ஐயப்பன் ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார். பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள். பாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது. ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும். ஐயனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மணிகண்டன் பூதநாதன் பூலோகநாதன் தர்மசாஸ்தா எருமேலிவாசன் ஹரிஹரசுதன் ஹரிஹரன் கலியுகவரதன் கருணாசாகர் லக்ஷ்மண பிராணதத்தா பந்தள ராஜன் பந்தளவாசன் பம்பாவாசன் ராஜசேகரன் சபரிவாசன் சபரீஷ் சபரீஷ்வரன் சபரி கிரீஷ் சாஸ்தா வீரமணி என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும். ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர். ஆறு அய்யப்பன் கோயில்கள் தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள் தமிழர் மத்தியில் தோன்றிய கடவுள் வழிபாட்டு முறைகளில் முக்கியப்படுத்தப்படும் கடவுள்கள் தமிழ்க் கடவுள்கள் ஆகும். சிவ வழிபாடு போன்ற இன்றைய பெருந்தெய்வ வழிபாடுகள் தமிழர் மத்தியிலேயே தோன்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையான தமிழ்க் கடவுள்கள் சிறுதெய்வ வழிபாடாகவே இருக்கின்றது. தொடக்கத்தில் சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் காலப்போக்கில் இந்து சமய நீரோட்டத்திலும், தொன்மத்திலும் கலந்துவிட்ட தமிழ்க் கடவுள்கள் பல இருக்கின்றன. இன்று தமிழ்க் கடவுள்கள் வழிபாட்டை இந்து சமய உட்பிரிவாகவே பலர் கருதுகின்றனர். கருப்பசாமி கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாக நாட்டார் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார். கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் பெருமாளாக சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டி பாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் முத்து கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது. சங்கிலி கருப்புசாமி மிகவும் உக்ரம் கொண்டவராகவும், அவரை அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டு சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கருப்புசாமி உள்ளார். கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராம கோயில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார். விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். 108 கருப்புசாமிகள் உள்ளதாகவும், 1008 கருப்புசாமிகள் உள்ளதாகவும் நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இடங்களில் கருப்புசாமிக்கு உருவம் இல்லாமல் பதிவு வைத்து வழிபடுகின்றனர். அத்தகைய இடங்களில் பெயரே முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இத்தனை வகையான கருப்பு சாமிகளுள் சிலவற்றுக்கு மட்டுமே உருவங்கள் கொடுக்கப்பட்டு வரையரை செய்யப்பட்டுள்ளன. 108 கருப்புசாமிக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மதுரை மாவட்டம். இசக்கி அம்மன் இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரட்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது. இசக்கியம்மன் - இசக்கி + அம்மன். இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். இயக்கி என்ற பொதுமைப் பெயரை உடைய பலருள் இவரும் ஒருவர். இவரைப்போல எண்ணற்ற இயக்கிகள் உள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாறான இயக்கிகளில் சிலர் மட்டுமே வழிபடப்படுகிறார்கள். பொதுவாக குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்க கூடிய வடிவம் மற்றும் கைகளில் குழந்தை இல்லாத வடிவம் என இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவர்களில் இயக்கியம்மன் மட்டுமே வழிபடப்படுகிறார். இயக்குபவள் என்ற அர்த்ததில் எண்ணற்ற பெண் எட்சிகளை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் பலரின் காவல் தெய்வங்களாக இந்த இயக்கிகளில் சிலர் இருந்துள்ளார்கள். இயக்கியம்மன் சிவப்பு சீலை அணிந்தும், இடது கையில் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்தவாறும், வலது கையை ஓங்கியபடி சூலத்தையோ, கத்தியை ஏந்தியவாறும் உள்ளார். சில இடங்களில் சிவப்பு சீலையின்றி வெறும் கச்சையுடன் இருக்கும் சிலைகளும், கையில் குழந்தையின்றி இருக்கும் சிலைகளும் உள்ளன. இசக்கியம்மனை அவர் இருக்கும் இருப்பிடத்தின் பெயரோடு அழைக்கின்றனர். சமண சமயத்தவர்களின் இசக்கிகள் வழிபாட்டிலிருந்து இந்த இசக்கயம்மன் வழிபாடு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இசக்கியம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களில் குலத் தெய்வமாக உள்ளார். தொட்டில் பிள்ளை. சீலைப்பிள்ளை http://isakkiammankovilsaral.zohosites.com/ தமிழர் அரசியல் தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளை பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டு சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகப்பட்டது, வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது. என்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்டபோது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புபோராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன. மலேசிய இந்தியர்களில் அனேகர் தமிழ் இந்துக்கள். இலங்கைத் தமிழ்ர்களும் கணிசமான அளவு வசிக்கின்றார்கள். மலேசியாவை 1973 ஆம் ஆண்டு தொடக்கம் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கட்சியின் தலைமையில் அமைந்த கூட்டணியே ஆட்சி செய்து வருகின்றது. இந்தக் கட்சியில் சாமி வேலு தலைமை தாங்கும் மலேசிய இந்தியர் காங்கிரசும் ஒரு கூட்டணிக் கட்சி. பாரிசான் நேசனல் மலேசிய நாட்டின் பெரும்பான்மையினரான மலாய மக்களுக்கு ஒரு பக்க சார்பாக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த வேற்றுமை 2007 ஆம் ஆண்டு முற்றி இந்தியர்கள் இந்து உரிமை நடவடிக்கைக் குழு (Hindu Rights Action Force) தலைமையில் எதிர்ப்புப் போராட்டம் செய்தார்கள். இந்தப் போராட்டம் இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவது, தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவது, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்கப்படாமை போன்ற உரிமை மறுப்பு செயற்பாடுகளை எதிர்த்து அமைந்தது. கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியத் தேர்தலில் பெரும்பான்மை மலேசியத் தமிழர்கள் பாரிசான் நேசனலையும் அதன் கூட்டணிக் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசையும் புறக்கணித்து வாக்களித்துள்ளார்கள். நடந்த தேர்தலில் சாமி வேலு உட்பட பெரும்பாலான மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தோல்வியடைந்தார்கள். மாற்றாக எதிக்கட்சிகளான ஜனநாயக நடவடிக்கை கட்சி (Democratic Action Party) போன்ற கட்சிகளில் போட்டியிட்ட எதிர்ப்போராட்ட ஆதரவார்கள் பலர் வெற்றியடைந்தார்கள். இந்து உரிமை நடவடிக்கைக் குழு தலைவரும் வெற்றி அடைந்தார். ஜனநாயக நடவடிக்கை கட்சி சார்பில் போட்டியிட்ட அரசறிவியல் பேராசிரியரான பி. ராமசாமியும் வெற்றி பெற்றார். இவர் பினாங் மாநிலத்தின் இணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலமைப்பு நிர்வாகக் குழுவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழப்பிரச்சினை காரணமாகவும், பொருளாதார நோக்கங்களுக்காவும் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியமர்ந்தனர். மேற்குலகச் சிறுபான்மையினங்களில் ஒப்பீட்டளவில் தமிழர்கள் அரசியல் அக்கறை கொண்டவர்கள். அதனால், தமிழர்கள் மேற்குநாடுகளின் அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள். முதலில் உள்ளூராட்சி அரசியலில் ஈட்பட்டு, தமது அனுபவத்தையும், தொடர்புகளையும், நிலையையும் மேம்படுத்தி மேல்கட்ட அரசியல் தளங்களுக்குச் செல்வார்கள். இந்தச் செயற்பாட்டில் தமிழர்கள் மேல்நாடுகளின் மக்களாட்சி விழுமியங்களை உள்வாங்கிச் செயற்படுகிறார்கள். பிரான்சின் தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 பாண்டிச்சேரித் தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பெருபான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒருங்கிணைந்து ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. . புவி மணிநேரம் புவி மணி ("Earth Hour") என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். இந்த நிகழ்ச்சி தனியர்களையும் குமுகங்களையும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச்சு இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும். இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதர்குப் பிறகு இது 7,000 நகரங்களிலும் நகரியங்களிலும் 187 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் கடபிடித்த பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்தது. அடிக்கடி, புனித சனி மார்ச்சில் கடை வாரத்தில் வரும் ஆண்டுகளில், புவி மணிநேரக் கடைபிடிப்பு வழக்கமான நாளினும் ஒருவாரம் முன்னகர்த்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது. அறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது. பேரள்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது. புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. சிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது. இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008. உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன. சோகுபி பன்னாட்டு இணைய அளக்கையின்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் (16% அமெரிக்க மக்கள்) 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுச்சூழல் அக்கறையும் அதாவது காலநிலை, மாசுறல் பற்றிய விழிப்புணர்வும் 4% அளவுக்கு (முன் 73%;பின் 77%) மிகுந்துள்ளது என அதே அளக்கை கூறுகிறது. சபாத்து சடங்குடன் மோதாமல் இருக்க டெல் அவீவு (Tel Aviv) புவி மணிநேர நிகழ்ச்சியை 2008 மார்ச்சு 27 நாளுக்கு நகர்த்தித் திட்டமிட்டது. டப்ளின் தன் புவி மணிநேர நிகழ்ச்சியை இரவு 9 இல் இருந்து இரவு10 மணிக்கு தனது புவி வடக்கிருப்பிடங் காரணமாக நகர்த்தல். பாங்காக்கில் உள்ள தாய்லாந்து நாட்டு உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின்படி, 73.34 மெவா மின்பயன்பாடு ஒருமணி நேரத்தில் குறைந்துள்ளது. இது 41.6 டன் கரிம ஈராக்சைடுக்குச் சமமாகும். "பாங்காக் அஞ்சல்" 165 மெவாமணி அளவுக்கு மின்பயன்பாடு குறைந்ததாகவும் அது 102 டன் கரிம ஈராக்சைடுக்குச் சம மாகும் எனவும் வேறு மதிப்பீட்டைக் கூறுகிறது. இது முந்தைய ஆண்டு மே மாத பாங்காக் நகர பரப்புரையின் போதைய மதிப்பை விடக் கணிசமான அளவு குறைவானதாகும். அப்போது 530 மெவாமணி மின்பயன்பாடும் 143 டன் அளவு கரிம ஈராக்சைடும் சேமிக்கப்பட்டது. பிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது. மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது. அயர்லாந்து புவி மணிநேர மாலையில் 1.5% அளவுக்குக் குறைவாக மின் ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது. 6:30 இல் இருந்து 9:30 வரையிலான மூன்று மணி நேரத்தில் 50 மெவா அளவு மின் நுகர்வு குறைந்துள்ளது. அதாவது 150 மெவாமணியளவு மின் ஆற்றலைச் சேமித்துள்லது. இது 60 டன் கரிம ஈராக்சைடுக்கு சமமாகும். துபாயில் பெருநகரங்கள் அனைத்தும் வெளிவிளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டன. சிலபகுத்களின் தெரு விளக்குகளும் கூட 50% அளவுக்கு மங்கலாக்கப்பட்டன. இதனால் 100 மெவாமணி மின்சாரம் சேமிக்கப்பட்டதாக மிந்துறையினர் கூறுகின்றனர். இதுபுவி மணிநேரத்துக்கு முன்பிருந்த நுகர்வினும் 2.4% அளவு குறைவனதாகும். மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார். ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார். கனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது. கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22°F) அளவு குறைந்துள்ளது. என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. புவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை "புனித சனி" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை: மொரிசியசு மொரிசியசு அல்லது மொரிசியஸ் ("Mauritius") ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன. நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது. மொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது. மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை. 1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது. ஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது. 1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது. மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொரிசியஸ் அதன் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடனே உள்ளது. அதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ஒன்றை அர்ப்பணித்தார். பிரசெல்சு பிரசெல்சு (, ; , ), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி (, ), என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும். இதுவே பெல்ஜியத்தின் பாரிய நகரப் பகுதியாகும். இது பெல்ஜியத்தின் நீதித்துறைத் தலைநகரான பிரசெல்சு நகர் உட்பட 19 மாநகர சபைகளைக் கொண்டுள்ளது. பிரசெல்சு நகரில் "பெல்ஜியத்தின் பிரஞ்சுச் சமூகம்" மற்றும் "பிளெமிய சமூகம்" ஆகியன காணப்படுகின்றன. பிரசெல்சு சார்லமேனின் வழித்தோன்றல் ஒருவரால் 10ம் நூற்றாண்டில் ஒரு கோட்டை நகராக உருவாக்கப்பட்டு பின் ஒரு நகராக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நகரின் சனத்தொகை 1.1 மில்லியனும் இதன் பெருநகர்ப்பகுதிச் சனத்தொகை 1.8 மில்லியனும் ஆகும். இது பெல்ஜியத்திலேயே பெரிய சனத்தொகையாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவு தொடக்கம் பிரசெல்சு சர்வதேச அரசியலின் முக்கிய மையமாகத் திகழ்கிறது. இது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் மற்றும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமையத்தின் தலைமையகம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் ஒரு பன்மொழிச் சமூகத்தை உருவாக்கியுள்ளதுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசியல் வல்லுனர்கள் போன்றோரின் இருப்பிடமாகவும் விளங்குகிறது. வரலாற்று ரீதியாக டச்சு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரசெல்சு, 1830ல் பெல்ஜியத்தின் விடுதலையைத் தொடர்ந்து பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயமாக மாறியுள்ளது. இன்று இந்நகர் அதிகார பூர்வமாக இருமொழி நகராகும். இங்கு காணப்படும் போக்குவரத்து அடையாளங்கள், வீதிகளின் பெயர்கள் மற்றும் பல்வேறு விளம்பர மற்றும் சேவைப் பதாகைகள் இவ்விரு மொழிகளையும் கொண்டுள்ளன. இங்கு மொழி தொடர்பான முறுகல்கள் காணப்படுவதோடு, பிரசெல்சைச் சுற்றியுள்ள நகரங்களில் காணப்படும் மொழி தொடர்பான சட்டங்கள் பெல்ஜியத்தில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. பிரசெல்சின் பெயர் தோன்றிய விதம் தொடர்பான பொதுவான கருத்தின் படி, "புரோக்செல்" என்ற பண்டைய டச்சுச் சொல்லே இதன் மூலமாகும். இதன் கருத்து சதுப்புநிலம் ("புரோக்") மற்றும் வீடு ("செல்") அல்லது சதுப்பு நிலத்திலுள்ள வீடு என்பதாகும். பிரசெல்சின் ஆரம்ப அமைவிடம் சீன் நதியிலுள்ள ஒரு தீவின் மீது அமைந்துள்ளது. இது 580 அளவில் உருவாக்கப்பட்டது. கம்பிராயின் ஆயரான புனித வின்டிசியானசு என்பவரே "புரோசெல்லா" எனப்பட்ட இடத்தைப் பற்றிய முதல் குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது காலமான 695இல் இது ஒரு சிறு கிராமமாகவே இருந்துள்ளது. எனினும் அதிகாரபூர்வமான பிரசெல்சின் உருவாக்கம் 979ம் ஆண்டளவிலேயே இடம்பெற்றது. இவ்வாண்டில் கீழ் லோதரிஞ்சியாவின் சார்ள்சு என்பவன், புனித குடுலா என்பவரின் தந்த தாதுவை மூர்செல் எனுமிடத்திலிருந்து புனித கௌகரிகசின் தேவாலயத்துக்கு மாற்றினான். மேலும் இவன் அத்தீவிலேயே முதலாவது நிரந்தரமான கோட்டையைக் கட்டினான். சார்ள்சின் மகளை மணந்துகொண்டதன் மூலம் லூவானின் முதலாம் லம்பேட் என்பவன் 1000ம் ஆண்டளவில் பிரசெல்சைப் பெற்றுக்கொண்டான். புரூக்சு, கென்ட் மற்றும் கொலோன் ஆகிவற்றுக்கிடையிலான வணிகப்பாதையில் காணப்பட்ட சீன் நதியின் கரையில் அமைந்திருந்த காரணத்தால் பிரசெல்சு ஓரளவு விரைவான முன்னேற்றம் கண்டது. இது ஒரு வாணிக மையமாக வளர்ந்ததுடன் அதன் எல்லை மேல் நகரம் வரை விரிவடைந்தது. இதன் சனத்தொகை 30,000ஐ எட்டியபோது பிரசெல்சைச் சூழவுள்ள சதுப்பு நிலங்கள் நிரப்பப்பட்டு மேலதிக விரிவாக்கங்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் லூவானின் ஆட்சியாளர்கள், பிராபன்டின் ஆட்சியாளர்களாக மாறினர். 13ம் நூற்றாண்டில் இந்நகரச் சூழக் கோட்டை மதில்கள் எழுப்பப்பட்டன. 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நகர மதில்களின் கட்டுமானத்தின் பின் பிரசெல்சு குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. நகரை விரிவாக்குமுகமாக 1356க்கும் 1383க்கும் இடையில் இரண்டாம் கட்ட மதில்கள் எழுப்பப்பட்டன. இவற்றின் எச்சங்களை இன்றும் காணலாம். 1516ல் ஐந்தாம் சார்ள்சு பிரசெல்சின் புனித மிக்கேல் மற்றும் புனித குடுலா தேவாலயத்தில், தன்னை எசுப்பானியாவின் மன்னனாக அறிவித்துக் கொண்டான். இவனது பாட்டனான முதலாம் மாக்சிமில்லியனின் மரணத்தின் பின், சார்ள்சு ஹப்ஸ்பேர்க் பேரரசு மற்றும் உரோமப் பேரரசின் மன்னனானான். 1555ல் கூட்டன்பேர்க்கிலுள்ள மாளிகைத் தொகுதியில் ஐந்தாம் சார்ள்சு முடி துறந்தான். இம் மாளிகை ஐரோப்பா முழுவதிலும் பிரசித்தி பெற்றிருந்ததோடு, பிராபன்ட் அரசர்களின் தலைமையிடமாக ஆன பின் பாரியளவில் விரிவாக்கப்பட்டது. எனினும் 1731ல் இடம்பெற்ற தீவிபத்தின் பின் இது அழிவடைந்தது. 1695ல், பிரான்சின் பதினான்காம் லூயி தனது படைகளை அனுப்பி பீரங்கிகள் மூலம் பிரசெல்சைத் தாக்கினான். இதனால் ஏற்பட்ட தீவிபத்துடன் பிரசெல்சு பாரிய அழிவைச் சந்தித்தது. இந்நகரின் மூன்றிலொரு பகுதிக் கட்டடங்கள், அதாவது கிட்டத்தட்ட 4000 கட்டடங்களுடன் கிரான்ட் பிளேசும் அழிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியை மீளமைக்கும் நடவடிக்கைகள் அடுத்தடுத்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இது அந்நகரின் தோற்றத்தையே மாற்றியமைத்தது. 1746ல் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின்போது இந் நகரம் பிரான்சினால் கைப்பற்றப்பட்டது. மூன்றாண்டுகளின் பின் இது ஆஸ்திரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1795 வரை பிரசெல்சு ஆஸ்திரியாவுடன் இணைந்திருந்தது. தென் நெதர்லாந்துப் பகுதி பிரான்சினால் கைப்பற்றப்படும்வரை இந்நிலை நீடித்தது. டைல் பகுதியின் தலைநகராக பிரசெல்சு நியமிக்கப்பட்டது. 1815 வரை இது பிரான்சின் பகுதியாக இருந்தது. பிரசெல்சு அவ்வாண்டில் நெதர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்தது. டைல் பகுதி, பிரசெல்சைத் தலைநகராகக் கொண்டு தென் பிராபன்ட் மாகாணமானது. 1830ல், பிரசெல்சிலும் பெல்ஜியப் புரட்சி பரவியது. புதிய நாட்டின் தலைநகரமாகவும் புதிய அரசாங்கத்தின் தலைமையகமாகவும் பிரசெல்சு செயல்பட்டது. தென் பிராபன்ட் பகுதி, பிராபன்ட் எனப் பெயர் மாற்றப்பட்டு பிரசெல்சு அதன் தலைநகரானது. சூலை21, 1831ல் முதலாம் லெப்பால்ட் பெல்ஜியத்தின் முதல் மன்னனானான். இவன் நகர மதிகளை அழித்ததுடன், புதிய கட்டடங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டான். இந் நகரம் பல மாற்றங்களுக்கு உள்ளானது. சீன் நதி நகரின் பாரிய சுகாதாரச் சீர்கேட்டுக்கு வழிகோலியமையால், 1867இலிருந்து 1871 வரை நகர்ப்பகுதிக்குள் காணப்பட்ட அதன் பகுதி முழுவதும் முழுமையாக மூடப்பட்டது. இதன் காரணமாக நகரம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு நவீன கட்டடங்களும் வீதியமைப்புக்களும் கட்டப்பட்டன. இக்காலப்பகுதியில் பிரசெல்சு பெரும்பாலும் ஒரு டச்சு மொழிபேசும் நகரமாகக் காணப்பட்டது. இது 1921ல் பிரெஞ்சு தனி ஆட்சிமொழியாக அறிவிக்கப்படும் வரை தொடர்ந்தது. எவ்வாறாயினும் 1921ல், பெல்ஜியம் மூன்று மொழிப் பிரதேசங்களாகப் பிளவுற்றது. அவை டச்சு மொழி பேசும் பிலாந்தர்சு, பிரெஞ்சு மொழி பேசும் வல்லோனியா மற்றும் இரு மொழி பேசும் பிரசெல்சு என்பனவாகும். 20ம் நூற்றாண்டில், இந்நகரம் பல்வேறு மாநாடுகள் மற்றும் சந்தைகளை நடத்தியுள்ளது. அவற்றுள் 1927ல் நடைபெற்ற சோல்வே மாநாடு மற்றும் 1935 பிரசெல்சு சர்வதேசக் கண்காட்சி மற்றும் எக்ஸ்போ '58 ஆகிய வர்த்தகக் கண்காட்சிகள் என்பவை குறிப்பிடத்தக்கவை. முதலாம் உலகப் போரில் பிரசெல்சு செருமனியால் கைப்பற்றப்பட்டாலும், செருமானியப் படைகள் இதற்குச் சேதம் விளைவிக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் மீண்டும் இது செருமானியர் வசப்பட்டு பாரிய அழிவுகளைச் சந்தித்தது. பின்னர் இது பிரித்தானியத் தாங்கிப் படையினரால் விடுவிக்கப்பட்டது. போரின்பின் பிரசெல்சு நவீனமயப்படுத்தப்பட்டது. புதிய புகையிரதப் பாதைகளும் உருவாக்கப்பட்டன. 1960களின் தொடக்கத்திலிருந்து பிரசெல்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரானதுடன், புதிய கட்டடங்களும் கட்டப்பட்டன. எனினும் எதிர்பாராத வகையில் இதன் பண்டைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. 1988ன் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பின் சூன் 18, 1989 அன்று பிரசெல்சு தலைநகரப் பகுதி உருவாக்கப்பட்டது. இது இரு மொழிப் பயன்பாட்டு நிலையைப் பெற்றுள்ளதுடன் பிலாந்தர் மற்றும் வல்லோனியா ஆகியவற்றுடன் கூடிய பெல்ஜியத்தின் கூட்டமைப்புப் பிரதேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பிரசெல்சு தலைநகரப் பகுதியின் 19 நகர சபைகளும் தத்தம் எல்லைக்குட்பட்ட கடமைகளை நிறைவேற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இவற்றுள் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாடசாலைகள் மற்றும் வீதிகளைப் பராமரித்தல் என்பன அடங்கும். நகரசபையின் நிர்வாகம் நகர முதல்வர், சபை மற்றும் நிறைவேற்றுக் குழு ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. 1831ல், பெல்ஜியம் பிரசெல்சின் 19 பகுதிகள் அடங்கலாக 2739 நகர சபைகளாகப் பிரிக்கப்பட்டது. 1964,1970 மற்றும் 1975களில் பெல்ஜியத்தின் சில நகர சபைகள் ஒன்றிணைக்கப்பட்டபோதும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் காணப்பட்ட நகரசபைகள் ஏனையவற்றுடன் இணைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், பிரசெல்சு தலைநகர்ப் பகுதிக்கு வெளியிலுள்ள சில நகரசபைகள் பிரசெல்சு நகருடன் இணைக்கப்பட்டன. இவற்றுள் 1921ல் இணைக்கப்பட்ட லேக்கன், ஆரென் மற்றும் நெடெர் ஓவர் ஈம்பீக் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நகரசபைகளில் பெரியதும் சனத்தொகை மிகுந்ததுமான பிரசெல்சு நகர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 145,917 பேர் இங்கு வசிக்கின்றனர். சனத்தொகை குறைந்த நகரசபை 18,541 பேரைக் கொண்ட கோகெல்பேர்க் ஆகும். பரப்பளவில் சிறியது பரப்பளவைக் கொண்ட செயின்ட் ஜோசே டென் நூட் ஆகும்.எனினும், இதுவே உயர் சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. இதன் சனத்தொகை அடர்த்தி சதுரக் கிலோமீற்றருக்கு 20,822 பேர் ஆகும். கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் பிரசெல்சு சமுத்திரக் காலநிலையைக் கொண்டுள்ளது. பிரசெல்சு கடற்கரைக்கு அண்மையிலுள்ளதால் அத்திலாந்திக்கு பெருங்கடலிலிருந்து வீசும் கடற்காற்று இதன் காலநிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது. அருகிலுள்ள ஈரநிலங்களும் கடல்சார் இடைவெப்பக் காலநிலையைக் கொண்டுள்ளன. சராசரியாக (கடந்த 100 வருடகால அளவீடுகளின்படி) பிரசெல்சு தலைநகரப் பகுதியில் வருடத்துக்கு அண்ணளவாக 200 மழை நாட்கள் காணப்படுகின்றன. பனிவீழ்ச்சி மிகவும் அரிதாக, வருடத்துக்கு பொதுவாக ஒருமுறை அல்லது இருமுறை நிகழ்கிறது. இங்கு ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம் வர்ஜீனியா டெக் (Virginia Tech) என்று பொதுவாக அழைக்கப்படும் வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம் ("Virginia Polytechnic Institute and State University"), ஐக்கிய அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பிளாக்ஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ளது. 2007ல் ஏப்ரல் 16ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் சோ சுங்-ஹுயி, ஒரு தமிழர் உட்பட 32 நபர்களைச் சுட்டுக்கொன்று பின் தானும் தற்கொலை செய்து கொண்டார். தமிழர் பாலியல் வழக்கங்கள் பாலியல் வாழ்வின் ஒரு இயல்பான செயற்பாடு. ஒவ்வொரு சமூகத்துக்குமிடையே பாலியல் நோக்கிய அணுகுமுறைகள் அல்லது வழக்கங்கள் சற்று வேறுபடும். இந்தக் கட்டுரை தமிழ்ச் சூழலில் காணப்படும் பாலியல் வழக்கங்களைப் பற்றியதாகும். பாலியல் தொடர்பான திறந்த கதையாடல்கள் தமிழ்ச் சூழலில் இன்னும் ஆழமாக நடைபெறவில்லை. மேற்கத்தைய பாலியல் புரட்சி போன்று தமிழ்ச் சூழலில் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் இன்றைய உலகமய ஊடகங்களும், பழந்தமிழர் பாலியல் முறைகள் பற்றிய அலசலும் இன்று பாலியல் தொடர்பான ஒரு கதையாடலைத் தமிழர் மத்தியில் தோன்றிவித்துள்ளது. கோயிலில் காம நிலைகளில் கடவுள் சிற்பங்கள் வடிமைக்கப்படுள்ளன. தமிழிலக்கியத்தில் காதல், களவு, காமம் ஆகியவை சிறப்பாக கூறப்பட்டுள்ளன. 1800 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணியும் வழக்கம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டது. இப்படியிருக்க பாலியல் குறித்து ஒரு தணிக்கை தற்காலத் தமிழ்ச் சூழலில் காணப்படுகிறது. தமிழர் வரலாற்றில் பெண்ணுக்கு கண்டிப்பான கற்பு, குடும்பம் போன்ற ஒழுக்க விதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆண்களுக்கு அப்படி இருக்கவில்லை. எனினும் "பாலியலை இயற்கையான தூண்டுதலாக தமிழர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பது எட்டுத் தொகையையும், பத்துப்பாட்டையும் வாசிக்கும்போது புரிகிறது. அதனை தீயது, பாவம், அசிங்கம் என்று ஒதுக்கும் போக்கு அன்று இல்லை. ஆனால், அப்படியான ஒரு பார்வை பின்னாளில் வருவதற்கான அடையாளங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை." சங்க காலம் தொடர்ந்து சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டில் நிலைபெற்றன. இவை ஒரு ஆணின் ஆத்ம விடுதலைக்கு பெண்ணை ஒரு தடைக்கல்லாக, தூய்மையற்றவளாக கருதின. அதன் பின் வந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலையான அரசு இல்லாததால் "பெண்கொள்ளை என்பது ஓர் அன்றாட நிகழ்வாக நடந்த அக்காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்தலும், குழந்தை மணமும் உருவானது. பெண்ணுக்கான இன்றைய நடத்தைக் கட்டுப்பாடுகள் அவ்வாறு உருவானவை." மேலும் ஆங்கிலேயரின் வருகை பின்பு அவர்களின் "விக்டோரியன் மொராலிட்டி" இங்கு வந்தது. அது தமிழரிடையே இருந்த நிர்வாணம், காமம் போன்றவை மனித இயல்புகளாக கருதக்கூடிய பார்வையை ஆபாசம் என்று மாற்ற உந்தியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியல் ஒழுக்கம் தமிழ் சினிமா, இந்து சமயம் போன்ற சமூக நிறுவனங்களால் முன்னிறுத்தப்படுகின்றது. விதவை மறுமணம் போன்ற முற்போக்கான போக்குகளும், மணவிலக்கு செய்து மறுமணம் செய்வோரும், பல காதலர்களைக் கொள்ளும் வழக்கமும் ஏற்பட்டு வருவதாலும் நடைமுறையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியல் ஒழுக்கம் பலருக்கு பொருந்துவதில்லை. திருமணத்துக்கு முந்திய அல்லது வெளியேயான உடலுறவு தமிழ்ச் சமூகத்தில் கருத்தியல் நோக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நடைமுறையில் அந்த நடத்தைகள் மறைமுகமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் ஓரினச்சேர்க்கை, இருபால்சேர்க்கை போன்ற பாலுறவுகளையும், திருநங்கைகளையும் முழுமையாக ஏற்கவில்லை, அங்கீகரிக்கவில்லை. மேற்குநாட்டு சமூகங்களில் இடம் பெறும் கதையாடல்களும் தமிழ்ச் சூழலில் இடம் பெறவில்லை. பொதுவாக இவை தமிழ் பண்பாட்டுக்கு புறம்பானவை அல்லது ஏற்கத்தகாதவை என்ற கருத்தே இருக்கின்றது. இருப்பினும் ஆவணப் பத்திரத்தில் மாறிய பாலினம் (Third Gender) என்ற தெரிவை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் முடிவு ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் "இப்படிக்கு ரோஸ்" என்ற திருநங்கை தொகுப்பாளராக விழங்கும் நிகழ்ச்சியும் ஒரு முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. பாலியல் தொடர்பாக தமிழர் கருத்துகள் பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளனவா என்று அறிய முடியவில்லை. பொதுவாக தமிழ்ச் சமூகம் 'விக்டோரியன் மொராலிட்டி’ அல்லது conservative மன்ப்பான்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஒருவருக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் "உயர்ந்த விழுமியாக" கருதப்படுகிறது. இருப்பினும் பாலியல் தொடர்பான பார்வை தற்போது மாறிவருகிறது. அவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே: இலங்கையில் இந்து சமயம் இலங்கையின் தற்போதைய மக்கள்தொகையில் 12.6 சதவீதத்தினர் இந்து சமயத்தவர்களாக இருகின்றனர். இந்தியா, பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த சிறிய அளவினரான மலையாள, தெலுங்கு, சிந்தி மக்களை தவிர்த்து ஏனையவர்கள் தமிழர்களாக இருகின்றார்கள். 1915 ஆண்டு இலங்கை மக்கள்தொகைக் கணிப்பீட்டின் படி இந்துக்கள் 25% காணப்பட்டப் போதிலும் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைந்தப் பின்னர், இந்திய வம்சாவழித் தமிழர்களின் நாடுகடத்தல், உள்நாட்டுப் போர் காரணமாக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறல், கிறித்தவம், இசுலாம் சமயங்களுக்கு மதம் மாறல் போன்றக் காரணங்களால் இந்து சமயத்தவர்களின் சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு, மத்திய மாகாணங்களில் இந்துசமயம் முக்கிய சமயமாக பின்பற்றப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இலங்கை மக்கள்தொகை கணிப்பீட்டின்படி 2,554,606 பேர் இந்துசமயிகளாக உள்ளனர். லிட்டர் லிட்டர் அல்லது லீற்றர் ("litre" அல்லது "liter") என்பது கனவளவு அல்லது கொள்ளளவின் அலகாகும். இது "லி", L அல்லது l என்று குறிக்கப்படும். இது மெட்ரிக் முறை அலகாகும். லிட்டர் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. லிட்டர் ஒரு எஸ்.ஐ. (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் அனைத்துலக முறை அலகுகள் (SI) மீ³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும். முதன் முதலில் 1795-இல் பிரான்ஸ் நாட்டிலேயே லிட்டர் எனும் அளவு முறை நடைமுறக்கு கொண்டுவரப்பட்டது.ஒரு லிட்டர் என்றால் ஒரு கிலோ எடைக்கு சமமான நீர்ம பொருளாகும்.அதன்பின் 1879-இல் சிஐபிமஎம் லிட்டர் அளவுக்கான கோட்பாட்டையும்,l என்ற அலகையும் வெளியிட்டது. 1901 ஆம் ஆண்டில் நடந்த, மூன்றாவது CGPM மாநாட்டில், 1 லிட்டர் நீரின் அளவுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட்டது.நதன்படி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் , 3.98 ° C வெப்பநிலையில் இருக்கும் 1 கிலோ தூய நீரே லிட்டர் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 1.000 028 dm3 க்கு சமமான நீர்மப் பொருள் லிட்டர் எனச் செய்தனர். இதன் பின் 1964-இல், 12 CGPM மாநாட்டில், லிட்டர் மீண்டும் மாற்றப்பட்டது ஒரு கன டெசிமீட்டர் ஒரு லிட்டர் என்றானது. 1 லி ≡ 0.001 மீ³ அல்லது 1 டெமீ³ (dm³) அ+து: 1000 லி = 1 மீ மில்லிலிட்டர் என்பது ஒரு கன சென்ட்டிமீட்டர் அல்லது ஒரு லீட்டர் கொள்ளளவில் ஈடாகப் பங்கிட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். இவ்வலகு முக்கியமாக மருத்துவத்திலும் சமையல் அலகுகளிலும் பாவிக்கப்படுகிறது. இதன் குறியீடு "மிலி" (mL). முதன் முதலில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது.ஏனெனில் நபரின் பெயரை முன்னிட்டு அலகுகள் வந்தால் மட்டுமே தலைப்பெழுத்துகளாக வரும் நடைமுறை இருந்தது.அமெரிக்காவில் உள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் L- லிட்டர்ன் அலகாக நிர்நயிக்க பரிந்துறை செய்தது. இம்முறை கனாடா , ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் நடைமுறையில் இருந்தது.ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது. மிகை திருத்தம் மிகை திருத்தம் ("Hypercorrection") அல்லது மீதிருத்தம் என்பது பொதுவாக மீறப்படும் இலக்கண நெறிகளைத் திருத்தும் எண்ணத்தில் அந்நெறிகள் பொருந்தா (பரிந்துரைக்காத) இடங்களிலும் உரைகளை மாற்றியமைக்கும் மொழியியல் நிகழ்வுகளைக் குறிக்கும். இதன் விளைவாக பிழை இல்லாத இடங்களிலும் திருத்தம் என்ற பெயரில் பிழைகள் புகுத்தப்படும் வாய்ப்பு உண்டு. இது பின்வரும் காரணங்கள் உட்பட பல வழிகளில் நிகழ்வதுண்டு. பன்னெடுங்காலம் முன்பு எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அப்போதைய பேச்சு வழக்கு பற்றிய பதிவுகள் உள்ளன. இவற்றில் இலக்கணம் மீறிய பயன்பாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. அவ்வாறான ஒரு பதிவைக் கீழே காணலாம்: பலரை அறிவதற்கான வினாச்சொல்லாகிய "யாவர்" என்ற பெயரிலுள்ள வகர உயிர்மெய் கெட்டு 'யார்' என வருவதும், அஃறிணையைச் சுட்டும் ஒன்றன்பால் வினாச்சொல்லாகிய 'யாது' என்பதன் இடையில் "வகரம்" தோன்றி 'யாவது' என்று வருதலும் வழக்கில் திரிந்து வருகின்ற முறையாகும். இத்திரிபு ஒரு நெறியை வேரோரிடத்தில் செலுத்துவதால் விளைவதால் ஒருவேளை மிகைபடத் திருத்தம் எனலாம். "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தில் டி. எஸ். பாலையா அசோகன் (நடிகர் இரவிச்சந்திரன்) தனது மகளைக் காதலிப்பதை விரும்பாமல் அவர்மேல் வெறுப்புற்றிருப்பார். அவரை தனது வீட்டிலிருந்து வெளியேற்றியும் விடுவார். இந்நிலையில் ஒரு காட்சியில் நடிகர் முத்துராமன் செல்வந்தன் போல வேடம் பூண்டு அசோகனின் தந்தை எனச்சொல்லி பாலையாவிடம் "என் மகன் எங்கே?" என்று கேட்பார். அக்காட்சியில் அசோகன் செல்வந்தன் என அறிந்து அதிர்ச்சியுறும் பாலையா பதற்றத்தில் ""அசோகர் உங்க(ள்) மகரா?"" என்பார். உயர்திணையில் மதிப்பு தருவதற்காகச் சேர்க்கப்படும் "அர்" ஒட்டை பயன்பாடு மீறி "மகன்" என்ற சொல்லுடனும் இணைத்து மிகைபடத் திருத்தம் செய்வதுபோல் பகடியாக அக்காட்சி அமைந்திருந்தது. 'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை' என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும். பணிவு + ஆமை = பணியாமை கனிவு + ஆமை = கனியாமை செய் + ஆமை = செய்யாமை அதே நெறியில் பார்த்தால் அருகு + ஆமை = அருகாமை என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால் online Tamil lexican-இல் கூட proximity என்றே அருகாமைக்குப் பொருள் சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா? அருகாமை என்பது எதிர்மறை பொருள் அல்ல மிக அருகில் என்றே பொருள் அருகுதல் என்றால் அருகில் வருவது, அதாவது நெருங்கி வருவது என்று பொருள். அருகாமை என்றால் நெருங்க முடியாது அளவு ஏற்கனவே நெருங்கு விட்டதாக பொருள் எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை. கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத் தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்- சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு. இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும். 'அண்மையிலுள்ளது; அண்மையில் நிகழும்' என இட அணிமையும் கால அணிமையும் குறிக்கப்படுகின்றன. 'பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம், அணித்தோ, சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (புறம்: 173). அருகே என்பதை இடச்சுருக்கத்தை மட்டும் சுட்டவும், 'அண்மை', 'அணிமையை' இடம், காலம் இரண்டிற்கும் பயன்படுத்தவும் பழகியுள்ளோம். எங்கள் வீடு அருகில்தான் இருக்கிறது; குடியரசு நாள் அணிமையில் வருகிறது, இல்லையா?* சரியாக இருப்பதைத் தவறுபடத் திருத்துவது மிகைப்பட்ட செயலாகும். மிகைத் திருத்தம் என்பது செந்தமிழாக எழுதுகிறோம் என நினைத்துக் கொண்டு தவறு செய்வது. அவற்றுள் முக்கியமான சிலவற்றை நினைவுகூர்வோம். நூல்களே முறையாகும். செந்தமிழில் எழுதுவதாக எண்ணிக்கொண்டு நூற்கள் எனப்பலர் எழுதி விடுகின்றனர். நமது கால்களைக் காற்கள் ஆக்கலாமா? உழுகின்ற சால்களை சாற்களாக்குவதா? வால்கள், வேல்கள் இருக்கவும் நூல்கள் நூற்களாவது 'மிக நன்றாக' எழுதுவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தவறு! அதைத் தவிர்க்க வேண்டும். பொருள்கள்தான் சரி. ஆனால் பொருட்களை, பொருட்களுக்கு என்றே எழுதக் காரணம் பொருட்சிறப்பு, பொருட்பேறு, பொருட்குறை எனப் பிற இடங்களில் விகாரப்படுவதால், இதிலும் அவ்வாறே ஒலித்துவிடும் பழக்கமாகும். பொருள்களை எடுத்து வை, அங்கு எத்தனை பொருள்கள் உள்ளன என்பதே முறையாகும். இவையெல்லாம் சரியாக உள்ளவற்றை நாமே ஒரு நினைப்பில் தவறென்று எண்ணிக்கொண்டு பிழைபட எழுதி விடுவன ஆகும். பொருத்தமாகயிருப்பதைத் திருத்தம் எனலாம். இப்படி மிகையாக - வேண்டாமல் செய்வதை (மிகைத் திருத்தம்) என்றுதானே சொல்ல வேண்டும். தமிழர் பொருளாதாரம் பொருளே வாழ்வாதாரம். பொருள் உற்பத்தி முடிவுகள், உற்பத்தி முறைகள், பரிர்ந்தளிக்கும் முறைகள், பண்டமாற்று, நுகர்வு தொடர்பான ஒழுங்கமைப்பை பொருளாதாரம் எனலாம். வரலாற்று, தற்காலத் தமிழரின் பொருளாதாரத்தை தமிழர் பொருளாதாரம் கட்டுரை விபரிக்கும். "முதன்மைக் கட்டுரை: பண்பாடும் பொருளாதாரமும்" பொருட்களின் தெரிவு, உற்பத்தி, பகிர்வு அடிப்படையில் ஒரு பண்பாடு சார் செயற்பாடுதான். உடை, உணவு, உறையுள், ஈடுபாடுகள், தொழில்கள், கலைகள், ஊடகம் என அனேகமானவை பண்பாடு தொடர்புடைய செயற்பாடுகள்தான். ஒரு தனிமனிதனுடைய பொருளாதாரம் அவனுடையா முயற்சியை மட்டுமல்லாமல், அவன் சார்ந்துள்ள சமூகத்தையும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக இன்றைய ஆபிரிக்காவின் தாழ்ந்த பொருளாதர நிலைக்கு, அவர்களது பண்பாடும் ஒரு முக்கிய காரணமாகும். 1960 களில் ஒரே பொருளாதார நிலையில் இருந்த இலங்கையும் சிங்கப்பூரும் இன்று எதிர் நிலைகளில் நிற்கின்றன. இன்று சிங்கப்பூர் உலகின் பொருளாதார வளம் மிக்க நாடுகளில் ஒன்று. இலங்கை போரினால் சீரழிந்த, கடனில் மூழ்கி இருக்கும் ஒரு நலிந்த பொருளாதாரம் கொண்ட நாடு. சிங்கப்பூரின் அணுகுமுறை தமிழை அலுவல் மொழியாக ஆக்கியது. தமிழையும் அதன் பல்லினப்பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக ஆக்கியது. இலங்கை தமிழரை இரண்டாம் நிலை குடிமக்களாக ஆக்கி, சிதைந்து போனது. தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி மிக்க மாநிலமாக இருப்பதற்கு திராவிட இயக்கம் உந்திய கொள்கைகள் முக்கிய காரணமாகும். பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை, இறை மறுப்பு, தொழில்மயமாக்கம் ஆகியவை தமிழ்நாட்டை வளமாக்கின. சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் "வர்க்க போராட்டத்தில்" ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக "உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குகெதிராக திரண்டெழுந்ததை" குறிப்பிடலாம். பண்டைய தமிழர் வணிகத்தில் சிறந்து சிறப்புற்றினர் எனினும், இந்த பொருளாதார மேன்மை பெரும்பான்மையினருக்கு கிட்டவில்லை. தற்காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆகையால் உலகப் பொருளாதார தரத்தில் பெரும்பானமையானோர் ஒரு தாழ்த்தப்பட்ட நிலையிலே உள்ளார்கள். எடுத்துக்காட்டாக முதலாம் உலக நாட்டைச் சேர்ந்த அனேக அமெரிக்கர்கள் ஒரு தானுந்தாவது வைத்திருப்பர், ஆனால் பெரும்பாலான தமிழர்களிடம் அது இல்லை. தமிழர்கள் விரைவாக நகரமயப்படுத்தப்பட்டு, தொழில்மயப்படுத்தப்பட்ட வரும் ஒரு இனம். தமிழ்நாடே இந்தியாவில் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம். வேளாண்மை, மீன்பிடித்தல், கைத்தொழில் ஆகியவையே தமிழரின் முக்கிய தொழில்களாக இருந்தன். இன்றும் கணிசமான தொகையினர் இந்த தொழில்களிலேயே ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் இன்று தொழிற்துறையின் சேவைத்துறையின் வளர்ச்சி துரிதமானது. ஆங்கில காலனித்துவ அரசால் தமிழர்கள் கூலிகளாக இலங்கை, மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். தொழில்வாய்ப்புக்களை, வசதிகளைக் கவர்ச்சி காட்டியே அழைத்துச் செல்லப்பட்டனர். பெரும்பாலானோர் தேயிலை, ரப்பர் தோட்டக் கூலிகளாக வேலை செய்தார்கள். ஈழப்போராட்டம் காரணமாக மேற்குநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் பொருளாதார அடிமட்டத்திலேயே ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் உணவகங்கள், தொழிற்சாலைகள், வியாபார அங்காடிகள், சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகளாக வேலை செய்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சிறு பொருள் சேவை வியாபார நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றார்கள். பெரும்பான்மையானவற்றை தமிழ்ச் சமூகத்துனுள்ளேயே சந்தைப்படுத்துகின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் மருத்துவம், நிதித்துறை, பொறியியல் போன்ற உயர் தொழில் திறன் வேண்டிய துறைகளில் இயங்கி வருகின்றார்கள். உணவு விலை உயர்வு, 2007 - 2008 கடந்த வருடத்தில் இருந்து (2007-2008) அரிசி, கோதுமை போன்ற அத்யாவசிய உணவுப் பொருள்களின் விலை உலகச் சந்தையில் உயர்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக சுமார் US $300 இருந்த இந்திய அரிசியின் ஏற்றுமதி விலை US 1000 ஆக சமீபத்தில் உயர்ந்து இருக்கிறது. இந்திய உணவு உற்பத்தி உலக உணவு உற்பத்தியில் இந்தியா ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் 60% மேற்பட்ட மக்கள் வேளாண்மையையே தமது தொழிலாகவும் வாழ்வியலாகவும் கொண்டவர்கள். நலிவுற்ற இந்திய சமூகத்தினர் 1970 வரை அவ்வப்பொழுது பட்டினிச்சாவை எதிர்நோக்கினர். 1970 பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக இந்தியா உணவு உற்பத்தியில் பெருமளவு தன்னிறைவு கண்ணடுள்ளது. உலகின் அடிப்படை உணவுப் பொட்களாக கருதக்கூடிய அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தியில் முறையே இரண்டாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை இந்தியா கொண்டிருக்கின்றது. குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி குர்திசுதான் தொழிலாளர் கட்சி ("குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி", குர்தி: Partiya Karkerên Kurdistan or PKK, Kurdistan Workers Part) சுதந்திரமான குர்திஸ்தானை ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்டக் கட்சி. துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து இருக்கும் தொடரான நிலப்பரப்பான குர்திஸ்தானை, சுதந்திர சோசலிசக் குடியராசாக பிரிக்க இவ்வமைப்பு முயற்சி செய்கிறது. மார்க்சிய-லெனிய சமவுடமை, காலனித்துவ எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகிய கொள்கைகளைக் கொண்ட இவ்வமைப்பு குர்து தேசியத்தால் உந்தப்பட்டது. இந்தக் கட்சி 1970களில் அப்துல்லா ஓசுலான் என்பவரால் தொடங்கப்பட்டது. ஹொங்கொங்கில் தமிழ் மொழி ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்தியும் வருகின்றனர். 2004 செப்டம்பர் மாதம் ஹொங்கொங்கில் முதன்முதலாக தமிழ் மொழி கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த தமிழ் வகுப்புகள் சிம் சா சுயி நகரில், சுங்கிங் கட்டடத்தில், 9 ஆம் மாடியில் அலாவுதீன் எனும் உணவகத்தில், சனிக்கிழமைகளில் மாலை நேர வகுப்புகளாகவே ஆரம்பம் ஆகின. ஹொங்கொங் உணவகச் சட்டத்திற்கு அமைய உணவகங்கள் மாலை மூன்று முதல் ஆறு மணிவரை, உணவகப் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் மூடப்பட வேண்டும். அதன்படி உணவகம் மூடப்படும் நேரமான (3:00 முதல் 5:00) வரையில் அலாவுதீன் எனும் உணவகத்தில் வகுப்புகளை நடாத்த, அவ்வுணகத்தின் உரிமையாளர் சம்மதித்திருந்தார். வகுப்புகள் ஆரம்பமான முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். குழந்தைகளின் வயது 5 முதல் 13 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான தமிழ் பயிற்சிகள், தமிழ் நூல்களின் அச்சு நகல் பிரதிகளாக எடுத்தே கற்பிக்கப்பட்டது. அதன்பின்னரே ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. அலாவுதீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனங்களிம் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து இறுதியிலேயே ஹொங்கொங் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்தனர். தேர்வின் முடிவாக சிங்கப்பூர் பாட நூல்களை தெரிவுசெய்தனர். குழந்தைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். எழுத்து பயிற்சிகள் மட்டும் பெறுவோர் முதல் பிரிவுக்கும், சொற்கள், சொற்றொடர்கள், பாடல்கள், கதைகள் போன்றவற்றை பயிலும் குழந்தைகள் இரண்டாம் பிரிவுக்கும், வாக்கியங்கள், உரைநடை, இலக்கணம் போன்றன மூன்றாம் பிரிவுக்கும் என வகுக்கப்பட்டது. சுங்கிங் கட்டடத்தில், உள்ள உணவகம் ஒன்றில் நடைப்பெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் "யவ் மா டேய்" எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் தங்களிடையே இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் மதப் பேதங்களின்றி "நாம் அனைவரும் ஒரே தமிழர்கள்" என ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து கற்கின்றனர். "தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு செம்மொழி" என்பதை உணர்த்தி ஆசிரியர்களும் தமிழ் கற்பிக்கின்றனர் என்பது மகிழ்வான விடயமாகும். இந்த தமிழ் மொழி கற்பிக்கும் திட்டத்தை ஹொங்கொங் இந்திய முஸ்லிம் கழகமும், தமிழ் பண்பாட்டு கழகமும் இணைந்து ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் என வகுப்பில் பொங்கலிட்டு ஆசிரியர்களும் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். திருக்குறள் வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் திருக்குறள் வாசகங்களை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர். பாடசாலையில் கற்கும் பாடங்களைத் தவிர, பகுதி நேர வகுப்புகளாக குரலிசை, நாட்டியம், பிரார்த்தனை, வாத்திய இசை போன்றவற்றையும் இக்குழந்தைகள் கற்று வருகின்றனர். இருப்பினும் 2004 செப்டம்பர் மாதத்திற்கு முன்புவரை ஹொங்கொங் தமிழர் வரலாற்றில் ஒரு முறையான தமிழ் மொழி பாடம் கற்பிக்கும் திட்டமோ வகுப்புகளோ இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இந்திய இளம் நண்பர்கள் குழுவினரின் தன்னார்வ முயற்சி முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வப் பணியாக தொடங்கிய இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் குழுமம், 2003 யூன் மாதம் விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த குழு கடற்கரை கைபந்தாட்டம், காற்பந்தாட்டம், துடுப்பாட்டம், பந்தெறிதல் மற்றும் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றுவதற்கான ஒரு குழுவாகவே உருவாக்கம் பெற்றதாகும். இந்த தமிழ் வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளை, ஒவ்வொரு ஆண்டும் விழாவாக எடுத்து சிறப்பிக்கப்படுகின்றது. அத்துடன் "ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்" சிறப்பு மலர் வெளியிட்டும் சிறப்பிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுங்கிங் கட்டடத்தில், அலாவுதீன் உணவகத்தில் நடைப்பெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் கவுலூன், யவ் சிம் மொங் மாவட்டத்தில் உள்ள யவ் மா டேய் சமூகக்கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வகுப்புகள் முன்பையும் விட கூடிய இடவசதியுடன் வகுப்புகள் தொடர்ந்தும் நடைப்பெற்று வருகின்றன. வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடைப்பெறும். ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் (Tamil Cultural Association, Hong Kong) 1967 ஆம் ஆண்டிலிருந்து ஹொங்கொங்கில் செயல்பட்டு வரும் ஒரு கழகமாகும். இக்கழகத்தினர் தங்களிடையே இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் சமய பேதங்களின்றி "நாம் அனைவரும் தமிழர்கள்" என ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து இந்த கழகத்தை நடத்தி வருகின்றனர். 1967 ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் பதிவு செய்யப்பட்டது. இந்த கழகத்தின் தோற்றம் பி.எசு.அப்துல் ரகுமான் என்பவரின் முயற்சியால் உருவானது ஆகும். 1968 ஆம் ஆண்டு முதல் பொது கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கழகத்தின் தொடக்கக் காலத்தின் தலைவராக செல்வக்கனி முஹம்மது யூனூஸ் என்பவர் பொறுப்பு வகித்தார். "இந்த ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் ஆரம்பக்கால செயல் திட்டங்கள் என்னவாக இருந்தன? இந்த கழகம் உருவாக்கியதன் நோக்கம் என்னவாக இருந்தது?" எனும் கேள்விகளுக்கு செல்வக்கனி முஹம்மது யூனூஸ் அவர்கள் கூறியதாவது, ஹொங்கொங் மக்கள் தமது பொழுது போக்கு நிகழ்வுகளாக உல்லாச விடுதிகள், குதிரை ஓட்டப் பந்தயங்கள் போன்றவற்றில் செலவிடுவார்கள். தமிழருக்கோ அவ்வகையான பொழுது போக்குகளில் நாட்டமில்லை; சினிமா பார்த்தல், நாடகங்கள் நடித்தல் போன்ற விடயங்களிலேயே ஆர்வம் உள்ளவர்கள். அக்காலக்கட்டத்தில், இன்றையக் காலக்கட்ட பொருற்களான குறுந்தட்டு, தொலைக்காட்சி போன்றன இருக்கவில்லை. எனவே ஹொங்கொங்கில் தமிழ் சினிமா பார்ப்பதற்கும் வாய்பில்லை. அதனால் அப்போது ஹொங்கொங்கில் தொழிலதிபராக இருந்த பி.எசு.அப்துல் ரகுமான் என்பரின் தலமையில் இந்தியாவில் இருந்து சினிமா படங்களை எடுப்பித்து பார்ப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது இருந்த சட்டத் திட்டங்களின் படி சினிமா சுருள்களை விமானத்தின் ஊடாக எடுப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. ஹொங்கொங் சட்டங்களின் படி திரைப்படச் சுருள்களை எடுப்பிப்பதானால், ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு அல்லது கழகம் இருத்தல் வேண்டும் எனும் நிலை இருந்தது. அதன் காரணமாக உருவாக்கப்பட்டதே "ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்" ஆகும். அத்துடன் எடுப்பிக்கும் திரைப்படச் சுருள்களை திரையரங்குகளில் ஓட்டவோ, திரையரங்குகளில் ஓட்டி இலாபம் ஈட்டுவது என்பதெல்லாம் அக்காலக் கட்டத்தில் சாத்தியமானதாக இருக்க வில்லை. திரைப்படச் சுருளை எடுப்பித்த அன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரிடத்தில், திரையிட்டு பார்த்துவிட்டு, உடனடியாக திரைப்படச் சுருள்களை திருப்பி அனுப்பிவிடுதல் தான் அப்போதைய நடைமுறையாக இருந்தது. இந்த கழகம் உருவாக்கப்பட்ட அதே ஆண்டு, தமிழகத்தில் முதல்வராக இருந்த கா. ந. அண்ணாதுரை அவர்கள் ஹொங்கொங் வந்தார். அதனை அறிந்த ஹொங்கொங் வாழ் தமிழர்கள் ஒருங்கிணைந்து வரவேற்பு வழங்கினர். அவ்வரவேற்பு நிகழ்வை "ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்" எனும் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட்டது. இது இக்கழகத்தின் இரண்டாவது செயலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆறுமுக நாவலர், இரா. நெடுஞ்செழியன் (1970), அப்துல் சமது (1976), குமரி அனந்தன் (1985), லேனா தமிழ்வாணன் (1988) போன்ற தமிழ் பிரமுகர்கள் பலர் ஹொங்கொங் வரும் போது அவர்களுக்கு வரவேற்பளித்தல், வரவேற்று கௌரவித்தல் போன்ற செயல்களையும் இந்த கழகம் செய்துவருகிறது. இவ்வாறான செயல்கள் படிப்படியாக கலை நிகழ்ச்சிகளை நடத்துதல், மேடை நாடகங்களை அரங்கேற்றுதல் என படிப்படியாக வளர்ந்து தற்போது, குறும்படங்கள், சிறுவர் விழா, விளையாட்டுப் போட்டி, சுற்றுலா என பல்வேறு செயல்திட்டங்களையும் கொண்டு இயங்குகிறது. அன்மைக் காலங்களில் இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம், சிவாஜி திரைப்படம் போன்றவற்றை எடுப்பித்து திரையரங்கில் ஒரு நாள் காட்சிகளாக திரையிடப்பட்டதும் இக்கழகத்தின் செயல் திட்டங்கள் ஆகும். இந்த கழகம் நடத்திய கலை நிகழ்ச்சிகளும் உள்ளன. அவற்றில் இசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், சொற்பொழிவு, நீயா நானா நிழச்சி போன்றனவும் உள்ளடங்கும். "சீனமொழி ஒரு அறிமுகம்" எனும் நூலும் இந்த கழகத்தால் வெளியிடப்பட்டது. அத்துடன் சமூக நலன் சார்ந்த சில செயல்களையும் இக்கழகம் முன்னெடுத்து வருகிறது. வாழ்ந்து பார்க்கலாம் வா என்ற தலைப்பில் சுகி சிவம் சொற்பொழிவாற்றினார். ஹொங்கொங் தமிழர் ஹொங்கொங் தமிழர் அல்லது ஹாங்காங் தமிழர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவிட உரிமைப் பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர். ஹொங்கொங் வாழ் தமிழர்களின் எண்ணிக்கைத் தொடர்பான சரியான புள்ளிவிபர அறிக்கைகளோ பதிவுகளோ எதுவும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்களில் பெருமான்மையானோர் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவர்களாவர். இருப்பினும் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள் அல்லர். பர்மா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இலங்கையில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். இவர்களால் உருவாக்கப்பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹொங்கொங் நாட்டிற்கும் தமிழருக்குமான உறவு எத்தனையாம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது என்பது தொடர்பான சரியான சான்றுகள் எதுவும் இல்லை. ஹொங்கொங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக இருந்தப் பொழுது; ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் தென்சீனாவிற்கு உட்புகும் முத்து ஆற்றின் முகத்துவாரமாகவும், ஆசிய நாடுகளுக்கான வணிக மையமாகவும் பிரசித்திப்பெற்று விளங்கியதால், மிகவும் பரப்பான ஒரு துறைமுகமாக பிரசித்துப்பெற்றிருந்தது. அத்துடன் பல்வேறு கடல் வழி பிரயானம் செய்வோருக்கான மையமாகவும், இடை தங்குமிடமாகவும் ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் விளங்கியது. அப்பொழுது ஹொங்கொங்கில் விமான சேவை இருக்கவில்லை. அக்காலத்தில் கடல் வழி கப்பல் பயணங்களை மேற்கோண்டோரில் சில தமிழர்களும் ஹொங்கொங் வந்து சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. குறிப்பாக பர்மாவில் வசித்தவரும் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவருமான ஏ. கே. செட்டியார் எனும் பிரசித்திப்பெற்ற தமிழர், 1938 ஆம் ஆண்டு ஜப்பான் செல்லும் தமது கப்பல் பயனத்தின் பொழுது இடைத் தங்குமிடமாக ஹொங்கொங் வந்துச் சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஏ. கே. செட்டியார் பர்மாவில் வெளியாகிய தனவணிகன் எனும் வார இதழின் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஆவார். 1940 மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை, மகாத்மா காந்தி வாழ் நாட்களிலேயெ எடுத்தவரும் ஆவார். 1954 ஆம் ஆண்டு எம். ஜே. எம். மொஹிதீன் மற்றும் அவர் சகோதரரான ஜே. எம் இஸ்மாயில் எனும் இருவர் ஹொங்கொங் வந்து சாலிமார் நிறுவனம் எனும் பெயரில் ஒரு நிறுவனத்ததை திறந்துள்ளனர். இதுவே ஹொங்கொங் வரலாற்றில் முதல் தமிழரின் நிறுவனமாகும். அத்துடன் கபே டிஸ்யூம் எனும் பெயரில் ஒரு உணவகமும் திறந்துள்ளனர். இதுவே முதல் தமிழர் உணவகமுமாகும். இவர்கள் தமிழகத்தில் கூத்தா நல்லூர் எனும் இடத்தைச் சேர்ந்தவர்கள் எனிலும், வியட்நாமில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள். அதனடிப்படையில் ஹொங்கொங் வந்த முதல் தமிழர்கள் என்று பார்த்தால், அவர்கள் வியட்நாமில் இருந்து வந்தடைந்தவர்களே ஆகும். அக்காலப்பகுதியில் வியட்நாமில் நடைப்பெற்ற எழுச்சிப் போராட்டத்தில் தமிழர் பலர் வியட்நாமில் கொல்லப்பட்டுள்ளனர். பலரது சொத்து பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது ஹொங்கொங் வந்தடைந்த தமிழர்கள் சிலர் உள்ளனர். அவ்வாறு வியட்நாமில் இருந்து வந்தவர்களில் ஒருவரே தற்போது ஹொங்கொங் தமிழர் சமூகத்தின் மூத்தப் பிரமுகர் என அழைக்கப்படும் திரு. செல்வக்கனி முஹம்மது யூனூஸ் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் பர்மா வில் இருந்து சில தமிழர்கள் ஹொங்கொங் வந்துள்ளனர். ஆனால் இதற்கு முன்பாகவே இலங்கையில் இருந்து சில தமிழ் மாணிக்கக் கற்கள் வணிகர்களான ஹாஜி. காரிம், ஹாஜி. குஹாபா போன்றோர் ஹொங்கொங் வந்தடைந்திருந்தனர். 1955 ஆம் ஆண்டு எல். எம். ஷா என்பவர்... 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கீழக்கரை எனும் பகுதியில் இருந்து பீ. எஸ். அப்துல் ரஹ்மான் என்பவரே நேரடியாக தமிழ்நாட்டில் இருந்து ஹொங்கொங் வந்தவராவர். இவர் மாணிக்கக் கற்கள் வணிக நோக்கில் ஹொங்கொங் வந்தவராவர். அதே ஆண்டு தமிழகம், காயல்பட்டினம் எனும் இடத்தில் இருந்தும் சிலர் வந்துள்ளனர். அவர்களில் முதல் வந்தடைந்தவர்களின் பெயர்கள்; விளக்கு லெப்பை காக்கா, சுலைமான், காசிம், ஆவை அமீட், சுகூர் போன்றவர்களாகும். ஹொங்கொங் தமிழர்கள் எவ்வாறு வதிவிட உரிமை பெற்றனர் என்றால், அப்பொழுதிருந்த பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளின் அரசியல் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் சற்று பார்க்கவேண்டும். பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றுவதற்கு காரணியாய் அமைந்த முதலாம் அபின் போரின் போது பிரித்தானியர் "பட்டான்" எனும் இந்தியப் படையணிகளையும், நேப்பாள் "குர்கா" படையணிகளையும் பயன்படுத்தியிருந்தனர். போரின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களில் பலர் ஹொங்கொங் நாட்டிலேயே வசிக்கலாயினர். இப்படையணிகளில் எவருமே தமிழர்களோ, தென்னிந்தியர்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னனியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஹொங்கொங் நிலப்பரப்பின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல்வேறு துறைச்சார்ந்த பணியாளர்கள் தேவைப்பட்டனர். பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் இருந்து எவரும் ஹொங்கொங் வந்து எவ்விதச் சிக்கலுமின்றி பணிப்புரியக் கூடியதாக இருந்தது. ஹொங்கொங் வந்தடைந்தவுடன் உள்நுழைவு அனுமதி கிடைத்துவிடும். அந்த உள்நுழைவு அனுமதி படிவத்தை ஹொங்கொங் குடிவரவு திணைக்களத்தில் காட்டினால் தமது தொழில் தொடர்பான ஒரு அடையாள அட்டை உடனடியாகவே கிடைத்துவிடும். இந்த அடையாள அட்டை தொழிலுக்கானதாகவோ, வதிவிட உரிமை தொடர்பானதாகவோ இருக்கவில்லை. அதாவது எந்தக்கட்டுப்பாடுகளையும் கொண்டதாக இருக்கவில்லை. இச்சட்டம் 1962 வரையிருந்தது. அடையாள அட்டை பெற்ற ஒருவர் ஹொங்கொங்கில் எவ்வளவு காலம் விரும்பினாலும் வேலை செய்யலாம். நாடு செல்வோர் மீண்டும் திரும்பிவந்து தமது அடையாள அட்டையைக் காட்டி விட்டு வேலையைத் தொடரலாம் அல்லது வேறு வேலையை தேடிக்கொள்ளலாம். இந்தியா ஒரு மனிதவளம் மிக்க நாடாகும். எனவே இந்தியாவில் இருந்து பல்வேறு துறைச்சார்ந்தோரையும் ஹொங்கொங் பிரித்தானிய அரசு எடுபித்து பணிகளில் அமர்த்தியது. அதேசமயம் ஹொங்கொங் வணிக மையமாக திகழ்ந்ததுடன், அதன் வளர்ச்சி போக்கு உலகின் பலப்பாகங்களில் இருந்தம் வணிகர்களை ஈர்த்தது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் வந்த வணிகர்கள் தமது முதலீடுகளை இட்டு பல்வேறு வணிகங்களைத் தொடங்கினர். இவ்வாறான பின்னனியில் தான் ஹொங்கொங் வந்தடைந்த முதல் தமிழரின் வருகையும், அதனைத் தொடர்ந்த வந்தடைந்தவர்களின் வருகையும் அமைகின்றது. ஹொங்கொங் வந்திருந்தவர்கள் எவரும் ஹொங்கொங்கை தமது வாழ்விட நாடாக கருதி வசிக்கவில்லை. தமது பணித்தொடர்பில் இருப்பதும் விடுமுறையின் போது தாயகம் சென்றுவிடுவதும், விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் வந்து பணியில் அமர்வதுமாகவே இருந்துள்ளனர். வணிகர்களும் அவ்வாறே இருந்துள்ளனர். தொடர்ச்சியாக குடும்பத்துடன் ஹொங்கொங்கை வாழ்விடமாகக் கொண்டு வசித்த தமிழர்கள் எவரும் இருக்கவில்லை. ஹொங்கொங்கின் திறந்தப் பொருளாதாரக் கொள்கையினால் உலகின் பல்துறைச் சார்ந்த வணிகவியலாளர்களின் முதலீடு ஹொங்கொங்கில் பெருகியது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வெவ்வேறு பணிகளிற்காகவும் ஹொங்கொங் வந்தடைந்தனர். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பா உட்பட ஆசிய நாடுகள் என பல வணிகரின் முதலீடுகளுமே ஹொங்கொங்கின் முன்னேற்றத்திற்கு காரணாமானது. அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக 1969 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் 7 ஆண்டுகள் வீசா அனுமதியுடன் வசிப்போருக்கு நிரந்த வதிவுரிமை வழங்கும் சட்டமே உருவானது. இருப்பினும் இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்றோர் ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகையினராகவே இருந்துள்ளனர். அதன்பின் அதிகமான தமிழர்கள் ஹொங்கொங் வந்தடைவதற்கு காரணியான இன்னுமொரு பின்னனி நிகழ்வும் உள்ளது. அதாவது தமிழகத் தமிழர்கள் பலர் மலேசியாவில் உணவகத் தொழிலாளர்களாகவும், சமையல் தொழிலார்களாகவும் பணிப்புரிந்துள்ளனர். அவர்கள் பணிப்புரிந்த ஒரு உணவகம் பனானா லீப் நிறுவனமாகும். இது ஒரு மலேசியரினின் நிறுவனமாகும். மலேசியாவில் பல கிளைக்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் பார்வை ஹொங்கொங் பக்கமும் திரும்பியுள்ளது. இந்நிறுவனம் ஹொங்கொங்கில் பல கிளைகளை நிறுவியது. இவற்றில் மலேசிய உணவுகள் இருந்தாலும், தென்னிந்திய உணவுகளுக்கே பிரசித்திப்பெற்றது. (குறிப்பாக தமிழர் உணவுகள்) எனவே மலேசியாவில் வீசா அற்று களவாக பணிப்புரிந்த பலருக்கு இது வாய்ப்பானது. அந்நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுருத்தலின் படி பலர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியா சென்ற அவர்கள் புதியக் கடவுச்சீட்டுகளில் ஊடாக ஹொங்கொங் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தடைந்தவர்களின் உண்மையானப் பெயர்கள் மறைக்கப்பட்டு போலிப்பெயர்களின் ஹொங்கொங் இறங்கினர். எடுத்துக்காட்டாக: குப்புசாமி - சந்திரசேகர் ஆனார், குமாரசாமி - ரகுவரன் ஆனார். இவ்வாரு வந்தடைந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர்களாகும். இவர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களும் அவ்வாறே வந்தடைந்தனர். இவர்கள் வீசா அனுமதியுடன் 7 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வசித்ததால் இவர்களுக்கும் ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை கிடைக்கப்பெற்றது. இன்றும் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமைப் பெற்று வசிக்கும் தமிழர்களில் அதிகமானோர் உணவகப் பணியாளர்களாகவே உள்ளனர். ஹொங்கொங் தமிழர்களின் வாழ்க்கை முறைமையை இரண்டு வகையாக வகைப்படுத்திக் கூறலாம். ஹொங்கொங்கில் முதல் தமிழர் அமைப்பு என்றால் அது ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஆகும். இது 1966 ஆம் ஆண்டிறுதியில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். அவ்வமைப்பு எவ்வாறான பின்னனியில் தோற்றம் பெற்றது என்றால், அக்காலப்பகுதியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழரின் பொழுதுபோக்கு அம்சத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றுள்ளது. அதாவது ஹொங்கொங் வாழ் பிற இனத்தவர்கள் குறிப்பாக சீனர்கள் தமது பொழுதுப்போக்கு அம்சமாக சூதாட்ட விடுதிகளிலும், பந்தயக் களங்களிலும், உல்லாச அரங்குகளிலுமே களிப்பவர்களாக இருந்தனர். ஆனால் தமிழர்களுக்கோ இவ்வாறான பொழுதுபோக்கு அம்சம் பொருத்தமற்றமாக இருந்துள்ளது. அவ்வாறான சூழ்நிலைப் பின்னனியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழர் கிட்டத்தட்ட 50 பேர் இந்தியாவில் இருந்து தமிழ் திரைப்படங்களை எடுப்பித்து பார்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து எடுப்பிப்பதானால் அதற்கான சில சட்டவிதிமுறைகள் இருந்துள்ளன. அதில் முதன்மையானது ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து ஹொங்கொங் எடுப்பிப்பதற்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அதற்கமைவாக அப்பொழுது இருந்தவர்கள் கலந்தாலோசித்து பதிவுசெய்யப்பட்டு உருவாக்கம் பெற்றதே ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகமாகும். இது காலப்போக்கில் தமிழர் பண்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் கொண்ட அமைப்பாக வளரத்தொடங்கியுள்ளது. இந்திய இளம் நண்பர்கள் குழு "(YIFC)" எனும் பெயரில் ஒரு குழுவாக செயல்ப்பட்டு வரும் தமிழ் இளைஞர்களால் ஹொங்கொங்கில் தமிழ்மொழிப் பாட வகுப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிப்போரைத் தவிர, ஹொங்கொங்கில் தொழில் அனுமதிப் பத்திரம் பெற்று தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-500 எண்ணிக்கையானோர் இருக்கலாம். இவர்களில் 200-300 தமிழகத் தமிழர்களும், 200-300 இலங்கைத் தமிழர்களும் இருக்கலாம். ஹொங்கொங்கில் அரசியல் புகலிடம் கோரி ஐக்கிய அகதிகளுக்கான ஆனையத்தில் விண்ணப்பம் செய்து அதன் முடிவுக்காக ஹொங்கொங்கில் வசிக்கும் தமிழர்களாக (குறிப்பாக இலங்கை வடக்கு கிழக்கு) பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 200 - 300 வரையிலானோர் உள்ளனர். (2007-2009 இவ்வெண்ணிக்கை மாறக்கூடியது) 2006/7 ஆம் ஆண்டுகளின் பின் வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஹொங்கொங் ஈழத்தமிழர்- எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. தற்போது இவ்வெண்ணிக்கை 1000 ஆயிரங்களுக்கும் மேலாகும். தமிழக தமிழர்களும் ஐக்கிய அகதிகளுக்கான அனையத்தில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துவிட்டு தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-350 வரையில் இருக்கின்றனர். ருவாண்டா ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1994ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 லட்சத்துக்கு மேல் ருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இது ருவாண்டாப் படுகொலை என அறியப்படுகிறது. நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் 2013ஆம் வருட ஆய்வறிக்கையின்படி, சர்வதேச அளவில் அரசியல் பாலினச் சமத்துவத்தில் ருவாண்டா முதலிடம் வகிக்கிறது .மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேரில் 45 பேர் பெண்கள். ருவாண்டா 26,338 சதுர கிலோமீற்றர்ர் (10,169 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், உலக நாடுகளில் பரப்பளவு அடிப்படையில் 149 ஆவது இடத்தை வகிக்கின்றது. இது புருண்டி, எயிட்டி மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கின்றது. நாடு முழுவதும் உயரமான பகுதியிலேயே அமைந்துள்ளது. இதன் மிகத்தாழ்வான இடம் கடல் மட்டத்திலிருந்து 950 மீற்றர் (3,117 அடி) உயரத்திலுள்ள "ருசிசி ஆறு (Rusizi River)" ஆகும். ருவாண்டா ஆபிரிக்காவின் மத்திய/கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ருவாண்டாவின் மேற்குத் திசையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசும், வடக்குத் திசையில் உகண்டாவும், கிழக்குத் திசையில் தான்சானியாவும், தெற்குத் திசையில் புருண்டியும் அமைந்துள்ளன. ருவாண்டா மத்திய கோட்டிற்கு சில பாகைகள் தெற்காக அமைந்துள்ளதுடன் இது நான்குதிசையிலும் நிலம் சூழ்ந்த நாடாக உள்ளது. ருவாண்டாவின் தலைநகரமான கிகாலி நகரம் நாட்டின் நடுப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. பிரதான ஆறுகளான கொங்கோ மற்றும் நைல் ஆகியவற்றின் நீரேந்து பிரதேசங்கள் ருவாண்டாவினூடாக வடக்கிலிருந்து தெற்காகச் செல்வதுடன், நாட்டின் பரப்பளவில் கிட்டத்தட்ட 80% ஆனது நைல் நதியைச் சார்ந்துள்ளதுடன், 20% ஆனது ருசிசி ஆறு மற்றும் தங்கனிக்கா ஏரி என்பவற்றினூடாக கொங்கோ நதியைச் சார்ந்துள்ளது. ருவாண்டாவின் நீளமான நதி "நயபரொங்கோ (Nyabarongo)" எனும் நதி ஆகும். நயபர்னோகோ நதி முடிவில் விக்டோரியா ஏரியிலேயே சென்று முடிகிறது. ருவாண்டா பற்பல ஏரிகளைக் கொண்டுள்ளது, வற்றுள் மிகவும் பெரிய ஏரி "கிவு ஏரி (Lake Kivu) என்பதாகும். கிவு ஏரியானது உலகிலுள்ள ஆழமான இருபது ஏரிகளுள் ஒன்றாகும். "புரேரா (Burera)", "ருஹொண்டொ (Ruhondo)", "முகசி (Muhazi)", "ருவெரு (Rweru), மற்றும் "இஹெமா (Ihema)" எனு சில ஏரிகளும் இங்குள்ள வேறு சில மிகப் பெரிய ஏரிகளாகும். ருவாண்டா நாட்டின் மத்திய பிரதேசத்தில் பற்பல மலைகள் காணப்படுகின்றன. ருவாண்டா நாட்டின் வட மேற்குத் திசையில் பற்பல சிகரங்களை "விருங்கா (Virunga)" எனும் எரிமலைத் தொடரில் காணக்கூடியதாக உள்ளது. ருவாண்டா நாட்டினுடைய அதி உயர் புள்ளி 4,507 மீற்றர்கள் ஆகும். ருவாண்டாவின் பொருளாதாரம் 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது பெருமளவிலான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தமையால் பெரிதும் தாக்கத்திற்குள்ளானது. இதன் போது உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்ததுடன், முக்கிய பணப்பயிர்கள் உதாசீனம் செய்யப்பட்டன. ருவாண்டாவின் சுற்றுலா வருமானத்தில் 70% அந்நாட்டின் மலைக் கொரில்லாக்களை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கிறது. 2012 ஆம் ஆண்டில், ருவாண்டாவின் மக்கள்தொகை 11,689,696 ஆகக் கணக்கிடப்பட்டது. இங்கு மக்களில் பெரும்பாலானோர் இளையோர்களாக உள்ளதுடன்: கணக்கெடுப்பின்படி 42.7% ஆனோர் 15 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும், 97.5% ஆனோர் 65 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் உள்ளனர். இங்கு வருடாந்தப் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40.2 பிறப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருடாந்தப் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 14.9 இறப்புகளாக உள்ளது. இங்கு ஆயுட்கால எதிர்பார்ப்பு 58,02 வருடங்களாக உள்ளது (பெண்களுக்கு 59.52 வருடங்கள் மற்றும் ஆண்களுக்கு 56.57 வருடங்கள்), இதுவே 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30 ஆவது மிகக் குறைந்ததாக உள்ளது. இந்நாட்டின் பாலின விகிதம் ஒப்பீட்டளவில் கூடியதாக இல்லை. பத்மா லட்சுமி பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருஷ்டி ("Lady Rushdie", பிறப்பு: செப்டம்பர் 1, 1970) ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும், உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார். இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.. நீர்மூழ்கிக் குண்டு நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்தோ அல்லது நீருக்கடியிலிருந்து ஏவப்பட்டு நீருக்கடியில் தானாக உந்திச் சென்று இலக்கைத் தாக்ககூடிய கணை நீர்மூழ்கிக் குண்டு (டொர்பீடோ) எனப்படுகிறது. இந்நீர்மூழ்கிக் குண்டுகள் இலக்கைத் தொட்டவுடன் அல்லது இலக்கை அண்மித்தவுடன் வெடிக்கக் கூடியன. நீர்கண்ணிகள் நீர்மூழ்கிக் குண்டை ஒத்தனவாயினும் இவை தானாக உந்திச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இவை கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள், வான்கலங்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலிருந்து ஏவப்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கெதிராகவே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட் ஒயிட்ஹெம் என்பவர் 1866-ஆம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி குண்டு. நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன டார்பிடோ, எதிரிகளின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சில நிமிடப் பயணத்தில் அழித்து விடும் வல்லமை படைத்தவை. டார்பிடோவின் பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும். நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன. நவீன நீர்மூழ்கிக் குண்டுகளை கோத்தாபய ராஜபக்ச லெப்டினன்ட் கேணல் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச ("Nandasena Gotabaya Rajapaksa", , பிறப்பு: 20 சூன் 1949) இலங்கை படைத்துறையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர் 2005 நவம்பர் முதல் 2015 சனவரி வரை இலங்கைப் பதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஈழப்போரின் போது பல நாட்டின் இடங்களிலும் பணியாற்றிய பின்னர் 1992 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இருந்து இளைப்பாறினார். இவரது சகோதரர் மகிந்த ராசபக்ச 2005 ஆம் ஆண்டில் இலங்கை அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, இவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். மகிந்த ராசபக்ச 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இவரும் பதவி இழந்தார். இவர் 2006 டிசம்பரில் விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் கருதப்படும் தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. உலகப் பறவைகளின் உசாநூல் உலகப் பறவைகளின் தரவேடு (அ) உசாநூல் (Handbook of Birds of the World ) என்பது பல தொகுதிகளாக வெளியாகி இருக்கும் உலகின் பறவைகளைப் பற்றிய சான்றுகோளாக கொள்ளத்தக்க பல்தொகுதி உசாநூல் இப்பல்லடுக்குத் தொகுதி "லின்க்ஸ் எடிசியோன்ஸ்" (Lynx Edicions ) என்னும் எசுப்பானிய (Spanish) பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றது. இப்பல்லடுக்குத் தொகுதிகளின் சிறப்பு என்னவென்றால் முதன்முதலாக உலகில் உள்ள எல்லாப் பறவைகளைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் கொண்டதாக இருப்பதாகும். இதுகாறும் 12 தொகுதிகள் வெளி வந்துள்ளன. இப்பல்லடுக்குத் தொகுதி மொத்தம் 16 தொகுதிகளாக 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு முற்று பெற இருக்கின்றது. அப்படி முற்று பெறும் நிலையில், இதுவே உயிரின வகைப்பாட்டில் விலங்குகள் என்னும் அரசில் உள்ள வகுப்பு என்னும் வகைப்பாட்டுப் பிரிவில் உள்ள முழு உயிரினங்களையும் பற்றி, விரிவாக எழுதிய, முதற்பெரும் பல்லடுக்குத் தொகுதி நூலாக இருக்கும். இவ் உசாநூலில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், முதலில் பறவை என்னும் வகுப்பில் உள்ள ஒவ்வொரு வரிசை, குடும்பம் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் எழுதி, பின்னர் அக்குடும்பத்தில் உள்ள பேரினங்கள், இனங்கள் பற்றியும், அவற்றின் வாழ்முறை, வாழிடம், பரவல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இப் பல்லடுக்குத் தொகுதிகள் 40 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் கூடுதலான புகழ்பெற்ற துறையறிஞர்களின் உதவியாலும், ஏறத்தாழ 35 சிறந்த ஓவியர்களின் பங்களிப்பாலும் உருவாகி வருகின்றது. இது மட்டுமல்லாமல் 834 ஒளிப்படக் கலைஞர்களும் உதவுகிறார்கள். இந்நூல் வரிசையின் தொகுப்பாசிரியர் ஹோசெ டெல் ஓயோ (Josep del Hoyo), ஆண்ட்ரூ எலியட் (Andrew Elliott) ஹோர்டி சார்கட்டால்) (Jordi Sargatal) மற்றும் டேவிட் ஏ கிறிஸ்டி (David A Christie). பறவைகளைப் பற்றிய விக்கிப்பீடியா திட்டத்திற்கு ( WikiProject Birds.). இந்த உலகப் பறவைகளின் உசாநூல் ஒரு தரமான சான்றுநூலாகப் பயன்படுகின்றது இப் பல்லடுக்குத் தொகுதியின் முதல் தொகுதி 1992 ல் வெளிவந்த உடனேயே பல பரிசுகளைப் பெற்றது. இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கும் வன்முறைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தமது நிதி உதவ இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து தமிழ் மக்களும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு புகலிட அமைப்புகள் கோரி வருகின்றார்கள். இந்தக் கோரிக்கை முன்னர் பல்வேறு கட்டங்களில் முன்வைக்கப்பட்ட போதும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இம்முறை இந்த அமைப்புகள் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தீவரமாக செயற்படுகிறார்கள். இந்தப் புறக்கணிப்பு சிங்கள மக்களுக்கோ, அல்லது தனிப்பட்ட வணிகர்களையோ அல்லது வணிக நிறுவனங்களையோ இலக்காக கொள்ளவில்லை. மாற்றாக வெறிபிடித்த இலங்கை அரசுக்கு எதிராது என்றே புறக்கணிப்பாளரால் கூறப்படுகிறது. பொருட்கள் புறக்கணிப்பு வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காலனித்துவ பிரித்தானியப் பொருட்களைக் புறக்கணிக்க கோரியது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜோ ஜான்சன் ஜோ மார்க்கஸ் ஜான்சன் ("Joe Marcus Johnson", பிறப்பு - ஜூன் 29, 1981) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் அட்லான்டா ஹாக்ஸ் என்ற அணியிலும் அமெரிக்கா தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடுகிறார். ஆர்கன்சா பல்கலைக்கழகம் ஆர்கன்சா பல்கலைக்கழகம் ("University of Arkansas"), ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கால்பந்தாட்டம் விளையாடுகின்றனர். ரேசர்பேக் என்ற குழுவும் உண்டு. சிலர் ஆடவர் கூடைப்பந்தாட்டமும், பேஸ்பால் விளையாட்டும் விளையாடுகின்றனர். பல்வேறு மாணவர் குழுக்கள் உள்ளன. அவரவர் விருப்பத்தை முன்னிறுத்திய குழுக்களாக உள்ளன. ஜெர்மெயின் ஓனீல் ஜெர்மெயின் ஓனீல் (ஆங்கிலம்:Jermaine O'Neal, பிறப்பு - அக்டோபர் 13, 1978) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 1996ல் இவர் என். பி. ஏ. சேர்ந்த பொழுது இவர் என். பி. ஏ. வரலாற்றில் மிக இளந்தையான ஆட்டக்காரர் ஆவார்; அப்பொழுது இவரின் வயசு 18 வருடம், ஒரு மாதம் ஆகும். மேஜிக் ஜான்சன் எர்வின் "மேஜிக்" ஜான்சன் ஜூனியர் ("Earvin "Magic" Johnson, Jr.", பிறப்பு - ஆகஸ்ட் 14, 1959) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1979 முதல் 1991 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியிலும் 1992ல் ஒலிம்பிக் தங்கம் பரிசு பெற்ற அமெரிக்க "ட்ரீம் டீம்" தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடினார். இவர் பெரும்பான்மையாக பந்துகையாளி பின்காவல் நிலையில் விளையாடினார், ஆனால் பல போட்டிகளில் இவர் ஐந்து கூடைப்பந்தாட்ட நிலைகளிலும் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் இரண்டு ஆண்டுகளாக மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி ஒரு என்.சி.ஏ.ஏ. பட்டத்தை வென்றுள்ளார். புகழ்பெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் வீரர் லாரி பர்ட் உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற நட்பான எதிரிடை இருந்தது; 1980களில் ஜான்சனின் லேகர்சும் பர்டின் செல்டிக்சும் மொத்தத்தில் 7 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் வென்றுள்ளன. 1992ல் இவர் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றார் என்று கூறி என். பி. ஏ.யிலிருந்து அகற்றினார். கூடைப்பந்து புகழவையில் உறுப்பினர் மேஜிக் ஜான்சன் தற்போது தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணரும் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியின் ஒரு அதிபரும் ஆவார். மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் ("Michigan State University"), ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிழக்கு லான்சிங் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஜார்ஜ் வாக்கர் புஷ் ஜார்ஜ் வாக்கர் புஷ் ("George Walker Bush", ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார். தமிழர் அழகியல் அழகு ஒன்றுக்கு இருக்கக்கூடிய ஓரு பண்பியல்பு. அதை மனிதர் உணர்வது ஒரு மகிழ்அனுபவம். அழகியல் அழகை உருவாக்கும், வெளிப்படுத்தும், ரசிக்கும் ஓர் அணுகுமுறைச் சுட்டுகிறது. ஓவியம், இசை, கதை, கவிதை, சிற்பம், கட்டிடம், மெய்யியல், நுட்பம் என்று அனைத்திலும் அழகியல் இருக்கும். இத்துறைகளில் தமிழர் அழகை ஆக்கும் வெளிப்படுத்தும் ரசிக்கும் அணுகுமுறையைத் தமிழர் அழகியல் குறிக்கின்றது. ஜூன் 2008 ஜூன் 2008, 2008 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜூலை 15 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது. ---- அனத்தோலி கார்ப்பொவ் அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ("Anatoly Yevgenyevich Karpov", ரஷ்ய மொழி: Анатолий Евгеньевич Карпов; பிறப்பு: மே 23, 1951) ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1986 முதல் 1990 வரையில் இவர் இப்பட்டத்தை மீளப் பெற்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் போட்டியிட்டவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவரது எலோ தரவுகோள் 2780 ஆகும். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005 ஆஅம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் ("Public Chamber of Russia") ஓர் உறுப்பினராக உள்ளார். 1975 இல் உலக வீரரான பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் உலகப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். பொபி ஃஇஷர் போட்டி நடைபெறுவதற்கு 10 நிபந்தனைகளை விடுத்திருந்தார். ஆனால் பிடே அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் ஃபிஷர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கார்ப்பொவ் உலக வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் ஃபிஷருடன் கார்ப்பொவ் விளையாட எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததால் கார்ப்பொவ் எந்நாளிலும் ஃபிஷருடன் சதுரங்கப் போட்டி ஒன்றில் பங்கு பெற முடியாமல் போனது. அ. கா. பெருமாள் அ.கா.பெருமாள் "(A. K. Perumal)" நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. நாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்) நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர். இவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர். குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.இவரது ஆய்வுக்கும், பார்வைக்கும் உதவியவர்களில் முக்கியமாக அருள்பணி ஜெயபதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆகிய இருவரை குறிப்பிட்டாக வேண்டும். இவர் எழுபத்தைந்து நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு,கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார். தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யபப்ட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார். இவர் எழுதிய ""தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004). ஏ. எம். ராஜா ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி. ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார். இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார். 1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் "அழியாத காதல் வாழ்வில்..." என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா. துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. "சிற்பி செதுக்காத பொற்சிலையே", "தென்றல் உறங்கிய போதும்" போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான "ஆடாத மனமும் ஆடுதே", "பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா", "ஓகோ எந்தன் பேபி" போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். "மைனர் லைஃப் ரொம்ப ஜாலி" போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் "கலையே என் வாழ்க்கையின்" வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் "காலையும் நீயே" ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது. அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட "வாடிக்கை மறந்ததும் ஏனோ", "கண்மூடும் வேளையிலும்" போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட "நிலவும் மலரும்", "இதய வானின் உதய நிலவே", "கண்ணாலே நான் கண்ட கணமே" போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. "மாசிலா உண்மைக்காதலே" (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), "கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம். ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை. ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார். 1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் "அழகு நிலவின் பாவனையிலே" என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ. எம். ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர். ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் "அதி மதுர அனுராகா" போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருக்கிறார். இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது. 1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ. எம். ராஜா மட்டுமே. 1952இல் வி. தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் "லோகநீதி" என்ற படம் வழியாக ஏ. எம். ராஜா மலையாள திரையுலகில் நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச் சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ. எம். ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். . ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய "பெரியாறே பெரியாறே" போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் "என் சைனபா !" என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ. எம். ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. "காச கங்கையுடெ கரையில்.." போன்றபாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம். தெலுங்கில் ஏ. எம். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற "அந்து மாமிடி" போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும். நடுவே திரைவாழ்க்கையில் ஏ. எம். ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக் கச்சேரிகள் மூலமாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் வி. குமார் ஏ. எம். ராஜாவை மீண்டும் பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ. எம். ராஜா பாடிய "முத்தாரமே உன் ஊடல் என்னவோ?", புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய "செந்தாமரையே செந்தேனிதழே..." ஆகியன குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இரு பாடல்களும் சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973இல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ. எம். ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த "ராசி நல்ல ராசி" ஒரு வெற்றிப்பாடல். 1975இல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ. எம். ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970இல் ஏ. எம். ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970இல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்தப் பயணம் நீண்டது. ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 8 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார். எம். சிவசுப்ரமணியம் எம். எஸ் என்று அழைக்கப்படும் எம். சிவசுப்ரமணியம் (1929; திருப்பதிச்சாரம், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா- மறைவு டிசம்பர் 3 2017) தமிழின் குறிப்பிடத்தக்க பிரதிமேம்படுத்துநர், மொழிபெயர்ப்பாளர். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். 1947ல் அப்போதைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் நிதித்துறை ஊழியரானார். நவீன இலக்கிய ஆர்வம் அவ்வாரு உருவான ஒன்றுதான். சுந்தர ராமசாமியை அறிமுகம்செய்துகொண்டதும் இக்காலகட்டத்திலேயே. பின்னர் தமிழ்நாடு மொழிவழிப்பிரிவினைக்கு உட்பட்டபோது நாகர்கோயில் வந்து பத்திரப்பதிவுத்துறை எழுத்தராக வேலைபார்த்து 1987ல் ஓய்வு பெற்றார். சிவசுப்ரமணியம் நவீன இலக்கிய படைப்புகள் பலவற்றுக்கும் பிழை திருத்துபவராகவும் மொழியை செப்பனிடுபவராகவும் வெளியே தெரியாமல் உழைத்துள்ளார். நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி முதலிய முதல் தலைமுறை , நாஞ்சில்நாடன் தோப்பில் முகமது மீரான் போன்ற இரண்டாம் தலைமுறை , ஜெயமோகன் போன்ற மூன்றாம் தலைமுறை ,சல்மா போன்ற நான்காம் தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை செப்பனிட்டுள்ளார். சுந்தர ராமசாமியின் நெடுநாள் தோழரான எம்.எஸ் அனேகமாக தினமும் அவரைச் சந்திப்பவராக விளங்கினார். காலச்சுவடு இதழ் மற்றும் பிரசுரங்களில் நண்பராக தொடர்ந்து உடனிருந்தார். காலச்சுவடின் ஆலோசகராக தன் இறுதி வரை பணியாற்றினார். எம்.எஸ் தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல் 'கிழவனும் கடலும்,' அர்ஜெண்டின எழுத்தாளர் சோரொண்டினோவின் சிறுகதைகளான 'ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை' கேரள பழங்குடித்தலைவர் ஜானுவின் வாழ்க்கைவரலாறான 'ஜானு 'கியவை காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளன. மலையாள எழுத்தாளர் சகரியாவின் சிறுகதைகள் 'சகரியா கதைகள்' என்ற பேரிலும், பொதுவான ங்கில கதைகள் 'அமைதியான மாலைப்பொழுதில்' என்ற தலைப்பிலும் யுனைட்டர் ரைட்டர்ஸ்[ தமிழினி ] பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ் நாகர்கோயிலில் 3 டிசம்பர் 2017 அன்று காலமானார். இவரது தம்பிதான் பிரபல படைப்பாளியான மா.அரங்கநாதன். ரத்த மரியாள் (புனைகதை) தற்கால மேற்கத்திய நவீன புனைகதைகளில், ரத்த மரியாள் என்பது கண்ணாடியின் முன் தன் பெயரை மூன்றுமுறை கூப்பிட்டால் தோன்றும் ஒரு பேய் அல்லது சூன்யக்காரியை குறிக்கும். இந்தப் பேயை நரக மரியாள் எனவும் வேறு சில பெயர்களிலும் குறிப்பிடுவர். கட்டுக்கதைகளில், "ரத்த மரியாள்" என்பது இந்தப் பேயின் பெயரை கண்ணாடியின் முன் பல முறை கூப்பிடும் ஒரு வித விளையாட்டாகும். இது பொதுவாக சிறுவர்கள் ஒன்றாக இரவுகளை கழிக்கும் போது விளையாடப்படுகிறது. இதில் பங்குபெறுவோர், ரத்த மரியாளை வரவழைக்க இருட்டில் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு(பொதுவாக குளியலறையில்) இவளுடைய பெயரை மூன்று முறை உச்சரிப்பர். இவளின் பெயரை நூறு முறை உச்சரிப்பது, நடுநிசியில் உச்சரிப்பது, சுற்றுவது, கண்களை கசக்குவது, இவளின் பெயரை மெழுகுவர்த்தியுடன் 13 முறை உச்சரிப்பது என பலவாறாகவும் இவளை தோன்றவைப்பதற்கான வழிமுறைகளாக நம்பப்படுகிறது.சில கட்டுகதைகளில், ரத்த மரியாளை அழைப்பவர்கள், "ரத்த மரியாளே, உன் குழந்தையை கொன்றது நான் தான்" என கூறினால் தோன்றுவதாக உள்ளது. இந்த கட்டுக்கதைகளில் இரத்த மரியாள் தன் குழந்தைகளையே கொன்றதாலோ அல்லது அதனது தொலைத்ததாலோ பித்து பிடித்து இறுதியில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணாக கருதப்படுகிறாள். மரியாள் தவறுதலாக தன் பிள்ளைகளின் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவளாக கருதப்படும் கதைகளில், "நான் மரியாளை நம்புகிறேன்" என்று கூறினாள் இவள் தோன்றுவாள் என கருதப்படுகிறது. இந்த விளையாட்டு, ஒருவரின் மன தைரியத்தை பரிசோதிப்பதற்காக விளையாடப்படுகிறது. ஏனெனில், ரத்த மரியாள் தோன்றினால், அழைத்தவரை முகத்தை கிழித்து, கண்களை பிடுங்கி, பித்து பிடிக்கச்செய்து, என பலவாறாக மிகவும் குரூரமாக கொலை செய்வாள் என நம்ப்பப்படுகிறது. எனினும் சில கதைகளில், இவளது பெயரை கண்ணாடியின் முன் பதின்மூன்று முறை கூறினாள் ரத்த மரியாள் தோன்றி, பிறகு இறந்த ஒருவருடன் பேச இயலும் என கூறப்படுகிறது. எனினும் இறந்தவருடன் 12:01 மணி வரை தான் பேச இயலும், அதற்கு பிறகு ரத்த மரியாளும் இறந்தவரும் மறைந்து விடுவர். வேறு சில கதைகளின் படி, அழைப்பவர் ரத்தமரியாளை நேரடியாக காணாமல், அவளது பிம்பத்தை கண்ணாடியில் கண்டால், ரத்த மரியாள் அழைத்தவரின் வருங்காலத்தை குறித்து முக்கியமாக திருமணம் மற்றும் பிள்ளைகளை குறித்து குறிகூறுவாள் என நம்பப்படுகிறது. மேலும் இருட்டு குளியறையில் ஒரு மங்களான மெழுகுவர்த்தியை கண்ணாடியின் முன் காட்டினால் "ரத்த மரியாள்" தோன்றுவாள் எனவும் கூறுப்படுகிறது. எனவே தான் இந்த செயல் செய்ய பல மேற்கத்திய சிறுவர்கள் அஞ்சுகின்றனர். இந்த புனைகதை நன்றாக பரவியிருக்கும் நகரில், ரத்த மரியாள் குழந்தை கொலைகாரியாக கருதப்பட்டு, இவளுடன் தொடர்புடைய ஒரு மயானத்தையும் காணலாம் ரத்த மரியாள் புனைகதை இங்கிலாந்தின் அரசியான முதலாம் மரியாளை அடிப்படியாகக் கொண்டு எழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவளும் பலரை கொன்ற காரணத்துக்காக "ரத்த மரியாள்" என்றே வரலாற்றில் அறியப்படுகிறாள் இந்த அரசி தன் வாழில் பல கருச்சிதைவுகளையும் போலி கருவுற்றலையும் எதிர்க்கொண்டாள். இவளது கருச்சிதைவுகள் வேண்டுமென்றே தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சில செவிவழி கதைகளில், ரத்த மரியாள் தன் குழந்தைகளை இழந்ததால் பித்து பிடித்த ஒரு அரசியாக கூற்ப்படுகிறாள் எனினும் பெரும்பாலும். அரசி முதலாம் மேரி, இந்த புனைகதையில் வரும் பேய்க்கு பெயர் வர மட்டுமே காரணாமாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். ரத்த மரியாளை அழைக்கும் சடங்கு, ஹாலோவீன் நாளில் ஒரு காலத்தில் செய்யப்பட்ட குறிபார்க்கும் சடங்கினை ஒத்ததாக உள்ளது. இந்த ஹாலோவீன் சடங்கின் படி, ஒரு இளம்பெண் படிக்கட்டுகளை பின்புறமாக, கையில் மெழுகு மற்றும் கண்ணாடியுடனும் இருட்டு வீட்டில் ஏறினால், அந்தப்பெண்ணின் வருங்கால கணவன் அந்த கண்ணாடியில் தெரிவான என நம்பப்பட்டது. எனினும் இதற்கு மாறாக மண்டை ஒட்டினை கண்டால், அந்தப்பெண் திருமணத்துக்கு முன்பே இறந்துவிடுவால் என்பதை இது குறித்தது. ஆகவே, இதுவும் ரத்த மரியாள் புனைகதை உருவாவதற்கு காரணாமக் இருந்திருக்கலாம். சி. ஜேசுதாசன் பேராசிரியர் சி. ஜேசுதாசன் ("C. Jesuthasan", 1919 - மார்ச் 6, 2002; சேனவிளை, குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், திருவனந்த புரத்திலும் தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் முடித்தார். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார். நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். ஹெப்ஸிபா ஜேசுதாசன் புத்தம் வீடு. மாநீ டாக்டர் செல்லப்பா போன்ற நாவல்களை எழுதிய நாவலாசிரியர். பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும். கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவரது தமிழாசிரியர். அண்ணாமலைபல்கலையில் கா.சு.பிள்ளையிடம் தமிழ்கற்றார் கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர். கம்பராமாயணம் மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். நகுலன், மாதவன், நீலபத்மநாபன், காஸ்யபன், தட்சணாமூர்த்தி போன்ற தமிழ் எழுத்தாளர்களும் அய்யப்ப பணிக்கர், கே எஸ் நாராயணபிள்ளை போன்ற மலையாள எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் குருஷேத்ரம் என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு. கல்வித்துறையில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய அமைப்பு ரீதியாக போராடியவர் ஜேசுதாசன். புதுமைப்பித்தனைப் பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு அவரது மாணவரால் முனைவர் ஏ சுப்ரமணியபிள்ளை அவரது வழிகாட்டலில் நடத்தப்பட்டது. புதுமைப்பித்தன், ஆர். சண்முக சுந்தரம் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவும் அவரே காரணமாக அமைந்தார். ஒரு விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார். அதற்கு அன்றைய பிரசுரச் சூழலும் ஒரு காரணம். நீலபத்மநாபன், ஆர் ஷண்முக சுந்தரம், க நா சு ஆகியோர் குறித்து அவர் ஆக்கிய விமரிசனங்கள் முக்கியமானவை. பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு' (ஆங்கிலம்: "Count Down from Salamon", "Hepsipaa Jeesuthaasan") ஒரு சாதனை படைப்பு. ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், அ. கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர். பேராசிரியர் இசைப்பயிற்சி உடையவர். இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர். தமிழிசையார்வம் உண்டு. அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார். வீணை வாசிப்பார். ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர். ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல. தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர். பேராசிரியரின் விரிவான பேட்டி "சொல்புதிது" ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.." என்று அசோகமித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார். நித்ய சைதன்ய யதி நித்ய சைதன்ய யதி என்று அறியப்படும் ஜெயச்சந்திரன் (1923 - 1999) கேரள சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயண குருவின் வழிவந்த ஆன்மீகவாதி, உளவியலாளர், தத்துவ அறிஞர். பந்தளம் பணிக்கர்கள் என புகழ் பெற்ற நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் 1923ல் பிறந்தவர் நித்யசைதன்ய யதி. பத்தனம் திட்டா மாவட்டத்தில் கோந்நி என்ற ஊரில் தாய் வீட்டில் பிறந்தார். இயற் பெயர் ஜெயச்சந்திரன். அவருடைய குடும்பம் கேரளத்தில் உள்ள ஒரே ஈழவ நிலப்பிரபுக் குடும்பம். அவரது தந்தை மூலூர் ராகவப் பணிக்கர் அக்காலத்தைய முக்கியமான கவிஞர். தாய்வழித் தாத்தா பெரிய பாளி மொழி அறிஞர். பௌத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. அவரது தாய் வாமாக்‌ஷி அம்மா. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டு வந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம்.ஏ படித்து அங்கேயே ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போதுதான் நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது. துறவு பூண்ட நித்ய சைதன்ய யதி பிச்சை எடுத்தபடி பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். காந்தியின் சபர்மதி ஆச்சிரமத்திலும், ரமணரின் ஆச்சிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார். பின்னர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு தத்துவ மோதலுக்குப் பிறகு அப்பதவியைத் துறந்தார். முன்னரே நித்ய சைதன்ய யதிக்கு நடராஜகுருவின் அறிமுகம் இருந்தது. 1952ல் அவர் ஊட்டி ஃப்ரென்ஹில் குருகுலத்துக்குச் சென்று நடராஜகுருவின் நேரடி சீடரானார். இருவரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். நடராஜகுவிடமிருந்து ஜெயசந்திரன் துறவு பெற்று நித்யசைதன்ய யதி என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார் 1956ல் நடராஜகுரு உலகப் பயணத்துக்குப் போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவின் ஆணைப்படி 1959ல் மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார். 1969ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்துச் செல்லப்பட்டுத் திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட், சிக்காகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர், போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1973ல் நடராஜகுரு உடல்நலம் குறைந்து இறந்தபோது பாரதம் திரும்பி ஊட்டி பெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். 1999 ல் மரணமடைந்தார். அவரது சமாதி ஊட்டியிலேயே உள்ளது. நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் புகழ்பெற்ற, பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். கேரளம் உலகை ஈ எம் எஸ் மற்றும் யதி கண்கள் வழியாகவே காண்கிறது என்று ஒருமுறை புகழ்பெற்ற நூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டார். நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் கிட்டத்தட்ட நூற்று இருபது நூல்களை எழுதியுள்ளார். எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றச் செய்த பெரும் ஆசிரியர் அவர். அவரது நூல்களில் முக்கியமனவை நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் அவர் எழுதிய உரைகளாகும். நித்ய சைதன்ய யதியின் ஆங்கில நூல்களில் முக்கியமானவை தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்துள்ளது . தமிழில் நித்ய சைதன்ய யதியின் நான்கு நூல்கள் கிடைக்கின்றன. சூத்ரதாரி மொழிபெயர்ப்பில் ஈசோவாஸ்ய உபநிடதம் என்ற நூல் முதலில் வெளிவந்தது. "அனுபவங்கள் அறிதல்கள்" என்ற நூல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. "குருவும் சீடனும்" என்ற நூலை எனி இண்டியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது பொன்னீலன் பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் இளங்கலை படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார். சிறுவயதிலேயே மார்க்சிய ஈடுபாடு கொண்டிருந்த பொன்னீலன் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தன் வாழ்க்கையிலிருந்து களைவதை முக்கியமான செயல்பாடாகக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆசிரியர் சங்கம் மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கிடைத்த உறவு அவருக்கு உதவியது. ஆயினும் நெல்லை மாவட்டத்தில் பணிபுரிந்த நாட்களில் மார்க்ஸிய ஆய்வாளர் நா.வானமாமலையுடன் கொண்ட தொடர்பும் வானமாமலை நடத்திய 'ஆராய்ச்சி' என்ற சிற்றிதழுமே தன்னை உருவாக்கிய சக்திகள் என்று பொன்னீலன் குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் ஆராய்ச்சி இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். நெல்லையில் இருந்த நாட்களில் தி. க. சிவசங்கரன் இவருக்கு நெருக்கமானார். தாமரை இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருந்த அவர் பொன்னீலனை சிறுகதைகள் எழுதும்படி தூண்டினார். முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டுவந்தது 1976ல் வெளிவந்த 'கரிசல்' என்ற நாவலே. இது பொன்னீலன் அப்போது பணியாற்றிவந்த கோயில்பட்டி மக்களையும் நிலத்தையும் சித்தரிக்கும் 'சோஷலிச யதார்த்தவாத' நாவலாகும். பொன்னீலனின் பெரும் படைப்பு 1992ல் வெளிவந்த 'புதிய தரிசனங்கள்' என்ற இரண்டு பாக நாவல். இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் இந்நாவல் ஜனநாயகத்தின் வேர்களைத் தேடும்படைப்பு. அக்காலத்தில் பொன்னீலனின் கட்சி எடுத்த நெருக்கடி நிலைத் தரவு நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமரிசிக்கும் படைப்பும் கூட. பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். சலில் சௌதுரி சலில் சௌதுரி ("Salil Chowdhury", ; 'சொலில் சௌதுரி'; 19 நவம்பர் 1923 – 5 செப்டம்பர் 1995) இந்திய இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் வங்காள மொழி, இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சலீல் சௌதுரி மேற்கு வங்கத்தில், இருபத்துநான்கு பர்கானா மாவட்டத்தில் இன்று சுபாஷ் கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி போதா ஊரில் 1925 நவம்பர் 19 அன்று பிறந்தார். தன் இளமைப் பருவத்தை சலீல் சௌதுரி அசாமியத் தேயிலைத் தோட்டங்களில் கழித்தார். அஸாமிய தேயிலைத் தோட்ட ஊழியர்களின் பாடல்களும் அஸாமிய நாடோடிப் பாடல்களும் அவரை மிகவும் பாதித்துள்ளன. இசையார்வமுள்ள அவரது தந்தை பாக், பீத்தோவன், மொஸார்ட் போன்றவர்களின் இசைத் தட்டுகளைச் சேர்த்து வைத்திருந்தார். மேலை இசையில் சலீல் சௌதுரியின் ஈடுபாடு மிக இளம் வயதிலேயே உருவான ஒன்றாகும். மேலை இசையின் தாக்கமே கருவியிசைகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் இசையில் ஒத்திசைவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவருக்கு கற்பித்தது. சலீல் சௌதுரியின் சாதாரண சினிமாப் பாடல்கள் கூட அவற்றின் ஒத்திசைவு மிக்க அமைப்புக்காகக் கவனிக்கத் தக்கவை. இந்துஸ்தானி இசையைத் தன் தந்தையிடமிருந்தும் அண்ணனிடமிருந்தும் கற்றார். சிறுவயதிலேயே அவர் ஒரு நாடோடி. அந்த அலைச்சல், வங்க பழங்குடி இசையையும் அவருக்குப் பழக்கப்படுத்தியது. சலீல் சௌதுரியின் இசையில், மேலை இசையும் நாட்டுப்புற இசையும் சரியான விகிதத்தில் கலந்து அதனை அழகூட்டின. பட்டப் படிப்புக்காகக் கல்கத்தா வந்த சலீல் சௌதுரி அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946 ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற அமைப்புக்காக பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்தைய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் பதிவு செய்ததன் மூலம் அப்பாடல்கள் வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர் பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக் ப்ரொதிபி' முதலியவை சலீல் சௌதுரியின் வார்த்தைகளிலேயே 'நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக' அமைந்தவை. தன் 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய 'காயார் போது ' என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் புதிய அலையை உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்' என்ற பெயரில் வந்த அவரது புதியவகைப் பாடல்கள் வங்க இசையின் அடுத்த கட்டத்தை உருவாக்கின இசையை கோர்ப்பதில் சலீல் சௌதுரி செய்த சோதனைகளை அன்றுவரை இந்திய இசையில் எவருமே செய்தது இல்லை. பல்வேறு பாடகர்களை பலவிதமான மெட்டுக்களில் பாடச் செய்து அவற்றை இசையொருமையுடன் கோர்த்து பாடல்களை அமைக்கும் அவரது முறை அவரது திறமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் . அவரே பாடல்களை எழுதி அவரே இசையமைத்து அவரே பின்னணி இசையை நடத்தி அனைத்து நுட்பங்களுடன் அவரே பதிவும் செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த இசை நடத்துநர். நூற்றுக்கணக்கான வங்க இசைப் பாடல்களை அமைத்த சலீல் சௌதுரி 41 வங்க திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது முதல் படம் பரிபர்த்தன் [மாற்றம்] 1949 ல் வந்தது. 1994ல் வந்த' மகாபாரதி 'அவரது கடைசி வங்க திரைப்படம். அவரது வங்கப்பாடல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் அவரே பாடல்களையும் எழுதினார். பிமல் ராய் 1954ல் சலில் சௌதிரியின் கதையான 'ரிக்ஷாவாலா'வை இந்தியில் 'தோ பிகா ஜமீன்' என்றபேரில் சினிமாவாக எடுத்தபோது சலீல் சௌதுரி அதற்கு இசையமைத்து இந்தியில் நுழைந்தார். அப்படம் 1954ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு ஜூரி பரிசு பெற்றது. ஆயினும் அப்படத்தின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களான' தர்த்தி கஹே புகார்' , 'ஹரியாலா சவான்', 'ஜாரே 'போன்றவை இந்தியாவெங்கும் விரிவாகக் கவனிக்கப்பட்டன அதன்பின் சலீல் சௌதுரி இந்தி திரையிசையை மாயம் போல ஆக்கிரமித்துக் கொண்டார். பிராஜ் பாபு, நௌகரி, அமானாத், டாங்கேவாலி, வாஸ், பரிவார், ஜாக்டே ரகோ, அபராதி கௌன், ஏக் காவ் கி கஹானி, லால் பத்தி, முசா•பர், ஜமானா முதலியவை பெரும் புகழ்பெற்ற படங்கள். இப்படங்களின் பாடல்கள் இன்றும் வாழ்கின்றன. 1958 ல் மதுமதி படத்தில் வந்த 11 பாடல்களும் இந்தி இசையுலகை அதிரச் செய்தபோது சலீல் சௌதுரியின் அலை உச்சத்தை அடைந்தது. ' ஜா ரெ பர்தேசி' என்றபாடல் இந்திய இசையின் மிக மிக முக்கியமான ரொமாண்டிக் பாடல் எனலாம். 'சுஹானா ச•பர் ', 'தில் தடப் தடப் கெ 'முதலியவை இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. பரக் , உஸ்னே கஹா தா , சாயா , மாயா, காபூலிவாலா, னந்த், மேரே அப்னே, ரஜ்னிகந்தா , சோட்டி சி பாத், ஜீவன் ஜோதி, மிருகயா, னந்த் மகால் கியவை தொடர்ந்து வந்த இசை வெற்றிப்படங்கள். 1994ல் சுவாமி விவேகானந்தா படத்துக்கு இசையமைத்தபடி சலீல் சௌதுரி தன் இந்திப் பட வரிசையை முழுமை செய்தார். தமிழ்நாட்டினர் சலில் சௌதிரியின் இசையை 'செம்மீன்' மலையாளப் படத்தின் பாடல்களின் வழியாகத்தான் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். 'கடலினக்கர போணோரே', 'மானச மைனே வரூ' போன்ற பாடல்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாட்டையும் வசீகரித்தவை. இன்றும் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டுக் கடற்கரையிலும் பலசமயம் அப்பாடல்களின் இசையே மீனவர்களின் இசையாக அறியப்படுகிறது. பிற்பாடு கடற்கரை சார்ந்த படங்களுக்குப் போடப்பட்ட பாடல்களில் எல்லாம் அவற்றின் சாயல் உள்ளது. அவற்றை அமைத்த சலீல் சௌதுரி ஒரு வங்காளி. சலீதாவின் இசையின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள முக்கியமான தொடக்கப்புள்ளி இது. அவரது மெட்டுகள் அனைத்துமே அனேகமாக பற்பல இந்திய மொழிகளுக்கு மீண்டும் மீண்டும் போடப்பட்டவை. வங்கத்து மழைப்பாடல் மலையாள இரவு விடுதிப் பாடலாகும். இந்தியில் அது சோகப் பாடலாகலாம் . கலாச்சாரத்தின் சாரத்திலிருந்து பிறக்கும் இசைக்கு அனைத்து கலாச்சாரங்களையும் கடந்து மேலே நிற்கும் ஒரு பொது வெளியில் ஒளிவிட முடியும் என்று நிரூபித்தவர் சலீல் சௌதுரி. இன்றைய இந்திய திரையிசையின் அனைத்து பாணிகளிலும் ஆழமாக ஊடுருவிய தனித்துவம் மிக்க இசை மரபுக்கு சொந்தக்காரர் சலீல் சௌதுரி. மொழியின் எல்லைகளைக் கடந்து நிலவியல் தனித் தன்மைகளைக் கடந்து இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு உணர்ச்சிகரங்களின் தருணங்களை இசையில் பதிவுசெய்தது அவரது பாணி. லதா மங்கேஷ்கர் முதல் ராஜ் கபூர் வரை திரையுலகின் முதல்வர்கள் அவரை ' எக்காலத்திற்கும் உரிய திரையிசை மேதை ' என்று புகழ்ந்தனர். இசையமைப்பாளர்களான சங்கர் ஜெய்கிஷன் முதல் இஸ்மாயில் தர்பர் வரையிலானவர்கள் அம்மேதையின் இசையில் உணர்ச்சிகளுடன் கருவிகளின் இசையை இணைக்கும் அமைப்புமுறையை கண்டு பிரமித்துப் பாராட்டினர். ஆகவேதான் சலீல் சௌதுரி வங்க இசையில் தாகூருக்குப் பின்பு உருவான மிகப்பெரிய அலையை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். சலீல் சௌதுரி இசையமைக்கத் தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு முன்பு. வங்காளம், இந்தி, மலையாளம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸாமியம் என ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் சலீல் சௌதுரி இசையமைத்துள்ளார். அவர் அடிபப்டையில் ஒரு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர் அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக இருந்த சலீல் சௌதுரி அரசியல் போராட்டத்தில் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். இருபது வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலீல் சௌதுரி தென் எல்லையில் கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் செம்மீன். இன்றும் மலையாள இசையை பல வெளி மாநிலத்தவர் செம்மீனின் இசைமூலமே அடையாளம் காண்கிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப்பொன்மான், நெல்லு, ராகம். ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி தும்போலி, கடப்புரம் வரை அவர் 23 படங்களில் 106 பாடல்களை உருவாக்கியிருக்கிறார் . மற்றும் மூன்று படங்களுக்கு அவர் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார். அரவிந்தன் இயக்கிய 'வாஸ்துஹாரா' என்ற மலையாளப் படத்தில் இரு வங்கமொழிப் பாடல்களை சலீல் சௌதுரி இசையமைத்திருக்கிறார். சலீல் சௌதுரி இசையமைத்த சில படங்கள் வரவேயில்லை. பல படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் •பீஸ் தோல்விகள். ஆனாலும் அவரது இசை ஒளி மங்கவில்லை. பல படங்கள் இன்று அவரது பாடலாலேயே அறியப்படுகின்றன. சலீல் சௌதுரியின் புதியவகை இசைக்கு ஏற்பப் பாடலமைக்க மலையாள பாடலாசிரியர்கள் திணறினர் . பலசமயம் அபத்தமான வரிகளை எழுதினர். அவை மேலும் அபத்தமாகப் படமாக்கப்பட்டன. ஆனாலும் அப்பாடல்கள் மலையாள மனதுக்கு அன்னியமாகவில்லை. அவற்றின் இசையே அவ்வுணர்ச்சிகளை எளிய மலையாள மனதுக்குக் கூட அளித்தன. ஒரு பாடலில் வரிகளும் பின்னணி இசையும் கூடிமுயங்கி முழுமைசெய்துகொள்ளும் சித்திரம் அவரால்தான் மலையாளிக்கு அறிமுகமாயிற்று சலீல் சௌதுரி பெரும்பாலான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் என்பதை அவரது இசையில் ஏராளமான கருவிகள் எந்தவிதமான பிறழ்வும் இன்றி கூடி இசைவுகொள்வதன்மூலம் காணக்கிடைக்கிறது. 'தபலா முதல் சரோட் வரை, பியானோ முதல் பிகாலோ வரை அனைத்தையும் வாசிக்கத்தெரிந்த அபூர்வ மேதை' என்று சலீல் சௌதுரிவைப்பற்றி ராஜ்கபூர் ஒருமுறை சொன்னார். விசித்திரமான வாத்தியங்களைக்கூட இந்திய இசைக்கு ஏற்பப் பதப்படுத்தி இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வழிகாட்டியவர் அவர். ஓபோ [Oboe] •ப்ரெஞ்ச் ஹார்ன், மாண்டலின், சாக்ஸ•போன் போன்றவற்றை அவர் பாடல்களில் பயன்படுத்தியுள்ள முறை அபூர்வமானது. குறிப்பாக சலீல் சௌதுரிக்கு, பார்க்க கிளாரினெட் போல இருக்கும் இரட்டை ரீட் வாத்தியமான ஓபோ மேலுள்ள காதல் ஆச்சரியமான ஒன்று. பலபாடல்களில் அதை அவர் பயன்படுத்தியுள்ளார் மேலை இசை இந்துஸ்தானி இசை மற்றும் வங்க நாட்டுப்புற இசை ஆகியவற்றை நுட்பமாக ஊடுபாவாகக் கலந்து உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள். பாடலின் திரைப்படத் தேவை, வணிக ரீதியான நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டுத் தன் தனித்தன்மையை இழக்காமல் படைப்பூக்கத்துடன் உருவாக்கப்பட்டவை அவரது பாடல்கள் என்பதுதான் குறிப்பாகச் சொல்லவேண்டியது. இன்று கலப்பிசை [ •ப்யூஷன்] மோஸ்தராக உள்ளது. சலீல் சௌதுரி அதற்கு முக்கியமான முன்னோடி. பாகேஸ்ரீ , கலாவதி, ஹமிர் கல்யாணி போன்ற ராகங்களுக்கு பின்னணி இசையாக மேலை நாட்டு இசையை அவர் அமைத்திருப்பதைக் காணலாம். அதேசமயம் அவர் மேலைநாட்டுப் பின்னணி இசையமைப்பு முறையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் இல்லை. சலீல் சௌதுரியின் இசையை எந்த ஒரு வகைமைக்குள்ளும் அடக்க இயலாது. " இசை எப்போதும் தன்னைக் கலைத்துக் கொண்டு மீள மீள புதுப்பித்துக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்பப் புதுவடிவங்கள் கொண்டு வளரவேண்டும். இல்லையென்றால் அது உறைந்து போய்விடும். ஆனால் முன் நகரும் உந்துதலில் நான் என் மரபை விட்டுவிடலாகாது என்பதே என் எண்ணமாகும்" சலீல் சௌதுரி தன் இசையின் அடிப்படை பற்றிச் சொன்னது இது. இணைமெட்டைத் [ obligato ] திறமையாக பயன்படுத்துவது சலீல் சௌதுரியின் இசையின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான மெட்டு பலதிசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும். மேலை மரபிசையில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கூறு இங்கே இசையை வளரச்செய்யும் கூறாக கையாளப்படுகிறது. அவரது எதிர் மெட்டுகள் ஓபோ மாண்டலின் போன்ற வாத்தியங்கள் வழியாகவும் கூட்டுக் குரல் தனிக் குரல்கள் வழியாகவும் மெட்டின் குறுக்காக ஊடுருவிச் செல்லும்போது நாம் இசையின் மாயத்தை அறிகிறோம். சலீல் சௌதுரி மெட்டுதான் பாடல் என்று உறுதியாக நம்பினார். கேட்பவர் முதலில் கவனிப்பது மெட்டைத்தான், மெட்டுதான் பாடலின் அடிப்படை என்றார் அவர். அவரே ஒரு சிறந்த பாடலாசிரியராக இருந்தாலும் ஒரு சரியான மெட்டை கண்டடைந்துவிட்டால் அதற்குரிய வரிகளை உருவாக்குவது பெரியவேலை இல்லை என்றே அவர் எண்ணினார். தன் மெட்டுகள் மீது அவருக்கு இருந்த அபாரமான பிடிப்பும் பயிற்சியும் காரணமாக வங்கத்தில் ஒரு துள்ளல் நடனத்துக்குப் போட்ட அதே மெட்டையே மலையாளத்தில் ஓரு உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் போட அவரால் முடிந்தது. அவரது மலையாளப் பாடல்களில் பல சமயம் மலையாள மணம் இல்லை. இந்திப்பாடல்களில் இந்தி வாசனையும் குறைகிறது. ஆனாலும் அவை அவரது கனவுகள். ஆகவே அழியாத உணர்ச்சிகளினால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் மானுடப் பொதுவானவை. இசை அவ்வுணச்சிகளின் மொழி. அதற்கு மொழி இல்லை. மொழியில் ஆழ வேரூன்றிய ஒரு கவிஞர் சலீல் சௌதுரி என்பதை நான் இங்கு நினைக்கவேண்டும். அவரது கவிதைகள் இன்றும் அழியாத முக்கியத்துவத்துடன் உள்ளன. ரவீந்திர பாரதி பல்கலையில் பாடமாக்கப்பட்டுள்ளன அவை. ஆனால் இசை என்பது மொழிகடந்தது என்று அவர் எண்ணினார். மரபுவாதிகளின் எதிர்ப்பை சலீல் சௌதுரி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் வங்க இசையை மேலைமயமாக்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஹார்மோனியமே மேலைநாட்டுக் கருவிதானே என்று சலீல் சௌதுரி அதற்குப் பதிலளித்தார். குரல் என்பது ஒரு பாடலின் ஒரு சிறு பகுதியே என்றார் சலீல் சௌதுரி. முன் நகர வாய்ப்பு அளிக்காத திறனாய்வு உதாசீனம் செய்யப்படவேண்டியது என்றார் அவர். சலீல் சௌதுரி மலையாளத்தில் இசையமைத்தபோது பாடலாசிரியர்களிடம் மோத நேர்ந்தது. அவர்கள் மெட்டுக்குப் பாடல் எழுதிப் பழக்கமில்லாதவர்கள் . மரபான யாப்பின் சொல்லாட்சிகளைக் கையாள்பவர்கள். சலீல் சௌதுரியின் மெட்டுகளுக்குப் பொருந்த அவர்கள் வரிகளை ஒடித்து மடக்கி மொழியை இம்சை செய்தனர். சலீல் சௌதுரி அதில் தெளிவாக இருந்தார். கவிதை என்பது கட்டுப்படுத்தப்பட்ட மொழியே என்பது அவரது எண்ணம். யாப்புக்கு கட்டுப்படலாமென்றால் ஏன் மெட்டுக்குக் கட்டுப்படலாகாது? தேவை சற்று இசையார்வம் மட்டுமே. தன் இறுதிக்காலத்தில் 'தம்புரான் 'என்ற படத்துக்கு இசையமைத்துவிட்டு சலீல் சௌதுரி சொன்னார் முதன்முறையாக மலையாளத்தில் தன் மெட்டும் பாட்டும் சரியானபடி இணைந்து வந்திருக்கிறது என்று. காரணம் அதற்குள் மெட்டுக்கு எழுத கவிஞர்கள் பழகிவிட்டிருந்தனர். அவ்விஷயத்தை மலையாளத்துக்குக் கொண்டுவந்ததே அவர்தான். சலீல் சௌதுரி மொழியறியாத மன்னா தேவ், லதா மங்கேஷ்கர் போன்றவர்களை மலையாளத்துக்குக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அதே சலீல் சௌதுரி தான் ஜேசுதாஸை வங்கமொழியிலும் பாடச்செய்தவர். மன்னா தேவ் பாடிப் புகழ்பெற்ற மலையாளப் பாடலான 'மானச மைனே வரூ' வின் வங்க வடிவத்தை ஜேசுதாஸ் பாடினார். அவரது போக்குக்குச் சிறந்த உதாரணம் இது. 1958 ல் சலீல் சௌதுரி எழுதிய கட்டுரை ஒன்றில் 'இந்தியத் திரையிசையின் எதிர்காலம்' இந்திய திரை இசை மெட்டுகள் சார்ந்து பின்னணி இசைக்கு அதிக இடமளித்தபடி முன் நகரும் என்று சொல்லியிருந்தார். அவர் போட்ட பாதையில் ஆர். டி. பர்மன் போன்றவர்கள் முன் நகர்ந்தார்கள். மலையாள இசையில் சலீல் சௌதுரியின் உதவியாளர்களான கெ ஜெ ஜாய் , சியாம் போன்றவர்கள் முன் நகர்ந்தனர். இன்றைய தமிழ் திரைப்பட இசைக்கு உண்மையான முன்னோடி சலீல் சௌதுரி என்றால் அது மிகையல்ல. அவர் குறைவாகவே தமிழில் இசையமைத்திருக்கிறார். ஆனால் இன்றைய திரையிசையின் இரு பெரும் சக்திகளான இளையராஜா , ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவருமே சலீல் சௌதுரியின் வழிவந்தவர்கள்தான் . இளையராஜா சலீல் சௌதுரியின் குழுவில் கித்தாரும் காம்போ ஆர்கனும் வாசிப்பவராக அறிமுகமானவர். அவரிடம் சலீல் சௌதுரியின் செல்வாக்கு நேரடியானது. அவரது கணிசமான பாடல்கள் சலீல் சௌதுரியின் பாணியை அப்படியே பின்பற்றுபவை. நாட்டாரிசையை மேலையிசையுடன் பிணைத்தல், பின்னணி இசையை பாடலுடன் பிரிக்கமுடியாதபடி பின்னி விரித்தல் போன்றவை அவர் சலீல் சௌதுரியிடமிருந்து கற்றுக் கொண்டவை. தான் சலீல் சௌதுரியின் ஒரு பெரும் ரசிகன் என்பதை இளையராஜா எப்போதுமே சொல்வதுண்டு. ராஜாவின் விரிவான பின்னணி இசை அமைப்பு முறைகள் [ chord progressions, choral background arrangements] மற்றும் இணை மெட்டைத் [ parallel melody/ obligato ] திறம்படப் பயன்படுத்தும் முறை ஆகியவை சலில் சௌதுரியின் பாணியிலிருந்து கற்றுகொண்டவை ஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகர் சலீல் சௌதுரியின் குழுவில் பணியாற்றியவர். அதே பாணியில் பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஹ்மானின் பல அடுக்குகளிலான பின்னணி இசை நகர்வுகள் சலீல் சௌதுரியின் பாணி தான். சலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்தார். செம்மீன் இயக்குநரான ராமுகாரியட் தன் கரும்பு என்ற தமிழ் படத்துக்கு இசையமைக்க 1972 ல் சலீல் சௌதுரிவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள 'திங்கள் மாலை வெண்குடை' 'கண்ணே கண்மணியே' போன்ற பாடல்கள் எழுபதுகளில் இலங்கை வானொலியில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் கமலஹாசன் நடித்த மதனோத்சவம் தமிழில் பருவமழை என்றபேரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலீல் சௌதுரியின் 'மாடப்புறாவே வா' ' தேன்மலர் கன்னிகள் ' 'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே செங்கதிர்' போன்ற அரிய மெட்டுகள் இங்கே பிரபலமடைந்தன. 1977 ல் பாலுமகேந்திரா கன்னடத்தில் கோகிலா படத்தை இயக்கியபோது அதற்கு சலீல் சௌதுரி இசையமைத்தார். அவர் 1979ல் அழியாத கோலங்களை தமிழில் இயக்கியபோது சலீல் சௌதுரி அதற்கும் இசையமைத்தார். அதில் உள்ள ' பூ வண்ணம் போல நெஞ்சம்' 'நாள் எண்ணும் பொழுது' போன்ற பாடல்கள் புகழ்பெற்றன. 1980ல் சலீல் சௌதுரி இசையமைத்த 'தூரத்து இடிமுழக்கம்' அவரது கடைசி தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள் புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால் அம்மா' 'செவ்வெள்ளிபூவே' 'வலையேந்திச் செல்வோம்' ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப்பாடலான 'There is a rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கிலப்பாடலை சலீல் சௌதுரியே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்றபாடல்தான் தமிழில் சலீல் சலீல் சௌதுரியின் சிறந்த பாடல் எனலாம். ஆனால் அன்றைய சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும்கொண்ட சலீல் சௌதுரியின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நேரடிப்பங்களிப்புத் தமிழில் குறைவே. ஒர் இசையமைப்பாளராக சலீல் சௌதுரியின் பங்களிப்பு நுட்பமாகப் பார்த்தால் மிகமிக ஆழமான ஒன்றாகும். இந்திய இசையானது லாபனையை மையமாகக் கொண்டது. நம் காதுகள் அப்படி இசை கேட்பதற்கு பழகிப் போனவை. இது பல நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய விஷயம். சலீல் சௌதுரி மேலையிசையில் ஒருவித முழுமையை அடைந்திருந்த இசையொழுங்கை [Orchestra] நம் திரையிசையில் நிறுவினார். இன்று நாம் இளையராஜாவையோ ஆர். டி. பர்மனையோ ஏ. ஆர். ரஹ்மானையோ கேட்கும்போது சாதாரணமாகவே பின்னணி இசையையும் பின்னணி ஓசைகளையும் எல்லாம் இணைத்து நம் மனதில் ஒட்டுமொத்தமாக அவ்விசைக்கோலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சலீல் சௌதுரி தான். இது மேலையிசையில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இந்திய இசையுடன் வெற்றிகரமாகப் பிணைத்ததன் மூலம் உருவானது. இன்று உள்ள எல்லா திரையிசைப் பாடல்களும் இப்படிப்பட்ட கலப்பிசை தான். ஒரு தேசத்தின் இசை ரசனையை மாற்றியமைப்பது என்றால் அது சாதாரணமான விஷயமல்ல . தணியாத புதுமை நாட்டமும் பல்வேறுபட்ட இசை மரபுகளில் பயிற்சியும் கொண்ட சலீல் சௌதுரி போன்ற மேதைகளினாலேயே அது நிகழ முடியும். தேவதேவன் தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய ""தேவதேவன் கவிதைகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கைவல்யம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜாகோயில் என்ற ஊரில் மே 5 1948 ஆம் ஆண்டு பிச்சுமணி தம்பதியினருக்குப் பிறந்தார். ஈ. வெ. ராமசாமி இவருக்குக் கைவல்யம் என்றப் பெயரை இட்டார். தந்தையுடன் 19 அகவையில் தூத்துக்குடிக்கு பிழைப்புத் தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கியிருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்தபின் கைவல்யம் ஒரு சிறு அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் ஆசிரியர் படிப்பு முடித்து தூத்துக்குடியிலேயே ஆசிரியரானார். நகராட்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இவரது மனைவி சாந்தி , மகள் அமர்த்தா பிரீதம் , மகன் அரவிந்தன். இளம்வயதில் மரபுக்கவிதைகள் எழுதிவந்த கைவல்யம் தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீனக் கவிதைகளைப் புனையத் தொடங்கினார். குறுகிய காலம் கேரளத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த இயற்கைக் காட்சிகளினால் ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி நிறைய கவிதைகள் எழுதினார். இக் காலகட்டத்தில் அவர் சுந்தர ராமசாமி தன் வீட்டு மாடியில் நடத்திவந்த காகங்கள் என்ற இலக்கிய உரையாடல் அமைப்பில் நெடுந்தொலைவுப் பயணம் செய்து வந்து கலந்துக் கொள்வதுண்டு. கைவல்யத்தின் முதல்கவிதைத் தொகுப்பு "குளித்துக் கரையேறாத கோபியர்கள்" 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு "மின்னற்பொழுதே தூரம்" பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்து கவிதை வாசகர்களால் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து 'மாற்றப்படாத வீடு' பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது. பெரும்பாலான கவிதைகளை தன் நண்பர்களான முத்துப்பாண்டி, லெனா குமார், காஞ்சனை சீனிவாசன் ஆகியோரின் உதவியுடன் அவரே வெளியிட்டு வந்தார். பின்னர் அவரது கவிதைகளைத் தமிழினி பதிப்பகம் வெளியிட தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு அவரது கவிதைகளுக்கான முழுத்தொகுப்பு "தேவதேவன் கவிதைகள்" என்ற பெயருடன் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தேவதேவன் "கவிதைபற்றி" என்ற உரையாடல் நூலையும் "அலிபாபவும் மோர்ஜியானாவும்" என்ற நாடக நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். 1970-80 களில் தூத்துக்குடியில் கலைப்படங்களுக்கான திரைப்படச் சங்கம் ஒன்றையும் நடத்திவந்தார். விஷ்ணுபுரம் விருது திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, தேவமகள் அறக்கட்டளை விருது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கழக விருது விளக்கு விருது தூத்துக்குடி சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது "திறனாய்வு" தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். "நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து" என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழினி வெளியீடாக ஜெ.ப்ரான்ஸிஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனைப்பற்றி "யாதும் ஊரே யாதும் கேளிர்" என்ற செய்திப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டவை. இயற்கைசார்ந்த படிமங்களை உள்ளொடுங்கிய தத்துவ நோக்குடன் சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும் இலக்கின்மையையும் விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமான கருணையையும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். கவிதைக்கு புற அரசியல் தேவையில்லை, கவிதை தன்னளவிலேயே அரசியல்செயல்பாடுதான் என்று வாதிடும் தேவதேவன் தமிழக தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மிகுந்த உணர்ச்சிப் பங்குடன் கண்டனக் கவிதைகளை எழுதியுள்ளார். தி. க. சிவசங்கரன் தி. க. சிவசங்கரன் ("Thi. Ka. Sivasankaran", 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014), மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார். நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார். "டிசம்பர் 14,1964இல் வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு, தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் இணைந்தார்.  இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சோவியத் செய்தித்துறையிலும், மாலை வேளைகளில் ‘தாமரை’யின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்." "1965 முதல் 1972 வரை 'தாமரை'யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். 'வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்' என பல சிறப்பிதழ்களை கொண்டு வந்தார். அதே போல், சோவியத் செய்தித்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து 1990இல் ஒய்வு பெற்றார்." தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். 'விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' நூலுக்காக 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. காரல் மார்க்சின் இல்வாழ்க்கை - உண்மைப் பிரசுரம் , 1951 வசந்த காலத்திலே - (ரஷ்ய நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951 எது நாகரீகம் ?  கலாசாரத்தைப் பற்றி ( மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் ) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951 சீனத்துப் பாடகன்  (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951 போர்வீரன் காதல் (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951 குடியரசுக் கோமான் (மாக்சிம் கார்க்கி கட்டுரை) - ரவி பிரசுரம், 1952 தி.க.சி.யின் திறனாய்வுகள் - கிறிஸ்துவ இலக்கியச் சங்கம் , 1993 விமர்சனத் தமிழ் - அன்னம், சிவகங்கை , 1993 விமர்சனங்கள் , பேட்டிகள், மதிப்புரைகள் - விஜயா பதிப்பகம் , 1994 மனக்குகை ஓவியங்கள் - பூங்கொடி பதிப்பகம் . 1999 தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001) கடல் படு மணல் - நிவேதிதா புத்தகப் பூங்கா - 2010 காலத்தின் குரல் - ஆவாரம்பூ வெளியீடு , 2012 தி..க.சி என்னுமொரு திறனாய்வுத் தென்றல் - மு. பரமசிவம்  - நர்மதா பதிப்பகம் - 1999 தி.க.சி என்றொரு மனிதன் - (தொ.ஆ)- அ .நா .பாலகிருஷ்ணன் - ஞானியாரடிகள் மன்றம் , 2004 தி.க.சி நேர்காணல்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார் , உயிர் எழுத்து , 2011 பிரிய சகோதர - (தொ .ஆ ) சுகதேவ் & சீனி குலசேகரன் - கலைஞன் பதிப்பகம் , 2012 தந்தமைத் தவழும் வளவு வீடு - தி. சுபாஷினி , மித்ராஸ், 2012 நிழல் விடுத்து நிஜத்திற்கு (கடிதத் தொகுப்பு) குள்ளக்காளிப்பாளையம் கே .  பாலசுப்பிரமணியம் , ஆவாரம்பூ வெளியீடு,  2013 தி.க.சி நாட்குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார்,  சந்தியா பதிப்பகம், 2014 தி.க.சி நாடகங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017 தி.க.சி திரைவிமர்சனங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017 தி.க.சி கவிதைகள் ¬- (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017 நினைவோடைக் குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், 2018 தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன. சிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார். மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர். எம். வேதசகாயகுமார் எம். வேதசகாயகுமார் நவீனத்தமிழின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர். 1949 ல் நாகர்கோயில் அருகே ஆரல்வாய்மொழி ஊரில் பிறந்தவர். இவரது அப்பா முத்தையா ஒரு புகழ்பெற்ற சித்த மருத்துவர். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேதசகாயகுமார் கேரளத்தில் சிற்றூர் கலைக்கல்லூரியில் முதுகலை தமிழ் படித்தார். நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின் சித்தூர் கலைக்கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற பேராசிரியரான ஏசுதாசன் இவரது ஆசிரியராக இருந்தார். ஏசுசுதாசனின் வழிகாட்டுதலில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கலைக்கல்லூரியில் முனவைர் பட்ட ஆய்வை முடித்தார்(1985). இவரது ஆய்வேடு 'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு' தமிழில் முக்கியமான ஒரு திருப்புமுனையாகக் கருதபப்டுகிறது. முதன்முதலாகப் புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் கண்டெடுத்து காலவரையறை செய்து பட்டியலிட்டார். ஆவணப்பதிவுகள் முறையாகச் செய்யபப்டாத தமிழ்ச் சூழலில் அன்று இதற்குப் பத்து வருடகால ஆய்வு தேவைப்பட்டது. இவ்வாய்வு நூலாகத் தமிழினி வெளியீடாக வெளிவந்துள்ளது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வேதசகாய குமார் இப்போது பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். எழுபதுகளில் கொல்லிப்பாவை சிற்றிதழை ராஜமார்த்தாண்டனுடன் சேர்ந்து நடத்தினார். 1979 ல் வேதசகாயகுமார் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை வரலாறு' தமிழ் சிறுகதைகளைப் பற்றிய திறனாய்வு அடிப்படையிலான வரலாற்று நூல். க.நா.சுப்ரமனியம் மற்றும் சுந்தர ராமசாமி வளர்த்தெடுத்த இலக்கிய மதிப்பீடுகளை இந்நூலில் வேதசகாய குமார் வரலாற்று ஆயுதமாகக் கொள்கிறார். இது திறனாய்வில் ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் ' தற்கால இலக்கியம் ஓர் வாசகப்பார்வை' 'புனைவும் வாசிப்பும்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார். நேரியப் பார்வையும் தாக்கும் தன்மை கொண்ட நடையும் உடையவர் வேதசகாய குமார். ஆகவே இவரது இலக்கியக் கருத்துக்கள் எப்போதும் விவாதத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. கால்டுவெல், அ.மாதவையா ஆகியோரைப் பற்றியும் விரிவான ஆய்வுகள்செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வேதசகாயகுமார் இலக்கியப்படைப்பை கூர்ந்து ஆராய்ந்து வரலாற்றுப்பார்வையுடன் திறனாய்வு செய்பவர். ஐரோப்பிய இடலை ஐரோப்பிய இடலை ("Olea europea") என்பது நடுநிலக் கடல் வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை. ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. "Olea europaea" என்றால் இலத்தீன் மொழியில் "ஐரோப்பிய இடலை" என்று பொருள். ஐரோப்பாவில் காணப்படும் இடலை இனம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய இடலை இனத்தில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன. ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஐக்கிய அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ( "President of the United States of America", POTUS)அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். கூட்டரசின் செயலாக்கப் பிரிவின் தலைவராக உள்ளார். ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதற் பெரும் படைத்தலைவராகவும் உள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் உலகில் மிகுந்த செல்வாக்குடைய நபராகக் கருதப்படுகின்றார். உலகின் மிகுந்த அணுசக்தி ஆயுதங்களைக் கொண்ட மிகுந்த செலவிடப்படும் படைத்துறையின் முதற் பெரும் தலைவராகவும் பெயரளவில் மற்றும் மெய்யான மொ.உ.உ அடிப்படையில் மிகப்பெரும் பொருளியல் நிலையைக் கொண்ட நாட்டின் அதிபராகவும் தற்காலத்தில் உலகில் உள்ள ஒரே வல்லரசின் தலைவர் என்பதாலும் இவ்வாறு கருதப்படுகின்றார். ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு வன்மையாகவும் மென்மையாகவும் மிகுந்த செல்வாக்கு உள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் சட்டவிதியின்படி ஐக்கிய அமெரிக்க நாட்டின் செயலாக்க அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கூட்டரசு சட்டத்தை செயற்படுத்தவும் கூட்டரசு அதிகாரிகள், பேராளர்கள், கட்டுப்பாட்டு ஆணையங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் மேலவையின் பரிந்துரையின்படியும் ஒப்புமையுடனும் வெளிநாடுகளுடன் இறுதி உடன்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரமுள்ளது. தவிரவும் தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கிடவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும் தள்ளி வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமது கட்சி சார்பில் சட்டமன்ற அலுவலை முடிவு செய்யும் பொறுப்பும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை வழிநடத்தும் பொறுப்பும் இவருக்குள்ளது. ஐக்கிய அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் கூட்டரசின் பங்காற்றலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. குடியரசுத் தலைவர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் வாக்காளர் குழு மூலமாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்; தேசிய அளவில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இரு கூட்டரசு பதவிகளில் இதுவொன்று, மற்றது ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கானதாகும். 1951இல் இயற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி மூன்றாம் முறை தொடர்ந்து முழுமைக்கால குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் முன்னதாக குடியரசுத் தலைவராகவோ, மற்றொருவர் பதவிக் காலத்தில் இரண்டாண்டுகளுக்கு மேலாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தாலோ ஒருமுறைக்கு மேலாக போட்டியிடுவதை தடை செய்கின்றது. இதுவரை 56 முழு நான்காண்டுப் பதவிக் காலங்களில் 43 நபர்கள் (கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாகவின்றி இருமுறை தனித்தனியாக இருந்ததை கணக்கிலெடுத்து) 44 பதவிகளில் இருந்துள்ளனர். சனவரி 20, 2009இல் பராக் ஒபாமா 44வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்;இவரே தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்குகின்றார். நவம்பர் 6, 2012இல் இவர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்; 57ஆவது குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தில் உள்ள இவரது பதவிக்காலம் சனவரி 20, 2017இல் முடிவடைகின்றது. அரசியலமைப்பின் இரண்டாவது சட்டவிதியின் முதல் பிரிவு, ஐந்தாம் உட்கூறு இப்பதவிக்கானத் தகுதிகளை விவரிக்கின்றது. குடியரசுத் தலைவர்: ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ("George Herbert Walker Bush", சூன் 12, 1924 - நவம்பர் 30, 2018) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார். கர்நாடகம் தமிழ்நாடு பிரச்சினைகள் காலக்கோடு கர்நாடகம் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள மாநிலமாகும். கர்நாடகம் தமிழ்நாட்டைப் போலவே திராவிட மொழி பேசும் திராவிட பண்பாடு கொண்ட மாநிலமாகும். அருகிலேயே இருப்பதால் கர்நாடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இருப்பினும் மாநிலங்களை கடந்து பாயும் ஆற்று நீரை பகிர்விடுதவில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலான பிரச்சினை இருக்கிறது. மேலும், கர்நாடகத்தில் குறிப்பிடத்தக்க தமிழர்கள் வாழுகின்றார்கள். பெர்ங்களூரில் தமிழர்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலைமையில் வாழுகின்றார்கள். இந்த நிலைமை பூர்வீகக் கர்நாடகக் குடிகளில் வாய்ப்புக்களு எதிராக அமைவதாக சில தீவர கன்னட செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். கர்நாடக திரைப்படத்துறை தேக்கம் கொண்டுள்ளதால், அதற்கு தமிழும் இந்தி திரைப்படத்துறைகளூம் காரணம் என்றும் இவர்கள் கருதுகின்றார்கள். இப்படியான பிரச்சினைகளால் இரண்டு மாநிலங்களும் அரசியல் ரீதியாக மோதிக்கொள்கிறார்கள். இது சில வேளைகளில் வன்முறையாகவும் மாறுவதுண்டு. சுல்பிக்கார் அலி பூட்டோ சுல்பிக்கார் அலி பூட்டோ ("Zulfikar Ali Bhutto", உருது:ذوالفقار علی بھٹو, சிந்தி: "ذوالفقار علي ڀُٽو", ) (ஜனவரி 5, 1928–ஏப்ரல் 4, 1979) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும், அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையில் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவியவர். இவரது மகள் பெனாசிர் பூட்டோ இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராக இருந்து டிசம்பர் 27, 2007 இல் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். சுல்பிக்கார் அலி பூட்டோ ஐக்கிய அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி கற்றவர். இவர் 1979 இல் தனது அரசியல் எதிரியை கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்னும் நூல், பி. எல். சாமி என்கிற பி. லூர்துசாமி எழுதி, 1976ஆம் ஆண்டு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசைத்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் பறவைகளைப் பற்றி கூறப்பட்டுள்ள செய்திகளைத் திரட்டி, அவை பற்றிய தன்னறிவையும், தற்கால மக்களின் நேரடியான அறிவையும், ஆங்கில, பிற மொழி நூல்களில் கூறியுள்ள குறிப்புகளையும் ஒப்பிட்டுத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பறவைகளின் தோற்றம், வாழிடங்கள், உணவு, வாழ்முறைகள் முதலியன பற்றியஅரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. பறவையினங்களின் தமிழ்ப்பெயர்களும், அவற்றிற்கான ஆங்கிலப் பெயர்களும், அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்களும் தந்துள்ளார். சங்க இலக்கியத்தில் காணப்படும் மொத்தம் 62 பறவைகளைப் பற்றியதே இந்நூல். மொத்தம் 387 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 61 தமிழ் நூல்களை மேற்கோள்களாகவும், 26 ஆங்கில நூல்களைத் துணைநூல்களாகவும் சுட்டியுள்ளார். இதே நூல் பின்னொரு பதிப்பாக "சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம்" என்னும் தலைப்பில் வெளியாகியது. இந்தப்பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. இந்நூலில் மொத்தம் 38 உள்பிரிவுகள் உள்ளன. இதுவே தமிழில் பறவைகளைப் பற்றி, சங்க இலக்கியச் செய்திகளையும் தற்கால பறவையியல் கருத்துக்களையும் சேர்த்துத் தரும் முதல் நூல். பி. லூர்து சாமி பி. எல். சாமி என்றும் பி. லூர்து சாமி (பிறப்பு: 1925 இறப்பு:??) என்றும் அழைக்கப்படும் இவர் தமிழில் பல கட்டுரைகளையும், மூன்றுக்கும் மேலான நூல்களையும் எழுதியவர். செடியினவியல், விலங்கியல், பறவையியல் ஆகிய துறைகளில் இவர் தமிழில் எழுதிய நூல்கள் முதன்மையானவை. இவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியத்தின் முதல் முதன்மைப்பதிப்பாசிரியர் ஆவார்.அதன் முதல் தொகுதி இவரது பொறுப்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கீழ்வாலை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை என்பதை முதன்முதலில் இனங்கண்டவர்.இது பற்றிய கட்டுரையை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழ்க்கல்சர்" இதழில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் "கீழ்வாலை எழுத்துகள்-ஒரு விளக்கம்" என்ற குறுநூலையும் எழுதினார். இது தவிர இவர் சங்க இலக்கியத்தில் நீரின விளக்கம் என்னும் நூலையும் உருவாக்கி வந்தார். வெளியான செய்தி கிடைக்கவில்லை. தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு அல்லது பலன்களுக்கு எதிராக சரி என்றோ அல்லது பலன் தரும் என்றோ நம்புவதை எனலாம். தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை கட்டுரை அத்தகைய மூடநம்பிக்கைகளை அடையாளம் காட்டும், அவை ஏன் மூடநம்பிக்கைகள் என்பதை விளக்கும். மேலும், தமிழர் சமூகத்தின் மூடநம்பிக்கைகளின் வரலாற்றையும் குறிக்கும். மூட நம்பிக்கைகள் மருந்துப்போலி (Placebo) மருந்துகள் போல் சில விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவை நேரடியான தமது மீவியற்கை விளைவுகளை என்றும் நிரூபித்ததில்லை. "விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை." தாகம் மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது. உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். ஈரோடு மகேஸ் ஈரோடு மகேஸ் ஒரு மேடை நகைச்சுவையாளர். இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். தொடர்ந்து நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்ல வல்லவர். சிந்திக்கக்கூடியவாறு சொல்வது இவரின் சிறப்பு. ஈரோடு மகேஷ் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டில் பிறந்தார் . பெற்றோர் திரு. சந்திரசேகரன் ; திருமதி .மீனாட்சி ஆவார்கள் . பள்ளிப் படிப்பை ஈரோட்டில் உள்ள ரயில்வே காலனி நகரவை மேல் நிலைப் பள்ளியில் பயின்றார் . தமிழ் இள நிலை பட்டப் படிப்பை மயிலாடுதுறை ஆதினக் கல்லூரியிலும் தமிழ் மேல் நிலை பட்டப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யிலும் பயின்றார் . தற்பொழுது தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பைத் தொடர்கிறார் . சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூல், பி. எல். சாமி (பி. லூர்துசாமி) என்பவர் எழுதி, 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு் மாதம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசைத்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இதன் முதற்பதிப்பு டிசம்பர் மாதம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல்பதிப்பின் தலைப்பு "சங்க இலக்கியத்தில் நிலைத்திணை விளக்கம்" என்று இருந்தது. இந்நூலின் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் செடிகொடிகளைப் பற்றி கூறப்பட்டுள்ள செய்திகளைத் திரட்டி, அவைபற்றிய ஆசிரியரின் தன்னறிவையும், தற்கால மக்களின் நேரடியான அறிவையும், ஆங்கில மற்றும் பிற மொழி நூல்களில் கூறியுள்ள குறிப்புகளையும் ஒப்பிட்டுத் தொகுத்து இந்நூலை ஆகியுள்ளார். செடிகொடிகளின் தோற்றம், இலை, பூ, காய், கனி விதைகள், வாழிடங்கள், நில-நீர்ச் சூழல்கள் பற்றிய அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. செடிகொடிகளின் தமிழ்ப்பெயர்களும், அவற்றிற்கான ஆங்கிலப் பெயரும், அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்களும் தந்துள்ளார். இந்நூலில் மொத்தம் 21தலைப்புகளில் உள்பிரிவுகள் உள்ளன. இதுவே தமிழில் செடிகொடிகளைப்பற்றி, சங்க இலக்கியச் செய்திகளையும் தற்கால செடியியல் கருத்துகளையும் சேர்த்துத் தரும் முதல் நூல். இந்நூலில் கடைசி தலைப்பாக தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள செடி நோய்கள் பற்றியும் இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள தலைப்புகள்:
உகாதி உகாதி அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை "குடிபாட்வா"(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் "சேதி சந்த்" எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாள் ஆகும். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும். உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக "உகாதி பச்சடி" செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் "பேவு பெல்லா" (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர். தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாது போயினும், இனிப்பு வகைகள் முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர். புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகம் எஃப். எஸ். யூ. (FSU) என்று பொதுவாக அழைக்கப்படும் புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகம் ("Florida State University"), ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்பது தமிழக மக்களின் குறிப்பாக தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்வைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்கான மொத்தச் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 13.34 பில்லியன் ரூபாய்களில் 12.4 பில்லியன் ரூபாய்களை ஜப்பானின் பன்னாட்டு கூட்டுறவு வங்கி வழங்க இருக்கிறது. மீதமான செலவை தமிழ்நாடு அரசு பொறுப்பேற்கும். இத்திட்டத்திற்கான அடிக்கல்லை தர்மபுரி, ஒகேனக்கலில் பெப்ரவரி 26, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி நாட்டினார். இத்திட்டத்தினால் மூன்று நகராட்சிகளில் உள்ள 6,755 குடிமனைகள், 17 ஊராட்சிகள், மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் புளோரைடு அதிகமாக இருப்பதை குறைத்து நீர் தூய்மைபடுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.. இத்திட்டத்திற்கு கர்நாடக பாஜக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். கர்நாடக முதல்வர் எடியூரப்பா போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இத்திட்டம் நடைபெறும் ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்பது அவர்கள் வாதம். யமாரி யமாரி அனுத்தர யோக தந்திரத்தில் ஒரு தியான மூர்த்தி ஆவார். "யமாரி" என்று சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "யமனின் எதிரி" என்று பொருள். மூன்று விதமான யமாரிகள் உள்ளனர்: 1814 1814 (MDCCCXIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளுள் ஒன்று. காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன. பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் "பாவங்களை ஒழித்தல்" என்பதாகும். பாபநாசம், இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் அமைவிடம் 10.9333°N 79.2833°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் உள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,548 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,628 ஆண்கள், 8,920 பெண்கள் ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 89.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.79%, பெண்களின் கல்வியறிவு 84.82% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 10.16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார். கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார். அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார். அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். பாபவிநாசம் என்ற பெயர் நாளடைவில் பாபநாசம் என்று மருவி விட்டது. திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார். ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும். பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் பாபநாசம் தொடர்வண்டி நிலையம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ளது. பாபநாசம் நகரின் எல்லைக்குள் மூன்று அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் உள்ளன. அவை பண்டாரவாடை, அய்யம்பேட்டை மற்றும் பசுபதிகோயில். முன்பதிவு நேரம் புளோரிடா பல்கலைக்கழகம் புளோரிடா பல்கலைக்கழகம் ("University of Florida"), ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இசுடெஃபான் மார்பெரி இசுடெஃபான் சேவியர் மார்பெரி (ஆங்கிலம்:Stephon Xavier Marbury, பிறப்பு - பெப்ரவரி 20, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ யோர்க் நிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். கென்டக்கி பல்கலைக்கழகம் கென்டக்கி பல்கலைக்கழகம் ("University of Kentucky"), ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஆன்ட்ரே இக்வொடாலா ஆன்ட்ரே டைலர் இக்வொடாலா (ஆங்கிலம்:Andre Tyler Iguodala, பிறப்பு - ஜனவரி 28, 1984) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பிலடெல்பியா 76அர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் ("University of Memphis"), ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரத்தில் அமைந்த அரசு சார்புப் பல்கலைக்கழகம் ஆகும். விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் - மேடிசன் ("University of Wisconsin-Madison"), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். மடு மரியாள் ஆலயம் மடு அன்னை ("Shrine of Our Lady of Madhu") கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வர். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை ஏப்ரல் 4, 2008 இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நவம்பர் 20, 1999 இல் மடு தேவாலயத்தை நோக்கி எறியப்பட்ட எறிகணை வீச்சினால் அங்கு தங்கியிருந்த 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் வரையில் படுகாயமடைந்தனர். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே (ஜனவரி 11, 1953 - ஏப்ரல் 6, 2008) இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர். கொழும்புச் செட்டிகள் என்னும் இனக்குழுவைச் சேர்ந்தவர். ஜெயராஜ் நீர்கொழும்பு, கொச்சிக்கடை வெலிகனப் பகுதியில் பிறந்தார். பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு 1970 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கிய அவர், 1984 ஆம் ஆண்டு கந்தானை தொகுதியில் அக்கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1989, 1994, 2000, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர், கத்தோலிக்க விவகார அமைச்சர் , துறைமுக அதிகாரசபை அமைச்சர், பெருந்தெருக்கள் அமைச்சர் எனப் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். சட்டத்தரணியான இவர், சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய திறமையைக் கொண்டவர். இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் முக்கிய ஒருவராக இடம்பிடித்தார். 55 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர். 2008, ஏப்ரல் 6 இல் கம்பகா மாவட்டம், வெலிவேரிய என்ற இடத்தில் இடம்பெற்ற சிங்களப் புதுவருட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒரு மரதன் ஓட்டப் பந்தயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வின்போது தற்கொலைக் குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டு 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என இலங்கை பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது. முதுமையடைதல் மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர் ("ageing"). இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது. முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா மிக மோசமான கொடுமையாக பலராலும் பாக்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளை கூட்ட பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரை முதுமைப்படுதலை தடுக்க பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை. முதுமைப்படுதலால் உடலின் செயல்பாடு குன்றும். திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றும். மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் உட்படும். இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது. வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமூக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து சுவாசிலாந்தில் 32.6 ஆண்டுகள் தொடங்கி, யப்பானில் 81 ஆண்டுகள் வரை என வாழ்நாள் எதிர்பார்ப்பு வேறுபடுகிறது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு கூடியே வருகிறது. இடைக்காலத்தில் 35 வயதுக்குட்பட்டே வாழ்நாள் எதிர்பார்ப்பு இருந்தது, இன்று இது இரண்டு மடங்காக கூடி உள்ளது. இருப்பினும் பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாள் கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே. நாம் ஏன் முதுமை அடைகிறோம் என்பது பற்றி பல கோட்பாடுகள் இருக்கின்றன. இவை தனித்தனியே முழு விளக்கத்தையும் தருவதில்லை. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் சாரம். இந்தக் கோட்பாட்டைப் பற்றி Theodore. C. Goldsmith Theories of Biologcal Aging என்ற ஆய்வறிக்கையில் விளக்கம் காணலாம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. இதனால் ஒரு உயிரினம் தனது உடல் வளங்களை இளம்பருவத்தில் குவியப்படுத்துகின்றது. குறிப்பாக உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. இதனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து, உயிர் துறக்கிறது. மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது. பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. முதுமைக்கு ஒரு விளக்கம் Cellular Senescence theory. தற்போது இருக்கும் தகவல்களின் படி உடலில் இருக்கும் கலன்கள் எழுந்த மானமாக ஆக அல்லது தம்மைப் படி எடுக்கும் பொழுது சிறு பிழைகள் விட வாய்ப்பு உண்டு. அந்த பிழைகள் நாளடைவில் சேர்ந்து உடலை வலு இழக்கச் செய்கின்றன. இவை தம்மைப் புதிப்பிக்கும் அல்லது படி எடுக்கும் முறை நாளடைவில் சீர் குறைந்து, இறுதியாக சாவுக்கு இட்டுச்செல்கிறது. கலன்கள் ஆற்றலை உற்பத்தி செய்யும்பொழுது நிலையற்ற உயிர்வளி மூலக்கூறுக்களையும் (oxygen molecules) உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையற்ற மூலக்கூறுகளை free radicals என்பர். இந்த நிலையற்ற மூலக்கூறுகளில் ஒரு இலத்திரன் மேலதிகமாக இருக்கும். இவை பிற மூலக்கூறுகளிலும் சேர்ந்து, அவற்றை முறையாக இயங்க விடுவதில்லை. Damage to DNA, protein cross-linking போன்றவற்றுக்கு இதுவே காரணம். காலப்போக்கில் இத்தகைய தவறுகள் குவிந்து முதுமைக்கு காரணமாகின்றன. மோகன்லால் மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (பிறப்பு 21 மே 1960), மோகன்லால் (), இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை பிலிம்பேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டுபத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே. மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது .. தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் சனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.இந்திய அரசு 2019 ஆண்டில் இருக்கு பத்ம பூசன் விருதினை வழங்கி கெளரவித்தது. மோகன்லால் கேரளத்திலுள்ள பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் - சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் 'LP' பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் ஸ்கூலில், தனது படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது; பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், . பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் " ப்ரியதர்ஷன் ","M.G.ஸ்ரீகுமார் " மற்றும் "மணியன்பிள்ளராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள். Mohanlal: filmography மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர் "மஞ்சில் விரிஞ்ச பூக்கள்" என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தார். அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி ஐ.வி சசி இயக்கிய படமான "உயரங்களில்" என்ற படத்தில் நடித்தார், அதன் கதை ஏமாற்றுவது மற்றும் துரோகம் இழைத்தலை கருத்தாகக் கொண்டது, இது அவருடைய சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதற்குப்பிறகு அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான "பூச்சைக்கு ஒரு மூக்குத்தி" என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். 1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது.. படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்திக் கொண்டார். 1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் "டி.பி. பாலகோபாலன் எம்.ஏ." என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த "ராஜாவின்டே மகன்" என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதி செய்தது. அதே வருடத்தில் இவர், "தாளவட்டம்" என்ற படத்தில் காப்பிடத்தில் இருக்கும் மனநிலை குன்றியவராக நடித்திருக்கிறார், "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" படத்தில் பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும் , எம்.டி. வாசுதேவன் நாயரின் "பஞ்சாக்னியில்" பத்திரிகையாளர் வேடத்திலும், "நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்" படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், "காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் " படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாக, என பல்வேறுவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்தார். எழுத்தாளர் - இயக்குனர் ஜோடியாக திகழ்ந்த ஸ்ரீநிவாசன் ,சத்யன் அந்திக்காடு ஆகியோர் போன்ற சமூக பொறுப்போடு, சமுதாய சீர்கேடுகளை நையாண்டி செய்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடன், இணைந்து பணியாற்றிய படம் "நாடோடிக்கட்டு", இதில் வேலையில்லா இளைஞனாக நடித்தார். "வரவேல்பு" என்ற படத்தில் இவர் அரபு நாட்டில் இருந்து திரும்பி வரும் நாயகனாக நடித்தார், பேராசை கொண்ட உறவினர்களும் , பகைமை உணர்வுடன் நடத்தும் நாட்டுநிலவரத்தைக் கண்டு அஞ்சும் தொழில்முனைவோர் வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ப்ரியதர்ஷனின் இயக்கிய சித்ரம், கிலுக்கம் படங்களில் வசீகரமான காதல் கதாப்பாத்திரங்களில் நடித்து இளம் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமானார். இத்திரைப்படங்கள் இசைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கதாநாயகர்கள் வழக்கமான கதாப்பாதிரங்கலையே ஏற்று நடித்து வந்த நேரத்தில் "தூவானத்தும்பிகள்" என்ற படத்தில் இரு பெண்களிடம் காதல் கொண்டு அவதிப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் நாயகியிடம் அடி வாங்கிய மறு கணமே இன்னொரு பெண்ணிடம் காதல் வசப்படும் கோமாளி நாயகனாக இவர் நடிக்கத் துணிந்தார். "அம்ரிதம்கமைய" என்ற படத்தில் இவர் கல்லூரியில் நையாண்டி செய்து அறியாமல் கொன்று விட்ட ஒரு சிறுவனின் வீட்டிற்கே அவர் கடைசியில் வந்துசேரும் கதாப்பாத்திரம் . "தாழ்வாரம்" என்ற படம் இந்த கால கட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படமாகும். எழுத்தாளர் "லோஹிததாஸ்" மற்றும் இயக்குனர் "சிபி மலையில்" ஆகியோர் இணைந்து ஜோடியாக தயாரித்த படங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான மனம் கவரும் பாத்திரங்களைப் பெற்றுத்தந்தன. "கிரீடம்" என்ற படத்தில் சேது மாதவன் எனும் ஒருவன் போலீஸ்காரனாக வேண்டும் என்ற கனவு கண்டு கடைசியில் குற்றவாளியாக கூண்டில் நிற்பவனாக நடித்திருந்தார், இது அவருக்கு சிறப்பு நடுவர் குழு விருதைப் பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த வருடத்தில், "பாரதம்" என்ற படத்தில் இவர் ஒரு மரபார்ந்த பாடகர் வேடத்தில் நடித்தார், இதில் பாடகரான தன் சகோதரன் மீது பொறாமை கொல்வதும், அவருடைய இறப்பால் மனம் வெதும்பும் வேடத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 90 ஆம் ஆண்டுகளிலும் இவர் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார், "ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்" போன்ற மனதைக் கொள்ளை கொள்ளும் (மனோரஞ்சிதமான) படங்கள் வெளியானது, இதில் இவர் இஸ்லாமியராக நடித்தார், அதில் நம்பூதிரி வேடம் பூண்டு ஒரு ராஜவம்சத்தினனைக் கொல்லத்துணிகிறார். இந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றியடைந்த இதர திரைப்படங்கள் "மிதுனம்" , "மின்னாரம்" , "தேன்மாவின் கொம்பத்து" போன்ற படங்கள் 80 ஆம் ஆண்டுகளைப்போலவே மரபு சார்ந்த நல்ல திரைப்பட கதைகள் கொண்டவையாகவும், நல்ல பாத்திர அமைப்பு பெற்றவையாகவும் திகழ்ந்தன. "தேவாசுரம்" , ரஞ்சித் எழுதி ஐ.வி சசியின்இயக்கத்தில் உருவானது, மத்திய கேரளாவில் இராணுவ ஆட்சியின் காலத்தை சுட்டி காட்டும், அப்படத்தில் மோகன்லால் திமிர் பிடித்த, பணக்கார முரட்டுத்தனம் நிறைந்த வாலிபனாக தோன்றி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக சஞ்சலமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அடக்கமானவராக மனம் மாறும் பாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பத்ரனின் "ஸ்படிகம்" என்ற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் புதுமையாக அமைந்து மாபெரும் வெற்றி படமானது. சிறந்த படங்கள் குறைவாக வந்துக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் "மணிசித்திரத்தாழ்", போன்ற கலை மற்றும் வியாபார ரீதியான வெற்றிப்படங்கள் வெளிவந்தன "மனிச்சித்திரத்தாழ்" படத்தில் நடித்ததற்காக " சோபனா " சிறந்த நடிகிக்கான தேசிய விருதைப்பெற்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கையின் இந்த கால கட்டத்தில் கேரளாவில் மோகன்லால் அடைந்த அளவற்ற மக்கள் செல்வாக்கின் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் அவரை திரைப்படங்களில் எதற்குமே அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத, நிஜ வாழ்க்கையை மிஞ்சும் கதாநாயகனாக பல படங்களில் நடிக்க வைத்து வியாபாரமாக்கினர். அந்த நாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி "ஆறாம் தம்புரான்" , "நரசிம்ஹம்" , ராவணப்பிரபு, "நரன்" போன்ற திரைப் படங்களைத் தயாரித்தனர். அவை யாவும் வெற்றிப்படங்களாகவே திகழ்ந்தன. ஆரம்பத்தில் அவை புதுமையாக காணப்பட்டாலும், காலப்போக்கில் இவ்வாறான படங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமலும், மோகன்லாலை சுற்றியே வடிவமைந்ததாகவும் பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. 90 களின் இறுதியில் வெளிவந்த இயக்குநர் ப்ரியதர்ஷனின் "காலாபானி" இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் அந்தமான் தீவில் உள்ள குறுகிய சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்பட்ட கைதிகளைப்பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது), லோஹிததாஸ் அவர்களின் "கண்மடம்" படமும் இவர் நடித்த சில பெயர்பெற்ற படங்களாகும். இந்த நேரத்தில் தான் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான " மணிரத்னம் " இயக்கத்தில் தமிழ் மொழிப்படமான "இருவரில்" நடித்தார். இந்தப் படத்தில் மோகன்லால் அவரது அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் "எம்ஜிஆர்"(தமிழக முன்னாள் முதல்வர்) அவர்களின் வேடத்தில் நடித்தார் .பின் இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான "வானப்ரஸ்தம்" என்ற படத்தில், தமது அடையாளத்தையே இழந்த கதகளி நாட்டிய விற்பன்னராக வேடம் புனைந்தார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் உலக அளவில் அவரது திறமையை அறியவைத்த முதல் படமாக இது திகழ்ந்தது. கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் பிரிவில் இப்படம் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது, அவரது நடிப்பு பல திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது.. 2002 ஆம் ஆண்டில், மோகன்லால் அவரது முதல் பாலிவுட் படமான, "கம்பெனி" யில் நடித்தார், இப்படம் இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியில் சிறப்பான வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில், இவர் நடித்த "தன்மாத்ரா" ("மொலிக்யுள்") என்ற படத்தில், "அல்செய்மர்ஸ் " நோயால் (முதுமை வியாதி) அவதியுறும் ஒரு பாத்திரத்தின் நடிப்பு அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகாருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அவரது இரண்டாவது பாலிவுட் திரைப்படம் "ராம் கோபால் வர்மா கி ஆக்" , இப்படம் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப்படமான "ஷோலே " படத்தின் மறு தயாரிப்பாகும் மேலும் அதில் சஞ்சீவ் குமார் அவர்கள் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றினார். "பரதேசி "என்ற படத்தில் வலியகத்து மூசா என்ற வேடத்தில் நடித்ததற்காக மோகன்லால் அவர்களுக்கு கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரதேசி என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு கிடைக்கவேண்டிய சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லால் அவர்கள் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் இழந்தார். 2009 ஆம் ஆண்டில் மோகன்லால் டாக்டர் கமல் ஹாசனுடன் தமிழ் படமான உன்னைப்போல் ஒருவனில் நடித்தார். அவரது நடிப்பை தமிழ் ரசிகர்கள் மிகவும் போற்றினர். 2010 ஆம் ஆண்டை இவர் மிகவும் நல்ல முறையில் துவங்கினார், ஓர் உண்மையான குடும்பக் கதையை சித்தரிக்கும் குடும்பப் படமான "இவிடம் ஸ்வர்கமாணு" என்ற ரோஷன் ஆண்ட்ர்யூஸ் இயக்கிய வெற்றிப் படத்தில் இவர் நடித்துள்ளார். இதர இந்தியத்திரைப்பட நடிகர்களைப் போல மோகன்லால் அவர்களுக்கு திரைப்படத்திற்கு முந்தைய நாடக அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். நியூ டெல்லியில் நேஷனல் தியேட்டர் பெஸ்டிவல் என்ற பெயரிலான தேசிய நாடக விழாவில் பங்குபெற்ற ஒரு நாடகமான "கர்ணபாரம்" என்ற சமஸ்க்ரித மொழி நாடகத்தில் அவர் கர்ணன். (மகாபாரதம் எனப்படும் இந்திய புராண இதிகாசத்தில் வரும் ஒரு பாத்திரம்) வேடத்தில் நாடகமேடையில் முதன்முதலாகத் தோன்றினர். இந்த நாடகம் குருக்ஷேத்திரத்தில் நடக்கவிருக்கும் போரின் முந்தைய நாள் அன்று, கர்ணனின் மனதில் காணப்படும் சஞ்சலத்தை, அவருடைய கடந்த கால நிகழ்வுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி அவர் நினைக்கும் பொழுது அவர் படும் மன உளைச்சலை சித்தரிப்பதாகும். கதையாட்டம் என்ற வகைப்பாட்டில் மோகன்லால் மலையாள காவியங்களில் இருந்து தெரிவு செய்த பத்து மறக்க முடியாத பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தார். அதை அவர் தமது தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்வதாகக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குனர் டி.கே. ராஜீவ் குமார் கற்பனையில் உதித்த இந்தக்காட்சியின் வடிவமைப்பு, மேடை நாடக நடிப்பு, திரைப்படத்திற்கான முகத்தோற்றம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் இசை நயம் அனைத்தும் கொண்ட ஓர் அற்புத கலவையாகும். 'காளிதாசா விசுவல் மேஜிக்' என்ற பெயரில் மோகன்லால் மற்றும் அவருடன் புகழ் பெற்ற நடிகரான முகேஷும் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் தற்போது மிகவும் அண்மையில் "சாயாமுகி" என்ற நாடகத்தைத் தயாரித்தது. மோகன்லால் பீமன் வேடத்திலும் முகேஷ் கீசகன் வேடத்திலும் நடித்தார்கள். 12 மார்ச் அன்று இந்த நாடகம் முதல் முதலாக திருச்சூரில் அரங்கேறியது. 2007 ஆம் ஆண்டில் கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மது தயாரிப்பு நிறுவனத்திற்கான விளம்பரங்களில் அவர் நடித்ததற்காக விமரிசகர்களால் மிகவும் சர்ச்சைக்குள்ளானார். இந்தியாவில் மதுபானங்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த தடையையும் மீறி தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதற்கு பல தரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன, அவற்றில் ஒரு முறையானது மது பானங்களைப் போலவேயுள்ள இதர மது சாரா பானங்களை அதே குறியீட்டுகளுடன் தயாரித்து விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்வது. உள்ளூர் தொலைகாட்சி மற்றும் திரை அரங்குகளில் மிகவும் பரவலாக விளம்பரமான இந்த குறிப்பிட்ட விளம்பரத்தில், ஒரு மதுபானம் சார்ந்த குறியீடு கொண்ட நேந்திரங்காய் வறுவலுக்காக மோகன்லால் நடித்தார். மோகன்லால், அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் நடிக்கும் பொழுது அவர் உள்ளுணர்வு சொல்வதை நம்பியே நடித்து வருகிறார் மற்றும் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுவதையே அவர் விரும்புகிறார். அவரது தொடக்கக் காலங்களில் இருந்தே அவருடன் நெருக்கமாக பழகிய மக்கள் குழுமத்துடன் சேர்ந்து மலையாளத் (திரைப்படத்) துறையில் நடிப்பதையே அவர் விரும்புகிறார், அதில் அவர் மிகவும் ஆனந்தம் அடைகிறார். அவருடைய மிகவும் சிறந்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றும் அவருடன் திரைப்படத்துறையில் உள்ளனர். அவர்களில் பட இயக்குனர் ப்ரியதர்ஷன், பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார், நடிகர் ராஜு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் போன்றோர் அடங்குவர். மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார் பட இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கும் நம்பக்கூடிய முக பாவங்களை சித்தரிக்கக்கூடிய நடிகராக திரை உலகில் அறியப்படுகிறார்.. அவர் பிற மொழிப்படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் மன உளைச்சலுடன் காணப்படுகிறார், அம்மொழிகளில் அவருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லாததாலும், மேலும் அதற்கான காரணம் அவருக்கு அந்தந்த மொழிகளில் காணப்படும் சிக்கல்களை அவர் அறியாதிருப்பதே என்பதை உணர்ந்துள்ளார். List of awards and nominations received by Mohanlal Mohanlal: filmography மோகன்லால் சுமார் 300 மலையாள, இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் 12 படங்களை தயாரித்துள்ளார். யாழ் வலைத்தளம் யாழ் இணையத்தளம் (http://www.yarl.com/) தமிழில் உள்ளடக்க செறிவுடனும் நுட்ப நேர்த்தியுடனும் இயங்கும் ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் 1998 ஆண்டளவில் மோகன் ராமர் அவர்களால் தொடங்கப்பட்டது. இது தமிழ் இணையத்தளங்கள் மத்தியில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது. மனித வளர்ச்சி கலைச்சொற்கள் Terms for stages of age-related physical development include, with their approximate age ranges: இந்தியத் தமிழர் இந்தியத் தமிழர் may refer to: வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்) வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (Foreign domestic helpers in Hong Kong) என்போர் ஹொங்கொங்கில் வந்து வீடுகளில் பணிப்புரிவோர் ஆவர். இந்த வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர் அநேகமாக பெண்களே என்றப்போதும், ஆண்களும் உள்ளனர். ஹொங்கொங்கில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர், ஹொங்கொங்கின் முழு மக்கள் தொகையில் 3% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியக் கிழக்கு நாடுகளில் போன்று அல்லாமல், ஹொங்கொங்கில் பணிப்புரியும் வீட்டுப்பணியாளர்கள் ஏனைய பணியாளர்கள் போன்றே வாரவிடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் ஹொங்கொங் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போன்றவற்றையும் பெறகூடியதாக உள்ளது. 2010ம் ஆண்டின் கணிப்பின் படி 284,901 பேர் பணிப்புரிவதாக அறியமுடிகிறது. இதில் 48% வீதமானோர் பிலிப்பீன்சு பெண்களாகும். இந்தோனேசியப் பெண்கள் 49.4% வீதமானோர்களாகும். மீதமானோர்களில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாட்டுப் பெண்கள் உள்ளனர். மத்திய கிழக்காசிய நாடுகளில் போன்று இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் எந்த பிரச்சினைகளும் இங்கு இல்லை. தொழில் வழங்குபவர்களான வீட்டு உரிமையாளர்கள், ஹொங்கொங்கின் சட்டத் திட்டங்களை மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடரக்கூடிய வசதிகளும் ஹொங்கொங்கில் உள்ளன. வழக்குகள் பதிவுசெய்யப்பட்டால் அவை 99% வீதம் வீட்டுப்பணியாளர்களுக்கு சார்பாகவே தீர்ப்பாகின்றன. வழக்குகள் தொடரும் பட்சத்தில் தொழிலாளர் நீதிமன்றமே முன் வந்து உதவுகின்றது. அவ்வாறு நீதிமன்றம் செல்லக்கூடிய போதிய தெளிவற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வித இலாப நோக்கமற்று செயல்படும் பல தொண்டு நிறுவனங்களும் ஹொங்கொங்கில் இருக்கின்றன. ஆனால் ஹொங்கொங்கில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணிப்புரிவோருக்கு வழங்கப்படும், ஹொங்கொங் வசிப்பிட உரிமை, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் சிலப் பணிப்பெண்கள் குடியுரிமையுள்ளோரை அல்லது வசிப்பிட உரிமைப் பெற்றவர்களை திருமணம் முடித்து ஹொங்கொங்கின் வசிப்பிட உரிமைப் பெற்றுவிடுபவர்களும் உள்ளனர். ஹொங்கொங் நாட்டில் அகதி நிலை ஹொங்கொங் நாட்டில் அகதி நிலைக் கோரி வருவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. ஹொங்கொங் மனிதவுரிமை பேணும் ஒரு நாடாக இருந்தாலும் அகதியாக மக்கள் இங்கு வருவதை கட்டுப்படுத்தவதற்கு கடந்த சில வருடங்களாக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. பல புதிய புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்திய முன்னேற்ற நுழைவாயில் வலைத்தளம் இந்திய முன்னேற்ற நுழைவாயில் (http://www.indg.in/) இணையத்தளம் இந்திய அரச அலகான உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையத்தால் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட ஒரு தகவல் இணையத்தளம் ஆகும். வளர்ச்சிக்கு தேவையான தகவல்களை "இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்." ஐசேயா தாமஸ் ஐசேயா லார்ட் தாமஸ் III ("Isiah Lord Thomas III", பிறப்பு - ஏப்ரல் 30, 1961) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1981 முதல் 1994 வரை டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களில் (Point guard) ஒருவர் ஆவார் என்று பல கூடைப்பந்து வல்லுனர்கள் சொல்லிருக்கிறார்கள். கூடைப்பந்து புகழவையில் உறுப்பினராக, 2006 முதல் 2008 வரை நியூ யோர்க் நிக்ஸ் அணியின் பயிற்றுனராக பணியாற்றியுள்ளார். இதன் முன் இவர் டொராண்டோ ராப்டர்ஸ் அணியின் முதன்மை நிர்வாகியாகவும் இந்தியானா பேசர்ஸ் அணியின் பயிற்றுனராகவும் பணி புரிந்தார். கூடைப்பந்து புகழவை நெய்ஸ்மித் நினைவகக் கூடைப்பந்து புகழவை என்பது உலக கூடைப்பந்து வரலாற்றில் மிக உயர்ந்த வீரர்களையும் பயிற்சியாளர்களையும் போற்றும் அவையாகும். ஹார்லம் குளோப்ட்ராட்டர்ஸ் போன்ற புகழ்பெற்ற அணிகள் இவ்வவையில் உள்ளன. 1959ல் தோன்றி 1968ல் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரத்தில் திறந்தது. 1985ல் இக்கட்டடம் கனெடிகட் ஆறுக்கு பக்கம் ஸ்பிரிங்ஃபீல்டின் நடுப் பகுதிக்கு நகர்ந்தது, 2002 செப்டம்பர் 28ல் இவ்வவை ஒரு புது 45 மில்லியன் $ கட்டடத்துக்கு நகர்ந்தது. 2007 கூடைப்பந்து புகழவை தேர்தலுக்கு பிறகு இவ்வவையில் 278 உறுப்பினர்கள் (131 வீரர்கள், 77 பயிற்சியாளர்கள், மூவர் வீரர்களாகவும் பயிற்சியாளராவும், 54 உதவியாளர்கள், 13 நடுக்காரர்கள்), 5 அணிகள் உள்ளனர். ஜான் வுடென், லெனி வில்கென்ஸ், பில் ஷார்மன் ஆகிய மூன்று பேர் மட்டும் வீரர்களாகவும் பயிற்சியாளராகவும் உள்ளனர். ஜேம்ஸ் நெய்ஸ்மித் டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன. 1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார். மழைநீர் சேகரிப்பு வலைத்தளம் மழைநீர் சேமிக்கும் திட்டத்தை தமிழ்நாடு 1990 இறுதியில் அமுல்படுத்தியது. அது தொடர்பான தகவல்களை கொண்ட அதிகாரபூர்வ இணையத்தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதுதான் மழைநீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோகமான இணையத்தளம்(http://www.aboutrainwaterharvesting.com/tamil/default2.htm). இந்த இணையத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இங்கு மழைநீர் சேகரிப்பு முறை பற்றி ஒரு கையேடும் கிடைக்கிறது. அறுசுவை வலைத்தளம் அறுசுவை இணையத்தளம் (http://www.arusuvai.com/) இனிய தமிழில் ஒரு சமையல் இணையத்தளம் என கூறி சமையல் தொடர்பான பல்வேறு தகவல்களை அழகாக தொகுத்து தருகின்றது. இவர்களின் நோக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. "இதன் பொருட்டு, முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தர இந்த அறுசுவை.com என்கின்ற இணையத்தளம் உருவாக்கப்படுகின்றது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது." வச்சிரயான பௌத்தம் வச்சிரயான பௌத்தம் (சீனம்: 金剛乘, "jingangcheng", சப்பானியம்: 金剛乗, "kongōjō") என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் உபாயங்களை கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், "புத்தகுஹ்யர்" போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை "பாரமித-யானம்", "மந்திர-யானம்" என இரு வகையாக பிரிக்கின்றனர்.தேரவாதம் மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது. வஜ்ரயானம் தற்போது இரண்டு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது "வஜ்ரம்" என்ற சொல்லுக்கு மின்னல் மற்றும் வைரம் என்று பொருள். இது அனைத்தையும் அழிக்கக்கூடிய ஊடுருவக்கூடிய மிகவும் உறுதிவாய்ந்த ஆயுதத்தையும் குறிக்கிறது. எனவே வஜ்ரம், என்பது உறுதியான ஒரு பொருளை குறிக்கிறது. எனவே போதிநிலை அடைய ஒரு உறுதியான வழி என்ற முறையில் இது "வஜ்ரயானம்" என அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் இது இதை பின்பற்றுபவர்கள் உறுதியான மனநிலையை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆக, வஜ்ரயானம் என்ற சொல்லுக்கு வைர வழி அல்லது உறுதியான வழி என பொருள் கொள்ளலாம்(யானம் என்ற வடமொழிச்சொல்லுக்கு வழி,பாதை என பொருள் கொள்ளலாம்) பல்வேறு வஜ்ரயான பிரிவுகள் மற்றும் சம்பிரதாயங்களின் படி, வஜ்ரயான உபாயம் ஒருவர் அதிவிரைவில் போதி நிலை அடைய வழிவகை செய்கிறது. பல்வேறு தந்திர முறைகளை கையாள்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. பௌத்தத்தின் வேறு பிரிவுகள் முழு போதிநிலை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டும் என குறிப்பிடும் வேலையில், வஜ்ரயானம் இப்பிறவியிலேயே புத்த நிலை அடைய பல முறைகளை குறிப்பிடுகிறது. அதே வேளையில், வஜ்ரயானம் தேரவாதம் மற்றும் மகாயானம் ஆகிய பிரிவுகளின் கொள்கைகளை இது தவறென்று குறிப்பிடவில்லை, உண்மையில் வஜ்ரயானத்தின் படி இப்போதனைகளே வஜ்ரயானத்தின் அடிப்படையாக கொள்ளப்படுகிறது. வஜ்ரயானத்தில் கங்க்யூர் பிரிவு, பிரக்ஞாபாரமித சூத்திரம், மற்றும் சில பாளி சூத்திரங்களை கூட தந்திர முறைகளுக்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வஜ்ரயானத்தின் படி, மரணம், உடலுறவு, கனவு மற்றும் இதைப்போன்ற பிற நிலைகளில் உடலும் மனமும் ஒரு விதமான நுட்பமான நிலையில் இருக்கின்றது. ஆகவே, முறையான பயிற்சி மூலம் மேம்பட்ட தந்திர சாதகம் செய்பவர்கள் இந்த நிலையினை பயன்படுத்தி mindstreamஐ முறையாக முற்றிலும் மாற்ற இயலும். மேலும் வஜ்ரயான பாரம்பரியத்தின் படி, ஒருவர் சில நுட்பங்களை கையாளவதன் மூலம் ஒரே பிறப்பில் புத்தநிலையை அடைய இயலும். திபெத்திய பௌத்தத்தின் கெலுக், சாக்ய, மற்றும் கக்யு பிரிவினர் தந்திரங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது. நியிங்மா பிரிவு கீழ்க்கண்டாவாறு வேறுவிதமாக தந்திரங்களை வகைப்படுத்துகிறது வஜ்ரயானத்தின் மிகவும் முக்கியமான கூறு அதன் மறைபொருள்வாதம் ஆகும். மறைபொருள் வாதத்தின் படி போத்னைகள் குருவிடமிருந்து நேரடியாக சீடருக்கு கற்றுத்தரப்படும். புத்தகம் வாயிலாகவோ அல்லது பிற முறையிலோ அதை கற்றல் தகாது. இப்படி பல தந்திர முறைகள் இரக்சியமாக வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் சில வஜ்ரயான குருக்களின் படி குரு-சிஷ்ய பாரம்பர்யத்தில் தான் இந்த முறைகளுக்கு பொருள் உள்ளதையும் இதற்கு வெளியே இவை பொருளற்றவையாக உள்ளதையுமே இந்த ரகசிய போதனை என்ற குறிப்பால் உணர்த்துகிறது மேலும் இந்த ரகசிய தந்திர முறைகளை முறையாக கற்காவிடின் கற்பவருக்கு இது தீங்கு விளைவிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த மறைபொருள் தீட்சை இரு விதங்களில் அளிக்கப்படுகிறது திபெத்திய பௌத்ததில் மகா சந்தி முறையும் ஷிங்கோன் பௌத்தத்தில் மகாமுத்திரை முறையும் பயன்படுத்தப்படுகிறது. திபெத்திய பௌத்த பார்வையில், தந்திரமும் மறைபொருள்வாதமும் வஜ்ரயானத்தை மகாயானத்தில் இருந்து வேறுபடுத்துகிறது. எனினும் இரண்டிலும் மற்ற உயிர்களுக்கு நன்மை செய்வதற்காக புத்தத்தன்மை அடைவதே இறுதி குறிக்கோள் ஆகும். மகாயானத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூத்திரங்கள் பொதுவாக வஜ்ரயானத்திலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இந்த சூத்திரங்களுடன் வஜ்ரயானம் தனக்கே உரிய சில சூத்திரங்களையும் நூல்களையும் கொண்டுள்ளது. போதிசத்துவர்கள் மற்றும் எண்ணற்ற பிற மீதுள்ள நம்பிக்கை மகாயானத்துக்கும் வஜ்ரயானத்துக்கு பொதுவானவை. எனினும் ஜப்பானிய வஜ்ரயான குரு கூக்காய் வஜ்ரயானத்தையும் மகாயானத்தை தெளிவாக வேறுபடுத்துகிறார். கூக்காயை பொருத்தவரையில் மகாயானம் வெளிப்படையானது எனவே அது தற்போதைக்கும் மட்டுமே. மாறாக வஜ்ரயான போதனைகள் தர்மகாய உருவில் உள்ளது. ஏனெனில் இப்போதனைகள் மஹாவைரோசன புத்தர் தமக்கு தாமே பேசிக்கொள்ளும் போது தோன்றியவை. அவ்வாறெனில், உண்மையில் மகாயானமும் ஹீனயானமும் வஜ்ரயானத்தின் வெவ்வேறு அம்சங்களாக ஆகிவிடுகிறது. இதே வாதம் திபெத்திய பௌத்தத்திலும் காணப்படுகிறது, அதாவது புத்தத்தன்மை ஒருவர் அடவைதற்கு இறுதி வழி தந்திரமே என்கிறது. வஜ்ராயானத்தின் சில கூறுகள் மீண்டும் மகாயானத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வஜ்ரயானத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை மகாயான கோவில்களில் காணலாம் வஜ்ரயானம் பலதரப்பட்ட நடத்தை விதிமுறைகளையும் உறுதிமொழிகளையும் கொண்டுள்ளது. இவ்வனைத்தும் பிரதிமோக்‌ஷம் மற்றும் போதிசத்துவத்தை அடிப்படையாக கொண்டவை. எனினும் இது புத்த பிக்ஷுக்குளுக்கு மட்டும் பிரத்யேகமானவை. பொதுமக்கள் தங்களுக்குரிய பொதுவான நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. இவை அல்லாமல், உயர்வகை தந்திரங்களை பின்பற்றுவோர் அதற்கேற்றாற்போல் சில விசேஷமான உறுதிமொழிகளையும் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் (Harold & Kumar Go to White Castle) 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில நகைச்சுவை திரைப்படமாகும். டானி லைனர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜான் சோ, கால் பென், பாலா கார்செஸ் மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. ஆசிய-அமெரிக்க நடிகர்கள் பிரதான நடிகராக இருந்த ஆங்கிளத் திரைப்படங்களில் இத்திரைப்படம் ஒன்றாகும். இதன் பிந்தையப் படம், ஹேரல்ட் & குமார் எஸ்கேப் ஃப்ரம் குவாண்டானமோ பே, ஏப்ரல் 2008ல் வெளிவருகிறது. நகைச்சுவைப்படம் ஹேரல்ட் (ஜான் சோ), ஒரு கொரிய-அமெரிக்க வங்கியாளர், மற்றும் குமார் (கால் பென்), ஒரு இந்திய-அமெரிக்க கல்லூரி மாணவர், இரு தோழர்களும் ஒரு அறையில் சேர்ந்து வாழ்துகிறார். ஒரு நாள் இருவரும் சேர்ந்து கஞ்சத்தை பிடித்து வெறிகொள்ளி "வைட் காசில்" என்ற "fast food" உணவகத்தின் சாப்படை ஆசை பட்டு இந்த உணவகத்தை தேடி போகிரார். தேடும்பொழுது இருவரும் பல தொந்தரைகளை அனுபவித்து கடைசியில் "வைட் காசில்" உணவகத்தை கண்டுப்பிடித்து இருவரும் 50 ஹாம்பர்கர்களை சாப்பிடுகிராற்கள். கால் பென் கால் பென், என்றழைக்கப்படும் கல்பேன் சுரேஷ் மோதி (இந்தி: कल्पेन सुरेश मोदी; பிரப்பு ஏப்ரல் 23, 1977) ஒரு குஜராத்தி-அமெரிக்க நடிகர் ஆவார். இவர் பிரதான நடிகரா நடித்த சில திரைப்படங்கள் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் மற்றும் த நேம்சேக் ஆகும்; நேஷனல் லாம்பூன்ஸ் வான் வைல்டர், அமெரிக்கன் தேசி, மாலிபூஸ் மோஸ்ட் வாண்டெட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். கொமொரோசு கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு "கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு" என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான "கொமார்" என்பதிலிருந்து தோன்றியதாகும். நாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது. இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை. கொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது. சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் (லித்துவேனிய மொழி:Žydrūnas Ilgauskas, பிறப்பு - ஜூன் 5, 1975) ஒரு லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2.21 மீட்டர் உயர்வு இல்கவுச்காஸ் என். பி. ஏ.-இல் யாவ் மிங் தவிர மிக உயரமாந ஆட்டக்காரர் ஆவார். ழூல் வேர்ண் (விண்கலம்) ழூல் வேர்ண் (ஜூல்ஸ் வேர்ண், "Jules Verne ATV"), என்பது ஐரோப்பாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் ஆகும். பிரெஞ்சு அறிவியல் புதின எழுத்தாளர் ழூல் வேர்ண் என்பவரின் நினைவாக இவ்விண்கலத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இது மார்ச் 9, 2008 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (அவிநி) தங்கியுள்ள வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், உடைகள் மற்றும் விண்வெளி மையத்துக்கு தேவையான 5 தொன் பொருட்கள் அனுப்பப்பட்டன. இதுவே முதலாவது ஆளில்லா சரக்கு விண்கலமாதலால், இவ்விண்கலம் மூன்று வாரங்கள் சோதிக்கப்பட்டே அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அவிநி உடன் இது ஏப்ரல் 3, 2008 இல் வெற்றிகரமாக இணைந்தது. நான்கு மாதங்கள் வரை இது விண்வெளி நிலையத்துடன் இணைந்திருந்த பின்னர் அங்கிருந்து விடுபட்டு பூமியின் வளிமண்டலத்தினுள் பிரவேசித்து பசிபிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னித் தீவுகள் கன்னித் தீவுகள் ("Virgin Islands") கரிபியக் கடலில் காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இத்தீவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பிரித்தானியாவாலும் அமெரிக்காவாலும் ஆட்சி செய்யப்படுகின்றன. வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493 ஆம் ஆண்டு அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes (புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுருக்கப்பட்டது. இத்தீவுகளில் வசித்து வந்த அரவாக், கரிப், செர்மிக் இந்தியர்கள் ஐரோப்பிய அடிமைக் காலத்தின் போது ஏற்பட்ட நோய்கள் காரணமாகவோ அல்லது இன அழிப்புகளிந் காரணமாகவோ அழிந்துப் போயினர். பின்னர் இத்தீவுகளிக்ல் கரும்பு பெருந்தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்துக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களால் குடியேற்றப்பட்டது. தற்போது கரும்புத் தோட்டங்கள் இல்லையாயினும் வேலைக்காக கொண்டுவரப்பட்ட வேலையாட்களில் பரம்பரையினர் இங்கு வசித்து வருகின்றனர். மம்மூட்டி மம்முட்டி (மலையாளம்: മമ്മൂട്ടി, "முகமது குட்டி", பிறப்பு: 7 செப்டம்பர் 1951), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல்தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் மம்மூட்டி இருக்கின்றார். வனிதா பத்திரிக்கை அதன் வாசகர்களிடையே நடத்திய ஆய்வின் பிறகு மம்மூட்டியை மிகவும் கவர்ச்சியான நடிகராகத் தேர்ந்தெடுத்தது. மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்‍ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார். மம்மூட்டி அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். அவரது உடன்பிறப்புகளுடன் அவர் வைக்கம் அருகிலுள்ள சேம்பு என்னும் இடத்தில் வளர்ந்தார். அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை (பட்டப்படிப்புக்கு முந்தையது) கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார். அவர் சல்பாத் என்பவரை 1980 இல் மணந்தார், இவர்களுக்கு சுருமி என்ற மகளும் தல்குயர் சல்மான் என்ற மகனும் உள்ளனர். மம்மூட்டி 1971 இல் கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய "அனுபவங்கள் பாலிச்சகள்" திரைப்படத்தில் முதன்முதலில் தோன்றினார். இருப்பினும் இந்த கதாப்பாத்திரம் நன்மதிப்பைப் பெறவில்லை. அப்பொழுது அவர் மகாராஜாஸ் கல்லூரியில் மாணவராக இருந்தார். அதன் பிறகு 1973 இல், கே. நாராயணன் இயக்கிய பிரேம் நசீர் படமான "காலச்சக்கரம்" திரைப்படத்தில் மற்றொரு வேடத்தைப் பெற்றார். அவரது திரைப்பட தொழில் வாழ்க்கை 1979 இல் தொடங்கியது, அப்பொழுது அவர் தலைசிறந்த இயக்குநர் எம். டி.வாசுதேவன் நாயர் இயக்கிய "தேவலோகம்" திரைப்படத்தில் அவர் முதல் முன்னணி வேடத்தில் நடித்தார். இருப்பினும், இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை. எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி எம். ஆசாத் இயக்கிய "வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்" மம்மூட்டியின் முதல் குறிப்பிடத்தகுந்த திரைப்படம் ஆகும். கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய "மேலா" திரைப்படத்தில், அவர் சர்க்கஸ் கலைஞராக நடித்தார், மேலும் ஐ.வி. சசி இயக்கிய "திரிஷ்னா" திரைப்படம் அவருக்கு கதாநாயகன் எனும் பிரபலத்தை வழங்கியது. 1982 இல், கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய துப்பறியும் திரில்லர் படமான "யவனிகா" (1982) திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடித்தது, மம்மூட்டி நேர்மையான காவல்துறை அதிகாரியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிரடி மற்றும் துப்பறியும் விறுவிறுப்புப் படங்களில் நடிக்கும் போக்கிற்கு அது தொடக்கமாக அமைந்தது. 1981 இல், "அஹிம்சா" திரைப்படத்தில் அவர் நடித்தற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் முதல் மாநில விருதைப் பெற்றார். 1982-1984 காலகட்டம் மம்மூட்டியை முக்கியமான மலையாள சினிமாவில் வணிக ரீதியாக எதையும் செய்யக்கூடிய கதாநாயகனாக மதிப்பிட்டது. பத்மராஜனின் "கூடேவிதே" மற்றும் ஜோஷியின் "ஆ ராத்திரி" இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய "ஆள்கூட்டத்தில் தனியே" மற்றும் "ஆதியொழுக்குகள்" போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அவரை அர்த்தமுள்ள நடிகராக நிலைநாட்டியது. 1982 முதல் 1986 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மம்மூட்டி கதாநாயகனாக 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். எம். டி. எழுதி ஐ.வி. சசி இயக்கிய "ஆதியொழுக்குகள்" திரைப்படத்தில் "கருணன்" பாத்திரத்தில் அவர் நடித்தது, அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. மம்மூட்டி, பாலு மகேந்திரா இயக்கிய "யாத்திரா" திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்ததற்காக மாநில சிறப்பு ஜூரி விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். "நிறக்கூட்டு" (1985), நியூ டெல்லி"(1987) மற்றும் " தனியாவர்த்தனம்(1987) ஆகியவை 80களில் அவரது குறிப்பிடத்தகுந்த பிற படங்களாகும். "நியூ டெல்லி" அவரது நடிப்புத் தொழிலில் முக்கியமான திரைப்படமாகும். அந்தத் திரைப்படம் "த அல்மைட்டி" என்ற இர்விங் வாலஸ் எழுதிய நாவலை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது. 1988 இல் மம்மூட்டி மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை தனது "ஒரு CBI டைரிக் குறிப்பு" திரைப்படத்தைக் கொண்டு அளித்தார். "ஒரு CBI டைரிக் குறிப்பு" கேரளாவிலும் அதேபோன்று தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கியது. முதல் CBI திரைப்படம் "ஒரு CBI டைரிக் குறிப்பு" வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மூன்று மர்மக் கொலை சம்பந்தமான தொடர்ச்சிகள் அதே நடிகர்களைக் கொண்டு அதே கதாப்பாத்திரங்களில் தயாரிக்கப்பட்டன, அவை: "ஜகார்த்தா" (1989), "சேதுராம ஐயர் CBI" (2004) மற்றும் "நேரரியன் C.B.I" (2005), அனைத்தும் கே மதுவால் இயக்கப்பட்டு எஸ்.என். ஸ்வாமி எழுதியது, இவற்றில் மும்மூட்டி சேதுராம ஐயராக புத்திசாலித்தனமான ஆனால் யூகிக்க முடியாத CBI அதிகாரியாகத் தோன்றினார். சுயசரிதை கதைகளைக் கொண்ட எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டு திரைப்படங்களில் மம்மூட்டி நடித்தார். அவற்றில் ஒன்று "அக்‌ஷரங்கள்" ஐ.வி. சசியால் இயக்கப்பட்டது, மற்றொன்றான "சுக்ரதம்" படத்தை ஹரிகுமார் இயக்கினார். மம்மூட்டி "ஒரு வடக்கன் வீரக்கதா" திரைப்படத்தில் நடிப்பு வாழ்வின் உச்சத்தை தொட்டார்; அத்திரைப்படம் எம்.டி. வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டு டி.ஹரிஹரன் அவர்களால் இயக்கப்பட்டது. அவரது தெளிவான சேகவார் (கூலிப் படைவீரன்), கதநாயகனாக இல்லாமல் எதிர்மறைப் பாத்திரமாக இருந்தாலும் அவருக்கு தேசிய விருதை வென்று தந்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய "மதிலுகள்" படத்தில் மும்மூட்டியின் நடிப்பு விருதுக்காகக் கருதச்செய்தது. ஐ.வி சசி இயக்கிய "முருகயா" வில் வேட்டைக்கார வருணியாக அவரது வேடம் மற்றும் மற்றொரு திரைப்படம் "மஹாயனம்" ஆகியவையும் மாநில விருதுக்கு கருதச்செய்தன. மம்மூட்டி, பரதன் இயக்கிய "அமரம்" திரைப்படத்தில் அவது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதை வென்றார். மம்மூட்டி தனது இரண்டாவது தேசிய விருதை, அடூர் கோபாலகிருஷ்ணனின் "விதேயன்" மற்றும் டிவி சந்தரனின் "பொந்தன் மாடா" ஆகியவற்றில் தனது நடிப்பிற்காகப் பெற்றார். அவர் இரண்டு படங்களில் தனது வேடங்களுக்காக மாநில விருதையும் பெற்றார். கொச்சின் ஹனீபா இயக்கிய "வால்ட்சல்யம்" படத்தில் அவரது நடிப்பும் மாநில விருதுக்குக் கருதப்பட்டது. மம்மூட்டி தனது மூன்றாவது தேசிய விருதை "டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்" திரைப்படத்திற்காக வென்றார், இது ஜாபர் படேல் இயக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் ஆங்கில மொழி திரைப்படம் ஆகும், இத்திரைப்படம் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. ஜாபர் படேல் "அம்பேத்கர்" படத்தில் மம்மூட்டி பற்றி தெரிவித்த கருத்துக்கள்: மம்மூட்டி "காழ்ச்சா" வில் "ஆபரேட்டர் மாதவன்" உருவத்திற்காக மாநில விருதை வென்றார். புதுமுகம் அன்வர் ரஷீத் இயக்கிய "ராஜமாணிக்யம்" மலையாள சினிமாவில் அனைத்துக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றியுடன் ரசிகர்கள் மனம் கவர்ந்தது. 2006 இல், மம்மூட்டி "துருப்புக்குலன்" திரைப்படத்தை உருவாக்கினார், அதில் வரும் கதாப்பாத்திரம் குலன் மீது குழந்தைகளிடையே கடுங்கோபம் உண்டானது, பின்னர் அந்தப் பாத்திரத்தை வைத்து 'சூப்பர் குலன்' எனற கார்ட்டூன் தொடர் கிட்ஸ் காமிக்ஸ் மூலம் தொடங்கப்பட்டது. மம்மூட்டியின் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் "மாயாவி" , 2007 இன் சிறந்த வசூலைப் பெற்ற படமானது. 2008 இல், மம்மூட்டியின் "அண்ணன் தம்பி" மாநிலம் முழுவதும் 75 மையங்களில் திரையிடப்பட்டு சுமார் 61 மையங்களில் 50 நாட்களை நிறைவு செய்தது. அத்திரைப்படம் ராஜமாணிக்கத்தின் சாதனையை முறியடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்து ரசிகர்கள் மனம் கவர்ந்தது. மம்மூட்டி சில மலையாளம் அல்லாத திரைப்படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்கள் அடங்கும். 1989 இல், கே. மது இயக்கிய "மௌனம் சம்மதம்" திரைப்படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார். அவர் தமிழ்த் திரைப்படங்களில் கே. பாலச்சந்தர்(அழகன்) மற்றும் மணி ரத்னம்(தளபதி) போன்ற துறையின் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து "தளபதி" யில் அவர் நடித்தது தமிழ் ரசிகர்களிடையே அவரை மிகவும் பிடிக்கச் செய்தது. பாசில் இயக்கிய "கிளிப்பேச்சு கேட்கவா" (1993) திரைப்படத்தில் மம்மூட்டி அவரது அரிதான வேடமான காதல் நாயகன் வேடத்தில் நடித்தார். 1995 இல் மம்மூட்டி, ஆர்.கே.செல்வமணி இயக்கிய "மக்கள் ஆட்சி" வடிவில் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், கேப்டன் பாலாவாக ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அவரது நடிப்பு அனைவரையும் கவரும் விதமானதாகக் கருதப்பட்டது. என். லிங்குசாமி இயக்கிய "ஆனந்தம்" படத்தில் மம்மூட்டி ஒரு குடும்பத் தலைவன் வேடத்தில் நடித்திருந்தார். மம்மூட்டி மறக்கூடிய சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். புதையல்(1996) (புதையல் வேட்டை பற்றிய திரைப்படம்), ஜூனியர்-சீனியர்(2002)(முக்கோணக் காதல் கதை), விஸ்வதுளசி (2004)(ஒரு முதிர்ந்த காதல் கதை) இவையனைத்தும் கவர்ந்திழுக்கும் நடிப்பில் உருவாக்கப்பட்டவை, ஆனால் விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின. அவர் [1989] இல் "திரியத்திரி" மூலமாக ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்தார். இருப்பினும், அவரது கதாநாயகனாக நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் "தர்த்திபுத்ரா" எந்த அறிவிப்புமின்றிப் போனது., என்றாலும் அவரது தேசிய அளவிலான வருகையை ஜாபர் படேல் இயக்கிய வாழ்க்கை வரலாற்றுப் படமான "டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர்" படத்தைக்கொண்டு உறுதியாக்கினார். மம்மூட்டியின் "சௌ ஜூத் ஏக் சச்" விமர்சன ரீதியாகப் பாராட்டை வென்றாலும், அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடையவில்லை. மம்மூட்டியின் தெலுங்குத் திரைப்படம் ஸ்வாதி கிரணம், ஒரு ஆபத்தான முயற்சியான அது ரசிகர்களாலும் விமர்சனங்களாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் "மதிலுகள்" ('சுவர்கள்') வெனிஸ் நகரில் தொடங்கி கிட்டத்தட்ட 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியது: இது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகையில் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் 1990 இல் நான்கு விருதுகளை வென்றது. "விதேயன்" , மலையாள எழுத்தாளர் பால் சாச்சாரியா எழுதிய "பாஸ்கர பட்டேலரும் என்டே ஜீவிதமும்" நாவலின் சினிமா தழுவல், இது தெற்கு கர்நாடகாவில் அமைந்துள்ள ஆண்டான்-அடிமை முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றது. அத்திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட திருவிழாவில் ஆசிய சினிமா வளர்ச்சிக்கான நெட்வொர்க் (NETPAC) விருதுடன் இண்டர்பிலிம் விருதையும் வென்றது - மன்ஹேயிம்-ஹேய்டெல்பெர்க் சர்வதேச திரைப்பட திருவிழாவில் கௌரவமாகக் குறிப்பிடப்பட்டது. துபாயில் 2006 IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற போது அவரது குறிப்புகள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தைப் பெற்றது.. தெற்கு இந்தியத் திரைப்படங்கள் முழுவதையும் தவிர்த்ததற்காக IIFA விருதுகள் ஒருங்கிணைப்பாளர்களை திறந்த மனதுடன் விமர்சித்தார். மம்மூட்டி பாலிவுட் திரைப்படத் துறை தங்களை சர்வதேசம் என்று கூறுவதற்கு முன்பு தென்னிந்தியத் திரைப்பட துறையுடன் போட்டியிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவர் விமர்சித்தது: மம்மூட்டி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரை டஜனுக்கும் மேற்பட்ட ஏழைகள் மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். மம்மூட்டி கேரளாவில் உள்ள பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி, அறக்கட்டளை அமைப்பு உடைய புரவலராக இருக்கின்றார், இவ்வமைப்பானது புற்றுநோய் தீவிரமான நோயாளிகளிடையே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. அவர் இந்தியாவின் கோழிக்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள, வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்பு மையத்தின் மைய சக்தியாகவும் செயலாக்குபவராகவும் இருக்கின்றார். அந்த நிறுவனம் வழங்கும் நன்மைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பெறுகின்றனர். மம்மூட்டி வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்புக்கு, கேரளா முழுவதும் வாழும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு, இப்போது நாவல் திட்டத்தை அமைத்திருக்கிறார். மம்மூட்டி ஜீவன் ஜோதியின் தூதராக இருக்கின்றார் - இது மண உணர்வு நரம்பு வியாதிகள், இதயம் (இதயம் சார்ந்த) எலும்பு இயல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள், சிறுநீரகக் குழாய் செயலிழப்பு, இரத்தம் உறையா நோய்கள், ENT குறைபாடுகள் போன்ற வியாதிகளின் சிகிச்சைக்காக எதிர்பார்க்கும் மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கைக் கொண்ட சமூக சேவை திட்டம் ஆகும். மம்மூட்டி, குழந்தை பிச்சையெடுத்தலையும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் அடியோடு ஒழிப்பதை இலக்காகக் கொண்ட "இந்தியத் தெருமுனை இயக்கம்" அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதராக இருக்கின்றார். அவர் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றார், இது குழந்தைகளைப் பாதுக்காக்க காப்பகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றது. காழ்ச்சா என்பது சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சையை நீட்டிக்கும் ஒரு துணிகர முயற்சி ஆகும். ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தின் பெயரில் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். காழ்ச்சா 06-07, மம்மூட்டி ரசிகர் நற்பணி மன்றம் & மம்மூட்டி டைம்ஸ் ஆகியவற்றால் லிட்டில் பிளவர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் மற்றும் கேரளாவின் கண் வங்கி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தொடர்ந்து செயலாக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 10,000 மக்கள் இலவச கண் சிகிச்சை பெற்று பயனடைவர் மேலும் 1000 ஏழை நோயாளிகள் கண்புரை அறுவைச் சிகிச்சைகளை இலவசமாக லிட்டில் பிளவர் மருத்துவமனை, அனகமாலியில் பெறும் வாய்ப்பைப் பெறுவர். இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு சுமார் ரூ.8000/- ஆகும். இதில் இன்னும் கூடுதலாக அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து தகுதிவாய்ந்த நோயாளிகளுக்கும் இலவச தங்குமிடம், உணவு, மருந்துகள் மற்றும் பயணப்படி ஆகியவை அளிக்கப்படும். இந்தத் திட்டம் சமுதாயத்தில் குழந்தைப்பருவ குருட்டுத் தன்மையைத் தடுக்கும் பல்வேறு திட்டங்களையும் உள்ளடக்கியது ஆகும். சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவது இதன் முக்கிய செயல்பாடுகளில் தொடர்புடைய ஒன்றாகும். சிறப்பு நிதி உதவி இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்திருந்து பெறப்பட்டு இந்த செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். இலவச கண் சிகிச்சை முகாம்கள் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்படும். ஓணம் 2007 இன் போது மம்மூட்டி, சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட கேரள கிராமமான கோட்டயம் மாவட்டத்தின் பரத்தோடுக்கு அருகிலுள்ள கஞ்ஜிராப்பள்ளியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். மாநிலத்திலேயே இந்தக் கிராமம், அந்த நோயால் அதிகமான உயிரிழப்பை எதிர்கொண்டது. ஒரு பத்திரிக்கைக் கருத்தரங்கின் மம்மூட்டி இதைச் செய்வதற்கான அவரது தேவையை விளக்கினார்: மம்மூட்டியும் துபாயை-சேர்ந்த வியாபாரி எம்.ஏ யூசுப் அலியும் துபாய் இணைய நகர (DIC) அதிகாரிகளுடன் சந்தித்து சுறுசுறுப்பான நகரம் திட்டத்தை கொச்சியில் அமைப்பது பற்றிய முன்மொழியப்பட்ட நுழைவாயில் பற்றி விவாதித்தனர். மம்மூட்டி விளக்கிய இந்திய-ஆசிய செய்திச் சேவை: . அக்‍ஷயா, கேரளா அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டம் மம்மூட்டியை அதன் நல்லெண்ண தூதராக நியமித்தது. அவர் அந்தப் பதவியை 26 பிப்ரவரி 2006 அன்று அதிகாரப்பூர்வமாக வீடியோ நெட்வொர்க் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்றுக்கொண்டார், அது மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுடனும் இணைக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் காட்சி ஊடக விளம்பரங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அக்‍ஷயாவின் செய்தியை அனுப்பும் பிற விளம்பர பொருட்கள் மூலமாக பிரச்சாரத்திற்கு வழிநடத்தும் பொறுப்பை மம்மூட்டி ஏற்கிறார். அவர் விவரித்தது: மம்மூட்டி தற்போது தொலைக்காட்சியில் புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் கணினி விசைப்பலகை அல்லது இணைய உலாவலில் கைதேர்ந்தவர் ஆவதற்கான உதவிக்குறிப்புகளைத் தருவதாகத் தோன்றினார். அக்‍ஷயா என்பது கேரளாவின் கணினிக் கல்வி பிரச்சாரம் ஆகும், அது பல விருதுகளைப் பெற்றுள்ளது, மேலும் அந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்த பலமொழி நட்சத்திரத்தைக் கொண்டுள்ளது. தற்சமயம் கேரளாவில் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து மின்னொளிக்கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவர் கைராலி டிவி, பீப்பிள் டிவி மற்றும் சேனல் வீ போன்ற பல் மலையாள டிவி சேனல்களால் இயக்கப்படுகின்ற மலையாளம் தகவல் தொடர்பின் தற்போதைய தலைவர் பொறுப்பில் உள்ளார். மம்மூட்டி மெகாபைட்ஸ் என்ற தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார், அது பல தொலைக்காட்சி தொடர்களை தாயாரித்தது, 1990களின் இறுதியில் முதலாவதாக "ஜ்வாலயாய்" இருந்தது, இது ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அவருக்கு முதல் திட்டமாகவும் இருந்தது.. "ஜ்வாலயாய்" மலையாள தொலைக்காட்சியில் வரலாற்றை உருவாக்கியது. அவர் மம்மூட்டி டெக்னோடெயின்மெண்ட் என்ற பெயரில் ஒரு விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அது அவரது தமிழ் திரைப்படம் "கார்மேகம்" படத்தை கேரளாவில் விநியோகித்தது. அது விநியோக உரிமைகளிலிருந்து முதல் பங்கைப் பெறுகின்றது. மம்மூட்டி கேரளாவை அடிப்படையாகக் கொண்ட சவுத் இந்தியன் பேங்கின் உலகளாவிய வணிகத் தூதராக 16 அக்டோபர் 2006 அன்று நியமிக்கப்பட்டார். மம்மூட்டியின் ரசிகர்களில் பெரும்பாலானோர் NRIகளாக இருப்பதையும், நல்ல பேன் இந்தியன் நடிகராக அவரது செல்வாக்கையும் கருத்தில் கொண்டே அவர் நியமிக்கப்பட்டதாக வங்கி தலைவர் கூறினார். மம்மூட்டி, பல ஆண்டுகளில் பல்வேறு வெளியீடுகளில் அவர் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பான "காழ்ச்சப்பாடு" (("பெர்ஸ்பெக்டிவ்" ) என்ற பெயரில் ஏறத்தாழ மொழிமாற்றம் செய்தார்) என்ற தனது முதல் புத்தகத்துடன் எழுத்தாளராக மாறினார். அஜய் நாயுடு அஜய் நாயுடு (பிரப்பு பெப்ரவரி 12, 1972) ஒரு தெலுங்கு-அமெரிக்க நடிகர் ஆவார். சிக்காகோவில் பிரந்து வளந்த நாயுடு 1999ல் ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space) என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். வேறு சில இவர் நடித்த திரைப்படங்கள் பாட் ஸான்டா (Bad Santa), ரெக்குயியெம் ஃபொர் அ ட்ரீம் (Requiem For A Dream), மற்றும் த குரு (The Guru) ஆகும். இந்தியானா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக்கழகம் ("Indiana University"), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் புளூமிங்டன் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்தியானா பல்கலைக்கழகம் புளூமிங்டன், மற்றும் இன்டியனாபொலிஸ் ஆகிய இரு இடங்களில் அமைந்துள்ளது. தேயிலை தேயிலை ("Tea", "Camellia sinensis") ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது. இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் "Camellia sinensis" என்பதாகும், இங்கு "sinensis" என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். "Camellia" என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார். தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது. இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும். இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும். இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன. தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன. தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது. சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. லுவால் டெங் லுவால் டெங் (பிறப்பு ஏப்ரல் 16, 1985) ஒரு பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-யில் சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடுகிறார். சூடானில் பிறந்து சிறுவராக இருக்கும்பொழுது இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர் காலத்தில் சூடானிலிருந்து வெளியேறி எகிப்துக்கு குடியேறினார். எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு சரணாகதராக குடியேறினார். 1999ல் நியூ ஜெர்சியில் பிளேர் அகாடெமி உயர்பள்ளியில் சேர்ந்து முதலாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுக்கொண்டார். ஒரு ஆண்டு டியுக் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டத்தை விளையாடி 2003யில் சிகாகோ புல்ஸ் என். பி. ஏ. அணியை சேர்ந்தார். மூணார் மூணார் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணார் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.மூணார் நகரமும்,அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணார் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை , நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாராகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிளாலர்களான தமிழர்கள் ஆவர் இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடத் தொடங்கினர். ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதி, ரோப் கார் வசதியை ஏற்படுத்தினர். எனினும் பின்னர் வெள்ளத்தால் ரயில் பாதைகள் அழிந்ததால் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு சரக்குகளை கையாளப்பட்டது. இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணார் எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணார் மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்கையாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணார் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. மூணாரில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்கு தமிழகத்திலிருந்து மதுரை, தேனி, கோவை, உடுமலைப்பேட்டை, சென்னையிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான கொச்சி, அலுவா, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பேருந்து உள்ளது. போடிநாயக்கனூர் நகரிலிருந்து 2 மணி நேரத்தில் சிற்றுந்தில் செல்லலாம்.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும். 1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும். 1865 1865 (MDCCCLXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். குக் தீவுகள் குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும். முக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும். குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது. இயந்திரப் பொறியியல் இயந்திரவியல் (அல்லது இயந்திரப் பொறியியல்), ஒரு பொறியியலின் முக்கிய கிளைத்துறையாகும். மேலும் இது பழைமையான பொறியியல் துறைகளுள் ஒன்றாகும். கணிதம், பௌதீகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்துறையின் கீழ் அடங்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள், விசையியல், இயக்கவியல், வெப்பவியக்கவியல் போன்ற கிளைத்துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இயந்திரவியல் பொறியாளர் எனப்படுவர். இவர்கள் உற்பத்தி ஆலைகள், தொழில்துறை கருவிகள் மற்றும் இயந்திரங்கள், வெப்பமூட்டி மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள், போக்குவரத்து சாதனங்கள், விமானம், கப்பல்கள், மருத்துவ சாதனங்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்களின் வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கென அவர்கள் அடிப்படை கோட்பாடுகளோடு கணினி உதவி அமைப்புகள் மற்றும் பொருள் வாழ்நாள் சுழற்சி மேலாண்மை கொள்கைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின்போது இயந்திரப் பொறியியல் எனும் துறை தனித்துவம் பெற்றது. இயற்பியல் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்களால், 19 ஆம் நூற்றாண்டில் ‘இயந்திரப் பொறி அறிவியல்’ என்பது முக்கியத்துவம் பெற்றது. அதன்பிறகு உலகின் வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு கூட்டமைவு (நிலவியல்), இயந்திர மின் நுட்பவியல், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் என இன்று பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.இயந்திர பொறியாளர்கள் சமீபத்தில் உயிரியக்கவியல், போக்குவரத்து ஆய்வுகள், போன்ற உயிரியல் அமைப்புகள், மாடலிங், உயிரிமருத்துவ பொறியியல் திசு இயக்கவியல் உருவாக்கம் ஆகிய துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இயந்திரப் பொறியியல் பயன்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் பல பண்டைய மற்றும் இடைக்கால சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றுள் மேலும் மா ஜூன் ( 200-265 AD) மாறுபட்ட பற்சக்கரங்களை கொண்ட ஒரு குதிரை வண்டியை உருவாக்கினார். இடைக்கால சீன கடிகார உற்பத்தியாளர் மற்றும் பொறியாளர் சு சாங் (1020-1101 AD) வானியல் கடிகார கோபுரங்களில் ஒரு தப்பிக்கும் இயந்திர அமைப்பு பொறியை உருவாக்கினார். உருவரைவு அல்லது தொழிற்நுட்ப வரைபடங்கள் மூலமாக பொருட்களை வடிவமைத்தலும், தயாரிப்பதற்கான செய்முறை கட்டளைகளை உருவாக்குதலும் நிகழ்கின்றன. தொழிற்நுட்ப வரைபடங்கள், கணிப்பொறியில் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது கையால் வரைந்து உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம். ஒரு தொழிற்நுட்ப வரைபடம் கீழ்காணும் தகவல்களைக் கொண்டுள்ளது: இருபரிமாண செயல்முறையாக இருந்து வந்த உருவரைவு, கணினியின் உதவியால் தற்போது முப்பரிமாண செயல்முறையாக உள்ளது. இது CAD (Computer Aided Design) என அழைக்கப்படுகிறது. Kinematics of Machines Dynamics of Machines நோரா ஜோன்ஸ் நோரா ஜோன்ஸ் (பிறப்பு கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர், மார்ச் 30, 1979) ஒரு இந்திய-அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். இவரின் 2002ல் வெளிவந்த ஆல்பம், "கம் அவே வித் மி" (Come Away With Me), 20 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இன்று வரை 10 கிராமி விருதுகளை வெற்றிபெற்ற நோரா ஜோன்ஸின் தந்தையார் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ரவி சங்கர் ஆவார். கூகிள் குழுமம் கூகிள் குழுமம் ஒரு இலவச சேவையாக கூகிள் அமைப்பினரால் கொண்டு வரப்பட்டது. இதில் இணையத்தின் வாயிலாகவும் மடல்கள் மூலமாகவும் பொது மக்கள் கூடி அவர்களுடைய பொதுவான சிந்தனைகளை பரிமாறிக்கொள்கிறார்கள். இணையத்தில் உலாவுவர்கள், தங்களுக்குப் பிடித்தமான குழுமத்தைத் தேடி அதில் இணைந்து கொள்வதன் மூலம் ஒருவர் அனுப்பும் மடல் குழுமத்தின் மட்டுறுத்துனர் வாயிலாக அனைவரையும் சென்றடைகிறது. தமிழ் குழுமங்களில் சில பார்வைக்கு அன்புடன், முத்தமிழ், தமிழ் பிரவாகம், தமிழ் மணம், பண்புடன், விக்சனரி, இல்லம், மின் தமிழ், தமிழ் நண்பர்கள், நூலகம் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் பாபி ஜிண்டல் பியுஷ் 'பாபி' ஜிண்டல் ("Piyush "Bobby" Jindal"", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார். 2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டி இடுவார் என மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார். ஜும்ப்பா லாஹிரி ஜும்ப்பா லாஹிரி (வங்காள மொழி: ঝুম্পা লাহিড়ী) (பிறப்பு நீலஞ்சனா சுதேஷ்னா, 1967) ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இலண்டனில் பிறந்து ரோட் தீவில் வளர்ந்த லாஹிரியின் முதலாம் நூல், ஒரு சிறுகதைத் தொகுப்பு "இண்டர்ப்பிரெட்டர் ஆஃப் மேலடீஸ்" (Interpreter Of Maladies), 2000ல் புலிட்சர் பரிசை வெற்றிபெற்றது. இவரின் இரண்டாம் நூல், முதலாம் நாவல் "த நேம்சேக்" (The Namesake) 2003ல் வெளிவந்து 2007ல் இயக்குனர் மீரா நாயர் திரைப்படமாக படைத்தார். ஜும்பா லாகிரியின் பெற்றோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முதலில் பிரிட்டனில் குடியேறினார்கள். ஜும்பா லாகிரி பிரிட்டனில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயது ஆனபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடியேறினர். 2014 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் தேசிய மனித நேய விருதை ஜும்பா லாகிரிக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா வழங்கிக் கவுரவித்தார். தி இந்து (தமிழ்) 12, செப்தம்பர், 2015. ஔட்கேஸ்ட் ஒளட்கேஸ்ட் (Outkast) ஒரு அமெரிக்க ராப் குழுமமாகும். இக்குழுமத்தில் இரண்டு ராப் இசை கலைஞர்கள், ஆன்ட்ரே 3000 & பிக் பாய், உள்ளனர். அட்லான்டாவின் கிழக்குத் திக்கு (East Point) என்ற புறநகரத்தில் சேர்ந்த ஒளட்கேஸ்ட் 1991 முதல் இன்று வரை மொத்தத்தில் 20 மில்லியன் ஆல்பம்களை விற்று 6 கிராமி விருதுகளை வெற்றிபெற்றுள்ளார். 1994ல் இவர்களின் முதலாம் ஆல்பம், "சதர்ன்பிளேயலிஸ்டிக்காடிலாக்மியூசிக்" (Southernplayalisticadillacmuzik) வெளிவந்து அமெரிக்கவின் தென் பகுதி ராப் இசை புகழுக்கு வந்தது. பல ராப் இசை நிபுணர்கள் இவர்களின் அடுத்த இரண்டு ஆல்பம்கள் "ஏடிஎலியென்ஸ்" (ATLiens) மற்றும் "அக்குவெமினை" (Aquemini) ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்தமான ஆல்பம்களிலேயே சேர்ந்தது என்று கூறியுள்ளார்கள். "த சோர்ஸ்" (The Source) என்ற உயர்தர ராப் இதழ் அக்குவெமினைக்கு மிகவும் உயர்ந்த ஐந்து-நட்சத்திர rating கொடுத்தது. 2000ல் இவர்களின் 4ம் ஆல்பம், "ஸ்டாங்கோனியா" (Stankonia), 4 மில்லியன் ஆல்பம்களை விற்று இரண்டு கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இதுக்கு பிறகு ஔட்கேஸ்ட் மேலும் இரண்டு ஆல்பம்களை இன்று வரை படைத்துள்ளனர். ராப் இசை தவிர ஆன்ட்ரே 3000 மற்றும் பிக் பாய் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளனர். வெற்றி பரிந்துரைக்கப்பட்டது ஜகார்த்தா ஜகார்த்தா இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இது பத்தாவியா என்றே அழைக்கப்பட்டது. புராதன மீன்பிடிக் கிராமமாக இருந்து வளர்ச்சி பெற்ற இந்நகரம் இன்று உலகின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பண்டைய இஸ்லாமிய சுல்தான் ஒருவர் இந்நகரை வெற்றி கொண்டபோது வெற்றியின் நகரம் எனப் பொருள்படும் ஜயகர்த்தா எனப் பெயரிட்டிருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே இதன் பெயர் ஜகார்த்தா ஆகியிருக்கிறது. இந்நகரின் இன்றைய சனத்தொகை கிட்டத்தட்ட 12 மில்லியன் எனவும் தினசரி வேலைகளுக்காக வெளியிடங்களிலிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களுடன் சேர்த்து அவ்வெண்ணிக்கை 16 மில்லியனுக்கு மேல் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரும் நகரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும் எங்கு சென்றாலும் மா, வாழை, ரம்புட்டான் போன்ற பழ மரங்களையும் வெவ்வேறு விதமான அழகிய மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் காண முடியும். ஜகார்த்தா மாநகரம் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் என்றே கொள்ளப்பட வேண்டும். இந்நகரில் பயணிக்கும்போது இது உலகின் மிக அழகிய நகரங்களுள் ஒன்றெனும் உண்மை அனைவருக்கும் புலனாகும். எனினும், உலகின் மற்றப் பெருநகரங்களைப் போன்று பாதாள தொடருந்துச் சேவைகள் இங்கு காணப்படாமையால், வீதிப் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது. ஜகார்த்தா மாநகரம் இந்தோனேசியாவின் (ஜகார்த்தா, ஜொக்ஜாகார்த்தா மற்றும் ஆச்சே ஆகிய) மூன்று விசேட நிருவாகப் பிராந்தியங்களில் ஒன்றும் அதன் மிகப் பெரும் நகரமும் ஆகும். இந்நகர நிருவாகத்தை ஐந்து பிரதான பிரிவுகளாகப் பிரித்திருப்பதால் இந்நகருக்கென ஐந்து மேயர்கள் காணப்படுகிறார்கள். இந்தோனேசியாவின் பல்வேறு மொழிகளையும் பேசக்கூடிய மக்களும் இங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஜகார்த்தா நகரில் எங்கு சென்றாலும் இந்தோனேசிய மொழியிலேயே உரையாடுகிறார்கள். பண்டைய ஜகார்த்தாவாசிகள் பேசிய மொழியான பத்தாவிய மொழியைப் பேசுவோரும், சாவகத் தீவின் மேற்குப்பகுதியில் அதிகமாகப் பேசப்படும் சுண்டா மொழியைப் பேசுவோரும், இந்தோனேசிய சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியினரின் தாய்மொழியாகிய சாவக மொழியைப் பேசுவோரும் இங்கு அதிகமாகவே காணப்படுகின்றனர். இங்கு அரச அலுவல்கள் அனைத்தும் இந்தோனேசிய மொழியில் மாத்திரமே நடைபெறுவதால் ஆங்கிலம் அல்லது வேறு மேற்கத்திய மொழிகளைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். இந்தோனேசியத் தமிழர்களிலும் கணிசமான தொகையினர் இங்கு வாழ்கின்றனர். முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இந்நகரில் பொதுவாக அனைத்து மதங்களையும் பேணும் மக்களும் வாழ்கின்றனர். மற்ற மதங்கள் மீதான சகிப்புத்தன்மை இங்கு மிக அதிகம். மேலும், மேற்கத்தியக் கலாசாரத்தின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஜகார்த்தா மாநகரில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வு கூடங்களும் காணப்படுகின்றன. ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப்பகுதியான செங்காரெங் எனுமிடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையம் சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையம் என அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சிறந்த தலைவர்களெனக் கருதப்படும் முன்னாள் சனாதிபதி மற்றும் உப சனாதிபதி ஆகியோரின் நினைவாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கென முன்னர் பயன்படுத்தப்பட்டுவந்த ஹாலிம் பெர்தானா குசுமா விமான நிலையம் இப்போது இந்தோனேசியாவின் விமானப்படையினால் பயன்படுத்தப்படுகிறது. ஜகார்த்தா பல குடியேற்றங்களுடனும் அவர்களது பெயருடனும் உள்ளது: சுந்தா கெலாபா (397-1527), ஜெயகார்த்தா (1527-1619), படாவியா (1619-1942), ஜ்ஜகார்த்தா (1942-1972), மற்றும் ஜகார்த்தா (1972-தற்போது).அதன் தற்போதைய பெயர் ஜெயகார்த்தா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தையின் தோற்றங்கள் பழைய ஜாவானியா மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் பொருந்துகின்றன. "ஜெயகார்த்தா" "வெற்றிகரமான செயலாக", "முழுமையான செயல்", அல்லது "முழுமையான வெற்றி" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1950 முதல், ஜாவா மற்றும் பிற இந்தோனேசிய தீவுகளின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜகார்த்தாவுக்கு மக்கள் படையெடுத்தனர். மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு ஜகார்த்தாவில் வழங்கப்படும் என வெள்ளமாக மக்கள் குவிந்தனர்.1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள்தொகையில் வெறும் 51% மக்கள் மட்டுமே உண்மையில் ஜகார்த்தாவில் பிறந்தவர்கள். 1961 மற்றும் 1980 க்கு இடையில், ஜகார்த்தா மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்தது மற்றும் 1980-1990 காலப்பகுதியில் நகர மக்கள் தொகை ஆண்டுக்கு 3.7% ஆக அதிகரித்தது.2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜகார்த்தா மக்கள்தொகையாக 9.58 மில்லியன் மக்களைக் கணக்கிட்டது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.ஜகார்த்தாவின் பரப்பளவு 664 கிமீ 2 ஆகும், இந்நகரின் மக்கள் அடர்த்தி 15,174 மக்கள்/ 1சதுர கீ.மீ ஆகும். இதனால் இந்நகர் உலகின் ஒன்பதாவது அடர்த்தி மிகுந்த நகர மக்கள்தொகையாக உதயமாகியுள்ளது. ஜகார்த்தா மக்கள் தொகையில் 85.36% முஸ்லிம்கள், 7.53% புராட்டஸ்டன்ட், 3.30% பெளத்தர்கள், 3.15% ரோமன் கத்தோலிக்கர்கள், 0.21% ஹிந்து, மற்றும் 0.06% கன்ஃபுஷியனிஸ்ட் ஆகியோர். ஜகார்த்தா மக்கள் பெரும்பான்மையானவர்கள் சுன்னி முஸ்லீம்கள்.இந்தோனேசியா யுலேமா கவுன்சில், முஹம்மதியா, ஜரிக்கிங்கன் இஸ்லாம் லிபரல் மற்றும் முன்னணி பெம்பெலா இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையகம் ஜகார்த்தாவில் பல உள்ளன. ஜகார்த்தாவில் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. இனி நடக்கவிருக்கும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் இங்கே தான் நடக்கவுள்ளது.ஜகார்த்தா மாநகர் 1979, 1987, 1997, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள கெலொரா பங் கர்னோ ஸ்டேடியம், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் 2007 AFC ஆசிய கோப்பை குழு நிலை(group stage), கால் இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தியது.ஜகார்த்தாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் 88,083 இடங்களைக் கொண்டிருக்கும், கெலோரா பங் கர்னோ ஸ்டேடியம் ஆகும்.ஜகார்த்தா மராத்தான் பந்தயம் "இந்தோனேசியாவின் மிகப்பெரிய ஓடுதல் நிகழ்வு" என்று கூறப்படுகிறது. இது சர்வதேச மராத்தான் மற்றும் தொலைவு ஓட்டப்பந்தய சங்கம் (AIMS) மற்றும் சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கத்தால் (IAAF) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.2015 ஆம் ஆண்டின் மராத்தான் போட்டியில், 53 நாடுகளில் இருந்து 15,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இது ஜகார்த்தாவின் சகோதரி நகரங்களின் பட்டியலாகும்: கெய்ரோ, எகிப்து கசாபிளாங்கா, மொராக்கோ இஸ்லாமாபாத், பாக்கிஸ்தான் ஜெத்தா, சவுதி அரேபியா இஸ்தான்புல், துருக்கி பெய்ஜிங், சீனா ஷாங்காய், சீனா டோக்கியோ, ஜப்பான் பியோங்யாங், வட கொரியா சியோல், தென் கொரியா ஹனோய், வியட்நாம் பாங்காக், தாய்லாந்து ஏதன்ஸ், கிரீஸ் பாரிஸ், பிரான்ஸ் பெர்லின், ஜெர்மனி புடாபெஸ்ட், ஹங்கேரி ராட்டர்டாம், நெதர்லாந்து லண்டன், யுனைட்டட் கிங்டம் மாஸ்கோ, ரஷ்யா லாஸ் ஏஞ்சல்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ் சிட்னி, ஆஸ்திரேலியா ஜிம்மி கார்ட்டர் ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் ("James Earl "Jimmy" Carter") (பிறப்பு அக்டோபர் 1, 1924) அமெரிக்காவின் 39ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இவர் 2002ல் நோபல் அமைதி பரிசு வெற்றிபெற்றார். அலகு குத்துதல் அலகு குத்துதல் என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு. மீசை மீசை என்பது முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது. டெஸ்ட்டோஸ்டீரான் பருவ வயதில் சுரக்கும்போது மீசை வளரும் ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல் வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர வைப்பதாகும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்குரிய மிடுக்கை கொடுக்கும். தசைகள் இருக்கமாகி, இளமைப்பொலிவு கூடும். குரலும் மாறிவிடும். கால்சைட்டு கால்சைட்டு ஒரு கால்சியம் கார்பனேட்டின் படிக வடிவம்; இது ஒரு தாதுப்பொருள். இது சாய்சதுர அமைப்பில் படிகமாகிறது; பொதுவாக நிறமற்று இருப்பினும், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் ஒரு வடிவமான ஐசுலாந்துச் சுண்ணாம்புக்கல்லின் முக்கியப்பண்பு இரட்டை விலகல் ஆகும். இது மிக நிலைப்புத் தன்மை வாய்ந்தது. கால்சைட்டு ஒரு முக்கியமான பாறை-உருவாக்கும் தாதுப்பொருள். இது சுண்ணாம்புக்கல், பளிங்கு, சுண்ணக்கட்டி ஆகிய பொருள்களின் முக்கிய உட்பொருளாகும். பைஞ்சுதை, சுண்ணம், உரத் தயாரிப்பில் கால்சைட்டு பயன்படுகிறது. 1658 1658 (MDCLVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். சீபூத்தீ சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, "Djibouti") அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது. எரித்திரியா எரித்திரியா (எரித்திரேயா) அல்லது எரித்திரிய அரசு ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். ஆங்கிலத்தில் "Eritrea" ( or ); என்பது இத்தாலியம் வழி பிறந்தது. அதற்கு மூலமான Ἐρυθραίᾱ என்னும் சொல் "சிவப்பு" என்னும் பொருளுடையது. இவ்வாறு "எரித்திரேயா" என்பது "செந்நாடு" என்னும் பொருள் தருகிறது. பிற மொழி வடிவங்கள்: Ge'ez: '; '. "ஆப்பிரிக்காவின் கொம்பு" ("Horn of Africa") பகுதியில் உள்ள இந்நாட்டின் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடலால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும் யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்குழுமமும் அனீசுத் தீவுகளின் சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா 1993 மே 23 இல் ஐநாவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது. எதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது. 1885ம் ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ப் பிரபுக்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்கு செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்தாலி செங்கடலில் உள்ள தனது வெவ்வேறு நிலப்பரப்பை ஒருங்கிணைத்து எரித்திரியா என்ற பெயரில் ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கியது. 1896 ஆம் ஆண்டு இத்தாலி அண்டை நாடான எத்தியோப்பியா மீது படையெடுக்க எரித்திரியாவை ஒரு களமாகப் பயன்படுத்தியது. ஆனால் இத்தாலி மேற் கொண்ட தாக்குதலை எதியோப்பியா வெற்றிகரமாக முறியடித்தது. இத்தாலிப்படை தோல்வியை தழுவியது. அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் தோல்வி இத்தாலியின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. 1936 ஆம் ஆண்டு மீண்டும் இத்தாலி எரித்திரியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்திரியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி போரில் வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அபிசீனியா, (ஐரோப்பியர்கள் எரித்திரியாவை இப்படித்தான் அழைப்பார்கள்) எரித்திரியா, சோமாலிலாந்து ஆகிய மூன்றும் சேர்ந்து "இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இரண்டாவது உலகப்போரை அடுத்து இத்தாலியின் காலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றி மன்னர் ஹெயிலி செலாஸ்சியை மீண்டு எத்தியோப்பாவின் மன்னன் ஆக்கியது. 1952 இல் ஐநா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டு வந்தது. எரித்திரியாவின் விடுதலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்திரியாவிற்கு ஒரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது எரித்திரியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன. 1962இல் மன்னர் ஹேயிலி லொஸ்சி ஏரித்தியா நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அதனை எத்தியோப்பியவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார். இது தான் ஏரித்தியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்தது. 1974ம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் சுகந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது. மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஐிஸ்ட்டு ஹேயிலி மரியம் தலைமையில் இயங்கியது. 1960களில் ஏரித்தியாவின் விடுதலைப் போராட்டம் ஏரித்தியவின் விடுதலை முன்னனி தலைமையில் நடந்தது. 1970ல் இருந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னனி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1970ம் ஆண்டு கடைசிப்பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுகளுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி செயல்ப்பட்டர். இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது. 1977ல் இப்எல்எப் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் "இபிஎல்எப் மட்டுமே ஏரித்திய மக்களின் ஏகப்பிரதிநிதி ஆவர். அந்த அமைப்போ எரித்திய மக்களின் சார்பில் பேசவல்ல சட்டபூர்வமான அமைப்பு என அறிவித்தது. 1977இல் எத்தியாப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால் அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான் வழியாக கொண்டு சென்று குவித்தது. இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது. 1978 மற்றும் 1986 காலப்பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டு முறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியல் முடிந்தன. இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கொரிலா தாக்குதல்களையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற் கொண்டது. 1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கும் முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படைகள் எதிர்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்த்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டை நாடான சுடானுக்கு ஓடித்தப்பினார்கள். 1982இல் எத்தியோப்பியா 6 வது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற் கொண்டது. எத்தியோபபிய படையில் 120 000 ஆயிரம் படையினர் இருந்தனர். இதற்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூடப்பட்டது. 1984 மே மாதத்திலும் 1986இலும் அஸ்மேரா என்றா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி ஊடுருவித்தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதக் களஞ்சியங்களும் எரி பொருள் சூதங்களும் ஏரியூட்டப்படடன. 1980ல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தை தாக்கி கைப்பற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள். எரித்திரியா - எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. அதற்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது. 1991 மே மாதம் மெங்கிஸ்து அரசு கவிண்டது. மே நடுவில் மெங்ஐிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு காப்பந்து அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாப்வேயில் அரசியல் புகலிடம் கோரினார். மே மாத கடைசியில் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட நான் போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றின. எத்தியோப்பிய படைகளைக் களத்தில் புறமுதுகு கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மே 1991 இல் இபி எல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை நிறுவியது. அரசுத் தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையஸ் அவர்கள் நியமிக்கப்பட்டர். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசமையாக மாறியது. 1993 ஏப்ரலில் 23-25 நாட்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு ஐ.நா. கண்காணிப்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரலில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள். எரித்திய மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24இல் அதிகாரபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் ("Oklahoma State University"), ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். பியான்சே நோல்ஸ் பியான்சே ஜிசெல் நோல்ஸ் ("Beyoncé Giselle Knowles", பிறப்பு செப்டம்பர் 4, 1981), பொதுவாக பியான்சே என்றழைக்கபட்ட ஒரு அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். டெஸ்டினீஸ் சைல்ட் என்ற பெண்ணின் ஆர் & பி இசை குழுமத்தில் முதலாம் பாடகியாக இருந்து புகழுக்கு வந்தார். இக்குழுமம் உலகில் பல பெண்ணின் இசைக்குழுமங்களில் நிறைய ஆல்பம்களை விற்ற குழுமமாகும். 2003ல் இவரின் முதலாம் தனி ஆல்பம், டேஞ்ஜரஸ்லி இன் லவ் (Dangerously In Love) படைத்து ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றார். பாடல் தவிர கோல்டுமெம்பர், த பிங்க் பாந்தர், ட்ரீம்கர்ல்ஸ் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் இவரும் புகழ்பெற்ற ராப் இசை கலைஞர் ஜெய்-சியும் திருமணம் செய்தார்கள். அடிஸ் அபாபா அடிஸ் அபாபா ("Addis Ababa") எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது. மியன்மார் தமிழர் தமிழ்நாட்டில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசாலும் தாமாகவும் தொழிலாளர்களாகவும் அரச சேவர்கர்களாகவும் வணிகர்களாகவும் பர்மா(மியான்மார்) கொண்டு செல்லப்பட்டவர்களின், சென்றவர்களின் வம்சாவழியினர் பர்மா தமிழர் அல்லது மியன்மார் தமிழர் ஆவர். தொடக்கத்தில் 500 000 மேற்பட்டவர்களாக இருந்தார்கள். 1960 களில் பர்மாவில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பெரும்பாலான தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இருப்பினும் இன்றும் பர்மாவில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். தற்போது,பல பத்தாண்டுகளுக்குப் பிறகு "பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன." பர்மா அரசு அவர்களுக்கு தமிழ்க் கல்வியையோ, பண்பாட்டையோ பேண இடமளிக்கவில்லை என்ற படியால் பலர் பர்மா மைய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். இருப்பினும் குறிப்பிடத்தக்க தொகையினர் தமிழ் அடையாளத்தோடும் இன்றும் பர்மாவில் வசிக்கின்றனர். தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் பராசக்தியில் பர்மா தமிழர் அகதியாக தமிழ்நாடு திரும்புகையில் சந்திக்கும் அவலங்கள் காட்டப்பட்டுள்ளன. ரங்கூனில்(தற்போதைய யாங்கோன்) இருந்து தனவணிகன் என்ற நாளேடு சில ஆண்டுகள் வெளியானது. இந்தோனேசியத் தமிழர் தமிழ் பின்புலத்துடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் இந்தோனேசியாத் தமிழர் எனப்படுவர். இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு முதலாம் ராஜேந்திர சோழரின் படையெடுப்புகளுடன் (கிபி 1023 - 1026) தொடங்குகிறது. ஆனாலும், தமிழர்கள் ஆயிரத்தெந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே வணிக நிமித்தம் அங்கு வந்து போயிருந்தனர். ஆங்காங்கு சில பட்டினங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கு வர்த்தக மையங்கள் போன்றவற்றை வைத்திருந்தனர். ராஜேந்திர சோழர் படையெடுப்பின்போது சில இடங்களில் தமிழர்கள் நன்கு வளமுடன் வாழ்ந்துகொண்டிருந்தனர். முக்கியமான பல ஊர்களில் அவர்களும் இருந்தனர். சில தமிழர் மன்னர் குடியினரும் வந்து அரசுகளை நிறுவியிருக்கின்றனர். அவர்கள் நாளடைவில் அங்குள்ள மக்களுடன் கலந்துவிட்டனர். அதன் பின்னர் 1830களின் டச்சுக் குடியேற்றக்காரர்களால் தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருவிக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் தொழில் பொருளாதார வாய்ப்புகள் தேடி மேலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். வடக்கு சுமாத்திரா மாநிலத்தின் மெடான் நகரில் மாத்திரம் 5,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர். இது தவிர ஜகார்த்தா, தஙராங், பண்டுங், சுராபாயா, மலாங் போன்ற இடங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். 2009 இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் சில நூறு பேர் இங்கு அகதிகளாக வந்து வாழ்கிறார்கள். இந்தோனேசியாவில் பல தமிழர் அமைப்புகளும் இயங்குகின்றன. இந்தோனேசியத் தமிழர்கள் தமது தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தாலும், சரியாகத் தமிழ்ப் பேசும் நிலை மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் இந்தோனேசிய மொழியையே தமது முதன்மொழியாகப் பேசுகின்றனர். அவர்கள் தமிழிற் பேசினாலும் இடைக்கிடையே இந்தோனேசிய மொழிச் சொற்களைக் கலந்துவிடுகின்றனர். லைபீரியா அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது. லைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும். 19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது. லாரி பர்ட் லாரி ஜோ பர்ட் ("Larry Joe Bird", பிறப்பு டிசம்பர் 7, 1956) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபை கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். என். பி. ஏ.யை 1979ல் சேர்ந்து 1992 வரை பாஸ்டன் செல்டிக்ஸ் அணியில் விளையாடி மூன்று போரேரிப்புகளை வெற்றிபெற்றார். லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் பந்துகையாளி பின்காவல் மேஜிக் ஜான்சன் உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற இன்பமான எதிரிடை இருந்தது; 1980களில் ஜான்சனின் லேகர்ஸும் பர்டின் செல்டிக்ஸும் மொத்தத்தில் 7 போரேறிப்புகளை வெற்றிபெற்றார். என். பி. ஏ. ஒழுக்கம் முடிந்துவிட்டு இப்பொழுது இவர் இந்தியானா பேசர்ஸ் அணியின் பிரதான நிருவாகி ஆவார். போக்லாந்து தீவுகள் போக்லாந்து தீவுகள் ("Falkland Islands", தமிழக வழக்கு:"பாக்லாந்து தீவுகள்") தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். ஆர்ஜென்டீனாவின் கரையிலிருந்து 300 மைல் (483 கிமீ) தொலைவிலும் தெற்கு யோர்சியாவின் சாங் பாறைகளிலிருந்து 671 மைல் (1,080 கிமீ) மேற்காகவும் பிரித்தானிய அண்டார்டிக் மண்டலத்திலிருந்து 584 மைல் (940 கிமீ) வடக்காகவும் அமைந்துள்ளது. போக்லாந்து தீவுகள் கிழக்கு போக்லாந்து தீவு, மற்றும் மேற்கு போக்லாந்து தீவு என்ற முக்கிய இரண்டு தீவுகளையும் 776 சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. கிழக்கு போக்லாந்து தீவில் அமைந்துள்ள சுடான்லி இதன் தலைநகராமாகும். இத்தீவுகள் சுயாட்சி அரசைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலமாகும். இருப்பினும் ஆர்ஜென்டீனா இத்தீவுகளுக்கு 1833 முதல் உரிமைக் கோரி வருகின்றது. இந்த உரிமைக் கோரலுக்காக 1982 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா இத்தீவுகளை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையே இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத போக்லாந்து போர் இடம்பெற்றது. இப்போரில் ஆர்ஜென்டீனாவின் தோல்வியுடன் தனது படைகளை அது பின்வாங்கிக் கொண்டது. போர் முடிவடைந்தது முதல் மீன்பிடிக் கைத்தொழில், உல்லாசப்பிரயாணக் கைத்தொழில் என்பவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி இத்தீவுகளின் குடிகள் பிரித்தானிய குடிமக்களாக கணிக்கப்படுகின்றனர், மேலும் ஆர்ஜென்டீன குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர். இத்தீவுகளின் குடிகள் பெரும்பான்மையாக 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு குடியேறிய சுகொட்லாந்து நாட்டினரின் வம்சாவழியினராவார்கள். இத்தீவுகளின் குடிகள் ஆர்ஜென்டீனாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கின்றனர். இப்ஸ்விச் இப்ஸ்விச் இங்கிலாந்தின் சப்பொக் கவுண்டியில் சுமார் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறு நகரமாகும். கிழக்கு ஆங்கில மாகாணத்தில் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர், வேடுவர் மற்றும் சிங்களவர் என வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாக கொண்டோர் இலங்கை தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் ஆவர். இந்திய தமிழ் முஸ்லீம்கள் போலில்லாமல் இவர்கள் முஸ்லீம்கள் என்ற சமய அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துகின்றார்கள். 1800 களில் பிரித்தானிய காலனித்துவ அரசால் இலங்கை மலைநாட்டு தேயிலை இரப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினர் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். ஏறக்குறைய எண்பது சதவீதத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். ஏனையோர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இலங்கையில் அனைத்து தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது. ஐரோப்பாவில் தமிழர் தற்கால தமிழர்களுக்கும் ஐரோப்பியருக்குமான தொடர்பு ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியினாலேயே ஏற்பட்டது. பிரித்தானிய, பிரெஞ்சு, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பிய காலனித்துவ அதிகாரங்கள் தமிழர்களை ஆண்டனர். எனினும் அக்காலத்தில் தமிழர் ஐரோப்பா சென்று வசிக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்து, 1950 களின் பின்னரே தமிழர்கள் தொழில்துறை வல்லுனர்களாக பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்கு பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஈழ அகதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு துறையினர் இடம்பெற்றார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வம்சாவளியினரும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார விருத்தி பெற்று வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள் மற்றும் பிற நாடுகளில் பரந்து வாழுகின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 500 000 - 600,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ) ஆல்புகெர்க்கி என்பது நியூ மெக்சிகோவின் மிகப்பெரிய நகரமாகும். இது ஒரு அதி உயர நகரம். இந்நகரின் மக்கள் தொகை, ஜூலை 1, 2012 வரை 555,417 இருந்ததுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 32வது பெரிய நகரமாக இந்நகரம் தரப்படுத்தப்பட்டுள்ளது ஆன்டுரூ போகட் ஆன்டுரூ போகட் ("Andrew Bogut", பிறப்பு நவம்பர் 28, 1984) ஒரு ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் அணியில் நடு நிலையில் விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவில் குரொவேசிய தாய், தந்தையாருக்குப் பிறந்த போகட் வளந்து யூட்டா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு விளையாடினார். 2006 என். பி. ஏ. தேர்தலில் மில்வாகி பக்ஸ் இவரை முதல் நிலையில் தேர்துக்கொண்டார். யூட்டா பல்கலைக்கழகம் யூட்டா பல்கலைக்கழகம் ("University of Utah"), ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். டோகோ டோகோ ("Togo") மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் லோமே ஆகும். மேற்கு கானா, கிழக்கு பெனின், வடக்கு புர்கினா பாசோ ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. கிராமி விருது கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது. கார்ல் மலோன் கார்ல் ஆந்தனி மலோன் ("Karl Anthony Malone", பிறப்பு ஜூலை 24, 1963) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் இரண்டாம் மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்; இவருக்கு முன் கரீம் அப்துல்-ஜப்பார் மட்டும். லூசியானா டெக் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடி 1985ல் யூட்டா ஜேஸ் அணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற பந்துகையாளி பின்காவல் ஜான் ஸ்டாக்டன் உடன் இவரின் யூட்டா ஜேஸ் சித்திஅடைந்தது, ஆனால் 2004ல் ஒரு போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லாமல் என். பி. ஏ.-இலிருந்து அகலினார். ஜான் ஸ்டாக்டன் ஜான் ஹியூஸ்டன் ஸ்டாக்டன் ("John Houston Stockton", பிறப்பு மார்ச் 26, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் மிகவும் அதிக உதவல்களும் (Assists), திருடங்களும் (Steals) பெற்றவர் ஆவார். இவரின் பிறந்த நகரம் ஸ்போகேனில் நாலு ஆண்டு கொன்சாகா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடி 1984ல் யூட்டா ஜேஸ் அணியை சேர்ந்தார். 2003ல் என். பி. ஏ.-யை அகலி போகும் வரை யூட்டா ஜேஸ் அணியில் கார்ல் மலோன் உடன் விளையாடி புகழுக்கு வந்தார். மலோன் உடன் "பிக் அண்டு ரோல்" (Pick and Roll) என்ற கூடைப்பந்து நுட்பத்தை மேன்மையாக செய்தார். ஆனால் இவர் ஒரு என். பி. ஏ. போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லை; மிக உயர்ந்த போரேறிப்பு வெற்றிப்படாத வீரர்களின் இவர் ஒன்றாவார் என்று பல என். பி. ஏ. நிபுணர்கள் கூறுகிறார். பரோயே தீவுகள் பரோயே தீவுகள் ("Faroe Islands") வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமொன்றாகும். ஐசுலாந்து, சுகொட்லாந்து, நோர்வே என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் 1948 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது. பரோயே தீவுகள் ஐசுலாந்து, செட்லாந்து, ஓக்னீ, வெளி ஏப்பிரைட் தீவுகள், கிறீன்லாந்து என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் 1814 இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் நோர்டிக் சங்கத்தில் டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது. டென்செல் வாஷிங்டன் டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் ("Denzel Hayes Washington, Jr.", பிறப்பு டிசம்பர் 28, 1954) தலைசிறந்த அமெரிக்க நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 1990களின் படைத்த திரைப்படங்களுக்கு மிக புகழ்பெற்றவராவார். மால்கம் எக்ஸ், ஸ்டீவ் பிகோ, ஃப்ராங்க் லூகஸ் என்றைய உண்மையாக இருந்த நபர்களை திரைப்படத்தில் பாவனைக்காட்டி புகழ்பெற்றார். மூன்று தங்க உருண்டை விருதுகளும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வெற்றிபெற்ற டென்செல் வாஷிங்டன் வரலாற்றில் இரண்டாம் உயர்ந்த நடிகர் ஆஸ்கரை வெற்றிபெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். இந்த உயர்ந்த நடிகர் விருது 2001ல் ட்ரெய்னிங் டே திரைப்படத்துக்கு வெற்றிபெற்றார். டிரெய்னிங் டே ட்ரெய்னிங் டே ("Training Day", அல்லது ""பயிற்சி தினம்"") 2001ல் வெளிவந்த ஆங்கில நாடகத் திரைப்படமாகும். ஆன்டுவான் ஃபூக்குவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டென்செல் வாஷிங்டன், ஈத்தன் ஹாக், ஈவா மென்டெஸ், டாம் பெரெஞ்ஜெர், மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. இத்திரைப்படத்தில் நடித்த டென்செல் வாஷிங்டன் 2001ல் ஆஸ்கர் விருது வெற்றிபெற்றார். நாடகப்படம்/திகிற் திரைப்படம் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் "ஜேக் ஹொய்ட்" (ஈத்தன் ஹாக்)) முதலாம் நாள் போதை காவல்துரையாக அனுபவிப்பட்ட காவல்துரை "அலோன்சோ ஹாரிஸ்" (டென்செல் வாஷிங்டன்) உடன் பயிற்சி செய்கிறார். சமோவா சமோவா ("Samoa") ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும். மக்கள் சமோவர் என்றழைக்கப்படுகின்றனர். ஆட்சிமொழி சமோயன் (Samoan), ஆங்கிலம். நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது. நியூசிலாந்திலிருந்து 1.1.1962 இல் விடுதலை பெற்றது. நாட்டின் மொத்தப் பரப்பளவு 2,831 கி.மீ. 11 மாவட்டங்கள் உள்ளன. நாணயம் தாலா(Tala) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் பிரதமர் துயிலேபா அயோனா சயிலெலெ மலியலெகாய் (Tuilaepa Aiono Sailele malielegaoi). கல்வியறிவு பெற்றவர்கள் 99.7%. சுதந்திரம் அடைவதற்குமுன் சமோவா மேற்கு சமோவா என்றும் ஜெர்மன் சமோவா என்றும் அழைக்கப்பட்டுவந்தது. 1962இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியர்கள் உபோலு (upolu) என்னும் பகுதியைக் கைப்பற்றி வணிகம் செய்யத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் வணிகம் மற்றும் துறைமுகத்தினை அமைத்தனர். 20 ஆம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. 1920 ஆம் ஆண்டு மாயு (Mau) தலைவர்களில் ஒருவரான ஒலாஃப் ஃபிரடரிக் நெல்சன் (Olaf Frederick Nelson) நியூசிலாந்தின் ஆட்சியை எதிர்த்தார். நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்சன் மறையும் போது “Peace Samoa” என்று உரக்கக் கத்திக்கொண்டே மறைந்த நாள் Black Saturday என்று சமோவா மக்களால் அழைக்கப்படுகிறது. ஜூலை 1997 இல் மேற்கு சமோவா, சமோவா என்று மாற்றப்பட்டது. சாலையில் பயணம் செய்யும்போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும். 21 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். 49 உறுப்பினர்களுடன் பாராளுமன்றம் செயல்படுகிறது. இதில் இருவரைத் தவிர 47 உறுப்பினர்கள் சமோவாவைச் சேர்ந்தவர்கள். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பெண்களும் பாராளுமன்ற அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். சமோவா நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் ஹவாய் என்ற நாட்டிற்கும் நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. சமோவாவின் சராசரி வெப்பநிலை 26.50C . நவம்பர் முதல் ஏப்ரல்வரை மழைக்காலம் ஆகும். மேற்குப் பகுதியில் எரிமலை உள்ளது. இது சமோவாவின் வெப்பமான பகுதி எனப்படுகிறது. சமோவாவின் முக்கிய விளைச்சலாக தேங்காய் உள்ளது. தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், கொப்பரைத் தேங்காய், நோனி (Noni) (Juice of nonu fruit) ஆகியன விவசாயம் படித்தவர்களால் திறமையாகச் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. மேலும் வாழைப்பழம், கோகோ சாக்லெட், காபிக் கொட்டை, ரப்பர், அன்னாசிப் பழம் ஆகியவையும் விளைகின்றன. நாகரிகம் பல ரூபங்களில் வளர்ந்திருந்தாலும் மக்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து மாறுபடவில்லை. இசைக்கேற்றவாறு உடலை அசைத்துக் கொண்டே கதை சொல்லும் சிவா, இசைக்கேற்றவாறு கைத்தட்டிக் கொண்டே ஆடுகின்ற ஃபாடயுபடி (Fa’ataupati) நடனங்கள் ஆண்களால் ஆடப்பட்டு வருகின்றன. ஆண்கள் முழங்காலுக்கு மேலே இடுப்பு வரையிலும் பெண்கள் முழங்காலிலிருந்து தொடைவரையிலும் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது. கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் Rugby Union என்றழைக்கப்படும் கால்பந்துக் குழு 1991 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றுவரும் புகழ்பெற்ற குழுவாகும். மேலும் குத்துச் சண்டை, குஸ்திச் சண்டை, உதைக்கும் குத்துச் சண்டை, சுமோ (Sumo) போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரிட்டிஷ் மக்களின் சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டுவருகின்றன. ஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) குறிப்பிடத்தகுந்தவைகளாகும். கிர்கிசுத்தான் கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் ("Kyrgyzstan") மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும். இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன. கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. அரசாங்கம் யெமன் யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா ஆகும். 5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 நபர்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர். நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமை மிக்க நாடாக உள்ளது. ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 10-ஆம் நூற்றாண்டு 10ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 901 தொடக்கம் கி.பி. 1000 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு பொலினீசியா ("French Polynesia") தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. விசையியல் விசையியல் ("Mechanics") என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின் விளைவுகளையும் விபரிக்கும் இயற்பியல் துறையாகும். ஐசாக் நியூட்டன், கலிலியோ, கெப்ளர் போன்ற அறிஞர்கள் மரபார்ந்த விசையியலுக்கான ("Classical Mechanics") அடித்தளத்தை அமைத்தனர். விசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன. இது தவிர விசையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை பயன்பாட்டு விசையியல் ("Applied Mechanics") எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் ("Structures"), இயங்கமைப்புகள் ("Mechanisms"), இயந்திரங்கள் ("Machines") போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது. மரபு விசையியல் தொன்மையானது. அண்ட அவதானிக்கக்கூடிய பொருட்களையும் மீதான விசைகளையும் அவற்றின் வினைகளையும் எடுத்துறைக்கப் பயன்படுகிறது. குவாண்டம் பொறிமுறையும் அடிப்படைத்துகள்கள், குவாண்டாக்கள் இடையேயான உறவுகளை விளக்குகிறது. இது பெரும்பாலும் கருத்தியல் ("theoretical"), சோதனை ("experiment") இயற்பியலில் அதிகம் பயன்படுகிறது. விசையியல் ஆனது நிலையியல், இயக்கவியல், அசைவு விபரியல், பயன்பாட்டு விசையியல், வான் விசையியல், தொடர்ம விசையியல், புள்ளிவிபரநிலையியக்கவியல் என்று பலவகைப்படும். நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும். இயக்கவியல் எந்திரவியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர். அசைவு விபரியல் என்பது ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் ஆகும். இது விசையியலின் மற்றுமொரு பிரிவாகும். கால்வாய் தீவுகள் சானெல் தீவுகள் ("Channel Islands", நோர்மன்: "Îles d'la Manche", பிரெஞ்சு: "Îles Anglo-Normandes" அல்லது "Îles de la Manche") என்பது ஆங்கிலக் கால்வாயில் நோர்மண்டியின் பிரெஞ்சுக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். இத்தீவுகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் உள்ளது, ஆனாலும் இவை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அல்ல. சானெல் தீவுகள் கேர்ன்சி மற்றும் ஜேர்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மக்கள் தொகை 160,000 ஆகும். கேர்ன்சியின் தலைநகர் சென் பீட்டர் போர்ட் (மக்கள் தொகை: 16,488), ஜேர்சியின் தலைநகர் சென் ஹெலியர் (மக்கள் தொகை: 28,310). சானெல் தீவுகளில் கேர்ன்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கேர்ன்சி, ஆல்டேர்னி, சார்க், ஹேர்ம் ஆகியனவாகும். இவற்றை விட ஜெத்தோ, பிரெக்கு, லீஹூ ஆகிய சிறிய தீவுகளும் உள்ளன. சார்க் சார்க் ("Sark", பிரெஞ்சு: Sercq) என்பது தென்மேற்கு ஆங்கிலக் கால்வாயில் உள்ள சானெல் தீவுகளில் ஒன்றான கேர்ன்சியின் ஒரு சிறிய தீவாகும். இதன் மொத்த மக்கள் தொகை 600 (2002 இல் 610) ஆகும். இதன் பரப்பளவு 2 சதுர மைல்கள். இங்கு தானுந்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. பதிலாக குதிரை வண்டில்களே முக்கிய போக்குவரத்தாகும். அதைவிட மிதிவண்டி, உழவு வண்டி, மின்கலங்களில் இயங்கும் தானுந்துகள் (வலது குறைந்தோருக்காக) ஆகியனவும் பாவனையில் உள்ளன. சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வருவாய் தரும் தொழிலாகும். சார்க்கின் அதி உயரமான இடம் கடல் மட்டத்தில் இருந்து ஆகும். 1571 இல் கட்டப்பட்ட காற்றாலை ஒன்று இங்கு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியினரால் இதன் பாகங்கள் சேதமாக்கப்பட்டன. பிரெக்கு என்ற தீவும் சார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு தனியாரின் தீவாகும். தற்போது இங்கு சேர் டேவிட் மற்றும் பிரெடெரிக் பார்க்லே என்போர் வசிக்கின்றனர். இவர்கள் இதனை 1993 இல் வாங்கினார்கள். வெளியாட்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சார்க் தீவு ஐரோப்பாவின் கடைசி நிலமானிய (feudal) அமைப்பாக இருந்து வந்தது.. குத்தகை (fiefdom) இங்கு இன்னமும் நடைமுறையில் உண்டு. ஆனாலும், ஏப்ரல் 2008 இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. காசாக்கரை காசாக்கரை ("Gaza Strip", ) என்பது நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11 கிமீ) எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்கே () இசுரேலும் உள்ளன. காசாக் கரை அண்ணளவாக நீளமும் தொடக்கம் அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை ஹமாஸ் என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை பலத்தீன் நாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. 1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நடந்துவரும் நிகழ்வுகளினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக காசா மாறிவிடலாம் என்று ஐநா சபையின் ஒரு நிறுவனமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD) தெரிவித்துள்ளது. இசுட்டீவ் பால்மர் இசுட்டீவ் அந்தோனி பால்மர் ("Steve Anthony Ballmer", பிறப்பு: மார்ச் 24, 1956) எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார். இளமை பருவம் பால்மர் டெட்ராய்ட் என்னும் இடத்தில் பிறந்தார்.அவரது தந்தையார் ஹென்ரி பால்மர் ஃபொர்ட் மொடெர் கம்பெனி இல் மேலாளர் ஆக பணிபுரிந்தார். ஸ்டெவ் பால்மர் கல்லூரியில் கால் பந்து அணியின் மேலாளர் ஆக இருந்தார். மேலும் ஹார்வர்ட் க்ரிம்சன் நாளிதழில் பணிபுரிந்தார். மைக்ரோசாப்ட் உடன் ஜனவரி 11 1980 இல் மைக்ரோசாப்ட் இல் 50000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.பின் முதன்மை செயல் அதிகாரி ஆக ஜனவரி 2000 இல் பதவி உயர்வு பெற்றார். பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ( பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951 ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரியும் இதுவாகும். 1926 ஆம் ஆண்டு பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட "பி. எஸ். ஜி அறக்கட்டளை"யின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பூ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த சாண்ட்விச் பொறியியல் படிப்புகளை வழங்குகிறது, இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது. ஜலியான்வாலா பாக் படுகொலை ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் ("Jallianwala Bagh Massacre"), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்., காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர். மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும் பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை. ஏப்ரல் 13 வைசாகி நாள். அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான். திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும். அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது. பஞ்சாபின் துணை ஆளுநர் சேர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டையரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" என டையருக்குத் தந்தி அனுப்பினார். பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது: வின்ஸ்டன் சர்ச்சில் 1920 சூலை 8 ஆம் தேதி இங்கிலாந்தின் ஹவுஸ் ஒப் கம்மன்சில் உரையாற்றும் போது ஜெனரல் டயர்யை பணியில் இருந்து எடுத்து விடலாம் அல்லது அவருக்கு பணி ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறினார். இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார். அக்டோபர் 14 1919 ஆம் ஆண்டு லார்ட் விலியம் ஹன்டர் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.அதற்கு அவர் பெயரே வைக்கப் பட்டது. இந்த கமிஷனின் தனது அறிக்கையை மார்ச் 8, 1920 அன்று வெளியிட்டது. அக்குழுவின் அறிக்கை விபரம் :- இக்கமிஷன், ராணுவ அதிகாரி டயருக்கு எந்த தண்டனையும் பரிந்துரைக்கவில்லை. File:Jallianwala Bagh Memorial in Amristsar.jpg இந்த படுகொலையில் உயிர் இழந்தோர் 379 , குண்டுக் காயம் பட்டோர் 1337 பேர் என்று ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்ரால்ட்டர் ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம். இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை. Interactive Map of Gibraltar ஆப்பிரிக்காவில் தமிழர் ஆப்ரிக்காவில் தமிழர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே வசித்து வருகின்றார்கள். குறிப்பாக 1850 களில் காலத்துவ பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாபிரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். இக்காலத்தில் மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய ஆப்பிரிக்க தீவுகளுக்கும் தமிழர்கள் வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடையே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரிசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும், எண்களும் இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவர். மார்சல் தீவுகள் மார்சல் தீவுகள் ("Marshall Islands") அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது. வேக் தீவுகளுக்கான ஆட்சியை மார்சல் தீவுகள் கோரிவருகிறது. ஓசியானியாவில் தமிழர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழுகின்றார்கள். இவர்களே ஓசியானாத் தமிழர் எனப்படுகின்றனர். பீஜி தீவுகளில் தமிழர்கள் காலனித்துவ பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை இழந்து அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள். தென் அமெரிக்காவில் தமிழர் தென் அமெரிக்காவில் கயானாவில் மட்டுமே தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறார்கள். இவர்கள் காலனித்துவ பிரித்தானிய அரசால் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யவன அழைக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்ல்கள் ஆவர். இவர்கள் தமிழ் மொழியை இழந்து விட்டார்கள், ஆனால் பல பண்பாட்டு கூறுகளையும் வரலாறையும் கொண்டு இவர்களின் தமிழ் பின்புலத்தை அடையாளம் காட்டலாம். தென் அமெரிக்க இன்னும் வளர்ச்சி பெறாத ஒரு பிரதேசமாகவே இருப்பதால் தமிழர்கள் இங்கு புலம்பெயர்வதை தவர்த்து இருக்கலாம். எலும்புண்ணிக் கழுகு எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% எலும்பாக இருப்பதால் இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்பாறு அறிவியல் வகைப்பாட்டில் "கழுகுவரிசையில்" (Falconiformes, "`வால்க்கனி`வார்ம்ஸ்") "ஆக்ஸிபிட்ரிடீ" (Accipitridae) என்னும் குடும்பத்தில், "ஜிப்பீட்டஸ்" (Gypaetus) என்னும் பேரினத்தில், எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும். எலும்புண்ணிப்பாறு தன் சிறகை விரித்து இருக்கும் பொழுது ஏறத்தாழ 3 மீட்டர் (9-10 அடி) அகலமும், தலையில் இருந்து வால் வரையில் நீளம் ஏறத்தாழ ஒரு மீட்டரும் இருக்கும். சிறகுகள் கரும்பழுப்பு நிறத்திலும், உடல் இளம்பழுப்பு நிறத்திலும், தலையில் கருப்பு வெள்ளை பட்டைகளும் அலகை ஒட்டி தாடி போல இறகுகள் நீட்டிக்கொண்டிருப்பதும் சிறப்புத் தோற்ற அடையாளங்கள் ஆகும். இப் பாறுக்கு "தாடி" இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் "தாடிப் பிணந்தின்னிக் கழுகு" (Bearded vulture) என்று அழைக்கிறார்கள். நெஞ்சில் கருப்பும் வெள்ளையுமாக புள்ளிகள் இருக்கும். பிணந்தின்னிக் கழுகாக இருந்த பொழுதிலும், பிணந்தின்னிக் கழுகுகள் போல இல்லாமல் பிற கழுகுகளைப் போல் முகத்தில் இறகுகள் இருப்பதும் சிறப்பு அடையாளம். இறந்த விலங்குகளின் தசையைக் கிழிக்க வலுவான வளைந்த பெரிய அலகும், வலிந்து பற்றக்கூடிய கால்விரல்களும் நீளமான உகிர்களும் (கால் நகம்) கொண்டிருக்கும். எலும்புண்ணிக் கழுகு மலை முகடுகளில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைப் பகுதிகளில் கூடுகட்டி வாழ்கின்றது. ஒரு பெண்பறவையுடனே உறவு கொண்டுள்ளது (ஒரு சில ஆண் பறவைகளுடனும் உறவு கொள்ளுமாம் . மார்ச்-மே மாதங்களில் கூட்டில் ஒன்றோ இரண்டோ முட்டைகள் இடுகின்றன. முட்டைகள் வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் உள்ளன. குஞ்சுகள் பொரித்து வெளிவரும்பொழுது அதன் தூவி வெண்மையாக இருக்கும். குஞ்சு பொரித்து 7 மாதங்கள் முதல் ஓராண்டுவரை தாய்-தந்தைப் பறவைகள் கொண்டு வந்து தரும் உணவை உண்டு வாழ்கின்றன. 6-7 ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற முழு உடல்வளர்ச்சி அடைகின்றன. விலங்குக்காட்சியகங்களில் வளரும் பொழுது 40 ஆண்டுகள் கூட உயிர்வாழும் .. எலும்புண்ணிப் பாறுகள் எலும்பை முழுவதுமாக உண்ணுவது வியப்பூட்டுவதாகும்.. உண்ணும் அளவாக எலும்பை உடைக்க, பெரிய எலும்புகளை தூக்கிக்கொண்டு ஏறத்தாழ 80 மீட்டர் (260 அடி) உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே பாறைகளில் விழச்செய்து எலும்புகளை உடைத்து உண்ணுகின்றது. பாறுதல் என்றால் மோதி உடைத்தல், சிதறுதல் என்னும் பொருள் இருப்பதாலும், உயர் மலைப்பகுதிகளில் பாறைகளில் வாழ்வதாலும் இக்கழுகு இனம் எலும்புண்ணிப்பாறு என்று தமிழில் அழைக்கப்படுகின்றது. உடைத்த எலும்புகளின் உள்ளே இருக்கும் எலும்பு மச்சையையும் உண்கின்றது. இப்பறவைகள் தான் வாழும் பகுதிகளிலேயே தங்கி வாழும் பறவைகள் (தொலைவான பகுதிகளுக்கு வலசையாகச் செல்லாத பறவை). விஜய் சிங் விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார். ஜீவ் மில்க்கா சிங் ஜீவ் மில்க்கா சிங் (பிறப்பு டிசம்பர் 15, 1971) ஒரு இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். பி.ஜி.ஏ. சுற்றில் முதலாம் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார். அமெரிக்காவில் அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகம் கோல்ஃப் அணியில் விளையாடி ஒரு என்.சி.ஏ.ஏ. போரேறிப்பு வெற்றிபெற்றார். இப்பொழுது இவர் உலகில் முதல் எண் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார். இவரின் தந்தையார், மில்க்கா சிங், புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2007ல் இவர் இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருதை வெற்றிபெற்றார். ராவுல் காஸ்ட்ரோ ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ ருஸ் ("Raúl Modesto Castro Ruz", பிறப்பு: ஜூன் 3, 1931) கியூபாவின் அரசுத் தலைவர் ஆவார். முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான இவர், கியூபா பொதுவுடமைக் கட்சியின் நடுக் குழுவின் இரண்டாம் செயலாளராகவும், முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார். பிடல் காஸ்ட்ரோவின் சுகவீனத்தை அடுத்து ஜூலை 31, 2006 இல் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் தற்காலிக அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ பெப்ரவரி 19, 2008 இல் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பெப்ரவரி 24, 2008 இல் ராவுல் முறைப்படி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராவுல் காஸ்ட்ரோ கியூப புரட்சியின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் ஆவார். புரட்சியின் போதும் அதற்கு‍ அடுத்தும் தொடர்ந்து‍ கியூபா நாட்டின் வளர்ச்சி மற்றும் அரசின் தலைமைப் பொறுப்புகளை வகித்து‍ வருகிறார். 1961ம் ஆண்டுமுதல் தங்களின் அரசாங்க உறவுகளை முறித்துக்கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன. 10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னால் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கினார். தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் ("South Asian Association for Regional Cooperation", "SAARC") என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இஸ்லாம் தேசம் இஸ்லாம் தேசம் ("Nation of Islam") என்பது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும்.1930ல் இவ்வமைப்பை வாலஸ் ஃபரத் முகமது என்பவர் டிட்ராயிட், மிச்சிகனில் உருவாக்கினார். அமெரிக்காவில் அனைத்து ஆப்பிரிக்க,அமெரிக்கர்களின் ஆன்மீக, மன,சமூக,பொருளாதார நிலையை மேம்படுத்தும் இலக்குகள். 1934ல் ஃபரத் முகமதுக்கு பிறகு, எலிஜா முகமது, இஸ்லாம் தேச அமைப்பை வழி நடத்தினார்.எலிஜா முகமது அமெரிக்காவில் இஸ்லாமிய முகமது பல்கலைக்கழகம் எனும் கல்வி நிறுவனத்தை நிறுவினார். எலிஜா முகமது தலைமை போது புகழ்பெற்ற பேச்சாளர் மால்கம் எக்ஸ் இச்சமயத்தை சேர்ந்ததில் 1950கள், 1960களில் அமெரிக்காவின் சமூக உரிமை இயக்கத்தில் இச்சமயத்துக்கு செல்வாக்கு வந்தது. ஆனால் மால்கம் எக்ஸின் 1965 கொலைக்குப் பின்பு இஸ்லாம் தேசம் பிரிய ஆரம்பித்தது. 1975 இல் எலிஜா முகமது காலமானார். இவரின் மகன், இமாம் வாரித் தீன் முகமது இஸ்லாம் தேசத்தை சுணி இஸ்லாமுக்கு மாற்ற முனைந்தார். இதனால் 1978 இல் இஸ்லாம் தேசம் இரண்டாக பிரிந்தது. வாரித் தீன் முகமது ஒரு பிரிவில் தலைவராக இருந்து பெயரை "முஸ்லிம் அமெரிக்க சங்கம்" என்று மாற்றினார். இரண்டாம் பிரிவில் லூயிஸ் ஃபரக்கான் தலைவராக இருந்து அசல் மாதிரி இஸ்லாம் தேசம் மீண்டும் ஏற்படுத்தப் பட்டது.சிக்காகோவில் அமைந்த மரியம் மசூதியில் லூயிஸ் பர்கானின் இஸ்லாம் தேசத்தின் தலைமையகம் உள்ளன. த பைனல் கால் (இறுதி அழைப்பு) சிக்காகோவில் வெளியிடப்படும் செய்தித்தாள் ஆகும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம் 1920 களில் உருவாக்கப்பட்டது பின்னர் 1980களில் வெள்ளவத்தை பாமன்கடைப்பகுதிக்கு இடமாற்றப்பட்டது. தரம் 1 முதல் தரம் 11 வரையுள்ள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையில் நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், மனையியல் கூடம் ஆகியவை இருப்பினும் விளையாட்டுத் திடல் (மைதானம்) கிடையாது. 2008 ஆம் ஆண்டின் படி இப்பாடசாலையின் அதிபராக இந்திரா இராசத்தினம் கடமையாற்றுகின்றார். இப்பாடசாலையில் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நியூட்டனின் இயக்க விதிகள் நியூட்டனின் இயக்க விதிகள்(Newton's laws of motion), ஒரு பொருளின் மீது ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் (motion) ஏற்படும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன. இவ்விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும். ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும். இதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம். ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும். இதனால் இரண்டாவது விதியை விசை விதி எனலாம். நியூட்டன் விசையைக் கீழ்க் கண்ட சமன்பாட்டால் குறிப்பிட்டார்: formula_1 இதில் F என்பது விசை (அலகு நியூட்டன்), m என்பது நிறை (அலகு கிலோ கிராம்), மற்றும் a என்பது முடுக்கம் (அலகு மீட்டர் / விநாடி). ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை. அதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு கழுகு வரிசை கழுகு வரிசை (Falconiformes) என்பது பறவை வகுப்பில் பகலில் இரை தேடும் கொன்றுண்ணிப் பறவைகளாக உள்ள ஏறத்தாழ 290 கழுகு இனங்களைக் கொண்ட வரிசை. வழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர். சாமுவேல் எல். ஜாக்சன் சாம்யுவெல் லிராய் ஜாக்சன் (பிறப்பு டிசம்பர் 21, 1948) ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். 1990களில் பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். சாட்டனூகா, டென்னிசியில் வளந்து அட்லான்டாவில் மோர்ஹவுஸ் கல்லூரியில் படித்தார். இவரின் சில பிரதான வேடத்தில் நடித்த படங்கள் பல்ப் ஃபிக்சன், அ டைம் டு கில், த நெகோஷியேடர், அன்பிரேக்கபில், கோச் கார்டர், தி அவேஞ்சர்ஸ், ஸ்னேக்ஸ் ஆன் அ ப்ளேன், மற்றும் கடைசி மூன்று ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் ஆகும். நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் நோட்ரெ டேம் (Notre Dame), என்று அழைக்கப்படும் நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம் (University of Notre Dame du Lac), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் நோட்ரெ டேம் நகரத்தில் ஒரு கத்தோலிக பல்கலைக்கழகமாகும். டைட்டானிக் ஆர்எம்எஸ் "டைட்டானிக்" (RMS "Titanic") என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது. "டைட்டானிக்" கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. "டைட்டானிக்" கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கூலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது. "டைட்டானிக்" தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த "நியூயோர்க்" என்ற கப்பலை நகர்த்தி "டைட்டானிக்"க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது.. "டைட்டானிக்" மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு "அமெரிக்கா" என்ற கப்பலில் இருந்து "டைட்டானிக்"க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி "டைட்டானிக்"கை அடையவில்லை. இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் "டைட்டானிக்"க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர். குயெர்ன்சி குயெர்ன்சி அல்லது அதிகாரப்பட்சமாக குயெர்ன்சி பலிவிக் நோமண்டிக்கு அப்பால் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள பிரித்தானிய முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி தீவு உட்பட அல்டேர்னி, சார்க், ஏர்ம், பிரெக்கு, சேதௌ, புரௌவ், லைகௌ ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக மாண் தீவைப் போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் யேர்சி பலிவிக்குடன் இணைத்து கால்வாய் தீவுகள் என அழைக்கப்படுகிறது. குவாதலூப்பு குவாதலூப்பு ("Guadeloupe", , குவாதலூப்) என்பது கரிபியன் பகுதியில் சிறிய அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும். 1,628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400,132 (சனவரி 2015) ஆகும். வட அமெரிக்காவில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய ஐரோப்பிய ஒன்றியப் பகுதி இதுவாகும். குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகளில் பாசு-தெர் மேற்கேயும், கிராண்ட்-டெர் கிழக்கேயும் அமைந்துள்ளன. இவையிரண்டும் குறுகிய நீரிணை ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே பாலங்கள் வழியே போக்குவரத்து இடம்பெறுகின்றன. இவ்விரண்டும் பொதுவாக ஒரே தீவாகக் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு தீவுகள் என சிறிய தீவுகளும் உள்ளன. பிரான்சின் ஏனைய வெளிநாட்டு மண்டலங்களைப் போன்று, குவாதலூப்பும் ஐரோ வலயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தொகுதியாகும். இதன் அதிகாரபூர்வமான நாணயம் யூரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் ஒருவர் எவ்விதக் கட்டுப்ப்பாடும் இன்றி இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேற முடியும். ஆனாலும், இந்த வெளிநாடு மண்டலம் ஐரோப்பாவின் ஷெங்கன் பரப்பு நாடுகளுக்குள் அடங்கவில்லை. குவாதலூப்பின் தலைநகர் பாசு-தெர் ஆகும். இது பாசு-தெர் தீவில் அமைந்துள்ளது. அதிகாரபூர்வ மொழிகள் பிரெஞ்சு, அந்தீலிய கிரியோல் மொழிகள் இங்கு அனைவராலும் பேசப்படுகின்ற மொழிகளாகும். ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு ஆகும். மாண் தீவு மாண் தீவு அல்லது மாணின் தீவு அயரிய கடலில் அமைந்துள்ள சுயாட்சியைக் கொண்ட பிரித்தானிய முடிச் சார்பாகும். அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத் ஆவார்.லுதினன் அளுனர் ஒருவர் முடியை பிரதிநித்துவப்படுத்துகிறார். இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. தீவின் பாதுகாப்பு, வெளியுரவு, நல்லாட்சி என்பன ஐக்கிய இராச்சியத்தின்பொறுப்பாகும். இத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிறுப்பாக இருந்துவந்தது தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. இங்கிலாந்து, சுகொட்லாந்து மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் நிலைவுரிமையின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபூத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது. மாண் தீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியல்ல எனினும் 1972 ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை. இரண்டாம் ராமேசஸ் இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு. நிலையியல் நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும். நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் எல்லா விசைகளின் கூட்டு மதிப்பும், எல்லா திருப்பு விசைகளின் கூட்டு மதிப்பும் சுழியாக இருக்கும். இந்த விதிகள் முறையே முதல் சமன் நிலை விதி மற்றும் இரண்டாம் சமன் நிலை விதியென்று அழைக்கப்படும். இவ்விதிகளின் அடிப்படையில் பொருளின் மீதும் பொருளின் உருப்புகளின் மீதான அழுத்தத்தின் அளவை நிர்ணயிக்கலாம். நிலையியல், கட்டிடக்கலை, வடிவமைப்பு பொறியியல் துறைகளில், வடிவமைப்புகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது. சமன் நிலையில் இருக்கும் திரவ பொருட்களை பகுப்பாய்வு செய்யும் துறை பாய்ம நிலையியல்(Hydrostatics) எனப்படும். தொழில்நுட்பம் (வலைத்தளம்) இணையத்தில் தமிழில் தொழில்நுட்ப தகவல்களைத் தொழில்நுட்பம் இணையத்தளம் (http://www.thozhilnutpam.com/) தருகிறது. மின்னணுவியல், மின்னியல், இயற்பியல், பொறியியல் ஆகிய நவீனகால அறிவியல்களை தமிழில் தந்து ஆங்கிலத்தின் உதவி இன்றி அறிவியல் தொழில்நுட்ப கல்வியையும் விழுப்புணர்வையும் வளர்ப்பதே இந்த தளத்தின் மைய நோக்கம். இந்த தளத்தில் பல்வேறு துறைகளின் கலைச்சொற்களும் தரப்பட்டுள்ளன. ரான் ஆர்டெஸ்ட் ரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் ("Ronald William Artest Jr.", பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார். 2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும். சித்தர் பாடல்கள் சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். "முதன்மைக் கட்டுரை: அழுகணிச் சித்தர் பாடல்" "முதன்மைக் கட்டுரை: கடுவெளிச் சித்தர் பாடல்கள்" "முதன்மைக் கட்டுரை: குதம்பைச் சித்தர் பாடல்கள்" மத்திய கிழக்கில் தமிழர் மத்திய கிழக்கில் தமிழர் என்னும் இக்கட்டுரை மத்திய கிழக்கு நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரேய்ன், யெமென், ஓமான் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றியது. இவர்களில் பல தொழிலாளர்களாகவும், துறைசார் திறனர்களாகவும் பணி நிமித்தம் அங்கு இருப்பவர்களே. இவர்களிற் பலர் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள். இலங்கையில் இருந்து சென்ற தமிழர்களும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எல்லா வெளிநாட்டினரையும் போலவே தமிழர்களும் ஒப்பந்த அடிப்படையிலான தொழில் புரிபவர்கள் என்னும் அடிப்படையிலேயே இங்கே வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்களுக்கு இவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் வழங்கும் பொறுப்பின் அடிப்படையில் வதிவிட விசா அந்தந்த நாட்டு அரசுகளால் வழங்கப்படுகின்றன. குறித்த வதிவிட விசாக்களின் காலம் நாடுகளைப் பொறுத்து 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ளது. சொந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தமிழர்களும் இந்த நாடுகளில் காணப்படுகின்றனர். குடும்பத்துடன் இந்நாடுகளில் வசிக்கக்கூடிய தகுதி உள்ள தமிழர்கள் பலர் குடும்பத்துடன் இந்நாடுகளில் வாழ்கின்றனர். இசுலாம், இந்து, கிறித்தவம் ஆகிய எல்லாச் சமயங்களையும் சார்ந்த தமிழர்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் தனிப்பட்ட முறையில் அவரவர் சமயங்களைக் கடைப்பிடிப்பதற்கான அனுமதி உண்டு. ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற சில நாடுகளில் மட்டும் இந்துக் கோவில்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உண்டு. பெரும் பாலான மத்திய கிழக்கு நாடுகளில் தமிழ்ச் சிறுவர்களின் கல்வி வசதிகள் சிறப்பாகவே உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற நாடுகளில் இந்தியக் கல்வித் திட்டங்களுக்கு அமைவான பள்ளிகள் நிறையவே உள்ளன. இந்நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை இங்கேயே முடித்துக்கொண்டு உயர் கல்விக்காக இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். சில நாடுகளில், உயர் கல்விக்கான இந்தியப் பல்கலைக் கழகங்களின் கிளைகளும் உள்ளன. இவற்றைவிட, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலுகின்ற தமிழரும் கணிசமாக உள்ளனர். பொதுவான கல்வி வசதிகளுக்குக் குறைவு இல்லை என்றாலும், தமிழ் மொழிக் கல்விக்கான வசதிகள் மிகவும் குறைவே. இரண்டாம், மூன்றாம் மொழிகளாக இந்தி, வங்காள் மொழி, மலையாளம் போன்றவை பெரும்பாலான பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும், தமிழ் மொழி ஓரிரு பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படுவதைக் காணலாம். தமிழர்களோடு நெருக்கமான கலை பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டவர்களான மலையாளிகள் மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவில் வாழ்வதனால், பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற கலைகளைப் பயில்வதற்கான வசதிகளுக்கு இப்பகுதியில் உள்ள பல நாடுகளில் வசதிகள் உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் பல நிறுவனங்கள் மேற்படி கலைகளில் பயிற்சியளித்து வருகின்றன. தமிழரும் இவற்றின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிறுவனங்கள் தமது மாணவர்களைக் கொண்டு கலை விழாக்களை நடத்துவதனாலும், ஓணம் போன்ற பண்டிகைகளையொட்டிக் கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதனாலும், இந்நாடுகளில் வாழும் தமிழர்களும் இக்கலைகளோடுள்ள தொடர்புகளைப் பேணிவரக்கூடியதாக உள்ளது. தவிர, தமிழர்களுக்கான சில பண்பாட்டுச் சங்கங்களும் உள்ளன. இந்நாடுகளின் சட்டங்களுக்கு அமைய பெரும்பாலும் இச்சங்கங்கள் இந்தியத் தூதரகங்களின் பொறுப்பிலேயே இயங்குகின்றன. இவ்வாறான தமிழர் சங்கங்களும் இலக்கிய நிகழ்வுகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்வது உண்டு. அவ்வப்போது தமிழ்நாட்டில் இருந்தும் பேச்சாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் ("French Southern and Antarctic Lands", பிரெஞ்சு:"Terres australes et antarctiques françaises", சுருக்கமாக "TAAF") அல்லது முழுமையாக அழைக்கப்படும் போது பிரெஞ்சு தென்னக அண்டார்க்டிக் நிலங்களின் மண்டலம் (பிரெஞ்சு:"Territoire des Terres australes et antarctiques françaises"), என்பது ஆப்பிரிக்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடைடே அண்ணளவாக நடுத்தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள எரிமைலைத் தீவுகள் சிலவற்றையும் அண்டார்டிக் ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சின் ஆளுமையில் உள்ள அடிலியே நிலமும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சுகாட்ரெட் தீவுகளையும் உள்ளடக்கிய மண்டலமாகும். இம்மண்டலம் பரவலாக பிரெஞ்சு தென்னக மண்டலங்கள்(பிரெஞ்சு:"Terres australes françaises") என அழைக்கப்படுவதுமுண்டு இதன் போது பிரான்சின் ஆளுமை பன்னாடுகளால் ஏற்கப்படாத அடிலியே நிலம் தவிர்த்தப் பகுதியே கணக்கில் கொள்ளப்படுகிறது. யேர்சி யேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால் அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும். இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் (Pierres de Lecq) என்றத் தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன. பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது. நாசா வேல்ட் வின்ட் வேல்ட் விண்ட் மென்பொருளானது நாசா, திறந்த நிரலாக்க குழுக்களாலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயன்குதளத்திற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இம்மென்பொருளில் பொதுவில் கிடைக்கும் பல்வேறு லேயர்கள் (Layers) பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுள் செய்மதியூடான படங்கள், வானில் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் பாவிக்கும் வசதியுள்ளது. வேல்ட் விண்ட் மென்பொருளானது ஆரம்பத்தில் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிந்தைய பதிப்பான 1.4 ஆனது வேல்ட் விண்ட் செண்டரல்/பிறீ ஏத் பவுண்டேசன்ன் (WorldWind Central/Free Earth Foundation) ஊடாகப் பெரும்பாலும் திறந்த நிரலாக்க குழுக்களூடாகவே பெரிதும் முன்னெடுக்கப்பட்டது. வேல்ட் விண்ட் மென்பொருளில் பூமியை விட சந்திரன் உபகோளையும் செவ்வாய், வீனஸ், யூப்பிட்டர் போன்ற கிரகங்களையும் பார்க்க இயலும். அடிப்படைப் பொறியியல் தலைப்புக்கள் பொறியியல் என்பது, அறிவியல் மற்றும் அநுபவ அறிவை மனித குல நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கான நடைமுறையும் வழிமுறையும் ஆகும். இயற்கை அண்டம் பற்றிய இயல் அறிவியல் துறையில் இருந்து இது வேறுபட்டது. பொறியியல் சார்ந்த தலைப்புக்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன. பால்ட்டிமோர் பால்ட்டிமோர் மேரிலன்டில் மிகப்பெரிய நகரம் ஆகும். கிளெம்சன் பல்கலைக்கழகம் கிளெம்சன் பல்கலைக்கழகம் ("Clemson University") ஐக்கிய அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம் (Leland Stanford, Jr. University) அல்லது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். இது கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோ என்னும் பகுதிக்கு அருகே உள்ள இசுட்டான்போர்டு என்னும் ஊரில் 8,180-ஏக்கர் (3,310 எக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இவ்விடம் வடமேற்கு சிலிக்கான் பள்ளத்தாக்கில், சான் ஒசே (San Jose) நகரத்துக்கு வடமேற்கில் ஏறத்தாழ 32 கி.மீ தொலைவிலும், சான் பிரான்சிசிக்கோ நகரத்துக்குத் தென்கிழக்கே 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கலிபோர்னியாவைச் சேர்ந்த இருப்புப்பாதை நிறுவன பெரும்பண முதலாளியும் அரசியலாளரும் ஆன இலேலண்டு இசுட்டான்போர்டும் அவர் மனைவி சேய்ன் இலாத்ரோப்பு இசுட்டான்போர்டு என்பாரும் சேர்ந்து 1891 இல் இப்பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள். இவர்களுடைய மகன் தைபாய்டு நோயில் தன் 16 ஆம் அகவை நிரம்ப இரண்டு மாதம் இருக்கும் முன்பாக இறந்து போனதினால் அவர் நினைவாக "இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர்" என தன் மகனின் நினைவாக பெயரிட்டு இப்பல்கலைக்கழகத்தை நிறுவினர். இப்பல்கலைக்கழகம் ஆண்-பெண் இருபாலாருக்குமான கல்வி நிறுவனமாகவும், சமயப் பாகுபாடுகள் பாராட்டாத கல்வி நிறுவனமாகவும் தொடங்கினார்கள். 1893 இல் தந்தரிலேலண்டு இசுட்டான்போர்டு இறந்து போகவும், 1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிசிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் பல்கலைக்கழகத்துக்குப் பணமுடை ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தின் முதல்வர் (புரவோசிட்டு, Provost) பிரடெரிக்கு தெர்மன் (Frederick Terman) பேராசிரியர்களையும், மேற்பட்டப்படிப்பு மாணவர்களையும் ஊக்குவித்து தொழில்முனைவோராக இருக்கச்செய்து தன்னிறைவு எய்தும் பல்கலைக்கழகமாக மலர உதவினார். இதன் விளைவாய்ப் பின்னாளில் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொழில்முனைவோர் செறிவாக வாழும் உயர்தொழிநுட்பம் மிகுந்த இடம் உருவானது. 1970 ஆம் ஆண்டளவில் இசுட்டான்போர்டு நேர்ப்பாதை அணுமுடுக்கி (SLAC) அமைப்பை நிறுவினர். இது அர்ப்பாநெட்டு என்னும் முதலில் தோன்றிய சிறுபொதி தகவல் பரிமாற்ற வலையின் நான்கு புள்ளிகளில் ஒன்றாக இயங்கியது. இவ்வாய்ப்புகளின் பயனாய் இப் பல்கலைக்கழகம் முக்கியமான ஆய்வுநிலைப் பல்கலைக்கழகமாய் கணினி அறிவியல், கணக்கு, இயற்கை அறிவியல், வாழ்வியல் அறிவியல் முதலான துறைகளில் முன்னணியில் நிற்கும் பல்கலைக்கழகமாய் வளர்ந்தது. இங்கு 34 விளையாட்டுக் குழுக்கள் உள்ளன. இவை என்.சி.ஏ.ஏ போட்டிகளில் பங்கெடுக்கின்றன. இந்தப் போட்டிகளில் 104 முறை வாகையர் பட்டம் பெற்றுள்ளனர். இங்குள்ள தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். 1912 ஆம் ஆண்டில் தொடங்கி, இன்று வரை மொத்தம் 244 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இவற்றில் 129 தங்கப் பதக்கங்களும் அடக்கம் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலேயே அதிகப் பதக்கங்கள் பெற்றது இதுவே. இது பரப்பளவில், சான் பிரான்சிசுக்கோ பகுதியில் அமைந்துள்ளது. முதன்மை வளாகம், பாலோ ஆல்டோ பகுதிக்கு அருகில் உள்ளது. இதற்கு தொலைதூர வளாகங்களும் உள்ளன, வளாகத்தினுள் அருங்காட்சியகம், கவின் கலை மையம், ஸ்டான்போர்டு நினைவு தேவாலயம், அரிசோனா தோட்டம், கிரீன் நூலகம், உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கன. வளாகத்தினுள் பணியாளர்க்கு தனியான குடியிருப்புகள் உள்ளன. ஜாஸ்பர் ரிட்ஜ் பயாலஜிக்கல் பிரிசர்வ், என்னும் உயிரியல் பூங்கா வளாகத்தின் தெற்கே உள்ளது. இதை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவர். 1200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. நேசனல் ஆஃசிலரேட்டர் ஆய்வகம், பல்கலையின் ஆற்றல் துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது 426 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஹாப்கின்ஸ் மரைன் ஸ்டேசன், கலிபோர்னியாவில் உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தொலைதூர வளாகங்கள் பல்வேறு நாடுகளில் உள்ளன. இது பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சீனாவில் சிறு வளாகத்தைக் கட்டியிருக்கிறது. இதை 35 பேர் கொண்ட தனியார் குழு நிர்வகிக்கின்றது. ஒவ்வொரு குழு உறுப்பினரும், ஐந்து ஆண்டுகள் பணியில் இருப்பார். ஒருவரின் பணிக்காலம் முடிந்ததும், மற்ற உறுப்பினர்கள் புதிய உறுப்பினரை, வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்வர். இந்த குழுவினால் பல்கலைக்கழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்களின் பணியை மேற்பார்வையிடுவது, நிர்வாக, நிதி வேலைகளை கவனிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். கலிபோர்னியா அரசு சட்டத்தில் இந்த பல்கலைக்கு விலக்கு உண்டு. நிதி தொடர்பான செயல்பாடுகளில் வரி கட்டத் தேவையில்லை. இது பெரிய ஆய்வுப் பல்கலைக்கழகம். இங்கு தங்கிப் படிக்கும் வசதி உண்டு. மேற்கத்திய பள்ளி, கல்லூரிகளின் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பொதுப் பிரிவில் 27 துறைகளும், பொறியியல் பிரிவில் ஒன்பது துறைகளும், புவிப் பிரிவில் நான்கு துறைகளும் உள்ளன. இவற்றில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சட்டம், மருத்துவம், வணிகம் ஆகிய துறைகளில் முதுநிலைப் படிப்புகள் மட்டும் வழங்குகின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு 2,60,000 அரிய நூல்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் மின்னூல்களும், 1.5 மில்லியன் ஒலிக்கோப்புகளும், மற்றும் பல வகை ஆவணங்களும் உள்ளன. இங்குள்ளவற்றில் முதன்மையானது கிரீன் நூலகம். இங்கு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேயேர் நூலகத்தில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆசிய நூல்கள் உள்ளன. பெரும்பாலானோர், இங்குள்ள விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் ஆவர். வேற்றுநாட்டு மாணவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். மாணவர்கள் ஏறத்தாழ 650 குழுக்களைக் கொண்டுள்ளனர். இவை, சமூகம், தன்னார்வம், இசை, பண்பாடு என வெவேறு வகையானவை. ஸ்டான்போர்டு டெய்லி என்ற மாணவர் இதழ் வெளியாகிறது. இவை தவிர, பாடம் தொடர்பான குழுக்களும் உண்டு. சூரிய வாகனத் திட்டம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் வழிபாடு நடத்த தேவாலயம் உள்ளது. பாஸ்டன் கல்லூரி பாஸ்டன் கல்லூரி (Boston College) ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க இயேசு சபையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகமாகும். ஏல் ஜெஃபர்சன் ஏல் ஜெஃபர்சன் (பிறப்பு ஜனவரி 4, 1985) அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் அணியில் விளையாடுகிறார். தமிழ் ராக் இசை குரலொலியுடன் கிற்றர், drums, bass ஆகிய இசைக்கருவிகளும் இணைந்து பாட்டு பாடப்படும் போழுது இதை ராக் இசை வடிவம் எனலாம். வெவ்வேறு ராக் இசைப் பிரிவுகள் organ, piano, mellotron, and synthesizers போன்ற பிற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றன. ராக் இசை 1940-50 களில் அமெரிக்காவில் தோன்றியது. தமிழ் ராக் இசை அமெரிக்க ராக் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப், பாப் போன்ற மேற்கத்தைய இசைவடிவங்கள் போன்று பரவலான வரவேற்பைப் பெறவில்லை. தமிழ் இசுலாமியப் பாடல்கள் தமிழில் அல்லாவைப் பற்றியும் [[இசுலாம்|இசுலாமி [[பகுப்பு:தமிழ்ப் பாடல்கள்]] [[பகுப்பு:தமிழ் இசுலாமிய இசை]] தமிழர் மெய்யியல் தமிழ்ச் சூழலில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில், இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது. திருக்குறள் - 423 "முக்கிய கட்டுரைகள்: திணை விளக்கம், தமிழர் நிலத்திணைகள்" தமிழர் இடையே பௌத்தம் செல்வாக்கு பெற்று மெய்யியல் முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் 1891 ஆம் ஆண்டளவில் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபா என்னும் இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது. சுயமரியாதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனித உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியது. திராவிட இயக்கம் தற்கால தமிழ்நாட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியும் வருகிறது. இன்றைய தமிழ்நாட்டின் எழுச்சிக்கு திராவிட கருத்தியல் ஏதுவாக்கியது எனலாம். திராவிட கருத்தியல் பகுத்தறிவு, சமுக நீதி, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், தமிழ் தேசியம், பொருளாதார மேம்பாடு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பகிர்வு (சுயநிர்ணய அல்லது விரிவான சுதந்திரங்களை உடைய மாநிலங்கள்), இட ஒதிக்கீடு, நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் இலவசக் கல்வி, தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்தது. தமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்யியலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன. மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்) மேரிலன்ட் பல்கலைக்கழகம் ("University of Maryland"), ஐக்கிய அமெரிக்காவின் மேரிலன்ட் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். புள்ளி தொடுத்தல் புள்ளி தொடுத்தல் ஒரு சிறுவர் புதிராகும். ஒரு தாளில் தொடர்ச்சியான எண் புள்ளிகள் பரவப்பட்டு இருக்கும். அந்த எண்களைத் தொடுத்தால் ஒரு படம் புலப்படும். சிக்கல் வழி சிக்கல் வழி ("labyrinth") என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான மினோசு என்பவருக்காக டேடலசு என்னும் கைவினைஞரால் நோசசு என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், ஆதென்சின் வீரனான தேசியசு அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அவ்வமைப்பைக் கட்டி முடித்த பின்னர் அவ்வமைப்பில் இருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வகையில் அதைத் தந்திரமாக அமைத்திருந்தானாம். "சிக்கல் வழி" என்பதும், "புதிர்வழி" (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, "சிக்கல் வழி" உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு. தொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும், கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும். ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து மறுமலர்ச்சிக் காலம் வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின. சிக்கல் வழி வடிவங்கள் அலங்காரமாக மட்பாண்டங்கள், கூடைகள், உடல் ஓவியங்கள், குகை ஓவியங்கள், தேவாலயச் சுவரோவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உரோமர் சிக்கல் வழி வடிவங்களைச் சுவர்களிலும், நிலத்திலும் ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கினர். சில இடங்களில் தளங்களில் உருவாக்கப்பட்ட சிக்கல் வழி வடிவங்கள் அவ்வழியில் நடக்கக் கூடிய அளவு பெரியவையாகவும் இருந்தன. சொல் தேடல் மேலோட்டமாக தொடர்பற்ற எழுத்து வரிசைகள் ஒரு சதுர பெட்டகத்தில் இடப்பட்டிருக்கும். அந்த எழுத்துக்களில் மறைந்திருக்கும் சொற்களை கண்டுபிடித்தலே சொல் தேடல் என்ற புதிர் விளையாட்டின் இலக்கு ஆகும் சொற்கள் கிடையாகவோ, செங்குதாயோ, அல்லது மூலைவிட்டமாகவோ இருக்கலாம். குறுக்கெண் கூட்டல் குறுக்கெண் கூட்டல் ஒரு கணிதப் புதிர் ஆகும். கணக்கு கட்டங்களின் ஓர் ஒரத்தில் மட்டும் சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். காலியான கட்டங்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைத் தகுந்தபடி இட்டு ஓரத்தில் உள்ள் எண்களில் கூட்டுதொகையைப் பெறவேண்டும். வேறுபாடுகளைக் கண்டுபிடி சிறு வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படம் ஒன்றை அருகு அருகில் வைத்து, அவற்றில் இருக்கும் வேறுபாடுகளை கட்டிபிடிக்க முயற்சி செய்வதே வேறுபாடுகளை கண்டுபிடி புதிர். இது ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளி வருவதுண்டு. மர்தினிக்கு மர்தினிக்கு கரிபியக் கடலில் அமைந்துள்ள 1,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும். இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போலவே மர்தினிக்கும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைக்கப்பட்ட ஒரு அங்கமுமாகும். பிரான்சின் ஒரு அங்காமான படியால் மர்தினிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இங்கு ஐரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. அதிகாரபூர்வ மொழி பிரெஞ்சு மொழியாகும் எனினும் பெரும்பான்மையான மக்கள் அட்லாண்டிக் சோரே மொழியை பேசுகின்றனர். மயோட்டே மயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு (பிரெஞ்சு: "Collectivité départementale de Mayotte") பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே (அல்லது மவோரே) என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே (அல்லது பமன்சி, Pamanzi) என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளது. மொசாம்பிக் கால்வாயின் வட எல்லையில் பெருங்கடலில் வட மடகசுகாருக்கும் வட மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு புவியியல் சார்பாக நோக்குகையில் கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ளது எனினும் 1970களிலிருந்து அரசியல் சார்பாக தனி அமைப்பாக நிழவிவருகின்றது. இக்கூட்டமைப்பு உள்ளூர் பெயரான மவோரே எனவும் அழைக்கப்படுவதுண்டு முக்கியமாக கொமொரொசு ஒன்றியத்துடன் மயோட்டையை இணைக்க கோறுகின்றவர்கள் இவ்வாறு அழைப்பது கூடுதலாக காணப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் சென்னை ஒப்போலை உரிமையின் பெயராகும். 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அணியின் தற்போதைய தலைவர் மகேந்திரசிங் தோனி ஆவார். அணியின் தற்போதைய பயிற்றுனர் முன்னாள் நியூசிலாந்து வீரர் சுடீபன் பிளெமிங் ஆவார். அணியின் இல்ல அரங்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கமாகும். இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணி இதுவே ஆகும். இந்த அணி 2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பையை வென்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன்சு லீக் இருபது20 போட்டியின் கோப்பையை வென்ற முதல் இந்திய அணி. சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் சுரேஷ் ரைனா மற்றும் அணிக்காக அதிக ஆடுநர்களை வீழ்த்தியவர் டுவைன் பிராவோ. 2013 மே 24 அன்று, அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உச்ச நீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது. 2013 மே 24 அன்று, அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உச்ச நீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது. அதனால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்த அணி பங்கேற்கவில்லை. தடைகாலம் முடிந்த நிலையில் இந்த அணி இந்த ஆண்டு களமிறங்க உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் ஒன்றாகும். இந்த ஒப்போலை உரிமை 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வரும் 10 ஆண்டுகளுக்கு இந்திய சிமேந்து நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு வரை இந்த ஒப்போலை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார். மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும் நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர். . சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்க காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் நிருவனத்தின் "கோரமாண்டல் சூப்பர் கிங்" என்ற சிமெண்ட் வகையின் பெயரையும் குறிக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இல்ல அரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கமாகும். இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான திரு.எம்.ஏ.சிதம்பரத்தில் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், இந்தியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழைமையான அரங்கமாகும். தமிழ்நாடு துடுப்பாட்டக் கழகத்திற்கு சொந்தமான் இந்த அரங்கில் மே 2013 நிலவரப்படி 50,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. 2011 துடுப்பாட்ட உலக கிண்ணத்திற்காக புணரமைக்கப்பட்டபோது இதன் பார்வையாளர் கொள்ளளவு 36,000தில் இருந்து 50,000ஆக அதிகரிக்கப்பட்டது. இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் "சேப்பாக்கம் கோட்டை" எனவும் "சிங்கத்தின் குகை" எனவும் அழைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்சு பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உள்பட) வென்று, தன் இல்ல அரங்கத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது. ஆதாரம்: எதிரணி வரிசைப்படி ஆல் கோர் ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் ("Albert Arnold "Al" Gore", பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார். 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார். ஆரியபட்டா (செயற்கைக்கோள்) ஆரியபட்டா ("Aryabhata") என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் "கப்புஸ்டீன் யார்" என்ற இடத்தில் இருந்து "கொஸ்மொஸ்-3எம்" என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது. தேசிய பொறியியல் கல்லூரி தேசிய பொறியியல் கல்லூரி இந்தியாவில் தமிழ் நாட்டில், கோவில்பட்டியில் அமைந்துள்ளது. கொழும்புத் திட்டம் கொழும்புத் திட்டம் ("Colombo Plan") என்பது ஆசியா-பசிபிக் பகுதிகளில் உள்ள உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவ்வவ் நாட்டு அரசுகளின் கூட்டுறவினால் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். ஜனவரி 1950 இல் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களிப் பரிந்துரைக்க ஒரு ஆலோசனை சபை இம்மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆறாண்டுகளில் முடிவடையும் திட்டமாகவே இவ்வமைப்பூ உருவாக்கப்பட்டாலும் பின்னர் பல தடவைகள் நீடிக்கப்பட்டு 1980 முதல் ஒரு நிரந்தர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் கொழும்பில் உள்ளது. ஆரம்பத்தில் 7 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் தற்போது 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. டென்னசி பல்கலைக்கழகம் டென்னசி பல்கலைக்கழகம் ("University of Tennessee"), ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் நாக்ஸ்வில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். மொன்செராட் மொன்செராட் ("Montserrat") கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கிமீ (7 மைல்) அகலத்தையும் 16 கிமீ (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு நீளமான கடற்கரையும் காணப்படுகிறது. 1493 ஆம் ஆண்டு புது உலகு நோக்கிய தனது இரண்டாம் பயணத்தின் போது கிரிஸ்டோபர் கொலம்பஸ் இத்தீவுகளுக்கு சுபெயினிலுள்ள மொன்செராட் மலையின் பெயரை இத்தீவுக்கு இட்டார். அயர்லாந்துக் கடற்கரைப்பகுதிகளை ஒத்திருப்பதாலும், ஐரியர்கள் இங்கே வந்து குடியேரியமையாலும் மொன்செராட் பரவலாக " கரிபியத்தின் பைம்மணி" என அழைக்கப்படுவதுண்டு. ஜூலை 18, 1995 இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்துடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. நெதர்லாந்து அண்டிலிசு நெதர்லாந்து அண்டிலிசு ("Netherlands Antilles") முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் முன்னாள் சுயாட்சிப் பகுதியாகும். 2010 ஆம் ஆண்டில் இது கலைக்கப்பட்டிருந்தாலும், இத்தீவுகள் தொடர்ந்து நெதர்லாந்து இராச்சியத்தின் கீழ் வேறு சட்டபூர்வ நிலையில் இருந்து வருகிறது. தற்போது இவை டச்சு கரிபியன் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இம்மண்டலத்தில் இரண்டு தீவுக்குழுமங்கள் காணப்படுகின்றன: குராசோ, பொனைரே தீவுகள் வெனிசுலா கரைக்கு அப்பாலும் செயிண்ட் எசுடேசசு (Sint Eustatius), சபா (Saba),செயிண்ட் மார்டென் (Sint Maarten) தீவுகள் கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணக் கைத்தொழிலில் தங்கியுள்ளது. நெதர்லாந்து அண்டிலிசுவின் 5 தீவுகளும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இல்லாமால் நெதர்லாந்து இராச்சியத்துள் தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன. பக்திப் பாடல்கள் இந்து சமயப் பாடல்கள் பக்திப் பாடல்கள் எனப்படும். முருகன், அம்மன், ஐயனார், சிவன், கண்ணன், மதுரைசாமி என பல இந்துக்கடவுள்களை முன்வைத்து இந்தப் பாடல்கள் பாடப்படும். அரகோனைட்டு அரகோனைட்டு என்பது கால்சியம் கார்போனேட்டு (calcium carbonate), CaCO என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் கால்சைட்டு (calcite) என்னும் கனிமம். அரகோனைட்டின் படிக வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வேறுபட்டது. அரகோனைட்டு பருமச்செவ்வக வடிவில் இருக்கும். 470 °C வெப்பநிலையில் அரகோனைட்டானது கால்சைட்டாக மாறும். அரகோனைட்டு குச்சிகுச்சியான வடிவிலோ நார்போன்ற வடிவிலோ இருக்கலாம். அல்லது ""இரும்புப்பூ" ("flos-ferri") என்று அழைக்கப்படும் கிளைக்கும் ஸ்ட்டால்க்டைட் (stalactite) என்னும் வடிவிலும் காணப்படுகின்றது. கார்த்தினியத்தில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. எசுப்பானியத்தில் (ஸ்பெயினில்) குவாடலாஃகரா (Guadalajara) மாநிலத்தில் உள்ள "மொலினா டி அரகோன்" (Molina de Aragón ) என்னும் இடத்தில் இருந்து கிடைப்பதால், அரகோனைட்டு என்று பெயர் பெற்றது. சுலோவாக்கியா நாட்டில் ஓச்டின்சக்கா அரகோனைட்டு குகை (Ochtinská Aragonite Cave) உள்ளது. பகாமா நாட்டில் கடலடியில் ஓலைட் அரகோனைட்டு படிவுகள் நிறைய உள்ளன. அரகோனைட்டு இயல்பாக கிளிஞ்சல் உயிரிகள் (மெல்லுடலிகள்), முத்துச்சிப்பி போன்ற வற்றில் புறக்கூட்டில் உருவாகின்றன. இவை உயிர்வேதியல் வினைகளால் உருவாகுவதால் இதன் வடிவங்கள் உயிர்கரிமமல்லாத வேதியியல் அரகோனைட்டு வடிவில் இருந்து மாறுபட்டன. சில மெல்லுடலிகளில் முழு சிப்பியுமே அரகோனைட்டாக இருக்கும், சிலவற்றில் அரகோனைட்டு, கால்சைட்டாகிய இரண்டு கனிமங்களும் இருக்கும். அரகோனைட்டு வெப்பவியக்கவியலின் படி சீர்தரமான வெப்ப அழுத்தநிலைகளில் நிலைபெறாத வேதிப்பொருள் வடிவம். இது பத்து முதல் நூறு மில்லியன் ஆண்டுகள் கணக்களவில் (10 to 10 ) கால்சைட்டாக மாறும். சான் டியேகோ சான் டியேகோ ("San Diego") அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது பெரிய நகரமாகும். அமெரிக்காவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும். இந்நகரில் வாழ்பவர்களில் எசுப்பானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என பலவிதமான இனக்குழுக்களாக வாழ்கின்றனர். 2010ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்நகரின் மக்கட்தொகை 1,307,402 ஆகும். சான் டியேகோ பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாக இருப்பவை பாதுகாப்புத் துறை, பொருள்கள் உற்பத்தி செய்தல் மற்றும் சுற்றுலா துறைகள். இங்கிருக்கும் கடற்கரைகள் பிரபலமானவை. அமெரிக்க தேசிய பூங்கா இந்நகரின் அருகில் உள்ளது. டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ் வில்லியம் எடுவர்ட் பர்க்கார்ட் டுபோய்ஸ் ("William Edward Burghardt Du Bois") அல்லது டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ் ("W.E.B. Du Bois") (பிறப்பு பெப்ரவரி 23, 1868, இறப்பு ஆகஸ்ட் 27, 1963) ஆப்பிரிக்க அமெரிக்க சமூக உரிமை இயக்கத்தில் ஒரு முயற்சியாளரும் பல்கலைக்கழக ஆசிரியரும் ஆவார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பெற்றவர்களில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். 1909ல் முன்னாள் அட்லான்டா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும்பொழுது நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு தேசிய சங்கத்தை ஆரம்பித்தார். என்.ஏ.ஏ.சி.பி. நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் (National Association for the Advancement of Colored People), குறுக்க எழுத்து என்.ஏ.ஏ.சி.பி. (N.A.A.C.P.) ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையானதும் வலிமையானதுமான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கங்களில் ஒன்றாகும். டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ் மற்றும் இன்னும் இரண்டு ஆபிரிக்க அமெரிக்கர்கள், மூன்று வெள்ளை அமெரிக்கர்கள், மற்றும் ஒரு யூதர் ஆகிய நபர்கள் பெப்ரவரி 12, 1909 ஆபிரிக்க அமெரிக்க சமூக உரிமையை முன்னேற்றத்துக்காக இந்த சங்கத்தை உருவாக்கினார்கள். இச்சங்கம் நிறம் படி ஒதுக்குச்செயலை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது. 1920கள், 1930களில் நீதிமன்றம் வழியால் இச்சங்கம் ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிராக இருந்த பல சட்டங்களை செல்லாததாக ஆக்கியுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்களை சட்டதுக்குப் புறம்பாகத் தூக்கிலுடும் (Lynching) வழக்கத்துக்கு எதிராகவும், நிறப்பிரிக்கைக்கு எதிராகவும் போராடி பல அவற்றை சட்டபடி குற்றங்களாக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இன்று இந்த சங்கத்தின் அடித்தளம் பால்ட்டிமோர், மேரிலன்டில் அமைந்துள்ளது. அக்ரா அக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும். பன்றிகள் விரிகுடா படையெடுப்பு 1961 பன்றிகள் விரிகுடா படையெடுப்பு ("Bay of Pigs Invasion") என்பது கியூபாவினால் நாடுகடத்தப்பட்ட இராணுவத்தினரால் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த தாக்குதலைக் குறிக்கும். இப்படையெடுப்பு பிடெல் காஸ்ட்ரோவின் அரசைக் கவிழ்ப்பதற்காக ஜோன் எஃப். கென்னடி அதிபராக வந்தவுடன் ஐக்கிய அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து கியூபா-அமெரிக்க உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் தென்மேற்கு கியூபாவின் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியமையினால் இது "பன்றிகள் விரிகுடா படையெடுப்பு" என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 15, 1961, காலையில் மூன்று சிறியரக விமானங்கள் அண்டோனியோ மக்கேயோ விமானநிலையம், மற்றும் முக்கிய தளங்கள் மீது குண்டுகளை வீசின. தீவு முழுமையும் 48 மணிநேரத்துக்கு விமானத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி வான் தாக்குதல் நடத்தப்படவில்லை. காஸ்ட்ரோவின் வான்படைத் தளங்களைத் தாக்கும் இரண்டாவது திட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஏப்ரல் 17 இல் 1,511 பேரை ஏற்றிக் கொண்டு நான்கு கப்பல்கள் கியூபாவின் பிக்ஸ் விரிகுடாவில் இறங்கின. இவற்றுடன் சிஐஏயின் இரண்டு கப்பல்கள் தாக்குதல்களுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களை ஏற்றி வந்தன. இந்த சிறிய படையினர் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஹவானாவுக்குள் புகுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். இந்த முற்றுகையினால் காஸ்ட்ரோவுக்கு எதிராக மக்கள் அணி திரள்வார்கள் என சிஐஏ எதிர்பார்த்திருந்தது. ஆனாலும், முற்றுகை தொடங்க முன்னரே உள்ளூர் அமெரிக்க ஆதரவாளர்கள் பலரை சிறைகளில் அடைத்தது காஸ்ட்ரோ அரசு. சோவியத் ஒன்றியத்தின் கனரக பீரங்கிகள் கியூபா இராணுவத்தினரால் பாவிக்கப்பட்டன.. வான் தாக்குதலின் போது 10 கியூபா எதிராளிகளும், நான்கு அமெரிக்க விமானிகளும், 6 கியூபா விமானிகளும் இறந்தனர். ஏப்ரல் 21 இல் தாக்குதல் நிறைவடைந்தபோது 68 கியூபா நாடுகடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மீதியானவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 1,209 பேர்கள் மீதான விசாரணைகள் உடனேயே ஆரம்பிக்கப்பட்டு சிலர் தூக்கிலிடப்பட்டனர். மீதமானோர் 30 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை பெற்றனர். ஐக்கிய அமெரிக்காவுடன் 20 மாதங்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். பதிலுக்கு கியூபா $53 மில்லியன் பெறுமதியான உணவு மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக் கொண்டது. இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள் இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 23 தேதியிட்ட இந்தியா டுடே இதழ் ஒரு சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழில் இந்திய நாட்டின் 60 சிறப்புமிக்கவர்களைக் குறித்தக் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தச் சிறப்பிதழுக்காக இணையம், குறுஞ்செய்தி ஊடகங்கள் வழியே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பெறப்பட்ட 18928 வாக்குகளில் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி ஆகியோருக்கு முறையே 37%, 27%%, 13% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவு செய்திருந்தனர் என்பதும், மகாத்மா காந்தி அறப்போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. மேலும், 60 பேரில் பத்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சோயூஸ் திட்டம் சோயூஸ் திட்டம் ("Soyuz program", ரஷ்ய மொழி: Союз, தமிழ்: ஒன்றியம்) என்பது 1960களின் ஆரம்பப்பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். இது சோவியத் விண்வெளி வீரரை சந்திரனுக்கு கொண்டுசெல்ல ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் ரஷ்ய விண்வெளி நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. சோயூஸ் விண்கலங்கள் பல முறை வெவ்வேறு பயணங்களுக்காக மாற்றியமைக்கப்படன. அவையாவன: சூத்திரர் சூத்திரர் என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வணிகர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர். உரோமைப் பேரரசு உரோமைப் பேரரசு ("Roman Empire") ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும். குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது. ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது. உரோமைப் பேரரசை முதன் முறையாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் ஆவார். இவரது ஆட்சிக்காலமே உரோமைப் பேரரசின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. பின்பு யூலியஸ் சீசர், நீரோ மன்னன் மற்றும் குளோடியசு போன்ற பேரரசர்கள் ஆட்சி செய்தனர். திருச்சபையுடன் அரசர் ஒருங்கிணைத்து உருவாக்கியதே உரோமைப் பேரரசு ஆகும். பண்டைய உரோமைப் பேரரசில் கிருத்துவ மதத்திற்கு இடமில்லை. ஆனால், நவீன உரோமைப் பேரரசில் கிருத்துவ சமயம் அரசின் சமயமாக அங்கீகாரம் பெற்றிருந்தது. அதிகாரத்தின் மையத் தலைமையிடமாக உரோம் விளங்கியது. கிருத்துவ அரசுக்களை சகோதரத்துவத்துடன் ஒருங்கிணைப்பதைப் புதிய உரோமைப் பேரரசின் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. பேரரசில் அரசர் முடிசூடப்படுதல் என்பது போப்பாண்டவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது. முந்தைய உரோமைப் பேரரசானது இத்தாலிய முறையில் இயங்கி வந்தது. புதிய பேரரசு இயல்பிலும் ஒழுக்கத்திலும் கிருத்துவ முறையினைக் கடைப்பிடித்தது. அரசரிடம் பரந்துபட்ட அதிகாரம் இருந்தது. அரசரின் கட்டுப்பாட்டில் போப்பாண்டவர் செயல்பட வேண்டும் என்றிருந்தது. பிறகு, போப்பாண்டவருக்கு, பேரரசர்களும் மற்ற உலகத்தாரும் உரித்தானவர்கள் என்கிற அதிகாரம் நடைமுறையில் இருந்தது. ஐரோப்பாவில் பல பகுதிகளாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை, போப்பாண்டவரும் பேரரசரும் ஒரே பேரரசாகக் கொண்டுவந்தனர். அதுபோல், குடியரசுத் தன்மையைப் பலவீனம் செய்து பரம்பரை ஆட்சிமுறையை இது வலுப்படுத்தியது. நவீன உரோமைப் பேரரசானது நிலமானிய முறையை முற்றாகப் புறந்தள்ளியது. குறிப்பாக, ஜெர்மனியில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தியது. இதுதவிர, இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உரோமைப் பேரரசு தோற்றுவித்தது. உரோமைப் பேரரசில் புதிய நகரங்கள் உருவாகின. இந்நகரங்கள் இடைக்காலத்தில் கைவினைத் தொழில் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு மையமாகத் திகழ்ந்தன. தொடக்கக் காலத்தில் இப்பேரரசில் தோற்றுவிக்கப்பட்ட நகரங்கள் சிறியனவாகக் காணப்பட்டன. கைவினைக் கலைஞர்களின் பெருக்கத்தால் நகரங்களில் வியாபாரம் பெருமளவில் வளர்ந்தது. மேற்கு ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ள, இத்தாலியின் அமைவிடம் ஏற்றதாக இருந்தபடியால் நகரங்கள் அதிகம் பயனடைந்து வளரக் காரணமாயின. ஜெனிவா, பிளாரன்ஸ், வியன்னா போன்ற நாடுகள் வர்த்தக மையங்களாக மாற்றம் பெற்றன. ஜெனிவா மற்றும் வெனிஸ் ஆகிய நகரங்கள் கடற்கரை நகரங்களாக அமைந்திருந்த காரணத்தால், மிலன், பிசா ஆகிய நகரங்கள் வாணிப வழித் தடங்களாக உருவாகின. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலுள்ள நகரங்கள் பலவும் துறைமுகங்களாகவும் வர்த்தக வாணிப மையங்களாகவும் வளர்ச்சிப் பெறத் தொடங்கின. இந்நகரங்கள் இடைக்கால ஐரோப்பிய நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த இடங்களாகின. முந்தைய இடைக்காலத்தில் மக்களுக்குக் கல்வியைத் திருச்சபை அளித்தது. இலக்கியம், கணிதம், வேதாந்தம், தருக்கவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கல்வி கற்கும் மையங்களாக மடாலயங்கள் செயல்படத் தொடங்கின. பல பல்கலைக் கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அப்பல்கலைக் கழகங்கள் துறவிகளின் ஆளுகையின்கீழ் இயங்கி வந்தன. வேதாந்தம் மற்றும் தத்துவம் ஆகியவை கற்பித்தலில் முக்கியத்துவம் பெற்றன. வரலாறு, அறிவியல் பாடங்கள் கற்பிப்பதிலிருந்து விலக்கப்பட்டன. நூல்கள் கைகளால் எழுதப்பட்டன. போலக்னோ பல்கலைக்கழகம் சட்டம் பயில்வதற்குப் புகழ்வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஸ்பெயின் பல்கலைக்கழகத்தில் அரேபியம், எபிரேயம் ஆகிய மொழிகள் கற்றுத்தரப்பட்டன. பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பல்கலைக்கழகம் போல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. உரோமைப் பேரரசு வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. காலனி நாடுகளின் முதலீடுகள் தவறான வழிகளில் சுரண்டப்பட்டன. உரோமானியர்கள் கடின உழைப்பைக் கைவிட்டனர். மாறாக, அடிமைகளைக் கொண்டு வேலை வாங்குவதையும் அவர்களைப் போரில் ஈடுபடுத்துவதையும் பெரிதும் விரும்பினர். உரோமைப் பேரரசு, கொள்கையளவில் குடியரசு ஆட்சியைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, நடப்பில் முடியாட்சி முறையையே பின்பற்றி வந்தது. இதன் காரணமாக, மக்கள் பேச்சுரிமையை இழந்தனர். செனட் மற்றும் பொது அவையில் பிரபுக்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எதேச்சதிகார ஆட்சியில், செனட் உதவிகரமாக இருந்து செயல்பட்டதால் சமுதாயத்தில் குழப்பநிலை நிலவியது. மக்களிடையே தோன்றி வளர்ந்த, ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி எண்ணங்கள் உரோமைப் பேரரசுவின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டன. அதுபோல், உரோமைப் பேரரசில் மன்னருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லாதது ஒரு பெருங்குறையாகும். இதனால், நாட்டில் உருவான உள்நாட்டுக் குழப்பங்கள், பல குழுக்களின் தோற்றம், அலிசன் நடவடிக்கை ஆகியவை உரோமைப் பேரரசு பலவீனமடைய காரணங்களாகின. இதுதவிர, ஆடம்பர வாழ்க்கைமுறைகளும் வரிவிதிப்பு முறைகளும் அந்நியரின் படையெடுப்பு நடவடிக்கைகளும் பேரரசின் வீழ்ச்சிக்கு அடிகோலின. தெற்காசிய தலைநகரங்கள் இது தெற்காசிய தலைநகரங்களின் பட்டியலாகும்.
நியூ கலிடோனியா நியூ கலிடோனியா ("New Caledonia", ) என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன. செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது. நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு) இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும். 1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது. 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில் 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர். நியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது. லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது. பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார். இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார். கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார். திணை விளக்கம் திணை விளக்கம் என்னும் இக்கட்டுரை தமிழில் திணை என்னும் சொல்லின் பயன்பாடு குறித்த விளக்கம் ஆகும். தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. இது தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை. தொல்காப்பியர் மொழியைப் பற்றி எண்ணும்போது திணைகளை வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார். இலக்கியங்களில் காணப்படும் பொருளைப்பற்றி எண்ணும்போது வேறு வகையான பெயர்களைக் கையாண்டு தமிழ் இலக்கண நெறியைத் தெளிவுபடுத்தியுள்ளார். இவற்றையும் பார்த்தல் நன்று தமிழர் சொல்லை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் பாகுபடுத்திக்கொண்டுள்ளனர். அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும். ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், இவற்றுள் அடங்கும் இடம், காலம், சினை(பொருளின் உறுப்பு), பண்பு, தொழில் பற்றிய பெயர்களும் அஃறிணை. உயர்திணையில் ஆண்பால், பெண்பால் பலர்பால் என்னும் பாகுபாடுகளும், அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என்னும் பாகுபாடுகளும் உண்டு. பொருள் என்பது வாழ்க்கையாகிய பொருள். இவற்றை இரு பிரிவுகளாகப் பார்த்தனர். ஆணும் பெண்ணும் உறவு கொண்டு வாழ்வதைக் கூறுவது அகவாழ்க்கை. பிறவெல்லாம் புறவாழ்க்கை. அகவாழ்க்கை என்னும் அகத்திணையை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாகவும், புறவாழ்க்கையை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாவும் பாகுபடுத்திக்கொண்டனர். இந்தப் பாகுபாடுகள் தொல்காப்பிய காலத்துக்கு முந்தியவை. தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்திணை இயலை ஏழு திணைகளாக பகுத்துள்ளார். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பனவாகும். அவற்றுள் ஒருதலைக்காதல் எனும் கைக்கிளை, பொருந்தா காமம் எனும் பெருந்திணை தவிர்த்த பிற ஐந்து திணைகளும், காளை ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே முகிழ்த்து வளரும் காதல் அன்பை பற்றி பாடும் திணைகள் ஆகும். இந்த அன்பின் எழுச்சியால் தலைவன், தலைவியரின் உள்ளத்தே தோன்றுகின்ற இன்பமும் துன்பமும், களிப்பும் கலக்கமும் இணைந்த வாழ்வியலை, இந்த ஐந்து திணைகளில் பிரித்து இலக்கியங்கள் பாடுகின்றன். இப்பாடல்கள், பெரும்பாலும் அவர் உள்ளத்திலே நிகழும் நினைவுப் போராட்டங்களாக தம் நெஞ்சுக்கு சொல்லுவாராக அமைந்தாலும், நெருங்கிய, தோழி, செவிலி, பாணன், பாங்காயினோர் போன்றோரிடம் தம் உள்ளம் திறந்து உரைப்பாராகவும் இவை விளங்குகின்றன. இந்த ஐவகை திணைகளில், ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக, அவற்றின் பகுதிகளாக மேலும் பலப்பல துறைகளையும் வகுத்துக்கொண்டு செய்யுள் செய்வது பண்டை தமிழ் புலவர்களின் மரபாகும். இவ்வொழுக்கங்கள் "முதல்", "கரு", "உரி" என மூன்று தலைப்புகளில் கீழ் சொல்லப்படும் பொருட்களின் சார்பாக நிகழும் என்றும் வகைப்படுத்தி உள்ளனர். 'முதற்பொருள்' என்பது 'நிலமும் பொழுதும்' என்ற இவற்றினை ஒட்டி அமையும் ஒழுக்கங்கள் ஆகும். 'நிலம்' என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும், 'பொழுது' என்பது அந்த ஐவகை நிலத்தை சார்ந்து நிற்போருக்கு காம உணர்வினை கிளர்ந்து எழச் செய்யும் "பெரும்பொழுது" மற்றும் "சிறுபொழுது" ஆகும். இவை அந்த அந்த நிலங்களுக்கு சிறப்பாக பொருந்துவன என்று காண பெற்றாலும், சிலரிடையே மயங்கி நின்றும் உணர்வு எழ செய்தலும் நிகழலாம். அவை "திணை மயக்கம்" என்றே கொள்ளல் வேண்டும். கருப்பொருள் என்பன அந்த அந்த திணைக்கு உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும், விளங்கும் தெய்வம், மக்கள் (உயர்ந்தோர், தாழ்ந்தோர்),புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான பதினான்கும். (பின்னர் காண்க) உரிப்பொருள் என்பன உள்ளத்தே எழுகின்ற மன உணர்வுகளுக்கு காரணமாக விளங்கும் உந்துதல்களாகும். அவை: 1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) 2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும் 3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்) 4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும் 5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) இவைகள் செய்யுள் செய்வார்க்கு பெரிதும் சிறப்புடைய அடிப்படை பொருட்களாகும். ஆயின், இவை பிற திணைகளின் உள்ளும் வருவதற்கு உரியன எனம் அறிதலும் வேண்டும். குறிஞ்சியாவது, 'மலையும் மலைசார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும் குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும். குறிஞ்சியின் கருப்பொருட்கள்: குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது" பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும். பாலையின் கருப்பொருட்கள்: பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது" இதை தற்கால திரைப்படங்களிலும் நாம் காணலாம், தலைவன் தலைவி பிரிவின் போது பாடல் காட்சிகளை கண்டால் இது நன்கு விளங்கும் முள் மரங்கள், உடைந்த கட்டிடங்கள், பாலைவனம்... முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும். முல்லையின் கருப்பொருட்கள்: முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது" மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும். மருதத்தின் கருப்பொருட்கள்: மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது" கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும். நெய்தலின் கருப்பொருட்கள்: நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது" இக்கருப்பொருட்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றி பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உசாத்துணை: கலித்தொகை: புலியூர் கேசிகன் உரை: பக்கம் 1-9 மனித வாழ்வின் உறுதிப்பொருள்களில் அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதால் “புறப்பொருள்” எனப்பட்டது. இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித் திணை, கரந்தைத் திணை, வஞ்சித் திணை,காஞ்சித் திணை, உழிஞைத் திணை, நொச்சித் திணை, தும்பைத் திணை, வாகைவாகைத்திணைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை என்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர். வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம் வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம் புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணைகளை அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உணரமுடிகிறது. தற்கொலைத் தாக்குதல் "தற்கொடைத் தாக்குதல்" தன்னை தானே விருப்புடன் சாவைத் தழுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். தமிழில் தற்கொலைத் தாக்கதல் என்றும் இதைக் குறிப்பர். குறிப்பாக தற்கொலையை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர். தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளும் ஒருவரை "தற்கொடையாளி" அல்லது "தற்கொலையாளி" என்று அழைப்படுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் யப்பான் அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக கமிகசே (யப்பானியம்:神風 [kamikazɛ] "கமி" - கடவுள், "கசே" - காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் நேச நாட்டுக் கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் முதல் வரலாறு. 1987 யூலை 5 ம் நாள் நெல்லியடியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, கரும்புலிகள் அணியின் கப்டன் மில்லர் என்பவரால் இலங்கை இராணுவப் படை முகாம் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை மோதி நடாத்தப்பட்ட தாக்குதலையும், அது போன்ற கரும்புலி அணியினரினரால் தற்கொடையாளியாய் சென்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும் "தற்கொடைத் தாக்குதல்" என ஒரு தாக்குதலுக்கான சொல்லாக (குறிப்பாக புலிகளின் ஊடகங்களில்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. பிசுக்குமை பிசுக்குமை அல்லது பாகுநிலை ("viscosity") என்பது சறுக்குப்பெயர்ச்சித் தகைவு அல்லது நறுக்குத் தகைவினால் தன்னுரு மாறிவிடாமல் இருக்க ஒரு பாய்மம் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அளவு ஆகும். பொதுவாக, இதனை பாய்மத்தின் தடிமன் எனவோ, அதன் பாய்விற்கான எதிர்ப்பு எனவோ கருதுவதும் உண்டு. ஒரு பாய்மத்தின் பாய்விற்கான உள்ளெதிர்ப்பே பிசுக்குமை என்று கொள்ளலாம். அல்லது, இதனைப் பாய்ம உராய்வின் ஒரு அளவை என்றும் கொள்ளலாம். காட்டாக, நீரின் பிசுக்குமை மிகவும் குறைவு, தேன், எண்ணெயின் பிசுக்குமை அதிகம். மெய்யான பாய்மங்கள் ("real fluids") எல்லாமே நறுக்குத் தகைவிற்கு உள்ளெதிர்ப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு நறுக்குத்தகைவெதிர்ப்பு ஏதுமின்றி இருக்கும் பாய்மங்கள் கருத்தியல் பாய்மங்கள் ("ideal fluids") எனப்படும். பிசுக்குமை அளவையைக் குறிக்கப் பொதுவாக, பிசுக்குமைக் கெழு அல்லது பாகுநிலை எண் η ("Co-efficient of Viscosity") என்னும் எண்ணைப் பாவிப்பதுண்டு. பாய்மத்தைப் பொருத்தும், அதன்மீது சுமத்தப்படும் அழுத்தத்தைப் பொருத்தும் பிசுக்குமையைப் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் சில: இவற்றுள் அதிகம் விளங்கப் பெறுவது நறுக்குப் பிசுக்குமையும் துனைமப் பிசுக்குமையுமே. நியுவே நியுவே ("Niue") என்பது தென் பசிபிக் பெருங்கடலில் பொலினீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும். இது பொதுவாக பொலினீசியாவின் பாறை என அழைக்கப்படுகிறது. சுயாட்சி உள்ள நாடாயினும் நியுவே நியூசிலாந்துடன் தன்னிச்சையாக இணைந்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு உரிமையுள்ள முடிக்குரியவரே நியுவேயின் அரசுத்தலைவரும் ஆவார். பெரும்பான்மையான வெளிநாட்டு தொடர்பாடல்கள் நியுவே சார்பாக நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது. நியுவே நியூசிலாந்திலிருந்து வடகிழக்குத் திசையாக 2,400 கிமீ தொலைவில் டொங்கா, சமோவா, குக் தீவுகள் என்பவற்றால் அமைக்கப்படும் முக்கோணத்துள் அமைந்துள்ளது. நியுவே மொழியும் ஆங்கிலமும் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவதோடு அன்றாட வணிக நடவடிக்கைளிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையினர் பொலினீசியராவார்கள். இந்நாட்டின் தலைநகர் அலோபி நியூ கினி நியூ கினி ("New Guinea", பிசின மொழி: "Niugini", டச்சு: "Nieuw-Guinea") என்பது கிறீன்லாந்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் நிலப்பரப்பு 786,000 கிமீ. Located in the southwest அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கே, மலாயு தீவுக்கூட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியாவின் அதே கண்டத்தட்டிலேயே நியூ கினி தீவும் உள்ளது. தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது.. மானிடவியல் அணுகுமுறையில், நியூ கினி மெலனீசியாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக, இத்தீவின் மேற்குப் பகுதி இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணத்தைக் கொண்டுள்ளது. இத்தீவின் கிழக்குப் பகுதி பப்புவா நியூ கினி நாட்டின் பெரும்பாகத்தைக் கொண்டுள்ளது. நியூ கினித் தீவின் மொத்த மக்கள் தொகை 7.5 மில்லியன் (மக்கள்தொகை அடர்த்தி: 8 நபர்/கிமீ). 16ம் நூற்றாண்டில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்து, "Nueva Guinea" என்ற பெயரில் அழைத்தார்கள். அண்மைக் கால வரலாற்றில் நியூ கினியின் மேற்குப் பகுதி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. செருமானியர்கள் முதலாம் உலகப் போரிற்கு முன்னர் இத்தீவின் கிழக்குப் பகுதியின் வடக்குக் கரையைக் கைப்பற்றி செருமானிய நியூ கினி எனப் பெயரிட்டனர். அதே வேளையில், தென்கிழக்குப் பகுதியை பிரித்தானியா கோரியது. வெர்சாய் ஒப்பந்தத்தை அடுத்து, செருமானியப் பகுதி ஆஸ்திரேலியாவிற்குக் கொடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதி 1975 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற தனி நாடானது. தீவின் மேற்குப் பகுதி 1961 ஆம் ஆண்டில் டச்சுக்களிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் இது உடனடியாகவே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பகுதியாக ஆக்கப்பட்டது. சொக்டோ மொழி சொக்டோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்கரான சொக்டோ இனத்தவரின் சொந்த மொழி இதுவாகும். இம்மொழி இன்னொரு தொல்குடி அமெரிக்க மொழியான சிக்காசோவுக்கு மிகவும் நெருங்கியது ஆகும். சில மொழியியலாளர் இவ்விரு மொழிகளும் ஒரே மொழியின் இரண்டு வட்டார வழக்குகள் எனக் கருதுகின்றனர். எனினும் அண்மைக்கால ஆய்வுகளின் படி சொக்ட்டோ மொழி பேசுபவர்கள் சிக்காசோ மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. சொக்ட்டோ மொழியில் "ர்" ஒலி இல்லை. சொக்டோ மொழியில் மூன்று வட்டார வழக்குகள் இனங்காணப்பட்டுள்ளன. அவை: என்பனவாகும். இவற்றுடன், புளோரிடாவிலுள்ள, தல்லஹாசி, லூசியானாவின் கோவாசாத்தி ஆகிய இடங்களிலும், டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய இடங்களிலும் குறைந்த அளவில் இம்மொழி பேசுவோர் காணப்படுகின்றனர். தொல்லெழுத்துக் கலை பண்டைய மற்றும் இடைக்கால எழுத்துக்களைப்பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு தொல்லெழுத்துக் கலை என்று பெயர். இக்கலை முக்கியமாக, நாணற்புல், தோல், காகிதம் போன்ற அழியக்கூடிய பொருள்களில் எழுதியுள்ள்வற்றை ஆய்வு செய்வதாகு. மேற்கோள்: த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா. டையஸ்கோரடீஸ் ஆவணம் வியன்னாவின் டையஸ்கோரடீஸ் ஆவணம் டையஸ்கோரடீசால் எழுதப்பட்ட 6வது நூற்றாண்டினைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் நூலாகும். இது பண்டைய அறிவியல் நூலுக்கான அறிய எடுத்துக்காட்டகும். 491 விலங்குத்தோல் பக்கங்களில் 400க்குமதிகமான விலங்குகளதும் நிலைத்திணைகளதும் வரைப்படங்கள் காண்ப்படுகின்றன. இவ்வாவணம் கி.பி 515 இல் பைசன்டைன் இளவரசியும் பேராரசர் அனிசியசு ஒப்லிபிரிசின் மகளுமான யூலியானா அனிசியாவுக்காக ஆக்கப்பட்டது. இது 37 சதமமீட்டர் நீளமும் 30 சதமமீட்டர் அகலத்தையும் கொண்டது. இளவரசிக்காக ஆக்காப்பட்டாலும் பின்வநத நூற்றாண்டுகளில் வைத்தியசாலை கைநூலாக பயனபடுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்நூலில் சில விளக்கங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன. டைஸ்கோரடிசின் உரைக்கு மேலதிகமாக இந்நூலில் "Carmen de herbis" எனப்பட்ட பிளதெல்பியாவின் தைனோசியசின் நிலைத்திணைப்பற்றிய ஆவணமும், நீகண்டரின் பாம்புக்கடிகான மருந்துகளின் ஆவனமும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இயற்கை எரிவளி இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள். இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்). இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், மின்னாற்றல் ஆக்குவதற்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு ஆற்றல்வாய்கள் பின்வருவன: எரியெண்ணெய் 37%, நிலக்கரி 24%. இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் நிறம், வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக, மிகையான தூய்மைக்கேடுகள் தராமல் எரியக் கூடியது. சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளைத் தராத ஒரு மூலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது பெட்ரோலியத்தை விட 30% குறைவான அளவு கார்பன்-டை-ஆக்சைடும், நிலக்கரியை விட 45% குறைவான கார்பன்-டை-ஆக்சைடும் வெளியிடுகின்றது. இயற்கை எரிவளிக்கு இயல்பாக மணம் ஏதும் இல்லை என்றாலும், அதனை இனங்காட்ட மெர்கேப்டன் என்னும் வேதிப்பொருளைக் கலந்துவிடுவது வழக்கம். அது அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், வளி கட்டுமீறி வெளியேறினால் எளிதில் கண்டுபிடிக்க இயலும். இயற்கை எரிவளியைப் பொதுவாக எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டுகிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாறைநெய் உற்பத்தியின் போது கிடைக்கும் பயனற்ற பொருளாகக் கருதப்பட்டது. அதனால், எண்ணெய்க்கிணறுகளில் வெளிவரும் இவ்வளியைப் பயனின்றி எரித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் அவ்வாறு பயனற்றதாகக் கருதப்படும் எரிவளியையும் எண்ணெய்க் கிணறுகளின் அழுத்தத்தை அதிகரிக்க உட்செலுத்தப் பயன்படுத்திக் கொள்வர். எண்ணெய்க் கிணறுகள் தவிர, கரிப்படுகைகளிலும் இயற்கை எரிவளி காணப்படும். மேலும், அண்மையில் களிப்பாறைகளிலும் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இவ்வகை வளியைக் களிப்பாறை வளிமம் என்றும் சொல்வதுண்டு. நிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் நீர், மணல், பிற சேர்மங்களும் வளிமங்களும் பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று. எரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன. உலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் கத்தார் நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும். இயற்கை எரிவளியைப் பல வகையாக அளந்து குறிப்பிடலாம். இது ஒரு வளிமம் என்பதனால், கன அடி என்னும் அலகைக் கையாளலாம். உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாக "ஆயிரம் கன அடி" என்னும் அலகைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் "மில்லியன் கன அடி" எனவும் "டிரில்லியன் கன அடி" எனவும் அளப்பதுண்டு. பிரித்தானிய வெப்ப அலகு என்னும் வெப்ப அலகு மிகவும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. இது எரியாற்றலின் அளவைக் கொண்டு குறிப்பது ஆகும். ஒரு பி. டி. யு (British Therman Unit, BTU) என்பது கடல்மட்ட சீர்நிலை அழுத்தத்தில் இருக்கும் ஒரு பவுண்டு நீரை ஓர் அலகு (ஒரு பாகை) வெப்பம் ஏற்றுவதற்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கன அடி இயற்கை வளியில் 1027 பி. டி. யு உள்ளது. எரிவளிச் சுழலிகள் மூலமும் நீராவிச் சுழலிகள் மூலமும் மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். சில வேளைககளில், எரிவளிச் சுழலிகளோடு கொதிகலன்களையும் சேர்த்து ஒரே நேரத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவியை மட்டும் உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவது உண்டு. அடுப்புக்களின் வழியே இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலம் 2000°F வரை வெப்பத்தை உண்டாக்க இயலும். வீட்டினுள் சமையலுக்கும் வெப்பமேற்றுவதற்கும் இவ்வளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழாய்கள் வழியாக எரிவளி வீடுகளுக்கு அனுப்பப் படுகிறது. சமையலுக்கும், துணிகள் காயவைப்பதற்கும், அறைகளை வெப்பமுற வைப்பதற்கும் இது பயன்படுகிறது. அழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். புதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே ஜூல் அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெய்யை விட இயற்கை எரிவளி குறைவான கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. ஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம். அறுசுவை அறுசுவை () எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன. அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள். மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது. இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது. சுவை உமாமிசுவை யூட்டர்சென் யூட்டர்சென் ("Uetersen") எனப்து ஜெர்மனியின் வட பகுதியில் பின்னெபேர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஹாம்பூர்க் நகரில் இருந்து 30 கிமீ வடமேற்கே, எல்ம்ஷோர்ன் நகரில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. நகோர்னோ கரபாக் குடியரசு நகோர்னோ கரபாக் குடியரசு ("Nagorno-Karabakh Republic") அல்லது ஆட்சாக் குடியரசு ("Artsakh Republic") "நிகழ்நிலைப்படி" விடுதலையான குடியரசாகும். இது தெற்கு கோகேசியாவில் உள்ள நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைஜானின் தலைநகரமான பாகுவிலிருந்து 270 கிலோமீட்டர் (170 மைல்) மேற்கில் ஆர்மேனியாவில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. 1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும் அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர் 1988 முதல் 1994 வரை நடைப்பெற்றது. 1991 டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை. 1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழனின் மகனாவான். இரண்டாம் குலோத்துங்கனைத் தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரம சோழன் கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத் தேதி தான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரம சோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அவனுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்திகளில் பலவகை வாசகங்கள் உள்ளன. அவை எல்லாம் ஆட்சியின் மாட்சியைச் சொல் அலங்காரமாகக் கூறுகின்றன. ஆனால் மருந்திற்குக்கூட வரலாற்று முறையில் பயன்படக்கூடிய உண்மையான செய்தி ஒன்று கூட இடம்பெறவில்லை. அபயன்,அனபாயன்,எதிரிலிப் பெருமாள். தியாகவல்லி,முக்கோக்கிழானடி இவர்களில் புவனாமுழுதுடையாள் எனும் தியாகவல்லியே பட்டத்து அரசி. ஆதாரம்; திருமழப்பாடி கல்வெட்டு ஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம். தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார். சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன் மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாமி கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான். இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிறுவப்பெற்று அந்நாள் முதல்நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முற்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையூறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளிக் கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூத்தர் கூறுகின்றார். குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை இராமானுசர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது. சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைணவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுசருக்கும் ஏற்பட்ட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுசர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விசுணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவத்தலமாக உள்ள இடத்தில் விசுணு சிலை இருப்பது சிவத்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விசுணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுசர். விசுணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லட்சுமி கடாட்சம் அகன்று விடும் என்றும் விசுணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலைதனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விசுணுவின் புகழ் பாடிய ராமனுசத்திற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண்பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விசுணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விசுணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விசுணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுசத்திற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுசர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான். ராமானுசர் திருவரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விசுணு சிலைதனை, தில்லை கோவிலில் இருந்து அகற்றினார். இதனால்இவனை கிருமி கண்ட சோழன் என பிற்கால "திவ்ய சூரிசரிதம்" மற்றும் கோயிலொழுகு முதலியவை குறிப்பிடுகின்றன. குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை கோவில் புதுப்பிப்பு பணிகளுக்க இடம் மற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், பின் குலோத்துங்கன் வற்புறுத்தி மரமாத்து பார்த்ததாக தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை குலோத்துங்கன் கோவிந்தராசர் சிலையை கோவிலில் இருந்து அகற்றியதாக திரித்துள்ளது ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம். பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் இவன் தமிழ்ப் புலமையும்,பலவகை செய்யுள் இயற்றும் ஆற்றலும் உடையவன். கி.பி 1150 இனம் (உயிரியல்) உயிரியலில், இனம் () என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிரிகளின் தொகுதி என வரையறுக்கப்படுகின்றது. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது என்றாலும் நுண்ணுயிரினம், வலய உயிரினம் போன்றவற்றைக் கருதும்போது இது அவ்வளவு தெளிவாக அமைவதில்லை. எனவே, டிஎன்ஏ அல்லது மரபன் ஒப்புமை, புறத்தோற்ற ஒப்புமை, சூழல் வாழிட ஒப்புமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இனம் என்பதற்கு வரையறை தருவது உண்டு. அதாவது, மரபன் வேறுபாடுகளும் இனங்களுக்குள் காணப்படும் சூழல் வாழிடம் சார்ந்த இயல்பு வேறுபாடுகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும், அவற்றைப் பல்வேறு இனங்களாகவும் துணையினங்களாகவும் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன. உயிரினங்களுக்கு வழங்கிவரும் பொதுப் பெயர்கள் சில வேளைகளில் இனங்களுக்கான அறிவியல் பெயராகவும் வழங்கப்படுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கமான உறவுடைய இனங்கள் சேர்ந்து பேரினம் என்னும் பகுப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு இருசொற் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெயரின் முதற்சொல் பேரினத்தையும், மற்றது இனத்தையும் குறிக்கின்றன. அரிசுடாட்டில் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இனங்கள் நிலையானவைகளாகக் கருதப்பட்டன. மாபெரும் உயிர்ச்சங்கிலி எனும் அமைப்பில் இவை படிநிலையில் வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில், நாளடைவில் போதுமான கால இடைவெளியில் இனம் படிமலரலாம் என உயிரியலாளர்கள் உணரத் தொடங்கினர். சார்லசு டார்வின் 1859 இல் வெளியிட்ட "The Origin of Species" (உயிரினத் தோற்றம் எனும் நூலில் அவர் இயற்கைத்தேர்வால் எப்படி உயிரினம் படிமலர வாய்ப்புள்ளது என விளக்கினார். இனங்களுக்கிடையில் மரபன்கள் கிடைநிலையாக பரிமாறப்படுவதுண்டு; பல்வேறு காரணங்களால் இனம் அழிந்தொழிதலும் உண்டு. அரிசுடாட்டில் தன் உயிரியல் நூலில் பரவை, மீன் போன்ற வகையைக் குறிக்க, γένος ("génos") எனும் சொல்லையும் அவ்வகையில் அமைந்த குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்க, அதாவது பறவைகளில் அமைந்த ஓந்தி, கழுகு, காக்கை, சிட்டுக்குருவி போன்றவற்றைக் குறிக்க, εἶδος ("eidos") எனும் சொல்லையும் பயன்படுத்தினார்). இந்தச் சொற்கள் இலத்தீனில் ""genus"" எனவும் ""species"", எனவும் மொழிபெயர்க்கப்பட்டன. என்றாலும், இவை அப்போது இலின்னேய வகைபாட்டுப் பொறுளில் வழங்கப்படவில்லை; இன்று பறவைகள் வகுப்பு வகைபாட்டில் அமைகின்றன. ஓந்திகள் குடும்ப வகைபாட்டில் அமைகின்றன. காக்கைகள் பேரின வகைபாட்டில் அடங்குகின்றன. வகை என்பது இயல்புக் கூறுகளால் பிரித்துணரப்படுகிறது; எடுத்துகாட்டக பறவை இறகுகளும் அலகும் சிறகுகளும்வல்லோடுடைய முட்டையும் வெங்குருதியும் பெற்றுள்ளது. வடிவம் அனைத்து உறுப்பு உயிரிகளும் பகிரும், மரபுபேறாக அவற்றின் இளவுயிரிகளும் தம் பெற்றோரிடம் இருந்து பெறும் பொதுவடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரிசுடாட்டில் அனைத்து வடிவங்களும் வகைகளும் தெளிவானவை என்றும் மாறாதவை என்றும் கருதினார். இவரது அணுகுமுறை மறுமலர்ச்சிக் காலம் வரை தாக்கம் செலுத்தியது. தொடக்கநிலைப் புத்தியற்கால நோக்கீட்டாளர்கள் உயிரிகளின் அணிதிரள்வு அல்லது ஒருங்கியைபு குறித்த அமைப்புகளை உருவாக்க முனைந்தபோது, நிலைத்திணை அல்லது விலங்கின ஒவ்வொரு வகையையும் குறிப்பிட்ட சூழலில் வைக்கத் தொடங்கினர். இதுபோன்ற பல பழைய பகுப்புத் திட்டங்கள் இன்று கற்பனையானதாகக் கருதப்படுகிறது: இத்திட்டங்கள் நிற ஒப்புமை சார்ந்தோ (மஞ்சள்பூ பூக்கும் நிலைத்திணைகள்), நடத்தை சார்ந்தோ (பாம்பு, தேள், கடி எறும்புகள் போல கடிக்கும் விலங்குகள்) அமைந்தன. ஆங்கிலேய இயற்கையியலாளராகிய ஜான் இரே (1686) பின்வருமாறு "இனம்" பற்றிய உயிரியல் வரையறையை முதன்முதலில் தந்தார்: சுவீடிய அறிவியலாளராகிய கார்ல் இலின்னேயசு 18 ஆம் நூற்றாண்டில் அவை பகிரும் புறநிலைக் கூறுபாடுகளை வைத்து, வேற்றுமைகளை வைத்தல்ல, உயிரிகளை வகைப்படுத்தினார்.இயற்கையின் உறவுகளை உணர்த்தவல்ல நோக்கீட்டுப் பான்மைகளைச் சார்ந்த படிநிலை அமைப்புள்ள வகைப்பாட்டு எண்ணக்கருவை நிறுவினார். அவரது காலத்திலும் இனங்களுக்கு இடையே அமைப்பியலான தொடர்பு ஏதும் இல்லை என அவை எவ்வளவு ஒற்றுமையுடன் தோற்றத்தில் அமைந்தபோதும் பரவலாக நம்பப்பட்டது. இந்தக் கண்ணோட்டம் ஐரோப்பியச் சமய அறிஞர்களிடமும் சமயக் கல்வியிலும் நிலவியது . இவர்கள் இனங்கள்அரிசுடாட்டில் படிநிலைப்படி கடவுளால் உருவாக்கப்பட்டவை என நம்பினர். இது இருத்தலின் மாபெரும் இயற்கைச்சங்கிலி எனப்பட்டது. ஆனாலும் இந்தச் சங்கிலி, நிலையானதா இல்லையா எனக் குறிப்பிடப்படா விட்டாலும், ஏணியில் படிப்படியாக ஏற இயன்றது. இயற்கையியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இனங்கள் கால அடைவில் தம் வடிவத்தை மாற்றிகொள்ளலாம் என்பதையும் புவியின் வரலாறு அத்தகைய மாற்றங்கள் நிகழ போதுமானகலவெளியைக் கொண்டுள்ளது என்பதையும் உணரலாயினர். ழீன் பாப்திசுத்தே இலம்மார்க், தனது 1809 ஆண்டைய "Zoological Philosophy" (விலங்கியல் மெய்யியல்) எனும் நூலில் இனங்களின் உருமாற்றம் குறித்து விவரிக்கிறார். இதன் வழியாக இனங்கள் கால அடைவில் மாறக்கூடியன என, அரிசுடாட்டிலியச் சிந்தனைக்கு மாறாக, முன்மொழிந்தார். சார்லசு டார்வினும் ஆல்பிரெடு இரசல் வாலசும் 1859 இல் படிமலர்ச்சி பற்றியும் புதிய உயிரினத் தோற்றம் பற்றியும் உறுதியான ஆய்வை வழங்கினர். டார்வின் தனியன்கள் அல்ல, உயிரித்திரள்களே இயற்கையாகத் தனியன்களில் தோன்றும் வேறுபாடுகளால் இயற்கைத் தேர்வு வழி படிமலர்கின்றன என வாதிட்டார். இது இனம் பற்றிய புதிய வரையறையின் தேவையை முன்கொணர்ந்தது. இனங்கள் என்பவை அவற்றின் இயல்தோற்ற அடிப்படையைச் சார்ந்தவை. இந்த எண்ணக்கரு ஊடாடும் தனியன்களின் குழுக்களை முறையாகப் பெயரிடப் பயன்படுகிறது என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். அவர் கூறுகிறார், "இனங்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்", "ஒன்றுக்கொன்று நெருக்கமான ஒத்திருக்கும் தனியன்களின் கணத்துக்கு தற்போக்கில் தரும் ஏந்தான பெயர்களாக;... இது சாரத்தில் குறைந்த வேறுபாடும் மேலும் நெகிழ்வும் மிக்க அலைவுறும் வடிவங்களைச் சுட்டும் வகைமை எனும் சொல்லில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. வெறும் தனியன்களின் வேறுபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொடர்ந்து மாறும் வடிவங்களைச் சுட்டும் இந்த வகைமை எனும் சொல்லும் கூட தற்போக்கில் ஏந்தாகத் தரப்படும் சொல்லே எனலாம்". உயிரிகளின் வகைகளுக்கு வழங்கும் பொதுவழக்குப் பெயர்கள் பெரிதும் குழப்பமானவையே. எடுத்துகாட்டாக, பூனை எனும் சொல் வீட்டுப் பூனையான ஃபெலிசு கேட்டசு ("Felis catus") வையும் பூனைக் குடும்பம் ஃபெலிடே ("Felidae") வையும் குறிக்கலாம். பொது வழக்குப் பெயரின் மற்றொரு சிக்கல் அவை இடத்துக்கு இடம் வேறுபடுவதாகும். அமெரிக்காவில் "puma", "cougar", "catamount", "panther", "painter", "mountain lion" என பல்வேறு இடங்களில் வழங்கும் அனைத்துமே "Puma concolor" என்ற இனமேயாகும். அதே நேரத்தில் ""panther"" என்பது இலத்தீன அமெரிக்காவின் "jaguar" ("Panthera onca") வையோ அல்லது ஆப்பிரிக்க, ஆசியாவின் "leopard" ("Panthera pardus") வையோ குறிக்கலாம். மாறாக, இனங்களின் அறிவியல் பெயர்கள் ஒன்றேயாகவும் பொதுவானதாகவும் அமையும்; அவை இரு பகுதிகளாக அமையும்: முதல் பகுதி பேரினமாகிய "Puma"வையும் அடுத்த பகுதி குறிப்பிட்ட இன அடையாகிய அல்லது பெயராகிய "concolor" ஐயும் குறிக்கும். ஓர் அறிவியலாளர் தன் ஆய்வுக் கட்டுரையில் ஓர் இனவகைமை உயிரியை முறையாக விவரித்து அறிவியல் பெயரைச் சூட்டியதும் இனத்தின் பெயர் உருவாகிறது. அறிஞரின் ஆய்வு ஏற்று வெளியாகியதுமே இப்பெயர் தாவரவியலில் ஏற்புள்ள வெளியீட்டுப் பெயராகவும் விலங்கியலில் கிடைப்புப் பெயராகவும் ஆகிறது அல்லது கொள்ளப்படுகிறது. பெரிய அருங்காட்சியகங்களில் திரட்டப்படும்போது, இனவகைமை உயிரி பிற ஆய்வாளர்களின் மேலாய்வுக்குத் தரப்படுகிறது. இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான். இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டுக்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி கி.பி 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவன், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவனுடைய ஆட்சி ஆண்டுகள் கி.பி 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன. இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது. இரண்டாம் இராஜராஜன் ஆட்சியில் பேரரசு எந்த அளவு, அல்லது எதுவரை பரவியிருந்தது என்பது அவன் கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கெந்தட்டியிலுள்ள அவனுடைய 7ம் ஆண்டுக் கல்வெட்டு குவலாள நாட்டில் சூற்றூரில் ஒரு மலை மீது காடுவெட்டு என்ற சிற்றரசன் கோயில் கட்டிய விவரத்தையும், நிகரிலாச் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியான கங்க நாட்டில் தகடூர் நாட்டைப் பற்றி சேலம் மாவட்டத்தில் கிடைத்த அழிந்து போகக்கூடிய ஓர் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தகடூர்க்கிழவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் கொடுத்த நன்கொடையைப் பற்றி கி.பி. 1164ல் பெரும்பேர் கொங்குநாட்டிலும் கங்க நாட்டின் கீழ்ப்பகுதியிலும் இன்னும் ஓரளவு சோழரின் மேலதிகாரம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வந்தது என்பதைக் காட்டுகின்றது. இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசா ராசா உலா கூறுகின்றது . இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்று ராசா ராசனுக்கு வாகை சுட்டினான். சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான் நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம். பாண்டிய நாட்டில் சோழ அரசப் பிரதிநிதிகளை நியமிக்கும் வழக்கம் முதலாம் குலோத்துங்கனால் கைவிடப்பட்டது. மதுரையில் கி.பி 1131-1144 வரை ஆட்சி செலுத்திய 'சடையவர்மன் சீவல்லபன் மகன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன். பராக்கிரம பாண்டியன் கி.பி 1144 இல் அரியணை ஏறினான். அப்போது தென் பாண்டி நாட்டில் 'சடையவர்மன் குலசேகரன்' திருநெல்வேலி மாவட்டம் கீழ்வேம்ப நாட்டிலுள்ள'முனையதரையன்' எனும் அரியணையில் ஆட்சி செய்தான். பராக்கிரம பாண்டியனிடமிருந்து மதுரையை கைப்பற்ற எண்ணி மதுரையை முற்றுகையிட்டான் சடையவர்மன் குலசேகரன். ஓராண்டாக முற்றுகைத் தொடர்ந்தது. இறுதியில் கி.பி 1166-இல் மனைவி மக்களுடன் பராகிரமப் பாண்டியன் கொல்லப்பட்டான். பராக்கிராமனின் மகன் வீர பாண்டியன் மட்டும் தப்பி பொதிகை மலைக் காடுகளில் ஒளிந்துகொண்டான். பின் இலங்கை அரசன் பராக்கிரமபாகு உதவியுடன் வீர பாண்டியன் மன்னனானான். வீர பாண்டியன் சிங்களர் உதவியுடன் குலசேகரன் மீது படை எடுத்தான். கி.பி1171-இல் குலசேகரப் பாண்டியன் இரண்டாம் இராசாதிராசன் உதவி வேண்டினான். ராசாதிராசன் தனது படைத் தளபதியும் அமைச்சனுமான திருச்சிற்றம்பலமுடைய பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் பெரும்படை அனுப்பினான். கீழ் நிலையிலும் பின் பொன்னமராவதியிலும் நடைபெற்ற போரில் சோழ படைத் தளபதி பல்லவராயன் தோற்றான். வீரபாண்டியனுக்கு சிங்கள மன்னன் உதவினான்.உண்மையில் இப்போர் சோழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடைபெற்ற போரே. ஆதாரம்; மகாவம்சம்,தொண்டை நாட்டிலுள்ள நன்கு கல்வெட்டுகள். பின் நடைபெற்ற போர்களில் பல்லவராயன் சிங்களவர்களைப் புறங்காணச் செய்து,சிங்களப் படைத் தலைவர்களான இலங்காபுரித் தண்ட நாயகன்,ஜகத் விஜய தண்டநாயகன் ஆகிய இருவரின் தலைகளையும் மதுரை கோட்டை வாசலில் வைத்தான். ஆதாரம்;பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு. அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தரின் பேரனான 'கவிப்பெருமாள் ஆனந்த வரதக் கூத்தன்'. அவர் 'சங்கர சோழன் உலா' இராசாதி ராசன் மீது பாடினார். "சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை. தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தான். " விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்" -என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இவனைத் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். தன் தந்தையை போல் சிவப் பக்தனாகிய இரண்டாம் ராஜ ராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜேஸ்வரமும் ஒன்றாகும். தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவில் தனை கட்டினான். கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஒட்டக்கூத்தர் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான். இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்றப் பட்டப் பெயருடன் அரியணை ஏரியவன் அரசப் பீடத்தின் நேரடி வாரிசு கிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூட்டி விட்டு மரணம் அடைந்தான். முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது. இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மைய அரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது.