இரண்டாம் இராசாதிராச சோழன் இரண்டாம் இராசாதிராச சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவான். இரண்டாம் இராசாதிராசன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில் முடிவு செய்தான். நேரடியாக ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின் மகள் வழிப் பேரனான இரண்டாம் இராசாதிராசன் தேர்ந்தெடுக்கப்பட்டான். இரண்டாம் இராசராசனுடன் சேர்ந்து, இராசாதிராசன் இவ்வாறு சில வருடங்கள் அரசப் பிரதிநிதியாக ஆண்டுவந்தான். இராசாதிராசனுடைய மெய்க்கீர்த்திகள், மூவகையின. அவை யாவும் சொல்லலங்காரம் நிறைந்ததாக உள்ளனவே தவிர வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவும் கொண்டவனவாக இல்லை. இரண்டாம் ஆட்சிக் காலத்திலேயே காணப்படுவதும் 'கடல் சூழ்ந்த பார் மகளும்(மாதரும்)' என்று தொடங்குவதுமான வாசகம், இரண்டாம் இராசராசன் கல்வெட்டுகளில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்க வேண்டும். வேறு வாசகங்களும் உண்டு. ஐந்தாம் ஆண்டில் முதல் முறையாக 'பூமருவியக் திசைமுகத்தோன்' என்ற வாசகம் காணப்படுகிறது. இதைப் பிற்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் கடைபிடித்தான். தஞ்சை மாவட்டத்தின் ஆறாம், பத்தாம் ஆட்சி ஆண்டுகளில் ஏற்பட்ட கல்வெட்டுகளில் 'கடல் சூழ்ந்த பாரேழும்' என்ற வாசகம் உள்ளது. அரசனின் மெய்க்கீர்த்திகள் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவனுடைய ஆட்சியில் ஏற்பட்ட சில கல்வெட்டுகள், பாண்டிய அரசுரிமைப் போர்களின் நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றன. இந்தப் போரைப் பற்றி மகாவம்சம் தெரிவிக்கும் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கல்வெட்டுச் செய்திகள் மிகவும் நம்பத்தக்கனவாக உள்ளன. இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப் பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றுவித்தான். பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது. அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராசாதிராசனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடம் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். தோண்டிப் பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்களுக்கும் முதல் போர் ஆரம்பித்தது. முதல் போரில் சிங்களப் படைகள் வெற்றியடைந்தன. இதனால் சோழ மக்கள் அச்சம் கொண்டனர். அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வெற்றிக் கொண்டான். சிங்கள மாதண்ட நாயகனையும், தண்ட நாயகன் ஜகத்விஜயனையும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத் தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாட்டி வைத்தான். இதனை அடுத்து குலசேகரப் பாண்டியன் அரியணை ஏறினான். சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றறிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான். அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டுமில்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல் தூண் நாட்டினான். இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக் கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுபட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப் பாண்டியனும் ஈழ தேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராச சோழன். சுருங்கிக் கொண்டிருந்த சோழர்களின் வரைப் படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராசன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று சோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராசாதிராசன். ஆனால் கால ஓட்டத்தில் இரண்டாம் ராசராசனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர் தினவெடுத்தன. இராசாதிராசனின் போர் கலந்த சுற்று சுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரச பீடம் கிடைக்காதா என்று ஏங்கினான். இதனை அறிந்த ராசாதிராசன் ராசராசனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரச பதவி அளித்துவிட்டு தெலுங்கு தேசம் சென்றான். மூன்றாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு கி.பி 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே கி.பி 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம் பிள்ளைகளை பல்லவராயர் பாதுகாத்துவந்தார். அந்த பச்சிளம் பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமார குலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப் போல இவனும் சோழப் பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். குமார குலோத்துங்கனின் வம்சாவழியை 'குலோத்துங்கன் கோவை' பின்வருமாறு தெரிவிக்கிறது. சங்கம ராஜா -- நல்லமன் & குமார குலோத்துங்கன் & சங்கரச் சோழன் 'சங்கரச் சோழன் உலா', சங்கரச் சோழனுடைய அண்ணனைக் குமாரமகீதரன் என்ற சற்று மாறுபட்ட பெயரில் சொல்லுகிறது. ஆனால் கோவையோ, உலாவோ மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்லாததால், இந்த அரசன் தா இலக்கியங்களில் சொல்லப்பட்ட குமார குலோத்துங்கனா? என்ற ஐயம் ஏற்படுகிறது. சங்கமராஜா சோழவம்சத்திற்கு என்ன உறவு? என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள எந்தவிதமான ஆதாரங்களும் இப்போது கிடைக்கவில்லை. ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன். எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான். போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான். தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான். சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான். ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான். காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான். விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது. குலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன. மூன்றாம் இராஜராஜ சோழன் கி.பி 1216ல் சூன் 27க்கும் சூலை 10க்கும் இடையே மூன்றாம் இராசராசன் பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். சுந்தர பாண்டியன், சோழ நாட்டைப் படையெடுத்தது, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம். மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் போசாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று. சுந்தர பாண்டியனின் படை எழுச்சி மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராச ராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன். மூன்றாம் ராச ராசச் சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராச ராசச் சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச் சமயத்தில் படை எடுத்து வந்து சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராச ராசச் சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராசச் சோழன். கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராச ராசச் சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது. கோப்பெருஞ்சிங்கன் போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப் பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான். ராச ராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக் கரை வரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர். வீர நரசிம்மன் பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களைப் பழையாறை நகரம் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள் மீது போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் திரும்பக் கூடும் என்று சிந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான். மூன்றாம் ராசேந்திர சோழன் தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராச ராசச் சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக் காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான் மூன்றாம் இராஜேந்திர சோழன் மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக கி.பி 1246ல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனது பட்டத்து உரிமை ஏற்கபட்ட பின் 14 ஆண்டுகளுக்கு அவனது தந்தையான மூன்றாம் இராஜராஜ சோழன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது. பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது; மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவன் திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோவிலுக்கு பணிவிடை செய்ததான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவெண்ணை நல்லூருக்கு பெருந்தொண்டு செய்ததாக கூறப்படுகிறது.இவன் இறக்கும் வரையில் ஓர் சிவபக்தனாகவே காணப்பட்டான். இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி.பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி.பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம். சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம். இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம். எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும். மூன்றாம் ராஜேந்திர சோழன் "இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன். முதலாம் பாண்டிய போர் தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான். ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின. போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும் வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர். தெலுங்கு சோழர்களுடன் நட்பு மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம். தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர். போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும் பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு ஒவ்வொரு மரபு வழிப் படைக்கும் பொறியியல் பிரிவு இருக்கும். ஆங்கிலத்தில் இதை Engineering Corps என்பர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் களமுனை பொறியியல் பட்டாளத்தை () குறிப்பிடலாம். பொதுவாக கரந்தடி அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட பொறியியல் பிரிவைக் கொண்டிருப்பதில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய ஒரு பிரிவைக் கொண்டிருந்தார்கள். வாழ்வோ சாவோ என்ற போராட்டத்தில் போர்த் தொழில்நுட்பமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணி. பல மடங்கு பலம் பொருந்திய எதிரியுடன் செய்ய தொழில்நுட்ப வளைவில் முந்தி உந்துவது அவசியமாகிற்று. ஆகையால் தொடக்க காலம் (~1980 கள்) முதலே புலிகள் பொறியியல் துறையில் ஈடுபட்டனர். அது தவிர குறிப்பிடத்தக்க குடிசார் பொறியியல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு, அதன் வரலாறு, கண்டுபிடிப்புகள், முக்கிய நபர்கள் ஆகியவற்றை விவரிக்கும். வான்புலிகள் தாக்குதலுக்குப் பின் ஆய்வாளர் குமார் டேவிட் வரைந்த "Human-capital in knowledge-based societies: Technology and the LTTE" என்ற கட்டுரையில் தொழில்நுட்ப திறனுக்கு வெறும் கருவிகள் மட்டுமல்ல மனித வளமும் முக்கியம் என்று சுட்டி, அது புலிகளிடம் உண்டு என்றும் சுட்டினார். குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு நுட்ப உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார். ரட்கர்சு பல்கலைக்கழகம் ரட்கர்சு, நியூ செர்சி மாநிலப் பல்கலைக்கழகம் ("Rutgers, State University of New Jersey"), ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பல்கலைக்கழகமாகும். லூயிவில் (கென்டக்கி) லூயிவில் ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். லூயிவில் பல்கலைக்கழகம் லூயிவில் பல்கலைக்கழகம் (University of Louisville) ஐக்கிய அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தின் லூயிவில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும். ஹேதோ துர்க்கொக்லு ஹிதயெத் "ஹேதோ" துர்க்கொக்லு (துருக்கி மொழி: "Hidayet "Hedo" Türkoğlu", பிறப்பு மார்ச் 19, 1979) ஒரு துருக்கி கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-யில் ஒர்லான்டோ மேஜிக் அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் முதலாம் துருக்கியிலிருந்து வெளிவந்த வீரர் ஆவார். அங்காரா அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3,901,201 மக்கள் வாழ்கிறார்கள். முஸ்டபா கமால் என்ற மாவீரர் துருக்கிக் குடியரசை தோற்றுவித்தபோது அங்காராவை தலைநகரமாக்கினார். இது `ஹடிப்’, `இனீசு’, `குபெக்’ நதிகள் சேருமிடத்திலிருக்கின்றது. இங்குதான் கி.பி.1920-ல் முதன் முதலாக துருக்கிய சட்டமன்றம் கூட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்கள் ஆசியா மைனரின் ஒரு பகுதியான அண்டோலியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்நகரம் முன்பு சதுப்பு நிலங்களால் சூழப்பட்ட குன்றுப்பிரதேசமாயிருந்தது. அங்கோரா வெள்ளாட்டின் உரோமத்திலிருந்து செய்யப்பட்ட கம்பெளிகள் பெயர்பெற்றவை. பழைய நகரத்தில் ரோமானியர், கிரேக்கர், ஹிட்டைட் முதலியோர் கட்டிய கட்டடங்கள் அப்படியே உள்ளன. சதுப்பு நிலத்திலுள்ள நீரை அகற்றிவிட்டு அங்கு பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பிப் புதிய அங்கோரா தலைநகரம் நிருமாணிக்கப்பட்டது. பல்கலைக்கழகக் கட்டடங்கள், சட்டமன்ற கட்டடங்கள், பெரிய தெருக்கள், விளையாட்டுத் திடல்கள், விமான நிலையம், அரும்பொருட்காட்சியங்கள் முதலியவற்றைக் கொண்டது இந்நகரம். நவீன துருக்கிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளக்குகிறது. விளாடிமிர் கொமரோவ் விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் ("Vladimir Mikhaylovich Komarov", Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார். பேரினம் (உயிரியல்) பேரினம் (இலங்கை வழக்கு - சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக நாய்ப் பேரினத்தில், உள்ள சில இனங்கள் நாய்கள், ஓநாய்கள், நரிகள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் பூனைகள், புலிகள், அரிமா இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) இனம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் ( (டி. என். ஏ புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பேரினம் என்பதன் இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும். தெலுங்குச் சோடர்கள் இந்த தெலுங்குச் சோட அரசர்கள் எல்லோரும் தங்களைச் சோடர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர் சூரிய மரபினர் என்றும் காசியப கோத்திரத்தினர் என்றும் சொல்லிக்கொண்டனர். முதலாம் குலோத்துங்க சோழன், மற்றும் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர்கள் ஆகியோருடைய பிரதிநிதியினராக இந்த வமிசத்தைச் சேர்ந்தவர்கள் தெலுங்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்ததை ஒவ்வோர் ஆட்சியின் கல்வெட்டுக்களும் உறுதிபடுத்துகின்றன. இரண்டாம் இராஜேந்திர சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலப்பகுதியில் தெலுங்குச் சோடர்களின் வரலாற்றுக் காலவரை, அரச மரபுவழி ஆகியவற்றில் பல சிக்கல்கள் உண்டாகின்றன. தெலுங்குச் சோடர்களின் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்துக் கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன. ஆனாலும் இந்த வகை அரசர்களின் அரச மரபுகளின் வரலாற்றை தொடர்ச்சியாகவும் முரண்பாடில்லாமலும் பொருத்தமாயும் எழுதுவதற்கான முயற்சிகள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்தக் குடும்பத்தின் அரச பரம்பரை இரண்டு ஆட்களின் நிழல்களுடன் தொடங்குகிறது. இவர்களில் முதலில் குறிப்பிட வேண்டியவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும் பொத்தப்பி என்ற ஊரை உண்டாக்கியதாகவும் இக்காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. பொத்தப்பி என்ற ஊர் அதே பெயரில் கடப்பை மாவட்டத்தில் புல்லம்பேட்டை வட்டத்தில் இப்போதும் இருந்துவரும் ஊரே என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மற்றோர் அரசன் தெலுங்கு வித்யன் என்பவன்(தமிழ்ச் சோழ கல்வெட்டுகளில் விச்சயன் என்று சொல்லப்பட்டிருக்கிறான்). இவன் உஜ்ஜபுரி என்னுமிடத்தில்(பெல்லாரி மாவட்டம் குட்லிகி வட்டம், உஜ்ஜினி) உச்சியில் கருடன் வைத்த வெற்றுத்தூணை நிறுத்தியுள்ளான். இத்தூணில் உள்ள வரலாற்றுப் பகுதி விக்கிரம சோழனின் சிற்றரசனான பேட்டா என்பவனுடன் தொடங்குகிறது. பேட்டாவின் மகன் ஏற சித்தி என்பவனுக்கு நல்ல சித்தி என்ற மன்மசித்தன், பேட்டா, தம்முசித்த என்ற மூன்று ஆண்மக்கள் இருந்தார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது. களப்பிரர் ஆட்சியில் சோழர்கள் தெலுங்கு தேசம் சென்று தனியாட்சி நிறுவினர். அவர்களே தெலுங்குச் சோழர்கள் என்ற கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மொர்மனியம் மொர்மனியம் ("Mormonism") என்பது மிகவும் குறிக்கத்தக்க, "பின்னாள் புனிதர் இயக்க" மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு (Restorationism) இயக்கமாகும். இதனை 1820களில் இரண்டாம் யோசப்பு இசுமித்து நிறுவினார். 1830களிலும் 1840களிலும் இவ்வியக்கம் தன்னை சீர்திருத்தத் திருச்சபையிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. சிமித்தின் இறப்புக்குப் பின்பு பெருவாரியான மொர்மனியர்கள் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறித்து சபை ("The Church of Jesus Christ of Latter-day Saints") என்னும் பெயரில் பிரிகாம் யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். "மோர்மொன் நூல்" இவர்களின் மற்றுமொரு மறைநூலாகும். இதனை ஜோசஃப் ஸ்மித், இளை. தனக்கு ஒரு தேவதை மூலம் கிடைத்த தங்கத் தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார் என்பர். இவரை இச்சமயத்தினர் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு இறைவாக்கினர் எனவும் இரத்த சாட்சியாகவும் கருதுகின்றனர். மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளின் அடிப்படை நம்பிக்கை முதலாக ஒத்த கருத்து கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனைவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது, கருப்பினத்தவரைப் பற்றிய கொள்கைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். விலனோவா பல்கலைக்கழகம் விலனோவா பல்கலைக்கழகம் ("Villanova University"), ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தின் ஒரு புறநகரத்தில் அமைந்த கத்தோலிக்க பல்கலைக்கழகமாகும். ஓரிகன் பல்கலைக்கழகம் ஓரிகன் பல்கலைக்கழகம் ("University of Oregon"), ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் 1876 ல் நிறுவப்பட்டது. கார்னேஜி அறக்கட்டளை ஓரிகன் பல்கலைக்கழகத்தை 1 அடுக்கு 1 RU / VH (மிக உயர்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள்) கொண்ட பல்கலைக்கழகம் என வகைப்படுத்துகிறது. நைரோபி நைரோபி ("Nairobi") கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைரோபி தேசியப் பூங்காவைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றுள்ளது, உலகில் ஒரு பெரிய நகரத்தில் காணப்படுகிம் தேசியப்பூங்கா இது ஒன்றே ஆகும். இந்நகரமும் அதன் சுற்றுப்புறமும் நைரோபி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன, இதன் தற்போதைய ஆளுநர் எவன்ஸ் கிடர்ரோ மற்றும் துணை ஆளுநர் ஜொனாதன் முக்கே ஆவார். "நைரோபி" என்ற பெயர் மசாய் சொற்றொடரான நைரோபி என்பதிலிருந்து வந்தது, இது "குளிர் நீர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சொல் நைரோபி ஆற்றைக் குறிக்கும் மாசாய் பெயராகும், இதன் பெயரே நகரத்தைக் குறிக்கும் பெயராகவும் மாறியது. இருப்பினும், இது சூரியனின் பசுமை நகரம் என பிரபலமாக அறியப்படுகிறது, மேலும் பல விரிவாக்கப்பட்ட குடில்கள் புறநகர்ப்பகுதிகளில் சூழப்பட்டுள்ளது. நைரோபி 1899 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனித்துவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது, இது உகாண்டா ரயில்வேயின் ஒரு தோடர்வண்டி நிலையமாகவும் இருந்தது. 1907 ம் ஆண்டு கெனியாவின் தலைநகராக மச்சாகோவுக்கு பதிலாக இந்த நகரம் வேகமாக வளர்ந்தது. 1963 இல் சுதந்திரத்திற்குப் பின்னர், நைரோபி கென்யா குடியரசின் தலைநகரமாக ஆனது. கென்யாவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, இந்த நகரம் காபி, தேயிலை, கதலை ஆகியவற்றின் தொழில் மையமாக ஆனது. நாட்டின் தெற்கு பகுதியில் அத்தி ஆற்றை ஒட்டி நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1,795 மீட்டர் (5,889 அடி) உயரத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டில் 3.36 மில்லியன் மக்கட்தொகை கொண்ட, நைரோபி நகரம், தன்சானியாவின், தாருஸ்ஸலாத்துக்கு அடுத்து ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2009 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நைரோபி நிர்வாகப் பகுதியில், க்குள் வாழ்ந்தனர். நைரோபி ஆபிரிக்காவின் 14 வது மிகப்பெரிய நகரமாகும், (அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட). நைரோபியில், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் , பல வணிக நிறவனங்களின் அலுவலகங்களின் மையமாக உள்ளது. நைரோபி பங்குசந்தை (என்எஸ்இ) ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் கண்டத்தின் இரண்டாவது மிகப் பழமையான பங்குசந்தையாகும் இது. இது வர்த்தக எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் நான்காவது மிகப்பெரிய பங்குசந்தையாகும் ஆகும், இங்கு ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. நைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் கென்ய குடியரசின் தலைநகரானது. கென்யாவின் காலனித்துவ காலத்தில், கோப்பி மற்றும் தேயிலை வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது நைரோபி மாநகரானது, முழுக்க மாகாண ஆட்சியின் கீழ் உள்ளது. நைரோபி மாகாணமானது, மற்ற கென்ய பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. இங்கு ஒரே ஒரு நகர சபை தான் உள்ளது, "நைரோபி நகர சபை". 2007க்கு முன்பு வரை, நைரோபி மாகாணத்தில் மாவட்டங்களே பிரிக்கப்படவில்லை. அதன் பிறகே, மூன்று மாவட்டங்களில் பிரிக்கப்பட்டது. 2010ல், புதிய சட்டமன்ற தொகுதியோடு இணைந்து, நைரோபி ஒரு மாகாணமானது. தற்போது, நைரோபி மாவட்டம் பதினேழு தொகுதிகளைக் கொண்டுள்ளது. கென்யாவின் சட்டமன்ற தொகுதிகளும், நகர்மன்ற தொகுதிகளும் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களைக் கொண்டிருக்கும். கம்பலா மற்றும் மாம்போசாவிற்கும் இடையில் நைரோபி அமைந்துள்ளது. கென்ய பிளவு பள்ளத்தாக்கு கிழக்கு விளிம்பின் அருகில் உள்ளதால், நைரோபியில் சிறு பூகம்பங்கள் மற்றும் நடுக்கம் எப்போதாவது ஏற்படும். நிகாங் மலை நகரின் மேற்கிலும், கென்ய குன்றானது வடக்கிலும், கிளிமஞ்சாரோ குன்று தென் கிழக்கிலும் அரணாக அமைந்துள்ளது. கென்ய மற்றும் கிளிமஞ்சாரோ குன்றுகளும் நைரோபியிலிருந்து நன்கு தெரியும். நைரோபி நதி மற்றும் அதன் கிளை நதிகளும், நைரோபி மாவட்டத்தின் வழியாக பயணிக்கின்றது. அமைத்க்கான உயரிய நோபல் பரிசு வாங்கிய திரு.வாங்கரி மாதை என்பவர், நகரின் உட்கட்டமைப்பு வசதிக்காவும், குடியிருப்பு அமைப்பதற்காகவும் நைரோபியின் வடக்கிலுள்ள கருரா காட்டை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பன் வகைப்பாட்டின்படி, நைரோபி ஒரு மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலருந்து ல் இருப்பதால் ஆனி மாதத்தின் மாலை வேளைகள் சற்று குளிராக இருக்கும். சில நேரங்களில், வெப்பநிலை வரை இருக்கும். மார்கழி முதல் பங்ககுனி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இக்காலங்களில், சூரியனின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதிக பட்சமாக வெப்பநிலையின் அளவு, வரை செல்லும். இங்கு இரண்டு மழைக்காலங்கள் உண்டு, ஆனால் மிதமான மழையே இருக்கும். ஆவணி மாதம் வரை குளிராகவும் பின்னர், குற்றாலச் சாரலோடு கருமேகங்கள் சூழ்ந்து, முதல் மழைக்காலம் தொடங்குகின்றது. நைரோபாவானது, பூமத்திய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், பருவங்களின் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன. இங்கு ஏற்படும் பருவமாற்றங்கள், ஈரமான பருவம் மற்றும் உலர்வான பருவம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நேரம் அதே காரணத்திற்காக ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது. உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள் ("biofuel") என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து (குறிப்பாகப் புதல் அல்லது தாவரம்) உருவாக்கப்படும் எரிபொருளாகும். அது திண்மமாகவோ, திரவமாகவோ, வளிமமாகவோ இருக்கலாம். புதைபடிவ எரிபொருளும் ("fossil fuels") இதுபோன்றே உயிரி மற்றும் தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்டாலும், அந்த உயிரிகள் பல்லாயிரம் காலத்துக்கும் முன்னரே இறந்து போனவை. பொதுவாக, உயிரி எரிபொருள் என்பது எந்தவொரு கரிம (உயிரி) மூலத்தினின்றும் உருவாக்க இயலும். ஆனால், அவற்றில் பரவலாய்ப் பயன்படுவது சூரிய ஒளியைப் பெற்று ஒளிச்சேர்க்கை செய்யும் தாவர இன வகைகளே. உயிரி எரிபொருள் உருவாக்கப் பல வகையான தாவரங்கள் பயன்படுகின்றன. உயிரி எரிபொருட்கள் உலகெங்கும் பயன்படுத்தப் படுகின்றன. உயிரி எரிபொருட் தொழிற்சாலைகள் ஐரோப்பா, ஆசியா, மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவலாகி வருகின்றன. பெரும்பாலும் வாகன எரிபொருளாக இவை பயன்படுகின்றன. உயிரி எரிபொருட்களுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகின்றன. இவற்றிற்கான மூலப்பொருட்களைப் பயிர் செய்ய வேண்டிக் காடுகள் அழிவதும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உண்டாவதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள். விளைச்சலை அதிகரிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலியனவற்றால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதும் உண்டு. உயிரி எரிபொருள் உற்பத்தியை நுட்பியல் வழியாகப் பார்க்கும் போது குறிப்பாக இரண்டு முறைகளைக் கருதலாம். இவை தவிர, வெறும் மரம்/கட்டைகளை வைத்து மரவளி, மெத்தனால், எத்தனால் போன்ற எரிபொருட்களையும் உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள். மல்லிகா செராவத் மல்லிகா ஷெராவத் (இந்தி: मल्लिका शेरावत, பிறப்பு "ரீமா லம்பா", அக்டோபர் 24, 1981) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும். இணைய திரைப்பட தரவுத் தளத்தில் சுமேரியக் கட்டிடக்கலை சுமேரியக் கட்டிடக்கலை என்பது மெசொப்பொத்தேமியா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். மெசொப்பொத்தேமியாவில் பாரிய கட்டிடங்களை அமைக்கும் வழக்கம், ஏறத்தாழ கிமு 3100 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், சுமேரியர்களுடைய நகரங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே எழுத்து முறையும் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிமு 3 ஆவது ஆயிரவாண்டின் தொடக்கம் வரையான 500 ஆண்டுக்காலப் பகுதியில் சுமேரியர்களால் அமைக்கப்பட்ட சமயச் சார்புடைய கட்டிடங்கள் கட்டிடக்கலை வடிவமைப்புக்கான முன் முயற்சிகளைத் தெளிவாகக் கட்டுகின்றன. இக் கோயில்கள் இரண்டு வகைகளாகக் காணப்பட்டன. ஒரு வகை மேடைகள் மீது அமைக்கப்பட்ட சிறிய கட்டிடங்களாகும். கோயில்களும், மேடையும் சுடாத செங்கற்களினால் அமைக்கப்பட்டன. இரண்டாவது வகைக் கோயில்கள் மேடையின்றி நில மட்டத்தில் அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் சிறியவையாக இருந்த மேடைக் கோயில்கள் காலம் செல்லச் செல்லப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கிமு 2100 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, ஊர் என்னும் நகரத்தில் இருந்த கோயில் மேடை 60 மீ நீளமும், 45 மீ அகலமும், 23 மீ உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இம் மேடைகள் சிகூரட் '(ziggurats)" என அழைக்கப்பட்டன. இப் பெயர் "உயரமானது" என்னும் பொருள் கொண்ட அசிரிய மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். உபைதுகள் காலச் சிகூரட்டுகள், மேலே செல்லச் செல்ல அளவில் குறைந்து செல்வனவும், ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டனவுமான பல மேடைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன. சுமேரியர்களுடையது என அடையாளம் காணப்பட்ட மிகப் பழைய நகரம் எரிது ஆகும். இங்கே பல கால கட்டங்களையும் சேர்ந்த பல கோயில்கள் இருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இங்கே அகழ்ந்து காணப்பட்ட மிகப் பழைய கோயில் சுமேரியக் கட்டிடக்கலைக்கே உரித்தான இயல்புகளைப் பெறத் தொடங்கிவிட்டதைக் காண முடிகின்றது. இங்கே காணப்படும் பிந்திய கோயில்கள் ஒப்பீட்டளவில் பெரியவை. கருவறை தவிர மேலும் இரண்டு அறைகளை இரு பக்கமும் கொண்டவையாக இவை காணப்படுகின்றன. சுமேரியர்களின் மிகப்பெரிய நகரம் வர்க்கா ஆகும். இது கிமு 2900 - கிமு 2340 காலப் பகுதியில் 9 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டதாக அமைந்திருந்தது. இதன் பரப்பளவின் மூன்றில் ஒரு பகுதியில் கோயில்களும், பொதுக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. இந்த நகரத்தில் அமைந்திருந்த கட்டிடங்களுள் முக்கியமானவை தாய்க் கடவுளுக்கும், வானக் கடவுளுக்கும் உரிய இரண்டு கோயில்கள் ஆகும். செந்நெறிக்காலக் கட்டிடக்கலை செந்நெறிக்காலக் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலக் கிரேக்க மற்றும் ரோமர் காலக் கட்டிடக்கலைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். செந்நெறிக்காலம், பாரசீகப் போர்க் காலம் (கிமு 490-479) தொடங்கி கிபி 500 ஆம் ஆண்டில் ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலப்பகுதிவரை எனக் கருதப்படுகிறது. இச் செந்நெறிக்காலக் கட்டிடக்கலை, கட்டிடக்கலை வரலாற்றில் அதிகமான செல்வாக்குச் செலுத்திய ஒன்று எனலாம். இக் காலக் கட்டிடக்கலையின் அடிப்படையான கூறு, கட்டிடக்கலை ஒழுங்குகள் ஆகும். கிரேக்கக் கட்டிடக்கலையில் மூன்று வகையான ஒழுங்குகள் பயன்பாட்டில் இருந்தன. இவை டொறிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு, கொறிந்திய ஒழுங்கு என்பனவாகும். ரோமர் காலத்தில் மேலும் புதிய இரண்டு ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை தஸ்கன் ஒழுங்கு, கூட்டு ஒழுங்கு என்பன. எனினும் இவை கிரேக்க ஒழுங்குகளான டொறிய மற்றும் கொறிந்திய ஒழுங்குகளின் வேறுபாடுகள் ஆகும். கிரேக்கக் கட்டிடக்கலை சிறப்பாக தூண்களையும், வளைகளையும் கொண்ட அமைப்பு முறையிலானது. ரோமர் தமது கட்டிடங்களில் வளைவுகளைப் (arch) பயன்படுத்தி அதன் பயன்பாட்டை முழுமையாக்கினர். அத்துடன் வளைவின் அமைப்பு முறையைப் பயன்படுத்தி வளைகூரை, குவிமாடம் ஆகிய கட்டிடக் கூறுகளையும் அறிமுகப்படுத்தினர். எத்தனால் எத்தனால் "(Ethanol)" என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று ஆகும். ஈசுட்டு என்ற நொதியைப் பயன்படுத்தி சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. பெட்ரோ வேதியியல் செயல்முறையிலும் எத்தனாலை தயாரிக்க இயலும். ஆல்ககால், எத்தில் ஆல்ககால், குடிக்கும் ஆல்ககால் என்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தில் ஆல்ககாலின் வேதியியல் வாய்ப்பாடு C2H6O ஆகும். இவ்வாய்ப்பாட்டை CH3-CH2-OH அல்லது C2H5-OH என்றும் எழுதலாம். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இப்படி எழுதுவதால் மெத்தில் குழுவில் (CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சில் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எத்தனாலை சுருக்கக் குறியீடாக எத்OH என்றும் அழைக்கலாம். எத்தனால் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக்கும் பழமையான மற்றும் மிகவும் பொதுவான பொழுதுபோக்கு பானமாகும். போதுமான ஒரு அளவுக்கு மேல் உட்கொள்ளப்படும் போது போதை அதிகரித்து குடிவெறியும் நரம்பு தளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. பரவலாக, ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது எரிபொருளாகவும் இதர வேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் எத்தனால் பயன்படுகிறது. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் ஐயுபிஏசி முறையில் இதற்கு எத்தனால் என்று பெயரிட்டுள்ளது. ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட இரண்டு கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்க்கைல் குழுவுடன் OH என்ற வேதி வினைக்குழு இணைக்கப்பட்டுள்ள ஒரு சேர்மமாக இது கருதப்படுகிறது . ’எத்’ என்ற முன்னொட்டும் ’ஆல்’ என்ற பின்னொட்டும் சேர்க்கப்பட்டு இச்சேர்மம் எத்தனால் எனப்படுகிறது. 1834 ஆம் ஆண்டு C2H5- என்ற குழுவுக்கு யசுடசு இலைபெக் சூட்டிய எத்தில் என்ற பெயரிலிருந்துதான் ’எத்’ என்ற முன்னொட்டும் எத்தில் ஆல்ககாலில் உள்ள எத்தில் என்ற சொல்லும் பெறப்பட்டன, C2H5-O-C2H5 சேர்மத்தின் செருமன் பெயரான Aether என்ற பெயரிலிருந்துதான் இவர் ’எத்தில்’ என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலத்தில் பொதுவாக ஈதர் என்றும் மிகக்குறிப்பிட்டு அழைப்பதென்றால் டையெத்தில் ஈதர் என்றும் இது அழைக்கப்படுகிறது. எத்தில் என்பது (aithḗr, மேற் காற்று), (hyle, பொருள்) என்ற பண்டைய கிரேக்க சொற்களின் சுருக்கம் என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் செனீவாவில் நடைபெற்ற இரசாயனப் பெயரிடல் பற்றிய சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எத்தனால் என்ற பெயர் உருவாக்கப்பட்டது . இரசாயனப் பெயரிடலில் ஆல்ககால் என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக எத்தனால் என்ற பெயர் நிலைத்துவிட்டது. அரபி மொழியில் ஆண்டிமனி தனிமத்தின் தாதுவாக அறியப்படும் சொல்லின் பொருள் இடைக்கால லத்தீனில் நிலைபெற்றுவிட்டதாக ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி தெரிவிக்கிறது. எத்தனாலுக்கு ஆல்ககால் என்ற பெயர் முதன்முதலில் 1753 இல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எத்தனால் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. பொதுவாக பாக்டீரியாவை எதிர்க்கும் நோய் நுண்ணுயிர்தடையாக எத்தனால் கருதப்படுகிறது. நோயுண்டாக்கும் பாக்டிரியாக்களின் புரதத்தில் வீரியத்தைக் குறைக்கிறது. அவற்றின் கொழுப்பையும் கரைத்து விடுகிறது. பாக்டிரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகவும் பல வைரசுகளுக்கு எதிராகவும் எத்தனால் செயல்படுகிறது. எனினும், எத்தனால் பாக்டிரியா சுபோர்கள் எனப்படும் பாக்டீரிய வித்துக்களுக்கு எதிராக திறனற்றதாக உள்ளது மெத்தனால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்றவற்றால் உண்டாகும் நச்சுத்தன்மையை ஒழிக்கும் நச்சுமுறியாக எத்தனால் பயன்படுகிறது. உயர் செறிவு எத்தனால் பெரும்பாலும் பல நீரில் கரையாத மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேர்மங்களை கரைக்க பயன்படுத்தப்படுகிறது. இருமல் மற்றும் குளிர் ஈரத்திற்கான வைத்தியத்திற்கும், வலி நிவாரண மருந்துகள் தயாரிப்பிலும், வாய் கொப்புளிக்கும் திரவங்கள் தயாரித்தலிலும் எத்தனால் 1 முதல் 25% செறிவு நிலையில் பயனாகிறது. ஆசுதுமா போன்ற சுவாசப்பாதை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்ககால் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் . அசிட்டமினோஃபென், இரும்பு கூட்டுப்பொருட்கள், பியூரோசுமைடு, மானிட்டால், ஃபெனோபார்பிட்டால், டிரைமெத்தோபிரிம்/சல்பாமெத்தாக்சசோல், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 700 வகையான மருந்துகளில் எத்தனால் பங்கு கொண்டுள்ளது . மத்திய நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை விளைவிக்கும் உளவியல் மருந்தாக எத்தனால் செயல்படுகிறது . பொதுவாக ஓர் அலகு இரத்த அளவிலுள்ள எத்தனாலின் எடையை அறிவதன்மூலமாக உடலின் இரத்த ஆல்ககால் அளவிடப்படுகிறது. சிறிதளவு எத்தனாலை உட்கொள்வதால் மகிழுணர்வும் நெகிழ்வுணர்வும் ஏற்படலாம். உளரல், குழப்பம், கட்டுப்பாடின்மை முதலியன இதற்கான அறிகுறிகள் ஆகும். அளவுக்கு மீறி எத்தனாலை உட்கொள்வதால் பார்வை இழப்பு, உணர்விழத்தல், நினைவிழத்தல், மந்தபுத்தி, மயக்கமடைதல், மரணமடைதல் போன்ற தீங்குகள் ஏற்படலாம் எத்தனால் ஒரு பெரிய தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் எத்தனால் இயந்திர எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே எத்தனால் உற்பத்தி செய்யும் உலகநாடுகளில் பிரேசில் முதலிடம் பிடிக்கிறது . பிரேசில் நாட்டில் விற்கப்படும் கெசோலின் எனப்படும் பெட்ரோலில் குறைந்தபட்சமாக 25 சதவீதமாவது எத்தனால் கலக்கப்படுகிறது. ஐதரசு எத்தனால் என்பது 95% எத்தனாலும் 5% தண்ணிரும் கலந்த கல்வையாகும். பிரேசில் நாட்டில் இவ்வெரிபொருள் புதியதாக விற்கப்படும் 90% பெட்ரோல் கார்களுக்கு எரிபொருளாக இடப்படுகிறது. பிரேசிலியன் எத்தனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனை தனிப்படுத்தி சேமிக்கிறது என்பதற்காகவும் இது அறியப்படுகிறது . அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் இ10 (10% எத்தனால்) எரிபொருளைப்யும் சில சமயங்களில் இ85 (85% எத்தனால்) எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. இராக்கெட்டு எரிபொருளாகவும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இலகுரக இராக்கெட் இயக்க பந்தய விமானங்களில் தற்போது எத்தனால் பயன்படுத்தப்படுகிறது . கரும்பு கழிவில் இருந்து தயாரிக்கப்படும் தூய எத்தனால் வாகனங்களுக்குப் பயன்படுத்துவதை ஆத்திரேலியா நாட்டுச் சட்டம் 10% வரை மட்டுப்படுத்துகிறது. பழைய கார்கள் மற்றும் மெதுவாக எரியும் எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது அவற்றில் இயந்திர வால்வுகள் பொருத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என அச்சட்டம் வலியுறுத்துகிறது . எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கார்பன் ஓராக்சைடு, நைட்ரசன் ஆக்சைடுகள், மற்றும் ஓசோன் மாசுக்கள் உருவாதல் தீங்குகள் குறைவதாக தொழிர்சாலைகள் ஆலோசனைக் குழு ஒன்று தெரிவிக்கிறது . பல்வேறு இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இணைப்புகள் வெளியிடும் பைங்குடில் விளைவு வாயுக்கள் வெளியீடு குறைவதாக ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூய கேசோலின் பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் உயிரிஎரிபொருள் பயன்பாடு 8% மாசுக்களை குறைப்பதாகவும், எ85 எத்தனால் பயன்பாட்டால் 17% மாசுக்கள் குறைவதாகவும், மரக்கூழ் எத்தனால் பயன்பாட்டால் 64% மாசுக்கள் குறைவதாகவும் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எத்தனால் எரிப்பு என்பது ஓர் உள்ளெரி இயந்திர எரிப்புவகையாகும். முழுமையடையாத பெட்ரோல் எரிப்பினால் வெளியிடப்படும் பார்மால்டிகைடு, அசிட்டால்டிகைடு போன்ற பொருட்கள் எத்தனால் எரிப்பில் கணிசமாக பெரிய அளவில் உற்பத்தியாகின்றன . இதனால் அதிக்மான அளவில் ஒளிவேதியியல் வினைகளும் தரையளவு ஓசோன் அளவும் அதிகரிக்கின்றன . இத்தரவுகள் யாவும் எரிபொருள் உமிழ்வுகள் குறித்த தூய எரிபொருள் அறிக்கையின் தரவுகளாகும் . அமெரிக்காவில் எத்தனால் உற்பத்தியானது சோளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தரவுகளின்படி அமெரிக்காவில் 7.0 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இத்திட்டங்களும் நிறைவு பெற்றால் மேலும் 6.4 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. இதே நேரத்தில் அமெரிக்க நாடெங்கிலும் பெட்ரோல் வர்த்தகத்தை எத்தனால் இடப்பெயர்ச்சி செய்துவருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும் . எத்தனால் தயாரிப்பதற்கு உதவும் மற்றொரு சாத்தியமான மூலமாக இனிப்புச் சோளம் கருதப்படுகிறது. மானாவாரி நிலங்களில் இனிப்புச் சோளத்தை சாகுபடி செய்யமுடியும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் எரிபொருள், உணவு, மற்றும் விலங்குணவுக்காக, வறண்ட வெப்ப மண்டல சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையம் சோளம் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஆகும் அதே கால அளவில் சோளம் உற்பத்திக்கு மூன்றில் ஒரு பங்கு தண்ணிரே தேவைப்படுவதாக கூறப்படுகிறது. உலகின் முதலாவது இனிப்பு சோள எத்தனால் வடிமனை இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2007 இல் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியது . தண்ணீருடன் எத்தனால் எளிதில் கலக்குமென்பதால் திரவ ஐதரோகார்பன்கள் போல நவீனக் குழாய்கள் அமைத்து கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலாக இருக்கிறது . எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதால் கார்புரேட்டர் போன்ற சிறிய இயந்திரங்கள் பழுதடைந்து விடுவதை இயந்திரப் பொறியாளர்களால் காண முடிகிறது. எனவே எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதை தவிர்க்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன . பொதுவாக தொடக்கக் கால ஈருந்தி இராக்கெட்டுகளில் (நீர்ம உந்துபொருள்) எத்தனால் திரவ ஆக்சிசனுடன் சேர்க்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் விண்வெளியுகத்தை தொடங்கி வைத்த செருமனியின் வி2 இராக்கெட்டில் எத்தனால் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இராக்கெட்டின் எரிகோபுரத்தின் வெப்பத்தைக் குளிர்விப்பதற்காக எத்தனாலுடன் 25% தண்ணிர் சேர்க்கப்பட்டது. வி2 இராக்கெட்டை வடிவமைத்த பொறியாளர்கள், இரண்டாம் உலகப்போருக்கு பின் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ரெட்சுடோன் இராக்கெட்டுகளில் எத்தனாலைப் பயன்படுத்த உதவி செய்தனர். நவீன எரிபொருட்கள் வளர்ந்த காரணத்தால் ஆல்ககால் எரிபொருட்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. வணிகரீதியிலான எரிபொருள் கலங்கள் புதுப்பிக்கப்பட்ட இயற்கை எரிவாயு, ஐதரசன் அல்லது மெத்தனால் முதலான எரிபொருட்களால் இயங்குகின்றன. பரவலாகக் கிடைப்பதாலும், அதிக தூய்மை மற்றும் மலிவான விலை, குறைவான நச்சுத்தன்மை போன்ற காரணங்களால் இவற்றுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. நேரடி-எத்தனால் எரிபொருள் கலங்கள், தன்வெப்ப சீர்திருத்தும் அமைப்புகள் மற்றும் வெப்ப ஒருங்கிணைப்பு அமைப்புகள் உட்பட பல எரிபொருள் கலத் தத்துவங்கள் முயற்சிக்கப்படுகின்றன. எத்தனால் எரிபொருள் கலங்கள் தொடர்பான செயல்பாடுகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் எத்தனால் எரிபொருள் கலங்களை சந்தைப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளன அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது பில்லியன் கேலன்கள். பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்திட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள். இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனாலையும் கலந்து விற்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அடுப்படிகளிலும் அலங்கார நெருப்பாகவும் எத்தனால் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது . எத்தனால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டு மூலப்பொருளாகும். எத்தில் ஆலைடுகள், எத்தில் எசுத்தர்கள், டை எத்தில் ஈதர், அசிட்டிக் அமிலம், எத்தில் அமீன்கள் உள்ளிட்ட பல்வேறு கரிமச் சேர்மங்களுக்கு எத்தனால் ஒரு முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது. எத்தனால் நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்டுள்ளது. மற்றும் ஒரு நல்ல பொது கரைப்பானாகவும் எத்தனால் செயல்படுகிறது. சாயங்கள், டிஞ்சர், அடையாளங் காட்டிகள், சொந்தநலன் காக்கும் பொருட்கள் போன்றவற்றில் எத்தனால் பயன்படுகிறது. கூட்டுச்சர்க்கரைகளை ஆல்ககால் முன்னிலையில் வீழ்படிவாக்கவும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றை தூய்மைப்படுத்தவும் எத்தனால் பயன்படுகிறது. குறைவான உருகு நிலை (−114.14 ° செ) மற்றும் குறைவான நச்சுத்தன்மை காரணமாக எத்தனால் சில சமயங்களில் ஆய்வகங்களில் உலர் பனிக்கட்டியுடன் அல்லது குளிரூட்டிகளில் வெப்பத்தைக் குறைக்கப் பய்ன்படுத்தப்படுகிறது. ஆல்ககால் மூளைக்குச் செல்லும்போது, அது நரம்புச் செல்களிலிருந்து அனுப்பப்படும் குறிப்பலைகளை தாமதப்படுத்துகிறது. இதனால் கட்டுப்பாடு, சிந்தனை மற்றும் இயக்கம் முதலிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இரைப்பையில் உணவு இல்லாத நேரத்திலும் கூட மதுபானம் இரைப்பைச்சாறு உற்பத்தியை தூண்டுகிறது. இதன் விளைவாக பொதுவாக புரத மூலக்கூறுகளை செரிப்பதற்காக அமில சுரப்பு தூண்டப்படுகிறது. அதிக அமிலச்சுரப்பு வயிற்றின் உட்புறச் சுவர்களை அரிக்கிறது. வயிற்றின் உட்புறச்சுவர் பொதுவாக மென்சவ்வு அடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. வயிறு தானே செரித்தலுக்கு உட்படுவதை இச்செவ்வு தடுக்கிறது. வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சவ்வு பழுதடைந்திருக்கும். பொதுவாக வயிற்றுப்புண் நோய் எச்.பைலோரி என்ற பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டதாகும். இப்பாக்டீரியாவினால் சுரக்கப்படும் ஒருவகை நஞ்சு வயிற்றைப் பாதுகாக்கும் மென்சவ்வை பலமிழக்கச் செய்கிறது. எனவே வயிற்றுபுண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் அதிகப்படியான அமிலச்சுரப்பு ஏற்பட்டு பலவீனமான குடல் சுவரை மேலும் அழித்துவிடும் . இதனால் அடிவயிற்றில் கடுமையான வலி, வயிறு வீக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகும். அடர் கருப்பு மலம் உட்புற இரத்தக் கசிவுக்கு அறிகுறியாகும் . இத்தகைய சிக்கல் உள்ளவர்கள் தொடர்ச்சியாக மது அருந்துவதிலிருந்து விடுதலை பெறவேண்டும் . மது உட்கொள்வதால் அமைப்பு அழற்சி சார்பு மாற்றங்கள் இரண்டு குடல் வழிகள் மூலம் ஏற்படுகிறது. (1)குடல் திசுக்களின் பகுதிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி லிப்போகூட்டுச்சர்க்கரை வெளியிடுவதை அதிகரித்தல், (2)குடல் சுவரிலுள்ள மென்சவ்வை பலவீனப்படுத்தி அதன்வழியாக லிப்போ கூட்டுச்சர்க்கரையை இரத்தச் சுழற்சி மண்டலத்திற்குள் அனுமதித்தல் இக்கூட்டுச்சர்க்கரை வெளியீடு அதிகரிப்பினால் கல்லிரல் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன . எத்தனால் அடங்கிய பானங்கள் அருந்துவதால் ஆசுதுமா போன்ற வரலாறு நோயாளிகளுக்கு தோல் வெடிப்புகள், நாசியழற்சி அதிகரித்தல், மூச்சுக்குழல் ஒடுக்கம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் உண்டாகும். மது அருந்திய ஒரு மணி நேரத்திற்குள் இத்தகைய பாதிப்புகளின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் . மது அருந்துவதால் பிறவிக் குறைபாடுகள் , புற்றுநோய உண்டாகும் வாய்ப்புகள் ", இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பு போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையிலுள்ள கேட்டலேசு மற்றும் சைட்டோகுரோம் பி-4502இ1 போன்ற ஆக்சிசனேற்றும் நொதிகளால் உருவாக்கப்படும் அசிட்டால்டுகைடால் போதைக்கு அடிமையாக்கும் விளைவுகள் நிகழ்கின்றன . ஆல்டிகைடுகள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாகக் கருதப்பட்டாலும் மூளையின் மத்தியப்பகுதியை செயலிழக்கச் செய்வதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன . எத்தனாலின் போதைப் பண்புகள் அல்லது அடிமையாக்கும் பண்புகள் மீசோலிம்பிக் ரிவார்டு பாத்வே எனப்படும் இடையங்கப் பாதையிலுள்ள தோப்பாமைன் நியூரான்கள்கள் மூலம் கடத்தப்படுகின்றன. நடுமூளையின் அடிப்புற திசு உறையை முன்மூளையின் அடித்தளத்திலுள்ள நியூக்ளியசு அக்கும்பென்சுடன் இணைக்கும் பாதையே இடையங்கப்பாதை எனப்படுகிறது. என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பிகளிலும், காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பிகளில் மாற்றுத்தூண்டு தடுப்பியாகச் செயல்படுவதுதான் எத்தனாலின் முதன்மையான விளைவுகளில் ஒன்றாகும். உயர் அளவுகளில் எடுத்துக் கொள்ளப்படும் எத்தனாலால் அதிக ஈனிமறைப்பு அயனி வழிகள் மற்றும் நியூரான்களில் உள்ள வோல்டேச்மறைப்பு அயனிவழிகளும் தடுக்கப்படுகின்றன. மிகக்கடுமையான அளவில் எத்தனால் உட்கொள்ளப்படும் நிகழ்வுகளில் இடையங்க நரம்பியற் சந்திப்புகளில் தோபாமைன் வெளியிடப்படுகிறது. நாட்பட்ட தீவிரமான எத்தனால் விரும்பிகளுக்கு, செல்படியெடுத்தல் காரணிகளில் இதேவகையான தூண்டுதல் ஏற்பட்டு செல்களில் பாசுபோரைலேற்றம் நிகழ்ந்து நிரந்தர மது அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள் . பல ஆண்டு கடுமையான குடிபோதையை திடீரென நிறுத்துவதும் உயிருக்கு ஆபத்தானதாக முடியும். பதட்டம் தன்னியக்க செயல் பிறழ்ச்சி, வலிப்பு மற்றும் சித்தப்பிரமை முதலிய பாதிப்புகள் ஏற்படலாம். பார்பிட்டியுரேட்டுகள், பென்சோடையசிப்பின்கள், ஓப்பியாயிட்டுகள் போன்ற மூளைத்திறன் குறைப்பு மருந்துகளுக்கு எத்தனால் எதிர்வினை புரிகிறது மற்றொரு உளவியல் பொருளான கோகைதைலீன் தயாரிப்பதற்கும் எத்தனால் எதிர்வினை புரிகிறது மத்திய நரம்புமண்டல சிகிச்சையில் பயன்படும் மெத்தில்பெனிடேட்டு என்ற மருந்தின் இருப்பை எத்தனால் உடலில் உயர்த்துகிறது . கனாபிசு எனப்படும் கஞ்சாவுடன் சேர்த்து பயன்படுத்தும்போது எத்தனால், டெட்ரா ஐதரோகனபினாலை ஈர்த்து உடலில் அதன் அளவை அதிகரிக்கிறது . நுண்ணுயிர்க் கொல்லி மருந்துசார் மருத்துவத்தில் பயன்படும் மெட்ரோனிடசோலுக்கும் ஆல்ககாலுக்கும் இடையிலான எதிர்வினைகள் முக்கியமாக கவனிக்கத்தக்கன ஆகும். பாக்டீரியா எதிர்ப்பு முகவரான மெட்ரோனிடசோல், பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் செல்லணு டி.என்.ஏக்களையும் அதன் செயல்பாடுகளையும் அழிக்கிறது . பொதுவாக குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு மருந்தாக மெட்ரோனிடசோல் கொடுப்பது வழக்கம் ஆகும். வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஒன்று குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியா ஆகும். இதனால் பெருங்குடல் வீக்கமும் மரணமும் கூட சம்பவிக்கலாம. மெட்ரோனிடசோல் மருந்தை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் ஆல்ககாலை பயன்படுத்துவதை கடுமையாகத் தவிர்க்க வேண்டும். மதுவும் மெட்ரோனிடசோலும் சேர்ந்து சிவந்துபோதல், தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று பிடிப்புகள் மற்றும் வியர்த்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் டைசல்ஃபிரம் போன்ற வினைகளாகக் கருதப்படுகின்றன. மெட்ரோனிடசோல் பொதுவாக ஆல்ககாலை வளர்சிதைமாற்றமடையச் செய்யும் ஒரு நொதியைப் பிணைக்கிறது. இத்தகைய நொதி பிணைப்பு முறையால் ஆல்ககாலை வெளியேற்றும் கல்லீரலின் ஆற்றல் பாதிக்கப்படுகிறது . காமா அமினோபியூட்டரிக் அமிலம் ஏற்பிகளுடன் பிணைந்து அவற்றின் விளைவுகளை அதிகரிப்பது எத்தனாலின் முதன்மையான பணியாகும். மேலும், எத்தனால் பின்வரும் மருத்தியக்க முறைகளை தனதாகக் கொண்டுள்ளது:. •காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பி நேர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி (primarily of δ subunit-containing receptors) •என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி •இடையங்கப் பாதையில் தோபாமைன் வெளியீடு •மூளையிலுள்ள ஓப்பியாயிடு ஏற்பிகளில் நியூக்ளியசு அக்கும்பென் வெளியீடு •α-அமினோ-3-ஐதராக்சி-5-மெத்தில்-4-ஐசோசாக்சோல்புரோப்பியோனிக் அமில ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி •கைனேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி •நிக்கோட்டின் அசிட்டோகோலின் ஏற்பி முன்னியக்கி •5-எச்டி3 ஏற்பி முன்னியக்கி •கிளைசீன் மீளேற்புத்தடுப்பி •அடினோசின் மீளேற்புத்தடுப்பி •எல்-வகை கால்சியம் வழித்தடுப்பி •கி-புரதவழி பொட்டாசியம் திறப்பி கல்லீரலில் ஆல்ககால் டீ ஐதரசனேசால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மனித உடலில் இருந்து எத்தனால் அகற்றப்படுவது குறைக்கப்படுகிறது. எனவே இரத்தத்திலிருந்து அடர் ஆல்ககாலை நீக்குவது சுழியவகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆல்ககால் உடலைவிட்டு மாறாத விகிதத்தில் வெளியேறுகிறது என்பதே இதன்பொருள் ஆகும். ஒரு பொருளுக்கான வேதிவினை படிநிலை விகிதம் மற்றொரு பொருளுக்கு பொதுவானதாக இருக்கலாம். இதனால் மெத்தனால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் வளர்சிதை மாற்றங்களில் இரத்த ஆல்ககால் அளவு வேதிவினை வீதத்தை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. மெத்தனாலைக் காட்டிலும் இதன் வளர்சிதை மாற்றப்பொருட்களான பார்மால்டிகைடும் பார்மிக் அமிலமும் நச்சுப்பொருட்களாகும். எனவே இத்தகைய நச்சுப்பொருட்களின் உற்பத்தியையும் அடர்த்தியையும் குறைக்க எத்தனால் உட்செலுத்தப்படுகிறது . எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மையும் இதே முறையில் நீக்கப்படுகிறது. தூய்மையான எத்தனால் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது . நாட்பட்ட தொடர்ச்சியான பயன்பாட்டினால் கல்லீரல் பாதிக்கப்படும் . வளிமண்டலத்தில் எத்தனாலின் செறிவு ஆயிரத்தில் ஒரு பங்கு என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் வெளிப்பாடு வரம்பெல்லை தெரிவிக்கிறது . மனித உடலில் உள்ள எத்தனால் ஆல்ககால் டி ஐதரோசனேசால் அசிட்டால்டிகடாகவும் பின்னர் ஆல்டிகைடு டி ஐதரோசனேசால் அசிட்டைலாகவும் மாற்றப்படுகிறது. கார்போ ஐதரேட்டு கொழுப்பு இரண்டின் வளர்சிதை மாற்றத்திலும் இருதி விளைபொருளாக அசிட்டைல் இணை நொதியே விளைகிறது. இந்த அசிட்டலை உயிரிதொகுப்புக்கும் ஆற்றலுக்கும் பயன்படுத்தமுடியும். இதேபோல எத்தனாலும் தோராயமாக ஒரு கிராமுக்கு 7கிலோகலோரி ஆற்றலை வெளியிடுகிறது . எனினும், முதல்படிநிலையில் உருவாகும் அசிட்டால்டிகைடு எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கும் புற்றுநோய் உருவாக்கத்திற்கும் இது காரணமாகிறது. தொடர்புடைய டி ஐதரோசனேசு வழியாக ஆல்ககால் வளர்சிதை மாற்றத்தின்போது நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு ஒடுக்கப்படுகிறது. ஆல்ககால் செரிமானத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. எத்தில் ஆல்ககாலின் ஒரு பகுதி நிர்விலக்கியாகும். நீர்விலக்கி அல்லது கொழுப்பு விரும்பியான எத்தனால் வயிற்றுச்சுவரின் குறுக்கே பரவுகிறது. உண்மையில் ஆல்ககால் வயிற்றில் ஈர்க்கப்படும் பொருள்களில் அரிதானது ஆகும். பெரும்பாலான உணவுப் பொருட்கள் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஆல்ககால் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்பட்டபிறகு வயிற்றுப் பொருட்கள் வெளியிடுவதை தாமதப்படுத்துகிறது. ஈர்க்கப்பட்டபின்னர் இது கல்லீரலை அடைந்து அங்கு வளர்சிதை மாற்றமடைகிறது. கல்லீரல் மூலம் பதப்படுத்தப்படாத மது இதயத்திர்கு செல்கின்றது. ஓர் அலகு நேரத்தில் கல்லீரல் ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்ககாலை மட்டுமே பதப்படுத்தும் ஆகவே, ஒருவர் அதிகமாக மது குடிக்கும்போது அது இதயத்தை அடைகிறது. இதயத்தில், இதய சுருக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக, இதயம் குறைவான இரத்தைச் செலுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாக உடலின் இரத்த அழுத்தமும் குறைகிறது . இதயத்திற்குள் செல்லும் இரத்தம் நுரையீரலுக்குள்ளும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. சுவாசத்தில் ஆல்ககாலின் சுவடுகள் தென்படுகின்றன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை இனம் கண்டு கொள்ள உதவும் மூச்சுப்பகுப்பி இதனைக் கண்டுபிடிக்கிறது. நுரையீரலில் இருந்து இதயத்திற்குத் திரும்பும் இரத்தம் உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஆல்ககால் இரத்தத்திலுள்ள லிப்போபுரதங்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றது. இவை கொழுப்பைக் கொண்டு செல்கின்றன. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. மிதமான ஆல்ககால் பயன்பாடு மாரடைப்பைக் குறைக்கும் என்பது ஆல்ககாலின் உடல் நலவியல் பயனாகும் . மற்றவர்களை விட அதிகமாக எத்தனால் நுகர்வு இருக்கும் சில தனிநபர்கள் கடுமையான அறிகுறிகளுக்கு சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுண்டு. அத்தகையவர்கள் சிலரிடம் நொதிகள் பாதிப்பின்றி மிகவும் வேகமாக எத்தனால் வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுவதுமுண்டு. நிறமற்ற நீர்மமான எத்தனால் சற்று நெடியுடன் விரைவில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாக உள்ளது. புகையில்லாமல் நீல நிறத்துடன் எரியும் இதை சாதாரண வெளிச்சத்தில் எப்பொதும் காண முடியாது. ஐதராக்சில் குழுவின் அடிப்படையிலும், குறுகிய சங்கிலி அமைப்பின் அடிப்படையிலும் இதன் இயற்பியல் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஐதராக்சில் குழுவால் ஐதரசன் பிணைப்பில் பங்கேற்கமுடிகிறது. இதனால் இதே மூலக்கூறு எடையைக் கொண்ட முனைவுக் கரிம சேர்மமான புரோப்பேனைக் காட்டிலும் அதிகமான பாகுமையும், குறைவான ஆவியாகும் தன்மையும் பெற்றுள்ளது. தண்ணிரைவிட சற்று அதிமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது. எத்தனாலின் ஒளிவிலகல் எண் 1.36242. ( 18.35° செ வெப்பநிலையில் λ=589.3 நா.மீ ஆக உள்ளபோது) 4.3 × 10−4 பாசுகல் அழுத்தத்தில் எத்தனாலின் மும்மைப்புள்ளி 150 கெல்வின் ஆகும். எத்தனால் ஒரு பல்துறை கரைப்பான் ஆகும்., நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்ட இச்சேர்மம் அசிட்டிக் அமிலம், அசிட்டோன், பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோபார்ம், டை எத்தில் ஈதர், எத்திலீன் கிளைக்கால், கிளிசரால், நைட்ரோமீத்தேன், பிரிடின், தொலுயீன் உள்ளிட்ட பல கரிமக் கரைப்பான்களுடனும் கலக்கும் இயல்புடையது . பென்டேன், எக்சேன் உள்ளிட்ட இலேசான அலிபாட்டிக் ஐதரோகார்பன்களுடனும், முக்குளோரோ ஈத்தேன், நாற்குளோரோ எத்திலீன் போன்ற அலிப்பாட்டிக் குளோரைடுகளுடனும் எத்தனால் கலக்கும் தன்மையுடையது ஆகும் . எத்தனாலின் தண்ணீருடன் கலக்கும் இயல்பு நீண்ட சங்கிலி சேர்மங்களின் கலக்கும் இயல்புடன் மாறுபடுகிறது. ஐந்து கார்பனுக்கு மேற்பட்ட நீளமுடைய சேர்மங்களின் நீருடன் கலக்கும் இயல்பு கார்பனின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது ஆல்க்கேன் முதல் அன்டெக்கேன் வரையுள்ள ஆல்க்கேன்களின் கலக்கும் பண்பு கட்டுப்படுத்தப்படுகிறது. பன்னிருடெக்கேன் மற்றும் உயர் ஆல்க்கேன்களின் கலவைகள் வெப்பநிலைக்கு ஏற்ப அவற்ரின் கலக்கும் இயல்பில் கலப்பு இடைவெளியை வெளிபடுத்துகின்றன). மேலும் உயர் ஆல்க்கேன்களைப் பொறுத்தவரையில் வெப்பநிலையும் பெரிய கலக்கும் இடைவெளியைக் காட்டுகின்றன. எத்தனால்-நீர்க் கலவையின் பருமன் அவற்றின் தனிப்பட்ட கூறுகளின் கூட்டுத்தொகையை விட குறைந்த அளவாக உள்ளது. சம அளவு எத்தனாலும் தண்ணீரும் சேர்க்கப்பட்டால் 1.92 பருமனளவு கொண்ட எத்தனால்-நீர்க் கலவை மட்டுமே கிடைக்கிறது. வெப்ப உமிழ்வினையான இவ்வினை 298 கெல்வின் வெப்பநிலையில் 777யூ/மோல் வெப்பம் உமிழப்படுகிறது. எத்தனால்-நீர்க் கலவையில் 89 மோல்% எத்தனாலும் 11 மோல்% நீரும் கலந்து கொதிநிலை மாறா கலவையாக உருவாகின்றன. இதையே 95.6 சதவீத எத்தனால் நிறையளவு கலவை என்றும் குறிப்பிடலாம். சாதாரண அழுத்தத்தில் இக்கலவை 78 பாகை செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மேலும், இக்கொதிநிலை மாறா கலவையின் உட்கூறுகள் வெப்பநிலை-அழுத்தத்தை சார்ந்திருக்கின்றன. இவை 303 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழ் மறைந்தும் விடுகின்றன. ஐதரசன் பிணைப்பு தூய எத்தனாலை தண்ணீர் உறிஞ்சி எத்தனாலாக மாற்றுகிறது. காற்றிலுள்ள நீரையும் எத்தனால் உறிஞ்சிக் கொள்கிறது. ஐதராக்சில் குழுவின் முனைவுத்தன்மை காரணமாக பல அயனிச் சேர்மங்களையும் எத்தனால் கரைத்துவிடுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகள், மக்னீசியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் புரோமைடு, மற்றும் சோடியம் புரோமைடு போன்ற சேர்மங்கள் எத்தனால் கரைக்கும் சில குறிப்பிட்ட சேர்மங்களாகும் . சோடியம், பொட்டாசியம் குளோரைடுகள் எத்தனாலில் சிறிதளவு கரைகின்றன . ஏனெனில் எத்தனால் மூலக்கூறின் முனைவற்ற முனை காரணமாக இது முனைவுத்தன்மையற்ற எண்ணெய் , சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்ற பொருட்களையும் கரைக்கிறது. எடையளவில் 40% ஆல்ககால் கலந்த எத்தனால் – தண்ணீர் கரைசலை 26° செல்சியசு வெப்பநிலைக்கு மேலாகச் சூடுபடுத்தினால் ஒரு தீப்பற்றும் மூலத்தின் மீது இக்கரைசல் தீப்பற்றி எரிகிறது. இவ்வெப்பநிலை தீப்பற்றும் வெப்பநிலை எனப்படுகிறது. தூய்மையான எத்தனாலின் தீப்பற்றும் வெப்பநிலை 16.60° செல்சியசு வெப்பநிலையாகும். இது சராசரி அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று குறைவு ஆகும். எத்தனாலின் எடையும் தீப்பற்றும் வெப்பநிலையும் ! எடை %!! வெப்பநிலை ஈசுட்டு நொதியால் நிகழும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் உடன் விளைபொருளாக எத்தனால் தோன்றுகிறது. மிகக்கனிந்த பழங்களில் எத்தனால் காணப்படுகிறது . பனை, தென்னை மரங்களிலிருந்து ஈசுட்டுகள் மூலம் தயாரிக்கப்படும் கள்ளு என்ற போதை பானத்திலும் மரச்சுண்டெலி போன்ற சிலவகை விலங்குகளிலும் எத்தனால் காணப்படுகிறது. இயற்கையாகவே காற்றில்லா சூழலில் முளைக்கின்ற பல தாவரங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கின்றன. விண்வெளியில் விண்மீன்களிடை மேகத்திலும் எத்தனால் பனிப்போர்வையுடன் காணப்படுகிறது. எத்தி்லீனை நீரேற்றம் செய்யும் பெட்ரோ வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறையிலும். கரும்புச் சர்க்கரையுடன் ஈசுட்டு நொதியைச் சேர்த்து நொதித்தல் என்ற உயிரினச் செயல்முறையிலும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது . ஊட்டு மூலப்பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டே ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்பு முறை சிறந்தது என கூறமுடியும். 1970 களில் அமெரிக்காவில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறை சிறந்ததாகவும், 1980 களில் சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினச் செயல்முறை சிறந்ததாகவும் கருதப்பட்டது . தொழிற்சாலை ஊட்டு மூலப்பொருளான எத்தனால் அல்லது எத்தனால் கரைப்பான் அல்லது செயற்கை எத்தனால் என்றழைக்கப்படும் எத்தனால், பெட்ரோவேதியியல் ஊட்டு மூலப்பொருளான எத்திலீனை அமில வினையூக்கியின் முன்னிலையில் நீரேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது. C2H4 + H2O → CH3CH2OH பொதுவாக இவ்வகை வினைகளில் பாசுபாரிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றது 1947 இல் செல் ஆயில் நிறுவனம் இம்முறையில் எத்தனாலை தயாரித்தது . உயர் அழுத்தத்தில் 300° செல்சியசு நீராவி வெப்பத்தில் 1.0:0.6 நீராவி, எத்திலீன் விகிதத்தில் இவ்வினை மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவனம் மற்றும் சில நிறுவனங்கள் இம்முறையைப் பயன்படுத்தின. தற்பொழுது லையோந்தெல்பேசல் நிறுவனம் மட்டும் இம்முறையில் எத்தனால் தயாரிக்கிறது. தற்காலத்தில் எத்திலீன் அடர் கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தப்பட்டு எத்தில் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது. பின்னர் இது நீராற்பகுப்பு முறையில் மறைமுகமாக நீரேற்றப்பட்டு எத்தனால் தயாரிக்கப்படுகிறது. கந்தக அமிலம் மீளுற்பத்தி செய்யப்படுகிறது. C2H4 + H2SO4 → CH3CH2SO4H CH3CH2SO4H + H2O CH3CH2OH + H2SO4 மதுபானங்களில் காணப்படும் எத்தனால் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சில வகை ஈசுட்டுகள் சர்க்கரையுடன் நொதித்தல் வினை புரிந்து எத்தனாலைக் கொடுக்கின்றன. கார்பனீராக்சைடு உடன் விளைபொருளாக உண்டாகிறது. C6H12O6 → 2 CH3CH2OH + 2 CO2 C12H22O11 + H2O → 4 CH3CH2OH + 4 CO2 பொருத்தமான வெப்பநிலையில் ஈசுட்டுகள் நொதித்தல் வினையில் ஈடுபட்டு ஆல்ககாலைக் கொடுக்கின்றன. பொதுவாக 35–40 °செல்சியசு வெப்பநிலையில் இவ்வினை நிகழ்கிறது. நொதித்தலுக்குத் தேவையான சர்க்கரை செல்லுலோசிலிருந்தும் கிடைக்கிறது. செல்லுலோசு தொழில்நுட்பத்தால் பல்வேறு விவசாயப்பொருட்கள் நொதித்தலுக்கான சர்க்கரை மூலங்களாக இனங்காணப்பட்டுள்ளன . எத்தனாலின் அடர்த்தியைக் கண்டறிய இரண்டு வகையான முறைகள் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுகின்றன. 1. அகச்சிவப்பு எத்தனால் உணரி முறை. 2. நீரடர்த்திமானி பல்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்படும் எத்தனால் நீருடன் கலந்த கலவையாகக் காணப்படுகிறது. எனவே எத்தனாலை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. வளிமண்டல அழுத்தத்தில் எத்தனால் தண்ணிர் கலந்த கலவையை பின்னக் காய்ச்சிவடித்தல் முறையில் தூய்மையாக்கலாம். பென்சீன், வளைய எக்சேன், எப்டேன் போன்ற வேதிப்பொருட்களின் உதவியால் எத்தனாலில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இவைதவிர வேறு பல முறைகளும் தூய்மையாக்கலுக்கு பயன்படுகின்றன. தூய எத்தனால் மற்றும் மதுபானங்கள் உளவியல் மருந்துகள் என்ற வகையில் வரிவிதிக்கப்படுகின்றன. ஆனால், எத்தனால் நுகர்வு என்பதைத்தாண்டி பல பயன்களைக் கொண்டுள்ளது. இந்த பயன்பாடுகளைக் கருதி வரி சுமை குறைக்கப்பட்டால், குடிக்க தகுதியற்றதாக எத்தனால் தயாரிக்கப்படும் போக்கு குறையும். கசப்புச்சுவை வேதிப்பொருளான தெனாட்டோனியம் பென்சோயேட்டு, மெத்தனால், நாப்தா, பிரிடின் போன்ற கசப்பு முகவர்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆல்க்ககால் இயல்பு திரிந்த ஆல்ககால் எனப்படுகிறது . தனி ஆல்ககால் அல்லது நீரற்ற ஆல்ககால் என்பது மிகக்குறைவான அளவு பகுதிப்பொருளாக தண்ணீர் கலந்திருக்கும் ஆல்ககாலைக் குறிக்கும். தண்ணிரின் அளவுக்கு ஏற்ப தரம் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. தண்ணீரை நீக்குவதற்காகச் சேர்க்கப்படும் பென்சீன் போன்ற பொருட்கள் இவ்வகை ஆல்ககாலுடன் சுவடளவுக்கு கலந்திருப்பதுண்டு . மனிதப்பயன்பாட்டுக்கு இவ்வால்ககாலை பயன்படுத்தலாகாது. ஆனால் தொழிற்சாலைகளில் கரைப்பானாக, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. புற ஊதா – கட்புல அலைமாலை ஓளி அளவியலில் எத்தனால் கரைப்பானாகப் பயன்படுகிறது . தூய்மையான எத்தனாலின் தரமதிப்பு அமெரிக்காவில் 200 புள்ளிகளும் , ஐக்கிய இராச்சியத்தில் 175 பாகை புள்ளிகளும் தர அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு அளவிடப்படுகின்றன . 96% எத்தனாலும் 4% தண்ணிரும் சேர்ந்த கலவை வடித்துப் பிரித்த சிபிரிட் எனப்படுகிறது. நீரற்ற ஆல்ககாலுக்கு மாற்றாக பலதுறைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் . முதல்நிலை ஆல்ககாலாக எத்தனால் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ள கார்பனுடன் குறைந்தபட்சம் இரண்டு ஐதரசன் அணுக்கள் இணைக்கப்பட்டிருக்கும். பல எத்தனால் வினைகள் ஐதராக்சில் குழுவில் நிகழ்கின்றன. அமில வினையூக்கிகள் முன்னிலையில் எத்தனால் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரிந்து எத்தில் எசுத்தர்களையும் நீரையும் கொடுக்கிறது. RCOOH + HOCH2CH3 → RCOOCH2CH3 + H2O பெருமளவில் தொழில்முறையாக எசுத்தர்கள் இம்முறையில் தயாரிக்கப்பட்டு நீர் நீக்கப்படுகின்றன. எசுத்தர்கள் அமிலம் அல்லது காரம் முன்னிலையில் மீளவும் ஆல்ககாலாகவும் உப்பாகவும் மாறுகின்றன. இவ்வினை சோப்பாக்குதல் வினை எனப்படுகிறது. எத்தனால் கனிம அமிலங்களுடன் வினைபுரிந்தும் எசுத்தர்களை உருவாக்குகின்றன. எத்தனாலுடன் கந்தக மூவாக்சைடு சேர்த்து டை எத்தில் சல்பேட்டும், பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து மூவெத்தில் பாசுபேட்டும் தயாரிக்கப்படுகின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் டை எத்தில் சல்பேட்டு ஒரு எத்திலேற்றும் முகவராகப் பயன்படுகிறது. எத்தனாலுடன் சோடியம் நைட்ரைல் மற்றும் கந்தக அமிலம் சேர்த்து தயாரிக்கப்படும் எத்தில் நைட்ரைல் சிறுநீர்பெருக்கியாக பயனாகிறது. வலிமையான ஈரமுறிஞ்சிகளில் எத்தனால் சிறிதலவு நீரை இழந்து டை எத்தில் ஈதராகவும் பிற உடன் விளைபொருள்களையும் கொடுக்கிறது. 160 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டால் முழுமையான நீர் நீக்கம் நிகழ்ந்து எத்திலீன் உருவாகிறது. 2 CH3CH2OH → CH3CH2OCH2CH3 + H2O (120 °செல்சியசு) CH3CH2OH → H2C=CH2 + H2O (160 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல்) முழுமையான எரிதலுக்கு எத்தனால் உட்பட்டால் கார்பனீராக்சைடும் தண்ணீரும் உருவாகின்றன. C2H5OH (l) + 3 O2 (g) → 2 CO2 (g) + 3 H2O (l); −ΔHc = 1371 கிலோயூல்/மோல் = 29.8 கிலோயூல்/கிராம் = 327கிலோகலோரி/மோல் = 7.1கிலோகலோரி/கிராம் C2H5OH (நீ) + 3 O2 (வாயு) → 2 CO2 (வாயு) + 3 H2O (நீராவி); −ΔHc = 1236 கிலோயூல்/மோல் = 26.8 கியூ/கி = 295.4 kகலோரி/மோல் = 6.41 கிலோகலோரி/கிராம் தன்வெப்பம் = 2.44 கிலோயூல்/(கிலோகிராம்•கெல்வின்) எத்தனால் ஒரு நடுநிலை மூலக்கூறு ஆகும். இக்கரைசலின் pH குறியீட்டு எண் 7 ஆகும். சோடியம் போன்ற கார உலோகத்துடன் வினைபுரியச் செய்து இதை ஓர் ஈத்தாக்சைடு (CH3CH2O−) அயனியாக மாற்ரி இணை காரமாக்கலாம் அல்லது மிகவலிமையான காரமான சோடியம் ஐதரைடுடன் வினைபுரியச் செய்யலாம். தண்ணீர் மற்றும் எத்தனாலின் அமிலத்தன்மை கிட்டத்தட்ட சமமாகும். இவற்றின் pKa மதிப்பு முறையே 15.7 மற்றும் 16 ஆகும். எனவே சோடியம் ஈத்தாக்சைடும், சோடியம் ஐதராக்சைடும் சமநிலையில் நெருக்கமாக ஒன்றுபட்டுள்ளன. எத்தில் ஆலைடுகளைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக தொழிற்சாலைகளில் எத்தனால் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதற்கான வினைகளை விளக்கமுடியும். எத்தனால் ஐதரசன் ஆலைடுகளுடன் SN2 வினைபுரிந்து எத்தில் குளோரைடு, எத்தில் புரோமைடு போன்ற எத்தில் ஆலைடுகளை உருவாக்குகிறது. துத்தநாகக் குளோரைடு போன்ற வினையூக்கிகள் இவ்வகை வினைகளுக்கு அவசியமாகிறது . கந்தக அமில வினையூக்கி HBr சேர்மத்திற்கு தேவைப்படுகிறது . எத்தனாலுடன் ஆலசனேற்றும் முகவர்களான பாசுபரசு முப்புரோமைடு அல்லது தயோனைல் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தியும் எத்தில் ஆலைடுகள் தயாரிக்கலாம் ஆலசன்களுடன் சேர்த்து காரத்தின் முன்னிலையில் சூடுபடுத்தினால் எத்தனால் அதனுடன் தொடர்புடைய ஆலோபார்ம்களைக் கொடுக்கிறது.(CHX3, இங்கு X = Cl, Br, I). இவ்வினை ஆலோபார்ம் வினை என்றழைக்கப்படுகிறது குளோரினுடன் வினைபுரியும்போது இடைநிலை வேதிப்பொருளாக குளோரால் உண்டாகிறது. தண்ணிருடன் இது குளோரால் ஐதரைடாக உருவாகிறது : பயன்படுத்தப்படும் வினைப்பொருள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனால் அசிட்டால்டிகைடாகவும் பின்னர் அசிட்டிக் அமிலமாகவும் ஆக்சிசனேற்றம் அடைகிறது. தொழிற்சாலைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத எத்தனால் ஆக்சிசனேற்றம் மனித உடலில் முக்கியத்துவம் பெறுகிறது. நொதித்தல் முறையில் எத்தனால் உற்பத்தி பண்டைய காலத்திலேயே மனிதர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எத்தனால் நுகர்வும் போதைப் பழக்கமும் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்படுகின்றன. எத்தனால் மதுபானங்களை போதை பொருளாக வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் காணப்படும் 9,000 வயதான மட்பாண்டங்களின் உலர்ந்த எச்சங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. தொடக்கக்கால கிரேக்கர்களும் அரேபியர்களும் காய்ச்சிவடித்தல் முறையை அறிந்துள்ளனர். பின்மத்திய கால மருத்துவப்பள்ளியில் 12 ஆம் நூற்றாண்டில் ஆல்ககால் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தனி ஆல்ககாலைக் குறித்த செய்திகள் இரேமண்டு லுல் தெரிவித்துள்ளார். 1796 இல் செருமன்-உருசிய வேதியியலாளர் நீரற்ற காரத்தை பகுதியாக தூய்மையாக்கப்பட்ட எத்தனாலுடன் சேர்த்து தாழ் வெப்பநிலையில் காய்ச்சி வடித்து தூய எத்தனாலை தயாரித்துள்ளார். பிரெஞ்சு வேதியியலர் அந்துவான் இலவாசியே எத்தனாலை கார்பன், ஆக்சிசன், ஐதரசன் தனிமங்களின் சேர்மம் என்று விவரித்தார். 1807 இல் நிக்கோலசு தியோடர் எத்தனாலின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை உறுதிப்படுத்தினார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எத்தனாலின் அமைப்பு வாய்ப்பாடு உறுதிப்பட்டது. மைக்கேல் பாரடேவால் 1825 இல் எத்தனால் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. நிலக்கரி வாயுவை கந்தக அமிலம் அதிக அளவில் ஈர்க்கிறது என்பதை இவர் தெரிவித்தார் வினையில் விளைந்த கரைசலை இவர் பிரித்தானிய வேதியியலர், எத்தில் ஐதரசன் சல்பேட்டைக் கண்டறிந்த என்றி என்னெல்லிடம் கொடுத்தார். 1828 இல் எத்தில் ஐதரசன் சல்பேட்டு சிதைவடைதல் கண்டறியப்பட்டது எத்திலீனில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை உறுதிப்படுத்தப்பட்டது. 1840 களில் விளக்கெரிக்க எத்தனால் பயன்படுத்தப்பட்டது. வாகன எரிபொருளாக 1908 முதல் பயன்படத்தொடங்கியது. எத்திலீனில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனால் தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டது. நுகர்வு, நறுமணம், சுவை, வண்ணங்கள் மற்றும் மருந்துகள் உட்பட மனிதப் பயன்பாட்டிற்கு பரவலாக எத்தனால் பயன்படத்தொடங்கியது. . வேதியியலில் இது ஒரு கரைப்பான் மற்றும் மற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள் ஆகும். வெப்பம், ஒளி, எரிபொருள் போன்ற ஒரு நீண்ட வரலாறு எத்தனாலுக்கு உண்டு. போக்குவரத்து விபத்துகள் ஆய்வில், மக்கள் 41% மதுவுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. பெருகிவரும் கார்விபத்துக்களுக்கும் ஓட்டுநரின் மதுப்பழக்கமே காரணமாக உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்த ஆல்ககால் அளவு தொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன மலைவலம் மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதலாகும். கயிலை மலையை வலம் வரும் பழக்கம் இருந்துவருகிறது. கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் பெரும்பாலும் பௌர்ணமி நாளன்று மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மிகப் பிரபலமாக உள்ளது. புராண காலம் முதல் இன்று வரையில் மலைவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை என்பது பண்டைக் காலத்தில் இன்றைய கிரீஸ் நாட்டுப் பகுதியில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். எனினும், இப்பகுதியின் 2 ஆவது ஆயிரவாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட கட்டிடக்கலை கிரேக்க மொழியினர் சார்ந்தது அல்ல. இதற்குப் பின் சுமார் கிமு 1000 ஆண்டு வரை இப் பகுதிகளில் பஞ்சமும், பொருளாதார வீழ்ச்சி நிலையும் நிலவியது. கிமு 1000 ஆவது ஆண்டுக்குப் பின்னர் சிறப்பாக கிமு 8 ஆவது நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைத் தொடர்ந்தே கிரேக்கக் கட்டிடக்கலைப் பாணி அறிமுகமானது. இக்காலத்தில், கட்டிடங்களின், தூண்கள், வளைகள், முகப்புகள் முதலிய கூறுகளை அமைப்பதிலும், அழகூட்டுவதிலும் ஒழுங்குகள் ஏற்பட்டன. கிரேக்கக் கட்டிடக்கலையில் இவ்வாறான மூன்று ஒழுங்குகள் பயன்பாட்டில் இருந்தன. இவை, டோரிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு, கொறிந்திய ஒழுங்கு எனப்பட்டன. இவ்வொழுங்குகளுக்கான எண்ணக்கருக்கள் இதற்கு முற்பட்ட எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியப் பகுதிகளில் நிலவிய கட்டிடக்கலைப் பாணிகளில் இருந்து பெறப்பட்டவையாகும். இந்த ஒழுங்குகளுள் டோரிக் ஒழுங்கே மிகப் பழமையானது. கிரேக்கத் தலைநிலத்தில் மரங்கள் மிகவும் அரிதாகவே கிடைத்தன. முக்கியமான கட்டிடங்களுக்குத் தேவையான தரமான மரங்கள் வேறிடங்களிலிருந்தே கொண்டுவரப்பட்டன. ஆனால் தரமான சுண்ணக் கற்களும், சலவைக் கற்களும் கிடைத்தன. இவை கட்டிட வேலைகளுக்கு உகந்தவையாக அமைந்தன. இக் கற்களின் பயன்பாடு கிரேக்கக் கட்டிடக்கலைக்குத் தனித்துவத்தைக் கொடுத்தன எனலாம். கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கு முன் இப்பகுதிகளில் சமயச் சார்புள்ள கோயில்கள் போன்ற கட்டிடங்கள் காணப்படவில்லை. எனினும், இதற்குப் பின்னர் வளர்ச்சி பெற்ற கிரேக்கக் கட்டிடக்கலையில் கோயில்கள் முக்கிய இடத்தை வகித்தன. எளிமையான கிரேக்கக் கோயில்கள் பொதுவாகச் செவ்வக வடிவமானவையும், கடவுள் சிலைகளை வைப்பதற்குரிய ஒரு அறையைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. பக்கச் சுவர்களை முன்புறம் சிறிது நீட்டி உருவாக்கப்பட்ட இடப்பகுதியின் திறந்திருந்த முன் பக்கத்தில் கட்டிடத்தின் அளவுக்கு ஏற்றவகையில் வேறுபட்ட எண்ணிக்கைகளில் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை பொதுவாக 2, 4, 6, 8, 10 என இரட்டை எண்ணிக்கைகள் கொண்டனவாக இருந்தன. மிகவும் அரிதாகத் தொடக்ககாலக் கட்டிடங்களில் ஒற்றை எண்ணிக்கைகளிலான தூண்களையும் காண முடியும். கோயில்களின் சிக்கல் தன்மை மேலும் வளர்ச்சியடைந்த போது இக் கருவறையைச் சுற்றி நாற்புறமும் தூண் வரிசைகள் அமைக்கப்பட்டன. மெக்சிக்கோ நகரம் மெக்சிகோ நகரம் (, ;) மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்சி அரசு அமைப்பாக உள்ளது. இதனால் "மெக்சிக்கோ, கூட்டரசு மாவட்டம்" எனவும் அழைக்கப்படுகின்றது. மெக்சிக்கோ நகரம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் அதன் மிக முக்கியமான, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் நிதி மையமாக திகழ்கிறது. உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும் . முதல் இடத்தில் யப்பானின் டோக்கியோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளன. வட அமெரிக்காவின் மிக முக்கியமான நிதி மையங்களில் இந்த நகரம் ஒன்றாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ள உயர் பீடபூமியின் 2.240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. நகரம் 16 நிர்வாகப் பிரிவுகளாக (பரோக்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கட்தொகையானது 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.84 மில்லியன் ஆகும். 2011 இல் $ 411 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூலம் மெக்சிக்கோ நகரம் உலகின் பணக்கார பெருநகர பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரம் மெக்சிக்கோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% மற்றும் பெருநகர பகுதிகளுக்கான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 34% பங்கும் வகிக்கின்றது. மெக்சிக்கோ பெருநகரத்தின் மொத்த உள்ளக உற்பத்தி, 2011இல், அமெரிக்க$411 பில்லியனாக இருந்தது; உலகின் செல்வமிக்க பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது. மெக்சிக்கோ நாட்டின் நிகர உற்பத்தியில் இந்த நகரம் 15.8% பங்களிக்கின்றது. இந்த நகரத்தின் பொருளாதாரம், தனிநாடாக இருப்பின், இலத்தீன் அமெரிக்காவில் ஐந்தாவதாக உள்ளது; கோஸ்ட்டா ரிக்காவினுடையதைப் போல ஐந்து மடங்காகவும் பெருவின் பொருளாதாரத்திற்கு சமனாகவும் உள்ளது. இந்த நகரம் அமெரிக்காக்களின் தொன்மைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. பழங்குடி மக்களால் நிறுவப்பட்ட இரு நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 1325இல் அசுடெக் காலத்தில் டெக்சுகோகோ ஏரியின் தீவொன்றில் நிறுவப்பட்டது.1521இல் இது முழுமையாக அழிக்கப்பட்டு எசுப்பானிய ஊரகத் தரத்தின்படி மீண்டும் கட்டப்பட்டது. 1524இல் மெக்சிக்கோ நகராட்சி நிறுவப்பட்டது. எசுப்பானிய குடியேற்றப் பேரரசின் அரசியல், நிர்வாக, நிதிய மையமாக மெக்சிக்கோ நகரம் விளங்கியது. எசுப்பானியாவிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1824ஆம் ஆண்டில் கூட்டரசு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அரசியல் தன்னாட்சிக்கு போராடிய பின்னர் 1997இல் கூட்டரசு மாவட்டதின் தலைவரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும் ஓரவையுள்ள சட்டப்பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றது. இடதுசாரிக் கட்சியான சனநாயகப் புரட்சிக் கட்சி இவ்விரண்டையும் கைப்பற்றியுள்ளது. ஆண்மை ஆண்டுகளில் பல தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன; கோரிக்கை அடிப்படையில் கருக்கலைப்பு, கட்டுப்பட்டளவில் வதையா இறப்பு, தவறின்றியும் மணமுறிவு, தற்பால் திருமணம் ஆகியன அனுமதிக்கப்படுகின்றன. இசுப்பானியர்கள் மெக்சிகோ நகரை உருவாக்கும் முன்னர் இந்நிலத்தின் அஸ்டெக் அமெரிக்கப் பழங்குடியினரின் பேரரசு இருந்தது. இந்நகரம் 1521 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உண்மையில் இந்நகரம் ஒரு ஏரியின் மீது கட்டப்பட்டதாகும். மெக்சிக்கோ நகரத்தில் அதன் வெப்ப மண்டல அமைவிடம் மற்றும் அதிக உயரம் காரணமாக ஒரு மிதவெப்ப மண்டல உயர்நில காலநிலை உள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலை பெருநகரின் உயரத்தினை பொறுத்து 12 முதல் 16 டிகிரி செல்சியஸ்( 54-61 °F ) வரை மாறுபடுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தின் போது குறைந்தபட்ச வெப்பநிலை -2 °C இலிருந்து -5 °C( 28 முதல் 23 டிகிரி பாரன்ஹீட் ) வரை உள்ளது. மேலும் வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 °C இருந்து 33.9 °C வரை பதிவு செய்யப்படுகிறது. மேலும் வருடாந்திர மழை 820 மில்லி மீட்டர் ஆகும். மெக்சிக்கோ நகரின் வரலாற்று மையம் மற்றும் தெற்குப் பெருநகரில் உள்ள சொஷிமில்கோ என்ற "மிதக்கும் தோட்டங்கள்" யுனெஸ்கோ மூலம் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்று மையமான புகழ்பெற்ற அடையாளங்களான ஸ்பானிஷ் சகாப்த பெருநகர கதீட்ரல் மற்றும் தேசிய அரண்மனை மற்றும் பண்டைய ஆஸ்டெக் கோவிலின் இடிபாடுகள் நகரில் மின்வடங்கள் தோண்டும் போது 1978 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஏகாதிபத்திய குடியிருப்பு கோட்டையில் அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளது. கூடுதலாக நகரில் பரவலாக 160 அருங்காட்சியகங்கள், 30 கச்சேரி அரங்குகள் மற்றும் 100 கலை அரங்குகளைக் கொண்டிருக்கிறது. இது நியூயார்க், லண்டன் மற்றும் டொராண்டோ போன்றவற்றிற்கு அடுத்து திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட நான்காவது நகரமாக உள்ளது. விக்கிமேனியா ௨௦௧௫ மெக்சிகோ நகரத்தில் நடைபெற்றது. தொல்லியல் களம் தொல்லியல் களம் (archaeological site) என்பது, தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஒரு இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிக்கும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இங்கே கடந்தகாலம் என்று குறிப்பிடுவது, வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாற்றுக் காலம், அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர, ஆய்வுசெய்யப்படும் காலப் பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக்கூடும். புதையல்கள், புதைகுழிகள் போன்றவை காணப்படும் இடங்களும் இக் களத்துள் அடங்கும். பொதுவாகத் தொல்லியல் களமொன்றின் எல்லைகளை வரையறுப்பது மிகவும் கடினமானது. ஒரு களம் சில சமயங்களில் ஒரு குடியிருப்பைக் குறிப்பதாக இருக்கக்கூடும், ஆனால் தொல்லியலாளர் இதனைச் சுற்றி மனித நடவடிக்கைகள் இருந்திருக்கக் கூடிய இடங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். பண்பாட்டு வள மேலாண்மை என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தொல்லியல் தொடர்பில், களத்தை, வளர்ச்சிக்காகக் குறித்த எல்லைகளுக்குள் அடக்கவேண்டியதாக இருக்கும். இது சில சமயங்களில் வசதியாகவோ அல்லது வசதியீனமாகவோ இருக்கலாம். இவ்வாறான வேளைகளிலும், குறிப்பிட்ட சான்றுகள் காணப்படும் இடத்தின் எல்லைக்கு வெளியேயும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு. அடுப்புகள், கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத எலும்புகள், செதில்கள், விதைகள் போன்ற உயிரியல் பொருட்கள், உயிரெச்சங்கள் முதலியனவும் தொலியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவனவாகும். பழையகற்காலம், இடைக்கற்காலம் போன்றவை தொடர்பில், சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும். நிலத்தோற்றத் தொல்லியல், தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலியல் பின்னணியிலேயே நோக்குகிறது. இது, களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், நிலவியல்சார் தொல்லியலாளர்களும், சூழலியல்சார் தொல்லியலாளர்களும், மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால், ஒரு தொடர்ச்சியான இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும். தங்கனீக்கா தங்கனீக்கா ("Tanganyika") என்பது கிழக்கு ஆபிரிக்காவில் தான்சானியா நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான விக்டோரியா ஏரி, மலாவி ஏரி, மற்றும் தங்கனீக்கா ஏரி ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் ("Deutsch-Ostafrika") ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா 1919 இல் வேர்சாய் ஒப்பந்தப்படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் "தங்கனீக்கா பிரதேசம்" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது ஐநாவின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. டிசம்பர் 9, 1961 இல் இது தங்கனீக்கா என்ற பெயரில் தனிநாடாகியது. ஜூன் 9, 1962 இல் இது பொதுநலவாயத்தின் கீழ் "தங்கனீக்கா குடியரசு" என்ற பெயரில் குடியரசாகியது. 1964 இல் இது சன்சிபார் தீவுகளுடன் இணைந்து "தங்கனீக்கா மற்றும் சன்சிபார் ஐக்கிய குடியரசு" என்ற பெயரில் ஒன்றுபட்டன. இதன் பெயர் ஏப்ரல் 26, 1964 இல் தான்சானியா ஐக்கிய குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. 'தங்கனீக்கா' என்ற பெயர் சுவாஹிலி மொழியில் "தங்கா" என்பது 'கப்பல் பயணம்' மற்றும் "நீக்கா" என்பது 'பாழ்வெளி' என்ற்ற் பொருள்படும். அதாவது பாழ்வெளியில் கப்பல் பயணம் செய்தல்" எனப்பொருள்படும். பண்பாட்டு வள மேலாண்மை பரந்த நோக்கில் பண்பாட்டு வள மேலாண்மை என்பது, கலை மற்றும் மரபு சார்ந்த வளங்களை மேலாண்மை செய்யும் நடைமுறை ஆகும். இது, மரபுவழி மற்றும் வரலாற்றுப் பண்பாட்டுடன் தொல்லியல் சார்ந்த பொருட் பண்பாட்டையும் கனனத்திற்கொள்ளும் பண்பாட்டு மரபு மேலாண்மையையும் உள்ளடக்குகிறது. மரபுவழிப் பண்பாட்டு வடிவங்களை மட்டும் பாதுகாத்து வழங்குவதன்றி, பண்பாட்டு வள மேலாண்மை என்பது, நகர்ப்புறப் பண்பாடு போன்ற முன்னேற்றம் சார்ந்ததும், புதுமை சார்ந்ததுமான தற்காலப் பண்பாட்டையும் தழுவி நிற்கின்றது. எனினும் இச்சொல்லின் இவ்வாறான பரந்த பயன்பாடு அண்மைக்காலத்தில் உருவானது ஆகும். இதனால் இது பெரும்பாலும் மரபு மேலாண்மை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் இச் சொல்லானது, [தொல்லியலாளர்]]களாலும், கட்டிடக்கலை வரலாற்றாளர்களாலும், வரலாற்றுக் கட்டிடக்கலைஞர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தொல்லியல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இடங்களைச் சூழலியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க மேலாண்மை செய்வதைக் குறிக்கவே இச்சொல்லை அவர்கள் ஆளுகிறார்கள். பண்பாட்டு வளங்கள் என்பன, தொல்லியல், கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம் போன்ற இயற்பியல் சொத்துக்களையும், நாட்டார்வழக்கு, கதை கூறல், நாடகம் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. பண்பாட்டு வள மேலாண்மையர்கள் பெரும்பாலும், அருங்காட்சியகங்கள், ஓவியக் காட்சியகங்கள், நாடக அரங்குகள் போன்றவற்றின் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். நாடு அல்லது உலக மட்டத்தில், பண்பாட்டு வள மேலாண்மை என்பது பரந்த நோக்கங்களின் அடிப்படையில் அமையலாம். இவை அழிநிலை மொழிகள், பொதுக் கல்வி, பல்பண்பாட்டிய இயக்கம், பண்பாட்டு வளங்களின் அணுக்கங்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சார்ந்தவையாக அமையக்கூடும். தொல்லியல் பதிவு தொல்லியல் பதிவு ("Archaeological record") என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்சங்களை உள்ளடக்கும் தொல்லியல் சான்றுகளைக் குறிக்கும். கடந்தகாலத்தைப் பகுத்தாய்ந்து மீளுருவாக்கம் செய்ய்வதற்காகத் தொல்லியலாளர் இவற்றைத் தேடிப் பதிவு செய்கின்றனர். முக்கியமாக இவை அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட பொருட்களாக அமைகின்றன. குறிப்பிட்ட தொல்லியல் களம் ஒன்றில் உள்ள தொல்லியல் பதிவு சில வேளைகளில் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) என்றும் அழைக்கப்படுவது உண்டாயினும், இரண்டு சொற்களும் ஒரே பொருள் தருவன அல்ல. தொல்லியல் பதிவு என்பது முழுமையான பொருள் தருவதாக இருக்கிறது. இச்சொல்லை தொல்பொருட்களுக்கும், பிற சான்றுகளான உயிரியல் பொருட்கள் போன்றவற்றுக்கும், அவற்றுடன் இணைந்த தொடர்புகளுக்கும், அடுக்கியல் தொடர்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் தொல்லியல் தொடரியம் என்பதை, அடுக்கியல் ஆய்வினால் அல்லது பிற காலங்கணிக்கும் முறைகளினால் தீர்மானிக்கப்படும் காலவரிசை தொடர்பிலேயே பயன்படுத்த முடியும். தொல்லியல் பதிவுகள் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத தொல்லியல் களங்களை அடக்குகிறது. இது களத்திலேயே பாதுகாக்கப்பட்ட தொல்பொருட்களையும், அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படும் தொல்பொருட்களையும், தொல்லியல் ஆய்வுகள், விளக்கங்கள் தொடர்பான ஆவணங்களையும் உள்ளடக்கும். அறிவுசார் சொத்துரிமை நாள் அறிவுசார் சொத்துரிமை நாள் ("World Intellectual Property Day") ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. "மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்" இந்நிகழ்வு 2001 இல் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் 26 ஆம் நாளிலேயே அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வின் கருப்பொருள்கள்: உள்ளம் உடலும் உள்ளமும் சேர்ந்தே மனிதர் எனப்படுகிறார்கள். மூளை, கண்கள், கைகள், கால்கள், தேகம் என உறுப்புகளை உடல் கொண்டுள்ளது. அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை போன்ற நேரடியாக பொருள்களால் பிரதிநிதிப்படுத்தப்பட்டாத கூறுகளாலானது உள்ளம். உள்ளத்தை தமிழில் மனம் என்றும் சிந்தை என்றும் குறிப்பர். உள்ளம் உள்ளுணர்வையே பெரிது சுட்டுகிறது. அதாவது உள்ளுணர்வு அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை ஆகியவற்றின் கூட்டாக வெளிப்படுகிறது. தற்கால அறிவியலின் படி மூளையே உள்ளத்துடன் இறுகிய தொடர்புடைய உறுப்பு. மூளையின் தொழிற்பாட்டின் விளைவே உள்ளம் அல்லது உள்ளுணர்வு என்ற கருத்தும் உண்டு. அகழ்வாய்வு தொல்லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும். அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு அகழ்வும் கொண்டிருக்கக்கூடிய அதற்கேயுரிய சிறப்பம்சங்கள் தொல்லியலாளர் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. வளம் மற்றும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளினால் தொல்லியலாளர் விரும்பும்போதெல்லாம் அகழ்வாய்வுகளைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அறியப்பட்ட களங்கள் பல வேண்டுமென்றே அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. இவை பிற்கால ஆய்வுகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. சில வேளைகளில் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பின்னர் நடத்தப்படும் ஆய்வுகள் கூடிய பயனுள்ள விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையிலும் அகழ்வாய்வுகளைத் தாமதப்படுத்துவது உண்டு. ஓரிடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை, நிலம் ஊடுருவும் ராடார்கள் போன்ற தொலையுணர்தல் முறைகள் மூலம் ஓரளவு துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும். இம்முறைமூலம் களமொன்றின் வளர்ச்சி குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும். நுணுக்கமான அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு இன்றியமையாதது. அகழ்வாய்வு நுட்பம் முதலில் புதையல் தேடும் முயற்சிகளில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில் இத் துறையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளையும்; அவ்விடம் பிற இடங்களோடும், அவ்விடம் அமைந்துள்ள நிலத்தோற்றத்தோடும் கொண்டுள்ள தொடர்புகளையும், முழுமையாகப் புரிந்து கொள்ள முயலும் ஒரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் வரலாறு தொடக்கத்தில் அரும்பொருள் சேகரிப்பவர்களின் தேவைக்காக அருங்கலைப் பொருட்களைத் தேடியெடுப்பதற்கான ஒரு திருத்தமற்ற முறையாகவே இருந்தது. இத்தகைய தோண்டுதல் நடவடிக்கைகள் பழங்கால மக்கள் தொடர்பான சான்றுகளை அழித்து விடுகின்றன என்பது உணரப்பட்டது. இத்தகைய அரும்பொருட்கள் அவற்றில் சூழலில் இருந்து அகற்றப்பட்டதும், அவற்றில் பொதிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் இல்லாது போய்விடுகின்றன. இப் புரிதலின் அடிப்படையிலேயே அரும்பொருள் சேகரிப்பு என்பது தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்னும் துறையாக வளர்ந்தது. தொல்லியல் பொருட்கள் பெரும்பாலும் ஒருகாலத்தில் அவ்விடங்களிலே குப்பைகளாக விடப்பட்டவையாக இருக்கின்றன. இவை அங்கு அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளினால் அவ்விடத்தில் குவிகின்றன. ஒரு தோட்டக்காரன் பெருக்கிக் குவிக்கும் மண்குவியல், அவன் கற்களைக் கொண்டு அமைக்கும் ஒரு நடை பாதை, பின்னர் அவ்விடத்தில் கட்டப்படும் ஒரு சுவர், இன்னொரு காலத்தில் அங்கு அமையும் ஒரு மாட்டுத் தொழுவம், முன்னர் அமைத்த சுவர் இடிதல் போன்ற ஒவ்வொரு நிகழ்வும் அவ்விடத்திலே ஒரு சூழ்நிலையை விட்டுச் செல்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் அடுக்குகள் பொதுவாகத் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) அல்லது தொல்லியல் பதிவுகள் எனப்படுகின்றன. இத் தொடரியத்தை அல்லது பதிவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமே அகழ்வாய்வு கடந்தகாலத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அடிப்படை அகழ்வாய்வு வகைகள் உண்டு: மில்ட்டன் பிரீட்மன் மில்ட்டன் பிரீட்மன் ("Milton Friedman") (ஜூலை 31, 1912 – நவம்பர் 16, 2006) 20ம் நூற்றாண்டின் அதி முக்கிய பொருளியல் நிபுணர்களில் ஒருவர். இவருக்கு 1976 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இவரின் consumption analysis, monetary history and theory க்கும் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களை விபரித்தற்காகவும் இந்தப் பரிசு கிடைத்தது. இவர் தீவிர திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திரமான ஆரோக்கியமான சமூகத்துக்கு அவசியம் என்று முன்னிறுத்தினார். இவரே 70கள், மற்றும் 80களில் தென் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். அர்ஜென்டினாவின் பொருளாதார வீழ்ச்சி, சிலியின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக னொமி கிளைனின் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார். இவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, இந்தியாவை உதாரணம் காட்டி, அது எப்படி பிரித்தானியாவுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையோடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார். மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் (1920க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும். கொலம்பியா பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் ("Columbia University") ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகம் ஆகும். ஐவி லீக் என்ற பிரபலமான பல்கலைக்கழக குழுமத்தில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் நடு ஆசியா மற்றும் ஆசிய மொழிகளும் பண்பாடுகளும் துறை தமிழ் கற்பதற்கு ஏற்பாடுகள் கொண்டுள்ளது. விண்டோசு 7 விண்டோசு 7 ("Windows 7") எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக "பிளாக்கோம்பு" ("Blackcomb") எனவும் "வியன்னா" ("Vienna") எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது ஒக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது. விண்டோசு 7 இன் வரலாற்றுப் பாதையில் பல்வேறு மைல்கல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மைல்கல் 1 இல், விண்டோசின் மின்வின் "கருனி" (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது. மின்வின் எனப்படும் கருனி (கெர்னல்) கொண்டு உருவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மைல்கல் ஒன்றில் பார்த்ததால் இப்படி கூறுகிறார்கள். ஐஃபோன் போன்று தொடுவிசை (டச்) வசதி கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுணர் திறனும் (Speech Recognition) கையெழுத்துணர் திறனும் போன்று நிறைய செய்ய இருப்பதாக மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார். தொலையுணர்தல் பரந்த பொருளில் தொலையுணர்தல் (Remote Sensing) என்பது, பொருள் அல்லது தோற்றப்பாடு ஒன்றுடன் நெருக்கமான தொடர்பு எதுவும் இல்லாமலேயே தொலை தூரத்திலிருந்து அது பற்றிய தகவல்களைத் திரட்டுதலைக் குறிக்கும். இது பொதுவாக வானூர்திகள், விண்கலங்கள், செய்மதிகள், கப்பல்கள் போன்றவற்றில் இருந்து செய்யப்படுகின்றது. நடை முறையில், பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது இடத்துக்கு அப்பால் இருந்து, அது பற்றிய தகவல்களைத் திரட்டுவது தொலையுணர்தல் எனப்படுகின்றது. ஆகவே, புவி அவதானிப்பு மற்றும் வானிலைச் செய்மதிச் சேகரிப்பு மேடைகள், கடல் மற்றும் வளி மண்டல அவதானிப்பு மேடைகள், உயரொலி முறை மூலம் கருத்தரிப்பை அவதானித்தல் போன்றன எல்லாம் தொலையுணர்தலுக்கான எடுத்துக் காட்டுகள் ஆகும். எனினும் இச்சொல்லின் தற்காலப் பயன்பாடு, பொதுவாகப் படவாக்க உணர் நுட்பங்களைப் பயன்படுத்துவதையே குறிக்கிறது. இங்கு வானூர்திகள், விண்கங்கள், செய்மதிகள் அல்லது வேறிடங்களில் பொருத்தப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. மருத்துவப் படவாக்கம் போன்ற பிற படவாக்கத் துறைகள் இதிலிருந்தும் வேறுபட்டவையாகவே கருதப்படுகின்றன. தொலையுணர்தலில், நேரடித் தொலையுணர்தல், மறைமுகத் தொலையுணர்தல் என இரு வகைகள் உண்டு. மறைமுகத் தொலையுணர்தலில், உணரிகள், பொருளினால் வெளிவிடப்படும் அல்லது தெறிக்கப்படும் இயற்கைக் கதிர்வீச்சை உணர்ந்தறிகின்றன. மறைமுக உணரிகளால் உணரப்படும் மிகப் பொதுவான கதிர்வீச்சு சூரிய ஒளி ஆகும். சாதாரண நிழற்படக் கருவிகள், அகச்சிவப்புக் கதிர்க் கருவிகள், ரேடியோமானிகள் என்பன மறைமுகத் தொலையுணரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். நேரடித் தொலையுணர்தலில் கருவிகள் தாமே கதிர்வீச்சை வெளியிட்டுப் பொருட்களையும், இடங்களையும் துருவுகின்றன. ராடார்கள் நேரடித் தொலையுணர்தலுக்கு எடுத்துக்காட்டு ஆகும். 1521 1521 (MDXXI) ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1520கள் 1520கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1520ஆம் ஆண்டு துவங்கி 1529-இல் முடிவடைந்தது. எழுத்து (இலக்கணம்) தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து ("letter") என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது. சிவாய சுப்பிரமணியசுவாமி சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி ("Sivaya Subramuniyaswami", ஜனவரி 5, 1927, கலிபோர்னியா - நவம்பர் 12, 2001, ஹவாய்), ஆங்கிலேயராகப் பிறந்த இந்து சமய அமெரிக்க ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 1970களில் ஹவாயில் கௌவாஹி ("kauai") தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" ("Hinduism Today") என்ற ஆங்கில மாதிகையை வெளியிட ஆரம்பித்தார். இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயராகப் பிறந்து இந்துவாக வாழ்ந்தவர். இவருக்கு அடுத்த சிவ சித்தாந்த யோக மரபு குரு சத்குரு போதிநாத வேலன்சாமி ஆவார். இவரே இன்று கௌவாஹி ஆதீனத்தை ஏற்று நடத்துகிறார். தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை, 2001 தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (சிங்களம்: "ஹீனி கல", ஏப்ரல் 25, 2001 - ஏப்ரல் 27, 2001) என்பது இலங்கை அரசபடையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அளவிலான இராணுவ (படைத்துறை) நடவடிக்கையாகும். ஏற்கனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ 20,000 இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி 6 கிமீ அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம் கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கிமீ வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது. புலிகள் பீரங்கிகள் கொண்டு இராணுவத்தினரைத் தாக்கினர். 3 நாள் சண்டையிலும் களத்திற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. இலங்கை வான்படையும் இத்தாக்குதலில் இணைந்திருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீரங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல் பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. புலிகளின் இராணுவ எதிர்ப்புச் சமரில் வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்களே. அவர்கள் காயமுற்றோரையும் போராளிகளையும் வாகனங்களில் ஏற்றி இறக்கினார்கள். இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கியது. 3 நாட்களில் ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் பின்வாங்கியது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ஏப்ரல் 27, 2001 இல் முடிவுக்கு வந்தது. இந்த எதிர்ப்புச் சமரில் களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு உருகுதல் உருகுதல் என்பது ஒரு பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம நிலைக்கு மாறும் ஒரு செயற்பாடு ஆகும். திண்மப் பொருளொன்றின் உள் ஆற்றல், பொதுவாக, வெப்பம் ஊட்டப்படுவதன் மூலம் ஒரு குறித்த வெப்பநிலைக்குக் கூட்டப்படும்போது, அது நீர்மமாக மாறுகின்றது. மேற்சொன்ன குறித்த வெப்பநிலை உருகுநிலை எனப்படுகின்றது. உருகுநிலை பொருளொன்றின் இயல்புகளுள் ஒன்றாகும். மறு திசை நிலைமாற்றம் அதாவது, நீர்ம நிலையிலிருந்து திண்மநிலைக்கு மாறுதல் உறைதல் எனப்படும். உறைதல் நிகழும் வெப்பநிலை உறைநிலை ஆகும். ஒரு பொருளின் உறைநிலையும், உருகுநிலையும் ஒரே வெப்பநிலையில் அமையும் என்பதில்லை. மீக்குளிர்வு (supercooling) எனும் தோற்றப்பாடு இதற்கு ஒரு சான்றாகும். மிகவும் தூய்மையான கண்ணாடி மேற்பரப்பில் இருக்கும் நீரை, அது உறையா வண்ணம் உருகு நிலைக்குப் பல பாகைகள் கீழாகக் குளிர்விக்க முடியும். இதன் காரணமாக உருகுநிலையைப் போல் உறைநிலை பொருளொன்றின் சிறப்பியல்பாகக் கொள்ளப்படுவதில்லை. மீக்குளிர்வு மீக்குளிர்வு (Supercool) என்பது, ஒரு நீர்மத்தை அது திண்மம் ஆகாமல் அதன் உறைநிலைக்குக் கீழ் குளிர்விக்கும் ஒரு செயற்பாடு ஆகும். இவ்வாறு அதன் உறைநிலைக்குக் கீழ் குளிர்விக்கப்படும் ஒரு நீர்மத்தில் சிறு பளிங்கு ஒன்று இடப்படும்போது அதனைச் சுற்றிப் பளிங்கு அமைப்பு உருவாகின்றது. இவ்வாறான ஒரு பளிங்குக் கரு இல்லாவிட்டால், ஓரகத் திண்மநிலை (homogeneous nucleation) ஒன்று எட்டும் வெப்பநிலை வரை அது நீர்ம நிலையிலேயே இருக்கும். நீரின் உறைநிலை 273.15 K (0 °C அல்லது 32 °F) ஆகும். ஆனால் நீரை அது ஓரகத் திண்மமாகும் வரை ஏறத்தாழ 231 K (−42 °C) வெப்பநிலைவரை நீர்மநிலையிலேயே மீக்குளிர்விக்க முடியும். மாவீரர் துயிலும் இல்லம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமும், மட்டு - அம்பாறையில் 18 சதவீதமும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 சதவீதமும் உள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணிஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும். இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன. டி. எம். தசநாயக்க டி. எம். தசநாயக்க ("Dassanayake Mudiyanselage Dassanayake", 29 ஏப்ரல் 1953 – 8 சனவரி 2008) இலங்கை, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசக் கட்டுமான அமைச்சரும் ஆவார். கொழும்பின் புறநகரான ஜா-எலவில் 2008 சனவரி 8 அன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவருடன் சென்ற 6 படையினர் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதல் ஜா-எலவில் உள்ள முன்னாள் சிங்கள நடிகை ருக்மணி தேவியின் சிலையினை அண்மித்த பகுதியில் முற்பகல் 10:45 மணிக்கு இடம்பெற்றது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் தசநாயக்க ராகமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 12:30 மணிக்கு உயிரிழந்தார். இறக்கும் போது இவரது வயது 54 ஆகும். தொடர்ந்து அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும், வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனர். பூநகரி மீதான எறிகணை வீச்சு, ஜனவரி 2008 கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சில் இரு பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு, மாலை 6:40 மணியளவில் நடந்த இச்சம்மபவத்தில் மாட்டு வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான துரைசாமி தெய்வேந்திரம் (வயது 37) மற்றும் மார்க்கண்டு பாலசிங்கம் (வயது 67) இருவரும் கொல்லப்பட்டனர், இவர்களை ஏற்றிச் சென்ற மாடும் இறந்து மக்கள் குடியிருப்புக்கள் பலவும் சேதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. எரிவளிச் சுழலி எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் நீராவிச்சுழலியை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே: சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே இயற்கை எரிவளி போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களைச் சுழலியினுள் செலுத்தி, அதன் தகடுகளால் வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு வேலை செய்யப் பயன்படுத்திச் சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு மின்னாக்கியைப் (electrical generator) பயன்படுத்தி மின்னாற்றல் உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எரிவழிச் சுழலியின் எளிய வரைபடத்தைப் பார்க்கவும். சோழ அரசாங்கம் கிபி 850 லிருந்து கிபி 1200 வரையிலான சோழர்களின் ஆட்சியானது பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்கும் உரியவர்கள் சோழர்கள். இக்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. சங்க காலத்தில் இருந்து வழங்கிவருவதாக அறியப்பட்ட மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர். முனைய துணைக்கோள் ஏவுகலம் முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி., "Polar Satellite Launch Vehicle", "PSLV") என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான "இஸ்ரோ" ("ISRO") வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்விரிசினால் 1600-கிகி நிறையுடைய துணைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு துருவப்பாதையிலும் 1050-கிகி நிறையுடைய துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும். பி. எஸ். எல். வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது; செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பி.எஸ்.எல்.வி - சி11 சந்திராயனை விண்ணில் செலுத்தப் பயன்பட்டது. இவற்றின் மூலம் 1994 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 38 முறை செலுத்தப்பட்டதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று 121 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன, இவற்றுள் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினுடையதும், 42 இந்தியாவிற்குச் சொந்தமானதும் ஆகும். கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை அல்லது கவுலூன்-கான்டன் தொடருந்துச் சேவை ("Kowloon-Canton Railway", KCR; சீன மொழி: 九廣鐵路) ஹொங்கொங்கில் உள்ள ஒரு தொடருந்துச் சேவையைக் குறிக்கும். 1911ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஹொங்கொங்கில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டத் தொடருந்து சேவையாகும். இதனை 2007 டிசம்பர் 2 ஆம் எம்.டி.ஆர் தொடருந்து கூட்டுத்தாபனம் தமது சேவையுடன் இணைத்துக்கொண்டது. அத்துடன் கே.சி.ஆர் எனும் பெயர் எம்.டி.ஆர் என்றாகிவிட்டது. அத்துடன் "கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை" உடன் இருந்த புதிய குடியிருப்பு நிர்வாகப் பகுதிகளில் சேவையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலகுரக தொடருந்து சேவையினையும், கே.எம்.பி பேருந்து சேவையும் தற்போது எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம் தமதாக்கிக்கொண்டது. தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள் நேரடி சமூக சேவை (சனசமூக நிலையம்), ஆபத்துதவி (தமிழர் புனர்வாழ்வுக் கழகம்), தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு நோக்குகளுடன் தமிழ்ச் சூழலில் தன்னார்வலர் திட்டங்களும் அவற்றை செயற்படுத்தும் அமைப்புகளும் இயங்கி வருகின்றன. தற்போது இவற்றுக்கிடையே synergy குறைவு, இருப்பினும் ஆங்காங்கே சில முயற்சிகள் உள்ளன. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தகவல் தொடபாடல் இணையப் புரட்சி தொழிற்துறை உற்பத்தி முறைகளை பெரிதும் மாற்றியமைத்திருக்கிறது. முன்னர் பெரும் நிறுவனங்களே நாளிதழ் நூல்கள் வெளியிடுவதோ, இசை ஆக்குவதோ, இயங்குபடம் ஆக்குவதோ, மென்பொருள் ஆக்குவதோ, ஆராய்ச்சி செய்வதோ சாத்தியமாக இருந்தது. புரட்சிக்குப் பின்னர் பலர் கூட்டாகச் சிறுகச் சிறுகப் பங்களித்து ஒரு பெரும் திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமாகியது. விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் (இலத்தீன்:adolescere : வளர்ச்சி நிலை) என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது.. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே கருதப்படுகிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல்ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக உள்ளது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம் மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாகும். பாறைநெய் தூய்விப்பாலை பாறைநெய் தூய்விப்பாலை ("Petroleum Refinery") என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் கரட்டுப் பாறைநெய்யைக் கன்னெய் (பெட்ரோல் அல்லது gasoline), மண்ணெய், டீசல், எரிநெய், எரிவளி முதலான பயனுள்ள பல புதுக்குகளாகப் பிரித்தெடுக்கும் ஒரு ஆலையாகும். நிறையப் புழம்புகளில் (குழாய்களில்) வெவ்வேறு பாய்மங்களைப் பல்வேறு வேதிச்செலுத்த அலகுகளுக்கு ("chemical processing units") இடையே செலுத்தித் தூய்விக்கும் இந்த ஆலை மிகவும் பரந்துபட்ட இடத்தில் அமைந்திருக்கும். நேரடியாக நிலத்தடியில் இருந்து கிடைக்கும் பாறைநெய்யைத் தூய்விக்காமல் அப்படியே பெரிதும் பயன்படுத்த முடியாது. குறை பிசுக்குமையும் குறைந்த கந்தகமும் கொண்ட சில எண்ணெய்களை அப்படியே நீராவி வாகனங்களின் உந்தத்திற்கு எரிபொருளாய்ப் பயன்படுத்த முடிந்தாலும், அதிலே கலந்திருக்கும் வளிமங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதால் அவற்றை அப்படியே பயன்படுத்த இக்குகள் உள்ளன. இதனாலும், பிற காரணங்கள் சிலவற்றாலும் எண்ணெய்யைத் தூய்வித்து அதனைப் பல பயனுள்ள நிலையான புதுக்குகளாய்ப் பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்துத் தூய்வித்த பொருட்களை எரிபொருட்களாகவும், பக்க விளைவாய்க் கிடைக்கும் பொருட்களைப் பிற வேதிப்பொருட்கள் உருவாக்க ஆரம்பப் பொருட்களாகவும் கொள்ளலாம். பாறைநெய் நூற்றுக்கணக்கான நீரியக்கரிமங்களின் கலவையாக இருந்தாலும், அவை வெவ்வேறு கொதிநிலை கொண்டவையாக அமைந்திருப்பதால் காய்ச்சிவடித்தல் அல்லது துளித்தெடுப்பு (distillation) முறையில் இவற்றைப் பிரித்தெடுக்கலாம். இந்நீரியக்கரிமங்கள் மூலக்கூறு அமைப்பில் ஒன்றையடுத்து ஒன்று அதிக நீளம் கொண்டவையாக இருக்கும். அவற்றின் நீளத்திற்குத் தக்கவாறு கொதிநிலையும் முறையே அதிகமாகியவண்ணம் இருக்கும். இந்தக் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு ஒவ்வொரு குறிப்பிட்ட நீரியக்கரிமக்கலவையையும் காய்ச்சி வடித்துப் பிரிக்க முடியும். எடைகுறைந்த நீர்ம நீரியக்கரிமப்பொருட்களே (liquid hydrocarbons) வாகன எரிபொருளாக உள்ளெரிப்பு எந்திரங்களில் பயன்படுவதால், அவற்றிற்கான தேவை அதிகமாக இருக்கிறது. அதனால், பெரும்பாலான இன்றைய தூய்விப்பாலைகள் கனமான நீரியக்கரிமங்களையும் எடைகுறைந்த வளிமங்களையும் அதிக மதிப்புக் கொண்ட நீர்ம எரிபொருட்களாய் மாற்றுகின்றன. தூய்விப்பாலைகளின் இன்றியமையாமையை உணர பாறைநெய்யைப் பகுத்து அவை உருவாக்கும் முக்கியமான பொருட்களில் சிலவற்றைக் காணவேண்டும். அவை தூய்விப்பாலையில் பொதுவாகக் காணப்படும் செலுத்த அலகுகளில் (process units) சில: நிலத்தடியிலோ கடலடியிலோ கண்டுபிடிக்கப்பட்டு, துளை பொறிகளால் குடைந்தெடுக்கப்பட்ட கரட்டு நெய் அக்கிணற்றுவாய்களில் இருந்து புழம்புவரிசை மூலமோ கப்பல்கள் மூலமோ தூய்விப்பாலைகளுக்குக் கொண்டுவரப்படும். சேமிப்புத் தாங்கல்களில் (tanks) நிறைத்து வைக்கப்படும் இந்தக் கரட்டு நெய்யைப் பிறகு சுத்தம் செய்து, பிரித்தெடுத்து, நுகர்வோருக்குப் பயனுள்ள வெவ்வேறு பொருட்களாய் மாற்றிச் சந்தைக்கு அனுப்புவர். தூய்விப்புச் செலுத்தங்களைப் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை: கரட்டு நெய்யில் கலந்திருக்கும் பல்வேறு மூலக்கூறுகளைப் பிரித்து எடுப்பது முதல் படி. நெடிந்துயர்ந்த துளித்தெடுப்புக் கோபுரங்களில் (distillation towers) வெப்பம் ஏற்றி கொதிநிலை வேறுபாட்டு அடிப்படையில் வெவ்வேறு கூறுகள் தனித்தனியே பிரித்து எடுக்கப்படும். இதற்காக வரிசையாகப் பல துளித்தெடுப்புக் கோபுரங்கள் பயன்படுத்தப்படும். ஒரு கோபுரத்தின் அடியில் இருந்து வெளியேறும் கனமான கூறு அடுத்த கோபுரத்தினுள் செலுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் எரிகலன்களில் (furnace) சூடுபடுத்தப்படும் கரட்டு நெய்யின் ஒரு பகுதி ஆவியாக மாறும். இந்த ஆவியும் நீர்மமும் சேர்ந்த கலவை கோபுரத்தினுள் அனுப்பி வைக்கப்படும். உள்ளீட்டு அல்லது ஊட்டுவாய் அருகே தான் அதிக வெம்மையாக இருக்கும். அந்த வெப்பநிலையில் நீர்மமாக இருக்கும் பகுதி கோபுரத்தின் கீழே செல்லும். ஆவியாக இருப்பவை மேலே செல்லும். மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அந்தக் குறைகின்ற வெப்பத்திற்கேற்ப சில கூறுகள் மீண்டும் நீர்மமாகும். இவ்வாறு வெவ்வேறு கூறுகளாகப் பிரிவனவற்றைப் பக்கவாட்டில் இருந்து வெவ்வேறு உயரங்களில் வெளியே எடுப்பதன் மூலம் கரட்டு நெய்யைப் பிரிக்கலாம். இதிலே வளிமங்கள் கோபுரத்தின் உச்சியிலும், தார் முதலிய அதிகப் பிசுக்குமை உள்ள பொருட்கள் கோபுரத்தின் அடியிலும் கிடைக்கும். இவ்வாறு பிரிக்கப்படும் கூறுகள் பெரும்பாலும் இன்னும் ஒரு முடிவுறா நிலையிலேயே இருக்கும் என்பதால் மேலும் சில செலுத்தங்களுக்குட்படுத்தப்பட்டு அதன் பிறகே சந்தைக்கு அனுப்பி வைக்கப்படும். பிரித்தல் முறைகள் மூலம் கரட்டு நெய்யைப் பகுத்து அதன் வெவ்வேறு கூறுகளாகப் பிரித்த பின்னும் அவற்றை அப்படியே பயன்படுத்துவது சிரமமானது. அதற்குப் பெருந்தடையாய் இருப்பது அந்தக் கூறுகளில் இயற்கையாக கன்னெய்யின் அளவு மிகவும் குறைந்தும், கன நெய்யின் (heavy oil) அளவு மிகவும் அதிகமாகவும் இருப்பதே. கன நெய்யின் மதிப்பு மிகவும் குறைவே. அந்தக் குறை மதிப்புள்ள எண்ணெய்யை அதிக மதிப்புள்ள கன்னெய்யாக மாற்றல் செலுத்தங்கள் (conversion processes) மூலம் மாற்றுவது இன்றியமையாதது. தூய்விப்பாலையின் பெரும்பாலான பொருட்கள் கரிமம் (கார்பன்), நீரியம் (ஹைட்ரஜன்)ஆகியவற்றால் ஆன சங்கிலிகளால் கட்டப்பட்டவையே. இந்தச் சங்கிலியின் நீளத்தைப் பொருத்து ஒரு புதுக்கு இலகுவானதாகவும் கனமானதாகவும் ஆகிறது. மிகவும் நீண்ட கரிம-நீரியச் சங்கிலிகளால் ஆன மூலக்கூறுகள் கனமானவையாக இருக்கும். அந்தச் சங்கிலிகளை நறுக்கி சிறிய சங்கிலித்தொடர்களாக மாற்றுவதை ஒத்ததே வேதி மாற்றல் செலுத்தங்கள். மூன்று வகையான மாற்றல் செலுத்தல்ங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை, முறையே: என்பனவாகும். இந்த உடைத்தல் மாற்றங்கள் தவிர, சில சமயம் சங்கிலிகளின் வடிவத்தை மாற்றிச் சீராக அமைக்க வேண்டியிருக்கும். அல்லது, சிறு சங்கிலிகளைப் பிணைத்துத் தேவையான நீளத்திற்கு மாற்றித் திருத்த வேண்டியிருக்கும். எரிபொருள் செலுத்தங்களான இவற்றுள் பரவலானவை இரண்டு. அவை, இந்த மாற்றல் செலுத்தங்கள் அனைத்திலுமே சிறப்புவாய்ந்த வினையூக்கிகள் அவசியமானவை. ஹோ சி மின் நகரம் ஹோ சி மின் நகரம் ("Ho Chi Minh City", வியட்நாமிய மொழி: Thành phố Hồ Chí Minh) என்பது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். 17ம் நூற்றாண்டில் வியட்நாமுடன் இணைக்கப்படும் வரை இந்நகரம் கெமர் மொழியில் "பிறே நொக்கோர்" என்ற பெயரில் கம்போடியாவின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. இது பின்னர் சாய்கோன் என்ற பெயரில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான கோச்சின்சீனாவின் தலைநகராக விளங்கியது. 1954 முதல் 1975 வரையில் தென் வியட்நாமின் தலைநகராக இருந்தது. மே 1, 1975 இல், சாய்கோன் அதன் அயல் மாகாணமான 'கியா டின்' உடன் இணைக்கப்பட்டு வியட்நாமியக் கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் அவர்களின் நினைவாக "ஹோ சி மின் நகரம்" எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் நகரின் குடிமக்கள் பலரால் இன்னமும் இது "சாய்கோன்" என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நகரின் நடுப்பகுதி சாய்கோன் ஆற்றுக் கரையில் உள்ளது. தென் சீனக் கடலில் இருந்து தூரத்திலும் வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் இருந்து தூரத்தில் உள்ளது. மையம் (ஹொங்கொங்) மையம் (Central) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தை "மையம்" என்று அழைப்பதற்கான பிரதானக் காரணம், ஹொங்கொங் பிரித்தானியர் குடியேற்றநாடாக இருந்தக் காலத்தில், இந்நகரம் ஹொங்கொங்கின் பிரதான வணிக மையமாக திகழ்ந்ததே ஆகும். இருப்பினும் இன்று "மையம்" என அழைக்கப்படும் இந்த நகரம் முன்னாள் விக்டோரியா நகரம் என்றழைக்கப்பட்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ட்ரல் சென்ட்ரல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: சிந்தோ சிந்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும்(சின் - கடவுள், தோ-வழி). இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது. ஓல்க்கான் அல்ஹோன் அல்லது அல்கோன் (, ) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ). நாளிதழ் நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு. கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார்.கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி.1550-இல் அறிமுகம் செய்துவைத்தனர்.அதன்பின்,1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக The Weekly News வெளியிடப்பட்டது.பின்,London Gazetteer என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது. இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது.இந்தியாவில் 1780-இல் Bengal Gazetteer,1789-இல் Indian Gazetteer போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன.தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்'வெளிவந்தது.பிறகு,1853-ஆம் ஆண்டில் தின வர்த்தமானி என்னும் தமிழ் வார இதழ் வெளியானது.கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள்,வார,மாத இதழ்கள் வெளிவர தொடங்கின. தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இதழ்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு: 1882-சுதேசமித்திரன்&ஞானபானு-வ.உ.சிதம்பரம் பிள்ளை&சுப்பிரமணிய சிவா 1906-சர்வஜனமித்திரன்-வேதமூர்த்தி முதலியார் 1907-இந்தியா-சுப்பிரமணிய பாரதியார் 1917-திராவிடன்,தேசபக்தன்,நவசக்தி-திரு.வி.கல்யாணசுந்தரனார் 1917-பாலபாரதி-வ.வே.சுப்பிரமணிய ஐயர் 1920-தமிழ்நாடு-வரதராஜுலு 1930-ஆனந்த விகடன்-எஸ்.எஸ்.வாசன் 1933-மணிக்கொடி-பி.எஸ்.ராமையா 1934-தினமணி- 1936-விடுதலை-பெரியார் ஈ.வே.ரா. 1937-ஜனசக்தி-ப.ஜீவானந்தம் 1940-கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி 1942-தினத்தந்தி-சி.பா.ஆதித்தனார். 1963 - தீக்கதிர் பொதுவாக ஒரு பத்திரிகையானது நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. அவையாவன, அச்சில் வெளிவரும் நாளிதழ்கள் காலமுறையில் இரண்டாகப் பகுக்கப்படுகின்றன. காலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "காலை நாளிதழ்" என்றும் மாலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "மாலை நாளிதழ்" என்றும் அழைக்கப்படுகின்றன. -இவைகளை முன் பணியறை, பின் பணியறை, செய்தி அறை என்றும் அழைப்பதுண்டு. ஆசிரியப் பிரிவு கீழ்காணும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. வணிகப் பிரிவு கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. எந்திரப் பிரிவு கீழ்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. நாளிதழ்களின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக இந்தப் பகுதி செயல்படுகிறது. இவை விளம்பர முறையைப் பின்பற்றி நாளிதழின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வாசகர்களைக் கவரவும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. நாளிதழ் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்து அதன் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வெளிநாடுகளில் இப்படி புள்ளி விபரங்களைச் சேகரித்து வகைப்படுத்தி தொகுத்து வைப்பதற்காகத் தனிப்பகுதியை வைத்துள்ளனர். (தற்போது கணினி வழியாக புள்ளி விபரங்கள் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றனர்.) நாளிதழின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவை நாளிதழின் உரிமையாளர் தலைமை ஏற்று நடத்துகிறார். இப்பிரிவில் பல நிர்வாக அதிகாரிகள் இருப்பார்கள். நாளிதழின் கொள்கையின்படி அனைத்துத் துறையினரும் செயல்படுகிறதா என இப்பிரிவில் கண்காணிக்கப்படுகிறது. 1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தது. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையை பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் கி. பி. 1987ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டு நாளிதழே மக்கள் சார் மின் நாளிதழை இணையத்தில் வெளியிட்டது. மின் நாளிதழ்கள் நடத்தும் நிறுவனங்கள் சில தினசரி நாளிதழ்களையும் சேர்த்தே வெளியிடுகிறது. சில நிறுவனங்கள் மின் நாளிதழ்களை மட்டுமே வெளியிடுகின்றன. நாளிதழ்கள் ஒரு ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நாளிதள்களை உருவாக்குவதில் ஈடுபடும் தொழிலை ஊடகவியல் என அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் மஞ்சள் பத்திரிகை யுகத்தில் அமெரிக்காவில் வெளியான பல நாளிதழ்கள் மக்களை கோபமூட்டும், கிளர்ச்சியூடும் செய்திகளைக் கொண்டு வெளிவந்தன. 1)செய்திகளை மக்களுக்கு அறிவித்தல். 2)மக்களை நல்வழிப்படுத்துதல். 3)மக்களை மகிழ்வித்தல். 4)சந்தைப்படுத்தி வியாபாரம் புரிதல். 5)நடுவுநிலை தவறாமை. 6)பண்பாட்டைப் பேணிக்காத்தல். 7)அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 8)கல்வி,வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல். 9)மொழியுணர்வை ஊட்டுதல். 10)நாட்டுப்பற்றை வளர்த்தல். முதலான பல்வேறு பணிகள் நாளிதழ்களுக்கு உள்ளன. போன்ற வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் நாளிதழ் செய்திகளாகின்றன. செய்திக்கான கட்டமைப்புகள் மூவகைப்படும். அவையாவன: 1.தலைப்பு 2.முகப்பு 3.உடற்பகுதி 1.ஆசிரியர் 2.செய்தி ஆசிரியர் 3.துணை ஆசிரியர்கள் தினமணி, தினகரன், தினத்தந்தி, The Hindu போன்றவை காலை இதழாகவும் மாலைமலர், மாலைமுரசு தமிழ் முரசு முதலானவை மாலை இதழாகவும் வெளிவருகின்றன. எனவே, இவ்விதழ்களின் அமைப்பு இதழ்கள் உருவாக்கத்தில் இன்றியமையாததாக உள்ளது. நாளிதழ்களின் அமைப்பை அதன் அளவு, பக்கம், விலை முதலியன கட்டமைக்கின்றன. பெரிய அளவில் இருப்பதுடன் இதழின் முதல் பக்கம் தலையாயதாக விளங்குகிறது.மேலும், இதழின் பெயர்,வெளிவரும் நாள்,அதன் விலை முதலியனவும் இதற்கு முக்கியமானதாக இருக்கின்றன. நாளிதழின் உள்ளடக்கமும், வார, மாத இதழ்களின் உள்ளடக்கமும் வேறானவையாக அமைகின்றன. மேலும் நாளிதழில் வலப்பக்கம் இடம்பெறும் செய்தி முக்கியமானதாகவும், பணம் அதிகம் தரும் செய்தியாகவும் அமைகின்றது. இன்னும் தெளிவாக அறிய வேண்டுமானால் நாளிதழின் உள்ளடக்கத்தைக் கீழ்க்காணுமாறு சொல்லலாம். (1) செய்தி முன்னுரை (2) செய்தித் தலைப்பு (3) தலைப்பின் வகைகள் (4) தலைப்பெழுத்து வகைகள் (5) தலைப்பின் பயன்கள் செய்தி இதழ்களில் இடம் பெறும் செய்திகள் அனைத்தையும் படித்துவிட இயலாது. காலக் குறைவு, ஆர்வமின்மை காரணமாகப் பல செய்திகள் படிக்க இயலாமல் போகும். அதனால் செய்தியைச் சுருக்கமாகத் தருவதே செய்தி முன்னுரை (Lead) ஆகும். இச்செய்தித் தொடக்கத்தைப் படித்த பின், தேவை ஏற்படின் அதன் செய்தித் தொடர்ச்சியினை மக்கள் படித்துக் கொள்வார்கள். தேவையில்லாத அல்லது தமக்கு ஆர்வமில்லாத செய்தியைத் தலைப்பை மட்டும் வாசித்து, விட்டுவிடுவார்கள்.இவ்வாறு தேர்வு செய்வதற்கு, தலைப்புக்குப் (Heading)பின் வரும் இந்த செய்தி முன்னுரை முக்கியமானதாக உள்ளது. எடுத்துக்காட்டு : பிளஸ் 2 தேர்வில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி செய்திப் பகுதிக்குத் தலைப்பு முக்கியமானதாகும்.வேகமாக வாசிப்போருக்கு இந்தத் தலைப்புகள் மிக்க பயன் உடையனவாக அமையும்.ஆதலால், செய்தித் தலைப்புகள் துல்லியமாகவும், ஆர்வம் ஊட்டக் கூடியதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருத்தல் அவசியம். தலைப்புகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை, (1) தலைமைத் தலைப்பு, (2) செய்தித் தலைப்பு. தலைமைத் தலைப்புகள் அரசியல் மாற்றம், போர், இயற்கை நிகழ்வு, பெரிய விபத்துகள், திடீர்த் திருப்பங்கள், அரசின் புதிய திட்டங்கள், உடன்படிக்கைகள், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலானவற்றை உள்ளடக்கியதாக அமையும். ஏனைய செய்திகளின் தலைப்புகள் செய்தித் தலைப்பு எனப்படும். தலைப்புகள் செய்திகளை வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டுகின்றன.அத்துடன் இவை அச்சடிக்கப்படும் எழுத்தின் அளவும் செய்தித்தாள் வாசிப்பில், விற்பனையில் முக்கிய இடம் வகிக்கின்றன. மிகப் பெரிய எழுத்துகளில் வரும் தலைப்புகள்,தினத்தந்தி மாலைமுரசு, மாலைமலர் ஆகியவற்றில் காண முடியும். எழுத்தின் அளவை செய்திகளின் முக்கியத்துவம் நிர்ணயிக்கின்றது. தலைப்புகள் பல்வேறு வகையில் உருவாக்கப்படுவதால் உண்டாகும் பலன்கள் அதிகம்.அவையாவன: வாரியாக வெளியிடப்படுகின்றன.எனவே அந்தந்த மாவட்டங்களின் செய்திகள் அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும் இதழ்களில் முக்கியச் செய்தியாக அமைகின்றன.மேலும் மாநிலச் செய்திகள், மாநகரச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்,திரைப்படச் செய்திகள்,வணிகச் செய்திகள்,இலக்கிய செய்திகள் முதலியனவும் நாளிதழின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் ஈர்ப்பை மக்களிடம் ஏற்படுத்த விளைகின்றன. தலையங்கம் மூன்று பகுதிகள் கொண்டதாக அமையும்.அவை, (1)கருப்பொருள் (2)விளக்கம் (3)முடிவு என்பதாகும். தலையங்கமானது கூறவிருக்கும் செய்தி அடிப்படையில் தலைப்பு அமைத்தல், அதற்கான கருப்பொருளை உருவாக்கல், அதனை விளக்கிக் கூறல்,அதற்கு விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலையோடு முடிவு கூறல் என்பதாக இருக்கும். அவை திறனாய்வு முறையிலும்,கருத்து பற்றிய தீர்வினை நடுநிலையுடன் வெளியிடுபவையாகவும் அமையும். தலையங்கம் ஆசிரியரின் கொள்கையையும் சமூக நோக்கையும் தெளிவாக உணர்த்துவதாகக் காணப்படும். தலையங்கம் ஏதேனும் ஒரு தலைப்பை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுவதாகும். பொதுவாக,தலையங்கம் நிகழ்கால நடப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. உதாரணத்திற்கு சில தலையங்க தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன: "பழைய புத்தகங்களுக்கும் உயிருண்டு" "வேண்டாம் இந்த விபரீதம்" "KARNAN CLOUD HANGS OVER COLLEGIUM SYSTEM" தலையங்கம் அமையும் இடம் என்பது முக்கியமானதாகும். பொதுவாக நாளிதழ்களில் தலையங்கம் இரண்டாம் மற்றும் நடுப்பக்கத்தில் அமைக்கப்பெறும். தலையங்கம் ஆசிரியர் எழுதும் பகுதி என்பதால் ஓர் இதழின் உண்மைத் தன்மையை நிறுவும் பகுதியாக இருக்கிறது. தலையங்கத்தை விரும்பிப் படிக்கும் போக்கு உள்ளது.அதனால் தலையங்க அமைவிடத்தைத் தொடக்கத்தில் அல்லது நிலையாகக் குறிப்பிடுவது நல்லது. தலையங்கம் இல்லாமல் வெளிவரும் நாளிதழ்கள் படிப்போரின் கவனத்தை ஈர்ப்பதில்லை. 1.கீற்று இணையதளம். 2.முனைவர் பாக்யமேரி, தமிழ் இலக்கிய வரலாறு (வகைமை நோக்கு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98,ஜூலை-2008. 3.முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14 ஜூலை-2010. 4.தமிழ் இணையப் பல்கலைக்கழகம். 5.மே 12,2017, தி இந்து நாளிதழ் 6.மே 13,2017, தி இந்து நாளிதழ் 7.மே 13,2017,தினமணி நாளிதழ் 8.May 13,2017,The New Indian Express. ரூடி கே ரூடி கார்ல்ட்டன் கே ஜூனியர் (ஆங்கிலம்:Rudy Carlton Gay Jr., பிறப்பு - ஆகஸ்ட் 17, 1986) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் அணியில் விளையாடுகிறார். 2006ல் என். பி. ஏ. வரதுக்கு முன் கனெடிகட் பல்கலைக்கழக கூடைப்பந்து அணியில் இரண்டு ஆண்டு விளையாடினார். மிசூரி பல்கலைக்கழகம் மிசூரி பல்கலைக்கழகம் ("University of Missouri"), ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இசுடேபிள்சு சென்டர் இசுடேபிள்சு சென்டர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி ஹாக்கியும் கச்சேரிகளும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது. சூன் (இசைகேளி) சூன் ("Zune") என்பது மைக்ரோசாப்டின் கையடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் ஐப்பாடை போல் பாடல்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள் ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் வானொலி வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒய்-ஃபை வசதியுடன் இரண்டு சூன் கருவியை இணையாகவும் ("pair") செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் படங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்தக் கருவி, 2006 நவம்பர் 19 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மைக்குரோசொஃப்ட் நிறுவனம் சூன் இசைகேளிகள் தயாரிப்பதை 2011 அக்டோபர் மாதம் முதல் நிறுத்தியது. 1840 1840 (MDCCCXL) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். சாளுக்கிய சோழர் சாளுக்கிய சோழர்கள் கி.பி 1070களிலிருந்து விஜயாலயச் சோழன் நிறுவிய சோழர் அரசை ஆண்டு வந்தனர். வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். கி.பி 10 நூற்றாண்டின் கடைசியில் தென் இந்தியாவில் இரண்டு சாளுக்கிய அரசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. மேலைச் சாளுக்கியர் என்று அழைக்கப்பட்ட கல்யாணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள், மற்றும் கீழைச் சாளுக்கியர் என்றழைக்கப்பட்ட வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள். இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர். மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன. கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம். கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான். இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர். பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது. ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான். வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர். இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது. 1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது. வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது. வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். முதலாம் குலோத்துங்க சோழனை அடுத்து பதவியேற்ற அனைவரும், சாளுக்கிய சோழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் கி.பி 10 மற்றும் கி.பி 12 நூற்றாண்டுகளுக்கிடையில் தக்காண பீடபூமி மற்றும் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய மன்னர்கள். இவர்கள் கல்யாணி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததால் கல்யாணிச் சாளுக்கியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள், இந்நகரம் தற்போதைய கர்நாடகாவில் இருக்கும் பசவகல்யாண் என்ற நகரமாகும். கீழைச் சாளுக்கியரிடம் இருந்து பிரித்துக் காட்டப்படுவேண்டியே மேலைச் சாளுக்கியர் என்று இவர்கள் வழங்கப்படுகிறார்கள். கீழைச் சாளுக்கியர் வேங்கியை தலைநகராகக் கொண்டு தென் இந்தியாவில் ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களுக்கு அடங்கியவர்களாக இருந்து இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்திருந்தனர். இவர்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நடவடிக்கையில் சோழ நாட்டுடன் தொடர்ந்து போரிட்டு வந்தனர். எனினும் மேலைச் சாளுக்கியருடன் தாயாதி உறவு இருக்கும் கீழைச் சாளுக்கியர்கள், சோழ அரசுடன் ஏற்பட்ட திருமண உறவுகள் காரணமாக சோழர்களுடன் இணைந்து மேலைச் சாளுக்கியருக்கு எதிராக இயங்கினர். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இளவரசனாகயிருந்த இராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியருடனான போரில் வெற்றி பெற்றான். சீன வேர் எழுத்துக்கள் சீன எழுத்துக்களுக்கு அடிப்படையாக 214 வேர் எழுத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வேர் எழுத்தும் எத்தனை கீற்றுக்களால் எழுதப்படுகிறது என்பதை வைத்து வகைப்படுத்தப்படும். வரலாற்றில் வெவ்வேறு வேர் எழுத்து முறைகள் பயன்பாட்டில் இருந்தன. பின்வருவது Kangxi முறையாகும். இதுவே கணினியில் ஒருகுறி சீர்தரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தகவல்கள் ஆங்கில விக்சனரியை ஆதாரமாக கொண்டவை (http://en.wiktionary.org/wiki/Index:Chinese_radical/%E4%B8%80). ஜூலை 2008 ஜூலை 2008, 2008 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் ஜூலை 16 புதன்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 16 சனிக்கிழமையில் முடிவடைகிறது. டாஸ் டாஸ் அல்லது இலங்கை வழக்கின் படி டொஸ் என்றறியப்படும் வட்டு இயக்கு தளம் எனப்பொருள்படும் டிஸ்க் ஆப்பரேட்ங் சிஸ்டம் என்பதன் சுருக்கம் ஆகும். டாஸ் இயங்குதளங்கள் நாவல் டாஸ், டாக்டர் டாஸ், பிறீ டாஸ், மைக்ரோசாப்ட் டாஸ் போன்ற பலரும் சந்தைப்படுத்தியிருந்தாலும் இவற்றுள் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளமே பிரபலமானது ஆகும். இவை விண்டோஸ் 95/98 உடன் உள்ளிணைக்கப்பட்டவை ஆகும். விண்டோஸ் 2000/எக்ஸ்பி போன்றவற்றில் டாஸ் இயங்குதளம் மெய்நிகர் நினைவகத்திலேயே இயங்கும். டாஸ் வரைகலைக் சூழல் அற்ற கட்டளைகளால் இயக்கப்படும் தனிப்பயனர்களுக்கான ஒரு நேரத்தில் ஒரு பணியை மாத்திரமே செய்யும் ஓர் இயங்குதளம் ஆகும். டாஸ் இயங்குதளம் பல்வேறு பங்சனூடாக விசைப்பலகையின் உள்ளீடுகளை வாசிக்கவும், தட்டுக்களில் எழுதுவதற்கும் துணையாக பங்சன்களைக் கொண்டுள்ளது. டாஸ் இயங்குதளத்தில் நெகிழ்வட்டு (பிளாப்பி டிஸ்க்) A: மற்றும் B: என்றவாறு பெயரிடப்படும் வன்வட்டு C: இல் ஆரம்பிக்கும். ஆங்கில அகர எழுத்துக்கள் 26 இதில் இரண்டு எழுத்துக்கள் நெகிழ்வட்டிற்குப் போவதால் டாஸ் இயங்குதளம் ஆகக்கூடுதலாக 24 பாட்டிசன்களை மாத்திரமே ஆதரிக்கும். விண்டோஸ் 2000/எக்ஸ்பி/விஸ்டா போன்று எழுத்துக்கள் அல்லாத பாட்டிசன்களை டாஸ் ஆதரிக்காது. நெகிழ்வட்டிற்கு பாட் 12 என்கின்றன 12பிட் முறையிலான கோப்புமுறையிலும் வன்வட்டிற்கு பாட் 16பிட்/32பிட் போன்ற முறையில் வன்வட்டினைக் கையாளலாம். ஆவியாகும் கரிமச் சேர்மம் ஆவியாகும் கரிமச் சேர்வை (Volatile organic compound) என்பது இயல்நிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் (vapor pressure) இருப்பதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடிய கரிம வேதிச் சேர்வையாகும். பல வகையான கரிமத்தை அடிப்படையாகக் கொண்ட, அல்டிகைடுகள், கீட்டோன்கள், மற்றும் பிற இலகுவான ஐதரோகாபன்கள் ஆவியாகும் கரிமச் சேர்வைகள் ஆகும். மிகவும் பொதுவாகக் காணப்படும் ஆவியாகும் கரிமச் சேர்வை பசுங்குடில் வளிமமான மெத்தேன் ஆகும். சேற்று நிலங்கள், ஆற்றல் பயன்பாடு, நெற் சாகுபடி, விறகு போன்றவற்றை எரித்தல் என்பன மெத்தேனின் முக்கியமான மூலங்கள் ஆகும். இயற்கை எரிவளியிலும் மெத்தேன் முக்கியமான ஒரு கூறாக உள்ளது. பொதுவான செயற்கையான ஆவியாகும் கரிமச் சேர்வைகளில் நிறப்பூச்சுகளுடன் கலக்கும் நீர்மங்கள், பலவகையான கழுவு கரையங்கள், நிலநெய் எரிபொருட்களின் சில கூறுகள் போன்றவை அடங்குகின்றன. மரங்களும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் ஒரு உயிரியல் மூலமாக உள்ளன. இவை ஐசோபிரீன்கள், தர்பென்கள் போன்ற ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுவது அறியப்பட்டுள்ளது. சுத்திகரிக்காத நிலநெய்யைக் கப்பல்களில் ஏற்றும்போதும் இறக்கும்போதும் பெருமளவு ஆவியாகும் கரிமச் சேர்வைகள் வளியில் கலக்கின்றன. தற்காலத்தில் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த ஆர்வம் காரணமாக புதிய எண்ணெய்க் கப்பல்களில் நிலநெய்யை ஏற்றி இறக்குவதில் முன்னேற்றமான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிடங்களின் உள்ளக வளிப் பண்பு தொடர்பிலும், ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. கட்டிடப் பொருட்கள் பலவும், கட்டிடங்களுக்குள் பயன்படுத்தப்படும் பல கருவிகளும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளிவிடுகின்றன. பல செயற்கைத் தரை விரிப்புக்கள் அவற்றை ஒட்டுவதற்கான ஒட்டுபொருட்கள், மரப்பொருட்கள், நிறப்பூச்சுகள் போன்றன இவ்வாறான சில கட்டிடப்பொருட்களாகும். எண்ணெய்க் கப்பல் எண்ணெய்க் கப்பல் என்பது நிலநெய்யைப் பெருமளவில் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பலொன்றைக் குறிக்கும். எண்ணெய்க் கப்பல்கள் பொதுவாக இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று கச்சா எண்ணெய்க் கப்பல் மற்றது முடிவு எண்ணெய்க் கப்பல். கச்சா எண்ணெய்க் கப்பல்கள் எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் இடத்திலிருந்து கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. முடிவு எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்திப் பொருட்களை அவை நுகரப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. எண்ணெய்க் கப்பல்கள் அவற்றில் அளவு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அளவு அடிப்படையிலான வகைப்பாட்டில் சில ஆயிரம் டன்களைக் (தொன்) கொண்ட உள்நாட்டு அல்லது கரையோரக் கப்பல்கள் முதல் 550,000 டன்கள் எடை கொண்ட பாரிய கப்பல்களை வரை அடங்குகின்றன. எண்ணெய் தாங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் எண்ணெயைக் கொண்டு செல்கின்றன. எண்ணெயை இடத்துக்கிடம் கொண்டு செல்லும் முறைகளில் குழாய் வழி கொண்டுசெல்வதற்கு அடுத்தபடியான செயல் திறன் கூடிய முறை கப்பல்வழி கொண்டு செல்வதாகும்.. எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவு, க்கு 2 அல்லது 3 ஐக்கிய அமெரிக்க சதங்கள் மட்டுமே. தற்காலத்தில் சிறப்புப் பயன்பாடுகளுக்கான எண்ணெய்க் கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்பல்களுக்கு, அவை பயணம் செய்யும்போதே எரிபொருள் நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் அவற்றுள் ஒரு வகையாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வகைக் கப்பல்களுக்கான வடிவமைப்பும், செயற்பாடுகளும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளன. முண்டா மொழிகள் முண்டா மொழிகள் இந்தியாவின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வங்காள தேசத்திலும் 90 இலட்சம் மக்களால் பேசப்படும் ஒரு மொழிக் குடும்பம் ஆகும். இவை ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் கிளைக்குடும்பத்தில் உள்ளன. இவற்றை ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக்குடும்பத்தின் தென்கிழக்காசியாவில் பேசப்படும் கிளைக்குடும்பமான மான்-குமேர் மொழிகளிடமிருந்து வேறுபடுத்தி வரையறுக்கின்றனர். இம்மொழிகளின் ஆறு (மூலம்) அறியப்படவில்லை. எனினும் இவை கிழக்கிந்தியாவின் குடிமக்களிடம் தொன்றுதொட்டுப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்று நம்பப்படுகிறது. கோ மொழி, முண்டாரி மொழி, சாந்தாலி மொழி ஆகியன இக்குடும்பத்தின் வெகுவாக அறியப்பட்டுள்ள மொழிகளாவன. முண்டா மொழிகள் இந்திய துணைக்கண்டத்தில் வழங்கிவந்த சமசுகிருதம் மற்றும் திராவிட மொழிகள் ஆகியவற்றின்மீது சில இடங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன மற்றும் அவற்றினால் தாக்கமடைந்துள்ளன. சோட்டா நாக்பூர் மேட்டுநிலப்பகுதி (பீட பூமி) மாநிலங்களான சார்க்கண்டு, சட்டீசுகடு, மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் வங்காள தேசத்தில் பேசப்படும் முண்டா மொழிகளை வடமுண்டா மொழிகள் என்றும் ஒரிசாவின் நடுவண் மற்றும் ஆந்திரத்தையொட்டிய பகுதிகளில் பேசப்படும் முண்டா மொழிகளை தென்முண்டா மொழிகள் என்றும் பொதுவாக பிரிக்கின்றனர். இருந்தாலும் இது மிகுதியாக எளிமைப்படுத்தப்பட்டவொரு பாகுபாடு என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருமை, பன்மை, என்பவற்றுடன் மூன்றாவதாக இருமை என்பதும், தமிழ் போலவே உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடும், தன்னிலை பன்மையில் தமிழில் உள்ளது போலவே கேட்பவரை உள்ளடக்கிய மற்றும் சேர்க்காத "நமது-எமது" வேறுபாடு காட்டுதலும், காலத்தை உணர்த்தும் ஒட்டுக்கள் இருப்பதும் இம்மொழிகளின் குறிப்பிடத்தக்க இயல்புகள் ஆவன. வட இந்தியாவில் பெருவாரியாகப் பேசப்படும் இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளைப் போலன்றி இவற்றின் சொற்களில் மெய்யொலிகள் இடையே உயிரொலிகளின்றித் தொடர்ந்து வருவதில்லை. அவ்வாறு வருதலும் சொல்லின் நடுவில் மட்டுமே ஏற்படுகிறது. டிஃவ்லோத் (1974) இல் தந்த, பரவலாக சுட்டப்படும், வகைப்பாடு: கெரார்டு டிஃவ்லோத் (2005) வகைப்பாடு இன்னும் நுணுக்கமான வகைப்பாடாகும்: கிரிகோரி டி. எசு. ஆண்டர்சன் (Gregory D. S. Anderson( (2001), கெரார்டு டிஃவ்லோத்தின் இரு வகைப்பாடுகளுடனும் மாறுபடுமாறு தன் கருத்தை முன் வைத்துள்ளார். கோரபுத் என்றொரு கிளை இல்லை என்று வாதிடுகின்றார். மொழியுரு (morphological) ஒப்பீட்டில் முதலுரு தென் முண்டா (Proto-South Munda) பிரிவுற்று மூன்று உடன்பிறப்ப்புக் குழுமங்களாக மாறின என்கிறார். இவை கரியா-சுவாங், சோரா-கோரம், குத்தோப்-ரேமோ-குத்தா ஆகிய மூன்றும் என்கிறார். எண்ணெய்க் கிணறு எண்ணெய்க் கிணறு என்பது பெற்றோலிய எண்ணெய் மற்றும் வளிம ஐதரோகாபன் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக அல்லது அவற்றை எடுப்பதற்காகப் புவியின் மேற்பரப்பினூடு அல்லது கடற்படுகையின் மீது செய்யப்பட்ட துளைகளைக் குறிக்கும். இவை பல ஆயிரம் மீட்டர்கள் வரை ஆழமுள்ளவை. 9 ஆம் நூற்றாண்டிலிருந்தே அசர்பைஜான் நாட்டிலுள்ள இன்றைய "பாக்கு" நகரைச் சூழவுள்ள இடங்களில் எண்ணெய் வயல்கள் இருந்துள்ளன. மத்தியகால இஸ்லாமிய உலகின் பெற்றோலியத் துறைக்கான நேப்தா இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த எண்ணெய் வயல்களைப் பற்றி 10 ஆம் நூற்றாண்டில் அல்-மசுதி என்பவரும், 13 ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவும் விபரித்துள்ளனர். இவற்றிலிருந்து பல கப்பல்கள் நிறைந்த எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 1264 ஆன் ஆண்டில் அசர்பைஜானின் கரையோரத்திலுள்ள பாக்கு நகருக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கே ஊற்றுக்களிலிருந்து எண்ணை எடுக்கப்படுவதைக் கண்டுள்ளார். அப் பகுதியிலிருந்த ஊற்றொன்றிலிருந்து நூறு கப்பல்களில் நிரப்பக்கூடிய எண்ணெய் கிடைக்கக் கூடும் என அவர் குறித்துள்ளார். இப்பகுதிகளில் ஆழம் குறைந்த பள்ளங்களைத் தோண்டி எண்ணெயை எடுத்தனர். அத்துடன் கைகளால் தோண்டப்பட்ட சுமார் 35 மீட்டர்கள் வரை ஆழம் கொண்ட துளைகள் 1594 ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. பாக்குவே முதலாவது உண்மையான எண்ணெய் வயலாகும். 1830 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 116 கிணறுகளில் இருந்து 3,840 மெட்ரிக் டன்கள் (சுமார் 28,000 பீப்பாக்கள்) எடையுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகத தெரிகிறது. 1849 ஆம் ஆண்டில் ரஷ்யப் பொறியியலாளரான எஃப். என். செம்யெனோவ் என்பவர் அப்செரோன் குடாநாட்டில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கு வடக் கருவி (cable tool) ஒன்றைப் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பென்சில்வேனியாவிலுள்ள புகழ் பெற்ற கிணறு கர்னல் டிரேக் என்பவரால் தோண்டப்பட்டது. 19 ஆன் நூற்றாண்டின் இறுதியில் பாக்குவிற்கு அண்மையிலுள்ள பிபி-எய்பட் (Bibi-Eibat) எண்ணெய் வயலில் கடலுள் துளையிடல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில் 1896 ஆம் ஆண்டில் கலிபோர்னியாக் கரையில் அமைந்திருந்த சம்மர்லாண்ட் எண்ணெய் வயலில் முதல் கடலினுள் அமைந்த எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது. தொடக்க கால எண்ணெய்க் கிணறுகள் வடக் கருவிகளை நிலத்துள் அடித்துச் செலுத்துவதன் மூலம் தோண்டப்பட்டன. பின்னர் சுழல் துளைப்பான்கள் (rotary drill) பயன்பாட்டுக்கு வந்தன. இவை கூடிய ஆழத்துக்கும் விரைவாகவும் துளைகளை இட வல்லவையாக இருந்தன. 1970 களுக்கு முன் பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள் நிலைக்குத்தானவை. எனினும் தற்காலத் துளைக்கும் தொழில்நுட்பங்கள், நிலைக்குத்திலிருந்து விலகிய திசைகளிலும் துளைகளை இடக்கூடிய வல்லமையை உருவாக்கியுள்ளன. போதிய அளவு ஆழத்துக்குச் செல்லக்கூடிய சரியான கருவிகள் இருந்தால் கிடைநிலையிலும் துளைகளை இடலாம். ஐதரோகாபன்களைக் கொண்டிருக்கும் பாறைப் படைகள் கிடையாகவே இருப்பதால், பெற்றோலிய வலயத்தில் இடப்படும் கிடையான துளைகள் அவ்வலயத்தில் கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இதனால் உற்பத்தி வீதமும் கூடுகின்றது. சரிவாக அல்லது கிடையாகத் துளைப்பதன் மூலம் துளைக்கும் இடத்திலிருந்து விலகியிருக்கும் எண்ணெய்ப் படிவுகளையும் அணுகக் கூடியதாக உள்ளது. இதனால், துளை கருவிகளை அமைக்க முடியாத அளவுக்குக் கடினமான இடங்களுக்கு, அல்லது சூழல் தொடர்பான பெறுமதியுள்ள இடங்களுக்கு அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்தும் எண்ணெய் எடுக்க முடிகிறது. எண்ணெய்க் கிணறு ஒன்றின் உருவாக்கத்தையும் அதன் பயன்படு காலத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். குடிசார் பொறியியல் குடிசார் பொறியியல் என்பது ஒரு உயர்தொழில் பொறியியல் துறையாகும். இது, பாலங்கள், கால்வாய்கள், சாலைகள், அணைகள், கட்டிடங்கள் போன்றன உள்ளிட்ட கட்டிடச் சூழலின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றோடு தொடர்புடையது. படைத்துறைப் பொறியியலுக்கு அடுத்ததாக மிகப் பழைமையான பொறியியல் துறை இதுவாகும். இப் பொறியியல் துறையைப் பல துணைத்துறைகளாகப் பிரிப்பது வழக்கம். சூழலியல் பொறியியல், நிலத்தொழில்நுட்பப் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல், காற்றுப் பொறியியல், நீர்வளப் பொறியியல், பொருட் பொறியியல், கடற்கரைப் பொறியியல், கட்டுமானப் பொறியியல் என்பன இவற்றுட் சிலவாகும். மனித வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாலும், எல்லாவிதமான பொறியியல் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பதாலும் இது பொதுவியல் என்றும் அழைக்கப்படும்.. மனிதன் தோன்றியது முதலே பொறியியல் அவனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. குடிசார் பொறியியல், மனிதன் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டுத் தனக்கென வீடுகளை அமைத்துக்கொள்ளத் தொடங்கிய கிமு 4000 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் எகிப்து, மெசொப்பொத்தேமியா ஆகிய பகுதிகளில் முறையாகத் தொடங்கியது எனலாம். இக்காலத்தில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் பெறத்தொடங்கி சில்லு, பாய்களைக் கொண்டு கடலோடுதல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. கிமு 2700-2500 காலப்பகுதியில் எகிப்தில் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளே முதல் பெரிய கட்டுமான அமைப்புக்கள் எனலாம். சிந்துவெளி நாகரிகம், கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் போன்ற கிறிஸ்துவுக்கு முந்தியகால நாகரிகங்களிலும் குடிசார் பொறியியல் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுக்களைக் காணமுடியும். மிக அண்மைக்காலம் வரை குடிசார் பொறியியலுக்கும், கட்டிடக்கலைக்கும் இடையில் வேறுபாடு இருக்கவில்லை. பொறியியலாளர், கட்டிடக்கலைஞர் என்னும் சொற்கள் பெரும்பாலும் ஒருவரைக் குறிக்கப் வெவ்வேறு இடங்களில் பயன்பட்டவையாகவே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில், துறைமுகங்கள், கலங்கரை விளக்கங்கள் போன்றவற்றின் கட்டுமானங்கள் தொடர்பில் குடிசார் பொறியியல் தனியாகக் குறிப்பிடப்படும் ஒரு துறையாக வளர்ந்தது. எகிப்தின் பிரமிட்டுக்களைத் தொடர்ந்து, பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் பெரிய அமைப்புக்கள் உருவாகின. அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், எண்ணற்ற கோயில்கள், நீத்தார் நினைவுச் சின்னங்கள், பல்வேறு நினைவுத் தூண்கள் என்பன இவற்றுள் அடக்கம். ரோமர்கள், நீர்காவிகள், துறைமுகங்கள், பாலங்கள், அணைகள், சாலைகள் போன்ற பல்வேறு பயன்பாடு அமைப்புக்களைத் தமது பேரரசு முழுவதும் அமைத்தனர். குடிசார் பொறியியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் பயன்பாடு ஆகும். அதன் வரலாறு இயற்பியல் மற்றும் கணிதத்தின் வளர்ச்சிகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. குடிசார் பொறியியல், பல துணைத் துறைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த துறை என்பதால், அதன் வரலாறு, அமைப்பியல், பொருள் அறிவியல், நிலவியல், மண்ணியல், நீரியல், சூழலியல், பொறிமுறை போன்ற துறைகளில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சிகளோடு தொடர்புடையது. குடிசார் பொறியியலோடு தொடர்புடைய, இயற்பியல் மற்றும் கணிதம் சார்ந்த பிரச்சினை தொடர்பிலான அறிவியல் அணுகுமுறையின் முந்திய எடுத்துக்காட்டு கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஆக்கிமிடீஸ் செய்த ஆய்வுகள் ஆகும். பொதுவாக குடிசார் பொறியியல், மனிதன் பேருலகை உருவாக்கும் நிலையான திட்டங்களின் இடைமுகமாக உள்ளது. கட்டமைப்புப் பொறியியல் () என்பது, பல்வேறு வகையான சுமைகளைத் தாங்கும் நோக்கிலான கட்டமைப்பு முறைமைகளின் வடிவமைப்பு தொடர்பான பொறியியல் துறை ஆகும். பிற துறைகள் சிலவும் இத்துறையின் நோக்கங்களோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. எனினும், ஒரு பொருள் அல்லது ஒரு தொகுதியின் அறிவியல் அல்லது தொழிற்துறைப் பயன்பாடு எதுவாக இருப்பினும், அது முக்கியமாக சுமைகளைத் தாங்குவதும் ஆற்றலைப் பரவலாக்குவதற்குமான வடிவமைப்புத் தேவைகளைக் கொண்டிருப்பின் அது அமைப்புப் பொறியியலைச் சேர்ந்ததாகக் கருதப்படும். அமைப்புப் பொறியியல் பொதுவாகக் குடிசார் பொறியியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. எனினும் இது ஒரு தனித்துறையாகக் கற்கப்படுவதும் உண்டு. ஒரு கட்டமைப்புப் பொறியியலாளர், மிகப் பொதுவாகக் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் அல்லாத அமைப்புக்களை வடிவமைப்பார். எனினும் அமைப்பியல் உறுதிப்பாடு தேவைப்படும்போது பொறிகளின் வடிவமைப்பிலும் அவரின் பங்கு வேண்டியிருக்கும். மனிதனால் உருவாக்கப்படும் மிகப் பெரிய அமைப்புக்களில் மட்டுமன்றி, தளபாடங்கள், மருத்துவக் கருவிகள், பலவகையான வண்டிகள் போன்றவற்றிலும் கூட அமைப்புப் பொறியியல் சார்ந்த வடிவமைப்பு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன. முதன்மைக் கட்டுரை:கடற்கரைப் பொறியியல் "கடற்கரைப் பொறியியல்" கடற்கறைப் பகுதியை மேலாளும் பொறியியல் புலமாகும். சில இடங்களில், கடல் தற்காப்பு, கடற்கரைப் பாதுகாப்பு எனும் சொற்கள் முறையே வெள்ளப்பெருக்கு, அரிமானம் ஆகியவற்றில் இருந்தான தற்காப்பைக் குறிக்கின்றன. கடற்கரைத் தற்காப்பு என்பது பழைய சொல்லாகும். இப்போது கடற்கரை மேலாண்மை எனும் சொல் பரவலான வழக்கிற்கு வந்துவிட்டது. கடற்கரை மேலாண்மை அரிமானத்தை ஏற்றே நிலத்தை மீட்கும் விரிவான பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. கட்டுமானப் பொறியியல் நெடுஞ்சாலைகள், பாலங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டிப் பாதைகள், கட்டிடங்கள், அணைகள், நீர்நிலைகள் போன்ற அமைப்புக்களின் கட்டுமான வேலைகளைத் திட்டமிடல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது. மேற்படி கட்டுமான வேலைகளுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மைக் கோட்பாடுகள், வணிக வழிமுறைகள், பொருளியல், மனித நடத்தை போன்றவை தொடர்பான அறிவு தேவை. கட்டுமானப் பொறியியலாளர்கள், தற்காலிக அமைப்புக்களை வடிவமைத்தல், தரத்தை உறுதிசெய்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு, நில அளவை, கட்டிடப்பொருட் சோதனை, காங்கிரீட்டுக் கலவை வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, திட்டமிடல், பாதுகாப்பு, கட்டிடப் பொருள் கொள்வனவு, உபகரணத் தேர்வு, வரவு செலவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். போக்குவரத்துப் பொறியியல் அறிவியல், தொழில்நுட்ப நெறிமுறைகளை எந்தவொரு போக்குவரத்து முறைமைக்குமான திட்டமிடல், வடிவமைப்பு, இயக்கம், மேலாண்மை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் பொறியியல் புலமாகும். இது மக்களையும் பொருள்களையும் சுற்றுச்சூழல் நலம் ஊறுபடாதவாறு காப்பாகவும் திறம்படவும் வேகமாகவும் பொருளியலாகச் சிக்கனமாகவும் உயரேந்துடனும் போக்குவரத்து செய்யவேண்டும். போக்குவரத்துப் பொறியியலின் திட்டமிடல் கூறுபடுகள் நகரத் திட்டமிடல் அடிப்படைகளோடு உறவுடையதாகும். முதன்மைக் கட்டுரை: நகராட்சி அல்லது நகர்ப்புறப் பொறியியல் நகராட்சிப் பொறியியல் நகராட்சி சார்ந்த அகக்கட்டமைப்புகளைச் சார்ந்தது. இது தெருக்கள், நடைபாதைகள், நீர்வழங்கல் குழாயமைப்புகள், துப்புரவுக் கழிவுக் குழாயமைப்புகள், தெருவிளக்குகள், நகரத் திண்மக் கழிவு மேலாண்மையும் வெளியேற்றமும், பொதுப்பணிகளுக்கும் பேணுதலுக்கும் வேண்டிய மொத்தப் பொருள்களைத் தேக்கிவைத்தல் (உப்பு, மணல் போன்றன), நகர்ப் பூங்காக்கள், மிதிவண்டி அக்க் கட்டமைப்பு ஆகியவற்றின் குறிப்பீடுகள், வடிவமைப்புகள், கட்டுமானம், பேணுதல் பணிகளை ஆற்றுகிறது. நிலத்தடி பொதுப்பயன் வலையமைப்புகளைப் பொறுத்தவரை அவற்றின் குடிசார் பொறியியல் பணிகளாகிய உறைகுழாய்கள், அணுகல் அறைகள், ஆகியவற்றைக் கள மின், தொடர்பு வலையமைப்புகளுக்கு ஏற்பாடு செதுதரல் வேண்டும். இது நகராட்சி திண்மக் கழிவுத் திரட்டலையும் பேருந்து இயக்கத் தடவழிகளையும் உகப்புநிலைப்படுத்த வேண்டும். இதன் சில புலங்கள் பிற குடிசார் பொறியியல் சிறப்புத் துறைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், நகராட்சிப் பொறியியல் இந்த அகக் கட்டமைப்புகளின் ஏந்துகளையும் பணிகளையும் ஒருங்கிணைத்தலில் கவனம் குவிக்கிறது. ஏனெனில், இவை ஒருங்கே ஒரு தெருவுக்கோ, குறிப்பிட்ட திட்டத்துக்கோ அதே நகராட்சி அதிகார அமைப்புதான் மேலாளுகிறது. நகராட்சிப் பொறியாளர்கள் பெரிய கட்டிடங்கள், தொழிலகங்கள், பொது ஏந்துகள் சார்ந்த பொதுப்பணிகளையும் ( அணுகுசாலைகள், ஊர்தி நிறுத்த இடங்கள், கழிவுநீர் பதப்படுத்தலும் முன்பதப்படுத்தலும், குடிநீர் வழங்கல், கள வடிகால் உட்பட,)மேற்கொள்வர் இத்துறையானது இன்று மிகவும் கவனத்தை பெற்று வருகிறது .இளங்கலை குடிசார் பொறியியல் முடித்தவர்கள் முதுகலையில் இத்துறை தனி கவனத்தை பெறுகிறது .கழிவு நீர் மேலாண்மை ,திடக்கழிவு மேலாண்மை ஆகியவை அடங்கும் எல்லா கட்டிடங்களுக்கும் அடித்தளம் அவசியம் .இந்த அடித்தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது .இந்த அடித்தளங்களின் அவசியத்தை நாம் மறுக்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது இந்த துறை .அரேபிய நாடுகளில் இத்துறைக்கு பெரும் மதிப்பு இருக்கிறது . கட்டமைப்புப் பொறியியல் கட்டமைப்புப் பொறியியல் "(Structural engineering)" குடிசார் பொறியியலின் ஓர் உட்புலமாகும். இப்புலத்தில் கட்டமைப்புப் பொறியாளர்கள் கட்டிடங்களுக்கும் கட்டிடம் சாராத அமைப்புகளின் கட்டமைப்புகளின் நிலைப்பு, வலிமை, விறைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் முன்கணிக்கவும் கணக்கிடவும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர் இவர்கள் கட்டமைப்புகளின் வடிவமைப்புகள் செய்து அவற்றை பிறர் செத வடிவமைப்புகளோடு ஒருங்கிணத்து களத்தில் திட்டங்களின் கட்டுமானத்தை மேற்பார்வை செய்கின்றனர். கட்டமைப்பு ஒருமை செயல்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய தேவைப்படும்போது இவர்கள் எந்திரத் தொகுதி, மருத்துவக் கருவிகள், ஊர்திகள் ஆகியவற்றையும் வடிவமைப்பர். கட்டமைப்புப் பொறியியலின் கோட்பாடு பயன்முறை இயற்பியலையும் கட்டமைப்புகளின் பல்வேறு பொருள்களின், வடிவவியல்களின் செயல்திறப் பட்டறிவையும் சார்ந்து உருவாகிறது. இப்பொறியியல் சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்க எளிய கட்டமைப்பு உறுப்புகளைப் பயன்படுத்துகிறது. கட்டமைப்புப் பொறியாளர்கள் இந்த இலக்குகளை அடைய, நிதி, கட்டமைப்பு உறுப்புகள், பொருள்கள் ஆகியவற்றை ஆக்கநிலையிலும் திறம்படவும் பயன்படுத்தும் பொறுப்புள்ளவர்கள் ஆவர். கட்டமைப்புப் பொறியாளர்கள் பொறியியல் வடிவமைப்புக்கும் கட்டமைப்புப் பகுப்பாய்வுக்கும் பொறுப்பாவர். நுழைவுநிலைக் கட்டமைப்புப் பொறியாளர்கள் கட்டிட விட்டங்கள், தூண்கள் போன்ற தனித்தனிக் கட்டமைப்பு உறுப்புகளை வடிவமைப்பர். கூடுதலான பட்டறிவு வாய்ந்தவர்கள் கட்டிடம் ஒத்த ஒட்டுமொத்த கட்டமைப்பு வடிவமைப்பையும் ஒருமையையும் மேற்கொள்வர். கட்டிடங்கள், பாலங்கள், குழாய்த்தொடர்கள், தொழிலகங்கள், சுரங்கங்கள், ஊர்திகள், கப்பல்கள், வானூர்திகள், விண்வெளிக்கலங்கள் அகியவற்றில் குறிப்பிட்டவகைக் கட்டமைப்புகளில் சிறப்பு புலமையும் பட்டறிவும் பெறுவர். கட்டிடங்களில் சிறப்பு தகைமை பெறும் கட்டமைப்புப் பொறியாளர்கள் அதைச் சார்ந்த கட்டுமானப் பொருள்களாகிய கற்காரை, எஃகு, மரம், கட்டுசுவர், பொன்மக் (உலோகக்) கலவைகள், கூட்டுக் கட்டுபொருள்கள் ஆகியவற்றில் பட்டறிவு பெறுவதோடு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள், வீடுகள் போன்றவற்றில் குறிப்பிட்டவகைகளில் கவனம் குவிப்பர். மாந்த இனம் தன் முதல் கட்டமைப்பைக் கட்ட தொடங்கியதில் இருந்தே கபட்டமைப்புப் பொறியியலும் தொடங்கிவிட்டது எனலாம்மிது நன்கு வரையறுத்த வடிவமுள்ள தொழிலாக 19 ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் தொழிற்புரட்சிக்குப் பிறகு கட்டிடக் கவினிய்ல் தனிப் புலமாகப் பிரிந்ததும் மாறியது. அதுவரையில், கட்டிடக்கவின் பொறியாளரும் கட்டமைப்புப் பொறியாளரும் ஒருவராகவே இருந்தார். 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் கட்டமைப்புக் கோட்பாடுகளின் சிறப்பறிவு வளர்ச்சிக்குப் பின்னரே கட்டமைப்புப் பொறியாளர்கள் தனியாகப் பிரிந்து இயங்கலாயினர். இன்றைய கட்டமைப்புப் பொறியாளரின் பாத்திரம் நிலையியல், இயங்கியல் சுமைகளைப் புரிந்துகொள்வதிலும் அவற்றைத் தாங்கும் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதிலும் அடங்கியுள்ளது. புத்தியல் கட்டமைப்புகளின் சிக்கலான தன்மை, கட்டமைப்புகள் தாம் ஆட்படும் சுமைகளை உறுதியாக ஏற்கும்திரத்தோடு அமைய பொறியாளரிடம் இருந்து பேரளவான ஆக்கநிலை பங்களிப்பை எதிர்பார்க்கிறது. கட்டமைப்புப் பொறியாளர் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் பட்டப் படிப்பும் பின்னர் குறைந்தது மூன்றாண்டுகள் களத் தொழில் பட்டறிவும் பெற்றிருந்தால் முழுத்தகுதி வாய்ந்தவராகக் கருதப்படுவார். கட்டமைப்புப் பொறியாளர்கள் உலகெங்கிலும் பல புலமைசால் கழகங்களாலும் ஒழுங்குமுறை நிறுவனங்களாலும் உரிமம் அல்லது உறுப்பாண்மை வழங்கப்படுகின்றனர்மெடுத்துகாட்டாக, பிரித்தானியாவில் இயங்கும் கட்டமைப்புப் பொறியாளர் நிறுவனத்தைக் குறிப்பிடலாம்)மவர்கள் படித்த பட்டப் படிப்பை வைத்தோ அல்லது அவர்கள் வேன்டும் புல உரிம்ம் சார்ந்தோ, இவர்கள் கட்டமைப்புப் பொறியளர்களாகவோ குடிசார் பொறியாளர்களாகவோ அல்லது இருவகையும் சார்ந்த பொறியாளர்களாகவோ உரிமம் வழங்கப்படுவர். மற்றொரு பன்னாட்டு நிறுவனம் IABSE எனப்படும் பன்னாட்டு பாலம், கட்டமைப்புப் பொறியியல் கழகம் ஆகும். இக்கழகத்தின் குறிக்கோள் உலகெங்கும் கட்டமைப்புப் பொறியியல் அறிவைப் பகிர்வதும் அப்பொறியியல் புல நடைமுறையை மேம்படுத்துவதும் அதன்வழி மக்களுக்குப் பணிபுரிவதுமாகும். எந்தவொரு கட்டமைப்பும் சில உறுப்புகளாலேயே கட்டப்படுகின்றன: இக்கட்டமைப்பு உறுப்புகளை வடிவத்திலும் பருமானத்திலும் வகைப்படுத்தலாம்: சுமைகளின் தாங்குதிறனையும் எதிர்ப்பு/தடுப்புதிறனையும் புரிந்துகொள்ள, கட்டமைப்புப் பொறியியல் பொருள்களின் இயல்புகளையும் அறிவையும் சார்ந்துள்ளது. வழக்கில் உள்ள கட்டமைப்புப் பொருள்களாவன: போக்குவரத்துப் பொறியியல் போக்குவரத்துப் பொறியியல் "(Transportation engineering)" அறிவியல், தொழில்நுட்ப நெறிமுறைகளை எந்தவொரு போக்குவரத்து முறைமைக்குமான திட்டமிடல், வடிவமைப்பு, இயக்கம், மேலாண்மை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் பொறியியல் புலமாகும். இது மக்களையும் பொருள்களையும் சுற்றுச்சூழல் நலம் ஊறுபடாதவாறு காப்பாகவும் திறம்படவும் வேகமாகவும் பொருளியலாகச் சிக்கனமாகவும் உயரேந்துடனும் போக்குவரத்து செய்யவேண்டும் . இது குடிசார் பொறியியல் (கட்டிடப் பொறியியலின்) உட்புலம் ஆகும். குடிசார் பொறியியலில், இதன் முதன்மையை இதிலடங்கிய ஆறுவகை உட்புலங்களில் இருந்து உணரலாம். இதில் வான், விண்வெளிப் போக்குவரத்து, வானூர்திப் போக்குவரத்து, நெடுஞ்சாலைப் போக்குவரத்து, குழாய்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுகப் போக்குவரத்து கடலோரப் போக்குவரத்து, நாவாய்ப் போக்குவரத்து, நகர்ப்புறப் போக்குவரத்து ஆகியன அடங்கும். போக்குவரத்துப் பொறியியலின் திட்டமிடல் கூறுபடுகள் நகரத் திட்டமிடல் அடிப்படைகளோடு உறவுடையதாகும். இதில் தொழில்நுட்ப முன்கணிப்பு முடிவுகளும் அரசியல் காரணிகளும் அடங்கும். பயணர்களின் பயன முன்கணிப்பில் வழக்கமாக நகர்ப்புறப் போக்குவரத்து படிமம் பயன்படுகிறது. இப்படிமத்தில், பயண நேர்வின் மதிப்பீடு (எந்நோக்கத்துக்காக, எத்தனை பயணங்கள்), பயணப் பரவல் (முனையத் தேர்வு, அதாவது பயணர் போகுமிடத் தேர்வு), முறைமைத் தேர்வு (எந்த போக்குவரத்து முறைமையைப் பயன்படுத்துவது எனும் முடிவு), வழித்தட தேர்வு (எந்தத் தெருக்களை அல்லது வழிகளைப் பயன்படுத்துவது எனும் முடிவு) ஆகியவை தேவையாகின்றன. மேலும் நுட்பமான முன்கணிப்பில் பயணர் முடிவுகள் (தானி உரிமை உட்பட), பயணப்பிணைப்பு (ஒரு முறையிலேயே தனிப் பயணங்களை இணைக்கும் முடிவுகள்) வீடு அல்லது வணிக இருப்பிடத் தேர்வு( இது நிலப் பயன் முன்கணிப்பு எனப்படுகிறது) ஆகியனவும் உள்ளடங்கும். பயணர்களின் பயணங்களே, போக்குவரத்து அமைப்பின் உச்ச நெரிசலை முடிவு செய்வதால், போக்குவரத்துப் பொறியியலின் குவிமையமாகின்றன. போக்குவரத்துப் பொறியியல் சார்ந்த வடிவமைப்புக் கூறுபாடுகள் போக்குவரத்து வசதிகளின் அளவுகளைத் தீர்மானித்தல், தொடர்புடைய கட்டுமானக் கூறுபாடுகளின் அளவுகளைத் தீர்மானித்தல், சாலைகள் முதலியவற்றின் வடிவவியல் கூறுபாடுகளைத் தீர்மானித்தல் போன்றவற்றை உள்ளடக்கியவை ஆகும். நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் பின்வரும் பணிகளை மேற்கொள்கின்றனர்: இருப்புப் பாதைப் பொறியாளர்கள், இர்ட்டைத் தண்டவாளங்கள் அல்லது ஒற்றைத் தண்டவாளம் அமைந்த தொடர்வண்டித் தடத்தையும் பெருந்திரள் போக்குவரத்து அமைப்பையும் வடிவமைத்து, கட்டி, இயக்குகின்றனர். முதன்மைப் பணிகளாக கிடைநிலை, குத்துநிலைத் திசை ஒருங்கிணைப்பு வடிவமைப்பு, தொடர்வண்டி நிலைய இருப்பிடத் தேர்வும் வடிவமைப்பும் இவற்றைக் கட்டியமைப்பதற்கான செலவு மதிப்பீடு ஆகியன அடங்கும். இவர்கள் மேலும் நுட்பமான தொடர்வண்டி இயக்க்க் கட்டுபாட்டையும் கையாள்கின்றனர். இவர்கள் எதிர்காலத் தேவைகளைச் சந்திக்க, மறுமுதலீடு செய்து, தடவலிமையைக் கூட்டி,பாதுகாப்பான தூய்மையான போக்குவரத்தை உருவாக்கலாம். ஐக்கிய அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களை அடிக்கடி கூட்டி நாட்டின் போக்குவரத்துத் தேவைகளை அறிந்து உரிய தொடர்நடவடிக்கைகளை எடுக்கின்றனர். துறைமுகப் பொறியாளர்கள் துறைமுகங்கள் அவைசார்ந்த கால்வாய்கள், பிற கடல்சார் ஏந்துகள் ஆகியவற்றை வடிவமைத்து கட்டுகின்றனர். இதைக் கடல்சார் பொறியியலுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. விமானதளப் பொறியாளர்கள் விமானதளத்தை வடிவமைத்து கட்டுகின்றனர். இவர்கள் விமானதள ஏந்துகளின் வடிவமைப்பில் வானூர்தித் தேவைகளையும் கணத்தாக்கு நிலைமைகளையும் கருத வேண்டும். விமான ஓடுதளச் சாலையின் வழித்தடத் திசையை வடிவமைக்க முதன்மையான காற்றோட்டத் திசையையும் முன்கணிக்கவேண்டும். அவர்கள் ஓடுதள விளிம்பளவையும் பாதுகாப்புப் பகுதிகளையும் தீர்மானிக்கவேண்டும். இவர்கள் பல்வேறு சிறகு நுனிகளின் அளவுகளையும் அளந்து அனைத்து வாயில்களின் சிறகு நுனி இடைவெளியை வடிவமைக்க வேண்டும். ஒட்டுமொத்த விமானதள காப்பன இடங்களைக் குறிப்பிட வேண்டும். குடிசார் பொறியியல் கட்டமைப்புப் பொறியியல் கட்டுமானப் பொறியியல் சொலமன் தீவுகள் சொலமன் தீவுகள் ("Solomon Islands") மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ (10,965 சதுர மைல்) ஆகும். இதன் தலைநகர் ஓனியாரா குவாடல்கனால் தீவில் உள்ளது. சொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது. 1998 ஆம் ஆண்டில் இருந்து இங்கு இடம்பெற்றுவரும் இனப்போரை அடுத்து ஜூன் 2003 இல் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இங்கு பல்தேசியப் படைகள் அனுப்பப்பட்டன. வடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களில் 94.5 விழுக்காட்டினர் மெலனீசியரும், 3% பொலினேசியரும் 1.2% மைக்குரோனீசியரும் ஆவர். இங்கு மொத்தம் 74 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 4 மொழிகள் அழிந்து விட்டன. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தாலும் 1-2 விழுக்காட்டினரே அம்மொழியைப் பேசுகின்றனர். சொலமன் தீவுகளின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் ஆகும் . 97 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 2.9 விழுக்காட்டினர் பழங்குடியினரின் சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவர். சுதந்திரவாதம் சுதந்திரவாதம் அல்லது தாராண்மியவாதம் ("Libertarianism": லிபர்ட்டேரியனிசம்) ஒர் அரசியல் பொருளாதாரக் கொள்கை. இயன்றளவு அரசின் பங்கு குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. குறிப்பாக அரசின் வன்முறைக்கான அதிகாரத்தை இயன்றவரை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கிறது. தனி மனிதனின் சுதந்திரம் இன்னொரு மனிதனை பாதிக்காத வகையில் அவளுக்கு/அவனுக்கு முழுமையான சுதந்திரத்தை இந்தக் கொள்கை வேண்டுகிறது. எங்கே ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுகிறதோ, அதைப் பாதுகாக்க மட்டுமே அரசுக்கு வன்முறைக்கான அதிகாரம் உண்டு என்கிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம், ஆபாசம் போன்றவை மற்ற மனிதர்களை நேரடியாக பாதிப்பதில்லை, எனவே அவற்றை குற்றவியல் செயல்களாகக் கருதக் கூடாது என்று இது வலியுறுத்துகிறது. சுதந்திரவாதத்தைப் பொறுத்தவரையில் தனிமனிதத்துவத்தையும், தனிமனித உரிமைகளையும் மிக அடிப்படையான, மிக முக்கியமானதாகக் கருத்துகிறது. தனிமனிதர்களே தெரிவுகள் செய்யக் கூடியவர்கள், அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள். பிறரைப் பெளதீக முறையில் பாதிக்காத வகையில் முழுமையான சுதந்திரம் தனிமதர்களுக்கு உண்டு என்கிறது. போதைப் பயன்பாடு, தற்கொலை போன்ற தனக்குப் பாதகமான தெரிவுகளை தனிமனிதர் செய்தாலும் அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்கிறது. வலிந்து தாக்காமைக் கொள்கை (Non-aggression principle) என்பது தனிமனித உரிமைகளின் நீட்சி ஆகும். ஒருவரின் செயற்பாட்டு பிறரைப் பெளதீக நோக்கில் பிறரைப் பாதிக்காத வகையில் அவர் மீதோ, அவரது உடைமைகள் மீதோ தாக்க முடியாது, அத்துமீற முடியாது. ஒருவர் தாக்கப்பட்டால் அற அல்லது ஆயுதப் போராட்ட முறையில் தற்காப்புச் செய்வதை இக் கொள்கை தடுக்கவில்லை. இக் கொள்கை களவு, ஏமாற்றல் போன்ற குற்றங்களையும், பிற நாடுகள் மீது படையெடுப்பதை, ஆக்கிரமிப்பதை, தலையிடுவதையும் குற்றங்களாகத் தடுக்கிறது. சுதந்திரவாதம் திறந்த சந்தையையும், தனியார் சொத்துரிமையையும் முதன்மைப் பொருளாதாரக் கொள்கைகளாக முன்வைக்கிறது. மனிதர்களின் நலம் சிறக்க அவர்கள் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். திறந்த சந்தையே சுதந்திர மனிதர்களுக்கு ஏற்ற, சுதந்திர மனிதர்கள் அவர்களின் தெரிவுகளுக்கு ஏற்ற முறையிலான பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட சிறந்த முறை. இவ்வாறு இவர்களின் உழைப்பின் ஊடாகப் பெறப்படும் உடைமைகளுக்கு இவர்கள் முழு உரித்தும் உடையவர்கள். சுதந்திரவாதம் அனைத்து அல்லது அனேக பொருளாதர செயற்பாடுகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, வேளாண்மை உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இதை செயற்றிறனுடன் செய்ய முடியும் என்று கூறுகிறது. படைத்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய துறைகளில் மட்டுமே அரசுக்கு ஒரு பங்கு உண்டு என்கிறது. இதனையும் கூட சில தீவர சுதந்திரவாத நிலைப்பாட்டாளர்கள் மறுப்பர். தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு வரம்புக்குட்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்டாதாகவும், அதன் பணிகள் தெளிவாக வரையை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று சுதந்திரவாதம் கருதுகிறது. அதிகாரம் குவியப்படுத்தப்படுதலையும், அரசு பெரிதாவதையும் சுதந்திரவாதம் விரும்புவதில்லை. மேற்கு நாடுகள் பலவற்றில் சுதந்திரவாதம் பரவி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் மையநீரோட்ட கொள்கையாக யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிலேயே இதற்கு பலத்த தார்மீக ஆதரவு இருக்கிறது. கட்டுமானப் பொறியியல் கட்டுமானப் பொறியியல் நெடுஞ்சாலைகள், பாலங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டிப் பாதைகள், கட்டிடங்கள், அணைகள், நீர்நிலைகள் போன்ற அகக் கட்டமைப்புகள், பொதுத் திட்டங்களின் கட்டுமான வேலைகளைத் திட்டமிடல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது. அடிப்படைக் கட்டுமான வேலைகளுக்கு, பொறியியல், மேலாண்மைக் கோட்பாடுகள், வணிக வழிமுறைகள், பொருளியல், மனித நடத்தை போன்ற துரைகள் சார்ந்த அறிவு தேவை. கட்டுமானப் பொறியியலாளர்கள், தற்காலிக அமைப்புக்களை வடிவமைத்தல், தரத்தை உறுதிசெய்தல், தரக்கட்டுப்பாடு, நில அளவை, கட்டிடப்பொருட் சோதனை, கற்காரைக் (காங்கிரீட்டுக்) கலவை வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, திட்டமிடல், பாதுகாப்பு, கட்டிடப் பொருள் கொள்முதல், கருவிகள் தேர்வு, வரவு செலவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். கட்டுமான வழிமுறைகளை வடிவமைப்பதிலும், சிக்கல்களைப் பகுத்தாய்வதிலும் பயன்படுத்தப்படும் கணிதம், அறிவியல், பொறியியல் ஆகியவற்றின் பயன்பாட்டு விகிதம் சார்ந்தே கட்டுமானப் பொறியியலும், கட்டுமான மேலாண்மையும் வேறுபடுகின்றன. கட்டுமானத் தொழில்நுட்பம் திட்டங்களுக்கான கூடுதல் நடைமுறைக் கூறுபாடுகளைப் பயிலும் துறையாகும். கட்டுமானத் தொழில் வல்லுனர்கள் அல்லது தொழில்நுட்பர்கள், கட்டிடப் பொறியார்களைப் போன்றே சில வடிவமைப்புக் கூறுபாடுகளையும் கட்டுமான மேலாளர்களைப் போன்றே சில திட்டக்கள மேலாண்மைக் கூறுபாடுகளையும் பயில்கின்றனர். இவர்கள் கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டுமான மேலாளர்களுக்கும் இடையிலான பணியாளர்கள் ஆவர். கல்வி மட்டத்தில் கட்டிடப் பொறியியல் மாணவ்ர்கள் வடிவமைப்பில் முதன்மையான கவனம் செலுத்துகின்றனர். வடிவமைப்பு பெரிதும் பகுப்பாய்வு சார்ந்த்த்தாகும்.எனவே அவர்கள் வடிவமைப்புத் தொழில் வல்லுனர்களாகவே உருவாகின்றனர். இதனால், இவர்கள் தங்களது நான்காண்டுப் படிப்பில் அறைகூவல் மிக்க பல பொறியியல் புல வடிவமைப்புகலைப் பயில்கின்றனர். ஆனால், கட்டுமான மேலாளர்கள் கட்டுமான வழிமுறைகள், முறையிய்ல், செலவுகள், திட்டங்கள், தனியர் மேலாண்மை ஆகியவற்ரைப் பயில்கின்றனர் இவர்களது முதன்மை அக்கறை குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் ஒதுக்கிய பாதீட்டுக்குள்ளும் வேண்டிய தரத்துடன் திட்டங்களை முடித்தலே ஆகும். கட்டுமானத் தொழில்நுட்பவியலருக்கும் கட்டிடப் பொறியாளருக்கும் இடையில் உள்ள வேறுபாடு. பின்னது பொறியியல் புலமாகும். கட்டுமானத் தொழில்நுட்ப மாணவர்கள் அடிப்படை வடிவமைப்புப் பாடங்களுடன் கட்டுமான மேலாண்மைப் பாடங்களையும் படிக்கின்றனர். கட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்டுமனத்துக்கும் வேண்டிய வடிவமைப்பு, செலவு மதிப்பீடு ஆகியவற்றை தருகிறார். வடிவமைப்புப் பணி சார்ந்த தொழில்செய்ய தொழில்முறைப் பொறியாளர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் தனியர் இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் கல்லூரியில் இருக்கும்போதே தேர்ச்சி பெறுதல் வேண்டும். நுழைவுநிலை கட்டுமான மேலாளர் பதவிகள் திட்டப் பொறியாளர்கள் அல்லது உதவித் திட்டப் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் திட்ட்த்துக்கான கொள்முதல் தேவைகளை உருவாக்கி அதர்கான பணியாணைகளை அணியமாக்கி மாதவாரி பாதீட்டு அறிக்கைகளை கூட்டங்களில் வைக்கவேண்டும். அக்கூட்டங்களை நடத்துவதற்கான நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கி கூட்டத்தை நடத்தவேண்டும். கட்டுமான மேலாண்மைப் பதவிக்கு தொழில்முறை உரிமமேதும் தேவையில்லை; ஆன்னல், அவ்வுரிமத்தைப் பெற்றிருந்தால் அவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். ஏனெனில், இந்த உரிமம் இருந்தால் இவர்தற்காலிக கட்டிட வடிவமைப்புகளில் ஒப்புதல் கையொப்பம் இடலாம். கட்டுமானப் பொறியாளர்கள் சிக்கல் தீர்ப்பவர்கள். இவர்கள் சுற்றுச்சூழல் தேவைகளைச் சந்திக்கவல்ல அகக் கட்டமைப்பாக்கத்துக்கு பேரளவில் பங்களிப்பு செய்கின்றனர். இவர்கள் உரிய அகக் கட்டமைப்பின் வாணாள் சுழற்சி சார்ந்த அறிவைப் பெற்ரிருக்கவேண்டும். வடிவமைப்புப் பொறியாளர்களோடு ஒப்பிடும்போதும் வேறுபடுத்தும்போதும், கட்டுமானப் பொறியாளர்கள் தொழில்நுட்ப அறைகூவல்களைத் தெளிவாகவும் கற்பனைத் திறத்தோடும் சந்திக்கும் கண்ணோட்டப் பார்வையை கூட்டத்தில் முன்வைக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணி மேற்கொள்ளும் தனியர் கணிதவியலிலும் அறிவியலிலும் ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருக்கவேண்டும்; உய்யநிலை, பகுப்பாய்வு சிந்தனைவளத்தோடு கால மேலாண்மை, பணியாளர் மேலாண்மை, சிறந்த கட்டுமான நுட்பத்திறங்கள், தொடர்பாடல் வல்லமை ஆகிய திறமைகளையும் பெற்றிருக்கவேண்டும். கட்டுமானப் பொறியாளர்கள் தாம் படிக்கும் கல்லூரி கட்டுமானப் பொறியியல் பாடம் நடத்த உரிய பொறியியல், தொழில்நுட்ப ஏற்பு குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இந்த ஒப்புதல் தாம் படிக்கும் துறைப்பாடத் தரத்தைக் குறிக்கும். பிறகு அந்த பாட்த்தில் நன்கு பாடம் எடுக்கும் கல்லூரியைத் தகுந்த அறிவுரை வழியாகத் தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து படிக்க சேரவேண்டும். கட்டுமானப் பொறியியல் பாடத்திட்டத்தில் பொறியியல்சார் இயக்கவிய்ல், பொறியியல் வடிவமைப்பு, கட்டுமான மேலாண்மை, பொது அறிவியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் கலந்திருக்கும். இது பொதுவாக அறிவியல் இளவல் பட்ட்த்துக்கு வழிவகுக்கும். இந்தப் பட்டமும் ஓரளவு வடிவமைப்பு அல்லது கட்டுமான பட்டறிவு பெரும்பாலான கட்டுமானப் பொறியாளர் நுழைவுநிலைப் பதவிக்குப் போதுமானதாகும். இதில் மேலும் ஆழமான அறிவு பெற பட்டமேற் படிப்புக்குச் செல்லலாம். இந்தக் கல்வியோடு பெரும்பாலும் இவர்கள் பொறியியல் மேலாண்மையிலோ தொழில்வணிக மேலாண்மையிலோ அல்லது கட்டிடப் பொறியியலிலோ பட்டம் பெற்றிருத்தல் நல்லது. technology. Retrieved from https://web.archive.org/web/20110813060637/http://catalog.njit.edu/undergraduate/programs/constructioneng.php Engineering and Technology. Retrieved from http://www.abet.org/ கட்டுமான மேலாண்மை கட்டுமான மேலாண்மை கட்டுமானத் தொழில் துறையின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்த கற்கை மற்றும் செயற்பாடுகளையோ அல்லது கட்டுமான வடிவமைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கிக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றுக்கு ஆலோசகராகச் செயற்படும் ஒரு வணிக மாதிரியையோ குறிக்கும். கட்டுமான மேலாளர் ஒருவருடைய மிகவும் பொதுவான 120 பொறுப்புக்கள் 7 பிரிவுகளுள் அடங்குவதாக அமெரிக்கக் கட்டுமான மேலாண்மைக் கழகம் கூறுகிறது. இப்பிரிவுகள், திட்ட மேலாண்மைத் திட்டம், செலவு மேலாண்மை, நேர மேலாண்மை, தர மேலாண்மை, ஒப்பந்த நிர்வாகம், பாதுகாப்பு மேலாண்மை என்பனவாகும். கட்டுமான மேலாளரின் தொழில் செயற்பாடுகள், திட்ட மேலாண்மைக் குழுவின் பொறுப்புக்கள் மற்றும் மேலாண்மைக் கட்டமைப்பை வரையறுத்தல், திட்டக் கட்டுப்பாடுகளை அமுல் படுத்துவது மூலம் ஒழுங்குபடுத்துதல் மற்றும் முன்னெடுத்துச் செல்லுதல், பொறுப்புக்கள் மற்றும் பங்களிப்புக்களையும் தொடர்பு வழிமுறைகளையும் வரையறுத்தல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் முரண்பாடுகள், மேலதிகச் செலவு கோரல் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய கூறுகளை அடையாளம் காணுதல் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. தன்னார்வலர் தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள். மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி ஒரு தடவையோ ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள். அரசு சார்பற்ற அமைப்பு அரசு சார்பற்ற அமைப்பு அல்லது "அரசு சாரா தொண்டு நிறுவனம்" (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்போ, சார்பாண்மையோ அற்ற நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை. பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 400,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,000,000 அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம். இவை அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன. உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. முத்து குமாரசுவாமி சேர் முத்து குமாரசுவாமி ("Mutu Coomaraswamy", சனவரி 23, 1833 - மே 4, 1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி. சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார். முத்து குமாரசுவாமி இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783-1836) என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு அக்கடெமியில் (இன்றைய கொழும்பு ரோயல் கல்லூரி) 1842 முதல் 1851 வரை கல்வி பயின்றார். கல்லூரியில் இவருக்கு 1851 ஆம் அண்டுக்கான டர்னர் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி இதழிலும் பிரதான ஆசிரியராக இருந்தார். இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் (magistrate), முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 ஆம் ஆண்டில் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மே 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கு 1863 இல் "லிங்கனின் இன்" (Lincoln's Inn) என்ற பாரிஸ்டர்களின் மாளிகையில் சேர்க்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பினார். 1867 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1874 ஆகத்து 11 இல் இவர் முதலாவது ஆசியராகவும், இலங்கையராகவும் சேர் பட்டம் பெற்றார். 1877 ஆம் ஆண்டில் முத்து குமாரசுவாமி இங்கிலாந்தின், கெண்ட் நகரைச் சேர்ந்த எலிசபெத் கிளே பீபி என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. ஆனந்த குமாரசுவாமிக்கும் டோனா லூசா என்ற ஆர்ஜெண்டீனியப் பெண்மணிக்கும் பிறந்தவர் மருத்துவர் ராமா குமாரசுவாமி. முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் ("Royal Asiatic Society") இலங்கைக் கிளையில் "சைவசித்தாந்தச் சுருக்கம்" எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு "இந்து சமயம்" என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. தாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்டோரியா மகாராணியாரால் சேர் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த 'இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்' (Illustrated London News) என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 'அரிச்சந்திரன்' நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் பின்னிணைப்பாக 'சைவசித்தாந்தச் சுருக்கம்' என்ற கட்டுரை சேர்க்கப்பட்டது. சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் 'சைவ சித்தாந்தம்' பற்றியும் 'இந்தியத் தத்துவம்' பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை "கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்" (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர். 1862 ஆம் ஆண்டில் இலங்கையின் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இவர் இப்பதவியை வகித்துள்ளார். இங்கிலாந்தில் பெற்ற கல்வி, சமூக-அரசியல் அறிவு, சட்டத் திறமை என்பவற்றோடு உள்ளூர்ப் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு என்பவை தொடர்பிலும் இவருக்கு அறிவு இருந்தது. இதனால், சட்டவாக்கப் பேரவையில் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. இவரது பேச்சாற்றலாலும், துணிவாலும், அவையில் பயமின்றி மக்களுக்காகப் போராடினார். 1878-79 காலப் பகுதியில் வடமாகாணத்தில் ஏற்பட்ட காலராவினால் ஏற்பட்ட பேரழிவின் போது, அப்போதைய சுகாதாரத் திணைக்களத்தின் அசட்டை, தவறான நிர்வாகம் என்பன குறித்த மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர், இவ்விடயம் குறித்து அப்போதைய வடமாகாண அரசாங்க அதிபர் டபிள்யூ. சி. துவைனம் குறித்த மக்களின் குற்றச்சாட்டுகளைப் புள்ளிவிபரங்களுடன் சட்டவாக்கப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இது போன்ற மேலும் பல மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் சட்டவாக்கப் பேரவையில் வாதாடினார். இதன்மூலம் அக்காலத்துப் பத்திரிகைகளினால் பெரிதும் பாராட்டப் பெற்றார். அதேவேளை இவரது பதவிக் காலத்தில் பல ஆண்டுகளை இங்கிலாந்தில் கழித்ததனால் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களுக்குப் போதிய அளவு பலன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இவரைத் தொடர்ந்து இவரது மருமக்களான சேர். பொன். இராமநாதன், சேர். பொன் அருணாசலம் ஆகியோரும் இலங்கைச் சட்ட சபையில் உறுப்பினராக இருந்ததுடன். இலங்கை அரசியலில் புகழுடன் விளங்கினர். புகழ்பெற்ற பிரித்தான நாடகாசிரியரான பெர்னாட் ஷா, 1933 ஆம் ஆண்டில், "ஆன் த ராக்சு" (On the Rocks) என்னும் அரசியல் நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதினார். இதில் வரும் "சர். ஜாஃப்னா பன்ட்ரநாத்" "(Sir Jafna Pandranath)" என்னும் பாத்திரம் சர். முத்துக்குமாரசாமியை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நாடகத்தில் பிரித்தானியப் பிரதமராக வரும் "சர். ஆர்தர் சவென்டர்" என்னும் பாத்திரம், முன்னாள் பிரித்தானியப் பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரைலியைக் குறிக்குமுகமாகவே எழுதப்பட்டது. முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் இருந்த காலத்தில் பல உயர்மட்டத்தினருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. பிரதமர் டிஸ்ரைலியும் அவருக்கு நண்பராக இருந்தார். வேலைக்கான நேர்முகத் தேர்வு வேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, வேலை கொள்வோர் தமக்குப் பொருத்தமான பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே கைக்கொள்ளும் ஓர் வழிமுறையாகும். வேலை தொடர்பான விளம்பரங்கள் பத்திரிகையூடாகவும் இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும். இந்த வேயைப் செய்ய விரும்புபவர்கள் தமது சுயவிபரக் கோவையை விண்ணப்பத்துடன் அனுப்புவார்கள் (பொதுவாக மனிதவளப் பிரிவிற்கு). அங்கே பொருத்தமானவை எனக்கருதும் சில சுயவிபரக்கோவைகள் வடிகட்டி எடுக்கப்படும். பழையகாலத்தில் 2 பக்கங்களுக்கு மிகையாகாமல் சுயவிபரக்கோவையையே விரும்பினார்கள் எனினும் அண்மைக்காலத்தில் சுயவிபரக்கோவைகள் பல பக்கங்களிலும் இருப்பதும் ஓர் போட்டியாளரில் இருந்து இன்னோர் போட்டியாளரை பிறிதாகத் தரம் பிரித்துக் காட்டும் என்பதால் இதுவும் இப்பொழுது விரும்பப்படுகின்றது. சுயவிபரக் கோவையானது பொதுவாகச் சுருக்கமாக 2 பக்கங்களில் இருக்கலாம். இவை A4 மற்றும் Letter அளவிலோ இருக்கலாம். பொதுவாக சுயவிபரக்கோவையை காலரீதியாக அண்மைக்காலத்தில் இருந்து ஆரம்பித்து முந்தையவற்றைக் கீழும் காட்டுதலே விரும்பப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஓருவர் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு உடையவர் என்றால் முதலில் அதைப்பற்றி விளக்கிவிட்டு பின்னர் அதற்கு முந்தையவற்றைக் கீழே தரலாம். வேலை சம்பந்தமான விபரங்களும் இவ்வாறானதே. எப்பொழுதுமே நேர்முகத்தேர்விற்கு ஆகக்குறைந்தது 15 நிமிடமாவது முன்னரே செல்லவதே நல்லது. நேர்முகத் தேர்வு நடக்கும் இடம் பரீட்சயமானதாக இல்லாவிட்டால் இயன்றவரை 1/2 மணித்தியாலமாவது முன்னரே போவது நல்லது. இடையில் எதிர்பாராத வாகன நெரிசல்கள் வேறு பிரச்சினைகள் வரக்கூடும் என்பதையும் கருத்திற் கொள்ளவும். நேர்முகத் தேர்விற்குப் போகமுன்னர் முதல்நாளே வேண்டிய ஆவணங்களைத் எல்லாம் தயார்படுத்திவிட்டு அடுக்கி நேரத்திற்கு தூங்கவும். இயன்றவரை பணியாற்ற விரும்பும் அமைப்பின் தகவலகளைப் பெற்றுக்கொள்ளவும். இணையத்தளங்கள் தெரிந்தவர்கள் ஊடகங்கள் போன்றவை இதற்கு உதவி செய்யும். நேர்முகத் தேர்வு இடத்திற்கு வந்ததும் நீங்கள் வந்திருப்பதைக் காரியதரிசியிடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும். அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் வணக்கம் கூறி உங்களை நீங்கள் சுய அறிமுகம் செய்துகொள்ளவும். அன்னதானம் அன்ன தானம் () (Soup kitchen) என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது. அன்னம் என்றால் சோறு ஆகும். தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது "தா" எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும். 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிரமதானம் சிரமதானம் என்பது பொது இடங்களை பலர் கூட்டாக சுத்தப்படுத்திப் பேணும் பணியைக் குறிக்கும். ஆறு, கடற்கரை, பூங்கா, விளையாட்டு அரங்கு, மாவீரர் துயிலுமில்லங்கள், சனசமூக நிலையம், சமய நிறுவனங்கள் என பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களை சிரமதானம் மூலமாக சுத்தம் செய்து பேணுவர். இந்தச் செயற்பாட்டில் மாணவர்களும் இளையோரும் சிறப்பாக ஈடுபடுவர். குழந்தை ஆதரிப்பு வசதி பெற்றவர் ஒருவர் வசதிகள் பெறாத ஒரு குழந்தை வளர்ந்து சுயசார்பு பெறும் வரையில் அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதை குழந்தை ஆதரிப்பு ("Child sponsorship") எனலாம். புலம்பெயர்ந்தோரும் தமது தாயகக் குழந்தைகளை ஆதரிப்பர். இந்தச் செயற்பாடு ஒரு நிறுவனம் ஊடாகவே பெரிதும் நடைபெறுகிறது. ஒரு நிறுவனத்துக்கு தரப்படும் பணத்தில் எவ்வளவு வீதம் குழந்தையின் நேரடித் தேவையை பூர்த்தி செய்வதில் பயன்படுத்துகின்றது என்பது நிறுவனங்களை மதிப்பிடும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்தது 80% குழந்தைக்கு நேரடியாக போய்ச்சேர்வது ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு திறனக்கு சான்று பகிரும். தன்னலம் தன்னலம் அல்லது சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதைக் குறிக்கிறது. இதுவே பல பொருளியியல், அரசியல், சமூகவியல், கோட்பாடுகளின் அடிப்படை. பிறரை விட தானே தனது நலத்தைப் பேண முடியும் என்பதையும், இந்த செயற்பாட்டில் முழுச் சுதந்திரம் வேண்டும் என்பதையும் தன்னலம் கருத்தியல் சுட்டி நிற்கின்றது. பரந்த நோக்கில் பொது நலத்தையும் பேணியே தன்னலத்தைப் பேணக் கூடியதாக இருக்கின்றது. தன்னலம் கருத்தியல் தனிமனித சொத்துரிமையை வலியுறுத்துகிறது. ஒருவன் ஒன்றை தனது சொத்தாக கருதினாலேயே அவன் கூடிய கவனத்துடன் அதைக் கவனித்து கொள்வான் என்று இந்தக் கருத்தியல் சுட்டுகிறது. குறிப்பாக வன்மையான பொதுவுடமையை தன்னலம் முற்றிலும் எதிர்க்கிறது. இளமை விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை () ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்துனருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவு மிக்கது, செயற்பாட்டை முதன்மைப் படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு(ஆதாரம் தேவை). அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது. அலன் ஷெப்பர்ட் அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் ("Alan Bartlett Shepard", நவம்பர் 18, 1923 – ஜூலை 21, 1998) விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5, 1961 இல் மேர்க்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் 1971 இல் தனது 47வது அகவையில் அப்பல்லோ 14 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார். 1959 இல் புதிதாக உருவாக்கப்பட்ட நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட 110 பயிற்சி விமானிகளுள் செப்பர்டும் ஒருவர். மிகவும் கடினமான பயிற்சிகளின் பின்னர் மேர்க்குரி திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு விண்வெளி வீரர்களுள் இவரும் ஒருவர். முதலாவது அமெரிக்கராக விண்வெளிக்கு செல்லவென இவர் ஜனவரி 1961 இல் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அக்டோபர் 1960 இல் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்ட போதும் பல தடைகள் காரணமாக பயணம் மே 1961 இற்குத் தள்ளிப் போடப்பட்டது. ஏப்ரல் 12, 1961 இல் சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார். மே 5, 1961 இல், அலன் ஷெப்பர்ட் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஃப்றீடம் 7 (Freedom 7) என்ற விண்கலத்தில் 116 (statute miles) தூரத்திற்கு சென்றார். தனது 47வது வயதில் ஷெப்பர்ட் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை அப்பல்லோ 14 இல் ஜனவரி 31–பெப்ரவரி 9, 1971 இல் சென்றார். இதுவே வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது அமெரிக்கத் திட்டமாகும். சந்திரனில் இவர் தங்கியிருந்த போது குழிப்பந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 1, 1974 இல் இவர் நாசாவில் இருந்தும் கடற்படையில் இருந்தும் ஓய்வு பெற்றார். பொபி சான்ட்ஸ் ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் ("Robert Gerard Sands", அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் ("Bobby Sands", மார்ச் 9, 1954 – மே 5, 1981), என்பவர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார். 1981 இல் சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து 10 பேர் இந்த நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. பல தன்னார்வலர்கள் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர். சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் பலத்த குரலெழுப்பப்பட்டன. தமிழிசை வாணர்கள் திருவடி திருவடி, தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தெய்வேந்திரநல்லூர் ஊராட்சியின் உள்ள சிற்றூர். திருவடி சிவகாளி அம்மன் கோயில் மக்களிடையே புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான சடங்குகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சடங்குகள் சமய சார்புடையதாகவே உள்ளது. இருப்பினும் ஒரு சில நிகழ்வுகள் இனங்களை பொறுத்தும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக உணர்ச்சி வெளிப்படுத்தப்படும் முறை, பாடப்படும் பாடல்கள், கொண்டாட்ட முறைகள் ஆகியன. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் தமிழர் மத்தியில் பொதுவாகவும், சமயம் சார்ந்தும் காணப்படும் சில சடங்குகளை தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் எனலாம். ஆப்பிரிக்க கனேடியர் ஆப்பிரிக்க பின்புலத்தைக் கொண்டு கனடாவில் வசிப்பவர்களை ஆப்பிரிக்க கனேடியர் என்பர். இவர்களை கறுப்புக் கனேடியர், கரீபியன் கனேடியர் என்றும் அழைப்பதுண்டும். ஆப்பிரிக்க கனேடியர்கள் தொடக்கத்தில் (1700 கள்) இருந்தே கனேடிய சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார்கள். இருப்பினும் அனேகர் அண்மைக்காலத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து குடிபுகுந்தவர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்) தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் பயன்படும் பாட நூல்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் கிடைக்கின்றன. வகுப்பு 1 முதல் 12 வரையான பாட நூல்கள் இங்கு கிடைக்கின்றன. தமிழ், கணக்கு, அறிவியல், மனையியல் உட்பட எல்லா பாடங்களும் இங்கு உள்ளன. தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்கி செயற்படுத்தியது பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ் வலைத்தளங்களின் பட்டியல் "இங்கு முற்றிலும் தமிழில் அல்லது தமிழிலும் உள்ள இணையத்தளங்கள் பட்டியலிடப் படுகின்றன. இணையத்தில் தமிழில் நம்பிக்கையான தகவல்களை சேகரித்து பகிரும், தகவல்களை முன்னிலைப்படுத்தும் தளங்களை இங்கு பகிர்வது நன்று. தனிப்பட்டோரை முதன்மைப்படுத்தும் இணையத்தளங்கள் அல்லது தனிப்பட்டோரின் இணையத்தளங்கள் தவிர்க்கப்படுகின்றன." பார்க்க: இருள்வ மௌத்திகம் இருள்வ மௌத்திகம் எழுத்தாளர் கோணங்கி எழுதிய குறுநாவல் மற்றும் கதைகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை: I. இதுவரைத் தன் நூலைப் படித்து - முடித்து - இராத வாசகனின் குறிப்புகள் அ) தேய்ந்தால் வளரும் கலை வளர்ந்தால் தேயும் கலை ஆ) ஒரு கதை சொல்பவன் மற்றொரு கதை சொல்லியை விரும்ப மாட்டான். இ) கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் II. கதாந்தகம் 1. இருள்வ மௌத்திகம் 2. புலிக்குகை நாயனம் 3. அலையும் கண்ணாடியுள் ரஸவாதி 4. வெள்ளரிப் பெண் 5. திறந்த விழிகளோடு தூங்கும் ஸ்திரிகள் 6. மண் சிலம்பை 7. மோன இழை III. குறுநாவல் 1. தழும்புகள் சிவந்த அணங்குநிலம் IV. நேர்முகம் 1. தன்னுடன் தன் உரையாடல் "வனச்சாம்பல் பூக்களாக உருமாறி நில வாசனைகளை அடுத்த காலத்திற்கு அப்பால் உள்ள கல்வீடுகளின் இருபக்க யோனிகளில் அருவிபாயும் தொனி மறைவாய் கேட்கிறது. உள்ளிருப்பவர் யாவரும் நிழல்களின்றி இருந்தார்கள். கூட வருபவர்கள் யாருமின்றி கொற்றவைச் சுடர் விளக்கிற்கருகில் மான்கூட்டம் உறங்க அவற்றோடு மந்திகள் பாறைகளில் துயில வெம்பரப்பான அவாந்தரவெளி மூடிய தருணம். வேடர் மரங்கடைந்த கொற்றவைச் சிற்பங்களின் திருகிய சுடர் மேவும் வெளிச்சம் ஆனைத்தோல் சுற்றிக் கரு உடல் கொண்ட ஒற்றை முலைச்சியை மயிற்பீலிகளால் மூடிய கண்களின் இருவம் மயூர பிச்சதுவஜம் அணிந்த பாழ்நிலத்தாள் விடியலாய் எழ இலையுடைதறித்த வனாந்தரி பயங்கரக் கரியநிறத்தில் காட்டை இருட்டித் தீர்த்தாள்" என் பெயர் ராமசேஷன் என் பெயர் இராமசேஷன் என்பது எழுத்தாளர் ஆதவன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம். இதன் முதல் பதிப்பை இமயப் பதிப்பகம் 1980ம் ஆண்டு வெளியிட்டது. இப்புதினம் வித்தாலி பூர்ணிக்காவால் உருசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் படிகள் விற்பனையானது. உயிர்மை பதிப்பகம் 2006 ஆம் ஆண்டு இதனை மீண்டும் வெளியிட்டது. மொத்தம் 199 பக்கங்கள் கொண்ட இப்புதினம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகளும் தலா 90 பக்கங்களைக் கொண்டுள்ளன. மூன்றாவது பகுதி எட்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. உயிர்மைப் பதிப்பின் பின்பக்கக் குறிப்பு: ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது. ராமசேஷன் நடுத்தரவர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்தவன். அப்பா சாது. பெண்கள்தான் குடும்பத்தில் ஆட்சி செலுத்துகிறார்கள். ராமசேஷன் பொறியியல் கல்லூரி படிக்கின்றான். அப்போது அவனுக்கு சில பெண்கள் அறிமுகம் ஆகின்றார்கள். வேறு தரமான ஆண்கள் நண்பர்களும் விரோதிகளுமாக ஆகின்றார்கள். ஒரு பேராசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எல்லாரையும் நெருக்கமாகத் தெரிய வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் அனைவருமே முகமூடிகளை அணிந்து கொண்டு தங்கள் உறவுகளையும், உணர்வுகளையும் அணுகுகிறார்கள். அந்த முகமூடிகள் எவை, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடு கதை உள்ளது. முதலாம் கோப்பெருஞ்சிங்கன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன்இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான். தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது. கோப்பெருஞ்சிங்கன் 13ஆம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலைவர்களில் ஒருவன். 1243ல் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசன் இவன். பல்லவர் படை5த்தலைவர் வழியில் வந்தவன். சோழர் பரம்பரையில் பெண் கொண்டு வாழ்ந்தவன். எனினும் மூன்றாம் இராசராசனைச் சிறைபிடித்துச் சோழப்பேரரசு வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவன். தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவனது கல்வெட்டுகள் மிகுதி. இவன் புலவனாகவும் விளங்கினான். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவனைக் குறிப்பிடுகின்றன. வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவன் சோழனைச் சிறையிலிட்ட செய்திகளைக் கூறுகின்றன. இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. கால்வாய் சுரங்கம் கால்வாய் சுரங்கம் ("Channel Tunnel", அல்லது சணெல் ("Chunnel"), அல்லது யூரோ சுரங்கம் ("Eurotunnel") என அழைக்கப்படும் ', 50.5 கிமீ (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும். தனிமனிதத்துவம் தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, தற்சார்பை முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதைத் தனிமனிதத்துவம் குறிக்கின்றது. இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதில்லை. கவிஞர் தேவதேவன் கோகிலா மகேந்திரன் பொருள்முதல் வாதம் அண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருள்முதல் வாதம் ("materialism") எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற கருத்து முதல்வாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர். பொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யமுடியவில்லை. உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது. சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா " நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது. இந்திய தத்துவஞானி கபிலரைப்போலவே கிரேக்கத் தத்துவஞானிகளில் ஒருவரான தாலெஸ் (தேலேஸ்) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் தண்ணீர் அல்லது ஈரம் என்று கருதினார். அனாக்சிமேனஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் காற்று என்றார். ஹெராக்ளிடஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் நெருப்பு என்றார். எல்லாவற்றுக்கும் மூலம் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் என்ற நான்குமே என்றார். ஆனால் டெமாக்ரிடஸ்(டெமோக்கிரட்டிசு) கண்ணால் காணவோ, தொட்டறிய முடியாத மிகச் சிறிய பொருளான அணுக்கள் (கிரேக்க மொழியில் "atom" என்னும் சொல்லுக்கு "பிரிக்க முடியாதது என்று பொருள்") என்ற நிரந்தரமான, அழிக்க முடியாத, மாற்றமுடியாத அணுக்கலிலிருந்து தோன்றுவதுதான் பொருள் என்றார் உறுதியாக. குறிப்பிட்ட பருமன், வடிவம், எடை, இயக்கம் ஆகியன கொண்டவை அனைத்தும் குறிப்பிட்ட முறையில் இணைந்த அணுக்களைக் கொண்டவை. அணு அடுக்குகளின் பதிவுகளே நமது புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் ஆகும் என்று போதித்தார். இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும். அடிக் கட்டுமானம் எனப்படுவது பொருளாதார வாழ்க்கையின் பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற பொருளாதார உற்பத்தி உறவு நிலைகளைக் குறிப்பிடுவதாக அமையும். இதனைச் சமூக இருப்பு (Social Being) என்றழைப்பர். இத்தகு வாழ்வியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அதன் உயர்மட்ட கருத்தாக்கங்கள், சமய நெறிகள், அரசமைப்புகள், சமூக மரபுகள், அழகியல் கோட்பாடுகள் போன்றவற்றின் ஒட்டுமொத்தத்தைச் சமூக உணர்வு (Social Consciousness) எனக் குறிப்பிடுவர். இத்தகைய, சமூக உணர்வே மனித சமுதாய அமைப்பின் உயர் கட்டுமானம் என்றழைக்கப்படுகிறது. இவ் அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் தமக்குள் ஒன்றுடனொன்று சார்ந்து காணப்பட்டு பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றுக்கொன்று ஒருமித்தவை. ஒன்றின் மீது மற்றொன்று செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இரண்டு கட்டுமானங்களும் வேறுவேறானது அல்ல. தனித்துச் செயற்படும் தன்மையற்றது. அடிக் கட்டுமானத்தைச் சார்ந்தே எப்போதும் உயர் கட்டுமானம் அமைந்துள்ளது. அதேபோல், உயர் கட்டுமானமானது, பொருளாதார உற்பத்தி உறவுமுறைகளால் உருவான அடிக் கட்டுமானத்தைப் பாதிப்படையச் செய்கின்றது. இத்தகைய, உயர் கட்டுமானத்தில் மொழி, கலை, இலக்கியம், அழகியல் முதலானவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மனித சமுதாய வாழ்கையின் அடிப்படையாகப் பொருள் உற்பத்திமுறை விளங்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறையானது உற்பத்திச் சக்திகள் (Productive Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Objects of labour) ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. சமூகத்தின் அடிப்படையாகப் பொருள் உற்பத்தி உள்ளது. மனித சமூகம் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்குரிய தேவையான, இன்றியமையாதப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கின்றது. உற்பத்தி என்பது மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைத் தோற்றுவிக்கும், மக்களின் செயல்பாடாகும். இந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு, மனிதனுக்கு உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் (Instruments of labour), உழைப்பு ஆகிய மூன்றும் இன்றியமையாததாக உள்ளன. மனித சமூகம் உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அவ் உற்பத்தி மூலமாக உருவான விளைபொருட்களைப் பெறுவதற்கும் தேவைப்படும் பொருளுக்கு உழைப்பின் குறிபொருள் என்று பெயர். அதாவது, எந்தப் பொருட்களின் மீது மனித சக்தி, தமது உழைப்பை செலுத்துகிறதோ, அந்தப் பொருளானது உழைப்பின் குறிபொருள் என அழைக்கப்படுகின்றது. வழக்கத்தில் இரு வகையான உழைப்பின் குறிபொருள்கள் உள்ளன. இயற்கைக் குறிபொருள்கள் என்பவை இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்படுபவையாகும். பூமியிலிருந்து கிடைக்கும் மண் வளம், கனிம வளம், நீர் வளம், மீன்வளம், காட்டு வளம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் நிலப்பகுதிகள் முதலானவை எடுத்துக்காட்டுகளாவன. பயிரிடுவதற்கான உரிய, உகந்த நிலம் உழவுத்தொழில் மேற்கொள்வதற்குரிய உழைப்பின் குறிபொருளாக அறியப்படுகிறது. இயற்கைக் குறிபொருளைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்படும் கசசாப் பொருள்களுக்கு மனித ஆக்க மூலப் பொருள்கள் எனப்படும். நெல், பருத்தி, இரும்பு, கரும்பு, தங்கம், செங்கல் முதலாவை மனித ஆக்க மூலப் பொருள்களுக்குச சான்றுகளாகும். உற்பத்திக்குக் கருவிகளின் பயன்பாட்டுத் தன்மை இன்றியமையாதது. மனித உழைப்பிற்கு உபயோகப்படும் கருவிகளே உழைப்புக் கருவிகள் ஆகும். மனிதன் என்பவன், உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, உழைப்பின் குறிபொருளின் மீது வினையாற்றிப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறான். தொடக்கக் காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களும், அண்மைக் காலத்தில் நவீன இயந்திரங்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள், தொலைத்தொடர்புகள் முதலியன உழைப்புக் கருவிகளாகச் செயற்படுகின்றன. உழைப்புக் கருவிகளுடன் இணைந்த தொழிற்கூடங்கள், கிடங்குகள், இருப்புப்பாதைப் போக்குவரத்து, நீர்ப்பாசன வசதிகள், மின்சாரம் போன்றவையும் உழைப்புக் கருவிகளுக்குள் அடங்கும். பொருள் உற்பத்திக்கு இன்றியமையாதது உழைப்பு ஆகும். உழைப்பின் குறிபொருள் மற்றும் கருவிகள் தாமாகவே இயங்கி எந்தவொரு உற்பத்தியையும் செய்திடவியலாது. அவற்றுள், மனிதனது உழைப்பு செயற்படுத்தப்படும் போதுதான் உற்பத்தி நிகழ்கிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு மனிதனின் தேவைகளை ஈடேற்றிட முற்படும் நடவடிக்கையாகும். உழைப்பின் பயனாக மனித சமூகம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்திச் செய்துள்ளது. உழைப்பானது மனிதனுக்குத் திறமையையும் திறன்களையும் தருகின்றது. மனித சமுதாயம் வளர்ச்சியும் மேம்பாடும் அடைய உழைப்பு உறுதுணையாக உள்ளது. உழைப்பே புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகும். அரசு சமயம் பிரிவினை அரசு மற்றும் சமயப் பிரிவினை ("Separation of church and state") என்பது ஒர் அரசியல் சட்ட கொள்கை ஆகும். இது அரசியல் நிறுவனங்களும் சமய நிறுவனங்களும் தனித்து தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று வேண்டுகிறது. இது பொதுவாக சமய சார்பற்ற அரசு, மக்களுக்கு தமக்கு விருப்பமான சமயத்தை பின்பற்றும் உரிமை என்ற இரு கொள்கைகளின் கலப்பாகும்.. குறிப்பாக அரசு சமயம் சார்பற்றதாக்கவும், இயன்றவரை சமய செயற்பாடுகளில் தலையிடாமலும் இருக்க வேண்டும் என இந்தக் கொள்கை வேண்டுகிறது. பல்வேறு சமய சார்புடைய சமூகங்களை ஒரே அரசியல் அலகில் இனைக்க இந்தக் கோட்பாடு அவசியமாகிறது. பொதுவாக, அரசும் சமயமும் முரண்படுகையில் அரசே முதன்மைபடுகிறது. குறிப்பாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சமயத்தை விட கூடிய பொறுப்பும் கடமையும் மிகுந்ததாக கருத்தப்படுகிறது. அரசு சமயப் பிரிவினை மேற்கு நாடுகளில், சிறப்பாக அமெரிக்காவிலேயே தோற்றம் கண்டது. அரசு சமய பிரிவினை இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இலங்கை, ஈரான், பாகிஸ்தான் போன்றவை இந்தக் கொள்கையை கடைப்பிடிப்பதில்லை. இலங்கையில் புத்த மதமே அரசால் முதன்மைப்படுத்தப்பட்டது இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. அவ்வை தமிழ்ச் சங்கம் அவ்வை தமிழ்ச் சங்கம் என்பது இந்தியத் தலைநகர் டெல்லியை அடுத்த நோய்டாவில் கிரேட்டர் நொய்டா, நொய்டா, வசுந்தரா, மயூர் விகார், இந்திராபுரம் மற்றும் காஜியாபாத் வாழ் தமிழ் மக்களின் நலனிற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் வழியாக -ஆகிய பணிகளும், மற்றும் சமூகப் பணிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம், கி பி 1686 முதல் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து தன்னாட்சியாக இயங்கியது. பின்னர் 1800 - முதல் 1948 முடிய பிரித்தானியர்களின் கீழ் சமஸ்தானமாக இயங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம், 1948-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கிபி 1686 ல் , புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கி புதுக்கோட்டையின் முதல் மன்னராக ரகுநாதராய தொண்டைமான் அரியணை ஏறினார். இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது. இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தாம் ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீமையை அந்த மன்னரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார். கள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது. 1717–1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் புதுக்கோட்டையில் அடைக்கலம புகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்டு தலைமுறைகள் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர்தம் பேரன்களில் மூத்தவராகிய விஜயரகுநாதனுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார். இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டு பாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார். 1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்து பெரும் பகுதியைப் கைபற்றிக்கொண்டார் ஆயினும், திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டார். ஐதராபாத்து நிசாம் (ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர். மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர். பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது. இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர். இவர் , 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிட த்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டடை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்: “நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.” இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார். இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். 1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார். இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர். இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார். இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், குழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் பயிற்றுவிக்கப்பெற்றனர். இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன. 1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு. இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார். இவர் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர். இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. 1. அப்பீல் கோர்ட்டு 2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு 3. ஸ்மால் காஸ் கோர்ட்டு 4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள் இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார். இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது. 1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரண்மனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது. 1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார். 1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது. இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:- 1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார். 2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார். 3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலைவிலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார். 4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார். 5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார். 6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார். 7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார். 8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார். 9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார். 10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார். இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிர்வாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1909-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம். நகர சபையில் 8 அங்கத்தினரும், சட்டசபையில் 35 அங்கத்தினரும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டியவராவர். இன்னும் நமது நாடு முழுதும் கட்டாய இலவசக்கல்வி ஏற்படுத்திப் பெரும் புகழுடன் இவ்வரசர் பெருந்தகை நீடுழி வாழ்வாராக. புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17. சனவரி 1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1997 இல் மறைந்தார். புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள்சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள்.அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம்.இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்தனர். பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இயங்கிய துறைகள்: 1. நிலவரி வசூல் 1. கிராமம் 2. வருவாய் வட்டம் 3. காவல் 4. சிறைச்சாலை 5. அஞ்சல் சேவை 6. பங்களா 7. மராமத்து 8. உப்பளம் 9.காடு 10. நீதிமன்றம் 11. வட்டார அலுவலகம் அமெரிக்கக் கனவு யார் எங்கிருந்து ஐக்கிய அமெர்க்காவுக்கு வந்தாலும், அவர் எந்த பொருளாதார நிலையில் தொடங்கினாலும், சாதி, வர்க்கம், சமயம், இனம் கடந்து கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பதுவே அமெரிக்க கனவு. அமெரிக்க கனவு என்ற கருத்துரு அல்லது விழுமியம் அமெரிக்காவின் தொடக்கலாகத்தில் இருந்தே இருக்கிறது. இந்தியர்களும் பல்வேறு நாட்டவரும் இந்த அமெரிக்க கனவுடனேயே குடிவருகின்றார்கள். ஒப்பீட்டளவில் வெற்றியும் பொறுகிறார்கள். சமய சார்பின்மை சமயத்தை அல்லது கடவுளை முதன்மைப் படுத்தப்படாமையை சமயசார்பின்மை (secularism) அல்லது சமய சார்பின்மை எனப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம் அரசாங்கத்தில் கோலோச்சிய காலத்தில் அரசை மதப்பிடியிலிருந்து மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்த போது , "Secularism" என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் . அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்பு இந்தப் போக்கு வலுப்பெற்றிருக்கிறது. அனேக மேற்குநாடுகள், இந்தியா, சீனா, உருசியா உட்பட பல்வேறு நாடுகளில் இது ஒரு அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள், இலங்கை ஆகியவை இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. சமயத்தை திணிப்பதை, அல்லது பொது செயற்பாடுகளில் புகுத்துவதை சமயசார்பின்மை எதிர்க்கிறது. எடுத்துக்காட்டாக கல்வியில் ஒரு சமயத்தை முதன்மைப்படுத்துவதை இது ஏற்றுக்கொள்ளவில்லை. சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது. அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன. இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது. தற்காலத்தில் பொது வாழ்விலும் அரசியலிலும் சமய சார்பின்மை போக்கினையே தமிழர் பெரிதும் பின்பற்றி வருகிறார்கள். கூட்டுத்துவம் மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துழைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை கூட்டுத்துவம் குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிமனிதத்துவமே வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது. புலனறிவாதம் புலனறிவாதம் ("empiricism"), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும். புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது. புலனறிவாதத்தின்படி, மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகளின் வழியாகவே வருகின்றது. "சூரியன் சுடுகின்றது" என்ற கருத்து (அதாவது, அறிவு) சூரியன் அவனைச் சுடுவதாலேயெ அவனுக்கு வந்தது. "நச்சுப் பாம்பு கொடியது" என்ற அறிவு பாம்பு கடித்து இறந்த பட்டறிவினாலேயே (அனுபவம்) வந்தது. மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் பட்டறிவினால் மட்டுமே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் பட்டறிவு சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பட்டறிவு; ஆனால் அது உண்மையன்று. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. எனவே, புலனறிவாதத்தின்படி, மனிதனுக்குக் கிட்டும் அறிவு பெரும்பாலும் ஒன்று, அவனுடைய பட்டறிவினால் வந்ததாக இருக்க வேண்டும்; அல்லது அவன் அதற்கு ஆதாரங்கள் தேடிப் பெறப் பட்டதாக இருக்க வேண்டும். புலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதைப் புலனறிவாதம் வலியுறுத்துகின்றது. அதாவது, அறிவியலில் வரும் எல்லா கூற்றுக்களும் கருத்துக்களும் புற உலகத்தில் உண்மையானவையா என்று ஆய்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்; மற்றும், ஒருவர் ஒன்றை உண்மை என்று நம்புவதாலேயோ அல்லது கடவுள் என்ற ஒரு பேராற்றல் தனக்கு ஒன்றை உணர்த்தி விட்டுச் சென்றது என்று சொல்வதாலேயோ எதுவும் உண்மையாகாது. எதுவாயினும் அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். அறிவு என்பது எப்போதுமே சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுகின்றது என்பது நேற்று வரை உண்மையாக இருந்து, இன்று பொய்யாகிப் போயிருக்கலாம். உண்மையாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றோ, பொய்யாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு பொய் என்றோ சொல்லவதற்கில்லை. நாளை மழை பெய்யும் என்று சொன்னால், நாளை கட்டாயமாக (நூற்றுக்கு நூறு) மழை பெய்யும் என்று சொல்வதற்கில்லை. 90% பெய்யலாம். கொஞ்ச நேரம் கழித்து, 90% பெய்யாது, 70% தான் பெய்யும் என்றும் சொல்ல வேண்டியும் இருக்கும். இவ்வாறு, உண்மையான (அல்லது சரியான) அறிவு என்று ஒன்றும் கிடையாது. அது மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும். Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு ("instinct") அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். முற்காலத்தில் மனம் அல்லது உள்ளம் என்பது ஒரு தூய பலகை (அல்லது தூய வெள்ளைத்தாள்) எனவும், ஒருவனின் பாடு (அனுபவம்) அந்த வெள்ளைத்தாளில் விடுகின்ற கிறுக்கல்களே எனவும் கருதப் பட்டது. அரிஸ்டாட்டில் கூறுகிறார்: பிளாடோவின் கருத்து இதற்கு நேர் மாறாக உள்ளது. அவர் கருத்துப்படி, ஒரு மனிதனின் மனம் என்பது அவன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே, விண்ணுலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். அவன் பிறந்த பிறகு, அந்த மனம் அவன் உடலில் வந்து சேர்ந்து கொள்கின்றது.(பார்க்க ) தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகம் என்பது உள்ளிருப்பது, மனதில் அல்லது உள்ளத்தில் இருப்பது என்று கொள்ளலாம். ஒருவனுக்கு புற வாழ்க்கை இருப்பது போலவே அவனுக்கு அக வாழ்க்கையும் இருக்கின்றது. ஒரு வகையில், அக வாழ்க்கை என்பது புற வாழ்க்கையினும் இன்றியமையாதது என்றும் கருதப்பட்டது. அக வாழ்க்கையில், உள்ளுக்குள் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் அவன் உள்ளத்தில் ஆழ பதிந்து விடுகின்றன. இத்தாலியில் மறுமலர்ச்சி பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் பல அறிஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்கள் உண்மைலேயே சரியானவைதானா என்று பல கேள்விகளை பிரித்தானிய புலனறிவாதம் பிரித்தானிய புலனறிவாதத்திற்கு 17-ஆம் நூற்றாண்டில் அத்திவாரம் (foundation) இட்டவர்களில் பிரான்சிஸ் பேகன்(), ஜான் லாக்() , ஜியார்ஜ் பெர்க்லி(), டேவிட் ஹ்யும்() ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர். குறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று "வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்" போல பதிந்து விடுகின்றன. நம் மனத்தில் உள்ள அறிவு இரண்டு வகையாகப் படும்: ஒன்று புலனறிவு( knowledge through sensation), மற்றொன்று சிந்தனையறிவு(knowledge through reflection). புலனறிவு என்பது புலன்கள் புற உலகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு, அந்தத் தாக்கம் மனத்துக்குள் சென்று பதிவதனால் ஏற்படுகின்றது. (தேன் இனிக்கும், முள் குத்தும், என்பன புலனறிவே.) சிந்தனை அறிவு என்பது சிந்தித்துப் பார்ப்பதால் மனத்தில் தோன்றும் அறிவு ஆகும். ( ஓ(make sound) --> ஓது(chant, read, learn) --> வேது(knowledge) --> வித்து (வித்தை - அறிவு, skill) --> சித்து (அறிவு,knowledge ) --> சிந்தி (think, create knowledge ) என்று கூறுவார்.) எடுத்துக் காட்டாக, இரு இணை கோடுகளை வரைந்து, அவற்றை எல்லையில்லாமல் (infinitely) நீட்டிக் கொண்டே போனாலும், அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வதே இல்லை. இது ஒரு சிந்தனை அறிவு. ஏனெனில், ஒரு கோட்டை எல்லை இல்லாமல் நீட்டி கொண்டே போவது என்பது நாம் நடை முறையில் காண்பது அன்று. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள இணை கோடுகள் (parallel lines of finite length) ஒன்றுகொன்று வெட்டி கொள்ளாது என்று மட்டும் தான் நமக்குத் தெரியும்.(இது ஒரு வேளை பட்டறிவாகலாம்.) ஆனால், அளவில்லாத (infinitely long) இணை கோடுகள் வெட்டிக் கொள்ளாது என்பது சிந்தனை அறிவு மட்டுமே; பட்டறிவாகாது. அறிஞர் ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி, அறிவு பிரித்து அறியக்கூடிய ஒரு கூட்டுப் பொருளாக இருக்கலாம், இதைக் கூட்டறிவு எனலாம். அல்லது, அறிவு பிரிக்கவியலாத ஒன்றாகவும் இருக்கலாம், இதைத் தனியறிவு எனலாம். எடுத்துக் காட்டாக, அணு என்பது கூட்டறிவு. எதிர்மின்னி (electron) என்பது தனியறிவு. நடைமுறைவாதம் நடைமுறைவாதம், பயனீட்டுவாதம் அல்லது காரியவாதம் (Pragmatism) என்பது ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். நடைமுறை விளைவுகளைக் கருத்தில் கொள்வதன் மூலமே ஒரு செயற்பாடு அல்லது பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நடைமுறைவாதம் முதன்மையாக எடுத்துரைக்கிறது. அதாவது விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் நுட்பம், நிலைப்பாடு அல்லது ஏற்பாடுகள் சிறந்தவை என்கிறது. இந்தக் கோட்பாடு அமெரிக்கர்களான சார்ல்ஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ், வில்லியம் ஜேம்ஸ், ஜோன் டூவி ஆகியோரால் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. எல்லா விடயங்களிலும் முன்கூட்டியே அறிந்து நிலைப்பாடுகளை எடுக்க முடியாது என்பது இந்த வாதத்தின் ஒரு முக்கிய கூறு. காரியவாதம் அடிப்படைவாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைப்பாடு எனலாம். பகுத்தறிவுவாதத்தையும் இது கேள்விக்கு உட்படுத்துகிறது. சூறாவளி நர்கீஸ் சூறாவளி நர்கீஸ் ("Cyclone Nargis") என்பது மியான்மாரில் (பர்மா) மே 2008 இல் வீசிய கடும் சூறாவளியைக் குறிக்கும். இச்சூறாவளியின் தாக்கத்தால் மியான்மாரில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் குறைந்தது 22,500 பேர் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. நர்கீஸ் மியான்மாரைத் தாக்கும் முன்னர் கடைசியாக 2006 ஆம் ஆண்டில் சூறாவளி மாலா இந்நாட்டைத் தாக்கியது. ஏப்ரல் 27, 2008 இல் நர்கீஸ் சூறாவளி வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் முதன் முதலில் தோன்றியது. ஆரம்பத்தில் மிக மெதுவாக வடமேற்குத் திசையில் நகர்ந்த இச்சூறாவளி தனக்குச் சாதகமான காலநிலையை சந்தித்ததில் அதன் தாக்கம் தீவிரமாகியது. ஏப்ரல் 29 அளவில் உலர்ந்த காற்று இதன் தாக்கத்தைக் குறைத்திருந்தாலும், மே 2 இல் அதன் வேகம் தீவிரமடைந்து குறைந்தது 165 கிமீ/மணி (105 மைல்/மணி) வேகத்தை அடைந்தது. அதன் உயர் வேகம் 215 கிமீ/மணி (135 மைல்/மணி) ஆகப் பதியப்பட்டது. மியான்மாரின் "ஐராவதி" டெல்டா கரையை உயர் செறிவில் தாண்டிய சூறாவளி பின்னர் யங்கோன் (ரங்கூன்) நகரை கடந்தபோது அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து மியான்மார்-தாய்லாந்து எல்லையில் மறைந்தது. இரண்டாம் நந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் கி.பி 732 - 769களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார். கி.பி 731 பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன் சந்ததியில்லாமல் இறந்துவிட, எதிரிகளின் கைகளின் பல்லவதேசம் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் (தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம்) சென்றனர். அங்கே சென்லா அரசராக ஆட்சி செய்து வந்த சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் வழிவந்த கடவேச ஹரி வர்மாவின் நான்கு இளவரசர்களில் பல்லவதேசம் வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த பல்லவ மன்னன் நந்திவர்மனை அழைத்து வந்து பதவியேற்கச் செய்தனர். பட்டத்திற்கு வரும் பொழுது நந்திவர்மனுக்கு 12 வயது தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன. பரமேஸ்வரவர்மன் மற்றும் ராஜசிம்மனால் பலமாக்கப்பட்டிருந்த பல்லவ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அந்தக் காலத்தில் தென்னிந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் பல்லவ வம்சத்தை சந்ததியில்லாமல் ஒழிக்க எண்ணி பல்லவநாட்டின் மீது படையெடுத்தார்கள். அப்பொழுது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது பதின்மூன்று. இந்தப் போரில் முதல் முறையாக சிம்மவிஷ்ணு வழிவந்த பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், பல்லவர் படைகளின் பலத்தால் ஆட்சிப் பகுதியில் எந்தவிதமான இழப்பும் இல்லாமல் பல்லவநாடு மீண்டது. இந்தக் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள், பெரும்பாலும் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி அமைதியாக இருந்ததாகவே தெரிவிக்கின்றன. இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் எதிரிகளான பாண்டியர்கள் இம்மன்னரிடம் தோல்வியுற்றனர். தற்போதைய நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயம் இம்மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இம்மன்னனின் ஆட்சி பலமாக நிறுவப்பட்டிருந்தது உறுதியாகிறது. இம்மன்னர் கி.பி 769 ஆண்டு மறைந்தார். திருமங்கை ஆழ்வார் இவரது காலத்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதலாம் பரமேஸ்வரவர்மன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 - 685) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவர். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றார். இம்மன்னரின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிறுவியிருந்தார். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தார். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில். "பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றூரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றூரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுவர க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும். இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தார். கடுக்கரை பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் தம்பிரான் கோவில் உட்டுத் திருவிழா இவ்வூரில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இவ்வூரின் முக்கிய தொழிலாக விவசாயமும் வைக்கோல் கட்டும் தொழிலும் உள்ளது நெல், வாழை, உளுந்து, தென்னை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை இங்கு பயிரிடப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் (காட்டுப்புதூர்) அமைந்துள்ள நீர் வீழ்ச்சி உலக்கை அருவி ஆகும். இந் நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். மேலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன. இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சியையும் செய்வது போலவும் ஆகும். சிங்கப்பூர் பிளையர் சிங்கப்பூர் பிளையர் ("Singapore Flyer", சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும். இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும். இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும். அலெக்சாண்டர் பப்போவ் அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ் ("Alexander Stepanovich Popov", ரஷ்ய மொழி: "Александр Степанович Попов", – ), ரஷ்யாவின் இயற்பியலாளர் ஆவார். இவரே மின்காந்த வானொலி அலைகளை முதன் முதலில் காட்சிப்படுத்தினார், எனினும் இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் கோரவில்லை. 1539 1539 (MDXXXIX) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். சீனமொழிக் கல்வி உலகில் அதிகமான மக்களால் (1.3 பில்லியனுக்கு மேல்) தாய்மொழியாக எழுதப்படும் மொழி சீன மொழி ஆகும் சீனாவின் நீண்ட தனித்துவமான பண்பாடும், அதன் இன்றைய பொருளாதார எழுச்சியும் சீன மொழியை உலக அரங்கில் இன்றியமையாததாக ஆக்கி இருக்கிறது. 2010ல் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் கூடுதலான வெளி நாட்டினர் சீன மொழியைக் கற்பர் என Chinese National Office for Teaching Chinese as a Foreign Language தெரிவித்துள்ளது . சீன மொழியை கற்க உதவும் வகையில் சீன அரசு உலகெங்கும் கன்பூசியஸ் நிலையங்களை உருவாக்கி வருகிறது. வரைபலகை வரைபலகை என்பது பொதுவாகத் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவதற்கான ஒரு பலகை ஆகும். பல்வேறு அளவுகளிலுள்ள வரை தாள்களைப் பொருத்தி வரைவதற்கு ஏற்ற வகையில் வரைபலகைகளும் பல்வேறு அளவுகளில் உள்ளன. கணினி உதவு வரைதல் முறைமை பரவலாகப் புழக்கத்துக்கு வருமுன் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவோர்க்கான முக்கியமான பொருளாக இது இருந்துவந்தது. இப்பொழுது பல இடங்களில் வரைபலகைகளின் இடங்களைக் கணினிகள் எடுத்துக்கொண்டு விட்டன. ஒரு எளிமையான வரைபலகை பலகையையும், கிடையான இணைகோடுகளை வரைவதற்கான T-மட்டையையும் உள்ளடக்கியதாகும். அமெரிக்கக் கால்பந்தாட்டம் அமெரிக்கக் கால்பந்தாட்டம் ("American Football") உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் என். எஃப். எல். உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர ஜப்பான், மெக்சிகோ, மற்றும் ஐரோப்பாவில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. அமெரிக்கக் காற்பந்தாட்டமும் ரக்பியும் ஐக்கிய இராச்சியத்தில் 19ம் நூற்றாண்டில் இருந்த விளையாட்டுகளிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டுகளின் சட்டங்களை வால்ட்டர் கேம்ப் மாற்றி அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை படைத்தார். வால்ட்டர் கேம்ப் இன்று "அமெரிக்கக் காற்பந்தாட்டத்தின் தந்தையார்" என்று அழைக்கப்பட்டவர். அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாடி இந்த விளையாட்டு புகழுக்கு வந்தது. இன்று வரை கல்லூரி காற்பந்தாட்டம் அமெரிக்காவில் மிக விரும்பப்பட்ட விளையாடுகளில் ஒன்றாகும். 1922ல் என். எஃப். எல். சங்கத்தை ஆரமித்து இன்று இந்த சங்கம் அமெரிக்காவில் நாலு மிகப்பெரிய தொழிலாக விளையாட்டுச் சங்கங்களில் (Four major professional sports leagues) ஒன்று ஆகும். ஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 அடி நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன. 11 ஆட்டக்காரர்கள் ஒரு அணியில் விளையாடவேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் நாலு 15-நிமிடம் பகுதிகள் இருக்கும். பந்தை தூக்கிண்டு ஓர மண்டலத்தில் போனால் 6 புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "டச்டவுன்" (Touchdown). ஒரு டச்டவுன் பெற்றி கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் ஒரு கொசறு புள்ளி (Extra point) பெறமுடியும். டச்டவுன் செய்யாமல் கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் மூன்று புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "ஃபீல்ட் கோல்" (Field goal). ஒரு அணியின் பக்கம் பந்து இருக்கும்பொழுது ஒரு உடைமை (possession) என்று அறியப்படுவது. 10 யார்டுகள் முன் போகரத்துக்கு 4 சமயங்கள் இருக்கும்; இந்த சமயங்களை "டவுன்" (down) என்று அழைக்கப்பத்தது. 4 டவுன்களில் 10 யார்டுகள் பெறமுடியவில்லைனால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைத்து அந்த அணி உடைமை ஆரமிக்கும். பொதுவாக 3 டவுனில் 10 யார்ட் பெறமுடியவில்லைனால் 4ம் டவுனில் "பன்ட்" (Punt), அல்லது பந்து உதைப்பு செய்யுவார்; இப்படி செய்தால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைக்கிறதுக்கு பதில் எங்கே பந்து சேரரதோ அங்கே எதிர் அணி பந்து பெற்று உடைமையை ஆரமிக்கும். பந்தை முன்போகரத்துக்கு இரண்டு வழி இருக்கு: துக்கி எறிதல் (Passing) மற்றும் தூக்கிண்டு ஓடுதல் (Running or Rushing). நாலு பகுதிகள் முடிந்து நிறைய புள்ளிகளை பெற்ற அணி போட்டியை வெற்றிப்பெறும். ஃபீல்ட் கோல் உதைக்கும் ஆட்டக்காரரை உதையாளர் (Kicker) என்று அழைக்கப்படும். பன்ட் உதைக்கும் ஆட்டக்காரர் பன்ட்டர் (Punter) என்று அழைக்கப்படும். இது தவிர, புள்ளி பெறத்துக்கு பிரகு உதையாளர் எதிர் அணிக்கு பந்தை உதைக்கனும்; இந்த ஆட்டம் நடைக்கும்பொழுது உதைக்கும் அணியில் (Kicking team) அட்டக்காரர்கள் பந்து பிடிக்கும் அணியின் (Receiving team) வீரர்களை மோதபார்ப்பார். இந்த ஆகிய ஆட்டக்காரர்கள் "சிறப்பு அணி" என்றழைக்கப்படுவார். உலகில் மிகப்பெரிய, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கம் தேசிய காற்பந்தாட்டக் குழுமம் அல்லது என். எஃப். எல். ஆகும். இந்த குழுமத்தில் 30 அணிகள் விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம், அல்லது என். சி. ஏ. ஏ., கல்லூரி காற்பந்தாட்டத்தை ஒழுங்குப்படுகிறது; அமெரிக்காவில் கல்லூரி காற்பந்து தான் பல விளையாட்டுகளில் மிக விரும்பப்பட்டது ஆகும். அமெரிக்கா தவிர ஜப்பானில் எக்ஸ்-லீக் குழுமத்தில் 60 அணிகள் விளையாடுகிறார்கள். ஜெர்மனியில் ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமத்தில் 12 அணிகள் விளையாடுகிறது. கனடாவில் அமெரிக்கக் காற்பந்தாட்டப்போன்ற கனடியக் காற்பந்தாட்டம் என்று ஒரு விளையாட்டு நடைபெறுகிறது; இந்த விளையாட்டு கனடிய காற்பந்தாட்டக் குழுமத்தில் ஒழுங்கப்படுகிறது. ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர் வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன. இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது. இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர். விஜய நகர பேரரசின் கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. இங்கிருந்து அவர்கள் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற அரசுகளை நிர்வகித்தனர். பிற்காலத்தில் விஜய நகர பேரரசின் பலம் குறைந்ததை கண்டு மைசூர் மன்னர் இராஜா உடையார் விஜய நகர பேரரசை எதிர்த்து அவர்களின் ஸ்ரீரங்கப்பட்டண தளபதி இரங்கராயரை தோற்கடித்து விஜய நகர பேரரசிலிருந்து சுதந்திரம் அடைந்து மைசூர் பேரரசுக்கு அடிகோலினார். விஜய நகர பேரரசின் தளபதியை தோற்கடித்த பிறகு 1610 ல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 10 நாட்களுக்கு தசரா திருவிழாவை கொண்டாடி தன் பலத்தையும் மைசூர் அரசின் சுயசார்பையும் பறைசாற்றினார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளன. இது நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கிலப் படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ("Eelam Revolutionary Organization of Students") அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது ஈரோஸ் ("EROS") எனும் பெயரால் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதியாகும். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவே உயர்மட்டத்தீர்மானங்களை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன்(நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர். இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. இந்தக் கட்சியின் சின்னர் கலப்பை (ஏர்) ஆகும். 1979 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. 1990 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்த இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் 1990 மே மாதம் 30 நாள் வே. பாலகுமாரனினால் உத்தியோகபுர்வமாகக் கலைக்கப்பட்டது. விரும்பியவர்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய ஒரு தொகுதி உறுப்பினர்கள் வே. பாலகுமாரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கினர். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் யூ. எஸ். சி. அல்லது தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ("University of Southern California"), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகமாகும். சீனப் பண்பாடு சீனப் பண்பாடு (சீன மொழியில்: 中國文化) மிகவும் பழமையானதாகும். 5000 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் சிக்கலான நாகரிகம் ஆகும். சீனாவில் பழங்காலத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து இருந்தாலும், தற்சமயம் ஹான் சீனர்கள் எனப்படும் குடிகளே அதிகமாக உள்ளார்கள். சீனாவில் அதிகமாக பின்பற்றப்படும் மதம் கன்புசியனிசம் மற்றும் டாவோயிசம் ஆகும். தற்காலத்தில் பௌத்த மதமும் பின்பற்றப்படுகிறது. சீனாவில் பெரும்பான்மையோர் மாண்டரின் எனப்படும் சீன மொழியையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரிலும் இம்மொழி பேசப்படுகிறது. இது, ஹொங்கொங், தைவானில் பேசப்படும் மொழியில் இருந்து சற்றே மாறுபட்ட மொழியாகும். சீனர்கள் கட்டடம் கட்டுவதில் வல்லவர்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடுக்குத் தூபி போன்றவற்றை கட்டினார்கள். இங்கே காட்டப்பட்டுள்ள கட்டடம் 600 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. இது தவிர சீனப்பெருஞ்சுவர் போன்ற பெருமை வாய்ந்த சுவர்களும் கட்டினார்கள். கட்டடம் கட்டும் பொழுது, ஃபெங்சுய் என்ற சாத்திரத்தை பின்பற்றிக்கொண்டே கட்டினார்கள். இந்த ஃபெங்சுய் ஆனது, வாஸ்து சாத்திரத்தை போன்றதாகும். தந்திவர்மன் தந்திவர்மன் (கி.பி 777 - 830) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார். இவர் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவார். இவர் பாரத்துவாச கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவர் தந்திவர்மன் எனவும் " கோவிசைய தந்திவிக்கிரமவர்மன் " எனவும் கல்வெட்டுகளினல் குறிக்கப்பட்டுள்ளார். தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்னும் இளவரசியை மணந்துகொண்டவர். திருச்சிராப்பள்ளி வட்டத்தில் இன்று ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளார். இங்கு ஏரி ஒன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி எனப்பெயரும் வைத்துள்ளார். புதுக்கோட்டையில் குளத்தூர் வட்டத்தில் இக்காலம் மலையடிப்பட்டனம் என்று வழங்கும் திருவாலத்தூர் மலைக்கோயில் இவர் காலத்தில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தனால் கட்டப்பட்டது. திருச்சிக்கு வடக்கே திருவெள்ளறை எனும் ஊரிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணறும் செங்கற்பட்டு வட்டத்தில் உத்தரமல்லூரிலுள்ள வைரமேகத் தடாகமும் இவர் காலத்தே வெட்டப்பட்டவை. தந்திவர்மனுக்கு இராட்டிரகூட அரசன் கோவிந்தனும், பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் வரகுண மகாராசனும் பகைவர்களாயிருந்தனர். பெலே மலை பெலே மலை ("Mount Pelée", பிரெஞ்சு: "Montagne Pelée") என்பது கரிபியன் தீவுகளில் ஒன்றான மார்டீனிக் தீவில் உள்ள ஒரு குமுறும் எரிமலையாகும். பெலேஎரிமலை 1902ஆம் ஆண்டு மே 8 இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது. 1530கள் 1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது. தமிழ் கலப்பிசை மூலப் பாடலின் வரிகள், தாளம், காட்சியமைப்பு, இசைக்கோர்ப்பு போன்றவற்றை மாற்றி மீள இசையமைத்து வெளியிடப்படுவது கலப்பிசை எனப்படும். ஒரு பாடலை வேறு ஒரு பின்னணி இசையில் தருவது, பழைய பாடல்களை புதிய மாதிரி மாற்றியமைப்பது, வெவ்வேறு பாடல்களை கலந்து ஒரு புதுப் பாடலை ஆக்குவது, பாடல்களின் சில கூறுகளை நீக்கியோ சேர்த்தோ பல்வேறு வழிகளில் ஒரு பாடலை மாற்றியமைக்கலாம். தமிழ்ப் பாடல்கள் இவ்வாறு மூலப்பாடல்களில் இருந்து மாற்றியமைக்கப்படும் பொழுது அதை தமிழ் கலப்பிசை எனலாம். கலப்பிசை என்பது ஆங்கில சொல்லான Remix Music இணையாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. சிலர் கலப்பிசை என்பதை Fusion Music இணையாக தமிழில் குறிப்பர். Fusion Music தமிழில் இயைபிசை எனலாம். அண்மைக் காலமாக கலப்பிசைப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. திரையிசையும் கலப்பிசைப் பாடல்களை பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக Yogi B யால் கலப்பு செய்யப்பட்ட "எங்கேயும் எப்போதும்" பாடல் பொல்லாதவன் படத்தில் இடம்பெற்றது. சில வேளைகளில் கலப்பிசை காப்புரிமை மீறலாக மூலப்பாடல் ஆக்கர்களால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. ஆனால், பண்பாடே பல்வேறு கூறுகளின் ஒரு கலப்பு தான்; அந்தப் பண்பாட்டின் சூழலில் இருந்து எழும் ஆக்கங்களைப் பயன்படுத்தி மேலும் புதிய ஆக்கங்களைச் செய்வது பண்பாட்டு வளர்ச்சிக்கு அவசியம் என பலரால் முன்வைக்கப்படுகிறது. இது , , என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. தமிழில் இதை கலப்புப் பண்பாடு எனலாம். பூண்டுலோயா பூண்டுலோயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.பூண்டுலோயா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான நுவரெலியா நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. பூண்டுலோயா மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1235 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு தேயிலைப் தோட்டங்கள் முக்கிய இடத்தைப் பெருகின்றன. சிறு தோட்டப் பயிர்செயகைகளாக நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை என்பன் விளங்குகின்றன. இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் இலங்கையில் இருந்து வெளிவந்த, வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல். இரண்டு திரைப்படங்கள் 16 மில்லிமீட்டரில் தயாரிக்கப்பட்டன. அக்னி (ஏவுகணை) அக்னி ஏவுகணை (சமஸ்கிருதம்: अग्नि, ""நெருப்பு"") என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும். அக்னி நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தைத் தாக்கும் ஏவுகணையாகும். அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் முதல் ஏவுகணையான அக்னி-1, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு அக்னி ஏவுகணையின் முக்கியத்துவம் கருதி அத்திட்டத்தில் இருந்து அக்னி ஏவுகணைத் திட்டம் பிரிக்கப்பட்டு ராணுவ பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கி தனி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் உள்ள ஏவுகணைகளின் பட்டியல்: திட எரிபொருள் கொண்ட முதல் அடுக்குடன் கூடிய ஈரடுக்கு அக்னி தொழில்நுட்பம், சந்திபூரிலுள்ள இடைக்கால சோதனை தளத்தில் இருந்து 1989 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. அது 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறனுடையதாக இருந்தது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு அக்னி-1 மற்றும் அக்னி-2 ஆகிய திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்தியா முதலில், 2000 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட ஈரடுக்கு அக்னி-2 ஏவுகணையை உருவாக்கி 1999 ஆம் ஆண்டு சோதித்தது. பின்னர் அதன் ஓரடுக்கைப் பயன்படுத்தி 700 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட அக்னி-1 உருவாக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்தபோதும் வெற்றிகரகாக சோதனை செய்து சாதனை செய்தார். பன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட அக்னி-1 ஏவுகணை 700 முதல் 1250 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ஏவுகணை, ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவிலிருந்து, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி ஏவுகணைகள் ஒன்று (குறுகிய இயங்கு தூரம்) அல்லது இரண்டு (இடைத்தர இயங்கு தூரம்) அடுக்குகள் கொண்ட ஏவுகணைகளாகும். திட எரிபொருள் கொண்டு இயங்கும் இவற்றை இருப்புப்பாதை மற்றும் சாலைகளில் இருந்து நடமாடும் ஏவுதளத்தில் மூலம் ஏவ முடியும். அக்னி-1 ஏவுகணை இந்திய தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது. அக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது. அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்குவன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் "நம்பகமான தற்காப்பின்" ஒரு அங்கமாக இந்த ஏவுகணை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியா, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிரானவை அல்ல என்றும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஒரு சிறு அங்கம் மட்டுமே என்றும், சீனாவுக்கு எதிரான தற்காப்பில் அக்னி ஏவுகணை ஒரு முக்கிய அங்கம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூலோபாய படைப்பிரிவு, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அக்னி-1 சோதனைக்குப் பிறகு, பயனர் சோதனையின் ஒரு பகுதியாக அக்னி-2 ஏவுகணையை, 9 ஆகஸ்டு 2012 அன்று சோதித்தது. இந்தியா தனது 'அணு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய அக்னி-2' ஏவுகணையை ஓடிசாவிலுள்ள இராணுவ தளத்தில் இருந்து 7 ஏப்ரல் 2013 அன்று சோதித்தது. அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் மூன்றாவது ஏவுகணையான அக்னி-3, 3500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது. அக்னி-3 ஏவுகணை, தனது இரண்டு அடுக்குகளிலும் திட எரிபொருள் கொண்டு இயங்குவதாகும். ஒடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 9 சூலை 2006 அன்று அக்னி-3 சோதிக்கப்பட்டது. ஏவுகணையின் இரண்டாம் அடுக்கு பிரியத்தவறியதால் ஏவுகணை இலக்கை எட்டாமலே விழுந்தது சோதனைக்குப்பிறகு தெரியவந்தது. மீண்டும் வீலர் தீவிலிருந்து, 12 ஏப்ரல் 2007 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மே 7, 2008 அன்று மற்றொரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த மூன்றாவது சோதனையின் போது அக்னி-3 ஏவுகணையின் விரைவாக உபயோகிக்கக்கூடிய தன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்தியா இதன் மூலம் தனது எதிரிகளின் முக்கிய இடங்களைத் தாக்கும் வல்லமையைப் பெற்றது. அக்னி-3 ஏவுகணை தனது இலக்கை, 40 மீட்டர் துல்லியத்துடன் தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் அக்னி-3 ஏவுகணையே உலகின் மிகத் துல்லியமான தாக்குகணை என்றாகிறது. மிக அதிக துல்லியத்தினால் இதன் இலக்கைத் தகர்க்கும் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் குறைந்த எடையுடைய ஆயுதங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அதிக அழிவை வெற்றிகரமாக உண்டாக்க முடியும். ஆகையால் இந்தியாவால் குறைந்த அளவு அணுப்பிளவு அல்லது அணு இணைவு பொருட்களைக் கொண்டு மிக அதிக ஆற்றலுடைய அணு வெடிப்பை நிகழ்த்த முடியும். மற்ற அணு சக்தி நாடுகளால் பயன்படுத்தப்படும் தாக்குகணைகளில், அக்னி-3க்கு இணையான அழிவை உண்டாக்க மிக அதிக அளவில் (1 - 2 மெகா டன்) அணு வெடி பொருட்கள் தேவைப்படும். மேலும், அக்னி-3 ஏவுகணையால் குறைந்த எடையுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 3500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது. முன்னர் 'அக்னி-2 பிரைம்' என்றழைக்கப்பட்ட அக்னி-4, அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் நான்காவது ஏவுகணையாகும். முதன்முதலாக, 15 நவம்பர், 2011 அன்று இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் அருகிலுள்ள வீலர் தீவில் இருந்து, அக்னி-4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மீண்டும் 19 செப்டம்பர், 2012 அன்று அதன் முழு இயங்கு தூரமான 4000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதே தீவிலிருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும், ஒரு டன் எடையுடைய ஆயுதங்களை சமது செல்லும் திறனும் கொண்டது. இந்த ஏவுகணை, 3000 முதல் 4000 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 3000°C வெப்பத்தையும் தாங்கக்கூடியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மிக உயரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, நடமாடும் ஏவுதளத்திலிருந்தும் ஏவக்கூடியதாகும். அக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதனைக் கொண்டு 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும். அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது. அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 49 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 19 ஏப்ரல் 2012 அன்று ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு, சூலை 2013 இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி-6 கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தற்போது அதன் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில் உள்ளது. இது, அக்னி ஏவுகணைக் குடும்பத்திலேயே மிகவும் நவீனமான ஏவுகணையாக இருக்கும். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவக்கூடிய இந்த ஏவுகணையின் இயங்கு தூரம் 8000 முதல் 10,000 கிலோ மீட்டர் ஆகும். இந்திய விஞ்ஞானிகள், மே 2008 இல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 - 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரிய மக்கள் ஐரிய மக்கள் அல்லது ஐரிஷ் மக்கள் ("Irish people", (ஐரியம்: "Muintir na hÉireann", "na hÉireannaigh", "na Gaeil") என்போர் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் இனக்குழு ஆகும். இவர்கள் வட மேற்கு ஐரோப்பாவில் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள். ஐரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அயர்லாந்துக்கு வெளியே பொதுவாக மேற்கத்திய நாடுகளில் குறிப்பாகஆங்கிலம் பேசும் நாடுகளில் பெரும்பாலும் வசிக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் ஐரிய மக்களின் எண்ணிக்கை மட்டும் அயர்லாந்தில் வசிப்பவர்களை விட 10 மடங்காகும். முத்துராஜா முத்தரையர் (Mutharaiyar) மற்றும் முத்துராஜா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்,கரூர், திருவாரூர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும் பட்ராஜூ என புதுச்சேரியிலும் கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், வால்மீகி, கங்கைபுத்திரர், கோளி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர். கேரளா மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர். தமிழ்நாடு அரசு 22 பெப்ரவரி 1996 அன்று 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்து அரசாணை எண் 15 வெளியிட்டது. அதன்படி முத்தரையர்களில் 29 பட்டங்களைப் போடுபவர்கள் அடங்குவர். அதன்படி அந்த 29 பிரிவுகளாவன சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் என்னும் தொடர் சீனத் தலைநிலத்திலும், தாய்வானிலும் வாழும் ஹான் சீனர் அல்லாத பிற இனத்தவரைக் குறிக்கும். மக்கள் சீனக் குடியரசு அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் சிறுபான்மையினரதும் மொத்தத் தொகை 123.33 மில்லியன்கள் ஆகும். இது சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் மொத்த மக்கள்தொகையின் 9.44% ஆகும். இவ்வாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினரை விட மக்கள் சீனக் குடியரசில் மேலும் சில ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுவினர் உள்ளனர். யூத, துவான், ஒயிராத், இலி துருக்கி போன்ற இனத்தவர் இக் குழுவினருள் அடங்குவர். இவர்களைவிடச் சீனக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் வேறு குழுக்களாக உள்ளனர். பொதுவாக, தாய்வான் நாட்டு முதுகுடிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிச் சிறுபான்மையினர் அனைவரும் சீனத் தலைநிலத்திலேயே உள்ளனர். தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு, 13 தாய்வானிய முதுகுடிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. மக்கள் சீனக் குடியரசு மேற்படி 13 முதுகுடிகளையும் காவோஷான் என்னும் ஒரே குழுவாக வகைப்படுத்தியுள்ளது. ஹாங்காங், மக்காவு ஆகிய ஆட்சிப் பகுதிகள் மேற்படி இன வகைப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் இவ்விரு ஆட்சிப் பகுதிகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெரும்பாலான இனக்குழுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக உள்ளன எனினும், சில குழுக்கள் ஹான் பெரும்பான்மைக் குழுவுக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான ஹுயி சீனர், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்பது தவிர வேறு வகையில் ஹான் சீனரிடமிருந்து அவர்களைப் பிரித்து அறிவது கடினம். மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் அடங்கும் சில குழுக்கள் அவற்றுள் வேறுபட்ட பல குழுக்களை அடக்கியுள்ளதையும் காணமுடியும். மியாவோ சிறுபான்மையினருள் அடங்கும் பல்வேறு குழுக்கள் ஹுமொங்-மியென் மொழிகள், தாய்-கடாய் மொழிகள், சீன மொழிகள் போன்றவற்றின் பல்வேறு கிளைமொழிகளைப் பேசுபவர்களாக இருப்பதும், பல்வேறுபட்ட பண்பாட்டு வழக்குகளைக் கைக்கொள்பவர்களாக இருப்பதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சில இனக்குழுக்கள் முற்றிலும் வேறுபட்ட பெரிய இனக்குழுக்களுடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஹைனான் மாகாணத்தின் உத்சுல்கள், ஹுயி சிறுபான்மைக் குழுவின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, சுவாங்கிங் இனம் ஹான் பெரும்பான்மையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஹான் சீனர், சீனாவின் மக்கள்தொகையின் மிகக்கூடிய வீதத்தினராக இருந்தாலும், அவர்களுடைய மக்கள்தொகைப் பரம்பல் மிகவும் சீரற்றதாகக் காணப்படுகின்றது. மேற்குச் சீனாவின் பெரும்பகுதியில் ஹான் சீனர் சிறுபான்மையினராகவே உள்ளனர். முக்கால் (செய்யுள்) முக்கால் என்பது தமிழ்ச் செய்யுள் வகைகளில் வழங்கும் ஒரு பாவினம். இதில் நிரையசையில் முடியும் விளச்சீரால் ஆன ஆறு சீர்களும் , நேரசையில் முடியும் மாச்சீரால் ஆன் ஒரு சீருமாக ஏழுசீர்கள் கொண்ட ஒன்றே முக்கால் அடிகள் இரண்டு முறை வருமாறு அமைந்த பாவினம்.
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா
என ஒன்றே முக்கால் அடியில் ஏழு சீர்களாக, இரண்டு ஒன்றே முக்கால் அடிகளாக வருவன. தேவாரத்தில் திருமுக்கால் என்னும் பதிகத்தலைப்பில் உள்ள பாடல்கள் இவ்வகைப் பாக்களால் ஆனவை. முதல் ஒன்றே முக்கால் அடியில் உள்ள கடைசி மூன்று சீர்களை ஒற்றி இரண்டாவது ஒன்றே முக்கால் அடியின் முதல் மூன்று சீர்கள் வருவது இயல்பாய் உள்ளது. எ.கா:
சம்பந்தர் திருச்சிறுகுடி என்னும் ஊரில் பாடிய பதிகத்தின் முதல் இரு பாடல்கள் (சாதாரிப் பண்)
திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே
மேலே உள்ள இரண்டு பாடல்களில் முதல் ஒன்றே முக்கால் அடியில் உள்ள கடைசி மூன்று சீர்களில் உள்ள "படமலி யரவுடை யீரே" என்னும் அடி இரண்டாவது ஒன்றே முக்கால் அடியில் மீண்டும் முதல் மூன்று சீர்களில் ஆளப்படுவதைக் காணலாம்.
சீன மெய்யியல் சீன மெய்யியல் "(Chinese philosophy)" "நூறு சிந்தனைப் பள்ளிகள்" காலம் எனப்பட்ட போரிடு அரசுகள் காலத்தில் தோன்றியது. இக்காலம் இளவேனில், இலையுதிர் காலம் எனவும் சீன வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இக்காலம் கணிசமான அறிவு வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்பட்ட காலமாகும். சீன மெய்யியலின் பெரும்பகுதி இக்காலத்தில் தோன்றினாலும் சீன மெய்யியலின் சில கூறுகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே நிலவி வந்துள்ளன; சில கூறுகள் யி யிங் எனப்படும் மாற்றங்களின் நூலில் உள்ளன. இந்நூல் இறைமை குறித்த கி.மு 672 ஆம் ஆண்டின் பண்டைய தொகுப்பு நூலாகும். இந்த போரிடு அரசுகளின் காலத்தில் தான் சிமா தான் எனபவர் பல பெரிய சீன மெய்யியல் பள்ளிகளின் பெயரைக் குறிப்பிடுகிறார். அப்போது, கன்பூசியனியம், சட்டவியம், தாவோவியம் என்பனவற்றோடு, பின்னர் மறைந்த பலவும் தோன்றின.பின் மறைந்தவற்றில் வேளாணியம், மோகியம், சீன இயற்கையியப் பள்ளி, சீன அளவையியல் (ஏரணப்) பள்ளி ஆகியன அடங்கும்.. சாங் அரச மரபின் தொடக்கநிலைச் சிந்தனை சுழற்சிகளை அடிப்படையாக்க் கொண்டிருந்தது. இக்கருதுபாடு சாங் அரச மரபு மக்கள் தம்மைச் சூழ நடந்தநிகழ்ச்சிகளின் நோக்கீட்டால் முகிழ்த்தது; குறிப்பாக, இரவு பகல் சுழற்சி, பருவச் சுழற்சி, நிலாவின் வளர்தல் தேய்தல் சுழற்சி போன்ற இயற்கை சுழற்சிகளைப் பார்த்து உருவாகியது எனலாம். எனவே, இந்த கருத்தோட்டம் சீன வரலாறு முழுவதுமே பொருந்தி, இயற்கையின் இயல்பை எதிர்பலிக்கிறது. இது மேற்கத்திய மெய்யியலுக்கு எதிர்முரண் தன்மை கொண்டதாகும். ஆனால், மேலை மெய்யியலில் முன்னேற்றம் காலத்தைச் சார்ந்து நேரியல்பானதாகும். சாங் காலத்தில் ஊழ் (விதி) சீனப் பெருதெய்வங்களால் (கடவுள்களால்) தமக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.முன்னோர் வழிபடு நிலவியது; பரவலாகப் ஒபின்பற்ரப்பட்டது. விலங்கு பலியும் மாந்தப் பலியும் தரப்பட்டன. சாங் அரச மரபை சவு அரச மரபு வீழ்த்தியதும், புதிர அரசியல், சமய, மெய்யியல் கருத்துப்படிமம் உருவாகி, அது வானுலகக் கட்டளை என அழைக்கப்பட்டது. அரசர்கள் தம் அதிகாரநிலையைக் காத்துகொள்ள முடியாமல் போனபோது இக்கட்டளை முன்னிறுத்தப்பட்டு, சவு ஆட்சி தொடர்வதற்கான கூர்மையான நெறிப்பாடு ஆக மாறியது. இந்த காலகட்ட்த்தில், எழுத்தறிவு தோன்றி பரவலானதற்கும் சாங்தி எனும் மரபுவழி சீன சமய மீவுயர் இருப்பாளர் ந்ம்பிக்கைக்கு மாறாக முன்னோர் வழிபாடு தோன்றி பரவலானதற்கும் உலகாயதப் போக்கு கோலோச்சியதற்கும் அதாவது இம்மை வாழ்வுக்கு அழுத்தம் கூடியதற்கும் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. கன்பூசியனியம் இளவேனில், இலையுதிர் காலகட்ட்த்தில் சீன மெய்யியலாளர் கன்பூசியசுவின்(கி.மு 551–479) பயிற்றுரைகளில் இருந்து தோன்றியது. இவர் தன்னை சவு விழுமியங்களை மீட்டுரைப்பவராக கருதினார். இவரது மெய்யியல் அறவியலையும் அரசியலையும் க்ருப்பொருள்களக்க் கொண்டிருந்தது. இது தனியர், அரசு அமைப்பு ஆகியவற்ரின் அறம், சமூக உறவுகளில் நேர்மை, நீதி, மரபு பிறழாமை, உண்மையாக இருத்தல் ஆகிய விழுமியங்களை வற்புறுத்தியது. பல நூல்களின் சுருக்க மேற்கோள்கள் சடங்கையும் அதேவேளையில் இரென் எனும் மாந்தப் பண்பையும் முதன்மையாக வற்புறுத்துகின்றன. மேலும் காண்க,சீனத்தேசியம்,மாவோயியம்,சீன மார்க்சிய மெய்யியல் தனிதனி மெய்யியல் பள்ளிகள் தம்முள் வேறுபட்டாலும் சில சொற்களும் அக்கறிகளும் பொதுவாக சீன மெய்யியலின் ஒட்டுமொத்த வழக்காற்றில் அமைகின்றன. சீன மெய்யியலின் பொதுவான சொற்கள் பின்வருமாறு: சீன மெய்யியலின் பொதுவான அக்கறைகளாவன: ஸ்னூப் டாக் ஸ்னூப் டாக் (Snoop Dogg) அல்லது ஸ்னூப் டாகி டாக் (Snoop Doggy Dogg) (பிறப்பு கோர்டோசார் கேல்வின் புரோடஸ் ஜூனியர் (Cordozar Calvin Broadus, Jr.), அக்டோபர் 20, 1971) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர், மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். மேற்கு கடற்கரை ராப் இசை கலைஞர்களின் ஒரு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் முதலாம் ஆல்பம் டாகிஸ்டைல் ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த ஆல்பம்களின் ஒன்று என்று பல ராப் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் ஒரு புறநகரம் லாங் பீச் (கலிபோர்னியா)சில் பிறந்து வளந்த ஸ்னூப் டாக் 1992ல் டாக்டர் ட்ரேயின் முதலாம் ஆல்பம் த க்ரானிக்கில் சில கவிதைகளை படைத்து புகழுக்கு வந்தார். டாக்டர் ட்ரே உடன் இசை தயாரிப்பு நிறுவனம் டெத் ரோ ரெக்கர்ட்ஸ்-ஐ சேர்ந்து 1993ல் இவரின் முதலாம் ஆல்பம் டாகிஸ்டைல் வெளிவந்தது. த க்ரானிக், டாகிஸ்டைல் ஆகிய ஆல்பம்கள் ஜி-ஃபங்க் மற்றும் மேற்கு கடற்கரை ராப் இசையை சிறப்பினது. டெத் ரோ ரெக்கர்ட்ஸில் இருக்கும்பொழுது வேறு புகழ்பெற்ற ராப்பர்கள் ஐஸ் கியூப், டூபாக் ஷகூர், மற்றும் இவரின் மாமாப் பிள்ளை நேட் டாக் உடன் ராப் பாடல்களை படைத்தார். இரண்டு ஆல்பம் படைத்து 1998ல் டெத் ரோ நிறுவனத்தை விட்டு மாஸ்டர் பீயின் நோ லிமிட் ரெக்கர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தார். இங்கு மூன்று ஆல்பம்களை படைத்தார். 2003ல் இந்த நிறுவனத்தை விட்டு ஃபரெல் வில்லியம்ஸ் உடன் ஸ்டார் ட்ராக் நிறுவனத்தை சேர்ந்து இன்று வரை ஃபரெல் உடன் நாலு ஆல்பம் படைத்துள்ளார். ராப் இசை தவிர இவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். போன்ஸ், ஸ்டார்ஸ்கி & ஹச், மற்றும் சோல் ப்ளேன் ஆகிய திரைப்படங்களில் ஒரு பிரதான நடிகராக நடித்தார். இது தவிர பல திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். எம்.டி.வி.யில் ஒரு காட்சி, டாகி ஃபிசில் டெலெவிசில், இவரின் தயாரிப்பில் 2002ல் வெளிவந்தது. Porn படங்களும் இவர் தயாரிப்பு செய்துள்ளார். 2008இல் ஸ்னூப் டாக் சிங் இஸ் கிங் என்ற பாலிவுட் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார் உடன் ஒரு பாடலை தயாரித்துள்ளார். முக்கால் முக்கால் என்பது பல பொருள்களில் வழங்கும் ஒரு சொல். அவற்றுள் கீழ்க்காணும் தலைப்புகளில் தனிக் கட்டுரைகள் உண்டு. சீசெல்சு சீசெல்சு ("Seychelles", ; பிரெஞ்சு: ), அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு ("Republic of Seychelles") என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ளது. இதற்கு தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன. கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது. ஹராரே ஹராரே சிம்பாப்வேயின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1982 வரை "சாலிஸ்பரி" என்றழைக்கப்பட்டது. சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல் சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல், சீனா என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளில் வாழும் இனக்குழுக்களை உள்ளடக்குகின்றது. ஹான் சீனர்களே சீனாவின் மிகப் பெரிய இனக் குழுவினராகும். இவர்கள் சீனாவில் மொத்த மக்கள்தொகையின் 91.5% த்தினராக இருக்கின்றனர். இது ஏறத்தாழ 1.2 பில்லியன்கள் ஆகும். இவர்கள் தவிர சீனாவில் அரசினால் தேசிய இனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 55 இனக் குழுக்கள் உள்ளன. இவர்கள் தொகை ஏறத்தாழ 105 மில்லியன்கள் ஆகும். இச் சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பாலும் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். சில குழுக்கள் நாட்டின் நடுவிலுள்ள உட் பகுதிகளிலும் வாழ்கின்றனர். முக்கியமான சிறுபான்மை இனக்குழுக்களாவன: சுவாங் (16.1 மில்லியன்), மஞ்சு (10.6 மில்லியன்), ஹுயி (9.8 மில்லியன்), மியாவோ (8.9 மியாவோ), உய்குர் (8.3 மில்லியன்), துஜியா (8 மில்லியன்), யி (7.7 மில்லியன்), மங்கோலியர் (5.8 மில்லியன்), திபேத்தியர் (5.4 மில்லியன்), புயேயி (2.9 மில்லியன்), தோங் (2.9 மில்லியன்), யாவோ (2.6 மில்லியன்), கொரியர் (1.9 மில்லியன்), பாயி (1.8 மில்லியன்), ஹானி (1.4 மில்லியன்), கசாக் (1.2 மில்லியன்), லி (1.2 மில்லியன்), டாய் (1.1 மில்லியன்). மக்கள்தொகைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.. இது தாய்வானிய முதுகுடிகளின் பட்டியலாகும். மக்கள் சீனக் குடியரசு இவர்கள் அனைவரையும் காவோஷான் என்னும் பெயரில் ஒரே இனக்குழுவாக வகைப்படுத்தியுள்ளது. (高山族 : Gāoshān Zú). தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு இவற்றுள் 13 குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இக்குழுக்கள் நட்சத்திரக் குறி மூலம் காட்டப்பட்டுள்ளன. இது மக்கள் சீன அரசால் அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுக்களின் பட்டியல் ஆகும். ஹாங்காங், மக்காவு என்பன, மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் ஆகும். ஹாங்காங், மக்காவு பகுதிகளின் அரசுகள் மக்கள் சீனக் குடியரசின் இன வகைப்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மேற்குறிப்பிட்ட வகைப்பாடு ஹாங்காங், மக்காவு பகுதிகளிலுள்ள இனக்குழுக்களைக் கவனத்திற்கு எடுக்கவும் இல்லை. இதனால் அப் பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரான பிலிப்பினோக்கள், இந்தோனீசியர், ஐரோப்பியர், தெற்காசியர், போத்துக்கீசர், மாக்கானியர்கள் (சீன, போத்துக்கீசக் கலப்பு இனத்தவர்) ஆகியோர் மக்கள் சீனாவின் பட்டியலில் இடம்பெறவில்லை. கராச்சி கராச்சி (; ; ALA-LC: , ) பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும், சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் இரண்டாவது மிகுதியான மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் நகர மக்கள்தொகை தரவரிசையில், இது உலகில் 10 வது மிகப்பெரிய நகரமாகும். இது ஒரு உலகளாவிய நகரமாக (குலோபல் சிட்டி) கருதப்படுகிறது. 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான தொழில் நகராகவும், வணிக தலைநகரமாகவும் உள்ளது. கராச்சி பாக்கிஸ்தானின் பெரிய பல்வள இயைபு நகரமும் ஆகும். அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள கராச்சி ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது, பாகிஸ்தானின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களான, கராச்சி துறைமுகமும், பிங் காசிம் துறைமுகத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் பரபரப்பான வானூர்தி நிலையமாகுமான ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே உள்ளது. கராச்சியின் சுற்றுப்புறங்களில் மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தாலும், இது "கோலாச்சி" என்ற கிராமமாக 1729 ஆம் ஆண்டில் இந்த நகரம் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்பானது, பிரித்தானிய காலனித்துவவாதிகளின் வருகையைக்குப் பின்னர் பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. பிரித்தானியர் இந்த நகரத்தை ஒரு முக்கிய துறைமுகமாக மாற்றியமைப்பதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் விரிவான தொடர்வண்டி வலைப்பின்னலுடன் இணைத்தனர். இந்தியப் பிரிவினை காலக்கட்டத்தில், சிந்து மாகாணத்தில் 400,000 மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமாக ஆனது. பாக்கிஸ்தானின் சுதந்திரத்தைத் தொடர்ந்த்து உடனடியாக, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடியேறிகளின் வருகையுடன் நகரின் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்தது, 1950 கள் மற்றும் 1960 களில் இந்திய முஸ்லீம் குடியேறிகளின் முதன்மை இலக்காக கராச்சி இருந்தது.  பாக்கித்தானின் விடுதலைக்குப் பின் இந்த நகரம் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, பாக்கிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து இடம்பெயர்பவர்களை இது பெருமளவில் ஈர்த்தது. கராச்சி பாகிஸ்தானின் மிகவும் மதச்சார்பற்ற மற்றும் சமூக தாராளவாத நகரங்களில் ஒன்றாகும்.   இது பாக்கிஸ்தானில் மொழியியலில், இனவியலில், சமயவியலில் என பல்வேறு வகைகளில் மிகவும் மாறுபட்ட நகரமாகும். 15 மற்றும் 23.5 மில்லியன் மக்களுக்கு இடைப்பட்ட மக்கள் தொகை கொண்ட பல்வள இயைபு பிராந்தியத்தில்,   முஸ்லீம் உலகில் கராச்சி மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகிறது, உலகின் 7 வது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பாகவும் இது உள்ளது. கராச்சி உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.   மேலும் பாக்கிஸ்தானின் ஒவ்வொரு இன குழுவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்கள் கிட்டத்தட்ட உள்ளன.   கராச்சியில் 2 மில்லியனுக்கும் அதிகமான வங்கதேச குடியேறியவர்கள், 1 மில்லியன் ஆப்கானிய அகதிகள், மியான்மர் நாட்டிலிருந்து வந்த 400,000 ரோகிஞ்சா மக்கள் உள்ளனர். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள். கராச்சி இப்போது பாகிஸ்தானின் முதன்மை தொழில் மற்றும் பொருளாதார மையமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குள், இதன் முறையான பொருளாதாரம் 113 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக மதிப்பிடப்படுகிறது. கராச்சி பாகிஸ்தானின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அளிக்கிறது, மேலும் பாக்கிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்களிக்கிறது. பாக்கிஸ்தானிய தொழில்துறை உற்பத்தியில் கராச்சியில் இருந்து ஏறத்தாழ 30% நடக்கிறது, கராச்சியின் துறைமுகங்கள் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95% ஐ கையள்கின்றன. பாகிஸ்தானில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் 90% கராச்சியை தலைமையிடமாக கொண்டு உள்ளன. கராச்சி தொழிலாளர்களில் 70% வரை அமைப்பு சாரா தொழிலாளர்கள்,   இது பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. செப்படம்பர் 12, 2012 அன்று கராச்சி நகரின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர். இது மேலும் அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இரியோ டி செனீரோ ரியோ டி ஜெனீரோ (போர்த்துக்கீசிசம்: Rio de Janeiro, அல்லது "தை மாதத்தின் ஆறு") பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும். நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள். பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது. ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது. 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின. ரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது. ரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும். 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 பேர் வசிக்கின்றனர். ரியோ டி ஜெனீரோவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் இந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும். இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது. இந்நகரில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன. இந்நகரத்தில், புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது. மேலும் பேருந்துச் சேவையும் உள்ளது. இந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர் 1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர். ஹான் சீனர் ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன. சீன அரசியல் வரலாற்றுக் காலக்கோடு இந்தக் காலக்கோடு முற்றுப்பெறவில்லை. விடப்பட்ட தகவல்களை நீங்களும் சேர்க்கலாம். இந்த தகவல்கள் அனேகமாக ஆங்கிலம் மூலமே பெறப்பட்டதால் இதில் மேற்குலக சார்பு இருக்கலாம். சுவாங் இனக்குழு சுவாங் இனக்குழு தென் சீனாவிலுள்ள குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் வாழும் ஒரு இனக்குழுவாகும். இக்குழு மக்கள் சீனக் குடியரசினால் அங்கீகரிக்கப்பட்ட 55 சிறுபான்மை இனக்குழுக்களுள் ஒன்று ஆகும். ஏறத்தாழ 18 மில்லியன்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள மக்கள்தொகையைக் கொண்டுள்ள இக்குழுவினர், சீனாவில் ஹான் சீனருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட இனக்குழுவாகவும், மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழுவாகவும் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலேயே வாழ்ந்தாலும், இவர்கள் யுன்னான், குவாங்டோங், குயிசோவு, ஹுனான் ஆகிய மாகாணங்களிலும் குறைந்த அளவில் வாழ்கின்றனர். மஞ்சு இனக்குழு மஞ்சு இனக்குழுவினர், இன்றைய வடகிழக்குச் சீனாவான மஞ்சூரியாவில் இருந்து வந்த ஒரு துங்குசிக் மக்களாவர். 17ஆம் நூற்றாண்டில் இவர்களின் எழுச்சியின் போது இவர்கள் மிங் வம்சத்தைக் கைப்பற்றி, கிங் வம்சத்தை உருவாக்கினர். இவ் வம்சம், அது ஒரு குடியரசினால் 1911 ஆம் ஆண்டில் அகற்றப்படும்வரை இருந்து வந்தது. மேடிசன் சதுக்கத் தோட்டம் மேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: "Madison Square Garden"), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் "உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது. மாவலித்துறை மாவலித்துறை அல்லது மாவிலித்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவில் உள்ள ஒரு படகுத் துறைமுகம் ஆகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ். குடாநாட்டிற்கும் கடல் மூலம் பிரயாணம் செய்யப்படும் முக்கிய துறைமுகமாகவும் விளங்குகிறது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டது. 'மா' என்ற சொல்லுக்கு குதிரை என்ற அர்த்தம் உள்ளது. எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பர். ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் குதிரைகளை இத்துறையூடாக இறக்கி ஏற்றினார்கள். ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்தில் உள்ள வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டது போல் அமைவு பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச் சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது. இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இரவில் தொடர்ந்து ஒளியை வீசிய வண்ணம் அமைவுபெற்று விளங்குகின்றது. சிப்பாய் சிப்பாய் ("sepoy", பாரசீக மொழி: سپاهی "சிப்பாஹி" "போர் வீரன்") என்பது மேற்கத்தைய (பொதுவாக பிரித்தானியாவின் பிடியில் இருந்த இந்தியாவின் உள்ளூர் போர்வீரர்களைக் குறிக்கும். குறிப்பாக, பிரித்தானிய இந்திய இராணுவம், மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்றவற்றில் பணி புரிந்த உள்ளூர் போர் வீரர்கள் சிப்பாய்கள் என அழைக்கப்பட்டனர். ஆயினும் தற்போதும் இந்திய, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய இராணுவ மட்டத்தில் இச்சொல் உப்யோகிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக 1806 இல் இடம்பெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி, மற்றும் 1857 இல் இடம்பெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகியவற்றில் இவர்களின் பங்கு கணிசமானது. அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006 அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006 என்பது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு ஜிம் பிறவுண் ("Fr. Jim Brown") மற்றும் அவரது உதவியாளரும் ஆகஸ்ட் 20, 2006 முதல் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் காணாமல் போன நிகழ்வைக் குறிக்கும். அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறெளன் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிரௌன். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். பலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார். அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியது. அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்தார். சீனச் சமையல் சீனச் சமையல், பல நூற்றாண்டுகளாக சீனாவிலும் சீனர் சென்ற இடமெங்கும் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இன்று உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் சீன உணவும் ஒன்று. சீனா ஒரு பெரிய நாடு ஆகும். வெவ்வேறு நிலப்பரப்புகளில் தனித்துவமான உணவு வழக்கங்கள் விருத்தி பெற்றன. இன்று இவற்றை எட்டு பெரிய சமையல் மரபுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையானைவை Anhui, Cantonese, Fujian, Hunan, Jiangsu, Shandong, சச்சுவான், and Zhejiang ஆகும். இவை தவிர பல்வேறு வேற வகைகளும் உண்டு. சீனர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த போது சமையல் துறையிலேயே அவர்கள் இலகுவாக தொழில்வாய்ப்புக்கள் பெறக்கூடியதாக இருந்தது. இதில் மூலமே சீன உணவுகள் மேற்குநாடுகளில் ஒரு இன்றியமையாத இடம் பிடித்துக்கொண்டன. சீன சமையல் உணவு சிரமாக பெறப்படும் ஒரு சூழலில் வளர்ந்தது. இதனால் எல்லாவித உணவுப் பொருட்களையும் சிறப்பாக பயன்படுத்துவதில் சீனர்கள் தேர்வு பெற்றனர். இதைச் சுட்ட சீனாவில் ஒரு பழமொழி உண்டு. கால்கள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் நாற்காலிகளைத் தவிர, இறகுகள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் வானூர்திகளைத் தவிர. அதற்கமைய மீன், கோழி, மாடு மட்டுமல்லாமல் பாம்பு, நாய், தவளை, பல்வேரு பூச்சிகள் என மனிதரைத் தவிர எல்லாவித உயிரனங்களையும் ருசியுடன் சமைக்க சீன சமையல் வழி சொல்கிறது. சீனச் சமையலில் தோன்றிய சூழலைப் பொறுத்து அதன் உணவு வகைகளில் சில பண்டங்கள் கூடுதலாக அல்லது சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றன. அவையே கீழே குறிக்கப்படும்.. இவற்றை இந்திய ஆறு சுவைகளுடன் ஒப்பிடலாம்: இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு. மேற்குலகள் நான்கு சுவைகலைக் குறிப்பிடுகின்றன. ஸ்பென்சர் பேர்சிவல் ஸ்பென்சர் பேர்சிவல் ("Spencer Perceval", நவம்பர் 1, 1762 – மே 11, 1812) பிரித்தானியாவின் அரசியல்வாதியும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே. இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் ("Chancellor of the Exchequer") மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார். இவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான். 1812 1812 (MDCCCXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது. இரட்டைத்திமில் ஒட்டகம் இரட்டைத்திமில் ஒட்டகம் ("Camelus bactrianus") என்பது இரட்டைத் திமில் கொண்ட, பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த ஒட்டகம் ஆகும். இவ் ஒட்டகங்கள் ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்புகளைக் கொண்டுள்ளன. இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் காணப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 1.4 மில்லியன் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் உலகில் வாழ்கின்றன. இவை வளர்ப்பு வகை ஒட்டகங்கள். ஆனால் 2002 அக்டோபர் மாதத்தில், வட மேற்கு சீன-மங்கோலியாப் பகுதியில் வளர்ப்புக்கு உட்படுத்தப்படாத இயற்கைசூழலில் வாழும் இரட்டைத்திமில் ஒட்டகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் இன்று உலகில் ஏறத்தாழ 950 இருக்கலாம் என்றும், இந்த இயற்கைவாழ் வகை முற்றாக அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைத்திமில் ஒட்டகங்கள் ஏறத்தாழ 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவை. திமில்கள் மட்டுமே 20 செ.மீ உயரம் உடையவை. ஆண் ஒட்டகங்கள் 400 கிலோ கிராம் முதல் 600 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் ஒட்டகங்கள் ஏறத்தாழ 350 கிலோ கிராம் முதல் 500 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இரட்டைத்திமில் ஒட்டகங்களுக்கு அதிகமாக முடி (உடல்மயிர்) இருக்கும். இவற்றின் மூக்குத் துளைகளை இறுக்கி மூடிக்கொள்ளும் வசதி கொண்டவை. மணல் வீச்சில் இருந்து காத்துக்கொள்ள தடிப்பான கண்ணிமைகளும் உள்ளன. இந்த ஒட்டகங்கள் நடக்கும் பொழுது இடப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்துப் பின்னர் வலப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்து நடக்கின்றன. இப்படி இடக்கால்களும் பின்னர் வலக்கால்களும் நகர்த்தி நடத்தலுக்கு குதிரை நடைக் கலைச்சொல்போலவே "பண்" அல்லது "போக்கு" என்று பெயர். இரட்டைத்திமில் ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வல்லது . சிறுதொலைவு ஓட்டத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் விரைவில் ஓட வல்லது. இவ்விலங்கின் இனப்பெருக்கம் பின்பனிக் காலத்தில் நடக்கிறது. ஆண் ஒட்டகங்கள் தம்முடைய ஐந்து முதல் ஆறு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. பெண் ஒட்டகங்கள் மூன்று முதல் நான்கு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. இனப்பெருக்கப் பருவத்தின்போது ஒரு குழுவில் உள்ள ஆண்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஒட்டகம் மற்ற ஆண் ஒட்டகங்களைக் கடித்தோ அவற்றின் மேல் அமர்ந்து காட்டியோ தன் வலிமையைப் பறைசாற்றும். இப்படி பெண் ஒட்டகத்தைக் கவர்ந்து பின் உறவு கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு ஆண் ஒட்டகம் பல பெண் ஒட்டகங்களுடன் உறவு கொள்ளும். இவ்விலங்கின் சூல்கொள்ளும் காலம் பதிமூன்று மாதங்களாகும். ஒட்டகக் கன்று பிறந்த சில மணி நேரத்தில் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். ஒட்டகக் கன்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தன் தாயுடன் வாழும். இரட்டைத்திமில் ஒட்டகம் பகற்பொழுதில் உற்சாகத்துடன் இரை தேடும். இவை தனியாகவோ 30 விலங்குகள் வரை கொண்ட குழுக்களாகவோ காணப்படும். இவ்விலங்கு ஒரு தாவரவுண்ணி ஆகும். எவ்வகையான கடினமான முட்களையும் உண்ணக்கூடிய தன்மையை இவ்விலங்கின் வாய்ப் பகுதிகள் பெற்றுள்ளன. இவை உண்ணும்பொழுது உணவைப் பகுதியாக மென்றுவிட்டு உணவுப் பையில் சேகரித்துக்கொண்டு பின்பு ஓய்வு நேரத்தில் அசை போடும். இரட்டைத்திமில் ஒட்டகங்களில் தனித்த ஒரு சில உள்ளினங்கள் (சிற்றினிங்கள்) இருப்பதாக நம்ப இடம் உண்டு. இந்த ஒட்டகங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் வாழும் வகைகளாகக் கொள்ள இடம் உள்ளது. இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் கோபி பாலை நிலத்தில் "காழ்சுன் கோபி" (Gashun Gobi) என்னும் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இவை வளர்ப்பு இரட்டைத் திமில் ஒட்டகங்களில் இருந்து பழக்க வழக்கங்களிலும், மரபணு தொடரமைப்பு முறைகளிலும் மாறுபட்டது. ஆனால் இம்மாறுபாடுகளின் சிறப்புத் தன்மையை இன்னும் நிறுவவில்லை. மரபணுக் குறிப்புத்தொடரில், 3% வேறுபாடு உள்ளதாக கூறப்படுகின்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இயற்கைவாழ் விலங்குகளின் தரவில் இருந்து பெற்றதால், இவை உறுதியான முடிவுகள் அல்ல. கனடிய ஆய்வாளர் வில்லியம் சோம்மர்சு (William Sommers) என்பவர், இயற்கைவாழ் ஒட்டகங்கள் உப்புநீரை குடிக்கக்கூடியவை என்று கண்டு கூறியுள்ளார். வளர்ப்பு ஒட்டகங்கள் உப்புநீரைக் குடிக்க மாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. உப்புநீரைக் குடித்தாலும், அது இவ்விலங்குகளுக்குப் பயன்படுகின்றதா என்பது நிறுவப்படவில்லை. படிவளர்ச்சியில் சிறப்பான மாறுபாடு கொண்ட, அதே நேரத்தில் உலகளாவிய வகையில் அழிவுறும் நிலையில் உள்ள விலங்குகள் என்னும் பட்டியலில் (“EDGE”), 8 ஆவதாக உள்ளது இந்த இரட்டைத்திமில் ஒட்டகம். குறிப்பாக இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகம் அழிவுறும் தருவாயில் உள்ளது. கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை ("The Story of the Weeping Camel") என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான மங்கோலிய ஆவணப்படம். 2004 ஆம் ஆண்டு உலகெங்கும் வெளியானது. இப்படத்தை "பயம்பசுரென் தவா" (Byambasuren Davaa), லூயிகி 'வலோர்னி ( Luigi Falorni) சேர்ந்து எழுதி இயக்கினர். கோபி பாலைநிலத்தில் நாடோடிகளாக வாழும் மங்கோலிய மக்களில் ஒரு குடும்பம் எப்படி ஓர் இரட்டைத்திமில் ஒட்டகக் கன்றின் உயிரைக் காக்கின்றார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். இப்படம் 77 ஆவது ஆஸ்கார் திரைப்பட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. கன்று ஈனும் பொழுது மிகவும் அல்லல் பட்டு ஈன்ற தாய் ஒட்டகம், தன் கன்றுக்குப் பாலூட்ட மறுக்கிறது. குட்டியும் தான் ஒதுக்கப்பட்ட துன்பத்தில், மக்கள் கறந்து கொடுத்த பாலையும் உண்ணாமல் பிடிவாதம் பிடிக்கிறது. அந்த மங்கோலியக் குடும்பம் எவ்வளவு முயன்றாலும் ஒட்டகம் தொடர்ந்து பாலூட்ட மறுக்கிறது. இது போன்று மறுக்கும் ஒட்டகங்களின் மனதை மாற்ற "ஹூஸ்" (Hoos) என்றழைக்கப்படும் ஒரு பௌத்த சமயச் சடங்கு உண்டு. இந்தச் சடங்கில் ஒருவர் வயலின் போன்ற கருவி கொண்டு இசைக்க வேண்டும். அதே ஊரில் அத்தகைய கலைஞர் இல்லாததால், அக்குடும்பச் சிறுவர்கள் இருவர் வெகு தொலவு சென்று பக்கத்து ஊரில் இசைக்கலைஞரை அழைத்து வருகின்றனர்.புத்த சமயச் சடங்கு ஒன்று செய்து, அந்த நரம்பிசைப் பின்னணியோடு, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, ஒட்டகத்தின் கழுத்தை மென்மையாக வருடிக்கொண்டே, மிக இனிய குரலில் இசைப்பாட்டு பாடுகிறார். ஒட்டகத்தின் கண்ணில் இருந்து நீர் வடிய வடிய, ஒட்டகம் தன் உள்ளம் மாறி பாலூட்டத் தொடங்குகிறது. இக்காட்சி உள்ளத்தை உருக்கி வியப்பூட்டும் ஒன்று. நேஷனல் ஜியோகிரா'விக் நிறுவனத்தின் தளத்தில் இத் திரைப்படம் பற்றிய செய்தி கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம். இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் . கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார். மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்களில் ஒன்று நைதரசன் ஆக்சைடு நைதரசன் ஆக்சைடு ("Nitrogen Oxide") அல்லது நாக்சு (NOx) என்பது பொதுவாக நைட்ரசனும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் நைட்ரசன் ஆக்சைடு சேர்மங்களின் சுருக்கப் பெயராகும். குறிப்பாக ஒரு நைட்ரசன் மூலக்கூறும் ஒன்றோ இரண்டோ ஆக்சிசன் மூலக்கூறும் சேர்ந்து உருவாகும் நைட்ரிக் ஆக்சைடு (NO) அல்லது நைட்ரசன் டை-ஆக்சைடு (NO) என்னும் வேதிச்சேர்மங்களே நாக்சு என்று வழங்கப்பெறும். இவை எரிப்புச் செலுத்தங்களில் (combustion processes), குறிப்பாக உயர்வெப்ப எரிப்புக்களின் போது உருவாகும் தன்மையுடையவை. இயல்சூழ் (ambient) வெப்ப நிலைகளில் காற்றிலே கலந்திருக்கும் நைட்ரசனும் ஆக்சிசனும் ஒன்றோடு ஒன்று பிணைவதில்லை. ஆனால் தான்நகர்ச்சி வண்டிகளில் உள்ளெரிப்பு எந்திரங்களில் காற்றும் எரிபொருளும் கலந்து எரியும்போது மிக அதிக வெப்பம் உருவாகி, அந்த உயர்வெப்ப நிலைகளில் நைட்ரசனும் ஆக்சிசனும் ஒன்றோடு ஒன்று வேதிவினையாற்றி இணைந்து பலவித நைட்ரசன் ஆக்சைடு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதனால், வாகன நெரிசல் அதிகம் இருக்கும் பெருநகர்ப்புறங்களில் காற்றில் இந்த நாக்சுச் சேர்மங்களின் கலப்பு அதிகமாக இருக்கும். நாக்சு மூலக்கூறுகளும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளும் சூரிய ஒளியில் வேதிவினையாற்றும்போது சூழல் மாசுபடுகிறது. குறிப்பாக வேனிற்காலங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாகி, ஆசுத்துமா உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், மூச்சுத் தொந்தரவுகளும், நுரையீரல் பாதிப்புகளும் ஏற்பட முதன்மைக் காரணிகளாகின்றன. காற்றிலே கலந்திருக்கும் ஈரப்பதத்தினோடு வேதிவினையாற்றி அமில மழைக்கும் இவை காரணமாகின்றன. கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் இந்த வேதி வினையைக் குறிக்கலாம். 2NO + HO → HNO + HNO நாக்சும், அதன் வேதிவினைச் சேர்மங்களும் காற்றிலே பரவக் கூடியவை என்பதால், அவை உருவாகும் இடங்களில் மட்டுமின்றி அவற்றை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் மேற்கண்ட பிரச்சினைகளைப் பார்க்கலாம். அதனால், நாக்சைக் குறைக்கும் முறைகளை அது உருவாகும் இடத்தில் மட்டுமின்றி, அதனை ஒட்டிய சுற்றுப் பகுதி முழுவதும் கையாள வேண்டும். NOx - How nitrogen oxides affect the way we live and breathe மைக்ரோசாப்ட் விசியோ மைக்ரோசாப்ட் விசியோ விண்டோஸ் இயங்குதளங்களில் வெக்டர் முறையில் படவரையும் ஓர் மென்பொருள் ஆகும். இது ஸ்டாண்டட் (நியம்) மற்றும் புரொபெஷனல் (தொழில்ரீதியான) பதிப்புக்களாகக் கிடைக்கின்றது. ஸ்டாண்டட் மற்றும் புரொபெஷல் ஆகிய இரண்டும் ஒரே இடைமுகத்தையே பாவிக்கின்ற பொழுதும் புரொபெஷனில் கூடுதலான டெம்லேட்டுக்கள் கிடைக்கின்றன. மைக்ரோசாப்ட் விசியோ காப்ரேஷனை 2000 ஆம் ஆண்டு உள்வாங்கிக் கொண்டது. விசியோ 2007 ஆனது 30 நவம்பர் 2006 அன்று வெளிவந்தது. விசியோ ஒர் தனித்துவமான மென்பொருளாக விசியோ காப்ரேசனால் வெளிவிடப்பட்டுவந்தது. விசியோ 2000 ஐ மைக்ரோசாப்ட் உள்வாங்கி ஆபிஸ் மென்பொருளாக இணைத்துக் கொண்டபொழுதும் ஆபிஸ் மென்பொருளுடன் சேர்த்து வெளிவிடவில்லை. கடலை மிட்டாய் கடலை மிட்டாய் என்பது உடைத்த நிலக்கடலை, கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம். வட இந்தியப் பகுதிகளில் "சிக்கி" என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. இதைப்போன்ற தின்பண்டம் தென் அமெரிக்க நாடுகளிலும் உண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்றது. உடைத்த நிலக்கடலையைக் கருப்பட்டி பாகில் இட்டு தேங்காய்த் துருவல் கலந்து செய்யப்படுடுகிறது. கருப்பட்டி மிகுதியாகக் கிடைக்காத பகுதிகளில் வெல்லமிட்டும் செய்யப்படுகிறது. கட்டம் கட்டமாய் வார்த்தும் உருண்டைகளாகப் பிடித்தும் விற்கின்றனர். சிலர் மணம் கூட்டும் பொருட்டு ஏலக்காயும் சேர்க்கின்றனர். புனே அருகிலுள்ள உலோனாவாலா என்ற சுற்றுலா இடத்தில் இவ்வினிப்பு பெயர் பெற்றது. அதிகளவிலான கடலை மிட்டாய்கள் மும்பை பகுதிகளில் உற்பத்தியாகின்றன. 1656 1656 (MDCLVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. 1650கள் 1650கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1650ஆம் ஆண்டு துவங்கி 1659-இல் முடிவடைந்தது. சின்ன பேரரசு (ராப் இசைக் குழு) ஆங்கிலத்தில் Little Empires என அறியப்படும் சின்ன பேரரசு ஒரு ரொறன்ரோ ராப் இசைக் குழுவாகும். இது ஐந்து ஈழத்தமிழர்களைக் கொண்டிருக்கிறது. இந்தக் குழு ஆங்கிலத்திலேயே பெரும்பாலான பாடல்களைப் பாடினாலும், ஈழத் தமிழர் பிரச்சினையை எழுத்து சொல்கிறது. ரொறன்ரோ தமிழ் சமூகத்திலும் ஓரளவு வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. யோகி பி உடன் நட்சத்ரா யோகி பி உடன் நட்சத்ரா அல்லது யோகி பி அண்ட் நட்சத்ரா ஒரு முன்னணி தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்களின் "மடை திறந்து" புகழ் பெற்ற தமிழ் சொல்லிசைப் பாடல்களில் ஒன்று. இவர்களே தமது பாடலில் ராப் இசையை சொல்லிசை என்று எடுத்தாண்டனர். இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள். சக்ரசோனிக் சக்ரசோனிக் (Chakrasonic) ஒரு முன்னணி தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள். கிறிசான் கிறிசான் ஒரு ராப் இசைக் கலைஞர் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாட வல்லவர். இவர் இப்போது இங்கிலாந்தில் இயங்குகிறார். உலக நாகரிகங்கள் அட்டவணை கவனிக்க: இந்த் அட்டவணை சில கூற்றுக்களைப் பொதுமைப்படுத்துகிறது. இது இந்த சிக்கலான தலைப்பை புரிந்து கொள்ள மேலோட்டமான ஒரு தொடக்கம் மட்டுமே. நீங்களும் மேலும் துல்லியமான தகவல்களைச் சேரித்து மேம்படுத்தலாம். ஏகே-47 ஏகே-47 ("Ak-47", 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் ("Fixed Stock") கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் ("Metal shoulder stock") தயாரிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக ("Carbine") அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது. இதுதான் முதன் முதலில் "குறைந்த செலவில்" நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே. இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது. அரசாட்சி முறைமை ஒரு சமூகத்தின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்படும் ஒரு அதிகாரபூர்வ அமைப்பே அரசு ஆகும். அந்த அரசு அந்த சமூகத்தின் பல்வேறு வளங்களை பயன்படுத்தி நிர்வாகித்து இயன்றவரை எல்லோரின் பாதுகாப்பையும் நலங்களையும் உரிமைகளையும் பேணவதை நோக்கா கொண்டு செயற்படும். பொதுவாக எல்லா அரசகளுக்கும் இதுவே இலக்காக இருப்பினும் இதை எப்படி செய்வது என்ற கொள்கையில், அணுகுமுறையில், நடத்தையில் வேறுபாடுகள் உண்டு. அரசின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமையை தீர்மானிக்கும் முறையையும், அரசு நிர்வாகிக்கும் அல்லது செயற்படும் முறையையும் அரசியல் முறை குறிக்கிறது. பொருளாதார முறைமை பொருளாதார முறை அல்லது பொருளாதார முறைமை என்பது சமூக நிறுவனங்கள் பொருட்களையும் சேவைகளையு உற்பத்தி செய்து, பகிர்ந்து, நுகர்கிர ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுங்குமுறை ஆகும். ஒரு சமூகம் எவ்வளவு உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு அது செல்வம்மிக்கது எனலாம். செல்வம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த அவசியம் ஆகும். சூழ்நிலைகளுக்கேற்ப இருக்கும் இயற்கை வளம், மனித வளம், பண முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றை நியாமான முறையில் பயன்படுத்தி செல்வத்தைப் பொருக்குவதே பொருளாதார முறையின் நோக்கம் ஆகும். பெரிய சமயக் குழுக்கள் பெரிய சமயக் குழுக்களின் பட்டியல்: நீராவிச்சுழலி நீராவிச்சுழலி ("steam turbine") என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் சர் சார்லசு பார்சன்சு அவர்களால் 1884 இல் புனையப்பட்டது. நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு நீராவிப் பொறிகளைப் போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், மின்னாக்கிகளை இயக்கப் பொருத்தமானவை ஆகின. இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன.ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் வெப்ப இயக்கவியல் திறன் கூடுகிறது. நீராவிச் சுழலியின் முதல் வடிவமைப்பு பொம்மையை விடச் சற்றே மெல்லனதாக அமைந்தது. இது எதிர்வினை நீராவிச் சுழலி எனப்பட்டது. இது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர் ஈரோ விவரித்த நீராவிக் கருவியை ஒத்திருந்த்து எனலாம். ஆட்டோமன் எகிப்து பேரரசில் வாழ்ந்த தகி அல்-தின் விவரித்த நீராவிச் சுழலி நடைமுறையில் சுழலும் சமையல் உதவியாகப் பயன்படுவதாக அமைந்தது. இத்தாலியைச் சேர்ந்த ஜியோவன்னி பிராங்கோவும் நீராவிச் சுழலியை விவரித்துள்ளார் (1629). தாகி அல்-தின்னும் வில்கின்சுவும் விவரித்த கருவிகள் இப்போது நீராவித் தூக்கி எனப்படுகின்றன. மலாய் மக்கள் மலாய் மக்கள் ("Malays", மலாய் மொழி: "Melayu") எனப்படுவோர் மலாய் தீபகற்பத்திலும், மற்றும் சுமாத்திரா, போர்ணியோ ஆகியவற்றின் பகுதிகளிலும் வாழும் ஒரு ஆஸ்திரனேசிய இனக்குழுவாகும். மலாய் மக்கள் எனப்படும் இவர்கள் இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளில் வாழும் மலாய் இனம் எனப்படும் பெரும் இனத்திலிருந்து வேற்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். மலாய் மொழி ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். எல்செவியர் எல்செவியர் (Elsevier) உலகின் மிகப் பெரிய மருத்துவ, அறிவியல் பதிப்பகம் ஆகும். இது றீட் எல்செவியர் குழுமத்தின் ஓர் நிறுவனம் ஆகும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் இப்பதிப்பகம் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. இப்போதுள்ள எல்செவியர் நிறுவனம் 1880 இல் உருவானது. பிளக்வெல் பதிப்பகம் பிளக்வெல் (Blackwell Publishing) உலகின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்களுள் ஒன்றாகும். இது இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, டென்மார்க், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. ஒக்ஸ்போர்ட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் இணைவால் உருவான இந்த நிறுவனம் 2007 இல் யோன் வில்லி அன் சன்சால் வாங்கப்பட்டது. யோன் வில்லி அன் சன்ஸ் யோன் வில்லி அன் சன்ஸ் (John Wiley & Sons) ஓர் உலகளாவிய பதிப்பகம் ஆகும். நூல்கள், ஆய்விதழ்கள், கலைக்களஞ்சியங்களை அச்சிலும் இணையத்திலும் வெளியிடுகிறது. இது 1807 இல் சார்ள்ஸ் வில்லியால் ஐக்கிய அமெரிக்காவின் மான்காட்டனில் தொடங்கப்பட்டதாகும். 2007 இல் பிளக்வெல் நிறுவனத்தை வாங்கிக் கொண்டது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அல்லது ஆக்ஸ்போட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ("Oxford University Press") ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் ("Cambridge University Press") கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். 1584 இல் முதலாவது நூலைப் பதிப்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா போன்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் களஞ்சியங்களையும், துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. பன்மொழிப் பாடல் பல்வேறு மொழிகள் கலந்து பாடப்படும் பாடல் பன்மொழிப் பாடல் எனப்படும். தமிழர்கள் பன்மொழிச் சூழலில் வாழ்வதால் தமிழ் மொழி கலந்தும் பல பன்மொழிப் பாடல்கள் உண்டு. பன்மொழிப் பாடல்கள் பன்மொழிச் சமூகங்களுக்கிடையே நடைபெறும் ஊடாடலையும் இணக்கப்போக்கையும் சுட்டி நிற்கின்றன. போரியல் மூல உபாயம் ஒரு போரின் இறுதி வெற்றியைப் பெறத்தக்கவாறு திட்டமிட்டு படைத்துறை வளங்களைப் பயன்படுத்தலை போரியல் மூல உபாயம் குறிக்கின்றது. போர்த் தந்திரம் என்றும் குறிக்கலாம். போர்க்களத்தின் உடனடிச் சூழலுக்கேற்ப போர் உத்திகள் இலவில் மாற்றப்படலாம். ஆனால் தொலைநோக்குள்ள ஆணித்தரமான மூல உபாயம் இறுதி வெற்றிக்கு தேவை. போர் உத்தி களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திகள் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது. போர் ஏற்பாடுகள் எவை ஏலும், எப்படி ஏலும், ஏன் ஏலும், எதனால் ஏலும் என்னும் தன்மைகளை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு. போர் ஏற்பாடுகள் என்பது படையணிகளை நகர்த்தல் பேணிதல் தொடர்பான திட்டமிடலையும் நடைமுறைப்படுத்தலையும் குறிக்கிறது. போர் ஏற்பாடுகள் கவனிக்கும் கூறுகளில் பின்வருவன அடங்கும்: உத்தி போர்க் களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு அணிவகுத்து எதிரிக்கு அதிகப்படியான கேடு விளைவிக்கும் நுட்பமே போர் வியூகம் ஆகும். சுற்றிவளைத்தல், ஊடறுத்தல், தற்கொலைத்தாக்குதல்கள் போர் வியூகங்களாக கருதப்படலாம். போர் உத்திகள் என்ற கருத்துருவுடன் ஒப்பிடுகையில் களத்தில் படையணியை எப்படிப் பரப்பித் தாக்குதலை ஏதுவாக்குவது என்பதை போர் வியூகம் சிறப்பாகச் சுட்டுகிறது. மகாபாரதப் கதையில் பல்வேறு போர் வியூகங்கள் பற்றி விபரங்கள் உள்ளன. கல்விமலர் கல்விமலர் என்பது தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் கல்வித் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் 2008 மே 9 ஆம் தேதி முதல் இயங்கத்தொடங்கிய இணையத்தளம் ஆகும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்வு செய்யவும், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் உள்ள தகவல்களை வல்லுனர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் தேடித் தொகுத்துள்ளனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த இணையத்தளத்தை கல்வி ஆர்வலர் இல. ஆதிமூலம் தலைமையில், ஆறு பேர் கொண்ட நிர்வாகக்குழு இயக்கி வருகிறது. நூறு பேர் கொண்ட குழு இதற்கான தகவல்களை மூன்று மாதங்களாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடி தொகுத்துள்ளனர். கல்வித் துறையில் பல்வேறு வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவும், ஐயங்களை தீர்த்துக் கொள்ளவும் இந்த இணையத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்குத் தகுதிப்படுத்தும் படிப்புகள் பற்றியும் இத்தளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் வகையில் இத்தளம் துவக்கப்பட்டிருந்தாலும் கூட, இளங்கலைப் படித்த பின்னர் படிக்கக்கூடிய, முதுகலை, சிறப்புப் படிப்புகள், தொழில் படிப்புகள், அரிய படிப்புகளின் தொகுப்புகள் உள்ளன. கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், ஏராளமான துறைகளில் புலமைப்பரிசில் பெறுவதற்கான முறைகள், நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கு மாதிரித் தேர்வு, வினா தொகுப்புகள், வெற்றி பெறுவதற்கான வழிகாட்டல்கள், கல்வித் துறையில் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கட்டுரைகள், பெற்றோர்களுக்கான குறிப்புகள் முதலிய தகவல்கள் இத்தளத்தில் உள்ளன. கல்லூரிகளை ஒப்பிட்டு சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவும், முக்கியத் தேர்வுகளை குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டவும் இத்தளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்குக் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்தத் தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூரும் விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ். சிங்கப்பூர் வெள்ளி சிங்கப்பூர் வெள்ளி ("Singapore Dollar", சீன மொழி: 新加坡元, மலாய் மொழி: Dolar Singapura) என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும். வதனா வதனா ஒரு சிறந்த தமிழ் ராப் இசைக் கலைஞர் ஆவார். இவர் பல ராப் பாடல்களை எழுதியுள்ளார். இவரும் சஞ்சீவனும் இணைந்து பல கிறிஸ்தவ தமிழ் ராப் இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவர் நோர்வேயில் இயங்குகிறார். ஷைன் ஸ்சயின் (Shine) ஒரு ஒரு ராப் இசைக் குழுவாகும். இந்தக் குழு சுதாஸ், சகயா, சுபீஸ் ஆகிய மூன்று சகோதரகளைக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களான இவர்களின் பாடல்கள் ஈழத்து நிலைமைகளை எடுத்துரைக்கிறன. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பல பாடல்கள் அமைந்தாலும் இவர்களின் முதல் தமிழ் ஆங்கில ராப் பாடலான "உலகம் முடியும் வரை, உயர்கள் அழியும் வரை" மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் சுஜதா இந்தப் பாடலே தனக்கு மெத்த பிடித்த தமிழ் ராப் பாடல் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் நோர்வேயில் இயங்குகிறார்கள். பூம்மிரங்ஸ் பூம்ரங்ஸ் ("Boomerangx") ஒரு தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழுவின் "நல்லவர் சொல்லைப்" பாட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்கள் "நில் கவனி" (2002), "சத்ரியே சாம்ராஜ்யம்" ("2007") ஆகிய அல்பங்களை வெளியுட்டுள்ளார்கள். இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள். சைவ சிந்தாந்தம் சித்தர் மெய்யியல் ஒப்பீட்டு அட்டவணை இந்த வே. மு. பொதியவெற்பன் எழுதிய "தமிழர்சித்தர் மரபு: அத்துமீறலும் வெட்ட வெளியும்" கட்டுரையில் இருந்து பெறப்பட்டது. ஏ.பி.ஐ ஒப்படர்த்தி ஏபிஐ ஒப்படர்த்தி ("API Gravity") என்பது ஒரு பாறைநெய் நீர்மமானது நீரோடு ஒப்பிடுகையில் எவ்வளவு கனமாக அல்லது இலேசாக (நொய்ம்மையாக) இருக்கிறது என்று அளவிடும் ஒரு அளவையாகும். இது அமெரிக்கப் பெற்றோலியக் கழகத்தின் ஆங்கிலப் பெயரான "American Petroleum Institute" என்பதன் சுருக்கப் பெயரான ஏபிஐ (API) ஐ முன்னொட்டாகக் கொண்டுள்ளது. ஒரு பாறைநெய்யின் ஏபிஐ ஒப்படர்த்தி எண் பத்துக்கும் மேல் (API > 10) இருக்குமானால் அது நீரை விட இலேசாக இருக்கும்; நீரின் மேலே மிதக்கும் தன்மையுடையதாய் இருக்கும். இவ்வெண் பத்துக்கும் குறைவாக (API < 10) இருக்குமானால், இதற்குரிய பாறைநெய் நீரை விடக் கனமாக அமைந்து நீரில் கலக்கும் போது மிதக்காமல் மூழ்கும் தன்மையுடையதாய் இருக்கும். ஆக, ஏபிஐ ஒப்படர்த்தி என்பது ஒரு பாறைநெய் நீர்மத்தையும் நீரையும் அவற்றின் அடர்த்தியைக் கொண்டு ஒப்பிடும் அளவையாகும். பொதுவாக நீரினோடு ஒப்பிட அல்லாமல், பலவிதப் பாறைநெய் நீர்மங்களை ஒன்றினோடு ஒன்று ஒப்பிட இது பயன்படுத்தப் படுகிறது. ஒரு பாறைநெய் நீர்மம் இன்னொன்றின் மீது மிதக்கிறது எனில், மிதக்கும் நெய்யின் ஏபிஐ ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும். அதோடு அது குறைந்த அடர்த்தியைக் கொண்டிருக்கும். ஒரு வகையில் இது ஒப்படர்த்தி வகையைச் சேர்ந்த பண்பே. ஏபிஐ ஒப்படர்த்தி நீர் ஒப்படர்த்திக்கு நேரெதிர் உறவைக் கொண்டிருக்கும். அதாவது, நீர் ஒப்படர்த்தி அதிகமாக அதிகமாக ஒரு பொருள் கனமாக அமைவதற்கு எதிராய், ஏபிஐ ஒப்படர்த்தி அதிகமாக அதிகமாக அப்பொருள் இலேசானதாக அமையும். கணித அடிப்படையில் ஏபிஐ ஒப்படர்த்தி ஓர் எண் மட்டுமே. அதற்குப் பண்பு அலகுகள் கிடையாது. எனினும் பொதுப் பயன்பாட்டில் டிகிரி (பாகை) என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது. ஏபிஐ ஒப்படர்த்தி நீரியமானி ("hydrometer") என்னும் கருவி கொண்டு அளக்கப்படுகிறது. பெரும்பாலான நீர்மங்கள் 10இலிருந்து 70க்குள் ஏபிஐ ஈர்ப்பு கொண்டிருக்கும்படி இதன் பாகைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். ஏபிஐ ஒப்படர்த்தியைக் கணிக்கப் பாவிக்கப்படும் சூத்திரங்கள் கீழ்வருமாறு: மாறாக, பாறைநெய் நீர்மங்களின் நீர் ஒப்படர்த்தி (specific gravity) ஐக் கணிக்க: கோ. நம்மாழ்வார் கோ. நம்மாழ்வார் ("G. Nammalvar", 06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு "சுற்றுச் சூழல் சுடரொளி" விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இவர் 30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். மெக்சிக்கோ எறும்புண்ணி மெக்சிக்கோ எறும்புண்ணி அல்லது வட தமண்டுவா ("தமண்டுவா மெக்சிகானா") என்பது ஒரு எறும்புண்ணி விலங்கு. தென் அமெரிக்காவில் வழங்கும் மொழிகளின் ஒன்றான தூப்பி மொழியில்" தமண்டுவா" என்றால் எறும்புண்ணி என்று பொருள் இது மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு. கிரேக்க மொழியில் Myrme (மிர்மி) என்றால் எறும்பு, phag ('வா'க்) என்றால் உண்ணுதல். எறும்புண்ணிக் குடும்பத்தை மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்று அழைப்பர். இக்குடும்பம் பிலோசா (Pilosa) என்னும் உயிரின வகுப்பில் உள்ளது. பிலோசா என்னும் சொல் மயிருடைய (pilos= hairy) என்னும் பொருளுடையது. தற்பொழுது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள ஈரப்பதம் மிக்க வெப்பமண்டல அல்லது இடைவெப்ப மண்டலக்காடுகளில் காணப்படுகின்றது. இவ்விலங்கு பெலீசு, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, ஈக்வெடோர், எல் சால்வெடோர், கௌதமாலா, ஹாண்டுராஸ், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பெரு, வெனிசூயெலா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. தூப்பி-குவரானி மொழிகள் தூப்பி-குவார்னி () என்பது தென் அமெரிக்காவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் குவார்னி மொழியும் பழம் தூப்பி மொழியும் நன்கு அறியப்பட்ட மொழிகள். ஆங்கிலத்தில் வழங்கும் : முதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே. மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள் உலக அளவில் மிகப் பெரிய ஆறு பன்னாட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்களை மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள் என்று பொதுவாகக் குறிப்பர். இவை எந்த ஒரு அரசையும் சாராதவை. இவர்களை "எண்ணெய் அரக்கர்" (Big Oil) என்று நொசிவாகவும் குறிப்பிடுவது உண்டு. நிறுவனங்களின் பட்டியல்: தொண்ணூறுகளில் கரட்டுநெய் விலை வீழ்ச்சி அடைந்த சமயம் இந்தப் பெரிய நிறுவனங்கள் உருவாக ஆரம்பித்தன. ஏற்கனவே பெரிதாய் இருந்த பெட்ரோலியம் நிறுவனங்கள் பொருளாதார நிமித்தம் ஒன்றோடு ஒன்று இணைந்து மாபெரும் நிறுவனங்கள் ஆகின. தற்போது இந்த நிறுவனங்களுள் பெரியது எக்சான் மோபில் நிறுவனம் ஆகும். இவை ஆறும் சேர்ந்து உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 5% கொண்டிருக்கின்றன. புதைபடிவ எரிமம் புதைபடிவ எரிமங்கள் "(Fossil fuels)" இறந்து புதைந்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை நிகழ்வுகளால் புவிக்கடியில் தோன்றிய எரிமங்களாகும். இவை பண்டைய ஒளிச்சேர்க்கை ஆற்றலைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன. உயிரிகளின் அகவையும் விளையும் எரிமங்களின் ஆயுளும் பல மில்லியன் ஆண்டுகளாகும். சிலவேளைகளில் இது 650 மில்லியன் ஆண்டுகளினும் கூதலாகவும் அமையலாம். இந்தவகை எரிமங்களில் கரிமத்தின் அளவு கூடுதலாக அமையும். இவற்ரில் பாறைநெய் அல்லது கல்நெய், நிலக்கரி, இயற்கை வளிமம் ஆகியன அடங்கும். பொதுவாக இவற்றில் இருந்து பெறப்படும் கொணர்வுப் பொருள்களாக கெரோசின் புரோப்பேன் ஆகியன அடங்கும். புதைபடிவ எரிமங்களில் ஆவியாகும் பொருள்களும் ஆவியாகாத பொருள்களும் அடங்கும். ஆவியாகும் பொருள்களில் மீத்தேன் போன்ற தாழ் கரிம-நீரக விகிதம் உள்ள பொருள்களும் பாறைநெய் போன்ற நீர்மங்களும் அடங்கும். ஆவியாகாத பொருள்களில் பெரிதும் கரிமமே அடங்கியிருக்கும். இவற்றில் நிலக்கரி வகைகள் அடங்கும். நீரியக்கரிம வயல்களில் மீத்தேன் தனியாகவோ எண்ணெயுடன் கலந்தோ மீத்தேன் கிளத்திரேட்டுகளாகவோ கிடைக்கிறது. இறந்த நிலைத்திணை (தாவர) எச்சங்களில் இருந்து புதைபடிவ எரிமங்கள் முன்னவை புவி மேலோட்டில் உயர் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆட்பட்டபோது உருவாகியது எனும் கோட்பாட்டை முதலில் 1556 இல் கியார்கியசு அகிரிகோலாவும் 18 ஆம் நூற்றாண்டில் மிகயீல் இலமனசொவ்வும் வெளியிட்டனர். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தோற்றம் ("abiogenic theory") என்று வழங்கப்படும் ஒரு கோட்பாடும் உண்டு. இயற்கை வளிமம் போன்ற எளிதில் ஆவியாகும் நீரியக்கரிமங்கள் எந்தவொரு உயிரிப் பொருளோடும் தொடர்பில்லாமல் உருவானவை என்று இக்கண்ணோட்டம் கூறுகிறது. 2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான ஆற்றல் மூலங்களில் 86% புதைபடிவ எரிமங்களில் இருந்து பெறப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 6.3% நீர் மின் ஆற்றலாகவும், 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன. ஆற்றல் தகவல் ஆட்சியகம் 2007 இல் முதன்மை ஆற்றல் வாயில்களாக 36.0% பாரைநெய்யும் 27.4% நிலக்கரியும் 23.0% இயற்கை வளிமமும் அமைவதாக மதிப்பிட்டுள்ளது. எனவே மொத்த உலக முதன்மை ஆற்றல் நுகர்வில் புதைபடிவ எரிமங்கள் மட்டுமே 86.4% பங்கினதாக அமைகிறது. புதைபடிவமற்ற ஆற்றல் வாயில்களாக, 2006 இல் 8.5% அணுமின் ஆற்றலும் 6.3% நீர்மின்சாரமும் மற்ற 0.9% அளவு ஆற்றலாக புவி வெப்ப ஆற்றலும் சூரிய ஆற்றலும் கடலோத ஆற்றலும் காற்றின் ஆற்றலும் விறகு ஆற்றலும் கூள ஆற்றலும் அமைகின்றன. உலக ஆற்றல் நுகர்வு ஓராண்டுக்கு 2.3% வீதத்தில் வளர்ந்துவருகிறது. புதைபடிவ எரிமங்கள் இயற்கையில் தொடர்ந்து உருவாகினாலும் இவை புதுப்பிக்கவியலா வாயிகளாகவே கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உருவாக பலமில்லியன் ஆண்டுகள் தேவைப்படுவதாலும் அற்ந்த வளங்களின் பயன்வீதம் உருவாகும் வீத அளவை விட மிக்க் குறைவாக அமைவதாலும் எனலாம். புதைபடிவ எரிமங்கள் புதுப்பிக்க முடியாதவை. அவை உருவாகப் பல்லாயிரம் ஆண்டுக்காலம் தேவைப்படும். இந்த வளங்கள் உருவாகும் வேகத்தை விட அவற்றைப் பயன்படுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால், கால ஓட்டத்தில் இவ்வளம் குன்றி வருகிறது. பிற இயற்கைச் சூழல் சார்ந்த சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன. அதோடு பல வட்டார, உலகப் சிக்கல்களும் இந்த வளங்களைச் சார்ந்து ஏற்படுகின்றன. உலக எரிபொருள் தேவை பெருகப் பெருக, புதுப்பிக்கும் முறையிலான ஆற்றலை நோக்கிய தேடல்கள் தொடர்கின்றன. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஒரு ஆண்டில் உலக அளவில் 21.3 பில்லியன் டன்கள் கரியீராக்சைடு(கார்பன் டை-ஆக்சைடு) வளிமம் வெளியேற்றப் படுகிறது என்று கணிக்கப் பட்டுள்ளது. இயற்கைச் செலுத்தங்களால் அதில் பாதியை மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சூழலில் கரியமில வளிம அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பசுங்குடில் வளிமங்களில் ஒன்று என்பதால், புவி வெப்ப ஏற்றத்திற்கும் (global warming) இது காரணமாக அமைகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்/ஏரி அடியில் உயிரகம் கிடைக்காத நிலைமைகளில் பேரளவில் திரண்ட நிலைத்திணை, விலங்கு மிதவை உயிரிகள் உட்பட்ட உயிரிகளின் எச்சங்களின் உயிரக வளிமமற்ற சிதைவால் பாரைநெய்யும் இயற்கை வளிமமும் உருவாகின. புவியியல் கால அளவில் இந்த மட்புழுதியுடன் கலந்த கரிமப் பொருண்மம், அடர்ந்த படிவு அட்ய்க்குகளின் கீழ் புதையுண்டன. முதல் நிலையில் இவை உயர் வெப்ப, அழுத்த நிலைமைகளின் கீழ் வேதியியலாக சிதைந்து மெழுகு போன்ற கெரோஜனாக மாறியுள்ளது. இவை எண்ணெய்க் கிளிஞ்சல்களில் அமைந்துள்ளன. பின்னர் இந்த கழைவான கெரோஜென் மேலும் கூடுதல் வெப்பத்துக்கு ஆட்பட்டு நீர்மமாகவும் வளிமமாகவும் உடைந்து பிரிந்து நீரியக் கரிமங்களாக மாறியுள்ளன. இந்த உருமாற்றங்களுக்குப் பிறகும் இவற்றின் அடிப்படை ஆற்றலாகப் பொதிந்த ஆற்றல் ஒளிச்சேர்க்கை ஆற்றலேயாகும். அனைத்துக் குறிப்பிட்ட எரிமக் கலவையிலும் பல்வேறு கரிம, நீரியக் கரிம சேர்மங்கள் கலந்த்ருக்கின்றன. நீரியக் கரிமங்களின் குறிப்பிட்ட விகிதக் கலவை அதற்கே உரிய பான்மைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பான்மைகளில் கொதிநிலை, உருகுநிலை, அடர்த்தி, பிசுப்புமை, போன்றவை அடங்கும் இயற்கை வளிமம் போன்ற சில எரிமங்கள், காட்டாக, தழ் கொதிநிலை வளிமக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ளன. பாரைநெய் (பெட்ரோல்), டீசல் போன்றவை உயர் கொதிநிலைக் கூறுகளைப் பெற்றுள்ளன. மாறாக, புவியக நிலைத்திணைகள் நிலக்கரியையும் மீத்தேனையும் உருவாக்குகின்றன. புவி வரலாற்றின் கரிப்படிவுக் காலத்திலேயே பெரும்பாலான நிலக்கரி வயல்கள் அமைகின்றன இவை மேலும் இயற்கை வளிம வாயிலான கெரோஜென் மூன்று வகை எரிமத்தை உருவாக்குகின்றன. அலகு பொருண்மைக்குக் கணிசமான ஆற்றலையும் நீரையும் கரியமில வளிமத்தையும் புதைபடிவ எரிமங்கள் எரிகையில் உருவாக்குகின்றன. நிலக்கரி முந்து வரலாற்றுக் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ள எரிமம் ஆகும். நிலக்கரி பொன்மத் தாதுக்களை உருக்கும் உலைக்களங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குழைவான எண்ணெய்க்கசிவுகளில் இருந்து நீரியக் கரிமங்கள் பண்டைய நாளில் இருந்தே பயன்படுத்தியுள்ளனர் ஆனால் அவை நீர்த்தடுப்புக்கும் இறந்த உடலைப் பதப்படுதவும் பயன்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டிலேயே விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்க்கு மாற்றாக வணிகவியலாகப் பேரளவில் பாறைநெய் பயன்படலானது. பாறைநெய்யின் துணைவிளைபொருளான இயற்கை வளிமம் முன்பு எர்த்தித்து வீணாக்கப்பட்டது. இது இன்று மதிப்புமிக்க எரிம வளம் ஆகிவிட்டது. இயற்கை வளிமப் படிவுப் படுகைகல் இன்று எல்லியத் தனிம முதன்மை வாயிலாகவும் அமைகிறது. வழக்கமான கரட்டு எண்ணெயைவிட பிசுப்புமைகொண்ட அடர்கரட்டு எண்ணெயும் மணலும் களிமண்ணும் கலந்த நிலக்கீலான தார்மணலும் சிறப்புள்ள புதைபடிவ எரிம வாயில்களாக விளங்குகின்றன. எண்னெய்க் கிளிஞ்சலும் இதைப் போன்ற பொருள்களும் கெரோஜென் கலந்த படிவுப் பாறைகளாகும். இவற்றை உயர்வெப்பநிலையில் சூடேற்றினால் இவற்றில் அமைந்த உயர்மூலக்கூற்று எடைக் கரிமச் சேர்மங்களின் சிக்கலான கலவைகள் செயற்கைக் கரட்டு எண்ணெயைத் தருகின்றன. இவை இனிமேல்தான் வணிகவியலாகப் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த எரிமங்களை உள்ளெரி பொறிகளிலும் புதைபடிவ எரிம மின்னிலையங்களிலும் பிறபயன்களிலும் பயன்படுத்தலாம். முதன்மை ஆற்றல் வாயில்களின் மட்டம் என்பது நிலத்தடியில் அமைந்த வள இருப்பாகும். இந்த வள இருப்புகளில் இருந்து அன்றாடம் உருவாக்கப்படும் அளவு பாய்வு எனப்படும். முதன்மை ஆற்றல் வளங்களில் சிறப்பான பகுதியாக கரிமம்சார்ந்த புதைபடிவ எரிம வாயில்கள் அமைகின்றன. 2002 இல் நிலக்கரியும் எண்ணெயும் இயற்கை வளிமமும் 79.6% அளவு முதன்மை ஆற்றல் வளமாக அமைந்தது. இது (34.9+23.5+21.2) மில்லியன் டன்கள் எண்ணெய்க்குச் சமனாகும். 2005–2006 இல் வள இருப்புகள் விவாதம் முதுகுநாணி முதுகுநாணிகள் (இலங்கை வழக்கு - "முண்ணாணிகள்") (Chordates) என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு "பெரும்பிரிவு" அல்லது தொகுதி. இத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் கருவிலிருந்து வளர்ச்சி பெறும்பொழுது ஒருநிலையில் உடலின் அச்சு போன்ற ஒரு முதுகு நாண் கொண்டிருக்கும். இதனாலேயே இவற்றிற்கு முதுகுநாணி என்று பெயர். இந்த விலங்கினத் தொகுதி (phylum) மூன்று துணைத்தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன: உரோகோர்டேட்டா என்னும் அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்களின் புழுநிலையில் முதுகுநாணும், நரம்புகள் கற்றையும் உண்டு ஆனால் அவை முழு வளர்ச்சி அடைந்தவுடன் மறைந்துவிடுகின்றன. தலைகொள் முதுகுநாணிகளுக்கு அச்சுபோன்ற முதுநாணும், தண்டுவடம் போன்ற நரம்புக்கற்றையும் உண்டு, ஆனால் முள்ளெலும்பாகிய முதுகெலும்பு கிடையாது. மண்டை ஓடு உள்ள ஆனால் முதுகெலும்பில்லா ஆரல்மீன்வகை போன்ற "ஹாகுமீன்" (Hagfish) தவிர மற்றெல்லா முதுகெலும்பிகளிலும் முதுகில் நரம்புக்கற்றைக்கான (தண்டுவடம்) குழாய் போன்ற பகுதியைச் சுற்றி குருத்தெலும்போ முள்ளெலும்போ வளர்ந்திருக்கும். தற்பொழுது உயிர்வாழும் முதுகுநாணிகளுக்குத் தொடர்பான கிளை உயிரினங்களை கீழே உள்ள வகைப்பாட்டுக் கிளைப்படம் காட்டும். இதில் காட்டப்பட்டுள்ள சில உயிரின வகைப்பாட்டு உறுப்பினங்கள் மரபுவழியான வகுப்புகளுடன் இணங்கி இருப்பதில்லை. மிகப்பரவலான முதுகுநாணிகளை ஒழுங்குடன் வகைப்படுத்துவதில் இன்னமும் குழப்பங்கள் உள்ளன. ஒருசில உயிரினங்களுக்கிடையே உள்ள உறவுகளும் தெளிவாகவில்லை. கீழ்க்காணும் முறை Vertebrate Palaeontology (முதுகெலும்பியின் தொல்லுயிரியல் பாகுபாடு) என்னும் நூலின் மூன்றாவது பதிப்பினைப் பின்பற்றியது"Vertebrate Palaeontology". படிவளர்ச்சியில் முறைப்படி உள்ள உறவுகளைக் காட்டுவதாயினும், மரபுவழி உள்ள தொடர்புகளையும் (லின்னேயின் பெயரீட்டுமுறை) காட்டுகின்றது. குறிப்பு: படிவளர்ச்சியில் நிகழ்ந்திருக்கூடிய தொடர்புக்ளைக் கோடுகள் காட்டுகின்றன, இவற்றுள் முற்ரிலுமாய் அற்றுப்போன வகையினங்களும் காட்டப்பட்டுள்ல; அவை வாள் † போன்ற குறியீட்டால் காட்டப்பட்டுள்ளன. முதுகுநாணிகள் எனினும் இவற்றுள் ஒருசில முதுகெலும்பு இல்லாதனவும் அடங்கும். முதுகுநாணிகள் எனபன உயிரியல் வகைப்பாட்டில் ஒருதொகுதி. முதுகுநாணிகள் முதன்முதல் எவ்வாறு தோன்றின என்று அறியக்கிடைக்கவில்லை. கேம்பிரியன் காலத்தில் (ஏறத்தாழ 542± 0.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 488.3± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வரைஉள்ள காலம்) இருந்து அறியப்பட்ட லான்செலெட் போன்ற மீனின் முன்நிலை போன்ற உயிரினங்கள்தான் தெளிவாக அறியப்பட்ட வகைகள். முதன்முதல் தோன்றியதாகக் கூறப்படும் கருத்துகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றில் ஒட்டியதாக இருக்கும். நெளிந்து நெளிந்து நீஞ்சுவதற்கு ஏற்றவாறு தசைகள் இறுகிச்சுருங்குவதற்கு உகந்தவாறு முதுகுநாணியின் கெட்டித்தன்மை அல்லது உறுதித்தன்மை வளர்ச்சி அடைந்தது. தாயம் தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை [[இந்தியா வில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம். தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. [[சூதாட்டம்]], சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும். =தாய விளையாட்டு வகைகள்= =ஐந்துக்கு ஐந்து கட்டங்களில்= [[படிமம்:கோடு.png|thumbnail|right]] நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவார்கள். ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும். ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார். நான்கு சோகிகளை ஒன்றாக எறிந்து பேறுகள் எடுக்கலாம். ஆட்டமிழக்காமல் இருக்க 1, 4 அல்லது 8 எறிய வேண்டும். 1, 4 அல்லது  8 எடுத்தால் தொடர்ந்து விளையாடலாம். 2 அல்லது 3 எறிந்தால் ஆட்டமிழக்கப்படும். 2 அல்லது  3 எடுத்தால் அடுத்தவர் விளையாடுவார். ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும். ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் என்பவை சில உதாரணங்கள். [[படிமம்:நகர்வுகள் .png|thumbnail]] எண்ணிக்கை அளவுக்குக் காய்கள் நகர்த்தப்படலாம். ஒரு எண்ணிக்கை ஒரு காய்க்கு ஒரு முறை மட்டும் நகர்த்தப் பாவிக்கப்படும். விளையாட்டு ஆரம்பத்தில், இரு பகுதியும் தமது காய்களைத் தமது இல்லத்தில் (மனைக்கு வெளியே) வைத்திருப்பார்கள். கோட்டிற்குள் செல்வதற்குத் தாயம் அவசியம். இது முழுக்கு என்று சொல்லப்படும். முழுகிய பின்னர் எல்லா எறிவுகளுக்கும் காயை நகர்த்த முடியும். உங்கள் காயைத் தந்திரமாக நகர்த்துவதற்கு உங்கள் எறிதல்களைப் பொருத்தமாகத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் பக்கம் இருக்கும் நடுப் பெட்டியிலிருந்து (மனை)  தொடங்கி வலஞ்சுழியாகச் சென்று, வெளிப் பெட்டிகளால் சுற்றி மீண்டும் உங்கள் மனைக்கு வரும்போது, மனைக்குட் செல்லாமல் உட் பெட்டிகளுக்குச் சென்று எல்லாப் பெட்டிகளினூடும் சுற்றி நகர்ந்து  பழத்தை அடைய வேண்டும். பழுத்த காய்களைத் தாயம் மூலம் முதலில் இறக்கியவர் வென்றவராவார். உங்கள் நகர்வு முடிந்த்ததும் அடுத்தவர் விளையாடலாம். கோட்டில் நுழைந்த பின், தடைகள் (எதிராளிகளின் காய்கள்) இல்லா விட்டால் எல்லா எறிதல்களும் நகர்வுக்குப் பயன்படும். ஒரு எண்ணிக்கை நகர்வின் , முடிவிடத்தில் அடுத்தவர் காய் இருந்தால், அங்கே இருந்தவர் வெட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்.   ஒரு நகர்வின் முடிவிடத்திற்கு முன்பே அடுத்தவர் காய் இருந்தால், நகர்வு தடுக்கப்படும். இது இறுக்கு நிலை எனப்படும். ஆனால், அடுத்தவர் காய், மனைகளில் இருந்தால் வெட்டும் இல்லை, தடையும் இல்லை. மனைகளிலும், பழத்திலும் எல்லோரும் பாதுகாப்பாக ஒன்றாக இருக்கலாம். பழத்தை அடைந்து முதலில் தனது காய்களை வீட்டுக்கு இறக்குபவர் அல்லது இறக்கும் சோடி வெற்றி பெறும். =தாயக் கட்டை= பொதுவாக [[தாயக் கட்டை]]கள் மரத்திலோ அல்லது [[வெண்கலம்]] போன்ற [[உலோகம்|உலோகத்திலோ]] செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7x7 தாயக்கட்ட விளையாட்டில் [[புளி]]யங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு [[தேங்காய்]]ச் [[சிரட்டை]]யில் போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் [[வெள்ளை|வெண்புறம்]] காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது [[கருப்பு|கருநிறம்]] காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும். நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு. அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும். ஆறு சோழிகளை உருட்டி தாயம் விளையாடுவதும் உண்டு இந்தியாவில் ஒவ்வொறு பகுதியிலும் ஒவ்வொறு வகையாக கட்டங்களை அமைத்து தாயம் விளையாடப்படுகிறது. [[தென்னிந்தியா]]வில் பெரும்பாலானோர் இரு வகைக் கட்டங்களை அமைத்தே விளையாடுகின்றனர். முதல் வகை தாயக் கட்டம் காய்களை வைக்கும் பகுதி உட்புறமாக நாற்புறமும் ஆறு x மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகை தாயக் கட்டம் ஏழு x ஏழு சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். தாயக் கட்டத்தை வெறும் தரையில் வரைந்தோ அல்லது மரப் பலகையில் வரைந்தோ விளையாடப்படுகிறது. பின்வரும் விதி முறைகள் நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் விளையாடுவதற்கேற்றது: [[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] அம்பேத்கர் பாபா சாகேப் (பொருள்: "தந்தை") என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (, ; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் (Mhow) எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. 1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது. பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து. ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து. 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார். படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார். 1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 - டிசம்பர் 6-ல் காலமானார். தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும் செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது. அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!” இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார். அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது. இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார். டாக்டர். அம்பேத்கர் காஷ்மீர்க்கு தனி அந்தஸ்த்து வழங்குவதை விரும்பவில்லை. அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார். கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார். இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார். இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார். பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார். புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார். 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார். 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள். அதன் பின் இவர் காட்மண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார். இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது. 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது. பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது. 'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை. மகாராட்டிர அரசின் கல்வித்துறை, முனைவர்.அம்பேத்காரின் உரையாடல்களையும், உரைகளையும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளன. அவை வருமாறு;- அம்பேத்கரின் 124-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, மன்மத வருடம், சித்திரை 1-ஆம் நாள் (ஏப்ரல், 14, 2015), கூகிள் தன் டூடில் தளத்தில் அம்பேத்காரின் படத்தை வெளியிட்டு கெளரவப்படுத்தியது. பேங்காக் பேங்காக் ("Bangkok") தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், "குருங் தேப் மஹா ந கொன்" () என வழங்கப்படுகிறது. இதில் "குருங் தேப்" என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 விழுக்காடு ஆகும். "பேங்காக் பெருநகர மண்டலம்" எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 15ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தில் சிறு வணிகத்துறையாக இருந்த பேங்காக் படிப்படியாக வளர்ச்சியுற்று இரண்டு தலைநகரங்களின் அமைவிடமாக விளங்கியது; 1768இல் தோன்புரி மற்றும் 1782இல் ரத்தனகோசின். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சயாம் என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நவீனப்படுத்துதலின் மையமாக பேங்காக் இருந்தது. அக்காலத்தில் மேற்கத்திய தாக்கம் மிகுந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் வரையற்ற மன்னராட்சி நீக்கப்பட்டு பல புரட்சிகளை சந்தித்த தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களின் மையமாக பேங்காக் அமைந்திருந்தது. 1960களிலிருந்து 1980கள் வரையிலான காலத்தில் மிக விரைவான வளர்ச்சியை கண்டது. தாய்லாந்தின் அரசியல், பொருளியல், கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் பேங்காக்கின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆசிய மண்டல தலைமையகங்களை பேங்காக்கில் நிறுவின. இதனால் இந்த மண்டலத்தில் பேங்காக் ஓர் முக்கிய நிதிய, வணிக விசையாக விளங்குகிறது. மேலும் பன்னாட்டுப் போக்குவரத்து மற்றும் நலத்துறை நிறுவனங்களின் அச்சுமையமாகவும் விளங்குகிறது. கலை, கவின்கலை, மனமகிழ் நிகழ்வுகளுக்கான மண்டல மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இங்குள்ள பரபரப்பான சாலை வாழ்க்கையும் பண்பாட்டுச் சுவடுகளும் பரவலாக அறியப்பெற்ற சிவப்பு விளக்கு மாவட்டங்களும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஆவலைத் தூண்டுகின்றன. இவற்றால் பேங்காக் உலகின் மிகக்கூடிய சுற்றுலாப் பயணிகளை உடைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாஸ்டர்கார்டு வெளியிடும் உலகளாவிய வருகைபெறும் நகரங்களின் பட்டியலில் இலண்டன், பாரிசை அடுத்து மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாக் குறித்த உலகளாவியத் துறையிதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக "உலகின் சிறந்த நகரமாக" பெயரிடப்பட்டுள்ளது. இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு. போதிய நகரமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாது விரைவான வளர்ந்துள்ள பேங்காக் சரியான கட்டமைப்பு அமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. போதிய சாலைகள் இல்லாததாலும் மிகுதியான தனியார் ஊர்திகள் பயன்பாட்டினாலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தாய் விரைவுவழி அமைப்பு அமைக்கப்பட்டபோதும் இச்சிக்கல் இன்றும் தீரவில்லை. 1990களில் இதனால் மிகுந்த காற்று மாசடைதல் உண்டானது. இதற்கு தீர்வாக நான்கு விரைவுத் தொடருந்து வழிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன; மேலும் பல வழிகள் கட்டமைக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் வருகின்றன. "பேங்காக்" ( என்ற சொல்லின் சொற்பிறப்பியல் தெளிவாக இல்லை. "பேங்" என்ற தாய்ச்சொல்லிற்கு "ஓடையிலமைந்த சிற்றூர்", என்றும் இதன் பெயர் "பேங் கோ" (),( "கோ"வின் பொருள் "தீவு", இப்பகுதியில் பல ஆறுகளும் கால்வாய்களும் ஏற்படுத்திய நிலப்பகுதியை குறிக்க) என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் கருதப்படுகிறது. "பேங்காக்" என்பது பேச்சுவழக்குப் பெயராக இருந்திருக்கலாம்; ஆனால் இதுவே வெளிநாட்டுப் பயணிகளால் பயன்படுத்தபடத் துவங்கி பரவலான பயன்பாட்டால், பேங்காக் பெருநகர நிர்வாகம் போன்ற சொல்லாட்சிகளில், அலுவல்முறையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பேங்காக்கின் முழுமையான அலுவல்முறைப் பெயர், "குருங் தேப் மஹாந கொன் அமன் ரத்டனகொசின் மஹிந்தரயுத்தய மகாடிலோக் போப் நோப்ப்ஹராத் ராட்சதனி புரிறோம் உடோம்ரட்சநிவேட் மகாசதன் அமன் பிமன் அவதான் சதித் சக்கதட்டிய விட்சனுகம் பிரசித் " () என்பதாகும். 168 இலத்தீன் எழுத்துக்களை கொண்ட பேங்காக்கின் பெயரே, உலகின் நகரமொன்றின் மிக நீளமான பெயராகும் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்தின் மொழியில் 139 எழுத்துருக்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் பாலியிலும் சமசுகிருதத்திலும் வேர்ச்சொற்களைக் கொண்ட இப்பெயரின் மொழிமாற்றம் இவ்வாறுள்ளது: பன்னாட்டளவில் பேங்காக் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பொதுவாக "குருங் தேப்" ("தேவதைகளின் நகரம்") என்று அழைக்கின்றனர். தானுந்து உரிமப்பட்டைகளில் " குருங் தேப் மகா நகொன்" என்று குறிக்கப்படுகிறது. பேங்காக் நகரம் 2013 நிலவரப்படி 15 நாடுகளிலுள்ள 23 நகரங்களுடன் சகோதர நகரமாகவும் நட்பு நகரமாகவும் உடன்பாடு கண்டுள்ளது. அவை: ஜார்ஜ் புஷ் ஜார்ஜ் புஷ் என்னும் பெயரில் இரண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் உள்ளனர்: பால் செசான் பால் செசான் ( ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றாண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரும் "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்று கூறியுள்ளனர். செசான் குடும்பத்தினர் மேற்கு பைடுமான்டில் உள்ள செசானா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களது குடும்பப்பெயர் இத்தாலிய தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பால் செசான் 19 ஜனவரி 1839ல் ஐ-அன்-ப்ராவென்ஸில் (Aix-en-Provence) தெற்கு பிறந்தார் ஃபிரான்ஸில் பிறந்தார். 22 பிப்ரவரியில் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது. அவரது தந்தை லூயி அகஸ்டெ செசான் (28 ஜூலை 1798 – 23 அக்டோபர் 1886) ஒரு வங்கியின் துணை நிறுவனர். இது இக்கலைஞர் வளமையுடன் வாழ வாழ்க்கை முழுவதும் உதவியது. இவரது தாய் ஆன்னெ எலிசபெத் ஹானரின் ஆபெர்ட் (24 செப்டம்பர் 1814–25 அக்டோபர் 1897), உற்சாகமானவர், பால் இவரிடம் இருந்து தான் வாழ்க்கையை பற்றிய கருத்தும், பார்வையும் பெற்றார். பாலுக்கு இரு தங்கைகளும் இருந்தனர்; மேரி மற்றும் ரோஸ், இவர்களுடன் தான் பால் தினமும் ஆரம்ப பள்ளிக்கு செல்வார். 10 வயதில் பால் அதே நகரத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்தார். 1852ல் "காலேஜ் பௌர்பான்" எனும் கல்லூரியில் சேர்ந்தார், இங்கு தான் அவர் எமிலி சோலா, பேப்டிஸ்டின் பெய்லி ஆகியோருடன் நட்பு கொண்டார். இம்மூவரையும் "லெ ட்ராய் இன்செப்ரபல்ஸ்" அதாவது இணை பிரியா மூன்று நண்பர்கள் என்றே அனைவரும் அழைப்பர். 1857ல் அவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஜோசப் ஜிபர்ட் எனும் ஸ்பானிஷ் துறவியின் கீழ் பயின்றார். 1858ல் இருந்து 1861 வரை தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற சட்ட கல்லூரியில் சேர்ந்து ஓவியத்துடன் சட்டமும் படித்தார். ஆனால் தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் கலை வளர்ச்சிக்காக 1861ல் அவர் பாரிஸுக்கு சென்றார். இம்முடிவை எடுக்க சோலா மிகுந்த ஊக்கம் ஊட்டினார் கடைசியில் தன் தந்தை செசானின் வாழ்க்கை தேர்வினை ஆதரித்தார். செசான் பின்னர் தன் தந்தையிடம் இருந்து 400,000 ஃப்ராங்குகளை (£218,363.62) இது தன் பண கஷ்டம் அனைத்தையும் போக்கியது பாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர். செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், "என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும்." என்றார். செசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைப்பெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும். ஒரு நாள், செசான் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புயலில் சிக்கிக்கொண்டார். அவர் கொட்டும் மழையில் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னரே வீட்டுக்கு போக எண்ணினார், ஆனால் அவர் வீட்டுக்கு போகும் வழியிலேயே கீழே விழுந்தார். அவர் அந்த சாலை வழியாக சென்றவரால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற பின் அவரது வயதான வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் அவரது கைகளையும், கால்களையும் சூடு பறக்க தேய்த்து விட்டார் அதன் விளைவாக அவர் மயக்கம் தெளிந்தார், அடுத்த நாள் அவர் மீண்டும் வேலை செய்ய முற்ப்பட்டார். ஆனால் கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டார். சிறிது நாட்கள் கழித்து, 22 அக்டோபர் 1906 அன்று நிமோனியாவால் அவர் இறந்து போனார் அவர் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊரான ஐ-அன்-ப்ராவின்ஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ரெம்பிரான்ட் ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn ) (ஜூலை 15, 1606 – அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார் இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர். இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார். ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn ) சூலை 15,1606 ஆம் ஆண்டு லைடனில் பிறந்தார். தற்போது அது நெதர்லாந்தில் உள்ளது. இவருடைய பெற்றோருக்கு இவர் ஒன்பதாவது குழந்தை . இவருடைய பெற்றோர்கள் சற்று வசதி படைத்தவர்களாக இருந்துள்ளனர். இவருடைய தந்தை அரவைத்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தாயாரின் பெற்றோர்கள் அடுமனை வைத்திருந்தனர். இவருடைய ஓவியத்தின் மையக் கருவாகச் சமயம் இருந்தது. இவருடைய தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் என்றும் இவரின் தந்தை டச்சு கிறிஸ்துவ மறுமலர்ச்சி சபையைச் சார்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவருடைய அனைத்து பணிகளிலும் கிறித்துவ சமய தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் இவர் எந்த சபையைச் சார்ந்தவர் என்பது பற்றிய ஒரு தெளிவான சான்றுகள் இல்லை ரெம்பிரான்ட் லைடன் பல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த ஆம்ஸ்டர்டம் நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்ததால் அங்கு சென்றார். 1634 ஆம் ஆண்டில் "சசிகா வன் உலென்பேர்க்" (Saskia van Uylenberg) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருடத்திற்கு பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள். சசிகா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார். பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார். பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ("International Phonetic Alphebet") உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும். பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. 2007 ஆண்டின் படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 1498 1498 (MCDXCVIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். சலீம் அலி சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ("Bombay Natural History Society") புரவலராக ("patron") விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். “இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு "(Handbook of the Birds of India and Pakistan)" மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி "(The Fall of Sparrow)" ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும். 1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி ("Khethwadi") என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலீம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் ("W S Millard") என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மா சென்றுவிட்டார். அங்குச் சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார். பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் ("Dr Irwin Strassman") என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை. சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது. சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே ("S.Dillon Ripley") என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே. சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் முன்னிற்குஞ்சுரப்பி "(prostate)"புற்றுநோயால் இயற்கை எய்தினார். பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் 1883 ஆம் ஆண்டு தொடங்கப்பட ஓர் அரசு சாரா அமைப்பாகும். பறவைகள் மற்றும் விலங்குகள் மீது இயற்கை ஆர்வம் கொண்ட தொழில்முறை சாராத ஆறு ஆங்கிலேயர்களும், இரண்டு இந்தியர்களும் செப்பம்பர் 15,1883 இல் விக்டோரியா அருங்காட்சியகத்தில் கூடி உருவாக்கிய சங்கம் இதுவாகும். இந்தியாவில் காணப்படும் உயிரினங்களின் வரலாற்றை சேகரித்தல், அவ்வுயிரினங்களைப் பிடித்து அதை ஆராய்தல் அவற்றை அறிவியல் முறையில் வகைப்படுத்துதல், உயிரினங்களை பாதுகாத்தல் கள ஆய்வு மேற்கொள்ளல் என இவ்வகையில் இயங்க ஆரம்பித்தனர். இங்கு பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை 1,20,000க்கும் மேல் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொகுப்பு இது. பாலூட்டிகள் 20,000, பறவைகள், 29,000, பறவை முட்டைகள் 5,400, இருவாழிகளும், ஊர்வனவும் 8,500, பூச்சிகள் 50,000 ஆகும். கபி குஷி கபி கம் இயக்குனர் கரண் ஜோஹர் இயக்கிய இரண்டாவது திரைப்படம். அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன் போன்ற முன்னணி நடிகர்களும் ஜெயா பச்சன், கஜோல், கரீனா கபூர் போன்ற முன்னணி நடிகைகளும் நடித்து உள்ளனர். ராணி முகர்ஜி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் தலைவருமாவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்துச் சென்று கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார். 2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை முதலமைச்சரானார். மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர். 1990 ஏப்ரல் 4 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார். 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார். 2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார். கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். விடுதலைப் புலிகளுக்கெதிராகத் தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட இவர் பின்னர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார். 2007 இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சிறிநகர் ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, , Srinagar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்து ஆற்றின் துணை ஆறாகிய ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள ஏரிகளும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது. அப்துல் காதர் சாகுல் அமீட் அப்துல் காதர் சாகுல் அமீட் (பொதுவாக ஏ. சி. எஸ். ஹமீட், "Abdul Cader Shahul Hameed", ஏப்ரல் 10, 1927 - செப்டம்பர் 3, 1999) இலங்கையின் அரசியல்வாதியும், முனாள் அமைச்சரும் ஆவார். இலங்கையின் மத்திய மாகாணத்தில் அக்குரணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமீட் ஒரு இசுலாமியராவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்ற சாகுல் அமீது மாத்தளை வின்ட்சர் கல்லூரியில் ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த போதிலும் 1960களின் ஆரம்பத்தில் அரசியலில் நுழைந்தார். சிறந்த எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் பிற்காலத்தில் திகழ்ந்தார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் சரளமாகப் பேசுவதில் வல்லவர். 17 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல பங்களிப்புகளை செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைப் பொதுத்தேர்தலை வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார். 1978 முதல் 1989 ஆண்டு வரை இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் 1989 முதல் 1993 வரை கல்வி அமைச்சராகவும் செயலாற்றினார். 1989 ஆம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலைப் புலிகளுடனாக பேச்சுக்களின் போது அரச தரப்பிற்கு தலைமைத் தாங்கினார். இவர் 1999 செப்டம்பர் 3 ஆம் நாள் கொழும்பில் காலமானார். மின்னியல் வரலாறு மின்னியல் வரலாறு என்பது மின்னியல் ஊடகங்கள் வாயிலாக வரலாற்று பகுப்பாய்வு, விளக்கக்காட்சி மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மனித நேய மின்னியல், அளவியல், வரலாறு, பொருளாதார வரலாறு மற்றும் கனிணியியல் ஆகியவற்றின் ஒருவகை கிளையாகும். செயல்பாடுகள் : Charles Dollar and Richard Jensen, Historians Guide to Statistics (1971) Thomas, III, William G. (2004). "Computing and the Historical Imagination". In Susan Schreibman; Ray Siemens; John Unsworth. A Companion to Digital b Burton, Orville Vernon (Summer 2005). "American Digital History". Social Science Computer Review. 23 (2): 206–220. doi:10.1177/0894439304273317. WWW-VL: World History Index and History Central Catalogue Ayers, Edward L. (2005). What Caused the Civil War. New York: W. W. Norton and Company. ISBN 0-393-05947-2. Bernstein, Adam (2007-10-13). "Digital Historian Roy A. Rosenzweig". Washington Post. Retrieved 2008-04-02. Beals, M. H. (21 March 2017). "Stuck in the Middle: Developing Research Workflows for a Multi-scale Text Analysis". Journal of Victorian Culture: 1–8. Navickas, Katrina; Crymble, Adam (20 March 2017). "From Chartist Newspaper to Digital Map of Grass-roots Meetings, 1841–44: Documenting Workflows". Grandjean, Martin (2014). "La connaissance est un réseau". Les Cahiers du Numérique. 10 (3): 37–54. doi:10.3166/lcn.10.3.37-54. Darnton, Robert (2000). "An Early Information Society: News and the Media in Eighteenth-Century Paris". American Historical Review. 5 (1) ரஞ்சன் விஜேரத்ன ஜெனரல் ரன்ஜன் விஜேரத்ன (ஏப்ரல் 4, 1931 - மார்ச் 2, 1991) இலங்கையின் அரசுத்தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் 1989 முதல் 1991 வரை வெளிநாட்டமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வல்பொல முதலிகே யோர்ஜ் ஏர்கிலிஸ் விஜேரத்னவுக்கும் ரொசலிண்ட் மரியா செனாநாயக்கவுக்கும் பிறந்த ரஞ்சன் குருத்தலாவை புனித தோமையார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கிசை புனித தோமையார் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளியையும் மேற்கொண்டார். பின்னர் பெருந்தோட்டத்துறையில் அதிகாரியாக இணைந்து பணியாற்றினார். 1978 ஆம் அண்டு விவசாயத்துறை ஆராய்ச்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டத்துறைக்குப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இலங்கை நீள் துப்பாக்கி படையின் லுதினன் கேர்னலாக நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டுஐக்கிய தேசியக் கட்சியின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது அரச பணிகள் அனைத்திலிருந்தும் விலகினார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பாதுகாப்புப் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார். 1991 மார்ச் 2 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், அராலியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தூர இருந்து இயக்கும் ஊர்தி வெடிகுண்டின் மூலம் கொலை செய்யப்பட்டார். இதன் போது 13 பொதுமக்கள், 5 அமைச்சு பாதுகாப்பு ஊழியர்கள், அமைச்சர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். லுதினன் கேர்னர் ரஞ்சன் விஜேரத்ன இறப்பின் பின்னர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் மேலும் கொத்தலாவலை பாதுகாப்பு பயிலகம் (தற்போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்) சட்டத்துறையில் முனைவர் பட்டத்தை வழங்கியது. தசாவதாரம் தசாவதாரம் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கலாம்: உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு ("Nicholas II of Russia", , நிக்கொலாய் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ், – ) உருசியப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும் பின்லாந்தின் இளவரசரும் ஆவார். இரண்டாம் நிக்கலாசு 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார். முதலாம் உலகப் போரில் உருசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தினார். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர். 1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர். 2000 ஆகத்து 15 இல் உருசியப் மரபுவழித் திருச்சபை இவர்களைப் புனிதர்களாக அறிவித்தது. புனித எலன்சு மலை புனித எலன்சு மலை அல்லது சென் ஹெலன்ஸ் மலை ("Mount St. Helens") என்பது ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள ஒரு தீவிர எரிமலையாகும். இது சியாட்டில் நகரில் இருந்து 96 மைல்கள் (154 கிமீ) தெற்கேயும், போர்ட்லாந்தில் இருந்து 53 மைல்கள் (85 கிமீ) வடகிழக்கேயும் அமைந்துள்ளது. சென் ஹெலன்ஸ் மலை மே 18, 1980 இல் வெடித்த நிகழ்வு அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. மொத்தம் 57 பேர் கொல்லப்பட்டனர்; 250 வீடுகள், 47 பாலங்கள், 15 மைல் (24 கிமீ) தூர தொடருந்து வழிகள், 185 மைல் (300 கிமீ) தூர நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன. ஐராவதி ஆறு ஐராவதி ஆறு ("Ayeyarwady River") மியான்மாரின் மிக நீளமான ஆறு ஆகும். இது 2170 கிமீ (1350 மைல்) நீளம் உடையது. இது மியான்மரின் வட தெற்காக ஓடுகிறது; மிக முதன்மையான வணிக நீர்வழித் தடமாகவும் உள்ளது. மியான்மாரின் வட உச்சியில் தொடங்கி அதனை கிழக்கு, மேற்காக இரு கூறுகளாக பிரித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வாறு வளமையான ஐராவதி கழிமுகத்தை உருவாக்கியுள்ளது. இது முன்னர் மண்டலேவுக்கான பாதை என்று அழைக்கப்பட்டது. 2008 இல் வீசிய நர்கீஸ் புயலால் ஐராவதி கழிமுகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி ஏறத்தாழ 1,00,000 மக்கள் உயிர் இழந்தனர். இயக்க ஆற்றல் ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அப்பொருளின் நகர்ச்சி காரணமாக அதனிடம் இருக்கும் அதிக (எச்சான) ஆற்றலாகும். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொருளை, அதன் சடநிலையில் இருந்து தற்போதைய வேகத்திற்குச் செலுத்தத் தேவையான வேலையே (பளு) இயக்க ஆற்றல் என்று வழங்கப் படும். தனது முடுக்கத்தின் போது அடைந்த ஆற்றலை அதன் வேகம் மாறாதிருக்கும் வரை அப்பொருள் மாறாமல் கொண்டிருக்கும். அதே அளவுள்ள ஆற்றலை நொசிவாகச் (அல்லது எதிராகச்) செலுத்தினால் மட்டுமே அதன் வேகம் மட்டுப்பட்டு அப்பொருள் நிலைக்குத் திரும்பும். "முதன்மைக் கட்டுரை:" ஆற்றல் இயக்க ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்ள சில காட்டுக்களைப் பார்ப்போம். ஒரு மிதிவண்டியோட்டி தான் உண்ட உணவின் வேதி ஆற்றலைப் பயன்படுத்தி மிதிவண்டியை மிதித்துச் செல்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்கிறார். அந்த வேகத்தில் காற்றின் எதிர்த் தடையையும் உராய்வையும் தவிர்க்கத் தேவையானது போக அதிக வேலை செய்யாமலே அதே வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும். இங்கு ஆற்றல் இயக்கத்தின் ஆற்றலாக (இயக்க ஆற்றல்) மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆற்றல் மாற்றம் மிகுந்த செயல்திறன் கொண்டதல்ல. பக்கவிளைவாய் மிதிவண்டியோட்டியினுள்ளே வெப்பமும் உண்டாக்கப் பட்டிருக்கும். நகரும் மிதிவண்டியினதும், வண்டியோட்டியினதுமான இயக்க ஆற்றலைப் பிற வடிவங்களுக்கும் மாற்ற முடியும். எச்சான வேலை செய்யாமல் ஒரு மலையுச்சியில் ஏறி அதன் உச்சிக்கு வந்தபோது முழுமையாக வண்டி நின்று போனால், அங்கே இயக்க ஆற்றல் புவியீர்ப்பு நிலை ஆற்றலாக மாறியிருக்கும். மீண்டும் மலையுச்சியின் மறுபக்கம் சென்று கீழே செலுத்துவாராயின் நிலை ஆற்றல் மீண்டும் இயக்க ஆற்றலாய் மாறியிருக்கும். ஆற்றலின் ஒரு பகுதி உராய்வின் காரணமாய் வெப்ப ஆற்றலாக மாறி இருக்கும் என்பதால், முந்தைய வேகத்தை அப்படியே பெற இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆற்றல் அழிந்து போகவில்லை. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஓட்டுனர் பிரேக் (தடை) கைக்கொண்டால் அப்போது இயக்க ஆற்றல் முழுவதுமாக உராய்வின் காரணமாக வெப்ப ஆற்றலாய் மாறியிருக்கும். டிரோன் பெர்னாண்டோ டிரோன் பெர்னாண்டோ ("Tyronne Fernando", ஆகத்து 8, 1941 – பெப்ரவரி 26, 2008) இலங்கையின் அரசியல்வாதியும் 2001 தொடக்கம் 2004 வரை இலங்கை வெளிநாட்டமைச்சருமாவார். 1848 ஆம் ஆண்டு பிரித்தானியருக்கு எதிரான மாத்தளை புரட்சியை வழிநடத்திய தலைவர்களுள் ஒருவரான வீரபுரன் அப்புவின் வழியில் 1941 ஆகஸ்ட் 8 ஆம் நாள் பிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை முடித்த பர்னாண்டோ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெபல் கல்லூரியில் அரசறிவியல் துரையில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் கழகத்தின் அவைத்தலைவராக தெரிவுச் செய்யப்பட்ட முதல் ஆசியராகவும் பர்னாண்டோ விளங்கினார். பர்னாண்டோ மேலும் இலண்டன் ஊடகவியலாளர் கல்லூடியில் ஊடகவியல் டிப்ளோமாவையும் கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்சின் சட்டத்தரணியாக "கிரே இன்" மூலமாக உள்நுழைந்தார். பின்னர் இலங்கைக்கு திரும்பி முடியின் சட்டத்தரனியாக 10 ஆண்டுகள் வேலைச் செய்தார் பின்னர் அதிபரின் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியலில் பிரவேசித்தார். 1977 ஆம் ஆண்டு மொறட்டுவை தேர்தல் தொகுதியில் வெற்றிப் பெற்று இலங்கைப் பாராளுமன்றம் சென்றார். ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஆட்சியின் கீழ் உதவி வெளிநாட்டமைச்சராக செயற்பட்டார். 1993 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ரணசிங்க பிரேமதாசா ஆட்சியில் செயர்பட்டார். 1991 முதல் 1994 வரை இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையின் தலைவராகவும் கடமையாற்றினார். 2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாரான போது வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். பதவியிலிருநத போது ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விழகினார். 2004 டிசம்பர் 8 ஆம் நாள் சந்திரிகா குமாரதுங்கவினால் இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். 2006 ஆண்டின் சனவரி மாதம்வரை பதிவியிலிருநதார். 2007 ஆம் ஆண்டு பிரன்சிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார். 2008 பெப்ரவரி 26 ஆம் நாள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறப்பின் போது அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமை ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகள் உண்டு. கறுப்புப் பெட்டிச் சோதனை கறுப்புப் பெட்டிச் சோதனை ஆனது மென்பொருட் சோதனையில் ஓர் அங்கம் ஆகும். இவ்வழிமுறையில் சோதனையாளர் சரியான மற்றும் பிழையான உள்ளீடுகளைக் கொடுத்து சரியான வெளியீட்டை மென்பொருளானது தருகின்றதா என்று சோதிக்கப்படும். இச்செய்கையானது மென்பொருட் சோதனையில் எல்லாக் கட்டங்களிலுமே செய்யப்படுவது ஆகும். இச்செயன்முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படாத வசதிகளை வெளிக்கொண்டுவரக் கூடியதாக இருப்பினும் எல்லா வசதிகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த இயலாது. பயனரின் உள்ளீட்டைச் சோதிப்பதாகும். எடுத்துக்காட்டாக வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை 4.78, -7.99 என்றே விலையை -1 என்றோ உள்ளிட்டுச் சோதிப்பதாகும். வேறு எடுத்துக்காட்டுகளாக விலை எனக் கேட்கும் இடத்திலோ எண்ணிக்கை எனக் கேட்கும் இடத்திலோ சம்பந்தமில்லாத எழுத்துக்களை உள்ளீடு செய்து மென்பொருளின் நடத்தையை நோக்குவதாகும். எடுத்துக்காட்டாக "1.20.35", "Abc", "0.000001", and "999999999". இவ்வாறான சோதனைகள் ஒவ்வொரு பயனரின் உள்ளீட்டில் சோதிக்கப்படும். சில இடங்களில் 30 எழுத்துக்களை மாத்திரமே உள்ளீடு செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் 50 எழுத்துக்களையொ ஒருங்குறியில் அமைந்த தமிழ் எழுத்துக்களையோ உள்ளீடு செய்து மென்பொருளின் நடத்தை அவதானிக்கப்படும். இவ்வாறான சில சந்தர்பங்களில் பபர் ஓவபுளோ (buffer overflow) போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரலாம். கருப்பு வண்ணப் பெட்டியில் என்ன உள்ளது என்பது கண்ணுக்கு தெரியாது. அது போலவே உள்ளீட்டை வாங்கும் மென்பொருள் என்ன செய்கிறது என்பது தெரியாது. வெளிவரும் விடை மட்டுமே சரிபார்க்கப்படும். பூகுன் பாடும்பறவை பொதுநலவாய இங்கிலாந்து பொதுநலவாய இங்கிலாந்து ("Commonwealth of England") என்பது 1649 முதல் 1660 வரை முதலில் இங்கிலாந்து (வேல்ஸ் உட்பட), பின்னர் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு குடியரசாகும். முதலாம் சார்ல்ஸ் மன்னன் ஜனவரி 30, 1649 இல் கொலை செய்யப்பட்ட பின்னர் மே 19, 1649 இல் ஒலிவர் குரொம்வெல்லின் தலைமையிலான எச்ச நாடாளுமன்றத்தினால் ("Rump Parliament") இங்கிலாந்து குடியரசாக அறிவிக்கப்பட்டது. குரொம்வெல் ஆட்சிக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தில் எஞ்சியிருந்ததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமேயாகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிற தொடர்ந்திருந்த நாடாளுமன்றத்தில் எஞ்சிய பகுதியான இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்" (The Rump) என்று அழைக்கப்பட்டது. குரொம்வெல் முதலில் புதிய தேர்தல்கள் நடத்துவது குறித்துப் பேச்சுகள் நடத்துவதற்கு முயன்று தோல்வியடைந்ததும், எச்ச நாடாளுமன்றத்தை ஏப்ரல் 20, 1653 இல் கலைத்தார். அதன் பின்னர் இராணுவத்தினரின் துணையுடன் ஜூலை 4, 1653 முதல் டிசம்பர் 12, 1653 வரையில் Barebones Parliament என்ற பெயரில் ஆட்சி நடத்தினார். பின்னர் குரொம்வெல் டிசம்பர் 16, 1653 முதல் செப்டம்பர் 3, 1658 இல் அவரது இறப்பு வரை "ஆட்சிக் காவலர் பெருமகனார்" ("Lord Protector") என்ற பெயரில் நேரடி ஆட்சி நடத்தினார். சீரான நிருவாக முறையை ஏற்படுத்தினார். கடுமையான சட்டங்கள் பலவற்றை சீர்ப்படுத்தினார். கல்வி கற்பதை ஆதரித்தார். யூதர்கள் இங்கிலாந்தில் மீண்டும் குடியமரவும் அவர்கள் தங்கள் சமயத்தைப் பயிலவும் அவர் அனுமதியளித்தார். அவரது இறப்பின் பின்னர் அவரது மகன் ரிச்சார்ட் குரொம்வெல் அரசுத் தலைவரானார். 7 மாதங்கள் வரை ரிச்சார்ட் குரொம்வெல் ஆட்சியில் இருந்தார். மே 6, 1659 இல் இராணுவத்தினர் அவரைப் பதவியில் இருந்து அகற்றி மீண்டும் ஓர் எச்ச நாடாளுமன்றத்தை அமைத்தனர். ஏப்ரல் 4, 1660 இல் இரண்டாம் சார்ல்ஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1649 1649 (MDCXLIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். த நேம்சேக் (திரைப்படம்) த நேம்சேக் ("The Namesake") ஜும்ப்பா லாஹிரி எழுதிய த நேம்சேக் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மீரா நாயர் இயக்கிய திரைப்படம். இர்பான் கான், தபு, கால் பென் (Kal Penn) ஆகியோர் நடித்துள்ளனர். 1640கள் 1640கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1640ஆம் ஆண்டு துவங்கி 1649-இல் முடிவடைந்தது. அனைத்துலக முறை முன்னொட்டுச் சொற்கள் இப்பக்கத்தில் அனைத்துலக முறை அலகுகளில் பயன்படுத்தும் மேல்வாய், கீழ்வாய் அலகு முன்னொட்டுகளுக்கான சொற்களும் அதன் மதிப்பும் உள்ளன. கீழ்வாய் அலகு கீழ்வாய் அலகு என்பது ஒன்றுக்கும் குறைவான (கீழான) எண்களையோ அளவுகளையோ குறிக்கும் அலகு. அரை (1/2), கால் (1/4), அரைக்கால் (1/8), வீசம் (1/16) என்பன போல கீழ்வாய் எண்கள் வழக்கில் உள்ளன. அறிவியலில், பத்தில் ஒரு பகுதியைக் குறிக்க "டெசி" (deci) என்றும் நூற்றின் ஒரு பகுதியைக் குறிக்க "சென்ட்டி" (centi), ஆயிரத்தின் ஒரு பகுதியைக் குறிக்க "மில்லி" (milli) என்றும் கூறும் சொற்களும் கீழ்வாய் அலகுகள்தாம். இப்படிக் கீழ்வாய் அலகுகள் பற்பல உள்ளன. அழுத்தம் அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு "குறிப்பிட்ட" அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும். அழுத்தத்தை, அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பைக் கொண்டு ஓர் அளவியால் (ஒரு மானியால்) அளப்பர். அழுத்தமானி கொண்டு அளக்கப்படும் அழுத்தம் சூழ் அழுத்தத்தில் (ambient pressure) இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று குறிக்கும் அழுத்தம் ஆகும். ஆங்கிலத்தில், அழுத்தத்தைக் குறிக்க, P என்னும் எழுத்தைப் பாவிப்பர். F என்பது விசையெனவும், A என்பது பரப்பு எனவும் கொண்டால், கணித முறையில், ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பில் எவ்வளவு விசை செங்குத்தாக விழுகின்றது என்று காண, என்று குறிப்பிடலாம். வெப்ப இயக்கவியலில் அழுத்தம் என்பது முக்கியமான ஒரு கூறு ஆகும். அழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m or kg·m·s) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான பிலைசு பாஸ்கலின் பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது. பார் என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது. நீரின் கீழ் நீந்துகின்ற ஒருவர் திரவ அழுத்தத்தை உணருவார். இது உண்மையில் நீந்துபவரின் மேலாக உள்ள நீரின் திணிவு காரணமாக எற்படுத்தப்படும் அழுத்தமாகும். நீந்தும் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிப்பதை உணருவர். ஆகவே ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கின்றது. திரவ அமுக்கம் இது தவிர திரவ அடர்த்தியிலும் தங்கியிருக்கும். இதன் அடிப்படையில் திரவநிரலால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் தரப்படும். இங்கு: 2008 சிச்சுவான் நிலநடுக்கம் 2008 சிச்சுவன் பூகம்பம் என்பது சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம், சீன நேரப்படி 2008 மே 12 ஆம் நாள் மதியம் 14:28:01.42 மணியளவில் நிகழ்ந்தது. 1976-ல் டாங்சான் மாகாணத்தைத் தாக்கிய பூகம்பத்திற்கு பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது. சிச்சுவான் மாகாணத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் சீனாவின் (1560 கி.மீ தள்ளியிருக்கும்) பீஜிங், ஷாங்காய் (1744 கி.மீ தள்ளியிருக்கும்), ஆகிய பெருநகரங்களிலும் தைவான் (1912 கி.மீ தள்ளியிருக்கும்), தாய்லாந்து (1940 கி.மீ தள்ளியிருக்கும்) ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. 70000 மனிதர்களின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கத்தினால் 4 லட்சம் மக்கள் காயமடைந்துள்ளனர், 50 லட்சம் மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். தரைமட்டமாகிவிட்ட 31.3 லட்சம் கட்டிடங்களையும் சேர்த்து 156.10 லட்சம் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.. மேலும் இறந்த 70,000 பேரில் 19065 பள்ளி மாணவர்கள் என்று சீனாவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.