் விக்கி அமைப்புகள் குறித்து விமர்சிப்பவர்கள் இந்த அமைப்புக்களில் சுலபமாக குறுக்கிட்டுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர், அதேசமயம் இதற்கு ஆதரவானவர்கள், பயனர் சமூகத்தினர் கெடுநோக்குள்ள உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்து அதை சரிசெய்துவிடுவர் என்கின்றனர். தரவு அமைப்புகள் நிபுணரான லார்ஸ் ஆரன்ஸன், முரண்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: மருத்துவ துறைக்கு தேவைப்படும் உயர்ந்த தொகுப்பு தரநிரணயங்கள், நிபுணர் சரிபார்ர்கும் விக்கி பக்கங்களுக்கு காரணமாக அமைந்தன. சில விக்கிகள் கட்டுரைகளின் குறிப்பிட்ட வர்ஷன்களுக்கு பயனர்கள் செல்ல அனுமதிக்கிறது. இது விஞ்ஞான சமூகத்துக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. இதில் சக நிபுண விமர்சகர்கள், கட்டுரைகளை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்தி நம்பத்தகுந்த வர்ஷன்களுக்கு இணைப்பை அளிக்க முடியும். நோவெக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "பங்களிப்பாளர்கள், அவர்களின் தொடர் பங்களிப்பின் அடிப்படையில், விக்கி தகவலின் தரத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள் விக்கி சமூக உறுப்பினர்களால் மதிக்கப்படுகிறார்கள். பாதகமான திகுப்புக்கு சாத்தியமுள்ள முரண்பாடுள்ள தலைப்புகளுக்கு தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் விக்கி அனுமதிக்கலாம். பெரும்பாலான விக்கிகளின் வெளிப்படையான தத்துவம் என்னவெனில், ஒவ்வொரு எடிட்டரும் நன்கறிந்தவர் என்ற உறுதிப்படுத்தல் இன்றி, உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்ய அனுமதிப்பது என்பதாகும். வேண்டுமென்றே அழிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்சினைதான். விக்கிமீடியா ஃபவுண்டேஷன் போன்றவற்றால் நடத்தப்படும் பெரிய விக்கி தளங்களில் வேண்டுமென்றே அழிக்கப்படுதல் அதிக காலத்திற்கு கவனத்திற்கு வராமலே இருந்துவிடுகிறது.விக்கிகள் அவற்றின் இயல்பின் காரணமாக "டிரோல்லிங்" எனப்படும் வேண்டுமென்றே இடையூறு செய்யக்கூடியவற்றை எளிதில் ஏற்றுக்கொள்கின்றன. வேண்டுமென்று அழிக்கப்படும் பிரச்சினையின் காரணமாக விக்கிகள் "மென் பாதுகாப்பு" அணுகலை மேற்கொள்பவையாக இருக்கின்றன; சேதத்தைத் தடுப்பதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும் சேதப்படுத்தியதை இல்லாமல் செய்வது சுலபமானது. பெரிய விக்கிகள் வேண்டுமென்றே அழிக்கப்படுவதை அடையாளம் கண்டு மீட்டெடுக்கக்கூடிய போட்ஸ்கள் போன்ற நுட்பமான முறைகளை நிறுவியிருக்கின்றன என்பதோடு ஒவ்வொரு எடிட்டிலும் சேர்க்கப்படுகின்ற கேரக்டர்களைக் காட்டும் ஜாவாஸ்கிரிப்ட் புற இணைப்புகளையும் பயன்படுத்துகின்றன. இம்முறையில், போல்ட்களால் அடையாளம் காணமுடியாத, பயனர்கள் பெருமளவில் கவனம் செலுத்தாத மிகக்குறைவாக சேர்க்கப்படும்/அழிக்கப்படும் இடத்திலுள்ள வேண்டுமென்றே அழி்க்கப்படுதலை "சிறிதளவு வேண்டுமென்றே அழிக்கப்பட்டது" அல்லது "வஞ்சகமாக வேண்டுமென்றே அழிக்கப்பட்டது" என்று வரம்பிற்குட்படுத்திக்கொள்ள முடியும். ஒரு விக்கி பெறுகின்ற வேண்டுமென்றே அழிக்கப்படுதலின் அளவு விக்கி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, சில விக்கிகள் பயனர்கள் எடிட் செய்வதற்குப் பயன்படுத்தும் ஐபி முகவரியைக் கொண்டு அடையாளம் காணப்படக்கூடிய பதிவுசெய்யாத பயனர்களை அனுமதிக்கின்றன, மற்றவை பதிவுசெய்த பயனர்களுக்கென்று மட்டும் செயல்பாட்டை வரம்பிற்குட்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலான விக்கிகள் கணக்கு இல்லாமலேயே அநாமதேய எடிட்டிங்கை அனுமதிக்கின்றன, ஆனால் பதிவுசெய்த பயனர்களுக்கு கூடுதல் எடிட்டிங் செயல்பாடுகளை வழங்குகின்றன; பெரும்பாலான விக்கிகளில் பதிவுபெற்ற பயனராக இருப்பதே சுருக்கமான எளிதான நிகழ்முறையாகும். குறிப்பிட்ட சில டூல்களுக்கு அனுமதி பெறுவதற்கு முன்பு சில விக்கிகள் கூடுதல் காத்திருப்பு காலத்தைக் கோருகின்றன. உதாரணத்திற்கு, ஆங்கில விக்கிபீடியாவில் பதிவுசெய்த பயனர்கள் தங்களுடைய கணக்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகியிருந்தால் மட்டுமே பக்கங்களை மறுபெயரிட முடியும்.போர்ச்சுகீஸ் விக்கிபீடியா போன்ற மற்ற விக்கிகள் நேரக் கோருதலுக்கு பதிலாக எடிட்டிங் கோருதலையே பயன்படுத்துகின்றன, ஒரு எடிட்டராக நம்பகத்தன்மையையும் பயன்மிக்க திறனையும் பயனர் நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எடிட்களை செய்துமுடித்த பின்னர் அவர்களுக்கு கூடுதல் கருவிகளை வழங்கிவிடுகின்றன.அடிப்படையில், "மூடப்பட்ட" விக்கிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை மிக்கவை, ஆனால் மெதுவான வளர்ச்சியுள்ளவை, அதேசமயம் மிகவும் வெளிப்படையாக உள்ள விக்கிகள் நிலையான விகிதத்தில் வளர்கின்றன ஆனால் வேண்டுமென்றே அழிக்கபடுதலுக்கு சுலபமான இலக்காக இருக்கின்றன. இதற்கான தெளிவான உதாரணமாக விக்கிபீடியாவும் சிட்டிஸண்டியமும் இருக்கின்றன.முதலாவது அதிகபட்ச அளவு வெளிப்படையானது, கணிப்பொறியும் இணையத்தள அணுகலும் உள்ள எவரையும் எடிட் செய்ய அனுமதிப்பது, விரைவாக வளர்ச்சியடைவது, இரண்டாவதாக இருப்பது பயனர்களின் உண்மையான பெயர் மற்றும் வாழ்க்கைக் குறிப்பைக் கோருவது, இது விக்கியின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது, ஆனால் பெரும்பாலும் "வேண்டுமென்றே அழிக்கப்படுதலற்ற" சூழலை உருவாக்கக்கூடியது. பல விக்கி சமூகங்களும் தனியாருடையதாக இருக்கின்றன, குறிப்பாக நிறுவனங்களுக்குள்ளாக. அவை தொடர்ந்து நிறுவனங்களுக்குள்ளிருக்கும் அமைப்புக்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான உட்புற ஆவணமாக்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சில நிறுவனக்கள் மென்பொருள் ஆவணமாக்கலை தயாரிக்க வாடிக்கையாளார்களை அனுமதிக்க விக்கிகளை பயன்படுத்துகின்றன. நிறுவன பயனர்கள், "தொகுபாளர்கள்" "சேர்ப்பவர்கள்" என இரு வகைப்படுவர் என அவர்கள் மீதான ஒரு ஆய்வு கூறுகிறது. இதர விக்கி பயனர்கள் மீது அவர்களின் தாக்கம் பொருத்து தொகுப்பாளர்கள் எவ்வளவு அடிக்கடி பங்களிக்கிறார்கள் என்பதும், தங்கள் வெலை எவ்வளவு உடனுக்குடன் செயல்படுகிறது எனப்தை பொருத்து சேர்ப்பாளார்கள் பங்களிப்[பும் இருக்கும். 2005ல் விக்கியின் புகழை கவனித்த கார்ட்னர் குழு, 2009ல் குறைந்தபட்சம் 50% நிறுவனங்களில் நடைமுறை ஒருங்கிணைவு கருவிகளாக விக்கிகள் அமையும் என மதிப்பிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச எல்லைகளுக்கிடையே, தகவல் பகிர்வு மற்றும் பரவலுக்காக கல்வி சமூகத்தினரிடையே விக்கி மிகவும் பயன்படுகிறது. இந்த அமைப்புகளில், விக்கி, நிதிகோரி எழுதுதல், திட்டமிடல், துறைசார் ஆவணப்படுத்தல், மற்ரும் வாரியப் பணிகளுக்கு மிகவும் உதவுகிறது. இடை 2000 வருடங்களில், தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கல்வி நிறுவனங்களும் மாணவர்களை ஒருங்கிணைப்பு பணியில் தயார்செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், வகுப்பறைகளில் விக்கிகளின் பயன்பாடு அதிகரித்தது. அரசாங்கம் மற்றும் சட்ட துறையிலும் விக்கிகள் பயன்படுகின்றன/. உதாரணமாக தகவல் சேகரிப்பு மற்றும் பகிர்வுக்காக வடிவமைக்கப்பட்ட மதிய புலனாய்வு நிறுவனத்தின் இண்டெலிபீடியா. குவாண்டனாமோ வளைகுடாவில், நிறுத்திவைக்கப்பட்டவர்களின் தங்குதல் குறித்த ஆவண சரிபார்ப்புக்குப் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் சங்கம் பயன்படுத்திய டிக்சோபீடியா, நீதிமன்ற சட்டங்களை அறிவிக்க மற்றும் வக்கீல்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய மற்றும் கெள்விகள் கேட்கப் பயன்பட்ட ஏழாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீடுகள் நீதிமன்றத்தின் விக்கி. நிலுவையிலுள்ள உரிமம் விண்ணப்பங்களின் பரிசோதனை தொடர்பான முன்கூட்டிய நிலவரம் அறிதலில் பொதுமக்களை ஈடுபடுத்த அமெரிக்க உரிமம் வழங்கும் அலுவலகம் விக்கியைப் பயன்படுத்துகிறது. உள்ளூர் பூங்கா வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதலில் பொதுமக்களை ஈடுபடுத்த க்வின்ஸ், நியூயார்க் விக்கியை பயன்படுத்தியது. கர்னெல் சட்டப் பள்ளி, விக்கியை அடிப்படையாகக்கொண்ட வெக்ஸ் என்ற சட்ட அகராதியை உருவாக்கியது. ஆனால் அதன் வளர்ச்சி யார் தொகுப்பது என்ற கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட விக்கிகளைப் பற்றி விவரிக்கின்ற விக்கிகளில் உள்ள பக்கங்களான விக்கிநோட்ஸ்களும் இருக்கின்றன. அவை வழக்கமாக அண்மையிலிருப்பவையாகவும் பிரதிநிதிகளாகவும் அமைக்கப்படுகின்றன. "அண்மை" யிலிருக்கும் விக்கி என்பது ஒரேவிதமான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்ற அல்லது மற்றவகையில் அதற்கு சார்புடையதாக உள்ள விக்கி மட்டுமேயாகும். "பிரதிநிதி" விக்கி என்பது அந்த விக்கிக்கான குறிப்பிட்ட உள்ளடக்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்ற விக்கியாகும். ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கான விக்கியை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி விக்கியிலிருந்து விக்கியாக உள்ள விக்கி-நோட்ஐ பின்தொடர்வதாகும்; மற்றொரு வழி விக்கி "பஸ் டூர்" செல்வதாகும், உதாரணத்திற்கு: "விக்கி" என்பதை டொமைன் பெயரில் கொண்டிருப்பவை குறிப்பிட்ட மதிப்பிடத்திற்கு உதவுவதற்கான பிரபலத்தன்மையில் வளர்ச்சியுறுபவை. தங்களுக்கு சொந்தமான விக்கியை உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பொதுவாக கிடைக்கக்கூடிய "விக்கி படிவங்கள்" இருக்கின்றன, இவற்றில் சில தனியார், கடவுச்சொல் பாதுகாப்புள்ள விக்கிகளையும் உருவாக்குகின்றன. PBwiki, Socialtext, Wetpaint, மற்றும் Wikia ஆகியவை இதுபோன்ற சேவைகளுக்கான பிரபலமான உதாரணங்கள். மேலும் தகவலுக்கு பார்க்க விக்கி படிவங்களின் பட்டியல்இலவச விக்கி படிவங்கள் பொதுவாக ஒவ்வொரு பக்கத்திற்குமான விளம்பரங்களைக் கொண்டிருக்கின்றன. விக்கிகளில் பங்குபெறும் 4 விதமான பயனர்கள் பின்வருமாறு: வாசகர், ஆசிரியர், விக்கி நிர்வாகி, வலைதள நிர்வாகி. வலைதள நிர்வாகி, விக்கி என் ஜின் மற்றும் வலைதள சர்வரை நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்புடையவர். விக்கி நிர்வாகி விக்கி உட்பொருளை நிர்வகிக்கிறார். இவர் பின்வரும் கூடுதல் செயல்களையும் செய்கிறார்: பக்கங்களை பாதுகாத்தல், நீக்குதல். பயனர்களின் உரிமைகளை சரி செய்தல். உதாரணமாக அவர்களை பக்கங்களை தொகுப்பதிலிருந்து தடுப்பது. உலகளாவிய வலைத்தளத்தில் உள்ள விக்கிகளிடையே ஆங்கில மொழி விக்கிபீடியாவிற்கு பெரிய அளவிலான பயனர் அடித்தளம் இருக்கிறது, அது போக்குவரத்து வரையறையின் அடிப்படையில் அனைத்து வலைத்தளங்களுக்கிடையே முதல் பத்து தரநிலையில் இருக்கிறது. மற்ற பெரிய விக்கிகள் விக்கிவிக்கிவெப், மெமரி ஆல்ஃபா, விக்கிடிராவல், வேர்ல்டு66 மற்றும் சன்ஸ்னிங்.என்யு, ஸ்வீஷ்-மொழி அறிவுத்தளம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கின்றன. மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விக்கி உதாரணங்கள்: ப்ளூ விக்கி: ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா கொள்ளை நோய் தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் சுகாதார சமூகங்களை தயார்படுத்த மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவி செய்தது. கன்பைட்: மருத்துவ நிபுணர்கள் தொகுத்த, மருத்துவ துறை சாரா நிபுணர்களையும் வரவேற்ற ஒரு ஆன்லைன் ஒருங்கிணைந்த மருத்துவ தகவல் தளம். ஒரு குரிப்பிட்ட ளவிலான உட்பொருளுக்கு அதிக எண்ணிக்கை நிர்வாகிகள் வளர்ச்சியை பாதிக்கும் என பல் நூரு விக்கிகளின் மேலான ஆய்வு தெரியப்படுத்தியுள்ளது. தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அளிப்பதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இது போன்ற கட்டுப்பாடுகள் அற்ற சூழல், புதியபயன்ர்களின் பதிவை அதிகரிக்கும். இதனால் அதிக நிர்வாகிகள் விகிதம் உட்பொருளின் மீதோ பயனர்கள் எண்ணிக்கை மீதோ தாக்கம் ஏற்படுத்தாது. விக்கிகள் ஆராய்ச்சிக்குரிய ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கிறது. நன்கறியப்பட்ட இரண்டு விக்கி மாநாடுகளாவன விக்கி மென்பொருள் அல்லது அதன் மாறுபாடுகளைப் பயன்படுத்தும் பல்வேறு சிறிய அளவிலான கல்வித்துறை சமூகங்களும் இருக்கின்றன. விக்கிடாட்ஸின் 'தத்துவ விசாரணைகள்' நன்கறியப்பட்ட ஒன்றாகும். லண்டன் டைம்ஸ் உயர்கல்வித்துறை செய்தித்தாளில் ஏப்ரல் 2009இல் வெளிவந்த கட்டுரையில், தத்துவவாதியான மார்டின் கோஹன், இந்த 'பாட்டம்அப்' மாதிரியானது விக்கிபீடியா மற்றும் சிட்டிஸண்டியம் போன்று பேராவலுள்ள "எல்லா அறிவுக்குமான நூலகம்" என்ற இடத்தை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் என்று முன்னுரைத்திருந்தார். சட்டங்கள் பயனர் நடவடிக்கையை கட்டுப்படுத்த விக்கி சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. பின்வரும் 5 விதிமுறைகளைக் கொண்ட கொள்கைகளை விக்கிபீடியா கடைபிடிக்கிறது. விக்கிபீடியா ஒரு நடுநிலைமை கொண்ட கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிபிடியா ஒரு இலவச தகவல் தளம். விக்கிபீடியா பயனர்கள் மரியாதையான நாகரீகமான முறையில் தொடர்புகொள்ளவேண்டும். விக்க்கிபீடியாவிற்கு நிலையான சட்டங்கள் கிடையாது. பல விக்கிகள் சூழலுக்கேற்ப விதிகளை மாற்றிக்கொண்டுள்ளன. உதாரணமாக வரலாற்று காலங்களை குரிப்பிடுகையில் தன் பயனர்கள் பி.சி இ க்குப் பதிலாக பி.சி என்றுதான் பயன்படுத்த வேண்டுமெனவும் பயனற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் கன்சர்வபீடியா வலியுறுத்துகிறது. ஒரு ஆசிரியர் தன் விக்கி வகுப்பிற்கு பின்வரும் கட்டளையைச் சொல்கிறார்: "நீங்கள் விக்கிக்கு என்ன செய்கிறீர்களோ அதனை விக்கி மற்றவர்களுக்கு செய்கிறது" போர்லாண்ட் போர்லாண்ட் மென்பொருள் நிறுவனம் (முன்னர் பொர்லாண்ட் சர்வதேச நிறுவனம்) ஸ்கொட்ஸ் பள்ளத்தாகு, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இது நன்கு பிரசித்தி பெற்ற ரேபோ பஸ்கால் நிரலாக்கல் மொழியானால் வளர்ந்த இன்றைய டெல்பி மொழியினால் பிரபலமாகியுள்ளது. 1981 ஆகஸ்டில் ஓர் மிகச்சிறிய நிறுவனமாக அயர்லாந்தில் மூன்று டென்மார்க் நாட்டவர்களால் ஆரம்பிக்கப் பட்டது. போர்லாண்ட் சர்வதேசம் ஓர் தனியர் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாறி பொது நிறுவனமாக 2 மே 1983 இல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப் பட்டது.பிலிப்பி ஹான் என்னும் அமெரிக்கரைத் தலைவராகக் கொண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது. பிலிப்பி ஹான் தொடர்ச்சியாக மென்பொருட்களை விருத்தி செய்யும் கருவிகளை வெளிவிடுவதன் மூலம் போர்லாண்டை வெற்றி கரமாக வழிநடத்தினார். இதன் முதலாவது பதிப்பான ரேபோ பஸ்கால் அண்டரஸ் ஹிஜல்ஸ்பேர்க் இனால தயாரிக்கப் பட்டது. 1984 இல் கணினியின் நினைவகத்தில் இருந்து பணியாற்றும் கணிப்பான், நேர ஒழுங்கமைப்பு, குறிப்புப் புத்தம் ஆகியன உள்ள சைட்கிக் மென்பொருளை உருவாக்கினார்கள். 1987 செப்டம்பரில் அனாசா மென்பொருள் நிறுவனத்தை அதன் தகவற் தளக் கருவியான பரடொக்ஸ் உடன் வாங்கியது. 1989 இல் வரைபடங்களைக் காட்டும் குவாட்டறோபுறோ எனும் மென்பொருளையும் உருவாக்கினார்கள். ரேபோ பஸ்கால் வெளிவரமுன்னர் நிரலாக்கல் மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய மைக்ரோசாப்ட் போர்லாண்டின் ரேபோ பஸ்கால் வருகையைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் இயங்குதளங்கள், பாவனைக்குதவும் மென்பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர் ஏனெனில் ரேபோ பஸ்காலின் கூட்டிணைந்த மென்பொருளை உருவாக்கும் சூழலானது மைக்ரோசாப்ட்டின் தூய வரிக்கு வரி மொழிபெயர்க்கும் இண்டபிறிட்டர், மற்றும் கம்பைலர்கள் , விடச் சிறந்ததாக இருந்தது. 1981 செப்டெம்பரில் போர்லாண்ட் அஷன்ரேற் நிறுவனத்தில் இருந்து dBase ஐ வாங்கிக் கொண்டது. இதை வாங்கும் போது கொடுத்த அபரிமிதமான விலையே தொடர்ந்த நிதி நெருக்கடிகளிற்குக் காரணமாக அமைந்தது. விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் மைக்ரோசாப்ட்டும் இதற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்னும் மென்பொருளை வெளியிடுவதோடு நிற்காது dBase உடன் ஒத்தியங்கிய FoxPro ஐயும் வாங்கி "போர்லாண்டை"' விட விலைக்குறைப்புச் செய்து விற்பனை செய்தனர். வர்த்தகரீதியான சந்தைப் படுத்தலைக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட்டை விட போர்லாண்ட்டின் சி++ நிரலாக்கல் மொழி மற்றும் ObjectPAL நிரலாக்கல் மொழியுடன் விருத்தி செய்யப்பட்ட பரடொக்ஸ் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் இலும் சிறந்ததாகக் கருதப் பட்டது. 90 களின் நடுப்பகுதியில் போர்லாண்ட் மென்பொருட் கருவிகளைச் செய்யும் நிலையில் முதலாமிடத்தில் இருந்து கீழ் தள்ளப்பட்டது. இதற்குச் சிலர் மைக்ரோசாப்ட்டே காரணம் எனக் குறை கூறினர். 1995 இதன் தலைவரான பிலிப்பி ஹானைப் பதவி நீக்கம் செய்தனர். அண்டரஸ் ஹிஜல்ஸ்பேக்கினால் டெல்பி துரித மென்பொருளை உருவாக்கும் கருவியானது அறிமுகம் செய்யப் பட்டது. போர்லாண்டின் தற்போதைய தயாரிப்புக்கள் பாலியர் நேசன் (சஞ்சிகை) பாலியர் நேசன் என்பது யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்காக வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். இவ்விதழ் நவம்பர் 1859ம் ஆண்டில் வணக்கத்துக்குரிய ஈ. ஹேஸ்டிங்ஸ் ("Rev. E. Hastings") என்பவரால் அமெரிக்கன் மிஷனின் "சாண்டேர்ஸ் அண்ட் ஹிட்ச்கொக்" தாபனத்தின் (Messrs. Sanders and Hitchcock) உதவியுடன் வெளியிடப்பட்டது. இதுவே ஈழத்து சிறுவர் சிற்றிதழ் வரலாற்றில் முதற்படியாக விளங்குகிறது. இது பெரிய தாளில் நான்கு பக்கங்களுடன், இரண்டாக மடித்து வெளிவந்தது. இதன் விலை அன்றைய நாளில் எட்டு அணாவாகும். வைகை வைகை அல்லது "'வைகையாறு" என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற மிக வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ. இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேகமலையின் விளம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு வெள்ளிமலையாறுடன் இணைகிறது. இதனுடன் கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான் வைகை, பெரிய ஆறாகிறது. மலையில் இருந்து இறங்கிய வைகையானது, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது. பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும். இதன் வறட்சிக்கு காரணமாக வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும் அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் (தேக்கடி) தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வராதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனலாம். இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும் சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன்(வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனி க்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாராக பயணிக்கிறது.இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாராக வைகை அணையைச் சென்று அடைகிறது. மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும். 1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது. இந்த அணை ஆங்கிலப் பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது இதன் ஆரம்பம் கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது. இது கேரள தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சனைத் தொடர்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் ஆழம் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும். தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன. இந்து சமயப் புராணங்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறும்.வடமொழி நூல்கள் வைகையை ""க்ருதமாலா" நதி என்று குறிக்கின்றன. இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" இடறுவது கண்கூடு. மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு. மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும்போது திருமணம் முடிந்துவிட்டது எனக் கேட்டு வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அதே மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு, உணவு உண்ண வந்த குண்டோதரனின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகை யைப்ப யன்படுத்தியதாகவும் கூறுவர். வைகை ஆற்றுக்கு இரண்டு வழிகளில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிளிருந்து உருவாகும் வள்ளல் நதி (இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர்). இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள். ஆனால் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்க்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன. இந்த ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நகரங்களின் கழிவு நீரும் இந்த ஆற்றுடன் கலக்கும் படியான கழிவு நீர் வடிகால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே இந்த ஆற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது. பாக்கு நீரிணை பாக்கு நீரிணை தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். மேட்டுப்பாங்கான ஆதாம் பாலம் இதனை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. இது 53 முதல் 80 கி. மீ (33 முதல் 50 மைல்) அகலம் உடையது. இந்த நீரிணைக்கு மதராசு மாகாணத்தின் ஆளுனராக (1755 - 1763) இருந்த சர் இராபர்ட் பாக் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் விஸ்டா விண்டோஸ் விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கு பிந்தைய வர்த்தகரீதியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹார்ன் என அறியப் பட்டது.. விண்டோஸ் விஸ்டாவின் விருத்தியானது 8 நவம்பர் 2006 இல் முழுமையடைந்தது. இதை அடுத்துக் கட்டம் கட்டமாகப் வன்பொருள், மென்பொருள் விருத்தியாளர்கள், வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி விஸ்டாவின் வர்த்தகப் பதிப்பு நவம்பர் 2006 இலும் உலகளாவிய ரீதியில் ஜனவரி 30, 2007 இலும் வெளிவந்தது. இந்தப் பதிப்பானது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி வெளிவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. இத்திட்டமானது கணினி வரலாற்றிலேயே மிகப் பெரியதும் மிகப் பணச் செலவானதுமான ஓர் திட்டமாகும் தவிர இதுவே விண்டோஸ் வரலாற்றில் ஓர் சந்ததி இயங்குதளங்களுக்கிடையிலான மிகக்கூடுதலான காலம் எடுத்த இயங்குதளமும் ஆகும். "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த இயங்குதளத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர். விண்டோஸ் விஸ்டாவானது புதிய பல வசதிகளைக் அறிமுகப் படுத்துகின்றது. ஏரோ() என்றழைக்கப்படும் மேம்படுத்தப் பட்ட படங்களுடனான பயனர் இடைமுகம் ("Graphical user interface") மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடற் தொழில் நுட்பம், வீட்டு வலையமைப்பில் கணினிகளிற்கிடையே தொடர்புகளை அதிகரிக்க தொழில்நுட்பத்தினூடாக கோப்புக்களைப் பகிர்தல் இலகுவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் பிரதித் தலைவரும் விஸ்டா விற்குப் பொறுப்பானவருமான ஜிம் ஆல்சின் ஓராயிரத்திற்கு மேற்பபட்ட புதிய வசதிகளும் தொழில் நுட்பங்களும் இதில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 12 ஆண்டுகளிற்கு முன்னர் வெளிவந்த வின்டோஸ் 95 இலிருந்து விண்டோஸ் மேம்படுத்தல் இதுவாகவே இருக்கும் என்றார். மைக்ரோசாப்டின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இயங்கு தளங்களின் பாதுகாப்பு இருக்கும். விண்டோஸ் XP இயங்குதளத்தின் முக்கிய குறைகளாக கணினி வைரஸ், கெட்டமென்பொருட்கள், buffer overflows ஆகியவைகளே இருக்கின்றன. தமிழ் உட்பட இந்திய மொழிகளை இதன் முந்தைய பதிப்புப் போன்று கட்டுப்பாட்டுப் பலகத்தினூடாக சிக்கலான சிறுநிரல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இது நேரடி ஆதரவினையும் வழங்குகின்றது. சிங்களம் முதன் முறையாக விண்டோஸ் கணினிகளில் ஒருங்குறி முறையில் விஸ்டாவூடாக ஆதரவளிக்கப்படுகின்றது. வேகமாகத் தேடும் பாளம் ("quick search pane") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை தட்டச்சு செய்து அதனுடன் தொடர்பான கோப்புகளின் பெயர்களைப் பெறலாம். தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை கோப்புறைகளாக சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த கோப்புறைகள் புதுப்பிக்கப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி கோப்புறையை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த கோப்புறையில் சேர்க்கப்படும். இனி சிறு உருவங்கள் ("icon") கோப்பு வகையைக் குறிக்காது. ஒவ்வொரு கோப்பின் உரையைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் ஆவணத்தின் சிறுஉருவம் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த சிறுஉருவ படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை கோப்பில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும். விண்டோஸ் விஸ்டா மடிக்கணினி இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. இயங்குதளத்தை இயக்காமல் கூட ஒரு மடிக்கணினி ஏற்கனவே அமைக்கப்பட்ட தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும். வலையமைப்பில் இணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கணினிகளின் அனைத்து கோப்புகளையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கணினியில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள இசைக்கோப்புகளையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும். விண்டோஸ் விஸ்டா 6 பதிப்புக்களாக வெளிவந்துள்ளது. அவையாவன விண்டோஸ் விஸ்டாவை நிறுவக்கூடிய கணினிகள் இரண்டாக வகைப்படுத்தப்படும் அவையாவன விஸ்டாவை நிறுவக்கூடியது, விஸ்ட்டாவிற்குத் தயாரானது. விஸ்டாவின் அடிப்படையான (பேசிக்) இடைமுகமும் மற்றும் விண்டோஸ் சம்பிரதாய (கிளாசிக்)இடைமுகமும் அநேகமாக எல்லா விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை ஆதரிக்கும் ஒளிஅட்டைகள் (வீடியோ காட்ஸ்) இவற்றையும் ஆதரிக்கும். விண்டோஸ் 2000 உம் விண்டோஸ் எக்ஸ்பியுமே விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்தக் கூடியவை. ஏனைய பதிப்புக்களை விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்த இயலாது. எனினும் அக்கணினியானது வன்பொருட் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால் நேரடியாக புதிய துப்பரவான நிறுவலை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா தமிழ் உட்பட பல இந்திய மொழிகளை ஆதரித்தாலும் அவை நேரம் மற்றும் திகதியினைக் காட்டும்போது திகதியின் ஒருபகுதியை மாத்திரமே காட்டும் இப்பிழையானது விண்டோஸ் 2000 காலப் பகுதியில் இருந்தே வழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இக்குறைபாடானது இற்றைவரை தீர்க்கப்படவில்லை. தவிர விண்டோஸ் விஸ்டாவுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் காலண்டரிலும் இக்குறைபாடுண்டு. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை ("proportional representation") என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில், வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதாம். அதேவேளையில் நேரடி தேர்தல் முறைக்கு மாற்றான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (விபி) (Proportional Representation-PR) குறித்து இங்கு காணலாம். அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன. நேரடித் தேர்தல் முறையில் ஒரு தொகுதிக்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிகபட்ச வாக்குகளைப் பெறுகிற வேட்பாளர் வாகை சூடுகிறார். இது நேரடியானது, பழக்கமானது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைச் சுவீகரித்த இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளிலும், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்போதும் அமலில் இருப்பது. ஆகவே, பல ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் விபி முறை நமக்கு அன்னியமானதாகத் தெரிகிறது. விபி முறையில் பல வகைகள் இருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் விபி முறையின் ஆதார விதி எளிதானது. எல்லாக் கட்சிகளும் அவை பெறுகிற வாக்குகளுக்கேற்ப சட்டப்பேரவையில் இடம் பெற வேண்டும். அதாவது 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி, 100 இடங்கள் உள்ள பேரவையில் 40 இடங்களைப் பெற வேண்டும். ஒரு தேர்தலில் கட்சி-அ 40% , கட்சி ஆ 30%, கட்சி-இ 20% சுயேச்சைகள் 10% பெற்றால் மொத்தமுள்ள 100 இடங்களில் இந்த அணிகள் நியாயமாக முறையே 40,30,20,10 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடப்பு நேரடித் தேர்தல் முறையில் கட்சி அ மட்டுமே 100 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளது. 40% வாக்கு மட்டுமே பெற்ற கட்சி 60 % மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சியமைக்கிறது ஒவ்வொரு முறையும் ஆட்சி அமைக்கும் கட்சி, அவர்கள் பெறுகிற வாக்கு விகிதத்தைக் காட்டிலும் அதிகமான இடங்களைப் பெறுகிறது. எதிர்க்கட்சியின் நிலை நேரெதிர். ஆனால் இன்று பாதிக்கப்படும் கட்சி, நாளை இதே நேரடித் தேர்தல் முறையால் ஆட்சி பீடத்தை அடைய முடியும். இது பெரிய கட்சிகளுக்குச் சாதகமானது. நேரடித் தேர்தலில் எப்போதும் பாதிக்கப்படுபவை சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள். கூட்டணிகளால் சிறிய கட்சிகளின் உண்மையான பலம் புலப்படுவதில்லை. அவை தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்தாலும், அது வெற்றிக் கோட்டை அடைவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. மூன்றாவது அணியினர் வாக்குகளைப் பிரிக்கும் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் நியாயமான விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான் விபி முறையின் ஆதார நோக்கமாக இருந்தபோதும், பல நாடுகளில் பலவிதமான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மிகுதியும் பின்பற்றப்படுவது "பட்டியல் வாக்கு முறை". இதில் தொகுதிகள் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 10 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தொகுதியில் உள்ள மொத்த இடங்களுக்குப் போட்டியிடலாம். 5 இடங்கள் உள்ள தொகுதிக்கு 5 வேட்பாளர்களை ஒரு பட்டியலின் கீழ் அவை களத்தில் இறக்கலாம். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடலாம். வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கல்ல பட்டியலுக்கே வாக்களிப்பார்கள். எடுத்துக்காட்டாக, 5 இடங்கள் உள்ள தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன எனலாம். அப்போது ஓர் இடத்தைப் பெறுவதற்கு 1,00,000/5 = 20,000 வாக்குகள் தேவை. இது தொடக்க நிலை மதிப்பு எனப்படுகிறது. முதல் சுற்றில் பெறுகிற ஒவ்வொரு 20,000 வாக்குகளுக்கும் 1 இடம் கிடைக்கும். கீழே உள்ள அட்டவணையில் கண்டபடி, 38,000 வாக்குகளைக் கட்சி - 1 பெறுவதாகக் கொண்டால், முதல் சுற்றில் அது 1 இடத்தைப் பெறும். கட்சி - 1 பெற்ற வாக்குகளில் 20,000ஐக் குறைத்தால், கிடைக்கும் எஞ்சிய 18,000 வாக்குகள் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 2, 17,000 வாக்குகள் பெறுகிறது. அது தொடக்கநிலை மதிப்பைக் காட்டிலும் குறைவானதால், அது பெற்ற வாக்குகள் அனைத்தும் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 3 முதல் சுற்றில் 1 இடத்தைப் பெறும். இப்போது இரண்டாம் சுற்றில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி - 1இன் இரண்டாம் வேட்பாளரும், கட்சி - 2இன் முதல் வேட்பாளரும், பட்டியல் - 4இன் சுயேச்சை வேட்பாளரும் தேர்வு பெறுவர். இந்த முறையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் உள்ள இடைவெளி குறைவு என்பதை அட்டவணையில் காணலாம். பதிவான வாக்குகள்:1,00,000, இடங்கள்:5, தொடக்க நிலை மதிப்பு: 1,00,000/5 = 20,000 இந்த எடுத்துக்காட்டில் வேட்பாளர்களின் வரிசை, கட்சிகள் முன்னதாகவே நிச்சயித்துக் கொள்வதாகும். இது "நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் வாக்கு முறை" எனப்படுகிறது. பட்டியலைத் தேர்வு செய்வதோடு, குறிப்பிட்ட பட்டியலில் உள்ள வேட்பாளர்களுள் ஒருவரையும் தெரிவு செய்வது "திறந்த பட்டியல் வாக்கு முறை" எனப்படும். ஒவ்வொரு பட்டியலிலும் தேர்வு பெறத் தகுதியானவர்களின் எண்ணிக்கை மேற்சொன்ன முறையில் தீர்மானிக்கப்படும். பின்னர் குறிப்பிட்ட பட்டியலில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவாவார். பட்டியல் வாக்கு முறையின் மாறுபட்ட வடிவங்களே, நெதர்லாந்து, பின்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, போலந்து, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும், தென் ஆப்ரிக்காவிலும், இஸ்ரேலிலும் பின்பற்றப்படுகின்றன. விபி முறையின் இன்னொரு வடிவமான "கலப்பு உறுப்பினர் விகிதாசார முறை"யில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 வாக்குகள் இருக்கும். சட்டப்பேரவையில் சரி பாதி உறுப்பினர்கள் முதல் வாக்கின் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டாம் வாக்கு கட்சிகளுக்கு அளிக்கப்படும். கட்சிகள் தாம் பெற்ற வாக்கு விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பேரவையின் மீதமுள்ள பாதி இடங்களை நிரப்புவார்கள். ஜெர்மனி, நியூஸிலாந்து, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகளில் இந்த முறை அமலில் இருக்கிறது. "மாற்றத் தக்க வாக்கு முறை" என்பது இன்னொரு வகை. அயர்லாந்து, மோல்டோவா ஆகிய நாடுகள் இதைப் பின்பற்றுகின்றன. நேரடித் தேர்தல் முறையிலேயே பழக்கப்பட்டுவிட்டதால், விபி முறையும் அதன் பல்வேறு வகைகளும் தொடக்கத்தில் குழப்பமிக்கதாகத் தோன்றலாம். உறுப்பினர்கள் பெறும் இடங்களை நிர்ணயிப்பது ஒருக்கால் சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் வாக்களிக்கும் முறை எளிதானது; நேரானது. வாக்காளர்கள் விபி முறையின் நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஒரு குறுந்தகட்டில் பிடித்தமான பாடலை ரசிப்பதற்கு அதன் மின்னணுவியல் தெரிய வேண்டியதில்லை என்கிறார் விபி ஆதரவாளரான அமெரிக்க அரசியல் விஞ்ஞானி டக்ளஸ் ஜே அமி. மேற்கு நாடுகளில் விபி முறை பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் வாக்குகள் வீணாவாதில்லை. இந்தியாவில் இதைப் பெரிய கட்சிகள் ஆதரிக்கப் போவதில்லை. சிறிய கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், விபி முறையின் சாதகங்களைப் படிப்படியாகப் பிரசாரம் செய்யலாம். இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1977 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன. தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது. இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும். இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது. முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும். அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன. மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்கு வழங்கப்படும். இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன. அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும். தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 6. எனவே: கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க: இப்பொழுது கட்சி நிலைவரம்: மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும். முடிவில் கட்சி நிலைவரம்: வேங்கை ஜிமெயில் டிரைவ் ஜிமெயில் டிரைவ் என்பது மைக்ரோசாப்ட் இன்டெர்நெட் எக்ஸ்புளோளர் உலாவியின் ஓர் இலவச நீட்சியாகும். இது ஜிமெயில் மின்னஞ்சல் உள்ள கணினிகளின் வலையமைப்பில் ஓர் பகிரப்பட்ட இடமொன்றை உருவாக்குகின்றது. கணினிகளின் தட்டுக்களில் செய்வதைப் போன்றே நகலெடுத்தல் ஒட்டுதல் போன்றவற்றைச் செய்ய இயலும். ஜிமெயில் ட்றைவ் அஞ்சற்பெட்டி ஜிமெயில் மின்னஞ்சலின் கணக்கினைப் பயன்ப்டுத்தி கோப்புகளைப் பாவிக்கும் முறையாகும். இம்முறை ஜிமெயிலைப் பாவிப்பதால் ஜிமெயிலிலுள்ள அதே கட்டுப்பாடுகள் இங்கும் உண்டு. ஜிமெயில் தனித்து இயங்கக்கூடிய கோப்புக்களையும் மற்றும் சுருக்கப் பட்ட கோப்புக்களையும் கோப்பு நீட்சிப் பெயரை மாற்றி அமைப்பதன் மூலமோ RAR முறையிலோ 7ZIP கோப்புமுறையில் சுருக்கப்பட்ட கோப்புக்களோ சேமிக்க இயலும். மேலும் 20 மெகாபைட் இற்கு மேற்பட்ட கோப்புக்களை ஜிமெயில் அனுமதிக்காது என்பதால் அதை இங்கும் பயன்படுத்த முடியாது. அவ்வாறு 20 மேகாபைட்டிற்கும் மேற்பட்ட கோபுகளை தகவலேற்ற செய்ய வேண்டின், கோப்புகளை கோப்பு பிரிப்பான்(File Splitter) மூலம் சிறு சிறு பகுதிகளாக பிரித்துவிட்டு, அப்பகுதிகளை தகவலேற்றம் செய்யலாம் ஜிமெயில் டிரைவ் ஓர் பயனர் கணக்கில ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளிளூடாக இணைந்து கொள்ளும் வசதிகள் உள்ளது. இது பாதுகாப்புக் குறைவானது எனினும் பல பயனர் உள்ள கோப்பு வழங்கி அல்லது சேவரைப் போன்றும் தொழிற்படும். ஜிமெயில் ட்றைவ் தொழிற்படுவதற்கு பயனரின் கணினி இணையத்துடன் இணைக்கப்ட்டு ஜிமெயில் மின்னஞ்சலும் இருக்க வேண்டும். அகலக்கற்றை (broadband) இணைய இணைப்பு இருப்பதுதான் நடைமுறையில் சாத்தியமாகும். ஜிமெயில் டிரைவ் அவ்வப்பபோது மின்னஞ்சலைச் ஆய்வுசெய்து ஏதேனும் புதிய கோப்புக்கள் வந்துள்ளனவா என்று பார்த்து அதன் கோப்புறை அமைப்பை மீளமைத்துக் கொள்ளும். ஜிமெயில் டிரைவ் ஓர் சோதனைப் மென்பொருளே. இது ஜிமெயிலின் பிரயோக நிரலாக்க இடைமுகத்தில் (API)-இலேயே தங்கியுள்ளது. ஜிமெயில் தமது பிரயோக நிரலாக்க இடைமுகத்தை மாற்றினால் இது செயலிழந்து போகலாம் எனினும் ஜிமெயில் ட்றைவும் ஜிமெயில் மாற்றங்கள் ஏற்றபட ஏற்பட அதற்கேற்ப மாற்றங்களைத் தொடர்ந்து செய்துள்ளதோடு இனியும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தவிர அப்படியே மாற்றங்கள் செய்யமுடியாவிட்டாலும் கோப்புக்கள் அங்கேயேதான் மின்னஞ்சலில் இருக்கும் என்பதால் மீள்விப்பதில்(திரும்பப்ப்பெருவதில்) சிரமம் ஏதும் இருக்காது. ஜிமெயில் டிரைவைப் பாவிப்பது ஜிமெயிலின் சேவை நிபந்தனைகளை மீறுவதாக அமையலாம். ஜிமெயில் ட்றைவ் கூகிளின் சேவை அன்று. இது மூன்றாம் தரப்பில் இருந்து பெறப்படும் சேவையாகும். எனவே ஜிமெயில் பயனர்கள் தமது ஜிமெயில் பற்றிய விபரங்களை மூன்றாம் தரப்பிற்கு பகிரப்படுகின்றது. ஜிமெயில் டிரைவ் அதிகாரப்பூர்வத் தளம் திறந்த மூல அறிவுத்திறன் திறந்த வழிகளில் இருக்கும் தகவல்கள்களை அல்லது அறிவுத்திறன் வடிகட்டி திரட்டப்படுவது திறந்த மூல அறிவுத்திறன் (Open Source Intelligence) எனலாம். இணையத்தின் ஆரம்பத்தில் பல மன்றங்கள், தளங்கள், மின் அஞ்சல் குழுக்கள் திறந்த மூல அறிவுத்திறனை முன்நிறுத்தியே இயங்கின. எனினும், காலப்போக்கில் அவை துர்பிரயோகத்து உள்ளாகி சிதறி போய்விட்டன. அதன் பின்னர் திறந்த மூல அறிவுத்திறன் திரட்டல், வகுத்தில், பகிரலுக்கு ஒரு ஒழுங்கிய முறை தேவை என்பது புரிந்தது. கொக்கான் கொக்கான் தரையில் இருந்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். இந்தியாவில் இவ்விளையாட்டை சொட்டாங்கல் அல்லது சொட்டாங்காய் என்பார்கள். இவ்விளையாட்டுக்குச் சமதரை முக்கியமானது. முந்திய காலங்களில் மூன்று சல்லிக்/கூழாங் கற்களையோ அல்லது ஐந்து சல்லிக்/கூழாங் கற்களையோ வைத்துத்தான் கொக்கான் வெட்டியுள்ளார்கள். காலப்போக்கில் கோலியின் வரவுக்குப் பின் இரண்டு கற்களும், ஒரு கோலியும் அல்லது நான்கு கற்களும், ஒரு கோலியும் என்று வைத்து விளையாடும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. கோலியோடு விளையாடும் போது ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் விளையாடுவார்கள். சீமெந்து விறாந்தை கோலியோடு கொக்கான் வெட்டுவதற்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் கோலி மேலெழும்பாது. கொக்கான் வெட்டுவதற்கு ஒரு கோலியும், இரு சிறிய கற்களும் அல்லது ஒரு கோலியும், நான்கு சிறிய கற்களும், அல்லது மூன்று/ஐந்து சல்லிக்/கூழாங் கற்களும் சமதரையும் வேண்டும். முதலில் கைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு கோலியை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு கோலியை ஏந்த வேண்டும். கோலியை இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ, நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ, கோலியை பிடிக்காமல் விட்டாலோ, பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார். எந்தக் கட்டத்திலும் கோலி இருதரம் தரையைத் தொடக் கூடாது. இரண்டாவதாக, கோலியை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். கோலி நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு கோலியை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் கோலியை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும். மூன்றாவதாக, இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே கோலியையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது கோலி கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார். நான்காவதாக, இரண்டாவது, மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.) ஐந்தாவதாக, கற்களைப் போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டாது விட்டால் கோலியை விட்டு விடுவீர்கள். ஆறாவதாக, நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும். ஏழாவதாக, ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும். எட்டாவது, (பழம்) கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் விளையாடுபவர் தோற்றவராவார். ஒவ்வொரு முறையும் ஒருவர் தோற்று விட்டால் அடுத்தவர் தான் தோற்ற இடத்திலிருந்து தொடர வேண்டும். ஓமின் விதி ஒரு மின்கடத்தியில் மின்னழுத்ததைக் கொடுக்கும் போது, அதில் மின்னோட்டம் நடை பெறுகின்றது. அந்த மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, "R" என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின்(எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, "V" என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, "I" என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: இந்தக் கருத்தை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற செருமானிய அறிஞர் 1827-இல் முன் வைத்தார்.அவர் கூறிய இக் கருத்து "ஓமின் விதி" என்று பின்னால் வழங்கப் பட்டது. சுருங்கக் கூறின், ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் "I" அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் "V"-இன் மீது நேர் விகிதச் சார்பு கொண்டிருக்கும் என்பதுதான் ஓமின் விதி. அதாவது, வேறுவிதமாகக் கூறுவதென்றால், மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். அதாவது, இந்த மாறிலி எண் R என்பதே மின் தடை எனப்படும். மின்தடையின் அலகு ஓம் (Ω) (Ohm) ஆகும். ஓம் என்ற அலகு,வோல்ட்டு/ஆம்ப்பியர் (volt/ampere),(வோல்ட்டு-நொடி/கூலாம்) (volt-second/coulomb) ஆகிய அலகுகளுக்கு இணையானது. ஓமின் விதியை, இயற்பியல் துறையில் சற்று மாற்றி எழுதுவார்கள். ஒரு மின்கடத்தியின் வழியாகப் பாயும் மின்சாரத்தின் மின்னோட்டச் செறிவு ஒரு புள்ளியில் J எனவும், அதே புள்ளியில் மின்புலம் E எனவும், அந்த மின்கடத்தியின் மின்கடத்துதிறன் formula_4 எனவும் வைத்துக் கொண்டால், ஓமின் விதியை என்றும் எழுதலாம். ஜார்ஜ் ஓம் அவர்களுக்கு முன்னரே, 1781-இல், என்றி காவன்டிஷ்(Henry Cavendish) என்பவர், வேவ்வேறு அளவுள்ள கண்ணாடிக் குழாய்களில் உப்பு நீரை அடைத்து, அவற்றுள் மினசாரத்தைச் செலுத்தி, பல ஆய்வுகளைச் செய்தார். அதன் படி, மின்னழுத்த அளவு மாறினால் மின்னோட்டம் அளவும் மாறும் என்று கண்டறிந்தார். ஆனால், தம் கண்டுபிடிப்பை மற்ற ஆய்வாளர்கள் யாரிடமும் சொல்லாமல் விட்டு விடவே, இதைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அதற்குப் பிறகு வந்த ஜேம்சு கிளார்க் மாக்சுவெல்(James Clerk Maxwell) என்ற அறிவியல் அறிஞர் அந்தக் கண்டுபிடிப்பை 1879-இல் வெளியிட்டார். ஓம் தம்முடைய ஆராய்ச்சியை 1825–1826 ஆண்டுகளில் செய்து, தம் கண்டு பிடிப்புகளை 1827-இல் "Die galvanische Kette, mathematisch bearbeitet" ("மின் சுற்று - ஓர் கணித முறை ஆய்வு")என்ற நூலாக வெளியிட்டார். தன்னுடைய ஆய்வில் அவர் கண்டறிந்ததைக் கீழ்க்கண்ட சமன்பாடாக எழுதினர்: இதில், formula_7 மின்னோட்டத்தின் அளவையும், formula_8 மின் கடத்தியின் நீளத்தையும், formula_9 அவர் மின்கலனாகப் பயன்படுத்திய வெப்பமின் இரட்டையின் வெப்பநிலையையும் குறிக்கும். மற்றும், formula_10 என்பது அவர் செய்த சோதனையைச் சார்ந்த ஒரு மாறிலி(constant) எண் ஆகும். இந்தக் கண்டு பிடிப்பை மற்ற ஆய்வாளர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. 1840-உக்குப் பிறகே, அவர் கண்டுபிடிப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு, அவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்தனர். ஓமின் விதி எல்லா இடங்களிலும் சரியான விடையைத் தருமா என்று தெரியாமல் இருந்தது. ஓமின் விதியில் ஒரு சில குறைகள் இருப்பதாக சிலர் நினைத்தனர். 1920-இல், மின்கடத்தி வழியாகச் செல்லும் மின்னோட்டம் மின்கடத்தியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை எனக் கண்டு பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் மின்னோட்டம் மாறி இருப்பதற்குக் காரணம் ஜான்சன்-நைகிஸ்ட் இரைச்சல் எனப்படும் ஒரு வகை மின்னிரைச்சல் என்று கருதப் பட்டது. அதனால், ஒரு மின்கடத்தியில், மின்தடையின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை என்றும் கருதப் பட்டது. எனவே, ஓமின் விதியை எல்லா இடங்களிலும் அப்படியே பயன்படுத்த இயலாது என்று தெரிய வந்தது. எடுத்துக் காட்டாக, ஒரு மின்கடத்தியின் இரு முனைகளிலும் மிக அதிக அளவில் மின்னழுத்தம் கொடுக்கும் போது, மின்கடத்திக்குள் மிக வன்மையான மின்புலம் உருவாகின்றது. இதனால், மின்கடத்தியில் மின் முறிவு ஏற்பட வழியுண்டு. அவ்வாறு மின் முறிவு ஏற்பட்டால், ஓமின் விதியின் படி எதிர் பார்த்ததைவிட மிக அதிக அளவிலான மின்சாரம் பாயும். அது போலவே, ஒரு சில மின் கடத்திகளில், மிகக் குறைவான மின் அழுத்தம் கொடுக்கும் போது, ஓமின் விதியின் படி எதிர்பார்த்த அளவு மின்னோட்டம் ஓடுவதில்லை. இருப்பினும், ஓமின் விதி பல இடங்களில் சரியாகவே இருக்கின்றது. அணு அளவில் நடக்கும் மின்னோட்டம் ஓமின் விதி சொல்வது போல் இருக்காது என்று 20-ஆம் நூற்றாண்டில் எதிர் பார்க்கப் பட்டது. ஆனால், அது தொடர்பான நடத்திய ஆய்வுகளில், அணு அளவிலும் ஓமின் விதி சரியாகவே செயல் படுகின்றது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. சொல்லப் போனால், 2012-இல் நடத்தப் பட்ட ஆய்வுகளின் படி, நான்கு அணுக்கள் அகலமும், ஒரு அணு உயரமும் கொண்ட சிலிகான் கம்பிகளில் கூட ஓமின் விதி சரியாகவே செயல் படுகின்றது என்று அறியப் பட்டது. ஓமின் விதியை அணு அளவில் எவ்வாறு புரிந்து கொள்வது(microscopic origin of Ohm's law) என்பது பற்றி செருமானிய அறிவியலாளர் பால் ட்ரூட்(Paul Drude) 1900-இல் ஒரு விளக்கம் கொடுத்தார்.இதன் படி, ஒரு மின் கடத்தியில் மின்னழுத்ததைக் கொடுக்கும் போது அதில் மின்புலம் உருவாகின்றது. அந்த மின்புலம் மின்கடத்தியில் உள்ள எதிர்மின்னிகளைக் கவர்ந்து இழுத்து ஒரே திசையில் ஓட வைக்கின்றது. எதிர்மின்னிகள் ஓடும் போது மின்கடத்தியில் உள்ள அணுக்கள் மீது மோதி சிதறி திசை மாறுகின்றன. திசை மாறிய எதிர்மின்னிகள் மற்ற அணுக்களோடு மீண்டும் மோதிச் சிதறுகின்றன. இருப்பினும், மொத்தத்தில், ஒரு திசையை நோக்கி எதிர்மின்னிகள் கொஞ்சம் நகருகின்றன. இவ்வாறு எதிர்மின்னிகள் நகருவதால் மின்கடத்தியில் மின்னோட்டம் நடை பெறுகின்றது. நகருகின்ற எதிர்மின்னிகளின் உந்தம் p, மின்புலத்தின் அளவு E, ஒரு எதிர்மின்னியின் மின்னூட்டம்(charge) -"e", மோதல்களுக்கிடையுள்ள நேரம் "τ" எனக் கொண்டால், p = −"eEτ" என்று பால் ட்ரூட் கணக்கிட்டுக் கூறினார். இந்தச் சமன்பாட்டின் படி, E அதிகமாகும் போது, p அதிகமாகின்றது; p அதிகமானால், மின்னன்களின் விரைவும் அதிகமாகிறது. அதாவது, மின்னோட்டம் அதிகமாகிறது. ஓமின் விதி சொல்வதும் இதுவே: மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் அதிகமாகும். மின்னோட்டத்தை நீரோட்டத்தோடு ஒப்பிட்டும், ஓமின் விதியை விளங்கிக் கொள்ளலாம். நீர் அழுத்தம் என்பது மின்னழுத்தம், நீரோட்டம் என்பது மின்னோட்டம், நீரோட்டத் தடை என்பது மின்தடை என்று கொண்டால், நீர் அழுத்தம் அதிகமானால் நீரோட்டமும் அதிகமாகும் என்பது மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் அதிகமாகும் என்ற ஓமின் விதி போன்று உள்ளது எனலாம்.(நீரோட்டத் தடை என்பது நீரோட்டத்தைக் குறைப்பதற்காக வைக்கப் படும் தடைகள் ஆகும்.) ஓமின் விதி மின் சுற்றுகளைப் பகுத்து அலசிப் பார்க்க பெரிதும் துணையாக இருக்கும். ஓமின் சமன்பாட்டைக் கீழ்க் கண்டவாறு நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்: இந்தச் சமன் பாடுகள் மின் சுற்றுகளில் ஓடும் மின்னோட்டம், தோன்றும் மின்னழுத்தம், அடங்கியுள்ள மின் தடை ஆகியனவற்றைக் கணக்கிட பெரிதும் உதவியாக இருக்கும். மின்தடைச் சுற்றுகள் என்பது மின்தடைகள் மட்டுமே கொண்ட மின் சுற்றுகள் ஆகும். இதில் மின்தேக்கி, மின்தூண்டி போன்ற மின் உறுப்புகள் (மின்கூறுகள்)இருக்காது. இப்படிப் பட்ட சுற்றுக்களை ஓமின் விதி கொண்டு ஒவ்வொரு புள்ளியிலும் எவ்வளவு மின் அழுத்தம் உள்ளது, ஒவ்வொரு மின் தடையிலும் எவ்வளவு மின்னோட்டம் செல்கிறது என்று எளிதாகக் கணக்கிட முடியும். எதிர்இயக்கச் சுற்று என்பது மின் தடை R, எதிர் இயக்கப் பொருள்களான மின்தேக்கி C , மின்தூண்டி L ஆகிய மின் கூறுகள் கலந்த மின் சுற்று ஆகும். இது போன்ற சுற்றுக்களில், நேர் மின்னோட்டத்தைக் காட்டிலும், மாறுதிசை மின்னோட்டமே பெரிதும் செலுத்தப் படும். மாறுதிசை மின்னோட்டத்தின் அதிர்வெண் formula_12 என்று வைத்துக் கொண்டால், formula_13-இன் மின்னெதிர்ப்பு formula_14 எனவும், formula_15-இன் மின்னெதிர்ப்பு formula_16 எனவும் இருக்கும். இதில், formula_17, மற்றும் கற்பனை எண் formula_18. மின்னியலில், formula_19 என்பதை formula_20 என்ற எழுத்தாலும், மின்னெதிர்ப்பை formula_21 என்ற எழுத்தாலும் குறிப்பிடுவர். எனவே, ஓமின் விதியைக் கீழ்க் கண்டவாறும் குறிப்பிடலாம்: மின்தூண்டி L-இன் மின்னெதிர்ப்பு: மின்தேக்கி C -இன் மின்னெதிர்ப்பு: ஓமின் விதி: எல்லா மின் பொருட்களும் ஓமின் விதிப்படிச் செயல் படுவதில்லை. எடுத்துக்கட்டாக, இருமுனையம், மின்கலம் ஆகிய மின்கூறுகள் ஓமின் விதியைப் பின்பற்றுவதில்லை.மின்னோட்டத்துக்கும் மின்னழுத்துக்கும் உள்ள சார்பின் வரைபடம் (0,0) என்ற புள்ளியின் வழியாகச் செல்லும் நேர்க் கோடாக இருக்க வேண்டும். நேர்க் கோட்டின் சாய்வின் அளவு மின்கடத்துதிறனைக் குறிக்கும். படத்தில், மின்தடையத்தின் I–V வரைபடம் நேர்க்கோடாக இருக்கிறது. எனவே, மின்னோட்டம் I, மின்னழுத்தம் V -உடன் நேர் விகிதச் சார்பு கொண்டதாக உள்ளது. ஆனால், இருமுனையத்தின் I–V வரைபடம் நேர்க் கோடாக இல்லை.(படத்தைப் பார்க்க.) ஒவ்வொரு புள்ளியிலும் சாய்வின் அளவு மாறிக் கொண்டே போகின்றது. மேலும், மின்கலத்தின் I-V வரைபடம், நேர்க் கோடாக இருப்பினும், (0,0) என்ற புள்ளி வழியாகச் செல்லவில்லை. இது போன்ற பொருட்களில் மின்னோட்டத்தைக் கணக்கிட ஓமின் விதி பயன்படாது. ஓமின் விதிப்படி, மின்கடத்தியில் வேறு எந்த மாற்றமும் நிகழாத போதுதான், மின்னழுத்தம் அதிகரிக்க மின்னோட்டமும் அதிகரிக்கும். ஆனால், ஒரு மின்கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் போது, ஜூல் விளைவின் படி, அக் கடத்தி சூடாகிறது. சூடு அதிகமாகும் போது, கடத்தியின் மின்தடை அதிகரிக்கின்றது. எனவே, மின்னோட்டம் நடக்கும் போது மின்தடை மாறுவதால், ஓமின் விதியை இங்கு நாம் பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. மாக்ஸ்வெல் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயல்பியல் அறிஞர், மின்கடத்தியில் உண்டாகும் வெப்பத்தைக் குறைத்து ஓமின் விதியை எப்படி நிறுவுவது என்று பல ஆய்வுகள் நடத்தி 1876-இல் தம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். ஒரு மின்கடத்தியில், இரு புள்ளிகளுக்கிடையில் மின்னழுத்த வேறுபாடு இருக்கும் போது அக் கடத்தியில் மின்னோட்டம் நடப்பது போல, ஒரு வெப்பக்கடத்தியில், பிரெஞ்சுக் கணிதவியலாளரான பூரியே அவர்களின் கூற்றுப்படி, இரு புள்ளிகளுக்கிடையே வெப்ப வேறுபாடு இருக்கும் போது, அதில் வெப்ப ஓட்டம் நடை பெறும். அவ்வாறு நடக்கின்ற வெப்ப ஓட்டம், ஓமின் விதி போலவே, புள்ளிகளுக்கிடையே உள்ள வெப்ப வேறுபாட்டின் அளவைப் பொறுத்து இருக்கும். இயல்பியலில் V = IR என்ற ஓமின் விதியை, என்று எழுதுவார்கள். இதில், E என்பது மின்புலத்தின் வலிமை, ρ என்பது மின்தடைத் திறன், மற்றும் J என்பது மின்னோட்டச் செறிவும் ஆகும். (கவனிக்க: formula_26, உங்கே formula_27 என்பது மின் கடத்தியின் பரப்பளவு, formula_8 என்பது மின் கடத்தியின் நீளம் ஆகும்.) ஒரு மின்கடத்தியில் E என்ற மின்புலம் இருந்தால், அதில் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்தை கீழ்க் கண்டவாறு கணக்கிலாம்: இதில், dl என்பது கடத்தியின் நீளத்தில் மிகச் சிறு (நுண்ணிய) அளவைக் குறிக்கும். மின்புலம் E மின்கடத்தியில் எந்த இடத்திலும் மாறாது ஒரே மதிப்பு உள்ளதாக இருந்தால், மின்கடத்தியின் நீளம் l எனவும் கொண்டால், மேற்கண்ட சமன்பாட்டை கீழ்க் கண்டவாறு எழுதலாம்: இனி, கடத்தியின் மின்தடைத்திறனும் ஒரு சீராக இருந்தால், மின்னோட்டச் செறிவும் கடத்தி முழுவதும் ஒரு சீராக இருக்கும் எனலாம். எனவே,a என்ற குறுக்கு வெட்டுப் பரப்பளவு கொண்ட மின் கடத்தியில், மின்னோட்டச் செறிவைக் கீழ்க் கண்டவாறு எழுதலாம்: மேற்கண்ட சமன்பாடுகளில் இருந்து, மின்னழுத்தம் V-ஐக் கணிக்கலாம்: மின்தடைத்திறன் ρ எனவும், l என்ற நீளமும், a என்ற குறுக்கு வெட்டுப் பரபளவும் உள்ள ஒரு மின்கடத்தியின் மின்தடையத்தை கீழ்க் கண்டவாறு எழுலாம்: மேற்கண்ட சமன்பாடுகளில் இருந்து, ஓமின் விதியைத் தருவிக்கலாம்: ஓமின் விதி, E அளவுள்ள மின்புலத்தினால் R அளவு மின்தடை கொண்ட ஒரு மின்கடத்தியில் எவ்வளவு மின்னோட்டம் ஓடுகின்றது என்று சொல்கின்றது. ஒரு மின்கடத்தி B என்ற அளவுள்ள ஒரு காந்தப் புலத்தில் v என்ற வேகத்தோடு நகரும் பொது, v x B என்ற அளவுக்கு மின்புலம் உருவாக்கப் படுகின்றது. இதனால், மின்கடத்தியில் உள்ள மொத்த மின்புலம் E + v x B என்றாகிறது. அதனால், மின்கடத்தியில் கூடுதல் மின்னோட்டம் நடைபெறுகின்றது: மின்சாரத்தைக் கடத்தும் தன்மை கொண்ட பாய்மங்களை மின்கடத்திப் பாய்மங்கள் எனச் சொல்லலாம். மின்மக் கலவை(பிளாசுமா) போன்றவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். மின்கடத்தி ஒன்றில் செல்லும் எதிர்மின்னிகளை ஒரு புகை மண்டலமாக நினைத்துக் கொள்ளலாம். இது formula_36 என்ற வேகத்தோடு formula_37 என்ற அளவு கொண்ட காந்தப் புலத்தில் நகர்கின்றது என்றும், மின்கடத்தியில் உள்ள அணுக்கள் வேகம் formula_38 என்றும் கொண்டால், மின் கடத்தியில் formula_39 என்ற அளவுள்ள மின் புலம் உருவாகும். இந்த மின்புலம் formula_40 என்ற அளவு கொண்ட மின்னொட்டச் செறிவை உருவாக்கும். இந் நிலையில், எதிர் மின்னிப் பாய்மத்தின் இயக்கச் சமன்பாட்டைக் கீழ்க் கண்டவாறு எழுதலாம்: இதில், formula_42 என்பது எதிர் மின்னிகளின் அடர்த்தி; formula_43, formula_44 and formula_45 என்பவை, முறையே எதிர்மின்னியின் மின்ம அளவு, திணிவு, வேகம் என்பனவற்றைக் குறிக்கும். மற்றும், formula_46 என்பது ஒரு எதிர் மின்னி அணுக்களோடு ஒரு வினாடிக்கு எத்தனை முறை மோதுகிறது என்பதையும் குறிக்கும். மேலும், formula_38 என்பது அணுக்களின் வேகத்தைக் குறிக்கின்றது. இனி, எதிர் மின்னியின் திணிவு அணுக்களின் திணிவைக் காட்டிலும் மிக மிகக் குறைந்ததாக இருப்பதால், மேற் கண்ட சமன்பாட்டில், இடது புறத்தில் உள்ள கோவையை 0 என்று வைத்துக் கொண்டு, சமன்பாட்டை இவ்வாறு சுருக்கி எழுதலாம்: இதில், J என்பது மின்னோட்டச் செறிவாகும். மேலும், formula_49 என்பது கடத்தியின் மின்கடத்துத்திறனைக் குறிக்கின்றது. மேலுள்ள சமன்பாட்டை என்றும் எழுதலாம். இதில் formula_51 மின்தடைத்திறனைக் குறிக்கும். யாகூ! யாஹூ! (Yahoo!) "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத இணையச் சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் வலைவாயில் (web portal) ஆகும். இந்நிறுவனம் இணையப் போட்டல், இணையத்தளங்களைப் பட்டியலிடுதல், மற்றும் பிரபலமான யாஹூ!மெயில் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இது அமெரிக்காவின் ஸ்ரான்போட்(ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவரி 1994 இல் ஆரம்பிக்கப் பட்டு 2 மார்ச் 1995 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது. அலெக்ஸா இன்ரநெட்(இன்டெர்நெட்) மற்றும் நெட்கிறாவ்ட்(நெட்கிராஃப்ட்) சேவையின் படி இணையத்தில் யாகூவே இணையத்தில் அதிகூடியவர்கள்(அதிகமானவர்கள்) பார்வையிடும் தளமாக அமைகின்றது. அக்டோபர் 2005 தரவின் படி யாஹூ! நாளொன்றிற்கு 3.5 பில்லியன் பக்கங்கள் பார்வையிடப் படுவதாகத் தெரிகின்றது. யாஹூ! ஜெரியின் வையக வலையின் வழிகாட்டியாகவே ஆரம்பிக்கப்பட்ட போதும் பின்னர் அகராதியின் துணையுடன் "Yet Another Hierarchical Officious Oracle" எனபதைப் பெற்றுக் கொண்டது. யாஹீ! இணையத்தில் பிரபலமைடைந்து வரத் தொடங்கியது. இது இணையத்தில் எல்லாவிதமான தேவைகளிற்கும் ஒரேதளத்தில் தீர்வையளிக்கத் தொடங்கியது. இச்சேவைகளாவன் இணையமூடான மின்னஞ்சலான யாஹூ! மெயில் , யாஹூ! மெசன்ஜர், மிகவும் பிரபலமான குழு மின்னஞ்சல், இணையமூடான கணினி விளையாட்டுக்கள், உரையாடல்கள், இணையமூடான வர்த்தம், ஏல விற்பனை. இதில் அநேகமானவை தனித்தியங்கிய சேவைகளை யாகூ வாங்கிக் கொண்டது. உதாரணமாக ஜியோசிற்றீஸ்(ஜியோசிட்டீஸ்) இலவசமான இணையத்தளத்தை வைத்திருக்கும் சேவை, ராக்கெட் மெயில் போட்டியான மின்னஞ்சல் சேவை வழங்குவோர் போன்றவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. யாஹூ! இந்தியா தற்போது ஏழு இந்திய மொழிகளிற்கான ஆதவவை வழங்குகின்றது. தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தற்போது ஆதரவு வழங்குகின்றது. இது ஆரம்பக்கட்ட பரீட்சார்த்தமாகவே(சோதனை நிலையில்) இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாத்தான் சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிஸ்ட குக்கி ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சீன உணவகங்களில் உணவு உண்ட பின் வாடிக்கையாளர்கர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படும் குக்கிகளே அதிஸ்ட குக்கியாகும். அதிஸ்ட குக்கிக்குள்ளே ஒரு பொன்மொழி, அல்லது தீர்கதரிசன வாக்கியம் இருக்கும். சீனாவில் இந்த வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் இறைச்சி சில ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம்ஆகிய நாடுகளில் நாய்கள் இறைச்சி உணவாக உண்ணப்படுகின்றது. நாயின் சில பாகங்கள் மருத்துவ பலன்களுக்காகவும் உண்ணப்படுகின்றது. சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு. மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு நோக்குகின்றார்கள். நாய் இறைச்சி உண்ணுவது பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவது போலவே என்று அதை உண்ணுபவர்கள் வாதிடுகின்றார்கள். மேலும், வளர்ப்பு நாய்களுக்கும் அதனை வளர்ப்பவருக்கு இருக்கும் தொடர்பு இறைச்சி நாய்களுக்கும் அதனை உண்பவருக்கும் இருக்கும் தொடர்பை விட வேறுபட்டது என்று சுட்டுகின்றனர். மாட்டிறைச்சி மாட்டிறைச்சி விலங்கினத்தில் மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், சவூதி அரேபியா ,சீனா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது. இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், உயர்சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு. Top 10 cattle and beef producing countries Beef production (1000 Metric Tons CWE) National cattle herds (Per 1000 Head) கியூபா கியூபா அல்லது அலுவல்முறையாக கியூபாக் குடியரசு ("Cuba", எசுப்பானிய ஒலிப்பு: கூபா) கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன. எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது. அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது. 1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது. வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது. கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் எசுப்பானிய குடியேற்றவாத கால ஆப்பிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் "மிக உயர்ந்த" மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசையிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது. மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள் ஆகும். கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99.8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது. கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர். அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார் 1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. விரைவில் 1515~ குள் மற்ற நகரங்களில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது. 1529 ஆம் ஆண்டில், கியூபாவில் ஒரு அம்மை நோய் தாக்கியது அதனால் பூர்வீக குடிமக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர். செப்டம்பர் 1, 1548 இல், டாக்டர் கோன்சலோ பெரேஸ் டி அன்குலோ கியூபா கவர்னராக நியமிக்கப்பட்டார். 1817 ல் மக்கள் தொகை 6,30,980 ஆக இருந்தது 2,91,021 பேர் வெள்ளையர்கள், 1,15,691 பேர் சுதந்திர கருப்பர்கள் மற்றும் 2,24,268 கறுப்பு அடிமைகள்இருந்தனர்.இதில், இருந்தது. 1820 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்ப்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது. எசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர். கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது. 1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகைக்கேற்பக் கட்டப்பட்டன. பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையிலான ஒரு கொரில்லா இயக்கம் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு 1953ம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்குதலைத் துவக்கியது . 1959 சனவரியில் புரட்சி வெற்றி பெற்று, பிடல் காஸ்ட்ரோ தலைமயில் தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டது . பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர். ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளில் பெரிய தீவாக கியூபா உள்ளது. இந்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதியில் கால் பாகமே மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பகுதியில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக உள்ளன. செழிப்பான நிலமும் சாதகமான வானிலையும் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கிறது. கரும்பு கியூபாவின் முதன்மை வணிகப்பயிராக உள்ளது. இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இதன் காரணமாக கியூபாவை உலகத்தின் "சர்க்கரைக் கிண்ணம்" என்று அழைக்கிறார்கள். இரண்டாவதாக புகையிலை உள்ளது. புகையிலையைக் கொண்டு கைகளால் "சிகார்" தயாரிக்கப்படுகின்றது. கூபா சிகார்கள் உலகில் மிகவும் தரமிகுந்தவையாகக் கருதப்படுகின்றன. பிற முக்கியப் பயிர்களாக நெல், காப்பி, பழம் உள்ளன. கூபாவில் கோபால்ட், நிக்கல், இரும்பு, செப்பு, மாங்கனீசு போன்ற தனிமங்களும் கிடைக்கின்றன. உப்பு, பாறை எண்ணெய், இயற்கை எரிவாயுவும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. காஸ்ட்ரோவின் தலைமையின் கீழான கியூபா ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் பல போர்களில் பங்கேற்றுள்ளது. 1961–5 ஆண்டுகளில் கியூபா அல்சீரியாவை ஆதரித்தது. அங்கோலா உள்நாட்டுப் போரின்போது அங்கோலாவிற்கு பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை கியூபா அனுப்பியது. தவிர எதியோப்பியா, கினி, கினி-பிசாவு, மொசாம்பிக், மற்றும் யெமன் நாடுகளில் கூபா தலையிட்டுள்ளது. ஓர் சிறிய, வளரும் நாடாக இருந்தபோதும் கியூபாவின் வெளியுறவுக் கொள்கை தனித்தன்மையுடன் இருந்தது. டொமினிக்கன் குடியரசுக்கு 1959இல் நிகழ்த்திய இயக்கங்கள் பெரிதும் அறியப்படாதவை. இந்த முயற்சி தோல்வியடைந்தபோதும் இதன் நினைவாக சான்டோ டொமிங்கோவில் டொமினிக்க அரசால் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. திசம்பர் 2014 ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்கா கியூபாவுடன் நல்லுறவுகளைப் புதுப்பித்ததன் மூலம் முறிந்த உறவு மீண்டும் மலரத் துவங்கியுள்ளது. அமெரிக்கா கியூபா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனந்த சமரக்கோன் ஆனந்த சமரக்கோன் ("Ananda Samarakone", ) என அழைக்கப்படும் எகோதகாகே ஜோர்ஜ் வில்பிரட் அல்விசு சமரக்கோன் ("Egodahage George Wilfred Alwis Samarakoon", 13 சனவரி 1911 - 5 ஏப்ரல் 1962) இலங்கையில் சிங்கள இசைத்துறையில் ஒரு முன்னோடியாகவும், 20ஆம் நூற்றாண்டில் சிங்கள இசையில் செல்வாக்குச் செலுத்திய மூவருள் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். மற்ற இருவர், சுனில் சாந்த, அமரதேவ என்பவர்களாவர். இவர் ஒரு இசைக்கலைஞர் மட்டுமன்றி, சிங்கள மொழியில் சிறந்த பாடலாசிரியரும், திறமை மிக்க ஒரு ஓவியரும் ஆவார். இவர் "சிறீ லங்கா தாயே" என்ற இலங்கையின் நாட்டுப்பண்ணை இயற்றி இசையமைத்தவர் ஆவார். இலங்கையில் பாதுக்கை என்னும் இடத்தில் சாமுவேல் சமரக்கோன், டொரிங்கா ஆகியோருக்குப் பிறந்த இவர் பிறப்பால் கிறித்தவர். இவருக்கு இடப்பட்ட பெயர் "ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ்" என்பதாகும். பள்ளிப் படிப்பை முடித்தபின், 1931 இல் இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, பயிற்சி பெற்றார். 1936 ஆம் ஆண்டு, தனது இருபத்து ஐந்தாவது வயதில் இந்தியாவில் உள்ள சாந்திநிகேதனுக்குச் சென்று அங்கே "நந்தல போஸ்" என்பவரின் கீழ், ஓவியம் பயின்றார். இசையையும் ஒரு துணைப் பாடமாக அவர் பயின்றார். அங்கே இவரது கல்வி ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்ததாகத் தெரிகிறது. இலங்கை திரும்பிய இவர், 1937 இல், தனது முன்னோரின் மதமான பௌத்தத்துக்கு மாறினார், பெயரையும் ஆனந்த என்று மாற்றிக்கொண்டார். 1940 இல் இவர் எழுதிய "எண்டத மெனிக்கே" என்னும் இசைப் பாடல், தற்கால சிங்கள இசைக்கலைக்கு ஒரு அடித்தளமாக அமைந்ததுடன், சமரக்கோனுக்குப் புகழையும் தேடிக்கொடுத்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 1940களின் முதற்பாதியில் பல ஆக்கங்களைச் சிங்கள இசைத்துறைக்கு அளித்தார். இக்காலமே இவரது பொற்காலம் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. இவரது ஆக்கங்களில், "பொடிமல் எதனோ", விலே மலக் பிபிலா", "அசே மதுர", "சுனிலா குவனே", "புஞ்சி சுதா", "நில்வல கங்கே", "சுமனோ", "புதுமு குசும்", "சிரி சரு சார கெதே" என்பவை இவரது ஆக்கங்களில் பெரிதும் புகழ் பெற்றவை. இவற்றுடன், ஒரு மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்குவதிலும் அவர் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். சிங்கள இசைத்துறையில் புகழ் பெற்றவர்களான ஆர். ஏ. சந்திரசேன, டபிள்யூ. டி. அமரதேவ ஆகியோர் இவரது மாணவர்களாவர். 1940 இல் இவர் எழுதிய நமோ நமோ மாதா என்னும் சிங்கள தேசபக்திப் பாடலே இலங்கையின் நாட்டுப்பண்ணாக 1951 நவம்பர் 22 இல் அன்றைய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. "நமோ நமோ மாதா" பாடலை இரவீந்திரநாத் தாகூர் தனது மாணவர் ஆனந்த சமரக்கோனுக்காக எழுதியதாகவும், இப்பாடலைப் பின்னர் சமரக்கோன் சிங்களத்தில் மொழிபெயர்த்து இசையமைத்தார் எனவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இப்பாடல் "நமோ நமோ" என அமங்கலமான "ந" எனும் எழுத்தில் தொடங்குவது அபசகுனமானது என்றும், நாட்டுக்குத் துரதுர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்றும் ஒரு பிரிவினர் வாதிட்டதில், "ஸ்ரீ லங்கா மாதா" என்னும் வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதை சமரக்கோன் வன்மையாக எதித்தார் என்றும், தன்னுடைய பாடலைத் தனது அனுமதியின்றி மாற்றியது பற்றி மிகவும் அதிருப்தி கொண்டிருந்தாரென்றும் கூறப்படுகிறது. இவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களால் இவர் பெரிதும் பாதிப்படைந்திருந்தார். முக்கியமாக, 1945 ஆம் ஆண்டில், ஐந்து வயது நிரம்பிய இவரது ஒரே மகன் அகால மரணமானது இவரைப் பெரிதும் பாதித்ததாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் 1951 வரை இந்தியாவில் காலத்தைக் கழித்ததாகத் தெரிகிறது. இக்காலத்தில் இவர் பாடல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஓவியத்துறையில் நாட்டத்தைத் திருப்பிய இவர், அத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்தியாவில் மும்பாய், புது டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களிலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 1951 க்குப் பின்னர் இவரது ஆக்கங்கள் பல முன்னர் போல் சோபிக்கவில்லை என்றும், அவற்றின் கலைத்துவம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தது என்றும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இக்கால கட்டத்தில் திரைப்படத்துறையிலும் ஈடுபட்டிருந்த இவரால் குறிப்பிடத்தக்க வகையில் கலைத்துவம் கொண்ட ஆக்கங்கள் எதையும் தர முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறான போக்கின் உச்சக் கட்டமாக தனது 51 ஆவது வயதில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தங்கக் கன்று தங்கக் கன்று விவிலிய தொன்மவியல் கதைகளில் உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து சுழலும் ஒரு சம்பவமாகும். இஸ்ரவேலர் ,எகிப்தின் அடிமை வாழ்வை விட்டு விடுதலைப்பெற்று வாக்களிக்கப்பட்ட கானான் நாடு நோக்கிய நெடுபயணப் பாதையில், சினாய் மலையடிவாரத்தில் இச்சம்பவம் நிகழ்கின்றது. இது கிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இரண்டாவது நூலான யாத்திராகமம் நூலில் 31 மற்று 32 ஆம் அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ளது. விவிலியத்தின் படி, மோசே இறைவனிடம் இருந்து பத்துக் கட்டளைகளைப் பெற சினாய் மலை உச்சி நோக்கி சென்றிருந்தார். பல நாட்களாக மோசே திரும்பாததைக் கண்ட இஸ்ரவேலர் , அரோனிடம் தமக்கு கடவுள்களை உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணங்கிய அரோன், மக்களிடமிருந்த தங்கத்தை பெற்று உருக்கி தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேல் மக்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள். இதனால் ஆத்திரமுற்ற இறைவன் இஸ்ரவேலர் (இசுரேலியர்) தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசேயிடம் சொன்னார். ஆனால் மோசே அவர்களை மன்னித்துவிடும்படி மன்றாடினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசே பத்துக் கட்டளைகளோடு சினாய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரவேலர்களின் ஒழுக்கமீறல்களை கண்டு கோபமுற்றவராக பத்துக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லேவி கோத்திரத்து ஆண்களைக் கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார். அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரவேலர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசே இறைவனிடம் தன்னை தண்டிக்கும் படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களுக்கு தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசேயை மீண்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். அலுமினியம் அலுமினியம் (ஆங்கிலம்: அலுமினியம்; வட அமெரிக்க ஆங்கிலம்: Aluminum) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும். அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண், செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என கிட்டத்தட்ட 270 அலுமினியச் சேர்மங்கள் உள்ளன. அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், ஃபெல்ட்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், கோமேதகம், நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும். அறிவியல் வளர்ச்சி அடைந்திராத பண்டைய காலத்திலேயே அக்கால மக்கள் அலுமினியத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அலுமினியம் ஓர் உலோகம் என்பதையும் அதன் பலன்கள், தன்மை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக கி. மு 5300 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து மத்திய கிழக்கில் வாழ்ந்த மனிதர்கள் பயன் படுத்திய உபகரணங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருந்தன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் அலுமினியச் சேர்வை கலந்திருந்தமையாகும். அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர். இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இதை அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும் அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் பியரி பெர்தியர் என்பவர் பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். முதலில் ஹம்பிரி டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார். இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது." அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க ஹால்- ஹெரௌல்ட் முறை, ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க பேயர் வழிமுறை பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம். அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ. உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K, அணு எண் 13, அணு நிறை 26.98. வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும், மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது. தங்கம், வெள்ளி செம்புக்கு அடுத்த படியாகச் சிறந்து விளங்குவது அலுமினியம். இதற்குக் காரணம் இதிலுள்ள கட்டற்ற எலக்ட்ரான்களே ஆகும். அலுமினியம், அதே அளவு எடை கொண்ட செம்பை விட இரண்டு மடங்கு கூடுதலாகக் கடத்தும் திறனைப் பெற்றிருக்கிறது. இவற்றுள் அலுமினியமே 904 ஜூல்/கிகி /கெ என்ற அளவில் மிக அதிகமான சுய வெப்பத்தைப் பெற்றுள்ளது. சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும், வெள்ளியை விட 3.86 மடங்கும், தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது. வறண்ட மற்றும் ஈரமான காற்று வெளியில் அலுமினியம் நிலையானது. எனினும் அதன் பொலிவு, ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது ஏற்படுத்திக் கொள்வதால் மங்கிப் போகிறது. இது கவசமாகச் செயல்பட்டு காற்று வெளி மற்றும் நீர்மங்களில் உள்ள வீரிய ஆக்சிஜனிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. அலுமினியப் பொடியைச் சூடு படுத்தி போதிய அளவு வெப்ப நிலையை உயர்த்தினால், அது ஆக்சிஜனோடு இணைந்து பிரகாசமான வெண்ணிற ஒளியை உமிழ்ந்து எரிகின்றது. அப்போது அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது. அலுமினியம், நைட்ரஜன் மற்றும் கந்தகத்துடன் நேரடியாக இணைகிறது. அலுமினியம் ஆக்சிஜன் மீது நாட்டம் கொண்டிருப்பதால் இது ஒரு வலிமையான ஆக்சிஜநீக்கி ஊக்கியாகச் (reducing agent) செயல்பட வல்லது. நற்கடத்தியாக விளங்குவதால் அலுமினியம் வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக் கடத்தியாகவும், மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்கம்பியாகவும் பயப்படுகிறது மின்சாரத்தை நெடுந்தொலைவு எடுத்துச் செல்லும் கம்பியாக அலுமினியத்தைப் பயன்படுத்தும் போது தடித்த கம்பிகளாக்கி மின்தடையைப் போதிய அளவு தாழ்த்திக் கொள்ள மின் இழப்பு பெருமளவு குறைக்கப் படுகிறது. பிற மின்கம்பிகளை விட எடையும் குறைவு. அலுமினியத்தின் வெப்பங் கடத்தும் திறன் அதை சமையல் கலன்களாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது. கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைத்து விடுவதற்கு இது அனுகூலமாக இருக்கிறது. எனினும் சாதாரண உப்பால் அரிக்கப்படுகிறது. வெப்பங் கடத்தும் திறனும், வெப்ப ஏற்புத் திறனும் அதிகமாக இருப்பதால் அலுமினியம் சூரிய ஆற்றல் சேகரிப்பான்களுக்கும், கருவிகளுக்கும் உகந்ததாக விளங்குகிறது. தூய அலுமினியம் புற ஊதாக் கதிர்களுக்கு ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. இதனால் அலுமினியம் புற ஊதாக் கதிர்களை ஆராயும் ஆய்கருவிகளில் பயன்தருகிறது. காலநிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிப்பதால் கூரை வேயப் பயன்படும் குழவுத் தகடுகள் செய்ய முடிகிறது. அலுமினியப் பொடியை எண்ணையோடு கலந்து, நீராவிக் குழாய், எண்ணெய் மற்றும் பெட்ரோல் கிடங்கு, இயந்திரங்களின் வெப்ப ஆற்றி (radiator) போன்றவைகளில் மேற்பூச்சிடுகிறார்கள் அலுமினியப் பூச்சு இரும்பு துருப் பிடிக்காமல் பாதுகாக்கிறது. உலோகவியல் துறையில் அலுமினியம் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டு குரோமியம், மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் தனித்துப் பிரிக்கப்படுகின்றன. உருகிய எக்கில் அலுமினியம் வளிமங்களுடன் சேர்வதால் உட்புழை ஏதுமின்றி எஃகை வார்க்க முடிகிறது. அலுமினியம் மிகவும் இலேசான உலோகம். அதனால் அது வானவூர்திகளை வடிவமைக்க இணக்கமாய் இருக்கிறது. தேவையான கட்டுறுதியை அலுமினியக் கலப்பு உலோகங்கள் மூலம் பெறுகின்றார்கள் .இவற்றுள் முக்கியமானது டூராலுமின்(Duralumin), நிக்கலாய் (Nickaloy) மற்றும் சிலுமின் (Silumin)ஆகும். இந்தோலியம் என்ற அலுமினியக் கலப்பு உலோகம் 'பிரஷர் குக்கர்‘ போன்ற சமையல் கலன்கள் செய்யப் பயன்படுகிறது. இக்கலப்பு உலோகங்கள் நீர் மூழ்கிக் கப்பல், செயற்கைக் கோள்களின் உடல் பாகங்கள், ஏவூர்தி மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் உணர் கொம்பின் (antena) சட்டங்கள், அலைச் செலுத்திகள் (wave guides) மின் தேக்கிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. கட்டடப் பொறியியலில் நிலைச் சட்டங்கள், சன்னல், படச்சட்டங்கள், இடைத் தட்டிகள், கைப்பிடிகள் போன்றவற்றில் அலுமினியம் இன்றைக்குப் பயன்படுகிறது. நேர் முனைப் பூச்சேமம்(anodising) மூலம் அலுமினியத்தின் மீது ஆக்சைடு மென்படலத்தை ஏற்படுத்தி புறப்பரப்பை மெருகூட்டுவதுடன் அரிமானத்திலிருந்தும் பாதுகாக்கின்றார்கள். இதனால் ஒரு திண்மப் பரப்பை 90 சதவீதம் எதிரொளிக்கக் கூடியதாக மாற்ற முடியும். இன்றைக்கு வானளாவிய கட்டடங்களின் முகப்பை இத்தகைய எதிரொளிப்புத் தட்டிகளினால் அலங்கரிக்கின்றார்கள். அலுமினியம் அமில பூமியில் செடிகளின் வளர்ச்சியினை குறைக்கிறது. பல்வேறு சிறப்புப் பயன்களுக்கென பல்வேறு அலுமினியக் கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்துள்ளனர். மக்னீலியம்(Magnelium)என்ற கலப்பு உலோகம் பற்றினைப்புக்குப் பயன்தருகிறது. அலுமினியப் பொடியையும் பெரிக் ஆக்சைடையும் கலந்த கலவையை தெர்மிட்(Thermit )என்பர். இது எரியும் போது வெப்ப நிலை 3000 டிகிரி C வரை உயர்வதால், இரும்பு மிக எளிதாக உருகிவிடுகிறது. இதனால் உடைந்த பாகங்களையும், இரயில் தண்டவாளங்களையும் பற்றிணைக்க முடிகிறது. கலகக்காரர்கள் இதை ஏறிகுண்டாகப் பயன்படுத்துவர். ஏனெனில் இதனால் தோன்றும் தீயை எளிதில் கட்டுப் படுத்தமுடியாது. அலுமினிய மென்னிழையாலான 0.009 மில்லிமீட்டர் தடிப்புள்ள அஞ்சல் வில்லையை முதன் முதலாக ஹங்கேரி வெளியிட்டது. அதன் பிறகு பல நாடுகள் அலுமினிய அஞ்சல் வில்லைகளை வெளியிட்டன மெல்லிய அலுமினியப் பூச்சிட்ட இழைகளாலான அலுமினியத் துணியை நெய்துள்ளார்கள். இது கோடையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் குளிர் காலத்தில் குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு பலானியம் (Planium) என்ற வர்த்தகப் பொருளாகும். இது அலுமினியத்தால் மேற் பூச்சிடப்பட்ட நெகிழியாகும். நெகிழியை விட 10 மடங்கு அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கிறது. ஆனால் அதைப் போல நெருப்பினால் பாதிக்கப்படுவதில்லை. தானியங்கு ஊர்திகள், குளிர் சாதனப் பெட்டி இவற்றில் உட்புறம் மற்றும் மேற்புறத் தளங்கள், சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான தற்காலியத் தடுப்புச் சுவர்கள், கை அலம்பும் தொட்டிகள் தயாரிப்பதற்கு பலானியம் பயன்படுகிறது கெய்ரோ கெய்ரோ ("Cairo", அரபு மொழியில்: القاهرة - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். "பெரும் கெய்ரோ" எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக "ஆயிரம் மினராட்டுகளின் நகரம்" என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது. எகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் அராபிய பலுக்கலான ' () என்றே அழைக்கின்றனர். இதன் அலுவல்முறையானப் பெயர் ', "வாகையாளர்" அல்லது "வெற்றி கொண்டான்" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது ' எனப்படுகிறது. மேலும் "உலகின் தாயகம்" எனப் பொருள்படும் "உம் அல்-துன்யா", என்றும் குறிப்பிடப்படுகின்றது. கெய்ரோவில் அரபு உலகின் மிகவும் பழமையானதும் பெரியதுமான திரைப்படத்துறை இயங்குகிறது. இங்குதான் உலகின் மிகப் பழைமையான கல்விநிறுவனங்களில் இரண்டாவதாக உள்ள உயர்கல்வி நிறுவனமான அல்-அசார் பல்கலைக்கழகம் உள்ளது. பல பன்னாட்டு ஊடக, வணிக, பிற அமைப்புகளின் வட்டாரத் தலைமையகமாக கெய்ரோ விளங்குகிறது. அரபுநாடுகள் கூட்டமைப்பின் தலைநகரமாகப் பெரும்பாலும் இருந்துள்ளது. மெம்பிசைச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் பண்டைய எகிப்தின் மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில், மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது உரோமானியர்கள் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். "பாபிலோன் கோட்டை" என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே கோப்து மரபுவழி சமூகத்தினர் வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது. கி.பி. 640 இல் முஸ்லீம்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற அமர் இபின் பாபிலோன் கோட்டையின் வடக்குப் பகுதியில் அல் ஃபுஸ்தாத் என அழைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் குடியேறினார். துவக்கத்தில் கூடார முகாம் (ஃபுஸ்தாத் (fusta) என்பதன் பொருள் "கூடாரங்களின் நகரம்" என்பதாகும் ) ஃபுஸ்தாத் நிரந்தர குடியிருப்பாகவும் பின்னர் இஸ்லாமிய எகிப்தின் முதல் தலைநகரமாகவும் மாறியது. கி.பி 750 இல், அப்பாசியரால் உமையா கலீபகம் தூக்கியெறியப்பட்ட பின்னர், புதிய ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த தலைநகரமாக மாறிய ஃபுஸ்தாத்தின் வடகிழக்கு பகுதிக்கு தங்கள் குடியிருப்பை உருவாக்கினர். இது அல்-அஸ்கார் (பாசறை அல்லது பாளையம்) என அழைக்கப்பட்டது, இங்கு ஒரு இராணுவ முகாம் போடப்பட்டு இருந்தது. கி.பி. 869 இல் அஹ்மத் இபின் துலானின் கிளர்ச்சிக்குப் பிறகு அல் அஸ்கார் கைவிடப்பட்டு, மற்றொரு குடியிருப்பானது கட்டியெழுப்பப்பட்டது. இது ஆட்சியாளரின் இடமாக ஆனது. இது ஃபாஸ்டாதின் வடக்கில், ஆற்றுக்கு நெருக்கமாக அல் குத்தாவை ("குவார்ட்ஸ்") என்ற பெயருடன் இருந்தது. அல் குத்தாவையானது செர்மானியல் பள்ளிவாசல் பகுதியின் மையமாக இருந்தது, இப்போது இது இபின் துலுன் மசூதி என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 905 ஆம் ஆண்டில் அப்பாஸ்கள் நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் கைகளில் கொண்டுவந்தனர் மேலும் அவர்களின் ஆளுனர் ஃபுஸ்தாத்துக்குத் திரும்பினார். கி.பி 969 இல், பாத்திம கலீபகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு குடியிருப்பு நிறுவப்பட்டது, இந்தக் குடியிருப்பானது மேலும் வடக்கே உருவானது இது அல் கஹிரா ("வெற்றியாளர்") என அழைக்கப்பட்டது. எவ்வாறாயினும், கி.பி 1168 ஆம் ஆண்டு வரை ஃபுஸ்தாத் தலைநகரமாகவே இருந்தது, பின்னர் பிஸ்டாத் தீயினால் அழிந்ததால் அப்போதைய ஆட்சியாளரான விஜிவரால் அரசு தலைமையகத்தை அல் கஹிராவுக்கு மாற்றினார். இதன்பிறகு அல் கஹிராவின் முந்தைய குடியிருப்புகள் விரிவாக்கப்பட்டன, பின்னர் இது கெய்ரோ நகரின் பகுதியாகவும் விரிவடைந்து பரவியது; இவை இப்போது "பழைய கெய்ரோ" என்று அழைக்கப்படுகின்றன. கெய்ரோவிலும், நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், சூடான பாலைவன சூழலில் உள்ளது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையின் படியான ), ஆனால் பெரும்பாலும் மத்தியத்தரைக் கடல் மற்றும் நைல் வடிநிலத்திலிருந்து மிக அதிகமான தொலைவில் இல்லாததால் அதிக ஈரப்பதத்துடனான காலநிலை உள்ளது. காற்று புயல்கள் அடிக்கடி ஏற்பட்டு, சகாரா பாலைவன மண்ணை நகரத்திற்கு கொண்டு வருகின்றன, சில நேரங்களில் மார்ச் முதல் மே வரை காற்று அடிக்கடி அசவுகரியமாக உலர்வுத் தன்மையை உண்டாக்குகிறது. குளிர்கால வெப்பநிலையானது அதிகபட்சம் 14 முதல் 22 ° C (57 முதல் 72 ° F வரை) இருக்கும், அதேசமயம் இரவு நேர வெப்பநிலை 11 ° C (52 ° F) க்கு குறைவாக இருக்கும், பெரும்பாலும் 5 ° C (41 ° F). கோடைக் காலத்தில், அதிகபட்சம் 40 ° C (104 ° F) ஐ விட அதிகமாகவும், 20 டிகிரி செல்சியஸ் (68 ° F) வரை குறைந்தும் காணப்படும். மழைப்பொழிவு மிகக் குறைவு மேலும் குளிர்ந்த மாதங்களில் மட்டுமே பொழிகிறது, ஆனால் திடீர் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. பனிப்பொழிவு மிகவும் அரிது; 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கெய்ரோவின் கிழக்குப் புறநகர்ப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது, முதல் முறையாக கெய்ரோ பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையான மழைப்பொழிவை பெற்றது. மிகவும் வெப்பமான காலம் சூன் மாதம் ( 13.9 °C (57 °F) ) முதல் ஆகத்து ( 18.3 °C (65 °F) ) வரை நிலவும். புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு. கூகிள் டாக் கூகிள் டாக் (Google Talk) என்பது இணைய உரையாடல் மற்றும் இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் ஒரு கூகிளின் சேவையாகும். கூகிள் டாக் 24 ஆகஸ்ட் 2005 முதல் வெள்ளேட்டத்திலுள்ளது. வேறு சில இணைய உரையாடல் மென்பொருட்களைப் போன்றல்லாது கூகிள் டாக் துதுவன் திறந்த protocol ஐப் பாவிப்பதோடு வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் கூகிள் டாக் உடன் இணைவதையே கூகிள் விரும்புகின்றது. இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் "ஜபர்"' தொழில்நுட்பத்தினூடாக கெயிம் போன்ற இணைய உரையாடல் மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர். 23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான "ஜபர்" தொழில்நுட்பத்திலமைந்த இணைய உரையாடல் சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல் சேவை மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில் மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் ("dialback protocol") ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது. கூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது. யாழ் தேவி யாழ் தேவி ("Yal Devi") கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும். இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ சந்தி, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, பிற்பகல் 1.15 இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி பிற்பகல் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது. தற்போது இச்சேவை யாழ்ப்பாணம் வரை இடம்பெறுகின்றது. 1990 சூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியாவின் ரயில்வே அமைச்சின் கீழுள்ள இர்க்கொன் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்தது. இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி 2011 மே 27 அன்று ஓமந்தையை சென்றடைந்தது. பின்னர் கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது. பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது. 2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றது. 2014ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாளன்று இதன் சேவை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பளை முதல் யாழ்ப்பாணம் வரை தொடங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 18 கிமீ தூரப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரேடியம் ரேடியம் "(Radium)" என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர் இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. வன்னி தேர்தல் மாவட்டம் வன்னி தேர்தல் மாவட்டம் ("Vanni Electoral District") எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். வன்னிப் பகுதி மிகவும் மக்கள்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாக இருப்பதனால், பரப்பளவில், வடக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 236,449 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2011 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 221,409 வாக்காளர்கள் பதிவாயினர். இதனால் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையில், 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னிருந்த தேர்தல் முறையின் கீழ் நாட்டிலிருந்த நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். 1978 இல் இம்முறை ஒழிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பல தேர்தல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவானவற்றில் ஒன்றே வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகும். பெரும்பாலும், ஒவ்வொரு நிர்வாக மாவட்டமும் ஒரு தேர்தல் மாவட்டமாகவும் அமைந்தது. ஆனால் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இம் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை மட்டுமே கொண்டிருந்தன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பல உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லாதிருந்ததால், அருகருகேயிருந்த இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னித் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையின் மொத்தப் பரப்பளவில் ---% ஆகும். மாவட்ட அடிப்படையில் இதன் பரப்பளவு: வன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையில் உள்ள மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்று. இங்கே முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது 1981 ஆம் ஆண்டில். இப்பகுதியில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, அதன் பின்னர் இப் பகுதியில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆனாலும், இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இப்பகுதிகளுக்கான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 2003, 2004 ஆம் ஆண்டுகளின் மதிப்பீடுகளை அடிப்படியாகக் கொண்டு கணிக்கப்பட்ட இத்தேர்தல் மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம்: யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் ("Jaffna Electoral District") எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இவை இயங்குகின்றன. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்: 2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்: பின்வருவோர் தெரிவாயினர்: டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 28,585 விருப்பு வாக்குகள்; மாவை சேனாதிராஜா (இதக), 20,501; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 16,425; ஏ. வினாயகமூர்த்தி (ததேகூ), 15,311; இ. சரவணபவன் (ததேகூ), 14,961; சில்வெஸ்டர் "உதயன்" அலண்டைன் (ஈபிடிபி), 13,128; எஸ். சிறீதரன் (ததேகூ), 10,057; முருகேசு சந்திரகுமார் (ஈபிடிபி), 8,105; விஜயகலா மகேசுவரன் (ஐதேக), 7,160; 2004 ஏப்ரல் 2 ஆம் நாள் இடம்பெற்ற 2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்: பின்வருவோர் தெரிவாயினர்: செல்வராசா கஜேந்திரன் (ததேகூ), 112,077 விருப்பு வாக்குகள் (விவா); பத்மினி சிதம்பரநாதன் (ததேகூ), 68,240 விவா; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா), 60,770 விவா; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 45,786 விவா; கே. சிவனேசன் (ததேகூ), 43,730 விவா; நடராஜா ரவிராஜ் (இதக), 42,965 விவா; எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ), 42,193 விவா; மாவை சேனாதிராஜா (இதக), 38,783 விவா; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,405 விவா. 2006 நவம்பர் 10 இல் நடராஜா ரவிராஜ் (இதக) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக நல்லதம்பி சிறீகாந்தா (டெலோ) 2006 நவம்பர் 30 பதவியேற்றார்.. 2008 மார்ச் 6 இல் கே. சிவநேசன் (ததேகூ) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சொலமன் சிரில் (ததேகூ) 2008 ஏப்ரல் 9 இல் பதவியேற்றார். 12வது நாடாளுமன்றத் தேர்தல் 2001 டிசம்பர் 5 இல் இடம்பெற்றது. விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ), 36,217 வாக்குகள்; மாவை சேனாதிராஜா (தவிகூ-இதக), 33,831; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தவிகூ-தகா), 29,641; அ. விநாயகமூர்த்தி (தவிகூ-தகா), 19,472; நடராஜா ரவிராஜ் (தவிகூ-இதக), 19,263; ம. க. சிவாஜிலிங்கம் (தவிகூ-டெலோ), 17,859; தியாகராஜா மகேஸ்வரன் (ஐதேமு-ஐதேக), 11,598; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,744; நடராசா மதனராஜா (ஈபிடிபி), 7,350. 7வது அரசுத்தலைவர் தேர்தல் 2015 சனவரி 8 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முடிவுகள்: ஆரி பாட்டர் ஆரி பாட்டர் என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்பாகும். ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் பயிலும் ஆரி பாட்டர் (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான ரோன் வீசுளி (Ronald Weasley) மற்றும் எர்மாயினி கிறேஞ்செர் (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது. இத்தொடரின் கதைக்கருவானது, மந்திரவாத உலகத்தை வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஆரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட இலோர்டு வோல்டெமோர்ட் (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஆரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. சூன் 30, 1997இல் இத்தொடரின் முதல் புதினமான ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிடைத்தது. சூலை 2013 நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் இறுதிப் புதினமானது வெளிவந்த 24 மணிநேரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது. இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய பள்ளிக்கூடக் கதையியல், மர்மம், திகில், சாகசம், காதல், மரணம், பாகுபாடு, ஊழல் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன. 1990 ம் ஆண்டில் ஒரு நாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக் குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார். இது பற்றி ரெளலிங் தனது இணையத் தளத்திலும் கூறியுள்ளார். அதே நாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.ஸ உத்தியோக பூர்வ தளங்கள்: ஏனைய மூலங்கள்: இசுகைப் இசுகைப் (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும். இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஒளித்தோற்ற (வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். 2010ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் இசுகைப் சகா-சகா முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது. இசுகைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டமபர் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது. இசுகைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் ஆஸ்திரேலியா, பிறேசில், சிலி, டென்மார்க் டொமினிக்கன் றிப்பப்றிக் எசுத்தோனியா பின்லாந்து பிரான்ஸ் ஜேர்மனி ஹாங்ஹாங் ஹங்கேரி ஐயர்லாந்து இத்தாலி ஜப்பான் மெக்சிக்கோ நியூசிலாந்து போலாந்து றொமேனியா தென்கொரியா சுவீடன் சுவிட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். இசுகைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் இசுகைப் பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம். பிரான்ஸ் ஜேர்மான் ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும். ஒலி அழைப்புக்களுக்கு மேலதிகமாகப் முகத்தைப் பார்த்தவண்ணமே உரையாடலை நிகழ்த்தக் கூடியதான வசதி ஜனவரி 2006 இல் விண்டோஸ் மற்றும் மாக் ஓ. எசு. இயங்குதளங்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டது. 13 மார்ச் 2008 இல் லினக்சு இயங்குதளத்திற்கான இசுகைப் 2.0 இந்த வசதியினைக் அறிமுகப்படுத்தியது. விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் இசுகைப் 3.6.0.216 பதிப்பில் இருந்து சிறந்த காணொளித் தரத்துடன் பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இசுகைப் அவுட் (Skypeout) இசுகைப்பின் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட சேவையாகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். இது மூடிய Peer-to-peer முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலையெழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் NAT ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது. ஒரு 'ஸ்கைப் பயனர் பிறிதோர் இசுகைப் பயனருடன் அல்லது இசுகைப்பில் குழு உரையாடலிலும் (ஒலி சார்ந்த உரையாடல்களிற்கு 5 பேரிற்கு மிகையாகமல்) முற்றிலும் இலவசமாக உரையாட முடியும். இது தவிர விண்டோசு எக்ஸ்பி பயனர்கள் இணைய ஒளிப்படக் கருவி (காமிரா) இருப்பின் அழைக்கபட்டவர்களைப் பார்த்துக் கொண்டே உரையாடமுடியும். இசுகைப் பயனர்கள் கட்டணம் செல்லுத்தி பன்னாட்டு மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளமுடியும் இச்சேவையை இசுகைப் அவுட்(SkypeOut) எனக் கூறுவர். இது மாத்திரமன்றி நிலம்வழி கம்பி-வடம் வழியாக இயங்கும் தொலைபேசியில் இருந்து இசுகைப்பிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் இது இசுகைப் இன் (SkypeIn) என்றழைக்கப் படுகின்றது. 2005ல் சுமார் 225 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பகுதிகளில் வாழும் 54 பயனர்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150,000 புதுப்பயனர்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மே 10, 2011 அன்று இசுகைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இசுகைப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், இசுகைப் நிறுவன நிறைவேற்று அதிகாரி அதே நிறுவனத்தின் அதிபராக நியமனம் பெற்றுள்ளதுடன் மைக்ரோசாப்ட் நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மருக்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில் எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில் ("Helensberg Sri Venkateswara Temple") அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்திலிருந்து சுமார் 55 கிமீ தெற்காக அமைந்துள்ள எலன்ஸ்பெர்க் (Helensburg) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்காக சிற்ப சாத்திரம் குறிப்பிடுகின்ற அனைத்து இயல்புகளும் அமையப் பெற்ற ஒரு நிலம் 1979 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அங்கு முதலில் வெங்கடேசுவரர் கோயிலும், வரசித்தி விநாயகருக்கான கருவறையும் அமைக்கப்பட்டது. இதற்கான குடமுழுக்கு 1985 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் நடைபெற்றது. அருகில் சிவன் கோயில் அமைக்கப்பட்டு அதற்கான மகாகும்பாபிஷேகம் 1994, ஜனவரி 23 இல் நடைபெற்றது. இரு கோயில்களுக்குமான மகா மண்டபம், ராஜகோபுரம் ஆகியன அமைக்கப்பட்டு 2004, பெப்ரவரி 1 இல் அவற்றிற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. வெங்கடேசுவரர் கோயில் மூலஸ்தானத்தில் வெங்கடேசுவரர் வீற்றிருக்க மகாலட்சுமி வலப்பக்கத்திலும் ஆண்டாள் இடது பக்கத்திலும் கோயில் கொண்டுள்ளனர். அனுமான், ராமர், நரசிம்மர், கருடர், விஸ்வக்சேனர், சுதர்சனர் ஆகியோர் கோயிலில் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்துள்ளனர். வேணுகோபால் ஆழ்வார்கள், தசாவதாரம் சத்தியநாராயணன் ஆகியோரது சிற்பங்கள் பிரகார சுவரை அலங்கரிக்கின்றன. சிவன் கோயிலில் கணேசர், சந்திரமௌலீஸ்வரர், திரிபுரசுந்தரி, துர்க்கை அம்மன், தக்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேதரராக சுப்பிரமணியசுவாமி ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இடும்பன், வைரவர், நவக்கிரகங்கள் ஆகியனவும் வாசலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளனர். பிரகார சுவர்களில் உள்ள சிறு மாடங்களில் விநாயகர், முருகன் ஆகியோரது பல்வேறு மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கோயில்களிலும் நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆண்டுமுழுவதும் உள்ள சகல சிறப்பு நாட்களிலும் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. பவித்ர உற்சவமும், கணேஷ விசர்ஜன உற்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள். பிட்கின் பிட்கின் (Pidgin) (முன்னர் கெயிம் (Gaim) என்றறியப்பட்டது) ஒரு பல் இயங்குதள இணைய உரையாடல் மென்பொருளாகும். இவை கீழ்வரும் இணைய உரையாடல் சேவைகளை ஆதரிக்கின்றது. கட்டற்ற மென்பொருளான கெயிம், GTK கட்டுமானத்தில் விருத்திசெய்யப்பட்டிருப்பதுடன் க்னூ பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் கிடைகின்றது. இதன் தற்போதைய பதிப்பு 1.5 ஆகும். தொடக்கத்தில் மார்க் ஸ்பென்சர்ரினால் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் மட்டும் இயங்கிய இந்த மென்பொருள் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ், க்னூ/லினக்ஸ், FreeBSD, SkyOS, Mac OS X உடன் வேறுபல இயங்குதளங்களையும் ஆதரிக்கின்றது. சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம் சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம் நோர்வேயின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோர சுன்மூர நகரசபைகளில் வாழும் தமிழர்களினால் நடாத்தப்பட்டுவரும் ஒரு சங்கமாகும். அகதிகளாக 1986 - 1987ம் ஆண்டுகளில் Hareid என்னும் பகுதில் உள்ள Hareid Hotell என்னும் இடத்தில் வாழ்ந்த தமிழர்களினால் 1987 இல்உருவாக்கப்பட்டது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற தமிழ் சொற்றொடரை உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பு தனக்கு மட்டுமே சொந்தம் என்ற வகையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் தனியுரிமை உரிமம் கோரிய விண்ணப்பம் ஆர்வலர்களின் ஆட்சேபனைக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் கடிதம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உங்களின் ஆட்சேபனையை பதிவு செய்யலாம். மிகவும் அவசமாகவும், அவசியமாகவும் இத்தகவலை உங்களது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். வேறு சந்தேகம் ஏதுவாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி! No law, no life. Know law, know life! Warrant ba law - 9842909190 warrantbala2011@gmail.com ஆஸ்திரேலியக் கோயில்கள் அவுஸ்திரேலியக் கோயில்கள் எனப்படுபவை அவுஸ்திரேலியாவில் முறையான கட்டிட அமைப்புக் கொண்டனவாக உள்ள இந்துக் கோயில்கள் மற்றும் பௌத்த கோயில்களைக் குறிக்கும். அத்துடன் முறையான கோயில் கட்டிடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சில கோயில்களும் தற்காலிக கட்டிடங்களில் அமைந்துள்ளன. திராயன் போர் திராயன் போர் அல்லது திரோயன் போர் ("Trojan War") ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது. கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம். கிரேக்க நாட்டின் ஒரு நகரம் எசுப்பார்த்தா ஆகும். எசுப்பார்தாவை இரின்டர்யசு என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் இரின்டர்யசு அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடீசியசு என்னும் இளவரசன் இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு யோசனையை இரின்டர்யசுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன், மெனெலசு என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலசு எசுப்பார்த்தாவின் அரசுரிமையை பெற்றான். ஒடீசியசின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய இரின்டயர்சு ஒடீசியசுக்கு உதவினான். ஒடீசியசு தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான். இச்சமயம் பாரிசு என்ற திராய் நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். அஃபறோடைரி என்ற காதல் தேவதைக்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான். கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் திராய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறித்தோபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் திராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே திராயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, திராய் அழிந்து போனது. இப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன. சியுசு என்பவர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்கியவர். இவர் இவரது மனைவி எராவிற்கு உண்மையானவராக இருக்கவில்லை. பிற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பல பிள்ளைகளைப் பெற்றார். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்தது. ஆகவே இந்த போரின் மூலம் பலரை அழிக்க திட்டமிட்டார். ருக்மணி தேவி (நடிகை) ருக்மணி தேவி ("Rukmani Devi", , சனவரி 15, 1923 - அக்டோபர் 28, 1978) ஒரு சிங்களத் திரைப்பட நடிகையாவார். ஆடல், பாடல், நடிப்பு எனப் பல்துறை ஆளுமையின் காரணமாக வெள்ளித்திரையின் நாயகி எனப் போற்றப்படுகிறார். ஜோன். டி. டானியல், ஹெலன்ரோஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக நுவரெலியாவில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டெய்சி இராசம்மா. தந்தையார் கொழும்புச் செட்டி சமுகத்தை சேர்ந்தவர். டெய்சி தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு புனித மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை புனித கிளேயர் பாடசாலையிலும் பயின்றார். தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான "கடவுன பொறந்துவ"வில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். நான் உங்கள் தோழன் படத்தில் வி. பி. கணேசனுக்குத் தாயாகவும், காத்திருப்பேன் உனக்காக படத்தில் கதாநாயகி கீதாஞ்சலிக்குத் தாயாகவும் இவர் நடித்துள்ளார். மினர்வா தியேட்டர் குரூப்பில் பணி புரியும் போது பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை காதலித்தார் .இவர்கள் திருமணம் வலிங்கம்பட்டிய மாதாகோவிலில் 1943 பெப்ரவரி 18 இல் நடைபெற்றது 1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் பரிசை(Agnet Award ) பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் வாகை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது. சிந்தன விதானகே சிந்தன விதானகே இலங்கையைச் சேர்ந்த ஓர் எடை தூக்கும் வீரர். இவரது சொந்த இடம் பொலன்னறுவையாகும். இவர் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கொமன்வெலத் போட்டியில் எடை தூக்கும் பிரிவில் 4வது இடத்தை பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடந்த 16 வது கொமன்வெலத் விளையாட்டுப்போட்டியில் 65 கிலோ எடை தூக்கும் பிரிவில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இப்பதக்கமே இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெற்ற ஒரே ஒரு பதக்கம் ஆகும். இவரின் திறமையைப் பாராட்டி இவருக்கு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலை இலை () "(Leaf)" என்பது மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களில் பசுமை நிறத்தில் தகடு போன்று வளர்ந்திருக்கக் கூடிய ஓர் உறுப்பு ஆகும் . தண்டு அல்லது கிளைகளிலிருந்து பக்கவாட்டில் தோன்றும் வளர்ச்சியே இலை ஆகும். தண்டின் மிகமுக்கியமான இணையுறுப்புகளாக இவை கருதப்படுகின்றன. இலைகளும் தண்டும் ஒன்றாகச் சேர்ந்த பகுதி தளிர் எனப்படுகிறது. கூட்டாக இலைகளைப் பொதுவாக சாதாரண இலைகள் என்றே கூறுவர் இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன. ஒரு இலை என்பது வாஸ்குலார் ஆலை ஒரு உறுப்பாகும், மேலும் இது தண்டுகளின் முதன்மை பக்கவாட்டு பயன்பாடு ஆகும். இலைகள் மற்றும் தண்டு ஆகியவை ஒன்றாக உருவாகின்றன. இலைகள் "இலையுதிர்கால பசுமையாகவும்".குறிப்பிடப்படுகின்றன. முதன்மை நரம்பு,இரண்டாம்நிலை நரம்பு. மென்தகட்டினதும். இலை விளிம்பு பல வடிவங்களில், அளவுகளில் காணப்படுகின்றன என்றாலும், பொதுவாக ஒரு இலை என்பது ஒரு மெல்லிய தட்டையான உறுப்பு, தரையில் மேலே பரவி, ஒளிச்சேர்க்கைக்கு சிறப்பான முதன்மை ஒளிச்சேர்க்கை திசு, கொல்லிமண்டல் மெசோஃபில், இலைகளின் பிளேடு அல்லது லமீனாவின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் யூகலிப்டஸ் முதிர்ச்சியுள்ள பசுமையாக உள்ள சில இனங்கள், இருபுறமும் இலைகள் இபோபிளேடாலல் என்று கூறப்படுகிறதுஇலைகளில் தனித்துவமான மேல் மேற்பரப்பு (அடிவயிற்று) மற்றும் குறைந்த மேற்பரப்பு (அசாதாரணமானது), நிறம், கூந்தல், ஸ்டோமாட்டாவின் எண்ணிக்கை (உட்கொள்ளும் மற்றும் வெளியீடு வாயுக்கள்), காளானுறைவு மெழுகு அளவு மற்றும் கட்டமைப்பு மற்றும் பிற அம்சங்கள் ஆகியவை வேறுபடுகின்றன. பரவலான பிளாட் இலைகள் சிக்கலான இடத்தோடு மெகாஃபில்ஸ் மற்றும் அவை தாங்கக்கூடிய இனங்கள், பெரும்பான்மையானவை, பரந்த-அடுக்கப்பட்ட அல்லது மெகாஃபில்ஸ் செடிகள் என அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பரிணாம மூலங்களுடன் கூடிய கிளாஸ்மஸ்கள் போன்ற இலைகள் இலைகள் எளிமையானவையாகும், இவை ஒற்றை நரம்பு கொண்டவை மற்றும் மைக்ரோஃபில்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. புல்வெளிகளைப் போன்ற சில இலைகள் தரையில் மேலே இல்லை, பல நீர்வகைகளில் இலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சதைப்பற்றுள்ள தாவரங்கள் பெரும்பாலும் தடித்த தழும்பு இலைகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் சில இலைகள் பெரிய ஒளிச்சேர்க்கை செயல்பாடு இல்லாமல் இருக்கின்றன, மேலும் முதிர்ச்சியடையாத நிலையில் அவை இறந்து போயிருக்கலாம், சில கேபபில்ஸ் மற்றும் ஸ்பைன்கள் போன்றவை. மேலும், பல வகையான இலை-போன்ற கட்டமைப்புகள் வாஸ்குலார் செடிகளில் காணப்படுகின்றன, அவற்றுடன் முற்றிலும் இல்லை. உதாரணமாக, பைலோகாக்லேட்ஸ் மற்றும் கிளாடோட்ஸ் என்று அழைக்கப்படும் தட்டையான செடியின் தண்டுகள், மற்றும் ஃபைலோட்ஸ்கள் என்று அழைக்கப்படும் இலைத் தண்டுகள் அவற்றின் கட்டமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்றன. தாவரங்கள் அல்லாத (பொடியாக்கின் அங்கத்தினர் என்ற முறையில் இருப்பதால்) தாவரங்கள் அல்ல, அவை இலைகளைப் போல தோற்றமளிக்கின்றன மற்றும் சில கட்டமைப்புகள். இலை என்பது மரஞ்செடி கொடிகளின்மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர் ஓர் உறுப்பு. இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன. மரஞ்செடி கொடிகளில் இலைகளின் புறத்தோற்றம் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன சில அகலமாக அடிவிரிந்தும் நுனி குறுகியும், சில இலைகளின் விளிம்பில் பல்வேறு நெளிவுகள் கொண்டும், சில ஊசி போன்ற வடிவிலும் உள்ளன. பொதுவாக, வித்துத்தாவரம் ஒன்றின் முழுமையான அமைப்பைக் கொண்ட இலை, இலைக்காம்பு, இலைப்பரப்பு, இலையடிச் செதில் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்பு, தாவரத்தின் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இடம் கணு (இலைக்கணு) எனப்படும். எல்லா வகைத் தாவரங்களின் இலைகளும் மேற்கூறிய பகுதிகள் அனைத்தையும் கொண்டிருப்பதில்லை. சில இனங்களில், இலையடிச் செதில்கள் இணையாக அமைந்திருப்பதாகத் தெரிவதில்லை அல்லது முற்றாகவே இருப்பதில்லை. இலைக்காம்புகளும் சில இனங்களில் இல்லாதிருக்கலாம், இலைப்பரப்பும் தட்டையாக இல்லாதிருக்கக்கூடும். இனத்துக்கு இனம் பெருமளவில் வேறுபடுகின்ற இலை அமைப்புக்கள் பற்றி இலை உருவியல் பகுதியின் கீழ் விரிவாக ஆராயப்படும். இலையுதிர்க்கும் தாவரங்கள் குறிப்பிட்ட பருவ காலப்பகுதிகளில் தங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன. பல்வேறு இலைகள்:பெரிய கூட்டிலை,பெரிய தனியிலை,இதயவடிவ இலை. இலை, பின்வரும் இழையங்களைக் கொண்டுள்ள ஒரு தாவர உறுப்பு ஆகும்: புறத்தோல் என்பது பல படைகளாக அமைந்து இலைகளை மூடியிருக்கும் திசுள் (கலம்) தொகுதியாகும். இது இலையின் உட்பகுதித் திசுள்களை புறச் சூழலிலிருந்து பிரிக்கின்றது. புறத்தோல், நீரிழப்பைத் தடுத்தல், வளிமப் பரிமாற்றத்தை ஒழுங்கமைத்தல், வளர்சிதைமாற்றத்துக்கான நீர்மங்களைச் சுரத்தல், சில இனங்களில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை உள்ளிட்ட பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. பல இலைகளில் மேல் புறத்தோலும், கீழ் புறத்தோலும் வெவ்வேறு விதமான அமைப்புக்களை உடையனவாக இருப்பதுடன் வெவேறு செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. புறத்தோல் பொதுவாக ஒளி புகவிடும் தன்மை கொண்டிருப்பதுடன், நீரிழப்பைத் தடுப்பதற்காக அவற்றின் மேல் மெழுகு போன்ற தோலி எனப்படும் பூச்சும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் மேற்பக்கத் தோலி, கீழ்ப்பக்கத் தோலியிலும் தடிப்பானதாக இருக்கும். வரண்ட பகுதித் தாவரங்களின் இலைகளில் தடிப்புக் கூடிய தோலிகளும், ஈரவலயத் தாவரங்களின் தோலிகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவையாகவும் காணப்படுகின்றன. புறத்தோல் திசுக்கள் பல்வேறுபட்ட திசுள் (கலம்) வகைகளைக் கொண்டுள்ளன. புறத்தோல் திசுள்கள், காப்பணுக்கள், துணைத் திசுள்கள், புறத்தோல் உரோமங்கள் என்பன இவற்றுள் அடங்கும். புறத்தோல் திசுள்களே இவற்றுள் எண்ணிக்கையில் அதிகமானவையாகவும், பெரியனவாகவும், சிறப்புச் செயற்பாடுகள் குறைந்தவையாகவும் உள்ளன. இருவித்திலைத் தாவர இலைகளின் புறத்தோல் திசுள்கள், ஒருவித்திலைத் தாவர இலைகளில் உள்ளவற்றிலும் நீளம் கூடியவையாகக் காணப்படுகின்றன. புறத்தோலில், இலைத்துளைகள் எனப்படும் துளைகள் பரவியுள்ளன. இவற்றுடன், இத் துளைகளின் இருபுறமும் பசுங்கணிகம் அடங்கிய காப்பணுக்களும், இரண்டு முதல் நான்கு எண்ணிக்கையான துணைத் திசுள்களும் அமைந்திருக்கும். இவை கூட்டாக இலைத்துளைத் தொகுதி எனப்படும். இலைத்துளைத் தொகுதி, இலையின் உட்புறத்துக்கும், வெளியிலுள்ள வளிமண்டலத்துக்கும் இடையிலான வளிமம் மற்றும் நீராவிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துகின்றது. பொதுவாக, கீழ் புறத்தோலில், மேல் புறத்தோலிலும் கூடிய எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன. மேலும் கீழும் அமைந்துள்ள புறத்திசுப் படலங்களுக்கு இடையே இலையின் உட்புறத்தின் பெரும்பகுதி நடுத்திசு எனப்படும் பஞ்சுத்திசுக்களால் ஆனது. இந்தத் தன்வயமாக்கல் (assimilation) திசுக்களே தாவரங்களில் ஒளித்தொகுப்பு நடைபெறுகின்ற முக்கியமான இடங்களாகும். பன்னங்களிலும், பெரும்பாலான பூக்கும் தாவரங்களிலும், நடுத்திசு இரண்டு படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புறத்தோலில் காணப்படும் இலைத் துளைகள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிறிய அறைகளுக்குத் திறந்திருக்கும். இவ்வறைகளுக்குப் பஞ்சுத் திசுப் படையில் உள்ள வளி இடைவெளிகளுடன் தொடர்பு இருக்கும். நடுத்திசுவின் இந்த இரு வேறுபட்ட படைகள், நீர்த் தாவரங்களிலோ, சதுப்பு நிலத் தாவரங்களிலோ காணப்படுவதில்லை. சில சமயங்களில், புறத்தோல் மற்றும் நடுத்திசு கூடக் காணப்படாமல் இருக்கலாம். இத்தகைய இலைகளில் ஒருதன்மைத்தான மெல்லிய சுவர்களைக் கொண்ட திசுள்கள் பெரிய வளிம இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்படும். இவற்றின் இலைத் துளைகள் இலையின் மேற் பகுதியிலேயே காணப்படும். இலைகள் பொதுவாகப் பச்சை நிறமானவை. இது கணிகங்களில் (plastids) காணப்படும் பச்சையத்தினால் ஏற்படுகின்றது. பச்சையத்தைக் கொண்டிராத தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செய்ய முடியாது. HV உயிரியல் வகைப்பாடு வகைபாட்டியல் ("Taxonomy") என்பது ( "taxis", "ஏற்பாடு", "-nomia", "முறை" எனும் சொற்களில் இருந்து பெறப்பட்ட சொல்) உயிரிகள் தமக்குள் பகிரும் பான்மைகளைப் பொறுத்து அவற்றை வரையறுக்கவும் பெயரிடவும் பயன்படும் அறிவியல் ஆகும். உயிரிகள் பல வகையன்களாக ஒருங்கிணைத்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகையன்கள் எனும் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் வகைபாட்டியல் தரவரிசை தரப்படுகிறது. இப்படி தரவரிசை தரப்பட்ட குழுக்களை மேலும் ஒருங்கிணைத்து மேனிலைக் குழுக்களாக உயர் தரவரிசையில் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வகைபாட்டியல் படிநிலை உருவாக்கப்படுகிறது.சுவீடிய தாவரவியலாளராகிய கார்ல் இலின்னேயசு உயிரியலுக்கான வகைபாட்டியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார், உயிரிகளைப் பகுப்பதற்கும் இருபடிநிலைப் பெயரிடலுக்குமான இவரது வகைபாட்டு அமைப்பு இலின்னேயசு வகைப்பாடு எனப்படுகிறது. இவ்வாறு, அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், உயிரியல் வகைப்பாடு ("biological classification") எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் ("Carolus Linnaeus") என்பவர் உயிரிகளை அவற்றின் பொதுவான புறநிலைத் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால உயிரியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை ("principle of common descent") ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதற்கு ஏற்ப கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் சில திருத்தங்கள் செய்யவேண்டி நேர்ந்தது. மூலக்கூற்றுத் வகைபாட்டியலின் ("Molecular systematics") பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் உயிரியல் வகைபாட்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொகுதி மரபியல், கிளைபிரிவியல் அல்லது கவைபிரிவியல், அமைப்புசார் வகைபாட்டியல் போன்ற அண்மைக்கால அறிவியல் புலங்கள் தோன்றி வளர்ந்ததும், இலின்னேயசு உயிரியல் வகைபாட்டு அமைப்பு உயிரிகளின் படிமலர்ச்சி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, புத்தியல் உயிரியல் வகைபாடாக படிமலர்ந்தது. வகைப்பாட்டியல் ("taxonomy") அல்லது உயிரியல்சார் வகைப்பாட்டியல் ("biological systematics") என்பது முதன்மை வாய்ந்த அறிவியல் வகைபாட்டு முறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது... உயிரியல் வகைப்பாட்டை வரையறுத்தவர் எர்ணஸ்ட் மாயர் ஆவார். அவரால் கொடுக்கப்பட்ட வரையறை, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகையனில் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகையன்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படும்". என்பதாகும்... அண்மித்த ஒரு பொதுவான மூதாதையருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான மரபுபேற்று இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் அல்லது வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, அமைப்பொத்த ("homologous") உயிரினங்களில் ஒரு பொது மூதாதையிலிருந்து மரபுபேற்றுவழிப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படும்.. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய செயலொத்த ("analogous") இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ. கா. பறவையும், வவ்வாலும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து மரபுவழியில் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே வகுப்பிற்குள் அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், திமிங்கிலமும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் பாலூட்டிகள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன. வகைபாட்டியலின் வரையறை அத்தகவலைப் பெறும் வாயிலுக்கேற்ப வேறுபடுகிறது. என்றாலும் வரையறையின் சாரம் ஒன்றாகவே அமைகிறது; அதாவது உயிரிசார் கருத்துப்படிமமும் பெயரிடல் மரபும் வகைப்படுத்தலும் மாறுவதில்லை. மேற்கோள் கருத்துகளாக, அண்மையில் வெளிவந்த சில வரையறைகள் கீழே தரப்படுகின்றன: மேற்கூறிய பல்வேறு வரையறைகள் வகைபாட்டியலை அமைப்புசார் வகைபாட்டியலின் உட்புலமாக (வரையறை-2) அல்லது மறுதலையாக அவ்வுறவைத் தலைக்கீழாக்குவதாக, அல்லது இரண்டைiயும் ஒத்த பொருண்மை கொண்டதாக்க் கருதுவதைக் காணலாம். மேலும் இவற்றில் வகைபாட்டியலில் உயிரியல் பெயரிடலை வரையறைக்குள் அடக்குவதில் சிலவற்றிலும் (வரையரை-1, வரையறை-2) அல்லது அதை அமைப்புசார் வகைப்பாட்டியலின் ஒரு பகுதியாக நோக்குவதிலும் உள்ள இசைவின்மையை காண முடிகிறது, . எடுத்துகாட்டாக, ஆறாம் வரையறையானது, அமைப்புசார் வகைபாட்டியலின் பின்வரும் வரையறையோடு இணைவாக அமைந்து பெயரிடலை வகைபாட்டியலுக்கு வெளியே கொண்டுசெல்வதைக் காணலாம்: வகைப்பாட்டியல், அமைப்புசார் உயிரியல், அமைப்புசார் வகைபாட்டியல், உயிர்சார் வகைபாட்டியல் அறிவியல் வகைபாடு, உயிரியல் வகைபாடு, தொகுதிமரபியல் எனும் சொற்களின் ஓட்டுமொத்தக் கணம், சிலவேலைகளில் ஒன்றின் மீது ஒன்று படிந்தமைதலை, அதாவது சிலவேளைகளில் அவை ஒன்றியும் சிலவேளைகளில் அவை சற்றே வேறுபட்டும், ஆனல் எப்போது உறவுடனும் இடைவெட்டியும் அமையும் பொருளுடன் விலங்குவதைக் காணலாம். "வகைபாட்டியல்" புலத்துக்கான பரந்து விரிந்த பொருள் இங்கே சுட்டப்பட்டது. இந்தச் சொல் 1913 இல் கண்டோல் என்பவரால் அவரது "Théorie élémentaire de la botanique" எனும் நூலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை ("taxon") படிவளர்ச்சி மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் ("monophyletic") எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் ("polyphyletic") எனப்படும். வகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை ("three-domain system") 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே ஏற்பு பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து திணைப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் ("levels") அமைந்திருந்தன: திணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே ("plantae" – "தாவரங்கள்"), அனிமேலியா ("animalia" – "விலங்குகள்") என "இரண்டாகப்" பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன. லின்னேயசின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது. பேரினங்களுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது. அங்கீகாரம் ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் கரோலஸ் லின்னேயஸ் ("Linnaeus") ஆசிய யானைக்கு "Elephas maximus" என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் ""Elephas maximus" Linnaeus, 1758" எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக லி = "L." என்ற சுருக்க எழுத்தானது கரோலஸ் லின்னேயஸைக் குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தாவரவியலில் நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது விலங்கியலுக்கும் தாவரவியலுக்கும் இடையில் சற்று வேற்படுகின்றது. முக்தி குப்தேசுவர் கோவில் முக்தி குப்தேசுவர் கோவில் ("Mukti Gupteshwar Mandir", முக்தி குப்தேஷ்வர் மந்திர்) அவுஸ்திரேலியாவில் மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரே இந்துக் குடைவரைக் கோயில் ஆகும். இக்கோயில் அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரத்தின் புறநகர்ப் பகுதியான மின்டோ என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு கருவறையில் 13 ஆவது ஜோதிர்லிங்கம் தாபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய படைப்பு அழிப்புச் சக்கரத்தில் 13 ஆவது ஜோதிர்லிங்கமே இறுதியானதும் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ளதுமாகும். இது காலஞ்சென்ற நேபாள மன்னரான பிரேந்திராவினால் அவுஸ்திரேலியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த 13 ஆவது ஜோதிர்லிங்கத்தின் பெயர் "முக்தி குப்தேஸ்வரர் மகாதேவ்" என்பதாகும். அதாவது குகையின் கடவுளான சிவன் என்பது இதன் பொருள். இங்கு குகை என்பது உருவகமாக ஆத்மாவைக் குறிக்கிறது. இந்த வகையில் இங்கு கோயில் கொண்டுள்ள 13வது ஜோதிர்லிங்கமானது சுயம்புவாக உருவான லிங்கமாகும். தொல்பொருள் ஆய்வின்படி 220-240 கோடி வருடங்களின் முன் இது பாறைகளின் மத்தியில் உருவானது எனக் கருதப்படுகிறது. இங்கு கருவறையில் 13வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. ஏனைய 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்களும் இங்கு உள்ளன. அவை தவிர சிவனின் உருத்திர நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 108 லிங்கங்களும் 1008 சகஸ்ரநாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் இங்கு உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் சிறிய கோயில்கள் இங்குள்ளது. அதாவது முக்தி குப்தேஸ்வரர் கோயிலுக்குள் 1128 சிறிய கோயில்கள் உள்ளன. இது மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாகும். கருவறையில் 10 மீட்டர் ஆழமுள்ள ஒரு நிலவறையமைப்பு உள்ளது. அதில் 'ஓம் நமசிவாய' என்று உலகம் முழுவதிலுமுள்ள 2 மில்லியன் பக்தர்கள் தத்தமது கைபட எழுதியவை உள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நதிகள் உட்பட 81 நதிகளிலும் 5 சமுத்திரங்களிலும் பெறப்பட்ட நீரும், 8 பெறுமதி வாய்ந்த உலோகங்களும் ஞானிகள் மற்றும் முக்கியமானவர்களது நல்லாசிகளும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மகாதேவ மந்திருக்கு அருகில் மாதா மந்திர், ராம்பரிவார் மந்திர், கணேஷ மந்திர் ஆகியனவும் உள்ளன. தினமும் இங்கு காலையில் புரோகிதரால் இந்த 13வது ஜோதிர்லிங்கம் உட்பட 1128 சிவ வடிவங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது (நைவேத்யம்). திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் ("திருக்கோணேஸ்வரம்") இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும். காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது: இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று. திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம். மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே. திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது. இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார். இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது. சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். இதிலே, இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள். கரோலஸ் லின்னேயஸ் கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus or Carolus Linnæus) (மே 23, 1707 - ஜனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு ("scientific classification") முறைக்கும், பெயர்முறைக்கும் ("nomenclature") அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் ("ecology") முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார். "கார்ல் லின்னேயஸ்", "கரோலஸ் லின்னேயஸ்", கார்ல் வொன் லின்னே, "கார்ல் லின்னே" போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார். இவரது உண்மையான சுவீடிய மொழிப் பெயர்பற்றி இப்பொழுதும் குழப்பம் நிலவுகிறது.(சுவிடியப் பெயர்-"Carl von Linné"; இலத்தீனியப்பெயர்-"Carolus Linnaeus" (1707–1778)) 'கார்லஸ் லின்னேயஸ்' என்பது லத்தீனாக்கம் செய்யப்பட்ட பெயராகும். இப்பெயரையே அவர், இலத்தீன் மொழியில் தான் எழுதிய அறிவியல் நூல்களில் பயன்படுத்தியுள்ளார். ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் கரோலஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார். இந்த ராஷல்ட் ("Råshult") என அழைக்கப்படும் பகுதி, தென் சுவீடனில் ஸ்மாலாந்து ("Småland") மாகாணத்தில் உள்ள "Älmhult Municipality" இல் அமைந்துள்ளது. இவரது தந்தை ஒரு பாதிரியார் ஆவார். தாவரவியலாளரும்கூட. தன் மகன் லின்னேயஸுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். கரோலஸ் லின்னேயஸ் இலத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றைத் தம் தந்தையிடமே கற்றுத் தேர்ந்தார். தந்தையைப் போன்று இவரும் தாவரங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தம் வீட்டுத் தோட்டத்தில் பல்வேறுவகையான தாவரங்களை வளர்த்து வந்தார். புதிய தாவரங்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்தார். இவருடைய ஈடுபாட்டைக் கண்டு, லின்னேயஸ் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதை இவரது தந்தை உறுதி செய்தார். லின்னேயஸ் தம் பத்தாவது வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். தொடர்ந்து தாவர ஆராய்ச்சிகளையும் இவர் மேற்கொண்டு வந்தார். உடலியல் மற்றும் தாவரவியல் குறித்த கல்வியை முறையே லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பெற்றார். பூக்களில் உள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றால் கவரப்பட்ட இவர், அதே தலைப்பில் தானும் கட்டுரை ஒன்றை எழுதியதன் மூலம் தாவரவியற் பூங்காவான உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே தாவரவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு இவர் ஆற்றிய விரிவுரைகள் புகழ்மிக்கவை. தாவர வகைப்பாட்டியல் முறை குறித்து கட்டுரைகள் படைத்தார். இவ் ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்குப் போதுமான நிதியை, 1732 இல், அக்காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத லாப்லாந்து ("Lapland") பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு உப்சாலா அறிவியல் அக்காடமி வழங்கி ஊக்கப்படுத்தியது. இதற்காக, இவர் நெடும் பயணம் மேற்கொண்டார். தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாது புவியியல் பற்றியும் எண்ணற்ற குறிப்புகளை எழுதினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வகை தாவர இனங்களை அடையாளம் கண்டார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன்பின், தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார். பிறகு, நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன: இவர் உயிரினங்களை "பிளாண்டே" (plantae - தாவரங்கள்), "அனிமேலியா" (animalia - விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார். இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில், ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்குப் பல சொற்பெயரிடு முறை என்று பெயர். பலசொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார். இம்முறையை பின்பற்றி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரும், மருத்துவருமான கரோலஸ் லின்னேயஸ் (1707–1778) பெயரிடல் முறையைப் பெரிதும் ஒழுங்கு படுத்தினார். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இவர் உருவாக்கிய இருசொல் பெயரிடும் முறையானது எளிய முறையில் அமைந்திருந்தது. இம்முறையே நடப்பில் வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காரணங்களால், கரோலஸ் லின்னேயஸ், வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார். இயற்கையின் அமைப்பு முதல் பதிப்பு 1735 இல் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டது. இது ஒரு பன்னிரண்டு பக்க புத்தகமாகும். இது 1758 ல் அதன் 10 வது பதிப்பில் வெளிவந்த நேரத்தில், இது 4,400 விலங்கினகள் மற்றும் 7,700 தாவர இனங்கள் கொண்டதாக இருந்தது. இப்போது உயிரி அட்டவணை என அழைக்கப்படும் அமைப்பு, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாகின் சகோதரர்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றாலும், லின்னேயஸ் ஆராய்ச்சிக்கு பின்பே அறிவியல் சமூகத்தில் இது பிரபலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இனங்களின் வகைப்பாடு முதல் இரண்டு தொகுதி, 1753 ல் வெளியிடப்பட்டபின் அது முக்கியத்துவம் வாய்ந்த பெயரிடும் முறையின் தொடக்க புள்ளியாக உள்ளது. இன வகைப்பாடு, 1737 இல் வெளியிடப்பட்டது. இதன் 10 பதிப்புகளில் லின்னேயஸ் அவர்களால் 1754ல் வெளியிடப்பட்ட ஐந்தாவது பதிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. இதில் 24 வகைகளாகத் தாவர உலகம் பிரிக்கப்பட்டுள்ளது, தாவரங்களின் மறைக்கப்பட்ட இனப்பெருக்க பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு 1751ல் வெளியிடப்பட்டது. தாவர வகைப்பாடு மற்றும் பெயரிடும் முறைபற்றிய லின்னேயஸின் சிந்தனை சுருக்கத்தை, அவர் முன்பு 1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு (Fundamenta Botanica) மற்றும் 1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கரோலஸ் லின்னேயஸ் பயணம் மேற்கொண்டு, நிறைய மாதிரிகளைச் சேகரித்ததுடன் அங்குள்ள அறிவியல் அறிஞர்கள் பலரை சந்தித்தார். பின்னர், ஸ்வீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராகப் பணியாற்றினார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741 இல் பொறுப்பேற்று, பின் 1750 இல் அப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஸ்வீடன் மன்னர், கரோலஸ் லின்னேயஸுக்கு 1761 இல் சர் பட்டம் வழங்கிப் பாராட்டினார். நவீன சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், தற்கால அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கரோலஸ் லின்னேயஸ் தம் 71-வது வயதில் (1778) மறைந்தார். லின்னேயஸ் 'பிறந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய அஞ்சல் தலைகள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான சிலைகள் உள்ளன. 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் தாவரவியல் அல்லது விலங்கியலில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் (லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது. உயிரினங்களின் பெயர்களைப் பொதுப்பெயரிட்டு அழைத்து அறியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் பொதுப்பெயர்கள் இட்டு வழங்கும் முறைகளால் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குழப்பங்கள் நீடித்து வந்தன. இந்நடைமுறை உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகக் காணப்பட்டது. இத்தகைய குறைபாடுகளைக் களைவதற்காக உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது. இது உலகளவிலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோலஸ் லின்னேயஸ் உயிரினங்களுக்கு தற்போதும் நடைமுறையிலுள்ள இருசொற் பெயரீட்டு முறையை உருவாக்கினார். கரோலஸ் லின்னேயசின் இத்தகைய வகைப்பாட்டியல் முறை, உயிரினங்களுக்குப் பெயரிடவும், அவற்றை வகைப்படுத்திடவும், ஒப்பீடுகள் மேற்கொண்டு வேறுபாடுகளை அறிந்திடவும் பயன்படுகிறது. உயிரின வகைப்பாட்டியலின் மிகப்பெரிய படிநிலை உலகம் ஆகும். இதன் கீழ் பல்வகைப்பட்ட துணை அலகுகள் பல்வேறு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என்பதாகும். இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் அனைத்துவித உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான பண்புகளின் அடிப்படையில் உயிரினங்கள் பல்வேறு சிறு அலகுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் உள்ள உயிரினங்கள் அவற்றிற்கு முந்தைய அலகு உயிரிங்களிளிருந்து உருவாகியிருக்கக் கூடும். இவ் வகைப்பாட்டியலின் கீழ்நிலை அலகு சிற்றினம் ஆகும். பொது மரபுவழி ஒரு உயிரினக் குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு பொது மரபுவழியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், "முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு" ("theory of universal common descent"), புவியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்தே உருவாகின என்று கூறுகிறது. படிவளர்ச்சி அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலான முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு சார்லஸ் டார்வினால் "இனங்களின் தோற்றம்" ("The Origin of Species, 1859") மற்றும் "மனிதனின் மரபுவழி" (The Descent of Man, 1871) ஆகிய அவரது நூல்களில் முன்மொழியப்பட்டது. இக்கோட்பாடு இன்று உயிரியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது வாழும் எல்லா உயிரினங்களினதும் இறுதியான முழுமைப் பொது மூதாதை ("last universal common ancestor"), அதாவது மிகக் கிட்டிய பொது மூதாதை ("most recent common ancestor") ஏறத்தாழ 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. யாகூ! மின்னஞ்சல் யாஹூ! மெயில் யாஹூ! இனால் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையமூடான மின்னஞ்சல் சேவையாகும். யாஹூ! மெயிலில் 260 மில்லியன் பதிவுசெய்த பயனர் கணக்குகள் உண்டு .இன்று உலகின் மிகப் பெரும் மின்னஞ்சல் வழங்குபவராவார். யாஹூ! மெயிலின் இன் பிரதான போட்டியாளராக ஜிமெயில், ஹொட்மெயில், ஏஐஎம் மெயில் ஆகியவை விளங்குகின்றன. 26 ஆகஸ்ட் 2007 இன்படி ஏஜாக்ஸ் இடைமுகத்திலான யாஹூ! முழுமையடைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது இவ்வசதியானது இச்சேவையானது எல்லாப் பயனர்களுக்குமே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தற்போதைய இடைமுகம் ஜூலை 2004 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் இடைமுகமானது இன்டநெட் எக்ஸ்புளோளர் 7, பயர்பாக்ஸ் மற்றும் கமினோ (எல்லா ஜிக்கோ இலான் உலாவிகள்) உலாவிகளுடன் ஒத்திசைவு. யாஹூ!வின் திட்டப்படி எல்லாச் சேவைகளையுமே இறுதியில் ஃபயர்பாக்ஸ் உலாவிக்கு ஒத்திசைவாகச் செய்வதாகும்.). இதன் இடைமுகத்தை ஒபேரா மற்றும் கான்குவர் உலாவிகளூடாகவும் அணுகமுடியும் எனினும் அவற்றில் இடைமுகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. யாஹூ! மெயிலின் வரலாறு ஜேஜே ஹேலி உடன் ஆரம்பமாகின்றது. இவர் யாஹூ! இன் ஒவ்வொரு உள்வாங்கலிலும் சம்பந்தப்பட்டுள்ளார். "உங்களுக்காக உழைப்பவர்களே உங்களின் வணிகத்தை" சரியாக அறிவார்கள் என இவர் கூறினார். இவரைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே மூன்று பிரதான கேள்விகளே இவரிடம் இருக்கும் அவையானது "விருத்தி செய்வதா, வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?" இதற்கான விடையானது அதன் போட்டியாளர்களைப் பொறுத்தும் நிறுவனத்தின் நிலையைப் பொறுத்தும் அமையும். குறிப்பு: இலவச சேவையிலும் POP3 முறையில் அனுமதிக்கின்றார்களெனினும் இச்சேவை எல்லாருக்குமா என்பது தெளிவான விளக்கம் இல்லை. யாஹூ!மெயில் தனது பிந்தைய பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளிணைந்த உரையாடல் வசதியை வழங்கியுள்ளது. இதனால் யாஹூ! மெசன்ஜர் இல்லாமலே யாஹூ!மெசஞ்சர் மற்றும் வின்டோசு லைவ் மெசஞ்சர் பயனர்கள் உரையாடக் கூடியதாக இருக்கும். எனினும் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு அடோபி பிளாஷ் மென்பொருள் உலாவியில் இருக்கவேண்டும். இது ஜிமெயில் சேவைக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதெனினும் ஜிமெயிலின் உள்ளிணைந்த உரையாடலுக்கு அடோபி பிளாஷ் மென்பொருள் அவசியம் இல்லை. களனி கங்கை களனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும். கன்பரா ஆறுபடை முருகன் கோயில் ஆறுபடை முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவிலுள்ள டொரென்ஸ் (Torrens) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முருகன் கோயிலின் முதற்கட்ட அமைப்பாக 1996 ஆம் ஆண்டு ஒரு மண்டபம் கட்டப்பட்டது. அதில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகன் முதன்மைத் தெய்வமாக தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விநாயகர், சிவா-பார்வதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மகா விஷ்ணு, துர்க்கை, நடராஜர், வைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக தாபிக்கப்பட்டு 1997 நவம்பர் 9 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தினசரி மூன்று வேளைப் பூசைகள் நடைபெறுகின்றன. புதிய கோயில் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதில் முருகனுக்குரிய ஆறு படை வீடுகளையும் குறிக்கும் முகமாக ஆறு தனி கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன. இவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான். நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன. தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள். இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றது. 1952இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது. திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள். பொங்கல் தலமாகவும், தீர்த்தச்சிறப்பும், மூர்த்திப்பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மெல்பேர்ண் வக்ரதுண்ட விநாயகர் கோயில் வக்ரதுண்ட விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் எழுந்த முதல் விநாயகர் கோயிலாகும். கோயில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அப்போது காஞ்சி காமகோடி பீடம் ஒரு விநாயகர் விக்கிரகத்தை வழங்கியிருந்தது. அத்துடன் ஒரு வெண்கல விக்கிரகமும் வாங்கப்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த இந்துக்களின் பலத்த முயற்சியின் பின் பயன்படுத்தப்படாத ஒரு பழைய தேவாலயம் வாங்கப்பட்டு, ஸ்தபதிகளின் துணையுடன் 1991-92 ஆம் ஆண்டில் அது கோயிலாக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயில் மெல்பேர்ண் இந்து சங்கத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் வக்ரதுண்ட விநாயகரையும் மற்றும் உரிய இடங்களில் சிவன், விஷ்ணு, வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், அபிராமி, துர்க்கை, மற்றும் நவக்கிரகங்களையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. தினமும் இக்கோயில் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். காலை 8.00 மணிக்கும் மாலை 7.30 மணிக்கும் தினசரி பூசைகள் நடைபெறுகின்றன. வருடம் முழுவதும் விசேட நாட்களில் விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மெல்பேர்ண் இந்து சங்கம் 'சைவநெறி' என்ற பெயரில் செய்திப் பத்திரிகை ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது. இளைஞரை கோயில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் ஓர் இளைஞர் சங்கம் இக்கோயிலில் உள்ளது. கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள் கிர்க்காஃபின் விதிகள் ("Kirchhoff's circuit laws") மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு: இவ்விதிகளை கிர்க்காஃப் ("Gustav Kirchhoff") என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் முதலில் எடுத்துக் கூறினார். கிர்க்காஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு: எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும். [அல்லது] ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும். இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: இங்கு, "n" என்பது ஒரு புள்ளியில் உள்நுழையும் அல்லது வெளியேறும் மின்னோட்டங்களின் எண்ணிக்கை. கலப்பு மின்னோட்டங்களுக்கு இச்சமன்பாடு பின்வருமாறு தரப்படும்: உற்று நோக்கினால் இது மின்னணுக்களின் அழியாமையின் விளைவு எனக் காணலாம். இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, கொண்மியின் தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் பெயர்வு மின்னோட்டத்தைக் கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும். மேலும் நுட்பமாக, இவ்விதியை கீழ்க்கண்ட சமன்பாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது மின்னணுக்களின் அழியாமையையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும். ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும். இது ஆற்றல் அழியாமையின் விளைவாகும். திணை (உயிரியல்) உயிரியலில், இராச்சியம் அல்லது உயிரித்திணை என்பது, உயிரினங்களுக்கான, அறிவியல் வகைப்பாட்டுப் படிநிலையில் மிக உயர்ந்த அல்லது மிக உயர்ந்த நிலைக்கு அண்மையாக உள்ள, வகைப்பாட்டியல் அலகு ஒன்றைக் குறிக்கும். இராச்சியம் மிக உயர்ந்த நிலையாகக் கொள்ளப்படாதவிடத்து, அதற்கும் மேலாக ஆட்களம் (Domain or Empire) என்னும் அலகு பயன்படுத்தப்பட்டது. இராச்சியத்திற்குக் கீழான அலகாக தொகுதிகள் வகைப்படுத்தப்பட்டன. அதற்குக் கீழாகச் செல்லும் படிநிலைகளில் முறையே வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் என்பன வகைப்படுத்தப்பட்டன. கரோலஸ் லின்னேயஸ் இற்கு முன்னான காலப் பகுதியில் தாவரங்களும், விலங்குகளும் தனித்தனி இராச்சியங்களாகக் கருதப்பட்டு வந்தது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் உயிரினங்களை தாவரம், விலங்கு எனப் பிரித்திருந்தார். அரிஸ்டாட்டல் மேலும் விலங்குகளை வகைப்படுத்தினார். அவரது மாணவரான Theophrastus தாவரங்களை வகைப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் அவர்களது வகைப்பாட்டியல் போதுமற்றதாக உணரப்பட்டதனால், கைவிடப்பட்டது. 1735 இல் கரோலஸ் லின்னேயஸ் தான் எழுதிய நூலில், உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் என இரண்டு இராச்சியங்களாகப் பிரித்ததுடன், உயிரற்ற கனிமங்களை அவற்றிலிருந்து வேறுபடுத்தினார். இவரே முதன் முதலாக அனைத்துலக தரத்திற்கு வகைப்பாட்டியலை ஏற்படுத்தியதுடன், புதிய உயிரியல் வகைப்பாடு, மற்றும் இருசொற் பெயரீட்டு முறையையும் அறிமுகப்படுத்தினார். 1674 இல் நுண்ணோக்கியியலின் தந்தை என அழைக்கப்படும் ஆன்டன் வான் லீவன்ஹூக் என்பவர் நுண்ணோக்கியால் அவதானிக்கப்படக் கூடிய நுண்ணுயிர்களைப்பற்றி வெளிப்படுத்தினார். அவரால் அவதானிக்கப்பட்ட ஒரு கல உயிரினங்கள் (ஒற்றைக்கல உயிரினங்கள்) விலங்கு இராச்சியத்துள்ளும், தாவர இராச்சியத்துள்ளும் வகைப்படுத்தப்பட்டன. அசையக்கூடியன, விலங்குகளின் கீழ் அடங்கும் புரோட்டோசோவா (Protozoa) தொகுதியிலும், நிற பாசிகள் அல்லது அல்காக்களும், பாக்டீரியாக்களும் தாவரங்களின் கீழ் வரும் தலோபைட்டா அல்லது புரோட்டாபைட்டா பிரிவுகளுள்ளும் வகைப்பாடு செய்யப்பட்டன. பல உயிரினங்கள் இரண்டு வகை இராச்சியத்துள்ளும் அடக்கப்பட்டன. அறிவியல் முன்னேற்றமடைந்து செல்லச் செல்ல, மிக அதிகளவிலான உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டதுடன், வகைப்பாட்டியலும் பொருத்தமற்றதாகத் தோன்றியது".. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 1866 இல் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் என்பவர் அதிநுண்ணுயிரி ( Protista) என்னும் மூன்றாவது இராச்சியமொன்றை ஒருவாக்கும் கருத்தை முன்வைத்தார். 1990 இல் ஏற்படுத்தப்பட்ட வகைப்பாட்டின்படி, மூன்று ஆட்களங்கள் (Domains) மிக உயர்ந்த வகைப்பாட்டியல் அலகாகவும், அதற்கு அடுத்ததாக உள்ள அலகாக ஆறு இராச்சியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது மூன்று-ஆட்கள ஒழுங்கமைப்பு எனப்படும். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வகைப்பாட்டியல் முறையானது, ஐந்து அல்லது ஆறு இராச்சியங்களை உள்ளடக்கியுள்ளது. பாக்டீரியா, மற்ற உயிரினங்களிலிருந்தும் வேறுபட்ட வகையில், கரு இல்லாத அமைப்பைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டன் (Édouard Chatton) என்பவர் 1925 ஆம் ஆண்டளவில், மெய்யான கருவைக் கொண்ட அமைப்புடையவை மெய்க்கருவுயிரி (Eukaryota) என்றும், கருமென்சவ்வால் சூழப்பட்ட வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்டிராதவை நிலைக்கருவிலி (Prokaryota) என்றும் கூறினார். மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை வகைப்பாட்டியலில் சேர்ப்பதற்கு முன்மொழிந்தார். இதனால் இராச்சியத்திற்கு மேலான ஒரு வகைப்பாட்டியல் அலகொன்றின் தேவை ஏற்பட்டது. அந்த அலகே, மேல் இராச்சியம், அல்லது Empire அல்லது ஆட்களம் எனப் பெயரிடப்பட்டது. சட்டனுடைய முன்மொழிவு உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 1938 இல் ஹேபர்ட் கோப்லண்ட் (Herbert Copeland) என்பவர் இன்னொரு முறையை முன்வைத்தார். இதன்படி தெளிவான கருவற்ற உயிரினங்களான மெய்க்கருவிலிகளை மொனேரா (Monera) என்னும் தனியான இராச்சியத்தினுள் அடக்கினார். இதுவே பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது. கோப்லண்டின் நான்கு இராச்சியப் பகுப்பு, தெளிவான கருவுள்ள ஒற்றைகல மெய்க்கருவுயிரி உயிரினங்களை அதிநுண்ணுயிரி (Protista) என்னும் இராச்சியத்திலேயும், ஏனைய மெய்க்கருவுயிரிகளான விலங்குகளையும், தாவரங்களையும் தனித்தனி இராச்சியங்களாகவும் கொண்டிருந்தது. காலப்போக்கில் மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி வேறுபாட்டின் முக்கியத்துவம் புலப்படத் தொடங்கியது. 1960 ஆண்டளவில், ஸ்டேனியர் (Stanier), வான் நீல் (van Niel ) என்பவர்கள் சட்டனுடைய இரண்டு ஆட்களங்களையும் பிரபலப்படுத்தி, அவ்விரு ஆட்களங்களுக்குக் கீழே மேற்குறிப்பிட்ட நான்கு இராச்சியங்களையும் வகைப்படுத்தினர். பூஞ்சைகளுக்கும், ஏனைய தாவரங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு பலகாலமாகவே உணரப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்கூட தனது இறுதியான வகைப்படுத்தலுக்கு முன்னராக, ஆரம்பத்தில், பூஞ்சைகளை தாவர இராச்சியத்தில் சேர்க்காமல், அதிநுண்ணுயிரிகள் இராச்சியத்தில் சேர்த்திருந்தார். பின்னரே, அதனைத் திருத்தியிருந்தார். 1969 இல், ராபர்ட் விட்டேக்கர் (Robert Whittaker) பூஞ்சை அல்லது பங்கசு (Fungi) அடங்கிய தனி இராச்சியமொன்றை உருவாக்கி ஐந்து இராச்சியங்கள் கொண்ட முறையைக் கொண்டு வந்தார். ஒரு நியமமாகப் பிரபலமடைந்த இம்முறை சில திருத்தங்களுடன் இன்றும் பயன்படுவதுடன், புதிய பல்-இராச்சிய முறைமைகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது. இந்த ஐந்து இராச்சிய முறை முக்கியமாக உயிரினங்கள் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறும் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டது. தாவரங்கள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக கனிம மூலக்கூறுகளைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்பவையாகவும் (Autotroph) இருக்கும். விலங்குகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், தாமாகவே உணவைத் தயாரிக்க முடியாமல், வேறு கரிமப் பொருட்களையோ, அல்லது வேறு உயிரினங்களையோ உண்பதன் மூலம் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Heterotroph) இருக்கும். பூஞ்சைகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், இறந்த அல்லது அழுகும் கரிமப் பொருட்களிலிருந்து தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Saprotroph) இருக்கும். ஏனைய இரண்டு இராச்சியங்களும் அதிநுண்ணுயிரிகளும், மொனராவுமாகும். இந்த ஐந்து இராச்சிய முறையானது, இரண்டு ஆட்கள முறையுடன் இணந்திருக்கலாம். பன்னாட்டுத் தமிழ் நடுவம் தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தவும் வளர்க்கவும், அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஒரு பல்கலைக்கழக பண்பாட்டு மையமே பன்னாட்டுத் தமிழ் நடுவம் ஆகும். இதன் முதல் கட்டிடத் தொகுதி நிர்வாக பணிமனை, நூலகம், பொருட்காட்சியகம், பதிப்பகம், கலையரங்கம், மண்டபம், ஐந்து நட்சத்திர விடுதி ஆகியவற்றை கொண்டிருக்கும். இது உலகளாவிய தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாகும். மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில் சிவா விஷ்ணு கோயில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் மாநகரத்திலிருந்து சுமார் 55கிமீ தென்கிழக்காக அமைந்துள்ள கரம் டௌன்ஸ் (Carrum Downs) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டில் உருவான இந்து சங்கத்தின் பல ஆண்டு முயற்சியின் பயனாக இக் கோயில் உருவாகியது. 1994 ஆம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. Port Phillip Bay, Patterson River ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள அழகான தடாகங்களுக்கு அருகில் இது அமைந்துள்ளது. சிவனையும் விஷ்ணுவையும் முறையே வழிபடும் சைவம், வைஷ்ணவம் ஆகிய இரு வழிபாட்டு முறைகளையும் ஒன்றுபடுத்தும் ஒரு முயற்சியாக உருவாகியதே இக்கோயில். இது இந்து சமய மரபுகளும் அவுஸ்திரேலிய கட்டிட நடைமுறைகளும் கலந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினசரி காலை 7.30 மணிக்கு உஷத் காலப் பூசையும், 8.30 மணிக்கு காலை சந்திப் பூசையும், 11.00 மணிக்கு உச்சிக் காலப் புசையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சைப் பூசையும் 7.00 மணிக்கு மாலைப் பூசையும் 8.30 மணிக்கு அர்த்த சாமப் பூசையும் நடைபெற்று வருகின்றன. மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில் இணையத்தளம் சி. சரவணபவன் சிற்பி சி. சரவணபவன் (28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015) ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிவசரவணபவன் 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் ஆகியோருக்குப் பிறந்தவர். கந்தரோடையில் வாழ்ந்து வந்தவர். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். 1953 இல் சென்னையில் கல்வி கற்கும் வேளையில் செலையூர் மன்றம் வெளியிட்ட "இளந்தமிழன்" என்ற இதழின் ஆசிரியரானார். திருநெல்வேலி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றார். சிற்பியின் முதற் சிறுகதையான "மலர்ந்த காதல்" 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது "மறுமணம்" என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் "ஈழத்துச் சிறுகதைகள்" என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது. தேன்மொழி (இதழ்) தேன்மொழி ஈழத்தில் கவிதைகளுக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகும். புரட்டாதி 1955 இல் முதன்முதலில் வெளிவந்த மாத இதழான தேன்மொழியின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் வரதர் ஆவார். இணையாசிரியராக மஹாகவி உருத்திரமூர்த்தி பணியாற்றினார். தேன்மொழி பதினாறு பக்கங்களுடன் அழகிய சிறிய அமைப்பில் வெளியானது. மொத்தம் ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. முத்தையா முரளிதரன் முத்தையா முரளிதரன் ("Muttiah Muralitharan", பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது. தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சூலை 22, 2010 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும், தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் துடுப்பாட்ட காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். தெரன தொலைக்காட்சி வழங்கும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கை வீரர் விருதினைப் பெற்றார். பெப்ரவரி 5, 2009 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது கவுதம் கம்பீரை வீழ்த்திய போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரான வசீம் அக்ரமின் சாதனையான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 502 இலக்குகள் எனும் சாதனையை முரளிதரன் முறியடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைப் பெற்ற ஷேன் வோர்ன் சாதனையை டிசம்பர் 3, ,2007 இல் முறியடித்தார். சராசரியாக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆறு இலக்குகளைப் பெற்றுள்ளார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரப்பட்டியலில் தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராக 1,711 நாட்கள் முதல் இடத்தில் நீடித்தார். இவரின் துடுப்பாட்டக் காலங்களில் பல சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவரின் அதிநீட்டம் பந்து வீசும் முறையானது நடுவர்களாலும் (துடுப்பாட்டம்) துடுப்பாட்ட வாரியங்களினாலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பின் பலபரிசோதனைகளுக்குப் பிறகு 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளதாகத் தெரிவித்து விளையாட அனுமதித்தது. பெப்ரவரி 2009 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துடுப்பாட்ட வடிவங்களையும் சேர்த்து அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது தனது ஓய்வினைப் பற்றி அறிவித்தார். அப்போது தான் மனதளவிலும் , உடல் அளவிலும் தகுதியுடன் இருப்பதாகவும், துடுப்பாட்டப் போட்டிகளை மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவும் இன்னும் விளையாடவேண்டும் போல இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியின் போதே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்தார். சூலை 18, 2010 இல் காலியில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியின் இறுதி நாளில் தனது ஓய்வினை அறிவித்தார். அந்தப் போட்டியின் போது 8 இலக்குகளை வீழ்த்தினார். பிரக்யான் ஓஜாவினை வீழ்த்திய பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். . இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார். சின்னசாமி முத்தையா, இலட்சுமி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ல் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார். இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கத்தில் விளையாடினார். "துடுப்பாட்ட உலகின் பைபிள்" என வர்ணிக்கப்படும் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 800 தேர்வு இலக்குகளையும் 500க்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார். ஸ்டீவ் வா முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் டொன் பிறட்மன் என வர்ணித்துள்ளார். முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்: இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 444 இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31 இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341 இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 444 டார்வின் சித்தி விநாயகர் கோயில் சித்தி விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் (Northern Territory) தலைநகரான டார்வினில் இருந்து 15கிமீ வடக்கே Malak என்னும் இடத்தில் அமைந்துள்ளது. டார்வினில் வாழும் சைவ மக்கள் தமக்கென ஒரு கோயிலை அமைப்பதற்காக வட பிராந்திய அரசு Malak என்னும் இடத்திலுள்ள நிலத்தை வழங்கியது. ஆரம்பத்தில் பஜனை மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் அதில் பஜனை ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் விசேட தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தது. ஓர் ஆண்டுக்குள் இந்திய ஸ்தபதிகளினால் அதனுள் கோயில் அமைக்கப்படடது. கோயிலின் மூலஸ்தான மூர்த்தியாக சித்தி விநாயகர் தாபிக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண்டபத்தினுள் மூஷிகம், பலிபீடம் ஆகியனவும், தெட்சணாமூர்த்தி, சிவலிங்கம், விஷ்ணு, பிரம்மா, சிவகாமி சமேதரராக நடராஜர், வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், வைரவர் ஆகிய வடிவங்களும் தாபிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் விசேட தினங்கள் யாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. வின்டோஸ் 95 வின்டோஸ் 95 (Windows 95) என்பது மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 24 ஆகஸ்ட் 1995 இல் வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். இது அந்நிறுவனத்தின் வின்டோஸ் இயங்குதளத்தின் பதிப்புகளுள் ஒன்றாகும் சிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும். விண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் () மற்றும் ஸ்ராட் மெனியூ () மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு வேர்க்குறூப்ஸ்சிற்கான் விண்டோஸ் இல் இருந்து 32 பிட் கோப்புக்களை அணுகும் முறை ஆரம்பிக்கப் பட்டதால் வன் தட்டை நிர்வாகிப்பதற்கு பயோஸ்ஸின் இடையீடுகள் தேவைப் படவில்லை. 32 பிட் கோப்பு முறையில் கோப்பை அணுகும் முறையானது நீண்ட பெயர்களைப் பாவிபதற்குத் தேவைப் பட்டது. டாஸ் இயங்கு தளமானது நீண்ட கோப்புப் பெயர்களை அறிவதற்கு மேம்படுத்த வெண்டி இருந்தது. விண்டோஸ் 95 ஐத் தொடர்ந்து விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு, விண்டோஸ் Me, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் NT சார்ந்த கேணலே (kernel) விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் XP ஆனது கூடுதல் வதிகளைக் கொண்டதாக இருந்ததால் 31 டிசெம்பர் 2001 இதற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. விண்டோஸ் 95 ஆனது நெகிழ்வட்டு (floppy disks) மற்றும் குறுவட்டில் (CD-ROM) வெளியிடப் பட்டது. ஏனெனில் அச்சமயத்தில் பல கணினி களில் குறுவட்டு இருக்கவில்லை. நெகிழ்வட்டுப் பதிப்பானது 13 நெகிழ் வட்டில் வெளிவிடப்பட்டது. மீரட் மீரட் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும். இந்நகரம் தில்லிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பெரிய இராணுவ கண்டோன்மென்ட் ஒன்றும் அமைந்துள்ளது. இது மீரட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சந்தி (போக்குவரத்து) சந்தி என்பது சாலைகள் சந்திக்கின்ற ஒரு இடம் எனலாம். நுட்பியல் அடிப்படையில், இது வாகனப் போக்குவரத்து வழி மாறவும், திசை மாறவும் கூடிய ஒரு பகுதியாகும். சந்திகளை உருவாக்கும் சாலைகளில் இருக்கக்கூடிய வாகனப் போக்குவரத்து அளவைப் பொறுத்து சந்திகளின் சிக்கல் தன்மை வேறுபடுகின்றது. வாகனப் போக்குவரத்துக் குறைவான சாலைகள் தொடர்புபடும் சந்திகள் எளிமையானவையாக இருக்கின்றன. இத்தகைய சந்திகளில் சாலைகள் ஒன்றையொன்று ஒரே தளத்தில் இடைவெட்டுகின்றன. இத்தகைய சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்போது, போகுவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்காக சந்தி அமைப்பில் பல விருத்திகள் ஏற்பட்டுள்ளன. பொதுவாகச் சந்திகளைப் பின்வரும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இடைவெட்டுச் சந்திகள் என்பன வீதிகள் நிலமட்டத்தில் ஒன்றையொன்று ஒரேதளத்தில் வெட்டும்போது ஏற்படுகின்றன. இடைமாற்றுச் சந்திகளில் சாலைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் ஒன்றையொன்று கடந்து செல்கின்றன. இவ்விரு வகைச் சந்திகளும் அவற்றின் வடிவமைப்புகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இடைவெட்டுச் சந்திகள் இடைமாற்றுச் சந்திகள் உலகத் தமிழர் பேரமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட உலகத் தமிழர் பேரமைப்பு திட்டமிட்டிருக்கின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதுவே இதன் கோசம். இவ்வமைப்பு நான்கு மாநாடுகளை 2002 தொடக்கம் தொடராக நடத்தியிருக்கின்றது. மின்சுற்று மின்சுற்றானது (electric circuit) மின்கூறுகளான மின்தடை, மின்தூண்டி, மின்தேக்கி, நிலைமாற்றி போன்றவற்றின் இணைப்பாகும். இது தேசிய மின்வழங்கலோ அல்லது தொலைத் தொடர்பாடல் வலையமைப்புப் போன்றோ பெரிதாக இருக்கலாம். இயற்கையில் இருப்பவற்றை இயற்பியல் கோட்பாடுகள் மூலம் ஒப்பு நிறுத்தி, அந்த இயற்பியல் கோட்பாடுகளையும் விதிகளையும் மின்சுற்று உறுப்புகளாக ஒருங்கே முன்னிறுத்தப்படுகின்றது. மின்சுற்று நிலையில் ஒப்புநிறுத்தும் பொழுது நாம் இயற்கையை நேரடியாக கையாளவேண்டிய தேவையை தவிர்த்து கொள்ளலாம். இயற்கைக்கும் இயற்பியல் விதிகளுக்கும் இருக்கும் தொடர்பும் இயற்பியல் விதிகளுக்கும் மின்சுற்று உறுப்புகளுக்கு இருக்கும் தொடபை துல்லியமாக அறிந்ததன் மூலமே இந்த ஒப்புநிறுத்தல் சாத்தியமானது. இது அறிவிலாளினதும் நுட்பவிலாளர்களினதும் நீண்ட உழைப்பின் பயனாகும். இந்த மின்சுற்று உறுப்புகளில் இருந்து சிக்கலான மின்சுற்றுக்களும் மேல் நிலை ஒப்பு நிறுத்தலும் உண்டு. அவை திருமூர்த்தி அருவி திருமூர்த்தி அருவி இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஆகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி மிக பிரபலமானது. இந்த அருவியில் இருந்து வரும் நீரானது திருமூர்த்தி அணையில் தேக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. கிளைமோர் கிளைமோர் ("M18A1 Claymore Antipersonnel Mine") என்பது மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதனை நோர்மன் மாக்கிளியோட் என்பவர் கண்டறிந்தார். இது மறைந்திருந்து படைவீரர்களை தாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிளைமோர்கள் வளைவான அதேநேரம் சற்றுத் தடிப்பான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். கிளைமோரில் ஏதோவோர் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படும். அதேவேளை வளைவான பக்கத்தில் இலக்கைத் தாக்கவேண்டிய சிதறுதுண்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான கிளைமோர்களில் உருக்கு உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும், சிலவற்றில் சிற்சிறு துண்டுகளாகச் சிதறக்கூடிய வகையில் உருக்குத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். கிளைமோர் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட பாகை ஆரைச்சிறைக்குள் (பெரும்பாலும் 60 பாகை) ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திற்கு சிறு உருக்கு உருளைகளை, அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிளைமோர்களில் 'எதிரியின் பக்கம்', 'எமது பக்கம்' என இரு பக்கங்கள் உள்ளன. பல கிளைமோர்களில் இவை எழுதப்பட்டுமுள்ளன. எதிரியின் பக்கத்தில் குறிப்பிட்ட ஆரையை விடுத்து ஏனைய பக்கங்களில் சிதறுதுண்டுகள் செல்லா. ஆனால் வெடிப்பின் அதிர்வு குறிப்பிட்டதூரம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். கிளைமோரை வெடிக்க வைப்பவர் தமது பக்கம் சிதறுதுண்டுகள் வரா என்றபோதிலும் மிக அருகிருந்து வெடிக்க வைக்க முடியாது. கிளைமோரை வெடிக்க வைப்பவருக்கான பாதுகாப்புத் தூரமென்று ஒரு தூரத்தை உற்பத்தியாளர்கள் வரையறுத்து வைப்பார்கள். M18A1 எனும் கிளைமோருக்கு இது பதினைந்து மீற்றர்கள். பலநாடுகளின் பலநிறுவனங்கள் பல்வேறு வகையில் கிளைமோர்களைத் தயாரிக்கின்றன. எனவே கிளைமோரின் தாக்கும் ஆரை, கொலைவீச்சு, பாதுகாப்புத் தூரம் என்பன மாறுபட்டுக்கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக P5MK2 இன் தாக்கும் ஆரை 60 பாகை, அதேவேளை செந்தூரன்-96 இன் தாக்கும் ஆரை 80 பாகை. கிளைமோர் என்பது துருப்பெதிர்ப்பு வகைக் கண்ணிவெடியாகும். இவை மனித இலக்குகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக மனித இலக்குகளை மட்டுமன்றி இலகுரக வாகனங்களிற் பயணிக்கும் மனித இலக்குகளுக்கு எதிராகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. கிளைமோர்கள் நிலத்தின் மேலே பயன்படுத்தப்படுகின்றன. தரையில் கிளைமோரை நாட்டுவதற்கு உதவியாக இவற்றில் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிளைமோரின் கோணத்தை மாற்றும்வகையில் இக்கால்கள் அசைதிறனைக் கொண்டவை. கிளைமோர் நிலைப்படுத்தப்பட்ட பின்னர் இவை சிறந்தமுறையில் உருமறைக்கப்படுகின்றன. உருமறைக்கும்போது கிளைமோரின் முன்பக்கத்தில் பெரிய தடைகள் ஏற்படாதவண்ணம் உருமறைக்க வேண்டும். அல்லாதுவிடின் கிளைமோரிலிருந்து புறப்படும் சிதறுதுண்டுகளின் தாக்கத்தை இத்தடைகள் வெகுவாகக் குறைத்துவிடும். பொதுவாக சிறுபற்றைகள், புற்கள், சேறு என அச்சூழலோடு தொடர்புபட்டு இவை உருமறைப்புச் செய்யப்படுகின்றன. கிளைமோர்கள் தரையில் நிலைப்படுத்தப்பட்டு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஓரளவு உயரமான இடங்களில் - குறிப்பாக மரங்களில் பொருத்தப்பட்டுக்கூட பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் வரும் எதிரிகள் மீதான தாக்குலுக்கு கிளைமோரை தரையில் நிலைப்படுத்துவதை விட மரங்களில் பொருத்தித் தாக்குதல் நடத்துவது அதிகளவு பலனைத் தரவல்லது. ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைமோர்களை வெடிக்க வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதுண்டு. நேரடியாக ஒவ்வொரு கிளைமோருக்கும் ஒரேநேரத்தில் மின்சாரம் வழங்கியோ அல்லது ஒரு கிளைமோருக்கு மட்டும் மின்சாரம் வழங்கி ஏனைய கிளைமோர்களை வெடிப்பதிர்வு கடத்தி(Detonating cord) மூலம் இணைத்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது. கிளைமோரை வெடிக்க வைப்பதற்கு கெற்பு (Detonator) பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கிளைமோர்களில் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வெடித்தலின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக மட்டுமன்றி, சீரான வெடித்தலை உறுதிப்படுத்தவும் அதன் விளைவாக சிதறுதுண்டுகளைச் சரியாக வழிநடத்தவும் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கெற்பு வெடித்து கிளைமோரிலுள்ள உயர்சக்தி வெடிமருந்தின் வெடித்தலைத் தொடக்கி வைக்கிறது. கெற்பை வெடிக்க வைக்கும் முறைகள் மூவகைப்படும். இம்முறையில் கெற்பானது மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுகிறது. எந்நேரத்தில் வெடிக்க வேண்டுமென்பதை மனிதரொருவர் தீர்மானித்து இதைச் செயற்படுத்துகிறார். இம்முறையில் மின்சாரக் கெற்புகளே பயன்படுத்தப்படுகின்றன. இக்கெற்புகளுக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதற்குள்ளிருக்கம் தங்குதன் இளை எரிந்து வெடித்தலைத் தொடக்கிவைக்கிறது. நகர்ந்துவரும் எதிரிகளைத் தாக்கவென நிலைப்படுத்தப்பட்டிருக்கும் கிளைமோரை இலக்கு கொலைவலையத்துள் வந்ததும் குறிப்பிட்ட மனிதர் வெடிக்க வைப்பார். இம்முறையில் தாக்குதலை நடத்துபவர்கள் இலக்கை அவதானித்துக் கொண்டு நிற்க வேண்டும். மின்கம்பி மூலமாக நேரடியாக மின்சாரம் வழங்கியோ அல்லது தானியங்கிக் கட்டுப்பாட்டுக் கருவி மூலமோ (Remote control) தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இம்முறையில் கெற்பானது தாக்குதலைச் செய்யும் மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக தாக்குதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்களால் தூண்டல் ஏற்பட்டு இவை வெடிக்க வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொறிவெடியாக அமையப் பெற்றிருக்கும். எடுத்துக் காட்டாக, வீதிக்குக் குறுக்காக இடறுகம்பியொன்றைக் கட்டி, அது இடறுப்படும்போது செயற்படத்தக்கதாக ஒரு பொறியமைப்பை அதன் ஓர் அந்தத்திற் பொருத்தி கிளைமோரை நிலைப்படுத்தி வைத்தல். வீதியில் நடந்துவருபவர்களோ வாகனமோ இடறுகம்பியில் இடறும்போது கிளைமோர் வெடிக்கும். இம்முறையில் மின்சாரக் கெற்புகள் மட்டுமன்றி, ஏனைய பொறிமுறைக் கெற்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது மேற்குறிப்பிட்ட இரு வகைக்குள்ளும் அடக்க முடியாததால் தனியொரு முறையாகக் வகைப்படுத்தப்படுகிறது. கிளைமோரோடு பொருத்தப்பட்ட நேரக்கணிப்பியில் (Timer) தாமத நேரம் தெரிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வந்தது கிளைமோர் வெடிக்கும். இம்முறை மிகமிக அரிதாகவே கிளைமோர்த் தாக்குதல்களிற் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். பிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காகவும் சில சிறப்புத் தேவைகளுக்காகவும் இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது. விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தினர் . இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்பட்டன. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் என்பது இலங்கையை பிருத்தானியர் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இலங்கை அரசியல் நிர்வாக முறையில் பிருத்தானியரால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமாகும். இது 1833 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தம் கோல்புறூக், கமரன் ஆகியோரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி இலங்கையில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றஎஎடெடெடெடடவர்களாக இருந்தனர். 1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. கண்டிச் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது. சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்ட நிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறையே கொழும்பு அரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி, கணக்காய்வாளர், வருமானவரி அதிகாரி என்போராவர். சி. சிவசேகரம் சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார். 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மொன்சன்ரொ மொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது. மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது. கராத்தே (இதழ்) தற்காப்பு கலைகளை மையமாக வைத்து மார்ச் 2006 முதல் சென்னையில் இருந்து வெளிவரும் மாத சஞ்சிகை கராத்தே ஆகும். இந்திய தற்காப்பு கலைகள் பற்றி எளிய தமிழில் சிறப்புக்கட்டுரைகளை இச்சஞ்சிகை கொண்டிருக்கின்றது. தற்காப்பு கலைகளை விளக்கும் நோக்கில் படங்களுடன் கூடிய நுணுக்க குறிப்புகள், தற்காப்பு கலை அகராதி போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் உடற்பயிற்சிதிட்டங்கள், உணவு, மருத்துவ அலோசனைகளையும் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியிர் கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆவார். ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் (இதழ்) உடல் செதுக்க கலை, உடற்பயிற்சி கலை ஆகிய துறைகளை மையமாக வைத்து வெளிவரும் மாத சஞ்சிகை ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் ஆகும். உடற்பயிற்சி எடுத்துக்காட்டுக்கள், நுட்ப குறிப்புகள், உடல் செதுக்க கலை வீரர்களை பற்றிய கட்டுரைகள், தமிழ் நாட்டு, இந்திய, சர்வதேச் உடல் செதுக்க கலை போட்டிகள் குறித்த செய்திகள், உணவு ஆலோசனைகள், புகைப்படங்கள் போன்று பல அம்சங்களை கொண்டுள்ளது. ஆங்கிலம் கலந்த இந்திய தமிழ் நடையிலேயே படைப்புக்கள் பொதுவாக எழுதப்பட்டுள்ளன. இச்சஞ்சிகையின் ஆசிரியர் ஒலிம்பியா ஜெய் ஆவார். வளர்தொழில் (இதழ்) வளர்தொழில், வணிகத் துறைத் தகவல்களை முதன்மைச் செய்திகளாகக் கொண்டு எளிய தமிழில் வெளிவரும் மாத இதழ் ஆகும். முன்மாதிரித் தொழில் முனைவோர், தொழில்சார் ஆலோசனைகள், கேள்வி பதில்கள், பலதரப்பட்ட தொழில்துறை செய்திகள், தொடர்புத் தகவல்கள், நிர்வாகத் தகவல்கள் என்று பலதரப்பட்ட தொழில், வணிகத் தகவல்களுடன் வளர்தொழில் வெளிவருகின்றது. பொது அறிவு உலகம் (இதழ்) "தன்னம்பிக்கை - போட்டித் தேர்வு - வேலைவாய்ப்பு தமிழ் - ஆங்கில மாத இதழ்" என்ற சுலோகத்துடன் வெளிவரும் இதழ் பொது அறிவு உலகம் ஆகும். பல துறை சார் கட்டுரைகள், பல துறை செய்தி குறிப்புகள், பொது அறிவு கேள்வி பதில்கள், கட்டுரை போட்டிகள் என பல அம்சங்களை இந்த இதழ் கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் ஆக்கங்கள் எழுதப்பட்டிருந்தாலும், கட்டுரைகள் பொதுவாக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன.பொது அறிவு உலகம் மாத இதழ் 2004 ஆம் ஆண்டு டாக்டர் அகிலன் இராம்நாதன் மற்றும் எஸ்.செல்வராஜ் இருவரால் துவக்கப்பட்டது. பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து வெளிவருகின்றது.இவ்விதழின் பதிப்பாளர் மற்றும் உரிமையாளர் நக்கீரன்கோபால் ஆவார். நுட்பம் (சஞ்சிகை) ஆரம்ப நிலை, சிக்கலான நுட்ப அறிவியல் தகவல்களை பகிரவென கனடாவில் இருந்து 1999 இல் வெளிவந்த சஞ்சிகை நுட்பம் ஆகும். பல்வேறு துறைசார் ஆக்கங்களோடும், திறமான வடிமைப்போடும் நுட்பம் வெளிவந்தது. எனினும் நான்கு இதழ்களோடு அச்சு இதழ்கள் நின்றுவிட்டன. இவ்விதழ்கள் அவர்களின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன. குவியம் (சஞ்சிகை) "அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை குவியம் ஒன்றாக குவிக்கும்" என்று கூறி தமிழிலிலும் ஆங்கிலத்திலும் படைப்புக்களை தாங்கி கனடாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை குவியம் ஆகும். அரசியல், கட்டுரை, வணிகம், சிறுகதை என்று பலதரப்பட்ட படைப்புக்கள் வெளிவருகின்றன. இச்சஞ்சிகை இணையத்தில் வெளிவரும் படைப்புக்களின் முழுமையான அச்சுப் பதிப்பு ஆகும். காலம் (சஞ்சிகை) சீரிய தமிழ் இலக்கியத்தையும், திறனாய்வுகளையும் கொண்டு கனடாவில் நீண்ட காலமாக வெளிவரும் ஒரு சஞ்சிகை காலம் ஆகும். இச்சஞ்சிகை தமிழ்நாட்டு காலச்சுவட்டை தழுவிய அல்லது அதன் படைப்புக்களையே பெரிதும் தாங்கி வருவதாக ஒரு விமர்சனம் உண்டு. காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் அவர்கள் "வாழும் தமிழ்" என்று ஒரு நூல் கண்காட்சியும் ஒவ்வொரு கோடை காலத்திலும் கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். பறை (சஞ்சிகை) "எமது-நமது தமிழ் சமூகத்தின் மீது அக்கறையுடைய தமிழ் விருப்பும் பகுத்தறிவு முனைப்புமுடையவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கே இந்தத் தளம்" என்று முதல் இதழில் சொல்லி கனடாவில் வெளிவரும் சஞ்சிகையே பறை ஆகும். தீவிர தமிழ்த் தேசியம், பெரியாரியம், பிராமணிய எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற அக்கறைகளைக் கொண்ட சஞ்சிகை. இது ரொறன்ரோவின் முழக்கம் வார பத்திரிகையின் ஒரு வெளியீடாகும். ரிஒ தமிழ் (சஞ்சிகை) ரொறன்ரோ (டொரான்ட்டோ) இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் - ஆங்கில சஞ்சிகை ரிஒ தமிழ் (டிஓ தமிழ்) ஆகும். அழகிய வடிவமைப்போடு வெளிவருகின்றது. ரொறன்ரோ (டொரான்ட்டோ) சார் செய்திகள், "சிறையிலிருந்து" போன்ற சில போட்டிகள் சிறப்பு அம்சங்கள் எனலாம். நிர்மாணம் (சஞ்சிகை) "எந்த விடயமுமே எதோ ஒரு பரிசோதிப்புக்கு உள்ளாகிக்கொண்டே (Check and Balance) இருக்க வேண்டும்" என்று கூறி பல்வேறு தரப்பட்ட அரசியல் அலசல் கட்டுரைகளை கொன்டு நிர்மாணம் சஞ்சிகை வெளிவந்தது. இச்சஞ்சிகை ஈழ அரசியலையே மையமாக வைத்து வெளிவருகின்றது. கைநாட்டு (சஞ்சிகை) "மாற்றுக்கான களம் என்பதே எமது குறிக்கோள்" என்று கூறி ரொறன்ரோவில் இருந்து வெளிவரும் சமூக, அரசியல், இலக்கிய சஞ்சிகை கைநாட்டு ஆகும். இச்சஞ்சிகை கட்டுரை, கவிதை, சிறுகதை, நிகழ்வு குறிப்புகள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது. இச்சஞ்சிகை அரசியல், கலை, இலக்கியம், நாடகம், பத்திரிகை ஆகியவற்றின் ஊடாக அனைத்து அடக்குமுறையாளர்களையும் எதிர்ப்பதை தம் நோக்கமாக கூறும் கருமையம் அமைப்பினால் வெளியிடப்படுகின்றது. பிறிஸ்பேன் செல்வ விநாயகர் கோயில் செல்வ விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிறிஸ்பேனிலிருந்து 45கிமீ தெற்காக உள்ள தெற்கு மக்லீன் ("South Maclean") என்னுமிடத்தில் லோகன் ஆற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கோயில் கட்டிடக் கலைஞர்களாலும் சிற்பிகளாலும் சிற்ப சாத்திரங்களுக்கும் சிவாகமம் கூறும் விதிமுறைகளுக்கும் அமைய வடிவமைக்கப்பட்டுள்ளது. 1995 பெப்ரவரி 5 ஆம் திகதி இக்கோயிலின் குடமுழுக்கு("கும்பாபிஷேகம்") நடைபெற்றது. கோயிலில் செல்வ விநாயகர் மூலஸ்தானத்தில் வீற்றிருக்க, அவரது வலதுபுறத்தில் அபிராமி சமேதரராக சிவனும், இடப்புறத்தில் விஷ்ணுவும் அமர்ந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தின் பின்புறத்தில் உரிய இடத்தில் முருகன் அமர்ந்து அருள் பாலிக்கின்றான். நவக்கிரகங்களும் வைரவரும் வாசலுக்கு அருகில் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்துள்ளனர். சிவனுக்கு வலது புறத்தில் பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்ட திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் , கருங்கல்லில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணரும் அமர்ந்துள்ளனர். தினசரி காலையிலும் மாலையிலும் பூசை நடைபெறுகி்றது. இக்கோயில் கல்விநிலையமாக விளங்கி பிள்ளைகளுக்கான பல சமய வகுப்புக்களை நடத்தி வருவதுடன் நூலக வசதிகளையும் கொண்டுள்ளது. 'கோயில்மணி' என்ற பெயரில் ஒரு செய்தி மடல் வருடத்திற்கு இரு முறை வெளியிடப்படுகிறது. பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பேர்த் சிவன் கோயில் பேர்த் சிவன் கோயில் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகரான பேர்த்தில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில். பேர்த்தில் ஒரு இந்துக் கோயில் அமைப்பதற்காக காணியொன்றை வாங்கும் திட்டம் 1986, ஆகத்து 10-ஆம் திகதி நடைபெற்ற பேர்த் இந்து சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1987 செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 அம்ம் திகதி வரை நடைபெற்ற நவராத்திரி பூசையின் போது சுவாமி சாந்தானந்ஜீ கோயிலுக்காக வாங்கப்பட்ட காணியைப் புனிதப்படுத்தினார். 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயில் மண்டபம் கட்டும் பணி ஆரம்பமாகியது. ஒரு வருடத்துக்குள் மண்டபம் நிறைவுற்று 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 7-9 ஆம் திகதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவலிங்கம், அம்மன், விநாயகர் ஆகிய விக்கிரகங்கள் முதலில் அங்கு தாபிக்கப்பட்டன. ஒரு சீன அன்பரால் வழங்கப்பட்ட அநுமன் விக்கிரகம் 1990 ஆம் ஆண்டு இராம நவமியின் போது தாபிக்கப்பட்டது. சுவாமி அரிதாஸ் கிரியால் அனுப்பி வைக்கப்பட்ட அவரவர் தேவிகளோடு கூடிய விஷ்ணு, முருகன் விக்கிரகங்கள் 1993 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி குரு பூர்ணிமாவில் தாபிக்கப்பட்டன. பேர்த்தில் இந்துக்களின் தொகை அதிகரிக்கவே கோயில் பெரிதாக அமைய வேண்டிய தேவை எழுந்தது. அப்போது உள்ள மண்டபத்தை பரபார்ந்த கோயிலாக மாற்றிக் கட்டுவதா அல்லது புதிதாகக் கோயில் அமைப்பதா என்ற கேள்வி எழுந்தது. புதிய கோயில் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டு மரபார்ந்த கோயிலைப் போல ஒரு பிரதம தெய்வமும் பரிவார தெவங்களாகவும் அமைக்காது ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே விதமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோயில் அமைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. 1998 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விநாயகர், அம்மன், முருகன், சிவலிங்கம், இலட்சுமி சமேதரராக நாராயணன் ஆகிய தெய்வங்கள் தாபிக்கப்பட்டு ஒவ்வொரு தெய்வத்துக்குரிய சிறப்பு நாட்களுக்கு சிறப்புப் பூசைகளும் நடத்தப்படுகின்றன. தமிழர் தகவல் (சஞ்சிகை) கனடாவில் 'ஒட்டகப் பயணம்' என்று கூறி நிலைத்து நின்று பலதரப்பட்ட நிகழ் கால தகவல்களை எளிமையாக தமிழர் தகவல் பகிர்கின்றது. குடிவரவு, கல்வி, கனடிய அரசியல், மொழிபெயர்ப்பு, அறிவுப்புக்கள், பயணக் கட்டுரைகள், நினைவு மீட்டல்கள், "கனடிய காட்சிகள்" என்று பல முக்கிய பயனுள்ள தகவல்களை பகிர்கின்றது. இச்சஞ்சிகையின் ஆண்டு இதழ்கள் அதிக பக்கங்களுடன் பல நல்ல கட்டுரைகளை கோர்த்து வெளிவருகின்றது. கனேடியத் தமிழ் இலக்கியம் கனடாவில் ஆக்கப்படும் தமிழ் ஆக்கங்களைக் கனேடியத் தமிழ் இலக்கியம் எனலாம். கனேடியத் தமிழ் இலக்கியம் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் என்றும் வகைப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் கனடாவில் பல ஆக்கங்களை ஆக்கிவருகின்றார்கள். இவ்வாக்கங்கள் புகலிட வாழ்வியல், கனடிய சூழல், உலகமயமாக்கம், தமிழ்த் தேசியம், தொழில்நுட்பம் போன்று பல கருப்பொருள்களை மையப்படுத்தி வெளிவருகின்றன. அற்றம் (சஞ்சிகை) அற்றம் கனடாவிலிருந்து வெளிவரும், பெண்களை ஆசிரியர்களாகக் கொண்ட இதழாகும். இதன் முதலாவது வெளியீடு 2005ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. கூட்டுறவு கூட்டுறவு என்பது கூட்டுறவுக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சமூக, பொருளாதார, நிறுவன அமைப்பாகும். தனிக்கட்டுரை: கூட்டுறவுக் கொள்கைகள் 1995 ம் ஆண்டு அனைத்துலக கூட்டுறவு ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள். 1. தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை. 2. மக்களாட்சி முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும். 3. உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்பு 4. கட்டுப்பாடுகளின்றியும் தானாகவும் தொழிற்படல். 5. கல்வி, பயிற்சி, தகவல். 6. கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு. 7. சமூக மேம்பாடு அடிலெயிட் கணேசர் கோயில் அருள்மிகு கணேசர் கோயில் தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் அடிலெயிடில் உள்ள ஓக்லண்ட்ஸ் பார்க் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோயிலை அமைப்பதற்கு முன்னோடியாக 1985இல் அடிலெய்டில் இயங்கி வந்த இந்து சங்கம் ஒரு தேவாலயத்தை வாங்கியது. பின்னர் இத்தேவாலயத்தைக் கோவிலாக்கி அருள்மிகு கணேசரை முதன்மைக் கடவுளாக நிறுவுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மாமல்லபுரத்தில் இருந்து கருங்கல்லாலான கணேசர் சிலையை நிறுவி 1986 ஜூலை மாதத்தில் குடமுழுக்கு நடத்தினர். இறை வழிபாட்டுடன் இந்து தத்துவம், பண்பாடு, இந்திய மொழிகள் போன்றவற்றையும் கற்பிப்பதற்கான இடமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலகட்டத்தில் இதுவே அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கோயிலாக இருந்தது. 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கோயிலுக்கு அருகில் இருந்த நிலம் வாங்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அத்திவாரம் இடப்பட்டது. கோயிலை உருவாக்குவதற்காக இந்தியாவிலிருந்து சிறந்த ஸ்தபதி வரவழைக்கப்பட்டார். கோயில் கட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பரில் குடமுழுக்கு செய்யப்பட்டது. தென்னிந்திய மரபின்படி கருங்கல், வெண்கலம் ஆகியவற்றாலான சிலைகளும், வட இந்திய மரபின்படி பளிங்கிலான சிலைகளும் அமைந்திருப்பது இக்கோயிலுக்குரிய தனித்தன்மையாகும். வளத்தையும் செல்வத்தையும் வழங்கும் சித்தி கணேசர் கருவறையிலும், சிவலிங்கம், வள்ளி தெய்வானை உடனிருக்க முருகன், துர்க்கை, லட்சுமி, நாராயணன் ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் இக்கோயிலில் அமர்ந்திருந்து அருள் தருகின்றனர். அத்துடன் ஒன்பது கிரகங்கள், வைரவர், அநுமன் ஆகியோரையும் அவரவர்க்குரிய இடங்களில் நிறுவியுள்ளனர். நா. மகேசன் நா. மகேசன் (பி: 1933, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்) அவர்கள் மேடை நாடக விற்பன்னர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். "வானொலி மாமா" என அழைக்கப்பெற்றவர். நாகலிங்கம் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஐந்தாவது மகவாகப் பிறந்த மகேசன் இளவாலை சாந்த ஹென்றி கல்லூரியில் கல்வி பயின்றார். இலங்கை அரசாங்க கணக்காளர் சேவையில் கணக்காளராகப் பணிபுரிந்த போதிலும், இலங்கை வானொலியில் 'சிறுவர் மலர்' என்ற 45-நிமிட நேர நிகழ்ச்சி மூலம் 1965 முதல் தனது கலைப்பணியை ஆரம்பித்து, 1981 வரை விடாது நடத்தி வந்தார். இதனால் இவர் 'வானொலி மாமா' என சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவர் மலர் நிகழ்ச்சியில், சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும் வந்தார். பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பா போன்ற அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர் தற்போது சிட்னியில் வசித்து வருகிறார். சிட்னியில் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி நியூ சவுத் வேல்ஸ் அரசு 2006 இல் அவருக்கு “THE ACHIEVER” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. மெல்பேர்ண் முருகன் கோயில் மெல்பேர்ண் முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ணில் சண்சைன் நோர்த் () என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மெல்பேர்ண் முருகன் கலாசார நிலையம் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டில் ஒரு சங்கம் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டது. ஒரு வேல் வடிவமைக்கப்பட்டு அதற்கு பூசைகள் தொடர்ந்தும் மண்டபங்களில் நடத்தப்பட்டு வந்தது. சுற்றுச் சூழலில் வசித்த இலங்கை, இந்தியா, மலேசியா, பீஜி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்குரிய ஆன்மிக, வழிபாட்டுத் தேவைகளை இது நிறைவேற்றி வந்தது. பின்னர் கோயில் ஒன்றை அமைப்பதற்காக சண்சைன் நோர்த் என்னும் இடத்தில் காணி வாங்கப்பட்டது. வழிபாட்டு மண்டபத்தின் முதல் கட்டம் 1999 இல் பூர்த்தியடையவே பூசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு பகல் முழுவதும் அங்கு வரும் பக்தர்களுக்காக பூசைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட கட்டிடத்தை அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டளவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூரணி (இதழ்) பூரணி ஈழத்திலிருந்து வெளியான சிற்றிதழ்களில் ஒன்று. குறைந்த எண்ணிக்கையான இதழ்களே வெளியான போதும் பூரணியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. 1972 இல் பூரணி முதல் இதழ் வெளியானது. காலாண்டிதழாக வெளியான பூரணியின் ஆசிரியர்களாக க. சட்டநாதன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் பணியாற்றினர். ஞானம் (இதழ்) ஞானம் ("Gnanam") ஈழத்தில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாதாந்த இலக்கிய இதழ் ஆகும். இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஆவார். ஞானம் முதல் இதழ் 2000 ஜூனில் வெளியானது. இதுவரை மாதம் தவறாமல் வெளிவருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பத்திகள் ஞானத்தில் வெளிவருகின்றன. ஞானம் 150ஆவது இதழ் ஈழப்போர் இலக்கியச் சிறப்பிதழாக 2012 நவம்பர் 25 இல் வெளியிடப்பட்டது கே. விஜயனின் படித்ததும் கேட்டதும், மானா மக்கீனின் ஓசையில்லா ஓசைகள் ஆகிய பகுதிகள் ஞானம் சஞ்சிகையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது. ஒரு சில இதழ்களை ஒருங்குறி வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் மின்னஞ்சலினூடாக அனுப்பி வைக்கப்படுகின்றது. ஞானம் சஞ்சிகை பற்றிய கலந்துரையாடல்களுக்காக ஓர் இணையத்தளம் ஒன்றையும் ஞானம் ஆசிரியர் ஆரம்பித்துள்ளார். இவ்விணையத்தளத்தின் மூலம் வாசகர்கள் ஞானம் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது. பா. அகிலன் பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. சபா. ஜெயராசா பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசா ஈழத்தின் புலமையாளர்களில் ஒருவர். பல கல்வியியல் மற்றும் உளவியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் "ஊர்வீதி" என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். தமிழர் அறிக்கையும் பரத நடனமும்-2002 செம்பியன் செல்வன் இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(பி:ஜனவரி 1,1943 திருநெல்வேலி, யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) பேராதனைப் பல்கலைக் கழக சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனது ஆழமான பங்களிப்பினை ஆற்றிய முக்கிய படைப்பாளிகளிலொருவரான செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபாலன்) தனது அறுபத்திரண்டாவது வயதில் கொழும்பில் காலமானார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. செங்கை ஆழியான் எழுதிய "வாடைக் காற்று" திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதியவர். சுயாதீனத் தொலைக்காட்சி சுயாதீன தொலைக்காட்சி இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது. எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) என்பது, மென்பொருள், வன்பொருள் மற்றும் எண்முறை வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை, பயன்படுத்துவதற்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்துகின்ற/கட்டுப்படுத்துகின்ற கொள்கைகளையும், உரிம ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் எந்தவொரு தொழிநுட்பத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும். எண்முறை உரிமைகள் முகாமைத்துவமானது, குறித்த எண்முறை ஆக்கம் ஒன்று கொண்டிருக்கும் உரிமைகளை, உரிமக் கட்டுப்பாடுகளை விபரித்தல், பயன்படுத்தல் விற்றல், போன்ற விடயங்களை கையாள்கிறது. காப்புரிமை மீறல்களைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் பயனாகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்தவொரு எண்முறை ஆக்கத்தையும் நகலெடுப்பது கடினமாகும். இவை சிலநேரங்களில் காப்புரிமை சட்டங்களை விடக் கடுமையாக இருப்பதாக உள்ளது. இதனால் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் இதனை எண்முறை தடுப்பு முகாமைத்துவம் (Digital Restrictions Management) எனப் பெயரிடல் பொருத்தமானது எனக் கருதுகின்றனர். தற்போது வெளியிடபட்டிருக்கும், க்னூ பொதுமக்கள் உரிமத்தின் மூன்றாம் வெளியீட்டின் முதலாவது முன்வரைவானது தன்னகத்தே, எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் தொடர்பான வியாக்கியானங்களையும் கொண்டிருக்கிறது. எண்முறை உரிமைகள் முகாமைத்துவத்தை செயல்படுத்தும் மொன்பொருள் நிரலை மாற்றி மீறிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிரல் மீறப்பட்டல் நகலெடுப்பது எளிதாகும். இதுவரை உள்ள அனைத்து பொதுவான முகாமைத்துவ நிரல்களும் மீறப்பட்டுள்ளன. வருங்கால நிரல்களும் மீறப்படக்கூடும். இவ்வாறு நிரல்மீறல் ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பானதாகும். எண்ணிம முறை எண்ணிம முறை (Digital system) என்பது கருத்தளவில், 6 மரம், 8 விதை, 5 விரல் என்பது போல எண்ணிக்கையால் குறிக்கப்பெறும் முறை. இதற்கு மாறாக, நீர், பால் போன்றவற்றையோ, நீள அகலம் போன்றவற்றையோ தொடர்ச்சியாக மாறுபடும் அளவைப் பொருள்களாகக் கொள்ளலாம். இந்த எண்ணிம முறையில் பல வகைகள் உண்டு என்றாலும், அடிப்படையாக 0,1 என்று கருதப்படும் இரண்டின் அடிமானமாகிய இரும முறையே இன்று பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச் சொல் digital என்பது இலத்தீன் மொழியில் "விரல்" (finger) என்று பொருள்படும் digit என்பதில் இருந்து உருவானது. ஒலி, ஒளி போன்று தொடர்ச்சியாக மாறும் பண்புகளையும், தக்கவாறு பகுத்துத் தோராயமாக எண்ணிம அளவாக மாற்றலாம். இப்படி எண்ணிமப் பொருளாக மாற்றுவதற்கு துளிகையாக்கம் (quantization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தொடர்ந்து மாறுபடும் ஒரு குறிப்பலையை எவ்வாறு துளிகையாக்கம் செய்து எண்ணிமப்படுத்தலாம் என்பதை அருகில் உள்ள படங்கள் விளக்கும். அ. ந. கந்தசாமி அ. ந. கந்தசாமி (ஆகத்து 8, 1924 - பெப்ரவரி 14, 1968) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகின்றவர். சிறுகதை, புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதியவர். அ. ந. கந்தசாமியின் தந்தை நடராஜா யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் மருத்துவ அதிகாரியாக விளங்கியவர். தாய் கெளரியம்மா. இவருடன் உடன்பிறந்தவர்கள் நவரத்தினம், தையல்நாயகி ஆகியோர். தந்தை பல சொத்துக்களின் உரிமையாளராக விளங்கியவர். கந்தசாமிக்கு ஐந்து வயதான போது தந்தை இறந்து விட்டார். தாயும் தந்தை இறந்து 41-ஆம் நாள் இறந்து விட்டார். தொடக்கக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற கந்தசாமி சிறிதுகாலம் அளவெட்டி சென்று பாட்டியுடன் வாழ்ந்து வந்தார். அங்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆண்டு 10 (SSC) வரை கல்வி கற்றார். அ. ந. கந்தசாமி சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் வாழ்ந்து மணமுடித்தார். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது உடன் பிறந்தவளை. அளவெட்டியில் வாழ்ந்ததால் தன் பெயரில் முன்னொட்டாக 'அ' என்பதையும், தந்தையின் பெயரின் முதலெழுத்தான 'ந' என்பதையும் இணைத்து அ. ந. கந்தசாமி என்று தன்னை அ. ந. கந்தசாமி அழைத்துக் கொண்டார். இவர் பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றார். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களில் ஒருவர். அதன் சங்கப் பண்ணை இயற்றினார். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ. ந. க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். 1943 இலிருந்து 1953 வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணி நிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ. ந. க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் விளங்கினார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் உரை திருத்துபவராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய கந்தசாமி தேசாபிமானி இதழின் தொடக்கக்கால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் இதழில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கில இதழான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நாநா' (புதினம்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீனப் புதினம், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். பேராசிரியர் க. கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ. ந. கந்தசாமிக்கு உரித்தாக்கி உள்ளார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த புலமை மிக்கவர் கந்தசாமி. காரைநகர் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் அல்லது சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது "ஈழத்துச் சிதம்பரம்" என அழைக்கப்பட்டு வருகின்றது. இது 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேசுவரர் என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பேர். இக்கோயில் தொடக்கத்தில் ஆண்டி கேணி ஐயனார் கோயில் என்றே அழைக்கப்பட்டது. ஐயனார் கோயிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை அமைப்பதிலும் முன்னின்றவர். இங்குள்ள ஐயனார் பூரணை, புட்கலை சூழ அமர்ந்துள்ளார். சிவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகின்றது. சிவனுக்குக் கோபுரம், சித்திரத்தேர் உள்ளது போல ஐயனாருக்கும் தனியே கோபுரம், சித்திரத்தேர் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர். இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும். பங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும் ஆடிப்பூரத்தில் நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன. கொழும்புத்துறை சிவயோக சுவாமிகள் இத்தலைத்தை வழிபட்டுள்ளார். அவர் இக்கோயிலைச் சுட்டிக் காட்டி இவ்வாலயம் சிறப்பான ஆலயம், இதனைக் கூத்துக் கொட்டகை ஆக்கி விடாதீர்கள் என ஆணையிட்டார். போர்னியோ போர்னியோ ("Borneo") உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவான இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது. இந்தோனேசியாவில் இத்தீவு "கலிமந்தான்" என்று அழைக்கப் படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது "மலேசிய போர்னியோ" என்பது சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும். அமேசான் காடுகளின் ஒரு பகுதிக்கு புவிக்கோளத்தின் நேர்எதிரே உள்ள போர்னியோக் காடுகள் உலகின் பழமையான மழைக்காடுகளுள் ஒன்றாகும். போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலிபிஸ் கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன. போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட தீவு ஆகும். கினபாலு மலை என்பதே இத்தீவின் உயரமான மலை. உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு. இத்தீவில் குறிப்பிட்டத்தக்க குகை அமைப்புகளும் உள்ளன. உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளது. மான் குகை என்றறியப்படும் குகையில் 30 இலட்சம் வவ்வால்கள் இருப்பதாகவும் கரப்பான் பூச்சிக் குகை என்னும் குகையில் பல இலட்சக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்துக் கடவுள்கள் இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். இந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்த சமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன. வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள். வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதி ஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்து சமயக் கடவுள்களின் பட்டியல் இந்து சமயக் கடவுளுடைய வாகனங்களின் பட்டியல் எரிக் சொல்ஹெய்ம் எரிக் சொல்ஹெய்ம் ("Erik Solheim", பி: ஜனவரி 18, 1955, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் இடது சோசலிஷ கட்சியின் (Socialist Left Party) தலைவர் ஆவார். 2005ம் ஆண்டு தேர்தேடுக்கப்பட்ட அரசாங்கத்தில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சாராகவும் பதவிவகித்து வருகின்றார். இலங்கையில் நோர்வே அரசின்அனுசரணையுடன் இடம்பெறும் அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான சமாதானப் பேச்சுக்களில் சிறப்புத் தூதூவராக 2000ம் ஆண்டிலிருந்து 2006 வரை பணியாற்றி வந்தார். இந்திரன் (இந்து சமயம்) இந்திரன் () (தேவேந்திரன் ) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர். இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வஜ்ஜிராயத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவன். யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான். தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது.ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுகள் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரியவருகிறது. வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டு இந்திரர்கள் இந்தியத்தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன். பின் குறிப்பு:- இந்த ஆரியர் -தமிழர் பாகுபாடு மிகுந்த நகைப்பை வரவழைக்கும். தமிழ்சித்தர் போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலைப் படித்திருந்தால் இது புலப்படும். 'ஆதியில் நந்தியாகி, அயனும் மாலுமாகி, பிறகு இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணன், நபி என்று ஜெனனம் எடுத்தபின் இன்று போகராக இருக்கிறேன்' (பா.324) என்கிறார். அப்படி என்றால் தேவேந்திரனான போகர் ஆரியரா? புராணங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொரு பாத்திரத்தை ஏற்கும். இதை ஈசன் தான் முடிவு செய்கிறார் என்று போகர் குறிப்பிடுகிறார். இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார். இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம். இருக்கு வேதம் இருக்கு வேதம் (சமசுகிருதம்: - "ரிக்வேத") இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 - 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருக்கு வேதம் என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது. இருக்கு வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று. ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக(மந்திரங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. ’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ’ருக்’ என்று பெயர். இந்த 1028 சூக்தங்களில் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் (சோமபானம்), நல்ல மழை, தானிய விளைச்சல், தானம்,(தட்சனை) அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான "தாசர்" எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் கிராதர்கள் என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இருக்கு வேதத்தில் காணப்படும் வேறு கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் "ஸேயுஸ்" (Zeus), லத்தீன் மொழியிலுள்ள "ஜுபிட்டார்" (Jupiter) ("தேயுஸ் பேட்டர்" (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான "தியாயுஸ் பிதா" என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம். இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் முதன்மையான ரிக்வேத கால முனிவர்கள், வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான், தீர்க்கதமா, கோதமர், மேதாதிதி, சியாவாஷ்வ, குதச, மதுச்சந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக், பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி ஆவர். இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் அரசர்களில், திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவா, நகுசன், யயாதி, மாந்தாதா, புரு, குசிக், திரிச்சு மற்றும் குசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருக்கு வேதத்தில் குறிப்பிடும் பகையரசர்கள் மற்றும் படைத்தளபதிகளில் முதன்மையானவர்களில் சிலர், தஸ்யூக்கள் [அசுரர்கள்], இமயமலைவாழ் கிராத இனத்து அரசர்களான சம்பராசூரன், விருத்திராசூரன், சுஷ்ணன், குத்ஸன், பிப்ரு, வங்கிருத், கரஞ்ச், பர்ணய், மற்றும் வர்ச்சி. இருக்கு வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள், இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ, வைஸ்வதி, ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா, விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, மன்னன் சுதாசின் மனைவி சுதேவி மற்றும் சூர்யா. ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். இருக்கு வேதத்தில் அரிசி பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. அவர்கள் அருந்தும் சிறப்பான பானம், சோம பானம் ஆகும்.(இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்) ஆனால் அவர்கள் சுரா பானம் அருந்துவது இல்லை. சவ்வரிசி முதன்மையான உணவாக இருந்தாலும், வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர். ஆரிய மக்கள் வாழும் இருப்பிடங்களை ‘கிராமங்கள்’ என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி’ என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா’ என்றும் அழைத்தனர். ’சாம்ராட்’, ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப்’ (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதி’ ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். இருக்கு வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதும் ஆகும். இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி (ராவி ஆறு), 2 அசிக்னி (செனாப் ஆறு), 3 சிந்து ஆறு, 4 விபாஷ் (ஜீலம் ஆறு),5 சுதுத்ரி (சத்லஜ் ஆறு), 6 திருஷ்த்வதி (சரசுவதி ஆறு), 7 கக்கர் (யமுனை) நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் கங்கை நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும் (ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் கங்கை ஆறு, இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் (கிராதர்கள்வாழ்ந்த பகுதி) அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது. இருக்கு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் ஐதரேய உபநிடதம்↑ ஆகும். இது 'ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர். உபுண்டு (இயக்குதளம்) உபுண்டு ( ) ("Ubuntu") என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களைப் பணம் எதுவும் செலுத்தாமல் அஞ்சல் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. உபுண்டு என்ற ஆப்பிரிக்கச் சொல்லிற்கான பொருள், மானிட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்சு" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது. உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டபடி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் வெளிவந்ததாகும். இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப் போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது. மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிக்கல் நிறுவனம் (Canonical Ltd) எனும் நிறுவனம் உபுண்டுவுக்கு அனுசரணை வழங்குகிறது. உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன, இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன. இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம். இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது. இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை. உபுண்டு சர்வர் பதிப்பு மேகக் கணினி கூட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. (உபுண்டு 11.04 பதிப்பும் அதற்க்கு மேலும்) பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது. கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன. உறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்) உறுதியின் வெற்றி என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய றைய்யம் ஒஃவ் த வில் (ஆங்கிலம்: Triumph of the Will; யேர்மன்:Triumph des Willens) நாசி கட்சியை பற்றிய ஒரு பரப்புரை விபரண திரைப்படமாகும். இத்திரைப்படம் Leni Riefenstahl எனபவரால் 1934 ஆண்டு நடைபெற்ற நாசி கட்சியின் Nuremberg பேரவையையின் நிகழ்வுகளை பதிவுசெய்கின்றது. இத்திரைப்படம் திரைப்பட நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கணிக்கப்படுவதோடு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய ஆவணமாகவும் திகழ்கின்றது. நாசி யேர்மனியின் ஏகபோக சர்வதிகார அரசை போற்றி எடுக்கப்பட்ட ஒரு பரப்புரை திரைப்படம் என்றபடியால், இத்திரைப்படம் சர்ச்சைக்குரியது. வ. ந. கிரிதரன் வ.ந.கிரிதரன், (நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர், வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர், இங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார். மிக இளவயதிலேயே எழுத தொடங்கிய வ.ந.கிரிதரன், பல சிறுவர் கால படைப்புக்களை படைத்துள்ளார். இவரின் படைப்புக்கள் ஈழநாடு 'சிறுவர் மலர்', சுதந்திரன், கண்மணி, சிரித்திரன், வீரகேசரி, ஈழமணி 'கணையாழி', 'சுபமங்களா', ஆனந்தவிகடன், 'துளிர்', 'தாயகம்', 'தேடல்', 'சுவடுகள்', 'திண்ணை', 'தடஸ்.தமிழ்' உட்படப் பல பத்திரிகை, சஞ்சிகை மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 17 வயதில் படைக்கப்பட்ட 'சலனங்கள்' என்னும் சிறுகதை சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டது. 'பொந்துப் பறவைகள்' என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டமொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதையொன்று குட்டிக்கதையாகி ஆனந்தவிகடனின் பவளவிழாக் குட்டிக் கதைப் போட்டியில் ரூபா 3000 சன்மானம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. 'வானியற் பெளதிகம்' (Astro Physics) பற்றிய அறிவியற் கட்டுரைகள் பல வீரகேசரி, கணையாழி, பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மொறட்டுவைத் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார். கனடாவிற்கு புலம் புகுந்த பின்பு இவரின் பல படைப்புக்கள் இங்குள்ள சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் ரொறன்ரோவில் 'இரவி (வார பத்திரிகை)', 'கல்வி (வார பத்திரிகை)' , குரல் (கையெழுத்துப் பிரதி), 'நமது பூமி (செய்தி கடிதம்)', 'கணினி உலகம் (செய்தி கடிதம்)' ஆகிய பல ஆரம்ப கால தமிழ் படைப்பு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவை சில இதழ்களோடு நின்றுவிட்டன. எனினும் 2000 ஆண்டு இவர் ஆரம்பித்த பதிவுகள் இணைய இதழ் தொடர்ந்து வெளிவருகின்றது. கோவை (நிரலாக்கம்) கணித்தல் கூறுகள் (மதிப்பீடுகள்-values, மாறிகள், செயற்குறிகள், செயலிகள்) நிரலாக்கத்துக்கு ஏற்றவாறு கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்பொழுது அதை கோவை (Expressions) எனலாம். குறிப்பிட்ட நிரலாக்க மொழியின் நிகழ்வுமுறைமை (precedence) விதிகளுக்கும் தொடர்புறு (association) விதிகளுக்கும் அமைய கோவை எழுதப்பட்டாலே அது கணித்தலின் போது ஒரு மதிப்பீட்டை தரும். கோவை கணித்தலின் போது மதிப்பீடு தரும் ஒரு அடிப்படை நிரலாக்க கணித்தல் விபரிப்பு முறை என்றும் கூறலாம். யசுர் வேதம் யசுர் வேதம் (சமற்கிருதம் ', ' "வேள்வி" + "veda" "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை "சுக்கில யசுர்வேதம்", "கிருஷ்ண யசுர்வேதம்" எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன. சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது. மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது. ஜெகசிற்பியன் ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல இதழ்களில் சிறுகதை, குறுநாவல் எழுதிய போதிலும் ஜெகசிற்பியன் என்ற பெயர் தமிழ் வாசகர்களுக்குப் தெரிய வந்தது 1957இல் 'ஆனந்த விகடன்' நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில்தான். அதில் அவரின் "நரிக்குறத்தி" (சிறுகதை), "திருச்சிற்றம்பலம்" (வரலாற்றுப் புதினம்) ஆகியன இரு முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ்நேசன் என்ற மலேசியத் தினசரியில் அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம் தனி நூலாக வெளியானது. 'ஜீவகீதம்' தொடர்புதினத்தை ஜனவரி 17 1965 முதல் கல்கி இதழில் அவர் எழுதியது அவருக்குப் பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது. இப்புதினம் 'நேஷன்ல் புக் ட்ரஸ்ட்டால்' பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில் 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பெற்றன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதுகை (எம்.ஏ) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில் ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க கபிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தெற்காசிய மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர் 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இவற்றைவிட பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் செண்டர் தனது "சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்- யார் எவர்?" நூலின் எட்டாம் பதிப்பில் அவரது வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன். தீத்தடுப்பு தீத்தடுப்பு ("Fire Protection") அல்லது தீக்காப்பு என்பது பொதுவாகக் கட்டடங்களில் தீயினால் ஏற்படக்கூடிய அழிவுகளைத் தடுப்பதற்கான செயல்முறைகளைக் குறிக்கும். கட்டிடங்களில் தீத்தடுப்பு அம்சங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதாகும். கட்டடங்களில் அமையக்கூடிய தீத்தடுப்பு உத்திகள் கட்டிடவகை, அதனைப் பயன்படுத்துபவர்களின் வகை, அவர்களின் எண்ணிக்கை, போன்ற காரணிகளில் தங்கியுள்ளது. தீத்தடுப்பு உத்திகள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கவேண்டியது இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில், கட்டடங்கள் பரப்பளவிலும், உயரத்திலும் அதிகரித்து வருவதுடன், அதிக சிக்கல்தன்மை கொண்டவையாகவும் உருவாகி வருகின்றன. பல்வேறு தேவைகளுக்காக அவ்வாறான கட்டிடங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனால் தீ ஏற்படும்போது மக்களைப் பாதுகாப்பது முன்னரிலும் கடினமாகியுள்ளது. இன்றைய கட்டிடங்கள், அவற்றின் அளவு, பல்வேறுபட்ட நவீன வசதிகளுக்கான தேவைகள், அவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றில் உள்ளிடப்படுகின்ற அதிகரித்த நிபுணத்துவக் கூறுகள் என்பவற்றின் காரணமாகக் கட்டிடங்களுக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தீயினால் பெரும் பொருளாதார நட்டங்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதைவிடக் கட்டடங்கள் பல இன்றியமையாத செயற்பாடுகளுக்கும், பெறுமதியானதும், விலைமதிப்பு அற்றவையுமான பொருட்களுக்கும், சாதனங்களுக்கும் உரிய இடமாகவும் அமைவதால், மீள்விக்கமுடியாத இழப்புகளும் ஏற்படக்கூடும். அத்துடன், மனித உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், கட்டிட உறுப்புக்களின் பாதுகாப்பு முக்கியமாகின்றது. தீயினால் பொருளாதாரச் செயற்பாடுகளை இடைநிறுத்தவேண்டி ஏற்படுவதும் பெரும் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துவதுடன், பல சந்தர்ப்பங்களில் மக்களுடைய இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் நிலை உள்ளது. கட்டிடங்களில் தீத்தடுப்பு மூன்று வழிகளில் எய்தப்படுகின்றது. மேலே குறிப்பிட்ட அனைத்துமே ஒரு கட்டிடத்தின் தீத்தடுப்புக்கு முக்கியமானவை ஆகும். ஒன்றில்லாமல் மற்றவை சரியாகத் தொழிற்பட முடியாது. ஆனாலும் கட்டடங்களில் இவற்றைச் சமநிலையில் ஏற்படுத்துவது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருந்தே வருகின்றன. காந்தப் புலம் காந்தப் புலம் "(magnetic field)" என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள காந்தப் புலம் திசையாலும் வலிமை (பருமை)யாலும் குறிப்பிடப்படுகிறது; எனவே இது ஒருநெறியப் புலமாகும். இந்தச் சொல் ஆகிய இரு குறியீடுகளால் குறிக்கப்படும் இருவகைப் புலங்களுக்குப் பயன்படுகிறது. இங்கு, ஆம்பியர்/மீட்டர் அலகால் அளக்கப்படுகிறது. செப (SI) அலகில் இதன் குறியீடு: A m அல்லது A/m) aagum . தெசுலா அலகால் அளக்கப்படுகிறது. தெசுலாவின் குறியீடு T ஆகும். செப (SI) அலகில் இதன் குறியீடு நியூட்டன்கள்/மீட்டர்/ஆம்பியர் ஆகும். இதன் குறியீடு: N mA அல்லது N/(mA)) ஆகும். , பெரும்பாலும் நகரும் மின்னூட்டங்கள்பாலான இலாரன்சு விசையால் வரையறுக்கப்படுகிறது. நகரும் மின்னூட்டங்களால் காந்தப் புலங்கள் உருவாகலாம். அடிப்படைத் அணுவகத்துகள்களின் இயல்புக் காந்த்த் திருப்புமைகள் அவற்றின் அடிப்படைக் குவைய இயல்பான தற்சுழற்சியுடன் அமைகின்றன.> சிறப்பு சார்பியலில், காந்த, மின் புலங்கள் ஒரே நிகழ்வின் சார்புள்ல இருவேறு கூறுபாடுகள் ஆகும். இது மின்காந்த மீநெறியம் எனப்படுகிறது; இந்த மீநெறியம் மின், காந்தப் புலங்களாகப் பிரிதல் மின்னூட்டத்துக்கும் நோக்கீட்டாளருக்கும் இடையிலான சார்பு விரைவைப் பொறுத்ததாகும். குவைய இயற்பியலில், மின்காந்தப் புலம் குவையப்படுகின்றது. ஒளியன்களின் பரிமாற்றத்தால் மின்காந்த இடைவினை விளைகிறது. அன்றாட வாழ்வில், நிலைக்காந்தங்கள் உருவாக்கும் விசைகளாக எதிர்கொள்லப்படுகின்றன. காந்த விசை. இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் காந்தங்களை ஈர்க்கின்றன. இது பிற காந்தங்களை ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது. அண்மைத் தொழில்நுட்பத்தில், குறிப்பாக மின்பொறியியலிலும் மின்னியக்கவியலிலும் காந்தப் புலங்கள் பரவலாகப் பயன்படுகின்றன. புவி காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இது நாவாயோட்டப் பெரிதும் பயன்படுகிறது. இது புவி வளிமண்டலத்தைச் சூரியச் சூறாவளியில் இருந்து காக்கிறது. சுழல்காந்தப் புலங்கள் மின்னாக்கி அல்லது மின்னியற்றியிலும் மின்னோடி அல்லது மின்னியக்கியிலும் பயன்படுகின்றன. ஃஆல் விளைவால் காந்த விசைகள் பொருளில் உள்ள மின்னூட்ட ஏந்திகள் அல்லது ஊர்திகளைப் பற்றிய தகவலை அறிய உதவுகின்றன. மின்மாற்றிகளில் நிகழ்வதைப் போல மின்கருவிகளில் காந்தப் புலங்களின் இடைவினை காந்தச் சுற்றதர்களின் துறையில் ஆயப்படுகின்றன. காந்தங்களும் காந்தவியல்பும் நெடுங்காலமாகவே அறியப்பட்டிருந்தாலும், காந்தப் புலங்களின் ஆய்வு கி.பி 1269 இல் தொடங்கியது. அப்போது பெட்ரசு பெரிகிரினசு தெ மரிகோர்த் கோளப்பரப்பில் அமைந்த காந்தப் புலத்தை இரும்பு ஊசிகளைக் கொண்டு வரைந்தார். இரு புள்ளிகளில் புலக்கோடுகள் குறுக்கிடுவதைக் கண்ணுற்ற இவர் அப்புள்ளிகளைப் புவியின் முனைகளைப் போன்றுள்ளதால் காந்த முனைகள் எனப் பெயரிட்டார். இவர் மேலும் காந்தங்களை எத்தனை நுண்மையான கூறுகளாகப் பிரித்தாலும் அவை வடமுனை, தென்முனை என இரு காந்த முனைகளைக் கொண்டமைதலையும் கூறினார். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வில்லியம் கில்பர்ட் பெட்ரசு பெரிகிரினசுவின் பணியல் மீண்டும் மறுமுறையாக செய்துப் பார்த்தார். இவரே முதன்முதலில் புவி ஒரு காந்தம் என உறுதியாகக் கூறியவராவார். இவர் 1600 இல் வெளியிட்ட நூலான, "De Magnete", காந்தவியலை அறிவியல் தரத்துக்குக் கொணர்ந்தது. ஜான் மிட்செல் 1750 இல் தலைக்கீழ்ச் சதுர விதிப்படி, காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன எனக் கூறினார். சார்லசு அகத்தின் தெ கூலம்பு 1785 இல் இதைச் செய்முறை வாயிலாக நிறுவினார். மேலும் இவர் வட, தென் முனைகளைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார். முனைகளுக்கு இடையில் அமைந்த இந்த விசையைச் சார்ந்து, சிமியோன் தெனிசு பாயிசான் (1781–1840) வெற்றிகரமாக காந்தப் புலத்தின் படிமத்தை உருவாக்கி 1824 இல் விளக்கிக் காட்டினார். இந்தப் படிமத்தில், காந்த -புலம் காந்த முனைகளால் உருவாக்கப்பட்டது. இதில் சிறு வட, தென் காந்த முனைகளால் காந்தவியல்பு உருவாக்கப்பட்டது. இந்தக் காந்தவியல் விளக்கத்துக்கு மூன்று அறைகூவல்கள் எழுந்தன. முதலில், 1819 இல் ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு மின்னோட்டம் தன்னைச் சுற்றிக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனக் கண்டறிந்தார். அடுத்து, 1820 இல் ஆந்திரே மரீ ஆம்பியர் ஒரே திசையில் மின்னோட்டம் சுமக்கும் இரு இணைநிலைக் கம்பிகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனக் காட்டினார். இறுதியாக, ழீன் பாப்திசுத்தே பையாத்தும் பேலிக்சு சவார்த்தும் 1820 இல் பையாத்-சவார்த் விதியக் கண்டடைந்தனர். இந்த விதி மிகச் சரியாக மின்னோட்டம் சுமக்கும் கடத்தியைச் சுற்றி அமையும் காந்தப் புலத்தை விவரிக்கிறது. இந்தச் செய்முறைகளை விரிவாக்கி ஆம்பியர் 1825 இல் மிகைச் சிறந்த காந்தவியல் படிமத்தை வெளியிட்டார். இதில் இவர் மின்னோட்டங்களின் காந்தச் சமனைத் தெளிவாக எடுத்துகாட்டினார் பாயிசானின் காந்த ஊட்டங்களின் இருமுனைப் படிமத்துக்கு மாற்றாக, தொடர்ந்து பாயும் மின்னோட்டக் கண்ணிப் படிமத்தை முன்வைத்தார்..> இது மேலும் காந்த ஊட்டங்களைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது என்பதையும் கூடுதலாக விளக்குகிறது. மேலும் ஆம்பியர் இருமின்னோட்டங்களுக்கு இடையிலான விசையை விவரிக்கும் ஆம்பியர் விசை விதியையும் ஆம்பியர் விதியையும் கொணர்ந்தார். இது பையாத்-சவார்த் விதியைப் போலவே நிலையான மின்னோட்டம் உருவாக்கௌம் காந்தப் புலத்தை மிகச் சரியாக விளக்குகிறது. மேலும் இப்பணியில் ஆம்பியர் மின்சாரம், காந்தம் இடையிலான உறவை விளக்க மின்னியங்கியல் எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார். சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்து காந்தப் புலத்தைப் பல்வேறு சம வழிகளில் வரையறுக்கலாம். மின்னோட்டம் ஒரு மின்கம்பியில் பாயும்போது அக்கம்பியை சுற்றிக் காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும். அதாவது வரலாற்றியலாக H காந்தபுலப் வலிமையைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், பல நேர்வுகளில் இது நேர் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதால் B, H இரண்டையும் ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டுதல் தேவையாகிறது. காந்தப் புலத்திற்கும் காந்தப் புல வலிமைக்கும் இருக்கும் தொடர்பு: formula_7 இங்கே, formula_8காந்த இசைமை ஆகும். காந்தப்புலம் உருவாக அடிப்படைக் காரணம் மின்னோட்டம் ஆகும். அதாவது மின்னூட்டம் ஒன்று ஒரு குறித்த திசையில் ஒரு குறித்த வேகத்துடன் செல்லும் போது அதனால் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும். நிலையான காந்தங்களிலும் காந்தப்புலத்துக்கு மின்னோட்டமே காரணம். காட்டாக, இரும்பாலான சட்டக் காந்தம் ஒன்றினுள் உள்ள இரும்பு அணுக்களின் கட்டற்ற மின்னன்களின் (இலத்திரன்களின்) குறித்த திசைப்படுத்தப்பட்ட சுழற்சி இயக்கமே அவற்றின் காந்தப் புலத்துக்குக் காரணமாக அமைகின்றது. மேலே உள்ள சமன்பாடு நகரும் மின்னூட்டம் ஒன்றால் உண்டாக்கப்படும் காந்தப் புலச் செறிவைக் குறிக்கின்றது. Arc & Mitre Magnetic Field Diagrams. Magnet Expert Ltd. சுட்டு (நிரலாக்கம்) நினைவகத்தில் மதிப்பீடு ஒன்றை சேர்ப்பதற்கும், மீண்டும் பெறுவதற்குமான ஒரு வழிமுறையே சுட்டு (Pointer) ஆகும். சுட்டு ஒருவித தரவு இனம் ஆகும். கணினி நினைவகம் பல்லாயிர நினைவு கூறுகளால் ஆனது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவ முகவரி உண்டு. ஒரு சுட்டு ஒரு முகவரியை சேமிக்கின்றது. அந்த முகவரியில் என்ன மதிப்பீடு சேமிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டுமூலம் சுட்டலாம். #include மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் பின்வருவற்றை குறித்து கொள்க: தீக்காப்பு விதித்தொகுப்பு தீக்காப்பு விதித்தொகுப்பு (Fire Code) என்பது, களஞ்சியப்படுத்தல், கையாளுதல், ஆபத்தான பொருட்களின் பயன்பாடு, வேறு குறிப்பிட்ட ஆபத்து விளைக்கும் நிலைமைகள் என்பவற்றால் உருவாகக்கூடிய தீ, மற்றும் வெடிப்பு அபாயங்களைத் தடுப்பதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய ஆகக்குறைந்த தேவைகள் தொடர்பான விதிகளைக் (rules) கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். பொதுவாகக் கட்டடங்களில் கடைப்பிடிக்கப்படவேண்டிய தீத்தடுப்பு நடைமுறைகள் பற்றி, கட்டிடச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள அமைப்புக்களினால் அங்கீகரிக்கப்படும் கட்டட விதித்தொகுப்புகள் (building code) விபரிக்கின்றன. எனவே, தீக்காப்பு விதித்தொகுப்புகள், கட்டட விதித்தொகுப்புகளின் குறைநிரப்பிகளாகவே (supplement) பயன்படுகின்றன எனலாம். எனினும், தீக்காப்பு விதித்தொகுப்புகள் தீத்தடுப்பு தொடர்பான விடயங்களை மிக விரிவாகக் கையாளுகின்றன. நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) என்பது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகின்றது. சுதந்திரமான, அனைத்துலக, அரசசார்பற்ற, இலாபநோக்கு இல்லாததுமான இந்த அமைப்பு பின்வருவனவற்றை அடைவதை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் ஈழத்து இலக்கியங்கள் தொடர்பான ஆய்வு நூல்களாகும். ஈழத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய முழுமையான ஆய்வு முயற்சிக்கு இவை உதவக்கூடும். இலக்கிய நினைவுகள் (நூல்) தனது இலக்கிய வாழ்வுடன் கூடிய நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். ஈழத்து இலக்கியம் பற்றிய அறிவுக்கு இந்நூல் உதவுகின்றது. இலக்கியவழி (நூல்) ஆசிரியர்: சி.கணபதிப்பிள்ளை (மூலம்) அ.பஞ்சாட்சரம்(பதிப்பு) உரும்பிராய்.
1 வது பதிப்பு 1964(சுன்னாகம் திருமகள் அழுத்தகம்)
4 வது பதிப்பு 1985(உரும்பிராய்:பண்டிதமணி நூல்வெளியீட்டுச்சபை)
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் சமயச்சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பெற்று சமயக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளிவந்தது.அதன் திருத்தப்பதிப்பாக, இலக்கியக்கட்டுரைகளும் சேர்க்கப்பட்டு இருபது கட்டுரைகளுடனும் இரசனைக் குறிப்புகளுடனும் இலக்கியவழி என்ற பெயரில் வெளிவந்துள்ளது
இலக்கியச் சிந்தனைகள் (நூல்) பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன எழுத்துக்களையும் அறிவியல்பூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய 19 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள். இலக்கியத் தேறல் (நூல்) இலக்கியத் தேறல் சங்க இலக்கியங்கள் தொடங்கித் திரைப்படப்பாடல்கள் வரை அலசி வடித்த பன்னிரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். அகளங்கனால் (நா.தர்மராஜா) எழுதப்பட்ட இந்நூல் வவுனியா முத்தமிழ்க் கலாமன்றத்தினரால் 1988 இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. இலக்கியமும் திறனாய்வும் (நூல்) இலக்கியமும் திறனாய்வும் என்பது இலக்கியத் திறனாய்வு பற்றிய ஒரு தமிழ் நூல். மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்காலத் தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்) ஆசிரியர் - கோப்பாய் சிவம் புத்தூர் ப.சிவானந்த சர்மா பதிப்பு - 1 வது பதிப்பு ஆனி 1985 ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,பற்றிய ஆசிரியரின் நோக்கும் 1841 முதல் 1984 வரையில் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள்,சஞ்சிகைகள் பற்றிய சுருக்கமான விளக்கங்களுடன் கூடிய பட்டியலும் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழ் இலக்கியம் (நூல்) இலங்கைத் தமிழ் இலக்கியம், பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலாகும். பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் மணிவிழாவினையொட்டி வெளிவரும் இந்நூலில் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிக் கடந்த 25 ஆண்டுக் காலப்பகுதியில் அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் 27 கட்டுரைகள் உள்ளடக்கப்படுள்ளன. தேசிய கலை இலக்கியப் பேரவை, இதனை முதற்பதிப்பாக 1997 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (நூல்) இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க காலம் முதல் இற்றை வரையிலான வளர்ச்சிப்போக்கினை தொடர்ச்சியாக உணர்த்தும் வகையில் அமைந்த நூல். இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (நூல்) தமிழியல் பற்றிய ஆய்வுகளை வரலாற்று விவரண ஆய்வுமுறையியலூடாகத் துறைகளின் அடிப்படையிலும், கால அடிப்படையிலும் ஒழுங்கமைத்துத் தருவதுடன் ஆங்காங்கே அவை தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றது. இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:ஓர் அறிமுகம் (நூல்) இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்: ஓர் அறிமுகம் என்னும் நூல் க. அருணாசலம் என்பவரால் 1999 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஈழத்து நூல். மலையகத் தொழிலாளர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கைப் போராட்டங்களை, அவலங்களை, வேதனைகளை, அவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறப்போராடும் நிலமையை விழுப்புணர்வினைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்களான மலையகப் புதினங்கள் பற்றிய ஆய்வு. இன்றைய உலகில் இலக்கியம் (நூல்) மக்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், விஞ்ஞானம், இலக்கிய நயப்பு, இலக்கிய விமர்சனம், இலக்கியப்பரவல், இலக்கிய நூல் வெளியீடு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகள் தொடர்பாக ஒரு இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களைத் தெளிவாக்கும் வகையில் அமைந்த நூல் இனி ஒரு விதி செய்வோம் (நூல்) எஸ். பொன்னுத்துரை ஆஸ்திரேலியா:மித்ரா வெளியீடு 1 வது பதிப்பு ஆவணி 2000 ஈழத்தின் முன்னணி எழுத்தாளரான எஸ்.பொ.வின் இக்கட்டுரைத் தொகுதி ஈழ இலக்கிய வரலாற்றின் ஆவணமாகக் கருதலாம். வரலாற்று ரீதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் விவாதத்துக்குரிய பல இலக்கியக் கொள்கைகள் அந்தந்தக் காலகட்டத்தில் எப்படி அர்த்தம் கொண்டனவாக இருந்தனவோ, அவ்வகையிலேயே பதியப்பெற்றுள்ளன. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் (நூல்) 1939 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்னும் நூல். இது வித்துவசிரோமணி என அழைக்கப்பட்ட சி. கணேசையர் அவர்களால் ஆக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த இவர், சங்ககாலத்தைச் சேர்ந்த ஈழத்துப் புலவரான பூதந்தேவனார் முதல் தனக்கு முன் வாழ்ந்த ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து இந்த நூலை ஆக்கியுள்ளார். ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (நூல்) இந்நூலிலுள்ள ஆறு கட்டுரைகள் 19ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சில அம்சங்களை விபரிக்கின்றன.பொதுவான வளர்ச்சியையும் அவ்வளர்ச்சிக்குச் சிலர் ஆற்றிய காத்திரமான பங்களிப்பையும் ஆங்காங்கு ஆசிரியர் மதிப்பிட்டுள்ளார். டப்லின் டப்லின் அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும். கலிபோர்னியா கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு பசிபிக் மாக்கடலுக்கு அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். இதற்கு வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், கிழக்குத் திசையில் நெவாடா மாநிலமும், அரிசோனா மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன. இங்கே 37 மில்லியன் மக்கள் 423.970 சதுர கி.மீ (163,696 சதுர மைல்) பரப்பில் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது. நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். சேக்ரமெண்டோ இதன் தலைநகரம் ஆகும். கலிபோர்னியாவில் 10,000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன் இங்கிருந்த அமெரிக்க முதற்குடி மக்கள் அமெரிக்கக் கண்டத்தில் வேறு எங்குமுள்ளதைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல்வேறு இனங்களாகவும், மக்களடர்த்தியும் அதிகமாக இருந்தனர். 1769இல் ஸ்பெயின் நாட்டினர் தம்குடியாக்கினர். ஆனால் 1810-1821க்கு இடையே நடந்த மெக்சிக்கோவின் விடு்தலைப் போருக்குப்பின், கலிபோர்னியா மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1846-1848இல் நடந்த அமெரிக்க - மெக்சிக்கோ போரில் அமெரிக்கா இப்பகுதியைக் கைப்பற்றியது. 1848-1849இல் தங்கம் எடுப்பதற்காக நிகழ்ந்த பெரும் வேட்கையில் இப்பகுதிக்கு சுமார் 90,000 மக்கள் குடியேறினர். அதன்பின் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக 1850இல் மாறியது. கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவையே முன்னிழுத்துச் செல்லும் பேரியந்திரம் என்றும் கூறுவதுண்டு. கலிபோர்னியா மட்டுமே ஆண்டுக்கு (2005 ஆண்டின் கணக்குப்படி), 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருள் உற்பத்தி செய்கின்றது. உலகிலேயே ஆறு நாடுகள்தான் இம்மாநிலத்தைவிட பெரிய பொருளாதாரம் ஆகும். அமெரிக்காவின் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் ஆக்கம். நேபாள மக்கள் புரட்சி நேபாள மக்கள் புரட்சி அல்லது நேபாள உள்நாட்டுப் போர் என்பது நேபாளத்தின் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உருவாக்கும் நோக்குடன் மாவோயிசவாத போராளிகளால் நடத்தப்படும் போராகும். இது 1996 பிப்ரவரி 13 இல் ஆரம்பிக்கப்பட்டது. சமவுடமைவாத போராளிகள் இப்போரை "நேபாள மக்கள் போராட்டம்" என அழைக்கின்றார்கள். இப்போராளிகள் "மக்கள் நேபாள குடியரசு" என்ற இலக்கை கொண்டுள்ளார்கள் தற்சமயம் நேபாளத்தின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். 1998 ஜூன் தொடக்கம் ஆகஸ்டு வரை அப்போதைய பிரதமர் செர் பகதூர் தேவ்பாவினால், போராளிகளை கைப்பற்றி அழிக்கும் நோக்குடன் நடைமுறைப் படுத்தப்பட்ட "கிலோ சேரா 2" என்ற மூர்க்கமான நடவடிக்கை காரணமாக போராளிகள் தலைமறைவாகினர் மேலும் போராட்டம் வலுக்கவும் வழிவகுத்தது. 2001 இல் நேபாள மன்னர் மாவோயிச போராளிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். அது முதல் 12,700க்கும் மேற்பட்டவர்கள் இறந்தும் 100,000 - 150,000 பேர்வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.இப்போராட்டம் நேபாளத்தின் கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவதோடு நேபாள மக்களிடையே பெரும் சிக்கலான சமூக சிக்கல்களுக்கும் வித்திட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ் இந்துக் கல்லூரி ("Jaffna Hindu College") இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும். இது யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு பாடசாலையாக மட்டுமன்றி தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பல்கலைக்கழகங்களின் பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாக உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் உருவான பாடசாலைகள் அனைத்தும் கிறித்தவ மிசன்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. இப் பாடசாலைகள் மேனாட்டுக் கல்விமுறையை அறிமுகப்படுத்தின. ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டிய இப் பாடசாலைகள் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டுப் பின்னணியிலேயே கல்வி புகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்களில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர். இவர் இதற்காகத் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கினார். எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேனாட்டுக் கல்விமுறை, ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்துக்கொண்டே சொந்தப் பண்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட்டது. 1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறித்தவ மிசன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது. இவ்வாறான பாடசாலை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் நோக்கம் எதிர்பாராத ஒரு முறையில் நிறைவேறியது. 1887 ஆம் ஆண்டில் வில்லியம் நெவின்சு முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்னும் யாழ்ப்பாணத் தமிழ்க் கிறித்தவர் ஒருவர் தேசிய நகர உயர் பாடசாலை ("Native Town High School") என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றைக் கிறிஸ்தவ மிசன் தொடர்புகள் ஏதுமின்றித் தனியாகவே தொடங்கினார். இப் பாடசாலை யாழ்ப்பாணத்தின் கிறித்தவப் பெரும்பான்மைப் பகுதியான பிரதான வீதிப் பகுதியிலேயே அமைக்கப்பட்டது. எனினும் இதனை நடத்துவதில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரும், பண வசதி படைத்தவருமான எஸ். நாகலிங்கம் என்பாரின் துணையை சிதம்பரப்பிள்ளை நாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம், அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். 1889 ஆம் ஆண்டில் பாடசாலையை நாகலிங்கம் அவர்களிடம் முழுதாகவே ஒப்படைத்தார் சிதம்பரப்பிள்ளை. பாடசாலையின் புதிய உரிமையாளரான நாகலிங்கம், பாடசாலையை உள்ளூர் இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதிக்கு இடம் மாற்றினார். இதன் பெயரும் நாகலிங்கம் நகர உயர் பாடசாலை ("Nagalingam Town High School") எனப் பெயர் மாற்றப்பட்டது. நாகலிங்கம் இந்து சமயத்தவர். சைவ பரிபாலன சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இதனால் அவர் தனது பாடசாலையைச் சைவ பரிபாலன சபையின் மேலாண்மையின் கீழ்க் கொண்டுவர விரும்பினார். இதற்கிணங்க 1890 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சபையின் தலைவர் தா. செல்லப்பாபிள்ளை என்பவரின் தலைமையில் கூடிய சபையின் செயற்குழு பாடசாலையைப் பொறுப்பேற்க முடிவெடுத்தது. பாடசாலையின் பெயரும் அவ்வாண்டிலேயே இந்து உயர் பாடசாலை ("Hindu High School") என மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற்காலிக கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளராகவும் பொறுப்பேற்றார். 1892 இல் வில்லியம் சிதம்பரப்பிள்ளையின் மகன் என். செல்வத்துரை இதன் தலைமை ஆசிரியரானார். பாடசாலைக்கு நிரந்தரமான கட்டிடங்கள் தேவைப்பட்டன. இதற்கான நிலம் வாங்கப்பட்டது. கட்டிடங்களுக்கான நிதி உள்ளூரில் வீடுவீடாகத் திரட்டப்பட்டது. இந்து வணிக நிறுவனங்களும் தாராளமாக உதவின. 100 ஆண்டுகளைத் தாண்டி இன்றும் நிலைத்திருக்கும் இக் கட்டிடம் செப்டம்பர் 28, 1895 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. நவம்பர், 1909 இல் என். செல்வதுரை கண்டி திரித்துவக் கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். ஜி. சிவா ராவ் (G. Shiva Rau) என்பவர் இந்துக் கல்லூரிக்குத் தலைமை ஆசிரியரானார். மே 30, 1910 இல் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி ("Boarding House") திறந்து வைக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி முதல் இன்றிருக்கும் குரு சிறீரவிசங்கர் வரை பல ஆன்மீக பெரியார்கள் யாழ் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர்களாக இருந்தவர்கள்: இக்கல்லூரி பல கழகங்களைக் கொண்டதாகும். பல மாணவர்கள் இதை நோக்கி வருவதற்கு இங்குள்ள கழகங்களும் காரணமாகும். இந்துக் கல்லூரியின் கழகங்கள்: கல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி) இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும் கலைபயில் கழகமும் இதுவே பல கலைமலி கழகமும் இதுவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன தருள்கொடு நன்றே! ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவையியல் கழகமும் இதுவே ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒருபெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரின கழகமும் இதுவே! தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப்பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு. மாமண்டூர் உருத்தரவாலீசுவரம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்தது மாமண்டூர். இங்கே அமைந்துள்ள சித்திரமேகத் தடாகம் என்னும் ஏரியை அண்டி அமைந்துள்ள குன்றுகளில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட நான்கு குடைவரைகள் காணப்படுகின்றன. இவற்றில் முற்றுப் பெற்ற நிலையிலுள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றே உருத்திரவாலீஸ்வரம் என்னும் சிவாலயம் ஆகும். இக் குடைவரையை அமைத்தது யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இதன் கட்டிடக்கலைப் பாணியை ஆராய்ந்தும், இதன் அண்மையிலுள்ள இதே போன்ற குடைவரையில் கிடைத்த கல்வெட்டு ஒன்றை அடிப்படையாக வைத்தும், இது முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இது ஒரு சிவன் கோயில் எனப்பட்டாலும், இங்கே மும்மூர்த்திகளும் வைத்து வணங்கப் பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இக் குடைவரையின் நுழைவாயிலில் இரண்டு பக்கச் சுவர்களையும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், இவற்றுக்கிடையே இரண்டு முழுத்தூண்கள் தனித்தூண்களாகவும் காணப்படுகின்றன. இதனால் மூன்று நுழைவழிகளைக் கொண்டதாக இக் கோயில் அமைந்துள்ளது. இத் தூண் வரிசைக்குப் பின்னால் முன் வரிசைத் தூண்களுக்கு நேராக மேலும் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் அமைந்துள்ளன. இந்த அமைப்பானது குடைவரையின் உட் புறத்தை அர்த்த மண்டபம், மகாமண்டபம் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. வெளி மண்டபத் தளம், உள் மண்டபத் தளத்திலும் சற்று உயரமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கு எதிரான பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் வாயிலிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வாயிற்காப்போர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பதிவுகள் (இணைய இதழ்) பதிவுகள் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு இணைய இதழ் (சஞ்சிகை) ஆகும். இது 2000 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றைப்படுத்தப்பட்டுவருகின்றது. இவ்விதழ் TSCII தமிழ் கணினி எழுத்துருவை பயன்படுத்துகின்றது. இதன் ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆவார். ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ. ந. கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணி மக்கள் விடுதலை முன்னணி (சிங்களம்: ජනතා විමුක්ති ෙපරමුණ ஆங்கிலம்: People's Liberation Front) இலங்கையின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது. இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்சாதியினர் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர். 1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது. 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார். கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர். ஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது. 2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர். ஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நோர்வே அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம் இன்றைய தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமும், ஒரு காலத்தில் பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியதுமான மாமல்லபுரத்தில் பெருமளவில் காணப்படும் குடைவரை கோயில்களில் ஒன்றே தற்காலத்தில் பஞ்சபாண்டவர் மண்டபம் என அழைக்கப்படும் கோயிலாகும். இது கட்டிமுடிக்கப்படாத ஒரு குடைவரை. மூன்று சார்பு உடையதாக அமைந்துள்ள இதன் அமைப்பைப் பார்க்கும்போது, நடுவில் கருவறையையும், சுற்றிலும் மண்டபத்தையும் கொண்ட ஒரு பெரிய கோயிலாகவே திட்டமிடப்பட்டது என்பது விளங்கும். கருவறைக்குப் பின்புறமாக இருக்கவேண்டிய நான்காவது சார்பின் குடைவு வேலைகள் தொடங்கு முன்னரே கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டுவிட்டன. இதன் முகப்பு ஆறு முழுத்தூண்களையும், இரண்டு அரைத்தூண்களையும் கொண்டுள்ளது. இதன் பின்னால் இதே போன்ற இன்னொரு தூண்வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. நாடகம் நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார். "உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன. ஈழமணி (பத்திரிகை) ஈழமணி இலங்கையிலிருந்து வெளியான ஒரு தினசரிப் பத்திரிகை ஆகும். இது எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து ரைம்ஸ் ஒஃவ் சிலோன் (Times of Ceylon) நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. ஒரு சில மாதகாலம் மட்டுமே இது வெளிவந்து பின்னர் இது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனந்த குமாரசுவாமி ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர். சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற 'எதெல் மேரி' ("Ethel Mary") என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்த குமாரசுவாமி ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமக்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராக விளங்கினார். எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையின் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார். அந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை (1905) நிறுவினார். அதன் சார்பில் "Ceylon National Review" என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1906 ஆம் ஆண்டு சூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது "நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது...எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்..." எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு "வித்தியா விநோதன்" என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலை முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார். இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார். இந்தியக்கலைகளின் இறைமையை உலகிற்கு எடுத்துக் காட்டியசிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912-இல் 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற இதழில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை எழுதினார். 1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் அமைந்திருந்த நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் டோனா லூசா (Dona Lusa) என்னும் ஆர்ஜெண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் இந்தியாவின் ஹரித்வாரில் உள்ள குருகுல (Gurukul) பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் வைத்தியராகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றியவர். ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947 இல் அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார். விடுகதை ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும். முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார். டா டா டா டா டா டா அது டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை இதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர். ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம் மூன்றும் நான்கும் சேரில் குளம் மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை மூன்றும் ஆறும் சேரில் பெருமை ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன? -எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் "திருவாவினன்குடி" என்ற விடையளிப்பர். சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது. மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி, மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார் இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்: அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர். யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முற்பட்ட அதன் வரலாற்றை ஆய்வு செய்யும் நூல் ஆகும். இந்த ஆராய்ச்சி நூலை எழுதியவர் சுவாமி ஞானப்பிரகாசர். இதன் முதற் பதிப்பு 1928 ஆம் ஆண்டில் அச்சுவேலியில் இருந்த ஞானப்பிரகாச யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை இந்த நூலில் எடுத்துக் காட்டினார். சன்மார்க்கபோதினி பத்திரிகைகளில் அவ்வப்போது பாகம் பாகமாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இச்சிறு நூல் வெளியிடப்பட்டது. இதன் நூலாசிரியர் நூலின் முதற்பதிப்புக்கான முன்னுரையில், "இச்சிறுநூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்திர ஆராய்ச்சியையும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது" என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூலைப் பிற்காலத்தில் கிடைத்த சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்து உண்மை வரலாற்றை அறிவதே இந்த நூலின் நோக்கம் என்பது புலனாகிறது. வைபவமாலை, அக்காலத்தில் இருந்த சில நூல்களையும், செவிவழிக்கதைகளையும் சான்றுகளாகக் கொண்டு, யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்து ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தலையீடு ஏற்பட்டதற்குப் பிந்திய வைபவமாலை தரும் வரலாறு செவிவழிக்கதைகளை ஆதாரமாகக் கொண்டது எனவும் அதனால் இக்காலம் குறித்த வைபவமாலையின் வரலாறு பிற்காலத்தில் அறியப்பட்ட போர்த்துக்கேயர் காலக் குறிப்புக்களுடன் முரண்படுவதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கருதுகிறார். இதனால், இந்த நூல் எழுதிய காலத்தில் கிடைத்த போர்த்துக்கேயர் காலத்துத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் உண்மை வரலாற்றை அறிய நூலாசிரியர் முயன்றுள்ளார். இந்த நூலிலே ஆரம்ப அதிகாரம் என்று பெயர் கொண்ட அதிகாரத்தில் வைபவமாலையில் கூறப்பட்டுள்ளனவும், யாழ்ப்பாண இராச்சியத்துக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தனவுமாகச் சொல்லப்படும் கதைகளை, வைபவமாலையின் முதனூல்களில் சொல்லப்படவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து யாழ்ப்பாண வைபவ விமரிசனத்தில் 15 அத்தியாயங்கள் உள்ளன. இவை பின்வருமாறு: காமினி பொன்சேகா காமினி பொன்சேகா ("Don Shelton Gamini Fonseka", மார்ச் 21, 1936 - செப்டம்பர் 30, 2004) சிங்களத் திரைப்பட நடிகர். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார். 1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி இலங்கையில் கொழும்பு மாவட்டம், தெகிவளையில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தெகிவளை பிரெஸ்பிட்டேரியன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வியை ஆரம்பித்த காமினி, பின்பு கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். 1950களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். திரைப்படத்துறையில் இணையும் வாய்ப்பை பிரேம்நாத் மொராயஸ் என்பவரே பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பே காமினிக்கு கிடைத்தது. அதற்கமைய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் ‘ரேகாவ’ என்ற திரைப்படத்தின் புகைப்படப்பிடிப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற காமினி அதனூடாகவே நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். சோமசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரிமியெக் நிசா’ என்ற திரைப்படமே இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த முதல் திரைப்படம். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தியாவிற்கும் 1970 இல் இங்கிலாந்துக்கும் சென்று திரைப்படத்துறை பற்றி கற்றுக் கொண்டார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார், நங்கூரம், நீலக்கடல் ஓரத்தில் ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "சருங்கலய" என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தில் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது. 1985 இல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார். பிளாசுமா (இயற்பியல்) பிளாஸ்மா (:கிரேக்கம், "moldable substance" (அ) மின்மப் பொருள்/கலவை. மின்மக் கலவை என்பது இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின்படி பொருளொன்றின், திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம்(வாயு) ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் (phase) புறம்பாகவுள்ள நான்காவது ஒரு தனி நிலையாகும். இதனை புவியில் இயல்பான நிலைகளினின்று செயற்கை முறையில் பெறப்பட்ட நடுநிலையான வாயுக்கலவை மூலமே பெற இயலும். இதனை மின்மக்கூழ்மம் (ஜெல்லி) எனவும் அழைப்பர். வேதியியலறிஞர் இர்விங் லாங்முயர் என்பவரே 1928 ஆம் ஆண்டு பிளாஸ்மா என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார். இதனை மின்மமாக்கப்பட்ட (அயனாக்கம்) அடைந்த வளிம நிலை எனலாம். மேலும் இதன் நிலைப்பாடு இன்னும் ஆராய்ந்தறியப்பட வேண்டியதாகும். பிளாஸ்மா என்னும் மின்மக் கலவை நிலை, சுதந்திரமாக இயங்கும் இலத்திரன்களையும், அயன்கள் எனப்படும் (எதிர்மின்னிகளை) இலத்திரன்களை இழந்த மின்னூட்டம் பெற்ற அணுக்களையும் கொண்டன. அதாவது நேர்மின்மப்(+) பொருட்களும், எதிர்மின்மப்(-) பொருட்களும் ஈடான (சமமான) எண்ணிக்கையில் கலந்து ஒரு வளிமம் போன்ற நிலையில் உள்ளது இம் "மின்மக்கலவை" என்னும் பிளாஸ்மா. அணுக்களிலிருந்து இலத்திரன்களை (எதிர்மின்னிகளை) வெளியேற்றிப் பிளாஸ்மா நிலையை உருவாக்குவதற்கும், எதிர்மின்னிகளும் (இலத்திரன்களும்), அயன்களும் தனித்தனியாக இருக்கும் நிலையைத் தக்கவைப்பதற்கும், சக்தி தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவைப்படும் சக்தி வெப்பம், மின்சாரம், கட்புலனாகாத புற ஊதாக்கதிர்கள், கட்புலனாகும் செறிவாக்கப்பட்ட லேசர் கதிர்கள் போன்ற பல மூலங்களிலிருந்து கிடைக்கக் கூடும். பிளாஸ்மா நிலையைத் தக்கவைப்பதற்குரிய சக்தியில் குறைவு ஏற்படும்போது அது மீண்டும் மின்னேற்றம் இல்லாத (வளிம) வாயு நிலையை அடைகின்றது. தனியாக இயங்கக்கூடிய மின்னேற்றம் கொண்ட துணிக்கைகள் (துகள்கள்) இருப்பதன் காரணமாகப் பிளாஸ்மா மின்கடத்துதிறன் கொண்டது. அத்துடன் மின்காந்தப் புலங்களினால் தூண்டப்படக்கூடியது. சுற்றுப்புறச்சூழலின் வாயுமண்டலத்தின் வெப்பம், அடர்த்தியைக் கொண்டு பகுதியளவாகவோ (அ) முற்றிலுமாகவோ மின்னூட்டம் பெற்ற பிளாஸ்மாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சான்றாக, பகுதியளவு அயனியாக்கமடைந்த பிளாஸ்மாக்கள் வெளிர்ந்த நியான் குழல்களிலும், மின்னல்களிலும் காணப்படுகின்றன. மேலும் முற்றிலும் அயனியாக்கமடைந்த பிளாஸ்மாக்கள் சூரியனின் உட்புறாத்திலும், சூரிய ஒளிவட்டத்திலும், நட்சத்திரங்களிலும் காணப்படுகின்றன. அணு உட்கருவில் நேர்மின்மப்(+) பொருட்களிலிருந்து இலத்திரன்களை (எதிர்மின்னிகளை) நீக்குவதால் அயனியாக்கமடைகின்றன. நீக்கப்ப்ட்ட இலத்திரன்களின் எண்ணிக்கை வெப்பம் உயர்வு, அடர்த்தியினைக் கொண்டு மாறுபடும். அணுமூலக்கூறு பிணைப்பை பிளக்க இவை உதவுகின்றன. இம்முறை வேதியிய நீர்ம அயனியாக்கம், உலோக அயனியாக்க முறைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. மின்னூட்டம் பெற்ற பிளாஸ்மா மின்துகள்கள் மின்கடத்துபவைகளாக ஒன்றிணைந்து மின்காந்தப்புலத்தில் நன்கு செயல்படுகின்றன. இம்முறைமை தற்காலத்திலுள்ள நவீனத்தொழில் நுட்பக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறன்து. சான்றாக பிளாஸ்மா தொலைக்காட்சித் திரைகள் முதலியவற்றில் பயன்படுகின்றன. பிளாஸ்மாக்கள் பெரும்பாலும், விண்வெளி மண்டலங்கள், நட்சத்திரங்கள், பால்வழித்திரள் போன்றவற்றில் அளப்பரியதாக பரந்து காணப்படுகின்றன. அயனியாதல் வீதமான, formula_1, என்பது சமன்பாட்டில் formula_2, இங்கு formula_3 அயனிகளின் அடர்த்தி எண்ணிக்கை & formula_4 நடுநிலை அயனிகளின் அடர்த்தி எண்ணிக்கை. இலத்திரான் அடர்த்தி, சராசரி மின்னூட்ட அளவு formula_5 வழி அயனிகளுடைய formula_6, இங்கு formula_7 இலத்திரான் அடர்த்தி எண்ணிக்கை. பிளாஸ்மாவின் வெப்பநிலை கெல்வின் / இலத்திரான் வோல்ட்ஸ் என்ற அலகால் அளக்கப்படுகிறது. பிளாஸ்மாவின் அயனியாதல் வீதமனாது பிளாஸ்மாவின் அயனியாக்க வெப்பநிலையால் மாற்றமடைகிறது. திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலைப்பாடாக அயனியாக்கப்பட்ட வாயுக்களாக இப்பிளாஸ்மாக்கள் கருதப்படுகின்றன. புவியில் நாம் பெருமளவுக்கு எதிர்கொள்ளும் பொருட்களின் நிலை திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம் (வாயு) ஆகிய மூன்று நிலைகளாகும். அண்டத்தைக் கருத்துக்கு எடுத்தால், இயற்கையில் அதி கூடிய அளவில் காணப்படும் பொருளின் நிலை பிளாஸ்மா நிலையாகும். சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் பிளாஸ்மா நிலையிலேயே காணப்படுகின்றது. புவியிலும் குறைந்த அளவுக்குப் பிளாஸ்மா காணப்படுகின்றது. இவற்றைவிட செயற்கையாகவும் பிளாஸ்மாக்கள் உருவாக்கப்படுகின்றன. பிளாஸ்மாவின் அளவுருகள் அவற்றின் அளவைப்பொருத்து மாறுபடும்,ஆனால் அவற்றின் குணநலன்கள் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும்.பிளாஸ்மாக்கள் குவார்க்குகளைப் போல வித்தியாசமான குணநலன்களைக் கொண்டிருப்பதில்லை. பிளாஸ்மாவின் மிகையான வெப்பம், அடர்த்தி காரணமாக ஆராய்ச்சி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, பெனிட்டோ முசோலினி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர். முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை, சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாரசின் பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார். 1902 ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது. 1912 இல் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் தேசிய இயக்குநராக இருந்த முசோலினி. முதலாம் உலகப் போரில் இராணுவ தலையீட்டிற்கு நடுநிலைமை வகிக்காத்தால், கட்சியின் நடுநிலைப்பாட்டிற்கு எதிரான செயலைசெய்த்தாக கூறி, பிஎஸ்ஐ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1917 வரை போரின் போது அவர் ராயல் இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றினார். பின்பு அவர் காயமடைந்ததால் விடுவிக்கப்பட்டார். PSI கட்சியை முசோலினி கண்டனம் செய்தார், இப்போது அவருடைய கருத்துக்கள் சோசலிசத்திற்கு பதிலாக தேசியவாதத்தை மையமாகக் கொண்டு இருந்தது, பின்னர் பாசிச இயக்கத்தை நிருவ இதுவே காரணமாகியது.அவர் சமத்துவமற்ற வர்க்கமுரண்பாடுகளை எதிர்த்து வந்தார், அதற்கு பதிலாக புரட்சிகர தேசியவாத வர்க்கக் கோட்பாடுகளை கடந்து செல்லுமாறு பரிந்துரைத்தார். அக்டோபர் 1922 இல் ரோம் நகரில் மார்சில் இத்தாலிய வரலாற்றில் இளைய பிரதமராக ஆனார் (2014 பிப்ரவரி மாதம் மாட்டோ ரென்சி நியமனம் வரை). பின்னர், முசோலினி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஒரு கட்சியை ஒரு கட்சி சர்வாதிகாரமாக மாற்ற தொடர்ச்சியான சட்டங்கள் மூலம் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர். ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் சர்வாதிகார அதிகாரத்தை சட்டப்பூர்வ மற்றும் அசாதாரணமான வழிகளில் நிறுவியதோடு ஒரு சர்வாதிகார அரசை உருவாக்க விரும்பினார். முசோலினி 1943 ஆம் ஆண்டில் கிங் விக்டர் இம்மானுவல் மூன்றாம் அதிகாரத்தை கைப்பற்றும் வரை பதவியில் இருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் இத்தாலிய சமூக குடியரசின் தலைவராக ஆனார். 1945 ல் அவர் இறக்கும்வரை அவர் பதவியை வகித்தார். முசோலினி குறைந்தபட்சம் 1942 வரை ஐரோப்பாவில் ஒரு பெரிய போரை தாமதப்படுத்த முயன்றார். இருப்பினும், ஜெர்மனி 1 செப்டம்பர் 1939 இல் போலந்து மீது படையெடுத்தது. இதன் விளைவாக பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம்(United Kingdom) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை அறிவித்தது.அறிவித்தது. ஜூன் 10, 1940-ல் பிரான்சின் வீழ்ச்சிக்கு உடனடியாக முசோலினி ஜேர்மனியின் போரில் அதிகாரப்பூர்வமாக போரில் நுழைந்தார், ஆனால் இத்தாலிக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் நீண்ட போர் நடத்தும் இராணுவ திறன் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்பதை அறிந்திருந்தார்.1941 ம் ஆண்டு கோடையில், முசோலினி இத்தாலிய படைகளை சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பில் பங்கேற்க அனுப்பினார், மேலும் டிசம்பர் மாதம் அமெரிக்காவுடன் யுத்தம் நடந்தது.ஜூலை 24, 1943 இல் சிசிலி மீது கூட்டணிப் படைகளின் படையெடுப்பு தொடங்கியவுடன், அவர் பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், ஜூலை 25 இல் கிங் வரிசையில் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 12, 1943 இல், ஜெர்மன் சிறப்பு படைகளால் முசோலினி கிராஸ் சாஸோ தாக்குதலில் சிறையில் இருந்து மீட்கப்பட்டார். ஏப்ரல் இறுதியில் 1945 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், முசோலினி மற்றும் அவரது மனைவி கிளாரா பெட்ஸ்கி சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றனர், ஆனால் இருவரும் இத்தாலிய கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டுமற்றும் சுருக்கமாக துப்பாக்கி சூடு மூலம் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். சோசலிசம் இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார். பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்பு வாதக்கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழைய உயரத்துக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தரவர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார் செயல்படுவதையும் பாசிஸ்டுகள் தடுத்தனர். இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle) ஜூன்,1919 ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. அனைவராலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி 1911 முதல் 1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார். முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை. 1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இனவேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்த நேரத்திலும் எந்த பதவியிலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார். முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926 "வையலட் ஜிப்சன்" துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர், 1926 ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது. முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், 1914 ம் ஆண்டு டிரன்டோ வில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915 ல் மணந்தார். 1910 ஆண்டே இவருக்கு திருமணம் நடந்ந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910-1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரி ல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916-1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927-2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார். 28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார். முசோலினியின் வாழ்க்கை வரலாறு கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும் கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல் (Computer Aided Design and Drawing)என்பது கணினி தொடர்பான கருவிகளைப் பயன்படுத்திக், கட்டிடக்கலை, பொறியியல், இயந்திர உற்பத்தி மற்றும் இன்னபிற துறைகளில் வடிவமைப்பு மற்றும் வரைபடம் வரைதலைக் குறிக்கின்றது. இதில் இதற்காக உருவாக்கப்படும் பலவகையான மென்பொருள்களும், சில சமயம், விசேடமாக உருவாக்கப்படும் வன்பொருள்களும் தொடர்பு படுகின்றன. தற்காலத்தில் இருபரிமாண, காவி அடிப்படையில் அமைந்த வரைபு முறைமைகள் (2D vector based drafting systems) தொடக்கம், முப்பரிமாண, மேற்பரப்பு மற்றும் திண்ம வடிவமைப்பு மாதிரியுருவாக்கிகள் (3D surface and solid design modellers) வரை பலவிதமான மென்பொருள்கள் புழக்கத்திலுள்ளன. கணினித் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மனித வாழ்வின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று, வடிவமைப்பு மற்றும் அதனோடிணைந்த படவரைதற் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை, வரைபலகைகளைப் பயன்படுத்திக் கைகளால் படங்களை வரைந்த நிலைக்கு மாற்றாக கணினிகளைப் பயன்படுத்திப் படம் வரையும் முறை அறிமுகமானது. இத் துறையில் கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகப் பல துறைகளில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக ஆகியுள்ளது. ராக்கெட் மற்றும் வானூர்திகள் வடிவமைப்பு, உற்பத்தி முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை "கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்" முறையைப் பயன்படுத்தி வருகின்றன. கட்டிடங்களையும் பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், இயந்திர சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, திரைப்படத் தயாரிப்பு, விளம்பரத்துறை போன்றவற்றில் கலை சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15வரை பூங்கா திறந்திருக்கும். வானலை அடையாளம் ஒரு பொருளை தனித்துவமாக வானலையூடாக கண்டு அடையாளப்படுத்தும் தொழில்நுட்பமே வானலை அடையாளம் (Radio Frequency IDentification - RFID) எனப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை வானொலி அலைவரிசை இனம்காட்டி, ஒளியலை அடையாளம், வானலை அடையாள குறி என்றும் தமிழில் குறிப்பர். வானலை அடையாள நுட்பமைப்பு மூன்று முக்கிய பின்வரும் கூறுகளால் ஆனது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள நிரலிற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும். உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன. இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது. RFID எவ்வாறு வேலை செய்கிறது? இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது. இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது. வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது அனைத்துவகையான Tagகளிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்மின்னி நுண்நோக்கி எதிர்மின்னிகளை அல்லது இலத்திரன்களை (எலெக்ட்ரான்) ஒளிக்கற்றை போல இயக்கி ஒரு நுண்நோக்கியாகப் பயன்படுவதால் இது எதிர்மின்னி நுண்ணோக்கி அல்லது இலத்திரன் நுண்நோக்கி (இலங்கை வழக்கு: இலத்திரன் நுணுக்குக்காட்டி) எனப்படுகின்றது. இது நுண்ணிய பொருட்களை அதிக நுண்தேர்திறனுடன் (resolving power) பெரிதாக்கிக் காட்டவல்லது. இது நுண்ணளவு உள்ள ஓரு பொருளை 500,000 மடங்கு அளவுக்குப் பெரிதாக்கும் திறன் கொண்டது. ஏர்ணஸ்ட் ருஸ்கா (Ernst Ruska) என்னும் செருமானிய இயற்பியலாளர் முதன்முதலாக இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். எதிர்மின்னி அலை இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக, அதை ஒளியைப் பயன்படுத்துவது போலக் கையாள முடியும் என அவர் நம்பினார். காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எதிர்மின்னிகளைக் கட்டுப்படுத்திச் (குவியச்செய்து) செயற்படவைக்க முடியும் என அறிந்திருந்த ஏர்ணஸ்ட், ஒளியைக் கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்வதுபோல், காந்தப் புலத்தைப் பயன்படுத்தி எதிர்மின்னி அலைகளைக் குவிக்க முடியும் என உணர்ந்தார். அலை நீளம் குறையும் போது, பெரிதாக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால், குறைந்த அலை நீளம் கொண்ட எதிர்மின்னி (இலத்திரன்) அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதாரண ஒளியியல் நுண்நோக்கிகளைவிட மிக அதிகமான உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என அவருக்குப் புலப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் மாக்ஃசு நொல் என்னும் இன்னொரு இயற்பியலாளருடன் சேர்ந்து திருத்தமற்ற இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். நடைமுறைத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இது இல்லாதிருந்தாலும், இதன்மூலம் 400 மடங்கு உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. இக்கண்டுபிடிப்புக்காக ருஸ்காவுக்கு 1986 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதலாவது நடைமுறையில் பயன்படுத்தப்படக்கூடிய எதிர்மின்னி நுண்நோக்கி எலி பிராங்க்ளின் பர்ட்டன் (Eli Franklin Burton) மற்றும் அவரது மாணவர்களான சிசில் ஆல் (Cecil Hall), சேம்சு இல்லியர் (James Hillier), அல்பர்ட் பிறிபசு (Albert Prebus) என்பவர்களால் கனடாவிலுள்ள ரொராண்டோ பல்கலைக் கழகத்தில் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தற்கால எதிர்மின்னி(இலத்திரன்) நுண்நோக்கிகள் 20 இலட்சம் மடங்குவரை கூட உருப்பெருக்கும் திறன் கொண்டவையாக இருப்பினும், அவை இன்னும் ருஸ்காவின் மாதிரியின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் இலத்திரன் நுண்நோக்கிகள் முன்னணி ஆய்வகங்களிலும், பல்கலைக்காழக ஆய்வுச் சாலைகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. இந் நுண்நோக்கிகள், நுண்ணுயிர்கள், உயிரணுக்கள் (கலம்) போன்ற உயிரியற் பொருட்களை ஆராயவும், உலோகவியல், படிகக் கட்டமைப்புக்கள் போன்றவற்றில் ஆய்வு செய்யவும் பெரிதும் பயன்படுகின்றன. ஊடுருவு = Transmission ஊடுருவு எதிர்மின்னி நுண்ணோக்கிகளில், எதிர்மின்வாய்களில் அல்லது எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து கதிர்வீசப்படும் (உமிழப்படும்) இலத்திரன் கற்றைகள் உயர் மின்னழுத்தத்தால் முடுக்குவிக்கப்பட்டு பின்னர் காந்தவில்லைகளினால் (மின் காந்த லென்சுகளினால்) குவிக்கப்படுகின்றன. பருப்பொருள்களின் அலைப்பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது; அடிப்படையில் ஒளி நுண்ணோக்கியை ஒத்துள்ள ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஒளிக்கற்றைக்கு பதிலாக எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் அலைநீளம் அதிகம் (~ 600 nm அதாவது 600 நேனோமீட்டர்), எனவே ஒளி நுண்ணோக்கியால் நாம் காணும் பொருள்களில் பகுதிறன் (Resolving power) குறைவாக இருக்கும். முடுக்கப்பட்ட எலக்ட்ரான் கற்றையின் அலைநீளம் குறைவு (~ 6 pm அதாவது 6 பைகோமீட்டர்; எனவே ஒளியை விடவும் 1 இலட்சம் மடங்கு குறைவு). எனவே, பகுதிறன் ~ 1 இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும். இவை படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன; கற்றைகளாகச் செலுத்தப்படும் இலத்திரன்களை (முதல்நிலை இலத்திரன்கள்) உணர்தலை அடிப்படையாகக் கொண்ட செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கிகளைப் போலன்றி, துருவுமுறை இலத்திரன் நுண்நோக்கிகள், செலுத்தப்படும் இலத்திரன் கற்றைகளினால் அருட்டப்பட்டு, மேற்பரப்புகள் வெளியேற்றும் இலத்திரன்களை (துணைநிலை இலத்திரன்கள்) உணர்வதன்மூலம் அவற்றின் உருப்பெருக்கப்பட்ட படிமங்களை உருவாக்குகின்றன. துருவல் செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி (Scanning Transmission Electron Microscope தெறிப்புமுறை இலத்திரன் நுண்நோக்கி இக்கருவியில், ஒளிக் கதிர்களுக்குப் பதில் எலக்ட்ரான் கற்றையினையும் வில்லைகளுக்குப் பதில் மின், காந்தப் புலங்களும் பயன் படுத்தப் படுகின்றன.மிகவும் மெல்லிய தகடு போன்ற ஆராயப்பட வேண்டிய பொருளின் மேல் எலக்ட்ரான் கற்றை விழுமாறு செய்து, அடர்த்திக் கூடிய பகுதியினால் தோன்றும் நிழல் உடனொளிர் திரையில் பெறப்படுகிறது. உருப்பெருக்கம் 100 000 வரையிலிருக்கும். இக்கருவி உலோகவியல், உயிரியல், வேதியியல் போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகின்றது. நுண்நோக்கி நுண்நோக்கி அல்லது நுணுக்குக்காட்டி ("microscope", பழைய கிரேக்கம்: μικρός, mikrós) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். பலவிதமான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன, இவற்றுள் பொதுவானதும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுமான ஒளிநுண்நோக்கியில் ஒளியின் உதவியுடன் பிம்பம் நோக்கப்படுகின்றது. பொதுவாக, நுண்நோக்கி எனும்போது ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது. ஒளி நுண்நோக்கியின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மிகவும் நுண்ணிய பொருட்களை நோக்க இலத்திரன் நுண்நோக்கி, வருடு நுண்சலாகை நோக்கி (scanning probe microscopes) பயன்படுகின்றது.நுண்ணோக்கியின் மூலமாக பொருள்களைப் பத்து மடங்கிலிருந்து 100 மடங்கு வரை பெரிது படுத்தலாம். ஆரம்ப காலங்களில் நுண்ணோக்கிகளில் ஒரே ஒரு வில்லை(lens) மட்டுமே இருந்தது. அதனால் அவை தற்போது சாதாரண நுண்ணோக்கி என்று அழைக்கப்படுகின்றது.கலவை நுண்ணோக்கிகளில் குறைந்தது இரண்டு வில்லைகளாவது இடம் பெறும். 1590ம் ஆண்டு நெதர்லாந்தில் கான்சு ஜேன்சென்(Hans Janssen) மற்றும் அவரது மகன் சக்கரியாசு ஜேன்சென்(Zacharias Janssen) ஆகிய மூக்குக்கண்ணாடி தயாரிப்போர் முதல் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்கள். கலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) 1609 – 1624ம் ஆண்டுப் பகுதிகளில் குழிவு, குவிவு வில்லைகளைப் பயன்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கி, பூச்சிகளின் கூட்டுக்கண்களை ஆராய்ந்தார். 1625இல் “microscope” (நுண்ணோக்கி) என்னும் பெயரை ஜெர்மானிய மருத்துவரான கியோவான்னி ஃபாபெர் (Giovanni Faber) என்பவர் இட்டார். மார்செலோ மல்பிஜி (Marcello Malpighi, 1628-1694) எனும் இத்தாலிய உடற்கூற்றியல், இழையவியல் ஆராய்ச்சியாளர் நுண்ணோக்கியை உபயோகப்படுத்தி விலங்குகளின் இழைய அமைப்புக்களை ஆராய்ச்சி செய்தார், சில உள்ளுறுப்புக்களின் இழைய அமைப்பு இவரது பெயரால் அழைக்கப்படுகின்றது (தோலில் உள்ள மல்பிஜியின் படை). ரொபட் கூக் (Robert Hooke, 1635 – 1703) எனும் ஆங்கிலேய நுண்ணோக்கி ஆராய்ச்சியாளர் 1665 - 1667இல் தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைக்கலங்களின் மெல்லிய பகுதியினை ஆராய்ந்தார், இவற்றில் நோக்கிய தேன்கூடு போன்ற சிறுசிறு பகுதிகளுக்கு “cell” (கண்ணறை) என்று பெயரிட்டார், இவ்வார்த்தையே இன்று ஆங்கிலத்தில் செல் என்று உயிரணுக்களை அழைக்கப்பயன்படுகின்றது. அன்டன் வான் லீவன்கோக் (Anton van Leeuwenhoek, 1632-1723) நுண்ணோக்கியின் தரத்தை உயர்த்தி அதனது உருப்பெருக்கத்தையும் உயர்த்தினார்; தனி உயிரணுக்களை விரிவாக ஆராய்ந்தார்; இவரே முதன் முதலில் பாக்டீரியாக்கள் பற்றி ஆராய்ந்தவரும் ஆவார். 1900-களின் ஆரம்ப காலங்களில் ஒளிநுண்ணொக்கிக்கு மாற்று கண்டுபிடிக்க முயற்சித்தபோது கண்டுபிடிக்கப்பட்டதே எல்ட்ரான் நுண்ணோக்கிகள் ஆகும்.ஏர்னஸ்ட் ரஸ்கா என்பவர் முதன் முதலில் 1931-இல் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியினைக் (TEM) கண்டுபிடித்தார். மிகப்பெரிய தெளிவான படிமங்களை அவை தந்ததால் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் வரவேற்கப்பட்டன.இதைத் தொடர்ந்து ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மேக்ஸ் க்னால் என்பவரால் 1935-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் இரண்டாம் உலகப்போரின் போது மிகவும் பிரபலமாகின.இதன் பின் முதல் முதலாக வர்த்தக பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியிணை 1965-ஆம் ஆண்டு சார்லஸ் ஓட்லே என்பவர் வடிவமைத்தார். எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் ஒளி நுண்ணோக்கிகள் போன்றே செயல் படுகின்றன.ஆனால் இவற்றில் ஒளிக்கு பதிலாக எலட்ரான்களை பயன்படுத்தி பிம்பத்தை உருவாக்குகின்றனர்.வில்லைகள் செய்யும் வேலையை இதில் மின்காந்தங்கள் செய்கின்றன. 1980 முதல் ஸ்கேனிங் ஆய்வு நுண்ணோக்கிகள் வளர்ச்சிக் காண ஆரம்பித்தது. முதலில் 1981 -ஆம் ஆண்டு வருடு நுண்சலாகை நோக்கி , கெர்ட் பின்னிக் மற்றும் ஹென்ரிச் ரோஹ்ரெரால் உருவாக்கப்பட்டது. இந்த பின் கெர்ட் பின்னிக் , குவேட் மற்றும் கெர்பர் ஆகியோரின் கண்டுபிடிப்பான அணு விசை நுண்ணோக்கியானது 1986-ஆம் ஆண்டு வெளியானது. இவை இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கிகள் ஆகும்.இதில் ஒளிரும் புரதங்கள் கொண்டு பொருட்களைப் பெரிதாக்குகின்றனர்.இதன் கொள்கைக்கு மார்வின் மின்ஸ்கி என்பவர் 1957 இல் காப்புரிமை பெற்றார்.பின் 1978 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக இது வெளியிடப்பட்டது.1980 களில் இவ்வகை நுண்ணோக்கிகள் பிரபலம் அடைந்தன. இவற்றில் AFM மற்றும் STM நுண்ணோக்கிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒலி ஊடுருவல் நுண்ணோக்கி ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஒலி மின்மறுப்பின் மாற்றங்களை அளக்கப் பயன்படுகின்றது. கொள்கை அடிப்படையில் இது ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவை ஒத்திருக்கின்றது. ஏர்ணஸ்ட் ருஸ்கா ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) (டிசம்பர் 25, 1906–மே 25, 1988), ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவர் ஹெய்டில்பர்க்கில் (Heidelberg) பிறந்தார். 1925 தொடக்கம் 1927 வரை மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஒளியைப் பயன்படுத்தும் நுண்நோக்கியைக் காட்டிலும் ஒளியிலும் அலைநீளம் குறைந்த இலத்திரன்களைப் பயன்படுத்துவதன்மூலம் கூடிய உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என உணர்ந்தார். 1931 இல் இலத்திரன் வில்லை ஒன்றை உருவாக்கிய இவர், தொடர்ந்து இவ்வாறான பல வில்லைகளை உருவாக்கினார். 1933 இல், இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார். 1937க்கும், 1955க்கும் இடையில் Siemens-Reiniger-Werke AG என்னும் நிறுவனத்தில் ஆய்வுப் பொறியியலாளராகப் பணியாற்றிய இவர் 1955 தொடக்கம், 1972 வரை பிரிட்ஸ் ஹார்பெர் நிறுவனத்தின் (Fritz Harber Institute) இலத்திரன் நுண்நோக்கியல் நிறுவனத்தில் (Institute for Electron Microscopy) இயக்குனராகப் பணி புரிந்தார். அதே சமயத்தில் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் ஓய்வு பெறும்வரை பேராசிரியராகக் கடமையாற்றினார். 1986 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு இவர் மேற்கு ஜெர்மனியில் காலமானார். நுண்நோக்கியல் மனித வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத நுண்பொருட்கள், அமைப்புகள் மற்றும் விபரங்களை, நுண்நோக்கி மற்றும் வேறு உருப்பெருக்கும் கருவிகள் மூலம் கட்புலனாகக்கூடிய படிமங்களாக உருவாக்கும் நுட்பமே நுண்நோக்கியல் ஆகும். ஒளிசார் நுண்நோக்கியலில், எடுத்துக்கொண்ட பொருளினூடாகச் செல்கின்ற அல்லது அதிலிருந்து தெறித்து வருகின்ற ஒளியைப் பல கண்ணாடி வில்லைகளின் ஊடாகச் செலுத்துவதன் மூலம் உருப்பெருக்கிய விம்பம் பெறப்படுகிறது. இதை நேரடியாகக் கண்ணால் பார்க்கவோ அல்லது நிழற்படத் தகடுகள்மீது படமாகப் பதிக்கவோ முடியும். உருப்பெருக்குதிறன் ஒளியின் அலைநீளத்தில் தங்கியுள்ளது அறியப்பட்ட பின்னர், குறைந்த அலைநீளம் கொண்ட இலத்திரன் கற்றைகளைப் பயன்படுத்தும் இலத்திரன் நுண்நோக்கிகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் மிக உயர்ந்த உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. 1940 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எக்ஸ் கதிர் நுண்நோக்கிகளும் விருத்தி செய்யப்பட்டன எனினும், இவை அதிகம் பயன்பாட்டில் இல்லை. ஒழுங்கின்மை கோட்பாடு ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு (Chaos Theory). இக்கோட்படானது உயிரியல், கணிதம், பொறியியல், மெய்யியல், இயற்பியல், அரசியல் மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயன்படுகின்றது. இந்த கோட்பாடின் முன்னோடிகளில் ஒருவர் லொரென்ஸ். லொரென்ஸின் அடிப்படை மேற்கோள் ஒன்று, பலரைத் தூண்டி, ஒழுங்கின்மைக் கோட்பாடு என்னும் ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு முக்கியமடைந்தது. மின்புலம் மின் தன்மைகளில் இரண்டு "வகைகள்" உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் ("Electric Field") என்கிறோம். மின் புலம் உள்ள ஓரிடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை வைத்தால், அது மின்புல விசையால் எதிர்மின் மிகுந்துள்ள திசையில் நகரும். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிப்பது வழக்கம். மின் தன்மை ஏற்ற ஒரு பொருளை மின்னி (மின்னூட்டம் பெற்ற பொருள்) என்றோ மின்னேற்பு என்றோ அழைக்கப்படுகிறது. மின்புலம் ஒரு காவிப் புலமாகும். அதாவது மின்புல வலிமை பருமனையும் திசையையும் கொண்டிருக்கும். ஒரு மின்புலத்தில் ஓரலகு நேரேற்றத்தை வைக்கும் போது அது அனுபவிக்கும் விசையின் பருமனும் திசையும் அப்புள்ளியில் அம்மின்புலத்தின் மின்புல வலிமை எனப்படும். மின்னேற்றத்தின் அளவை கூலோம் (Coulomb) என்னும் அலகால் அளக்கிறார்கள். மின் புலத்தில் உந்தப்படும் விசையின் அளவு இந்த மின்னேற்பின் அளவைப் பொறுத்தது. பொதுவாக மின்புலம் ("E") பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்: எனவே மின்புலம் மின்னேற்பின் பால் தொழிற்பட்டு, உந்துகின்றது. அந்த உந்து விசையே "F" எனப்படும் மின்விசையாகும். மின் புலமானது மின்னேற்றங்களினாலோ அல்லது நேரத்துடன் மாற்றமடையும் (பருமன் அல்லது திசை மாறும்) காந்தப் புலத்தினாலோ உருவாக முடியும். பாரடே விதி இயற்பியலில் பாரடே விதிகள் இரண்டு உள்ளன. அவை திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு கட்டிடக்கலை ஒழுங்கு (Architectural Order) என்பது கட்டிடமொன்றில் அதன் உறுப்புக்களின் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைவு ஆகும். திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு என்னும்போது திராவிடக் கட்டிடக்கலையில் காணப்படுகின்ற இவ்வாறான ஒழுங்கமைவைக் குறிக்கும். இக்கட்டிடக்கலை ஒழுங்கானது பண்டைக்கால இந்தியாவின் ஆகமங்கள் மற்றும் சிற்பநூல்களில் அடங்கியுள்ள கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவை தொடர்பான விதிகளுக்கு அமையவும், பிரதேச மற்றும் சமுதாய, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஒட்டியும் வளர்ந்து வந்ததாகும். திராவிடக் கட்டிடக்கலை பெரும்பாலும் சமயம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதனால் கோயில் கட்டிடங்களை ஆராய்வதன் மூலம் இக் கட்டிடக்கலை ஒழுங்கு பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒற்றைக் கருவறையுடன் கூடிய எளிமையான கோயில் கட்டிடமொன்று திராவிடக் கட்டிடக்கலையின் அடிப்படையான உறுப்புக்களான (அங்கங்கள்) பின்வரும் அனைத்தையும் கொண்டிருக்கக்கூடும். மேலே தரப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் பல துணை உறுப்புக்களால் ஆனது. துணை உறுப்புக்கள் வெவ்வேறான எண்ணிக்கைகளிலும், விதங்களிலும் சேர்வதன் மூலம் பலவகையான அடிப்படை உறுப்புகள் உருவாகின்றன. புழக்கத்திலுள்ள பல்வேறு சிற்பநூல்களும் ஆகமங்களும் இவ்வாறான வேறுபாடுகள் குறித்து விளக்குகின்றன. திராவிடக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு இது. ஆரம்பகாலக் கட்டிடங்களில் உபபீடம் காணப்படவில்லை. கட்டிடங்களின் அளவு பெரிதாகி அவற்றின் சிக்கல் தன்மையும் அதிகரித்தபோது இந்த உறுப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மேல் அமைக்கப்படவுள்ள தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், கட்டிடத்தை உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சிற்பநூல்கள் கூறுகின்றன. மயமதம், "வேதி பத்ரம்", "பிரதி பத்ரம்", "சுப பத்ரம்" என மூன்று வகையான உபபீடங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் என்னும் சிற்பநூல், "பிரதி பத்ரம்", "பிரதி சுந்தரம்", "சௌபத்ரம்", "கல்யாணிகா" என்னும் நான்கு வகையான உபபீடங்கள் பற்றியும் விளக்குகின்றன. சிற்பநூல்களின்படி கட்டிடங்களின் அடித்தளம் இத் தாங்குதளங்களே. வடமொழியில் இதனை "அதிஷ்டானம்" என்பர். எதன்மீது கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவோ அதுவே அதிஷ்டானம் என மயமதம் கூறுகிறது. தாங்குதளங்கள், "பாதபந்தம்", "பிரதிபந்தம்", "பத்மபந்தம்" என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பல துணைப்பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. மயமதம் 14 வகையான தாங்குதளங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் 22 வகையான தாங்கு தளங்கள் பற்றியும் விபரங்கள் தருகின்றன. கூழ்மம் கூழ்மம் "(colloid)" என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் . பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவு பெரியவை என குறுகிய பொருளில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூழ்மத் தொங்கல் என்ற சொல் ஒட்டுமொத்த கரைசலையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. கரைபொருளும் கரைப்பானும் ஒரு படித்தான நிலையில் காணப்படும் கரைசலைப் போலவும் அல்லாமல், கரைபொருள் கரைசலின் அடியில் கீழே படிந்துவிடும் தொங்கல் போலவும் அல்லாமல் கரைபொருள் கரைசலில் விரவிய நிலையில் காணப்படும் பலபடித்தான கலவையை கூழ்மம் என்கிறார்கள். ஒரு கலவையை கூழ்மம் என்று கருத வேண்டுமெனில் அக்கலவையில் உள்ள துகள்கள் கலவையின் அடியில் படியக்கூடாது அல்லது படிவதற்கு மிக நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும். கூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவு தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் சிறியதாகவும், உண்மையான கரைசலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் பெரியதாகவும் காணப்படும். அதாவது கூழ்மத்தில் விரவிக் கிடக்கும் துகள்களின் அளவு 1 நானோ மீட்டர் என்ற அளவிலிருந்து 1000 நானோ மீட்டர் என்ற அளவுவரை உள்ள துகள்கள் காணப்படும் கலவை கூழ்மம் என்று வரையறுக்கிறார்கள் . 250 நானோ மீட்டருக்கு மேல் அதிக அளவு கொண்ட பெரிய துகள்களை ஒளியியல் நுண்ணோக்கியின் மூலம் நன்கு பார்க்கமுடியும். இதைவிட சிறிய துகள்களை எலக்ட்ரான் நுண்ணோக்கி அல்லது மீநுண்ணோக்கி கொண்டுதான் பார்க்கமுடியும். இந்த உருவளவில் துகள்கள் விரவிக்கிடக்கும் ஒரு படித்தான கலவையை கூழ்மத்தூசுப்படலம், கூழமப்பால்மம், கூழ்மநுரைகள், கூழ்மவிரவல்கள் அல்லது நீர்ப்படலங்கள் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியியல் விரவிய நிலையிலுள்ள துகள்களை அல்லது நீர்த்துளிகளை பெருமளவில் பாதிக்கிறது. கூழ்மத்திலுள்ள துகள்களால் ஒளிச்சிதறல் அடையும் எனப்படும் டிண்டால் விளைவு காரணமாக சில கூழ்மங்கள் ஒளி ஊடுறுவக்கூடியனவாக உள்ளன. மற்றவை ஒளிப்புகா தன்மையைக் கொண்டுள்ளன அல்லது இலேசான நிறம் கொண்டவையாகவும் உள்ளன. கூழ்மங்களை ஆராய்கின்ற கூழ்ம வேதியியல் துறையை இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் விரவிக்கிடக்கும் கட்டத்தில் துகள்களை அளவிடுவது கடினமாக இருப்பதாலும், கூழ்மம் கரைசலின் தோற்றத்தில் காணப்படுவதாலும் சில சமயங்களில், கூழ்மங்கள் அவற்றின் இயற்பிய-வேதியியல் மற்றும் நகரும் பண்புகளால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு கூழ்மத்தில் திண்மத் துகள் நீர்மத்தில் விரவிக் கிடக்க நேர்ந்தால் அந்த திண்மத் துகள்கள் ஒரு சவ்வின் வழியே ஊடுறுவாது. உண்மையான கரைசலில் கரைந்துள்ள அயனி அல்லது மூலக்கூறு சவ்வின் வழியே ஊடுறுவும். கூழ்மநிலைத் துகள்கள் அவற்றின் சொந்த பரிமாணத்தை விட சிறிய அளவிலான அளவு குறைந்த துளைகள் வழியாக செல்ல இயலாது. மீச்சிறிய துளை கொண்ட சவ்வின் அளவிற்கேற்ப வடிகட்டப்பட்ட நீர்மத்தில் கூழ்மத் துகள்களின் செறிவும் காணப்படும். எனவே வகைப்படுத்துவதற்கான சோதனைகளில் இக்கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கூழ்மத்தின் வகைபாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன. பரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன. ஒரு விழ்படிவை ஒரு கூழ்மமாக மாற்றும் செயல்முறை கரைசலாக்கம் என்று அழைக்கப்படுகிறது. கரைசலாக்கம் இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உரிய அயனிகளைச் சேர்த்தல் மற்றும் பிரிகை ஊடகம் ஒன்றை சேர்த்தல் என்பன அவ்விரண்டு முறைகளாகும். இச்செயல்முறையில் சேர்க்கப்படும் பொருள் கூழ்மமாக்கும் அல்லது சிதறலாக்கும் காரணி எனப்படுகிறது. பிரிகை ஊடகத்தின் முன்னிலையில் விழ்படிவு ஒன்றுடன் சிறிதளவு மின்பகுளியைச் சேர்த்து கூழ்மம் தயாரிப்பது அயனிகள் கொண்டு கூழ்மம் தயாரிக்கும் முதல்வகை தயாரிப்பு முறையாகும். இங்கு மின்பகுளியில் உள்ள அயனிகள் கூழ்மமாக்கும் காரணியாகச் செயல்படுகின்றன. ஒரு வீழ்படிவு பிரிகை ஊடகம் ஒன்றுடன் சேர்க்கப்பட்டு கூழ்மம் தயாரிக்கப்படுதல் இரண்டாவது வகை கூழ்மம் தயாரிக்கும் முறையாகும். ஓர் உண்மையான கூழ்மம் நிலையானது ஆகும். இதன் துகள்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து வீழ்படிவாவதில்லை. சங்கம் மருவிய காலம் கிபி. 100 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்ததாக கருதப்படுகிறது. நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர். இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை" என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர். இந்த இருண்ட காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள் மின்காந்த அலைச் சமன்பாடு மின்காந்த அலைச் சமன்பாடு என்பது ஓர் ஊடகத்தில் அல்லது வெற்றிடத்தில் மின்காந்த அலைகள் பரவுவதை விளக்கும் இரண்டாம் வரிசை பகுதிவகையீட்டுச் சமன்பாடு ஆகும். காந்தப்புலம் அல்லது மின்புலத்தின் துணை கொண்டு கூறப்படும் இச் சமன்பாட்டின் ஒருபடித்தான வடிவம் வருமாறு: இதில் "c" என்பது ஊடகத்தில் ஒளியின் திசைவேகம். வெற்றிடத்தில் c = 2.998 x 10 மீட்டர்/வினாடி. மின்காந்த அலைச் சமன்பாடு மேக்ஸ்வெல் சமன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். இராபர்ட் தெ நோபிலி தத்துவ போதக சுவாமிகள் (1577 - 1656) என அழைக்கப்படும் இராபர்ட் தெ நோபிலி ("Robert de Nobile S.J.") உரோமப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். 26 வயதில் இயேசு சபையில் சேர்ந்து கத்தோலிக்கக் குருவாகி, தமிழ் நாட்டில் சமயப்பணியாற்ற விரும்பி, 1605 மே 20இல் கோவா வந்து சேர்ந்தார். 1606-ஆம் ஆண்டில் மதுரையை அடைந்து தமிழ்த்துறவி போல் வாழத்தொடங்கி கத்தோலிக்க மறைபணியாளராகப் பணி புரிந்தார். இறுதியில் மயிலையில் 1656-இல் இறைவன் திருவடி யடைந்தார். இவர் தமிழில் 40 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பங்களிப்பால் இவர் "தமிழ் உரைநடையின் தந்தை" என்று அறியப்படுகிறார். தமிழகத்தில் இவர் காலத்தில் உயர் இனத்தவராகக் கருதப்பட்டு வந்த பிராமணர்களைத் தம் சமயத்தில் ஈடுபடுமாறு செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டார். காவியுடையும் பூணூலும் அணிந்தார். புறத்தோற்றத்தில் தமிழ்த்துறவியாக மாற்றம் கொண்டாலும் அகவுணர்வில் சமயக்கோட்பாடுகளினின்று சிறிதும் வழுவவில்லை. தாம் அணிந்திருந்த ஐம்புரிகள் தமதிரித்துவத்தையும், இரண்டு வெள்ளிப் புரிகள் கிறிஸ்து பிரானின் உடலையும் உயிரையும் குறித்தனவாகக் கூறினார். இவரின் இத்கைய செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய எதிர்ப்பையும் பெற்றது. இது திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. அவர் 31 சனவரி 1623இல் வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காதவரை எத்தடையும் இல்லை என அறிவித்தார். மேலும் இம்மடலில் இந்திய குருமடத்தில் பயிற்சிபெறுபவர்களிடம் இருத்த சாதி வெறியையும் குறிப்பாக பறையர் இனமக்களிடம் இருந்த வெறுப்பையும் விட்டுவிட வற்புறுத்தியிருந்தார். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய வடமொழி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழில் நாற்பது உரைநடை நூல்கள், மூன்று கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் "ஞானோபதேச காண்டம்", "மந்திர மாலை", "ஆத்தும நிர்ணயம்", "தத்துவக் கண்ணாடி", "சேசுநாதர் சரித்திரம்", "ஞான தீபிகை", "நீதிச்சொல்", "புனர்ஜென்ம ஆக்ஷேபம்", "தூஷண திக்காரம்", "நித்திய சீவன சல்லாபம்", "கடவுள் நிர்ணயம்", "அர்ச். தேவமாதா சரித்திரம்", "ஞானோபதேசக் குறிப்பிடம்", "ஞானோபதேசம்" ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள், அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை', நான்கு தெலுங்கு நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார். இவா் ஒருமுறை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியுடன் சமய வாதம் செய்தா்ா என்று கூறுவா். ஆரோவில் ஆரோவில் ("Auroville") என்பது தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது. எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும்’ என்ற பிரகடனத்தோடு ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம் திருக்கனவில் உதித்ததாகும். ‘பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது’ என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார். ஆரோவில் நகரத்திற்காக, அன்னை சுட்டிய இடம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் வட்டப் பகுதியில் அமைந்துள்ளது. அது இன்றைக்குப் புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உலகப்புகழ் பெற்ற ஆரோவில்லாக மலர்ந்துள்ளது. ஆரோவில் ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு. இது சித்தர் பூமி. கடுவெளிச் சித்தர் தவம் செய்த புண்ணியபூமி. இந்த இடத்தில் ஆரோவில் உருவாகும் என்று கடுவெளிச் சித்தர் கூறியிருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்வதுண்டு. ஆரோவில்லைச் சுற்றிலும் பழஞ்சிறப்புக்குரிய சிவாலயங்கள், சிறுதெய்வக் கோயில்கள் அமைந்துள்ளன. 18 சிவன் கோயில்கள் உள்ளனவாக இப்பகுதி மக்களால் சுட்டப் பெறுகின்றன. குறிப்பாக, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இரும்பை மாகாளம், திருவக்கரை, அரசிலி ஆலயங்களை ஒட்டி ஆரோவில் அமைந்துள்ளது. 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இந்தியாவிலிருந்தும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து 5000 பேர் வந்து குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது. இந்த உலக நகரில் சுமார் 50,000 பேர் வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்று வருகிறது. நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (Peace) என்று பெயர். இந்த மையத்திலிருந்து நாற்புறமும் சுருள் சுற்று வடிவத்தில் விரிந்த நான்கு பகுதிகள் உள்ளன. அதன் தென்கிழக்குத் திசையில் குடியிருப்பும், வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும் வடமேற்குத் திசையில் தொழிற்கூடங்களும் அமைந்துள்ளன. புதிய கட்டடக் கலைகள் பலவற்றின் உறைவிடமாகத் திகழும் ஆரோவில்லின் குடியிருப்புகள் இயற்கைச் சூழ்நிலையோடு அழகு நிறைந்து விளங்குகின்றன. பன்னாட்டுப் பகுதியானது ஒரு மைய அரங்கம், அனைத்து நாட்டு இசை, நடனம், நாடகம் முதலியன பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைஅரங்குகள், நூலகங்கள், பரிசோதனைக் கூடங்கள், கல்வி பற்றிய ஆய்வுக்கூடங்கள், விளையாட்டரங்குகள் கொண்டதாக அமையும். பன்னாட்டுப் பகுதியில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் அரங்கு இருக்கும். அங்கு அந்தந்த நாட்டின் கலை, பண்பாடு, வாழ்க்கை முதலானவற்றை மற்றவர்கள் கண்டு அறிந்து கொள்ள, ஆய்ந்துணர உதவியாக அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. இந்தியப் பகுதியான பாரத்நிவாஸ் முதல் அங்கமாக அமைந்துள்ளது. அதன் அங்கமாகச் செயல்படும் ஆரோவில் தமிழ் மரபு மையம் குறிப்பிடத்தக்க பணிகளைச் சிறப்புற ஆற்றி வருகிறது. தற்போது திபெத் கலாச்சார அரங்கு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் தங்களுக்கான அரங்குகளை நிறுவ முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு மாசுஉண்டாக்காத வகையில் அமைந்துள்ள தொழிற்கூடப் பகுதிகளில் உயர்தரத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. சிறிய, நடுத்தரத் தொழிற்கூடங்களாக அவை அமைகின்றன. நகரப்பகுதியைச் சுற்றிலும் மரங்களும், பூங்காக்களும், பூந்தோட்டங்களும் பசுமை வளையங்களாக நகரை எழிலூட்டி வருகின்றன. ஆரோவில்லைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் வசிக்கும் மக்கள் இப்பகுதியின் ஆதிமுதல் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். நவம்பர் 10, 2005 கணக்கீட்டின்படி 1780 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 736 பேர் இந்தியர்கள் ஆவார்கள். ஆரோவில் சமூகத்தில் 35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். ஆரோவில்லின் நோக்கினைப் புரிந்து கொண்டு, அவர்கள் இயங்க வழிவகை செய்வதன் முதற்கட்டமாக இங்குள்ள கிராமங்களின் வளர்ச்சி, கல்வி, நல்வாழ்வு, நல்ல குடிநீர், சத்துணவு, பொது சுகாதாரம், சூழல்காப்பு மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. தன்னிறைவு பெற்ற, கைத்தொழில் அறிந்த கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்டதாக அந்தக் கிராமங்கள் வளர்ந்து வருவதை இன்று காண முடிகிறது. பன்னாட்டு மக்களிடையே நல்லிணக்கமாகவும் கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன்மிகத்தின் அடிப்படையில் ஓருலகக் கருத்துணர்வை வளர்க்கும் வகையிலும் வளர்ந்து வரும் இந்நகரில் நான்கு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. முதல்மொழி தமிழ். அடுத்து பிரெஞ்ச், சமஸ்கிருதம், மற்றும் ஆங்கிலம் இங்கு பேச்சு மற்றும் எழுத்து மொழிகளாக விளங்குகின்றன. ‘ஆரோவில் டுடே’ என்னும் இதழ் (1988 ஆம் ஆண்டிலிருந்து) ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் மூலமாக ‘ஆரோவில் ரேடியோ’ இயக்கப்படுகிறது. முற்றிலும் வறண்ட பூமியான இதனைச் செழிப்பு மிகுந்த ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 40 நாட்டு மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்து வந்திருக்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு, இயற்கை வேளாண்மை, மாற்றுச்சக்தி மற்றும் மறுஉற்பத்தி செய்ய வல்ல (சூரிய சக்திப் பலகங்கள்வழி) பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வழங்குதல், விதைகள் சேகரிப்பு, மர நாற்றுப் பண்ணைகள், ஆராய்ச்சிப் பணிகள் எனப் பலவற்றைச் செய்து வரும் ஆரோவில்லின் நோக்கம் மானுடம் மேம்படைதல் என்பதேயாகும். சிதைவுக்குள்ளாகி வரும் பழங்காலக் கட்டடங்களைப் பாதுகாத்தல், மரபு மாறாமல் புதுப்பித்தல், இயற்கையோடு இசைந்தவண்ணம் கட்டடங்களை எளிமையாக அமைத்தல், உள்ளூர்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூர் விளையாட்டுகளை உயர்த்துதல் என்பதான நிலைகளில் விரிவாகவும், ஆழமாகவும் ஆரோவில் தன் பணிகளைத் தொடர்கின்றது. இயற்கை கொலுவிருக்கும் எழிலார் சோலைகளுடன் அமைந்திருக்கும் ஆரோவில் தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களை முன்னேற்றம் செய்யும் முயற்சிகளிலும் முனைந்துள்ளது. இயற்கை சார்ந்த நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் உயர் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. கடற்கரை வளர்ச்சி மையம், உள்ளூர் அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து பல சீரிய பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்பர் போன்ற திட்டங்கள் மூலம் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பிற மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. 25 அறக்கட்டளைகளின் கீழுள்ள 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெறுகின்றன. மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்றுமூலம் மின்சார உற்பத்தி, உயர்தர இயந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத 2 உலோகத் தொழிற்கூடங்கள், உயர்தரத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், பேக்கரிகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன. ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 2 சிறார் பள்ளிகள், 2 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் 16 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு தொழிற்பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் இயங்கும். 8 மொழிகளில் 25,000 மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. பாரத்நிவாஸ் வளாகத்தில் ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது. நடனம், யோகா, தற்காப்புக் கலை, இசை, ஓவியம் முதலியவற்றிற்கான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. ஆரோவில்லிற்கும் வெளி நிறுவனங்களுக்கும் தங்கள் பங்களிப்பை நல்கி வரும் எழுத்தாளர்கள், இசை மற்றும் ஓவிய, நடன, கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள், நடிகர்கள், மட்பாண்டக் கலைஞர்கள் பலர் இயங்கி வருகின்றனர். பல நாடுகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி வரும் கலைக்குழுக்களும் இங்கு உண்டு. அறிவியல் சாதனைகளும் ஆன்மிக வழியில் இங்கு நாள்தோறும் பொலிவு பெற்றிலங்குகின்றன. 40க்கு மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள், மாணவர், இளைஞர் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன. ஆய்விற்காகவும், ஆன்ம பரிசோதனைகளுக்காகவும் இங்கு ஆண்டுதோறும் ஆரோவில் சபைகளைச் சார்ந்த பன்னாட்டினர் வந்து தங்குகின்றனர். ஆயிரம்பேர் அமர்ந்துண்ணும் வகையில் இங்கு இயங்கும் சூரியசக்தி உணவகம் (சோலார் கிச்சன்) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு வருகைதரும் யாரும் தமது உணவுக்காக விலை கொடுக்க வேண்டியதில்லை. எனினும், தம்மைப்போல் பின்னர் வரும் விருந்தினர்க்காகத் தாம் விரும்பும் தொகையையோ, பொருளையோ, உழைப்பையோ செலுத்தி மகிழலாம். ங்கு விருந்துண்ண வருபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி காவியத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள சாவித்ரி பவன், சிறப்பாக உருவாகி வரும் கலைக்கூடம், கண்காட்சிக் கூடம், நூலகம், கருத்தரங்க அரங்கு என்னும் பன்முகத் தன்மைகளோடு கட்டப்பெற்று வரும் இதன் முன் கம்பீரமாகக் காட்சி ஸ்ரீஅரவிந்தர் - ஏழரை அடி உயர வெண்கலச் சிலைவடிவில் தருகிறார். பன்னாட்டுச் சிறப்புகளும் ஒருங்கிணைந்த ஆரோவில்லின் கட்டடக்கலை முதலான அனைத்துலகக் கலைகளும் கண்டுகளிப்பதற்கு மட்டுமின்றிப் பின்பற்றுதற்கும், தலைமுறை கடந்து பேணுதற்கும் உரியவை எனலாம். 1968-இல் நடைபெற்ற ஆரோவில் தொடக்கவிழாவில் 124 நாடுகள் பங்கேற்று ஆரோவில் சாசனத்தை ஏற்றுக் கொண்டன. 1988-இல் இந்திய அரசு ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தை நிறைவேற்றி, நிர்வாகப் பேரவை, பன்னாட்டு ஆலோசனைக் குழு, ஆரோவில்வாசிகள் அவை ஆகியவற்றை அமைத்தது. ஆரோவில் நகரத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததோடு நிதியுதவியும் வழங்கி வருகிறது. யுனெஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் முக்கியத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் நல்லுறவையும் அங்கீகாரத்தையும் ஆரோவில் பெற்றுள்ளது. 6 கண்டங்களில் உள்ள உலக அமைதிச் சின்னங்களின் வரிசையில் ஆசியாவிற்கான அமைதி மேசை ஆரோவில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மேசையை ஐ.நா. சபை நட்புக்குழு சார்பில் நியூயார்க் நகரில் வழங்கப் பெற்றபோது ஆரோவில்லின் பிரதிநிதியாக தமிழ்க்கவிஞர் இரா.மீனாட்சி அதனைப் பெற்றுக்கொண்டார். பல பன்னாட்டுக் கருத்தரங்குகள் இங்கு நடத்தப் பெறுகின்றன. ஆரோவில்லிற்கு ஆதரவு நல்கி வரும் ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற தலைவர்களான இந்திராகாந்தி, புனித தலாய்லாமா, யுனெஸ்கோவின் பொதுச் செயலர், ஐக்கியநாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலர், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர், மாநில, மத்திய அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில். ‘ஆரோவில்லின் ஆன்மா’ என்று ஸ்ரீஅன்னையால் வருணிக்கப் பெற்ற ‘மாத்ரி மந்திர்’ என்ற வடசொல்லுக்கு ‘அன்னை ஆலயம்’ என்று பொருள். எனினும், அதற்கெனச் சிலையோ, வழிபாடோ பூசனைகளோ இங்கு எதுவும் மேற்கொள்ளப் பெறுவதில்லை. சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு 1971ஆம் ஆண்டு ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. பிரபஞ்ச அன்னையின் நான்கு மகாசக்தியின் செயல்பாடுகளைக் குறிக்கும் வண்ணம் இங்கு நான்கு தூண்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மாகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரி மந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் ஸ்ரீஅன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும் ஸ்ரீஅரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும். மாத்ரிமந்திரைச் சுற்றி உள்ள பூங்காக்களின் எண்ணிக்கை 12 ஆகும். அது, பராசக்தியின் சத், சித், ஆனந்தம், ஒளி, வாழ்க்கை, ஆற்றல், செல்வம், பயன்பாடு, முன்னேற்றம், இளமை, இசைவு, பூரணச் சிறப்பு ஆகிய பன்னிரு அம்சங்களைக் குறிப்பனவாக அமைகின்றன. ஒருவன், தன்னை, தன் இருப்பை, இறை உண்மையை, தன் வாழ்வின் உண்¬மான நோக்கத்தை அறிய விரும்பினால், தன் ஆன்மாவை, சைத்திய ஜீவனைக் கண்டுகொள்ள விரும்பினால், இறைவனை அடைய விரும்பினால், அவன் அதற்காக ஒருமுனைப்படுதற்காக மட்டுமே இருப்பது மாத்ரிமந்திரின் நோக்கமாகும். பூரணத்தை நாடும் மனிதனின் ஆர்வத்திற்கு இறைவனுடைய பதிலின் அடையாளமாக இருக்கவே மாத்ரிமந்திர் விரும்புகிறது. இறைவனிடம் ஏற்படும் ஐக்கியம், மேன்மேலும் வளர்ச்சியடையும் மனிதகுல ஒருமையாகவே வெளிப்படுதல் மாத்ரிமந்திர். ‘இது ஸ்ரீஅரவிந்தரின் கொள்கைப்படி பிரபஞ்ச அன்னையின் சின்னமாகவே விளங்குகிறது’ என்கிறார் ஸ்ரீஅன்னை. ஆரோவில் ஒரு சமய நிறுவனம் அல்ல. அது சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ கொண்டதோ, அல்லது எந்த மதத்தினையும் சேர்ந்ததோ இல்லை. ‘விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கைகோத்து மானுட குலம் தழைக்க உழைக்கும் கர்மபூமி, ஆரோவில். ‘ஊருக்குழைத்திடல் யோகம்’ என்றார் பாரதியார். இங்கு ‘உலகிற்குழைத்தலே பரிபூரண யோகமாக’க் கொள்ளப் பெறுகின்றது. போரே இல்லாத பொதுமை காண்பதற்கு ஆன்மிக நெறியில் அறிவியல் வளர்க்கும் ஞானபூமி, ஆரோவில் என்பதால், இங்கும் சோதனைகள் உண்டு. வளர்ச்சி குறித்த பிரச்னைகள் உண்டு. அவை கடந்து மேலே மேலே முன்னேறி வளரும் அனுபவத்தின் சாட்சியம் ஆரோவில். உலகத்தின் ஞானபூமியாக விளங்கும் இந்தியா, ‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையினை உலகிற் களிக்கும்’ என்று தீர்க்க தரிசனமாய் முன்மொழிந்த பாரதியாரின் சத்திய வாக்கை மெய்யாக்கும் வகையில் முன்னின்று இயங்கும் ஆரோவில், நல்லெண்ணம் உடைய அனைவரையும் வரவேற்கிறது. சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், பொம்மையா பாளையம் & முதலியார் சாவடியிலிருந்து சுமார் 6.கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பொ. பூலோகசிங்கம் பொன். பூலோகசிங்கம் (பிறப்பு: ஏப்ரல் 1, 1936) ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர். இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியாவில் செட்டிக்குளம் என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று 1961 ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், சு. வித்தியானந்தன் ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் வசித்து வருகிறார். ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை (1886) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் முன்னின்று உழைத்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவராவார். நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும். மார்ச் 2006 உபபீடம் இந்தியாவின், சிற்பநூல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மரபுவழிக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு உபபீடம் ஆகும். ஆரம்பகாலக் கட்டிடங்களில் "அதிட்டானம்" என்று அழைக்கப்படும் தாங்குதளமே கட்டிடத்தின் அடித்தளமாக இருந்தது. பிற்காலத்தில் இத் தாங்குதளத்தின் கீழ் உபபீடம் என்னும் உறுப்பு அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், கட்டிடத்தை உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சிற்பநூல்கள் கூறுகின்றன. கட்டிடங்கள் உயரத்திலும் பரப்பளவிலும் பெரியவையாக வளர்ந்தபோது, அளவுவிகிதப்படி கட்டிடங்களின் அடித்தளமும் உயரமாக அமையவேண்டியது, அழகியல் நோக்கில் அவசியம் ஆகியது. உபபீட அமைப்பு இத் தேவையை நிறைவு செய்தது எனலாம். சிற்பநூல்கள் பலவகையான உபபீடங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மயமதம், உபபீடங்களை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறுகிறது. அவை, என்பனவாகும். காசியப சிற்பசாஸ்திரம் என்னும் சிற்பநூல், நான்கு வகையான உபபீடங்களின் விபரங்களைத் தருகிறது. என்பனவே இவையாகும். மேற்படி உபபீடங்கள் பல்வேறு துணை உறுப்புக்களின் அடுக்கமைவில் உருவானவை. இடம்பெற்றுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை, அவை அமைந்துள்ள விதம் என்பவற்றைப் பொறுத்து, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகையும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. உபபீடங்களின் துணை உறுப்புகள் பலவாகும். சில உறுப்புகள் சிற்பநூல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களால் குறிப்பிடப்படுவதைக் காணலாம். பொதுவான துணை உறுப்புகளின் பெயர்களும், அவற்றுக்கான மாற்றுப் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளன. மின்காந்த நிழற்பட்டை இருக்ககூடிய அனைத்து மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பே மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum) ஆகும். மின்காந்த கதிர்வீச்சுக்களை அதன் அலைநீளம் அல்லது அலையெண் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும். நா. சோமகாந்தன் நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு, சனவரி 14, 1934 - ஏப்ரல் 28, 2006) ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, பத்திரிகைளுக்கான இலக்கியத்திறனாய்வு (பத்தி எழுத்துக்கள்) என எழுதி வந்தவர். யாழ்ப்பாண மாவட்டம், கரணவாய் தெற்கில் கலட்டி என்ற சிற்றூரில் சாதாரண ஒரு அந்தணர் குடும்பத்தில் நாகேந்திர ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் சோமகாந்தன். தனது ஆரம்பப் படிப்பினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார். அவருக்கு சைவக்குருக்களாகவிருந்து எழுத்தறிவித்தவர்கள் திரு. வைத்தியநாதக் குருக்கள், செவ்வந்திநாதக்குருக்கள் ஆகியோர். தனது இடைநிலைக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. அங்கு ஆசிரியத் தம்பதிகளாகக் கடமையாற்றிய ஐ.சிற்றம்பலம் ஆசிரியர் (ஐ.சி. மாஸ்ரர்) அவர்களின் ஊக்குவிப்பில் இலக்கியத்தில் நாட்டமும், எழுதுவதற்கான ஆக்கத்திறனையும் பெற்றுக்கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அரச ஊழியராகப் பணியாற்றி, பின்னர் இந்து, கலாசார அமைச்சில் நிருவாக அதிகாரியாகப் பணியாற்றினார். 1962இல் சென்னையில் இடம்பெற்ற அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1964இல் அ. ந. கந்தசாமி அவர்களின் ஆய்வின் முயற்சியினால் மகாகவி பாரதியார் யாழ்ப்பாணத்துச் சாமி எனக்குறிப்பிட்டுத் தனது ஞானகுருவாகக் கொண்டிருந்த மோனம் அருளம்பலம் அவர்கள் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறுவ அரும்பாடுபட்டார். தமிழில் முதலாவது கைநூலை வரதரோடு இணைந்து 1970ல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவில் செயலாளராக பணியாற்றி அந்த நூல் சிறப்பாக வெளிவரக் காரணமாகச் செயற்பட்டார். 1980இல் நீதியரசர் தம்பையா அவர்களின் தலைமையில் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவின் தேசிய செயலாளராகப் பணியாற்றினார். பேராசிரியர் க. கைலாசபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பாரிய நூலை வெளியீடு செய்தார். எழுத்தாளர் சோமகாந்தன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் எழுதினார். இவருடைய மனைவி திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் பெண்ணிய வாதியாக பெண்கள் விடுதலைக்காகப் போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ம் ஆண்டு தொடக்கம் அவர் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் (Communist Party of Nepal - Maoist Centre) என அழைக்கப்படும் இக்கட்சியானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தி வருகிறது. 1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன. இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சியான மாவோவாத மக்கள் போராட்டக் கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பாகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சியானது, புரட்சிகரமான பன்னாட்டு இயக்கம் (Revolutionary Internationalist Movement), தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றில் (Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia) ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது. ராஜ ஸ்ரீகாந்தன் ராஜ ஸ்ரீகாந்தன் (ஜூன் 30, 1948 - ஏப்ரல் 20, 2004) வதிரி, யாழ்ப்பாணம்) எழுபதுகளின் ஆரம்பத்தில் விவேகி இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில ஆங்கிலம், உருசிய, உக்ரேனிய, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1987 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பாடநெறியைக் கற்றுத் தேர்ந்த இவர் சோவியத் நாடு, "சோஷலிசம் - தத்துவமும் நடைமுறையும்", "புதிய உலகம்" ஆகிய சஞ்சிகைகளிலும் சக்தி பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக 1997-2002 காலப்பகுதியில் பணியாற்றினார். ராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். சோவியத் இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதை அழகு சுப்பிரமணியத்தின் இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். "நீதிபதியின் மகன்", மற்றும் "காலச் சாளரம்" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன. அழகு சுப்பிரமணியம் அழகு சுப்பிரமணியம் (மார்ச் 15 1915 - பெப்ரவரி 15, 1973, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்) ஆங்கில இலக்கியத்துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நீண்ட காலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் "Indian Writing" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் "இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்" இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இவருடைய தந்தையார் புகழ்பெற்ற நீதிபதி. புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரும், விமரிசகருமான பால்ரர் அலன், "எமது கருத்துப்படி அழகு சுப்பிரமணியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவார். இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்களின் மூலமே மேற்குலகில் வாழும் நாங்கள் கீழைத்தேசங்களைத் தரிசிக்கின்றோம். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஆங்கிலப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையிலும் இவர் சில கதைகளை எழுதியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய இலக்கியப் படைப்புகள் ஜேர்மன், பிரெஞ்சு, ரஷ்ய மொழிகளிலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "The Big Girl" என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "Closing Times & Other Stories" இவருடைய மறைவுக்குப் பின்னர் இவரது மனைவி திருமதி செல்லகண்டு அழகு சுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டது. அழகு சுப்பிரமணியத்தின் ஒரே நாவலான "Mister Moon" இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. ஆனால் இதன் தமிழாக்கம் மல்லிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. "Lovely Day" என்ற சிறுகதை 'மிகச் சிறந்த இந்தியச் சிறுகதைகள்' என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. "The Mathematician" என்ற சிறுகதை "உலக இலக்கியத்தின் உன்னதச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவருடைய 12 சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு "நீதிபதியின் மகன்" என்ற தலைப்பில் நூலாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. படகு படகு, ஒரு நீரோடும் வாகனமாகும். இது கப்பலை விட அளவில் சிறியது. இதனை மனித சக்தியால் இயக்கப்படும் வகை, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படும் வகை என இரு வகையாகப் பிரிக்கலாம். மனித சக்தியால் இயக்குவதற்கு “துடுப்பு” அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும். ஜிம் கார்பெட் புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். 1907க்கும் 1935க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாக கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது. கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்ட நிலையில் இரைதேட வழியின்றி நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றிருந்த பானார் சிறுத்தைப்புலியையும் கொன்றார். கடைசியாக, இவர் தனது 63வது வயதில் ஆண்புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண்புலியைக் கொன்றார். பகல்நேரக் கொலைகளுக்குப் புலிகளும், இரவு நேரக் கொலைகளுக்குச் சிறுத்தைப்புலிகளும் காரணமாக இருந்ததை உற்றறிந்து எழுதினார். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். பெரும்பாலான தாக்குதல்கள் அவப்பேறாகவோ, குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க முயலும் தாயின் செயலாகவோ நிகழ்ந்தனவேயன்றி ஆள்தின்ன அலைவதால் நிகழ்ந்தவையல்ல என்று உறுதியாக நம்பினார். நல்ல உயரம் கொண்டிருந்த கார்பெட், புதருக்குள் மறைந்திருக்கும் புலியைக்கூட இருபதடிக்குள்ளாக நின்று எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவர். நடந்தேயும் தனியாளாகவும் செல்வதை விரும்பியவர். ஒன்றிய மாகாணப் பகுதிகளில் (இப்போது உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம்) கானுயிர்களைப் பேணுவதற்கான அமைப்பையும், அகில இந்திய கானுயிர்ப் பாதுகாப்புக் கலந்தாய்வுக் கூட்டத்தையும், இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1947க்குப் பிறகு தனது சகோதரி மேகியுடன் கென்யாவிலுள்ள நியேரியில், ஆலமர வகையைச் சார்ந்த ஒரு மரத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசிக்கத் தொடங்கிய கார்பெட் 19 ஏப்ரல் 1955ல் மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். இவரது இறுதி வார்த்தைகள்: "எப்போதும் துணிச்சலோடிரு.இவ்வுலகை பிறர் வாழ்வதற்கு இன்னும் மகிழ்ச்சிகூடிய இடமானதாக முயன்று மாற்று". இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆறாவது நூலான "மர உச்சிகள்" ("Tree Tops")-ஐ எழுதி முடித்திருந்தார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.1968ல் புலியின் இதர ஐந்து துணைச்சிற்றினங்களில் ஒன்றுக்கு "பாந்தெரா டைக்ரிஸ் கார்பெட்டி" ("panthera tigris carbetti") என்று இவரது பெயர் சூட்டப்பட்டது. இப்புலி பொதுவாக கார்பெட் புலி என்றே அழைக்கப்படுகிறது. இவர் "குமாவுனின் ஆட்தின்னிகள்" ("Man-eaters of Kumaon")(1946), "ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை" ("The man-eating leopard of Rudraprayag")(1948), "கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்"("Temple Tiger and maore man-eaters of Kumaon")(1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார். இந்திய ஊரக வாழ்க்கையை "எனது இந்தியா" ("My India") என்ற நூலில் பதிவு செய்தார். "புதர்க்காட்டின் போதனைகள்" ("Jungle lore") அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது."குமாவுனின் ஆட்தின்னிகள்" 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.