மலேரியா மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது. மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்; நோயின் மிகவும் கடுமையான தன்மை "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால்" ஏற்படுத்தப்படுகிறது. "பிளாஸ்மோடியம் விவக்ஸ்" (Plasmodium vivax), "பிளாஸ்மோடியம் ஓவலே" (Plasmodium ovale) மற்றும் "பிளாஸ்மோடியம் மலேரியா" (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான "பிளாஸ்மோடியம் நோலெசி" (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக "மலேரியா ஒட்டுண்ணிகள்" என்று கருதப்படுகின்றன. வழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Anopheles) கொசு அல்லது நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும்போது அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகிறது. நோய்த்தொற்றுடைய கொசு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்தக் கொசு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக் கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் கொசுவின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன: இரத்த சோகை (தலை லேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு, இன்னும் பல). மற்ற பொது அறிகுறிகளாவன: காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், ஃப்ளூ போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம். கொசு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் கொசு கடிக்காமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் கொசுக்கள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கொசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம். பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தது. கொசுக்களுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக கொசுக்களுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன. சில தடுப்புமருந்துகள் உருவாக்கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை; நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்புமருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ப்ரோஃபிலாக்டிக் (நோய் வருவதற்கு முன்னதாகவே தடுக்கும் மருந்துப் பொருள்) மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயதுவந்தவர்கள் பலருக்கு நீண்டக் கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (நோய் எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது; சில நாட்கள் கழித்து இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும். இந்த வயந்துவந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய் தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந்தார்களானால் இவர்களுக்கு கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால் நோய் வராமல் தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று பரிந்துரைக்கபடுகிறது. குயினைன் (quinine) அல்லது ஆர்டிமிஸினின் (artemisinin) மூலம் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் இது போன்ற பல மருந்துகளை எதிர்க்கும் தன்மையுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. மலேரியாவின் அறிகுறிகளாவன: காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்த சோகை (இரத்தமழிதலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல், மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும். இவைகள் மலேரியாவின் முதல்நிலை அறிகுறிகளாகும். "P. விவக்ஸ்" மற்றும் "P. ஓவலே" நோய்த்தொற்றுகளாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு நாட்களும் இது போன்று ஏற்படும். "P. மலேரியா" நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு மூன்று நாட்களும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். "P. பால்சிபாரத்தனால்" (falciparum) ஏற்படும் நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு 36 முதல் 48 மணி நேரங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரங்களுக்கு காய்ச்சல் திரும்பத் திரும்ப வரும் (விட்டு விட்டு) மற்றும் காய்ச்சல் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியாவிட்டாலும், உயர் மண்டையக அழுத்தத்தின் காரணத்தினாலும் இது போன்ற அறிகுறி ஏற்படலாம். மலேரியாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் இருக்கை நிலையை வைத்திருப்பதுப் போல் காணப்படுவார்கள். மூளை கடுமையாக பாதித்ததன் காரணத்தினாலும் இது இருக்கலாம். அறிந்துகொள்ளும் அறிவாற்றலை மலேரியா பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படைய கூடிய பெருமூளைச்சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. பெருமூளைச்சிரைக்குரிய மலேரியா விழித்திரை வெண்மையாகுதலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற காய்ச்சலிருந்து இந்த அறிகுறி தான் இந்த நோயைவேறுபடுத்திக் காட்டுகிறது. மலேரியாவின் கடுமையான நோய்த் தாக்கத்தை "P. ஃபால்ஸிபாரம்" நோய்த்தொற்று தான் அதிகமாக ஏற்படுத்துகிறது. வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும். ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும். மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கபடாவிட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரல் பிதுக்கம் (மண்ணீரல் விரிவடைதல் (பெரிதாகுதல்), கடுமையான தலைவலி, பெருமூளைச்சிரையில் குருதியோட்டக்குறைவு ஏற்படுதல், ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), இரத்தசை சர்க்கரைக் குறைவு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் ஈமோகுளோபின் நீரிழிவு ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு கறுநீர்க்காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதன் காரணத்தினால் சிதைவடைந்த இரத்த சிவப்பணுக்களிலிருந்து ஹீமோகுளோபின் சிறுநீர் வழியாக வெளியாகும். மலேரியாவின் கடுமையான நோய் நிலை மிகவும் விரைவாக அதிகரித்து சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்திவிடலாம். தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தும் கூட அதிகமான நேரங்களில் கடுமையான நோய் தாக்கம் இருக்கும் நோயாளிகள் மத்தியில் நோய் இறப்பு வீதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடுகிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் கொடுக்கப்படும் சிகிச்சை திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. மலேரியாவின் மொத்த இறப்பு வீதம் 10ல் ஒன்றாக இருக்கலாம் (10 நோயாளிகளில் ஒருவருக்கு இறப்பு நேரிடுகிறது). நெடுங்காலமாக, மலேரியாவின் கடுமையான நோய் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி ரீதியான குறைவுகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. "P. விவக்ஸ்" மற்றும் "P. ஓவலே" ஆகிய இரண்டிலும் நாட்பட்ட (நீண்ட கால) மலேரியா தாக்கம் காணப்படுகிறது. ஆனால் "P. ஃபால்சிபாரத்தில்" இது போன்ற நோய்த் தாக்கம் இல்லை. கல்லீரலில் ஒட்டுண்ணிகள் மறைந்திருப்பதன் காரணத்தினால், நோய் தாக்கம் ஏற்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நோய் மறுபடியும் ஏற்படலாம். இரத்த ஓட்டத்தில் ஒட்டுண்ணிகள் மறைந்துவிட்டதை பார்த்துவிட்டு மலேரியாவின் நோய் குணமாகிவிட்டது என்று விவரிப்பது தவறாக இருக்கலாம். "P. விவக்ஸ்" நோய்த்தொற்றின் மிகவும் நீண்ட நோய்காப்பு காலம் 30 வருடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிதமான காலநிலையுள்ள பகுதிகளில் தோராயமாக 5 "P. விவக்ஸ்" மலேரியா நோயாளிகளில் ஒருவருக்கு ஹிப்னோசோயட்டுகளால் பொறுத்திருந்து தாக்குதல் ஏற்படுகிறது (அதாவது கொசு கடித்த பிறகு உள்ள ஆண்டிலிருந்து நோய் மறுபடியும் வர ஆரம்பிக்கும்). பேரினம் "பிளாசுமோடியத்தின்" முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் மலேரியா ஏற்படுகிறது. (தொகுதி அபிகாம்ப்லெக்ஃசா). "P. ஃபால்சிபாரம்" , "P. மலேரியா" , "P. ஓவலே" , "P. விவக்ஃசு" மற்றும் "P. நோலெசி" ஆகியவை மனிதர்களிடம் மலேரியா ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணமாக இருப்பது "P. ஃபால்சிபாரம்" ஆகும். மலேரியா நோயாளிகளில் சுமார் 80 சதவீதமானோருக்கு மலேரியா நோய்த்தொற்று வர இது காரணமாக இருக்கிறது. மலேரியா நோயினால் இறப்பவர்களில் சுமார் 90% இறப்பிற்கு இது காரணமாக இருக்கிறது. பறவைகள், ஊரும் விலங்குகள் (ஊர்வன), குரங்குகள், சிம்பான்சிகள் மற்றும் கொறிணிகள் ஆகியவைகளுக்கும் ஒட்டுண்ணி சார்ந்த "பிளாசுமோடியம்" இனங்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. மலேரியாவின் பல சிமியன் இனங்கள் மனித நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: "P. நோலெசி" , "P. இனியு" , "P. சைனோமோல்கி" , "P. சிமியோவலே" , "P. பிராசிலியணம்" , "P. ஸ்கிவெட்ஸி" மற்றும் "P. சிமியம்" ; எனினும், "P. நோலெசியை" தவிர மற்றவைகளுக்கு பொது சுகாதாரத்தில் குறைவான முக்கியத்துவமே பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. கோழிக்குஞ்சுகளுக்கும் வான்கோழிகளுக்கும் ஏவியன் மலேரியா உயிரிழப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட, பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் எதுவும் அதிகளவில் இந்த நோய் ஏற்படுத்திவிடாது. எனினும், மனிதர்களுக்கு தற்செயலாக ஏற்பட்ட இந்த நோய் ஹவாயில் ஆண்டு முழுவதும் இருக்கும் பறவைகளை அதிகமாகக் கொன்றுவிட்டது. அந்த பறவைகளுக்கு ஏவியன் மலேரியாவை எதிர்க்கும் சக்தி இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது. "அனாஃபிலிஸ் கொசு" (Anopheles genus) பேரினத்தின் பெண் கொசுக்களே ஒட்டுண்ணியின் முதல்நிலை (முதல்தர) ஊட்டுயிர்கள் மற்றும் பரவும் தன்மை கொண்ட நோய் பரப்பிகளாகும். ஒரு நோய்த்தொற்றுடைய மனிதனிடமிருந்து இளம் கொசுக்கள் உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் முதலில் மலேரியா ஒட்டுண்ணிகளை உறிஞ்சிக்கொள்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட "அனாஃபிலிஸ்" கொசுக்கள் "பிளாஸ்மோடியம்" வித்துயிரிகளை அதனுடைய உமிழ் நீர்ச்சுரப்பிகளின் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒரு நோய்த்தொற்றுடைய மனிதரிடமிருந்து இரத்த உணவை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கொசுவிற்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஒட்டுண்ணி புணரிச்செல்கள் உறிஞ்சப்பட்டவுடனேயே இரத்தத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண் அல்லது பெண் புணரிகளாக மேலும் வேறுபடுத்தப்பட்டு கொசுவின் குடலில் கலந்துவிடுகிறது. இது நகரண்டத்தை உற்பத்தி செய்து குடல் அகவுறையில் ஊடுருவி சென்று குடல் சுவரில் அண்டப்பந்தை உற்பத்தி செய்கிறது. அண்டப்பந்தில் பிளவு ஏற்படுவதனால் வித்துயிரிகள் வெளியாகின்றன. இந்த வித்துயிரிகள் கொசுவின் உடல் வழியாக உமிழ் நீர்சுரப்பிகளுக்கு சென்று மற்றொரு நபருக்கு (நோய் தொற்று இல்லாத மனிதனுக்கு) நோய்த்தொற்றை பரப்ப தயாராக இருக்கிறது. இந்த வகையான நோய் பரவல் முந்தைய மாற்றம் என்று கருதப்படுகிறது. கொசு, அதனுடைய அடுத்த உணவை எடுத்துக்கொள்ளும் போது உமிழ் நீருடன் வித்துயிரிகளையும் சேர்த்து உட்செலுத்துகிறது. பெண் கொசுக்கள் மட்டுமே இரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்ளும். ஆகையால் ஆண் கொசுக்கள் நோயை பரப்பாது. கொசுவின் பெண் "அனாஃபிலிஸ்" பேரினம் இரவில் தான் தன்னுடைய உணவை எடுத்துக்கொள்ளும். அவை பொதுவாக அந்தி பொழுதில் தான் உணவை தேட ஆரம்பிக்கும். அதற்கு தேவையான உணவு கிடைக்கும் வரை இரவு முழுவதும் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கும். மலேரியா ஒட்டுண்ணிகள் இரத்தம் ஏற்றலின் மூலமாகவும் பரவலாம். இந்த வகையான நோய் பரவல் மிகவும் அரிய ஒன்றாகும். மலேரியா இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு உருவாகிறது: எக்ஸோஎரித்ரோசைட்டிக் (exoerythrocytic) மற்றும் எரித்ரோசைடிக் (erythrocytic) கட்டம். எக்ஸோஎரித்ரோசைட்டிக் கட்டத்தில் ஈரலுக்குரிய அமைப்பில் அல்லது கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. எரித்ரோசைட்டிக் கட்டத்தில் எரித்ரோசைடுகள் அல்லது இரத்த சிவப்பணுக்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. நோய்த்தொற்றுடைய ஒரு கொசு உணவை எடுத்துக்கொள்வதற்காக ஒரு நபரின் தோலைக் கடிக்கும் போது கொசுவின் உமிழ் நீருடன் சேர்ந்து வித்துயிரிகளும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து கல்லீரலுக்கு செல்கின்றன. மனிதர்களுக்குள் நுழைந்த 30 நிமிடங்களிலேயே வித்துயிர்கள் ஹெபட்டோசைட்டுகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி 6 முதல் 15 நாட்களில் அறிகுறிகளற்றும் பாலிலி முறையிலும் பெருக்கமடையும். கல்லீரலுக்கு வந்த உடனேயே இந்த உயிரினங்கள் ஆயிரக்கணக்கான வளருயிரிகளாக பெருக்கமடைகின்றன. இவை பெருக்கமடைந்தவுடன் இரத்தத்தில் தப்பிச் சென்று இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கை சுழற்சியின் எரித்ரோசைட்டிக் நிலை இவ்வாறு ஆரம்பமாகிறது. நோய்த்தொற்றுடையவரின் கல்லீரல் உயிரணு செல் சவ்வின் மூலம் ஒட்டுண்ணிகள் அதனுடைய தோற்றத்தை மறைத்துக்கொண்டு கல்லீரலிலிருந்து தப்பிச் செல்கிறது. இரத்த சிவப்பணுக்களில் ஒட்டுண்ணிகள் மேலும் பெருக்கமடைந்து புதிய இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கு அதனுடைய ஊட்டுயிரிகளிலிருந்து பாலிலி முறையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகிறது. இது போன்று பலப் பெருக்கமடையும் சுழற்சிகள் நடைபெறும். இது போன்று ஒரே சமயத்தில் பல வளருயிரிகள் தப்பிச் சென்று இரத்த சிவப்பணுக்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் போது முதல் நிலை காய்ச்சல் ஏற்படுகிறது. சில "P. விவக்ஸ்" மற்றும் "P. ஓவலே" வித்துயிரிகள் எக்ஸோஎரித்ரோசைட்டிக் கட்ட வளருயிரிகளாக உடனடியாக மாறுவதில்லை. அதற்கு மாறாக இவை ஹிப்னோசோயட்டுகளை (hypnozoites) உற்பத்தி செய்து குறிப்பிட்ட மாதங்களிலிருந்து (பொதுவாக 6 முதல் 12 மாதங்கள் இருக்கலாம்) மூன்று வருடங்கள் வரையிலும் செயலற்றதாக இருக்கும். செயலற்றதாக இருந்த பிறகு அவை மறுபடியும் செயல்பட தொடங்கி வளருயிரிகளை உற்பத்தி செய்யும். மலேரியாவின் இந்த இரண்டு இனங்களின் நீண்ட நோய்க்காப்புக் காலத்திற்கும் காலத்தாமதத்துடன் நோய் மறுபடியும் ஏற்படுதலுக்கும் ஹிப்னோசோயட்டுகள் காரணமாக இருக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தனால் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராட முடியாது. ஏனெனில் கல்லீரல் மற்றும் இரத்த உயிரணுக்களில் மனிதனுள் இருக்கும் ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி அமைந்திருக்கிறது. மேலும் தடுப்பாற்றல் முனைந்து காணல் திறனிற்கும் புலப்படாத வகையில் அமைந்துள்ளது. எனினும், நோய்த்தொற்றுடைய இரத்த உயிரணுக்கள் சுழற்சியின் போது மண்ணீரலில் அழிக்கப்பட்டுவிடும். இதை தவிர்ப்பதற்கு, "P. ஃபால்ஸிபாரம்" ஒட்டுண்ணிகள் நோய்த்தொற்றுடைய இரத்த உயிரணுக்களின் மேல் பரப்பில் ஒட்டும் தன்மையுடைய புரதங்களை வெளிக்காட்டுகிறது. இதனால் சிறிய இரத்த குழல்களின் சுவர்களில் இரத்த அணுக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இதன் மூலம் பொது சுற்றோட்டத்திலும் மண்ணீரலிலும் ஒட்டுண்ணிகளை இணைத்துவிடுகிறது. மலேரியாவின் இரத்த இழப்பு சோகை சிக்கலை அதிகரிப்பதற்கு இந்த ஒட்டும் தன்மையே முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த நோய்த்தொற்றுடைய இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக இணைந்ததன் காரணத்தினால் உயர் அகத்தோலியம் சார்ந்த நுண்சிரைகள் (சுற்றோட்ட மண்டலத்தின் மிகச்சிறிய கிளைகள்) அடைபட்டுவிடலாம். இந்த குழல்களில் அடைப்பானது நஞ்சுக்கொடி சார்ந்த மற்றும் பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியா ஆகியவற்றின் அறிகுறிகளுக்குக் காரணமாக இருக்கலாம். பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியாவில் இரத்த சிவப்பணுக்களின் இணைப்பினால் மூளை இரத்தத் தடையை அதிகரிக்க செய்து ஆழ்மயக்கத்தையும் (கோமா) ஏற்படுத்தலாம். இரத்த சிவப்பணு மேல் பரப்பிலுள்ள ஒட்டும் தன்மை கொண்ட புரதங்கள் (PfEMP1 என்று அழைக்கப்படும் "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்திற்கான" எரித்ரோசைட் சவ்வு புரதம் 1) நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உட்பட்டவையாகவே இருப்பினும், அதனுடைய அதிகளவு வகைகள் இருப்பதன் காரணத்தினால் நல்ல தடுப்பாற்றல் இலக்குகளாக அவை கருதப்படுவதில்லை; ஒர் ஒற்றை ஒட்டுண்ணியில் குறைந்தது 60 வேறுபாடுகள் கொண்ட புரதங்களாவது இருக்கும் மற்றும் ஒட்டுண்ணி தொகுதிகளினுள் வரம்பற்ற வகைகளும் இருக்கின்றன. ஒரு திருடன் மாறுவேடங்களை மாற்றுவது போல் அல்லது ஓர் ஒற்றன் பல கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதுப் போல் ஒட்டுண்ணிகளும், PfEMP1 மேல் பரப்பு புரதங்களுக்கு இடையே எங்கு வேண்டுமானாலும் அதனுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் போராடி துரத்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விட இது ஒரு படி முன்பு உள்ளது. சில வளருயிரிகள் ஆண் மற்றும் பெண் புணரிச்செல்களாக மாறுகின்றன. நோய்த்தொற்றுடைய ஒரு நபரின் தோலை ஒரு கொசு கடிக்கும் போது இரத்தத்தினுள் உள்ள புணரிச்செல்களையும் சேர்த்து அந்த கொசு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஒட்டுண்ணியின் கருத்தரித்தல் மற்றும் பாலியல் மறுசேர்க்கை கொசுவின் குடலில் நடைபெறுகிறது. இதனால் கொசு, நோயின் இறுதி ஊட்டுயிர் என்று வரையறுக்கப்படுகிறது. புதிய வித்துயிரிகள் உருவாகி கொசுவின் உமிழ் நீர்சுரப்பிகள் வழியாக பயணம் செய்து சுழற்சியை முழுமை செய்கின்றன. கொசுக்கள் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கக்கூடியதாக இருக்கின்றன. குழந்தை இறந்தே பிறத்தல், குழந்தை இறக்கும் பண்பு மற்றும் குழந்தை எடை குறைவாக பிறத்தல் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு மலேரியா ஏற்படுவதனால் உண்டாகிறது. குறிப்பாக "P. ஃபால்ஸிபாரம்" நோய்த்தொற்றின் காரணத்தினால் இவை ஏற்படுகின்றன. "P. விவக்ஸ்" போன்ற மற்ற இன நோய்த்தொற்றுகளும் இதற்கு காரணமாக இருக்கின்றன. 1880 ஆம் ஆண்டில் சார்லஸ் லாவ்ரன் முதன் முதலாக இரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணிகள் இருப்பதை காட்சியாகக் காண்பித்ததிலிருந்து இரத்தத்தின் நுண்ணோக்கி பரிசோதனை மலேரியா நோயறிதலின் முக்கிய பரிசோதனையாக இருக்கிறது. காய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் (septic shock) ஆகியவை பொதுவாக ஆப்பிரிக்காவில் மலேரியாவின் தீவிரத்தன்மையாக தவறாக அறுதியிடல் செய்யப்படுகிறது. இதனால் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்ற நோய்கள் சிகிச்சையளிக்கப்படாமல் போய்விடுகிறது. மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் குருதியில் ஒட்டுண்ணி இருப்பதனால் மட்டும் மலேரியாவின் தீவிரத்தன்மையை அறுதியிடல் செய்து விட முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் இருக்கும் மற்ற நோயின் காரணமாகவும் குருதியில் ஒட்டுண்ணி இருக்கலாம். மலேரியா சார்ந்த அல்லது மலேரியா அல்லாத ஆழ்மயக்கத்தை (கோமா) வேறுபடுத்திக் காட்டுவதில் மற்ற மருத்துவ அல்லது ஆய்வுக்கூட பரிசோதனைகளை விட மலேரியா சார்ந்த விழித்திரை நோய் சிறந்ததாக (95% கூட்டு உணர்திறன் மற்றும் 90% தனிக்குறிப்புத்தன்மை) இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. அறுதியிடல் செய்வதில் இரத்த மாதிரி மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும் கூட, உமிழ் நீரும் சிறுநீரும் இரத்தத்திற்கு பதிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. இவை தோலினுள் உட்செலுத்தப்படாமல் பெறப்படும் மாதிரிகளாகும். சிறிய ஆய்வுக்கூட அறுதியிடல் பரிசோதனைகள் கூட செய்யமுடியாத நிலையில் இருக்கும் பகுதிகளில் மலேரியாவிற்கு சிகிச்சைக் கொடுப்பதற்கு தானுணர் காய்ச்சலின் வரலாறு மட்டுமே நோய்க்குறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலாவி (Malawi) நாட்டுக் குழந்தைகளில் கீம்சா-நிற (Giemsa-stained) இரத்த ஸ்மியர்கள் பயன்படுத்தி செய்த ஒரு ஆய்வில், தானுணர் காய்ச்சலின் வரலாற்றை மட்டுமே அறுதியிடலுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ முன்கணிப்புகளை (மலக்குடல் சிரைக்குரிய வெப்பநிலை, நகத்தடியின் தோல் நிறமிழப்பு மற்றும் மண்ணீரல் பிதுக்கம்) சிகிச்சைக்கான நோய்க் குறிகளாக பயன்படுத்தபட்டன. இதன் மூலம் துல்லியமான அறுதியிடல் 21 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்தது மற்றும் மலேரியாவிற்கான தேவையற்ற சிகிச்சை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. குருதிப்படலங்களின் நுண்ணோக்கி பரிசோதனை மிகவும் சிக்கனமான, விரும்பக்கூடிய மற்றும் நம்பகமான மலேரியா அறுதியிடலாகும். ஏனெனில் நான்கு பெரிய ஒட்டுண்ணி இனங்கள் ஒவ்வொன்றிற்கும், வேறுபட்ட சிறப்புப்பண்புகள் இருக்கின்றன. குருதிப்படலத்தின் இரண்டு வகைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெல்லிய படலங்கள் வழக்கமான குருதிப்படலங்களைப் போலவே இருக்கும், மேலும் இனங்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் உதவும். ஏனெனில் இந்த முறையின் மூலம் ஒட்டுண்ணிகளின் தோற்றம் தெளிவாகத் தெரிகின்றன. தடித்த படலங்கள் அதிக அளவு இரத்தத்தை நுண்ணோக்கியாளர் ஸ்கிரீன் செய்வதற்கு உதவுகிறது. மெல்லிய படலத்தை விட தடித்த படலங்கள் பதினோறு மடங்குகள் உணர்திறன் அதிகம் கொண்டதாக இருக்கின்றன. இதனால் குறைந்த அளவு நோய்த்தொற்றுகளை எடுத்தல் தடித்த படலத்தில் சுலபமாக உள்ளது. ஆனால் ஒட்டுண்ணியின் உருவம் மிகவும் அதிகமாக வேறுபடுத்தப்பட்டு காண்பிக்கப்படும். இதன் காரணத்தினால் வித்தியாசமான இனங்களிடையே உள்ள வேறுபாடுகளை கண்டறிதல் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த தடித்த மற்றும் மெல்லிய ஸ்மியர்களின் (smears) நன்மை மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டால், இறுதி அறுதியிடல் செய்யும் போது இரண்டு ஸ்மியர்களையும் பயன்படுத்துவது அவசியமாக இருக்கிறது. தடித்த படலத்திலிருந்து ஓர் அனுபவமிக்க நுண்ணோக்கியாளரால் இரத்த சிவப்பணுவில் 0.0000001 சதவீதம் வரை ஒட்டுண்ணிகளின் அளவுகள் இருந்தாலும் அதை (அல்லது குருதியில் ஒட்டுண்ணி இருப்பதை) கண்டறிய முடியும். ஆரம்பநிலை வளர்விலங்குயிரிகளின் ("வட்ட வடிவ") நான்கு இனங்களும் ஒரே மாதியாகக் காணப்படுவதனால் இனங்கள் சார்ந்த அறுதியிடல் செய்தல் சிரமமாக இருக்கலாம். ஓர் ஒற்றை வட்ட வடிவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இனங்களை அறுதியிடல் செய்துவிட முடியாது; பல வகையான வளர்விலங்குயிரிகளை அடிப்படையாகக் கொண்டே இனங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன. நுண்ணோக்கி இல்லாத பகுதிகளில் அல்லது ஆய்வுக்கூடப் பணியாளர்களுக்கு மலேரியா அறுதியிடலில் அனுபவம் இல்லாமல் இருக்கும் போது மலேரியா எதிர்செனி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பரிசோதனைகளுக்கு ஒரு துளி இரத்தமே தேவைப்படுகிறது. இம்யூனோக்ரோமாட்டோக்ராஃபிக் பரிசோதனைகள் (மலேரியா அறுதியிடல் துரிதமாக செய்யவதற்கான பரிசோதனைகள், எதிர்ச்செனியைக் கண்டுபிடிக்கும் சோதனை அல்லது "ஆழ்த்துகோல் (டிப்ஸ்டிக்ஸ்)" என்றும் அழைக்கப்படுகின்றன) உருவாக்கப்பட்டு களப்பரிசோதனைகளாகச் செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனைகளில் விரல் முனைகள் அல்லது நாளக்குருதி பயன்படுத்தப்படுகின்றன. இந்த பரிசோதனை முழுமையாக செய்யப்படுவதற்கு மொத்தம் 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படும். இதற்கு ஆய்வுக்கூடம் தேவைப்படாது. இந்த வகையான துரித அறுதியிடல் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறுமட்டத்தின் வரம்பு இரத்தத்தில் 100 ஒட்டுண்ணிகள்/µl ஆக உள்ளன. ஆனால் தடித்த படல நுண்ணோக்கியின் மூலம் 5 மட்டுமே கண்டறியப்பட்டது. துரித அறுதியிடல் செய்வதற்கான முதல் பரிசோதனைகள் P. ஃபால்ஸிபாரம் குளுட்டோமேட் டீஹைடிரோஜீனேஸுகளை எதிர்ச்செனிகளாக பயன்படுத்தி செய்யப்பட்டன. PGluDH பதிலாக P.ஃபால்ஸிபாரம் லாக்டேட் டீஹைடிரோஜீனேஸ் 33 kDa ஆக்ஸிடோரெடக்டேஸ் [EC 1.1.1.27] பயன்படுத்தப்பட்டது. கிளைகோட்டிக் தடத்தின் கடைசி நொதியாக இது உள்ளது. இது ATP உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது மற்றும் P. பால்ஸிபாரம் வெளிப்படுத்தும் அதிக அளவு நொதிகளில் ஒன்றாகும். PLDH இரத்தத்தில் நிலைத்திருக்காது. ஆனால் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு ஒட்டுண்ணிகள் வெளியாகும் அதே நேரத்தில் இதுவும் வெளியாகிவிடும். சிகிச்சைக்குப் பிறகு எதிர்ச்செனி குறைபாடு இருத்தல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டதை முன்னமே கணித்து சொல்வதற்கு pLDH பரிசோதனைப் பயன்படும். இந்த வகையில் pLDH pGluDH ஐப் போன்றே உள்ளது. pLDH சரிச்சமான நொதிகளுக்கு இடையே உள்ள எதிர்ச்செனி சார்ந்த வித்தியாசங்களினால் ஆப்டிமல்-ஐ.டி (OptiMAL-IT) பரிசோதனையின் மூலம் P. ஃபால்ஸிபாரம் மற்றும் P. விவக்ஸிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்க முடியும். 0.01% குருதியில் இருக்கும் ஒட்டுண்ணி வரை உள்ள "ஃபால்சிபாரத்தை" ஆப்டிமல்-ஐ.டி கண்டுபிடிக்கும். "ஃபால்சிபாரம்" அல்லாதவற்றை 0.1% வரை கண்டுபிடிக்கும். பாரா செக்-பி.எஃப் ("Para" check-Pf) இரத்தத்தில் ஒட்டுண்ணி இருப்பதை 0.002% அளவுக்கு கண்டுபிடிக்கும். ஆனால் "ஃபால்ஸிபாரம்" மற்றும் "ஃபால்ஸிபாரம்" அல்லாத மலேரியாவிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்காது. பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனையைப் பயன்படுத்தி ஒட்டுண்ணியின் நியூக்ளிக் (உட்கரு) அமிலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம், நுண்ணோக்கியை விட மிகவும் துல்லியமானதாகும். எனினும் இந்த பரிசோதனை செய்வதற்கு அதிகம் செலவாகும் மற்றும் இதற்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூடமும் அவசியப்படும். குறிப்பாக ஒட்டுண்ணி இரத்த குழல் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் திறனுடன் இருக்கும் போது குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் அளவு, நோய் தீவிரமடைதலுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. களத்தில் குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் குறைந்த அளவுகளை கண்டறிவதற்காக உணர்திறன் அதிகமாகக் கொண்ட தாழ்-தொழில்நுட்ப அறுதியிடல் கருவிகள் உருவாக்கப்படவேண்டும். சிறிய ஆய்வுக்கூட அறுதியிடல் பரிசோதனைகள் கூட செய்யமுடியாத நிலையில் இருக்கும் பகுதிகளில் மலேரியாவிற்கு சிகிச்சைக் கொடுப்பதற்கு தானுணர் காய்ச்சலின் வரலாறு மட்டுமே நோய்க்குறிகளாகப் பயன்படுத்தப்பட்டன. மலாவி நாட்டுக் குழந்தைகளில் கீம்சா-நிற இரத்த ஸ்மியர்கள் பயன்படுத்தி செய்த ஒரு ஆய்வில், தற்போதைய தேசிய திட்டமான தானுணர் காய்ச்சலின் வரலாற்றை மட்டுமே அறுதியிடலுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு பதிலாக மருத்துவ முன்கணிப்புகளை (மலக்குடல் சிரைக்குரிய வெப்பநிலை, நகத்தடியின் தோல் நிறமிழப்பு மற்றும் மண்ணீரல் பிதுக்கம்) சிகிச்சைக்கான நோய்க் குறிகளாக பயன்படுத்தபட்ட போது மலேரியாவிற்கான தேவையற்ற சிகிச்சை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது (உணர்திறன் 21 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்தது). சில மருத்துவ ஆய்வுக்கூடங்களில் மூலக்கூறு வழிமுறைகள் கிடைக்ககூடியதாக இருக்கின்றன. விரைவான நிகழ்நேரப் பரிசோதனைகள் (எடுத்துக்காட்டாக பாலிமரேஸ் தொடர்வினைப் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் QT-NASBA ஆய்வு) ஆண்டு முழுவதும் நோய்த் தோன்றும் பகுதிகளில் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்படுகின்றன. 0.01% குருதியில் இருக்கும் ஒட்டுண்ணி வரை உள்ள "ஃபால்சிபாரத்தை" ஆப்டிமல்-ஐ.டி கண்டுபிடிக்கும். "ஃபால்சிபாரம்" அல்லாதவற்றை 0.1% வரை கண்டுபிடிக்கும். பாரா செக்-பி.எஃப் இரத்தத்தில் ஒட்டுண்ணி இருப்பதை 0.002% வரை கண்டுபிடிக்கும். ஆனால் "ஃபால்ஸிபாரம்" மற்றும் "ஃபால்ஸிபாரம்" அல்லாத மலேரியாவிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்காது. பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனையைப் பயன்படுத்தி ஒட்டுண்ணியின் நியூக்ளிக் (உட்கரு) அமிலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம், நுண்ணோக்கியை விட மிகவும் துல்லியமானதாகும். எனினும் இந்த பரிசோதனையைச் செய்வதற்கு அதிகம் செலவாகும் மற்றும் இதற்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூடமும் அவசியப்படும். குறிப்பாக ஒட்டுண்ணி இரத்த குழல் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் திறனுடன் இருக்கும் போது குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் அளவு, நோய் தீவிரமடைதலுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. களத்தில் குருதியில் இருக்கும் ஒட்டுண்ணியின் குறைந்த அளவுகளை கண்டறிவதற்காக உணர்திறன் அதிகமாகக் கொண்ட தாழ்-தொழில்நுட்ப அறுதியிடல் கருவிகள் உருவாக்கப்படவேண்டும். நோய் பரவாமல் தடுப்பதற்கு அல்லது மலேரியா ஆண்டும் முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தும் முறைகளாவன: ப்ரோஃபிலாக்டிக் (முற்காப்பி) மருந்துகள், கொசுக்களை முற்றிலுமாக அழித்தல் மற்றும் கொசுக் கடித்தலை தடுத்தல். மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல், கொசுவின் தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல் மற்றும் மனிதர்களிடமிருந்து கொசுவிற்கும் கொசுவிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுதலின் வீதம் அதிகமாக இருத்தல் ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் பகுதியில் மலேரியாவின் நோய் தாக்கம் தொடர்ந்து இருக்கும். இவற்றில் ஏதாவது குறிப்பிட்ட அளவு குறைந்ததானால் அந்த பகுதியை விட்டு ஒட்டுண்ணி சீக்கிரமாகவோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ மறைந்துவிடும். இது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் அதிகமான இடங்களில் நிகழ்ந்தது. எனினும் முழு உலகத்திலிருந்தும் ஒட்டுண்ணிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலே ஒழிய இந்த நிலை மாறாது. ஒட்டுண்ணிகளில் இனப்பெருக்கத்திற்கு சாதகமான நிலை ஏற்படும் போது அவை மறுபடியும் நோய் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதிகமாக பயணம் செய்வதாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குடி பெயர்தலினாலும் மற்ற நாடுகளிலிருந்து மலேரியா தொற்றுநோயாக பல நாடுகளுக்கும் பரவுகிறது. இது போன்ற பரவுதலின் மூலம் நோய் தொற்றடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (அனாஃபிலிஸ் எனும் பகுதியைக் காண்க.) தற்போது மலேரியாவை தடுக்கக்கூடிய தடுப்புமருந்து எதுவுமில்லை. ஆனால் அதிகமான ஆய்வுகள் இதன் அடிப்படையில் செய்வதற்கு ஏதுவான களமாக உள்ளது. நீண்ட நாட்களாக மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட மலேரியா வருவதற்கு முன்னதாகவே தடுத்தல் செலவை குறைப்பதாக இருக்கிறது என்று பல ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால் உலகத்திலேயே மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் பலருக்கு இதற்கு தேவையான செலவை ஈடுசெய்ய முடியவில்லை. ஓர் ஆண்டிற்கு அமெரிக்க டாலர் 3 பில்லியன் நிதி இருந்தால் மலேரியாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று பொருளாதார அறிவுறையாளரான ஜெஃப்ரி சாச்ஸ் (Jeffrey Sachs) கணக்கிட்டார். புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றும் வகையில் HIV/AIDS சிகிச்சைக்காகக் கொடுக்கப்படும் பணத்தை மலேரியாவை தடுப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு செலவாகும் பணம் ஆப்பிரிக்க பொருளாதாரங்களுக்கு அதிக பலனை கொடுக்கலாம் என்று வாதிட்டனர். நிதியைப் பகிர்ந்தளிக்கும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டிருக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு இதே அளவு ஆதரவு இல்லை. 34 நாடுகளுக்கும் ஒரு ஆண்டின் நிதி ஆதரவு டாலர் 1ஐ விட குறைவாக கிடைக்கிறது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த சில ஏழை நாடுகளும் அடங்கும். மற்ற வளரும் நாடுகளைப் போன்று இல்லாமல் பிரேசில், இரிட்ரியா, இந்தியா மற்றும் வியாட்நாம் நாடுகளில் மலேரியாவின் சுமை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற ஏதுவாக இருந்த பொதுவான காரணிகளாவன: ஏற்றதாக இருந்த நாட்டின் நிலைகள், பயனுள்ள கருவிகளின் தொகுப்புகளை இலக்குகளாகப் பயன்படுத்தி செய்த தொழில்நுட்ப அணுகுமுறைகள், தரவை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுத்தல், அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் திறம்பட செயலாற்றுதலினால், சமூகங்களின் தன்னார்வ பங்கேற்பு, நிதிகளை பன்முகப்படுத்தி செயல்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், தேசிய மற்றும் துணை தேதிய அளவிலான திறம்பட்ட தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திறன், கூட்டாளர் ஏஜென்சிகளிடமிருந்து தொழில்நுட்ப ரீதியான மற்றும் திட்டங்கள் தொடர்பான ஆதரவு மற்றும் போதுமான மற்றும் நெகிழ்த்தன்மை கொண்ட நிதி ஆதரவு. கொசுக்களை அகற்றுதலின் மூலம் மலேரியாவை முற்றிலுமாக அழிக்கும் முயற்சிகள் சில பகுதிகளில் வெற்றியை தந்துள்ளது. அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் மலேரியா பொதுவாகக் காணப்பட்டது. ஆனால் நோய்ப் பரப்பும் உயிரிகளை கட்டுப்படுத்துதல் திட்டங்களுடன் நோய்த்தொற்றுடைய மனிதர்களைக் கண்காணித்து சிகிச்சை அளித்தலின் மூலம் அப்பகுதிகளிலிருந்து மலேரியா அகற்றப்பட்டுவிட்டது. சில பகுதிகளில், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் மற்றும் சிறந்த புறச்சுகாதாரம் ஆகியவையே போதுமானதாக இருந்தது. இது போன்ற முறைகளின் மூலம் அமெரிக்க ஒன்றியத்தின் வடக்கு பகுதிகளில் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேரியா அகற்றப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் பூச்சிக்கொல்லி DDTஐ பயன்படுத்தி தெற்கு பகுதியில் இந்நோய் அகற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்தில் 1,059 மலேரியா நோயாளிகள் இருந்ததாக அறிக்கை வெளியானது. அதில் 8 பேர் இந்த நோயினால் இறந்ததும் அடங்கும். ஆனால் அதில் 5 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டது. DDTக்கு முன்னதாக பல வெப்ப மண்டலப் பகுதிகளில் சில முறைகளைப் பயன்படுத்தி மலேரியா வெற்றிகரமாக முற்றிலும் அழிக்கப்பட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டது. அந்த முறைகளாவன: கொசுக்களின் இனப்பெருக்க நிலங்கள் அல்லது புழுப்பருவ (லார்வா) நிலைகளில் நீர்வாழ்வன இருப்பிடங்களை அகற்றுதல் அல்லது விஷமாக்குதல், எடுத்துக்காட்டாக தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எண்ணெய் போடுதல் அல்லது நிரப்புதல். அரை நூற்றாண்டிற்கு மேலாக ஆப்பிரிக்காவில் இந்த வழிமுறைகள் சிறிய பயனை தந்து வருகிறது. 1950கள் மற்றும் 1960களில் மலேரியாவை உலகளவில் முற்றிலுமாக அழிப்பதற்கு, மிகப்பெரிய பொது சுகாதார முயற்சியாக, மலேரியா அதிகம் பரவுகின்ற பகுதிகளில் இருக்கும் கொசுக்கள் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. எனினும், வளரும் நாடுகளின் பல பகுதிகளில் மலேரியாவை முற்றிலுமாக அழிப்பதற்கு எடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் தோல்வியையே தந்தது. இந்த பிரச்சனை பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. கொசுவைக் கட்டுப்படுத்தகூடிய முறையாக தொற்று நீக்கப்பட்ட பூச்சி முறை பெருகி வருகிறது. மரபியல் அல்லது மரபு ரீதியாக மாற்றம் செய்தலின் மூலம் மலேரியா நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட கொசுக்களை உருவாக்கலாம் என்று கருத்துரைக்கப்பட்டது. இம்பீரியல் காலேஜ் லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உலகத்திலேயே முதல் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மலேரியா கொசுவை உருவாக்கினார்கள். 2002 ஆம் ஆண்டில் ஓஹியோவில் உள்ள கேஸ் வெஸ்டன் ரிசார்வ் யூனிவர்சிடி குழுவினர்கள் முதல் பிளாஸ்மோடியம்-நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட இனத்தை அறிவித்தார்கள். தற்போது இருக்கும் கொசுக்களுக்கு பதிலாக புதிதாக மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் வெற்றிகரமாக இடம் மாற்றம் செய்யப்படுகின்றன. இது குறிப்பிட்ட மரபணுவின் மெண்டல் கண்ட தலைமுறையுரிமை அல்லாதவற்றை அனுமதிக்கும் வரிசைமுறையை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய தனிமங்கள் போன்ற வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. எனினும், இந்த முறையில் பல இடர்பாடுகள் இருக்கின்றன மற்றும் இந்த முறை வெற்றியடைய சில காலமாகலாம். பறக்கும் கொசுக்களை அழிப்பதற்கு லேசர்களைப் பயன்படுத்துதல் போன்ற யோசனை நோய்ப்பரப்பும் உயிரிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளில் புதிய முறைகளாக உள்ளன. மலேரியாவின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் மலேரியாவை தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம். பொதுவாக நோய்த்தாக்கம் ஏற்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்தின் மருந்தளவை விட குறைவான அளவு நோயைத் தடுப்பதற்காக எடுத்துக்கொள்ளலாம். இவற்றை வாரம் அல்லது தினசரியாகவும் எடுத்துக்கொள்ளலாம். மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் முழு நேரமும் வசிப்பவர்கள் இந்த ப்ரோஃபிலாக்டிக் மருந்துகளை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். மலேரியா இருக்கும் பகுதிகளுக்கு பயணிகளாகவும் குறுகிய-கால விருந்தாளியாகவும் வருபவர்களுக்கு மட்டுமே வழக்கமாக இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் வரம்புப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகளை வாங்கும் விலை, நீண்ட நாட்கள் மருந்துகளை பயன்படுத்துவதனால் ஏற்படும் எதிர்மறையான பக்க விளைவுகள் மற்றும் வசதியான நாடுகளுக்கு வெளியில் சில ஆற்றல் வாய்ந்த மலேரியா எதிர்ப்பு மருந்துகளை வாங்குதலில் உள்ள சிரமம் ஆகியவை இதற்கு காரணமாக இருக்கின்றன. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேரியாவைத் தடுக்கும் ப்ரோஃபிலாக்டிக் மருந்தாக குயினைன் (Quinine) பயன்படுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் குயினக்ரைன் (quinacrine), குளோரோகுயின் (chloroquine) மற்றும் ப்ரைமகுயின் (primaquine) போன்ற ஆற்றல் வாய்ந்த மருந்துகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் குயினைனை மட்டுமே நம்பியிருந்த நிலை சற்று குறைந்தது. குளோரோகுயினை எதிர்க்கும் சக்திக் கொண்ட "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம்", கடுமையான மற்றும் பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு குயினைன் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது நோய் தடுப்பு மருந்தாக பொதுவாகப் பயன்படுத்துப்படுவதில்லை. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாமுவேல் ஹனெமான் (Samuel Hahnemann) என்பவர் குயினைனை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்வதனால் மலேரியாவைப் போன்றே (ஒத்த) நோய்க்குறி நிலை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். ஒப்புமை விதிகள் மற்றும் ஓமியோபதி ஆகியவற்றை அவர் உருவாக்குவதற்கு இது வழிவகுத்தது. நோயைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நவீன கால மருந்துகளாவன: மெஃபெலோகுயின் (லாரியம் ), டாக்ஸிசைக்ளின் (பொதுவாக கிடைக்கக்கூடிய மருந்துகள்), மற்றும் ஆடோவெகுவான் மற்றும் புரோகுவானில் ஹைட்ரோகுளோரைடு (மலரோன் ) ஆகியவற்றின் சேர்க்கை. மலேரியா பகுதியில் உள்ள ஒட்டுண்ணிகளுக்கு இருக்கும் எதிர்க்கும் சக்தியை கண்டறிதல், மருந்தின் பக்கவிளைவுகள் மற்றும் மற்ற பயன்களை கருத்தில் கொண்டு எந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று தேர்வு செய்யவேண்டும். மருந்துகளை எடுத்துக்கொண்ட உடனேயே ப்ரோஃபிலாக்டிக் மருந்துகள் பயன் தந்துவிடாது. அதனால் மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளுக்கு தற்காலிகமாக வருபவர்கள் வழக்கமாக அந்த பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட வேண்டும் மற்றும் அந்தப் பகுதியை விட்டு சென்ற பிறகும் தொடர்ந்து நான்கு வாரங்கள் மருந்துகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். (ஆனால் ஆடோவெகுவான் புரோகுவானில் மருந்து மட்டும், அந்த பகுதிக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அப்பகுதியை விட்டு சென்ற பிறகும் 7 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்). மலேரிய நோய் தொற்றுடைய கொசுக்கள் இருக்கும் இடத்தில் ப்ரோஃபிலாக்டிக் மருந்துகளை பயன்படுத்துவதனால் மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு இது உதவி செய்கிறது. இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங் (IRS) என்பது மலேரியாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகளின் உட்புற சுவர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதாகும். உணவு எடுத்துக்கொண்ட பிறகு பல கொசு இனங்கள் இரத்த உணவு செரிமானத்திற்காக அருகில் உள்ள தளங்களின் மேல் அமரும். இதனால் இருப்பிடங்களின் சுவர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படிருந்தால் இந்த கொசுக்கள் மற்றொருவரைக் கடித்து மலேரியா ஒட்டுண்ணியைப் பரப்புவதற்கு முன்னமே இறந்துவிடும். IRSக்காக முதன் முதலாக வராலாற்று ரீதியில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சிக்கொல்லியாக DDT பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கு பிறகு வேளாண்மையிலும் பயன்படுத்தப்பட்டது. நோயைக் கட்டுபடுத்துவதற்கு பதிலாக பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை அதிகமாகி DDT பயன்பாட்டை விட மேலோங்கிவிட்டது. பெரிய அளவில் வேளாண்மை ரீதியாக பயன்படுத்துவதனால் பல பகுதிகளில் எதிர்ப்பு சக்திக் கொண்ட கொசுக்களின் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு இது வழிவகுத்தது. அனாஃபிலிஸ் கொசுக்களுக்கு இருக்கும் DDT எதிர்ப்பு சக்தியை பாக்ட்டீரியாவிற்கு இருக்கும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி எதிர்ப்பு சக்தியுடன் ஒப்புமை செய்யப்படலாம். பாக்ட்டீரியா எதிர்ப்பு சோப்புகள் மற்றும் நோய்க்கிருமி கட்டுப்படுத்திகள் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தனால் பாக்ட்டீரியாவிற்கு நோய்க்கிருமி கட்டுப்படுத்தி எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். அதே போல பயிர்களுக்கு அதிகமாக DDTஐ தெளிப்பதனால் அனாஃபிலிஸ் கொசுக்களுக்கு DDT எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். 1960களின் போது, DDTஐ அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதனால் உண்டாகும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. இதனால் 1970களில் பல நாடுகளில் வேளாண்மை தொழிலில் DDTஐ பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. சில காலங்களுக்கு வேளாண்மை தொழிலில் DDTயின் பயன்பாடு குறைக்கப்பட்டது அல்லது தடைசெய்யப்பட்டிருந்தது. ஒருவேளை இதன் காரணத்தினால் நோயைக் கட்டுப்படுத்தும் முறையில் DDT மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இப்போதும் இருக்கலாம். மலேரியாவை கட்டுப்படுத்த DDTஐ பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றாலும் IRSற்கு மற்ற பல பூச்சிக்கொல்லிகள் ஏற்றதாக இருந்தது. ஒரு காலத்தில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் முறையில் DDT மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்த வெப்ப மண்டல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இறப்பு நேரிடுவதற்கு DDTஐ தடை செய்ததே காரணமாக இருக்கிறது என்று சில வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். மேலும், DDTஐ பொது சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேளாண்மையில் அதிக அளவு தொழில் ரீதியாக பயன்படுத்தப்பட்டது. இது பெரும்பாலான பிரச்சனைக்கு தொடர்புடையதாக இருந்தது. தற்போது 12 வெவ்வேறான பூச்சிக்கொல்லிகளை IRS முறைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்துகிறது. DDT எதிர்ப்பு சக்தியுள்ள கொசுக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் மலேரியாவை எதிர்த்து போராடுவதற்கும் அந்த கொசுக்களின் எதிர்ப்பு சக்தி பரிணாம வளர்ச்சியைக் குறைப்பதற்கும் DDT மற்றும் பல பூச்சிக்கொல்லி மருந்துகள் (பைரெத்ராய்ட்ஸ் பெர்மித்திரின் மற்றும் டெல்டாமித்ரின்) பயன்படுத்தப்படுவதற்கு அறுவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியான கரிம மாசுப்படுத்திகளின் (POPs) ஸ்டாகோம் மரபொழுங்கின் அடிப்படையில் பொது சுகாதாரத்திற்காக DDTஐ சிறிய அளவு பயன்படுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இது DDTஐ வேளாண்மை தொழிலுக்கு பயன்படுத்தப்படுவதற்கு தடைவிதிக்கிறது. எனினும் அதனுடைய மரபு எச்சத்தின் காரணத்தினால் பல வளந்த நாடுகளில் DDTஐ சிறிய அளவு பயன்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதில்லை. எல்லா வகையான இண்டோர் ரெசிட்யூவல் ஸ்ப்ரேயிங்கினால் கொசுக்களின் பரிணாம வளர்ச்சியின் வாயிலாக பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி கொசுவிற்கு ஏற்பட்டுவிடுகிறது. இது ஒரு பிரச்சனையாக கருதப்படுகிறது. கொசுவின் நடத்தை மற்றும் நோய்ப் பரப்பியைக் கட்டுபடுத்துதல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு வெளியானது. அந்த ஆய்வில் IRS-னால் பாதிக்கப்பட்ட கொசு இனங்கள் எண்டோபீலிக் இனங்களாகும் (உள்ளரங்குகளில் வாழும் தன்மைக் கொண்ட இனங்கள்). தெளித்தலினால் ஏற்படும் எரிச்சலின் காரணத்தினால் அதனுடைய பரிணாம வளர்ச்சிக் கொண்ட சந்ததிகள் எக்ஸோபிலிக் இனங்களாக (வெளியே வாழும் இனங்கள்) மாற்றம் அடைகின்றன. இதன் காரணத்தினால் கொசுக்கள் IRSனால் பாதிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டாலும் குறைந்த அளவே பாதிக்கப்படுகின்றன. இதனால் தற்காப்பு அமைப்பான IRS பயன் மிகுந்ததாக இல்லை. கொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கிறது. இதனால் இது மலேரியா நோய்த்தொற்றையும் பரவுதலையும் அதிகமாகக் குறைக்கிறது. கொசு வலைகள் ஒரு சரியான வேலியாக இருப்பதில்லை. கொசுவலைகளின் வழியாக உள்ளே வருவதற்கு வேறு ஏதாவது வழியை தேடுவதற்கு முன்னதாக கொசுக்களைக் கொல்லும் வகையில் பூச்சிக்கொல்லியும் அந்த வலையுடன் சேர்ந்து வைக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளுடன் சேர்த்து செய்யப்படும் வலைகள் (ITN) பூச்சிக்கொல்லிகள் இல்லாத வலைகளை விட இருமடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. வலைகளே இல்லாததுடன் ஒப்பிடும் போது 70% பாதுகாப்பை இந்த வலைகள் தருகின்றன. ஐ.டி.என் மலேரியா நோயிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் இருக்கும் நகர்ப்புற குழந்தைகளில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்த ITNனினால் பாதுகாக்கப்படுகின்றனர். "அனாஃபிலிஸ்" கொசுக்கள் இரவில் தான் உணவை எடுத்துக்கொள்ளும் என்பதனால் படுக்கைக்கு மேலே பெரிய "படுக்கை வலையை" தொங்கவிடவேண்டும். அந்த வலை படுக்கை முழுவதையும் முற்றிலுமாக மூடியிருக்கும் வகையில் அமைந்திருக்கவேண்டும். பெர்மித்திரின் (permethrin) அல்லது டெல்டாமித்ரின் (deltamethrin) போன்ற பூச்சிக்கொல்லிகளை கொசு வலைகளில் நிரப்பி மற்றவர்களுக்கு வழங்கப்படுவதனால் மலேரியாவை தடுக்கும் முறையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மலேரியாவை தடுக்கும் வழிகளில் இது மிகவும் செலவு குறைவான முறைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வலைகள் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் மற்ற இடங்களில் சுமார் 2.50 டாலர் முதல் 3.50 டாலர் (2–3 யூரோக்கள்) வரை கிடைக்கப்பெறுகின்றன. மலேரியாவை தடுக்கும் முறையில் மிகவும் செலவுக் குறைவான முறையாக ITNகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இது WHOவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில் (MDGகள்) ஒரு அங்கமாக உள்ளது. இந்த வலைகள் மூலம் அதிக பயன் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை அந்த வலைகள் பூச்சிக்கொல்லிகளினால் நிறப்பப்பட வேண்டும். இந்த செயல்பாட்டினால் கிராமப்புற பகுதிகளில் தேவையான போது வழங்குவதில் குறிப்பிடத்தக்க அளவு சிக்கல் ஏற்படுகிறது. ஆலிசெட் (Olyset) அல்லது டாவாப்ளஸ் (DawaPlus) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் நீண்ட நாட்கள் வரும் பூச்சிக்கொல்லி போடப்பட்ட கொசு வலைகளை (LLINகள்) உற்பத்தி செய்தது. இந்த வலையை 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். இதனுடைய விலை சுமார் அமெரிக்க டாலர் 5.50 ஆக இருக்கிறது. ITNகள் வலைக்கு உள்ளே தூங்குபவர்களை பாதுகாக்கிறது. அதே சமயத்தில் வலையை தொடும் கொசுக்களையும் கொல்கிறது. இந்த முறையின் மூலம் மற்றவர்களுக்கும் சில பாதுகாப்புகளை வழங்குகிறது. குறிப்பாக வலை இருக்கும் அதே அறையில் ஆனால் வலைக்கு வெளியே தூங்குபவர்களுக்கும் இது சிறிது பாதுகாப்பை தருகிறது. மலேரியா தடுத்தல், சமூக கல்வி மற்றும் மலேரியாவினால் ஏற்படும் ஆபத்துகளை குறித்து விழிப்புணர்வு அளித்தல் ஆகியவற்றுடன் கொசு வலைகளை வழங்கும் பிரச்சாரமும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த கொசு வலைகளை வழங்கும் போது அதை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு அந்த கொசு வலைகளைப் பயன்படுத்தும் முறைகளும் தெரிந்திருக்கவேண்டும். "ஹாங்க் அப்" பிரச்சாரங்கள் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் ரெட் க்ரெசெண்ட் இயக்கத்தின் தன்னார்வ குழுவினர்களினால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தை போன்றதாகும். இந்த தன்னார்வ குழுவினர்கள் நடத்தும் பிரச்சாரத்தில், பிரச்சாரம் முடிந்தவுடன் அல்லது மழைக்காலத்திற்கு முன்னதாக வலையை பெற்ற மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வலையை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். மலேரியாவின் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பவர்கள் குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொசு வலைக்கு உள்ளே தூங்குகிறார்களா என்பதை கண்காணிக்கவேண்டும். சியரா லீஒனில் உள்ள CDCயில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வலைகளை பெற்ற மக்கள் வாழும் பகுதியில் ஒரு தன்னார்வளர் வலையின் பயன்பாட்டை ஊக்குவித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்தும் வந்தார். அந்த ஊக்கத்தின் மூலம் வலைகளை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது ஆய்வில் காண்பிக்கப்பட்டது. டோகோவில் செய்யப்பட்ட ஆய்விலும் இதேப் போன்ற முன்னேற்றங்கள் காண்பிக்கப்பட்டன. மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிடப்படும் பணம் மக்களின் வருமானத்தை விட அதிகமாக இருந்தது. உடல்நல குறைவின் காரணத்தினால் சம்பளம் இல்லாத நிலை ஏற்பட்டது. வளரும் நாடுகளில் குறிப்பாக நோயின் ஆபத்து அதிகமாக இருக்கும் மக்களினால் கொசு வலைகளை வாங்கமுடியவில்லை (கொசு வலைகளை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை). ஆப்பிரிக்காவில் 20 பேர்களில் ஒருவரிடம் மட்டுமே படுக்கைவலை இருக்கும். ஐரோப்பாவிலிருந்து இலவச முன்னேற்ற உதவியாக ஆப்பிரிக்காவிற்கு வலைகள் அனுப்பப்பட்டாலும் கூட, அவை சீக்கிரமே விலை அதிகமான வியாபார சரக்குகளாகி விடுகின்றன. தானமாகக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வலைகளை இணைத்து, அவற்றை மீன்பிடித்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சிறிய மீன்களைக் கூடப் பிடித்து ஆற்றின் மொத்த பகுதியையும் முழுவதுமாக மூடிவிடலாம். குழந்தைகளுக்காக நடத்தப்படும் தட்டம்மை பிரச்சாரத்தைப் போன்றே சான்றுச்சீட்டு மானியங்களைப் பயன்படுத்தி தடுப்புமருந்து பிரச்சாரத்தின் மூலம் வலைகள் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. பெர்மித்திரினை டாப்-ஷூட்டிகளிலும் சடார்களிலும் (தலையை மூடும் துணி) போடுவதனால் ஏற்படும் பயனும் பூச்சிக்கொல்லி மருந்திடப்பட்ட வலைகளினால் கிடைக்கும் பயனும் ஒரேமாதிரியாக தான் உள்ளது. ஆனால் இந்த முறையின் மூலம் செலவு மிகவும் குறைகிறது என்று பாகிஸ்தானில் உள்ள ஆஃப்கான் அகதிகள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூஞ்சைக்காளான் "பியூவீரியா பாசியனாவின்" வித்துகளை சுவர்களிலும் படுக்கை வலைகளிலும் தெளிப்பதன் மூலம் கொசுக்கள் அழிக்கப்படுகின்றன. இது கொசுவை கட்டுபடுத்துவதன் மற்றொரு வழியாகும். சில கொசுக்கள் வேதிப்பொருட்கள் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் சக்தி இல்லை. கொசுக்கள் புகாத மருத்துவமனை படுக்கைகள் மற்றும்/அல்லது வீட்டு (புறநோயர்) படுக்கைகளைப் பயன்படுத்துவதனால் நோயின் பாதிப்பும் தொற்றும் தன்மையும் குறைந்து இயல்புத்தேர்விற்கு சாதகமாக இருக்கிறது. ஏனெனில் நோய்த்தொற்றுடைய ஒருவர் நடமாடாத (படுத்தப்படுக்கையிலேயே இருக்கும் நோயாளியாக இல்லாதவர்கள்) வரைக்கும் நோய்த்தொற்றை மற்றவர்களுக்கு பரப்பமாட்டார். மலேரியாவின் நோய்த்தொற்று திரும்ப திரும்ப ஏற்படுவதனால் மட்டுமே தடுப்பாற்றல் (அல்லது மிகவும் துல்லியமாக, பொறுத்துக்கொள்ளுதல் என்று சொல்லலாம்) இயற்கையாக உருவாகும். மலேரியாவிற்கான தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுமையாக பயன் தரும் தடுப்புமருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை. முதன் முதலாக 1967 ஆம் ஆண்டு மலேரியா தடுப்புமருந்தின் திறன்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வுகள் செய்துக் காண்பிக்கப்பட்டன. அந்த ஆய்வில் கதிரியக்க-வலுக்குறைக்கப்பட்ட வித்துயிரிகளை உயிரோடிருக்கும் எலிகளுக்கு தடுப்புமருந்தாக கொடுக்கப்பட்டது. இந்த வித்துயிரிகள் எலிகளுக்குக் ஊசியின் மூலம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 60% எலிகளுக்கு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது. 1970களிலிருந்து இதேப் போன்று மனிதர்களுக்கும் வழங்கும் வகையில் தடுப்புமருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. நோய்த்தொற்றுடைய கதிரியக்கம் செய்யப்படாத கொசுக்கள் 1,000 முறைகள் கடித்ததானால் "P. பால்ஸிபாரம்" நோய்த்தொற்றிலிருந்து ஒருவர் பாதுகாக்கப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. நோயினால் தாக்கப்படும் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த தடுப்புமருந்து வழங்கும் முறை நடைமுறைக்கு உகந்ததாக இல்லை என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தின்" ஜீனோமை முதல் முதலில் வரிசைப்படுத்திய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர். ஸ்டீஃபென் ஹாஃப்மன் என்பவர் சமீபத்தில் செய்த ஆராய்ச்சி இந்த ஆராய்ச்சிக்கு சவாலாக இருந்தது. மொத்தமாக சேமித்து வைப்பதற்கும் மனிதர்களுக்கு தடுப்பூசியாக வழங்கப்படுவதற்கும் 1000 கதிரியக்கம் செய்யப்படாத கொசுக்களுக்கு ஒப்பான ஒட்டுண்ணிகளை தயார் செய்து தனித்து வைக்கும் லாஜிஸ்டிகள் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அவர் தற்போது செய்யும் ஆராய்ச்சி உள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஆரம்ப கால மருத்துவ ஆய்வுகளை தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு சமீபத்தில் பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்தனால் பல-மில்லியன் டாலர்கள் உதவித்தொகையாகக் கொடுக்கப்பட்டது. சீட்டல் பையோமெடிகல் ரிசார்ச் இன்ஸ்டிட்யூட்டிற்கு (SBRI) மலேரியா தடுப்புமருந்து தொடக்க நடவடிக்கைகள் மூலம் நிதி உதவி கொடுக்கப்படுகிறது. ஆய்வில் கலந்துக்கொள்ள முன்வரும் தன்னார்வளர்களுக்கு இந்த "[2009] மருத்துவ சோதனை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அனுபவமாக இருக்காது என்று SBRI உறுதிப்படுத்துகிறது. பல தன்னார்வளர்களுக்கு (சீட்டலில்) உண்மையாகவே மலேரியா நோய்த்தொற்று ஏற்படும். ஆனால் குளோனிங் முறையில் செய்யப்பட்ட நோய்க்கிருமிகள் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதால் அந்த நோய்த்தொற்றை சீக்கிரமே குணப்படுத்திவிடமுடியும். நோய்த்தொற்று திரும்ப திரும்பவும் ஏற்படாது." "சில பங்கேற்பாளர்களுக்கு ஆய்வு மருந்துகள் அல்லது தடுப்புமருந்துகள் கிடைக்கும். மற்ற பங்கேற்பாளர்களுக்கு பிளாசிபோ (மருந்துப்போலி) மருந்தாகக் கிடைக்கும்." அதற்கு மாறாக கதிரியக்கம் செய்யப்படாத வித்துயிரிகளைக் கொண்டுக் நோய்த்தடுப்பாற்றல் கொடுக்கப்படுகிறது. இந்த நோய்த்தடுப்பாற்றல் கொடுக்கப்பட்டப் பிறகு தடுப்பாற்றல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் செயல்முறைகளை புரிந்துக்கொள்ளவும் அதை முயற்சி செய்யவும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 1967 ஆம் ஆண்டில் எலிகளுக்கு தடுப்புமருந்து வழங்க செய்யப்பட்ட ஆய்விற்கு பிறகு ஊசிமூலம் செலுத்தப்பட்ட வித்துயிரிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டுகொண்டு ஒட்டுண்ணிகளுக்கு எதிராக பிறபொருளெதிரிகளை உருவாக்குகிறது என்ற கொள்கை விளக்கப்பட்டது. வித்துயிரிகளை மூடியிருக்கும் சர்கம்ஸ்பொரொசோயட் புரதத்திற்கு (CSP) எதிராக பிறபொருள் எதிர்ப்புகளை, நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்குகிறது என்பது தீர்மானிக்கப்பட்டது. மேலும், CSPக்கு எதிராக செயல்படும் பிறப்பொருள் எதிர்ப்புகள் ஹெபட்டோசைட்களுக்கு வித்துயிரிகள் போகாமல் தடுக்கிறது. மலேரியா வித்துயிரிகளுக்கு எதிராக தடுப்புமருந்து உருவாக்குவதற்கு மிகவும் ஏற்ற புரதமாக CSP தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வரலாற்று ரீதியான காரணங்களினால் CSPஐ அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தடுப்புமருந்துகள் மற்ற எல்லா மலேரியா தடுப்புமருந்துகளையும் விட அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது, பல வகையான தடுப்புமருந்துகள் ஆய்விற்காக உள்ளன. ப்ரீ-எரித்ரோசைட்டிக் தடுப்புமருந்துகள் (ஒட்டுண்ணிகள் இரத்தத்திற்கு வருவதற்கு முன்னரே அதை அழிக்கும் தடுப்புமருந்துகள்), குறிப்பாக CSPஐ அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தடுப்புமருந்துகளானது ஆராய்ச்சி குழுக்கள் பலவற்றிற்கு மலேரியா தடுப்புமருந்தாக வழங்கப்படுகிறது. ஆய்விற்காக இருக்கும் மற்ற தடுப்புமருந்துகளாவன: நோய்த்தொற்றின் இரத்த நிலைகளுக்கு தடுப்பாற்றைலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்பவைகள்; இரத்த நுண்சிரைகள் மற்றும் நஞ்சுக்கொடியில் ஒட்டுண்ணிகள் ஒட்டுக்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் மிகவும் கடுமையான மலேரியாவின் நோய்குறியியல்களை தவிர்ப்பதற்கு முயற்சி செய்பவைகள்; மற்றும் பரவுதலை-தடைச்செய்யும் தடுப்புமருந்துகளின் மூலம் நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து கொசு இரத்த உணவை எடுத்துக்கொண்ட உடனேயே கொசுவினுள் ஒட்டுண்ணிகள் உருவாவதை நிறுத்துதல். "P. ஃபால்ஸிபாரம்" ஜீனோமை வரிசைப்படுத்துவதன் மூலம் பல புதிய மருந்துகள் அல்லது தடுப்புமருந்துகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு மானுவேல் எல்கின் பாடரோயோ (Manuel Elkin Patarroyo) என்பவரால் உருவாக்கப்பட்ட SPf66 என்ற தடுப்புமருந்து முதன் முதலாக உருவாக்கப்பட்ட தடுப்புமருந்தாகும். இது கள சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வித்துயிரி (CS திரும்ப செய்தல் முறையின் மூலம் பெறப்படும் வித்துயிரி) மற்றும் வளருயிரி ஒட்டுண்ணிகளிலிருந்து வரும் எதிர்ச்செனிகளின் சேர்க்கையை இது வழங்குகிறது. ஃபேஸ் I சோதனைகளின் போது 75% செயற்திறன் வீதம் விளக்கிக் காண்பிக்கப்பட்டது மற்றும் ஆய்வில் பங்குக்கொண்டவர்களால் இந்த தடுப்புமருந்தை நன்றாக பொறுத்துக்கொள்ள முடிந்தது மற்றும் எதிர்ப்பாற்றலை ஊக்குவிப்பதாகவும் இருந்தது. ஃபேஸ் IIb மற்றும் III சோதனைகள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை மற்றும் அதனுடைய செய்ல்திறன் 38.8% மற்றும் 60.2% க்கு இடைப்பட்டு இருந்தது. ஒரு வருடம் பின்தொடர்தலுக்கு பிறகு செயற்திறன் 31 சதவீதமாக இருந்தது என்று 1993 ஆம் ஆண்டு டான்சானியாவில் செய்த ஒரு ஆய்வில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. எனினும், மிகவும் சமீபத்தில் (முரணாக இருப்பினும்) காம்பியாவில் செய்யப்பட்ட ஆய்வில் எந்த பயனும் காணப்படவில்லை. நீண்ட கால சோதனைகள் மற்றும் பல ஆய்வுகள் செய்தப் போதிலும் SPf66 தடுப்புமருந்து நோய்த்தடுப்பாற்றலை எப்படி அளித்தது என்பது இன்னும் அறியப்படவில்லை; அதனால் இதை மலேரியாவின் உண்மையான தீர்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. SPf66 தடுப்புமருந்திற்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட மருந்து CSP தடுப்புமருந்தாகும். இந்த தடுப்புமருந்து ஆரம்பத்திலேயே சோதனைகளுக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இருந்தது. சர்கம்ஸ்பொரொசோயட் (circumsporoziote) புரதங்களின் அடிப்படையிலும் இது உள்ளது. ஆனால் கூடுதலாக சுத்தம் செய்யப்பட்ட "சூடோமோனஸ் எரூஜினோசா" நச்சுடன் (A9) இனக்கலப்பு உயிர் (Asn-Ala-Pro15Asn-Val-Asp-Pro)2-Leu-Arg(R32LR) புரதம் சக இணைப்புடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஆரம்ப நிலைகளில் போடப்பட்ட நோய்த்தடுப்பூசியில் பாதுகாப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் முற்றிலும் குறைவுபட்டு இருந்தது. கென்யாவில் நடத்தப்பட்ட ஆய்வில் குருதியில் ஒட்டுண்ணி இருக்கும் நோய் நிகழ்வு 82 சதவீதமாக இருந்தது. ஆனால் கண்ட்ரோல் குழுவில் 89 சதவீதம் மட்டுமே நோய் நிகழ்வு இருந்தது. நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு T-லிம்ஃபோசைட்டு பதில் வினை அதிகமாக வேண்டும் என்பதற்காக தடுப்புமருந்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வும் கவனிக்கப்படவில்லை. பாட்டரோயோ தடுப்புமருந்தின் செயற்திறன் சில அமெரிக்க அறிவியல் அறிஞர்களுடன் சர்ச்சையை ஏற்படுத்தி த லேன்சட்டில் (1997), "இந்த தடுப்புமருந்து பயன் தருவதாக இல்லை அதனால் இந்த ஆய்வை கைவிட்டு விடவேண்டும்" என்று முடிவு செய்தனர். அவர் வளரும் நாட்டிலிருந்து வந்ததன் காரணத்தினால் கொலம்பியர்கள் அவர்களை "ஆணவக்காரர்கள்" என்று குற்றம் சாட்டினார்கள். RTS, S/AS02A தடுப்புமருந்தானது தடுப்புமருந்து சோதனைகளில் மேற்படி உள்ள தடுப்புமருந்தாகும். PATH மலேரியா வாக்ஸின் இனிஷுயேட்டிவ், (கேட்ஸ் நிறுவனத்தின் அச்சாரம்), மருந்து நிறுவனம், கிளக்சோஸ்மித்கிளைன் மற்றும் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிசார்ச் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கூட்டாண்மையின் மூலம் இந்த மருந்து உருவாக்கப்பட்டது. அந்த தடுப்புமருந்தில் CSPயின் ஒரு குறிப்பிட்ட அளவு ஹெபட்டைட்டஸ் B வைரசின்எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் "S எதிர்ச்செனியுடன்" இணைக்கப்பட்டது; இந்த இனக்கலப்பு உயிர்புரதம் ஆற்றல் மிக்க AS02A துணை மருந்துப்பொருள் ஊசியின் மூலம் செலுத்தப்படும் போதே செலுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் RTS,S/AS02Aன் ஆய்வாளர்கள் ஃபேஸ் IIb சோதனையின் முடிவை அறிவித்தனர். அந்த முடிவில் தடுப்புமருந்து நோய்த்தொற்றின் ஆபத்தை தோராயமாக 30 சதவீதமாக குறைத்தது என்றும் மேலும் நோய்த்தொற்றின் வீரியத்தன்மையை 50 சதவீதமாக குறைத்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. 2,000 மோசாம்பிக்க குழந்தைகளைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது மழலைப் பருவதிற்கு முன்னரே குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தை வழங்குவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் செயற்திறனை மையமாகக் கொண்டு தற்போது பல RTS,S/AS02A தடுப்புமருந்து பரிசோதனைகள் செய்யப்படுகின்றன: 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேஸ் I/IIb சோதனையின் முடிவை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். அந்த ஆய்வு 10 மற்றும் 18 மாதங்களுக்கு இடையே உள்ள 214 மோசாம்பிக்க (Mozambican)குழந்தைகளை வைத்து செய்யப்பட்டது. அந்த குழந்தைகளுக்கு தடுப்புமருந்தின் மூன்று முழு மருந்தளவும் கொடுக்கப்பட்டதன் விளைவாக பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் 62 சதவீதம் நோய்த்தொற்றை குறைத்தது. ஆனால் ஊசி போடும் போது மட்டும் சிறிது வலி இருந்தது. இந்த தடுப்புமருந்தில் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்யப்பட இருப்பதனால் 2011 ஆம் ஆண்டு வரை இந்த தடுப்புமருந்து சந்தைகளில் விற்கப்படாது. வளரும் உலகத்தில் இருக்கும் சில பகுதிகளில் மலேரியாவின் அறிகுறிகளை கண்டுக்கொள்ளும் கல்வியின் மூலம் நோய்த்தொற்று 20 சதவீதமாக குறைந்தது. நோயின் ஆரம்ப நிலையிலேயே அதை அடையாளம் கண்டுபிடிப்பதனால் அந்த நோய் உயிர்க்கொல்லியாவதை தடுக்கலாம். நீர் தேங்கியிருக்கும் பகுதிகளையும் ஒரே இடத்தில் இருக்கும் நீரையும் மூடிவைப்பதை கல்வியின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒட்டுண்ணிகளுக்கும் கொசுக்களுக்கும் இனப்பெருக்கம் செய்யும் இடமாக நீர் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் மக்களுக்கிடையே நோய்ப் பரவும் ஆபத்தை குறைக்கலாம். நகர்புற பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவார்கள். இது போன்ற பகுதிகளில் நோய்ப் பரவுதல் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறை அல்லது முறைகளின் சேர்க்கையைக் கண்டறிவதற்காக உடல்நல பயன்கள் மற்றும் நோய்ப்பரவும் இயங்கியலின் மாதிரிகளுக்காக உலகம் முழுவதிலும் இருக்கும் தனிப்பட்ட தன்னார்வளர்கள் (தன்னார்வளர் கணக்கிடுதல் மற்றும் BOINCஐ காண்க) தங்களுடைய ஒய்வு நேரங்களில் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றார்கள். இந்த மாதிரியமைத்தல் முற்றிலும் கணினியைப் பயன்படுத்தி செய்யப்படுவதாக இருக்கிறது. ஏனெனில் நோய்ப் பரவுதலை ஏற்படுத்தும் உயிரியல் சார்ந்த மற்றும் சமூக காரணிகளுக்கு தொடர்பாக இருக்கும் மிகவும் அதிகமான கூறளவுகளுடன் அதிக அளவு மக்கள்தொகையைப் போன்ற மாதிரியாக இது உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கிய அறிவியல் அறிஞர்களிடம் தற்போது இருக்கும் வள ஆதாரங்களை கணக்கிடுவதற்கு 40 வருடங்கள் ஆகலாம். ஆனால் தன்னார்வளர்களை பயன்படுத்தி கணினி மூலம் செய்யப்படும் கணக்கிடுதலுக்கு சில மாதங்களே ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேரியாவை முற்றிலுமாக அழிக்கும் திட்டங்களைத் திட்டமிடுதலில் உள்ள கணினி மாதிரியமைத்தலின் முக்கியத்துவத்திற்கான எடுத்துக்காட்டு ஆகஸ் மற்றும் மற்றவர்களால் ஒரு தாளில் காண்பிக்கப்பட்டுள்ளது. மலேரியாவின் அறிகுறிகளில்லாமல், ஆனால் நோய்த்தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் ஆண்டு முழுவதும் நோய்த்தோன்றும் பகுதிகளில் வசிக்கும் மக்களைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டும். இதன் மூலமாக தான் மலேரியாவை முற்றிலுமாக அழிக்கமுடியும் என்று அவர்கள் காண்பித்தனர். மிருக இனங்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியால் பாதிப்பு ஏற்படாது. இதன் காரணத்தினால் மனிதர்கள் மத்தியில் மலேரியா நோயை முற்றிலுமாக அழித்தல் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த மருந்து வழங்குதல்கள் மற்றும் இடைப்பட்ட தடுப்பு சிகிச்சை ஆகியவை மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கான மற்ற சிகிச்சை முறைகளாகும். அமெரிக்க விஞ்ஞானிகளால் உலகின் முதல் மலேரிய நோய் காவாத கொசுக்கள் மரபுப் பொறியியலாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தக் கொசுக்களானது மலேரிய ஒட்டுண்ணிகளைக் காவாதவண்ணம் நூறு வீதம் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளது, இதனால் மனிதனுக்கு கொசு மூலம் இந்த நோய் பரவுவது தடுக்கப்படும். "P. ஃபால்ஸிபாரத்துடன்" சேர்ந்து செயலில் இருக்கும் மலேரியா நோய்த்தொற்று ஒரு மருத்துவ அவசரநிலையாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளித்தல் அவசியமாக இருக்கிறது. "P. விவக்ஸ்" , "P. ஓவலே" அல்லது "P. மலேரியா" ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு புறநோயர் அடிப்படையிலேயே பெரும்பாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆதரவு தரும் நடவடிக்கைகள் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மலேரியாவின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மலேரியாவினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் அவர் நோயிலிருந்து முழுமையாக விடுபட்டுவிடலாம். மலேரியாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பல மருந்துகளின் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. குளோரோகுயின் உலகத்தின் பல பகுதிகளில் பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மலேரியா எதிர்ப்பு மருந்தாக இருக்கிறது. இது மிகவும் விலை மலிவானதும் இன்றும் மிகவும் பயன் தருவதாகவும் இருக்கிறது. எனினும், "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்திற்கு" குளோரோகுயினை எதிர்க்கும் சக்தி இருக்கிறது என்ற செய்தி ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை பரவிவிட்டது. உலகத்தில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பல மிகவும் ஆபத்தானது என்று கருதப்படும் பிளாஸ்மோடியத்தின் வகைகளுக்கு எதிராக இந்த மருந்து பயன் தரவில்லை. குளோரோகுயின் பயன் தருவதாகக் கருதப்படும் மற்ற நோய்த்தொற்றுகளில் இது இன்னும் முதல் தேர்வாகத் தான் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, குயினைன் மற்றும் ஆர்டிமிஸினின் போன்ற மற்ற மருந்துகளுக்கு உள்ள குறைந்த உணர்திறனுடன் குளோரோகுயின்-தடுப்புத்திறன் தொடர்புடையதாக இருக்கிறது. சிகிச்சைக்காக பல மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில மருந்துப் பொருட்களே நோயைத் தடுப்பதற்காக (நோய்த் தடுப்பு) பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு காரணங்களுக்காக பல மருந்துகள் (தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும்) பயன்படுத்தப்படலாம்; மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிகமான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள் பயன்படுத்தப்படும் இடத்தில் இருக்கும் எதிர்ப்பாற்றல் கொண்ட ஒட்டுண்ணிகளின் அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டே அவை வழங்கப்படுகின்றன. பீட்டா பிளோக்கர் ப்ரோப்ரானோலால் (beta blocker propranolol) என்ற ஒரு மருந்து மலேரியா எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது முக்கியமாக மருந்தை எதிர்க்கும் திறன் கொண்ட வகைகளின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இரத்த சிவப்பணுவில் நுழைந்து நோய்த்தொற்றை உருவாக்கும் "பிளாஸ்மோடியத்தின் திறனை ப்ரோப்ரானோலால் தடைசெய்கிறது மற்றும் இது ஒட்டுண்ணி நகலாக்கமாகவும் இருக்கிறது " . "நார்வெஸ்டன் யூனிவர்சிடி ஆராய்ச்சியாளர்கள் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்த ஆய்வில் " P. ஃபால்ஸிபாரத்திற்கு" எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளுக்கு தேவையான மருந்தளவை 5 முதல் 10-மடிப்புகள் (ஃபோல்டு) வரை ப்ரோப்ரானோலால் குறைக்கலாம் என்று கருத்துரைக்கப்படுகிறது. சிகிச்சைகளின் சேர்க்கையும் இதில் பங்கு வகிக்கிறது என்று பரிந்துரைக்கிறது." தற்போது கிடைக்கக்கூடிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளாவன: "பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம்" வெற்றிகரமாக நோய்க்கிருமி வளர்ப்பு செய்யப்பட்ட போது மருந்துகளின் உருவாக்கத்திற்கு உதவியாக இருந்தது. புதிய மருந்துகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுக்கூட பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. "ஆர்ட்மீஸியா அனுவா" தாவரத்தின் பிரித்தெடுத்தல் மூலம், ஆர்டிமிஸினின் அல்லது பாதி-செயற்கையான வழிப்பொருட்கள் (குயினைனுக்கு தொடர்பில்லாத பொருட்கள்) சேர்மத்தைக் கொண்டிருக்கிறது. இது 90% செயற்திறன் வீதங்களைக் கொடுக்கிறது. ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை. ர்வாண்டாவில் P. ஃபால்ஸிபாரம் மலேரியாவின் நோய் வீரியமற்ற நிலையில் இருந்த குழந்தைகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அமோடியகுயின் மட்டும் தனியாக வழங்கப்படுவதற்கு (OR = 0.34) பதிலாக ஆர்டெசுனேட்டுடன் சேர்க்கை மருந்தாக வழங்கப்பட்ட போது சிகிச்சைக்கு-பின்பு 28 வது நாளில் குறைந்த மருத்துவ மற்றும் ஒட்டுண்ணியல் ரீதியான செயலிழப்புகள் ஏற்பட்டதை அந்த ஆய்வில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. எனினும், இந்த ஆய்வின் போது அமோடியகுயினுக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி இருப்பதும் குறிப்பிடப்பட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார நிறுவனம் பழைய மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்திக்கொண்ட வீரியமற்ற மலேரியா இருக்கும் பகுதிகளில் ஆரம்பநிலை சிகிச்சையாக ஆர்டிமிஸினின் அடிப்படையாகக் கொண்ட சேர்க்கை சிகிச்சையை (ACT) பயன்படுத்தும் படி பரிந்துரைத்தது. சமீபத்தில் வெளியான WHO மலேரியா சிகிச்சைக்கான வழிகாட்டி குறிப்புகள், நான்கு வித்தியாசமான ACTகளை பரிந்துரைக்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்த்து பல நாடுகள் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான மலேரியா சிகிச்சை கோட்பாடுகளில் இந்த மாற்றத்தை பின்பற்றினாலும் ACTஐ நடைமுறைப்படுத்துதலில் சிகிச்சைக்கு ஆகும் செலவு ஒரு மிகப்பெரிய தடையாக தான் இருந்தது. ஏனெனில் ACTற்கு ஆகும் செலவு பழைய மருந்துகளுக்கு ஆகும் செலவை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் காரணத்தினால் மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பல நாடுகளால் இந்த செலவை ஈடுசெய்ய முடியவில்லை. ஆர்டிமிஸினின் மூலக்கூறு இலக்குகள் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. இருப்பினும், அகச்சோற்றுவலையில் இருக்கும் கால்சியம் எக்கியான SERCA ஆர்டிமிஸினின் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு கருத்துரைக்கிறது. மலேரியா ஒட்டுண்ணிகள் ஆர்டிமிஸினின் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளலாம் மற்றும் அந்த எதிர்ப்பு சக்தி SERCAவின் சடுதி மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படலாம். எனினும் ஆர்டிமிஸினின் மற்றும் அதனுடைய ஒப்புமைகளுக்கு மிகப்பெரிய இலக்காக மிட்டோகாண்டிரியன் இருக்கிறது என்று மற்ற ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. அதிகமாக பயன் தரக்கூடிய மலேரியா எதிர்ப்பு மருந்துகள் சந்தையில் கிடைத்தாலும் கூட அந்த மருந்துகளை முறையாக அல்லது தேவைப்படும் போது பெற வசதியில்லாத நிலையில் இருக்கும். நோய் ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நோய் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. மருந்தகம் மற்றும் சுகாதார தளங்களுக்கு போக முடியாத நிலை மற்றும் மருந்தின் விலைகளும் இதற்கு மிகப்பெரிய தடைகளாக இருக்கின்றன. 2002 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் தோன்றும் நாடுகளில் இருக்கும் மலேரியா நோய்த்தொற்றுடைய ஒரு நபரின் சிகிச்சைக்காக கொடுக்கும் ஒரு மருந்தளவிற்கு $0.25 முதல் $2.40 வரை செலவாகும் என்று மெடிசன்ஸ் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ் கணக்கிட்டது. கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லயோஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற பல ஆசிய நாடுகளில் அதிநவீனமான போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நாடுகளில் தவிர்த்திருக்கக்கூடிய மரணங்கள் ஏற்பட இது முக்கிய காரணமாக இருந்தது. ஆர்டெசுனேட்டை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் மருந்துகளில் 40 சதவீதம் வரையிலான மருந்துகள் போலியானவை என்று ஆய்வுகள் சுட்டிகாட்டுவதாக WHO அறிவித்தது. குறிப்பாக க்ரேட்டர் மெகாங்க் பகுதியில் விரைவு எச்சரிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. போலியான மருந்துகள் பற்றின தகவல் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் ஏற்ற அதிகாரிகளிடம் புகாரிட வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டது. மருந்துவர்கள் அல்லது சாதாரண மக்களுக்கு ஆய்வுக்கூடத்தின் உதவி இல்லாமல் போலியான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்துகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் வரைக்கும் புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்புக் கொடுப்பதன் மூலம் போலியான மருந்துகளை ஒழிப்பதற்கு நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. 50,000 வருடங்களாக மலேரியா மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இனங்களின் முழு வரலாற்றிலேயும் மலேரியா ஒற்றையணு உயிரி ஓர் மனித நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களாக இருந்திருக்கலாம். மனித மலேரியா ஒட்டுண்ணிகளுடன் நெருங்கிய தொடர்புடையவைகள் சிம்பான்ஸிகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. கி.மு2700 -வின் ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் மலேரியாவின் தனித்தன்மை வாய்ந்த குறிப்பிட்ட காலத்து காய்ச்சல்களின் ஆதாரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்று இடைக்காலத்து இத்தாலியர்களிடமிருந்து மலேரியா என்ற சொல் தோன்றியது: "மல ஏரியா" —"கெட்டக் காற்று"; தேங்கு நீர் மற்றும் சதுப்புநிலத்துடன் இதற்கு தொடர்பு இருந்ததனால், இந்த நோய் குளிர் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் (மலேரியா) அல்லது சதுப்பு நில காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஒரு காலத்தில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இப்போது மற்ற நாடுகளிலிருந்து நோய்த்தொற்றுடன் நோயாளிகள் அந்நாடுகளுக்கு வந்தாலும் கூட அந்த நோய் ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இல்லை மலேரியாவின் நோய்த்தாக்கத்தனால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மக்களின் இரத்த சிவப்பணுக்களினுள் ஒட்டுண்ணிகள் இருப்பதை முதல் முறையாக சார்லஸ் லூயிஸ் அல்ஃபோன்ஸ் லாவ்ரன் (Charles Louis Alphonse Laveran) என்பவர் கண்டுபிடித்தார். இவர் அல்ஜீரியாவில் உள்ள கான்ஸ்டண்டைனின் இராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பிரெஞ்சு இராணுவ மருத்துவராவார். இவருடைய இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் 1880 ஆம் ஆண்டில் மலேரியாவைப் பற்றி நடத்தப்பட்டு வந்த அறிவியல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முதற் கலவுறு தான் மலேரியாவிற்கு காரணமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நோய்கள் ஏற்படுவதற்கு ஒற்றையணு உயிரிகள் காரணமாக இருப்பது முதல்முறையாக கண்டறியப்பட்டது. இதற்காகவும் அவருடைய மற்ற கண்டுபிடிப்பிற்காகவும், அவருக்கு 1907 ஆம் ஆண்டு உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இட்டோர் மார்சியாஃபவா (Ettore Marchiafava) மற்றும் ஆஞ்சிலோ சில்லி (Angelo Celli) என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர்களால் முதற் கலவுறு, "பிளாஸ்மோடியம்" என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு, ஹவானாவில் மஞ்சள் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த கார்லஸ் ஃபின்லே என்ற க்யூபாவைச் சேர்ந்த மருத்துவர் கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோயை பரவுவதற்கு காரணமாக உள்ளது என்பதற்கு உறுதியான ஆதாரத்தை வழங்கினார். யானைக்கால் நோய் பரவுதலில் ஆராய்ச்சி செய்து வந்த பேட்ரிக் மான்சன் என்பவராலும் ஜோசியா C. நாட் என்பவர் ஆரம்பத்தில் கொடுத்த பரிந்துரையினாலும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டது. எனினும், ப்ரிட்டனை சேர்ந்த சர் ரானல்ட் ராஸ் என்பவர் கொல்கத்தாவில் உள்ள ப்ரெஸிடென்ஸி பொது மருத்துவமனை பணிபுரிந்துக் கொண்டிருக்கும் போது 1898 ஆம் ஆண்டில் மலேரியாவை கொசுக்கள் தான் பரப்புகின்றன என்று இறுதியாக நிரூபித்தார். பறவைகளுக்கு மலேரியாவை பரப்பும் சில கொசு இனங்களை காண்பித்தார் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து இரத்த உணவை எடுத்துக்கொண்ட கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்த மலேரியா ஒட்டுண்ணியை பிரித்து வைத்ததன் மூலம் அவர் இதை நிரூபித்தார். இவருடைய இந்த ஆராய்ச்சிக்காக 1902 ஆம் ஆண்டு மருத்துவத்தில் ராஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சேவையிலிருந்து ராஜினாமா செய்தப் பிறகு, புதிதாக நிறுவப்பட்ட லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் ட்ராபிகல் மெடிசனில் ராஸ் பணிபுரிந்தார். எகிப்து, பனாமா, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் மலேரியா கட்டுப்பாட்டு முயற்சிகளில் இயக்குநராக பணிபுரிந்தார். ஃபின்லே மற்றும் ராஸின் கண்டுபிடிப்புகள் 1900 ஆம் ஆண்டில் வால்டர் ரீட் தலைமையில் ஒரு மருத்துவ வாரியத்தனால் உறுதிசெய்யப்பட்டது. இதனுடைய பரிந்துரைகள், பனாமா கால்வாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளில் வில்லியம் C. கார்கஸால் செயல்படுத்தப்பட்டது. இந்த பொது-சுகாதார வேலையின் காரணத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இந்த நோயை ஒழிப்பதற்காக செய்யப்பட்ட எதிர்கால பொது-சுகாதார பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்ட முறைகளை உருவாக்குவதற்கும் இது உதவியாக இருந்தது. கொயினா மரத்தின் அடிமரப்பட்டைகளில் குயினைன் உள்ளது. இதனைக் கொண்டு முதன் முதலாக மலேரியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டிஸின் சரிவுகளில் இந்த மரம் வளர்கின்றது. இது முக்கியமாக பெருவில் காணப்படுகிறது. இந்த இயற்கை பொருளிலிருந்து செய்யப்பட்ட டிஞ்ச்சரை, மலேரியாவை கட்டுப்படுத்துவதற்காக பெரு மக்கள் பயன்படுத்தினர். 1640களின் போது ஜேசுயிட்கள் இந்த பயன்பாட்டை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்கள். இந்த பயன்பாட்டை அவர்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள். எனினும், 1820 ஆம் ஆண்டு வரை இந்த முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பையர் ஜோசப் பெல்லிடையர் மற்றும் ஜோசப் பியானைமே காவெண்டோ ஆகிய பிரெஞ்சு வேதியியல் அறிஞர்கள் அடிமரப்பட்டையிலிருந்து குயினைனைப் பிரித்தெடுத்து அதற்கு பெயரிட்டனர். இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டப் பிறகே இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜூலியஸ் வாக்னர்-ஜாரெகின் ஆராய்ச்சியை தொடர்ந்து 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சிபிலிஸ் (கிரந்தி) நோயாளிகளுக்கு காய்ச்சலை உருவாக்கதுவதன் நோக்கத்திற்காக மலேரியா நோய்த்தொற்றை அந்த நோயாளிகளுக்கு ஏற்படுத்தினார்கள். குயினைனை பயன்படுத்திக் காய்ச்சலைத் துல்லியமாக கட்டுப்படுத்துவதன் மூலம் சிபிலிஸ் மற்றும் மலேரியா ஆகியவற்றின் நோய்த்தாக்கம் குறைக்கப்பட்டது. மலேரியா நோயினால் சில நோயாளிகள் இறந்ததாக இருந்தாலும் கூட சிபிலிஸினால் இறக்கக்கூடிய நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயன் தருவதாக உள்ளது. மலேரியா வாழ்க்கை சுழற்சியின் இரத்த நிலைகள் மற்றும் கொசுவின் நிலைகள் 19வது மற்றும் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட ஒட்டுண்ணி கல்லீரலில் மறைந்திருப்பது 1980களில் கண்டுப்பிடிக்கப்படும் வரை இது நிரூபிக்கப்படவில்லை. மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து அவர்களுடைய இரத்த ஓட்டத்தில் ஒட்டுண்ணிகள் மறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகும் நோய் திரும்ப ஏற்படுகிறது. இதற்கு ஒட்டுண்ணிகள் கல்லீரலில் மறைந்து இருப்பதே காரணம் என்று இதைக் கண்டுபிடித்தப் பிறகு விளக்கப்பட்டது. சமீபத்து வரலாற்றில் மனித ஜினோமில் மலேரியா மிகப்பெரிய தேர்வு செய்யப்பட்ட அழுத்தமாக எண்ணப்படுகிறது. மலேரியாவினால், குறிப்பாக "P. ஃபால்ஸிபாரம்" இனங்களின் காரணத்தினால் இறப்பு வீதம் மற்றும் நோயின் பாதிப்பு நிலை அதிகமானதே இதற்கு காரணமாக இருக்கிறது. சிக்கில்-செல் நோய் என்ற பரம்பரை இரத்த நோய் மலேரியா ஒட்டுண்ணியினால் மனித ஜினோமிற்கு ஏற்படுத்தப்படும் நோய்த்தாக்கமாகும். சிக்கில் செல் நோய் ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட, சிக்கில் செல்லினால் பகுதியளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிலிருந்து குறிப்பிடும் அளவு பாதுகாப்பு கிடைக்கிறது. சிக்கில்-செல் நோயில், "HBB" மரபணுவில் சடுதி மாற்றம் இருக்கிறது. இது ஹீமோகுளோபினின் பீட்டா-குளோபின் துணை பிரிவை குறியீட்டாக்கம் செய்கிறது. சாதாரண அலீல் குளுட்டோமேட்டை பீட்டா-குளோபின் புரதத்தின் ஆறாவது நிலையாக குறியீட்டாக்கம் செய்கிறது. ஆனால் சிக்கில் செல் அலீல் இதை வேலினாகக் குறியீட்டாக்கம் செய்கிறது. இது நீர்நாட்டமுள்ள (ஹைட்ரோஃபிலிக்) அமினோ அமிலத்திலிருந்து நீரை வெறுக்கும் (ஹைட்ரோஃபோபில்) அமினோ அமிலமாக மாற்றமடைகிறது. இந்த மாற்றம் ஹீமோகுளோபின் மூலக்கூறுகளும் ஹீமோகுளோபின் பல்பகுதிசேர்க்கையும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த சிவப்பணுக்களை "சிக்கில்" வடிவமாக மாற்றி சிதைக்கின்றன. இது போன்ற சிதைக்கப்பட்ட செல்கள் இரத்தத்திலிருந்து குறிப்பாக மண்ணீரலில் இருந்து அழிக்கப்படுவதற்காகவும் மறுசுழற்சிக்காகவும் அதிவேகமாக நீக்கப்படுகின்றன. அதனுடைய வாழ்க்கை சுழற்சியின் வளருயிரி நிலையில் மலேரியா ஒட்டுண்ணி இரத்த சிவப்பணுக்களுக்குள் வாழ்கின்றன. இரத்த சிவப்பணுவின் உட்புற வேதியியலை இதனுடைய வளர்சிதை மாற்றம் மாற்றுகிறது. ஒட்டுண்ணிகள் மறுபடியும் இனப்பெருக்கம் செய்யும் வரை இயல்பாக நோய்த்தொற்றுடைய செல்கள் உயிர் வாழும். ஆனால் இரத்த சிவப்பணுக்களில் சிக்கிலும் இயல்பான ஹீமோகுளோபினும் கலந்து இருந்தால் அவை சிதைக்கப்படலாம் மற்றும் ஒட்டுண்ணியின் சந்ததி வருவதற்கு முன்னதாகவே அழிக்கப்படவும் கூடும். சடுதி மாற்றம் செய்யப்பட்ட அலீலின் வேறுபட்ட மரபு நிலை கொண்டவர்கள் சிக்கில்-செல்லின் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். இதில் இரத்த சோகையின் நிலை குறைவாகவும் வழக்கமாக-முக்கியமல்லாமலும் இருக்கலாம். இதன் மூலம் கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. இது மாறுபட்ட கருமுட்டை நன்மைகளுக்கான ஒர் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. சடுதி மாற்றத்திற்கு ஒத்த மரபு நிலை கொண்டவர்களுக்கு முழு சிக்கில்-செல் நோய் இருக்கும். பாரம்பரிய சமூகங்களில் அவர்கள் இளம் பருவம் வரை உயிர் வாழ்வது அரிதாக இருக்கிறது. எனினும், மலேரியா ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் சிக்கில்-செல் மரபணுக்களின் அதிர்வெண் 10 சதவீதமாக இருக்கிறது. சிக்கில்-வகை ஹீமோகுளோபினின் நான்கு ஹப்லோடைப்கள் இருப்பதனால் மலேரியாவில் ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் இந்த சடுதிமாற்றம் எதையும் சாராமல் குறைந்தது நான்கு முறையாவது ஏற்படும். இது போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதனுடைய பரிணாமவளர்ச்சி நன்மைகளை இன்னும் அதிகமாக விளக்கிக் காண்பிக்கிறது. HBB மரபணுவில் பிற சடுதிமாற்றங்களும் உள்ளன. இவை மலேரியா நோய்த்தொற்றை எதிர்க்கும் சக்திக்கு ஒத்த எதிர்ப்பு சக்தியை கொண்ட ஹீமோகுளோபின் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது. HbE மற்றும் HbC ஹீமோகுளோபின் வகைகளை இந்த சடுதிமாற்றங்கள் உற்பத்தி செய்கின்றன. இவை பொதுவாக தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. மலேரியாவுடன் தொடர்புடைய ஆவணப்படுத்தப்பட்ட மற்றொரு சடுதிமாற்றங்களின் தொகுப்பு, மனித ஜினோம்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தாலசரத்தங்கள் என்றழைக்கப்படும். இது இரத்த நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. கொடுக்கப்பட்ட மக்கள்தொகையில் மலேரியா சார்ந்த நோய் பரவுதலின் அளவுடன் β-தாலசரத்தங்களின் மரபணு அதிர்வெண் தொடர்புடையதாக இருக்கிறது. இது சார்டீனியா மற்றும் பாப்வா நியூ கினியாவில் செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. லிபெரியாவில் 500 குழந்தைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் β-தாலசரத்தங்கள் கொண்டவர்களுக்கு மருத்துவ மலேரியா நோய் ஏற்பட 50% வாய்ப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. இதே போன்ற மற்ற ஆய்வுகளில் α-தாலசரத்தங்களின் α+ வடிவத்தில், மரபணு அதிர்வெண்ணுக்கும் மலேரியா சார்ந்த நோய் பரவுதலுக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. பகுத்தறிவு ரீதியான ஊகங்களின் அடிப்படையில் இந்த மரபணுக்கள், மனித பரிணாம வளர்ச்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீமோகைன் ஏற்பியாக செயல்புரிவதற்காக இரத்த சிவப்பணுக்களிலும் உடலின் மற்ற செல்களிலும் எதிர்ச்செனிகள் செலுத்தப்படுகின்றன. இந்த எதிர்ச்செனிகள் டஃபி எதிர்ச்செனிகள் எனப்படும். இரத்த செல்களில் செலுத்தப்படும் டஃபி எதிர்ச்செனிகள் Fy மரபணுக்களால் (Fya, Fyb, Fyc மற்றும் பல) குறியீடாக்கம் செய்யப்படும். "பிளாஸ்மோடியம் விவக்ஸ்" மலேரியா இரத்த செல்களில் நுழைவதற்காக டஃபி எதிர்ச்செனியை பயன்படுத்துகிறது. எனினும், இரத்த செல்களில் டஃபி எதிர்ச்செனிகள் அல்லாதவைகளையும் உட்செலுத்த முடியும் (Fy-/Fy-). இந்த மரபுசார் வடிவம் "P. விவக்ஸ்" நோய்த்தொற்றை எதிர்க்கும் சக்தியை முழுமையாக அளிக்கிறது. ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு இந்த மரபுசார் வடிவம் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஆனால் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவினுள் இருக்கும் மக்கள் எல்லோருக்கும் இந்த மரபுசார் வடிவம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் "P. விவக்ஸின்" நோய்த்தொற்று அதிகமாக இருந்ததன் காரணத்தினால் தான் என்று எண்ணப்படுகிறது. குளுக்கோஸ்-6-பாஸ்பேட் டீஹைட்ரோஜினேஸ் (G6PD) என்பது ஒரு நொதியாகும். இது இரத்த சிவப்பணுக்களில் ஒட்சியேற்றுகின்ற தகைவு ஏற்படும் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. எனினும், இந்த நொதியில் ஏற்படும் மரபு சார்ந்த குறைபாட்டினால் கடுமையான மலேரியா நோய்த்தாக்கத்திற்கான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. HLA-B53, கடுமையான மலேரியா ஏற்படும் ஆபத்தை குறைப்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த MHC பிரிவு I மூலக்கூறு T-செல்களுக்கு கல்லீரல் நிலையையும் வித்துயுரி எதிர்ச்செனிகளையும் கொடுக்கிறது. இண்டர்லியூக்கின்-4, IL4-னால் குறியீடாக்கம் செய்யப்படுகிறது. இது செயலில் உள்ள T செல்களினால் உற்பத்தி செய்யப்படுகிறது. B செல்களை உற்பத்திசெய்யும் எதிர்ப்பொருளின் இனப்பெருக்கத்தையும் வகைப்படுத்துதலையும் மேம்படுத்துகிறது. பர்கினா ஃபாசோவின் ஃபுலானியில் (Fulani of Burkina Faso) ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நாட்டின் அருகாமையில் உள்ள இனஞ்சார்ந்த குழுக்களை விட மலேரியா எதிர்ப்பு எதிர்ப்பொருள்களின் அளவுகள் அதிகமாகவும் மலேரியாவின் தாக்கம் குறைவாகவும் இருப்பவர்களைக் கொண்டு அந்த ஆய்வு செய்யப்பட்டது. மலேரியா எதிர்ச்செனிகளுக்கு எதிராக எதிர்ப்பொருளின் அளவு உயர்ந்து காணப்பட்டது மற்றும் இதனுடன் IL4-524 T அலீல் தொடர்புடையதாக இருந்தது. மலேரியா நோயை எதிர்ப்பதற்கான அதிகரிக்கப்பட்ட எதிர்ப்பு சக்திக்கு இது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை இது அதிகரித்தது. தாழ்வான இமய மலையின் கீழ்ப்பகுதியிலும் நேபாளம் மற்றும் இந்தியாவின் உட்புற டிராய் அல்லது டூன் பள்ளத்தாக்குகளிலும் மலேரியா நோய் அதிகமாக காணப்படுகிறது. அந்த நாடுகளின் தட்பவெப்ப நிலையினாலும் மலைகளின் உயரமான பகுதிகளிலிருந்து நிலத்து நீர் கசிவதனால் வரண்ட காலத்திலும் சதுப்பு நிலங்கள் காணப்படுவதனாலும் அந்த பகுதிகளில் மலேரியா நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலேரியா நோய் பரவியிருக்கும் காடுகள் உள்நோக்கத்தோடு தற்காப்பின் காரணத்திற்காக நேபாளத்தை ஆட்சி செய்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரண்ட கங்கை சமவெளிக்கு கீழே வாழ்பவர்களும் உயர்ந்த பகுதிகளில் வாழ்பவர்களையும் விட இந்த பகுதிகளில் வாழ்வதற்கு முயற்சி செய்யும் மனிதர்களிடையே இறப்பு வீதம் அதிகமாக உள்ளது. எனினும் பன்மடங்கான மரபணுக்களின் வாயிலாக எதிர்ப்பு சக்தியை பெருவதற்காக தரு மக்கள் (Tharu community) இந்த பகுதியில் பல நாட்கள் வாழ்ந்தனர். தரு மக்கள் கடைப்பிடித்து வந்த புறமணத்தடை முறையினாலும் காலாச்சாரக் கட்டுப்பாடுகளின் காரணத்தினாலும் தரு மக்களுக்கு மட்டும் இந்த மலேரியா நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. இல்லாவிட்டால் இந்த மரபணுக்கள் தெற்கு ஆசியாவையும் தாண்டி உலகளவில் பரவியிருந்திருக்கலாம். ஏனெனில் இந்த மரபணுக்களின் வாழ்தல் மதிப்பு மற்றும் சிக்கில் செல் இரத்த சோகையோடு ஒப்பிடும் போது இதன் எதிர்மறைத் தாக்கங்கள் குறைவாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் 250 மில்லியன் நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கும் தோராயமாக ஒரு மில்லியன் நோயாளிகள் இறப்பதற்கும் மலேரியா காரணமாக இருக்கிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த மலேரியா நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்; குறிப்பாக கர்ப்பிணிகளும் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நோய்ப் பரவலை குறைத்து சிகிச்சையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்த நோயின் ஆபத்து இருக்கும் பகுதிகளில் சிறிய மாற்றமே காணப்பட்டது. இப்போது மலேரியா நோய்த்தாக்கம் இருப்பது போலவே இனியும் பரவி வந்தால் அடுத்த இருபது வருடங்களில் இறப்பு வீதம் இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். இதற்கான துல்லியமான புள்ளியியல் விவரங்கள் தெளிவாக இல்லை. ஏனெனில் மருத்துவமனைக்கு செல்வதற்கு சரியான வசதியில்லாமல் அல்லது உடல்நலத்தை பராமரிப்பதற்கு போதிய வருவாய் இல்லாத மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் தான் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக பெரும்பான்மையான நோயாளிகளைப் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. எச்.ஐ.வி மற்றும் மலேரியா ஆகியவை சேர்ந்த நோய்த்தொற்று நிலையின் காரணமாக இறப்பு வீதம் அதிகமாகிறது. இருப்பினும் இது HIV/காச நோய் ஆகியவை சேர்ந்து வருவதனால் ஏற்படும் பிரச்சனையை விட குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் இரண்டு நோய்களும் வழக்கமாக வித்தியாசமான வயது வரம்பினரையே தாக்குகின்றன. மலேரியா நோய் இளமையாக இருப்பவர்களை அதிகமாக பாதிக்கிறது. ஆனால் காச நோயோ வயதானவர்களை அதிகமாக பாதிக்கிறது. எச்.ஐ.வி மற்றும் டி.பி யின் கடுமையான அறிகுறிகளோடு ஒப்பிடும் போது HIV/மலேரியாவில் இருக்கும் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும். ஆயினும் HIV மற்றும் மலேரியா ஒன்றுக்கொன்று பரவுவதில் பங்குவகிக்கின்றன. இந்த விளைவுக்கு காரணம் மலேரியா வைரஸ் ஏற்றலை (வைரஸ் சார்ந்த ஏற்றல்) அதிகரிக்கிறது. எச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள ஒருவருக்கு மலேரியா நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது. தற்போது மலேரியா நிலநடுக்கோட்டை சுற்றியுள்ள அகன்ற பகுதிகளான அமெரிக்கா, ஆசியா ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாக உள்ளது. எனினும் சப்-சஹாரன் ஆப்ரிக்காவில் மலேரியா நோயினால் ஏற்படும் இறப்புகள் 85 முதல் 90 சதவீதமாக இருக்கிறது. மிகப்பெரிய பகுதிகளுக்குள் மலேரியாவின் புவியியல் ரீதியான பகிர்வு ஒரு சிக்கலாக உள்ளது. மலேரியாவின் நோய்த்தாக்கம் இருக்கும் பகுதிகளும் மலேரியா நோய் இல்லாத பகுதிகளும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே அமைந்து காணப்படுகின்றன. வறண்ட பகுதிகளில், மழைப்பொழிவை அறிந்துகொள்வதன் மூலம் மலேரியாவின் நோய்த்தாக்கம் எப்போது அதிகமாக பரவும் என்பதை ஓரளவிற்கு கணித்துவிடலாம். நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதிகளில் மலேரியா அதிகமாக காணப்படுகிறது; இது டெங்கு காய்ச்சலிற்கு முரணாக உள்ளது. ஏனெனில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் நகரங்களில் மலேரியா நோய் காணப்படுவதில்லை. ஆனால் பல கிரமாப்புறங்களில் இந்த நோய் பரவியிருக்கிறது. இதற்கு முரணாக, ஆப்பிரிக்காவின் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மலேரியா நோய் காணப்படுகிறது. ஆயினும் கிராமங்களோடு ஒப்பிடும் போது நகரங்களில் நோயின் ஆபத்து குறைவாகவே உள்ளது. 1960 ஆம் ஆண்டிலிருந்து மலேரியா உலகளவில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன என்பது இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. எனினும், தற்போது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மலேரியா நோயின் சுமையை மதிப்பிடுவதற்கு நவீன வழிமுறைகளையும் அதிகமான நிதியுதவியையும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெல்கம் ட்ரஸ்ட் அமைப்பு மலேரியா அட்லஸ் பிராஜெக்ட்டிற்கு அளித்தது. மலேரியா வறுமையுடன் தொடர்புடைய நோயாக மட்டுமில்லாமல் வறுமையை ஏற்படுத்தும் ஒரு நோயாகவும் உள்ளது. மலேரியா நோய் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது. வெப்ப மண்டலப் பகுதிகள் மலேரியாவினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன. எனினும் சில குளிர்ப்பகுதிகளில் அதிகமான காலநிலை மாற்றங்கள் உள்ள இடங்களில் மலேரியாவின் நோய்த்தாக்கம் உள்ளது. மலேரியா அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் எதிர்மறையான பொருளாதார விளைவுகள் ஏற்படுவதற்கு இந்த நோயும் காரணமாக உள்ளது. 19வது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தின் போதும் அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தது. இதற்கு மலேரியா நோய் மிகப்பெரிய காரணமாக இருந்தது. . 1995 ஆம் ஆண்டில் மலேரியா நோய் பரவியிருக்கும் நாடுகளுக்கும் மலேரியா நோய் இல்லாத நாடுகளுக்கும் இடையே உள்ள வாங்கும் திறன் சமநிலையை ஒரு நபருக்கான GDPயின் சாரசரிக்கு ஏற்றதாக சரிசெய்யப்பட்டு ஒப்பிடப்பட்டது. அதில் ஐந்துமடங்கு வித்தியாசம் காணப்பட்டது ($1,526 USD மற்றும் $8,268 USD). மலேரியா நோய் பரவியிருக்கும் நாடுகளில் ஒரு நபருக்கான GDPயின் சராசரி ஒரு வருடத்திற்கு 0.4% மட்டுமே அதிகமானது (1965 மற்றும் 1990க்கு இடைப்பட்ட ஆண்டுகள்). ஆனால் நோய் இல்லாத மற்ற நாடுகளில் ஒரு வடத்திற்கு 2.4% அதிகமாகின்றன. வறுமைநிலை நோய் ஏற்படுவதற்கு காரணமாகவும் நோயின் விளைவாகவும் உள்ளது. எனினும் வறுமையில் உள்ளவர்கள் நோயை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் போதிய அளவு பண வசதி இல்லாததும் இதற்கு காரணமாக உள்ளது. மலாவியில் (1994) மிகவும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் ஒரு வருடத்தில் மலேரியா நோய்க்காக அவர்களுடைய ஊதியத்தில் 32 சதவீதத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அதே நாட்டில் அவர்களை விட அதிகமான வருமானத்தை உடையவர்கள் மலேரியா நோய்க்காக 4 சதவீதமே செலவிடுகிறார்கள். உலகளவில் மலேரியாவின் பொருளாதார தாக்கத்தைக் கணக்கிட்டால், ஆப்பிரிக்கா ஒவ்வொரு வருடமும் $12 பில்லியன் அமெரிக்க டாலரை மலேரியா நோய்க்காக செலவிடுகிறது. பொருளாதார தாக்கங்களாவன: சுகாதார மையங்களுக்கு ஆகும் செலவுகள், உடல்நலக் குறைவின் காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் இருக்கும் நாட்கள், நோயின் காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் இருத்தல், பெருமூளை சம்பந்தப்பட்ட மலேரியாவினால் செயல்திறன் குறைதல் மற்றும் நோயின் காரணத்தினால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படுதல். மலேரியாவின் நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும் சில நாடுகளில் பொது சுகாரத்திற்காக செலவிடப்படும் நிதியில் 40% மலேரியா நோய்க்காக செலவிடப்படுகிறது. 30 முதல் 50 சதவீதம் உள்நோயாளிகள் உள்ளனர் மற்றும் 50% வரை புறநோயாளிகள் வருகைகள் உள்ளன. பொதுவான தகவல் தூது தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தின் மூலமும், சங்க இலக்கியத்தின் மூலமும் அறியலாம். தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம்பெற்று கி.பி. 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூதினைக் குறிப்பிடுவர். கூழங்கைத் தம்பிரான் கூழங்கைத் தம்பிரான் (இ. 1795) ஒல்லாந்தர் கால இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிபி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் மிக்க பாண்டித்திய முடையவர். இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் கனகசபாபதி.திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமை காரணமாகச் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனாற் கை கூழையாகப் பெற்றவர் என்று கூறுவர். யாழ்ப்பாணம் வந்த இவருக்கு வண்ணார்பண்ணையில் இருந்தவரும் பிற்காலத்தில் வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலைக் கட்டுவித்தவருமான வைத்திலிங்கச் செட்டியாரின் தந்தை கோபாலச் செட்டியார் என்னும் வணிகர் நண்பராய் இருந்து பரிபாலித்து வந்தார். தம்பிரான் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலுக்கு விளக்கம் எழுதினார். போர்த்துக்கீச, ஒல்லாந்து மொழிகளையும் நன்கு கற்றறிந்து கொண்டார். யோசேப்பு புராணம் என்னும் காவியத்தை 21 காண்டத்தில் 1023 விருத்தத்தில் பாடி தமது நண்பரான பிலிப்பு தெ மெல்லோ பாதிரியாருக்கு அர்ப்பணம் செய்தார். பிற்காலத்தில் சுண்டிக்குளி சிவியா தெரு இவருக்கு உறைவிடமாய் இருந்தது. பண்டம் நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ (object) சேவையோ பொருளியலில் பண்டம் (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட மெய்யியலில் பண்டமாகவே கருதுவர். கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது. வர்த்தகம் வர்த்தகக்குறி தியாகராஜர் தியாகராஜர் கையாண்ட அபூர்வராகக் கிருதிகள் தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது. பல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது. ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருப்பதிலிருந்து இவருடைய அபூர்வ சங்கீதத் திறமையும் கற்பனையும் வெளியாகின்றன. இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்தமை குறிப்பிடத்தக்கது. இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து "நிதிசால சுகமா" என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப் படவில்லை. "ஏலநீதயராது" கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்யநாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையாதது இவரின் தாய் மொழி பற்றை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது இசையுடன் கலந்த இன்ப வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து "இராமகிருஷ்ண யதீந்திரர்" என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அதனைத் தெய்வ வாக்காக எடுத்து அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளிற் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இம் முக்கிய சந்தர்ப்பங்களில் "ஏலநீதயராது" (அடாணா இராகம்) "கனுகொண்டினி" (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளை இயற்றினார். நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து "ஸ்வரார்ணம்" என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு சிறீ தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார். இவர் இளமையிலேயே சிறீ இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், சிறீ ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து ஈற்றில் சிறீ இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இவர் சுமார் 2400 உருப்படிகள் செய்திருக்கிறார். கீர்த்தனைகளைத் தவிர "பிரகலாத பக்தி விஜயம்", நவுகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். "கனராக பஞ்சரத்தினம்", "நாரத பஞ்சரத்தினம்", "திருவொற்றியூர் பஞ்சரத்தினம்", "கோவூர் பஞ்சரத்தினம்", "சிறீரங்க பஞ்சரத்தினம்", "லால்குடி பஞ்சரத்தினம்" ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லாக் கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்தி ரசம் ததும்புவன ஆகும். இவரது உருப்படிகள் உள்ளத்தை உருக்கும் படியான பாவத்துடன் அமைந்திருக்கும். முதன் முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகித்தவர் இவரே ஆவார். சங்கதிகள் மூலம் கிருதிகளை மிகவும் அழகு பெறச் செய்யலாம் என்பதை இவர் நிரூபித்தார். தியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கியதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப் புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறைந்த சீடர்கள் சேர்ந்தனர். இச் சீடர்களும், இவர்களின் சீடர்களும் பிற்காலத்திலே சிறந்த இசைக் கலைஞர்களாகவும், இசைப் புலவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்ர்களில் முக்கியமான சிலர் பின்வருமாறு: வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. 1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பிலே சுவாமிகளின் மனைவியார் காலமானார். 1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இதனை அச்சமயத்தில் இயற்றிய "கிரிபை நெல" எனும் சகானா இராக கிருதியில் விவரித்துள்ளார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் காவேரி ஆற்றங்கரையில் அவரது குருவின் (சொண்டி வெங்கட ரமணய்யர்) சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது. தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அழகொளிரக் காட்சியளிக்கின்றது. ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். அன்னாரின் கீர்த்தனைகளை இசையுலகுக்கு அரும் பொக்கிசங்கள் ஆகும். கலிங்க நாடு கலிங்க நாடு அல்லது கலிங்கம் () என்பது தற்கால ஒரிஸ்சா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால இந்திய அரசுகளில் ஒன்றாகும். மகாமேகவாகனப் பேரரசு கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் முக்கியமானவர் காரவேலன் ஆவார். வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. தொலை தூர இடங்களாகிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலும், இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர். கலிங்க நாட்டிற்கு "தந்தபுரம்" மற்றும் "இராஜபுரம்" என இரண்டு தலைநகரங்கள் இருந்ததை மகாபாரதம் குறித்துள்ளது. குரு நாட்டின் இளவரசன் துரியோதனனின் மனைவி பானுமதி, கலிங்க நாட்டின் மன்னர் சித்திராங்கதனின் மகளாவார். குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக போரிட்டனர். அங்க நாடு (கிழக்கு பிகார்), வங்க நாடு (தெற்கு வங்காளம்), பௌண்டர நாடு (மேற்கு வங்காளம்) மற்றும் சுக்மா நாடு மற்றும் (வடமேற்கு வங்காளதேசம்) ஆகிய நாட்டு மன்னர்களுக்கு, கலிங்க நாட்டு அரச மரபினர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார். பரத கண்டத்தின் பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் மகாபாரதம் குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் கிராதர்கள் நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது. குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் கௌரவர் அணி சார்பாக போரிட்டனர். போரில் வீமனால் கலிங்கர்கள் கொல்லப்பட்டனர். மௌரியப் பேரரசின்  அசோகருக்கும் கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த போரில், அசோகர் வெற்றி பெற்ற பின்னர் பௌத்த சமயத்தைத் தழுவி அகிம்சை வழியில் நாட்டை ஆண்டார். கலிங்க நாட்டவரகள் புலி வடிவத்தில் சிவனை வியாக்கிரேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17) ஹிரகனா எழுத்துக்கள் இறகனா எழுத்து(Hiragana (கன்ஜி எழுத்து முறையில்: 平仮名) ஜப்பான் மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை "கட்டகனா", "கன்ஜி" எழுத்து முறைகள் ஆகும். "கனா" என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர். ஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுப்பாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.(டோக்யோ - とうきょう(டொஉக்யொஉ)). கன்ஜி எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை ஃபுரிகனா(Furigana) என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத கட்டகனா உபயோகப்படுத்தப்படுகிறது. எபிரேயருக்கு எழுதிய திருமுகம் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ("Letter [Epistle] to the Hebrews") என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பத்தொன்பதாவது நூலாக அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Ebraious (Επιστολή Πρὸς Έβραίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Hebraeos எனவும் உள்ளது . பவுலுடன் தொடர்புப்படுத்தப்படும் இறுதியான திருமுகம் இந்த எபிரேயர் திருமுகம். இது ஒரு திருமுகம் என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் இறையியல் கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திற்கும் பவுலின் திருமுகங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பினும் வேற்றுமைகள் மிகுதியாக இருப்பதால் இத்திருமுகத்தைப் பவுல் எழுதியிருக்க இயலாது என அனைவரும் இப்போது ஒரு மனதாக ஏற்றுக் கொள்கின்றனர். அப்பொல்லோ எழுதியிருக்கலாம் என்பர் சிலர். இருப்பினும் யாரால் எழுதப்பட்டது என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண இயலவில்லை . இத்திருமுகம் யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டதாகும். அவர்கள் பழைய ஏற்பாட்டில் தோய்ந்தவர்கள்; தங்கள் நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டு, நம்பிக்கையை இழந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் நில்லாமல் மீண்டும் யூதச் சமயத்திற்குத் திரும்ப நினைத்தார்கள்; தாங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியை யூதமயமாக்க விரும்பினார்கள் (கலா 2:14). ஒரு வேளை இந்த வாசகர்களில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதக் குருக்களாகவும் இருக்கலாம் (திப 6:7). இத்திருமுகத்தில் எருசலேம் கோவில் மற்றும் அதன் வழிபாடுகள் நிகழ்காலத்தில் விரிவாகத் தரப்படுவதால் கி.பி. 70இல் நடந்த எருசலேம் கோவில் அழிவுக்கு முன்னர் இது எழுதப்பட்டது என்பர் சிலர். ஆயினும் இக்கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் கோவிலும் அதன் வழிபாடுகளும் கிறிஸ்துவின் செயல்களுக்கும் தன்மைக்கும் முன் அடையாளமாக மட்டுமே தரப்படுகின்றன. தன்னிலேயே அவற்றை விளக்குவது ஆசிரியரின் நோக்கமல்ல. திருமுகம் கி.பி. 80ஆம் ஆண்டிலிருந்து 85ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எல்லாரும் நம்புகின்றனர். கிறிஸ்துவின் மேன்மையே இந்நூலின் மையக் கருத்தாகும். முன்னுரையில் கிறிஸ்து முழுமையான, முடிவான வெளிப்பாட்டைத் தருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினருக்கும் வானதூதருக்கும் பழைய உடன்படிக்கையின் இணைப்பாளரான மோசேக்கும் மேலானவராகக் கிறிஸ்து காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டுக் குருத்துவத்தினின்று முற்றிலும் மாறுபட்டதும் அதற்கு மேம்பட்டதுமாகும் எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை நிறைவு செய்கிறது (எபி 8:1-13); கிறிஸ்துவின் பலியும் எக்காலத்துக்கும் உரிய ஒரே பலியாய் விளங்கி, பழைய ஏற்பாட்டுப் பலிகளை நிறைவு செய்கிறது; கிறிஸ்துவின் சாவு, உயிர்பெற்றெழுதல், விண்ணேற்றம் ஆகியன விண்ணகத் தூயகத்தை நமக்குத் திறந்து வைத்துள்ளன என்னும் கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. இத்தகைய காரணங்களினால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூத முறைக்குத் திரும்பலாகாது என்று கேட்டுக் கொள்கிறார் ஆசிரியர்; அவ்வாறு செய்தால் பாலைவனத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரயேலர் போல் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார். எபிரேயர் 1:1-3 "பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." எபிரேயர் 4:12-16 "கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக." எபிரேயர் 13:5-9 "பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்' என்று கடவுளே கூறியிருக்கிறார். இதனால், நாம் துணிவோடு, 'ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?' என்று கூறலாம். உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர். பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள். உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல, அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது. சிலுவை சிலுவை இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று 90° கோணத்தில் வெட்டும்போது உண்டாகும் கேத்திரகணித வடிவமாகும். இக்கோடுகள் கிடையாகவும் செங்குத்தாகவோ அல்லது மூலைவிட்டங்கள் வழியாகவோ செல்லும் சிலுவைகள் அதிகமாகும். சிலுவை ஆதி மனிதன் பயன்படுத்திய அடையாள குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் இது பல சமயங்களில் சமயச்சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இது கிறிஸ்தவ சமயச்சின்னமாகும். சிலுவைகள் பல இடங்களில் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும். வின்ஸ்டன் சர்ச்சில் சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த "சர்ச்சில்" இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார். சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். இந்தியா, சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர்புரிந்தபோது "ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின்" 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10., 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார். 1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் இராணி எலிசபெத் ஆல் இலண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இராணி சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார். இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே.
அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே. வின்ஸ்டன் சர்ச்சில், இஸ்பென்சர் குடும்பம் என்ற மதிப்பு மிகு குடும்ப பாரம்பரியத்தின் கிளை வழியான மார்ல்ப்ரோ டியுக்சு என்ற மேற்குடித் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தார். வின்ஸ்டன் லியோனார்டு இஸ்பென்சர் சர்ச்சில் தனது தந்தையைப் போன்று குடும்ப மரபுப் பெயரான சர்ச்சில் என்பதைப் பொது வாழ்விற்கான தனது பெயருடன் பயன்படுத்திக் கொண்டார். சர்ச்சிலின் தந்தையாரான லார்டு ராண்டால்ப் சர்ச்சில், மார்ல்ப்ரோவினுடைய 7 ஆவது நிலப்பிரபுவான ஜான் இஸ்பென்சர் சர்ச்சில் உடைய மூன்றாவது மகன் ஆவார். இவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். சர்ச்சிலின் தாயார் லேடி ராண்டால்ப் சர்ச்சில் (இயற்பெயர் ஜென்னி ஜெரோம்) அமெரிக்க பெருங்செல்வந்தர் லியோனார்டு ஜெரோம் என்பவரின் மகள் ஆவார். 1874 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி ஆக்ஸ்போர்ட்சைர், உட்ஸ்டாக் எனுமிடத்தில் உள்ள பிளென்கிம் அரண்மனை யில் உள்ள அறையொன்றில் இரண்டு மாதங்கள் முன்னதான குறைபிரசவக் குழந்தையாக சர்ச்சில் பிறந்தார். தனது ஆறாம் வயதிலிருந்து சர்ச்சில் தனது தாத்தா அரசின் சார்பில் மாநிலத்தை ஆளுபவர் ஆக நியமிக்கப்பட்டிருந்த டல்பின் நகரில் வாழ்ந்தார். இதே நகரில் சர்ச்சிலின் தந்தை வைசிராயின் தனிச் செயலராக இருந்தார். இதே நேரத்தில் சர்ச்சிலின் சகோதரர், ஜான் இஸ்ட்ரேஞ் இஸ்பென்சர் சர்ச்சில், அயர்லாந்தில் பிறந்தார். அயர்லாந்தின் குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான தங்கும் விடுதியில் (Vice Regal Lodge) இருந்து இராணுவ அணிவகுப்புக்களைக் கவனித்ததன் விளைவாகவே சர்ச்சிலுக்கு இராணுவ விவகாரங்களில் ஈர்ப்பு தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சர்ச்சிலின் ஆரம்பகால கல்வி டப்ளினில் நிகழ்ந்தது, அங்கு வீட்டு ஆசிரியை ஒருவர் அவருக்கு படித்தல், எழுதுதல், அடிப்படைக் கணித அறிவு ஆகியவற்றைக் கற்பிக்க முயற்சித்தார். அந்த சமயத்தில் “கண்ணீரின்றி வாசிப்பது“ (Reading without tears) என்ற புத்தகத்தை சர்ச்சில் முதன் முதலாக வாசித்தார். அவரது பெற்றோருடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்த சர்ச்சில், தனது பழைய உறவினரான 'திருமதி எலிசபெத் ஆன் எவரெஸ்டுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவரை சர்ச்சில் வயதான ஊம் (Old Woom) என அழைத்தார். வேறு சில குறிப்புகள் “உமேனி“ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ).எலிசபெத் ஆன் எவரெஸ்ட் அவருடைய நம்பிக்கைக்குரியவராக, செவிலித் தாயாக, செவிலியராக பணியாற்றினார். போனிக்சு பூங்கா என்னும் இடத்தில் இருவரும் பல மணி நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கழித்தனர். இயற்கையாகவே, சுதந்திர உணர்வும், புரட்சி செய்யும் குணமும் கொண்ட சர்ச்சில் பொதுவாக பள்ளியில் தனது கல்வி சார்ந்து மிகவும் மோசமான அடைவுகளையே கொண்டிருந்தார்.. அவர் பின்வரும் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார். அவை புனித ஜார்ஜ் பள்ளி, அஸ்காட், பெர்க்சைர்; பிரைட்டனுக்கு அருகில் உள்ள ப்ரன்ஸ்விக் பள்ளி, ஓவ், (இந்தப் பள்ளியானது இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மேற்கு சசெக்ஸில் ஆசர்ஸ்ட் உட் என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது) மற்றும் 1888 ஏப்ரல் 17 இலிருந்து ஆரோவ் பள்ளி. சர்ச்சில் ஆரோவ் பள்ளிக்கு (Harrow School) வந்த சில வாரங்களிலேயே ஆரோ துப்பாக்கி படைப்பிரிவில் சேர்ந்தார். இளமையான வின்ஸ்டன் தனது பள்ளிப்படிப்பை ஆரோ பள்ளியில் தொடங்கிய போது அவர் இஸ்பென்சர் சர்ச்சில் என்ற ‘S’ வரிசையிலேயே பெயர் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் வின்ஸ்டன் திக்கித் தடுமாறிப் பேசும் சிவப்பு முடி கொண்ட, தடித்த, குட்டையான ஒரு பையனாக இருந்தான். வின்ஸ்டன் தனது ஆரோ நுழைவு தேர்வில் கணிதத்தில் மிகவும் நன்றாக செய்திருந்தார், அதனால் அவர் அந்தப் பாடத்திற்கான பிரிவில் முதலாவதாக வைக்கப்பட்டிருந்தார். ஆரோவில் தனது முதல் ஆண்டில் அவர் வரலாற்றில் அவரது பிரிவில் சிறந்தவராக அறியப்பட்டார். வின்ஸ்டன் பள்ளியில் நுழைந்jததிலிருந்து மிகவும் தாழ் நிலை வகுப்பில் குறைவான அடைவு நிலையைக் கொண்ட சிறுவனாக இருந்தபோதும், அவர் தொடர்ந்து அந்த நிலையிலேயே இருந்தார். வின்ஸ்டனால் உயர் பள்ளியிலும் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தார். ஏனென்றால், அவரால் மரபு சார்ந்த கல்வியில் பெரிதாக எதையும் சாதிக்க இயலாது. தனது பள்ளி சார்ந்த வேலைகளில் அவர் மோசமாகச் செய்தாலும், அவர் ஆங்கில மொழியை நேசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஆரோ பள்ளியயை வெறுத்தார். அவருடைய தாயார் அவரை அரிதாகவே சந்தித்தார். வின்ஸ்டன் தனது தாயாருக்கு கடிதங்களில் தன்னை தனது பள்ளியியல் வந்து சந்திக்குமாறோ அல்லது தன்னை பள்ளியை விட்டு வீட்டுக்கு வர அனுமதிக்க வேண்டியோ கெஞ்சினார். அவரது தந்தையுடனான உறவு சற்று விலகியே இருந்தது. ஒருமுறை அவர்கள் இருவரும் திறந்த மனதுடன் பேசிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1895 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 24 ஆம் நாள் அவருடைய தந்தை வின்ஸ்டனும் கூட இளைய வயதிலேயே இறந்து விடக்கூடும் என்ற திடமான நம்பிக்கையை வின்ஸ்டனின் மனதில் விதைத்து விட்டு இறந்து போனார். இதன் காரணமாக, வின்ஸ்டனுக்கு தான் தன்னை இந்த உலகில் தனது வாழ்விற்கான அடையாளத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இவர் இங்கிலாந்து இராணுவத்தில் பணி ஆற்றும் போது பல்வேறு போர்களில் பங்கெடுத்துள்ளார். அதில் கியூபாவிலும் இந்தியாவிலும் சூடானிலும் ஓல்டுகாமிலும் நடந்த போரிலும், மேற்குப் போர்முனையில்இரண்டாம் உலகப் போரின் போது நடந்த போரிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. வின்சுடன் சர்சில் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். இவர் தான் உரையாற்றும் முன்னர் தான் பேசப்போகும் விடயங்களை பயிற்சி எடுத்துக் கொண்டே பேசும் பழக்கம் உள்ளவர். இவர் ஆற்றிய உரைகளில் சில மேற்கோள்களாகக் காட்டப்படுவது உண்டு. அதில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்: மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது. அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார். அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்.
வேத தத்துவ தரிசனங்கள் வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். "விடயங்களை நோக்கும் வழிகள்" எனப் பொருள்படும் "தரிசனங்கள்" ஆறு வகைகளாக உள்ளன. இவற்றை, உண்மைப் பொருள் பற்றிய ஆறு விதமான விளக்கங்கள் எனக் கூறலாம். இவை ஒவ்வொன்றும், பல்வேறு காலப்பகுதிகளிலும் எழுதப்பட்ட வேதப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கேயுரிய முறைகளில் ஒழுங்கு படுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தருகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவையும் நிறுவியவர்களாக அறியப்படும் ரிஷிகள், இவற்றுக்குரிய "சூத்திர நூல்களையும்" இயற்றியுள்ளார்கள். இவைகளை ஆத்திக அலலது வைதிக தர்சனங்கள் என்பர். ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு: இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: நான்கு நாத்திக அல்லது அவைதிக தரிசனங்களும் அவற்றை நிறுவியவர்களும் பின்வருமாறு: பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்) பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது. அரியாலை சிவன் கோவில் யாழ்ப்பாணம் நீர்நொச்சியந்தாழ்வு அரியாலை சிவன் கோவில் 1880ஆம் ஆண்டில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டில் சிவன் கோயில் ஒன்றை உருவாக முயன்ற முயற்சிகள் கைகூடாமல் போகவே இந்த ஆலயம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உருவாக்கப்படது. 1955ஆம் ஆண்டில் முன்னர் சிவன்கோவிலமைக்க முற்பட்ட இடத்தில் கோவிலமைக்கப்பட்டது. தினமும் மூன்றுகாலப் பூசை, பங்குனி மாதத்தில் பதினொரு திங்களும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. பாய்ம நிலையியல் பாய்ம நிலையியல் (Hydrostatics) என்பது ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் பாய்ம ஆற்றலை பற்றிய அறிவியலாகும். பாய்ம நிலையியல் என்பது ஒரு கணித அறிவியல் அணுமுறையையே சுட்டி நிற்கின்றது. திரவங்கள் சமநிலையில் நிலைத்து நிற்க வேண்டிய காரணிகளை இவ் இயல் சிறப்பாக ஆய்கின்றது. நீர்ம இயக்கவியல் நீர்ம இயக்கவியல் என்பது நீர்மங்களின் இயல்புகளை, குறிப்பாக இயற்பியல் பண்புகளையும், புற அசைவு, நகர்ச்சிப் பண்புகளாகிய வினையியல் பண்புகளையும், அறிவதும், அதன் அடிப்படையில் ஆக்கப்படும் பொறியியல் கருவிகளையும் இயக்கங்களையும், பயன்பாடுகளையும் பற்றியும் அறியும் அறிவுத்துறை ஆகும். பெனடெட்டொ காஸ்டலீ (Benedetto Castelli) என்பவரே நவீன நீர்மயியலுக்கு வழிகாட்டியாவார். இவர் காஸ்டலீ கலீலியோ கலிலியின் மாணவர் ஆவார். வவுனியா கோவில்குளம் சிவன் கோயில் அருள்மிகு சிறீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்து திருகோணமலை செல்லும் வீதியில் (ஹொரவபொத்தானை வீதி) ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வரும் இறம்பைக்குளம் சந்தியில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆசிகுளம் வீதியில் (இதற்கு சிதம்பரபுரம் வீதி மற்றும் உமாமகேஸ்வரன் வீதி என்ற பெயர்களும் உண்டு) சுமார் 100 யார் தூரத்தில் அமைந்துள்ளது. வடக்கு வீதியில் காஞ்சிச் சிவ மண்டபமும், தெற்கில் அமி்ர்தவர்சிணி தீர்த்தமும் அமையப்பெற்று சுமார் 5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வவுனியாவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் அமைதியைக் தேடிவருபவர்களுக்கு மிகச் சிறப்பான ஆலயமாக அமைகின்றது. மூர்த்தி திருநாமம் :- அகிலாண்டேசுரர் அம்பாள் பெயர் :- அகிலாண்டேஸ்வரி தலப்பெயர் :- கோயில்குளம், வவுனியா தீர்த்தம் :- அமிர்தவர்ஷிணி தலவிருட்சம் :- திருக்கொன்றை மாதம் தோறும் நடைபெறும் விழாக்களில் பெளர்ணமி, பிரதோசம், சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை), சோமவாரம் (திங்கட்கிழமை) என்பனவாகும். சிறப்பான திருமண மண்டபங்கள் இரண்டு அமைக்கப் பட்டு சைவ சமய அடிப்படையில் செய்வதற்கான வசதிகள் அமைந்துள்ளன. அனாதரவற்ற சிறுவர்களை அரவணைக்கும் முகமாக சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக சிறுவர் இல்லங்கள் அமைக்கப்பட்டு ஆலய அறங்காவலர் சபையினரின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் பேருந்தில் கோவில்குளம் சிவன் கோவில் என்ற தரிப்பில் இறங்க வேண்டும். இவ்வாலயத்தின் கோவில் மறுசீரமைப்பிற்குப்பின் சிலையை அதனிடத்தில் வைக்கும் (புனராவர்த்தனப் பிரதிஸ்டா கும்பாபிஷேகம்) திருவிழா 09 ஜூலை 2008 அன்று நடைபெற உள்ளது. 16 மே 2008 அன்று யந்திரபூசைகள் ஆரம்பமாக உள்ளது. தற்போது ஆலயத்தில் மீளமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. மிகப்பெரிய யாகத்திற்கான ஓம குண்டலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. நல்லூர் கைலாசநாதர் கோயில் நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ள சிவனுக்கு உரிய கோவில் ஆகும். யாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கை ஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும், அதன் அயலிலே முருகன் கோயிலையும், கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் தெற்கிலே கைலாசபிள்ளையார் கோயில், கைலாசநாதர் கோயில், கைலைநாயகி கோயில் ஆகியவற்றைக் கட்டினார் என அறியப்படுகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் மூல நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் கைலாயமாலை இக் கோயில் தொடர்பில் எழுந்த ஒரு நூல் என்பது குறிப்பிடத்தக்கது. வேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. நாடோறும் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. மகோற்சவங்கள் பிள்ளையாருக்கு சித்திரையிலும் சிவனுக்கு ஆனியிலும் நடைபெறுகின்றன. இ. பத்மநாபன் இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பி. ஆகஸ்ட் 24, 1941, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை) ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற இவர், பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்துசக்தி. வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்தவர். தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் இப்பொழுது லண்டனில் வசித்துவருகிறார். பத்மநாப ஐயரின் துணைவியார் சொர்ணவல்லி ஒரு இலக்கிய ஆர்வலர். பத்மநாப ஐயரின் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கிவந்த அவர் இடையில் மரணித்துவிட்டார். அவரது இறப்புக்குப் பின்னும் பத்மநாப ஐயர் தனது இலக்கியப்பணியைத் தொடர்கிறார். சொர்ணவல்லி எழுதிய "இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்" என்ற நூலும் பத்மநாப ஐயரால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தந்தையுடனும் கல்வி, தொழில் நிமித்தம் பல இடங்களிலும் வசிக்க நேர்ந்ததில் இலக்கிய நேசிப்பாளர்கள் பலரை நண்பர்களாக்கியும் கொண்டார். இவர், தரமான நூல்களும் இதழ்களும் ஈழத்து வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலும், ஈழத்துப் படைப்புக்கள் நூல்வடிவம் பெற வேண்டும் என்பதிலும் அறுபதுகளிலிருந்து தொடர்ந்து அக்கறை செலுத்திவருகின்றார். தமிழியல் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். "கண்ணில் தெரியுது வானம்" முதலிய குறிப்பிடத்தக்க நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் பங்காற்றியுள்ளார். காலச்சுவடு, நூலகம் திட்டம் போன்றவற்றின் ஆலோசகராகவும் இருக்கிறார். அச்சிடலின் முன்மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டுவந்ததில் ஓவியர் மார்க் அவர்களின் 'தேடலும் படைப்புலகமும்' (1987) நூலாகும். வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும் இது கருதப்பட்டது. மேலும், 31 கவிஞர்களின் 82 சமகால அரசியல் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'மரணத்துள் வாழ்வோம்' (1985) எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்துள்ளார். ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது. நூலகக் கனவின் ஒரு படியாகவே, ஈழத்து நூல்களை மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டத்தின்படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தார். ஈழ நூலகத் திட்டத்தின் அறங்காவலர் சபையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வெளிவரும் "காலம்" சஞ்சிகை பத்மநாப ஐயரின் பணிகளைக் கௌரவிக்குமுகமாகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோட்டை முனீசுவரர் கோவில் கோட்டை முனீசுவரர் கோவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் டச்சுக் கோட்டைக்குக் கிழக்கே அமைந்திருக்கின்றது. இது "முனியப்பர் கோயில்" எனவும் அழைக்கப்படுகின்றது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் ஒல்லாந்தர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. தினமும் மூன்று காலப் பூசை நடைபெறுகின்றது. ம. வே. திருஞானசம்பந்தம் ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளை (1885 - 1955) யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். "கோபால நேசரத்தினம்" என்னும் சமூக புதினத்தை எழுதியவர். திருஞானசம்பந்தபிள்ளை மேலைப் புலோலியைச் சேர்ந்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் புதல்வர். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மருகர். சட்டத்தரணி வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோரின் சகோதரர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ஆரம்ப கால ஆசிரியர். யாழ் இந்துக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டு தொடக்கம் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, தமிழும் சைவமும் அங்கு கற்பித்தார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து "உலகம் பலவிதம்" என்ற நெடுந்தொடரை எழுதினார். மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து "பாலபாடங்கள்" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அரிச்சந்திர புராணம், மயானகாண்டம், நளவெண்பா, கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும். "சரஸ்வதி விலாச சபை" (1914) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக சபையில் நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார். தமிழை மரபு முறை நின்று கற்றவர். அவர் எழுதிய "மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்" அவரின் பாண்டித்தியத்திற்கு எடுத்துக்காட்டு. மூன்று நாவல்களை எழுதி வெளியிட்டார். இவற்றில் கோபால நேசரத்தினம் (1927) அக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பேசப்பட்ட நாவலாகும். ""யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்கத்தையும், பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த மக்களையும் அவர்களின் வாழ்வியல்களையும் கூர்ந்து நோக்கி அவற்றைச் சுவைபடக் கதை வடிவில் அமைத்திருந்தார். கிறிஸ்தவ சமயப் பின்னணியிலே சன்மார்க்கச் சீவியத்தை வலியுறுத்தும் வகையில் இவரின் நாவல் அமைந்திருந்தது."" சியேரா லியோனி சியேரா லியோனிக் குடியரசு ("Republic of Sierra Leone") என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யாவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களிற்காகப் போரிட்ட அமெரிக்க ஆபிரிக்கர்களிற்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களிற்கு 38 ஆண்டுகளும் பெண்களிற்கு 42 உம் ஆகும் மேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலியோனியில் தான் ஐரோப்பியர்கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள். 1462 இல் போத்துக்கீசியக் கடலோடி பேதுறு டா சின்ரா Pedro da Cintra இப்போதைய பிறீடவுண் துறைமுகத்தை வரைபடத்தில் குறித்து அதை சிங்க குகைகள் எனப் போத்துக்கீசிய மொழியில் பொருள்படும் "பீடோறோ டா சின்றா" (Pedro da Cintra) எனப்பெயரிட்டான். 1652 ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் () கொண்டுவரப்பட்டனர். 1700களில் தென் கலிபோர்னியாவிலும் ஜார்ஜியாவிலும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகள் சீராலியோணியில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இவர்களில் நெற்பயிற்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 1787 இல் இலண்டனில் ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை விடுதலை மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் () இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 15 மே, 1787 இல் ஏழைக் கறுப்பினத்தவர்களும் வெள்ளைப் பெண்களும் பிரித்தானியவர்தர்களுடன் வந்து சீராலியோனிக் கடற்கரையில் காலடிவைத்தனர். இது இலண்டனில் உள்ள செயின் ஜாஜ் பே கம்பனி ஊடாக பொருளாதார ரீதியாக இலண்டனில் வசதியுடன் இருக்கும் எண்ணக்கருவுடன் செய்யப்படது. இவ் ஏழைக்கறுப்பினத்தவர்கள் அமெரிக்க சுதந்திரப் போரில் பிரித்தானியாவிற்காகப் போரிட்டால் சுதந்திரம் வழங்கப்படும என வாக்குறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர். முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும், அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள். தாமஸ் பீட்டர் சீராலியோனிக் கம்பனியைத் தலையிட்டு 2000 கறுப்பின ஆதரவாளர்களை நோவா ஸ்கொட்டியாப் பகுதியில் குடியேற்றினார்கள். நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள். இதன் பின்னர் 1792 இல் பிறீடவுணில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள். இக்குடியேற்றமானது தாமஸ் பீட்டரினால் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அடிமைகளுடன் சேர்த்து பிரித்தானியாவின் மேற்கு ஆபிரிக்காவின் முதலாவது காலணித்துவ இடமாகியது. 27 ஏப்ரல் 1961 இல் சேர் மில்டன் மார்காய் (Sir Milton Margai) ஐக்கிய இராச்சியத்தில் இல் இருந்து சுந்தந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்தத் திகதியானது (தேதியானது) 1898 இல் ஐக்கிய இராச்சியத்திற்கு சட்டத்திற்கு எதிரான முதலாவது எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற திகதியைக் குறிப்பதாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்கள் மூலம் அரசியல் தீர்மானிக்கபடும். அரசியற் தலைவராக ஜனாதிபதி விளங்குகின்றார். சமீபத்திய தேர்தல் மே 2002 இல் இடம் பெற்றது. பாராளுமன்றத்தில் 124 ஆசனங்கள் உண்டு, இதில் 112 ஆசனங்கள் ஜனாதிபதித் தேர்தலுடன் கூடிய ஓரே நாளில் இடம்பெறும் தேர்தலில் 112 ஆசனங்கள் நிரப்பப்படும். மிகுதி 12 ஆசனங்களும் 12 நிர்வாக மாவடங்களின் தலைவர்கள் ஆவர். சீராலியோணி உலகின் மிக வறிய நாடாகும். இங்கே ஏழை பணகாரர்களிற்கிடையே மிகப் பெரும் வித்தியாசம் காணப்படுகின்றது. தெளிவத்தை ஜோசப் தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார். "காலங்கள் சாவதில்லை" என்பது இவருடைய முக்கியமான நாவல். "நாமிருக்கும் நாடே" சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது "குடை நிழல்" என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார். கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 5:36-40, மத்தேயு 11:17, மாற்கு 2:18-22 இல் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை எனக்கேட்டபோது இயேசு அதனை நியாப்படுத்தி சொன்ன உவமையாகும். இது கதை வடிவில் இல்லாமல் உறைநடைவடிவில் அமைந்த உவமையாகும். மேலும் இது விவிலியத்தில் சேர்க்கப்படாத நற்செய்தி நூலான தோமையாரின் நற்செய்தியிலும் காணப்படுகிறது (தோமஸ் 104 மற்றும் 47). எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அதுபோலபப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும். தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில்"பழையதே நல்லது" என்பது அவர் கருத்து. பழையவை புதியவற்றுடன் சேரமுடியாது என்பது இதன் கருத்தாகும். அதாவது இங்கு புதிய திராட்சை மது அல்லது புதிய துணி கிறித்தவமாகும். அது பழைமையான இசுரவேலில் இணையாது என்பதாகும். பிற்குறிப்பு: இறைவனின் கட்டளைப்படி, தாம் எதிர்பார்த்த இறைமகன் இயேசுவின் வருகையின் பின்னர் இஸ்ரவேலர், கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றினார்கள். அவர்களே கிறிஸ்தவர்களின் முன்னோடிகள் ஆவார். (ஆதித்திருச்சபை) முன்னேசுவரம் முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் ("Munneswaram") இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளது. முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகா சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இங்குள்ள காளி கோவிலில் பௌத்தர், கத்தோலிக்கர்களும் வழிபடுகின்றனர். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சிங்களவரும், தமிழரும் கலந்து வாழ்கின்றனர். வேறெந்த ஆலயத்திலும் இல்லாதவாறு இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமஸ்கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும். இத்திருவிழாக்களுக்கு கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மிகுந்த பக்தியோடு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும். இறைவன் இரவலர் கோலம் பூண்டு, தாருகாவனத்து முனிவர்களின் அகங்காரத்தை அடக்கிய அருள் வண்ணத்தைச் சித்தரிக்கும் பொருட்டு பிட்சாடணோற்சவத் திருவிழா இடம்பெறுகின்றது. இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாஷாடண மூர்த்தி விக்கிரகம் ஈடிணையற்ற கலையழகைக் கொண்டு விளங்குகின்றது. கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு இறைவன் திருவுலா வருவார். முன்னேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் மற்றொரு உற்சவமாகிய அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும். இது ஒரு சிவாலயமாக இருக்கின்ற போதிலும், சக்திக்கு இத்துணை முக்கியத்துவமளிப்பது குறிப்பிடத்தக்கது. நகுலேச்சரம் நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து. முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது. 9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம். போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுக நாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு ஆறுகாலப் பூசைகளும் நித்திய கிரியைகளாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. இலங்கையில் 1980களில் ஆரம்பமான உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன. 1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் ஆக்ரமித்த சமயத்திலிருந்து பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி அனுமதிக்கப்படவில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகௌரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின.பொதுமக்களும் கொல்லப்பட்டனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்டது. ஆலய ஆதீனகர்த்தா நகுலேசுவரக் குருக்களினது அயராத முயற்சியின் பயனாக 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு தை மாதம் சிவஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் பொறுப்பில் ஆலயத்தில் குடமுழுக்கு இடம்பெற்றது. நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள். மற்றும் பஞ்ச ஈஸ்வரமாக முன்னேச்சரமும் சேர்த்து அழைக்கப்படுகிறது. செ. யோகநாதன் செ. யோகநாதன் (அக்டோபர் 1, 1941 - சனவரி 28, 2008) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனை­வுகள், கட்­டு­ரைகள், மொழிப்­பெ­யர்ப்­புகள், குழந்தை இலக்­கியம் என தொன்னூறுக்கும் மேற்­பட்ட நூல்­களை இவர் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்­வாகச் சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். மார்க்­சிய சித்­தாந்­தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதி­னாறு ஆண்­டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இறுதியாக கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். ஈழ­கே­ச­ரியின் மாணவர் மல­ருக்கு கவி­தைகள், கட்­டு­ரைகள் எழு­திப் பரி­சுகள் பெற்­றவர். 1962 இல் சிற்­பியின் கலைச்செல்வி இதழில் இவ­ரு­டைய முதற்­கதை வெளியானது. இதனை அடுத்து இவரது "மலர்ந்த நெடு நிலா" என்ற குறும் புதினமும் கலைச்செல்வி வெளியிட்டது. பேராதனைப் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்த 1964 ஆம் ஆண்டில் இவரது பத்துச் சிறு­க­தைகளைக் கொண்ட "யோகநாதன் கதைகள்" சிறுகதைத் தொகுதி வெளி­வந்­தது. அஞ்­ச­லி இதழில் வெளிவந்த ஒளி­ ந­மக்கு வேண்டும் குறு­நாவல் 1974 இல் நூலாக வெளிவந்து இலங்கை சாகித்­திய மண்­டலப் பரி­சைப் பெற்றது. பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் தமிழக இதழ்களில் நிறைய சிறு­க­தை­க­ள், புதினங்கள், கட்­டு­ரை­க­ள் எழுதினார். செ. யோக­நாதன் இந்­திய மத்­திய அரசின் பரிசு உட்­பட தமி­ழக அரசின் விரு­தினை நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார். உயர் இலக்­கிய விரு­தான இலக்­கியச் சிந்­தனை விரு­தி­னையும் நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார். இலங்கை சாகித்­திய விருது நான்கு தடவை கிடைத்­துள்­ளது. 1994 இல் இந்த நூற்­றாண்டின் ஈழத்துச் சிறு­க­தைகள் என்று ஒவ்­வொன்றும் 650 பக்­கங்கள் கொண்ட வெள்ளிப் பாத­சரம், ஒரு கூடைக் கொழுந்து ஆகிய இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார். எம். பௌசர் எம். பௌசர் ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் மூன்றாவது மனிதனின் ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மூன்றாவது மனிதனுக்காக குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே. முத்துசுவாமி தீட்சிதர் முத்துசுவாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். கருநாடக இசை மும்மூர்த்திகளும் தமிழிசை மூவரும் வேறானோர். இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது. தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வேதம், மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவகள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார். தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றார். இவரின் குரு மிக்க மகிழ்ந்து "அன்பா இனி தமிழகம் செல். திருத்தணி முருகனை உபாசி. முருகன் அருள் பெற்று நாத வித்தையைப் பரவச் செய்" என நல் வாக்களித்தார். சில நாட்களில் இறைவன் அடி சேர்ந்த தம் குருவின் உடலுக்கு ஹனுமான் கட்டடத்தில் சமாதி கட்டி வைத்து, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு தீட்சிதர் மணலிக்குத் திரும்பினார். மணலிக்குத் திரும்பிய தீட்சிதர், பின் குருவின் சொற்படி திருத்தணி சென்றார். சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிக்க மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து " முத்துஸ்வாமி வாயைத் திற" என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே மயில் மேல் ஏறிச் செல்லும் முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், சுப்பிரமணிய சுவாமியின் அருளால் கானவாக்கு உதித்து நாத உருப்படிகளை இயற்றும் திறனையும் பெற்றார். இவருடைய முதல் கிருதி மாயாமாளவகௌளையில் ""சிறீ நாதாதி குருகுஹோ ஜயதி"" என்பதாகும். தன்னுடைய பாடல்களில் "குருகுஹ" என்ற முத்திரையைக் கையாண்டார். இவரது கிருதிகள் நாளிகேர ரஸத்திற்கு ஒப்பானவை. பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார். தீட்சிதர், சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன. தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் ""வாதாபி கணபதிம்"" (ஹம்சத்வனி) ""சிறீமகா கணபதி"" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை. சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் ""ஜம்பூபதே"" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார். தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை. மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணபடும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும். அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார். தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன. ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார். தீட்சிதரின் கிருதிகள், இசையில் ஆரம்பப் பயிற்சி பெறும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் சபையில் பாடும் வகையிலும் அமைந்துள்ளன. குகன் திருவருளால் அழியாப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த ""மீனலோசனி பாப மோசனி"" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து, இரு கைகளையும் தலை மேல் குவித்து "சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே" என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது. நுாற்றி எண்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த சம்பவம் தீபாவளியன்று நடந்தது. எட்டயபுரத்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். எட்டயபுரம் மன்னர் குமாரவெங்கடேச பூபதி, தீபாவளியன்று தன் சமஸ்தானத்துப் பட்டத்து யானைக்கு காலையில் 'கஜ' பூஜை செய்வது வழக்கம். பாகன், எட்டயபுரத்திலுள்ள பெரிய தெப்பக்குளத்தில் இருக்கும் யானைப்படித்துறைக்கு அழைத்து சென்றான். வழக்கமாக நீரில் இறங்கி துதிக்கையால் நீர் பீய்ச்சி விளையாடும் காங்கேயன் யானை, அன்று நீரில் இறங்க மறுத்தது. பாகன் நீரில் இறங்கக் கட்டளையிட்டான். காங்கேயன் நீரில் இறங்காமல் வெறித்துப்பார்த்தவாறு நின்றது. பின், குளத்தில் கிழக்குப் பக்கமாக ஓடி சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டு பிளிறியது. பாகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? இது அபசகுனமாகுமே! அதுவும் இன்று தீபாவளி. கவலையுடன் பாகன் ஓட்டமும், நடையுமாக அரண்மனை சென்று, அரசரிடம் நடந்ததைக் கூறினான். திடுக்கிட்ட மன்னர் குமாரவெங்கடேச எட்டப்ப பூபதி 'இது கெட்ட சகுனமாகத் தெரிகிறதே; என் சமஸ்தானத்துக்கோ என் மகளுக்கோ ஏதேனும் விரும்பத்தகாதது நடக்கப் போகிறதோ' என்று புலம்பினார். மனைவியின் அறிவுரை :மன்னரின் மனைவி... 'ராஜா, பதட்டப்பட வேண்டாம்; நமது சமஸ்தானத்து வித்வான், உங்கள் குரு முத்துசுவாமி தீட்சிதரிடம் போய் இது பற்றி கேளுங்கள்' என்றவுடன் 'நல்ல யோசனை!' என்ற மன்னர் எட்டையபுரம் மாட வீதியில் கடைசி வீட்டில் தங்கி இருந்த தீட்சிதரைப் பார்க்க, பல்லக்கை தவிர்த்து நடந்து வந்தார். தீபாவளித் திருநாள் என்பதால் சமஸ்தான வித்வான், முத்துசாமி தீட்சிதர், அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து மாடத்தில் இருக்கும் காசி அன்ன லட்சுமிக்கு விளக்கேற்றி, அவர் அம்பாள் மேல் இயற்றிய பாடல்களை ராகத்துடன் சிஷ்யர்களை பாடச் சொன்னார். சிஷ்யர்கள் பாடிக்கொண்டிருந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் கண் மூடி தியானத்திலிருந்தார். அப்போது பதட்டத்துடன்தீட்சிதர் முன் நின்றார் மன்னன், எட்டப்பன்.மன்னருக்கு ஆறுதல் கண்மூடி தியானத்திலிருந்த தீட்சிதர் மெல்ல கண் திறந்து, எட்டப்ப மன்னரை சற்று நோக்கினார். எட்டப்ப மன்னர் தேடி வந்த நோக்கம் ஒரு நொடியில் தீட்சிதருக்குப் புரிந்தது. 'எட்டப்ப மன்னரே..! உன் மனக்குழப்பம் அறிகிறேன். உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ, உனக்கோ எந்தவித தீங்கும் நேரா; பட்டத்து யானை அரண்மனைக்கு திரும்பி வரும்' என்றார். மனம் லேசான மன்னர், மனக்கவலை நீங்கி அரண்மனைக்கு திரும்பினார்.பாகனும் மன்னரிடம் 'பட்டத்து யானை அமைதியாகி கொட்டடிக்கு வந்து விட்டது' என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினான். தீட்சிதரின் கடைசி நிமிடம் :மன்னர் சென்றவுடன் முத்துசுவாமி தீட்சிதர் தன் சிஷ்யர்களிடம்... 'இன்று சதுர்தசி, தேவிக்கு உகந்த நாள். எனவே தேவியின் மீதான கீர்த்தனங்களை பாடுங்கள் என்று கூற, சிஷ்யர்கள் தேவி மீதான 'மீனாஷி மேமுதம் தேஹி' என்று பாடினர். சுருதியின் அனுபல்லவியில்'மீனலோசனிபாசமோசனி'மானலோசனிபாசலோசனி என்ற வரியை மீண்டும், மீண்டும் பாடச் சொன்ன தீட்சிதர், கண்மூடி கேட்டுக் கொண்டே, வீட்டின் மாடத்தில் அன்னலட்சுமி முன் ஏற்றிய விளக்கின் ஜோதியோடு இரண்டறக் கலந்தார். தீட்சிதர் மறைவு எட்டப்ப மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த எட்டப்பர், விரைந்து தீட்சிதர் இல்லம் சென்று உடலைப் பார்த்து, 'உனக்கோ, உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ ஒன்றும் நேராது என்று கூறினீர்களே... உங்களை நான் மறந்து விட்டேனே...' என்று அழுதார். மன்னர் எட்டப்பர், தீட்சிதரின் உடலை தகுந்த வைதீக முறைப்படி, எட்டயபுரம் பஸ் நிலையம் சமீபம் இருக்கும் 'அட்டக்குளம்' கரையில் அடக்கம் செய்தார். பின் ஒரு சமாதி கட்டி வழிபாடு செய்தார். தற்போது நல்ல பொலிவுடன் இச்சமாதி, மண்டபமாக உள்ளது.சாஸ்திரிய சங்கீதம் கற்பவர்கள், ஒரு முறையேனும் அங்கு சென்று, தீட்சிதரின் சமாதி யின் முன் அமர்ந்து, இரண்டு நிமிடம் அவரின் கீர்த்தனையைப் பாடி, மானசீகமாக ஆசீர்வாதம் பெற வேண்டும். அமிர்தவர்ஷினியும் ஆனந்தமழையும் முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரம் வந்தது தனிக்கதை. அவரது தம்பி பாலுசாமி தீட்சிதருக்கு (எட்டயபுரம் சமஸ்தானத்தில் வித்வானாக இருந்தார்) திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார் எட்டயபுரம் மன்னர். இதை அறிந்த முத்துசாமி தீட்சிதர் தம்பியைக் காணவும், திருமணத்தில் கலந்து கொள்ளவும், எட்டயபுரம் வந்தார். வரும் வழியில் மழையின்றி கரிசல் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்திருந்ததையும், நீர் நிலைகள் வறண்டு இருந்ததையும் கண்டு வருந்தினார் முத்துசாமி தீட்சிதர். இதனை தொடர்ந்து 'ஆனந்த மருதார்கர்ஷினி! அம்ருதவர்ஷினி!'என உருகிப் பாட கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னன், முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய அரண்மனையின் வித்வானாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதனால் தான் எட்டயபுரத்தில் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். காசியில் தீட்சிதர் இருக்கும் பொழுது, கங்கையில் ஒரு வீணை கிடைத்தது. அதன் யாழி வழக்கத்துக்கு மாறாக மேல் நோக்கி இருந்தது. மேலும் அதில் ராமா என்ற சொல் செதுக்கப்பட்டிருந்தது. முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகள் யாவும் சமஸ்கிருத மொழியிலேயே அமைந்துள்ளன. கிருதிகள் பலவற்றுள் இராகத்தின் பெயர் புகுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். இவருடைய தொகுதிக் கீர்த்தனைகள் வருமாறு: கூகிள்பீடியா கூகிள்பீடியா ஆனது ஓர் இலவசமான பயர்பாக்ஸ் நீட்சியாகும். இது கூகிள் தேடலை மேற்கொள்ளும் போது அதே விருப்பமொழியிலான விக்கிப்பீடியாவிலும் தேடல்களை மேற்கொள்ளும். சொத்து கணக்கியல் மற்றும் வணிகத்தில் சொத்து எனப்படுவது ஒரு தனிநபரால் அல்லது சேர்ந்தியங்கும் ஒரு குழுவினால் வருமானத்தை ஈட்டிதரும் விதமாக வைத்திருக்கும் அனைத்து வளங்களும் சொத்து (Asset) எனப்படும்.சுருக்கமாக சொல்லின் காசும்,காசாக மாறக்கூடிய் வளங்களும் சொத்து எனலாம். பொருளியலில் செல்வத்தினை(wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும். சொத்து அவற்றின் திரவதன்மை, வாழ்வு காலத்தை பொறுத்து வகைபிரிக்கப்படும்.ஐந்தொகையில் நீண்ட ஆயுளினை பொறுத்து மேலிருந்து கீழாக பட்டியல் படுத்தப்படும்.கீழே திரவதன்மை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. உடனடியாக காசாக மாறக்கூடிய தன்மையினை உடைய அதாவது திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் நடைமுறை சொத்தினுள் அடங்கும்.இவை வியாபார நடவடிக்கையினால் இவற்றின் பெறுமதி கூடிக்குறையலாம்.5வகையான பிரிவுகளாக காணப்படும் அவைகள், 1.காசு- இதுவே அதீதிரவத்தன்மை வாய்ந்த சொத்தாகும்.இவற்றில் கையிலுள்ள காசு,வங்கிவைப்புக்கள்,காசோலைகள் என்பன உள்ளடக்கப்படும். 2.குறுங்கால மூதலீடுகள் 3.கடன்பட்டோர் 4.கையிருப்பு 5.முற்பண செலவுகள்- எதிர்கால நுகர்விற்கென கொடுக்கப்பட்டுள்ள பணத்தினை குறிக்கும். இவை தொழிற்படும்மூலதனம்(working capital) எனவும் அழைக்கப்படும். நீண்ட காலத்தின் பின்னர் பணமாக மாறும் தன்மையினை கொண்டிருக்கும் முதலீடுகள் நீண்டகால முதலீடுகள்(Long-term investments) எனப்படும்.பிணைகள்,முறிகள,வங்கி நிலையான வைப்பு,காப்புறுதி,கடன்பத்திரம் என்பன இவற்றிலடங்கும். வியாபார நிறுவனத்தில் நீண்ட பாவனை (ஒரு வருடத்திற்கும் மேலே) உடையதும் இலாபமீட்டக்கூடியதுமான வளங்கள் நிலையான சொத்து அல்லது நடைமுறையல்லா சொத்து எனப்படும்.இவற்றில் நிலம்,கட்டிடம்,இயந்திரங்கள்,தளபாடம்,கருவிகள் என்பன உள்ளடக்கப்படும்.இவற்றில் நிலம் தவிர்ந்த எனையவை பெறுமதி தேய்விற்கு உட்பட கூடியவை இதனால் ஐந்தொகையில் தேய்வின் பெறுமதி கழித்த பின்னரான பெறுமதியே காட்டப்படும். இவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,நன்மதிப்பு என்பன உள்ளடக்கப்படும். ஆதித்த கரிகாலன் ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான். சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான். என்று தெரிவிக்கின்றன. இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன். வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும். இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார். "இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது." பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன. இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது. எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன. சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான். இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை தெரிவித்ததின் முடிவுகள். பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது. அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே, பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15 ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே. எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல. ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969 உத்தம சோழன் அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 964 - 965ல் தொடங்கியிருக்க வேண்டும். இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும். மெய்யெழுத்து தமிழ் அரிச்சுவடியில் "க்" தொடங்கி "ன்" வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை. மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன. சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:- தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:- ! எழுத்து!! பெயர் !! பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு !! சொல் தமிழ் இலக்கணப்படி, தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வரமாட்டா. ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு. க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும். சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், சகர மெய்யும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என நன்னூலில் கூறப்பட்டுள்ளது. வகர மெய்யானது உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும். ஞகர மெய்யானது ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவற்றோடு அகரத்தோடும் சேர்ந்து ஞகர மெய் மொழி முதலாகும் எனப் பவணந்தி நன்னூலில் கூறுகின்றார். யகர மெய்யானது ஆகாரத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். எனினும், யகர மெய்யானது அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று பவணந்தி நன்னூலில் கூறுகின்றார். ஆயினும், அ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் மொழி முதலாகுவதற்குக் காட்டப்படும் எடுத்துக்காட்டுகள் வடசொற்களாக இருப்பதைக் காரணங்காட்டி, பவணந்தியின் கூற்றை மறுப்பதுண்டு. பக்தி நெறி இறையிடம் அன்பு மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு தமிழ் நாட்டில் தோன்றிய சமய நெறி பக்தி நெறி ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. கூகிள் காலண்டர் முன்னர் CL2 என்றழைக்கப்பட்ட கூகிள் காலண்டர் இணையப் பிரயோகம் கூகிளின் ஓர் இலவச சேவையாகும். இது ஜிமெயில் தொடர்பிலுள்ள பயனர்களின் பகிரப்பட்டு (உங்களின் விருப்பபடி) பார்வையிடக்க் கூடிய இணைய நாட்காட்டியாகும். இது 13 ஏப்ரல் 2006 முதல் வெள்ளோட்டத்தில் உள்ளது. பயனர்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இல்லாவிடினும் ஆகக்குறைந்தது கூகிள் கணக்கொன்றை வைத்திருத்தல் வேண்டும். ஏஜாக்ஸ் (AJAX) இடைமுகம் இதிலுள்ளவற்றைப் பார்க்கவும் வேண்டிய மாற்றங்கள் செய்து பக்கத்தை மீண்டும் புத்துத்துணர்ச்சி செய்யாமல் பல்வேறு பட்ட பார்வையில் எடுத்துக்காட்டாக வாரப்பார்வை, மாதப் பார்வை, அஜண்டா (agenda) போன்றவற்றைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. பயனர்கள் இதில் இலகுவாக சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம் எடுத்துக்காட்டாக "காலை திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லல்", எல்லா நிகழ்வுகளிற்கும் பயனர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எல்லா நிகழ்வுகளுமே இணையத்திலேயே சேமிக்கப்படுவதால் வன்வட்டு (ஹார்டு டிஸ்க்) பழுதடைந்தாலும் எந்தவொரு தகவலும் இழக்கப்படுவதில்லை. இந்தப் பிரயோகம் மைக்ரோசாப்ட் அவுட்லுக் காலண்டர் கோப்புக்களையும் ஐகால் காலாண்டர் கோப்புக்களையும் இப்பிரயோகத்திற்கு இறக்கும் வசதிவாய்ப்புள்ளது. பாவனையாளர்களிற்குப் பல்வேறு பட்ட அனுமதியையும் வழங்கி கூகிள் காலண்டர்கள் பகிரப்படுகின்றன. கூகிள் காலண்டர் ஜிமெயிலுடன் சேர்ந்தியங்கும் பொழுது meeting அல்லது dates and times போன்ற சொற்கள் வரும்போது தானகவே காலண்டருடன் சேர்த்துக் கொள்ளுவதற்கான இணைப்பும் அருகில் காட்டப்படும். எனினும் இந்த வசதி எல்லாப் பாவனையாளர்களிற்கும் இன்னமும் கிடைக்கவில்லை. தற்சமயம் கணினிகளில் மைக்ரோசாப்ட் அவுட்லுக்குடனும் நகர்பேசிகளில் பிளக்பெரி (BlackBerry), உள்ளங்கைக் கணினி (Palm), Pocket PC போன்றவற்றுடன் ஒத்தியங்குகின்றது. இதன் பிரதான போட்டியாளரக யாகூ காலண்டர் விளங்குகின்றது. அநேகமான நாடுகளில் குறுஞ்செய்திகள் ஊடகவும் ஞாபகமூட்டும் வசதிகள் உண்டு. இலங்கையில் ரிகோ மற்றும் டயலாக் ஆகிய நகர்பேசிகளில் இந்த வசதியுண்டு . இது ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆதலினால் அநேகமாக எல்லா இயங்குதளங்களிலும் இணைந்தியங்குகின்றது. இது ஓர் புதிய பிரயோகம் என்பதால் பயர்பாக்ஸ் 1.0+, இண்டநெட் எக்ஸ்புளோளர் 6, சவாரி 2.0.3 உலாவிகளில் இயங்குகின்றன. அநேகமாக ஏனைய எல்லா உலாவிகளிலும் பக்கங்களை சரியாகக் காட்டுவதில்லை. யாகூ! நாட்காட்டி யாகூ காலண்டர் உலகில் மில்லியன் பாவனையாளர்களிற்கு மேல் பாவிக்கும் ஓர் இணைய சேவையாகும். இதற்குப் போட்டியாக கூகிள் காலண்டர், ஹொட்மெயில் ஆகியவை விளங்குகின்றன. கூகிள் டாக்ஸ் கூகிள் டாக்ஸ் கூகிளின் ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆகும். இது பயனர்களை இணைமூடாக விரிவுத்தாளை உருவாக்கவும் நிகழ்நேரத்தில் மற்றவர்களுடன் பகிரவும் பயன்படுகின்றது. கூகிள் விரிவுத்தாள்கள் சேவை ஜூன் 6 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்றவகையில் மட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கே அளிக்கப்பட்டபோதும் பின்னர் எல்லா கூகிள் பயனர்களிற்கும் அளிக்கப் பட்டது. ரைட்லி என்று முன்னர் அறியப்பட்ட சேவையும் சேர்க்ககபட்டு அக்டோபர் 10 கூகிள் கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் பின்னர் இச்சேவையானது கூகிள் டாக்ஸ் என இப்போது அறியப்படுகின்றது. டாக்ஸ் இணையமூடாக உருவாக்கக் கூடியதும் மின்னஞ்சலூடக அனுப்பக் கூடியதும் ஆகும். இவை பல்வேறுபட்ட கோப்பு வடிவங்களில் சேமிக்கப் படக் கூடியவை. வழமையாக இவை கூகிள் வழங்கியிலேயே சேமிக்கப்படும். திறக்கப்பட்ட ஆவணங்கள் தரவுகளை இழக்காவண்ணம் தானாகவே சேமிக்கப்படும். விக்கிபீடியாவைப் போன்றே பலரும் சேர்ந்து ஓர் கூட்டு ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதோடு அவை பகிரவும் படலாம். அவை பல்வேறுபட்ட பயனர்களால் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுத் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல் செய்யப்படலாம். ஒபேரா சவாரி உலாவிகளைத் இற்றை வரை ஆதரிக்காது. கூகிள் நிறுவனம் தமது கூகிள் டாக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. ஆவணம் HTML: ஊடாக, சாதாரண எழுத்துக்களாக, RTF, மைக்ரோசாப்ட் வேட், ஓப்பிண் டாக்கியூமண்ட்(Open Document), ஸ்ரார்(ஸ்டார்) ஆபிஸ் கோப்புக்களாகச் சேமிக்கப் படலாம். கூகிள் விரிதாட்கள் மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற மாற்றுமென்பொருட்களில் உள்ள பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது. பிரத்தியேகமானதும் பாதுகாப்பான விடயங்களுக்கான வசதிகள் கூகிள் விரிதாட்கள் இன்னமும் கிடையாது. இணையத்தில் பாதுகாப்பான கோப்புபரிமாற்றத்தை இன்னமும் ஆதரிக்காது (https). இது ஒபீரா போன்ற உலாவிகளையும் ஆதரிக்காது. இதன் தற்போதயை பதிப்பில் வரைபடங்களைப் போட்டுக் காட்டும் வசதி கிடையாது. ஆபிரகாம் ஆபிரகாம் ( ) என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையர் மூவரில் முதலாமவர் ஆவார். ஆபிரகாம் என்ற பெயருக்கு "எண்ணற்ற மக்களின் தந்தை" என்பது பொருள். இவருடைய வாழ்க்கை பற்றி ஆபிரகாமிய சமயங்களின் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களில் விசுவாசத்திற்கு ஓர் உதாரணமாக இவர் திகழ்கிறார். இவர் கிறிஸ்தவம், யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல் 11:26-25:18 மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறன. யூதம், கிறித்தவம், இசுலாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை "விசுவாசத்தின் தந்தை" என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும். விவிலியத்தின்படி ஆபிரகாமின் காலம் கி.மு. 2000 களில் எனக் கணிக்கலாம். ஆயினும் இது அக்காலத்தில் தொல்பொருலாளார்களால் கணிக்கப்படுவதில்லை. விவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் 11:26–25:10 முடிய ஆபிரகாமின் வாழ்வு விவரிக்கப்படுகின்றது. நோவாவின் பத்தாம் வழிமரபினரான தேராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான். ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தேராகிற்கு முன்பே இறந்தார். ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார். தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார். ஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறுசெய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும்; அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த கருவாலி மரத்தை அடைந்தார். அங்கே கானானியா் வாழ்ந்து வந்தனா். கடவுள் ஆபிராமுக்கு தோன்றி "உன் வழிமரபினா்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்" . என்றார். எனவே அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார். அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், அவர் அழகானவராக இருப்பதால் எகிப்தியர் தன்னைக் கொன்று அவரைக்கவர்ந்திடாதவாறு இருக்க அவரை தன் சகோதரி எனச் சொல்லச்சொன்னார். அவர்கள் எகிப்தைச் அடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை கண்ட எகிப்திய பார்வோனின் மேலதிகாரிகள் அவரை பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஈடாக ஆபிராமுக்குப் பார்வோன் ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான். ஆனால் ஆண்டவர் சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். பார்வோன் ஆபிராமை அழைத்து நீ அவள் உன் மனைவி என்று ஏன் சொல்லவில்லை? நீ சகோதரி என்று சொன்னதால் தானே அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன். இப்பொழுதே நீ நாட்டை விட்டு புறப்படு எனக்கூறிய பார்வோன் ஆபிராமையும் அவர் மனைவியையும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் நாட்டைவிட்டு அனுப்பிவிட்டான். ஆபிராம் தம் மனைவியுடன் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆபிராமும் லோத்தும் மேலும் பூசல் வலுக்காமலிருக்க ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார். அம்ராபல், அரியோக்கு, கெதர்லகோமர் மற்றும் திதால் ஆகியோர் பெரா, பிர்சா, சினாபு, செமேபர், சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அதனால் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் அவர்களை முறியடித்தனர். வெற்றி பெற்றவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர். தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர். அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். ஆபிராம் திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான். அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி ஆசிவழங்கினார்.. அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார். ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை ஆபிராமின் வழிமரபினர்க்கு வழங்குவதாகவும் வாக்களித்தார். ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண் ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். இதனால் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அவர் ஆகாருக்கு ஆருதல் கூறி திரும்பிப்போகப் பணித்தார். ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் 'இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ட பின்பு அவரிடம் அவரின் மனைவி சாராளுக்கு ஒரு மகன் பிறக்கப்போவதை முன்னறிவித்தனர். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாராய் கர்ப்பவதியாகி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாமுக்கு, சாராய் தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார். சிலகாலத்துக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ″உன் ஒரே மகனான ஈசாக்கை நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து ஈசாக்கோடு கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அடைந்து அங்கே ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று அவரைத்தடுத்து "நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். ஆபிரகாம் அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார். அவரின் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவர் தம் மனைவி சாராயோடு அடக்கம் செய்தனர். உலகிலுள்ள மதங்களில் ஆபிரகாமுக்கு மூன்று மதங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய இம்மூன்று மதங்களிலும் உயர் நிலையையும், நம்பிக்கையான நிலையையும் ஆபிரகாம் வகிக்கின்றார். யூத மதத்தினர் ஆபிரகாமே கடவுளுடனான ஒப்பந்தத்தை நிறுவிய தந்தை எனக் குறிப்பிடுகின்றனர். கடவுளுக்கும், யூத மக்களுக்கும் இடையிலான இணைக்கும் மனிதராக இவர் கருதப்படுகின்ரார். யூதர்கள் இவரை "அவரகாம் அவினு" (אברהם אבינו) எனக் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள் "எங்கள் தந்தை ஆபிரகாம்" என்பதாகும்.அத்துடன் யூதர்களின் பிதாவாகவும், முதலாவது யூதராகவும் இவர் கருதப்படுகின்றார். இசுரயேலர் இசுரயேலர் அல்லது இஸ்ரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். ஆதியாகமம் 32:28 இல் கடவுள் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இசுரயேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும். இஸ்ரவேலரின் 12 குலங்களுக்கும் யாக்கோபின் 12 மகன்மாரது பெயர் சூட்டப்பட்டது. அவைகளாவன ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி,அசேர், யோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும். இஸ்ரவேலின் 12 குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்தார் ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு குலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு எகிப்திய மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு குலங்களாக பிரகடனப்படுத்தினார். ஆகவே இஸ்ரவேலரின் குலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்: இஸ்ரவேலர்களிடம் 12 தலைவர்கள் இருந்ததாக அல்-குரானிலும் கூறப்பட்டுள்ளது. சூரா 5, வசனம் 12 விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின் காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9 குலங்களும் நிலமற்ற சில லேவி குலத்தவரும் பிரிந்தன. விவிலியத்தில் இச்சந்தர்ப்பத்தில் சிமியோன் கோத்திரம் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சிமியோன் குல யாக்கொபின் சாபத்தின் படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, எருசலேமை தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர். கி.மு. 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு ஈரான் மற்றும் மேற்கு அப்கானிஸ்தான்) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10 குல மக்களே இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்கள் என அழைக்கப்படுகின்றன. தென் அரசில் இருந்த யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர். கி.மு. 586 இல் புது பாபிலோனியப் பேரரசினர் இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பாபிலோனை பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசால் கைப்பற்றப்பட்டப்போது இசுரயேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இசுரயேலர் தங்களது குல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர். மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள் மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள் (Microsoft Most Valuable Professional) என்பது மைக்ரோசாப்டால் வழங்கப்படும் ஒரு விருது மற்றும் அங்கீகாரத் திட்டமாகும். இவ்விருது, மைக்ரோசாப்டின் மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த தங்கள் தொழில்நுட்பத்திறனை பகிர்ந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கான விருதும், அதற்கு கடந்த ஆண்டுப் பங்களிப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. சோமநாதபுரம் (கர்நாடகம்) சோமநாதபுரம் மைசூர் மாவட்டத்தில் (கர்நாடக மாநிலம், இந்தியா) காவேரிக்கரையில் அமைந்து உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்நகரமே போசளப் பேரரசின் கட்டிடக்கலையின் முதன்மையான இருப்பிடம் ஆகும். இங்கு தான் கலைநயம் மிக்க "கேசவர் கோயில்" அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிற்பங்கள் மென்மையான மாக்கல்லால் ஆனவை. இந்நகரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1254-91) வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் தளபதியான ("தண்டநாயக்கா") "சோமா" என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது சோமநாத புரம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள கேசவர் கோயில் மிக நுட்பமான மாக்கல் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. விண்டோஸ் லைவ் விண்டோஸ் லைவ் (Windows Live) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் பல சேவைகளை குறிக்கும். இது கூகிள் போன்ற போட்டியாளர்களுடன் போட்டிபோடக்கூடிய வகையில் எம்எஸ்என்-இன் மீளுருவாக்கம் ஆகும். இது பொதுவாக உலாவிகளூடாக இயங்கக்கூடியதாகும். இந்தப் பயன்பாடுகளும் அதன் தரவுகளும் உள்ளூர்க் கணினிகளில் அல்லாமல் வழங்கிகளிலேயே சேமிக்கப்படும். இச்சேவையும் வரவிருக்கின்ற கூகிள் சேவைகளும் பயன்பாட்டு மென்பொருட்களை கணினியில் நிறுவாமல் உலகில் எங்கிருந்தும் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளமாறு அமைய இருப்பதே வருங்காலத்தின் குறிப்பிடத்தக்க போக்காக இருக்கும் என்று கருதப்படுகின்றது. சூலை 29 ஜெ. ர. தா. டாட்டா ஜே. ஆர். டி. டாட்டா எனப்பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். 1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார். இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார். 15. ^http://www.tatacentralarchives.com/history/family_tree/family_tree.pdf வரத பண்டிதர் வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர். சுல்பிகா சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார். மணவை முஸ்தபா மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர். இவர் எழுதிய "இசுலாமும் சமய நல்லிணக்கமும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய "மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. "அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி" நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. "கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி" நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது. தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார். திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார். கலைமாமணி விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994). 'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி ஜாகீர்உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் வழங்கப்பட்டது. ‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம் இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘புகழ் பதிந்த தமிழர்” பட்டம், பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி வழங்கியது. ‘அறிவியல் தமிழ் வித்தகர்” விருது (1995) - ஈரோடு அல்லாமா இக்பால் இலக்கிய மன்றத்தாரால் இவரது தமிழ்ப் பணிக்காக வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) மணவைத் தமிழ் மன்றம் இவரது அறிவியல் தமிழப் பணியை பாராட்டி வழங்கியது. ‘ராஜா சர் முத்தையா செட்டியார் விருது” (1995) திரு.மணைவையாரின் கால் நூற்றாண்டு கால தமிழ் பணியைப் பாராட்டும் வகையில் “ராஜா சர் முத்தைய” விருதும் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் பொற்கிழியும் வழங்கப்பட்டது. “முத்தமிழ் வித்தகர்” (1996) உலகப் பண்பாட்டுக் கழகத்தார் இவரது ஆக்கபூர்ர்வமான தமிழ் பணியை பாராட்டும் வகையில் “முத்தமிழ் வித்தகர்” விருது வழங்கினர் (23.07.1996) ‘தந்தை பெரியார் விருது” திராவிடர் கழகத்தின் முத்தமிழ் மன்றத்தாரால் தமிழ் வளர்ச்சி பற்றி பெரியார் கொண்டிருந்த கொள்கையை கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் இவரது அறிவியல் தமிழ் பணியை பாராட்டி வழங்கியது. ‘மூப்பனார்’ விருது (1997) தா.மா.கா.வின் தேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தாரால் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சாதனையாளர்” விருது இவரது தமிழ்ப் பணியை பாராட்டி 'முகம்' திங்களிதழ் சார்பாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ.மோகனால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ் மன்றத்தாரால் 1998இல் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சேவா ரத்னா” விருது (1998) இவரது இடையறா அறிவியல் தமிழ்ப்பணி சமய நல்லிணக்கப் பணியை பாராட்டி காஞ்சி காமகோடி பீட சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவால் வழங்கப்பட்டது (17.09.1998) ‘சான்றோர் விருது” (2000) சான்றோர் பேரவை சார்பில் இவரது அறிவியல் தமிழ்ப் பணியை - குறிப்பாக கலைச் சொல்லாக்கப் பணியைப் பாராட்டி நவம்பர் 2000ல் வழங்கப்பட்டது. ‘கணினி கலைச் சொல் வேந்தர்” (2000) திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் சார்பில் இவரது கலைச் சொல்லாக்கப் பணியை பாராட்டி விருதும் பொற்கிழியும் நவம்பர் 2000இல் வழங்கப்பட்டது. ‘ஆறாவது உலகத் தமழ் மாநாட்டு சிறப்பு விருது” தஞ்சையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக கூரியர் இதழியல் பணிக்காக அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ‘மாமனிதர்” விருது (1999) இந்திய தேசிய முஸ்லிம லீக் வழங்கியது - 10.3.99 ’அறிவில் கலைச் சொல் தந்தை” விருது (1999) ஆறிவியல் தமிழுக்கு இவர் ஆற்றும் பெரும் பணிக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. 24.02.99 ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது (2003) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை – குவைத் 14.02.2003 ‘தமிழேந்தி’ விருது வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் வழங்கியது. ‘சீறாச் செல்வர்” விருது கம்பன் கழகம் வழங்கியது ‘தமிழ் வாகைச் செம்மல்’ விருது சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கியது. ‘கலைஞர்”விருது (2003) முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது (28.6.2003). ‘அமெரிக்க மாட்சிமை” விருது கனடாவில் வழங்கப்பட்டது. ‘அறிவியல் செல்வம் “ விருது முத்தமிழ் பேரவை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்க நட்சத்திர’ விருது. ‘அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர்” விருது வாணியம்பாடி முத்தமழ் மன்றத்தால் வழங்கப்பட்டது. ‘ஆதித்தனார்” விருது (2004) ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பாக தங்கப் பதக்கத்துடன் வழங்கப்பட்டது (27.09.2004). ‘உமா மகேசுவரனார்” விருது (2005) கரந்தை தமிழ்ச்சங்ம் வழங்கியது (05.09.2005). ‘செம்மொழிச் செம்மல்” விருது திருவள்ளுவர் தமிழ் மன்றம்; மணிமேகலை மன்றம்; கம்பர் கழகம்; சேக்கிழார் மன்றம்; முத்தமிழ் நற்பணி மன்றம்; பாரதி மன்றம் ஆகிய ஆறு மன்றங்களும் இணைந்து இராசபாளையத்தில் வழங்கிறது. ‘செம்மொழிக் காவலர்” விருது (2006) செம்மொழி பணியினை பாராட்டி 20.05.2006 அன்று தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கியது. “இயல் செல்வம்” விருது (2003) இவருடைய கலைத் தொண்டை பாராட்டி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முத்தமிழ் பேரவை சார்பாக வழங்கப்பட்டது 28.01.2003. சிறப்பு பரிசு (இலங்கை , 2002) உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு (அக்டோபர் 2002) இலங்கை அதிபர் ரணல் விக்ரமசிங்கே அவர்களால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் களஞ்சியம்” விருது (2006) பிரான்ஸ் தமிழ் சங்கம் வழங்கியது 9.2.2006. ‘பண்பாட்டு காப்பாளர்” விருது (2006) பூவை தமிழ் பண்பாட்டுச் சங்கம் வழங்கியது (31.12.2006). ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது (2008) பாலம் அமைப்பு 2008ல் வழங்கியது. ‘பாரதி” விருது (2008) ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை 11.12.2008 வழங்கியது. ‘உலகப் பெருந்தமிழர்“ விருது (2009) உலகத் தமிழர் பேரமைப்பு 27.12.2009ல் வழங்கியது பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 40க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர். தமிழ்நாடு அரசு வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விண்டோசு 98 விண்டோஸ் 98 வரைகலை இயங்குதளமானது ஜூன் 25, 1998 அன்றுமைக்ரோசாப்டினால் வெளியிடப்படது. இவ் இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் () என்றழைக்கப் படுகின்றது. ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் () இவ்வியங்குதளத்தின் "இணைத்தவுடன் இயங்கும்" (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டுக்கூறினார். எனினும் அவரின் உதவியாளர் ஸ்கானரை (Scanner) இணைத்து அதற்குரிய மென்பொருளை நிறுவமுயன்றபோது அவ்வியங்குதளம் நிலைகுலைந்தது (crashed). அப்போது பில்கேட்ஸ் "இதற்காகத்தான் இன்னமும் மக்களிடம் விண்டொஸ் 98 ஐ வழங்கவில்லை" என்றார் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 இற்குப் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது. முதன் முதலாக விண்டோஸ் 98 புதிய வன்வட்டில் நிறுவுவதாக இருந்தால் fdisk கட்டளை மூலம் வன்வட்டைப் பிரிக்கவேண்டும். பின்னர் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆக்டிவ் பாட்டிஷன் (Active Partition) ஆக்கிவிட்டு நிறுவலை மேற்கொள்ளலாம். வன்வட்டினை Format பண்ண format /q/u/s c: என்னும் கட்டளையை வழங்கலாம். இதில் q என்பது விரைவாக என்பதைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான quick ஐக் குறிப்பிடுகின்றது. இது முதற்தடவையாக போமட் பண்ணினால் ஆதரிக்காது. U என்பது நிபந்தனைகள் அற்ற என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான Unconditional என்பதன் தமிழாக்கம் ஆகும். S என்பது சிஸ்டம் என்பதைக் குறிப்பிடுகின்றது எந்தக் வட்டின் பகுதியில் இருந்து கணினி ஆரம்பிக்கவேண்டுமோ அந்த டிரைவைப் போமட் பண்ணுவதற்கு மாத்திரமே /s என்ற சுவிச்சைப் பாவிக்கவும். விண்டோஸ் 98 இறுவட்டில் கீழுள்ளழவாறு MSBATCH.INF கோப்பினை உருவாக்கினால் நிறுவலின் போது கேட்கும் தொடரில்லக்கம் போன்றவற்றை வழங்கலாம். கீழே மைக்ரோசாப்டின் பதிப்புரிமைகாரணாமாக் ஓர் போலியான தொடரிக்கம் தரப்பட்டுள்ளது. [BatchSetup] Version=3.0 (32-bit) SaveDate=01/29/00 [Version] Signature = "$CHICAGO$" [Setup] ProductKey="This-is-a-fake-key" கார்ல் மார்க்சு கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார். கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். காரல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக எப்போது மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார். 1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் "ரைனிஷ் ஸைத்துங்" எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது. பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது. ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், செருமனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார். மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது. "நியூயோர்க் டெய்லி டிரிபியூன்" என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார். மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர். மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில: வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார். மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும். "ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்." கார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது. " நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான் புதிதாகச் செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான். 1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது, இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான "Workers of All Land Unite" (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், "The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it" (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை. மைக்கேல் ஹெச் ஹார்ட், 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை'(100பேர்), மீரா பதிப்பகம்-1998. திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் 1872-இல் இவ்வரண்மனையை புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரன்மனையின் நீட்சியாக பத்துத் தூண் பகுதி இருந்தது. இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று "சொர்க்க விலாசம்" என்றும் மற்றது "ரங்க விலாசம்" என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டது. திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் "திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு" என்பதாகும்.முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார். திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராய கோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது. திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார். இடைக்காட்டுச் சித்தர் பாடல் இடைக்காட்டுச் சித்தர் பாடல் இடைக்காட்டுச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. காப்புச் செய்யுள் நீங்கலாக 130 பாடல்களை உடையது இப்பாடல் தொகுப்பு. எளிமையான நடையுடையவை. உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள். இவை நாட்டுப் பாங்கான இலக்கிய அமைதிகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்து வெற்றியும் அடையலாம் என்று கூறுகிறார். கிளிவெட்டி சிவன் ஆலயம் கிளிவெட்டி சிவன் கோயில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிளிவெளிவெட்டியில் அமைந்துள்ளது. மூதூர் மட்டக்களப்பு முதன்மை வீதிக்கு அருகில் உள்ள இக்கோயில் மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து கொழும்புக்கான தரைவழிப்பயணத்தை மேற்கொள்கின்ற அனைவரும் வணங்கிச் செல்லும் முதன்மைக் கோயில் ஆகும். இவ்வூருக்கு அருகில் ஆஸாத்நகர், ஜின்னாநகர் போன்ற இசுலாமிய ஊர்களும் தெகிவத்த என்னும் சிங்கள ஊரும் அமைந்துள்ளது. பாரதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. புதிதாக கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம். தரிசன மண்டபம், மடப்பள்ளி என்பன மறு சீரமைக்கப்பட்டுளன. கூடிய விரைவில் பெரும் திருக்குடமுழுக்கும் நடைபெற உள்ளது. வந்தாறுமூலைச் சிவன் கோவில் வந்தாறுமூலைச் சிவன் கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. வந்தாறுமூலைக்கு மேற்கே சுமார் 30 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் பின்னர் இங்கு வைக்கப்பட்டுள்ளது. சியாமா சாஸ்திரிகள் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் (ஏப்ரல் 26, 1762 - பெப்ரவரி 06, 1827) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார். சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார். இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் "சங்கீத சுவாமிகள்" என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார். தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி (பைரவி ராகம் - அட தாளம்) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின் நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் வீணையில் வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார். சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார். இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார். இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்:- நின்னு வினாகமரி- பூர்விகல்யாணி) பைரவி இராகத்தில் உள்ள இவரது காமாட்சி ஸ்வரஜதியில் சரணங்களின் ஆரம்ப ஸ்வரங்கள் ஆரோகண ஸ்தாயி என்னும் முறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வராஷ்ட்ர அணிகளை இவர் தனது உருப்படிகளில் நன்கு பயன்படுத்தியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். பக்திப்பரவசத்தால் அவர் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருகும். அவ்வேளைகளில் அநேக உருப்படிகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது உருப்படிகளுக்கு தனியான சுவை ஒன்று ஏற்பட்டது என்பர். மதுரை மீனாட்சியம்மன் பேரில் பல கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அம்மன் சந்நிதியில் நவரத்ன மாலிகை என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடினார். நவரத்ன மாலையில் பிரசித்தமான கிருதிகள் சில வருமாறு: இவரது உருப்படிகளில் பலவிதமான இசையணிகள் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. சில உருப்படிகளில் அழகான ஸ்வரஸாகித்யங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில: இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன. இன்று இவ்வாலயம் விநாயகர், சுப்பிரமணியர் , நடராஜர், வைரவர், நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார். இவ்வாயத்தில் முக்கிய தினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. பொன்னம்பலவாணேசுவரர் கோயில் பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன. இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது. மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார். வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்.. வில்லியம் சேக்சுபியர் வில்லியம் சேக்சுபியர் (திருமுழுக்கு: 26 ஏப்ரல் 1564 - இறப்பு: 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன. சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார். அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார். "ஹேம்லட்" , "கிங் லியர்" , மற்றும் "மெகாபெத்" ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது. சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர். இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன. வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் சேக்சுபியருக்கும், செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டனுக்கும் மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார். அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார். எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில் ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை அநேக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் [[இலக்கணப் பள்ளி|இலக்கண பள்ளிகள்]] தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. பள்ளியானது [[லத்தீன் மொழி|லத்தீன் இலக்கணம்]] மற்றும் [[செவ்வியல் இலக்கியம்|செவ்வியலில்]] தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும். [[படிமம்:William Shakespeares birthplace, Stratford-upon-Avon 26l2007.jpg|thumb|left|சேக்சுபியர் பிறந்த இடமாகக் கருதப்படும், ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் ஜான் சேக்சுபியரின் வீடு.]] 18 வயதில், சேக்சுபியர் 26 வயதான [[ஆன் ஹேதாவே]] திருமணம் செய்து கொண்டார்.[[வார்செஸ்டர் ஏஞ்சலிகன் டயோசிஸ்|வார்செஸ்டர் டயாசிஸ்]] திருச்சபை மன்றம் திருமண உரிமத்தை 27 நவம்பர் 1582 அன்று வழங்கியது. ஹதாவேயின் அண்டைவீட்டார் இருவர் உத்தரவாத பிணையை அளித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு ஏதும் தடை இருக்கவில்லை. தம்பதிகள் திருமண ஏற்பாட்டினை சற்று துரிதமாக நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனியின் கர்ப்பம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் [[சுசானா ஹால்|சுசானா]] எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் [[ஹேம்னெட் சேக்சுபியர்|ஹேம்னெட்டும்]] மகள் [[ஜூடித் குவினி|ஜூடித்தும்]] பிறந்தனர். ஹேம்னெட் புரியாத காரணங்களால் 11 வயதில் இறந்து போனான். இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல [[:விக்ட்: உறுதிப்படாதவை|உறுதிப்படாத]] கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான [[நிகோலஸ் ரோவ் (நாடகக் கலைஞர்)|நிகோலஸ் ரோவ்]] தெரிவிக்கிறார். சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது. சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார். [[லங்காஷயர்|லங்காஷயரைச்]] சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய [[:விக்ட்:வாய்மொழி|வாய்வழிச்]] செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. சேக்சுபியர் எப்போது எழுதத் துவங்கினார் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத்திய குறிப்புகளும் நாடக நிகழ்ச்சிகளின் பதிவுகளும் அவரது பல நாடகங்கள் லண்டன் அரங்கில் 1592 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன. அப்போது நாடக ஆசிரியரான [[ராபர்ட் கிரீன் (16வது நூற்றாண்டு)|ராபர்ட் கிரீன்]] சேக்சுபியரை பின்வரும் வகையில் அவமதித்துப் பேசும் அளவுக்கு சேக்சுபியர் லண்டனில் போதுமான அளவு அறியப்பட்டவராயிருந்தார்: ...புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க "எல்லாம்-தெரிந்த ஆசாமி" யாக இது அலட்டிக் கொள்கிறது. இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள். ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, [[தாமஸ் நஷே|தாமஸ் நஷெ]] மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர். கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் [[லார்ட் சாம்பர்லெய்ன்'ஸ் மென்|லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென்]] குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி [[நாடக நிறுவனம்|நாடக நிறுவனமானது]]. 1603 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|ராணி எலிசபெத்தின்]] மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்|முதலாம் ஜேம்ஸ்]] இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] என்பதாக மாற்றினார். 1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் [[குளோப் தியேட்டர்|குளோப்]] என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி [[பிளாக்ஃபிரையர்ஸ் தியேட்டர்|பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கத்தையும்]] கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான [[நியூ ப்ளேஸ்|நியூ ப்ளேஸை]] அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை [[வருவாய்|வருவாய் பங்கில்அவர்]] முதலீடு செய்தார். 1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் [[புக்பைண்டிங்#நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்|குவார்டோ]] பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி [[முகப்பு பக்கம்|முகப்பு பக்கங்களில்]] தோன்றத் துவங்கியிருந்தது. நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் "படைப்பு" களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு "[[எவ்ரி மேன் இன் ஹிஸ் ஹியூமர்|எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர்]]" (1598) மற்றும் "[[செஜானஸ் (நாடகம்)|செஜானஸ், அவரது வீழ்ச்சி]]" (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது. 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் "வோல்போன்" நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில "வோல்போனுக்கு" பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை. 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது. அவர் "அஸ் யூ லைக் இட்" நாடகத்தில் ஆதாம் வேடமும் "[[ஹென்றி V (நாடகம்)|ஹென்றி V]]" நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன, ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார். 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது. 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு [[ஹியூக்னாட்|ஹயூக்னாட்டிடம்]] வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார். சேக்சுபியர் தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றார் என்பதான கருத்தினை முதல்முதலில் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர் ரோவ் குறிப்பிட்டார். ஆனால் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு என்பது அந்த சமயத்தில் சாதாரண நிகழ்வு அல்ல. சேக்சுபியர் தொடர்ந்து லண்டனுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். 1612 ஆம் ஆண்டில் மவுண்ட்ஜாயின் மகளான மேரியின் திருமணம் குறித்த நீதிமன்ற வழக்கில் அவர் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். 1614 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தனது மருமகனான [[ஜான் ஹால் (மருத்துவர்)|ஜான் ஹால்]] உடன் பல வாரங்கள் லண்டனில் இருந்தார். [[படிமம்:ShakespeareMonument cropped.jpg|thumb|upright|left|ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவானில் சேக்சுபியரின் இறுதி ஊர்வல நினைவுச்சின்னம்]] 1606-1607 காலத்துக்குப் பிறகு, சேக்சுபியர் சில நாடகங்கள் மட்டுமே எழுதினார். 1613 காலத்துக்கு பிந்தையவற்றில் எதுவும் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. அவரது கடைசி மூன்று நாடகங்கள் கூட்டுமுயற்சிகளாக இருந்தன. அநேகமாக கிங்'ஸ் மென் குழுவுக்கு குழு நாடக ஆசிரியராக அவருக்கு பின் வந்த [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் பிளட்சர்]], உடன் சேர்ந்து உருவாக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். சுசானா ஜான் ஹால் என்னும் ஒரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். ஜூடித் சேக்சுபியர் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாக தாமஸ் குவினி என்னும் [[தேறல் விற்பவர்|தேறல் விற்பவரை]] திருமணம் செய்து கொண்டார். தனது உயிலில், சேக்சுபியர் தனது பெரிய மலைத்தோட்டத்தின் பெரும்பகுதியை தனது மூத்த மகளான சுசான்னாவுக்கு எழுதி வைத்தார். அதன் வாசகங்கள் அதனை சுசானா தனது "உடல்வழியான முதல் மகனுக்கு" வழங்க வேண்டும் என்று தெரிவித்தன. குவினிஸ்க்கு மூன்று குழந்தைகள். அனைவருமே திருமணமாகாமலேயே இறந்து விட்டனர். ஹால்ஸுக்கு எலிசபெத் என்னும் ஒரு பிள்ளை இருந்தார். இவர் இருமுறை திருமணம் செய்தும் குழந்தை எதுவும் இன்றி 1670 ஆம் ஆண்டில் இறந்து, சேக்சுபியரின் நேரடி வாரிசு வரிசையை முடித்து வைத்தார். சேக்சுபியரின் உயில் அவரது மனைவி ஆனி குறித்து குறைவான இடங்களிலேயே குறிப்பிடுகிறது. அவருக்கு அநேகமாக அவரது தேயிலைத் தோட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி தானாக சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆயினும் அவருக்கு "எனது இரண்டாவது சிறந்த படுக்கை"யை விட்டுச் செல்வதாக சேக்சுபியர் குறிப்பிட்டிருந்தார், சேக்சுபியரின் இந்த உயில்வாசகம் நிறைய ஊகங்களுக்கு இட்டுச் செல்கிறது. சில அறிஞர்கள் இது ஆனியை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்டது என்கிறார்கள். மற்றவர்கள் இரண்டாவது சிறந்த படுக்கை என்பது திருமண படுக்கை என்பதாக இருக்க வேண்டும். எனவே முக்கியத்துவத்தில் செறிவானதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இறந்த இரண்டு நாட்களுக்குப் பின் சேக்சுபியர் புதைக்கப்பட்டார். அவரது கல்லறையில் இருக்கும் கல்லில் அவரது எலும்புகளை நகர்த்துவதற்கு எதிரான சாபம் பொறிக்கப்பட்டுள்ளது: [[படிமம்:Shakespeare grave -Stratford-upon-Avon -3June2007.jpg|right|thumb|சேக்சுபியரின் கல்லறை]] 1623 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு காலத்தில், அவரது நினைவாக வடக்கு சுவரில் [[சேக்சுபியரின் இறுதிஊர்வல நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னம்]] ஒன்று எழுப்பப்பட்டது. அதில் அவரது பாதி உருவம் எழுதிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகடு அவரை [[நெஸ்டர் (புராணம்)|நெஸ்டர்]], சாக்ரடீஸ், மற்றும் [[வெர்ஜில்|வர்ஜில்]] உடன் ஒப்பிடுகிறது. சேக்சுபியர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு [[வில்லியம் சேக்சுபியருக்கு நினைவுஇல்லங்கள்|சிலைகள் மற்றும் நினைவகங்களில்]] போற்றப்படுகிறார். சேக்சுபியரின் எழுத்து வாழ்க்கையில் அறிஞர்கள் அடிக்கடி நான்கு காலகட்டங்களைக் குறிப்பிடுகின்றனர். 1590களின் மத்தியகாலம் வரை, ரோமானிய மற்றும் இத்தாலிய மாதிரிகளின் பாதிப்புடனான நகைச்சுவை நாடகங்களையும், காலக்கிரம மரபிலான வரலாற்று நாடகங்களையும் தான் அவர் பிரதானமாக எழுதினார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவரது இரண்டாவது காலகட்டம் சுமார் 1595 வாக்கில் "ரோமியோ ஜூலியட்" என்னும் துன்பியல் நாடகத்துடன் தொடங்கி 1599 ஆம் ஆண்டில் "[[ஜூலியஸ் சீசர் (நாடகம்)|ஜூலியஸ் சீசர்]]" என்னும் துன்பியல் நாடகத்துடன் முடிந்தது. இந்த காலகட்டத்தின் போது தான், அவர் அவரின் மிகப்பெரும் படைப்புகளாகக் கருதப்படும் மிகப்பெரும் நகைச்சுவைகள் மற்றும் வரலாறுகளை எழுதினார். சுமார் 1600 ஆம் ஆண்டுக் காலம் தொடங்கி சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும், தனது "துன்பியல் காலகட்ட"த்தில் சேக்சுபியர் பெரும்பாலும் துன்பியலையே எழுதினார். சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் முதல் 1613 ஆம் ஆண்டுக் காலம் வரை [[துன்பியல்நகைச்சுவை]]களை அவர் பிரதானமாக எழுதினார். சேக்சுபியரின் முதல் பதிவு செய்த படைப்புகள் "[[ரிச்சர்டு III (நாடகம்)|ரிச்சர்டு III]]" மற்றும் "[[ஹென்றி VI, பகுதி 1|ஹென்றி VI]]" படைப்பின் மூன்று பாகங்கள் ஆகும். இது 1590களின் ஆரம்பத்தில் வரலாற்று நாடகம் வழக்கத்தில் இருந்த ஒரு காலகட்ட சமயத்தில் எழுதப்பட்டதாகும். சேக்சுபியரின் நாடகங்கள் தேதி குறிப்பிட சிரமமானவை. ஆனால் "டைடஸ் ஆன்ட்ரோனிகஸ்" , "தி காமெடி ஆஃப் எரர்ஸ்" , "[[தி டேமிங் ஆப் ஷ்ரூ|தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ]]" மற்றும் "டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா" ஆகிய நாடகங்களும் சேக்சுபியரின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவரது முதல் [[சேக்சுபியர் வகை வரலாறு|வரலாற்று படைப்புகள்]] பலவீனமான அல்லது ஊழல் ஆட்சியின் சீரழிவான விளைவுகளை நாடகப்படுத்துகின்றன. இவை [[டியூடர் வம்சம்|ட்யூடர் வம்ச]] மூலங்களை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்ததாக பொருள்கொள்ளப்படுகிறது. ஆரம்ப நாடகங்கள் பிற எலிசபெத் நாடக ஆசிரியர்கள், குறிப்பாக தாமஸ் கிட் மற்றும் கிறிஸ்டோபர் மர்லோ ஆகியோர், மற்றும் மத்தியகால நாடகங்களின் மரபுகள் மற்றும் [[செனேகா தி யங்கர்|செனகாவின்]] நாடகங்கள் ஆகியவற்றில் இருந்தான பாதிப்புகளைக் கொண்டிருந்தன. "தி காமெடி ஆஃப் எரர்ஸ்" நாடகமும் செவ்வியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இரண்டு நண்பர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்புதலளிப்பது போல் தோன்றக் கூடிய "டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா" போலவே, ஒரு ஆணால் ஒரு பெண்ணின் சுயாதீனமான மனம் முடக்கப்படுவதை சொல்லும் "ஷ்ரூ" வின் கதையும் சில சமயங்களில் நவீன கால விமர்சகர்களையும் இயக்குநர்களையும் பாதிக்கிறது. சேக்சுபியரின் ஆரம்ப கால செவ்வியல் மற்றும் இத்தாலிய வகை நகைச்சுவை நாடகங்கள், 1590களின் மத்தியில் அவரது மிகப்பெரும் நகைச்சுவைக் காதல் காவிய சூழல்வகைக்கு வழிவிட்டது. "[[தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்|தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்]]" , வஞ்சகமான யூத வட்டிக்கடைக்காரரான ஷைலாக்கின் சித்தரிப்பை கொண்டிருந்தது. இது எலிசபெத்திய பார்வைகளைப் பிரதிபலித்தது ஆனால் நவீனகால பார்வையாளர்களுக்கு இது அவமதிப்பான சித்தரிப்பாக தோன்றலாம். "[[மச் அடூ வித் நத்திங்|மச் அடூ அபவுட் நத்திங்]]" கின் நகைச்சுவை மற்றும் வார்த்தை வசனம், "அஸ் யூ லைக் இட்" டின் மனதை மயக்கும் கிராம அமைப்பு, மற்றும் "ட்வெல்த் நைட்" டின் உயிரோட்டமான ஆனந்தம் ஆகியவை சேக்சுபியரின் பெரும் நகைச்சுவை நாடக வரிசையை நிறைவு செய்கின்றன. ஏறக்குறைய முழுமையாக செய்யுள் கொண்டே எழுதப்பட்ட கவிதைவயமான "[[ரிச்சர்டு II (நாடகம்)|ரிச்சர்டு II]]" க்கு பிறகு, சேக்சுபியர் 1590களின் பிற்பகுதியில் வரலாறுகளில் "[[ஹென்றி IV, பகுதி 1|ஹென்றி IV, பகுதிகள் 1]]" மற்றும் "[[ஹென்றி IV, பகுதி 2|2]]" , மற்றும் "[[ஹென்றி V (நாடகம்)|ஹென்றி V]]" ஆகிய உரை நகைச்சுவையை அறிமுகம் செய்தார். நகைச்சுவை காட்சிகளுக்கும் தீவிர காட்சிகளுக்கும் இடையில், உரை மற்றும் கவிதைக்கு இடையில் என அவர் நுட்பமாக திருப்பக் கூடியவர் என்பதால் அவரது பாத்திரங்கள் கூடுதல் சிக்கலானவையாகவும் நுட்பமானவையாகவும் இருந்தன. அத்துடன் அவரது முதிர்ந்த படைப்பின் விவரிப்பில் பன்முகத்தன்மையையும் இருந்தது. இந்த காலகட்டத்தின் தொடக்கமும் முடிவுமாய் இரண்டு துன்பியல் நாடகங்கள் இருந்தன. "ரோமியோ ஜூலியட்" நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்; மற்றும் "[[ஜூலியஸ் சீசர் (நாடகம்)|ஜூலியஸ் சீசர்]]" - இது சர் தாமஸ் நார்த் 1579 ஆம் ஆண்டில் எழுதிய புளூடார்க்கின் "பேரலல் லைவ்ஸ்" மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது - ஒரு புதிய வகை நாடகத்தை அறிமுகம் செய்தது. சேக்சுபியர் குறித்த ஆராய்ச்சி அறிஞரான ஜேம்ஸ் ஷப்ரியோ கூற்றுப்படி, "ஜூலியஸ் சீசரில்" "அரசியல், பாத்திரப்படைப்பு, உள்முகப்பார்வை, சமகால நிகழ்வுகள், இன்னும் எழுதுவதில் சேக்சுபியரின் சொந்த பிரதிபலிப்புகள் இவற்றின் வெவ்வேறு பரிமாணங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருந்தன". சேக்சுபியரின் "துன்பியல் காலகட்டம்" சுமார் 1600 தொடங்கி 1608 வரை நீடித்தது, "மெஷர் ஃபார் மெஷர்" , "[[டிராய்லஸ் அன் கிரெஸிடா|டிராய்லஸ் மற்றும் கிரெசிடா]]" , மற்றும் "ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்" ஆகிய [[பிரச்சினை நாடகங்கள் (சேக்சுபியர்)|"பிரச்சினை நாடகங்கள்"]] என்பனவற்றையும் அவர் இதே காலத்தில் எழுதினார். சேக்சுபியரின் மகத்தான துன்பியல்கள் தான் அவரது கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலாவதன் நாயகன் [[இளவரசர் ஹேம்லெட்|ஹேம்லெட்]] தான் வேறு எந்த சேக்சுபியர் பாத்திரத்தை விடவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு. குறிப்பாக "[[இப்படி செய்யலாமா, இல்லை வேண்டாமா|இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி]]" என்று தனக்குத் தானே அவன் கூறி கொள்ளும் மனவொலி மிகப் பிரபலமானது. தனக்குத்தானே மருகிக் கொள்ளும் ஹேம்லெட் - தயக்கம் தான் இவனது மரணத் தவறு - போலல்லாமல் அடுத்து வந்த துன்பியல்களின் நாயகன்களான, ஓதெல்லோ மற்றும் கிங் லியர், அவசர முடிவுகளின் தவறுகளால் மாட்டிக் கொண்டார்கள். சேக்சுபியரின் துன்பியல்களின் கதைக்களம் பெரும்பாலும் இத்தகைய மரணத் தவறுகள் அல்லது பிழைகளின் மீது தொங்குகின்றன. இவை ஒழுங்கைப் புரட்டுவதுடன் நாயகனையும் அவன் நேசிப்பவர்களையும் சீரழிக்கின்றன. "[[ஓதேல்லோ|ஓதெல்லோ]]" வில், தன்னை நேசிக்கும் அப்பாவி மனைவியை தான் கொலை செய்யும் அளவுக்கு ஓதெல்லோவின் பாலியல் பொறாமையுணர்வை வில்லன் [[இயகோ|லகோ]] தூண்டிவிடுகிறான். "[[கிங் லியர்|கிங் லியரில்]]" , பழைய ராஜா தனது அதிகாரங்களைத் துறப்பது என்னும் துன்பியல் தவறை செய்து விடுகிறார். இது அவரது மகளின் கொலைக்கும் கிளவ்செஸ்டர் இயர்ல் சித்திரவதை செய்யப்பட்டு குருடாக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் நிகழ்வுகளுக்குத் துவக்கமளிக்கிறது. விமர்சகரான ஃபிராங்க் கெர்மோடேயின் கூற்றுப்படி, "இந்த நாடகம் தனது நல்ல பாத்திரங்களுக்கும் சரி தனது பார்வையாளர்களுக்கும் சரி கொடூரத்தில் இருந்து எந்த நிவாரணமும் அளிப்பதில்லை. சேக்சுபியரின் துன்பியல் நாடகமான " [[மக்பெத்]] " தில், கட்டுப்படுத்தமுடியாத ஆசை மெகாபெத் மற்றும் அவரது மனைவியான [[லேடி மக்பெத்(சேக்சுபியர்)|லேடி மக்பெத்தை]], உரிமையுள்ள அரசரைக் கொன்று அவரது மகுடத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பதிலுக்கு அவர்களது சொந்த குற்ற உணர்ச்சியே அவர்களை சீரழிக்கிறது. இந்த நாடகத்தில், துன்பியல் கட்டமைப்புக்கு ஒரு அமானுடக் கூறினை சேக்சுபியர் சேர்க்கிறார். அவரது இறுதிப் பெரும் துன்பியல்களான, "அந்தோனி கிளியோபாட்ரா" மற்றும் "[[கொரியோலனஸ் (நாடகம்)|கோரியாலானஸ்]]" , ஆகியவை சேக்சுபியரின் மிகச்சிறந்த கவிதைகளில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை தான் அவரது மிகவும் வெற்றிகரமான துன்பியல்களாக கவிஞர் மற்றும் விமர்சகரான [[டி.எஸ். எலியட்|டி.எஸ்.எலியட்]] கருதினார். தனது இறுதிக் காலகட்டத்தில் சேக்சுபியர் "[[சிம்பிளைன்|சிம்பிலைன்]]" , "தி வின்டர்'ஸ் டேல்" மற்றும் "[[தி டெம்பெஸ்ட்|தி டெம்பஸ்ட்]]" ஆகிய மூன்று பெரும் நாடகங்களையும் அத்துடன் கூட்டுப்படைப்பான "[[பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர்ஸ்|பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டயர்]]" நாடகத்தையும் நிறைவு செய்தார். சேக்சுபியர் தன் பங்குக்கு வாழ்க்கையை அமைதியாகப் பார்க்கத் தொடங்கியிருந்ததற்கு இந்த நாடகங்களின் மனோநிலை மாற்றம் ஒரு சான்று என்று சில வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது அந்நாளின் நாடக அரங்கு பாணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவும் இருந்திருக்கலாம். அதற்குப் பின்னும் "[[ஹென்றி VIII (நாடகம்)|ஹென்றி VIII]]" மற்றும் "தி டூ நோபிள் கின்ஸ்மென்" ஆகிய இரண்டு நாடகங்களில் சேக்சுபியர் அநேகமாக [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளெட்சர்]] என்கிற நாடகாசிரியருடன் இணைந்து பணியாற்றினார். சேக்சுபியர் தனது ஆரம்ப நாடகங்களை எந்த நிறுவனங்களுக்காக எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "டைடஸ் ஆன்ட்ரோனிகஸின்" 1594 ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்புப் பக்கம் இந்த நாடகம் மூன்று வெவ்வேறு நாடகக்குழுக்களால் அரங்கேற்றப்பட்டதை வெளிப்படுத்துகிறது. 1592-3 [[கருப்பு சாவு|பிளேக்]] பாதிப்புகளுக்குப் பிறகு, சேக்சுபியரின் நாடகங்கள் தேம்ஸின் வடக்கில் ஷோர்டிச்சில் உள்ள தி கர்டெயின் அரங்கில் அவரது சொந்த நிறுவனத்தாலேயே நடத்தப்பட்டன. "ஹென்றி IV" நாடகத்தை அங்கு காண லண்டன்வாசிகள் இந்நாடகங்களுக்கு கூட்டம் கூட்டமாய் திரண்டனர். இந்த நிறுவனம் இடமுதலாளியுடன் மோதலுக்கு பிறகு, தி தியேட்டர் அரங்கை மூடிவிட்டு அதன் பலகைகளைக் கொண்டே [[குளோப் தியேட்டர்|குளோப் திரையரங்கைக்]] கட்டியது. தேம்ஸின் தெற்குக் கரையில் சவுத்வார்க்கில் கட்டப்பட்டதான இந்த நாடக அரங்கு தான் நடிகர்களுக்காக நடிகர்களால் எழுப்பப்பட்ட முதல் நாடக அரங்காகும். 1599 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் குளோப் திரையரங்கு திறக்கப்பட்டது. அதில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகங்களில் ஒன்று "ஜூலியஸ் சீசர்" ஆகும். 1599 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சேக்சுபியரின் மகத்தான நாடகங்களில் பலவும் குளோப் திரையரங்கிற்காக எழுதப்பட்டவையே. "ஹேம்லெட்" , "ஓதெல்லோ" மற்றும் "கிங் லியர்" ஆகிய நாடகங்களும் இதில் அடங்கும். [[படிமம்:Globe theatre london.jpg|thumb|left|மறுகட்டுமானம் செய்யப்பட்ட லண்டன் குளோப் திரையரங்கு]] லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்பது 1603 ஆம் ஆண்டில் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] என்பதாக பெயர்மாற்றம் கண்டபின், புதிய [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்|அரசரான ஜேம்ஸ்]] உடன் அவர்கள் ஒரு சிறப்பான உறவுக்குள் நுழைந்தனர். நாடக நிகழ்ச்சிப் பதிவுகள் தெளிவின்றியே இருக்கின்றன எனினும், நவம்பர் 1, 1604 மற்றும் அக்டோபர் 31, 1605 ஆகிய காலத்துக்கு இடையே அவையில் சேக்சுபியரின் நாடகங்களில் ஏழு நடத்திக் காட்டப்பட்டதாய் தெரிகிறது. "தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸின்" இரு நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும். 1608 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குளிர்காலத்தில் அவர்கள் [[பிளாக்ஃபிரையர்ஸ் தியேட்டர்|பிளாக்ஃபிரையர்ஸ் உள்ளரங்கில்]] நிகழ்ச்சிகள் நடத்தினர். கோடைகாலத்தின் போது குளோப் திரையரங்கில் நடத்தினர். ஆடம்பரமான மேடையமைப்புகளுடனான [[ஜேகோபியன் சகாப்தம்|ஜேகோபியன்]] வகை உள்புற அமைவு, விரிவான நாடக சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு சேக்சுபியரை அனுமதித்தது. உதாரணமாக, "சிம்பிலைனில்" [[ஜூபிடர் (புராணம்)|ஜூபிடர்]] கழுகில் அமர்ந்து இடி மற்றும் மின்னல் மீது இறங்குகிறார். அவர் ஒரு மின்னலைத் தூக்கியெறிகிறார். பேய்கள் மண்டியிடுகின்றன. பிரபலமான ரிச்சர்டு புர்பேஜ், வில்லியம் கெம்பெ, ஹென்றி கோன்டெல் மற்றும் ஜான் ஹெமிங்ஸ் ஆகியோர் சேக்சுபியர் நிறுவன நடிகர்களில் நன்கறியப்பட்டவர்கள் ஆவர். "ரிச்சர்டு III" , ஹேம்லட், "ஓதெல்லோ" மற்றும் "கிங் லியர்" உள்ளிட்ட சேக்சுபியரின் நாடகங்கள் பலவற்றின் முதல் நிகழ்ச்சிகளில் முன்னணிப் பாத்திரத்தை புர்பேஜ் தான் ஏற்றார். பிரபலமான நகைச்சுவை நடிகரான வில் கெம்பெ "ரோமியோ ஜூலியட்" டில் பீட்டர் எனும் வேலைக்காரன் வேடமும் "மச் அடூ எபவுட் நத்திங்" நாடகத்தில் [[டாக்பெர்ரி|டாக்பெரி]] பாத்திரமும் ஏற்றார். பதினாறாம் நூற்றாண்டின் திருப்பவாக்கில் அவர் இடத்தில் ராபர்ட் ஆர்மின் இடம்பெற்றார். "ஹென்றி VIII" "செழுமை மற்றும் கொண்டாட்டத்தின் பல அசாதாரண சூழ்நிலைகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததாக" 1613 ஆம் ஆண்டில் சர் ஹென்றி வோட்டன் பதிவு செய்தார். ஆயினும் 29 ஜூன் அன்று, ஒரு ரவை குளோப் அரங்கின் கூரையை தீக்கிரையாக்கி நாடக அரங்கை தரைமட்டமாக்கியது. சேக்சுபியரின் நாடகம் ஒன்றை துல்லியமான தேதியுடன் குறிப்பிடும் ஒரு நிகழ்வாகும் இது. [[படிமம்:First Folio.jpg|thumb|right|சேக்சுபியரின் தாமிர சிற்பம்]] 1623 ஆம் ஆண்டில், கிங்'ஸ் மென் குழுவில் சேக்சுபியரின் நண்பர்களாக இருந்த [[ஜான் ஹெமிங்ஸ்|ஜான் ஹெமிங்க்ஸ்]] மற்றும் ஹென்றி கோன்டெல் ஆகிய இருவரும் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் சேக்சுபியர் நாடகத் தொகுப்பை வெளியிட்டனர். இது 36 மூல உரைகளைக் கொண்டது. பல நாடகங்கள் ஏற்கனவே [[புத்தக அளவு|குவார்டோ]] - காகிதம் இருமுறை மடிக்கப்பட்டு நான்கு இதழ்களாக ஆக்கப்பட்டு உருவாக்கப்படும் புத்தகங்கள் - பதிப்புகளில் தோன்றியிருந்தன. சேக்சுபியர் இந்த பதிப்புகளுக்கு ஒப்புதலளித்தற்கு எந்த ஆதாரமுமில்லை. இதனை ஃபர்ஸ்ட் ஃபோலியோ "திருடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற நகல்கள்" என்று விவரிக்கிறது. [[ஆல்பிரட் W. போலார்டு|ஆல்பிரட் போலார்டு]] சிலவற்றை "[[மோசமான குவார்டோ]]க்கள்" என்று குறிப்பிட்டார். ஒரு நாடகத்தின் பல்வேறு பதிப்புகள் வாழ்ந்தாலும் கூட, ஒவ்வொன்றும் [[சேக்சுபியரின் நாடகங்கள்#சேக்சுபியரும் உரை பிரச்சினையும்|மற்றொன்றில் இருந்து வேறுபடுவதாய் இருக்கிறது]]. நகலெடுப்பது அல்லது [[டைப்செட்டிங்#லெட்டர்பிரஸ் சகாப்தம்|அச்செடுப்பதிலான]] பிழைகளில் இருந்து, நடிகர்கள் அல்லது பார்வையாளர் உறுப்பினர்களிடமிருந்தான குறிப்புகளில் இருந்து, அல்லது சேக்சுபியரின் சொந்த தாள்களில் இருந்தே கூட இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம். 1593 மற்றும் 1594 ஆம் ஆண்டில், [[புபோனிக் பிளேக்|பிளேக்]] நோய் பரவியதன் காரணமாக நாடக அரங்குகள் எல்லாம் மூடப்பட்டபோது, காமக் கருப்பொருளுடனான "[[வீனஸ் அடோனிஸ் (சேக்சுபியர் கவிதை)|வீனஸ் அன் அடோனிஸ்]]" மற்றும் "தி ரேப் ஆஃப் லுக்ரிஸ்" ஆகிய இரண்டு விவரிப்பு கவிதைகளை சேக்சுபியர் வெளியிட்டார். "வீனஸ் அன் அடோனிஸில்" , அப்பாவியான [[அடோனிஸ்]] [[வீனஸ் (புராணம்)|வீனஸின்]] பாலியல் முன்னேற்றங்களை நிராகரிக்கிறார். "தி ரேப் ஆஃப் லுக்ரிஸில்" , கற்புடை மனைவியான [[லுக்ரெசியா|லுக்ரிஸ்]] காமம் கொண்ட [[செக்ஸ்டஸ் தர்குவினஸ்|டர்குவினால்]] பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். [[ஓவிட்|ஓவிடின்]] "[[கற்பனைக் கவிதைக்கதை|கற்பனைக் கவிதைக் கதை]]" களின் பாதிப்பில், இந்த கவிதைகள் கட்டுப்படுத்த முடியாத காமத்தினால் விளையும் குற்ற உணர்வையும் அறவியல் குழப்பத்தையும் காட்டுகின்றன. இரண்டுமே பிரபலமானதோடு, சேக்சுபியரின் வாழ்நாள் காலத்திலேயே மறுபிரசுரம் செய்யப்பட்டன. மூன்றாவது விவரிப்பு கவிதையான, "[[எ லவர்'ஸ் கம்ப்ளெயின்ட்|எ லவர்' ஸ் கம்ப்ளெயின்ட்]]" டில் ஒரு இளம் பெண் தான் பாலியல் ஆசைக்கு தூண்டப்படுவது குறித்து புலம்புகிறாள். இது 1609 ஆம் ஆண்டில் "செய்யுள் கவிதை" வடிவில் முதல் பதிப்பு அச்சிடப்பட்டது. அநேக அறிஞர்கள் இப்போது சேக்சுபியர் தான் "எ லவர்'ஸ் கம்ப்ளெயின்ட்" எழுதினார் என ஒப்புக் கொள்கிறார்கள். 1599 ஆம் ஆண்டில் 138 மற்றும் 144 செய்யுள்களின் இரண்டு ஆரம்ப வரைவுகள் சேக்சுபியரின் அனுமதியின்றி அவரது பெயரைப் போட்டு "[[தி பேஸனேட் பில்கிரிம்|தி பாசனெட் பில்கிரிமில்]]" தோன்றின. [[படிமம்:Sonnets1609titlepage.jpg|thumb|right|சேக்சுபியர் கவிதைகளின் 1609 ஆம் ஆண்டு பதிப்பின் முகப்புப் பக்கம்]] "[[சேக்சுபியரின் கவிதைகள்|செய்யுள் கவிதை]]" கள் தான் அச்சிலேறிய சேக்சுபியரின் நாடகமல்லாத படைப்புகளில் இறுதியானவை. 154 செய்யுள் கவிதைகளில் ஒவ்வொன்றும் எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை அறிஞர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் தனிப்பட்ட வாசகர்களுக்காக தனது தொழில் வாழ்க்கைக் காலம் முழுவதும் சேக்சுபியர் செய்யுள் கவிதைகளை எழுதினார் என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. உரிய அனுமதியின்றி இரண்டு செய்யுள் கவிதைகள் 1599 "தி பாஸனேட் பில்கிரிம்" படைப்பில் தோன்றி விடுவதற்கு முன்பே, சேக்சுபியரின் "தனிப்பட்ட நண்பர்களுக்கான செய்யுள் கவிதைகள்" குறித்து [[பிரான்சிஸ் மெரெஸ்|பிரான்சிஸ் மெரிஸ்]] 1598 ஆம் ஆண்டில் குறிப்பு வெளியிட்டிருக்கிறார். வெளியிடப்பட்ட தொகுப்பு சேக்சுபியர் விரும்பிய வரிசையில் அமைந்தது என்பதை குறைவான ஆய்வாளர்களே நம்புகின்றனர். அவர் இரண்டு வேறுபாடான வரிசைகளை திட்டமிட்டதாகத் தோன்றுகிறது. கருப்பு நிற தோற்றத்துடனான திருமணமான பெண் ஒருவரின் கட்டுப்படுத்த முடியாத காமம் குறித்த (தி "டார்க் லேடி") என்கிற ஒரு படைப்பையும், இன்னொன்று ஒரு சிவப்பான இளம் ஆணின் மோதலுக்குட்படும் காதல் குறித்த (தி "ஃபேர் யூத்") என்னும் படைப்பையும் அவர் உருவாக்கினார். இந்த பாத்திரங்கள் உண்மையான தனிநபர்களைக் குறிக்கிறதா, அல்லது "நான்" என்று அவர்களைக் குறிப்பிடும் தொனியில், சேக்சுபியர் தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செய்யுள்கள் கொண்டு "சேக்சுபியர் தனது இதயத்தைத் திறந்தார்" என்று [[வோர்ட்ஸ்வொர்த்|வேர்ட்ஸ்வொர்த்]] நம்பினார். காதல், பாலியல் நேசம், புனருற்பத்தி, மரணம் மற்றும் காலம் ஆகியவற்றின் மீதான ஆழமான தியானம் என்பதாக இந்த "செய்யுள் கவிதை"களை விமர்சர்கள் புகழ்கிறார்கள். சேக்சுபியரின் முதல் நாடகங்கள் அன்றைய நாளின் வழக்கமான நடையில் இருந்தன. கவிதை நீண்ட, சில சமயங்களில் விரிவான உருவகம் மற்றும் கற்பனைப் புனைவுகளை சார்ந்திருந்தது. மொழி பல சமயங்களில் ஆரவாரமானதாக இருந்தது - நடிகர்கள் பேசுவதைக் காட்டிலும் முழக்கமிடும் வகையானதாக. உதாரணமாக, "[[டைடஸ் ஆன்ட்ரோனிகஸ்|டைடஸ் ஆன்ட்ரோனிகஸின்]]" மகத்தான வசனங்கள் தான் இயக்கத்தை தூக்கி நிறுத்துகின்றன என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆயினும், விரைவில் மரபான நடையை தனது சொந்த நோக்கங்களுக்கேற்ப மாற்றினார் சேக்சுபியர். "[[ரிச்சர்டு III (நாடகம்)|ரிச்சர்டு III]]" நாடகத்தில் ஆரம்பத்தில் வரும் மனவொலி தனது வேர்களை மத்தியகால நாடகத்தின் [[தி வைஸ்|வைஸின்]] சுய பிரகடனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில், ரிச்சர்டின் தெளிவான சுய விழிப்புணர்வு சேக்சுபியரின் முதிர்ச்சியான நாடகங்களின் மனவொலிகளில் இருந்து எடுத்துக் கொள்ளப் பார்க்கின்றன. மரபான நடையில் இருந்து சுதந்திர நடைக்கான மாற்றத்தை அடையாளப்படுத்துவதாக எந்த ஒரு ஒற்றை நாடகத்தையும் குறிப்பிட முடியாது. தனது தொழில்வாழ்க்கை முழுவதிலும் சேக்சுபியர் இந்த இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தினார். "ரோமியோ ஜூலியட்" தான் நடைகளை இணைப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். 1590களின் மத்தியிலான "ரோமியோ ஜூலியட்" , "[[ரிச்சர்டு II (நாடகம்)|ரிச்சர்டு II]]" , மற்றும் "எ மிட்சம்மர் நைட்'ஸ் ட்ரீம்" ஆகியவற்றின் சமயத்தில், சேக்சுபியர் கூடுதல் இயல்பான கவிதைகளை எழுதத் துவங்கியிருந்தார். தனது உருவகங்கள் மற்றும் பிம்பங்களை அதிகமாக தனது நாடகத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் அவர் மேம்படுத்தி வந்தார். "ஹேம்லெட்" நாடகத்துக்குப் பின் சேக்சுபியர் தனது கவிதை நடையை மேலும் மாற்றினார். இந்த நடை கூடுதல் துரிதமானதாகவும் பன்முகப்பட்டதாகவும், அத்துடன் கட்டுமானத்தில் வழக்கமானதாக இல்லாமல் அபூர்வமாகத் தான் திருப்பமுடைய நீள்வட்ட வடிவம் கொண்டதாகவும் இருந்ததாக இலக்கிய விமர்சகரான ஏ.சி.பிராட்லி விவரிக்கிறார். தனது தொழில்வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், இந்த விளைவுகளைச் சாதிக்க பல்வேறு நுட்பங்களை சேக்சுபியர் கையாண்டார். [[இரண்டாம் அடி கடந்தும் நீளும் வாக்கியம்]], ஒழுங்கற்ற நிறுத்தங்களும் புள்ளிகளும், மற்றும் வாக்கிய அமைப்பு மற்றும் நீளத்தில் அதிகமான மாறுபாடுகள் ஆகியவை இதில் அடங்கும். சேக்சுபியரின் கவிதை மேதாவிலாசத்தில் நாடக அரங்கு குறித்த நடைமுறை உணர்வும் சேர்ந்திருந்தது. அந்த காலத்தின் அனைத்து நாடக ஆசிரியர்களையும் போலவே, பெட்ரார்க் மற்றும் ஹோலின்ஷெட் ஆகிய மூலங்களில் இருந்து கதைகளை நாடகவயமாக்கினார். ஒவ்வொரு கதைக்களத்திலும் பல்வேறு ஆர்வ மையங்கள் உருவாகுமாறு மாற்றியமைத்த அவர், பார்வையாளர்களுக்கு ஒரு விவரிப்பின் அதிகப்பட்ச சாத்தியமான பக்கங்களைக் காட்டினார். ஒரு சேக்சுபியர் நாடகம், மொழிபெயர்ப்பு, வெட்டல், மற்றும் பரவலான பொருள்கொள்ளலிலும் நாடகத்தின் மையக்கருவுக்கு எந்த இழப்பும் இன்றி இருக்க முடிந்தது இந்த வடிவமைப்பின் வலிமையாக அமைந்தது. சேக்சுபியரின் தேர்ச்சி வளர்ச்சி பெற்றபோது, அவர் தனது பாத்திரங்களுக்கு தெளிவான கூடுதல் பன்முகத்தன்மையுடனான ஊக்குவிப்புகளையும் வசனங்களின் தெளிவான வடிவங்களையும் கொடுக்க முடிந்தது. ஆயினும், தனது பிற்கால நாடகங்களில் அவரது ஆரம்ப கால நடையின் அம்சங்களைப் பாதுகாத்தார். தனது பிற்கால காதல்காவியங்களில் அவர் கூடுதல் செயற்கைப்பட்ட ஒரு நடைக்குத் திட்டமிட்டு திரும்பினார். [[படிமம்:Macbeth consulting the Vision of the Armed Head.jpg|thumb|இடது மெகாபெத் ஆயுதமேந்திய தலைமையின் பார்வையை ஆலோசிக்கிறார். ஹென்றி ஃபுயுஸ்லி, 1793–94. ஃபோல்கர் சேக்சுபியர் நூலகம், வாஷிங்டன்.]] சேக்சுபியரின் படைப்புகள் பின்னாளில் நாடகம் மற்றும் இலக்கியத்தில் நீடித்த படிமத்தை உருவாக்கியது. குறிப்பாக, பாத்திரப்படைப்பு, [[கதைக்களம் (விவரிப்பு)|கதைக்களம்]], [[மொழி]] ஆகியவற்றின் நாடக வகைத் திறனை அவர் விரிவுபடுத்தினார். உதாரணமாக, "ரோமியோ ஜூலியட்" வரையில், காதல்காவியம் என்பது துன்பியலுக்கு உகந்தவையாகக் கருதப்படவில்லை. மனவொலிகள் முக்கியமாக பாத்திரங்கள் அல்லது நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவே முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தன; ஆனால் சேக்சுபியர் அவற்றை பாத்திரங்களின் மனதை ஆராய பயன்படுத்தினார். அவரது படைப்புகள் பிந்தையநாள் கவிதைகளை பெருமளவு பாதித்தது.[[ரொமான்டிசிஸம்|காதல்காவியக் கவிஞர்கள்]] சேக்சுபியர் வகை செய்யுள் நாடகங்களுக்கு புத்துயிரூட்ட முயன்றனர். ஆயினும் அது அவ்வளவு வெற்றி பெறவில்லை. [[சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ்|கொலிரிட்ஜ்]] முதல் [[ஆல்பிரட் டெனிசன், முதலாவது பரோன் டெனிசன்|டெனிசன்]] வரையான அனைத்து ஆங்கில கவிதை நாடகங்களுமே "சேக்சுபியர் கதைக்கருக்களின் மெல்லிய வேறுபட்ட வடிவங்களே" என்று விமர்சகர் [[ஜார்ஜ் ஸ்டெய்னர்|ஜார்ஜ் ஸ்டெயினர்]] விவரித்தார். தாமஸ் ஹார்டி, வில்லியம் ஃபால்க்னர், மற்றும் [[சார்லஸ் டிக்கன்ஸ்]] ஆகிய புதின எழுத்தாளர்களையும் சேக்சுபியர் பாதித்தார். டிக்கன்ஸ் அடிக்கடி சேக்சுபியரை மேற்கோளிடுவார். அவரது படைப்புகளின் தலைப்புகளில் 25 சேக்சுபியரின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அமெரிக்க புதின ஆசிரியரான [[ஹெர்மன் மெல்வில்|ஹெர்மன் மெல்விலின்]] மனவொலிகளில் அதிகமானவை சேக்சுபியருக்குக் கடன்பட்டவையாகும்; "மோபி-டிக்" கில் வரும் அவரது கேப்டன் அஹாப் பாத்திரம் சேக்சுபியரின் "கிங் லியர்" பாதிப்பில் உருவான தீரமிகுந்த நாயகன் ஆவார். 20,000 இசைத் துண்டுகளை சேக்சுபியரின் படைப்புகளுக்கு தொடர்புபடுத்தி அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சேக்சுபியர் பல ஓவியர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார். வில்லியம் ப்ளேக்கின் நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் ஹென்றி ஃபுயுஸ்லி என்னும் கலைஞர் "மெகாபத்" தை ஜெர்மனில் மொழிபெயர்க்கவும் சென்றார். [[மனோவியல் ஆய்வு நிபுணர்|மனோவியல் ஆய்வு நிபுணரான]] [[சிக்மண்ட் பிராய்டு|சிக்மன்ட் பிராய்டு]] சேக்சுபியர் மனோதத்துவம் என்ற ஒன்றை, குறிப்பாக மனித இயல்பு குறித்த அவரது தத்துவங்களுக்கு, ஹேம்லட்டில் இருந்து வரைந்தார். சேக்சுபியரது நாளில், ஆங்கில இலக்கணமும் உச்சரிப்பும் இப்போதை விடவும் குறைந்த தரநிர்ணயத்துடன் இருந்தன. அவரது ஆங்கில பயன்பாடு நவீன ஆங்கிலத்தை வடிவமைக்க உதவின. [[சாமுவேல் ஜான்சன்]] தனது "[[எ டிக்‌ஷனரி ஆஃப் தி இங்கிலீஷ் லாங்வேஜ்|எ டிக்சனரி ஆஃப் தி இங்கிலீஷ் லாங்க்வேஜ்]]" புத்தகத்தில் வேறு எந்த ஆசிரியரை விடவும் அதிகமான அளவில் சேக்சுபியரை மேற்கோள் காட்டுகிறார். "with bated breath ("மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்" ) மற்றும் "a foregone conclusion" ("ஓதெல்லோ" ) ஆகிய சொற்றொடர்கள் அன்றாட ஆங்கிலப் பேச்சில் தங்களது இடத்தைப் பிடித்தன. தன் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியர் ஒருபோதும் போற்றப்பட்டதில்லை. ஆனால் அவருடைய பங்கு புகழ் அவருக்கு கிடைத்தது. 1598 ஆம் ஆண்டில் மதகுருவும் எழுத்தாளருமான [[பிரான்சிஸ் மெரெஸ்|ஃபிரான்சிஸ் மெரெஸ்]] ஆங்கில எழுத்தாளர்களின் குழு ஒன்றில் சேக்சுபியர் தான் நகைச்சுவை, துன்பியல் இரண்டிலும் "மிகவும் சிறந்த" எழுத்தாளர் எனத் தனிப்படுத்திக் காட்டினார். [[செயின்ட் ஜான்'ஸ் காலேஜ், கேம்பிரிட்ஜ்|கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில்]] நாடக ஆசிரியர்கள் அவரை [[ஜெஃப்ரி சாஸர்|சாசர்]], [[ஜான் கோவர்|கோவர்]] மற்றும் [[எட்மண்ட் ஸ்பென்ஸர்|ஸ்பென்ஸர்]] ஆகியோருடன் வகையிட்டனர். [[First Folio|ஃபர்ஸ்ட் ஃபோலியோ]][[ஃபர்ஸ்ட் ஃபோலியோ|வில்,]] பென் ஜான்சன் சேக்சுபியரை "காலத்தின் ஆன்மா" என்று அழைத்தார். முன்பொரு முறை இன்னொரு இடத்தில் "சேக்சுபியருக்கு கலை அவசியமாயிருக்கிறது" என்று அவர் ஏளனமாய் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. [[படிமம்:Millais - Ophelia (detail).jpg|thumb|இடது ' 'ஓபெலியா' ' (விரிவு). ஜான் எவரெட்ட் மில்லய்ஸ், 1851–52. தாதே பிரிட்டன்.]] 1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளட்சர்]] மற்றும் [[பென் ஜான்சன்|பென் ஜான்சனுக்கு]] கீழாகத் தான் மதிப்பிட்டனர். உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான [[ஜான் டிரைடன்]] சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார். பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக [[சாமுவேல் ஜான்சன்|சாமுவேல் ஜான்சனினது]] பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், [[எட்மண்ட் மலோன்|எட்மண்ட் மலோனினது]] பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன. 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், [[ழொஹன் வோல்பிகங் வான் கோஎதே|கோயத்]], [[ஸ்டெந்தால்|ஸ்டென்தால்]] மற்றும் [[விக்டர் ஹியூகோ]] ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர். [[ரொமான்டிசிஸம்|காதல்காவிய சகாப்த]] காலத்தில், சேக்சுபியர் கவிஞரும் இலக்கிய தத்துவாசிரியருமான [[சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ்|சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜால்]] போற்றப்பட்டார். விமர்சகரான [[ஆகஸ்டு வில்ஹெம் ஸ்க்லெகல்|ஆகஸ்ட் வில்ஹெம் ஸ்க்லெகல்]] அவரது நாடகங்களை [[ஜெர்மன் ரொமான்டிசிஸம்|ஜெர்மன் காதல்காவிய]] பொருளில் மொழிபெயர்த்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், சேக்சுபியரின் மேதாவித்தனத்திற்கான புகழ் போற்றலின் எல்லையைத் தொட்டது. "மன்னர் சேக்சுபியர்" என்று 1840 ஆம் ஆண்டில் கட்டுரையாசிரியரான தாமஸ் கார்லைல் எழுதினார். [[விக்டோரியா காலத்தவர் சகாப்தம்|விக்டோரியா காலத்தவர்கள்]] அவரது நாடகங்களை பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர அதிசயங்களாகத் தயாரித்தனர். நாடக ஆசிரியரும் விமர்சகருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேக்சுபியரை தொழும் மரபினை கிண்டல் செய்தார். [[ஹென்றி இப்சென்|இப்சென்]] நாடகங்களின் புதிய [[இயல்புவாதம் (நாடகம்)|இயல்புவாதம்]] சேக்சுபியரை காலத்திற்கொவ்வாததாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலைகளில் நவீனத்துவ புரட்சியானது, சேக்சுபியரை ஒதுக்கவில்லை. மாறாக, அவரது படைப்புகளை கலைப் பரிசோதனையின் சேவையில் பட்டியலிட்டனர். ஜெர்மனியின் [[ஜெர்மன் வெளிப்பாட்டுவாதம்|வெளிப்பாட்டுவாதிகளும்]] மாஸ்கோவின் [[வருங்காலவாதம் (கலை)|எதிர்காலவாதிகளும்]] அவரது நாடகங்களின் தயாரிப்புகளை நிறுவினர். மார்க்சிய நாடக ஆசிரியரும் இயக்குநருமான [[பெர்டோல்ட் ப்ரெச்ட்|பெர்டொல்ட் பிரெச்ட்]] சேக்சுபியரின் பாதிப்பில் ஒரு [[எபிக் தியேட்டர்|காவிய அரங்கை]] வடிவமைத்தார். கவிஞரும் விமர்சகருமான [[டி.எஸ். எலியட்|டி.எஸ்.எலியட்]] ஷாவுக்கு எதிராக வாதிடுகையில், சேக்சுபியரின் "அடிப்படைதன்மை" தான் உண்மையில் அவரை மிகவும் நவீனமாக்குவதாகக் கூறினார். எலியட், ஜி. வில்சன் நைட் மற்றும் [[புதிய விமர்சனவாதம்|புதிய விமர்சனவாத]] பள்ளி உடன் இணைந்து, சேக்சுபியரின் படிமங்களை நெருக்கமாக கற்கும் ஒரு இயக்கத்திற்கு தலைமையேற்றனர். 1950களில், புதிய விமர்சனவாத அணுகுமுறைகளின் ஒரு அலை நவீனத்துவத்தை இடம்பெயர்த்து சேக்சுபியரின் [[பின்நவீனத்துவம்|"பின்-நவீனத்துவ"]] ஆய்வுகளுக்கு பாதையமைத்துக் கொடுத்தது. எண்பதுகளின் வாக்கில், சேக்சுபியர் ஆய்வுகள் என்பவை [[கட்டமைப்புவாதம்]], [[பெண்ணியம்]], ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள், மற்றும் [[விந்தை ஆய்வுகள்|விந்தை ஆய்வுகளுக்கு]] திறந்துபட்டதாக இருந்தன. சேக்சுபியர் இறந்து சுமார் 150 வருடங்களுக்கு பிறகு, அவரினுடைய சில படைப்புகள் குறித்த சந்தேகங்கள் எழத் துவங்கின. ஃபிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மர்லோ, மற்றும் [[எட்வர்டு டி வெரெ|எட்வர்டு டீ வெரெ]], தி யர்ல் ஆஃப் ஆக்ஸ்போர்டு ஆகியோர் உண்மைப் படைப்பாளிகளாய்க் கருதப்பட்டனர். கல்வியியலாளர் மட்டங்களில் அனைத்து மாற்று எழுத்தாளர்களுமே உலகளவில் நிராகரிக்கப்படுகின்றனர் என்றாலும், இந்த விஷயத்தில் வெகுஜன மக்களின் ஆர்வம், குறிப்பாக [[ஆக்ஸ்போர்டு தத்துவம்|ஆக்ஸ்போர்டுவாத சித்தாந்தம்]] 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. [[ரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கத்தை]] பின்பற்றுவது சட்டவிரோதமாக இருந்த ஒரு காலத்தில், சேக்சுபியரின் குடும்ப உறுப்பினர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர் என்று சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சேக்சுபியரின் தாயான, [[மேரி சேக்சுபியர்|மேரி ஆர்டன்]], நிச்சயமாக ஒரு தயாள உள்ளமுடைய கத்தோலிக்க குடும்பத்தில் தான் பிறந்தார். உறுதியான ஆதாரமாக ஜான் சேக்சுபியர் கையெழுத்திட்ட கத்தோலிக்க விசுவாச வாக்குமூலத்தை குறிப்பிடலாம். இது 1757 ஆம் ஆண்டில் ஹென்லி தெருவில் இருந்த அவரது முன்னாள் வீட்டின் தூணில் காணப்பட்டது. ஆயினும், இப்போது இந்த ஆவணம் தொலைந்து விட்டது என்பதோடு அதன் உண்மைத்தன்மையிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள். 1591 ஆம் ஆண்டில், "கடன் நடைமுறைக்கான பயத்தால்" ஜான் தேவாலயத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பொதுவான கத்தோலிக்க நடைமுறையாகும். 1606 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்போர்டில் நடந்த ஈஸ்டர் [[ஈகாரிஸ்ட்|கூட்டத்தில்]] பங்குபெறத் தவறியோர் பட்டியலில் வில்லியமின் பெண் சுசானா பெயர் இருந்தது. சேக்சுபியரின் நாடகங்களில் கத்தோலிக்கவாதத்திற்கு ஆதரவான எதிரான இரண்டுக்கான ஆதாரங்களையும் அறிஞர்கள் காண்கிறார்கள். ஆனால் உண்மை இருவழியிலும் நிரூபிக்க சாத்தியமானதாய் இல்லை. சேக்சுபியரின் பாலியல் விருப்பம் குறித்த சில விவரங்களே அறியக் கிடக்கின்றன. 18 வயதில், அவர் கர்ப்பமாக இருந்த 26 வயது ஆனி ஹதாவேயைத் திருமணம் செய்தார். அதன்பின் ஆறு மாதத்தில் அவர்களது முதலாவது குழந்தையான சுசானா, 26 மே 1583 அன்று பிறந்தது. ஆயினும், சேக்சுபியருக்கு ஒரு இளம் ஆண் மீது இருந்த காதலுக்கு ஆதாரமாக சேக்சுபியரின் செய்யுள் கவிதைகளை பல நூற்றாண்டுகளாக வாசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே பத்திகளை தீவிரமான [[நட்பு|நட்பின்]] வெளிப்பாடே தவிர பாலியல் நேசம் அல்ல என்று மற்றவர்கள் பார்க்கிறார்கள். அதே சமயத்தில் திருமணமான ஒரு பெண்ணைக் குறித்து எழுதப்பட்ட [[சேக்சுபியரின் ஈரேழ்வரிப்பாக்கள்#தி டார்க் லேடி|"டார்க் லேடி"]] எனப்படும் இருபத்தியாறு செய்யுள் கவிதைகள் அவரது எதிர்பாலின உறவுகளுக்கான ஆதாரமாக கொள்ளப்படுகின்றன. சேக்சுபியரின் உடல் தோற்றம் குறித்த எந்த எழுத்துரீதியான விவரிப்பும் இல்லை. அத்துடன் அவர் ஒரு தோற்றச் சித்திரத்தை வரைய ஏற்பாடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவரை நன்கு ஒத்திருப்பதாக பென் ஜான்சன் ஒப்புதலளித்ததான [[ட்ரோஸ்ஹவுட் செதுக்கல்|ட்ரோஷவுட் கல்வெட்டும்]], அவரது ஸ்ட்ராட்போர்டு [[சேக்சுபியரின் இறுதிஊர்வல நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னமும்]] அவரது தோற்றம் குறித்த சிறந்த சான்றாக இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல், அதிகாரப்பூர்வமான சேக்சுபியர் தோற்றச்சித்திரங்களுக்கான ஆர்வம் மிகுதியாய் இருந்தது. பல போலியான சித்திரங்கள், அதேபோல் தவறான சித்தரிப்புகள், மறுதீட்டல், மற்ற மனிதர்களின் சித்திரங்கள் மீது பெயர் மாற்றி எழுதுதல் ஆகிய போக்கிற்கும் இந்த தேவை இட்டுச் சென்றது. [[படிமம்:Gilbert WShakespeares Plays.jpg|thumb|right|வில்லியம் சேக்சுபியரின் நாடகங்கள்]] சேக்சுபியரின் படைப்புகளில் ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் அச்சிடப்பட்ட 36 நாடகங்கள் அடங்கும். அவை [[சேக்சுபியர் வகை காமெடி|நகைச்சுவை]], [[சேக்சுபியர் வகை வரலாறு|வரலாறுகள்]] மற்றும் [[சேக்சுபியர் வகை துன்பியல்|துன்பியல்]] ஆகிய அவற்றின் வகைப்படுத்தலின் படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. சேக்சுபியர் தன் பெயரிலுள்ள நாடகங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் எழுதவில்லை. பல காட்சிகள் அந்த காலகட்டத்தில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்த, கூட்டுழைப்பின் அடையாளங்களைக் காட்டின. ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் இடம்பெறாத, "தி டூ நோபிள் கின்ஸ்மென்" மற்றும் "[[பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர்ஸ்|பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர்]]" ஆகியவை இப்போது படைப்புகளின் பாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றில் சேக்சுபியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் கவிதைப் படைப்பு எதுவும் இடம்பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எட்வர்டு டவ்டன் பிந்தைய நகைச்சுவைகளில் நான்கினை "காதல்காவியங்கள்" என்று வகைப்படுத்தினார். பல அறிஞர்கள் அவற்றை "துன்பியல்நகைச்சுவை"யினதாக வகைப்படுத்த விரும்பினாலும், அவரது வகைப்பாடு தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில் [[ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்]], மெஷர் ஃபார் மெஷர், டிராய்லஸ் அன் கிரெஸிடா மற்றும் ஹேம்லெட் ஆகிய நான்கு நாடகங்களை "பிரச்சினை நாடகங்கள்" என்ற பதத்தை கொண்டு பிரடெரிக் எஸ்.போஸ் விவரித்தார். நாடகங்கள் கருப்பொருள் மற்றும் தொனியில் ஒற்றைத்தன்மையனவாய் இருப்பதால் அவற்றை உறுதிப்பட நகைச்சுவைகள் என்றோ துன்பியல் என்றோ வரையறுக்க முடியாது" என்று அவர் எழுதினார். எனவே இன்றைய நாடக அரங்கத்தில் இருந்து வசதியான ஒரு பதத்தை இரவல் பெற்று, அவற்றை மொத்தமாக சேக்சுபியரின் பிரச்சினை நாடகங்களாக வகைப்படுத்தலாம். பிற பிரச்சினை நாடகங்கள் கீழே ஒரு ‡ குறியினால் அடையாளமிடப்பட்டுள்ளன. சேக்சுபியரால் ஒரு பகுதி பங்களிப்பை மட்டுமே பெற்றிருப்பதாக நம்பப்படும் நாடகங்கள் கீழே ஒரு † குறி மூலம் குறியிடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவர் எழுதியதாகக் குறிப்பிடப்படும் பிற படைப்புகள் உறுதிப்படுத்தப்படாத படைப்புகள் என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. [[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]] [[பகுப்பு:நாடகாசிரியர்கள்]] [[பகுப்பு:1564 பிறப்புகள்]] [[பகுப்பு:1616 இறப்புகள்]] [[பகுப்பு:பிரித்தானியக் கவிஞர்கள்]] [[பகுப்பு:வில்லியம் சேக்சுபியர்]] கீற்று (இணையத்தளம்) கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணையத்தளம் ஆகும். இலக்கியம், திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், நளபாகம், தகவல் களம், சிரிப்'பூ' ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அருள் செல்வநாயகம் அருள் செல்வநாயகம் (சூன் 6, 1926 - செப்டம்பர் 2, 1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946 இல் "மின்னொளி" என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். அருள் செல்வநாயகம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம், குருமண்வெளி என்ற ஊரில் 1926 சூன் 6 ஆம் நாள் தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1948 இல் சேர்ந்து 1950 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். மட்டக்களப்பிலும் மலையகத்திலும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்தார். 1956 ஏப்ரல் 23 இல் அருளம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். மனைவியின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். நுவரெலியா அக்கரைப்பத்தனையில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது ‘பசுமலைப் பார்பதி’ என்னும் கதையை எழுதி வெளியிட்டார். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "சீர்பாத குல வரலாறு" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. சுவாமி விபுலானந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று "விபுலானந்த அடிகள்" என்னும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அத்துடன், விபுலானந்தரின் ஆக்கங்களைத் தொகுத்து விபுலானந்தத்தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். "விபுலானந்த ஆய்வு" என்னும் நூல் க.பொ.த (சா.த) வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. "விபுலானந்த வெள்ளம்" அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடநூலாகவும், "விபுலானந்த இன்பம்" க.பொ.த. உயர்தர வகுப்புக்குக்கும் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. பியூட்டேன் பியூட்டேன் ("Butane")என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு CH ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CHCHCHCH. இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும். அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது. இதன் பெயர் பியூட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பியூட் மற்றும் அல்கேன்களுக்கான விகுதி ஏன் ஆகியைவ இணைந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சேர்மம் எட்வர்ட் பிரேங்லேண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. "n"-பியூட்டேனில் மையத்தில் உள்ள C−C பிணைப்பைப் பொறுத்த சுழற்சி இரண்டு விதமான ("டிரான்சு" மற்றும் "காஸ்") வகை (டிரான்சு மற்றும் காசு) புறவெளி அமைப்பு மாற்றியங்களைத் தோற்றுவிக்கிறது. அதிக அளவு ஆக்சிசனின் முன்னிலையில் பியூட்டேன் ஆக்சிசனில் எரிந்து கார்பனீராக்சைடு மற்றும் நீராவியைத் தருகிறது; குறைவான அளவில் ஆக்சிசன் இருக்கும் போது, கார்பன்(புகை) அல்லது கார்பன் மோனாக்சைடும் சேர்த்து உருவாக்கப்படலாம். போதுமான ஆக்சிசனின் முன்னிலையில்: வரையறுக்கப்பட்ட அல்லது குறைவான ஆக்சிசனின் முன்னிலையில்: காற்றில் எரியும் போது பியூட்டேனின் உயர்ந்தபட்ச வெப்பமாறா தழல் வெப்பநிலையானது. "n"-பியூட்டேனானது மேலியிக் நீரிலியின் தயாரிப்பின் போதான டூபாண்ட் எனப்படும் வெடிமருந்தின் வினைவேகமாற்றிச் செயல்பாட்டின் தொடக்கநிலை மூலப்பொருளாக உள்ளது: "n"-பியூட்டேன், அனைத்து இதர ஐதரோகார்பன்களைப் போலவும் தனி உறுப்பு குளோரினேற்ற வினைகளில் ஈடுபட்டு 1-குளோரோ மற்றும் 2-குளோரோபியூட்டேன்கயும், மேலும் அதிக குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களையும் தருகின்றது. குளோரினேற்ற வினையின் வேகங்களின் ஒப்புமையானது n-பியூட்டேனில் காணப்படும் இரண்டு வகை c-H பிணைப்புகளின் பிணைப்பு சிதையும் ஆற்றல்களில் உள்ள வேறுபாட்டைக் (425 and 411 கிலோயூல்/மோல்) கொண்டு விளக்கப்படுகிறது. பியூட்டேனானது பெட்ரோல் (அ) பாறை எண்ணெய் உடன் கலவைப்பொருளாகவும், எரிபொருளாகப் பயன்படும் வாயுவாகவும், நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் போது தனித்தோ அல்லது புரொப்பேனுடன் சேர்ந்த கலவையாகவோ கரைப்பானாகவும், எத்திலீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றைத் தயாரிக்க தொடக்க மூலப்பொருளாகவும், தொகுப்பு முறை இரப்பரில் ஒரு தலையாய பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஐசோபியூட்டேன் முதன்மையாக பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என குறிப்பிடப்படுகிறது. பாறை எண்ணெயின் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு நீராவியாற் பகுப்பு செயல்முறையில் இதர அடிப்படையான பெட்ரோவேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான தொடக்கநிலை மூலப்பொருளாகவும் சிகரெட் பற்றவைப்பானில் எரிபொருளாகவும், நாற்றமகற்றிகள் போன்ற தெளிப்பு வகைக் கரைசல்களில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பியூட்டேனின் மிகத்துாய்மையான வடிவங்களானவை, குறிப்பாக ஐசோபியூட்டேன் ஓசோன் சிதைவுபடுத்திகளாக இருந்த ஆலோமீத்தேன்களுக்குப் பதிலியாக, வீட்டு உபயோக குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களில் குளிர்பதனூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பியூட்டேன் ஒரு தீமூட்டி எரிபொருளாகவும், பியூட்டேன் பந்தம் போன்ற பொதுவான தீமூட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அழிந்த பறவைகள் கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன. இராணி மங்கம்மாள் இராணி மங்கம்மாள் (இறப்பு: 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாகக் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகளாவார். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682 -ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார். மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார் . தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெரியம்மை நோயால் 1688-ல் காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றெடுத்த சின்ன முத்தம்மாள் கணவரின் பிரிவு தாங்காமல் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி கண்டு உயிரிழந்தார். அம்மன்னரின் மகனான விஜயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார். மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார். முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'சல்பீகார் அலிகான்' என்பவரை அனுப்பினார். சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மன்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர். இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார். மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். எனவே, தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது. திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது. தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு நிலவவில்லை. தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது. எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் இராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார். முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது. சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது. இராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான மிகப்பெரிய தோல்வியாக ராமநாதபுரம் போர் இருந்தது. மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702 ல் ரகுநாத சேதுபதிக்கு எதிராக இராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார். இந்த போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர மரணம் அடைந்தார். இது போரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. மதுரை நாயக்கர்களைப் போலவே மங்கம்மாளும் சமயப் பொறையைக் கடைப் பிடித்தார்." ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் " என்ற கொள்கையைக் மங்கம்மாள் பின்பற்றினார். மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் பொன்னணிகள் பலவற்றை வழங்கினார். ஆணித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது, இராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சித்திரை முழுமதி நாளில் இராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி, மீனாட்சி திருமணத்தைக் கண்டு களித்தனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அவர்கள் இருவரும் வழிபட்டனர். தான் ஒரு இந்துவாக இருந்த போதும் கிறிஸ்துவர் மற்றும் இசுலாமியர்களையும் மதித்தார். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்ததோடு, 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார். இசுலாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளித்தார். 1701-ல் இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு கூறுகிறது இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும். இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன. மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பெயரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார். , இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். தஞ்சை நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். சோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். என்.எப்.பி.ஏ 704 NFPA 704 என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் நாட்டு தீக்காப்பு அமைப்பின் (National Fire Protection Association) ஒரு சீர்தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் சட்டென (உடனே) கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும், நிறங்களாலும் எண்களாலும் உணர்த்தும் சாய்க்கட்ட வடிவில் உள்ளக் குறியீடு. இதனை தீ சாய்க்கட்டம் (Fire diamond) என்று பேச்சு வழக்கில் அமெரிக்காவில் கூறுவதுண்டு. சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேட்டைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள். வெண்மையாக உள்ள கட்டத்தில் இருக்கும் குறிப்பானது ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பாக குறிப்பிட ஏதும் இருந்தால், அதற்கான குறியீட்டை அங்கு இடுவர். சில சிறப்புக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பு: 'W' மற்றும் 'OX' ஆகிய இரண்டு குறிகள் மட்டும்தான் NFPA 704 ன் சீர்தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையேற்பான குறிகள். பிறவெல்லாம் எளிதில் விளங்கிக்கொள்ளும் குறிகள் அவைகள் முறையேற்பு ஏதும் இல்லாமல் பயன்படுத்தப்படுவன. பென்ட்டேன் பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது. டோடோ டோடோ ("dodo") ("Raphus cucullatus") அழிந்த பறவையினங்களில் ஒன்று. பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டோடோ என்ற சொல்லுக்கு போர்த்துகீசிய மொழியில் முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள். இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது. இப்பறவை வான்கோழியைவிட சற்றுப் பெரியது. சதைப்பற்று மிக்கது. வளைந்த பெரிய அலகு உடையது. இறகுகளும், வாலும் வளர்ச்சியுறாமல் காணப்பட்டன. கால்கள் குட்டையாகத் தடித்து மஞ்சள் நிறத்தில் இருந்தன. எனவே, இவை பறக்கவும், ஓடவும் முடியாதவைகளாக இருந்தன. ஒரு தடவைக்கு ஒரு முட்டையே இடும். தரையில் புற்களால் கூடு அமைத்து முட்டையை அடைகாக்கும். இந்தப் பறவையைப் பற்றி 1507 - ஆம் ஆண்டுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பலில் சென்ற மாலுமிகள் தண்ணீரூக்காக மொரீசியஸ் தீவில் ஒதுங்கியபோது இப்பறவையைப் பார்த்தார்கள். பிடித்து உண்டார்கள். 1598 - ல் இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள், மனிதர்கள் விரும்பாத அழகற்ற பறவை என இதனை அறிவித்தார்கள். குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் இடச்சுக்காரர்கள்]] அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள். எக்சேன் எக்ஃசேன் (ஹெக்சேன்) என்னும் கரிம வேதியியல் பொருள் ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஒரு ஐதரோகார்பன் (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 கரிம அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. இந்நீர்மம் 69 °C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், எக்ஃசேன் விளைபொருளாக கிடக்கின்றது. எக்ஃசேன் அதிக நச்சுத்தன்மை கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, தலைவலி, மயக்கம் போன்ற தூக்கம் ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். கை கால்களை துல்லியமாய் இயக்க முடியாமையும், கண்பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. காலணிகள், தானுந்துகள், வீட்டு மேசை நாற்காலி போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு எக்ஃசேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் கேடுகள் நிகழலாம். லேவி கோத்திரம் லேவி ("Levite") என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கோபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் "சேர்ந்திருத்தல்" என்பதாகும். லேவியர்கள் அர்ச்சகர்களாக தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரமாகும். இயேசுவா இஸ்ரவேலருக்கு கானான் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்த்ருக்கு நிலம் எதனையுன் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தார் சமய கடமைகளை தவிர்த்த விடத்து அரசியல் கடமைகள எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே ஏனைய கோத்திரத்தார் லேவியருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. பத்துக் கட்டளைகள் பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது. விவிலியத்தின் படி, "பத்துக் கட்டளைகள்" என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது: மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது. பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 மற்றும் இணைச் சட்டம் 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும். மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன: ஒரே சர்வேஸ்வரனை விசுவசிப்பாயாக சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும். முகவுரை: 20:1-2 இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது. இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சூலை 31 பிரெட்ரிக் எங்கெல்சு பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; "Friedrich Engels"; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார். இவர் பிரசியாவிலுள்ள, பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். செருமனிக்கு செல்லும் வழியில் பாரீசில், கார்ல் மார்க்சை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து‍ கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது. முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது. முதலாளித்து‍வ பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு‍ அவர் இவ்வாறு‍ கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன. கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். 1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு‍ 5-ஆம் நாள் இறந்தார். சி. ஜே. எலியேசர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், "Christie Jeyaratnam Eliezer", 12 சூன் 1918 – மார்ச் 10, 2001) இலங்கைத் தமிழ் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், கல்வியாளரும், தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் பவுல் டிராக்கின் வழிகாட்டலில் டாக்டர் ("DSc") பட்டமும் பெற்றார். எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக "அமைதிக்காக அணு சக்தி" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார். 1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "சுழியம்" என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படைத்தார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் ("La Trobe") பல்கலைக்கழகத்தில் பயன்முகக் (பிரயோக) கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978ஆம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார். இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் "Order of Australia" விருது 1996 இல் வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன், மாமனிதர் விருதினை பேராசிரியருக்கு வழங்கினார். முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நேர்மின்னி (புரோத்தன்) ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி (இலத்திரன்) ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் ("radially") செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் ("Lorentz-Dirac") சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' ("asymptotically") ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது "எலியேசரின் தேற்றம்" எனப்படுகிறது. தினத்தந்தி தினத்தந்தி தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது 1942 ஆம் ஆண்டு சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது. வருடத்தின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் தினத்தந்தி 'பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை' புத்தகத்தை வெளியிடுகிறது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள். பள்ளிப்பகல் உணவுத் திட்டம், சீருடைத்திட்டம், பள்ளிச்சீரமைப்புத் திட்டம் முதலான பல கல்வித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து தந்த நாளிதழ்களில் முதலிடம் பெற்ற நாளிதழாக தினத்தந்தியைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு. மாணவர் ஸ்பெஷல் தி.மு.க சார்பில் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் போட்டியிட்டதில் இருந்து 1976 இல் தி.மு.க அரசு நீக்கப்படும் வரை தி.மு.க சார்பு நாளிதழாகவும் பின்னர் ஓரளவு நடுநிலை நாளிதழாகவும் மாறியது. முகமது ரபி முகமது ரஃபி ("Mohammed Rafi", டிசம்பர் 24, 1924 - ஜூலை 31, 1980) இந்தியாவின் பாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற இந்தி/உருது பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியர்கள் வாழும் ஐக்கிய இராச்சியம், கென்யா போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் இந்தி மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். கொங்கணி, போச்புரி, அசாமிய மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, மாகாகி, மைதிலி மொழி மற்றும் உருது மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலம், பார்சி, அரபி, சிங்களம், டச்சு மற்றும் கிரியோல் மொழி ஆகியவற்றிலும் பாடியுள்ளார். இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார். 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது. முகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள "மஜிதா" எனும் இடமாகும். சிறுவயதிலேயே தெருவில் பாடிச் செல்லும் "பகீர்"களைப் போல பாடும் திறமையுடையவர். உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசையினைக் கற்றார். முகமது ரபி இருமுறை திருமணம் செய்து கொண்டார். உறவினராக முதல் மனைவியுடனான திருமணம் சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது ரபியின் மனைவி "பஸிரா ரபி"யின் பெற்றோர் கொல்லப்பட்டதால். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி இந்தியாவில் வசிக்க விரும்பாமல் லாகூர் நகருக்கு இடம்பெயர்ந்தால், இவரது இரண்டாவது திருமணம் "பில்குஸ் ரபி"யுடன் நடைபெற்றது. இறகுப்பந்தாட்டம், கேரம் மற்றும் பட்டம் பறக்கவிடுதல் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஆகும். 1941 ஆம் ஆண்டு "அகில இந்திய வானொலி"யின் லாகூர் நிலையத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். திரைப்படப் பாடகர் வாய்ப்பினைப் பெறுவதற்காக 1944 ஆம் ஆண்டு முகமது ரபி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். நெரிசல்மிக்க "பெகந்தி பஜார்" (Bhendi Bazar) பகுதியில் தங்கியிருந்தார். கவிஞர் "தன்வீர் நக்வி" இவரைத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாய் "ஸ்யாம் சுந்தர்" (Shyam Sunder) "கோன் கி கோரி" (Gaon Ki Gori) திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 1970 களில் இவரது தொண்டையில் நோய்தொற்று ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடினார். 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் இரவு 10:25 ற்கு அவரது 55 வயதில் மாரடைப்பினால் உயிரிழந்தார். "லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால்" (Laxmikant-Pyarelal) இசையில் மரணமடைவதற்கு சற்று முன்னர் "ஆஸ் பாஸ்" (Aas Paas) திரைப்படத்திற்காகப் பாடியதே இவரது கடைசித் திரைப்படப் பாடலாகும். இவரது மரண ஊர்வலத்தில் 10,000 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்காக இந்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடித்தது. ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். “தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின. துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார். பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான ராதா, காமராசரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும். முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர். ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது. அரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது "நாத்திகம்" இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர். மேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா "சுட்டாச்சு, சுட்டாச்சு" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய வழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த "நாடோடி" திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது. மேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான "தூக்குமேடை", "ரத்தக்கண்ணீர்", "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு" ஆகிய நாடகங்களின் தொகுப்பாக "கதம்பம்" என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. மு. க. முத்து நடிப்பில் வந்த "சமையல்காரன்" என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார். அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர். ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கூறினர். பின்பு சிறுக சிறுக உடல் நலம் பாதித்தது. சில ஆண்டுகள் மட்டுமே நடிக்கவும் முடிந்தது. குரலில் மாற்றம் இருந்த போதும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. தொண்டையில் குண்டுடனே வாழ்ந்து வந்தார். பின்பு உடல்நலம் குன்றி 1987-ல் இறந்து விட்டார். பறக்காத பறவைகள் பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும். ஏறத்தாழ நாற்பது பறக்காத பறவையினங்கள் இப்பொழுது உலகில் உள்ளன. தீக்கோழி, எமு, கிவி, பென்குயின் என்பன பறக்காத பறவையினங்களில் சிலவாகும். கொன்றுண்ணிகள் அற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலேயே இப்பறவைகள் தம் பறக்கும் ஆற்றலை இழந்துள்ளன. இதற்கு தீக்கோழி விதிவிலக்காகும். ஆபிரிக்க சவன்னா வெளிகளில் வாழும் தீக்கோழி தன் நகங்களுடைய பலமான கால்களை எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறது. நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய ஓக், டோடோ போன்றவை அவற்றுள் சில. பறக்காத பறவைகளைப் பிடித்து வளர்ப்பது இலகுவானது. ஏனெனில் அவற்றுக்கு கூண்டுகள் தேவையில்லை. தீக்கோழிகள் இறகு, தோல், இறைச்சி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பறக்காத பறவை தீக்கோழி ஆகும். அதுவே உயிர்வாழும் பறவைகளுள்ளும் பெரியது. யானைப் பறவை யானைப் பறவை (Elephant birds) அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன. பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனங்கள் சி. பா. ஆதித்தனார் சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் "நாம் தமிழர்" என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார். சொந்த ஊர்  காயாமொழி  ( திருச்செந்தூர் தாலுகா  - தூத்துக்குடி மாவட்டம் ) ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார். 1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார். இவர் தொடங்கிய முதல் பத்திரிகை "தமிழன்" என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், "ராணி" என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் "தினத்தாள்" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே "தினத்தூது", "தினத்தந்தி" ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன. மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் "ராணி முத்து" என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார். சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின. இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார். இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார். நச்சுத்தன்மை நச்சுத்தன்மை என்பது ஓருயிருக்கு ஏதேனும் ஒரு வகையில் உடலியக்கத்திற்குக் கேடுதரவல்ல பொருளின் கேடுதரும் தன்மையைக் குறிப்பதாகும். பாம்பு கடித்தால் கடிவாயின் வழியே செலுத்தும் நச்சுப்பொருள் குருதியில் (இரத்தத்தில்) கலந்து ஏற்படும் விளைவுகள் நச்சுத்தன்மையை நன்கு உணர்த்தும். இதே போல தேள் கடித்தாலும் உடலுள் நச்சூட்டு நிகழ்கின்றது. நச்சுத்தன்மையில் அதிக கேடு, குறைவான கேடு என்று வீரியம் மாறுபடலாம். மேலும், எந்த ஒரு நச்சுப்பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறி இருந்தால்தான் கேடு தருகின்றது. எனவே நச்சாகும் அளவும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக நச்சுப் பொருள்களில் இரண்டு வகைகள் உண்டு: இவை அன்றி மூன்றாவதாக கதிரியக்கம் முதலிய இயற்பியல் வகையிலும் கேடுகள் விளையலாம். நச்சுத்தன்மை பற்றிய கற்கைநெறி நச்சியல் எனப்படும். கமால் கமலேஸ்வரன் கந்தையா கமலேசுவரன் ("Kandiah Kamalesvaran", பிறப்பு: நவம்பர் 13, 1934) உலகப் புகழ்பெற்ற இசைஞர். கமால் ("Kamahl") என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர். இவரது இயற்பெயர் "கந்தையா கமலேஸ்வரன்". மலேசியாவில் பிறந்தவர். இவரின் பெற்றோர் கந்தையா மயில்வாகனம், இளையதங்கம். இவர்கள் இலங்கைத் தமிழர்கள். 1953 ஆம் ஆண்டு கமால் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி பெறுவதற்காக வந்தார். தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்ட்டில் மன்னர் கல்லூரியில் ("King College") தமது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது கமாலுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. இனவெறி தாண்டவமாடிய காலம். வெள்ளை அவுஸ்திரேலியாக் கொள்கை தீவிரமாக அமுலில் இருந்த காலம் அது. கமால் கறுப்பு நிறம் கொண்டவர். இந்தச் சூழலில் கமால் தமது படிப்பை மேற்கொண்டார். பல இடர்களுக்கு மத்தியில் 1955 ஆம் ஆண்டு கமால் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டார். அடிலெய்ட்டில் பெரும் செல்வந்தராக விளங்கிய ரூபேட் மேர்டொக் ("Rupert Murdock") அவர்களின் நட்புக்குரியவரானார். 1968 ஆம் ஆண்டு தொடங்கிய இந்நட்புறவு, கமாலுக்குத் துன்பங்கள் வந்தபோதெல்லாம் பேருதவியாக இருந்தது. 1962 ஆம் ஆண்டு கமால் அடிலெய்டில் இருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தார். 1966 இல் அவுஸ்திரேலியாவின் நிரந்தரக் குடிமகனானார். ரூபேட் மேர்டொக்கின் உதவியால் மேற்கத்திய இசையில் புகழ் பெற்றார். தனது முதலாவது ஆல்பமான "A Voice to Remember" சிட்னியில் 1967 இல் வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசை விழாவில் கமால் பங்கு கொண்டார். மேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சி நூற்றுக்கணக்கான ஆல்பங்களை பலநாடுகளிலும் வெளியிட்டார். சமீபத்திய ஆல்பமான "Imagine the World in Unison" 2005 இல் வெளியிடப்பட்டது. பாலகுமாரன் பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். 150 இற்கும் மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியவர். பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்ப்பார்வையில் இயக்கினார். அகரவரிசையில் மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - அறிமுகம் ஆகத்து 1 மீன்கொத்தி மீன்கொத்தி (Kingfishers) உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும். எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன. அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் "ஆல்சிடினிடீ" (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் "ஆல்க்கியோனிடீ" (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் "செரிலிடீ" (Cerylidae). நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன. தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன. மீன்கொத்திகள் உலகில் புவிமுனைப் பகுதிகள், மிக வறண்ட சில பாலைவனங்களைத் தவிர ஏறக்குறைய மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில இனங்கள் பசிபிக் பெருங்கடலின் தெற்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவில் மெக்சிக்கோவிற்கு வடக்கிலும் சிறிய எண்ணிக்கையிலான மீன்கொத்தி இனங்களே காணப்படுகின்றன. புரந்தரதாசர் புரந்தரதாசர்"' (1484 - 1564) "கருநாடக இசையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். "மாயாமாளவகௌளை" என்னும் இராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. புரந்தரதாசர் 1484 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில் பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் பண்டரிநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் "புரந்தரவிட்டலர்" எனும் பெயரும் வழங்குதலாயிற்று.தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்தார். வயிற்று வலி நீங்கியது.தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும்,சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.இவர் சங்கீத பிதாமகர்,ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார். இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது. இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை "தாசர்வாள் பதங்கள்" என்றும் "தேவர் நாமாக்கள்" என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார். இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ("Gross Domestic Product" அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான "ஜிடிபி" என்பதை பரவலாக தனிசொல்லாகவே பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட உதவும் இச்சொல் ஓர் பகுதி அல்லது ஓர் தொழிற்றுறையை அளவிடவும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது விற்பனையை விட மதிப்புக் கூட்டலையே அளக்கின்றது; ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகின்றது. ( வெளிவரும் பொருட்களின் மதிப்பிலிருந்து அதனை உருவாக்க பயன்பட்ட மதிப்பைக் கழித்துப் பெறுவதாகும்). காட்டாக, ஓர் நிறுவனம் இரும்பை வாங்கி அதிலிருந்து தானுந்து தயாரிக்கின்றது; இரும்பின் மதிப்பையும் தானுந்து மதிப்பையும் கூட்டினால் ஜடிபி இரட்டிப்பாக எண்ணப்படும். எனவேதான் மொ.உ.உற்பத்தியில் மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஓர் நிறுவனம் அதே வெளியீட்டிற்கு தயாரிப்புச் செலவையோ பயன்படுத்தப்படும் பொருட்களையோ குறைத்தால் மொ.உ.உ மதிப்பு கூடுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பொருளாதார வளர்ச்சியை காலாண்டுக்கு காலாண்டோ ஆண்டுக்கு ஆண்டோ ஒப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றி/தோல்விகளை தீர்மானிக்கவும் பொருளாதார பின்னடைவை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method). "மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) இதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேர்ந்திருப்பதன் காரணமாக "மொத்த உற்பத்தி" என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும். மொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, "Gross National Product") மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா. ஆகத்து 2 அவுட்லுக் எக்சுபிரசு மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்சுபிரசு அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இல் இருந்து. இது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளேளருடனும் இணைத்தே விநியோகிக்கப்டுகின்றது. இது விண்டோஸ் 95 இயங்குதளத்திற்கும் ஆப்பிள் வகைக்கணிகன்களிலும் இப்பதிப்பானது விநியோகிப்படுகின்றது எனினும் இதன் Mac OS X இலிருந்து மாக்கிண்டோஷ் கணினிகளிற்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புடன் சேர்ந்து விநியோகிப்பதால் இது உள்ளடக்கபடவில்லை. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் விண்டோஸ்மெயில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளை மாற்றீடு செய்துள்ளது. மைக்ரோட்சாப்ட் விண்டோஸ் லைவ்மெயில் டெக்ஸ்டாப் என்ற ஓர் மென்பொருளையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றது. இவ்விரண்டினதும் வழிவந்த பதிப்பாக விண்டோஸ் லைவ் மெயில் விளங்குகின்றது. மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 இல் இணைப்பாக வந்த மைக்ரோசாப்ட் இணைய மின்னஞ்சல் மற்றும் செய்தி மென்பொருளை இது மாற்றீடு செய்துள்ளது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஆனது மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்கின்ற ஆபிஸ் மென்பொருளுடன் வினியோகிப்படுகின்ற ஓர் மாறுபட்ட பிரயோக மென்பொருள் ஆகும். இவ்விரண்டு மென்பொருட்களும் ஓர் பொதுவாக மூலநிரலைப் பகிர்வதில்லையாயினும் கட்டமைப்பில் ஒரே பாணியையே பின்பற்றுகின்றன. இரண்டு பெயர்களும் ஒரே மாதிரியாக உள்ளமையால் அநேகமானவர்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் இன் ஓர் வசதி குறைக்கப்பட்ட (stripped-down) பதிப்பாகக் கருதுகின்றனர். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் வருவதால் மிகப்பெருமளவில் பாவிக்கப்பட்ட மென்பொருளாக விளங்கியது இது வைரஸ் தாக்குதல்களிற்கும் அடிக்கடி உட்பட்டது. மாக்கிண்டோஷ் கணினிகளுக்கான பதிப்பானது இதைவிட வைரஸ் பிரச்சினைகள் இருந்தாலும் இப்பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் விண்டோஸ் முகவரிப் புத்ததையே பாவித்தாலும் இவை இரண்டும் வெவ்வேறான பிரயோகங்கள். அத்துடன் இது விண்டோஸ் மெசன்ஜருடன் ஒத்திசைவானது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4.0 உடன் சேர்த்து செப்டம்பர் 1997 வெளிவந்தது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்று அழைக்கபடும் மின்னஞ்சல் மற்றும் செய்திகளுக்கான மென்பொருளின் வழிவந்தது ஆகும். மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்கின்ற மென்பொருளானது இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 உடனான ஓர் பொருத்து என்பதுடன் அது வெறும் எழுத்துக்களால் ஆன மின்னஞ்சலை மாத்திரமே ஆதரித்தது. ஒருகட்டத்தில் வெள்ளோட்டத்தில் (பீட்டா) இருந்த அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளானது எரிதம் (ஸ்பாம்) வடிகட்டும் வசதியினைக் கொண்டிருந்த பொழுதிலும் வெளியிடுவதற்கு முன்னர் இவ்வசதிகளை நீக்கப்பட்டே வெளிவந்தது. பல்வேறு பட்ட இணையத்தளங்களும் செய்திக் குழுக்களும் பெருந்தொகையாகச் சந்தைப்படுத்துவதற்காக இது உறுதியானதல்ல என்ற கருத்தை வெளியிட்டிருந்ததே இதன் காரணம் ஆகும். பின்னர் இரண்டு வருடங்களின் பின்னர் இதே முறையைப் பின்பற்றி மைக்ரோசாப்ட் அவுட்லுக் எரிதங்களை வடிகட்டும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூன் 2006 ஜூலை 2006 வளைய வலையமைப்பு வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் () வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும். பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். இந்திய நாகம் இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீற்றர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன. மூலதனம் (நூல்) டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது. "டஸ் கப்பிற்ரால்" நூலின் முதல் பாகம் கார்ல் மார்க்சினால் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) என்பவரால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான "Theories of Surplus-Value" ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. சுன்னாகம் சுன்னாகம்அல்லது சுண்ணாகம் ("Chunnakam"), இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்று. இதன் பழைய பெயர் மயிலணி ஆகும். ஏறத்தாழக் குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் யாழ்ப்பாண நகரிலிருந்து, காங்கேசன்துறை துறைமுகப் பட்டினத்தை இணைக்கும் காங்கேசந்துறை வீதியில், 6 ஆவது மைலில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கத்தில் மல்லாகமும், தெற்கே உடுவிலும், மேற்கே கந்தரோடையும், கிழக்கே புன்னாலைகட்டுவனும் அமைந்துள்ளன. இந்த நகரம் முக்கியமான வேளாண்மைப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், சிறப்பாக வேளாண்மைச் சேவைகளுக்கான மைய இடமாகவும் திகழ்கின்றது. இங்கு அமைந்துள்ள காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இப்பகுதியில் புகழ் பெற்றது. இணுவில் இணுவில் ("Inuvil"), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது. அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள். புகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு: சூலை 30 ஆகத்து 3 கலப்பை (சஞ்சிகை) கலப்பை () , அவுத்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினரால் ஜூலை 1994 இலிருந்து வெளியிடப்படும் காலாண்டு கலை இலக்கிய இதழாகும். ”மனித மனங்களை உழுது, உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்க வேண்டும்”, ”முக்கால நிகழ்வுகளையும் உள்ளடக்கிச் சமுதாய சீர்திருத்தத்திற்காகப் பாடுபட வேண்டும்” என்பது கலப்பையின் முக்கிய கோட்பாடாகும். இன்றைய தமிழ் இளைஞரின் தேவைகளைப் நிறைவு செய்யக்கூடிய ஆக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கலப்பையின் குறிக்கோளாகும். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவரும் கலப்பையின் வெளியீட்டுப் பணியை இப்போது "அவுஸ்திரேலியத் தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்" என்ற அமைப்பு பொறுப்பேற்று நடத்துகின்றது. எரியும் முட்செடி எரியும் முட்செடி, என்பது யாத்திராகமம் நூலில் காணப்படும் ஒரு புதுமையாகும், யாவே கடவுள் மோசேயை, இஸ்ரவேலரின் எகிப்து அடிமை வாழ்விலிருந்து அவர்களை மீட்பதற்கான தலைவராக அழைக்கப் பயன்படுத்தினார். மோசே எகிப்தை விட்டு தப்பிவந்து எத்திரோவிடம் வாழ்ந்தபோது, ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது மலைமீது எரியும் முட்செடி ஒன்றை கண்டு மரம் மரம் வெந்துபோகமல் இருக்க கண்டு அதனருகே போனார். அப்போது கடவுளின் ஆவி முட்செடியின் நடுவிலிருந்து மோசேயை அழைத்து, அவர் நிற்பது புனித பூமி என்றும்,மோசேயின் பாதணிகளை அகற்றுமாறும் கட்டளையிட்டு, தன்னை "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்" என அறிமுகப்படுத்தினார். பின்பு கடவுள் மோசேயை எகிப்துக்கு போய் அரசனிடம் பேசி இஸ்ரவேலரை விடுவித்து அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்துமாறு கட்டளையிட்டார். இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இப்போது காணப்படும் முட்செடி மோசேக்கு கடவுள் தோன்றிய முட்செடியின் வழிவருவது என்பது நம்பிக்கையாகும். மோசேக்கு கடவுள் தோன்றிய மரம் இறந்துவிட்டது. சூலை 1 சூலை 2 சூலை 3 சூலை 4 சூலை 5 சூலை 6 சூலை 8 சூலை 7 சூலை 9 சூலை 10 சூலை 11 சூலை 12 சூலை 13 சூலை 14 சூலை 15 சூலை 16 சூலை 17 சூலை 18 சூலை 19 சூலை 20 [[பகுப்பு:சூலை]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] சூலை 21 சூலை 22 சூலை 23 சூலை 24 சூலை 25 சூலை 26 சூலை 27 சூலை 28 இணைய இணைப்பைப் பகிர்தல் இணைய இணைப்பைப் பகிர்தலானது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) வின்டோஸ் சேவர் 2003 வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது. இதுபோன்றே வின்டோஸ் எக்ஸ்பி 64பிட் பதிப்பும் சொதனையில் இருக்கும் வி்ன்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 வழங்கியாகச் செயல்படுவதில் சில பிரச்சினைகள் அவதானிக்கப்பட்டுள்ள பொழுதிலும் தொடர்ந்தும் இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படும். இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது. குறிப்பு:இரண்டு கணினிகள் மாத்திரமே இருந்தால் இரண்டு கணினியையும் குறஸோவர் (Cross-over) கேபிள் மூலம் இணைத்துவிடலாம் இதற்கு சுவிச் அவசியம் இல்லை. ஆகத்து 4 யாவே யாவே ("Yahweh") அல்லது யெகோவா ("Jehovah") என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம். இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" ("The Being") அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும். (கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரவேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.) எபிரேய மொழியில் "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" / "முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்" / முக்காலமும் கடந்தவர் என்று பொருள்படும்.. தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் "YHWH" எனக் குறிக்கப்படுகிறது. எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக "ஹஷெம்" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி". யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் குருக்களும், கோயில் தலைமை குருவும் (யோம் கிப்பூர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை. பைபிள்: ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது. யாவே பெயர், பைபிளில் 7000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது. யெகோவாவின் சாட்சிகள் எனும் ஒரு சமயப்பிரிவு காலப்போக்கில் இப்பெயரில் உருவானது. பலரால் இச்சமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த கொடிய உலகம் இறைவனால் மீண்டும் சொர்க்கமாக மாற்றப்படும் என்று இவர்கள் நம்புக்கின்றனர். ஈசாக்கு ஈசாக்கு விவிலியத்தின்படி, ஆபிரகாமின் மகனும் யாக்கோபு, ஏசா என்பவர்களின் தந்தையுமாவார். இப்பெயரின் பொருள் "அவர் நகைப்பார்" என்பதாகும். இவரது சரிதம் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது. ஈசாக்கின் தாயான சாராள் தான் குழந்தையைப் பெறப்போவதாக தூதர் ஆபிரகாமிடம் சொல்வதை கேட்டு தான் முதியவளாக இருந்தபடியால் நகைத்தார். இதனால் குழந்தையை பெற்றவுடன் நகைத்தல் எனப் பொருள்பட ஈசாக்கு என பெயரிட்டார். ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு விருத்த சேதனம் பண்ணினார். ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார். சாராள், அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான இஸ்மவேல் மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு அபிரகாமை வேண்டினார். கடவுளும் அபிரகமுக்கு இதயே சொல்ல அபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். ஈசாக்கு வளர்ந்து சுமார் 25 ஆவது அகவையை அடைந்தபோது, கடவுள் அபிரகாமை சோதிக்கும் நோக்கில், ஈசாக்கை பலியிட கட்டளையிடுகிறார். அபிரகாம் கடவுள் காட்டிய இடத்துக்குச் சென்று இசாக்கை கட்டி பலியிட ஆயத்தமான போது, தேவதூதன் அபிரகாமை தடுத்தார். ஈசாக்கின் 40ஆவது அகவையில் அபிரகாம் தனது சேவகரான எலியேசரை மொசபத்தேமியாவுக்கு தனது மைத்துனரான லாபான் வீட்டுக்கு அனுப்பி, ஈசாக்கு ஒரு மனைவியை தேடினார். ரெபேக்காள் ஈசாக்கின் மனைவியாக அனுப்பப்பட்டார். ஈசாக்கு ரெபேக்காளை மணந்தார். சில காலம் குழந்தையற்றிருந்த ரெபேக்காள் கர்பவதியாகி இரட்டை குழந்தைகளை பெற்றார். அவர்களுக்கு ஏசா,யாக்கோபு என பெயரிட்டார். ஏசா ஈசாக்கின் ஆதரவையும் யாக்கோபு ரெபேக்காளின் ஆதரவையும் பெற்றனர். ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண்பார்வை மிகவும் கொன்றிக்காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவர அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர். கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு கருநாடக. இந்துஸ்தானி இசைகளுக்கான அடிப்படைத் தத்துவம் ஒன்றேயானாலும் பாடும் முறைகளில் அனேக வித்தியாசங்கள் உண்டு. 7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் "மாயாமாளவகெளளை" இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் "பலடாஸ்" என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன. கருநாடக சங்கீதத்தில் உள்ளவாறு ஏராளமான உருப்படி வகைகளோ தள வகைகளோ இராகங்களோ இந்துஸ்தானி சங்கீதத்தில் கிடையாது. கான காலத்திற்கேற்பவே இராகங்களைப் பாடும் முறை இந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், கர்நாடக இசையிலோ இம்முறை அருகி வருகின்றது. கர்நாடக இசையில் கமகங்கள், பிருகாக்கள் என்பன மிக முக்கியமான அம்சங்களாகும். கமகம் என்னும் அம்சம் இந்துஸ்தானி சங்கீதத்தில் காணப்படுகின்ற போதும் அவை லேசான ஏற்ற ஜாரு, இறக்க ஜாரு வகையிலான கமகங்களாகும். இராகம் பாடும் முறையில் இரு இசைகளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனை விஸ்தாரமாக நீண்ட நேரம் பாடப்படுகிறது. நீண்ட நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்த பின்னரே படிப்படியாக மத்யஸ்தாயி, மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்வர். சாதாரணமாக ஹிந்துஸ்தானி கச்சேரியில் 2, 3 இராகங்களே பாடப்படுகின்றன. ஆனால், கர்நாடக சங்கீதத்தில் 3 மணி நேரக் கச்சேரியில் 10-15 உருப்படி வகைகள் பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீதக் கச்சேரியின் ஆரம்பத்தில் வர்ணம், பஞ்சரத்ன கீர்த்தனை, துரிதகால கீர்த்தனைகள் என்பன கச்சேரி களை கட்டுவதற்காகப் பாடப்படுகின்றன. இந்துஸ்தானி கச்சேரி பெரும்பாலும் ஆலாபனையுடனேயே ஆரம்பமாகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் ஓர் இராகத்தில் ஒரு உருப்படியே பாடப்படுதல் வழக்கமாகும். ஆனால், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரே இராகத்திலேயே விளம்ப லய உருப்படி, துரித லய உருப்படி என்பன பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். பிரதானமான இராகம், கிருதி, பல்லவி பாடப்பட்ட பின் தனி ஆவர்த்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் இந்துஸ்தானி இசையில் சுருதிக்காக தம்புராவும், தாளத்திற்காக தபேலாவும் மாத்திரமே வாசிக்கப்படும். தனி ஆவர்த்தனத்திற்கு இவ்விசையில் இடம் இல்லை. கர்நாடக இசையின் பாதிப்பினால் ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இப்போது வயலின் வாசிக்கப்படுகிறது. கர்நாடக-ஹிந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமை-வேற்றுமை கர்நாடக சங்கீதத்தில் கையினால் தாளம் இடுவது போன்று ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கையினால் தாளம் போடுவதில்லை. தபேலாவில் வாசிக்கப்படும் டேக்கா (ஜதி) ஒட்டியே பிரதானமாக பாடுபவர் பாடவேண்டும் அல்லது பக்கவாத்தியம் வாசிப்பவர் வாசிக்க வேண்டும். ஆகையினால் ஹிந்துஸ்தானி இசையில் தபேலா வாசிப்பு முறையை பாடகர், வாத்திய இசை விற்பன்னர் யாவரும் அறிந்திருத்தல் அவசியம். ஹிந்துஸ்தானி இசையில் கற்பனாஸ்வரம் பாடும் முறை மிகக் குறைவாகும்.கீர்த்தனை, கிருதியில் உள்ள பல்லவி, அனுபல்லவி போன்ற அங்க வேறுபாடுகளை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஸ்தாயியில், அந்தரா எனக் கூறுவர். கஸல் என்னும் ஹிந்துஸ்தானி உருப்படி வகை கர்நாடக சங்கீதத்தில் ஜாவளிக்கு ஒப்பானது. தும்ரி என்பது பதத்திற்கும், தரானா என்பது தில்லானாவுக்கும் ஒப்பானது. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பலவித கரானாக்கள், அதாவது குருகுல முறைகள் உண்டு. ஒவ்வொரு கரானாவும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவதாக அமைகின்றது. உ+ம்: கவாலியர், ஆக்ரா, ராம்பூர், பெனாரஸ் தென்னிந்தியாவிலும் கேரளாப் பாணி, ஆந்திராப் பாணி என்றிருந்தாலும் ஹிந்துஸ்தானி சங்கீத கரானாக்களைப் போன்று அதிக வேறுபாடில்லை. ஒரே உருப்படி வகைகளே தென்னிந்தியா எங்கும் பாடப்படுகின்றன. மந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் 3 ஸ்தாயிகளும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மந்த்ரசப்தக, மத்யசப்தக, தாரசப்தக என அழைக்கப்படுகின்றன. தாய் ராகங்களை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் "தாட்" என அழைப்பர். தாட் ராகத்திற்கான அம்சங்கள்: 1) 7 ஸ்வரங்களையும் கொண்டிருத்தல் 2) ஸ்வரங்கள் கிரமகதியில் செல்லுதல் 3) ஒரே ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் அடுத்தடுத்து தாட்டில் வரலாம். 4) தாட் ஆரோகணத்தை மட்டும் கொண்டதாகும். உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் (கரகரப்பிரியா) காபிதாட்டைக் குறிக்கும். 5) தாட் ரஞ்சகத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை. 6) ஒவ்வொரு தாட்டும் அத்தாட்டிலிருந்து பிறக்கும் ராகத்தின் பெயரைக் கொண்டு விளங்கும். உ+ம்: காபிதாட் அதிலிருந்து பிறந்த பிரபல்யமான காபியின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானியில் இவ்வாறான 10 தாட்கள் உண்டு. இவற்றிலிருந்தே இராகங்கள் பிறக்கின்றன. கர்நாடக சங்கீதத்தில் உள்ளது போன்றே இராகங்கள் ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண என ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றன. ஒளடவ ராகம்: பூபாலி, ஹிந்தோளம் ஷாடவ ராகம்: மார்வா, பூர்யா சம்பூர்ண ராகம்: யமன், பிலாவல் கர்நாடக சங்கீதம் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் பாடகர் தம் குரலுக்கு உகந்த சுருதியை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் தம்புராவை சுருதி கூட்டும் போது பஸஸஸ என்று கூட்டப்படுகிறது. ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் அவ்வாறே. கர்நாடக சங்கீதத்தைப் போல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் 7 ஸ்வரங்களும் கோமள, தீவிர பேதத்தினால் 12 ஸ்வரஸ்தானங்களாகின்றன. இரு சங்கீதங்களிலும் மனோதர்மம் இன்றியமையாததாகும். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனையை "ஆலாப்" என்றழைப்பர். ஆலாப் 4 பிரிவுகளாகப் பாடப் படுகிறது. 1. ஸ்தாயி 2. அந்தரா 3. ஸஞ்சாரி 4. ஆபோக் ஜோட் என்பது ஆலாபனையை மத்திம காலத்தில் பாடுவதாகும். இது ஓரளவு கர்நாடக சங்கீதத்தில் தானம் பாடும் முறைக்கு ஒத்ததாகும். பொன். கணேசமூர்த்தி பொன். கணேசமூர்த்தி (இறப்பு: ஆகஸ்ட் 4, 2006, யாழ்ப்பாணம்), தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர். பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் "வைகறை", "இலங்கை மண்" , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. "இன எழுச்சி" சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். "வரலாறு சொல்லும் பாடம்" என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். "மண்ணுக்காக" என்ற முழுநீள திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார். பொன் கணேஷமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்; வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார். இவர் ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொள்ளப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார். பாஸ்கலின் விதி பாஸ்கலின் விதி ("Pascal's law") பாய்மங்களின் அழுத்தத்தைப் பற்றிய விதியாகும். இவ்விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்கு செங்குத்தாகவும் அமையும். இவ்வழுத்தம் கொள்கலனின் வடிவத்தைப் பொறுத்ததல்ல. இவ்விதி பிரெஞ்சு கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது. பாசுக்கலின் விதி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: இவ்விதி கணித முறையில் பின்வருமாறு தரப்படும்: நோவாவின் பேழை நோவாவின் பேழை என்பது நோவா, யாவே கடவுளின் கட்டளைப்படி கட்டிய பெரிய ஒரு கப்பலாகும். பெரு வெள்ளப்பெருக்கு ஒன்றிலிலிருந்து நோவாவையும் அவனது குடும்பத்தையும் உலகில் உள்ள விலங்கு இனங்களையும் காக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த சம்பவம் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் நூலில் 6 தொடக்கம் 9 ஆம் அதிகாரங்களில் காணப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், புவியியல், மற்றும் அது சார்ந்த்த துறைகளின் வளர்ச்சி மூலம் ஒரு சில வரலாற்றாய்வாளரால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஒன்றை நியாயப்படுத்த முடிந்தது. ஆனாலும் பல விவிலிய ஆய்வாளர்கள் நோவாவின் பேழை தரைத்தட்டியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அரராத் மலை (வடகிழக்கு துருக்கி) சார்ந்த பிரதேசங்களில் ஆய்வுகளை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, கடவுள் மனிதரின் தீய செயல்களை கண்டு கோபமுற்றவராக உலகை அழிக்க எண்ணினார். அவர் அம்மனிதரிடையே ஒரே ஒரு நீதிமானாக நோவாவைக் கண்டு, மனித வம்சம் அவர் மூலமாக பூமியி நிலைக்கும் படியாக, நோவாவை காப்பற்ற எண்ணினார். அவர் நோவாவை அழைத்து ஒரு பேழையை செய்யச் சொல்லி அதனுள் அதனுள் அவரது மனைவி,மகன்களான சேம்,ஆம் சாபேத்து என்பவர்களையும் அவர்களின் மனைவியினரையும் உற்பிரவேசிக்க சொன்னார். மேலதிகமாக உலகில் உள்ள எல்ல விலங்குகளிலும் ஒவ்வொரு சோடியையும் விலங்குகளுக்கும் குடும்பத்தாருக்கும் வேண்டிய உணவையும் பேழைகுள் சேர்க்கச் சொன்னார். நோவா கடவுள் கூறியபடியே பேழையைக் கட்டி முடித்த பின்பு அவருடைய குடும்பமும் விலங்குகளும் பேழையுள் சென்றது. ஏழுநாள் சென்றபிறகு, "பாதாளத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன" மழை 40 இரவும் பகலும் மழை தொடர்ந்து பெய்தது. இந்த சம்பவத்துக்கு முன்னதாக பூமியில் மழை பெய்த்தாக எந்த குறிப்பும் விவிலியத்தில் காணப்படவில்லை. "வானத்தின் மதகுகள்" என்பது ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஆகயத்துக்கு மேல் இருந்த நீர் பூமியை நோக்கி வீழ்ந்த்தை குறிக்கிறது. வெள்ளம் உலகின் உய்ர்ந்த மலைகளையும் 20 அடிக்கு மேல் மூடியது. நோவாவையும் அவரோடு பேழையிலிருந்த குடும்பதாரையும் விலங்குகளையும் தவிர அனைத்தும் இறந்து போயிற்று. சுமார் 220 நாட்களுக்குப் பிறகு, பேழை அரராத் மலையில் தங்கிற்று, நீர் மேலும் 40 நாட்களுக்கு வழிந்தோடிய போது மலைச்சிகரங்கள் தென்பட்டது. அப்போது நோவா ஒரு காகத்தை வெளியே விட்டார்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த நீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. பின்பு நோவா, பூமியில் நீர் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டார்.பூமிமீதெங்கும் நீர் இருந்தபடியால், திரும்பிப் பேழையிலே அவரிடத்தில் வந்தது. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டார். அந்தப் புறா சாயங்காலத்தில் அவரிடத்தில் வந்து சேர்ந்தது;அது கொத்திக் கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதன் மூலமாக நோவா பூமியின்மேல் நீர் குறைந்து போயிற்று என்று அறிந்தார். பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவர் புறாவை வெளியே விட்டார்; அது திரும்ப வரவில்லை. அப்பொழுது நோவாவும், அவரின் குமாரரும், அவரின் மனைவியும், குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டு புறப்பட்டு வந்தார்கள்.பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் இனமினமாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.அப்பொழுது நோவா கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார். அப்பொழுது கடவுள் இனி நான் மனிதன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல சீவன்களையும் சங்கரிப்பதில்லை என்று நோவாவோடு உடன்படிக்கை பன்னினார். தமது உறுதிமொழியை நினவுகூறும் வகயில், கடவுள் வானவில்லை முகிலின் மீது வைத்து," பூமிக்கு மேலாக முகில்களை தோற்றுவிக்கும் போது இவ்வில் தோன்றும், அப்போது இவ்வுடன்படிக்கையை நினைவுகூறுவேன்" என்றார். இவ்வெள்ளப்பிரலயத்திற்குப் பிறகு விவிலியத்தில் மனிதரின் வயது திடிரென குறைந்தது கவனிக்க தக்கதாகும்.வெள்ளதுக்கு முன்னர் மனிதர் சுமார் 900 ஆண்டுகள் வாழ்ந்தாக கூறப்பட்டுள்ள போதும் வெள்ளப்பெருக்கு பின்னர் மன்னிதனின் வயது 100 ஆக குறந்தது. பேழையை பற்றிய 87 விவிலிய வசனங்கள் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது: "மனிதன் பாவ வழியில் போனான் அவனை அழிக்க வேண்டும், ஆனால் நோவா நீதிமானானபடியாள் அவரை காப்பாற்ற வேண்டும்" என்ற வசனம் ஏன் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது? (ஆதியாகமம்6:5-8,6:11-13) நோவாவுக்கு எத்தனை சோடி விலங்குகள் பேழையில் சேர்க்க கட்டளையிடப்பட்டது, இரண்டு சோடிகளா? அல்லது ஏழு சோடிகளா? மழை எத்தனை நாட்கள் நீடித்தது 40 நாட்களா? 150 நாட்களா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை பேழைக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல, மாறாக ஐந்து திருச்சட்ட நூல்களில் உள்ள பல சம்பவங்கள் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளன. இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யப்பட்ட பல ஆராய்சிகளின் மூலம் முன்வைக்கப்பட்ட கருதுகோள் "பன்னூல் எடுகோட்பாடு " என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோளின் பாடி, ஐந்து திருச்சட்ட நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பன கி.மு. ஐந்தாம் நூற்றாணடளவில் நான்கு மூல நூல்களை கொண்டு எழுதப்பட்டவையாகும். பேழையை பற்றிய சம்பவம் இவற்றில் இரண்டான,ஆசாரிய மூலம் (Priestly source) மற்றும் யாவே மூலம் (Jahwist) என்பவற்றை பயன்பாடுத்தி எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்விரண்டு மூலங்களில் முதலாவதான, யாவே மூலம் கி.மு. 920 அளவில் யூத இராச்சியத்தில் எழுதப்பட்டதாகும். யாவே மூலம், ஆசாரிய மூலத்தை விட எளிமையான நடையைக் கொண்டுள்ளது. அதன்படி:கடவுள் 40 நாட்களுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். நோவாவும் அவனது குடும்பத்தாரும், விலங்குகளும் (தூய விலங்குகளில் 7 அல்லது 7 சோடிகள், எபிரேய பதம் குழப்பம்மானது) நோவா பலிப்பீடத்தை கட்டி கடவுளுக்கு தகனப்பலி இடுகிறார். கடவுள் மனிதனை இனி நீரால் அழிப்பதில்லை என உறுதிக்கொள்கிறார். யாவே மூலத்தில் கடவுளுக்கும் நோவாவுக்குமிடையான உடன்படிகைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசாரிய மூலத்தின் உறை வட இஸ்ரவேல் இராச்சியத்தில் கி.மு.722க்கும் கி.மு. 586 க்குமிடையே எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. ஆசாரிய மூலத்தின் உறை யாவே மூலத்தை விட கூடுதலான தகவல்களை கொண்டிருக்கிறது; உதாரணமாக, பேழையின் பரிமாணங்கள், மேலும் கடவுள் செய்த உடன்படிக்கை என்பவற்றை குறிப்பிடலாம். பேழை சம்பவத்தின் அடியான மனிதரின் பொல்லாப்பும், கடவுளின் கோபமும் அதனால் வெள்ளம் மூலம் மக்களை அழித்தல் பின்பு வருந்தி இவ்வாறு இனி செய்யமாட்டேன் என கூறியது போன்றவை யாவே மூலத்தி ஆசிரியர்களுக்குரிய பாணியாகும். இவர்கள் கடவுளை மனிதன் போன்ற இயல்பில் வைத்து நோக்கினார்கள். ஆசாரிய மூலத்தில் கடவுள் ஆசாரியர் (குருக்கள்) மூலமாகவன்றி நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவராக நோக்கப்படுகிறார். இந்தியக் குயில் "குயில் என்ற பெயரில் வெளிவந்த இதழ் பற்றி அறிய குயில் (இதழ்) பக்கத்தைப் பார்க்கவும்." இந்தியக் குயில் ("Cuculus micropterus") தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் குயில் இனமாகும். குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. இந்தியக் குயில்கள் பெரும்பாலும் காகக் கூடுகளில் முட்டையிடுகின்றன. முட்டையின் நிறம் வெளுப்பான பச்சை. குயிற் குஞ்சுகள் முதலில் பொரிப்பதோடு வேகமாகவும் வளர்கின்றன. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது. ஆல், அத்திப்பழங்களை முதன்மையாக உண்ணும். பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் உண்கிறது. குயில்கள் பெரிதும் பழங்களையே விரும்பி உண்ணுகின்றன. புதர்களிலுள்ள குற்றுச் செடிகளின் பழங்களையும் உண்ணும். கம்பளிப் புழுக்களையும், பூச்சிகளையும் உண்ணும். இதன் உடலினுள் நிறைய கொழுப்பு சேமிக்கப்பட்டிருக்கும். இதனால்தான் சுவையான இதன் ஊனை மக்கள் விரும்பி உண்ணுகிறார்கள். குயில் காகத்தைவிட சற்று சிறியது. ஆனால், உருண்டு திரண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும். ஆண் குயில் கறுப்பாக இருக்கும். பெண் குயிலின் அடிப்படை நிறம் வெள்ளை. ஆனால், உடல் முழுவதும் கறுப்புத் திட்டுகள் முத்து முத்தாகக் காணப்படும். குயில்கள் காடுகள், வீட்டுத் தோட்டங்கள், தோப்புகளில் (மா, தென்னை, புளி, பலா) காணப்படுகின்றன. பொதுவாக, குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். கிளிகள் போன்று கூட்டமாகப் பறந்து செல்லாது. ஆண் குயிலை எளிதில் பார்க்கலாம். பெண் குயிலை அரிதாகவே பார்க்க முடியும். மரக்கிளைகளின் ஊடே மறைந்திருக்கும். ஆண், பெண் இரண்டுமே வெட்கப்படும் பறவைகள் சோம்பேறிப் பறவைகள். மரங்களில் மறைந்திருந்து தூங்கிக்கொண்டிருக்கும். குயில் அழகாக பாடும் பறவை. அதிகாலையில் முதலில் பெண்குயில் பிங், பிங் என்றும் உ..ஓ..உ..ஓ..உ..ஓ.. என்று ஆண் குயில் பதிலும் பாடும். பெண்குயில் எத்தனை முறை பாடுகிறதோ அத்தனை முறை ஆண் குயிலும் பதிலுக்கு பாடும். அதிகாலையில் தான் இந்தப் பாடல் ஒலி கேட்கும். பகலில் ஆண் குயில் மட்டுமே பாடும்.குயில்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. குயில்களுக்கு கூடு கட்டத் தெரியாது.குயில்கள் காகத்தின் கூட்டில் முட்டையிடும். காகம் குயிலின் முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.சில காலங்களில் குஞ்சு பொரிக்கத் தொடங்கும்.அப்பொழுது காகம் அது குயில் என்று தெரிந்து அதை கலைத்துவிடும். குயில் குக்கூஸ் என்ற குடும்பத்தைச் சார்ந்த பறவை. குக்கூஸ் இன பறவைகள் அனைத்தும் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. குயில் இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் - ஆகஸ்ட். காகம் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் முட்டையிடும். குயிலின் முட்டை இளம் சாம்பல் பச்சை நிறம். காகத்தின் முட்டை நிறம் இளம் நீல-பச்சை. ஆனால், குயிலில் முட்டைகள் காகத்தின் முட்டையை விட சிறியது. பொதுவுடைமை அறிக்கை பொதுவுடமை அறிக்கை ("The Communist Manifesto", டொய்ச்: "Das Manifest der Kommunistischen Partei" அல்லது பொதுவாக பொதுவுடமை அறிக்கை) எனப்படுவது 1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆல் இணைந்து எழுதப்பட்ட அறிக்கை ஆகும். இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்-ன் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், பொதுவுடமை சமூகத்தினை உருவாக்கும் பட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்ககை உலக அரசியல் நடவடிக்கையில் மிக்க செல்வாக்கை செலுத்துகின்றது. 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும். கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் 1848 இல் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் 1850 ஆம் ஆண்டு ஹெலன் மெக்ஃபார்லேன் (Helen MacFarlane) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொதுவுடமை அறிக்கை ஏழு முகவுரைகள் கொண்டது. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை. மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர். தொழிற்துறை நீர்ம இயக்கவியல் தொழில்துறை நீர்ம இயக்கவியல் என்பது இயந்திரப் பட்டறைகள், கனரக வாகனங்கள், கப்பல்கள், கட்டுமான இயந்திரங்கள், நிலபெயர்ப்பு இயந்திரங்கள் போன்ற துறைகளில் நீர்ம இயக்கவியலின் பங்கினை ஆயும் இயல் ஆகும். ஆகத்து 5 பாலியற் கல்வி பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலை பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிர பரவல் பாலியற்கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன. மெக்கா கோலா மெக்கா கோலா ஒரு வகை கோலா மென்பானமாகும். அமெரிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமெரிக்க மென்பானங்களான கொகா கோலா, பெப்சி போன்றவற்றுக்குப் பதிலாக அறிமுகமான பானம் இதுவாகும். இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா என்பதை பெயரில் கொண்டிருக்கும் இவ்வகைப் பானம் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் விற்பனையாகிறது. இப்பானம் முதலில் பிரான்சில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. கொக்கக் கோலா கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. இது முதன் முதலில் டாக்டர் பெம்பர்டன் என்பவரால் ஒரு மருந்தாகவே கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதனை இவர் விற்கத் தொடங்கினார்.1892இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.1894 இல் ஆசா கிரிக்ஸ் கேன்டலரால் வாங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது. பெப்சி பெப்சி (Pepsi) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது பெப்சிகோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையாகிறது. Caleb Bradham என்பவரால் 1890களில் தயாரிக்கப்பட்ட இப்பானம் 1898 ஆகஸ்ட் 28 அன்று பெப்சி எனப் பெயரிடப்பட்டது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் காலேப் பிராட்ஹாம் என்னும் மருத்துவர் இருந்தார்.பல சோதனைகளை செய்து1993-இல் பிராட்ஸ் டிரிங் (Brad's drink) என்று தன் பெயர் கொண்ட பானத்தை அறிமுகம் செய்தார். ஐந்து ஆண்டு கடும் முயற்சி, பானம் மக்களிடம் எடுபடவில்லை. கொக்கோ கோலா பானியில் 1898இல் தன் பானத்துக்கு பெப்சி கோலா என்று பெயர் மாற்றினார். அடுத்த 30ஆண்டுகள் பெப்சி கோலாவுக்கு சோதனையான காலம். 1923,1931,1933, ஆகிய மூன்று ஆண்டுகளும் நிறுவனம் திவாலானது. புதிய முதலாளிகள் கையில் மறு பிறப்பெடுத்தது. 1929 முதல் 1942 வரை, அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி அப்போது ஆறரை அவுன்ஸ் கொண்ட போத்தல்களில் கொக்கோ கோலா விற்பனை ஆகிவந்தது. ஒரு போத்தல் விலை ஒரு நிக்கல் (1டாலருக்கு 20 நிக்கல்கள்) அதே ஒரு நிக்கலுக்கு 12 ஆவுன்ஸ் போத்தலை பெப்சி அறிமுகப்படுத்தியது. பொருளாதார வீழ்ச்சி காலத்தில் கொக்கோ கோலா-வின் விலையில் பாதிவிலையில் பெப்சிகிடைத்ததால், ஏராளமானோர் கொக்கோ கோலாவிலிருந்து பெப்சிக்கு மாறினர். கொக்கோ கோலா சுதாரிப்பதற்குள், இக்கால கட்டத்தில் பெப்சியின் சுவைக்கு பலர் பழகிவிட்டனர். அதன் பிறகு பெப்சி கொக்கோ கோலாவுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. , தமிழக சூழிலில் தாமிர பரணி ஆற்றின் நீரை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளது. இதற்கு இந்நிறுவனம் அளித்துள்ள குத்தகைத் தொகை வெறும் ரூ. 3600 மட்டுமே. ஜின்ஜர் பியர் ஜின்ஜர் பியர், இஞ்சி, சர்க்கரை (இலங்கைத் தமிழ்: சீனி) போன்றவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பானமாகும். இதன் உற்பத்தி இங்கிலாந்தில் 1700 களில் ஆரம்பிக்கப் பட்டு 1900 களில் பரவலானது. இதன் உண்மையான உற்பத்தியில் இஞ்சி, சர்க்கரை, நீர் ஆகியவற்றுடன் ஒரு வகை ஜெலட்டினால் ஆன பொருளும் சேர்க்கப்படும். இன்றைய ஜின்ஜர் பியரில் சாராயம் கிடையாது. இது அதிக அழுத்தத்தில் கார்பன்டைஆக்சைடு சேர்து அழுத்தி விற்கப்படும். இலங்கையில், பெரும்பாலும் யானைச்சின்ன குளிர்பானத் தயாரிப்பாளர்கள் இதை உற்பத்தி செய்கின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) இரண்டு சாரரிற்கிடையிலான ஓர் சட்டபூர்வமான ஆவணமாகும். இது ஓர் பொதுவான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுகின்றது. இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 22 பெப்ரவரி 2002ஆம் ஆண்டு வவுனியா அன்றை அரச அதிபர் (இன்றை யாழ்ப்பாண அரச அதிபர்) கணேஷ் முன்னிலையில் வவுனியா கச்சேரியில் (மாவட்டச் செயலகத்தில்) கைச்சாத்திடப்பட்டது. பின்னர் 15 ஜனவரி 2008 முதல் இவ்வொப்பந்தமானது கைவிடப்பட்டது. ஒட்டகச் சிவிங்கி ஒட்டகச் சிவிங்கி () ஆபிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும். உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும். ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீற்றர்) 900 கிலோ கிராம் வரை நிறையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிடப் பொதுவாக உயரத்திலும் நிறையிலும் குறைந்தவை. ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர்ந்த ஏனைய உடல் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை. இவை நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட 10% நீளமானவை. இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது. ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன. இவை நின்ற படியே குட்டியீனுபவை என்பது குறிப்பிடத்தக்கது. குட்டிகள் 1.8 மீற்றர் உயரமுடையவையாக இருப்பதோடு பிறந்து சில மணிநேரத்திலேயே எழுந்து ஓடக்கூடியவை. வளர்ந்த ஒட்டகச் சிவிங்கிகளைக் கொன்றுண்ணிகளால் தாக்க முடிவதில்லையாயினும் குட்டிகளை சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் ஆபிரிக்கக் காட்டுநாய்கள் போன்றவை வேட்டையாடுகின்றன. 25% முதல் 50% வரையான ஒட்டகச் சிவிங்கிகளே உயிர்தப்பி முழுவளர்ச்சியடைகின்றன. இவை தம்மைத் தாக்கும் விலங்குகளைக் கால்களால் உதைத்துத் தாக்குகின்றன. இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பெப்ரவரி 22, 2002ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருந்த போதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையை அடுத்து பின்லாந்து நாட்டு உறுப்பினர்களை வெளியேறச் சொல்லி விடுதலைப் புலிகள் கேட்டதை அடுத்து பின்லாந்து இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொண்டது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 3, 2008 அன்று அறிவித்ததை அடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 2008 இல் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளனர். இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் கொழும்பில் உள்ளது. ஆறு மாவட்ட அலுவலகங்கள் வடக்குக்கிழக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. மேலும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் ஓரு தொடர்பாடல் அலுவலகம் அமைந்துள்ளது . கடற்கண்காணிப்பு அணிகள் இரண்டு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருந்தபோதும் அவை 2006 ஜூன் மாதம் முதல் இயங்கவில்லை. ஆகத்து 6 பெல்மதுளை பெல்மதுளை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறியநகரமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு தென்கிழக்குத் திசையில் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 120 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 216 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 2000-2500 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். நகரில் இங்கு 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி 562 பேரே வாழ்கின்றார்கள், ஆனால் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களில் 83,888 பேர் வசிக்கின்றார்கள். இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு: சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு: 1982 1982 (MCMLXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 1981 1981 (MCMLXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 1983 1983 (MCMLXXXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். _ Y 1984 1984 (MCMLXXXIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 1985 1985 (MCMLXXXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். எகலியகொடை எகலியகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எகலியகொடை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 70 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 156 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எகலியகொடை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது. இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு: சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு: இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயில, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரடேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்: குருவிட்டை குருவிட்டை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் குருவிட்டை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 85 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. சிவனொளிபாத மலைக்குச் செல்லும் ஒரு பாதை இந்நகரத்தினூடாக அமைந்துள்ளது மேலும் அம்மலையிலிருந்து ஊற்றெடுக்கும்,களுகங்கையின் கிளையாரான, குருகங்கை பாய்கின்றது. இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் ஒரு சிறைச்சாலை இங்க் அமைந்துள்ளது. இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 91 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் குருவிட்டை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது. இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு: சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு: இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்: புவியியல் ஆள்கூற்று முறை புவியியல் ஆள்கூற்று முறை ("Geographic coordinate system") என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளரான தொலமி பபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதிகளாக பிரித்தார்.(பாகை) இவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம். உதாரணமாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும். பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும். அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயண்படுத்தப்படும் முறைக்கேற்ப (Geodetic system அல்லது datum அல்லது WGS84) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும் புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) மத்தியக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அது எப்போது பூச்சியமாகும். புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஒரு ஆதார தளத்துக்கு சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தூரம் பயன்படுத்தப்படுகிறது. 1986 1986 (MCMLXXXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். இலங்கை ஆள்கூறு புவியியல் ஆள்கூற்று முறைகளைப் பின்பற்றி இலங்கைக்கென உருவாக்கப் பட்டதே இலங்கை ஆள்கூறு ஆகும். இலங்கையில் அதியுயர் மலையான பீதுறுதாலகால மலையின் உச்சியை மையப் புள்ளியாகக் (Reference Point) ஆகக் கொண்டமைக்கப்பட்டு காட்டீசியன் (இலங்கைத் தமிழ்: தெக்காட்டு) முறையில் அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பில் ஒவ்வோர் அலகும் ஒரு மீட்டர் அளவினைக்குறிக்கிறது. பீதுறுதாலகால மலையின் உச்சியை மையமாக கொள்ளாமல் (0,0), இலங்கையின் எந்தப்பாக்கத்தினதும் ஆள்கூறு நேர்(+ ஆக) பெருமானமாக வரக்கூடியதாக வசதியாகவும் (200000, 200000) என்றவாறு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பீதுறுதாலகால மலையின் உச்சியில் இருந்து இலங்கையின் எந்த வொரு நிலப்பரப்பும் மேற்கிலோ, தெற்கிலோ 200கிலோ மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே உள்ளது. புதிய முறையில் பீதுறுதாலகால மலையின் ஆள்கூறானது 500, 000; 500, 000 என்றவாறு பரிந்துரைக்கப்பட்ட பொழுதும் பெரும்பாலான தேசப்படங்கள் பழைய ஆள்கூற்றிலேயே இருப்பதால் பழைய ஆள்கூற்றுமுறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது. புவியியல் ஆள்கூற்று முறைகளைகளையே கூகுள் ஏர்த் ஆதரிப்பதால் இவற்றின் செல்வாக்கு ஓரளவு குறைந்து வருகின்றது. 1987 1987 (MCMLXXXVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பெரு வட்டம் பெரு வட்டம் என்பது, கோளமொன்றில், அதன் மேற்பரப்பை பரிதியாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு வட்டம் ஆகும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளமொன்றின் மையத்தூடாக செல்லும் ஒரு தளமாகும். புவியில் நெட்டாங்குகள் அனைத்தும் பெருவட்டங்களை அமைக்கின்றது. ஏனெனில் இவை அனைத்தும் புவியின் மையத்தை தமது மையமாக கொண்டுள்ளன. மாறாக அகலாங்குகளில் மத்திய கோட்டைத் தவிர்ந்த ஏனைய அனைத்தும் சிறு வட்டங்களாகும். புவியின் பெருவட்டங்கள் சுமார் 40,000 கி.மீ. பரிதியை கொண்டனவாகும். புவி, சரியான கோளமல்ல என்பதால் இவை சிறிது மாற்றமடைகின்றன. உதாரணமாக மத்திய கோடு 40,075 கி.மீ நீளமானது. எம்பிலிபிட்டியா எம்பிலிபிட்டியா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எம்பிலிபிட்டியா ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு தென்கிழக்குத் திசையில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது மாத்தரையும், அம்பாந்தோட்டையயும் இணைக்கும் பெருந்தெருவும், வெல்லவாயா மற்றும் மொனராகலையும் இணைக்கும் பெருந்தெருவும் சந்திக்கும் இடத்தில் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திரிக்கா வாவி நகரத்துக்கு அருகில் காணப்படுகிறது. மேலும், இப்பிரதேசத்துக்கு அருகாமையில், சுமார் 26 கி.மீ. தூரத்தில் இலங்கயில் யானைகளுக்கு பிரசித்தமான உடவளவை வானோத்தியானம் அமைந்துள்ளது. இப்பிரதேசம், இலங்கையின் புவியியல் பிரிவான அன்சமவெளியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 185 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 29.4 பாகை செல்சியஸ் ஆகும். இப்பிரதேசம் இலங்கயின் உலர் வலயம் என அழைக்கப்படும் காலநிலை பிராந்தியத்தில் அமைந்துள்ளது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1524 மி.மீ. ஆகும். இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எம்பிலிபிட்டியா நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது. இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு: சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு: இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.மரக்கரி பயிர் செய்கையும் பழட்த்தோட்டங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இப்பிரதேசம் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. எனவே சிறிய அளவில் இரத்தினக் கல் அகழ்வும் மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்: 1989 ஆண்டு கடைசி காலப்பகுதியில் நகரத்தின் பிரபால பாடசாலை மாணவர்கள் 24 உட்பட மொத்தம் 25 பேர் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு இராணுவ முகாமுக்குள் புதைக்கபட்டனர். இப்போது குறிப்பிட்ட பாடசாலையின் முன்னால் அதிபர் உட்பட பல இராணுவ அதிகாரிகளுக்கு தண்டணை வழாங்கப்பட்டுள்ளது. மேலும் பல பேர் விசாரிக்கப்படவேண்டு என்பது ஆசிய மனித உரிமைகள் ஆணைகுழுவின் கருத்தாகும். ஆகத்து 7 ஆத்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலிய பழங்குடிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர். ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாக நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். 1988 1988 (MCMLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 – மே 13, 1975) ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது. இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் புல்லரித்துப் போனோம்" என்று மெச்சியுள்ளார். இந்தியப் பெருங் கலைஞரான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார். தொடர்ந்து இந்திய நாதசுவர மேதைகளாகிய காருக்குறிச்சி அருணாசலம், சேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை விழாக்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈழத்திலும் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை, என். கே. பத்மநாதன், கே. எம். பஞ்சாபிகேசன், திருநாவுக்கரசு ஆகியோருக்கும் தவில் வாசித்தார். தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார். கிருட்டின கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார். ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பு. இணுவிலிலே வாழ்ந்த தந்தையார் காலமாக தனது மூத்த தமக்கையார் கணேசு இராஜேஸ்வரி வாழ்ந்த அளவெட்டியிலே சென்று குடியேறினார் தட்சிணாமூர்த்தி. இவரது திருமணம் 1957ஆம் ஆண்டு நடைபெற்றது. அளவெட்டி தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகளான மனோன்மணியைத் திருமணம் புரிந்து கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து பிள்ளைகளைப் பெற்றார். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர் (17 மார்ச் 1969 — 21 மே 2016). தெட்சணாமூர்த்திக்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970களில் இலங்கை வந்து 13. மே 1978 இல் காலமானார். யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணத் திரைப்படம் 2015 ஏப்ரலில் வெளியானது. இதனை சித்தார்த்த புரொடக்சன்சு சார்பில் அம்சன் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் தேசிய விருது (வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) விருதுடன் 50,000 இந்திய உரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. 1989 1989 (MCMLXXXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். தமிழ்/இந்து நாட்காட்டியில் 1988 - 1989 விபவ ஆண்டும், 1989 - 1990 சுக்கில ஆண்டும் ஆகும். மார்ச் 10 பொன். செல்வகணபதி பொன். செல்வகணபதி அறுபதுகளில் எழுதத் துவங்கினார்.கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவர்.சென்னைமாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.இவருடைய சாதனைகளுக்கு கண்ணதாசன் சாட்சியம் அளித்திருக்கிறார். பத்மபூஷன் விருதுபெற்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாராட்டியுள்ளார் காவிரி தமிழகத்தின் ஜீவநதி ! கணபதி தமிழ்நாட்டின் ஜீவகவி ! என்கிறார் கவிஞர் மு.மேத்தா இணுவில் சிவகாமி அம்மன் கோயில் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே "'சிவகாமி அம்மன் கோயில்" முக்கியமான ஒன்று. இது கிழக்கு இணுவில் பகுதியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாண அரசு அமைந்த தொடக்க காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்குப் பொறுப்பாக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தலைவர்களில் ஒருவன் குடியேறிய பகுதியாக, இணுவில் குறிப்பிடப்படுகின்றது. இவன் தமிழ் நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்த பேராயிரவன் என்று யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தனர். இணுவையூருக்கு, திருக்கோவலூர் பேராயிரவன் தலைவன் ஆயினான். இவன் சிதம்பரத்திலிருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத் தான் வாழ்ந்த இடத்தில் இச்சிவகாமியம்மை ஆலயத்தை அமைத்தான் எனவும் அவ்விடம் அதனால் சிதம்பர வளவு என அழைக்கப்பட்டதெனவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன. பேராயிரவன் பின் இப்பகுதிக்கு ஆட்சித்தலைவனாயிருந்த காலிங்கராயன் நாள்தோறும் சிவகமியம்மையை வழிபட்டே ஆட்சிக் கடைமைகளை மேற்கொண்டான் எனவும், அவன் மகன் கைலாயநாதன் உலாவின்போது தன்முன்பாய் சிவகாமியம்மை திருவுருவை தேரில் பவனிவரச் செய்தான் எனவும் பஞ்சவன்னத் தூது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான திருக்கோயில்களை இடித்தளித்த போத்துக்கீசர் கொடுங்கோலாட்சி யாழப்பாணத்தில் இடம்பெற்றபோது இணுவைச் சிவகாமியம்மன் ஆலயமும் அவர்களினால் இடித்தளிக்கப்பட்டது. பின் வந்த ஒல்லாந்தரின் 138 ஆண்டுகால ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர்களது இந்து எதிர்ப்புக் கொள்கை சற்றுத் தளர்ந்தபோது, மீண்டும் இவ்விடத்தில் அம்மன் வழிபாடு ஆரம்பமானது. அக்காலத்தே தொம்பு எழுதும் பணியில் இருந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமி அம்மையை நாளும் வழிபாடு செய்தவர். புலவரை ஒல்லாந்த ஆட்சியாளர் தவறான குற்றச்சாட்டொன்றினாலே சிறையிலிட்டபோது அவர் சிவகாமி அம்மை அருளாலே சிறைமீண்டதால் இத்தலத்தின் பெருமை எங்கும் பரவலாயிற்று. சின்னத்தம்பிப் புலவர் இணுவை சிவகாமி அம்மை மீது சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம் என்பனவற்றையும் பாடியுள்ளார். தான் அம்மையின் அருளினாலே சிறை மீண்டதை புலவர் சிறை நீக்கு பதிகமாக பாடியுள்ளார். இக்கோயிலின் அருகே சிறந்த நாடக அரங்கு ஒன்றும் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தே அமைந்திருந்தது. இதனால் இத்தலம் சமயத்தை மட்டுமன்றி தமிழையும் வளர்த்தலில் முன்னின்றது. இத்திருத்தலம் சிறந்த தெய்வச் சூழலில் அமைந்துள்ளது. இணுவிற்பதியின் பண்டைய ஆட்சியாளர்கள் தம் வீரத்திற்காக வழிபட்ட வைரவர் – பத்திரகாளி கோயில் இவ்வாலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு கிழக்கில் சோழர் காலத்தைய அருள்மிகு காரைக்காற் சிவன்கோயில் அமைந்துள்ளது. மேற்கில் பெருஞ்சித்தராய் விளங்கிய பெரிய சந்நியாசியாரின் அடக்கத் திருத்தலம் உள்ளது. வடமேற்கில் இப்பகுதியை ஆண்ட பண்டைய ஆட்சியாளர் ஒருவருக்கு அமைந்த இளந்தாரி கோயிலும் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கோயிலுக்கெனப் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோயிற் கட்டடங்கள் பலவும் திருத்தி அமைக்கப்பட்டன. திருத்தொண்டகள் செய்வதில் ஊரவர்கள் பலரும் ஈடுபட்டனர். உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும் வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைக்கப்பட்டன. நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. ஆண்டுத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச்சிறப்பாய் ஆலயத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் பன்னிரு நாள் நடைபெற்று வருகின்றது. உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. பகல் சங்காபிடேகத்தோடு நடைபெறும் ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழாவும் மிகச்சிறப்பானது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிடாசுர சங்கார விழாவும், பத்தாம்நாள் மானம்பூ விழாவும் இத்திருத்தலத்திற்கு சிறப்புத் தருவன. புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அம்மன் மகிடாசுரனை அழித்த நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. இது சூரன் போர் என மக்களால் அழைக்கப்படுகின்றது. அடுத்த நாள், விஜயதசமியன்று இக் கோயிலில் நடைபெறும் மானம்புத் திருவிழா புகழ் பெற்றதாகும். ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச் சிவகாமி அம்மன் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். அவையாவன: மக்லியொட் மருத்துவமனை, இணுவில் "இணுவில் ஆஸ்பத்திரி" என்று பரவலாக அறியப்படுகின்ற, பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனை 1898 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் நாள் அமெரிக்க மிசனால் இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள இணுவிலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மருத்துவர் ஜே. எச். கேர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.. பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இது ஒரு சிறந்த மகப்பேற்று மருத்துவமனையாக யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பெயர் பெற்றிருந்தது. வசதியான கட்டிடங்களும், அமைதியான சூழலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பு அம்சமாகும். பல தனிப்பட்டவர்களின் உதவியாலும் காலத்துக்குக் காலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு இது விரிவாக்கப் பட்டது. 1911 ஆம் ஆண்டில் இந் நிறுவனத்தால் பயன்பெற்றவர்களும் பிறரும் அளித்த நன்கொடைகள் மூலம் ரூ10,000 செலவில் புதிய மகப்பேற்றுப் பிரிவு அமைக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டிலும், 1918 ஆம் ஆண்டிலும் புதிய கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. 1919 ல் ஏழை நோயாளர்களின் நலன் கருதிப் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. 23 அக்டோபர் 1920 ஆம் ஆண்டின் "மோர்னிங் ஸ்டார்" பத்திரிகையில் வெளியான புள்ளி விபரங்கள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. நூறு ஆண்டுகளைக் கடந்து இந்நிறுவனம் இன்றும் இயங்கி வருகின்றது. ஆகத்து 8 [[பகுப்பு:ஆகத்து]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] ஊழிவெள்ளம் ஊழிவெள்ளம் என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் பேழை மற்றும் இந்து சமயத்தில் கூறப்படும் மச்ச அவதாரம் என்பன பிரசித்தமான ஊழி வெள்ள புராணங்களாகும். உலகில் இருந்த இருக்கிற கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவற்றில் "பெரு வெள்ளம்" ஒன்றைப் பற்றிய கதைகள் காணப்படுகிறது. சுமேரியரின் வரலற்றின் படி, சார்ரூபாக் (இன்றைய தெற்கு ஈராக்கு)என்ற நகரிலிருந்து அரசாண்ட சியுசூத்ரா அரசன், என்கிற கடவுளால் மனித குலத்தை அழிக்க வரவிருக்கும் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றி எச்சரிக்கப்பட்டார், என்கி ஒரு பெரிய கப்பலைச் செய்யக் கட்டளையிட்டார். அதன் பின்னரான வரலாற்றுப் பதிவு காணமல் போய்விட்டது. வெள்ளத்துக்குப் பிறகு, சியுசூத்ரா, ஆகாய கடவுளுக்கும் என்லில்(தலைமை கடவுள்) கடவுளுக்கும் பலியிட்டார். சுமேரிய அரசர்களின் வம்ச வரலாறும் ஊழிவெள்ளம் பற்றிக் குறிப்பிடுகிறது. தெற்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் சார்ரூபாக் பிரதேசத்தில் கி.மு. 2,750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய அதாரங்கள் கிடைத்துள்ளன. இப்பூராணமானது, கி.மு. 17 நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும், எத்ரூ ஆதியாகமத்தின் ஒரு பிரதியில் காணப்படுகிறது. பபில்லோனிய வரலாறுகளில் ஒன்றான கில்காமேசு வரலாற்றில் கில்காமேசு (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்காக "உட்னபிசிதிம்" (Utnapishtim) என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம்ம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காகப் பெரிய கப்பல் ஒன்றைச் செய்யச் சொன்னார். வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வைக் கொடுத்தார். பபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) மனிதரின் சனத்தொகை மிக அதிகரித்தமையே ஊழிவெள்ளத்துக்கு காரணமாக கூறுகின்றது. இது கி.மு. 1700 இல் எழுதப்பட்டதாகும். மனிதன் படைக்கப்பட்டு 1200 வருடங்கள் சென்றப்பிறகு என்லில்(Enlil) கடவுள் அதிக மனித சனத்தொகையால் ஏற்படும் சத்தங்கள் காரணமாக தமது நித்திர களைவதால் இதற்கு தீர்வு காணும் பொருட்டு தேவர் சபையிடம் உதவி கேட்டார். அவர்கள் முதலில் வாதைகளையும், வறட்சியையும், பஞ்சத்தையும் ,உவர்நிலத்தையும் புவி மீது ஏவி சனத்தொகையை குறைக்க எத்தனித்தனர். இவை பலனற்று போகவே, தேவர்கள் ஊழிவெள்ளமொன்றை அனுப்ப முடிவு செய்தனர். இத்தீர்வை ஏற்காத என்கி (Enki)என்ற தேவன் அத்ரசிசுவிவை வெள்ளம் பற்றி எச்சரிக்கிறார். அவர் கப்பலொன்றை செய்வதற்கான அளவீடுகளையும் கொடுத்தார். மீண்டும் தேவர் இப்படியான ஊழி வெள்ளத்தை அனுப்பி உலகை அளிக்காதபடி, உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் என்கி தேவன் விவாகமாகத பெண்கள், மலடிகள், சிசுமரணம், கருக்கலைவு போன்றவற்றை உணடாகினார். ஆதியாகமம் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, ஏதேன் தோட்டத்தைவிட்டு மனிட்தன் வெளியேற்றப்பட்டு சில தலைமுறைகள் கடந்த பின்பு மனிதன் பாவ வழிகளில் வீழ்ந்து கடவுளை விட்டு தூரப்போனாகள். கடவுள் உலகை அழிக்க எண்ணி வெள்ளமொன்றை அனுப்ப எண்ணினார். நோவா நீதிமானாக இருந்தபடியால் அவரையும் அவர் குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார்.கடவுள் பேழையொன்றை செய்யச்சொல்லி அதற்கான அளவீடுகளையும் கொடுத்தார். பின்பு அவர் குடும்பத்தையும், மேலதிகமாக தூய விலங்கள் மற்றும் பறவைகளில் ஆண் பெண்னாக 7 சோடிகளையும் தீட்டான விலங்குகளில் ஆண் பெண்ணாக ஒரு சோடியையும் பேழையுள் சேர்க்கச் சொன்னார். மேலும் விலங்குகளுக்கும் நோவாவின் குடும்பத்தாருக்கும் தேவையான உணவையும் பேழயுள் சேர்கச் சொன்னார். நோவாவின் 600வது அகவையில், உலகம் படைக்கப்பட்டு 1656 ஆவது ஆண்டில் கடவுள் வெள்ளத்தை அனுப்பினார். இதன் படி வெள்ளம் பின்வரும் வழிகளில் வந்தது: ஆதியாகம்ம முதல் அதிகாரத்தை கொண்டு ஆய்வாளகள் வெள்ளதுக்கு முன்னர் பெரிய அளவு நீர் வானத்தில் நீர்காணப்பட்டதாக ஊகிக்கின்றனர்."பின்பு தேவன் நீரின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது நீரிலிருந்து நீரைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்". வெள்ள நீர் 150 நாள் உலகை மூடி காணப்பட்டது. கப்பல் அரராத் மலையில் தரைதட்டியது. நோவாவின் 601 அகவை முதல் மாதம் முதல் நாளில் வெள்ளம் முற்றாக வற்றிப் போயிருந்தது. இரண்டாவது மாதம் 27 ஆம் நாள் தரை காய்ந்து காணப்பட்டது. கடவுள் நோவாவைப் பேழையை விட்டு வெளியேறச் சொன்னார். பின்பு நோவா கடவுளுக்கு தகன பலியொன்றை கொடுத்தார். மேலும் இனி உலகை நீரால் அழிக்க மாட்டேன் எனக் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்தார். பின்பு கடவுள் விலங்குகள் மீது மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்து அவற்றை உண்பதற்கு அதிகாரத்தைக் கொடுத்தார். தனது உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை முகிலின் மீது வைத்தார். கிமு 4ஆம் ஆயிரமாண்டு