பராக் ஒபாமா பராக் உசைன் ஒபாமா ("Barack Hussein Obama", பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தில் சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். 1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2000இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து 2003 ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார். 2004இல் மக்களாட்சிக் கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்த காலத்தில் ஒபாமா பதவியில் ஏறினார். நடுவண் அரசின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டை உறுதியாக்க சட்டத்தை படைத்தார். 2006இல் மக்களாட்சி கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு தேர்தல் மோசடி, காலநிலை மாற்றம், அணுசக்தி தீவிரவாதம், முன்னாள் படையினர்களுக்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகளை தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பெப்ரவரி 2007இல் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியை அறிவித்த ஒபாமா ஈராக் போரை முடிவுக்கு கொணர்தல், ஆற்றல் சுதந்திரம் அடைதல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீது தாக்கம் குறைதல், அனைவருக்கும் சுகாதார திட்டம் முதலியன தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறுகிறார். ஹொனலுலுவில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் (University of Hawaii) முதலாக சந்தித்த கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியர், கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹமுக்கு பிறந்தார் பராக் ஒபாமா. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார். பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து 1982இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் 1995இல் சூல்பைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2008இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார். உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். நியூயார்க் நகரிலேயே இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார். நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன. 1988இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார். இதனால் 1991இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார் . இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001) பிறந்தனர். சிக்காகோவின் தெற்கு பகுதி உள்ளிட்ட 13ஆம் தேர்தல் மாவட்டத்தின் சார்பில் 1996இல் ஒபாமா இலினொய் மாநில மேலவைக்கு (செனட் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நெறிமுறைகள் மற்றும் உடல்நலம் தொடர்பான இவர் எழுதிய சட்டங்களை இரண்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். ஏழை மக்களுக்கு வரி குறைத்தல், நிதியுதவி (welfare) முறையை சீரமைப்பு செய்தல், குழந்தை உடல்நலம் தொடர்பான சட்டங்களை ஆதரவளித்தார். 2001இல் நிர்வாகச் சட்டங்கள் தொடர்பான கூட்டுச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து கடன் மற்றும் அடைமானம் கட்டுப்பாட்டை உறுதி ஆக்க சட்டங்களை ஆதரவளித்தார். 2003இல் காவல்துறையால் செய்த இனத்தை பொறுத்து தீர்ப்பை நிறுத்த சட்டத்தை படைத்தார். 1998இலும் 2002இலும் மீண்டும் இலினொய் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000இல் அமெரிக்கக் கீழவைக்கு போட்டி நடத்தி முதல்கட்டத் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஜனவரி 2003இல் இலினொய் செனட் அவையில் மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மை அடைந்து ஒபாமா மருத்துவம் மற்றும் மனித நல செயற்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 2004இல் அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு இலினொய் சட்டமன்றத்திலிருந்து விலகியுள்ளார். நடு 2002வில் முதலாக அமெரிக்க மேலவைக்கு போட்டி செய்ய சிந்தித்துப் பார்த்து ஜனவரி 2003இல் மேலவைப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார் ஒபாமா. அன்று பதவியில் இருந்த பீட்டர் ஃபிட்ஸ்ஜெரல்ட் மீண்டும் போட்டி செய்யமாட்டார் என்று கூறி மொத்தமாக 15 fat lady with chickenஇப்பதவிக்கு போட்டி நடத்தியுள்ளனர். மார்ச் 2004இல் நடந்த மக்களாட்சிக் கட்சி முதல்கட்ட தேர்தலில் 52% வாக்குகளை பெற்றார். ஜூன் 2004இல் எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜாக் ரயன் போட்டியை விட்டார். பாஸ்டன், மாசசூசெட்ஸில் ஜூலை 2004இல் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் எழுதி ஆற்றிய சிறப்புரை காரணமாக முதலாக நாட்டு அளவில் கவனம் பெற்றார் . இச்சிறப்புரையில் ஜார்ஜ் வாக்கர் புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளை கண்டனம் செய்து அமெரிக்கப் படையினர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தார். அமெரிக்க வரலாற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசில் இருந்த அரசியல் கட்சி அடிப்படையில் பிரிவுகளை கண்டனம் செய்து அமெரிக்க மக்களை ஒன்றுசேர அறிவித்தார். இது தொடர்பாக ஒபாமா கூறுவன, "முற்போக்குவாத அமெரிக்காவும் பழமைவாத அமெரிக்காவும் இல்லை; ஒரே ஐக்கிய அமெரிக்க தான்" ("There is not a liberal America and a conservative America, there's the United States of America.") நவம்பர் 2004 தேர்தலில் ஆலன் கீசுக்கு எதிராக போட்டியிடுத்த ஒபாமா 70% வாக்குகளை பெற்று மேலவை பதவியில் ஏறினார். ஜனவரி 4, 2005இல் உறுதி செய்யப்பட்டு ஒபாமா ஐந்தாவது கருப்பின மேலவை உறுப்பினராகவும் மூன்றாவது தேர்தலை வென்ற மேலவை உறுப்பினராகவும் ஜனவரி 4, 2005 ஒபாமா உறுதி செய்யப்பட்டார். 2007இல் இவர் செய்த வாக்குகளை ஆராய்ச்சி செய்து தேசிய சஞ்சிகை (National Journal) இதழ் இவரை மேலவையில் மிக முற்போக்குவாத உறுப்பினராக அறிவித்துள்ளது. காங்கிரஸ்.ஆர்க் இணையத்தளம் இவரை 2008இல் 11ஆம் மிக வலிமையான மேலவை உறுப்பினர் என்று அறிவித்துள்ளது. 2005இலும் 2006இலும் சட்டவிரோதமான குடியேற்றலுக்கு எதிராக ஒரு சட்டத்தை படைத்து இன்னொரு ஆதரவளித்தார். ஜான் மெக்கெய்ன் உள்ளிட்ட வேறு சில செனட்டர்களுடன் ஒபாமா படைத்த இரண்டு சட்டங்கள் நடுவண் அரசின் செலவை பொது மக்களால் அடையகூடிய மாதிரி ஆக்கியுள்ளன. ஒபாமா முக்கிய புரவலரான "கொங்கோ மக்களாட்சிக் குடியரசு உதவி, பாதுகாப்பு மற்றும் மக்களாட்சி சட்டம்" டிசம்பர் 2006இல் சட்டமானது. திறந்த அரசு, ஈராக் போர் முடிவு, குழந்தைகளுக்கு உடல்நலக் காப்பீடு போன்ற தலைப்புகள் தொடர்பான சட்டங்களுக்கு ஆதரவளித்தார். மேலவையில் வெளியுறவு, சூழ்நிலை மற்றும் பொது வேலைகள், முன்னாள் படையினர்களின் நிகழ்வுகள் தொடர்பான செயற்குழுக்களில் டிசம்பர் 2006 வரை ஒபாமா உறுப்பினராக பணியாற்றினார். ஜனவரி 2007இல் சூழ்நிலை செயற்குழுவிலிருந்து விலகி உடல்நலம், தொழில், கல்வி மற்றும் ஓய்வூதியம் செயற்குழுவையும் உள்நாட்டு பாதுகாப்பு செயற்குழுவையும் சேர்ந்தார். ஐரோப்பிய நிகழ்வுகள் தொடர்பான குறுஞ்செயற்குழுவின் தலைவர் ஆவார். வெளியுறவு செயற்குழுவில் உறுப்பினராக பணியாற்றியதன் காரணமாக அரசு சார்பில் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். 2007இல் பெப்ரவரி 10ஆம் தேதி இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியரசுத் தலைவர் போட்டியை ஒபாமா தொடங்கினார். பிரச்சாரம் முழுவதிலும் ஆற்றல் சுதந்திரம், ஈராக் போர் முடிவு, மற்றும் பலருக்கும் உடல்நலப் பாதுகாப்பு இவரின் மூன்று முன்னுரிமைகளாக தெரிவித்துள்ளார். முதல் 6 மாதங்களில் ஒபாமாவின் பிரச்சாரம் $58 மில்லியன் நன்கொடைகளை குவித்தது. ஜனவரி 2008இல் தொடங்கிய மக்களாட்சிக் கட்சி மாநில முதல்கட்ட தேர்தல்களில் ஒபாமா இலரி கிளின்டனுக்கு எதிராக ஒரே அளவிலான போட்டி செய்தார். முதலாக நடந்த அயோவா, நெவாடா, தென் கரொலைனா மாநிலங்களில் முதல்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று நியூ ஹாம்சயர் மாநிலத்தில் இலரிக்கு ஒரே அளவில் வாக்குகளை பெற்றார். மார்ச் 2008இல் ஒபாமா சேர்ந்த தேவாலயத்தின் முன்னாள் அறவுரையாளராக இருந்த ஜெரமையா ரைட் அமெரிக்காவை கண்டனம் செய்ததை ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஒபாமா ரைட்டை கண்டனம் செய்து 20 ஆண்டுகளாக சேர்ந்த தேவாலயத்தை விட்டார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒபாமாவும் இலரியும் ஒரே அளவிலாக மாநில முதல்கட்ட தேர்தல்களில் வாக்குகளை பெற்றனர். இதனாலும் இவர் இரண்டும் ஒரே அளவில் சம்மேளன பிரதிநிதிகளின் (convention delegates) ஈடுபாட்டை பெற்றனர். ஜூன் 3 ஆம் தேதி ஒபாமா பரிந்துரைக்கப்பட வேண்டிய அளவில் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை பெற்றார். இதனால் ஜூன் 7 ஆம் தேதி இலரி கிளின்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவிற்கு ஆதரவளித்தார். இதற்கு பிறகு ஒபாமா குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன்க்கு எதிராக போட்டி செய்ய ஆரம்பித்தார். ஆகஸ்ட் 23ஆம் தேதி டெலவெயர் மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினர் ஜோ பைடனை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்வர், கொலராடோவில் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். முதலாகவே புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா. அக்டோபர் 2002இல் புஷ்சும் சட்டமன்றமும் ஈராக் போர் தொடங்க ஒப்பந்தம் செய்த நாள் ஒபாமா சிக்காகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு தெரிவித்தார். 2005இல் பாகிஸ்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் நடந்த அல் கைடா தலைவர்களின் சந்திப்பு அமெரிக்க உளவு துறைக்கு தெரிந்து அமெரிக்க அரசு அச்சந்திப்பு மீது தாக்குதல் செய்யவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்று ஒபாமா கூறி இவர் குடியரசுத் தலைவராக இருந்தால் பாகிஸ்தான் ஆதரவு இல்லாத இருந்தாலும் அந்த மாதிரி வாய்ப்பை தவற விடமாட்டார் என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 2006இல் ஈராக்கிலிருந்து படையினர்களை பின்வாங்கி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் தந்திரமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஈரானை அணு ஆயுதங்கள் படைப்பை நிறுத்தவேண்டும் என்றால் அந்நாட்டுடன் முதலாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கருதுகிறார். குடியரசுத் தலைவராக இருந்தால் பில்லியன் கணக்கில் அரசு செலவும் ஆயுதப் படைப்பையும் குறைப்பார் என்று தெரிவித்துள்ளார் ஒபாமா. உலக முழுவதிலும் அணு ஆயுதங்கள் படைப்பை தடை செய்ய ஆதரவளிக்கிறார். வெளிநாட்டுக் கொள்கைகள் மூலமாக உலகத்தை வழிநடத்தவேண்டும் என்பது ஒபாமாவின் கருத்து. தார்ஃபூர் போர் காரணமாக வணிக நிறுவனங்களை சூடான் நாட்டுடன் வியாபாரம் செய்ய கூடாது என்று அறிவுறுத்துகிறார். பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்து ஃபிராங்கிளின் ரோசவெல்ட் 1930களில் தொடங்கிய நியூ டீல் பொது நலம் கொள்கைகளை ஆதரவளிக்கிறார். சூறாவளி கத்ரீனா பற்றி பேசும் பொழுது இரண்டு அரசியல் கட்சிகளும் ஏழை மக்களுக்கு உதவி செய்து அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரப் பிரிதலை சீர்ப்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார். அனைவருக்கும் சுகாதார திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை தொடங்கியதற்கு பிறகு ஆதரவளித்தார். ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் அமெரிக்க வரி சட்டங்களை மாற்றி இரண்டரை லட்சத்துக்கு மேலும் சம்பாதிக்கிற மக்களுக்கு புஷ் கொடுத்த வரி குறைதலை முன்நிலை ஆக்கி 50,000 டாலர்களுக்கு குறைந்த அளவில் சம்பாதிக்கிற முதுமை மக்களுக்கு பல வரிகளும் நீக்கும். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மேல் சார்ந்திருக்க வேண்டாம் என்று வேறு ஆற்றல் வகைகளை கண்டுப்பிடிக்க முதலிடுக்க ஆதரவளிக்கிறார். 1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர். அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார். இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார். ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர். தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர். இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார். 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது. உயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார். தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார் . ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார் கென்யாவை சேர்ந்த தந்தையார், வெள்ளை இன தாய்க்கு பிறந்து, ஹொனொலுலுவிலும் ஜக்கார்த்தாவிலும் வளந்து, ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் படித்த ஒபாமாவுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் 1960களில் சமூக உரிமை இயக்கத்தில் கவனம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளுடைய வாழ்க்கை வரலாற்றுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதனால் ஒபாமா முதலாக புகழுக்கு வந்த பொழுது சில கருப்பின எழுத்தாளர்கள் இவருக்கு உண்மையாக கருப்பின மக்களின் அனுபவத்தை தெரியுமா என்று யோசனையை கூறியுள்ளனர். இதுக்கு பதிலாக, வெள்ளை மக்கள் கருப்பின அரசியல்வாதியை ஆதரவளித்தால் ஏதோ ஒன்று தவறானது என்று இன்னும் நினைக்கிறோம் என்று ஒபாமா கூறினார். ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஆனால் ஜூலை 2008இல் நியூஸ்வீக் சஞ்சிகை நடத்திய வாக்களிப்பின் படி அமெரிக்க மக்களில் 26% ஒபாமா ஒரு முஸ்லிம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பொது மக்கள் எண்ணத்தில் வாஷிங்டனில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வேறுபடியாக, இளமையான அரசியல்வாதி ஒபாமா. இதனால் அமெரிக்க இளையோர் இடம் இருந்து ஒபாமாவுக்கு அதிகமான ஆதரவு வருகிறது. ஆனால் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒபாமாவின் இளமை காரணமாக அனுபவம் இல்லாதவர் என்று அறிவிக்கின்றனர். மஹ்மூத் அஹ்மதிநெஜாத் போன்ற அமெரிக்காவுக்கு எதிரான உலகத் தலைவர்களுடன் நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தது காரணமாக ஒபாமாவுக்கு வெளிநாடு உறவில் போதுமான அனுபவம் இல்லை என்று குடியரசுக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 2008இல் 22 நாடுகளில் பிபிசி நடத்திய வாக்களிப்பில் அந்த நாடுகளின் மக்கள் ஒபாமாவை ஜான் மெக்கெய்ன் விட ஆதரவளிக்கின்றனர் என்று தெரியவந்தது. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கும் வெளிநாடுகளுக்கும் உறவு மேம்படுத்தப்பட்டு வரும் என்று வாக்களித்த மக்களில் பெரும்பான்மை கருதுகின்றனர். இந்தியாவில் மெக்கெய்ன் விட ஒபாமாவை 9% மக்கள் ஆதரவளிக்கின்றனர். 10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னாள் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கினார். 1961ம் ஆண்டுமுதல் தங்களின் ராஜாங்க உறவுகளை முறித்துக்கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன. கன்னியாகுமரி (புதினம்) 'கன்னியாகுமரி' எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்ட புதினம். இது மலையாள சினிமா உலகினையும் ஒர் கலைஞனின் மனவெழுச்சி,உணர்வுகள் என்பனவற்றையும் மையப்படுத்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியினை கதைகளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கதையின் நாயகன் ரவி சொல்லிக் கொள்ளும்படியாக, ஒரு திரைக் காவியம் படைத்த ஒரு சினிமா இயக்குனர். அதன் பின்னர் வெளிவந்த அவன் படைப்புகள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையாததால், தன் விருப்பதிற்குரிய இடமான கன்னியாகுமரிக்கு வருகிறான், மீண்டும் ஒரு நல்ல படைப்புக்கான ஒரு கதை அமையும் என்ற நம்பிக்கையில். வந்த இடத்தில், அவன் தன் முன்னாள் காதலி விமலாவினை கண்டுகொள்கிறான். அவன் நினைவில், அவளை மூன்று பேர் வண்புணர்ந்தது ஆகியவை வந்து போகின்றன. அவன் தூக்கம் கூட இதனால் சிரமமாகின்றது. இவற்றிலிருந்து மீள அவன் பிரவீணா என்ற நடிகையின் துணை நாடுகின்றான். இங்கும் அவனுக்கு பிரச்சனை. பிரவீணா குறித்தான எண்ணங்கள் அவனை சிறுமை கொள்ள செய்கிறது. பல்வேறு சூழ்நிலைகளில், ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்கிறான். இதனால் அவளை வெறுக்கிறான், இருந்தபோதிலும் அவளை அவன் நேசிக்கிறான். இந்த ஊசலாட்டங்களுக்கு இடையே அவன் தன் கனவு படைப்புக்கான கதையை தேடி அலைகிறான். கடைசி வரை ஒரு நல்ல கதைக்கான கருவை தீர்மானிக்க முடியாமல் திணறுகிறான். அவனை சுற்றியுள்ள அனைவரும் அவனை தனியே விட்டு விலகுகின்றனர்.அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படுகின்றதா என்பதே நாவலின் முடிவாகும். ஏதிலி ஏதிலி அல்லது அகதி () என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார். இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். வளைகுடா பகுதில் ஏற்பாட்ட தீவிர வாத தாக்குதல்களால் 2015 ஆம்ம் ஆண்டுகளில் பல அகதிகள் மரணம் அடைந்தார்கள். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிடுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2014 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான், சிரியா, திபெத் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் மற்றும் இந்தியா, இலங்கை ஆகும். ஆப்ரிகானர் ஆப்ரிகானர் தென்னாபிரிக்காவோடும், ஆப்ரிகான்ஸ் மொழியுடனும் தொடர்புடைய ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள், ஜெர்மானிய, இலத்தீன் மற்றும் செல்ட்டிய மரபுவழிகளைப் பெரும்பாலும் சேர்ந்த ஐரோப்பிய மூலத்தைக் கொண்டவர்களாவர். ஆப்ரிக்கானர்கள், வடமேற்கு ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் மரபுவழியினர் ஆவர். இவர்கள், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆட்சிசெய்த காலத்தில் (1652 – 1795)நன்னம்பிக்கை முனையில் முதன் முதலாக வந்து இறங்கினர். முதலில் வந்தவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமய அகதிகளும் வந்து, ஐரோப்பியரின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அவர்களுடைய முன்னோர்கள் முக்கியமாக, டச்சு கல்வினிஸ்ட்டுகள், பிளெமியர்கள், பிரிசியர்கள் ஆவர். நன்னம்பிக்கைமுனையில் தொடக்கத்தில் குடியேறிய டச்சுக்காரரின் எண்ணம், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்காக ஒரு இளைப்பாறு மையத்தை ஏற்படுத்துவதேயன்றி நிரந்தரமான ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்துவது அல்ல. எனினும், 1688 ஆம் ஆண்டில் கத்தோலிக்கரினால் இழைக்கப்பட்ட துன்பங்களில் இருந்து தப்பிய பிரெஞ்சு புரட்டஸ்தாந்த சமயத்தவர் வரவால் குடியேறியோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பிற்காலத்தில் ஐரோப்பாவின் ஸ்கன்டினேவியா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்களும் இன்றைய ஆப்ரிகானர் இனக்குழுவுள் கலந்துவிட்டனர். இவர்களைவிட, தொடக்கத்தில், ஐரோப்பியர்கள், இந்திய, மலாய மற்றும் உள்ளூர் கோயிகளுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளின் வாரிசுகளும் இந்த ஆப்ரிகானர் இனக்குழுவுள் அடங்கிவிட்டனர். பதிவுகளின்படி முதன் முதலாகத் தன்னை ஒரு ஆப்ரிகானர் என்று அழைத்துக்கொண்டவர் ஹெண்ட்ரிக் பியெபோவ் (Hendrik Biebouw) என்பவராவார். 1707 மார்ச் மாதத்தில் ஸ்ட்டெலென்பொச் என்னும் இடத்தின் நீதிபதி ஒருவர் விதித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தான் ஆப்ரிகானர் என்றும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இச் சொற் பயன்பாடு, ஒரு ஐரோப்பியர் தனது முன்னோர்களின் தாயகத்தை அல்லாமல் புதிய தென்னாபிரிக்காவைத் தனது சொந்த மண்ணாகக் கருதியதற்கான ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் ஐரோப்பியக் குடியேற்றக்காரர் தம்மை அமெரிக்கர், கனேடியர், ஆஸ்திரேலியர் என அழைத்துக் கொண்டது போன்றது இது எனப்படுகின்றது. இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008 2006-2008 காலப்பகுதில் காணாமல் போன பல நூறு தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவமும் அதன் துணைக்குழுக்களுமே காரணம் என மனித உரிமைகள் கண்காணிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் 'காணமல்போதல்கள்' மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு" என்று தலைப்யிடப்பட்ட 241 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் சுருக்கம் தமிழிலும் சிங்களத்திலும் தரப்பட்டுள்ளன. சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு ("The International Independent Group of Eminent Persons", IIGEP) என்பது இலங்கையில் நடைபெற்ற பாரதூர மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானித்து சுயாதீனமாக கருத்தும் பரிந்துரையும் தர அமைக்கப்பட்ட குழுவாகும். இந்தக் குழுவில் பன்னாட்டு மாண்புமிக்கோர் அங்கம் வகிக்கின்றனர். விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவது இந்தக் குழு அமைத்ததிற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் ஓய்வு பெற்ற நீதிபதி பி. என். பகவதி இதன் தலைவராக பணியாற்றுகிறார். இந்தக் குழு மார்ச் 2008 இல் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அவை அனைத்துல நியமனங்களை எட்டவில்லை என்றும் தெரிவித்தது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான கி. சிவநேசன் மார்ச் 5, 2008 வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கொலைசெய்யப்பட்டார். மாங்குளத்திற்குத் தெற்காக 2 கிலோமீற்றர் தொலைவிலும் ஓமந்தையில் இருந்து 25 கிமீ தொலைவிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான் ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பபவரும் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணி நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கி. சிவநேசன் வடக்கு மாகாணத்தின் பனை அபிவிருத்தி கூட்டுறவின் நிர்வாகியாக 1996 இருந்து 2005 வரை கடைமையாற்றினார். ஏ-9 நெடுஞ்சாலை மூடப்படிருப்பதால் யாழ்ப்பாணம் கரவெட்டியிலிருந்து குடும்பத்துடன் மல்லாவியில் இவர் தங்கியிருந்தார். 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலும் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக - விடுதலைக்காக குரல் கொடுப்பதை - போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கி. சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான மாமனிதர் விருது வழங்கி மலரஞ்சலி செலுத்தினார். 1618 1618 (MDCXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். நிதிக்கூற்றுக்கள் நிதிக்கூற்றுக்கள் (Financial statements) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காணப்படும்.இந் நிதிக்கூற்றுக்கள் 4 வகைப்படும் அவையாவன: வணிகத்தின் தன்மை,நாடுகள்,கண்க்கீட்டுக் கொள்ளைகள்,சட்ட தேவைகள் என்பனவற்றிக் அமைவாக நிதிக்கூற்றுக்களின் வடிவங்கள் மாறுபடலாம். வணிகத்தில் அக்கறையுடையோர் நிறுவனம் தொடர்பில் ஒர் தீர்மானத்தினை மேற்கொள்ள உதவுகின்ற வகையில் நிதியியல் உறுதித்தன்மை, செயற்பாடுகளின் விளைவுகள்,இலாபமீட்டும் தன்மை போன்ற தகவலினை வெளிப்படுத்தத்தக்கதாக இருப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். இவ் நிதிக்கூற்றுக்கள் புரிந்து கொள்ளதக்கவகையிலும், பொருத்தப்பாடுள்ளதாகவும், ஒப்பிடக்கூடியதாகவும், உண்மையாகவும் நேரடியாக நிறுவன சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில் தகவலினை தரகூடியதாக அமைதல் வேண்டும். உள்வாரி பயனாளர்கள் (Internal Users) : வெளிவாரி பயனாளர்கள் (External Users): அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம் அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம் (The End of America: A Letter of Warning to a Young Patriot) (ISBN 978-1933392790) நவோமி வோல்ஃப் (Naomi Wolf)என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புத்தகம். தற்கால அமெரிக்காவின் பாசிசப் போக்கைப் பற்றி எச்சரித்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னைய ஏகாதிபத்திய அரசுகளை ஆய்ந்து, தற்கால அமெரிக்காவின் போக்கை அவதானித்து இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைப்பாடுகளை விளக்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. மக்களாட்சி பாசிசமாக மாறுவதற்கான 10 அறிகுறிகளை அல்லது படிநிலைகளை இந்த நூல் சுட்டியுள்ளது. அவை பின்வருமாறு: சிட்னி ஷெல்டன் சிட்னி ஷெல்டன் ("Sidney Sheldon", பெப்ரவரி 11, 1917 – ஜனவரி 30, 2007) ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது. இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றவை: "மாஸ்டர் ஒப் த கேம்", "ரேஜ் ஒப் ஏஞ்சல்ஸ்", "தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட்" ஆகியவையாகும். இவர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் யூத இனத்தையும் சேர்ந்தவர்கள். இரண்டாம் உலகப் போரின் போது இவர் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம். The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 இல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது. இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார். 2005 இல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம். சிட்னி ஷெல்டன் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். சாகா இனக்குழு சாகா இனக்குழு (Chaga), பான்டு மொழி பேசுகின்ற, ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழங்குடி (tribe) ஆகும். இது, "வச்சாகா, சக்கா, ஜக்கா, வஸ்சக்கா, வச்சக்கா" எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இது தான்சானியாவில் வாழும் இனக்குழுக்களில் மூன்றாவது பெரியது ஆகும். கிளிமஞ்சாரோ, மெரு ஆகிய மலைகளின் தெற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளிலும், மோஷி பகுதியிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் இவர்களுக்கு உள்ள வளம், சாதகமான காலநிலைகளால் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் வழங்கி வரும் வெற்றிகரமான வேளாண்மை முறைகளாலும் ஏற்பட்டது. விரிவான பாசன முறைகள், தொடர்ச்சியான உரப் பயன்பாடு என்பன இவற்றுள் அடங்கும். இப்பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறிய முதல் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். கிறிஸ்தவர்கள் என்பதனால், கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் என்பன இவர்களுக்கு இலகுவாகக் கிடைத்தது. இது ஏனைய இனக்குழுக்களைக் காட்டிலும் இவர்கள் பொருளாதார அடிப்படையில் சாதகமாக நிலையில் இருக்க உதவியது. சாகாக்கள், ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து கிளிமஞ்சாரோ மலையடிவாரப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த பல்வேறு பாண்டு குழுக்களின் வழி வந்தவர்கள் ஆவர். சாகக்கள் பாண்டு மொழியினராக இருந்தாலும், அவர்கள் அனைவரும், ஒரே மொழியைப் பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் மொழி தொடர்புள்ள பல வட்டார வழக்குகளின் கலப்பு என்று கூறலாம். இந்த வட்டார வழக்குகள், வடகிழக்கு கெனியாவில் பேசப்பட்டுவரும் கம்பா மொழி, கிழக்குப் பகுதியில் பேசப்படும் தபிதா, பொக்கோமோ ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ளவை. சாக்கா நிலம் முன்னர் அரசியல் ரீதியாக, சமத்துவச் சமூக முறை சார்ந்த, தனித்தனியான குடிமரபு ஆட்சிப்பகுதிகளாகப் (chiefdoms) பிரிந்திருந்தன. சாகா இனக்குழு, பாரே, தவேட்டா, தெயிட்டா ஆகிய இன மக்களுக்குப் பண்பாட்டு அடிப்படையில் நெருங்கிய தொடர்புள்ள இனக்குழுவாகும். வாரிசுரிமை தொடர்பில் இவர்கள் தந்தைக் கால்வழி முறையைப் பின்பற்றுகின்றனர். அருஷா இனக்குழு அருஷா இனக்குழு ஒரு இன மற்றும் மொழி சார்ந்த ஒரு இனக்குழு ஆகும். இது வட தான்சானியாவில் உள்ள அருஷா பகுதியில் காணப்படுகின்றது. இவர்கள் மாசாய் இனக்குழுவிலும் வேறானவர்களாக இருப்பினும் அவர்களுக்குத் தொடர்பானவர்கள். மசாய் மொழியையே பேசும் இவர்களின் மக்கள்தொகை 308,000 ஆகும். வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் சூழ்நிலை கட்டுப்பாட்டகம் ("climate control") என்பது வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் ஆகியவற்றை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி விரும்பிய இட சூழ்நிலையை உருவாக்க உதவும் கருவிகளைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் "heating, ventilating, and air conditioning" அல்லது HVAC ("aitch-vak") என்ற சுருக்கத்தால் சுட்டப்படும். குளிர் பிரதேச நாடுகளில் வீட்டு சூழ்நிலையை பேண இந்த சூழ்நிலை கட்டுப்பாடு கருவிகள் அத்தியாவசியமாகின்றன. தானியங்கி வாகன வழிகாட்டி போக்குவரத்து தரவுகளை அறிந்து, சூழ்நிலைகளுக்கேற்ப சாதுரியமாக ஒரு வாகனத்தை வழிகாட்டி அதன் பயண இலக்குக்கு இட்டுசெல்ல உதவும் நுட்பமே தானியங்கி வாகன வழிகாட்டி. ஆங்கிலத்தில் இதை Automated Vehicle Guidece என்பர். நவீன நகரமய சூழலில் போக்குவரத்து நெரிச்சல், சாலை விபத்து, சூழல் மாசுறல், ஆற்றல் வீணாதல் போன்றவை வாகனப் போக்குவரத்தின் விழைவுகள் ஆகும். இவற்றை இயன்றவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது தானியங்கி வாகன வழிகாட்டிகளின் நோக்கம் ஆகும். இயன்றவரை பயண இலக்கை அடைய பயணிக்கு அல்லது வாகன ஓட்டுக்கு உதவுவதே தானியங்கி வாகன வழிகாட்டிகளின் நோக்கம் ஆகும். இவ்வகை கருவிகள் பல தரப்பட்டவை. பாதை காட்டுவது போன்ற மட்டுப்படுத்தப்பட்ட கருவிகளில் இருந்து ஓட்டுனர் இல்லாமல் பொது போக்குவரத்து சாலையுனூடே குறிக்கப்பட்ட இடத்தூக்கு தானக பயணிக்க ஏதுவாக்க கூடிய கருவிகள் என தானியங்கி வாகன வழிகாட்டி கருவிகள் பலவகைப்படும். பின்வருவனவும் தானியங்கி வாக வழிகாட்டிகளுக்கு எடுத்துக்காடுகள் ஆகும். திசையறிதல், குறிகிய சிறந்த வழியைத் தெரிதல், வாகனத்தை கட்டுப்படுத்தல் ஆகியவை தானியங்கி வாகன வழிகாட்டிகளின் முக்கிய செயற்பாடுகள். அறிவு அடித்தளம் அறிவு ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அவசியம். அறிவு அடித்தளம் என்பது ஒரு துறைபற்றி அறிவை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, இலகுவாக பகிர்ந்து, பயன்படுத்துவதையே முதன்மையாக குறிக்கிறது. விரிவான ஆழமான அறிவு அடித்தளத்தை உருவாக்கி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொழுது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. தற்கால தகவல் மைய அறிவியல் சூழலில் ஒவ்வொரு துறைக்கும் அதைப் பற்றிய அறிவு அடித்தளத்தை அமைப்பது அவசிமாகிறது. கபர்து மக்கள் கபர்து மக்கள், வடக்குக் காக்கேசஸ் பகுதியில் வாழும் மக்கள் இனத்தோராவர். இவர்கள் தமது இனத்தின் பன்மைப் பெயரான "கபார்தீன்" என்பதால் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள். தொடக்கத்தில் அடிகே பழங்குடியின் அரை-நாடோடிக் கிழக்குப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் இப்போதும் தங்களை அடிகே பழங்குடியினராகவே கருதிவருகின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ரஷ்யாவில் இவர்களுடைய மக்கள்தொகை சுமார் 520,000 ஆகும். துருக்கி, ஜோர்ஜியா ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவ்வினத்தவர் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான கபர்துக்கள், சுன்னி முஸ்லிம்கள் ஆவர். எனினும், வட ஒசெட்டியாவின் மொஸ்டொக் மாவட்டத்தில் வாழும் கபர்துக்கள், பழமைவாத கிறிஸ்தவர்களாவர். இவர்கள், காக்கேசிய மொழிக்குடும்பத்தின், கிழக்கு எல்லையில் உள்ள வடமேற்குக் காக்கேசிய மொழிக்குழுவைச் சேர்ந்த கபர்திய மொழியைப் பேசுகிறார்கள். இலெப்ரோன் ஜேம்சு லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ய. சு. ராஜன் ய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவர். தமிழில் வடக்கு வாசல் என்ற சிற்றிதழில் எழுதி வருகிறார். கோபி பிரயன்ட் கோபி பீன் பிரயன்ட் (ஆங்கிலம்:Kobe Bean Bryant, பிறப்பு - ஆகஸ்டு 23, 1978) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ஏலன் ஐவர்சன் ஏலன் இசயில் ஐவர்சன் (ஆங்கிலம்:Allen Ezail Iverson, பிறப்பு - ஜூன் 7, 1975) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். என்.பி.ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியை சேர்ந்த ஐவர்சன் என்.பி.ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 27.8 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். கார்மெலோ ஆந்தனி கார்மெலோ கியன் ஆந்தனி (ஆங்கிலம்:Carmelo Kiyan Anthony, பிறப்பு - மே 29, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டென்வர் நகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே. இவர் பிறந்தது குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்கள் இரு தமிழர்கள். அப்போது நடுவண் அமைச்சரவையில் உணவு அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி. சுப்பிரமணியம். அதை முன்னின்று நடத்தியவர் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர் டிம் டங்கன் டிமத்தி தியொடோர் டங்கன், அல்லது டிம் டங்கன், (ஆங்கிலம்:Timothy Theodore "Tim" Duncan, பிறப்பு - ஏப்ரல் 25, 1976) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். சக்கீல் ஓனீல் ஷகீல் ரஷான் ஓனீல (ஆங்கிலம்:Shaquille Rashaun O'Neal, பிறப்பு - மார்ச் 6, 1972) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். டுவேன் வேட் டுவேன் டைரோன் வேட் (ஆங்கிலம்:Dwyane Tyrone Wade, பிறப்பு - ஜனவரி 17, 1982) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மயாமி ஹீட் என்ற அணியில் விளையாடுகிறார். கெவின் கார்னெட் கெவின் மோரீச் கார்னெட் (ஆங்கிலம்:Kevin Maurice Garnett, பிறப்பு - மே 19, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். யாவ் மிங் யாவ் மிங் (மாண்டரின்: 姚明, பின்யின்: Yáo Míng, பிறப்பு - செப்டம்பர் 12, 1980) சீனா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இவரின் உயரம் 228.6 சதம மீட்டர் ஆகும்; என். பி. ஏ.-யிலே முதலாம் உயரமான ஆட்டக்காரர் ஆவார். மனித ஆண்குறி அளவு மனித ஆண்குறி அளவு என்பது மனிதப் பாலுறுப்பான ஆண்குறியின் நீள அகலங்களைக் குறிக்கிறது. பெரிய ஆண்குறிகள் தொடர்பான ஆர்வம் ஆண்குறிப் பெரிதாக்கம் தொடர்பான தொழிற்துறையையே தோற்றுவித்துள்ளது. உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக உள்ளது. ஆண்குறியை சரியாக அளப்பதற்குப் வெவ்வேறு பல நாட்களில் அளவெடுப்பது பொருத்தமெனக் கருதப்படுகிறது. பின்னர் அவற்றின் சராசரியை ஏற்கலாம். உணர்ச்சி அளவு, நேரம், சூழல் வெப்பநிலை, பாலியற் செயற்பாடுகளின் அளவு போன்ற பலவற்றின் வித்தியாசங்களால் அளவு வேறுபடுவதும் அளக்கும் முறைகளின் நம்பகமின்மையுமே இதற்கான காரணமாகும். பொதுவாக மனித ஆண்குறி 12.7 - 15 செ.மீ நீளமானது எனப்படுகிறது. ஸ்டீவ் நேஷ் ஸ்டீவென் ஜான் நேஷ் அல்லது ஸ்டீவ் நேஷ் ("Stephen John Nash", பிறப்பு - பெப்ரவரி 7, 1974) கனடாவில் பிறந்த கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். மைக்கல் ஜார்டன் மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் ("Michael Jeffrey Jordan", பிறப்பு - பெப்ரவரி 17, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2003 வரை விளையாடினார். 1984 முதல் 1993 வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என்.பி.ஏ.-யிலிருந்து விலகினார். ஒரு ஆண்டாக பேஸ்பால் விளையாடி 1995இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார். மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது 6 முறையாக என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார். 1999இல் இரண்டாம் முறையாக விலகினார். 2000இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் அணியை சிறுபான்மை உரிமையாளராகவும் அணியின் தலைவராவும் என்.பி.ஏ. உலகத்துக்கு திரும்பினார். 2001இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் உறுப்பினராக விளையாட்டு வீரராக என்.பி.ஏ.க்கு திரும்பினார். 2003 வரை இந்த அணியில் விளையாடி கடைசி முறையாக விலகினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் மூன்று ஆண்டுகளாக வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் படித்து அந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடியுள்ளார். விளையாட்டு வீரராக பணியாற்றுவதற்கு பிறகு 2006இல் ஷார்லட் பாப்கேட்ஸ் அணியின் ஒரு சிறிய பங்கு வாங்கி தற்போது அந்த அணியின் ஒரு சிறுபான்மை உரிமையாளர் ஆவார். என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) என். பி. ஏ. (NBA) என்று பொதுவாக அழைக்கப்படும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் (National Basketball Association), தமிழ் மொழிபெயர்ப்பு தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம், அமெரிக்காவிலும் கனடாவிலும் செயற்படும் கூடைப்பந்துச் சங்கம் ஆகும். வட அமெரிக்காவில் நான்கு மிகப்பெரிய விளையாட்டு சங்கங்களுள் ஒன்றாகும். இந்தச் சங்கத்தில் 30 அணிகள் உள்ளன. என்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன. 2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு "பெரிய மூன்று" தலைசிறந்த வீரர்கள் உள்ளன—செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம். இதுவரை போஸ்டன்செல்டிக்ஸ் அணி அதிகமுறை (17) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, இதற்கு அடுத்தபடியாக லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (15) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஜூன் 6, 1946 நியூயார்க் நகரில் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டச் சங்கம் என்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவலகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன. 1984 முதல் இன்று வரை என்.பி.ஏ.-இன் ஆணையர் டேவிட் ஸ்டர்ன் ஆவார். என்.பி.ஏ. ஆனது 1946 இல் ஆரம்பிக்கப்படும் போது 11 அணிகளைக் கொண்டிருந்தது. தற்போது 30 அணிகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 29 அணிகள் அமெரிக்காவிலும் ஒரு அணி கனடாவிலும் அமைந்துள்ளன. பாஸ்டன் செல்டிக்ஸ் அணியே 17 என்.பி.ஏ. வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக விளங்குகின்றது. லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணி 11 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. அட்லான்டா அட்லான்டா (Atlanta) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அமெரிக்காவில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 9 ஆவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இது ஃபுல்டன் மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது, ஆனால் இந்த நகரின் ஒரு சிறிய பகுதி டிகேப் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. 2006ன் கணக்கெடுப்பின் படி அட்லான்டா நகரில் 486,411 மக்கள் வாழ்கிறார்கள்; அட்லான்டா புறநகரப் பகுதியையும் சேர்த்து மொத்தம் 5,138,223 மக்கள் வாழ்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் பல ஆண்டுகளாக முதன்மையாக விளங்கிய நகரங்களில் ஒன்றாக இருந்த அட்லான்டா, அண்மைக் காலத்தில் உலகளாவிய செல்வாக்கு பெற்ற நகரமாக மாறியுள்ளது. 2000 முதல் 2006 வரை அட்லான்டா மாநகரத்தின் மக்கள் தொகை 20.5% என்னும் அளவில் வளர்ந்தது; இதே காலப்பகுதியில் வேறு எந்தவொரு அமெரிக்க மாநகரமும் இந்த அளவு வளர்ச்சி பெறவில்லை. இந்த விரைவான மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக மாநகரப் பரப்பளவும் விரிவடைந்தது; அண்மைய ஆண்டுகளில் அட்லான்டா மாநகராட்சி இந்த பெருநகர விரிவை (urban sprawl) அடைந்திருந்த பொழுதும், இணக்கமான சுற்றுச்சூழலியல் கொள்கைகளும் கொண்டிருப்பதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் பாராட்டுகின்றன. அட்லான்டா இன்று இருக்கும் இடத்தில் ஐரோப்பியர்கள் குடியேற்றத்துக்கு முன், கிறீக் மற்றும் செரோக்கீ மக்கள் இவ் இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தோற்றத்துக்கு பிறகு, 1836இல், ஜோர்ஜியா மாநில சட்டமன்றம் (Georgia General Assembly) ஜோர்ஜியாவிலிருந்து அமெரிக்காவின் நடுப் பகுதிக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க வாக்களித்து ஒப்புதல் அளித்தது. கண்ணீர்ப் பாதை என்று பின்னர் அழைக்கப்பட்ட நிகழ்வில், அங்கிருந்த படி பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக துரத்திவிட்டு, இந்த தொடர்வண்டிப் பாதையை கட்ட தொடங்கினார்கள். முதலில் இப்பாதையின் கிழக்கு நிறுத்தம் அல்லது "டெர்மினஸ்" (Terminus) என்று கூறப்பட்ட பகுதி வளர்ச்சி அடைந்து, இன்றுள்ள அட்லான்டா பகுதி உருவானது. 1842இல் இந்த ஊருக்கு "மார்த்தாஸ்வில்" (Marthasville) என்று பெயர்வைக்கப்பட்டது. 1847இல் இந்நகரத்தின் பெயர் மீண்டும் "அட்லான்டா" என்று மாற்றப்பட்டது. மேலும் பல தொடர்வண்டிப் பாதைகள் இப்பகுதிகளில் அமையவே அட்லான்டாவின் மக்கள் தொகை இன்னும் கூடி வளர்ந்தது. 1860இல் இந்நகரத்தில் 7,741 மக்கள் குடியிருந்தார்கள். உள்நாட்டுப் போரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒரு நடுச்சிறப்பான நகரமாக இருந்தது. கூட்டமைப்பு இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கும் ஒரு முக்கியமான, நடுவான நகரமாக, இருந்தது. 1864இல் ஐக்கிய அமெரிக்க படைத்துறை (இராணுவ) ஜெனெரல் வில்லியம் ஷெர்மன் அட்லான்டாவை நான்கு மாத முற்றுகைக்குப் பின் கைப்பற்றி, அந்நகரின் மருத்துவ மனைகள் வழிபாட்டுக் கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கட்டடங்களை எரித்து தரைமட்டமாக்கச் செய்தார் உள்நாட்டுப் போருக்கு பிறகு முன்னாள் அமெரிக்க கூட்டமைப்பு மாநிலங்களில் மீட்டுருவாக்கம் செய்யும்பொழுது அட்லான்டாவிலும் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கி, அடிமைகளாக முன்னாள் இருந்தவர்களின் விடுதலைக்கும் சில உரிமைகளும் கொடுக்கப்பட்டன. 1868ல் ஜோர்ஜியா மாநிலம் தலைநகரத்தை அட்லான்டாவுக்கு மாற்றப்பட்டது. 1865 முதல் 1880கள் வரை பல பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் நிறுவனங்கள் இந்நகரத்தில் உருவாக்கப்பட்டன. இவ் வளர்ச்சியின் காரணமாக நிறைய பேர் அட்லான்டாவுக்கு வந்து இனக்குழு எதிர்ப்புகால் தொடங்கப்பட்டன. 1906இல் அட்லான்டா இனக்கலவரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 1913ல் ஒரு வெள்ளை குழந்தை கொல்லப்பட்டார் என்று ஒரு யூத கடைக்காரர் லியோ ஃப்ராங்க்கை குற்றம்சாட்டி ஒரு வெள்ளைக்கார கூட்டம் இவரை படுகொலை செய்ததின் விளைவாக அட்லான்டாவின் பெரும்பான்மையான யூதர்கள் அட்லான்டாவிலிருந்து வெளியேறிப் போனார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின் படைத்துறை (இராணுவ) வீரர்கள் பயிற்சிக்காக அட்லான்டாவுக்கு வந்தார்கள். இதுனால் நிறைய போர் நிறுவனங்கள் அட்லான்டாவில் உருவாக்கப்பட்டு அட்லான்டாவின் பொருளாதாரம் வளர்ந்தது. 1954ல் Brown v. Board of Education என்ற முக்கியமான நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் "தனித்தனி ஆனால் ஒன்று" (separate but equal) சட்டங்களை மாற்றி அமெரிக்க சமூக உரிமை இயக்கம் தொடங்கப்பட்டது. இதுனால் அமெரிக்கா முழுவத்திலும், முக்கியமாய் தென் பகுதியில் புது இனப்பிரச்சினைகள் வந்தது. சமூக உரிமை இயக்கத்தில் அட்லான்டா ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. இந்நகரத்தில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்து வளந்து 1960களில் சமூக உரிமை போராட்டங்களை இங்கே நடத்தினார். இந்த காலத்தில் அமெரிக்க தென் பகுதியில் நிறைய வெள்ளை அரசியல்வாதிகள் பள்ளிகளை இனக்குழுக்கள் படி தனித்தனியாக இருக்கவேண்டும் என்று கூறும்பொழுது அட்லான்டா மாநகரத் தலைவர் ஐவன் ஆலன் மாநகராட்சி பள்ளிகளை ஒன்றாக படைத்தார். அட்லான்டாவின் சமூக உரிமை முன்னேற்றம் என்றால் மிக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அட்லான்டாவுக்கு வந்தார்கள். இன்று வரை "அமெரிக்காவின் கறுப்பு தலைநகரம்" என்று அட்லான்டா அழைக்கப்பட்டது. 1990இல் பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் அட்லான்டாவில் 1996 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்கள். இதுக்காக அட்லான்டாவின் அரசு போக்குவரத்து, பூங்காக்கள், மைதானங்கள், கட்டடங்களை வளர்ச்சி செய்தார்கள். அட்லான்டா 1996 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் இரண்டு அமெரிக்க நகரங்களில் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த ஜோர்ஜியா மாநிலத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள அடலான்டாவின் பரப்பளவு 343 கி.மீ.². கடல் மட்டத்திலிருந்து 320 மீட்டர் உயரத்தில் அமைந்த அட்லான்டா டென்வருக்கு கிழக்கில் இருந்த பிரதான நகரங்களில் மிக உயரமானதாகும். அமெரிக்காவின் கிழக்குக் கண்டப்பிரிவு (Eastern Continental Divide) அட்லான்டா வழியாக போகிறது; இந்த பிரிவின் கிழக்கு விழும் மழை அட்லான்டிக் பெருங்கடலுக்கு பாய்கிறது, மேற்கு விழும் மழை மெக்சிகோ வளைகுடாவுக்கு பாய்கிறது. அட்லான்டா வடகிழக்கில் ஹால் மாவட்டத்தில் அமைந்த லெனியர் ஏரியிலிருந்து சாட்டஹூச்சி ஆறு அட்லான்டா வழியாக மெக்சிகோ வளைகுடாவுக்கு பாய்கிறது. ஆப்பலேசிய மலைத்தொடரின் சிறுமலைகளுக்கு தென்கிழக்கின் பீட்மாண்ட் பீடபூமி பகுதியில் அட்லான்டா அமைந்துள்ளது. கோப்பென் வகைப்பாட்டு பிரகாரம் அட்லான்டா ஈரக் கீழ்வெப்ப (humid subtropical) காலநிலை பகுதியில் அமைந்துள்ளது. ஜூலை மிக வெப்பமான மாதமாகும்; சராசரியாக பகலில் 31 °C -க்கு மேல், இரவில் கிட்டத்தட்ட 19 °C வெப்பநிலை இருக்கும். மிகவும் குளிரான மாதம் ஜனவரி; இந்த மாதத்தில் சராசரியாக பகல், இரவு வெப்பநிலைகள் 10 °C, -2 °C. சில நாட்கள் வெய்யில்காலத்தில் 38 °C (100 °F) -க்கு மேல் போகும்; குளிர்காலத்தில் சில நாட்கள் இரவில் -6 °C -க்கு கீழே போகும். பல மாதங்களிலும் மழை பெய்யும்; சராசரியாக ஒரு ஆண்டில் 128 ச.மீ. அளவில் மழை, 5 ச.மீ. அளவில் பனித்தூவி விழும். அட்லான்டாவில் டவுன்டவுன் (Downtown), மிட்டவுன் (Midtown), மற்றும் பக்ஹெட் (Buckhead) ஆகிய மூன்று பிரதான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அட்லான்டாவின் வியாபாரப் பகுதிகளும் வானளாவிகள் உள்ளன. புறநகரங்களிலும் "பெரிமிட்டர் சென்டர்" மற்றும் "கம்பர்லன்ட்" இரண்டு இடத்தில் உயர கோபுரங்கள் உள்ளன. டவுன்டவுனில் முதன்மையாக கட்டின கோபுரங்களும் சில புதுமையாக கோபுரங்களும் கட்டப்பட்டன. இப்பகுதியில் ஜோர்ஜியா மாநிலத்தின் அரசு கட்டடங்களும், ஜோர்ஜியா மாநிலப் பல்கலைக்கழகமும் உள்ளன. 191 பீச்ட்றீ கோபுரம், வெஸ்டின் பீச்ட்ரீ பிளாசா, சன்ட்ரஸ்ட் பிளாசா டவுன்டவுனின் சில பிரதான கோபுரங்கள் ஆகும். அமெரிக்காவின் பிரதான நகரங்களுடன் அட்லான்டாவின் மொத்த பூங்கா பரப்பளவு குறைவு, ஆனால் பீட்மாண்ட் பூங்கா, சாஸ்டெயின் பூங்கா, நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா மற்றும் வேறு சில பூங்காகள் உள்ளன. 1980கள் முதல் வணிக நிறுவனங்கள் டவுன்டவுனின் வடக்கில் இருக்கும் மிட்டவுன் பகுதியுக்கு போக ஆரம்பித்தன. பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா, அட்லான்டாவின் மிக உயரமான கட்டடமும் உலகில் 29ஆம் மிக உயரமான கோபுரம் இப்பகுதியில் உள்ளது. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஃபாக்ஸ் நாடகமன்றம் மிட்டவுன் பகுதியில் அமைந்துள்ளன. மிட்டவுன் பகுதியின் வடக்கில் அமைந்த பக்ஹெட் பகுதி அமெரிக்காவிலேயே மிகவும் செல்வம் மிகுந்த மக்கள் வசிப்பும் நகரங்களில் ஒன்றாகும். 1993ல் இப்பகுதி வழியாக ஜோர்ஜியா 400 நெடுஞ்சாலையை கட்டினத்துக்கு பிரகு பக்ஹெட் வேகமாக வளர்ந்தது. இப்பகுதியில் நிறைய கடைகள் உள்ளன; லெனக்ஸ் சதுக்கம் (Lenox Square), ஃபிப்ஸ் பிளாசா (Phipps Plaza), மற்றும் வேறு சில அங்காடிகள் (shopping malls) உள்ளன. வணிக நிறுவனங்களுக்கும் மக்கள் வசிப்புக்கும் பல உயர கோபுரங்கள் இப்பகுதியில் உள்ளன. இந்த மூன்று பகுதியுக்கு தவிர 50க்கு மேலும் பகுதிகள் உள்ளன; இதில் சிலது புருக்ஹேவென் (Brookhaven), பேன்க்ஹெட் (Bankhead), சிறு ஐந்து திக்குக்கள் (Little Five Points), வர்ஜினியா-ஹைலன்ட் (Virginia-Highland) ஆகும். 2006 கணக்கெடுப்பும் படி அட்லான்டா மாநகர மக்கள் தொகை 5,138,223 ஆகும். மதிப்பீட்டின் படி நகரத்திலேயே 486,411 பேர் வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலொமீட்டரில் 1,221 மக்கள் வசிக்கிறார்கள். நகர மக்களில் 59.39% ஆபிரிக்க அமெரிக்கர்கள், 33.22% வெள்ளை அமெரிக்கர்கள், 2.93% ஆசியர்கள், 0.18% அமெரிக்கப் பழங்குடி மக்கள், 0.04% பசிபிக் தீவு நாட்டிலிருந்து வந்தவர்கள், 1.99% வேறு இனங்கள் மக்கள், 1.24% பல இனங்கள் மக்கள். மக்கள் தொகையில் 6.49% இஸ்பானியர்கள் ஆவார். நூறு ஆண்களுக்கு 98 பெண்கள் உள்ளனர். 2000 முதல் இன்று வரை ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளின் மிக வேகமாக வளரும் மாநகரம் அட்லான்டா மாநகரம் ஆகும். ஒரு குடும்பத்தின் நடுவாம் சம்பளம் $55,939; மக்களின் 24.4% வறுமை கோடுக்கு (Poverty line) கீழ் இருப்பார்கள். அட்லான்டாவில் ஆயிரக்கணக்கான சமய இல்லங்கள் உள்ளன. மக்களின் பெரும்பான்மை பிராடெஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆகும்; இதில் பெரும்பான்மை பாப்டிஸ்ட் மற்றும் மெத்தடிஸ்ட் சபைகள் ஆகும். இஸ்பானிய மக்கள் பெரும்பான்மையாக கத்தோலிக் சபையில் உள்ளனர். பல ஆபிரிக்க-அமெரிக்க கிறிஸ்தவ ஆலயங்களும் அட்லான்டாவில் உள்ளன; புகழ் பெற்ற எபனீசர் பாப்டிஸ்ட் ஆலயத்தில் மார்ட்டின் லூதர் கிங் மேய்ப்பராக இருந்தார். அட்லான்டாவின் டுலூத் புறநகரத்தில் அட்லான்டா தமிழ் கிறிஸ்தவ சபை அமைந்தது. கிறிஸ்தவர்கள் தவிர, 120,000 யூதர்களும் 75,000 இஸ்லாமியர்களும் அட்லான்டாவில் வசிக்கிறார்கள். அட்லான்டா மாநகரத்தில் கிட்டத்தட்ட 35 மசூதிகள் உள்ளன. அட்லான்டாவில் 69,000 தெற்காசியர்களும் வசிக்கிறார்கள். ஜோர்ஜியாவின் தமிழ் மக்கள் அட்லான்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி இச்சங்கம் ஆண்டுதோரும் தமிழர் விழாகளை கொண்டாடுகிறது. அட்லான்டாவில் சில இந்து கோயில்களும் உள்ளன. அட்லான்டா இந்து கோயில், இந்திய-அமெரிக்க பண்பாட்டுச் சங்கம், அட்லான்டா வேதக் கோயில், அட்லான்டா ஸ்ரீ சக்தி மந்திர் மற்றும் 2007இல் திறந்த அட்லான்டா சுவாமிநாராயண மந்திர் அட்லான்டா மாநகரில் சில புகழ்பெற்ற கோயில்கள் ஆகும். அமெரிக்காவில் நியூயார்க் நகரம், ஹியூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு தவிர அட்லான்டாவில் மிக அதிகமாக ஃபார்சுன் 500 நிறுவனங்கள் (அமெரிக்காவில் 500 மிகப்பெரிய நிறுவனங்கள்) உள்ளன. கொக்கக் கோலா நிறுவனம், ஹோம் டிபோ, யூ.பி.எஸ்., மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின் அடித்தளங்கள் அட்லான்டா மாநகரில் அமைந்தன. 1,250 பன்னாட்டு நிறுவனங்களின் ஆபிஸ்கள் அட்லான்டாவில் உள்ளன. மிகவும் நிறையாக அட்லான்டா மக்களை தொழிலாக வைத்துக்கொள்கிற நிறுவனம் டெல்டா எயர்லைன்ஸ் ஆகும். டெல்டா மற்றும் எயர்ட்ரான் எயர்வேஸ் ஆகிய விமானசேவை நிறுவனங்கள் அட்லான்டா விமான நிலையத்தில் "ஹப்", அல்லது அடித்தளம் என்று குறிப்பிட்டதுக் காரணமாக இவ் விமான நிலையம் பயணிகளின் படி உலகில் மிகுந்த விமான நிலையமும் அட்லான்டா பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான நிறுவனமாகும். பல வங்கிகளும் ஊடக நிறுவனங்களும் அட்லான்டாவில் இருக்கின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி சேமவங்கி முறையில் (Federal Reserve System) 12 வங்கிகளில் அட்லான்டாவில் ஒன்று அமைந்துள்ளது. அமெரிக்காவின் 7ஆம் மிகப்பெரிய வங்கி சன்ட்ரஸ்ட் பேங்க்கின் அடித்தளம் அட்லான்டாவில் உள்ளது. டெட் டர்னர் 1970இல் அட்லான்டாவில் தொடங்கப்பட்ட டர்னர் ஒளிபரப்பு முறையின் சி.என்.என்., கார்ட்டூன் நெட்வர்க், டி.என்.டி., டி.பி.எஸ். சில புகழ்பெற்ற ஒளிபரப்பாளர்கள் ஆகும். அமெரிக்காவின் ஒரு மிகப்பெரிய ஊடக நிறுவனம், காக்ஸ் என்டர்பிரைசெஸ், அட்லான்டாவிலும் அமைந்துள்ளது. அட்லான்டாவுக்கு கிழக்கில் இருக்கும் டிகேப் மாவட்டத்தில் நோய் கட்டுப்படுத்தல் மற்றும் தடைப்படுத்தல் மையங்கள் (Centers for Disease Control and Prevention) அமைந்துள்ளன. எமரி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இருக்கும் இம்மையங்களில் 15,000 பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், மற்றும் பலரும் வேலைப் பார்க்கிறார்கள். அட்லான்டாவுக்கு 16 கிமீ தெற்கில் இருக்கும் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் பன்னாட்டு விமான நிலையம் அட்லான்டாவின் முக்கியமான விமான நிலையமும் உலகில் போக்குவரத்து மிகுந்த விமான நிலையமும் ஆகும். அட்லான்டா மாநகரத்தில் டிகேப்-பீச்ட்ரீ விமான நிலையம், ப்ரௌன் ஃபீல்ட் மற்றும் வேறு சில பொதுமக்கள் விமான நிலையங்களும் உள்ளன. பொதுமக்கள் போக்குவரத்துக்காக அட்லான்டா மாநகர விரைவான போக்குவரத்து துறை (Metropolitan Atlanta Rapid Transit Authority, அல்லது "மார்ட்டா") ஃபுல்டன் மற்றும் டிகேப் மாவட்டங்கள் முழுவதிலும் தொடர்வண்டிகளும் பேருந்துகளும் செயல்படுகிறது. அட்லான்டா மாநகரில் அதிக மக்கள் தொகை இருக்கும் காப், குவினெட், கிளேட்டன் ஆகிய மாவட்டங்கள் மார்ட்டாவுக்கு இணைக்கும் பேருந்துகளை செயல்படுகின்றன. வெளி ஊர்களுக்கு போகும் ஆம்ட்ராக் தொடர்வண்டி மற்றும் கிரேஹௌண்ட் பேருந்துகளும் அட்லான்டா வழியாக போகும். ஐ-75, ஐ-85, மற்றும் ஐ-20 ஆகிய மூன்று இடைமாநில நெடுஞ்சாலைகள் அட்லான்டா வழியாக போகும். ஐ-75 அட்லான்டாவை வடமேற்கில் டென்னசி மாநிலத்துக்கும் தெற்கில் மேகன் நகரத்துக்கும் புளோரிடா மாநிலத்துக்கும் இணைக்கும். ஐ-85 அட்லான்டாவின் வடகிழக்கில் தென் கரொலைனா மாநிலத்தையும் தென்மேற்கில் அலபாமா மாநிலத்தையும் இணைக்கும். ஐ-20 அட்லான்டாவை மேற்கில் அலபாமா மாநிலத்துக்கும் கிழக்கில் தென் கரொலைனா மாநிலத்துக்கும் இணைக்கும். மேலும் அட்லான்டாவை சுற்றி ஐ-285 ஒரு 63-மைல் நீள வட்டமாக அமைந்துள்ளது. அட்லான்டா மாநகரத்தில் வேறு சில முக்கியமான சாலைகள் தேசிய நெடுஞ்சாலை 78, ஜோர்ஜியா 400, ஐ-675 ஆகும். அட்லான்டா நடு பகுதியில் ஐ-75-உம் ஐ-85-உம் சேர்ந்து "டவுன்டவுன் கனெட்கர்" (Downtown Connector) என்றழைக்கப்பட்ட ஒரே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையாக போகும். இச்சாலை உலகில் மிக அகலமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். அட்லான்டாவில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. வரலாற்றை பற்றி மார்ட்டின் லூதர் கிங் தேசிய வரலாறு இடம், அட்லான்டா வரலாறு மையம், அட்லான்டா சைக்லோராமா மற்றும் உள்நாட்டுப் போர் காட்சியகம், மற்றும் வேறு சில அருங்காட்சியகங்களை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும். புதிய பெம்பர்ட்டன் ப்ளேஸ் என்றழைக்கப்பட்ட பகுதியில் உலகில் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, ஜோர்ஜியா நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலையும் கொக்கக்-கோலா அருங்காட்சியகமும் 2005இல் கட்டப்பட்டன. அட்லான்டா நடு பகுதியிலிருக்கும் நிலக்கீழ் அட்லான்டா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமும் பேரங்காடியும் ஆகும். உயர் கலை அருங்காட்சியகம், ஃபாக்ஸ் நாடகமன்றம், வுட்ரஃப் கலை மையம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கலைகளை ரசிக்கமுடியும். அட்லான்டாவின் கிழக்கில் அமைந்த 513 மீட்டர் உயரமான கல் மலை உலகில் மிகப்பெரிய கருங்கல் மலைகளில் ஒன்றாகும். இந்த மலையில் படைத்த சித்திரவேலை ஓவியம் உலகில் மிகப்பெரிய சித்திரவேலை ஓவியமாகும். இந்த ஓவியத்தில் மூன்று கூட்டமைப்பு நாடுகளின் வீரர்கள் இருக்கின்றன. இதற்கு சுற்றியிருக்கும் கல் மலை பூங்கா, சாஸ்டெயின் பூங்கா, பீட்மாண்ட் பூங்கா மற்றும் வேறு சில பூங்காக்களில் பண்பாடு இலக்குக்கள் நடைபெறும். அட்லான்டா சிம்ஃபனி கூட்டிசை, அட்லான்டா பாடல் நாடகம் போன்ற குழுமங்கள் தொன்மை இசையை காட்டுக்கின்றன. 1980களிலும் 1990களிலும் அட்லான்டாவில் த பிளாக் குரோஸ், செவென்டஸ்ட், கலெக்டிவ் சோல் போன்ற பல ராக் இசை குழுமங்கள் தொடங்கப்பட்டன. இன்று அட்லான்டா ராப் இசையில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். அமெரிக்காவின் தெற்கு பகுதி ராப் இசை அட்லான்டாவில் முதன்மையாக தொடங்கப்பட்டது. க்ரங்க் மற்றும் ஸ்னாப் ராப் இசை வகைகள் அட்லான்டாவில் தொடங்கப்பட்டன. ஔட்கேஸ்ட், ஜெர்மெய்ன் டுப்ரீ, டி.ஐ., லில் ஜான், லூடக்கிரிஸ், சோல்ஜ பாய் போன்ற புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்களும் குழுமங்களும் அட்லான்டாவிலிருந்து வெளிவந்தன. அமெரிக்காவின் நாலு பிரதான வல்லுனர் விளையாட்டுச் சங்கங்களிலும் ஒரு அணி அட்லான்டாவில் உள்ளது. என். பி. ஏ.-யின் அட்லான்டா ஹாக்ஸ் கூடைப்பந்தாட்ட அணி, என்.எஃப்.எல்.-இன் அட்லான்டா ஃபால்கன்ஸ் அமெரிக்கக் காற்பந்தாட்ட அணி, எம்.எல்.பி.-யின் அட்லான்டா பிரேவ்ஸ் பேஸ்பால் அணி மற்றும் என்.எச்.எல்.-இன் அட்லான்டா திராஷர்ஸ் பனி ஹாக்கி அணி ஆகிய அணிகள் அட்லான்டாவில் விளையாடுகின்றன. ஜோர்ஜியா டோம் கட்டடத்தில் அட்லான்டா ஃபால்கன்ஸ் போட்டிகள் மற்றும் வேறு பல அமெரிக்கக் காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜோர்ஜியா டோம் பக்கத்தில் அமைந்த ஃபிலிப்ஸ் அரீனாவில் அட்லான்டா ஹாக்ஸ், அட்லான்டா திராஷர்ஸ், டபிள்யூ.என்.பி.ஏ.-யின் அட்லான்டா டிரீம் பெண்களின் கூடைப்பந்தாட்ட அணி போட்டிகள் மற்றும் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அட்லான்டா பிரேவ்ஸ் பேஸ்பால் போட்டிகள் 1996 ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்ட டர்னர் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறுகின்றன. அட்லான்டாவில் கல்லூரி விளையாட்டுக்களும் பிரபலமானதாகும். பல அட்லான்டா மக்கள் ஜோர்ஜியா டெக், யூ.ஜி.ஏ. கல்லூரி விளையாட்டுக்களை ரசிப்பார்கள். இவ் இரண்டு பல்கலைக்கழக விளையாட்டு அணிகள் இடையில் புகழ்பெற்ற எதிரிடை உள்ளன. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாபி டாட் மைதானத்தில் இப்பல்கலைக்கழகத்தின் காற்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகின்றன; அலெக்சாண்டர் நினைவகக் காலிசியத்தில் கூடைப்பந்த்தாட்டம், கைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. யூ.ஜி.ஏ. விளையாட்டுக்களை பார்க்கிறதுக்கு நிறைய அட்லான்டா மக்கள் 117 கிமீ தூரத்தில் அட்லான்டா வடகிழக்கில் அமைந்த ஏத்தன்ஸ் நகரத்துக்கு செல்லுவார்கள். என்.சி.ஏ.ஏ.-யின் பீச் போல் காற்பந்தாட்டப் போட்டியும் ஆண்டுதோரும் ஜோர்ஜியா டோம் கட்டடத்தில் நடைபெறுகிறது. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், எமரி பல்கலைக்கழகம், ஜோர்ஜியா மாநிலப் பல்கலைக்கழகம் உள்ளிட அட்லான்டாவில் 30க்கு மேல் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உள்ளன. அட்லான்டா பல்கலைக்கழக மையத்தில் நாலு வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க கல்லூரிகள் -- மோர்ஹவுஸ் கல்லூரி, ஸ்பெல்மன் கல்லூரி, க்ளார்க் அட்லான்டா பல்கலைக்கழகம் மற்றும் இடைமதப்பிரிவு இறையியல் மையம்—உள்ளன. ஜான் மார்ஷல் சட்டக்கல்லூரி, தெற்கு பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம், அக்னெஸ் ஸ்காட் கல்லூரி, ஓகில்தார்ப் பல்கலைக்கழகம் வேறு சில அட்லான்டாவில் அமைந்த கல்லூரிகள் ஆகும். அட்லான்டா பொது பள்ளிகளில் 49,773 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த முறை 20 உயர்பள்ளிகள், 16 நடுப்பள்ளிகள், மற்றும் 58 அடிப்படை பள்ளிகளை செயல்படுகிறது. பொது பள்ளி முறை ஒரு வானொலி ஒலிபரப்பும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயல்படுகிறது. அட்லான்டா மாநகரில் சில தனியார் பள்ளிகளும் உள்ளன. வுட்வர்ட் அகாடெமி, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி, அட்லான்டா மாநகர கிறிஸ்தவ பள்ளி போன்ற தனியார் பள்ளிகளில் சில அட்லான்டா குழந்தைகள் படிக்கிறார்கள். தலைவர்-சபை பொறுப்பில் அட்லான்டா அரசு உருவாக்கப்பட்டது. தற்போது பதவியிலுள்ள மாநகரத் தலைவி ஷர்லி ஃபிராங்க்லின் உள்ளிட 1973 முதல் இன்று வரை பல அட்லான்டா மாநகரத் தலைவர்கள் ஆபிரிக்க-அமெரிக்கர்களாக இருக்கிறார்கள். 15 உறுப்பினர்கள் உள்ளிட மாநகரச் சபையில் அட்லான்டாவின் 12 ஆட்சிப் பகுதிகளுக்கு ஒரு உறுப்பினர் மற்றும் மீதி மூன்று "at-large" உறுப்பினர்கள் உள்ளனர். ஜோர்ஜியா மாநில சட்டச்சபையும் அட்லான்டாவில் ஜோர்ஜியா தலைநகர கட்டடத்தில் உள்ளது. மாநில ஆளுனரின் வீட்டும் பக்ஹெட் பகுதியில் உள்ளது. 2005இல் அட்லான்டாவில் 2004 குறைந்து 90 பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால் வேறு அமெரிக்க நகரங்களுட அட்லான்டாவின் கொலை வீதம் ஒறு அளவு உயரமானது. 250,000 மக்கள் தொகையுக்கு அதிகமான அமெரிக்க நகரங்களில் அட்லான்டாவின் கொலை வீதம் 12ஆம் மிக அதிகமானது ஆகும். அட்லான்டா மாநகரப் புள்ளியியற் பரப்பளவில் 140 ஊர்களும் நகரங்களும் 28 மாவட்டங்களும் உள்ளன. அட்லான்டாவின் முக்கியமான நாளிதழ் அட்லான்டா ஜர்னல்-கான்ஸ்டிட்டூசன் ஆகும். இந்த நாளிதழ் முன்னாள் இரண்டு இதழ்களாக இருந்து 1982இல் ஒன்றாக சேர்ந்தது. இது தவிர கிரியேட்டிவ் லோஃபிங், அட்லான்டா நேஷன் போன்ற வேறு வார இதழ்களும் நாளிதழ்களும் அச்சிலுள்ளன. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அட்லான்டாவில் ஒளிபரப்பு செய்கின்றன. 2,310,490 வீடுகள் உள்ளிட அட்லான்டா மாநகரம் அமெரிக்காவில் 8ஆம் தொலைக்காட்சி குறிப்பிட்ட சந்தை மண்டலம் ஆகும். WSB, WAGA, WXIA போன்ற பல உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர சிஎன்என், கார்ட்டூன் நெட்வர்க், டிஎன்டி போன்ற டர்னர் ஒளிபரப்பு முறையின் சலக்கங்களும் அட்லான்டாவிலிருந்து ஒளிபரப்பு செய்கின்றன. வானிலை சலக்கமும் அட்லான்டாவில் உள்ளது. பல பேச்சு, செய்தி, இசை வானொலி சலக்கங்களும் அட்லான்டாவில் இயக்குகின்றன. நீல் போர்ட்ஸ் மற்றும் கிளார்க் ஹவர்ட் அட்லான்டாவிலிருந்து ஒலிபரப்பு செய்து அமெரிக்கா முழுவதிலும் இவர்களை கேட்கமுடியும். ச. சாமிவேலு சாமிவேலு சங்கிலிமுத்து ("S. Samy Vellu") (பிறப்பு: மார்ச் 8, 1936) மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர். தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன. சாமிவேலு 1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். 1974 ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய சரித்திரத்தையே மாற்றி அமைத்தது 1960களில் இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனீசியாவை அதிபர் சுகர்ணோ ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனீசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். "Ganyang Malaysia" எனும் வாசகங்களிப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார். மலேசியாவிற்குள் இந்தோனேசியப் படைகள் தரை இறங்கின. உலக அரசியல் அரங்கில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் சாமிவேலு, கோலாலம்பூரில் இருந்த இந்தோனீசிய தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார். அவருடைய நாட்டுப் பற்றின் மூலம் அவரது புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது. மலேசிய ஆங்கில, மலாய், சீன, தமிழ் நாளேடுகள் அவரைப் பெரிதும் புகழ்ந்தன. சங்கிலிமுத்து, அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் பிறந்தார். தனது ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். தாய் தந்தையருக்கு பால் மரம் சீவும் வேலைகலில் உதவி செய்தார். பின்னர், இவருடைய குடும்பம் நிலக்கரிச் சுரங்க நகராக விளங்கும் பத்து ஆராங்கிற்கு குடி பெயர்ந்தது. பத்து ஆராங்கிற்கு குடி வந்த பின்னரும் அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழ்மை தொடர்ந்து வந்தது. பத்து ஆராங்கிற்கு அருகில் ரவாங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமை அவருடைய வாழ்க்கையைத் திசைத் திருப்பியது. அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விக வேண்டிய நிலைமை. பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகப் படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். சாமிவேலுவின் கடின உழைப்பு மலாயன் கொலிரியர்ஸ் நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப் பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 7-இல் அவருடைய தாயார் அங்கம்மாள் இயற்கை எய்தினார். தாயாரின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்தது. அதன் பின்னர், அவர் அங்கு இருக்க விரும்பவில்லை. 1951-இல் பத்து ஆராங் நகரையே விட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தார். 1951-இல் கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகச் சிறிது காலம் வேலை பார்த்தார். அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூரில் ஸ்ரீ ஜெயா பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதவிச் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார். அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. வேலை நேரங்கள் போக ஓய்வு நேரங்களில் கோவிந்தசாமி என்பவரின் துணையுடன் கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக் கொண்டார். தந்தையார் சங்கிலிமுத்து 1957ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மறைந்த போது சாமிவேலுவின் வயது 21. இக்கட்டத்தில் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு சாமிவேலுவின் தோளில் விழுந்தது. குடுமபத்தின் மீது காட்டிய அதே அக்கறையை, கடமை உணர்வைப் பின்னர் சமுதாயத்தின் மீதும் செலுத்த வேண்டிய பொறுப்பு சாமிவேலுவுக்கு வாய்த்தது. 1960 ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1964 ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்திய செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார். பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட காலக் கட்டத்திலேயே சாமிவேலு தனது கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டார். லண்டனுக்குச் சென்று "Royal Institute of British Architects" எனும் அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் தேர்வு எழுதி வல்லுநராகத் தாயகம் திரும்பினார். அந்தத் துறையிலேயே தொழில் புரியவும் தொடங்கினார். அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து மலேசிய அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராகவும், 1990 முதல் 1995 வரை எரிசக்தி தொலைத் தொடர்பு அஞ்சல் துறை அமைச்சராகவும் பணி புரிந்தார். அரசாங்கத்தின் தூதுக்குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார். 1979 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருதை வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். 1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது. அப்போதைய பிரதமர் துன் (டத்தோ ஸ்ரீ) டாக்டர் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல் 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது. 1989 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. 2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார். இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (பிறப்பு:1965) எனும் ஒரு மகன் உள்ளார். வேல்பாரி சர்ச்சைக்குரிய மலேசிய இந்தியர்களின் மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷீலா நாயர், (பிறப்பு:1976) டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினரின் மருமகள் ஆவார். 2008 ஆம் ஆண்டில், ம.இ.கா.வின் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் ("Maju Institute of Education Development (MIED)") நிர்வாக இயக்குநர் சித்திரகலாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடரப் பட்டது. அந்தக் குற்றச் சாட்டை மறுத்த சித்திரகலா, ம.இ.கா தலைவர்களின் மீதே திருப்பிக் குற்றம் சாட்டினார். இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் கண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன. அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன. மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்திய பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர். நவம்பர் 25, 2007ல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன.. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது. பின்னர், மார்ச் 8, 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட மரு. ஜெயக்குமார் தேவராஜிடம் சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார். இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த பாரிசான் நேசனல், மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது. ம.இ.கா. பாரிசான் நேசனல் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும். இண்டியானாபொலிஸ் இண்டியானபொலிஸ் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 785,597 மக்கள் வாழ்கிறார்கள். பாஸ்டன் பாஸ்டன் (இலங்கை வழக்கு: பொஸ்ரன்) அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தின் மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது. மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் நியூ இங்கிலாந்தின் மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது. இதனை மையமாகக் கொண்ட பெருநகர பாஸ்டன் மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், "சாமுத் மூவலந்தீவில்" 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது. பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது. கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது. பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635), முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897), மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன. இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது. பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம், தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன. இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்; பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும் ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது. பல்க்கர் மக்கள் பல்க்கர் மக்கள் ("Balkars") துருக்கிய இனத்தவராவர். இவர்கள் காக்கேசஸ் பகுதியிலுள்ள ரஷ்யக் குடியரசான கபர்தினோ-பல்கரீயாவின் முக்கிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களுடைய கராச்சே-பல்கர் மொழி, வடமேற்குத் துருக்கிய மொழிகளின் பொண்டோ-காஸ்பிய துணை மொழிக் குழுவைச் சேர்ந்தது. இது, கிரீமிய தாத்தார் ("Crimean Tatar") மற்றும் குமிக் ("Kumyk") மொழிகளுக்கு உறவுடைய மொழியாகும். பல்க்கர்கள், கி.பி. நான்காம் நூற்றாண்டளவில், காக்கேசியப் பகுதிக்குள் வந்த பல்கர் ("Bulgar") என்னும் பழங்குடியினரின் மீந்த பகுதியினராக இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். 2002 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ரஷ்யாவின் கபர்தீனோ-பல்கரீயா குடியரசில் 105,000 பல்கர்கள் உள்ளனர். தமிழர் வரலாறு தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும். தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று. தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். ("தி ஹிண்டு", 2005) தமிழர் சமூக அமைப்பு ஒரு சமூகத்தில் இருக்கும் குழுக்களுக்கிடையான உறவுகளையும், அந்த சமூகத்தின் அமைப்புகளினது நடைமுறைத் தன்மையையும் சமூக அமைப்பு என்ற கருத்துரு சுட்டுகிறது. தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. முன்னர் சாதிய அடுக்கமைவும், வர்க்க வேறுபாடும் இணையொத்து இருந்தாலும், தற்காலத்தில் அவை பல இடங்களில் வேறுபடுகின்றன. அதாவது மரபு ரீதியாக உயர் சாதி பிராமணர் பொருளாதார ரீதியாக ஏழையாகவும் (underclass), தாழ்த்தப்பட்ட ஒருவர் பொருளாதார ரீதியாக பணக்காரர் ஆகவும் இருக்கலாம். தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்கால தமிழர் சமூக அமைப்பில் சமூக மேல் அசைவியக்கம் (social mobiliazation) இருக்கின்றது. பீனிக்ஸ், அரிசோனா பீனிக்ஸ் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். தமிழர் அமைப்புகள் தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் என பல நோக்கங்களை மையமாக வைத்து தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. தமிழர்களின் மிக முக்கிய அரசு அமைப்புகளாக விளங்கி வருவன தமிழ் நாடு அரசும் இலங்கை அரசும் ஆகும். இவ்விரு அரசுகளும் 1950கள் முதற்கொண்டு அறிவியல் தொழில் நுட்பக் கலைச் சொல் உருவாக்கத்திலும் அதை பரவலாக்குவதிலும் செயல்பட்டு வருகின்றன. பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் சுய மரியாதையையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. டென்வர் டென்வர் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். டென்வர் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சரியாக ஒரு மைல் உயரத்தில் (5,280 அடி) அமைந்திருப்பதால் இதனை "மைல்-உயர நகரம்" எனவும் அழைப்பர். டென்வர் சுரங்கத் தொழில் செய்பவர்களுக்காக 1858 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நகரமாகும். மினியாப்பொலிஸ் மினியாபோலிஸ் ("City of Minneapolis") ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். சால்ட் லேக் நகரம் சால்ட் லேக் நகரம் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். சேக்ரமெண்டோ சேக்ரமெண்டோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 467,343 மக்கள் வாழ்கிறார்கள். சார்லட் சார்லட் என்பது அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 695,995 மக்கள் இங்கு வாழ்கிறார்கள். மில்வாக்கி மில்வாகி அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 602,782 மக்கள் வாழ்கிறார்கள். பிலடெல்பியா பிலடெல்பியா ("Philadelphia") ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும் அந்நாட்டின் ஏழாவது பெரிய மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நகரமும் ஆகும். இது பிலடெல்பியா கவுண்டியின் தலைமை இடமாகவும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 1.44 மில்லியன் மக்களுக்கு மேல் இங்கே வாழ்கிறார்கள். இதனையும் உள்ளடக்கிய டெலாவெயர் பள்ளத்தாக்கு மெட்ரோபாலிட்டன் பகுதியின் மக்கள்தொகை 5.8 மில்லியன்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் 5 ஆவது பெரியதும் உலக நகரங்களின் வரிசையில் 45 ஆவது மக்கள்தொகையும் ஆகும். ஒரு காலத்தில் இது இலண்டனுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில், அரசியல் மற்றும் சமூக அடிப்படையில் இந்நகரின் முக்கியத்துவம் நியூ யார்க் நகரினதைக் காட்டிலும் மேலோங்கியிருந்தது. அமெரிக்கப் புரட்சி தொடர்பான எண்ணக்கருக்களும், தொடர்பான செயற்பாடுகளும் இங்கேயே உருவானதன் காரணமாக தொடக்ககால அமெரிக்க வரலாற்றின் மையமாக இந்நகரம் விளங்கியது எனலாம். 1682 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் வில்லியம் பென் என்பவரால் பிலடெல்பியா நகரம் நிறுவப்பட்டது. பிலடெல்பியா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் "சகோதர பாசம்" என்று பொருள்படும். குவேக்கர்களின் சிந்தனை வழி ஆட்சி அமைக்கப்பட்ட இந்த நகரம், ஆரம்பம் முதலே தனி மனித சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தது. மத, இன வேறுபாடுகளை அனுமதிக்காத இந்நகரத்தின் சட்டங்கள் இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்று. 1701 ஆம் ஆண்டு பென் அவர்களால் "நகரம்" என அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்ட பின், பிலடெல்பியா மேன்மேலும் வளர்ந்து வணிகத்திலும் முக்கியமான இடமாக விளங்கியது. பொதுமக்கள் சேவையிலும் இந்நகரம் தலைசிறந்து இருந்தது: எடுத்துக்காட்டாக, இந்த நகரத்தின் பெயர்பெற்ற குடிமகரில் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் குடியமைப்புகளின் முதன்முதல் மருத்துவமனையை இங்கு அமைத்தார். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற பிலடெல்பியா, 1790ஆம் ஆண்டு முதல் 1800ஆம் வருடம் வரை, அமெரிக்காவின் (முதல்) தலைநகரமாகச் சிறப்பு பெற்றது. பிலடெல்பியாவின் பொருளாதாரம் உற்பத்தி, எண்ணெய்ச் சுத்திகரிப்பு, உணவு பதப்படுத்துதல், உடல் நலச் சீரமைப்பு, உயிரித் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் வணிக சேவைகள் என்று பலவகைப்பட்ட தொழில் அமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதார ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, 2010 ஆம் ஆண்டில் 347 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய உற்பத்தித்திறத்துடன், அமெரிக்காவின் மாநகரங்களில் ஏழாவது இடத்தை பிலடெல்பியா கைப்பற்றி உள்ளது. "பிலடெல்பியா இன்குவைரர்" ("Philadelphia Inquirer"), "பிலடெல்பியா டெய்லி நியூஸ்" ("Philadelphia Daily News") ஆகியன இந்நகரத்தின் இரண்டு முக்கியமான செய்தித்தாள்கள் ஆகும். ஈகிள்கள், பிளையர்கள், பில்லீக்கள், பிலடெல்பியா 76அர்ஸ் போன்ற பிரபலமான விளையாட்டுக் குழுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதன்முதல் விலங்குக் காட்சிச்சாலையும், மருத்துவமனையும் இந்நகரத்திலேயே அமைக்கப் பெற்றன. அமெரிக்க நாட்டின் மிகத் தொன்மை வாய்ந்து, விரிந்து பரந்த நகர்ப்புறப் பூங்காக்களுள் ஒன்றான பேர்மவுண்ட் பூங்கா ("Fairmount Park") இந்நகரத்திற்கு இன்றும் எழில் சேர்க்கிறது. வரலாற்றுப் பெருமை மிக்க அருங்காட்சியகங்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் முப்பது கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெருமை உடைய நகரம் இது. அமெரிக்காவில் தொள்ளாயிரம் அடிக்கு மேல் கட்டிடங்கள் உடைய நான்கே நகரங்களில் பிலடெல்பியாவும் ஒன்றாக உள்ளது. ஹியூஸ்டன் ஹியூஸ்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தென்கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் மெக்ஸிகோ வளைகுடாவிற்கு அருகில் அமைந்துள்ளது. 2014 ஆம் வருட கணக்கெடுப்பின் படி 2.239 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் 599.9 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வடஅமெரிக்காவின் ஜனத்தொகை மிகுந்த பெருநகர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஹூஸ்டன் நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி Buffalo Bayou நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837 இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின் முன்னாள் தலைவரும், Battle of San Jacinto போரை  வழிநடத்தி வெற்றி கண்டவருமான Sam Houston நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. மெம்ஃபிஸ், டென்னிசி மெம்ஃபிஸ் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். போர்ட்லன்ட் (ஒரிகன்) போர்ட்லன்ட் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். சியாட்டில் சியாட்டில் ("Seattle" {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது. இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாசிங்டன் மாநிலத்திலும் வட அமெரிக்காவின் பசிபிக்பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது. சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று. மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது. சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது. அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் "புசே சவுண்டிற்கும்" வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது. சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே தொல்குடி அமெரிக்கர் கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர். எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் "நியூ யார்க்-ஆல்க்கி" அன்றும் "டுவாம்ப்" என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. சியாட்டிலின் முதன்மைத் தொழிலாக மரம் வெட்டுதலும் வெட்டுமர வணிகமும் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "கிளோன்டிகே தங்க வேட்டை"க் காலத்தில் அலாஸ்காவிற்கான வாயிலாகவும் கப்பல் கட்டுதலும் சந்தையிடமாகவும் மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போயிங் நிறுவனம் சியாட்டிலில் தனது வானூர்தி தயாரிப்பைத் துவங்கியது; இதையொட்டி சியாட்டில் வானூர்திகள் மற்றும் உதிரிகள் தயாரிக்கும் மையமாக உருமாறிற்று. 1980களில் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது; இப்பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைய வணிக முன்னோடி அமேசானும் நிறுவப்பட்டன. மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் சியாட்டிலில் பிறந்தவர். வளர்ச்சி வீதம் உயர, போக்குவரத்து வசதிகளாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டது; புதிய சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டது. புதிய மென்பொருள், உயிரித் தொழில்நுட்பம், இணைய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் நகரத்தின் மக்கள்தொகையை 1990க்கும் 2000க்கும் இடையே 50,000 வரை கூட்டியது. சியாட்டிலுக்கு இசைத்துறையிலும் சிறப்பான வரலாறு உண்டு. 1918இலிருந்து 1951 வரை ஜாக்சன் தெருவில் கிட்டத்தட்ட 24 ஜாஸ் இரவு விடுதிகள் இருந்தன. இங்கிருந்தே புகழ்பெற்ற ரே சார்ல்ஸ், குயின்சி ஜோன்சு, எர்னெஸ்டைன் ஆண்டர்சன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்கள் தம் இசைவாழ்வில் முதன்மை பெற்றனர். ராக் இசைக் கலைஞர் ஜிமி ஹென்றிக்ஸ் இங்குதான் பிறந்தார். நிர்வானா, பேர்ல் ஜெம், சவுன்டுகார்டன், ஃபூ ஃபைட்டர்சு, மாற்று ராக்கிசை கிரஞ்சு ஆகியோரும் இங்கேத்தவர்களே."இயர் கம்சு தி பிரைட்சு", "பிரேசியர்", "கிரேஸ் அனாடமி" போன்றத் தொலைக்காட்சித் தொடர்களில் நிகழிடமாக சியாட்டில் உள்ளது. சியாட்டில் விளையாட்டுத் துறையிலும் சிறப்பாக உள்ளது. சியாட்டில் மாரினர்சு (அடிபந்தாட்டம்), சியாட்டில் சீஹாக்சு (அமெரிக்கக் கால்பந்தாட்டம்), சவுண்டர்சு காற்பந்துக் கழகம் (கால்பந்து கூட்டமைப்பு) போன்ற பல சிறந்த விளையாட்டு அணிகளின் தாயகமாக உள்ளது. மேற்கிலுள்ள பூஜே சவுண்டும் அமைதிப் பெருங்கடலும் கிழக்கேயுள்ள வாசிங்டன் ஏரியும் to நீர் விளையாட்டுக்களுக்கு களமாக விளங்குகின்றன. சியாட்டிலில் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் முதன்மையானவை வாசிங்டன் பல்கலைக்கழகமும் சியாட்டில் பல்கலைக்கழகமும் ஆகும். சியாட்டிலின் வானிலை வேனிற்காலத்தில் மிதமானதாக (நடுக்கடல் வானிலை) உள்ளது. தொல்லியல் அகழ்வாய்வுகள் இங்கு தொல்குடி அமெரிக்கர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. துவாமிச குடிகள் என அறியப்படுகின்ற தொல்குடிகள் எலியட் விரிகுடாவைச் சுற்றி பதினேழு சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர். இங்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஜார்ஜ் வான்கூவர் ஆகும். இவர் மே, 1792இல் பசுபிக் வடமேற்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது இங்கு வந்தார். 1851இல் லூதர் காலின்சு இங்குள்ள துவார்னிச ஆற்று முகத்துவாரத்தில் வந்திறங்க ஓர் இடம் தேடினார். அதே நேரத்தில் ஆர்தர் ஏ டென்னியின் குழுவினரும் இப்பகுதிக்கு குடியேற வந்தனர்; செப்டம்பர் 28, 1851இல் அவர்கள் சியாட்டிலின் அல்க்கி முனைக்கு உரிமை கோரினர். அல்கி முனையில் மிகுந்த கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்ட டென்னிக் குழுவினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து எலியட் விரிகுடாற்கு எதிரே தற்போதைய பயனீர் சதுக்கம் அருகே முகாமிட்டு அங்கு உரிமை கோரினர். புதிய இடத்திற்கு துவாம்ப்சு எனப் பெயரிட்டனர். ஆனால் அவருடன் வந்த சார்லசு டெர்ரியும் ஜான் லாவும் பழைய இடத்திலேயே தங்கி விட்டனர். தாங்களிருந்த இடத்தை நியூ யார்க் என்றும் பின்னர் நியூயார்க் அல்க்கி என்றும் பெயரிட்டனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்களிருக் குழுவினரும் தத்தம் இடங்களை முன்னெடுக்க முயன்றனர். ஆனால் நாளடைவில் அல்க்கி கைவிடப்பட்டு துவாம்ப்சிற்கு அனைவருமே குடியேறத் தொடங்கினர். இங்கு துவக்கத்தில் குடியேறியவர்களில் ஒருவரான டேவிட் சுவின்சன் உள்ளூர் குடிகளின் தலைவனாக இருந்தவரின் பெயரான சியாட்டிலை புதிய குடியேற்றத்திற்கு பெயராகப் பரிந்துரைத்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008 2006 மார்ச் 30 ஆம் நாள் இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைப்பெற்ற போது பிற்போட்டப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008 மார்ச் 10 ஆம் நாள் நடைப்பெற்றது.1994 ம் ஆண்டின் பின்னர் 14 வருடம் கழித்து இத் தேர்தல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கவிடயமாகும். இத்தேர்தல் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களுக்கு 101 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் வாக்களிக்க 270,471 பேர் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுகள் 291 வாக்களிப்பு நிலையங்களில் நடைப்பெற்றது. தேர்தல் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.கிருஷ்ணானந்தலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இத்தேர்தலைப் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தன. இலங்கை தேர்தல் சட்டத்தின் படி வாக்களிப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மார்ச் 7 ஆம் நாள் நள்ளிரவோடு தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. தேர்தலுக்கு முன்னதாக பெப்ரவரி 21 22 ஆம் நாட்களில் தபால் மூல வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது 934 வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். மட்டக்களப்பு மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியதோடு ஏனைய 8 பிரதேச சபைத் தேர்தல்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெற்றிப் பெற்றனர். இத் தேர்தல்முடிவுகளை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.இலங்கை அமைச்சர்கள் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுமாறு உலக நாடுகளை கேட்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்றும் துணை இராணுவக் குழுவின் ஆதரவுடன் இந்த அரசாங்கத்தால் மட்டக்களப்பு களங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தல் முடிவுகளை நிராகரித்ததுடன் இலங்கை மக்களையும் வெளியுலகையும் ஏமாற்ற நடத்தப்பட்ட ஒரு நாடகம் என வர்ணித்துள்ளது. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. டென்வர் நகெட்ஸ் டென்வர் நகெட்ஸ் (Denver Nuggets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரில் அமைந்துள்ள பெப்சி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆலெக்ஸ் இங்கிலிஷ், டேன் இசல், டேவிட் தாம்ப்சன், கார்மெலோ ஆந்தனி, ஏலன் ஐவர்சன். கிளீவ்லாந்து கவாலியர்சு கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் (Cleveland Cavaliers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் அமைந்துள்ள குயிகன் லோன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், மார்க் ப்ரைஸ், லெப்ரான் ஜேம்ஸ். லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (Los Angeles Lakers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மேஜிக் ஜான்சன், கரீம் அப்துல்-ஜப்பார், வில்ட் சேம்பர்லென், ஜார்ஜ் மைகன், ஜெரி வெஸ்ட், எல்ஜின் பெய்லர், ஷகீல் ஓனீல், கோபி பிரயன்ட். கிளீவ்லாந்து கிளீவ்லாந்து (Cleveland) என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். மயாமி மயாமி (Miami) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். டாலஸ் டாலஸ் (Dallas) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். சான் அந்தோனியோ சான் அன்டோனியோ (San Antonio) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். இது அமெரிக்காவின் ஏழாவது பெரிய நகரமும், டெக்சாஸ் மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும். ஓக்லண்ட், கலிபோர்னியா ஓக்லன்ட் (Oakland) ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். யமாத்தோ இனக்குழு யமாட்டோ இனக்குழு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முதன்மையான இனக்குழுவாகும். "யமாட்டோ" என்னும் சொல் 19 ஆம் நூற்றாண்டளவில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. தலைநிலத்து ஜப்பான் மக்களை பிற ஜப்பானின் விளிம்புப் பகுதிகளில் வாழ்ந்த அயினு (Ainu), ரியுக்யுவான் (Ryukyuans), நிவிக்ஸ் (Nivkhs), உயில்ட்டா (Uilta) போன்ற உள்ளூர் சிறுபான்மை இன மக்களிலிருந்தும்; கொரியர்கள், தாய்வான் மக்கள், தாய்வான் தொல்குடிகள், போன்ற பிற நாட்டு இனக்குழுக்களிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது பயன்பட்டது. தொடக்கத்தில் இம் மக்கள் குடியேறிய இடத்தின் பெயர் இதுவாகும். ஜப்பானில் 4 ஆம் நூற்றாண்டில் நிலவிய யமாட்டோ அரசின் பெயரிலிருந்தே இச் சொல் பெறப்பட்டது. யமாட்டோ மக்கள், 6 ஆம் நூற்றாண்டளவில், அக்காலத்தில் ஆசியாவிலேயே முன்னேறியவைகாகக் கருதப்பட்ட சீனாவின் சுயி, தாங் ஆகிய அரசுகளைப் பின்பற்றி, ஒரு அரசை நிறுவினர். யமாட்டோக்களின் செல்வாக்கு விரிவடைந்து தீவு முழுவதும் பரவியபோது, பழைய ஜப்பானிய மொழிக்குப் பதிலாக யமோட்டோக்களின் மொழி பொதுப் பேச்சு மொழி ஆனது. ஐனு இனக்குழு அயினு இனக்குழு ஜப்பானின், ஹொக்கைடோ, குரில் தீவுகள், ரஷ்யாவின் ஒரு பகுதியான சக்காலின் தீவு ஆகியவற்றில் வாழும் ஒரு இனக்குழுவாகும். வடக்கு ஹொன்ஷுவின் சில பகுதிகளிலும், கம்சத்கா குடாநாட்டின் தெற்குப்பக்க மூன்றிலொரு பகுதியிலும், முற்காலத்தில் இவர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் எனச் சிலர் எண்ணுகிறார்கள். இவர்களைக் குறிக்கப் பரவலாகப் பயன்படும் இனப்பெயர், அயினு மொழியின் ஹொக்கைடோ கிளைமொழிகளின் "மனிதன்" எனப் பொருள்படும் "ஐனு" (aynu) என்பதில் இருந்து பெறப்பட்டது. எமிஷி, எசோ, யெசோ போன்ற இவ்வினத்தவரைக் குறிக்கும் பெயர்கள் ஜப்பானிய மொழிப் பெயர்களாகும். இவையும், "மனிதன்" என்னும் பொருள் குறிக்கும் "என்சிவ் (enciw) அல்லது எஞ்ஜு (enju)" எனும் தற்கால சக்காலின் அயினு மொழிச் சொல்லின் பழங்கால வடிவம் என நம்பப்படுகின்றது. "தோழர்" என்னும் பொருள்படும் உத்தாரி என்னும் சொல்லையே இவ்வினத்தவரில் சிலர் விரும்புகிறார்கள். இவர்களின் தொகை சுமார் 150,000 இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இவர்களில் பலர் தங்கள் அடையாளத்தை மறைப்பதாலும், சிலருக்கு அவர்கள் அடையாளம் தெரியாமலே இருப்பதாலும், இனவாதத்தில் இருந்து தப்புவதற்காகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து அவர்கள் அடையாளத்தை மறைப்பதாலும், அவர்களது எண்ணிக்கையைச் சரியாகக் கூறமுடியாது. சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் (San Antonio Spurs) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரில் அமைந்துள்ள ஏடி&டி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜார்ஜ் கெர்வின், டேவிட் ராபின்சன், டிம் டங்கன். நியூ யோர்க் நிக்ஸ் நியூ யோர்க் நிக்ஸ் (New York Knicks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ யோர்க் மாநிலத்தில் நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள மேடிசன் ஸ்குவேர் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் விலிஸ் ரீட், வால்ட் ஃப்ரேசியர், பேட்ரிக் யூவிங், ஏள் மன்ரோ. பிலடெல்பியா 76அர்ஸ் பிலடெல்பியா 76அர்ஸ் (Philadelphia 76ers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள வகோவியா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜூலியஸ் எர்விங், மோசஸ் மலோன், மோரீஸ் சீக்ஸ், சார்ல்ஸ் பார்க்லி, ஏலன் ஐவர்சன். மயாமி ஹீட் மயாமி ஹீட் (Miami Heat) என். பி. ஏ. இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் மயாமி நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டிம் ஹார்டவே, அலோன்சோ மோர்னிங், டுவேன் வேட், ஷகீல் ஓனீல். பீனிக்ஸ் சன்ஸ் பீனிக்ஸ் சன்ஸ் (Phoenix Suns) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் நகரில் அமைந்துள்ள யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேன் மார்லி, கெவின் ஜான்சன், சார்ல்ஸ் பார்க்லி, ஸ்டீவ் நேஷ், அமாரே ஸ்டெளடமையர், ஷகீல் ஓனீல். அட்லான்டா ஹாக்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் (Atlanta Hawks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லான்டா நகரில் அமைந்துள்ள ஃபிலிப்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் பெடிட், லூ ஹட்சன், டாமினீக் வில்கின்ஸ், டாக் ரிவர்ஸ், டிகெம்பே முடம்போ, ஜோ ஜான்சன். டிகெம்பே முடம்போ டிகெம்பே முடம்போ ம்பொலொந்தோ முகம்பா ஜான்-ஜாக் வாமுடம்போ, அல்லது டிகெம்பே முடம்போ (ஆங்கிலம்:Dikembe Mutombo Mpolondo Mukamba Jean-Jacques Wamutombo, பிறப்பு - ஜூன் 25, 1966) ஒரு காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். சிகாகோ புல்ஸ் சிகாகோ புல்ஸ் (Chicago Bulls) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி இலினொய் மாநிலத்தில் சிகாகோ நகரில் அமைந்துள்ள யுனைடெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜெரி ஸ்லோன், பாப் லவ், மைக்கல் ஜார்டன், ஸ்காடி பிபன். பாசுடன் செல்டிக்சு பாசுடன் செல்டிக்சு (Boston Celtics) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள டி.டி. பாங்க்நார்த் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் கூசி, பில் ரசல், ராபர்ட் பாரிஷ், லாரி பர்ட், கெவின் மெக்ஹேல், பால் பியர்ஸ், கெவின் கார்னெட். டாலஸ் மேவரிக்ஸ் டாலஸ் மேவரிக்ஸ் (Dallas Mavericks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மார்க் அக்வையர், ஜேசன் கிட், ஸ்டீவ் நேஷ், டெர்க் நொவிட்ச்கி. ஹியூஸ்டன் ராக்கெட்ஸ் ஹியூஸ்டன் ராகெட்ஸ் (Houston Rockets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஹகீம் ஒலாஜுவான், க்ளைட் ட்ரெக்ஸ்லர், சார்ல்ஸ் பார்க்லி, ரால்ஃப் சேம்ப்சன், ட்ரேசி மெக்ரேடி, யாவ் மிங். சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (Seattle SuperSonics) அல்லது சியாட்டில் சானிக்ஸ் என். பி. ஏ.-இல் ஒரு முன்னாள் கூடைப்பந்து அணியாகும். 1967இல் தொடங்கப்பட்ட இவ்வணி 2008 வரை வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் போட்டிகள் விளையாடினது. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் மெக்மிலன், ஜாக் சிக்மா, கேரி பெய்டன், ஷான் கெம்ப், ரே ஏலன், கெவின் டுரான்ட் ஆவார். 2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார். 2008-2009 பருவத்திலிருந்து ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி சூப்பர்சானிக்ஸ் அணியின் நிலையில் என்.பி.ஏ.-ஐ சேரும். எதிர்காலத்தில் புதிய சியாட்டில் அணி தொடங்கப்பட்டால் முந்திய பட்டங்கள், நிறங்கள், வரலாறு, "சூப்பர்சானிக்ஸ்" என்ற பெயர் எல்லாம் அந்த அணி வைத்துக்கொண்டிருக்கும். தமிழ் ஊடகம் தமிழ் ஊடகம் ஊடாக தமிழர்களிடையே தொடர்பாடல் நடைபெறுகிறது. நாளிதழ், சிற்றிதழ், இதழ், நூல்கள், தமிழ் ஒலிபரப்புத்துறை|வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் ஆகிய வடிவங்கள் ஊடாக தமிழ் தொடர்பாடல் இடம்பெறுகிறது. பெரும்பாலன ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரபுக்குள் உள்ள வாசகர்களை நோக்கியே அக்கறை காட்டுகின்றன. இணையம் உலகத்தமிழரை இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கின்றது. பண்டைக்காலத்தில் கல்வெட்டு, ஓலைச்சுவடு ஆகியவற்றில் தகவல்களை பதிந்துவைத்தார்கள். இணைய ஊடகத்தைத் தமிழர்கள் முதலில் இருந்தே அறிந்து நன்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அவை தமிழ் இணையதளங்கள், மடலாடற் குழுமங்கள், மின்மன்றங்கள் (Forums), வலைப்பதிவுகள் மற்றும் திறந்த நிலை மென்பொருட்களுக்கான பங்களிப்புகள் என்று எல்லா வகையிலும் பரவி வருகிறது. கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் ஓக்லன்ட் நகரில் அமைந்துள்ள ஓரகில் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், வில்ட் சேம்பர்லென், ரிக் பாரி, கிரிஸ் மலின், டிம் ஹார்டவே, பேரன் டேவிஸ். டிட்ராயிட் பிஸ்டன்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (Detroit Pistons) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மிச்சிகன் மாநிலத்தில் டிட்ராயிட்டின் ஒரு புறநகரம் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் அமைந்துள்ள பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஐசேயா தாமஸ், ஜோ டுமார்ஸ், பில் லேம்பியர், டெனிஸ் ராட்மன், பென் வாலஸ், சான்சி பிலப்ஸ். டிட்ராயிட் டிட்ராயிட் (Detroit) ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. வாஷிங்டன் விசர்ட்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் (Washington Wizards) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வாஷிங்டன், டி. சி நகரில் அமைந்துள்ள வெரைசன் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் வெஸ் அன்செல்ட், ஏள் மன்ரோ, ரெக்ஸ் சாப்மன், மைக்கல் ஜார்டன், கில்பர்ட் அரீனஸ். மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மினசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள டார்கெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் கிரிஸ்டியன் லேட்னர், கெவின் கார்னெட், சான்சி பிலப்ஸ், ஏல் ஜெஃபர்சன். டொராண்டோ ராப்டர்ஸ் டொராண்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கனடாவில் டொராண்டோ நகரில் அமைந்துள்ள ஏர் கனடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேமன் ஸ்டெளடமையர், மார்கஸ் கேம்பி, வின்ஸ் கார்டர், ட்ரேசி மெக்ரேடி, கிரிஸ் பாஷ். ஒர்லான்டோ மேஜிக் ஒர்லான்டோ மேஜிக் (Orlando Magic) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் ஒர்லான்டோ நகரில் அமைந்துள்ள ஏம்வே அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பெனி ஹார்டவே, ஷகீல் ஓனீல், ட்ரேசி மெக்ரேடி, கிரான்ட் ஹில், டுவைட் ஹவர்ட். நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (New Orleans Hornets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லியன்ஸ் நகரில் அமைந்துள்ள நியூ ஓர்லியன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் லாரி ஜான்சன், அலோன்சோ மோர்னிங், பேரன் டேவிஸ், கிரிஸ் பால். லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (Los Angeles Clippers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பில் வால்டன், பாப் மேக்கடூ, எல்டன் பிரான்ட். சேக்ரமெண்டோ கிங்ஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் (Sacramento Kings) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் சேக்ரமெண்டோ நகரில் அமைந்துள்ள ஆர்கோ அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் ஆர்சிபால்ட், ஆஸ்கர் ராபர்ட்சன், மிச் ரிச்மன்ட், மைக் பிபி, கிரிஸ் வெபர். மில்வாக்கி பக்ஸ் மில்வாகி பக்ஸ் (Milwaukee Bucks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி விஸ்கொன்சின் மாநிலத்தில் மில்வாகி நகரில் அமைந்துள்ள ப்ராட்லி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆஸ்கர் ராபர்ட்சன், கரீம் அப்துல்-ஜப்பார், ரே ஏலன், மைக்கல் ரெட். நியூ ஜெர்சி நெட்ஸ் நியூ ஜெர்சி நெட்ஸ் (New Jersey Nets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ ஜெர்சி மாநிலத்தில் நியூவர்க்கின் ஒரு புறநகரம் கிழக்கு ரதர்ஃபோர்ட் நகரில் அமைந்துள்ள ஐசாட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ட்ராசென் பெட்ரொவிக், ஜூலியஸ் எர்விங், ஸ்டெஃபான் மார்பெரி, ஜேசன் கிட், வின்ஸ் கார்டர். நுவார்க் நியூவர்க் அல்லது நுவார்க் ("Newark") ( அல்லது உள்ளூரில் ) என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277,140 ஆகும். நாட்டின் மிகவும் கூடுதலான மக்கள் குடியிருக்கும் நகரங்களில் 67வது இடத்தில் உள்ளது. நியூ செர்சி மாநிலத்தின் நுழைவாயிற் பகுதி என அறியப்படும் பகுதியின் மையமாகவுள்ள நுவார்க் நியூ யார்க் பெருநகரப் பகுதியில் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். இது மன்காட்டனுக்கு மேற்கில் ஏறத்தாழ 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நுவார்க்-எலிசபெத் கடல்வழி முனையத் துறைமுகம் நியூசெர்சி மாநிலத்தின் முதன்மை சரக்குப்பெட்டி போக்குவரத்து மையமாக விளங்குவதுடன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நகராட்சி ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் வானூர்தி நிலையமாகும். நாட்டின் போக்குவரத்து மிக்க வானூர்திநிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியானா பேசர்ஸ் இந்தியானா பேசர்ஸ் (Indiana Pacers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி இந்தியானா மாநிலத்தில் இண்டியானபொலிஸ் நகரில் அமைந்துள்ள கன்சிகோ ஃபீள்ட் ஹவுஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ரெஜி மிலர், ஜெர்மெயின் ஓனீல், ரிக் ஸ்மிட்ஸ், ரான் ஆர்டெஸ்ட். போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (Portland Trail Blazers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒரிகன் மாநிலத்தில் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ள ரோஸ் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் க்ளைட் ட்ரெக்ஸ்லர், ட்ராசென் பெட்ரொவிக், ஆர்விடஸ் சபோனிஸ், பில் வால்டன், ரஷீத் வாலஸ், பிரான்டன் ராய், கிரெக் ஓடென். சேலம் (ஒரிகன்) சேலம் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 152,290 மக்கள் வாழ்கிறார்கள். யூட்டா ஜேஸ் யூட்டா ஜேஸ் (Utah Jazz) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி யூட்டா மாநிலத்தில் சால்ட் லேக் நகரில் அமைந்துள்ள எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஏட்ரியன் டேன்ட்லி, பீட் மாரவிச், ஜான் ஸ்டாக்டன், கார்ல் மலோன், டெரான் வில்லியம்ஸ், கார்லோஸ் பூசர். மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (Memphis Grizzlies) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் அமைந்துள்ள ஃபெடெக்ஸ் ஃபோரம் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாவ் கசோல், மைக் பிபி, ஷரீஃப் அப்துர்-ரஹீம், ரூடி கே. ஷார்லட் பாப்கேட்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் (Charlotte Bobcats) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வட கரோலினா மாநிலத்தில் ஷார்லட் நகரில் அமைந்துள்ள ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த 2004-ல் ஏற்பட்ட அணி என். பி. ஏ.-இல் மிகவும் புதுசான அணி. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் எமெக்கா ஓகஃபோர், ஏடம் மாரிசன், ரேமன்ட் ஃபெல்டன், ஜெரல்ட் வாலஸ். ஆபர்ன் ஹில்ஸ் ஆபர்ன் ஹில்ஸ் என்பது அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டிட்ராயிட் நகரின் ஒரு புறநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 19,837 மக்கள் வாழ்கிறார்கள். இட்ரென்டன் இட்ரென்டன் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 84,913 மக்கள் வாழ்கிறார்கள். கிரிஸ் பால் கிரிஸ்தஃபர் இமேன்யுவல் பால் அல்லது கிரிஸ் பால் ("Christopher Emmanuel Paul", பிறப்பு - மே 6, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ஜேசன் கிட் ஜேசன் ஃபிரெடெரிக் கிட் ("Jason Frederick Kidd", பிறப்பு - மார்ச் 23, 1973) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டாலஸ் மேவரிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ரே ஏலன் வால்டர் ரே ஏலன் ("Walter Ray Allen", பிறப்பு - ஜூலை 20, 1975) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். பேரன் டேவிஸ் பேரன் வால்டர் லூயிஸ் டேவிஸ் (ஆங்கிலம்:Baron Walter Louis Davis, பிறப்பு - ஏப்ரல் 13, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ரஷீத் வாலஸ் ரஷீத் அப்துல் வாலஸ் (ஆங்கிலம்:Rasheed Abdul Wallace, பிறப்பு - செப்டம்பர் 17, 1974) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்) ஆல்பெனி அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 95,658 மக்கள் வாழ்கிறார்கள். மேடிசன் மேடிசன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 223,389 மக்கள் வாழ்கிறார்கள். கில்பர்ட் அரீனஸ் கில்பர்ட் ஜே அரீனஸ் (ஆங்கிலம்:Gilbert Jay Arenas, பிறப்பு - ஜனவரி 6, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். பாவ் கசோல் பாவ் கசோல் சாயேஸ் (எசுப்பானிய மொழி:Pau Gasol Sáez, பிறப்பு - ஜூலை 6, 1980) எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். டெர்க் நொவிட்ச்கி டெர்க் வெர்னர் நொவிட்ச்கி (ஜெர்மன் மொழி:Dirk Werner Nowitzki, பிறப்பு - ஜூன் 19, 1978) ஒரு ஜெர்மன் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டாலஸ் மேவரிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். கிரிஸ் பாஷ் கிரிஸ்தஃபர் வெசன் பாஷ் (ஆங்கிலம்:Christopher Wesson Bosh, பிறப்பு - மார்ச் 24, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். எமெக்கா ஓகஃபோர் சுக்வுயெமெக்கா ந்டுபுயிசி ஓகஃபோர் என்னும் எமெக்கா ஓகஃபோர் (ஆங்கிலம்:Chukwuemeka Ndubuisi Okafor, பிறப்பு - செப்டம்பர் 28, 1982) அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஷார்லட் பாப்கேட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். டெரான் வில்லியம்ஸ் டெரான் மைக்கல் வில்லியம்ஸ் (ஆங்கிலம்:Deron Michael Williams, பிறப்பு - ஜூன் 26, 1984) அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் யூட்டா ஜேஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் இலினொய் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஆடியுள்ளார். மைக் பிபி மைக் பிபி (ஆங்கிலம்:Mike Bibby, பிறப்பு - மே 13, 1978) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் அட்லான்டா ஹாக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் இரண்டாம் அலெக்சாந்தர் நிக்கலாயவிச் ("Alexander (Aleksandr) II Nikolaevich", ரஷ்ய மொழி: "Александр II Николаевич", மாஸ்கோ, ஏப்ரல் 29, 1818 – மார்ச் 13, 1881 சென் பீட்டர்ஸ்பேர்க்) ரஷ்யாவின் பேரரசனாக மார்ச் 3, 1855 முதல் 1881 இல் படுகொலை செய்யப்படும் வரையில் இருந்தவன். 1867 வரையில் ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பாடும் வரையில் பின்லாந்து நாட்டின் இளவரசனாகவும் போலந்து நாட்டின் மன்னனாகவும் இருந்தவன். செரோக்கீ செரோக்கீ ("Cherokee") எனப்படுவோர் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830களில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக ஓசார்க் சமவெளிக்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே. ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர், தொல்குடி அமெரிக்கத் தேசிய இனங்களான செரோக்கீ, சிக்காசோ, சொக்ட்டோ, கிறீக், செமினோலே ஆகிய ஐந்து பழங்குடிகளை ஒருங்கே குறிக்கிறது. அக்காலத்தில் ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் பழக்க வழக்கங்களை இவர்கள் பின்பற்றியதாலும், தமது அயலவருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததாலும் இவர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டனர். அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு, குறிப்பாகப் பிற்காலத்து ஒக்லஹோமாவுக்கு இடம் பெயர்க்கப்படும் முன், இவர்கள் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். இன்று பல அமெரிக்க இந்தியர்கள், சிறப்பாக மேற்படி ஐந்து இனங்கள் தவிர்ந்த ஏனையோர் "ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்" என்னும் பெயர் இனவாதத் தன்மை கொண்டது என எண்ணுகின்றனர். குறிப்பிட்ட ஐந்து பழங்குடியினருக்கு இவ்வாறு பெயரிடுவதன் மூலம் ஏனைய பழங்குடியினர் நாகரிகம் அற்றவர்கள் என்னும் தொனி தெளிவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது மட்டுமன்றி மேற்படி ஐந்து பழங்குடிகளும் தங்கள் சொந்தப் பண்பாட்டைக் கைக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் அற்றவர்களாக இருந்தார்கள் என்றும், ஐரோப்பியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னரே நாகரிகம் அடைந்தார்கள் என்றும் இப்பெயர் சொல்கிறது. இப் பழங்குடிகள், தமது தாயகப் பகுதிகளான மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பக்கமிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். இந்த இடப்பெயர்வுகள், மத்திய அரசின் சட்டவாக்கங்களின் துணையுடன், பல பத்தாண்டுகளாக நடைபெற்று, இம்மக்கள், அன்று இந்தியப் பகுதி என அழைக்கப்பட்ட, இன்றைய ஒக்லஹோமாவின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இவற்றுள் மிகவும் மோசமான இடப்பெயர்வு 1838 ஆம் ஆண்டின் கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனப்பட்ட இடப்பெயர்வு ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், இந்த ஐந்து பழங்குடிகளும், பிரிந்து போரிட்டனர். சொக்ட்டோ, சிக்காசோ என்னும் இரண்டு பழங்குடிகளும் கூட்டமைப்பின் பக்கம் நின்றனர். கிறீக், செமினோலே, செரோக்கி பழங்குடிகள் தங்களுக்குள் பிரிந்து ஒரு பிரிவினர் ஐக்கிய அமெரிக்காவின் பக்கமும் மற்றப் பிரிவினர் கூட்டமைப்பையும் ஆதரித்து நின்றனர். டுவைட் ஹவர்ட் டுவைட் டேவிட் ஹவர்ட் (ஆங்கிலம்:Dwight David Howard, பிறப்பு - டிசம்பர் 8, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஒர்லான்டோ மேஜிக் என்ற அணியில் விளையாடுகிறார். பால் பியர்ஸ் பால் ஆந்தனி பியர்ஸ் (ஆங்கிலம்:Paul Anthony Pierce, பிறப்பு - அக்டோபர் 13, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். செல்டிக்ஸ் வெற்றிபெற்ற 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் இவர் என்.பி.ஏ. முடிவுப்போட்டிகள் மிகவும் முக்கியமான வீரர் விருதை வெற்றிபெற்றுள்ளார். செயின்ட் பால் (மினசோட்டா) செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள். அகஸ்தா (மேய்ன்) அகஸ்தா அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 24,260 மக்கள் வாழ்கிறார்கள். அனாபொலிஸ் அனாபொலிஸ் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2004 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 36,217 மக்கள் வாழ்கிறார்கள். ஆஸ்டின் ஆஸ்டின் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 715,893 மக்கள் வாழ்கிறார்கள். லிட்டில் ராக் லிட்டில் ராக் அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 184,422 மக்கள் வாழ்கிறார்கள். பியேர் பியேர் அமெரிக்காவின் தென் டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 13,876 மக்கள் வாழ்கிறார்கள். ஹெலேனா ஹெலேனா அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 25,780 மக்கள் வாழ்கிறார்கள். டோவர் டோவர் அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 32,135 மக்கள் வாழ்கிறார்கள். ஒலிம்பியா, வாஷிங்டன் ஒலிம்பியா அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,514 மக்கள் வாழ்கிறார்கள். டி மொயின் டி மொயின் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 203433 மக்கள் வாழ்கிறார்கள். கொலம்பியா (தென் கரொலைனா) கொலம்பியா அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள். பொய்சி பொய்சி அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 211,473 மக்கள் வாழ்கிறார்கள். தலகசி தலகசி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 159,012 மக்கள் வாழ்கிறார்கள். ராலீ ராலீ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 374,320 மக்கள் வாழ்கிறார்கள். ஹாரிஸ்பர்க் ஹாரிஸ்பர்க் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 48,950 மக்கள் வாழ்கிறார்கள். ஹார்ட்பர்ட் ஹார்ட்பர்ட் அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 124,512 மக்கள் வாழ்கிறார்கள். கொலம்பஸ் (ஒகையோ) கொலம்பஸ் அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 733,203 மக்கள் வாழ்கிறார்கள். பிஸ்மார்க் பிஸ்மார்க் அமெரிக்காவின் வட டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 58,333 மக்கள் வாழ்கிறார்கள். ஜாக்சன் (மிசிசிப்பி) ஜாக்சன் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 176,614 மக்கள் வாழ்கிறார்கள். கார்சன் நகரம் கார்சன் நகரம் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 57,701 மக்கள் வாழ்கிறார்கள். ஓக்லஹோமா நகரம் ஓக்லஹோமா நகரம் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 537,734 மக்கள் வாழ்கிறார்கள். டொபீகா டொபீகா அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 122,113 மக்கள் வாழ்கிறார்கள். ஜெபர்சன் நகரம் ஜெபர்சன் நகரம் அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 39,274 மக்கள் வாழ்கிறார்கள். லிங்கன் (நெப்ரஸ்கா) லிங்கன் அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 241,167 மக்கள் வாழ்கிறார்கள். பாடன் ரூஜ் பாடன் ரூஜ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2004 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 229,553 மக்கள் வாழ்கிறார்கள். பிராங்போர்ட் (கென்டக்கி) பிராங்போர்ட் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 27,741 மக்கள் வாழ்கிறார்கள். காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) காங்கர்ட் அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,378 மக்கள் வாழ்கிறார்கள். இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) இசுப்பிரிங்ஃபீல்ட் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,482 மக்கள் வாழ்கிறார்கள். பிராவிடென்ஸ் பிராவிடென்ஸ் அமெரிக்காவின் றோட் தீவு மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 175,255 மக்கள் வாழ்கிறார்கள். லான்சிங் லான்சிங் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 119,128 மக்கள் வாழ்கிறார்கள். சாந்தா பே சான்டா ஃபே ("Santa Fe") அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 72,056 மக்கள் வாழ்கிறார்கள். நாஷ்வில் நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள். இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும். இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும். ஹொனலுலு ஹொனலுலு அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 377,357 மக்கள் வாழ்கிறார்கள். செயென் செயென் அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 55,362 மக்கள் வாழ்கிறார்கள். ரிச்மண்ட் (வர்ஜீனியா) ரிச்மன்ட் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 192,913 மக்கள் வாழ்கிறார்கள். மான்ட்பீலியர் மான்ட்பீலியர் அமெரிக்காவின் வெர்மான்ட் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 8,035 மக்கள் வாழ்கிறார்கள். சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) சார்ல்ஸ்டன் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 51,342 மக்கள் வாழ்கிறார்கள். மான்ட்கமரி மான்ட்கமரி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 205764 மக்கள் வாழ்கிறார்கள். ஜூனோ ஜூனோ அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 30,987 மக்கள் வாழ்கிறார்கள். சார்ல்ஸ் பார்க்லி சார்ல்ஸ் வேட் பார்க்லி ("Charles Wade Barkley", பிறப்பு - பெப்ரவரி 20, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2000 வரை விளையாடினார். 1984 முதல் 1992 வரை பிலடெல்பியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1992 முதல் 1996 வரை பீனிக்ஸ் சன்ஸ் அணியில் விளையாடினார். 1996 முதல் 2000 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார். ஆபர்ன் பல்கலைக்கழகம் ஆபர்ன் பல்கலைக்கழகம் ("Auburn University"), ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். பென் வாலஸ் பென் வாலஸ் (ஆங்கிலம்:Ben Wallace, பிறப்பு - செப்டம்பர் 10, 1974) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். கரீம் அப்துல்-ஜப்பார் கரீம் அப்துல்-ஜப்பார் ("Kareem Abdul Jabbar", பிறப்பு - ஏப்ரல் 16, 1947) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவரின் பிரந்த பெயர் ஃபெர்டினாந்ட் லூயிஸ் அல்சின்டொர் (Ferdinand Lewis Alcindor), ஆனால் இஸ்லாம் நம்பிக்கை சேரருத்துக்கு பிரகு பெயரை மாற்றினார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1969 முதல் 1989 வரை விளையாடினார். 1969 முதல் 1975 வரை மில்வாகி பக்ஸ் அணியில் விளையாடினார். 1975 முதல் 1989 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். கண்ணீர்த் தடங்கள் 1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, "நுன்னா டவுல் இசுன்யி" எனப்படுகின்றது. இதன் பொருள் "அவர்கள் அழுத தடம்" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். "கண்ணீர்த் தடங்கள்" என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது. ஒசியோலா ஒசியோலா, தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான். அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவர். பின்னரே அவனது தாய் ஆங்கிலேயரான வில்லியம் பவெலை மணந்து கொண்டாராம். இதனால் பல ஆங்கிலேயர் இளம் ஒசியோலாவை பில்லி பவெல் என்றே அழைத்து வந்தனர். ஒசியோலா, தான் ஒரு முழு முஸ்கோஜீ எனக் குறிப்பிட்டாலும், அவனது தலை முடி எனக் கருதப்படும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட மரபியல் சோதனைகள் அவன் ஒரு கலப்பு இனத்தவன் எனவே காட்டுகின்றன. ஒசியோலாவின் தாய்வழிப் பேரனான ஜேம்ஸ் மக்குயீன் (James McQueen) அலபாமாவில் இருந்த கிறீக் (Creek) இனத்தவருடன் வணிகம் புரிந்த தொடக்ககால ஆங்கில வணிகருள் ஒருவர். 1714 ஆம் ஆண்டளவில் அலபாமாவிலேயே தங்கிவிட்ட அவர், அடுத்த பல பத்தாண்டுகளுகளாக ஒரு வணிகராகவும், கிறீக் இனத்தவரின் தலைவராகவும் விளங்கினார். ஜேம்ஸ் மக்குயீனின் மகளான ஆன் என்பவரை ஜோஸ் காப்பிங்கெர் மணந்து கொண்டார். அவர்கள் இருவரதும் மகளே ஒசியோலாவின் தாயார் ஆவார். 1814 ஆம் ஆண்டில் ஒசியோலாவும் அவவது தாயும் ஏனைய கிறீக் இனத்தவருடன் புளோரிடாவுக்கு வந்தனர். 1832 ஆம் ஆண்டில் சில செமினோலேத் தலைவர்கள், தமது தாயகத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உள்ள நிலப்பகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். மிக்கனோப்பி உட்பட்ட ஐந்து முக்கியமான செமினோலே தலைவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதற்குப் பதிலடியாக, தொல்குடி அமெரிக்கர்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதியான விலே தாம்சன் என்பான் அத் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் பணித்தான். செமினோலேக்களுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியபோது அவர்களுக்கான துப்பாக்கிகள், அவற்றுக்கான குண்டுகள் என்பவற்றை செமினோலேக்களுக்கு விற்பதையும் அவன் தடை செய்தான். ஒசியோலா, ஒரு இளம் வீரனாக வெள்ளைக்காரரால் அறியப்படத் தொடங்கிய காலம் அது. தாம்சனின் நடவடிக்கைகளால் ஒசியோலா கோபம் அடைந்தான். செமியோலேக்களை தாம்சன் அடிமைகளைப் போல் நடத்துவதாக அவன் எண்ணினான். ஒசியோலாவின் மனைவி ஒரு கறுப்பு இனப்பெண். அவன் அடிமைத் தனத்தை தனது இறுதிவரை எதிர்த்து வந்தான். இருந்தும் தாம்சன் ஒசியோலாவைத் தனது நண்பனாகக் கருதி அவனுக்கு ஒரு சுழல் துப்பாக்கியையும் கொடுத்தான். பின்னர், ஒசியோலா குழப்பங்களை உண்டாக்குகிறான் என்னும் குற்றச்சாட்டில் அவனைக் கிங் கோட்டையில் ஓரிரவு அடைத்து வத்தான். விடுதலை பெறுவதற்காக, அரசாங்கம் சில செமினோலேத் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிப்பதாகக் கூறி அடுத்த நாளே அவன் வெளியே வந்தான். 1835 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி ஒசியோலாவும் அவனைப் பின்பற்றியோர் சிலரும் மறைந்திருந்து தாம்சனையும், வேறு ஆறு பேரையும் கிங் கோட்டைக்கு வெளியே சுட்டுக் கொன்றனர். 1837 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, அமெரிக்கத் தளபதி தாமஸ் சிட்னி ஜெசப் என்பவனின் ஆணையின் பேரில், ஒசியோலாவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு என ஏமாற்றி அழைத்துக் கைது செய்தனர். அவன் புளோரிடாவில் அகஸ்ட்டீன் என்னும் இடத்தில் இருந்த, மரியன் கோட்டையில் அடைக்கப்பட்டான். இவ்வாறு ஒசியோலாவை ஏமாற்றிக் கைது செய்தமை வெள்ளையர் மத்தியிலும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த டிசம்பரில் ஒசியோலாவும் அவனது ஆதரவாளர்களும் தென் கரோலினாவில் உள்ள மோல்ட்ரீ கோட்டைக்கு மாற்றப்பட்டனர். அங்கே ஜார்ஜ் கட்லின் என்னும் ஓவியர் ஒசியோலாவைச் சந்தித்து அவனது படத்தை வரைவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அங்கே அவ்வோவியர் இரண்டு படங்களை வரைந்தார். இந்தப் படங்களுக்குப் பின்னர் இப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வரையப்பட்டன. 1838 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி, பிடிபட்ட மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே, மலேரியா நோய் வாய்ப்பட்ட ஒசியோலா சிறையிலேயே மரணம் அடைந்தான். அவர் படைத்துறை மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டான். ஒசியோலாவின் மறைவுக்குப் பின்னர், படை மருத்துவரான பிரடெரிக் வீடன் என்பவர், அவனது தலையை எடுத்துப் பதப்படுத்தி வைத்தார். அவனது முகத்தை அச்செடுத்து வைக்கவும் ஏனைய செமினோலேத் தலைவர்களை உடன்படச் செய்தார். அத்துடன் ஒசியோலா அவருக்குக் கொடுத்த பல பொருட்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டார். கப்டன் பிட்கைன் மொரிசன் (Pitcairn Morrison) என்பவன், இந்த முக அச்சையும், பிற பொருட்களையும் எடுத்து வாஷிங்டனில் இருந்த ஒரு படை அலுவலருக்கு அனுப்பினான். 1885 ஆம் ஆண்டளவில் இப் பொருட்கள் சிமித்சோனியன் நிறுவனத்தின் மானிடவியல் சேமிப்புகளுடன் சேர்க்கப்பட்டன. இன்றும் அப்பொருட்கள் அங்கே உள்ளன. மருத்துவர் வீடன் ஒசியோலாவின் பதப்படுத்தப்பட்ட தலையைத் தனது மருமகனான டானியல் வைட்ஹர்ஸ்ட் என்பவருக்கும் கொடுத்தார். அது பின்னர் 1843 இல் நியூ யார்க் மருத்துவரான வலண்டைன் மாட் (Valentine Mott) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தனது அருங்காட்சியகத்தில் வைத்தார். 1866 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அத்தலை அழிந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது. ஓசனிச்சிட்டு ஓசனிச்சிட்டுகள் ("Hummingbird") என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக்கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு) வகைகள் உள்ளன. . உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவையாகிய தேனி ஓசனிச்சிட்டு இவ்வினத்தைச் சேர்ந்த பறவை ஆகும். கியூபாவில் வாழும் இப்பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 கிராம் மட்டுமே. ஓசனிச்சிட்டுகளின் அறிவியல் பெயர் டிரோச்சிலிடீ (Trochilidae). "டிரோச்சிலசு" (trochilus, τροχιλός) என்னும் கிரேக்க மொழிச்சொல் "ஓடு" (விரைந்தோடு) என்னும் பொருள் கொண்டது; இதிலிருந்து இச்சொல் ஆக்கப்பட்டது. இதனைத் தமிழில் "சடுதிப்புள்" துணைக்குடும்பம் என்று தமிழில் வழங்குகின்றோம். தமிழில் ஓசனிச்சிட்டை "முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்கார சிட்டு" என்றும் அழைக்கிறார்கள். இப்பறவையின் இதயம் நிமிடத்திற்க்கு 1260 முறை துடிக்கிறது. இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே "பின்னோக்கியும்" நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. ஓசனிச்சிட்டுகள் அந்தரத்தில் ஓரிடத்திலேயே நின்று பறப்பதற்கு "ஞாற்சி" (அல்லது "நாற்சி") என்று பெயர். இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன. சிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய, குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு, குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு (கீழ்த்தாடை) பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது. ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும். இதில் உள்ள 320 இனங்களில் "சுண்டு ஓசனிச்சிட்டு" மிகச் சிறியது; ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது "பட்டகோன கிகா" (Patagona gigas) என்னும் அறிவியல் பெயர் கொண்ட "பேரோசனிச்சிட்டு" ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்கெந்தீனா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும். ஓசனிச்சிட்டுகளில் ஒரு வகையாகிய தேனி ஓசனிச்சிட்டு, அதனது சிறிதான உடல் அமைப்பின் காரணமாக, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 5 சென்டிமீட்டர் நீளத்தையும், சுமார் 2 கிராம் எடையையும் கொண்ட இந்த ஓசனிச்சிட்டு, பறவைகளிடையே மிகவும் சிறிதான பறவை எனும் சாதனையைப் படைத்துள்ளது. கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை, இப்பகுப்பில் மட்டுமின்றி மேலும் உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது. ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து, அமினோக் காடிகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: செம்பருத்திப் பூ, பாச்சிசுடாச்சிசு லூட்டியா ("Pachystachys lutea") , மோனார்டா ("Monarda") ஃஎலியாக்கோனியா ("Heliconia"), படிலையா ("Buddleia"), புரோமெலியாடு ("bromeliad"), மணிவாழை (அல்லது கல்வாழை), வெர்பேனா ("verbena"), தேன்குழல்பூ ("honeysuckle"), சால்வியா ("salvia"), பெண்ட்டா ("pentas"), ஃவூக்சியா ("fuchsia"), பலவகையான பென்ஸ்டெமோன் ("penstemon") பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது. ஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011). இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action) நீர்ம வடிவான தேனை உறிஞ்சுகின்றது என்று 1833 முதல் பறவையறிஞர்கள் கூறிவந்தனர். ஆனால் அப்படி இல்லை என்று இப்பொழுது (2011 இல்) கண்டறிந்துள்ளனர். இதன் நாக்கு பிளவுடையது. இந்தப் பிளவுபட்ட இரட்டை நாக்கில் மிக மெல்லிய இழைகள் உள்ளன. இந்த இழைகள் ஒருவாறு வளைத்து சுழற்றும் இயக்கத்தால் தேன் கவர்ந்து வருகின்றது என்று அறிந்துள்ளனர். ஓசனிச்சிட்டுகளை ஆய்வுச்சாலைகளில் உள்ள "காற்றுக்குகைகளில்" பறக்கவிட்டு, விரைந்தியங்கும் ஒளிப்படக்கருவிகளின் துணையுடன் அறிவியலாளர்கள், அவற்றின் பறக்கும் இயல்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டுள்ளனர். இப்பறவைகள் தம் இறக்கைகளைக் கீழ்நோக்கி அடிக்கும் பொழுது 75% தன் உடலைத்தாங்கும் திறனும், மேல் நோக்கி இறக்கைகளை அடிக்கும்பொழுது 25% தாங்கு திறனும் கொண்டுள்ளதாக அறிகின்றனர். இதனால் இது அந்தரத்தில் நிற்கும் ஞாற்சியின் பொழுது இதன் இயக்கம் மற்ற பறக்கும் பூச்சிகளின் (எ.கா: பட்டாம்பூச்சி) இறக்கை இயக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது. பெரிய ஓசனிச்சிட்டுகளாகிய பேரோசனிச்சிட்டுகள் நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, ஆனால் சிறிய வகை ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 60-80 முறை அடிக்கின்றன. நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன. தடை ஆட்டம் தடை ஆட்டம் (Break dance) கிப் கொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். "தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்." கனெடிகட் பல்கலைக்கழகம் கனெடிகட் பல்கலைக்கழகம் ("University of Connecticut"), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். சான் பிரான்சிஸ்கோ சான் பிரான்சிஸ்கோ (San Francisco) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு முதன்மையான நகரமாகும். புனித ஃபிரான்சிஸ் நினைவாக இந்நகரம் பெயரிடப்பட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி ("University of Calfornia, Berkeley"), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இங்கு ஒரு தமிழ்த் துறை இருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்து துணை கழகங்களில் இதுவும் ஒன்று. இங்கு படித்தவர்களும், பணியாற்றியவர்களும் உட்பட 72 பேர் நோபல் பரிசுகளையும், 9 உல்ப் விருதுகளும், 7 பீல்டு பதக்கங்களும், 15 டூரிங் விருதுகளும், 45 மெக்கார்தர் பரிசுகளும், 11 புலிட்சர் விருதுகளும் பெற்றுள்ளனர். இங்குள்ள ஆய்வுக்கூடத்தில் 6 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகளவில் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இதுவும் ஒன்று. 1868 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போதைய பெர்க்லி வளாகம் அமைந்துள்ள இடம், 1868 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் தனியாரிடம் இருந்து பெறப்பட்டது. பின்னர், அரசு பல்கலைக்கழகத் துறைகளுடன் இணைக்கப்பட்டது. இதற்கு யேல் பல்கலைக்கழகத்துடன் கல்வியளவில் தொடர்புண்டு. இந்த வளாகத்தின் பரப்பளவு 1,232 ஏக்கர்கள் இருக்கும். லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம், லாரன்ஸ் அறிவியல் கழகம், விண்வெளி ஆய்வு மையம், கணிதவியல் ஆய்வுக் கழகம் உள்ளிட்டவை இங்குள்ளன. தாவரவியல் தோட்டமும், ஓய்வு மையமும் இங்குள்ளன. வளாகத்திற்கு வெளியிலும் ஆய்வுக்கூடங்கள் உள்ளன. இது ஆய்வு மேற்கொள்ளுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டது. மேற்கத்திய பள்ளி, கல்லூரிகளின் கூட்டமைப்பினால் அங்கிகரிக்கப்பட்டது. இது அரையாண்டு கால அளவுகளில் கல்வி வழங்குகிறது. இங்கு 106 வகை இளநிலைப் படிப்புகளும், 88 முதுநிலைப் படிப்புகளும், 97 ஆய்வுப் படிப்புகளும், 31 துறை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. என துறைக்கான தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மின்பொறியியல், கணிப்பொறியியல், அரசியல், சுற்றுச்சூழலியல், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை இளநிலையில் அதிகம் பேர் படிக்கின்றனர். வேளாண் அறிவியல், வானியற்பியல், கட்டிடப் பொறியியல், கணிப்பொறியியல், ஆங்கிலம், ஜெர்மன், கணிதம், இயந்திரப் பொறியியல், உயிரிவேதியியல், மரபியல், இயற்பியல், அரசியல் ஆகியன அதிகம் பேரால் கற்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் ஆகும். பன்னாட்டு தரவரிகளை வெளியிடும் நாளேடுகள், அமெரிக்க அளவில் முன்னணியில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும், உலகளவிலும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளன. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 26 பேர் கொண்ட குழுவிடம் உள்ளது. இவர்களில் பதினெட்டு பேரை கலிபோர்னிய மாகாண ஆளுநர் நியமிப்பார். 7 முன்னாள் உறுப்பினர்களும், ஒரு மாணவ உறுப்பினரும் இருப்பர். பின்னாளில், பல்கலைக்கழகத்திற்கான தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. பெர்க்லியின் 130க்கும் அதிகமான துறைகளையும், படிப்புகளையும், 14 கல்லூரிகளில் வழங்குகின்றனர். இங்கு மருத்துவத் துறை இல்லை. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ வளாகத்தின் கல்வி மையம், இங்கு ஒரு மருத்துவத் துறைப் பள்ளியை தொடங்கியுள்ளது. இங்கு 24,700 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பண உதவிகளை தனியாரும், அரசு நிறுவனங்களும் வழங்குகின்றன. மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளிக்கப்படுகிறது. இங்கு இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இளநிலை மாணவர்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுநிலையும் பயில்கின்றனர். இவர்களில் வேற்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கணிசமான அளவினர் ஆவர். மாணர்களை உள்ளடக்கிய 1700 குழுக்கள் பல உள்ளன. இவை சமூக, அறிவியல், பண்பாடு தொடர்பானவை. தி டெய்லி கலிபோர்னியன் என்ற மாணவர் இதழும், கால்க்ஸ் என்ற வானொலி நிலையமும் குறிப்பிடத்தக்கவை. இங்கு 32 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 1.1 கோடி நூல்களும், 70, 000 பாடத் தலைப்புகளும் உள்ளன. அமெரிக்க வரலாற்றைப் பறைசாற்றும் நூல்களும் இங்குள்ளன. இங்குள்ள மாணவர் குழுவிற்கு கலிபோர்னியா கோல்டன் பியர்ஸ் என்று பெயர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுக்கின்றனர். பேஸ்பால், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், டென்னிஸ், ஓட்டப்பந்தயம், ஜிம்நாஸ்டிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளும் அவற்றிற்கான குழுக்களும் உள்ளன. வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (பி.எஸ் 1931, பி.எச்.டி 1933) ரேடியோ ஆக்டிவ் கார்பனின் காலத்தை கண்டுபிடித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) யூ.சி.எல்.ஏ. ("UCLA"), அல்லது கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (University of California, Los Angeles) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில் ("University of North Carolina at Chapel Hill, UNC"), அல்லது யூ.என்.சி., ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் டியுக் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா டெக் (Georgia Tech) என்று பொதுவாக அழைக்கப்படும் ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ("Georgia Institute of Technology"), ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். வேக் ஃபாரச்ட் பல்கலைக்கழகம் வேக் ஃபாரச்ட் பல்கலைக்கழகம் ("Wake Forest University"), ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் ஒரு பல்கலைக்கழகமாகும். அரிசோனா பல்கலைக்கழகம் அரிசோனா பல்கலைக்கழகம் ("University of Arizona"), ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் ("Georgetown University"), ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன், டி. சியில் ஒரு இயேசு சபையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகமாகும். கேன்சஸ் பல்கலைக்கழகம் கேன்சஸ் பல்கலைக்கழகம் ("University of Kansas"), ஐக்கிய அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் எல். எஸ். யூ. (LSU) என்று பொதுவாக அழைக்கப்படும் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் ("Louisiana State University"), ஐக்கிய அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் ("Syracuse University"), ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன. மார்க்கெட் பல்கலைக்கழகம் மார்க்கெட் பல்கலைக்கழகம் ("Marquette University"), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் ஒரு ஜெசுயிட் பல்கலைக்கழகமாகும். இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்) இலினொய் பல்கலைக்கழகம் - அர்பானா-சாம்பேன் ("University of Illinois - Urbana-Champaign"), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். வர்ஜீனியா ஒன்றியப் பல்கலைக்கழகம் வர்ஜீனியா ஒன்றியம் பல்கலைக்கழகம் ("Virginia Union University"), ஐக்கிய அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் ஒரு வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்கர்கள்ளுக்கான பல்கலைக்கழகம் ஆகும். சான்டா கிலாரா பல்கலைக்கழகம் சான்டா கிலாரா பல்கலைக்கழகம் ("Santa Clara University"), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஒரு யேசு சபையுடன் இணைந்த பல்கலைக்கழகமாகும். செமினோலே செமினோலே என்பது, தொடக்கத்தில், புளோரிடாவிலும், தற்போது புளோரிடாவிலும், ஒக்லஹோமாவிலும் வாழும் தொல்குடி அமெரிக்க மக்களைக் குறிக்கும். செமினோலே தேசிய இனம் 18 ஆம் நூற்றாண்டளவில் உருவானது. இது, பல இனக்குழுக்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஜோர்ஜியா, மிஸ்சிசிப்பி, அலபாமா ஆகிய இடங்களைச் சேர்ந்த தொல்குடி அமெரிக்கர், முக்கியமாகக் கிறீக் தேசிய இனம்; தென் கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகளில் அடிமைத் தளையில் இருந்து தப்பிய ஆபிரிக்க அமெரிக்கர் என்போர் இவ்வினத்தாருள் அடங்குவர். ஒக்லஹோமாத் தேசிய இனத்தவர் உட்பட ஏறத்தாழ 3,000 செமினோலேக்கள் மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் பக்கம் துரத்தப்பட்டபோது, பல புதிய உறுப்பினர்களையும் அவர்கள் வழியில் இணைத்துக் கொண்டனர். சுமார் 300 - 500 செமினோலேக்கள், புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் தங்கி இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடிவந்தனர். இப் போரில் சுமார் 1,500 வரையான அமெரிக்கப் படையினர் இறந்து போனதாகச் சொல்லப்படுகின்றது. செமினோலேக்கள் என்றும் ஐக்கிய அமெரிக்க அரசிடம் சரணடையவில்லை. இதனால் புளோரிடாவின் செமினோலேக்கள் தங்களை "அடங்கா மக்கள்" (Unconquered People) எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். புளோரிடா செமினோலேக்கள் மட்டுமே ஐக்கிய அமெரிக்க அரசுடன் முறையான ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளாத அமெரிக்க இந்தியப் பழங்குடியாகும். இன்று அவர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது தன்னாதிக்கம் உண்டு. அவர்களுடைய பொருளாதாரம், புகையிலை வணிகம், சுற்றுலா, சூதாட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. புளோரிடாவை எசுப்பானியர்கள் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த தொல்குடியினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். பிரித்தானியர், 1763 ஆம் ஆண்டில் புளோரிடாவைக் கைப்பற்றியபோது, தப்பிய சிலரையும் எசுப்பானியர் கியூபாவுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில், கீழ் கிறீக் தேசிய இன மக்கள், மேல் கிறீக் மக்களின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்த தொல்குடிகளுடன் கலந்தனர். அங்கிருந்த தொல்குடிகளுள், யமாசிப் போரில் அகதிகளாக இடம்பெயர்ந்த யூச்சி, யமாசி போன்ற பிற குடிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் செமினோலேக்கள் என அழைக்கப்பட்டனர். செமினோலே எனும் சொல், "ஓடியவர்கள்" எனப்பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லிலிருந்து வந்த, கிறீக் மொழிச் சொல்லான "சிமானோ-லி" என்பதிலிருந்து உருவானது. செமினோலேக்கள் ஒரு கலப்பு இனத்தவராவர். ஜார்ஜியாவிலிருந்து வந்த கீழ் கிறீக் இனத்தவர், மிக்காசுக்கி மொழி பேசும் முஸ்கோஜிகள், தப்பிய ஆபிரிக்க அமெரிக்க அடிமைகள், குறைந்த அளவில் பிற அமெரிக்க இந்தியப் பழங்குடி இனத்தவர் மற்றும் ஐரோப்பியர் என்போர் இக் கலவையில் அடங்குவர். இணைந்த செமினோலேக்கள் இரண்டு மொழிகளைப் பேசினர். அவை தொல்குடி அமெரிக்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பு மொழிகளான கிறீக், மிக்காசுக்கி என்பனவாகும். மொழி அடிப்படையில் மட்டுமே தற்கால புளோரிடாவின் மிக்கோசுக்கி பழங்குடிகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். ரெஜி மிலர் ரெஜினல்ட் வெயின் மிலர் அல்லது ரெஜி மிலர் ("Reginald Wayne Miller", பிறப்பு - ஆகஸ்டு 24, 1965) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார். சராசரியாக 18.2 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். இவர் என். பி. ஏ.-இல் 1987 முதல் 2005 வரை இந்தியானா பேசர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நான்கு ஆண்டு யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார். அகீம் ஒலாஜுவான் அகீம் அப்துல் ஒலாஜுவான் ("Hakeem Abdul Olajuwon", பிறப்பு - ஜனவரி 21, 1963) முன்னாள் நைஜீரியாக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2001 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். 2001 முதல் 2002 வரை டொராண்டோ ராப்டர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் ஒரு இசுலாமியர் ஆவார்; என். பி. ஏ. போட்டிகளில் விளையாடும்பொழுது ரமழான் விரதத்தை தழுவிநடத்தார். ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் ("University of Houston"), ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். வின்ஸ் கார்டர் வின்சென்ட் லமார் கார்டர் அல்லது வின்ஸ் கார்டர் (ஆங்கிலம்:Vincent Lamar Carter, பிறப்பு - ஜனவரி 26, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யக்கூடிய வீரர்களில் இவர் ஒருவர். டெய்டோனா கடற்கரை (நகரம்) டெய்டோனா கடற்கரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒரு நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 64,421 மக்கள் வாழ்கிறார்கள். இப்படிக்கு ரோஸ் இப்படிக்கு ரோஸ் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாக மக்கள் பேச தயங்கும் தலைப்புகளை விவாதித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெயர் ரோஸ். இவர் ஒரு திருநங்கை ஆவார். The show is telecast at every Thursday at 11:PM IST. சான்சி பிலப்ஸ் சான்சி ரே பிலப்ஸ் (ஆங்கிலம்:Chauncey Ray Billups, பிறப்பு - செப்டம்பர் 25, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்) கொலராடோ பல்கலைக்கழகம் - போல்டர் ("University of Colorado - Boulder"), ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். கின்ஷாசா கின்ஷாசா காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகரம் ஆகும். இதுவும் நாட்டின் முதலாம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் காங்கோ நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 7,017,000 ஆகும். கின்ஷாசா தற்போது நகர்ப்புற பகுதியாக உள்ளது, 2014 ஆம் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்டிருக்கிறது. கின்ஷாசா நகரம் காங்கோ மக்களாட்சி குடியரசுவின் 26 மாகாணங்களின் ஒன்றாகும். கெய்ரோ மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களுக்கு பின் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமாக கின்ஷாசா உள்ளது. இது உலகின் மிகப்பெரிய பிரான்கோபோன் நகர்ப்புற பகுதியாகும் (சமீபத்தில் பாரிசில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது). பிரஞ்சு மொழி, பள்ளிகள், செய்தித்தாள்கள், பொது சேவைகள், மற்றும் உயர் இறுதி வர்த்தகம் ஆகியவற்றில் பேசப்படும் அரசு அலுவலக மொழியாகும். கின்ஷாசாவில் வசிப்பவர்கள் கீய்னோய்ஸ் (Kinois) (பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில்) அல்லது கின்ஷாசாசன்ஸ்(Kinshasans) (ஆங்கிலம்) என அழைக்கப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் ஹும் மற்றும் தெக்கே ஆகியவர்களும் இதில் அடங்குவர். 1881 ஆம் ஆண்டில் ஹென்றி மோர்டன் ஸ்டான்லி என்பவரால் இந்த வர்த்தக நகரம் நிறுவப்பட்டது. பெல்ஜியத்தின் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டை கௌரவப்படுத்தும் விதமாக லியோபோல்ட்வில்லே என பெயரிடப்பட்டது. தற்போது காங்கோவின் ஜனநாயகக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பரந்த பிரதேசத்தை, ஒரு காலனியாக அல்லாமல் தனியார் சொத்தாக நிர்வாகித்து வந்தனர். 1923 காலத்தில், பெல்ஜிய காங்கோவின் தலைநகராக இருந்த காங்கோ நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள பாமா நகர் கைவிடப்பட்டு இந்நகரம் தலைநகராக உயர்ந்தது. "லியோ" அல்லது "லியோபோல்ட்" எனப் பெயரிடப்பட்ட இந்த நகரம், ஒரு வணிக மையமாக இக்காலத்தில் மாறியது மற்றும் காலனித்துவ காலத்தில் மிக வேகமாக வளர்ந்தது. 1960 ஜூன் 30 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) அதன் முதல் பிரதம மந்திரியாக பேட்ரிஸ் லுமும்பாவைத் தேர்ந்தெடுத்தது. 1965 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்தின் உதவியுடன், காங்கோவில் ஜோசப்-டீஸிரே மோபூட்டு அரசின் அதிகாரத்தை கைப்பற்றினார். நாட்டில் மக்கள் மற்றும் இடங்களின் பெயர்களை "ஆபிரிக்கனைசிங்"(ஆபிரிக்கப்பெயர்களைச் சூட்டுவது) செய்யும் கொள்கையை இவர் ஆரம்பித்தார். இக்கொள்கைப்படியே 1966 இல், லியோபோல்ட் என்ற பெயரை கின்ஷாசா என மறுபெயரிடப்பட்டது. காங்கோ மக்களாட்சி குடியரசுவின் நிர்வாக மற்றும் பிரதான எழுத்து மொழியாக பிரெஞ்சு உள்ளது. கின்ஷாசா ஒரு நகரம் மற்றும் மாகாணமானமும் ஆகும், காங்கோ ஜனநாயக குடியரசின் 26 மாகாணங்களில் ஒன்றாகும். கின்ஷாசாவின் அந்தஸ்து பாரிஸ் நகரைப் போன்றது, பாரிஸ் ஒரு நகரம் மற்றும் பிரான்சின் 101 துறைகளில் ஒன்றாகவும் உள்ளது. கின்ஷாசாவின் நகரம்-மாகாணமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இவை 24 நகராட்சி மன்றங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கின்ஷாசா வளமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் மற்றும் மூன்று பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்தும் சேரிகளுடன் கூர்மையான முரண்பாடுகளைக் கொண்ட நகரம் ஆகும். இது காங்கோ ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. நைல் நதிக்குப் பிறகு ஆப்பிரிக்கா கண்டத்தில் காங்கோ ஆறு இரண்டாவது நீளமான ஆறு ஆகும், மேலும் இக்கண்டத்தின் மிகப்பெரிய நீர் வெளியேற்றத்தைக் கொண்டுள்ள ஆறும் காங்கோ ஆறு தான். ஒரு நீர்வழியாக, காங்கோ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான நகரங்களுக்கான போக்குவரத்தை இது வழங்குகிறது. காங்கோ நதிக்கரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் நகரங்களுக்கு நீர்மின் உற்பத்தி சக்தியை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நதியாக இந்த நதி விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டில், குற்றவியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், கின்ஷாசா ஆப்பிரிக்காவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. கொலைகள், கொள்ளை, கடத்தல் மற்றும் கும்பல் வன்முறை பொதுவானவை. கின்ஷாசாவின் கொலை விகிதம் 100,000 க்கு 112 கொலைகாரர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெரு குழந்தைகள் பெரும்பாலும் அனாதையானவர்கள், காவல்துறை மற்றும் இராணுவத்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். கின்ஷாசாவின் தெருக்களில் வாழும் சுமார் 20,000 குழந்தைகள், கிட்டத்தட்ட கால்நடையில் உள்ள பிச்சைக்காரர்கள் ம்ற்றும் சிலர் தெரு விற்பனையாளர்கள். முன்னர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்நாட்டுப் போரினால் அனாதையானவர்களாக இருந்தனர் . தெரு குழந்தைகள் முக்கியமாக சிறுவர்கள், ஆனால் யுனிசெப் படி பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. கின்ஷாசா பல உயர்தர கல்வி நிறுவனங்களுக்கும், கட்டிட பொறியியல், நர்சிங், இதழியல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நகரத்தில் மூன்று பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒரு கலைக் கல்லூரியும் உள்ளது: கின்ஷாசாவில் இருபது மருத்துவமனைகளும், பல்வேறு மருத்துவ மையங்களும், பல்வேறு மருந்தகங்களும் உள்ளன. 1991 ஆம் ஆண்டிலிருந்து, மோன்கோல் மருத்துவமனை கின்ஷாசாவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையாக சுகாதார துறைய்டன் ஒத்துழைத்து பெரிய சுகாதார அமைப்பாக செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரி ப்ரெஷன் லியோன் ட்ஷிலோலோ, சிறுநீரக மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர், மோன்கோல் மருத்துவமனை தலைமையில் 2012 ல் 150 படுக்கையறையுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தது. நோயறிதல், கதிர்வீச்சியல், தீவிர சிகிச்சை, குடும்ப மருத்துவம், அவசரநிலை பகுதி மற்றும் ஒரு பெரிய அறுவை சிகிச்சை பகுதி ஆகியவற்றில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கியது. நகரத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் கெசமினேஸ் வணிகக் கட்டிடம் (முன்னர் சோஸாகம்) மற்றும் ஹோட்டல் மெல்லிங் வானளாவியங்கள் ஆகியவை அடங்கும்; நகரத்தின் மத்திய மாவட்டத்தின் பிரதான பகுதிகளை 30 ஜூன் மாதத்தின் பவுல்வர்டு இணைக்கிறது. கின்ஷாசாவில் தான் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தேசிய அரங்கமான " தியாகிகளின் அரங்கம் " உள்ளது. கின்ஷாசா, டெலிவிஷன் நேஷனல் கேன்கோலிஸ் (RTNC), பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் , டிஜிட்டல் கொங்கோ மற்றும் ராகா டி.வி , தனியார் ஊடகங்கள் உள்ளிட்ட பல பெரிய ஊடக மையங்களுக்கு தலைமையிடமாக உள்ளது. இதனில் குறிப்பிடத்தக்க தனியார் சேனல் RTGA கின்ஷாசாவில் தனது தலைமையிடத்தினைக் கொண்டுள்ளது. RTNC, MONUC- ஆதரவு வானொலி ஒகபி மற்றும் ராகா வானொலி நிலையத்தால் இயக்கப்படும் லா வோக்ஸ் டூ கொங்கோ உட்பட பல தேசிய வானொலி நிலையங்கள் கின்ஷாசாவில் அமைந்துள்ளது. பிபிசி கின்ஷாசாவிலும், 92.6 FM இல் கிடைக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் பிரஞ்சு மற்றும் லிங்கலாவை ஒரு பெரிய அளவிற்கு பயன்படுத்துகின்றன;1974 ஆம் ஆண்டில், கின்ஷாசாவில் நடைப்பெற்ற" தி ரம்பில் இன் தி ஜங்கிள்" குத்துச்சண்டை போட்டியில் முஹம்மத் அலி மற்றும் ஜார்ஜ் ஃபோர்மேன் பங்கேற்றனர். இதில் முஹம்மத் அலி ,ஃபோர்மேனை தோற்கடித்து, உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு ("Democratic Republic of the Congo", பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது. இது பரப்பளவில் ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் உலகின் பதினோராவது பெரிய நாடாகும். இந்நாடு 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டதாக உள்ளது, மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசானது அதிகாரபூர்வமாக பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளில் மிகுதாயான மக்கள் தொகைகொண்ட நாடாகவும், ஆபிரிக்காவில் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே பதினெட்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கோ பிரதேசத்தில் முதலில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது. 7 ஆம் நூற்றாண்டில் பாண்டு மக்களின் குடியேற்றம் துவங்கியது. கொங்கோ இராச்சியமானது 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது. 1879 ஆம் ஆண்டில், பெல்ஜிய குடியேற்றமானது 1885 ஆம் ஆண்டில் காங்கோ சுதந்திர அரசு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.   1908 ஆம் ஆண்டில், பெல்ஜியம் இப்பகுதியை பெல்ஜியன் காங்கோ என்ற பெயருடன் தன் நாட்டுடன் இணைத்ததுக்கொண்டது. காங்கோவில் ஏற்பட்ட நெருக்கடியால், காங்கோவுக்கு பெல்ஜியம் 1960 இல் விடுதலை வழங்கியது. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும். 1990 களின் முற்பகுதியில், மொபூட்டுவின் ஆட்சி பலவீனப்படத் தொடங்கியது.   1996-ல் துவங்கிய காங்கோவின் உள்நாட்டுப் போர்கள், மொபூட்டுவின் 32-ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை அழித்தது. இந்த உள்நாட்டுப் போர்களின் இறுதியில் ஒன்பது ஆபிரிக்க நாடுகள் மற்றும் பல குழுக்களைக் கொண்ட ஐ.நா. அமைதி காக்கும்படை ஆகியவை இந்த போரில் தலையிட்டன, உள்நாட்டுப் போரில் இருபது ஆயுத குழுக்கள் ஈடுபட்டன, இந்தப் போர்களினால் 5.4 மில்லியன் மக்கள் இறந்தனர். காங்கோ ஜனநாயக குடியரசானது இயற்கை வளங்களுக்கு குறையில்லாத வளமான நாடு, ஆனால் அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், ஆழ்ந்த வேரூன்றிய ஊழல், காலனித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக சுரண்டப்பட்டதால்,  சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் கின்ஷாசா தவிர, மற்ற முக்கிய நகரங்கள், லுபும்பாஷி மற்றும் முபுஜி-மையி ஆகியவை ஆகும். காங்கோவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருள் கச்சா கனிம்ப் பொருட்களாகும், காங்கோவின் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50% க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரையிலான, காலக்கட்டத்தில் மனித அபிவிருத்தி சுட்டெணில் (HDI), காங்கோ மனித வளர்ச்சியின் குறைந்த அளவிலேயே உள்ளது, 187 நாடுகளில் 176 வது இடத்தைப் பெற்றுள்ளது. கொங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ சுதந்திர நாடு, பெல்ஜிய காங்கோ, கொங்கோ குடியரசு (லியோபோல்ட்வில்), கொங்கோ ஜனநாயக குடியரசு, மிக அண்மையில் இந்தாட்டின் தற்போதைய பெயர் ஜெயர் குடியரசு என்ற பெயரில் இருந்து தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. 1965 முதல் அக்டோபர் 1971 வரையான காலப்பகுதியில், இந்த நாடு அதிகாரப்பூர்வமாக   "காங்கோ ஜனநாயகக் குடியரசு" என்று அழைக்கப்பட்டது, பின்னர் ஜெயர் குடியரசு என மாற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், சோவியரிங்கன் தேசிய மாநாட்டு நாட்டின் பெயரை "காங்கோ ஜனநாயக குடியரசு" என மாற்ற வாக்களித்தது, ஆனால் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. 1997 ஆம் ஆண்டு நீண்டகாலமாக ஆண்ட சர்வாதிகாரி மொபூடு சீஸ் செகோவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த லாரென்ட்-டீசிரே கபிலா நாட்டின் பெயரை மீட்டெடுத்தார். கொங்கோவின் பரப்பளவு 2,345,408 சதுர கிலோமீற்றர் (905,567 சதுர மைல்) ஆகும். இங்குள்ள கொங்கோ காடுகள், அமேசன் மழைக்காட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக உள்ள மிகப்பெரிய மழைக்காடாகும். காங்கோ மக்களாட்சிக் குடியரசானது 10 மாகாணங்களாகவும் 1 நகர மாகாணமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. லாகோஸ் லாகோஸ் (அல்லது லேகோஸ்) நைஜீரியாவில் லோகோசு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரமும் அதைச் சூழ்ந்துள்ள புறநகர் பகுதிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக உள்ளன. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகவும், அதிக மக்கள் தொகை நிறைந்த நகர்புற திரட்சியாகவும் உள்ளது. லாகோஸ் ஆப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மையம் ஆகும்; இந்தப் பெருநகரம் அதிக உள்நாட்டு உற்பத்தி அளவையும், கண்டத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகங்களுள் ஒன்றையும் கொண்டுள்ளது. லாகோஸ் ஆரம்ப காலத்தில் தீவுக்கூட்டங்களில் இருந்து தோன்றிய துறைமுக நகரமாக இருந்தது, அந்த தீவுகள் தற்போது உள்ளூர் அரசு பகுதிகளான லாகோஸ் தீவுகள், எடி ஓசா, அமுவா ஓடோபின் மற்றும் அபாபாவில் அமைந்துள்ளன; தீவுகள் லாகோஸ் கடற்காயலில் இருந்து தோன்றும் சிறுகுடாக்களினால் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை முகவாயின் கிழக்கு மேற்காக 100 கீமீ (60 மைல்) வரை பரவியுள்ள பவளத் தீவுகள், மணற் திட்டுகள் மற்றும் நீரிடைக் கடற்கரை போன்றவற்றால் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. விரைவாக நகரமயமாதலின் காரணத்தால் நகரானது கடற்காயலின் மேற்கே தற்போது லாகோஸ் நிலப்பகுதி, அஜிரோமி - லிபோடின் சுருலெரே வரை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக லாகோஸ் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது: தீவுப்பகுதி, ஆரம்ப கால லாகோஸ் நகரம் மற்றொன்று நிலப்பகுதி,ref name="Lagos Case Study"> விரிவடைந்த நகரப்பகுதி. 1967 இல் லாகோஸ் மாநில உருவாக்கத்திற்கு முன்பு வரை நகரப் பகுதியானது, லாகோஸ் நகர குழுவினால் மைய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாநில உருவாக்கத்தின் மூலம் மேற்கு பகுதியைத் தவிர்த்து லாகோஸ் நகரானது ஏழு உள்ளூர் அரசு பகுதிகளாக பிரிக்கப்பட்டது (தற்போது அவற்றையும் சேர்த்து 13 உள்ளூர் அரசுப் பகுதிகள் உள்ளன). 1914 இல் நைஜீரிய ஒருங்கிணைப்பிலிருந்து லாகோசானது அதன் தலைநகராகவும், பின்னர் லாகோசு மாநில உருவாக்கத்திற்கு பின் அதன் தலைநகராகவும் இருந்துவந்தது. ஆனால் 1976 இல் மாநிலத் தலைநகரானது இக்ஜாவிற்கு மாற்றப்பட்டது, அதேவேளையில் 1991 இல் கூட்டாட்சியின் தலைநகரானது அபூஜாவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் லாகோசானது ஒரு நகரமாக பரவலாக அறியப்பட்ட வந்தது. தற்போதைய லாகோசு, "பெருநகர லாகோசு" என்றும் அறியப்படுவது, அதிகாரப்பூர்வமாக "லாகோசு பெருநகரப் பகுதி", ஒரு நகர்புற திரட்சியாகவும் அல்லது தொகுதியாகவும் உள்ளது. இதில் மாநிலத் தலைநகரான இகெஜா உட்பட 16 உள்ளூர் ஆட்சிப் பகுதிகள் உள்ளன. இந்த நகரத்தொகுதியானது லாகோசு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 37% ஆக்கிரமிப்பதுடன், மாநில மக்கள் தொகையில் 85% கொண்டுள்ளது. லாகோசின் சரியான மக்கள் தொகை குறித்து குழப்பம் நிலவுகிறது. 2006 ஆம் ஆண்டிற்கான கூட்டாட்சியின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, மாநகரத்தில் 8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இது மாநில அரசால் மறுக்கப்பட்டது. பின்னர் லாகோசு மாநில அரசு அதன் மக்கள்தொகை தரவின் வெளியிட்டது, அதன்படு நகரின் மக்கள்தொகை தோராயமாக 16 மில்லியன் ஆகும். 2015 இல் அதிகாரப்பூர்வமற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகள், லாகோசு மற்றும் அதைச் சூழ்ந்துள்ள ஓகுன் மாநிலம் வரை நீட்சியடையும் பெருநகரப் பகுதிகளை உள்ளடக்கிய "பெருநகர லாகோசின்" மக்கள்தொகை தோராயமாக 21 மில்லியன்கள் என்கிறது. லாகோசு நைஜீரியாவின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்டுள்ளது. லாகோசில் காணப்படும் கட்டிட அமைப்புகள் பன்முகத்தன்மை வாயந்தவை. வெப்பமண்டல, உள்ளூர் அமைப்புகளில் தொடங்கி ஐரோப்பிய பாணி மற்றும் அதிநவீன கட்டிடங்கள் கலந்த ஒரு கலவையாக உள்ளது. நீர் வீடு மற்றும் சிட்டா பே தொழுகைப்பள்ளி போன்றவற்றில் பிரேசில்லிய கட்டிடப் பாணி காணப்படுகிறது. வானுயுர் கட்டிடங்கள் தீவுப்பகுதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன, அதேவேளையில் நிலப்பகுதியிலும் சில உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், லாகோசு மாநில அரசு நீண்ட கால விரிவாக்க நோக்கங்களுடன் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமை பகுதிகளை புதுப்பித்துள்ளது. லாகோசில் வெப்ப மண்டல புல்வெளி காலநிலை நிலவுகிறது, கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி வறண்டகாலம் மற்றும் மழைக்காலங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க படிவுவீழ்ச்சி காணப்படுகிறது. மழைக்காலம் ஏப்ரலில் தொடங்கி அக்டோபரில் முடிவடைகிறது, வறண்ட காலம் நவம்பரில் தொடங்கி மார்ச்சில் முடிவடைகிறது. மிகவும் ஈரப்பதமான மாதம் ஜூன், மொத்த படிவுவீழ்ச்சி அளவு 315.5 மில்லிமீட்டர்கள் (12.42 இன்ச்), மிகவறண்ட மாதம் ஜனவரி, மொத்த படிவுவீழ்ச்சி 13.2 மில்லிமீட்டர்கள் (0.52 இன்ச்). நகரானது நிலநடுக்கோட்டின் அருகில் அமைந்துள்ளதால், வெப்பநிலை வெப்பமான மாதம் மற்றும் குளிரான மாதம் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடின்றி நிலையாக உள்ளது. மிக வெப்பமான மாதம் மார்ச், சராசரி வெப்பநிலை , குளிர்ச்சியான மாதம் ஆகஸ்ட், சராசரி வெப்பநிலை . லாகோசு மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய மற்றும் விரிவான சாலைப் வலைப்பின்னல்களுள் ஒன்றாக உள்ளது. அது புறநகர் தொடருந்துகள் மற்றும் படகு சேவைகளும் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் நகரில் அவற்றின் புவியியல் அமைப்பு மற்றும் நகரின் மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக வழக்கமாக உச்ச நேரங்களில் மிகவும் நெருக்கடியாக உள்ளன. லாகோசு பல நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களாலும் இணைக்கப்பட்டுள்ளது. பாட்கரி விரைவுச் சாலை முழுமைக்குமான ஒரு புதிய தொடருந்து அமைப்பு தற்போது கட்டப்பட்டு வருகிறது. லாகோசு பெருநகரின் வழியாக ஓடும் விரிவான லாகோசு தொடருந்து பெருநகர போக்குவரத்து தற்போது கட்டப்பட்டு வருகிறது. லாகோசு தொடருந்து முனையத்தின் மூலம் பல நகர்புற தொடருந்து மற்றும் பயணிகள் வண்டிகள் சேவையாற்றி வருகின்றன. லாகோசு மாநில படகு சேவை நிறுவனம் சில வழக்கமான தடங்களில் இயக்கி வருகிறது, எடுத்துக்காட்டாக லாகோசு தீவு மற்றும் நிலப்பகுதி இடையே நவீன படகுகள் மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தனியார் படகுகள் முறைசாரா சேவைகளை சில காயல்கள் மற்றும் சிறுகுடாக்களில் வழங்கி வருகின்றன. லாகோசில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றான முர்தாலா முகம்மது பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. விமானநிலையம் இகெஜாவின் வடக்கில் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்ளன. 2008 இல் 5.1 மில்லியன் பயணிகளுடன், இந்த விமான நிலையம் நைஜீரியாவின் விமான போக்குவரத்தில் 50% விழுக்காட்டைக் கொண்டுள்ளது. இந்த விமானநிலையம் மெட்வியூ விமானநிறுவனம் மற்றும் அரிக் ஏரின் முதன்மை முனையமாகும், இவை தவிர முன்னணி விமான நிறுவனங்களான பிரிட்டிசு ஏர்வேசு, விர்ஜின் அட்லாண்டிக், கேஎல்எம், ஏர் பிரான்சு, லுபுத்தான்சா மற்றும் துருக்கி ஏர்லைன்சு போன்றவை லாகோசிலிருந்து உலகம் முழுவதும் தினசரி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்த விமான நிலையத்தில் சமீபத்தில் தரைக்கீழ் புதுப்பிப்புகள் மற்றும் புதிய முனையம் அமைக்கப்பட்டன. லாகோசு பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில நைஜீரிய மருத்துவ வரலாற்றில் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. எடுத்துக்காட்டாக நைஜீரியாவின் பழமையான மருத்துவமனை நகரில் அமைந்துள்ளது. அத்துடன் லாகோசில் தான் மேற்கு ஆப்பிரிக்காவின் முதல் வான்வழி அவசர ஊர்தி சேவை செயல்பாட்டுக்கு வந்தது. லாகோசின் மருத்துவ சேவையினை பொதுவாக அரசு மற்றும தனியார் துறைகள் எனப் பிரிக்கலாம். அவை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நலம் பேணல்களை வழங்குகின்றன. தனியார் மருத்துவமனைகள் அதிக செலவுபிடிப்பவையாக இருந்தாலும், அவை உயர்தர சிகிச்சை வழங்குகின்றன என்பதற்கு உத்திரவாதமில்லை. லாகோசு மாநில அரசு பல்வேறு பள்ளிகளை நடத்தி வருகிறது. கல்வி முறையில், நாடு முழுவதும் பின்பற்றப்படும் 6-3-3-4 அமைப்பு பின்பற்றப்படுகிறது ஆரம்ப நிலை, இளையோர் இரண்டாம் நிலை (JSS), மூத்தோர் இரண்டாம் நிலை (SSS), பல்கலைக் கழகம் போன்ற நிலைகள் உள்ளன. முதல் ஒன்பது வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் அரசால் நிதி அளிக்கப்படும் உறைவிடப் பள்ளிகளாக உள்ளன. எல்டன் பிரான்ட் எல்டன் டைரான் பிரான்ட் (ஆங்கிலம்:Elton Tyron Brand, பிறப்பு - மார்ச் 11, 1979) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பிலடெல்பியா 76அர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டியுக் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். டியூக் பல்கலைக்கழகம் டியூக் பல்கலைக்கழகம் ("Duke University"), ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் வட கரோலினா பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஒரு புகழ்பெற்ற எதிரிடை உள்ளது. ஏக்ரன் (ஒகைய்யோ) ஏக்ரன் (Akron) என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 209,704 மக்கள் வாழ்கிறார்கள் சொல்லிசை சொல்லிசை அல்லது ராப் இசை (Rap music) அல்லது ஹிப் ஹொப் இசை (Hip hop music) ஹிப் ஹொப் பண்பாட்டில் ஒரு வகுப்பு ஆகும். 1970களின் நியூ யார்க் நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட இசை இன்று அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற இசை வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நியூ யார்க் நகரம் தவிர அட்லான்டா, லாஸ் ஏஞ்சலஸ், டொரான்டோ, லண்டன் நகரில் இன்று பல ராப் இசை கலைஞர்கள் இருக்கிறார்கள். ராப் இசை பலவிதமானவை; அவற்றில் சில: க்ரங்க் (Crunk), ஜி-ஃபங்க் (G-Funk), கிழக்குக் கடற்கரை ராப் (East Coast Rap), கேங்க்ஸ்ட ராப் (Gangsta Rap) ஆகும். பொதுப்பட ராப் இசையின் வரலாறு மூன்று இனத்தில் பிரிக்கப்படலாம். ராப் இசையின் "தங்கமான ஆண்டு" (Golden Age of Hip Hop) 1970கள் முதல் 1990 வரை ஆகும். இந்த ஆண்டுகளின் நியூ யார்க் ராப் இசை தலைப்பட்டது. இக்காலப்பகுதியின் ராப் இசையின் பெயர் (Old School). சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் கர்டிஸ் ப்ளோ (Kurtis Blow), ஆப்பிரிக்கா பம்பாட்டா (Afrika Bambaataa), கே ஆர் எஸ்-வன் (KRS-One), எரிக் பி & ராகிம் (Eric B & Rakim), மார்லி மார்ல் (Marley Marl)ஆகியோர். 1988 முதல் 1996 வரை "கேங்க்ஸ்ட ராப்"பும் கிழக்கு-மேற்கு எதிரிடை ஹிப் ஹாப்பை மேற்பட்டது. 1987 இல் லாஸ் ஏஞ்சலஸ் இல் இருந்த NWA ராப் கூட்டணி "Straight Outta Compton" ஆல்பம் படைத்தார்கள். இந்த ஆல்பம் முதல் பிரதான "கேங்க்ஸ்ட ராப்" ஆல்பம் ஆகும். NWAஇல் இருந்த இசை கலைஞர்கள் ஐஸ் கியூப் (Ice Cube), டாக்டர் ட்ரே (Dr. Dre) மிக புகழ்பெற்ற தனி ஆல்பங்கள் படைத்தார்கள். 1991 இல் ஓக்லன்ட்-இல் இருந்த டூபாக் ஷகூர் (Tupac Shakur) அவரின் முதல் ஆல்பம், "2Pacalypse Now", படைத்தார். 1991 முதல் 1996 வரை 75 மில்லியன் ஆல்பம்கள்ளை விற்று, இன்று வரை உலகில் ராப் ஆல்பம் விற்ற இசை கலைஞர்களின் இவர் முதலாவார். 1988 முதல் 1993 வரை மேற்கு கடற்கரையில் இருந்த ராப் இசை மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால் 1994-இல் நியூ யார்க் நகரிலிருந்த நாஸ் (Nas), நொடோரியஸ் பி.ஐ.ஜி (Notorious BIG) என்ற ராப் கலைஞர்கள் இவர்களின் முதல் ஆல்பம்களை படைத்தார்கள். நொடோரியஸ் பி.ஐ.ஜியுக்கும் டூபாக் ஷகூருக்கும் 1994 முதல் 1996 வரை எதிரிடை இருந்தது. 1996 செப்டம்பர் மாதத்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். 6 மாதங்கள் பிரகு நொடோரியஸ் பி.ஐ.ஜி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். டூபாக், நொடோரியஸ் பி.ஐ.ஜி மரணத்துக்கு பிரகு ஜெய்-சி (Jay-Z), எமினெம் (Eminem), ஒளட்கேஸ்ட் (Outkast), 50 சென்ட் (50 Cent) சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் ஆவார். வெரும் இசை மட்டும் அல்ல அது என் உயர்களிடாம் கலந்தாது கிமு 44 ஆண்டு கிமு 44 ("44 BC") என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு வெள்ளி அல்லது சனிக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் "சீசர் மற்றும் அந்தோனியின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Caesar and Antony") எனவும், "ஆண்டு 710" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 44 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறீக் இனக்குழு கிறீக் இனக்குழு (Creek) என்பது தொடக்கத்தில் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்த தொல்குடி அமெரிக்க இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை முஸ்கோஜி (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் ஒக்லஹோமா, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா ஆகிய ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் "ம்விஸ்கோக்கே" (Mvskoke) அல்லது கிறீக் மொழி, முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின் கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. செமினோலேக்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர். வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், "மண்மேடு கட்டிகள்" என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், தென்னசி ஆற்றோரம் அமைந்திருந்தமிசிசிப்பிப் பண்பாட்டு மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய தென்னசி (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள உத்தினாகிக்கா (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்த தன்னாட்சித் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், ஹிச்சித்தி, அலபாமா, கௌஷாத்தா போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர். ஒக்முல்கீ ஆற்றங்கரையோரம் வாழ்ந்த இவ்வினத்தவரை "கிறீக் இந்தியர்கள்" எனத் தென் கரோலினாவில் இருந்து வந்த பிரித்தானிய வணிகர்கள் அழைத்தனர். இது வே தொடர்ந்து அப் பகுதியில் எல்லா ஆற்றங்கரையோர மக்களையும் குறிக்கும் பெயர் ஆயிற்று. இம்மக்களிடையே கீழ் நகரத்தார் மேல் நகரத்தார் என்ற பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஜார்ஜியா எல்லையோரப் பகுதியில் சட்டகூச்சி ஆறு, ஒக்மல்கி ஆறு, ஃபிளிட் ஆறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்த நகரங்கள் கீழ் நகரங்களாகவும், அலபாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு நகரங்கள் மேல் நகரங்கள் ஆகவும் இருந்தன. கீழ் நகரங்களுள், கொவேத்தா, குசேத்தா, மேல் செகாவ், ஹிச்சித்தி, ஓக்கோனி, ஒக்மல்கீ, அப்பலாச்சி, யமாசி, ஒக்புஸ்கி, சவோக்லி, தமாலி ஆகிய நகரங்கள் அடங்கியிருந்தன. துக்காபச்சி, அபிக்கா, குசா, இத்தாவா, ஹோத்லிவாகி, ஹிலிபி, இயுஃபோலா, வாக்கோகை, அத்தாசி, அலிபாமு, கோஷாத்தா, துஸ்கேஜீ ஆகிய நகரங்கள் மேல் நகரங்கள் ஆகும். கொவேத்தா, குசேத்தா ஆகிய இரு நகரங்களுமே கிறீக் தேசிய இனத்தாரின் முக்கிய நகரங்களாக இன்றுவரை உள்ளன. மரபு வழியாக குசேத்தா, கொவேத்தா குழுக்களே கிறீக் தேசிய இனத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டனர். அமெரிக்கப் புரட்சியின்போது, மிசிசிப்பி ஆறு, லூசியான ஆறு ஆகியவற்றுக்குக் கிழக்கே இருந்த பல தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களைப் போலவே கிறீக் இனத்தவரும், எப்பகுதியை ஆதரிப்பது என்பதில் பிரிந்து இருந்தனர். கீழ் கிறீக்குகள் நடுநிலை வகிக்க, மேல் கிறீக்குகள் பிரித்தானியருக்கு ஆதரவாக அமெரிக்கருடன் போரிட்டனர். 1783 ஆம் ஆண்டில், போர் முடிவடைந்த பின்னர், பிரித்தானியர் கிறீக் நிலங்களை புதிய ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்ததை அறிந்தனர். ஜார்ஜியா மாநிலம் கிறீக் நிலப் பகுதிகளுக்குள் விரிவடையத் தொடங்கியது. கிறீக் அரசியல் தலைவனான அலெக்சாண்டர் மக்கில்லிவ்ரே (Alexander McGillivray) இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பரந்த தொல்குடியினரின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்தார். அத்துமீறும் ஜார்ஜியர்களுடன் போரிட புளோரிடாவில் இருந்த எசுப்பானியரிடம் இருந்து ஆயுதங்களும் அவருக்குக் கிடைத்தன. தனித்தனியாக அமெரிக்காவுக்குத் தங்கள் நிலங்களை விற்ற ஊர்த் தலைவர்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததுடன், கிறீக் அதிகாரத்தை மையப்படுத்தவும், கிறீக் தேசிய உணர்வை உருவாக்கவும், மக்கில்லிவ்ரே உழைத்தார். 1790 இல் செய்துகொள்ளப்பட்ட நியூ யார்க் ஒப்பந்தத்தின் மூலம், எஞ்சிய பகுதியில் கிறீக் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனையுடன், கிறீக் நிலங்களின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க மக்கில்லிவ்ரே உடன்பட்டார். ஆனால் மக்கில்லிவ்ரே 1793 ஆம் ஆண்டில் இறக்கவே, ஜார்ஜியர்கள், கிறீக் நிலப் பகுதிகளுக்குள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தனர். துளு எழுத்துமுறை துளு எழுத்துமுறை துளு மொழியை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்துமுறை ஆகும். இதை "திகலரி எழுத்துமுறை" என்றும் அழைப்பர். துளு எழுத்துமுறை மலையாள எழுத்துமுறையுடன் மிகுந்த ஒற்றுமை உடையது. துளு பிராமனர்கள் வேத மந்திரங்களை துளு எழுத்துமுறை கொண்டே எழுதினர். துளு எழுத்துமுறையில் அதிக அளவில் நூல்கள் இல்லை. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "துளு மகாபாரதம்" என்ற நூல்தான் துளு எழுத்துமுறையில் எழுதப்பட்ட மிகப்பழைய நூலாகும். துளு எழுத்துமுறை எழுதப்பட்ட 15ஆம் நூற்றாண்டின் "துளு தேவிமஹாத்மே", மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியங்களான "ஸ்ரீ பாகவதா" மற்றும் "காவேரி" ஆகிய நூல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துளு எழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. மொழியியற் பார்வையில் துளு ஒரு சிறுபாண்மை மொழியாக இருந்ததால் போதிய ஆதரவோ அல்லது கவனமோ பெறவில்லை. ஜெர்மானிய மிஷினரிகள் துளு நூல்கள் அச்சிடும் போது, துளு எழுத்துமுறையை பயன்படுத்துவதற்கு பதிலாக கன்னட எழுத்துமுறையை பயன்படுத்தியதும் இவ்வெழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும். கரோஷ்டி எழுத்துமுறை கரோஷ்டி எழுத்துமுறை அல்லது காந்தாரி எழுத்துமுறை என்பது அபுகிடா வகையை சார்ந்த ஒர் எழுத்துமுறை ஆகும். இவ்வெழுத்துமுறை இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதியின் காந்தார பிரதேசத்தில் காந்தாரி மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்துமுறை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மத்தியில் வழக்கில் இருந்த இவ்வெழுத்துமுறை தன் தாய் நிலத்திலேயே கி.பி 3ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிழந்தது. இது குஷன், சோக்தானியா மற்றும் பட்டு வீதியில் வழக்கிலும் இருந்தது. சில ஆதாரங்களின் படி, கோட்டான் மற்றும் நியா போற தொலை இடங்களில் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கரோஷ்டி யூனிகோடு அட்டவணையில் U+10A00—U+10A5F ஆகிய இடங்களை கொண்டுள்ளது. பிற இந்திய எழுத்துமுறைகளை போல் இடது புறத்தில் இருந்து வலது புறத்துக்கு எழுதப்படாது மாறாக வலது புறத்தில் இருந்து இடது புறத்துக்கு எழுதப்படுகிறது. இதற்கு இது நேரடியாக அரமேய எழுத்துமுறையை சார்ந்த வளர்ந்ததே காரணமாகும். சமீபத்திய கல்வெட்டியல் ஆராய்ச்சிகளின் படி, பேராசிரியர் ரிச்சர்டு சாலமன், சமஸ்கிருத நூல்களின் ஆவணப்படுத்தியது போல, கரோஷ்டி எழுத்துமுறையின் எழுத்துவரிசை: இதுவே "அரபசன அரிச்சுவடி" என அழைக்கப்படுகிறது. எழுத்துக்களின் எண்ணிக்கையிலும் வரிசையிலும் சில நூல்களின் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கரோஷ்டி உயிரெழுத்துக்களை குறிக்க ‘அ'கர எழுத்தில் பல்வேறு உயிர்க்குறிகளை இட்டு வெவ்வேறு உயிரெழுத்துகளாக பயன்படுகிறது. மேலும் சாலமன், கல்வெட்டியல் ஆதாரங்களைக்கொண்டு, உயிரெழுத்துவரிசை மற்ற இந்திய மொழிகளைப் போன்று அகர இகர உகர எகர ஒகர வரிசையில் அல்லாது அகர எகர இகர ஒகர உகர வரிசையை கொண்டிருப்பதாக நிரூபித்துள்ளார். மேலும் கரோஷ்டி எழுத்துமுறை குறில்-நெடில் வேறுபாடுகளை காட்ட முடியாது. இரண்டுக்கும் ஒரே உயிர்க்குறிகளே பயன்படுகின்றன. இந்த அரிச்சுவடி பௌத்தர்களால், பல இயற்கைவெளிப்பாடுகளை மனப்பாடம் செய்துகொள்ள பயன்பட்டது. பிறகு இந்த மந்திரமாக இது ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது. கரோஷ்டி ரோம எண்முறையை ஒத்த எண்முறையை கொண்டுள்ளது. I -ஒன்று , X - நான்கு மற்றூம் ੭ -பத்து (இரட்டித்தால் இருபது): கரோஷ்டி எழுத்துமுறை "ஜேம்ஸ் பிரின்செப்" (1799–1840) என்பவரால், முற்புறத்தில் கிரேக்கத்திலும் பின்புறத்தில் பாளியையும் கொண்டிருந்த இருமொழி இந்தோ கிரேக்க நாணயங்களை கொண்டு தெளிவாக்கம் செய்யப்பட்டது. இதன் விளைவால், இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதிகளில் அசோகரால் நிறுவப்பட்ட கரோஷ்டி கல்வெட்டுகளை படிக்க நேரிட்டது. கரோஷ்டி எழுத்துமுறை படிப்படியாக வளர்ந்ததா அல்லது ஒருவரால் ஒரேடியாக இயற்றப்பட்டதா என்பதில் அறிஞர்களிடத்தில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த எழுத்துமுறையினை ஆராய்கையில், இது அரமேய அரிச்சுவடியை சார்ந்திருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது. எனினும் இந்திய மொழிகளின் ஒலியியலை ஆதரிப்பதற்காக பல விரிவான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கருத்தின் படி, கி.மு 5ஆம் நூற்றாண்டுகளில் அரமேய படையெடுப்பால், இங்கு வந்திறங்கி, அடுத்த 200+ ஆண்டுகளில் கரோஷ்டியாக உருமாறியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், இடைப்பட்ட எழுத்துமுறைகள் ஏதும் கிட்டவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு சீர்படுத்தப்பட்ட எழுத்துமுறையே பயன்பாட்டில் காணப்படுகிறது. காந்தார பௌத்த நூல்களின் கண்டுபிடிப்பு, மீண்டும் கரோஷ்டி எழுத்துமுறை குறித்த ஆய்வுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. மரப்பட்டைகளில் எழுத்துப்பட்ட பல பௌத்த நூல்கள் ஆப்கானிஸ்தானின் ஹத்தா நகரின் கைபர் கனவாயில் மேற்குபுறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்லது. இந்த கையெழுத்துப்பிரதிகள் பிரிடிஷ் அருங்காட்சியகத்துக்கு கொடையாக 1994 இல் அளிக்கப்பட்டது. இந்த பிரதிகள் அனைத்து கி.மு முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை ஆகும். இது இவற்றை இதுவரை புத்த நூற்பிரதிகளாக மிகப்பழமையானதாக ஆக்குகிறது. தீ உண்டாக்கல் தீயை உண்டாக்க இன்று பல முறைகள் உள்ளன (எ.கா. தீக்குச்சி, தீப்பற்றும் பெட்ரோலியக்குழல், எரிவளிக்குழல்). ஆனால் தொல்பழங்காலம் முதல் அண்மைக்காலம் வரை தீ உண்டாக்குவது அத்தனை எளிதானதல்ல. தொல் பழங்காலத்தில் இயற்கையில் காய்ந்த மரத்தோடு மரம் உரசும் பொழுது தோன்றிய தீ, அல்லது அத் தீ அடங்கிய பின் கனன்றுகொண்டிருக்கும் மரம், கரி முதலியவற்றில் இருந்து பற்றப்படும் தீ. இப்படித்தான் தீயைப் மாந்தன் பெற்றான் என்கிறார்கள் அறிஞர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரும்புக்கனிமம் உள்ள கற்களை உரசியோ," தீக்கடைக் கோல்" எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ தீ உண்டாக்கி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் "தீக்கடைக் கோல்" பயன்படுத்துகின்றனர். தமிழில் இவற்றை "ஞெலிகோல்" என்றும் கூறிவந்தனர் இவ்வகையான தீ மூட்டும் முறைகள் பழைய கற்கால மக்களுக்குத் தெரிந்து இருந்தது. மாந்த இனம் தற்கால மாந்த இனமாக உயிரின வளர்ச்சி பெறும் முன்னரே, "ஹோமோ எரக்டஸ்" (Homo erectus) எனப்படும் "எழுநிலை தொல்முன்மாந்தன்" காலத்திலேயே தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள். இதற்கு அடிப்படை தொல்லியலில் கண்டுபிடித்த பழைய அடுப்புகள்தாம் மிசிசிப்பிப் பண்பாடு மிசிசிப்பிப் பண்பாடு என்பது, "மண்மேடு கட்டும்" (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் செப்புக் கால மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது. மிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்னோரிலும் வேறுபட்டிருந்தார்கள். இவர்களிடம் எழுத்து முறையோ அல்லது கற்களால் கட்டிடங்களைக் கட்டும் முறையோ இருக்கவில்லை. இயற்கையாகக் கிடைத்த உலோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு எடுக்கத் தெரிந்திருக்கவில்லை. மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு: தொடர்புசால் தரவுத்தளம் தொடர்புசால் தரவுத்தளம் (Relational database) தரவுகளை தொடர்புசால் முறையில் ஒழுங்குபடுத்தப்படும் தரவுத்தளத்தைக் குறிக்கும். தற்காலத்தில் பயன்படும் நிறைய தரவுதளங்கள் இந்த வகையைச் சேந்தவையே. தொடர்புசால் தரவுதளங்களை பற்றி ஐபிஎம் இல் தொழில் புரிந்த E.F. Codd என்பவரால் 1970 களில் விபரிக்கப்பட்டு, பின்னர் ஆக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சீர்தரமாக இருக்கின்றது. இவையே தரவுகளை முதன்முதலில் தொடர்கள் உள்ள அட்டவணைகளாக ஒழுங்குபடுதின. இவை சீக்வல் (கட்டமைப்புள்ள வினவு மொழி) கட்டளைகளை ஏற்று செயற்படுத்தகூடியவை. தரவுத்தளம் தரவுத்தளம் என்பது கணினியில் சேகரித்து தொகுத்து ஒழுங்கமைப்பட்ட தரவுகள் ஆகும். தரவுத்தள மென்பொருட்களே தரவுகளை சேகரிக்க, தொகுக்க, தேட ஏதுவாகின்றன. எப்படி தரவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த மென்பொருள் தரவு ஒழுங்கமைப்பு வடிவங்கள் விபரிக்கின்றன. இவற்றை இன்று பரவலாக பயன்படுவதும் ஒரு சீர்தரமாக இருப்பது தொடர்புசால் தரவுத்தளம் ஆகும். தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் என்பது, பயனர்கள், பிற மென்பொருட்கள் மற்றும் தரவுத்தளங்களுடன் தொடர்புகொண்டு தரவுகளை சேகரிக்கவும், பரிமாற்றிக்கொள்ளவும், ஆராயவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் மென்பொருளாகும். ஒரு பொதுப்பயனிற்கான தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது தரவுத்தளங்களை உருவாக்குதல், அழித்தல், வினவுதல், புதுப்பித்தல், நிர்வகித்தல் போன்று செயலிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பிரபலமான தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு (தமேஅ) மென்பொருட்கள் இவைகள் -- மையெசுக்யூயெல், போசிட்கிரீயெசுகியூயெல், மைக்ரோசாப்ட் எசுகியூயெல், ஆரக்கிள் தரவுத்தளம், சாப், பாக்சுப்ரோ, ஐபிஎம் டிபி2, லிப்ரேஆபீசு பேசு, மற்றும் பைல்மேக்கர் பிரோ. ஒரு மேலாண்மை அமைப்பிலிருக்கும் தரவுத்தளத்தை மற்றொரு மேலாண்மை அமைப்பிற்கு நேரடியாக மாற்ற முடியாது. ஆனால் பல்வேறு மேலாண்மை அமைப்புகளில் இருக்கும் தரவுத்தளங்களை அந்தந்த மேலாண்மை அமைப்புகளின் வாயிலாகவே ஒரு மென்பொருள் பயன்படுத்தமுடியும். அதற்கு ஓடிபிசி மற்றும் ஜேடிபிசி போன்ற செந்தர முகப்புகளை மென்பொருட்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இணையத்தளம் ஒன்றில் உள்நுழைய முனையும் போது பயனர் சொல் கடவுச் சொல் ஆகியவற்றைத் தரவுத்தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டு சரிபார்த்தே உள்நுழைய அனுமதிக்கும். மேலும் அநேகமாக உள்நுழைந்தவுடன் தரவுத்தையும் மேம்படுத்திக்கொள்ளும். தரவுத்தளம் தொழில்நுட்பத்தின் கலைச்சொற்களை இந்த பகுப்பில் காணலாம். தரவுத்தளம் என்பது தொகுக்கப்பட்ட தரவுகள் ஆகும். 'தரவுத்தளம்' என்ற சொல் தரவுகளையே குறிக்கும். நிறைய தரவுகளை சேகரித்து, தொகுத்து, பாதுகாத்து, பயன்படுத்துவதற்காகவே தரவுத்தளங்கள் உருவாக்கப்படுகிறது. தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை பயனர்கள் பயன்படுத்துவதற்கு உதவுவது தரவுத்தளம் மேலாண்மை மென்பொருட்களும், அதை சார்ந்த உதவி மென்பொருட்களுமாகம். தரவுத்தளம் மேலாண்மை மென்பொருள் என்பது தரவுகளுக்கும் பயனர்களுக்கும் இடையில் அமர்ந்து, பயனர்களுக்கு உதவியாக ஒரு எளிமையான முகப்பை கொடுக்கிறது. தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது பயனர்களுக்கும் தரவுகளுக்கும் இடையில் இருக்கும் பல மென்பொருட்களை குறிக்கும். தரவுத்தளம் என்ற வார்த்தையும் தரவு என்ற வார்த்தையும் மிகவும் நெருங்கிய தொடர்புடையதால் தரவுத்தளம் என்று சொன்னால் அது மேலாண்மை அமைப்பு மென்பொருளையும் அதனால் ஒருங்கிணைக்கப்படும் தரவுகளையும் குறிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அப்பால், சாதாரணமாக பேசும் போது தரவுத்தளம் என்ற சொல்லை எல்லாவகையான தரவுத்தொகுப்பிற்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த கட்டுரையானது தரவுத்தளம் மேலாண்மை அமைப்பைப் பற்றிய விடயங்களை மட்டுமே இங்கு அலசிப்பார்க்கும். தரவுத்தளம் மேலாண்மை அமைப்பின் வாயிலாக பயனர்கள் மேற்கொள்ளும் முக்கியமான வேலைகளை நான்கு முக்கிய வகைகளாக பிறிக்க முடியும். அவை கீழ் வருமாறு: தரவுகளை பாதுகாப்பது மற்றும் ஒருங்கமைப்பிற்கு தரவுத்தளமேலாண் அமைப்புதான் பொறுப்பேற்கிறது. மேலும் அமைப்பு ஏதோவொரு காரணத்திற்காக செயலிழந்து போனால், அதை மீட்டமைக்கும் போது தரவுகளை பிழையில்லாமல் மீட்டெடுக்கும் செயலும் இந்த அமைப்பின் கடமையாகும். இயல்பாக தரவுத்தளமேலாண் அமைப்புகளும், அதில் இருக்கும் தரவுத்தளங்களும் ஏதாவது ஒரு தரவுப்படிமத்தினை பின்பற்றியிருக்கும். 'தரவுத்தள அமைப்பு' என்பது தரவுத்தளம், தரவுத்தளமேலாண் அமைப்பு, தரவுத்தளபடிமம் என்று அணைத்தையும் குறிக்கும் ஒரு சொற்றொடர். தரவுத்தள வழங்கி என்பது ஒரு தனிப்பயன் கணினி. இந்த கணினியில் தரவுத்தளமேலாண் அமைப்பும் அதைச்சார்ந்த மென்பொருட்களும் மட்டுமே இயக்கப்படும். தரவுத்தள வழங்கிகள் பல செயற்படுத்திகளைக் கொண்டது. இவ்வழங்கிகளில் நிறைய கொள்ளளவு கொண்ட நினைவகங்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இத்தகைய வழங்கிகளில் "ரெய்ட்" எனப்படும் சக்திவாய்ந்த அடுக்குத் தட்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வடுக்குத் தட்டுகள் தரவுத்தளங்களை பத்திரமாக சேமித்து பாதுகாக்க மிகவும் முக்கியமானது. இந்த அடுக்குத் தட்டுகளில் ஒன்று செயலிழந்தாலும் மற்ற தட்டுகள் சரியாக வேலை செய்யும். எந்த தரவும் பல தட்டுகளில் சேமிக்கப்படும் என்பதால் ஒரு தட்டு செயலிழந்தாலும் தரவுகளுக்கு எவ்விதபாதிப்புமில்லை. இக்காலத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது அன்றாட வர்த்தகத்திற்கு தரவுத்தளங்களை மிகவும் நம்பியுள்ளனர். ஒரு நிறுவனம் தனது சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு திறம்பட கொடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது இந்த தரவுத்தளங்களும் அதனுடன் இருக்கும் மென்பொருட்களுமாகும். தரவுத்தளங்களில் பலவிதமான தகவல்கள் சேகரித்து வைக்கப்படுகிறது. தரவுத்தளங்களில் நிர்வாகத்திற்கு தேவையான தகவல்களை மட்டும் வைப்பதில்லை, அதில் ஒரு சேவைக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வைத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு பொறியியல் தரவுகள் மற்றும் பொருளியல் படிவங்கள் கூட தரவுத்தளங்களில் வைத்துக்கொள்ளமுடியும். நூலகம் மேலாண்மை அமைப்புகள், வானூர்த்தி முன்பதிவு அமைப்புகள், உதிரிப்பாகங்களின் கொள்ளளவு கங்காணிப்பு அமைப்புகள் ஆகியவை தரவுத்தளங்களின் உதவியுடன் உருவாக்கப்படும் குறிப்பிடத்தக்க சேவைகளின் உதாரணங்கள் ஆகும். வழங்கன்-பயனர் அல்லது பரிவர்த்தனைசார் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் பல்லாயிரம் பயனர்ளுக்கு ஒரே நேரத்தில் தேடுதல் மற்றும் புதுப்பித்தல் சேவைகளை அளிக்க வேண்டியுள்ளதால் இத்தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதாகும். தனிநபர் அல்லது மேசை கணினியில் இயங்கக்கூடிய தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் எளிமையாக இருக்கும். பைல்மேக்கர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆக்சசு ஆகியவை இந்த எளிமையான தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளுக்கு உதாரணமாக கூறலாம். ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது மிகவும் சிக்கலான, கடினமான தொழில்நுட்பத்தை கொண்டதாக வளர்ந்துள்ளது. இதை உருவாக்குவதற்கு பல மனிதர்கள் பல ஆண்டுகளாக உழைக்கவேண்டும். இதனால் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பதை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறது என்பது முக்கியமாகிறது. பொதுவான நோக்கத்திற்கு தயாரிக்கப்படும் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு பலவிதமான பயனர்களுக்கு பயன்படவேண்டும் என்பதால் அதன் விடிவத்தில் சிக்கல் அதிகமாகிறது. இருப்பினும் பல்வேறு பயனர்கள் இந்த அமைப்பை பயன்படுத்துவார்கள் என்பதால் அதன் தயாரிப்பு செலவை பலரும் பகிர்ந்துகொள்வார்கள். இதனால் பொதுவான நோக்கத்துடன் உருவாக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள்தான் மிகவும் சிக்கனமானதாகும். ஆனால் பொதுவான நோக்கத்துடன் தயாரிக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள் எல்லா தேவைகளுக்கும் உகந்ததல்ல. சில தேவைகளுக்கு தனித்தன்மை கொண்ட தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் தேவைப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் அமைப்புகளை நாம் குறிப்பிடலாம். மின்னஞ்சல் அமைப்புகள் என்பது மின்னஞ்சல்களை மட்டுமே கையாளக்கூடிய திறமையைக் கொண்டது. இதற்கு தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளின் எல்லா பண்புகளும் தேவையில்லை. பல சமயங்களில் கடைநிலை பயனர்கள், அதாவது மனிதர்கள், தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளை நேரடியாக தொடர்புகொண்டு பயன்படுத்துவது கிடையாது. அதற்கு மாறாக அவர்களின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சேவையை தரும் பிரயோக மென்பொருட்களையே பயன்படுத்துகிறார்கள். இந்த பிரயோக மென்பொருட்கள் கடைநிலை பயனர்களின் சார்பாக தரவுத்தளம் மேலாண்மை அமைப்பிடம் தொடர்பு ஏற்படுத்தி தரவுகளை பரிமாற்றிக்கொள்ளும். பிரயோக மென்பொருட்களை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் பொறியாளர்கள் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புடன் உறவாட அவர்கள் கொடுக்கும் சீர்தரம் கொண்ட பிரயோக மென்பொருள் இடைமுகப்புகளை பயன்படுத்தலாம். தரவுத்தளங்களை வடிவமைப்பவர்களும், நிர்வகிப்பவர்களும் சிறப்பு மேலாண்மை முகப்புகளின் மூலம் தரவுத்தளங்களை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றை செய்வார்கள். எனவே இவர்களுக்கு கடைநிலை பயனர்களைவிட அதிக ஆற்றல் தேவைப்படும். இவர்கள் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளை எப்படி செயல்படுத்துவது, அதன் பல்வேறு முகப்புகள் என்ன, அதை எப்படி சிறப்பாக வேலை வாங்குவது, அதன் பண்புகளை எப்படி மேம்படுத்துவது, எந்தெந்த பண்புகளை தேவைக்கு ஏற்ப மாற்றுவது, போன்ற பல விடயங்களை கற்றறிந்திருக்கவேண்டும். கடந்த காலங்களில் பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளது. செயற்படுத்திகள், கணினி நினைவகங்கள், கணினி வன்தட்டுகள், மற்றும் கணினி வலைகள் ஆகியவையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் தரவுத்தளங்கள் பன்மடங்கு பல பண்புகளில் வளர்ச்சியடைந்துள்ளது. தரவுத்தளங்களின் அளவு, செயல்திறன், வேகம் ஆகிய பண்புகளை இவ்வளர்ச்சிக்கு உதாரணமாக குறிப்பிடலாம். தரவுத்தள தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றை தரவுப்படிமத்தின் அடிப்படையில் மூன்று காலமாக பிரிக்கலாம். அவை வலம்வரல் தரவுத்தளம் , எசுக்யூயெல்/தொடர்புசால் தரவுத்தளம் மற்றும் தொடர்புசால்-பிறகு ஆகும். வலம்வரல் தரவுபடிமத்தின் இரண்டு முக்கியமான படிமங்கள் படிவரி தரவுப்படிமம் மற்றும் வலையமைப்பு தரவுப்படிமம் ஆகும். படிவரி படிமத்தின் சிறந்த உதாரணமாக ஐபியெமின் ஐயெம்யெசு அமைப்பை குறிப்பிடலாம். கோடாசில் படிமம் அல்லது வலையமைப்பு படிமத்தின் உதாரணமாக ஐடியெம்யெசை குறிப்பிடலாம். தொடர்புசால் தரவுப்படிமம் என்கின்ற தரவு ஒழுங்கமைப்பு முறையை 1970 இல் முதன்முதலில் முன்மொழிந்தவர் எட்கார் எப். கோட் ஆவார். இவர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த வலம்வரல் தரவு ஒழுங்கமைப்பு முறைக்கு மாற்றாக இந்த சிந்தனையை முன்வைத்தார். வலம்வரல் என்கிற தரவு ஒழுங்கமைப்பு முறையில் ஒரு தகவலைத்தேடும் போது ஒவ்வொரு இணைப்பாக வலம் வந்த நமக்கு தேவையான தகவலை பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இப்படி செய்வதால் தரவுத்தளத்தின் முழுமையான ஆற்றலை பயன்படுத்தமுடியாமல் போகிறது. இதற்கு மாற்றாக, அல்லது இதை மேம்படுத்த தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறையை முன்வைத்தார். இம்முறையில் ஒரு தகவலைத் தேடும் போது நாம் சேகரித்து வைத்துள்ள தரவுகளை நேரடியாக தேடி பெற்றுக்கொள்ளலாம். தொடர்புசால் தரவுப்படிமத்தில் ஒவ்வொரு உருப்படிக்கும் பேரேட்டில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு அட்டவணை இருக்கும். ஒரு தரவுத்தளத்தில் இப்படியான பல அட்டவணைகள் இருக்கும். அவ்வட்டவணைகள் அணைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட தரவுப்படிமத்தை பயன்படுத்த கணினிகளின் கணிப்புச் சக்தி அதிகமாக தேவைப்படும். இவ்வாறான சக்தி வாய்ந்த கணினிகள் 1980 களின் நடுவில்தான் உருவாக்கப்பட்டது. அதனால் ஆரம்பத்தில் தொடர்புசால் தரவுப்படிமம் குறைவாகத்தான் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் தொடர்புசால் தரவுப்படிமம் பிரபலமாகியது. 1990 களில் இருந்து இன்றளவும் (2013) பேரளவில் தரவுகளைப் பதப்படுத்தும் அணைத்து பிரயோகத்திலும் தொடர்புசால் தரவுப்படிமம்தான் முன்னிலையில் இருக்கிறது. தொடர்புசால் தரவுப்படிமத்தின் முறையில் தரவுகளை ஒழுங்கமைத்து அதை பயன்படுத்துவதற்கான தரவுத்தள மொழிகளில் முக்கியமானது கட்டமைப்புள்ள வினவு மொழி அல்லது எசுக்யூயெல் ஆகும். பொருள் நோக்கு நிரலாக்கம் மொழிகளால் உருவாக்கப்படும் மென்பொருட்கள், தொடர்புசால் தரவுத்தளங்களுடன் ஊடாடும் போது சில சிக்கல்கள் உருவாகின்றன. இதை பொருள் தொடர்புசால் சிக்கல் என்று குறிப்பிடலாம். இதை சரிசெய்வதற்காக உருவானதே பொருள் சார்ந்த தரவுத்தளங்களாகும். தொடர்புசால் தரவுத்தளங்களுக்கு பொருட்சால் தரவுத்தளத்தின் பண்புகளை கொடுத்து ஒரு கலவையாக உருவானது பொருளும் தொடர்பும் சார்ந்த தரவுத்தளங்கள். இந்த பொருள் சார்ந்த தொழில்நுட்பத்தை குறிப்பிடவே "தொடர்புசால்-பிறகு" என்ற சொல்லாடல் உருவாக்கப்பட்டது. சமீபமாக வேறு வகையான தரவுத்தளங்களும் புளக்கத்திற்கு வந்துள்ளது. இவை சாவி-பெறுமானம் தரவுத்தளம் மற்றும் கோப்பு நோக்கு தரவுத்தளம் ஆகும். இந்த வகையான தரவுத்தளங்கள் 'நோயெசுக்யூயெல்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு போட்டியாக புதிய தொடர்புசால் தரவுத்தளங்கள் 'நியூயெசுக்யூயெல்' என்கின்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. 1960 களில் கணினிகளின் வேகமும் ஆற்றலும் பேரளவிற்கு அதிகம் ஆனதால், பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது. 1960 களின் நடுவில் இவ்வாறு பல தரவுத்தளங்கள் சந்தையில் இருந்தது. இவைகளை சீர்படுத்தி ஒரு தரத்தினை உருவாக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. அப்போது இந்த முயற்சியில் சார்லெசு பாக்மேன் என்பவர் ஈடுபட்டார். சார்லெசு பாக்மென் என்பவர் இன்டெக்ரேடட் டேடா சுடோர் என்கின்ற ஒரு தரவுத்தளத்தை உருவாக்கியவர். இம்முயற்சியானது கோடாசில் என்கிற குழுமத்தின் மூலமாக செய்யப்பட்டது. சார்லெசு பாக்மென் அவர்கள் கோடாசில் குழுவிற்குள் ஒரு தரவுத்தளம் சீரமைப்புக் குழுவை உருவாக்கினார். இக்குழுவானது 1971 இல் தனது தரவுத்தள சீர்தரத்தினை பரிந்துறை செய்தது. இத்தரத்தினை 'கோடாசிலின் வழி' என்று அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டது. இவ்வழியைப் பின்பற்றி பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது. கோடாசில் முறையில் தரவுகள் ஒரு பெரிய வலையைப்போல பிண்ணி பிணைந்து இருக்கும். நமக்கு தேவையான ஏடுகளை ஒவ்வொரு இணைப்பாக வலம் வந்து தேர்வு செய்யவேண்டும். கோடாசில் தரவுத்தள மேலாண்மை அமைப்புகளுக்கும் எளிமையான வினவு மொழிகள் இருந்தது. இருப்பினும் இந்த கோடாசில் முறை பயன்படுத்துவதற்கு கடினமாக இருந்து. அதைப் பயன்படுத்தி ஒரு சேவையை உருவாக்குதவதற்கு நிறைய வேலை தேவைப்பட்டது. அதனால் இம்முறை அதிகம் வெற்றி பெறவில்லை. ஐபியெம் நிறுவனம் 1968 இல் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பை உருவாக்கியிருந்தனர். அதன் பெயர் ஐயெம்யெசு ஆகும். ஐயெம்யெசு என்பது அப்போலோ என்கின்ற திட்டத்திற்காக அமைப்பு/360 என்ற இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். ஐயெம்யெசு என்பது பலவகைகளில் கோடாசில் அமைப்பை போலவே இருந்தது. முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஐயெம்யெசில் தரவுகளை வலைப்பிண்ணல் போல ஒழுங்கமைக்காமல் படிவரியாக ஒழுங்கமைக்கப்பட்டதுதான். எனவேதான் இந்த ஐயெம்யெசை படிவரி தரவுத்தளங்களுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. இதிலும் ஒரு தரவைத் தேடி தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு படியாக வலம் வர வேண்டும். இந்த படிவரி தரவுத்தளம் ஒருவகையான வலம்வரல் தரவுத்தளமாகும். எட்கார் கோட் என்பவர் கலிபோர்னியாவில் உள்ள சானோசே என்ற நகரத்தில் ஐபியெம் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தார். இந்த பணிமனை வன்தட்டுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. இவருக்கு கோடாசில் முறையான வலம்வரல் தரவுப்படிமத்தில் திருப்தியில்லாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எளிமையான தேடுதல் வசதியில்லாமையே. இதனால் உந்தப்பட்டு 1970 ஆம் ஆண்டில் இவர், புதிய தரவுத்தள ஒழுங்கமைப்பு முறையை விவரித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். இந்த முயற்சியின் அடிப்படையில் அவர் எழுதிய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை "பெரிய பகிரப்பட்ட தரவு வங்கிகளுக்கு தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறை" என்பதேயாகும். இந்த ஆராய்ச்சி கட்டுரையில் அவர் ஒரு புதிய தரவு ஒழுங்கமைப்பு முறையை விவரிக்கின்றார். இந்த புதிய முறையில் தரவுகள் அட்டவணை போன்ற விடிவமைப்பில் சேமிக்கப்படும். கோடாசில் முறையில் ஒவ்வொரு ஏடும் தனித்தனியே சேமிக்கப்பட்டு ஒரு ஏடிலிருந்து மற்றொரு ஏட்டிற்கு இணைப்பு இருக்கும். இது ஒரு இணைப்பு பட்டியலைப் போல இருக்கும். எட்கார் கோடின் புதிய முறையில் ஒரு அட்டவணைப்போன்ற விடிவத்தில் ஏடுகள் ஒவ்வொன்றும் அந்த அட்டவணையில் ஒரு வரியாக இருக்கும். ஒரு அட்டவணையில் குறிப்பிட்ட சில தகவல்களையே சேமிக்கவேண்டும். வெவ்வேறு வகையான தகவல்களை வெவ்வேறு அட்டவணைகளில் சேமிக்கவேண்டும். இந்த அட்டவணைகளில் தரவுகளை புகுத்துவது, அழிப்பது, புதுப்பிப்பது என்று அணைத்து விதமாக செயல்களையும் செய்யலாம். இதற்கு தேவையான அணைத்து வசதிகளையும் தரவுத்தள மேலாண்மை அமைப்பு கொடுக்கவேண்டும். மேலும் பயனர்களுக்கு தகவல்களை அட்டவணை வடிவத்தில் கொடுக்கவேண்டும். தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறையில் சேமிக்கப்படும் தரவுகளை தேவைக்கு ஏற்ப படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றுவது கோடாசில் முறையைக் காட்டிலும் எளிமையாக இருக்கும். தொடர்புசால் தரவுப்படிமத்தில் தரவுஏடுகள் ஒன்றுக்கொன்று பலவிதமான தொடர்புகளை வைத்துக்கொள்ளலாம். ஒன்றிலிருந்து பல, ஒன்றிலிருந்து ஒன்று, பலவற்றிலிருந்து பல ஆகியவை தொடர்பு வகைகளாகும். தொடர்புசால் தரவுப்படிமம் இவ்வணைத்து தொடர்பு வகைகளையும் ஆதரிப்பதாக உள்ளது. இம்மாதிரியான தொடர்புகள் வெவ்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவுகளுக்கு இடையே இருக்கும். ஒரே அட்டவணையில் இருக்கும் தரவுகளும் தங்களுக்குள் ஏதாவது ஒரு வகையான தொடர்பை வைத்திருக்கலாம் (உதாரணத்திற்கு பெரியது, சிறியது). எனவே தொடர்புசால் தரவுப்படிமம் என்பது வலம்வரல் தரவுப்படிமத்தை விட மிகவும் சக்திவாய்ந்தது. வலம்வரல் தரவுப்படிமங்களான படிவரி மற்றும் வலை மூலம் நாம் செய்யக்கூடிய அணைத்து வேலைகளையும் தொடர்புசால் தரவுப் படிமத்தின் மூலம் ஏளிமையாக செய்து கொள்ளலாம். மற்ற படிமங்களில் செய்ய முடியாததை தொடர்புசால் படிமத்தின் மூலம் செய்யலாம். பயனர்களின் பெயர், அவர்களின் கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, போன்றவை பல சேவைகளுக்கு நாம் முக்கியமாக தரவுத்தளங்களில் சேமிக்கும் தகவல்கள் ஆகும். கோடாசில் தரவு ஒழுங்கமைப்பு முறையில் ஒரு பயனரின் அணைத்து தகவல்களையும் ஒரே தரவு ஏட்டில் சேமிக்கப்படும். இதனால் ஒரு குறிப்பிட்ட தகவலைத்தேடுவது கடினமாகிறது. மேலும் குறிப்பிட்ட தகவல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதற்கு தேவையான இடத்தை வன்தட்டில் பயன்படுத்தப்படும். தொடர்புசால் தரவுப்படிமத்தில் இந்த இரண்டு பிரச்சினைக்கும் தீர்வுண்டு. தொடர்புசால் தரவு ஒழுங்குமுறையில், உதாரணத்திற்கு, பெயர்கள் ஒரு அட்டவணையில் சேமிக்கப்படும், கைபேசி எண்கள் இன்னொறு அட்டவணையில் சேமிக்கப்படும், மின்னஞ்சல்கள் இன்னொறு அட்டவணையில் சேமிக்கப்படும். ஒரு பயனாளரின் கைபேசி எண் இருந்தால் மட்டுமே அதற்குறிய அட்டவணையில் இடம் பயன்படுத்தப்படும். இல்லையேல் அந்த தகவலுக்கு எந்த இடமும் பயன்படுத்தப்படாது. மேலும் பெயர்களைத்தேடும் போது கைபேசி அட்டவணையையும் மின்னஞ்சல் அட்டவணையையும் நாம் தேடவேண்டியதுகிடையாது. இதனால் குறைந்த தரவுகளையே (பைட்டுகளில்) நாம் கையாளத்தேவைப்படுகிறது. வெவ்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவுகளை தொடர்பு படுத்துவதே இந்த முறையின் சிறப்பம்சமாகும். பெயர், கைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் ஆகிய தகவல்கள் வெவ்வேறு அட்டவணையில் உள்ளது. அதை தொடர்பு படுத்துவதற்காக ஒரு 'சாவி' பயன்படுகிறது. இந்த சாவியானது பல்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவு ஏடுகளை தொடர்புபடுத்த உதவும். இந்த சாவி தரவுகளில் இயக்கையாக ஏதாவது ஒரு தகவலின் அடிப்படையில் அமையலாம். இல்லையேல் தரவுத்தள வடிவமைப்பாளர்கள் சேவைக்கு ஏற்ப ஒரு செய்கையான சாவியை உருவாக்குவார்கள். இந்த சாவி என்பது ஒரு தரவு ஏட்டை தனித்தவத்துடன் குறிப்பிடத்தக்கது. கோடாசில் முறையில் ஒரு வினவிற்கு பல தரவு ஏடுகள் விடையாக கிடைக்கும். இதற்காக தரவுகளை வினவும் மென்பொருட்கள் கண்ணி மூலமாக அணைத்து தரவு ஏடுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரே ஒரு தரவு தேவை என்றாலும் இந்த கண்ணி மூலமாகவே தரவுகளைத்தேடி பெற்றுக்கொள்ளவேண்டும். கண்ணி தவிர்க்கமுடியாததாக இருந்தது. தொடர்புசால் முறையிலும் இதே கண்ணிகள் தேவைப்படுகிறது. ஆனால் இப்படி செய்வது சற்று சிரமமாக இருக்கும். இதை தவிர்க்க கோட் ஒரு கணம் சார்ந்த மொழியை சிபாரிசு செய்தார். இந்த மொழியே நாளைடைவில் எசுக்கியூயெல் ஆக பிரபலமடைந்தது. இந்த மொழியின் ஊடாக தரவுத்தளங்களை பராமரிக்க தேவையான அணைத்து செயல்களையும் செய்ய முடியும் என்பதை வரிசை நுண்கணிதம் கோட்பாட்டின் உதவியுடன் நிரூபித்தார். 1970 மற்றும் 1980 களில் மென்பொருளையும் வன்பொருளையும் ஒன்றிணைத்து தரவுத்தள இயந்திரங்களை அல்லது கருவிகளை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகளுக்கு காரணம் என்னவென்றால் இப்படி ஒன்றிணைப்பதால் தரவுத்தளத்தின் இயங்கு சக்தி குறைந்த விலையில் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே. இதற்கு உதாரணமாக ஐபியெம்மின் அமைப்பு/38, டெர்ராடேடாவின் ஆரம்ப முயற்சிகள், மற்றும் பிரிட்டான் லீயின் தரவுத்தள இயந்திரம். தரவுத்தளத்தின் சக்தியை அதிகரிக்க இந்த காலத்தில் வன்பொருளின் உதவியை நாடினார்கள். இந்த வகையான இன்னொரு முயற்சியே வன்தட்டிலேயே தரவுகளைத்தேடுவதற்காக பண்புகளை புகுத்துவது. இதற்கு உதாரணம் ஐசியெல்லின் சி. ஏ. எஃப். எசு வேகப்படுத்தியாகும். ஆனால் காலப்போக்கில் இம்முயற்சிகள் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் இரண்டாக கூறலாம். ஒன்று இப்படி தனித்துவமான, ஒரு குறிப்பிட்ட பிரயோகத்திற்காக தயாரிக்கப்படும் கணினிகள் விலை அதிகமாகவே இருந்தது. இரண்டு, இத்தனித்துவமாக கணினிகன் சக்திகள் பொதுவாக கிடைக்கும் கணினிகளைவிட சக்திவாய்ந்ததாக இருக்கவில்லை. எனவே இப்பொழுதெல்லாம் தரவுத்தளங்கள் பொதுவாக கிடைக்கும் கணினியில்தான் இயங்குகிறது. மேலும் பொதுப்பயனுக்காக தயாரிக்கப்படும் வன்தட்டுகளே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இருப்பினும் இன்றும் தரவுத்தள இயந்திரங்கள் சில சந்தையில் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக ஓரகில்லின் எக்சாடேடா மற்றும் நெட்டிசா நிறுவனத்தின் தயாரிப்புகளையும் குறிப்பிடலாம். கோட்டின் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு ஐபியெம் நிறுவனம் அமைப்பு ர என்கின்ற ஒரு முன்வடிவத்தை 1970 களின் ஆரம்பத்தில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முன்வடிவம் 1975 இல் தயாராகிவிட்டது. இதற்கு பிறகு ஒரு தரவு ஏட்டினை பல அட்டவணைகளில் பிரித்து சேமிப்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்தன. இப்படி செய்வதால், நாம் ஏற்கனவே கண்டது போல, வன்தட்டில் இடம் சேமிக்கப்படும். தேவையிருந்தால் மட்டுமே ஒரு தரவுவரிசை தரவுத்தளத்தில் இருக்கும். இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. 1970 களின் முடிவில் பலப் பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய அமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த காலத்தில் தான் எசுக்கியூயெல் வினவு மொழியானது சீர்தரம் பெற்றது. கோட்டின் யோசனைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல் இவை கோடாசில் முறையை விட சக்திவாய்ந்த்து என்றும் அறியப்பட்டது. இதை உணர்ந்த ஐபியெம் அடுத்த தலைமுறை தரவுத்தளம் மேலாண்மை அமைப்பான டிபி2 வை உருவாக்க முயற்சிகளை ஆரம்பித்தது. லாரி எலிசனின் நிறுவனமான ஓரகில் தனியாக தரவுத்தளங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இவர்களின் ஆராய்ச்சிகள் ஐபியெம்மின் அமைப்பு ர பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அடிப்படையில் நடந்தது. ஆனால் இவர்கள் ஐபியெம் நிறுவனம் டிபி2 வை சந்தைக்கு கொண்டுவருவதற்கு முன்பே தங்களின் படைப்பான ஓரகில் தரவுத்தளத்தை 1978இல் அறிமுகப்படுத்தினர். சுடோன்பிரேக்கர் என்பவர் இன்கிரசில் வேலை செய்த அனுபவத்தை பயன்படுத்தி போசிட்கிரசு என்ற ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இத்தரவுத்தளம் இன்றைக்கு போசிட்கிரீயெசுக்கியூயெல் என்றழைக்கப்படுகிறது. உலகளவில் மிக முக்கியமான இலக்குகளைக்கொண்ட அமைப்புகளில் போசிட்கிரீயெசுக்கியூயெல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உதாரணமாக இணைய முகவரிகளைப் பராமரிக்கும் பதிவு அமைப்பினைக் குறிப்பிடலாம். மேலும் இந்த தரவுத்தளத்தினைப் பல பெரிய நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் பயன் படுத்துகின்றன. சுவீடன் நாட்டிலுள்ள உப்பாலா பல்கலைக்கழகத்தில், கோட்டின் ஆராய்ச்சிக்கட்டுரையின் அடிப்படையில் மைமர் எசுக்கியூயெல் என்னும் தரவுத்தள மேலாண்மை அமைப்பு 1970 களின் நடுவில் தயாரிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்த முயற்சியானது ஒரு தனி நிறுவனமாக முன்னெடுக்கப்பட்டது. மைமர் தரவுத்தளத்தில் தரவுகளின் உறுதிக்காக பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த யோசனை மிகவும் வரவேற்கப்பட்டு, பல தரவுத்தள மேலாண்மை அமைப்புகளில் இது செயற்படுத்தப்பட்டது. 1976 இல் உருப்படி-தொடர்புசால் தரவுப்படிமம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிது காலத்திற்கு பிரபலமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதன் பண்புகளை தொடர்புசால் தரவுப்படிமத்தில் சேர்க்கப்பட்டன. இதனால் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது. 1980 களில் மேசைக் கணினி மிகவும் பிரபலமடைந்தது. இதை மேசைக் கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம். இந்த புதிய கணினிகள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது இரண்டு வகையான மென்பொருட்கள். ஒன்று விரிவுத்தாள் மென்பொருளான லோடசு 1, 2, 3 ஆகும். இன்னொன்று தரவுத்தளம் மென்பொருளான டிபேசு. டிபேசு மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. இதனை உருவாக்கியவர் சி. வேய்னே இராட்கிலிப் ஆவார். அவர் இதைப்பற்றி கூறியதாவது: "டிபேசு மற்ற கணினி மொழிகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இது பேசிக், சி, போர்ட்ரான் மற்றும் கோபால் ஆகிய மொழிகளுடன் ஒப்பிடும் போது இதை நம்மால் உணரமுடியும். டிபேசில் பயனர்களுக்கு தேவையான பல செயல்களை ஏற்கனவே செய்து முடித்தாயிற்று. தரவுகளைக் கையாள்வதற்கு தேவையான பல செயல்களை டிபேசே பார்த்துக்கொள்கிறது. பயனர்கள் தரவுகளைக் கையாள்வதற்காக கோப்புகளை திறப்பது, மூடுவது, படிப்பது, அதிலிருக்கும் இடத்தினை மேலாண்மை செய்வது ஆகிய எந்த ஒரு விசயத்திலும் கவணம் செலுத்தத்தேவையில்லை. இதை அணைத்தையும் டிபேசு பார்த்துக்கொள்ளும்." 1980 மற்றும் 1990 இன் ஆரம்பத்திலும், மிகவும் அதிகமாக விற்பனையான மென்பொருள் டிபேசு ஆகும். 1980 களில் பொருள் சார்ந்த நிரலாக்கம் பிரபலமடைந்தது. இதனால் தரவுத்தளங்களில் சேமித்திருக்கும் தரவுகளைக் கையாளும் முறையும் சற்று மாறியது. மென்பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை ஒரு பொருளாக அணுக முற்றபட்டனர். உதாரணமாக ஒரு நபரை பொருளாகவும், அவரைப்பற்றிய தகவல்களின் அந்த பொருளின் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. தரவுகளை வெறும் அட்டவணையாகவும் அதிலுள்ள வரிசையாகவும் பாவிக்காமல், ஒவ்வொரு வரிசையையும் ஒரு பொருளாகவும், அதிலுள்ள ஒவ்வொரு தகவல்களும் அதன் பண்புகளாகவும் பாவிக்கப்படுகிறது. இதனால் தரவுகள் அட்டவணைக்கும் அதிலுள்ள நெடுவரிசைக்கும் சொந்தமானது என்று பார்க்காமல், அவை அணைத்தும் அதனதன் பொருளிற்கு சொந்தமா பார்க்கப்படுகிறது. எனவே தரவுகள் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒரு அட்டவணையாகவும், வரிசையாகவும், மற்றும் நெடுவரியையாகவும் பார்க்கப்படுகிறது. இன்னொன்று பொருளாகவும் அதன் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல் பொருள் - தொடர்பு பொருத்தமின்மை என்று அழைக்கப்படுகிறது. பொருள் தரவுத்தளங்கள் மற்றும் பொருள்-தொடர்புசால் தரவுத்தளங்கள் ஆகியவை இந்த சிக்கலை தீர்க்க அதன் வினவு மொழிகளை மாற்றி அமைத்தனர். இந்த சிக்கலைத் தீர்பதற்கு இன்னொரு முயற்சியே பொருள்-தொடர்பு மேப்பிங் ஆகும். தொடர்புசால் தரவுத்தளங்களுக்கு பிறகு வந்த வேறு வகையான தரவுத்தளங்கள் நோயெசுக்கியூயெல் என்று அறியப்படுகிறது. இதற்கு உதாரணமாக சாவி-மதிப்பு கிடங்குகள் மற்றும் கோப்பு திசையுற்ற தரவுத்தளங்கள். எக்செம்மல் தரவுத்தளங்கள் என்பது ஒரு வகையான கோப்பு திசையுற்ற தரவுத்தளமாகும். இத்தரவுத்தளத்தில் எக்செம்மல் கோப்பின் பண்புகளைக்கொண்டு தரவுகளை வினவலாம். நோயெசுக்கியூயெல் தரவுத்தளங்கள் வேகமாக செயல்படக்கூடிய சக்தியைக் கொண்டது. இத்தரவுத்தளங்களுக்கு மாறாத அட்டவணை வடிவங்கள் தேவைப்படுவதில்லை. தரவுத்தள தொழில்நுட்பத் துறையில் 1960களில் இருந்து தொடரந்து ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளது. பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் இத்தொழில்நுட்பத்தில் நிறைய ஆய்வுகளை செய்கின்றனர். இதற்கு உதாரணமாக ஐபியெம் ஆய்வினை குறிப்பிடலாம். இவ்வாய்வுகள் தரவுத்தளத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றினவாகும். குறிப்பாக தரவுத்தள கோட்பாடு மற்றும் தரவுத்தள முன்வடிவங்களில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. படிமங்கள், அணுநிலை பரிவர்த்தனைகள், உடன்நிகழ் கட்டுப்பாடு வழிமுறைகள், வினவு மொழிகள், வினவை மேம்படுத்துதல், வன்தட்டுகளை மேம்படுத்துதல், மற்றும் பல தலைப்புகளில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. தரவுத்தள தொழில்நுட்பத்தில் செய்யப்படும் ஆய்வுகளை கட்டுரைகளாக வெளியிடுவதற்கு தனியே பல இதழ்கள் உள்ளன. குறிப்பாக ஏசியெம் தரவுத்தள அமைப்புகளின் பரிவர்த்தனைகள் (ஏசியெம் டிரான்சாக்சன்சு ஆன் டேடாபேசு சிசுடெம்சு) மற்றும் தரவு அறிவுப் பொறியியல் (தேட்டா அண்டு நாலெச்சு எஞ்சினியரிங்கு). மேலும் வருடந்தோரும் நடக்கும் மாநாடுகளும் இவ்வாய்வுகளுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. மாநாடுகளுக்கு உதாரணமாக ஏசியெம் சிக்மோட், ஏசியெம் போட்சு, வியெல்டிபி, ஐஇஇஇ ஐசிடிஇ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தரவுத்தளங்களை பலவிதமாக வகைப் படுத்தலாம். இங்கு மூன்று விதமான வகைப்படுத்தும் முறையை காணலாம். ஒன்று, தரவுத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில். இரண்டு, தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் துறையின் அடிப்படையில். மூன்று, தரவுத்தளத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில். முதல் இரண்டு வகையை இங்கு சுறுக்கமாக காணலாம். தரவுத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் நூலோதி, கோப்புகள்-உரை, புள்ளியியல் தரவுத்தளங்கள் அல்லது பல்லூடகத் தரவுத்தளங்கள் என்று வகைப்படுத்தலாம். தரவுத்தளங்களை பயன்படுத்தும் துறையின் அடிப்படையில் இசை தொகுப்பு, கணக்கு வைப்பு, படத்தொகுப்பு, வங்கி, காப்பீடு என்று வகைப்படுத்தலாம். தரவுத்தளங்களை அதன் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் வகைப்படுத்த முடியும். இந்த பகுதியில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பல்வேறு தரவுத்தள வகைகளை காணலாம். பிரித்தானியத் தமிழர் 1960 தொடக்கமே கல்வி, தொழில் வாய்ப்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள். 1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்தார்கள். இன்று ஏறத்தாழ 150 000 - 200 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார். தருக்கப் படலை தருக்க உள்ளீடுகளை எடுத்து, செயற்படுத்தி, தர்க்க ரீதியிலான விடையை அல்லது வெளியீடுடைத் தருவதே தர்க்க படலை ஆகும். ஒரு தருக்க படலையின் வெளியீட்டை இன்னொரு தருக்க படலையின் உள்ளீடாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல தர்க்க படலைகளை இணைத்து சிக்கலான தர்க்க செயற்பாடுகளை நிகழ்த்த முடியும். நிலைமாற்றியில் இருந்து கணினி வரை பல கருவிகள் தர்க்க செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டவை. உம், அல்லது, இல்லை ஆகியவை அடிப்படை தருக்க படலைகள் ஆகும். நிலைமாற்றி நிலைமாற்றி (வேறுபெயர்கள்: இணைப்பு மாற்றி, தொடர்மாற்றி, ஆளி மற்றும் சுவிட்ச் ஆங்கிலத்தில்: switch) மின்பொறியியலில் மின்சுற்றினை இணைக்கவோ இணைப்பறுக்கவோ அல்லது (மின்னோட்டத்தினை மறிக்கவோ அல்லது திசைமாற்றவோ பயன்படும் ஒரு இயந்திரக் கருவி ஆகும். இணைக்கப்பட்ட நிலையிலுள்ள ஒரு மின்சுற்றை இணைப்பறுக்கவும், இணைப்புறுத்தக்க நிலையில் இருக்கும் ஒரு மின்சுற்றை இணைக்கவும் நிலைமாற்றி பயன்படுகின்றது. ஒரு மின்சுற்றினை ஒரு நிலையிலிருந்து வேறு ஒரு நிலைக்கு இக்கருவி மாற்றுவதால் நிலைமாற்றி எனப் பெயரிடப்பட்டிருக்கலாம். . வீடுகளில் நாம் "மின் விளக்குகளை" எரியவோ அல்லது அணைக்கவோ கைகளினால் அழுத்துவது நிலைமாற்றிகளைத்தான். மேலும் நிலைமாற்றிகள் நகரும் பொருட்களினால்(எ.கா கதவினால் இயக்கப்படும் சுவிட்ச்) இயக்கப்படலாம், வெப்பம், அழுத்தம் அல்லது ஒட்ட உணரிகளாலும் இயக்கப்படலாம். உணாத்தி மின்சாரம் மூலம் இயக்கப்படும் நிலைமாற்றி ஆகும். நிலைமாற்றி பரவலான மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்தினை கையாளும் வகையில் செய்யப்படுகின்றன; மிக பெரிய சுவிட்சுகள் மின்நிலையங்களிலுள்ள 'உயர் மின்னழுத்த சுற்றுகளை' தனிமைப்படுத்த பயன்படுத்தப்படலாம். நிலைமாற்றி ஒரு அடிப்படை தர்க்க படலை ஆகும். மின்னணுக்களில், சுவிட்சுகள் தங்கள் தொடர்புகளுக்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு ஜோடி தொடர்புகள் "மூடிய" நிலையிலிருக்கும்பொழுது மின்னோட்டம் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்கின்றது. எப்பொழுது காற்றிடை வெளிகளினால் தொடர்புகள் பிரிக்கப்பட்டு "மின்காப்பான்களினால் பிரிக்கப்படும்பொழுது அவை, "திறந்த" நிலையிலிருக்கிறது மற்றும் அவைகளுக்கிடையே இயல்பான மின்னழுத்ததின்பொழுது எவ்வித மின்னோட்டமும் இருக்காது. நிலைமாற்றிகளின் தொடர்பு வேறுபாடுகள் பற்றி விவரிக்க முனை("POLE"), திசை("THROW") போன்ற சொற்களும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முனைகளின் எண்ணிக்கை என்பது மின்சாரத்தினால் பிரிக்கப்பட்ட சுவிட்ச்களின் எண்ணிக்கை ஆகும், இது ஒற்றை இயக்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. எ.கா ஒரு "2-முனை"(2-pole) சுஃவிட்ச் பிரிக்கப்பட்ட இரண்டு இணையான தொடர்புகளை கொண்டிருக்கிறது, இது ஒரே பொறிமுறையினால் இணைக்கவோ, பிரிக்கவோ செய்யப்படுகிறது. திசைகளின்(THROW) எண்ணிக்கை என்பது தனித்த மின்கம்பி பாதைகளின் எண்ணிக்கை ஆகும், திறந்த நிலையை(OPEN) தவிர்த்து ஒவ்வொரு முனைக்கும் தனித்த பாதையே தேர்ந்தெடுக்கமுடியும். ஒர் ஒற்றை-திசை நிலைமாற்றி திறந்த அல்லது மூடிய நிலையிலுள்ள ஒரு ஜோடி தொடர்புகளை கொண்டிருக்கும். ஒரு இரட்டை-திசை நிலைமாற்றியின் ஒருபுறமுள்ள ஒர் தொடர்பு மற்றொருபுறமுள்ள மற்ற இரண்டு தொடர்புகளுள் ஒன்றை இணைக்கும், ஒர் மும்மடி-திசை நிலைமாற்றி ஒருபுறமுள்ள தொடர்பானது மற்றொருபுறமுள்ள மூன்று தொடர்புகளுள் ஒன்றை இணைக்கும். நிலைமாற்றியின் தொடர்புகள் இயக்கப்படாதவரை ஒரே நிலையிலிருக்கும், அழுத்து பொத்தான்களின் தொடர்பு நிலைமாற்றியின் இயக்கத்தால் மூடியநிலைக்கு மாறும் வரை வழக்கமாக திறந்தநிலையிலிருக்கும் (Normally open; சுருக்கீடு "n.o." or "no"), அல்லது வழக்கமாக மூடியநிலையில் இருக்கும்(Normally closed; சுருக்கீடு "n.c." or "nc") மேலும் நிலைமாற்றியின் இயக்கத்தால் திறந்தநிலைக்கு மாறும். இரண்டு வகையான தொடர்புகளை கொண்டிருக்கும் நிலைமாற்றி "முறைமாற்றும் நிலைமாற்றி" எனப்படும். அதிக எண்ணிக்கையில் முனைகளையோ அல்லது திசைகளையோ கொண்டிருக்கும் சுவிட்ச்கள் "S" அல்லது "D"க்கு பதிலாக எண்களால் (எ.கா 3PST, 4PST போன்றவை) அல்லது சில சமயங்களில் ஆங்கில எழுத்துகளால் "T" ("triple") (அ) "Q" ("quadruple") விவரிக்கப்படும். இந்தக் கட்டுரை முழுவதும் SPST, SPDT போன்ற சொற்கள் தெளிவின்மையைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்டிருக்கும். முதலைவாய் பற்றுவாய் மின்சுற்றுக்களில் இரு உறுப்பக்களை கம்பிகள் ஊடாக இணைக்க பயன்படும் ஒரு மின்கூறுப் பொருளே முதலைவாய் பற்றுவாய் (alligator or crocodile clip) ஆகும். விரைவாக மின்சுற்று உறுப்புகள் ஊடாக இணைப்புகளை ஏற்படுத்த முதலைவாய் பற்றுவாய்கள் உதவுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிகமாக, எடுத்துக்காட்டாக பரிசோதனைக் கூடத்தில் சுற்றை இணைக்கவே பயன்படுத்தப்படுகின்றன. "இதில் சுருள் வில்லும், கவ்வி இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள கூர்ப்பான பற்களும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இது விலங்கினத்திலிருந்து பிறந்த ஒரு கலைச்சொல்." தீக்குச்சி தீக்குச்சி என்பது நுனியில் எளிதில் தீப்பற்றும் வேதிப்பொருள்கள் கொண்ட, ஏறத்தாழ 3-4 செ.மீ நீளம் கொண்ட மெல்லிய குச்சி ஆகும். இக்குச்சி மரத்தாலோ அல்லது கெட்டியான காகித அட்டை போன்ற பொருளாலோ ஆனது. தீக்குச்சிகளின் நுனியில் இருக்கும் வேதிப்பொருளில் பாஸ்பரஸ் ஒரு முக்கியமான பொருள். சொரசொரப்பான பகுதியில் விரைந்து தேய்க்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தில் சட்டென்று தீப் பற்றிக்கொள்ளும் பொருள்களால் ஆன பொருள் தீக்குச்சியின் நுனியில் உருண்டையாய் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும். இப்படி குச்சியின் நுனியில் ஒட்டவைக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் கலவையைத் தமிழில் "மருந்து" என்று அழைப்பர். தீக்குச்சிகளில் இரு வகைகள் உண்டு. சில எந்த சொரசொரப்பான தளத்தில் தேய்த்தாலும் தீபற்றுவன. மற்றவை தேய்ப்பதற்கு என சிறப்பாக தளங்களில் மட்டுமே தேய்த்து தீச்சுடர் உண்டாக்க முடியும். தற்கால தீக்குச்சிகள் பயன்பாட்டுக்கு வரும் முன்னர் சீனாவில் கி.பி. 577 ஆண்டு காலப்பகுதியில் கந்தகம் நுனியில் ஒட்டியிருக்கும் பைன் மரக் குச்சிகள் இருந்ததாக கருதப்படுகின்றது. கி.பி. 1805 இல், பாரிசில் இருந்த பேராசிரியர் லூயி சாக்கெஸ் தேனார் (Louis Jacques Thénard) அவர்களுக்குக் கீழ் பணி புரிந்த துணைப் பேராசிரியர் கே. சான்செல் (K. Chancel) என்பவர் முதன் முதலாக தானே பற்றி எரியும் தீக்குச்சிகளைக் கண்டு பிடித்தார். இக்குச்சிகளின் நுனியில் பொட்டாசியம் குளோரேட், கந்தகம் இனியம், ரப்பர் ஆகிய நான்கு பொருட்களும் இருந்தன. ஆனால் இந்த தீக்குச்சியைப் பயன்படுத்த குச்சியின் நுனியை கந்தகக் காடி (கந்தக அமிலம்) இருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் குப்பியுள் நனைத்தனர். இவை விலை மிக்கதாகவும். போதிய பாதுகாப்பு இல்லாததாகவும் இருந்தது. எனவே பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. கி.பி 1827 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய வேதியியலாளர் ஜான் வாக்கர் (John Walker) என்பவர் உரசித் தீப்பற்றும் தீக்குச்சிகளைக் கண்டுபிடித்தார். 1680களில் புகழ்பெற்ற ராபர்ட் பாயில் (Robert Boyle) பாஸ்பரஸ் கந்தகம் முதலிய பொருட்களைக்கொண்டு ஆய்வுகள் செய்திருந்தார், ஆனால் இத் துறையில் பயனுடைய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஜான் வாக்கர் ஆண்டிமனி சல்பைடு (ஸ்டிப்னைட்டு) (antimony(III) sulfide or stibnite), பொட்டாசியம் குளோரேட்டு(potassium chlorate), கோந்து (gum), ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள் ஆகிய நான்கும் சேர்ந்த பொருளை சொரசொரப்பான தளத்தில் விரைந்து தேய்த்தால் தீப்பற்றும் என்று கண்டுபிடித்தார். ஜான் வாக்கர் இந்த தீக்குச்சிகளை "காங்கிரீவ்ஸ்" (congreves) என்று அழைத்தார். ஆனால் "சாமுவேல் ஜோன்ஸ்" என்பவர் இதே தயாரிப்பு முறைக்கு படைப்புக் காப்புரிமம் (patent) பெற்றிருந்து "லூசிஃவர்" தீக்குச்சிகள் என்று விற்றுக்கொண்டிருந்தார். நெதர்லாந்தில் இன்னமும் தீக்குச்சிகளை லூசிஃவர் ("lucifers") என்று அழைக்கின்றார்கள். 1830 இல் பிரான்சியர் சார்லஸ் சோரியா (Charles Sauria) என்பவர் தீக்குச்சியின் நுனியில் உள்ள மருந்தில் வெள்ளைப் பாஸ்பரஸைச் சேர்த்தார். இதனால் தீக்குச்சியின் கெட்ட வாடை குறைந்தது, ஆனால் தீக்குச்சிகளை காற்றுப் புகா பெட்டிகளில் வைக்க வேண்டியிருந்தது. வெள்ளைப் பாஸ்பரஸ் இருப்பதால் இத் தீக்குச்சிகளை உற்பத்தி செய்வோர்களுக்கு ஃவாஸ்ஸித் தாடை (phossy-jaw) என்னும் நோயும், வேறு பல எலும்பு தொடர்பான நோய்களும் ஊனங்களும் தோன்றின. ஒரு தீப்பெட்டியில் (தீக்குச்சிப் பெட்டியில்) இருந்த பாஸ்பரஸ் ஒருவரைக் கொல்லும் அளவுக்கு இருந்தது. இதனால் இதற்கு அதிகம் எதிர்ப்பு தோன்றியது. ஃவாஸ்ஸித் தாடை நோய் வேதிப்பொருளால் அக்காலத்தில் தோன்றிய ஒரு குறிப்பிடத்தக்க நோய் அல்லது ஊனம். காடின் 12 விதிகள் காடின் 12 விதிகள் ("Codd's 12 rules") என்பது தகவல்தளத்திற்கான தொடர்புசால் அமைப்பு வல்லுநரான‌ எட்கர் ஃப். காட் என்பவரால் முன்மொழியப்பட்ட பன்னிரெண்டு விதிமுறைகளின் தொகுப்பாகும். இந்த விதிமுறைகள், தகவல்தள நிர்வாக அமைப்பை (DBMS) ஒரு தொடர்புசால் தகவல்தள நிர்வாக அமைப்பாகக்(RDBMS) கருதுவதற்கு என்னத் தேவை என்பதை வரையறைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. விதி 1: தகவல் விதி: விதி 2:நிர்ணயிக்கப்பட்ட அணுக்க விதி சைபேசு சைபேஸ் ("Sybase") நிறுவனம் ஓர் எண்டபிரைஸ் மென்பொருட் சேவைகள் நிறுவனம் ஆகும். இது தகவலை வினைத்திறனுடன் நிர்வாகிப்பதற்கான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றது. சைபேஸ் ஆரக்கிளுக்கு அடுத்தபடியாக தகவல் முகாமைத்துவ மென்பொருட்களை உருவாக்கும் நிறுவன் ஆகும். மைக்ரோசாப்டுடன் OS/2 இயங்குதளத்திற்கு சீக்குவல் சேர்வர் உருவாக்குவதில் மூலநிரல்களைப் பகிர்ந்ததன் மூலம் இந்த நிலையை எய்தியது. அச்சமயத்தில் சைபேஸ் இன் தரவுத் தளமானது :"சைபேஸ் சீக்குவல் சேர்வர்" என்றறியப்பட்டது. இதன் 4.9 பதிப்பு வரை சைபேஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இன் தரவுத்தளமும் இரண்டும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. எனினும் இலாபத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட உடன்பாடு ஏற்படாததால் இரண்டும் பிரிவடைந்தது தமது வழியில் சென்றன. மிகப்பெரிய மாறுபாடு யாதெனில் சைபேஸ் யுனிக்ஸ் வழிவந்ததாகும் மைக்ரோசாப்ட் இன் சீக்குவல் சேர்வர் ஆனது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் வினைத்திற்னாக இயங்குதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். சைபேஸ் தொடர்ந்தும் விண்டோஸ் இயங்குதளத்திற்கும், யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தரவுத் தளத்தை விருத்தி செய்து வருகின்றது. ஆகூங்க் மலை ஆகூங்க் மலை ("Mount Agung") இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும். 1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மை லாய் படுகொலைகள் மை லாய் படுகொலைகள் ("My Lai Massacre") என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான். இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின. டிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது. அமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். "அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி" கேணல் "ஒரான் ஹெண்டர்சன்" என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான். அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான். மார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிராமத்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான். யார் (நீள அலகு) யார் (yard) என்பது, இம்பீரியல் அலகு முறை, ஆங்கில அலகு முறை, ஐக்கிய அமெரிக்க அலகு முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு நீள அலகு ஆகும். பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் "யார்", "அனைத்துலக யார்" எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 மீட்டருக்குச் சமமானது. இந்த அலகு, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காற்பந்து விளையாட்டுக்கான களத்தின் நீள அளவுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. மீட்டர் அளவு முறையின் அறிமுகத்துக்கு முன்னர் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், துணி வகைகளின் அளவுகள் யார் அலகிலேயே அளக்கப்பட்டன. இம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்: மீட்டர் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்: வேறு சில அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்: பிராமிய குடும்பம் பிராமிய குடும்பம் என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா, திபெத், மங்கோலியா, மஞ்சூரியா ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிராமியில் இருந்து உருவான அபுகிடா எழுத்துமுறைகளின் குடும்பத்தை குறிக்கும். இந்த எழுத்துமுறைகளை "பிராமிய எழுத்துமுறைகள்" என்று குறிப்பிடுவர். பிராமிய எழுத்துமுறைகள் பண்டைய இந்திய எழுத்துமுறையாக பிராமியில் இருந்து தோன்றியனவாகும். இந்த பிராமி எழுத்துமுரை தோற்றத்தில் அறிஞர்களிடத்தில் கருத்து வேற்றுமை நிலவுகிறது. ஒரு சாரார் இது அரமேய எழுத்துமுறையில் இருந்து தோன்றியது என்றும் இன்னொரு சாரார், சிந்துசமவெளி எழுத்துமுறையில் இருந்து தொன்றியிருக்கக்கூடும் என வாதிடுகின்றனர். இந்த குடும்பத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துமுறை தேவநாகரி ஆகும். இவ்வெழுத்துமுறை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஹிந்தி, கொங்கணி, மராத்தி , நேபாளி, நேபாள் பாஸா , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை எழுத பயன்படுத்தப்படுகிறது. வட பிராமி எழுத்துமுறைகளுள் தேவநாகரியை போல் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துமுறை கிழக்கு நாகரி ஆகும். கிழக்கு நாகரி வங்காள மொழி, அசாமிய மொழி மற்றும் பிஷ்ணுபிரியா மணிப்பூரி ஆகிய மொழிகளை எழுத பயன்படுத்தப்படுகிறது. இதே போல் பிற இந்திய மொழிகளான ஒரியா, குஜ்ராத்தி மொழிகளும் பிராமிய எழுத்துமுறைகளையே கொண்டுள்ளன. ரஞ்சனா, பிரசலித், புஜிமோல் மற்றும் குர்முகி போன்ற எழுத்துமுறைகளும் பிராமியை ஒட்டி தோன்றியவையே ஆகும் தென்னகத்தில் வழங்கப்பட்டு வந்த பிராமி திராவிட மொழியியலுக்கு ஏற்றார்போல் மாற்றம் கொண்டது. தென் பிராமி வட்டவடிவாக எழுதப்பட துவங்கியது. மேலும் திராவிட ஒலிகளுக்கான சில எழுத்துக்களும் தென் பிராமிய எழுத்துமுறைகளின் சேர்க்கப்பட்டது. தற்கால தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துமுறையும் பழைய கன்னட எழுத்துமுறையில் இருந்து தோன்றியன. தமிழகத்தில் தமிழ் பிராமி ஆரம்பகாலத்தில் தமிழை எழுதபயன்படுத்தப்பட்டது. இதில் இருந்து நேரடியாக வட்டெழுத்து தோன்றியது. வட்டெழுத்தில் இருந்து தற்கால எழுத்துமுறை தோன்றியது. மலையாள எழுத்துமுறை பிராமிய எழுத்துமுறையான கிரந்த எழுத்துமுறையில் இருந்து எழுந்தது. இதே போல் பர்மிய மொழி, குமெர் மொழி(கம்போடிய மொழி), லாவோ மொழி, தாய் மொழி, ஜாவா மொழி, பாலி மொழி மற்றும் திபெத்திய மொழி ஆகியவையும் பிராமிய எழுத்துமுறையில் எழுதப்பட்டாலும் அம்மொழிகளின் ஒலியியலுக்கிணங்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிராமிய எழுத்துமுறையான சித்தம் பௌத்தத்தில் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளது. இது மிகவும் புனிதமான எழுத்துமுறையாக கருதப்படுகிறது, பல பௌத்த சூத்திரங்களும் மந்திரங்களும் சித்தம் எழுத்துமுறையிலேயே உள்ளன. இன்றளவும் சித்தம் ஜப்பானில் பயன்பாட்டில் உள்ளது. பேராசிரியல் கேரி லெட்யார்டு என்பவர் கொரிய ஹங்குல் எழுத்துமுறை பிராமிய எழுத்துமுறையான மங்கோலிய பக்ஸ்பா எழுத்துமுறையில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இது நிரூபிக்கப்பட்டால் கொரிய எழுத்துமுறை கூட ஒரு வகையில் பிராமிய எழுத்துமுறையாக இனி கருதப்படும் கீழ்க்கண்ட அட்டவனையில் பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய எழுத்துமுறைகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கத்தின் படியும் சர்வதேச உச்சரிப்பு அரிச்சுவடியின் படியும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணை முழுமையானது அல்ல சில எழுத்துக்கள் விடப்பட்டிருக்கலாம். உயிரெழுத்துக்களும் அவற்றின் இணையான 'க'கர உயிர்மெய்யெழுத்துக்களும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன இயந்திரவியல் கலைச்சொற்கள் மொழி பெயர்ப்பு செய்யப்படவேண்டிய இயந்திர பட்டியல் Lathe machine - உருளுருவாக்கி , கடைசல் எந்திரம் planer machine- இழைப்புளி எந்திரம் slotter - காடியிடு எந்திரம் Shaper - சிற்றிழைப்பு எந்திரம் milling machine - துருவல் எந்திரம் grinding machine- சாணை எந்திரம் Drilling machine- துளையிடு எந்திரம் broaching machine- கொந்து எந்திரம் வினவல் அமைப்பு மொழி "எஸ்கியூஎல் (SQL"' அல்லது "Structured Query Language") என்பது கட்டமைப்புள்ள வினவு மொழி ஆகும். இது தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை கட்டமைவுகளில் தரவுகளை மீட்கவும் மேலாண்மை செய்யவும் பயன்படும் ஒரு தரவுதள கணினி நிரலாக்க மொழியாகும். வெவ்வேறு நிறுவனங்களில் தரவுதளங்களில் இந்த மொழியை பயன்படுத்தலாம். மை எஸ்கியூஎல் (MySQL) ஒரு திறந்த மென்பொருள் ஆகும், ஆகையால் அதை இலவசமாக பயன்படுத்தலாம். மருத்துவக் கருவிகளின் பட்டியல் மருத்துவ கருவிகள் நோயை கண்டுபிடிக்கவும் குணமாக்கவும் உதவுகின்றன. கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் கலகத்தா தேசிய நூலக ரோமனாக்கம் என்பது இந்திய மொழிகளை லத்தீன எழுத்துக்களின் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறையை காங்கிரஸ் நூலகம் என்று குறிப்பிடுவர். இது மற்றொரு ரோமனாக்க வழிமுறையான ISO 15919 உடன் பல ஒற்றுமைகள் உடையது. இந்திய மொழிகளுக்கு பொதுவான எழுத்துக்கள் தேவநாகரியிலும், திராவிட மொழிகளுக்கே உரிய ஒலிகள் திராவிட மொழிகளிலும் தரப்பட்டுள்ளன. இந்த வழிமுறை IASTயின் நீட்சியாகும். நிகழ்படக்கருவி நிகழ்படக்கருவி ஒரு காட்சியை நிகழ்படமாக ஒலியுடன் சேர்த்துப் பதிவு செய்யும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். நிகழ்சிகளை அசைவற்ற படிமங்களாக தொடர்ச்சியாக வேகமாகப் பதிவு செய்வதன் மூலம் நிகழ்படங்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் analog கருவிகளாக இருந்த நிகழ்படக்கருவிகள் இன்று பெரும்பாலும் இலக்கமுறை கருவிகளாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி IAST சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழிகளை ரோமனாக்கம் செய்வதற்கு மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறை சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழிகள் தொடர்புடைய புத்தகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் தேவநாகரியை விடுத்து முழுவதுமாகவே IASTயிலும் எழுதப்படுவது உண்டு. யூனிகோடு முறை அறிமுகமான பிறகு பல மின்னூல்கள் IASTஐ பயன்படுத்த துவங்கியுள்ளன. IAST ஏத்தென்ஸ் நகரில் 1912ஆம் ஆண்டு "'கிழக்கத்திய காங்கிரஸில்"("Congress of Orientalists") ஏற்படுத்தப்பட்டது. இது தேவநாகரி மற்றும் அதைப்போன்ற எழுத்துமுறைகளின் அனைத்து ஒலியன்களையும் இழப்பற்ற முறையில் ரோமனாக்கம் செய்ய இது வழிவகை செய்கிறது. கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் என்பது அனைத்து பிராமய குடும்ப மொழிகளுக்கான ரோமனாக்கம் வழிமுறையாகும். இது IASTன் நீட்சியாகும். IAST எழுத்துப்பெயர்ப்பு வழிமுறையை விளக்கும் வகையில் தேவநாகரி எழுத்துக்களும் அதன் உச்சரிப்பை குறிக்கும் வகை சர்வதேச உச்சரிப்பு அரிச்சுவடி(IPA) எழுத்துக்களும் தரப்பட்டுள்ளது. குறிப்பு: பிற ரோமனாக்கத்தை போல் அல்லாது இந்த வழிமுறை தலைப்பெழுத்துக்களின் பயன்பாட்டை ஆதரிக்கிறது. IAST ISO 15919இன் குறுக்கமாகும். இந்த வழிமுறைக்கும் ISO ரோமனாக்க வழிமுறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. ISO சமஸ்கிருதத்தை மட்டும் அல்லாமல் பிற இந்திய எழுத்துமுறைகளையும் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கு வழிவகை செய்கிறாது. தொடர்வரிசை ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்புள்ள எண் வரிசைகள் தொடர்வரிசை அல்லது தொடர்முறை ("Sequence") எனப்படும். மிசிசிப்பி ஆறு மிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசூரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும். மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது. பூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது. மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும். "மெசிப்பி" என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது. மிசிசிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது. மிசிசிப்பி ஆற்றின் புவியியல் அமைப்பானது ஆற்றின் போக்கு, அதன் நீர்க்கொள்ளளவு, அதன் வெளியேற்றளவு, வரலாற்று ரீதியான மற்றும் வரலாற்று மாற்றங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்களின் சாத்தியக்கூறுகளின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆற்றின் ஊடாக செல்லும் புதிய மாட்ரிட் நில அதிர்வு மண்டலம் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான பல்வேறு பல அடிப்படை புவியியல் அம்சங்கள் மனித வரலாற்றுக்கான அடிப்படையிலமைந்து அதன் நீர்வழிகள் மற்றும் அருகில் இருக்கும் நிலங்களைப் பயன்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகின்றன.. மிசிசிப்பி நதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. மேல் மிசிசிப்பி, மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள இடாசுகா ஏரியில் (lake Itasca) தொடங்குகிறது. மினசோட்டா, கிளியர்வாட்டர் கவுண்டியில் உள்ள இட்டாசுகா மாநிலப் பூங்காவில் கடல் மட்டத்திலிருந்து 1,475 அடி (450 மீ) அமைந்துள்ள எரியாகும்.இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும். இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன. உயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது. மிசோரியில் உள்ள செயின்ட் லூயிசில் மிசிசிப்பி ஆறு மிசோரி ஆற்றுடன் கலக்கும் இடம் தொடங்கி இலினாய்ஸ் மாகானம் கெய்ரோவின் ஓகியோ ஆறு வரையிலான 190 மைல்கள் (310 கிமீ) வரை பாயும் மிசிசிப்பி மத்திய மிசிசிப்பி என்றழைக்கப்படடுகிறது.. மத்திய மிசிசிப்பி ஒப்பீட்டளவில் தடையின்றி பாய்கிறது. செயின்ட் லூயிஸில் இருந்து ஒஹாயோ ஆற்றுடன் கலக்கமிடத்தில், மத்திய மிசிசிப்பி 180 மைல் (290 கிமீ) மேல் மைல் (23 செமீ / கிமீ) சராசரியாக 1.2 அடிக்கு 220 மீட்டர் (67 மீ) விழும். ஓஹியோ ஆற்றுடன் சேருமிடத்தில், மிசிசிப்பி கடல் மட்டத்திலிருந்து 315 அடியில் (96 மீ) அமைந்துள்ளது. இல்லினாய்ஸ் மிசூரி மற்றும் மெரமேக் ஆறுகள் மற்றும் இல்லினாய்சின் கஸ்கஸ்கியா ஆறு ஆகியவற்றை தவிர, மிசிசிப்பி ஆற்றின் மத்திய பகுதியில் எந்த பெரிய கிளை நதிகளும் பாயவில்லை. ஓகியோ ஆற்றுடன் சங்கமிக்கும் இடத்திலிருந்து மெக்சிகோ வளைகுடாவின் முகத்துவாரம் வரையிலான மிசிசிப்பி ஆறானது மீழ் மிசிசிப்பி என்றழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கி 1000 மைல்கள் (1.600 கி.மீ) தூரத்திற்குப் பாய்ந்தோடுகிறது. மிசிசிப்பி ஆறானது உலகிலேயே நான்காவது வடிநிலப்பரப்பைக் கொண்ட ஆறாகும். இந்த வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 1,245,000 சதுர மைல்களுக்கும் (3,220,000 km2) அதிகமாகும்.இது அமெரிக்காவின் 30 மாநிலங்களையும் கனடாவின் 2 மாகானங்களையும் உள்ளடக்கிப் பரவியுள்ளது.இவ்வடிநில அமைப்பிலுள்ள ஆற்று நீரானது மெக்சிக்கோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கிறது.மிசிசிப்பி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியானது அமெரிக்க கண்டத்தின் 40% நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.நிச்பிடிப்பு பகுதியின் மிக உயரத்தில் அமைந்த புள்ளி ராக்கி மலைத்தொடரிலுள்ள மவுண்ட் எல்பெர்ட் ஆகும். அதன் உயரம் 14,440 அடி (4,400 மீ). மிசிசிப்பி ஆறானது வருடத்திற்குச் சராசரியாக வினாடிக்கு 200 முதல் 700 ஆயிரம் கன அடி (7,000–20,000 மீ/வி) வரை நீரை வெளியேற்றுகிறது.இருப்பினும் இந்த ஆறு கொள்ளளவு அடிப்படையில் உலகின் 5 ஆவது பெரிய ஆறாகவும் , அமேசானின் வெளியீட்டில் சிறு பங்கினைப் போன்றதாகவும் உள்ளது,மழை பருவ காலங்கலில் விநாடிக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் கன அடி (சுமார் 200,000 மீ / வி) நீரை வெளியேற்றுகிறது. அமேசான் ஆற்றின் ஓட்டத்தில் மிசிசிப்பி 8% அளவாக உள்ளது. மிசிசிப்பி ஆற்றின் நன்னீரானது மெக்சிகோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கும் போது உடனடியாக உப்பு நீரில் கரைந்துவிடுவதில்லை.நாசாவின் வானிலைப் புகைப்படங்களை ஆராயும் போது கடலின் நெடுந்தூரத்திற்கு கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது. கடல் நீரானது இதனைச் சூழ்ந்து வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது.இதன் மூலம் கடலில் மிசிசிப்பி ஆற்று நீரானது உடனடியாக கலக்கவில்லை என அறிய முடியும். இது மெக்சிகோ வளைகுடாவில் கலந்து புளோரிடா நீரினை வழியாகச் சென்று வளைகுடா நீரோட்டத்தில் கலக்கிறது. மிசிசிப்பி ஆறானது அமெரிக்காவின் மின்னசோட்டா முதல் லூசியானா வரை 10 மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. மேலும் விசுக்கொசின், இலினாய்சு, டென்னிசி, மற்றும் மிசிசிப்பி மாநிலங்கள் இந்த ஆற்றின் கிழக்குப்பகுதியிலும் அயோவாஈ மிசோரி,மற்றும் அர்க்னசாஸ் மாநிலங்கள் மேற்குப்பகுதியிலுமாக மாநில எல்லைகளை வரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மினசோட்டா மற்றும் லூசியானா ஆகிய இரு மாநிலப் பகுதிகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களில் எல்லைகள் மிசிசிப்பி ஆற்றினால் வரையறுக்கப்பட்டுள்ளது. கூ சிங்தாவ் கூ சிங்தாவ் ("Hu Jintao", சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார். கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர். பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார். பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார். தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம். மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழா‌விற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம் பின்பனிக் காலம். அக்காலத்தை ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே பின்பனிக் காலம் என்று கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர். குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில், சந்தனம், வாசனைப்பொருள், கருப்பூரம் முதலிய பொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று இளங்கோ வினவுகின்றது நயமான இலக்கிய விருந்தாகும். காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப்பட்டுள்ளது. கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது. காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான் என்பதில் இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரியவருகின்றன. விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று பெயரிடப் பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. . காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே வருகின்றான் என்று விழாவைச் சிறப்பித்துக் கூறும் புலவர், காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு வந்தான் என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது! அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை மலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர். காதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால், காதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப் பட்டது! மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்தன. இத்தெய்வத்திற்கு இராசகிரியத்தில் விழா நட‌த்தப்பட்டதை பெருங்கதை உரைக்கிறது. காதலன் வரவுக்காகக் காத்திருந்த பதுமாபதி, உதயணனைக் கண்டு மகிழ்ந்த பின்னர் தன் காதற் தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் வேதியர்க்கும் மற்றவக்கும் அவர்கள் வேண்டிய பொருளைத் தானமாக வழங்கினாள் என்பதயும் அறியலாம். இலக்கியத்தில் காதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது போலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது என்ற கற்பனை இடம்பெற்றுள்ளது. எவ்வாறென்றால், காதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த கை நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான் என்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது போல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் காதலர்க்கும் இளவேனில் நல்லையே என்று கலித்தொகை பாராட்டுகிறது. இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது. காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும். பழங்கதைகளின்படி தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன். அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. அச்செய்தியை மணிமேகலை "விழாவறை காதை" விளங்குகிறது. அவ்விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், "மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்' உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், "இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்" என வரைவு காண்கின்றார். வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, "காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டுகின்றனர். 'காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும், காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும்!என்று காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்' என்று கலித்தொகையில் ஒருத்தி உரைக்கக் காணலாம். காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து புனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோது, வினையாற்ற வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம். தோழியிடம் தலைவி கீழ்க் கண்டவாறு உரைக்கின்றாள். 'ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ?' என்று காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது புலனாகிறது. நம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக் கிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக் கொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும். இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்று நாட்டார் பழங்கதைகள் கூறுகின்றன. கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான். தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார். நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை. பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் கே. உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், "உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று" என்று கூறலாம். உரோமாபுரியினரால் தொடங்கப்பட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற காதலர் நாள் ("VALENTINES DAY") தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும் வாய்ப்பு உள்ளது. காரணம், உரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர் வீரர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அஃதோடல்லாமல், உரோமானிய வணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து சென்றனர் என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்! அதனால், அவர்களிடத்திலும் அப்பழக்கம் தோன்றியிருக்கலாம். உரோமாபுரி நாட்டினராகிய யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கி விட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றன. (அகநானூறு. 149: 9-11) யவனர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின் பொருட்டு வந்திருந்து தங்கியிருந்திருக்கின்றனர். (சிலப்பதிகாரம். 5:10) யவனர்கள், வாளைக் கையில் ஏந்திக் கொண்டு மதுரை மாநகர் கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்துள்ளனர். (சிலப்பதிகாரம்.14:66-67) யவனர்களில் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்துள்ளனர். புகார் நகரில் தங்கியவர்கள் மாடமாளிகைகளிலும் மதுரையில் தங்கியவர்கள் கோட்டையைக் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதால் தமிழகத்தின் தொன்மையான பழக்கவழக்கங்களில் பலவற்றை யவனர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவற்றுள் சில பழக்கவழக்கங்கள் யவனர்கள் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கவும் கூடும். அவ்வாறு கொண்டு சென்றவற்றுள் "காதலர் தின விழா"வும் ஒன்றாக இருந்திருக்கூடும் என்ற கருத்தும் உள்ளது. பாபிலோன் (மென்பொருள்) பாபிலோன் சுட்டி (மவுஸ்) இன் துணைகொண்டு சொற்களை மொழிபெயர்ப்பதும் அகராதி வசதி கொண்டதுமான ஒரு மென்பொருள் ஆகும். இதைப் பொதுவாக சொற்களைப் புரிந்து கொள்ளும் (OCR) தொழில்நுட்பமூடாக ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிகளை உணர்ந்துகொள்ளும் என்றாலும் தமிழ்மொழியை இன்றுவரை சரியாகச் சொற்களைப் புரிந்துகொள்ளாது. இம்மென்பொருளானது ஏறத்தாழ எல்லா விண்டோஸ் பிரயோகங்களிலுமே வேலைசெய்யும் எனினும் அடோபி அக்ரோபாட் PDF கோப்புக்களில் நகலெடுக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருந்தால் இதுவும் வேலை செய்யாது. இதை உயிர்பூட்டியதும் (Activate) திரையில் சிறியதோர் சாளர்ரத்தில் (விண்டோஸ்) அதன் பொருளை விளக்குவதாகவோ அல்லது மொழிபெயர்ப்பையோ காட்டும். புதிய 7 வது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏறத்தாழ எல்லா இந்தியமொழிகளிலுமே ஒருங்குறி முறையில் அகராதியை உருவாக்குவது சாத்தியம் ஆகின்றது. ராபின் உத்தப்பா ராபின் வேனு உத்தப்பா (Robin Venu Uthappa (; பிறப்பு: நவம்பர் 11, 1985) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவரது தந்தை வேணு உத்தப்பா ஒரு வளைதடிப் பந்தாட்ட நடுவர். இவர் கருநாடக அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகிறார். ஏப்ரல் 2006 இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதில் ஏழாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 86 ஓட்டங்கள் எடுத்து "ரன் அவுட்" முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அறிமுக வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இவர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையினால் "தி வாக்கிங் அசாசின்" எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற மிகமுக்கிய பங்காற்றினார். 2014-2015 ஆம் ஆண்டிகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ராபின் உத்தப்பா நவம்பர் 11, 1985 இல் குடகு மாவட்டம், கருநாடகத்தில் பிறந்தார். இவர் பெங்களூர், ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரியில் கல்வி பயின்றார். 2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத்ன் தொடரில் சிறப்பான திறமையை வெளிபடுத்தினார். இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில் 38 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய இவர் 36 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஆறு 4 மற்றும் ஒரு 6 ஓட்டங்களும் அடங்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 123 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து முக்கிய போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்தார். 2009 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரன போட்டியில் 42 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல்66 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது அதிவேக 50 ஓட்டங்கள் இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இந்தத் தொடர் முழுவதும் 14 போட்டிகளில் விளையாடி 374 ஓட்டங்கள் எடுத்தார். 27 ஆறுகள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக ஆறுகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். முள்ளும் மலரும் முள்ளும் மலரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா. ஹர்பஜன் சிங் ஹர்பஜன் சிங் பிளாஹா (Harbhajan Singh Plaha (; (, பிறப்பு:சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலத் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். தற்போது இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஹர்பஜன் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட ஆட்டங்களில் 1998ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார். துவக்க காலங்களில் இவரது ஆட்டப்பணி பந்துவீச்சு செயல்முறை குறித்த மற்றும் ஒழுங்கீன செயல்கள் குறித்த சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமடைந்ததை அடுத்து அப்போதைய அணித்தலைவர் சௌரவ் கங்குலியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இந்தப் போட்டிகளின்போது ஓர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி "ஹாட்ரிக்" சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். ஹர்பஜன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான "இந்தியன் போர்ட் பிரசிடண்ட்ஸ் லெவன்" அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தப் போட்டியில் 127 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே வீழ்த்தினார். பின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பின் பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அறிமுகமானார். அதில் ஒரு ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும் மற்றதில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் 136 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப்போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 11 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சரசரி 30.45 ஆகும். இவர் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தத் தொடரில் ஆத்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டும் இலக்குகளை வீழ்த்த முடியவில்லை. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்களின் தரவரிசையில் ஜாகிர் கான், ஆசீஷ் நேரா மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்திற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் 11 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 3.65 ஓட்டங்கள் எடுத்துள்ளார். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவரை அவமதிக்கும் வகையில் நடந்ததால் தண்டனை பெற்றார். அதிகாரப்பூர்வ வலைத்தளம் நாவல் நெட்வேர் நெட்வெயார் ஓர் நாவல் நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்ட ஓர் வலையமைப்பு இயங்குதளம் ஆகும். நெட்வெயார் மிகவும் இலகுவான ஓர் சித்தாந்ததின் அடிப்படையிலேயே விருத்தி செய்யப்பட்டது அதாவது வன்வட்டினைப் (ஹாட்டிஸ்க்) பகிர்வதற்கு மாறாக கோப்புக்களைப் பகிர்தல் என்னும் எண்ணக்கருவுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. 1983 இல் நெட்வெயாரின் முதலாவது பதிப்பானது வெளிவந்தது. அக்காலத்தில் இதன் போட்டியாளர்கள் எல்லாருமே நேரடியாகப் பகிரப்பட்ட வன்வட்டினைப் பாவிக்ககூடியதாகவே தமது வலையமைப்பு இயங்குதளங்களை வடிவமைத்தனர். இந்தத் தத்துவங்கள் ஒருகாலத்தில் கணினி ஜாம்பவானாக இருந்த ஐபிஎம் நிறுவனத்தால் 1984 பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாவல் நெட்வேரின் விருத்திக்கு வித்திட்டது. நாவல் நெட்வேரில் வன்வட்டின் இடமானது டாஸ் இயங்குதளம் போன்று நெட்வெயார் வொல்லியூம் ஆகப் பகிரப்பட்டது. டூப்பாக் ஷகூர் டூப்பாக் (Tupac) என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1991 முதல் 1996 வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 மில்லியன் இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று கின்னெஸ் உலகச் சாதனை நூலில் உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர திரைப்பட நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழும் வறுமைப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, இனப் பாகுபாடு, போதைப்பொருள் பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக சமத்துவத்தை டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார். நியூயார்க் நகரில் பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக ஓக்லன்ட், கலிபோர்னியா நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு 2பாக்கலிப்ஸ் நௌ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. 1994ல் நவம்பர் மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் நொடோரியஸ் பி.ஐ.ஜி உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு 1990களில் நடந்த கடும் கிழக்கு-மேற்கு எதிரிடையின் ஒரு காரணமாகும். பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் சுக் நைட் நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, ஆல் ஐஸ் ஆன் மி, படைத்தார். செப்டம்பர் 7, 1996 லாஸ் வேகஸ் நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார். லாஸ் வேகஸ் லாஸ் வேகஸ் (Las Vegas) ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 552,539 மக்கள் வாழ்கிறார்கள். சூரிய ஆற்றல் சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் ("solar energy") எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி ("biomass") ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்று மண்டலத்தையடையக்கூடிய சூரிய ஆற்றலில் 174 x 10 வாட் அளவுள்ள ஆற்றல் புவியை அடைகிறது. அவற்றுள் 30 சதவீதம் விண்வெளிக்கே திருப்பிச் செலுத்தப்படுகிறது. சில வாட் ஆற்றல் கடல், நிலம், மேகங்கள் போன்றவற்றால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சூரிய ஒளியின் மின்காந்த நிழற்பட்டையில் புவியை அடைவது பெரும்பாலும் ஒளி அலையாகவும் அகச்சிவப்புக் கதிராகவும் மிகச்சிறு பகுதி புற ஊதாக் கதிராகவும் உள்ளது. ஒரு வருடத்திற்கு புவியின் காற்று மண்டலம், கடல், நிலப்பரப்பு ஆகியவை உள்ளெடுத்துக்கொள்ளும் மொத்தச் சூரிய ஆற்றலின் அளவு 3,850,000 x 10 ஜூல்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு மட்டும் 3,000 x 10 ஜூல்கள் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. உயிர்ப்பொருட்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலும் மறைமுகமாக சூரிய சக்தி மூலமே கிடைக்கிறது. இதன் அளவு, ஒரு வருடத்திற்கு 100–300 x 10 ஜூல்கள் ஆகும். நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் போன்ற புதுப்பிக்கவியலா வளங்களிலிருந்து ஒரு வருடத்தில் பெறப்படும் மொத்த ஆற்றலின் அளவைவிட புவியின் பரப்பை ஒரு வருடத்தில் வந்தடையும் சூரிய ஆற்றலின் அளவு இருமடங்கு அதிகமாகும். பூமத்திய ரேகையிலிருந்து உள்ள தூரத்தினைப் பொருத்து, சூரிய ஆற்றலை பூமியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு அளவுநிலைகளில் கவரவியலும். சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி சூரியக்கலங்கள் (solar cell) மூலம் நேர் மின்சார ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இந்த மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து தேவையான போது உபயோகிக்கலாம். இன்று, உலகின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தெருக்களில் வெளிச்சத்துக்காகவும், கிராமங்களில் நீர்ப்பாசன மோட்டார்களை இயக்குவதற்கும் சூரியக் கலங்கள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. சூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. சூரிய ஒளிக்கதிர்களை நேரடியாகக் கவருதலே பொதுவாக சோலார் தொழில்நுட்பம் எனப்பட்டாலும் (புவிவெப்ப ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல் தவிர) அனைத்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களும் மறைமுகமாக சூரிசக்தியின் மூலமே கிடைக்கப்பெறுகின்றன. சூரிய ஒளி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. போட்டோவோல்டயிக் செல்களைக் கொண்டு மின்சாரம் தயாரித்தல், சோலார் தொழினுட்பத்தில் இயங்கும் விசையியக்கக் குழாய்கள், மின்விசிறிகள் போன்றவை இதன் நேரடிப் பயன்பாடுகள் எனக் கூறலாம். சூரிய ஒளியை கண்ணாடிகள் மூலம் ஒருமுகப்படுத்தி கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு நீராவி எஞ்சின் தத்துவத்தின் முறையிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தேவையான வெப்பப் பண்புகள் கொண்ட பொருட்களைத் தேர்வு செய்தல், இடங்களை இயற்கைக் காற்றோட்டத்துடனும் கட்டிடங்களைச் சூரியனின் நிலையைப் பொருத்தும் அமைத்தல் ஆகியவை மறைமுகப் பயன்பாடுகள் எனக் கூறமுடியும். தண்ணீரைச் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் குளிருட்டவும் மற்றும் செயல்முறை வெப்ப உற்பத்திக்கும் சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தலாம். நீரைச் சூடாக்குதலில் (water heating) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது. 40 டிகிரிக்குக் குறைவான நிலநேர்க்கோடு உள்ள பகுதிகளில் வீடுகளில் தண்ணீரை சூடாக்க (60 °C வரை) 60 - 70 சதவீதம் சூரிய ஆற்றலே பயன்படுகிறது. சூடாக்குதல், குளிரூட்டுதல் மற்றும் காற்றோட்ட முறையில் (heating,cooling,ventilation) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது. அமெரிக்காவில் 30 சதவீதம் (4.65 EJ) வணிகக் கட்டிடங்களிலும் 50 சதவீதம்(10.1 EJ) குடியிருப்புக் கட்டிடங்களிலும் சூரிய ஆற்றல் மூலம் சூடாக்குதல், குளிரூட்டுதல், காற்றோட்ட முறை பயன்படுத்தப்படுகிறது. சமைத்தலிலும் (cooking) சூரிய ஆற்றல் உபையோகப்படுகிறது. செயல்முறை வெப்ப உற்பத்தியில் (process heat generation) பல நாடுகள் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. பொனொபோ பொனொபோ எனப்படும் மனிதக் குரங்குகள் அண்மைக் காலம் வரை குள்ள சிம்ப்பன்சி அல்லது குள்ள சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்டன. இவை முதனி வரிசையில், சிம்ப்பன்சி இனக் குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றின்கீழ் வருவன. "சிம்ப்பன்சி" என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்சி (Common Chimpanzee), மற்றும் பொனொபோ இரண்டையும் குறித்தாலும் வழக்கமாக பொதுவான சிம்ப்பன்சியையே குறிக்கும். பொனொபோக்கள் தற்போது அழிவுநிலையில் உள்ளன. அவை இயற்கையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டில் உள்ள காடுகளில் மட்டும் காணப்படுகின்றன். இவை மனிதர்களின் மரபணுவுடன் 98.5 விழுக்காடு ஒத்துப் போகின்றன. இந்தக் குரங்குகளிடம் மனிதனின் நிறைய குணங்கள் உள்ளன. மனிதனைப் போலப் பேச, கருவிகளைக் கையாள, இசைக் கருவிகளை இயக்கச் சீக்கிரமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் குரங்குகள் கூட்டமாகவே வாழும். பொனொபோ குரங்கை முதன்முதலில் கண்டுசொல்லிய பெருமை செர்மன் நாட்டவரான உடற்கூறியலாளர் (அல்லது என்புகூட்டியலார் (anatomist)) "எர்னசுட்டு சுவார்ட்ஃசு" (Ernst Schwarz) என்பவரைச்சேரும். அவர் 1928 இல் பெல்சியம் நாட்டு தெர்வுரென் அருங்காட்சியகத்தில் (Tervuren museum) இருந்த, ஒரு குட்டி சிம்பன்சியினுடையது என்று அதுகாறும் கருதப்பட்ட, மண்டை ஓடு ஒன்றை ஆய்ந்த போது இந்த உண்மையை கண்டறிந்து, 1929 ல் வெளிப்படுத்தினார். 1933 இல் அமெரிக்கரான. என்புகூட்டியலார் "அரால்டு கூலிட்சு" (Harold Coolidge) பொனொபோ குரங்குகளின் விளக்கமான அடையாளங்களை கொடுத்தது மட்டுமன்றி அவற்றை ஒரு தனி இனமாகவே உயர்த்தினார். இந்த இனம் நீளமான கால்களை உடையனவாகவும், தாய்வழிப் பண்பாட்டை போற்றுவனவாகவும், அதன் சமூகத்தில் பாலியல் நடவடிக்கைகளில் முன்னணி பங்கு கொள்ளும் இயல்பு கொண்டனவாகவும் தனித்து தென்படுகின்றன. இந்த முதனிகள் (primate) முதன்மையாக கனியுண்ணிகள் (frugivorous). ஆனால் இலைகள் மற்றும் சில நேரங்களில் பறக்கும் அணில், குட்டி தியூய்க்கர் ("duikers") போன்ற சிறு விலங்குகளையும் முதுகுத்தண்டு இல்லா உயிரினங்களையும் உண்டு தன் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்ளும். பொனொபோ என்னும் பெயர் முதன்முதலில் 1954ல் தான் காணப்பட்டது. எட்வர்டு திராட்ஃசு மற்றும் ஐன்சு ஃகெக்கு (Edward Tratz and Heinz Heck) இருவரும், குறள சிம்பன்சிகளுக்கு ஒரு புதிய, தனித்த பொதுப்பெயராக இந்த பெயரை சூட்டினார்கள். இந்த சொல் பண்ட்டு (Bantu) மொழியில் "சிம்பன்சி" அல்லது "முன்னோர்" என பொருள் தரும் சொல்லாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த சொல் காங்கோ ஆற்றின் கரையில் உள்ள பொலொபொ (Bolobo ) என்ற நகரின் பெயர்த்திரிபு ஆக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நகர் 1920ல் சிம்பன்சிகள் சேகரிப்பில் தொடர்பு படுத்தப்பட்டது. பொனொபோவின் அறிவியல் பெயர் "பான் பானிஸ்கஸ்" ("Pan paniscus") . முதல்கட்ட ஆய்வுகளின்படி இவற்றின் மரபணுக்கள் மாந்தர் இனத்துக்கு 98% ஒன்றிய பண்புகள் கொண்டதாக உள்ளன. அண்மைய ஆய்வுகள் கொரில்லாக்களை காட்டிலும் சிம்பன்ஸிகளே, மனித இனத்துக்கே நெருக்கமாக உள்ளன என சொல்லுகின்றன. மிகவும் அண்மையில் நடைபெற்ற ஜீனோம் ஒப்புமைகளில் சிம்பன்ஸி மற்றும் மந்தர்களின் மரபணு ஒற்றுமைகளை அலசி ஆய்ந்ததில், இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமை அதன் அளவிலும் தன்மையிலும் மிக சிக்கலானதாகவே உள்ளன (complex both in extent and character) என தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், இவ்விரண்டினுடைய 5% ஜீனோம்களை ஆய்ந்ததில், 35 மில்லியன் ஒற்றை நியூக்லியாய்டு மாற்றங்கள், ஐந்து மில்லியன் செருகல்/ நீக்கல் நிகழ்ச்சிகள், மற்றும் குரோமொசோம்களின் வரிசைமாற்றங்களை கண்டுள்ளார்கள். இந்த ஆய்வுகள் வழக்கமான சிம்பன்சியை கொண்டு நிகழ்த்தப்பட்டன். ஆயினும், பொனொபோவுக்கும் சிம்பன்சிக்கும் இடையே உள்ள வேற்றுமைகள், பொனொபோவை சிம்பன்சி இனத்தில் இருந்து பிரித்து விட போதுமான காரணமாக இல்லை. அண்மைய டி.என்.ஏ. மரபணு ஆய்வுகள், பொனொபோவும், சிம்பன்சியும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு சற்றே குறைவான காலத்தில்தான் பிரிந்தன என்று சொல்லுகின்றன. மாந்தர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் முன்னோடியான இனத்தில் இருந்து சிம்பன்சி கிளை பிரிவு, நான்கு முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. மாந்தர் இனத்தில் இருந்து பிரிந்த இனங்களில் ஹோமோ சேப்பியன் எனப்படும் மதிமாக்கள் இனம் (மதியை பயன்படுத்தும் இனம்) பிற இன்று இல்லாததால் சிம்பன்சி இனமே மாந்தர் இனத்துக்கு மிக நெருக்கமானதாகும் பொனொபோ விலங்குகள் சிம்பன்சியை விட மெலிந்து காணப்படும். அதன் தலை சிம்பன்சியின் தலையை விட சிறுத்தும் சற்று குறைவாகவே எடுப்பான புருவமேடுகள் கொணடதாகவும் இருக்கும். கறுத்த முகம், சிவந்த உதடுகள், சிறிய காதுமடல்கள், அகலமூக்கு, தலையில் நீண்ட மயிர்கள் உடையதாக இருக்கும். பெண்பாலாருக்கு மற்ற மனிதக்குரங்கு பெண்களைப்போல் தட்டையாக இல்லாமல் சற்று எடுப்பான முலைகள் உடையதாக இருந்தாலும் மாந்தர் இன பெண்களைபோல் மிகுந்த எடுப்பாக இராது. பொனொபோக்கள் ஒல்லியான மேல் உடலும், மெலிந்த தோள்களும், சன்ன கழுத்தும், சிம்பன்சிகளை ஒக்கும் அளவுக்கு நீண்ட கால்களும் கொண்டன. இவை நிலமிசை நகர்கையில் 25% நேரம் தன் இருகால்களால் நிமிர்ந்து நடக்கும். இந்த பண்புகளும் அமர்கின்ற (posture) நிலையும் பொனொபோக்கள், சிம்பன்சி தோற்றத்தை விட, மாந்தர்களை போன்ற தோற்றத்தையே தருகின்றன. இதற்கும் மேலாக மாந்தர்களை போல் பொனொபோக்கள் ஒவ்வொன்றும் தனித்த முக சாடைகளை கொண்டு, ஒன்று மற்றதை விட குறிப்பிட்ட வேற்றுமையுடன் இருப்பதால் சமூக உறவுகளில் பார்த்தே அறிந்துகொள்ளும் தன்மை கொண்டனவாகவும் உள்ளன ஃப்ரான்ஸ் டி வால் என்ற உலகின் முன்னணி முதனியியலார் ("primatologist") சொல்லும்போது, பொனொபோக்கள் பிறநலம் பேணுவனவாகவும், கனிவு, தன்னைபோல் பிறரையும் பாவித்தல் (empathy), கருணை, பொறுமை மற்றும் உணர்வுகள் கொண்டனவாக இருக்கவல்லன என்கிறார். காடுகளில் வாழும் சிம்பன்சி சமுதாயங்களை கவனித்ததில், அதன் ஆண்கள் பிற குழுக்களில் இருக்கும் ஆண்களிடம் மிகுந்த பகைமையை காட்டின. ஆண் கும்பல்கள், தனியாக திரியும் பிற ஆண் சிம்பன்சிகளை தேடி அதனை தாக்குகின்றன. அன்றியும், பல நேரங்களில் கொன்றும் விடுகின்றன. (சில ஆய்வாளர்கள் சிம்பன்சியின் இந்த பகைமை குணத்துக்கு மனிதர்களின் தொடர்பு மற்றும் காடுகள் அழிவதால் விளையும் இடநெருக்கடியை காரணமாக சொல்லுவார்கள்.) ஆனால் பொனொபோ ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டனிடமும் இந்த நடத்தை இல்லை. அவை வெளியாட்களிடம் மோதல் கொள்வதினும் காதல் உறவு கொள்வதே மேலானது என கொள்கின்றன. பொனொபோக்களோ, வன்முறை வழக்கமுடைய சிம்பன்சிகள் வாழும் இடத்தை விட்டு வேறு இடங்களில் வாழ்கின்றன. இரண்டு இனங்களும் நீச்சல் அறியா. எனவே காங்கோ ஆற்றின் சில இடங்களில் வெவ்வேறு கரைகளில் வாழுகின்றன. பொனொபோக்கள் அமைதி வாழ்க்கைக்கு, அவை வாழும் இடத்தில் ஊட்டம் மிக்க தழைகள் ஏராளமாக இருப்பதால், கூட்டமாக மேய்வதற்கு தோதாக இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பொனொபோக்களின் இந்த பரவலான மதிப்பு தற்போது ஒரு சிலர் கேள்விக்கும் உரித்தாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் ஒன்றை ஒன்று தாக்கி கொள்வதும் குதறிக்கொள்வதும் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன். ஆனால் இந்த நிகழ்வுகள் காட்சியகங்களில் தாய் மகன்களை பிரித்து வைப்பதால் இருக்கலாம். பொனொபோ சமுதாயம் பெண்களின் ஆதிக்கம் கொண்டது என்பதால், தாய்க்கும் அதன் ஆண் வாரிசுகளுக்கும் இடையே உள்ள ஆயுள் முழுக்க நீடிக்கும் உறவை துண்டிப்பது, பெண்களின் வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். டி வால் (De Waal) என்பவர் பொனொபோக்களை காதல் விலங்குகளாக தீட்டுவதன் இடறுகளை எச்சரிக்கிறார், "எல்லா விலங்குகளும் இயற்கையாகவே தம்முள் போட்டி இடும், ஒரு குறிப்பான சூழல்களில் மட்டும் ஒத்துழைக்கும் தன்மையன. முதன்முதல், நான் சமாதான காதல் என்று எழுதியது என்னெனில் பொனொபோக்கள் இடையே பல மோதல்கள் இருந்தன். அவைகள் சிறந்த ஒற்றுமையுடன் இருந்தால் சமாதானம் ஏன் தேவைப்படும்?" இதற்கு மாறாக, சிம்பன்சிகளை போல், பொனொபோக்களிடையே, காடுகள் என்றாலும் காட்சியகங்கள் என்றாலும், சாவு நிகழ்த்தும் வன்முறைகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் இல்லை. ஆனால் சிம்பன்சிகளைபோல் போதுமான ஆய்வுகளை, காடுகளில் வாழும் பொனொபோக்கள் மேல் இன்னும் செய்யப்படாததால், அதன் கொலைவெறி வன்முறைத்தன்மை இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும் பொனொபோ குழுமத்தில் பாலியல் கலவி (உடலுறவு) ஒரு பெரும் பங்கு கொள்கிறது. இந்த செய்கை, பிறரை வரவேற்பதாகவும், பிணக்குகளுக்கு தீர்வு காணும் வழியாகவும், தகராறுகளுக்குப்பின் நல்லிணக்கம் பெறுவதாகவும், பெண்கள் பெறும் உணவுக்கு கைமாறாகவும் பயன்படுகிறது. ஒரே ஒரு ஜோடி காங்கோ கொரில்லாக்கள் அன்றி, பொனொபோக்கள் மட்டுமே மனித குரங்குகளில், மல்லாந்து கலவி செய்வது (பல தடவை பெண்-பெண், அடுத்து ஆண்- பெண், மற்றும் ஆண்- ஆண்), நாவால் வருடி முத்தம் இடுவது மற்றும் வாய்வழிப் பாலுறவு போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை கவனித்துள்ளார்கள். மிக அண்மையில் கொரில்லாக்களும் மல்லாந்து கலவி செய்தலை கவனித்து உள்ளார்கள். In scientific literature, the female-female sex is often referred to as "GG rubbing" or "genital-genital rubbing", while male-male sex is sometimes referred to as "penis fencing". பாலியல் நடவடிக்கைகள் பல நேரங்களில் வளர்ந்தவர்-பிள்ளைகள் இடையேயும் சிலநேரங்களில் குட்டிகளுடனும் என நெருங்கிய குடும்பத்தாரிடையேயும், பிறத்தியாரிடையேயும் நடைபெறுகின்றன. எந்த இரண்டு பொனொபோக்களும் நிலையான உறவுமை ஏற்படுத்திக் கொள்வது இல்லை. தாய் - வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்ற ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் கடைப்பிடித்து, வயது, பால் என்ற வேறு பாடு இன்றி இந்த பாலுறவு கொள்ளுகின்றன். சில ஆய்வாளர்கள் இந்த 'தாய் - வளர்ந்த ஆண் பிள்ளைகள்' உறவு, மட்டும் ஒரு தீட்டு (taboo) போல் என்று நினைக்கிறார்கள். பொனொபோக்கள் உணவு இருக்கும் இடங்களை புதிதாக கண்டால், அவைகளின் அந்த ஆர்வமிகுதி, வழக்கம்போல் கூட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யும். இந்த செயல், அவைகள் தம்முள் ஏற்படக்கூடிய இறுக்க உணர்வை தளர்த்தி ஆர அமர்ந்து உணவு உண்ண ஏதுவாகின்றன. பொனொபோ ஆண்கள் அடிக்கடி பல்வேறு ஆண்-ஆண் பாலுறவு செயல்களில் ஈடுபடுகின்றன். ஒரு நிலையில் இரண்டு ஆண்கள் கிளைகளில் இருந்து தொங்கிக்கொண்டு தம் பால் உறுப்புக்களால் மோதி விளையாடும். இதையே படுத்துக்கொண்டும் செய்யும். குறிப்பாக "பின்தட்டு தேய்த்தல்" எனறு கூறப்படும் முறையில் இரண்டு ஆண்கள் ஒரு பிணக்குக்கு பின நல்லிணக்கம் உற்றதற்கு அடையாளமாக, அவ்விரண்டும் ஒன்றன் முதுகு மற்றதன் முதுகொடு ஒட்டி நின்றுகொண்டு, அவர்களிண் விதைப்பைகளை (scrotal sacs) ஒன்றொடுஒன்று தேய்த்துக் கொள்ளுமாம். பொனொபோ பெண்களும் பிற பெண்பாலாரிடம் நல்லிணக்க ஒட்டுதலை ஏற்படுத்தி, பொனொபோ சமூகத்தில் பெண்களை ஒன்று திரட்ட, பெண்-பெண் பாலுறவில் ஈடுபடுமாம். இந்த ஒற்றுமை பொனொபோ சமுதாயத்தில் பெண்களை மேலாதிக்கம் பெறவைக்கிறது. ஆண் பொனொபோக்கள் தனிப்பட்டு வலிமையானதாக இருந்தாலும், ஒன்று திரண்ட பெண்கள் எதிரே நிற்க இயலாது. பருவம் வந்த பெண்கள் பெரும்பாலும் தம் கூட்டத்தை விட்டு விலகி பிற கூட்டங்களில் இணைந்து கொள்கின்றன். பிற பெண்களுடனான இந்த பாலியல் ஒட்டுறவு, புதிய பெண்களை மற்ற குழுக்களில் எளிதே உறுப்பினராக்கி விடுகிறது. பொனொபோக்களின் ஈனும் திறன் பொதுவான சிம்பன்சிகளை விடவும் அதிகம் இல்லை. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு குழவியை ஈன்று, அதை ஐந்து ஆண்டு வரை சுமந்தும், பாலூட்டியும் வளர்க்கும். பொதுவான சிம்பன்சிகளை ஒப்பிடுகையில் பொனொபோ பெண்கள் குட்டி ஈன்ற பின் மிக விரைவில் கருவுறு சுழற்சியை (genital swelling cycle) அடைகின்றன. இது அவை மீண்டும் தங்கள் சமூகத்தில் பாலுறவு தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. மேலும் பொனொபோ பெண்கள் மலடாக இருப்பினும் அல்லது பிள்ளை பெற முடியாத அளவுக்கு இளையதாக இருப்பினும் பாலியில் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. கிரெய்க் ஸ்டான்ஃபோர்ட் (Craig Stanford) எனும் அமெரிக்க முதனியியலார் (primatologist), பொதுவான சிம்பன்சிகளை காட்டிலும், பொனொபோக்கள் அதிக பாலியல் உறவு மேற்கொள்வன அல்ல என்ற அறைகூவல் விடுகிறார். அவர், இயற்கையான வாழ்விடங்களில், ஏற்கனவே உள்ள சிம்பன்சி மற்றும் பொனொபோக்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு, பெண் பொனொபோக்கள் புணர்ச்சி செய்யும் எண்ணிகைக்கு ஒப்ப பெண் சிம்பன்சிகளும் புணர்ச்சி செய்கின்றன் என்றும், ஆண் சிம்பன்சிகளோ ஆண் பொனொபோக்களை காட்டிலும் அதிகமாகவே புணர்ச்சியில் ஈடுபட்டன என்றும் கண்டார். ஆனால் இவரது ஒப்பீடு, பொனொபோக்கள் இடையே பரவலாக காணப்படும் ஓரின பாலுறவுகளை கணக்கில் சேர்க்கவில்லை. டீ வால் (De Waal) என்பவரின் பொனொபோ பற்றிய நூல், களப்பணியாளர்களின் பேட்டிகள், மற்றும் காடுவாழ் பொனொபோக்களொடு இருபது ஆண்டுகள் பணியாற்றியவரான டாக்யோஷி கனொ Takayoshi Kano என்பாரது குறிப்புக்களையும் கொண்டுள்ளது. ஜெர்மன், லெய்ப்ச்ஜிக் நகர மேக்ஸ் ப்ளாங்க் தளிர்ப்புநிலை மாந்தரியலுக்கான நிறுவனத்தில் (Max Planck Institute for Evolutionary Anthropology of Leipzig, Germany) துணை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் காட்ப்ரைடு ஹாப்மான் (Gottfried Hohmann) ஆப்பிரிக்காவில் கண்டறிந்தவைகளில் இருந்து, பொனொபோக்களிடை குறிப்பிடத்தக்க வன்முறை உள்ளது என தெரிகிறது. ஆனாலும் சாவு நிகழ்த்தும் வன்முறைகள் சிம்பன்சிகள் இடையே சான்றுகளோடு இருக்க, பொனோக்களிடம் அவை இருப்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பது மட்டும் மிகவும் உண்மை. பெண் பொனொபோக்கள் ஆணைவிட உருவத்தில் சற்று சிறியதாக இருந்தாலும், சமூகத்தில் உயர் மதிப்பிடத்தை கொண்டுள்ளன. பெண்களிடையேயான இந்த வலிமையான ஒட்டுறவு, பெண் குழுக்கள் பொனொபோ சமுதாயத்தில் மேலாதிக்கம் கொள்ள செய்கிறது. ஆண், பெண்கள் இடையே ஆதிக்க போட்டிகள் காண்பது மிக அரிது. அதேபோல் குழந்தைகள் சிறாரிடம் ஆண் பொனொபோக்கள் மிகுந்த பொறுமையை கொண்டுள்ளன. ஆணின் மதிப்பிடம் அதன் தாயின் மதிப்பிடத்தை பொறுத்தது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒட்டுறவு அதன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வலுவோடு இருக்கின்றது. சமூகத்தில் ஏற்றத்தாழவுகள் இருப்பினும், பிற முதனி சமூகங்களில் தென்படுவது போல். ஒன்றின் மதிப்பிடம் அதற்கு எவ்வித முக்கிய பங்கும் தருவது இல்லை. பொனொபோக்கள் விடியல் முதல் கருக்கல் வரை பிரிதல்-சேர்தல் பாணியில் சுறுசுறுப்பாக இருக்கும். நூறு எண்ணிக்கை உடைய ஒரு கூட்டம் பகலில் உணவு தேடல் பொருட்டு சிறிய குழுக்களாக பிரிந்து, இரவில் உறங்குவதற்காக மீண்டும் ஒன்றாக சேரும். இவைகள் மரங்களின் மேல் கூடுகள் அமைத்து அவற்றில் உறங்கும். பிற குரங்குகளை வேட்டை ஆடும் சிம்பன்சிகளைப் போல் அல்லாமல், பொனொபோக்கள் அடிப்படையில் கனி வகைகளை உண்பவையே. இருந்தும், அவை பூச்சிகளையும், சில நேரங்களில் அணில், மான் இனத்தில் ஒருவகையான டியூக்கர் (duiker) போன்ற சிறு பாலூட்டிகளை கைப்பற்றுவதையும் கவனித்து உள்ளார்கள். பொனொபோக்கள், கண்ணாடி கொண்டு தன்னை அறியும் சோதனைகளில் தேர்ச்சி பெறும் திறன் உள்ளவை. அவைகள் முதன்மையாக குரல் ஒலியால் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றன என்றாலும், அந்த குரல் ஒலிகளின் பொருள் இன்னும் விளங்கப்படவில்லை. இருந்தாலும் அவைகளின் முகவெளிப்பாடுகளை, மற்றும் "தன்னோடு வந்து விளையாடு" என கேட்கும் இயற்கையான கையால் செய்யும் சைகைகளை மனிதர்கள் புரிந்துகொள்ளலாம். Great Ape Trust எனும் நிறுவனத்தை சேர்ந்த கான்சி மற்றும் பான்பனிசா (Kanzi and Panbanisha) எனும் இரண்டு பொனொபோக்களுக்கு 3000 க்கும் மேலான சொற்களை பயிற்றுவித்ததில் அவற்றை வரைகணிதக் குறியீடுகளைக் கொண்டு (lexigrams or geometric symbols) அடையாளம் காட்டும் வல்லமை பெற்றுள்ளன. மேலும் அவை பேசப்படும் சொற்றொடர்களுக்கு ஏற்ப செயல்படும் திறனும் கொண்டன. இதனால், மெய்யியலார் மற்றும் உயிர்களிடை அறம்பேணுவோரான (philosopher and bioethicist Peter Singer) பீட்டர் சிங்கர் போன்றோர் சிலர், இதுபோன்ற ஆய்வு முடிவுகள், மனிதர்கள் பிறருக்கு கொள்கை அளவில் தரும் வாழும் உரிமையை, பொனொபோக்களும் பெறும் தகுதி கொண்டன என்று வாதிடுகிறார்கள். ஏறத்தாழ 10,000 பொனொபோக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு புழுக்கமான காடுகளில், காங்கோ ஆற்றின் தெற்கும், அதன் துணையாறு (Tributory) கசாய் ஆற்றின் (Kasai River), வடக்கும் மட்டுமே காண படுகின்றன. அவை வாழுமிடம் அருகுவதாலும் இறைச்சிக்காக வேட்டை ஆடப்படுவதாலும் அழிவு நிலையில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு போர்களால், ஆயுதம் தாங்கிய போராளிகள் காடுகளின் உட்பகுதிகளில், சலோங்கா தேசீய பூங்கா (Salonga National Park) போன்ற காவல்படுத்தப்பட்ட பகுதிகளிலும் ஊடுருவியதால், இந்த இறைச்சி வேட்டை திடீர் என அதிகமானது. தற்போது உச்ச எண்ணிக்கையாக சில பல ஆயிரம் பொனொபோக்களே எஞ்சி உள்ளன. பொதுவாகவே எல்லா மனிதக்குரங்குகளின் ஒழியும் நிலையின் போக்கும் இதுதான். 1990 இல் நடந்த இருந்து காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் போர்கள், பொனொபோ மற்றும் நாட்டுமக்கள் தொகையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்நாட்டு மக்கள், தற்போது, தங்கள் நலன்களை பாதுகாப்பதில் விருப்பம் கொண்டுள்ளார்கள். வேட்டை ஆடப்படுவதால், பொனொபோக்கள் ஒழியும் இடர்பாடுகளில் உள்ளன. எனவே, பொனொபோக்களை காக்கும் முயற்சிகள், இந்த இரண்டுக்கும் நடுவாக இருக்கவேண்டும். பொனொபோக்களின் வாழ்விடம் மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதால். அவைகளை காக்கும் இறுதி வெற்றி, அம்மக்களின் ஈடுபாட்டை பொறுத்தே அமையும். பூங்காவா, மக்களா என்ற கேள்விக்கு, பொனொபோக்களின் வாழ்விடமான குவெட் சென்றேல் (Cuvette Centrale) மிக பொருத்தமான சான்று. பூங்காக்கள் அமைக்கும் போது, மண்ணின் மைந்தர்கள் காடுகளில் இருந்து விரட்டப்படுவதால் அவற்றை ஏற்படுத்துவதற்கு உள்ளூரிலும் பரவலாகவும் காங்கோ மக்களின் எதிர்ப்பு இருக்கிறது. சொலொங்காவில் (Salonga) பொனொபோக்களின் வாழ்விடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரே பூங்காவில், உள்ளூர் மக்களின் பங்கேற்பு இல்லை. அங்கு அண்மையில் நடந்த கணக்கெடுப்பில், பொனொபோ, ஆப்பிரிக்க காட்டு யானை, மற்றும் பிற உயிரினங்களும் கள்ள வேட்டைக்காரர்களாலும், காட்டு இறைச்சி வணிகத்தாலும் கடுமையான சீரழிவு பூண்டுள்ளன. இதற்கு மாறாக, இந்த பூங்காக்கள் இல்லாமலேயே, உள்ளூர் மக்களின் பொனொபோக்களை கொல்லகூடாது என்னும் சமூக நம்பிக்கையால் பொனொபோக்களும் பல்லுயிர்பன்மையும் (biodiversity) செழிப்போடு உள்ளன. 1990 இல் நடந்த போர்களின் போது ஆராய்ச்சியாளர்களும், பன்னாட்டு அரசுசாரா அமைப்புகளும் பொனொபோ வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டனர். 2002 இல், பொனொபோ பாதுகாப்பு முனைவு (Bonobo Conservation Initiative), தேசிய நிறுவனங்கள், உள்ளூர் அரசு சாரா அமைப்புகள், மற்றும் உள்ளுர் மக்கள் துணையுடன், பொனொபோ அமைதி காடுகள் திட்டம் ( Bonobo Peace Forest Project) தொடங்கியது. இந்த திட்டம் உள்ளூர் மக்களின் மேலாண்மைக்கு உட்பட்ட, ஒன்றொடு ஒன்று தொடர்புடைய பல சமுதாயங்களிலும் தனி ஒதுக்கீடுகளை (Reservations) நிறுவி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உதவி இல்லை என்றாலும் , காங்கோ அரசு அமைப்புகள், மற்றும் உள்ளூர் மக்களால் அமுல்படுத்தப்பட்ட் இந்த "மாதிரி" (model), ஏறத்தாழ 5000 சதுர மைல் பரப்பை, பொனொபோக்களின் வாழ்விடத்துக்காக பாதுகாக்கும் உடன்படிக்கைகள் ஏற்பட உதவியது. முனைவர் ஏமி பாரிஷ் (Dr. Amy Parish) என்பவரின் கருத்துப்படி, "இந்த பொனொபோ அமைதி காடுகள் திட்டம் 21ஆம் நூற்றாண்டில் விலங்குகள் பாதுகாப்புக்கு ஒரு மாதிரி திட்டமாக அமையும்)" இந்த முனைவு நாளாக நாளாக ஊக்கம் மற்றும் பெரிய அளவில் பன்னாட்டு அங்கீகாரம் பெற்று, Conservation International, the Global Conservation Fund, United States Fish and Wildlife Service's Great Ape Conservation Fund, மற்றும் the United Nations' Great Apes Survival Project போன்ற நிறுவனக்களின் மேலான ஆதரவை பெற்றுள்ளது. கிரெக் ஓடென் கிரெக்கொரி வெயின் ஓடென் அல்லது கிரெக் ஓடென் (ஆங்கிலம்:Gregory Wayne Oden, பிறப்பு - ஜனவரி 22, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் போர்ட்லன்ட் அணி இவரை முதலாம் தேர்வு செய்தார்கள். இவர் என். பி. ஏ.-இல் முதலாம் ஆண்டில் முட்டியை கெடுத்து ஆண்டு முழுவதும் விளையாடமுடியவில்லை. ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் ஓ. எஸ். யூ. (OSU) என்று பொதுவாக அழைக்கப்படும் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் ("The Ohio State University"), ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். பஃபலோ (நியூ யோர்க்) பஃபலோ (Buffalo) ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். நயாகரா நீர்வீழ்ச்சி இன்நகரின் 27 கிமீ தள்ளி அமைந்துள்ளன. தினேஷ் கார்த்திக் கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். 2004இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார். இவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை வங்காளதேசம் அணிக்கு எதிராக எடுத்தார். இர்பான் பதான் இர்பான் கான் பதான் (Irfan Khan Pathan (; பிறப்பு: 27 அக்டோபர் 1984) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 2003- 2004 ஆண்டில் நடைபெற்ற பார்டர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டியில் அறிமுகம் ஆனார். ஏப்ரல் 2008 இல் இவர் கடைசியாக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார். துவக்கத்தில் இவர் துயல்பந்து வீசல் மற்றும் விரைவு வீச்சு போன்றவற்றால் அறியப்பட்டார். இவர் வசீம் அக்ரம் போன்றே பந்து வீசுகிறார் என்ற ஒப்பீடு இருந்தது. 2006 ஆம் ஆண்டில் கராச்சியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகம் ஆனார். முதல்போட்டியில் முதல் ஓவரில் "ஹாட்ரிக்" இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் நிலையில்லாத விளையாட்டுத் திறனால் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின் 2007 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவர் இந்திய அணியில் இடம் பிடித்தார். இர்பான் பதான், வினோத் காம்ப்ளி மற்றும் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் "இந்தியாஸ் லாஸ்ட் பாய்ஸ்" என சசி தரூர் குறிப்பிடுகிறார். 2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரை ஆண்டின் சிறந்த வீரராக அறிவித்தது. மேலும் 2004 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தார். ஊடகங்களால் இவர் இதியத் துடுப்பாட்ட அணியின் "புளூ ஐய்ட் பாய்" எனப் புகழப்பட்டார். 2004 ஆம் ஆண்டின் இறுதியில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் இரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 18 இலக்குகள் எடுத்தார். ஆனால் 2005 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து சரியான திறனை வெளிப்படுத்தத் தவறினார். 2005 ஆம் ஆண்டில் கிறெக் சப்பல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆன பின்பு பதானின் திறமையைக் கண்டறிந்தார். அதன் பின் பந்து வீச்சு மற்றும் துடுப்பாடுவது என இரண்டிலும் கவனம் செலுத்தி சகலத் துறையினராக ஆனார். டிசம்பர் 10,2005 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக புது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார். கிறெக் சப்பலின் தலைமையின் கீழ் சகலத் துறையராக சிறப்பாக செயல்பட்டார். மேலும் எதிரணியின் முக்கிய வீரர்களின் இலக்கினைக் கைப்பற்றினார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சகலத் துறையினருக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடமும், தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள்ளும் இடம்பிடித்தார். இதனால் துடுப்பாட்ட விமர்சகர்கள் இவரை இந்திய அணியின் முன்னாள் தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் பந்து வீச்சாளர் கபில்தேவ் உடன் ஒப்பிட்டனர். இர்பான் பதான் அக்டோபர் 27, 1984 இல் வடோதராவில், குஜராத், இந்தியா பிறந்தார். இவர் குஜராத்திலுள்ள பஷ்தூன் மக்கள் மரபைச் சார்ந்தவர். இவர் வடோதராவில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு யூசுப் பதான் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவரும் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். இவர் சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட சஃபா பெயிக் என்பவரை பெப்ரவரி 4, 2016 இல் மக்காவில் திருமணம் செய்தார். சஃபா , மிர்சா ஃபரூக் பெயிக்கின் மகள் ஆவார். இந்தத் தம்பதிக்கு இம்ரான் கான் பதான் எனும் மகன் உள்ளார். Irfan Pathan Body Statistics முனாஃவ் பட்டேல் முனாஃப் பட்டேல் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தியத் துடுப்பாட்ட அணி, மேற்கு மண்டல துடுப்பாட்ட அணி, டுலீப் கோப்பை, குஜராத் துடுப்பாட்ட அணி, மும்பை துடுப்பாட்ட அணி மற்றும் மகாராஷ்ட்ரா துடுப்பாட்ட அணி ஆகியவற்றிற்கு விளையாடியுள்ளார். ஜாகிர் கான் ஜாகீர் கான் (Zaheer Khan (பிறப்பு:7 அக்டோபர், 1978) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் பந்து "(யார்க்கரை" ) துல்லியமாகவும், விரைவாகவும் வீசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் விளையாட்டு விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பெற்றார். இவர் பல முறை காயங்களினால் துன்பமடைந்தார். அந்தக் காராணத்தினால் தான் "புரோ ஸ்போர்ட் அண்ட் சர்விசஸ்" எனும் சேவை மையத்தினை ஆண்ட்ரூ லிபசுடன் இணைந்து துவங்கினார். 2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. அக்டோபர் 2015 இல் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்தார். இவர் மும்பை துடுப்பாட்ட அணிக்காவும், வோர்செஸ்டெர்ஷயர் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஜாகீர் கான் அக்டோபர் 7,1978 இல் ஸ்ரீராம்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தந்தை பக்தியார் கான், தாய் ஷகியா. இவருக்கு சீசான் எனும் மூத்த சகோதரரும் , அனீஸ் எனும் இளைய சகோதரரும் உள்ளனர். இவர் "நியூ மராத்தி துவக்கப் பள்ளியிலும், பின் கே. ஜே. சோமையா" மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் "லோகல் ரெவென்யூ காலனி" துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். பின் புனேவில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் துவக்கினார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 282 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். இவர் ஒரு இலக்குகளை வீழ்த்துவதற்கு 29 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் 4 இலக்குகளை 6 முறைகள் வீழ்த்தியுள்ளார். இதில் நான்கு முறை சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளார். மேலும் அந்த அணிக்கு எதிராக மட்டும் 32 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இலக்கிற்கு 17.46 ஓட்டஙகளை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஆசீஷ் நேராவுடன் பந்துவீசி இந்திய அணியை இறுதிப் போட்டியில் பங்கேற்கச் செய்தார். இந்தத் தொடரின் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெற்றார்.இவர் 11 போட்டிகளில் விளையாடி 18 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு இலக்கிற்கு 20 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாகித் அஃபிரிடியுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா 21 இலக்குகள் வீழ்த்தினர். இதன்மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் அதிக இலக்குகள் எடுத்த இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். இந்தச் சாதனையை 34 போட்டிகள் ஸ்ரீநாட்த் பெற்றார். ஆனால் 23 போட்டிகளிலேயே ஜாகீர் கான் இந்தச் சாதனையைப் புரிந்தார். சிறிசாந்த் சாந்தகுமாரன் சிறிசாந்த் (Shanthakumaran Sreesanth "(, ),"பிறப்பு: பிப்ரவரி 6 1983), முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். வலது கை விரைவு வீச்சாளரான இவர் வலது கை இறுதிக்கட்ட மட்டையாளரும் ஆவார். கேரளா மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2006 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பிக் பிக்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறிசாந்த் , இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் புதிய பந்தில் வீசிய இவர் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரது இலக்கினை வீழ்த்தினார். பின் இரு ஆட்டங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகு நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டியில் இவருக்கு அணியின் பயிற்சியாளரான கிறெக் சப்பல் வாய்ப்பு வழங்கினார். பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடினார். கராச்சியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 58 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தினார்.ஏப்ரல், 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் அனியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 55 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் மொத்தமாக 10 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.3 ஆக இருந்தது. இவரின் அதிகபட்சமான பந்துவீச்சு சராசரியினால் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார். இவருக்குப் பதிலாக ஆர் பி சிங் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் அஜித் அகர்கருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு அந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளைணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பின் இறுதிப்போட்ட்டியில் விளையாடிய இவர் 8 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் அலெக்சி லியோனொவ் அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (), ) (பி. மே 30, 1934) சோவியத்/ரஷ்யாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் மார்ச் 18, 1965 ல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். மைக்கேல் கொலின்ஸ் மைக்கேல் கொலின்ஸ் இரண்டுமுறை விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்வெளிவீரர். சந்திரனில் காலடிவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தார். எட்வின் ஆல்ட்ரின் பஸ் ஆல்ட்ரின் ("Buzz Aldrin" (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், "Edwin Eugene Aldrin, Jr.", பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார். அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். "பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார். மைக்கேல் ஹசி மைக்கல் எட்வர்டு கில்லீன் அசி ("Michael Edward Killeen Hussey" - பி. 27 மே 1975) பரவலாக மைக் ஹசி என அறியப்படும் இவர் முன்னாள்அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். மிஸ்டர் கிரிக்கெட் எனும் புனைபெயரால் பரவலாக அறியப்படுபவர். ஓரளவு வயதான பின்னரேயே அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 28 ஆவது வயதிலும், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 30 ஆவது வயதிலும் அறிமுகமானார். இவர் பன்னாட்டு ஆட்டங்களில் அறிமுகமாகும் முன்னர் முதல்-தர ஆட்டங்களில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார் அதிக வயதில் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் உள்ள மூன்று மாகாணத் துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். டிசம்பர் 29,2012 அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2015 ஆம் ஆண்டின் பிக்பாஷ் போட்டிகளோடு அனைத்து வடிவப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பெப்ரவரி 1, 2004 இல் பெர்த்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 17 ஒட்டங்களை எடுத்து 5 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார். அகடோபர் 9, 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சூப்பர் சீரிசின் மூன்றாவது போட்டியில் மகாயா நிதினி வீசிய பந்தை விளையாட்டு அரங்கத்தின் கூரையின் மேல் அடித்தார்.பெப்ரவரி 6, 2006 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த ஆத்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கான வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், ஆண்ட்ரு சைமண்ட்ஸ், பிறெட் லீ மற்றும் இவரும் தலா 22 வாக்குகள் பெற்றனர். சைமண்ட்ஸ் குடி போதையில் இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் தகுதிநீக்கம் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், பிறெட் லீ ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று ஆலன்பார்டர் பதக்கம் பெற்றார். நவம்பர், 2006 இல் மும்பையில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியில் 12 ஆவது வீரராக இடம்பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியத்தின் சுழல்முறை தலைவர் திட்டத்தினால் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரில் ரிக்கிபாண்டிங்கிற்குப் பதிலாக மைக் ஹசி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க பிராட் ஹாடினுடன் இனைந்து 165 ஓட்டங்கள் சேர்த்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 6 வது இலக்கிற்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனையைப் படைத்தனர். பிறெட் லீ பிறெட் லீ (Brett Lee (பிறப்பு:நவம்பர் 8, 1976) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் . இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய முன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இவரின் சமகாலத்தவரான சுஐப் அக்தருடன் இணைந்து அறியப்படுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் உள்ள சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விரைவாக அதே சமயம் நிலையான வேகத்தில் பந்து வீசுவதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 161.8 கிலோ மீட்டர் என பதிவானது. பின் அது மணிக்கு 142 கிலோ மீட்டர் என உறுதிசெய்யப்பட்டது. . 2005 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மணிக்கு 161.1 கிலோ மீட்டர் எனும் வேகத்தில் பந்து வீசினார். இது இரண்டாவது அதிவேக பந்துவீச்சு ஆகும். சுஐப் அக்தர் மணிக்கு 161.4 கிலோ மீட்டர் என வீசியதே தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. பிறெட் லீ தேர்வுத் துடுப்பாட்டங்களில் 310 இலக்குகளும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 380 இலக்குகளும் எடுத்துள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகிய இரு உலகக் கோப்பை வென்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 1999 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். சூலை 12, 2012 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். ஆனால் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் போட்டிகளில் விளையாடினார். 2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஷ் போட்டிகளோடு ஓய்வு பெற்றார். தற்போது நடிகராகவும், சேனல் 9 தொலைக்காட்சியின் விளக்கவுரையாளராக பணிபுரிகிறார். சனவரி 9, 2000 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இவர் 140 வது வீரராக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களை எடுத்தார். இதில் 51* ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஹேட்ரிக் இலக்குகள் எடுத்தார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் ஹேட்ரிக் வீழ்த்திய முதல் ஆத்திரேலியப் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஷேன் வோர்ன் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பிறெட் லீ, ஆண்டி பிககெல், கிளென் மெக்ரா ஆகியோர் இந்தத் தொடரின் 55 இலக்குகளை வீழ்த்தினார். பிறெட் லீ மட்டும் 83.1 ஓவர்கள் வீசி 22 இலக்குகள் வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சராசரி 17.90 ஆகும். ஆன்ட்ரூ சைமன்ஸ் ஆன்ட்ரூ சைமன்ஸ் (Andrew Symonds (பிறப்பு: சூன் 9, 1975) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டங்களில் சகலத்துறையராக விளங்கிய இவர் இருமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் ஆவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டின் மத்திய காலங்களில் மதுபானம் அருந்தியது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது ஆகிய காரணங்களினால் பெரும்பாலும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சூன், 2009 ஆண்டில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியின் போது அணியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இது இவரின் மூன்றாவது இடைநீக்கம் ஆகும். இவரின் நடவடிக்கைகளால் பல நிருவாகிகள் இவரை ஓய்வு பெறும்படி கூறினர். தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக பெப்ரவரி 16, 2012 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2008 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம் இவரை 1,350,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டின் அதிக பட்ச விலைக்கு ஏலம் போனவர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதே நிர்வாகம் சகநாட்டு வீரரான அடம் கில்கிறிஸ்ற் 700,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தை எடுத்து தலைவராக நியமித்தது. முதல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஏப்ரல் 18,2008 இல் துவங்கப்பட்டது. ஏப்ரல் 24, 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 117 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடியதால் இரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவகால தொடர்களில் இவரால் பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் இறுதிகாலப் போட்டிகளில் அணிக்காக விளையாடி வெற்றிபெற்றுத் தந்தார். மூன்றாவது பருவகால 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் "மங்கூஸ் மட்டை" கொண்டு முதல் மூன்று போட்டிகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். நான்காவது 2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 850,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் மரபைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் தீர்மானித்தார். நவம்பர் 10, 1998 இல் லாகூரில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் 156 ஆகும். இவரின் "ஸ்டிரைக் ரேட்" 90 க்கும் அதிகமாக உள்ளது. துவக்ககாலத்தில் களத்தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் மட்டையாளராகவும், பந்து வீச்சாளராகவும் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். இதனால் அணியில் நிலையான இடம் இவருக்கு வழங்கப்படவில்லை. 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மனு ஜினோபிலி இமான்யுவெல் டேவிட் ஜினோபிலி அல்லது மனு ஜினோபிலி (எசுப்பானிய மொழி:Emanuel David Ginobili, பிறப்பு - ஜூலை 28, 1977) ஒரு அர்ஜென்டினா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2004ம் ஆண்டு ஒலிம்பிக் கூடைப்பந்துப் போட்டிகளில் இவர் தங்கம் பரிசு வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணியில் விளையாடினார். அமாரே ஸ்டெளடமையர் அமாரே கர்சரெஸ் ஸ்டெளடமையர் (ஆங்கிலம்:Amare Carsares Stoudemire, பிறப்பு - நவம்பர் 16, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். நொடோரியஸ் பி.ஐ.ஜி த நொடோரியஸ் பி.ஐ.ஜி. (The Notorious B.I.G.) அல்லது பிகி ஸ்மால்ஸ் (Biggie Smalls) அல்லது பிக் பாப்பா (Big Poppa), என்றழைக்கப்படும் கிரிஸ்தஃபர் ஜார்ஜ் லடோர் வாலஸ் (Christopher George Latore Wallace), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிரந்து வளந்தார். ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் 1980களில் போதைப் பொருள் விற்பவராக இருந்த பிகி அதை 1992ல் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 1994ல் இவர் முதலாம் ஆல்பம், ரெடி டு டை, படைத்து ஹிப் ஹாப்பில் புகழுக்கு வந்தார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிகியின் முன்னாள் நன்பர் டூபாக் ஷகூர் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். டூபாக் இந்த செயலை பிகி மேல் குற்றம் சாட்டினார். இவர்களின் எதிரிடை முளைத்து மேற்கு கடற்கரை ராப் பாடர்களுக்கும் கிழக்கு கடற்கரை ராப் பாடர்களுக்கும் ஒரு உக்கிரமான எதிரிடை இருந்தது. இதுனால் 1996ல் செப்டம்பர் மாத்த்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்; 6 மாதங்களுக்கு பிரகு, பிகி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். இந்த இரண்டு ஆட்கொல்லிகளை இன்று வரை காவல்துரை கண்டுப்பிடிக்கவில்லை. பிகியின் மரணத்துக்கு 15 நாள்கள் பிரகு இவரின் இரண்டாம் ஆல்பம், "லைஃப் ஆஃப்டர் டெத்", வெளிவந்தது. இன்று வரை இந்த ஆல்பம் 10 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டிருப்பது. பல ராப் ஆராய்ச்சி செய்யரவர்கள் இவர் ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த கலைஞர்களில் ஒன்று என்று உறுதிசொல்கிராற்கள். சிட்னி துறைமுகப் பாலம் சிட்னி துறைமுகப் பாலம் ("Sydney Harbour Bridge") என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ("arch bridge") ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" ("Coathanger") என்று அழைக்கப்படுகின்றது.. 1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும். 1815 ஆம் ஆண்டு "பிரான்சிஸ் கிறீன்வே" என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னி துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலகப் போரைத் தொடந்து பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை "ஜே. பிறாட்ஃபீல்ட்" என்பவரின் தலைமையில் நிபுணர்கள் குழு தயாரித்தனர். அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த "டோர்மன் லோங் அன் கோ" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் "ஜோன் லாங்" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்து தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது. கங்கார் கங்கார் ("Kangar") என்பது மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2,619.4 ஹெ பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 48,898 ஆகும். தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் இருக்கும் மிகச் சிறிய நகரம். காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்துதான் கங்கார் நகரத்தின் பெயர் உருவானது. இதன் வட பகுதியில் பெர்லிஸ் ஆறு அருகில் அமைந்திருக்கிறது. பெர்லிஸ் அரச செயலர் கட்டிடமும் 1930களில் அமைக்கப்பட்ட மணிக்கூண்டுக் கோபுரமும் இங்கு அமைந்துள்ளன. அவற்றை விட இங்குள்ள ஆல்வி மசூதி 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கே பெர்லிஸ் மாநிலத்தின், அரசாங்க அலுவலகங்கள் உள்ளன. இந்த நகரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் அரச நகரமான ஆராவ் இருக்கிறது. ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி, கிறீக் இனக்குழுவினரோடு உறவுடையவர்களாக இருந்த ஒரு தொல்குடி அமெரிக்கப் பழங்குடி ஆகும். இவர்களைப் பல்லச்சக்கோலா எனவும் அழைப்பதுண்டு. அவர்கள் ஹிச்சித்தி மொழிக்கு இனமான முஸ்கோஜிய மொழிகளுள் ஒன்றைப் பேசினார்கள். இவர்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றோரமாக வாழ்ந்தனர். 1706 ஆம் ஆண்டளவில் சில ஆப்பலாச்சிக்கோலா மக்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதியில் இருந்து தென் கரோலினா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள சாவன்னா ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். 1706 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாவன்னா ஆற்றுப் பகுதி ஆப்பலாச்சிக்கோலாக்கள் 80 பேர் சாவன்னா ஆற்றிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் குடியேறியிருந்தனர். ஜான் பார்ண்வெல் என்பவர் 1715 இல் கூடிய திருத்தமான கணக்கெடுப்பொன்றைச் செய்தார். இது சாவன்னா ஆற்று ஆப்பாலாச்சிக்கோலாக்கள் இரண்டு ஊர்களில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவற்றில், 64 ஆண்கள், 71 பெண்கள், 42 சிறுவர்கள், 37 சிறுமிகள் உட்பட 214 பேர் வாழ்ந்ததாகத் தெரிகிறது. 1715 ஆம் ஆண்டின் யமாசிப் போரில் இவர்களும் தென் கரோலினா மீதான தாக்குதலில் பங்கேற்றனர். பின்னாளில் இப்போரில் தப்பியவர்கள், மீண்டும், சட்டகூச்சி ஆறு, ஃபிளிண்ட் ஆறு ஆகியவை சந்திக்கும் இடத்திற்கு அருகில், ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதிக்கு வந்தனர். 1833 இலும், 1834 இலும் செய்துகொள்ளப்பட்ட இரண்டு இந்தியர் அகற்றல் சட்ட ஒப்பந்தக்களுக்கு அமைய இவர்கள் இன்றைய ஒக்லஹோமாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஆப்பலாச்சிக்கோலா ஆறு, புளோரிடாவில் உள்ள ஆப்பலாச்சிக்கோலா நகரம் என்பன இவர்களுடைய பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர்கள் ஆகும். சிக்காசோ சிக்காசோ ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்க இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முன்னர் அலபாமாவின், ஹண்ட்ஸ்வில் பகுதிக்கு மேற்கில் மிசிசிப்பி, தென்னசிப் பகுதிகளில் அமைந்திருந்த தென்னசி ஆற்றோரம் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இவர்கள் அங்கிருந்து கிழக்காகச் சென்று, மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். சிக்சோக்கள், முதல் ஐரோப்பியர் வருகையில் இருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவுக்குத் துரத்தப்படும் வரை வடகிழக்கு மிசிசிப்பியில் வாழ்ந்து வந்ததாகவே எல்லா வரலாற்றுப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன. இவர்கள், சிக்காசோ மொழி போன்ற ஒரு மொழியைப் பேசும் சொக்ட்டோக்களுக்கு உறவுடையவர்கள். இவ்விரு மொழிகளும் சேர்ந்து முஸ்கோஜிய மொழிகளின் மேற்குக் குழுவை உருவாக்குகின்றன. சிக்காசோக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். இப்பிரிவுகள், "இம்ப்சக்தயா", "இஞ்சுத்வாலிப்பா" என்பனவாகும். இந்தியர் அகற்றல் சட்டத்தின் அடிப்படையில் ஒக்லஹோமாவுக்கு அகற்றப்பட்ட ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் இக் குழுவினரும் அடங்குவர். இவ்வினக்குழுவினர் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களுள் 13 ஆவது பெரிய பழங்குடியாகும். டாம்ப்பா டாம்ப்பா (Tampa) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு பெரிய நகரமாகும். இது புளோரிடா மாநிலத்தில் உள்ள இல்சுபரோ மாவட்டத்தில் (Hillsborough County) உள்ளது. 2000 ஆம் ஆண்டு 303,447 ஆக இருந்த மக்கள்தொகை 2006 ஆண்டு கணக்கெடுப்பின்படி 332,888 ஆக உயர்ந்துள்ளது . யேல் பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் ("Yale University"), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும். இப் பலகலைக்கழக தெற்காசியவியல் துறை தமிழ் பாடங்களை வழங்குகிறது. 1701 இல், கனெக்டிகட் பகுதியில் நிறுவப்பட்டு, அமெரிக்காவிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலேஜியேட் ஸ்கூல் எனப் பெயரிடப்பட்டு, 1718 இல், யேல் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுநரான எலிகு யேல் என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில், இதன் உறுப்பான கலை, அறிவியல் பள்ளி, முனைவர் பட்டத்தை வழங்கியது. அமெரிக்காவிலேயே முதலில் முனைவர் பட்டம் வழங்கிய நிறுவனம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 1900 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டைமைப்பை நிறுவியதில் இந்தப் பல்கலைக்கும் பங்குண்டு. தற்போது 12 கல்லூரிகள் இயங்குகின்றன. இன்னும் இரண்டு வரவுள்ளன. இங்கு 1,100 ஆசிரியர்களும், 5,300 இளநிலைப் பட்டதாரிகளும், 6,100 முதுநிலைப் பட்டதாரிகளும் உள்ளனர். என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய விளையாட்டுகளில், யேல் புல்டாக்ஸ் என்ற பெயரில் களமிறங்குவர். இங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு குழுக்களில் பங்கெடுக்கின்றனர். மாணவர்கள் இயக்கும் செய்தித்தாள், வானொலி, இலக்கியக் குழுக்களும், திரைக் குழுக்களும் உள்ளன. யேல் புல்டாக்ஸ் குழுவும் இதில் அடங்கும். யேல் வானொலியை மாணவர்களே இயக்குகின்றனர். இங்கு 35 ஆட்டக் குழுக்கள் உள்ளன. இவ ஐவி லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. என்.சி.ஏ.ஏ. போட்டிகளிலும் இவை பங்கெடுப்பதுண்டு. விளையாட்டுத் திடல்களும் உள்ளன. பெரிய அளவிலான உடற்பயிற்சியகம் இங்குள்ளது. இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாய்மரப் படகோட்டம், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆட்டங்களும் விளையாட்டப்படுகின்றன. இதனுடன் இணைந்த சில தங்கிப் படிக்கும் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் பெர்க்லி, பிரான்போர்டு, கல்ஹவுன், டாவ்ன்போர்ட், டிரம்புல் ஆகியன குறிப்பிடத்தக்கன. தலைவரும், நிர்வாகக் குழுவினரும் இணைந்து பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்றனர். இதன் தலைவர், அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார். யேல் பல்கலையின் முன்னெடுப்புகளில் சில: யேல் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பில் கிளின்டன் வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிறப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆவார். இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் மனைவி இலரி கிளின்டன் 2008இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட பில் கிளின்டன், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை, இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தைப் பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டிலும், நலக் காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாகக் கருதப்பட்டன. ஜான் மெக்கெய்ன் ஜான் சிட்னி மெக்கெயின் (John Sidney McCain) (ஆகஸ்ட் 29, 1936 - ஆகஸ்ட் 25, 2018) அரிசோனா மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மூத்த உறுப்பினர். இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர். ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமியிலிருந்து 1958இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை விமான ஓட்டுநர் ஆனார். விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். வியட்நாம் போரில் அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து "ஃபோரெஸ்டல்" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் ஹனோய் மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து வடக்கு வியட்நாமியர்களால் போர் கைதியாக சிக்கினார். 1973 வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார். காப்டனாக கடற்படையிலிருந்து 1981இல் விலகி அரிசோனாவுக்கு நகர்ந்து அரசியல் உலகில் நுழைந்தார். 1982இல் கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பதவி காலங்களாக பணியாற்றியுள்ளார். பின்பு 1986இல் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1992, 1998, மற்றும் 2004இல் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். பொதுவாக பழமைவாதக் கொள்கைகளை நம்புகிற மெக்கெய்ன் சில முக்கிய தலைப்புகள் தொடர்பான தனது கட்சிக்கு எதிராக கருதுகிறார். 1980களில் அரசியல் செல்வாக்கு இழிப்பு நடவடிக்கையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு குற்றமற்றவர் என்று தீர்ப்பு செய்யப்பட்டதற்கு பிறகு பிரச்சாரம் நிதி சீர்திருத்தம் (campaign finance reform) ஒரு முக்கிய தலைப்பாக உறுதி செய்து பிரச்சாரம் நிதியை திருத்த 2002இல் ஒரு சட்டத்தை படைத்தார். 1990களில் வியட்நாமுடன் உறவு மேம்படுத்துதலுக்கும் 2000களில் ஈராக்கில் முடிவு வரை சண்டையிடுவதுக்கும் மெக்கெய்ன் கவனம் பெற்றார். மேலவையில் பொருளாதார செயற்குழுவின் தலைவராக பணியாற்றி மாநிலங்களின் சிறிய திட்டங்களுக்கு நடுவண் அரசு நிதி கொடுதலை எதிர்த்தார். 2000இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் ஜோர்ஜ் புஷிடம் தோல்வி அடைந்தார். 2008இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் சேரா பேலின் உடன் உறுதி செய்யப்பட்டார். 2008 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார். பனமாவில் அமெரிக்க கடற்படை விமான நிலையத்தில் 1936இல் கடற்படை அலுவலர் ஜான் மெக்கெய்ன் சீனியர் மற்றும் ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்னுக்கு ஜான் மெக்கெய்ன் பிறந்தார். அப்பொழுது பனமா கால்வாய் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்தது. மெக்கெய்னின் குலமரபில் ஆங்கிலேயர்கள், ஸ்காட்டியர்கள், மற்றும் ஸ்காட்-ஐரியர்கள் உள்ளனர். தனது தந்தையார் பல்வேறு கடற்படை நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டது காரணமாக மெக்கெய்ன் மொத்தத்தில் 20 பள்ளிகளில் படித்தார். 1951இல் வர்ஜீனியாவின் வடக்கு பகுதியில் தனது குடும்பம் குடியேறி மெக்கெய்ன் 1954இல் உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார். பின்பு ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடெமியில் சேர்ந்தார். அங்கே இருக்கும் பொழுது குத்துச்சண்டை விளையாடினார். நான்கு ஆண்டுகளாக படித்து 899 மாணவர்கள் கொண்ட வகுப்பில் 894ஆம் நிலையில் 1958இல் பட்டம் பெற்றார். கடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன. ஆனால் 1960இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார். 1965இல் தனது முதல் மனைவி கேரல் ஷெப்புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார். 1967இல் "ஃபோரெஸ்டல்" என்கிற விமானம் தாங்கிக் கப்பலின் விமான படையை சேர்ந்து வியட்நாமுக்கு சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர். பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு வியட்நாமில் தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார். 1967இல் அக்டோபர் 26ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது ஹனோய் நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார். டுருக் பாச் ஏரியில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர். மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார். ஆகஸ்ட் 1968இல் மெக்கெய்னின் தந்தையாருக்கு நிலை உயர்வு பெறுவது காரணமாக வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னுக்கு முன்னர் விடுவித்தல் அனுமதி கொடுத்தனர், ஆனால் பிற போர் கைதிகளுக்கு விடுவித்தல் கொடுக்கவில்லை. இதனால் மெக்கெய்ன் சிறையிலிருந்து வெளிவரவில்லை. பின்னர் வியட்நாமியர்கள் மெக்கெய்ன் மீது கடும் வதை திட்டத்தை தொடங்கினர். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கயிறால் கட்டிவைத்து வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னை அடித்தனர். இதனால் மெக்கெய்ன் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தார். சிறையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இன்று வரை மெக்கெய்னால் கைகளை தலைக்கு மேல் தூக்க முடியாது. மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக போர் கைதியாக இருந்து 1973இல் விடுதலை பெற்றார். அமெரிக்காவுக்கு திரும்பி ஓர் அளவு புகழ்பெற்றவராக தெரியவந்தார். இரண்டு ஆண்டுகளாக காயங்களுக்கு நோய்த்தீர் மருத்துவம் செய்து மறுபடி விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். 1976இல் புளோரிடாவில் ஒரு கடற்படை பயிற்சி குழுமத்தின் அதிகாரியாக பணியாற்றினார். 1977 முதல் மேலவைக்கு கடற்படை தொடர்பு அலுவலராக பணி புரிந்தார். இதுவே அரசியல் உலகில் தனது முதல் நுழைவு என்று மெக்கெய்ன் கூறியிருக்கிறார். 1980இல் தனது முதல் மணம் முறிந்து இரண்டாம் மனைவி சிண்டி மெக்கெய்னை திருமணம் செய்தார். 1981இல் 17 விருதுகளுடன் கடற்படையிலிருந்து காப்டனாக விலகி அரிசோனா மாநிலத்துக்கு நகர்ந்தார். தண்டம்பட்டு நடுகல் முதலாம் மகேந்திரவர்மனின் 18-வது ஆட்சியாண்டில், மேல் வேணாட்டில் ஆந்தைப்பாடி என்னும் ஊரை ஈசைப் பெரும்பானரசர் என்னும் வாணரக் குல அரசனின் மருமகனாகிய பொற்சேந்தியார் என்பவர் ஆண்டு வந்தார். இப்பேரரசனின் சேவர்கள் (தண்டம்பட்டில் இருந்த) ஆதிநிரைகளைக் கவர்ந்தனர். ஆதிநிரைகளை மீட்பதற்கு நடந்த போரில் வேணாட்டினைச் சேர்ந்த 'நந்தியார்' என்பவன் வீரமரணம் அடைந்தான். இந்த நந்தியாருக்காக நடப்பட்ட நடுகல் தண்டப்பட்டு நடுகல் எனப்படுகிறது. வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்ட ஒரு வீரனின் உருவம் நடுகல்லில் உள்ளது. இந்த உருவத்தின் இடது பக்கத்தில் இக்கல்வெட்டு உள்ளது. இது வட்டெழுத்துக் கல்வெட்டின் வகையைச் சேர்ந்ததாகும். கோவிசைய மயீந்திரவருமற்கு பதில் எட்டாவது வேணாட்டு ஆந்தைப்பாடி ஈசை பெரும்பாணரைசரு மருமக்கள் பொற்சேந்தியாரு சேவகரு கண்ட ஞான்று மீட்டு பட்டான் நாந்தியார் கல்க. கோவிசய மகேந்திர வர்மற்குப் பதினெட்டாவது மீவேணாட்டு ஆந்தைப்பாடி ஈசைப் பெரும்பாணரசர் மருமக்கள் பொற்சேந்தியார் சேவகர் தொறுக் கொண்ட ஞான்று மீட்டுப் பட்டான் வேணாட்டு நந்தியார் கல். சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ) சான் வான் ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமாகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 434,374 மக்கள் வாழ்கிறார்கள். கெவின் டுரான்ட் கெவின் வேன் டுரான்ட் (ஆங்கிலம்:Kevin Wayne Durant, பிறப்பு - செப்டம்பர் 29, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் சியாட்டில் அணி இவரை இரண்டாம் தேர்வு செய்தார்கள். டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) டெக்சாஸ் பல்கலைக்கழகம் - ஆஸ்டின் ("University of Texas at Austin"), ஐக்கிய அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். கிளைடு திரெட்சுளர் க்ளைட் ஆஸ்டின் ட்ரெக்ஸ்லர் ("Clyde Austin Drexler", பிறப்பு - ஜூன் 22, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்; ஒரே அணியில் இன்னும் ஒரு எதிர் காலம் கூடைப்பந்துப் புகழ்ச்சி சபையின் கணவர், அகீம் ஒலாஜுவான், இருந்தார். இவர்கள் இரண்டு வீரர்களும் 1995ல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் என். பி. ஏ. கடைசிப் போட்டிகள் வெற்றிபெற்றார். ட்ரெக்ஸ்லர் என். பி. ஏ.-இல் 1983 முதல் 1998 வரை விளையாடினார். 1983 முதல் 1995 வரை போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் அணியில் விளையாடினார். 1995 முதல் 1998 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். ஆர்தர் சி. கிளார்க் சர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க் ("Arthur Charles Clarke", டிசம்பர் 16, 1917 – மார்ச் 19, 2008) பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும், அறிவியல் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன்படுத்தியவர். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதனின் தலைவிதி பரந்துள்ளது என்ற தொலைநோக்கக் கருத்தை வலுவாக முன்னிறுத்தியவர். 1968 இல் இவர் எழுதிய 'எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற புதினமும் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட '2001: எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற திரைப்படமும் இவரது இந்தத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகளாக உள்ளன. கிளார்க் இருபதாம் நூற்றாண்டு அறிபுனை எழுத்துலகின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார் மற்ற இருவர் ஐசாக் அசிமோவ் மற்றும் ராபர்ட் ஏ. ஹெய்ன்லீன் ஆகியோராவர். கிளார்க் இங்கிலாந்தில் சொமர்செட் என்ற இடத்தில் டிசம்பர் 16, 1917 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு உழவர். தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனராகப் பணியாற்றினார். நான்கு குழந்தைகளில் மூத்தவரான கிளார்க் அருகில் உள்ள டாண்டன் (Taunton) நகர உயர்நிலைப்பள்ளியில் 'புலமைப்பரிசில்' (கல்வித்திறமைப் பரிசில்) பெற்ற மாணவனாகக் கல்வி பயின்றார். தான் பிள்ளைப் பருவத்தில் சோமர்செட் கடற்கரையோரம் நடக்கையில் தனது அறிவியல் கற்பனைகளை விழித்தெழச் செய்த பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். அவற்றில் ஒரு சில, தன் தந்தை ஒரு முறை ஒரு டைனோசர் படமுள்ள ஒரு சீட்டுக்கட்டு கொடுத்தது; கட்டுமானம் செய்யும் விளையாட்டுப் பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றது போன்றன. முதல் உலகப்போரில் படுகாயமடைந்திருந்த தன் தந்தையை தன் 13-வயதில் கிளார்க் இழந்தார். இதன் பின் டான்டூனில் உள்ள ஷாய்ஷ் இலக்கணப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்ட ஆர்தர் பழைய அமெரிக்க அறிவியல் புதின நூல்களைப் படிப்பது வழக்கம். ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டவர் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க அவரது குடும்ப வருவாய் போதாமையினால், தனது 19 ஆவது வயதிலேயே லண்டன் அரசுப் பணியில் (கல்வித்திணக்களத்தில்) சேர்ந்து பணியாற்றினார். இவர் தனது 17-ஆம் அகவையிலேயே பிரித்தானியாவில் கோள்களியல் கழகத்தில் சேர்ந்தார். பின்னாளில் இதன் பொருளாளராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அரசுப் பணியில் இவரது கணிதக் கூர்மை கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் பணிக்கு உயர்வித்தது. ஆனால் 1941-ல் இரண்டாம் உலகப் போரின்போது அப்பணியிலிருந்து விலகி ராயல் வான்படையில் இணைந்தார். அங்கு இலத்திரனியலில் பயிற்சி பெற்று வானொலிப் பள்ளியில் செய்முறைப் பயிற்சியாளரானார். இறுதியில் தென்மேற்கு இங்கிலாந்தில் வட காரன்வாலில் உள்ள டேலிட்ஸ்டோமூர் என்ற இடத்தில் அமெரிக்காவின் தரைக் கட்டுப்பாட்டு ராடார் அமைப்புக் குழுவில் பணியாற்றினார். இவர் பணியாற்றிய இந்த அமெரிக்கக் குழுவின் தலைவர், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற லூயிஸ் டபிள்யூ ஆல்வாரெஸ் ஆவார். இந்தக் காலகட்டமே கிளார்க்கைச் சாதாரண புதினங்கள் எழுதுவதிலிருந்து அறிவியல் பக்கம் திருப்பியதாக 1963-ல் எழுதிய "பறத்தல் வழி" ("Glide path") என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் ராயல் வான்படையிலிருந்து விலகி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் மற்றும் கணிதவியலில் சேர்ந்தார். அதன் பின் பட்ட மேற்படிப்பாக வானவியலில் சேர்ந்தார். இப்படிப்பு அவருக்குச் சோர்வைத் தந்ததால் அதை விடுத்து "சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்" ("Science Abstracts") (1949-50) என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பணி அவருக்குச் சிந்திக்கவும் எழுதவும் நேரத்தைக் கொடுத்தது. 1951-இலிருந்து கிளார்க் முழுநேர எழுத்தாளரானார். 1953 இல் கிளார்க் மரிலின் மேஃபீல்ட் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். மணம் புரிந்து ஆறு மாதங்களில் அவர்கள் பிரிந்தனர். ஆனாலும் 1964 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அதிகாரபூர்வமாகப் பிரிந்தனர். 1962-ல் இவர் போலியோ நோயினால் தாக்குண்டார். நோயின் தொடர் விளைவால் வாழ்வில் பிற்காலங்களைப் பெரும்பாலும் இவர் நகரும் நாற்காலியிலேயே கழித்தார். இவரது வெளியுலகத் தொடர்பு, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகவே இருந்தது. தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையில் கொழும்பு நகரைத் தேர்ந்தெடுத்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார். அங்கு அவர் இறக்கும் வரை ஏறக்குறைய 45 ஆண்டு காலம் வாழ்ந்தார். "புவியிலிருந்து பார்க்கும்பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதி எனப்படும் செயற்கைக்கோள்களை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்" என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை இவர் 1945-இல் முன்வைத்தார். இக்கருத்துதான் தற்கால வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறவியலாது எனினும், இவர் நினைவாக, (புவிநிலை வலயம்-geostationary orbit) புவியிடமிருந்து மாறாச் சுற்றுப்பாதைகளை சிலநேரங்களில் "கிளார்க் வலயம்" என்றும் அழைப்பர். ஆர்தர் சி கிளார்க் தான் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் அவருடைய மூன்று விதிகளையும் (Three Laws) நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இது அவரது அறிவியல் புதினங்களில் நடைமுறை சாத்தியமாக வெளிப்படுத்திய உள்ளுணர்வுக் கோட்பாடுகளின் அறிவார்ந்த உந்தமாகக் கருதலாம். அவை: 1998 இல் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசியாரால் "நைட்" பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருகை தந்தபோது இப்பெருந்தகைக்கு சர் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். இலங்கை அரசின் மிக உயரிய விருதான "ஸ்ரீ லங்காபிமன்யா" என்ற விருது 2005 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார். மார்ச் 19 ஆம் தேதி, 2008, புதன்கிழமை காலை அவர் கொழும்பில் உயிர் துறந்தபோது அவருக்கு வயது 90. ரகுவரன் ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார். நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர். டைகண்டர் டைகண்டர் (爆闘宣言ダイガンダー; "பகுட்டோ சென்கென் டைகண்டா") மனிதர்கள் ரோபோக்களை விளையாட்டுப்போட்டிகளில் பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமே தொடராகும். இது டி.வி டோக்யோவில் ஏப்ரல் 2002 முதல் டிசம்பர் 2002 வரை ஒளிபரப்பட்டது. இந்த தொடரில் மொத்த 39 எபிசோடுகள் உள்ளன. வருங்காலத்தில் பேசும் ரோபோக்களைப் பயன்படுத்தி, மனிதர்கள் விளையாட்டுப்போட்டிகளை நிகழ்த்துகின்றனர். இவ்விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்களின் கட்டுப்பாட்டில் ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்த்து போராடுகின்றன. விலங்குகளைப்போல் இயல்பு நிலையில் இருக்கும் இந்த பேசும் ரோபோக்கள் யுத்தத்தின் போது மனித உருவத்துக்கு ஒத்த உருவத்தில் உருமாறி போராடுகின்றன. "அகிரா அகெபோனோ" என்னும் சிறுவன் "டைட்டன் பெல்ட்" என்னும் மிகப்பெருமை வாய்ந்த ரோபோ போட்டியில் தன்னுடைய ரோபோக்களான "பிளையன்", "ஈகிள்ஆரோ", "'ட்ரைமாக்", "போன்ரெக்ஸ்", "டெஸ்பெக்டார்", "ட்ரைஹார்ன்", "ரியூகே" மற்றும் "டைகூ" ஆகியவற்றை பயன்படுத்தி, வெல்லுவதே அவனது குறிக்கோள். இந்த ரோபோக்கள் அனைத்தும் அகிராவின் தாத்தா பேராசியர் "ஹஜிமே அகெபோனோ" உருவாக்கியது. இந்த ஒட்டுமொத்த குழுமத்துக்கு "ஹருகா" என்ற சிறுமி மேலாண்மையாளராக இருக்கிறாள். "குழு அகிரா", இந்த ரோபோக்களுடன் பல ரோபோ சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றில் பெற்றும் வருகின்றனர். இதற்கிடையில், பல நேரங்களில் "ஜின்சன்" என்ற இன்னொரு ரோபோ அகிராவையின் அவனைச்சார்ந்த ரோபோக்களையும் அழிக்க முற்படுகிறது. பேராசிரியர் "மேல்ஸ்ட்ராம்" என்பவன் தான், இந்த ரோபோவுக்கு கட்டளையிடுகிறான், மேல்ஸ்ட்ராமும் ஹஜிமேயும் முற்காலத்தில் ஒன்றாக பணி புரிந்தனர். பின்னர் "டைகமாரு" மற்றும் "ரோகமாரு" என இரண்டு ரோபோக்களும் அகிரா குழுவை அழிக்க அனுப்பப்படுகின்றன. எனினும் இந்த இரு ரோபோக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பெரும்பாலும் நகைச்சுவையாகவே முடியும். பின்னர், கட்டுக்கடங்காத இன்னொரு ரோபோவான "டிராகன் பஸ்டர்" மற்றும் இதைச்சார்ந்த ரோபோக்களையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை அகிராவுக்கு ஏற்படுகிறது. அகிரா எல்ல தடைகளையும் வெற்றிக்கொண்டு எவ்வாறும் "டைட்டன் பெல்ட்டை" வெல்கிறான் என்பதே கதை. அகிராவும் அவனது ரோபோக்களும் டைலாந்து என்னும் இடத்தில் வசிக்கின்றனர். தங்களுடைய வாகனத்தேவைக்கு டைஷட்டில் என்னும் விண்ணோடத்தை இயக்குகின்றனர். அகிராவின் குழுவின் கீழ்க்கண்ட ரோபோ பிரவுகள் உள்ளன. "டைகண்டர் பிரிவு(ரியூகே, டைகு, டிராகன் ஃபிளேம், டிராகன் ஃபிரீஸ்), விலங்கு பிரிவு(பிளையன், ஈகிள்-ஆரோ, டிரைமாக்) மற்றும் டைனோ பிரிவு(போன் ரெக்ஸ், டெஸ்பெக்டர், ட்ரைஹார்ன்)". சொக்ட்டோ சொக்ட்டோ ("Choctaw") எனப்படுவோர், தொடக்கத்தில், மிசிசிப்பி, அலபாமா, லூசியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்க இனக்குழு ஆகும். இவர்கள் பேசும் மொழி முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்தது. இவர்கள், மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த மிசிசிப்பிப் பண்பாட்டின் ஒரு பகுதியினர் ஆவர். எசுப்பானியப் பயணிகள் இவர்களை முதன்முதலாகக் கண்டதாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு அயலவர்களாக இருந்த ஐரோப்பிய அமெரிக்கக் குடியேற்றக்காரரின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை இவர்கள் பின்பற்றி வந்தனர். இதனால் அக்காலத்தில் சொக்ட்டோக்கள், ஐரோப்பிய அமெரிக்கர்களால், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் ஒரு பழங்குடியாகக் கொள்ளப்பட்டனர். தெற்குப் பகுதியிலும் சில் சொக்ட்டோக் குழுக்கள் இருந்தாலும், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசமும், மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியக் குழுவுமே முதன்மையான சொக்ட்டோ சமூகங்கள் ஆகும். ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன், சொக்ட்டோக்களில் வெளியேற்றத்தை இந்தியர் அகற்றல் செயற்பாடுகளுக்கு ஒரு மாதிரியாகக் கொண்டார். முதலாவது கண்ணீர்த் தடங்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள் சொக்ட்டோக்களே ஆவர். 1831 ஆம் ஆண்டில், ஆடும் முயல் வெளி ஒப்பந்தம் (Treaty of Dancing Rabbit Creek) எனப்படும், சொக்டோக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்படி, ஒக்லஹோமாவுக்குச் சென்றவர்கள் போக, புதிதாக உருவான மிசிசிப்பி மாநிலத்திலேயே சில சொக்ட்டோக்கள் தங்கிவிட்டனர். இவர்களே முதன்முதலாக ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற முக்கியமான ஐரோப்பியர் அல்லாத இனத்தவர் ஆவர். பெரிய ஐரிஷ் பஞ்சம் (1845–1849), ஏற்பட்ட காலத்தில் அவர்களுக்குத் தாராளமாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது தொடர்பாகவும் இவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் ஒக்லஹோமாவிலும், மிசிசிப்பியிலும் இருந்த சொக்ட்டோக்கள் பெரும்பாலும் கூட்டமைப்புக்கே ஆதரவாக இருந்தனர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் என்போர் அலாஸ்காவின் சில பகுதிகள் உட்பட இன்றைய ஐக்கிய அமெரிக்காவுக்கு உட்பட்ட வட அமெரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்தே நீண்டகாலம் அங்கு வசித்து வருபவர்களும் ஆவர். இவர்களுள், பெரும் எண்ணிக்கையிலான தனித்துவமான பழங்குடிகள், நாடுகள், இனக்குழுக்கள் என்பன அடங்கும். இவர்களுட் பலர் இன்றும் அரசியல் சமுதாயங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள், அமெரிக்க இந்தியர், இந்தியர், மூல அமெரிக்கர் (Original Americans), அமெரிந்தியர் போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுவது உண்டு. எல்லாத் தொல்குடி அமெரிக்கர்களும் தொடர்ச்சியாக அமைந்த 48 மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. இவர்களிற் சிலர், அலாஸ்காவையும் தீவுகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். இத்தகையவர்களில் அலாஸ்காவைச் சேர்ந்த, இனுப்பியாக், யூப்பிக், எஸ்கிமோக்கள், அலெயுத்துகள் என்பவர்கள் எல்லா வேளைகளிலும் தொல்குடி அமெரிக்கராகக் கருதப்படுவதில்லை. எனினும், 2000 ஆண்டுக்கான குடித்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில், இவர்கள் எல்லோரையும் சேர்த்து "அமெரிக்க இந்தியர்களும், அலாஸ்கத் தொல்குடிகளும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹவாய்த் தொல்குடிகளும், பல்வேறு பசிபிக் தீவு அமெரிக்கர்களும் கூடத் தொல்குடி அமெரிக்கர்களாகக் கருதப்படலாம், ஆயினும் இது பொதுவான நடைமுறை அல்ல. அமெரிக்காவில் இடம்பெற்ற ஐரோப்பியர் குடியேற்றம், தொல்குடி அமெரிக்கர்களையும், அவர்கள் பண்பாட்டையும் சிதைத்துவிட்டது. 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐக்கிய அமெரிக்கா ஆகிவிட்ட பகுதிகளிலிருந்த மக்களுக்கு, ஐரோப்பியக் குடியேற்றம் பல வழிகளிலும் நாசம் விளைவித்தது. ஐரோப்பியக் குடியேற்றக்காரரினால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளும், இன அழிப்பும், ஐரோப்பாவிலிருந்து வந்த தொற்று நோய்கள், சொந்த நிலங்களிலிருந்து இடம் பெயர்த்தமை, அடிமைகள் ஆக்கப்பட்டமை, உள்நாட்டுப் போர் என்பவற்றுடன், பெருமளவு கலப்பு மணங்களும் இந்த அழிவுகளுக்கு முக்கிய காரணங்கள் ஆயின. வில்ட் சேம்பர்லென் வில்டன் நார்மன் சேம்பர்லென் அல்லது வில்ட் சேம்பர்லென் ("Wilton Norman Chamberlain", பிறப்பு - ஆகஸ்டு 21, 1936, மரணம் அக்டோபர் 12, 1999) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ.-இல் சேர்வதுக்கு முன் இவர் நாலு ஆண்டு கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் என். பி. ஏ.-இல் 1959 முதல் 1973 வரை விளையாடினார். 1959 முதல் 1964 வரை ஃபிலடெல்ஃபியா/சான் ஃப்ரான்சிஸ்கோ வாரியர்ஸ் அணியில் விளையாடினார். 1965 முதல் 1968 வரை ஃபிலடெல்ஃபியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1968 முதல் 1973 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 30.1 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். மார்ச் 2, 1962 ஒரு போட்டியில் 100 புள்ளிகள் பெற்றார்; என். பி. ஏ. வரலாற்றில் ஒரு போட்டியில் வேறு யாரும் இவ்வளவு புள்ளிகள் இன்று வரை பெற்றவில்லை. மைக்கல் ரெட் மைக்கல் ரெட் (ஆங்கிலம்:Michael Redd, பிறப்பு - ஆகஸ்டு 24, 1979) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார். டாமினீக் வில்கின்ஸ் ஜாக் டாமினீக் வில்கின்ஸ் ("Jacques Dominique Wilkins", பிறப்பு - ஜனவரி 12, 1960) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யர வீரர்கலில் இவர் ஒன்று ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். வில்கின்ஸின் என். பி. ஏ. ஒழுக்கம் 1982ல் வெளிப்பட்டு 1999ல் முடிந்தது; நடுவில் இரண்டு ஆண்டு ஐரோப்பாவில் விளையாடினார். இவரின் என். பி. ஏ.-இல் மிகவும் உயர்ந்த ஆண்டுகள் அட்லான்டா ஹாக்ஸ் அணியில் விளையாடினார், ஆனால் என். பி. ஏ. கடைசிப் போட்டிகளை வெற்றிப்படவில்லை; இவரின் ஒரே போரேறிப்பு (Championship) ஐரோலீகில் பனதினயிகோஸ் அணியில் வெற்றிபெற்றார். ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ("University of Georgia"), ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஏத்தன்ஸ் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஜெய்-சி ஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார். முஸ்கோஜிய மொழிக்குழு முஸ்கோஜிய மொழிக்குழு என்பது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உள்நாட்டுக்கு உரிய மொழிகளின் குடும்பம் ஆகும். இம் மொழிகள் பொதுவாகக் கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. எனினும் இது குறித்த வாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இம் மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும். முஸ்கோஜிய மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்ற இரண்டு வகையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வழக்கில் உள்ள வகைபிரிப்பு, மேரி ஹாஸ் என்பரும் அவரது மாணவர்களும் உருவாக்கியது. பிந்தியதும், சர்ச்சைக்குரியதும் ஆன இன்னொரு வகைப்பாடு பமீலா முன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது. ஹாஸ் (1951, 1952) என்பார், முஸ்கோஜிய மொழிகள், குடாப்பகுதி மொழிகள் எனப்படும் பெரிய மொழிக் குழு ஒன்றின் ஒரு பகுதி எனக் கருத்து வெளியிட்டார். குடாப்பகுதி மொழிகளுள், முஸ்கோஜிய மொழிகள், அத்கப்பா, சித்திமச்சா, துனிக்கா, நட்செஸ் ஆகிய மொழிக் குழுக்கள் அடங்கு என அவர் கூறினார். காம்பெல் போன்றவர்கள், குடாப்பகுதி மொழிகள் என்னும் கருத்துருவை மறுக்கிறார். சிலர் முஸ்கோஜிய மொழிகள், யமாசி மொழிகளுடன் தொடர்புள்ளவை எனக் கருதினர். யமாசி மொழிபற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. யமாசி பல இனங்களின் ஒரு குழுவையே குறிக்கிறது என்றும், அவர்கள் ஒரே மொழியைப் பேசியவர்கள் அல்ல என்ற கருத்து உண்டு. ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம், ஐக்கிய அமெரிக்கா, ஒக்லஹோமா ஆகியவற்றின் அரசுகளுடன் சிறப்புத் தொடர்புகளைப் பேணிவருகின்ற பகுதியளவு தன்னாட்சி ஒரு பகுதி ஆகும். இங்கே சுமார் 250,000 மக்கள் வாழ்கின்றனர். சொக்ட்டோ தேசத்தின் தலைமையகம் ஒக்லஹோமாவின் துரந்த் நகரில் அமைந்துள்ளது. ஒக்லஹோமாவின் துஷ்கஹோமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க "கவுன்சில் ஹவுஸ்" இன்று சொக்ட்டோ அருங்காட்சியகத்தையும், நீதித்துறையின் நீதிமன்றத் தொகுதியையும் கொண்டுள்ளது. சொக்ட்டோ தேசம், ஒக்லஹோமா சொக்ட்டோக்கள் எனப்படும் தொல்குடி அமெரிக்கர்களின் இன்றைய தாயகமாக உள்ளது. இவர்கள் 1831 க்கும் 1838 க்கும் இடையில் அவர்களில் மூலத் தாயகப் பகுதிகளிலிருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவின் இப்பகுதிக்கு அகற்றப்பட்டனர். இங்கே அவர்கள், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இவ் வெளியேற்றம் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 1903 ஆம் ஆண்டில் 300 சொக்ட்டோக்கள் ஒக்லஹோமா சொக்ட்டோ தேசத்துக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் சுமார் 11,020 சதுரமைல் (28,500 கிமீ) பரப்பளவு கொண்டது. இதில், தென்கிழக்கு ஒக்லஹோமாவிலுள்ள 10 1/2 கவுண்டிகள் அடங்கியுள்ளன. இவை அட்டோக்கா கவுண்டி, பிரையன் கவுண்டி, சொக்ட்டோ கவுண்டி, கோல் கவுண்டி, ஹஸ்கெல் கவுண்டி, ஹியூகெஸ் கவுண்டியின் அரைப்பகுதி, லாட்டிமெர் கவுண்டி, லே புளோர் கவுண்டி, மக்கர்ட்டன் கவுண்டி, பிட்ஸ்பர்க் கவுண்டி, புஷ்மத்தாஹா கவுண்டி என்பனவாகும். இத் தேசத்தின் பழங்குடித் தலைமையகம், ஒக்லஹோமாவின் தூரத்தில், மூன்று மாடிக் கட்டிடங்களையும், ஒரு தளக் கட்டிடங்களையும் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளது. சொக்ட்டோ பழங்குடி, சொக்ட்டோ தேச அரசியலமைப்பினால், ஆளப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு, 1984 ஜூன் 9 ஆம் தேதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசியலமைப்பின் கீழ், அரசின் நிறைவேற்றுப் பிரிவு, சட்டவாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு என்னும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்ட்டோப் பழங்குடிகளின் தலைவர் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இவர் பழங்குடிப் பேரவையின் (Tribal Council) வாக்களிக்கும் உரிமையுள்ள ஒரு உறுப்பினர் அல்ல. பழங்குடியின் சட்டவாக்க அதிகாரம் 12 உறுப்பினரைக் கொண்ட பழங்குடிப் பேரவையிடம் உள்ளது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் சொக்ட்டோ மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நமீபியா நமீபியா ("Namibia"), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது. 1857 1857 (MDCCCLVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பிரான்டன் ராய் பிரான்டன் டவேன் ராய் ("Brandon Dawayne Roy", பிறப்பு - ஜூலை 23, 1984) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் நாலு ஆண்டு ஆடியுள்ளார். வாஷிங்டன் பல்கலைக்கழகம் வாஷிங்டன் பல்கலைக்கழகம் ("University of Washington"), ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். பேஜா ஸ்டொயாகொவிக் ப்ரேட்றாக் "பேஜா" ஸ்டொயாகொவிக் (செர்பிய மொழி:Predrag "Peja" Stojaković, பிறப்பு - ஜூன் 9, 1977) செர்பியா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார். செயின்ட் லூயிஸ் (மிசூரி) செயின்ட் லூயிஸ் (St. Louis) ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். கேன்சஸ் நகரம் (மிசூரி) கேன்சஸ் நகரம் என்பது அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். எம். நைட் சியாமளன் எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார். ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. புகழ்பெற்ற திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரை தமிழில் திருக்காளத்தி என அழைப்பதுண்டு. இந்த மண்டலத்தின் எண் 14. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 67 ஊர்கள் உள்ளன. சிக்காகோ பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் ("University of Chicago"), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்கு படித்தவர்கள் ஆவார். மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர். இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இருபாலரும் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. அமெரிக்க பாப்டிச தேவாலயத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஜான் டி. ராக்பெல்லர் இதற்கு பண உதவி வழங்கினார். முதன்முறையாக, 1890 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ப்பர் இதன் தலைவரானார். முதல் வகுப்புகள் 1892 ஆம் ஆண்டு நடந்தன. . தனி நிறுவனமாகத் தொடங்கினர். இதே பெயரில் முன்னர் செயல்பட்ட பல்கலைக்கழகம், நிதி நெருக்கடியால் 1886இல் மூடப் பட்டதால், இது தொடங்கப்பட்டது, பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, . பல்கலைக்கழக சட்டப் பள்ளி 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், ஆசிய ஆய்வியல் நிறுவனம் தொடங்கப்பட்டு தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் இலவசமாகவே இங்கு படிக்க அனுமதிக்கப்பட்டனர். இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நூல்களையும், ஆய்வுக் கருவிகளையும் வழங்கியது, 1929 ஆம் ஆண்டு, பல்கலையின் ஐந்தாவது தலைவரான ராபர்ட் மேனார்டு ஹட்சின்ஸ், கல்விக்கு முக்கியத்துவம் தர எண்ணி, பல்கலைக்கழக கால்பந்து குழுவை நீக்கினார். வடமேற்குப் பல்கலைக்கழகத்தையும், சிக்காகோ பல்கலைக்கழகத்தையும் இணைக்கத் திட்டமிட்டார். இவரது காலத்தில், பல்கலைக்கழக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. மருத்துவத் துறை மாணவர்கள் சேரத் தொடங்கினர். ராக்ஃபெல்லர் அறக்கட்டளை வழங்கிய பணத்தால், பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது கல்லூரி நிர்வாகம். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தால் மன்காட்டன் திட்டம் செயற்படுத்தப்பட்டது. புளூட்டோனியத்தை முதன்முறையாக இங்கு தான் பிரித்தனர். செயற்கையான, அணுப்பிளவை என்ரிக்கோ பெர்மி கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டில், ஹன்னா ஹோல்போர்ன் கிரே, யேல் பல்கலைக்கழகத்தின் தலைவராய் இருந்தவர், பின்னர் இங்கு தலைவராக ஏற்கப்பட்டார். பெண்ணான இவர், 15 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார்.. 1999 ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான ஹூகோ சோன்னென்ஷென், மாணவர்களின் சுமையைக் குறைக்க எண்ணி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை 21 இல் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டது. "த நியூயார்க் டைம்ஸ்", "தி எக்கனாமிஸ்ட்" உள்ளிட்ட முன்னணிப் பத்திரிக்கைகள் இதை செய்தியாக வெளியிட்டன. பிரச்சனை எழவே, 2000 இல் தன் பதவியில் இருந்து விலகினார். . பல மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியது. 2009 ஆம் ஆண்டில், மேக்ஸ் பலேவ்சுகி வசிப்பிடக் கட்டிடம் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், 10 மாடிக்கட்டிடமாக உயிர்மருத்துவத் துறை மையம் கட்டப்பட்டது. முதன்மை வளாகம் பரப்பளவில் சிக்காகோ நகரில் உள்ளது. 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி, பல்கலையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது. தொடக்ககால கட்டிடங்கள் ஆறு உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன, இங்குள்ள ஹட்சிசன் அறை, ஆஃக்சுபோர்டு நகர தேவாலயத்தை ஒத்திருக்கும். சிக்காகோ பைல்-1 அமைந்துள்ள இடம், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்க் லாய்டு ரைட் கட்டிய ராபி ஹவுஸ் கட்டிடமும் தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளென் சீபோர்க், தன் 405 அறையில், புளோட்டினியத்தை இங்கு தான் பிரித்தார். இந்த பல்கலைக்கழகம் தொலைதூரங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது. இதன் வணிகப் பள்ளிக்கு, சிங்கப்பூரிலும், லண்டனிலும் கிளைகள் உள்ளன. பாரிசு நகரில் ஒரு வளாகம், செய்ன் ஆறு அருகில் உள்ளது. பெய்ஜிங் நகரிலும் இதன் வளாகம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு உள்ளது. பல்கலைக்கழகத் தலைவர் உட்பட ஐம்பது பேர் இந்த குழுவில் இடம்பெறுவர். பல்கலைக்கு தேவையான நிதியை சேகரிப்பதும், திட்டங்களை வகுப்பதும், இதன் பொறுப்பு. இங்கு ஆறு நூலகங்கள் உள்ளன. மொத்தம் 8.5  மில்லியன் நூல்கள் உள்ளன. அமெரிக்காவின் முன்னணி நூலகங்களில் இதுவும் ஒன்று. தத்துவம், வரலாறு, வணிகம், மருத்துவம் எனப் பல துறைச் சார்ந்த நூல்களும் இவற்றுள் அடங்கும். 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பல்கலைக்கழகத்திற்கு 133,155 பழைய மாணவர்கள் உள்ளனர்.. இவர்களில் பராக் ஒபாமா குறிப்பிடத்தக்கவர். மேலும், இங்கு படித்தவர்கள். உலக வங்கி, கனடிய அரசு, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் பணிபுரிகின்றனர். நேட் சில்வர், கர்ட் வானெகெட், கார்ல் சேகன், மில்ட்டன் ஃப்ரீட்மன், யூஜின் ஃபாமா, எட்வின் ஹபிள், லாரி எலிசன் ஆகியோரும் இங்கு கற்றனர். இங்கு பத்து ஆண் குழுக்களும், ஒன்பது மகளிர் குழுக்களும் இயங்குகின்றன. . சிக்காகோ மரூன்ஸ் என்பது இந்த விளையாட்டுக் குழுக்களின் ஒட்டுமொத்த பெயர். என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய தடகளப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பர். இங்குள்ள மாணவர்கள் ஏறத்தாழ 400 அமைப்புகளை நடத்துகின்றனர். இவற்றில் சமயம், பண்பாடு, விளையாட்டு, ஆர்வக் குழுக்கள் ஆகியன அடங்கும். மாணவர்களே பதிப்பிக்கும் செய்தித்தாள், திரைப்படக் குழு, பல்கலைக்கழக வானொலி உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன. இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆண்குறிப் பெரிதாக்கம் ஆண்குறிப் பெரிதாக்கம் என்பது மனித ஆண்குறியின் அளவினைப் பெரிதாக்கும் முயற்சியாகும். இது ஒரு தொழிற்றுறையாக வளர்ச்சியடைந்துள்ளது. உடற்பயிற்சிகள், கருவிகள், மருத்துவம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆண்குறியின் அளவை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இவற்றின் சாத்தியம் பற்றி ஆதரவானதும் எதிரானதுமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரபலமாக அறியப்பட்ட அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மனிதனது ஆண்குறியைப் பெரிதாக்கும் முயற்சிகள் பல நூற்றாண்டுகளின் முன்பேயே தொடங்கி விட்டன. ஆண்குறியில் ஓர் எடையைத் தொங்கவிடுவதன் மூலம் அதன் நீளத்தை அதிகரிக்க முயன்றுள்ளனர். இது ஓரளவு ஆபத்தானதுமாகும். சில ஆபிரிக்க இனக்குழுக்கள் 2000 ஆண்டுகளின் முன்னர் இம்முறையைப் பின்பற்றியதாச் சொல்லப்படுகிறது. தற்காலத்தில் ஆண்குறையைப் பெரிதாக்கவல்லவை எனப் பல மருந்துகள் விற்பனையாகின்றன. ஆண்குறியின் நீள, அகலத்தை அதிகரிப்பதற்கான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஓர் ஆய்வில் ஆண்குறியைப் பெரிதாக்கும் சத்திரசிகிச்சைக்குட்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் திருப்தியின்மையை தெரிவித்துள்ளனர். ரஞ்சனா எழுத்துமுறை ரஞ்சனா எழுத்துமுறை என்பது பிராமியில் இருந்து தோன்றிய ஒரு அபுகிடா எழுத்துமுறையாகும். இந்த எழுத்துமுறை நேபால் பாசா மொழியினை எழுத முதன்மையாக பயன்படுகிறது. மேலும் இது இந்தியா, திபெத், மங்கோலியா போன்ற பகுதிகளின் பௌத்த மந்திரங்களை எழுத பயன்படுகிறது. ரஞ்சனா எழுத்துமுறை ஒரு பிராமிய எழுத்துமுறையாகும். இது தேவநாகரி எழுத்துமுறையோடு பல ஒற்றுமைகளைக்கொண்டது. இந்த எழுத்துமுறை மகாயான மற்றும் வஜ்ரயான பௌத்த மடங்களில் ஓம் மணி பத்மே ஹூம் போன்ற மந்திரங்களையும் பௌத்த சூத்திரங்களை எழுத பயன்படுத்தப்படுகிறது. பிரசலித் எழுத்துமுறை யுடன் இதுவும் நேபாள எழுத்துமுறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பிக்‌ஷு ஆனந்தர் கி.பி 1215 ஆம் ஆண்டில் ஆரிய அஷ்டசஹஸ்ரிக பிரக்ஞாபாரமித சூத்திரத்தை ரஞ்சனா எழுத்துமுறையிலேயே எழுதினார் இருபாதாம் நூற்றாண்டின் மத்தியில் கிட்டத்தட்ட பயன்படாத நிலைக்கு சென்ற இவ்வெழுத்துமுறை தற்காலத்தில் எழுச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் உள்ள காத்மாண்டு மாநகராட்சி, லலித்பூர் துணை மாநகராட்சி, பக்தபூர் நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இவ்வெழுத்துமுறையினை அறிவிப்பு பலகைகளிலும், பிற இடங்களிலும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் இந்த எழுத்துமுறையினை ஊக்கிவிக்கவும் அழிவில் இருந்து காப்பாற்றவும் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றனர். இந்த எழுத்துமுறை நேபாள் பாசா இயக்கத்தினாரால் ஆதரவளிக்கப்பட்டு, செய்திதாள்கள் மற்றும் வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நேபாள-ஜெர்மானிய திட்டம் ஒன்று ரஞ்சனா கையெழுத்துபிரதிகளை பாதுகாப்பத்தில் ஈடுபாடு காட்டுகின்ற்ன ரஞ்சனா எழுத்துமுறையினை யூனிகோடில் சேர்ப்பதற்கான கோரிக்கையும் விடப்பட்டு அதற்கு வரைவறிக்கையும் தரப்பட்டுள்ளது வலேரி பொல்யாக்கொவ் வலேரி விளாடிமீரொவிச் பொல்யாக்கொவ் ("Valeriy Vladmirovich Polyakov" ரஷ்ய மொழி: Вале́рий Влади́мирович Поляко́в, பிறப்பு: ஏப்ரல் 27, 1942) ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார். மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் ஆவார். மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் 14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும். ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர் மார்ச் 22, 1972 இல் விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஜூன் 1, 1995 இல் இளைப்பாறினார். வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டதாரி ஆனார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். மலையாளப் பாடல்கள் மலையாளம் தமிழ் மொழியில் இருந்து பிரிந்த ஒரு திராவிட மொழியாகும். மலையாள மொழியில் அமையும் பாடல்கள் மளையாளப் பாடல்கள் ஆகும். மலையாள இசையும் பாடல்களும் தமிழிசையையும் பாடல்களையும் போலவே அமைந்திருக்கும். செவ்விய இசையில் இருந்து தற்கால ராக், ராப் இசை என மலையாள பாடல்கள் பல வடிவங்கள் எடுக்கும். கரான் பட்லர் ஜேம்ஸ் கரான் பட்லர் (ஆங்கிலம்:James Caron Butler, பிறப்பு - மார்ச் 13, 1980) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். கென்யா மலை கென்யா மலை கென்யா நாட்டின் யாவற்றினும் உயரமான மலையும், ஆப்பிரிக்காக் கண்டத்தின் மலைகள் யாவற்றினும் இரண்டாவது மிக உயரமான மலையும் ஆகும். கென்யா மலை ஆப்பிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலைக்கு அடுத்த மிக உயரமான மலை. கென்யா மலையில் உள்ள உயரமான மூன்று முகடுகள்: "பாட்டியன்" (Batian) 5,199 மீ (17,058 அடி), நெலியோன் (Nelion ) 5,188 மீ - (17,022 அடி), மற்றும் லெலானா (Lenana) 4,985 மீ (16,355 ft). கென்யா மலை கென்யா நாட்டின் நடுவே நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே 150 கி.மீ தொலைவில் நைரோபிக்கு வடக்கு-வடகிழக்காக திசையில் அமைந்துள்ளது. கென்யா மலையைச் சூழ்ந்துள்ள 620 கி.மீ (240 cathura mail) பரப்பளவுள்ள இடம், கென்யாவின் தேசிய புரவு இடமாக (Mount Kenya National Park) பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்விடம் ஐக்கிய நாடுகள் அவையின் (யுனெசுக்கோவின்) உலக மரபு சிறப்பிடமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 15,000 பேர் இங்கு வருகை புரிகிறார்கள் நுட்பியல் ஒற்றைப்புள்ளி தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது. இம்மாற்றம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக எதிர்கூறமுடியாது, ஆனால் குமுகம் (சமூகம்), அரசியல், சூழல், பொருளியல் என அனைத்து தளங்களிலும் மாற்றம் இருக்கும். மனித இருப்பின் பொருள் அல்லது தன்மையைக் கூட இந்த நிகழ்வு மாற்றி அமைக்கலாம் என்று ஒற்றைப்புள்ளியாளர்கள் கருதுகின்றனர். இந்த கருதுகோளுக்கு வலுவான அறிவியல் அடிப்படை இன்னும் இல்லை. ஒற்றைப்புள்ளி என்ற எண்ணக்கரு இயற்பியிலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. இயற்பியலில் ஒற்றைப்புள்ளியியே கருங்குழிக்கும் விளிம்பு வானத்துக்குமான இறுதி எல்லை அல்லது புள்ளி ஆகும். நுட்பியல் ஒற்றைப்புள்ளி உலகில் காணப்படும் பன்முக தன்மையை, ஏற்றதாழ்வை கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அதி வலு உள்ளவர்களாக படிவளர்ச்சி அடைய மற்றவர்கள் அனுமதிப்பர்களா? அப்படி படிவளர்ச்சி அடைந்தால் மற்றவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இன்று பொருளாதார நோக்கில் பின்தங்கிய மனித குழுக்கம் போன்று, மனித இனம் படிவளர்ச்சி பெற்ற இனம், பின் தங்கிய இனம் என்று உயிரியல் நோக்கிலும் இரண்டாக பிளவுபடுமா? இவ்வாறு பலவேறு கேள்விகள் எழுகின்றன. நுட்பியல் ஒற்றைப்புள்ளி கோட்பாட்டையும் மார்க்சிய வர்க்க புரட்சி கோட்பாட்டையும் ஒப்பிட்டு பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டும் கடந்த கால நிகழ்வுகளை அவதானித்து வரவிருக்கும் காலகட்டம் ஒன்றை விபரிக்கின்றன. மார்க்சியம் வரலாற்று அரசியல் மாற்றத்தையும், நுட்பியல் ஒற்றைப்புள்ளி வரலாற்று தொழில்நுட்ப மாற்றத்தையும் முதன்மைப்படுத்தி வருவதுரைக்கின்றன. இரண்டிலும் அடிப்படையில் முன்னேற்றம் என்ற கரு இழையோடுகிறது. நுட்பியல் ஒற்றைப்புள்ளி ஒரு குறிப்பிட்ட காலத்தை தந்தாலும், அந்த காலம் பிற்போடப்படக்கூடியதே. எனவே இரண்டும் கோட்பாடுகளும் பிழை என்று இறுதியாக நிரூபிக்க முடியாதவை, ஆகையால் இரண்டையும் அறிவியல் கோட்பாடுகளாக கருத முடியாது. பகத் சிங் பகத் சிங் ("Bhagat Singh", செப்டம்பர் 27/28, 1907 –மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் "சாஹீது" பகத் சிங் என அழைக்கப்பட்டார் ("சாஹீது" என்பது "மாவீரர்" எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது. இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர். தன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார். பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார். 1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார். மார்ச் 1926இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார். ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். பகத்சிங் அம்ரிட்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார். மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். செப்டம்பர் 1928இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் அவர் உருவெடுத்தார். இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை. பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர். மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது, சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார். பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். "தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்" என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. நகர்ப்புற வெப்பத்தீவு பல்வேறு காரணங்களால் நகர்ப்புற வளிமண்டலம் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு கூடிய வெப்பநிலை கொண்டதாகக் காணப்படும். இது நகர்ப்புற வெப்பத்தீவு (urban heat island) எனப்படுகின்றது. இந்த வெப்பநிலை வேறுபாடு பகலைவிட இரவிலும், கோடை காலத்தைவிட, மாரி காலத்திலும் அதிகமாக இருக்கும். காற்றோட்டம் குறைவாக இருக்கும்போதும் இவ்வேறுபாடு அதிகமாகக் காணப்படும். நகர்ப்புற வெப்பத்தீவுக்கான முதன்மையான காரணம் நகர்ப்புற வளர்ச்சியின்போது நில மேற்பரப்பில் இயல்பு மாற்றப்படுவதாகும். நகரப்பகுதிகளில் அதிக ஆற்றல் பயன்பாட்டினால் விளையும் கழிவு வெப்பம் இதற்கு இன்னொரு காரணமாகும். மக்கள் நெருங்கி வாழும் பகுதிகள் வளர்ச்சியடையும்போது நிலப்பகுதிகள் மேன்மேலும் கூடிய அளவில் மாற்றம் அடைவதால் அதற்கு ஒப்ப வெப்பநிலையிலும் அதிகரிப்புக் காணப்படும். நகர்ப்புற வெப்பத்தீவுக்கான காரணங்கள் பல. கட்டிடங்கள் நெருக்கமாக இருப்பதால் வெப்பம் வெளியே இழக்கப்படுவது குறைவாக உள்ளது. நகரப் பகுதிகளில் காணும் மேற்பரப்புக்களின் வெப்ப இயல்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும், தாவரங்களினால் ஏற்படக்கூடிய ஆவியுயிர்ப்புக் குறைவாக உள்ளமையும் மேலும் இரண்டு முக்கியமான காரணிகள் ஆகும். நகரப் பகுதிகளில் உள்ள மேற்பரப்புக்கள் பெரும்பாலும், அஸ்பால்ட்டு, காங்கிறீற்று போன்றவையாக உள்ளன. இவற்றின் வெப்பக் கொள்ளளவு, வெப்பக் கடத்துதிறன் என்பனவும், வெப்பத்தை உறிஞ்சும்தன்மை, வெளிவிடும்தன்மை என்பனவும் சூழவுள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் காணப்படும் மேற்பரப்புகளிலும் வேறுபாடாக உள்ளன. இது ஆற்றல் சமநிலையில் மாற்றம் உண்டாகி, நகரப்பகுதி வெப்பநிலை உயர்வதற்குக் காரணமாகின்றது. இவற்றுடன், நகரங்களில் காணப்படும் உயரமான கட்டிடங்கள், சூரியக் கதிர்வீச்சைப் பலமுறை தெறிப்பதற்கும், உறிஞ்சுவதற்கும் ஏற்ற வகையில் பல மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளன. இது நகரப்பகுதிகளைச் சூடேற்றுவதற்கான செயற்திறன் மிக்க ஒன்றாக உள்ளது. இது கன்யன் விளைவு எனப்படுகின்றது. கட்டிடங்கள் காற்றோட்டத்தைத் தடுப்பதாலும், மேற்காவுகை மூலம் வெப்பம் இழக்கப்படுவது குறைகிறது. தொழிற்சாலைகள், வளிப்பதனப் பொறிகள் என்பவற்றிலிருந்து வெளியேறும் கழிவு வெப்பமும் நகரங்களில் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றது. மாசுப்பொருட்கள் பல வளிமண்டலத்தின் கதிர்வீசும் தன்மையில் மாற்றங்களை உண்டாக்கக் கூடியன என்பதால், நகரப்பகுதிகளில் காணப்படும் உயர்ந்த அளவு மாசடைந்த சூழலும் நகர்ப்புற வெப்பத்தீவு விளைவுக்குப் பங்களிக்கின்றன. 123 உடன்படிக்கை 123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களுக்கான முன் நிபந்தனைகளை வரையறுக்கிறது. இது வரை, ஐக்கிய அமெரிக்கா கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் 123-உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அவற்றில் சில: குர்து மக்கள் குர்து மக்கள் மத்திய ஆசியாவில் வசிக்கும் குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்கள் குழு. இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் ஏறத்தாழ 27-38 மில்லியன் குர்து மக்கள் வாழ்கின்றனர். ராபர்ட் கோக் ராபர்ட் கோக் ("Robert Koch", டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார். காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிக்காசோ மொழி சிக்காசோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்குடி அமெரிக்க மொழியாகும். ஒட்டுநிலை மொழியாகிய இது எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்னும் ஒழுங்கையுடைய மொழியாகும். இம்மொழி, சொக்ட்டோ மொழிக்கு நெருங்கிய உறவுடையது எனினும், இவற்றில் ஒன்றைப் பேசுவோர் மற்றதை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கில்லை. தற்போது தென்கிழக்கு ஒக்லஹோமாவில் அடாவைச் சுற்றிய பகுதிகளில் வாழ்ந்து வரும் சிக்காசோ பழங்குடியினர் இம் மொழியைப் பேசுகின்றனர். சிக்காசோ மொழியில் 16 மெய்யொலிகள் உள்ளன. கீழுள்ள அட்டவணையில் மெய்யொலிகள் ஒலியெழுத்தாக எழுதப்பட்டுள்ளன. ஒலியெழுத்து, அனைத்துலக ஒலியியல் எழுத்து முறையிலிருந்து வேறுபடும்போது, ஒவ்வொரு மெய்யொலியினதும் ஒலியியல் குறிகள் அனைத்துலக ஒலியியல் எழுத்துக்களிலும் தரப்பட்டுள்ளன. திபெத்திய மக்கள் திபெத்திய மக்கள் ("Tibetan people") திபெத்தை இயலிடமாகக் கொண்ட மக்களையும் மேற்கில் நடுவண் ஆசியாவிலிருந்து மியான்மார், சீனா வரையில் பரந்து வாழும் மக்களையும் குறிக்கும். திபெத்திய மக்களின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டில் இருந்து 6,330,567 முதல் 5.4 மில்லியன் வரையில் குறைந்துள்ளதாக நாடு கடந்த நிலையில் உள்ள திபெத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் சீனக் குடியரசு திபெத்தியர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனில் இருந்து 5.4 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. திபெத்துக்கு வெளியே இந்தியாவில் 125,000 பேரும், நேபாளத்தில் 60,000 பேரும், பூட்டானில் 4,000 பேரும் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள் கிறித்தியான் ஐகன்சு கிறித்தியான் ஐகன்சு ("Christiaan Huygens", கிறிஸ்டியான் ஹைகன்ஸ், ஏப்ரல் 14, 1629 – ஜூலை 8, 1695) ஒரு டச்சு கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை (Wave Theory) மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்றவர் ஆவார். கோள்கள், இயந்திரவியல், ஒலியியல், இயற்பியல், கணிதம், வானவியல் ஆகிய துறைகளில் இவர் பெருமை தரும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் கொன்ஸ்டன்டீன் ஹைகன்ஸ் என்பவருக்குப் பிறந்தவர். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் கண்வில்லையைக் கண்டறிந்தார். அதனைக் கொண்டு வான்பொருள்களை நுட்பமாக ஆய்வு செய்தார். இன்றளவும் விலை குறைந்த தொலை நோக்கிகளில் பயன்படுத்தப்படும் எளிய கண்வில்லை ஹைஜன்ஸ் வடிவமைத்ததே ஆகும். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது இன்ற அலைக் கொள்கை காரணமாக உலக அளவில் அவர்பால் கவனம் ஈர்க்கப்பட்டது. ஹைகன்ஸ் கூறிய கருத்து, ஒளியானது துகள் (particle) மற்றும் அலை (wave) என இருமைப் பண்பு கொண்டது என்ற அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. "ஓர் அலை முகப்பின் ஒவ்வொரு புள்ளியும் இரண்டாம் கட்ட சிற்றலைகளின் ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம். இப்படித் தோன்றும் இரண்டாம் கட்டச் சிற்றலைகள் அனைத்துத் திசைகளிலும் சீராக முதல் அலையின் வேகத்திலேயெ பயணிக்கும்" என்பது ஹைஜென்ஸின் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாகும். இதனை ஹைஜன்ஸ் தத்துவம் என்று அழைக்கிறார்கள். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். புதன் கோளை விட பெரியதான இது சூரியக் குடும்பத்தின் துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக்கோளாகும். (இதற்கு முன் பெரிய துணைக்கோளாக வியாழனின் "கானிமீட்" இருந்தது). அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை சிறு சிறு பாறைகளினால் ஆனவை என்பதை 1656 இல் கண்டறிந்தார். அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய டைட்டன் பற்றிய வானவியல் ஆய்வுக்கான இறங்கு கலனிற்கு டைட்டனைக் கண்டறிந்த ஹைஜன்ஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியின் வளி மண்டலம் பல இலட்சக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அது போல அடர்ந்த வளிமண்டலத்தைக் கொண்ட டைட்டனை ஆய்வு செய்ய இக்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ஹைஜன்ஸ் 1659 ஆம் ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதியை (Nebula) ஆய்வு செய்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். ஓரியான் தொகுதியின் முதல் வரைபடமாக விளங்குவது இவரது ஓவியமே ஆகும். அவரது தொலைக்காட்டியின் மூலம் ஓரியான் வாயுத்திரளின் வேறுபட்ட பகுதிகளைப் பிரித்துக் குறிப்பிட்டு அதனைக் குறித்த தெளிவான விளக்கங்களை 17ஆம் நூற்றாண்டிலேயே வகுத்துக் கொடுத்தார். இப்பணியைப் போற்றும் விதமாக ஓரியோன் திரளின் ஒளிமிக்க நடுப்பகுதிக்கு இவரது நினைவாக "ஹைஜன்ஸ் பகுதி" எனப் பெயரிடப்பட்டது. காலத்தைக் கண்டறிய உதவும் ஊசல் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவரும் ஹைஜன்ஸ் தான் என்ற கருத்தும் நிலவுகிறது. நெகிழக்கூடிய ஒரே ஆதாரத்தில் கட்டப் படக்கூடிய இரு ஊசல் குண்டுகளில் ஒன்றை மட்டும் இயக்கினாலும் அந்த இயக்கம் அடுத்த ஊசல் குண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒத்த அதிர்வும், எதிர் அதிர்வும் மாறி மாறி நிகழ்வதையும் இவர் கண்டுபிடித்தார். பரிவதிர்வு ஊசல் என்ற இது இன்றும் அறிவியல் மையங்களில் காணப்படுகிறது. ஐசாக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே. இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தற்காலத் தொகையீட்டு மற்றும் வகையீட்டு நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரான்சிய நாட்டில் சில காலம் கழித்தபின் நெதர்லாந்தின் ஹாக் நகருக்குத் திரும்பிய ஐகன்சு கி.பி. 1695 ல் மறைந்தார். முனைவர் ப. ஐயம்பெருமாள், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பமைய செயல் இயக்குநர். அறிவியல் ஒளி, மே.2008. இதழில் வந்துள்ள வானவியல் முன்னோடிகள் என்ற கட்டுரை. கமலினி முகர்ஜி கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். ஆனந்த், கோதாவரி, வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில. தமிழ்க் கல்வி தமிழ் மொழியை பேச, வாசிக்க, எழுத, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த உதவும் கல்வியே தமிழ்க் கல்வி ஆகும். தமிழ்க் கல்வி, பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் பயற்சி முறையையும் சிறப்பாக குறிக்கும். மாணவருக்கு ஆர்வம் ஊட்டி, சூழலுக்கேற்ப, தமிழின் சிறப்புக்களை விளக்கி, இயல்பாக கற்பிப்பதை தமிழ்க் கல்வி வலியுறுத்துகிறது. தமிழர் தாயக நிலங்களான தமிழ்நாடு, இலங்கை பகுதிகளில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்தியா (தமிழ்நாடு), இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் சில பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பட்டப்படிப்பு துறையாக இருக்கிறது. தமிழ் இளங்கலை கல்வி பொதுவான பணிகளுக்கு நல்ல அடித்தளமாக இருக்கின்றது. "முதன்மைக் கட்டுரை: தமிழியல்" தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம். தமிழை பள்ளியில் முழுமையாக கற்க இயலாமலும், தகுந்த ஆசான்கள் இல்லாமலும் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் நல்ல கருவி. பின்வரும் இணைய தளங்கள் தமிழ் கற்பதற்கு உதவும். [http://www.tamilnotes.com[ தமிழில் கல்விக்கான இவ்விணையம் சிறப்பாக இன்றைய உலக அறிவியல் மற்றும் கலை தொழில்நுட்பங்கள் சார்பான விடையங்களை தமிழில் வெளிக்கொண்டுவருவதற்கான ஓர் சிறிய ஆரம்பமாகும். தமிழ் மொழி மூலம் தம் கல்வியினை தொடர்கின்ற, மற்றும் தமிழ் மொழி மூலம் தம் கல்வியினை கற்பதற்கு ஆவலாய் இருக்கின்ற மாணவர்களை பிரதானமாக மையப்படுத்துகின்றபோதும் ஆர்வம் உள்ள அனைவரும் தம் துறைசார் தகவல்களை பெறுவதற்கு வழியமைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இணையத்தின் பெரும்பாலான தலைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தலைப்பு தொடர்பாக நீங்கள் ஆர்வம் உடையவர்கள் எனின் நீங்களும் உங்கள் ஆக்கங்களை பகிர்ந்துகொள்ளலாம். உலக தமிழர்களுக்கு தமிழ் கல்வி பயில உதவும் முறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தளம். உத்யோக பூர்வமான, பட்ட படிப்புக்கான சேவைகளை தருகின்ற தளம். இணையத்தை பாவித்து ஆசிரியர் உதவியுடன் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள உதவும் பென்சல்வேனிய பல்கலைக்கழகத்தின் தளம். தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக உயர்நிலை நோக்கி பயிற்சிகள் உள்ளன. ஒலி கோப்புக்கள், யாவா நுட்பம் கொண்டு செய்யப்பட்ட பயிற்சிகள், படிநிலை தேர்வுகள் என்பன சிறப்பம்சங்கள். ஆங்கிலம் மூலம் படிபடியாக தமிழ் கற்பதற்க்கு 38 பகுதிகளை கொண்ட "தமிழ் பாட நூல்". செந்தில் குமார் சேரன் அமெரிக்காவில் ஆங்கில சூழலில் வளர்ந்து பின் தன் சுய முயற்ச்சியால் தமிழ் கற்றவர். அவரது அனுபவங்கள் பலருக்கு உந்துதலாக வழிகாட்டலாக அமையும். பயிற்ச்சிகள், கதைகள், பாட்டுக்கள், உரையாடல்கள், பொது சொற்கள் என பல மூலங்களை தந்து பாவித்து தமிழ் படிக்க இத்தளம் உதவுகின்றது. பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வி ஆராச்சி அனுபவங்கள் இணைய நுட்பங்களை ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்டுவரும் படி நிலை தமிழ் பாடங்கள். 1871 1871 (MDCCCLXXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். பொதக்குடி பொதக்குடி ("Podakkudi") தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது. இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, "அந்நூருல் முஹம்மதிய்யு" எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர். புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் பெயரிட்டு 30.09.2010 திறந்து வைக்கப்பட்டது. இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல் இயங்கத்துவங்கியது. பொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை தமிழக சுகாதார அமைச்சர் S.J. ஸாதிக் பாட்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது. பொதக்குடி உயர்நிலைப்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் எம். பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.) பொதி (லினக்சு) குனு / லினக்ஸ் இயக்கு தளங்களில், மென்பொருட்களை எளிதில் நிறுவிடும் பொருட்டு, முன்னரே முறையாக தொகுத்து தருவது வழமை. நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருள் வடிவங்களை, பொதிகள் என அழைக்கப் படுகின்றன. .deb விகுதியுடைய கோப்புகள் டெபியன் வழி வந்த இயங்கு தளங்களிலும் .rpm விகுதியுடைய கோப்புகள் ரெட்ஹாட் வழி வந்த இயங்கு தளங்களிலும் பொதிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. பொதிகளை நிர்வகிக்கும் பொருட்டு சினாப்டிக், அடெப்ட் போன்ற பயன்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய பயன்பாடுகளுக்கு, பொதி மேலாண்மைக் கட்டகம் (Package management system) என்று பெயர். மசுகெலியா மஸ்கெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். மஸ்கெலியா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான நுவரெலியா நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்திருந்த பழைய நகரம் காசல்றி நீர்த்தேக்கத்தை அமைத்த போது மூழ்கிவிட்டமையால் புதிய நகரம் அதற்கு அருகிலேயே உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு வருடமும் கோடைக்காலங்களில் பழைய மஸ்கெலியா நகரை காணக்கூடியதாகயிருக்கின்றது. இங்கு கோயில், முஸ்லிம் பள்ளிவாயல், பெளத்தகோயில் எனைய கட்டிடங்களையும் காணமுடியும் மஸ்கெலியா, மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் ஏறத்தாழ 1205 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கிறது. 3750-5000 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இங்கு தேயிலைப் பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்தினக்கல் அகழ்வும் அண்மைக்காலங்களில் வளர்ந்து வருகிறது. மஸ்கெலியா நகரை கினிகத்தனை நகரிலிருந்து நோட்ட்ன் பிரிஜ் வழியாக அடையலாம். மாற்றாக அட்டன் நகரிலிருந்து நோர்வுட் வழியாகவும் அடைய முடியும். நகரை அண்டி காசல்றி நீர்தேக்கம் அமைந்துள்ளபடியால் அப்பகுதியைச் சாராதவர்கள் நகரை அடைவதில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கலாம். இங்கிருந்து நல்லத்தண்ணி, அப்கொட் குடியிருப்புகளை அடைவதற்கான பெருந்தெருக்களும் காணப்படுகின்றன. மஸ்கெலியா ஹட்டன் நகரில் இருந்து 20 கிலோமீட்டரைக்கொண்டதாகும் வானியல் தலைப்புகளின் பட்டியல் வால் நட்சத்திரம் பெலிவுல்லோயா பெலிவுல்லோயா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பெலிவுல்லோயா என்பது இப்பகுதியினூடாக பாயும் பெலிவுல் ஆற்றின் சிங்கள மொழிப் பெயரிலிருந்து தோன்றியப் பெயராகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இந்நகரம் சுற்றுலாப் பயணிகளில் கவனத்தைப் பெற்ற இடங்களில் ஒன்றாகும். ஓட்டன் சமவெளியின் உலக முடிவு என அழைக்கப்படும் 1000 அடி செங்குத்துச் சாய்வின் கீழ்ப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. பெலிவுல்லோயா மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 736 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கிறது. 1900-2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. இரத்தினக்கல் அகழ்வுகளும் நடபெற்று வருகின்றன. செந்தில் ராமமூர்த்தி செந்தில் ராமமூர்த்தி (பிறப்பு மே 17, 1974) ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில் தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில் ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார். அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்" என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக நடித்துப் புகழ் அடைந்தார். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்திய பெற்றோரிற்குப் பிறந்தார் செந்தில் ராமமூர்த்தி. இவரது தந்தையார் ஒரு கன்னட இனத்தவர் என்பதும் தாயார் தமிழ் இனத்தவர் என்பதையும் குறிப்பிடவேண்டும். செந்திலின் பெற்றோர்கள் வைத்தியர்களாக இருந்ததுடன் பெங்களூரில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்கள். இவரிற்கு ஒரு சகோதரி உள்ளமையுடன் அந்த சகோதரியும் ஒரு வைத்தியராக பணிபுரிகின்றார். 1991 கீ நோட் பாடசாலையில் பட்டம் பெற்றார் செந்தில். ஒல்கா எனும் நடிகையை திருமணம் செய்த செந்திலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். டப்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து மருத்துவத் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும் இடையில் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு நடிப்புத்துறையில் கவனத்தைச் செலுத்தினார். 1999ம் ஆண்டு செந்தில் அவர்கள் வரலாறு துறையில் பட்டம் பெற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆரம்பத்தில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டிய செந்தில் பிற்காலத்தில் ஹீரோஸ் எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றார். சென்னையைச் சேர்ந்த ஒரு மரபணு ஆராய்ச்சி செய்யும் ஒரு பேராசிரியராக இந்தப் பாத்திரத்தில் செந்தில் நடித்தார். ஆரம்பத்தில் இந்தப் பாத்திரம் 54 வயதான ஒருவருக்கே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் செந்திலின் திறமையைக் கண்டு இவரின் வயதிற்கு ஏற்றவாறு பாத்திரத்தை மாற்றியமைத்தனர் தயாரிப்பாளர்கள். மங்கள் பாண்டே மங்கள் பாண்டே ("Mangal Pandey", இந்தி: मंगल पांडे, சூலை 19, 1827 – ஏப்ரல் 8, 1857) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். பாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர். மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள். கல்கத்தாவின் பரக்பூர் நகரில் மார்ச் 29, 1857 மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும் தாக்காதாவாறு தடுத்து நிறுத்தினான். பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வார விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857 இல் அவன் தூக்கிலிடப்பட்டான். 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது. பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே "தியாகி" எனப் பின்னால் கருதப்பட்டான். மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்தன. "The Rising" என்ற திரைப்படம் 2005 இல் வெளிவந்தது இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984 இல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது. ஜெய் சந்திரசேகர் ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் (பிரப்பு ஏப்ரல் 9, 1968) "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும். கிரிஸ் வெபர் மெய்ஸ் எட்வர்ட் கிரிஸ்தஃபர் வெபர் III ("Mayce Edward Christopher Webber III", பிறப்பு - மார்ச் 1, 1973) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். 1993 என். பி. ஏ. தேர்தலில் முதலாம் தேர்ந்த வீரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1993 முதல் 2008 வரை கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், வாஷிங்டன் விசர்ட்ஸ், சேக்ரமெண்டோ கிங்ஸ், பிலடெல்பியா 76அர்ஸ், டிட்ராயிட் பிஸ்டன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் இரண்டு ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற "ஃபாப் ஃபைவ்" (Fab Five) கூடைப்பந்து அணியில் விளையாடினார். மிச்சிகன் பல்கலைக்கழகம் மிச்சிகன் பல்கலைக்கழகம் ("University of Michigan"), ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். ஏன் ஆர்பர் (மிச்சிகன்) ஏன் ஆர்பர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் ஒரு நகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 114,024 மக்கள் வாழ்கிறார்கள். அசீஸ் அன்சாரி அசீஸ் அன்சாரி ("Aziz Ansari", பிறப்பு: பெப்ரவரி 23, 1983) ஒரு அமெரிக்கத் தமிழர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். எம் டிவியில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார். என்பிசி (2009–2015) பூங்கா மற்றும் பொழுதுபோக்கு ("Parks and Recreation)" தொடர்களில் டோம் ஹாவர்போர்டு என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். மேலும் 2015 இல் நெட்பிலிகஸ் (Netflix) இல் வந்த "Master of None" என்ற தொடரை உருவாக்கி மற்றும் அதில் நடித்தற்காக 2017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான தங்க பூமி விருதைப் பெற்றார். சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் என்ற விருதைப் பெறும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும், குளோடன் குளோப் விருதைப் பெற்ற முதல் தமிழ் மரபு வழி வந்த நடிகர் என்ற புகழையும் பெற்றார். அசீஸ் அன்சாரி கொலம்பியா, தெற்கு கரோலினாவில் பிறந்தார். இவர் தமிழ்நாடு,இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். அசீஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். தெற்கு கரோலினா கவர்னர் கலை மற்றும் அறிவியல் பள்ளியில் படித்தார். பின் நியூயார்க் பல்கலைகழகத்தின் ஸ்டெர்ன் மேலாண்மை பள்ளியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் பாத்திமா மருத்துவ அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் மற்றும் இவரது தந்தை செளகத் ஒரு குடல் சம்பந்தமான சிறப்பு மருத்துவர். இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் "Master of None" முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்கள். வீசட் Very Small Aperture Terminal (VSAT) என்றறியப்படும் வீசட் உபகரணமானது பூமிக்கு நிலையாக இருக்கும் ஓர் செய்மதியூடாக இணைய அணுக்கத்தினை வழங்கி வருகின்றது. வீசட் இவை பொதுவாக விநாடிக்கு 1.3 மெகாபிட்ஸ் வேகத்தில் இருந்து விநாடிக்கு 4 மெகாபிட்ஸ் வேகமுள்ள இணைப்பினை வழங்கி வருகின்றது. மேலேற்ற வேகமானது இலங்கையில் தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவினால் விநாடிக்கு 33 கிலோபிட்ஸ் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில வீசட் உபகரணங்கள் இணைய அணுக்கத்திற்கு மேலாக ஒலியழைப்புக்களையும் வழங்கி வருகின்றது எனினும் இவற்றூடாக உரையாடும் செய்மதிக்குச் சென்று வருதினால் ஓரளவு நேரம் பொறுத்திருந்தே உரையாடலை மற்றையவர் தொடங்க வேண்டும். ஐக்கிய நாடுகளில் உலக உணவுத் திட்டம், திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பொன்றவை பாவித்து வருகின்றன. இலங்கை நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் ("Parliament of Sri Lanka") 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர். கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833, மார்ச் 13 ஆம் நாள் நிறுவப்பட்டன. நிறைவேற்றுப் பேரவையில் குடியேற்றச் செயலாளர், இராணுவப் படைகளின் கட்டளை அதிகாரி, சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவையின் கடமைகள் பொதுவாக இலங்கை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் மட்டுமே. ஆனாலும் இவ்வாலோசனைகளை ஆளுனர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் பிரிந்த்தானியர் மட்டுமே உறுப்பினர்களாகவிருந்தனர், பின்னர் இலங்கையரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் 16 உறுப்பினர்களும், பின்னர் 49 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இலங்கையின் குடிமக்களில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 1931 இல் சட்டவாக்கப் பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 101 உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார். 1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. பிரித்தானியக் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது "குடியரசுக் கட்டடம்" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இங்கு இலங்கை அரசாங்க சபை (1931-1947), [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை (1947–1972), [[தேசிய அரசுப் பேரவை]] (1972–1977), [[இலங்கை நாடாளுமன்றம்]] (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது. 1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் [[ஆர். பிரேமதாசா]] கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே [[கோட்டே]] நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா]] திறந்து வைத்தார். [[பகுப்பு:இலங்கை நாடாளுமன்றம்|*]] [[பகுப்பு:இலங்கை அரசு]] மும்பை பரவர் சங்கம் தமிழகத்தின் தென்‌கோடி கடற்கரை வாழ் பரதகுல மக்களின் நலனிற்கென மும்பையில் 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நற்பணி அமைப்பு மும்பை பரவர் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் தற்போதை‌ய தலைவர் பிரபல தொழிலதிபர் திரு. அல்பர்ட் ராயன், செயலாளர் திரு. ராஜா வாயிஸ் மற்றும் பொருளாளர் திருமதி மெர்லின் ஃபர்ணான்டோ ஆகியோர் ஆவார். மும்பை பரவர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக திரு. டோம்பிவிலி அந்தோனிசாமி, திரு. கார்மல் ஃபர்ணான்டோ ஆகியோரும் இணைச்‌செயலாளர்களாக திரு. புன்னை அந்தோனிசாமி, திரு. பென்னட் ஃபர்ணான்டோ ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மும்பை பரவர் சங்கத்திலிருந்து பரவர் குரல் என்ற தமிழ் மாத இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து ‌‌‌வெளி வந்து கொண்டிருக்கிறது. அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு சமுதாய இதழ் பரவர் குரல். இதன் ஆசிரியர் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு. ராஜா வாயிஸ் ஆவார். திருமதி மெர்லின் ஃபர்ணான்டோ, திரு. புன்னை அந்தோனிசாமி மற்றும் திரு. பென்னட் ஃபர்ணான்டோ ஆகி‌யோர் பரவர் குரல் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகின்றனர். மும்பை பரவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது ஆண்டு விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. மும்பை பரவர் சங்கத்தின் ஏற்புபெற்ற இணையதளம் ஒன்றும் இயங்கி வருகிறது. மும்பை பரவர் சங்கத்தின் இணைய தளம் ஐயனார் ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது. ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார். ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார். கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர். சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர். பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர். ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர். புஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும். இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர். ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர். நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும். ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள். ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும். கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர். ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள். பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை. சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர். எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர். தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர். புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர். முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர். ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும். ஐயனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார். சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம். ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர். ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார். தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். "சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர். ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். "ய்" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும். "ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை.